விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.7 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம் 4 5145 1837107 1836863 2025-06-29T13:29:26Z Booradleyp1 1964 /* துணையெழுத்து, ஒற்றைக்கொம்பு/இரட்டைக்கொம்பு எழுத்து */ 1837107 wikitext text/x-wiki {{விக்கி உதவி பக்கங்கள் (தலைப்பட்டி)}} {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம்.''' உங்களுடைய கேள்விகளை இதற்கு கீழே தொகுக்கவும். மேலும் விரைவான பதில்களுக்கு [https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource மின்னஞ்சல் குழுவையும்] பயன்படுத்தலாம். |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} [[பகுப்பு:விக்கிமூலம்]] [[பகுப்பு:உதவிப் பக்கங்கள்]] == படங்களை == படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது --[[பயனர்:Sgvijayakumar|Sgvijayakumar]] ([[பயனர் பேச்சு:Sgvijayakumar|பேச்சு]]) 00:25, 25 டிசம்பர் 2018 (UTC) https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf/7 படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது--[[பயனர்:Girijaanand|Girijaanand]] :[[விக்கிமூலம்_பேச்சு:விக்கி_நிரல்கள்#படங்கள் ]] என்ற பக்கத்தில் குறிப்புகள் உள்ளன. --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:51, 2 திசம்பர் 2020 (UTC) == புதிய நூலைப் பதிவேற்றம் செய்வது எப்படி?== புது நூல்கள் பதிவேற்றம் செய்ய என்னிடம் அரிதான நூல்கள் உள்ளன. அவற்றை எப்படி பதிவேற்றலாம் என்று கூறுங்கள்--[[பயனர்:செவ்வந்தி|செவ்வந்தி]] ([[பயனர் பேச்சு:செவ்வந்தி|பேச்சு]]) 10:27, 1 செப்டம்பர் 2022 (UTC) == கேள்விகளை == இங்கே, விக்கீமூலம் கேள்விகளை மட்டும் தான் கேட்க வேண்டுமா, அல்லது தமிழ் விக்கீபீடியா பற்றின சந்தேகங்களை கேட்கலாமா? எனக்கு பக்கத்தை நகர்த்வதில் கேள்விகள் உள்ளன. [[பயனர்:Cyarenkatnikh|Cyarenkatnikh]] ([[பயனர் பேச்சு:Cyarenkatnikh|பேச்சு]]) 17:06, 27 ஆகத்து 2017 (UTC) :விக்கிமூலக் கேள்விகளை கேட்டால் இங்கு பதில் கிடைக்கும். தமிழ் விக்கிபீடியா கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைக்காமல் போகலாம். தமிழ் விக்கிபீடியாவில் கேட்பதே நன்று -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:56, 28 ஆகத்து 2017 (UTC) ஐயா நான் குமார் காளியண்ணன் தற்போது மெய்ப்பு பார்க்க வேண்டிய பக்கத்தில் தொகு வை சொடுக்கினாலே பழைய வடிவமைப்பு வராமல் மெய்ப்பு பார்க்க வேண்டிய பக்கம் மேலடியிலேயே முழுவதும் பத்தியாக வந்து விடுகிறது ஒப்பிட்டு பார்க்க வேண்டிய பாக்கம் கீழே சென்று விடுகிறது இதனால் வெகு நாட்களாக என்னால் மெய்ப்பு பார்க்க இயலவில்லை யாரேனும் இது குறித்து காணொளி இருந்தால் அனுப்பும்படிக் கேட்டு கொள்கிறேன் இது குறித்து வாட்சப் பில்நிகண்டியம் குழுவில் சில நாட்களுக்கு முன்பு விளக்கம் கேட்டிருந்தேன் வணக்கம் [[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] தொகுக்கும் கருவியின் அமைப்பில் நீங்கள் தொரியாமல் செய்துவிட்ட ஒரு சிறு மாற்றத்தால் இவ்வாறு நேர்ந்துள்ளது. இச்சிக்கலை ஒரு சொடுக்கில் சரிசெய்யலாம். தொகுத்தல் பக்கத்தில் மற்றவை என்ற சொல்லை அடுத்து இரண்டாவதாக உள்ள குறியீட்டை கவனிக்கவும் அதில் இரு செவ்வகங்களும் ஒரு வளைந்த அம்புக்குறியும் இருக்கும். அதை ஒரு முறை சொடுக்கினாலே பழையமாதிரியாகிவிடும். நீங்கள் வழக்கம்போல மெய்ப்பு பார்க்கலாம்--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:38, 12 பெப்ரவரி 2022 (UTC) [[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] தாங்கள் மெய்ப்பு பார்க்கும்போது மேலே மெய்ப்பு பார்க்கும் கருவிகள் என தொன்றுகிறதல்லவா. அதை சொடுக்கினால் இரு செவ்வகங்களும் ஒரு வளைந்த அம்புக்குறியும் கொண்ட குறியீடு வரும். தங்கள் குழப்பம் நீங்ஙவில்லை என்றால் 99442 99989 என்ற எண்ணை அழையுங்கள் நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 08:22, 13 பெப்ரவரி 2022 (UTC) :ஐயா வணக்கம் தாங்கள் கூறியபடி தொகுத்தல் பக்கம் சென்று பார்த்தபொழுது மற்றவை என்ற சொல்லை என்னால் காண இயலவில்லை மேற்கொண்டு என்ன செய்வது இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நூல் வரிசையினை அனுப்பினால் நான் அதைப் பார்த்து செய்ய தொடங்குவேன் [[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] ([[பயனர் பேச்சு:Kumarkaliannan|பேச்சு]]) 06:06, 13 பெப்ரவரி 2022 (UTC) ஐயா நான் குமார் காளியண்ணன். நடப்பு ஆண்டுக்கான மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்புக்கான நூல்கள் பற்றிய விபரம் எனக்கு அனுப்ப முடியுமா?ஆவலுடன் உங்களின் விடையை எதிர்பார்க்கும் --[[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] ([[பயனர் பேச்சு:Kumarkaliannan|பேச்சு]]) 07:39, 11 பெப்ரவரி 2022 (UTC) குமார் காளியண்ணன் [[பயனர்:Kumarkaliannan|Kumarkaliannan]] == பக்க தலைப்பு == இடது பக்க தலைப்பு, நடுப்பக்கத்தலைப்பு, வலது பக்கத்தலைப்பு இடுவதற்கான முறைகளை மறுபடி தருக, உதாரணங்களுடன். :எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/33&action=edit இப்பக்கத்தைப் பார்க்கவும்]. நன்றி --[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:30, 26 நவம்பர் 2019 (UTC) == என்ன செய்ய வேண்டும் == நண்பர்களே காலனை கட்டி யடிக்கிய கடோர சித்தன் கதை புத்தகத்தின் எல்லா பக்கங்களும் மெய்ப்பு பார்க்கப்பட்டு உள்ளன. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இதில் தவறுகள் ஏதும் உள்ளதெனில் சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன் மா.ப.கென்னடி நன்றி இந்த புத்தகத்தை இனி நான் சரி பார்க்கிறேன்--[[பயனர்:Sgvijayakumar|Sgvijayakumar]] ([[பயனர் பேச்சு:Sgvijayakumar|பேச்சு]]) 00:43, 23 டிசம்பர் 2019 (UTC) == மேலடி சேர்க்க தானியங்கி உதவி == === மருத்துவ விஞ்ஞானிகள் === *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf மருத்துவ விஞ்ஞானிகள்] புத்தகத்திற்கு மேலடி சேர்க்க தானியங்கி உதவி தேவை. <br> ஒற்றைப்படை பக்கங்கள் - <nowiki>{{rh|புலவர் என்.வி. கலைமணி||பக்கஎண்}}{{rule}}</nowiki> <br> இரட்டைப்படை பக்கங்கள் - <nowiki>{{rh|பக்கஎண்||மருத்துவ விஞ்ஞானிகள்}}{{rule}}</nowiki> <br> -- [[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 12:00, 1 திசம்பர் 2020 (UTC) ** [[அட்டவணை:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf]] என்ற நூலுக்கு, ஓரிரு நாட்களில் இட்டுத் தருகிறேன். இணையவேகம் குறைந்த நிலையில் இப்பொழுது செயற்பட இயலவில்லை. --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:48, 2 திசம்பர் 2020 (UTC) *** மேலடியும் பிறகுறியீடுகளையும் இட்டு வருகிறேன். அதனை கண்டு நினைவிற்கொள்ளவும். {{tl|u}} வார்ப்புரு குறித்து அறிய தந்தமைக்கு நன்றி.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:45, 15 திசம்பர் 2020 (UTC) {{ping|Dr.Benjamin.jebaraj}} மேற்கூறிய நூலில் மேலடி இட்டுள்ளேன். வேறேதும் உதவிகள் தேவையெனில் எனது பேச்சுப்பக்கத்தில் கூறவும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:18, 16 திசம்பர் 2020 (UTC) நன்றி --[[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 03:18, 16 திசம்பர் 2020 (UTC) === அகரமுதலி நூல் === * நான் கடந்த சில நாட்கள் முன்பே அட்டவணை:Vetri- English- English-Tamil pdf நூலை மெய்ப்பு பார்க்க முயன்ற போது மெய்ப்பு பார்க்க வேண்டிய பகுதி மேலடியில் காணப்பட்டதை குறித்து பதிவிட்டிருந்தேன் அதை எப்படி பார்க்க வேண்டும் எனத் தெரியவில்லை யாராவது எடுத்துக் காட்டாக ஒரு பக்கத்தை தொகுத்துக் காட்டினால் நான் தொடர ஏதுவாக இருக்கும் :உதாரணத்திற்கு [https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf] பக்கங்களை பார்க்கவும்.--[[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 02:32, 2 திசம்பர் 2020 (UTC) தாங்கள் மலே குறிப்பிட்ட பக்கம் சென்று பார்த்ததில் அதிலும் நான் முன்பு கூறியபடியே இருப்பதால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை{{unsigned|Kumarkaliannan}}[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:37, 15 திசம்பர் 2020 (UTC) {{ping|Kumarkaliannan}}! உங்கள் ஊருக்கு அருகில் தான் நானும் வசிக்கிறேன். 9095முன்று-நான்கு-33நான்குஇரண்டு என்ற எண்ணுக்கு, பிற்பகலில் அழைக்கவும்.சேலத்தில் எந்த இடத்தில் என்று கூறினால், உரிய நண்பர்களை அனுப்பி நேரடி பயிற்சி தர முயல்வேன்[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:42, 15 திசம்பர் 2020 (UTC) == ஒன்றுபோல் உள்ள பக்கங்கள் == [[:ta:அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf|அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf]] என்ற நூலை விட [[ta:அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf|அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf]] என்ற நூல் முழுமையாகவும், சிறந்த பிரதியாகவும் உள்ளது. எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள் என்ற அட்டவணையை நீக்கவேண்டும். [[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 03:50, 5 பெப்ரவரி 2021 (UTC) :இங்கு குறிப்பிடுவதை விட, [[அட்டவணை பேச்சு:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf]] என்ற பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஏனெனில், அந்த அட்டவணையைக் காணும் அனைவரும் இந்த பக்கத்தினை காணும் வாய்ப்பு மிக குறைவு. நீங்கள் அதில் சில நாட்கள் பங்களித்தீர்கள் என அறிவேன். எதனால் அந்த அட்டவணையை நீக்க வேண்டும் என்ற காரணத்தினை அங்கு பக்க எண்ணோடு எழுதுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:09, 5 பெப்ரவரி 2021 (UTC) == வடிவமைப்பு குறித்து== [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/69&action=submit இந்த] -- வடிவமைப்பு சரியாக இருக்கிறதா? இப்பக்கத்தை அச்சுப்பக்கத்தில் இருப்பது போன்று வடிவமைக்க முடியுமா?[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 16:14, 21 ஆகத்து 2021 (UTC) ::{{ping|Fathima_Shaila}} பத்தி பெரிதாக, அப்பக்கத்திலேயே முடிவதென்றால், அச்சுப் பக்கத்தில் உள்ளது போன்று அமைக்க இயலும். [[பக்கம்:அசோகனுடைய_சாஸனங்கள்.pdf/69 | மாற்றியமைத்துள்ள பக்கத்தைக் காண்க]]. அடுத்த பக்கத்தில் தொடரும் சிறிய பத்தி என்றால், பக்க ஒருங்கிணைப்பில் போது சிரமம் தரும். மேலும் அடுத்த பக்கத்தை வேறொருவர் மெய்ப்பு செய்யும் போது தொடர்ச்சி (continuity) விடுபடுகிறது. [[விக்கிமூலம்:விக்கி_நிரல்கள்#பிற | இப்பக்கத்தையும் காணவும்.]] - [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 11:30, 16 செப்டம்பர் 2021 (UTC) ==படங்களை வெட்டி பயன்படுத்துவது எப்படி?== ஒரு பக்கத்தில் உள்ள படங்களை குறிப்பிட்ட அளவில் வெட்டி பயன்படுத்துவது எப்படி? எங்கே அதற்கான கருவிகளையோ, நிரல்களையோ பார்ப்பது? --[[பயனர்:பிரயாணி|பிரயாணி]] ([[பயனர் பேச்சு:பிரயாணி|பேச்சு]]) 12:06, 31 மார்ச் 2023 (UTC) ==IndicOCR வேலை செய்யவில்லை== இன்டிகோசியர் வேலை செய்யவில்லை ஓரிரண்டு பக்கங்களில் சோதித்துப் பார்த்தேன். அப்போது வலது புறமாக No OCR text என்று வந்தது. அப்போது என்னிடம் இணைய வேகமும் நன்றாகவே இருந்தது [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் ]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 11:46, 20 சூலை 2023 (UTC) :ஆம். நீங்கள் வலப்பக்கம் வழியே உள்ள மற்றொரு எழுத்துணரியாக்கம் (OCR ) நுட்பத்தினை பயன்படுத்திப் பாருங்கள். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:45, 21 சூலை 2023 (UTC) ::நீங்கள் கூறிய நீங்கள் கூறிய மற்றொரு எழுத்துணரியாக்கம் சிறப்பாக வேலை செய்கிறது. நன்றி [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் ]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 16:08, 24 சூலை 2023 (UTC) == உதவி == மாரத்தான் நிகழ்வை விக்கிமூலத்தில் நடத்தும் எண்ணம் உள்ளது. விக்கிப்பீடியாவில், 'புதிய கட்டுரை எழுதுக' எனும் இணைப்பின் வழியே சென்று திட்டப் பக்கத்தை உருவாக்க இயலும். இங்கு எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து வழிகாட்டல் தேவைப்படுகிறது. - [[பயனர்:Selvasivagurunathan m|Selvasivagurunathan m]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:14, 22 ஆகத்து 2023 (UTC) உதவி வேண்டி எழுப்பப்பட்ட இக்கோரிக்கையை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். -[[பயனர்:Selvasivagurunathan m|Selvasivagurunathan m]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:01, 11 செப்டம்பர் 2023 (UTC) == [[அட்டவணை:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu]] == இவ்வட்டவனையில் உள்ள [[பக்கம்:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu/6|6]] பக்கத்தை நுட்ப மேம்பாடு செய்துத் தாருங்கள் இதைப் பார்த்து நேரம் கிடைக்கும்போது மெய்ப்பு செய்வேன் நன்றி [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 22:03, 6 சூன் 2024 (UTC) ==ocr இயங்கவில்லை== {{ping|Balajijagadesh}} {{ping|Info-farmer}}, {{ping|Arularasan. G}} ocr கருவிகள் இரண்டுமே எனக்கு வேலை செய்யவில்லை. என்னால் நூலின் பக்கங்களை இடப்புறம் ஏற்ற இயலவில்லை. சிக்கலைத் தீர்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:36, 22 திசம்பர் 2024 (UTC) :மன்னிக்கவும். *[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] இந்த நூலுக்கும் மட்டுமே \\no ocr text\\ என்று வருகிறது. *[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf]] இதனை செய்ய முடிகிறது. *முதல் அட்டவணையில் ஏதேனும் சிக்கல் உள்ளதா எனத் தெரியவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:42, 22 திசம்பர் 2024 (UTC) *:சரியாகிவிட்டதா? -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:28, 22 திசம்பர் 2024 (UTC) இன்னமும் சரியாகவில்லை பாலாஜி. பயனர் சோடாபாட்டில் வலப்பக்கமுள்ள Transcribe Text மூலம் அட்டவணையின் எல்லாப் பக்கங்களையும் செய்து தந்திருக்கிறார். அதனால் தற்போது இந்நூலின் மெய்ப்புக் பணியைத் தொடர்வதில் சிரமமில்லை. ஆனால் ஏன் இடப்பக்க ஓசிஆர்கள் *இந்நூலுக்கு இயங்கவில்லை என்பதுதான் புரியவில்லை. இண்டிக் ஓசிஆரை கிளிக் செய்தால் "நோ ஓசிஆர் டெக்ஸ்ட்" என்றும் மற்றொன்றைப் பயன்படுத்தினால் "எரர் அன்டிஃபைன்டு" என்றும் வலப்பக்க மேல்மூலையில் வருகின்றன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:37, 22 திசம்பர் 2024 (UTC) == துணையெழுத்து, ஒற்றைக்கொம்பு/இரட்டைக்கொம்பு எழுத்து== {{ping|Balajijagadesh}} {{ping|Info-farmer}}, {{ping|Arularasan. G}} [[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/85]] - இப்பக்கத்திலுள்ள கல்வெட்டு குறிப்பின் 19, 22 ஆவதுகளில் தமிழ் துணையெழுத்து வரியின் முதல் எழுத்தாக வந்துள்ளது. இதனைத் தட்டச்சு செய்வது எவ்வாறு என்று தெரியவில்லை. இதே போல ஒற்றைக்கொம்பு, இரட்டைக் கொம்புகளும் தனித்து வர வாய்ப்புள்ளது. இதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். [தமிழ் விக்கிபீடியாவில் தமிழ் துணை எழுத்து என்ற கட்டுரையில்: துணைக்கால் வடிவம் (ா) எனக் காணப்படுகிறது.]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:00, 28 சூன் 2025 (UTC) :தகவலுக்கு நன்றி தகவலுழவன். தற்சமயத்துக்கு தமிழ் விக்கியிலிருந்து பயன்படுத்திக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:29, 29 சூன் 2025 (UTC) :தமிழ் விக்கியில் இருந்தே பயன்படுத்துதல் நன்று. முன்னே இருக்கும் புள்ளிவட்டம் தவிர்க்க இயலாது. அல்லது [[c:Category:Tamil glyphs in SVG]] இதுபோல புள்ளிகள் இல்லா துணைக்காலை படமாக உருவாக்கி இணைக்கலாம். எடுத்துக்காட்டு : [[File:Tamil-alphabet-அஅ.svg|17px]]'''வன்''' இதில் 'அ' என்பது அங்குள்ள படம். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:10, 28 சூன் 2025 (UTC) 7jw5h319j8pbg4tdg7l83u7pvfqy1zg அட்டவணை:ஒத்தை வீடு.pdf 252 179808 1837160 1836835 2025-06-29T14:51:34Z Booradleyp1 1964 1837160 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஒத்தை வீடு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=ஏகலைவன் பதிப்பகம் |Address=சென்னை |Year=முதற்பதிப்பு ஜூன் 2000 |Source=pdf |Image=1 |Number of pages=249 |File size=23.44 |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 5to11=முன்னுரை 12to15= கத்திமேல் நடந்து... 16=ஒத்தைவீடு /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:Books to repair 201 முதல் 250 வரை பக்கங்கள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] 6rhgmj8eigwp65k4q1gjdl2vi8rgw14 1837166 1837160 2025-06-29T15:15:22Z Booradleyp1 1964 1837166 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஒத்தை வீடு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=ஏகலைவன் பதிப்பகம் |Address=சென்னை |Year=முதற்பதிப்பு ஜூன் 2000 |Source=pdf |Image=1 |Number of pages=249 |File size=23.44 |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 5to11=முன்னுரை 12to15= கத்திமேல் நடந்து... 16=ஒத்தைவீடு1 26=ஒத்தைவீடு2 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:Books to repair 201 முதல் 250 வரை பக்கங்கள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] 6l5enj2603pkzcuenmdlru57hlgtouf பக்கம்:ஒத்தை வீடு.pdf/16 250 202340 1837161 1836789 2025-06-29T14:53:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="1"/> {{center|{{Xx-larger|<b>ஒத்தை வீடு</b>}}}} {{dhr|5em}} அந்த வீட்டுக்கு வெளிப்புறத்தில், ஒரு வண்ணக்கோழியை செல்லமாகச் சிணுங்கியபடியே துரத்திக்கொண்டிருந்த வாலிப வனப்புச் சேவல் ஒன்று; திடுதிப்பென்று பின் வாங்கியது. வீட்டின் வெளிப்புற மாடத்தின் மேல் ஒன்றோடு ஒன்றாய் ஒட்டி, ஜோடியாய்க் கிடந்த சிட்டுக் குருவிகள் இறக்கைகளை உதறிய படியே எதிர் எதிர்த் திசைகளில் பறந்து போயின. அதே மாடத்திற்குள் காட்சி அளித்த பிள்ளையாருக்குத் தீபம் ஏற்றுவதற்காகச் சிறிது குனிந்த காந்தாமணி, விளக்கேற்றாமல் தீப்பெட்டியும் குச்சியுமாக நிமிர்ந்தாள். காந்தாமணியின் அம்மாவான சொர்ணம்மா, பேசிய பேச்சையெல்லாம் வலது காதில் வாங்கி இடது காதுவழியாய் விட்டுக் கொண்டிருந்த அண்டை வீட்டு உமா, தனது வீட்டை நோக்கிப்போகப் போனாள். ஆனாலும் இங்கே நிற்பதா, அங்கே போவதா என்று முடிவெடுக்க முடியாமல், ஒரு காலை முன்வைத்து, மறு காலைப் பின்வைத்துத் தடுமாறிக் கொண்டிருந்தாள். இத்தனை பேரின் அத்தனை வெளிப்பாடுகளுக்கும் காரணமான மனோகர், வீட்டின் வெளிப்பக்கத்தில் வாசலுக்கு முன்னால் நின்றான். அவனது வலது கர வளைவில் ஒரு தோல்பை தொங்கியது. இடது கைப்பிடியில் ஒரு சூட்கேஸ் ஒட்டப்பட்டதுபோல், கிடந்தது. வலது தோளில் சோல்னாப் பையும், இடது கையில் தூக்குப் பையும் தொங்கி வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவன் போல் நின்றான். அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தான் வீட்டுக்குத் திரும்பியதால் ஏற்பட்ட எதிர்பார்த்த<noinclude></noinclude> j8qbl76vkzj0cp5o2vmhxu7lx8ltdq3 1837162 1837161 2025-06-29T14:54:17Z Booradleyp1 1964 1837162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} <section begin="1"/> {{center|{{Xx-larger|<b>ஒத்தை வீடு</b>}}}} {{dhr|3em}} அந்த வீட்டுக்கு வெளிப்புறத்தில், ஒரு வண்ணக்கோழியை செல்லமாகச் சிணுங்கியபடியே துரத்திக்கொண்டிருந்த வாலிப வனப்புச் சேவல் ஒன்று; திடுதிப்பென்று பின் வாங்கியது. வீட்டின் வெளிப்புற மாடத்தின் மேல் ஒன்றோடு ஒன்றாய் ஒட்டி, ஜோடியாய்க் கிடந்த சிட்டுக் குருவிகள் இறக்கைகளை உதறிய படியே எதிர் எதிர்த் திசைகளில் பறந்து போயின. அதே மாடத்திற்குள் காட்சி அளித்த பிள்ளையாருக்குத் தீபம் ஏற்றுவதற்காகச் சிறிது குனிந்த காந்தாமணி, விளக்கேற்றாமல் தீப்பெட்டியும் குச்சியுமாக நிமிர்ந்தாள். காந்தாமணியின் அம்மாவான சொர்ணம்மா, பேசிய பேச்சையெல்லாம் வலது காதில் வாங்கி இடது காதுவழியாய் விட்டுக் கொண்டிருந்த அண்டை வீட்டு உமா, தனது வீட்டை நோக்கிப்போகப் போனாள். ஆனாலும் இங்கே நிற்பதா, அங்கே போவதா என்று முடிவெடுக்க முடியாமல், ஒரு காலை முன்வைத்து, மறு காலைப் பின்வைத்துத் தடுமாறிக் கொண்டிருந்தாள். இத்தனை பேரின் அத்தனை வெளிப்பாடுகளுக்கும் காரணமான மனோகர், வீட்டின் வெளிப்பக்கத்தில் வாசலுக்கு முன்னால் நின்றான். அவனது வலது கர வளைவில் ஒரு தோல்பை தொங்கியது. இடது கைப்பிடியில் ஒரு சூட்கேஸ் ஒட்டப்பட்டதுபோல், கிடந்தது. வலது தோளில் சோல்னாப் பையும், இடது கையில் தூக்குப் பையும் தொங்கி வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவன் போல் நின்றான். அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தான் வீட்டுக்குத் திரும்பியதால் ஏற்பட்ட எதிர்பார்த்த<noinclude></noinclude> pv18lp86svcploqs2jybj4b0jfnpad0 பக்கம்:ஒத்தை வீடு.pdf/17 250 202342 1837163 1836779 2025-06-29T14:56:09Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|16||ஒத்தை வீடு}}</noinclude>மகிழ்ச்சியுடன், அக்காவைப் பார்த்த எதிர்பாராத மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, காந்தாமணி அக்காவை ரெட்டிப்பு மகிழ்ச்சியுடன் பார்த்தான். மனைவியைக் கண்களால் தேடிப்பார்த்தான். கண்ணில் படவில்லை. மீண்டும் அம்மாவை விட்டு விட்டு அக்காவையே பார்த்தான். அவள், தான் வந்தது தம்பிக்கு பிடிக்கவில்லையோ என்று அனிச்சமலராய் ஆகும் வரை பார்த்தான். அப்புறம்தான் பேசினான்... “எப்போக்கா வந்தே...” “இன்னிக்கு காலையிலதான்...” “அறுவடை சமயம்... அடைமழை நேரம்... ஏன் இப்படி திடுதிப்புன்னு...” “நான் சொல்லாமல் கொள்ளாமல் வரப்படாதா...?” “ஒம்மா புத்தி... ஒன்னை விட்டுப் போகுமா... நிலத்தை வித்துட்டோ விற்காமலோ என்னோட தங்கிடுன்னு சொல்றவன் நான்?” இதற்குள், “என் புத்தில் என்னடா கண்டே...” என்று முற்றத்து மேல் திண்ணையில் நின்ற சொர்ணம்மா, வீதிக்கே ஓடிவந்தாள். அறுபத்தைந்து ஆண்டுகளைக் கொண்ட மொக்கையான முகம் கண், வாய், மூக்கு, காது ஆகியவை அந்த மொக்கையில் தனித்தனியாய் ஒட்டப்பட்டது போன்ற தோற்றம்... பின் நெற்றி முன் தலையை ஆக்கிரமித்தது போல் பொட்டல்... அதில் ஒரு பள்ளம்... பள்ளத்தாக்கைச் சுற்றிய மரங்கள் போல், அந்தப் பள்ளத்தைச் சுற்றிய முடிக் கற்றைகள்... காந்தாமணி, தம்பியிடம் இருந்த சூட்கேஸையும், ஜோல்னாப் பையையும் வாங்கிக் கொண்டிருந்தபோது, சொர்ணம்மா அங்கேயே, அந்த நிமிடமே ஒப்பித்தாள்... “ஊர்ல... ஆறு மாசமா பேச்சு மூச்சி இல்லாமக் கிடந்த பாவிப் பயலுவ. பழையபடியும்... புத்தியக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்களாம். அக்காவோட நிலம் இருக்கு பாரு... மூணு மரக்கால்... நாலு செண்டு... அசல் பட்டா இடம்... அதுல வண்டிப் பாதை வேணுமுன்னு ஊர்க்காரனுவ கேட்டாங்களாம்... அக்கா, பட்டா நிலமுன்னு சொல்லியும் கேட்காமல், ஊர்க்காரனுவ வண்டி அடிக்காங்களாம். நிலத்துல முளைச்ச காணப் பயிருல்லாம் கரையான் புத்தாய் ஆகிட்டாம்... அவங்க நாசமாப் போகணும்... போன இடம் புல்லு முளைச்சுப் போக... நீதான் பழையபடியும் பெரிய இடத்துல சொல்லணும்... இந்தத் தடவை... அவங்க காலுல கையில விலங்கை மாட்டி... போலீஸ் இழுத்துட்டுப் போறதுக்கு, நீ ஏற்பாடு செய்யணும்...”{{nop}}<noinclude></noinclude> f5pxml547ltzdnmyizun0dq4uuerk7n பக்கம்:ஒத்தை வீடு.pdf/19 250 202346 1837164 1836782 2025-06-29T14:59:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|18||ஒத்தை வீடு}}</noinclude>மனோகர் இல்ல... வீட்டுக்குக் கெட்ட பிள்ளையானாலும் பரவாயில்ல... ஊருக்கு நல்ல பிள்ளையாய் பேர் வாங்க நினைக்கான்னு சொன்னேன். கேட்டியாடி... என் பேச்சை...? எப்படிப் பலிச்சிட்டு பாரு!” மனோகர், அதட்டினான்... “எம்மா... இதுக்கு மேலே பேசினே... திண்ணைக்குக் கூட வராமல், திரும்பிப் பாராமல் போயிடுவேன்... நீயும் சண்டைக் கோழியாய் நிற்கப்படாதுக்கா... ஊரையும் அனுசரித்துத்தான் போகணும்... ஊர்ப் பாதைக்குத்தானே கேட்டாங்க... பெருந்தன்மையா விட்டுக் கொடுக்கலாமில்ல?” “இந்தா பாருப்பா... நீ செய்யணும் என்கிறதுக்காக நான் வரல... ஒன்னைப் பார்க்கறதுக்காகக் கூட வரல என் புது நாத்தனாரைப் பார்க்க வந்தேன்... பார்த்துட்டேன்... நாளைக்கே போயிடுவேன்... கவலைப்படாதே..” “மூக்குக்கு மேலே கோபம் மட்டும் வந்துடும்... சரி விவரமாய்ச் சொல்லு...” “ஊர்ப்பாதை... வெள்ளையன் தோட்டத்தோட முடியுது... அதுக்கு நேரா... சீமைச்சாமி நிலம், நீள வாக்குல இருக்குது... அதுல பாதை கேட்கலாமில்ல? அதவிட்டுட்டு, பத்தடி தள்ளி இருக்கிற என் நிலத்துல கேட்கிறது என்ன நியாயம்...? ஊர்ப்பாதையை வளைச்சு என் நிலம் வழியாய் விடாமல், சீமைச்சாமி நிலம் வழியா நேராய் விடலாம் இல்லியா... ஏன் விடல? ஏன்னா, சீமைச்சாமிக்கு ஆள் பலம் இருக்குது... நான், நாதியத்தபய மகள்... இல்லாதவன் பெண்டாட்டி... எல்லோருக்கும் இளக்காரமான மயினிதானே...?” அம்மாக்காரி, சவாலிட்டாள். “நான் இருக்கும்போது நீ... எப்படி நாதியத்துப் போவே... நாளைக்கே நானும் ஊருக்கு வாரேன்... எந்தப் பயல் வண்டியடிச்சுட்டு வந்தாலும் முன்னால போய் நின்னு மூக்கணாங் கயிறைப் பிடிக்கேன்...!” மனோகர், சளைத்தான். “சீச்சீ... இது வீடா...? ஒரு மாசம் நிம்மதியாய் டில்லியில் இருந்தேன். ஒருவன் கிட்டச் சிபாரிசுக்கு போறது பிச்சை எடுக்கிறது மாதிரின்னு யாருக்கும் தெரியல...” “ஒங்களுக்குத்தான் தெரியல... ஊர்க்காரன், இருக்கிறவன் நிலத்தை விட்டுவிட்டு, இல்லாதவன் நிலத்தை பிடுங்க வந்தால் எப்படிங்க? பாதி நிலத்தை வேணுமுன்னா, ஊர்ப்பொதுப்<noinclude></noinclude> iv4iewg0vn3xdje1uy5sk27mwfn8e95 பக்கம்:ஒத்தை வீடு.pdf/21 250 202350 1837165 1836784 2025-06-29T15:02:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|20||ஒத்தை வீடு}}</noinclude>கெஞ்சினாள்... ஆனால் உமா, கண்டுக்கவில்லை... ‘அந்நியன் பொருளைத் தொடுவது அவனை தொடுவது மாதிரிதானே... கற்பு கெட்டுப் போகாதா...’ உமா, வெளியே போய்க் கொண்டிருந்தபோது, மனோகர் எழுந்து வீட்டுக்குள் போகப் போனான். அவனையே பார்த்து நின்ற அக்காவின் தோளில் கைபோட்டபடியே, திண்ணைப் படியில் அவன் கால் வைத்தபோது, ஒரு மோட்டார் பைக் சத்தம்... உமாவின் கணவன் இந்திரன், இடது பக்கமாக ஒடிக்கப்போன பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு, உள்ளே வந்தான். உமாவை, ‘ஒனக்கென்ன இங்கே வேலை’ என்பது மாதிரி, எள்ளும் கொள்ளுமாய்ப் பார்த்தான். அவளை, அவன் பார்த்த தோரணை, உமாவைத் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக வந்தவன்போல் தோன்றியதே தவிர, மனோகரை பார்க்க வந்தவன்போல் தோன்றவில்லை. ஆனாலும், கடித்த பற்களை விடுவித்தபடியே ஒப்புக்குக் கேட்டான். “என்ன மனோ... டில்லியில் பயிற்சி எப்படி இருந்தது...” “உட்காருங்க இந்திரன் ஸார்... பயிற்சி... பொல்லாத பயிற்சி...” “உமா... வீட்டுக்குப் போ... அம்மா தேடுவாள்... அப்போ பயிற்சி பயனில்லன்னு சொல்றீங்க...” “அரசாங்கத்திலே இந்தப் பயிற்சி என்கிறதே ஒரு ஏமாத்து நாடகம்... மேலிடத்துக்குப் பிடித்தவங்க அதை... கவனிக்க வேண்டிய முறையில் கவனிக்கிறவங்க... ரிட்டயர்டாகிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்ன கூட வெளிநாட்டுப் பயிற்சிக்குப் போவாங்க... வேண்டாதவங்கள கழித்துக்கட்ட உள்நாட்டுப் பயிற்சின்னு அனுப்புவாங்க...” “நீங்க எந்த வகையில சேர்த்தி...?” “இரண்டுலயும் சேர்த்தி இல்ல... எங்க சர்வீஸ் அதிகாரிங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறதுக்குன்னு டில்லியில் ஒரு நிறுவனம் இருக்குது... இப்போ பயிற்சியாளர்கள் அதிகமாகவும், பயிற்சி பெறுகிறவங்க குறைவாகவும் ஆகிப் போச்சு... ஆள் பஞ்சம். இதனால் என்னை வரச்சொல்லிட்டாங்க... ஆனாலும் சும்மா சொல்லப்படாது... தமிழக அரசின் இல்லத்தில் ஏஸி ரூம்... அருமையான சாப்பாடு. தகராறுக்கு வராத ஆட்டோ டிரைவர்... அப்புறம் சைட் அடிக்கிறதுக்கு ஏகப்பட்ட அழகிகள்...” மனோகர், குரலைத் தாழ்த்திப் பேசியபோது, இந்திரன், உமா போய்விட்டாளா என்று கண்களைச் சுழற்றி ஒரு தாவு தாவி விட்டு, கிசு கிசுப்பாகக் கேட்டான்...{{nop}}<noinclude></noinclude> p1knd5zfmxyv3qg9mrvgvyn5m3kzfmi பக்கம்:ஒத்தை வீடு.pdf/25 250 202359 1837223 1836805 2025-06-30T03:12:58Z மொஹமது கராம் 14681 1837223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|24||ஒத்தை வீடு}}</noinclude>ஜோடியும் இருக்க முடியாது. மன்மதன் - ரதியே பொறாமைப்பட வேண்டும்... தம்பியை விட இவள் இரண்டு விரல்கட்டைதான் உயரக் குறைவு... தம்பிக்குத் தடிப்போ, மடிப்போ இல்லாத தேகம். நாத்திக்கு வயிறு தெரியாத லாவகம்... கொஞ்சம் ஒல்லியானாலும் மல்லி... கல்யாணமானதும் பூரிப்பில் தடிக்க வேண்டும். இன்னும் தடிக்கல. ஆனாலும் வளைவில்லாத மூக்கு... பயித்தங்காய் விரல்கள்... அடர்ந்த முடி... படர்ந்த முகம். தம்பி மட்டும் லேசுபட்டவனா. மாநிறம்... என்றாலும் அதில் ஒரு பளபளப்பு... ராஜ பார்வை... கோணாத உடம்பு... கோடு போட்டது மாதிரி சமமான தோளு... எம்மாடி... என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே...’ சமையலறைக்குள் அல்லாடிய மனோகரை, ‘நீ மொதல்ல வெளில் போடா...’ என்று மொதலுக்கு இரட்டை அழுத்தம் கொடுத்தாள்... அவன் போனதும், மாவு பிசைந்த சங்கரியை, அப்படியே தூக்கி, இரண்டு கைகளையும் குவித்து, குவித்துப் பிடித்தபடியே இழுத்து, வாஷ் பேசினுக்குக் கொண்டு வந்தாள்... நாத்தியின் கைகளைக் கழுவி விட்டாள்... தலை முடியை ஒதுக்கி விட்டாள். முகத்தை ஈரக்கையால் பாலீஷ் போட்டாள். பின்னர் அவள் முதுகைத் தள்ளித் தள்ளி, மாடிப் படிகளின் முனையில் விட்டாள்... அவள் படியேறி மேலே மறைந்த பிறகுதான், சமையலறைக்குள் வந்தாள்... அவளுக்கு முன்னால், அம்மா, அங்கே நின்றாள். மகள் வந்ததும் வராததுமாக அவள் காதைக் கடித்தாள்... “ஒரு மாசம் கழிச்சு... புருசன் வந்திருக்கான். அவள் முகத்துக்குப் பௌடர் போடல... கண்ணுல் ஒரு கிறக்கம் இல்ல... வாயில ஒரு சின்னச் சிரிப்புக்கூட இல்ல... இவள்ளாம் ஒரு பொம்புளையாம்... சரியான ஆம்புளப் பிறவி... இந்த மாதிரி சமயத்துல... அந்தப் பாவி மனுஷன் வெளியூர்ல மூணு நாள் தங்கிட்டு வந்தாக்கூட போதும்... நான் முகத்த அலம்பி... பொட்டு வச்சு... பூ முடிச்சு...” “என்னம்மா... நீ... நான் ஒன் மகள்... என்கிட்ட போயி...” “ஆபத்துக்குத் தோசம் இல்லடி...” “மொதல்ல இங்கிருந்து போம்மா...” அம்மா போய்விட்டாள். ஆனால் அவள் சொன்னது போகவில்லை... ஒரு வேளை அம்மா நினைத்தது மாதிரியே இருக்குமோ... எப்படிக் கண்டுபிடிக்கலாம்... கைகளை சொடக்குப் போட்ட காந்தாமணிக்கு, அவர்களது அந்தரங்கத்தைக் கண்டுபிடிக்க ஒரு வழி கிடைத்தது... <section end="1"/>{{nop}}<noinclude></noinclude> rmch79czc7ewj5izxn9xxlwilhy5zmr பக்கம்:ஒத்தை வீடு.pdf/26 250 202361 1837224 1836813 2025-06-30T03:14:23Z மொஹமது கராம் 14681 1837224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="2"/> {{larger|<b>2</b>}} {{dhr|2em}} சங்கரியின் தலை, பாதிப் பூந்தோட்டமாகியது... முடி வளையங்கள், பூப்பதியங்களாயின... காந்தாமணி அண்ணிதான், மெனக்கெட்டு, மார்க்கட்டுக்குப் போய் மல்லிகை, முல்லை... கனகாம்பர பூ வகைகளை, முழக் கணக்கில் வாங்கி வந்தாள். முல்லைப் பூவை முன் தலையில் வைத்து, மல்லிகைச் சரத்தை பின் தலையில் சூடி, அதன் மேல் கனகாம்பரத்தைப் பொருத்தினாள், வலது காதின் மேல்பக்கம் சொருகப்பட்ட ஒற்றை ரோஜா பிறைச் சந்திரனாய் ஒளியிட்டது. பின் தலையில் வைத்த செவ்வந்திப்பூ மஞ்சள் ஒளியாய் ஜொலித்தது. நடுத்தலையில் வில்போல் வரித்துக்கட்டப்பட்ட முல்லை வெள்ளொளியாய் பிரகாசித்தது. அண்ணி அதோடு விடவில்லை. அவளுக்குக் குங்குமம் இட்டாள். சந்தனம் தடவினாள். அவள் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல், பாவாடை தாவணி தோற்றம் காட்டும் புடவையை வலுக்கட்டாயமாகக் கட்டிவிட்டாள். இடைக்குக் கீழே மருதாணி நிறம். இடைக்கு மேல் சாம்பல் நிறம். காந்தாமணி, சங்கரிக்கு சிங்காரிப்போடு விடவில்லை. சுடச் சுடப் பாயசம் காய்த்து, அதில் நாலு பச்சை முட்டைகளை உடைத்துக் கலந்து, சுண்டக் காய்ச்சி, ஒரு செம்பு நிறைய நிரப்பி அவள் கையில் நீட்டியபடியே கிசுகிசுத்தாள். “ஆளுக்குப் பாதியாய் குடியுங்க... ஆண் பாதியும், பெண் பாதியும் முழு ஆளாய் மாறிவிடும்” என்று பிளாஷ்பேக் சம்பவங்களை நினைத்தபடியே, மெய் மறந்து குறிப்பிட்டாள். என்றாலும், சங்கரி, அந்த அறைக்குள் நாணப்பட்டோ, நளினப்பட்டோ வராமல் - ஏனோதானோ என்றே வந்தாள். வாசலில் கண்போட்டபடியே அந்த அறை முழுவதும் கால் போட்ட மனோகர், அவளை வழிமறித்துப் பற்றிக்கொண்டான். உடனே, அவள், செம்பை அவன் வாயில் திணித்தாள். அண்ணி சொன்னதை மெல்லச் சொன்னபடி, பாதியை தான் குடிக்காமல், அந்த செம்பு முழுவதையும் அவனைக் காலி செய்ய வைத்தாள். மனோகர், அவளை வலது கையால் இணைத்து, இடது கையால் அவள் பிடறியைத் தடவியபடி கட்டிலுக்கு நடத்தி வந்தான். மூன்று மணி நேரத்துக்கு முன்பே அண்ணி அனுப்பியபோது இருவரும் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டார்கள். வீட்டுக்காரர், வீட்டைக் காலி செய்யவில்லையானால், வேறொரு பூட்டைப் போடப்போவதாக மிரட்டியது...<noinclude></noinclude> j4lqekwnhptrmysbzjo3v4ks3ygvgzx பக்கம்:ஒத்தை வீடு.pdf/35 250 202379 1837171 1837050 2025-06-29T15:35:42Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|34||ஒத்தை வீடு}}</noinclude>அணைக்கிறான். இருளில் நடக்கிறான். அவள் மேல் படர்கிறான்... அங்குமிங்குமாய்ப் புரள்கிறான்... புரண்டதுதான் மிச்சம். அவன் புரண்டதில் கட்டில் சட்டத்தில் குடிக்காமல் வைக்கப்பட்ட அந்த பால்குவளை, கீழே விழுகிறது. பால் தரையில் வீணாய் ஓடுகிறது. அவன் குடிக்காமலும், அவளுக்கு கொடுக்காமலும், கெட்டுப் போகாமலேயே கொட்டிப் போகிறது... அப்புறம் சாக்கு சொல்கிறான்... கல்யாணக் காரியங்களை, தனியொரு ஆண் பிள்ளையாய் மேற்கொண்டதால், அலுப்பு என்றான்... நாளை இரவுதான் முதலிரவு என்கிறான்... அவளும் நம்புகிறாள்... நாளைதான் வரவில்லை. ஐம்பது இரவுகளில், பௌர்ணமிக்குப் பதிலாக அமாவாசைகளே வந்தன... சங்கரி, பால்கனிக் கதவைக் கோபத்தோடு சாத்திவிட்டு, உள்ளே போகிறாள்... கதவுச் சத்தம் கேட்டோ என்னவோ... எதிர் பால்கனியில் விளக்கு எரிகிறது. இந்த அறையின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே ஒளிக்கற்றையாய் ஊடுருவுகிறது. கட்டிலுக்கு வந்தவள், படுக்கையில் குத்துக்காலிட்டு, அதில் முகம் போட்டுக் கிடப்பவனைப் பார்த்துத் திடுக்கிடுகிறாள்... அவனைப் பார்க்கப் பார்க்க, கோபம், பரிதாபத்துக்கு விட்டுக் கொடுக்கிறது. படுக்கையில் உட்கார்ந்து அவனைக் குண்டுக்கட்டாய் வளைத்துப் பிடித்து, “தூக்கம் வர்லியா...?” என்றாள். மனோகர், பதிலளிக்கவில்லை... அவன் மனதில், சுய-இரக்கம் போய், கோபம் வருகிறது... மனதில் பல்வேறு யூகங்கள் நிழலாடுகின்றன. அந்த நிழல்களே, நிஜமாகி நெருப்பாய் எரிகின்றன... அவளைப் பார்க்கும் கண்கள், நெருப்பாய் கக்குகின்றன. எதிர் வீட்டு விளக்கு, அவனை நெருப்பாய் எரிக்கிறது. {{dhr|2em}} <section end="2"/><section begin="3"/> {{larger|<b>3</b>}} {{dhr|2em}} இரவு, பகலுக்கு விட்டுக் கொடுத்தாலும், மனோகரும், சங்கரியும் தத்தம் உள்ளுலகங்களில் மூழ்கிக் கிடந்தார்கள். அவன் மரக் கட்டையாய், மல்லாக்கக் கிடந்தான். அவளோ கள்ளிச் செடியாய்ச் சுருண்டு கிடந்தாள். நிசப்தம் கலைத்த சேவல்கள் கொக்கரக்கோவும், பால்காரப் பையனின் சைக்கிள் மணியோசையும், பத்திரிகைகள் விழுந்த டொக் டொக் சத்தமும். கை பம்புகளின் டப்... டப் சத்தமும் ஒன்றுடன் ஒன்று கூடிக் குலவி, ஒருவித கலவைச் சத்தத்தை எழுப்பின. இத்தகைய சப்தங்களுக்கு<noinclude></noinclude> 3o7035qotcch4q0cvcz888pqkfeijh4 பக்கம்:ஒத்தை வீடு.pdf/44 250 202397 1837238 1837051 2025-06-30T04:16:48Z மொஹமது கராம் 14681 1837238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||43}}</noinclude>“எனக்கு எந்தக் காரியமானாலும், அதை உடனே முடிச்சிடனும்... வாங்க உங்க ஆபீசுக்குப் போகலாம்...” “என்ன சார் நீங்க... காலங்காத்தாலே வழி மறிக்கிறீங்க... அடுத்தவனுக்கும் வேலையிருக்குமுன்னு நெனைத்துப் பாருங்க... நாளைக்கும் போஸ்டல் ஹாலிடே. அதுக்குள்ளே என்ன அவசரம்....” இந்திரன், சங்கடமாகச் சிரித்தான். நிற்கவும் முடியாமல், போகவும் முடியாமல் கால்களால் தரையைப் பிராண்டினான். மனோகர், ஏதோ தமாஷ் செய்வது போல் ஒரு மாயச் சிரிப்பை உதிர்த்தான்... இதற்குள், உமா தனது வீட்டின் கேட்டிற்கு வந்து, “ஏங்க உள்ள வாங்க... மதியாதார் தலைவாசல் மிதிக்கலாமா? உலகத்துலே இவரு மட்டுந்தான் ஆபீசரா...” என்று கத்தினாள். இந்திரன் யந்திரமாய் நடந்தான்... ஆனால், அதைப் பற்றிப் பொருட்படுத்தாதுபோல், மனோகர், வேக வேகமாய் நடந்து, தெருக்கோடியில் மறைந்தான். இதற்குள் பழைய நட்பை மறந்து உமாவை ஒரு பிடி பிடிக்க ஓடி வந்த சொர்ணம்மாவை, காந்தாமணி இழுத்துக்கொண்டு போனாள். உமா, சொர்ணம்மாவைப் பார்த்து நடுங்கினாள். மாமியாரைப் பற்றி தெரிவித்த சங்கதிகளையெல்லாம், மாமியாருக்கே வந்து விடுமே என்ற பயம். {{dhr|2em}} <section end="3"/><section begin="4"/> {{larger|<b>3</b>}} {{dhr|2em}} மனோகர், இடம், பொருள், ஏவல் அறியாதவனாய், இலக்கற்றுப்போய் நடந்தான்... கால்கள் முன்னோக்கியும், மனம் பின்னோக்கியும் போய்க் கொண்டிருந்தன. நினைக்க நினைக்க நெஞ்சம் வெந்தது. அவன் ஆவேசியாய் நடந்தான். உயிரும் உடலும் அற்றுப் போய், ஆவியாய் தாவுவதுபோல் போனான். உடல், உயிருக்குள்ளும், உயிர் உடலுக்குள்ளும் ஒடுங்கியது போல், ஆமை நடையாகவும் நடந்தான். காலாற்றுப் போனவன் போல், தள்ளாடித் தள்ளாடியும், நடந்தான். தலைவிரி கோலமாகவும் பாய்ந்தான். அங்குமிங்குமாய் நடந்து, முட்டுச் சந்து சுவரில் மோதி, மனிதச் சந்தடியில் ஊடுருவி, ஒரு மேம்பாலச் சுவரில் உட்கார்ந்தான். ஆட்டோக்களும், சைக்கிள்களும், ஆட்களைப் பிடித்துப் போட்டபடி அலை மோதின. ஒலிப்பெருக்கம்... பேசும் யந்திரங்கள், பேசாத யந்திரங்களில் போய்க் கொண்டிருந்தன இரண்டு தெரு<noinclude></noinclude> j9f4aq5y087srxs1pe23uco2auk63xt 1837239 1837238 2025-06-30T04:17:03Z மொஹமது கராம் 14681 1837239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||43}}</noinclude>“எனக்கு எந்தக் காரியமானாலும், அதை உடனே முடிச்சிடனும்... வாங்க உங்க ஆபீசுக்குப் போகலாம்...” “என்ன சார் நீங்க... காலங்காத்தாலே வழி மறிக்கிறீங்க... அடுத்தவனுக்கும் வேலையிருக்குமுன்னு நெனைத்துப் பாருங்க... நாளைக்கும் போஸ்டல் ஹாலிடே. அதுக்குள்ளே என்ன அவசரம்....” இந்திரன், சங்கடமாகச் சிரித்தான். நிற்கவும் முடியாமல், போகவும் முடியாமல் கால்களால் தரையைப் பிராண்டினான். மனோகர், ஏதோ தமாஷ் செய்வது போல் ஒரு மாயச் சிரிப்பை உதிர்த்தான்... இதற்குள், உமா தனது வீட்டின் கேட்டிற்கு வந்து, “ஏங்க உள்ள வாங்க... மதியாதார் தலைவாசல் மிதிக்கலாமா? உலகத்துலே இவரு மட்டுந்தான் ஆபீசரா...” என்று கத்தினாள். இந்திரன் யந்திரமாய் நடந்தான்... ஆனால், அதைப் பற்றிப் பொருட்படுத்தாதுபோல், மனோகர், வேக வேகமாய் நடந்து, தெருக்கோடியில் மறைந்தான். இதற்குள் பழைய நட்பை மறந்து உமாவை ஒரு பிடி பிடிக்க ஓடி வந்த சொர்ணம்மாவை, காந்தாமணி இழுத்துக்கொண்டு போனாள். உமா, சொர்ணம்மாவைப் பார்த்து நடுங்கினாள். மாமியாரைப் பற்றி தெரிவித்த சங்கதிகளையெல்லாம், மாமியாருக்கே வந்து விடுமே என்ற பயம். {{dhr|2em}} <section end="3"/><section begin="4"/> {{larger|<b>4</b>}} {{dhr|2em}} மனோகர், இடம், பொருள், ஏவல் அறியாதவனாய், இலக்கற்றுப்போய் நடந்தான்... கால்கள் முன்னோக்கியும், மனம் பின்னோக்கியும் போய்க் கொண்டிருந்தன. நினைக்க நினைக்க நெஞ்சம் வெந்தது. அவன் ஆவேசியாய் நடந்தான். உயிரும் உடலும் அற்றுப் போய், ஆவியாய் தாவுவதுபோல் போனான். உடல், உயிருக்குள்ளும், உயிர் உடலுக்குள்ளும் ஒடுங்கியது போல், ஆமை நடையாகவும் நடந்தான். காலாற்றுப் போனவன் போல், தள்ளாடித் தள்ளாடியும், நடந்தான். தலைவிரி கோலமாகவும் பாய்ந்தான். அங்குமிங்குமாய் நடந்து, முட்டுச் சந்து சுவரில் மோதி, மனிதச் சந்தடியில் ஊடுருவி, ஒரு மேம்பாலச் சுவரில் உட்கார்ந்தான். ஆட்டோக்களும், சைக்கிள்களும், ஆட்களைப் பிடித்துப் போட்டபடி அலை மோதின. ஒலிப்பெருக்கம்... பேசும் யந்திரங்கள், பேசாத யந்திரங்களில் போய்க் கொண்டிருந்தன இரண்டு தெரு<noinclude></noinclude> 9jmtibgymruvmqwme5r3c4lvbbor41g பக்கம்:ஒத்தை வீடு.pdf/47 250 202403 1837225 762339 2025-06-30T03:35:39Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|46||ஒத்தை வீடு}}</noinclude>இல்லை... அதன் சாதாரணத் தோற்றம், அவனை ஈர்த்தது. ‘டை’ கட்டாத சித்த வைத்தியர். ஸ்டெதாஸ் கோப்பைக் கூடக் காணவில்லை. இப்படிப்பட்ட மனிதர்களிடம் தான் விஷயம் இருக்கும்... இருக்குதோ இல்லையோ... இதுவே கடைசி முயற்சி. இதுவும் பலனளிக்கவில்லையானால், இருக்கவே இருக்குது விஷம்... ரயில்வே தண்டவாளம்... தேசிய சாலையின் நடுப்பக்கம்... மனோகர், வாழ நினைத்தவனாய் நடக்காமல், சாகத் துணிந்தவனாய், அந்த அறையை நெருங்கினான். மூன்று படிகளையும் ஒரே படியாய் அனுமானித்து, ஒரே தாவாய்த் தாவினான். பத்தாம் பசலி நாற்காலியில் முதுகைக் கிடத்தாமல், நிமிர்ந்திருந்த தோற்றத்தைப் பார்த்து, பரவசப்பட்டான். சதுர முகம்... சதுராடும் பார்வை... தினவெடுத்த தோள்கள்... இவ்வளவுக்கும் அவருக்கு, வயது எழுபது இருக்கலாம். வைத்தியர் ஜெகன்னாதன், அவனை உட்காரச் சொன்னார். அவனை சாமுத்திரிகா லட்சணங்களால் அளவெடுப்பதுபோல், அவன் மூக்கைப் பார்த்தார். வாய்க்கு மேலுள்ள மச்சத்தைப் பார்த்தார். கால்கள், தரையில் கோலம் போடுகின்றனவா என்று கீழ்நோக்கிப் பார்த்தார். பிறகு இயல்பாகப் பேசினார்... “எனக்கு காது கொஞ்சம் மந்தம்... உரக்கப் பேசணும். ஏன் அப்படி மிரண்டு பார்க்கிங்க... ‘கர்ப்பப்பை இல்லாட்டாலும் கர்ப்பிணி ஆகலாம்... எய்ட்ஸ் நோயை இப்பவே ஒழிக்கலாம். வழுக்கைத் தலையை பசுஞ்சோலை ஆக்கலாமுன்னு’ பேப்பர்ல படங்கள் வருதே... கருப்புத் துரைகள். அவங்க மாதிரி நான் இல்யேன்னு ஆச்சரியப்படுகிறீங்களா... ஸ்டெதாஸ் கோப்பை தூக்குக் கயிறாய் கழுத்துல தொங்கப் போட்டு, புன்னகை பூக்கிறாங்களே... அவங்க வேறு... நான் வேறு... இவங்க சித்த வைத்தியர்கள் இல்ல... செத்த வைத்தியர்கள்.” அந்தப் பெரியவர், பேச்சை நிறுத்திவிட்டு, மனோகரின் காதுகளில், தன் பேச்சு ஏறுகிறதா என்பது மாதிரி, மூக்கும் வாயும் முன்துருத்த உற்றுப் பார்த்தார். அவன் காட்டிய ஆவலில், பேச்சை தொடர்ந்தார். ஆனால், என்னை மாதிரி விரல்விட்டு எண்ணக்கூடிய அந்தக் காலத்து வைத்தியர்கள் இன்றும் உயிரோடதான் இருக்கோம். சித்தத்தை சிவனிடம் செலுத்தி, யோகம், ஞானம், மருத்துவம், மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற அப்பியாசங்களுக்கு அதிபதிகளான நந்தீசர், மூலதீசர், அகத்தீசர், சட்டநாதர், கிடைக்காடர், சண்டிகேசர், கனராமர், போகர், சிவவாக்கியர், பேரக்கர், புன்னாக்கீசர், மச்சமுனி, பூனைக்கண்ணர், யூகமுனி,<noinclude></noinclude> pb10yqanngt7ejw1sh4i5yk6qkscfeq 1837226 1837225 2025-06-30T03:37:26Z மொஹமது கராம் 14681 1837226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|46||ஒத்தை வீடு}}</noinclude>இல்லை... அதன் சாதாரணத் தோற்றம், அவனை ஈர்த்தது. ‘டை’ கட்டாத சித்த வைத்தியர். ஸ்டெதாஸ் கோப்பைக் கூடக் காணவில்லை. இப்படிப்பட்ட மனிதர்களிடம் தான் விஷயம் இருக்கும்... இருக்குதோ இல்லையோ... இதுவே கடைசி முயற்சி. இதுவும் பலனளிக்கவில்லையானால், இருக்கவே இருக்குது விஷம்... ரயில்வே தண்டவாளம்... தேசிய சாலையின் நடுப்பக்கம்... மனோகர், வாழ நினைத்தவனாய் நடக்காமல், சாகத் துணிந்தவனாய், அந்த அறையை நெருங்கினான். மூன்று படிகளையும் ஒரே படியாய் அனுமானித்து, ஒரே தாவாய்த் தாவினான். பத்தாம் பசலி நாற்காலியில் முதுகைக் கிடத்தாமல், நிமிர்ந்திருந்த தோற்றத்தைப் பார்த்து, பரவசப்பட்டான். சதுர முகம்... சதுராடும் பார்வை... தினவெடுத்த தோள்கள்... இவ்வளவுக்கும் அவருக்கு, வயது எழுபது இருக்கலாம். வைத்தியர் ஜெகன்னாதன், அவனை உட்காரச் சொன்னார். அவனை சாமுத்திரிகா லட்சணங்களால் அளவெடுப்பதுபோல், அவன் மூக்கைப் பார்த்தார். வாய்க்கு மேலுள்ள மச்சத்தைப் பார்த்தார். கால்கள், தரையில் கோலம் போடுகின்றனவா என்று கீழ்நோக்கிப் பார்த்தார். பிறகு இயல்பாகப் பேசினார்... “எனக்கு காது கொஞ்சம் மந்தம்... உரக்கப் பேசணும். ஏன் அப்படி மிரண்டு பார்க்கிங்க... ‘கர்ப்பப்பை இல்லாட்டாலும் கர்ப்பிணி ஆகலாம்... எய்ட்ஸ் நோயை இப்பவே ஒழிக்கலாம். வழுக்கைத் தலையை பசுஞ்சோலை ஆக்கலாமுன்னு’ பேப்பர்ல படங்கள் வருதே... கருப்புத் துரைகள். அவங்க மாதிரி நான் இல்யேன்னு ஆச்சரியப்படுகிறீங்களா... ஸ்டெதாஸ் கோப்பை தூக்குக் கயிறாய் கழுத்துல தொங்கப் போட்டு, புன்னகை பூக்கிறாங்களே... அவங்க வேறு... நான் வேறு... இவங்க சித்த வைத்தியர்கள் இல்ல... செத்த வைத்தியர்கள்.” அந்தப் பெரியவர், பேச்சை நிறுத்திவிட்டு, மனோகரின் காதுகளில், தன் பேச்சு ஏறுகிறதா என்பது மாதிரி, மூக்கும் வாயும் முன்துருத்த உற்றுப் பார்த்தார். அவன் காட்டிய ஆவலில், பேச்சை தொடர்ந்தார். “ஆனால், என்னை மாதிரி விரல்விட்டு எண்ணக்கூடிய அந்தக் காலத்து வைத்தியர்கள் இன்றும் உயிரோடதான் இருக்கோம். சித்தத்தை சிவனிடம் செலுத்தி, யோகம், ஞானம், மருத்துவம், மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற அப்பியாசங்களுக்கு அதிபதிகளான நந்தீசர், மூலதீசர், அகத்தீசர், சட்டநாதர், கிடைக்காடர், சண்டிகேசர், கனராமர், போகர், சிவவாக்கியர், பேரக்கர், புன்னாக்கீசர், மச்சமுனி, பூனைக்கண்ணர், யூகமுனி,<noinclude></noinclude> i6208101vimw3oem6360mitfh0ircd2 பக்கம்:ஒத்தை வீடு.pdf/48 250 202405 1837227 762340 2025-06-30T03:46:29Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||47}}</noinclude>கொங்கணர், புலிப்பானி, வரமுனி என்கிற பதினெட்டுச் சித்தர்களின் பரம்பரை இன்னும் இருக்கத்தான் செய்யுது... ஆனால், பத்திரிகைகளுல படமா சிரிக்கிறவங்க... இந்தப் பரம்பரையின் பெயரைக் கெடுக்கிறதுக்குன்னே பிறப்பெடுத்தவங்க... இவங்க சித்தர் முன்னோர்களின் உள்முகம் தெரியாத வான்கோழிகள்... போகட்டும் உடம்புக்கு என்ன செய்யுது?” மனோகருக்கு ஆன்மீக மனிதராய்த் தோன்றும் அவரிடம், அற்ப விஷயத்தை எப்படிக் கேட்பது என்று புரியவில்லை... பிடி கொடுக்காமலே சொன்னான். “வயிற்றுக் கோளாறு... வாயுத் தொல்லை... இங்கிலீஸ் மருந்து, கேட்கல...” “சரி... எழுந்து கைகால்களை உதறிட்டு... நிமிர்ந்து உட்காருங்க... இல்லாத கூனை ஏன் போடுறே...?” மனோகர், மனதை உதறிப்போடப் போவது போல், உதறிவிட்டு உட்கார்ந்தான். வைத்தியர் ஜெகன்னாதன், அவன் நீட்டிய கையின் மணிக்கட்டுக்கு கீழே, தனது மூன்று விரல்களைப் பதித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒவ்வொரு விரலாய் எடுத்தெடுத்து, மீண்டும் பதித்தார்... திடுக்கிட்டவராய் அவனைப் பார்த்தார்... கண்டதைச் சொன்னார். இப்போது அவனை ஒருமையிலேயே பேசினார்... “என்னப்பா... இது... நாதம் பேசலியே...” “அப்படின்னா...” “அடக் கடவுளே... இது, தெரியாமல் வந்த கோளாறு... நாதம் என்றால் ஒலி என்று மட்டும் அர்த்தமில்லை... பருவம் வந்ததும் ஒருத்தரோட குரலை ஆண், பெண் இயல்புக்கு தக்கபடி மாற்றி அமைக்கும் நாதாந்தம் என்றும் அர்த்தம். பதினான்கு, பதினாறு வயதில், ஆண்குரல்... பெண்குரல் என்று அடையாளம் காண முடிகிறதே... அந்த மகரக்கட்டு அடையாளத்தை ஆணுக்குத் தருவது, விந்து. பெண்ணுக்குத் தருவது, நாதம். சகல் உயிர்களுக்கும் ஆதாரமான பெரும்பொருள் மானுடத்தில் ஆணுக்குச் சுரப்பது விந்து... பெண்ணுக்குச் சுரப்பது நாதம்... ஆணையும் பெண்ணையும் எப்படிப் பொதுப்படையாய் மனிதன்னு அழைக்கிறோமோ அப்படி விந்துவையும், நாதத்தையும் நாதமுன்னு அழைப்பதுண்டு இதனால்தான் கோடிக்கணக்கான உயிரணுக்களைக் கொண்ட விந்தையும், லட்சோப லட்சம் முட்டைகளில் ஒன்றைக் கருப்பையில் சேர்க்கும் நாதத்தையும், பரம்பொருளின் சொரூபமாய் நினைக்கிறோம் இதனால்தான் நாதவிந்துக் கலாதி நமோ... என்றார் அருணகிரியார் நாதாந்த ஜோதி என்றார் ஞானமுள்ள தேகமெல்லாம் நாதவிந்தின் கூறு<noinclude></noinclude> jy7ztv5ao4dqjo8jcir87mhtmw24my9 பக்கம்:ஒத்தை வீடு.pdf/49 250 202407 1837228 1516716 2025-06-30T03:55:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|48||ஒத்தை வீடு}}</noinclude>என்றார்... இப்படிப்பட்ட பெரும்பொருளை இழந்து நிற்கிறியே... ஒரு பெண்ணைத் தொட்டாலே தீட்டாயிடுவியே... அப்படியே ஆகாட்டாலும்... உன்னால ஒருத்தியை ஊடுருவ முடியாதே... கல்யாணம் ஆகிட்டா...? ஆயுட்டுதா...” மனோகர், அவரை மருண்டும், மிரண்டும், பயந்தும், உண்மையைப் பாக்கப் போகிற புதிய தரிசனமாய்ப் பார்த்தான். அவரோ... கேள்விமேல் கேள்வி போட்டார்... “குடி... கூத்து... கஞ்சா... சிகரெட்டுன்னு உண்டா... போதை ஊசி போடுறது உண்டா...? இல்லையா...? சந்தோஷம்... சரி... தூர்ப்பழக்கமுன்னு சொல்றோமே, சுய இன்பம்... அந்தப் பழக்கம் இருக்குதா?” “இருந்தது... ஆனால் இப்போ இல்லை...” “அந்தக் கெட்ட பழக்கந்தான்... நாதம் பேசாததுக்குக் காரணம்... பொண்டாட்டிகிட்டே... முடியுதா...?” மனோகர், தலை கவிழ்ந்தான். அந்தத் தலையைத் தூக்கி பதிலளிக்கத்தான் போனான். முடியவில்லை. தலை நிமிர்த்தாமலேயே மென்று விழுங்கிப் பேசினான்... “அந்தப் பழக்கம் ஒன்றும் தப்பில்லன்னு... டாக்டருங்க...” “எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்... படித்தவன் பாட்டைக் கெடுத்தான்னு சொல்வாங்களே... அது இந்த எம்.பி.பி.எஸ் அரக்கன்களுக்குப் பொருந்தும்... அவங்க வாதம்... சொத்தை... எல்லாம் தெரியும் என்கிற ஆணவத்தில் எழுகிற மூடத்தனம்...” “விந்து என்பது பிறப்பின் ஆதாரம்... ஆகாயம், வாயு, தேயு, என்ற தந்தைப் பூதங்களும், பிருதிவி, அப்பு என்ற தாய் பூதங்களும் கொண்ட பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இந்த உடல்... இந்தப் பூதங்களின் குறிப்பிட்ட விகிதாச்சார சேர்க்கையே ஒரு உயிர்ப்பொருள்... அல்லது... ஜடப் பொருளின் இயல்பையும், உறுதிப்பாட்டையும் தீர்மானிக்குது... அந்தப் பொருளை சமச்சீர் நிலையில் வைக்கிறது... இதைத்தான் இங்கிலீஸில் மெடாபாலிஸம் என்கிறான். உன் உடம்பில் இயற்கையாய் இருந்த இப்படிப்பட்ட சமச்சீர் நிலைகளை... நீ செயற்கையாய் செய்துசெய்து சிதைத்திட்டே... எவள்கிட்டயும், உன்னால முடியாதே...?” மனோகர், தட்டுத்தடுமாறி சந்தேகம் கேட்டான். “வாயுக் கோளாறாய் இருந்தாலும்... நாதம் பேசாமல் இருக்கலாமே.”{{nop}}<noinclude></noinclude> 9y8mdurblibsb9xk7nyrlls5b44vadn பக்கம்:ஒத்தை வீடு.pdf/50 250 202409 1837232 762343 2025-06-30T04:03:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||49}}</noinclude>“என் மேலேயே எதிரம்பு விடுறியா...? சந்தோஷம்... சும்மா சொல்லலே... நிசமாவே சந்தோஷம்... வாயுக் கோளாறு... அது இருக்கிறது வரைக்கும் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும்... இதை அலோபதிக்காரன் கணக்கில் எடுக்காதது தவறு... பெருந்தவறு... ஆனால் உனக்கு வாயுக் கோளாறு இருக்கிறதாய் நாடி சொல்லல... நீ உண்மையின் விபரீதத்தைச் சந்திக்கப் பயந்து, அப்படி நினைக்கிறே... விந்து விட்டவன்... நொந்து கெட்டான் என்பது பழமொழி... அப்படிப் பட்டவனை, ஒரு கோழி முடியைக் காட்டியே பயமுறுத்திடலாம்... குரு பரசுராமருக்கும், சிஷ்யன் பீஷ்மருக்கும் ஏற்ப்பட்ட போரில் பீஷ்மர் வென்றார்... குருவிடம் இதற்குக் காரணம் கேட்டார்... பரசுராமர் என்ன சொன்னார் தெரியுமா... பீஷ்மா... ஒன் பிரம்மச்சரியம் என்னைத் தோற்கடித்தது... என்றார். நம்ம மாதிரி சாதாரண ஆட்கள் கடைசிவரைக்கும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டியதில்லை... ஆனால் கல்யாணம் வரைக்கும் விரதம் இருந்தால்... அதற்குப் பிறகு விரும்பறதை பலமாய்ச் சுவைக்கலாமே... ஒன்னால் முடியாதே... பாவம்... ஒன் வீட்டுக்காரி...” மனோகர், புழுவாய் நெளிந்தான். சிறு பிள்ளையாய்த் துடித்தான்... சங்கரி, அவன் முன்னால் வந்து ஒப்பாரி போடுவது போல் ஒரு பிரம்மை... அப்புறம் அவள், கைதட்டிச் சிரிப்பது போல் ஒரு கொடுமை... அந்தச் சமயத்திலும் ஒரு சிந்தனை... ஆசாமி, இப்படி பயமுறுத்துறது வியாபாரத் தந்திரமாய் இருக்குமோ... இருக்கிறது மாதிரித் தெரியலியே... தோரணை, பேச்சு, துஷ்டனுக்கு உரியதாய்த் தோணலியே... விளம்பரப் பலகையில் டாக்டர் என்று போடாமல் வைத்தியர் என்று போட்டுக் காட்டும் மனிதரிடம், இப்படிப்பட்ட வில்லத்தனம் இருக்குமா... இருக்காது... வைத்தியர், எழுந்தார் நாற்காலிக்குப் பின்பக்கம் திறந்த பலகை அலமாரியில், வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்ட லேகியப் பாட்டில்களில் ஒரு சின்னப் பாட்டிலை எடுத்தார்... சிறிது நடந்து, மேற்குப் பக்க சுவரோர கண்ணாடி அலமாரியைத் திறந்து, ஒரு சின்னக் குப்பியில் உள்ளதைக் கொட்டிக் கொட்டி, முப்பது சின்னச் சின்ன சரிகைக் காகிதங்களில் நிரப்பினார்... நிரப்பியதை மடித்துக் கொண்டு வர அவருக்கு முப்பது நிமிடமாயிற்று. நிலையற்றுக் கிடந்தவனிடம் திரும்பி வந்தார்... பாட்டிலையும், பஸ்பத்தையும் வைத்தார்... “பணம்...” “நூறு ரூபாய்...”{{nop}}<noinclude></noinclude> otfbd4ts11umabem9skefchguv1tgmu பக்கம்:ஒத்தை வீடு.pdf/51 250 202411 1837236 762344 2025-06-30T04:13:43Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|50||ஒத்தை வீடு}}</noinclude>மனோகர் நீட்டிய பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணிப் பார்க்காமலேயே, சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு, அவனுக்கு வைத்தியத்தை வர்ணித்தார். “சித்தர்கள், கட்டளைப்படி, நானே தயாரித்த மருந்து... ஒரு கரண்டி லேகியத்தையும், இந்த காகிதத்தில் இருக்கிற பஸ்பத்தையும் கலந்து சாப்பிடு. தினம் மூணு வேளை. ஆறின பாலைக் குடிக்கணும் சாப்பாட்டிற்குப் பிறகுதான்... போட்டுக்கணும்... ஒரு மணி நேரத்துக்கு முன்னாலேயோ, பின்னாலேயோ, காபி, டீ குடிக்கப்படாது. பத்து நாளைக்குப் பல்லைக் கடித்து, பெண்டாட்டியை ஏறெடுத்துப் பார்க்கக்கூடாது... இந்த மருந்து பலிக்காட்டி, எந்த மருந்தும் பலிக்காது... பலன் கொடுத்தால், பதினோராவது நாள் என்னை வந்து பாரு... போய் வா...” மனோகர் பேசாமலேயே நின்றான்... அவரையே உதடுகள் துடிக்கப் பார்த்தான்... அவர் அவன் பக்கமாய் வந்து, அவன் கையைப் பிடித்தபடியே அறிவுரையாற்றினார்... “பெண் என்பவள் சக்தி... சக்தியைத் திருப்திப்படுத்த எந்த ஆணாலும் இயலாது... அவளாய்த் திருப்திப்பட்டால்தான் உண்டு... பெண்ணிடம், ஆண் ஒடுங்க வேண்டும்... இதுதான் சித்த வைத்தியத்தின் கோட்பாடு... இதனால்தான் சித்தர்கள், மருந்துப் பொருட்களை தாய் சரக்கு, தந்தை சரக்கு என்று பிரித்தார்கள். தாய் சரக்கில் தந்தைச் சரக்கு மடிந்தால்தான் மருந்து கிடைக்கும்...” “உதாரணமாய், கந்தகம் தாய்ச் சரக்கு... பாதரசம் தந்தைச் சரக்கு... பாதரஸத்தை பஸ்பமாக்கி, அதை கந்தகத்தோடு சேர்த்து அரைக்க வேண்டும். இதனால் பாதரசம் மாண்டு, கந்தகத்துடன் இணைகிறது. சத்ரு எதிர்நிலை கொண்டது. சத்ரு... தாய் நன்மை தரும் மித்ரு... மித்ருவைக் கொண்டு, சத்ருவை மடியச் செய்யவேண்டும். சத்ருவான விந்தை, மித்ருவான நாதத்தில் ஒடுங்கச் செய்ய வேண்டும்... அதுவே தாம்பத்ய உறவு... ஆகையால் இந்த உறவில் மனைவியை அடக்க நினைக்காதே... அடங்க நினை... இப்படிச் சொல்வதால், மனைவியை அவள் போக்கில் அடாவடியாய் விடலாம் என்று இல்லை... அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் அவளைப் பப்ளிக்காய் அடக்கணும் ஆனால், பிரைவேட்டாய் அடங்கணும்... போகட்டும்... எனக்கு என்ன வயது இருக்கும்..?” “எழுபது.” “என் வயது எண்பது... இன்னும் ஒரு பல் போகல கண்ணுக்கு கண்ணாடி போடல. ஏன் இளமையிலேயே கட்டுப்பாடான<noinclude></noinclude> oeptkpkedt1vpsk9xe3ejdpu85cbq8e பக்கம்:ஒத்தை வீடு.pdf/52 250 202413 1837243 762345 2025-06-30T04:25:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||51}}</noinclude>பிரம்மச்சரியம்... தியானம்... யோகாசனம்... அடுத்த தடவை வரும்போது உனக்கும் சொல்லித்தாறேன்... அதுக்கு முன்னால ஒன்று சொல்றேன்... கவனமாய்க் கேள்... உச்சம் வரும்போது மூக்கின் நுனியைப் பார்... புருவ மத்தியைப் பார்... சரி போய் வா...” மனோகர், அங்கேயே இருக்கப் போவதுபோல் நின்றான்... வைத்தியர் நாற்காலியில் உட்கார்ந்து பதார்த்த குண சிந்தாமணிப் புத்தகத்தைப் புரட்டியபோது, அவன், அவர் தனக்கு மேற்கோள் காட்டப் போவதாய் அனுமானித்து அவரைப் பார்த்தான். என்றாலும், வைத்தியர் அந்தப் புத்தகத்தில் மூழ்கியபோது, மனோகர், மனதுள் மூழ்கியபடியே, இப்போது நடந்தான்... மூக்கு நுனியைப் பார்த்தபடியே தொடர்ந்தான்... போகப் போக, அந்த வைத்தியசாலையில் கிடைத்த நிம்மதி சுருங்கியது... சுருங்கிச் சுருங்கி, சுருக்கம் தெரியாமலே போய் விட்டது. மனதில் மீண்டும் குழப்பம். ‘இந்த மருந்து பலிக்கா விட்டால் எந்த மருந்தும் பலிக்காது... என்றாரே... ஒருவேளை பலிக்காமல் போனால்... செய்முறைப் பழக்கம் உடலின் சமச்சீர் நிலையைப் பாதிக்கும்... என்றாரே... பாதித்திருக்குமோ... நாத விந்துக்கு அவ்வளவு மகிமையா... குப்புறப் படுத்த பழைய நாட்கள், பகை நாட்களே... போனது போனதுதானோ... குரல் உடைந்துபோனதற்கு, அதுதான் காரணமோ. இதனால்தான் டெலிபோனில் வரும் சிலர், அவனை அடையாளம் தெரியாமலேயே மேடம் என்கிறார்களோ, மேடமா... மடமா... மோசம் போனேனே... நாசமானேனே...’ {{dhr|2em}} <section end="4"/><section begin="5"/> {{larger|<b>5</b>}} {{dhr|2em}} மனோகர், வீட்டுக்குத் திரும்பியபோது, முற்றத்தில் அம்மா... திண்ணை விளிம்பில் அக்கா... திண்ணைச் சுவரில் சாய்ந்தபடி சங்கரி... அம்மா முகத்தில் எள்ளும் கொள்ளும்; அக்கா முகத்தில் புருவச் சுழிப்புகள்... அவள் முகத்தில் கண்ணிர் வெள்ளம்... மனோகர் அதட்டினான் தேக்கிவைத்த வெறுப்பையெல்லாம் சினமாகக் கக்கினான். “என்ன இதெல்லாம்.” அக்காக்காரி கரங்களைப் பிசைந்தபோது, அம்மாக்காரி அசுரக் கோபத்துடன் பதிலளித்தாள் மருமகளைச் சுற்றி மானசீகமாக<noinclude></noinclude> 5waplxinbi07vk1gq2prgji776tfrnv பக்கம்:ஒத்தை வீடு.pdf/53 250 202415 1837248 762346 2025-06-30T04:32:51Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|52||ஒத்தை வீடு}}</noinclude>ஒற்றைக் குற்றவாளிக் கோட்டை போட்டபடியே குரலிழகப் பேசினாள். “லீவு நாளும் அதுமா... வீட்டைவிட்டுப் போறானே... என்னம்மா நடந்ததுன்னு கேட்கப் போனேன்... என் பிள்ளையைக் காணோமேன்னு நான் பட்டபாடு... எனக்குத்தான் தெரியும்... பெத்தவளுக்குத் தெரியுறது மத்தவளுக்குத் தெரியலியே... ஒரு மாமியார், மகன் எங்கே போனான்னு மருமககிட்ட கேட்கப் படாதா... எப்படியோ போகட்டும்... அக்கா விஷயம் என்னாச்சு... அந்தப் பயல்களைச் சும்மா விடப்படாது.” “எம்மா! எந்த நேரத்துல, ஒனக்கு, எதைப் பேசுவதுன்னு விவஸ்தை இல்லையா...? சங்கரி... எதுக்காக ஒப்பாரி வைக்கிறே... யதார்த்தமாத்தானே கேட்டிருக்காங்க...” சங்கரியால் கட்டுப்படுத்த முடியவில்லை... கண்ணீரும் கம்பலையுமாய் அழுதழுது சொன்னாள். “அப்படிக் கேட்டால் தப்பில்லதான்... ஆனால் அப்படிக் கேட்கலியே... நான் ஒங்களை வீட்ட விட்டுத் துரத்திட்டேனாம்... நான் இந்த வீட்டுக்கு வந்ததிலேருந்து, நீங்க பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டிங்களாம்... எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியும்... சொல்லுங்க... ஒங்கள நானா துரத்துறேன்? வேணுமுன்னால் எங்க வீட்டுக்குப் போயிடுறேன்...” மனோகர், பீறிட்டுக் கத்தினான். சுவரில் முகம் போட்டு நீர்க் கோடுகள் போடுகிறவள், திடுக்கிட்டுத் திரும்பும்படிக் கத்தினான். “ஏன் ஊரக் கூட்டுறது மாதிரி ஒப்பாரி போடுறே... சரியான காட்டுமிராண்டி... தாய்வீட்டுக்கு ஒரேயடியாய் வேணுமுன்னாலும் போயேன்... நான் தடுக்கல...” சங்கரி, சுவரோடு, சுவராய் உறைந்து நின்றாள்... இந்த மூன்று மாத காலத்தில், அவனிடமிருந்து கேட்டறியாத வார்த்தை அந்த அதிர்ச்சியில், அழுகை, திரவத்தில் இருந்து திடநிலைக்கு வந்தது... ஆனாலும், சொர்ணம்மவுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி... மகனின் சட்டையில் ஒட்டிய தூசி தும்புகளைத் தட்டிவிட்டாள். மனோகருக்கும், ஓரளவு திருப்தி. கட்டிய மனைவியை பப்ளிக்காய் அடக்கி விட்டானே!{{nop}}<noinclude></noinclude> 2iyzh6xiuz9q0gm9m13d9bjgd8hdmbr 1837249 1837248 2025-06-30T04:34:56Z மொஹமது கராம் 14681 1837249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|52||ஒத்தை வீடு}}</noinclude>ஒற்றைக் குற்றவாளிக் கோட்டை போட்டபடியே குரலிழகப் பேசினாள். “லீவு நாளும் அதுமா... வீட்டைவிட்டுப் போறானே... என்னம்மா நடந்ததுன்னு கேட்கப் போனேன்... என் பிள்ளையைக் காணோமேன்னு நான் பட்டபாடு... எனக்குத்தான் தெரியும்... பெத்தவளுக்குத் தெரியுறது மத்தவளுக்குத் தெரியலியே... ஒரு மாமியார், மகன் எங்கே போனான்னு மருமககிட்ட கேட்கப் படாதா... எப்படியோ போகட்டும்... அக்கா விஷயம் என்னாச்சு... அந்தப் பயல்களைச் சும்மா விடப்படாது.” “எம்மா! எந்த நேரத்துல, ஒனக்கு, எதைப் பேசுவதுன்னு விவஸ்தை இல்லையா...? சங்கரி... எதுக்காக ஒப்பாரி வைக்கிறே... யதார்த்தமாத்தானே கேட்டிருக்காங்க...” சங்கரியால் கட்டுப்படுத்த முடியவில்லை... கண்ணீரும் கம்பலையுமாய் அழுதழுது சொன்னாள். “அப்படிக் கேட்டால் தப்பில்லதான்... ஆனால் அப்படிக் கேட்கலியே... நான் ஒங்களை வீட்ட விட்டுத் துரத்திட்டேனாம்... நான் இந்த வீட்டுக்கு வந்ததிலேருந்து, நீங்க பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டிங்களாம்... எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியும்... சொல்லுங்க... ஒங்கள நானா துரத்துறேன்? வேணுமுன்னால் எங்க வீட்டுக்குப் போயிடுறேன்...” மனோகர், பீறிட்டுக் கத்தினான். சுவரில் முகம் போட்டு நீர்க் கோடுகள் போடுகிறவள், திடுக்கிட்டுத் திரும்பும்படிக் கத்தினான். “ஏன் ஊரக் கூட்டுறது மாதிரி ஒப்பாரி போடுறே... சரியான காட்டுமிராண்டி... தாய்வீட்டுக்கு ஒரேயடியாய் வேணுமுன்னாலும் போயேன்... நான் தடுக்கல...” சங்கரி, சுவரோடு, சுவராய் உறைந்து நின்றாள்... இந்த மூன்று மாத காலத்தில், அவனிடமிருந்து கேட்டறியாத வார்த்தை அந்த அதிர்ச்சியில், அழுகை, திரவத்தில் இருந்து திடநிலைக்கு வந்தது... ஆனாலும், சொர்ணம்மவுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி... மகனின் சட்டையில் ஒட்டிய தூசி தும்புகளைத் தட்டிவிட்டாள். மனோகருக்கும், ஓரளவு திருப்தி. கட்டிய மனைவியை பப்ளிக்காய் அடக்கி விட்டானே!<section end="5"/>{{nop}}<noinclude></noinclude> gxb252guc9xkq13bow7xdvzolm3f78n பக்கம்:ஒத்தை வீடு.pdf/54 250 202417 1837253 762347 2025-06-30T04:56:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="6"/> {{larger|<b>6</b>}} {{dhr|2em}} சங்கரி, கட்டிலில் குப்புறக் கிடந்தாள். கண்களை மூடி, இருளில் வியாபித்தாள். மத்தியானம் சாப்பிடவே இல்லை. மாடிப்படி ஏறி வந்தவள், கட்டிலில் துக்க மயக்கத்தில் தொப்பென்று விழுந்தாள். அதுவே தூக்க மயக்கமானது. அண்ணி காந்தாமணி, மாடிக்கு வரத்தான் செய்தாள். அவளைச் சாப்பிட வரும்படி கூப்பிடத்தான் செய்தாள். எப்படி வயிற்றுக்குள் சோறு இறங்கும். அந்தப் பேச்சையும், ஏச்சையும் மாமியாரிடமிருந்து கேட்ட பிறகு, தன்னால் சாப்பிட முடியும் என்று அண்ணி நினைத்தது, அதைவிடக் கொடுமை. சங்கரி, சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்தாள். மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டாயா என்று, ஆம் அல்லது இல்லை என்று சொல்லும்படி கட்டாயப்படுத்துவது போன்ற இக்கட்டான நிலைமை. ஆட்டையும் புல்லுக் கட்டையும், புலியையும் சேதாரமில்லாமல் சேர்க்கவேண்டியதுபோன்ற பொறுப்பு. பொறுப்பற்றவளுக்கு பதில் சொல்ல முடியாத பரிதவிப்பு. அந்த மூன்று நாட்கள் முடிந்த இன்று சங்கரி மஞ்சள் தேய்த்து சாவகாசமாய்க் குளித்து விட்டு கூந்தலுக்கு வெள்ளைத் துணியால் கட்டுப் போட்டு, பூஜை அறைக்குள் நுழைந்தாள். மூன்று நாட்களாய்ப் பார்க்க முடியாமல் போன தெய்வப் படங்களை, தீபம் ஏற்றி, கற்பூரம் கொளுத்திக் கொண்டிருந்தபோது, அதற்கு மரணமணி அடிப்பது போல் மாமியார் கத்தினாள். ஒவ்வொருத்திக்கு கல்யாணத்துக்குப் பிறகு, குழந்தை உண்டாகாட்டாலும், பத்து நாளாவது நின்னு வரும். இந்த வீட்ல என்னடான்னா டாண்னு வந்துடுது என்ன பொம்பளையோ... சாதகப் பொருத்தம் சரியாக இருக்குன்னு சொன்னவனைச் செருப்பால அடிக்கணும்... சங்கரி கற்பூரத்தட்டை சுற்றாமல், சுழற்றாமல், கீழே வைத்தாள். பூஜை மணியை அலட்சியப் படுத்தினாள். ஏதேச்சயாய்க் குங்குமம் எடுத்தவள் வழக்கப்படி அதை நெற்றியில் பொட்டாக்கி திருமாங்கல்யத்தில் ஒரு புள்ளியாக்குகிறவள், குங்குமத்தைப் பீடத்தில் சிதறடித்தபடியே, வெளியே வந்தாள். மாமியாரை முறைத்துப் பார்த்தாள். அவளோ, சண்டைக் கோழியாய் கைகளை மடித்து விலாவில் தட்டியபோது. சங்கரி பொறுமை இழந்தாள் ‘இனிமேல் எது கேட்கணுமுன்னாலும் ஒங்க பிள்ளைகிட்ட<noinclude></noinclude> 2naagh9p92pv5a0188e4l2zlq1yuuhq பக்கம்:ஒத்தை வீடு.pdf/55 250 202419 1837254 762348 2025-06-30T05:02:20Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|54||ஒத்தை வீடு}}</noinclude>கேளுங்க... என்கிட்ட கேட்டால் மரியாதை போயிடும்...’ என்றாள். பிறகு, தான் சொன்ன வார்த்தைகளைத் தானே நம்பமுடியாமல், சிறிது கால்களைத் தேய்த்தபடியே நின்றுவிட்டு, மாடிக்கு வந்தவள்தான். சிற்றுண்டியும் சாப்பிடவில்லை. மத்தியானச் சாப்பாடும் வரவும் இல்லை. இவள் போகவும் இல்லை. பசிமயக்கம் எடுத்தாலும் அந்த மயக்கத்தை ஏதோ ஒரு விதச் சூன்யம் விழுங்கி விட்டது. மனதில் இருக்கும் பாரத்தை இறக்கிப் போட, உமாவும் வருவதில்லை. உறவோ பகையோ அற்ற நிலைமை. அன்று அவள் கணவனிடம் அவர் அப்படிப்பட்டவர் இல்லை... ஏதோ டென்ஷன்ல சொல்லிட்டார்... தப்பா நினைக்காதிங்க... என்று சொன்னபோது, இந்திரன் போட்ட பார்வை சரியாகப் படவில்லை. அவர் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியுமென்று அவன் சொன்ன பதில் சொன்ன தோரணையும், என்னவோ போல் இருந்தது. யானை சேறில் சிக்கினால் தவளை கூடக் கிண்டல் செய்யுமாம். சங்கரி தனிமையில் தவித்தாள். இந்த உலகில் அவள் மட்டுமே தனித்திருப்பதாய் ஒரு அனுமானம். சபிக்கப்பட்டது போன்ற உறுத்தல். சாப விமோசனம் எப்போ கிடைக்குமோ என்ற ஏக்கம். திடீரென்று, அவள் காதில் ஏதோ உரசுவதுபோல் தோன்றியது. திடுக்கிட்டுக் கண்விழித்தால், ஒரு இலைப் பொட்டலம். மல்லிகைப் பூவாய் துருத்திக் கொண்டிருந்தது. ஏறிட்டுப் பார்த்தால், மனோகர்! அவளுக்கு முதுகு காட்டி வீராப்பாய் நின்றான். அந்தப் பொட்டலத்தையும், விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் நின்றவனையும் மாறி மாறிப் பார்த்த சங்கரி, குலுங்கப் போனாள். அவனைக் கட்டிப் பிடித்து தோளில் சங்கமமாக நினைத்தவளாய் எழுந்தாள். ஆனாலும், பழைய கசப்பு, புதிய இனிப்பை சேதாரம் செய்தது. காட்டுமிராண்டி மாதிரி ஏன் அழுகிறே என்று கேட்டாலும் கேட்பார். இதனால் மேலும் பத்து நாட்கள் சூன்யமாகலாம். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. மனோகர் முன்பக்கம் அற்றுப்போனவன் போல் முதுகு காட்டி நின்றான். அவளோ, கட்டிலில் உட்கார்ந்தபடியே விரல்களுக்குச் சொடுக்குப் போட்டாள். அந்த மல்லிகைச் சரத்தை பொட்டலத்திலிருந்து விடுவிக்கப் போனாள். பொட்டலத்தைச் சுற்றிய வாழை நாரை அவிழ்க்க முடியவில்லை பல்லால் கடித்துப் பார்த்தால், அந்தப் பல்லுக்குத்தான் வலி. பொட்டலமும் கலைய வேண்டும் பூவும் நிலைக்க வேண்டும். எப்படி... எப்படி...{{nop}}<noinclude></noinclude> cz0uh1v3vdgsstj7ru38kltyve26zqv பக்கம்:ஒத்தை வீடு.pdf/56 250 202421 1837255 762349 2025-06-30T05:08:55Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||55}}</noinclude>மனோகர், அவளுக்கு முகம் காட்டவில்லைதான்; என்றாலும், சங்கரிக்கு ஒரு நிம்மதி. ஆனந்தமான அதிர்ச்சி. மாமியாரின் கிரியா சக்தியால் பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கணவன் மனைவி யுத்தம் முடிவுக்கு வரப்போகிற மகிழ்ச்சி அன்று அவன், ஒரு தரப்பாக போர் தொடுத்த பிறகு, இன்றுவரை அவர்கள் பேசிக்கொள்வதில்லை அன்று முதல் அவள் கட்டிலில் உடல் கொள்ளாமல் தரையில் படுத்தாள் அவனோ, அவள் இருப்பதாக அனுமானிக்கவே இல்லை. மறுநாள் அவள் காப்பி கொண்டு வரவில்லை. அவன் துணிமணிகளுக்கு இஸ்திரி போடவில்லை. ஆனாலும், மாமியார்க்காரி ‘நானிருக்கேன் ராசா...’ என்று கத்தியபடியே படுக்கை அறைக்கே காப்பியோடு வந்தாள் இரண்டாவது நாளும் இப்படியே. மூன்றாவது இரவில், அவன் வருவதற்கு முன்பே, கட்டிலில் படுத்தாள். அவனோ தரையில் படுத்துக் கொண்டான். மறுநாள் காலையில் மாமியாரை வாசலிலேயே நிறுத்தி அவள் கையிலிருந்த டம்ளரை வலுக்கட்டாயமாக பறித்து, அவனிடம் நீட்டினாள். அவன் குளித்து முடித்து சீவிச் சிங்காரித்து ஒரு அழுக்குப் பேன்டை போடப்போன போது, அவள் அதை வெடுக்கென்று பறித்துவிட்டு, அலமாரியில் தயாராயிருந்த ஒரு நீலப் பேன்டைத் தூக்கி, அவன்மேல் எறிந்தாள். அதற்கு இணையாக பால் வெள்ளைச் சட்டை ஒன்றை அவன் தோளில் தொங்கப் போட்டாள் மறு இரவில், அவன் கட்டிலில் படுத்தபிறகு பக்கத்தில் படுத்தாள். அவனோ கல்லுப் பிள்ளையாராய்க் கிடந்தான். அவள் அழுது பார்த்தும் அவன் அசைவில்லை. இன்றைக்கு என்ன ஆச்சு. எப்படி இந்தப் பூப்பழக்கம்... அவள் தேன் கொண்ட பூவாய் மலர்ந்தாள். முதுகை முகமாக்காதவனை நினைக்க, நினைக்க சிரிப்பு வந்தது. செல்லமாகச் சிணுங்கினாள். “பூவுக்கு மட்டும் குறைச்சலில்லை...” மனோகர், குறைபட்டவன்போல் திரும்பினான். ‘என்ன சொல்கிறாள்... அந்த குறைச்சலைச் சொல்லாமல் சொல்லுகிறாளோ...’ சங்கரி, அவனைச் சீண்டினாள். “யாருக்கு வேணும் இந்தப் பூவு...? பிச்சைக்காரிக்கு எறிந்தது மாதிரி எறிந்தால் என்ன் அர்த்தம்...? வச்சா தலையிலே வைக்கணும்.” மனோகரின் முகக்கடுமை இளகியது. முணுமுணுப்பு புன்முறுவலானது வைத்தியர் சொன்னதுபோல், அந்தச் சண்டையையே ஒரு சாக்காக்கி. பத்து நாட்களாய் பல்லைக்-<noinclude></noinclude> lxu4f4x3jvggxm0e6srlrad84z490wp பக்கம்:ஒத்தை வீடு.pdf/57 250 202424 1837256 762350 2025-06-30T05:18:15Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|56||ஒத்தை வீடு}}</noinclude>கடித்துக் கொண்டிருந்தவன், பதினோராவது நாளான இன்று அவன் உடம்பு முறுக்கேறியிருந்தது. பார்வை மதப்பானது. எப்படியோ அவளுக்குத் தெரியாமல் சாப்பிட்ட மருந்து இன்றிரவு அவளுக்குத் தன்னை தெரியப்படுத்தும். மனோகர், அவளை நம்பிக்கையோடு நெருங்கினான். அந்தப்பூப் பொட்டலத்தை பல்லால் நார் உரித்து விடுவித்தான். தலையை கைகளால் மூடிக் கொண்டவளை, தன் மார்பில் கிடத்தினான். அவள் கைகளை தன் கைகளால் இறக்கினான். பிறகு அந்தப் பூவை அவள் தலையில் சூடினான். அவள் வீறாப்பாய் தலையை ஆட்டியபோது, அவன் கைபட்டு சில பூக்கள் கசங்கின. தலையில் சூடிய பூ கட்டிலில் விழுந்தது. அவள் செல்லமாக ஒரு பூவைக்கூட வைக்க முடியலே... என்று சொன்னபோது, அவன் உடல் முறுக்கு லேசாய்த் தளர்ந்தது. மனம் வாதைப்பட்டாலும், உடல் அவள் பக்கமாய்ச் சாய்ந்தது. நடுக்கமற்ற சாய்வு... நம்பிக்கை போகாத அணைப்பு... அவள், அவன் பக்கமாகத் திரும்பி அவன் தோள்களைப் பற்றியபோது... மாமியாரின் கனைப்புக்குரல் கேட்டது. வாசலுக்கு வெளியே உடம்பையும், உள்ளே தலையையும் போட்டுக் கொண்டு நின்றாள். “அக்கா விஷயம் என்னடா ஆச்சு...” என்றாள். சங்கரி, மாமியாரை ஏறிட்டுப் பார்க்கவில்லை. கணவனின் தோள்களைப் பற்றிய கைகளை அகற்றவில்லை. ‘பார்த்தால் பார்க்கட்டும்’ ஆனாலும், மனோகர் அவள் கரங்களை அவசர அவசரமாக எடுத்துப்போட்டான் அம்மா பக்கம் போய், அவளை எரிச்சலாய்ப் பார்த்தான். உடனே அவள், “காந்தாமணியோட கொழுந்தன் லெட்டர் போட்டிருக்கான். ‘மனோகர் பயலால என்ன செய்ய முடியுமுன்னு பார்க்கத்தான் போறோம். வண்டிப் பாதை வண்டிப் பாதைதான்... அவன் ஆபீசரா இருக்கலாம். ஆனால், எங்க ஊருக்கு, அவன் ஒரு இரப்பாளிப் பயதான்னு’ ஊரு முழுக்கச் சொல்லிட்டு வாரானாம்... இந்த ராமசாமிப் பய... எல்லாம் நீ கொடுக்கிற இளக்காரம்... அவனை கைவிலங்கு கால்விலங்கு போட்டு ஜெயிலில அடைச்சிருந்தா இப்படிப் பேசுவானா...? ஒன்னால முடியும். ஆனால், மனசுதான் இல்ல. சரிசரி... சாப்பாடு சூடு ஆறிடும்... வந்து சாப்பிட்டுட்டு அப்புறம் கொஞ்சுங்க குலாவுங்க... என்றாள்.” மனோகர், அம்மாவின் முதுகைத் தள்ளிக்கொண்டே படியிறங்கினான். சங்கரி, அவனை மாமியாரிடம் ஒப்படைக்க விரும்பாதவள் போல் கணவனைப் பின் தொடர்ந்தாள். தம்பியையும், நாத்தனாரையும் ஒருசேரப் பார்த்த காந்தாமணிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அவன் மாடிக்குப்<noinclude></noinclude> e4gl2lyfhf0g8kmbo3nama6ew83rnwx பக்கம்:ஒத்தை வீடு.pdf/58 250 202426 1837257 762351 2025-06-30T05:25:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||17}}</noinclude>போகும்போது பேன்ட் பை உப்பி இருந்ததைப் பார்த்தவள். அதுவே இப்போது நாத்தனார் கொண்டையை உப்ப வைத்திருந்தது கண்டு ஆனந்தித்தாள். தம்பியையும், தம்பி மனைவியையும், இருவர் தோளையும் அழுத்தி சின்னச் சின்ன சதுரப்பாய் இருக்கைகளில் உட்கார வைத்தாள். பரிமாற எழுந்த சங்கரியை, கண்ணால் அதட்டி உட்கார்ந்த இடத்திலேயே உட்கார வைத்தாள். முட்டைப் பாயாசம் போடாமல் போனோமே என்று, தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டாள். நெத்திலிக்கருவாடு குழம்பு... முருங்கைக்காய் சாம்பார்... எண்ணைக் கத்தரிக்காய்ப் பொரியல்... இருவரும் ரசித்துச் சாப்பிட்டார்கள். மனோகரும், சங்கரியும் ஈரக் கைகளைத் துடைத்தபடியே ஜோடியாய் மாடிப்படிகளில் ஏறப்போனபோது, மாமியார் மகனின் கையைப் பிடித்துக் கொண்டாள். “இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்... அக்காவுக்கு உதவப் போறியா இல்லியா... அந்த வண்டிப் பாதையை தடந்தெரியாம அழிக்கப் போறியா இல்லியா... ராமசாமிப்பயல ஜெயிலுல போடப்போறியா இல்லியா... இப்பவே எனக்குத் தெரிஞ்சாகனும்... உன்னால முடியாட்டா, நான் ஊருக்குப் போகப்போறேன்... என்று கத்தோ கத்தென்று கத்தினாள். காந்தாமணியோ, அம்மாவை ஒப்புக்குத் திட்டுவது போல் திட்டினாள்.” சங்கரிக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல். அந்தச் சிவபூஜைக் கரடிகளை கண்களால் எரித்துவிட்டு, சலிப்போடு மாடிக்கு வந்தாள். மொட்டை மாடியில் அங்கும் இங்குமாய் சுற்றினாள். கீழே சத்தம் கத்தலாகியது. அந்தக் கத்தலை மீறி தெற்குப்பக்க வீட்டு மாடியில் ஒரு முக்கல் முனங்கல். ‘என்னை விட்டுடு... எவ்வளவு நேரமுய்யா...? வாட்ச்மேன் வந்திடப் போறான்... அட விடுய்யா... இந்தா பாரு... நான் அப்புறம் வரவே மாட்டேன்...’ சங்கரி, மொட்டை மாடியின் மதில் சுவர் விளிம்பில் கை ஊன்றி எதிர்ப்பக்கத்து வீட்டை ரசனையோடு பார்த்தாள். இவள், இந்த வீட்டுக்கு வந்தபோது, காலியாக இருந்த மனை, இப்போது அடுக்கு மாடி கட்டிடமாகிக் கொண்டிருந்தது. முதல் மாடியில்தான், இந்த அமர்க்களம். ஒரு மரத்தில் தங்கும் பறவைகள் போல் கீழ்த்தளத்தில் தொழிலாளர்கள் தங்கியிருக்கிறார்கள். ‘அவன், வேறு ஏதோ ஒரு கட்டிடத்தில் வேலை பார்க்கும் ‘பெரியாள்’... அவள், இந்தக் கட்டிடத்தில் வேலை பார்க்கும் ‘சித்தாள்’ வாரம் இரண்டு தடவை நடக்கும் கூத்து இது. இவள் சாப்பிடப் போவதற்கு முன்பே அந்த கட்டிட முதல் மாடியில் சத்தம் கேட்டது. இன்னுமா முடியல... அடே யப்பா... எப்படி இவ்வளவு நேரம்... உமா<noinclude></noinclude> 9o75s9s7yn8bo3g4hd8v240tfhpkaik 1837258 1837257 2025-06-30T05:25:35Z மொஹமது கராம் 14681 1837258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||57}}</noinclude>போகும்போது பேன்ட் பை உப்பி இருந்ததைப் பார்த்தவள். அதுவே இப்போது நாத்தனார் கொண்டையை உப்ப வைத்திருந்தது கண்டு ஆனந்தித்தாள். தம்பியையும், தம்பி மனைவியையும், இருவர் தோளையும் அழுத்தி சின்னச் சின்ன சதுரப்பாய் இருக்கைகளில் உட்கார வைத்தாள். பரிமாற எழுந்த சங்கரியை, கண்ணால் அதட்டி உட்கார்ந்த இடத்திலேயே உட்கார வைத்தாள். முட்டைப் பாயாசம் போடாமல் போனோமே என்று, தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டாள். நெத்திலிக்கருவாடு குழம்பு... முருங்கைக்காய் சாம்பார்... எண்ணைக் கத்தரிக்காய்ப் பொரியல்... இருவரும் ரசித்துச் சாப்பிட்டார்கள். மனோகரும், சங்கரியும் ஈரக் கைகளைத் துடைத்தபடியே ஜோடியாய் மாடிப்படிகளில் ஏறப்போனபோது, மாமியார் மகனின் கையைப் பிடித்துக் கொண்டாள். “இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்... அக்காவுக்கு உதவப் போறியா இல்லியா... அந்த வண்டிப் பாதையை தடந்தெரியாம அழிக்கப் போறியா இல்லியா... ராமசாமிப்பயல ஜெயிலுல போடப்போறியா இல்லியா... இப்பவே எனக்குத் தெரிஞ்சாகனும்... உன்னால முடியாட்டா, நான் ஊருக்குப் போகப்போறேன்... என்று கத்தோ கத்தென்று கத்தினாள். காந்தாமணியோ, அம்மாவை ஒப்புக்குத் திட்டுவது போல் திட்டினாள்.” சங்கரிக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல். அந்தச் சிவபூஜைக் கரடிகளை கண்களால் எரித்துவிட்டு, சலிப்போடு மாடிக்கு வந்தாள். மொட்டை மாடியில் அங்கும் இங்குமாய் சுற்றினாள். கீழே சத்தம் கத்தலாகியது. அந்தக் கத்தலை மீறி தெற்குப்பக்க வீட்டு மாடியில் ஒரு முக்கல் முனங்கல். ‘என்னை விட்டுடு... எவ்வளவு நேரமுய்யா...? வாட்ச்மேன் வந்திடப் போறான்... அட விடுய்யா... இந்தா பாரு... நான் அப்புறம் வரவே மாட்டேன்...’ சங்கரி, மொட்டை மாடியின் மதில் சுவர் விளிம்பில் கை ஊன்றி எதிர்ப்பக்கத்து வீட்டை ரசனையோடு பார்த்தாள். இவள், இந்த வீட்டுக்கு வந்தபோது, காலியாக இருந்த மனை, இப்போது அடுக்கு மாடி கட்டிடமாகிக் கொண்டிருந்தது. முதல் மாடியில்தான், இந்த அமர்க்களம். ஒரு மரத்தில் தங்கும் பறவைகள் போல் கீழ்த்தளத்தில் தொழிலாளர்கள் தங்கியிருக்கிறார்கள். ‘அவன், வேறு ஏதோ ஒரு கட்டிடத்தில் வேலை பார்க்கும் ‘பெரியாள்’... அவள், இந்தக் கட்டிடத்தில் வேலை பார்க்கும் ‘சித்தாள்’ வாரம் இரண்டு தடவை நடக்கும் கூத்து இது. இவள் சாப்பிடப் போவதற்கு முன்பே அந்த கட்டிட முதல் மாடியில் சத்தம் கேட்டது. இன்னுமா முடியல... அடே யப்பா... எப்படி இவ்வளவு நேரம்... உமா<noinclude></noinclude> 1mq401cq865utek8e064m4t29hbjw1i பக்கம்:ஒத்தை வீடு.pdf/59 250 202428 1837259 762352 2025-06-30T05:34:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|58||ஒத்தை வீடு}}</noinclude>என்னடான்னா ஒரு மணி நேரம் புரட்டினதாச் சொல்றாள்... இங்கே என்னடான்னா அதைவிட அதிக நேரம் ஆகும் போல இருக்கு... இன்னும் ஓயல... பாவம்... பாவப்பட்டதுகள். சந்தோஷமாய் இருந்துட்டு போகட்டும் ஆமாம்... பாவப்பட்டது யார்...?’ என்றாலும், சங்கரிக்கு மகிழ்ச்சிதான் வீட்டுக்காரன் பேசிவிட்டான் என்பதால் மட்டுமல்ல. இன்றைக்கு அவன் பிடி அசத்தலாயிருந்தது முகத்தில் கூட ஒரு மலர்ச்சி. அவரோட அழகுக்கு வேற சொர்க்கம் இருக்க முடியாது. சங்கரி, அந்த மொட்டை மாடியையே சுற்றிச் சுற்றி வந்தாள். படிகளில் இறங்கி பக்குவமாகப் பார்த்தாள். சத்தம் ஓய்ந்தது. அண்ணி அழுது கொண்டிருந்தாள். மாமியார் மூலையில் சாய்ந்து கிடந்தாள் ‘அவரோ’ அக்காவின் கைகளைப் பிடித்து ஏதோ பேசுகிறார். அம்மாக்காரி ஓடி வந்து அந்தக் கையைத் தட்டி விடுகிறாள் விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்... பாவம் அவரு... கீழே போய் ரெண்டு கேள்வி கேக்கலாமா... வேண்டாம் ஒருவேளை அவரு காட்டுமிராண்டினு கத்திடப்படாது... சங்கரி, சலிப்போடு அறைக்கு வந்து, மல்லாக்கப் படுத்தாள். குப்புறப் புரண்டாள். ஒரு பக்கமாய் குடை சாய்ந்தாள். திடீரென்று அவள் உடலோடு உடல் உரசியது. தோளில் ஒரு முகம் விழுந்தது ஆனந்தமாய் திரும்பினாள். அவன், அவளை அங்கும் இங்குமாய் உருட்டினான். அவள் இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு... என்று திக்கித் திக்கிச் சொன்னபடி அவன் தலையைச் செல்லமாகக் குட்டினாள் குட்டிய தலையைக் கோதிவிட்டாள் கழுத்துக்குள் தன் முகத்தைப் பதியவிட்டாள்... அவள் ஆடைகள் அறைகுறையாகின. அந்தச்சுரணை இல்லாமலேயே அவள் அரை மயக்கத்தில் கிடந்தாள்... உடம்பு கனத்தது... ஒரு சுமை. சிறிது நேரத்தில் கனம் தெரியாமல் போன சுகமான சுமை... அவன் கழுத்தை வளைத்துக்கொண்டு ஐ லவ் யூ... ஐ லவ் யூ... மனோ... என்று உளறுவது போல் உணர்ச்சிகளை கொட்டினாள் ஒரே ஒரு நிமிடத்திற்கும் குறைவே... மனோகர், குழைந்து போனான்... அப்படிப் போகப்போக, அவனுக்கு, அவள் வெறும் சதைப் பிண்டமாகத் தெரிந்தது அவளுக்கும், அவன் சுமையாகப்பட்டது. அவளே அவனை கீழே தள்ளிப் போட்டாள். பிடித்ததும் பிடிபட்டதும் பொய்யாய், பழங்கதையாய் போனது அவள் அந்த இருட்டில் அவனை எரிச்சலோடு பார்த்தாள். வீம்புக்குதன் மேல் சாயப் போனவனை ஒரு தள்ளு தள்ளிவிட்டு, படுக்கையில் உட்கார்ந்தாள் அவனாவது சும்மா இருந்திருக்கலாம் அந்தச் சமயம் பார்த்து நெருப்புக் கோழியாய் ஒரு கேள்விக்குள் தன்னை மறைத்துக் கொண்டதாய் தன்னை நினைத்துக் கொண்டான்.{{nop}}<noinclude></noinclude> d2mcqsykrn6impvyhgl8vika5hcaaoz பக்கம்:ஒத்தை வீடு.pdf/60 250 202430 1837260 762354 2025-06-30T05:42:02Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||59}}</noinclude>“ஆமா... நான்தான் எங்கம்மா பித்துக்குளின்னு சொல்லியிருக்கேனே.. காலையில் அவளுக்குப் போட்டியா கூடக் கூடப் பேசினியாமே...” சங்கரி, வெடித்தாள்... எரிமலையான வார்த்தைகள். பூகம்பமாய்ப் போன விமர்சனம்... “எல்லாம் தலைவிதி... ஓங்களால இது முடியலைன்னு சொல்லிட்டுப் போங்களேன்... ஏன் வம்புச் சண்டைக்கு சாக்கு தேடுறீங்க...” சங்கரி, அவனது எதிர்த் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கத் தயாரானது போல் உடம்பை விறைப்பாக்கினாள். முகத்தைக் கடுமையாக்கினாள். வாயில் சில வார்த்தைகளைச் சுமந்தாள் ஆனாலும் அவனிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. ஒரு சின்ன முணுமுணுப்புக்கூட கேட்டகவில்லை. படுக்கைமட்டும் லேசாய் ஆடி அடங்கியது... எல்லாமே அடங்கிப்போன அல்லது அடக்கப்பட்ட வெறுமை. காலம் நிமிடங்களாய் கழிந்து கொண்டிருந்தது. சங்கரி, அவன் பக்கமாய்த் திரும்பினாள். ஜன்னல் கம்பிகள் வழியாய் ஊடுருவிய நிலா வெளிச்சத்தில் அவன் மங்கலாய்க் கிடந்தான். கண்களைத் திறந்து வைத்திருந்தான். கைகளை விரித்துப் போட்டிருந்தான்... தற்செயலாய் அவள் காலில்பட்ட தன் காலை அவசர அவசரமாய் இழுத்துக் கொண்டான். திறந்திருந்த கண்களை இமைகளால் பூட்டிக் கொள்ளாமல், கைகளால் மறைத்துக் கொண்டான். சங்கரிக்கு, என்னவோ போலிருந்தது. இப்போதுதான், தான் சொன்னதின் தாத்பரியம் அவளுக்கு முழுமையாய்ப் புரிந்தது போலிருந்தது. ‘ஓடி... ஓடி... புறமுதுகு காட்டியவனை, அப்படி சொற்சூடு போட்டது, தவறு. ஆயிரமிருந்தாலும், அவர் கணவர் அந்தக்குறை தவிர, எந்தக் குறையுமில்லாத மனிதர். அவரை மீறிப்போன செயலின்மை... மனதும் உடம்பும் எதிரெதிராய்போன கொடுமை. ஒன்றோடு ஒன்று மல்லுக்கு நிற்கும் கொடூரமான யதார்த்தம். இந்த இரண்டிற்கும் இடையே, இவர் பிள்ளைப் பூச்சியாய் இடையில் அகப்பட்டுத் தவிக்கிறார். மனமிருந்தும் மார்க்கமற்றத் தன்மை.’ ‘இப்படிப்பட்ட நோயாளி மாதிரியான ஒருவரை நோகடித்தாச்சு... அய்யோ... எனக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு ராட்சஷியா...? அன்றைக்கு அவர் சொன்னது போல் நான் ஒரு காட்டுமிராண்டிதான். மனுஷி இல்லை. இப்படியா கேட்பது...<noinclude></noinclude> nuq4kp859vb3kb5ga9vq4b83lkvlwk4 பக்கம்:ஒத்தை வீடு.pdf/61 250 202432 1837261 762355 2025-06-30T05:49:39Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|60||ஒத்தை வீடு}}</noinclude>கேட்டுட்டேனே... எப்படியோ கேட்டுட்டேனே... புத்தியக் கடன் கொடுத்துட்டேனே... அவர் ஆம்பளையா இல்லாமல் இருக்கலாம்... அதனாலேயே அவர் மனுஷன் இல்லேன்னு ஆயிடுமா... அந்த மனுஷனுக்குள்ள ஒரு மனம் இருக்குமே... அது இப்ப என்ன பாடுபடுதோ... நான் பெண்ணே இல்ல... பிறகு எப்படிப் பெண்டாட்டியா இருக்க முடியும்...’ சங்கரி, அவனைப் பார்த்துப் பார்த்து கைகளை பிசைந்தாள்... பிறகு, தலையில், ஓங்கி ஓங்கி அடித்தாள். மனோகரோ, அவளை ஏனென்று கேட்கவில்லை... தலையைத் தாக்கும் கரங்களைத் தடுக்கவில்லை... அழட்டும்... செத்துப்போனவனுக்கு ஒப்பாரி வைக்கிறாள்... தப்பில்லைதான்.... அவனுள் ஒரு வைராக்கியம். பட்டதுபோதும். இவள் ஒப்பாரிக்கு உருவம் கொடுப்பது போல் செத்துப் போகவேண்டும். ‘ஆணாய் நடக்க முடியாதவன், பிணமாய்த்தான் போக வேண்டும். அதை எப்படிச் செய்வது... எங்கே செய்வது... எப்போது செய்வது...’ {{dhr|2em}} <section end="6"/><section begin="7"/> {{larger|<b>7</b>}} {{dhr|2em}} மனோகர், துணை இயக்குநராய், அலுவலக சுழல் நாற்காலியில் சோர்ந்து போய்க் கிடந்தான். எதிர் நாற்காலிகளில் ஒன்றை மேஜைக்கு இழுத்துப் போட்டு கால்களை நீட்டி போட்டிருந்தான். தலைதட்டும் மெத்தையிட்ட நாற்காலியில் கரங்களை வளைத்துப் போட்டு, அரைக்கண் பார்வையில் கிடந்தான். தூக்கமும் துக்கமும் கலவையாகி அவனை மயக்கிப் போட்டன நினைவுகள் அவனைத் தூக்கிப் போட்டு மிதித்தன. சங்கரி, கண் விழிக்கும் முன்பே எழுத்து முகத்தை மட்டும் கழுவிவிட்டு, ஐந்து மணிக்குப் புறப்பட்டு ஆறு மணிக்கு அலுவலகம் வந்துவிட்டான். பாயில் அப்போதுதான் தூக்கம் கலைத்த அம்மா, அவன் பக்கமாய் ஓடிவந்து, ‘எங்கடா... எங்கடா...’ என்றபோது, அவன் அவளுக்குப் பதிலளிப்பதுபோல் டெலிபோன் எண்களைச் சுழற்றினான். ‘வேதமுத்தா... நான் ஆபீஸ் வாரேன்... நிறைய வேலை இருக்குது... என் ரூமைக் கிளீன் செய்து வை.’ அம்மாக்காரி, அவன் சட்டை கிழியும்படி இழுத்திருப்பாள். ஆனால், ராமசாமிக்கு விலங்கு மாட்டுவதற்கு அவன் போவதாக<noinclude></noinclude> bsingsqiw3jc70b70phz45e1upcfqmq பக்கம்:ஒத்தை வீடு.pdf/62 250 202434 1837263 762356 2025-06-30T05:57:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||61}}</noinclude>அனுமானித்து, சும்மாவே இருந்து விட்டாள். பைக்கில் ஏறிய மனோகர், வீட்டை திரும்பிப் பார்த்தபோது, அம்மா பக்கத்தில் சங்கரி. முகத்தைக் கழுவியதுபோல் கூடத் தெரியவில்லை. முந்தானை விலகிய நினைப்பற்றவளாய் நின்றாள். அவனைப் போய் வழி மறித்திருப்பாள். மாமியார் ரகளைக்குப் பயந்து விட்டாள். அலுவலகத்தில், மனோகர் நினைவுகளை அசை போட்டான். மனைவியை அந்தக் கோலத்தில் பார்த்தது, என்னவோ போலிருந்ததது. அங்கும் இங்குமாய் நெளிந்தான். கால்தட்டிக் கீழே விழுந்த நாற்காலியை எடுப்பதற்காக எழுந்தவன், எதற்கு எழுந்தோம் என்ற நினைப்பில்லாமல் அந்த அறையைச் சுற்றினான். அல்லாடி... அல்லாடி சோபா செட்டில் சாய்ந்தான். கொஞ்சம் சுகமாக இருந்தது. அவளிடம் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. மெய்யான நியாயம். மெய் சம்பந்தப்பட்ட நியாயம். ஆனால், அந்த நியாயத்தை, அப்படி அநியாயமாக சொல்லியிருக்க வேண்டாம். அப்படியும் சொல்ல முடியாது. அவள் இதுவரை பொறுத்ததே பெரிசு. நாய் தேங்காயை உருட்டியது போன்றி கதை. அரைக்கிணறு தாண்டி, கீழே விழுந்து அடிபட்டுப்போன கதை. “அய்யா... ஏதாவது...” ‘முப்பது வயதிலும் எழுபது வயது நடுக்கத்தோடு நின்ற சவுக்கிதார் மருதனை, மனோகர் கண் திறந்து பார்த்தான். துணை இயக்குநருக்கு உயிர் நடுக்கம் என்றால், அவனுக்கு உடல் நடுக்கம். இராக்காவலாளியான இவன், இரவு பத்து மணி முதல் நான்கு மணி வரை வீட்டில் படுக்கப் போய்விடுவான். டெலிபோனை எடுத்து, கீழே வைத்து விடுவான். ஒருவேளை அதற்கு முன்பே தன் வேலையைச் சரிபார்க்க நடுராத்திரியிலேயே டெலிபோன் செய்திருப்பாரோ... என்னை ஒழித்துக் கட்டுற வேலையைத்தான் முக்கியமான வேலை என்று சொல்லியிருப்பாரோ. பத்து வருஷ சர்வீஸ் பலன் கொடுக்குதான்னு பார்ப்போம்.’ “அய்யா... நேத்து நைட்டு முழுதும் டெலிபோன் வேலை செய்யலைய்யா. அப்பப்போ வருது... அப்பப்போ போய்டுதுய்யா... கேபிள் பால்டாம்யா...” மனோகர், அவனை, வினோதமாகப் பார்த்தான். அவன் நடுங்கி விட்டான். ‘சஸ்பென்ட் சஸ்பென்டு தானோ... எதுக்கும் அடுத்த அஸ்திரத்தைப் போட்டுப் பாக்கலாம்.’ “ராத்திரி முழுதும் எனக்குப் பேதி அய்யா... முக்கால் வாசி நேரம் பாத்ரூம்லதான் இருந்தேன் அய்யா.”{{nop}}<noinclude></noinclude> aa1gm0v0zqrii6k9no4153l1p7i1hj5 பக்கம்:ஒத்தை வீடு.pdf/63 250 202436 1837264 762357 2025-06-30T06:05:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|62||ஒத்தை வீடு}}</noinclude>மனோகருக்கு, அவனுக்கு, ‘வந்தது’ தனக்கு வந்தது போன்ற அசதியில் பேசினான். “இத மொதல்லயே சொல்லபடாதா...? சரி நீ... வீட்டுக்குப் போ... ஒன் வேலையும் நான் சேர்த்துக் கவனிக்கிறேன்.” “அய்யா... அய்யய்யா... தப்பு தவறு செய்தாலும் பொறுத்துக்குங்க அய்யா... எங்க மாமியார் படுத்த படுக்கையா இருக்காங்க அய்யா... எழுபது வயசு மாமியாருக்கு நான்தான் துணய்யா...” “மாமியாருக்காக அழுகிற முதல் மருமகன் நீதான்...” “அவங்க எங்கூடப் பொறந்த அக்காய்யா... அக்கா பொண்ணத்தான் கட்டியிருக்கேன் அய்யா...” “உறவை திரிக்கிற உன்ன இதுக்கே சஸ்பென்ட் பண்ணனும்... போய்யா... பேதியானவனுக்கு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும்... முதல்ல வீட்டுக்குப் போ... முடிஞ்சால் சாயங்காலம் வா...” “ஸ்வீப்பர் வரது வரைக்குமாவது இருக்கேன்யா...” “அவள் வந்தால், அவள் வேலையப் பார்ப்பாள் நீ போ...” மருதனுக்கு, இப்போது நிசமாகவே பேதி வந்தது. ‘என்ன ஆகுமோ... எப்படி ஆகுமோ... பூடகமாய்ப் பேசுறாரே.’ அவன் ஒடுங்கி ஒடுங்கி வெளியேறினான். மனோகர், மெல்லச் சிரித்தான். அக்காவை மாமியாராக்கியவனை நினைத்து ரசனையோடு சிரித்தான். திடீரென்று சிரிக்க அவனுக்கு அருகதை இல்லை என்பதுபோல், சங்கரி முன்னால் வந்து கை கொட்டிச் சிரிக்கிறாள். தலையில் அடித்து ஒப்பாரி இடுகிறாள். மனோகருக்கு விரக்தி தூக்கமானது. குறட்டை ஒப்பாரியானது. “சாரே... சாரே...” மனோகர், திடுக்கிட்டு கண் விழித்தான். விழிப்பில் ஏன் இப்படி பயம் வரவேண்டும் என்று சிந்தித்தான். வைத்தியர் சொன்ன கோழி முடி நினைவுக்கு வந்தது. தன்னைத்தானே நிமிர்த்திக் கொண்டு, அவளைப் பார்த்தான். அலுவலகத்தை கூட்டிப் பெருக்கும் கங்கா. சேரிக்கே உரிய கம்பீரம். உழைப்பில் உருவான உடல்கட்டு. இருபத்து நான்கு தேறலாம். பார்த்தால் பற்றிக் கொள்ளத் தூண்டும் கண்கள். பேசும்போது பூ விரிவது போன்ற தோரணை. அவள், இவனைத் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு, இவனுக்கு, அவளைத் தெரியாது ஒரு தடவை, மாதக் கூலியில் ஐம்பது ரூபாய் போட்டுக் கொடுக்கும்படி கேட்டபோது, இவன் நூறு ரூபாய் கூட்டிப்<noinclude></noinclude> 3pvhovvpnd3aw5u873dvdimvt3cru1o பக்கம்:ஒத்தை வீடு.pdf/64 250 202438 1837267 762358 2025-06-30T06:13:18Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||63}}</noinclude>போட்டான் இன்னொரு தடவை, இவளை இந்த அலுவலகத்தில் சேர்த்தவள் மாமூல் கேட்பதாக இவள் முறையிட்டபோது, பக்கத்து அலுவலக பெருக்கல்காரியான அந்த மாமூலை, மிரட்டியவன் இவன்... அதோடு சரி... “சாரே... சாரே... இந்த ரூமைப் பெருக்கித் துடைக்கணும் சாரே... இந்தாண்டை வா சாரே...” “நாளைக்குப் பார்த்துக்கலாம்...” “வாணாம் சாரே... நீ பொறுத்தாலும் ஏஓ கத்துவார் சாரே... வேணுமுன்னா சோபாவில கால்களை மடித்துப்போட்டு ஒக்காந்துக்கோ... சாரே...” மனோகர், அவள் சொன்னபடியே செய்தான். அவள் அந்த அறையை பெருக்கினாள். ஒரு வாளித் தண்ணீரை வைத்துக்கொண்டே ஈரத்துணியால் மொசைய்க் தரைக்கு பளபளப்பு ஏற்றினாள். “சாரே... சாரே... செத்தோண்டு நாற்காலிலே உட்காரு சாரே... சோபாவைத் துடைச்சிடறேன்.” மனோகர் எழுந்தபோது, அவன் தோள், கங்காவின் தோளில் மோதியது. அவன் கேட்டான். “ஆமா... ஒன் பேரு என்ன...?” “என்ன சாரே... அதுக்குள்ள என் பேரு மறந்து போச்சா...? ஆத்தா வச்ச பேரு கங்கையம்மா... நானே எனக்கு வச்ச பேரு கங்கா... நீ ஐம்பது ரூபாய ரெட்டிப்பா தந்ததை நா மறக்கல சாரே.” “உனக்கு கல்யாணம் ஆயிட்டா...” “என்ன சாரே. மஞ்சக் கயித்தப் பார்த்துட்டும் அப்படிக் கேக்கிறே... ஆயி என்ன பிரயோசனம்? அந்தக் கஸ்மாலம் கை விட்டுட்டான்... என்னப் பிடிக்கலையாம். ரெண்டு வருஷத்துக்குப் பிறகு சொல்றான்... ஒரு குரங்கு மூஞ்சியோட ஓடிட்டான்... அவன் கிடக்கான்... என் வேலைய பெர்மனென்டு ஆக்கு சாரே...” “பிரதம மந்திரி நெனச்சாலும் ஒன்னை பெர்மனென்டு ஆக்க முடியாது. ஆனாலும் ஒன்னை ஒரு நல்ல கம்பெனியில் சேர்க்கறதுக்குப் பார்க்கிறேன்... எதுக்கும் ஒன்னைப் பத்திய பயோடேட்டா அதாவது வயது, படிப்பு இப்படிப்பட்ட விவரங்களை எழுதிக் கொடு...” எட்டாவது படிச்சாலும் என் எழுத்து தலையெழுத்து மாதிரி கோணல் மாணலா இருக்கும் நீ கேட்டுக் கேட்டு எழுதிக்கோ சாரே.{{nop}}<noinclude></noinclude> l1zzj8khfiowsv7fni6vrljt94lujg8 1837268 1837267 2025-06-30T06:14:04Z மொஹமது கராம் 14681 1837268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||63}}</noinclude>போட்டான் இன்னொரு தடவை, இவளை இந்த அலுவலகத்தில் சேர்த்தவள் மாமூல் கேட்பதாக இவள் முறையிட்டபோது, பக்கத்து அலுவலக பெருக்கல்காரியான அந்த மாமூலை, மிரட்டியவன் இவன்... அதோடு சரி... “சாரே... சாரே... இந்த ரூமைப் பெருக்கித் துடைக்கணும் சாரே... இந்தாண்டை வா சாரே...” “நாளைக்குப் பார்த்துக்கலாம்...” “வாணாம் சாரே... நீ பொறுத்தாலும் ஏஓ கத்துவார் சாரே... வேணுமுன்னா சோபாவில கால்களை மடித்துப்போட்டு ஒக்காந்துக்கோ... சாரே...” மனோகர், அவள் சொன்னபடியே செய்தான். அவள் அந்த அறையை பெருக்கினாள். ஒரு வாளித் தண்ணீரை வைத்துக்கொண்டே ஈரத்துணியால் மொசைய்க் தரைக்கு பளபளப்பு ஏற்றினாள். “சாரே... சாரே... செத்தோண்டு நாற்காலிலே உட்காரு சாரே... சோபாவைத் துடைச்சிடறேன்.” மனோகர் எழுந்தபோது, அவன் தோள், கங்காவின் தோளில் மோதியது. அவன் கேட்டான். “ஆமா... ஒன் பேரு என்ன...?” “என்ன சாரே... அதுக்குள்ள என் பேரு மறந்து போச்சா...? ஆத்தா வச்ச பேரு கங்கையம்மா... நானே எனக்கு வச்ச பேரு கங்கா... நீ ஐம்பது ரூபாய ரெட்டிப்பா தந்ததை நா மறக்கல சாரே.” “உனக்கு கல்யாணம் ஆயிட்டா...” “என்ன சாரே. மஞ்சக் கயித்தப் பார்த்துட்டும் அப்படிக் கேக்கிறே... ஆயி என்ன பிரயோசனம்? அந்தக் கஸ்மாலம் கை விட்டுட்டான்... என்னப் பிடிக்கலையாம். ரெண்டு வருஷத்துக்குப் பிறகு சொல்றான்... ஒரு குரங்கு மூஞ்சியோட ஓடிட்டான்... அவன் கிடக்கான்... என் வேலைய பெர்மனென்டு ஆக்கு சாரே...” “பிரதம மந்திரி நெனச்சாலும் ஒன்னை பெர்மனென்டு ஆக்க முடியாது. ஆனாலும் ஒன்னை ஒரு நல்ல கம்பெனியில் சேர்க்கறதுக்குப் பார்க்கிறேன்... எதுக்கும் ஒன்னைப் பத்திய பயோடேட்டா அதாவது வயது, படிப்பு இப்படிப்பட்ட விவரங்களை எழுதிக் கொடு...” “எட்டாவது படிச்சாலும் என் எழுத்து தலையெழுத்து மாதிரி கோணல் மாணலா இருக்கும் நீ கேட்டுக் கேட்டு எழுதிக்கோ சாரே.”{{nop}}<noinclude></noinclude> 3z952gq2d2s80j1aeth9iqh92lo42q2 பக்கம்:ஒத்தை வீடு.pdf/65 250 202440 1837272 762359 2025-06-30T06:23:06Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|64||ஒத்தை வீடு}}</noinclude>மனோகர், நாற்காலியில் போய் உட்கார்ந்து ஒரு தாளை எடுத்தான் அவள், அவன் பக்கத்தில் வந்தாள். பிறந்த தேதி தெரியாது என்றாள். முகவரி சொன்னாள். அவன் முழங்கை விலாவில் பட்டபோது, விலகி நின்றாள். ‘குழந்தை இருக்கிறதா?’ என்று கேட்டபோது, ‘அதான் குரங்கு மூஞ்சியோட போய்ட்டானே...’ என்றாள். அவன், அவளை அனுதாபமாகப் பார்த்தான் ‘ஒன் அழகுக்கு என்னவாம்...’ என்று சொன்னபடியே கைகளை நெட்டி முறித்தான். ஒரு கை அவள் தோளில்பட்டது. அவள் அதை அறிந்தோ, அறியாமலோ, நின்றபோது, அந்தக் கை, அவள் தோளுக்கு கீழே போய், அவளை, அவன் பக்கமாக இழுத்துக் கொண்டு வந்தது. அவன் எழுந்தான். அவளின் கலங்கிய கண்களை நான் இருக்கேன் என்பது மாதிரி துடைத்து விட்டான். அவள் திடுக்கிட்டு திமிறினாள். முகத்தோடு முகம் முட்டியதுதான் மிச்சம். பிடிகள் இறுகின. அணைப்புக்கள் அணையை உடைக்கப் போயின. “வேண்டாம் சாரே... அது மட்டும் வேண்டாம் சாரே...” “என்னைப் பிடிக்கலியா...?” “பிடிக்காட்டி இப்படி இடங்கொடுப்பேனா... விடு சாரே... பேஜாரா இருக்குது...” “இனிமேல் உன் பிரச்சினை என் பிரச்சினை... ‘அதுக்காக’ நான் சொல்லல... ஆனாலும் ஒன்னைப் பார்த்ததும்...” “சரி சாரே... கதவையாவது சாத்திட்டு வா... வாட்ச்மேன் கேட்டுப் பக்கம் கீறாரு...” மனோகர், தள்ளு கதவைத் தாளிட்டான். நாணத்தோடு நின்றவளை அப்படியே அப்பிக் கொண்டான். அவளை நகர்த்தி நகர்த்தி ஆன்டி ரூம் எனப்படும் ஒரு பிளைவுட் தடுத்த ஓய்வறைக்கு கொண்டு போனான். அவளை அழுந்தப் பற்றினான். அரைகுறை ஆடைகளில் விட்டான். ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம்... பிறகு அப்படியே அவளை விட்டு விட்டு, உபதேசம் செய்தான். “கங்கா... இது ஆபீஸ்... கோயில் மாதிரி... இங்கே வேண்டாம்... வசதிப்படும்போது வெளியில போகலாம்...” கங்கா, மெல்லத் தலையாட்டினாள். அந்த ஆட்டு ஆமோதிப்பா, எதிர்ப்பா என்று தெரியவில்லை. ‘சும்மா கிடக்கிற சங்கை ஊதிவிட்டுட்டியே சாமி... இனிமே ஒன் நெனப்புத்தான்...’ என்று சிணுங்கினாள் வாளியை தூக்கிக் கொண்டு, கதவின் இடுக்கு வழியாகக் கண்ணைப் பதித்து விட்டு, பிறகு தாழ்ப்பாளை நகர்த்திவிட்டுப் போய் விட்டாள்.{{nop}}<noinclude></noinclude> mvyw3v40vxlqp0q4u51a8o27g3k3f1h பக்கம்:ஒத்தை வீடு.pdf/66 250 202442 1837277 762360 2025-06-30T06:31:24Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||65}}</noinclude>மனோகருக்குப், பித்துப் பிடித்தது போல் இருந்தது. எல்லாப் பெண்களுமே அவனைத் தள்ளி வைப்பதுபோல் இருந்தது. அவனுக்கு காலநேரம் சூன்யமானது. ஒன்பதரை மணிக்கு வரவேண்டிய ஊழியர்கள் பத்தரை மணி அளவில் வந்தார்கள். அவன் தங்களின் காலதாமத்தை கண்டுபிடிக்க வந்திருப்பதாக அனுமானித்து, பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொன்னார்கள். அவன் போனால் போகிறது என்பது மாதிரி ஆட்டிய கைக்கு, ஒருத்தி, மானசீகமாக முத்தங்கொடுத்தாள். பதினோரு மணிக்கு நிர்வாக அதிகாரி, இரண்டு பைல்களோடு வந்தார்... ஐம்பது வயதுக்காரர்... முக்கியமான பைல்களை ‘ரொட்டீனாக’ அனுப்பாமல், அவரே கொண்டு வருவார். அதாவது அவருக்கு முக்கியமானதை. ஒரு பைலைப் பார்த்தபடியே, மனோகர் கேட்டான். “கிருஷ்ணனை எதுக்காக மதுரை பிராஞ்சுக்கு டூர் அனுப்பணும்... பக்கத்துல இருக்கிற இராமநாதபுரத்துக் கிளார்கை அனுப்பலாமே...?” “வழக்கமாய்ச் சொல்றதுதானே ஸார்... அவன் பெண்டாட்டி, மதுரையில் இருக்காள். போனால், அங்க திறமயக் காட்டுறானோ இல்லியோ, ஆபீஸ்ல வந்து திறமையைக் காட்டுவான்...” சிரித்து மழுப்பாதீங்க... அவன் பொண்டாட்டியோட படுக்கிறதுக்கு கவர்ன்மென்ட் எதுக்கு டி.ஏ. டீ.ஏ. கொடுக்கனும்... நோ... நோ... நிர்வாக அதிகாரி, அவனைப் புதிதாய்ப் பார்ப்பதுபோல், அதிர்ந்து பார்த்தார். தன் பக்கம் நகர்ந்த பைலை வாங்கிக் கொண்டு, அடுத்த பைலை நீட்டினார். அவன் இப்போது அதிக கோபமாய்க் கேட்டான். “என்ன அக்கிரமம் இது...? இந்த வசந்தி... மூன்று மாசத்துக்கு முன்னாலேதானே குழந்தை பெத்தாள்.” “அதனால்தான், அபார்ஷனுக்கு லீவு கேட்கிறாள்.” “இது அக்கிரமம்... மூன்று மாசம் பிரசவ லீவுல போயிட்டு போன வாரம்தான் டூட்டிலே சேர்ந்தாள்... நோ... லீவ்...” கோப்பில் ஏதோ எழுதப்போன மனோகரின் கரத்தைக் கிட்டத்தட்டப் பிடித்துக்கொண்டு உரிமைக் குரலில் சட்டோபதேசம் செய்தார், ஏ.ஓ. எனப்படும் நிர்வாக அதிகாரி. “கவர்மெண்டு வேலையில கல்யாணமாகாத பெண் கூட கருக்கலைப்பதற்கு லீவு கேட்டால், கண்டிப்பாகக் கொடுக்கணுமுன்னு ரூல்... சொல்லுது ஸார்.”{{nop}}<noinclude></noinclude> 0k9ay0srw6oou745lm2u3hegaukme26 பக்கம்:ஒத்தை வீடு.pdf/67 250 202444 1837288 762361 2025-06-30T07:00:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|66||ஒத்தை வீடு}}</noinclude>மனோகர், வேண்டா வெறுப்பாய் கையெழுத்துப்போட்டபோது நிர்வாக அதிகாரி, அவனை ஆச்சர்யமாகப் பார்த்தபடியே வெளியேறினார். சலுகைகளை வழங்குவதில் கர்ணனான அவன், எப்படிக் கம்சனானான் என்பது புரியாமல் போய்விட்டார். அவர் போன பத்து நிமிடத்தில் அஸிஸ்டென்ட் கிருஷ்ணன், ஒரு குண்டு மனிதரோடு வந்தான். அவனுக்கு எப்போதாவது பிரச்சினை வரும்போது, பெரிய மனிதர்களை கூட்டிவந்து மனோகருக்கு அறிமுகப்படுத்துகிறவன். “ஸார்... இவர் எங்க கஸின் பிரதர், டாக்டர் குமார்... மதுரையில் பிரபலமான செக்ஸாலஜிஸ்ட்...” மனோகர், வந்தவரைக் கை கொடுத்து உட்கார வைக்காமல் கை கூப்பி அமரச் சொன்னான். அடுத்த இருக்கையில் உட்காரப்போன கிருஷ்ணனை ஒரு வேலையைக்கொடுத்து வெளியேற்றினான். “மதுரைக்கு டூர்ல போங்க... டூர் ஆர்டரை டைப்படிச்சிட்டு வாங்க...” என்றான். கிருஷ்ணன், குதிக்காத குறையாய் போனதும், அந்தக் கேள்வியை எப்படிக் கேட்பது என்பது புரியாமல், மனோகர் யோசித்தான். புரிந்தது. இன்னும் புத்திசாலித்தனம் போகவில்லை. நீங்க எம்.பி.பி.எஸ். படித்திட்டு அப்புறம், செக்ஸ்ல பட்ட மேற்படிப்பு வாங்கி என்ன ஸார் பிரயோஜனம்...? சிட்டுக்குருவிலேகியம்... லபு கபே... தங்கபஸ்பம்முன்னு விளம்பரம் படுத்துற நாட்டு வைத்தியர்ங்ககிட்டதானே நம்ம ஆளுங்க போறாங்க... டாக்டர். குமார், நாற்காலியிலேயே துள்ளினார். நீண்ட நாளாய், ஈ ஓட்டிக் கொண்டிருப்பவருக்கு, ஒரு வடிகால் கிடைத்த ஆனந்தம். “அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீங்க... செக்ஸ்ல தோத்துப் போறவன்... நெருப்புல பாய்கிற விட்டில் பூச்சியாக ஆயிடுவான்... உடலுறவுல செத்துப் போகிற ஆண் தேனீக்களோட முடிவுதான் இவன் முடிவும்... வைட்டமின் ஈ-யில் குணமாகக் கூடிய சமாசாரத்துக்கு, நூற்றுக்கணக்குல ரூபாய் செலவழித்து, லேகியம், பஸ்பம்முன்னு தின்கிறான்... கடைசியில், இதுக்குள்ளே இருக்கிற உலோகத் துகள்கள், கிட்னிக்கு வந்து அந்தக் கோளாறிலே சாகிறான்... உள்ளதும் போச்சு... நொள்ளக் கண்ணா என்கிற கதை... இந்த மாதிரி அடாவடி வைத்தியர்களைத் தண்டிக்க தடா சட்டத்தை திருத்தணும்.” மனோகர், திடுக்கிட்டான். இன்று அந்த வைத்தியரிடம் போக நினைத்தவன், ‘கிழட்டுப் பயல் கெடுத்துட்டானே கிட்னி போயிருக்குமோ?’{{nop}}<noinclude></noinclude> 2kpbakpoxktqlnicgcjuc56bc12ts7p பக்கம்:ஒத்தை வீடு.pdf/68 250 202446 1837291 762362 2025-06-30T07:08:07Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||67}}</noinclude>“ஒரு பத்து நாளைக்கு சாப்பிட்டாலும் போயிடுமோ டாக்டர்...” “கவலைப்படாதீங்க... மாதக் கணக்கிலே சாப்பிட்டாத்தான் கிட்னி கோளாறு வரும்...” “அப்புறம் டாக்டர்... இந்தியா டுடேயிலேயோ, ரீடர்ஸ் டைஜஸ்டிலேயோ ஒரு கட்டுரை படிச்சேன்... மத்திய தரக் குடும்பங்கள்ல அங்கேயும் இங்கேயுமா சில கணவன்மாரால் முடியலையாமே... நிசமாவா டாக்டர்...” “அநியாயமா நிசந்தான்...” “இந்த ஆண்மைக் குறைவுக்கு என்ன காரணம் டாக்டர்...” “பெரும்பாலும் மனம்தான் காரணம்... கணவனுக்கு மனைவிகிட்டே உள்ளூர வெறுப்பு இருந்தால், அவனால் முடியாது... கள்ளக் காதலியோட பயந்து பயந்து போனால், தேறாது... இப்படிப் பல காரணம்... இப்ப எனக்கு அவசர வேலை... மதுரைக்கு வாங்க... சாவகாசமா பேசலாம். நானிருக்கேன் கவலைப்படாதீங்க...” கிருஷ்ணனின் கஸின் பிரதர், ஒரு கேஸ் கிடைத்த திருப்தியோடு போய்விட்டார். மனோகர், அவரிடம் சொல்லியிருக்கக் கூடாது என்று மருவினான். ஆனால், இப்போது அலுவலகமே சங்கரியாகிவிடும். என்றாலும், அவனுக்கு ஒரு சின்ன ஆறுதல். அவன் பிரச்சினை, ஆண்மைக் குறைவு பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம்... ‘சங்கரி நாட்டுப்புறத் தோற்றம் கொண்டவள். பழக்க வழக்கமும் அப்படித்தான். பெண் என்ற நினைப்பற்று ஆண்களை இடிப்பதுபோல் நின்று பேசுகிறவள். அப்படியானால், அவளிடம் முடியாதது, இந்தக் கங்காவிடம் முடிந்திருக்க வேண்டுமே? முடிந்திருக்கும். ஆனால் பயம் அந்தஸ்தைப் பற்றிய பயம். அந்தஸ்த்துப் பேதம் பற்றிய பயம்.’ மனோகர், தன்னை மறக்க அலுவலகப் பைல்களை அழுத்தம் திருத்தமாகப் புரட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று தள்ளுகதவு சத்தம் போட்டது. அவன் எரிச்சலோடு பார்த்துவிட்டு, பிறகு எழுந்து நின்றான். வந்தவள் நீலம் கவுல்... மிஸ் நீலம்... வெள்ளையான கொள்ளை அழகு பிடரிக்குக் கீழே போகாத பாப் முடி... மஞ்சள் கட் சோளி வெளிப்படையாய்த் தெரிந்த தோள்களுக்கு இடையே அந்தச் சோளி, அவள் கழுத்துக்கு தங்க உறையாய் மின்னியது. கோவில் மாட்டுத் திமில்கள் மாதிரி உருண்டு திரண்ட புஜங்கள். ஈரப்பசையான உதடுகள்... வசீகரிக்கும் சென்ட் வாசனை. மிசெளரிப் பயிற்சியில் அவள், இவனோட பேட்ச் மேட் சில ஐ.ஏ.எஸ் டிரெயினிகள். இவள் பின்னால் ‘லோ லோ’ என்று<noinclude></noinclude> 7kq355b1ul9m6lt7veu2t5cw8tnyrq8 பக்கம்:ஒத்தை வீடு.pdf/69 250 202448 1837293 762363 2025-06-30T07:13:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|68||ஒத்தை வீடு}}</noinclude>அலைந்தாலும் இவனைச்சுற்றி வட்டமிட்டவள் ஒரு தடவை ‘என்னைக் கட்டிக்கிறியா?’ என்று கேட்டவள், “இந்தக் காலத்தில் பெண் அதிகாரிகள் ஒரு நல்ல கணவனையே விரும்புகிறார்கள்... மொழியோ, இனமோ முக்கியமல்ல... ஒன்னை எனக்குப் பிடித்திருக்கு... நீ தேகக் கட்டுள்ளவன்... ஒழுக்கமானவன்... எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களை மதிக்கத் தெரிந்தவன்... கட்டிக்கோ...” என்று மன்றாடியவள் இவன்தான் பயந்து போனான். அம்மாவுக்கு மாரடைப்பு வந்துவிடக்கூடாதே என்று அச்சப்பட்டான் தட்டிக் கழித்தான். நல்ல காலமோ கெட்ட காலமோ... இவளுக்கும் சென்னையிலேயே வேலை. உள்ளே வந்த வேகத்திலேயே, மிஸ். நீலம், ஒரு போடு போட்டாள். “ஏம்பா... ஒன்னோட டிரெயினிங்குல ஒன்னத்தான் பெஸ்ட் டிரெயினின்னு தேர்ந்தெடுத்தாங்களாம்... எங்கிட்ட ஏன் சொல்லலே...? ஒய்ப்கிட்டயாவது கிஸ் அடிச்சு சொன்னியா...? இன்னிக்கு நான் ஒன்ன விடப்போறதா இல்லை... இதுக்கு நீ எனக்கு பார்டி கொடுக்கணும்... இல்லாட்டி நான் கொடுக்கணும்... நைட்ல என் பிளாட்ல வச்சுக்கலாமா... ஏன் அப்படிப் போக்கிரித்தனமாக பார்க்கிறே...” மனோகர், அவள் நெஞ்சை ஊடுருவி, அவள் மனதை தரிசித்தான். தோழனாய், காதலனாய் வார்த்தெடுத்த மனக்காரி... அழகுக்கு அழகு... ஆசைக்கு ஆசை... அந்தஸ்துக்கு அந்தஸ்து. இவளை விட உற்ற தோழி யாரும் இருக்க முடியாது... “ஓக்கே நீலம்... இன்னைக்கு நைட்ல உன் பிளாட்தான் என் வீடு” “திருடா... திருடா...” மிஸ் நீலம், மேஜையில் அப்படியே படிந்து அவன் கழுத்தில் இரு கரங்களை வளைத்துப் போட்டாள். கதவு மீண்டும் சத்தம் போட்டதும், பால்குடிக்கத் தெரியாத பூனையாய் நாற்காலியில் பம்மி உட்கார்ந்தாள். <section end="7"/>{{nop}}<noinclude></noinclude> 8l2o11bnp5kcllogkat8wfxqia4cy7m 1837294 1837293 2025-06-30T07:14:14Z மொஹமது கராம் 14681 1837294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|68||ஒத்தை வீடு}}</noinclude>அலைந்தாலும் இவனைச்சுற்றி வட்டமிட்டவள் ஒரு தடவை ‘என்னைக் கட்டிக்கிறியா?’ என்று கேட்டவள், “இந்தக் காலத்தில் பெண் அதிகாரிகள் ஒரு நல்ல கணவனையே விரும்புகிறார்கள்... மொழியோ, இனமோ முக்கியமல்ல... ஒன்னை எனக்குப் பிடித்திருக்கு... நீ தேகக் கட்டுள்ளவன்... ஒழுக்கமானவன்... எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களை மதிக்கத் தெரிந்தவன்... கட்டிக்கோ...” என்று மன்றாடியவள் இவன்தான் பயந்து போனான். அம்மாவுக்கு மாரடைப்பு வந்துவிடக்கூடாதே என்று அச்சப்பட்டான் தட்டிக் கழித்தான். நல்ல காலமோ கெட்ட காலமோ... இவளுக்கும் சென்னையிலேயே வேலை. உள்ளே வந்த வேகத்திலேயே, மிஸ். நீலம், ஒரு போடு போட்டாள். “ஏம்பா... ஒன்னோட டிரெயினிங்குல ஒன்னத்தான் பெஸ்ட் டிரெயினின்னு தேர்ந்தெடுத்தாங்களாம்... எங்கிட்ட ஏன் சொல்லலே...? ஒய்ப்கிட்டயாவது கிஸ் அடிச்சு சொன்னியா...? இன்னிக்கு நான் ஒன்ன விடப்போறதா இல்லை... இதுக்கு நீ எனக்கு பார்டி கொடுக்கணும்... இல்லாட்டி நான் கொடுக்கணும்... நைட்ல என் பிளாட்ல வச்சுக்கலாமா... ஏன் அப்படிப் போக்கிரித்தனமாக பார்க்கிறே...” மனோகர், அவள் நெஞ்சை ஊடுருவி, அவள் மனதை தரிசித்தான். தோழனாய், காதலனாய் வார்த்தெடுத்த மனக்காரி... அழகுக்கு அழகு... ஆசைக்கு ஆசை... அந்தஸ்துக்கு அந்தஸ்து. இவளை விட உற்ற தோழி யாரும் இருக்க முடியாது... “ஓக்கே நீலம்... இன்னைக்கு நைட்ல உன் பிளாட்தான் என் வீடு.” “திருடா... திருடா...” மிஸ் நீலம், மேஜையில் அப்படியே படிந்து அவன் கழுத்தில் இரு கரங்களை வளைத்துப் போட்டாள். கதவு மீண்டும் சத்தம் போட்டதும், பால்குடிக்கத் தெரியாத பூனையாய் நாற்காலியில் பம்மி உட்கார்ந்தாள். <section end="7"/>{{nop}}<noinclude></noinclude> 5jfa0kcgublofw5n2jq2t1lgezaz1o2 பக்கம்:ஒத்தை வீடு.pdf/70 250 202450 1837320 762365 2025-06-30T07:48:20Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="8"/> {{larger|<b>8</b>}} {{dhr|2em}} மின்சார விளக்குகளில் மினுமினுத்த மையிருட்டு தயிரின் தெளிந்த நீர் போன்ற ஆகாய வெளிச்சம். இரவின் பிறப்பா அல்லது இறப்பா என்று கண்டறிய முடியாத வேளை. விடியல் பிரசவத்தின் இயற்கை வெளிப்பாடுகளான குருவிச் சத்தமோ கோழிச்சத்தமோ கேட்கவில்லை. ஆனாலும் சிசேரியன் ஆப்பரேஷன் போல், இருளின் வெளிப்பாடுகள் தோன்றின. மாநகரப் பேருந்துகள் வெறுமையாக நகர்ந்தன. லைக்கப்போர், செங்கல், இரும்பு டப்பா லாரிகள் மாமூலாகப் போகாமல் மைனர் நடை போட்டன. மோட்டார் பைக்குகளிலும் ஸ்வட்டர்களிலும் பெண்கள் தலை முக்காடுகளோடும். ஆண்களில் சிலர் சரிந்து வைத்த தொப்பிகளோடும் உட்கார்ந்தபடியே ஓடிக் கொண்டிருந்தார்கள். மனோகர், கரங்களைத் தலைக்கு முக்காடாக்கி நடந்தான். சிறிது தொலைவில் நாய்கள் குலைக்கும் சத்தம் மட்டும் கேட்கவில்லையானால், தொடர்ந்து நடந்திருப்பான். தெரு நாய்களுக்குப் பயந்து, நான்கு பக்கமும் பார்த்தான் நல்ல வேளையாக பேருந்து நிழல்குடை அருகிலேயே இருந்தது. அதன் முன்பக்கமும் பின்பக்கமும் பிளாட்பார பிரஜைகள் மூட்டைகளாய் வளைந்து கிடந்தார்கள் அப்பன், பிள்ளை, மனைவி என்று பூஜ்யமாய் வட்டமிட்டு படுத்து இருந்தார்கள். மனோகர், அந்த நிழல் குடைக்கு வந்து அதன் இரும்பு தூணில் பின்பக்கமாய் கைசுற்றிச் சாய்ந்தான். அவ்வப்போது ஒரு காலை இன்னொரு காலால் பின்னிக் கொண்டான். நடந்ததை நினைக்க மனம் மறுத்தது. ஏதோ ஒரு மாயப் பேய் உருவம், அவனை உச்சி முதல் பாதம் வரை ஆக்கிரமித்து நெஞ்சைக் கோர நகங்களால் கீறியது. தொண்டையை அகரப் பற்களால் கடித்தது. உலகின் அத்தனை பளுவும் தலையில் ஏறி அதைத் தாறு மாறாய் ஆடச் செய்தது. இப்படி நடக்குமா... நடக்குமா என்று ‘மனம்’ அவனைக் கேட்டது. ‘அவன்’ மனதைக் கேட்டான். தொண்டைக்குள் ஒரு தேள் கண்களில் நெருப்புக் கதிர் வீச்சு மூளைக்குள் ஈட்டி முனைகள். வாய்க்குள் அரைப் பைத்தியமானது போல் முணுமுணுப்பு. நீலம் குடிவெறியில்தான் அப்படிப் பேசினாள் என்று ஒரே ஒரு சலுகையைத் தான் அவளுக்குக் கொடுக்க முடியும். மற்றபடி, ஆண்களைப் பிடித்துத் தின்னும் ராட்சசியாக நடந்து கொண்டது போலத்தான், அவனுக்குத் தோன்றியது. அவள் குடிக்கு ‘கம்பெனி கொடுக்கவில்லை என்றதும், உதவாக்கரை’ என்று திட்டியது கூட<noinclude></noinclude> 4bhwn43qsamgs24yq2tc8dl1ypvgvgg பக்கம்:ஒத்தை வீடு.pdf/71 250 202452 1837329 762366 2025-06-30T07:54:19Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|70||ஒத்தை வீடு}}</noinclude>நட்புரிமைதான். முன்னாலேயே சேலை, பாவாடை சகிதங்களை அவிழ்த்துப் போட்டுவிட்டு கண்ணாடி கவுனை மாட்டிக்கொண்டது கூட காதலிக்கிறவள் என்ற முறையில் அதை ஒரு நெருக்கமாக ஒப்புக் கொள்ளலாம். அவன் உணவுக் கவளங்களை வாயில் ஊட்டி விட்டது, தாய் கூடக்காட்டாத வாஞ்சை. இவன் குழந்தையாகி, அவள் விரல்களை கடித்ததும், அவள், உடனே அவனை மடியில் போட்டு பஞ்சாபி மொழியில் தாலாட்டுப் பாடியதும், சங்கரியிடம் கிடைக்காத இன்பநேயம். அதேசமயம், படுக்கை அறையின் நான்கு சுவர்களிலும் தொங்கிய ஓவியங்கள், அதிகப்படியானவை மட்டுமல்ல அசிங்கமானவையும்கூட சில ராஜஸ்தானிய அந்தப்புர விளையாட்டுப் படங்களாம். அந்தரங்கம் பகிரங்கப்படுத்தப்பட்ட பச்சையான விளையாட்டுக்கள். ஆடு மாடுகள் கூடச் செய்யாத காதல் களியாட்டங்கள். இந்த வகைப் படங்களை பார்க்க மறுத்து, அவன் தலை குனிந்தபோது, அந்தத் தலையை அவள் நிமிர்த்தியது கூட தண்டனைக்குரியது அல்ல. ஆனால், அத்தனை படங்களையும், நகலாக்கிப் பார்க்க வேண்டும் என்று அவள் வற்புறுத்தியது, அதிகப்பிரசங்கித்தனம். ஆனாலும், திட்டவட்டமாக மறுத்தவனுக்கு, அவள் விட்டுக் கொடுத்தது, அவளது பெருந்தன்மை. முக்கால் இரவு வரை அந்தப் பெருந்தன்மையைக் காட்டத்தான் செய்தாள். முதல் ரவுண்டு இப்படித்தான் இருக்குமென்று அவனைத் திடப்படுத்தினாள். இரண்டாவது ரவுண்டும் இழுபறி ஆனபோது தூங்கிட்டு பார்ப்போம் என்று சொன்னவளும் அவள்தான் அவளை எழுப்பி விட்டது தப்பாய்ப் போயிற்று. மேஜைக்குத் தாவி அவனுக்காகவும் வாங்கி வைத்திருந்த அந்த திரவத்தை, அப்படியே விழுங்கிவிட்டு தாறுமாறாக ஆடினாள். இவன் பெண்ணாகவும் அவள் ஆணாகவும் மாற்றங் கொண்டது போன்ற நிலைமை. மூன்றாவது சுற்றும் முதலிரண்டு சுற்றுக்களானபோது, அவள் இப்படியா நாக் அவுட் செய்வது. “ஓடிப் போ பொட்டைப் பயலே நல்ல வேளை... நீ என்னைக் கட்டிக்கலே கட்டியிருந்தே, நானே உன்னைத் துப்பாக்கியாலே சுட்டிருப்பேன்.” என்றாள். இத்தோடவாவது அவள் விட்டிருக்கலாம். விடவில்லையே. “ஒன் பெண்டாட்டிய எவனும் இழுத்துட்டுப் போகும் முன்னால ஓடுடா... நீ அவளுக்குச் செய்யத் தவறுவது கொடுமைடா... ஆந்திரா ஹைகோர்டுல இதுக்குன்னே ஒரு ஜட்ஜ்மென்ட் வந்ததுடா” என்றாள். பிறகு பஞ்சாபி மொழியில் புலம்பினாள். அவை திட்டு வார்த்தைகள் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது<noinclude></noinclude> ij2l850onqdc221fu5bk67rbs6gli5w 1837330 1837329 2025-06-30T07:54:49Z மொஹமது கராம் 14681 1837330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|70||ஒத்தை வீடு}}</noinclude>நட்புரிமைதான். முன்னாலேயே சேலை, பாவாடை சகிதங்களை அவிழ்த்துப் போட்டுவிட்டு கண்ணாடி கவுனை மாட்டிக்கொண்டது கூட காதலிக்கிறவள் என்ற முறையில் அதை ஒரு நெருக்கமாக ஒப்புக் கொள்ளலாம். அவன் உணவுக் கவளங்களை வாயில் ஊட்டி விட்டது, தாய் கூடக்காட்டாத வாஞ்சை. இவன் குழந்தையாகி, அவள் விரல்களை கடித்ததும், அவள், உடனே அவனை மடியில் போட்டு பஞ்சாபி மொழியில் தாலாட்டுப் பாடியதும், சங்கரியிடம் கிடைக்காத இன்பநேயம். அதேசமயம், படுக்கை அறையின் நான்கு சுவர்களிலும் தொங்கிய ஓவியங்கள், அதிகப்படியானவை மட்டுமல்ல அசிங்கமானவையும்கூட சில ராஜஸ்தானிய அந்தப்புர விளையாட்டுப் படங்களாம். அந்தரங்கம் பகிரங்கப்படுத்தப்பட்ட பச்சையான விளையாட்டுக்கள். ஆடு மாடுகள் கூடச் செய்யாத காதல் களியாட்டங்கள். இந்த வகைப் படங்களை பார்க்க மறுத்து, அவன் தலை குனிந்தபோது, அந்தத் தலையை அவள் நிமிர்த்தியது கூட தண்டனைக்குரியது அல்ல. ஆனால், அத்தனை படங்களையும், நகலாக்கிப் பார்க்க வேண்டும் என்று அவள் வற்புறுத்தியது, அதிகப்பிரசங்கித்தனம். ஆனாலும், திட்டவட்டமாக மறுத்தவனுக்கு, அவள் விட்டுக் கொடுத்தது, அவளது பெருந்தன்மை. முக்கால் இரவு வரை அந்தப் பெருந்தன்மையைக் காட்டத்தான் செய்தாள். முதல் ரவுண்டு இப்படித்தான் இருக்குமென்று அவனைத் திடப்படுத்தினாள். இரண்டாவது ரவுண்டும் இழுபறி ஆனபோது தூங்கிட்டு பார்ப்போம் என்று சொன்னவளும் அவள்தான் அவளை எழுப்பி விட்டது தப்பாய்ப் போயிற்று. மேஜைக்குத் தாவி அவனுக்காகவும் வாங்கி வைத்திருந்த அந்த திரவத்தை, அப்படியே விழுங்கிவிட்டு தாறுமாறாக ஆடினாள். இவன் பெண்ணாகவும் அவள் ஆணாகவும் மாற்றங் கொண்டது போன்ற நிலைமை. மூன்றாவது சுற்றும் முதலிரண்டு சுற்றுக்களானபோது, அவள் இப்படியா நாக் அவுட் செய்வது. “ஓடிப் போ பொட்டைப் பயலே நல்ல வேளை... நீ என்னைக் கட்டிக்கலே கட்டியிருந்தே, நானே உன்னைத் துப்பாக்கியாலே சுட்டிருப்பேன்.” என்றாள். இத்தோடவாவது அவள் விட்டிருக்கலாம். விடவில்லையே. “ஒன் பெண்டாட்டிய எவனும் இழுத்துட்டுப் போகும் முன்னால ஓடுடா... நீ அவளுக்குச் செய்யத் தவறுவது கொடுமைடா... ஆந்திரா ஹைகோர்டுல இதுக்குன்னே ஒரு ஜட்ஜ்மென்ட் வந்ததுடா” என்றாள். பிறகு பஞ்சாபி மொழியில் புலம்பினாள். அவை திட்டு வார்த்தைகள் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.{{nop}}<noinclude></noinclude> qjb0rjj8l8qhmri0hss7bhhjxez5nbk பக்கம்:ஒத்தை வீடு.pdf/72 250 202454 1837332 762367 2025-06-30T08:01:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||71}}</noinclude>மனோகர், உள்ளமும் உடலும் அசைவற்றுப்போக நின்ற கோலத்திலேயே நின்றான். அந்த பேருந்து நிலைய தூண்களில் ஒன்றை, கட்டியபடியே தூங்கிவிட்டான். இதற்குள் மனித அரவங்கள் வெளிப்பட்டன. ஆவின் வேன் அலறியது. பக்கத்துப் பால் பூத்தில் வேலைக்காரப் பெண்களின் பிலாக்கணங்கள். சிறுவர்களின் பெரியமனித தோரணையான பேச்சுக்கள். அந்த நிழல் குடையைச் சுற்றியும் கடைக் கூடார பிளாட்பாரங்களிலும் படுத்துக் கிடந்தவர்கள், அசைந்து கொடுத்தார்கள். பொக்கிஷங்களான மூட்டைமுடிச்சுக்கள் இருக்கின்றனவா என்று படுத்தபடியே தலையைத் தூக்கியவர்கள், டப்பாக்களில் தண்ணீர் நிரப்பி அவற்றைத் தூக்கிக்கொண்டு நடந்தவர்கள், சேலைகளையே போர்வையாக்கிப் படுத்துவிட்டு அப்போது, போர்வைகளையே சேலையாக்கிக் கொண்டிருந்த பெண்கள், கடைகளின் படிக்கட்டுகளில் திட்டு வாங்கிய நோயாளிகள், சமையலறையான மூன்றுகல் அடுப்புக்களை மூலையோரமாய்க் கொண்டு போன முதியவர்கள். எவரோ ஒருத்தர் மனோகரை அதட்டலாகக் கேட்டார். சுவர் ஓரம் கிடந்த பிளாஸ்டிக் பானையை கொண்டுவந்து, முகத்திற்கு ‘சதக் சதக்’ என சத்தமிட நீரடித்தபடியே, “ஏரப்பா நீ... உனக்கு இங்க என்ன வேலை...” என்று அதட்டலாய்க் கேட்டார் பிறகு “பீஸ்ஸுக்கா நிற்கே...” என்று அவனுக்கு ஒரு பதிலையும் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். தூங்கிப் போன மனோகர், கண் விழித்தான். வினாடி நேரம் நிர்மலமான மனதில், இரவு நிகழ்ச்சிகள் நினைவுகளாய்ப் பீறிட்டன. பழைய நினைவுகளையும் இழுத்து வந்தன. வெற்றுக் குடத்தை ஆற்றுப் பிரவாகத்தில் அப்படியே முக்கிய நிலை. நீரும் ஏறவில்லை... குடமும் நிரம்பவில்லை... அவன் பின் பக்கமாய்த் திரும்பினான். ஒரு இளம் பெண் பாவாடை மேல் ஒரு படுதாத் துணியை தாவணியாய்ச் சுற்றிக் கொண்டிருந்தாள். முந்தானை பரவாத முன் பக்கம். தற்செயலாய்ப் பார்த்த மனோகர் அப்படிப் பார்ப்பதையே ஒரு செயலாக்கினான். மனதில் இச்சை வந்ததோ இல்லையோ, அவன் மனப்பாரத்திற்கு அவள் நெம்புகோலானாள். இதற்குள் அந்தப் பெண் சீறினாள். “யோவ்... இதுக்கு முன்னாடி நீ பொம்மனாட்டிங்களைப் பார்த்ததே இல்லியா... கஸ்மாலம்...” என்று கத்தினாள். அவள் போட்டக் கூச்சலில், மிச்சம் மீதியாய் படுத்திருந்தவர்கள் எழுந்தார்கள்; அவனை நெருங்கினார்கள். மனோகர், அங்கிருந்து நழுவி ஓடாக்குறையாக நடந்தான் பயத்தோடு திரும்பிப் பார்த்தான். எவரும் அவனை விரட்டுவது<noinclude></noinclude> 0u0zxgjancnxcts3ggefso0zkm393kl 1837333 1837332 2025-06-30T08:02:29Z மொஹமது கராம் 14681 1837333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||71}}</noinclude>மனோகர், உள்ளமும் உடலும் அசைவற்றுப்போக நின்ற கோலத்திலேயே நின்றான். அந்த பேருந்து நிலைய தூண்களில் ஒன்றை, கட்டியபடியே தூங்கிவிட்டான். இதற்குள் மனித அரவங்கள் வெளிப்பட்டன. ஆவின் வேன் அலறியது. பக்கத்துப் பால் பூத்தில் வேலைக்காரப் பெண்களின் பிலாக்கணங்கள். சிறுவர்களின் பெரியமனித தோரணையான பேச்சுக்கள். அந்த நிழல் குடையைச் சுற்றியும் கடைக் கூடார பிளாட்பாரங்களிலும் படுத்துக் கிடந்தவர்கள், அசைந்து கொடுத்தார்கள். பொக்கிஷங்களான மூட்டைமுடிச்சுக்கள் இருக்கின்றனவா என்று படுத்தபடியே தலையைத் தூக்கியவர்கள், டப்பாக்களில் தண்ணீர் நிரப்பி அவற்றைத் தூக்கிக்கொண்டு நடந்தவர்கள், சேலைகளையே போர்வையாக்கிப் படுத்துவிட்டு அப்போது, போர்வைகளையே சேலையாக்கிக் கொண்டிருந்த பெண்கள், கடைகளின் படிக்கட்டுகளில் திட்டு வாங்கிய நோயாளிகள், சமையலறையான மூன்றுகல் அடுப்புக்களை மூலையோரமாய்க் கொண்டு போன முதியவர்கள். எவரோ ஒருத்தர் மனோகரை அதட்டலாகக் கேட்டார். சுவர் ஓரம் கிடந்த பிளாஸ்டிக் பானையை கொண்டுவந்து, முகத்திற்கு ‘சதக் சதக்’ என சத்தமிட நீரடித்தபடியே, “ஏரப்பா நீ... உனக்கு இங்க என்ன வேலை...” என்று அதட்டலாய்க் கேட்டார் பிறகு “பீஸ்ஸுக்கா நிற்கே...” என்று அவனுக்கு ஒரு பதிலையும் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். தூங்கிப் போன மனோகர், கண் விழித்தான். வினாடி நேரம் நிர்மலமான மனதில், இரவு நிகழ்ச்சிகள் நினைவுகளாய்ப் பீறிட்டன. பழைய நினைவுகளையும் இழுத்து வந்தன. வெற்றுக் குடத்தை ஆற்றுப் பிரவாகத்தில் அப்படியே முக்கிய நிலை. நீரும் ஏறவில்லை... குடமும் நிரம்பவில்லை... அவன் பின் பக்கமாய்த் திரும்பினான். ஒரு இளம் பெண் பாவாடை மேல் ஒரு படுதாத் துணியை தாவணியாய்ச் சுற்றிக் கொண்டிருந்தாள். முந்தானை பரவாத முன் பக்கம். தற்செயலாய்ப் பார்த்த மனோகர் அப்படிப் பார்ப்பதையே ஒரு செயலாக்கினான். மனதில் இச்சை வந்ததோ இல்லையோ, அவன் மனப்பாரத்திற்கு அவள் நெம்புகோலானாள். இதற்குள் அந்தப் பெண் சீறினாள். “யோவ்... இதுக்கு முன்னாடி நீ பொம்மனாட்டிங்களைப் பார்த்ததே இல்லியா... கஸ்மாலம்...” என்று கத்தினாள். அவள் போட்டக் கூச்சலில், மிச்சம் மீதியாய் படுத்திருந்தவர்கள் எழுந்தார்கள்; அவனை நெருங்கினார்கள். ‘மனோகர், அங்கிருந்து நழுவி ஓடாக்குறையாக நடந்தான் பயத்தோடு திரும்பிப் பார்த்தான். எவரும் அவனை விரட்டுவது<noinclude></noinclude> ci6c4ofujtx6zqtmnhmw4hifwjrsqu1 பக்கம்:ஒத்தை வீடு.pdf/73 250 202456 1837336 762368 2025-06-30T08:08:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|72||ஒத்தை வீடு}}</noinclude>போல் பின் தொடரவில்லை. இப்படிப்பட்ட அனுபவங்கள் ஆயிரத்தைக் கண்டவர்கள்போல் அத்தோடு விட்டு விட்டார்கள். மனோகருக்குத்தான் மனம் கேட்கவில்லை. கொளுத்தும் வெயிலிலும் கிளுகிளுப்புச் சுகம் கொடுக்கும் குளிர்சாதன அறையும், மணி அடித்தால் மண்டியிடுவதுபோல் அலுவலர்கள் வருவார்கள். அலுவலர்களும் இன்டர்காமில் பேசினால், ஆயிரம் குழைவுகளோடு எவளாவது ஒருத்தி வருவாள். ஆனால், இப்போதைய நிலை...’ ‘ஒருத்தியிடம் பேடி... இன்னொருத்தியிடம் பொம்பளைக் கள்ளனாய்... இது என்ன ரெட்டை வேடம்...? இதில் எது வேடம்...? எது மூலம்...? இதற்கெல்லாம் யார் காரணம்...? சங்கரி... சங்கரியே... அவள் மட்டும் அழகாயிருந்து, பிற ஆண்களிடம் அளவோடு பழகி... தன்னிடம் பெண்மை குலுங்க நடந்திருந்தால்... இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நீலம் நேரடியாய்ச் சொன்னதை சங்கரி மறைமுகமாய்ச் சொன்னாள். எவனயாவது இழுத்துட்டுப் போவாளாமே... போகட்டும்... அதைப் பார்க்க இருக்கக் கூடாது. செத்துப் போகணும்... தற்கொலையாய் உடம்பைச் சிதைக்கணும்...’ மனோகர், நடுச்சாலையில் நடந்தான். கிறீச்சிட்டு நின்ற பல்லவனுக்குள் இருந்த டிரைவர், கண்டக்டர், பயணிகள் ஜனநாயகக் கூட்டணி அமைத்து இவனைத் திட்டினார்கள் ‘காலையிலேயே குடிச்சிட்டு ஆடுறியே... நீ மனுஷனாடா...?’ மனோகர், குடிகாரனாய் நடந்தான். எதிரே தென்படும் ஆட்டோக்களில் ஒன்றை நிறுத்தி வீட்டுக்குப் போகலாம் என்ற சுரணைகூட இல்லை. அந்த வீட்டின் நினைவு கூட இல்லை. வீடற்றவனாய், நாடற்றவனாய், தனக்குத்தானே அற்றுப்போனவனாய் அந்தச் சாலையில் நடந்தான். எவளோ ஒருத்தி முன்னால் போனாள். பின்பக்கத்தை வைத்து அனுமானிக்க முடியவில்லை! அவனுக்குள் ஒரு வேகம். மனம் அவளைச் சுமைதாங்கியாய்ப் பார்த்ததோ என்னமோ... அவளுக்கு இணையாக நடந்தான். அவளை, இணையாய்ப் பார்த்தான் மின்னும் கருப்பி... காதுகளைப் பாதி மூடும் சுருள் சுருளான தலைமுடி... அவளும் அவன் பக்கத்திலேயே நடந்தாள். இவன், ‘இன்னும் சூரியனே உதிக்கலே... இப்பவே இப்படி எரியுது...’ என்று தன் பாட்டுக்குச் சொல்வது போல் சொன்னபோது, அவள் ஏறிட்டுப் பார்த்தாள்... காறித்துப்பினாள். மனோகர், யாரையோ தேடுவது போல் அங்கும் இங்குமாய்ப் பராக்குப் பார்ப்பதுபோல் பார்த்தான் சாலையின் மறுபக்கம் அவனது நண்பன், நடந்து கொண்டிருந்தான் மிடுக்கான நடை இவனோடு மிசௌரியில் குப்பை கொட்டிய ஐ.பி.எஸ் இப்போது<noinclude></noinclude> 0sgkjj69hxkj7pg33xjwxbomqddcm4r பக்கம்:ஒத்தை வீடு.pdf/74 250 202458 1837341 1836795 2025-06-30T08:15:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||73}}</noinclude>எஸ்.பி... இவனை ரொம்பப் பிடிக்கும் ‘டா’ போட்டுத்தான் பேசிக்கொள்வார்கள். அவனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், ராமசாமிக்கு விலங்கு... அம்மாவுக்கு கொண்டாட்டம். அக்காவுக்குத் துக்கக் குறைவு... அந்த ஐ.பி.எஸ் நண்பனிடம் அக்கா சந்திக்கும் அநியாயமான அடாவடியை சொல்வதற்காக அவன் சாலையின் மறுபக்கம் போகப் போனான். அதற்குள் இன்னொருத்தி அவள் பார்த்த விதமே பன்னீர் தெளிப்பது போல் இருந்தது... அவளை முண்டியடித்து நடந்து, முதுகில் முட்டப் போவதுபோல் தொடர்ந்து, அவளுக்கு முன்னால் நடந்து, திரும்பித் திரும்பிப் பார்த்தான். அவள், தனக்கு இணையாக வரும் வரை நின்றான். இணையாகவே நடந்தான். குரலைக் கனைத்தான் செருமினான். அவளுக்குச் செய்தி கிடைத்தது... பதில் செய்தி கொடுத்தாள் ‘ஏண்டா சோமாறி... கூடை வச்சுருக்குற பொண்ணுன்னா கூட வந்துருவான்னு அர்த்தமா... அதோ சைக்கிள்ல வர்றார்... நீ ஆம்பளையா இருந்தா நில்லு... நில்லுடா.’ மனோகர், நிசமாகவே ஓடினான் சைக்கிள் மணிச்சத்தம் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் அலறினான். திரும்பிப் பார்த்தால், அவளைச் சுற்றி ஒரு சின்னக் கூட்டம். பக்கத்தில் சைக்கிள்... மனோகர் பதறியடித்து ஓடினான் சந்து பொந்து இல்லாத நெடுஞ்சாலை ஒளியக் கூட இடமில்லாத பெரிய பெரிய கட்டிடங்கள்... கூர்க்காக்கள்... எப்படியோ ஒரு ஆட்டோவை ‘நிறுத்து’ என்று சொல்லாமலேயே, அதற்குள் துள்ளிக் குதித்தான். மனோகர், தன்னைத்தானே கூறு போட்டுப் பார்த்தான் அவன் செயல்பாடு அவனுக்கே அவமானமாகத் தெரிந்தது. ‘இந்தப் பொம்பளைப் பொறுக்கித்தனம் எப்படி வருகிறது? எவள் கூப்பிட்டாலும், இவனால் இயலாது அப்போதைக்குப் பையில் பணமோ, உடம்பில் வீரியமோ இல்லை அப்படியும் ஏன் இப்படிப் பின் தொடர வேண்டும். ஊமையாய் அழும் மனம் அந்த ஒரு நிமிட இடைவேளையில் களியாட்டம் போடுகிறதா...? பில்லி சூன்யம் என்கிறார்களே, அப்படி யாராவது செய்திருப்பார்களோ...? ராசியில்லாத சங்கரி வீட்டுக்கு வந்த வேளையா...?’ வீட்டுக்கும் வாசலுக்குமாய் நடைபோட்டுக் கொண்டிருந்த சொர்ணம்மா, ஆட்டோவிலிருந்து இறங்கிய மனோகரைப் பார்த்து தலையில் அடித்தபடியே ஓடினாள் காந்தாமணி ஓடிப் போய் ‘தம்பி’ என்று சொன்னபடியே அவன் கைகளைப் பற்றிக் கொண்டு விம்மினாள். திண்ணையில் இருந்து முற்றத்திற்குத் தாவிய சங்கரி, மாமியார் போட்ட கூச்சலில் திகிலடைந்து நின்றாள்.{{nop}}<noinclude></noinclude> pzouj6j1hko186adcd4vq4a2sxljylx பக்கம்:ஒத்தை வீடு.pdf/75 250 202460 1837345 762370 2025-06-30T08:24:29Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|74||ஒத்தை வீடு}}</noinclude>“அடே... என் ராசா... எங்கேடா போனே? ராத்திரி முழுகக டெலிபோன் மேலே டெலிபோனா போட்டோமேடா... காலம் இருக்கிற இருப்புல என்ன எல்லாமோ நினைச்சோமடா... இந்தச் சண்டாளி ஒன்ன என்னடா பண்ணினா? இப்பவே இங்கேயே சொல்லுடா... இந்த வீட்ல இந்தப் பேயாள மட்டும்தானா இருக்காள்...? நா இல்லியா... அக்கா இல்லியா... தெய்வமே... தெய்வமே... செத்துப் போன தெய்வமே. ஓடுற பாம்பை பிடிக்கிறது மாதிரி இருந்த என் பிள்ளை... இந்தச் சண்டாளி வந்த பிறகு. பேயறைஞ்சது மாதிரி ஆயிட்டானே... ஏண்டா அப்படிப் பார்க்கே... எனக்கு பயமா இருக்குடா...” சங்கரி குன்றிப் போனாள், கால்கள் வளைந்து கொண்டிருந்தன. தலையும் கழுத்தும் சுருங்கிக் கொண்டிருந்தன. அம்மாவை அதட்டும் அண்ணி கூட, மவுனச் சம்மதமாய் நின்றாள். கொடுமையிலும் கொடுமையாகக் கட்டிய கணவன் பேசாமல் நின்றான். இதற்குள், தெருவோரம் சின்னக் கூட்டம். பட்டம் விட்டுக் கொண்டிருந்த சிறுவர்கள், அவற்றை இறக்கியபடியே, ஓடி வந்தார்கள். எதிர்வீட்டு மொட்டை மாடியில் நின்ற உமாவும், அவள் மாமியாரும், நெருங்கிய தோழிகளாய் நின்றார்கள். இந்திரன் மட்டும் கீழே வந்தான். எதுவும் நடக்காதது போல், மனோகரை நெருங்கினான். என்ன ஸார் இப்படிப் பண்ணிட்டீங்க...? ஒரு டெலிபோனாவது செய்யக் கூடாதா...? ஒங்க ஒய்பும், ஒங்க அக்காவும், எங்க வீட்டுக்கு, வந்து அழுத அழுகையில் எங்க உமா இன்னும் அழுதுகிட்டே இருக்காள்... போலீஸ்ல என்னை புகார் செய்யச் சொன்னாங்க. நான்தான் இன்னைக்குக் காலை வரை பொறுத்துக்கச் சொன்னேன்... ராத்திரி என்ன சார் நடந்தது... மனோகர், இந்திரனை, அகலிகையின் ரிஷிக் கணவன் பார்த்தது போலவே பார்த்தான். ‘மானங்கெட்ட பய, வலியப் பேசுறான்... எனக்காகவா பேசுறான்... சங்கரி எப்படி அங்கே போகலாம்? நான் ஒரு நாள் தலை மறைஞ்சதுக்கே இப்படின்னா... ஒரேயடியா மறைந்தால்... இந்த அக்காவுக்கு புத்தி எங்கே போயிட்டு...? அவள் சூதில்லாம போயிருப்பாள். இந்த சங்கரிதான், இதைச் சாக்காக வைத்துப் போயிருப்பாள்...’ மனோகர், இந்திரனுக்குப் பதில் சொல்லாமல், சங்கரியை அதட்டலாகப் பார்த்தான். அவசரப் பிரகடனச் சட்டத்தை வெளியிட்டான்... சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பல்ல... தீர்ப்பின் அடிப்படையிலான சட்டப் பிரகடனம். “ஏய்... சங்கரி... ஒண்ணு உள்ள போ... இல்லைன்னா வெளிலே போ இப்படி மானத்த வாங்கிட்டு நிற்காதே...”{{nop}}<noinclude></noinclude> 3eelomhkmq024p3u1vnqb453a86uvjk பக்கம்:ஒத்தை வீடு.pdf/76 250 202462 1837347 1412661 2025-06-30T08:30:32Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||75}}</noinclude>சங்கரி, அதிர்ந்து திரும்பினாள். கூட்டம் மட்டும் இல்லையானால், அவனிடம் நியாயம் கேட்டிருப்பாள். ஆனாலும், அவன் எந்த அர்த்தத்தில் அப்படிச் சொல்லுகிறான் என்பது புரியவில்லை. அந்தக் கூட்டத்தைப் பார்க்கப் பார்க்க அவளை, அவமானம் பிடுங்கித் தின்றது. மாமியார்க்காரி வேறு, அண்ணியின் கன்னத்துக்கு அருகே கையைக் கொண்டு போய், ‘பெண்ணாடி பார்த்தே... சீமையில் இல்லாத பொண்ணு...’ என்று கத்திக் கொண்டிருந்தாள். சங்கரி, சூனியப்பட்டு நின்றாள். பிறகு வாயில் முந்தானை முனையைச் சுருட்டிப் பந்தாய்த் திணித்தபடியே பின்னோக்கி ஓடினாள். படிநோக்கிப் பாய்ந்தாள். கட்டிலில் விழாமல், தரையில் வீழ்ந்தாள். வீட்டின் நினைப்பு கேளாமலே வந்தது. அப்பா, அவளைத் தாயாகப் பாவித்தார். அம்மாவோ, பேத்தி போல் செல்லம் கொடுத்தாள். என்ன கேட்டாலும் கிடைக்கும். எங்கே வேண்டுமானாலும் போகலாம். இவள்தான் கேட்டதில்லை... போனதில்லை. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், தத்தம் பெண்களை சங்கரி இருக்காபாரு, நீயும் இருக்கியே பாரு என்பார்கள். ஆனால், இவள் சமயம் பார்த்து அந்தப் பெண்களை வீட்டுக்குக் கூட்டி வந்து, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று ஆற்றுப்படுத்துவாள். அந்தப் பெண்களும், அவளிடம் பகைமை காட்டியதில்லை. கல்லூரியில், அவளைப் பார்த்து சில மாணவர்கள் கிண்டலடித்தது உண்மைதான், காரைக்கால் அம்மையாராம்... அன்னை தெரேஸாவாம்... இவளும் பதிலுக்கு அவர்களை நெருங்கி, அந்த அம்மையார்கள் போலவே ஆசீர்வாதித்து விட்டுச் சிரிப்பாள். அந்தச் சிரிப்பு, சிரிப்பாய்ச் சிரிக்கப்படவில்லை. அந்தக் கிண்டல், நையாண்டியாய் மாறியதில்லை. தோழிகள் கூட, ‘எங்களை இந்தப் பாடு படுத்தறானுக... உன்னை ஏண்டி விட்டு வைத்திருக்காங்க... சொல்லுடா...’ என்று சுவைபடக் கேட்பார்கள். இவள் சிரிப்பாள். அந்தச் சிரிப்பு, அவர்களையும் தொற்றிக் கொள்ளும். இந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் இப்படிப்பட்டச் சுடு சொற்களைக் கேட்கிறாள். தெரு அவமானத்திற்கு உட்படுத்தப்படுகிறாள். பேசாமல் வீட்டுக்குப் போய் விடுவோமா... நீரிழிவு அப்பாவுக்கு கிட்னிதான் பெயிலாகும்... அம்மா, அழுதே செத்துப் போவாள். இன்று வரை தன்னை வியக்கும் ஊர், ‘வாழாவெட்டி’ என்று வம்புப் பேச்சு பேசலாம்... கால வெளிப்பாட்டை அதன் போக்கிலேயே விட்டு விட வேண்டியது தான்...{{nop}}<noinclude></noinclude> feov7idv54sthuef219dkm8mtvy1zov பக்கம்:ஒத்தை வீடு.pdf/77 250 202464 1837348 762372 2025-06-30T08:39:17Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|76||ஒத்தை வீடு}}</noinclude>கதவு தட்டப்பட்டது கேட்டு, அவள் தரையிலிருந்து கட்டிலில் உட்கார்ந்தாள் எதிர் பார்த்ததற்கு மாறாக, மாமியார் வாசல் பக்கம் நின்றாள். “கீழே குளிச்சிட்டு இருக்கான் பேன்ட் சட்டையை வாங்கிட்டு வரச் சொன்னான்.” “அவரையே வந்து வாங்கிட்டுப் போகச் சொல்லுங்க.” “என்ன அதிசயமோ தெரியவில்லை - ஒருவேளை இவள் கண்களில் தெரிந்த கடுமையோ... சொர்ணம்மா பேசாமல் போய்விட்டாள். ஆனாலும், ‘என் பிள்ளைய பழையடியும் துரத்துவாள் போலிருக்கே...’ என்ற வார்த்தைகள் மட்டும் கேட்டன.” சங்கரி, அலமாறியிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து, அவன் கண்ணில் படும்படி மேஜையில் வைத்தாள். அவனை அப்படிப் பேசியதிலிருந்து அவள் பட்டபாடு அவளுக்குத்தான் தெரியும்... ‘துரத்திட்டேனே துரத்திட்டேனே’ என்று இதே அறைக்குள் வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டவள். அவன், நேற்றிரவு வராத போது, ஒரு நிமிடம் கூட இமை மூடவில்லை. அவன் வந்ததும், அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கோர நினைத்தாள். ‘நீங்கள் பக்கத்தில் இருந்தாலே போதும்... எனக்கு எதுவுமே வேண்டாம்.’ என்று சொல்லத் துடித்தாள். ஆனால், அம்மாக்காரி அப்படிப் பேசியபோது, அதை அங்கீகரிப்பதுபோல் நின்றவரிடம் என்ன பேச்சு... எல்லாரும் இளக்காரமாய் நினைக்கும்படி, கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக உள்ளே போகச் சொன்னவரிடம், என்ன ஒட்டு...? என்ன உறவு...? சங்கரி, கதியற்று, தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தபோது, மனோகர் ஈரத் துண்டைத் தலையில் துடைத்தபடியே வந்தான். அவள் ஒருத்தி, அங்கே இருக்கிறாள் என்று அங்கீகரிக்காமலேயே, பீரோவைத் திறந்து, நீலப் பேண்டையும், மஞ்சள் சொக்காவையும் தேடினான். அந்தத் தேடலில், அவள் சேலை பாவாடைகளைக் கீழே சிதறடித்தான். கண்ணாடி முன்னாடி ஒப்புக்குத் தலை வாரினான். மேஜையில்பட்ட காகித ஓலையை பார்த்துப் பிரித்தான். ‘இவள் கெட்ட கேட்டுக்கு ஸ்டாப் செலக்க்ஷன் கமிஷன்ல பாஸாயிட்டாளாம்... இன்னும் ஒரு மாதத்துக்குள்ளே எந்த டிபார்ட்மென்ட்ல வேலைன்னு ஆர்டர் போடுவாங்களாம்’ மனோகர், காகிதத்தை கீழே வீசி அடித்துவிட்டு திரும்பிப் பாராமல் நடக்கப் போனான். இப்போது அவள் மனதிலும் ஒரு வீம்பு. “நான் வேலையில சேரப் போறேன்.”{{nop}}<noinclude></noinclude> rpgd64fkr83559rut3ipe4jwxj8fkss பக்கம்:ஒத்தை வீடு.pdf/78 250 202466 1837350 762373 2025-06-30T08:47:17Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||77}}</noinclude>அவன் நின்ற இடத்தில் நின்றபடியே திரும்பினான். அவளுக்கு ஜீ.ஓ. போட்டான். “வேலையும் வேண்டாம்... கீலையும் வேண்டாம்... நான் ஒருத்தன் சம்பாதிக்குறதே போதும்.” “எனக்குப் பணம் முக்கியமில்லை.” “லுக் சங்கரி! நீ வேலைக்குப் போகல... போகல... போதுமா...?” “எனக்கு அங்கேயாவது நிம்மதி கிடைக்கும்.” “என்னால முடியலைன்னு பழையபடியும் சொல்ல வர்ற... அவ்வளவுதானே...” “அய்யோ... நான் அந்த அர்த்தத்திலே சொல்லலே... அந்த நினைப்பே இப்ப இல்லை... உங்க அம்மா படுத்தற பாட்டைத்தான் சொல்ல வந்தேன்.” “நீ எதைச் சொல்ல வந்தியோ... எனக்குக் கவலை இல்லை... ஆனா ஒரு விஷயத்தை விளக்கி ஆகணும். மனைவிகிட்டே குறைகள் இருந்தால், அவள் புருஷனால் முடியாதாம்... முதல்ல உன்னை கண்ணாடிலே பாத்துக்கோ... உன் மனசை நீயா சோதித்துக்கோ... ஏன் முனங்குறே... முனங்கி முனங்கி என்னை முக்காடு போட வைக்காதே... எதைச் சொல்ல வந்தாலும் வெளிப்படையாச் சொல்லு... சொல்றியா... இல்லியா...” “எங்கிட்ட எந்தக் குறையும் நீங்க கண்டு பிடிக்க முடியாது... அப்படிக் கண்டு பிடித்திருந்தால் உங்களுக்கு என்னை நெருங்கவே மனசு வராது. ஆசையாத்தான் வாறீங்க... அப்புறமாத்தான்... சரி இப்ப இது ஒரு விவகாரமே இல்லை... இப்ப விஷயம் என் வேலை சம்பந்தப்பட்டது...” “போக முடியாது.” “போய்த்தான் ஆகணும்... போவேன்.” “அப்போ... வேலையில சேருறதா லெட்டர் எழுதிப்போடு... மிஸஸ்னு எழுதாம மிஸ்ஸுன்னு எழுதிப்போடு... நம்ம ரெண்டு பேருக்குமே நிம்மதி...” மனோகர், வெளியேறிவிட்டான். சங்கரியையும் பிடிவாதம் பிடித்துக் கொண்டது... <section end="8"/>{{nop}}<noinclude></noinclude> k8zg42aizjanp4w2sf8ovgeneqldax2 பக்கம்:ஒத்தை வீடு.pdf/79 250 202468 1837354 762374 2025-06-30T09:46:49Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="9"/> {{larger|<b>9</b>}} {{dhr|2em}} சங்கரி, கண்ணுக்கு மையிடப் போனாள். ஆனாலும் மூக்கு வரை வந்த அந்த வட்டக் குப்பிளை ஒதுக்கி வைத்தாள். பவுடரைக் கூட ஒப்புக்குப் போடுவது போல் முகம் முழுக்க அப்பாமல், அங்கும் இங்குமாய் தடவிக் கொண்டாள். கவரிங் வளையல்களைக் கழட்டி விட்டு, பீரோவில் இருக்கும் தங்க வளையல்களைப் போட நினைத்து கண்ணாடி பீரோவின் டிராயரைத் திறக்கப் போனவள், அதை இருந்த இடத்திலேயே விட்டு வைத்தாள்... மனமோ அல்லது மனசாட்சியோ அறிவுறுத்தியதற்கு அவள் இணங்கினாள். அவள், போவது அலுவலகப் பணிக்குத்தானே தவிர, அழகுப் போட்டிக்கு அல்ல... அதோடு அவரை சவால் விட்டுப் போகவில்லை. இதனாலேயே அவன் பிறந்தநாளில் வாங்கிக் கொடுத்த வாயில் புடவையைக் கட்டிக் கொண்டாள். அவன் வரணும் வரணும் என்பது போல் மாடிப்படி முனைக்குப் போனாள். வரக்கூடாது என்பது போல் திரும்பி வந்தாள். வேலைக்குப் போவது சம்பந்தமாக ஏற்பட்டத் தகராறுக்கு ஒரு மாத வயதாகிவிட்டது. ஆனாலும் அது குழந்தையாய் வளராமல், கிழடாய்ச் சுருங்காமல் அப்படியே இருந்தது. இப்போது அவன் வருவதும் போவதும் அவளுக்கே தெரியாது. அரசங்காப் பயணமா... அல்லது ஒரு மாதிரிப் பேசிக் கொள்கிறார்களே... அப்படிப்பட்ட அலைச்சலா... அவளும் அலட்டிக்கவில்லை... அவனைப் பொறுத்த அளவில், அவள் மறக்கவில்லை என்றாலும் மரத்துப் போனாள். அன்றைக்கு அவளை, ‘உள்ளே போ... அல்லது வெளியே போ...’ என்று சொன்ன கணவன், எப்போது வேண்டும் என்றாலும் வீட்டை விட்டுத் துரத்தலாம். துரத்துகிறானோ இல்லையோ... மாமியாக்காரி துரத்த வைத்து விடுவாள். அண்ணி வேறு ஊருக்குப் போய் விட்டு இன்றுதான் திரும்பியிருக்காள். அவள் விவகாரம் முடிந்ததோ... முடியலையோ பழைய அண்ணியாக இருந்தால் இந்நேரம் இங்கு வந்திருப்பாள் அல்லது இவள், அங்கே போய் இருப்பாள். தாயும் மகனும் அண்ணி எழுதிய கடிதங்களைக் கண்ணில் காட்டியதில்லை. அம்மா எழுதும் கடிதங்களைக் கூட பிரித்து, மீண்டும் சிநேகிதியான உமா மூலம் ரகசியமாய்ப் படித்து பழையபடி ஒட்டுவதாக உமாவின் மாமியார் சொன்னாள் இனிமேல் அம்மாவை அலுவலகத்திற்கே கடிதம் எழுதச் சொல்லலாம்.{{nop}}<noinclude></noinclude> mhwrciha0j119nh6ypyrs5tpvyrtb8u பக்கம்:ஒத்தை வீடு.pdf/80 250 202471 1837355 762376 2025-06-30T09:53:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||79}}</noinclude>சங்கரி, புறப்படப் போனாள் கணவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் போவதை நினைக்கும்போது, வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், அவன் இரண்டு நாளாக வீட்டுக்கு வரவில்லை. இதுதான் கடைசி நாள். அதோடு நல்ல நாள்... அஷ்டமி, நவமி கழிந்த தசமி நாள்... பதினைந்து நாட்களுக்கு முன்புதான் ஆர்டர் வந்தது. அவனிடம் சொல்லியிருக்கலாம் சண்டைக்குப் பயந்தாள். சண்டை போடப் பயந்தாள். அதோடு முந்தா நாள் வரைக்கும் அப்படியா இப்படியா என்று அவளால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. நேற்றுதான் சாஸ்திரிபவனுக்குச் சென்று, தான் வேலையில் சேருகிற அலுவலகத்தை தேடிப் பிடித்தாள். அங்கு நிலவும் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க நினைத்தாள். அரசாங்க அலுவலகம் என்றாலே அவளுக்குப் பயம். அந்தப் பயம் இப்போது பெருமிதமாக உருமாறினாலும், நேற்றுவரை பயம்தான். கல்லூரித் தமிழ் பேராசிரியர் ஒருவர் கலாட்டா செய்யும் மாணவனிடம் பார்த்து, ‘கல்லூரி அருமையும் ஆசிரியர் அருமையும் நீங்க வேலையில் சேர்ந்த பிறகுதான் தெரியும்... நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள்... அரசாங்கம் கல்லூரி அல்ல... அது அடிமைக்கூடம்... ஆபீஸர் ஆசிரியர் அல்ல... அவர் ஆண்டான். உங்கள் சகாக்கள் இந்த மாவணர்கள் அல்ல... உங்கள் அனுகூலச் சத்ருக்கள்... இங்கே நான் நிற்கிறேன்... நீங்கள் உட்காருகிறீர்கள்... அங்கே ஆபீஸர் உட்காருவார்... நீங்கள் நிற்பீர்கள்... எனவே’ என்று பேராசிரியர் இழுத்தபோது, ஒருத்தன் அல்லது ஒருத்தி மூலம், ‘நம்ம அய்யாவை கவர்மென்ட் ஸர்வீஸ்ல இருந்து எவனோ செமத்தியா அடிச்சுத் துரத்தியிருக்கிறான்’ என்ற கமென்ட் கேட்டது. ஒரே சிரிப்பு. ஆசிரியரும் சேர்ந்து சிரித்தார்... இப்போது, சங்கரி அதே வகுப்பறையில் இருப்பது போல் சிரித்தாள். ஆனாலும், அவள் சேரப் போகும் அலுவலகம், ஆசிரியர் பயமுறுத்தியதுபோல் இல்லை தலைமை அதிகாரி, அவளைப் பார்த்து ஆனந்தக் கூச்சலிட்டார். ‘அடேயப்பா... ரெண்டு வருஷ வேகன்ஸிக்கு விமோசனம் வந்துவிட்டது’ என்றார். பஸ்ஸரை அழுத்தி, அங்கு வேலை செய்கிறவர்களை வரவழைத்து, அறிமுகம் செய்து வைத்தார். ஆகமொத்தத்தில், ஒரு குடும்பப் பாங்கு சாஸ்திரிபவன் திடலில் இடைவேளையில் வீணையும் கையுமாக பக்திப் பாடல்களை இசைக்கும் பெண்கள். விதவிதமான மனிதர்கள்... சங்கரிக்கு, தன் சக்திக்கு உட்பட்ட வகையில் மக்களுக்குச் சேவையாற்றப் போவதில் ஒரு பெருமிதம் சொந்தக்காலில் நிற்கப்போகும் கம்பீரம்.{{nop}}<noinclude></noinclude> a1k7z0fatuswmxk2tiswj7gdznlr3rx பக்கம்:ஒத்தை வீடு.pdf/81 250 202473 1837357 762377 2025-06-30T10:01:36Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|80||ஒத்தை வீடு}}</noinclude>இதற்குள், தெரு ஓரத்தில் கடாமுடாச் சத்தம். சங்கரி, இந்திரனுக்காக மூடிவைத்த பால்கனிக் கதவை திறந்தாள். அவன், தன்னை ஒரு மாதிரி பார்த்திருக்க முடியாது... அப்படிப் பார்த்திருந்தால் அண்ணியின் நிர்பந்தத்தில் வேண்டா வெறுப்பாய் அவன் வீட்டுக்குப் போனபோது, வசனம் பேசியிருப்பான் உஷாராயிருக்கலாம் அதுக்காக சந்தேகப்படக் கூடாது என்ன சத்தம்... குனிந்து பார்த்தாள். மாமியார் முழங்கினாள். ‘நீ ஒரு அற்பக் காய்கறிக்காரன்... எனக்குப் பதில் சொல்லாம எப்படிடா போகலாம்... நான் என்ன நாயா... குலைச்சா குலைக்கட்டுங்கிற மாதிரிப் போறே...’ “ஹலோ. உங்களைத்தான்...” சங்கரி நிமிர்ந்தாள் எதிர் பால்கனியில் இந்திரன். அவன் பார்வை அண்ணியோடு போகும் போது பார்த்த பொதுப் பார்வையாக இல்லை. பொலிகிடா மாதிரி பல்லை இளித்தான். அவள் கண்களை உயர்த்தி கழுத்தையும் முகத்தையும் நிமிர்த்தியபோது, அவன் ரகசியக் குரலில் கேட்டான். “உங்களுக்கு வேலை கிடைத்துட்டாமே. அதுக்காக உங்களை பாராட்டறதா... இல்லை நீங்க படுற பாட்டுக்கு அனுதாபப்படுறதான்னு புரியலே. நீங்க அன்றைக்கு மாமரத்துக்கு கீழே சொன்ன விபரத்தை உமா எங்கிட்டே சொன்னாள்... பாவம்...” சங்கரியின் கண்கள் உள்நோக்கிப் பாய்ந்து தொண்டைக்குள் போவது போல் இருந்தது. கை கால்கள் ஆடின. ஒரு நிமிடம்தான். கண்கள் உள்ளே ரத்தத்தில் மூழ்கி மீண்டும் விழிகளுக்குள் வந்தன. கால்களும் கைகளும் போராளியைப் போல் வைரப்பட்டன. அவனை நேருக்கு நேராய்ப் பார்த்தாள் அதையே அவன் ஒரு அனுகூலமாக எடுத்துக் கொண்டு குழைந்தான். “அந்த விவகாரத்தில போயிட்டுதுன்னா போயிட்டதுதான். குணப்படுத்த முடியாதாம்... பாவம் உங்க பாடு... ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க... வேலை வேற கிடைச்சிட்டுது... அவங்க, உங்களை என்ன பண்ண முடியும்? குணப்படுத்த முடியாத கேஸை விட்டுடுறதுதான், பெட்டர்...” சங்கரி, சங்காரம் செய்யப் போகிறவள் போல் அவனைப் பார்த்தாள். விசை கொண்ட வெடிகுண்டாய் வெடிப்பைக் காட்டாமல், இயல்பாகப் பேசுவதுபோல் பேசினாள். “முடியுமுன்னு சொல்றாங்களே...?”{{nop}}<noinclude></noinclude> syxckcammxe1rxlxy15ub8gziqozaav விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் 4 411887 1837195 1836664 2025-06-29T16:39:12Z Info-farmer 232 புதிது = " மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2", மொத்தம் = 461 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன. 1837195 wikitext text/x-wiki <div style="font-size:90%;"> <!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். --> {{புதியபடைப்பு | மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2|மேலாண்மை பொன்னுச்சாமி|2012}} {{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}} {{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}} {{புதியபடைப்பு |தாய்மதி|மேலாண்மை பொன்னுச்சாமி|1994}} {{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}} {{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}} {{மொத்தபடைப்பெண்ணிக்கை|446}} </div> 1m92lwvqedspsgqprlmybrm67rm9ojl 1837200 1837195 2025-06-29T16:44:44Z Info-farmer 232 - துப்புரவு 1837200 wikitext text/x-wiki <div style="font-size:90%;"> <!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். --> {{புதியபடைப்பு | மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2|மேலாண்மை பொன்னுச்சாமி|2012}} {{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}} {{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}} {{புதியபடைப்பு |தாய்மதி|மேலாண்மை பொன்னுச்சாமி|1994}} {{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}} {{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}} {{மொத்தபடைப்பெண்ணிக்கை|446}} </div> qhctkw9kmrw6arnyvfm9ygjibeshhe0 பக்கம்:கனிச்சாறு 3.pdf/47 250 446695 1837309 1836286 2025-06-30T07:33:00Z Info-farmer 232 <section begin="17"/> 1837309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|18 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude><section begin="16"/> {{larger|<b>16 {{gap+|11}} எச்சரிக்கை!</b>}} {{left_margin|3em|<poem>முன்னம் பறித்த முழுமைத் தமிழ்நிலத்தைத் தன்னால் திருப்பித் தராமல் இருப்பாரேல் கன்னல் தமிழ்மொழியால் கட்டுண்டு பாய்ந்தெழுந்தே இன்னல் விளைப்போமென் றெச்சரிப்பாய் பூங்குயிலே!</poem>}} {{Right|{{larger|<b>-1966</b>}}}} <section end="16"/> <section begin="17"/> {{larger|<b>17 {{gap+|11}} வேண்டும் விடுதலை!</b>}} {{left_margin|3em|<poem>“ஆண்டுநூ றானாலும் அன்னைத் தமிழ்நாடு வேண்டும் விடுதலை எண்ணம் விலக்கோம்யாம்; பூண்டோம் உறுதி! புறப்பட்டோம்” என்றேநீ மூண்ட இடியாய் முழங்காய் தமிழ்மகனே!</poem>}}<noinclude></noinclude> pt0k005lfkuxjqihxpwgv200afgnd60 1837312 1837309 2025-06-30T07:34:30Z Info-farmer 232 <section end="17"/> 1837312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|18 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude><section begin="16"/> {{larger|<b>16 {{gap+|11}} எச்சரிக்கை!</b>}} {{left_margin|3em|<poem>முன்னம் பறித்த முழுமைத் தமிழ்நிலத்தைத் தன்னால் திருப்பித் தராமல் இருப்பாரேல் கன்னல் தமிழ்மொழியால் கட்டுண்டு பாய்ந்தெழுந்தே இன்னல் விளைப்போமென் றெச்சரிப்பாய் பூங்குயிலே!</poem>}} {{Right|{{larger|<b>-1966</b>}}}} <section end="16"/> <section begin="17"/> {{larger|<b>17 {{gap+|11}} வேண்டும் விடுதலை!</b>}} {{left_margin|3em|<poem>“ஆண்டுநூ றானாலும் அன்னைத் தமிழ்நாடு வேண்டும் விடுதலை எண்ணம் விலக்கோம்யாம்; பூண்டோம் உறுதி! புறப்பட்டோம்” என்றேநீ மூண்ட இடியாய் முழங்காய் தமிழ்மகனே!</poem>}} <section end="17"/><noinclude></noinclude> sh85cpzo157hhvfb31e1nkj1n9lrlou பக்கம்:கனிச்சாறு 3.pdf/91 250 446774 1837403 1836746 2025-06-30T10:52:49Z Info-farmer 232 62 1837403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|62 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude><section begin="62"/> {{larger|<b>62 {{gap+|7}} {{Right|தமிழ் நாட்டைப் பெறாமல்<br> தமிழர் வாழ்வில்லையே !}}</b>}} {{left_margin|3em|<poem> இந்தியத் தேசியம் என்பது பொய்மை! இந்திய ஒருமையென் றெண்ணுதல் அடிமை! இந்தி(ய) மொழியென் றியம்புதல் கீழ்மை! 'இந்தியா' தமிழருக் குதவாத கொள்கை! பார்ப்பனர், வடவர், வணிகரே, இந்தியர்! பார்ப்பனர் ஆட்சி பயன்படா தெமக்கே! ஊர்ப்பணக் கொள்ளையர் ஒருமைப்பா டென்பர்! ஒருநாள் அவையெலாம் அடங்குவ துறுதியே! தமிழரெ லாம்தமைத் தமிழரென் றெண்ணுக! தம்சாதி மறக்க; தமிழினம் நினைக்க! தமிழரெ லாம்தமின் தாய்மொழி பேணுக! தமிழ்மொழி பேசுக; பிறமொழி தவிர்க்கவே! தமிழரெ லாம்தமின் தாய்நாட்டைக் கருதுக! தமிழ்நாட்டை விரும்புக; தனிநாடாய் ஆக்குக! தமிழர்க்குத் தமிழ்நாடு தம்நாடாய் ஆகுக! தமிழ்நாட்டைப் பெறாமல் தமிழர்வாழ் வில்லையே!</poem>}} {{Right|{{larger|<b>-1988</b>}}}} <section end="62"/><noinclude></noinclude> 4o5ev9c1tmoc7886o8lhoyuttjfme5g பக்கம்:கனிச்சாறு 4.pdf/39 250 446912 1837281 1440454 2025-06-30T06:39:04Z TVA ARUN 3777 tag 1837281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|4{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="2"/>{{larger|<b>{{rh|2||சுருட்டும் பீடியும் !}}</b>}} {{left_margin|3em|<poem> சுருட்டும் ''பீடியும்'' இளமையைச் சுருட்டும் அன்பு சூடிய மனைவி நெருங்கையில் மருட்டும் {{float_right|(சுருட்டும்)}} இருட்டு வேளையில் இதழால் அவ் விதழில் இனித்திட இனித்திடத் தேனுண்ணப் போகும் குருட்டு மாந்தர்க்கு யானொன் ன்று சொல்வேன் குடலோடு வாய்நாறும்! நற்காதல் சாகும்! {{float_right|(சுருட்டும்)}} திருட்டுத் தனமாகக் குடிகெட்டுப் போகும் தென்னம் பிள்ளைக்குப் புகையாதா மீசை! வறட்டு நெஞ்சோடு வாய்நாறும் கணவன் வரும்போதே பெண்ணுக்குக் குறையாதா ஆசை! {{float_right|(சுருட்டும்)}} செந்தமிழ் பேசிடும் நாவும் மரக்கச் செக்கச் சிவந்த செவ்விதழ் கருக, ''தந்தம்''போல் இருந்தபல் உறுதியும் தளரத், தளிர்மேனி சுருங்கிட உயிரை உலர்த்தும் {{float_right|(சுருட்டும்)}} பழத்தின் கதுப்பைப் போல்ஒளி செய்து பருமை ஒட்டி உலராதா கன்னம்! கிழத்தின் சாயல் வந்துன்னை அணைக்கக் கிளிவாயைக் கோணிப் போகாதா ''அன்னம்!'' {{float_right|(சுருட்டும்)}}</poem>}} {{Right|{{larger|<b>-1954</b>}}}} <section end="2"/><noinclude></noinclude> i4wmww7of3s0tqmlt71rvcglugru9is பக்கம்:கனிச்சாறு 4.pdf/40 250 446913 1837282 1440457 2025-06-30T06:39:46Z TVA ARUN 3777 tag 1837282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}5}}</b></small></noinclude> <section begin="3"/>{{larger|<b>{{rh|3||பெற்றவள் உவகை !}}</b>}} {{left_margin|3em|<poem> {{c|<b>எடுப்பு</b>}} காட்டுப் புலியடி என்மகன் - தமிழ் நாட்டுக்குப் பழியொன்று வாய்ந்திடிற் பாய்ந்தெழும் {{float_right|(காட்டுப்)}} {{c|<b>தொடுப்பு</b>}} கூட்டுக்குள் இருப்பது போலென் சொல் - கட்டுப் பாட்டுக்குள் இருப்பினும் பைந்தமிழ் நைந்திடில் {{float_right|(காட்டுப்)}} {{c|<b>முடிப்பு</b>}} வீட்டுக்குள் என்னிடம் அஞ்சினும் - இரா வேளையில் அவளிடம் கொஞ்சினும், - பண்புக் கோட்டுக்குள் நின்றவன் வாழினும் - தமிழ்க் கேட்டினுக் கவன்பொறான் யார்வந்து சூழினும் {{float_right|(காட்டுப்)}} ஏட்டுப் படிப்பினில் மன்னவன் - தமிழ்க் கேகும் படையினில் முன்னவன் - தனை மாட்டுஞ் சிறைக்கவன் பின்னிடான் - அவன் மனைவியைக் குழந்தையை என்னையும் எண்ணிடான் {{float_right|(காட்டுப்)}} வாட்டும் வறுமையைப் பார்த்திடான் - பிறன் வன்சொலைக் கேட்டவன் வேர்த்திடான் - உடற் கூட்டுக்குள் உயிருள்ள வரையினில் - தமிழ்க் காதலில் எந்நாளுங் கங்கு கரையிலன் {{float_right|(காட்டுப்)}} </poem>}} {{Right|{{larger|<b>-1954</b>}}}} <section end="3"/><noinclude></noinclude> tb9zpu60x9fsoo0o8jvoo73j70zwxks பக்கம்:கனிச்சாறு 4.pdf/38 250 447070 1837270 1440195 2025-06-30T06:17:47Z Info-farmer 232 +<section begin=""/> 1837270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude> <section begin="1"/> {{larger|<b>{{rh|1|| கடவுள் நம்பிக்கை!}}</b>}} {{left_margin|3em|<poem>காற்றுலவாக் குடியிருப்பால் கண்கள் காணாக் குற்றுயிரின் பெருவிளைவால் குருதி பீய்ச்சும் ஊற்றியங்கா வகையாலோ வந்த நோய்க்கே, ஒட்டாத கடவுள்மேல் கோள்கள் தம்மேல், ஏற்றுகின்றார் காரணத்தை அறியாதார்கள்; ஈதொன்றும் வியப்பில்லை! மருந்து நூற்கள், தேற்றமுடன் கற்றார்அறி வியலைக் கற்றார், தெய்வத்தைக் காட்டுகின்றார் வெட்கம்! வெட்கம்!! அருந்துகின்ற உணவுகளின் வகையால், தீமை ஆக்குகின்ற குடிவகையால், ஒழுங்கின் மையால், வருந்துகின்ற நோக்காட்டைப் போக்கு தற்கு வகைவகையாய்த் தெய்வங்கள், வணங்கு கின்றார் தெரிந்துணரா மக்கள்; இதில் வியப்பொன் றில்லை! தேர்ந்தநூல் பலகற்றும், உயிர்நூல் கற்றும், மருந்தறிந்த பெரியோரும் படையல் பூசை மனமாரச் செய்கின்றார் வெட்கம்! வெட்கம்!! கருக்கொள்ளா மகளிர்க்குக் குற்றஞ் சாற்றிக் கல்நின்ற பிள்ளையார் அரசு சுற்றி, எருக்கிலையால், எட்டியினால் தீத்தெய் வங்கள் ஏற்றத்தை உடுக்கைதட்டி இறங்கச் செய்து, தெருக்கடையில் ஓட்டிவிடும் மடமைப் போக்கைத் தெரியாதார் செய்கின்றார் வியப்பொன்றில்லை! பெருக்குநூல் பலகற்றும் உடல்நூல், பால்நூல் படித்துணர்ந்தும் செய்கின்றார் வெட்கம்! வெட்கம்!! பெயரளவை, கோட்பொருத்தம், நாட்பொருத்தம், பெண்ணுக்கும் ஆணுக்கும் பார்த்துத் தீர்த்து மயிரளவும் குறைகாணா வகையிற் செய்த மணம் நடந்தே ஓராண்டில் கணவன் மாய்ந்தால், உயிரளவும் பெண்சுமக்கும் பேச்சும் ஏச்சும் ஒன்றிரண்டா நாள்வைத்த குருவுக் கென்ன? மயர்வின்றிக் கற்றுணர்ந்த பெரியோர் செய்தால், மடமையெல்லாம் அறிவாமோ? தீமை நன்றோ?</poem>}} {{Right|{{larger|<b>-1951</b>}}}} <section end="1"/><noinclude></noinclude> ta2whn23ahrs3vxdjr9wd3ib9c3298p பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/15 250 456450 1837182 1836112 2025-06-29T16:08:35Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||14|}}</noinclude>{{left_margin|3em|<poem> சேர்ந்துமழை பெய்திடும் இலவமலை திருவாச்சி திகழ்பனசை ஓடாநிலை தென்முருங் கைத்தொழுவு முப்பத்தி ரண்டூர் சிறந்தபூந் துறைசைநாடே’</poem>}} இவ்விசைநலன் கனிந்த பாட்டு பூந்துறை நாட்டின் கண்ணமைந்த ஒப்பில்லாத முப்பத்திரண்டு ஊர்ப்பெயர்களையும் எடுத்துரைக்கின்றது. {{larger|<b>வெள்ளோட்டின் பெயர்க்காரணம்</b>}} கொங்கு நாட்டின் பழமையான ஊர்களுக்கெல்லாம் எவையேனும் காரணங்கள் கருதியே பெயர்கள் வைக்கப்பட்டன. பிற்காலத்தில் அவ்வூர்களின் பெயர்கள் மாறிப் பல்வேறு வடிவங்களை அடைந்தன. அவற்றின் உண்மைக் காரணங்கள் தெரியாமல் மறைந்தன. குளிர் தண்டலை—குளித்தலை ஆனதும், பொழில் வாய்ச்சி—பொள்ளாச்சி ஆனதும் இராசராசபுரம் தாராபுரம் ஆனதும் இதற்கு நல்ல சான்றுகளாகும். வெள்ளோடு என்னும் சிற்றூர் ஈரோட்டின் தென் மேற்கில் ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் வழியில் 14 கிலோ மீட்டரில் உள்ள ஊராகும். இவ்வூரில் பல செந்தமிழ்ப் புலவர்களும் அரசியல் தலைவர்களும் வள்ளல்களும் தோன்றி வாழ்ந்து ஊருக்குச் சிறப்புண்டாக்கினர். நமது தலைவன் காலிங்கராயன் பிறந்து வளர்ந்ததும் இவ்வூரில் அருகில் விளங்கும் கனகபுரத்தில்தான். புராணக் கதைகளோடு இணைத்து இவ்வூரின் பெயருக்குப் பல காரணங்கள் கூறுவர். காளியண்ணப் புலவர் மிகச் சுவையான முறையில் வெள்ளோட்டின் பெயர்க்காரணத்தைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார். “தேவர்கள் அனைவரும் கொங்கு மண்டலத்தில் பூந்துறை நாடு புகுந்து இறைவனை வணங்க ஏற்ற இடம் எது என்று ஆராய்ந்தனர். அவர்கட்கு முன்னே திருமாலு-<noinclude></noinclude> j03turenzmtjyaj3qeb1izn77bm3wqi பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/16 250 456451 1837184 1836115 2025-06-29T16:13:00Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||15|}}</noinclude>டைய யானை வழிபட இடந்தேடிச் சென்றது. அந்த யானை வெள்ளோடு இருக்குமிடம் வந்தவுடன் நின்றது. தேவர்கள், இறைவனை வணங்கத் தகுந்த இடம் கண்டோம் என்று ஆரவாரித்தனர். நால்வேதங்கள் முழங்க அங்குச் சர்வலிங்க நாயகராய் இறைவன் இருக்கக் கண்டனர். அந்த யானை தன்னுடைய தந்தங்களாலும் கால்களாலும் நிலத்தைத் தோண்ட அங்கு வெண்மணல் இருக்கவும் பால் நிறம் போன்ற ஓடை ஒன்றிருப்பதைக் கண்டனர். அதனைத் தீர்த்தமாக வைத்துத் தேவர்கள் இறைவனை வழிபட்டேகினர். அவ்வோடைக்கு வெள்ளோடை என்று பெயர் ஏற்பட்டது. பின்னர் அப்பெயர் வெள்ளோடு என்று மாறிற்று. {{left_margin|3em|<poem> “மேல்பாலில் வாசவன்தன் கரியொன் றேகி விளங்குமதம் பொழிந்துநிழல் சுழித்து விம்மிக் காலாலும் கோட்டாலும் நிலத்தைக் கீண்ட கண்டதுநீர் வெள்ளோடை கமழ்பால் ஓடை”</poem>}} என்பது அப்பாடல் பகுதியாகும். {{larger|<b>கோயில்கள்</b>}} வெள்ளோட்டின் பெருமையையும் வரலாற்றுப் பழமையையும் எடுத்துக் காட்டுவதற்கு இன்றும் அங்குள்ள கோயில்களே சிறந்த சான்றுகளாக அமைகின்றன. வெள்ளோட்டின் வடக்கே வயல்களிடையில் பாழடைந்த சிறுகோயில் ஒன்றுள்ளது. அது சமண சமயத்தைச் சேர்ந்த ஆதிநாதர் கோயிலாகும். கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையில் கொங்கு நாட்டில் ஈரோடு வட்டாரத்தின் பல இடங்களில் (விசயமங்கலம், திங்களூர், சீனாபுரம், வெள்ளோடு, பூந்துறை) சமண சமயத்தவர் வாழ்ந்தனர். இவ்வூர்களிலெல்லாம் சமண சமய ஆலயங்கள் இன்றும் இருக்கின்றன. {{nop}}<noinclude></noinclude> jfqlc6jav8a7gatmimpe22jp112hhbv பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/17 250 456452 1837185 1836118 2025-06-29T16:17:32Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||16|}}</noinclude>இங்குள்ள சிவாலயத்தில் வீற்றிருந்தருள் புரிபவர் சர்வலிங்கேசுவரன் அம்மன்—பாடகவல்லி அம்மன். காலிங்கராயனுடைய வழிபடு கடவுள் இந்த ஈசுவரனே! இங்குள்ள பெருமாளுக்கு ஆதிநாராயணப் பெருமாள் என்பது திருநாமம். பிற கோயில்கள் நஞ்சுண்ட ஈசுவரன் கோயில், சுப்பிரமணியர் கோயில், அண்ணன்மார் கோயில், இராசாக் கோயில், பொன்காளி அம்மன் கோயில், அயத்தாள் அம்மன் கோயில், ஆயி அம்மன் கோயில், மாகாளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் இவைகளாகும். {{larger|<b>கல்வெட்டுக்கள்</b>}} இவ்வூரில் சர்வலிங்கேசுவரன் ஆலயம், இராசாக் கோயில், பொன்காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், அண்ணன்மார் கோயில் ஆகிய கோயில்களில் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வூர்க் கல்வெட்டுக்களில் சருவலிங்கர் கோயில் கல்வெட்டுக்களைச் சாசன இலாகாவினர் படி எடுத்துள்ளனர். இக்கோயிலில் மட்டும் ஒன்பது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. வீரபாண்டியன் காலக் கல்வெட்டுக்கள் மூன்றும் விசயநகர அரசர் காலக் கல்வெட்டுக்கள் நான்கும் காலம் குறிப்பிடப்பெறாமல் உள்ள பாடல் சாசனங்கள் இரண்டும் இருக்கின்றன. {{larger|<b>இலக்கியங்கள்</b>}} இவ்வூரைப்பற்றி உள்ள தனிப்பாடல்களேயன்றிக் காணிப்பாடல்களும் ஊர்த்தொகைப் பாடலும் இவ்வூரின் புகழ்பாடும். கொன்றை வேந்தன் வெண்பா இவ்வூரைப் பற்றியதே! இவ்வூரில் உள்ள சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள பாடகவல்லியம்மன்மீது பிள்ளைத்தமிழ் ஒன்றுண்டு. சிவாலயக் கல்வெட்டிலிருந்து ‘அழைப்பிச்சான் பாட்டுக் கலம்பகம்’ என்ற நூலொன்று இருந்ததாக அறிகின்றோம். {{nop}}<noinclude></noinclude> rqz95vayc99701llhbcq6halh3wbk3r பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/18 250 456453 1837187 1836121 2025-06-29T16:20:00Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||17|}}</noinclude>வெள்ளோட்டில் வாழ்ந்த தெள்ளுதமிழ்ப் பாவலர் குந்தாணி சுவாமிநாதக் கவிராயர்தான் ‘சென்னிமலை யாண்டவர் பிள்ளைத் தமிழ்’, ‘நல்லண்ணன் காதல்’ போன்ற நூல்களைப் பாடியவர். ‘வாலசுப்பப்புலவன்’ என்பவர் ஒருவர் இங்கு வாழ்ந்ததாகக் கொங்கு மண்டல சதகம் மூலமாக அறிகின்றோம். இவ்வூரருகே புலவர் பாளையம் என்ற ஊர் ஒன்றுள்ளது. இராசாக்கள் அம்மானை, பாடகவல்லி பதிகம், குப்பணன் நீதிச்சதகம் என்பன இங்கே பாடப்பட்ட நூல்களாகும். {{larger|<b>தலைவர்கள்</b>}} வெள்ளோட்டில் சாத்தந்தை குலத்தில் நஞ்சையன், காலிங்கராயன், காசிலிங்கக் கவுண்டர், கொழந்தவேல் கவுண்டர், முத்தித்திருமலைக் கவுண்டர், ராசாக்கவுண்டர், நல்லண கவுண்டர், முதலியாக் கவுண்டர், பயிரகுலத்தில் குப்பண கவுண்டர், பழனிக் கவுண்டர் போன்ற பல வள்ளல்கள் வாழ்ந்து ஆலயத்திருப்பணி செய்தும் அருந்தமிழ் வளர்த்தும் புலவர்களைப் பேணியும் பணிகள் பல புரிந்துள்ளனர். {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> gafi2j7t4wj1kgn3if0r6o0pu24kqw9 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/19 250 456454 1837189 1836127 2025-06-29T16:25:41Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>பட்டமும் பதவியும்</b>}}}} {{larger|<b>இளமைக் காலம்</b>}} காலிங்கராயனின் இயற்பெயரைப்பற்றியும் இளமைப் பருவத்தைப்பற்றியும் விரிவாக அறியக் குறிப்புக்கள் எவையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ‘இந்தியாவின் ஆளும் தலைவர்களும் பெருமக்களும் நிலக்கிழார்களும்’ என்னும் ஆங்கில வரலாற்று நூல் அவரைச் ‘சாத்தந்தை காலிங்கராயர்’ என்று குறிப்பிடுகிறது. ‘சாத்தந்தை, என்ற குலப்பெயருடன் அவர் பெயர் இணைந்து வழங்கப் பெற்றமை தெரிகிறது. அண்மையில் கிடைத்த ஓலைப் பட்டயம் ஒன்றின்மூலம் காலிங்கராயனின் தந்தை பெயர் நஞ்சயன் என்றும் காலிங்கராயனின் இயற்பெயர் லிங்கய்யன் என்றும் தெரிகிறது. ::“தம்முடைய இஷ்ட தெய்வமான சர்வேஸ்வர பாடகவல்லி நாச்சியார் தேவஸ்தானம் ஜீரணோத் தாரணம் பண்ணிக்கொண்டு இருந்தான்” என்று ‘வமிசாவளி’ கூறுவதால் சிறந்த சிவபக்தன் என்றும் வெள்ளோடு சர்வலிங்கேசுவரரை வழிபடு தெய்வமாக வழிபட்டு வந்தார் என்றும் தனியாகக் கோயில் திருப்பணி செய்யும் அளவிற்கு மிகுந்த செல்வமுடையவர் என்றும் அறிகின்றோம். வைணவக் கோயில்கள் பலவற்றிற்கும் அவர் திருப்பணி செய்திருப்பதால் சமரச நோக்குடையவர் என்பதனையும் அறிகின்றோம். வமிசாவளிமூலம் காலிங்கராயனுக்கு ஒரு மகன் இருந்ததாகவும் பண்ணை குலத்தினரை மாமன் முறையாகக் கொண்டு வாழ்ந்தவர் என்றும் அறிகிறோம். மாமன் வீடு கொடுமுடிப் பகுதியில் இருந்ததாகக் கூறுவர். {{nop}}<noinclude></noinclude> 5k2qflfrlzsth8p1cjiw14klq4676h9 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/20 250 456455 1837190 1836128 2025-06-29T16:29:07Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||19|}}</noinclude>சோர்வில்லாத முயற்சியும் அயராத உழைப்பும் அனைவர்மீதும் பற்றிப் படரும் அன்பும் தடைக்கு அஞ்சாத ஆற்றலும் கொண்டு விளங்கியவர் காலிங்கராயர் என்று அவர் வாழ்க்கைக் குறிப்புக்கள் மூலம் தெரிகிறது. இவர் கற்பவை கசடறக் கற்றவர். செல்வத்துட் செல்வமாம் செவிச் செல்வமும் சிறக்கப் பெற்றவர். வெள்ளோட்டுக்காரர்களும் பூந்துறை நாட்டவர் அனைவரும் கொங்கு நாட்டவர் எல்லோரும் காலிங்கராயன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தனர். காலிங்கராயர் வடமொழி, தமிழ் இரண்டிலும் பெரும் புலமை படைத்திருந்தார் என்றும், திருக்குறளுக்கு உரை இயற்றிய 10 தொன்மையான புலவர்களில் காலிங்கர் என்பவர் நமது காலிங்கராயரே என்றும், புருஷசூக்தமாலா என்னும் வடமொழி நூலுக்குத் தமிழில் விரிவுரை கண்டார் என்றும் கரூர்ப் பெரும்புலவர் அ. கணபதி ஐயா அவர்கள் ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்கள். காலிங்கராயர் பற்றிய தனிப்பாடல் ஒன்றில் ‘கற்ற அறிவினன்’ என்று குறிக்கப் பெறுவதால் கணபதி ஐயா கூறுவது உண்மையாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. காவிரியை ஒட்டியுள்ள மேடு பள்ளமான இடத்தில் மிகுந்த பொறியியல் திறத்துடன் நிலத்தை நன்கு அளந்து திட்டமிட்டு ஆராய்ந்து கால்வாயை வெட்டியுள்ளார். கணிதம், பூகோளம் போன்ற கலைகளில் காலிங்கராயன் மிகவும் வல்லவராகத் திகழ்ந்திருக்க வேண்டும். பொறியியல் கலையில் மிகவும் மேலோங்கிய ஆற்றலையும் அறிவையும் காலிங்கராயர் பெற்றிருக்க வேண்டும். {{larger|<b>பிறந்த ஊர்</b>}} ‘பூந்துறை நாட்டுக்கு நாட்டானாய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்காரன்’ என்று ஆவணங்கள் கூறினாலும் காலிங்கராயன் கனகபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் தென்<noinclude></noinclude> n1brs95j4grjegkqsty8ojfqcazhxfz பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/21 250 456456 1837191 1836133 2025-06-29T16:33:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||20|}}</noinclude>முகம் வெள்ளோட்டுக்குரியவர் என்றும் அண்மையில் கிடைத்த பட்டயத்தாலும் சில கல்வெட்டுக்களாலும் உறுதிப்படுகிறது. காலிங்கராயன் அணை கட்டின பட்டயத்தில் ‘கனகபுரத்து நஞ்சையன் மகன் லிங்கையன் வானியாற்றில் அணை கட்ட வேணுமென்று’ என்ற தொடர் வருகிறது. கனகபுரம் விநாயகர் கோயிலில் ‘காலிங்கராயன் வங்கிஷத்தில் காசிலிங்கக் கவுண்டன் உபயம்’ என்ற கல்வெட்டுக் காணப்படுகிறது. கவுண்டச்சி பாளையம் பாலமடை அம்மன் கோயிலை 1850ஆம் ஆண்டுத் திருப்பணி செய்த கனகபுரம் கொளந்தவேல் கவுண்டர் தம்மைக்காலிங்கராயன் வம்மிஷம் என்றும் தாம் கனகபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் அக்கோயில் கல்வெட்டில் குறித்துக் கொள்ளுகின்றார். கனகபுரம் கரையைச் சேர்ந்த செம்மாண்டம் பாளையத்தில் காலிங்கராயர்க்கு நிலங்கள் இருந்ததாகச் செவிவழிச் செய்தி கூறுகிறது. எனவே காலிங்கராயர் கனகபுரத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதிப்படுகிறது. {{larger|<b>அரசியல் தலைவன் ஆதல்</b>}} கி.பி. 13ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் கொங்கு நாட்டைச் சடையவர்மன் வீரபாண்டியன் என்பவன் கைப்பற்றினான். {{left_margin|4em|<poem> “கொங்கீழங் கொண்டு கொடுவடுகு கோடழித்துக் கங்கை இருகரையும் காவிரியும் கைக்கொண்டு”</poem>}} எனவரும் அப்பாண்டியன் மெய்க்கீர்த்திப் பகுதி இச்செய்தியை வலியுறுத்தும். வெற்றி பெற்ற பாண்டியன் படையில் வெள்ளோட்டைச் சேர்ந்த ஓர் இளைஞன் சேர்ந்து மதுரை சென்றான். விரைவில் தன் அறிவு ஆற்றலால் பாண்டியன் படைக்குத் தலைமை பூண்டான். வீரபாண்டியனுக்கு அறிவுரை கூறும் தலைமை அமைச்சனாக<noinclude></noinclude> n6yso6l3v5xzhbegml5yz124jflnr9a 1837192 1837191 2025-06-29T16:34:06Z Desappan sathiyamoorthy 14764 1837192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||20|}}</noinclude>முகம் வெள்ளோட்டுக்குரியவர் என்றும் அண்மையில் கிடைத்த பட்டயத்தாலும் சில கல்வெட்டுக்களாலும் உறுதிப்படுகிறது. காலிங்கராயன் அணை கட்டின பட்டயத்தில் ‘கனகபுரத்து நஞ்சையன் மகன் லிங்கையன் வானியாற்றில் அணை கட்ட வேணுமென்று’ என்ற தொடர் வருகிறது. கனகபுரம் விநாயகர் கோயிலில் ‘காலிங்கராயன் வங்கிஷத்தில் காசிலிங்கக் கவுண்டன் உபயம்’ என்ற கல்வெட்டுக் காணப்படுகிறது. கவுண்டச்சி பாளையம் பாலமடை அம்மன் கோயிலை 1850ஆம் ஆண்டுத் திருப்பணி செய்த கனகபுரம் கொளந்தவேல் கவுண்டர் தம்மைக்காலிங்கராயன் வம்மிஷம் என்றும் தாம் கனகபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் அக்கோயில் கல்வெட்டில் குறித்துக் கொள்ளுகின்றார். கனகபுரம் கரையைச் சேர்ந்த செம்மாண்டம் பாளையத்தில் காலிங்கராயர்க்கு நிலங்கள் இருந்ததாகச் செவிவழிச் செய்தி கூறுகிறது. எனவே காலிங்கராயர் கனகபுரத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதிப்படுகிறது. {{larger|<b>அரசியல் தலைவன் ஆதல்</b>}} கி.பி. 13ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் கொங்கு நாட்டைச் சடையவர்மன் வீரபாண்டியன் என்பவன் கைப்பற்றினான். {{left_margin|4em|<poem> “கொங்கீழங் கொண்டு கொடுவடுகு கோடழித்துக் கங்கை இருகரையும் காவிரியும் கைக்கொண்டு”</poem>}} எனவரும் அப்பாண்டியன் மெய்க்கீர்த்திப் பகுதி இச்செய்தியை வலியுறுத்தும். வெற்றி பெற்ற பாண்டியன் படையில் வெள்ளோட்டைச் சேர்ந்த ஓர் இளைஞன் சேர்ந்து மதுரை சென்றான். விரைவில் தன் அறிவு ஆற்றலால் பாண்டியன் படைக்குத் தலைமை பூண்டான். வீரபாண்டியனுக்கு அறிவுரை கூறும் தலைமை அமைச்சனாக-<noinclude></noinclude> ktcun6528athhvndr1zymmbsmxyvjfx பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/22 250 456457 1837194 1836140 2025-06-29T16:37:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||21|}}</noinclude>வும் ஆனான். சடையவர்மன் வீரபாண்டியனும் கி.பி. 1253ஆம் ஆண்டு அவ்வீரனைப் பாராட்டிக் ‘காலிங்கராயன்’ என்ற சீர்மிகும் சிறப்புப் பட்டப்பெயரும் அளித்தான். அவரே நமது கால்வாய் வெட்டிய வெள்ளோடைச் சாத்தந்தை காலிங்கராயர் ஆவார். ஏறக் குறைய தன் 30 ஆம் வயதில் ஆட்சி அலுவலில் சேர்ந்த காலிங்கராயன் (சுமார் கி.பி. 1253 ஆம் ஆண்டு) பாண்டிய நாட்டின் வடக்குப் பகுதியாகிய கொங்கு நாட்டிற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். ‘உத்தர மந்திரி’ ‘உத்தர ராயன்’ ‘சுந்தர பாண்டிய கலிங்கராயன்’ என்ற சிறப்புப் பட்டப் பெயர்களும் பெற்றமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. வீரபாண்டியன் சுந்தர பாண்டியன் குலசேகர பாண்டியன் என்ற மூன்று கொங்குப் பாண்டிய அரசர்கள் காலத்தில் சுமார் 40 ஆண்டுகள் அரசியல் தலைவராக விளங்கிப் பெருமைகள் பெற்றவர் நம் காலிங்கராயன். கொங்கு நாட்டில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் காலிங்கராயர். தன் பெயரில் நாணயம் அச்சிட்டார் என்பதனையும் அறிகின்றோம். {{larger|<b>காலிங்கராயன்—பெயர்க்காரணம்</b>}} லிங்கையன் என்பது காலிங்கராயனின் இயற்பெயர் என்பதால் அப்பெயரை ஒட்டியே பட்டப் பெயர் காலிங்கராயன் என்றும் வழங்கப் பெற்றிருக்கலாம் என்றும் கருதலாம். தமிழரசர்கள் பெற்ற கலிங்க வெற்றியின் அடையாளமாகவே ‘காலிங்கராயன்’ என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. ‘வமிசாவளி’ காலிங்கராயன் என்பதற்கு ஒரு புதிய பெயர்க் காரணம் கூறுகிறது. கலிங்கு என்ற சொல்லுக்கு ஏரி, மதகு, நீர் வழியும் அணைக்கட்டு என்று பொருள் உண்டு. கலிங்கல் என்ற சொல்லும் ‘ஏரி நிறைந்து நீர் போகும் வழி’ என்ற பொருள்தரும். எனவே, காலிங்கராயன் அணை கட்டியதன் காரணமாகவே ‘கலிங்குராயன்’ அல்லது ‘கலிங்கல்ராயன்’ என<noinclude></noinclude> nhrye5rppvybuysd8yu42tw822fpp35 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/23 250 456458 1837197 1836229 2025-06-29T16:40:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||22|}}</noinclude>வழங்கப்பெற்றது. பின்னர் அப்பெயரே ‘காலிங்கராயன்’ என்று மாறியது என்ற கருத்து அதில் கூறப்படுகின்றது. “அணையும் கட்டிவச்சபடியினாலே காலிங்கக் கவுண்டன் என்னும் பேர் வரப்பட்டுப் பிரசித்திப்பட்டவனாய் இருக்கும் நாளையில்” எனவரும் பகுதியால் இக்கருத்தை அறியலாம். ஆனால் அணை கட்டுவதற்கு முன்னரும் காலிங்கராயன் என்ற பெயர் நம் தலைவனுக்கு வழங்கியதென்பதையும் அணை, குளம் கட்டாத பிற தலைவர்களும் பல்வேறு காலங்களில் காலிங்கராயன் என்று பெயர் பெற்றிருப்பதையும் நோக்கும்போது இக்கருத்து அவ்வளவு வலியுடையது அன்று என்பது தெரிகிறது. எனவே ‘காலிங்கராஜன்’ என்ற பெயரே ‘காலிங்கராயன்’ என்று வழங்கப்பட்டதென அறியலாம். வமிசாவளி மற்றொரு வகையிலும் பெயர்க்காரணம் கூறுகிறது. ‘காலிங்கன்’ என்பதுதான் முன்பு வழங்கிய பெயர். பின்னர் ராயர் சமஸ்தானம் உள்ள பெனு கொண்டாவிற்குச் சென்று பன்னிரண்டு ஆண்டுக்காலம் காத்திருந்து பேட்டி கண்டு ‘ராயர்’ பட்டம் பெற்றுக் காலிங்கராயர் என்று புகழ் பெற்று விளங்கியதாகவும் கூறுகின்றது. பாண்டியர் ஆட்சியே கொங்கு நாட்டில் பரவியிருந்தது என்பதாலும் காலிங்கராயன் என்ற பெயரிடும் வழக்கம் கி.பி. 12ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்து உள்ளது என்பதாலும் ‘காலிங்கராயன்’ என்ற பெயரே அரசன் அளித்த பட்டப்பெயராக நம் தலைவனுக்குள்ளமையை விளக்கும் கல்வெட்டுக்களைத்தான் ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும் என்பது தோன்றுகின்றது. {{larger|<b>செல்வச் செழிப்பு</b>}} உயர்பதவி வகித்த காலிங்கராயன் செல்வாக்குடன் மிகுந்த செல்வந்தராகவும் இருந்திருக்கவேண்டும். அணை<noinclude></noinclude> aiqz37y7u03chn7os9bxh3rzcdfb4bp பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/24 250 456459 1837199 1836455 2025-06-29T16:44:24Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||24|}}</noinclude>கட்டிக் கால்வாய் வெட்டும் முயற்சியில் காலிங்கராயன் சோர்வுற்றிருக்கும்போது அவர் தாயார் மகனுக்குத் தைரியமூட்டிப் பணியில் ஈடுபடுத்தினார் என்பது செவிவழிச் செய்தியாகும். ‘மகனே நம் வீட்டில் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. தயிர் விற்ற பணம் தாவாரம் வரை கிடக்கிறது. மோர் விற்ற பணம் முகடுவரை உள்ளது. அவைகளை எடுத்துக்கொண்டு சென்று தைரியமாக அணையைக்கட்டு; கால்வாயை வெட்டு’ என்று காலிங்கராயன் தாயார் கூறினார்களாம். இவ்வாறு மகனுக்கு ஊக்கமூட்டிய தாயாரின் பெயரைத் தெரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ‘காலிங்கராய வினியோகம்’ என்ற வரி கொங்கு நாட்டில் வசூலிக்கப்பட்டது. {{larger|<b>பங்காளிகள் பகையா?</b>}} பங்காளிகளிடம் பகை கொண்டிருந்தார் காலிங்கராயன் என்று சிலர் கூறுவர். அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. வேட்டுவர்களைக் காலிங்கராயன் வெல்லும் முயற்சியில் எண்ணமங்கலம் சாத்தந்தை குலத்தினர் உதவியுள்ளனர். வெள்ளோடு வெள்ளை வேட்டுவரை அடக்கும் முயற்சியிலும் பாலமடை அம்மன் கோயில் கட்டவும் வெள்ளோடு சர்வலிங்கேசுரன் கோயில் திருப்பணியிலும் வெள்ளோடு கனகபுரம் சாத்தந்தை குலத்தினர் அனைவரும் உதவியுள்ளனர். எலவமலை சாத்தந்தை குலத்தினர் அணை கட்டும் இடத்திலும் கால்வாய் வெட்டும் இடங்களிலும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர். தான் காடுபிடித்து நாடாக்கி வெள்ளிர வெளிப் பகுதியில் மக்களைக் குடியேற்றிய காலிங்கராயன் வெள்ளோட்டில் இருந்த தன் பங்காளிகளையே குடியேற்றியுள்ளார். இவை அனைத்துக்கும் கல்வெட்டு, பட்டய ஆதாரங்கள் உள்ளன. எனவே தன் பங்காளிகளான சாத்தந்தை குலத்தாரிடம் காலிங்க-<noinclude></noinclude> 8kmjaz1geb6km17b8r4i5bsi1liyd7c பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/25 250 456460 1837202 1836473 2025-06-29T16:47:20Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||24|}}</noinclude>ராயன் மிகவும் மரியாதை வைத்திருந்தார்; சாத்தந்தை குலத்தினரும் உயர்பதவி வகித்த தம் பங்காளி காலிங்கராயனைப் பெரிதும் மதித்து வேண்டிய பல உதவிகள் செய்தனர் என்று உறுதியாகத் தெரிகிறது. எனவே பங்காளிகளுக்கும் காலிங்கராயனுக்கும் பகை இருந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. {{larger|<b>ஆட்சிப்பகுதி</b>}} கொங்கு நாட்டில் பூந்துறை நாட்டுக்கு உரியனவாய் வெள்ளோட்டை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த காலிங்கராயன் பாண்டியர்களின் ஆட்சிப் பிரதிநிதியாகக் கொங்கு நாடு முழுவதையுமே ஆண்டு கொண்டிருந்த கொங்குப் பாண்டியரின் கீழ் அரசியல் அதிகாரியாக விளங்கினார் என்று அவர் கல்வெட்டுக்கள் வாயிலாக நாமறிகின்றோம். வெஞ்சமாங்கூடல், நெரூர், கொடுமுடி, வெள்ளோடு, இராமநாதபுரம் புதூர், அந்தியூர், திங்களூர், குன்னத்தூர், விசயமங்கலம், சர்க்கார் பெரியபாளையம், எலத்தூர், குடிமங்கலம், பேரூர், கரூர், பாரியூர், மொடச்சூர் போன்ற பல பகுதிகளில் காலிங்கராயனின் கல்வெட்டுக்கள் கிடைப்பதால் ஏறத்தாழ அமராவதி ஆற்றுக்கு வடக்கும் காவிரிக்கும் மேற்கும் பேரூரின் கிழக்கும் கோபி, அந்தியூரின் தெற்கும் இவைகளின் மத்தியப்பரப்பில் உள்ள கொங்கு நாட்டுப் பகுதி முழுவதையும் காலிங்கராயன் தன் அதிகார எல்லைக் குட்படுத்தியிருந்தார் என்று தெரியவருகிறது. தன் காலத்தில் கொங்குநாடு எழிலும் ஏற்றமும் பெற்று விளங்க வேண்டும் என்றெண்ணிக் காலிங்கராயன் செய்த பணிகள் எண்ணிலடங்கா. ஆட்சியின் பொருட்டும் நிருவாகத்தைச் சரி செய்வதன் பொருட்டும் அறக்கொடைகளை நிலைநாட்டும் பொருட்டும் பாண்டியர் தம் ஆணையை நாட்டும் பொருட்டும் நீதி<noinclude></noinclude> bdcviiloefybac0ohg3j84t42l63hu1 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/26 250 456461 1837203 1836481 2025-06-29T16:48:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||25|}}</noinclude>செலுத்தும் பொருட்டும் மக்கள் குறை கேட்டு முறை செய்யவும் கொங்குநாடு முழுவதும் காலிங்கராயன் பயணம் மேற்கொண்டுள்ளமை அவருடைய பரந்த கல்வெட்டுக்கள் மூலம் அறிகின்றோம். காலிங்கராயன் அரசர்மீது பற்றும் உடன் அலுவலர்மீது பரிவும் கொண்டு விளங்கினார் என்பது அவர் வெட்டி வைத்த பல கல்வெட்டுக்கள் மூலம் நாமறிகின்றோம். {{dhr|3em}} {{nop}}<noinclude> க.—2</noinclude> 9s35bsyjppuhazt8l4ywzzdx56izpa9 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/50 250 456485 1837265 1444164 2025-06-30T06:07:24Z Mohanraj20 15516 1837265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||49|}}</noinclude>காலிங்கராயன் கால்வாய் செல்லுகிறது. நீர் கசியாமல் இருக்கக் கால்வாய் காரையால் கட்டப்பட்டிருக்கிறது. எனவே ‘காரை வாய்க்கால்’ என்று அழைக்கின்றனர். இன்னும் பல இடங்களில் ‘பவானி வாய்க்கால்’ என்றும் சிறியதாக இருப்பதால் ‘சின்ன வாய்க்கால்’ என்றும், புதிதாகக் கீழ்பவானி வாய்க்கால் வெட்டப்பட்டிருப்பதால் காலிங்கராயன் கால்வாயைப் ‘பழைய வாய்க்கால்’ என்றும் பல இடங்களில் பல பெயர்களால் அழைக்கின்றனர். பலர் கால்வாய் என்ற சொல்லைக்கூடப் பின்னர் சேர்க்காமல் ‘காலிங்கராயன்’ என்ற தனிச் சொல்லாலேயே கால்வாயைக் குறிப்பர். {{larger|<b>கோணலின் காரணம்</b>}} பவானி தொடங்கி நொய்யலில் கலக்கும் வரை காலிங்கராயன் கால்வாய் மிகவும் கோணல் கோணலாக இருக்கிறது. அதனால் தான் ‘கோண வாய்க்கால்’ என்று கூறுகின்றனர். எனவே தான் பாம்பு வழிகாட்டியதாகக் கதை நாட்டில் உலவுகின்றது என அறிகின்றோம். ஆனால் இதன் உண்மையான காரணம் என்ன? பவானி அணை கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். நொய்யலாற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் கடல் மட்டத்திலிருந்து 412.48 அடி உயரம். நேராகப் பவானிக்கும் நொய்யலுக்கும் இடையில் உள்ள தூரம் 32கல். ஆனால் வளைந்து செல்லுவதால் கால்வாயின் நீளம் 57 கல் ஆகிறது. காலிங்கராயன் கால்வாய் பவானியிலிருந்து நேராக நொய்யல் வரை செல்லுமானால் வயலுக்குத் தண்ணீர் பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும். எனவே தான் நீர் தேங்கி நின்று வயலுக்குப் பாய்ந்து வளப்படுத்துவதாகவும் நீரின் வேகத்தைக் குறைத்துக் கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளைத் தடுப்பதற்காகவும் கால்வாய் வளைந்து வளைந்து மேட்டுப்பாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்லு<noinclude></noinclude> qjuo67vkdwj8o8h3fjrl8uz8uvxye09 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/51 250 456486 1837269 1444165 2025-06-30T06:15:23Z Mohanraj20 15516 1837269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||50|}}</noinclude>–கிறது. இது காலிங்கராயனின் பொறியியல் திறத்தை நன்கு வெளிப்படுத்துகிறது. {{larger|<b>காஞ்சியில் கலத்தல்</b>}} காஞ்சி என்ற பெயரையுடைய நொய்யலாற்றில்தான் காலிங்கராயன் கால்வாய் இறுதியாகக் கலக்கிறது என்று முன்பே கண்டோம். ‘மீ கொங்கில் அணிகாஞ்சி’ என்று செந்தமிழ் வல்ல சுந்தரமூர்த்தி நாயனாரும் இந்நதியினைப் போற்றியுரைத்துள்ளார். திருப்பாண்டிக் கொடுமுடிக்குத் தெற்கே காலிங்கராயன் கால்வாயைத் தொடர்ந்து நாம் செல்வோமானால் காலிங்கராயன் கால்வாயின் அளவு சுருங்கியிருப்பதைக் காணலாம். ‘வெங்கமேடு’ அருகில் உள்ள நாகமநாயக்கன் பாளையத்தில் மிகச் சுருங்கிக் கழிவு நீர்க் கால்வாய் போல மாறித் தென்கிழக்கில் உள்ள ஆவுடையா பாறை என்றும் ஊரை நோக்கிச் செல்லுகிறது காலிங்கராயன் கால்வாய். ஆவுடையாபாறையில் புகைவண்டிப் பாதையை ஒரு சிறு பாலத்தின் மூலம் கடந்து தெற்கு நோக்கி ஓடி நொய்யலாற்றில் கலக்கின்றது. இந்த இடத்தின் எதிர்க்கரையில் செல்லாண்டியம்மன் கோயில் இருக்கிறது. காலிங்கராயன் நொய்யலோடு கலக்கும் இந்த இடத்தைப் பொது மக்கள் ‘கூடுதுறை’ ‘கூட்டாற்று மூலை’ என அழைக்கின்றனர். இந்த இடத்தில் காலிங்கராயன் கால்வாயின் அகலம் சுமார் 3 அடியேயாகும். {{larger|<b>கிளைக் கால்வாய்கள்</b>}} காலிங்கராயன் கால்வாயில் மூன்று கிளைக்கால்வாய்கள் உள்ளன. {{larger|1. மலையம்பாளையம் பிரிவு வாய்க்கால்}} :- காலிங்கராயன் கால்வாயில் 31.6.430 மைலில் பழனிக்கவுண்டம் பாளையம் அருகே பிரிந்து சுமார் 4 மைல் தூரம் காலிங்கராயன் கால்வாய்க்கு இணையாகவே ஓடி மலையம்<noinclude></noinclude> avl0rb73418qq2rcunxtaoegqgg8a2c பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/52 250 456487 1837273 1444166 2025-06-30T06:23:43Z Mohanraj20 15516 1837273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||51|}}</noinclude>பாளையம் அருகே காலிங்கராயன் கால்வாயுடனே கலக்கிறது. இக்கால்வாய் சுமார் 675 ஏக்கர் நிலங்களை வளப்படுத்துகிறது. {{larger|<b>2. பெரியபட்டம் பரிசோதனை வாய்க்கால்</b>}} :-நாகம நாயக்கன் பாளையத்தில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலில் கலப்பதற்காக ஆவுடையா பாறையை நோக்கிப் பாயுமிடத்தில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி அங்கிருந்து ஒரு கால்வாயைத் தென்மேற்காகக் கொண்டு செல்லுகின்றனர். அது பெரியபட்டம் என்ற ஊரைக் கடந்து செட்டிபுள்ளா பாளையம் என்ற ஊரில் நொய்யலோடு கலக்கிறது. அதற்கும் காலிங்கராயன் கால்வாய் என்றே பெயர் கூறி அழைக்கின்றனர். ஆனால் இந்தப் பெரியபட்டம் கிளைக் கால்வாயைப் பற்றி வேறு சில செய்திகளும் இங்கு வழங்கப் பெறுகின்றன. இக்கால்வாய் 625 ஏக்கர் நிலத்திற்கு நீர் அளிக்கிறது. இதன் நீளம் 1.5.600 மைல் ஆகும். {{larger|<b>3. ஆவுடையாபாறை பிரிவு வாய்க்கால்</b>}} :- ஆவுடையா பாறையில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலோடு கலக்கு மிடத்திற்கு அருகில் மைல் 56.5.234 இல் கால்வாயை ஒரு கலிங்கின் மூலமாகத் தடுத்துத் தண்ணீரை மேற்கு நோக்கிக் கொண்டு செல்லுகின்றனர். அதற்கும் ‘காலிங்கராயன் கால்வாய்’ என்றே பெயர் கூறுகின்றனர். இருநூறு ஏக்கர்களை வளப்படுத்தி இக்கால்வாய் ‘புதுத்தோட்டம்’ என்ற இடத்தில் நொய்யலோடு கலக்கிறது. இதற்குக் ‘கல்லுக்கட்டுமடை’ என்றும் பெயர் கூறுகின்றனர். ‘ஆவுடையபாறைப் பிரிவு வாய்க்கால்’ என்பது பொதுப் பணித்துறையினர் பெயர். இதன் நீளம்மைல். {{larger|<b>பிற்காலத் திருப்பணி செய்த இருவர் வட்டக்கல் வலசு சின்னத்தம்பிக் கவுண்டர்</b>}} சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் பெருமழை பெய்து வெள்ளப் பெருக்கெடுத்தது. அதன் காரணமாகப் பள்ளங்களில் ஓடிவந்த தண்ணீர் காலிங்கராயன் கால்வாயினுள் புகுந்து பல இடங்களில் கரைகள் உடைந்தன. பொதுப்<noinclude></noinclude> hqvbyh3ilapux9e32wszj1b0vvcyheq பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/53 250 456488 1837276 1444167 2025-06-30T06:29:31Z Mohanraj20 15516 1837276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh|52||}}</noinclude>பணித்துறையினரால் விரைந்து பழுதுபார்க்க முடியாத அளவுக்கு உடைப்பு மிகுதியானதால் உழவர்கள் பெரிதும் துன்புற்றனர். அப்போது வட்டக்கல்வலசில் வாழ்ந்த கொங்கு வேளாளரில் கண்ண குலத்து நிலக்கிழாரான சின்னத்தம்பிக் கவுண்டர் அவர்கள் பெரும்பகுதிக் கால்வாய்க் கரைகளை அடைக்கத் திட்டமிட்டார். தம் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் எடுத்துரைத்தார். வட்டக்கல்வலசுச் சின்னத்தம்பிக் கவுண்டரின் நுண்ணறிவையும் விடாமுயற்சியையும் கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சின்னத்தம்பிக் கவுண்டருக்கு உதவி புரிந்தார். எங்கு வேண்டுமானாலும் சின்னத்தம்பிக் கவுண்டர் எவ்வளவு மரங்களை வேண்டுமானாலும் வெட்டிக்கொள்ளலாம். பாறைகளை உடைக்கலாம். மண் எடுக்கலாம். யாரையும் உதவிக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று சாசனம் எழுதித்தந்தார். தம் செல்வத்தாலும், செல்வாக்கினாலும், ஆட்களைத்திரட்டி அரிய முயற்சியால் சின்னத்தம்பிக் கவுண்டர் கால்வாய்க்கரைகளைப் பழுது பார்த்துக் கட்டினார். கால்வாய் முன்பு போலவே நன்றாக அமைந்து தண்ணீர் வந்தது. உழவர்கள் மகிழ்ந்தனர். {{larger|<b>மணியம் காளியப்ப கவுண்டர்</b>}} சுமார் 75 ஆண்டுகட்கு முன்பு மணியம் காளியப்ப கவுண்டர் என்பவர் ஆவுடையாறை அருகே தண்ணீர் வீணாகச் சென்று நொய்யலில் கலப்பதைக் கண்டு வருந்தி ஆவுடையாபாறை அருகிலிருந்து கிளைக்கால்வாய் ஒன்றமைத்துப் பாசனத்திட்டம் ஒன்றை அளித்தார். அவரே முன்னின்று அந்தச் செயலை முடித்தார். இன்று அவர் அமைத்த திட்டம் நன்கு செயல்பட்டுப் பல நூறு ஏக்கர்கள் பாசனம் பெறுகின்றன. பெரியபட்டம் பரிசோதனைக் கால்வாய் என்பது இதன் பெயராகும். {{nop}}<noinclude></noinclude> 21yaxgznq9fuerqn9doa096a5m149bd பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/54 250 456489 1837278 1444168 2025-06-30T06:33:56Z Mohanraj20 15516 1837278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||53|}}</noinclude>பிற்காலத்தில் பணிபுரிந்த இவர்கள் இருவரும் நம் பாராட்டுக்குரியவர்கள் ஆவர். {{larger|<b>காலிங்கராயன் பவானியாற்றில் கட்டிய மற்றொரு அணை</b>}} டணாயக்கன் கோட்டை என்பது பவானி ஆற்றங்கரையில் இருந்த புகழ்வாய்ந்த பழைய கோட்டையாகும். இப்போது அக்கோட்டை கீழ்பவானி அணையில் மூழ்கிவிட்டது. டணாயக்கன் கோட்டைப் பகுதியில் ஊருக்குச் சற்றுமேற்கே பவானி ஆற்றில் அணை ஒன்று கட்டிச் சிதைந்த நிலையிலும் 1800 வாக்கில் 400 ஏக்கர் நிலத்திற்குப் பாய்ந்து வந்தது. கீழ்பவானி அணை கட்டிய பின் இந்த அணை முழுவதும் அணையினுள் மறைந்து விட்டது. 1799 இல் மேக்ளியாட் இந்த அணையைப் பழுதுபார்த்தார். தூர்ந்த கால்வாயைச் செப்பனிட்டார். இந்த அணைக்கட்டைக் கட்டியவர் வேளாளர் லிங்கையன் என்பவர் என்று ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது. 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 29 இல் வெளிவந்த முல்லைக்கொடி என்னும் மாத இதழில் இந்த அணை பற்றிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது. காலிங்கராயன் அணை கட்டின பட்டயம் மூலம் காலிங்கராயனின் இயற்பெயர் லிங்கையன் என்பதனை அறிகின்றோம். டணாயக்கன் கோட்டை அணை தொன்மையான தாகவும் உள்ளது. எனவே பவானியின் இறுதியில் அணை கட்டிய காலிங்கராயன் பவானியின் தொடக்கப்பகுதியிலும் அணை கட்டியுள்ளார் என்பதைத் தெளிவாக அறிகின்றோம். இது மிகவும் அரிய செய்தியாகும். புக்கானன் எழுதிய யாத்திரைக் குறிப்புக்களிலும் இந்த அணைபற்றிக் கூறப்பட்டுள்ளது. அவருடைய குறிப்பிலும் இவ்வணை கட்டியவர் பெயர் லிங்கையன் என்றே காணப்படுகிறது. {{nop}}<noinclude></noinclude> iu9apd0foxtlpkz14ucm2f3e4gszqri பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/55 250 456490 1837280 1444169 2025-06-30T06:38:09Z Mohanraj20 15516 1837280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>அண்ணலும் அறப்பணிகளும்</b>}}}} காலிங்கராயன் கொங்கு நாட்டின் அரசியல் தலைவராகப் பூந்துறை நாட்டு வெள்ளோட்டில் வீற்றிருந்தபோது கொங்கு நாடெங்கும் பற்பல அறப்பணிகளைச் சிறப்புடன் செய்துள்ளார். குளங்கள் வெட்டுதல், கோயில் கட்டுதல், பழங்கோயில்களைப் புதுப்பித்தல், ஊர் உண்டாக்குதல், மக்களைக் குடியேற்றுதல், மக்களுக்கு உரிமைகள் அளித்தல் போன்ற பல்வேறு நயத்தகு நற்செயல்களைச் செய்துள்ளமையைக் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் சிறப்பித்துப் பேசுகின்றன. {{larger|<b>குளங்கள் வெட்டுதல்</b>}} கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை என்னும் சங்க இலக்கியத்தில் கரிகாலனைப் புகழும்போது அவன் ‘காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினான்’ என்று குறிப்பிடுகின்றார். காவிரிக்குக் கரை கட்டுவித்துக் கல்லணையை உண்டாக்கிய கரிகாலனைப் போலவே கொங்கு நாட்டிலும் பற்பல திருப்பணிகளைக் காலிங்கராயன் செய்துள்ளார். எனவே உருத்திரங் கண்ணனாரின் புகழ்ச்சி காலிங்கராயனுக்கும் பொருந்தும். வீரபாண்டியனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் கி.பி. 1255 இல் கொங்குக் குறுப்பு நாட்டு விசயமங்கலத்தின் ஒரு பகுதியாகிய வானாகப் புத்தூருக்குக் காலிங்கராயன் சென்றார் அங்கிருந்த வாகைக்குளம் நெடுநாள் பாழ்பட்டுக் கிடப்பதாகக் கேள்விப்பட்டார். அதைப் பழுது பார்க்குமாறு குறுப்பு நாட்டுச் சபையாருக்கு ஆணையிட்டு அதற்கு வேண்டும் பொருட்செலவையும் எதிர்காலத்தில் குளத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஆகும் செலவையும் விசயமங்<noinclude></noinclude> rvnmgcehus2prl6agove2ku5p98li91 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/56 250 456491 1837285 1444170 2025-06-30T06:54:49Z Mohanraj20 15516 1837285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||55|}}</noinclude>–கலம் ஊர்ச்சபையார் கொடுக்கவேண்டும் என்றுகாலிங்கராயன் கட்டளையிட்டார். திருப்பணி செய்யப்பெற்ற இக்குளத்திற்குத் தன் அரசன் பெயரால் ‘வீரபாண்டியப்பேரேரி’ என்று பெயர் வைத்தார். இன்றும் அக்குளம் விசயமங்கலத்தில் உள்ளது. கொடுமுடி தேவத்தான ஊராகிய விதரியான திருச்சிற்றம்பல நல்லூரில் ஒரு குளம் பாழ்பட்டு மழை பெய்து நீர் நிறையும் காலத்தில்கூட உடைவு குலைவுபட்டுக் கிடந்தது. கி.பி. 1256 ஆம் ஆண்டு காலிங்கராயன் இக்குளத்தை அடைத்துத் திருத்தி ‘வெள்ளைக்குளம் வரகுணன்’ என்று பெயரிட்டார். இப்பெயர் பாண்டியர் தம் முன்னோர்கள்மீது காலிங்கராயன் கொண்ட பற்றைக் காட்டுகிறது. வீரபாண்டியனின் பத்தாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1260) வெள்ளோட்டிலுள்ள சிறிய குளத்தையும் பெரிய குளத்தையும் கனகபுரத்தில் ஒரு குளத்தையும் குறுக்குக் குளத்தையும் காலிங்கராயன் வெட்டுவித்தார். கி.பி. 1264 ஆம் ஆண்டு (கோபி வட்டம்) எலத்தூரில் உள்ள குளம் உடைத்துக் கொள்ளவே காலிங்கராயன் அதனை அடைத்துத் திருத்தினார். வீரபாண்டியனுடைய 24 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1274) சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள நல்லாட்டுக் குளத்தைச் செப்பனிட்டார். {{larger|<b>கோயில் கட்டுதல்</b>}} வெள்ளோட்டுச் சிவன் கோயிலைக் காலிங்கராயன் தான் திருப்பணி செய்து புதுப்பித்துக் கட்டினார் என்று ‘தம்முடைய இஷ்ட தெய்வமான சர்வேஸ்வர பாடகவல்லி நாச்சியார் தேவஸ்தானம் சீரணோத்தாரணம் பண்ணிக் கொண்டு இருந்தான்’ என்னும் பகுதியால் வமிசாவளி தெரிவிக்கின்றது. ‘இந்தியாவை ஆளும் தலைவர்களும்<noinclude></noinclude> qncyu2zfi0feupf44hdauma02mgzvv3 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/57 250 456492 1837286 1444171 2025-06-30T06:59:07Z Mohanraj20 15516 1837286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||56|}}</noinclude>பெருமக்களும் ஜமீன்தார்களும்’ என்ற ஆங்கில வரலாற்று நூலும் அதை உறுதிப்படுத்துகின்றது. திங்களூரில் உள்ள பெருமாள் கோயிலைக் கட்டி அதற்குச் ‘சுந்தர பாண்டிய விண்ணகரம்’ என்று காலிங்கராயன் பெயரிட்டதாய்த் திங்களூர்க் கல்வெட்டுக் கூறுகின்றது. நாகமலை என்று சிறப்புப் பெயரையுடைய திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர்க்குக் காலிங்கராயன் பலதிருப்பணிகளைச் செய்ததாகவும் கொடைகள் அளித்ததாகவும் அறிகின்றோம். இதனைத் திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை சிறப்புடன் குறிப்பிடுகிறது. வெள்ளோட்டின் வடக்கே கவுண்டச்சிபாளையம் அருகேயுள்ள பாலமடை அம்மன் கோயிலை அணை கட்டுவதற்கு முன்பாகக் காலிங்கராயன் கட்டினார். பாலமடை அம்மனை அணைப்பகுதிக்கே எடுத்துக் கொண்டு சென்று பிரதிட்டை செய்யக் காலிங்கராயன் எண்ணியதாகவும் ஆனால் இப்பொழுது அம்மன் கோயில் இருக்குமிடம் வந்தவுடன் அம்மன் பெயர மறுத்து அங்கேயே குடிகொண்டதாகவும் ஆகவே அந்த அம்மனைக் காலிங்கராயன் தான் கட்டிய அணையை நோக்கி இருக்கும்படிப் பிரதிட்டை செய்ததாகவும் கூறுவர். அக்கோயில் கல்வெட்டில் அம்மன் பெயர் பாலமுடி அம்மன் என உள்ளது. ஊற்றுக்குழியிலேயுள்ள அகத்தூர் அம்மன் ஆலயத்தைக் கட்டியவர் காலிங்கராயரே! இச்செய்தியைப் பின்வரும் வமிசாவளிப் பகுதி விளக்கும். “ஊத்துக்குழிக்கு வந்து, பின்னர் இராய சமஸ்தானத்திலே தமக்கு கனவிலே பிரசன்னமான இஷ்ட தெய்வத்தைக் கோரி பிரார்த்தனை பண்ணி அகத்தூர் அம்மனென்று நிதர்சனமாக்கப்பட்ட தேவாலயம், சீரணோத்தாரணம் பண்ணி அகத்தூர் அம்மன் என்று<noinclude></noinclude> 1zbpht9dsayrtljmx25qyp8bb9o74wc பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/58 250 456493 1837335 1444172 2025-06-30T08:05:36Z Mohanraj20 15516 1837335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||57|}}</noinclude>பேர் பிரசித்தி படும்படியாய்ப் பூசை நைவேத்தியங்கள் செய்விச்சுக் கொண்டு” எனவரும் பகுதியால் அறியலாம். அகத்தூர் அம்மன் கோயில் கல்வெட்டுக்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இன்றும் காலிங்கராயர் வமிசத்தினரின் குலதெய்வம் அகத்தூர் அம்மன் எனப் புகழ்பெற்றுச் சிறப்புடன் விளங்குகிறது. இன்னும் பல கோயில்கட்கு நந்தா விளக்கெரிக்கவும் கோயில் திருப்பணிகட்காகவும் திருநாள் கொண்டாடவும் காலிங்கராயன் நிவந்தம் விட்டதாகக் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். வேறு பலர் செய்த இவை போன்ற பல்வேறு அறச்செயல்களை முன்னின்று திறம்பட நடத்தியதாகவும் கல்வெட்டுக்கள் முரசறைகின்றன. {{larger|<b>ஊர் உண்டாக்குதல்</b>}} காலிங்கராயன் செய்த பல அறச்செயல்களுக்கு மிகவும் உதவியாக இருந்தவர் கச்சிராயன் என்ற பாண்டியர் அரசியல் அதிகாரி ஒருவர். கச்சிராயன் செய்த உதவிகளை எண்ணிச் செய்ந்நன்றி மறவாச் செம்மலாகிய காலிங்கராயன் அவர் பெயர் என்றும் நாட்டில் நின்று நிலவும் பொருட்டு அவர் பெயரில் கச்சிராயநல்லூர் என்னும் ஊர் ஒன்றை உண்டாக்கினார். கி.பி. 1263ஆம் ஆண்டு வீரபாண்டியனின் பிறந்த நாளன்று கரூர் அருகே உள்ள அவ்வூர்ப் பகுதியில் நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த வழிப்போக்கி நத்தத்தைத் திருத்தினார். நன்செய், புன்செய், தோட்டம் இவைகளைச் செப்பனிட்டு அப்பகுதியில் மக்களைக் குடியேற்றினார். குறுப்பு நாட்டில் குன்னத்தூர் (குன்றத்தூர்) அருகே காடாக இருந்த பகுதியை அழித்து நாடாக்கி வெள்ளிர வெளி என்ற ஊரை உண்டாக்கினார். குன்னத்தூர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கல்வெட்டு இவ்வூரைக் ‘காடுபிடித்தழித்துக் கொண்ட வெள்ளிரவெளி’ என்று குறிப்பிடுகின்றது. க—4 {{nop}}<noinclude></noinclude> 1unkg5kjwkqw8f8zsv75zgobyih7jug பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/59 250 456494 1837338 1444174 2025-06-30T08:11:03Z Mohanraj20 15516 1837338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||58|}}</noinclude>காலிங்கராயன் அணைப்பகுதியில் உள்ள காலிங்கராயன் பாளையம் என்று வழங்கப்பெறும் நாவிதம் பாளையம் காலிங்கராயன் உண்டாக்கிய ஊரேயாகும். இவ்வூர் அணை நாசுவம் பாளையம், மேட்டு நாசுவம் பாளையம் என இரண்டு பகுதிகளாக வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி அருகேயுள்ள ஊத்துக்குளியைக் காலிங்கராயன் தான் முதன் முதலில் மக்கள்வாழும் வண்ணம் ஊராக அமைத்தவர். ஊத்துக்குளி உள்ள காவிடிக்கா நாட்டின் பல பகுதிகள் முன்பு சேரமான் பெருமாள் நாயனாரால் சாத்தந்தை குலத்தாருக்கு மானியமாக விடப்பட்டிருந்தன. ஏற்கெனவே காலிங்கராயனுடைய மாட்டுப் பட்டிகள் அங்கு இருந்தன. வெள்ளோட்டை விட்டுச் சென்ற காலிங்கராயர் நேராக அங்கு சென்றார். மாடுகள் நீர் குடிக்க ஊற்றுக்கள் தோண்டியுள்ள இடத்தில் ஊர் அமைத்தார். அதனை ‘ஊற்றுக்குழி’ என்றனர். இன்று ஊற்றுக்குழியில் உள்ள கிணறே அவர் ஏற்படுத்திய ‘ஊற்றுக்குழ’ என்பர். அங்கு கல்வெட்டும் உள்ளது. இன்று அப்பெயரே மக்கள் நாவில் மருவி ஊத்துக்குளி என்று வழங்கி வருகின்றது. வேறு ஊத்துக்குளிகளிலிருந்து பிரித்துக் காட்டும் பொருட்டு அதனை ஜமீன் ஊத்துக்குளி என அழைத்தனர். {{larger|<b>மக்களுக்கு உரிமைகள் அளித்தல்</b>}} கொங்கு நாட்டில் வேளாளர் வாழுமிடங்களில் கம்மாளர் எனப்படும் ஆசாரிகள் குலத்தார் வாழ்ந்தால் கால்களுக்குச் செருப்பு அணிந்துகொண்டு செல்லக்கூடாது; வீடுகட்குச் சுண்ணாம்பு முதலிய சாந்துகள் எவையும் பூசக்கூடாது; அவர்கள் வீடுகளில் மங்கல காரியங்கள் நடந்தால் அல்லது தீய காரியங்கள் நடந்தால் மங்கலவாத்தியங்கள், பேரிகை முதலியன வாசிக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துக் கட்டளையிட்டனர். ஆனால் வீரபாண்டியன் ஆட்சியின் 15 ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1265 முதல் அவர்களுக்கு இத்தடை நீங்கியது. இத்தடையை நீக்கி அவர்கட்கு அரசன் சார்பில் உரிமை அளித்தவர் நமது<noinclude></noinclude> b5llgc2k143sd5f9px7hqhcut1zvzgs பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/60 250 456495 1837343 1444175 2025-06-30T08:16:59Z Mohanraj20 15516 1837343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||59|}}</noinclude>காலிங்கராயர்தான்! இவ்வுரிமையைச் சோழ மன்னர் அளித்ததாகக் கொங்கு மண்டல சதகம் கூறுகிறது. ஆனால் வெள்ளோட்டுக் கல்வெட்டில் வீரபாண்டியன் காலத்தில் இவ்வுரிமைகள் அளிக்கப்பெற்றதாகத் தெளிவாக உள்ளது. கொங்கு நாட்டின் பிற பகுதிக் கல்வெட்டுக்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அக்கல்வெட்டுப் பகுதியைக் கீழே காணலாம். “சுபமஸ்து ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு 15ஆவது சுபமஸ்து ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்திகள் கோனேரிமேல் கொண்டான் காங்கய நாடும் பூந்துறை நாடும் உள்ளிட்ட பற்றில் கண்மாளர்க்குத் தங்களுக்கு நன்மை தின்மைக்குப் பதினஞ்சாவது ஆடிமாதம் முதல் இரட்டைச் சங்கும் ஊதிப் பேரிகை உள்ளிட்டன கொட்டுவித்துக் கொள்வதாகவும் தங்கள் வீடுகளுக்குச் சாந்திட்டுக் கொள்ளவும் தாங்கள் புறப்பட வேண்டுமிடங்களுக்குப் பாதரட்சை கோத்துக் கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு நம்மோலை பிடிபாடாகக் கொண்டு ஆசந்திராதித்தவரை செல்வதாகத் தங்களுக்கு வேண்டுமிடங்களிலே கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்க இவை காலிங்கராயன் எழுத்து யாண்டு 15 நாள் 129” இக்கல்வெட்டிலிருந்து காலிங்கராயன் காலம் வரை இந்தத்தடை இருந்ததென்றும் காலிங்சராயன் இந்தத் தடையை உடைத்தெறிந்தான் என்றும் அறிகின்றோம். கொங்குதந்த வரலாற்று ஆய்வாளர் கோவைக் கிழார் அவர்கள் கோனேரின்மை கொண்டான் என்ற பெயர் சோழன் எனக்கொண்டு இவ்வுரிமைகளை அளித்தவன் சோழன் என்பார். இவ்வாறு பாண்டியர்களும் கோனேரின்மை கொண்டான் என்று பெயர் வைத்துக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். வெள்ளோடு சிவாலயத்தில் கோனேரின்மை கொண்டான் என்ற பெயரோடு ஸ்ரீ வீரபாண்டிய தேவன் என்ற பெயரும் இணைந்து வருகிறது. கல்வெட்டின்<noinclude></noinclude> jc94yut6sh3ixxs629kddfxh2xavej5 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/61 250 456496 1837344 1444234 2025-06-30T08:22:07Z Mohanraj20 15516 1837344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||60|}}</noinclude>இறுதியில் காலிங்கராயன் கையொப்பமும் உள்ளது. எனவே இவ்வுரிமைகளை பாண்டியர் சார்பில் கொங்கு நாட்டுப் பகுதியில் அளித்து நிறைவேற்றியவர் காலிங்கராயரே என்று அறியலாம். காலிங்கராயன் அளித்த கம்மாளரின் உரிமைகள் எங்கெங்கு மறுக்கப்படுகிறதோ அவ்விடங்களிலும், கம்மாளர் விரும்பும் பிற இடங்களிலும் “கல்லிலும் செம்பிலும் இந்த ஆணையை வெட்டிக் கொள்க” என்று காலிங்கராயன் உரிமை அளித்துள்ளான். இதுபோன்ற உரிமைச் சாசனங்கள் பூந்துறை காங்கேய நாட்டு உரிமைக்காக வெள்ளோடு சர்வலிங்கேசுவரன் கோயிலிலும் தென் கொங்கு நாட்டு உரிமைக்காகப் பேரூர்ப் பட்டீசுவரர் கோயிலிலும், வடகொங்கில் வடகரை நாட்டு உரிமைக்காக அந்தியூர் செல்லீசுவரசுவாமி கோயிலிலும் குடிமங்கலம் சோழீசுவரர் கோயிலில் தென்கொங்கு நாட்டிற்காகவும் கரூர்ப் பசுபதீசு வரர் கோயிலில் வெங்கால நாட்டிற்காகவும் பாரியூர் அமரபரணீசுவரர் கோயிலில் காஞ்சிக் கூவல் நாட்டிற்காகவும் மொடச்சூர் மெய்ப்பொருள் நாதர் கோயிலில் தலையூர் நாடு முதலிய ஏழு நாடுகளுக்காகவும் கல்வெட்டுக்கள் இருப்பதை இன்றும் காணலாம். இவைகளின் மூலம் காலிங்கராயன் மக்கள் நல் வாழ்க்கையில் நாட்டம் கொண்டிருந்தவர் என்றும், எளியோர்க்கிரங்கும் இதயம் கொண்டவர் என்றும் அறிகின்றோம். பாண்டிய மன்னர்களின் பண்புடைத் தலைவராக விளங்கிய காலிங்கராயன் மக்கள் நலம் பேணி நாட்டு நலத்தின் பொருட்டு நல்லாட்சி நடத்திய நல்லமைச்சராக விளங்கி அழியாப் புகழ்பெற்று விளங்கினார். அவர் ஆற்றிய அரும்பணிகள் இன்றும், என்றென்றும் அவர் புகழ்பாடும் அழியாக் காவியமாக நின்று நிலவுகிறது. “மாவிசயம் பெறு காலிங்கன்” என்று கொங்குமண்டல சதகம் கூறுவதால் பாண்டியர் பொருட்டுப் படைநடத்திக் காலிங்கராயன் கவினுறு வெற்றிகளும் அடைந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது. {{nop}}<noinclude></noinclude> 4hbvkmsuhnz1td6i755u6dh6bm9309y பக்கம்:தமிழ் மணம்.pdf/15 250 461717 1837358 1480329 2025-06-30T10:03:08Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh||ஆமையும் முயலும்|15}}</noinclude>வரும்போது தமிழ் ஒளியாகும். எனவே. உலகினையே தமி ழாக்கிப் பார்க்கும் உள்ளக் கிளர்ச்சியே தமிழுணர்ச்சி ஆம். “தமிழில் இல்லாதது என்ன?” என்று பலர் கேட்கின் றனர்; “இல்லாதது இல்லை: பின் என்ன கவலை?” எனத் தூங்கத் தொடங்குகின்றனர். ஒரு கதை நினைவிற்கு வருகிறது. ஓாயிரம் ஆண்டிற்கு முன்- எகிப்து நாடு-அலக் சாண்டிரியா என்ற நகரம் - உலகத்தில் உள்ள நூல்களை எல்லாம் சேர்த்து வைத்த நூல்நிலையம் - இதனெதிர் ஓர் அரசர் வருகின்றார்; இதனைக் காண்கின்றார்: “இத்தனை நூலா!” என்று மருள்கின்றார்; ‘நாங்கள் நம்புவது எங்களது திருமறை. அதிலிருப்பது மட்டுமே இந்த நூல்களில் இருந்தால் இத்தனை ஏன்? வீணே; அதில் இல்லாதது இங்கு இருந்தால் இத்தனையும் பொய்; பொய்யானாலும் புகைந் தெரியவேண்டும்: வீணானாலும் வெந்தெரியவேண்டும்” என்று எரிகிற கட்சிப் பாட்டுப் பாடுகின்றார். இட்டதே சட்டம். அத்தனை நூலும் எரிகிற காட்சியைத்தான் இன்று மனத்தாலே நாம் பார்க்க முடியும். இப்படித்தான் முடியும். “தமிழில் இல்லாதது என்ன?” என்று கேள்வி கேட்கின்ற மனப்பான்மையும். தமிழில் அடிப்படையான உண்மைகள் உண்டு; நிறைய உண்டு. அந்த உண்மைகள் மாறுவதில்லை. ஆனால்,உலகம் மாறிமாறி வருகிறது. மாறிவரும் உலகத்தொடு மாறாத உண்மைகளைப் பொருத்திப் பார்க்கவேண்டும். மாறும் காலத்திற்கேற்ப மாறாத உண்மைகளை விளக்கினால் மட்டுமே மக்களுக்கு விளங்கும். “குழந்தையும் கடவுளும் கொண்டாடும் இடத்திலே” என்று, பழமொழியை வாய் பேசுகிறது. அந்த உண்மை உடலில் ஊறியிருக்கிறதா? ஊறிக் கிடந்தால் குழந்தை “குய்யோ முறையோ” எனக் கூவியலறிப் பள்ளிக் கூடம் போகுமா? கொண்டாடும் இடத்திற்குப் போகிறதா? திண்டாடும் இடத்திற்குப் போகிறதா? ஆங்கிலக் குழவிகள்<noinclude></noinclude> 2gd1k61ajenp25l4txvz1jefltzpsba பக்கம்:தமிழ் மணம்.pdf/16 250 461718 1837359 1480330 2025-06-30T10:06:01Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|16|தமிழ் மணம்|}}</noinclude>கற்கத் தொடங்கினால் இனிதாகக் கற்கின்றன. ஆடல் பாடலாகவே அறிவு வளர்கின்றது. எதனைப்பற்றியும் எளிதாக விளங்கும் நூல்கள்! எழுத்துத் தெரியாமற்போனாலும் படத்தாலேயே எல்லாவற்றையும் விளக்கும் நூல்கள்! வழவழப்பான ஏடுகள்! முத்துமுத்தான எழுத்துக்கள்! பட்டுப்போலப் பளபள எனப் பொலியும் கட்டுக்கள்! விளையாடிக்கொண்டே கற்கும் நூல்கள்! பாடிக்கொண்டே அறியும் நூல்கள்! இவற்றிலும் என்ன என்ன வகை! என்ன என்ன அழகு! என்ன என்ன இனிமை! தமிழ்க் குழவிக்கு இந்த வாய்ப்பு உண்டா? “அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவான்” என மருட்டி வெருட்டுகிறோம். குழவியன்றோ நாளைத் தமிழன்? நாம் படும்பாடு எல்லாம் அவனுக்காக வன்றோ? அவனையே இப்படி வளர்த்தால் எதிர்காலம் எப்படி இன்பமாக மலர முடியும்? மனம் மகிழ்ந்து குழவிகள் எந்த நூலை ஓதும் என அறியவேண்டாமா?. இப்போது இருக்கிற நிலையில் பிற மொழி நூல்களைக் கண்டாலன்றி இந்த உண்மை விளங்குமா? அவ்வளவுதானா? உலகில் தோன்றிய கருத்துக்களில் பெரும்பான்மையானவற்றை ஆங்கிலத்தில் காணலாம். ஆங்கிலந்தான் இன்றைய உலகத்தின் கண். உலகப் பொருள்களைப்பற்றி மேலும் மேலும் அறிய விரும்பினால் ஆங்கிலத்தினை ஒதுக்கித் தள்ள முடியுமா? தமிழ் முதல்மொழியாகிவிட்டது. தமிழில் பாடநூல்கள் வரும். அவ்வளவே! ஆங்கிலத்தில் இருப்பதனைத்தும் தமிழாகிவிடுமா? பாடத்தில் உள்ளவற்றைப்பற்றி மேலும் மேலும் குறிப்புக்கள் அறிய விரும்பினால், ஆசிரியர் எங்கே போகக்கூடும்? ஆங்கில நூல்களிடந்தான் செல்லக்கூடும்? என் இப்படித் தலைகீழாகத் தமிழ்நாடு நிற்கிறது? தமிழன் சில நூற்றாண்டுகள் தூங்கிக கிடந்தான். ஆங்கிலேயன் இவனைத் தூங்கவும் வைத்தான். இப்போதுதான்<noinclude></noinclude> fames2hqdk9qy5sfoaqckc6d3a5ugzg பக்கம்:தமிழ் மணம்.pdf/17 250 461719 1837360 1480331 2025-06-30T10:09:04Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh||ஆமையும் முயலும்|17}}</noinclude>தமிழன் விழித்தெழுகின்றான். “ஆமையும் முயலும்” ஓடிய கதையாய்த் தோன்றுகிறது. ஆங்கிலேயனே முன்னேறி ஓடியுள்ளான். அவன் ஓடிய வழியில் அவன் அடிச்சுவட்டினைப் பின்பற்றித்தானே ஓடவேண்டும்? விரைவாக ஓடி வெற்றி பெறவேண்டும். ஆங்கிலத்தில் இருப்பதுபோலத் தமிழிலும் எல்லாக் கருத்துக்களும் அழகு அழகாக இனிமை இனிமையாக எல்லோருக்கும் எளிதில் எட்டும்படி குவித்துக் குவித்து வைக்கவேண்டும். அப்போது நாம் பின்பற்றக்கூடிய ஆங்கிலேயரின் அடிச்சுவடு தோன்றாது. அவன் நம் பின்னே இருப்பான்; நாம் முன்னே இருப்போம். நம் அடிச்சுவட்டினைப் பின்பற்றியே அப்போது அவன் வரவேண்டும். அதுவரையில் ஆங்கிலத்தினையோ பிற மொழிகளையோ வெறுத்துப் பயனில்லை. தமிழ்மொழி பேராற்றல் படைத்தது. கும்பகருணன் பேராற்றல் படைத்தவன்: ஆனால். தூங்கித் தூங்கி ஒன்றற்கும் உதவாமற்போனான். நாமும் தூங்குதல் கூடாது; விழிப்பாக இருக்கவேண்டும்; விழித்தெழுந்து விரைவாக ஓடவேண்டும். தூங்கினால் ஆமை; விழித்தோடினால் முயல். இல்லை, தூங்கினால் பிணம்; ஓடினால் பணம். பணம் எங்கும் பாயும். தமிழ் இப்போது விரைந்தோடுகிறது. அதற்கென்ன ஓட்டம? செலாவணி? தமிழ்மொழி, உண்மையில் முதல்மொழியாக அமையவேண்டும். எல்லாம் தமிழாகிவிடும்; எங்கும் தமிழாகிவிடும். அப்போது ஆங்கிலம் துணைமொழியாக உதவுவதில் கேடொன்றும் இல்லை.ஆளும் மொழி என்று அதனைக் கற்கும் நிலை போயது. கட்டாயத்தால் கசப்பு நிலை நீங்கியது. உலக மொழி எனக் கற்கும்போது அதிலோர் இனிப்புத் தோன்றும். ஆங்கிலேயர் மொழி என்பதன்று அதன் பெருமை. அதுவே புதுமையின் வடிவம். புதுமையின் வாய்க்கால் அது; அதனைத் தமிழ் நிலததில் பாய்ச்சிக்கொள்வதில் கேடொன்றும் இல்லை. பழைய எரு இங்கு நிறைய உண்டு.<noinclude></noinclude> p9mx0ced1zor3ri7g36pa5a6ruoo1mm பக்கம்:தமிழ் மணம்.pdf/18 250 461721 1837361 1480333 2025-06-30T10:10:26Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|18|தமிழ் மணம்|}}</noinclude>எல்லாம் செழிப்பாக வளர்வதில் என்ன ஐயம்? ஆமை முயலாம்: முயல் ஆமையாம். புதுமை பழமையாம்; பழமை புதுமையாம். முடிவில் முழுதும் ஒன்றாம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்.”<noinclude></noinclude> mkvq7op9oocan1xiehw1f4adimqzne7 பக்கம்:தமிழ் மணம்.pdf/19 250 461722 1837362 1480334 2025-06-30T10:14:14Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude> {{center|{{x-larger|<b>3. குழப்புதல் வேண்டா</b>}}}} ஆங்கிலம் தமிழ்நாட்டில் பரவியுள்ளது. பிற மொழியை அறிந்தவரைவிட ஆங்கிலமறிந்தார் தமிழரிடையே பலர் உள்ளார்கள் என்பதில் ஐயத்திற் கிடமில்லை. எழுதப் படிக்க அறிந்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நம் நாட்டில். ஆங்கிலம் அறிந்தாருடைய எண்ணிக்கை அந்த வகையில் பார்க்கும்போது மிகக் குறைவேயாம்! ஆனால். இங்கு நாம் ஆராயவேண்டுவது உயர்நிலை வகுப்பிற்கும். கல்லூரிக்கும் சென்று கற்கும் மாணவர்களது சூழ்நிலையேயாம். இங்கு ஆங்கிலம் பழகியதொரு மொழியாக விளங்கவே காண்கிறோம். வேறு எந்த மொழிக்கும் தமிழ்நாட்டில் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தச் சிறப்பும பழககமும் இல்லை எனலாம். அனைத்துலக மொழியாக விளங்கும் இதனைச் சாம்ராஜ்யத் திமிரின் கடுங் குரலாக இனி நாம் கேட்கவேண்டுவதில்லை. உலக முன்னேற்றச் சூழலில் ஒலிக்கும் விஞ்ஞானத்தின் உண்மைக் குரலாகவே அஃது இன்று எல்லோர்க்கும் இனிக்கின்றது. உலகத்தோடு ஒத்து வாழ முயலும் நாம். இயற்கையின் இயைபொடு நம் வரலாற்றுப் போக்கில் நமக்குக் கிடைத்து, நம்மிடம் பரவிய அந்தச் செல்வத்தினை இழக்க வேண்டுமோ? நம் வழிவழி வரும் தலைமுறைகளுக்கும் உதவும் செல்வமாக அதனை வகுப்பதே சிறந்ததாம். எனவே. நம் பிரதமர் ஆங்கிலத்தை நம் மாணவர்கள் கற்கவேண்டும் என்று கூறுவது தமிழன் நெஞ்சில் எழும் இனிய பாடலே என்று கூறலாம். ஆங்கிலம் அறிந்த மாணவர்கள், தம் தாய்மொழி வழியே எதனையும் கற்கப் புகும்போது அவர்களுக்கு என்றென்றும் எப்போதும் உதவ ஆங்கில நூல்களும், ஆராய்ச்சி இதழ்களும் கோடிக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கின்றன.<noinclude></noinclude> 606914a7wqcybw73d80agzg2yvibczv பக்கம்:தமிழ் மணம்.pdf/20 250 461723 1837363 1480335 2025-06-30T10:17:38Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|20|தமிழ் மணம்|}}</noinclude>இவற்றை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்தே தீரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை; முடியவும் முடியாது. ஒருசில அடிப்படை நூல்கள் தமிழில் இருந்தால் போதும். உலகம் முழுதுமாக வளரும் ஆங்கிலம் மிகச் சிறிய செலவில் கண்ணைக் கவரும் வகையில் உண்மையை உள்ளது உள்ளபடி நம்முடைய மாணவர்கள் எளிதில் அறியும் போக்கில் உதவ முன்னிற்கும்போது நம்முடைய மாணவர்கள் பழமபசலியாவது என்றும் இல்லையாம். ஆனால், நம் மாணவர் கற்கும் ஆங்கிலத்தின் தரம் உயர வேண்டும். ஆங்கிலமோ பேச்சுமொழி. ஆதலின். அதைக் கற்பது அருமையாகவேண்டுவதில்லை. கற்பிக்கும் முறையே மாறவேண்டும். நம்முடைய மாணவர்கள் இன்று இடைநிலைப் பள்ளியின் முதல் வகுப்பில் ஆங்கிலம் கற்கத் தொடங்குகின்றனர். தாம் கற்கும் நேரத்தில் ஏறக்குறையக் கால் பங்கு அளவு (ஐந்தில் ஒரு பங்கு) ஆங்கிலம் கற்கவே செலவிடுகின்றனர். இதில் ஒன்றும் வஞ்சகம் இல்லை. இவ்வாறே பட்டம் பெறும்வரை நேரத்தைச் செலவு செய்கின்றனர். ஆனால். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக முடிகின்றது. முதல் கோணல் முற்றும் கோணலாகப்போகிறது. முதலில் கற்பிப்பவர்கள் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசத் தெரியாத, எழுதத் தெரியாத ஆசிரியர்கள்; உயர்நிலைப் பள்ளிப் பாடத்தை முடித்துத் தேர்ந்தவர்கள். இவர்கள்போலத்தானே இவர்கள் மாணவர்களும் “ஊமைக் குளறுவாயன் உற்பாத பிணடம்” என்ற பழமொழிபோல் ஆகிறார்கள்? இதன் பயனாக மாணவர்கள் படிக்கும் நேரமெலாம் வீணாகி ஒழிகிறது. இதற்குச் செலவாகும் பணமும் கமரில் உகுத்த பாலாகிறது. மாணவர் அறிவில் குறைந்தவர் அல்லர். பட்டம் பெற்று ஆங்கிலத்தில் தேர்ந்தவர்களை அந்த முதல் வகுப்பில் கற்பிக்க வகை செய்தால், கிறித்தவர் கன்னிமாடங்களில் கற்கும் நம் மாணவர்கள்போல் இரண்டாண்டுகளில் ஆங்கிலத்தில்<noinclude></noinclude> s79a13pup39e4baifbzogd427qsqhxv பக்கம்:தமிழ் மணம்.pdf/21 250 461724 1837364 1480336 2025-06-30T10:20:59Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh||குழப்புதல் வேண்டா|21}}</noinclude>விரும்பிப் பேச, ஆங்கில நூல்களை விரும்பிப் படிக்க எளிதில் தேர்ச்சி அடைந்துவிடுவார்கள். இந்த விருப்பம் கைவந்த பின், இவ்வளவு நேரம் பின்னைய ஆண்டுகளில் செலவழிக்க வேண்டுவதில்லை; நேரங் குறையச் செலவும் குறையும். முதல் வகுப்பில் பட்டம் பெற்றோரை ஆசிரியராக அமர்த்துவதால் நேரிடும் செலவு இந்த வகையில் ஈடாகிவிடும். முதலில் நல்ல வகையில் கற்பிக்காமல், பின்னெல்லாம் முயல்வது வீணேயாம். மேலும் மேலும் சுமையை மாணவர் தலையில் சுமத்துவதாகவே அத்தகைய முயற்சிகள் மாணவர் உள்ளத்தைக் கலக்குகின்றன. முதல் இருந்தே கற்பிக்கும் முறை மாறுமானால் ஆங்கிலத்தின் தரம் உயர்வதில் தடை ஒன்றுமில்லை இந்தத் திட்டத்தில் ஆங்கிலம் துணையாக நிற்குமே யன்றி முதலாக அமைந்துவிட முடியாது. முன்னெல்லாம் முதலாக அமைந்த ஆங்கிலத்தின் இடத்தைத் தமிழ்நாட்டில் தமிழே பெறமுடியும். ஆங்கிலமே பெறமுடியாதென்றால். இந்தி அந்த இடத்தைப் பள்ளிக்கூடங்களில் பெறமுடியும் என்பது வீண் கனவேயாம். தமிழில் உயர்நிலை வகுப்புக்களில், மாணவர்கள். எல்லாப் பாடங்களையும் படித்துவிட்டுக் கல்லூரியில் வந்ததும் வேறு மொழியில் படிக்கத் தொடங்குவது அருமையினும் அருமையாகிறது. பாதித் தமிழிலும் பாதி ஆங்கிலத்திலும் பேசியே இன்று கல்லூரிகளில் பாடம் நடைபெறவேண்டியிருக்கிறது. அங்கும் தமிழிலே நடந்தால் மாணவர்கள் எளிதில் கருத்தினைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால்,இன்று கருத்தினை அறிந்தால் மட்டும் போததாது; அதனை ஆங்கிலத்தில் பரீட்சையில் எழுதி வெளியிடும் ஆற்றலும் மாணவர்கள் பெறவேண்டும். எனவே, இந்தப் பரீட்சை அவர்கள் அறிவை அளக்காமல் ஆங்கிலப் பயிற்சியையே அளக்கிறது. இதன் பயனாக, மாணவர்கள் கருத்தினை அறிவதில் நாட்டம் இழந்து. அக் கருத்தை எளிதில் உருப்போட்டு<noinclude></noinclude> 9b9qbckfi7dke6nao1k1r15t79c9c54 பக்கம்:தமிழ் மணம்.pdf/22 250 461725 1837366 1480337 2025-06-30T10:23:18Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|22|தமிழ் மணம்|}}</noinclude>எழுதக்கூடிய அளவில் உள்ள ஆங்கிலக் குறிப்புக்களையே நாடி நிற்கின்றனர். நூல்களைக் கற்கும் மனப்போக்கு இங்கு வளருமா? ஆசிரியர் பேசும் விளக்கத்தினைக் கேட்கும் மனப்பான்மை வளருமா? Notes, Notes என்றே கதறுகின்றனர் மாணவர்கள்; அதனைக் கொடுத்தால்தான் அமைதியாக எழுதிக்கொள்கின்றனர்; பிற எல்லாம் அவர்களுக்கு இனிப்பதில்லை: Bore, Bore என்று கத்துகின்றனர். ஈதோ அறிவுச் சூழல்? இங்கு எப்படி ஒழுங்குமுறை வளரக்கூடும்? ஒழுங்கின்மையே வளர்கிறது. யார் வளர்ககிறார்கள்? மாணவர்களா? இல்லை; இந்தத் திட்டம் வகுக்கும் நாமே! ஆங்கிலம்,நம் மாணவர்கள் அறியவேண்டும். ஆனால். ஒரு மொழியை அறிவதில் இரண்டு வேறு நிலையுண்டு. ஒன்று அந்த மொழியிலுள்ள நூல்களை விரும்பிக் கற்று அறிந்துகொள்ளும் அளவு கற்பது; மற்றொன்று. அதிலேயே எழுதும் அளவு கற்பது. எனக்கு வடமொழி வரும்; வடமொழி நூல்களை நான் படிக்க முடியும். ஆனால், அதிலே நான் எழுத முடியாது. எழுத முயல்வது வீணேயாம். நம்முடைய மாணவர்களும் ஆங்கில நூல்களைக் கற்றறியக்கூடிய அளவு ஆங்கிலம் அறிந்தால் போதும்; ஆங்கிலம் பேச்சுமொழியாதலின் சிறிதளவு முயனறால் எழுதவும் வரலாம்? மிகமிக முயன்று இரண்டோர் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிவிடலாம். ஆனால், எல்லாவற்றையும் ஆங்கிலத்திலேயே எழுதவேண்டும் என்று வற்புறுத்துவது பொருளற்ற, பயனற்ற முயற்சியே யாம். கலைச் சொற்களைப்பற்றிய குழப்பமும் நம்மிடையே உலவுகிறது. எல்லாத் துறைகளையும் எண்ணிப்பார்த்தால் நமக்கு வேண்டிய கலைச் சொற்கள் நூறாயிரக் கணக்கில் இருக்கக் காண்கிறோம்! இவற்றையெல்லாம் தமிழில் மொழி பெயர்ப்பதா? மொழிபெயர்த்த பின்தான் தொடங்குவதென்றால், கடலலை ஓய்ந்தபின் கடலில் குளிப்பதுபோலாகும்.<noinclude></noinclude> ojbk64bpky5hdb17tpma6p8dfevy0aq பக்கம்:தமிழ் மணம்.pdf/23 250 461726 1837373 1480338 2025-06-30T10:25:58Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh||குழப்புதல் வேண்டா|23}}</noinclude>கலைச் சொற்கள் நாள்தோறும் வளர்ந்துகொண்டே வருகின்றன. நம்முடைய கல்வி அறிவை நாம் அறிந்த கலைச் சொற்களின் எண்ணிக்கை கொண்டு அளந்துவிடலாம். நாம் அறிந்த கலைச் சொல்லே நம்முடைய கலை அறிவானால் இவற்றை முழுதும் மொழிபெயர்ப்பாகவோ, வேறாகவோ மாற்றி அமைக்கும்போது என்ன நேரும்? இன்று கலையில் வல்லவர்கள் என்பவர்கள் எல்லாம் அந்தப் புதிய சொல்லுலகில் ஓரறிவுமில்லாதவர்களாக மாறிவிடுவார்கள். தமிழ் அறிந்தவன் திடீரென ஹாடண்ட்டாட் மொழியினிடம் சிக்கினால் ஊமையாகத்தானே விளங்கவேண்டும்? ஆசிரியர்கள் எல்லாம் இப்படி ஊமையானால், இனிக் கற்பிப்பார் யார்? எனவே, அனைத்துலகக் கலைச் சொற்களைப் பயன்படுத்துவது தான் இப்போதுள்ள ஒரே வழி. ஆசிரியர்களுக்கும் அவை கொண்டு கற்பித்தல் எளிதாம். தமிழில் நூல் இல்லாத பொழுது ஆங்கில நூல்களையே நம்பி வாழும் மாணவரும், பிறரும் இக் கலைச் சொற்களை அறிவதால் ஆங்கில நூல்களைக் கற்பதும் எளிதாகிவிடும். தமிழில் எழுதுவதும் மாணவர்க்கு இயல்பாகிவிடும். தமிழில் நூல்கள் வரும் வரையிலும் காத்திருக்கவும் வேண்டாம். கலைச் சொற்களை அறிவது என்பதுதான் கல்வித்துறையில் ஆழ்ந்து வருவதன் பயன் எனக் கண்டமையால் அவற்றின் எண்ணிக்கையை, அறிவைக் குறைத்தால் அன்றிக் குறைக்க முடியாது. எனவே, அவை நீங்கலான பிற சொற்களைத் தமிழில் எழுதுவதுதான் இங்கு மாணவர் காணும் எளிமை. இந்த எளிமையைத்தான் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். கல்லூரிக்குரிய நூல்களில் விஞ்ஞானம் இப்படித்தான் எந்த மொழியிலும் மணிப்பிரவாளமாக அமைய முடியும். கலைச் சொற்கள் பெருக்கல் வாய்பாட்டில் வரும் எண்கள் போன்றவையேயாம். ஆதலின், அவை உலகப் பொதுமொழி எனலாம். ஆனால், விஞ்ஞானத்தைப் பொதுமக்கள் அறியும்<noinclude></noinclude> fidf0yq8fna53a10mlofz55ivna52a5 பக்கம்:தமிழ் மணம்.pdf/24 250 461727 1837375 1480339 2025-06-30T10:26:37Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|24|தமிழ் மணம்|}}</noinclude>வகையிலே விளக்குவது என்பது வேறு. இங்கே மணிப் பிரவாளம் வரவேண்டுவது இல்லை. நல்ல, இனிய, எளிய தமிழில் எழுதி வருவதே இங்கு இயல்பாகும். ஆனால், இந்த முயற்சியினையும், கல்லூரி வகுப்பு நூல்கள் எழுதும் முயற்சியினையும் ஒன்றென எண்ணிக் குழப்புதல் ஆகாது.<noinclude></noinclude> 9di0y7oq9me3r8liltxpdh5sra24dbk பயனர்:Booradleyp1/books 2 481457 1837176 1836457 2025-06-29T15:50:56Z Booradleyp1 1964 /* மேலாண்மை பொன்னுச்சாமி */ 1837176 wikitext text/x-wiki ==அண்ணாத்துரை== ===ஒருங்கிணைப்பு முடிந்தவை === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div> <div class="NavContent" style="display:none;"> {{Multicol}} #[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024 #[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024 #[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024 #[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024 #[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024 #[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024 #[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024 #[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024 #[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024 #[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024 #[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024 #[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024 #[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024 #[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 # [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 #[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன் #[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ் #[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] # [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன் #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]] #[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]] #[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]] #[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]] #[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]] #[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]] #[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]] {{Multicol-break}} #[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]] #[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] #[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] #[[அட்டவணை:திருமணம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]] #[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]] #[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]] {{Multicol-end}} </div></div></div> ==சங்க இலக்கிய அட்டவணைகள்== === ஒருங்கிணைப்பு முடிந்தவை === #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}} # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}} #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}} ===மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] ===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை=== ===மேலும்=== #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]] #[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]] ==தொ. பரமசிவன்== === ஒருங்கிணைக்கப்பட்டவை=== #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #[[அட்டவணை:உரைகல்.pdf]] #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]] #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]] #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] ==மேலாண்மை பொன்னுச்சாமி== ===ஒருங்கிணைக்கப்பட்டவை === #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] #[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]] #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]] #[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]] #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]] ===முழுமையாக ஒருங்கிணைக்கப் படாதவை=== #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] ==உதிரிகள்== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}} #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}} === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] ===மெய்ப்பு நடபெற்று வருபவை === #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய் #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-மோகன் #[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]-பிரீத்தி #[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]]-கராம் ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை === #[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]-210 #[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]-202 #[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]]-202 #[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-171 #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-163 p3jpsgc9oejg5r0m17ob13s7040mj6m 1837177 1837176 2025-06-29T15:51:59Z Booradleyp1 1964 /* சங்க இலக்கிய அட்டவணைகள் */ 1837177 wikitext text/x-wiki ==அண்ணாத்துரை== ===ஒருங்கிணைப்பு முடிந்தவை === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div> <div class="NavContent" style="display:none;"> {{Multicol}} #[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024 #[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024 #[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024 #[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024 #[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024 #[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024 #[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024 #[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024 #[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024 #[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024 #[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024 #[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024 #[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024 #[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 # [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 #[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன் #[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ் #[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] # [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன் #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]] #[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]] #[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]] #[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]] #[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]] #[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]] #[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]] {{Multicol-break}} #[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]] #[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] #[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] #[[அட்டவணை:திருமணம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]] #[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]] #[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]] {{Multicol-end}} </div></div></div> ==சங்க இலக்கிய அட்டவணைகள்== === ஒருங்கிணைப்பு முடிந்தவை === #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}} # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}} #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]{{tick}} ===மெய்ப்பு முடிந்தவை === ===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை=== ===மேலும்=== #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]] #[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]] ==தொ. பரமசிவன்== === ஒருங்கிணைக்கப்பட்டவை=== #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #[[அட்டவணை:உரைகல்.pdf]] #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]] #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]] #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] ==மேலாண்மை பொன்னுச்சாமி== ===ஒருங்கிணைக்கப்பட்டவை === #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] #[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]] #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]] #[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]] #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]] ===முழுமையாக ஒருங்கிணைக்கப் படாதவை=== #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] ==உதிரிகள்== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}} #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}} === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] ===மெய்ப்பு நடபெற்று வருபவை === #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-156-அஜய் #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-மோகன் #[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]-பிரீத்தி #[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]]-கராம் ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை === #[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]-210 #[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]-202 #[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]]-202 #[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-171 #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-163 6i8bphaetec3ezxcsuif43b8m374a0n பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/74 250 489055 1837150 1837062 2025-06-29T14:38:19Z Booradleyp1 1964 1837150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 73}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>44. நாகூர் தர்காக் கல்வெட்டுக்கள்</b> <ref>*தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள், செ. இராசு: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு.</ref>}}}} நாகூர் தர்காவில் உள்ள கல்வெட்டுக்கள் ஒன்றாகத் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. <b>{{center|1. விசயராகவ நாயக்கர் கொடை}}</b> {| |- | இடம் || – ||நாகூர் தர்கா உள் மினார் |- | {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}| – ||தஞ்சை நாயக்கர் விசயராகவ நாயக்கர் (1640-1674) காலம் பார்த்திப ஆடி 15; கி.பி. 3.7.1645 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||தஞ்சை நாயக்க மன்னரின் அதிகாரியாக இருந்த நாகூர் மீரா ராவுத்தர் உள் மினாரைக் கட்டினார் (முழுவதும் காறை பூசி மறைந்திருந்த இக்கல்வெட்டு அடையாளம் காணப்பட்டு காறை பெயர்த்தெடுக்கப்பட்டு படிக்கப்பட்டது) |} <b>கல்வெட்டு</b> <poem>1. பாத்திப வருஷம் ஆடி மாதம் 10 தேதிஸ்ரீ விசையராவுக 2. நாயக்கய்யன் காரியத்துக்குக் கர்த்தரான 3. மதாறு ராவுத்தர் நாவூர் மீரா ராவுத்தர் முத 4. ல் வாசலில் கட்டின மினாற் மீரா ராவுத்தர் த 5. ம்மத்துக்கு அகுதம் பண்ணின பேர் 6. மக்கத்திலே அகுதம் ப 7. ண்ணின பாவத்திலே 8. போக கடவாராகவும் 9. கெங்கைக் கரையில் காரா 10. ன் பசுவை கொன்ற பா 11. வத்திலே போககடவாராகவும்</poem> {{c|<b>2. பிரதாபசிங் கொடை</b>}} {| |- | இடம் || – ||நாகூர் தர்கா முன்னர் உள்ள வெளி மினார் |- | {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}| – ||தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிங் மகாராசா (1739-1763) காலம், யுவ வருடம் தை மாதம் 11; கி.பி. 1755. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாபசிங் மகாராசா வெளி மினார் கட்டி வைத்தார். நாகூரில் அதிகாரியாக இருந்தவர் சேக் அப்துல் மலிக் அவர்கள் குறிக்கப்<noinclude>|} {{rule}} {{Reflist}}</noinclude> k37mx185xtw5n12ep8mxs6yx3my62wj பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/75 250 489056 1837151 1836495 2025-06-29T14:40:01Z Booradleyp1 1964 1837151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|74 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}} {|</noinclude>பெறுகிறார். மராட்டிய அதிகாரிகள் மானோசி செகதாப், ராமோசி நாயக்கர் ஆகியோரும் குறிக்கப் பெறுகின்றனர். |} <b>கல்வெட்டு</b> <poem>1. அசரத்து மீறா சாயிபு 2. ராஸ்ரீ பிறதாபசிங்கு ம 3. காராசா சாயிபு அவர் 4. கள் கட்டிவச்ச மணாறா 5. ரா. மானோசி சிகதாபு ரா. 6. அவர்கள் ரா.ரா. ராமோசி 7. னாயக்கர் அவர்கள் மத்தி 8. ஷத்தில் உத்தாரப்படிக்கு சேகு 9. மலிக்கு நாகூர் மத்திஷத் 10. தில் மனாரா பதினொரு நிலம் க 11. ட்டி முடிஞ்சுது யுவ வருஷம் தை மாதம் 12. தேதி கும்பம் வச்சது</poem> {{c|<b>3. பிரதாபசிங் மகாராசா</b>}} {| |- | இடம் || – ||மேலே உள்ள கல்வெட்டில் தென்புறம் உள்ள கல்வெட்டு |- |{{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}| – ||1752ல் மினார் கட்டத் தொடங்கியதைக் குறிக்கிறது. 1752ல் கட்டத் தொடங்கி, 1755ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. ஆங்கிரஸ வருஷம் மாசி மாதம் 9 2. அசறது மீரா சாயிபு அவர்கள் த 3. ற்காவில் இந்த மினாற் பதினோர 4. ங்கணம் ரா. பிறதாபசிங்கு மகா 5. ராசா சாயிபு அவர்களுடைய தற்மம் 6. சேகு அப்துல் மல்லிகையவர்கள் ராம 7. ரசா சாயிபு அவர்கள் உத்தாரப 8. டிக்கு கட்டி வைத்த மனா 9. ரா</poem>{{nop}}<noinclude></noinclude> cvqs9r2jg19ykdp3g1gni4h3gkxcnjb பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/76 250 489057 1837140 1836496 2025-06-29T14:32:49Z Booradleyp1 1964 1837140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 75}} {{rule}}</noinclude>{{c|<b>4. தங்கக் கலசம் வைத்த காசியப்பா ராவுத்தர்</b>}} <b>மேற்படி மினார் கீழ்புறக் கல்வெட்டு</b> <poem>1. திருச்சிராப்பள்ளி பாலக்கரை 2. ம. காசியப்பா இராவுத்தரால் 3. இம் மினாரின் சிகரத்தில் 4. தங்கக் கலசம் வைக்கப் பெற்றது 5. 1916</poem> {{c|<b>5. கோவிந்தசாமி செட்டி கொடை</b>}} <b>நாகூர் தர்கா தளம் பாவிய கல்வெட்டு</b> <poem>1. 1923 நவம்பர் மாதம் 2. நாகூர் 2 பக்கிரி 3. செட்டியார் குமா 4. றன் கோவிந்த 5. சாமி செட்டியால் 6. போடப்பட்டது</poem> {{c|<b>6. தங்கக் கலசம் வைத்த மகாதேவ அய்யர்</b>}} <b>வடக்கு மனோரா கல்வெட்டு</b> <poem>1. உ 2. கூத்தா நல்லூர் 3. எஸ். மகாதேவ ஐயர் அவர்களால் 4. தங்க கலசம் 5. வைக்கப்பட்டது 6. 9. 2. 1956</poem> {{c|<b>7. செய்கு தாவூது வைத்த தங்கக் கலசம்</b>}} <b>கீழ்ப்புறக் கல்வெட்டு</b> <poem>1. கரைப்பாக்கம் 2. ஜனாப் கு. செய்கு தாவூத் அவர்களால் 3. இந்த மணவறாவின் சிகரத்தில் 4. தங்கக் கலசம் வைக்கப்பட்டது 5. ஹிஜ்ரி 1374 ஷப்பால் 10 தேதி மன்மத வருஷம் 6. வைகாசி 19 தேதி 1955 ஜூன் 2 தேதி</poem><noinclude></noinclude> 8g0v95k2iwjkja97ema7kfqnzta5j20 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/77 250 489058 1837109 1836497 2025-06-29T13:40:56Z Booradleyp1 1964 1837109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh| 76 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{c|<b>8. குஞ்சு மரைக்காயர் கட்டிய பீர் மண்டபம்</b>}} <b>பீர் மண்டபத்தில் உள்ள கல்வெட்டு</b> {| |- | காலம் || – ||ஹஜ்ரி 972 றசப் மாதம் |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||குஞ்சு மரைக்காயர் காதர் மீரா சாயபு தன் சொந்தப் பணத்தில் பீர் மண்டபம் கட்டிய செய்தி கூறப்படுகிறது. |} <b>கல்வெட்டு</b> {{left_margin|3em|<poem>1. பீர் மண்டபம் 2. பிசுமில்லாகி 3. றரு கிசரத்து 4. 972 வருஷம் றசப் 5. மாதம் முதல் நாகூர் கலா 6. ரத்து சாகுல் கமீதொலி 7. ஆண்டவரவர்கள் சீசறு 8. மான குஞ்சு மரைக் 9. காயர் முகம்மது அ 10. பு பக்கர் மரைக்கா 11. யரவர்கள் குமாரரு 12. மாகிய குஞ்சு மரைக் 13. காயர் காதிறு மீறா சா 14. கிபு சொந்தத்தில் சில 15. வு செய்து கட்டிய பீர் 16. மண்டபம் 7031 17. நள வருஷம் சித்திரை மாதம்.</poem>}} {{c|<b>9. மண்டபத் திருப்பணி செய்த அப்துல் காதர்</b>}} {| |- | இடம் || – ||முன் மண்டபத் தூண் |- | காலம் || – ||பிரமாதி வருடம், கி.பி. 1879 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – || முன் மண்டபத்தின் கீழ்ப்புறம் ஒரு பத்தியை நாகூர் அகமது லெப்பை குமாரர் ஹாஜி அப்துல் காதர் கட்டி வைத்தார். இதனைக் கட்டிய கொத்தனார் இருவர் பெயரும் கூறப்படுகிறது. |}{{nop}}<noinclude></noinclude> is7kjhma4v9jzfc4t762452a3ch5ft8 1837145 1837109 2025-06-29T14:34:42Z Booradleyp1 1964 1837145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh| 76 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{c|<b>8. குஞ்சு மரைக்காயர் கட்டிய பீர் மண்டபம்</b>}} <b>பீர் மண்டபத்தில் உள்ள கல்வெட்டு</b> {| |- | காலம் || – ||ஹஜ்ரி 972 றசப் மாதம் |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||குஞ்சு மரைக்காயர் காதர் மீரா சாயபு தன் சொந்தப் பணத்தில் பீர் மண்டபம் கட்டிய செய்தி கூறப்படுகிறது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. பீர் மண்டபம் 2. பிசுமில்லாகி 3. றரு கிசரத்து 4. 972 வருஷம் றசப் 5. மாதம் முதல் நாகூர் கலா 6. ரத்து சாகுல் கமீதொலி 7. ஆண்டவரவர்கள் சீசறு 8. மான குஞ்சு மரைக் 9. காயர் முகம்மது அ 10. பு பக்கர் மரைக்கா 11. யரவர்கள் குமாரரு 12. மாகிய குஞ்சு மரைக் 13. காயர் காதிறு மீறா சா 14. கிபு சொந்தத்தில் சில 15. வு செய்து கட்டிய பீர் 16. மண்டபம் 7031 17. நள வருஷம் சித்திரை மாதம்.</poem> {{c|<b>9. மண்டபத் திருப்பணி செய்த அப்துல் காதர்</b>}} {| |- | இடம் || – ||முன் மண்டபத் தூண் |- | காலம் || – ||பிரமாதி வருடம், கி.பி. 1879 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – || முன் மண்டபத்தின் கீழ்ப்புறம் ஒரு பத்தியை நாகூர் அகமது லெப்பை குமாரர் ஹாஜி அப்துல் காதர் கட்டி வைத்தார். இதனைக் கட்டிய கொத்தனார் இருவர் பெயரும் கூறப்படுகிறது. |}{{nop}}<noinclude></noinclude> 632qmjrwyeu2w7mgb20a9uuvlv8fk2l பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/78 250 489059 1837108 1837060 2025-06-29T13:39:11Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 77}} {{rule}}</noinclude><b>கல்வெட்டு</b> <poem>1. பிஸ்மில்லாஹி 2. இந்தக் கட்டிடமும் கீள் 3. புறம் ஒரு பத்தி கட்டிடமும் 4. ஹஜரத்து ஷாஹனால் 5. ஹமீது செய்யிது 6. அப்துல் காதிர் ஒலி 7. கஞ்ஜ சவாயி கஞ்ஜ பகுசு 8. பாத்துஷாஃ சாஹிபு 9. ஆண்டவரவர்களுக்காக 10. நாகூர் அஃமது லெவ்வை 11. குமாரர் ஹாஜி 12. அப்துல் காதிர் 13. நகுதாவால் கட்டப் பட்டது 14. பிரமாதி வரு 1879 15. இந்த வேலை திருச்சினாப்பள்ளி ஒறையூர் 16. சின்னத் தம்பி முத்து கருப்ப கொத்தர் குமா 17. ரர்கள் க.று.ம. சிவந்திலிங்கம் 18. தாறானூர் ஆ. அண்ணாவி</poem> {{c|<b>10. மினார் கட்டிய சையது மரைக்காயர்</b>}} {| |- | இடம் || – ||நாகூர் தர்கா வடக்கு மினார் |- | காலம் || – ||19ஆம் நூற்றாண்டு; ஸ்ரீமுக மாசி; கி.பி. 1873 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || நாச்சிகுளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் கட்டிய விபரம் கூறப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. அமானல்லாயி சா 2. த்துக்தண நிறெகவு 3. ம் சிறிமுக வருஷம் மாசி 4. மாதம் நாச்சிகுழம் 5. உதுமா மரைக்கா</poem><noinclude></noinclude> bya211sqapra4haw1a80ccy22ytsg3n 1837110 1837108 2025-06-29T13:42:02Z Booradleyp1 1964 1837110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 77}} {{rule}}</noinclude><b>கல்வெட்டு</b> {{left_margin|3em|<poem>1. பிஸ்மில்லாஹி 2. இந்தக் கட்டிடமும் கீள் 3. புறம் ஒரு பத்தி கட்டிடமும் 4. ஹஜரத்து ஷாஹனால் 5. ஹமீது செய்யிது 6. அப்துல் காதிர் ஒலி 7. கஞ்ஜ சவாயி கஞ்ஜ பகுசு 8. பாத்துஷாஃ சாஹிபு 9. ஆண்டவரவர்களுக்காக 10. நாகூர் அஃமது லெவ்வை 11. குமாரர் ஹாஜி 12. அப்துல் காதிர் 13. நகுதாவால் கட்டப் பட்டது 14. பிரமாதி வரு 1879 15. இந்த வேலை திருச்சினாப்பள்ளி ஒறையூர் 16. சின்னத் தம்பி முத்து கருப்ப கொத்தர் குமா 17. ரர்கள் க.று.ம. சிவந்திலிங்கம் 18. தாறானூர் ஆ. அண்ணாவி</poem>}} {{c|<b>10. மினார் கட்டிய சையது மரைக்காயர்</b>}} {| |- | இடம் || – ||நாகூர் தர்கா வடக்கு மினார் |- | காலம் || – ||19ஆம் நூற்றாண்டு; ஸ்ரீமுக மாசி; கி.பி. 1873 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || நாச்சிகுளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் கட்டிய விபரம் கூறப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> {{left_margin|3em|<poem>1. அமானல்லாயி சா 2. த்துக்தண நிறெகவு 3. ம் சிறிமுக வருஷம் மாசி 4. மாதம் நாச்சிகுழம் 5. உதுமா மரைக்கா</poem> }}<noinclude></noinclude> oqc7d5j891gieonx6ml7xce2hp4dtum 1837147 1837110 2025-06-29T14:35:22Z Booradleyp1 1964 1837147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 77}} {{rule}}</noinclude><b>கல்வெட்டு</b> <poem>1. பிஸ்மில்லாஹி 2. இந்தக் கட்டிடமும் கீள் 3. புறம் ஒரு பத்தி கட்டிடமும் 4. ஹஜரத்து ஷாஹனால் 5. ஹமீது செய்யிது 6. அப்துல் காதிர் ஒலி 7. கஞ்ஜ சவாயி கஞ்ஜ பகுசு 8. பாத்துஷாஃ சாஹிபு 9. ஆண்டவரவர்களுக்காக 10. நாகூர் அஃமது லெவ்வை 11. குமாரர் ஹாஜி 12. அப்துல் காதிர் 13. நகுதாவால் கட்டப் பட்டது 14. பிரமாதி வரு 1879 15. இந்த வேலை திருச்சினாப்பள்ளி ஒறையூர் 16. சின்னத் தம்பி முத்து கருப்ப கொத்தர் குமா 17. ரர்கள் க.று.ம. சிவந்திலிங்கம் 18. தாறானூர் ஆ. அண்ணாவி</poem> {{c|<b>10. மினார் கட்டிய சையது மரைக்காயர்</b>}} {| |- | இடம் || – ||நாகூர் தர்கா வடக்கு மினார் |- | காலம் || – ||19ஆம் நூற்றாண்டு; ஸ்ரீமுக மாசி; கி.பி. 1873 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– || நாச்சிகுளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் கட்டிய விபரம் கூறப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. அமானல்லாயி சா 2. த்துக்தண நிறெகவு 3. ம் சிறிமுக வருஷம் மாசி 4. மாதம் நாச்சிகுழம் 5. உதுமா மரைக்கா</poem><noinclude></noinclude> bya211sqapra4haw1a80ccy22ytsg3n பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/79 250 489060 1837111 1837061 2025-06-29T13:44:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|78 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>6. யர் குமாரர் நல்ல 7. தம்பி மரைக்காய 8. ர் குமாரர் நகுதா 9. நல்ல செயிது மரை 10. க்காயர் அவர்கள் நா 11. கூர் மீரா சாயபு 12. அவர்கள் தறுகா 13. வில் கட்டிவச்ச மினாற்</poem> {{c|<b>11. கிழக்குப் பக்கம் உள்ள கல்வெட்டு</b>}} ஹிஜிரி 1326ஆம் வருடம் ரங்கூன் ஹாஜி முகம்மது தம்பி சம்மாட்டியார் தங்கக் கலசமும், வெள்ளிக்கதவும் செய்தார். <poem>1. பிஸ்மில்லாஹி 2. ஹலாத்து குத்துபவ் மஜீது கவு 3. துலிஸ்லாம் செய்யிதப்து 4. ல் காதிறு ஷாகுல் ஹமீது 5. ஆண்டவரவர்கள் ஹவுலா 6. ஷரீமன் மண்டபத்தின் மே 7. ல் தங்கக் கலசமும் தர்கா 8. நாலாவது வாயிலின் வெள்ளி 9. கதவும் இந்தக் கட்டிடமும் 10. செய்கு மதார் சாகிபு குமா 11. ரர் றெங்கூன் ஹாஜி முக 12. ம்மது தம்பி சம்மாட்டி 13. யாரால் கட்டப்பட்டது 14. ஹிஜரத்து 1326 வருஷம் 15. ஜமாஸ்துலாகிறு மாதம்</poem>}} {{c|<b>12. மராட்டிய மன்னர்கள் மினார் கட்டினர்</b>}} முன் மினாரில் மராத்தி மொழியிலும் ஒரு கல்வெட்டு விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதில் பிரதாப சிங் (1739-1763) கட்டிய 11 நிலை மினாருக்கு அவர் தந்தை துளசா மன்னர் காலத்திலேயே இடம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> rf2gnfieee6v78icfn2h84qkb36eh1o 1837148 1837111 2025-06-29T14:35:59Z Booradleyp1 1964 1837148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|78 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>6. யர் குமாரர் நல்ல 7. தம்பி மரைக்காய 8. ர் குமாரர் நகுதா 9. நல்ல செயிது மரை 10. க்காயர் அவர்கள் நா 11. கூர் மீரா சாயபு 12. அவர்கள் தறுகா 13. வில் கட்டிவச்ச மினாற்</poem> {{c|<b>11. கிழக்குப் பக்கம் உள்ள கல்வெட்டு</b>}} ஹிஜிரி 1326ஆம் வருடம் ரங்கூன் ஹாஜி முகம்மது தம்பி சம்மாட்டியார் தங்கக் கலசமும், வெள்ளிக்கதவும் செய்தார். <poem>1. பிஸ்மில்லாஹி 2. ஹலாத்து குத்துபவ் மஜீது கவு 3. துலிஸ்லாம் செய்யிதப்து 4. ல் காதிறு ஷாகுல் ஹமீது 5. ஆண்டவரவர்கள் ஹவுலா 6. ஷரீமன் மண்டபத்தின் மே 7. ல் தங்கக் கலசமும் தர்கா 8. நாலாவது வாயிலின் வெள்ளி 9. கதவும் இந்தக் கட்டிடமும் 10. செய்கு மதார் சாகிபு குமா 11. ரர் றெங்கூன் ஹாஜி முக 12. ம்மது தம்பி சம்மாட்டி 13. யாரால் கட்டப்பட்டது 14. ஹிஜரத்து 1326 வருஷம் 15. ஜமாஸ்துலாகிறு மாதம்</poem> {{c|<b>12. மராட்டிய மன்னர்கள் மினார் கட்டினர்</b>}} முன் மினாரில் மராத்தி மொழியிலும் ஒரு கல்வெட்டு விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதில் பிரதாப சிங் (1739-1763) கட்டிய 11 நிலை மினாருக்கு அவர் தந்தை துளசா மன்னர் காலத்திலேயே இடம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> 8f4ut7mkxo8ktsou91fq2i2gw6dh2ap பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/80 250 489061 1837119 1837066 2025-06-29T13:59:37Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 79}} {{rule}}</noinclude>தமிழ்க் கல்வெட்டைவிட மராத்தி மொழிக் கல்வெட்டு மிக விரிவாக உள்ளது. இங்கு மராத்திக் கல்வெட்டின் மொழிபெயர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காலம் கி.பி. 1752. <b>மொழிபெயர்ப்பு</b> சுபம் ஸ்வஸ்தி ஸ்ரீ சாலிவாகன சகம் 1674 கலியுகாப்தம் 4853 ஆங்கிரச வருடம் மாசி மாதம் 15ஆம் தேதி சுக்கிலபட்சம் பவுர்ணமியன்று அசரத் மீரா சாகிப் அவர்களுடைய சன்னதிக்கு மேற்கு போசள குலதீப மகாராசா ராச ஸ்ரீ ஏகோசி அவர்கள் மகனான ஸ்ரீ துளசிராசா சாகிப் அவர்கள் வணங்கி அளித்த இடத்தில் பசுக்களையும் அந்தணர்களையும் காப்பாற்றுகின்றவரான ஸ்ரீமத் சத்ரபதி மகாராசா ராசஸ்ரீ ஸ்ரீமந்த் பிரதாபசிம்ம மகாராசா சாகேப் அவர்கள் 11 நிலைகளையுடைய கோபுரத்தைத் தருமமாகக் கட்டி அளித்தார். சர்கேய் மானோசி செகதாப் அவர்கள் நாகூர் பந்தர் கார்பார் சுருணோசி போன்ஸ்லே மத்யஸ்தர் அப்துல் மாலிக் ஆகியோர் இந்த அறச்செயலை நிறைவேற்றி முடித்தனர். அசரத் சாகேப் அவர்களுடைய இடத்தில் பக்தி பூர்வமாக இந்த ஆவணம் சந்திரசூரியர் உள்ளவரை நடக்க வேண்டும் என்று எழுதிக் கொடுக்கப்பட்டது. வமிச பரம்பரையாக இந்தக் கொடையை வளர்த்துவர வேண்டும் என்ற எண்ணத்துடன் இக்கட்டிடம் கட்டப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> 0n88h1lng1n6wju8zo6cgoyo153ps6f பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/81 250 489062 1837115 1837068 2025-06-29T13:53:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|80 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 81 |bSize = 425 |cWidth = 246 |cHeight = 137 |oTop = 80 |oLeft = 122 |Location = center |Description = }} {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 81 |bSize = 425 |cWidth = 240 |cHeight = 158 |oTop = 225 |oLeft = 128 |Location = center |Description = }} {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 81 |bSize = 425 |cWidth = 245 |cHeight = 146 |oTop = 399 |oLeft = 129 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> ih7i85ref55ukdjps61dihmltrq6bfp பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/82 250 489063 1837116 1837070 2025-06-29T13:54:32Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 81}} {{rule}}</noinclude>{{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 82 |bSize = 425 |cWidth = 324 |cHeight = 150 |oTop = 96 |oLeft = 45 |Location = center |Description = }} {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 82 |bSize = 425 |cWidth = 161 |cHeight = 252 |oTop = 282 |oLeft = 125 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> o19co8hikodz8oi36x2gug9pd0da0z1 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/83 250 489064 1837117 1837083 2025-06-29T13:56:54Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|82 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{c|{{larger|<b>45. அதிராம்பட்டினம் தர்காவிற்கு செவ்வப்ப நாயக்கர் கொடை</b>}}<ref>*“தமிழ்நாட்டு செப்பேடுகள்” பகுதி -2; பக் 57; ச. கிருஷ்ணமூர்த்தி</ref>}} அதிராம்பட்டினத்தில் உள்ள தர்காவின் பெயர் ஹசரத் ஹாஜா அலாவுதீன் ஜிஸ்திய்யா வலியுல்லா சாகிப்தர்கா என்பதாகும். அந்தச் சிறப்புமிகும் தர்காவின் நுழைவாயிலின் மரநிலை சேதமடைந்து விழுந்தபோது செப்பேடு ஒன்று வெளிப்பட்டது. அச்செப்பேட்டை தர்கா அண்ணாவியர் கொண்டு வந்து கொடுக்க இந்நூலாசிரியரால் படிக்கப்பட்டது. தஞ்சை நாயக்க மரபின் முதல் மன்னர் செவ்வப்ப நாயக்கர். அவர் 29.12.1531 ஆம் ஆண்டு அந்தத் தர்காவிற்கு அதிராமப் பட்டினம் கிராமம் முழுவதையும் சர்வ மானியமாகக் கொடுத்தார். அதாவது அதிராமப்பட்டினத்தின் சகலவிதமான வரிகளையும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் எல்லா வரியையும் தர்காவிற்குக் கொடுக்க வேண்டும். சாகிப் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு மகிழங்கோட்டை என்று பெயர். அங்கு கிணறு வெட்டிக் கொடுக்கப்பட்டது. ஆண்டு தோறும் தவறாமல் கந்தூரி நடத்த வேண்டும். தர்காவின் நிர்வாகிகள் சாகிப் அவர்களின் குமாரர்கட்கும், பேரன்மார்கட்கும் வழிவழியாகக் கந்தூரி கொடுத்துவர வேண்டும். கந்தூரிக்குத் தீங்கு செய்பவர்கள் ரௌரவாதி நரகத்தை அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. ‘ஸ்ரீராய’ என்று அரசர் கையெழுத்திட்டுள்ளார். தொடக்கத்தில் இந்தச் செப்பேட்டில் “இராமானுஜய நம” என்று எழுதப்பட்டுள்ளது. இது தஞ்சை நாயக்கரின் முதல் செப்பேடாகும். தஞ்சையில் அரசர் ஆகும் முன்பு விசய நகர ஆட்சியின்போது இக்கொடை அளிக்கப்பட்டிருக்கலாம். அதனால்தான் விசயநகர மன்னன் அச்சுதராயர் (1529-1542) பெயரோடு சேர்த்து அச்சுத செவ்வப்ப நாயக்கர் என்று செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> c8rcxnbj65exnfw21nj8m8n1fshdrtb பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/84 250 489065 1837120 1837084 2025-06-29T14:03:22Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 83}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{c|{{larger|<b>46. ஈசா பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை</b>}}<ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள். டாக்டர் எஸ்.எம். கமால்; பக்கம் 445-451</ref>}} இராமநாதபுரம் சேதுபதி அரசர்களில் குமாரமுத்து விசயரகுநாத சேதுபதிகாத்த தேவர் 14.1.1734 அன்று இராமநாதபுரம் நகரம் கோட்டை கடைவீதிப் பகுதியில் உள்ள ஈசா பள்ளிவாசலுக்கு வரும் ஆன்மிகப் பெருமக்களுக்கு அன்னம் வழங்குவதற்காகக் ‘கிழவனேரி’ என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு தெரிவிக்கிறது. ‘கிழவனேரி’ முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ளது. ஊரில் உள்ள நன்செய், புன்செய், மாவிடை, மரவிடை, திட்டு, திடல், ஏந்தல், பிறவிடை, குடி, படை, பள்ளு, பறை, கிணறு, மரம் முதலிய பலவும் பள்ளிவாசல் உடைமையாகும். இச்செப்பேட்டில் காப்புச் சொல் புதுமையாக எழுதப்பட்டுள்ளது. <b>“தமிழனாலும் நாலு வருணத்திலே உள்ள பேரும், இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலேயும், சேதுவிலேயும் மக்கமதினத்திலேயும் புண்ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானமும் வெகு குடும்ப பிரதிட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும்”</b> என்பது காப்புப் பகுதியாகும். இக்கொடையைப் பெற்றுக் கொண்டவர் சர்தர்வேசலி மகன் சார்மூசா பாப்சா என்பவராவார். <b>செப்பேடு</b> {{left_margin|3em|<poem>1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலிவாகன சகாப்தம் 1656 இதன் மேல் செல்லா நின்ற ஆன 2. ந்த வருஷம் தை மாதம் 1ந்தேதி பௌர்ணமையும் சோம வாரமும் பூச நட்சத்திரமும் சௌமியாநா 3. மயோகமும் பாலவாகரணமும் கூடின புண்ணிய காலத்தில் தேவை நகரா 4. திபன் சேதுமூலரட்சா துரந்தரன் இராமநாதசவாமி காரியதுரந்தரன் சிவபூஜா து 5. ரந்தரன் பரராஜ சேகரன் பரராஜ கெஜசிங்கம் இரவி குலசேகரன் இரவிமார்த் 6. தாண்டன் சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்தி ஸ்ரீ மகாமண்டலேசுர</poem> }}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> kyd2isrb4marm6hgn959tw92x9sde9g 1837154 1837120 2025-06-29T14:41:55Z Booradleyp1 1964 1837154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 83}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{c|{{larger|<b>46. ஈசா பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை</b>}}<ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள். டாக்டர் எஸ்.எம். கமால்; பக்கம் 445-451</ref>}} இராமநாதபுரம் சேதுபதி அரசர்களில் குமாரமுத்து விசயரகுநாத சேதுபதிகாத்த தேவர் 14.1.1734 அன்று இராமநாதபுரம் நகரம் கோட்டை கடைவீதிப் பகுதியில் உள்ள ஈசா பள்ளிவாசலுக்கு வரும் ஆன்மிகப் பெருமக்களுக்கு அன்னம் வழங்குவதற்காகக் ‘கிழவனேரி’ என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு தெரிவிக்கிறது. ‘கிழவனேரி’ முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ளது. ஊரில் உள்ள நன்செய், புன்செய், மாவிடை, மரவிடை, திட்டு, திடல், ஏந்தல், பிறவிடை, குடி, படை, பள்ளு, பறை, கிணறு, மரம் முதலிய பலவும் பள்ளிவாசல் உடைமையாகும். இச்செப்பேட்டில் காப்புச் சொல் புதுமையாக எழுதப்பட்டுள்ளது. <b>“தமிழனாலும் நாலு வருணத்திலே உள்ள பேரும், இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலேயும், சேதுவிலேயும் மக்கமதினத்திலேயும் புண்ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானமும் வெகு குடும்ப பிரதிட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும்”</b> என்பது காப்புப் பகுதியாகும். இக்கொடையைப் பெற்றுக் கொண்டவர் சர்தர்வேசலி மகன் சார்மூசா பாப்சா என்பவராவார். <b>செப்பேடு</b> <poem>1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலிவாகன சகாப்தம் 1656 இதன் மேல் செல்லா நின்ற ஆன 2. ந்த வருஷம் தை மாதம் 1ந்தேதி பௌர்ணமையும் சோம வாரமும் பூச நட்சத்திரமும் சௌமியாநா 3. மயோகமும் பாலவாகரணமும் கூடின புண்ணிய காலத்தில் தேவை நகரா 4. திபன் சேதுமூலரட்சா துரந்தரன் இராமநாதசவாமி காரியதுரந்தரன் சிவபூஜா து 5. ரந்தரன் பரராஜ சேகரன் பரராஜ கெஜசிங்கம் இரவி குலசேகரன் இரவிமார்த் 6. தாண்டன் சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்தி ஸ்ரீ மகாமண்டலேசுர</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 70soympjscny1xvk3fzntrmku2y2ccj பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/85 250 489066 1837133 1837081 2025-06-29T14:28:13Z Booradleyp1 1964 1837133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|84 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>7. ன் அரியராய தளவிபாடணன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவராய க 8. ண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டிமண்டல 9. தாபனாச்சாரியான் சோழ மண்டல பிரதிஷ்டாபனாச் சாரியன் தொண்டம 10. ண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்ப்பாண பட்டணமும் கெ 11. சவேட்டை கண்டருளிய ராஜாதி ராஜன் ராஜபரமேசுரன் ராஜமார்த் 12. தாண்டன் ராஜ கம்பீரன் இளங்சிங்கம், தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங் 13. கம் துரைராயன் ஆற்றில் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப் புலி அடைக்கலங்காத் 14. தான் தாலிக்கு வேலி சத்துருவாதியள் மிண்டன் வேதியர் காவலன் அரசராவ 15. ணராமன் அடியார் வேளைக்காரன் பரதள விபாடன் உரி கோல சுரதானன் 16. அந்தம்பர கண்டன் சாடிக்காரர் கண்டன் சுவாமி துரோகியள் மிண்டன் 17. பஞ்சவர்ணராய ராகுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்ட மடக்கி வை 18. யாளி நாராயணன் இவுளிபாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரிய மானங்கா 19. ாத்தான் தொண்டியந்துறைக் காவலன் துரகரேபந்தன் அனுமகேதனன் கொ 20. டைக்கு கர்ணன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விஜயன் பரதநாடகப் 21. பிரவீணன் கருணா கடாட்சன் குன்றினுயர் மேருவில் குணில் பெ 22. ாரித்தவன் திலதநுதல் மடமாதர் மடலெழுதவரு சுமுகன் கருட கேதனன் 23. காவிக் கொடையான் விசையலட்சுமி காந்தன் கலை தெரியும் விற்பனன் 24. காமினி கந்தர்ப்பன் அட்டதிக்கு மனோபயங்கரன் துஷ்ட நிக்கிரக சிட்டபரி 25. பாலன் சங்கீத சாகித்ய வித்யா வினோதன் வீரதண்டை சேமத்தலை விள 26. ங்கிய தாளினான் சகல சாம்பிராச்சிய லெட்சுமி நிவாசன் சேது காவல 27. ன் வங்கிஷாதிபனான துகவூர் கூத்தத்தில் காத்தூரான குலோத்துங்க சோழ 28. நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும் ஸ்ரீ இரண்ய கெர்ப்ப யா</poem><noinclude></noinclude> ba77bk055s7ozpz3f175f7zlc7wyi3y 1837134 1837133 2025-06-29T14:28:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|84 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>7. ன் அரியராய தளவிபாடணன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவராய க 8. ண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டிமண்டல 9. தாபனாச்சாரியான் சோழ மண்டல பிரதிஷ்டாபனாச் சாரியன் தொண்டம 10. ண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்ப்பாண பட்டணமும் கெ 11. சவேட்டை கண்டருளிய ராஜாதி ராஜன் ராஜபரமேசுரன் ராஜமார்த் 12. தாண்டன் ராஜ கம்பீரன் இளங்சிங்கம், தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங் 13. கம் துரைராயன் ஆற்றில் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப் புலி அடைக்கலங்காத் 14. தான் தாலிக்கு வேலி சத்துருவாதியள் மிண்டன் வேதியர் காவலன் அரசராவ 15. ணராமன் அடியார் வேளைக்காரன் பரதள விபாடன் உரி கோல சுரதானன் 16. அந்தம்பர கண்டன் சாடிக்காரர் கண்டன் சுவாமி துரோகியள் மிண்டன் 17. பஞ்சவர்ணராய ராகுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்ட மடக்கி வை 18. யாளி நாராயணன் இவுளிபாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரிய மானங்கா 19. ாத்தான் தொண்டியந்துறைக் காவலன் துரகரேபந்தன் அனுமகேதனன் கொ 20. டைக்கு கர்ணன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விஜயன் பரதநாடகப் 21. பிரவீணன் கருணா கடாட்சன் குன்றினுயர் மேருவில் குணில் பெ 22. ாரித்தவன் திலதநுதல் மடமாதர் மடலெழுதவரு சுமுகன் கருட கேதனன் 23. காவிக் கொடையான் விசையலட்சுமி காந்தன் கலை தெரியும் விற்பனன் 24. காமினி கந்தர்ப்பன் அட்டதிக்கு மனோபயங்கரன் துஷ்ட நிக்கிரக சிட்டபரி 25. பாலன் சங்கீத சாகித்ய வித்யா வினோதன் வீரதண்டை சேமத்தலை விள 26. ங்கிய தாளினான் சகல சாம்பிராச்சிய லெட்சுமி நிவாசன் சேது காவல 27. ன் வங்கிஷாதிபனான துகவூர் கூத்தத்தில் காத்தூரான குலோத்துங்க சோழ 28. நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும் ஸ்ரீ இரண்ய கெர்ப்ப யா</poem><noinclude></noinclude> 6qwq6nhdumifhvpm1msx0ju629lubiu 1837155 1837134 2025-06-29T14:43:12Z Booradleyp1 1964 1837155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|84 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>7. ன் அரியராய தளவிபாடணன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவராய க 8. ண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டிமண்டல 9. தாபனாச்சாரியான் சோழ மண்டல பிரதிஷ்டாபனாச் சாரியன் தொண்டம 10. ண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்ப்பாண பட்டணமும் கெ 11. சவேட்டை கண்டருளிய ராஜாதி ராஜன் ராஜபரமேசுரன் ராஜமார்த் 12. தாண்டன் ராஜ கம்பீரன் இளங்சிங்கம், தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங் 13. கம் துரைராயன் ஆற்றில் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப் புலி அடைக்கலங்காத் 14. தான் தாலிக்கு வேலி சத்துருவாதியள் மிண்டன் வேதியர் காவலன் அரசராவ 15. ணராமன் அடியார் வேளைக்காரன் பரதள விபாடன் உரி கோல சுரதானன் 16. அந்தம்பர கண்டன் சாடிக்காரர் கண்டன் சுவாமி துரோகியள் மிண்டன் 17. பஞ்சவர்ணராய ராகுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்ட மடக்கி வை 18. யாளி நாராயணன் இவுளிபாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரிய மானங்கா 19. ாத்தான் தொண்டியந்துறைக் காவலன் துரகரேபந்தன் அனுமகேதனன் கொ 20. டைக்கு கர்ணன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விஜயன் பரதநாடகப் 21. பிரவீணன் கருணா கடாட்சன் குன்றினுயர் மேருவில் குணில் பெ 22. ாரித்தவன் திலதநுதல் மடமாதர் மடலெழுதவரு சுமுகன் கருட கேதனன் 23. காவிக் கொடையான் விசையலட்சுமி காந்தன் கலை தெரியும் விற்பனன் 24. காமினி கந்தர்ப்பன் அட்டதிக்கு மனோபயங்கரன் துஷ்ட நிக்கிரக சிட்டபரி 25. பாலன் சங்கீத சாகித்ய வித்யா வினோதன் வீரதண்டை சேமத்தலை விள 26. ங்கிய தாளினான் சகல சாம்பிராச்சிய லெட்சுமி நிவாசன் சேது காவல 27. ன் வங்கிஷாதிபனான துகவூர் கூத்தத்தில் காத்தூரான குலோத்துங்க சோழ 28. நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும் ஸ்ரீ இரண்ய கெர்ப்ப யா</poem> {{nop}}<noinclude></noinclude> 0nh65abvya9jhiia0v839j970jjklah 1837156 1837155 2025-06-29T14:44:01Z Booradleyp1 1964 1837156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|84 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>7. ன் அரியராய தளவிபாடணன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவராய க 8. ண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டிமண்டல 9. தாபனாச்சாரியான் சோழ மண்டல பிரதிஷ்டாபனாச் சாரியன் தொண்டம 10. ண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்ப்பாண பட்டணமும் கெ 11. சவேட்டை கண்டருளிய ராஜாதி ராஜன் ராஜபரமேசுரன் ராஜமார்த் 12. தாண்டன் ராஜ கம்பீரன் இளங்சிங்கம், தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங் 13. கம் துரைராயன் ஆற்றில் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப் புலி அடைக்கலங்காத் 14. தான் தாலிக்கு வேலி சத்துருவாதியள் மிண்டன் வேதியர் காவலன் அரசராவ 15. ணராமன் அடியார் வேளைக்காரன் பரதள விபாடன் உரி கோல சுரதானன் 16. அந்தம்பர கண்டன் சாடிக்காரர் கண்டன் சுவாமி துரோகியள் மிண்டன் 17. பஞ்சவர்ணராய ராகுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்ட மடக்கி வை 18. யாளி நாராயணன் இவுளிபாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரிய மானங்கா 19. ாத்தான் தொண்டியந்துறைக் காவலன் துரகரேபந்தன் அனுமகேதனன் கொ 20. டைக்கு கர்ணன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விஜயன் பரதநாடகப் 21. பிரவீணன் கருணா கடாட்சன் குன்றினுயர் மேருவில் குணில் பெ 22. ாரித்தவன் திலதநுதல் மடமாதர் மடலெழுதவரு சுமுகன் கருட கேதனன் 23. காவிக் கொடையான் விசையலட்சுமி காந்தன் கலை தெரியும் விற்பனன் 24. காமினி கந்தர்ப்பன் அட்டதிக்கு மனோபயங்கரன் துஷ்ட நிக்கிரக சிட்டபரி 25. பாலன் சங்கீத சாகித்ய வித்யா வினோதன் வீரதண்டை சேமத்தலை விள 26. ங்கிய தாளினான் சகல சாம்பிராச்சிய லெட்சுமி நிவாசன் சேது காவல 27. ன் வங்கிஷாதிபனான துகவூர் கூத்தத்தில் காத்தூரான குலோத்துங்க சோழ 28. நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும் ஸ்ரீ இரண்ய கெர்ப்ப யா</poem> {{nop}}<noinclude></noinclude> 9y4pku75rvlhjdfg338z0bd5kqvit1e பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/86 250 489067 1837128 1837082 2025-06-29T14:20:30Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 85}} {{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>29. ஜி ரெகுநாதசேதுபதி காத்த தேவர் அவர்கள் மருமகன் கெங்கை கொண்டானி 30. லிருக்கும் கட்டையத்தேவர் புத்திரன் ஸ்ரீகுமாரமுத்து விசையரெகுநாத சேது 31. பதிகாத்ததேவர் அவர்கள் இராமநாதபுரத்திலிருக்கும் ஈசா பள்ளி வாசல் 32. அன்னதான தன்மத்துக்கு சர்தர்வேசலி குமாரன் சார்மூஸா பாப்ஷா 33. பாரிசமாக கட்டளையிட்ட கிழவனேரிக்கு எல்கையாவது கருக்கத்திக் கண் 34. மாய்க் கடைக்கொம்புக்கு வடக்கு மாணிக்கனேரி பொருத்துக்கு கிழ 35. க்கு மேற்படி யேந்தல் தென்கரைக்குத் தெற்கு ஆதி நாராயணன் மடைசிவந்தி 35. யப்பன் பொட்டல் செய்க்கு மேற்கு இன்னான்கு எல்கைக்குட்பட்ட கிழ 37. வனேரி நஞ்சை புஞ்சை மாவிடை மரவிடை, திட்டு திடல் ஏந்தல் பிறவிடை 38. குடி, படை, பள்ளு, பறை, கீழ் நோக்கிய கிணறு. மேல் நோக்கிய மரம். 39. அஷ்டபோக தேஜ சுவாமியங்களும் இவை பரியது சர்வமானிபம் தாம் 40. பிரசாசனம் கட்டளையிட்ட படியினாலே ஆதி சந்திராதித்த வரை புத்திர 41. பௌத்திர பரம்பரைக்கும் அன்னதானத்துக்கும் ஆண்டனுபவித்துக் கொள் 42. ளுவாராகவும் இந்த தன்மத்திற்கு தமிழனாலும் நாலு வருணத்திலே உள் 43. ள பேரும் இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணினபேர்களும் கெ 44. ங்கைக்கரையிலேயும் சேதுவிலேயும் மக்க மதினத்திலேயும் புண் 45. ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானம் வெகுகுடும்ப பிர 46. திட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும் இந்த தன்மத்துக்கு 47. அகிதம் பண்ணினபேர்கள் புண்ணியத் தலங்களிலே மாதா பிதாவை 48. வதைத்த தோஷத்திலே போகக் கடவாராகவும்</poem>}}{{nop}}<noinclude></noinclude> 3eojx3i9e9sdmq3p5jo7stb1we3r2to 1837131 1837128 2025-06-29T14:26:26Z Booradleyp1 1964 1837131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 85}} {{rule}}</noinclude><poem>29. ஜி ரெகுநாதசேதுபதி காத்த தேவர் அவர்கள் மருமகன் கெங்கை கொண்டானி 30. லிருக்கும் கட்டையத்தேவர் புத்திரன் ஸ்ரீகுமாரமுத்து விசையரெகுநாத சேது 31. பதிகாத்ததேவர் அவர்கள் இராமநாதபுரத்திலிருக்கும் ஈசா பள்ளி வாசல் 32. அன்னதான தன்மத்துக்கு சர்தர்வேசலி குமாரன் சார்மூஸா பாப்ஷா 33. பாரிசமாக கட்டளையிட்ட கிழவனேரிக்கு எல்கையாவது கருக்கத்திக் கண் 34. மாய்க் கடைக்கொம்புக்கு வடக்கு மாணிக்கனேரி பொருத்துக்கு கிழ 35. க்கு மேற்படி யேந்தல் தென்கரைக்குத் தெற்கு ஆதி நாராயணன் மடைசிவந்தி 35. யப்பன் பொட்டல் செய்க்கு மேற்கு இன்னான்கு எல்கைக்குட்பட்ட கிழ 37. வனேரி நஞ்சை புஞ்சை மாவிடை மரவிடை, திட்டு திடல் ஏந்தல் பிறவிடை 38. குடி, படை, பள்ளு, பறை, கீழ் நோக்கிய கிணறு. மேல் நோக்கிய மரம். 39. அஷ்டபோக தேஜ சுவாமியங்களும் இவை பரியது சர்வமானிபம் தாம் 40. பிரசாசனம் கட்டளையிட்ட படியினாலே ஆதி சந்திராதித்த வரை புத்திர 41. பௌத்திர பரம்பரைக்கும் அன்னதானத்துக்கும் ஆண்டனுபவித்துக் கொள் 42. ளுவாராகவும் இந்த தன்மத்திற்கு தமிழனாலும் நாலு வருணத்திலே உள் 43. ள பேரும் இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணினபேர்களும் கெ 44. ங்கைக்கரையிலேயும் சேதுவிலேயும் மக்க மதினத்திலேயும் புண் 45. ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானம் வெகுகுடும்ப பிர 46. திட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும் இந்த தன்மத்துக்கு 47. அகிதம் பண்ணினபேர்கள் புண்ணியத் தலங்களிலே மாதா பிதாவை 48. வதைத்த தோஷத்திலே போகக் கடவாராகவும்</poem>{{nop}}<noinclude></noinclude> a4nh3ivn735td33xw2vfnt02cfmw3u7 1837157 1837131 2025-06-29T14:44:47Z Booradleyp1 1964 1837157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 85}} {{rule}}</noinclude><poem> 29. ஜி ரெகுநாதசேதுபதி காத்த தேவர் அவர்கள் மருமகன் கெங்கை கொண்டானி 30. லிருக்கும் கட்டையத்தேவர் புத்திரன் ஸ்ரீகுமாரமுத்து விசையரெகுநாத சேது 31. பதிகாத்ததேவர் அவர்கள் இராமநாதபுரத்திலிருக்கும் ஈசா பள்ளி வாசல் 32. அன்னதான தன்மத்துக்கு சர்தர்வேசலி குமாரன் சார்மூஸா பாப்ஷா 33. பாரிசமாக கட்டளையிட்ட கிழவனேரிக்கு எல்கையாவது கருக்கத்திக் கண் 34. மாய்க் கடைக்கொம்புக்கு வடக்கு மாணிக்கனேரி பொருத்துக்கு கிழ 35. க்கு மேற்படி யேந்தல் தென்கரைக்குத் தெற்கு ஆதி நாராயணன் மடைசிவந்தி 35. யப்பன் பொட்டல் செய்க்கு மேற்கு இன்னான்கு எல்கைக்குட்பட்ட கிழ 37. வனேரி நஞ்சை புஞ்சை மாவிடை மரவிடை, திட்டு திடல் ஏந்தல் பிறவிடை 38. குடி, படை, பள்ளு, பறை, கீழ் நோக்கிய கிணறு. மேல் நோக்கிய மரம். 39. அஷ்டபோக தேஜ சுவாமியங்களும் இவை பரியது சர்வமானிபம் தாம் 40. பிரசாசனம் கட்டளையிட்ட படியினாலே ஆதி சந்திராதித்த வரை புத்திர 41. பௌத்திர பரம்பரைக்கும் அன்னதானத்துக்கும் ஆண்டனுபவித்துக் கொள் 42. ளுவாராகவும் இந்த தன்மத்திற்கு தமிழனாலும் நாலு வருணத்திலே உள் 43. ள பேரும் இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணினபேர்களும் கெ 44. ங்கைக்கரையிலேயும் சேதுவிலேயும் மக்க மதினத்திலேயும் புண் 45. ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானம் வெகுகுடும்ப பிர 46. திட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும் இந்த தன்மத்துக்கு 47. அகிதம் பண்ணினபேர்கள் புண்ணியத் தலங்களிலே மாதா பிதாவை 48. வதைத்த தோஷத்திலே போகக் கடவாராகவும்</poem>{{nop}}<noinclude></noinclude> oqspj9inspnt8ycc08ep4cjfjz17jja 1837158 1837157 2025-06-29T14:45:13Z Booradleyp1 1964 1837158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 85}} {{rule}}</noinclude><poem> 29. ஜி ரெகுநாதசேதுபதி காத்த தேவர் அவர்கள் மருமகன் கெங்கை கொண்டானி 30. லிருக்கும் கட்டையத்தேவர் புத்திரன் ஸ்ரீகுமாரமுத்து விசையரெகுநாத சேது 31. பதிகாத்ததேவர் அவர்கள் இராமநாதபுரத்திலிருக்கும் ஈசா பள்ளி வாசல் 32. அன்னதான தன்மத்துக்கு சர்தர்வேசலி குமாரன் சார்மூஸா பாப்ஷா 33. பாரிசமாக கட்டளையிட்ட கிழவனேரிக்கு எல்கையாவது கருக்கத்திக் கண் 34. மாய்க் கடைக்கொம்புக்கு வடக்கு மாணிக்கனேரி பொருத்துக்கு கிழ 35. க்கு மேற்படி யேந்தல் தென்கரைக்குத் தெற்கு ஆதி நாராயணன் மடைசிவந்தி 35. யப்பன் பொட்டல் செய்க்கு மேற்கு இன்னான்கு எல்கைக்குட்பட்ட கிழ 37. வனேரி நஞ்சை புஞ்சை மாவிடை மரவிடை, திட்டு திடல் ஏந்தல் பிறவிடை 38. குடி, படை, பள்ளு, பறை, கீழ் நோக்கிய கிணறு. மேல் நோக்கிய மரம். 39. அஷ்டபோக தேஜ சுவாமியங்களும் இவை பரியது சர்வமானிபம் தாம் 40. பிரசாசனம் கட்டளையிட்ட படியினாலே ஆதி சந்திராதித்த வரை புத்திர 41. பௌத்திர பரம்பரைக்கும் அன்னதானத்துக்கும் ஆண்டனுபவித்துக் கொள் 42. ளுவாராகவும் இந்த தன்மத்திற்கு தமிழனாலும் நாலு வருணத்திலே உள் 43. ள பேரும் இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணினபேர்களும் கெ 44. ங்கைக்கரையிலேயும் சேதுவிலேயும் மக்க மதினத்திலேயும் புண் 45. ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானம் வெகுகுடும்ப பிர 46. திட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும் இந்த தன்மத்துக்கு 47. அகிதம் பண்ணினபேர்கள் புண்ணியத் தலங்களிலே மாதா பிதாவை 48. வதைத்த தோஷத்திலே போகக் கடவாராகவும்</poem>{{nop}}<noinclude></noinclude> 0yie25t8m8nh14ptarfdq3uk9jvfeq7 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/87 250 489068 1837132 1837085 2025-06-29T14:27:24Z ஹர்ஷியா பேகம் 15001 1837132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|86 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{c|{{larger|<b>47. ஏர்வாடி பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை</b> <ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம். கமால்: பக்கம் 472-479</ref>}}}} சேதுபதி அரசர்களில் குமாரமுத்து விசயரகுனாத சேதுபதி காத்த தேவர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது. செப்பேடு அளித்த நாள் 1.11.1742 ஆகும். செப்பேட்டில் ஏர்வாடி-“ஏறுபாடு” என்று கூறப்பட்டுள்ளது. இக்கொடையைப் பள்ளிவாசல் சார்பாகப் பெற்றுக் கொண்டவர் முசாபர் நல்ல இபுறாகீம் என்பவராவார். இவ்வூரில் 50 கலம் நெல்விதைக் கூடிய நன்செய்யும், 4 கலத்து 3 கலம் விதைக்கக்கூடிய புன்செயும் அடங்கியது. இத்துடன் உத்தரகோச மங்கைக்கு அளிக்கப்பட்டிருந்த தட்டு 32 அரைக்காணி சதுர செவ்வல் மணக்காடும் பள்ளிவாசலுக்கு அளிக்கப்பட்டது. ஊரின் எல்லா வரிகளும் பள்ளிவாசலுக்கு அளிக்கப்பட்டன. உப்பளம், சந்தை வரிகளும் அளிக்கப்பட்டன. “இந்தத் தர்மத்தைப் பரிபாலனம் செய்த பேர்கள் கோடிப் பிரதிஷ்டையும் கோடி சிவலிங்கப் பிரதிஷ்டையும் கோடி கன்னிகாதான பிரமப் பிரதிஷ்டையும், கோடி அன்னதான சொர்ணதான கோதானம் பண்ணின சுகிர்தத்தை அடைவாராகவும்” காப்புரை எழுதப்பட்டுள்ளது. இந்த தர்மத்துக்கு யாதாமொரு இசுலாமானவர்கள் பரிபாலனம் பண்ணியவர்கள் “கோடி அடிமைகொண்டு உரிமைக்கு விட்ட பயனும், கோடி கச்சுச் செய்த பலனும் அடைவராகவும்” எனக் காப்புரை புதுமையாக எழுதப்பட்டுள்ளது. <b>அடிமை கொண்டு உரிமை விடல்:</b> <b>முகமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை அரபு பகுதியில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியபோது செய்த நற்பணிகளில் அடிமைகட்கு விடுதலை அளித்தது ஒன்றாகும். அடிமைகளை விலை கொடுத்து வாங்கியவர்களிடம் அவர்கள் கொடுத்த விலையைக் கொடுத்து அடிமைகளை விடுதலை செய்வித்து உரிமை அளித்த செயலை இச்செயல் குறிக்கிறது.</b> தமது பிரதம சீடர்களான அபுபக்கர் போன்றவர்களையும் பிறரையும் அவ்வாறே அடிமைகளை விடுவிக்கும் நற்பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> eh5eckfmolzd5o6m2wpskun9kh89i1p 1837135 1837132 2025-06-29T14:29:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|86 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{c|{{larger|<b>47. ஏர்வாடி பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை</b> <ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம். கமால்: பக்கம் 472-479</ref>}}}} சேதுபதி அரசர்களில் குமாரமுத்து விசயரகுனாத சேதுபதி காத்த தேவர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது. செப்பேடு அளித்த நாள் 1.11.1742 ஆகும். செப்பேட்டில் ஏர்வாடி-“ஏறுபாடு” என்று கூறப்பட்டுள்ளது. இக்கொடையைப் பள்ளிவாசல் சார்பாகப் பெற்றுக் கொண்டவர் முசாபர் நல்ல இபுறாகீம் என்பவராவார். இவ்வூரில் 50 கலம் நெல்விதைக் கூடிய நன்செய்யும், 4 கலத்து 3 கலம் விதைக்கக்கூடிய புன்செயும் அடங்கியது. இத்துடன் உத்தரகோச மங்கைக்கு அளிக்கப்பட்டிருந்த தட்டு 32 அரைக்காணி சதுர செவ்வல் மணக்காடும் பள்ளிவாசலுக்கு அளிக்கப்பட்டது. ஊரின் எல்லா வரிகளும் பள்ளிவாசலுக்கு அளிக்கப்பட்டன. உப்பளம், சந்தை வரிகளும் அளிக்கப்பட்டன. “இந்தத் தர்மத்தைப் பரிபாலனம் செய்த பேர்கள் கோடிப் பிரதிஷ்டையும் கோடி சிவலிங்கப் பிரதிஷ்டையும் கோடி கன்னிகாதான பிரமப் பிரதிஷ்டையும், கோடி அன்னதான சொர்ணதான கோதானம் பண்ணின சுகிர்தத்தை அடைவாராகவும்” காப்புரை எழுதப்பட்டுள்ளது. இந்த தர்மத்துக்கு யாதாமொரு இசுலாமானவர்கள் பரிபாலனம் பண்ணியவர்கள் “கோடி அடிமைகொண்டு உரிமைக்கு விட்ட பயனும், கோடி கச்சுச் செய்த பலனும் அடைவராகவும்” எனக் காப்புரை புதுமையாக எழுதப்பட்டுள்ளது. <b>அடிமை கொண்டு உரிமை விடல்:</b> முகமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை அரபு பகுதியில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியபோது செய்த நற்பணிகளில் அடிமைகட்கு விடுதலை அளித்தது ஒன்றாகும். அடிமைகளை விலை கொடுத்து வாங்கியவர்களிடம் அவர்கள் கொடுத்த விலையைக் கொடுத்து அடிமைகளை விடுதலை செய்வித்து உரிமை அளித்த செயலை இச்செயல் குறிக்கிறது. தமது பிரதம சீடர்களான அபுபக்கர் போன்றவர்களையும் பிறரையும் அவ்வாறே அடிமைகளை விடுவிக்கும் நற்பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 4ks45cs9s9ontwy5ahs8imd9r155t4a பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/88 250 489069 1837101 1644190 2025-06-29T12:17:50Z ஹர்ஷியா பேகம் 15001 1837101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 87}} {{rule}}</noinclude>ஹஜ்-ஹஜ்ஜா என்ற சொல் ‘கச்சு’ எனத் தமிழ் வழக்குப்படி எழுதப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் 5 கடமைகளில் மக்கா புனித யாத்திரை ஒன்றாகும். இந்தத் தர்மத்திற்குத் தீங்கு செய்தவர்கள் மாதா பிதா ஒஸ்தாதை (குரு) வதை பண்ணுவிச்சு மக்கத்துப் பள்ளியை இடித்த பாவத்திலே போவாராக என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் பரமாச்சாரியர்களைக் குறிக்கும். சேதுபதி மன்னர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊர் கொடையாக அளித்த செயல் இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளது. மீமிசல் வண்ணக் களஞ்சியம் புலவர் தாமம் பாடிய ‘தீன்நெறி விளக்கம்’ என்னும் நூலில் (சேதுபதி சந்ததி பெற்ற படலம், பாடல் எண் 23) <poem> “தேறல்கொள் சரோருகப்பூந் திருவடித் தொழும்பாய் முன்னங் கூறல்மான் மேலைமாய குளம்எனும் கிராமம் தன்னை மாறலில் லாத பானு மதியுள நாள்மட் டாகச் சாறுவ பூமன் விட்டான் உருவமா னிய மதாக”</poem> என்று பாடியுள்ளார். <b>செப்பேடு</b> <poem> 1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1664 இதன் மேல்ச் செல்லாநின்ற துந்துபி வருஷ 2. நாம ஸம்வத்சரத்தில் தெட்சணாயத்தில் சரத்ரிதுவில் அற்பிசி மாஸத்தில் பவற்ணமையும் சோ 3. ம வாரமும் அசுபதி நட்செத்திரமும் வச்சிரநாம யோகமும் சுபகரணமும் பெத்த சுபதினத்தில் சுபஸ்ரீ 4. மன் மகாமண்டலேசுபரன் அரியராயிர தளவிபாடன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவரா 5. யிர கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டி மண்டலத் தபனாசாரி 6. யன் சோளமண்டலப் பிறதிஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டலப் பிறசண்டன் யீழமுங்</poem>{{nop}}<noinclude></noinclude> 8wlv2lvkjdx5ky5irtls2rjr12yjqmo 1837102 1837101 2025-06-29T12:18:40Z ஹர்ஷியா பேகம் 15001 1837102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 87}} {{rule}}</noinclude>ஹஜ்-ஹஜ்ஜா என்ற சொல் ‘கச்சு’ எனத் தமிழ் வழக்குப்படி எழுதப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் 5 கடமைகளில் மக்கா புனித யாத்திரை ஒன்றாகும். இந்தத் தர்மத்திற்குத் தீங்கு செய்தவர்கள் மாதா பிதா ஒஸ்தாதை (குரு) வதை பண்ணுவிச்சு மக்கத்துப் பள்ளியை இடித்த பாவத்திலே போவாராக என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் பரமாச்சாரியர்களைக் குறிக்கும். சேதுபதி மன்னர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊர் கொடையாக அளித்த செயல் இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளது. மீமிசல் வண்ணக் களஞ்சியம் புலவர் தாமம் பாடிய ‘தீன்நெறி விளக்கம்’ என்னும் நூலில் (சேதுபதி சந்ததி பெற்ற படலம், பாடல் எண் 23) <poem> {{left_margin|3em|“தேறல்கொள் சரோருகப்பூந் திருவடித் தொழும்பாய் முன்னங் கூறல்மான் மேலைமாய குளம்எனும் கிராமம் தன்னை மாறலில் லாத பானு மதியுள நாள்மட் டாகச் சாறுவ பூமன் விட்டான் உருவமா னிய மதாக”}}</poem> என்று பாடியுள்ளார். <b>செப்பேடு</b> <poem> 1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1664 இதன் மேல்ச் செல்லாநின்ற துந்துபி வருஷ 2. நாம ஸம்வத்சரத்தில் தெட்சணாயத்தில் சரத்ரிதுவில் அற்பிசி மாஸத்தில் பவற்ணமையும் சோ 3. ம வாரமும் அசுபதி நட்செத்திரமும் வச்சிரநாம யோகமும் சுபகரணமும் பெத்த சுபதினத்தில் சுபஸ்ரீ 4. மன் மகாமண்டலேசுபரன் அரியராயிர தளவிபாடன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவரா 5. யிர கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டி மண்டலத் தபனாசாரி 6. யன் சோளமண்டலப் பிறதிஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டலப் பிறசண்டன் யீழமுங்</poem>{{nop}}<noinclude></noinclude> dglfx6fupkn7wpexfvclzqyxgy02eo5 1837103 1837102 2025-06-29T12:19:04Z ஹர்ஷியா பேகம் 15001 1837103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 87}} {{rule}}</noinclude>ஹஜ்-ஹஜ்ஜா என்ற சொல் ‘கச்சு’ எனத் தமிழ் வழக்குப்படி எழுதப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் 5 கடமைகளில் மக்கா புனித யாத்திரை ஒன்றாகும். இந்தத் தர்மத்திற்குத் தீங்கு செய்தவர்கள் மாதா பிதா ஒஸ்தாதை (குரு) வதை பண்ணுவிச்சு மக்கத்துப் பள்ளியை இடித்த பாவத்திலே போவாராக என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் ஒஸ்தாது என எழுதப்பட்டுள்ளது. உஸ்தாது என்ற சொல் பரமாச்சாரியர்களைக் குறிக்கும். சேதுபதி மன்னர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊர் கொடையாக அளித்த செயல் இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளது. மீமிசல் வண்ணக் களஞ்சியம் புலவர் தாமம் பாடிய ‘தீன்நெறி விளக்கம்’ என்னும் நூலில் (சேதுபதி சந்ததி பெற்ற படலம், பாடல் எண் 23) <poem> {{left_margin|3em|<b>“தேறல்கொள் சரோருகப்பூந் திருவடித் தொழும்பாய் முன்னங் கூறல்மான் மேலைமாய குளம்எனும் கிராமம் தன்னை மாறலில் லாத பானு மதியுள நாள்மட் டாகச் சாறுவ பூமன் விட்டான் உருவமா னிய மதாக”</b>}}</poem> என்று பாடியுள்ளார். <b>செப்பேடு</b> <poem> 1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1664 இதன் மேல்ச் செல்லாநின்ற துந்துபி வருஷ 2. நாம ஸம்வத்சரத்தில் தெட்சணாயத்தில் சரத்ரிதுவில் அற்பிசி மாஸத்தில் பவற்ணமையும் சோ 3. ம வாரமும் அசுபதி நட்செத்திரமும் வச்சிரநாம யோகமும் சுபகரணமும் பெத்த சுபதினத்தில் சுபஸ்ரீ 4. மன் மகாமண்டலேசுபரன் அரியராயிர தளவிபாடன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவரா 5. யிர கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டி மண்டலத் தபனாசாரி 6. யன் சோளமண்டலப் பிறதிஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டலப் பிறசண்டன் யீழமுங்</poem>{{nop}}<noinclude></noinclude> mz10d671e9j6ps8g4wvbpzfwcpox6i9 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/89 250 489070 1837105 1644220 2025-06-29T12:59:11Z ஹர்ஷியா பேகம் 15001 1837105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|88 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>7. கொங்கு யாழ்ப்பான பட்டணமும் கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுப 8. ரன் ராசமாற்தாண்டன் ராககெம்பீரன் ராசகுலதீபன் வீரரில் வீரன் வீரகஞ்சுகன் வீரவெண்பா 9. மாலை வீரரணகேசரி வீரவிற்கிரமாற்கன் பரிக்கு நகுலன் குடைக்குக் கற்னன் வில்லுக்கு விசையன் மல்லு 10. க்கு வீசசேனன் பொறுமைக்கு தற்மபுத்திரன் ஆக்கினைக்கு சுக்ரீபன் அழகுக்கு வாலசீவகன் பிறச 11. ங்கத்துக்கு ஆதிசேஷன் கருணைக்கு ரெகுராமன் சத்திய பாஷா அரிச்சந்திரன் ச;ததுருவாதியள் மி 12. ண்டன் சகலகுண சம்பன்ன சங்கீத சாயுத்திய வித்தியா வினோதன் சறுவசீவ தயாபரன் சாமித் 13. துரோகியள் மிண்டன் தண்டுவார் மிண்டன் தளங்கண்டு தத்தளிப்பார்கள் கண்டன் தந தார. 14. தார பிறதார புத்திரன் சகல சாம்பிறாச்சிய லட்சுமிநிவாசன் கருதலர்கள் முடியிடறு கள துரந்த 15. ர னகுலன் கட்டாரிராயன் கருணா கடாட்சன் காமிநி கந்தப்பன் கலைதெரியும் விற்பன்ன கலியாண 16. குணசீலன் இரவிகுல சேகரன் இறவிவர்மன் இவுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் இடறு 17. வார் கண்டன் இடறுவார் கோடாலி யிரவலர் கலி கோபன் அரசராவண ராமன் அடியார் வேளை 18. க் காறன் அந்தம்பிற கண்டன் அனுமத்துவசம் கருடத்துவசம் மீன்துவசம் சிங்கத்துவசம் வியாக்கிற 19. துவசம் நீமிதுவசம் காவித்துவசமுஞ் செங்காவிக் குடையும் அதின் மேல் விருது சல்லியும் உண்டான தே 20. வாதி தேவன் அடைக்கலங் காத்தான் உரிகோல் சுரதானன் வீரதண்டை சேமத்தலை விளங்கிய தாளினான் 21. மனுநீதி மன்னன் மலைகலங்கினும் மனங்கலங்காதவன் வன்னியராட்டந் தவிள்த்தான் அசுபதி கெ 22. சபதி நரபதி சேது செம்பி வளநாடன் வேதியர் காவலன் கொளு மீதி கொண்டு குவலையங் காத்த 23. தவன் சேதுமூல ரெட்சா துரந்தரன் தேவை நகராதிபன் துரகரேவந்தன் துலுக்கர் தள விபாட</poem>{{nop}}<noinclude></noinclude> hctt9bblp0brzzb9sz1s1hkjc7574tw பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/90 250 489071 1837113 1644195 2025-06-29T13:48:04Z ஹர்ஷியா பேகம் 15001 1837113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 89}} {{rule}}</noinclude><poem>24. ன் சோடச மகாதான சீலன் பஞ்சகால பயங்கரன் பஞ்ச பாண அவதாரன் பஞ்சவற்ன்ன ராவுத்தர் 25. முண்டன் படைக்குங் குடைக்கும் ஓடாத கண்டன் ராமனாத சுவாமி பறுவதவற்தனி பாதாரவிந்த ே 26. சவிதன் தனுக்கோடி காவலன் திலத நுதல் மடமாதர் மடலெளுது புயசுமுகன் இயலிசை நாடக முத் 27. தமிளறிவாளன் அனகன் அதிவீரன் அகளங்கன் அதிசெயன் புவனேசுகவீரன் மருவலர் கெச சிங் 28. கம் விருதான் வலியச் சருவி வளியில் கால்நீட்டி துட்டர் கொட்ட மடக்கி பட்டமானங் காத்தான் 29. பகைமன்னர் சற்ப கெருடன் பரதள விபாடன் பனுக்கு வார் கண்டன் பரராச சிங்கம் தாலிக்கு வேலி 30. தெக்ஷண சிங்காசனாபதி மனு நீதி மன்னன் செகராசர் பணி பாதன் அன்னதான சோமன் அம 31. லன் அம்போது கடாட்சன் தற்மபரி பாலனன் சற்பன்ன பாஷா துரந்தரன் சங்கீத சுவாமி பறு 32. வதற்த்தனி நாயகி ராமநாதசுவாமி கருணா கடாட்சன் பரிபூரண கீற்த்திப் பிறதாபன் ஸ்ரீமது இ 33. றணிகெற்ப்பயாசி ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர் கள் குமாரர் ஸ்ரீமது முத்துக்குமார வி 34. சைய ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் ஏறுபாடிப் பள்ளிவாசலுக்குக் கட்டளையிட்ட கிறாம 35. த்துக்கு முசாபர் நல்ல இபுறாகிமிடத்தில் தாம்பிற சாதனம் கொடுத்தபரி சாவது இப்போது 36. செம்பி நாட்டில் பெரியமாயா குளமான ஏந்தலதற்க் கெல்கையாவது கீள்யெல் 37. கை நீலமுடையான் கண்மாயி கீள்கரைக்கும் சின்னு பன்னு பண்டாரம் தோட்டத்துக்கு 38. மேற்கு வடயெல்கையாவதும் பண்ணைக் காட்டில்த் தொலிச்சான் வீரன் தட்டுக்கும் 39. புனையேந்தல் புஞ்சைக் காட்டுக்கும் யெதம் பாடல் புஞ்சைக் காட்டுக்கும் தெற்கு ே 40. மலெல்கையமவது ஷெ யெதம்பாடல் காட்டுக்கும் ஆண்டி சுத்தான் வகையடி ஊ </poem>{{nop}}<noinclude></noinclude> 2vbnku4ywh4kiagcy7r7fw0eh2ump22 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/91 250 489072 1837126 1571519 2025-06-29T14:18:19Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1837126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|90 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>41. றணிக்கும் கிளக்கு தெற்கெல்லையாவது ஓரக்கரைக்கு வடக்கு யின்னாங் கெல்கை 42. குள்பட்டது ஆயக்கட்டுப்படிக்கு நஞ்சை விரையடி 50 கலம் புஞ்சைத் தட்டு கொச்சமுள்பட செய் {{c|<b>{{larger|இரண்டாம் பக்கம்}}</b>}} 43. க்கு விரையடி 4 கலத்து 3 கலம் ஆக விரையடி 54 கலத்து 3 கலமும் ஷ ஊர் புஞ்சையில் திருவுத்திரகோசமங் 44. கைப் பிறவேசமாயிருந்த தட்டு 32 அரைக்காணி சதிர செவ்வல் மணக்காடும் கட்டளையிட்டுக் கொ 45. டுத்தக் காட்டுக்கு யெல்கையாவது மாவிலங் ஊரணிக்கும் அரியவன் கட்டையன் தட்டு 46. க்கும் கரிமுந்தலுக்கும் கிளக்கு தெற்கெல்கையாவது சமுத்திரக் கரைக்கு வடக்கு கிளக்கெ 47. ல்கையாவது பள்ளிமுனைக் குடாவுக்கும் வாளி நாடான் தட்டுக்கும் பூசாறி நா 48. டான் தட்டுக்கும் தச்சனூறணிக்கும் மேற்கு ஓரக்கரைக்கு தெற்கு இன்னாங்கெல்கை 49. க்குள்பட்ட செவ்வல் மணல் நஞ்சை புஞ்சையும் ஊரணி குட்டம் திட்டு திடல் மாவடை ம 50. ரவடை மேல்நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறும் நீரும் பாசியும் பள்ளு பறை 51. ஊளியம் உலுப்பை வைக்கல் கட்டு வண்டில் மாடு ஆயக்கட்டுவரி உப்பளவரி நில 52. வரி பள்வரிப் பறைவரி கம்பளவரி முள்ளுவரி காணிக்கை வரி இவ்வரி முதல் யெவ் 53. வரிப்பிறக்கிலும் அவ்வரிமுதல் அஷ்டபோக தேச சாமியங்களும் ஓடையளத்தில் 54. மாதாந்தமுண்டு பறை உப்பு மூன்றெருவையில் நெல்லுப் புல்லு யேதொன்றாகிலும் 55. பொதிபிடிச்சு கொள்வினை விற்பினை யாபினை யாபாரம் பண்ணிக் கொள்கிறதுக் 56. கு ஆயந் தீருவை சம்மாடஞ் சத்தவரி யிதுமுதலான அஷ்ட்டபோக தேசசாமியங்களும்</poem>{{nop}}<noinclude></noinclude> i9q93jollxm4urgr08iaiq34dlg371c 1837222 1837126 2025-06-29T18:52:34Z ஹர்ஷியா பேகம் 15001 1837222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|90 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>41. றணிக்கும் கிளக்கு தெற்கெல்லையாவது ஓரக்கரைக்கு வடக்கு யின்னாங் கெல்கை 42. குள்பட்டது ஆயக்கட்டுப்படிக்கு நஞ்சை விரையடி 50 கலம் புஞ்சைத் தட்டு கொச்சமுள்பட செய் {{c|<b>{{larger|இரண்டாம் பக்கம்}}</b>}} 43. க்கு விரையடி 4 கலத்து 3 கலம் ஆக விரையடி 54 கலத்து 3 கலமும் ௸ ஊர் புஞ்சையில் திருவுத்திரகோசமங் 44. கைப் பிறவேசமாயிருந்த தட்டு 32 அரைக்காணி சதிர செவ்வல் மணக்காடும் கட்டளையிட்டுக் கொ 45. டுத்தக் காட்டுக்கு யெல்கையாவது மாவிலங் ஊரணிக்கும் அரியவன் கட்டையன் தட்டு 46. க்கும் கரிமுந்தலுக்கும் கிளக்கு தெற்கெல்கையாவது சமுத்திரக் கரைக்கு வடக்கு கிளக்கெ 47. ல்கையாவது பள்ளிமுனைக் குடாவுக்கும் வாளி நாடான் தட்டுக்கும் பூசாறி நா 48. டான் தட்டுக்கும் தச்சனூறணிக்கும் மேற்கு ஓரக்கரைக்கு தெற்கு இன்னாங்கெல்கை 49. க்குள்பட்ட செவ்வல் மணல் நஞ்சை புஞ்சையும் ஊரணி குட்டம் திட்டு திடல் மாவடை ம 50. ரவடை மேல்நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறும் நீரும் பாசியும் பள்ளு பறை 51. ஊளியம் உலுப்பை வைக்கல் கட்டு வண்டில் மாடு ஆயக்கட்டுவரி உப்பளவரி நில 52. வரி பள்வரிப் பறைவரி கம்பளவரி முள்ளுவரி காணிக்கை வரி இவ்வரி முதல் யெவ் 53. வரிப்பிறக்கிலும் அவ்வரிமுதல் அஷ்டபோக தேச சாமியங்களும் ஓடையளத்தில் 54. மாதாந்தமுண்டு பறை உப்பு மூன்றெருவையில் நெல்லுப் புல்லு யேதொன்றாகிலும் 55. பொதிபிடிச்சு கொள்வினை விற்பினை யாபினை யாபாரம் பண்ணிக் கொள்கிறதுக் 56. கு ஆயந் தீருவை சம்மாடஞ் சத்தவரி யிதுமுதலான அஷ்ட்டபோக தேசசாமியங்களும்</poem>{{nop}}<noinclude></noinclude> 0r30pk42rgop8xy5ztj25b402k5oehc பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/92 250 489073 1837130 1644196 2025-06-29T14:26:04Z ஹர்ஷியா பேகம் 15001 1837130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 91}} {{rule}}</noinclude><poem> 57. பள்ளிவாசலுக்கு சறுவமானியமாகக் கட்டளையிட்ட படிக்கி ஆதித்த ஈந்திராதித்த சந்ததிப் பிற 58. வேசமாக புத்திர கோத்திரமாக ஆண்டனுபவித்து கொள் பவராகவும் இந்த தற்மத்தை யாதாமெ 59. ாருதர் பரிபாலனம் பண்ணின பேர்கள் கோடிப் பிரதிஷ்டையும் கொடி சிவலிங்கம் பிரதிஷ்டை 60. யும் கோடி கன்னிகாதான பிற்ப பிரதிஷ்டையும் கோடி அன்னதான சொற்னதான கோதானமும் ப 61. பண்ணிவிக்கிற சுகுர்தத்தை அடைவாராகவும் இந்த தற்மத்துக்கு யாதாமொருத்தர் அகிதம் பண்ணி 62. ன பேர்கள் கெங்கைக் கரையிலேயும் சேதுவிலேயும் மாதா பிதாக் குருக்களையும் காராம்பசு 63. வையும் பிறாமணாளையும் வதை பண்ணின தோஷத்திலே போவாராகவும் இந்த தற்மத்துக்கு 64. யாதாமொரு யிசிலாமானவர்களில் பரிபாலனம் பண்ணினவர்கள் கோடி அடுமை கொண் 65. டு உருமைக்கு விட்ட பலனும் கோடி கச்சு செய்த பலனுமடைவாராகவும் இந்த தற்மத்க்குக் 66. கு விகாதம் பண்ணினவர்கள் மாதா பிதா ஒஸ்தாத்தை வதை பண்ணிவிச்சு மக்கத்துப் பள் 67. ளியை இடித்த பாவத்திலே போவராகவும் யிப்படி சம்மதித்து தாம்பிற சாதனங் கொடுத் 68. தோம் ஸ்ரீயிறணியகெற்பயாசி இரகுனாதச் சேதுபதிகாத்த தேவரவர்கள் குமாரர் ஸ்ரீமது முத்துக் கு 69. மார விசைய ரெகுனாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் விசுவகோத்திரத்தில் மதுரையிலிருக்கும் 70. மூர்த்தி காலிங்கராயன் ஆசாரி குமாரன் சட்டையப்பன் லிகிதம் உ </poem>{{nop}}<noinclude></noinclude> 128ixmbgcm8tpmnzu078hjt5hb692oy பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/93 250 489074 1837206 1644219 2025-06-29T17:08:14Z ஹர்ஷியா பேகம் 15001 1837206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|92 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>48 ஆபில் காபில் பள்ளி வாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை*</b>}}}} சேதுபதி மன்னர்களில் முத்துக்குமார விசயரகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் இராமேசுவரம் ஆபில் காபில் பள்ளிவாசலுக்கு புதுக்குளம் என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது. பள்ளிவாசல் சார்பாக கொடையைப் பெற்றவர்கள் நூறாலம்சா மகன் சுல்தான் சகாய்சரி பக்கீர் அவர்களாவர். சென்ற செப்பேடு போலவே இச்செப்பேட்டுக்கும் காப்புரை கூறப்பட்டுள்ளது. ஊர் வரிகளிலிருந்து வரும் அனைத்து வருவாயும் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது. இன்றும் இவ்வூர் ‘பக்கிரிகுளம்’ என்றே வழக்கிலும் அரசு ஆவணங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.1745. ஆபில், காபில் என்பவர்கள் மனித இனத்தின் முதல் மனிதனாக திருக்குர்ஆனும், கிறித்தவர்களின் பைபிளும் போற்றுகின்ற ஆதம் அவர்களது மக்கள் ஆவர். இவர்களின் புனித அடக்கத்தலமாக இப்பள்ளிவாசல் கருதப்படுகிறது. இறைவனது கட்டளையை மீறிய ஆதம் அவர்களும் அவர்களது துணைவியார் ஏவாள் அவர்களும் சுவர்க்கத்திலிருந்து பூவுலகிற்கு அனுப்பப்பட்டனர். ஆதம் துணைவியார் ஏவாள் அரபு நாட்டிலும், ஆதம் இலங்கையின் மிக உயரமான மலையாகிய சுமனக்கூட மலையிலும் இறங்கியதாக நம்பப்படுகிது. இம்மலையை போதிசத்து வரின் திருவடிகளைத் தாங்கிய இடமாக பௌத்தர்களு சிவபெருமான் பாதம் பட்டதால் சிவனடிபாதமலை என்று இந்துக்களும் நம்புகின்றனர். இராமேசுவரத்தையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் கடலில் 23 மைல் தொலைவில் மணல் திட்டுக்கள் உள்ளன. இவைகள் பெட்டி என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் இதன் வழியாக நடந்தே இலங்கை செல்ல முடிந்தது என்பர். “கடல் அடையாது இலங்கை கொண்டதாகக்” கூறுவது இவ்வழி சென்றதைத்தான். இதனை “ஆதம் பாலம்” என்று அழைக்கும் வழக்கம் உண்டு. எனவே இப்பள்ளிவாசல் ஆதம் மக்கள் அடக்கத்தலமாகக் கருதப்படுகிறது.{{nop}}<noinclude></noinclude> jvktdb5au364qvaevgdbtnv3y42ujc5 1837213 1837206 2025-06-29T18:00:04Z ஹர்ஷியா பேகம் 15001 1837213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|92 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>48 ஆபில் காபில் பள்ளி வாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை* <ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ். எம். கமால், பக்கம் 480-486</ref></b>}}}} சேதுபதி மன்னர்களில் முத்துக்குமார விசயரகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் இராமேசுவரம் ஆபில் காபில் பள்ளிவாசலுக்கு புதுக்குளம் என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது. பள்ளிவாசல் சார்பாக கொடையைப் பெற்றவர்கள் நூறாலம்சா மகன் சுல்தான் சகாய்சரி பக்கீர் அவர்களாவர். சென்ற செப்பேடு போலவே இச்செப்பேட்டுக்கும் காப்புரை கூறப்பட்டுள்ளது. ஊர் வரிகளிலிருந்து வரும் அனைத்து வருவாயும் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது. இன்றும் இவ்வூர் ‘பக்கிரிகுளம்’ என்றே வழக்கிலும் அரசு ஆவணங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.1745. ஆபில், காபில் என்பவர்கள் மனித இனத்தின் முதல் மனிதனாக திருக்குர்ஆனும், கிறித்தவர்களின் பைபிளும் போற்றுகின்ற ஆதம் அவர்களது மக்கள் ஆவர். இவர்களின் புனித அடக்கத்தலமாக இப்பள்ளிவாசல் கருதப்படுகிறது. இறைவனது கட்டளையை மீறிய ஆதம் அவர்களும் அவர்களது துணைவியார் ஏவாள் அவர்களும் சுவர்க்கத்திலிருந்து பூவுலகிற்கு அனுப்பப்பட்டனர். ஆதம் துணைவியார் ஏவாள் அரபு நாட்டிலும், ஆதம் இலங்கையின் மிக உயரமான மலையாகிய சுமனக்கூட மலையிலும் இறங்கியதாக நம்பப்படுகிது. இம்மலையை போதிசத்து வரின் திருவடிகளைத் தாங்கிய இடமாக பௌத்தர்களு சிவபெருமான் பாதம் பட்டதால் சிவனடிபாதமலை என்று இந்துக்களும் நம்புகின்றனர். இராமேசுவரத்தையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் கடலில் 23 மைல் தொலைவில் மணல் திட்டுக்கள் உள்ளன. இவைகள் பெட்டி என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் இதன் வழியாக நடந்தே இலங்கை செல்ல முடிந்தது என்பர். “கடல் அடையாது இலங்கை கொண்டதாகக்” கூறுவது இவ்வழி சென்றதைத்தான். இதனை “ஆதம் பாலம்” என்று அழைக்கும் வழக்கம் உண்டு. எனவே இப்பள்ளிவாசல் ஆதம் மக்கள் அடக்கத்தலமாகக் கருதப்படுகிறது.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 9f5w4m0dte5ob3yok6nbqpkfwhlv9p9 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/94 250 489075 1837209 1644197 2025-06-29T17:28:24Z ஹர்ஷியா பேகம் 15001 1837209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 93}} {{rule}}</noinclude><b>செப்பேடு</b> <poem> 1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1667 இதன்மேல் செல்லாநின்ற குறோத 2. ன ஸ்ரீ உத்தராயணத்தில் வசந்த ரிதுவில் வைய்யாசி மீ 11உ வியாளக் கிழ 3. மை பஞ்சமியும் உத்திராட நக்ஷத்திரமும் சுப்பிறநாம யோகமும் செளலவாக 4. றணமுங் கூடின சுபதினத்தில் தேவை நகராதிபன் சேது மூல ரக்ஷா துரந்தரன் 5. ராமனாத சுவாமி காரிய துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராசசேகரன் பரராச கெ 6. ச சிங்கம் இரவிகுல சேகரன் இரவிமார்த்தாண்டன் சொரி முத்து வன்னியன் ஸ்வஸ்தி 7. ஸ்ரீமன் மஹாமண்ட லேசுவரன் அரியராயிர தளவிபாடன் பாஷைக்குத் தப்பு 8. வராயிர கண்டன் மூவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு 9. கொடாதான் பாண்டிமண்டலத் தாபனாசாரியன் சோள மண்டலப் பிரதிஷ்டா 10. பனாசாரியன் தொண்டமண்டல சண்டப்பிரசண்டன் ஈழமும் கொங்கு மியா 11. ட்பாண பட்டணமும் யெம்மண்டலமுமளித்து 12. கெசவேட்டை கண்டருளிய ரசாதிராசன் ராசப 13. ரமீசுவரன் ராசமாத்தாண்டன் ராசகுல திலகன் 14. இளஞ்சிங்கந் தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்கம் 15. ஆற்றில்ப் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப்புலி அடை 16. க்கலங் காத்தான் தாலிக்கு வேலி சத்துருவாதிய 17. ள் மிண்டன் வேதியர் காவலன் அரசராவண ரா 18. மன் அடியார் வேளைக்காறன் பரதள விபாடன் உரி 19. கோல் சுரதானன் அந்தம்பிற கண்டன் சாடிக்கறார் கண்டன் சாமித்துரோகி 20. யள் மிண்டன் பஞ்சவற்ன ராய ராவுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்டமடக்கி </poem>{{nop}}<noinclude></noinclude> ps5oeb3uk4i1s751biy6yo4jr9q4ceg பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/95 250 489076 1837211 1644218 2025-06-29T17:36:20Z ஹர்ஷியா பேகம் 15001 1837211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|94 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem> 21. வைய்யாளி நாராயணன் இவுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரியர் மா 22. னங்காத்தான் தொண்டியந்துறை காவலன் துரகரேவந்தன் அனும கேதனன் 23. கெருட சேதனன் கொடைக்கு கற்னன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விசையன் 24. பரத நாடகப் பிறவீணன் கருணா கடாக்ஷன் குன்றினுயர் மேருவைக் குன்றா வ 25. ளைக்குணில் பொறித்தவன் திலத நுதல் மடமாதர் மடலெழுத வருசுமுகன் செங்கா 26. விக் குடையான் சேமத்தலை விளங்குமிரு தாளினான் விசையலட்சுமி காந் 27. மதன் கலைதெரியும் விற்பனன் காமினி காந்தப்பன் அஷ்டதிக்கு மனோபயங்கர 28. ன் துஷ்ட நிக்கிறக சிஷ்ட பரிபாலன் சங்கீத சாயித்தியன் வித்தியா வினோதன் 29. சகல சாம்பிறாச்சிய லக்ஷ்மிவாசன் சேதுகாவலன் துகவூர்க் கூத்தத்து 30. க் காத்தூரான குலோத்துங்கசோள நல்லூர் கீள்பால் விரையாத கண்டனிலிரு 31. க்கும் ராசமான்ய ராசஸ்ரீ இரண்யகெற்பயாசியான குமார முத்து விசைய ரகுநாதச் சே 32. துபதி காத்த தேவரவர்கள் குமாரன் முத்துக்குமார விசைய இரகுநாதச் சே 33. துபதி காத்த தேவரவர்கள் ராமீசுவரத்தலிருக்கும் ஆவல் காவல் பள்ளிவா 34. சல் தன்மத்துக்கு நூறாலம்சா குமாரன் சுலுத்தான் சஹாய் சரி பகீர் பாரிசமா 35. க கட்டளையிட்ட புதுக்குளத்தை ஆண்டனுபவித்துக் கொள்வாராகவும் 36. விட்டுக்குடுத்த புதுக்குளத்துக்கு யெல்கையாவது யெல்கைகுடி ஓரச்சிறகு 37. மடையில் நீர்பாய்ந்து நெல்விளைகின்ற குன்றா வயக்கலுக்கும் வாளவந் 38. தாளம்மன் கோவிலுக்கும் பச்சரித் திடலுக்கும் சேதுமாற்கத்துக்கும் வடக்கு </poem>{{nop}}<noinclude></noinclude> mb7rixh5r83ce6zwz74beg9igz4yhn2 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/96 250 489077 1837212 1644198 2025-06-29T17:59:02Z ஹர்ஷியா பேகம் 15001 1837212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 95}} {{rule}}</noinclude><poem>39. கொத்துங் குளத்துக்கும் புரவுக்கும் தென்மேற்கு அச்சங்குடிக்கும் தோட்டக்கா 40. ட்டுக்கும் தெற்கு எக்கைகுடிக் கண்மாய் வடகடைக் கொம்புக்கும் கானத் திட 41. லுக்கும் கிளக்கு யின்னாங் கெல்கைக்குள்பட்ட நஞ்சை பிஞ்சை மாவடை மர 42. வடை திட்டு திடல் மேல் நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறு நிதி நிக்ஷேப 43. ஜல தரு பாஷாண ஆகாம்ய அஷ்டபோகமும் குடிபடை பள்பறைவரி யிறை சக 44. லமும் சறுவ மானிபமாக கட்டளையிட்ட படியினாலே சந்திராதித்தவரை சந்ததிப் பிறவேசம் புத்திர பெளவுத்திர பாரம் பரையாய் ஆண் 45. டனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் இந்தத் தற்மத்துக்கு தமிளனாகிலும் நாலா 46. வர்னத்திலே உள்ளவனாகிலும் இசுலாமான வனாகிலும் வாக்குச் சகாயம் அர்த்த ச 47. காயம் பண்ணினால் கெங்கையிலும் சேதுவிலும் மக்க மதீனத்திலேயும் 48. அன்னதானமும் சொற்னதானமும் அனேகம் குடும்ப பிறதிஷ்டையும் பண்ணி 49. ன பலனை யடையக்கட.வாராகவும் இந்த தற்மத்துக்கு விகாதம் நினைத்தால் புண்ணி 50. ய ஸ்தலங்களிலேயும் மக்க மதீனத்திலேயும் மாதா பிதா வையுங் கொன்ற தோ 51. ஷத்திலும் மகாபாவத்திலேயும் போகக்கடவாராகவும் உ குருவே துணை உ 52. இந்தப் படிக்கு தாம்பிற சாதனம் யெளுதினேன் திருப் புல்லாணியூரிலிருக்கு 53. ம் முத்துப் பண்டாரம் புத்திரன் இருளப்பன் கையெளுத்து உ இந்த தற்மத்துக்கு 54. தமிளனாகிலும் எவர்களாகிலும் விகாதம் நினைத்தால் கெங்கையிலும் சேதுவி 55. லும் காராம் பசுவையும் மாதாபிதாவையுங் கொன்ற தோஷத்திலே போகக் க 56. டவாராகவும்</poem>{{nop}}<noinclude></noinclude> c5l8lshrlkoj5jypi8bj5fr5ctei3xm பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/97 250 489078 1837214 1644216 2025-06-29T18:09:31Z ஹர்ஷியா பேகம் 15001 1837214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|96 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>49. இராமேசுவரம் கோயில் விசாரணையில் அலிப்புலி ராவுத்தர்* <ref>*தமிழ்நாட்டு செப்பேடுகள், தொகுதி 2, பக்கம் 86.87, ச. கிருஷ்ணமூர்த்தி சேதுபதி செப்பேடுகள். புலவர் செ.இராசு. தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு (1994)</ref></b>}}}} இராமேசுவரம் கோயில் இந்துக்களின் புனித யாத்திரைத் தலம். அங்குள்ள அர்ச்சகர்களில் இருபெரும் பிரிவு உண்டு. குருக்கள்மார் என்றும், நயினாக்கள் ஆரிய மகாசபையார் என்றும் இரு பிரிவினர் அழைக்கப் பெறுவர். தமிழ்நாட்டுப் பக்தர்களுக்குக் குருக்கள்மாரும், வடநாட்டுப் பக்தர்களுக்கு ஆரிய மகாசபையாரும் வழிபாடு நடத்துவர். இராமேசுவரம் கோயிலில் உள்ள பல தீர்த்தங்களில் இலட்சுமண தீர்த்தம் என்பது மகா முக்கியமானது. மக்கள் பெருந்திரளாக அங்கு கூடுவதால் வருவாய் மிகுதி. இலட்சுமண தீர்த்தத்தின் உரிமை பற்றி இருபிரிவு அர்ச்சகர் கட்கும் தகராறு ஏற்பட்டது. சேதுபதி அரசரிடம் புகார் சென்றது. அப்போது சேதுநாட்டை ஆட்சிபுரிந்த மன்னர் முத்துக்குமார விசயரகுநாத சேதுபதி தன் அதிகாரிகள் நால்வரை விசாரிக்க ஆணையிட்டார். 1. தளகர்த்தர் ரா. வெள்ளையன் சேர்வைக்காரர் 2. ரா. பிரதானி ஆண்டியப்பப் பிள்ளை 3. பெரிய கட்டளை இராமநாத பண்டாரம் 4. சத்திர மணியக்காரர் ஆகியோர் 18.1.1746 அன்று அவ்வழக்கை விசாரிக்க வந்தனர். அந்த நீதிவிசாரணையில் நடுவராகப் பணியாற்றியவர்களில் ஒருவர் ‘இராமேசுவரம் அலிப்புலி ராவுத்தர்’ ஆவார்.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> b5s1ivccx7fybse3ccv6n0s4d8zuush பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/98 250 489079 1837215 1644217 2025-06-29T18:24:03Z ஹர்ஷியா பேகம் 15001 1837215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|97 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>50. இஸ்லாமியர் தறிக்கு வரி நீக்கிய சேதுபதி*</b> <ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம். கமால். பக்கம் 59.</ref>}}}} சேது நாட்டில் தறி நெசவு மிகுதி. பல சமூக மக்களோடு இஸ்லாமியர்களும் தறிநெசவில் பெருவாரியாக ஈடுபட்டனர். இன்றும் இஸ்லாமியர்கள் மிகுதியாக வாழும் கமுதி, அபிராமம், எக்ககுடி, பரமக்குடி, இளையாங்குடி, சித்தார்கோட்டை, பனைக்குளம் ஆகிய பல ஊர்களில் ‘பாவோடித் தெரு’ என்ற பெயரில் தெருக்கள் உள்ளன. கீழக்கரையில் ‘பருத்திக்காரத் தெரு’ என்ற தெரு உள்ளது. திருமலை ரகுநாத சேதுபதி வழங்கிய செப்பேடு ஒன்றில் “நமது காவல் குடியினரான துலுக்கர் தறிக்கடமை இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. கல்வெட்டுக்களில் ‘தறியிறை’ என்றும் கூறப்படும். ‘நமது காவல் குடி’ என்ற தொடரால் நேயம் மிகுந்த நெருக்கமான தொடர்பு புலப்படுகிறது.{{nop}}<noinclude>{{rule}} 7{{gap}}{{Reflist}}</noinclude> 6oxxuswwotb1287foeklttc7oonq4z9 1837216 1837215 2025-06-29T18:31:30Z ஹர்ஷியா பேகம் 15001 1837216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|97 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>50. இஸ்லாமியர் தறிக்கு வரி நீக்கிய சேதுபதி*</b> <ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம். கமால். பக்கம் 59.</ref>}}}} சேது நாட்டில் தறி நெசவு மிகுதி. பல சமூக மக்களோடு இஸ்லாமியர்களும் தறிநெசவில் பெருவாரியாக ஈடுபட்டனர். இன்றும் இஸ்லாமியர்கள் மிகுதியாக வாழும் கமுதி, அபிராமம், எக்ககுடி, பரமக்குடி, இளையாங்குடி, சித்தார்கோட்டை, பனைக்குளம் ஆகிய பல ஊர்களில் ‘பாவோடித் தெரு’ என்ற பெயரில் தெருக்கள் உள்ளன. கீழக்கரையில் ‘பருத்திக்காரத் தெரு’ என்ற தெரு உள்ளது. திருமலை ரகுநாத சேதுபதி வழங்கிய செப்பேடு ஒன்றில் “நமது காவல் குடியினரான துலுக்கர் தறிக்கடமை இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. கல்வெட்டுக்களில் ‘தறியிறை’ என்றும் கூறப்படும். ‘நமது காவல் குடி’ என்ற தொடரால் நேயம் மிகுந்த நெருக்கமான தொடர்பு புலப்படுகிறது.{{nop}}<noinclude>{{rule}} 7{{Reflist}}</noinclude> 01xv9dnak12lmplxxnptrkd54y4ysrl 1837217 1837216 2025-06-29T18:31:56Z ஹர்ஷியா பேகம் 15001 1837217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|97 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>50. இஸ்லாமியர் தறிக்கு வரி நீக்கிய சேதுபதி*</b> <ref>*சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம். கமால். பக்கம் 59.</ref>}}}} சேது நாட்டில் தறி நெசவு மிகுதி. பல சமூக மக்களோடு இஸ்லாமியர்களும் தறிநெசவில் பெருவாரியாக ஈடுபட்டனர். இன்றும் இஸ்லாமியர்கள் மிகுதியாக வாழும் கமுதி, அபிராமம், எக்ககுடி, பரமக்குடி, இளையாங்குடி, சித்தார்கோட்டை, பனைக்குளம் ஆகிய பல ஊர்களில் ‘பாவோடித் தெரு’ என்ற பெயரில் தெருக்கள் உள்ளன. கீழக்கரையில் ‘பருத்திக்காரத் தெரு’ என்ற தெரு உள்ளது. திருமலை ரகுநாத சேதுபதி வழங்கிய செப்பேடு ஒன்றில் “நமது காவல் குடியினரான துலுக்கர் தறிக்கடமை இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. கல்வெட்டுக்களில் ‘தறியிறை’ என்றும் கூறப்படும். ‘நமது காவல் குடி’ என்ற தொடரால் நேயம் மிகுந்த நெருக்கமான தொடர்பு புலப்படுகிறது.{{nop}}<noinclude>{{rule}} 7{{gap}}{{Reflist}}</noinclude> 6oxxuswwotb1287foeklttc7oonq4z9 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/99 250 489080 1837218 1644214 2025-06-29T18:39:35Z ஹர்ஷியா பேகம் 15001 1837218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|98 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>51. சேதுபதியும் சீதக்காதியும்</b>}}}} கிழவன் சேதுபதி (1678-1710) காலத்தில் வள்ளல் சீதக்காதி சேதுபதியின் அமைச்சராக விளங்கினார். சேதுபதி சீதக்காதி அவர்களைத் தன் சொந்த தம்பியாக உயர் மதிப்புடன் நடத்தினார். சீதக்காதி அவர்கட்கு “விசயரகுநாதப் பெரியதம்பி” என்று பட்டமளித்துப் பாராட்டினார். பின்னர் சீதக்காதி வழி வந்தவர்களும் சிலர் ‘பெரியதம்பி’ என்ற சிறப்புப் பெயரைச் சேர்த்துக் கொண்டனர். கிழவன் சேதுபதி சேதுநாட்டின் தலைநகரைப் போகலூரிலிருந்து பெரியகோட்டையும் அரண்மனையும் கட்டி இராமநாத புரத்திற்கு மாற்றினார். செவ்வக வடிவில் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் 44 கொத்தளங்களுடன் அமைத்தார். இதன் நிர்மாணப் பணியில் பெரிதும் உதவியவர் சீதக்காதியாவார். (Manual of Ramnad Samasthanam By T. Rajaram Rao, 1891, Page 280) “கீழக்கரை சீதக்காதி மரைக்காயர்” என்று அந்நூல் குறிக்கிறது. இலங்கையிலிருந்து ஏலம், கிராம்பு, சாதிபத்திரி, கொட்டைப் பாக்கு ஆகிய பொருட்கள் கிழக்குக் கடற்கரைக்கு வந்தன. அங்கிருந்து தானியம், பட்டுப்புடவை, பட்டுநூல், கருப்பட்டி, புளி, தேங்காய், சங்கு ஆகியவை ஏற்றுமதியாயின. இவ்வணிகத்தில் சீதக்காதிக்கு ஏகபோக உரிமை இருந்தது. கடற்கரை வாழ் இஸ்லாமியர்களும் வள்ளல் சீதக்காதியும் சேதுநாட்டின் வணிக - செல்வ வளர்ச்சியில் பெரிதும் உதவினர். பௌத்திர மாணிக்க பட்டணம் என்று சிறப்பிக்கப்பட்ட காயல் பட்டினத்திற்கும் இதில் பெரும் பங்கு உண்டு. அவர்களது மரக்கலங்கள் வங்கக் கடலையும், அரபிக் கடலையும் வலம் வந்து பலதரப்பட்ட பொருட்களைக் கீழக்கரை, பாம்பன், தேவிபட்டினம், தொண்டி ஆகிய துறைமுகங்களுக்குக் கொண்டு வந்தன. ஏற்றுமதிப் பொருட்களை எடுத்துச் சென்றன. அவர்கள் மரக்கலங்களுக்கு அரசர்கள் எனப்பட்டனர் (மரக்கலராயர் - மரக்காயர்) இவர்களைக் “கப்பலோட்டிய தமிழர்கள்” எனலாம்.{{nop}} -<noinclude></noinclude> ccmssgkzghgdcnyz9kd2ne9pagnrpsg 1837219 1837218 2025-06-29T18:40:12Z ஹர்ஷியா பேகம் 15001 1837219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|98 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>51. சேதுபதியும் சீதக்காதியும்</b>}}}} கிழவன் சேதுபதி (1678-1710) காலத்தில் வள்ளல் சீதக்காதி சேதுபதியின் அமைச்சராக விளங்கினார். சேதுபதி சீதக்காதி அவர்களைத் தன் சொந்த தம்பியாக உயர் மதிப்புடன் நடத்தினார். சீதக்காதி அவர்கட்கு “விசயரகுநாதப் பெரியதம்பி” என்று பட்டமளித்துப் பாராட்டினார். பின்னர் சீதக்காதி வழி வந்தவர்களும் சிலர் ‘பெரியதம்பி’ என்ற சிறப்புப் பெயரைச் சேர்த்துக் கொண்டனர். கிழவன் சேதுபதி சேதுநாட்டின் தலைநகரைப் போகலூரிலிருந்து பெரியகோட்டையும் அரண்மனையும் கட்டி இராமநாத புரத்திற்கு மாற்றினார். செவ்வக வடிவில் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் 44 கொத்தளங்களுடன் அமைத்தார். இதன் நிர்மாணப் பணியில் பெரிதும் உதவியவர் சீதக்காதியாவார். (Manual of Ramnad Samasthanam By T. Rajaram Rao, 1891, Page 280) “கீழக்கரை சீதக்காதி மரைக்காயர்” என்று அந்நூல் குறிக்கிறது. இலங்கையிலிருந்து ஏலம், கிராம்பு, சாதிபத்திரி, கொட்டைப் பாக்கு ஆகிய பொருட்கள் கிழக்குக் கடற்கரைக்கு வந்தன. அங்கிருந்து தானியம், பட்டுப்புடவை, பட்டுநூல், கருப்பட்டி, புளி, தேங்காய், சங்கு ஆகியவை ஏற்றுமதியாயின. இவ்வணிகத்தில் சீதக்காதிக்கு ஏகபோக உரிமை இருந்தது. கடற்கரை வாழ் இஸ்லாமியர்களும் வள்ளல் சீதக்காதியும் சேதுநாட்டின் வணிக - செல்வ வளர்ச்சியில் பெரிதும் உதவினர். பௌத்திர மாணிக்க பட்டணம் என்று சிறப்பிக்கப்பட்ட காயல் பட்டினத்திற்கும் இதில் பெரும் பங்கு உண்டு. அவர்களது மரக்கலங்கள் வங்கக் கடலையும், அரபிக் கடலையும் வலம் வந்து பலதரப்பட்ட பொருட்களைக் கீழக்கரை, பாம்பன், தேவிபட்டினம், தொண்டி ஆகிய துறைமுகங்களுக்குக் கொண்டு வந்தன. ஏற்றுமதிப் பொருட்களை எடுத்துச் சென்றன. அவர்கள் மரக்கலங்களுக்கு அரசர்கள் எனப்பட்டனர் (மரக்கலராயர் - மரக்காயர்) இவர்களைக் “கப்பலோட்டிய தமிழர்கள்” எனலாம்.{{nop}}<noinclude></noinclude> gzmyv3jev7ku6b40r5xz7itw727vqs1 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/100 250 489081 1837220 1644199 2025-06-29T18:50:26Z ஹர்ஷியா பேகம் 15001 1837220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 99}} {{rule}}</noinclude>மழையின்றிப் பெரும்பஞ்சம் ஏற்பட்டபோது சேது நாட்டில் சீதக்காதி அளித்த அன்னம் பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியது. இதைக்கண்ட ஒரு புலவர் பின்வரும் பாடலைப் பாடினார். <poem> “ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும் கார்கட்டிய பஞ்ச காலத்திலேயோர் தட்டு வாராமலே யார்தட்டினும் தட்டு வாராமலே அன்ன தானத்திற்கு மார்தட் டியதுரை வள்ளல் சீதக்காதி வரோதயனே” </poem>{{nop}}<noinclude></noinclude> ngwuxpczvyza1kputs9c6kb4v62eotg 1837221 1837220 2025-06-29T18:51:04Z ஹர்ஷியா பேகம் 15001 1837221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 99}} {{rule}}</noinclude>மழையின்றிப் பெரும்பஞ்சம் ஏற்பட்டபோது சேது நாட்டில் சீதக்காதி அளித்த அன்னம் பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியது. இதைக்கண்ட ஒரு புலவர் பின்வரும் பாடலைப் பாடினார். <poem> {{left_margin|3em|<b>“ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும் கார்கட்டிய பஞ்ச காலத்திலேயோர் தட்டு வாராமலே யார்தட்டினும் தட்டு வாராமலே அன்ன தானத்திற்கு மார்தட் டியதுரை வள்ளல் சீதக்காதி வரோதயனே”</b>}} </poem>{{nop}}<noinclude></noinclude> g8zcc1h7gplgdoa96uf3jo998tpb34d பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/64 250 535304 1837167 1833582 2025-06-29T15:22:51Z Arularasan. G 2537 /* சரிபார்க்கப்பட்டவை */ 1837167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Arularasan. G" /><b>{{rh|64||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> மனோ:{{gap+|4}} மறையேல்! மறையேல்! பிறைபழி நுதலாய்! {{gap+|5}}10{{gap+|1}} திங்கள் கண்டு பொங்கிய கடலெனச் செம்புனல் பரக்கச் செந்தா மரைபோற் சிவந்தவுன் கபோல நுவன்று, நின்மனக் களவெலாம் வெளியாக் கக்கிய பின்னர் ஏதுநீ யொளிக்குதல்? இயம்பாய் {{gap+|5}}15{{gap+|1}} காதலன் நேற்றுனக் கோதிய தெனக்கே. {{float_right|3}} வா: {{gap+|5}} ஐயோ கொடுமை! அம்ம! அதிசயம்! எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று திரிபவ ரொப்பநீ செப்பினை! நான் கண் டேநாள் நாலைந் தாமே. {{float_right|4}} மனோ:{{gap+|1}}20{{gap+|2}} ஏதடி! நுமது காதல் கழிந்ததோ? காணா தொருபோ திரேமெனுங் கட்டுரை வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்? காதள வோடிய கண்ணாய்! ஓதுவாய் என்பா லுரைக்கற் பாற்றே. {{float_right|5}} வா:{{gap+|2}}25{{gap+|2}} எதனையான் இயம்புகோ! என்றலை விதியே.</b> {{float_right|(கண்ணீர் சிந்தி)}}<b> வா; விளை யாடுவோம் வாராய். யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே! {{float_right|6}} மனோ:{{gap+|4}}ஏனிது! ஏனிது வாணி எட்பூ ஏசிய நாசியாய்! இயம்புக. {{gap+|4}}30{{gap+|2}} மனத்திடை யடக்கலை! வழங்குதி வகுத்தே. {{float_right|7}} </b></poem> {{rule|15em|align=left}} கபோலம் - கன்னம். நுவன்று - சொல்லி; வெளிப்படுத்தி இயம்பு – சொல்லு. ‘எருது ஈன்றது என்றால் என்ன கன்று. என்பதுபோல' என்பது பழமொழி. ‘எருது ஈன்றது என்றால் தொழுவத்திலே கட்டு' என்றும் கூறுவர். 'காள பெற்றென்னு கேட்டு கயறெடுத்து' என்பது மலையாளப் பழமொழி. பிழைத்தவர் – பிழை செய்தவர். எட்பூ - எள்ளின் பூவை. ஏசிய - இழித்துக் கூறிய. நாசி - மூக்கு. எள்ளின் பூவை மகளிரின் மூக்குக்கு உவமை கூறுவது மரபு. {{dhr|3em}}<noinclude></noinclude> anmx1ootq9vwodoc8ank45g3z6zgdsl மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் 0 540221 1837196 1836663 2025-06-29T16:39:41Z Info-farmer 232 புதிது = "{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}} ", மொத்தம் = 461 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன. 1837196 wikitext text/x-wiki {{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}} {{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}} {{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}} {{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}} {{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}} {{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}} {{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}} {{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}} {{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}} {{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}} {{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}} {{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}} {{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}} {{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}} {{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}} {{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}} {{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}} {{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}} {{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}} {{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}} {{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}} {{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}} {{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}} {{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}} {{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}} {{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}} {{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}} {{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}} {{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}} {{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}} {{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}} {{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}} {{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}} {{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}} {{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}} {{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}} {{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}} {{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}} {{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}} {{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}} {{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}} {{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}} {{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}} {{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}} {{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}} {{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}} {{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}} {{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}} {{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}} {{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}} {{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}} {{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}} {{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}} {{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}} {{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }} {{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }} {{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }} {{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}} {{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}} {{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}} {{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}} {{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}} {{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}} {{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }} {{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }} {{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}} {{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}} {{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}} {{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}} {{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}} {{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}} {{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}} {{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}} {{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}} {{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}} {{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}} {{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}} {{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}} {{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}} {{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}} {{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}} {{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}} {{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}} {{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}} {{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}} {{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}} {{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}} {{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}} {{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}} {{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }} {{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}} {{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}} {{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}} {{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}} {{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}} {{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}} # {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986 # {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007 # {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924 # {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986 # {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959 # {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957 # {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984 #{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988 # {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970 #{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968 #{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957 #{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961 #{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993 #{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]''' #{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]''' #{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001 #{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]''' #{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]''' #{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]''' #{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]''' #{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951 #{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995 #{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]''' #{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]''' #{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்‎|அ. மு. பரமசிவானந்தம்‎]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991 #{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000 #{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967 #{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953 #{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}} #{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952 #{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}} # {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960 #{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960 #{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993 #{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911 #{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998 #{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004 #{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003 # {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928 #{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]''' #{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986 #{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966 #{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002 #{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993 #{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993 #{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977 #{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957 #{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007 #{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952 # {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959 #{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966 #{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985 #{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999 #{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002 #{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989 #{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்‎|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981 {{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}} #{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978 #{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999 #{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998 #{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003 #{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}} #{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960 #{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}} #{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000 #{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994 #{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006 #{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004 #{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}} #{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001 #{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}} #{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959 #{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}} #{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு‎|நெ. து. சுந்தரவடிவேலு‎]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}} #{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}} #{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991 #* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946 #{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947 #{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}} #{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964 # {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979 # {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982 #{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986 # {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988 #* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990 #{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997 #{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997 #{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003 #* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988 # {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990 # {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993 #{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999 #{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999 #{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997 #{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} # {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994 #{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001 #{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994 #* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}} #{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005 #{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999 #{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005 #{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996 #{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006 #{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005 #{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991 #{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977 #* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}} #{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}} # {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983 # {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956 #{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960 #{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]''' #{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]''' #{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003 #{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''', #{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}} #{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}} #{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959 #{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956 #* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}} # {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003 # {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002 # {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001 #{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002 #{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002 #{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002 #{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]''' #{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''' #{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''' #{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001 # {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002 #* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}} #{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}} #{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}} #{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]''' #{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]''' # {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000 # {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000 #{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998 #{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000 #{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}} #{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}} # {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}} # {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955 # {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007 #{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}} #{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}} #* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}} # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001 #{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999 #{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999 # {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005 #* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005 #{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011 {{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}} #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000 #{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993 #{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993 #* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]''' #{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]''' #{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949 #{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964 # {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956 #* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967 #{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985 #{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992 #{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]''' #{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988 #{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981 #{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968 #{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}} # {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995 #{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}} #{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}} #{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}} #{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997 #{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988 #{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]''' #{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955 #{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]''' #{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998 #{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000 {{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}} #* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]''' #{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992 #{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}} #* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}} #{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}} #{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999 #{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]''' #{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]''' {{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}} #{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]''' #{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000 #{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002 #{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994 #{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007 #{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009 #{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007 #{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982 #{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007 #{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997 #* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}} # {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]''' #{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979 #{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979 #{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979 #{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002 #* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} # {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996 #{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993 # {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969 #{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]''' #* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}} #{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985 #{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989 #{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996 #{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996 #{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]''' #{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994 #{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993 #{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997 #{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995 #{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006 #{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980 #{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971 #{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975 #* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}} # {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957 #{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001 #{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}} #* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}} #{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}} #{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}} # {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987 #{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988 #{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988 #{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991 #{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992 #{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992 #{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001 #* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983 #{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995 #{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}} #{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004 #* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}} #{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985 # {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986 # {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990 # {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991 #* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}} #{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}} # {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946 #{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964 #{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998 #* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}} #{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}} #{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}} #{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}} #{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}} #{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}} #{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}} # {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949) #{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]''' # {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968 #* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005 # {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005 #{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}} * <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big> [[பகுப்பு:படைப்புகள்]] cxegrkwwp02yrmy1eca25ua8v449k1e பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/11 250 570495 1837112 1706161 2025-06-29T13:46:55Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''10'''|பெரிய இடத்துப் பெண்}}</noinclude>{{gap}}உலகநாதரிடம் ஊடல் உண்டு! கூடல் உண்டு! பாடல் உண்டு! ஆனால் அப்போதும் கண்ணம்மாவுக்கு வீரனைக் காணவில்லையே என்ற வாடல் உண்டு!<br> {{gap}}உலகநாதரிடம் உல்லாசம் பரிமாறுவதுண்டு! சல்லாபம் உண்டு ! எல்லாமுண்டு! ஆனால், வீரனிடம் நடிப்பதற்கு இவை ஒத்திகைகள்.<br> {{gap}}வண்டிக்கார வீரன் பலே ஆள்; கட்டுமஸ்தான உடல்; உழைத்து உழைத்துப் பக்குவம் பெற்ற உடற்கட்டு. முகத்திலே எப்பொழுதும் ஓர் அலாதியான தேஜஸ்! 'ஹை' என்று அவன் மாடுகளை அதட்டுவதே ஒரு சங்கீதமாயிருக்கும். அலட்சியமாகப் பார்வையைச் சிந்தும்போது அவன் ஒரு பாட்டாளி என்பதையே மறந்துவிடுவான். அவனது சிரிப்பிலே ஒரு தனி அழகு தாண்டவமாடும். அரும்பிய சிறு மீசைகள்! அவசரத்தையே காட்டிக்கொண் டிருக்கும் அசைவுகள்!<br> {{gap}}கண்ணம்மாவின் கருத்தைக் கிளற இவை போதாதா? கண்ணம்மா கற்போடு நடக்க வேண்டுமென்று தான் முதலில் கருதினாள். ஆனால், உலகநாதரின் விகார ரூபம் அவள் பிடிவாதத்தை உடைத் தெறிந்தது. வீரனின் 'கணீ'ரென்ற அதட்டல் காளை மாடுகளை அதிரச் செய்தன. அதே சமயத்தில் அந்த ஒலி கண்ணம்மாவுக்குக் கீதமாக இருந்தது. வண்டிக்காரனின் முறைப்பு, வெறித்த வண்டி மாடுகளுக்கு வெதறலைத் தந்தது. அதே சமயத்தில் கண்ணம்மாவுக்கு அது கம்பீரப் பார்வையாக இருந்தது. அவனது சவுக்கடிகள் மாடுகளுக்கு மனவேதனையைக் கொடுத்தன. அந்தச் சப்தத்தில் அவனது ஆற்றல் ஒளிந்து கிடப்ப<noinclude></noinclude> 6yuvor54fw18nqvkbwflk1sdigunx5s 1837137 1837112 2025-06-29T14:31:13Z கெரிக்மா 15530 1837137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''10'''|பெரிய இடத்துப் பெண்}} ---------------------------------------</noinclude>{{gap}}உலகநாதரிடம் ஊடல் உண்டு! கூடல் உண்டு! பாடல் உண்டு! ஆனால் அப்போதும் கண்ணம்மாவுக்கு வீரனைக் காணவில்லையே என்ற வாடல் உண்டு!<br> {{gap}}உலகநாதரிடம் உல்லாசம் பரிமாறுவதுண்டு! சல்லாபம் உண்டு ! எல்லாமுண்டு! ஆனால், வீரனிடம் நடிப்பதற்கு இவை ஒத்திகைகள்.<br> {{gap}}வண்டிக்கார வீரன் பலே ஆள்; கட்டுமஸ்தான உடல்; உழைத்து உழைத்துப் பக்குவம் பெற்ற உடற்கட்டு. முகத்திலே எப்பொழுதும் ஓர் அலாதியான தேஜஸ்! 'ஹை' என்று அவன் மாடுகளை அதட்டுவதே ஒரு சங்கீதமாயிருக்கும். அலட்சியமாகப் பார்வையைச் சிந்தும்போது அவன் ஒரு பாட்டாளி என்பதையே மறந்துவிடுவான். அவனது சிரிப்பிலே ஒரு தனி அழகு தாண்டவமாடும். அரும்பிய சிறு மீசைகள்! அவசரத்தையே காட்டிக்கொண் டிருக்கும் அசைவுகள்!<br> {{gap}}கண்ணம்மாவின் கருத்தைக் கிளற இவை போதாதா? கண்ணம்மா கற்போடு நடக்க வேண்டுமென்று தான் முதலில் கருதினாள். ஆனால், உலகநாதரின் விகார ரூபம் அவள் பிடிவாதத்தை உடைத் தெறிந்தது. வீரனின் 'கணீ'ரென்ற அதட்டல் காளை மாடுகளை அதிரச் செய்தன. அதே சமயத்தில் அந்த ஒலி கண்ணம்மாவுக்குக் கீதமாக இருந்தது. வண்டிக்காரனின் முறைப்பு, வெறித்த வண்டி மாடுகளுக்கு வெதறலைத் தந்தது. அதே சமயத்தில் கண்ணம்மாவுக்கு அது கம்பீரப் பார்வையாக இருந்தது. அவனது சவுக்கடிகள் மாடுகளுக்கு மனவேதனையைக் கொடுத்தன. அந்தச் சப்தத்தில் அவனது ஆற்றல் ஒளிந்து கிடப்ப<noinclude></noinclude> qcfgdab2f8cfvd182ewwvnw4k649d2s பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/12 250 570496 1837114 1706162 2025-06-29T13:53:10Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |11}}</noinclude>தாகக் கண்ணம்மாள் கருதினாள். கண்ணம்மாவின் அணைப்பு வீரனுக்கு ஆனந்தமாகத் தானிருந்தது. ஆனால், அவன் ஆண்ட வர்க்கமல்லவா? சுவைக்காததைச் சுவைத்தான்; கிடைக்காதது கிடைத்தது; முடியாதது முடிந்தது; எஜமானியின் ஆசைக்குரியவன் தான்! வீரனுக்கும் கண்ணம்மாவுக்கும் இருந்த தொடர்பு வரவர தாட்சண்யமாக மாறிற்று. உறியில் தாவும்போது பயப்படாத பூனை உறியை அடைந்ததும் பயப்பட்டதுபோல - சுவரைத் துளைத்தபோது அஞ்சாத திருடன் வீட்டில் நுழைந்தவுடன் அஞ்சுவதுபோல- வீரன் கண்ணம்மாவின் கட்டில் அகப்பட்ட பிறகு நடுங்கினான் ஊருக்காக! உலகநாதர் வீட்டு விஷயம் ஊரில் பரவிற்று. ஊர் தூற்றுமோ ? எஜமான் அறிந்தால் என்ன ஆகுமோ? என்ற கேள்விகள் வீரனைத் திக்கு முக்காட வைத்தன.<br> {{gap}}வண்டியுடன் மாடுகளுண்டு. வண்டிக்காரன் வீரனுண்டு, என்ற நிலை ஏற்பட்டது பின்னால்! கண்ணம்மாவைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக்கொண்டு போய் விடுவான். முகாந்திரம் தெரியாமல் கண்ணம்மா விழித்தாள். கடிதம் எழுதலாம் என நினைத்தாள்! நினைப்பு இருந்தது, நேரமிருந்தது, தாள் இருந்தது, பேனா இருந்தது, ஆனால், வீரனுக்குக் கல்வி வாடை இல்லையே! கண்ணம்மா கலங்கிய உள்ளத்துடனே காலத்தைக் கடத்தினாள். வீரனின் ஊடல் தீரும் வரை உலகநாதரிடம் உல்லாச நாடகத்தின் ஒத்திகைகளை நடத்தி வந்தாள்.<br> {{gap}}அப்போதுதான் ஒருநாள்! உலகநாதர்-கண்ணம்மா ஊஞ்சல் ஆட்டம் நடைபெற்றது. கண்ணம்மா கிளறிக் கிளறிக் கேட்ட பிறகு உலகநாதர் வாயைத் திறந்தார்.<noinclude></noinclude> 4q6q2lf4015d6e081zferdacddxxhw7 1837138 1837114 2025-06-29T14:31:47Z கெரிக்மா 15530 1837138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |11}} ------------------------------------</noinclude>தாகக் கண்ணம்மாள் கருதினாள். கண்ணம்மாவின் அணைப்பு வீரனுக்கு ஆனந்தமாகத் தானிருந்தது. ஆனால், அவன் ஆண்ட வர்க்கமல்லவா? சுவைக்காததைச் சுவைத்தான்; கிடைக்காதது கிடைத்தது; முடியாதது முடிந்தது; எஜமானியின் ஆசைக்குரியவன் தான்! வீரனுக்கும் கண்ணம்மாவுக்கும் இருந்த தொடர்பு வரவர தாட்சண்யமாக மாறிற்று. உறியில் தாவும்போது பயப்படாத பூனை உறியை அடைந்ததும் பயப்பட்டதுபோல - சுவரைத் துளைத்தபோது அஞ்சாத திருடன் வீட்டில் நுழைந்தவுடன் அஞ்சுவதுபோல- வீரன் கண்ணம்மாவின் கட்டில் அகப்பட்ட பிறகு நடுங்கினான் ஊருக்காக! உலகநாதர் வீட்டு விஷயம் ஊரில் பரவிற்று. ஊர் தூற்றுமோ ? எஜமான் அறிந்தால் என்ன ஆகுமோ? என்ற கேள்விகள் வீரனைத் திக்கு முக்காட வைத்தன.<br> {{gap}}வண்டியுடன் மாடுகளுண்டு. வண்டிக்காரன் வீரனுண்டு, என்ற நிலை ஏற்பட்டது பின்னால்! கண்ணம்மாவைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக்கொண்டு போய் விடுவான். முகாந்திரம் தெரியாமல் கண்ணம்மா விழித்தாள். கடிதம் எழுதலாம் என நினைத்தாள்! நினைப்பு இருந்தது, நேரமிருந்தது, தாள் இருந்தது, பேனா இருந்தது, ஆனால், வீரனுக்குக் கல்வி வாடை இல்லையே! கண்ணம்மா கலங்கிய உள்ளத்துடனே காலத்தைக் கடத்தினாள். வீரனின் ஊடல் தீரும் வரை உலகநாதரிடம் உல்லாச நாடகத்தின் ஒத்திகைகளை நடத்தி வந்தாள்.<br> {{gap}}அப்போதுதான் ஒருநாள்! உலகநாதர்-கண்ணம்மா ஊஞ்சல் ஆட்டம் நடைபெற்றது. கண்ணம்மா கிளறிக் கிளறிக் கேட்ட பிறகு உலகநாதர் வாயைத் திறந்தார்.<noinclude></noinclude> m850kbii7vpkdwrtaiopmwofomeu6lh பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/13 250 570497 1837118 1706163 2025-06-29T13:58:04Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''12'''|பெரிய இடத்துப் பெண்}}</noinclude>{{gap}}உலகநாதர் பண்ணையில் வேலை பார்க்கும் உத்தண்டி என்ற தலையாரி ஒரு கிழவன். அவனது மகள் குமுதா. குமுதம் என்ற பெயரின் சுருக்கம் குமுதா. உத்தண்டியின் தங்கை மகன்தான் வீரன். குமுதாவின் அத்தான். குமுதாவும் வீரனும் குலவிக் கொண்டிருந்ததை உலகநாதர் கண்ட அன்று தான் ஊஞ்சல் உரையாடல் நிகழ்ந்தது.<br> {{gap}}உத்தண்டியின் மகளிடம் உலகநாதருக்கு மோகம். கண்ணம்மா தரும் காதல் ரசத்தைவிடக் குமுதாவின் கொவ்வை இதழ்களில் கசியும் இன்பம் அதிக விலை என்று புள்ளி போட்டார். இவ்வளவுக்கும் அந்த மகானுபாவன் மாதிரி பார்க்ககூட இல்லை. கண்ணம்மா போனால் போகட்டும், கட்டிய புருஷனல்லவா என்று ஊருக்குப் பயந்தோ அல்லது சொத்துக்கு ஆசைப்பட்டோ உலகநாதரிடம் ஆசை காட்டி வாழ்ந்ததை, அவர் அன்பின் சிகரம் என்று நினைத்துவிட்டார். தமது அழகில் ஈடுபட்ட மயக்கம் என முடிவுகட்டிவிட்டார். கண்ணம்மா தம்மையே கடவுளாக நினைத்து விட்டதாகக் கனவு கண்டார்.<br> {{gap}}கடவுளுக்கு நைவேத்தியம் என்று கூறிப் பொங்கல் பள்ளயம் பாவாடை' போட்டு, அதைக் கருத்துக்கேற்ற கனகசுந்தரிகளுக்கு ஊட்டுகின்ற பூசாரியைப் போலவே, கண்ணம்மாவும் தன்னைக் கணவனுக்கு நைவேத்தியம் செய்து இன்பத்தை வீரனுக்கு வழங்கி வந்தாள். இதை அந்த இளித்தவாயர் அறியவில்லை. பாவம்! கடவுளாவது கற்சிலை; கண்ணில்லாதவர்! இந்தக் கணவனுக்கோ கருத்துமில்லை; கவனிப்புமில்லை!<noinclude></noinclude> tgy33w2wnn8oobh7fzsb60qthvh2bpc 1837139 1837118 2025-06-29T14:32:18Z கெரிக்மா 15530 1837139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''12'''|பெரிய இடத்துப் பெண்}} ---------------------------------------</noinclude>{{gap}}உலகநாதர் பண்ணையில் வேலை பார்க்கும் உத்தண்டி என்ற தலையாரி ஒரு கிழவன். அவனது மகள் குமுதா. குமுதம் என்ற பெயரின் சுருக்கம் குமுதா. உத்தண்டியின் தங்கை மகன்தான் வீரன். குமுதாவின் அத்தான். குமுதாவும் வீரனும் குலவிக் கொண்டிருந்ததை உலகநாதர் கண்ட அன்று தான் ஊஞ்சல் உரையாடல் நிகழ்ந்தது.<br> {{gap}}உத்தண்டியின் மகளிடம் உலகநாதருக்கு மோகம். கண்ணம்மா தரும் காதல் ரசத்தைவிடக் குமுதாவின் கொவ்வை இதழ்களில் கசியும் இன்பம் அதிக விலை என்று புள்ளி போட்டார். இவ்வளவுக்கும் அந்த மகானுபாவன் மாதிரி பார்க்ககூட இல்லை. கண்ணம்மா போனால் போகட்டும், கட்டிய புருஷனல்லவா என்று ஊருக்குப் பயந்தோ அல்லது சொத்துக்கு ஆசைப்பட்டோ உலகநாதரிடம் ஆசை காட்டி வாழ்ந்ததை, அவர் அன்பின் சிகரம் என்று நினைத்துவிட்டார். தமது அழகில் ஈடுபட்ட மயக்கம் என முடிவுகட்டிவிட்டார். கண்ணம்மா தம்மையே கடவுளாக நினைத்து விட்டதாகக் கனவு கண்டார்.<br> {{gap}}கடவுளுக்கு நைவேத்தியம் என்று கூறிப் பொங்கல் பள்ளயம் பாவாடை' போட்டு, அதைக் கருத்துக்கேற்ற கனகசுந்தரிகளுக்கு ஊட்டுகின்ற பூசாரியைப் போலவே, கண்ணம்மாவும் தன்னைக் கணவனுக்கு நைவேத்தியம் செய்து இன்பத்தை வீரனுக்கு வழங்கி வந்தாள். இதை அந்த இளித்தவாயர் அறியவில்லை. பாவம்! கடவுளாவது கற்சிலை; கண்ணில்லாதவர்! இந்தக் கணவனுக்கோ கருத்துமில்லை; கவனிப்புமில்லை!<noinclude></noinclude> 36pkbewbm7rctl41lrrea1wdsix6fbo பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/14 250 570498 1837121 1706164 2025-06-29T14:04:14Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |13}}</noinclude>{{gap}}இந்தக் கடவுளுக்குக் காட்டப்பட்ட பிரசாததிற்கு வீரன் நாக்கை நீட்டிக் கொண்டிருந்தான். அது ஒரு காலம்! ஆனால், அதே வீரன் அத்தை மகள் குமுதாவிடம் எஜமானியம்மாள் கற்பித்த பாடங்களை நடத்த நாள் எண்ணி வந்தான்.<br> {{gap}}குமுதாவிடம் ஆவலைக் கொட்டியிருந்த உலகநாதர் உள்ளம் வெதும்பினார், உடல் இளைத்தார்.<br> {{gap}}குமுதா குடியானவன் வீட்டுப் பெண்தான். அலங்காரமில்லாவிட்டாலும் அழகி. 'மேக்கப்' இல்லாவிட்டாலும் மேனியில் ஒரு லளித களை. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், குமுதா ஒரு குளிர்த் தென்றல்!<br> {{gap}}அவள் வீரனுக்குக் கிடைக்க அவனுக்கு உரிமை இருந்தது. அத்தான் என்ற முறையின் காரணமாக மட்டுமல்ல; அவன்தான் அவளுக்கும் சத்தான பொருள். வீரன் எஜமானியம்மாளின் இஷ்டத்திற்குரியவன் என்ற செய்தி குமுதாவுக்குத் தெரியாது. கொழுந்துப்பெண் தானே அவள்! வீரனை நம்பினாள். வீரனும் வாழ்க்கையின் துணையாக அவளை ஏற்றுக்கொள்ளத் துணிந்தான்.<br> {{gap}}இதற்கிடையில் உலகநாதர் நின்றார். குமுதாவை ருசி பார்க்கக் குள்ள நரியா? 'குமுதா எப்படியும் கிட்ட வேண்டும்' - இந்த எண்ணத்தைக் கண்ணம்மாவிடம் கக்கிவிட்டார். ஆம்! ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தபோது தான் உள்ளத்தைத் திறந்தார். ஒளித்து வைத்திருந்ததை எடுத்து நீட்டினார். "கண்ணம்மா என் கண்ணல்ல. நான் உன்னை அலட்சியப்படுத்துவதாக நினைக்<noinclude></noinclude> 3h9sozyg6oahpol6mrcyqo1wakrtrwc 1837141 1837121 2025-06-29T14:32:51Z கெரிக்மா 15530 1837141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |13}} -----------------------------------</noinclude>{{gap}}இந்தக் கடவுளுக்குக் காட்டப்பட்ட பிரசாததிற்கு வீரன் நாக்கை நீட்டிக் கொண்டிருந்தான். அது ஒரு காலம்! ஆனால், அதே வீரன் அத்தை மகள் குமுதாவிடம் எஜமானியம்மாள் கற்பித்த பாடங்களை நடத்த நாள் எண்ணி வந்தான்.<br> {{gap}}குமுதாவிடம் ஆவலைக் கொட்டியிருந்த உலகநாதர் உள்ளம் வெதும்பினார், உடல் இளைத்தார்.<br> {{gap}}குமுதா குடியானவன் வீட்டுப் பெண்தான். அலங்காரமில்லாவிட்டாலும் அழகி. 'மேக்கப்' இல்லாவிட்டாலும் மேனியில் ஒரு லளித களை. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், குமுதா ஒரு குளிர்த் தென்றல்!<br> {{gap}}அவள் வீரனுக்குக் கிடைக்க அவனுக்கு உரிமை இருந்தது. அத்தான் என்ற முறையின் காரணமாக மட்டுமல்ல; அவன்தான் அவளுக்கும் சத்தான பொருள். வீரன் எஜமானியம்மாளின் இஷ்டத்திற்குரியவன் என்ற செய்தி குமுதாவுக்குத் தெரியாது. கொழுந்துப்பெண் தானே அவள்! வீரனை நம்பினாள். வீரனும் வாழ்க்கையின் துணையாக அவளை ஏற்றுக்கொள்ளத் துணிந்தான்.<br> {{gap}}இதற்கிடையில் உலகநாதர் நின்றார். குமுதாவை ருசி பார்க்கக் குள்ள நரியா? 'குமுதா எப்படியும் கிட்ட வேண்டும்' - இந்த எண்ணத்தைக் கண்ணம்மாவிடம் கக்கிவிட்டார். ஆம்! ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தபோது தான் உள்ளத்தைத் திறந்தார். ஒளித்து வைத்திருந்ததை எடுத்து நீட்டினார். "கண்ணம்மா என் கண்ணல்ல. நான் உன்னை அலட்சியப்படுத்துவதாக நினைக்<noinclude></noinclude> 3pgalv14jmuv7fybrriw2297zjlo457 பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/15 250 570499 1837123 1706165 2025-06-29T14:10:58Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''14|பெரிய இடத்துப் பெண்}}</noinclude>காதே! எப்படியாவது ஒருநாள்....குமுதா என் படுக்கையை அலங்கரிக்க வேண்டும்.... இதை நீதான் செய்ய வேண்டும்.... தயவு செய்! உன் தாளைப் பிடிக்கிறேன். இரங்கமாட்டாயா?" என்று வேண்டினார்.<br> {{gap}}அதற்குப் பிறகு நடந்தது என்ன? அந்த வரலாற்றை ஒவ்வொவரும் கூறுகிறார்கள், கேளுங்கள்!<br> '''உத்தண்டி''' {{gap}}பல் முளைத்த நாள் முதல் நான் பண்ணைக்காரர் வீட்டில்தான் அடிமை வேலை பார்க்கிறேன். பரம்பரையாக என் பாட்டன் பூட்டன் எல்லோருமே அடிமைகள்தான். என் தகப்பனுக்கு என்னைச் சுதந்திர மனிதனாக ஆக்க எங்கிருந்து புத்தித் தோன்றும்? உலகநாத முதலியார் என்னைவிட எத்தனையோ வயது இளையவர். நான் அந்தப் பண்ணையில் மாடு மேய்க்கும்போது அவர் பிறக்கக்கூட இல்லை. இப்போது உலகநாதர் என்றாலே அடிவயிற்றில் 'பகீர்' என்கிறது. இத்தனைக்கும் மண்டிக்கடை ஆசாமிதான். ஆனால், லட்சுமி அங்கு விளையாடுகிறாள். அங்கேயே வாசம் செய்கிறாள். அவர் பார்த்து ஒழிக்க வேண்டுமென்றால் ஒழித்துக் கட்டிவிடலாம். என் வீடு, மனை, தோட்டம் எல்லாம் அவரிடம் அடமானம். அந்தத் தைரியத்தில்தான் அவர் என் நெஞ்சத்தைக் குத்திக் கிளறிவிட்டார்.<br> {{gap}}அவருக்கு நான் பட்டிருக்கும் கடன் 500 ரூபாய். உலோபி மனுஷன் நம்மை நம்பி எப்படிக் கடன் கொடுத்தார் என்று நினைத்தேன். அவருடைய தாராள புத்தியின் சரியான காரணம் இப்பொழுதுதான் தெரிந்<noinclude></noinclude> oyimy8mfslt0y9qef9wvbxfdysrwmyr 1837124 1837123 2025-06-29T14:11:31Z கெரிக்மா 15530 1837124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''14|பெரிய இடத்துப் பெண்}}</noinclude>காதே! எப்படியாவது ஒருநாள்....குமுதா என் படுக்கையை அலங்கரிக்க வேண்டும்.... இதை நீதான் செய்ய வேண்டும்.... தயவு செய்! உன் தாளைப் பிடிக்கிறேன். இரங்கமாட்டாயா?" என்று வேண்டினார்.<br> {{gap}}அதற்குப் பிறகு நடந்தது என்ன? அந்த வரலாற்றை ஒவ்வொவரும் கூறுகிறார்கள், கேளுங்கள்!<br> '''உத்தண்டி'''<br> {{gap}}பல் முளைத்த நாள் முதல் நான் பண்ணைக்காரர் வீட்டில்தான் அடிமை வேலை பார்க்கிறேன். பரம்பரையாக என் பாட்டன் பூட்டன் எல்லோருமே அடிமைகள்தான். என் தகப்பனுக்கு என்னைச் சுதந்திர மனிதனாக ஆக்க எங்கிருந்து புத்தித் தோன்றும்? உலகநாத முதலியார் என்னைவிட எத்தனையோ வயது இளையவர். நான் அந்தப் பண்ணையில் மாடு மேய்க்கும்போது அவர் பிறக்கக்கூட இல்லை. இப்போது உலகநாதர் என்றாலே அடிவயிற்றில் 'பகீர்' என்கிறது. இத்தனைக்கும் மண்டிக்கடை ஆசாமிதான். ஆனால், லட்சுமி அங்கு விளையாடுகிறாள். அங்கேயே வாசம் செய்கிறாள். அவர் பார்த்து ஒழிக்க வேண்டுமென்றால் ஒழித்துக் கட்டிவிடலாம். என் வீடு, மனை, தோட்டம் எல்லாம் அவரிடம் அடமானம். அந்தத் தைரியத்தில்தான் அவர் என் நெஞ்சத்தைக் குத்திக் கிளறிவிட்டார்.<br> {{gap}}அவருக்கு நான் பட்டிருக்கும் கடன் 500 ரூபாய். உலோபி மனுஷன் நம்மை நம்பி எப்படிக் கடன் கொடுத்தார் என்று நினைத்தேன். அவருடைய தாராள புத்தியின் சரியான காரணம் இப்பொழுதுதான் தெரிந்<noinclude></noinclude> 2xrx99g39gnl6ylfo3m8vgefkanvnij 1837142 1837124 2025-06-29T14:33:26Z கெரிக்மா 15530 1837142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''14|பெரிய இடத்துப் பெண்}} ------------------------------------</noinclude>காதே! எப்படியாவது ஒருநாள்....குமுதா என் படுக்கையை அலங்கரிக்க வேண்டும்.... இதை நீதான் செய்ய வேண்டும்.... தயவு செய்! உன் தாளைப் பிடிக்கிறேன். இரங்கமாட்டாயா?" என்று வேண்டினார்.<br> {{gap}}அதற்குப் பிறகு நடந்தது என்ன? அந்த வரலாற்றை ஒவ்வொவரும் கூறுகிறார்கள், கேளுங்கள்!<br> '''உத்தண்டி'''<br> {{gap}}பல் முளைத்த நாள் முதல் நான் பண்ணைக்காரர் வீட்டில்தான் அடிமை வேலை பார்க்கிறேன். பரம்பரையாக என் பாட்டன் பூட்டன் எல்லோருமே அடிமைகள்தான். என் தகப்பனுக்கு என்னைச் சுதந்திர மனிதனாக ஆக்க எங்கிருந்து புத்தித் தோன்றும்? உலகநாத முதலியார் என்னைவிட எத்தனையோ வயது இளையவர். நான் அந்தப் பண்ணையில் மாடு மேய்க்கும்போது அவர் பிறக்கக்கூட இல்லை. இப்போது உலகநாதர் என்றாலே அடிவயிற்றில் 'பகீர்' என்கிறது. இத்தனைக்கும் மண்டிக்கடை ஆசாமிதான். ஆனால், லட்சுமி அங்கு விளையாடுகிறாள். அங்கேயே வாசம் செய்கிறாள். அவர் பார்த்து ஒழிக்க வேண்டுமென்றால் ஒழித்துக் கட்டிவிடலாம். என் வீடு, மனை, தோட்டம் எல்லாம் அவரிடம் அடமானம். அந்தத் தைரியத்தில்தான் அவர் என் நெஞ்சத்தைக் குத்திக் கிளறிவிட்டார்.<br> {{gap}}அவருக்கு நான் பட்டிருக்கும் கடன் 500 ரூபாய். உலோபி மனுஷன் நம்மை நம்பி எப்படிக் கடன் கொடுத்தார் என்று நினைத்தேன். அவருடைய தாராள புத்தியின் சரியான காரணம் இப்பொழுதுதான் தெரிந்<noinclude></noinclude> 61s9tibi9nhhq42aathue1hcinqokeb பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/16 250 570500 1837125 1706166 2025-06-29T14:15:57Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு.கருணாநிதி |15}}</noinclude>தது. குமுதா என் பெண்; ஆசை மகள். அவள் அம்மா சாகும்போது குமுதாவை என்னிடம் ஒப்படைத்தாள். குமுதாவுக்கு வாழ்க்கையில் துன்பம் தோன்றவே கூடாது என்று எண்ணினேன். ஆனால், கடவுள் அப்படி நினைக்கவில்லை. உலகநாதரையல்லவா எமனாக அனுப்பியிருந்தான் பாழுங் கடவுள்.<br> {{gap}}அன்று உலகநாதர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ஏதோ சாகுபடி விஷயம் என்று நானும் போனேன். "வா, உத்தண்டி!" என்று அவர் அழைக்கும் போதே அவரது முகத்தில் ஆவல் ததும்பிக்கொண்டிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தில் யாருமே இல்லை, "ஏண்டா உத்தண்டி!" என்று அதிகாரத் தோரணையில் கூப்பிடும் அவர் அன்று பரிவோடு என்னை அழைத்தார். அகம்பாவமாகவே என்னிடம் நடந்துகொள்ளும் அவர் சில நாட்களாக அன்பு வார்த்தைகளையே உபயோகித்தார்.<br> {{gap}}"ஏன் எஜமான் கூப்பிட்டீங்களாம்' என்று கேட்டுக் குனிந்து நின்றேன். "கடனை வளர்த்துக் கொண்டே போகிறாயே, வட்டி வளருதே, தெரியலியா?" என்று கேட்டார். அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுக்கொண்டார். நான் அவர் கருத்தை முதலில் அறியவில்லை; பேசாமல் நின்றேன். "உன் மகளுக்குக் கல்யாணம், காட்சி நடக்கவில்லையா?" என்று அடுத்த கேள்வியைப் போட்டார். அதையும் நான் விகற்பமாகக் கருதவில்லை. பண்ணையாள் குடும்பத்திலே அய்யாவுக்கு அவ்வளவு அக்கறை என்று சந்தோஷப்பட்டுக்கொண்டேன். ஆனால், அதை அவர் நீடிக்க விடவில்லை. நம்<noinclude></noinclude> orusuenm9daxso57c6e5a6d0ffjmj0e 1837143 1837125 2025-06-29T14:34:00Z கெரிக்மா 15530 1837143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு.கருணாநிதி |15}} ---------------------------------</noinclude>தது. குமுதா என் பெண்; ஆசை மகள். அவள் அம்மா சாகும்போது குமுதாவை என்னிடம் ஒப்படைத்தாள். குமுதாவுக்கு வாழ்க்கையில் துன்பம் தோன்றவே கூடாது என்று எண்ணினேன். ஆனால், கடவுள் அப்படி நினைக்கவில்லை. உலகநாதரையல்லவா எமனாக அனுப்பியிருந்தான் பாழுங் கடவுள்.<br> {{gap}}அன்று உலகநாதர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ஏதோ சாகுபடி விஷயம் என்று நானும் போனேன். "வா, உத்தண்டி!" என்று அவர் அழைக்கும் போதே அவரது முகத்தில் ஆவல் ததும்பிக்கொண்டிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தில் யாருமே இல்லை, "ஏண்டா உத்தண்டி!" என்று அதிகாரத் தோரணையில் கூப்பிடும் அவர் அன்று பரிவோடு என்னை அழைத்தார். அகம்பாவமாகவே என்னிடம் நடந்துகொள்ளும் அவர் சில நாட்களாக அன்பு வார்த்தைகளையே உபயோகித்தார்.<br> {{gap}}"ஏன் எஜமான் கூப்பிட்டீங்களாம்' என்று கேட்டுக் குனிந்து நின்றேன். "கடனை வளர்த்துக் கொண்டே போகிறாயே, வட்டி வளருதே, தெரியலியா?" என்று கேட்டார். அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுக்கொண்டார். நான் அவர் கருத்தை முதலில் அறியவில்லை; பேசாமல் நின்றேன். "உன் மகளுக்குக் கல்யாணம், காட்சி நடக்கவில்லையா?" என்று அடுத்த கேள்வியைப் போட்டார். அதையும் நான் விகற்பமாகக் கருதவில்லை. பண்ணையாள் குடும்பத்திலே அய்யாவுக்கு அவ்வளவு அக்கறை என்று சந்தோஷப்பட்டுக்கொண்டேன். ஆனால், அதை அவர் நீடிக்க விடவில்லை. நம்<noinclude></noinclude> g5gq5yywoojen3m8bimjh0nex38o3ab பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/17 250 570501 1837127 1706167 2025-06-29T14:20:15Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''16'''|பெரிய இடத்துப் பெண்}}</noinclude>வீட்டு அண்ணிக்கு வேலைக்காரி ஒருத்தி வேண்டுமாம். "கல்யாணம் ஆகிற வரையிலே உன் மகளை இங்கே விட்டு வையேன்" என்றார். நான் அப்போதுதான் தடுமாறினேன். "அவள் குழந்தைங்கோ. தனியா இங்கே இருக்க பயப்படுவாளே" என்று பல்லைக் காட்டினேன். உன் மகளைக் காட்டிலா கொண்டு வந்து விடப் போகிறாய்! அட பைத்தியக்கார மனுஷா?" என்று ஏளனம் செய்தார் உலகநாதர். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. "எப்போதும் இங்கேதான் இருக்கணுமா?" என்று ஒரு கேள்வியைப் போட்டு வைத்தேன். "அட ஒரு இரண்டு மூணு மாசத்துக்கு இருக்கட்டுமே. என்ன உன் பெண் தேய்ந்தா போய் விடுகிறாள்! கண்ணம்மாவோடு இருந்து பழகினால் குடும்ப விஷயமும் புரியும், வேறு ஒரு புருஷன் வீட்டுக்குப் போனாலும் நல்ல குடித்தனக்காரியென்று பெயரெடுப்பாள்'' என்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். என்னால் மறுக்கவே முடியவில்லை; மறுக்கத் தைரியமும் இல்லை. மறுத்திருந்தால் மறுநாளே அவருடைய கடனை அடைத்தாக வேண்டும். நான் 500 ரூபாய்க்கு அப்பொழுது எங்கு போவேன். இந்தப் பாழுந் தெய்வங்கள் என்னை அப்படியா வைத்திருந்தன? அவைகளுக்குத் தான் என்னைப் பற்றிக் கவலையே கிடையாதே!<br> {{gap}}"உன் மகள் குமுதத்துக்கு மாசம் 20 ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன்.கவலைப்படாதே. அவளுக்கு இங்கு ஒரு கஷ்டமும் இருக்காது. கண்ணம்மாவோடு குஷாலா இருக்கலாம். வேலையும் அதிகமில்லை" என்று மறுபடியும் உலகநாதர் உபந்யாசத்தை ஆரம்பித்தார். கிராமத்திலே பணத்தைக் கண்டால் பகவானைக் கண்டது<noinclude></noinclude> izcamrdvpi513sfxfjq6qurl8w4fqtu 1837144 1837127 2025-06-29T14:34:38Z கெரிக்மா 15530 1837144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''16'''|பெரிய இடத்துப் பெண்}} ---------------------------------------</noinclude>வீட்டு அண்ணிக்கு வேலைக்காரி ஒருத்தி வேண்டுமாம். "கல்யாணம் ஆகிற வரையிலே உன் மகளை இங்கே விட்டு வையேன்" என்றார். நான் அப்போதுதான் தடுமாறினேன். "அவள் குழந்தைங்கோ. தனியா இங்கே இருக்க பயப்படுவாளே" என்று பல்லைக் காட்டினேன். உன் மகளைக் காட்டிலா கொண்டு வந்து விடப் போகிறாய்! அட பைத்தியக்கார மனுஷா?" என்று ஏளனம் செய்தார் உலகநாதர். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. "எப்போதும் இங்கேதான் இருக்கணுமா?" என்று ஒரு கேள்வியைப் போட்டு வைத்தேன். "அட ஒரு இரண்டு மூணு மாசத்துக்கு இருக்கட்டுமே. என்ன உன் பெண் தேய்ந்தா போய் விடுகிறாள்! கண்ணம்மாவோடு இருந்து பழகினால் குடும்ப விஷயமும் புரியும், வேறு ஒரு புருஷன் வீட்டுக்குப் போனாலும் நல்ல குடித்தனக்காரியென்று பெயரெடுப்பாள்'' என்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். என்னால் மறுக்கவே முடியவில்லை; மறுக்கத் தைரியமும் இல்லை. மறுத்திருந்தால் மறுநாளே அவருடைய கடனை அடைத்தாக வேண்டும். நான் 500 ரூபாய்க்கு அப்பொழுது எங்கு போவேன். இந்தப் பாழுந் தெய்வங்கள் என்னை அப்படியா வைத்திருந்தன? அவைகளுக்குத் தான் என்னைப் பற்றிக் கவலையே கிடையாதே!<br> {{gap}}"உன் மகள் குமுதத்துக்கு மாசம் 20 ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன்.கவலைப்படாதே. அவளுக்கு இங்கு ஒரு கஷ்டமும் இருக்காது. கண்ணம்மாவோடு குஷாலா இருக்கலாம். வேலையும் அதிகமில்லை" என்று மறுபடியும் உலகநாதர் உபந்யாசத்தை ஆரம்பித்தார். கிராமத்திலே பணத்தைக் கண்டால் பகவானைக் கண்டது<noinclude></noinclude> rch8zbb1me8291bqrcx5ja4o1errr4u பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/18 250 570502 1837129 1706168 2025-06-29T14:24:21Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |17}}</noinclude>போலத்தானே! அதுவும் என்போன்ற தலையாரிகளுக்குக் கேட்கவா வேண்டும்! கோபாலகிருஷ்ண பிள்ளை மகள் பள்ளிக்கூடத்திலே 10 கிளாஸ் படிச்சுப்பிட்டு வாத்தியாரம்மா வேலை பார்த்து மாசம் 20 ரூபாய் சம்பாதிக்கிறாள். ஒன்றுமில்லாமல் என் குமுதாவுக்கு. 20 ரூபாய் சம்பளம் என்றதும் எனக்குச் சபலம் தட்டிற்று; சிறிது ஆசையும் ஏற்பட்டது. அவளுக்கு மாதா மாதம் வரும் இருபது ரூபாயை அப்படியே மீத்துப் புருஷன் வீட்டுக்குப் வீட்டுக்குப் போகும்போது சீதனமாகக் கொடுத்தனுப்பலாமென்று திட்டங்கள் போட்டு விட்டேன். உலகநாதரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தேன்.<br> {{gap}}இந்த அபிப்பிராயத்தை என் குமுதாவிடம் கூறினேன். குமுதா குழந்தை மனம் படைத்தவள் அல்லவா? என்னைப் பிரிந்து வேறு ஒரு வீட்டில் வேலை செய்யத் தயங்கினாள். "இந்த ஊர்தானே அம்மா! ஏன் பயப்படுகிறாய்? நான் உன்னை அடிக்கடி எஜமான் வீட்டிலே வந்து பார்க்கிறேன். பயப்படாதே" என்று சப்பைக்கட்டுகள் கட்டினேன். அவளும் உலகநாதர் வீட்டுக்கு வேலைக்காரியாகப் போகச் சம்மதித்தாள். அதன்படி அங்குச் சென்று வேலையிலும் அமர்ந்தாள். பிறகுதான் நான் செய்தவற்றை உணர்ந்தேன். குமுதாவைக் குழியில் போட்டுப் புதைத்த குருட்டுப் புத்திக்காரனானேன். இன்னும் சொல்லட்டுமா? குமுதா ஒரு நாள் உலகநாதர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்திருந்தாள். நான் திடீரென்று அங்குப் பிரவேசித்தேன். குமுதா கண்களைத் துடைத்துக்கொண்டு அவசரமாக எழுந்து, "அப்பா!" என்று கூவிக்கொண்டு என்னிடம் ஓடிவந்தாள். "ஏன் குமுதா, அழுகிறாய்?" என்<br> {{gap}}2<noinclude></noinclude> mhaz1eltkfv6d3diva3p7jzej9fiv9a 1837146 1837129 2025-06-29T14:35:12Z கெரிக்மா 15530 1837146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |17}} ----------------------------------</noinclude>போலத்தானே! அதுவும் என்போன்ற தலையாரிகளுக்குக் கேட்கவா வேண்டும்! கோபாலகிருஷ்ண பிள்ளை மகள் பள்ளிக்கூடத்திலே 10 கிளாஸ் படிச்சுப்பிட்டு வாத்தியாரம்மா வேலை பார்த்து மாசம் 20 ரூபாய் சம்பாதிக்கிறாள். ஒன்றுமில்லாமல் என் குமுதாவுக்கு. 20 ரூபாய் சம்பளம் என்றதும் எனக்குச் சபலம் தட்டிற்று; சிறிது ஆசையும் ஏற்பட்டது. அவளுக்கு மாதா மாதம் வரும் இருபது ரூபாயை அப்படியே மீத்துப் புருஷன் வீட்டுக்குப் வீட்டுக்குப் போகும்போது சீதனமாகக் கொடுத்தனுப்பலாமென்று திட்டங்கள் போட்டு விட்டேன். உலகநாதரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தேன்.<br> {{gap}}இந்த அபிப்பிராயத்தை என் குமுதாவிடம் கூறினேன். குமுதா குழந்தை மனம் படைத்தவள் அல்லவா? என்னைப் பிரிந்து வேறு ஒரு வீட்டில் வேலை செய்யத் தயங்கினாள். "இந்த ஊர்தானே அம்மா! ஏன் பயப்படுகிறாய்? நான் உன்னை அடிக்கடி எஜமான் வீட்டிலே வந்து பார்க்கிறேன். பயப்படாதே" என்று சப்பைக்கட்டுகள் கட்டினேன். அவளும் உலகநாதர் வீட்டுக்கு வேலைக்காரியாகப் போகச் சம்மதித்தாள். அதன்படி அங்குச் சென்று வேலையிலும் அமர்ந்தாள். பிறகுதான் நான் செய்தவற்றை உணர்ந்தேன். குமுதாவைக் குழியில் போட்டுப் புதைத்த குருட்டுப் புத்திக்காரனானேன். இன்னும் சொல்லட்டுமா? குமுதா ஒரு நாள் உலகநாதர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்திருந்தாள். நான் திடீரென்று அங்குப் பிரவேசித்தேன். குமுதா கண்களைத் துடைத்துக்கொண்டு அவசரமாக எழுந்து, "அப்பா!" என்று கூவிக்கொண்டு என்னிடம் ஓடிவந்தாள். "ஏன் குமுதா, அழுகிறாய்?" என்<br> {{gap}}2<noinclude></noinclude> 1tatqn9gbb5gyihndbi54zzfndu3zx2 பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/19 250 570503 1837136 1706169 2025-06-29T14:30:12Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh||'''18'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>றேன். என் மனம் பட்டபாட்டை ஈசன்தான் அறிவான். குமுதா தேம்பினாள். அழுது அழுது அவள் முகம் வீங்கியிருந்தது. கண்கள் செக்கச் செவேலெனத் தோன்றின. என் கால்கள் நடுங்கின. கைகள் உதறலெடுத்தன. குமுதா பேசத் தொடங்கினாள். ஆனால், வாய் குளறிற்று. சில வார்த்தைகள் சொன்னாள். அவைகள் என் காதில் ஈட்டிகளைப் பாய்ச்சின. அதற்குள் எஜமானி கண்ணம்மா, குமுதா! குமுதா! என்று அழைத்தாள். குமுதா ஓடிவிட்டாள். நான் வீடு திரும்பினேன். அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கம் இல்லை. "குமுதா! குமுதா!" என்று புலம்பினேன்.<br> {{gap}}என் தங்கை மகன் வீரனுக்காக என் அருமைக் குமுதாவை வைத்திருந்தேன். வீரனையும் குமுதாவையும் மணக்கோலத்தோடு பார்க்க எண்ணியிருந்தேன். ஆனால் அதற்குமுன் அவர்கள் ஜோடியாகி விட்டார் கல்யாணத்தை முடித்துவிடலாமென்று இருந்தேன், இந்த கபோதியிடம் காசு ஏது? காசில்லாக் கஷ்டத்தால் தானே நான் உலகநாதர் உத்தரவுக்கு இணங்கி என் குமுதாவை வேலைக்காரியாக அனுப்பினேன்!<br> {{gap}}அந்தக் கண்ணம்மா இவ்வளவு கைகாரி என்று எனக்குத் தெரியாதே! என் வயிற்றை எரிய விட்டு விட்டாளே! அடி விபசாரி.<br> '''கண்ணம்மா'''<br> {{gap}}ஆம்! நான் விபசாரிதான். அது என் குற்றமா ! என் மனதுக்கேற்றவனை மணம் முடித்திருந்தால் என்<noinclude></noinclude> i7ha1aqrg725gqstofmqvcn2fsbuvkr 1837149 1837136 2025-06-29T14:36:40Z கெரிக்மா 15530 1837149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''18'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>றேன். என் மனம் பட்டபாட்டை ஈசன்தான் அறிவான். குமுதா தேம்பினாள். அழுது அழுது அவள் முகம் வீங்கியிருந்தது. கண்கள் செக்கச் செவேலெனத் தோன்றின. என் கால்கள் நடுங்கின. கைகள் உதறலெடுத்தன. குமுதா பேசத் தொடங்கினாள். ஆனால், வாய் குளறிற்று. சில வார்த்தைகள் சொன்னாள். அவைகள் என் காதில் ஈட்டிகளைப் பாய்ச்சின. அதற்குள் எஜமானி கண்ணம்மா, குமுதா! குமுதா! என்று அழைத்தாள். குமுதா ஓடிவிட்டாள். நான் வீடு திரும்பினேன். அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கம் இல்லை. "குமுதா! குமுதா!" என்று புலம்பினேன்.<br> {{gap}}என் தங்கை மகன் வீரனுக்காக என் அருமைக் குமுதாவை வைத்திருந்தேன். வீரனையும் குமுதாவையும் மணக்கோலத்தோடு பார்க்க எண்ணியிருந்தேன். ஆனால் அதற்குமுன் அவர்கள் ஜோடியாகி விட்டார் கல்யாணத்தை முடித்துவிடலாமென்று இருந்தேன், இந்த கபோதியிடம் காசு ஏது? காசில்லாக் கஷ்டத்தால் தானே நான் உலகநாதர் உத்தரவுக்கு இணங்கி என் குமுதாவை வேலைக்காரியாக அனுப்பினேன்!<br> {{gap}}அந்தக் கண்ணம்மா இவ்வளவு கைகாரி என்று எனக்குத் தெரியாதே! என் வயிற்றை எரிய விட்டு விட்டாளே! அடி விபசாரி.<br> '''கண்ணம்மா'''<br> {{gap}}ஆம்! நான் விபசாரிதான். அது என் குற்றமா ! என் மனதுக்கேற்றவனை மணம் முடித்திருந்தால் என்<noinclude></noinclude> 6b4zkl4siam83hqeq51b60rh5y0eo3i பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/20 250 570504 1837152 1706170 2025-06-29T14:41:10Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு.கருணாநிதி |19}}</noinclude>நிலை இப்படி ஆகி இருக்குமா? நான் சிறுமியாயிருக்கும் போது, எவ்வளவோ நல்லவளாகத்தான் இருந்தேன். ஊரில் கண்ணம்மா என்றாலே தனிப் பிரியந்தான் காட்டினார்கள். எனக்குக் கடவுளிடத்தில் அபார பக்தி இருந்தது. கிழமை தவறினாலும் தவறும், என்னுடைய விரதங்கள் தவறா. அம்பிகைக்குப் படையல் செய்து விட்டுத்தான் சாப்பிடுவேன். எதிர்காலத்தில் ஒரு பெரிய 'பக்திமானியாக வேண்டுமென்ற பேராசையால் என் நெஞ்சம் நிரப்பப்பட்டிருந்தது. சதா சர்வ காலமும் தெய்வத்தின் திரு நாமங்களையே உச்சரித்துக்கொண்டிருப்பேன். இப்பொழுதுதான் என்ன? எப்பொழுதும் ஆண்டவனைத் துதித்த வண்ணமே தான் இருக்கிறேன். குற்றம் செய்தவர்கள்தானே மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்! நான் செய்த விஷமகரமான விபரீதச் செயல்களுக்குக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத்தானே வேண்டும்! ஆனால் ஒன்று. அதை யாரும் கவனியாது விட்டு விடாதீர்கள்! பகவானிடம் மன்னிப்புப் பெற்றுவிடலாமென்ற தைரியத்தில் நான் இன்னும் என்னுடலில் ஊறிப்போன செய்கைகளை விட்டு விடாமல்தான் இருக்கிறேன்; அதை ஏன் கேட்கிறீர்கள்! விபசாரி வேதாந்தம் பேசுகிறாள் என்று கூறுவீர்கள், விவேகமொழி கூறுகிறாள் என்று ஏளனம் செய்வீர்கள். என்னைப்பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ பதில்! கண்ணம்மா ஒரு விபசாரி! கண்ணம்மா ஒரு பக்த சிரோன்மணி! போதுமா? இன்னும் வேண்டுமானாலும் இதோ விளக்கம். கேளுங்கள்!<br> {{gap}}என் தகப்பனார் நல்ல செல்வந்தர். என் தாயார் என்னை வெகு அருமையாக வளர்த்தாள். நானும்<noinclude></noinclude> 0clct8csy3l157g69zjg6b6lhtmitkl 1837153 1837152 2025-06-29T14:41:45Z கெரிக்மா 15530 1837153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு.கருணாநிதி |19}} ---------------------------------</noinclude>நிலை இப்படி ஆகி இருக்குமா? நான் சிறுமியாயிருக்கும் போது, எவ்வளவோ நல்லவளாகத்தான் இருந்தேன். ஊரில் கண்ணம்மா என்றாலே தனிப் பிரியந்தான் காட்டினார்கள். எனக்குக் கடவுளிடத்தில் அபார பக்தி இருந்தது. கிழமை தவறினாலும் தவறும், என்னுடைய விரதங்கள் தவறா. அம்பிகைக்குப் படையல் செய்து விட்டுத்தான் சாப்பிடுவேன். எதிர்காலத்தில் ஒரு பெரிய 'பக்திமானியாக வேண்டுமென்ற பேராசையால் என் நெஞ்சம் நிரப்பப்பட்டிருந்தது. சதா சர்வ காலமும் தெய்வத்தின் திரு நாமங்களையே உச்சரித்துக்கொண்டிருப்பேன். இப்பொழுதுதான் என்ன? எப்பொழுதும் ஆண்டவனைத் துதித்த வண்ணமே தான் இருக்கிறேன். குற்றம் செய்தவர்கள்தானே மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்! நான் செய்த விஷமகரமான விபரீதச் செயல்களுக்குக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத்தானே வேண்டும்! ஆனால் ஒன்று. அதை யாரும் கவனியாது விட்டு விடாதீர்கள்! பகவானிடம் மன்னிப்புப் பெற்றுவிடலாமென்ற தைரியத்தில் நான் இன்னும் என்னுடலில் ஊறிப்போன செய்கைகளை விட்டு விடாமல்தான் இருக்கிறேன்; அதை ஏன் கேட்கிறீர்கள்! விபசாரி வேதாந்தம் பேசுகிறாள் என்று கூறுவீர்கள், விவேகமொழி கூறுகிறாள் என்று ஏளனம் செய்வீர்கள். என்னைப்பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ பதில்! கண்ணம்மா ஒரு விபசாரி! கண்ணம்மா ஒரு பக்த சிரோன்மணி! போதுமா? இன்னும் வேண்டுமானாலும் இதோ விளக்கம். கேளுங்கள்!<br> {{gap}}என் தகப்பனார் நல்ல செல்வந்தர். என் தாயார் என்னை வெகு அருமையாக வளர்த்தாள். நானும்<noinclude></noinclude> s4g1gl4v5hdikm8b4224833qywca6kn பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/21 250 570505 1837159 1706171 2025-06-29T14:46:26Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''20'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>நன்றாகத்தான் வளர்ந்தேன். எப்படியோ எனக்குத் தெரியாது; ஒருநாள் உலகநாதரின் திருஷ்டியில் பட்டு விட்டேன். 'ஆண்கள் இருக்கும் பக்கத்தில் போகக் கூடாது' என்று என் அன்னை அடிக்கடி கூறித்தான் வந்தாள். ஆனால் கால வித்தியாசம், அவரது கழுகுப் பார்வைக்கு இரையானேன். இடுக்கி; கால்களின் இடும்புப் பிடியில் எலிகளைத் தூக்கிச் செல்லும் கழுகைப் போலவே, உலகநாதர் என்னை அடைந்துவிட்டார்.அந்த வயிற்றெரிச்சலை வர்ணிப்பானேன்! உலகநாதருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆமாம், வாழ்க்கையை ஒப்பந்தம் செய்து வைக்கப்பட்டேன். அதன் பெயர் திருமணமா? கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுக் கரடியோடு கொஞ்சு என்று கட்டளை இடுவதற்குப் பெயர் தான் 'திருமண'மென்றால், எனக்கு நடந்ததும் திருமணம்தான். விஷத்தை வேலில் தடவி விழியில் சொருகுவதற்குப் பெயர்தான் 'வாழ்க்கை ஒப்பந்தம்' என்றால் எனக்கு நடந்ததும் வாழ்க்கை ஒய்பந்தந்தான்! உலகநாதர் எனக்குக் காண்டாமிருகமாகத் தோன்றினாரே யொழியக் கணவனாகக் காட்சியளிக்கவில்லை. உலகத்தின் விகாரமே உருப்பெற்றெழுந்ததுதான் உலகநாதர். நான் என்ன செய்வேன்; அவருக்கு என்னவோ இளமை இருந்தது உண்மை. ஆனால், என் இதயத்தைக் கவரும் இன்முகம் கிடையாதே! அவர் வாலிபமுறுக்குள்ளவர்தான். ஆனால், அந்த வடிவம் வராகத்தைப் பழிப்பது போலவா இருக்க வேண்டும்? இவைகள் நான் பொறுத்துக்கொள்ளக் கூடாதா என்று நீங்கள் கேட்பீர்கள். 'புல்லென்றாலும் புருஷன், கல்லென்றாலும் கணவன்' என்று புராணக் காலக்ஷேபங்<noinclude></noinclude> b0lgbtuqb0jc1i22m5am7tw1dfwdknn பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/22 250 570506 1837173 1706172 2025-06-29T15:42:55Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு.கருணாநிதி |21}} -----------------------------------</noinclude>கூட நடத்துவீர்கள். என் நிலையில் நீங்கள் இருந்து பார்த்தால் அப்படிப் பேசமாட்டீர்கள். உலகநாதரின் குரலைப்பற்றி ஒரே ஒரு வார்த்தை, வாயைத் திறந்தாலே போதும், வாந்தியெடுப்பவனுக்கு வயிற்றிலிருந்து கிளம்புவது போன்ற வறட்டுச் சப்தம். அதைக் கோகிலத் தொனி என்று தான் கூறிக்கொள்ள வேண்டுமா? நீங்கள்தான் தீர்ப்புக் கூறுங்களேன். என்னைப் பற்றி நானே கூறிக்கொள்வதாக எண்ணாதீர்கள். ஒரு பணக்கார வீட்டுப்பெண், போதுமான அழகுடையவள். இளமையின் எழுச்சியில், இன்பத்தின் அடிவாரத்தில் உலாவத் தொடங்குபவள், 'எண்ணாத எண்ணங்கள் எண்ணியவள்' எதிர்காலத்தைப் பற்றி எட்டாத பேராசைக் "கோட்டைகள் கட்டியவள்," "கண்ணம்மாளா? கட்டழகியாயிற்றே! கட்டுடல் வாய்ந்தவளாயிற்றே!" என்று ஊராரின் மதிப்புரையைப் பெற்றவள் கடைசியில் ஒரு கண்ராவியான மனிதனைக் கட்டிக்கொள்வதென்றால், அது நியாயமா? பச்சிளங் குழந்தையும் பரிகாசஞ் செய்யுமே! தோழிகள் 'தூ' என்று துப்புவார்களே!<br> {{gap}}இது என்ன, வராகாவதாரத்தைக் கண்டு பூமா தேவி விரகதாபங்கொண்ட காலமா? அதுவுமில்லையே! என்னை விபசாரி என்று கூறுகிறீர்களே; எனக்கு அந்த வாழ்வை அமைத்துக் கொடுத்தது உங்கள் வைதீக உலகந்தானே !<br> {{gap}}வாழ்வில் கோணல் ஏற்பட்டு விட்டதே என்று வாடினேன்; வதங்கினேன். ஆனால் அதை உலகநாதரிடம் காட்டிக்கொள்ளவில்லை. என் தாய் தந்தையரைச் சபித்துக்கொண்டிருந்தேன், என் சாபங்களுக்கு மட்<noinclude></noinclude> 6x6iodohs1pbbqsq23ly675w5rawe7l பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/23 250 570507 1837174 1706173 2025-06-29T15:46:44Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''22'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>டும் சக்தி இருந்திருக்குமானால். இந்த உலகமே அழிந்து போயிருக்கும். என் தாயகத்திலிருந்து சீதனங்கள் வந்து குவிந்தன. கட்டில்களென்ன, கம்மல்களென்ன, ஏதேதோ வழங்கினார்கள். வழக்கத்தைவிடாமல் செய்து விட்டார்கள்; அவ்வளவுதான்! அவர்கள் அள்ளி அள்ளிக் கொடுத்த அவ்வளவும் எனக்குத் தேவையில்லை. என் கருத்துக் கேற்றவரைத் தேடித்தராத அந்தப் 'பெற்ற பேய்கள்' எனக்கு எதை வாரிக்கொடுத்தால்தான் என்ன? ஓர் ஆணழகரை மட்டும் எனக்குத் துணைவராகச் செய்திருந்தால் போதுமே! சீதனமா வேண்டும், எனக்குச் சீதனம் !<br> {{gap}}பார்த்தேன். வண்டிக்கார வீரன் வாட்டத்தைப் போக்க முன்வந்தேன். வெற்றி பெற்ற வீராப்பில் பெருமூச்சுவிட்டேன். அகழ் பல கடந்து, அரும்பாடு பட்டு அந்நியனுடைய கோட்டையைக் கைப்பற்றியது போல ஆனந்தங் கொண்டேன். இதய வீதியில் எண்ணப் பட்டாளம் ஜெயபேரிகை முழங்கிச் சென்றது. குனிந்து கிடந்த என் இளமை கொக்கரித்துக் கொடியேந்திப் புறப்பட்டது. "என்னடி வேசி! அளக்க ஆரம்பித்துவிட்டாய்" என்று ஆத்திரப் படுகிறீர்களா? சற்றுப் பொறுங்கள். இதோ பாருங்கள், வீரனுக்கும் உலகநாதருக்கும் உள்ள வித்தியாசங்களை!<br> {{gap}}உலகநாதரிடம் இளமை மட்டுமிருந்தது, வீரனிடம் அந்த இளமைக்கேற்ற அழகு இருந்தது! உலகநாதர் உருட்டுச் சட்டிப் பொம்மை; வீரன் வடிவழகன்! உலக நாதர் உன்மத்தர்; வீரன் விவேகி! உலகநாதரிடம் செல்வமிருந்தது; சிங்காரமில்லை! வீரன் ஏழைதான்<noinclude></noinclude> 9fl14r3jipxi1r2k76305dagodnihre பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/24 250 570508 1837175 1706174 2025-06-29T15:50:50Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |23}} ---------------------------------</noinclude>ஆனால், எழில் மிக்கவன் எனக்கு வேண்டியது. அது தானே! உலகநாதரின் குரலில் ஒரே கரகரப்பு, வீரனின் தொனியில் வீணை கிளப்பும்!உலகநாதரின் கண்களுக்கு ஆந்தை அருமையான உதாரணம்; வீரனின் கண்களோ என் விலாவைக் குத்தி வேதனைக் கிளப்பிய வேல்கள்! உலகநாதரின் பல்வரிசை பார்க்கப் பயங்கரம்; வீரனின் பற்களோ முத்துக் கோவை!<br> {{gap}}அவ்வளவு ஏன்? வீரன் என்னை இந்திர விமானத்தில் இட்டுச் சென்றான். இன்பபுரியில் சுற்றுப் பிரயாணம் செய்ய.<br> {{gap}}வீரனுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதை உலக நாதர் அறியவே இல்லை. அவர் அறியாதபடியே நான் நடந்துக்கொண்டேன். அவரது ஆசை மனைவிபோல நடந்தேன். அவரைக் கடவுளாகக் கருதுவதாகக் கூறினேன். பாதங்களைக் கண்களில் ஒத்திக்கொண்டேன். பாசமுள்ள பத்தினிமேல் பாசாங்கு செய்தேன். உலகநாதர் என்னை நம்பியே இருந்தார். இவ்வளவு நாடகமும் நான் ஆடாவிட்டால் அவர் என்னை நம்புவாரா ? தலையை வலிக்கிறது என்று சொல்வார்; எனக்கே வலி ஏற்பட்டதாக வருத்தத்தை வரவழைத்துக் கொள்வேன், அவர் நன்றாக ஏமாந்து விடுவார். ஏமாறட்டுமே! எனக்கென்ன!<br> {{gap}}வீரன் என் வலையில் சாதாரணமாக விழுவேன் என்றானா? அப்பப்பா! எவ்வளவு கஷ்டம்? எஜமானி அம்மாள் ஆயிற்றே என்று முதலில் பார்த்தான். பெரிய இடத்து விஷயமாயிற்றே என்று கலங்கினான். 'ஒய்யா<noinclude></noinclude> lrpewpwo8o8cncfgdbkjlowqywx9kg9 பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/25 250 570509 1837178 1706175 2025-06-29T15:54:37Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''24'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>ரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்' என்பதை அவன் எப்படி அறிவான். பாவம்!<br> {{gap}}எப்படியோ காரியம் கைகூடிற்று. என் கணவர் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். வாசலில் கை கட்டி நிற்கும் வண்டிக்காரனுக்கு ரயிலுக்கு வண்டி கொண்டு போகும் வேலை மட்டுந்தானா? என்னை வட்டமிடும் வேலையும் வந்து சேர்ந்தது. உலகநாதர் ஊரிலே! நானும் வீரனும் உல்லாசபுரியிலே! அவர் காட்டிலோ மேட்டிலோ அலைவார். அதைப் பற்றிக் கவலையில்லை நாங்கள் கட்டிலிலே!<br> {{gap}}வீரனுக்கு முதலில் என்னைத் தீண்டுவதற்குப் பயம்! தீண்டிய பிற்பாடு அய்யா பார்த்துவிடுவாரோ என்ற அச்சம்! சங்கதி பரவிவிடுமோ என்ற சந்தேகம்! கடைசியில் அவர் எப்பொழுது வெளியூர் செல்வார் என்ற ஏக்கம்! இந்த நிலைமையில் எங்கள் காதல் வளர்ந்தது. மாதங்கள் ஒன்று இரண்டு இப்படிப் பல மாதங்கள்! ஏன் இரண்டு மூன்று வருடங்களும் ஆகிவிட்டன. இதில் இன்னொரு பயங்கரமும் நடந்துவிட்டது. நானும் வீரனும் சேர்ந்து கொலையும் செய்துவிட்டோம். என் வயிற்றில் வளர்ந்த இரண்டரை மாதச் சிசுவை யம லோகத்திற்கு அனுப்பினோம். அதற்கு வீரன்தான் மருந்து வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தான். பிறக்கும் குழந்தை வீரனைப்போல் இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமே கொலைக்குக் காரணம். இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள் கண்ணம்மா ஒரு கொலைகாரி என்று. அதைப்பற்றி எனக்குக் கவலை<noinclude></noinclude> byxcsllbbqx5mydjhnpthf0to2vso3h பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/26 250 570510 1837183 1706176 2025-06-29T16:12:51Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |25}} ---------------------------------</noinclude>யில்லை. என் உடம்பில் ஏதாவது கூச்சம் இருந்தால் தானே! என் மனசுதான் மறத்துப் போய்விட்டதே!<br> {{gap}}குழந்தையை அழித்த சில நாட்களுக்குப் பிறகு வீரனுக்கும் எனக்கும் நடுவே ஒரு தொய்வு ஏற்பட்டது.<br> {{gap}}திடீரென்று வீரன் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டான். என்னைக் கண்டாலே பிடிக்காதவன் போல் நடந்துகொண்டான். நான் ஏதாவது கேட்டால் 'வெடுக்'கென்று பதிலைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவான். எத்தனையோ முறை உலகநாதர் வெளியூர் சென்று வந்தார். நான் அந்த நேரங்களையெல்லாம் தனியாகவே கழித்து வந்தேன். பலமுறை வீரனுக்கு ஆள் அனுப்பிப் பார்த்தேன். அவசரச் செய்தி என்று கூப்பிட்டேன். ஒன்றுக்கும் அவன் அசையவில்லை. காரணந் தெரியாது விழித்தேன்.<br> {{gap}}என்னுடைய கலக்கத்தைக் கண்டு என் கணவர், "என்ன கண்ணம்மா வருத்தம்?" என்று கேட்பார். "ஒன்றுமில்லை; உடம்பு சரியில்லை" என்பேன். உடனே அவர் எனக்குச் சிகிச்சைகள் செய்ய ஆரம்பிப்பார். அவர் அறிந்துகொள்ள முடியாத நோய் எனக்கு! அதை நீக்க அவர் கொண்டுவந்து தரமுடியாத மருந்து ஒன்று இருந்தது. அதை அவர் எப்படி அறிவார், பாவம்! இந்த நிலையிலே ஒரு சில மாதங்கள் ஓடின.<br> {{gap}}என்னுடன் பட்சமாயிருந்த உலகநாதரும் திடீரென்று மாறிவிட்டார். எப்பொழுதும் சிந்தனை; எப்பொழுதும் வெறுப்பு; எப்பொழுதும் கடுகடுப்பு!<br> {{gap}}சாதாரண வேளையிலேயே என் நாயகரைப் பார்க்க ஆயிரங் கண்கள் வேண்டும். அதுவும் இந்த நிலைமையி<noinclude></noinclude> smd3526v4ydbmy8oed24ky638y76phe பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/27 250 570511 1837186 1706177 2025-06-29T16:20:00Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''26'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>லேயே எப்படி இருப்பார் என்று நான் சொல்லவும் வேண்டுமா! அவர் இப்படி ஒரேயடியாக மாறிவிட்டதற்கு எனக்குக் காரணம் புரியவில்லை. ஒருவேளை வீரனுக்கும் எனக்கும் உள்ள "இரகசியம்" அம்பலமாகி விட்டதோ என்று நடுக்கமுற்றேன். அல்லது வேறு ஏதாவது புதுவித வியாதியோ என்று ஐயமுற்றேன். நான் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஒரு பக்கம் வீரனில்லா வாழ்வு! இன்னொரு பக்கம் உலகநாதர் பற்றிய ஆராய்ச்சி! இரண்டிற்கும் நடுவில் நின்று தவித்தேன். உலகநாதரிடம் எவ்வளளோ கேட்டுப் பார்த்தேன். அவர் மௌனமே சாதித்தார்.<br> {{gap}}ஒரு நாள் இரவு 9 மணிக்கு இருக்கும். உலகநாதர் எங்கேயோ போய்விட்டு வீட்டுக்கு வந்தார். ஊஞ்சலில் உட்கார்ந்தார். நானும் அவர் அருகில் அமர்ந்தேன். அவருடைய முகத்தைக் காணச் சகிக்கவில்லை. அந்த அகண்ட சச்சிதானந்த விழிகளைப் புருவத்தின் பக்கம் ஏற்றி எங்கேயோ யோசனையை ஓட்டிக்கொண்டிருந்தார். நான் நடிக்க ஆரம்பித்தேன். ஊஞ்சலிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். உண்மையாக அல்ல, உலக நாதரை ஏமாற்ற. உலகநாதர் என்னை வாரியெடுத்துத் தடவிக் கொடுத்தார். அந்த ஸ்பரிசத்தால் என் வலி நீங்குமென்று அவர் எண்ணியிருக்கலாம். 'வீரனிருக்க வேண்டிய இடத்தில் இந்த வீணனா' என்று என் மனம் துடித்துக்கொண்டதை அவர் எப்படி அறிவார்? மறுபடியும் ஊஞ்சலில் உட்கார்ந்தோம். ஊஞ்சல் அசைந்தது; உலகநாதரும் பேச்சை ஆரம்பித்தார்.<br> {{gap}}(எங்கள் பண்ணையிலே தலையாரி உத்தண்டி என்று ஒரு கிழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு ஒரு<noinclude></noinclude> t51guiucz422pktxerrrwxs5l5komq6 1837188 1837186 2025-06-29T16:22:12Z கெரிக்மா 15530 1837188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''26'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>லேயே எப்படி இருப்பார் என்று நான் சொல்லவும் வேண்டுமா! அவர் இப்படி ஒரேயடியாக மாறிவிட்டதற்கு எனக்குக் காரணம் புரியவில்லை. ஒருவேளை வீரனுக்கும் எனக்கும் உள்ள "இரகசியம்" அம்பலமாகி விட்டதோ என்று நடுக்கமுற்றேன். அல்லது வேறு ஏதாவது புதுவித வியாதியோ என்று ஐயமுற்றேன். நான் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஒரு பக்கம் வீரனில்லா வாழ்வு! இன்னொரு பக்கம் உலகநாதர் பற்றிய ஆராய்ச்சி! இரண்டிற்கும் நடுவில் நின்று தவித் தேன். உலகநாதரிடம் எவ்வளளோ கேட்டுப் பார்த் தேன். அவர் மௌனமே சாதித்தார்.<br> {{gap}}ஒரு நாள் இரவு 9 மணிக்கு இருக்கும். உலகநாதர் எங்கேயோ போய்விட்டு வீட்டுக்கு வந்தார். ஊஞ்சலில் உட்கார்ந்தார். நானும் அவர் அருகில் அமர்ந்தேன். அவருடைய முகத்தைக் காணச் சகிக்கவில்லை. அந்த அகண்ட சச்சிதானந்த விழிகளைப் புருவத்தின் பக்கம் ஏற்றி எங்கேயோ யோசனையை ஓட்டிக்கொண்டிருந்தார். நான் நடிக்க ஆரம்பித்தேன். ஊஞ்சலிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். உண்மையாக அல்ல, உலக நாதரை ஏமாற்ற. உலகநாதர் என்னை வாரியெடுத்துத் தடவிக் கொடுத்தார். அந்த ஸ்பரிசத்தால் என் வலி நீங்குமென்று அவர் எண்ணியிருக்கலாம். 'வீரனிருக்க வேண்டிய இடத்தில் இந்த வீணனா' என்று என் மனம் துடித்துக்கொண்டதை அவர் எப்படி அறிவார்? மறு படியும் ஊஞ்சலில் உட்கார்ந்தோம். ஊஞ்சல் அசைந்தது; உலகநாதரும் பேச்சை ஆரம்பித்தார்.<br> {{gap}}(எங்கள் பண்ணையிலே தலையாரி உத்தண்டி என்று ஒரு கிழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு ஒரு<noinclude></noinclude> o1vmsfzdhp9gpi5fpgzxhe9wst9nrhy பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/28 250 570512 1837193 1706178 2025-06-29T16:36:41Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |27}} ---------------------------------</noinclude>மகள். அவள் பெயர் குமுதம். அந்தக் குமுதம் அழகி தான். அந்தக் குமுதத்தின்மேல் என் பிராணபதிக்கு மோகம் ஏற்பட்டுவிட்டது. என்னைத் திருப்திபடுத்த முடியாத அந்த அழகுதுரை குமுதத்தின் மேல் பாய்ந்துவிட்டார். பணக்காரரல்லவா? பார்த்த பெண் களை யெல்லாம் காதலிப்பதுதானே பணக்காரத் தத்துவம்!) 'குமுதத்தோடு கொஞ்சவேண்டுமென்று என்னிடம் கூறினார் தாராளமாகச் செய்வதுதானே, என்று என் விருப்பத்தை வெளியிட்டேன். அதற்கு ஒரு தடங்கல் இருக்கிறதென்றார். என்ன தடை? என்று நான் கேட்டேன். அவர் அதை சொன்னார். வீரன் என்னை மறந்து விட்டதன் இரகசியத்தை அப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.<br> {{gap}}உலகநாதர் விரும்பிய குமுதாவுக்கு ஓர் அத்தான் உண்டு. அவன்தான் என்னை அடிமை கொண்ட அன்பன்வீரன் "குமுதாவுக்கும் வீரனுக்கும் காதலாம். இருவரும் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்து விட்டார்களாம். கல்யாணமும் சிக்கிரம் முடியப் போகிறது" என்று உலகநாதர் கூறினார். அந்தச் சமயத்தில் என் முகத்தில் தோன்றிய கீறல்களை உலகநாதர் பார்த்திருந்தால் ஆச்சரியப்பட்டிருப்பார். நான் இறந்து போய் விட்டதாகவே கருதினேன். ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, "வீரனுக்கும் குமுதாவுக்கும் காதல் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டேன். (குடியானவர் தெரு கொல்லைப்புறத்து வாய்க்கால் ஓரத்தில் இருவரும் இரகசியம் பேசிக்கொண்டிருந்ததைத் தாம் கண்டதாக என் கணவர் கூறினார்.) அதோடு உலகநாதர் நிற்கவில்லை. "கண்ணம்மா! என்<noinclude></noinclude> k28eobepo8pb5ktnu0frmsxgs684qy8 பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/29 250 570513 1837198 1706179 2025-06-29T16:41:18Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''28'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>கண்ணல்ல....நான் உன்னை அலட்சியப்படுத்துவதாக நினைக்காதே... எப்படியாவது ஒருநாள் ... குமுதா என் படுக்கையை அலங்கரிக்க வேண்டும். இதை நீதான் செய்யவேண்டும். தயவுசெய்! உன் தாளைப் பிடிக்கிறேன். இரங்கமாட்டாயா?" என்று கெஞ்சினார், கதறினார், பல்லைக் காட்டிப் பிச்சைக் கேட்டார். எனக்கும் ஒரு யோசனை தோன்றிற்று; அது மிகவும் அருமையான யோசனையாகத்தான் முடிந்தது.<br> {{gap}}குமுதாவையும் வீரனையும் பிரித்து விட்டால் மீண்டும் வீரன் என்னை நெருங்குவான் என்று தீர்மானித்தேன். குமுதாவை உலகநாதரிடம் அளித்துவிட்டால் அவளிடமே குலவிக் கிடப்பார். வீரனும் நானும் வேறு அந்தப்புரம் அமைத்துக் கொள்ளலாம், அவர் அதைக் கவனிக்க முனையமாட்டார் என்று முடிவு கட்டினேன். ஆகவே, குமுதாவை என் கணவருக்குக் கூட்டிவைக்க யோசனை சொல்லிக் கொடுத்தேன். குமுதாவை ஒரு விபசாரி ஆக்குவதன் மூலம் இழந்த வீரனை இழுத்து விடலாமென்ற தைரியம் எனக்கு! "அடி துரோகி! நீ கெட்டதோடு இருக்கக் கூடாதா? குமுதாவையுமா அப்படிச் செய்ய வேண்டும்?" என்று கேட்கிறீர்களா? அதற்கு நான் என்ன செய்வேன்? என் வீரனை அடைய வேறு வழி ஏது? குமுதா வேண்டுமானால் தன் கற்பின் திறமையைக் காட்டுவதுதானே!<br> {{gap}}மறுநாள் பொழுது விடிந்தது, என் யோசனைப்படி உலகநாதர் உத்தண்டிக் கிழவனைக் கூப்பிட்டனுப்பினார், 'குமுதா வீட்டில் வேலை செய்யவேண்டும்' என்றும், 'கண்ணம்மாவுக்குத் துணையாகச் சில நாட்களுக்கு<noinclude></noinclude> 5n6jbg9scyb9g2ulkgagvpbdath83a0 பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/30 250 570514 1837201 1706180 2025-06-29T16:46:18Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |29}} ---------------------------------</noinclude>இருக்க வேண்டுமென்றும் சொன்னார். கிழவன் சிறிது தடுமாறினான். குமுதாவுக்கு மாதச் சம்பளம் இருபது ரூபாய் என்று குறிப்பிட்டார். கிழவன் ஏமாந்துவிட்டான். பணத்தைப் பார்க்காதவன் தானே! அந்தப் பஞ்சை! குமுதாவை எங்கள் வீட்டுக்கு வேலைக்காரியாக அனுப்பிவிட்டான். குமுதாவை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது. ஆனால், இப்பொழுது குமுதா பருவமடைந்த மங்கை. அவளுடைய லாவகமான நடையும், முகத்தின் களையும் பெண்ணான என்னையே ஆசைப்பட வைத்தது.<br> {{gap}}குமுதா வீட்டுக்கு வந்தது முதல் மிகவும் மரியாதையாகவே பழகினாள். அவளுடைய சிந்தனை மட்டும் எங்கேயோ இருந்தது. அதை அவளால் மறைத்துக் கொள்ள முடியவில்லை. அடிக்கடி வாசல் பக்கம் செல்வாள். எங்கேயோ சுற்றுமுற்றும் பார்ப்பாள். எனக்கல்லவா தெரியும், அவள் யாரைப் பார்க்கிறாளென்று! அந்தச் சிறுமி வீரனிடங் கொண்டிருந்த கள்ளங் கபடமற்ற காதலில் நான் நச்சுப் பொடித் தூவ தயாராய் இருந்தேன்.<br> {{gap}}குமுதா வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் கழிந்தன. ஒருநாள் இரவு நான் அவளோடு சம்பாஷணை துவக்கினேன். இதற்குள் என் கணவர் பட்டபாட்டை நினைத்துக்கொண்டு நானே சிரித்தேன், குமுதா தன் வீட்டுக் கதைகளையெல்லாம் சொன்னாள். நான் அவள் பேச்சில் என் பசப்பு வார்த்தைகளைப் பின்னிக் கொண்டே வந்தேன். எங்கெங்கோ ஆரம்பித்துக் கடைசியில் உலகநாதர் குமுதாவிடம் கொண்டிருக்கும்<noinclude></noinclude> p4rzxozgh4r9gqaqh0gkiki4b7lzokh பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/31 250 570515 1837204 1706181 2025-06-29T16:49:29Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''30'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>ஆசை வரையில் கூறிவிட்டேன். குமுதா ஒன்றும் பேசவில்லை.பேசாமற் போய்ப் படுத்துக் கொண்டாள். சற்று நேரத்திற்குப் பிறகு குமுதா விம்மி விம்மி அழுத சப்தம் மட்டும் எனக்குக் கேட்டது. அன்றிரவு அதோடு முடிந்தது.<br> {{gap}}மறுநாள் காலை கொல்லைப்புறத் தோட்டத்தில் குமுதா தன் தகப்பனுடன் பேசிக்கொண்டிருந்தாள். குட்டி தப்பித்துக் கொள்வாளோ என்ற பயம் எனக்கு. "குமுதா! குமுதா!" என்று அதட்டலாகக் கூப்பிட்டேன். ஓடிவந்துவிட்டாள். எனக்குத் தெரியாமல் அவள் கண்களைத் துடைத்துக் கொண்டதை நான் பார்க்காமலில்லை. வீரனை நான் மறுபடியும் அடையும் பொருட்டு நான் குமுதாவை என்ன செய்தால்தான் என்ன? என்னை வந்தடையும் பழி பாவங்களுக்கு நானா பொறுப்பாளி? 'எண்ணியபடி எதுவும் நடக்காது' என்ற சட்டமும், 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்ற உறுதியும் இருக்கிற உலகத்திலே நான் ஒரு குற்றமற்றவள் தானே! இந்தத் தைரியத்தில்தான் குமுதாவின் நல்வாழ்வில் நஞ்சைக் கலந்தேன். அந்தக் காரியத்தைச் செய்யும்பொழுது என் உடல் பதறவில்லை தான். தோட்டத்தில் உத்தண்டியைச் சந்தித்து குமுதா பேசிய அன்றிரவேதான் நான் அந்தச் சதியைச் செய்தேன். உங்கள் பாஷைப்படி அது 'சதி'யாக இருக்கலாம். ஆனால், அந்தக் காரியம்தான் என் தலை விதியைத் தலைகீழாக மாற்றிய மாபெரும் புரட்சி ! என் சுயநலத்துக்காகக் குமுதாவைக் கொலை செய்தால்தான் என்ன?<noinclude></noinclude> k5fzb9buw8y31f6f8ekjy1ojvrpolkb பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/32 250 570516 1837205 1706182 2025-06-29T17:00:11Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |31}} ---------------------------------</noinclude>'''குமுதா'''<br> {{gap}}வேண்டுமானால் என்னைக் கொலை செய்திருக்கலாம். சந்தோஷத்தோடு செத்திருப்பேன். ஆறிலும் சாவு தான், நூறிலும் சாவுதான். ஆனால், எனக்கு வாழ்க்கையிலே ஆசை ஏற்பட்ட பிறகு சாகத் துணிவது சாமான்யமாகத் தோன்றாமல் தான் இருந்தது. கண்ணம்மா செய்த வேலை என்னை ஒரு வீராங்கனையாக்கிவிட்டது. சாவோடு விளையாடத் தயாராகி விட்டேன். "ஏன் இந்த முடிவுக்கு வந்தாள் குமுதா?" என்று நீங்கள் சந்தேகப்படுவீர்கள். முதலில் என்னைப் பற்றிய குறிப்பைப் படியுங்கள்.<br> {{gap}}நான் உத்தண்டியின் மகள். குழந்தையாயிருக்கும் பொழுதே தாயார் இறந்துவிட்டாள். என் குலத்திலே இல்லாத வழக்கமாக எனக்கு ஐந்தாவது வகுப்பு வரையில் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. அந்த ஆரம்பப் படிப்பை வைத்துக்கொண்டுதான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆனால் எனக்கு ஒரு வருத்தம். இந்தக் கடிதத்தை என் அத்தான் படிக்காவிட்டாலும் யார் கையிலாவது அகப்பட்டு நான் குற்றமற்ற நிரபராதி என்பது ருசுவாகி விட்டால் போதும். உலகத்திலே ஒருவராவது 'குமுதா குற்றமில்லாத பெண்' என்று கூறமாட்டார்களா?<br> {{gap}}நான் படித்த பெண்தான். படித்திருந்தாலும் படிந்த மனப்பான்மை உள்ளவள். நாகரிகத்தின் நாசுக் வேலைகளால் உள்ளத்தைக் குரங்கைப்போல ஆக்கிக் கொண்ட பெண்களின் இனத்தைச் சேர்ந்தவள் நானல்ல என்பதை நீங்கள் கட்டாயம் நம்பவேண்டும்.<noinclude></noinclude> 5ieou6fg15wwfe7fnd60i3kll9y1gvh பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/33 250 570517 1837207 1706183 2025-06-29T17:09:14Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''32'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>இந்த உலகத்திலே எத்தனையோ குமரிகள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களாகவே வீணாக்கிக் கொள்கிறார்கள். எனக்கு ஏற்பட்ட நிலைமை நானாகத் தேடிக் கொண்டதல்ல.<br> {{gap}}வீரன் என் அத்தை மகன். அத்தான் படிக்காத ஆள். ஆனால், என் வாழ்க்கைத் துணைவராக இருப்பதற்கு லாயக்குள்ளவர். அவரோடு ஆனந்தமாகக் காலத்தைக் கடத்தலாம் என்று நம்பினேன். நான் நினைத்ததிலே தவறில்லை. நம்பியதுதான் முட்டாள் தனமாகிவிட்டது. என் தகப்பனார் என்னை வீரனுக்கு மணமுடிப்பதாகக் கூறிய பின்னரே நான் அவரோடு பழக ஆரம்பித்தேன். அதுவரை என் சிந்தனையில் எந்த துர் எண்ணங்களும் இடம் பெறவில்லை. அத்தானுடைய அழகுகளைப் பற்றி நான் கூறவே தேவையில்லை. அவருக்கு நான் அடிமையாகி விட்டேன் என்றால், அந்த ஒரு வார்த்தை போதாதா? அத்தான் என்மேல் வைத்த ஆசை மாறக்கூடாதே என்பதற்கு வேண்டுமானால் நான் என்னைச் சிங்காரித்துக் கொள்வதுண்டு. வைர ஜோடிப்புகளா எனக்கு இருந்தது? கொல்லையில் கிடைக்கும் முல்லையும், தோட்டத்துத் தாழம்பூவுமே எனக்கு ஆபரணங்கள். கண்ணாடி வளையல்களைத்தான் என் கைகள் அறியும்.<br> {{gap}}எப்படியோ நானும் அத்தானும் ஒன்றுபட்டு விட்டோம். அவர் என்னை உண்மையாகவே காதலித்தார். அவருக்குக் காதல் என்றால் இன்னதென்று தெரியுமோ தெரியாதோ! என்னை அடிமையாக்கிக் கொள்ள மட்டும் அவரிடம் ஒரு சக்தி இருந்தது. சதா<noinclude></noinclude> ghxckwgdvc78scunl40xh8hez9pidcu பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/34 250 570518 1837208 1706184 2025-06-29T17:23:31Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|| மு. கருணாநிதி |33}} ---------------------------------</noinclude>என் இருதயப் பீடத்திலே அத்தானை அமரவைத்துப் பூஜித்துக்கொண்டிருந்தேன். அந்த இடத்திலே யாரும் எட்டிப் பார்க்கவும் முடியாது. அப்படி இருந்த அதே குமுதாதான் வெட்கமில்லாமல் இந்தக் கடிதத்தை எழுதுகிறாள். நான் கடிதமா எழுதுகிறேன். இல்லை கதறுகிறேன்! கடிதமா இது ! இல்லை, கண்ணீர்த் தேக்கம்! எழுத்துக்களா இவைகள்! இல்லை, இதயத்தைப் பொத்துக்கொண்டு பீறிட்டுக் கிளம்பிய இரத்தத் துளிகள்!<br> {{gap}}அன்றிரவு........ அய்யோ...... அதை நினைத்தாலே குலை நடுங்குகிறதே! என் தகப்பன் ஆசையைக் கெடுக்காமல் உலகநாதர் வீட்டுக்கு வேலைக்காரியாகச் சென்றேன். கண்ணம்மா என்னை அவருக்கு வெள்ளாட்டியாக்க முயன்றாள். ஒருநாள் இரவு அந்தப் பேச்சை எடுத்தாள். புருஷனுக்குப் பெண் தேடும் அவசியம் அவளுக்கு ஏன் ஏற்பட்டதோ எனக்குத் தெரியாது. என்னென்னவோ தளுக்குமொழிகள் பேசினாள். நாசுக்காக என்னை நடத்தினாள். வெட்டப்போகிற கிடாவுக்கு மஞ்சள் தெளித்து மாலை போடுகிறாள் என்பதை நான் முதலில் புரிந்துகொள்ளவில்லை. விஷயத்தை உணர்ந்து விம்மினேன். வீரனிடம் அதைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள திட்டம் போட்டேன். வீரனைக் காணவே இல்லை. அப்பா வந்தார். அவரிடம் விஷயத்தை முழுவதும் சொல்ல முடியவில்லை. அதற்குள் எஜமானி கண்ணம்மா கூப்பிட்டுவிட்டாள்; காரியம் மிஞ்சிவிட்டது.<br> {{gap}}அன்றிரவு மணி பத்து இருக்கும். உலகநாதர் ஊரில் இல்லை என்று கண்ணம்மாள் சொன்னாள். {{gap}}3<noinclude></noinclude> kt0pjgvmxptm16uqbs8k7o2ivwqb4h0 பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/35 250 570519 1837210 1706185 2025-06-29T17:29:29Z கெரிக்மா 15530 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கெரிக்மா" />{{rh|'''34'''|பெரிய இடத்துப் பெண்}} ----------------------------------------</noinclude>எனக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. காலையில் எப் படியாவது என் வீட்டுக்கு ஓடிவிடலாமென்று தீர்மா னித்துச் சந்தோஷப்பட்டேன்.<br> {{gap}}கண்ணம்மா அப்பொழுது எனக்கு ஒரு கட்டளையிட்டாள். சாதாரண வேலைதான்; அதுதான் சதியாக முடிந்தது. புலியின் அகண்ட வாய்க்குள்ளே ஒரு பிள்ளையைத் தவழ்ந்து செல்லும்படி ஆணை பிறந்தது.<br> {{gap}}"வெள்ளிக்கோப்பை அந்த அறையிலே இருக்கிறது. அதை எடுத்துவா குமுதா!" என்றுதான் கண்ணம்மா கூறினாள். நான் அதை எடுத்துவர அறையில் நுழைந்தேன். திடீரெனக் கதவுகள் மூடிக்கொண்டன. திரும்பிப் பார்த்தேன்; உலகநாதர் நின்றார். நின்றது மட்டுமல்ல; கலகலவெனச் சிரித்தார். "தோற்றாய் குமுதா,தோற்றாய்" என்று ஒரு பிசாசு அலறுவது போல் இருந்தது. என் நிலைமை தவறிவிட்டது. உலகமே கிறுகிறுவெனச் சுழன்றது. ஆகாய வெளியிலே ஒரு பயங்கரச் சப்தம் கேட்பதுபோல் தெரிந்தது. பல மின்னல்கள்! இடி முழக்கங்கள்!<br> {{gap}}அதற்குப் பிறகு என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது.கண்ணை விழித்துப் பார்த்தேன். கட்டிலில் படுத்திருப்பதாக உணர்ந்தேன். அருகில் உலகநாதர் சயனித்திருந்தார். ஏதோ சூரிய மண்டலத்தையே சுற்றி வந்துவிட்டவர் போலச் சிரித்தார்; என்னென்னவோ பேசினார். எதுவும் என் காதில் விழவில்லை. காமாந்தகாரப் பூதத்தின் இரத்தந் தோய்ந்த நகங்களால் என் இதயம் கிழிக்கப்பட்டு விட்டது. அத<noinclude></noinclude> 64c6mg4dve4kbg4kgsj17fnu493ghcc அட்டவணை:உயிர்க்காற்று.pdf 252 598584 1837181 1837036 2025-06-29T16:06:02Z Info-farmer 232 added [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1837181 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[உயிர்க்காற்று]] |Language=ta |Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=வானதி பதிப்பகம் |Address= |Year=இரண்டாம் பதிப்பு-திசம்பர் 2004 |Source=pdf |Image=1 |Number of pages=223 |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=பொருளடக்கம் 5=முன்னுரை /> |Remarks={{பக்கம்:உயிர்க்காற்று.pdf/4}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] 6moon3i6xjp1mhi78o49hiv53rb9ob4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/151 250 617020 1837229 1823827 2025-06-30T03:56:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அங்கேரி|115|அங்கேரி}}</noinclude>மீட்டர்களாகும். 1981–ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இந்நாட்டின் மக்கள் தொகை 1,07,10,000. இதன் தலைநகர் புதாபெகட்டு; ஆட்சிமொழி மாக்யார் எனப்படும் அங்கேரிய மொழி, அங்கேரி நாட்டு நாணயத்திற்குப் பாரின்ட்டு (Forint) என்பது பெயர். அதனை 100 பில்லர்களாகப் பிரித்துள்ளனர். {{larger|<b>நாடும் தட்பவெப்பமும்:</b>}} அங்கேரியைச் சுற்றிலும் நாடுகள் சூழ்ந்துள்ளன. அதனால் இதனை நாடுகளால் சூழப்பட்ட நாடெனலாம். இதன் மூன்றிலிரண்டு பங்கு நிலம், கடல் மட்டத்தைவிட 198 மீட்டர் வரை உயரமுள்ளது. உயரமுள்ளது. கீழை அங்கேரி, பெரும்பாலும் தட்டையானது. இதன் வடக்கில் உள்ள மலைகள் உயரமானவை. இங்குத்தான் அங்கேரியின் உயரம் மிகுந்த மலையுச்சியான கேகசு (Kekes) உள்ளது. மேலை அங்கேரியில் வளைந்து செல்லும் குன்றுகளையும் தாழ்ந்த மலைத் தொடர்களையும் காணலாம். இந்நாட்டின் மிக நீண்ட ஆறு திசா (Tisza) என்பதாகும். இந்த ஆறு ஏறத்தாழ 600 கிலோமீட்டர் வடக்கு தெற்காகக் கீழை அங்கேரி முழுவதிலும் பாய்ந்தோடுகிறது. திசா ஆறு தான்யூபு ஆற்றின் சிறப்பான கிளையாறாகும். தான்யூபு ஆறு, ஐரோப்பாவின் ஏழு நாடுகளில்–அங்கேரியையும் உள்ளடக்கிப் பாய்கிறது. தான்யூபு அங்கேரியின் வட எல்லையாகிப் பின்னர் வடக்கு – தெற்காக இந்நாட்டின் நடுவில் பாய்ந்து ஓடுகிறது. பால்ட்டன் ஏரி மேலை அங்கேரியில் அமைந்துள்ளது. இதுவே நடு ஐரோப்பாவின் பெரிய ஏரியாகும். {{larger|<b>இயற்கைப் பிரிவுகள்:</b>}} அங்கேரியை நான்கு இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1. பெரும் சமவெளி, 2. தான்யூபு ஆற்றுக்கப்பாலுள்ள பகுதி, 3. சிறு சமவெளி, 4. வடமேட்டு நிலங்கள். பெரும் சமவெளி என்பது தான்யூபு ஆற்றுக்குக் கிழக்கில் உள்ள பகுதிகள் அனைத்தையும் சுட்டும். வடபால் அமைந்துள்ள மலைகளை இது குறிக்காது. இப்பகுதி, இந்நாட்டின் அரைப் பகுதியை உள்ளடக்கி உள்ளது. சிறு குன்றுகள், மணல் மேடுகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள் போன்ற அறுத்த பகுதிகளை விட ஏனைய பகுதிகள் தட்டையானவை. இப்பகுதி வேளாண்மைக்கு ஏற்றதாகும். இதன் தென்கிழக்குக் கோடியிலுள்ள பகுதியே அங்தேரியில் மண்வளம் மிக்க பகுதியாகும். தான்யூபு ஆற்றுக்கப்பாலுள்ள பகுதி என்பது தான்யூபு ஆற்றின் மேற்கில் உள்ளதாகும். வடமேற்குக் கோடி இதனுள் அடங்காது. இப்பகுதி பெரும்பாலும் குன்றுகளையும் மலைகளையும் கொண்டது. பால்ட்டன் ஏரியின் வடக்கில் உள்ள நடு மேட்டு நிலங்களும் தாழ்ந்து வளைந்து நிற்கும் மலைகளும் சங்கிலித் தொடர்போல் அமைந்துள்ள இதன் வளைவில் புதாபெசுட்டு நகரம் அமைந்துள்ளது. ஆசுத்திரிய ஆல்ப்சுமலை அடிவாரம் இப்பகுதியின் மேற்கில் உள்ளது. இப்பகுதி பெரும் பண்ணைகளைக் கொண்டது. சிறுசமவெளி அங்கேரியின் வடமேற்குக் கோடியிலுள்ளது. இது மிகச் சிறிய பகுதியாகும். மேற்கு எல்லையை அடுத்துள்ள ஆசுத்திரிய ஆல்ப்சு அடிவாரத்தைவிட இப்பகுதிகள் தட்டையானவை. இதன் பெரும் பகுதி பண்ணைகளுக்கேற்றது. வடமேட்டு நிலங்கள் என்பது தான்யூபு ஆற்றுக்கு வடகிழக்கிலும் பெரும் சமவெளிக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. மலைத்தொடர்களாக உள்ள இப்பகுதி, நடு ஐரோப்பாவின் பெரும் மலைத்தொடரான கார்ப்பேத்திய மலையின் பாகமாகும். அடர்ந்த காடுகள், குறுகிய ஓடைகள், கண்கவர் மலைத்தொடர்கள் போன்றவற்றைக் கொண்டு விளங்கும் இப்பகுதி இயற்கை அழகுக்கு எடுத்துக்காட்டான இடம். இங்குத் தொழிற்சாலைகளும் சுரங்கங்களும் சிறப்பாக உள்ளன. {{larger|<b>தட்ப வெப்பநிலை:</b>}} வகைவகையான இயற்கைக் கூறுகள் இல்லாமையால் அங்கேரியின் தட்பவெப்பத்தில் ஏற்றத் தாழ்வுகள் குறைவு. இந்நாட்டில் குளிர்ந்த மழைக் காலமும் வெப்பமான கோடைக் காலமும் நிலவுகின்றன, இந்நாட்டின் ஆண்டு மழையளவு 60 செ.மீ. மே, சூன், சூலை மாதங்கள் இங்கு மழைக்காலம். {{larger|<b>பொருளாதாரம்:</b>}} பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரைக் காட்டிலும் மிகப் பெரும் அளவில் அங்கேரியத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து பெரும் பொருளீட்டி நாட்டின் வருமானத்தை உயர்த்தியுள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு முன்னர், அங்கேரி பெரும்பாலும் வேளாண்மையையே சிறப்பான தொழிலாகக் கொண்டிருந்தது. பொதுவுடைமைக்கட்சி அரசாங்கம் ஏற்பட்ட பின்னர், அக்கட்சியே இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி வருகிறது. திட்டமிட்ட முறையில் தொழிற்சாலைகள் பெருகி வளர்ந்துள்ளமையால் அங்கேரி இன்று தொழில் மயமான நாடாகியுள்ளது. 1968-இல் உருவாக்கப் பெற்றுச் செயற்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரச் செயலமைப்புத் திட்டத்தில் தொழில் துறைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. பெரும்பாலும் அனைத்து அங்கேரியத் தொழிலாளர்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைகளிலோ பண்ணைகளிலோ ஈடுபட்டுப் பணியாற்றுகிறார்கள். கூட்டுறவுத் துறைகளிலும் மக்கள் ஈடுபாடு கொண்டுள்ள-<noinclude> <b>வா.க. 1 _ 8அ</b></noinclude> 3nun8se1pl0w2kx8iepc90okfzzx03o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/152 250 617059 1837230 1823925 2025-06-30T04:00:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அங்கேரி|116|அங்கேரி}}</noinclude>னர். இந்நாட்டில் சொந்தத் தொழில் செய்வோரும், பண்ணை வைத்திருப்போரும் சிறுபான்மையினரே. {{larger|<b>இயற்கை வளங்கள்:</b>}} அங்கேரியின் வளமான மண்ணும் வாழ்வுக்கேற்ற தட்பவெட்ப நிலையுமே இதன் சிறப்பான மூலதனங்களாம். நாட்டின் பரப்பில் முக்கால் பங்கில் பண்ணைகள் பரவியுள்ளன. அப்பண்ணைகள் மக்களின் அடிப்படைத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. 15 விழுக்காடு நிலத்தில் காடுகள் உள்ளன. நாட்டு மக்களுக்குத் தேவையான மரப் பொருள்கள் போதுமான அளவிற்குக் கிட்டாமையால், அப்பொருள்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. பாக்சைட்டு உற்பத்தியில் அங்கேரி உலகிலேயே முதன்மையான இடத்தை வகிக்கிறது. இதிலிருந்து தான் அலுமினியம் செய்கிறார்கள். நிலக்கரி, இரும்புத் தாதுக்கள், மாங்கனீசு, இயற்கை எரிவாயு, பெட்ரோல் போன்றவை இங்குக் கிடைக்கும் பிற பொருள்களாம். ஆயினும், இப்பொருள்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. ஆகவே, அங்கேரி, தேவையான பொருள்களைப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்கிறது. உரேனியம், மின்சார உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது மெக்செக்கு மலைத் தொடருக்கருகில் உள்ள பெக்சு என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சோவியத் உருசியாவின் துணையுடன் உரேனியச் சுரங்கங்கள் பெருக்கப்பட்டுள்ளன. நாட்டிற்குத் தேவையான அளவு மின்சாரம் கிடைக்கப் பெறாமையால், பிற நாடுகளிலிருந்து அதைப் பெறுகிறார்கள். 1980–இல் அணு ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து, மின்சாரப் பற்றாக்குறையை ஈடுசெய்து வருகின்றனர். {{larger|<b>செய்தொழில்கள்:</b>}} அங்கேரியின் தொழிற்சாலைகள் அனைத்தும் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமானவையே. சில கூட்டுறவுக் குழுக்களிடம் உள்ளன. பொதுவுடைமைக் கட்சி ஆட்சிக்கு வந்தபின், எந்திரங்களை உற்பத்தி செய்து, அவற்றைச் செய்தொழில் மூலச் சரக்காக்க முயலுகிறது. நுகர்வோருக்குத் தேவையான பொருள்கள் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாமையால், புதிய பொருளாதாரச் செயலமைப்புத் திட்டத்தின் மூலம் அவற்றைப் பெருக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அங்கேரி முயல்கிறது. அங்கேரியின் சிறப்பான செய்பொருள்கள் பின் வருவன: வேதியியல் பொருள்கள், உணவுப் பொருள்கள், மதுபானப் பொருள்கள், எந்திரப்பொருள்கள், எஃகு, துணிமணிகள், போக்குவரத்துத் துணையாக உதவும் கருவிகள், பாக்சைட்டிலிருந்து அலுமினியம் தயாரித்தல் முதலியவை சோவியத் உருசியாவின் துணையுடன் நடைபெறுகின்றன. புதாபெசுட்டு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் அங்கேரியின் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 152 |bSize = 480 |cWidth = 195 |cHeight = 182 |oTop = 113 |oLeft = 269 |Location = center |Description = }} {{center|அங்கேரி-புதாபெசுட்டுநகரம்}} {{larger|<b>வேளாண்மை:</b>}} அங்கேரியின் பண்ணைப் பொருள்கள் மூலம் 60 விழுக்காடு மதிப்புள்ள வருவாயும் கால்நடைகள் மூலம் எஞ்சிய 40 விழுக்காடு வருவாயும் கிடைக்கின்றன. இங்கும் பயிரிடப்படும் சிறப்பான பொருள்கள், உணவுப்பயிர்கள், உருளைக்கிழங்கு, பீட்டுச்சருக்கரை, கோதுமை, திராட்சைச்சாறு முதலியன. உழவர்கள் கோழிக்குஞ்சுகளையும் பன்றிகளையும் ஏனைய கால்நடைகளைவிட மிகுதியாக வளர்க்கிறார்கள். மாட்டிறைச்சிக்கான கால்நடைகளும் பால்மாடுகளும் குதிரைகளும் ஆடுகளும் ஏனைய கால்நடைச் செல்வங்களாகும். நாட்டின் மொத்தப் பண்ணை நிலங்களும் 5 விழுக்காடே தனியாருக்குச் சொந்தமானவை. ஏனையவை கூட்டுறவுப் பண்ணைகளும் அரசுப் பண்ணைகளும் ஆகும். அங்கேரியின் பண்ணை நிலத்தின் 80 விழுக்காடு கூட்டுறவுப் பண்ணைகள் ஆகும். பல குடும்பங்கள் இப்பண்ணைகளில் இணைந்து பணிபுரிகின்றன. பொதுவான பண்ணைக் கொள்கைகளை அரசு முடிவு செய்கிறது. {{larger|<b>அயல் நாட்டு வாணிகம்:</b>}} அங்கேரியின் பொருளாதாரம் பெருமளவு அயல் நாட்டு வாணிகத்தைச் சார்ந்துள்ளது. எந்திரக் கருவிகள், பேருந்துகள், நிலக்கரி, பருத்தி, மின்சாரம், செயற்கை உரங்கள், இரும்புத்தாதுக்கள், கால்நடைத் தீவனங்கள், பெட்-<noinclude></noinclude> nh8twkl0lhqb9axwpj5qg1s6vsfq133 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/153 250 617071 1837233 1823949 2025-06-30T04:05:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அங்கேரி|117|அங்கேரி}}</noinclude>ரோலியப் பொருள்கள் போன்றவை சிறப்பான இறக்குமதிப் பொருள்களாம். அலுமினியம், கால்நடைகள், எந்திர வகைகள், மருந்துகள், பதப்படுத்தப்பெற்ற உணவுப்பொருள்கள், மதுபானங்கள், எஃகு, போக்குவரத்துக்குத் துணையான கருவிகள், குறிப்பாகப் பேருந்துகள் போன்றவை குறிப்பிடத்தகுந்த ஏற்றுமதிப் பொருள்களாகும். பொதுவுடைமை நாடுகளின் பொருளாதாரக் கூட்டிணைப்பில் அங்கேரியும் சேர்ந்துள்ளது. அங்கேரி மூன்றில் ஒருபங்கு வாணிகத்தைச் சோவியத் உருசியாவுடனும், மற்றொரு பங்கினைப் பிற பொதுவுடைமை நாடுகளுடனும், எஞ்சியதை ஆசுதிரியா, இங்கிலாந்து, மேற்குச்செருமனி போன்ற நாடுகளுடனும் செய்கிறது. {{larger|<b>போக்குவரத்து:</b>}} இந்நாட்டின் இருப்புப்பாதைப் போக்குவரத்து அரசின் உடைமையாக உள்ளது. இவ்விருப்புப்பாதை 9,000 கிலோ மீட்டர் நீளமுள்ளது சாலைகளின் நீளம் ஏறத்தாழ 30,000 கிலோ மீட்டர்களாம். அங்கேரியின் ஆறுகளும் கால்வாய்களும் படகுப் போக்குவரத்திற்குப் பெரிதும் பயன்படுகின்றன. இங்குக் கப்பல் போக்குவரத்து நிறுவனமொன்றும், வானவூர்தி வழிகளும் செயற்படுகின்றன. {{larger|<b>வரலாறு:</b>}} கிழக்கும் மேற்கும் ஒன்றையொன்று தழுவும் சந்திப்பில் அங்கேரி அமைந்துள்ளதால், படையெடுப்பாளர்கள் பலமுறை அதனைத் தாக்கிய வரலாற்றைக் காணலாம். ஏசுகிறித்து பிறப்பதற்கு முன்னர், அங்கேரி உரோமானியப் பேரரசின் பகுதியாய் இருந்தது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கிழக்கிலிருந்து வந்த ஊணர்கள் அதைக் கைப்பற்றினர் என்றும், ஊணர்களின் அரசரான அட்டிலாவை அங்கேரியில் புதைத்தனர் என்றும், செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. பின்னர் இசுலாவுகளும், தியூடானியரும், அவார்களும் இந்நாட்டைக் கைப்பற்றினர். ஆனால், அங்கேரியர்கள் தம் வரலாற்றை கி.பி. 896–இலிருந்து தொடங்கியபோது, தான்யூப் ஆற்று வடிநிலத்தில் மாக்கியர்கள் குடியேறியிருந்தனர். மாக்கியர்கள் ஆசியாவிலிருந்து அங்கேரி வந்த முரட்டு இனமக்கள். அவர்கள் கொடூரமாகப் போரிடும் இயல்புடையவர்கள். காலப்போக்கில் அங்கேரியைக் கட்டுப்படுத்தினர். செருமானிய இனத்தாரிடமிருந்தும், பைசான்டியப் பேரரசரிடமிருந்தும் காத்துக் கொள்ளும் பொருட்டுத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர். 10–ஆம் நூற்றாண்டில் மாக்கியர்கள் உரோமானியக் கத்தோலிக்கச் சமயத்திற்கு மாற்றப்பட்டனர். மதம் மாறிய மாக்கியர்கள் உரோமாபுரியுடன் சேர்ந்துகொண்டு பைசான்டியத்திற்கு எதிரிகளாயினர், கி.பி. 1001–ஆம் ஆண்டில் போப்பாண்டவர், மாக்கியரின் தலைவரான செயின்ட்டு இசுடீபன் என்பாருக்கு முடிகுட்டி, அவரை அங்கேரியின் முதல் கிறித்தவ அரசரென அறிவித்தார். இசுடீபன் மன்னர் அங்கேரியைப் பல பகுதிகளாகப் பிரித்து, அவற்றை ஆள ஒவ்வொன்றிற்கும் ஒரு கோமகனை அமர்த்தினார். பல சீர்திருத்தங்களை மேற்கொண்ட அவ்வரசர், மடாலயங்களை நிறுவி, அங்கேரியை மேலை ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிய உறவுடையதாகச் செய்தார். அன்றிருந்து இன்றுவரை, செயின்ட்டு இசுடீபனின் மணிமுடி அங்கேரியின் மதிப்பு மிக்க சின்னமாக இருந்து வருகிறது. 13–ஆம் நூற்றாண்டில் அரசர் பொன் ஆணை எனப்படும் பேரறிக்கை யொன்றை வெளியிட்டு, உயர்குடி மக்களுக்குப் புதிய உரிமைகளையும் மேலான அதிகாரங்களையும் வழங்கினார். ஆனால், அதே நூற்றாண்டில் தார்த்தார் இன மங்கோலியர்கள் கிழக்கிலிருந்து புற்றீசல்கள் போல் படையெடுத்து வந்து, நாட்டை அழித்து எரித்தனர். படையெடுத்து வந்தவர்களை எதிர்த்துப் போரிட்ட உயர்குடி மக்கள் மேலும் அதிகாரங்களைப் பெற்றனர். ஆனால், இவ்வுயர்குடிமக்கள் குடியானவர்களைப் பழித்துரைத்தனர். அதன் விளைவாக 1437 இல் குடியானவர்கள் கொதிந்தெழுந்தனர். ஆனால், அக்கலகம் எளிதில் அடக்கப்பட்டது. இதனிடையில், துருக்கியர் அங்கேரியின் எல்லைப் புறங்களைத் தாக்கி வந்தனர், 1443–க்கும் 1456–க்குமிடையில் உன்யாடி சானோசு, (Hunyadi Janos) என்பவர், செர்பியர்கள், உருமேனியர்கள் போன்றவர்களின் உதவியுடன் துருக்கியர்களைத் தோற்கடித்தனர். அவர் மகன் மத்தியாசு கார்னிவசு. 1458 முதல் 1480 வரை ஆட்சி புரிந்தார். நடு ஐரோப்பாவில் அங்கேரியை வலிமைமிகுந்த நாடாக்கிய பெருமை அவரையே சாரும். ஆனால், மத்தியாசு காலமானபோது, அவருக்கு அடுத்து யார் மன்னராக வேண்டுமென்பது குறித்து, உயர்குடிமக்கள் தமக்குள் சண்டையிட்டுக் தொள்ளவே, அங்கேரியில் மீண்டும் குழப்பம் மூண்டது. 1524–இல் மூண்ட உழவர் புரட்சி, கொடுமையாக அடக்கப்பட்டது. வலியிழந்த அங்கேரியின்மீது துருக்கியர் படையெடுக்கவே, நாட்டின் நிலை மேலும் மோசம் அடைந்தது. 1526–இல் துருக்கியர், மொகாக்சு (Mohacs) போரில் வெற்றி கண்டனர். இவ்வெற்றியின் விளைவாக, அங்கேரி மூன்று பகுதிகளாகப் பிரிந்தது. தான்யூப் ஆற்றுக்குக் கிழக்கிலிருந்து திசா ஆறு வரையிலுள்ள பகுதியைத் துருக்கியர் கைக்கொண்டனர். திரான்சில்வெனியா என்னும் பகுதியையும் அவர்கள் கட்டுப்படுத்தினர். எனினும், அதைத் தனியானதொரு அரசர் ஆண்டார். தான்யூப் ஆற்றுக்கு மேற்கில் இருந்த பகுதியை ஆசுத்திரியாவின் அரசரான முதலாம் பெர்டினான்டு பெற்றார். {{nop}}<noinclude></noinclude> bp2h0g9rwpvbws48rkgim48ajv8xb4f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/154 250 617105 1837235 1824098 2025-06-30T04:10:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அங்கேரி|118|}}</noinclude>17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை துருக்கியர், அங்கேரியைத் தம் ஆட்சியின்கீழ் லைத்திருந்தனர். பின்னர், அங்கேரியர்கள் ஆசுத்திரியாவின் உறுதுணையுடன் துருக்கியரைத் தம் நாட்டிலிருந்து விரட்ட முயன்றனர். 1739-ஆம் ஆண்டளவில் ஆசுத்திரியர்கள் அங்கேரி முழுவதையும் தம் ஆட்சியின் கீழ்க் கொணர்ந்தனர். மேற்கூறிய உதவிக்காக அங்கேரியர்கள் கைம்மாறாகப் பெருவிலை கொடுக்க வேண்டியவராயினர். அங்கேரி ஆசுத்திரியாவின் குடியேற்றப் பகுதியாகியது. அம்மக்கள் தொடர்ந்து விடுதலைக்காகப் பாடுபட்டனர். 18, 19–ஆம் நூற்றாண்டுகளில் ஆகத்திரியாவுக்கெதிரான வெறுப்புணர்ச்சி மேலோங்கியது. 1848–49–ஆம் ஆண்டுகள் ஐரோப்பா முழுவதிலும் புரட்சிகள் மூண்ட காலமாகும். இலாசோசு காசூத் என்பாரின் தலைமையில் அங்கேரியிலும் விடுதலைப்போராட்டம் தொடங்கியது. ஆனால் உருசியாவின் துணையுடன் ஆசுத்திரியா சுலகத்தை அடக்கியது. 1867–இல் ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஆசுத்திரியா–அங்கேரி என்னும் பெயரில் இரட்டை அரசாங்கம் நிலைநாட்டப்பட்டது. அதன்படி அங்கேரிக்கு என்று தனியான நாடாளுமன்றமும், அதன் சொந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் உரிமையும் அந்நாட்டிற்குக் கொடுக்கப்பட்டன. அங்கேரி, ஆசுத்திரியாவுடன் இணைந்தது. ஆனால், ஆசுத்திரியாவின் பேரரசர் முதலாம் பிரான்சிசு சோசப், அங்கேரியையும் இணைத்து ஆட்சி நடத்தியதுடன், அங்கேரியின் அரசராகவும் முடிசூட்டப்பெற்றார். அங்கேரி, முதல் உலகப் போரின்போது செருமனி, ஆசுத்திரியா நாடுகளின் பக்கம் சேர்ந்தது. போருக்குப் பின்னர் ஏற்பட்ட புரட்சியின் பயனாய் அங்கேரி ஒரு குடியரசாயிற்று. பின்னர்ப் பொதுவுடைமைக் கட்சியினரும் சமநிலைச் சமுதாயக்காரரும் பேலாகுன் (Bela Kun) என்பாரின் தலைமையில், 1919–இல் ஆட்சியைக் கைப்பற்றிச் சிறிது காலம் ஆண்டனர். கப்பற்படைத் தலைவர் மிக்லோசு ஓர்த்தி என்பாரின் தலைமையில் வந்த படைகள், அவர்களது ஆட்சியைத் தூக்கியெறிந்தது. ஓர்த்தி அங்கேரியை அரசரற்ற முடியாட்சி நாடாக்கினார். அவர் அந்நாட்டின் அரசப் பேராளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1920–இல் செய்து கொள்ளப்பட்ட திரியானன் உடன்படிக்கையின்படி, பழைய அங்கேரியின் மூன்றிலிரண்டு பங்கு நிலமும் அதன் பெரும்பாலான கனிச் செல்வங்களும் மலைகளும் காடுகளும் பறிபோயின. அங்கேரி அவற்றைத் திரும்பப் பெறச் சூளுரைத்தது. இரண்டாம் உலகப் போர், அவ்வாய்ப்பைக் கொடுத்தது. தம் பழைய நிலப்பகுதிகளில் சிலவற்றை அவர்கள் மீண்டும் வென்றார்கள். ஆனால், அங்கேரியின் அரைகுறை ஆதரவைக் கண்ட செருமானியர் அந்நாட்டை முழுவதும் கைப்பற்றிக் கொண்டனர். 1944–க்கும் 1945–க்கும் இடையில் உருசியப் படைகள், செருமானியப் படைகளை அங்கேரியிலிருந்து விரட்டியடித்தன. தனக்குச் சொந்தமாயிருந்த பழைய பகுதிகளை அங்கேரி மீண்டும் பெற விரும்பியது. 1946–ஆம் ஆண்டில் அங்கேரி குடியரசாயிற்று. ஆனால், சில ஆண்டுகளுக்குள் பொதுவுடைமையாளர் அங்கேரியைக் கைப்பற்றிக் கொண்டார்கள். 1949–இல், சோவியத் உருசியாவின் அரசியல் விதியமைப்பினைப் போன்றதொரு திட்டத்தை அங்கேரி பெற்றது. மாத்யாசு இராகோசி என்பார், தலைமை அமைச்சராகிக் கொடூரமாய் ஆட்சி நடத்தினார். அவரைத் தொடர்ந்து, தலைமை அமைச்சரான இம்ரே நாகி என்பார் ஆட்சி செய்தார். அவருடைய ஆட்சி கொடுமைகள் குறைந்ததாக இருந்தபோதிலும், காலதாமதமாக வந்த அவருடைய முயற்சியைக் கண்டு அங்கேரியர் சினங்கொண்டனர். 1956–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23–ஆம் நாள் அங்கேரியில் புரட்சி மூண்டது. மாணவர்களையும் தொழிலாளர்களையும் கொண்ட விடுதலை வீரர்கள், பொதுவுடைமைக் கட்சிக் கெதிராகப் புதாபெசுட்டு நகரச் சாலைகளில் கலகம் செய்தார்கள். கலசுக்காரர்களின் கையோங்கியபோது, அவர்களை உருசிய தாங்கிப் (Tanks) படைகள் அங்கேரியில் தாக்கி அடக்கின; புரட்சி நசுக்கப்பட்டது. ஏறத்தாழ 20,000 பேர் கொல்லப்பட்டனர்; இரண்டு இலட்சம் பேர் மேற்கு நாடுகளுக்குத் தப்பி ஓடினர். புதிய பொதுவுடைமைக் கட்சி அரசு ஒன்று நிலைநாட்டப்பட்டது. சானோசு கேதார் என்பார் பொதுவுடைமைக் கட்சியின் புதிய தலைவரானார். அவருடைய அரசு தாராள மனப்பான்மைக் கொள்கையை மேற்கொண்டது. செயின்ட்டு இசுடீபனின் மணிமுடி, இரண்டாம் உலகப்போர் முடியும் நிலையில் கைப்பற்றப்பட்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் வைக்கப்பட்டிருந்தது. அது 1978–ஆம் ஆண்டில் அங்கேரிக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டது. சானோசு கேதார் அங்கேரியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிச் சோவியத் உருசியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார். {{larger|<b>அங்கோலா</b>}} ஆப்பிரிக்காவின் தென்மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளதொரு நாடு, வடக்கில் காங்கோவும், கிழக்கில் சாம்பியாவும், தெற்கில் நமீபியாவும், மேற்கில் அட்லாண்டிக் கடலும் இதன் எல்லைகளாம். {{larger|<b>ஆட்சி:</b>}} இந்நாட்டின் ஆட்சி, அங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கத்தின் வசம் வந்தது. இவ்வியக்கத்தின் கொள்கைகள் காரல் மார்க்சின்<noinclude></noinclude> am13jsrnpttz7cdixzchrq6wydk8l0o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/155 250 617116 1837237 1824121 2025-06-30T04:14:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அங்கோலா|119|அங்கோலா}}</noinclude>கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை. கட்சியின் தலைவரே நாட்டின் தலைவராகவும் படைகளின் தலைவராகவும் இருப்பார். {{larger|<b>மக்கள்:</b>}} கறுப்புநிற ஆப்பிரிக்கர்கள்; பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். 4,00,000 ஐரோப்பியர்கள் அங்கோலாவில் வசித்து வந்தார்கள். உள்நாட்டுப் போரின்போது அவர்கள் ஓடிவிட்டார்கள். பெரும்பான்மை மக்கள் சிற்றூர்ப் பகுதிகளில் வாழ்கிறார்கள். அவர்கள் உழவர்களும் கால்நடை மேய்ப்பவர்களும் ஆவர். நகரத்தில் வாழ்பவர்கள் அலுவலகங்களிலும் நிருவாகங்களிலும் இருப்பவர்கள். கறுப்பர், பாண்டுக் கூட்டத்தினரின் மொழியைப் பேசுகின்றனர். மக்கள் தொகையில் பாதிப்பேர் கிறித்தவர். எழுத்தறிவு பெற்றவர் 30 விழுக்காடு. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 155 |bSize = 480 |cWidth = 136 |cHeight = 208 |oTop = 223 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|அங்கோலா}} நாடு பெரிதும் மலைப்பாங்கான புல்வெளிகளை உடையது. நிலம் நடுவிலிருந்து மேற்கில் உயர்ந்து செல்கிறது. கடற்கரை ஓரம், திடுமென இறக்கங் கொண்டுள்ளது. வடக்கே வெப்ப மண்டலக்காடுகள் வளர்கின்றன. கியூனெனி (Cunene), குவான்சா (Cuanza) என்னும் ஆறுகள் ஓடுகின்றன. அவை நீர் வழிகளாகப் பயன்படுகின்றன. {{larger|<b>பொருளாதாரம்:</b>}} வேளாண்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது. உணவுப் பயிர்கள், வாழைப் பழங்கள், கூலவகை, கரும்பு ஆகியவை பயிராகின்றன. ஏற்றுமதிப் பொருள்கள் காப்பி, புகையிலை முதலியன. இங்குச் செம்பு, வைரம், இரும்புத் தாது, சிமெண்டு, இரசாயனப் பொருள்கள், துணிகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டில் ஏறத்தாழ 72, கி.மீ. நீளமுள்ள சாலைகள் உள்ளன. இருப்புப் பாதைகளின் நீளம் 2798 கி.மீ. அங்கோலாவில் 8 வானொலி நிலையங்கள் உள்ளன; சில நாளேடுகளும் உள்ளன. கி.மு. 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கோலாவில் மக்கள் வாழ்ந்தனர். பாண்டு மொழி பேசும் மக்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்குக் குடியேறினர். போர்த்துகீசியர் கி.பி. 1482–ஆம் ஆண்டில் அங்கோலாவிற்கு வந்தனர். பிரேசில் நாட்டில் இருந்த போர்த்துகீசியருக்கு இந்நாடு அடிமைகளை அளித்து வந்தது. அடிமை வாணிகம் கி.பி. 1800–இல் வீழ்ச்சியுறவே, கூலம், கரும்பு, புகையிலை முதலானவற்றை அவர்கள் பயிரிடத் தொடங்கினர். தச்சுக்காரரின் (The Dutch) குறுகிய கால இடையீட்டுக்குப் பின்னர்ப் போர்த்துகீசியர் மீண்டும் 1920–இல் ஆட்சியைக் கைப்பற்றினர். அவர்தம் ஆட்சியில் பொருளாதார முன்னேற்றம் தொடங்கியது. 1950–ஆம் ஆண்டளவில் அங்கோலர்கள் தன்னுரிமை கேட்கத் தொடங்கினர். 1956 இல் விடுதலைக்குக் கிளர்ச்சி செய்தனர். கொரில்லாப் போர் முறைகள் மேற்கொள்ளப்பட்டன. 1961–ஆம் ஆண்டு புரட்சி வெடித்தது. விடுதலை இயக்கத்தினர் மூன்று அணிகளாக நின்று கொரில்லாப் போரில் ஈடுபட்டனர். போர்த்துகீசியப் படைத்தலைவர்கள் 1947–இல் அங்கோலாவுக்குத் தன்னாட்சி அளித்திட முடிவு செய்தார்கள். ஆனால் மூன்று புரட்சி அணியினரும் தனித்தனியே அரசாங்கத்தைக் கைப்பற்ற முயன்றதால், உள்நாட்டுப் போர் மூண்டது. எனினும் 1975 {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 155 |bSize = 480 |cWidth = 204 |cHeight = 115 |oTop = 438 |oLeft = 236 |Location = center |Description = }}<noinclude></noinclude> 0gord7hnz9qo1vf3561q7bxrt68jucl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/156 250 617119 1837240 1824132 2025-06-30T04:19:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|120|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்}}</noinclude>நவம்பர் 11–இல் இந்நாடு விடுதலை பெற்றது. ஆனால், உள்நாட்டுப் போர் தொடர்ந்தது. மூன்று அணிகளுள் ஒன்றான மக்கள் விடுதலை இயக்கம் (MPLA), உருசியாவிடமிருந்தும் கியூபாவிடமிருந்தும் உதவி பெற்று, மக்கள் குடியரசினை நிறுவியது. அங்கோலாவின் தலைநகர் உலுவாண்டா (Luanda); ஆட்சிமொழி போர்த்துகீசியம். நாட்டின் மொத்தப்பரப்பு 12,46,700 ச.கி.மீ. இந்நாட்டின் உயர்ந்த மலையுச்சியின் உயரம் 2620 மீ. மக்கள் தொகை 70,80,000 (1982). அங்கோலாவின் நாணயம் குவான்சா (Kwanza) எனப்படும்.{{float_right|த.கோ.}} {{larger|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்:</b>}} இது மத்திய அரசின் சட்டம். முதல் பகுதி, சட்டத்தின் பெயரையும் விதிகளின் வரையறைகளையும் சட்டப் பெயர்களின் விரிவான பொருள் விளக்கத்தையும், இரண்டாம் பகுதி, அச்சகம் நடத்த, நூல் வெளியிட, பருவ இதழ் வெளியிட அனுமதி பெறும் வழிமுறைகளையும், மூன்றாம் பகுதி, அச்சிட்ட நூலினையும் பருவ வெளியீடுகளையும் அரசு அலுவலர்களிடம் ஒப்படைக்கும் விதிமுறைகளையும், நான்காம் பகுதி, விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனையின் தன்மைகளையும், ஐந்தாம் பகுதி, நூல்களையும் இதழ்களையும் பதிவு செய்யும் முறைகளையும், ஆறாம் பகுதி, மத்திய–மாநில அரசுகளின் அதிகார வரம்புகளையும் சட்டத்திற்கு உட்பட்டு உள்விதிகள் ஏற்படுத்தும் முறைகளையும் சட்டத்தின் பிடியிலிருந்து விலக்கு அளிக்கும் உரிமையினையும் கூறுகின்றன. இச்சட்ட விதிகளின்படி, புதிதாக அச்சகமோ பருவ இதழ்களோ தொடங்க விரும்புவோர், மாவட்டங்களில், மாவட்ட வருவாய்த் துறை அலுவலரிடமும், சென்னைப் பெருநகரில், சென்னைப் பெருநகர்த் தலைமைக் குற்றவியல் நடுவரிடமும் உறுதி ஆவணம் (Declaration) தாக்கல் செய்து, அனுமதி பெற்றுச் செயற்பட வேண்டும். அச்சகத்தின் இருப்பிடத்தையோ பருவ வெளியீட்டின் இருப்பிடத்தையோ மாற்ற விரும்பினால், குற்ற இயல் நடுவரின் அதிகார எல்லைக்குள் 60 நாள்களுக்குள் மாற்றலாம். ஆனால், அம்மாற்றத்தை 24 மணி நேரத்திற்குள் குற்றவியல் நடுவருக்குத் தெரிவிக்க வேண்டும்; அச்சகத்தின் உரிமையாளரும் மாறாமல் இருக்க வேண்டும். அச்சிடப்பட்ட நூல்களிலும் பருவ வெளியீடுகளிலும் அச்சகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், வெளியிடுபவரின் பெயர், அச்சக முகவரி, பருவ வெளியீட்டின் முகவரி முதலிய தேவையான விவரங்களை அச்சிட வேண்டும். பருவ வெளியீட்டின் பெயர் மாறினாலும் உரிமையாளர் மாறினாலும் புதிய உறுதி ஆவணம் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும். அச்சகத்தைப் பற்றியும் பருவவெளியீடு பற்றியும் தவறான விவரங்களைக் கொடுப்பது குற்றமாகும். அத்தகைய குற்றத்திற்கு உரூ. 2,000/– ஒறுப்புத் தொகை அல்லது 6 மாதத்திற்குக் குறையாத சிறைத் தண்டனை வழங்க விதி அனுமதிக்கிறது. இச்சட்டத்தின் 11-ஆம் (பிற்.) பிரிவுப்படி, பதிவாளருக்குப் படிகள் அனுப்பாமல் இருப்பது குற்றமாகும். அத்தகைய குற்றத்திற்கு உரூ. 50/– ஒறுப்புத்தொகை பெற விதி இடமளிக்கிறது. மாநில நூற்பதிவாளருக்கு இரு படிகளை இலவசமாக அனுப்பும்பொழுது அதனுடன் நூலின் பெயர், மொழி, ஆசிரியர் பெயர், பொருள், அச்சகப் பெயர், வெளியிடுவோரின் முகவரி, அச்சிடப்பட்ட காலம், பக்கங்கள், படிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் விவரங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றினையும் நூலுடன் தாக்கல் செய்யவேண்டும். மத்திய அரசின் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் விதிமுறைகளை வரையறை செய்யவும் மாநில அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்யும் உரிமையுடையது மத்திய அரசாகும். சட்டத்திலிருந்து விதிவிலக்கு வழங்கும் அதிகாரத்தை மாநில அரசு கையாளலாம். அச்சகம், மற்றும் நூல்கள் பதிவுச் சட்டத்தில் (1867) சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அச்சகச் சட்ட விசாரணைக் குழு 1948-இல் பரிந்துரை செய்தது. மாநில அரசுகளும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த இடர்ப்பாடுகளைக் களையப் பரிந்துரைகள் வழங்கின. இதன் விளைவாக, அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டத்திற்கு 1955–ஆம் ஆண்டில் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. திருத்தச் சட்ட விதியின்படி உறுதி ஆவணம் தாக்கல் செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் செய்தித் தாளை அச்சிட்டு வெளியிட்டாக வேண்டும். அவ்வாறு வெளியிட முடியவில்லை என்றால், அனுமதி வழங்கப்பட்ட உறுதி ஆவணம் முறிக்கப்பட்டதாகக் கருதப்படும். வார இதழாக இருப்பின், உறுதி ஆவணம் பெற்று, ஆறு வாரத்திற்குள் இதழ் வெளி வர இயலவில்லை என்றால், உறுதி ஆவணம் செல்லாது. உறுதி ஆவணம் பெற்ற மூன்று மாதத்திற்குள் செய்தித்தாளை வெளியிடாமல் இருந்தால், உறுதி ஆவணம் செல்லத்தகாததாகி விடும். குற்றவியல் நடுவர் உறுதி ஆவணத்தில் அலுவலக முத்திரையைக் குத்தி, ஒரு படியைச் செய்தித்தாள் பதிவாளருக்கும் ஒரு படியை உறுதியாவணம் தாக்கல்<noinclude></noinclude> tgxuxapq3m2muz32lnr0385k4h9ojhp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/157 250 617120 1837242 1824149 2025-06-30T04:22:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|121|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்}}</noinclude>செய்தவருக்கும் அனுப்பவேண்டும். உறுதி ஆவணம் ஏற்காமல் தள்ளப்பட்டாலும், மேலே கூறிய இருவருக்கும் முத்திரை குத்திய ஆவணப்படியை அனுப்ப வேண்டும். அச்சிடுகின்றவரோ, வெளியிடுகின்றவரோ தம் பொறுப்பிலிருந்து விலகினால், குற்றவியல் நடுவர்முன் தோன்றி, பணியிலிருந்து விலகிவிட்ட விவரத்தை உறுதி ஆவணமாக எழுதிக் கையொப்பமிட வேண்டும். ஒப்புதல் இல்லாமல் ஒருவரின் பெயர், ஆசிரியர் என்று செய்தித்தாளில் அச்சிடப்பட்டிருந்தால், அதனால் பாதிக்கப்பட்டவர் குற்றவியல் நடுவர்முன் தோன்றித் தன் நிலைமையை விளக்கினால், குற்றவியல் நடுவர், தக்க விசாரணைக்குப் பின், அதற்கு உரிய சான்றிதழ் கொடுப்பார். உறுதி ஆவணம் தாக்கல் செய்து, அனுமதி பெற்றபின் அச்சகத்தாரோ, வெளியிடுவோரோ, அப்பணிகளிலிருந்து விடுபட்ட விவரத்தைக் குற்றவியல் நடுவர் முன்பு அறிவிக்கத் தவறினால், அக்குற்றத்திற்கு ரூ. 2,000/– வரை ஒறுப்புத் தொகை விதிக்கலாம். தொடர்ந்து ஓராண்டுக் காலம் செய்தித்தாள் வெளிவராவிட்டால், உறுதி ஆவணம் செல்லாத ஆவணமாகிவிடும். நீதி மன்றங்கள் வழங்கிய சில தீர்ப்புகளால் ஏற்பட்ட சிக்கல்களையும் திருத்தச் சட்டம் சீர்படுத்தியுள்ளது. சுவரொட்டிகளையும் திருத்தச்சட்டம் நெறிப்படுத்தியது. நாட்டிலுள்ள செய்தித் தாள்களை நெறிமுறைப்படுத்தி, உற்று நோக்கி, நோட்டமிடச் செய்தித்தாள் பதிவாளர் அலுவலகம் புதுதில்லியில் ஏற்படுத்தப்பட்டது. செய்தித் தாள் வெளியிடுகிறவர் வெளியிடும் ஒவ்வொரு படியையும் செய்தித்தாள் பதிவாளருக்கு இலவசமாக அனுப்பவேண்டும். அவ்வாறு அனுப்பத் தவறும் குற்றத்திற்கு உரூ. 50/– ஒறுப்புத் தொகை விதிக்க, விதி இடமளிக்கிறது. 1867–ஆம் ஆண்டுச் சட்டத்தையும் 1955–இல் திருத்திய சட்டத்தையும் செயற்படுத்தும் போது, சில முரண்பாடுகளும், காலத்துக்கு ஒவ்வாத இயல்புகளும் வெளிப்படவே, மீண்டும் இச்சட்டம் 1960–ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. சூழ்நிலை நெருக்கத்தின் விளைவாக, அனுமதி வழங்கிய உறுதி ஆவணத்தை முறிக்கும் ஆணை வழங்குவதற்கு முன், பாதிக்கப்படுபவருக்குத் தம் நியாயத்தை எடுத்துரைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர், மத்திய அரசினால் ஏற்படுத்தப்பட்ட குழுமத்திற்கு மேல் முறையீடு செய்யவும் வழி வகுக்கப்பட்டுள்ளது. உள்ளூர்க் குற்றவியல் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யவும் வழி வகுக்கப்பட்டுள்ளது. அச்சக உரிமையாளரோ வெளியிடுகிறவரோ மாறினாலும், உடைமை மாற்றப்பட்டாலும் புதியதாக உறுதி ஆவணம் தாக்கல் செய்து அனுமதி பெறவேண்டும். வெளியிடும் காலம் மாறினாலும் (மாத இதழை வார இதழாக மாற்றினாலோ வேறு விதமாக மாற்றினாலோ) புதிய உறுதி ஆவணம் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும். செய்தித் தாள்களுக்கு உரிய விதிகளை மீறினால் 20–ஆம் விதியின்படி உரூ. 100/– ஒறுப்புத்தொகையாக விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. திருத்தச் சட்டத்தின் 21–ஆம் பிரிவுப்படி மாநில அரசுகள், மத்திய அரசின் ஒப்புதல் பெற்றே விதி விலக்கு வழங்கவேண்டும். இத்தகைய கூறுகள் மேலே காட்டிய திருத்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட இன்றியமையாத திருத்தங்களாகும். புது தில்லியில் இயங்கிவரும் செய்தித்தாள் பதிவாளர் தம்முடைய அலுவலகத்தில் செய்தித் தாள்களின் பெயர், மொழி, ஆசிரியர் பெயர், அச்சிடுகின்றவர்பெயர், வெளியிடுபவர் பெயர், அச்சிடப்படும் இடம், வெளியாகும் இடம், பக்கங்கள், விலை, பருவ வெளியீட்டின் உரிமையாளர் பெயர் முதலிய விவரங்கள் அடங்கிய பதிவேட்டினைத் தயாரித்து வைத்திருப்பார். 19-சி பிரிவின்படி குற்றவியல் நடுவர் உறுதி ஆவணம் வழங்கிய விவரம் கிடைத்ததும் அப்பருவ வெளியீட்டிற்குப் பதிவுச் சான்றிதழைச் செய்தித் தாள் பதிவாளர் வழங்குவார். சட்டத்தின் 19–டி, பிரிவின்படி செய்தித் தாள்கள், செய்தித்தாள் பதிவாளருக்குத் தங்களுடைய பருவ வெளியீட்டின் முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையைத் (Statement) தாக்கல் செய்ய வேண்டும். அத்தகைய விவரங்களைத் தங்களுடைய பருவ வெளியீட்டில் வெளியிடவேண்டும். 19–இ பிரிவுப்படி செய்தித்தாள் பதியாளர் கேட்கும் விவர அறிக்கையை (Return) அனைத்துச் செய்தித் தாள்களும் கொடுத்தாக வேண்டும். பதிவாளர், செய்தித்தாள் அலுவலகங்களுக்குச் சென்று பருவ வெளியீடு தொடர்பான ஆவணங்களையும், மூல ஏடுகளையும். இதர குறிப்புகள் அடங்கிய பதிவேடுகளையும் பார்வையிடலாம்; தேவையான குறிப்புகளுக்கு நகல் எடுத்துக் கொள்ளலாம், எந்த விதமான தகவலையும் கேட்டு அறிந்து கொள்ளச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. சேகரிக்கப்பட்ட தகவல்களைச் செய்தித்தாள் பதிவாளர், முறைப்படுத்தி, வகைப்படுத்தி, ஆண்டறிக்கை தயாரித்து, அச்சிட்டு, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வழங்குவார். சட்டத்தின் 19–டி, 19–இ பிரிவுகளை மீறினால், செய்தித் தாள்களுக்கு உரூ. 500/– தண்டனை அளிக்கச் சட்டம் இடமளிக்கிறது. இச்சட்டத்தின்படி, தவறான தகவல்களை வேண்டும் என்றே எவர் கொடுத்தாலும், அத்தகைய குற்றத்துக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் உரூ. 1,000/– ஒறுப்புத் தொகையும் விதிக்கச் சட்டம் இடமளிக்கிறது. இச்சட்டத்தைத் திருத்தவோ, சட்-<noinclude></noinclude> 059ccg1wdioxp9el4np8objw6abcm64 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/158 250 617121 1837244 1824152 2025-06-30T04:25:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அச்சணந்தியடிகள்|122|அச்சம்}}</noinclude>டத்தில் புதிய விதிமுறைகளை உருவாக்கவோ மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. நூல் வெளியிடத் தனியாக உறுதி ஆவணம் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டியதில்லை; அச்சகத்திற்குப் பெறப்பட்ட உறுதி ஆவணமே போதுமானது. நூல் வெளிவந்ததும், அச்சிட்டவர் இரு படிகளை நூற்பதிவாளரிடம் கொடுத்து ஒப்புதல் சீட்டுப் பெற வேண்டும். அவ்வாறு கொடுக்கும் நூலுடன் நூலின் பெயர், மொழி, நவின் அளவு, விலை, பக்கம், படிகளின் எண்ணிக்கை, ஆசிரியர் பெயர் முதலிய விவரங்கள் அடங்கிய உறுதி மொழி ஆவணத்தையும் உடன் இணைத்துக் கொடுக்கவேண்டும். அன்றி, அத்தகைய விவரங்களை நூலின் ஒரு பகுதியில் அச்சிட்டும் தரலாம். நூல் வெளியிட்டவர் கன்னிமாரா, நூலகம் (சென்னை), தேசிய நூலகம் (பம்பாய்), தேசிய நூலகம் (சல்கத்தா) ஆகிய மூன்று நூலகங்களுக்கு மூன்று படிகள் அனுப்பி அல்லது நேரில் கொடுத்து, ஒப்புதல் சீட்டுப் பெற வேண்டும்.{{float_right|டி.எம்.கா.}} {{larger|<b>அச்சணந்தியடிகள்</b>}} சீவகசிந்தாமணிக் காப்பியத்தின் தலைவனாகிய சீவகனின் ஆசிரியர் ஆவார். ஆரியநந்தி என்பது இவரது மற்றொரு பெயர். சீவகனுக்குப் பிறப்பு உணர்த்துகிற நிலையில் நாமகன் இலம்பகத்தில் இவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். கோவித்தையார் இலம்பகத்தின் முதற் செய்யுளில் இவரது பெயர் ‘அச்சணந்தி’ என்று சுட்டப்படுகிறது. சீவகனைக் கட்டியங்காரனின் கொடுமையினின்றும் தப்புவித்துக் காலம் வரும்வரை வெளிப்படுத்திக் காட்டாது காப்பாற்றியவர். அச்சணந்தியடிகள் சீவகனுக்குத் தமது முற்பிறப்பு வரலாற்றினைக் கூறினார். இவர் முற்பிறப்பில் வெள்ளிமலையிலுள்ள வாரணவாசி என்னும் நகரத்தரசர். உலோகமாபாலன் என்பது இவரது இயற்பெயர். இவர் தவஞ்செய்யக் கருதித் தம் மகனுக்கு அரசளித்துத் தவவேடம் புனைந்து நோன்பு மேற்கொண்டார். ஆனால், முற்பிறப்பில் செய்த பாவத்தால் யானைத் தீ என்னும் நோய் இவருக்கு உண்டாகிப் பெரிதும் வருத்தியது. நீண்ட காலம் அதிலிருந்து இவர் விடுபட முடியவில்லை. சீவகனைக் கண்டவுடன் அந்நோய் நீங்கப் பெற்றார். ஆதலின், அவனிடம் பெரு விருப்புக் கொண்டு அவனுக்குக் கல்வி கற்பித்தார். கடமை முடிந்ததும் தவஞ் செய்தற்குச் சென்றார். சீவகன் இவரைப் பிரிவதற்கு வருந்தினாலும், இவர்தம் தவ நாட்டத்தை மறுத்தற்கு அஞ்சி உடன்பட்டான். பின்னர், அச்சணந்தியடிகள் இருபத்து நான்காம் தீர்த்தங்கரராகிய சீவர்த்தமானரைச் சரணமடைத்து நோன்பியற்றி முத்தியடைந்தார். சீவகனுக்குப் பிறப்புணர்த்திய அச்சணந்தியடிகள் அவன் அருகப் பெருமான் நெறியைத் தழுவுதல் வேண்டி நல் ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கற்பித்தார். நரகர், விலங்கு, மக்கள், தேவர் ஆகிய உயிர்கள் செல்லும் நெறியையும் காட்டினார்.{{float_right|வெ.ப.}} {{larger|<b>அச்சம்</b>}} என்பது இன்னல் தரும் சூழ்நிலைகளின் காரணமாக எல்லா உயிரினங்களிடமும் இயல்பாகத் தோன்றும் ஒரு மனவெழுச்சி, இன்னலிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் அச்சம் வழி செய்கிறது. எல்லாப் பருவத்தினருக்கும் அச்சம் தோன்றலாம். பச்சிளம் குழவிக்கு அச்சம் தோன்றுவதில்லை. ஏறத்தாழ ஆறுமாதங்களுக்குப் பின்னரே குழந்தை அச்சத்தை உணர்கிறது. மூன்று மாதக் குழந்தை மகிழ்ச்சி போன்ற மனவெழுச்சிகளைக் காட்டமுடிகிறது. ஆனால், ஆறுமாதங்களுக்குப் பின்னரே குழந்தை பட்டறிவின் மூலமாக அச்சம் கொள்ளக் சுற்றுக் கொள்கிறது. காட்டாக, குழந்தை தன் தாய் பாம்பைக் கண்டு அச்சம் கொள்வதைப் பார்க்கிறது. இதனைப் பார்க்கும் குழந்தையும் அஞ்சக் கற்றுக் கொள்கிறது. இவ்வாறே காலப்போக்கில் அக்குழந்தை பிற பொருள்களையும் கண்டு அஞ்சத் தொடங்குகிறது. அச்சம் மனிதர்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாறுதல்களைத் தோற்றுவிக்கிறது. இன்னல் நீடித்து இருப்பதாக அறிந்தால், மனிதன் அச்ச நிலையை அடைகிறான். இந்நிலையில் “சஞ்சலமும் கிலியும் நிறைந்த கூக்குரல், அழுகை, அல்லது பெருஞ்சிரிப்புப் போன்ற கட்டுக்கு மீறிய நடத்தைகளில் அவன் ஈடுபடலாம். தீ விபத்துப்போன்ற சூழ்நிலைகளில் அச்சத்தின் காரணமாகச் செய்வதறியாது உயரமான இடத்திலிருந்து கீழே குதித்துவிடலாம் அல்லது செயலற்று நின்றுவிடலாம். வால்டர் கானன் (Walter Cannon) என்னும் அமெரிக்க உடற்கூற்று வல்லுநர் 1920–இல், உடல் மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்து “நெருக்கடிச் செயற் கோட்பாடு” (Emergency function theory) என்னும் விளக்கத்தைக் கொடுத்தார். மிகையான அச்சம் ஏற்படின் உடலில் உள்ள பரிவு நரம்பு மண்டலம் (Sympathetic Nervous System) மனிதர்களை எதிர்பாராத வன்முறையான செயல்களிலோ ஓட்டத்திலோ ஈடுபடச் செய்யும் என்று கானன் கூறினார். இந்நிலையில் உடலின் இயங்கு முறைகளைச் செயற்படுத்தும் துணைப் பரிவு நரம்பு மண்டலம் தடைப்பட்டு நிற்கிறது என்றும் கூறினார். வேறு சில ஆராய்ச்சியாளர்கள், தானியங்கு நரம்பு மண்டலப் பகுதியின் சமநிலை சீர்குலைந்து விடுவதால், மிகை அச்சம்<noinclude></noinclude> nfge6yo69qpzotboo2ai1hoqix9geh0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/159 250 617223 1837246 1824521 2025-06-30T04:30:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அச்சம்|123|அச்சுதராயர்}}</noinclude>கொண்டவர்கள் தடுமாறுகின்றனர் என்று விளக்கம் தருகின்றார்கள். எதனைக் குறித்த அச்சம் கொள்கிறோம் என்பது தெரியாமலே சிலர் அச்சம் கொள்கின்றனர். இதனை இனம்புரியாத அச்சம் அல்லது பதற்ற நிலை (Anxiety) என்றும் கூறுவர். சிக்மண்டு பிராய்டு (Sigmund Freud) என்பவரின் கோட்பாட்டின்படி கசப்பான உண்மைகளும் பட்டறிவுகளும் ஒடுக்கல்களாக (Repressions) நனவிலியில் (The Unconscious) புதைந்து கிடக்கின்றன. இவற்றுடன் இயைபு கொண்ட வேறு ஏதாவது அனுபவம் நனவிலியில் இருந்தால், புதைக்கப்பட்ட எண்ணங்கள் மனத் தடைகளை மீறி, நனவு உள்ளத்தை ஆட்கொள்ள முற்படலாம். இவ்வாறு வெளிப்படும் ஒடுக்கப்பட்ட நினைவுகள், உள்ளத்தில் எப்பொழுதும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடும். இறுதியில் ஏன் இந்த அச்சம் எழுந்தது என்று தெரியாமலேயே ஒருவர் பதற்ற நிலையை அடைகிறார். இத்தகைய அச்சம், இனம் புரியாத அச்சம் ஆகும். இந்நிலையிலிருந்து மீள்வவதற்கு இதற்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடித்து விளக்கி, அச்சம் கொண்டவரிடம் அதனை எடுத்துக் கூறுவதினாலேயே ஓரளவு பலன் கிட்டும். உளவியல் வல்லுநர், நோயாளியின் உள்ளத்தைச் சமன்படுத்த அவரிடம் சில வழிமுறைகளை எடுத்துரைத்தபின், நோயாளிக்கு அளிக்கப்படவேண்டிய மருந்துகளும் பயிற்சிகளும் இருக்கின்றன. இவற்றின் மூலமாகப் பதற்றநிலை எனப்படும் இவ்வச்சம் நீங்கக்கூடும். சிலருக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருளையோ சூழ்நிலையையோ காணநேரிடின், மிகையான அச்சம் ஏற்படும். இத்தகைய அச்சங்கள் கிலிகள் (Phobias) எனப்படும். கிலிகள் எந்தப் பொருள் அல்லது எந்தச் சூழ்நிலை பற்றியேனும் ஏற்படலாம். கோபுரம், மலையுச்சி போன்ற உயரமான இடங்கள், அடைபட்ட இடங்கள், இருள், வெட்டவெளி, நெருப்பு, கூட்டங்கள், ஆறு, குளங்கள், பூச்சிகள், எலி, பாம்பு, தவளை, பல்லி, புற்றுநோய், காசநோய் போன்ற எதனைப் பற்றியும் கிலிகள் ஏற்படலாம். கிலிக்குக் காரணமான பொருள் அற்பமானதாக இருந்தாலும் மனநல ஆய்வுப்படி இத்தகைய கிலி படைத்தவர்களுக்கு மருத்துவம் செய்ய முற்படும் போது அவர்களின் அச்சம், இடம் மாறிய உணர்வு என்று கண்டு கொள்ளலாம். பாலுணர்வு பற்றிய குழப்பங்கள், குழந்தைப் பருவத்து ஈடிபசு சிக்கல் (Oedipus Complex), ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மைகள் ஆகியவை இவர்களின் அடிப்படை அச்சத்துக்குக் காரணமாயிருக்கலாம். அவற்றை உள்ளத்திலிருந்து வெளிக்கொணர்ந்து, நோயாளியை உணர வைப்பது ஒரு மருத்துவ முறையாகும். ஆனால், பலரும் இதுபோன்ற கிலியில் பீடிக்கப்பட்டவர்களைப் படிப்படியாக அவர்கள் பயப்படும் பொருளை உண்மையாக நெருங்கவோ கற்பனையில் நெருங்கவோ ஏற்பாடு செய்வது, நடத்தை மருத்துவம் (Behaviour Therapy) ஆகும். இதில் பலவித அணுகுமுறைகள் உள்ளன. மேற்கூறிய முறைகளைத் தவிர அச்சத்திற்குக் காரணமான சூழ்நிலைக்குப் பாதிக்கப்பட்டவரைத் தள்ளுவது என்னும் முறையும் (Implosive Therapy). முள்ளை முள்ளால் எடுப்பது போல் காரணமில்லா அச்சத்திற்குள்ளானோரை அந்த அச்சத்தை முழுவதும் உணர அல்லது எதிர்கொள்ள வைத்து மருத்துவம் செய்வது போன்ற முறைகளும் நடைமுறையில் உள்ளன.{{float_right|என்.மா.}} {{larger|<b>அச்சிராவதி</b>}} ஓர் ஆறு. அயோத்தியில், இந்த ஆற்றை இக்காலத்தில் இராப்தி என்பர். பௌத்த சமய இலக்கியத்தில் போற்றப்பெறும் புனித ஆறுகளுள் ஒன்று. இந்த ஆறு கோசல நாட்டின் கடைசித் தலைநகரான சிராவசுதி என்னும் பண்டைய நகரத்தின் மேற்கே ஓடுகிறது. இந்த ஆற்றங்கரையில் அமைந்திருந்த மனசாகேதா என்னும் மாந்தோப்பில் புத்தபிரான் தங்கியிருந்ததாகக் கூறுவர். {{larger|<b>அச்சிறுபாக்கம்</b>}} தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுன் ஒன்று, இன்று அச்சரப்பாக்கம் என்றும் இவ்வூர் வழங்கப் பெறுகிறது. திண்டிவனம்–சென்னைத் தொடர்வண்டி வழியில் சென்னைக்குத் தெற்கில் 22 கல் தொலைவில் இவ்வூர் உள்ளது. செங்கற்பட்டு, காஞ்சி ஆகிய இடங்களிலிருந்து செல்லச் சாலைத் தொடர்புகள் உள்ளன. இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது. இறைவன் ஆட்சி நாதர்; இறைவி இளங்கிளியம்மை. மேலும், இங்கு உமையாட்சி நாதர்–மெல்லியலாள் சந்நிதியும் உள்ளது. “மெல்லியலாளை ஒரு பாகமாப்பேணி”, “இளங்கிளை அரிவையோ டொருங்குடனாகி” என்பன தேவாரத் தொடர்கள். சிவபெருமான் திரிபுரமெரிக்கச் சென்ற போது, விநாயகரை வணங்காது சென்றமையால், இவ்விடத்தில் அவர் ஊர்ந்து சென்ற தேரின் அச்சு முறிந்தது என்றும், அதனால், இவ்விடம் அச்சிறுபாக்கம் (அச்சு + இறு + பாக்கம்) எனப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கொன்றை தலமரமாகும்.{{float_right|ரா.கி.}} {{larger|<b>அச்சுதராயர்</b>}} விசயநகரப் பேரரசை ஆண்ட கிருட்டிணதேவராயரின் தம்பி. இவர் கி.பி. 1529 முதல் 1542 வரை விசயநகரப் பேரரசின் அரசராகப் பதவி வகித்தவர். இவர் வல்லாட்சி நடத்த விரும்பி-<noinclude></noinclude> j3otkwts7x1djijrch4p2tc2ocevrup பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/160 250 617224 1837250 1824529 2025-06-30T04:35:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அச்சுதன்|124|அச்சுநாடுகள்}}</noinclude>னார். பீசப்பூர் சுல்தானாரிய இசுமாயில் ஆதில்சா என்பவன் அச்சுதராயரைப் போரில் தோற்கடித்து, முத்கல், இரெய்ச்சூர் ஆகிய கோட்டைகளை வெற்றி கொண்டான்.{{float_right|ம.இரா.}} {{larger|<b>அச்சுதன்</b>}} என்பது அழிவில்லாதவன் என்னும் பொருளில் இறைவனைக் குறிக்கும். திருமாலின் பன்னிரு திருநாமங்களுள் அச்சுதன் என்பதும் ஒன்றாகும். அச்சுதன் என்னும் பெயர் திருமாலையும் சிவனையும் சண்முக சேனா வீரனையும் குறிக்கும். சங்க காலத்தில் அச்சுதனார் என முடியும் பெயர் கொண்ட புலவர் சிலர் வாழ்ந்தனர். அவருள் நல்லச்சுதனார் என்பவர் ஒருவர். இவர் பெயரில் வரும் ‘நல்’ சிறப்பு அடையாகும். அச்சுதனார் எனப் பிறிதொரு புலவரும் அக்காலத்தில் வாழ்ந்தார். இவர் பரிபாடல் சிலவற்றிற்கு இசையமைத்துள்ளார். {{larger|<b>அச்சுதாநந்தசாமி{{sup|1}}</b>}} 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்; நாயுடு மரபினர்; இளமைப் பெயர் அப்பாய் நாயுடு; வைணவர்; இவர் வடார்க்காடு மாவட்டம் போரூரில் கி.பி. 1850-இல் பிறந்தார். இளமையில் பெற்றோரை இழந்தார். நெடுங்காலம் மணம் செய்து கொள்ளவில்லை. பின்னர்த் தாயம்மை என்பாரைத் துணைவியாராக ஏற்றார். வேங்கட கிருட்டிண தாசர் என்பவர் இவருக்கு ஞானாசிரியராக வாய்த்தார். பக்தியில் திளைத்த இவர், இசையோடு கூடிய துதிப் பாடல்கள் பல பாடியுள்ளார். யோகத்திலும் இவர் நாட்டம் சென்றது. வெங்கம்மையார் என்பவரிடம் யோகப் பயிற்சி பெற்றார். வைணவராக இருந்தும் நிசானந்தர் என்பவரிடம் அத்துவிதக் கோட்பாடுகளைக் கேட்டுணர்ந்தார். தோத்திர இசைப் பாடல்கள், நிசானந்தர் பதிகம், துருவ சரித்திரம், அத்துவைத கீர்த்தானந்த லகரி, சன்மார்க்க தருப்பணம், பிரகலாத சரித்திரம் ஆகியவை இவர் இயற்றிய நூல்களாகும். இவர் கி.பி. 1902–இல் மறைந்தார். {{larger|<b>அச்சுதாநந்தசாமி{{sup|2}} 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்; அத்துவித நெறியினர்; சென்னைக்கு அண்மையில் கோவிந்தபுரம் என்ற ஊரில் பிறந்தவர். பெற்றோர் சுப்பராய பூபதி, காமாட்சி அம்மையார். விருத்தாசலம் சிவசிதம்பர தேசிகர் என்பவர் இவருக்கு ஞானாசிரியர்; சமயப் பற்று மிக்கவர்; வழிபாட்டில் பேரீடுபாடு கொண்டவர். இவர் இயற்றிய நூல்கள்; தியானானுபூதி, அத்துவைத சாத்திர மான்மிய சங்கிரகம், அத்துவைத ரச மஞ்சரி. இந்நூல்களால் இவரது பரந்த தத்துவ ஆராய்ச்சி நன்கு விளங்கும், ஆதிசங்கரரிடம் ஈடுபாடு கொண்ட அச்சுதானந்த அடிகளும் இவரும் ஒருவரா வேறானவரா என்பது தெளிவாகவில்லை. அச்சுதானந்த அடிகள் ‘திருத்தாலாட்டு’ என்னும் நூலைப் பாடியுள்ளார். {{larger|<b>அச்சுநாடுகள்</b>}} என்பது செருமனி, இத்தாலி, சப்பான் ஆகிய மூன்று நாடுகளின் அணியாகும். இரண்டாம் உலகப்போரின்போது (1939) உலக நாடுகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நின்றன. செருமனி, இத்தாலி, சப்பான் ஆகிய மூன்று நாடுகளும் வலிந்து கவரும் போக்கினை மேற்கொண்டு, உலக அமைதியைக் காக்கத் தோன்றிய அனைத்து நாட்டுச் சங்கத்தைப் (League of Nations) புறக்கணித்தன. கடற்படை மற்றும் போர்க்கருவிகளைப் பெருக்குதலில் நம்பிக்கை வைத்துப் புதிய நாடுகளை அடையும் போட்டியில் இதுவரை வெற்றியடைந்துள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக விளங்க ஆவல் கொண்டு, ஒன்றாக இணைந்தன. ஒரே அச்சில் சுழல உடன்பட்ட இந்த மூன்று நாடுகளின் இணைப்பு அச்சு நாடுகளின் அணி (Axis Powers) என்று சொல்லப்பட்டது. இந்த இணைப்பிற்குப் பதிலளிக்கும் வகையில் நேச நாடுகளின் அணி (Allied Powers) உருவாயிற்று. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகள் இருந்தன. பின்னர் உருசியாவும் இவ்வணியில் சேர்ந்துகொண்டது. முதல் உலகப் போர் (1914–1918) முடிந்ததும் அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இதில் போரைத் தொடங்கிய குற்றத்திற்காகச் செருமனி நாட்டின்மீது மிகக் கடுமையான விதிகள் சுமத்தப்பட்டன. இதனால் ஆல்சேசு, இலொரேன் போன்ற இரும்புக் கனி வளம் நிறைந்த பகுதிகளைச் செருமனி இழந்தது. அன்றியும் பெரும் இழப்பீட்டுத் தொகையும் தர வேண்டியதாயிற்று. இவற்றோடு போரால் துயருற்ற மக்களின் பொருளாதாரத்தையும் பண்பாட்டையும் சீரமைக்கும் பெரும் பொறுப்பும் சேர்ந்துகொண்டது. தலை நிமிர்வதற்குள் செருமனி திணறிவிட்டது. தன்மானத்தையும் மதிப்பையும் இழந்த நிலையில் ஒரு செருமானியன், அவற்றை மீட்டுத் தர உறுதியளிக்கும் எந்த ஒரு தனி மனிதனையும் எந்த ஓர் அரசியல் கட்சியையும் நம்பத் தயாராக இருந்தான். இட்லர் செருமனியின் உயர்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றிலார். செருமனியை அவமானத்திற்குள்ளாக்கிய அமைதி உடன்பாட்டு விதிகளை மீறுதல், குடியேற்ற நாடுகளை அடைதல், படைவலியைப் பெருக்குதல் போன்ற செயல்களை நிறைவேற்றுவதில் விளையும் எதிர்ப்பை முறியடிக்க அவருக்கு நண்பர்கள் தேவைப்பட்டனர். அமைதி உடன்படிக்கையால் ஏமாற்றப்பட்டதாக எண்ணிப் பொருமிக் கொண்டிருந்த இத்தாலியும்,<noinclude></noinclude> i2t37x64ltf70c7nd59egttp6fn746l பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/75 250 619208 1837168 1836851 2025-06-29T15:27:17Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>வெகுளாமை</b>}}}} பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன்: பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?{{float_right|1}} பலிக்காத இடத்தில் (தன்னைவிட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு; பலிக்கும் இடத்திலும் (மெலியவரிடத்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.{{float_right|2}} யாரிடத்திலும் சினங் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும்; தீமையான விளைவுகள் அந்தச் சினத்தாலேயே ஏற்படும்.{{float_right|3}} முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?{{float_right|4}} ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால், சினம் வாராமல் காத்துக் கொள்ள வேண்டும்; காக்காவிட்டால், சினம் தன்னையே அழித்துவிடும்.{{float_right|5}} சினம் என்னும் சேர்நதவரை அழிக்கும் நெருப்பு, ஒருவனுக்கு இனம் என்னும் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.{{float_right|6}} (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப் பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.{{float_right|7}} பல சுடர்களை உடைய பெருநெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமானால் அவன்மேல் சினங்கொள்ளாதிருத்தல் நல்லது.{{float_right|8}} ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம் அவன்ஒருங்கே பெறுவான்.{{float_right|9}} சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.{{float_right|10}}<noinclude>{{rh|62||}}</noinclude> fpqtauh9ahkkk0rb1wizf36a6eahy58 பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/76 250 619209 1837169 1833866 2025-06-29T15:31:17Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|துறவறவியல்||அதிகாரம் 31}}</noinclude>{{center|{{larger|<b>வெகுளாமை</b>}}}} <poem>செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்{{float_right|301}} செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற{{float_right|302}} மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்{{float_right|303}} நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற{{float_right|304}} தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்{{float_right|305}} சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்{{float_right|306}} சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று{{float_right|307}} இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று{{float_right|308}} உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்{{float_right|309}} இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை{{float_right|310}} </poem><noinclude>{{rh||63|63}}</noinclude> nkkfc44987rzdm17c1flwj9rt9jg0r4 பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/77 250 619210 1837170 1833867 2025-06-29T15:35:30Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>இன்னா செய்யாமை</b>}}}} சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.{{float_right|1}} ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம். {{float_right|2}} தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.{{float_right|3}} இன்னா செய்தவரைத் தண்டித்தல், அவரே நாணும்படியாக அவர்க்கு நல்லுதவி செய்து, அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்துவிடுதலாகும்.{{float_right|4}} மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?{{float_right|5}} ஒருவன் துன்பமானவை என்று தன்வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.{{float_right|6}} எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனத்தால் எண்ணி உண்டாகின்ற துன்பச் செயல்களைச் செய்யாதிருத்தலே சிறந்தது.{{float_right|7}} தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத் துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாலோ?{{float_right|8}} முற்பகலில் மற்றவர்க்குத் துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும்.{{float_right|9}} துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன: ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்குத் துன்பம் செய்யார்.{{float_right|10}}<noinclude>{{rh|64||}}</noinclude> jcjznyyr6qs0ncrtchrhugmil71pnaj பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/78 250 619211 1837172 1833869 2025-06-29T15:39:06Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1837172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|துறவறவியல்||அதிகாரம் 32}}</noinclude>{{center|{{larger|<b>இன்னா செய்யாமை</b>}}}} <poem>சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்{{float_right|311}} கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்{{float_right|312}} செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும்{{float_right|313}} இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்{{float_right|314}} அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை{{float_right|315}} இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்{{float_right|316}} எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை{{float_right|317}} தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்{{float_right|318}} பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்{{float_right|319}} நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்{{float_right|320}} </poem><noinclude>{{rh||65|65}}</noinclude> s4iyx5zzv9uog8pappf1an0clyik7u8 கனிச்சாறு 3/011 0 619680 1837295 1836219 2025-06-30T07:14:35Z Info-farmer 232 8 1837295 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 011 | previous = [[../010|← 010 ]] | next = [[../012| 012 →]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="39" to="39" fromsection="8" tosection="8" /> 306b1m4nad0jnyv3i56981e0jngl12y கனிச்சாறு 3/012 0 619681 1837296 1836220 2025-06-30T07:15:48Z Info-farmer 232 <pages index="கனிச்சாறு 3.pdf" from="40" to="40" fromsection="9" tosection="9" /> 1837296 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 012 | previous = [[../011|← 011 ]] | next = [[../013| 013 →]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="40" to="40" fromsection="9" tosection="9" /> 9qyp7bxamq8ki4kal4hjdqify806u2w கனிச்சாறு 3/013 0 619682 1837297 1836223 2025-06-30T07:16:58Z Info-farmer 232 <pages index="கனிச்சாறு 3.pdf" from="41" to="41" fromsection="11" tosection="11" /> 1837297 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 013 | previous = [[../012|← 012 ]] | next = [[../014| 014 →]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="41" to="41" fromsection="11" tosection="11" /> m9hgfoeflyodyhpmn8vg5r1y7jbqpex 1837298 1837297 2025-06-30T07:18:10Z Info-farmer 232 <pages index="கனிச்சாறு 3.pdf" from="40" to="40" fromsection="10" tosection="10" /> 1837298 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 013 | previous = [[../012|← 012 ]] | next = [[../014| 014 →]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="40" to="40" fromsection="10" tosection="10" /> 2fbzce68bezpu7cb3us7drxgde8hqax உயிர்க்காற்று 0 619910 1837180 1837035 2025-06-29T16:05:33Z Info-farmer 232 added [[Category:சிறுகதைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1837180 wikitext text/x-wiki {{header | title = உயிர்க்காற்று | author = மேலாண்மை பொன்னுச்சாமி | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = இரண்டாம்பதிப்பு டிசம்பர் 2004 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 14 ஆகும். }}{{featured download}}<br><br><br> <pages index="உயிர்க்காற்று.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="உயிர்க்காற்று.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="உயிர்க்காற்று.pdf" from="3" to="3" /> {{page break|label=}} {{c|[[உயிர்க்காற்று/001]]}} <pages index="உயிர்க்காற்று.pdf" from="4" to="4" /> [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி]] [[பகுப்பு:Transclusion completed]] [[பகுப்பு:சிறுகதைகள்]] 3vc1h88l26pfua9t9tlapj6o4tm0dl8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/330 250 619924 1837104 2025-06-29T12:32:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்டவர்கள். இருக்குவேத காலத்தில் ஏழு சாதிகளாகப் பிரிந்து இருந்த பூசாரிகள் பிந்தைய வேத காலத்தில் பதினேழு சாதிகளாக உயர்ந்தனர். அக்காலத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதாய்-தின்-கா-சோப்ரா|294|அதிகச் சலுகையுறும் நாடுகள்}}</noinclude>பட்டவர்கள். இருக்குவேத காலத்தில் ஏழு சாதிகளாகப் பிரிந்து இருந்த பூசாரிகள் பிந்தைய வேத காலத்தில் பதினேழு சாதிகளாக உயர்ந்தனர். அக்காலத்தில் அவர்களின் செல்வாக்கும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. {{larger|<b>அதாய்-தின்-கா-சோப்ரா</b>}} என்பது ஒரு மசூதியின் பெயர். சாகம்பரியைத் தலைநகராகக் கொண்ட சாகமன அரசர்களுள் ஒருவரான விக்கிரகராசா விசாலதேவர் என்பார், சிறந்த கவிஞரும் இலக்கியப் புரவலருமாவார். அவர் எழுதிய அரகலி நாடகத்தின் சில பகுதிகள், அதாய்-தின்-கா-சோப்ர {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 330 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 281 |oTop = 190 |oLeft = 26 |Location = center |Description = }} {{center|அதாய்-தின்-கா-சோப்ரா}} என்னும் மசூதியின் சுவரில் பதிக்கப்பட்டுள்ள கற்பலகை ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர்த்தால் இந்நாடகப் பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் கண்டுபிடிக்கப்பட்ட ‘லலிதா விக்கிரகராசா’ என்னும் பிறிதொரு நாடகம், விக்கிரகராசாவின் மேல் மகாகவி சோமதேவர் என்பவரால் எழுதப்பெற்றதாகும். அதுவும் அங்கேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. {{larger|<b>அதானா</b>}} துருக்கி நாட்டின் நான்காவது பெருநகரம். செய்கான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரம், மத்திய தரைக்கடலுக்கு வடக்கே 48 கி.மீ. தாலைவிலும், துருக்கிக் குடியரசின் தலைநகரான அங்காராவின் தென்கிழக்கில் 386 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பெருமளவில் பருத்தி உற்பத்தியாகும் மாவட்டத்தின் மையமாக அதானா (Adana) அமைந்துள்ளது. இங்குள்ள பஞ்சாலைகள் சிறப்பாகப் பருத்தி ஆடைகளை நெய்கின்றன. இந்நகர் பண்டைய உரோமானியரின் குடியேற்றப் பகுதியாய் இருந்தது. எனவே, இஃது ஓர் இராணுவத் தளமாகவும் இருந்திருக்கக் கூடும். மக்கள் தொகை 5,74,515 (1980). {{larger|<b>அதிகச் சலுகையுறும் நாடுகள்:</b>}} பன்னாட்டு அரசியல், வாணிகத் தொடர்பான துறைகளில் சில நாடுகள் உயர்நிலைச் சலுகையைப் பெற்று வருவதுண்டு, அந்நாடுகள் பொதுவாகத் தம் பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாகப் பிற நாடுகளைக் காட்டிலும் உயர்நிலையை அடைந்துள்ளன. தடையற்ற, ஆதாயம் ஈட்டக்கூடிய வாணிக நடவடிக்கைகளுக்காக நாடுகள், பிற நாடுகளுடன் சிறப்பான இரு கருத்துகளின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் செய்து கொள்கின்றன. அவை: (1) ஒப்பந்தம் செய்து கொள்ளும் நாடுகளுக்கிடையே இறக்குமதி வரிவீதம் குறைவாயிருத்தல். (2) அவ்வீதத்தை விட அந்நாட்டில் வேறு நாட்டுப் பொருள்களின் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளின் வீதம் குறைவாக இவ்வாதிருத்தல். அப்படிக் குறைவாயிருப்பின் ஒப்பந்த நாட்டுப் பொருள்களின் இறக்குமதி வரிகளும் அதே அளவிற்குக் குறைக்கப்படும். அதாவது ஓர் ஒப்பந்த நாடு அதன் பொருள்களுக்கு அளிக்கும் சலுகைகளைப் பெறுவதுடன் அந்நாட்டில் வேறு நாட்டுப் பொருள்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளையும் பெற வேண்டும். அச்சலுகைகளைப் பெறுவதற்கான வாணிக ஒப்பந்தத்தின் ஓர் உட்பிரிவு விதியை அதிகச்சலுகை நாட்டு விதி (Most–Favoured Nation Treatment) எனவும், அவ்விதிக்குட்பட்டு ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகளை அதிகச் சலுகையுறும் நாடுகள் எனவும் குறிப்பிடுகின்றனர். அதிகச் சலுகை நாட்டு விதி, வாணிக நாடுகளுக்கிடையே அளிக்கப்படும் சமத்துவச் சலுகைகள் தொடர்பாகக் கூறுகிறது. தடையிலா வாணிகத்தில் (Free Trade) இணைந்திருந்த நாடுகளுக்கு இச்சலுகை விதி, மிகவும் பொருந்துவதாய் அமைந்திருந்தது. இவ்வாணிக ஒப்பந்தம் ஐரோப்பிய நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பரவலாக வழக்கத்திலுள்ளது. இது ஒப்பந்த நாடுகளுக்குத் தனிப்பட்ட சலுகைகளை அளிக்காமல் அதிகச்சலுகை நாட்டுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளேயே அனித்து வந்தது<noinclude></noinclude> 086jzymj9aivnzq7clf41yahh55vd2k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/331 250 619925 1837106 2025-06-29T13:03:10Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிரான்சு கி.பி. 1535–ஆம் ஆண்டில் ஒருமுக ஒப்பந்தத்தைத் (Unilateral) துருக்கி நாட்டுடன் ஏற்படுத்திக் கொண்டதிலிருந்து இவ்விதி தோன்றியது. இதன் பிறகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகச் சலுகையுறும் நாடுகள்|295|அதிகச் சலுகையுறும் நாடுகள்}}</noinclude>பிரான்சு கி.பி. 1535–ஆம் ஆண்டில் ஒருமுக ஒப்பந்தத்தைத் (Unilateral) துருக்கி நாட்டுடன் ஏற்படுத்திக் கொண்டதிலிருந்து இவ்விதி தோன்றியது. இதன் பிறகு தொடர்ந்து பல நாடுகள் இவ்விதியைப் பயன்படுத்தின. பின்னர் கி.பி. 1641-ஆம் ஆண்டு நெதர்லாந்தும் போர்ச்சுகல் நாடும் இருமுக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள இசைந்தன. இதுபோன்றே கி.பி. 1654–ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஆலிவர் கிராம்வெல் (Oliver Cromwell) சுவீடன் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இரிச்சர்டு காப்டென் (Richard-Cobden), மைக்கேல் கெவாலியர் (Michael Chavalier) ஆகியோரின் முயற்சியால் கி.பி. 1860–ஆம் ஆண்டு ஆங்கிலேய பிரெஞ்சு ஒப்பந்தம் ஏற்பட்டது. இச்சலுகை இதற்கு முன்பே இருநூற்றாண்டுகளாகப் பல வகைகளில் பழக்கத்திலிருந்ததாகவும் அறியப்படுகிறது. அதிகச் சலுகை ஒப்பந்தம், பன்னாட்டுப் பொருளாதாரச் சட்ட திட்டங்களுக்குட்பட்ட கொள்கையாக அமைந்து, வாணிகத்திற்குட்பட்ட நாடுகளிடையே சமாதானத் திட்டமாகவும் கட்டுப்பாடற்ற வாணிகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் உள்ளதென்ற ஒரு கருத்தும், நாடுகளிடையே காணப்படும் வாணிகச் சலுகைகளுக்கு இது முட்டுக்கட்டையாக விளங்குகிறது என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. அதிகச் சலுகை நாட்டு விதி, (1) கட்டுப்பாடற்ற அதிகச் சலுகை நாட்டு விதி, (2) கட்டுப்பட்ட அதிகச் சலுகை நாட்டு விதி என இரு வகைப்படும். {{larger|<b>கட்டுப்பாடற்ற அதிகச் சலுகை:</b>}} இது இரு ஒப்பந்த நாடுகள், வேறோர் அயல் நாட்டிற்கு வாணிகத்தையும் தொழிலையும் பற்றிய எல்லா உதவிகளையும் தாம் அளித்துள்ள அல்லது அளிக்கவிருக்கும் சலுகைகளுடன் உடனடியாகக் கட்டுப்பாடின்றி அளிப்பதுடன், அந்நாட்டு வாணிகத்தையும் தொழிலையும் எல்லா வகையிலும் உயர் சலுகை பெறும் நாட்டு வாணிகத்துடனும் தொழிலுடனும் ஒத்த நிலையில் நடத்திக் கொள்ள அனுமதிப்பதும் ஆகும். இதற்குச் சான்றாக 1911–ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கும் பொலிவியாவுக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைக் கூறலாம். இக்கருத்து, சர்வதேசச்சங்க (League of Nations) நாடுகளிடையே வாணிக ஒப்பந்தங்களின் போது பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட மாதிரி உயர் சலுகை நாட்டு விதியின் உட்பிரிவில், (Model Most-favoured Nation-treatment Clause) தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. விளங்கக் கூறினால் ‘A’ என்னும் நாடு ‘B’ என்னும் நாட்டுடன் அதிகச் சலுகைத் தொடர்பு கொண்டால் ‘B’ பிறநாடுகளுக்கு முன்னர் அளித்த அல்லது இனி அளிக்கப்போகும் சுங்கவரிச் சலுகைகளையெல்லாம் ‘A’க்கும் அளிக்கும். அதே நேரத்தில் ‘B’க்கு ‘C’ என்னும் நாட்டுடன் அதிகச் சலுகைத் தொடர்பு இருக்குமானால் ‘A’-க்கு ‘B’ கொடுக்கும் அனைத்துச் சலுகைகளும் ‘C’க்கும் கொடுக்கப்படும். இவ்வாறு அதிகச் சலுகை நாட்டு விதியின் உட்பிரிவு, ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு அளிக்கும் சிறப்புச் சலுகைகளை, அந்த இரு நாடுகளுக்கு மட்டுமே உரிமைப்படுத்தாமல், அதிகச் சலுகைத் தொடர்புடைய பிற எல்லா நாடுகளுக்கும் உரிமைப்படுத்துகிறது. அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் (Woodrow Wilson) செருமனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் 14 கூறுகளில் மூன்றாவது கூறாகக் கட்டுப்பாடற்ற அதிகச் சலுகை நாட்டு விதி கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா 1945–ஆம் ஆண்டு வெளியிட்ட பன்னாட்டு வாணிக, வேலை விரிவாக்கம் என்ற திட்ட வரைவு (Proposals for the expansion of world trade and employment) இலண்டன், செனிவா, அவானா (Hawana) போன்ற இடங்களில் கூடிய மாநாடுகளில், உலக வாணிக ஆவணமாக விரிவாக்கப்பட்டது. 1948–ஆம் ஆண்டு ஏற்படுத்திய சுங்கவரி வாணிகப் பொது ஒப்பந்தத்தில், கட்டுப்பாடற்ற கொள்கை புகுத்தப்பட்டது. அதிகச் சலுகை நாட்டு விதியின் உட்பிரிவை மேற்கொள்ளும் பல நாடுகளில், சுங்கவரிகள் ஒப்பந்தச் சுங்க வரிகள், பொதுச் சுங்க வரிகள் என இருவகைப்படும். அந்நாடுகளுடன் அதிகச்சலுகை வாணிக ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்படும் சுங்க வரிகள், ஒப்பந்தச் சுங்க வரிகள் ஆகும். வாணிக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளாத நாடுகளின் மீது விதிக்கப்படும் சுங்க வரிகள் பொதுச் சுங்க வரிகள் ஆகும். அவ்வகையில் பொதுச் சுங்க வரிகளின் வீதம் ஒப்பந்தச் சுங்க வரிகளின் வீதத்தை விட மிகுதியாக இருக்கும், பிற நாடுகளுடன் அவற்றின் சுங்க வரிகளைக் குறைக்கப் பேரஞ்செய்வதற்குப் பொதுச் சுங்க வரிகள் பயன்படுவதால் அவற்றைப் பேரச் சுங்க வரிகள் (Bargaining Tariff) என்றும் கூறுவதுண்டு. ஒப்பந்தச் சுங்க வரிகள் ஒப்பந்தக் காலம் வரையிலேயே செல்லுபடியாகும். ஒப்பந்தக் காலம் முடிந்தவுடன் மீண்டும் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளவோ மாற்றியமைக்கவோ வேண்டும். மேற்கூறிய வகைகளுக்குப் பதிலாக வேறு வகைச் சலுகைகளும் வழக்கத்திலுள்ளன. அவை உயர் அளவுச் சுங்க வரிகள் (Maximum Tariff), குறைந்த அளவுச் சுங்க வரிகள் (Minimum Tariff) என்பன. பிரான்சு மற்றும் அதன் தொடர்பு கொண்ட நாடுகளில் நடைமுறையில் உயர்ந்த அளவுச் சுங்க வரிகள் எனப்படுவன பொதுச் சுங்க வரிகளே. ஒப்பந்தச் சுங்க வரிகள் ஒரு குறிப்பிட்ட வீதத்திலேயே விதிக்கப்படுபவை. ஒப்-<noinclude></noinclude> ba8i65hvruju38walyurawgnt5k12n9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/332 250 619926 1837122 2025-06-29T14:10:27Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பந்தக் காலம் முடிவதற்குள் மாற்ற இயலாது. குறைந்த அளவுச் சுங்கவரி வீத அளவை ஒப்பந்தங்கள் குறிப்பிடா. ஆனால் ஒப்பந்தக் காலம் முடியுமுன் வரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகச் சலுகையுறும் நாடுகள்|296|அதிகச் சலுகையுறும் நாடுகள்}}</noinclude>பந்தக் காலம் முடிவதற்குள் மாற்ற இயலாது. குறைந்த அளவுச் சுங்கவரி வீத அளவை ஒப்பந்தங்கள் குறிப்பிடா. ஆனால் ஒப்பந்தக் காலம் முடியுமுன் வரி வீதத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆகையால் இவ்வரிகளை ஒப்பந்த வரிகளுக்கு மாறாக, ஒப்பத்தக் காலத்திலேயே உள்நாட்டுத் தொழில்களுக்குத் தொழிற்காப்பு அளிக்கும் நோக்கமுடன் உயர்த்திக் கொள்ளலாம். ஆனால் அவை, ஒப்பந்த வரிகளைப் போன்று பிறநாடுகளிலிருந்து சுங்க வரிகளை ஒட்டிய சலுகைகளைப் பெறப் பயன்படா. அதிகச் சலுகைத் தொடர்புடைய நாடுகள் வேறு நாடுகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளனைத்தையும் தாமும் பெற உரிமையுண்டு. எனினும், இவ்விதிக்குப் பின்வரும் விலக்குகளைக் குறிப்பிடுதல் மிகவும் இன்றியமையாதது. 1) {{larger|<b>எல்லைப்புற வாணிகம் (Frontier Trade)</b>}} பெரும்பாலும் தடையிலா வாணிகமாயிருக்கும். அவ்விதமான வாணிகத்தில் ஈடுபடும் இரண்டு நாடுகளும் பிற நாட்டுப் பொருள்களின் மீது சுங்க வரி விதிக்காது. ஆனால் இச்சலுகை அந்தந்த நாடுகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் பிறநாடுகளுக்கு அளிக்கப்பட வேண்டியதில்லை. 2) {{larger|<b>குடியேற்ற நாட்டுச் சலுகை:</b>}} பிரிட்டன், தன் ஆட்சியரிமை (Dominion) பெற்ற நாடுகளுக்கும் குடியேற்ற நாடுகளுக்கும் சுங்கவரிச் அளிக்கிறது. இச்சலுகை கூட, பிரிட்டனுடனும் ஆட்சி உரிமை பெற்ற நாடுகளுடனும் அதிகச் சலுகைத் தொடர்புடைய பிற நாடுகளுக்கு அளிக்கப்படுவதில்லை. இதையொத்த சலுகைகளை அமெரிக்கா, பிரான்சு, இத்தாலி, இசுபெயின் (Spain) போன்ற நாடுகளும் அளித்து வருகின்றன. ஆயினும், இசுபெயின் தன்னுடைய குடியேற்ற நாடுகளுக்கனிக்கும் சலுகைகளைப் பிற நாடுகளுக்கும் கொடுப்பதன் மூலம் தனித்து விளங்குகிறது. 3) {{larger|<b>மண்டலச் சலுகைகள்:</b>}} சில நாடுகள், அடுத்துள்ள நாடுகள் என்பதாலும் வரலாற்றுத் தொடர்புடைய நாடுகள் என்பதாலும் ஒன்றுக்கொன்று சுங்கவரிச் சலுகைகள் அளிப்பதுண்டு. இவையே மண்டலச் சலுகைகள் எனப்படும். இசுபெயின், போர்ச்சுகல், நார்வே, சுவீடன், அமெரிக்கா, கியூபா, பால்டிக், சில தென் அமெரிக்க நாடுகள், மத்திய அமெரிக்க நாடுகள் போன்றவை மண்டலச் சலுகைகள் அளித்துள்ளன. இச்சலுகைகள் அதிகச்சலுகைத் தொடர்புடைய வேறு நாடுகளுக்கு அளிக்கப்படுவதில்லை. 4) {{larger|<b>சுங்க ஒன்றியங்கள்:</b>}} சுங்க ஒன்றியங்களிலுள்ள நாடுகளுக்கிடையே சுங்க வரிகள் நீக்கப்பட்டுத் தடையிலா வாணிகம் நிறுவப்படும். இத்தடையிலா வாணிகச் சலுகையை அந்நாடுகள் உச்சச்சலுகைத் தொடர்புடைய வேறு நாடுகளுக்கு அளிப்பதில்லை. மேற்கூறிய வெளிப்படையான நான்கு விலக்குகளைத் தவிர சில மறைவான (Veiled) முறைகளிலும் உச்சச்சலுகைத் தொடர்புடைய நாடுகளுக்குரிய சலுகைகள் மறுக்கப்படலாம். அவை 1. பொருள்களை வகைப்படுத்துவதில் வேறுபாடு. 2. அதிகச் சலுகை நாட்டுத் தொடர்பு பெற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஒரே தன்மையான பொருள்களைச் சில வேறுபாடுகள் காட்டி ஒன்றை உயர்ந்த சுங்க வரி அட்டவணையிலும் (Customs Schedule) மற்றொன்றைத் தாழ்ந்த சுங்க வரி அட்டவணையிலும் சேர்க்கலாம். இப்பாகுபாட்டினால் ஒரு பொருளுக்கு அளிக்கும் சலுகை மற்றொன்றிற்கு அளிக்கப்படாமல் இருக்கலாம். இது அதிகச் சலுகைத் தொடர்பு பெற்ற நாடுகளின் ஒரே தன்மையான பொருளைச் சுகாதாரக் காரணங்களால் வேறுபடுத்தி, ஒன்றுக்களிக்கும் சலுகைகளை மற்றொன்றுக்கு அளிக்காமல் விட்டுவிடலாம். {{larger|<b>நன்மைகள்:</b>}} கட்டுப்பாடற்ற அதிகச்சலுகையின் அடிப்படையில் சுங்க வரிச் சலுகைகள் எல்லா ஒப்பந்த நாடுகளுக்கும் சமமாக வழங்கப்படுவதால், நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் சச்சரவுகள் குறைந்து, அமைதி ஓங்க வாய்ப்புண்டு. ஒரு பொருள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும் அதன் மீது ஒரே தன்மையான இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், சுங்க அதிகாரிகளுக்குப் பொருள்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறியவேண்டிய இடர்ப்பாடு இல்லை. கட்டுப்பாடான அதிகச் சலுகைத் தொடர்பில் சலுகைகளைப் பெறுவதற்குப் பதில் சலுகைகளைக் கொடுக்க வேண்டும். நாடுகளின் தரம் பொறுத்துச் சலுகைகள் வழங்கப்படும். கட்டுப்பாடற்ற அதிகச் சலுகைத் தொடர்பில், சலுகைகள் பதில் சலுகைகள் இல்லாமலே கொடுக்கப்படுவதால், சிறியநாடுகள் அதிக நன்மையைப் பெறும். {{larger|<b>கட்டுப்பாடான அதிகச் சலுகை:</b>}} இதன்படி இரண்டு ஒப்பந்த நாடுகன், வாணிகம், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றோடு தொடர்புடைய எல்லா நடவடிக்கைகளையும் வேறு நாட்டுக்கு அளித்துள்ள, அளிக்கப் போகிற சலுகைகளையெல்லாம் கட்டுப்பாடுகளுடன் தம்முள் ஒன்றுக்கொன்று அளித்துக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொள்வதாகும். அமெரிக்காவின் வாணிக ஒப்பந்தங்களில் 1922–ஆம் ஆண்டுக்கு முன் இக்கட்டுப்பாட்டு விதி காணப்பட்டது. முதல் உலகப் போருக்கு முன் பல ஆண்டுகள் அமெரிக்காவும் அதைப் பின்பற்றிச் சில தென் அமெரிக்க நாடுகளும் கட்டுப்பாடான அதிகச் சலுகை நாட்டுத் தொடர்பை ஆதரித்தன. போருக்குப் பின் சிறிது<noinclude></noinclude> b01jhtc0z7ksq6d0rmjy5t46ucsa281 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/333 250 619927 1837179 2025-06-29T16:04:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காலம் பிரான்சிலும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதற்கு ஆதரவளிக்கப்பட்டது. கட்டுப்பட்ட அதிகச் சலுகையின் நன்மைகளைக் கொண்டு இது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகச் சலுகையுறும் நாடுகள்|297|அதிகச் சலுகையுறும் நாடுகள்}}</noinclude>காலம் பிரான்சிலும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதற்கு ஆதரவளிக்கப்பட்டது. கட்டுப்பட்ட அதிகச் சலுகையின் நன்மைகளைக் கொண்டு இது விரும்பப்பட்டது. இதன்படி ஒருநாடு, தான் அளிக்கும் சலுகைக்குப் பதில் சலுகை பெற்றுக்கொள்கிறது. பிற நாடுகளிலிருந்து சுங்கவரிச் சலுகைகளை எளிதில் பெறுவதால், கட்டுப்பாடற்ற அதிகச் சலுகை நாட்டுத் தொடர்பை விடப் பயனளிப்பது, மிகுந்த தொழிற் காப்புப் பெற்றுள்ள நாடுகளிலிருந்து சலுகைகளைப் பெறவும் உதவுகிறது. {{larger|<b>சிக்கல்கள்:</b>}} 1) நாடுகளுக்கிடையே ஓரே சீரான சுங்க வரிமுறை இருப்பதில்லை, சலுகை பெறுகின்ற நாடுகள் ஒரே தன்மையான பதில் சலுகையை அளிக்க இயலாது. 2) ஒரு நாட்டின் சலுகைக்குப் பிறநாட்டின் பதில் சலுகை சமமானது என்று ஒப்புக்கொள்ள வேண்டும். இந்நிலையில் நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். 3) நாடுகள் பல சலுகைகளைக் கொடுக்கும்போது எந்தச் சலுகை எதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டது என்பதை உறுதியாக அறிய இயலாது. 4) ஒரு நாட்டின் சலுகையின் மதிப்புக்கும் பிறநாட்டின் பதில் சலுகைகளின் மதிப்புக்கும் நிறைய வேறுபாடு இருக்கலாம். இதைப் பற்றிய சிக்கலை ஒரு முறை அமெரிக்கா எழுப்பியது. அமெரிக்காவின் சுங்கவரி முறையில் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில், பரிமாற்றக் கொள்கை (Principle of Reciprocity) அமைக்கப் பெற்றது. அதன் விளக்கப்படி வெளிநாடுகளில் அமெரிக்கப் பொருள்களின்மீது மிகுதியான வரிகள் விதிக்கப்படுவதாகக் கருதினால், அமெரிக்காவில் அந்நாட்டுப் பொருள்களின் மீது வழக்கமாக விதிக்கப்படும் வரிகளுடன் கூடுதலான தண்ட வரி (Penalty Tax)களும் விதிக்கப்படும். பிற நாடுகளில் அமெரிக்கப் பொருள்களுடைய இறக்குமதி வரிகள் அமைவதைப்போல், அமெரிக்காவில் அந்நாடுகளின் பொருள்களுக்கு இறக்குமதி வரிகள் அமையும். அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் 1938–இல் ஏற்பட்ட சுங்க வரிப் பரிமாற்றக் கொள்ளகையின்படி, அமெரிக்கா, இறக்குமதி செய்த கட்டிடக் கற்கள் மீது சலுகை அளித்தது. இதன்படி அதிகச் சலுகை நாட்டு விதியைத் தொடர்ந்து செயல்படுத்தியது. ஆனால் பரிமாற்றச் சமநிலையை உறுதி செய்வதென்பது எளிதன்று. முதல் உலகப் போருக்கு முன் நீண்ட காலமாகக் கட்டுப்பட்ட அதிகச் சலுகை நாட்டு விதி, அமெரிக்காவில் நடைமுறையாய் இருந்து வந்தது. இரண்டொரு வாணிக ஒப்பந்தங்களே செய்யப்பட்ட போதிலும், அமெரிக்கப் பொருள்கள் பல நாடுகளில் அதிக சலுகைகளைப் பெற்றன. அவ்வாறு சலுகை பெறுவதற்கு அமெரிக்கா பிற நாடுகளோடு பேரஞ் செய்யவில்லை. அப்போதைய சூழ்நிலையும் அமெரிக்காவில் சிறப்பான ஏற்றுமதிப் பொருள்களுமே இதற்கான தனிக் காரணங்களாகும். முதல் உலகப் போருக்குப் பின், அமெரிக்க ஏற்றுமதிகளில் எந்திரக் கருவிகள் மிகுதியானபடியால் இப்பொருள்களுக்கு அயல்நாட்டுச் சந்தைகளில் போட்டி மிகுதியாபிருந்தது. இந்நிலையில் கட்டுப்பாடற்ற அதிகச் சலுகை நாட்டுத் தொடர்பு, அமெரிக்காவுக்குத் துணையான நடைமுறையாயிற்று. ஆகவே 1923–ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இம்முறையை ஆதரித்து வருகிறது. {{larger|<b>சுங்கவரிப் பேரங்கள்:</b>}} சுங்கவரிப் பேரங்கள், வன்கவர் பேரங்கள் (Aggressive Bargains), சமரசப் பேரங்கள் (Conciliatory Bargains) என இருவகைப்படும். வன்கவர் பேரஞ் செய்யும் நாடு, அதன் சுங்க வரிகளைக் குறைப்பது அதன் பொருளாதாரத்திற்கு நலமாய் இருந்தபோதிலும், அவற்றைக் குறைக்காது, பிறநாடுகளிலிருந்து சுங்கவரிச் சலுகைகளைப் பெற முயலும். சமரசப் பேரஞ் செய்யும் நாடு அதன் சுங்க வரிகளைக் குறைக்காமலிருப்பது அதன் பொருளாதாரத்திற்கு நலமாயிருப்பினும், அவற்றைக் குறைத்துப் பிற நாடுகளிலிருந்து சுங்க வரிச் சலுகைகளைப் பெறும். சுங்க ஒன்றியமும் காமன்வெல்த்திலுள்ள சுங்க வரிச் சலுகை முறையும் சமரசப் பேரத்திற்குத் தக்க சான்றுகளாகும். {{larger|<b>இப்போதைய நிலை:</b>}} இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி, குறைந்த அளவிலேயே உள்ளது. ஆகவே வளர்ச்சி குறைந்த நாடுகளின் சிறப்புத் தொழில்களுக்குச் சுங்க வரிகளாலும் இறக்குமதிப் பங்கீட்டாலும் தொழிற்காப்பு அளிக்கப்படலாம். இதற்கு உதவியாக 1947–ஆம் ஆண்டில் உருவாகிய சுங்கவரி வாணிகப் பொது ஒப்பந்தத்தில் (GATT) தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகின் பெரும்பான்மையான நாடுகள் பொருளாதார வளர்ச்சி குன்றிய நாடுகள் ஆதலால், அவற்றுக்குச் சில சிறப்புச் சலுகைகள் ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளன. இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னர் இல்லாத அளவுக்கான ஊக்கம் இப்போது அளிக்கப்படுகின்றது. அவற்றின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செருமனி போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவி சிறப்பானது. மூலதனம், நுட்ப அறிவு ஆகியவை அரசுகளாலும் தனியாராலும் அளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் உலக வங்கி (World Bank), பன்னாட்டு நிதிக் கழகம் (International Finance Corporation), ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Export Import Bank) போன்றவை குறிப்பிடத்தக்கவை.{{float_right|க.சொ.}} {{nop}}<noinclude></noinclude> 9y6atdj89oi1zyji17jmrdme38xbdwu பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/125 250 619928 1837231 2025-06-30T04:03:10Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காற்றிற் பறக்கவிடும் பட்டத்தைக் காலிப்பட்டம் என்பர் வடார்க்காட்டு மாவட்டத்தார். {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 125 |bSize = 386 |cWidt..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|பாண்டி|113}}</noinclude>காற்றிற் பறக்கவிடும் பட்டத்தைக் காலிப்பட்டம் என்பர் வடார்க்காட்டு மாவட்டத்தார். {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 125 |bSize = 386 |cWidth = 132 |cHeight = 176 |oTop = 90 |oLeft = 45 |Location = left |Description = }} {{larger|ஆடு கருவி}} : மூலைக்குறுக்குக் கோடிட்ட ஒரு சதுரமும், அதையொட்டிய படுக்கையான ஒரு சிறு நீள் சதுரமும் கொண்ட ஒரு பெருநீள்சதுர அரங்கும்; ஆளுக்கொரு சில்லியும்; இதை ஆடு கருவியாம். மூலைக்குறுக்குக் கோடிட்ட சதுரம் நான்கு கட்டமாக அமையும். மேலுள்ள நீள்சதுரம் ஐந்தாங் கட்டமாகும். {{larger|ஆடு முறை}} : முதலாவது முதற்கட்டத்திற் சில்லியெறிந்து, அதை ஒரேயெட்டில் நொண்டியடித்து மிதித்து வெளியே தள்ளி, மீண்டும் அதை முன்போல் மிதித்தல் வேண்டும். பின்பு மேற்கட்டங்களிலும் சில்லி யெறிந்து, எண் முறைப்படி கட்டங்கட்டமாய் நொண்டியடித்துச் சென்று மிதித்து, நேரடியாகவோ கட்டங்கட்டமாகவோ வெளியே தள்ளி, முன்போன்றே நொண்டியடித்து வந்து மிதித்தல் வேண்டும். மலை வேண்டுவாருள் சிலர், ஐந்தாங் கட்டத்தை மலையாகக் கொள்வர். அங்ஙனங் கொள்ளாதார், அதன் மேற்புற வெளியை அங்ஙனம் பயன்படுத்துவர். மலைக்குச் சில்லி யெறியும்போது திர்நோக்கியும், மலையிலிருந்து சில்லி யெறியும்போது புறங்காட்டித் தலைக்கு மேலாகவும், எறிவது வழக்கம். பழமானவர் உப்பு வைப்பர். இங்ஙனம் எளியமுறையில் இதை ஆடுவது வடார்க் காட்டு வழக்கமாம். {{nop}}<noinclude></noinclude> bfai9io17wmvr9linjky5cderul9oa1 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/126 250 619929 1837234 2025-06-30T04:08:55Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சேலம் வட்டாரத்தில், மேற்கூறிய பகுதிகளோடு <b>வெள்ளைக்கை கருப்புக்கை குத்துக்கை தலை கால் ‘அமரேசா’</b> என்பவற்றையும், சேர்த்துக்கொள்வர். இன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|114|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>சேலம் வட்டாரத்தில், மேற்கூறிய பகுதிகளோடு <b>வெள்ளைக்கை கருப்புக்கை குத்துக்கை தலை கால் ‘அமரேசா’</b> என்பவற்றையும், சேர்த்துக்கொள்வர். இனி, உத்தியில் நின்று சில்லியெறிந்து, 4 ஆம் அல்லது 5 ஆம் கட்டத்தில் விழின் உடனே பழமாவதும், பிறகட்டங்களில் விழின் நொண்டியடித்துச் சென்று மிதித்து, உத்திவரை தொண்டியடித்துத் தள்ளிக்கொண்டுபோய்ப் பழமாவதும்; சேலம் வட்டாரத்தில் மற்றொரு வகையாய் இதை ஆடும் முறையாம். {{center|{{larger|<b>VI. கைச்சில்லி</b>}}}} தனியாயிருக்கும் சிறுவன் அல்லது சிறுமி, கீழே உட்கார்ந்து ஒற்றைச் சில்லியரங்கு சிறியதாய் வரைந்து, ஆட்காட்டி விரலைக் கால்போற் பாவித்துக் கட்டங் கட்டமாய் வைத்துச் சென்று, ஆடிக்கொள்ளும் ஆட்டு <b>கைச்சில்லியாம்</b>. இது சேலம் வட்டாரத்தில் ஆடப்பெறும். {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> 6v9anypapy9oehi114mjfcg9217n76b பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/127 250 619930 1837241 2025-06-30T04:22:03Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. கம்ப விளையாட்டு</b>}}}} நால்வர், ஒரு மண்டபத்தின் அல்லது சதுர இடக்தின் நான்கு மூலைக் கம்பத்திலும், கம்பத்திற்கொருவராக நின்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. கம்ப விளையாட்டு</b>}}}} நால்வர், ஒரு மண்டபத்தின் அல்லது சதுர இடக்தின் நான்கு மூலைக் கம்பத்திலும், கம்பத்திற்கொருவராக நின்றுகொண்டு, எதிரும் வலமும் அல்லது எதிரும் இடமுமாக, மாறி மாறி அல்லது சுற்றிச்சுற்றி வேறுவேறு கம்பத்திற்கு இயங்கிக்கொண்டிருக்க, இன்னொருவர் அவரைத் தொடல்வேண்டும். முன்னரே ஏதேனுமொருவகையில் தோற்றவர் அல்லது தவறியவர் தொடவேண்டியவராவர். ஒருவர் கம்பத்தைவிட்டு விலகியிருக்கும்போதும், ஏற்கெனவே ஆளுள்ள இன்னொரு கம்பத்தைச் சேர்ந்திருக்கும்போதும், அவரைத் தொடலாம். தொடப்பட்டவர் தொட்டவர் வினையையும், தொட்டவர் தொடப்பட்டவர் வினையையும், மேற்கொள்ள வேண்டும். கொடுகிறவர், பால் மோர் தயிர் விற்பவர்போல், “பாலோ பால்!” அல்லது “மோரோ மோர்!” அல்லது “தயிரோ தயிர்!” என்று சொல்லிக்கொண்டு திரிவது, சோழ கொங்கு நாட்டு வழக்கும், உச்சந்தலையைக் கையால் தட்டிக்கொண்டு “தொண்டான் தொண்டான் தொடுபிடி தொண்டான்” என்று சொல்லித் திரிவது, பாண்டிநாட்டு வழக்கும் ஆகும். பாண்டிநாட்டில் இவ்விளையாட்டிற்குத் “தொண்டான் தொண்டான் தொடுபிடி தொண்டான்” என்றே பெயர். தீட்டுள்ள அல்லது தீண்டப்படாத ஒருவர் தம்மினின்று விலகியோடிய பிறரை, விளையாட்டிற்கோ குறும்பிற்கோ தொட்ட செயலை, நடித்துக் காட்டுவதாகவுள்ளது இவ்விளையாட்டு. {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|5em}} {{nop}}<noinclude></noinclude> alxx5b0ctgb4yh2p5a0idb63tsiwruh பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/128 250 619931 1837245 2025-06-30T04:29:24Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௪. கச்சக்காய்ச் சில்லி</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : கச்சக்காயைச் சில்லியால் அடித்து ஆடும் ஆட்டு <b>கச்சக்காய்ச் சில்லி.</b> {{larger|ஆடுவா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௪. கச்சக்காய்ச் சில்லி</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : கச்சக்காயைச் சில்லியால் அடித்து ஆடும் ஆட்டு <b>கச்சக்காய்ச் சில்லி.</b> {{larger|ஆடுவார் தொகை}} : பலர் இதை ஆடுவர். {{larger|ஆடுகருவி}} : ஆளுக்குப் பத்திற்குக் குறையாத பல கச்சக்காய்களும், அகன்ற சில்லியும், ஓரடி விட்டமுள்ள ஒரு வட்டமும், இதை ஆடு கருவியாம். சில்லிக்கு வடார்க்காட்டு வட்டத்தில் <b>சப்பாத்தி</b> என்று பெயர். {{larger|ஆடிடம்}} : பொட்டலில் இது ஆடப்பெறும். {{larger|ஆடுமுறை}} : ஆடகர் நாற்கசத் தொலைவிலுள்ள உத்தியில் நின்று கொண்டு, வட்டத்திற்குள் தத்தம் சில்லியை எறிவர். யாருடையது வட்டத்திற்கு அல்லது வட்டத்தின் நடுவிற்கு மிகநெருங்கி யிருக்கின்றதோ, அவர் முந்தியாடல் வேண்டும். ஏனையோரெல்லாம் தத்தம் அண்மை முறைப்படி முன் பின்னாக ஆடுவர். ஆடகரெல்லாரும் தத்தம் கச்சக்காய்களை வட்டத்திற்குள் இட்டபின், ஒவ்வொருவரும் உத்தியில் நின்றுகொண்டு, வட்டத்திற்குள் பரப்பி அல்லது குவித்து வைக்கப்பட்டிருக்கும் கச்சக்காய்களைத் தத்தம் சில்லியால் அடித்தல் வேண்டும். வட்டத்திற்கு வெளிச்சென்ற காய் களையெல்லாம் ஆடுவோர் எடுத்துக்கொள்ளலாம். சில்லி வட்டத்திற்குள் செல்லாவிடினும், வட்டத்திற்குள் சென்றும் காய்களை அடித்து வெளியேற்றாவிடினும், காய்களை வெளியேற்றியக்காலும் சில்லியும் உடன் வெளியேறாவிடினும், தவறாம். தவறிவிடின் அடுத்தவர் ஆடல் வேண்டும்; தவறாவிடின் தொடர்ந்து ஆடலாம். இறுதியில், மிகுதியான காய்களை வைத்திருப்பவர் கெலித்தவராவர். சேலம் வட்டாரத்தில் கச்சக்காய்க்குப் பதிலாகச்சிறு சுருட்டுப் பெட்டியையும் வைத்து அது ‘சிகரெட்பாகுச்’ சில்லி எனப்படும். ஆடுவதுண்டு. {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> lcp4gmb3ozuwdf5sxhanp3zc3cntwno பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/129 250 619932 1837247 2025-06-30T04:32:09Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௫. குஞ்சு</b>}}}} ஆடுவார் இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு, ஒரு கட்சியார் பஞ்சாரம் அல்லது ஆட்டுக் கூண்டளவுள்ள ஒரு வட்டக்கோட்டின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௫. குஞ்சு</b>}}}} ஆடுவார் இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு, ஒரு கட்சியார் பஞ்சாரம் அல்லது ஆட்டுக் கூண்டளவுள்ள ஒரு வட்டக்கோட்டின் அருகும், இன்னொரு கட்சியார் சற்றுத் தொலைவிலும் நிற்பர். தொலைவில் நிற்பவர், தம்முள் ஒருவரைக் ‘குஞ்சு’ என விளம்பி, எதிர்க் கட்சியில் தத்தம் உத்தியைப் பிடிக்கச் செல்வர். எதிர்க் கட்சியார் குஞ்சினைப் பிடிக்க முயல்வர். குஞ்சு கூடுவந்து சேர்ந்துவிடின் (அதாவது பிடிபடாது வட்டக் கோட்டிற்குள் புகுந்துவிடின்), அதே கட்சியார் மீண்டும் குஞ்சுவைத்து ஆடுவர்; பிடிபட்டுவிடின், கூட்டினருகு நின்றவர் குஞ்சுவைத்து ஆடல்வேண்டும். கோழிக்குஞ்சு பருந்திற்குத் தப்பிக் கூட்டிற்குள் அல்லது வீட்டிற்குள் புகுவதை, இவ்விளையாட்டுக் குறிப்யதுபோலும்! {{dhr|7em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> 5tsrn1al0m0eo11vv8fjmm7pgfgr6sb பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/130 250 619933 1837251 2025-06-30T04:51:29Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>(2) இரவாட்டு<br>௧. கண்ணும்பொத்தி</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : ஒருவர் ஒரு பிளளையின் கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும்போது, பிற பிள்ளைகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>(2) இரவாட்டு<br>௧. கண்ணும்பொத்தி</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : ஒருவர் ஒரு பிளளையின் கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும்போது, பிற பிள்ளைகள் ஓடி ஒளியும் விளையாட்டு கண்ணார்பொத்தி எனப்படும். {{larger|ஆடுமுறை}} : முதியார் ஒருவர், ஆட விரும்பும் பிள்ளைகளை யெல்லாம் ஒருங்கே இருத்திக்கொண்டு, ஒவ்வொருவரையும் சுட்டி ஒரு மரபுத் தொடரைச் சொல்லி, அத்தொடரின் இறுதிச் சொல்லாற் குறிக்கப்பெறும் பிள்ளையின் கண்ணைப் பொத்துவர். இனி, முதியார் ஒருவர் மீது எல்லாப் பிள்ளைகளும் படபடவென்று கையாலடிக்கும்போது, அம்முதியாரின் கையில் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்துவதுமுண்டு. பொத்தும்போது, மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடி ஒளிந்துகொள்வர். முதியார் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்திக்கொண்டிருக்கும்போது, அவ்விருவருக்கும் பின்வருமாறு உரையாட்டு நிகழும். ::{{larger|முதியவர்}} : கண்ணாம் பொத்தியாரே கண்ணாம் பொத்தியாரே!<ref>*‘கண்ணாம் பொத்தியாரே’ என்பது கொச்சை வடிவில் ‘கண்ணாம்பூச்சியாரே’ என்று திரியும்.</ref> ::{{larger|பிள்ளை}} : என்ன? ::மு : எத்தனை முட்டையிட்டாய்?<ref>*விளி உயர்வுப் பன்மையிலிருப்பினும், பயணிலை ஒருமையாகவே யிருக்கும். இது வழுவே.</ref> பி : மூன்று முட்டையிட்டேன். மு : அவற்றுள் ஒரு முட்டையைப் பொரித்துத் தின்றுவிட்டு, ஒரு முட்டையைப் புளித்த {{rule}} {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> p6gv6y0bp9sjiumpesv4tqkkzhb3782 1837252 1837251 2025-06-30T04:52:39Z AjayAjayy 15166 1837252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>(2) இரவாட்டு<br>௧. கண்ணும்பொத்தி</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : ஒருவர் ஒரு பிளளையின் கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும்போது, பிற பிள்ளைகள் ஓடி ஒளியும் விளையாட்டு <b>கண்ணார்பொத்தி</b> எனப்படும். {{larger|ஆடுமுறை}} : முதியார் ஒருவர், ஆட விரும்பும் பிள்ளைகளை யெல்லாம் ஒருங்கே இருத்திக்கொண்டு, ஒவ்வொருவரையும் சுட்டி ஒரு மரபுத் தொடரைச் சொல்லி, அத்தொடரின் இறுதிச் சொல்லாற் குறிக்கப்பெறும் பிள்ளையின் கண்ணைப் பொத்துவர். இனி, முதியார் ஒருவர் மீது எல்லாப் பிள்ளைகளும் படபடவென்று கையாலடிக்கும்போது, அம்முதியாரின் கையில் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்துவதுமுண்டு. பொத்தும்போது, மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடி ஒளிந்துகொள்வர். முதியார் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்திக்கொண்டிருக்கும்போது, அவ்விருவருக்கும் பின்வருமாறு உரையாட்டு நிகழும். ::{{larger|முதியவர்}} : கண்ணாம் பொத்தியாரே கண்ணாம் பொத்தியாரே!<ref>*‘கண்ணாம் பொத்தியாரே’ என்பது கொச்சை வடிவில் ‘கண்ணாம்பூச்சியாரே’ என்று திரியும்.</ref> ::{{larger|பிள்ளை}} : என்ன? ::மு : எத்தனை முட்டையிட்டாய்?<ref>*விளி உயர்வுப் பன்மையிலிருப்பினும், பயணிலை ஒருமையாகவே யிருக்கும். இது வழுவே.</ref> ::பி : மூன்று முட்டையிட்டேன். ::மு : அவற்றுள் ஒரு முட்டையைப் பொரித்துத் தின்றுவிட்டு, ஒரு முட்டையைப் புளித்த {{rule}} {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> nw9t9varpaxj6cu7noob1opfoul6p51 1837283 1837252 2025-06-30T06:53:21Z AjayAjayy 15166 1837283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>(2) இரவாட்டு<br>௧. கண்ணும்பொத்தி</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : ஒருவர் ஒரு பிளளையின் கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும்போது, பிற பிள்ளைகள் ஓடி ஒளியும் விளையாட்டு <b>கண்ணார்பொத்தி</b> எனப்படும். {{larger|ஆடுமுறை}} : முதியார் ஒருவர், ஆட விரும்பும் பிள்ளைகளை யெல்லாம் ஒருங்கே இருத்திக்கொண்டு, ஒவ்வொருவரையும் சுட்டி ஒரு மரபுத் தொடரைச் சொல்லி, அத்தொடரின் இறுதிச் சொல்லாற் குறிக்கப்பெறும் பிள்ளையின் கண்ணைப் பொத்துவர். இனி, முதியார் ஒருவர் மீது எல்லாப் பிள்ளைகளும் படபடவென்று கையாலடிக்கும்போது, அம்முதியாரின் கையில் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்துவதுமுண்டு. பொத்தும்போது, மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடி ஒளிந்துகொள்வர். முதியார் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்திக்கொண்டிருக்கும்போது, அவ்விருவருக்கும் பின்வருமாறு உரையாட்டு நிகழும். ::{{larger|முதியவர்}} : கண்ணாம் பொத்தியாரே கண்ணாம் பொத்தியாரே!<ref>*‘கண்ணாம் பொத்தியாரே’ என்பது கொச்சை வடிவில் ‘கண்ணாம்பூச்சியாரே’ என்று திரியும்.</ref> ::{{larger|பிள்ளை}} : என்ன? ::மு : எத்தனை முட்டையிட்டாய்?<ref>*விளி உயர்வுப் பன்மையிலிருப்பினும், பயணிலை ஒருமையாகவே யிருக்கும். இது வழுவே.</ref> ::பி : மூன்று முட்டையிட்டேன். ::மு : அவற்றுள் ஒரு முட்டையைப் பொரித்துத் தின்றுவிட்டு, ஒரு முட்டையைப் புளித்த {{rule}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 3u6sc42ddmsdzyqzb0v8re54m8rrfye பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/334 250 619934 1837262 2025-06-30T05:53:00Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Sodersten, B.O.,</b> “International Economics”, Macmillan, Great Britain, 1973. <b>Haterler, G.V.,</b> “International Trade”, William Hodge & Company Limited, London, 1965. {{larger|<b>அதிகப் பற்று</b>}} என்பது வங்கியில் நடப்புக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகப் பற்று|298|அதிகப் பற்று}}</noinclude>{{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Sodersten, B.O.,</b> “International Economics”, Macmillan, Great Britain, 1973. <b>Haterler, G.V.,</b> “International Trade”, William Hodge & Company Limited, London, 1965. {{larger|<b>அதிகப் பற்று</b>}} என்பது வங்கியில் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் தமது கணக்கில் பண இருப்பு எதுவும் இல்லாத நிலையில் வங்கி அனுமதித்த ஓர் எல்லைவரை பணத்தை அவ்வங்கியிலிருந்து பெற்றுப் பயன்படுத்தும் தொகையைக் குறிக்கும். இவ்வாறு பணத்தை வங்கியிலிருந்து, தான் பெறுவதன் மூலமோ, மற்றவர்களுக்குக் காசோலைகளாக விடுப்பதன் மூலமோ அதிகப் பற்றுத் தொகையைப் (Over–Draft) பயன்படுத்தலாம். இவ்வதிகப்பற்றை வாடிக்கையாளர் எப்போது வேண்டுமானாலும் பகுதி பகுதியாகவோ மொத்தமகாவோ பெறலாம். பணமாகவோ, வங்கி ஏற்கும் ஆவணங்கள் மூலமாகவோ பணத்தைத் தங்கள் கணக்கில் செலுத்துவதன் மூலம் அதிகப்பற்றைக் குறைத்துக் கொள்ளலாம். குறுகிய காலத்திற்குப் பணம் தேவையுள்ளோர் பெரும்பாலும் வங்கிகளிடமிருந்து இந்த வசதியைப் பெற முயல்வர். வணிகர், தொழில் முனைப்பாளர், தனி மனிதர், கூட்டு வணிகப் பங்காளி ஆகியோர் அதிகப்பற்று வசதியை அவ்வப்போது பெற்றுக் கொள்கின்றனர். அரசுகளும் தம் உடனடி நிதித் தேவையை ஈடு செய்ய அதிகப் பற்று வசதியைப் பயன்படுத்திக் கொள்கின்றன. பிணைய அதிகப்பற்று (Secured Over-Draft) வசதியை அனுமதிப்பதற்கே வங்கிகள் பெரும்பாலும் விரும்புகின்றன. இருப்பினும் மாத ஊதியம் பெறும் நிரந்தர ஊழியர், நாணயமும் நம்பிக்கையும் மிக்க வாடிக்கையாளர் ஆகியோர்க்கும் சிறிய அளவில் அதிகப்பற்று வசதியைப் பரவலாகக் கொடுப்பதை வங்கிகள் விரும்புகின்றன. {{larger|<b>வகைகள்:</b>}} அதிகப் பற்றை நடைமுறை அடிப்படையிலும், பிணைய அடிப்படையிலும் வகைப்படுத்தலாம். நடைமுறை அடிப்படையில் அதிகப் பற்றைச் சட்ட முறைப்படி அமைந்த அதிகப்பற்று, அளித்த அதிகப் பற்று (Actual Over–Draft) என இருவகைப்படுத்தலாம். நடப்புக் கணக்கில், வைப்பாளரால் செலுத்தப்பட்டிருக்கும் தொகைக்கும் அதிகமான அளவிற்குக் காசோலைகளை வைப்பாளர் பிறர்க்கு விடுவதன் மூலம் தோற்றுவிக்கும் அதிகப்பற்று சட்டப்படி அமைந்த அதிகப்பற்றாகும். வாடிக்கையாளரின் நடப்புக் கணக்கிலுள்ள இருப்புக்கும் அதிகமாக விடுத்த காசோலைகளுக்கு வங்கி பணம் கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளர் கணக்கில் தோற்றுவிக்கும் அதிகப் பற்று ‘அளித்த அதிகப்பற்று’ எனப்படும். வங்கி ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு பிணையத்தின் அடிப்படையில் வழங்கப்பெறும் அதிகப் பற்று ‘பிணைய அதிகப்பற்று’ எனப்படும். வாடிக்கையாளரால் கொடுக்கப்படும் பிணையத்தின் மதிப்பு ஓரளவுக்கே இருக்குமானால், அந்த அடிப்படையிலான அதிகப் பற்று ‘பகுதிப் பிணைய அதிகப்பற்று’ எனப்படும். எவ்விதப் பிணையமும் இல்லாமல் தோற்றுவிக்கும் அதிகப்பற்று, ‘பிணையமிலா அதிகப் பற்று’ அல்லது ‘தடையற்ற அதிகப் பற்று’ எனப்படும். {{larger|<b>கால அளவு:</b>}} வாடிக்கையாளருக்கு ஒரு நாள் முதல் ஓர் ஆண்டு வரை அதிகப் பற்று வசதியை வங்கிகள் அனுமதிக்கின்றன. இக்கால அளவை வங்கியின் நன்மை கருதி குறைக்கவோ, மறுக்கவோ செய்யலாம். இவ்வாறு செய்யும்போது வங்கி அதற்கான காரணத்தை வாடிக்கையாளருக்கு விளக்க வேண்டும். பயன்படுத்திய அதிகப் பற்றுத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்குரிய காலக் கெடுவை வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கவும் வேண்டும். வாடிக்கையாளருக்கு அனுமதிக்கும் கால அளவை அவ்வப்போது நிலவும் சூழ்நிலைகளையும், வாடிக்கையாளரின் தன்மையையும், செலுத்தும் திறனையும் கருத்தில் கொண்டு, வங்கி அவ்வப்போது வரையறுத்துக் கொள்கிறது. தகுதியானவர்களுக்கு மட்டுமே வங்கிகள் இந்த வசதியைக் கொடுப்பதால், மறுத்தல், காலத்தைக் குறைத்தல் ஆகியவைகளுக்கான வாய்ப்புகள் நடைமுறையில் மிகவும் குறைவே. தொகைக் கடன்களுக்கு, கணக்கில் பற்றாக உள்ள முழுத் தொகைக்கும் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என வங்கி வட்டியை வசூலிக்கும். ஆனால், அதிகப் பற்றில் அன்றாடம் கணக்கில் பற்று எவ்வளவு இருக்கிறதோ அந்தத் தொகைக்கு மட்டுமே வங்கி வட்டியை வசூலிக்கும். இந்த வட்டியையும் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என வங்கி வசூலிக்கும். இவ்விருவகைக் கடன்களில் அதிகப் பற்றுக்காகச் செலுத்தத் தக்க மொத்த வட்டி குறைவாக இருப்பதால், இவ்வகைக் கடனையே வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். ஆனால், ஆதாயம் பெறும் நோக்கத்துடன் வணிக வங்கிகள் செயற்படுவதால், வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் இந்த வட்டிச் சலுகையின் ஒரு பகுதியை வேறொரு வடிவத்தில் வாடிக்கையாளரிடமிருந்து வங்கி பெறுகிறது. அதாவது அதிகப் பற்றுக்கான நடப்புக் கணக்கை வைத்திருப்பதற்கானதொரு ‘தரகு’ என்ற வடிவத்தில் வங்கி பெறுகிறது. {{nop}}<noinclude></noinclude> 5dxkjkc1xxn4jmbt4mtulo7fai822vy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/335 250 619935 1837266 2025-06-30T06:12:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேலும், வாடிக்கையாளர் தேவைக்கேற்ப வங்கிகள் பணத்தை இருப்பில் வைத்திருக்க வேண்டும். அதனைச் சுட்டிக் காட்டி, வாடிக்கையாளர் அப்பணத்தைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகப் பற்று|299|அதிகப் பற்று}}</noinclude>மேலும், வாடிக்கையாளர் தேவைக்கேற்ப வங்கிகள் பணத்தை இருப்பில் வைத்திருக்க வேண்டும். அதனைச் சுட்டிக் காட்டி, வாடிக்கையாளர் அப்பணத்தைப் பெற்றாலும் பெறாவிட்டாலும், அனுமதித்த தொகையில் நான்கில் ஒரு பங்கு அல்லது ஒரு பங்குத் தொகைக்கான வட்டியைக் குறைந்த அளவு வட்டியாக வங்கிகள் பெற்றுக் கொள்கின்றன. வாடிக்கையாளர் வட்டியைச் செலுத்தாவிட்டால், அவரது பற்றுக் கணக்கில் அந்தத் தொகையையும் பற்றாகச் சேர்த்துக்கொண்டு வாடிக்கையாளருக்கு அதனைத் தெரிவிக்கும். {{larger|<b>திரும்பச் செலுத்தல்:</b>}} வங்கி கேட்டதும், அல்லது காலக்–கெடு முடிந்ததும் அதிகப் பற்றாக உள்ள தொகையை வாடிக்கையாளர் வங்கிக்குத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்பது விதி. ஆனால், குறிப்பிட்ட கால அளவுகளில் வாடிக்கையாளர் செயல்பட்ட விதம், வாடிக்கையாளரின் செலுத்தும் திறன், நாட்டின் பொதுவான நிதி நிலைமை போன்ற பலவற்றை பலவற்றை மதிப்பீடு செய்துகொண்டு, அதன் அடிப்படையில் அதிகப்பற்று வசதியை தொடர்த்து அனுபவிப்பதற்கு வாடிக்கையாளர் வங்கி இசைவதும் உண்டு. {{larger|<b>இந்தியாவில் அதிகப்பற்று:</b>}} இந்தியாவில் வங்கிகள் அளிக்கும் அதிகப்பற்றில் ஏறத்தாழ ஐந்தில் நான்கு பங்கு, மூலப் பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள், வாக்குறுதிச் சீட்டுகள் (Promissory Notes), அடைமான ஒப்பந்த ஆவணங்கள் (Hypothecation Agreement), தனியாள் வாக்குறுதி (Guarantees), ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம், வங்கி நிலை வைப்புச் சீட்டு ஆகியவற்றின் பேரிலும், இவை போன்ற ஏதாவதொரு பிணையத்தின் அடிப்படையிலும் வழங்கப்படுகின்றன. அதிகப் பற்றாக அனுமதிக்கும் தொகை, காலம் ஆகியவை இந்தியாவின் பல பகுதிகளிலும் பல வகையாக உள்ளன. வணிக வங்கிகள் அளவுக்கு மீறி அதிகப் பற்றை அனுமதிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தியாவின் மைய இருப்பு வங்கி (Reserve Bank of India) 1970–ஆம் ஆண்டில் 10 இலட்சம் உரூபாய், அல்லது அனுமதித்துள்ள அதிகப் பற்றுகளில் பயன்படுத்தாமல் இருக்கும் தொகைக்கு ஒரு விழுக்காடு (1%) கட்டணத்தைப் பொறுப்புக் கட்டணமாக வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு அட்டவணைப்படுத்தப்பட்ட (Scheduled) வங்கிகளுக்கு ஆணையிட்டது. தொடக்கத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பெற்றுக் கொள்ளுமாறு இருந்த இக்கட்டணத்தை 1971-ஆம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் பெறும் ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது. உணவு தானியக் கொள்முதல், உணவுப் பொருள்களைப் பாதுகாத்து வைத்தல், ஏற்றுமதிச் சரக்குகள், வணிக உறுதிக் கடிதங்கள் அடிப்படையில் இறக்குமதி செய்யும் பண்டங்கள், வங்கிகளுக்கிடைவே கொடுக்கப்படும் கடன்களில் ஒரு சில வகை அதிகப் பற்றுகள் ஆகியவற்றிற்கு இக்கட்டணத்திலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது இந்தக் கட்டுப்பாடுகளை மைய இருப்பு வங்கி நீக்கி விட்டது. இந்திய வணிக வங்கிகள் உழவர்களுக்குப் பெரும்பாலும் காலக் கடன்களையே (Term Loans) வழங்குகின்றன; அதிகப் பற்று வசதியைக் கொடுப்பதில்லை. அட்டவணை வங்கிகள் அதிகப் பற்று வசதி தேவைப்படும்போது, இந்திய மைய இருப்பு வங்கியின் வழி அல்லது பாரத மாநில வங்கியின் வழி இந்த வசதியைப் பெற்றுக் கொள்கின்றன. அட்டவணை வங்கியின் ஒவ்வொரு கிளையும் அதன் தலைமை வங்கியின் அனுமதியுடன் இந்த வசதியைப் பெறுகிறது. ஒவ்வொரு நாளும் எவ்வளவு தொகையை அதிகப் பற்றாகப் பெற்றிருக்கிறது என்ற விவரத்தைத் தலைமை வங்கிக்கு கம்பிச்செய்தி அல்லது தொலைபேசி மூலம் உடனுக்குடன் தெரிவிக்கிறது. கூட்டுறவு அமைப்புகள், வங்கிகள் ஆகியவை மாநில அளவில் உள்ள தலைமைக் கூட்டுறவு வங்கியிடமிருந்து இந்த வசதியைப் பெற்றுக் கொள்கின்றன. மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிகள், இந்தியாவில் மைய இருப்பு வங்கியிடமிருந்து அல்லது அதன் பிற அமைப்புகளிடமிருந்து இவ்வசதியைப் பெற்றுக் கொள்கின்றன. வங்கிகளின் இருப்பு நிலைக் குறிப்பில் கடன்கள் என்ற தலைப்பில் ஓர் அங்கமாக அதிகப் பற்று இனம் இடம் பெறுகிறது. இந்தியாவில் தற்போதுள்ள வங்கி வீதம் 10 விழுக்காடு. இதோடு 8 விழுக்காடு அதிகம் சேர்த்து, அதிகப் பற்றுகளுக்கு 18 விழுக்காடு வட்டி விதிக்கப்படுகிறது. அட்டவணை வங்கிகள் இந்த வசதியைப் பெறுவதற்காக இலட்ச ரூபாய் அதிகப் பற்றுத் தொகைக்கு, நாள் ஒன்றுக்குத் ‘தரகு’ என்ற வடிவத்தில் 59/– உரூபாயைச்-செலுத்துகின்றன. இந்திய மாநில அரசுகளுக்கு நிதித் தேவை ஏற்படும்போது, மைய அரசின் ஒப்புதலோடு, இந்திய மைய இருப்பு வங்கியிலிருந்து இடைக்காலமாக அதிகப் பற்று வசதியைப் பெற்றுக் கொள்கின்றன. இவ்வாறு பெறும் அதிகப்பற்றுத் தொகையை, மைய அரசு மாநில அரசுகளுக்குக் கொடையாகவும் உதவியாகவும் (Grants & Aids), வழங்கும் நிதியைப் பயன்படுத்தியும், அல்லது பற்றுத் தொகையைத் திருப்பிச் செலுத்-<noinclude></noinclude> mx2guurmn1tts8ohy8lr52kn4pvvo0p கனிச்சாறு 3/014 0 619936 1837271 2025-06-30T06:19:44Z Info-farmer 232 <pages index="கனிச்சாறு 3.pdf" from="46" to="46" fromsection="14" tosection="14" /> 1837271 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 014 | previous = [[../013|← 013 ]] | next = [[../015| 015 →]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="46" to="46" fromsection="14" tosection="14" /> srgeryad3f33arvpl6xxk2acjh1sj51 1837299 1837271 2025-06-30T07:19:02Z Info-farmer 232 <pages index="கனிச்சாறு 3.pdf" from="41" to="41" fromsection="11" tosection="11" /> 1837299 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 014 | previous = [[../013|← 013 ]] | next = [[../015| 015 →]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="41" to="41" fromsection="11" tosection="11" /> 8vsszynb279f8ab6r5yh49xay5gxx9s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/336 250 619937 1837274 2025-06-30T06:28:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தியும், அதிகப்பற்றை மாநில அரசுகள் குறைத்துக் கொள்கின்றன அல்லது நீக்கிக் கொள்கின்றன. அவ்வப்போது இந்தியாவில் ஏற்படுத்தப்படும் நிதிக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகப் பற்று|300|அதிகப் பற்று}}</noinclude>தியும், அதிகப்பற்றை மாநில அரசுகள் குறைத்துக் கொள்கின்றன அல்லது நீக்கிக் கொள்கின்றன. அவ்வப்போது இந்தியாவில் ஏற்படுத்தப்படும் நிதிக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், அதிகப் பற்றாக உள்ள தொகையில், ஒரு பகுதியைக் குறைப்பதும், அல்லது அதிகப் பற்றுத் தொகை முழுவதையும் நீக்கிவிடுவதும் உண்டு. மொத்தத்தில் இந்திய மைய இருப்பு வங்கியிடமிருந்து மாநில அரசுகள் அளவுக்கு மீறி அதிகப் பற்று வசதியைப் பெறுவதை மைய அரசு விரும்புவதில்லை. {{larger|<b>உலக நாடுகளும் அதிகப் பற்றும்:</b>}} ஆசுதிரேலியாவில் வங்கிகள் வழங்கும் கடன்களில் பெரும் பகுதி அதிகப் பற்று என்ற வடிவில்தான் வழங்கப்படுகின்றது. கோட்பாட்டளவில் இவ்வதிகப் பற்றுகள் குறுங்காலத்திற்கே அனுமதிக்கப்பட்டாலும் நடைமுறையில் இவை நெடுங்காலத்திற்கு அனுமதிக்கப்படுகின்றன. வாடிக்கையாளரின் நடப்புக் கணக்கில், அவர்தம் பணி மூலதனத் தேவையை ஈடு செய்வதற்காக அதிகப் பற்று வசதியை வங்கிகள் வழங்கினாலும், ஆசுதிரேலிய (Australia) நாட்டில் பேரளவில் உள்ள வேளாண்மைத் துறையில் ஈடுபட்டுள்ள பெருமக்களின், ‘நிலையான மூலதன’த் தேவையை ஈடு செய்யவும் இவ்வசதியை வங்கிகள் வழங்குகின்றன. இவ்வதிகப்பற்றுக்கென வாங்கும் வட்டி வீதத்தை அந்நாட்டின் மைய வங்கி வரையறுக்கிறது. பிரேசில் நாட்டு வங்கிகள் பிணையத்தின் அடிப்படையில்தான் குறுங்காலக் கடன்களைக் கொடுக்க விரும்புகின்றன. ஏறத்தாழ 80 விழுக்காடு அளவு கடன்கள் இந்த அடிப்படையில்தான் வழங்கப்படுகின்றன. அதிகப் பற்று வசதி இந்நாட்டில் மிகக் குறைவான அளவிலேயே பயன்படுகிறது. கனடாவில் ஒரு சில பகுதிகள் மட்டுமே இவ்வகைக் கடன்கள், சிறப்பான நிதியாக்க முறையாகக் கையாளப்படுகின்றன. பெரும்பாலான பகுதிகளில் யாரும் அதிகப் பற்றை விரும்புவதில்லை. ஆனால், வாடிக்கையாளருக்கும், வங்கியின் கிளை மேலாளருக்கும் இடையே உள்ள நல்ல உறவின் அடிப்படையில் அமையப் பெற்றுள்ள அதிகப் பற்றுமுறை வழக்கத்தில் உள்ளது. கடன் பெறுவதில் குறைவான கட்டுப்பாடு, சட்ட அடிப்படையிலான இடர்கள், இவை போன்ற பல குறைகள் இருந்தாலும், இவ்வகை அதிகப் பற்று அந்நாட்டில் பரவலாகப் பயன்பட்டு வருகிறது. மொத்தத்தில், வாக்குறுதிச் சீட்டு அல்லது அதனைப் போன்றதொரு பிணையம் அல்லது பிணையங்களின் அடிப்படையில், கடன்களை வழங்குவதையே அந்நாட்டு வங்கிகள் விரும்புகின்றன. கியூபாவில் வங்கிகள் அளிக்கும் கடன்களில் பெரும்பாலானவை குறுங்காலக் கடன்களே. கனடாவில் உள்ளதைப் போல், முன் அமைந்த பழக்க அடிப்படையிலான அதிகப் பற்றும், அமெரிக்காவைப் போல் வணிக ஒப்புதல்களைப் பெறும் வழக்கமும் அந்நாட்டில் உள்ளன. இவ்விரண்டில், இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ளதே அதிகமான அளவில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள வங்கிகள் அதிகப் பற்று வழங்குவதை விரும்புவதில்லை. அதிகப் பற்றை மிகவும் மோசமான வகைக் கடன், ஒழுங்கற்ற வகைக் கடன் என்றெல்லாம் அமெரிக்க வங்கியினர் கருதுகின்றனர். கடந்த காலங்களில் வங்கெளுக்கிடையே ஏற்பட்ட தோல்விகள், வங்கிகளுக்கிடையே இருந்த தேவையற்ற கடும் போட்டி, கடன் பெறுபவர் தம் நிலை குறித்துத் தவறான மதிப்பீடு செய்யும் வாய்ப்புப் போன்ற பல குறைகள், அதிகப் பற்றுக் கடன்களில் இருப்பதைச் சுட்டிக் காட்டி, அமெரிக்காவின் நீதி மன்றங்களும், ஒப்புதல் அளிக்கும் நிலையில் உள்ள மேலதிகால்களும் அதிகப் பற்று வடிவத்திலான கடன்களைக் கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே, அதிகப் பற்று அமெரிக்காவில் பரவலாகக் கையாளப்பட்டாலும், மிக மிகக் குறைந்த அளவில் தான் இருக்கிறது. சப்பானில் அதிகப் பற்று என்ற வடிவத்திலான கடன் வசதிகளைக் கொடுப்பதை வங்கிகள் பெரும்பாலும் விரும்புவதில்லை. இங்கிலாந்தின் வங்கிகள் வணிக நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் பேரளவில் குறுங்காலக் கடன்களைக் கொடுத்து உதவுகின்றன. இவை, முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் உள்ள தொகைக் கடன்கள், தேவைக்குத் தகுந்தாற் போன்று அவ்வப்போது பெற்றுக் கொள்ளும் அதிகப் பற்றுகள் என்ற இரு வடிவத்தில் வழங்கப்படுகின்றன. வங்கியின் இருப்பு நிலைக் குறிப்பு அதிகப் பற்று, பணக் கடன் (Cash Credit) ஆகிய இரண்டையும் வேறுபடுத்தாமல் ஒரே இனமாகத்தான் காட்டுகிறது.{{float_right|என்.எஸ்.பா.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Benjamin Haggort Backhard (ed.),</b> “Banking Systems” Times of India Press, Bombay, 1967. Davar, S.R., “Law and Practice of Banking: Bankers Edition”, Progressive Corporation (PVT), Bombay, 1972. <b>Rufus Wixon, (Ed.),</b> “Accountants Hand Book” (IV Ed.), The Ronald Press Company, 1957.<noinclude></noinclude> 54wk5ne13fz8wok0ekafzuo97fa1y0b 1837275 1837274 2025-06-30T06:29:06Z Desappan sathiyamoorthy 14764 1837275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகப் பற்று|300|அதிகப் பற்று}}</noinclude>தியும், அதிகப்பற்றை மாநில அரசுகள் குறைத்துக் கொள்கின்றன அல்லது நீக்கிக் கொள்கின்றன. அவ்வப்போது இந்தியாவில் ஏற்படுத்தப்படும் நிதிக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், அதிகப் பற்றாக உள்ள தொகையில், ஒரு பகுதியைக் குறைப்பதும், அல்லது அதிகப் பற்றுத் தொகை முழுவதையும் நீக்கிவிடுவதும் உண்டு. மொத்தத்தில் இந்திய மைய இருப்பு வங்கியிடமிருந்து மாநில அரசுகள் அளவுக்கு மீறி அதிகப் பற்று வசதியைப் பெறுவதை மைய அரசு விரும்புவதில்லை. {{larger|<b>உலக நாடுகளும் அதிகப் பற்றும்:</b>}} ஆசுதிரேலியாவில் வங்கிகள் வழங்கும் கடன்களில் பெரும் பகுதி அதிகப் பற்று என்ற வடிவில்தான் வழங்கப்படுகின்றது. கோட்பாட்டளவில் இவ்வதிகப் பற்றுகள் குறுங்காலத்திற்கே அனுமதிக்கப்பட்டாலும் நடைமுறையில் இவை நெடுங்காலத்திற்கு அனுமதிக்கப்படுகின்றன. வாடிக்கையாளரின் நடப்புக் கணக்கில், அவர்தம் பணி மூலதனத் தேவையை ஈடு செய்வதற்காக அதிகப் பற்று வசதியை வங்கிகள் வழங்கினாலும், ஆசுதிரேலிய (Australia) நாட்டில் பேரளவில் உள்ள வேளாண்மைத் துறையில் ஈடுபட்டுள்ள பெருமக்களின், ‘நிலையான மூலதன’த் தேவையை ஈடு செய்யவும் இவ்வசதியை வங்கிகள் வழங்குகின்றன. இவ்வதிகப்பற்றுக்கென வாங்கும் வட்டி வீதத்தை அந்நாட்டின் மைய வங்கி வரையறுக்கிறது. பிரேசில் நாட்டு வங்கிகள் பிணையத்தின் அடிப்படையில்தான் குறுங்காலக் கடன்களைக் கொடுக்க விரும்புகின்றன. ஏறத்தாழ 80 விழுக்காடு அளவு கடன்கள் இந்த அடிப்படையில்தான் வழங்கப்படுகின்றன. அதிகப் பற்று வசதி இந்நாட்டில் மிகக் குறைவான அளவிலேயே பயன்படுகிறது. கனடாவில் ஒரு சில பகுதிகள் மட்டுமே இவ்வகைக் கடன்கள், சிறப்பான நிதியாக்க முறையாகக் கையாளப்படுகின்றன. பெரும்பாலான பகுதிகளில் யாரும் அதிகப் பற்றை விரும்புவதில்லை. ஆனால், வாடிக்கையாளருக்கும், வங்கியின் கிளை மேலாளருக்கும் இடையே உள்ள நல்ல உறவின் அடிப்படையில் அமையப் பெற்றுள்ள அதிகப் பற்றுமுறை வழக்கத்தில் உள்ளது. கடன் பெறுவதில் குறைவான கட்டுப்பாடு, சட்ட அடிப்படையிலான இடர்கள், இவை போன்ற பல குறைகள் இருந்தாலும், இவ்வகை அதிகப் பற்று அந்நாட்டில் பரவலாகப் பயன்பட்டு வருகிறது. மொத்தத்தில், வாக்குறுதிச் சீட்டு அல்லது அதனைப் போன்றதொரு பிணையம் அல்லது பிணையங்களின் அடிப்படையில், கடன்களை வழங்குவதையே அந்நாட்டு வங்கிகள் விரும்புகின்றன. கியூபாவில் வங்கிகள் அளிக்கும் கடன்களில் பெரும்பாலானவை குறுங்காலக் கடன்களே. கனடாவில் உள்ளதைப் போல், முன் அமைந்த பழக்க அடிப்படையிலான அதிகப் பற்றும், அமெரிக்காவைப் போல் வணிக ஒப்புதல்களைப் பெறும் வழக்கமும் அந்நாட்டில் உள்ளன. இவ்விரண்டில், இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ளதே அதிகமான அளவில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள வங்கிகள் அதிகப் பற்று வழங்குவதை விரும்புவதில்லை. அதிகப் பற்றை மிகவும் மோசமான வகைக் கடன், ஒழுங்கற்ற வகைக் கடன் என்றெல்லாம் அமெரிக்க வங்கியினர் கருதுகின்றனர். கடந்த காலங்களில் வங்கெளுக்கிடையே ஏற்பட்ட தோல்விகள், வங்கிகளுக்கிடையே இருந்த தேவையற்ற கடும் போட்டி, கடன் பெறுபவர் தம் நிலை குறித்துத் தவறான மதிப்பீடு செய்யும் வாய்ப்புப் போன்ற பல குறைகள், அதிகப் பற்றுக் கடன்களில் இருப்பதைச் சுட்டிக் காட்டி, அமெரிக்காவின் நீதி மன்றங்களும், ஒப்புதல் அளிக்கும் நிலையில் உள்ள மேலதிகால்களும் அதிகப் பற்று வடிவத்திலான கடன்களைக் கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே, அதிகப் பற்று அமெரிக்காவில் பரவலாகக் கையாளப்பட்டாலும், மிக மிகக் குறைந்த அளவில் தான் இருக்கிறது. சப்பானில் அதிகப் பற்று என்ற வடிவத்திலான கடன் வசதிகளைக் கொடுப்பதை வங்கிகள் பெரும்பாலும் விரும்புவதில்லை. இங்கிலாந்தின் வங்கிகள் வணிக நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் பேரளவில் குறுங்காலக் கடன்களைக் கொடுத்து உதவுகின்றன. இவை, முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் உள்ள தொகைக் கடன்கள், தேவைக்குத் தகுந்தாற் போன்று அவ்வப்போது பெற்றுக் கொள்ளும் அதிகப் பற்றுகள் என்ற இரு வடிவத்தில் வழங்கப்படுகின்றன. வங்கியின் இருப்பு நிலைக் குறிப்பு அதிகப் பற்று, பணக் கடன் (Cash Credit) ஆகிய இரண்டையும் வேறுபடுத்தாமல் ஒரே இனமாகத்தான் காட்டுகிறது.{{float_right|என்.எஸ்.பா.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Benjamin Haggort Backhard (ed.),</b> “Banking Systems” Times of India Press, Bombay, 1967. <b>Davar, S.R.,</b> “Law and Practice of Banking: Bankers Edition”, Progressive Corporation (PVT), Bombay, 1972. <b>Rufus Wixon, (Ed.),</b> “Accountants Hand Book” (IV Ed.), The Ronald Press Company, 1957.<noinclude></noinclude> 864b7iemm1gtq8gfth19zt6kasjhopc கனிச்சாறு 3/015 0 619938 1837279 2025-06-30T06:35:09Z Info-farmer 232 <pages index="கனிச்சாறு 3.pdf" from="46" to="46" fromsection="15" tosection="15" /> 1837279 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 015 | previous = [[../014|← 014]] | next = [[../016| 016 →]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="46" to="46" fromsection="15" tosection="15" /> px96cw8o8qgldx03g98q50ljgcn2y3q 1837300 1837279 2025-06-30T07:21:22Z Info-farmer 232 <pages index="கனிச்சாறு 3.pdf" from="42" to="45" fromsection="12" tosection="12" /> 1837300 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 015 | previous = [[../014|← 014]] | next = [[../016| 016 →]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="41" to="41" fromsection="12" tosection="12" /> 6000q5282soecjl5ftd2hb5l9k2biqw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/337 250 619939 1837284 2025-06-30T06:54:42Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Tannan, M.L.,</b> “Banking Law and Practice in India”, Thacker & Company, Bombay, 1973. கருப்பன், க., “இந்தியாவில் பாங்கியல் சட்டமும் நடைமுறையும்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 19..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகமான்|301|அதிகார அளிப்பு}}</noinclude><b>Tannan, M.L.,</b> “Banking Law and Practice in India”, Thacker & Company, Bombay, 1973. கருப்பன், க., “இந்தியாவில் பாங்கியல் சட்டமும் நடைமுறையும்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1982. {{larger|<b>அதிகமான்</b>}} ஆதி என்பவளுக்கும் பகவன் என்பவனுக்கும் பிறந்த மக்கள் எழுவருள் ஒருவன். ஏனைய அறுவர் பெயர்கள் வருமாறு:— ஒளவையார், உப்பை, உறுவை, கபிலர், வள்ளியம்மை, திருவள்ளுவர், பெற்றோர் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, அதிகமான் குழந்தையாகப் பிறந்தபோது, அவனை விட்டுச் செல்லத் தயங்கிய தாயிடம் அவன் “கருப்பைக்குள் முட்டைக்கும்” எனத் தொடங்கும் வெண்பாவினைப் பாடியதாகவும், அதனைக் கேட்ட தாய் தெளிவு பெற்று, அக்குழந்தையை அங்கேயே விடுத்துக் கணவனுடன் வேற்றிடம் சென்றதாகவும் கூறப்படுகிறது. {{larger|<b>அதிகார அளிப்பு:</b>}} சட்டமியற்றும் அதிகாரம் சட்ட மன்றத்திற்குத்தான் உண்டு என்ற போதிலும் நடைமுறையில் ஆட்சிநிருவாக அங்கங்களுக்குச் சட்டம் இயற்றும் பணியை மேற்கொள்ளவேண்டிய இன்றியமையாமை ஏற்படுகிறது. சட்டமியற்றும் அதிகாரத்தைச் சட்டமன்றம், அதனால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலமாக, அரசுக்கும் அரசு ஆட்சி நிருவாக அங்கத்திற்கும் மற்றும் மேலாண்மைத் துறை முகவர்களுக்கும் வழங்குகிறது. அவ்வாறு சட்டமன்றம், ஆட்சி நிருவாக அங்கத்திற்கும் மற்றைய நிருவாகத்துறை முகவர்களுக்கும் சட்டத்தின்மூலம் சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்குதல், அதிகார அளிப்பு (Deligation of Power) எனப்பெயர் பெறும். தொடக்கக் காலத்தில் மக்கள் மிக மோசமான சூழ்நிலையில் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி வாழ்ந்து வந்தார்கள். தங்கள் உடைமைகளையும் உயிர்களையும் பாதுகாக்க வேண்டி, அவற்றைப் பாதுகாக்கும் தகுதி படைத்த ஒருவரிடம் சமூதாய ஒப்பந்தம் (Social Contract) செய்துகொண்டனர். அவ்வொப்பந்தப்படி, அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கினர். அதிகாரம் பெற்ற அவர் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஒப்பந்தப்படி அவர் அதிகாரம் எல்லையற்றது; முடிவில்லாதது; எல்லா வல்லமையும் பெற்றது. இவ்வாறு ஆப்சு (Hobbes Thomas, 1588–1679), அதிகாரம் மக்களால் சமுதாய ஒப்பந்தத்தின் மூலமாக ஒரு ஆற்றல் வாய்ந்த மனிதனுக்கு அளிக்கப்பட்டதென்று கூறுகிறார். இலாக்கு (Locke, John, 1632–1704) என்பவர் மக்கள், அதிகாரத்தை ஆற்றல் பெற்றவரிடத்தில் ஒப்படைத்தாலும் அவர் தகுதியற்ற நிலையை அடைவாரானால் அவரை நீக்கும் உரிமையை மக்களே பெற்றிருந்தார்கள் என்று கூறுகிறார். உருசோ (Rousseau, Jean Jacques, 1712–78), ‘ஒவ்வொரு மனிதனும் அவனே ஆட்சி செய்பவனும், ஆளப்படுபவனுமாவான்’ என்று கூறுகிறார். மேலும், தனிப்பேரரசாண்மை மக்களிடமே உறைந்து இருந்தது என்றும், அதை மக்கள் தங்களைப் பாதுகாக்கும் ஒருவரிடம் சமுதாய ஒப்பந்தத்தின் வாயிலாக அளித்தார்கள் என்றும் அவர் கூறுகிறார். ஒப்பந்தத்தின் வாயிலாக அவருக்கு அனைத்து அதிகாரங்களும் அளிக்கப்பட்டன. ஆனால், அவர் தம் கடமைகளை நிறைவேற்றத் தவறினால் அவரை நீக்கும் அதிகாரத்தை மக்கள் தங்களிடமே வைத்திருந்தார்கள் எனக் கூறுகிறார், இம்மூன்று அறிஞர்களின் கருத்துப்படி, மக்கள் எவரிடம் சமுதாய ஒப்பந்தம் செய்து கொண்டார்களோ, அவரிடம் மக்களிடமிருந்த தனிப் பேரரசாண்மை ஒப்படைக்கப்பட்டது முதல் அவர் மக்களை ஆளத் தலைப்பட்டார்; தலைவரெனப்பட்டார்; பின்னர் அரசர் எனப்பட்டார். ஆனால் ஆசுடினும் (Austin), பெந்தமும் (Bentham) இந்தத் தனிப் பேரரசு அதிகாரம் எல்லையற்றது என்றும் பிரிக்க இயலாததென்றும் சமுதாயத்தில் இன்றியமையாததென்றும் கூறுகிறார்கள். மக்கள் அரசனுக்கு அளித்த அதிகாரம், அதிகார ஒப்படைப்பு என்று இடைசி (Dicey) கூறுகிறார். நாளடைவில் தனிமனிதனின் அரசாட்சி மறைந்து மக்களாட்சி தொடங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையாளர் சட்டமன்றத்தில் அமர்ந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். அதிகார ஒப்படைப்பு அரசனுக்குக் கொடுக்கப்பட்டது என்ற நிலை மாறிச் சட்டமன்றத்திற்குக் கொடுக்கப்பட்டது என்ற நிலை உருவாயிற்று. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் வழங்கப்பட்ட அதிகாரத்தை அவர்கள் மீட்டளிக்க இயலாது; ஆகவே அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை ஆட்சி நிருவாகப் பிரிவுகளிடம் ஒப்படைத்தல் கூடாது. சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்ட சட்டம் இயற்றும் அதிகாரத்தை ஆட்சி நிருவாகப்பிரிவு ஏற்கக் கூடாது. ஆட்சி நிருவாகப் பிரிவு, சட்டமியற்றும் அதிகாரத்தை மேற்கொள்ளுமானால் அது அதிகாரங்களின் பிரிவிற்கு மாறானதாகும். சட்டம் இயற்றுவதைச் சட்டமன்றமே செய்துவருதல் வேண்டும். அவ்வதிகாரத்தைச் சட்டமன்றம், நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கக்கூடாது. முதலாவதாக, அவ்வாறு அதிகார ஒப்படைப்புச் செய்வதற்கு மக்கள் அதற்கு அதிகாரம் கொடுக்கவில்லை; இரண்டாவதாக, அவ்வாறு அதிகார ஒப்படைவுசெய்தல் அதிகாரங்களின் பிரிவிற்கு முரணானதாகும். நிருவாகத்துறை முகவர்களுக்குச் சட்டம் இயற்றும் அதிகாரம் அளிக்கப்பட்-<noinclude></noinclude> i0zmsxkx0uaio783rk0080d9y659ow8 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/131 250 619940 1837287 2025-06-30T06:59:13Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "::தண்ணீருக்குள் போட்டுவிட்டு, ஒரு முட்டையைப் பிடித்துக்கொண்டுவா. ::புலா அண்ணாதாராயின், இவ்வுரையாட்டில் விளிக்குப் பிற்பட்ட வினா, விடை,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||கண்ணாம் பொத்தி|119}}</noinclude>::தண்ணீருக்குள் போட்டுவிட்டு, ஒரு முட்டையைப் பிடித்துக்கொண்டுவா. ::புலா அண்ணாதாராயின், இவ்வுரையாட்டில் விளிக்குப் பிற்பட்ட வினா, விடை, ஏவல் பின்வருமாறிருக்கும். ::மு : எத்தனை பழம் பறித்தாய்? ::பி : மூன்று பழம் பறித்தேன். ::மு : அவற்றுள் ஒரு பழத்தைப் பிள்ளையாருக்கும் படைத்துவிட்டு, ஒரு பழத்தை அறுத்துத் தின்றுவிட்டு, ஒரு பழத்தைப் பிடித்துக் கொண்டுவா. இனி, மேற்கூறியவாறு உரையாட்டின்றி, <poem>::கண்ணாங் கண்ணாம் பூச்சி! ::காட்டுத்தலை மூச்சி ::ஊளை முட்டையைத் தின்றுவிட்டு ::நல்ல முட்டை கொண்டுவா</poem> என்று ஏவுங் கொங்குநாட்டு வழக்கும் உளது. இங்ஙனம் ஏவப்பட்ட பிள்ளை, உடனே ஓடிப்போய் அங்குமிங்கும் பார்த்து, ஒளிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளுள் ஒருவரைத் தொடமுயலும். முதலாவது தொடப்பட்ட பிள்ளை அடுத்தமுறை கண் பொத்தப்படும். தொடப்படுமுன் ஓடிவந்து முதியாரைத் தொட்டுவிட்டால், பின்பு தொடுதல் கூடாது. ஒருவரும் தொடப்படாவிடின், முன்பு கண்பொத்திய பிள்ளையே மறுமுறையுங் கண் பொத்தப்படும். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : பள்ளிக்குச் செல்லாது ஒளிந்து திரியும் திண்ணைப்பள்ளி மாணவரைச் சட்டநம்பிப் பிள்ளை பிடித்து வருவதினின்றோ, சிறைக்குத் தப்பி ஒளிந்து திரியும் குற்றவாளிகளை ஊர்காவலர் பிடித்துவருவதினின்றோ, இவ்விளையாட்டுத் தோன்றியிருக்கலாம். {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> hqkbkeei5c7r16nqvrqurh2tbxzd8ck 1837289 1837287 2025-06-30T07:02:29Z AjayAjayy 15166 1837289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||கண்ணாம் பொத்தி|119}}</noinclude>::தண்ணீருக்குள் போட்டுவிட்டு, ஒரு முட்டையைப் பிடித்துக்கொண்டுவா. புலா லுண்ணாதாராயின், இவ்வுரையாட்டில் விளிக்குப் பிற்பட்ட வினா, விடை, ஏவல் பின்வருமாறிருக்கும். ::மு : எத்தனை பழம் பறித்தாய்? ::பி : மூன்று பழம் பறித்தேன். ::மு : அவற்றுள் ஒரு பழத்தைப் பிள்ளையாருக்கும் படைத்துவிட்டு, ஒரு பழத்தை அறுத்துத் தின்றுவிட்டு, ஒரு பழத்தைப் பிடித்துக் கொண்டுவா. இனி, மேற்கூறியவாறு உரையாட்டின்றி, <poem>::கண்ணாங் கண்ணாம் பூச்சி! ::காட்டுத்தலை மூச்சி ::ஊளை முட்டையைத் தின்றுவிட்டு ::நல்ல முட்டை கொண்டுவா</poem> என்று ஏவுங் கொங்குநாட்டு வழக்கும் உளது. இங்ஙனம் ஏவப்பட்ட பிள்ளை, உடனே ஓடிப்போய் அங்குமிங்கும் பார்த்து, ஒளிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளுள் ஒருவரைத் தொடமுயலும். முதலாவது தொடப்பட்ட பிள்ளை அடுத்தமுறை கண் பொத்தப்படும். தொடப்படுமுன் ஓடிவந்து முதியாரைத் தொட்டுவிட்டால், பின்பு தொடுதல் கூடாது. ஒருவரும் தொடப்படாவிடின், முன்பு கண்பொத்திய பிள்ளையே மறுமுறையுங் கண் பொத்தப்படும். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : பள்ளிக்குச் செல்லாது ஒளிந்து திரியும் திண்ணைப்பள்ளி மாணவரைச் சட்டநம்பிப் பிள்ளை பிடித்து வருவதினின்றோ, சிறைக்குத் தப்பி ஒளிந்து திரியும் குற்றவாளிகளை ஊர்காவலர் பிடித்துவருவதினின்றோ, இவ்விளையாட்டுத் தோன்றியிருக்கலாம். {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> k688v63d7rnloyqj27q4sfndaz1l6n5 1837290 1837289 2025-06-30T07:03:30Z AjayAjayy 15166 1837290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||கண்ணாம்பொத்தி|119}}</noinclude>::தண்ணீருக்குள் போட்டுவிட்டு, ஒரு முட்டையைப் பிடித்துக்கொண்டுவா. புலா லுண்ணாதாராயின், இவ்வுரையாட்டில் விளிக்குப் பிற்பட்ட வினா, விடை, ஏவல் பின்வருமாறிருக்கும். ::மு : எத்தனை பழம் பறித்தாய்? ::பி : மூன்று பழம் பறித்தேன். ::மு : அவற்றுள் ஒரு பழத்தைப் பிள்ளையாருக்கும் படைத்துவிட்டு, ஒரு பழத்தை அறுத்துத் தின்றுவிட்டு, ஒரு பழத்தைப் பிடித்துக் கொண்டுவா. இனி, மேற்கூறியவாறு உரையாட்டின்றி, <poem>::கண்ணாங் கண்ணாம் பூச்சி! ::காட்டுத்தலை மூச்சி ::ஊளை முட்டையைத் தின்றுவிட்டு ::நல்ல முட்டை கொண்டுவா</poem> என்று ஏவுங் கொங்குநாட்டு வழக்கும் உளது. இங்ஙனம் ஏவப்பட்ட பிள்ளை, உடனே ஓடிப்போய் அங்குமிங்கும் பார்த்து, ஒளிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளுள் ஒருவரைத் தொடமுயலும். முதலாவது தொடப்பட்ட பிள்ளை அடுத்தமுறை கண் பொத்தப்படும். தொடப்படுமுன் ஓடிவந்து முதியாரைத் தொட்டுவிட்டால், பின்பு தொடுதல் கூடாது. ஒருவரும் தொடப்படாவிடின், முன்பு கண்பொத்திய பிள்ளையே மறுமுறையுங் கண் பொத்தப்படும். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : பள்ளிக்குச் செல்லாது ஒளிந்து திரியும் திண்ணைப்பள்ளி மாணவரைச் சட்டநம்பிப் பிள்ளை பிடித்து வருவதினின்றோ, சிறைக்குத் தப்பி ஒளிந்து திரியும் குற்றவாளிகளை ஊர்காவலர் பிடித்துவருவதினின்றோ, இவ்விளையாட்டுத் தோன்றியிருக்கலாம். {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> k9rvp5xsx0955k877qsusesc3l8pn0o பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/132 250 619941 1837292 2025-06-30T07:13:38Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௨. புகையிலைக் கட்டை யுருட்டல்</b>}}}} இது ஒருவாறு கண்ணாம்பொத்தி போன்றதே. ஆயின் இதற்கு ஒரு வட்டம் போடப்படும்; அதோடு முந்தித் தொடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௨. புகையிலைக் கட்டை யுருட்டல்</b>}}}} இது ஒருவாறு கண்ணாம்பொத்தி போன்றதே. ஆயின் இதற்கு ஒரு வட்டம் போடப்படும்; அதோடு முந்தித் தொடுவது யார் என்று தீர்மானித்தற்கு, எல்லாரையும் வரிசையாய்க் குனியவைத்து, அவர்கள் நிழலில் புகையிலைக் கட்டையை ஒருவர் உருட்டுவர். அது யார் நிழலிற்போய் நிற்கின்றதோ, அவர் ஏனையோரைத் தொடுதல் வேண்டும். பிறரெல்லாம் ஓடி ஒளிந்துகொள்ளுதற்கு இரண்டொரு நிமையங் கொடுக்கப்படும். தொடும் பிள்ளை தொடவரும்போது, எல்லாரும் ஓடிப்போய் வட்டத்திற்குள் நின்றுகொள்வர். வட்டத்திற்குட் சென்றபின் தொடுதல் கூடாது. வட்டத்திற்குட் செல்லுமுன் தொடப்பட்ட பிள்ளை அடுத்தமுறை தொடுதல் வேண்டும். ஒருவரும் தொடப்படாவிடின், முன்பு தொடமுயன்ற பிள்ளையே மீண்டும் தொடுதல் வேண்டும். ஒருவர் தொடர்ந்து மூவாட்டை ஒருவரையுந் தொடாவிடின், அவர்மீது ஏனையோர் சிறிது சிறிது குதிரையேறுவதுண்டு. அதன்பின்,மீண்டும் புகையிலைக் கட்டை உருட்டப்படும். {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> 176qv1aoe4wav12pvu45t98i8hl5dt5 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/133 250 619942 1837301 2025-06-30T07:23:28Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. புகையிலைக் கட்டை யெடுத்தல்</b>}}}} இதுவும் ஒளிந்து விளையாடும் விளையாட்டே. ஆடுவாரெல்லாம் உத்திகட்டி இருகட்சியாகப் பிரிந்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. புகையிலைக் கட்டை யெடுத்தல்</b>}}}} இதுவும் ஒளிந்து விளையாடும் விளையாட்டே. ஆடுவாரெல்லாம் உத்திகட்டி இருகட்சியாகப் பிரிந்து கொண்டபின், ஒரு கட்சியார் ஓடி ஒளிந்துகொள்வர். இன்னொரு கட்சியார், கடைகட்குச் சென்று புகையிலைக் கட்டை (அல்லது வெற்றிலைக்காம்பு) எடுத்துவந்து, ஒளிந்தவரைத் தேடிப்பிடிப்பர். யாரையேனும் கண்டுபிடித்தபோது, கடைக்குச் சென்று வந்தமைக்கு அடையாளமாகப் புகையிலைக் கட்டையைக் காட்டல்வேண்டும். கண்டு பிடிக்கப்பட்டவர் முன்பு எல்லாரும் நின்ற இடத்திற்கு வந்துவிடுவர். எல்லாருங் கண்டுபிடிக்கப்பட்டபின் வினைமாறி விளையாடுவர். ஒளிந்திருந்தவரைக் கண்டு பிடிக்கும்போது புகையிலைக் கட்டையைக் காட்டாவிடினும், யாரையேனுங் கண்டுபிடிக்க முடியாவிடினும், முன்பு கண்டுபிடித்தவரே மீண்டுங் கண்டுபிடித்தல் வேண்டும். இது பாண்டிநாட்டு விளையாட்டு. இதன் சோழநாட்டு வகை வருமாறு : ஆடுவாரெல்லாரும் கைபோட்டு ஒவ்வொருவராகப் பிரித்து, இறுதியிலகப்பட்டுக் கொண்டவர் ஏனையாரைப் பிடித்தல்வேண்டும். பிடிக்கவேண்டியவர் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு குறிப்பிட்ட தழையைக் கொண்டு வந்தபின்புதான் பிடித்தல் வேண்டும். அதற்குள் ஏனையரெல்லாம் மறைவான இடங்களில் ஒளிந்துகொள்வர். கண்டுபிடிப்பவர் ஒளிந்திருப்பவரைக் கையினாற் பிடித்துக்கொள்ளலாம், அல்லது அவர் பெயரைமட்டும் பிறர்க்குக் கேட்குமாறு உரக்கச் சொல்லலாம். இவ்விரண்டில் எது செய்வதென்று முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கும். கண்டு பிடிக்கப்பட்டவர் தழையைக் காட்டச்சொல்லும்போது, கண்டுபிடித்தவர் காட்டல் வேண்டும்; இல்லாவிடின், மறுமுறையும் அவரே கண்டுபிடித்தல் வேண்டும். தழை காட்டப்படின், கண்டுபிடிக்கப்பட்டலர் மறுமுறை கண்டு பிடித்தல் வேண்டும். இவ்விளையாட்டு குலீம்தார் என்னும் உருத்துப் பெயரால் வழங்குகின்றது. இதைத் தனித்தமிழில் தழைபறித்தல் எனலாம். {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> 0zywofd359gnim09c14y0yqg90kid79 கனிச்சாறு 3/016 0 619943 1837302 2025-06-30T07:25:59Z Info-farmer 232 + படிவத் தரவு 1837302 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 16 | previous = [[../015/|015]] | next = [[../017/|017]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="42" to="45"fromsection="13" tosection="13" /> pbniqjalgdbp9hkeoo2zyityqjtctwz பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/134 250 619944 1837303 2025-06-30T07:27:26Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௪. பூச்சி</b>}}}} பூச்சி என்பது ஆள்நிழல். நிலவொளியிற் பூச்சி தெரியும்போது ஒருவரைத் தொடும் விளையாட்டு, பூச்சி அல்லது பூச்சி விளை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௪. பூச்சி</b>}}}} பூச்சி என்பது ஆள்நிழல். நிலவொளியிற் பூச்சி தெரியும்போது ஒருவரைத் தொடும் விளையாட்டு, பூச்சி அல்லது பூச்சி விளையாட்டு. ஆடுவாருள் ஏதேனுமொரு வகையில் அகப்பட்டுக்கொண்ட ஒருவர், நிலவொளியிடத்தில் நிற்க, ஏனையரெல்லாம் அருகேயுள்ள ஓர் இருண்ட இடத்தில் நின்றுகொள்வர்.இருண்ட இடத்தில் நிற்பவர் ஒளியிடத்திற்கு வரின், அவரைத் தொடலாம்; இல்லாவிடின் தொடல் கூடாது. ஒளியிடத்தில் தொடப்பட்டவர் பின்பு பிறரைத் தொடுதல் வேண்டும். {{dhr|10em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> 40lud40fkgponigjp63mqimf02dh2k7 கனிச்சாறு 3/017 0 619945 1837304 2025-06-30T07:27:45Z Info-farmer 232 + படிவத் தரவு 1837304 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 17 | previous = [[../016/|016]] | next = [[../018/|018]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="46" to="46"fromsection="14" tosection="14" /> qo81doxtypp8h4hroftnas5vminp34e கனிச்சாறு 3/018 0 619946 1837305 2025-06-30T07:28:20Z Info-farmer 232 + படிவத் தரவு 1837305 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 18 | previous = [[../017/|017]] | next = [[../019/|019]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="46" to="46"fromsection="15" tosection="15" /> 98wjpkcsciczmlnhog00kjp2dcw88bu கனிச்சாறு 3/019 0 619947 1837306 2025-06-30T07:29:15Z Info-farmer 232 + படிவத் தரவு 1837306 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 19 | previous = [[../018/|018]] | next = [[../020/|020]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="47" to="47"fromsection="16" tosection="16" /> 27v7ko2gff5l1o2ufa6fzscjn8pes80 கனிச்சாறு 3/020 0 619948 1837307 2025-06-30T07:30:07Z Info-farmer 232 + படிவத் தரவு 1837307 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 20 | previous = [[../019/|019]] | next = [[../021/|021]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="47" to="48"fromsection="17" tosection="17" /> 32ads4ahb1p6b2g1pi2nzyv67qvfnoy 1837311 1837307 2025-06-30T07:33:32Z Info-farmer 232 47 1837311 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 20 | previous = [[../019/|019]] | next = [[../021/|021]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="47" to="47"fromsection="17" tosection="17" /> 0zqu27z3zsnaxxdhp75t4babafhkwn3 கனிச்சாறு 3/021 0 619949 1837308 2025-06-30T07:30:43Z Info-farmer 232 + படிவத் தரவு 1837308 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 21 | previous = [[../020/|020]] | next = [[../022/|022]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="48" to="48"fromsection="18" tosection="18" /> pjj8lamb55zftptymj719cou5y2kcsz பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/135 250 619950 1837310 2025-06-30T07:33:13Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௫. அரசனுந் தோட்டமும்</b>}}}} அரசனும் சேவகனும் தோட்டக்காரனும் தோட்டமும் (அதாவது பூசணிக்கொடிகளும்) என ஆடுவார் முதலாவது பிரிந்துக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௫. அரசனுந் தோட்டமும்</b>}}}} அரசனும் சேவகனும் தோட்டக்காரனும் தோட்டமும் (அதாவது பூசணிக்கொடிகளும்) என ஆடுவார் முதலாவது பிரிந்துகொள்வர். அரசன் சற்று எட்டத்திலிருந்து கொண்டு, பூசணித்தோட்டம் போடும்படி சேலகன்வழித் தோட்டக்காரனை ஏவுவன். தோட்டக்காரன் வேலை தொடங்குவன். அபசன் அடிக்கடி தன் சேவகனை ஏவித் தோட்டத்தின் நிலைமையைப் பார்த்துவிட்டு வரச் சொல்வன். சேவகன் வந்து கேட்கும் ஒவ்வொரு தடவையும், முறையே, ஒவ்வொரு பயிர்த்தொழில் வினை நிகழ்ந்துள்ளதாகத் தோட்டக்காரன் சொல்வான். இங்ஙனம் உழுதல், விதைத்தல், நீர்பாய்ச்சல், முளைத்தல்,ஓரிலை முதற்பல இலைவரை விடல், கொடியோடல், களையெடுத்தல், பூப்பூத்தல், பிஞ்சுவிடல், காய் ஆதல், முற்றுதல் ஆகியபல வினைகளும் சொல்லப்படும். உழுதல் முதற் காய் ஆதல் வரை ஒவ்வொரு வினையைச் சொல்லும்போதும், தோட்டத்தை நிகர்க்கும் பிள்ளைகள் அவ்வவ் வினையைக் கையால் நடித்துக் காட்டுவர். காய்கள் முற்றியதைச் சொல்லுமுன், தோட்டக்காரன் காய்களைத் தட்டிப்பார்ப்பதுபோல் ஒவ்வொரு பிள்ளையின் தலையையும் குட்டி “முற்றிவிட்டதா ?” என்று தன்னைத்தானே கேட்டு, சில தலைகளை “முற்றிவிட்டது” என்றும், சில தலைகளை “முற்றவில்லை” என்றும், சொல்லி; முற்றிவிட்டதென்று சொன்ன பிள்ளைகளை வேறாக வைப்பான். காய் கொண்டுவரும்படி அரசனால் ஏவப்பட்ட சேவகன் சில காய்களைக் கொண்டுபோய்த் தன் வீட்டில் வைத்திருப்பதுபோல், சில பிள்ளைகளைக் கொண்டுபோய்ச் சற்றுத் தொலைவில் வைத்திருப்பான். அக்காய்கள் களவு போவதுபோல், அப்பிள்ளைகள் தாம் முன்பிருந்த இடத்திற்கு வந்துவிடுவர். இங்ஙனம் இரண்டொருமுறை நிகழ்ந்தபின், சேவகன் அரசனையே அழைத்து வந்து, எல்லாக் காய்களையுங் கொண்டுபோவதுபோல் எல்லாப் பிள்ளைகளையுங் கொண்டுபோவன். இதோடு ஆட்டம் முடியும். இவ்விளையாட்டின் தோற்றம் வெளிப்படை. {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> nhn1lf4k96bt6o2b3wcbln5d02zqdp3 கனிச்சாறு 3/022 0 619951 1837313 2025-06-30T07:35:19Z Info-farmer 232 + படிவத் தரவு 1837313 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 22 | previous = [[../021/|021]] | next = [[../023/|023]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="48" to="48"fromsection="19" tosection="19" /> nvaz1g24tx731fjmrey8v0xkgae31o8 கனிச்சாறு 3/023 0 619952 1837314 2025-06-30T07:36:16Z Info-farmer 232 + படிவத் தரவு 1837314 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 23 | previous = [[../022/|022]] | next = [[../024/|024]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="49" to="49"fromsection="20" tosection="20" /> bjntj1epe1hwzudp5n2wnhujp60nrp5 கனிச்சாறு 3/024 0 619953 1837315 2025-06-30T07:36:43Z Info-farmer 232 + படிவத் தரவு 1837315 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 24 | previous = [[../023/|023]] | next = [[../025/|025]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="49" to="49"fromsection="21" tosection="21" /> hu9vwnmdx1bs1y9zboi8z7ky20rklms பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/136 250 619954 1837316 2025-06-30T07:39:08Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’</b>}}}} பல பிள்ளைகள் வட்டமாய் உள்நோக்கி உட்கார்ந்திருக்க, ஒரு பிள்ளை திரிபோல் முறுக்கிய துணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’</b>}}}} பல பிள்ளைகள் வட்டமாய் உள்நோக்கி உட்கார்ந்திருக்க, ஒரு பிள்ளை திரிபோல் முறுக்கிய துணியொன்றைக் கையில் வைத்துக்கொண்டு, “குலைகுலையாய் முந்தரிக்காய்” என்று விட்டு விட்டு உரக்கச் சொல்லி, வட்டத்திற்கு வெளியே பிள்ளை கட்கு அருகில் வலமாகச் சுற்றிச் சுற்றிவரும். அப்பிள்ளை “குலை......காய்” என்று சொல்லுந்தொறும், உட்கார்ந்திருக்கும் பிள்ளைகளெல்லாம் ஒருங்கே “நரியே, நரியே, ஓடிவா” என்று கத்திச்சொல்வர். இங்ஙனம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே, சுற்றி வரும் பிள்ளை திடுமென்று திரியை ஒரு பிள்ளையின் பின்னால் வைத்துவிடும்; திரிவைக்கப்பட்ட பிள்ளை உடனே கண்டு அதை எடுக்காவிடின், வைத்தபிள்ளை ஒரு சுற்றுச் சுற்றி வந்து, வைக்கப்பட்ட பிள்ளையின் முதுகில் அத்திரியால் ஓரடி ஓங்கிவைத்து எழுப்பி, அதை அப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, அப்பிள்ளையின் இடத்தில் தான் உட்கார்ந்துகொள்ளும். திரி வைத்தவுடன் வைக்கப்பட்ட பிள்ளை கண்டு எடுத்துக்கொண்டு எழுந்துவிடின், வைத்த பிள்ளை விரைந்து ஒரு சுற்றுச் சுற்றி வந்து வெற்றிடத்தில் உட்கார்ந்து அடிக்குத் தப்பிக்கொள்ளும். திரியெடுத்த அல்லது திரிவாங்கின பிள்ளை, முன்போல் “குலை....... காய்” என்று முன்சொல்ல, மற்றப் பிள்ளைகளெல்லாம் “நரியே ...... வா” என்று பின்சொல்வர். பின்பு திரிவைப்பதும் பிறவும் நிகழும். இங்ஙனம் தொடர்ந்து ஆடப்பெறும். இவ்விளையாட்டிற்குத் <b>திரித்திரி பந்தம்</b> என்று பெயர். பாண்டிநாட்டில், பிள்ளைகள் வட்டமாய் உட்காராது வரிசையாய் உட்கார்ந்து, இவ்விளையாட்டை ஆடுவதுண்டு. அது <b>யானைத்திரி</b> என்று பெயர் பெறும். {{rule|5em|align=}} {{nop}}<noinclude></noinclude> gfga56ld48yj5rxx3zbf1ln6dtiy4im பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/137 250 619955 1837317 2025-06-30T07:44:00Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>(3) இருபொழுதாட்டு<br>க. நொண்டி</b>}}}} {{larger|ஆடிடமும் பொழுதும் ஆடுவாரும்}} : <b>நொண்டி</b> என்பது, பொட்டலிலும் திறந்த வெளிநிலத்திலும், பெரும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>(3) இருபொழுதாட்டு<br>க. நொண்டி</b>}}}} {{larger|ஆடிடமும் பொழுதும் ஆடுவாரும்}} : <b>நொண்டி</b> என்பது, பொட்டலிலும் திறந்த வெளிநிலத்திலும், பெரும்பாலும் சிறுவரும் சிறுபான்மை சிறுமியரும், பகலிலும் நிலவிரவிலும் விளையாடும் விளையாட்டு. {{larger|ஆடு கருவி}} : ஆடுவார் தொகைக்கேற்ப நிலத்திற் கீறப்பட்ட ஒரு பெரு வட்டமே இவ்வாட்டுக் கருவியாம். {{larger|ஆடு முறை}} : இருவருக்குக் குறையாத சிலரும் பலரும் சமத்தொகையவான இருகட்சிகளாய்ப் பிரிந்து கொள்ளல் வேண்டும். இருவர்க்கு மேற்பட்டவராயின் உத்திகட்டிப் பிரிந்து கொள்வர். மரபான முறைகளுள் ஒன்றன்படி துணிந்துகொண்டு ஒரு கட்சியார் வட்டத்திற்குள்ளிறங்குவர். மறு கட்சியார் வெளி நின்றுகொண்டு, ஒவ்வொருவராய் ஒவ்வொருமுறை வட்டத்திற்குள் நொண்டியடித்துச் சென்று, உள் நிற்பாருள் ஒருவரையோ பலரையோ எல்லாரையுமோ தொடமுயல்வர். தொடப்பட்டவர் உடனே வெளிவந்துவிடல் வேண்டும். உள்நிற்பார் அனைவரும், தம்மை நொண்டியடிப்பவர் தொடாதவாறு, வட்டத்திற்குள் அங்குமிங்கும் ஓடித்திரிவர். அங்ஙனம் ஓடும்போது கோட்டை மிதிப்பினும்,கோட்டிற்கு வெளியே கால் வைப்பினும், உடனே வெளிவந்துவிடல் வேண்டும். நொண்டியடிப்பார் களைத்துப்போயின் கோட்டிற்கு வெளியே சென்று காலூன்றல் வேண்டும். ஒருமுறை வெளியே சென்றபின், காலூன்றாக் காலும், மீண்டும் உள்ளே வரல் கூடாது. நொண்டியடிப்பவர் வட்டத்திற்குள்ளும் கோட்டின்மேலும் காலூன்றினும், கோட்டை மிதிக்கினும், அவர் தொலைவதோடு, அவராலும் (அவர் பிந்தினவராயின்) அவருக்கு முந்தினவராலும்<noinclude></noinclude> lxxjn74vqt1pjz0ffb7jgs7b3znvqdq கனிச்சாறு 3/025 0 619956 1837318 2025-06-30T07:47:47Z Info-farmer 232 + படிவத் தரவு 1837318 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 25 | previous = [[../024/|024]] | next = [[../026/|026]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="50" to="50"fromsection="22" tosection="22" /> 6fd6o53l1wf8394bg9agvpezpeo2lxz கனிச்சாறு 3/026 0 619957 1837319 2025-06-30T07:48:13Z Info-farmer 232 + படிவத் தரவு 1837319 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 26 | previous = [[../025/|025]] | next = [[../027/|027]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="50" to="50"fromsection="23" tosection="23" /> nur6cmw6p5mdrj67jvpk0zy7u52h3nt கனிச்சாறு 3/027 0 619958 1837321 2025-06-30T07:48:37Z Info-farmer 232 + படிவத் தரவு 1837321 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 27 | previous = [[../026/|026]] | next = [[../028/|028]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="50" to="50"fromsection="24" tosection="24" /> d2cqzlymyozg54xmflze21c12j9j99d கனிச்சாறு 3/028 0 619959 1837322 2025-06-30T07:50:06Z Info-farmer 232 + படிவத் தரவு 1837322 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 28 | previous = [[../027/|027]] | next = [[../029/|029]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="51" to="52"fromsection="25" tosection="25" /> hc5vcmsl77h4b16dplye8i9abox1tzm பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/138 250 619960 1837323 2025-06-30T07:50:25Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொடப்பட்டு வெளியேறியுள்ள அத்துணைப்பேரும் உடனே உள்ளே வந்துவிடுவர். மீண்டும் அவரைத் தொடுதல் வேண்டும். ஒருவர் நொண்டியடித்து முடிந்தபின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|126|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>தொடப்பட்டு வெளியேறியுள்ள அத்துணைப்பேரும் உடனே உள்ளே வந்துவிடுவர். மீண்டும் அவரைத் தொடுதல் வேண்டும். ஒருவர் நொண்டியடித்து முடிந்தபின், இன்னொருவர் நொண்டியடிப்பர். வெளிநிற்கும் கட்சியாருள், முதலிலோ இடையிலோ இறுதியிலோ நொண்டியடிப்பவர் ஒருவரே உள்நிற்பார் எல்லாரையும் தொட்டுவிடுவதுமுண்டு; ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைத் தொடுவதுமுண்டு; இடையிட்டு ஒரோவொருவர் ஒருவரையோ பலரையோ தொடுவதுமுண்டு; ஒரே யொருவர் ஒரேயொருவரைத் தொடுவதுமுண்டு; ஒருவரும் ஒருவரையும் தொடாதிருப்பதுமுண்டு. இங்ஙனம், உள் நிற்கும் கட்சியாருள் ஒருவரே வெளியேறியிருத்தலும், சிலரோ பலரோ வெளியேறியிருத்தலும், அனைவரும் வெளியேறியிருத்தலும், அனைவரும் வெளியேறாதிருத்தலும், ஆகிய நால்வகை நிலைமை ஏற்படக்கூடும். வெளிநிற்கும் கட்சியாருள் அனைவரும் நொண்டியடித்து முடிந்தபின், அல்லது உள்நிற்கும் கட்சியாருள் அனைவரும் தொடப்பட்டபின், ஓர் ஆட்டம் முடியும். {{larger|ஆட்ட வெற்றி}} : உள்நிற்பார் அனைவரும் தொடப் பட்டுவிடின் வெளிநிற்பார்க்கும், அங்ஙனமன்றி ஒருவர் எஞ்சியிருப்பினும் உள் நிற்பார்க்கும், வெற்றியாம். {{larger|ஆட்டத் தொடர்ச்சி}} : ஒருமுறையாடியபின், மீண்டும் ஒருமுறையோ பல முறையோ ஆட நேரமும் விருப்பமுமிருப்பின், அங்ஙனஞ் செய்வர். முந்திய ஆட்டத்தில் வென்ற கட்சியாரே பிந்திய ஆட்டத்திலும் உள்நிற்பர். உள்நிற்பதே இனியதாகக் கருதப்படும். {{larger|ஆட்டுத் தோற்றம்}} : இவ்விளையாட்டுப் போர்வினையினின்று தோன்றியதாகும். போர்க்களத்தில் ஒருகால் வெட்டுண்ட மறவன் மறுகாலால் நொண்டியடித்துச் சென்றே, தான்பட்டு வீழுந்துணையும், பகைவரை வெட்டி வீழ்த்துவதுண்டு. இம்மறவினையை நடித்துக்காட்டும் முகமாகவே இவ்விளையாட்டுத் தோன்றிற்று. {{nop}}<noinclude></noinclude> bwvd8oy2axomemd3hbgmz253q1067sn கனிச்சாறு 3/029 0 619961 1837324 2025-06-30T07:50:46Z Info-farmer 232 + படிவத் தரவு 1837324 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 29 | previous = [[../028/|028]] | next = [[../030/|030]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="52" to="52"fromsection="26" tosection="26" /> 31rrwj8liknk0i1u4cozmxro9ns5hbs கனிச்சாறு 3/030 0 619962 1837325 2025-06-30T07:51:27Z Info-farmer 232 + படிவத் தரவு 1837325 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 30 | previous = [[../029/|029]] | next = [[../031/|031]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="53" to="53"fromsection="27" tosection="27" /> qwjzhy83e5xmv4j7m7ycnvjz3ayexkk கனிச்சாறு 3/031 0 619963 1837326 2025-06-30T07:51:54Z Info-farmer 232 + படிவத் தரவு 1837326 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 31 | previous = [[../030/|030]] | next = [[../032/|032]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="53" to="53"fromsection="28" tosection="28" /> 9pq32qatrbac7u24m72gjuygnbd2vla கனிச்சாறு 3/032 0 619964 1837327 2025-06-30T07:52:36Z Info-farmer 232 + படிவத் தரவு 1837327 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 32 | previous = [[../031/|031]] | next = [[../033/|033]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="54" to="55"fromsection="29" tosection="29" /> 2nmhveplcvv947sv3f5rr2uyl6m5je1 கனிச்சாறு 3/033 0 619965 1837328 2025-06-30T07:53:15Z Info-farmer 232 + படிவத் தரவு 1837328 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 33 | previous = [[../032/|032]] | next = [[../034/|034]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="55" to="56"fromsection="30" tosection="30" /> enndee9xttlkmk6pkq5qycy5pbxvuyk கனிச்சாறு 3/034 0 619966 1837331 2025-06-30T07:54:59Z Info-farmer 232 + படிவத் தரவு 1837331 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 34 | previous = [[../033/|033]] | next = [[../035/|035]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="56" to="62"fromsection="31" tosection="31" /> b3iiwzeqqlj1b4852uiil78emcgivh7 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/139 250 619967 1837334 2025-06-30T08:02:35Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறைத்தலைகள் கூத்தாடுவதும் தலையைக் கையிலேந்தி நிற்பதும் போன்ற மறவினைகளை நோக்கும்போது, ஒரு காற்குறைகள் நொண்டிச் சென்று நூழிலாட்டுவத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|பகுதி]|நொண்டி|127}}</noinclude>குறைத்தலைகள் கூத்தாடுவதும் தலையைக் கையிலேந்தி நிற்பதும் போன்ற மறவினைகளை நோக்கும்போது, ஒரு காற்குறைகள் நொண்டிச் சென்று நூழிலாட்டுவது வியப்பன்று. கள்வனொருவன் படையிலுள்ள குதிரையொன்றைத் திருட முயன்று கால் தறியுண்டபின் நல்வழிப்பட்ட செய்தியைச் சிந்துச் செய்யுளாற் புனைந்து கூறும் <b>நொண்டி நாடகம்</b> என்னும் நாடக நூல்வகையும் உளது. ‘சீதக்காதி நொண்டி நாடகம்’ இதற்கோர் எடுத்துக்காட்டாம். இந் நாடகச் செய்தி மேற்கூறிய போர்வினைச் செய்தியின் வேறாம். {{larger|ஆட்டின் பயன்}} : ஒருகால் நோய்ப்பட்டும் வெட்டுண்டும் நடக்கவியலாதபோது மறுகாலால் நொண்டியடித்து வேண்டுமிடஞ் செல்வதற்கான பயிற்சியை, இவ்விளையாட்டு அளிக்கும். {{rule|5em|align=}} {{center|{{larger|<b>௨. நின்றால் பிடித்துக்கொள்</b>}}}} ஏதேனும் ஒரு வகையில் அகப்பட்டுக்கொண்டபிள்ளை பிறபிள்ளைகளை நின்றால் தொடவேண்டும்; உட்கார்ந்து கொண்டால் தொடக்கூடாது. தொடப்பட்ட பிள்ளை, பின்பு பிறரைத் தொடல் வேண்டும். {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|5em}} {{nop}}<noinclude></noinclude> cwbdtqk3lvisgqyerl4n9uab2jz7dfk பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/140 250 619968 1837337 2025-06-30T08:10:03Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. பருப்புச் சட்டி</b>}}}} பல பிள்ளைகள் “விறகு விறகு” என்று சொல்லிக்கொண்டு, வட்டமாய்ச் சுற்றி வரவேண்டும். ஒரு பெரிய பிள்ளை அவர்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௩. பருப்புச் சட்டி</b>}}}} பல பிள்ளைகள் “விறகு விறகு” என்று சொல்லிக்கொண்டு, வட்டமாய்ச் சுற்றி வரவேண்டும். ஒரு பெரிய பிள்ளை அவர்களை அப்படியே உட்காரச் சொல்லி, வட்டத்துள் நின்று “உங்கள் வீட்டில் என்ன குழம்பு?” என்று வரிசைப்படி ஒவ்வொருவரையுங் கேட்கும். ஒவ்வொருவரும் பருப்பல்லாத ஒவ்வொரு குழம்பைச் சொல்வர். பின்பு, இறுதியில் எல்லாப் பிள்ளைகளுஞ் சேர்ந்து, அப் பெரிய பிள்ளையை அவ்வாறே கேட்பர். அப் பிள்ளை “பருப்புக்குழம்பு” என்னும். உடனே எல்லாரும் எழுந்திருந்து, அப்பிள்ளையைப் பருப்புச்சட்டி என அழைத்து நகையாடி மகிழ்வர். நாள்தோறும் பருப்புக் குழம்பையே விரும்பி யுண்ணும் ஒருவரைப் பழிப்பதுபோல் உள்ளது. இவ்விளையாட்டு. {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|10em}} {{nop}}<noinclude></noinclude> fxj9uck6rf2yk3li3op1ddimes0lrxl பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/141 250 619969 1837339 2025-06-30T08:12:55Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௪. மோதிரம் வைத்தல்</b>}}}} ஆடுவாரெல்லாரும் இருகட்சியாகப் பிரிந்துகொண்டு, கட்சிக்கொருவராக இருவரொழிய ஏனையரெல்லாம், கட்சி வாரிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௪. மோதிரம் வைத்தல்</b>}}}} ஆடுவாரெல்லாரும் இருகட்சியாகப் பிரிந்துகொண்டு, கட்சிக்கொருவராக இருவரொழிய ஏனையரெல்லாம், கட்சி வாரியாய் இரு வரிசையாக எதிரெதிர் உட்கார்ந்து கொள்வர்.உட்காராத இருவரும் தத்தம் கட்சி வரிசையின் பின்னால் நின்றுகொண்டிருப்பர். அவருள் ஒருவர் ஒரு மோதிரத்தைக் கையில் வைத்துக்கொண்டு குனிந்து, தம் வரிசையில் ஒவ்வொருவர் பின்னாலும் அதை வைப்பதாக நடித்து, யாரேனும் ஒருவர் பின்னால் வைத்துவிட்டு, வரிசை நெடுகலும் சென்றபின் நிமிர்ந்து நிற்பர். எதிர் வரிசைக்குப் பின்னால் நிற்பவர், மோதிரம் வைக்கப்பட்ட இடத்தை இன்னாருக்குப் பின் என்று சுட்டிக்கூற வேண்டும். சரியாய்ச் சொல்லிவிடின், அடுத்தமுறை எதிர் வரிசையாள் மோதிரம் வைத்தல் வேண்டும்; இல்லாவிடின் முன்வைத்தவரே வைத்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து ஆடப்பெறும். கீழே யிருப்பவர் நெடுகலும் உட்கார்ந்துகொண்டேயிருப்பர். {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|5em}} {{nop}}<noinclude> த.வி.—9</noinclude> csm1bk2xe8ejob3p1we1e9drmyto90s பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/142 250 619970 1837340 2025-06-30T08:15:47Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௫. புலியும் ஆடும்</b>}}}} பல பிள்ளைகள் வட்டமாய்க் கைகோத்து நிற்க, ஒரு பிள்ளை உள்ளும் மற்றொரு பிள்ளை வெளியும் நிற்பர். உள் நிற்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௫. புலியும் ஆடும்</b>}}}} பல பிள்ளைகள் வட்டமாய்க் கைகோத்து நிற்க, ஒரு பிள்ளை உள்ளும் மற்றொரு பிள்ளை வெளியும் நிற்பர். உள் நிற்கும் பிள்ளை ஆடாகவும், வெளி நிற்கும் பிள்ளை புலியாகவும், பாவிக்கப்பெறுவர். புலிக்கும் வட்டமாய் நிற்கும் பிள்ளைகட்கும் பின் வருமாறு உரையாட்டு நிகழும்: ::{{larger|புலி}} : சங்கிலி புங்கிலி கதவைத் திற. ::{{larger|பிள்ளைகள்}} : நான்மாட்டேன் வேங்கைப்புலி. ::{{larger|புலி}} : வரலாமா? வரக்கூடாதா? ::{{larger|பிள்ளைகள்}} : வரக்கூடாது. பிள்ளைகள் வழிமறுத்தபின், புலி யாரேனும் இரு பிள்ளைகட்கிடையில் நுழையப் பார்க்கும். பிள்ளைகள் இடம் விடுவதில்லை. பலமுறை அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தபின், புலி திடுமென்று ஓரிடத்தில் வலிந்து புகும். உடனே ஆடு வெளியே விடப்பெறும்.புலி ஆட்டைப் பிடிக்க வெளியேறும். ஆடு மீண்டும் உள்ளே விடப்பெறும். இங்ஙனம் மாறிமாறி இரண்டொருமுறை நிகழ்ந்தபின், இறுதியில் புலி ஆட்டைப் பிடித்துக்கொள்ளும். இவ்விளையாட்டின் தோற்றம் வெளிப்படை. வட்டமாய் நிற்கும் பிள்ளைகள் ஆட்டுத் தொழுவத்தை நிகர்ப்பர். {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|5em}} {{nop}}<noinclude></noinclude> sroatr67j20mvrgsca5ejm8ccyhx2tr 1837342 1837340 2025-06-30T08:16:37Z AjayAjayy 15166 1837342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௫. புலியும் ஆடும்</b>}}}} பல பிள்ளைகள் வட்டமாய்க் கைகோத்து நிற்க, ஒரு பிள்ளை உள்ளும் மற்றொரு பிள்ளை வெளியும் நிற்பர். உள் நிற்கும் பிள்ளை ஆடாகவும், வெளி நிற்கும் பிள்ளை புலியாகவும், பாவிக்கப்பெறுவர். புலிக்கும் வட்டமாய் நிற்கும் பிள்ளைகட்கும் பின் வருமாறு உரையாட்டு நிகழும் : ::{{larger|புலி}} : சங்கிலி புங்கிலி கதவைத் திற. ::{{larger|பிள்ளைகள்}} : நான்மாட்டேன் வேங்கைப்புலி. ::{{larger|புலி}} : வரலாமா? வரக்கூடாதா ? ::{{larger|பிள்ளைகள்}} : வரக்கூடாது. பிள்ளைகள் வழிமறுத்தபின், புலி யாரேனும் இரு பிள்ளைகட்கிடையில் நுழையப் பார்க்கும். பிள்ளைகள் இடம் விடுவதில்லை. பலமுறை அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தபின், புலி திடுமென்று ஓரிடத்தில் வலிந்து புகும். உடனே ஆடு வெளியே விடப்பெறும்.புலி ஆட்டைப் பிடிக்க வெளியேறும். ஆடு மீண்டும் உள்ளே விடப்பெறும். இங்ஙனம் மாறிமாறி இரண்டொருமுறை நிகழ்ந்தபின், இறுதியில் புலி ஆட்டைப் பிடித்துக்கொள்ளும். இவ்விளையாட்டின் தோற்றம் வெளிப்படை. வட்டமாய் நிற்கும் பிள்ளைகள் ஆட்டுத் தொழுவத்தை நிகர்ப்பர். {{dhr|5em}} {{rule|5em|align=}} {{dhr|5em}} {{nop}}<noinclude></noinclude> 8qlj15rv03ooes7i1quzrmrvlw5la7l பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/143 250 619971 1837346 2025-06-30T08:29:26Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௬. ‘இதென்ன முட்டை ?’</b>}}}} பல பிள்ளைகள் கூடினவிடத்து, ஒரு பெரிய பிள்ளை பிறரையெல்லாம் வட்டமாக இருத்தி, அவர்கள் கைகளை விரித்து நி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௬. ‘இதென்ன முட்டை ?’</b>}}}} பல பிள்ளைகள் கூடினவிடத்து, ஒரு பெரிய பிள்ளை பிறரையெல்லாம் வட்டமாக இருத்தி, அவர்கள் கைகளை விரித்து நிலத்தின்மேற் குப்புற வைக்கச் செய்து, ஒரு மரபுத்தொடர்ச் சொற்களைத் தனித்தனி சொல்லி ஒவ்வொரு சொல்லாலும் ஒவ்வொரு கையைச் சுட்டி, இறுதிச் சொல்லாற் குறிக்கப்பட்ட பிள்ளையை “உங்கள் அப்பன் பேர் என்ன?” என்று கேட்கும். அதற்கு அப்பிள்ளை “முருங்கைப்பூ” என்னும். பின்பு அப் பெரிய பிள்ளை “முருங்கைப்பூ தின்றவனே?” (ளே !) முள்ளாந் தண்ணீர் குடித்தவனே! (ளே !)” பாம்புக்கை படக்கென்று எடுத்துக்கொள்” என்று சொல்லும். “முருங்கைப்பூ...... குடித்தவனே! (ளே)” என்னும் பகுதியால், சொல்லுக் கொருவராக நான்கு பிள்ளைகள் சுட்டப்பெறும். “குடித்தவனே! (ளே)” என்று முடியும் பிள்ளை, உடனே ஒரு கையை எடுத்துப் பின்னால் வைத்துக்கொள்ள வேண்டும். “குடித்தவனே! (ளே)” என்று இரண்டாம் முறை முடியும் பிள்ளை, இன்னொருகையையும் எடுத்துப்பின்னால் வைத்துக் கொள்ளவேண்டும். இங்ஙனம் திரும்பத் திரும்பச் செய்பின், இறுதியில் ஒரு பிள்ளை அகப்பட்டுக்கொள்ளும். அப்பிள்ளை தன் இருகைகளையும் மடக்கி ஒன்றன்மேலொன்றாய்க் கீழேவைக்க, மற்றப் பிள்ளைகளும் தம் கைகளை அவ்வாறே அவற்றின்மேல் அடுக்கி வைப்பர். பெரிய பிள்ளை “கீழே சாணிபோட்டு மெழுகலாமா? மண்போட்டு மெழுகலாமா?” என்று கேட்டு, பிறர் “சாணிபோட்டு மெழுகு” என்றால், தன் அகங்கையால் அடிக்கையின் கீழ்ப் பூசுவதுபோல் தடவவேண்டும்; “மண்போட்டு மெழுகு” என்றால், புறங்கையால் அவ்வாறு செய்யவேண்டும். பின்பு மீண்டும், “தீட்டின கத்தியில் வெட்டலாமா? தீட்டாத கத்தியில் வெட்டலாமா?” என்று பெரிய பிள்ளை<noinclude></noinclude> becr0shpdgb79n1qdc7pdu28hshgd8s பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/144 250 619972 1837349 2025-06-30T08:43:32Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கேட்டு, “தீட்டின கத்தியில்” என்றால் ஐந்துவிரலும் நெருக்கி நீட்டிப் பக்கவாட்டாலும், “தீட்டாக கத்தியில்” என்றால் மணிக்கைப் பக்கத்தாலு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|132|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>கேட்டு, “தீட்டின கத்தியில்” என்றால் ஐந்துவிரலும் நெருக்கி நீட்டிப் பக்கவாட்டாலும், “தீட்டாக கத்தியில்” என்றால் மணிக்கைப் பக்கத்தாலும் வெட்டவேண்டும். இனி, வெட்டுஞ் செயல்பற்றி, முற்கூறிய வினாவிற்குப் பதிலாக, “அடியில் வெட்டட்டுமா? நுனியில் வெட்டட்டுமா?” என்று கேட்டு, “அடியில் வெட்டு” என்றால் குத்துக்கையடுக்கின் அடியிலும், “நுனியில் வெட்டு” என்றால் அதன் நுனியிலும் வெட்டுவதுமுண்டு. பின்பு மீண்டும் முன்முறைப்படி கைகளை அடுக்கி வைக்கவேண்டும். பெரிய பிள்ளை ஒவ்வொரு கையாய்த் தொட்டு “இதென்ன மூட்டை?” “இதென்ன மூட்டை” என்று கேட்கும். பிறர் “அரிசி மூட்டை,” “பருப்பு மூட்டை,” “புளி மூட்டை,” “உப்பு மூட்டை” ஒவ்வொரு சரக்கின் பெயராற் கூறுவர். “ஒவ்வொரு மூட்டையிலும் கொஞ்சங் கொஞ்சந் தாருங்கள்” என்று பெரிய பிள்ளை கேட்கும்.பிறர் "தரமாட்டோம்" என்பர். அதனாற் பெரிய பிள்ளை, எல்லாரையும் கண்ணை மூடிக்கொண்டு குப்புறக் கவிழ்ந்துகொள்ளச் சொல்வாள். அவர் அங்ஙனஞ் செய்தபின், “உங்கள் அப்பா வருகிறார்கள்” “உங்கள் அம்மா வருகிறார்கள்” என்று ஏமாற்றி யாரையேனும் எழவைத்து, அப்பிள்ளைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையான அடி பெரியபிள்ளை கொடுக்கும். ஒரு வரும் ஏமாறி எழாவிடின், “விளையாட்டுப் போதும், எழுந்திருங்கள்” என்று சொல்லி, எல்லாரும் எழுந்தபின் எல்லார்க்கும் அடிகொடுக்கும். இதோடு ஆட்டம் முடியும். {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 1eim8wh4fk3jnl8p4z2xtomaw48upmz பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/145 250 619973 1837351 2025-06-30T08:55:58Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{larger|<b>௭. கும்மி</b>}}}} பல பேதையரும்<ref>*ஐந்தாண்டு முதல் ஏழாண்டுவரைப்பட்ட பெண் பேதையெனப்படுவாள்.</ref> பெதும்பையரும், வட்டமாகச் சுற்றிவந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௭. கும்மி</b>}}}} பல பேதையரும்<ref>*ஐந்தாண்டு முதல் ஏழாண்டுவரைப்பட்ட பெண் பேதையெனப்படுவாள்.</ref> பெதும்பையரும், வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்து அடிக்கும் கூத்து <b>கும்மி</b> எனப்படும். வடார்க்காட்டு வட்டாரத்தார் இதைக் <b>கொப்பி</b> என்பர். கும்முதல் கைகுவித்தல் அல்லது கைகுவித் தடித்தல். கைகுவித் தடிக்கும் விளையாட்டாதலால், இது <b>கும்மி</b>யெனப்பட்டது. கும்மி யாட்டத்திற்கென்று தனிவகைப் பாட்டுண்டு அது ‘கும்மியடி’ என்று தொடங்குவதோடு, அத்தொடரையே ஒவ்வோர் உருவிலும் (சரணத்திலும்) மகுடமாகவுங் கொண்டிருக்கும். {{larger|எடுத்துக்காட்டு}} : <poem>::கும்மியடி பெண்ணே கும்மியடி—நல்ல :::கொன்றை மலர்சூடிக் கும்மியடி ::நம்மையாளும் தனி நாயகம் நம்மிடம் :::நண்ணிய தென்றுநீ கும்மியடி ::ஆட்சிமொழியிங்கே ஆங்கிலமாய்—என்றும் :::ஆகிவிடின் அது கேடாகும் ::மாட்சி மிகுந்தமிழ் மாநிலத் தாளுகை :::மாதரசே வரக் கும்மியடி.</poem> இக்காலை, ஒற்றைத் தாளத்திற்கும் அடித்தாளத்திற்கும் ஏற்கும் எல்லாப் பாட்டுக்களும் கும்மிக்கும் பாடப் படுகின்றன. ஒற்றை = ஏகம். அடி = ஆதி. {{rule|5em|align=}} {{rule}} {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> mjvhmr4l27yx3bhq40hzm8yuwsvkydh 1837352 1837351 2025-06-30T08:56:44Z AjayAjayy 15166 1837352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௭. கும்மி</b>}}}} பல பேதையரும்<ref>*ஐந்தாண்டு முதல் ஏழாண்டுவரைப்பட்ட பெண் பேதையெனப்படுவாள்.</ref> பெதும்பையரும், வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்து அடிக்கும் கூத்து <b>கும்மி</b> எனப்படும். வடார்க்காட்டு வட்டாரத்தார் இதைக் <b>கொப்பி</b> என்பர். கும்முதல் கைகுவித்தல் அல்லது கைகுவித் தடித்தல். கைகுவித் தடிக்கும் விளையாட்டாதலால், இது <b>கும்மி</b>யெனப்பட்டது. கும்மி யாட்டத்திற்கென்று தனிவகைப் பாட்டுண்டு அது ‘கும்மியடி’ என்று தொடங்குவதோடு, அத்தொடரையே ஒவ்வோர் உருவிலும் (சரணத்திலும்) மகுடமாகவுங் கொண்டிருக்கும். {{larger|எடுத்துக்காட்டு}} : <poem>::கும்மியடி பெண்ணே கும்மியடி—நல்ல :::கொன்றை மலர்சூடிக் கும்மியடி ::நம்மையாளும் தனி நாயகம் நம்மிடம் :::நண்ணிய தென்றுநீ கும்மியடி ::ஆட்சிமொழியிங்கே ஆங்கிலமாய்—என்றும் :::ஆகிவிடின் அது கேடாகும் ::மாட்சி மிகுந்தமிழ் மாநிலத் தாளுகை :::மாதரசே வரக் கும்மியடி.</poem> இக்காலை, ஒற்றைத் தாளத்திற்கும் அடித்தாளத்திற்கும் ஏற்கும் எல்லாப் பாட்டுக்களும் கும்மிக்கும் பாடப் படுகின்றன. ஒற்றை = ஏகம். அடி = ஆதி. {{dhr|2em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} {{rule}} {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ojwu2f5my520d442kb1pv60yc2s1zd0 1837353 1837352 2025-06-30T08:57:43Z AjayAjayy 15166 1837353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>௭. கும்மி</b>}}}} பல பேதையரும்<ref>*ஐந்தாண்டு முதல் ஏழாண்டுவரைப்பட்ட பெண் பேதை யெனப்படுவாள்.</ref> பெதும்பையரும், வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்து அடிக்கும் கூத்து <b>கும்மி</b> எனப்படும். வடார்க்காட்டு வட்டாரத்தார் இதைக் <b>கொப்பி</b> என்பர். கும்முதல் கைகுவித்தல் அல்லது கைகுவித் தடித்தல். கைகுவித் தடிக்கும் விளையாட்டாதலால், இது <b>கும்மி</b>யெனப்பட்டது. கும்மி யாட்டத்திற்கென்று தனிவகைப் பாட்டுண்டு அது ‘கும்மியடி’ என்று தொடங்குவதோடு, அத்தொடரையே ஒவ்வோர் உருவிலும் (சரணத்திலும்) மகுடமாகவுங் கொண்டிருக்கும். {{larger|எடுத்துக்காட்டு}} : <poem>::கும்மியடி பெண்ணே கும்மியடி—நல்ல :::கொன்றை மலர்சூடிக் கும்மியடி ::நம்மையாளும் தனி நாயகம் நம்மிடம் :::நண்ணிய தென்றுநீ கும்மியடி ::ஆட்சிமொழியிங்கே ஆங்கிலமாய்—என்றும் :::ஆகிவிடின் அது கேடாகும் ::மாட்சி மிகுந்தமிழ் மாநிலத் தாளுகை :::மாதரசே வரக் கும்மியடி.</poem> இக்காலை, ஒற்றைத் தாளத்திற்கும் அடித்தாளத்திற்கும் ஏற்கும் எல்லாப் பாட்டுக்களும் கும்மிக்கும் பாடப் படுகின்றன. ஒற்றை = ஏகம். அடி = ஆதி. {{dhr|2em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} {{rule}} {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> jb9hlvrekc6mahhycin54c8tebergj3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/338 250 619974 1837356 2025-06-30T10:01:13Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டால், அவை தன்னதிகாரப் போக்கில் செயல்படத் தொடங்கிச் சட்டத்தின் ஆட்சியை அழித்து மக்களைத் துயரத்திற்கு ஆளாக்கிவிடும். சட்டமன்றங்களும் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகார அளிப்பு|302|அதிகார அளிப்பு}}</noinclude>டால், அவை தன்னதிகாரப் போக்கில் செயல்படத் தொடங்கிச் சட்டத்தின் ஆட்சியை அழித்து மக்களைத் துயரத்திற்கு ஆளாக்கிவிடும். சட்டமன்றங்களும் நிருவாகத்துறை முகவர் நிலைகளும் தனித்தனி அதிகாரங்களோடு உரிமையுடன் செயல்பட வேண்டும். சமுதாய அமைப்பில் சட்டமன்றத்தின் பணி நாளும் பெருகிவருகிறது. மக்கள் அரசு, குடியாட்சி வழியில் சட்டங்கள் பல இயற்றி, மக்கள் அனைத்துத் துறைகளிலும் மேம்பாடு அடைய வழிகாண வேண்டி உள்ளது. இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் பொருந்துமாறு இருத்தல் வேண்டியுள்ளது. அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் பொருந்துமாறு சட்டம் இயற்றுதல் இயலாது. ஆகவே சட்டமன்றம் அனைத்துச் சூழ்நிலைக்கும் ஏற்பச் சட்டம் இயற்ற இயலுவதில்லை. முதலாவதாகச் சட்டமன்றத்திற்கு நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்துச் சட்டங்களையும் முழுமையாகச் செய்வதற்குரிய நேரமில்லை. இரண்டாவதாக, எல்லாச் சட்டங்களையும் செய்வதற்குச் சட்ட மன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான தொழில் நுட்ப அறிவு இருப்பதில்லை. மூன்றாவதாக, அமைதிக் காலங்களில் இயற்றப்படும் சட்டங்கள், அவசர காலச் சூழ்நிலைக்குப் பொருந்துவதாக அமைவதில்லை; அவசரகாலச் சூழ்நிலையை நிருவகிப்பதற்குச் சட்டமன்றம் உடனடியாகக் கூடிச் சட்டம் இயற்ற இயலாது; மேலும் அவசரகாலச் சூழ்நிலைகளை நிருவகிக்கச் சட்டமன்றம் முன்கூட்டியே சட்டங்களை இயற்றிவைத்தல் இயலாது; இறுதியாக மாறிவரும் சூழ்நிலைகளுக்கு வளைந்து கொடுக்கும் முறையில் சட்டம் இயற்ற இயலாது. இக்காரணங்களால் சட்டமன்றம், அனைத்துச் சட்டங்களையும் தானே இயற்ற முடியாத நிலையில் உள்ளது. ஆனால், இம்மன்றம் சமுதாயத்தில் தேவைகளைப் புறக்கணிக்கவும் இயலாது. தேவைக்கேற்பச் சட்டங்கள் செய்து சமுதாயத்தை மேம்பாடு அடையச் செய்வது சட்டமன்றத்தின் கடமையாகவும் உள்ளது. இந்நிலைமையை நிருவகிக்கச் சட்டமன்றம், சட்டமியற்றும் அதிகாரங்கள் சிலவற்றை நிருவாகத் துறை முகவர்களுக்கு வழங்க நேரிட்டது. {{larger|<b>பொதுக் கோட்பாடுகள்:</b>}} சட்டமன்றம் இயற்றும் அனைத்து அதிகாரங்களையும் நிருவாகத் துறை நிலைகளுக்கு வழங்கலாம் என்றால், சட்டமன்றம் தன் பணியை முழுமையாகச் செய்வதாகாது. சட்ட மன்றம், தன் பணியினைச் செம்மையாக ஆற்ற இயலாத நிலையில், தன் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டிய தேவை இல்லாத நிலைவில், சில சட்டம் இயற்றும் அதிகாரங்களை மட்டும் நிருவாகத்துறை முகவர்களுக்கு வழங்கலாம். மிக இன்றியமையாத சட்டங்களும் சிறப்புச் சட்டங்களும் சட்டமன்றத்தினாலேயே இயற்றப்படுதல் வேண்டும். நிருவாகத் துறை முகவருக்கு வழங்கப்பட்ட பணியைச் சில சூழ்நிலைகளில் அவர் தாமே செய்யாமல் வேறு ஒருவர் மூலம் நிறைவேற்றலாம். சட்டமன்றம், அதிகார ஒப்படைப்பினை நிருவாகத் துறை முகவர்களுக்கு வழங்க வேண்டுமானால், சட்டங்கள் இயற்றி அவை மூலமாக அதிகாரத்தை ஒப்படைத்தல் வேண்டும். இயற்றப்பட்ட சட்டங்கள், அவற்றின் இலக்கு, கொள்கை, திட்டங்கள் முதலியவற்றுடன் வழிகாட்டும் நெறிகளையும் தெளிவுபடக் கூறி இருக்க வேண்டும். சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள், நிலைமுறைச் சட்டங்கள் (Substantive Laws), அரசின் வருவாய்க்குரிய சட்டங்கள் (Fiscal Laws), நடைமுறை பற்றிய துணைச் சட்டங்கள் (Adjective Laws), மற்றும் நலச் சட்டங்கள் (Welfare Laws) என்று பல வகைப்படும். {{larger|<b>விதிகள் செய்தல்:</b>}} சட்டமன்றம், சட்டமியற்றும் அதிகாரங்கள் சிலவற்றை நிருவாகத்துறை முகவர்களுக்கு வழங்குகிறது. அவ்வாறு சட்டமன்றம், சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்கும்பொழுது அது சில பொதுக் கோட்பாடுகளுக்கு (General Principles) உட்பட்டே வழங்குகிறது. நிருவாகத்துறை முகவர் நிலைகளும் சட்டமன்றத்திடமிருந்து பெற்ற சட்டமியற்றும் அதிகாரங்களைக் கொண்டு, சட்டங்களைத் தோற்றுவாய்ச் சட்டத்தின் கீழ் (Parent Act) இயற்றுதல் வேண்டும். நிருவாகத் துறை முகவர்கள் தோற்றுவாய்ச் சட்டத்தின்கீழ்ச் செய்யும் சட்டங்களுக்கு, ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களின்படி செய்யப்பட்ட விதிகள் (Delegated Legislation) என்பது பெயர். ஆட்சி நிருவாகப் பிரிவுகள் இயற்றும் விதிகள், தோற்றுவாய்ச் சட்டத்தை முழுமை பெறச் செய்கின்றன. சூழ்நிலைக்கேற்பவும் மாறி வரும் தன்மைக்கேற்பவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சட்டமன்றம், பொதுக் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சட்டத்தில் குறித்துவிட்டு, அதன்படி மற்ற விதிகள் செய்யும் அதிகாரங்கள் யாவற்றையும் அதன்கீழே உள்ள நிருவாகத்துறை முகவர்களுக்கு அளித்துவருகின்ற நிலைதான் அவைத்துக் குடியரசு நாடுகளிலும் மிகுந்த அளவில் காணப்படுகிறது. சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட அனைத்துச் சட்டங்களும் இன்று இவ்வாறு விதிகள் செய்யும் அதிகாரங்களை நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கின்றன. {{nop}}<noinclude></noinclude> 6t78wduoqirl9k9z82qnijb833ky09o கனிச்சாறு 3/035 0 619975 1837365 2025-06-30T10:22:43Z Info-farmer 232 + படிவத் தரவு 1837365 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 35 | previous = [[../034/|034]] | next = [[../036/|036]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="63" to="63"fromsection="32" tosection="32" /> 6y8krw6cfbjshqs4gmdr3wle8g3vyfm கனிச்சாறு 3/036 0 619976 1837367 2025-06-30T10:23:19Z Info-farmer 232 + படிவத் தரவு 1837367 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 36 | previous = [[../035/|035]] | next = [[../037/|037]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="63" to="64"fromsection="33" tosection="33" /> 5h1i550vj1g0f2z5x8aen8fzeaa1b7y கனிச்சாறு 3/037 0 619977 1837368 2025-06-30T10:23:53Z Info-farmer 232 + படிவத் தரவு 1837368 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 37 | previous = [[../036/|036]] | next = [[../038/|038]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="64" to="65"fromsection="34" tosection="34" /> nhais0hjgbodzz5dyt6dpjvytuq2hf9 கனிச்சாறு 3/038 0 619978 1837369 2025-06-30T10:24:17Z Info-farmer 232 + படிவத் தரவு 1837369 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 38 | previous = [[../037/|037]] | next = [[../039/|039]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="66" to="66"fromsection="35" tosection="35" /> lfwi4swvy1fvea1lur7ec3uhdzjrq66 கனிச்சாறு 3/039 0 619979 1837370 2025-06-30T10:24:46Z Info-farmer 232 + படிவத் தரவு 1837370 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 39 | previous = [[../038/|038]] | next = [[../040/|040]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="67" to="67"fromsection="36" tosection="36" /> hkyps26d1fyw1pmfqy3y25bvheanuig கனிச்சாறு 3/040 0 619980 1837371 2025-06-30T10:25:13Z Info-farmer 232 + படிவத் தரவு 1837371 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 40 | previous = [[../039/|039]] | next = [[../041/|041]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="68" to="69"fromsection="37" tosection="37" /> 6qspk390725cxz34wbmhiapilxy734g கனிச்சாறு 3/041 0 619981 1837372 2025-06-30T10:25:38Z Info-farmer 232 + படிவத் தரவு 1837372 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 41 | previous = [[../040/|040]] | next = [[../042/|042]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="70" to="70"fromsection="38" tosection="38" /> 7hxthq291w42tmxg8ah0j4xo7hpblyr கனிச்சாறு 3/042 0 619982 1837374 2025-06-30T10:26:04Z Info-farmer 232 + படிவத் தரவு 1837374 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 42 | previous = [[../041/|041]] | next = [[../043/|043]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="770" to="70"fromsection="39" tosection="39" /> c6t054fdxwttkjioik5y7bgmtuiwg0k 1837376 1837374 2025-06-30T10:27:40Z Info-farmer 232 - துப்புரவு 1837376 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 42 | previous = [[../041/|041]] | next = [[../043/|043]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="70" to="70"fromsection="39" tosection="39" /> l6qlw3fofjm60vabu71mwczbs1p7xmg கனிச்சாறு 3/043 0 619983 1837377 2025-06-30T10:28:12Z Info-farmer 232 + படிவத் தரவு 1837377 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 43 | previous = [[../042/|042]] | next = [[../044/|044]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="71" to="71"fromsection="40" tosection="40" /> mr7hrdtjll8i5czj8y48254ih9qz5wm கனிச்சாறு 3/044 0 619984 1837378 2025-06-30T10:28:45Z Info-farmer 232 + படிவத் தரவு 1837378 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 44 | previous = [[../043/|043]] | next = [[../045/|045]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="72" to="72"fromsection="41" tosection="41" /> nm88c2wl9ao5fmrak7z1o8w7egigb1j கனிச்சாறு 3/045 0 619985 1837379 2025-06-30T10:29:18Z Info-farmer 232 + படிவத் தரவு 1837379 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 45 | previous = [[../044/|044]] | next = [[../046/|046]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="73" to="74"fromsection="42" tosection="42" /> 964rjd30p4pbpe94jyv89sdmzxhvey2 கனிச்சாறு 3/046 0 619986 1837380 2025-06-30T10:29:45Z Info-farmer 232 + படிவத் தரவு 1837380 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 46 | previous = [[../045/|045]] | next = [[../047/|047]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="74" to="74"fromsection="43" tosection="43" /> 409dcvqz9zjyckz4zk3xok163zqha79 கனிச்சாறு 3/047 0 619987 1837381 2025-06-30T10:30:13Z Info-farmer 232 + படிவத் தரவு 1837381 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 47 | previous = [[../046/|046]] | next = [[../048/|048]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="75" to="76"fromsection="44" tosection="44" /> cfz5jr04qeffcai1u4y2rycmqjvj0tb கனிச்சாறு 3/048 0 619988 1837382 2025-06-30T10:30:40Z Info-farmer 232 + படிவத் தரவு 1837382 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 48 | previous = [[../047/|047]] | next = [[../049/|049]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="76" to="76"fromsection="45" tosection="45" /> 2app28svyhnp0t9xeh6x0jmqqhbuuns கனிச்சாறு 3/049 0 619989 1837383 2025-06-30T10:31:23Z Info-farmer 232 + படிவத் தரவு 1837383 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 49 | previous = [[../048/|048]] | next = [[../050/|050]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="77" to="77"fromsection="46" tosection="46" /> 5a3l6glxr6e273gb0e3aidmok9577ke கனிச்சாறு 3/050 0 619990 1837384 2025-06-30T10:31:53Z Info-farmer 232 + படிவத் தரவு 1837384 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 50 | previous = [[../049/|049]] | next = [[../051/|051]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="77" to="77"fromsection="47" tosection="47" /> ng72ykuv91gebxdve888cy5n6r0hmb4 கனிச்சாறு 3/051 0 619991 1837385 2025-06-30T10:36:08Z Info-farmer 232 + படிவத் தரவு 1837385 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 51 | previous = [[../050/|050]] | next = [[../052/|052]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="78" to="78"fromsection="48" tosection="48" /> mjv2mgr7exe0qyonvgx93ikj4m8lexo கனிச்சாறு 3/052 0 619992 1837386 2025-06-30T10:36:52Z Info-farmer 232 + படிவத் தரவு 1837386 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 52 | previous = [[../051/|051]] | next = [[../053/|053]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="79" to="79"fromsection="49" tosection="49" /> dqwi56t2uq15tji1p1yhjwzpf4uwuip பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/339 250 619993 1837387 2025-06-30T10:37:17Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>விதிசெய்தலும், நிபந்தனைக்குக் கட்டுப்பட்டுச் சட்டமாக்கலும்:</b>}} தோற்றுவாய்ச் சட்டத்தின் மூலம் சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற நிருவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகார அளிப்பு|303|}}</noinclude>{{larger|<b>விதிசெய்தலும், நிபந்தனைக்குக் கட்டுப்பட்டுச் சட்டமாக்கலும்:</b>}} தோற்றுவாய்ச் சட்டத்தின் மூலம் சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற நிருவாகத்துறை முகவர்கள் விதிகளைச் செய்கின்றனர். இச்சட்டம், நிருவாகத்துறை முகவர்களால் இயற்றப்பட்ட விதிகளினால் முழுமை பெறுகிறது. பல்வேறு வகைப்பட்ட விதிகள் செய்யும் அதிகாரங்கள், நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. நிருவாகத்துறை முகவர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கேற்ப விதிகளை இயற்றுகின்றனர். இவ்வாறு செய்யப்படும் விதிகள், கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுச் சட்டமியற்றலிலிருந்து வேறுபட்டனவாகும். கட்டுப்பாட்டின் மீது சட்டமாக்குதலுக்கு எந்த விதக் கட்டுப்பாடும் சட்டமன்றம் விதிப்பதில்லை, தோற்றுவாய்ச் சட்டம், சட்டமன்றத்தை விட்டு வெளிவரும்பொழுதே முழுமைபெற்று விளங்குகிறது. அதனுடன் விதிகள் செய்து எதையும் விளக்க வேண்டிய தேவையில்லை. நிருவாகத்துறை முகவர், தோற்றுவாய்ச் சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள செயல் இலக்கிற்கு ஏற்பவும், கொள்கைக்கு ஏற்பவும் வழிகாட்டும் நெறிகளின்படியும் தரத்திட்டங்களின்படியும் விதிகள் செய்யவேண்டும். ஆக, கட்டுப்பாட்டுக்குட்பட்டுச் சட்டமியற்றலும் (Conditional Legislation) விதிகள் செய்யும் அதிகாரமும் (Delegated Legislation) ஒன்றல்ல; வெவ்வேறாகும். {{larger|<b>இங்கிலாந்து நாட்டில் அதிகார ஒப்படைப்பு:</b>}} இங்கிலாந்து நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் எழுதா அரசியலமைப்புச் சட்டமெனக் (Unwritten Constitution) கூறுவர். அரசியலமைப்புச் சட்டம் என்று ஒன்று இல்லாததால், நாடாளுமன்றம் இவற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கேற்ப இருக்கின்றனவா என்று உறுதி செய்யக்கூடியது எதுவும் இல்லை, நாடாளுமன்றத்தின் நடப்புமுறையினையும் சட்டம் செய்யும் போக்கினையும் கட்டுப்படுத்தச் சட்டம் எதுவும் இல்லை. நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் செய்யலாம்; வேண்டுமானாலும் செய்யலாம். அது, எவ்வாறு எல்லையற்ற-கட்டுப்பாடற்ற அதிகாரத்தோடு சட்டம் செய்யும் உரிமையைக் கொண்டு விளங்குகிறது. நாடாளுமன்றம் செய்யும் சட்டங்களை நீதிமன்றம், நீதிமுறை மறுஆய்வு (Judicial Review) செய்தல் இயலாது. நாடாளுமன்றம் இயற்றும் எத்தகைய சட்டமும் செல்லும், அவை நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறாக இங்கிலாந்து நாடாளுமன்றம் எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டு சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற மன்றமாகத் திகழ்கிறது. இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் இயற்றி, எவ்வாறு வேண்டுமானாலும் நிருவாகத்துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்யலாம். நாடாளுமன்றம் எந்த அதிகாரத்தை வேண்டுமானாலும் நிருவாகத் துறை முகவர்களுக்கு அளிக்கலாம். நிருவாகத்துறை முகவர் தோற்றுவாய்ச் சட்டத்தின் மூலம் எந்த விதியை வேண்டுமானாலும் ஆக்கலாம். இவ்விதிகள் தோற்றுவாய்ச் சட்டத்திற்குட்பட்டிருந்தாலோ தோற்றுவாய்ச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டிருந்தாலோ அவை செல்லும்; நீதிமன்றம் தலையிட இயலாது. ஆனால், நடைமுறையில் இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்றம், சட்டங்களின் பொதுக் கோட்பாடுகளை விவரித்த பின்னரே, அச்சட்டங்களின் கீழ் மற்ற விவரங்களை இணைக்கும் அதிகாரங்களை நிருவாகத்துறை முகவர்களுக்கு வழங்குகிறது. இம்முறையே, தொன்று தொட்டு நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. பொதுவாக எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தால் முழுமையாகச் செய்யப்படுவதில்லை. சட்டங்கள் அனைத்தும் நிருவாகத்துறை முகவர்களால் செய்யப்பட்ட விதிகள் மூலமே முழுமை பெறுகின்றன இதனால் நாடாளுமன்றத்தால் செய்யப்பட்ட சட்டங்களின் அளவைவிட, நிருவாகத்துறை முகவர்களால் செய்யப்பட்ட விதிகளின் அளவே மிகுதியாக அந்நாட்டில் இருந்து வந்தது. இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல், மேற்கூறிய பழக்கத்தில் சிறிது மாறுதல் ஏற்பட்டது. நாடாளுமன்றம் பெயரளவில் ஈட்டங்கள் இயற்றத் தொடங்கியது. அவ்வாறு இயற்றிய சட்டங்கள் மூலம் அனைத்து அதிகாரங்களும் நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்பட்டன. தோற்றுவாய்ச் சட்டத்தையே திருத்துவதற்கும் மாற்றுவதற்குமான அதிகாரங்களும் நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்பட்டன. நிருவாகத்துறை முகவர்கள், செய்யும் விதிகள் மூலம் தோற்றுவாய்ச் சட்டத்தையே குறைக்கவும் கூட்டவும் மாற்றவும் திருந்தவும் முடியும், தோற்றுவாய்ச் சட்டத்தின் விதிக்கூறு, அச்சட்டத்தையே திருத்தும் அதிகாரத்தை நிருவாகத்துறை முகவருக்கு வழங்குமாயின், அதனை ‘எட்டாம் என்றி (Henry) விதிக்கூறு’ எனக் கூறுவர். சட்டங்கள் செய்யும் அதிகாரமும் அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் நிருவாகத்துறை முகவர்கள் பெற்றிருந்ததால், அது தன்னதிகாரப் போக்கிற்கு வழி வகுத்தது. இந்த அதிகாரம் பற்றி ஈவர்ட்டு (Lord Hewart), இடைசி (Dicey) முதலியவர்கள் தங்களுடைய நூல்களின் மூலம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இவ்வெதிர்ப்புகளின் விளைவாகக் குறைகளைக் கண்டறிய, 1939–ஆம் ஆண்டு தானோமோர் குழு (Donoughmore Committee) அமைக்கப்பெற்றது. இக்குழு, நிருவாகத்துறை முகவர்களுக்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட அதிகார ஒப்படைப்புக் குறித்தும் விதிகள் செய்யும் அதிகாரம் குறித்தும்<noinclude></noinclude> o74umrz71r2f4e66a8gjb84tffcu3ob கனிச்சாறு 3/053 0 619994 1837388 2025-06-30T10:37:28Z Info-farmer 232 + படிவத் தரவு 1837388 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 53 | previous = [[../052/|052]] | next = [[../054/|054]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="80" to="80"fromsection="50" tosection="50" /> dyk4uirx2y9hmuj4jiq8x3v3um5rwvq கனிச்சாறு 3/054 0 619995 1837389 2025-06-30T10:37:53Z Info-farmer 232 + படிவத் தரவு 1837389 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 54 | previous = [[../053/|053]] | next = [[../055/|055]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="81" to="81"fromsection="51" tosection="51" /> fkc6qmi9jey774po5p9sn0d8ixur4cq கனிச்சாறு 3/055 0 619996 1837390 2025-06-30T10:40:23Z Info-farmer 232 + படிவத் தரவு 1837390 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 55 | previous = [[../054/|054]] | next = [[../056/|056]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="81" to="81"fromsection="52" tosection="52" /> 84em9xdzy1ik3dsf4rx91059bm4u73b 1837391 1837390 2025-06-30T10:41:09Z Info-farmer 232 82 1837391 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 55 | previous = [[../054/|054]] | next = [[../056/|056]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="82" to="82"fromsection="52" tosection="52" /> 54xd6dx5jmjcaiey19yxbq2uy0wcq5y கனிச்சாறு 3/056 0 619997 1837392 2025-06-30T10:41:33Z Info-farmer 232 + படிவத் தரவு 1837392 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 56 | previous = [[../055/|055]] | next = [[../057/|057]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="83" to="83"fromsection="53" tosection="53" /> h80euyffmksubzxn4zpl930qpj85aou கனிச்சாறு 3/057 0 619998 1837393 2025-06-30T10:42:11Z Info-farmer 232 + படிவத் தரவு 1837393 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 57 | previous = [[../056/|056]] | next = [[../058/|058]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="84" to="84"fromsection="54" tosection="54" /> kekaf7t37ysk98aem47ncgmpreighz5 கனிச்சாறு 3/058 0 619999 1837394 2025-06-30T10:43:00Z Info-farmer 232 + படிவத் தரவு 1837394 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 58 | previous = [[../057/|057]] | next = [[../059/|059]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="85" to="85"fromsection="55" tosection="55" /> obxksscy40hkuachcsdz7h047hpmc0b கனிச்சாறு 3/059 0 620000 1837395 2025-06-30T10:43:52Z Info-farmer 232 + படிவத் தரவு 1837395 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 59 | previous = [[../058/|058]] | next = [[../060/|060]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="86" to="86"fromsection="56" tosection="56" /> pw89y9q8eishzlqqovub5rdb6jjxbzs கனிச்சாறு 3/060 0 620001 1837396 2025-06-30T10:44:50Z Info-farmer 232 + படிவத் தரவு 1837396 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 60 | previous = [[../059/|059]] | next = [[../061/|061]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="87" to="87"fromsection="57" tosection="57" /> sknesb7tfali49215pu2rxmdg5q81kf கனிச்சாறு 3/061 0 620002 1837397 2025-06-30T10:46:47Z Info-farmer 232 + படிவத் தரவு 1837397 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 61 | previous = [[../060/|060]] | next = [[../062/|062]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="88" to="88"fromsection="58" tosection="58" /> nsxmby317q5p8rxsdvimm9034p91giy கனிச்சாறு 3/062 0 620003 1837398 2025-06-30T10:47:11Z Info-farmer 232 + படிவத் தரவு 1837398 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 62 | previous = [[../061/|061]] | next = [[../063/|063]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="88" to="88"fromsection="59" tosection="59" /> to8j325p6tfwe0g348nduh6biffuuq5 கனிச்சாறு 3/063 0 620004 1837399 2025-06-30T10:47:38Z Info-farmer 232 + படிவத் தரவு 1837399 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 63 | previous = [[../062/|062]] | next = [[../064/|064]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="89" to="89"fromsection="60" tosection="60" /> l5okzzb167vlmldx0mz29driob0v7xx கனிச்சாறு 3/064 0 620005 1837400 2025-06-30T10:49:38Z Info-farmer 232 + படிவத் தரவு 1837400 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 64 | previous = [[../063/|063]] | next = [[../065/|065]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="91" to="91"fromsection="61" tosection="61" /> l94x5z4w9fpy968082cyat0yuaikx6g 1837401 1837400 2025-06-30T10:51:10Z Info-farmer 232 60 1837401 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 64 | previous = [[../063/|063]] | next = [[../065/|065]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="90" to="90"fromsection="61" tosection="61" /> khpc87h4n9vt2s8nln2mbq15vahm22s கனிச்சாறு 3/065 0 620006 1837402 2025-06-30T10:51:51Z Info-farmer 232 + படிவத் தரவு 1837402 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 65 | previous = [[../064/|064]] | next = [[../066/|066]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="91" to="91"fromsection="62" tosection="62" /> j3v2w4jlsqiqdutpdtxp1acj6qny79d கனிச்சாறு 3/066 0 620007 1837404 2025-06-30T10:53:38Z Info-farmer 232 + படிவத் தரவு 1837404 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 66 | previous = [[../065/|065]] | next = [[../067/|067]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="92" to="92"fromsection="63" tosection="63" /> opz6j5mm6h0m34twq7666lwvhkw8ls6 கனிச்சாறு 3/067 0 620008 1837405 2025-06-30T10:54:32Z Info-farmer 232 + படிவத் தரவு 1837405 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 67 | previous = [[../066/|066]] | next = [[../068/|068]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="93" to="93"fromsection="64" tosection="64" /> fhmq61041e93sj73w7dq8c03phqdv3p கனிச்சாறு 3/068 0 620009 1837406 2025-06-30T10:55:05Z Info-farmer 232 + படிவத் தரவு 1837406 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 68 | previous = [[../067/|067]] | next = [[../069/|069]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="94" to="94"fromsection="65" tosection="65" /> huigymciw2lut5t4ma7srsy1eix902i கனிச்சாறு 3/069 0 620010 1837407 2025-06-30T10:55:36Z Info-farmer 232 + படிவத் தரவு 1837407 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 69 | previous = [[../068/|068]] | next = [[../070/|070]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="95" to="95"fromsection="66" tosection="66" /> ltwtx3l97361kzjqp4asxy72gkyw33z கனிச்சாறு 3/070 0 620011 1837408 2025-06-30T10:56:12Z Info-farmer 232 + படிவத் தரவு 1837408 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 70 | previous = [[../069/|069]] | next = [[../071/|071]] | notes = முழுமையான முதற்பதிப்பு: தி.பி. 2043. துலை ( அத்தோபர் 2012 ) }} <pages index="கனிச்சாறு 3.pdf" from="96" to="96"fromsection="67" tosection="67" /> 7r375ghazav30r8lb2tnzxd2209x4j1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/340 250 620012 1837409 2025-06-30T11:00:22Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் நடைமுறைத் தன்மையை ஆராய்ந்து ஓர் அறிக்கையினைக் கொடுக்குமாறு பணிக்கப்பட்டது. இக்குழு தன்னுடைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகார அளிப்பு|304|அதிகார அளிப்பு}}</noinclude>அவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் நடைமுறைத் தன்மையை ஆராய்ந்து ஓர் அறிக்கையினைக் கொடுக்குமாறு பணிக்கப்பட்டது. இக்குழு தன்னுடைய அறிக்கையில், அதிகார ஒப்படைப்போ விதிகள் செய்யும் அதிகாரமோ இன்றி ஆட்சி நடைபெற இயலாதெனக் கருத்தறிவித்தது. நிருவாகத்துறை முகவர்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரங்கனை அளித்ததன் வாயிலாக நாடாளுமன்றம் தவறு செய்யவில்லை என்றும், ஆனால் அதிகாரங்களை ஒப்படைக் கையில் நாடாளுமன்றம் அதிகக் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், நிருவாகத்துறை முகவர்கள் இயற்கை நியதிக்கு ஏற்பச் செயல்படவேண்டும் என்றும் இக்குழு கூறிற்று. அதன் அடிப்படையில், இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கியது. நாடாளுமன்றம் தோற்றுவாய்ச் சட்டத்தில் பொதுக் கோட்பாடுகளைத் தெள்ளத் தெளியக் கூறி, மற்ற விதிகளை விதிகளின் மூலம் சேர்க்கும் அதிகாரத்தை நிருவாகத்துறை முகவர்களுக்கு வழங்கவாயிற்று. ஆனால், இன்றும் நாடாளுமன்றம் செய்யும் அதிகார ஒப்படைப்பின் மீது நீதிமன்றம் நீதி முறை மறு ஆய்வினை மேற்கொள்ள இயலாது. {{larger|<b>அமெரிக்க நாட்டில் அதிகார ஒப்படைப்பு:</b>}} அமெரிக்க நாட்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்புச் சட்டம் இலாக்கு (Locke), மாண்டெசுக்கியூ (Montesquieu) போன்றவர்களின் கருத்திற்கேற்பவும் அதிகாரங்களின் பிரிவுக் கோட்பாட்டிற்கு இசைந்தும் இயற்றப்பட்டது ஆகும். இவ்வரசியலமைப்புச் சட்டத்தில் சட்டமியற்றும் அதிகாரம், நீதிவழங்கும் அதிகாரம், மேலாண்மை அதிகாரம் ஆகிய மூன்றும் தனித் தனியே மூன்று அரசியல் பிரிவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திடமும், நீதிமுறை நீதி மன்றத்திடமும் மேலாண்மை அதிகாரம் ஆட்சி நிருவாக அங்கத்தினர்களிடமும் ஒப்படைவு செய்யப்பட்டுள்ளன, ஒரு பிரிவு மற்றோர் பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக, ஆட்சி நிருவாகப் பிரிவின் மற்ற இரு பிரிவின் அதிகாரங்கன் குவித்திருக்குமாயின் அந்தப் பிரிவு, தன் அதிகாரப் போக்கில் செயல்பட வழி வகுக்குமென அமெரிக்க மக்கள் கருதினார்கள். இதனை மனத்தில் கொண்டு, நீதிபதிகளும் சட்டவியல் அறிஞர்களும் அமெரிக்காவில் அதிகார ஒப்படைப்புக் கூடாது என்றும், அவ்வாறு செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் கூறி வந்தார்கள். ஆனால், நாளடைவில் அதிகார ஒப்படைப்புச் செய்யாமல் அரசின் பணிகளை நிறைவேற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றமே அனைத்துச் சட்டங்களையும் இயற்றுவதென்பது இயலாததொன்றாயிற்று, சட்டமன்றம் நிருவாகத்துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்தால்தான் ஆட்சி தடையின்றிச் செயல்படும் என்ற நிலை உருவாயிற்று. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் நிருவாகத்துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்யத் தொடங்கிற்று. {{larger|<b>இந்தியாவில் அதிகார ஒப்படைவு:</b>}} வாணிக நோக்கத்தோடு இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர் பின்னாளில் அரசியலில் ஈடுபட்டனர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் கி.பி. 1833-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியச் சட்ட மன்றச் சட்டம் (The Indian Council Act of 1833), இந்திய ஆட்சி முறையிலும் கிழக்கிந்தியக் கம்பெனியின் அமைப்பிலும் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து வந்த இந்திய ஆட்சி, இங்கிலந்து நாட்டு மன்னரின் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய அரசின் பொறுப்புரிமை அமைப்பாக மாற்றப்பட்டது. தலைமை ஆளுநர் சட்டமன்றத்தில் இருக்கையில் அவரிடம் இந்திய அரசின் சட்டமியற்றும் அனைத்து அதிகாரங்களையும் ஒப்புவித்ததும், ஆட்சி நிருவாகத்தலைவரான அவர் சட்டங்கள் (1833–ஆம் ஆண்டுச் சட்டம்) செய்தார். இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்றத்தால் செய்யப்பட்ட சட்டங்களின்கீழ் விதிகள் இயற்றினார்; சட்டங்களைத் திருத்தினார்; மாற்றினார். இவ்வாறாகச் சட்டமியற்றும் அனைத்து அதிகாரங்களும் அவரிடமே இருந்தன. சட்டங்கள் செய்யும் அதிகாரமும் அவற்றைச் செயற்படுத்தும் அதிகாரமும் அவரிடமே இருந்தன. இவ்வாறாகத் தலைமை ஆளுநரிடமே அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த அதிகார ஒப்படைவு எந்தக் கோட்பாட்டிற்கும் உட்பட்டிருக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950–ஆம் ஆண்டு சனவரி 26–ஆம் நாள் செயல்முறைக்கு வருகையில், அதிகார ஒப்படைவு பற்றி நீதிமன்றங்களின் தெளிவான கருத்து எதுவுமில்லை. இந்தியாவில், அதிகார ஒப்படைவு பற்றி உரிய விளக்கம் பெற இந்தியக் குடியரசுத் தலைவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 143–ஆம் பிரிவின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றத்தைக் கருத்து வழங்குமாறு தில்லிச் சட்டங்கள் வழக்கில் (In Re Delhi Laws Act Case A.I.R. 1951, S.C. 332) கேட்டுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களுடைய கருத்துகளை தனித்தனியே அளித்தார்கள். இவ்வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:<noinclude></noinclude> nwtf4x9ht1t6vnl8nnpnsae18rt0cjg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/341 250 620013 1837410 2025-06-30T11:19:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":{{overfloat left|align=right|padding=1em|1.}} அதிகார ஒப்படைவு செய்யப்படாமல் மேலாண்மை, ஆட்சி நடத்துதல் இயலாதது. :{{overfloat left|align=right|padding=1em|2.}} இந்தியச் சட்டமன்றங்கள், அரசியல் அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகார அளிப்பு|305|அதிகார ஆவணம்}}</noinclude>:{{overfloat left|align=right|padding=1em|1.}} அதிகார ஒப்படைவு செய்யப்படாமல் மேலாண்மை, ஆட்சி நடத்துதல் இயலாதது. :{{overfloat left|align=right|padding=1em|2.}} இந்தியச் சட்டமன்றங்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ்ச் செயல்படுவதால் ஒரு வரம் பிற்குட்பட்டே அதிகார ஒப்படைவு செய்ய இயலும், இந்தியச் சட்டமன்றங்கள், தங்கள் விருப்பப்படி அனைத்து அதிகாரங்களையும் அதிகார ஒப்படைவு செய்ய இயலாது. :{{overfloat left|align=right|padding=1em|3.}} இந்தியச் சட்டமன்றங்கள் இன்றியமையாத சட்டமியற்றும் அதிகாரங்களை நிருவாகத் துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்தல் கூடாது; அவ்வாறு செய்தால் அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதாகும். :{{overfloat left|align=right|padding=1em|4.}} இன்றியமையாத சட்டமியற்றும் சட்டமியற்றும் அதிகாரங்களைத் தவிர மற்றச் சட்டமியற்றும் அதிகாரங்களை நிருவாகத்துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, தோற்றுவாய்ச் சட்டத்தில் நிருவாகத் துறை முகவர்கள் செயல்படக் கொள்கை, தரத் திட்டம், வழிகாட்டும் நெறிகள் ஆகியவை அவர்களுக்குக் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அவ்வதிகார ஒப்படைவு அரசியல் சட்டத்திற்கு முரண்பட்டதாகும். :{{overfloat left|align=right|padding=1em|5.}} கட்டுப்பாட்டுக்குட்பட்டுச் சட்டமியற்றல் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதன்று. தோற்றுவாய் சட்டத்தில் கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டிருந்தால், அக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விதிகள் செய்யலாம். :{{overfloat left|align=right|padding=1em|6.}} ஓரிடத்தில் நிலவிவரும் சட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் அதை மற்றோர் இடத்திற்கு, அவ்விடத்திற்கேற்ற மாறுபாடுகளுடனோ வரையறைகளுடனோ விரிவாக்கம் செய்யும் அதிகாரமும் நிருவாக முகவர்களுக்கு, சட்டமன்றம் வழங்கலாம். விதிகள் செய்யும் அதிகாரத்தின்மீது நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்யவும், சட்டமன்றங்களை நீதி முறை மறு ஆய்வு மூலம் கட்டுப்படுத்தும் விதிகள் செய்யவும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன. விதிகள் செய்யும் அதிகாரம் தோற்றுவாய்ச் சட்டத்தினால் நிருவாக அரசுக்கு ஒப்படைக்கப்படலாம். அவ்வதிகாரத்தைப் பெற்ற அரசு, அதை விதிகள் மூலம் நிருவாகத்துறை முகவர்களுக்கு ஒப்படைக்கலாம். நிருவாகத்துறை முகவர் நிலையும், தான் இயற்றும் துணை விதிகளினால் அதன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரத்தையும் அவற்றை நிறைவேற்றும் அதிகாரத்தையும் அளிக்கலாம். இவ்வாறாக விதிகள் செய்யும் அதிகாரம் படிப்படியாக நிருவாக அரசின்கீழ் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுவது, விதிகள் செய்யும் அதிகாரத்தின் உள் ஒப்படைவு எனப்படும். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>திருமலை, பு.சு.,</b> “இந்திய அரசியலமைப்புச் சட்டம்”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1975. <b>கிருஷ்ணசாமி, ச.,</b> “நிருவாக முறைச் சட்டம்”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1979. <b>Jain Kagzi, M.C.,</b> “The Constitution of India”, 2nd Vol., Metropolitan Book Co., Private Ltd., New Delhi, 1984. {{larger|<b>அதிகார ஆவணம்:</b>}} ஒருவர் தம் சார்பில் அல்லது தம் பெயரில் வேறு ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்டவரோ நடவடிக்கை எடுப்பதற்கு அவருக்கு உரிமை வழங்கி எழுதிக் கொடுக்கும் ஒரு முறை ஆவணம் ஆகும். குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு மட்டிலும், அதிகாரம் வழங்கும் ஆவணத்திற்கு, ‘சிறப்பு அதிகார ஆவணம்’ (Special Power of Attorney) என்றும், பொதுவாகச் சில நடவடிக்கைகள் எடுக்க எழுதிக் கொடுக்கப்படும் ஆவணத்திற்குப் பொது அதிகார ஆவணம் என்றும் பெயர். அதிகாரம் வழங்குபவர் ‘முதல்வர்’ (Principal); அதிகாரம் பெறுபவர் ‘முகவர்’. சட்டப்படி ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் தகுதியுடையவர்கள் யாரும் தங்களுக்கு ஓர் அதிகார முகவரை நியமித்துக் கொள்ளலாம். திருமணமான பெண்களுக்கு மட்டும் இவ்வுரிமை இல்லை. யார் வேண்டுமாயினும் முகவர் ஆகலாம். ஆனால் சட்டப்படி ஒப்பந்தம் செய்துகொள்ளும் தகுதி அவரிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் தம் முதல்வருக்குப் பொறுப்பாளியாவார். முகவர் நியமனத்துக்கு ஊதியம் தேவையில்லை, தமக்குத் தாமே நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலாத ஒருவர் தமக்கு ஒரு முகவரை நியமித்துக் கொள்கிறார். தம் முதல்வரின் ஆணைக்கு ஒப்ப, அல்லது நடைமுறை வழக்கங்கட்கு உட்பட்டு ஒரு முகவர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு மாறுபட்டு அவர் செயல்படுவாராயின், தம் செயலின் விளைவுகட்கெல்லாம் தாமே தம் முதல்வருக்குப் பொறுப்பாளியாவர். ஒரு முகவர் தம் முதல்வருக்குக் கணக்கு வழக்குகளை முறைப்படி ஒப்படைக்கக் கடமைப்பட்டவர், தம் முகவர் எடுக்கும் நடவடிக்கைகள் சட்டத்துக்குட்பட்டிருக்கும்போது, அவருக்கு ஏதேனும் ஊறுவிளையுமாயின் அதற்கு முதல்வர் ஈடு செய்யக் கடமைப்பட்டவராவார். {{nop}}<noinclude> <b>வா.க. 1 - 20</b></noinclude> jk6k75r7hqhodqqmlnubovqjngkmj1e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/342 250 620014 1837411 2025-06-30T11:43:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உத்தரவு பெற்ற ஒரு முகவர் நடவடிக்கையை எடுக்கும்போது அதற்கு உறுதுணையாக நியாயமான வேறு எந்தச் செயலையும் தாம் மேற்கொள்ளலாம். தம்மைக் கலந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1837411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகார ஆவணம்|306|}}</noinclude>உத்தரவு பெற்ற ஒரு முகவர் நடவடிக்கையை எடுக்கும்போது அதற்கு உறுதுணையாக நியாயமான வேறு எந்தச் செயலையும் தாம் மேற்கொள்ளலாம். தம்மைக் கலந்து கொள்ளாமலோ தம் உத்தரவின்றியோ தம்முடைய முகவர் எடுத்துக்கொள்ளும் நியாயமான நடவடிக்கைகளை எல்லாம் முதல்வர் அங்கீகரிக்கலாம்; அவை அவருடைய ஆணையின்படி எடுக்கப்பட்டவையாகவே கொள்ளப்படும். முகவர் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் முதல்வரால் எடுக்கப்பட்டவை போலவே சட்டப்படி செல்லுபடியாகத் தக்கன. தாம் பெற்ற ஆணைக்குப் புறம்பாக ஒரு முகவர் செய்யும் தவறுகளும் மோசடிகளும் அவருடைய முதல்வரைக் கட்டுப்படுத்தா, காலங்குறிக்கப் பெறாத அதிகார ஆவணங்கள் கீழ்க்கண்ட காரணங்களினால் முறிவு பெறும். முதல்வர் தாம் வழங்கிய ஆணையை மீளவும் திரும்பப் பெற்றுக் கொள்ளுதல்; தாம் பெற்ற ஆணையை முகவரே விட்டுக் கொடுத்தல்; தொடர்புடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முற்றுப் பெறுதல்; முதல்வரோ முகவரோ இறந்து போதல் அல்லது புத்திசுவாதீனத்தை இழத்தல்; முதல்வர் தாம் வாங்கிய கடன்களைத் திருப்பிக் கொடுத்த இயலாதவர் (Insolvent) என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுதல். அதிகார ஆவணத்தின்மேல் கட்டண முத்திரைவில்லை ஒட்டப்படவேண்டும். ஆவணத்திற்குச் சான்றோ பதிவோ தேவை இல்லை. ஆனால் ஓர் ஆவணத்தைப் பதிவுக்குச் சமர்ப்பிக்க உத்தரவு வழங்கி எழுதப்படும் அதிகார ஆவணத்துக்குச் சாட்சியும் பதிவும் தேவை. அதிகார ஆவணத்தைப் பற்றிய சட்டம் 1882-இல் இயற்றப்பட்ட அதிகார ஆவணச் சட்டத்திலும் ஒப்பந்தச் சட்டத்தின் (Contract Act) பத்தாம் பகுதியிலும் உள்ளது. {{larger|<b>பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 (சட்டம் 7, 1882) [The power of Attorneys Act, 1882 (Act VII of 1882)]:</b>}} பகராள் செயலுரிமைச் சட்டம், மாற்றுரிமையரின் பொதுவான அதிகார ஆவணத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்தச் சட்டம் ஒருவர் சட்டப்படி மாற்றுரிமையரின் பத்திரத்தை எழுதுவதை அனுமதிப்பதுடன், அதிகாரம் கொடுக்கும் கொடையாளி அல்லது முதல்வர், அதிகசரம் கொடுக்கும் ஒருவருக்காகவும் கொடை பெறுபவர் மாற்றுரிமையர் அல்லது முகவர் தரப்பிலும் நடவடிக்கை எடுக்கலாம். இந்தச் சட்டம் அதிகாரமளிக்கும் நபர் (கொடையாளி அல்லது முதல்வர்) இறந்தது தெரியாமல், கொடைபெறுபவர் மாற்றுரிமையர் அல்லது முகவர், அதிகாரமளிக்கப்படும் நபருக்கு (கொடையாளி அல்லது முதல்வருக்கு)ச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தினால் அவருக்குப் பாதுகாப்பளிக்கிறது, மேலும் இந்தச் சட்டம் இந்தப் பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வைக்கவும் செயல் முறையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையொப்பு நகல் சான்றிட்டபடி வழங்கவும் வழிவகை செய்துள்ளது. {{larger|<b>பதிவு செய்வது:</b>}} எழுதப்படும் ஆவணமானது அதற்கேற்ற மதிப்புள்ள நீதித்துறை சாரா முத்திரைத் தாளில் எழுதப்படவேண்டும். இந்தியப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக ஒரு ஆவணத்தைப் பதிவு செய்யும் அலுவலரின் முன் தாக்கல் செய்து அதிகாரமளிக்கும் அதிகார ஆவணம் முதல்வர் வரிக்கும் இடம் எந்தப் பதிவாளர் அல்லது சார்புப் பதிவாளர் அதிகார எல்லைக்குட்பட்டதோ அவரால் அத்தாட்சிக் கையொப்பம் செய்யப்பட வேண்டும். இந்தியப் பதிவுச் சட்டம் அமுலாகாத இடமாக இருந்தால், ஆவணத்தைக் குற்றவியல் நீதிபதியிடம் தாக்கல் செய்து, அத்தாட்சிக் கையொப்பம் பெறப்படவேண்டும். பொது அதிகார ஆவணம் இந்திய எல்லைக்கு வெளியே எழுதப்பட்டிருந்தால், அந்த ஆவணத்தைச் சான்றுறுதி அலுவலர், நீதிபதி, குற்றவியல் நீதிபதி, இந்திய நாட்டுப் பேராளர் அல்லது குடியரசுத் தலைவரின் பேராளர் முன்பு கையொப்பமிட்டு, அவருடைய அத்தாட்சிக் கையொப்பம் பெறப்பட வேண்டும் (பதிவுச் சட்டம் பி. 32, 33). <b>முத்திரை வரி:</b> பொது அதிகார ஆவணம் இந்திய முத்திரை வரிச்சட்டத்தின் கீழ் செயல்படுகிறது. ஆவணத்தை முறிவு செய்வதென்பது, அதே அட்டவணையின் கீழ் பிரிவுக் கூறு 17–இன் கீழ் கூறப்பட்டுள்ளது.{{float_right|ஈ.ப.}} {{larger|<b>அதிகாரக் குவிப்பு</b>}} என்பது, பொது ஆட்சி இயவில் (Public Administration) காணப்படும் அமைப்புப் பற்றிய (Organisation) ஒரு சீரிய கோட்பாடாகும், பொதுவாக, ஆட்சித்துறையை (Administrative Department), மேல்மட்டத்திலுள்ள மேலாண்மை நிலை என்றும் (Top Management), நடுமட்டத்திலுள்ள மேலாண்மை நிலை என்றும் (Middle Management), கீழ்மட்டத்திலுள்ள களநிலையங்கள் என்றும் (Field Establishments) பிரிப்பர். நடுமட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கும் களநிலைய அதிகாரிகளுக்குமிடையே உள்ள தொடர்பு, அதிகாரக் குவிப்பு என்ற கோட்பாட்டினாலோ (Centralisation of Powers) அதிகாரப்பரவல் என்ற கோட்பாட்டினாலோ (Decentralisation of Powers) உருவாக்கப்படுகிறது. மேல் நிலையிலுள்ள அதிகாரி தனக்குக் கீழ்நிலையிலுள்ள அதிகாரிக்குத் தன் அதிகாரங்களுள் சிலவற்றையோ<noinclude></noinclude> ggc5f6b3mlgyp1hjjlnshtj0yo1mkbc 1837412 1837411 2025-06-30T11:44:10Z Desappan sathiyamoorthy 14764 1837412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகார ஆவணம்|306|அதிகார குவிப்பு}}</noinclude>உத்தரவு பெற்ற ஒரு முகவர் நடவடிக்கையை எடுக்கும்போது அதற்கு உறுதுணையாக நியாயமான வேறு எந்தச் செயலையும் தாம் மேற்கொள்ளலாம். தம்மைக் கலந்து கொள்ளாமலோ தம் உத்தரவின்றியோ தம்முடைய முகவர் எடுத்துக்கொள்ளும் நியாயமான நடவடிக்கைகளை எல்லாம் முதல்வர் அங்கீகரிக்கலாம்; அவை அவருடைய ஆணையின்படி எடுக்கப்பட்டவையாகவே கொள்ளப்படும். முகவர் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் முதல்வரால் எடுக்கப்பட்டவை போலவே சட்டப்படி செல்லுபடியாகத் தக்கன. தாம் பெற்ற ஆணைக்குப் புறம்பாக ஒரு முகவர் செய்யும் தவறுகளும் மோசடிகளும் அவருடைய முதல்வரைக் கட்டுப்படுத்தா, காலங்குறிக்கப் பெறாத அதிகார ஆவணங்கள் கீழ்க்கண்ட காரணங்களினால் முறிவு பெறும். முதல்வர் தாம் வழங்கிய ஆணையை மீளவும் திரும்பப் பெற்றுக் கொள்ளுதல்; தாம் பெற்ற ஆணையை முகவரே விட்டுக் கொடுத்தல்; தொடர்புடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முற்றுப் பெறுதல்; முதல்வரோ முகவரோ இறந்து போதல் அல்லது புத்திசுவாதீனத்தை இழத்தல்; முதல்வர் தாம் வாங்கிய கடன்களைத் திருப்பிக் கொடுத்த இயலாதவர் (Insolvent) என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுதல். அதிகார ஆவணத்தின்மேல் கட்டண முத்திரைவில்லை ஒட்டப்படவேண்டும். ஆவணத்திற்குச் சான்றோ பதிவோ தேவை இல்லை. ஆனால் ஓர் ஆவணத்தைப் பதிவுக்குச் சமர்ப்பிக்க உத்தரவு வழங்கி எழுதப்படும் அதிகார ஆவணத்துக்குச் சாட்சியும் பதிவும் தேவை. அதிகார ஆவணத்தைப் பற்றிய சட்டம் 1882-இல் இயற்றப்பட்ட அதிகார ஆவணச் சட்டத்திலும் ஒப்பந்தச் சட்டத்தின் (Contract Act) பத்தாம் பகுதியிலும் உள்ளது. {{larger|<b>பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 (சட்டம் 7, 1882) [The power of Attorneys Act, 1882 (Act VII of 1882)]:</b>}} பகராள் செயலுரிமைச் சட்டம், மாற்றுரிமையரின் பொதுவான அதிகார ஆவணத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்தச் சட்டம் ஒருவர் சட்டப்படி மாற்றுரிமையரின் பத்திரத்தை எழுதுவதை அனுமதிப்பதுடன், அதிகாரம் கொடுக்கும் கொடையாளி அல்லது முதல்வர், அதிகசரம் கொடுக்கும் ஒருவருக்காகவும் கொடை பெறுபவர் மாற்றுரிமையர் அல்லது முகவர் தரப்பிலும் நடவடிக்கை எடுக்கலாம். இந்தச் சட்டம் அதிகாரமளிக்கும் நபர் (கொடையாளி அல்லது முதல்வர்) இறந்தது தெரியாமல், கொடைபெறுபவர் மாற்றுரிமையர் அல்லது முகவர், அதிகாரமளிக்கப்படும் நபருக்கு (கொடையாளி அல்லது முதல்வருக்கு)ச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தினால் அவருக்குப் பாதுகாப்பளிக்கிறது, மேலும் இந்தச் சட்டம் இந்தப் பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வைக்கவும் செயல் முறையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையொப்பு நகல் சான்றிட்டபடி வழங்கவும் வழிவகை செய்துள்ளது. {{larger|<b>பதிவு செய்வது:</b>}} எழுதப்படும் ஆவணமானது அதற்கேற்ற மதிப்புள்ள நீதித்துறை சாரா முத்திரைத் தாளில் எழுதப்படவேண்டும். இந்தியப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக ஒரு ஆவணத்தைப் பதிவு செய்யும் அலுவலரின் முன் தாக்கல் செய்து அதிகாரமளிக்கும் அதிகார ஆவணம் முதல்வர் வரிக்கும் இடம் எந்தப் பதிவாளர் அல்லது சார்புப் பதிவாளர் அதிகார எல்லைக்குட்பட்டதோ அவரால் அத்தாட்சிக் கையொப்பம் செய்யப்பட வேண்டும். இந்தியப் பதிவுச் சட்டம் அமுலாகாத இடமாக இருந்தால், ஆவணத்தைக் குற்றவியல் நீதிபதியிடம் தாக்கல் செய்து, அத்தாட்சிக் கையொப்பம் பெறப்படவேண்டும். பொது அதிகார ஆவணம் இந்திய எல்லைக்கு வெளியே எழுதப்பட்டிருந்தால், அந்த ஆவணத்தைச் சான்றுறுதி அலுவலர், நீதிபதி, குற்றவியல் நீதிபதி, இந்திய நாட்டுப் பேராளர் அல்லது குடியரசுத் தலைவரின் பேராளர் முன்பு கையொப்பமிட்டு, அவருடைய அத்தாட்சிக் கையொப்பம் பெறப்பட வேண்டும் (பதிவுச் சட்டம் பி. 32, 33). <b>முத்திரை வரி:</b> பொது அதிகார ஆவணம் இந்திய முத்திரை வரிச்சட்டத்தின் கீழ் செயல்படுகிறது. ஆவணத்தை முறிவு செய்வதென்பது, அதே அட்டவணையின் கீழ் பிரிவுக் கூறு 17–இன் கீழ் கூறப்பட்டுள்ளது.{{float_right|ஈ.ப.}} {{larger|<b>அதிகாரக் குவிப்பு</b>}} என்பது, பொது ஆட்சி இயவில் (Public Administration) காணப்படும் அமைப்புப் பற்றிய (Organisation) ஒரு சீரிய கோட்பாடாகும், பொதுவாக, ஆட்சித்துறையை (Administrative Department), மேல்மட்டத்திலுள்ள மேலாண்மை நிலை என்றும் (Top Management), நடுமட்டத்திலுள்ள மேலாண்மை நிலை என்றும் (Middle Management), கீழ்மட்டத்திலுள்ள களநிலையங்கள் என்றும் (Field Establishments) பிரிப்பர். நடுமட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கும் களநிலைய அதிகாரிகளுக்குமிடையே உள்ள தொடர்பு, அதிகாரக் குவிப்பு என்ற கோட்பாட்டினாலோ (Centralisation of Powers) அதிகாரப்பரவல் என்ற கோட்பாட்டினாலோ (Decentralisation of Powers) உருவாக்கப்படுகிறது. மேல் நிலையிலுள்ள அதிகாரி தனக்குக் கீழ்நிலையிலுள்ள அதிகாரிக்குத் தன் அதிகாரங்களுள் சிலவற்றையோ<noinclude></noinclude> 1smxhr8d931cl1tmagbbpld2mmshqy6