விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.45.0-wmf.8
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/5
250
102195
1838075
1062570
2025-07-02T05:15:33Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838075
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|||3}}{{rule}}</noinclude><center>{{Xx-larger|'''பதிப்புரை'''}}</center>
விளையாட்டுத்துறை இலக்கியத்தின் தந்தை என்றும், பல்கலைப் பேரறிஞர் என்றும் பாராட்டப்படுகின்ற, டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள், விளையாட்டுத்துறை தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கான பணியைத் தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு பணியாற்றினார்.
திருமூலர், திருருவள்ளுவர், வள்ளலார் போன்றவர்களுக்குப் பிறகு, தேகத்தின் தெய்வாம்சம் பற்றி மக்களிடையே, மகிமையை வளர்க்கும் விளையாட்டுத்துறை இலக்கியப்பணியை புத்தகங்கள், பத்திரிகைகள், வானொலி தொலைக்காட்சி மூலமாக நாற்பது ஆண்டுகளாக செய்து வந்தார்.
விளையாட்டு பற்றிய கட்டுரை, கவிதை, சிறுகதைகள், நாவல் மற்றும் தனி மனித முன்னேற்றம் பற்றிய பொது அறிவு நூல்கள், ஆய்வு நூல்கள் என இதுவரை 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
முற்றிலும் மாறுபட்ட ஒரு நூலக நல்ல அனுபவத்துடன் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களோடு இந்நூலை எழுதியுள்ளார்.
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்றார் கவியரசு கண்ணதாசன்.<noinclude></noinclude>
1awaelvkybl93ztedntlkhf8inu62t7
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/6
250
102197
1838077
1062571
2025-07-02T05:18:04Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|4||}}{{rule}}</noinclude>
மனைவி என்ற மந்திரச் சொல்தான் ஒரு மனிதனை மனிதனாக மாற்றக்கூடிய வல்லமை பெற்றது என்றால், யாராவது மறுப்பார்களா?
எத்தனை பெரிய மனிதர்களானாலும், பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் இல்வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க வாழ்க்கைத் துணையாக வந்து குடும்பத்தைத்தாங்கி, சமுதாயத்தில் கணவனுக்கென்று ஒரு மரியாதைத் தேடித்தருபவர் மனைவி.
நல்ல குழந்தைகளைப் பெற்று நல்ல பெற்றோர்களாகவும், மருமக்களைப் பெறவும், தேடிவந்த உறவுகளைப் பேணிகாக்கவும் மனைவியின் கடமை அளப்பறியது.
அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் இருக்கும் மனைவியோடு உறவு கொள்வதும், விட்டுக் கொடுத்து வாழ்வதும் ஓர் அற்புதமான கலை என்றே சொல்லலாம்.
இல்லறத்தின் இனிய அனுபவங்களை கேள்விபதிலாகத் தந்து புதுமணத் தம்பதிகளுக்கு நல்வழி காட்டுகிறார் டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா.
இல்வாழ்க்கையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
படியுங்கள், சுவையுங்கள், வாழ்வில் வெற்றி பெறுங்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது.
{{c|இனிய வாழ்த்துக்கள்}}
{{right|
அன்புடன் {{gap}}
{{larger|'''ஆர். ஆடம் சாக்ரட்டீஸ்'''}}
பதிப்பாளர்{{gap}}
}}<noinclude></noinclude>
srh7rnxy179h67fr2k7krq2hx3l6bx6
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/7
250
102199
1838078
1062573
2025-07-02T05:19:15Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|||5}}{{rule}}</noinclude><center>{{Xx-larger|'''என்னுரை'''}}</center>
இந்நூல் ஓர் உடல் நல நூல்.
இன்னும் சொல்லப் போனால், இது ஒரு இதமான உடல் நலத்தினால் எழுப்பப்படும் பதமான மனோபலத்தை ஊட்டும் மன நல நூல் என்றும் சொல்லலாம்.
ஏறத்தாழ அறுபது நூல்களுக்கு மேல் உடலுக்குப் பலத்தையும் வளத்தையும் ஊட்டுகின்ற உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத்துறை நூல்களை எழுதி வந்த நான், இந்தத் தலைப்பில் நூல் எழுத முனைந்ததற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.
கல்லூரியில் உடற் கல்வி இயக்குநராக இருந்தபோதும், சென்னை டி.வி.எஸ். நிறுவனங்களில் மனமகிழ் மன்ற மேலாளராகப் பணியாற்றிய சமயங்களிலும், உடலழகுப் பயிற்சிப் பள்ளி என்று தொடங்கிய உடற் பயிற்சிப் பள்ளியிலும் என்னை அணுகிய இளைஞர்களும், மணமான நண்பர்களும் கேட்ட கேள்விகளைத் தொகுத்து, அவற்றிற்குப் பதிலாகத் தான் இந்த நூலை இப்பொழுது படைத்துள்ளேன்.
உடலுக்குப் பலத்தை உண்டாக்கி விடுவது கடினம் என்றாலும், முயன்றால் அது சுலபமே. ஆனால் உருவாக்கிக் கொண்ட உடல் பலத்தை, வீணாக்கி விடாமல் கட்டிக்காத்து வாழ்வது என்பது முயன்றாலும் கடினமே!<noinclude></noinclude>
efi9421x9tjrdjh2hnguhkpqzipdzzx
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/8
250
102201
1838079
1062574
2025-07-02T05:20:06Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|6}}{{rule}}</noinclude>
என்றாலும், பலம் வீணாகத்தான் போகும். ஆனால் பழுதாக்கி விடாமல், பாழாக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனமாகும்.
நீ அதிகமாக சம்பாதிப்பதால் மட்டும் பணக்காரன் ஆகிவிட முடியாது. ஆனால், சேர்த்து வைப்பதால் மட்டுமே பணக்காரன் ஆகிட முடியும் என்று ஒரு பழமொழி உண்டு. அதையே உடல் நலம் என்று கூறக்கூடிய செல்வத்திற்கும் சொல்லலாம்.
வாழ்க்கையை ஒரு மண்குடத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவார்கள். அந்த மண்குடத்தில் நிறைய தண்ணி இருக்கிறது. அது ஒட்டையில்லாத குடம் என்றாலும், நீள் கசிந்து கசிந்து வெளியேற, நீர் அளவில் குறைந்து கொண்டே வருகிறது.
நாளாக நாளாக நீள் குறையும். ஒரு நாள் குடம் வெறுங்குடமாக வீற்றிருக்கும் என்பது போல, உடல் ஒரு மட்குடம் என்றால், உடலில் உள்ள சக்தி என்பது நீராக இருக்கிறது.
நம்மையறியாமலேயே நீர் கசிவது போல், சக்தி செலவாகிக் கொண்டேதான் இருக்கிறது. அதை உணர்ந்து சிக்கனமாக, சக்தியை, பலத்தை செலவழித்தால், நீண்ட நாள் நிம்மதியாக, நலமாக வாழ முடியும்.
இருக்கிறதே என்று இறைத்து விட்டால், எல்லாம் பாழாகும். அதற்குத்தான் உடல் நலத்தை வளர்த்திட நூல்கள் எழுதிய நான், இளைஞர்கள் வேண்டுகோளுக் கிணங்க, உடல் நலத்தைக் காக்கும் உபாயத்தினை விளக்க, இந்நூலை எழுதத் துணிந்தேன்.<noinclude></noinclude>
odr5p73f7jw7wxp5hjc0jquw7mxsc5h
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/9
250
102202
1838080
1062575
2025-07-02T05:21:04Z
Balu1967
5532
1838080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|||7}}{{rule}}</noinclude>
இளைஞர்கள் எல்லோரும் ஒரு நாள் இல்லறத்தில் ஈடுபடுவது இயற்கைதான். அது தான் இனிமையான வாழ்க்கையுங் கூட.
அத்தகைய ஆள்வத்தில் அலைபாய்ந்து நடக்கும் இளைஞர்கள், எத்தனையோ கனவுகளில் இலயித்துக் கிடந்தாலும், இடையிடையே குழப்பங்களிலும், குதர்க்கவாதங்களிலும் குமுறி எழுந்து, குன்றிப் போயும் கிடக்கின்றார்கள்.
என்னை அணுகிய இளைஞர்களுக்கும், மணமான நண்பர்களுக்கும், உடற்கல்வித் துறையில், பயிற்சித் துறையில் மனம் ஒன்றி ஈடுபட்டவன் என்ற முறையில், பல வினாக்களுக்கு விடையளித்து, சந்தேகங்களைத் தீர்த்தது மட்டுமன்றி, சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தேறி வெளியேற்றும் பல யுக்திகளையும் கூறினேன்.
அந்த கருத்துக்களின் தொகுப்புதான் இந்நூலாகும். இந்நூலைப் படிக்கும் அன்பர்கள், வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதற்கே என்ற தத்துவத்திற்கேற்ப, வழிகாட்டும் நூல் என்றே ஒப்புக் கொள்வார்.
ஒருவருக்கொருவர் துணையாக மனைவியும் கணவனும் இருக்கிறார்கள். வாழ்கின்றார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால் எப்படி என்ற ஓர் கேள்விக்கு விடையாகத்தான் இந்த நூலை உருவாக்கி இருக்கிறேன்.
மகிழ்ச்சியாகத் தொடர இனிய நடையில் நூலை எழுதி இருக்கிறேன். மகிழ்ச்சியாக வாழ கருத்துக்களைத் தொகுத்து இருக்கிறேன். மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
ஞானமலர் இல்லம்
சென்னை-17.{{float right|எஸ். நவராஜ் செல்லையா}}<noinclude></noinclude>
s7q9cs4a2w18iqkyuekoz6zeqg12q8g
1838081
1838080
2025-07-02T05:21:29Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|||7}}{{rule}}</noinclude>
இளைஞர்கள் எல்லோரும் ஒரு நாள் இல்லறத்தில் ஈடுபடுவது இயற்கைதான். அது தான் இனிமையான வாழ்க்கையுங் கூட.
அத்தகைய ஆள்வத்தில் அலைபாய்ந்து நடக்கும் இளைஞர்கள், எத்தனையோ கனவுகளில் இலயித்துக் கிடந்தாலும், இடையிடையே குழப்பங்களிலும், குதர்க்கவாதங்களிலும் குமுறி எழுந்து, குன்றிப் போயும் கிடக்கின்றார்கள்.
என்னை அணுகிய இளைஞர்களுக்கும், மணமான நண்பர்களுக்கும், உடற்கல்வித் துறையில், பயிற்சித் துறையில் மனம் ஒன்றி ஈடுபட்டவன் என்ற முறையில், பல வினாக்களுக்கு விடையளித்து, சந்தேகங்களைத் தீர்த்தது மட்டுமன்றி, சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தேறி வெளியேற்றும் பல யுக்திகளையும் கூறினேன்.
அந்த கருத்துக்களின் தொகுப்புதான் இந்நூலாகும். இந்நூலைப் படிக்கும் அன்பர்கள், வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதற்கே என்ற தத்துவத்திற்கேற்ப, வழிகாட்டும் நூல் என்றே ஒப்புக் கொள்வார்.
ஒருவருக்கொருவர் துணையாக மனைவியும் கணவனும் இருக்கிறார்கள். வாழ்கின்றார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால் எப்படி என்ற ஓர் கேள்விக்கு விடையாகத்தான் இந்த நூலை உருவாக்கி இருக்கிறேன்.
மகிழ்ச்சியாகத் தொடர இனிய நடையில் நூலை எழுதி இருக்கிறேன். மகிழ்ச்சியாக வாழ கருத்துக்களைத் தொகுத்து இருக்கிறேன். மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
ஞானமலர் இல்லம்
சென்னை-17.{{float right|எஸ். நவராஜ் செல்லையா}}<noinclude></noinclude>
hxpsr7opdkff9l7utitx98mlvs63t3a
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/10
250
102204
1838097
1671477
2025-07-02T05:28:34Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{|
| || உள்ளே..... ||
|-
| 1 || திருமணம் ஏன்? || 9
|-
| 2 || திருமணம் என்றால் என்ன? || 20
|-
| 3 || பெண்ணென்றால் புரியாத புதிர் || 28
|-
| 4 || உறவும் நிறைவும் || 41
|-
| 5 || மகிழ்ச்சியுடன் வாழும் ரகசியம் || 68
|}<noinclude></noinclude>
t92m16hcbgt0qf5mz0t05hsb9ap7gja
1838098
1838097
2025-07-02T05:29:16Z
Balu1967
5532
1838098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{{dhr|10em}}
{|
| || '''உள்ளே.....''' ||
|-
| 1 || திருமணம் ஏன்? || 9
|-
| 2 || திருமணம் என்றால் என்ன? || 20
|-
| 3 || பெண்ணென்றால் புரியாத புதிர் || 28
|-
| 4 || உறவும் நிறைவும் || 41
|-
| 5 || மகிழ்ச்சியுடன் வாழும் ரகசியம் || 68
|}<noinclude></noinclude>
3oer9zw10jub94fy9ry2fqmt7jeqrb3
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/11
250
102206
1838114
1062576
2025-07-02T05:30:28Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||9}}{{rule}}</noinclude>
<center>{{Xxx-larger|'''1. திருமணம் ஏன்?'''}}</center>
“நிம்மதியாக நான் வாழ விரும்புகிறேன்! என்னைத் தனியாக இருக்க விடுங்கள். எனக்குக் கல்யாணமே வேண்டாம். மீறி என்னை வற்புறுத்தினால், நான் என்ன சொல்வேன், என்ன செய்வேன் என்பது எனக்கே தெரியாது.”
ஆத்திரம் பொங்க தன் அம்மாவிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் வாசு. அவனைப் பார்த்து, அழுவதா அல்லது வசை பாடுவதா என்று ஒன்று புரியாமல் வீட்டிற்குள் போகச் சொல்லிச் சைகை செய்தார்.
ஊரிலிருந்து வந்த தன் அண்ணன் உலக நாதரை ஏக்கத்துடன் பார்த்தாள். உலகநாதரும் தன் தங்கையை வீட்டிற்குள் போகச் சொல்லி சைகை செய்தார்.
“எப்படியோ நீங்கள் தான் அவன் மனதை மாற்ற வேண்டும். என் வயிற்றில் பால் வார்க்க வேண்டும்” என்று கெஞ்சுவது போல, ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்.
இதுவரை ஆழ்ந்த சிந்தனையுடன் தரையை பார்த்துக் கொண்டிருந்த வாசு, தலையை நிமிர்த்திப் பார்த்தான். தன் தாய்மாமன் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், சிறிது சங்கடப்பட்டான். அந்த நிலைமையை சமாளிக்கவும் முயன்றான் வாசு. மெதுவாகக் கனைத்துக் கொண்டான்.<noinclude></noinclude>
826zdods60qk5ox24567p35rzv0cxcg
1838135
1838114
2025-07-02T06:05:01Z
Balu1967
5532
1838135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||9}}{{rule}}</noinclude>{{dhr|1em}}
{{border|maxwidth=370px|bstyle=dotted|bthickness=5px|color=black|align=center|{{c|{{x-larger|<b>1. திருமணம் ஏன்?</b>}}}}}}
“நிம்மதியாக நான் வாழ விரும்புகிறேன்! என்னைத் தனியாக இருக்க விடுங்கள். எனக்குக் கல்யாணமே வேண்டாம். மீறி என்னை வற்புறுத்தினால், நான் என்ன சொல்வேன், என்ன செய்வேன் என்பது எனக்கே தெரியாது.”
ஆத்திரம் பொங்க தன் அம்மாவிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் வாசு. அவனைப் பார்த்து, அழுவதா அல்லது வசை பாடுவதா என்று ஒன்று புரியாமல் வீட்டிற்குள் போகச் சொல்லிச் சைகை செய்தார்.
ஊரிலிருந்து வந்த தன் அண்ணன் உலக நாதரை ஏக்கத்துடன் பார்த்தாள். உலகநாதரும் தன் தங்கையை வீட்டிற்குள் போகச் சொல்லி சைகை செய்தார்.
“எப்படியோ நீங்கள் தான் அவன் மனதை மாற்ற வேண்டும். என் வயிற்றில் பால் வார்க்க வேண்டும்” என்று கெஞ்சுவது போல, ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்.
இதுவரை ஆழ்ந்த சிந்தனையுடன் தரையை பார்த்துக் கொண்டிருந்த வாசு, தலையை நிமிர்த்திப் பார்த்தான். தன் தாய்மாமன் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், சிறிது சங்கடப்பட்டான். அந்த நிலைமையை சமாளிக்கவும் முயன்றான் வாசு. மெதுவாகக் கனைத்துக் கொண்டான்.<noinclude></noinclude>
qvvrz3t67ri6eurqc5dh6fjha58pjaj
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/12
250
102208
1838115
1062577
2025-07-02T05:31:50Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|10||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
“பாருங்கள் மாமா! வீட்டிற்குள் வந்தால் தினம் இதே பாட்டுதான். காக்கையாய் கத்தி கரையானாய் அரித்து, கல்யாணம் என்று என்னைப் போட்டுத் தொந்தரவு செய்தால், நான் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? எனக்கு வீட்டிற்குள் வரவே பிடிக்கவில்லை. வெளியே ஓடிப்போகவும் வழியில்லை. நீங்கள் ஊருக்குப் போவதற்குள், இதற்கொரு முடிவு செய்துவிட்டுப் போனால், உங்களை என் உயிர் உள்ளளவும் மறக்கமாட்டேன்” என்று கையெடுத்துக் கும்பிட்டான் வாசு.
இவ்வளவு விநயமாக கும்பிடும் வாசுவைப் பார்த்து, உலகநாதர் மனம் நெகிழ்ந்து போனார். தன் தங்கை தேவைக்கு அதிகமாகவே வாசுவை வற்புறுத்தியிருக்கிறாள், வருத்தப்படுத்தியிருக்கிறாள் என்பதையும் நன்கு புரிந்து கொண்டார். அவளுக்கு அவன் ஒரே மகன் தானே! ஆதங்கம் இருக்காதா?
வாசுவின் மன நிலையைப் புரிந்து கொண்டால்தான், மேற்கொண்டு பேசமுடியும் என்று தனக்குள்ளே சிந்தனையில் ஆழ்ந்து போனாள் உலகநாதர்.
என்ன மாமா? நான் கேட்கிறேன்! நீங்கள் பேசாமல் இருக்கிறீர்களே? எனக்கு எப்படி உதவப் போகிறீர்கள் என்று பரிதாபமாகக் கேட்டான் வாசு.
நீ சொல்வது தான் சரி. உனக்குக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் இல்லையென்றால், பிடிக்கவில்லையென்றால் நான் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். நீதான் காரணமில்லாமல் எதுவும் பேசமாட்டாயே?
ஆமாம் மாமா ! எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லைதான். கல்யாணம் செய்து கொள்ளாமல்<noinclude></noinclude>
psik3awu9mplfkw3gmeb5ocv8iw7py9
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/13
250
102210
1838116
1062578
2025-07-02T05:39:06Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rule}}</noinclude>
எத்தனையோ பிரம்மச்சாரிகள் எவ்வளவோ நிம்மதியாக வாழ்கிறாள்கள் தெரியுமா? இந்த சம்சார சாகரத்தில் என்னைப் போய் ஏன் தான் அழுத்தப் பார்க்கிறார்களோ அம்மா? அது தான் எனக்குப் புரியவில்லை என்று வாசுவே வாதத்தைக் கிளப்பினான்.
சம்சார சாசுரம் என்றாயே? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? என்று பேச்சை தொடங்கியதால், தாய் மாமனை அர்த்தம் புரியாமல் பார்த்தான் வாசு.
சம்சாரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு அர்த்தம் நான் கூறுகிறேன். சம் என்றால் நல்ல என்று அர்த்தம். சாரம் என்பது நல்லவைகளிலிருந்து நல்லவைகளைப் பெறுதல் என்று பொருள் தரும். நல்லவைகளிலிருந்து நல்லனவற்றை வாழ்க்கையில் நிறையப் பெறுவதைத்தான் சம்சார சாகரம் என்கிறார்கள் என்று விளக்கம் கூறினார் உலகநாதர்.
ஏதோ அர்த்தம் சொல்லி என்னை ஏய்க்கப் பார்க்கிறீர்கள். ஏதோ சொர்க்கம் என்று எண்ணிக்கொண்டு தேடிப் போய் கல்யாணம் செய்து கொண்டு, கழுத்தறுப்பட்ட கோழி போல, உடல் தொடர்பையிழந்த பல்லியின் வால் போல, மக்கள் துடிப்பதைப் பார்த்தால், இது போல அர்த்தம் சொல்ல உங்களுக்கு எப்படி மாமா மனம் வந்தது? என்று மாமாவை மடக்கினான் வாசு.
கல்யாணம் செய்து கொண்டவர்கள் எல்லோரும் கஷ்டப்படுகிறாள்கள், துடிக்கிறாள்கள், துவள்கின்றாள்கள் என்று உனக்கு யார் சொன்னது?
“தினந்தோறும் தான் நான் பார்க்கிறனே? கல்யாணம் செய்து கொள்வதற்குமுன், அழகான உடையணிந்து கொண்டு, சிரித்த முகமாக, களையான முகத்துடன்<noinclude></noinclude>
r5psz9671o78pnsiadb7d08at12v33f
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/14
250
102212
1838117
1062579
2025-07-02T05:40:06Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" /></noinclude>
வாழந்தவர்கள், கல்யாணம் ஆன சில நாட்களுக்குள்ளே ஆளே மாறி, களையிழந்து, கண்குழி விழுந்து, கன்னங்கள் ஒட்டி, நடை தடுமாறி நடமாடுகின்றார்களே? இதற்கென்ன சொல்கிறீர்கள்” என்றான் வாசு.
உலகநாதர் பேசாமல் இருக்கவும், இது தான் சமயமென்று வாசு, மேலே தன் குற்றச் சாட்டைத் தொடர்ந்து கூறினான்.
அப்படியே, ஒருசில தம்பதிகள் தங்கள் உடலை அழகாக வைத்துக் கொண்டாலும், வீட்டுக்குள்ளே எப்பொழுது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொள்கிறாள்கள். மனதிலே சாந்தியில்லாமல் என் நண்பர்கள், மற்றும் தெரிந்தவர்கள் எல்லோரும் அவதிப்படுவதை நானே என் கண்களாலேயே பார்த்திருக்கிறேனே!
பெண்களால் தானே மாமா, இப்படிப் பிரச்சினைகள் மிகுதியாகின்றன! அவர்கள் மனதை அறிய முடியாது என்று பைபிளில் ஒரு உவமை வருகிறது. உங்களுக்கு தெரியுமா?
என்னப்பா அது?
“பாறையில் போகும் பாம்பின் பாதையை அறிந்து கொள்ளலாம். கடலில் போகின்ற கப்பலின் வழியைத் தெரிந்து கொள்ளலாம். வானில் பறக்கின்ற பறவையின் போக்கைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளவே முடியாது”. இப்படிக் கூறியிருப்பது உண்மை தானே மாமா?
அப்படிப்பட்ட பெண்ணை நன்றாகப் புரிந்து கொண்டு, 'பூலோக சொர்க்கம்' என்று பெண்களைப் போற்றியும் பாடியிருக்கிறார்களே புலவர்கள்! அதற்கென்ன நீ பதில் சொல்லப் போகிறாய்?<noinclude></noinclude>
78kfmgiellbv4n611t1hjxu2ro6evua
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/15
250
102214
1838118
1062581
2025-07-02T05:42:26Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா||13}}</noinclude>
அவர்கள் தெரியாமல், பாடியிருக்கிறார்கள் மாமா! ஒரு வேளை, அவசரத்தில் கூட பாடியிருக்கலாம்!
இல்லை. அவர்கள் தெரிந்து தான் பாடியிருக்கிறார்கள். உள்ள பூர்வமாக உணர்ந்து உலகுக்குக் கூறியிருக்கிறார்கள் “பெண்ணை எவன் புரிந்து கொள்கிறானோ, அவன்தான் பேரின்பம் காண்கிறான்” என்ற முதுமொழி உனக்குத் தெரியுமா?
நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே! நிலைக் கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு, நாம் எப்படி பார்க்கிறோமோ, அப்படித்தான் நமது முகம் அதில் தெரியும். அது போலவே, நாம் பெண்ணை எவ்வாறு நோக்குகிறோமோ, அவ்வாறுதான் நமக்கும் நினைக்கத் தோன்றும்.
“பெண்னை நம்பாதே” என்று ஏன் பாடியிருக்கிறார்கள் என்றான் வாசு.
‘உன்னையும் நம்பாதே’ என்று கூடத் தான் பாடியிருக்கிறார்கள். ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்றும் பாடவில்லையா? ஏன் தெரியுமா?
“மாயமான வாழ்வு தானே இது மண்பாண்டம் போன்றது தானே நம் உடல் அந்த மயக்கத்துடன் ஏன் போய் இந்த கல்யாண சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கத்தான் அந்தப் பாட்டு என்றான் வாசு.
அப்படி இல்லை வாசு. ‘நாளை நடப்பதை யாரறிவார்’ என்ற நிலையில் தான் இந்த உலகம் இருக்கிறது. அதே நேரத்தில், உலகத்தில் இனிய வாழ்வும் ஏராளமாக அமைந்திருக்கிறது. அதற்குள்ளே, இந்த அற்புதமான பிறவியை ஆனந்தமாக வாழ்ந்துவிட வேண்டும்' என்று பிச்சரிக்கத் தான் இப்படி பாடியிருக்கின்றார்கள்.<noinclude></noinclude>
ftwfcd4c2ivqx87n6786gx7rs3g8jsu
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/16
250
102216
1838120
1062582
2025-07-02T05:44:26Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|14||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
ஆனந்தம் எப்படி வரும்? அதை அடைய வேறு வழியேயில்லையா? கல்யாணம் செய்து கொண்டால் தான் ஆனந்தம் கிடைக்குமா?
ஆமாம் கல்யாணம் என்றால் ஆணுக்குத் துணையாகப் பெண்ணும், பெண்ணுக்கு துணையாக ஆணும் இருந்து வாழ்வது. அதில் அனுதினம் பெறுவதான் ஆனந்தம்.
‘ஆதிகால மனிதனான ஆதாமுக்குத் துணையாகத் தானே ஏவாள் படைக்கப்பட்டாள்! அந்த ஏவாள் பேச்சைக் கேட்டதால்தானே இத்தனை துன்பமும்!’
‘நீ சரியாகப் புரியாமல் பேசுகிறாய்! ஆதாமுக்குத் துணையாகத் தானே ஏவாள் வந்தாள். துணையாக வந்தவளுடன் தொடர வேண்டியது தானே ஆதாம் தன் பயணத்தை, ஆதாம் என்ன செய்தான்? அவளை நம்பி, தனி சுய அறிவை இழந்தானே! இறைவன் எச்சரிக்கையையும் மீறி, அவன் பெண் பேச்சைக்கேட்டதால் தானே இன்பத்தை இழந்தான். வாழ்ந்த இடத்தை இழந்தான். எல்லாத் துன்பமும் பெறக் கூடிய வாழ்க்கையை அடைந்தான்.’
“இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே” என்று சரித்திரங்கள் கூறுகின்றனவே!
ஆணுக்குப் புலனடக்கம் இல்லை அதனால் வந்த வினை நடக்கும் போது தவறி கீழே விழுந்து விட்டு, நடந்த தரையின் மீது குற்றம் சொன்னால் எப்படி? பெண் தேவை தான். ஆனால் அந்தத் தேவையைத் தீர்த்துக்கொள்ளும் வழியில் தான் ஆளுக்குஆள், முறையும் வழியும் மாறுபடுகிறது.<noinclude></noinclude>
cvf9z19s69gyu2p2o4yj0912yipt82n
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/17
250
102218
1838121
1062583
2025-07-02T05:48:21Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||15}}{{rule}}</noinclude>
எப்படியோ, பெண்களால் தான் எல்லோரும் கெட்டாள்கள்! ஏவாள்தானே ஆதாமைக் கெடுத்தாள்!
துணையாக வந்தவளை வழிநடத்தி அழைத்துக் செல்ல வேண்டிய ஆதாம், அவள் அறிவுரையைக் கேட்டபொழுது அல்ல, சிந்திக்காது நடந்த போது தான் அனர்த்தம் ஏற்பட்டது. அறிவு இருந்து என்ன பயன்? பயன்படுத்த வேண்டாமா?
வாழ்க்கையை மகிழ்விக்க வருபவளைத்தாள் துணைவி என்கிறார்கள். மனையில் வாழ வந்ததால்தான் மனைவி என்கிறார்கள். மனைவி என்று கூறுகிறோமே, அதற்குப் பொருள் தெரிகிறதா?
வாசு பேசாமல் இருந்தான்.
மனைவி என்ற சொல்லை உச்சரிக்கும் பொழுது ‘வி’ என்ற எழுத்தை நாம் நம்மையறியாமலேயே ‘வீ’ என்று ஈகார ஒலியால் தானே சொல்கிறோம். அந்த ‘வீ’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
வாசு நிமிர்ந்து அவர் முகத்தையே பார்த்தான். மலரின் நிலையை விளக்கிட வந்த புலவர்கள், செடியில் தோன்றத் தொடங்கியதை அரும்பு என்றார்கள். முளைத்து முட்டிக்கொண்டு வருவதை மொட்டு என்றார்கள். தேன், மணம், நிறம் எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வர, பொழுது பார்க்கிறது. அது என்பதால், அதனை ‘போது’ என்றார்கள். காலம்பார்த்து மலர்ந்ததை ‘மலர்’ என்றார்கள். மலர்ந்த மலரை சிறிது நேரம் கழித்து ‘வி’ என்றனர்.
அதுபோலவே, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேதை, பெதும்பை, பேரிளம்பெண் என்று பெண்ணின் நிலையையும் ஏழு வகையாகப் பிரித்துப் பாடியிருக்கிறார்கள். உடலால் மலர்ந்திருந்து வாழ்க்கையாகக் காத்திருந்து<noinclude></noinclude>
lafvu1ktv8nybysr2w7591wub8lnmsm
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/18
250
102220
1838122
1062584
2025-07-02T05:52:32Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|16||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
வாழ்வுக்குத் துணையாக ஆணுக்குப் பெண் வருவதால்தான், ‘துணைவி’, மனைவி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
அதனால் யாருக்கு என்ன லாபம்? லாபமே அங்குதான் ஆரம்பிக்கிறது வாசு. வாழ்க்கை வியாபாரத்தின் முதலீடு ‘ஆண் பெண்’ என்றால், பெறுகிற ஆனந்தம் தான் நிகரலாபம். அதுதான் வெற்றி. வியாபாரத்தைத் திறமையாகச் செய்யாவிட்டால், துன்பம் என்ற நஷடம் மட்டும் வருவதில்லை. வாழ்க்கையே படுத்துப் போய்விடும். ஊரும் உலகமும் ஏசும்.
வியாபாரிகள் நல்ல சுறுசுறுப்பின்றியும், மந்தமும் மதமதர்ப்பும் கொண்டிருந்தால், நஷடமும், தோல்வியும் ஏற்படும். அத்துடன் அவமானமும் நேரிடும்.
‘திருமணத்தில் லாபம் என்றால் வெற்றி என்கிறீர்கள்’ வெற்றி வந்து என்ன பயன்?
குறள் தெய்வமாம்சமாக இருந்ததால் தான் ‘திரு’ என்ற அடைமொழி கொடுக்கப்பெற்று திருக்குறள் ஆயிற்று. தெய்வத்தைப் பற்றியப் பாடிய நூல்களுக்கே திரு என்று வழங்கப்பெற்றன. அதாவது, திருமுருகாற்றுப் படை என்பது போல, அது போலவே, ஆண் பெண் சேர்ந்து செய்கின்ற மணமும் தெய்வாம்சம் நிரம்பியிருக்கிறது என்பதால்தான். ‘திருமணம்’ என்று, பெயரிலே பக்திபெருக்கோடு அழைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
வெற்றி வந்து என்ன பயன் என்று கேட்டாயே! சொல்கிறேன்! ஒருவனுடைய வாழ்க்கையை பரிபூரணமான வாழ்க்கை, முற்றுப்பெற்ற வாழ்க்கை என்பதெல்லாம் திருமணமாகிக் குழந்தைகள் பெற்றபிறகுதான். இதற்கு உதாரணமாக ஒன்று சொல்கிறேன். புத்தருடைய வாழ்க்கையை முற்றுப் பெற்ற வாழ்க்கை என்றும், மணம் செய்து கொள்ளாத ஏசுநாதரின் வாழ்க்கையை முற்றுப் பெறாத வாழ்க்கை என்றும் பல பெரியோர்கள் கூறுகின்றனர். பிள்ளைப் பேறில்லாத தம்பதிகள் ‘புத்’ என்னும் நரகத்தில்<noinclude></noinclude>
hw9417zn475axgvtpg35hr3r9gdbap4
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/19
250
102222
1838125
1062585
2025-07-02T05:54:43Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||17}}{{rule}}</noinclude>
இன்னும் ஒன்று சொல்கிறேன். கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையர் என்ற புலவரும் நண்பர்கள். சோழன் வடக்கிருந்து உண்ணாநோன்பிருந்து சாக இருந்த போது பிசிராந்தையாரும், அவருடன் துணையாக இறக்க முயன்றபோது பிள்ளைப்பேறில்லாத நீங்கள் இறக்கக்கூடாது என்ற அரசன் கூறியவுடன், அவர் தன் இல்லத்திற்குச் சென்று, குழந்தை பிறக்கும் வரை இருந்துவிட்டு, குழந்தை பிறந்ததும் மீண்டும் தேடிச்சென்றார் என்று இலக்கியம் கூறுகிறது. ஆகவே, ஒருவரது வாழ்க்கை திருமணத்திற்கு பிறகே தொடங்குகிறது. குழந்தை பிறந்ததுமே முற்றுப் பெறுகிறது என்ற அடிப்படையில் அவ்வாறு அமைந்திருக்கிறது.
திருமணம் செய்து கொள்ளாதவர்களுக்கும் சிறப்பான வாழ்வு அமைகிறதே! அதற்கென்ன சொல்கிறீர்கள்?
சிறப்பான வாழ்வு அமைவது போலத் தோன்றலாம். ஆனால், ஆராய்ச்சி செய்த அறிஞர்கள், ‘பிரம்மசாரிகளே அதிக விரைவில் இறக்கிறார்கள், அவர்களுக்கு அதிகமான மனநோய்களும், உடல் நோய்களும் இருக்கின்றன.’ என்று கண்டு பிடித்துக் கூறியிருக்கின்றனரே! அதற்கென்ன சொல்கிறாய்!
எனவே, வாழவந்த ஒரு இளைஞன், ‘பருவத்தே பயிர்செய்’ என்பதுபோல, காலத்தே கல்யாணம் செய்து கொண்டு வாழவேண்டும் என்பது இறைவனின் எழுதாக் கட்டளையாகும். இயற்கையின் விருப்பமும் இதுவே தான். நமது மதங்களில் வரும் கதைகளும் நிகழ்ச்சிகளும் உருவங்களும் சடங்குகளும் எல்லாமே, ஆண் பெண்ணை இணைத்தேதான் கூறப்பட்டிருக்கின்றன. கோயில் சிற்பங்களை நீ பார்த்திருக்கலாமே!
நீங்கள் சொல்வது எனக்குப்புரிகிறது மாமா, ஆனால் நீங்கள் என் நிலைமையையும் மனதையும் புரிந்து கொள்ளவில்லையே? அதுதான் எனக்கு சங்கடமாக இருக்கிறது.<noinclude></noinclude>
c17j42p9nsnqobt7o2vegez49h1vd5m
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/20
250
102224
1838128
1062595
2025-07-02T05:59:51Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|18||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
புரியும்படி சொன்னால் தானே, என்னாலும் மேற்கொண்டு ஏதாவது யோசித்துப் பதில் சொல்ல முடியும். மனதிற்குள்ளே வைத்து மருகிக் கொண்டால், புதிரானது விடுபட்டுப் போகின்ற மார்க்கம் எப்படி கிடைக்கும்?
திருமணத்தைப் பற்றியும், பெண்களைப்பற்றியும், அவர்களோடு வாழ்வது பற்றியும் பயங்கரமான புதிர்களை என் நண்பர்கள் அவிழ்த்து விட்டிருக்கிறார்களே! அந்த சந்தேகங்கள் எல்லாவற்றையும் நீங்கள் நீக்கினால்தானே என்னாலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மேற்கொண்டு என்னாலும் யோசிக்க முடியும் என்றான் வாசு.
என்னால் முடிந்தவரை உன் சந்தேகங்களைப் போக்க முயற்சிக்கிறேன். என் வாழ்க்கையில் பெற்ற அனுபவம், பிறர் வாயிலாகக் கேட்ட அனுபவம், என் வாழ்க்கையில் பல புத்தகங்களைப் படித்துப்பெற்ற என் அறிவு எல்லாம் உன் சந்தேகங்களைத் தீர்க்கக் கூடியனவாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லாது போனாலும், உனக்குத் திருப்தி ஏற்படுகின்ற வகையில் திறமையாக தெளிவாக விளக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. என்ன என்று நீ சொல்லேன் கேட்கலாம் என்று உலகநாதர் ஒரு புன்சிரிப்புடன் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார்.
நானும் எத்தனையோ பேர்களைக் கேட்டிருக்கிறேன். அவர்களிடமிருந்து சரியான விவரமும் விளக்கமும் எனக்கு கிடைக்கவேயில்லை. அவர்களால் மேலும் எனக்குக் குழப்பமும் கவலையும் அதிகமானதே தவிர, குறையவேயில்லை, அதனால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன்.<noinclude></noinclude>
3dmpykbbccss4zbq0mh5jl5r0z6vy08
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/21
250
102226
1838131
1062596
2025-07-02T06:02:36Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||19}}{{rule}}</noinclude>
உன்னுடைய நோக்கம் சரிதான். குறிக்கோளும் முறையானது தான். ரசம்போல கண்ணாடியில் உன் முகத்தைப் பார்த்துவிட்டு, விகாரமாயிருக்கிறது என்று நீயே உன் முகத்தை வெறுத்துக் கொண்டால் எப்படி? வாழ்க்கையில் தோற்றவர்களிடம் போய், உன் வினாக்களைத் தொடுத்திருக்கிறாய். அவர்கள் வாரிவழங்கி விட்டார்கள். அதுதான் உன் குழப்பத்திற்குக் காரணம். அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து விட்டாய்.
முதலில் உன்கேள்வியைத் தொடங்கு! என்று கேட்பது போல வாசுவைப் பார்த்து நிமிர்ந்து உட்கார்ந்தார் உலகநாதர். அவர்கள் பேச்சு, களை கட்டிக்கொண்டது.
திருமணம் என்பது எதற்காக? வாசு தன்முதற் கேள்வியைக் கேட்டதும், உலகநாதர் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.
அண்ணா! சாப்பாடு ஆறுகிறது! சீக்கிரம் சாப்பிட வாருங்கள் என்று வாசுவின் அம்மா வீட்டிற்குள் இருந்தவாறே குரல் கொடுத்தாள்.
‘சாதத்தைச் சுடச்சுட சாப்பிட்டு விட்டு, மீந்ததை அப்புறம் தொடரலாமே’ என்று கூறிவிட்டு வாசுவின் பதிலுக்குக் காத்திராமல் உலகநாதர் எழுந்தார். கிடைத்தற்கரிய விளக்கம் இப்பொழுது கிடைக்கப் போகிறது என்று மகிழும்போது, சாப்பாடு வந்து கெடுத்ததே என்று சங்கடப்பட்டாலும், நல்லகுருவை நயந்து பின்பற்றுகிற மாணவன் போல, தாய்மாமனைப் பின் தொடர்ந்தான் வாசு.
விரல்கள் சாதத்தைப் பிசைந்து கொண்டிருந்தாலும், சிவனது மனம் திருமணம் ஏன்? ஏன்? என்று வினாவுடன் சிலந்து கொண்டிருந்தது. நினைவுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன. உலகநாதர் நம்பிக்கையுடன் அவனைப் பார்த்து சிரித்த வண்ணம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.<noinclude></noinclude>
gyv03v42f40qy2t2g4p1bhixvtbfb7s
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/22
250
102228
1838134
1693912
2025-07-02T06:03:28Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|20||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>{{dhr|1em}}
{{border|maxwidth=370px|bstyle=dotted|bthickness=5px|color=black|align=center|{{c|{{x-larger|<b>2. திருமணம் என்றால் என்ன?</b>}}}}}}
மேல் மாடிக்கு வந்த இருவரும், பாய் விரித்துப் போட்டு உட்கார்ந்து கொண்டனர். மேலே முழு நிலவு காய்ந்து கொண்டிருந்தது. உலகநாதர் உண்ட அவகாசத்தை விட, எடுத்துக் கொண்ட ஓய்வு நேரம், கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வாசுவுக்கோ, நிமிடம் யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது.
ஏன் திருமணம் என்று கேட்டாயே, இப்பொழுது சொல்லட்டுமா என்று சிரித்துக் கொண்டே ஆரம்பித்தார் உலகநாதர்.
ஒரு ஆணும், பெண்ணும் ஒன்று சேர்ந்து, ஓர் ஒப்பற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஈடுபடுகின்ற நல்ல நோக்கத்தின் அமைப்பே திருமணமாகும்.
எல்லா மதங்களும் இதையேதான் விரும்புகின்றன. போதிக்கின்றன. ஆணும், பெண்ணும் சேர்ந்து, ஒரு புதிய பொலிவான சமுதாயத்தை சமைக்கும் பணியில் ஈடுபடவேண்டும், பாடுபட வேண்டும் என்றே அறிவுறுத்துகின்றன.
திருமணத்தால் என்ன பயன் என்று கேட்கலாம். இருவரும், ஒருவருக்கொருவர், தன்னையே முழுமையாக ஒவ்வொருவரிடமும் ஒப்புவித்துக் கொண்டு, இரு மனமும் ஒரு<noinclude></noinclude>
m0r2in13n8foifsfi8al9jp5q1syw37
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/23
250
102231
1838163
1062598
2025-07-02T06:47:58Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||21}}{{rule}}</noinclude>
தன் மலர் போன்ற உடலை, மகிழ்வினை விரும்புகின்ற உள்ளத்தை, ஒப்பற்ற இன்பத்தை, இனம்புரியாத எதிர்காலத்தை, ஏற்றமிகு வாழ்வான அத்தனையையுமே மற்றவரிடம் தந்து, தைரியமாக ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழத் துடிக்கின்ற இரு உள்ளங்களின் இணைப்பே திருமணமாகும்.
முன்பின் தெரியாத ஒரு புதிய ஆணிடம் அல்லது புதிய பெண்ணிடம் தன்னையே ஒப்படைக்கக் கூடிய தைரியம் மட்டும் அங்கு இருக்கவில்லை. தான் இந்த உலகிலே வாழ்கின்ற இறுதிக்காலம் வரை, சேர்ந்து ஐக்கியமாக வாழவேண்டும் என்று வாழத் துடிக்கும் நம்பிக்கையின் பெருந்துணிவின் வைபோகமே திருமணம் ஆகும்.
இதற்கு ஒரு தைரியம், துணிவு வேண்டுமா? புதிராக இருக்கிறதே கேட்பதற்கு?
ஆமாம்! திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக, பெருந்தன்மையான துணிவுடன் வாழ்வின் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு, எதையும் இணைந்தே முனைந்தே அனுபவிக்க விரும்பும் ஓர் இனிய கனவின் இயல்பான நினைவின் இதமான முன்னோடியாகும்.
எதிர்காலமானது அவர்களுக்கு இன்னலைத் தரலாம். எதிர்பாராத திருப்பங்களை எந்த நேரத்திலும் தரலாம். வேண்டாவெறுப்பாக விருப்பங்களை கட்டாயமாக நிறைவேற்றிவிடலாம். இன்பத்தை வாரி இறைக்கலாம். அவர்கள் ஆசையை, நோக்கத்தை மேற்கொள்கின்ற முயற்சிகளை எல்லாவற்றையும் தோற்கடிக்கலாம். அப்படி ஆயிரம் துன்பங்கள் நேரும் என்று தெரிந்தாலும், அயர்ந்து போகாமல், சோர்ந்து விடாமல், துடித்துப் போய்விடாமல்<noinclude></noinclude>
2egwxtv9hyhxasr56xb5qjp2bom3dn7
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/24
250
102233
1838164
1062599
2025-07-02T06:49:12Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|22||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
தோற்றுப்போவோமோ என்று பயந்துவிடாமல், நன்றாக வாழவேண்டும் என்று ஒரே நம்பிக்கையில், புதிய துணையுடன் சேருகின்ற நிலையைத்தான் திருமணம் என்கிறோம்.
இந்த நினைவும் நம்பிக்கையும் எப்படி ஒருவருக்கு ஏற்படுகிறது? எனக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது என்றான் வாசு.
இதுதான் மனித சுபாவம். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தமக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றனர். ஊராரோ உற்றரோ, உறவினரோ பெற்றோரோ, அவர்களை வற்புறுத்துவது இல்லை. அவர்கள் உள்ளத்தில் எழுகின்ற உள்ளுணர்வின் ஊக்க எழுச்சியானது, ஒவ்வொரு நினைவிலும் இப்படி ஊடாடிக் கொண்டுதான் இருக்கின்றன.
திருமண உணர்வு ஒருவருக்கு இல்லையென்றால்? வாசுவின் கேள்வி திடீரென்று வந்தது.
அவருக்கு எங்கேயோ ஒரு குறை! இனந்தெரியாத ஒரு கோளாறு என்றுதான் பொருள். பாடாத தேனி, பசிக்காத நல்லவயிறு பார்தததுண்டோ, என்று பாரதிதாசன் பாடியிருக்கிறாரே! வயிறு என்று ஒன்று இருந்தால் பசி என்று ஒன்று வரவேண்டும். பசியே இல்லையென்றால் வயிற்றில் கோளாறு என்றுதானே அர்த்தம். வயிறு பசிப்பது போலத்தான், உள்ளத்தின் உணர்வுகளும் பசியுடன் கிளம்புகின்றன.
உடல் உணர்வுகளுக்காகத்தானே திருமணம் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்?
அப்படி இல்லை. திருமணத்தில் உடல் உணர்வு ஒரு பகுதி தான். ஒரு மனிதன் தன் உடலால் உணர்வால்,<noinclude></noinclude>
hazxxkwr3ylsmt2u4866v4b0sufxxl6
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/25
250
102235
1838166
1062601
2025-07-02T06:50:52Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா||25}}{{rule}}</noinclude>
மனத்தால் சழுதாயத்துடன் இணைந்து வாழ்வது போலத்தான் திருமணத்திலும் வாழ்கின்றான்.
இரண்டு உள்ளங்களுக்கிடையே எழுகின்ற அன்பு உணர்ச்சி, இரக்கத்தின் எழுச்சி, துன்பங்கள் வந்தால் ஈடுகொடுத்துச் சமாளிக்கும் பொறுமையுணர்ச்சி, எதையும் இன்பமாக ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை, தன் உள்ளம் கவர்ந்தவரின் செயல்களை மெய்யென்றே போற்றி வாழும் நம்பிக்கை எல்லாமே திருமணத்தின் மூலமே நிறையக் கிடைக்கின்றன. நிறைவு பெறுகின்றன.
இந்த நம்பிக்கை இங்கே எப்படி நிறைவேறுகிறது?
இருவரும் இதயத்தால் ஐக்கியமாகலாம் என்ற ஒரு நம்பிக்கை நிறைந்த தைரியத்தில் தாமே திருமணம் அதாவது, தாங்கள் காட்டும் அன்பு மேலேயே ஒரு பூரண நம்பிக்கை வைத்துதான், தங்களது வருங்காலத்தை நிர்ணயித் து, அதனூடே ஆனந்தமான நிம்மதி பெறும்போதுதான், அவர்களது நம்பிக்கை நிறைவேறுகிறது.
அத்துடன், அந்த இருவரும், தங்களின் சக்தியால், புதியதொரு சமுதாயத்தைத் தோற்றுவிக்கவும், செழுமையான சமூகப் பாங்கையும் உண்டாக்கும் ஒரு ஆக்க பூர்வமான முயற்சியிலும் தானே அவர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கிறாள்கள்! ஆகவே, அந்த அரிய நம்பிக்கை அவர்களது காதலிலும் கருணையிலும் கலந்தே அமைகின்றது.
இந்த நம்பிக்கை எனக்கு ஏற்படுவதற்குமுன், இன்னும் சில சந்தேகங்களைக் கேட்டு விடுகிறேனே என்றான் வாசு. உலகநாதர் சிரித்துக் கொண்டே தலையசைத்தார். வாசு நீ ஆரம்பிக்குமுன், நான் ஒன்று முன்னுரையாகக் கூறி விடுகிறேன் என்றும் அரம்பித்தார்.<noinclude></noinclude>
nuu07hvwrad85jd9v1ygjtq35p2o1bh
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/26
250
102237
1838167
1062609
2025-07-02T06:52:23Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|24||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
ஒவ்வொரு மனித உயிரும் பிறந்தது முதல் இறக்கும் வரை உணவாலும், பருவ உணர்வாலும் ஆளப்படுகிறது. ‘பால்உணர்வு’ என்பதை (Sex) யாரும் தனியாகத் தேடிப் போய் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை.
இந்தப் பால உணர்வு ஆறு மாதக் குழந்தையிலிருந்தே தொடங்கிவிடுகிறது என்றும், இறக்கும் வரை அது எழுச்சி பெற்றே மனித உயிர்களை ஆசை காட்டுகிறது. ஆட்டுவிக்கிறது என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, இயற்கையாகவே நமக்குள்ளே பிறந்து இலங்குகின்ற அந்த இனிய உணர்வினால் தான், உறவினால் தான் புதிய மனித இனமே படைக்கப்படுகின்றது என்பதை நீ முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இனிய உணர்வுதான் மனித இனத்திற்கு இதமளிக்கிறது. சுகம் கொடுக்கிறது. சொர்க்கத்தைக் காட்டுகிறது.
காதல் தான் மனித இனத்திற்கு முக்கியமான உணர்வு என்பது தானே உங்கள் கருத்து?
காதல் என்பது அன்பாகும். காதல் உணர்வு என்பது அடிப்படையான தேவையாகும். அதனை, வயிற்றுக்கு உணவு என்றும், தவிக்கும் வாய் தாகத்திற்குக் கிடைக்கும் தண்ணி என்றும் நாம் உதாரணம் காட்டலாம். இந்த உணர்வின் சிறப்பைப்பற்றிக் கூறும்போது, மனித இனம் அஸ்தமித்துப் போகாமல் பெருகி வாழ இயற்கை போடுகின்ற அஸ்திவாரம் என்று நீ உணரவேண்டும். இந்த அன்பின் மிகுதியே காதல் என்றும் நம்மால் பெரிதும் போற்றப்படுகிறது.<noinclude></noinclude>
coj99ni5bi9d4kngenmszab6sjsq148
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/27
250
102239
1838169
1313562
2025-07-02T06:53:53Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா||25}}{{rule}}</noinclude>
காதல் உறவு என்பது...
காதல் என்பது மனநிலை. காதல் உறவென்பது உடல் செயல் நிலை. அது முற்றிலும் உடல் உறவு தொடர்புள்ளதாகும். காதலை அளக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. ஆனால், காதல் உறவை சோதனை செய்யலாம். புரிந்து கொள்ளலாம். குறைத்துக் கொள்ளலாம். குறித்தும் கொள்ளலாம்.
இந்த காதல் உறவு நமக்குத் தேவைதானா? நிச்சயமாக, திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவி என்று ஒன்றாகிவிடுவதால் மட்டும் முடிந்து போய்விடுவதல்ல. ஒருவரை ஒருவர் மனதால் ரசிப்பதுடன் மட்டும் நிறைவு பெற்றுப் போய்விடுவதல்ல! காதல் என்பது, கணவனும் மனைவியும் தமது அன்பின் ஆழத்தை வெளிப்படுத்திக்காட்டும் ஓர் அரிய அற்புதச் சுகநிலையாகும். அளவிட முடியாத ஆனந்த விளக்கமுமாகும்.
அன்பு இல்லாமல் காதல் இல்லை. காதல் இல்லாமல் காதல் உணர்வு இல்லை. காதல் உணர்வு இல்லாமல் உடல் உறவு இல்லை அந்த உறவு இல்லாமல் அன்பு இல்லை என்று வண்டி சக்கரம் போல் சுற்றிச் சுழன்று சுழன்று வருவதுதான் மணவாழ்க்கையாகும்.
ஆகவே, பால் உணர்வு என்பது மனித இனத்தைப் புதுப்பிக்கவும், மனித இனத்தைப் பிறப்பிக்கவும், மணமக்கள் தங்கள் ஆழ்ந்த அன்பினை ஆனந்த செயலாக வெளிப்படுத்திக் காட்டவும் கூடிய ஒரு விலைமதிக்க முடியாத சாதனமாகும்.
இந்த உடல் உறவு என்பது மனித வாழ்க்கையில் நூற்றுக்கு பத்து சதவிகிதம் தான். மீதியெல்லாம்<noinclude></noinclude>
b6rhl3vsffhvlhttzvm85dhyvnkjqvc
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/28
250
102241
1838171
1303323
2025-07-02T06:55:06Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|26||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
தங்களது அன்பை வெளிப்படுத்தவே தேவைப்படுகிறது என்பது அரிய உண்மை என்றே உடலியல் அறிஞர்கள் நிதமும் உரைக்கின்றனர்.
காதல் உறவின் உடல்உணர்வு என்பது, உடலில் உள்ள சுரப்பிகளிலிருந்து ஏற்படுகின்ற அதிசயமான ஹார்மோன்களினால் உசுப்பப்படுவதால் விளையும் தேவையாகும் என்பதையும் நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு எழுப்பப்படுகின்ற உணர்வுகளால், உணர்வுப் பசியால் தேடிய உடல் உறவைப் பெற்று. அந்தச் சுக உறவு உணர்வு முடிந்து அவிந்தவுடன், தான் பெறுகிற திருப்தியோடு ஆனந்தமடைந்து கொள்வது மட்டுமல்ல. தனது பங்குதாரராக இருந்து தனக்கு உதவியவரை சிறிதும் நன்றியுணர்வோ அன்போ இல்லாமல் உடனே மறந்து விடவும். ஒதுங்கிக் கொள்ளவும், பிரிந்து போகக் கூடிய மனநிலையயும் அளிப்பது இந்த உடல் உறவு உணர்வு என்பதையும் நீ அறிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே, மனித வாழ்வுக்கு உடல் உறவு தேவைதான் அது, தனது ஏதோ ஒருவித உடல்நிலை வெளிப்பாட்டுக்காகவும், மனத் திருப்திக்காகவும் தான் உதவுகிறது என்பதை மட்டும் அறிந்து கொண்டால், உனக்கு உடல் உறவு பற்றிய உண்மை நிலை புரியும்.
அப்படியென்றால், காதல் உணர்வும், பால் உணர்வும் நிச்சயம் எல்லோருக்கும் வேண்டும் என்கிறீர்களா?
ஆமாம்! காதல் உணர்வும், பால் உணர்வும் நல்லதைவிட நயம் நிறைந்தது. உண்மையைவிட வலிமையானது. மதிப்பு மிக்கப் பொருட்களை விட கவர்ச்சி உடையது.<noinclude></noinclude>
syvwjyjcj60vbrodgpn2rjtc9smze2w
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/29
250
102243
1838193
1315855
2025-07-02T07:48:35Z
Balu1967
5532
1838193
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||27}}{{rule}}</noinclude>
எனவேதான், இந்த அடிப்படையான உணர்வைக் காக்கவும், அத்தியாவசிய உறவுக்காகவும், அருமையும் பெருமையும் நிறைந்த வாழ்வுக்காகவுமே வாழ்க்கையில் திருமணம் நடைபெறுகிறது. நடத்தப்பெறுகிறது.
திருமணம் ஏன் என்று புரிகிறது. ஆனால் என் சந்தேகத்தைத்தான் இன்னும் கேட்கவில்லை என்ற பீடிகையுடன் உலகநாதரின் முகத்தைப் பார்த்தான் வாசு.
உலகநாதர் அவன் கேள்விக்குப் பதில் தருவதற்குத் தயாராக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
‘முதலில் பெண்ணைப் புரிந்து கொள்ள வேண்டும்! அது தான் எனக்கு கவலையாயிருக்கிறது’ என்றான் வாசு.
பெண்ணையா? புன்சிரிப்புடன் கேட்டாள் உலகநாதர்.
இந்தப் பாலைக் குடி! பிறகு சொல்கிறேன் என்றாள். தன் பக்கத்தில் வைக்கப்பட்ட பால் டம்ளரை எடுத்துக் குடித்தான் வாசு.
பிறகு அவர் முகத்தை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
உலகநாதர் நிம்மதியாக சுவைத்துப் பாலை பருகிக்கொண்டிருந்தார்.
{{center|●●●●●●}}<noinclude></noinclude>
lzh83y4qbmu4el50qq4kat3ysa824qx
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/30
250
102245
1838195
1062498
2025-07-02T07:51:03Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838195
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{{dhr|1em}}
{{border|maxwidth=370px|bstyle=dotted|bthickness=5px|color=black|align=center|{{c|{{x-larger|<b>3. பெண்ணென்றால் புரியவில்லையே?</b>}}}}}}
திருமணம் செய்து கொள்வது எதற்காக என்று புரிந்து கொண்டேன். அந்தத் திருமணத்தில் முக்கியப் பங்கேற்கும் பெண்ணைப் பற்றித்தானே எனக்குப் புரியவில்லை என்ற ஒரு பெரிய கேள்வியை மீண்டும் கேட்டான் வாசு.
‘பெண்ணையே புரியாமலா, ஒரு பெண்ணுக்கு மகனாய்ப் பிறந்திருக்கிறாய்’ என்று கேலி செய்தார் உலகநாதர்.
‘தாய்க்கு;மகனாக இருப்பது வேறு தாரத்திற்குக் கணவனாக இருப்பது வேறு!’
புரிகிறது வாசு புரிகிறது! நீ கேட்கப் போகும் கேள்விகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்டால், எனக்குத்தொகுத்துச் சொல்ல முடியாது. கேட்கும் உனக்கும் புரியாது. முன்போல் மீளாத குழப்பத்தையும் உண்டாக்கி கொள்வாய். அதனால் பகுதி பகுதியாகப் பிரித்து தருகிறேன். அப்பொழுது கேள்வி கேட்க எளிதாக இருக்கும் அல்லவா!
பகுதியாக என்றால்?<noinclude></noinclude>
pv63dco7av31v9179aq56e154l4bcva
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/33
250
102252
1838198
1319216
2025-07-02T07:55:03Z
Balu1967
5532
1838198
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||31}}{{rule}}</noinclude>
அதனால்தான், பெண்களை அதிகக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கவேண்டும் என்று அக்காலத்திலே, எச்சரிக்கையுடன், பொன்னைக்காப்பது போல, வீட்டிற்குள்ளே வைத்துப் பாதுகாத்தனர்.
இந்தக் காதல் உணர்வுகள் எல்லாம், திருமணத்தின் மூலமாக மட்டுமே தீர்த்துக்கொள்ளப்படவேண்டும், என்று தான் கட்டுபாடான சமூக சூழ்நிலையை அமைத்து, அக்கால மக்கள் வாழ்ந்தனர். வாழ்ந்து காட்டினர்.
இந்த சமூக நிலையையும், கட்டுப்பாட்டையும் மீறி உடல் உறவு கொள்ளுகின்ற பெண்களைத்தான், கற்பிழந்தவர்கள், வழுக்கி விழுந்தவர்கள். காமாந்தகாரிகள் என்று அழைத்தனர். பழித்தனர். வெறுத்தனர்.
என்னதான் அன்பாக இருந்தாலும், பாசத்துடன் வாழ்ந்தாலும், மனைவி தன்னை ஏமாற்றி, மற்றவனை விரும்புவாள் என்று எண் நண்பர்கள் அடிக்கடி கூறியிருக்கின்றார்கள்! நீங்கள் அதற்கென்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்?
பெண்கள் மேல் வெறுப்பு கொண்டவர்கள் பாடியிருக்கும் பாட்டும் உண்டு. அதுபோன்ற நிலைமையினை கொடுமையினை அனுபவித்த ஆண்களும் உண்டு. பெண்கள் ஒழுக்கம் கெடுகின்றார்கள், தரம் மாறிப் போகின்றார்கள் என்றால், அதற்கும் ஒரு காரணம் இருக்கத்தான் இருக்கும். காரணத்தைப் புரிந்துகொண்டால், காரியம் நடக்காமல் நாமும் காப்பாற்ற முடியுமே!
ஒரு சில பெண்கள் ஒழுக்கம் கெடுகின்றார்களே? அது ஏன் என்று உங்களால் கூறமுடியுமா?<noinclude></noinclude>
snnrptx3kaq8mdnezai1d6ukf7oty4c
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/34
250
102254
1838200
1315865
2025-07-02T07:59:10Z
Balu1967
5532
1838200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|32||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>நம் முன்னோர்கள், ஒழுக்கம் தவறுதற்குரிய காரணங்களை எல்லாம் தொகுத்துத் தந்திருக்கின்றார்கள். அவர்கள் கூறிச் சென்றதையே உனக்கும் அப்படியே தொகுத்துக் கூறுகிறேன். எந்தத் தவறுக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையே தான் காரணமாகும். அதை மனதில் வைத்துக்கொள். நான் கூறப்போகும் காரணங்கள் எல்லாம் சந்தர்ப்பங்களால் ஏற்படுவனவேயாகும்.
காதல் உறவிலே அதிக சக்தியில்லாமல், தொய்ந்து போகின்றவன் ஒருவனின் மனைவி; தினம் உறவு இன்பத்தை அதிகம் எதிர்பார்த்து, கணவனிடம் வீரிய சக்தி இல்லாமல் போகின்றதால் எரிச்சல் கொண்ட பெண்; மற்ற எந்த விதமான தகுதியும் இல்லாமல், மனைவியே சதம் என்று பின்னால் அலைந்து கொண்டிருக்கும் சோம்பேறியின் மனைவி; கனியே, பொன்னே, மணியே என்று கொஞ்சுவான் கணவன் என்று கருதி வந்து, குடும்பம் ஏற்று மனைவியான ஒருத்தி, தன் கணவனால் வெறுக்கப்படுகின்ற, உதைக்கப்படுகின்ற நிலையில் தன் ஆத்ம திருப்திக்காக, உடல் திருப்திக்காக மற்றொருவனை நாடி மாறிவிடுவதும் உண்டு.
கணவன் தன்னை வெறுக்கிறான் என்றும், கணவன் தன்னை மதிக்கவில்லை என்றும் உணர்ந்து கொண்ட பெண்ணும்; மற்ற பெண்களிடம் தன் கணவன் உடல் உறவு கொண்டிருக்கிறான் என்று அறிந்து கொண்ட பெண்ணும், தன் கணவனைப் பழிவாங்குவதற்காகவே தவறு செய்ய முற்பட்டு சில சமயங்களில் ஒழுக்கம் கெட்டு விடுகின்றாள்.
கணவனிடமிருந்து நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் வயோதிகனை மணந்தது கொண்டு பெண்ணும் கண்ணுக்கு கவர்ச்சியில்லாத<noinclude></noinclude>
k0reqwxi4w5j5psnhvju1yvha0s7s9h
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/38
250
102262
1838202
1314378
2025-07-02T08:02:56Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|36||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
மேற்கூறிய தகுதியுடைய ஆண்மகனை பெண்கள் விரும்புகின்றனர் என்றே வைத்துக்கொள்வோம். அவனும் காதலிக்க விரும்புகிறான் என்றால், அதற்கும் ஏதாவது கட்டுப்பாடு இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறதே! ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்ள விரும்புகிறான் என்றால், அவன் யார் யாரிடம் உடல் உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற கட்டுப்பாட்டையும் அக்காலத்தில் எச்சரிக்கை செய்து வைத்திருந்தார்களே!
“தன் தரத்தைவிட தாழ்ந்திருக்கும் பெண்; பூப்படையாத பெண்; அங்கஹீனம் உள்ள பெண், துறவியாக வாழுகின்ற பெண்; அறிவு குழம்பி, பைத்தியமாக வாழுகின்ற பெண்; தேகத்தில் துர்நாற்றம் அடிக்கின்ற பெண்; தன்னைவிட வயதில் மூத்த பெண்; அடுத்தவனின் மனைவி”
மேற் கூறியவர்களுடன் எக்காரணத்தை முன்னிட்டும் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று பெரியோர்கள் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றனர். தடுத்திருக்கின்றனர், மீறியவர்களை தண்டித்தும் இருக்கின்றனர்.
அதனால்தான், பொருத்தம் பார்த்து திருமணம் வைக்கிறார்களோ!
ஆமாம்! நமது முன்னோர்கள் மிகவும் திறமையானவர்கள், அவர்கள் ஒரு ஆணையும் பெண்ணையும் நன்கு ஆராய்ந்து, உடலமைப்பினைப் பார்த்து தெரிந்து கொண்டுதான், பொருத்தம் பார்த்திருக்கின்றார்கள். அதையே இப்பொழுது ஜாதகமாக்கிப் பார்க்கிறார்கள்.
ஆண்களின் உடலமைப்பைக் கொண்டு அவர்களை மூன்று பிரிவாகவும், பெண்களின் உடலைமைப்பை ஆராய்ந்து மூன்று பிரிவாகவும் பிரித்தனர். அதனைக் கொஞ்சம் விளக்கமாகக் கூறுகிறேன்.<noinclude></noinclude>
abmek8tvux4vb8jtlppd0lhs6urwos8
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/40
250
102266
1838204
1062615
2025-07-02T08:05:05Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838204
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|38||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
உவப்பாக இருக்கும். பசியினைப் போக்கியவரை ரசிக்கவும் தோன்றும். வணங்கவும் தூண்டும்.
உறவில் திருப்தி என்பதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமானால் நன்றாக இருக்கும்?
சொல்கிறேன். முயல் இன ஆண்மகனும் மான் இனப் பெண்ணும்
காளை இன ஆண்மகனும், குதிரை இன பெண்ணும்.
குதிரை இன ஆண்மகனும், பெண்யானை இனப் பெண்ணும், திருமணம் செய்துகொண்டு, உடல் உறவு முறையில் ஈடுபட்டால், சாதாரண இன்பமும், ஓரளவு திருப்தியுமே இருவருக்கும் கிடைக்கும் என்பது பெரியோள்கள்
பூரண திருப்திபெற வேண்டுமானால்? குதிரை இன ஆண் மகனை மானினப் பெண் மகளும் சேர்ந்து பெறுகின்ற உடல் உறவில்தான் பூரண இன்பம் நிலவும். அதற்கு மாறாக, முயலின் ஆண்மகனும் பெண் குதிரை இனப் பெண்ணும் சேர்ந்தால், அது உடல் உறவாக இருக்காது. ஏதோ ஒன்று போல, இன்பத்தை இருவருமே பெறமுடியாத நிலையில் தான் அது முடியும் என்றும் திருத்தமுறக் கூறிச் சென்றிருக்கிறாள்கள்.
முன் கூறியவற்றை தொகுத்துப் பார்த்துக்கொண்டால் உண்மை நிலை புரியும் என்பதால்தான், நான் அதிகம் விளக்காமற் மேலே செல்லுகிறேன்.
பெண் திருப்தியடையாவிட்டால்?
ஆண், தன் உணர்வுகள் உந்தி எழுந்திட, விந்து கழிந்த உடனேயே, ஒரு ஆத்மதிருப்தியை அடைந்துவிடுகிறான். ஆனால் பெண்நிலை அப்படியல்ல. பெண்ணுக்குரிய உணர்வுகள் பெரிதும் புயல் போன்றவை.<noinclude></noinclude>
0ot29xn8tcwlwnlhpk8fg3xu9g4t8f2
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/41
250
102268
1838214
1062509
2025-07-02T08:41:56Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838214
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>
ஏமாற்றத்தால், தான் நினைத்ததைச் செய்துவிடவும் தயங்க மாட்டாள் என்றே சாத்திரங்கள் கூறுகின்றன.
அதெப்படி அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகின்றீர்கள்?
ருசியான உணவு, பகட்டான உடை, உல்லாசமான வாழ்க்கை, ஊரார் புகழ்வதற்குகேற்ற பங்களா, கார்போன்ற பலவிதமான வசதிகளைச் செய்து தருகின்ற தன் கணவனை மதிக்காமல், மரியாதை தராமல் அலட்சியமாக நடத்துகின்ற பெண்களை நீ சமூகத்தில் சந்தித்திருப்பாய் என்று நினைக்கிறேன்.
இத்தனை வசதிகளையும் தந்துவிட்டு, மனைவிக்கு அடங்கி ஒடுங்கிப் போகின்ற நன்கு படித்த பணக்கார, வசதியுள்ள ஆண்களையும் நீ பார்த்திருப்பாய்!
‘கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை’ என்று ஓர் இலக்கிய வரி உண்டு. அதற்குரிய பொருளையும் சொல்லுகிறேன். கண்ணாடி முன்னால் நின்று கொண்டு, நாம் எப்படி கையையும் காலையும் தூக்கி உயர்த்துகிறோமோ, அது போலவே கண்ணாடியில் தெரிகின்ற நிழற்பிம்பமும் அசையும். செய்து காட்டும்.
அதுபோலவே, மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் மனவிைக்கு அடங்கி ஒடுங்கிப் போகின்ற கணவன்மார்களின், முக்கால் வாசிப்பேர், மனைவியை உடல் உறவில் முழுமையாகத் திருப்திபடுத்த இயலாததால் தான் இப்படி இருக்கின்றனர் என்று உடல் உறவு முறை பற்றி விளக்குகின்ற நூல்கள் கூறுகின்றன.
சொல்கிறேன்.
உதாரணத்திற்கு ஒன்று நல்லஉணவோ, அழகான சேலையோ, நாவுக்கு ருசியான சுவையான பொருட்களையோ, வாங்கித் தராத, உடற்கட்டு மிகுந்த ஓர் ஏழைக் கணவனிடம், அவனது மனைவி அடங்கி<noinclude></noinclude>
nqzzlg0sensqprxcpnvr62n3vkls6my
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/42
250
102270
1838217
1062510
2025-07-02T08:43:53Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838217
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|40||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
ஒடுங்கி, அவன் சொல்கின்ற வார்த்தைக்கு மறு வார்த்தை பூனைபோல் கணவனுடன் குழைந்து பேசாமல், செல்வதையும் நீயும் பார்த்திருப்பாய்!
அவன் முரட்டுத்தனமாக அடிப்பான் என்பதற்காகப் பயந்துகொண்டு, அவனுடன் அப்படி வாழலாம் இல்லையா?
அதுதான் தவறு. ஒருவரை அடிப்பதனால் மட்டுமே அடங்கி ஒடுங்கி விடமுடியாது. உடல் திருப்தியால் எழுகின்ற உணர்வுகள், அந்த சக்தியும் திறமையும் படைத்த கணவன் முன்னே அவளை சரணகதியடைய வைத்துவிடுகிறது. திருப்தியடையாத பெண்ணின் உணர்வுகள் திமுறிக்கொண்டு, எழுந்து திணறிக்கொண்டு துள்ளிவிழுவதானது, திறமையில்லாத கணவனை சாடவைக்கிறது. அவனை சதிராட வைக்கிறது. அதனால் ஒரு நிம்மதியை நிறைவேறாத உணர்வுகள் நிறைவாகப் பெற்று மறைமுகமாகக்களிக்கின்றன. சுகம் காணுகின்றன. அதுவே உண்மையான ரகசியமாகும்.
இந்த உடல் உறவைப்பற்றி பூடகமாகச் சொன்னால் எப்படி புரியும் எனக்கு?
நாளை காலையில் சொல்லுகிறேன் என்று நழுவினார் உலகநாதர்.
விடியுமட்டும் காத்திருக்கவேண்டுமே என்று முனகியவாறு எழுந்தான் வாசு. நட்சத்திரங்கள் கண்ணை சிமிட்டி மின்னின. நிலவும் மறைந்து மறைந்து அவனைப் பார்த்து சிரித்தது. எதையும் காணா விழியனாகி, தன் படுக்கையை நோக்கி விரைந்தான் என்றாலும், அவனது எண்ணங்கள் எதை எதையோ சிந்தித்து
அசைபோட்டுக்கொண்டிருந்தன.<noinclude></noinclude>
ag6n8wsy78ywyarskzb13i031gxijlt
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/43
250
102273
1838219
1062511
2025-07-02T08:48:48Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838219
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||41}}{{rule}}</noinclude>{{dhr|1em}}
{{border|maxwidth=370px|bstyle=dotted|bthickness=5px|color=black|align=center|{{c|{{x-larger|<b>4. உறவும் நிறைவும்</b>}}}}}}
உடல் உறவில் திருப்தி ஏற்பட்டால் தானே, உறவுக்குரியவனிடம் உண்மையான அன்பும் பிறக்கும் என்கிறீர்கள்! என்று ஆற்றை நோக்கி காலையில் நடந்து கொண்டடிருக்கும்போது, வாசு கேட்டான்.
ஆமாம் என்று ஆரம்பித்தார் உலகநாதர். இந்த உண்மையான அன்புதான் உலகத்தை ஆள்கிறது. உலக மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்கின்றது.
தனக்கு பிரியமானவரை அல்லது அன்புக்குரியவனை பார்த்த உடனேயே, அந்த அன்பும் இன்பமும் உள்ளத்தில் பீறிட்டுக் கொப்பளிக்கின்றது. அவர்கள் சேர்ந்து இருக்கும் வரை, இன்ப நினைவுகள் மனதிலே கூடுகட்டிக்கொண்டு உற்சாக ஊஞ்சலாடி மகிழ்கின்றன. இனிக்கும் போதையில் நர்த்தனமாடுகின்றன.
எந்தப் பொருளைப் பார்த்தாலும், அதிலிருந்து தோன்றும் தொடர்பான எண்ணங்கள் எல்லாம், தனக்குப் பிரியமானவரைச் சுற்றிச் சுற்றியே வட்டமிடும். வண்டாகப்பாடும். பிரியும்போது தடுமாறும், நடைமாறும்.
இத்தகைய மகிழ்ச்சி எண்ணங்கள் முகிழ்க்க, நித்திரையும் நெருங்கி வராதவண்ணம் நிலைமாறும்,<noinclude></noinclude>
df0ksvmsu1y9dmkkyg6hx6oqc9a3f7s
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/44
250
102277
1838220
1315859
2025-07-02T08:49:51Z
Balu1967
5532
1838220
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|42||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
நித்திரைக் குறையக் குறைய பசியும் குறையும். தாகம் மறையும். தேகம் மெலியும். செயல்களும் தடுமாறும். தன் அன்புக்குரியவருக்காக, தன் உயிரையே அர்ப்பணித்துக் கொள்கின்ற உறுதிவாய்ந்த உள்ளத்தை உருவாக்குகின்ற சக்தியையே இந்த அன்பு கொடுத்து விடுகிறது என்றால், இந்த அன்புக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது பாாத்தாயா? என்று அன்பு விமரிசனம் செய்தார் உலகநாதர்.
‘புதிதாக மணமான தம்பதிகளுக்கு இத்தகைய உண்மையான அன்பு வேண்டும்’ என்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்.
புதிதாக மணமான தம்பதிகளுள் சிலர், கணவனிடமிருந்து விடுபட்டு, பொங்கலில் விடுகின்ற மஞ்சு விரட்டுக்காளைபோல தன்தாய் வீட்டுக்கே ஓடிப் போய் விடுகின்றார்களே, அவ்வாறு பெண்கள் ஓடிப்போய்விடக் காரணம் அன்பு இல்லாததனால் தானே?
அதற்கும் ஒருசில காரணங்கள் இருக்கத்தான் இருக்கின்றன. புதுஇடம், புதுஉறவு, புதுசூழ்நிலை என்று பெண்ணுக்கு ஏற்படுகிறபொழுது, ஒரு பெண்ணுக்கு அச்சமும், எப்படியிருப்பார்களோ கணவனது பெற்றோர்கள்? எவ்விதம் தன்னை ஏற்றுக்கொள்வார்களோ? என்ற பயமும் அவளை ஆட்டிப் படைக்கும். இதனால் தான் மனைவியை ‘அஞ்சிவரும் உரிமை’ என்று தொல்காப்பியர் கூறுகின்றார்.
கணவனைப் பற்றியும், கணவனது வீட்டாரைப் பற்றியும் , மற்றவர்கள் கண்ட கண்ட விதமாகக் கூறியனவற்றைக் காதில் வாங்கிக்கொண்டு, அவற்றைக் கற்பனை செய்து பார்த்துக்கொண்டு, திகிலுடனும் மருண்டும் திருமணப் பெண் கணவன் வீடுவருவதும் இயல்புதான்.
அப்பொழுது, கணவனும் வீட்டாரும் அந்தப் பெண்ணிடம் இதமாகவும், பதமாகவும் நடந்துகொள்ள<noinclude></noinclude>
9tfh8pgjvjfok8nvb1pp60hftv5pfvm
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/45
250
102280
1838221
1315856
2025-07-02T08:50:59Z
Balu1967
5532
1838221
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||43}}{{rule}}</noinclude>
வேண்டும். அதற்குமாறாக பெண்ணை விரட்டிப்பிடித்து வேலை வாங்கியும், கோபப்படுவது போல் பேசியும் சாடியும் மணமகன் வீட்டார் நடந்து கொள்ள முயன்றாலும், கணவன் அவளை ஆதரவுடன் நடத்தவே வேண்டும்.
ஆதரவு காட்டுவதற்குப் பதிலாக, அல்லும் பகலும் அவளை உடலுறவுக்காகக் கட்டாயப்படுத்தி, முரட்டுத்தனமாக நடத்தும் ஆண் நடந்துகொள்ளும் போதும், பயந்தபெண்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட முயல்கிறார்கள். இதுதான் உண்மையாகும்.
அன்பு காட்டுவதும், நம்பிக்கை ஊட்டுவதும்தான் கணவனின் முதல் காரியமாக இருக்க வேண்டும். அப்படித்தானே!
ஆமாம்! திருமணம் நடந்து முடிந்த உடனேயே உடலுறவுக்காகத் துடிப்பது இயற்கை. அது இளமையின் தூண்டுகோல். உடல் சக்தியின் வேண்டுகோள். அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு போகும் பொழுதுதான், காலங்காலமாக இருவரும் நிம்மதியாக வாழ்வதற்கு வகை ஏற்படும்.
கரைபுரண்டு வரும் காட்டாற்றைத் தேக்கிவிட்டால், எப்படியெல்லாம் அந்த நீர் பயன்படுமோ, அதுபோலவே, பொங்கிவரும் உடலுறவு வெறியை கொஞ்சம் சாந்தப்படுத்தி, சரிசெய்து கொண்டுவிட்டால், பிறகு அதுவே பேரின்பம் தரும் கற்பக விருட்சமாகிவிடும்.
சரிசெய்துகொண்டு வாழ்வதுதான் தன்மையாகும்.
அப்படியானால், முதல் இரவுக்கு அவசரப்படக் கூடாது என்கிறீர்களா?
நான் கூறவந்தது அந்த அர்த்தத்தில் இல்லை. முதல் இரவுக்குத் தம்பதிகள் ஆர்வம் காட்டவில்லை<noinclude></noinclude>
czx2x9c4mpg1sfzp0eywa4d9nt2rhre
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/46
250
102284
1838223
1062514
2025-07-02T08:52:53Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838223
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|44||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
யென்றாலும் அவர்களது பெற்றோர்கள் சுற்றத்தார் அவசரப் படுத்திவிடுவார்கள். அவ்வாறு வருகின்ற வாய்ப்பை பொறுமையாக மணமகன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கொள்கை.
முதன்முதலாக திருமணத் தம்பதிகள் உடலுறவு கொள்வதைத்தான் முதலிரவு என்கிறோம். முதலிரவைப் பற்றி ஒரு அறிஞர் கூறுகின்றார் “உடலுறவின் மூலம் கன்னி ஒருத்தியைப் பெண்ணாக்கி விடும் அற்புதமான இரவே முதலிரவாகும்.” என்கிறார். அந்த அற்புதத்தை நிகழ்த்தும் போது அவசரப் பட்டால் !... ஆக்கம் பொறுத்தவர்கள் கொஞ்சம் ஆறவும் பொறுக்கவேண்டும்! அதிலும் புதிதாக உறவு கொள்ள முயல்பவர்கள் எவ்வளவு நிதானம் காட்டவேண்டும் தெரியுமா?
திருமணத்திற்கு முன்னே, உடலுறவில் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அப்பொழுது நீங்கள் கூறுவது?
புதியவர்களுக்குத்தான் அந்த முதலிரவு புனிதமான நாள். இல்லையேல் அது வெறும் சம்பிரதாய நாள்தான். ஏற்கனவே உடலுறவில் வேண்டிய அனுபவம் உள்ளவர்கள். திருமணம் செய்து கொள்வது வெறும் சம்பிரதாயத்திற்காக இருக்கலாம். அல்லது வருமானம் சுலபமாக அனுபவிப்பதற்காக இருக்கலாம். அல்லது வருமானம் கருதியும் இருக்கலாம். பிறந்த அல்லது பிறக்கின்ற குழந்தைகள் நேரான வழியில் பிறந்தவை தான் என்று ஊருக்கும் உலகத்திற்கும் உணர்த்தும் நோக்கத்துடன் திருமணம் செய்துகொண்டதாகவும் இருக்கலாம்.
ஆனால் புதுமை மணம் வீசும் முதலிரவில்தான் ஓர் புத்துணர்ச்சி இருக்கும். அதில் மனச்சிலிர்ப்பு (Thrill) இருக்கும்.<noinclude></noinclude>
1llbsyksogsiuw3zm1sp6q3zmc6cdq7
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/47
250
102287
1838229
1314367
2025-07-02T08:56:26Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838229
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||45}}{{rule}}</noinclude>புதிய தம்பதிகளுக்கு உங்களது யோசனை என்ன என்று கூறுங்களேன்!
முதலிரவு என்றதும், உடலுறவுக்காக அது என்று எல்லோருமே உறுதி செய்து கொள்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்ததையெல்லாம், அந்த ஓர் இரவுக்குள்ளேயே தெரிந்துகொண்டு விடவேண்டும், அனுபவித்து விடவேண்டும் என்று துடித்துப் போய் விடுகின்றனர். அதற்கான எல்லா முயற்சிகளையும் தீவிரமாக்கிக் கொள்கின்றனர்.
பெண்ணுக்கோ இந்த முதலிரவு ஒரு திரிசங்கு சொர்க்கம். பிறர்சொல்லக் கேட்ட கதைகள்; என்ன நடக்கப் போகிறதோ? எப்படியெல்லாம் தன்னை அலைக்கழிக்கப் போகிறாறோ? எதிர்பார்க்காதது எதுவும் நடந்து விடுமோ என்றெல்லாம் பெண்ணானவள் ஓர் இனம் புரியாத ஒருவித பெருமூச்சுடன் அந்த நேரத்தில் இருப்பதும் உண்டு. பயந்துகொண்டு துடிப்பது உண்டு.
இப்படி முன்பின் பழக்கமில்லாத, அறிமுகமில்லாத புதியவர்கள் இருவர். ஒரு தனிப்பட்ட சூழ்நிலையில் தனித்திருக்க விடப்படுகிற பொழுது, ஒருசில இனிய முறைகளை இருவரும் ஒத்துப்போய் கையாண்டால்தான், இருவருக்குமே நல்லது போகப் போக அது சுகபோகமாகவும் இருக்கும். சுகலோகமாகவும் இருக்கும்.
கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய்விடும்? இந்த மனப்பாங்கு அந்தநேரத்தில் ஆணுக்கு வந்தால் அது மிகமிக நல்லது.
ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?.............<noinclude></noinclude>
7pfa5brigxoy506jmsssifronvmcksz
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/48
250
102290
1838230
1062616
2025-07-02T08:57:52Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838230
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>
முதன்முதலாக, தன் மனைவியிடம் உடலுறவு கொள்வதற்கு ஆணானவன், எந்தவித முயற்சியிலும் ஈடுபடுவது உகந்ததல்ல. அது உரிய முறையும் அல்ல.
மணமான ஒரு கன்னி, தனது தூய்மையை, இதுவரை காத்துவந்த ஒரு புனிதத்தை கற்பை, உடனே இழந்துவிட விரும்பமாட்டாள். தான் கண்ணெனக் காத்து வந்ததை கணவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று, விரும்பி வந்தாலும், அந்த மாற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகவே ஊக்குவிக்க, விருந்தளிக்க, பகிர்ந்தளிக்க, பக்குவப்படுத்த வேண்டும்.
அதற்காக, அவள் மனம் அன்பினால் நெகிழுமாறு நடந்து கொள்ள வேண்டும். அந்த அன்பை முதலில் அவளிடமிருந்து பெறுவதுதான் கணவனின் முக்கிய நோக்கமாக, முதன்மையான கடமையாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்வது புதுமையாக இருக்கிறதே? காரணமில்லாமல் நான் எதையும் சொல்லத் துணிவதில்லை வாசு. இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால், புது மணப்பெண்ணின் அவயவங்கள் அனைத்தும் பூ போன்றவை. தொட்டால் மலரும் தன்மையுள்ளவை. பெண்மை மிகுந்தவை. அவசரமும், ஆத்திரமும், அவளை அடைந்தே முடித்திடவேண்டும் என்ற ஆவேசமும் கொண்டு, அவயவங்களை வலிந்து பற்றும்பொழுது, அழுத்தி தழுவும் பொழுது, அவயவங்கள் வலியெடுக்கும். அதனால் மனதில் திகில் பிடிக்கும். அந்தப் புதுசெயலில் மனம் அசூயை அடையும். வெறுப்பு அவள் மனதில் தலைதூக்கிவிட்டால் அதில் சிறப்பு எப்படி அமையும்? முதல் கோணல் முற்றிலும் கோணல் அல்லவா?
மனைவியின் அன்பை எப்படிக் கவர்வது<noinclude></noinclude>
mfe9mzux5dq5pwsgax70cfzu0xs3myt
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/49
250
102294
1838236
1062617
2025-07-02T09:09:04Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838236
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>
ரயிலிலோ பஸ்ஸிலோ நாம் பிரயாணம் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது பல பேர்களை, புதியவர்களை நாம் சந்திக்கிறோம். அவர்களுடன் பழகும்போது நாம் என்ன செய்கிறோம்? முதலில் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிறோம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள முயற்சிக்கிறோம்.
பேச்சின் இடையிலே அவர்களின் மனம் கோணாதவாறு உரையாடுவதும், தின்பண்டங்கள் தந்து உறவு கொள்வதும் போன்று பழகுவதுபோல, தனது புதிய துணைவியிடமும் பழகி அவளின் அன்பைப் பெறவேண்டும்.
மனைவியை நட்புக்கு உரியவளாக மாற்றுகின்ற வழியில் ஆரம்பத்தில் சொல்லாடுவதும், உரையாடி மகிழ்வதும், தன்னுடன் இணக்கத்திற்கு ஏற்றவளாகப் பேசி மகிழ்விப்பதும் தான் உரையாடுதல் என்பதில் இருக்க வேண்டும். மனைவியை கிண்டலாகப் பேசித்தான் உரையாட வேண்டும் என்பது கூடவே கூடாது. பொது விஷயங்கள் பேசலாம். அல்லது, ஒருவரைப் பற்றி ஒருவர் பேசி அறிந்து, அவரவர் திறமையைப்புரிந்து, மகிழ்ந்து பாராட்டிக் கொள்ளலாம்.
இதில் முக்கியமாக ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பெண்ணின் மனமறிந்து பேசி நட்புகொள்ள வேண்டியது என்பதுதான்.
நட்புடன் முகமலர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, ‘தழுவுதல்’ போன்ற காரியங்கள் செய்தாலும், பெண்ணுக்குரிய அச்சமும், நாணமும், மடமும், பயிர்ப்பும் அவளைத் துடிக்க வைக்கும். சில சமயங்களில் தடுத்து நிறுத்தவும் செய்யும். இதுபோன்ற நிலையில், விளக்கின் ஒளியில் இருப்பதைவிட, முகம்தெரியாத மங்கலான<noinclude></noinclude>
3x8hjbfzj5cuhp15jndt7z5rz262kb8
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/50
250
102297
1838237
1062518
2025-07-02T09:10:31Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838237
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|48||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>செய்தல் நன்மையே பயக்கும். சரசம் எந்த நேரத்திலும், எக்காரணத்தை முன்னிட்டும் விரசமாகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உடலுறவு முயற்சியை மேற்கொள்வதற்கு முன், மனைவியைத் அந்த உச்ச நிலைக்குத் தயாராக்கும் பொறுப்பு கணவனையே சார்ந்ததாகும். மனைவியின் மனமொத்த ஒத்துழைப்புக்கு, அவசியம் அவளிடம் இணக்கம் பெறுவதும், இல்லையேல் இணக்கம் பெறத் தூண்டி இசைவு பெறுவதும் மிகவும் அவசியமானதாகும்.
சுவையான செய்திகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, அதற்கு மறுமொழி கிடைப்பது போன்ற வகையில், மனைவியை பேசவைத்தவாறே செயல்முறையில் ஈடுபடுவது, இருவருக்குமுள்ள இடைவெளியை மேலும் குறைத்து, ஒரு இனிய சூழ்நிலையை உருவாக்கும்.
எத்தனை நாளைக்கு இப்படி நடந்துகொள்ளவேண்டும்.?
மனைவியானவள், தன்னை முழுவதும் அவனிடம் தருவதற்குத் தயார் என்ற நிலை வருகின்ற வகையில் தான் இப்படி நடந்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவளாக இருந்தால் முதல் மூன்று நாட்களே போதுமானது என்பார்கள். என்றாலும் இப்பொழுது கவர்ச்சி மிக்கப் படங்கள், கதைகள், சினிமா, நாடகங்கள், பத்திரிக்கை விளம்பரங்கள் போன்றவற்றைக் கண்டறிந்து, பெண்ணும் முதலிரவே தயார் என்ற நிலைக்கு வந்து பதமானால், பக்குவமான முறையிலே உடல் உறவை மேற்கொள்ளலாம்.
எப்படி என்று விளக்கிக் கூறாமல் மேம்போக்காகக் கூறினால், என்னைப் போன்றவர்கள் எப்படி புரிந்துகொள்ள முடியம் என்றான்
வாசு<noinclude></noinclude>
8n2vqndtlnnc213b4o91wq6by4hdxxx
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/51
250
102301
1838238
1062519
2025-07-02T09:11:57Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>
இதுபோன்ற உடலுறவு விவரங்களை அனுபவமுள்ளவர்களிடமே தான் கேட்கவேண்டும். அவர்களிலும் நற்பண்பு உள்ளவர்களாக இருந்தால்தான் உன் கேள்விக்கு நல்ல முறையில் பதில் கிடைக்கும். காமாந்தகாரராகவோ அல்லது முரட்டுத்தனமும் வெறித்தனமும் நிறைந்தவராகவோ உள்ளவர்களிடம் கேட்டு, அவர்களும் அவர்கள் பாணியிலேயே கற்றுத்தந்து விட்டால், வேறு வேதனையே தேவையில்லை. குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொள்ளும் கதைதான். ஆன்ற பெரியோர்கள் கூறிய அறிவுரையை உனக்கு அப்படியே சொல்கிறேன்.
மனைவியிடம் மேற்கூறிய முறைகளில் மனம்விட்டுப் பழகி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்ற பொழுது, மணற்பகுதியில் தோண்டிய நீருற்று போல அன்பு பொங்கி வழியும், காதலுக்கும் அந்த உறவுக்கும் தயாரான பெண் தன் கணவனுக்கு பல செய்கைகள் மூலம் தன் அன்பை வெளிப்படுத்துவாள். இது காதலனுக்கு காதலி காட்டுகின்ற முறையிலும் பொருந்தும்.
வாசு அறிந்து கொள்கின்ற ஆவலின் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் ஆவலுக்கேற்றவாறு உலகநாதர் மேலும் விளக்கமாகக் கூறலானார்.
காதலனுக்கு என்றல்லவா சொன்னேன்! ஏனென்றால், கணவனும் முதன்முதலில் அறிமுகமாகின்ற காதலன்தானே! தனது எண்ணத்தை இயற்கையான உடல் இயக்கத்தின் மூலமாகத்தானே வெளிப்படுத்த முடியும்! அதனால் தான் இந்த முறை இருவருக்கும் பொருந்தும் என்றேன்.
காதலால் உந்தப்பட்ட பெண்ணின் இதழ்கள் காதலனைப் பார்த்ததும் இலேசாக நடுங்குவது போல துடிக்கும். குளத்திலே மீன் துள்ளுவது போல, கண்கள்<noinclude></noinclude>
09sbzmjj9n6mjmlbxtbrbqqkgv5axzj
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/52
250
102304
1838240
1062520
2025-07-02T09:13:18Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838240
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>
வட்டமிடும். ஏற்கனவே கட்டிமுடித்த கூந்தலை அல்லது உடையை கரங்கள் கோதி விடும்! அதனை அடிக்கடித் தழுவிக்கொள்ளும்; அன்புக்குரியவன் பார்வை தன் மேல் படும்பொழுது, மேலாக்கை நழுவவிடுவது போல தவறவிட்டு, மேலழகை வெளிப்படுத்திக் காட்டும்: வேலைநேரம் என்றால், தவறுதலாக நேர்வது போல. தன் துடையழகையும் வெளிப்படுத்திக் காட்டும். ஏற்கனவே இறுக்கமாகக் கட்டியுள்ள ஆடையை தளர்த்தி விட்டுக் காட்டும் பாங்கெல்லாம் அன்பை வெளிப்படுத்திக் காட்டும் குறிப்பேயாகும்.
காதலனை சாந்தமாகப் பார்ப்பதும், ரகசியமாக பார்த்து சிரிப்பதும், வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு அடிக்கடி பேச முயற்சிப்பதும், அருகிலே உள்ள குழந்தையிடம் அவர் காதில் படும் படியாக பேசுவதும் எல்லாமே தன் அன்பை வெளிப்படுத்திக் காட்டும் அற்புத சைகைகளாகும்.
அன்பைத்தான் மனைவி காட்டி விடுகிறாளே! அவளிடம் எவ்வாறு நெருங்குவது? எவ்வாறு நெருக்கம் பெறுவது? அதற்கென்று ஏதாவது விதிகள் உள்ளனவா என்றான் வாசு!
விதி என்று ஒன்று இல்லாவிட்டாலும், எதற்கும் முறை ஒன்று இருக்கிறதல்லவா! மதியைக் கொஞ்சம் பயன்படுத்தினால் வருவது நிதிதான். இல்லையேல் நல்ல கதி பெறுவது கஷ்டமே!
மனதால் நெருங்கிவிட்ட பிறகு, இனி உடலால் நெருங்கும் முறையைத்தானே கேட்கிறாய். பெண் உடலில், பருவ உணர்வுகள் எல்லா இடங்களிலும் பரவி இருந்தாலும் அந்த இன்ப உணர்வுகளை எழுச்சியுறச் செய்வதற்கென்று உடலில் ஒரு சில இடங்கள் இருக்கின்றன. அவைகளைத் தடவும்பொழுதும், தழுவும் பொழுதும், உடல்உறவுக்குரிய உணர்வு ஓங்கி எழுந்து உச்ச நிலைக்கு வந்து விடுகின்றன.<noinclude></noinclude>
o33epp9ox86vmqwhqmynghs59ohl7j5
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/53
250
102307
1838242
1062618
2025-07-02T09:14:52Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||51}}{{rule}}</noinclude>
அத்தகைய இடங்களாக, உணர்வு மிகுந்த எட்டு இடங்களைப் பெரியோர்கள் குறித்திருக்கின்றார்கள். முதல் தரமான உணர்விடங்களாக உதடுகள். (உதடுகள் என்றாலே முத்தம் என்று பொருள் தருகிறது பிங்கள நிகண்டு). கொங்கைகள்; பிறப்பு உறுப்பும் அதைச் சுற்றியுள்ள உள்பகுதிகள்; மேற்கூறிய நான்கு இடங்களும் திரவங்களை உண்டுபண்ணுகின்ற (Anal Region) இடங்களாகும்.
மற்ற நான்கு இடங்களும் முடி, முளைத்திருக்கின்ற
பகுதிகளாகும். தாழ்வாய், கன்னம், அக்குள் (Arm Pit) மற்றும் பிறப்புஉறுப்பின் வெளிப்பகுதிகள்.
மேற்கூறிய எட்டு இடங்களிலும், உடல் உறவு பற்றிய உணர்வுகள் நிறையாகவே நிறைந்து கிடக்கின்றன. மேலும், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், விரல்கள், விரல் நுனிகள், முன்பாத விரல்கள், முழங்கால்கள் முழங்கைப் பகுதிகள் அத்துடன் காதுபகுதிகளும், சற்று காதல் வேக உணர்வை எழுப்பும் இரண்டாந்தர பகுதிகளாகும்.
இடங்களைத் தெரிந்து கொண்டது போலவே அவைகளைப் பயன்படுத்தும் தடங்களையும், விதங்களையும் புரிந்து கொள்வது நலம்.
உதடுகளில் முத்தமிட்டும், கன்னங்களை வேதனையெழாமல் கடித்தும் கிள்ளியும்: கொங்கைகளை நசுக்குவது போல் பிசைந்தும் இன்பம்பெறச் செய்ய வேண்டும். இன்பம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிச் சென்றிருக்கின்றனர் நமது முன்னோர்கள்.
இவ்வாறு உடலுறவு கொள்வதற்கு, ஒவ்வொரு முறை தொடங்குவதற்குமுன், வெளிப்படையாக இப்புற விளையாட்டுக்களில் ஈடுபட்டு விளையாடிவிட்டுத்தான், உள்
உறவில் ஈடுபட வேண்டும்.<noinclude></noinclude>
13qy3evzwjmyp8lqsm60yiun1obx7on
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/54
250
102309
1838243
1315853
2025-07-02T09:16:17Z
Balu1967
5532
1838243
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" /></noinclude>
ஒருவர் நினைத்த உடனேயே உடல் உறவில் ஈடுபடமுடியாதா?
இது இயற்கையாக நடக்க முடியாதது. நடக்கக்கூடாதது. துன்பமில்லாத இன்பம்பெற வேண்டும் என்றால் சற்றுப் பொறுமையும் வேண்டும். நினைத்தவுடனேயே, ஆணின் பிறப்புறுப்பானது கிளர்ந்து எழுந்துவிடும். ஆனால் பெண்ணுக்குரியது அப்படி அல்ல. முன்னே விளக்கியது போல, நினைவாலும் செயலாலும் பெண் நெகிழ்ந்து விடும் தருணத்தில், பெண்குறியினுள்ளே ஒரு வழவழப்பான திரவம் ஒன்று உதயமாகி, ஆண்குறிசெல்லும் பாதைக்கு பாய்விரித்து, நடத்திச்செல்வது போல அமைப்பினை உண்டாக்கி விடுகிறது.
அது எப்படி மாமா?
தரைமேலே நத்தை ஊர்ந்து போவதற்கு முன், ஒரு விதத் திரவத்தை ஒழுகவிட்டு, அதன் பிறகு எளிதாக இனிதாக அதன்மேல் ஊர்ந்து போவது போல, ஆண்குறியானது தடையின்றி தாராளமாக, ஊன்றி உள்ளே நுழைந்து செல்வதற்கு ஏதுவாக, அந்தத் திரவம் பெண்குறி பாதை முழுவதும் பரவி நிற்கிறது. அதனால் ஆண், பெண் இருவருக்குமே நல்லது.
எந்த விதத்தில் இது நல்லதென்று கூறுகின்றீர்கள்?
அவ்வாறு திரவம் சுரந்து நிற்கும் போதுதான், பெண்ணானவள், உடலுறவுக்குத் தகுதியாகித் தயாராக இருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இல்லையேல், ஆண் குறியானது உள் புகுவதற்கு இயலாமையால் சிரமப்பட, அதன் காரணமாக வலிந்து புணரும் போது, ஆணுக்கு வேதனையும், பெண்ணுக்கு<noinclude></noinclude>
lng67m2ppez6z62v955224vl45wi5mf
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/55
250
102313
1838245
1062523
2025-07-02T09:28:21Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||53}}{{rule}}</noinclude>
எரிச்சலும் ஏற்படுகிறது. அதனால் இருவருமே
துன்பமடைகின்றனர்.
ஆண்குறியின் முன்பாகம் சிராய்வு ஏற்பட்டு, சில சமயங்களில் புண்ணாகியும் போகும். பெண்ணாலும், அந்த எரிச்சலினால் இதமாக ஈடுகொடுக்க முடியாதவாறும் ஆகும். ஆகவே, பெண் தயாராகிவரும்வரை ஆண் புறவிளையாட்டுக்களில் ஈடுபடுத்திப் பொறுத்திருப்பது தான் சாலச் சிறந்ததாகும்.
பொறுமை இல்லையென்றால் என்ன செய்வது?
பொறுமை இல்லையென்றால், ஆண் தன் சக்தி முழுவதையும் சேர்த்து, தானே உடலுறவில் ஈடுபட, அதன் காரணமாக ஆணுக்கு விந்து விரைவில் வெளியாகிவிடும். பெண்ணுக்கு உச்சநிலை (Climax) வருவதற்குள், ஆண் செயலற்றுப் போனால், பெண்ணின் நிலை என்னவாகும்? ஏமாற்றம்தானே தொடரும்!
ஏமாற்றம் ஒரு முறை என்றால் பரவாயில்லை. பெண் பொறுத்துக்கொள்வாள். சகித்துக்கொள்வாள். தினமும் இதே கதை தொடர்ந்தால், அவளுக்கு சங்கடம் நேர்வது மட்டுமல்ல; உடலுறவில் சலிப்பும் ஏற்பட்டுவிடும்.
கணவனுடன் பேசும்போது கடுகடுப்பும், எரிச்சலுமே அந்த ஏமாறும் பெண்ணிடமிருந்து பூதமாகக் கிளம்பும். ஆகவே, உடலுறவு என்றால், பெண்ணும் திருப்தியடையும் வரை, தொடர்ந்து இருவரும் இன்ப உறவு நிலையில் இருப்பது என்பது தான் உண்மையான முறையாகும்.
ஒரு பெண் உடலுறவில் திருப்தியடைந்து விட்டாள் என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்.?
உடலுறவு முடிந்து விடுகிறது. அதில் அவள் திருப்தியடைந்து விட்டாள் என்றால், அவள் தன் தேகத்தை<noinclude></noinclude>
hagts5r1wpbaesyzq9uqiut9u2b7v83
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/56
250
102316
1838246
1062524
2025-07-02T09:30:00Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838246
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>
மீண்டும் கணவன் மீது வலியோடும், விசையோடும், விருப்பத்தோடும் அழுத்தி இன்பம் காண்பாள்.
அவளது கண்கள் ஆனந்தப் பூரிப்பின் மிகுதியால் துடித்தெழுந்து துவண்டு, மின் விடுவதையும் காணலாம்.
அத்துடன் ஆணுக்கு விந்து வெளியாவது போலவே பெண்ணுக்கும் வெளியாகும். அவ்வாறு அது வெளியேறியதும் கைகால்கள் விட்டுப்போவது போன்ற ஒரு உணர்வு நிறைவதும், களைப்பின் மிகுதியால் கண்களை மூடிக்கொண்டும், நெட்டிக் முறித்துக் கொண்டும் பெண் தனது திருப்தியை காட்டி விடுவதின் மூலம் நாம் கண்டு கொள்ளலாம்.
அவள் பெற்ற அந்தத் திருப்தியின் மிகுதியால் மனமிழந்து தன் வசமிழந்து, தனது துடையிரண்டையும் துணைவனது துடைகளுடன் இணைத்தும், தழுவியும் பெருமூச்சு விடுவது போன்ற ஸ்...ஸ் என்ற ஒலியெழுப்பி தனது இச்சையின் இச்சையின் உச்சநிலையை திருப்தியை வெளிப்படுத்துவாள்.
பெண் திருப்தியடையவில்லை என்றால்?...
அதிக அச்சமும் கூச்சமும் உள்ள பெண்ணாக இருந்தால், அதைத் தன் மனதுக்குள்ளேயே வைத்து கொண்டு மருகுவாள். கணவன் பெறுகிற திருப்தியைக் கண்டு, ‘அவர் இன்பமடைந்தால், அதுவே போதும்’ என்ற விதத்தில் தேறுதல் அடைவாள். ஆறுதல் கொள்வாள்.
பல நாள் இதுபோலவே, உடலுறவு திருப்தியில்லாமல் முடிந்தால், சில சமயங்களில் அவள் தன்னையறியாமல் பெருமூச்சு விடுவாள். அழுவாள். என்ன செய்வது என்று அறியாமல் அடிக்கடி பலர் கைகளைப் பிசைந்து கொண்டும், சிலர் முறுக்கிக்கொண்டும்,<noinclude></noinclude>
etdacnn5r7vmi567cg27ywlnbaw3qna
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/57
250
102320
1838247
1062525
2025-07-02T09:31:53Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838247
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||55}}{{rule}}</noinclude>
இன்னும் சிலர் கோபத்தால் கணவனை அடித்தும் கூட விடுவார்கள். என்றும், இன்னும் சிலர் ‘கணவனை விந்து விரைவில் வெளியாகிவிடுகிறது. அவனால் இயலவில்லை’ என்று அறிந்தும் அவன்மேல் ஏறி வலிந்து படுத்துக்கொண்டு, தன்னிச்சையாக செயல்படத் தொடங்கிவிடுவார்கள் என்றும் பழங்கால நூல்கள் கூறுகின்றன.
ஆணுக்கு அந்த ‘இயலாமை’ எப்படி ஏற்படுகிறது?
ஆணுக்கு ஆண்குறியில் வலுவில்லாத தன்மை இருந்தால், நிச்சயம் தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முடியாமல் போய்விடும்.
சிறியவயதில் ‘சுயஇன்பம்’ பெற்று, அதன் காரணமாக நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டவர்கள், உணர்ச்சிகரமான நிலையில் உடல் உறவில் அதிகநேரம் இருக்க முடியாது. முற்றிய நோயுள்ளவர்களால் கூட, உடலுறவில் அதிக அளவு ஈடுபாடு கொள்ள முடியாது.
நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம், ஆண்கள் தங்களுக்குள்ளேயே போட்டுக்கொண்டிருக்கிற மனப் போராட்டத்தாலும், கணக்கற்ற ஆவல்களாலும், குழப்பங்களாலுமே இந்த உணர்வும் குன்றிப் போய் இருக்கின்றனர். தன் உறுப்பும் நரம்புத் தளர்ச்சி காரணமாக வலுவிழந்து போய் தவிக்கின்றனர்.
அப்பொழுதும் உள் மனதில் காதல் உணர்வுகளும், உறவிலும் ஒருவித வலிப்பும் ஈடுபாடும் இருந்தால் தான் உள்ளத்தில் கிளர்ச்சியும், உறுப்பில் உணர்ச்சி மிகுந்த எழுச்சியும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்.
இந்த இயலாமையைப் போக்க வழியே கிடையாதா?<noinclude></noinclude>
4eh7ld0fg5lkyiyf3ynioamqpwyy2vg
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/58
250
102323
1838249
1062526
2025-07-02T09:34:28Z
Balu1967
5532
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838249
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|56||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>
இருக்கிறது. அந்த வழி அவனது மனைவியிடந்தான் இருக்கிறது.
உடல் உறவு என்பது, ஒருவரே முயன்று, ஒருவரே இயக்கி, தனியே இன்பங்காணும் காரியமல்ல; அது சாத்தியமும் அல்ல.
கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி, கனிந்து கூடி உணர்ந்து பெறக்கூடிய இன்பமே தாம்பத்ய சுகமாகும். ஆகவே இரண்டு பேரும் விரும்பி ஈடுபட்டால்தான் சுவையும் இருக்கும்; சுகமும் இருக்கும்.
கணவன் வலுவிழந்து, உடலுறவில் திருப்தி தரமுடியாமற் போனால், தானும் திருப்திபெற முடியாமற் போனால் திருப்தியடையாத மனைவி, அந்த சமயத்தைப் பெரிதுபடுத்திக்கொண்டு, கணவனது இயலாமையை மிகுதிப்படுத்திக் கணவனை கேலி செய்வதும், கேவலப்படுத்துவதுபோல, கொச்சை மொழியினைக் கொட்டுவதும் கூடாது. அது தவறாகும்.
கணவனின் இயலாமைக்குரிய காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கணவனின் அதிகமான குடும்பப் பொறுப்பை, உத்தியோகத்தில் உண்டாகும் சுமைகளை, சுற்றுப் புறத்தில் நிகழும் கவலைகளை அதிக உடல் உழைப்பை, தானே வலியப் போய் ஏற்றுக் கொண்டு அதனால் அதிகம் அவதிப்படுவதை மாற்றி, கணவனுக்குத் தேவையான சேவைகளை முதலில் மனைவி செய்ய வேண்டும்.
கணவனுக்கு தெம்பு ஊட்டுவதைப் போல் தைரியம் தருவது போல, தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
கணவனுக்குத் தான் செய்கின்ற பணிவிடையின் மூலம் மீண்டும் அவரது வலிமையை மேலும் கொண்டுவர<noinclude></noinclude>
duu1tknrjejyblti3v1sb0mfb99iyse
பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/59
250
102326
1838250
1312688
2025-07-02T09:36:34Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838250
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||57}}{{rule}}</noinclude>
முயல வேண்டும். கணவனும் தன் மனைவியுடன் ஒத்துழைக்க வேண்டும். தேவையானால் மருத்துவர்களின் ஆலோசனையையும் மேற்கொள்ளலாம்.
கொஞ்சங்கொஞ்சமாக, தன்னம்பிக்கை பெருகபெருக, தேகமும் சக்தியை அடைய அடைய, விரும்பியதைப் பெறலாம். வேண்டிய அளவும் பெறலாம்.
ஏற்கனவே திருப்தியைத் தரக்கூடிய சக்தி மிகுந்த கணவனும், இருக்கிறது என்று எகத்தாளமாக இறைத்து விடாமல், சற்று உடலுறவில் சிக்கனமாக இருக்க வேண்டும். தேகத்தை வளமாகவே காத்துக்கொள்ள வேண்டும்.
எதற்கும் நேரம், காலம், நெருங்கும் சமயம் உண்டு என்பார்களே, அது போல, காலம் நேரம், சமயம் சந்தர்ப்பம் உறவுக்கும் உண்டு.
உடலுறவுக்கு கென்று தகுந்த நேரம் காலம் என்பதை எப்படி மாமா தெரிந்து கொள்ள முடியும்?
முடியும். அதற்கு வழி இருக்கிறது.
“ஒரு ஆணுக்கு அளப்பில்லாத ஆனந்தத்தை அளிப்பதற்காகவே அழகும் நளினமும் மிக்கப்பெண் படைக்கப்பட்டிருக்கிறாள்” என்று ஓர் அறிஞர் கூறுகின்றார். உடலுறவை விரும்பும் பெண்ணானவள் எப்படி நாசூக்காக வெளிப்படுத்துவாள் என்பதை முன்கூட்டியே உனக்குக் கூறியிருக்கிறேன்.
ஒரு பெண் எப்பொழுது உடலுறவை உண்மையிலேயே விரும்புவாள்? எப்பொழுது அவளுக்கு அதிகம் தேவைப்படுகிறது என்பதையும் கணவனானவன் புரிந்து கொண்டாலே போதுமல்லவா!
நெடுந்தூரம் அல்லதுபயணம் செய்து முடித்துக்களைத்திருக்கும் பொழுதும்; உடல் நலக்குறைவு<noinclude></noinclude>
775ywpm09nnnul8hd2pzb9loz1s9hez
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/119
250
130155
1837858
816627
2025-07-01T13:09:02Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>15. ஸி. என். அண்ணாதுரை</b>}}}}
{{larger|<b>தே</b>}}சிய உணர்வு எழுச்சியும், நாட்டின் விடுதலை இயக்க வேகமும் மொழிகளில் ஒரு மறுமலர்ச்சி புகுத்தியது வரவாற்று உண்மையாகும். அதே காலத்தில், இன உணர்வும்—மொழி அடிப்படையிலும் இன ரீதியிலும் தனி நாடு அமைக்கவேண்டும் என்று ஒரு சாராரிடையே எழுந்த உணர்வும்—மொழியின் மலர்ச்சிக்கு வகை செய்தது. இதுவும் வரலாறு காட்டும் ஒரு உண்மைதான்.
பெரியார் ஈ. வே. ராமசாமி திராவிட இன உணர்வைத் தூண்டி, தமிழர்—தமிழ்—தமிழ்நாடு—தமிழ்மொழி உயர்வு என்ற உணர்ச்சிகள் பெருகுவதற்கு வகை செய்தார். அவரைப் பின்பற்றியவர்கள் பலர் மொழிப்பற்றுடன் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தம்மால் இயன்றதைச் செய்ய முற்பட்டார்கள். அவர்களில் முக்கிய மானவர் ஸி. என். அண்ணாதுரை ஆவார்.
பெரியார் விதைத்த இயக்கம் நன்கு வளரவும், வேகமாகப் பரவவும், இளைஞர்களைக் கவர்வதற்கும் அண்ணாதுரையின் பேச்சாற்றலும் எழுத்து வேகமும் முக்கியக் காரணங்களாக அமைந்தன.
“உலகிலே பலபல தீவிரவாதிகள் தோன்றியது பற்றிய வரலாறுகள் எனக்குத் தெரியும். நாத்திகம் பேசிய நாவலரையும் நானறிவேன். நெருப்பாறு தாண்டும் வீரரும்<noinclude></noinclude>
tmagipof9r1wkxjor27tz35wvriaska
1838056
1837858
2025-07-02T04:15:10Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>15. ஸி. என். அண்ணாதுரை</b>}}}}
{{larger|<b>தே</b>}}சிய உணர்வு எழுச்சியும், நாட்டின் விடுதலை இயக்க வேகமும் மொழிகளில் ஒரு மறுமலர்ச்சி புகுத்தியது வரலாற்று உண்மையாகும். அதே காலத்தில், இன உணர்வும்—மொழி அடிப்படையிலும் இன ரீதியிலும் தனி நாடு அமைக்கவேண்டும் என்று ஒரு சாராரிடையே எழுந்த உணர்வும்—மொழியின் மலர்ச்சிக்கு வகை செய்தது. இதுவும் வரலாறு காட்டும் ஒரு உண்மைதான்.
பெரியார் ஈ. வே. ராமசாமி திராவிட இன உணர்வைத் தூண்டி, தமிழர்—தமிழ்—தமிழ்நாடு—தமிழ்மொழி உயர்வு என்ற உணர்ச்சிகள் பெருகுவதற்கு வகை செய்தார். அவரைப் பின்பற்றியவர்கள் பலர் மொழிப்பற்றுடன் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தம்மால் இயன்றதைச் செய்ய முற்பட்டார்கள். அவர்களில் முக்கிய மானவர் ஸி. என். அண்ணாதுரை ஆவார்.
பெரியார் விதைத்த இயக்கம் நன்கு வளரவும், வேகமாகப் பரவவும், இளைஞர்களைக் கவர்வதற்கும் அண்ணாதுரையின் பேச்சாற்றலும் எழுத்து வேகமும் முக்கியக் காரணங்களாக அமைந்தன.
“உலகிலே பலபல தீவிரவாதிகள் தோன்றியது பற்றிய வரலாறுகள் எனக்குத் தெரியும். நாத்திகம் பேசிய நாவலரையும் நானறிவேன். நெருப்பாறு தாண்டும் வீரரும்<noinclude></noinclude>
l94doszwwciy1jog5d2dm59djfzl1ao
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/120
250
130158
1837860
816629
2025-07-01T13:21:22Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|118||பாரதிக்குப் பின்}}</noinclude>எனக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசத்தை உணரவேண்டுகிறேன். அவர்கள் படித்த பக்குவ மனம் படைத்து கூட்டத்திலே பேசினர். அவர்களுக்கு எழுதினர். பெரியாரின் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே கல்வீச்சு மண்வீச்சுக்கிடையே என்பதை அறியவேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த சகலகலா வல்லவர்களும் வெறும் சாமியாடிகளைக் கண்டித்துப் பேசவும் சக்தியற்றுக்கிடந்த காலை, பெரியாரின் பெருங்காற்றுத் தமிழகத்திலே வீசி, நச்சு மரங்களை வேரோடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதை உணர வேண்டும்.” (வர்ணாஸ்ரமம்)
பெரியார் துவக்கி வைத்த பெருங்காற்றை வலிய சூறையாகத் தமிழ் மண்ணிலே பரப்ப திட்டமிட்ட அண்ணாதுரை அதற்குத் தேவையான அறிவு வலிமையும் பேச்சுத் திறனும் எழுத்து வன்மையும் பெற்றிருந்தார். அவருடைய பேச்சிலும் எழுத்திலும் உயிரும் உணர்வும், வேகமும் கனன்றன. எழுத்து எப்படி இருக்கவேண்டும், என்னென்ன சாதிக்க வேண்டும் என்ற திட்டமான கருத்துக்களை ஆரம்ப முதலே அவர் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம்.
“ஜோலா. பிரான்சு நாட்டிலே இலக்கிய மன்றத்தாரால் ஏளனம் செய்யப்பட்டு, புத்தகம் எழுதுவோரால் புறக்கணிக்கப்பட்டு, மேட்டுக் குடியினரால் வெறுக்கப்பட்டு தன்பாட்டு மொழியினால் நாட்டுக்குக் கேடு வருகிறதென்று பலர் பழித்துரைக்கக் கேட்டு, பாரிசில் பல கஷ்டங்களைப் பட்டுக் கொண்டிருந்தார். போராடிப் போராடியே, உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். ஆகவே தான், எமிலி ஜோலாவால், ‘நானா’வுக்காக அனுதாபத்துடன் போராடியவரால், டிரைபசுக்காகப் போராட முடிந்தது. மற்றவர்கள் ‘மேதை’ என்ற புகழ்பெற மேட்டுக் குடியினரின் பாதசேவை செய்தனர், அரண்மனைக்கு<noinclude></noinclude>
as0dvnv0lppzrd8wb40vpvyjlk6civy
1838057
1837860
2025-07-02T04:16:45Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838057
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|118||பாரதிக்குப் பின்}}</noinclude>எனக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசத்தை உணரவேண்டுகிறேன். அவர்கள் படித்த பக்குவ மனம் படைத்து கூட்டத்திலே பேசினர். அவர்களுக்கு எழுதினர். பெரியாரின் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே கல்வீச்சு மண்வீச்சுக்கிடையே என்பதை அறியவேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த சகலகலா வல்லவர்களும் வெறும் சாமியாடிகளைக் கண்டித்துப் பேசவும் சக்தியற்றுக்கிடந்த காலை, பெரியாரின் பெருங்காற்றுத் தமிழகத்திலே வீசி, நச்சு மரங்களை வேரோடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதை உணர வேண்டும்.” (வர்ணாஸ்ரமம்)
பெரியார் துவக்கி வைத்த பெருங்காற்றை வலிய சூறையாகத் தமிழ் மண்ணிலே பரப்ப திட்டமிட்ட அண்ணாதுரை அதற்குத் தேவையான அறிவு வலிமையும் பேச்சுத் திறனும் எழுத்து வன்மையும் பெற்றிருந்தார். அவருடைய பேச்சிலும் எழுத்திலும் உயிரும் உணர்வும், வேகமும் கனன்றன. எழுத்து எப்படி இருக்கவேண்டும், என்னென்ன சாதிக்க வேண்டும் என்ற திட்டமான கருத்துக்களை ஆரம்ப முதலே அவர் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம்.
“ஜோலா. பிரான்சு நாட்டிலே இலக்கிய மன்றத்தாரால் ஏளனம் செய்யப்பட்டு, புத்தகம் எழுதுவோரால் புறக்கணிக்கப்பட்டு, மேட்டுக் குடியினரால் வெறுக்கப்பட்டு தன்பாட்டு மொழியினால் நாட்டுக்குக் கேடு வருகிறதென்று பலர் பழித்துரைக்கக் கேட்டு, பாரிசில் பல கஷ்டங்களைப் பட்டுக் கொண்டிருந்தார். போராடிப் போராடியே, உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். ஆகவே தான், எமிலி ஜோலாவால், ‘நானா’வுக்காக அனுதாபத்துடன் போராடியவரால், டிரைபசுக்காகப் போராட முடிந்தது. மற்றவர்கள் ‘மேதை’ என்ற புகழ்பெற மேட்டுக் குடியினரின் பாதசேவை செய்தனர், அரண்மனைக்கு<noinclude></noinclude>
3ou7q8x7x69agsabhm9jha62rhxiom3
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/121
250
130161
1837862
816630
2025-07-01T13:32:40Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||119}}</noinclude>ஆலாத்தி எடுத்தனர்; ஆலயப் பூஜாரிக்கு அன்பாபிஷேகம் செய்தனர். ஜோலா, மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக எழுதினார்; எழுதினார் என்றால், போராடினார் என்றே பொருள். அவருடைய எழுத்து, வீரன் கைவாளை விட வலிவுடையது. உள்ளத்தை உலுக்கக் கூடியது. உலகே எதிர்த்தாலும் அஞ்சாது போரிடும் எழுத்துக்கள். மமதைக் கோட்டைகளைத் தூளாக்கும் வெடிகுண்டுகள். ‘நீதி’ வேண்டும் என்று, ஜோலாவின் பேனா எழுதிற்று. என்ன நேரிட்டது? ‘நீதி’ கிடைத்தது! மந்திரி சபைகளை, அவருடைய பேனா முனை மாற்றி அமைத்தது. பல மண்டலங்களிலே, மறக்கப்பட்டுப் போனடிரைபசுக்கு, நண்பர்களைத் திரட்டிற்று, ஒரு பெரும் படை திரட்டிவிட்டார், பேனா மூலம். எங்கோ தீவிலே, ஏக்கத்துடன், ‘நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே’ என்று கதறிக் கொண்டிருந்த டிரைபசுக்கு, வெற்றி, விடுதலை! பதினோரு ஆண்டுகள் பராரியாகப் பாழும் தீவில் வதைபட்டவனுக்கு, வெற்றி, விடுதலை; ஒரு ஜோலாவின் எழுத்தால்” (ஏழை பங்காளர் எமிலி ஜோலா)
இந்த விதமான ஒரு சக்தி தனது எழுத்துக்கும் வேண்டும் என்று அண்ணாதுரையின் உள்ளம் ஆசைப்பட்டிருக்கக் கூடும். எத்தகைய சூழ்நிலையில், எப்படிப்பட்டவர்களுக்காக எழுதுகிறோம் என்பதை நன்கு உணர்ந்திருந்தார் அவர். எனவே என்னென்ன எழுதவேண்டும், எதை எப்படி எழுதவேண்டும் என்றும் அவர் நன்கு அறிந்திருந்தார். அதற்கேற்றபடி அண்ணாதுரையின் உரைநடையும் அமைந்தது.
மேலே தந்துள்ள உதாரணங்களிலேயே அண்ணாதுரை உரைநடையின் தன்மை ஒருவாறு புலனாகும். எளிமை, இனிமை, உணர்ச்சிவேகம், இவற்றுடன் ‘பாட்டுமொழிக்கு’ உரிய அடுக்குத் தன்மையும் மோனை அழகும் அவர் நடையிலே கலந்துள்ளன.{{nop}}<noinclude></noinclude>
km8a4cyn4w5atecbgy4p4saervhxqq8
1838058
1837862
2025-07-02T04:18:05Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||119}}</noinclude>ஆலாத்தி எடுத்தனர்; ஆலயப் பூஜாரிக்கு அன்பாபிஷேகம் செய்தனர். ஜோலா, மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக எழுதினார்; எழுதினார் என்றால், போராடினார் என்றே பொருள். அவருடைய எழுத்து, வீரன் கைவாளை விட வலிவுடையது. உள்ளத்தை உலுக்கக் கூடியது. உலகே எதிர்த்தாலும் அஞ்சாது போரிடும் எழுத்துக்கள். மமதைக் கோட்டைகளைத் தூளாக்கும் வெடிகுண்டுகள். ‘நீதி’ வேண்டும் என்று, ஜோலாவின் பேனா எழுதிற்று. என்ன நேரிட்டது? ‘நீதி’ கிடைத்தது! மந்திரி சபைகளை, அவருடைய பேனா முனை மாற்றி அமைத்தது. பல மண்டலங்களிலே, மறக்கப்பட்டுப் போன டிரைபசுக்கு, நண்பர்களைத் திரட்டிற்று, ஒரு பெரும் படை திரட்டிவிட்டார், பேனா மூலம். எங்கோ தீவிலே, ஏக்கத்துடன், ‘நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே’ என்று கதறிக் கொண்டிருந்த டிரைபசுக்கு, வெற்றி, விடுதலை! பதினோரு ஆண்டுகள் பராரியாகப் பாழும் தீவில் வதைபட்டவனுக்கு, வெற்றி, விடுதலை; ஒரு ஜோலாவின் எழுத்தால்” (ஏழை பங்காளர் எமிலி ஜோலா)
இந்த விதமான ஒரு சக்தி தனது எழுத்துக்கும் வேண்டும் என்று அண்ணாதுரையின் உள்ளம் ஆசைப்பட்டிருக்கக் கூடும். எத்தகைய சூழ்நிலையில், எப்படிப்பட்டவர்களுக்காக எழுதுகிறோம் என்பதை நன்கு உணர்ந்திருந்தார் அவர். எனவே என்னென்ன எழுதவேண்டும், எதை எப்படி எழுதவேண்டும் என்றும் அவர் நன்கு அறிந்திருந்தார். அதற்கேற்றபடி அண்ணாதுரையின் உரைநடையும் அமைந்தது.
மேலே தந்துள்ள உதாரணங்களிலேயே அண்ணாதுரை உரைநடையின் தன்மை ஒருவாறு புலனாகும். எளிமை, இனிமை, உணர்ச்சிவேகம், இவற்றுடன் ‘பாட்டுமொழிக்கு’ உரிய அடுக்குத் தன்மையும் மோனை அழகும் அவர் நடையிலே கலந்துள்ளன.{{nop}}<noinclude></noinclude>
fe2r2j6j9pwwjvessdtb8dc6t4e2bov
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/122
250
130163
1837865
816631
2025-07-01T13:49:07Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|120||பாரதிக்குப் பின்}}</noinclude>அடுக்கு மொழி ஆர்வம் சில சந்தர்ப்பங்களில் நீளம் நீளமான வாக்கிய அமைப்புகளுக்கு இடம் அளித்து விடுவதையும் அவர் எழுத்தில் காணமுடியும்—
“இலட்சியத்துக்காகவும், அந்த இலட்சியத்தை அடைய உதவும் கருவிபோன்ற கட்சிக்காகவும், சொந்த நலனையும், உயர்பதவியையும் வெறுத்து ஒதுக்கும் வீரமும் கஷ்ட நஷ்டம் ஏற்கும் சகிப்புத் தன்மையும் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால், அவரைத் தலைவராகக் கொண்ட கட்சியும் அதனைச் சார்ந்துள்ள மக்களும் முன்னேற்றமடைய முடியுமென்பது திண்ணம். அரண்மனை மாடியிலே அம்சதூளிகா மஞ்சத்திலே அமர்ந்துள்ள அரிவையை அடைய ஆங்குச் சென்ற ஆணழகன், அகழின்
ஆழத்துக்கோ, அதிலே அலையும் முதலையின் வாய்க்கோ அஞ்சினால், எங்ஙனம் மங்கையைப் பெறமுடியும்! இலட்சியமெனும் எழிலுடையாளைப் பெற்று இன்புற எண்ணுவோரிற் பலர், அகழிக்கு அஞ்சி, புறத்தே நின்று புகைபடு மனமுடன் போரிட்டுக் கொண்டோ, புலம்பியோ கிடப்பர். ஒரு சிலருக்கே, உழவுக்கேற்ற விளைவு எனும் மொழிவழி நடக்கும் அறிவாற்றல் உண்டு. அவர் தமைச் சலிப்பு அண்டாது. சாகசத்துக்கு அவர் பலியாகார், போவியைக் கண்டு ஏமாறார், புல்லரின் புன்மொழி கேட்டுப் புழுங்கார், தாக்கிய வேலினைத் தூக்கியெறிந்துவிட்டுப், போர்க்குப்
புகின் யார்க்கும் இது நேரல் முறையே என்பது தெரிந்து, புவியுடன் போரிடுகையிலே, கிலி எனும் வலி கொளல் கூடாது என்பதறிந்து, உயிர் கெடும் வரை நெடுவரைபோல் நின்று போரிடுவர் வீரர். கட்சிப்பணியும், களத்துப் பணி போன்றே, வீரருக்கு ஏற்றதேயன்றி விலாவிலே விரக்திப் புழு நடமாடுவோருக்கோ, மனதிலே சுயநலமெனும் குளவி கொட்டிடுவோருக்கோ ஏற்றதன்று. சிறு செயல் புரிய மட்டுமே தெரிந்தோர்க்குப் பெருநெறி பிடித்தலரிது.<noinclude></noinclude>
958k8ldqcqj2jd6e5x3ijitdziskv95
1838059
1837865
2025-07-02T04:20:53Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838059
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|120||பாரதிக்குப் பின்}}</noinclude>அடுக்கு மொழி ஆர்வம் சில சந்தர்ப்பங்களில் நீளம் நீளமான வாக்கிய அமைப்புகளுக்கு இடம் அளித்து விடுவதையும் அவர் எழுத்தில் காணமுடியும்—
“இலட்சியத்துக்காகவும், அந்த இலட்சியத்தை அடைய உதவும் கருவிபோன்ற கட்சிக்காகவும், சொந்த நலனையும், உயர்பதவியையும் வெறுத்து ஒதுக்கும் வீரமும் கஷ்ட நஷ்டம் ஏற்கும் சகிப்புத் தன்மையும் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால், அவரைத் தலைவராகக் கொண்ட கட்சியும் அதனைச் சார்ந்துள்ள மக்களும் முன்னேற்றமடைய முடியுமென்பது திண்ணம். அரண்மனை மாடியிலே அம்சதூளிகா மஞ்சத்திலே அமர்ந்துள்ள அரிவையை அடைய ஆங்குச் சென்ற ஆணழகன், அகழின்
ஆழத்துக்கோ, அதிலே அலையும் முதலையின் வாய்க்கோ அஞ்சினால், எங்ஙனம் மங்கையைப் பெறமுடியும்! இலட்சியமெனும் எழிலுடையாளைப் பெற்று இன்புற எண்ணுவோரிற் பலர், அகழிக்கு அஞ்சி, புறத்தே நின்று புகைபடு மனமுடன் போரிட்டுக் கொண்டோ, புலம்பியோ கிடப்பர். ஒரு சிலருக்கே, உழவுக்கேற்ற விளைவு எனும் மொழிவழி நடக்கும் அறிவாற்றல் உண்டு. அவர் தமைச் சலிப்பு அண்டாது. சாகசத்துக்கு அவர் பலியாகார், போலியைக் கண்டு ஏமாறார், புல்லரின் புன்மொழி கேட்டுப் புழுங்கார், தாக்கிய வேலினைத் தூக்கியெறிந்துவிட்டுப், போர்க்குப்
புகின் யார்க்கும் இது நேரல் முறையே என்பது தெரிந்து, புலியுடன் போரிடுகையிலே, கிலி எனும் வலி கொளல் கூடாது என்பதறிந்து, உயிர் கெடும் வரை நெடுவரைபோல் நின்று போரிடுவர் வீரர். கட்சிப்பணியும், களத்துப் பணி போன்றே, வீரருக்கு ஏற்றதேயன்றி விலாவிலே விரக்திப் புழு நடமாடுவோருக்கோ, மனதிலே சுயநலமெனும் குளவி கொட்டிடுவோருக்கோ ஏற்றதன்று. சிறு செயல் புரிய மட்டுமே தெரிந்தோர்க்குப் பெருநெறி பிடித்தலரிது.<noinclude></noinclude>
lfgzksyfsvhfezl44gkeq1mdadhv8ux
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/123
250
130165
1837866
816632
2025-07-01T13:57:25Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைடை||121}}</noinclude>கட்சிப் பணிக்கு இத்தகைய கடமையுணர்த்த காவலர் தேவை.” (வர்ணாஸ்ரமம்)
தாழ்ந்து கிடந்த சமுதாயத்துக்கு விழிப்பும் வீர உணர்வும் புகுத்த வேண்டும் என்ற நோக்குடன், வரலாற்று நிகழ்ச்சிகளை விறுவிறுப்பான நடையில் எடுத்துச் சொல்லும் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார் அண்ணாதுரை. அவற்றின் ஆரம்பமே எடுப்பாக இருக்கும். ஒரு நாடகப் பாங்குடன் அது மேலே செல்லும். உதாரணமாக, ‘அந்த ஜூலை 14!’ என்ற கட்டுரையின் துவக்கப் பகுதியைப் பாரிக்கவாம்.
“ஜூலை 14! உலக வரலாற்று ஏட்டிலே உன்னதமான இடத்தைப் பெற்றுவிட்டது. அந்நாளே வீர பிரஞ்சு மக்களின் வெற்றிநாள்! எதிரி நாட்டின்மீது போரிட்டுப் பெற்ற வெற்றியா? இல்லை! கொடுமையை எதிர்த்துக் கொடுங்கோலை எதிர்த்து, அன்று வரை குமுறிக் கிடந்த கூட்டம், அந்நாள் வரை அடக்குமுறையினால் தாக்கப்பட்டு அடிமைப்பட்டு, ‘இம்மென்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்’ என்ற நிலையிலே சிக்கிச் சிதைந்து, நசுக்கப்பட்டு நாதியற்றுக் கிடந்த மக்கள், நிமிர்ந்து நின்று, புனல் சொரிந்த கண்களினின்றும் கனலைக் கக்கி, பெருமூச்சை நிறுத்திப் பெருமுழக்கங் கிளப்பி, தருசுதர்களின் தாளைத் தொட்டுக் கிடந்த கரங்களிலே, வாளேந்தி, விடுதலை; விடுதலை! என்ற புரட்சி கீதம் பாடிக்கொண்டு படைபோல் திரண்டு, இடிபோல் ஆர்ப்பரித்து, புயலெனக் கோபத்தை வீசி போக போகத்திலே புரண்டு, பொதுமக்களைப் பொதி மாடுகளாக்கி, அரசியலைக் கொடுமைக் கருவியாகக் கொண்டு, மக்களைக் கசக்கிப் பிழிந்து, அவர்தம் மானத்தை மண்ணெனக் கருதி, மதித்து, செருக்கு நிறைந்த சீமான்கள் எதேச்சாதிகாரம் செய்து வந்ததை ஒரே அடியில், ஒரே<noinclude>{{rh|பா—8||}}</noinclude>
ijipg4cnyw4l5y22l1slbuqibxz5src
1838060
1837866
2025-07-02T04:22:54Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைடை||121}}</noinclude>கட்சிப் பணிக்கு இத்தகைய கடமையுணர்த்த காவலர் தேவை.” (வர்ணாஸ்ரமம்)
தாழ்ந்து கிடந்த சமுதாயத்துக்கு விழிப்பும் வீர உணர்வும் புகுத்த வேண்டும் என்ற நோக்குடன், வரலாற்று நிகழ்ச்சிகளை விறுவிறுப்பான நடையில் எடுத்துச் சொல்லும் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார் அண்ணாதுரை. அவற்றின் ஆரம்பமே எடுப்பாக இருக்கும். ஒரு நாடகப் பாங்குடன் அது மேலே செல்லும். உதாரணமாக, ‘அந்த ஜூலை 14!’ என்ற கட்டுரையின் துவக்கப் பகுதியைப் பார்க்கலாம்.
“ஜூலை 14! உலக வரலாற்று ஏட்டிலே உன்னதமான இடத்தைப் பெற்றுவிட்டது. அந்நாளே வீர பிரஞ்சு மக்களின் வெற்றிநாள்! எதிரி நாட்டின்மீது போரிட்டுப் பெற்ற வெற்றியா? இல்லை! கொடுமையை எதிர்த்துக் கொடுங்கோலை எதிர்த்து, அன்று வரை குமுறிக் கிடந்த கூட்டம், அந்நாள் வரை அடக்குமுறையினால் தாக்கப்பட்டு அடிமைப்பட்டு, ‘இம்மென்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்’ என்ற நிலையிலே சிக்கிச் சிதைந்து, நசுக்கப்பட்டு நாதியற்றுக் கிடந்த மக்கள், நிமிர்ந்து நின்று, புனல் சொரிந்த கண்களினின்றும் கனலைக் கக்கி, பெருமூச்சை நிறுத்திப் பெருமுழக்கங் கிளப்பி, தருகதர்களின் தாளைத் தொட்டுக் கிடந்த கரங்களிலே, வாளேந்தி, விடுதலை; விடுதலை! என்ற புரட்சி கீதம் பாடிக்கொண்டு படைபோல் திரண்டு, இடிபோல் ஆர்ப்பரித்து, புயலெனக் கோபத்தை வீசி, போக போகத்திலே புரண்டு, பொதுமக்களைப் பொதி மாடுகளாக்கி, அரசியலைக் கொடுமைக் கருவியாகக் கொண்டு, மக்களைக் கசக்கிப் பிழிந்து, அவர்தம் மானத்தை மண்ணெனக் கருதி, மதித்து, செருக்கு நிறைந்த சீமான்கள் எதேச்சாதிகாரம் செய்து வந்ததை ஒரே அடியில், ஒரே<noinclude>{{rh|பா—8||}}</noinclude>
dbmwquz7ksc4wcf0ihdgfveznnl8knl
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/124
250
130167
1837874
816633
2025-07-01T14:05:11Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|122||பாரதிக்குப் பின்}}</noinclude>நாளில், ஒரே பெரும் புரட்சியில், அடித்து நொறுக்கி, உருத்தெரியாதபடி அழித்த நாள் அந்த ஜூலை 14...”
இப்படி வளர்கிறது இன்னும் மேலே—
“முகாரி முடிந்து அடாணா ஆரம்பமான நாள்! மாடப்புறா வல்லூறைத் துரத்திய நாள்! மன்னர் மருண்ட நாள்! சீமான்களின் தலை சிதறிய நாள்! மதுக்கிண்ணமேந்திய மனோஹரிகளின் இதழ் தரும் சுவையிலே இகத்தின் ரசத்தைக் கண்டு, பரலோக ரசம் பாதிரிமாரின் கைவசம் இருக்கிறது, கேட்டால் கிடைக்கும், அதற்காகத் தேடி அலை வானேன் என்று மதோன்மத்தர்கள் அரண்மனை செல்லப்பிள்ளைகள், ஆணவ சொரூபங்கள் ஆடிப் பாடிக் கிடந்த கோலாகலத்தை வேரறுத்த நாள்! ஓடப்பரெல்லாம் உதையப்பரான நாள்! விலங்கு பூட்டப்பட்டு வேதனையை அடைந்த கரங்களிலே வீரவான் ஜொலித்த நாள்! விடுதலை நாள்! வீரரின் வெற்றித் திருநாள்! வெறியரின் வீழ்ச்சி நாள்!”
அண்ணாதுரையின் எழுத்துக்களில் ஒரு குறைபாடு—ஒரு சிறு விஷயத்தை வைத்துக் கொண்டு அளவுக்கு அதிகமாக அளப்பது. சுருங்கச் சொல்கிற தன்மை அவரிடம் இல்லை. சுவையாகச் சொல்லப்பட்டாலும், தேவை இல்லாமலே சவ்வுமிட்டாய்த்தனம் பண்ணியிருப்பது பாராட்டக் கூடியதாக இல்லை. மேடையில் மணிக்கணக்கிலே பேசும் பழக்கம் சிறுவிஷயத்தை மிகப் பெரிதாக வளர்த்தலையும். சொன்னதையே வெவ்வேறு விதங்களில் திரும்பத் திரும்பக் கூறும் தன்மையையும் அவருடைய இயல்புகளாகிவிட்டன. எழுத்து நடையிலும் அது பிரதிபலிக்கிறது.
மக்களைக் கவரவேண்டும் என்பதற்காக அண்ணாதுரையும் புராணங்களில் உள்ள ஆபாசங்களையும், கம்பராமாயணத்தில் கலந்துள்ள ஆபாசவர்ணனை எனத்தாம் கருதி-<noinclude></noinclude>
7020q6a4vzioovdm7drafg9o7wgyg6e
1838061
1837874
2025-07-02T04:24:47Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838061
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|122||பாரதிக்குப் பின்}}</noinclude>நாளில், ஒரே பெரும் புரட்சியில், அடித்து நொறுக்கி, உருத்தெரியாதபடி அழித்த நாள் அந்த ஜூலை 14...”
இப்படி வளர்கிறது இன்னும் மேலே—
“முகாரி முடிந்து அடாணா ஆரம்பமான நாள்! மாடப்புறா வல்லூறைத் துரத்திய நாள்! மன்னர் மருண்ட நாள்! சீமான்களின் தலை சிதறிய நாள்! மதுக்கிண்ணமேந்திய மனோஹரிகளின் இதழ் தரும் சுவையிலே இகத்தின் ரசத்தைக் கண்டு, பரலோக ரசம் பாதிரிமாரின் கைவசம் இருக்கிறது, கேட்டால் கிடைக்கும், அதற்காகத் தேடி அலைவானேன் என்று மதோன்மத்தர்கள், அரண்மனை செல்லப்பிள்ளைகள், ஆணவ சொரூபங்கள் ஆடிப் பாடிக் கிடந்த கோலாகலத்தை வேரறுத்த நாள்! ஓடப்பரெல்லாம் உதையப்பரான நாள்! விலங்கு பூட்டப்பட்டு வேதனையை அடைந்த கரங்களிலே வீரவாள் ஜொலித்த நாள்! விடுதலை நாள்! வீரரின் வெற்றித் திருநாள்! வெறியரின் வீழ்ச்சி நாள்!”
அண்ணாதுரையின் எழுத்துக்களில் ஒரு குறைபாடு—ஒரு சிறு விஷயத்தை வைத்துக் கொண்டு அளவுக்கு அதிகமாக அளப்பது. சுருங்கச் சொல்கிற தன்மை அவரிடம் இல்லை. சுவையாகச் சொல்லப்பட்டாலும், தேவை இல்லாமலே சவ்வுமிட்டாய்த்தனம் பண்ணியிருப்பது பாராட்டக் கூடியதாக இல்லை. மேடையில் மணிக்கணக்கிலே பேசும் பழக்கம் சிறுவிஷயத்தை மிகப் பெரிதாக வளர்த்தலையும். சொன்னதையே வெவ்வேறு விதங்களில் திரும்பத் திரும்பக் கூறும் தன்மையையும் அவருடைய இயல்புகளாகிவிட்டன. எழுத்து நடையிலும் அது பிரதிபலிக்கிறது.
மக்களைக் கவரவேண்டும் என்பதற்காக அண்ணாதுரையும் புராணங்களில் உள்ள ஆபாசங்களையும், கம்பராமாயணத்தில் கலந்துள்ள ஆபாசவர்ணனை எனத் தாம் கருதி-<noinclude></noinclude>
kikna3ktj3y6ao1hohg81a74xlgdqol
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/125
250
130169
1837887
816634
2025-07-01T14:29:35Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||123}}</noinclude>யவைகளையும் சுவையாக விவரித்திருக்கிறார். சொல்வதை நயமாகச் சொல்ல அவருடைய நடை கைகொடுத்துள்ளது.
“‘இரும்பனைய நெஞ்சுடையோன் பரிசனித்த இடையணியைக் களைந்தாள். கணமொன்று கவலை கொண்டாள். முகில் சிறிது மூடிய முழுமதிபோல் நின்றாள்’ என்ற கருத்துப்பட, மங்கை நிர்வாணமாவதை, ஆடை களைவதைக் கூறுகிறார் கவி. நிர்வாணமான பிறகு குதிரைமீதமர்ந்து மங்கை சென்றதைக் கூறுகையில், டெனிசன் கற்பெனும் ஆடை பூண்ட காரிகை, குதிரைமீதேறிச் சென்றாள் என்ற கருத்துப்பட, Then she rode forth, clothed on with chastity என்று கூறுகிறார். ஒரு உத்தமி நிர்வாணமாக, ஊரை வலம் வந்த கதையை, ஓர் கவி வல்லவர், ஆங்கிலர் மட்டுமேயன்றி, அவனியில் வேறு பல நாட்டினரும் வியந்திடும் அளவு புலமை கொண்ட டெனிசன், இவ்வளவு நாகரிகமாக நாசுக்காகப் பாடியிருக்கிறார். இதனால், ஆங்கில் நாட்டிலே கலை வளம் குன்றிவிடவில்லை. கவிதா ஊற்று வறண்டுவிடவில்லை. ‘பாவம்’ பாழாகிவிடல்லை, புலமை புகைந்து போகவில்லை. மொழிவளம் கெட்டுப்போவில்லை, இவ்வண்ணம் பாடினதால், டெனிசனைக் கவிதா விற்பன்னர் பட்டியிலே நேர்ல் கலாகாதென்று கூறும் மட்டியும் எவரும் இல்லை தோழர்களே கம்பர். இராமகாதையிலே கொட்டியிருக்கும் காமரசத்தைக் காண்போர், கம்பரிடம் மட்டும், ஆடைகளைந்து அசுவமேறி ஊர்உலவிய உத்தமியின் கதையைப் பாடிட ‘கண்டிராக்டு’ விட்டிருந்தால், எவ்வளவு மலைமலையான ஆபாசத்தை அழகழகாப் பாடியிருப்பார், என்பதைக் சற்றே சிந்தித்து பாருங்கள்! பிராட்டியின் உருவையே நிர்வாணமாக்கிக் காட்டிடும் பெரும் புலவரின் கவிதைத் திறத்திடம், நிர்வாண நங்கை சிக்கியிருந்திருப்பின் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நினைக்கும்போதே நடுக்கம் பிறக்கிறது. டெனிசன் அனுசரித்த முறை, ஒழுக்கத்தையும்,<noinclude></noinclude>
0qnh25mas4e7v79h7zuguw0wdx8tg3u
1838062
1837887
2025-07-02T04:27:18Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838062
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||123}}</noinclude>யவைகளையும் சுவையாக விவரித்திருக்கிறார். சொல்வதை நயமாகச் சொல்ல அவருடைய நடை கைகொடுத்துள்ளது.
“‘இரும்பனைய நெஞ்சுடையோன் பரிசளித்த இடையணியைக் களைந்தாள். கணமொன்று கவலை கொண்டாள். முகில் சிறிது மூடிய முழுமதிபோல் நின்றாள்’ என்ற கருத்துப்பட, மங்கை நிர்வாணமாவதை, ஆடை களைவதைக் கூறுகிறார் கவி. நிர்வாணமான பிறகு குதிரைமீதமர்ந்து மங்கை சென்றதைக் கூறுகையில், டெனிசன் கற்பெனும் ஆடை பூண்ட காரிகை, குதிரைமீதேறிச் சென்றாள் என்ற கருத்துப்பட, Then she rode forth, clothed on with chastity என்று கூறுகிறார். ஒரு உத்தமி நிர்வாணமாக, ஊரை வலம் வந்த கதையை, ஓர் கவி வல்லவர், ஆங்கிலர் மட்டுமேயன்றி, அவனியில் வேறு பல நாட்டினரும் வியந்திடும் அளவு புலமை கொண்ட டெனிசன், இவ்வளவு நாகரிகமாக நாசுக்காகப் பாடியிருக்கிறார். இதனால், ஆங்கில் நாட்டிலே கலை வளம் குன்றிவிடவில்லை. கவிதா ஊற்று வறண்டுவிடவில்லை. ‘பாவம்’ பாழாகிவிடல்லை, புலமை புகைந்து போகவில்லை. மொழிவளம் கெட்டுப்போவில்லை, இவ்வண்ணம் பாடினதால், டெனிசனைக் கவிதா விற்பன்னர் பட்டியிலே சேர்க்கலாகாதென்று கூறும் மட்டியும் எவரும் இல்லை. தோழர்களே கம்பர் இராமகாதையிலே கொட்டியிருக்கும் காமரசத்தைக் காண்போர், கம்பரிடம் மட்டும், ஆடைகளைந்து அசுவமேறி ஊர்உலவிய உத்தமியின் கதையைப் பாடிட ‘கண்டிராக்டு’ விட்டிருந்தால், எவ்வளவு மலைமலையான ஆபாசத்தை அழகழகாப் பாடியிருப்பார், என்பதைக் சற்றே சிந்தித்து பாருங்கள்! பிராட்டியின் உருவையே நிர்வாணமாக்கிக் காட்டிடும் பெரும் புலவரின் கவிதைத் திறத்திடம், நிர்வாண நங்கை சிக்கியிருந்திருப்பின் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நினைக்கும்போதே நடுக்கம் பிறக்கிறது. டெனிசன் அனுசரித்த முறை, ஒழுக்கத்தையும்,<noinclude></noinclude>
3e2aoesf4u7uuuhtm51wgjpxae1q1qa
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/126
250
130171
1837899
816635
2025-07-01T14:43:20Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|124||பாரதிக்குப் பின்}}</noinclude>உயர்ந்த எண்ணத்தையும், தூய்மையையும், தோகையரின் மேன்மையையும் உணர்த்துமா, வாம மேகலை இறவளர்ந்த அல்குலை உடையவள் பிராட்டி என்று கூறிய கம்பரின் கவிதை முறை, இத்ததைய உயரிய எண்ணத்தைக் கிளப்புமா என்று கேட்கிறேன். புளித்த காடி தாகவிடாய் தீர்க்குமா, இளநீர் போக்குமா என்று கேட்கிறேன். புண்ணிலிருந்து (வடிவது) தாற்றமடிக்கும், பூவிலிருந்து மணம் வீசும்! புலமை என்றால், புனிதமான எண்ணத்தைப் பக்குவமாகப் புகுத்த வேண்டுமேயொழிய, மேலிட மறைவிட வர்ணனைக்குக் கருவியாக இருக்க வேண்டுமா என்றுதான் நான் கேட்கிறேன்.” (கம்பரசம்)
அரசியல் உண்மைகளை அழுத்தமாகக் கூறுகிறபோது, சாதாரண மக்களும் இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் சர்வ சாதாரண விஷயங்களை உதாரணங்களாக அடுக்கி, உரிய கருத்தை நன்கு பதிய வைக்கும் திறன் அண்ணாதுரையின் உரைநடையில் கலந்து மிளிர்கிறது. இதோ ஒரு பகுதி—
“மோட்டார் நன்றாக ஓட, அதை ஓட்ட விசை இருந்தால் மாத்திரம் போதாது—அது தவறான வழியில் சென்றால் தடுக்க ‘பிரேக்’கும் வேண்டும்! நாடு செழிக்க நல்ல ஆறு இருந்தால் மாத்திரம் போதாது—அதிலிருந்து வெள்ளம் புரண்டு ஊரை அழித்து விடாமல் இருக்கக் கரைவேண்டும்? நல்ல காளையை ஓட்ட சிறு சவுக்கு இருந்தால் மாத்திரம் போதாது—அதைக் கிழக்கேயும் மேற்கேயும் திருப்ப மூக்கணாங் கயிறும் வேண்டும்! வீட்டிற்கு வாயிற்படி இருந் தால் மாத்திரம் போதாது—வாயிற்படிக்குக் கதவு வேண்டும். கதவுக்குத் தாழ்ப்பாளும் வேண்டும்! அது போலவே, ஜனநாயக காலத்தில், குடியரசு வந்த பிறகு, நாட்டில் நல்லாட்சி நடக்க வேண்டுமானால், ஆளும் கட்சி ஒன்று இருந்தால் மாத்திரம் போதாது—மாற்றுக் கட்சியும்<noinclude></noinclude>
32d9l935c2co92taxxqs3gltv26tyo4
1838063
1837899
2025-07-02T04:28:59Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838063
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|124||பாரதிக்குப் பின்}}</noinclude>உயர்ந்த எண்ணத்தையும், தூய்மையையும், தோகையரின் மேன்மையையும் உணர்த்துமா, வாம மேகலை இறவளர்ந்த அல்குலை உடையவள் பிராட்டி என்று கூறிய கம்பரின் கவிதை முறை, இத்ததைய உயரிய எண்ணத்தைக் கிளப்புமா என்று கேட்கிறேன். புளித்த காடி தாகவிடாய் தீர்க்குமா, இளநீர் போக்குமா என்று கேட்கிறேன். புண்ணிலிருந்து (வடிவது) நாற்றமடிக்கும், பூவிலிருந்து மணம் வீசும்! புலமை என்றால், புனிதமான எண்ணத்தைப் பக்குவமாகப் புகுத்த வேண்டுமேயொழிய, மேலிட மறைவிட வர்ணனைக்குக் கருவியாக இருக்க வேண்டுமா என்றுதான் நான் கேட்கிறேன்.” (கம்பரசம்)
அரசியல் உண்மைகளை அழுத்தமாகக் கூறுகிறபோது, சாதாரண மக்களும் இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் சர்வ சாதாரண விஷயங்களை உதாரணங்களாக அடுக்கி, உரிய கருத்தை நன்கு பதிய வைக்கும் திறன் அண்ணாதுரையின் உரைநடையில் கலந்து மிளிர்கிறது. இதோ ஒரு பகுதி—
“மோட்டார் நன்றாக ஓட, அதை ஓட்ட விசை இருந்தால் மாத்திரம் போதாது—அது தவறான வழியில் சென்றால் தடுக்க ‘பிரேக்’கும் வேண்டும்! நாடு செழிக்க நல்ல ஆறு இருந்தால் மாத்திரம் போதாது—அதிலிருந்து வெள்ளம் புரண்டு ஊரை அழித்து விடாமல் இருக்கக் கரைவேண்டும்? நல்ல காளையை ஓட்ட சிறு சவுக்கு இருந்தால் மாத்திரம் போதாது—அதைக் கிழக்கேயும் மேற்கேயும் திருப்ப மூக்கணாங் கயிறும் வேண்டும்! வீட்டிற்கு வாயிற்படி இருந்தால் மாத்திரம் போதாது—வாயிற்படிக்குக் கதவு வேண்டும். கதவுக்குத் தாழ்ப்பாளும் வேண்டும்! அது போலவே, ஜனநாயக காலத்தில், குடியரசு வந்த பிறகு, நாட்டில் நல்லாட்சி நடக்க வேண்டுமானால், ஆளும் கட்சி ஒன்று இருந்தால் மாத்திரம் போதாது—மாற்றுக் கட்சியும்<noinclude></noinclude>
nx1emooght1mmxjmpxkd0cxhc266y03
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/127
250
130173
1837912
816636
2025-07-01T14:54:13Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||125}}</noinclude>வேண்டும். மாற்றுக் கட்சி இல்லாத ஜனநாயக சர்க்கார், பிரேக் இல்லாத கார், கரை இல்லாத ஆறு, மூக்கணாங்கயிறு இல்லாத மாடு! ஆகவே ஆளும் கட்சிக்கு அது அடக்குவாரற்று அக்கிரமம் செய்யும் கட்சியாக மாறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள ஒரு மாற்றுக் கட்சி தேவை.”(நாம்)
பிறமொழிப் பதங்கள் தமிழில் சேர்வதை அண்ணாதுரை வெறுக்கவில்லை இதர மொழிச் சொற்களை அவர் தாராளமாகவே தன் உரைநடையில் எடுத்தாண்டிருக்கிறார்.
“நெறியில்லாதவனுக்கு நெறி காட்ட, ஒளி காணாதவனுக்கு ஒளிகாட்ட ஒரு ஜோதி—ஆண்டவன்!
அசுத்தமான உலகில் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதை விளக்க,
அநாகரிக உலகில் நாகரிக போதனையின் நாதனாக விளங்க.
கபடம்; வஞ்சகம், காய்ச்சல் முதலியன கொண்ட உள்ளத்திலே, கருணை, நேர்மை, அன்புடைமை முதலிய அருங்குணங்கள் உண்டாகச் செய்ய ஒரு குருநாதன் ஆண்டவன்! எங்கும் நிறைந்து, எந்தச் சக்தியும் பெற்று எல்லையில்லாத இன்பத்தின் எல்லையாகி, சத்திய சொரூபியாகி, சாட்சாத்காரமாகி, சகல ஜீவாத்மாக்களுக்கும் ரட்சகனாகி, பதியாகி உள்ள பரமன்—ஆண்டவன்.
கடவுளைப் பற்றிக் கசிந்து கண்ணீர் மல்கி, பலர் கூறுவர் இதுபோல! ஆம். நெறி, ஒளி, நீதி, வாய்மை, தூய்மை, அன்பு—இவையே கடவுள். அழிவான தெய்வமே! எங்கும் நிறைகின்ற பொருளே! அன்பே சிவம்! உண்மையே ஆண்டவன்!—என்று பவர் போதித்தனர்.” (தேவலீலைகள்)
அண்ணாதுரை பல சிறுகதைகளும், சில நாவல்களும் எழுதியுள்ளார். அவருடையவை ‘சிறுகதை’களே அல்லா தாவல்கள் இலக்கியத் தன்மை பெற்றனவாகவும் இல்லை.{{nop}}<noinclude></noinclude>
iilsmsvnldm3m0q3ne9imhggshqru5y
1838065
1837912
2025-07-02T04:31:06Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838065
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||125}}</noinclude>வேண்டும். மாற்றுக் கட்சி இல்லாத ஜனநாயக சர்க்கார், பிரேக் இல்லாத கார், கரை இல்லாத ஆறு, மூக்கணாங்கயிறு இல்லாத மாடு! ஆகவே ஆளும் கட்சிக்கு அது அடக்குவாரற்று அக்கிரமம் செய்யும் கட்சியாக மாறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள ஒரு மாற்றுக் கட்சி தேவை.” (நாம்)
பிறமொழிப் பதங்கள் தமிழில் சேர்வதை அண்ணாதுரை வெறுக்கவில்லை இதர மொழிச் சொற்களை அவர் தாராளமாகவே தன் உரைநடையில் எடுத்தாண்டிருக்கிறார்.
“நெறியில்லாதவனுக்கு நெறி காட்ட, ஒளி காணாதவனுக்கு ஒளிகாட்ட ஒரு ஜோதி—ஆண்டவன்!
அசுத்தமான உலகில் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதை விளக்க,
அநாகரிக உலகில் நாகரிக போதனையின் நாதனாக விளங்க.
கபடம்; வஞ்சகம், காய்ச்சல் முதலியன கொண்ட உள்ளத்திலே, கருணை, நேர்மை, அன்புடைமை முதலிய அருங்குணங்கள் உண்டாகச் செய்ய ஒரு குருநாதன் ஆண்டவன்! எங்கும் நிறைந்து, எந்தச் சக்தியும் பெற்று எல்லையில்லாத இன்பத்தின் எல்லையாகி, சத்திய சொரூபியாகி, சாட்சாத்காரமாகி, சகல ஜீவாத்மாக்களுக்கும் ரட்சகனாகி, பதியாகி உள்ள பரமன்—ஆண்டவன்.
கடவுளைப் பற்றிக் கசிந்து கண்ணீர் மல்கி, பலர் கூறுவர் இதுபோல! ஆம். நெறி, ஒளி, நீதி, வாய்மை, தூய்மை, அன்பு—இவையே கடவுள். அழிவான தெய்வமே! எங்கும் நிறைகின்ற பொருளே! அன்பே சிவம்! உண்மையே ஆண்டவன்!—என்று பலர் போதித்தனர்.” (தேவலீலைகள்)
அண்ணாதுரை பல சிறுகதைகளும், சில நாவல்களும் எழுதியுள்ளார். அவருடையவை ‘சிறுகதை’களே அல்ல; நாவல்கள் இலக்கியத் தன்மை பெற்றனவாகவும் இல்லை.{{nop}}<noinclude></noinclude>
0q61vac534y33nd8ecwkfz78sb2h2z4
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/128
250
130174
1837919
816637
2025-07-01T15:03:50Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|126||}}</noinclude>‘பாட்டியம்மா ‘பாட்டி’ ஆகி, பிறகு ‘கிழவி’யாகி, பிறகு ‘ஏ! யாரது?’ ஆகி, பிறகு ‘போ! போ!’ என்றாகி பிறகு ‘இதேதடா தொல்லை’ என்றாகி, ‘பெரிய சனியன்’ என்றாகி ‘பிசின், இலேசில் விடாது’ என்றாகி, இப்போது கவனிப்பார், கவலைப்படுவாரற்ற ஓர் உருவமாகிவிட்ட நிலை!’ —இது போன்ற நயமான வர்ணிப்பு அபூர்வமாகச் சில இடங்களில் காணக் கிடைக்கும். மற்றப்படி சுத்த வளவளா!
அண்ணாதுரையின் பேச்சு, அவரைப் போலவே நாமும் பேசவேண்டும் என்ற ஆசையை அவருடைய ‘தம்பிகள்’ பலருக்கு ஏற்படுத்தியது போலவே, அவருடைய எழுத்து அண்ணாதுரையைப் போல நாமும் எழுதவேண்டும் என்ற எழுச்சியைப் பல இளைஞர்களிடையே உண்டாக்கியது. ஆனால், அண்ணாதுரையின் படிப்பும் பயிற்சியும், அறிவும் ஆற்றலும், சிந்தனையும் உள்ளத்தின் ஒளியும் அவர்களில் எளவரிடமும் இல்லாததால், உரைநடையில் அண்ணாதுரை பெற்ற வெற்றியை மற்றவர்கள் பெறஇயலாமல்போயிற்று.{{nop}}<noinclude></noinclude>
fdvcujwwsj7i9z2cm4natneuyn2lmgj
1838067
1837919
2025-07-02T04:32:23Z
Booradleyp1
1964
/* சரிபார்க்கப்பட்டவை */
1838067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|126||}}</noinclude>‘பாட்டியம்மா ‘பாட்டி’ ஆகி, பிறகு ‘கிழவி’யாகி, பிறகு ‘ஏ! யாரது?’ ஆகி, பிறகு ‘போ! போ!’ என்றாகி பிறகு ‘இதேதடா தொல்லை’ என்றாகி, ‘பெரிய சனியன்’ என்றாகி ‘பிசின், இலேசில் விடாது’ என்றாகி, இப்போது கவனிப்பார், கவலைப்படுவாரற்ற ஓர் உருவமாகிவிட்ட நிலை!’ —இது போன்ற நயமான வர்ணிப்பு அபூர்வமாகச் சில இடங்களில் காணக் கிடைக்கும். மற்றப்படி சுத்த வளவளா!
அண்ணாதுரையின் பேச்சு, அவரைப் போலவே நாமும் பேசவேண்டும் என்ற ஆசையை அவருடைய ‘தம்பிகள்’ பலருக்கு ஏற்படுத்தியது போலவே, அவருடைய எழுத்து அண்ணாதுரையைப் போல நாமும் எழுதவேண்டும் என்ற எழுச்சியைப் பல இளைஞர்களிடையே உண்டாக்கியது. ஆனால், அண்ணாதுரையின் படிப்பும் பயிற்சியும், அறிவும் ஆற்றலும், சிந்தனையும் உள்ளத்தின் ஒளியும் அவர்களில் எவரிடமும் இல்லாததால், உரைநடையில் அண்ணாதுரை பெற்ற வெற்றியை மற்றவர்கள் பெறஇயலாமல்போயிற்று.{{nop}}<noinclude></noinclude>
i9ctdwtmn99xztd3qvxfyqst42zxz4c
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/129
250
130176
1838072
816638
2025-07-02T04:45:39Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>16. லா. ச. ராமாமிருதம்</b>}}}}
{{larger|<b>சொ</b>}}ற்களைக் கொண்டு அற்புதமான கலைச்சித்திரங்கள் அமைப்பதில் தனித் தேர்ச்சியும், ஆற்றலும் பெற்ற படைப்பாளி லா. ச. ராமாமிருதம் ஆவார். அவருடைய கதைகள் தனிச்சிறப்புடன் திகழ்வதற்கு, கதைகளில் அவர் எடுத்தாள்கிற விஷயங்களைப் போலவே, அவர் கையாள்கிற உரைநடையும் முக்கியக் காரணங்களின் ஒன்று ஆகும். எடுத்துக்கொண்ட விஷயத்தைக் கலைநயத்தோடு கதையாகப் பின்னுவதில் அவர் காட்டுகிற சிரத்தையையும் உற்சாகத்தையும், கதையைச் சொல்லிச் செல்கிற நடை அமைப்பிலும் அவர் ஈடுபடுத்தியிருக்கிறார். ஆகவே, அவருடைய எழுத்துக்கள் உயிரும் உணர்வும் பொதிந்த அழகிய சொற் சித்திரங்களாக விளங்குகின்றன.
கதையில் வரும் சூழ்நிலைகளைச் சித்திரிப்பதிலும், கதைமாந்தரின் உணர்ச்சிகளை வர்ணிப்பதிலும் லா. ச. ர. மிகுந்த அக்கறை காட்டியுள்ளார். அத்தகைய கட்டங்களில் அவருடைய உரை நடை கைத்தேர்ச்சியுடன் உருவாக்கப்பெற்ற எழிற்கோலமாக வளர்கிறது.
‘அபூர்வ ராகம்’ என்ற கதையில் வருகிற ஒரு கட்டம் இது—
“புயலில் குடையைக் கொண்டு போக சாத்தியமில்லை. தூறல் முகத்தில் சாட்டை அடித்தது. தெரு விளக்கின் வெளிச்சத்தில் குடைக்கம்பி கனத்தில் பளபளத்துக்<noinclude></noinclude>
02zcrfcsimrjfiiueohvan3sd2u0phj
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/130
250
130178
1838073
816640
2025-07-02T04:55:10Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|128||பாரதிக்குப் பின்}}</noinclude>கொண்டு பூமிக்கும் வானத்திற்கும், ஜல்லி கட்டியது போன்றிருந்தது. தெருவில் ஜலம் பிரவாகமாய் ஓடியது. சாபம் பிடித்ததுபோல் தெரு வெறிக் சென்றிருந்தது. இந்த மழையில் எங்களைத் தவிர எவன் கிளம்புவான்? எதிர்க்காற்றில் முன் தள்ளிக்கொண்டு ஒருவரை யொருவர் இறுகத் தழுவியபடி ஜலத்தில் இழுத்து இழுத்து நடந்து சென்றோம்.
இடையிடையே இடியில் பூமி அதிர்ந்தது.
கடலில் அலைகள் மதில்கள்போல் எழுந்து, மனிதனின் ஆசைக் கோட்டைபோல் இடிந்து விழுந்தன. எங்களை வாரி வாயில் போட்டுக் கொள்ள வேண்டுவதுபோல், துரத்திக் கொண்டு ஓடிவந்தன. ஏமாற்றமடைந்த அரக்கனின் ஆத்திரம்போல், அலைகளின் கோஷம் காதைச் செவிடுபடுத்திற்று. ஒரு அலை அவளைக் கீழே தள்ளிவிட்டது. வெறி கொண்டவள் போல் சிரித்தாள். ஜலத்தின் சிலுசிலுப்பு சதையுள் ஏறுகையில் நெருப்பைப் போல் சுறீலெனப் பொரித்தது. புயலில் எங்கள் அங்கங்களே பிய்ந்துவிடும் போவிருந்தன.
திடீரென்று இடியோடு இடி மோதி ஒரு மின்னல் வானத்தின் வயிற்றைக் கிழித்தது. இன்னமும் என் கண்முன் நிற்கிறது அம்மின்னல், மறைய மனமில்லாமல் தயங்கிய வெளிச்சத்தில், நான் கண்ட காக்ஷி! குழுமிய கருமேகங்களும், காற்றில் திரைபோல் எழும்பி குளவியாகக் கொட்டும் மணலும், கோபக்கண் போல் சமுத்திரத்தின் சிவப்பும். அலைகளின் கழிப்பும், அடிபட்ட நாய்போல் காற்றின் ஊளையும், பிணத்தண்டை பெண்கள் போல், ஆடி, ஆடி அலைத்து, அலைந்து, மரங்கள் அழும் கோரமும்!
“இத்தனைக்கும் மூலகாரணி போல் அவள் நின்றாள்.”
சாதாரணச் சொற்கள்தான். வரி வரியாக கவனித்தால் எனிய சொல்லடுக்குகள் தான். ஆனாலும், லா. ச. ரா<noinclude></noinclude>
go557h41lw1n2cb97jynzg25dgdo8lo
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/131
250
130180
1838074
816641
2025-07-02T05:13:30Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||129}}</noinclude>அவற்றைக் கோர்த்துச் சொல்கிற முறையினால் உரைநடை இனிய வசீகரம் பெற்று விடுகிறது. இதை அவருடைய ஒவ்வொரு கதையிலும் காணமுடியும்.
ஒரு உதாரணம்:
“கட்டவிழ்த்து சரித்த பசுங் கூந்தலிலிருந்து முகத்தில் அலைமோதும் பிரி இது.
அவளையே அள்ளி உண்ணும், பசுமை நிறைந்து, தாமரைக் குளம் போன்ற கண்கள் இவை.
நீங்காத மௌனம் நிறைந்து அம் மௌனத்திலேயே முழுகிப்போன வாய் இது.
அகன்ற மனதில் கிளர்ந்த ஆசை. வெளியும் வர இயலாது, உள்ளும் அடங்க இயலாது, முண்டிய மார்பு இது. பச்சை மேலாக்கினடியில் பட்டுப்போன்ற வயிறு இது.
அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஓரே முச்கில் அளந்துவிட முயலுவது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தையிது.” (பச்சைக் கனவு)
எழுதிச் செல்கிறபோது, வாக்கியங்களில் வினைச்சொல், வாக்கிய அமைப்பு மரபு முதலியவைகளுக்கு லா. ச. ர. முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தனி ‘எபெக்ட்’ தருவதற்காக அப்படி அப்படியே சொற்களைவிட்டு விடுவது அவருடைய உரைநடை உத்திகளில் ஒன்று
‘வயிற்றில் பகீர்’
‘உடல் மணம் காற்றுவாக்கில் சிறு வெடிப்பாய் குபீர்.’
“இத்தனை வித சப்தங்களின் நடு நாடியை அடைந்துவிட்டாற்போல் காதுகளில் ‘ரொய்ஞ் என்று ஒரு கூவல் கண்டு தலை கிரர்ர்ர்—”
“அபூர்வ ராகம், அதே வக்கரிப்பு. பிடாரன் கை பிடிபடாத பாம்பு போல், அபாயம் கலந்த படபடப்பு.<noinclude></noinclude>
3bagf49ourmrmwre2e1cg29vipu94rn
1838076
1838074
2025-07-02T05:16:54Z
Sridevi Jayakumar
15329
1838076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||129}}</noinclude>அவற்றைக் கோர்த்துச் சொல்கிற முறையினால் உரைநடை இனிய வசீகரம் பெற்று விடுகிறது. இதை அவருடைய ஒவ்வொரு கதையிலும் காணமுடியும்.
ஒரு உதாரணம்:
“கட்டவிழ்த்து சரித்த பசுங் கூந்தலிலிருந்து முகத்தில் அலைமோதும் பிரி இது.
அவளையே அள்ளி உண்ணும், பசுமை நிறைந்து, தாமரைக் குளம் போன்ற கண்கள் இவை.
நீங்காத மௌனம் நிறைந்து அம் மௌனத்திலேயே முழுகிப்போன வாய் இது.
அகன்ற மனதில் கிளர்ந்த ஆசை. வெளியும் வர இயலாது, உள்ளும் அடங்க இயலாது, முண்டிய மார்பு இது. பச்சை மேலாக்கினடியில் பட்டுப்போன்ற வயிறு இது.
அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஓரே முச்கில் அளந்துவிட முயலுவது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தையிது.” (பச்சைக் கனவு)
எழுதிச் செல்கிறபோது, வாக்கியங்களில் வினைச்சொல், வாக்கிய அமைப்பு மரபு முதலியவைகளுக்கு லா. ச. ரா. முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தனி ‘எபெக்ட்’ தருவதற்காக அப்படி அப்படியே சொற்களைவிட்டு விடுவது அவருடைய உரைநடை உத்திகளில் ஒன்று
‘வயிற்றில் பகீர்’
‘உடல் மணம் காற்றுவாக்கில் சிறு வெடிப்பாய் குபீர்.’
“இத்தனை வித சப்தங்களின் நடு நாடியை அடைந்துவிட்டாற்போல் காதுகளில் ‘ரொய்ஞ் என்று ஒரு கூவல் கண்டு தலை கிரர்ர்ர்—”
“அபூர்வ ராகம், அதே வக்கரிப்பு. பிடாரன் கை பிடிபடாத பாம்பு போல், அபாயம் கலந்த படபடப்பு.<noinclude></noinclude>
q019yyh6upqvox03c2icg3he3an7j8m
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/132
250
130181
1838083
816642
2025-07-02T05:23:52Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|130||பாரதிக்குப் பின்}}</noinclude>ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடாது, பழகப்பழக எல்லையேயற்றதுபோல், நடையுடை பாவனைகளில் சித்தும் ஒரு கவர்ச்சி. வேட்டையில் வேடுவன்மேல் பாயத் திரும்பிய மிருகம்போல பயந்த ஒரு முரட்டுத்தனம். சிலிர்சிலிர்ப்பு.”
இப்படி எவ்வளவோ எடுத்துக் காட்டலாம்.
சர்வ சாதாரண விஷயங்களைக் கூட வெகு அழகான நடையில் லா.ச. ரா. குறிப்பிடுவது வழக்கம்.
அவள் அழுதாள், அல்லது கண்ணீர் சிந்தினாள் என்பதை அவர் இவ்வாறு சித்திரிக்கிறார்: (ஒருத்தி சிந்திய கண்ணீர் ஒருவன்மீது விழுந்ததைக் குறிப்பிடுகையில்)—“அவன் பிடரியில் இரு நெருப்புத் துளிகள் சுரீலெணச் சுட்டுப் பொரிந்து நீர்த்தன.”
இத்தகைய அழகான பிரயோகங்கள் லா. ச. ரா. எழுத்தில் சகஜமாகக் காணப்படும்.
‘நிமிஷத்தின் சிமிழிலிருந்து மையை எடுத்து இட்டுக் கொண்டு வருடங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.’
‘விசனத் திரை லேசாய் அவன் மேல் மடிபிரித்து விழுகையில்—’
‘சப்தமே சப்திக்க சோம்பிற்று,’
‘மாலை முதிர்ந்து இருள் தோட்டத்தில் வாழை மரங்களிலும் வைக்கோற் போரிலும் கிணற்றடியிலும் வழிய ஆரம்பித்தது. வானம் அப்பொழுதுதான் தூக்கம் கலைந்ததுபோல், அதன் பல்லாயிரம் கண்கள் ஒவ்வொன்றாயும் ஒருங்கொருங்காயும் விழித்துச் சிமிட்ட ஆரம்பித்தன.’
“நான் செல்லும் நடைபாதை பச்சை நடுவில் செம்பட்டைதீட்டி, பாம்பின் ‘சொரேலுடன்’ சூரியனை நோக்கி வளைந்து வளைந்து சீறி விரைந்து செம்மணல், பொடிந்த கண்ணாடியென இளம் வெய்யிலில் பளபளத்தது.”{{nop}}<noinclude></noinclude>
e2wpaiol6sk2cotc9alct0krz9aacyx
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/133
250
130183
1838123
816643
2025-07-02T05:54:25Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||131}}</noinclude>கதை மாந்தரின் உணர்ச்சிக் குழப்பங்களைச் சித்திரிக்கும் இடங்களில் லா.ச.ரா. விசேஷமான வர்ணனை நடையைக் கையாள்கிறார். விரிவான உதாரணம் ஒன்றைக் காணலாம்—
“அம்மாவையும் பிள்ளையையும் சேர்ந்தாற்போல் கண்டதும் ராஜியின் நெற்றியும் கன்னங்களும் கழுத்தும் சிவப்பு லாந்தரைத் தூக்கிப்பிடித்தாற்போல் குங்குமமாய்ச் சிவந்தன. ராஜத்தின் மேனி ஏற்கெனவே நல்ல சிவப்பு. வெறும் வெளிறிட்ட சிவப்பல்ல: அழகுச் சிவப்பு. பழுத்த நெற்கதிர்களின் மேல் படும் பொன் வெயிலின் தகதகக்கும் சிவப்பு.
‘என்ன ராஜம்?’
சிறைப்பட்ட பறவையின் சிறகுகள் போல் ராஜத்தின் கண் இமைகள் படபடவென்று அடித்துக் கொண்டன. கனவு கலைந்த விழிகளிலிருந்து அந்தக் கனவே உருகிக் கனந் தாங்காது விழியோரங்களிலிருந்து வழிந்து அவள் கணவன் இதயத்துள் கொட்டி விழுந்து, விழுந்த இடங்களைத் தஹித்தன. சிவராஜனுக்கு உடல் பரபரத்தது.
‘ராஜம், மாடிக்கு வா!’
கவிந்த தலையுடன் ராஜம் அவனை மாடிக்குத் தொடர்ந்தாள். கொண்டையில் வில்லாய்ச் செருகிய மல்லிகையின் மணம் கம்மென்று சாவித்ரியின் மேல் மோதியது: சாவித்ரி அப்படியே திகைத்து நின்றாள். முற்றத்தில் மரத் தொட்டி ஜலத்தில், நன்றாய்ச் சிறகுகளைக் கோதி, மூக்கை உள்ளே விட்டு அலசி, ஆற அமர ஒரு காக்கை குளித்துக் கொண்டிருந்தது. அதை ஓட்ட வேணும் என்று உள் நினைவில் ஓர் எண்ணம் எழுந்து அவளைத் தூண்டிக் கொண்டிருந்ததே தவிர, அதைச் செயலாக்க உடல் மறுத்துவிட்டது. அதன் மேல் திடீரென ஓணான் கொடி படர்ந்தது; மேலே சிலந்திக் கூடு கட்டி, பூஞ்சைக்<noinclude></noinclude>
iasmpgiozo518cppgbx67d3saonhvev
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/134
250
130185
1838129
816644
2025-07-02T06:02:12Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|132||பாரதிக்குப் பின்}}</noinclude>காளானும் பூத்துவிட்டாற்போல அவ்வளவு புராதன உணர்ச்சி படர ஆரம்பித்தது. முற்றத்தில் ஒரு மஞ்சள் பூனை வெயிலில் வெகு சுகமாய்க் கால்களை நீட்டியபடி உறங்கிக் கொண்டிருந்தது.” (சாவித்ரி)
லா. ச. ரா. எழுத்தில் சிந்தனை கனம் சேர்கிறபோது சாதாரண வாசகனுக்குக் குழப்பம் ஏற்படுத்துகிற சொற்பின்னல் தோன்றுகிறது.
“சில விஷயங்கள் சில சமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு. முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நோந்த விதமல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது. நேர்ந்த சமயத்தில் நேர்ந்தபடி அவை நேர்வது அல்லாது முடியாது, நேர்ந்தமையால், அதனால் நேர வேண்டியவையாய் ஆனதால் அவைகளில் ஒரு நேர்மையும் உண்டு. அந்த நேர்மை தவிர அவை நேர்ந்ததற்கு வேறு ஆதாரம் இல்லை. வேண்டவும் வேண்டாம். அவைகளின் ஸ்வரங்களே அவ்வளவுதான்.” (தாக்ஷாயணி)
“அன்றோடு ஜம்பு சரி, இனிமேல் ஜம்பு இல்லை.
இல்லை. அப்படிச் சொல்வதும் தப்பு. ஜம்பு இருந்து கொண்டே இல்லை. இல்லாமலே இருந்து கொண்டிருக்கிறான்...” (சாவித்ரி)
“மூடு சூளையாய்ப் பேசுவதிலேயே எனக்கு ஒரு ஆசை இதுவரை அவளுடன் பளிச்செனப் பேசியதில்லை. மிருகங்கள் வாய் திறவாது ஒன்றையொன்று புரிந்து கொள்வது போல, நாங்கள் அர்த்தமற்ற, அல்ல, அர்த்தம் மறைந்த வார்த்தைகளைப் பேசியே ஒருவரை யொருவர் அர்த்தம் கண்டு கொள்வதில் ஒரு இன்பம்.”{{nop}}<noinclude></noinclude>
9zfwfukthhj7rcfgklxbry4gycdy4mt
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/135
250
130187
1838139
816645
2025-07-02T06:11:59Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||133}}</noinclude>இத்தகைய விவரிப்புகளும், லா. ச. ரா, புரியாத விதத்தில் எழுதுகிறார் என்ற பொதுவான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களாகின்றன.
பாம்பு—நாத வெள்ளம் இவைகளை உவமைகளாகவும் உருவகங்களாகவும் அமைப்பதில் லா. ச. ரா.வுக்கு ஆர்வம் அதிகம். இயற்கை வர்ணனைகளிலும், கதாபாத்திர உணர்ச்சிகள் அல்லது மன நிலை வர்ணிப்பிலும் இவை விதம் விதமாக இடம் பெறுகின்றன. அழகிய சொற்கோலங்களாக அவை காட்சி தருகின்றன. ஒரு எடுத்துக்காட்டு:
“எல்லா அரயங்களும் அடங்கிய அவ்வேளையில் தம்பூரிலிருந்து பொழியும் அவ்வோசை பாம்பு போல் அவள் மேல் வழிந்து கவ்விற்று, அது தன்னை விழுங்குவதை உணர்ந்தாள். நாத வெள்ளம் கிறுகிறுவென மூக்கு விளிம்பு வரை ஏறிற்று. மூச்சுத் திணறிற்று. இனி ஒன்றும் பண்ணுவதற்கில்லை எனத் தெளிந்ததும் திடீரென மட்டற்ற மகிழ்ச்சி அவளுள் பொங்கிற்று. அதில் தன்னை இழந்த மசிழ்ச்சியுடன் சமர்ப்பித்துக் கொண்டு, மழை நாளில் குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல், தான் சுழலில் அடித்துக் கொண்டு போவதை உணர்ந்தாள். அந்த மூல முர்க்க ஆனந்தத்தில், மூழ்கித் திணறும் மூச்சு நுனியில் கடைந்தெழுந்து எண்ணங்கள் உருவாகையில் அவை தண்ணீருள் பேசிய பேச்சுப்போல் சத்தம் இழந்து வார்த்தைகள் இழந்து வேகத்தில் வரம்புகளும் இழந்து வெற்றாய் நின்று பம்பரமாய் ஆடும் ஒன்றிலிருந்து வெறும் நீயும் நானுமாய்ப் பிரிந்து அவைகளின் ஜீவனாய் மாத்திரம், சுருதியோசை வெள்ளத்தில் நீந்துகையில், உடல் தாங்க முடியாது மூர்ச்சையில் மூழ்கிப் போனாள்.” (தாக்ஷாயணி)
இவ்வாறெல்லாம் அவர் எழுதியிருப்பனவற்றைப் படிக்கிறபோது—அவருடைய கதாபாத்திரம் ஒன்று கூறுவது<noinclude></noinclude>
g5koixubz1w15acnlk5ugflz9x1mc0o
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/136
250
130189
1838142
816646
2025-07-02T06:19:00Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|134||}}</noinclude>போல ‘உன் பாஷைக்குத் தலைவணங்குகிறேன்’ என்று உள்ளம் குறிப்பிடும்.
லா. ச. ராமாமிருதத்தின் எழுத்தாற்றல் ஆச்சரியகரமானது. கதை சொல்லும் முறையில் அவர் சோதனைகளும் சாதனைகளும் செய்திருப்பது போலவே, அவற்றை எழுதும் உரைநடையிலும் அவர் சோதனைகளும் சாதனைகளும் மிகுதியாகப் புரிந்திருக்கிறார். அவருடைய உரைநடையின் வீச்சையும் வளத்தையும், ஆழத்தையும் அழுத்தத்தையும், அவருடைய சிறுகதைகளைப் போலவே, ‘புத்ர’, ‘அபிதா’ ஆகிய நாவல்களும் எடுத்துக் காட்டுகின்றன.{{nop}}<noinclude></noinclude>
5nqb4bv9m2whe6dvh4t4a4ltuf92ku4
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/137
250
130190
1838222
816647
2025-07-02T08:51:43Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838222
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>17. எழுத்தில் கொச்சை</b>}}}}
{{larger|<b>எ</b>}}ழுத்தில் பேச்சு வழக்கைக் கலக்கக் கூடாது எனும் இலக்கண விதி நெடுங்காலம் பின்பற்றப்பட்டு வந்தது பேச்சு மொழியைக் ‘கொச்சை’ என்று கூறிப் பண்டிதர்கள் ஒதுக்கி வைத்தனர். பேச்சு வழக்கு இடத்துக்கு இடம் மாறுபட்டுக் காணப்படுகிறது; இனத்துக்கு இனம் வேறுபட்டிருக்கிறது. எனவே மக்கள் பேசுகிற பாஷையை அப்படி அப்படியே எழுத்தாக்கினால் குழப்பம் ஏற்படும்; எழுத்தின் புனிதம் கெட்டுவிடும்; படிப்பவர்களுக்கும் எளிதில் விளங்காமல் போகும் என்ற கருத்தும் நிலவிவந்தது. அதனால், பேச்சு நடைக்கும் எழுத்து நடைக்கும் மிகுந்த வேறுபாடு இருந்தது.
பேசுவது போல் எளிமையாக எழுதவேண்டும்— வழக்கில் உள்ள ஜீவனுள்ள மொழியை எழுத்தாக்க வேண்டும்—என்ற நோக்குடன், உரை நடையில் மறுமலர்ச்சி புகுத்தியவர்கள் கூட, பேச்சு வழக்குகளை அப்படி அப்படியே கையாளத் தயங்கினார்கள். கதைகளில் கதா பாத்திரங்கள் பேசுகிறவற்றையும் ‘புத்தகத் தமிழில்’ எழுதுவதுதாண் மரபு ஆக ஆளப் பெற்று வந்தது.
பாரதியார் கூட, கதா பாத்திரங்களின் உரையாடல்ளை எழுத்து நடையில்தான் எழுதினார். அவ்வாறு எழுதுவது தான் முறை, நல்லதும்கூட என்றே அவருக்குப் பின் வந்த படைப்பாளிகளில் பலரும் கருதினர். ‘கல்கி’ ரா. கிருஷ்ண-<noinclude></noinclude>
te4ft0v1ekc6fw6mz4ack5uq5ip1fba
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/138
250
130192
1838233
816648
2025-07-02T09:04:48Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838233
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|136||பாரதிக்குப் பின்}}</noinclude>மூர்த்தியும் அவரைப் பின்பற்றியவர்களும் இந்த விதியையே ஆதரித்தார்கள். இந் நாட்களில் கூட அநேகர் இந்த மரபை அனுஷ்டிக்கிறார்கள்.
இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது—மனிதரின் போக்குகளையும் இயல்புகளையும், தன்மைகளையும், தவறுகளையும், பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் உள்ளது உள்ளபடி சித்தரிப்பது—என்ற கொள்கை உடையவர்கள், மனிதரின் பேச்சுக்களையும் உள்ளவாறே எழுத்தில் வழங்க முற்பட்டார்கள்; பேச்சுமுறை இடம் மட்டுமின்றி—இனத்துக்கு இனம் மாத்திரமல்லாது—மனிதனுக்கு மனிதன் மாறுபடுவதும் இயல்பாக இருக்கிறது. தேர்ந்த படைப்பாளி இந் நுணுக்கங்களை எழுத்தாக்குவதில் வெற்றி பெறுகிறான்.
இலக்கியத்தில் ‘கொச்சை’யின் இடம்பற்றி வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு பேர் தங்கள் கருத்துக்களை அறிவித்தது உண்டு. ஒரு சந்தர்ப்பத்தில், ‘சுதேசமித்திரன்’ தீபாவளி மலரில் லா. ச. ராமாமிருதம் ‘எழுத்தில் கொச்சை’ பற்றி தனது எண்ணங்களை அழகான கட்டுரையாக எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையே அருமையான ஒரு படைப்பாக அமைந்திருந்தது.
எழுத்தில் உரை நடையை அதன் பல்வேறு தன்மைகளிலும் திறம்படக் கையாள ஆசைப்பட்டு, அதையே தீவிரமாய் சாதகம் செய்து, பெரும் வெற்றிகள் கண்டுள்ள லா. ச. ரா., கொச்சை நடைக்கும் கலை மெருகும், இலக்கிய அந்தஸ்தும் ஏற்றியிருக்கிறார். இதை அவருடைய கதைகளில் நன்கு காணலாம்.
சொற்களுக்கு அழகும் மெருகும் ஜீவனும் சேர்ப்பதில் லா. ச. ரா. அளவுக்கு ஆர்வமும், ஆசையும், முயற்சியும், உழைப்பும், ஆற்றலும் அக்கறையும் கொண்ட படைப்-<noinclude></noinclude>
q7hfx9lao39ab9riwhzkvtpkgmsktdv
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/139
250
130194
1838241
816649
2025-07-02T09:14:40Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||137}}</noinclude>பாளிகள் தமிழ் மொழியில் வேறு எவரும் இல்லை என்றே சொல்லவேண்டும்.
‘மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்பது பாரதி வாக்கு. தனது சொற்களுக்கு ‘மந்திர சத்தி’ சேரவேண்டும் என்று உண்மையாகவே விரும்பியவர் லா. ச. ரா. ‘தீ’ என்ற சொல்லே சுடுவதாக அமைய வேண்டும் தன் எழுத்தில் என்ற ஆசை அவருக்கு உண்டு.
பேச்சு நடையிலேயே கதை எழுதுகிற வழக்கம் சில தசாப்தங்களுக்கு முன்னரே தமிழில் நடைமுறையில் வந்துவிட்டது. கதாபாத்திரங்களில் இயல்பு—இடம்—இனம் முதலியவற்றுக்கு ஏற்ப அவற்றின் பேச்சு வழக்குகளைச் சித்திரிக்கும் வழக்கமும் சகஜமாகிவிட்டது. இந்த ரீதியிலும் லா. ச. ரா. பல சோதனைகள் செய்து எழுத்துக்கு இனிமையும் அழகும் சேர்த்திருக்கிறார்.
பேச்சு நடையில் (கொச்சையில்) முழுக் கதையையும் புதுமைப்பித்தன், சோதனைக்காகவேனும், எழுதியது கிடையாது. ‘உலகத்துச் சிறுகதை’ ஒன்றை அவர் அவ்வாறு தமிழாக்கியிருக்கிறார். திருநெல்வேலியான் ஒருவன் அசல் திருநெல்வேலித் தமிழில் சுவாரஸ்யமான ஒரு கதையைச் சொல்வதுபோல் பு. பி. எழுதியிருந்தால், அது மிகச் சிறப்பான சிறுகதையாக உருவாகி யிருக்கக்கூடும். ஏனோ அவர் அப்படி ஒரு கதை எழுதவில்லை.
பி. எஸ். ராமையா ‘தலைக்குஊத்திக்கின பொம்பிளெ’ என்று ஒரு கதை எழுதினார்; பட்டணத்து ரிக்க்ஷாக்காரன் பாஷையில், கர்ணன் மனைவியின் சுபாவம் பற்றி சுவையாகச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கதை கர்ணன் யுத்த களத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் அவன் மனைவி வேணுமென்றே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறாள், ஒருவரை வழி அனுப்புகிறபோது, அல்லது வழி அனுப்பிவிட்டு, எண்ணெய் ஸ்நானம் செய்வது அபசகுணம்<noinclude>{{rh|பா—9||}}</noinclude>
jx12v2xfjhawdd16z4t06mqlbx29l7b
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/140
250
130196
1838244
816651
2025-07-02T09:25:33Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|138||பாரதிக்குப் பின்}}</noinclude>ஆகும்; அதனால் நல்லது நேராது என்பது மக்களின் நம்பிக்கை. கர்ணன் மனைவிக்கு, அவன் தேரோட்டி மகன் என்பதால், அவனிடம் மரியாதைக் குறைவு. ஆகவே, ‘தலைக்கு ஊற்றிக்கொண்டு’ அவள் அவனை அனுப்புகிறாள். அவன் திரும்பி வரவேயில்லை. இதை, ‘பட்டணத்து பாஷையில்’ சொல்லும் ரசமான கதை அது.
லா. ச. ரா. பட்டணத்துக் கொச்சை மொழியிலும் கதை எழுதியிருக்கிறார்; பண்பட்ட உயர்குடியினரின் பேச்சு மொழியிலும் கதைகள் படைத்திருக்கிறார்.
ஆனால், லா. ச. ரா.வின் எந்த ஒரு கதையும் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே உத்தியில் அமைவதில்லை. ஒரே கதையில் பல்வேறு முறைகளையும் கையாள்வது அவருடைய இயல்பு. ஒரு பாத்திரம் ஒன்றைச் சொல்லத் தொடங்குவது, நினைவுகூர்தல், நனவோட்டம், ஆசிரியர் கூற்று, உரையாடல்—இப்படிப் பல வழிகளும் கலந்து கிடக்கும். கொச்சை நடை நிறைய வந்து, திடீரெனக் கவிதை நடையாக மாறி, சிக்கல் நடையாகப் பின்னி, சித்திர நடையாக மலர்ந்து—இவ்வாறு அற்புதங்கள் பூக்கும் அநாயாசமாக அவரது எழுத்துக்களில்.
குப்பத்துச் சிறுவனும், அவன் அப்பனும் பேசிக் கொண்டிருப்பதாக ஒரு கதை ஆரம்பிக்கிறது. குப்பத்து பாஷைகூட லா. ச. ரா. எழுத்தில் ஒரு அழகு பெறுகிறது. அதில் ஒரு இடம்—
“நீ இந்தக் காரைப் பாத்தில்லே. நாளைக் காலைலே காட்றேன் பாரு, நீளமா கமா வய வயன்னு—ஆ? அன்னைக்கு செங்காலி அப்பனும் நீயுமா, கட்ட மரத்துப் பின்னாலே ‘போட்’டாட்டமா ஓட்டியாந்தீங்களே ஒரு ராச்சஸ மீனு, அது மாதிரி... சுமா வயவயன்னு மூஞ்சிலே ரெண்டு லைட்டு முழியாட்டம் முழிக்கிது. நான் அதன் ஒடம்பை தொட்டுப் பார்ந்துட்டேருந்தேன். ஆசையா<noinclude></noinclude>
nk6xauh80mbx1biu1f3xsobyd7wea4p
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/141
250
130197
1838251
816652
2025-07-02T09:36:50Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838251
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||139}}</noinclude>இருந்திச்சிப்பா! அப்போ புட்டத்துலே பட்டுனு ஒரு உதை விளுந்துச் சுப்பா. கீளே வியுந்துடற மாதிரி கால் அப்படியே மடிஞ்சி போச்சு. ‘யம்மாடி’ன்னு கத்திட்டு திரும்பிப் பாத்தேன்; யமனாட்டம் நிக்கிறான்!”
இந்த சம்பாஷணை வளர்ச்சியில், பின்னர் அவன் சொல்கிறான்:
“அவனேப் பத்தி நமக்கென்னப்பா இப்போ? நான் இப்போ சொன்னேனே இந்த மீனு இது அலை மேலை தள்ளி வந்து மணல்லே அப்படியே சொருவிக்கிட்டுது. மூஞ்சி தெரியல்லே. கரை மேலே நான் நண்டு துரத்திட்டிருந்தேன். அப்போ வாலு மாத்திரம் ரெண்டு இலை முளைச்சாப்பிலே வெளியிலே நீட்டித் துடிச்சுட்டிருந்தது. என்னாதுன்னு புடிச்சு இளுத்துப் பாத்தா, மீனு! நல்ல அயகு அப்பா. மின்னாலே நீலம், பின்னாலே செழுப்பு. நடுவுலே வெள்ளை, சூரியன் முளைக்கறத்துக்கு முன்னாலே கடல் மேலே மானம் டாலடிக்குது பாரு அப்பா, அதுமாதிரி. இன்னும் உசிர் போவல்லே. வாயை ஆவ் ஆவ்னு தொறந்து தொறந்து மூச்சுக்குத் தேடித் தவிக்குது. அதும் கண்ணை நெனைச்சகா கஸ்டமாயிருக்குது அப்பா. கஞ்சிப்பானைக் கூடையோடே உனக்காகக் கரை மேலே காத்திட்டிருந்தா ஆத்தா இதா பாரம்மான்னு கையிலே புடிச்சுக்கிட்டு ஓடினேன். என் கிட்டேருந்து புடுங்கி கூடையிலே போட்டுக்கிட்டு ஆத்தா என்னை அப்படியே இஸ்து கட்டி அணைச்சுக்கிட்டது. அந்த மீனு ஆம்பிட்டா ரொம்ப ரொம்ப அதிஸ்டமாம்பா!”
அடுத்த ‘பாரா’ அப்பனின் நினைவை—‘நம்ம அதிஸ்டம் தான் தெரிஞ்சிருக்குதே இண்ணைக்கு’ என்ற ரீதியில்—விரிவாகக் கூறுகிறது. பிறகு சம்பாஷணை.
கதை வளர்ச்சியில், ஒரு பாராவிலேயே வெவ்வேறு உத்திகள் கலந்து விடுகின்றன; அது ஆசிரியர் விவரிப்பாக ஆரம்பிக்கிறது:{{nop}}<noinclude></noinclude>
00488s1uvthvlg51bljp1cfczgcqd5s
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/142
250
130199
1838254
816653
2025-07-02T09:47:32Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838254
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|140||பாரதிக்குப் பின்}}</noinclude>“அவன் ஒரு சமயம் அலைகளில் விளையாடிக் கொண்டிருந்தான். நாய்க் குட்டிகள் கீழே புரண்டு ஒன்றையொன்று கடித்து விளையாடுவதுபோல், அலைகள் அவன்மேல் மோதி அவனைக் கீழே தள்ளி, காலடியில் மண்ணைப் பறித்து அவனோடு விளையாடின. அப்பொழுது ஒரு பெரிய அலை திரண்டு, சிகரத்தில் நுரை கக்கிக்கொண்டே வந்து, நேரே அவன்மேல் உடைந்து பின்வாங்குகையில், அவனைக் கரையிலிருந்து அடியோடு பெயர்த்துத் தன்னோடு கிர்ரென்று இழுத்துச் சென்றது. அந்தரத்தில் பந்துபோல் மேலும்கீழும் சுற்றிலும் ‘தண்ணி’. ‘அம்மா’ன்னு அலறித்திறந்த வாயுள் ‘தண்ணி’ புகுந்தது. (இந்த இடம். தனவோட்டம் ஸ்ட்ரீம் ஆஃப் கான்ஷியஸ்னஸ்—ஆக மாறியுள்ளது). கண், காது, மூக்கு எங்கும் ‘தண்ணி’. ‘நான் உசிரோடே இருக்கேனா செத்துப்பூட்டேனா? இரண்டுமே தெரியவில்லை. ஆனால், பூமிலே காலோ கையோ படணும். அவஸ்யமாபடணும். அது ஒன்றுதான் தெரிஞ்சுது’. நல்ல வேளையாய் இன்னொரு அலை இடை கடைந்து எழுந்து, அந்தச் சுழலிலிருந்து அவனைப் பிடுங்கித் தன்னோடு இழுத்துவந்து அப்படியே மணலில் ஓங்கிக் குப்புற அறைந்தது. ‘செத்தேன் புளைச்சேன்’னு ஓடிவந்து விட்டான். ஆனால், அந்தப் பொறி நேரம்—சுள்ளெறும்புக்குக் கண் எம்மாத்தம், அம்மாத்த நேரம், கையும் காலும் பூமியைத் தொடத் துழாவியபோது நெஞ்சு தவித்தது. முன்பின் புரியாத திகில்”
‘மண்’ என்ற கதை செங்கற்பட்டு ஜில்லாவைச் சேர்ந்த ஒரு கிராமவாசி சொல்வதுபோல் எழுதப்பட்டிருக்கிறது. அதன் போக்கிற்கு ஒரு உதாரணம்:
“என்ன இருந்தாலும் ஒரு விசயம் ஒப்புக்கணுங்க.
படிச்சவன் படிக்காதவன் எல்வாரும் புளைச்சாவணும். பசி எல்லாருக்கும் ஒண்ணுதாள்.{{nop}}<noinclude></noinclude>
q7dsyi0cbhsody97i1lh7be59w6axor
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/143
250
130201
1838261
816654
2025-07-02T09:57:45Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838261
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||141}}</noinclude>இந்த உசிர் இருக்கிற வரைக்கும், இந்த ஒரு சாண் வவுத்தை வளர்த்து எப்படியாவது புளைக்கணும்னு தானே, மனுசன் நாலு பேரோடே கூடறான், பிரியறான், சண்டை போடறான். சமாதான மாவறான்! இடையிடையே மாரியாத்தா, வாந்திபேதி, ஒண்ணுமில்லாட்டா வயசு, எல்லாம் அவனை வாரியடிச்சிட்டுப் போவுது. அப்பவும் இந்த உசிரிலே இருக்கிற ஆசையை என்னான்னு சொல்றது. எல்லாமே அதிலேதால் “அடங்கியிருக்குதுங்க. சாமி, பூதம், பிசாசுகூட பயிர் தண்ணிக்குக் காஞ்சா, கொடும்பாவி கட்டியிளுத்து அளுவறான. தண்ணி சாஸ்தியாப் போனா, சுங்கம்மாளுக்கு ரவிக்கை, மஞ்சா, விளக்கு எல்லாம் முறத்திலே வெச்சு தண்ணியிலே விடறான். கோவமடங்கணும், வாழவைக்கணும் தாயேன்னு எல்லையம்மனுக்குப் பூசை போடறான். என்னாத்துக்கு சொல்ல வந்தேன்னா இந்த நம்பிக்கைன்னு ஒண்ணு இருக்குதே அதிலே அவ்வளவு இருக்குது—உடம்பிலே இருக்குதே உசிரில்லே நம்பிக்கைதான் உசிர்.”
‘மேல்தட்டு மனிதர்’களின் பேச்சு முறைகளை லா. ச. ரா.வின் பெரும்பாலான கதைகள் சித்திரிக்கின்றன.
பேச்சு நடையானாலும், கனவு, நினைவு, நனவோட்டம் எந்த முறையாயினும், வா. ச. ரா.–வின் உரைநடை திடீரென்று கவிதைத் தன்மை பெற்று விடுவதையும் அவருடைய கதைகளில் காணமுடியும்.
ஒரு சிறு சொல்கூட லா.சு.ரா.–வின் கவி உள்ளத்தில் இனிய சிலிர்ப்பு ஏற்படுத்திவிடும். ‘உஷை’ என்ற சொல் எவ்வளவு கிளர்ச்சி உண்டாக்கி விடுகிறது பாருங்கள், அவர் உள்ளத்திலே!
“எவ்வளவு அழகான பெயர்! உஷை. உன் பேரை நாக்கில் உகுட்டுகையில், கனத்தில் என்று என்ன<noinclude></noinclude>
21ziat60v8gnng6txamh84dgefxunh5
பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/144
250
130203
1838262
816655
2025-07-02T10:02:49Z
Sridevi Jayakumar
15329
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838262
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|142||}}</noinclude>தோற்றங்கள் எழுகின்றன தெரியுமா? அதுவும் எல்லாம் ஒரே சமயத்தில்!
“பட்சிகளின் கோஷ்டி கானம். சேவலின் அறைகூவல். பசுக்களின் கழுத்து மணிகள். கன்றுக் குட்டிகளின் ‘அம்மே’ வயல்களின் பச்சைக் கதிர்கள் பேசும் ரகசியங்கள். காய்களின் மேல் படரும் செந்திட்டு. ஏற்றச் சாலிலிருந்து சரியும் ஜலத்தின் கொந்தளிப்பு. அதுவே பூஞ்செடிகளின் அடியில் பாய்கையில், மாறும் கிளுகிளுப்பு. அப்பொழுது தான் பூத்த மலர்களின் புது மணம். உஷக்காலப் பூஜையின் ஆராய்ச்சி மணி. கோபுர ஸ்தூபியின் தகதகப்பு. வாசற் குறடுகளின் மேல் பிரம்மாண்டமான கோலங்கள்.”
“உஷை! இரவின் இருளைக் கிழித்துக் கொண்டு புறப்படும் உதயத்தின் தேவதை. என்ன தைரியமான பெயர்?”
லா.ச.ரா.–வின் மனவளம் தனித்தன்மையானது. எனவே, அவருடைய உரைநடையும் தனி ரகமானது, எவராலும் பின்பற்ற முடியாதது.{{nop}}<noinclude></noinclude>
kofr73ynthg2pq7vkfw3c5gk2n4v1ln
பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/5
250
132026
1838180
909488
2025-07-02T07:25:16Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}}
விரிந்த மலர்தொறும் பறந்து சென்று அமர்ந்து, விரும்பிய தேனை நுகர்ந்து சேகரிக்கும் தேனிபோல, வேறுபல நூல்களுக்குக் குறிப்பெடுப்பதற்காகத் திரிந்து, நான் திறந்த விளையாட்டுத்துறை நூல்களில் எல்லாம் வீறு பெற்றுத் தோன்றிய பல சுவையான நிகழ்ச்சிகைள அவ்வப்போது கண்டேன். குறித்துக் கொண்டேன்.
விளையாட்டுக்களிலே வீரர்களும் வீராங்கனைகளும், வேட்கை கொண்டவர்களும் பதித்துச் சென்ற சாதனைகள், பலகாலம் பெற்ற சோதனைகள், விளையாட்டில் மயங்கிக் கிடந்த மன்னர்கள், இராணிகள், செல்வந்தர்கள், அவர்கள் சிந்திச் சென்ற குறிப்புக்கள் அனைத்தையும் சேகரித்து, இன்று வினா விடையாகத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.
விளையாட்டு நிகழ்ச்சிகளை எல்லாம் விளையாடும் இயக்கங்களிலே நேரே கண்டும், வானொலியிலே கேட்டும் செய்தித்தாள்களிலே படித்துச் சுவைக்கும் அன்பர்கள் இந்நூலில் உள்ள வினாக்களை ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ள, ஒருவர் பதில் சொல்ல முடியாதபோது திகைத்துத்துள்ள, இவ்வாறு கூடும் போதெல்லாம் கேட்டு மகிழ வாய்ப்புத் தரும் வண்ணம் வினாக்களைத் தந்துள்ளேன்.
வினாவை முதலில் படியுங்கள். உடனே பதில் தெரிந்தால் சொல்லிப் பாருங்கள். தெரியவில்லை என்றால் சற்று நேசம் சிந்தனை செய்து கூறுங்கள். இல்லையேல்...!
ஏன் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து முனகுபவர்களும் சிலர் உளர். அவர்களுக்காகவும் சேர்த்து, பெறும் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு, வினாவுக்குக் கீழேயே விடையையும்<noinclude></noinclude>
195sne112dgwjs214se1jiwvrcljf3t
பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/6
250
132027
1838181
909510
2025-07-02T07:27:11Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>கொடுத்திருக்கிறேன்.
எவ்வளவு தூரம் இந்த விளையாட்டுக்களில் நாம் லயித்திருக்கிறோம். வரலாறு ஆகியிருக்கும் அந்தச் செய்திகளைக் கிரகித்திருக்கிறோம் என்று தன்னைத் தானே சோதித்துப் பார்க்க இந்நூல் ஒரு சமய சஞ்சீவி.
அன்றாடம் பத்திரிக்கையிலே வந்த செய்திகள்தான் என்றாலும் சில நினைவாற்றலைத் தூண்டும் சங்கதிகளாகும்.
கல்வித்துறையிலே கணிசமான அளவுக்கு ஒரு பெரும் இடத்தைப் பெற்றுத் திளைக்கும் விளையாட்டுத் துறையில், இன்பத்துடன் ஈடுபடும் மாணவர்களுக்கு இந்நூல் பெரிதும் உற்சாகம் ஊட்டுவதாக அமையும்.
விளையாட்டுத்துறை வளர பணியாற்றும் ஆசிரியர் ஆசிரியைகளின் வளமான சிந்தனைக்கு, சற்றுப் பக்கத் துணையாகவும் இந்நூல் உதவும்.
விளையாட்டை விரும்பும் மக்களுக்கு இது ஒர் நல்ல வழிகாட்டியாகவும் விளங்கும்.
ஆயிரமாயிரம் வினாக்களை நமக்கு விடுத்துவரும் பரந்த விளையாட்டுத் துறையில் பிறந்திருக்கும் சில நூறு கேள்விகளை, இயன்ற வரையில் எழுதித் தொகுத்துள்ளேன்.
முடிந்தவரை எல்லா விளையாட்டுக்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கின்றன என்றாலும் இது ஒரு முழு நூல் அல்ல. பெரும் முயற்சிக்கு இது ஒரு தொடக்கம் என்றால் அதுதான் உண்மை.
ஞானமலர் இல்லம், {{float_right|<b>டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா</b>}}<br>
சென்னை-17,<noinclude></noinclude>
fs3266mc4nowq3sr41gh331hm15pud6
பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/7
250
132028
1838184
909532
2025-07-02T07:31:20Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{center|{{x-larger|<b>விளையாட்டுக்களில் <br>
வினாடி வினா விடை</b>}}}}
<b>1.1984ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயங்கள் எங்கே நடைபெற்றன? அதில் சிறப்பான அம்சம் என்ன? </b>
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்றது. அமெரிக்க வீரர் ஜெசி ஒவன்சைப் போல, கார்ல் லூயிஸ் என்ற அமெரிக்க வீரர் 4 தங்கப் பதக்கங்களை வென்று காட்டியதுதான் சிறப்பான அம்சமாகும்.
<b>2. உயரத் தாண்டும் போட்டியில் இடம் பெறுகின்ற தாண்டும் முறைகளை (ஸ்டைல்) விளக்குக.</b>
1. கத்ததிரிக்கோல் தாண்டு முறை மிகப் பழையது. இது 1988ம் ஆண்டோடு கைவிடப்பட்டது.
2. கிழக்கிந்திய தாண்டுமுறை. இதன் ஆரம்ப கர்த்தா ஸ்வீனி என்பவர்
3. மேற்கத்திய தாண்டுமுறை: (Western Roll) இதைக் கண்டு பிடித்தவர் ஜார்ஜ் ஹாரின் எனும் அமெரிக்கர்.
4. பாஸ்பரி தாண்டுமுறை: கண்டு பிடித்தவர் டிக் பாஸ்பரி என்ற அமெரிக்கர்.
<b>3. இந்தியாவின் சிறந்த ஒட்டக்காரி என்ற புகழைப் பெற்ற வீராங்கனை யார்?</b>
கேரளாவைச் சேர்ந்த பி.டி.உஷா. 1984 ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் நான்காவதாக வந்து இந்தியா பெருமை பெறச் செய்தார்.
<b>4. ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட்</b><noinclude></noinclude>
5fa6mvfacgcwzmdjrs0y8uealczbdbp
பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/8
250
132029
1838187
909553
2025-07-02T07:35:17Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|6||விளையாட்டுக்களில் வினாடி வினா விடை}}{{rule}}</noinclude><b>போட்டித் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் யார் ? (1985)</b>
இந்தியாவைச் சேர்ந்த ரவி சாஸ்திரி. அவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்று பரிசு அளிக்கப்பட்டது.
<b>5. விரைவோட்டத்தில் ஒடும் தொடக்கத்தில் எத்தனை தொடக்க முறைகள் உள்ளன? பெயர்களைக் கூறுக?</b>
1. மிகக் குனிந்து நின்று தொடக்கம் (Crouch Start)
2. இடைநிலைத் தொடக்கம் (Medium Start)
3. நீள்நிலைத் தொடக்கம் (Elongated Start)
<b>6. சடுகுடு ஆட்டத்தில் எத்தனை ஆட்டக்காரர் களை மாற்றி ஆடலாம்?</b>
ஆட்ட நேரத்தில், எந்த நேரம் ஆனாலும் 3 மாற்று ஆட்டக்காரர்களை மாற்றிக் கொண்டு ஆடலாம். யாருக்காவது காயம் ஏற்பட்டால், 2 ஆட்டக்காரர்களை அதற்காக மாற்றிக் கொள்ளலாம். ஒருமுறை ஆட உள்ளே ஒருவர் நுழைந்தால், அவர் மீண்டும் வெளியே வந்தும் மற்றவர் மீண்டும் உள்ளே சென்றும் ஆட அனுமதியில்லை.
<b>7. புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் எந்த ஆண்டு மீண்டும் தொடங்கப் பெற்றன? எந்த நாட்டில் முதல் பந்தயங்கள் நடைபெற்றன? </b>
1896ம் ஆண்டு கிரேக்கத்தில் உள்ள ஏதென்ஸ் நகரில் நடைபெற்றன.
<b>8. உலகத்திலேயே மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் என்று புகழப்பட்டவர் யார? அவரது சாதனை என்ன?</b>
மேற்கிந்திய தீவினைச் சேர்ந்த கேரி சோபர்ஸ் (Gary Sobers), அவர் 93 டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 26 சதங்களுக்கு மேல் எடுத்து இருக்கிறார். 236<noinclude></noinclude>
4xdln15wj5j34dumzguq4jjgtdlirji
பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/9
250
132030
1838194
909561
2025-07-02T07:49:13Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh|டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா||7}}{{rule}}</noinclude>விக்கெட்டுக்களை வீழ்த்தி இருக்கிறார். அவர் 365 ஒட்டங்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
<b>9. இப்போது கிரிக்கெட் உலகில் சிறந்த சாதனையாளர் யார்?</b>
பிரியன்லாரா.
<b>10. அவர் நிகழ்த்திய ஓட்டங்களின் சாதனை எவ்வளவு?</b>
375 ஓட்டங்கள்.
<b>11. கைப்பந்தாட்டத்தைக் (Volley Ball) கண்டு பிடித்தவர் யார்? எந்த ஆண்டு? </b>
வில்லியம் மோர்கன் (William Morgan) எனும் அமெரிக்கர்.
கண்டு பிடித்த ஆண்டு 1895.
<b>12. உடற்கல்வியைக் கட்டாயப் பாடத் திட்டமாக ஆக்கியிருக்கும் மாநிலங்கள் எவை எவை?</b>
தமிழ்நாடு மட்டுமே. இந்தியாவில் முதன் முதலாக உடற்கல்வியைக் கட்டாயப் பாடமாக்கிய பெருமை தமிழ் நாட்டையே சாரும்.
<b>13. கூடைப்பந்தாட்டத்தைக் கண்டு பிடித்தவர் யார்? எந்த ஆண்டு?</b>
டாக்டர் ஜேம்ஸ் யெ்சுமித் (Dr. James Naismith) எனும் அமெரிக்கர். கண்டு பிடித்த ஆண்டு 1891 (1892ம் ஆண்டு என்றும் சிலர் கூறுவர்)
<b>14. டென்னிஸ் (Tennis) என்றதும் உடனே நினைவுக்கு வருகின்ற இந்திய ஆட்டக்காரரின் பெயர் என்ன?</b>
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமனாதன் கிருஷ்ணன்
<b>15. உலகிலேயே சிறந்த குத்துச் சண்டை வீரர் (பேரெடைப்</b><noinclude></noinclude>
aqger9k1p0ylfz57jj4bhdd9s3xz18b
பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/23
250
198019
1838068
1242527
2025-07-02T04:36:03Z
Booradleyp1
1964
1838068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="அனிதா செல்வம்" /></noinclude>________________
க.சமுத்திரம்
21
"எங்கய்யா இல்லாம நான் எப்படி வந்துட்டேன்? அது கிடக்கட்டும். இனிமேல், இது ஒம்ம மாடு... சரிதான?"
"நம்ம மாடுன்னு சொல்லு பிள்ள..."
"மணவறத் தட்டுல இருக்கிற பொண்ணு மாப்பிள்ளயளே மாறிப்போற காலத்துல கழுத்துல தாலி ஏறு முன்னால, நான் அப்டிச் சொல்லப் போறதில்ல... அண்ணிக்கு எப்டி இருக்கு?
ஆண்டியப்பன், அவளை முறைத்துப் பார்த்தான். பிரித்துப் பேசும் அவளிடம். 'ஒம்மா புத்திதான... ஒனக்கும் இருக்கும்' என்று சொல்லப் போனவன், கோபத்தை அடக்கிக் கொண்டு, வார்த்தைகளை விடக்கூடாத வன் போல், உதட்டைக் கடித்தபோது, தங்கம்மா, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, மாட்டைத் தடவி விடுவதுபோல், அதன் முதுகைத் தடவி விட்டு அந்தச் சாக்கில், மாட்டின் முதுகின் மீது வந்திருந்த அவன் கையருகே தன் கையை கொஞ்சங் கொஞ்சமாகக் கொண்டு வந்து, அவன் கையைப் பிடித்து, லேசாக வருடிக் கொண்டே, "இப்படிச் சொன்னாலாவது... ஒமக்கு ரோஷம் வந்து. சுந்தரிய, அபிமன்யூ கூட்டிகிட்டு போனது மாதிரி. என்னைக் கொண்டு வருவீரான்னு பாக்கேன்" என்றாள்.
பிறகு அவன் கைமேல். தன் கை 'அதுக்காக' படவில்லை என்று காட்டும் வகையில், "அண்ணி எப்படி இருக்காவ?" என்றாள்.
அவனும் அவள் மேற்கொண்டு எதையாவது பேசி, இப்போது ஏற்பட்ட நெருடலின் நெகிழ்வை கலைத்துவிடக் கூடாது என்று நினைத்தோ அல்லது தங்கையின் நிலையைக் கருதியோ "வீட்டுக்குள்ள... சின்னான் அக்காளோட... எதையோ முனங்கிக் கிட்டு இருக்காள்... போயிப் பாரு" என்றான்.
தங்கம்மா, துள்ளிக் குதித்துப் போனபோது, ஆண்டியப்பனின் மனமும் துள்ளிக் குதித்தது. இந்தப் பசுமாடு... எட்டு லிட்டர் பால் கறக்குது... பதினாலு ரூபாய்... சிங்கத்துல... பால் வாங்காம போனாலும் பரவாயில்ல... வெளியில விற்று பணத்தைக் கட்டலாம். ஐந்து ரூபாய் லோன்ல கழிந்தால், ஐந்து ரூபாய் மாட்டுத் தீவனத்துக்குப் போய்விட்டால், தினம் நாலுரூபாய். மாதம் நூற்றிருபது ரூபாய். தங்கை மகனுக்கு, இனிமேல் நாடிமுத்து பயக்கிட்ட வாங்குற தண்ணிப் பாலுக்குப் பதிலா... நிஜப்பால கொடுக்கலாம். சேருற பணத்துல... தங்கச்சியோட மூக்குத்திய மீட்டணும். ஒரு அட்டியல்' செய்து போடணும். அதை... அவள் கழுத்துல மாட்டி, 'முறச்சிக்கிட்டு இருக்கிற அவள் புருஷன் கிட்ட கெஞ்சி கூத்தாடி ஒப்படைச்சுடணும்.
பரமசிவம். அகங்காரம் பிடித்த மனிதர். நாலு நாளாய், வெளியூர்ல இருக்கார். ஊருக்கு வந்ததும், மாட்டை விட்டுவைப்பாரா? இந்த சொசைட்டி பயலுவ கூட பாலக் கொண்டுபோனால், வாங்க<noinclude></noinclude>
a89s18icomyn3lbprriixazz3rfwusl
பக்கம்:ஒத்தை வீடு.pdf/92
250
202495
1837837
762389
2025-07-01T12:20:27Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||91}}</noinclude>“இந்தா பாரு... கதவைச் சாத்தாதே... இந்த இரவு முழுசும் நமக்குத்தான்...”
அவள், வேசாய் திடுக்கிட்டாள். அவன் குரலில் காட்டிய கடுமை, அவளுக்கு என்னவோ போலிருந்தது. ஆனாலும், தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அரைமணி நேரம் முக்கால் மணியாகியது. அதுவரைக்கும் அவள்தான் பேசினாள். அவன் ஒற்றை வார்த்தையிலேயே பதிலளித்தான். அவள் ‘பலாவான’ சில்மிஷங்களைச் செய்தாள். அந்த சதை வஸ்துவை, அவன் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான்.
இதற்குள், அந்தச் சிறுவன் ஆடி அசைந்து வந்தான். வாங்கியவற்றை அங்கிருந்த டீப்பாயில் பொட்டலங்களாகவும் பாட்டிலாகவும் வைத்துவிட்டு எஞ்சிய நோட்டுக்களையும் சில்லறைகளையும் அப்படியே கொடுத்துவிட்டு, கொசுறுக்காகக் காத்திருக்காமல் போய்விட்டான்.
மனோகர், இரண்டு கிளாஸ்களை எடுத்து பாட்டிலில் கால்வாசியைக் காலி செய்தான். எறா மாதிரி நெளிந்து கிடந்த வலுத்த முந்திரிப்பருப்பு ஒன்றை அவள் வாயில் திணித்தபடியே, ‘நீயும் போட்டுக்கோ...’ என்றான்.
“வாணாம்யா...”
“பழக்கம் கிடையாதா...?”
“அந்தக் கஸ்மாலம் ஒருவாட்டி வற்புறுத்தித் தந்திருக்கான். அடிக்குப் பயந்து நானும் ஊத்திக்கினேன்... அப்புறம் ஆடுனனாம் பாரு ஆட்டம்... அப்படி ஆடுனேனாம். அந்தக் கஸ்மாலத்தைப் போடா வாடான்னு திட்டினேனாம். அவன் வழக்கம்போல் அடிக்க... நான் புதுசாத் திருப்பி அடிக்க... தெருவே திரண்டிட்டு...”
“ஒனக்கு புருஷன்மேலே இருந்த வெறுப்பு அப்படி வெளியாயிருக்கு... இங்கே சூழ்நிலை வேறே... ஒரு ‘பெக்’ போட்டுக்கோ... ‘அதுக்கும்’ நல்லதாம்...”
மனோகர், அவள் வாய் விளிம்பில் அந்தக் கிளாஸை திணித்து, உதடுகளை இரண்டாக்கினான். அவள் அழுத்தம் தாங்காமல் வாயைத் திறக்க, அந்தத் திரவம் அவள் வயிற்றுக்குள் தானாய் ஓடியது. அவன் கோழி வறுவல்களையும், உருளைக்கிழங்கு சிப்ஸையும் அவள் வாய்க்குள் திணித்தபோது, அவள் கிளாஸிலிருந்து தானாகவே கொஞ்சம் ஊற்றி வாய்க்குள் விட்டாள். மூன்றாவது பெக்கை தனக்குமட்டுமல்லாமல்<noinclude></noinclude>
asws2ze16ioa3ghfcyerm2vr93nxclf
பக்கம்:ஒத்தை வீடு.pdf/93
250
202498
1837840
762390
2025-07-01T12:27:05Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|92||ஒத்தை வீடு}}</noinclude>அவனுக்கும் ஊற்றிக் கொடுத்தாள். மெல்ல மெல்ல அவள் இரண்டுபட்டாள் கண்கள் தனியாய் கழன்றன. பிறகு தலையோடு சேர்ந்து சுழன்றன. அவன் சுழன்றான்... அந்த அறையே சுழன்றது... அவள் காளியாய் எழுந்தாள். குதியாய்க் குதித்தாள்... அவன் தோளைப் பற்றித் தூக்கியபடியே... கத்தினாள்...
“ஏன்யா... தெரியாமத்தான் கேக்கேன்... நீ ஆம்பளதானா...? இந்நேரம் அந்தக் கஸ்மாலமாயிருந்தா, என்னமா உருட்டியிருப்பான்... கதவைச் சாத்தாதேன்னு போக்கு காட்டுறியே... எனக்கா தெரியாது... நீ நெசமாவே ஆம்பளைன்னா... வாய்யா பார்க்கலாம்... வாய்யா...”
கங்கா, மல்லாக்க விழுந்தாள். சேலையை அவிழ்த்துப் போட்டாள். தலையைத் தூக்கித் தூக்கி இரண்டு கைகளையும் ஆட்டி ஆட்டி “ஒனக்கு நெசமாங்காட்டியும் தில்லு இருந்தா, வாய்யா... வாய்யா...” என்று அபிநயம் காட்டி குரலிட்டாள்.
போதைக்குள் மூழ்கியிருந்த மனோகருக்கு, உடனடியாய் போதை தெளிந்தது. சத்தம் போட்டவளின் வாயை கைகளால் பொத்தினான். அவள் கடித்த வலி பொறுக்காமல், கட்டிலில் கிடந்த பனியனை பந்து போலாக்கி, அவள் வாய்க்குள் திணித்தான். அவள், அவனை ஒரே தள்ளாய்த் தள்ளிவிட்டு எழுந்தாள். வார்த்தைகள் அம்புகளாகின குரல் அதிர்வேட்டானது.
“ஒன்னையே நம்புற என்னோட வேலையப் பற்றி யோசித்தியா... இன்னாச்சு ஒன் கம்பெனி... பொல்லாத கம்பெனி... போவட்டும்... ஆபீஸ்லயாவது பெர்மனென்டு ஆக்கினியா... ஆமாம்... தெரியாமத்தான் கேக்கேன்... நீ பொம்பளப் பொறுக்கி ஆயிட்டியாமே ஆபீஸ்ல ஒரு கிளார்க்குப் பொண்ணு வனஜா... செருப்பைத் தூக்கிக் காட்டினாளாமே... நான் இருக்கேன்... ஒன் பொண்டாட்டி இருக்காள். இந்த ரெண்டையும் சமாளிச்சாலே ஒனக்குப் பெரிசு... இன்னா மன்ஷன்யா நீ... பொட்டையில்லைன்னா இப்பவே வாய்யா... ஒன்னால நம்ம ஆபீஸே நாறுதுய்யா... என்னையும் ஒன்னையும் அந்தக் கிருஷ்ணன் பய ஏடாகூடமாப் பேசுறான்யா... தாங்க முடியலைய்யா... என்னால தாங்க முடியலைய்யா... எனிக்குப் பழி பாவத்தைக் கொடுத்திட்டியே... என்ன கைவிட்டிடாதேய்யா... என்னக் காப்பாத்தைய்யா.... ஏமாத்திடாதேய்யா... ஏமாத்துவியா? மவனே... ஏமாத்தின என்ன நடக்கும் தெரியுமா?”
கங்கா, படுக்கையிலிருந்து எழுவதும் விழுவதுமாகச் சுழன்றாள். பாவாடை ஜாக்கட்டில் ஒரு சினிமாப் பாட்டைப் பாடினாள். அவன் முதுகில் இரண்டு சாத்துச் சாத்தி, தாவி ஆடினாள் அவன் கையை எடுத்து, தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்... அழுதாள். அந்த அறையே குலுங்கும்படி ஒப்பாரி போட்டாள்<noinclude></noinclude>
iyw9ro9sgw3mrjcxqf4qvf5szaqa5km
1837841
1837840
2025-07-01T12:27:39Z
மொஹமது கராம்
14681
1837841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|92||ஒத்தை வீடு}}</noinclude>அவனுக்கும் ஊற்றிக் கொடுத்தாள். மெல்ல மெல்ல அவள் இரண்டுபட்டாள் கண்கள் தனியாய் கழன்றன. பிறகு தலையோடு சேர்ந்து சுழன்றன. அவன் சுழன்றான்... அந்த அறையே சுழன்றது... அவள் காளியாய் எழுந்தாள். குதியாய்க் குதித்தாள்... அவன் தோளைப் பற்றித் தூக்கியபடியே... கத்தினாள்...
“ஏன்யா... தெரியாமத்தான் கேக்கேன்... நீ ஆம்பளதானா...? இந்நேரம் அந்தக் கஸ்மாலமாயிருந்தா, என்னமா உருட்டியிருப்பான்... கதவைச் சாத்தாதேன்னு போக்கு காட்டுறியே... எனக்கா தெரியாது... நீ நெசமாவே ஆம்பளைன்னா... வாய்யா பார்க்கலாம்... வாய்யா...”
கங்கா, மல்லாக்க விழுந்தாள். சேலையை அவிழ்த்துப் போட்டாள். தலையைத் தூக்கித் தூக்கி இரண்டு கைகளையும் ஆட்டி ஆட்டி “ஒனக்கு நெசமாங்காட்டியும் தில்லு இருந்தா, வாய்யா... வாய்யா...” என்று அபிநயம் காட்டி குரலிட்டாள்.
போதைக்குள் மூழ்கியிருந்த மனோகருக்கு, உடனடியாய் போதை தெளிந்தது. சத்தம் போட்டவளின் வாயை கைகளால் பொத்தினான். அவள் கடித்த வலி பொறுக்காமல், கட்டிலில் கிடந்த பனியனை பந்து போலாக்கி, அவள் வாய்க்குள் திணித்தான். அவள், அவனை ஒரே தள்ளாய்த் தள்ளிவிட்டு எழுந்தாள். வார்த்தைகள் அம்புகளாகின குரல் அதிர்வேட்டானது.
“ஒன்னையே நம்புற என்னோட வேலையப் பற்றி யோசித்தியா... இன்னாச்சு ஒன் கம்பெனி... பொல்லாத கம்பெனி... போவட்டும்... ஆபீஸ்லயாவது பெர்மனென்டு ஆக்கினியா... ஆமாம்... தெரியாமத்தான் கேக்கேன்... நீ பொம்பளப் பொறுக்கி ஆயிட்டியாமே ஆபீஸ்ல ஒரு கிளார்க்குப் பொண்ணு வனஜா... செருப்பைத் தூக்கிக் காட்டினாளாமே... நான் இருக்கேன்... ஒன் பொண்டாட்டி இருக்காள். இந்த ரெண்டையும் சமாளிச்சாலே ஒனக்குப் பெரிசு... இன்னா மன்ஷன்யா நீ... பொட்டையில்லைன்னா இப்பவே வாய்யா... ஒன்னால நம்ம ஆபீஸே நாறுதுய்யா... என்னையும் ஒன்னையும் அந்தக் கிருஷ்ணன் பய ஏடாகூடமாப் பேசுறான்யா... தாங்க முடியலைய்யா... என்னால தாங்க முடியலைய்யா... எனிக்குப் பழி பாவத்தைக் கொடுத்திட்டியே... என்ன கைவிட்டிடாதேய்யா... என்னக் காப்பாத்தைய்யா.... ஏமாத்திடாதேய்யா... ஏமாத்துவியா? மவனே... ஏமாத்தின என்ன நடக்கும் தெரியுமா?”
கங்கா, படுக்கையிலிருந்து எழுவதும் விழுவதுமாகச் சுழன்றாள். பாவாடை ஜாக்கட்டில் ஒரு சினிமாப் பாட்டைப் பாடினாள். அவன் முதுகில் இரண்டு சாத்துச் சாத்தி, தாவி ஆடினாள் அவன் கையை எடுத்து, தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்... அழுதாள். அந்த அறையே குலுங்கும்படி ஒப்பாரி போட்டாள்.{{nop}}<noinclude></noinclude>
be5cgx2v1f97bncvwoewyll8wdhm6n0
பக்கம்:ஒத்தை வீடு.pdf/94
250
202500
1837842
762391
2025-07-01T12:34:35Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||93}}</noinclude>“அந்த கஸ்மாலம் விட்டதுமாதிரி என்னக் கைவிட்டிடாதேய்யா... நீ... விட்டிடுவே... விடத்தான் போறே... எனக்கும் ஒனக்கும் எதுவும் நடக்கல... நடத்தவும் ஒன்னால முடியல... நடக்காமலே முடிக்கிறே... என்னால ஒனக்குப் பிரயோசனமில்ல... ஒன்னால எனக்குப் பிரயோசனமில்ல... என்ன மாதிரி ஒரு வயசுப் பொம்மனாட்டிக்கி இந்த ரூமு முக்கியமில்லய்யா... பெட்டு முக்கியமில்லய்யா... தரை கூடப் போதும்யா... ஏய்யா என்னக் கூட்டி வந்தே...? என்னக் கைவிடப் போறீயே...”
கங்கா, பக்கத்திலிருந்த கிளாஸை எடுத்து பீரோ கண்ணாடி மீது வீசினாள். கையெடுத்துக் கும்பிட்டவனைப் பார்த்துச் சிரித்தாள். கைதட்டினாள்... கதவைக் குத்தினாள்... கொண்டையை அவிழ்த்துப் போட்டாள்... பூக்களைப் பிய்த்துப் போட்டாள்... பாட்டுப் பாடினாள்... தங்தங்கென்று குதித்தாள்.
அறைக்கதவு பலமாக தட்டப்பட்டது. மனோகர் கைகளை நெறித்தான். அவள் கன்னத்தில் கூட, ஒன்று போட்டான். அவள், உடனே ஒப்பாரி இட்டாள். இப்போது கதவுக்கு வெளிப்பக்கம் வசவுகள் கேட்டன. அந்தக் கதவு அதிர்ந்தது. மனோகர் வேறு வழியில்லாமல் பெட்டிப்பாம்பாய் கதவைத் திறந்தான். வெளியே நான்கைந்து பேர் நாகப்பாம்பாய் சீறி நின்றார்கள். வரும்போது வாஞ்சையோடு இந்த அறையில் விட்டுப்போன வரவேற்பாளன், இன்னும் அங்கும் இங்குமாய் ஆடிக் கொண்டிருந்தவளை நோட்டம் போட்டபடியே கத்தினான்.
‘ஏண்டா... ஒன்னப் பார்த்தா படிச்சவன் மாதிரி தெரியுது... இப்படிப்பட்டவள ஏண்டா கொண்டு வந்தே...’
“ஏண்டா கமால்... அவங்கிட்டே போய் நியாயமா கேக்குறே... கற்பழிப்பு கொலைன்னு பழியை நம்ம மேல போட்டுட்டு, தப்பிக்கறதுக்கு வந்திருக்கான்... பேசாம போலீசுக்கு போன் போடு... நீ பேசறியா? நான் பேசட்டுமா...? ஏடி ஒன்னத்தான் இதுக்கு மேலே ஆடின, கடலுக்குள்ள வீசி கடாசிடுவோம்... கடாசினவங்கதான்... கமால்... இன்னுமா டெலிபோனை எடுக்கலை...”
ஒரு மொட்டைத்தலை தடியனின் அதட்டலுக்குக் கட்டுப்பட்டு, வரவேற்புக் கமால், அந்த அறைக்குள் இருந்த டெலிபோனை எடுத்தான். பிரமித்து நின்ற மனோகருக்கு விபரீதம் புரிந்துவிட்டது. கையெடுத்துக் கும்பிட்டு மன்றாடினான்...
‘வேண்டாம் ஸார்... வேண்டாம் ஸார்...’
அந்தச் சமயத்தில் கங்கா, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றினாள்.{{nop}}<noinclude></noinclude>
jai2illfxzuoa0o7zwq8u1w2u9tl3o3
பக்கம்:ஒத்தை வீடு.pdf/95
250
202502
1837843
762392
2025-07-01T12:43:11Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|16||ஒத்தை வீடு}}</noinclude>“ஏன் போலீசுகுறே...? போன்போட்டாப் போடட்டுமே... கொம்பனா... டேய் கஸ்மாலம்... போலீசு மச்சிக்கிட்ட பேசுடா”
இதுவரை தயங்கிய கமால், இப்போது டெலிபோன் எண்களை உறுதியாகச் சுற்றினான்... மனோகர் அவன் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டே மன்றாடினான்...
“என் கழுத்துல கிடக்கிற இந்த நாலு பவுன் செயினை எடுத்துக்குங்க சார்... பையில இருக்கிற ரெண்டாயிரம் ரூபாயும் எடுத்துக்குங்க சார்... இந்த கடிகாரத்தையும் வாங்கிக்கிங்க சார்... ஏய் கங்கா... சார் காலுல விழுடி...”
மனோகர் சுட்டிக் காட்டிய அந்த தடித்த மனிதரை அற்பப் புழுபோல் பார்த்துவிட்டு, கங்கா, மனோகரிடம் மல்லுக்கு வந்தாள்.
“அடப்போடா... அந்தக் கஸ்மாலம் மட்டும் ஒனக்குப் பதிலா இருந்திருந்தால், இந்த மொட்டைப்பயல இன்நேரம் கீய்சுப் போட்டிருப்பான்...”
தடித்த மொட்டை, கமாலிடமிருந்து டெலிபோனை வாங்கியபோது, மனோகர், அவன் காலில் விழுந்தான்.
“வேண்டாம் ஸார். தயவு செஞ்சு வேண்டாம் ஸார்... நான் பெரிய ஆபீஸர் ஸார்... அரெஸ்டானால், என் வேலை போயிடும் சார்... நான் சொன்னதெல்லாம் ஒங்களக்கு தாரேன் சார்...”
“சரி கீழே வந்து நீ சொன்னதையெல்லாம் கழட்டிக் கொடுத்திட்டு லாரியப் பிடித்து ஓடு... இந்த தத்தேறி குட்டி இங்கேயே இருக்கட்டும்... காலைல அனுப்பி வைக்கிறோம்...”
“நீங்க நினைக்கிறமாதிரி அவள், அப்படிப்பட்டவள் இல்லை சார்... போதையிலே உளறினாலும்... புருஷனுக்கு பதிலா என்னையே நம்பியிருக்கிறவள் சார்...”
“இவன் சரிப்படமாட்டான்... போலீசு நம்பர் என்கேஜ்டா...? சரி... மூணாவது மாடியில இருக்கிற, சப்-இன்ஸ்பெக்டரைக் கூட்டி வா... ஏய் ஒன்னத்தான் எதுக்குடி புடவையைக் கட்டுறே... உக்காருடி...”
“சார்... சார்... என் மானம் போயிடும்... வேலை போயிடும்... எங்களை விட்டிடுங்க சார்...”
“இந்தா பாருடா... நீ பண்ணின காரியத்துக்கு நாங்களே ஒன்ன போலீசுல ஒப்படைக்கணும். ஆனால், ஒன்னப் பார்த்தால், பாவமா இருக்கு... நீ மட்டும் தப்பிச்சுப் போயிட்டே இரு. இவள நாங்க விடப் போறதில்லை டேய்... அவ புடவையப் பிடுங்குடா.”{{nop}}<noinclude></noinclude>
1snlpunbgl5hg8j1p3zy46l2t3bpvjd
1837845
1837843
2025-07-01T12:43:30Z
மொஹமது கராம்
14681
1837845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|94||ஒத்தை வீடு}}</noinclude>“ஏன் போலீசுகுறே...? போன்போட்டாப் போடட்டுமே... கொம்பனா... டேய் கஸ்மாலம்... போலீசு மச்சிக்கிட்ட பேசுடா”
இதுவரை தயங்கிய கமால், இப்போது டெலிபோன் எண்களை உறுதியாகச் சுற்றினான்... மனோகர் அவன் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டே மன்றாடினான்...
“என் கழுத்துல கிடக்கிற இந்த நாலு பவுன் செயினை எடுத்துக்குங்க சார்... பையில இருக்கிற ரெண்டாயிரம் ரூபாயும் எடுத்துக்குங்க சார்... இந்த கடிகாரத்தையும் வாங்கிக்கிங்க சார்... ஏய் கங்கா... சார் காலுல விழுடி...”
மனோகர் சுட்டிக் காட்டிய அந்த தடித்த மனிதரை அற்பப் புழுபோல் பார்த்துவிட்டு, கங்கா, மனோகரிடம் மல்லுக்கு வந்தாள்.
“அடப்போடா... அந்தக் கஸ்மாலம் மட்டும் ஒனக்குப் பதிலா இருந்திருந்தால், இந்த மொட்டைப்பயல இன்நேரம் கீய்சுப் போட்டிருப்பான்...”
தடித்த மொட்டை, கமாலிடமிருந்து டெலிபோனை வாங்கியபோது, மனோகர், அவன் காலில் விழுந்தான்.
“வேண்டாம் ஸார். தயவு செஞ்சு வேண்டாம் ஸார்... நான் பெரிய ஆபீஸர் ஸார்... அரெஸ்டானால், என் வேலை போயிடும் சார்... நான் சொன்னதெல்லாம் ஒங்களக்கு தாரேன் சார்...”
“சரி கீழே வந்து நீ சொன்னதையெல்லாம் கழட்டிக் கொடுத்திட்டு லாரியப் பிடித்து ஓடு... இந்த தத்தேறி குட்டி இங்கேயே இருக்கட்டும்... காலைல அனுப்பி வைக்கிறோம்...”
“நீங்க நினைக்கிறமாதிரி அவள், அப்படிப்பட்டவள் இல்லை சார்... போதையிலே உளறினாலும்... புருஷனுக்கு பதிலா என்னையே நம்பியிருக்கிறவள் சார்...”
“இவன் சரிப்படமாட்டான்... போலீசு நம்பர் என்கேஜ்டா...? சரி... மூணாவது மாடியில இருக்கிற, சப்-இன்ஸ்பெக்டரைக் கூட்டி வா... ஏய் ஒன்னத்தான் எதுக்குடி புடவையைக் கட்டுறே... உக்காருடி...”
“சார்... சார்... என் மானம் போயிடும்... வேலை போயிடும்... எங்களை விட்டிடுங்க சார்...”
“இந்தா பாருடா... நீ பண்ணின காரியத்துக்கு நாங்களே ஒன்ன போலீசுல ஒப்படைக்கணும். ஆனால், ஒன்னப் பார்த்தால், பாவமா இருக்கு... நீ மட்டும் தப்பிச்சுப் போயிட்டே இரு. இவள நாங்க விடப் போறதில்லை டேய்... அவ புடவையப் பிடுங்குடா.”{{nop}}<noinclude></noinclude>
mj87uuhryy912z2zgcchcbfzpoud11k
1837928
1837845
2025-07-01T15:13:41Z
Booradleyp1
1964
1837928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|94||ஒத்தை வீடு}}</noinclude>“ஏன் பயப்புடுறே...? போன்போட்டாப் போடட்டுமே... போலீசு கொம்பனா... டேய் கஸ்மாலம்... போலீசு மச்சிக்கிட்ட பேசுடா”
இதுவரை தயங்கிய கமால், இப்போது டெலிபோன் எண்களை உறுதியாகச் சுற்றினான்... மனோகர் அவன் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டே மன்றாடினான்...
“என் கழுத்துல கிடக்கிற இந்த நாலு பவுன் செயினை எடுத்துக்குங்க சார்... பையில இருக்கிற ரெண்டாயிரம் ரூபாயும் எடுத்துக்குங்க சார்... இந்த கடிகாரத்தையும் வாங்கிக்கிங்க சார்... ஏய் கங்கா... சார் காலுல விழுடி...”
மனோகர் சுட்டிக் காட்டிய அந்த தடித்த மனிதரை அற்பப் புழுபோல் பார்த்துவிட்டு, கங்கா, மனோகரிடம் மல்லுக்கு வந்தாள்.
“அடப்போடா... அந்தக் கஸ்மாலம் மட்டும் ஒனக்குப் பதிலா இருந்திருந்தால், இந்த மொட்டைப்பயல இன்நேரம் கீய்சுப் போட்டிருப்பான்...”
தடித்த மொட்டை, கமாலிடமிருந்து டெலிபோனை வாங்கியபோது, மனோகர், அவன் காலில் விழுந்தான்.
“வேண்டாம் ஸார். தயவு செஞ்சு வேண்டாம் ஸார்... நான் பெரிய ஆபீஸர் ஸார்... அரெஸ்டானால், என் வேலை போயிடும் சார்... நான் சொன்னதெல்லாம் ஒங்களக்கு தாரேன் சார்...”
“சரி கீழே வந்து நீ சொன்னதையெல்லாம் கழட்டிக் கொடுத்திட்டு லாரியப் பிடித்து ஓடு... இந்த தத்தேறி குட்டி இங்கேயே இருக்கட்டும்... காலைல அனுப்பி வைக்கிறோம்...”
“நீங்க நினைக்கிறமாதிரி அவள், அப்படிப்பட்டவள் இல்லை சார்... போதையிலே உளறினாலும்... புருஷனுக்கு பதிலா என்னையே நம்பியிருக்கிறவள் சார்...”
“இவன் சரிப்படமாட்டான்... போலீசு நம்பர் என்கேஜ்டா...? சரி... மூணாவது மாடியில இருக்கிற, சப்-இன்ஸ்பெக்டரைக் கூட்டி வா... ஏய் ஒன்னத்தான் எதுக்குடி புடவையைக் கட்டுறே... உக்காருடி...”
“சார்... சார்... என் மானம் போயிடும்... வேலை போயிடும்... எங்களை விட்டிடுங்க சார்...”
“இந்தா பாருடா... நீ பண்ணின காரியத்துக்கு நாங்களே ஒன்ன போலீசுல ஒப்படைக்கணும். ஆனால், ஒன்னப் பார்த்தால், பாவமா இருக்கு... நீ மட்டும் தப்பிச்சுப் போயிட்டே இரு. இவள நாங்க விடப் போறதில்லை டேய்... அவ புடவையப் பிடுங்குடா.”{{nop}}<noinclude></noinclude>
4n7ku252szdwrp7iasmm8dfgsjlwti2
பக்கம்:ஒத்தை வீடு.pdf/96
250
202504
1837847
762393
2025-07-01T12:49:24Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||95}}</noinclude>மொட்டைத் தலையனின் தடித்த கால்களில் போட்டிருந்த கைகளை, மனோகர் வெட்டருவாள் வீச்சோடு எடுத்தான் அவனுக்குள் அவனையறியாமலேயே ஒன்று விஸ்வ ரூபம் எடுத்தது. அவர்களை நேருக்கு நேராய்ப் பார்த்து ஆணையிட வைத்தது. வீறாப்பாய் நின்று சூளுரைக்க வைத்தது...
‘சரி... போலீஸைக் கூப்பிடுங்க... ஆனது ஆகட்டும்... என் உயிர் போவதற்கு முன்னால, இவள நீங்க தொட முடியாது...’
{{dhr|2em}}
<section end="2"/><section begin="3"/>
{{larger|<b>3</b>}}
{{dhr|2em}}
எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து ரகசியமாய் ஏறினார்களோ, அதே இடத்திற்கு அருகே மனோகரும், கங்காவும் ஆட்டோவில் இருந்து பகிரங்கமாய் இறங்கினார்கள். இரவு மரித்துக் கொண்டிருக்கும்போது புறப்பட்டு, பகல் விடியல் குழந்தையாய் பிறந்தபோது, அந்தக் குழந்தையின் தொப்புள் கொடிபோல் ஆகாயத்தில் செஞ்சிவப்பாய் ஒளிக்கற்றை. அந்தப் பிறப்பை அறிவிக்கும் குலவைச் சத்தம்போல் பறவைகளின் சத்தங்கள்.
கங்கா, மனோகரை கண்கூசிப் பார்த்தாள். அந்த அறையில் நடந்த அமர்களத்திற்குப் பிறகு இருவருமே பேசவில்லை. முகத்துக்கு முகம் பார்க்கவில்லை. இப்போதுதான் பார்த்துக் கொண்டார்கள். தலைகளைத் தாழ்த்திக் கொண்டார்கள். மவுனம் பேசிற்று. பார்வைகள் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டன. அவன் பேன்ட் பையில் கையிட்டு ஐந்து இருபது ரூபாய் நோட்டுக்களை, வெறுமையாய் புரட்டிய அவள், கைகளுக்குள் திணித்தான். அவள், அந்த நோட்டுக்களை, அவன் பைக்குள் சொருகியபடியே, ஆற்றாது அரற்றினாள்.
“அந்தப் பசங்க கிட்ட நானு அப்படிப்பட்டவள் இல்லேன்னு நீ சொன்னப்போ... பெருமைப்பட்டேன்... ஆனால், இப்போ நானு அப்படிப்பட்டவள்தான்னு நினைக்கிறது மாதிரி பணத்த நீட்டுறியே சாரே...”
மனோகர், அவளை, அவள் கண்கள் வழியாய்ச் சந்தித்தான் கூடவே அவள் நினைவூட்டும் சம்பவக் கோர்வைகள் தானாய் மனதில் மோதின. இப்போதே அந்த நிகழ்ச்சிகள் அங்கேயே நடப்பதுபோல் கண்கள் பார்த்தன... காதுகள் கேட்டன.{{nop}}<noinclude></noinclude>
pu63uexcojtgfsfqzw993bnzv92pvom
1837849
1837847
2025-07-01T12:49:41Z
மொஹமது கராம்
14681
1837849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||95}}</noinclude>மொட்டைத் தலையனின் தடித்த கால்களில் போட்டிருந்த கைகளை, மனோகர் வெட்டருவாள் வீச்சோடு எடுத்தான் அவனுக்குள் அவனையறியாமலேயே ஒன்று விஸ்வ ரூபம் எடுத்தது. அவர்களை நேருக்கு நேராய்ப் பார்த்து ஆணையிட வைத்தது. வீறாப்பாய் நின்று சூளுரைக்க வைத்தது...
‘சரி... போலீஸைக் கூப்பிடுங்க... ஆனது ஆகட்டும்... என் உயிர் போவதற்கு முன்னால, இவள நீங்க தொட முடியாது...’
{{dhr|2em}}
<section end="10"/><section begin="11"/>
{{larger|<b>11</b>}}
{{dhr|2em}}
எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து ரகசியமாய் ஏறினார்களோ, அதே இடத்திற்கு அருகே மனோகரும், கங்காவும் ஆட்டோவில் இருந்து பகிரங்கமாய் இறங்கினார்கள். இரவு மரித்துக் கொண்டிருக்கும்போது புறப்பட்டு, பகல் விடியல் குழந்தையாய் பிறந்தபோது, அந்தக் குழந்தையின் தொப்புள் கொடிபோல் ஆகாயத்தில் செஞ்சிவப்பாய் ஒளிக்கற்றை. அந்தப் பிறப்பை அறிவிக்கும் குலவைச் சத்தம்போல் பறவைகளின் சத்தங்கள்.
கங்கா, மனோகரை கண்கூசிப் பார்த்தாள். அந்த அறையில் நடந்த அமர்களத்திற்குப் பிறகு இருவருமே பேசவில்லை. முகத்துக்கு முகம் பார்க்கவில்லை. இப்போதுதான் பார்த்துக் கொண்டார்கள். தலைகளைத் தாழ்த்திக் கொண்டார்கள். மவுனம் பேசிற்று. பார்வைகள் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டன. அவன் பேன்ட் பையில் கையிட்டு ஐந்து இருபது ரூபாய் நோட்டுக்களை, வெறுமையாய் புரட்டிய அவள், கைகளுக்குள் திணித்தான். அவள், அந்த நோட்டுக்களை, அவன் பைக்குள் சொருகியபடியே, ஆற்றாது அரற்றினாள்.
“அந்தப் பசங்க கிட்ட நானு அப்படிப்பட்டவள் இல்லேன்னு நீ சொன்னப்போ... பெருமைப்பட்டேன்... ஆனால், இப்போ நானு அப்படிப்பட்டவள்தான்னு நினைக்கிறது மாதிரி பணத்த நீட்டுறியே சாரே...”
மனோகர், அவளை, அவள் கண்கள் வழியாய்ச் சந்தித்தான் கூடவே அவள் நினைவூட்டும் சம்பவக் கோர்வைகள் தானாய் மனதில் மோதின. இப்போதே அந்த நிகழ்ச்சிகள் அங்கேயே நடப்பதுபோல் கண்கள் பார்த்தன... காதுகள் கேட்டன.{{nop}}<noinclude></noinclude>
qhnc8719vv31k1abgflem5mgfpl6yl7
பக்கம்:ஒத்தை வீடு.pdf/97
250
202506
1837856
762394
2025-07-01T12:57:59Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|96||ஒத்தை வீடு}}</noinclude>போதை தெளிந்து பயந்து நின்ற கங்காவை, தன் உடம்போடு உடம்பாய் இணைத்துக்கொண்டு, அவன் சூளுரைக்கிறான்... ‘வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடுவது குற்றமில்லை... ஒருத்தி உடலை விற்றால்தான் குற்றம்... அதை நட்புக்காக விட்டுக் கொடுத்தால் அதில் தப்பில்லை... இவள் என்னோட தோழி... நாங்கள் உறவாடுவது எங்கள் சொந்த விவகாரம்... வேணுமின்னா ஒன் போலீஸை வரச் சொல்லைய்யா...’ என்று சவால் இடுகிறான். உடனே கமால் சிரித்தபடியே... ‘சட்டந் தெரியாதவன்தான்யா போலீஸ். அதத் தெரிஞ்சு வச்சிருந்தால், அதை எப்படி வளைக்கனுமுன்னு அவங்களுக்குத் தெரியும்...’ என்கிறான்.
உடனே மனோகர் ஆகாயமும் பூமியும் ஆனவன்போல் கர்ஜிக்கிறான்... ‘இந்தா பாருங்கப்பா... நீங்களும் போலீசுமா சேர்ந்து என்னைக் கட்டிப் போட்டுட்டோ இல்லை கொலை செய்துட்டோ இவள, மானபங்கப்படுத்த முடியும்... அப்புறம் என்ன நடக்கும்... கொலைக் கேஸ்ல உள்ள போவீங்க... இல்லாட்டி நான் நியாயம் கிடைக்கறது வரைக்கும் அதாவது ஒங்க கைல காப்பு மாட்டறது வரைக்கும் ஓய மாட்டேன்... உண்ணா விரதம் இருப்பேன்... ஊரக் கூட்டுவேன்... மறியல் செய்வேன்... எதுவும் பலிக்காட்டி... தீக்குளிப்பேன்... எங்கே அவளத் தொட்டுப் பாருங்க... எங்கே டெலிபோன் செய்யுங்க...’ என்று அதட்டுகிறான், மிரட்டுகிறான். அவர்கள் அடங்கிப் போகிறார்கள். அப்படியும் அவன் தங்கச் செயினையே பார்க்கிறார்கள். மனோகரோ ‘இந்த அறைக்கு ஏற்பட்ட சேதாரத்துக்கு முன்பணத்துல கழித்துக்கலாம்... இப்ப மொதல்ல வெளில போங்க... இல்லாட்டி நானே போலீஸுக்கு போன் செய்வேன்... உங்களுக்கு இன்ஸ்பெக்டரத்தான் தெரியும்... எனக்கு ஐ.ஜி.யையே தெரியும்...’ என்கிறான். அவளை ஆக்கிரமிக்கப் போனவர்கள், ஆக்கிரமிக்கப் பட்டவர்களாய் வெளியேறுகிறார்கள்.
மனோகர், ஒரு மாவீரன்போல் அவளைப் பார்க்கிறான். அவள் நீட்டிய ரூபாய் நோட்டுக்களை தனது பைக்குள் திணித்துக்கொண்டே ‘ஆட்டோவுக் காவது’ என்று ஒரு வார்த்தையை ஒரு வாக்கியமாய் இழுக்கிறான். அவளோ, ‘நான் நடந்தே போயிடுவேன் சாரே... நடந்து நடந்தாவது வழி குறையுறது மாதிரி என் பாரம் குறையுறதான்னு பார்க்கிறேன் சாமி...’ என்கிறாள். அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தே, நடக்கிறாள். மீண்டும் அவனிடம் திரும்புகிறாள். ஆகாயத்தைச் சாட்சியாக வைத்துச் சொல்வது போல், அந்த ஆகாயத்தைப் பார்த்துவிட்டு, அவனிடம் பேசுகிறாள்.
“நீ ஆம்பளைங்களுலேயே பெரிய ஆம்பளை ஸாரே. உன்ன மாதிரி ஆம்பளைய இப்பதான் நான் பாக்கேன் ஸாரே... பொம்மனாட்டிக்கிட்டே போறவன் சாதா ஆம்பளைன்னா<noinclude></noinclude>
iwb69r47piy7539nthzi9lzr05t62qm
பக்கம்:ஒத்தை வீடு.pdf/98
250
202508
1837857
762395
2025-07-01T13:05:05Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||97}}</noinclude>அவளை கட்டிக் காக்கிறவன் பெரிய ஆம்பிளை... நீ மட்டும் என்ன விட்டுட்டுப் போயிருந்தே... என்ன பீஸ் பீஸா ஆக்கி இருப்பாங்க... நானு ஒரு கபிரிச்சி... என்னெல்லாமோ பேசியிருப்பேன்... ஆடியிருப்பேன்... என்ன மன்னிச்சேன்னு... ஒரே ஒரு வார்த்தை... எனிக்கி ஒன் ஆபீஸ்ல கூட்ற வேலை வேணாம்... கம்பெனி வேலையும் வேணாம்... என்ன மன்னிச்சேன்னு... ஏன்னா... இனிமேங்காட்டி நாம பாக்கப் போறோமோ இல்லியோ... சொல்லு ஸாரே... என் வவுத்துல பால் வாரு சாரே...”
அழப்போன கங்கா, பின் பக்கமாக லேசாய்ச் சாய்ந்தாள். அப்படியும் கண்ணீர் தெரித்தது... அவன், அவளை அழுத்தமாகப் பார்த்தான். அடக்கி வைத்திருந்த உணர்வுகளை கொட்டினான்...
“இந்தா பாரு கங்கா! மன்னிப்புன்னு வந்தால், நீதான் என்னை மன்னிக்கனும். கலங்காத குளமா இருந்த உன்னை, குட்டையாய் கலக்கிட்டேன். ஆனால், ஒன்னோட நட்பு என் ஆயுள் வரைக்கும் நெனப்பா இருக்கும். பிரியப்போறதா நெனச்சுச் சொல்லல, நாம் பிரியப் போறதும் இல்ல... ஆனா... அதேசமயம் நம்ம ரெண்டு பேரோட நடவடிக்கையும்... வேற மாதிரி இருக்கும்... இருக்கணும்... நான் நம்பிக்கைத் துரோகியுமில்ல... நிச்சயம் ஒரு நல்ல செய்தி வீடு தேடி வரும்... ஆபீஸுக்கு வாரத மட்டும் நிறுத்திடாதே... ஆபீஸ்ல நான் அதிகாரியில்லே... நீ பெருக்குறவள் இல்லே... நான் மனுஷன்... நீ மனுஷி... சரி... போய்வாம்மா... சீக்கிரமா ஆபீஸ்ல போய் வேலையப் பாரு...”
“அழ வைக்கிறியே ஸாரே... அழ வைக்கிறியே... ஒன் நெலமய நினைச்சா எனிக்கு மனசு கேட்க மாட்டேங்குதே...”
கங்கா, உதடுகளைக் கடித்தபடியே, அவனை உற்றுப் பார்த்தாள். அவளை தனக்குள் உள்வாங்குவது போல், அசைவற்ற கண்ணாடி போல் சலனமின்றி நின்ற மனோகர், எதிர்திசையில் நடந்தான். இலக்கு நோக்கிச் சென்றான். சங்கரியைப் பார்க்க வேண்டும். அவள் கண்களைத் துடைத்து விடவேண்டும். அவளுக்கு எது தேவையோ அதை ஈடேற்ற வேண்டும். அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
மனோகர், நடையில் ஒரு மிடுக்கு... பார்வையில் ஒரு கம்பீரம்... கால்கள் தரையில் அழுந்தப் பதிந்தன. சாய்வாய் நடக்காமல் நேராய் நடந்தான். கெட்டதைப்போல் நல்லதும் தொடர்ந்து வரக்கூடியது... ஒரு நல்ல குணம் இன்னொரு நல்ல குணத்தைத் தொற்றிக்கொள்ளக் கூடியது. அழுகையும், சிரிப்பும் இப்படித்தான். இனிமேல் சிரிக்க முடிகிறதோ இல்லையோ, அழப்போவதில்லை. அழ வைக்கப் போவதும் இல்லை. எப்படி இருக்காளோ. எப்படியெல்லாம் நடந்திருக்கேன். கங்காவை காப்பாற்றியதுபோல்<noinclude></noinclude>
szncuvirqu9lnms1nbq456youzy1qap
பக்கம்:ஒத்தை வீடு.pdf/99
250
202510
1837859
762396
2025-07-01T13:11:58Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|98||ஒத்தை வீடு}}</noinclude>சங்கரியையும் காப்பாற்ற வேண்டும்... எல்லா வகையிலும் காப்பாற்ற வேண்டும்.
மனோகர், பெரு விரலைப் பார்த்தபடியே நடந்தான். அக்கம் பக்கம் எந்தப் பெண்ணும் இயங்குவது அறியாமல், நடந்து கொண்டிருந்தான். தன்னைத்தானே தரிசித்ததில் ஒரு பெருமிதம். இந்த உணர்வையும் குணத்தையும் ஆவியாக்காமல் மனதுக்குள்ளேயே கட்டிப்போட வேண்டும் என்ற வைராக்கியம்.
அந்த மருத்துவமனையின் நுழை வாயிலுக்குள் சென்றதும், மனோகரின் கால்கள் லேசாய்த் தளர்ந்தன. கால்களோடு சேர்ந்து தலையும் தாழ்ந்தது. எந்த முகத்தோட அவளைப் பார்ப்பது? தரையைப் பார்க்க மனமில்லாமல், அண்ணாந்து பார்த்தான். அந்தக் கட்டிடத்திற்கு மேலே தலைநீட்டிய அசோக மரங்களை அண்ணாந்து பார்த்தபடியே நடந்தான். ஏதோ ஒன்று மோதுவது கண்டு, கண்ணிறக்கினான். அவனிடம் முட்டுப்பட்ட கட்டுப்போட்ட மனிதர் ஒருவர், இயல்பாகச் சொல்வதுபோலவும், தன்னை நினைத்துக் கொண்டது போலவும் வலி அடக்கிப் பேசினார்...
“அண்ணாந்தும் பார்க்கப்படாது... குனிந்தும் நோக்கப்படாது... நேராப் பார்க்கணும். நேரா நடக்கணும். நம்மோட சிரமம், பிறத்தியாரைச் சிரமப்படுத்தக் கூடாது...”
மனோகர் நின்றான். தன்பாட்டுக்குப் போய் கொண்டிருந்த மனிதரின் முதுகைப் பார்த்தான் அந்த முதுகு புறமுதுகல்ல. அவனுக்கு ஒரு கேடயம்... அந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அசரீரி வார்த்தைகள்.
மனோகர், லிப்டில் ஏறி, மூன்றாவது மாடிக்கு வந்தான். அதுவே தரைத்தளம் மாதிரியான வரவேற்பறை. பார்வையாளர்கள் இருக்கைகள். அரசாங்க மருத்துவமனை காணாத பளபளப்பான தரை, இந்த மருத்துவமனை இவன் சக்திக்கு அப்பால் பட்டதுதான். போலீஸ் வழக்கு வம்பு வரக்கூடாது என்பதற்காக, தெரிந்தவர் ஒருவர் மூலம் கிடைத்த இடம்.
சங்கரியின் அறைக்கு முன்னால் நாலு பேர் அம்மா, அக்கா, மாமனார், மாமியார் அக்கா, அவ்வப்போது பேசுகிறாள். அம்மாவின் கை வீச்சுக்களுக்கிடையே முகமிட்டு, அவளுக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பேசுகிறாள் மாமனார், தலையை ஒருச்சாய்த்து நிற்கிறார் மாமியார் இரண்டு கைகளையும் தலையில் குவித்துக்கொண்டு தடுமாறுகிறாள்.{{nop}}<noinclude></noinclude>
jcwqoodcy73k1lrwzl19hg60uvw3406
பக்கம்:ஒத்தை வீடு.pdf/100
250
202512
1837861
762151
2025-07-01T13:27:43Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||99}}</noinclude>இந்த சொர்ணம்மா அவர்கள் வந்ததும் பயந்து போனவள்தான். போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திடாதீங்கன்னு கெஞ்சப் போனவள்தான். ஆனால் சம்பந்திகள் ‘என் மகள் தெரிஞ்சும் தெரியாம ஏதாவது செய்திருந்தால், நீங்கதான் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்’ என்று அழுதபோது, அவளது பயம், பயமுறுத்தலானது. கடந்த மூன்று நாட்களில் அவள் எகிறல் மூன்று மடங்காகி, முப்பரிமாணம் பெற்றது. மனோகர் பின்னால் நிற்பதை அந்த நால்வருமே கவனிக்கவில்லை. நாயகியான சொர்ணம்மா, சுடச்சுடக் கொடுத்தாள்...
“இன்னியோட எங்க பொறுப்புத் தொலைஞ்சது... நீங்க ஆயிரம் சொன்னாலும் கேட்கப் போறதாய் இல்லை... இனிமேல் நீங்க யாரோ... நாங்க யாரோ.. ஊருக்குக் கூட்டிப் போகணுமுன்னாலும் கூட்டிப் போங்க... இங்கேயே வச்சு அழகு பார்க்கணுமுன்னாலும் பாருங்க... ஏய்... காந்தாமணி... புறப்படு...”
“அண்ணி! அப்படியெல்லாம், பேசாதீங்க... நாங்க எந்த முகத்தோட அவளக் கூட்டிட்டுப் போவோம்...?”
‘சும்மாச் சும்மா பினாத்தாதே... எங்கேயாவது... பெண்டாட்டி, புருஷன அடிப்பாளா...? இவள் அடிச்சிட்டாளே... இவளைச் சேர்த்தால்... ஒருநாள் ராத்திரியிலே என் மகனைக் கொலை செய்ய மாட்டாள் என்கிறதுக்கு என்ன நிச்சயம்...?’
“எம்மா... என்ன இதுல்லாம்...”
மனோகர், ஓங்கிக் கத்தினான்... நால்வரும் திரும்பினார்கள். கண்களில் நீர் கோர்த்த மாமியாரையும், யோகி போல் கைகட்டிக் நின்ற மாமனாரையும் மாறி மாறிப் பார்த்தான். மாமியார் அவனைப் பார்த்துவிட்டு, இயல்பிலேயே ஒடுங்கிப்போன உடம்பை ஒடுக்கினாள். மாமனார், அவன் கையைப் பிடித்து தேக்கி வைத்த உணர்வுகளைத் திரவமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இருவரும் ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர்கள். குழந்தைகளோடுப் பழகிப் பழகி குழந்தையானவர்கள். மாமியார், மருமகனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அம்மாவைப் போல் அவன் திட்டிவிடக்கூடாதே என்கிற பயம். அவள் உடம்பு ஆடியது. சரணாகதியாய் ஆடியது. கும்பிட்ட கையை எடுக்காமலே மருமகனைப் பார்த்து மன்றாடினாள்.
“அவள் நடந்துக்கிட்டது தப்புத்தான் மாப்பிள்ளே எங்க குடியைக் கெடுக்கிறதுக்கின்னே பிறந்திருக்காள் ஒரே பெண்ணாச்சேன்னு தலையிலே தட்டி வளர்க்காமப் போயிட்டோம். எங்க வீட்ல இருந்தது மாதிரியே ஒங்க வீட்லயும் இருப்பான்னு நினைத்தோம். இப்படி ஒங்களைச் சீரழிப்பான்னு நினைக்கலே... ஏங்கி ஏங்கி அழுகிறா மாப்பிள்ளே நீங்களே சொல்லுங்க அவளை ஊருக்குக் கூட்டிட்டுப்<noinclude></noinclude>
iy334z13voovd3wkk2r48134743t1zn
பக்கம்:ஒத்தை வீடு.pdf/101
250
202514
1837863
762152
2025-07-01T13:35:17Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|100||ஒத்தை வீடு}}</noinclude>போக முடியுமா? அப்படிப் போய் உயிரோடதான் இருக்க முடியுமா ஒரே ஒரு சந்தர்ப்பம் அவளுக்குக் கொடுங்க மாப்பிள்ளே... அப்பக்கூட நீங்க அவளை அடிப்பீங்களோ... பிடிப்பீங்களோ... அவள் ஒங்க பொருளு அவளை என்ன வேணுமின்னாலும் செய்யுங்க... நாங்க ஏன்னு கேட்கமாட்டோம்...”
சம்மந்தியம்மா பேசி முடிப்பது வரைக்கும் பொறுமை காட்ட முடியாமல் சொர்ணம்மா, கைகளை ஆட்டியபோது, காந்தாமணி, அவற்றைப் பிடித்துக் கொண்டாள். இப்போது அந்தம்மா கைகளை நீட்டாமலேயே கத்தினாள்...
“இந்த மாதிரி பசப்பற வேலையெல்லாம் வேண்டாம்... என் மகனை அவ ராவோட ராவா குத்திக் கொலை பண்ணணும் அப்பப்பா... என்ன நல்லெண்ணம் உனக்கு...”
சொர்ணம்மா, மகளிடமிருந்து கையை எடுத்து விட்டு, அங்குமிங்குமாய் ஆடிக் காட்டியபோது, மனோகர், அம்மாவை முறைத்தபடியே கத்தப் போனான். அதற்குள் வாசல் கதவு திறக்கப்பட்டது. சங்கரியை எட்டிப் பார்க்கப்போன மனோகரின் கண்களை இரண்டு உருவங்கள் மறைத்தன. ஸ்டெதஸ்கோப் மனிதருக்கு ஐம்பது வயதிருக்கலாம். கூட நின்ற பெண்ணுக்கு இருபத்தேழு வயதிருக்கலாம்... டாக்டர் கத்தினார்...
“இப்படி சந்தைக்கூட்டம் போட்டால் எப்படி...? ஏம்மா நீ இங்க வரக்கூடாதுன்னு சொன்னேனே... எதுக்காக வந்தே...”
“காசு செலவளிக்கிறவள் நான். வரப்படாதா...”
மனோகர் ‘எம்மா’ என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு, டாக்டரைக் கேட்டான்...
“இப்போ என் ஒய்புக்கு எப்படி இருக்கு டாக்டர்...”
“கன்கிராசுலேஷன் மிஸ்டர் மனோகர்...”
மனோகர் அந்த இளம் பெண்ணை புரியாமல் பார்த்தான். அவள் தனது பாராட்டுக்கு விளக்கமளித்தாள்.
‘அந்தம்மா, ஒங்க பெண்டாட்டி, என்கிற நினைப்பு வந்திருக்கே... இப்போவாவது பார்க்கணுங்கிற எண்ணம் வந்திருக்கே... அதுக்குத்தான் பாராட்டினேன்...’
அந்தப் பெண்ணின் கோபத்தைச் சந்திக்க முடியாமல், மனோகர், டாக்டரிடம் அடைக்கலமானான்.
“அவளுக்கு எப்படி இருக்கு டாக்டர்...”{{nop}}<noinclude></noinclude>
cgx0sbphgxvvh2gnekpt0ych2xuc5fi
பக்கம்:ஒத்தை வீடு.pdf/102
250
202516
1837884
762153
2025-07-01T14:26:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||101}}</noinclude>“நல்லாத்தான் குணமாகி வந்தாங்க... ஆனால் இந்தம்மா... ஒங்கம்மாவா... நல்ல அம்மா... இவங்க, இந்த ரெண்டுபேரையும் படுத்தின பாட்டுல பாவம் ஒங்க மனைவிக்கு பழையபடியும் கைகால் வெட்டிட்டு...”
டாக்டர் மேற்கொண்டு பேசமுடியாமல் வாயடைத்துப் போனார். மனோகரின் மாமியாரும், மாமனாரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு விம்மினார்கள். அதுவும் நல்லதாய்ப் போயிற்று. தனித்தனியாய் அழுதிருந்தால் கீழே விழுந்திருப்பார்கள். ஒருவரையொருவர் எதுவும் பிடிபடாமல், பிடித்துக் கொண்டார்கள். ஒருவர் தோளில் இன்னொருவர் முகம்போட்டு முதுகுகளை ஈரமாக்கினார்கள். தலைகள் இறங்கி முண்டமான இரு உடம்புகளாய் ஆகிப்போனார்கள்.
மனோகர், பொங்கிய கோபத்தை திசை திருப்பினான். எதிர்மறை உணர்வை ஆக்கமாக்கினான். அம்மாவின் தோளில் கை போட்டபடியே அவள் முகத்தைத் தூக்கிப்பிடித்து நெகிழ்ந்து பேசினான்...
எம்மா... ஒன் மகளாயிருந்தால், இப்படிப் பேசுவியா...? இவங்க ஒன் தம்பி தங்கச்சியாயிருந்தால், இப்படி நோகடிப்பியா? ஒன்னையும் என்னையும் நம்பித்தானேம்மா சங்கரியை ஒப்படைத்தாங்க. ஏம்மா இந்த மாதிரி எல்லாரையும் நோகடிக்கிறே... அக்காவுக்கு, சங்கரி மாதிரி வெட்டு வந்திருந்தால், நீ அவள் புருஷனை விட்டு வைப்பியா... என் பெண்டாட்டியையும் ஒன் மகளா நெனச்சுப் பாரும்மா...
சொர்ணம்மா, கண்களால் அரைவட்டம் போட்டாள். விழி பிதுங்கப் பார்த்தாள். பிறகு முகத்தை முடிக் கொண்டாள்... உச்சிமுதல் பாதம்வரை குலுங்கியது. காந்தாமணி அவள் கைகளைப் பிடித்தபோது, அம்மாக்காரி அவள் தலையில் முகம்போட்டு மருவினாள்... ஊமை அழுகையாய் அழுதாள். மகன் அப்படிப் பேசிவிட்டானே என்று அழுகிறாளா... மருமகள் பழையபடியும் வீட்டுக்கு வருவது நிச்சயம் என்று நினைத்து அழுகிறாளா... அல்லது அன்று முதல் இன்றுவரை தான் நடந்து கொண்டதைப் பற்றி குற்ற உணர்வில் அழுகிறாளா... குற்றஞ்சாட்டி அழுகிறாளா... அந்த சொர்ணமாவுக்கே அது தெரியாது.
இதற்குள் டாக்டர் அதட்டுவதுபோல் பேசினார்.
‘இடத்தை காலிபண்ணுங்கம்மா... வேடிக்கை பார்க்காங்க பாரு... இப்போ அந்தப் பொண்ணுக்கு டைசிபார்ம் ஊசி போட்டுட்டு, வந்திருக்கோம்... இன்னும் நாலுமணி நேரம் அரை மயக்கத்திலேயே இருப்பாங்க... அப்பா அம்மா மட்டும் இங்கேயே இருக்கட்டும்...’{{nop}}<noinclude></noinclude>
nhcv5gli5kmm2m0xazt0wan1csvt1l6
1837885
1837884
2025-07-01T14:26:31Z
மொஹமது கராம்
14681
1837885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||101}}</noinclude>“நல்லாத்தான் குணமாகி வந்தாங்க... ஆனால் இந்தம்மா... ஒங்கம்மாவா... நல்ல அம்மா... இவங்க, இந்த ரெண்டுபேரையும் படுத்தின பாட்டுல பாவம் ஒங்க மனைவிக்கு பழையபடியும் கைகால் வெட்டிட்டு...”
டாக்டர் மேற்கொண்டு பேசமுடியாமல் வாயடைத்துப் போனார். மனோகரின் மாமியாரும், மாமனாரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு விம்மினார்கள். அதுவும் நல்லதாய்ப் போயிற்று. தனித்தனியாய் அழுதிருந்தால் கீழே விழுந்திருப்பார்கள். ஒருவரையொருவர் எதுவும் பிடிபடாமல், பிடித்துக் கொண்டார்கள். ஒருவர் தோளில் இன்னொருவர் முகம்போட்டு முதுகுகளை ஈரமாக்கினார்கள். தலைகள் இறங்கி முண்டமான இரு உடம்புகளாய் ஆகிப்போனார்கள்.
மனோகர், பொங்கிய கோபத்தை திசை திருப்பினான். எதிர்மறை உணர்வை ஆக்கமாக்கினான். அம்மாவின் தோளில் கை போட்டபடியே அவள் முகத்தைத் தூக்கிப்பிடித்து நெகிழ்ந்து பேசினான்...
எம்மா... ஒன் மகளாயிருந்தால், இப்படிப் பேசுவியா...? இவங்க ஒன் தம்பி தங்கச்சியாயிருந்தால், இப்படி நோகடிப்பியா? ஒன்னையும் என்னையும் நம்பித்தானேம்மா சங்கரியை ஒப்படைத்தாங்க. ஏம்மா இந்த மாதிரி எல்லாரையும் நோகடிக்கிறே... அக்காவுக்கு, சங்கரி மாதிரி வெட்டு வந்திருந்தால், நீ அவள் புருஷனை விட்டு வைப்பியா... என் பெண்டாட்டியையும் ஒன் மகளா நெனச்சுப் பாரும்மா...
சொர்ணம்மா, கண்களால் அரைவட்டம் போட்டாள். விழி பிதுங்கப் பார்த்தாள். பிறகு முகத்தை முடிக் கொண்டாள்... உச்சிமுதல் பாதம்வரை குலுங்கியது. காந்தாமணி அவள் கைகளைப் பிடித்தபோது, அம்மாக்காரி அவள் தலையில் முகம்போட்டு மருவினாள்... ஊமை அழுகையாய் அழுதாள். மகன் அப்படிப் பேசிவிட்டானே என்று அழுகிறாளா... மருமகள் பழையபடியும் வீட்டுக்கு வருவது நிச்சயம் என்று நினைத்து அழுகிறாளா... அல்லது அன்று முதல் இன்றுவரை தான் நடந்து கொண்டதைப் பற்றி குற்ற உணர்வில் அழுகிறாளா... குற்றஞ்சாட்டி அழுகிறாளா... அந்த சொர்ணமாவுக்கே அது தெரியாது.
இதற்குள் டாக்டர் அதட்டுவதுபோல் பேசினார்...
‘இடத்தை காலிபண்ணுங்கம்மா... வேடிக்கை பார்க்காங்க பாரு... இப்போ அந்தப் பொண்ணுக்கு டைசிபார்ம் ஊசி போட்டுட்டு, வந்திருக்கோம்... இன்னும் நாலுமணி நேரம் அரை மயக்கத்திலேயே இருப்பாங்க... அப்பா அம்மா மட்டும் இங்கேயே இருக்கட்டும்...’{{nop}}<noinclude></noinclude>
6rpp4wgvvfefxznjkg94h9vgxaivam4
பக்கம்:ஒத்தை வீடு.pdf/103
250
202518
1837894
762154
2025-07-01T14:35:00Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|102||ஒத்தை வீடு}}</noinclude>‘நானும் இருக்கேன் டாக்டர்...’
‘நோ மிஸ்டர் மனோகர்... ஸாரி... இன்னும் ஒரு வாரத்திற்கு நீங்க அவளைப் பார்க்கக்கூடாது... நாங்க ஒங்க ஓய்பை அப்ஸர்வேஷன்ல வச்சிருக்கோம்... எப்போ பார்க்கச் சொல்றோமோ... அப்பப் பார்த்தால் போதும்... இந்தாம்மா... பெரியம்மா வீட்டுக்குப்போய் எவ்வளவு அழணுமோ... அவ்வளவு அழு... இனிமேலாவது யாரையும் அழவைக்காதே... இல்லாட்டி ஒனக்கும்... மிஸ்டர் மனோகர்... என்னோட வாங்க...’
அந்த அறைக்குள் முண்டியடித்த சொர்ணம்மாவை, காந்தாமணி இழுத்துக்கொண்டு போனாள். மனோகர், மாமனாரின், மடித்து வைத்த கரங்களில், லேசாய் பிடித்து அழுத்திவிட்டு, டாக்டரோடு போனான். கூடவே அவனைச் சாடிய அந்தப் பெண்ணும் போனாள்.
அந்த அறையில் சுழல் நாற்காலியில் மேலே கதிர் விரிந்த சூரியப் படம். எதிர்ச் சுவரில் வட்டங்களை உள்ளடக்கிய பெருவட்டப் படம். அதன் மையத்தில் ஒரு புள்ளி. அதற்குக் கீழே மெத்தையிட்ட கட்டில்.
“இப்போ என் ஒய்புக்கு எப்படி இருக்கு டாக்டர்...”
“ஒய்ப் இருக்கட்டும்... ஒங்களுக்கு இப்ப எப்படி இருக்குது... நோயின்னு அனுமானித்தால், அது ஓங்களுக்குத்தான். ஒங்க ஒய்புக்கு இருக்கிறது அதோட அறிகுறிகள்... ஒங்களுக்கு மனக்காய்ச்சல்... அந்தப் பெண்ணுக்கு நெறி கட்டியிருக்கு... அந்தப் பொண்ணு கிட்டே பேசிப் பார்த்தோம்... ஒங்க செக்ஸ்லைப் பற்றி சொன்னாங்க... ஏன் அப்படிப் பார்க்கறீங்க... டாக்டர்களான நாங்க தாயுமானவங்க... ஒடம்போட நிர்வாணம் மட்டுமில்லே... மனசோட நிர்வாணமும் எங்களுக்குத்தான் தெரியும்...”
அந்தப் பெண், இடைமறித்தாள். சூரியகாந்திப் பூ நிறம். அதன் விதை போலவே கன்னத்தில் ஒரு மச்சம்.
“ஆனால் உங்களுக்கு இவ்வளவு ஆணாதிக்கம் கூடாது சார்... அந்த ஆர்டரை எப்படி சார் கிழிச்சுப் போடலாம்...? பெண்டாட்டின்னா அடிமையா... பக்கத்து வீட்டுக்காரன் ஏடாகூடமாப் பேசினான்னு அவனக் கேட்காத கேள்வியை கேட்டிட்டு, திரும்பி வரும்போது, நீங்க ஒரு கணவன், கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்கலாமா...? ஒரு கேள்வி முறை இல்லையா? கோளாறை ஒங்ககிட்ட வச்சுக்கிட்டு குறையை அவங்ககிட்ட கண்டா என்ன அர்த்தம்? கற்புப் பெருமிதத்தோட வந்த மனைவியை. நீங்களே மானசீகமா, அதே மனிதனை கற்பழிக்கச் செய்தீங்க... ஆனாலும்<noinclude></noinclude>
ig9dheny93kbk7v4z8rshx1cccyxoan
பக்கம்:ஒத்தை வீடு.pdf/104
250
202520
1837902
762155
2025-07-01T14:46:29Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||103}}</noinclude>ஆண்மைக்குறைவு உள்ளவங்களுடைய நடத்தையைப் பற்றி விளக்கி, நீங்க தற்கொலை செய்தாலும் செய்துக்கலாம் என்று அவங்ககிட்டச் சொன்னபோது, அந்தம்மா, தனக்காக அழுகிறத நிறுத்திட்டு, உங்களுக்காக அழுகிறாங்க சார். இதுதான், இந்த நாட்டுப் பெண்களோட பண்பாடோ. அல்லது சுயத்தைத் தொலைக்கும் சீரழிவோ...”
டாக்டர். சந்திரசேகரன், அந்தப் பெண்ணை கண்களால் அடக்கினாரோ கெஞ்சினாரோ. அவள் அடங்கினாள்.
“ஏம்மா... நீ வந்தது கவுன்சிலிங் செய்யுறதுக்கு... வக்கீலா மாறினால் எப்படி...? சங்கரிகிட்டேயும் கோளாறு இல்லாம இல்லை... பக்கத்து வீட்டுக்காரன் ஒரு மாதிரிப் பார்த்ததை... அது தனக்கு பிடிக்கல என்கிறதை... இவர்கிட்ட பகிரங்கமா சொல்லியிருக்கணும்... செக்ஸ் லைப் பற்றி, படித்த பெண்ணுக்கு தெரிந்திருக்கணும்... இவரு ஆயத்தமா நெருங்கும் போதெல்லாம், அந்தம்மா, தெரிந்தோ தெரியாமலோ, சில வார்த்தைகளைக் கொட்டியிருக்காங்க... ஆனாலும், மிஸ்டர் மனோகர்! கூட்டிக் கழிச்சுப் பார்த்தால், தப்பு ஒங்க மேல தொண்ணூறு சதவீதம்... மீதி பத்து சதவீதம், அந்த பொண்ணு மேல...”
“நான் என்ன செய்யனும் டாக்டர்...? நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன்... டாக்டர்...”
“நாம் பிரச்சினையை நேருக்கு நேராய்ச் சந்திப்போமா? இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமே, உங்களோட ஆண்மைக் குறைவுதான்... அந்தக் குறைவு மனோரீதியாலானதா? அல்லது ஆர்கானிக் அதாவது உடல் ரீதியாலானதா? என்கிறதை இனிமேல்தான் கண்டுபிடிக்கணும்... மனோரீதியா கண்டுபிடிக்க உங்க மனசுல என்னல்லாம் உறுத்துதோ, அதை எல்லாம் எழுதுங்க... எத்தனை பக்கமானாலும் சரி எழுதுறதை என்கிட்ட கொடுங்க... அதோட சில பிஸிகல் டெஸ்டுகளுக்கும் எழுதிக் கொடுக்கிறேன்... இரண்டையும் வைத்து ஒரு முடிவுக்கு வரலாம்.”
“நல்ல முடிவு கிடைக்குமா டாக்டர்...?”
“இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல முடியாது... நீங்க உண்மையை - அது எதுவாயிருந்தாலும் சந்திக்கத் தயாராகணும்...”{{nop}}<noinclude></noinclude>
m1vxzcvf5kzlihflolmhb8omgpegkhh
1837904
1837902
2025-07-01T14:47:17Z
மொஹமது கராம்
14681
1837904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||103}}</noinclude>ஆண்மைக்குறைவு உள்ளவங்களுடைய நடத்தையைப் பற்றி விளக்கி, நீங்க தற்கொலை செய்தாலும் செய்துக்கலாம் என்று அவங்ககிட்டச் சொன்னபோது, அந்தம்மா, தனக்காக அழுகிறத நிறுத்திட்டு, உங்களுக்காக அழுகிறாங்க சார். இதுதான், இந்த நாட்டுப் பெண்களோட பண்பாடோ. அல்லது சுயத்தைத் தொலைக்கும் சீரழிவோ...”
டாக்டர். சந்திரசேகரன், அந்தப் பெண்ணை கண்களால் அடக்கினாரோ கெஞ்சினாரோ. அவள் அடங்கினாள்.
“ஏம்மா... நீ வந்தது கவுன்சிலிங் செய்யுறதுக்கு... வக்கீலா மாறினால் எப்படி...? சங்கரிகிட்டேயும் கோளாறு இல்லாம இல்லை... பக்கத்து வீட்டுக்காரன் ஒரு மாதிரிப் பார்த்ததை... அது தனக்கு பிடிக்கல என்கிறதை... இவர்கிட்ட பகிரங்கமா சொல்லியிருக்கணும்... செக்ஸ் லைப் பற்றி, படித்த பெண்ணுக்கு தெரிந்திருக்கணும்... இவரு ஆயத்தமா நெருங்கும் போதெல்லாம், அந்தம்மா, தெரிந்தோ தெரியாமலோ, சில வார்த்தைகளைக் கொட்டியிருக்காங்க... ஆனாலும், மிஸ்டர் மனோகர்! கூட்டிக் கழிச்சுப் பார்த்தால், தப்பு ஒங்க மேல தொண்ணூறு சதவீதம்... மீதி பத்து சதவீதம், அந்த பொண்ணு மேல...”
“நான் என்ன செய்யனும் டாக்டர்...? நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன்... டாக்டர்...”
“நாம் பிரச்சினையை நேருக்கு நேராய்ச் சந்திப்போமா? இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமே, உங்களோட ஆண்மைக் குறைவுதான்... அந்தக் குறைவு மனோரீதியாலானதா? அல்லது ஆர்கானிக் அதாவது உடல் ரீதியாலானதா? என்கிறதை இனிமேல்தான் கண்டுபிடிக்கணும்... மனோரீதியா கண்டுபிடிக்க உங்க மனசுல என்னல்லாம் உறுத்துதோ, அதை எல்லாம் எழுதுங்க... எத்தனை பக்கமானாலும் சரி எழுதுறதை என்கிட்ட கொடுங்க... அதோட சில பிஸிகல் டெஸ்டுகளுக்கும் எழுதிக் கொடுக்கிறேன்... இரண்டையும் வைத்து ஒரு முடிவுக்கு வரலாம்.”
“நல்ல முடிவு கிடைக்குமா டாக்டர்...?”
“இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல முடியாது... நீங்க உண்மையை - அது எதுவாயிருந்தாலும் சந்திக்கத் தயாராகணும்...”
<section end="11"/>{{nop}}<noinclude></noinclude>
kzu6t91iuf2anfttp4j4g6hd48mnhc5
பக்கம்:ஒத்தை வீடு.pdf/105
250
202522
1837909
762156
2025-07-01T14:53:19Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="12"/>
{{larger|<b>12</b>}}
{{dhr|2em}}
உள்ளே வந்து உட்காராமல் நின்ற மனோகரை, டாக்டர் சந்திரசேகரன் ஆச்சரியமாகப் பார்த்தார். சொன்னபடி, எழுதிக்கொடுத்ததுபோல், குறிப்பிட்ட நாளில், குறித்த நேரத்தில் வந்துவிட்டான். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும், நேரம் தவறாமையும் நல்ல பழக்கங்கள் மட்டுமல்ல... பண்பாடுங்கூட... தன்னை மையமாக வைத்துச் சுழலாமல், பிறர் நலத்தையும் பேணும் ஆரோக்கியமான அணுகுமுறை. இதுவே மனநலத்திற்கு முக்கியமான காரணி... இவன் தேறிடுவான்.
“உட்காருங்க மிஸ்டர் மனோகர்! ஏன் கிழவர் மாதிரி சாய்ந்துருக்கீங்க? நிமிர்ந்து, நேரா உட்காருங்க... மனம் எப்படி புற வெளிப்பாடுகளைத் தோற்றுவிக்குதோ... அப்படி புற வெளிப்பாடுகளும் அகத்தை செப்பனிடும்.”
மனோகர், நாற்காலியின் பின்பக்கம் சாய்த்துப் போட்ட முதுகை நிமிர்த்தினான். அதன் சட்டங்களில் கிடந்த கரங்களைத் தூக்கி, வயிற்றுக்கு அணையாய்ப் போட்டான். இதற்குள் டாக்டர், ரேக்கில் இருந்து ஒரு பைலை எடுத்தார். அதன் இரண்டு நீல உறைகளை அகலப்படுத்தி, அவற்றின் இடைவெளிக்குள் கிடந்த காகிதங்களைப் புரட்டினார். அத்தனையும் மனோகர் எழுதிக்கொடுத்தவை. அவற்றை, அவர் ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக, ஆங்காங்கே பச்சைக் கோடுகள் போடப்பட்டிருந்தன. பக்கவாட்டில் சின்னச் சின்ன குறிப்புக்கள்.
டாக்டர் சந்திரசேகரன், அவனை ஏறிட்டுப் பார்த்தார். அவனது நேர் கொண்ட தோரணையைப் பார்த்து, சுயச் சிரிப்பாய்ச் சிரித்து விட்டு, நாற்காலியில் படுக்க = வைத்த தனது உடம்பை நிமிர்த்தினார். பிறகு, காகிதக் கத்தைகளுக்குள் கண்களைப் படரவிட்டப்படியே கேட்டார்.
“நீங்க எழுத்தாளரா... மனோகர்?”
“நான் கெட்ட கேட்டுக்கு...”
“லுக் மிஸ்டர் மனோகர்! உலகில் உள்ள சகல உயிரினங்களுக்கும், நாம் அனுதாபப்படலாம்; படணும் ஆனால், நமக்கு நாமே அனுதாபப்படுகிற ஒரு சுய அனுதாபம், ஒரு மனங்கொல்லி நோய். நான் நிசமாத்தான் சொன்னேன். மனோயியல் நிபுணர்கள் நல்லதுக்காக நடிக்கிறவர்கள் என்று ஒரு கருத்து இருக்குது... பாவலா செய்யுறவங்க என்றும் ஒரு எண்ணம் இருக்குது<noinclude></noinclude>
stfbctjvp54zjrklmd3ld74ifivo4vu
1837911
1837909
2025-07-01T14:53:50Z
மொஹமது கராம்
14681
1837911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="12"/>
{{larger|<b>12</b>}}
{{dhr|2em}}
உள்ளே வந்து உட்காராமல் நின்ற மனோகரை, டாக்டர் சந்திரசேகரன் ஆச்சரியமாகப் பார்த்தார். சொன்னபடி, எழுதிக்கொடுத்ததுபோல், குறிப்பிட்ட நாளில், குறித்த நேரத்தில் வந்துவிட்டான். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும், நேரம் தவறாமையும் நல்ல பழக்கங்கள் மட்டுமல்ல... பண்பாடுங்கூட... தன்னை மையமாக வைத்துச் சுழலாமல், பிறர் நலத்தையும் பேணும் ஆரோக்கியமான அணுகுமுறை. இதுவே மனநலத்திற்கு முக்கியமான காரணி... இவன் தேறிடுவான்.
“உட்காருங்க மிஸ்டர் மனோகர்! ஏன் கிழவர் மாதிரி சாய்ந்துருக்கீங்க? நிமிர்ந்து, நேரா உட்காருங்க... மனம் எப்படி புற வெளிப்பாடுகளைத் தோற்றுவிக்குதோ... அப்படி புற வெளிப்பாடுகளும் அகத்தை செப்பனிடும்.”
மனோகர், நாற்காலியின் பின்பக்கம் சாய்த்துப் போட்ட முதுகை நிமிர்த்தினான். அதன் சட்டங்களில் கிடந்த கரங்களைத் தூக்கி, வயிற்றுக்கு அணையாய்ப் போட்டான். இதற்குள் டாக்டர், ரேக்கில் இருந்து ஒரு பைலை எடுத்தார். அதன் இரண்டு நீல உறைகளை அகலப்படுத்தி, அவற்றின் இடைவெளிக்குள் கிடந்த காகிதங்களைப் புரட்டினார். அத்தனையும் மனோகர் எழுதிக்கொடுத்தவை. அவற்றை, அவர் ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக, ஆங்காங்கே பச்சைக் கோடுகள் போடப்பட்டிருந்தன. பக்கவாட்டில் சின்னச் சின்ன குறிப்புக்கள்.
டாக்டர் சந்திரசேகரன், அவனை ஏறிட்டுப் பார்த்தார். அவனது நேர் கொண்ட தோரணையைப் பார்த்து, சுயச் சிரிப்பாய்ச் சிரித்து விட்டு, நாற்காலியில் படுக்க வைத்த தனது உடம்பை நிமிர்த்தினார். பிறகு, காகிதக் கத்தைகளுக்குள் கண்களைப் படரவிட்டப்படியே கேட்டார்.
“நீங்க எழுத்தாளரா... மனோகர்?”
“நான் கெட்ட கேட்டுக்கு...”
“லுக் மிஸ்டர் மனோகர்! உலகில் உள்ள சகல உயிரினங்களுக்கும், நாம் அனுதாபப்படலாம்; படணும் ஆனால், நமக்கு நாமே அனுதாபப்படுகிற ஒரு சுய அனுதாபம், ஒரு மனங்கொல்லி நோய். நான் நிசமாத்தான் சொன்னேன். மனோயியல் நிபுணர்கள் நல்லதுக்காக நடிக்கிறவர்கள் என்று ஒரு கருத்து இருக்குது... பாவலா செய்யுறவங்க என்றும் ஒரு எண்ணம் இருக்குது<noinclude></noinclude>
6uxvgis9x3hxdwvnslm26hrvhr3ozs3
1837913
1837911
2025-07-01T14:54:21Z
மொஹமது கராம்
14681
1837913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="12"/>
{{larger|<b>12</b>}}
{{dhr|2em}}
உள்ளே வந்து உட்காராமல் நின்ற மனோகரை, டாக்டர் சந்திரசேகரன் ஆச்சரியமாகப் பார்த்தார். சொன்னபடி, எழுதிக்கொடுத்ததுபோல், குறிப்பிட்ட நாளில், குறித்த நேரத்தில் வந்துவிட்டான். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும், நேரம் தவறாமையும் நல்ல பழக்கங்கள் மட்டுமல்ல... பண்பாடுங்கூட... தன்னை மையமாக வைத்துச் சுழலாமல், பிறர் நலத்தையும் பேணும் ஆரோக்கியமான அணுகுமுறை. இதுவே மனநலத்திற்கு முக்கியமான காரணி... இவன் தேறிடுவான்.
“உட்காருங்க மிஸ்டர் மனோகர்! ஏன் கிழவர் மாதிரி சாய்ந்துருக்கீங்க? நிமிர்ந்து, நேரா உட்காருங்க... மனம் எப்படி புற வெளிப்பாடுகளைத் தோற்றுவிக்குதோ... அப்படி புற வெளிப்பாடுகளும் அகத்தை செப்பனிடும்.”
மனோகர், நாற்காலியின் பின்பக்கம் சாய்த்துப் போட்ட முதுகை நிமிர்த்தினான். அதன் சட்டங்களில் கிடந்த கரங்களைத் தூக்கி, வயிற்றுக்கு அணையாய்ப் போட்டான். இதற்குள் டாக்டர், ரேக்கில் இருந்து ஒரு பைலை எடுத்தார். அதன் இரண்டு நீல உறைகளை அகலப்படுத்தி, அவற்றின் இடைவெளிக்குள் கிடந்த காகிதங்களைப் புரட்டினார். அத்தனையும் மனோகர் எழுதிக்கொடுத்தவை. அவற்றை, அவர் ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக, ஆங்காங்கே பச்சைக் கோடுகள் போடப்பட்டிருந்தன. பக்கவாட்டில் சின்னச் சின்ன குறிப்புக்கள்.
டாக்டர் சந்திரசேகரன், அவனை ஏறிட்டுப் பார்த்தார். அவனது நேர் கொண்ட தோரணையைப் பார்த்து, சுயச் சிரிப்பாய்ச் சிரித்து விட்டு, நாற்காலியில் படுக்க வைத்த தனது உடம்பை நிமிர்த்தினார். பிறகு, காகிதக் கத்தைகளுக்குள் கண்களைப் படரவிட்டப்படியே கேட்டார்.
“நீங்க எழுத்தாளரா... மனோகர்?”
“நான் கெட்ட கேட்டுக்கு...”
“லுக் மிஸ்டர் மனோகர்! உலகில் உள்ள சகல உயிரினங்களுக்கும், நாம் அனுதாபப்படலாம்; படணும் ஆனால், நமக்கு நாமே அனுதாபப்படுகிற ஒரு சுய அனுதாபம், ஒரு மனங்கொல்லி நோய். நான் நிசமாத்தான் சொன்னேன். மனோயியல் நிபுணர்கள் நல்லதுக்காக நடிக்கிறவர்கள் என்று ஒரு கருத்து இருக்குது... பாவலா செய்யுறவங்க என்றும் ஒரு எண்ணம் இருக்குது.<noinclude></noinclude>
qj08k6jzbupufk4wlfaid44siuhovcv
பக்கம்:ஒத்தை வீடு.pdf/106
250
202524
1837917
762157
2025-07-01T15:00:54Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||105}}</noinclude>இது தப்பான கருத்து. சைக்கியாட்ரிஸ்டுகளிலும் மெண்டல் கேஸ்கள் உண்டு. ஆனால், பொய்யர்கள் கிடையாது. அதனால், நான் சொல்வதை நீங்க நம்பணும்... ஒங்களுக்கு எழுத்து ஒரு கிப்டா கிடைத்திருக்கு. முயற்சி செய்தால் நீங்க மிகச் சிறந்த எழுத்தாளராய் மாறலாம். மனம் வைத்தால், அப்படி மாற முடியும். கெட்டுப்போன அருணகிரிநாதர்தான் திருப்புகழ் தந்தார். மனநோய் பிடித்த சார்லஸ் டிக்கன்ஸ் தான், டேல்ஸ் ஆப் டூ சிட்டிஸ், பிக்விக் பேப்பர்ஸ் முதலிய அற்புதப் படைப்புக்களைத் தந்தார். அதனால், கெட்டுப் போனதை, அல்லது மன மாற்றத்தைப் ஒரு அனுபவமாய் எடுத்து, நீங்க அதை எழுத்தில் ஆரோக்கியமாய் மாற்றலாம். நான் சொல்வது சரியா எழுத்தாளரே...”
மனோகர் மனதில் ஒரு குறுகுறுப்பு. சின்னதாய் ஒரு கம்பீரம். புன்னகைத்தான். டாக்டர் சந்திரசேகர் தொடர்ந்தார்.
“நான், சைக்கியாட்ரிஸ்ட் யூரலாஜிஸ்ட்... செக்ஸாலஜிஸ்ட்... அதோடு நல்ல வாசகன். நீங்க எழுதியதை, ஒரு நிபுணராய் படிக்கத் துவங்கி, ஒரு வாசகனாய் முடித்தேன். உதாரணத்திற்கு, நீங்க எழுதிய முன்னுரையை வாசித்துக் காட்டுறேன் பாருங்க... இதை நீங்க எழுதியதாய் அனுமானிக்காமல், மனதை உதறிப் போட்டுவிட்டு, ரசிகனாய் கேட்கணும்.”
டாக்டர். சந்திரசேகரன், அவன் எழுதிய முதல் பக்கத்தை படிக்கத் துவங்கினார்.
“தமிழகத்தில் பொதுவாக பலவகைக் கிராமங்கள் உண்டு. முதலாவது, சமபலத்தில் ஆன சாதிகளைக் கொண்ட கிராமம் இங்கே யானைக்குப் புலியிடம் பயம். புலிக்கு யானையிடம் பயம் என்பது மாதிரி பரஸ்பர பயமும் மரியாதையும் கொண்ட இந்த சாதியினர் பொதுவாய் அடித்துக்கொள்ள மாட்டர்கள். ஆனால், தப்பித் தவறி சாதிச் சண்டை வந்தாலோ, அது தமிழகப்போர் மாதிரி ஆகிவிடும். இரண்டாவது வகை கிராமம், சிறுபாண்மைச் சாதியும், பெரும்பான்மைச் சாதியும் கொண்டது. இந்த சாதியினர் அடக்கியும், அடங்கியும் போவார்கள். ஆனால், அடக்கப்படுவது அத்துமீறல் ஆகும்போது, இதர கிராமங்களில் பெரும்பான்மையாய் இருக்கும் இந்தக் கிராமத்தில் சிறுபான்மைச் சாதியினர், தம் சாதியின் பலத்தோடு ஆதிக்க சாதியை எதிர்த்துப் பொங்கி எழுவார்கள். இது மாவட்டப் போராக மாறும் மூன்றாவது வகைக் கிராமம், ஒரே ஜாதியைக் கொண்டது. இங்கே சாதிச் சண்டைக்குப் பதிலாக எந்தக் குடும்பம், பெரிய குடும்பம் என்ற பங்காளிச் சண்டைகள். எந்தத் தெரு, பெரிய தெரு என்ற வீதிச் சண்டைகள்.<noinclude></noinclude>
f9vz4liu57qxxkn3tl50u5p0nnkm0bs
பக்கம்:ஒத்தை வீடு.pdf/107
250
202526
1837922
762158
2025-07-01T15:09:26Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|106||ஒத்தை வீடு}}</noinclude>கட்சிக் சண்டைகள், கோவில் சண்டைகள் என்று பலப் பல சண்டைகள் நடக்கும்.”
“இதே சாதியம், மதங்களுக்கும் பொருந்தும். இவையும் மூன்று வகை. மூன்றும் மூன்றும் சேர்ந்தும், கிளை பிரிந்தும், யாருக்கு யாருடன் தகராறு என்று கண்டறிய முடியாத பெரும் போர்களைத் தோற்றுவிப்பதும் உண்டு. அதாவது, இரண்டாவது மூன்றில் ஒவ்வொன்றும், முதலாவது மூன்றில் எதில் சேர்கிறது? ஏன் சேர்கிறது? என்பது சேர்கிறவர்களுக்கும், சேர்த்துக் கொள்கிறவர்களுக்கும் புரியாது. சாதி - மதக் கலவரங்களில், இதுவே பெருங் கலவரமாகும். ஆனாலும், எப்படியோ, துண்டுபட்ட ஊர்கள் ஒன்றுபடும். ஆனாலும், இந்தச் சண்டைகள் ஜலதோசம் மாதிரி, சட்ட ஒழுங்கு நடவடிக்கையால் ஒரு வாரத்திலும், போலீஸ் தலையீடு இல்லாமல் ஏழு நாட்களிலும் தீர்ந்து போகும். ‘மறப்போம்; மன்னிப்போம்.’ என்ற தத்துவம், கொடி கட்டிப் பறக்கும்.”
“இந்த ஆறுவகைக் கிராமங்களிலும், ஒரு வகை வீடோ அல்லது வீட்டுக் குவியல்களோ இருக்கும். இதற்கு ‘ஒத்தை வீடு’ என்று பெயர். இதில் இருப்பவர்களுக்கு ‘ஒத்தை வீட்டுக்காரன்’ என்ற பட்டப்பெயர். இந்தக் குடும்பத்தினரை, வந்தேறிகள் அல்லது வந்தட்டிகள் என்பார்கள். இந்த ஒத்தை வீட்டுக்காரக் குடும்பத்துடன் சண்டை என்று வந்தால், சொல்லுக்குச் சொல்... ‘ஒத்தை வீட்டுப் பயலே... ஒனக்கா இவ்வளவு திமிரு...’ என்கிற வசைச் சொல் வந்தபடியே இருக்கும். இந்த ஒத்தை வீட்டுக்குப் பங்காளி பலம் கிடையாது. பண பலமும் கிடையாது. ஓட்டுக்கள் குறைவு என்பதால், உள்ளூர் அரசியல்வாதிகளும் சீண்டுவதில்லை.”
“இந்த வகைக் குடும்பத்தை, சொந்த சாதிக்காரனும் அடிப்பான்; எந்த சாதிக்காரனும் அடிப்பான். ‘எங்க வீட்டு நாயை எப்படி அடிக்கலாம்’ என்று கேட்கும் ஊரில், இந்த ஒத்தை குடும்பத்திற்கு நாதி கிடையாது. இந்தக் குடும்பத்தினரை, யார் வேண்டுமானாலும் அடிக்கலாம். இவர்கள் சாதி இருந்தும், தள்ளாமல் தள்ளி வைக்கப்பட்டவர்கள். சமயம் இவர்களுக்குச் சமயத்தில் உதவாது. ஆனாலும், இப்படிப்பட்ட ஒத்தை வீடுகளில் சிலர், பெருத்த பங்காளிக் குடும்பத்தில் பெண் கொடுத்து, பாதுகாப்பைத் தேடிக்கொள்வார்கள். அத்தகைய பலமான பங்காளிக் குடும்பமும், இந்த ஒத்தை வீட்டில் பெண் எடுக்குமே தவிர, பெண் கொடுக்காது.”
இப்படிப்பட்ட பின்னணியில், எங்கள் வீடு ஒத்தை வீடு. இத்தகைய சூழலில் ஒதுங்கிப் போக வேண்டிய என் அம்மாவோ, கிராமத்து யதார்த்தம் புரியாத வாயாடி பட்டறிவு இல்லாத பாமரப்<noinclude></noinclude>
oi8l0npw9d9ox1y532lfvm745e1dn2t
பக்கம்:ஒத்தை வீடு.pdf/108
250
202528
1837939
762159
2025-07-01T15:29:40Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||107}}</noinclude>பெண். வெறும் உணர்வுகளால் ஆளப்பட்டவள். கெட்ட கெட்ட வார்த்தைகளை வாங்கிக் கொள்வதிலும், அவற்றைத் திரும்பிப் கொடுப்பதிலும் வல்லவள். எத்தனையோ பெண்களிடம், சில சமயம் ஆண்களிடமும் உதைபட்டுப் போனவள். கீழே விழுந்து கிடக்கும்போதும், எதிரிகள் முகத்தில் காலால் மண் வாரித் தூத்துவாள். அடிபட்டால் வலிக்கும் என்பதுதான் அவளுக்குத் தெரியும். அவமானமாயிற்றே என்பதை அறியாதவள்.”
“ஒரு தடவை, வழக்கம்போல் ஒரு சண்டை அம்மாவின் வாய்க்கு ஈடு கொடுக்க முடியாத ஒரு தடியன், அவன் பேர் ராமசாமி. எங்கம்மாவைப் பார்த்து, நேத்துக்கூட பத்து ரூபா கொடுத்துட்டு ஒன்கிட்டே படுத்தேனடி...” என்று அபாண்டமாய்ச் சொன்னான். உடனே எங்கம்மா, அவனுடைய மனைவியின் ‘வைப்பாளன்களை’ பட்டியல் போட்டுச் சொன்னாள் அவ்வளவுதான். ராமசாமி, அம்மாவை மல்லாக்கத் தள்ளினான். அவன் பெண்டு பிள்ளைகள், அம்மாவின் கால், கைகளைப் பிடித்துக் கொள்ள, ராமசாமி, ஒரு கூர்மையான கல்லை எடுத்து, அம்மாவின் நெற்றியில் இடித்தான். அம்மாவுக்கு மயக்கம் வரும்வரை குத்தினான். என் அம்மாவின் நெற்றியில் இப்போதுகூட அது பள்ளத்தாக்காய் கிடக்கிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம்... இப்போதுகூட அந்தப் பள்ளத்தில் ஒரு கோரக் காட்சி எனக்குத் தென்படும். அப்போது எனக்கு வயது பன்னிரண்டு இருக்கலாம். ராமசாமியின் பிடறியில் அடிக்கப் போனேன். உடனே, அவன் பெரிய மகன் என்னைக் கீழே தள்ளி, வாயில் மண்ணைப் போட்டு, கை முஷ்டியால் இடித்தான். இந்தச் சமயத்தில், அப்பா வந்தார். பரமசாது. “என்னை அடிக்கிறதப் பார்த்துட்டு நிற்கிறியே... நீயும் ஒரு ஆம்பிளையா?” என்று அம்மாவிடம் வாங்கிக் கட்டும் பரமசாது. “அதோடு பூஞ்சையான ஒல்லி உடம்பு.”
“ஆனாலும், அந்தச் சாதுக்குக் காடு கொள்ளாச் சினம் பொங்கியது. என் மார்பில் உட்கார்ந்திருந்த ராமசாமியின் மகனை மல்லாக்கத் தள்ளினார். ஒரு கல்லைத் தூக்கி, அம்மாவை ரத்தக் காடாக்கிய ராமசாமியின் மேல் போடப் போனார். அதற்குள், அந்த ஒற்றை மனிதர் அடிபட்டதே மிச்சம். பத்துப் பதினைந்து பேருக்கு மத்தியில் சுருண்டு விழுந்தார். ரத்தமும் சதையுமாய் மயங்கிக் கிடந்தார். அப்போதுதான், புல்லுக்கட்டுடன் வந்த அக்கா காந்தாமணி, ஒப்பாரியுடன், வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே, ஐந்து கிலோமீட்டர் தொலைவு போலீஸ் நிலையத்திற்குப் போனாள் போலீஸ் வந்தது. கோபத்தோடு வந்தவர்கள், ‘குணத்தோடு’ போனது. ராமசாமிக் குடும்பம் கொடுத்த அடியில் ‘வர்மம்’ ஏற்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போன அப்பா, ஒரு வருடத்தில் ஒரேயடியாய் முடங்கி விட்டார்.”{{nop}}<noinclude></noinclude>
cus7gawq5qy5ii4im6bou0kzwjxx4kz
பக்கம்:ஒத்தை வீடு.pdf/109
250
202530
1837955
762160
2025-07-01T16:07:19Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|108||ஒத்தை வீடு}}</noinclude>டாக்டர் சந்திரசேகர், மேற்கொண்டு படிக்க முடியாமல், மனோகரை நிமிர்ந்து பார்த்தார். அவர் மனதில், அவரே முன்னால் சொன்ன இலக்கிய நயமும், வாசிப்புச் சுகமும் மரித்துப் போயின. மரித்தவை, மனித நேயமாய் உயிர் பெற்றன. அவர், மனோகரின் தோளைத் தட்டிக் கொடுத்தார். அவனோ, தட்டப்பட்டது தெரியாமல் தலை தாழ்த்திக் கிடந்தான். அந்த மொஸைக் தரை, சாணம் பூசிய வெறுந்தரையானது. மேல் தளம் பனையோலைகள் பதித்த கூரையாகிறது. ‘அப்பா செத்துக் கிடக்கிறார். வெளியே அம்மா, ஊரைத் தூற்றி மண்வாரிப் போடுகிறாள். சிலர் திட்டுகிறார்கள். ஊர் வழியில் பிணம் போவாது என்று அவளை மிரட்டுகிறார்கள். பாவாடை-தாவணி அக்கா, அவன் தலையில் முகம் போட்டு விம்முகிறாள். ஈரப் பசையில், இருவர் விழிகளும் ஒட்டிக் கொள்கின்றன.’
விநாடிகள், நிமிடங்களாய் மாறுகின்றன. எப்படிப் பேச்சைத் துவக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்த டாக்டருக்கு, மனோகரே இறுதியில் அடியெடுத்துக் கொடுக்கிறான்.
“அப்போதான்... அப்படின்னனா... இப்பவும் இப்படி... பட்ட காலுலயே படும்; கெட்ட குடியே கெடும் மாதிரி ஆகிட்டு.”
டாக்டர், அவன் பேச்சைப் பிடித்துக் கொள்கிறார்.
“அப்போ... அப்படி இருந்ததால்தான், இப்போ இப்படி இருக்குது. ஆமாப்பா... ஒன்னோட பிரச்சினை, அடிப்படையில் செக்ஸ் பிரச்சினை அல்ல. ஆழ் மனதில் வேரூன்றிய பாதுகாப்பின்மை உணர்வு. அதுதான பீலிங் ஆப் இன் செக்யூரிட்டி. வெளி மனதில் பாலியல் இயலாமை வெளிப்பாடுகளாய் வேடம் போடுது. இந்த அடிமனப் பெரும் பயத்தை, நீக்கினால் தவிர, செக்ஸ் முயலாமையைப் போக்க முடியாது. ஒங்க அம்மா, சிறுமைப் படுத்தப்பட்ட போதெல்லாம் சிறுவனான நீ, எதிரிகளை அடிக்கக் கைகளைத் தூக்கி இருக்கே... பற்களைத் கடித்திருகிகே. பெரியவனாகாமல், போயிட்டமேன்னு வருத்தப் பட்டிருக்கே. இயலாமையில் துடித்திருக்கே. கற்களைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவற்றை எறிந்தால் என்ன ஆவோமோ என்று நினைத்து சும்மா இருந்திருக்கே.”
“பன்னிரண்டு வயதில், அம்மா தாக்கப்பட்ட போது, நீயும் ஒரு பெரிய பையனால் தாக்கப்பட்டு, அவனை மாதிரி பெரியவனாய் ஆகாமல், போனதுக்கு வருத்தப்பட்டே... சரியா?” ஆனாலும், யதார்த்தத்தின் சூடு தாங்காமல், பேன்டஸி எனப்படும் ஒரு கற்பனை உலகில் உலவி இருக்கே. எதிரிகளின் பெண்கள் ஒனக்கு ஆறுதல் சொல்வது போல் ஒரு கற்பனை. அவர்கள் ஒன் முகத்தோடு<noinclude></noinclude>
7cv2crslzxlppac5mxeps3xg3wbhz3i
பக்கம்:ஒத்தை வீடு.pdf/110
250
202532
1837956
762162
2025-07-01T16:17:30Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||109}}</noinclude>முகம் போட்டு முதுகைத் தட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஒன் மேலே விழும் ஒவ்வொரு பெண்ணும் படிப்படியாய் கீழே போனாள். பாயில் விழுந்த பாவை, ஒனக்கு மெத்தையாகிறாள். அப்போதெல்லாம், ஒன் விடலை உடம்பில் ஒரு இயக்கம்; ஒரு சுகம். விதவிதமான பெண்கள். பெரும்பாலும் உள்ளூர் எதிரிகளின் பெண்கள். இவர்கள் உன்னை அடிக்க வரும் அப்பன் மார்களுக்கு எதிராய் வெகுண்டு, உன் முன்பக்கத்தில் முதுகைப் போட்டு, அவரைக் கொல்லுமுன் என்னைக் கொல்லுங்கள் என்று கேடயமாய்ச் சுசூளுரைத்தார்கள்.”
“இப்படிப்பட்ட போலிக் கற்பனையும், நிசமான பாலியல் இயக்கமும் மெல்ல மெல்ல உங்களுக்கு ஒரு பழக்கமாகிறது. பழக்கம் வழக்கமாகி, அதுவே ஒரு போதை ஆகிறது. தெருச் சண்டைகள் நடக்கும்போதும், வரப்புகளை வெட்டி ஒன் வயலை ஆக்கிரமிப்புச் செய்த மிராசுதார்கள், ஒங்கம்மாவை சிரமப் படுத்தும்போதும், கல்லூரிப் படிப்பு சங்கடத்தைக் கொடுத்த போதும், இந்த பாலியல் பழக்கத்துடன் அடைக்கலம் ஆனாய்.”
“சைக்கிளில் கல்லூரிக்குப் போகும் ஒன்னை, சின்னப் பிள்ளைகளில் இருந்து பெரிய பயல்கள் வரை, ஒன் கையில் கிடந்த கடிகாரத்தைச் சாக்காக்கி, ‘ஓட்டைக் கடிகாரம்... ஓட்டைக் கடிகாரம்’ என்று நையாண்டி செய்த போதெல்லாம், நீ மிரண்டே; துவண்டே; பெரிய ஆளாகாமல் போனோமே என்று துடித்துப்போனே. வீட்டுக்கு வந்ததும், பரிகாசிகளின் பெண்கள், ஒன் படுக்கை அறைக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டதால், சுய சேர்க்கையில் ஈடுபட்ட நீ, இறுதியில், அந்தச் சேர்க்கைகளுக்காக கஷ்டப்பட விரும்பினே. அம்மா திட்டும்படி நடந்துக்கிட்டே சின்னப் பசங்க பரிகசிக்கும்படி, அவர்கள் கண் முன்னாலேயே கடிகாரத்தைக் சுழற்றி, ‘கீ’ கொடுத்தே அவர்கள் கிண்டலடிக்க அடிக்க, அவன் தமக்கைகள் உன் மானசீக காதலிகளாய் ஆனார்கள்.”
மனோகர், தலை தானாய் தொங்கியது; முகம் வெளுத்தது; நிமிர்ந்த மேனி, சரிந்து கிடந்தது. டாக்டர், இப்போது சுருதி மாற்றிப் பேசினார்.
“ஒனக்கு வந்தது, எனக்கு வந்தாலும், நானும் அப்படித்தான் நடந்திருப்பேன். பொதுவாக, வாழ்க்கையில், தாங்க முடியாத கஷ்ட நஷ்டங்களையும், சிறுமைகளையும் அனுபவிப்பவர்கள், ஒன்று ஒன் தந்தையைப்போல், பரமசாதுவாய் ஆவார்கள். அல்லது ஒன் அம்மாவைப் போல் பயங்கரியாய் ஆவார்கள் ஆனாலும், ஒனக்குத் தீமையே நன்மையாகி விட்டது. படித்துப் படித்து நல்ல<noinclude></noinclude>
388cfajtosmzldkral07oq92pq89dm8
பக்கம்:ஒத்தை வீடு.pdf/111
250
202534
1837957
762163
2025-07-01T16:31:18Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|110||ஒத்தை வீடு}}</noinclude>வேலைக்குப் போய், குடும்பத்தோடு, ஊரை விட்டே, வேரோடும், வேரடி மண்ணோடும் போகவேண்டும் என்ற எண்ணம் ஒனக்கு ஏற்பட்டது. போதாக் குறைக்கு, பாவாடை தாவணியிலிருந்து சேலைக்கு வந்த ஒன் அக்கா, உள்ளூரிலேயே, பங்காளி பலமிக்க தேக்கன் குடும்பத்தில் நல்லவனும் வல்லவனுமான சௌரிமுத்துவைக் காதலித்து, அவனையே திருமணம் செய்து கொண்ட பிறகு, உன் வாழ்க்கையில் ஒரு வாசனை வீசியது. ஒன் மச்சானே, உன் குடும்பத்தின் காவல் தெய்வமானார். ஒன்னை மோட்டார் பைக்கில் கொண்டு போய் கல்லூரி வாசலில் விட்டார். ஒன்னை, ஓட்டைக் கடிகாரம் என்று நச்சரித்த பயல்களின் காதுகளைத் திருகினார். தலைகளில் குட்டினார். மனதில் சிறுவனாய் இருந்த நீ, சம வயதுக்கு வந்தாய். சுய சேர்க்கையைக் கூட கைவிட்டாய்.”
“ஆனால், வசந்தம், பாலையானது. சௌரிமுத்து, மாரடைப்பால் இறந்தபோது, அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்த குடும்பம், ஒன் அக்காவை, வீட்டை விட்டுத் துரத்தியது. அவள் வந்த வேளைதான், அண்ணன் போய்விட்டான் என்று மைத்துனர்கள் ஊர்ச் சாட்சியாக அவளை அடித்து விரட்டினார்கள். மனைவிதான், கணவனின் வாரிசு என்று சொல்ல, ஊரில் அதைத் தெரிந்து வைத்திருந்தவர்கள் முன்வரவில்லை. மீண்டும் நீ, மனதுக்குள் சிறுவனாய் மாறிவிட்டாய். உன்னுள் அந்தச் சிறுவன் அப்படியே இருக்கிறான். அவ்வப்போது வளர நினைக்கிற அந்தச் சிறுவனை, அம்மாவின் நெற்றிப் பள்ளமும், அக்காவின் விதவைக் கோலமும் வளர விடாமல் செய்கின்றன. ஒன் மனதில் தவிக்கும் அந்தச் சிறுவனைப் பெரியவனாக்கி விட்டால், ஒன் செக்ஸ் பிரச்சினை தீர்ந்தது மாதிரிதான். நீ, முழுமையான ஆணாய், மனைவியை நெருங்கும் போதெல்லாம், இந்தச் சிறுவன், மூக்கை நீட்டுகிறான். ஒன் மூக்கை அறுக்கிறான். அதோடு, ‘ஓட்டைக் கடிகாரம்... ஓட்டை...’ என்ற சத்தம் தானாய்க் கேட்கிறது. இந்த வன்மமான, இளக்காரமான வார்த்தைகள், ஒன் வெளித் தோற்றத்தைக் கலைத்து, உள் தோற்றமான சிறுவனை முன்னிலைப்படுத்திவிட்டன. ஆகையால், இந்தச் சிறுவனை முதலில் வேண்டும். அல்லது, அவனை வளர்த்து, ஒரு வாலிபனாக்க வேண்டும். இது சிரமமமான காரியம் ஆனால், எனக்குச் சிரமமில்லாமல் செய்துட்டே...”
மனோகர், டாக்டரை ஒரு கேள்வியாய்ப் பார்த்தான். அவரும் பதிலாய்ப் பேசினார்.
“ஒன்னை மாதிரிப் பிரச்சினைக்காரங்களுக்கு அதிரடிச் சிகிச்சை - அதுதான் ஷாக் ட்ரீட்மெண்ட் தேவைப்படும். ஆனால், ஒனக்குத் தேவையில்லை அந்த விடுதி நிகழ்ச்சிகள். ஒனக்கு ஒரு<noinclude></noinclude>
fg177cyl52bp0g4l7hebqtbyjyq0d55
பக்கம்:ஒத்தை வீடு.pdf/112
250
202537
1837959
762164
2025-07-01T16:49:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||111}}</noinclude>அதிரடிச் சிகிக்சையைத் தந்துவிட்டன. ஒன்னுள் இருந்த சிறுவன், ஒரே சமயத்தில், ஒரேயடியாய் பெரியவனாகி விட்டான். நீ, அந்த விடுதிப் பயல்களோடு நடத்திய போராட்டம் இருக்குதே... அது வெறும் ஆண்மையல்ல... பேராண்மை. இப்பவே, ஒன் மனதில் ஒன்னைப் பற்றி ஒரு உயர்வான எண்ணம் வந்திருக்குமே. எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளத் தயார் என்கிற மனப்பான்மை வந்திருக்குமே. நான் சொல்றது சரியா? வாயைத் திறந்து பேசுறது. இப்படித் தலையாட்டினால் எப்படி.”
“சரிதான் டாக்டர்...”
“கேட்கிறதுக்கு சந்தோஷமாய் இருக்குது. ‘நான் “வயதுக்கு” வந்த வாலிபன். மிஞ்சேன்; அஞ்சேன்; கெஞ்சேன். என்னால், செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியும்’ என்று பலதடவை மனதுக்குள் சொல்லிப் பாருங்கள். இதுக்கு ஆட்டோ சஜ்ஜஸ்ஷன்னு பேர்... தேவைப்பட்டால், உறிப்னாடிக் சிசிக்கை கொடுக்கேன். ஆனால், அது உங்களுக்குத் தேவைப்படாதுன்னு நினைக்கேன் கடைசியாய் ஒரே கேள்வி. கமர்ஷியல் செக்ஸ் ஒர்கர்ஸ்கிட்டே போனதுண்டா...”
“அப்படின்னா...”
“விலைமாதர். இந்தப் பெண்கள் பாவிகள் அல்ல. பாவப்பட்டவர்கள். இவர்களில் பலர், தங்கள் விருப்பத்துக்கு விரோதமாய், அந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். அதனால்தான், இந்தப் பெயர் மாற்றம். சரி... போனதுண்டா?”
“எல்லாம் கடற்கரை வரைக்கும்தான். எல்லை தாண்டல...”
“குட். எதுக்கு கேட்டேன்னா... விலை மாதருக்கு, சாரி... ஒரு பாலியல் விற்பனைப் பெண்ணுக்கு, சலிப்பு வரும்போதோ அல்லது குற்ற உணர்வு கூடும்போதோ, நிர்வாணமாகிறவனை உற்றுப்பார்ப்பாள். பிறகு, திடுக்கிட்டதுபோல் பாவலா செய்வாள். அப்புறம், ‘நீ ஆம்பிளையே இல்ல... போய்யா... தம்மாத்துண்டு’ன்னு துரத்துவாள். இதனாலேயே பலருக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருக்கு...”
மனோகர், அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் பேச்சை முடித்து மறு பேச்சைத் துவங்குமுன்பு, அரைகுறையாகச் சொன்னான்.
“சுய சேர்க்கையாலே, ஏடாகூடமாயிடுமுன்னு மயிலாப்பூர்ல, ஜெகன்நாதன்னு ஒரு சித்த வைத்தியர் சொன்னார்.”
“ஓ! அவரா... எங்க பெரியப்பாதான். என்னக் கூடத் திட்டுவார். இன்னும் ஐம்பது வருஷம் கழிச்சு, சுய சேர்க்கை ஆபத்துன்னு.<noinclude></noinclude>
ao8xdzd1h3lqsx79dl1qic8tf3xbsl1
பக்கம்:ஒத்தை வீடு.pdf/113
250
202539
1837962
762165
2025-07-01T17:11:43Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|112||ஒத்தை வீடு}}</noinclude>அல்லோபதிக்காரன் ஆய்வு அறிக்கை விடுவான்னு கிண்டல் அடிப்பார் ஆனால், அதனாலே, எந்தக் கோளாறும் கிடையாது என்பதுதான் எங்க கட்சி. அதோட, இன்னொரு விஷயம். ஆண்மைக் குறையுள்ளவன், பெண்டாட்டியெல்லாம் ஒழுக்கங் கெட்டவளாய் இருக்க வேண்டியதில்லே... ஆண்மையுள்ளவன் மனைவிகள் பத்தினிகளாய் இருப்பாங்க என்ற கட்டாயமும் கிடையாது வாட்ட சாட்டமானவன் ஆண்மை உள்ளவனா இருக்கணும் என்கிற அவசியமில்லே. பூஞ்சை உடம்புக்காரன் இயலாதவன் என்கிற பேச்சும் கிடையாது.”
மனோகர், மேலும் சில வினாக்களைக் கேட்கப் போனபோது. ஒரு யூனிபார வாலிபன், ஒரு பைலைக் கொண்டு வந்து, டாக்டர் சந்திரசேகரிடம் கொடுத்தான். அதன் மேலட்டையில் மனோகரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. கீழே மெடிகல் ரிப்போர்ட் என்ற ஆங்கில வாசகம்.
டாக்டர் சந்திரசேகர், அந்த பைலுக்குள் இருந்த எக்ஸ்ரே படத்தை உருவிப் பார்த்தார். கருப்பாய்ப் பளபளத்த பின்னணிப் படத்தில் வெளுப்பான நிழல்களைக் காட்டிய அந்த எக்ஸ்ரேயை மானிட்டரில் பொருந்திப் பார்த்தார் சர்க்கரை, ரத்தம், சிறுநீர் போன்றவற்றின் சோதனைக் குறிப்புக்களை படித்துப் பார்த்தார்.
மனோகர், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டான். உடல் ரீதியில் ஏதும் கோளாறு இருக்குமோ என்ற சந்தேகம். அப்படியானால், எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதில் ஓர் தீர்மானம்.
மனோகர், பிடித்திருந்த அவனது சொந்த உயிர், இப்போது டாக்டர் சந்திரசேகரின் கைக்கு மாறியது. சிறிது நேரத்தில், அவனின் கையை குலுக்கியபடியே, உயிர் கொடுத்தார்.
“கன்கிராஜ்லேஸன்ஸ் மனோ, உங்களுக்கு உடல் ரீதியிலும் எந்தக் கோளாறும் கிடையாது. ரத்தத்தில் சர்க்கரை, சாப்பாட்டிற்கு முன்பு 90... நார்மல். சாப்பாட்டிற்குப் பிறகு 130... நார்மல். ஆக நீரிழிவு கிடையாது. ரத்த அழுத்தம் 90 - 130; கச்சிதம். ஆண்மைக் குறைவுக்குக் காரணமான சயரோகமோ புட்டாளம்மன் நோயோ வந்ததில்லை. நான், ஆரம்பத்தில் சந்தேகப்பட்டது போல், பிட்டத்துக்குக் கீழே, உட்பக்கமாய்க் கட்டி ஏதும் இல்லை. அப்படி ஒரு கட்டி இருந்தால், அது ஆயுள் வரைக்கும் வலிக்காது. ஆனால், பாலியல் நரம்புகளை அழுத்தி, இறுக்கி அடம் செய்யும். இப்படிப்பட்ட கட்டியும் இல்லை. அதனால், ஆபரேஷனுக்கு அவசியம் இல்லை. இப்போ ஒரு நவீன முறை வந்திருக்கு. செக்ஸ் ரீதியாய் பலவீனப்பட்ட ஆணுக்கு, ஒரு பலூன் மாதிரி வஸ்துவைப்<noinclude></noinclude>
a9j18xjcf2eblk7ts10olkzp0fskywn
பக்கம்:ஒத்தை வீடு.pdf/114
250
202541
1837964
762166
2025-07-01T17:23:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||113}}</noinclude>பொருத்தி வைக்கிற சிகிச்சை முறை. ஆனால், இதுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவாகும். இதுவும் மிச்சம். அதோட உங்க கணவரோட உயிரணுக்கள் சரியான அளவில் இருக்குது. இதனால் அடுத்த வருஷம் நீங்க ஒரு குழந்தையை பெற்றெடுத்தாக் கூட ஆச்சரியமில்லை.”
மனோகர், தன்னை புதிதாய் கண்டுபிடித்ததுபோல், தன்னையே பார்த்துக் கொண்டபோது, டாக்டர், சந்திரசேகரன், இன்னொரு ஆலோசனையும் வழங்கினார்.
“உடம்பை லகுவா வச்சுக்கணும். கொத்துக்கறி, குலை கறி உடம்பு பாலியல் உறவைப் பாதிக்கும். பாரதி சொன்னதுபோல், காற்றில் ஏறி விண்ணைச் சாடுவது மாதிரியான, மிதப்பான உடம்பு தேவை. இதை ஆசனப் பயிற்சியாலும், அளவான உணவாலும், ஆக்கிக் கொள்ளும்போது, நாமே உணரக்கூடியது மாதிரி நமக்குள்ளே ஒரு வாசனை எழும். பொதுவாய், ஒவ்வொரு மனிதருக்கும், பல வாசனைகள் உண்டு. இதில் பாலியல் வாசனை முக்கியமானது. இந்த வாசனையைப் பிற வாசனைகள் மூழ்கடிக்காமல், பார்த்துக்கணும். உதாரணமாய், ஒரு குழந்தையைக் கொஞ்சும்போது, ஒரு ஆணுக்குப் பெண் மீதோ, பெண்ணுக்கு ஆண் மீதோ ஆசை ஏற்படாது. காரணம், குழந்தையிடம் பீறிடும் வாசனை, பாலியல் வாசனையை அமுக்கிவிடும். இதனால்தான் படுக்கை அறையில், மலர் தூவும் வழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டு வந்தார்கள். இப்போது, நான் உங்களுக்கு மலர் தூவ வேண்டிய அவசியமில்லை. அந்த விடுதி நிகழ்ச்சியே, உங்கள் மனதை வைரப்படுத்தியதுடன், அதே மனதில், பாலியல் மலர்களையும் தூவிவிட்டது.”
மனோகருக்கு, தான் புதிதாய் வளர்ந்தது போன்ற எண்ணம் ஏற்பட்டது.
{{dhr|2em}}
<section end="12"/><section begin="13"/>
{{larger|<b>13</b>}}
{{dhr|2em}}
“ஒரு பெண், தாம்பத்ய உறவில் சுகம் பெற வேண்டும்; நிறைவு பெற வேண்டும். இதற்கு, அவளுக்கு முழுமையான உரிமை உண்டு. இந்த உரிமை மறுக்கப்பட்டால், அது சட்டப்படி, மனைவிக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிறக்கும்போதே, கோடிக்கணக்கான சின்னஞ்சிறு முட்டைகளை உள்ளடக்கிய ஒரு பெண், தாய்மை அடைவதற்கும் தடங்கல் ஏதும்<noinclude></noinclude>
0fnwqn6h7i1cl2omevb8yn35wdgxefp
பக்கம்:ஒத்தை வீடு.pdf/115
250
202543
1837965
762167
2025-07-01T17:36:41Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|114||ஒத்தை வீடு}}</noinclude>இருக்கக்கூடாது. தனாலேயே ஒங்க கணவரை, தொழில் மரபையும் மீறி அதட்டுனேன். ஆனாலும்...”
கட்டில் சட்டத்தில், தலையணையை சுவரோடு சுவராய் போட்டு, அதன் மேல் தலை சாய்த்து கிடந்த சங்கரி, எதிரே பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தபடி, தனது முகம் பார்த்துப் பேசியவளின் வார்த்தைகளை, வேத வாக்காகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ‘ஆனாலும்’ என்று அவள் நாக்கை இழுத்துப் பிடித்தபோது, இவள் முகமும், தொலைக்காட்சிப் பெட்டியில் தடங்கல் ஏற்படும்போது வருமே, சுழிப்புக் கோடுகள், அவை போல் ஆனது. இந்த ‘ஆனாலும்’ என்கிற வார்த்தை, சொன்னது அனைத்திற்கும் சூடுபோடும் பதம் என்பதை உணர்ந்தவள்போல், சங்கரி, அந்தக் ‘கவுன்சிலிங்’ பெண்ணை கண்களால் பரிசீலித்தாள். சம வயதுக்காரி; மனோ தடுமாற்றங்களை தீர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்டவள். உடம்பு பளபளத்தாலும், உடையில் படாடோபம் இல்லை. குண்டு மாம்பழ முகம். ஒவ்வொரு வார்த்தையும் கேட்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவள். சங்கரிக்கு, தனது அடுத்த கருத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தம் கொடுத்துவிட்டு, அவள் தொடர்ந்தாள்.
“பாலியல், இனப்பெருக்கம் போன்றவற்றில், நாம் இயற்கையிடம், குறிப்பாகத் தாவரங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ளவேண்டும். நம் முழங்கால் உயரத்திற்குச் சுருட்டை இலைகளோடு கிடக்குதே பிரளிச் செடி... அது வண்ணத்துப் பூச்சி, ஆரம்பத்தில் புழுவாய் இருப்பதுபோல், தரையோடு தரையாய் சின்ன சுருட்டை முளையாய்த் தோன்றும். இப்படிப் பல முளைகள் சிதறிக் கிடக்கும். இந்த முளைகள் எல்லாமே பெண் பாலாய் இருந்தால், இந்த முளைகளில் ஒன்று வேகமாய் வளர்ந்து, பெண் செடியாகி, ஒருவித இனமாற்றத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம், தரைக்கு வந்து, நீரில் கரைந்து, பிற முளைகளில் ஊடுருவி, அத்தனை பெண் முளைகளையும், ஆண் செடிகளாக்கி விடும். இதில் இருந்து ஒங்களுக்கு ஏதாவது புரியுதா சங்கரி...?”
சங்கரி, தலையணையை எடுத்துக் கட்டிலில் போட்டுவிட்டு, சம்மணம் போட்டு உட்கார்ந்து, முதல் தடவையாகப் பேசினாள்.
“புரியுது. சொல்ல வந்ததை முழுசா... முடியுங்க”
“அப்படில்ல. ஒங்களுக்கு என்ன புரிந்திருக்கு என்கிறது எனக்கும் புரிந்தால்தான், நான் மேற்கொண்டு, சொன்னதைப் புரிஞ்சுகிட்டே பேச முடியும். நாம் என்ன பேசுகிறோம் என்கிறதைப்<noinclude></noinclude>
fe3lnwkeke19vkbvufrzw78oag22au2
1837967
1837965
2025-07-01T17:45:03Z
மொஹமது கராம்
14681
1837967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|114||ஒத்தை வீடு}}</noinclude>இருக்கக்கூடாது. தனாலேயே ஒங்க கணவரை, தொழில் மரபையும் மீறி அதட்டுனேன். ஆனாலும்...”
கட்டில் சட்டத்தில், தலையணையை சுவரோடு சுவராய் போட்டு, அதன் மேல் தலை சாய்த்து கிடந்த சங்கரி, எதிரே பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தபடி, தனது முகம் பார்த்துப் பேசியவளின் வார்த்தைகளை, வேத வாக்காகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ‘ஆனாலும்’ என்று அவள் நாக்கை இழுத்துப் பிடித்தபோது, இவள் முகமும், தொலைக்காட்சிப் பெட்டியில் தடங்கல் ஏற்படும்போது வருமே, சுழிப்புக் கோடுகள், அவை போல் ஆனது. இந்த ‘ஆனாலும்’ என்கிற வார்த்தை, சொன்னது அனைத்திற்கும் சூடுபோடும் பதம் என்பதை உணர்ந்தவள்போல், சங்கரி, அந்தக் ‘கவுன்சிலிங்’ பெண்ணை கண்களால் பரிசீலித்தாள். சம வயதுக்காரி; மனோ தடுமாற்றங்களை தீர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்டவள். உடம்பு பளபளத்தாலும், உடையில் படாடோபம் இல்லை. குண்டு மாம்பழ முகம். ஒவ்வொரு வார்த்தையும் கேட்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவள். சங்கரிக்கு, தனது அடுத்த கருத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தம் கொடுத்துவிட்டு, அவள் தொடர்ந்தாள்.
“பாலியல், இனப்பெருக்கம் போன்றவற்றில், நாம் இயற்கையிடம், குறிப்பாகத் தாவரங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ளவேண்டும். நம் முழங்கால் உயரத்திற்குச் சுருட்டை இலைகளோடு கிடக்குதே பிரளிச் செடி... அது வண்ணத்துப் பூச்சி, ஆரம்பத்தில் புழுவாய் இருப்பதுபோல், தரையோடு தரையாய் சின்ன சுருட்டை முளையாய்த் தோன்றும். இப்படிப் பல முளைகள் சிதறிக் கிடக்கும். இந்த முளைகள் எல்லாமே பெண் பாலாய் இருந்தால், இந்த முளைகளில் ஒன்று வேகமாய் வளர்ந்து, பெண் செடியாகி, ஒருவித இனமாற்றத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம், தரைக்கு வந்து, நீரில் கரைந்து, பிற முளைகளில் ஊடுருவி, அத்தனை பெண் முளைகளையும், ஆண் செடிகளாக்கி விடும். இதில் இருந்து ஒங்களுக்கு ஏதாவது புரியுதா சங்கரி...?”
சங்கரி, தலையணையை எடுத்துக் கட்டிலில் போட்டுவிட்டு, சம்மணம் போட்டு உட்கார்ந்து, முதல் தடவையாகப் பேசினாள்.
“புரியுது. சொல்ல வந்ததை முழுசா... முடியுங்க.”
“அப்படில்ல. ஒங்களுக்கு என்ன புரிந்திருக்கு என்கிறது எனக்கும் புரிந்தால்தான், நான் மேற்கொண்டு, சொன்னதைப் புரிஞ்சுகிட்டே பேச முடியும். நாம் என்ன பேசுகிறோம் என்கிறதைப்<noinclude></noinclude>
a2w8o7u4ksx1sl4ysdc91hs62wwm0c8
பக்கம்:ஒத்தை வீடு.pdf/116
250
202545
1837966
762168
2025-07-01T17:44:36Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||115}}</noinclude>புரிஞ்சிட்டுப் பேசினால், பிரச்சினையில் பாதியளவு போயிடும். சொல்லுங்க மேடம்?”
“அதாவது, கணவனை, முழுமையான ஆணாக்குவதில், ஒரு மனைவிக்கும் பொறுப்பு இருக்குதுன்னு சொல்ல வாரீங்க... நான் இதுல தோற்றுப் போயிட்டேன்.”
“தோற்கல. தோற்றுப் போனதாய் நினைக்கிறீங்க. கணவன் மனைவி உறவில், மூன்று மாத காலத்தில் ஏற்படும் முட்டுக்கட்டை, ஒரு முட்டுச் சந்தல்ல. ஆண்டுக் கணக்கில், உங்களைவிட மோசமான நிலையில் இருந்தவர்களுடைய பிரச்சினைகளை அடியோடு தீர்த்து வைத்திருக்கிறோம். ஒங்க பிரச்சினை ஒங்களுக்கு அசாதாரணம். ஆனால், எங்களுக்கு சாதாரணம். மனோகரை, கணவராய்ப் பார்க்காமல், ஆண்மைக் குறைவில் அல்லாடுகிற ஒரு வாலிபனாய்ப் பாருங்க!”
“ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், எப்படி நடப்பாங்கன்னு அந்தக் காலத்திலேயே விஞ்ஞான ஜாதகம் கணித்திருக்காங்க. அதன்படிதான், ஒங்க கணவர் நடந்துக்கிட்டார். அதே ஜாதகத்தில் பரிகாரமும் இருக்குது. அந்தப் பரிகாரம், ஓங்க கணவருக்குக் கொடுக்கப்பட்டு வருது. பொதுவாய், பணக்காரக் குடும்பங்களில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தால், ஓசைப்படாமல் விவாகரத்து ஏற்படும். அடிமட்டக் குடும்பங்களில் ஏற்பட்டால், கட்டிய பெண்ணே ‘ஓட்டை வண்டின்னு’ கணவனை வெளிப்படையாய் திட்டித் தீர்ப்பாள். நானே பலதடவை இப்படிப்பட்ட வசவுகளை கேட்டிருக்கேன். ஆனால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிப்பது, நாம் இருக்கிற நடுத்தர வர்க்கந்தான்.”
“என்னை... என்னதான் செய்யச் சொல்றீங்க...?”
“அவருக்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்க. இன்னும் இரண்டு மாத புரபேசன். அதாவது பரீட்சார்த்த காலம் இந்தக் கால வரம்புல, நீங்க அவரை குத்திக் காட்டக்கூடாது. அவரைப் பாசத்தோடு அணுகணும். ஏமாற்றத்தை எந்த வகையிலும் காட்டிக்கப்படாது. ‘இன்றைக்குப் பரவாயில்லிங்க’ன்னு பொய்கூடச் சொல்லணும். இது வள்ளுவர் சொல்றது மாதிரி, ‘புரை தீர்ந்த பொய்’ அதுலயும் முடியலைன்னா, அப்புறம் இருக்கவே இருக்கு. விவாகரத்து... மறுமணம்”
“நீங்க தப்புக் கணக்குப் போட்டுட்டிங்க! அவர் கிட்ட இருந்து, நான் விலகிப் போக நினைக்கிறது உண்மைதான் என்<noinclude></noinclude>
0dt6z8vkqhj3zenr8ofhewn089iovzg
1837968
1837966
2025-07-01T17:45:17Z
மொஹமது கராம்
14681
1837968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||115}}</noinclude>புரிஞ்சிட்டுப் பேசினால், பிரச்சினையில் பாதியளவு போயிடும். சொல்லுங்க மேடம்?”
“அதாவது, கணவனை, முழுமையான ஆணாக்குவதில், ஒரு மனைவிக்கும் பொறுப்பு இருக்குதுன்னு சொல்ல வாரீங்க... நான் இதுல தோற்றுப் போயிட்டேன்.”
“தோற்கல. தோற்றுப் போனதாய் நினைக்கிறீங்க. கணவன் மனைவி உறவில், மூன்று மாத காலத்தில் ஏற்படும் முட்டுக்கட்டை, ஒரு முட்டுச் சந்தல்ல. ஆண்டுக் கணக்கில், உங்களைவிட மோசமான நிலையில் இருந்தவர்களுடைய பிரச்சினைகளை அடியோடு தீர்த்து வைத்திருக்கிறோம். ஒங்க பிரச்சினை ஒங்களுக்கு அசாதாரணம். ஆனால், எங்களுக்கு சாதாரணம். மனோகரை, கணவராய்ப் பார்க்காமல், ஆண்மைக் குறைவில் அல்லாடுகிற ஒரு வாலிபனாய்ப் பாருங்க!”
“ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், எப்படி நடப்பாங்கன்னு அந்தக் காலத்திலேயே விஞ்ஞான ஜாதகம் கணித்திருக்காங்க. அதன்படிதான், ஒங்க கணவர் நடந்துக்கிட்டார். அதே ஜாதகத்தில் பரிகாரமும் இருக்குது. அந்தப் பரிகாரம், ஓங்க கணவருக்குக் கொடுக்கப்பட்டு வருது. பொதுவாய், பணக்காரக் குடும்பங்களில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தால், ஓசைப்படாமல் விவாகரத்து ஏற்படும். அடிமட்டக் குடும்பங்களில் ஏற்பட்டால், கட்டிய பெண்ணே ‘ஓட்டை வண்டின்னு’ கணவனை வெளிப்படையாய் திட்டித் தீர்ப்பாள். நானே பலதடவை இப்படிப்பட்ட வசவுகளை கேட்டிருக்கேன். ஆனால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிப்பது, நாம் இருக்கிற நடுத்தர வர்க்கந்தான்.”
“என்னை... என்னதான் செய்யச் சொல்றீங்க...?”
“அவருக்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்க. இன்னும் இரண்டு மாத புரபேசன். அதாவது பரீட்சார்த்த காலம் இந்தக் கால வரம்புல, நீங்க அவரை குத்திக் காட்டக்கூடாது. அவரைப் பாசத்தோடு அணுகணும். ஏமாற்றத்தை எந்த வகையிலும் காட்டிக்கப்படாது. ‘இன்றைக்குப் பரவாயில்லிங்க’ன்னு பொய்கூடச் சொல்லணும். இது வள்ளுவர் சொல்றது மாதிரி, ‘புரை தீர்ந்த பொய்’ அதுலயும் முடியலைன்னா, அப்புறம் இருக்கவே இருக்கு. விவாகரத்து... மறுமணம்.”
“நீங்க தப்புக் கணக்குப் போட்டுட்டிங்க! அவர் கிட்ட இருந்து, நான் விலகிப் போக நினைக்கிறது உண்மைதான் என்<noinclude></noinclude>
eohy9os8m099nn3yipz7xfcq0169rxp
பக்கம்:ஒத்தை வீடு.pdf/117
250
202547
1837970
762169
2025-07-01T17:54:11Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|116||ஒத்தை வீடு}}</noinclude>பெற்றோரால்தான் இந்த அறையில் முடங்கிக் கிடக்கேன். ஆனால், மறுமணத்தைப் பற்றி, நான் நினைத்தே பார்க்கல... பட்டது போதும்...”
“அப்படி நினைத்தால், நீங்கதான் பட்டுப் போவீங்க. விவாகரத்து செய்கிற எந்தப் பெண்ணுக்கும் மறுமணம் செய்ய உரிமை உண்டு. பழையவன் மாதிரிதான், புதியவன் இருப்பான் என்கிற அனுமானமே தவறு. ஒரு பெண் தனித்து வாழ்வதாலேயே, அவளுக்குத் தனித்துவம் வந்துவிடாது. ஒங்க பெற்றோரின் நிம்மதிக்காவது, மறுமணம் செய்துக்கணும். இது பெற்றோருக்கு செய்கிற வைத்தியம். ஒங்களுக்கு, நீங்களே ஏற்படுத்திக்கிற புனர்வாழ்வு.”
“என்ன மேடம் நீங்க. எனக்குத் தோணாதையும் சொல்லிக் கொடுக்கிறீங்க. நான் எதுக்கும் லோலோன்னு அலையுற ‘லோ’ டைப் இல்லை, வசந்திம்மா.”
வசந்தி, அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தாள். சங்கரி, லேசாய்ப் புன்னகைத்தில், அவளுக்கு ஆறுதல். அந்த ஆறுதலை மகிழ்ச்சியாக்கி, சங்கரி பேசினாள்.
“அவரோடு வாழ்கிறதா... இல்லையா என்கிறதுல என்னால இன்னும் ஒரு முடிவு எடுக்க முடியலதான். அவரோட அடாவடித்தனங்களை, அவருடைய ஆரம்பகால இனிய சுபாவமும், நேர்மையும் இன்னும் பின்னுக்குத் தள்ளுது. ஆனால், என்னோட மாமியாரை நினைத்தால்...”
“அந்தம்மாவும் ஒரு மனநோயாளிதான். வாழ்க்கையின் அடிமட்டத்தில் பிறந்து, அடிபட்டு அடிபட்டு அந்தம்மாவுக்கு உள்ளூர ஒருவித உறிஸ்டிரியாவும், சேடிஸமும் வந்துட்டு... நீங்க இல்லாட்டால், அந்தம்மா, சொந்த மகனையும், மகளையும்கூட பாடாய்படுத்தி இருப்பாங்க. அந்தம்மாவுக்கு, ஏவுகணைத் தாக்குதல்தான் முக்கியம். இலக்கு முக்கியமல்ல. இப்போ, அவங்களுக்கும் ‘கவுன்சிலிங்’ செய்யுறோம். பாதி குணமாயிடும். நீங்க, கணவனைச் சந்திக்க, இப்போ தயாராய் இருக்கீங்க... சரியா...”
சங்கரி, நகத்தைக் கடித்தபோது, வசந்தி, டெலிபோனில் எட்டைச் சுழற்றி, ஆப்பரேட்டரிடம் லைன் கேட்டாள். உடனே, அவள், டாக்டர் சந்திரசேகரனிடம், சங்கரி, கணவனைச் சந்திக்கத் தயாராய் இருக்கும் விபரத்தைச் சொன்னாள். பிறகு, ஐந்தாறு நிமிடம் பேசினாள். பேசி முடித்துவிட்டு, டெலிபோன் குமிழை சரியாகப் பொருத்திவிட்டு உற்சாகமாகப் பேசினாள்.{{nop}}<noinclude></noinclude>
n8as3hiwo9trcuyw3mw82e4urut0xtz
பக்கம்:ஒத்தை வீடு.pdf/118
250
202549
1837971
762170
2025-07-01T18:03:17Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||117}}</noinclude>“வாழ்த்துக்கள் மேடம்! உங்கள் மனோவுக்கு, உடம்பு ரீதியில், எந்த குறையும் கிடையாது. ஒரு சராசரி ஆண்மகனுக்கு உள்ள அத்தனை உடலியல் நிறைவுகளும் அவருக்கு இருக்குதாம். மனம் கூட, இப்போது பாலியல் பயம் இல்லாமல் போய்விட்டதாம். ஆனாலும், பறவை போனாலும், கிளை ஆடுவதைப்போல சில காலத்திற்கு தடுமாறத்தான் செய்யும். அப்போது, நீங்கள்தான், தாங்கிக் கொள்ளவேண்டும் - இரண்டு விதத்திலும்... சரியா...?”
சங்கரி, நகத்தை கடிப்பதை விட்டுவிட்டு, அவளை புன்முறுவலாய் பார்த்தபோது, “ஓ.கே. குட்லக்...” என்று சிரித்தபடியே வசந்தி, போய்விட்டாள்.
{{dhr|2em}}
<section end="13"/><section begin="14"/>
{{larger|<b>14</b>}}
{{dhr|2em}}
சங்கரி, மீண்டும் நகங்களைக் கடித்தாள். விரல்களுக்குச் சொடுக்குப் போட்டாள். வாசல் பக்கம், பட்டும் படாமலும் கண் போட்டாள். அது பயத்தாலா, பாசத்தாலா என்பது அவளுக்கே புரியவில்லை. அவன் கேட்ட, ‘கேட்கத்தகாத’ கேள்விகள் இன்னும் மனதைக் குத்தின. இத்தனை கேள்விகளுக்குப் பிறகும், அவனுடன் வாழ வேண்டியது தேவையா என்று ஒரு கேள்வி. அதே சமயம், பெற்றோரைத் திட்டிய அம்மாவை, அவன் அதட்டியதும், அவர்களைத் தனது சிகிச்சைக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்று தடுத்து, தானே அத்தனை செலவுகளையும் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டதும், அவளுக்கு ஒரு இனிமையான நினைவாக வந்தது. இரு வித நினைவுகளும், அவளை இருபக்கமாக இழுத்தன. பழைய நரகம் மீளுமோ, புதிய சொர்க்கம் கிடைக்குமோ...
இப்போது, அவள், அந்த அறை வாசலை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். மனோகரைக் காணவில்லை. மனம் பட படத்தது. எழுந்து அறையில் உலாவினாள். டீப்பாயிலிருந்து கீழே விழுந்த ஒரு வெண்கல டம்ளரை, எடுத்து மேஜையில் வைத்துவிட்டுத் திரும்பியபோது....
மனோகர், அவள் எதிரே நின்றான். கைகளைக் குறுக்காய்க் கட்டி, அவளை அவ்வப்போது பார்த்துப் பார்த்து தலை<noinclude></noinclude>
sd9il4243oe4qcv5nmujw8bdcflpz7m
பக்கம்:ஒத்தை வீடு.pdf/119
250
202551
1837972
762171
2025-07-01T18:12:12Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|16||ஒத்தை வீடு}}</noinclude>கவிழ்ந்தான். ஏதோ பேசுவதற்காக, முகத்தை முன்னோக்கி நிமிர்த்தப் போனான். முடியவில்லை. முயன்று, முயன்று பார்த்தான். கண்கள்தான், கசிந்தன. அவள், எடுத்த எடுப்பிலேயே தன்மீது தாவி, விழுந்து அழுவாள் என்று எதிர்பார்த்த அவனுக்கு, ஒரு ஏமாற்றம். அந்த ஏமாற்றமே, அவன் மனதை வைரப்படுத்தியது. அவளது எந்த முடிவையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மனம் சொல்லிக் கொடுத்தது.
சங்கரி, இன்னும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அழுகையும், ஆத்திரமும், நீரும் நெருப்பும்போல் ஒருங்கே வந்தன. படுக்கையில் உட்கார்ந்து முட்டிக் கால்களைக் கட்டிக் கொண்டு முகம் புதைத்தாள். இடையிடையே அவனைப் பார்த்தாள். அவனைப் போலவே, பார்க்க நினைத்து, பார்க்க முடியாமல், முகம் நீட்டியும் தலை கவிழ்த்தும் அல்லாடினாள்.
இதற்குள், ஒரு உறுதியனான முடிவுக்கு வந்த மனோகர், கட்டிலின் எதிரே உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தான். சட்டைப் பைக்குள் இரு மடிப்பாய் இருந்த ஒரு அரசாங்க முத்திரையிட்ட கவரை, ஒரு கையால் எடுத்தபடி, மறு கையால் அவள் முகத்தை நிமிர்த்தினான். அந்தக் கவரை, அவள் கைகளைப் பிரித்துத் திணித்தான். சிறிது நேரம் அசைவற்ற அவள் கண்களில், அந்தக் கவர் தாளாய்ப்பட்டது. அதன் மேல் அவளது பெயர், முகவரி...
மனோகர், அந்தக் கவரை, அவளிடமிருந்து எடுத்து, உள்ள இருந்த காகிதத்தை, அவள் முட்டிக் கால்களில் வைத்தான் அதைப் படிப்பதைத் தவிர, அவளுக்கு வேறு வழியில்லை. மூன்றாம் ஆளாய்ப் படித்தவளின் உடல் நிமிர்ந்தது. கால்கள் சம்மணமிட்டன. கண்கள் பிரகாசித்தன. சாஸ்திரிபவனில், அவள் சேர வேண்டிய அலுவலகத்திலிருந்து வந்துள்ள கடிதம், அவள் வேலையில் சேர ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அவகாசம் முடிய இன்னும் இருபத்தைந்து நாட்கள் உள்ளன.
சங்கரி, பரவசப்பட்டாள். சாஸ்திரிபவனில், அவள் அப்போதே வேலை பார்ப்பது போன்ற பிரமை. சக தோழிகளுடன் பேசுகிறாள்... சிரிக்கிறாள்...
அப்போது, அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில், அந்த மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ளவேண்டும்<noinclude></noinclude>
8k6rd6jr3pziio750xpplvb8z9er2fo
1837973
1837972
2025-07-01T18:12:31Z
மொஹமது கராம்
14681
1837973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|118||ஒத்தை வீடு}}</noinclude>கவிழ்ந்தான். ஏதோ பேசுவதற்காக, முகத்தை முன்னோக்கி நிமிர்த்தப் போனான். முடியவில்லை. முயன்று, முயன்று பார்த்தான். கண்கள்தான், கசிந்தன. அவள், எடுத்த எடுப்பிலேயே தன்மீது தாவி, விழுந்து அழுவாள் என்று எதிர்பார்த்த அவனுக்கு, ஒரு ஏமாற்றம். அந்த ஏமாற்றமே, அவன் மனதை வைரப்படுத்தியது. அவளது எந்த முடிவையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மனம் சொல்லிக் கொடுத்தது.
சங்கரி, இன்னும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அழுகையும், ஆத்திரமும், நீரும் நெருப்பும்போல் ஒருங்கே வந்தன. படுக்கையில் உட்கார்ந்து முட்டிக் கால்களைக் கட்டிக் கொண்டு முகம் புதைத்தாள். இடையிடையே அவனைப் பார்த்தாள். அவனைப் போலவே, பார்க்க நினைத்து, பார்க்க முடியாமல், முகம் நீட்டியும் தலை கவிழ்த்தும் அல்லாடினாள்.
இதற்குள், ஒரு உறுதியனான முடிவுக்கு வந்த மனோகர், கட்டிலின் எதிரே உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தான். சட்டைப் பைக்குள் இரு மடிப்பாய் இருந்த ஒரு அரசாங்க முத்திரையிட்ட கவரை, ஒரு கையால் எடுத்தபடி, மறு கையால் அவள் முகத்தை நிமிர்த்தினான். அந்தக் கவரை, அவள் கைகளைப் பிரித்துத் திணித்தான். சிறிது நேரம் அசைவற்ற அவள் கண்களில், அந்தக் கவர் தாளாய்ப்பட்டது. அதன் மேல் அவளது பெயர், முகவரி...
மனோகர், அந்தக் கவரை, அவளிடமிருந்து எடுத்து, உள்ள இருந்த காகிதத்தை, அவள் முட்டிக் கால்களில் வைத்தான் அதைப் படிப்பதைத் தவிர, அவளுக்கு வேறு வழியில்லை. மூன்றாம் ஆளாய்ப் படித்தவளின் உடல் நிமிர்ந்தது. கால்கள் சம்மணமிட்டன. கண்கள் பிரகாசித்தன. சாஸ்திரிபவனில், அவள் சேர வேண்டிய அலுவலகத்திலிருந்து வந்துள்ள கடிதம், அவள் வேலையில் சேர ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அவகாசம் முடிய இன்னும் இருபத்தைந்து நாட்கள் உள்ளன.
சங்கரி, பரவசப்பட்டாள். சாஸ்திரிபவனில், அவள் அப்போதே வேலை பார்ப்பது போன்ற பிரமை. சக தோழிகளுடன் பேசுகிறாள்... சிரிக்கிறாள்...
அப்போது, அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில், அந்த மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ளவேண்டும்<noinclude></noinclude>
ddn4a91jconnb9x7sqpijexbj1v8dfb
பக்கம்:ஒத்தை வீடு.pdf/120
250
202553
1837974
762173
2025-07-01T18:20:07Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||119}}</noinclude>என்பதுபோல், அவனைப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க தனது மகிழ்ச்சி, மடிந்து, அவனது கோலம் மனதைக் குடைந்தது. பத்து நாளையத் தாடி; கசங்கிப் போன உடை; உள்ளுக்குள் போன கன்னங்கள். ‘அய்யோ, இது என்ன அலங்கோலம்.’
மனோகர், தட்டுத் தடுமாறி தழுதழுத்த குரலில் விளக்கினான்.
“நீ சேரவேண்டிய அலுவலகத்துக்குப் போய், தலைமை அதிகாரியைச் சந்தித்தேன். உனக்கு சுகமானதும், வேலையில் சேர்த்திடுவேன்னு அவகாசம் கேட்டேன். உடனே, அந்தப் பெரிய மனிதர், ‘வெளியூர்ல அவங்க அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ சீரியஸ்னும், இதனால் ஓங்க ஒய்பு அங்கே போயிருக்காங்கன்னும்’ ஒரு லெட்டர் எழுதிக் கொடுக்கச் சொன்னார். ஒனக்கு சுகமில்லைன்னு சொன்னால், மெடிகல் சர்டிபிகேட்டில் பிரச்சினை வரும் என்றார். நானும், ஒங்கம்மா, மதுரையில் படுத்த படுக்கையாய் இருக்கிறதாய் எழுதிக் கொடுத்தேன். எந்த நேரம் பொய் சொன்னேனோ, அது எங்கம்மா விஷயத்துல மெய்யாயிட்டு...”
சங்கரி, அவனை நேருக்கு நேராய்ப் பார்த்து, முதல் தடவையாக அதே சமயம், எதார்த்தமான குரலில் கேட்டாள்.
“என்னாச்சு... என்னால எல்லாருக்குமே பிரச்சினைதான். என்னாச்சு...”
“பயப்படும்படியா இல்ல... நாலு நாள் படுக்கை வாசம். இப்போ பக்கத்து வீட்டுக்காரனைத் திட்டுற அளவுக்குத் தேறிட்டாங்க. ஐ... ஆம் ஸாரி சங்கரி... ஒன் விஷயத்துல, அரக்கத்தனமா நடந்துக்கிட்டேன்னு, எங்கம்மாவே என்னைத் திட்டுறாங்க...”
சங்கரி, சகவாச தோசத்தில் கேட்பதுபோல, கேட்டாள்.
“ஒங்க அக்காவுக்கு ஏதாவது செய்தீங்களா...”
“ஆமாம். என் போலீஸ் எஸ்.பி. பிரெண்டைப் பார்த்தேன். அவரு, எங்க மாவட்ட எஸ்.பி. கிட்டே பேசினார். இரண்டு நாளுல் அக்காகிட்டே தகராறுக்குப் போன அத்தனை பேரும், இங்கே வீட்டுக்கு வந்தாங்க. என் காதைப் பிடித்துத் திருகுனவன் முதல் இளக்காரமாய்ப் பார்த்தவனுங்க வரை அத்தனை பேரும் வந்தாங்க... காலுல விழாத குறையாக் கெஞ்சினாங்க. அக்காவும் சமரசத்திற்குச் சம்மதிச்சிட்டாள். பிரச்சினை தீர்ந்துட்டு.”
“கடைசில... எல்லாரும் தர்மத்தை விட, போலீஸுக்குத்தான் பயப்படுறாங்க... ஒங்க அக்காவுக்கு... நீங்க இருக்கீங்க<noinclude></noinclude>
riu6kmoaz5na99f0anfuznsvp3f84l5
பக்கம்:ஒத்தை வீடு.pdf/121
250
202555
1837975
762174
2025-07-01T18:25:49Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|120||ஒத்தை வீடு}}</noinclude>தப்பிச்சிட்டாங்க... இதை மாதிரி அதிகார பலம் இல்லாத அனாதைப் பெண்கள் என்ன செய்வாங்க? உதைக்கிற காலுலதான் விழணுமா? அடிக்கிற கையைப் பிடித்துத்தான் கெஞ்சணுமா?”
சங்கரி, பாதிக் கண்களை மூடியபடி, மனோகரைப் பார்த்தபோது, அவன், அவளைச் சந்திக்க முடியாமல், முழுக் கண்களையும் மூடினான். என்ன சொல்கிறாள்? அவளோட நிலைமையைச் சொல்லாமல் சொல்கிறாளா... பேசிட வேண்டியதுதான்... முழுமையாகப் பேசி... முடிவை அவளிடம் விட்டுவிட வேண்டியதுதான். எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டியதுதான்.
மனோகர், நாற்காலியில் நிமிர்ந்து உட்காருகிறான். மனம், விரக்தியையும், பற்றையும் விலக்கித் தள்ளியது. வாய் அதன் வெளிப்பாடாகியது.
“ஒன் விஷயத்தில், நான் ஒரு மிருகமாகவும், எனக்கு நானே பித்துக்குளியாகவும் நடத்துக்கிட்டேன். இதற்கு, டாக்டர், பல்வேறு பின்னணிக் காரணங்களைச் சொல்கிறார். ஒனக்கு, வலிப்பு வந்தது எப்படி, உன்னை மீறிய செயலோ... அப்படித்தான் நான், நடத்திய ஆர்ப்பாட்டமும், அடித்த கூத்தும், என்னை மீறிய செயல் என்கிறார். ஆனாலும், அவர் சாக்கில், நான், நடந்து கொண்ட விதத்தை நியாயப்படுத்த விரும்பல... உன்கிட்டே மன்னிப்புக் கேட்டுக்கிறேன்... தயவுசெய்து என்னைப் பேச விடும்மா...”
“இப்போ... நான், எல்லா அம்சங்களிலும் மேன்மைப்பட்டதாய் நினைக்கேன். டாக்டரும் அதைத்தான் சொல்கிறார். இனிமேல் என்னோட சேர்ந்து வாழ்வதும், வாழாததும் ஒன்னோட உரிமை. பிளீஸ் பேச விடு... நீ என்னோட வாழ்வதற்கு வசதியாய் நானும் நடந்துக்குவேன். டாக்டர், சொன்னது மாதிரி, நம் இரண்டு பேருக்கும் சுற்றுப்புற மாற்றம் அவசியம் ஒன் முடிவு எப்படியோ... நான், வீடு பார்க்கேன். உனக்குச் சம்மதமுன்னால், புதுவீடு கிடைக்குற வரைக்கும், ஒன்னோட ஊருக்கே வரத் தயாராய் இருக்கேன். ஊர்க்காரன் அடங்கிட்டதால், அம்மா, அக்காவோட ஊருக்குப் போகப் போவதாய் ஒத்தக் காலில் நிற்கிறாள்.”
“இனிமேல், நீ சொந்தக் காலில் நிற்கப் போகிற சுயேச்சையான பெண் கணவன் கையை எதிர்பார்க்கிற ஒரு மனைவியின் அன்பு, மாசு, மருவற்று இருந்தாலும், சில சமயம் அது கட்டாயத்தின் பேரிலும் வரலாம். ஆனால், வேலைக்குப் போகிற ஒரு மனைவியின்<noinclude></noinclude>
enl0aamm9tpmq1udl5rcrc7d47cy9dx
பக்கம்:ஒத்தை வீடு.pdf/122
250
202557
1837976
762175
2025-07-01T18:33:30Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||121}}</noinclude>அன்பு, எந்தக் கட்டாயத்திற்கும் உட்பட்டதல்ல... அந்த அன்பு, நீர் தேக்கமல்ல... தானாய்ப் பீறிடும் நீரூற்று... ஒன்கிட்டப் பேசின பிறகு என் மனம் லேசானது மாதிரித் தெரியுது. ஒன்கிட்ட மனைவியாய்ப் பேசற உரிமையை, நீ தராமல் நான் எடுக்கத் தயாராயில்லை. ஒன்னை ஒரு தோழியாய் நினைத்துத்தான் பேசுறேன். நான் பேசுறதுல, ஒனக்குச் சந்தோசமோ... இல்லியோ... எனக்கு ஒரு நிம்மதி. காரணம், நானும் ஒன்னை மாதிரி ஒரு வகையிலே, அனாதரவான...”
மனோகர், விம்மினான். உடனடியாய் அந்த விம்மலை, அடக்கினான். தனக்குத்தானே ஆணையிட்டான். ‘அழுது ஆதாயம் தேடப்படாது. நான் வயதுக்கு வந்தப் பெரியவன். அழமாட்டேன். எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன்.’
யந்திர சங்கரி, பெண்ணானாள். அந்தப் பெண், மெள்ள மெள்ள மனைவியாக மாறிக் கொண்டிருந்தாள். இந்தச் சமயத்தில், மனோகரும் யதார்த்தக் குரலில் கேட்டான்.
“இப்போ, எனக்கு ஒரு பதில் வேணும். சங்கரியை, இனிமேல் நான் எப்படிப் கூப்பிடணும்? வழக்கம்போல் நீ என்றா, இல்லை நீங்கன்னா... ரெண்டு எழுத்துத்தான் வித்தியாசம். ஆனால், இது நம்மை ரெண்டாகவும் பிரிக்கலாம்; ஒன்றாகவும் ஆக்கலாம். என் முடிவைச் சொல்லிட்டேன். அதேசமயம், சங்கரி முடிவையும் மதிக்கிறேன். மனசு கேட்கல... நான் நடந்துகிட்டதுக்குப் பிராயச்சித்தம் செய்யணும். எது என்கிறது எனக்கு இப்பத் தெரியணும். இல்லாட்டியும்... நாளைக்குச் சொல்லலாம்.”
சங்கரி, மனோகரை மலங்க மலங்கப் பார்த்தாள். அவன், கண் கலக்கத்தில், அவள் கண்கள், கசிந்தன. ஒரு விநாடி அவனையே அசைவற்றுப் பார்த்தவள், மறு விநாடி அவன் மேல் சாய்ந்தாள். அவன் கழுத்தை இரண்டு கரங்களாலும், சுற்றி வளைத்து, அவனை தன் பக்கமாகச் சரித்தாள். ஏதோ பேசப் போனவனின் வாயைப் பொத்தினாள். குலுங்கிக் குலுங்கி அழுதழுது, அவனையும் குலுக்கினாள். அவன் தோள்களை, அழுத்தப் பற்றி, அவன் கழுத்தில் முகம் போட்டாள். சத்தம் போட்டே கத்தினாள்.
“நான் போகமாட்டேன். ஒங்கள விட்டுட்டுப் போகமாட்டேன். என்ன ஆனாலும் சரி... எப்படி ஆனாலும் சரி... நீங்க என்னை விட்டுப் போறதுக்கு விடமாட்டேன்... பார்த்துடலாமா...”
சங்கரி, அவனைச் சவாலாகப் பார்த்தாள். ஒரு குழந்தையைப் போல பார்த்தாள். அவனை, பொய்யடியாய், கன்னத்தில்<noinclude></noinclude>
784woqyuq8s7xvloj8q9bjztm5ojmis
பக்கம்:ஒத்தை வீடு.pdf/123
250
202559
1838192
1836790
2025-07-02T07:48:05Z
மொஹமது கராம்
14681
1838192
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|122||ஒத்தை வீடு}}</noinclude>அடித்தாள். தலையில் குட்டினாள். அவன் சிரித்தபோது, இவள் அழுகை விக்கலாகி, திக்கலாகி, அவன் கழுத்துக்கு, இன்னொரு முகம் முளைத்ததுபோல் மவுனமாய் முற்றுப் பெற்றது. அவளது கண்ணீர், மழை விட்ட தூவானமாய், அவன் கழுத்து மேட்டில் துளித் துளியாய் பல்கிப் பரவி நின்றது. அந்த ஒவ்வொரு துளியும், அவன் மனதில் ஒவ்வொரு நதியாய்ப் பிரவாகம் எடுத்தது. அத்தனை நதிகளும், ஒரு மகாநதியாகி, சங்கரிக்குள் சங்கமித்தது.
கடலும் நதியும் ஒன்றானதில், அவர்களது கரங்களும், கால்களும் அலைகளாய் ஆர்ப்பரித்தன. நேரத்தை இழுத்துப் பிடித்த அலைகள்... இயக்கத்தை நிறுத்தாத புதிய புதிய அலைகள்.
{{***|5|1em|char=✽}}
<section end="14"/>{{nop}}<noinclude></noinclude>
pwuc0xl3fzzmtyel363n48572meumg5
பக்கம்:ஒத்தை வீடு.pdf/125
250
202563
1838208
762178
2025-07-02T08:12:18Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838208
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="15"/>
{{center|{{Xx-larger|<b>புதைமண்</b>}}}}
{{dhr|3em}}
சென்னைப் பெருநகரின் இதயப்பகுதி; அதற்குப் பைபாஸ் சர்ஜரி செய்தது போன்ற கட்டிடத் தொகுதிகள். அத்தனையும் வானம் அளப்பவை. இதில் முக்கோணமாய் முகம் காட்டும் மூன்று திரையரங்குகள். இந்தக் கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் விரிந்து பரந்த ஆள் நடமாட்டம் இல்லாத வளாகம். பென்ஸ், டாடா சுமோ, மாருதி, சான்ரோ, இண்டிகா போன்ற பல்வேறு கார்கள், கிழித்த கோடுகளை மீறி நின்றன. இவற்றின் அருகே பல்வேறு வண்ணத்திலான இரண்டு சக்கர வாகனங்கள்; ஒரு ஓரத்தில் சைக்கிள்கள்.
இந்த வளாகத்தின் உள்முனையில் பத்து படிக்கட்டுக்கள். கீழே இறங்கிப் போனால் ‘அண்டர் கிரவுண்டான’ அடிவாரத் தளம். பளபளப்பான கடப்பா மேனித் தரை நடந்தால் காலுக்கு ஒரு சுகம்; உள்ளே வருகிறவர்களை வரவேற்பதற்காக, ஒரு காதில் மட்டும் கடுக்கன் போட்ட விரிந்த சடை இளைஞர்கள் இரண்டு பேர், கோட்டும் சூட்டுமாய் நின்றார்கள் ‘ஹலோ’ என்பதற்கு பதிலாக ஒவ்வொருவரிடமும் “ஹாய் கேய்” என்றார்கள்.
அடிவாரத் தளத்தில் வடக்கு முனையில் அலங்கரித்த மேடை; மிருதங்க, வீணை, வயலின், கடம் முதலிய வித்தகர்கள் தத்தம் கருவிகளோடு அவற்றை செல்லத் தட்டாய் தட்டியபடியே இருந்தார்கள். இவர்கள் மத்தியில், ஒரு இளம் பாடகன். மேடையின் மேட்டுப் பகுதியில், காகிதப் பூக்களால் தோரணமாய் சுருள் சுருளாய் கட்டப்பட்டிருந்தன பின்தளத்தில் தில்லை நடராஜருக்குப் பதிலாக, அர்த்த நாரீஸ்வார் சிலை அதன் ஒரு கண்ணில் நளினப்<noinclude></noinclude>
i9peceu18bncrhzq0j4zc8s45341xfc
1838267
1838208
2025-07-02T11:37:39Z
மொஹமது கராம்
14681
1838267
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}}
<section begin="1"/>
{{center|{{Xx-larger|<b>புதைமண்</b>}}}}
{{dhr|3em}}
சென்னைப் பெருநகரின் இதயப்பகுதி; அதற்குப் பைபாஸ் சர்ஜரி செய்தது போன்ற கட்டிடத் தொகுதிகள். அத்தனையும் வானம் அளப்பவை. இதில் முக்கோணமாய் முகம் காட்டும் மூன்று திரையரங்குகள். இந்தக் கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் விரிந்து பரந்த ஆள் நடமாட்டம் இல்லாத வளாகம். பென்ஸ், டாடா சுமோ, மாருதி, சான்ரோ, இண்டிகா போன்ற பல்வேறு கார்கள், கிழித்த கோடுகளை மீறி நின்றன. இவற்றின் அருகே பல்வேறு வண்ணத்திலான இரண்டு சக்கர வாகனங்கள்; ஒரு ஓரத்தில் சைக்கிள்கள்.
இந்த வளாகத்தின் உள்முனையில் பத்து படிக்கட்டுக்கள். கீழே இறங்கிப் போனால் ‘அண்டர் கிரவுண்டான’ அடிவாரத் தளம். பளபளப்பான கடப்பா மேனித் தரை நடந்தால் காலுக்கு ஒரு சுகம்; உள்ளே வருகிறவர்களை வரவேற்பதற்காக, ஒரு காதில் மட்டும் கடுக்கன் போட்ட விரிந்த சடை இளைஞர்கள் இரண்டு பேர், கோட்டும் சூட்டுமாய் நின்றார்கள் ‘ஹலோ’ என்பதற்கு பதிலாக ஒவ்வொருவரிடமும் “ஹாய் கேய்” என்றார்கள்.
அடிவாரத் தளத்தில் வடக்கு முனையில் அலங்கரித்த மேடை; மிருதங்க, வீணை, வயலின், கடம் முதலிய வித்தகர்கள் தத்தம் கருவிகளோடு அவற்றை செல்லத் தட்டாய் தட்டியபடியே இருந்தார்கள். இவர்கள் மத்தியில், ஒரு இளம் பாடகன். மேடையின் மேட்டுப் பகுதியில், காகிதப் பூக்களால் தோரணமாய் சுருள் சுருளாய் கட்டப்பட்டிருந்தன பின்தளத்தில் தில்லை நடராஜருக்குப் பதிலாக, அர்த்த நாரீஸ்வார் சிலை அதன் ஒரு கண்ணில் நளினப்<noinclude></noinclude>
5vf06gtbz78awc15vx108gwwx904mhr
பக்கம்:ஒத்தை வீடு.pdf/126
250
202565
1838210
762179
2025-07-02T08:29:23Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838210
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|126||புதைமண்}}</noinclude>பார்வை. இன்னொன்றில் சுடலைத் தீப்பொறி. ஒற்றை மார்பகம்; இடுப்பில் ஒரு பக்கத்தை காணவில்லை. கால்கள் ஒன்றில் லாவகம். இன்னொன்றில் ஆடு தளத்தை அழுந்தப்பிடித்த - நாட்டிய பாணியில் சொல்லப்போனால் “தரைத்தட்டு”க் கோலம்.
நடுநிசி வந்துவிட்டது.
திடீரென்று மிருதங்கத்தின் அலாரிப்பும், அந்த அர்த்த நாரீஸ்வரர் சிலைமீது பூக்களும் ஒரே சமயத்தில் உராய்ந்தன. பக்கவாட்டில், நீளவாகு தேக்குப் பலகையில் விஸ்கி, பிராந்தி, ரம், ஓயின், ஓட்கா, பிளடி மேரி போன்ற குடி வகையறாக்கள். இடது பக்கத்து நீளவாக்குப் பலகையில் பிஷ் பிங்கர், பிங்கர் சிப்ஸ், மட்டன், சிக்கன் வறுவல்கள், முந்திரிக்கொட்டை, வேர்க்கடலை, நனைந்த பருப்பு, நனையாத பருப்பு, உருளை வடிவமான வெங்காயம், அதே மாதிரியான வெள்ளரிக்காய், பிரியாணி, சப்பாத்தி, சமாச்சாரங்கள். இவை அத்தனையையும் ஓரங்கட்டிப் பார்த்தபடியே நின்றவர்கள், இரண்டு வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்காரப் போனார்கள்.
அதுவரை, மனித குரோசோம்களில் நாலு கோடியே பத்து லட்சம் கேரக்டர்கள் இருப்பதை கண்டு பிடித்த லண்டன் மருத்துவ விஞ்ஞானிகளின் பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பை அலசிக் கொண்டிருந்தவர்கள் - வீட்டில் வெள்ளைக் கோட்டை தூக்கிப் போட்டுவிட்டு வந்திருந்த இவர்கள், முன் வரிசையில் இடது பக்கம் நட்புக்கு ஏற்ற வகையிலும், மேடைப் பார்வைக்கு ஏற்ற வகையிலும் உட்கார்ந்தார்கள். தர்மபுரியில், மூன்று மாணவிகளை, உயிரோடு கொளுத்திய கொடுமையை அரசியல் சாசனத்தின் வழியாகவும், இ.பி.கோ. மூலமும், அலசிக் கொண்டிருந்தவர்கள், வலது பக்கம் உட்கார்ந்தார்கள். இவர்களும் கருப்பு அங்கிகளை கார்களுக்குள் போட்டுவிட்டு வந்தவர்கள். பொறியாளர்களிடம், தான் வரைந்த கட்டிடப் பிளானை தலைகளாகப் பிடித்த கார்ப்பரேஷன் கிளார்க்கிடம் அதைச் சுட்டிக் காட்டினால் உடனே அவர் தவறுக்கு வருந்தாமல் ‘எனக்குத் தெரியும்’ என்று திமிராக பதிலளித்ததை விளக்கிக் கொண்டிருந்த சீனியர் பொறியாளரை விட்டுவிட்டு, ஜூனியர் பொறியாளர்கள் இருக்கைகளில் ஓடிப்போய் உட்கார்ந்தார்கள் சாதிச் சண்டைகளை, சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக கருத வேண்டும் என்று வாதாடி போராடிக் கொண்டிருந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.,காரர்களும், சமூகப் பிரச்சினையாக கருத வேண்டும் என்று பதிலளித்த அரசியல் வாதிகளும் அவசர அவசரமாய் ஓடி உட்கார்ந்தார்கள் இவர்கள் அல்லாது கம்பெனி நிர்வாகிகள், மாணவர்கள், டாக்சி டிரைவர்கள், என்.ஜி.ஓ எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனர்கள்,<noinclude></noinclude>
22hmr7fs09zfq0ms9xixrl1wdpyxwqo
பக்கம்:ஒத்தை வீடு.pdf/127
250
202567
1838211
762180
2025-07-02T08:35:54Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838211
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||127}}</noinclude>லுங்கிக்காரர்கள் உள்ளிட்ட கலப்புக் கூட்டமாக, அந்த இருக்கைகள் மாறின. ஆனாலும், மருந்துக்குக்கூட ஒரு பெண் இல்லை.
திடீரென்று, அந்தத் தளத்தின் மேடை, வெள்ளை வாழைத்தண்டு விளக்குகளும், வண்ண பல்புகளும் அணைய அணைய, செஞ்சிவப்பு விளக்குகளால் பிரகாசித்தது. மிருதங்கம் மட்டும் பெரிதாய் ஒலிக்க, இதர இசைக்காரர்கள் தத்தம் கருவிகளுக்கு சுதி சேர்த்தார்கள். எங்கிருந்தோ ஒரு பின்னணிக் குரல்.
“ஹாய்! கேய்... பாய்ஸ்... வணக்கம். இப்போது நமது சங்கத்தின் பொதுச் செயலாளரும், பெரிய இடத்துப் பிள்ளையும், நடன சிகாமணியுமான மோகனனின் பரத நாட்டியமும், கதக் நாட்டியமும் நடைபெறும்.”
மோகனன் என்ற பெயர் வந்தபோது நமது தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் வி.ஐ.பி. பேர்களுக்கு ஒரு அழுத்தம் கொடுப்பார்களே, அப்படிப்பட்ட அழுத்தம் அந்த பெயருக்கு கிடைத்தது. நிகழ்ச்சி அறிவிப்பு முடிந்ததும், மேடை விளக்குகள் திடீரென்று அணைந்தன. அந்த இருள் மயத்தில் மெல்லிய இசைகூட பேயோசையானது. இரண்டு நிமிடங்களில் அதே மேடை விளக்குகள் மீண்டும் ஜொலித்தன.
மேடையின் மையப் பகுதியில், மோகனன் நடனக் கச்சிதமாய் காணப்பட்டான். செம்பச்சை வேட்டி இறுகக் கட்டப்பட்டிருந்தது. இடுப்பிற்கு மேல் இடது பக்கம் மட்டும் ஒரு தாவணி போன்ற துணி தோளைத் தொட்டு, முதுகை வருடிக் கொடுத்தது. ஒருகால், லேசாய் தூக்கியும், இன்னொரு கால், நளின வளைவோடும் நின்றன. காதுகள் ஒன்றில் வளையம். இன்னொன்றில் கடுக்கன். முகத்தில் ஒரு பகுதி சிவப்பு. மறுபகுதி கரும்பச்சை கீழ் உதட்டில் மட்டும் லிப்டிக்ஸ். பரதநாட்டிய இலக்கணப்படி, அவன் இரண்டு தோள்களும் ஒரே நேர்கோடாய் இணைந்தன. கழுத்து அதன் முடிச்சானது. இடுப்பின் நடுப்பகுதி ஒரு முக்கோண வடிவமாகவும், இடுப்புக்கு கீழே இருந்து பாதம் வரை இன்னொரு முக்கோண வடிவமாகவும் தோன்றின. அவன் கைகளை நீட்டி வளைத்து, அவற்றில் ஒவ்வொன்றும் முட்டிகளில் முட்டியபோது அவையும் இரண்டு முக்கோணங்களாகின.
மோகனன், ஒரு காலை மேலே தூக்கி, பிறகு பக்கவாட்டிற்கு கொண்டு வந்தான் கால்களை சலங்கை சத்தத்துடன் முன்னால் வந்து தரைத்தட்டு செய்தான். பின்னர், குதிகாலில் நின்று அப்படியே திரும்பி அர்த்த நாரீஸ்வரரை வணங்கி அதே காலோடு<noinclude></noinclude>
myuq3l0is73jgadw9rvv4vr6fdp2ruo
பக்கம்:ஒத்தை வீடு.pdf/128
250
202569
1838212
762181
2025-07-02T08:40:48Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838212
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|128||புதைமண்}}</noinclude>குருவான நட்டுவனாரை கைகூப்பி, அப்படியே திரும்பிய இடத்திற்கு திரும்பி, அவைக்கு வணக்கம் போட்டான். பின்னர் உடம்பின் நடுப்பகுதியில் பூமத்தியரேகை மாதிரியான ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து “சம பங்கமாய்” நின்றான். அப்போது தாள லயத்துடன் பாடல் அனுபல்லவியாய் ஒலித்தது.
{{c|பல்லவி}}
{{left_margin|3em|<poem><b>ஆணும் ஆணும் உறவு கொண்டால் — நீங்கள்
அலட்டிக்க என்னய்யா இருக்குது?
ஓரின உறவு, எங்களின் உரிமை — இந்த
உரிமையை பறிப்பது, உங்களின் மடமை!
{{c|அனுபல்லவி}}
என்னய்யா நியாயம்?
இதுதான் அநியாயம்!</b></poem>}}
பலத்த கைத்தட்டலுக்கு, இடையே இப்படி பாட்டு ஒலித்த
போது, மோகனன் ஒரு பக்கம் சாய்ந்தாடி, "அபங்கம்" செய்தான்.
முக்கோணமாய் உடலாட்டி திரிபங்கம் போட்டான். பின்னர்
அய்யப்ப சாமிபோல் குத்துக்காலில் உட்கார்த்து அவற்றில் இரு
கைகளையும் வேலியாக்கி வேக வேகமாய் உட்கார்ந்தான்.
அப்படியே அவன் எழுந்தபோது, இன்னொருவன் அலங்கார
மேடைக்கு வந்தான். இவனை அடிக்கப் போவது போல் துரத்திக்
கொண்டே கையை ஓங்கினான். மோகனன், அவனுக்குப் பயந்தவன்
போல் கை நடுங்கி, கால் நடுங்கி மேடையின் மறுமுனைக்கு
அபிநயமாய் போனான். உடனே, உச்ச கட்டத்தில் இசையொலி
விடாதே பிடி என்பது மாதிரி ஒலித்தது. அவ்வளவுதான்.. மோகனன்
அடிக்க வந்தவனை காலை வாரி குப்புறப் போட்டான். அவன்
மேல் கவிழ்ந்து படுத்தான். "அய்யோ அய்யோ" என்று சிறிது நேரம்
கீழே கிடந்தவன் அலறினான். பிறகு “ஆகா ஆகா" என்று மகிழ்ச்சி
ஆரவாரத்தில் குப்புறப்படுத்த மோகனனின் கழுத்தை பிடித்துக்
கொண்டான். உடனே பேரவையில் இருந்து "ஒன்ஸ்மோர்" என்று
பல "மோர்கள்" ஒலித்தன. அதற்குள் அது முடிந்து, மீண்டும்
மோகனனின் தனித்துவ நாட்டியம்.
பல்லவி பல தடவை ஒலித்தது ஒவ்வொரு தடவைக்கும்
ஒவ்வொரு விதமாக மோகனன் ஆடினான் 'வர்ணம்" என்ற
நாட்டிய இலக்கணப்படி சுழன்றான்; சுற்றினான்; சாணத்திற்கு ஏற்ப
பாடுவதுபோல் வாயசைத்தான்.{{nop}}<noinclude></noinclude>
cnuadg4r7lhj0fgkze4ujskdl6x27d2
1838213
1838212
2025-07-02T08:41:25Z
மொஹமது கராம்
14681
1838213
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|128||புதைமண்}}</noinclude>குருவான நட்டுவனாரை கைகூப்பி, அப்படியே திரும்பிய இடத்திற்கு திரும்பி, அவைக்கு வணக்கம் போட்டான். பின்னர் உடம்பின் நடுப்பகுதியில் பூமத்தியரேகை மாதிரியான ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து “சம பங்கமாய்” நின்றான். அப்போது தாள லயத்துடன் பாடல் அனுபல்லவியாய் ஒலித்தது.
{{c|பல்லவி}}
{{left_margin|3em|<poem><b>ஆணும் ஆணும் உறவு கொண்டால் — நீங்கள்
அலட்டிக்க என்னய்யா இருக்குது?
ஓரின உறவு, எங்களின் உரிமை — இந்த
உரிமையை பறிப்பது, உங்களின் மடமை!</b>
{{c|அனுபல்லவி}}
<b>என்னய்யா நியாயம்?
இதுதான் அநியாயம்!</b></poem>}}
பலத்த கைத்தட்டலுக்கு, இடையே இப்படி பாட்டு ஒலித்த
போது, மோகனன் ஒரு பக்கம் சாய்ந்தாடி, "அபங்கம்" செய்தான்.
முக்கோணமாய் உடலாட்டி திரிபங்கம் போட்டான். பின்னர்
அய்யப்ப சாமிபோல் குத்துக்காலில் உட்கார்த்து அவற்றில் இரு
கைகளையும் வேலியாக்கி வேக வேகமாய் உட்கார்ந்தான்.
அப்படியே அவன் எழுந்தபோது, இன்னொருவன் அலங்கார
மேடைக்கு வந்தான். இவனை அடிக்கப் போவது போல் துரத்திக்
கொண்டே கையை ஓங்கினான். மோகனன், அவனுக்குப் பயந்தவன்
போல் கை நடுங்கி, கால் நடுங்கி மேடையின் மறுமுனைக்கு
அபிநயமாய் போனான். உடனே, உச்ச கட்டத்தில் இசையொலி
விடாதே பிடி என்பது மாதிரி ஒலித்தது. அவ்வளவுதான்.. மோகனன்
அடிக்க வந்தவனை காலை வாரி குப்புறப் போட்டான். அவன்
மேல் கவிழ்ந்து படுத்தான். "அய்யோ அய்யோ" என்று சிறிது நேரம்
கீழே கிடந்தவன் அலறினான். பிறகு “ஆகா ஆகா" என்று மகிழ்ச்சி
ஆரவாரத்தில் குப்புறப்படுத்த மோகனனின் கழுத்தை பிடித்துக்
கொண்டான். உடனே பேரவையில் இருந்து "ஒன்ஸ்மோர்" என்று
பல "மோர்கள்" ஒலித்தன. அதற்குள் அது முடிந்து, மீண்டும்
மோகனனின் தனித்துவ நாட்டியம்.
பல்லவி பல தடவை ஒலித்தது ஒவ்வொரு தடவைக்கும்
ஒவ்வொரு விதமாக மோகனன் ஆடினான் 'வர்ணம்" என்ற
நாட்டிய இலக்கணப்படி சுழன்றான்; சுற்றினான்; சாணத்திற்கு ஏற்ப
பாடுவதுபோல் வாயசைத்தான்.{{nop}}<noinclude></noinclude>
jxl0fvsnxdlzoeh7kjmcultwovdy1lt
1838215
1838213
2025-07-02T08:42:08Z
மொஹமது கராம்
14681
1838215
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|128||புதைமண்}}</noinclude>குருவான நட்டுவனாரை கைகூப்பி, அப்படியே திரும்பிய இடத்திற்கு திரும்பி, அவைக்கு வணக்கம் போட்டான். பின்னர் உடம்பின் நடுப்பகுதியில் பூமத்தியரேகை மாதிரியான ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து “சம பங்கமாய்” நின்றான். அப்போது தாள லயத்துடன் பாடல் அனுபல்லவியாய் ஒலித்தது.
{{c|பல்லவி}}
{{left_margin|3em|<poem><b>ஆணும் ஆணும் உறவு கொண்டால் — நீங்கள்
அலட்டிக்க என்னய்யா இருக்குது?
ஓரின உறவு, எங்களின் உரிமை — இந்த
உரிமையை பறிப்பது, உங்களின் மடமை!</b>
{{c|அனுபல்லவி}}
<b>என்னய்யா நியாயம்?
இதுதான் அநியாயம்!</b></poem>}}
பலத்த கைத்தட்டலுக்கு, இடையே இப்படி பாட்டு ஒலித்த
போது, மோகனன் ஒரு பக்கம் சாய்ந்தாடி, "அபங்கம்" செய்தான்.
முக்கோணமாய் உடலாட்டி திரிபங்கம் போட்டான். பின்னர்
அய்யப்ப சாமிபோல் குத்துக்காலில் உட்கார்த்து அவற்றில் இரு
கைகளையும் வேலியாக்கி வேக வேகமாய் உட்கார்ந்தான்.
அப்படியே அவன் எழுந்தபோது, இன்னொருவன் அலங்கார
மேடைக்கு வந்தான். இவனை அடிக்கப் போவது போல் துரத்திக்
கொண்டே கையை ஓங்கினான். மோகனன், அவனுக்குப் பயந்தவன்
போல் கை நடுங்கி, கால் நடுங்கி மேடையின் மறுமுனைக்கு
அபிநயமாய் போனான். உடனே, உச்ச கட்டத்தில் இசையொலி
விடாதே பிடி என்பது மாதிரி ஒலித்தது. அவ்வளவுதான்.. மோகனன்
அடிக்க வந்தவனை காலை வாரி குப்புறப் போட்டான். அவன்
மேல் கவிழ்ந்து படுத்தான். "அய்யோ அய்யோ" என்று சிறிது நேரம்
கீழே கிடந்தவன் அலறினான். பிறகு “ஆகா ஆகா" என்று மகிழ்ச்சி
ஆரவாரத்தில் குப்புறப்படுத்த மோகனனின் கழுத்தை பிடித்துக்
கொண்டான். உடனே பேரவையில் இருந்து "ஒன்ஸ்மோர்" என்று
பல "மோர்கள்" ஒலித்தன. அதற்குள் அது முடிந்து, மீண்டும்
மோகனனின் தனித்துவ நாட்டியம்.
பல்லவி பல தடவை ஒலித்தது ஒவ்வொரு தடவைக்கும்
ஒவ்வொரு விதமாக மோகனன் ஆடினான் 'வர்ணம்" என்ற
நாட்டிய இலக்கணப்படி சுழன்றான்; சுற்றினான்; சாணத்திற்கு ஏற்ப
பாடுவதுபோல் வாயசைத்தான்.{{nop}}<noinclude></noinclude>
8a52dr27w1jbcgy4oifaoqsrihtp3we
1838216
1838215
2025-07-02T08:42:37Z
மொஹமது கராம்
14681
1838216
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|128||புதைமண்}}</noinclude>குருவான நட்டுவனாரை கைகூப்பி, அப்படியே திரும்பிய இடத்திற்கு திரும்பி, அவைக்கு வணக்கம் போட்டான். பின்னர் உடம்பின் நடுப்பகுதியில் பூமத்தியரேகை மாதிரியான ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து “சம பங்கமாய்” நின்றான். அப்போது தாள லயத்துடன் பாடல் அனுபல்லவியாய் ஒலித்தது.
{{c|பல்லவி}}
{{left_margin|3em|<poem><b>ஆணும் ஆணும் உறவு கொண்டால் — நீங்கள்
அலட்டிக்க என்னய்யா இருக்குது?
ஓரின உறவு, எங்களின் உரிமை — இந்த
உரிமையை பறிப்பது, உங்களின் மடமை!</b>
{{c|அனுபல்லவி}}
<b>என்னய்யா நியாயம்?
இதுதான் அநியாயம்!</b></poem>}}
பலத்த கைத்தட்டலுக்கு, இடையே இப்படி பாட்டு ஒலித்த
போது, மோகனன் ஒரு பக்கம் சாய்ந்தாடி, "அபங்கம்" செய்தான்.
முக்கோணமாய் உடலாட்டி திரிபங்கம் போட்டான். பின்னர்
அய்யப்ப சாமிபோல் குத்துக்காலில் உட்கார்த்து அவற்றில் இரு
கைகளையும் வேலியாக்கி வேக வேகமாய் உட்கார்ந்தான்.
அப்படியே அவன் எழுந்தபோது, இன்னொருவன் அலங்கார
மேடைக்கு வந்தான். இவனை அடிக்கப் போவது போல் துரத்திக்
கொண்டே கையை ஓங்கினான். மோகனன், அவனுக்குப் பயந்தவன்
போல் கை நடுங்கி, கால் நடுங்கி மேடையின் மறுமுனைக்கு
அபிநயமாய் போனான். உடனே, உச்ச கட்டத்தில் இசையொலி
விடாதே பிடி என்பது மாதிரி ஒலித்தது. அவ்வளவுதான்.. மோகனன்
அடிக்க வந்தவனை காலை வாரி குப்புறப் போட்டான். அவன்
மேல் கவிழ்ந்து படுத்தான். "அய்யோ அய்யோ" என்று சிறிது நேரம்
கீழே கிடந்தவன் அலறினான். பிறகு “ஆகா ஆகா" என்று மகிழ்ச்சி
ஆரவாரத்தில் குப்புறப்படுத்த மோகனனின் கழுத்தை பிடித்துக்
கொண்டான். உடனே பேரவையில் இருந்து "ஒன்ஸ்மோர்" என்று
பல "மோர்கள்" ஒலித்தன. அதற்குள் அது முடிந்து, மீண்டும்
மோகனனின் தனித்துவ நாட்டியம்.
பல்லவி பல தடவை ஒலித்தது ஒவ்வொரு தடவைக்கும்
ஒவ்வொரு விதமாக மோகனன் ஆடினான் 'வர்ணம்" என்ற
நாட்டிய இலக்கணப்படி சுழன்றான்; சுற்றினான்; சாணத்திற்கு ஏற்ப
பாடுவதுபோல் வாயசைத்தான்.{{nop}}<noinclude></noinclude>
mtf5cbca9vjqauxcwrajxgazizdq899
1838218
1838216
2025-07-02T08:48:19Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838218
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|128||புதைமண்}}</noinclude>குருவான நட்டுவனாரை கைகூப்பி, அப்படியே திரும்பிய இடத்திற்கு திரும்பி, அவைக்கு வணக்கம் போட்டான். பின்னர் உடம்பின் நடுப்பகுதியில் பூமத்தியரேகை மாதிரியான ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து “சம பங்கமாய்” நின்றான். அப்போது தாள லயத்துடன் பாடல் அனுபல்லவியாய் ஒலித்தது.
{{c|பல்லவி}}
{{left_margin|3em|<poem><b>ஆணும் ஆணும் உறவு கொண்டால் — நீங்கள்
அலட்டிக்க என்னய்யா இருக்குது?
ஓரின உறவு, எங்களின் உரிமை — இந்த
உரிமையை பறிப்பது, உங்களின் மடமை!</b>
{{c|அனுபல்லவி}}
<b>என்னய்யா நியாயம்?
இதுதான் அநியாயம்!</b></poem>}}
பலத்த கைத்தட்டலுக்கு, இடையே இப்படி பாட்டு ஒலித்தபோது, மோகனன் ஒரு பக்கம் சாய்ந்தாடி, “அபங்கம்” செய்தான். முக்கோணமாய் உடலாட்டி “திரிபங்கம்” போட்டான். பின்னர் அய்யப்ப சாமிபோல் குத்துக்காலில் உட்கார்த்து அவற்றில் இரு கைகளையும் வேலியாக்கி வேக வேகமாய் உட்கார்ந்தான். அப்படியே அவன் எழுந்தபோது, இன்னொருவன் அலங்கார மேடைக்கு வந்தான். இவனை அடிக்கப் போவது போல் துரத்திக்கொண்டே கையை ஓங்கினான். மோகனன், அவனுக்குப் பயந்தவன் போல் கை நடுங்கி, கால் நடுங்கி மேடையின் மறுமுனைக்கு அபிநயமாய் போனான். உடனே, உச்ச கட்டத்தில் இசையொலி விடாதே பிடி என்பது மாதிரி ஒலித்தது. அவ்வளவுதான்... மோகனன் அடிக்க வந்தவனை காலை வாரி குப்புறப் போட்டான். அவன் மேல் கவிழ்ந்து படுத்தான். “அய்யோ அய்யோ” என்று சிறிது நேரம் கீழே கிடந்தவன் அலறினான். பிறகு “ஆகா ஆகா” என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் குப்புறப்படுத்த மோகனனின் கழுத்தை பிடித்துக்கொண்டான். உடனே பேரவையில் இருந்து “ஒன்ஸ்மோர்” என்று பல “மோர்கள்” ஒலித்தன. அதற்குள் அது முடிந்து, மீண்டும் மோகனனின் தனித்துவ நாட்டியம்.
பல்லவி பல தடவை ஒலித்தது ஒவ்வொரு தடவைக்கும் ஒவ்வொரு விதமாக மோகனன் ஆடினான் “வர்ணம்” என்ற நாட்டிய இலக்கணப்படி சுழன்றான்; சுற்றினான்; சாணத்திற்கு ஏற்ப பாடுவதுபோல் வாயசைத்தான்.{{nop}}<noinclude></noinclude>
6t9pm45wfhv6lvnottqd47bn136gfn8
பக்கம்:ஒத்தை வீடு.pdf/129
250
202571
1838248
762182
2025-07-02T09:33:28Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||129}}</noinclude>{{left_margin|3em|<poem><b>ஓரினச் சேர்க்கை ஒருத்தரின் உரிமை
ஈரினச் சேர்க்கையால் என்னத்தை கண்டீர்? — மனித
உயிரினம் பெருகினால் உயிருக்கே ஆபத்து எங்கள்
ஓரினச் சேர்க்கைதான் உடனடி மருந்து.
மக்கள் பெருகினால் வெள்ளம், எரிமலை,
பூகம்பம், புயல், போரென்று வருமாம்.
மாபெரும் நிபுணன் மால்தஸின் கூற்று.
ஓரினச் சேர்க்கையே இந்தக் கூற்றுக்கு கூற்று.
கருப்பை இல்லாத சேர்க்கை
உருவம் பிறக்காத சேவை...
இருப்பினும் எங்களை வெறுக்கிறீர்
என்னய்யா நியாயம்? இது அநியாயம்...</b></poem>}}
மோகனன், பாடலுக்கு ஏற்ப அபிநய ஆட்டம் ஆடிவிட்டு, கால்களை லேசாய் ஆட்டி ஆட்டி பலமாய் நின்றான். அப்போது ஒரு பின்னணிக் குரல்.
“மோகனனின் பரத நாட்டியத்தால் நீங்கள் பாலியல் ரீதியாக பரவசப்படுவது புரிகிறது. ஆகையால், தில்லானா இல்லாமல், இப்போது கதக் ஆட்டத்தை ஒரு சாம்பிளாக ஆடிக்காட்டுவான் நம் மோகனன்.”
மோகனன் எழுந்து, சபைக்கு சிரம் தாழ்த்தி கைகூப்பி வணக்கம் செய்து கொண்டே, உள்ளே போய்விட்டான். கீழே கிடந்தவனும் இரண்டு குதி குதித்துவிட்டு போய்விட்டான். ‘ஆடும் மேய்த்தாயிற்று... அண்ணனுக்கும் பெண் பார்த்தாயிற்று...’ என்பதுபோல், மோகனன் இளைப்பாறுவதற்கும், ஆடை மாற்றத்திற்கும் ஏதுவாக, ஒவ்வொரு இசைக்கருவியும் தனி ஆவர்த்தனம் செய்தது. முப்பது நிமிடங்களில் மோகனன் திரும்பி வந்தபோது, கைதட்டு வலுவா? இசையோசை வலுவா? என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.
இப்போது, மோகனன் பட்டுக் கச்சை கட்டியிருந்தான். கழுத்தில் வெவ்வேறு அளவிலான விதவிதமான நகைகளை போட்டிருந்தான். கால் சதங்கையிலும், கை மணிகளிலும் மாற்றம் இல்லை. ஒரு பக்கத் தாவணியைக் காணவில்லை. பத்தம் பசலியாக ஒலித்த அதே இசைக்கருவிகள், இப்போது அட்டகாசமாய் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. மோகனனின் உடல் ஒற்றை நேர்கோடாய் நின்றது கால்கள் சமபாத நிலையில் ஊன்றின. இசைக்கு ஏற்ப அவன் இரு கால்களையும் மூன்றடி அளவிற்கு<noinclude></noinclude>
4bd2h7fi9izd1prpumxqxlhq6c1tyza
பக்கம்:ஒத்தை வீடு.pdf/130
250
202573
1838252
762184
2025-07-02T09:39:10Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838252
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|130||புதைமண்}}</noinclude>மேலே தூக்கி எம்பினான். எம்பி எம்பி குதித்தான். கை தட்டல்கள் வலுத்தன. மேடை குலுங்கியது. பின்னர் ஒரு காலை தரையில் ஊன்றிக் கொண்டே கண் புருவங்கள் வேக வேகமாய் அசைய அசைய, இன்னொரு காலை வட்ட வட்டமாய்ச் சுற்றி உடம்பையே பம்பரமாக்கினான். பூவாய் விரிந்தாடினான். மொட்டாய் குவிந்தாடினான். அந்தரத்தில் பல்டி அடித்தான். குறுக்கு நெடுக்குமாய் துள்ளினான்.
மோகனன், ஆட்டத்தை முடித்துவிட்டு, அவையோரைப் பார்த்தான். அங்குள்ள அனைவருக்கும் சீருடை வேலைக்காரர்கள் ஒவ்வொரு வெள்ளைக் கிளாசிலும் கால்வாசியை ரத்தக் கலராக்கி கொடுத்தார்கள். இன்னும் சிலர் கிளாஸ்களோடு வரிசையில் அமர்ந்தவர்கள் முன்னே, தட்டுக்களோடு பணிந்து குனிந்து நகர்ந்தார்கள். அப்போது, மோகனன் அவைக்கு ஒரு அறிவிப்பு கொடுத்தான்.
“பெண்ணாதிக்கதிலிருந்து விடுபட்ட “கேய்” தோழர்களே! இப்போது உங்களுக்கு, ஒரு நல்லவரை வல்லவரை அறிமுகப்படுத்தப்போகிறேன். ஆனால் அவர் “கேய்” இல்லை. கேய்களோடு நட்பாக இருப்பவர். தமிழக அரசின் எய்ட்ஸ் பிரிவில் இணை இயக்குநராக இருந்த, சிறந்த பேச்சாளர். இப்போது அரசாங்க பொது மருத்துவமனையில் எஸ்.டி.டி. - அதுதான் பாலியல் நோய் பிரிவிற்கு தலைவராக இருக்கிறார். ஒரு முன்னாள் அமைச்சரின் தம்பி. இவர் நினைத்திருந்தால், அமெரிக்காவிற்கு என்ன, அண்ணனின் உதவியால் நிலவுக்கே போயிருக்கலாம். ஆனாலும், சுயமரியாதைக் காரர். இன்னும் டெப்டி டைரக்டர் அந்தஸ்துலேயே இருப்பவர். இவர் எய்ட்ஸ் நோயில் ஒரு அதாரிட்டி. நமது தோழர். பார்ப்பதற்கு அழகாக இருப்பார். அவரை ஏதும் செய்து விடாதீர்கள். இப்போது அவர் மேடைக்கு வரப்போகிறார். அவர்தான் டாக்டர் காந்தராஜ். காந்தராஜ் அவர்களே! மேடைக்கு வாருங்கள்.”
டாக்டர். காந்தராஜ், மேடையில் போடப்பட்டிருந்த அலங்கார நாற்காலியில் விட்டு விட்டுத் தட்டப்பட்ட கைதட்டுக்களோடும், விசில் சத்தங்களோடும் உட்கார்ந்தார். அவையைப் பார்த்தார். அவருக்கு பழக்கப்பட்ட டாக்டர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வகையறாக்களும் இருப்பதைக் கண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார். அத்தனை பேரும் மிளகாய் பஜ்ஜி, மீன் வறுவல், சிக்கன் பிரைகள் சாட்சியாக மதுக் கிண்ணத்தை வாயில் சொருகியபோது, டாக்டர் காந்தராஜ், முன்னால் இருந்த மைக்கில், பொதுப்படையாகப் பேசினார்.{{nop}}<noinclude></noinclude>
dhg46wzyr8ruytd71x8s21mitobs0ef
பக்கம்:ஒத்தை வீடு.pdf/131
250
202575
1838255
762185
2025-07-02T09:48:05Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838255
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||17}}</noinclude>“ஓரினச் சேர்க்கை என்பது இயற்கைக்கு விரோதமானது. ஒரு முழுமையான ஆண் என்கிற முறையில், எனக்கு முழு இன்பம் கிடைக்கிறது. என் பெண் பார்ட்னருக்கும் கிடைக்கிறது. இதை வெறுத்து ஒதுக்கிவிட்டு...”
அவையினர் அத்தனைபேரும் அவரைப் பகைப் பார்வையாக பார்த்தபோது, ஒருவர், அதுவும் சரியான பெரிசு, ‘எங்கிருந்தோ வந்தவர்போல்’ இடையே குறுக்கிட்டார்.
“லுக் டாக்டர் காந்தராஜ்! உங்களை பொம்பள சுக உபதேசத்திற்காக இங்கே கூப்பிடல... அதனால ஹோமோ செக்ஸ் தப்பானதா? சரியானதா? என்ற ஆராய்ச்சி உங்களுக்கு அனாவசியம். இனிமேலும் பேசினால் எங்களின் ஒருவரின் மேலேயோ அல்லது கீழேயோ கிடத்தப்படுவீர்கள்! எங்களால் சமுதாயத்திற்கு எந்தக் கேடும் இல்லை. ‘நாங்கள் உண்டு. எங்கள் ஹோமோ செக்ஸ் உண்டு’ என்று இருக்கும் வாயில்லா ஜீவன்கள் நாங்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால், எங்களுக்குத்தான், இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை ஆனாலும் எங்களுக்கு அமெரிக்காவில் சுதந்திரம் கிடைச்சுட்டுது... பம்பாயில் பத்திரிகை வெளியிடுகிறோம். இந்த டர்ட்டி தமிழ்நாட்டில்தான் இன்னும் சுதந்திரம் கிடைக்கல. வந்த வேலையை கவனியுங்க டாக்டர் காந்தராஜ்...”
இன்னொருத்தவரும் எகிறினார்.
“ராமன் கெட்டதும் பெண்ணாலே. ராவணன் கெட்டதும் பெண்ணாலே என்று உங்களுக்கு புரியாதா காந்தா.”
காந்தராஜ் பயந்து போனார். தன்னை காந்தா என்று அழைத்ததில், அப்படி ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. பெரிய இடத்துப் பிள்ளையான மோகனனின் ஐ.ஏ.எஸ்., தந்தை, இவருக்கு அறிமுகமானவர். அதன் மூலம் இந்த மோகனனின் பரிச்சயம் கிடைத்தது இவனுக்காகவே வந்தார். ஆனால், இங்கே என்னடா என்றால்...
என்றாலும், டாக்டர் காந்தராஜ் சுதாரித்துக் கொண்டார். அவருக்கு இயற்கையின் அசலை சொல்லாமல், தான் மட்டும் அசலாய் வெளியேறினால் போதும் என்றாகிவிட்டது பதமாக இதமாகப் பேசினார்.
“தம்பிகளா... அண்ணன்களா... சக வயதுக்காரர்களா... உங்களை நான் குறை சொல்லவோ நிறை சொல்லவோ போவதில்லை. ஒரு வீடி டாக்டர் என்கிற முறையில், உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராய் இருக்கிறேன் சீக்கிரமாய் கேள்வி கேட்டு<noinclude></noinclude>
afoe92fzblo1702qfvy3pwao0ow5o6m
1838256
1838255
2025-07-02T09:48:38Z
மொஹமது கராம்
14681
1838256
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||131}}</noinclude>“ஓரினச் சேர்க்கை என்பது இயற்கைக்கு விரோதமானது. ஒரு முழுமையான ஆண் என்கிற முறையில், எனக்கு முழு இன்பம் கிடைக்கிறது. என் பெண் பார்ட்னருக்கும் கிடைக்கிறது. இதை வெறுத்து ஒதுக்கிவிட்டு...”
அவையினர் அத்தனைபேரும் அவரைப் பகைப் பார்வையாக பார்த்தபோது, ஒருவர், அதுவும் சரியான பெரிசு, ‘எங்கிருந்தோ வந்தவர்போல்’ இடையே குறுக்கிட்டார்.
“லுக் டாக்டர் காந்தராஜ்! உங்களை பொம்பள சுக உபதேசத்திற்காக இங்கே கூப்பிடல... அதனால ஹோமோ செக்ஸ் தப்பானதா? சரியானதா? என்ற ஆராய்ச்சி உங்களுக்கு அனாவசியம். இனிமேலும் பேசினால் எங்களின் ஒருவரின் மேலேயோ அல்லது கீழேயோ கிடத்தப்படுவீர்கள்! எங்களால் சமுதாயத்திற்கு எந்தக் கேடும் இல்லை. ‘நாங்கள் உண்டு. எங்கள் ஹோமோ செக்ஸ் உண்டு’ என்று இருக்கும் வாயில்லா ஜீவன்கள் நாங்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால், எங்களுக்குத்தான், இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை ஆனாலும் எங்களுக்கு அமெரிக்காவில் சுதந்திரம் கிடைச்சுட்டுது... பம்பாயில் பத்திரிகை வெளியிடுகிறோம். இந்த டர்ட்டி தமிழ்நாட்டில்தான் இன்னும் சுதந்திரம் கிடைக்கல. வந்த வேலையை கவனியுங்க டாக்டர் காந்தராஜ்...”
இன்னொருத்தவரும் எகிறினார்.
“ராமன் கெட்டதும் பெண்ணாலே. ராவணன் கெட்டதும் பெண்ணாலே என்று உங்களுக்கு புரியாதா காந்தா.”
காந்தராஜ் பயந்து போனார். தன்னை காந்தா என்று அழைத்ததில், அப்படி ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. பெரிய இடத்துப் பிள்ளையான மோகனனின் ஐ.ஏ.எஸ்., தந்தை, இவருக்கு அறிமுகமானவர். அதன் மூலம் இந்த மோகனனின் பரிச்சயம் கிடைத்தது இவனுக்காகவே வந்தார். ஆனால், இங்கே என்னடா என்றால்...
என்றாலும், டாக்டர் காந்தராஜ் சுதாரித்துக் கொண்டார். அவருக்கு இயற்கையின் அசலை சொல்லாமல், தான் மட்டும் அசலாய் வெளியேறினால் போதும் என்றாகிவிட்டது பதமாக இதமாகப் பேசினார்.
“தம்பிகளா... அண்ணன்களா... சக வயதுக்காரர்களா... உங்களை நான் குறை சொல்லவோ நிறை சொல்லவோ போவதில்லை. ஒரு வீடி டாக்டர் என்கிற முறையில், உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராய் இருக்கிறேன் சீக்கிரமாய் கேள்வி கேட்டு<noinclude></noinclude>
izkhd4j5asx21bnsz1qe9wh84p33n83
1838259
1838256
2025-07-02T09:50:14Z
மொஹமது கராம்
14681
1838259
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||131}}</noinclude>“ஓரினச் சேர்க்கை என்பது இயற்கைக்கு விரோதமானது. ஒரு முழுமையான ஆண் என்கிற முறையில், எனக்கு முழு இன்பம் கிடைக்கிறது. என் பெண் பார்ட்னருக்கும் கிடைக்கிறது. இதை வெறுத்து ஒதுக்கிவிட்டு...”
அவையினர் அத்தனைபேரும் அவரைப் பகைப் பார்வையாக பார்த்தபோது, ஒருவர், அதுவும் சரியான பெரிசு, ‘எங்கிருந்தோ வந்தவர்போல்’ இடையே குறுக்கிட்டார்.
“லுக் டாக்டர் காந்தராஜ்! உங்களை பொம்பள சுக உபதேசத்திற்காக இங்கே கூப்பிடல... அதனால ஹோமோ செக்ஸ் தப்பானதா? சரியானதா? என்ற ஆராய்ச்சி உங்களுக்கு அனாவசியம். இனிமேலும் பேசினால் எங்களின் ஒருவரின் மேலேயோ அல்லது கீழேயோ கிடத்தப்படுவீர்கள்! எங்களால் சமுதாயத்திற்கு எந்தக் கேடும் இல்லை. ‘நாங்கள் உண்டு. எங்கள் ஹோமோ செக்ஸ் உண்டு’ என்று இருக்கும் வாயில்லா ஜீவன்கள் நாங்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால், எங்களுக்குத்தான், இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை ஆனாலும் எங்களுக்கு அமெரிக்காவில் சுதந்திரம் கிடைச்சுட்டுது... பம்பாயில் பத்திரிகை வெளியிடுகிறோம். இந்த டர்ட்டி தமிழ்நாட்டில்தான் இன்னும் சுதந்திரம் கிடைக்கல. வந்த வேலையை கவனியுங்க டாக்டர் காந்தராஜ்...”
இன்னொருத்தவரும் எகிறினார்.
“ராமன் கெட்டதும் பெண்ணாலே. ராவணன் கெட்டதும் பெண்ணாலே என்று உங்களுக்கு புரியாதா காந்தா.”
காந்தராஜ் பயந்து போனார். தன்னை காந்தா என்று அழைத்ததில், அப்படி ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. பெரிய இடத்துப் பிள்ளையான மோகனனின் ஐ.ஏ.எஸ்., தந்தை, இவருக்கு அறிமுகமானவர். அதன் மூலம் இந்த மோகனனின் பரிச்சயம் கிடைத்தது இவனுக்காகவே வந்தார். ஆனால், இங்கே என்னடா என்றால்...
என்றாலும், டாக்டர் காந்தராஜ் சுதாரித்துக் கொண்டார். அவருக்கு இயற்கையின் அசலை சொல்லாமல், தான் மட்டும் அசலாய் வெளியேறினால் போதும் என்றாகிவிட்டது பதமாக இதமாகப் பேசினார்.
“தம்பிகளா... அண்ணன்களா... சக வயதுக்காரர்களா... உங்களை நான் குறை சொல்லவோ நிறை சொல்லவோ போவதில்லை. ஒரு வீ.டி. டாக்டர் என்கிற முறையில், உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராய் இருக்கிறேன் சீக்கிரமாய் கேள்வி கேட்டு<noinclude></noinclude>
j3hxnqu8cgs2wi4rlsxoaohkkbhqcz2
பக்கம்:ஒத்தை வீடு.pdf/132
250
202577
1838268
762186
2025-07-02T11:38:13Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838268
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|132||புதைமண்}}</noinclude>சீக்கிரமாய் என்னை அனுப்பினால் உங்களுக்கு கோடி புண்ணியம். சரி... கேளுங்கள்.”
குடிமகனான ஒரு தடிமகன், ஒரு கேள்வி கேட்டான்.
“ஓகே டாக்டர்! ஓரல் செக்ஸ்ஸால் எய்ட்ஸ் வருமா?”
“பொதுவாக வராது. ஆனால், வாயில் புண் இருந்தால், உறுப்பிலும் புண் இருந்தால் இந்த இருவரில் ஒருவர் எய்ட்ஸ் நோயாளியாக இருந்தால், இது வருவதற்கு வாய்ப்புண்டு.”
“இந்த ஓரல் செக்ஸ்ல, எய்ட்ஸ், வீ.டி., ஆபத்துக்கள் வராமல் இருக்க நாங்கள் என்ன செய்யணும்...”
“ஓரல் செக்ஸ்சுகுன்னே தனி ரக காண்டோம் இருக்குது. பனானா... பைன் ஆப்பிள்... மல்லிகை... ஆரஞ்சுன்னு விதவிதமாய் இருக்குது...”
“ஏன் இந்த மாதிரி பேரு வச்சாங்க?”
“அப்படிக் கேளுங்க... இதுல ஒரு உரையை மாட்டினால் அது வாழைப்பழம் போல் வாசனை கொடுக்கும். இன்னொன்றை மாட்டினால் ஆரஞ்சு போல் சுக வாசனையை நுகரலாம். இதனால், ஆக்டிவ் பார்ட்னர் இதை போட்டுக் கொள்ளும்போது, பாசிட்டிவ் பார்ட்னருக்கு, ஒரு இனிமையான வாசனை கிடைக்கும்.”
“டாக்டர் அய்யாவுக்கு ஒரு விண்ணப்பம். இந்த பனானா, பைன் ஆப்பிள் உறைகளில் ஒன்றை தாங்கள் போட்டுக் கொண்டு எங்களுக்கு டமான்ஸ்ஸ்டிரேட் செய்ய வேண்டும்.”
“எப்பா... நான் பிள்ளைக் குட்டிக்காரன். என்னை அப்படியே விட்டுடுங்க. மோகனன் கூப்பிட்டான்னு வந்தேன். வேற எந்த பாவமும் அறியேன். ஆனால், வாயிலோ அல்லது எதிலோ செக்ஸ் நோய் வந்தால், என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். இந்த மாதிரி விவகாரங்களில் நான் நீதிபதி அல்ல. வெறும் சாட்சிதான்...”
“நீங்க ரொம்ப ரொம்ப அழகு. எங்களுக்குன்னே பிறந்தவர் மாதிரி தோணுது. கிளப்ல சேர்ந்துடுங்க காந்தா.”
டாக்டர் காந்தராஜ், வெலவெலத்துப் போனார். இந்த மோகனன் சொன்னானென்று ஒரு மாறுதலுக்காக வந்த தன்னை, எங்கே ஒருவழி ஆக்கிவிடுவார்களோ என்று பயந்து போனார். பேண்டையும் சட்டையையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இரண்டு கைகளையும் பின்புறமாக வளைத்து பிட்டத்தில் வளைத்துக் கொண்டார். ‘இந்த “கேய்” பையன்களைப் பற்றி ஆய்வு<noinclude></noinclude>
91xw61oaos4jcigsjreiklu9s2n09ci
பக்கம்:ஒத்தை வீடு.pdf/133
250
202579
1838269
762187
2025-07-02T11:57:56Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838269
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||17}}</noinclude>செய்து தனது துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கலாம் என்ற அவர் எண்ணம் “சம்பில் விழாத கார்ப்பரேஷன் தண்ணீர்” போல் ஆனது. ஆளை விட்டால்போதும்.’
மோகனன், நிலமையை புரிந்து கொண்டான். இந்தக் கூட்டத்தை பொறுத்தவரை, காதலுக்கு கண் உண்டு. பெண் இல்லை. இந்த ஐம்பதிலும் அழகாக தோன்றும் காந்தராஜை எவனும் எதுவும் செய்து விடக்கூடாதே என்று எச்சரிக்கையானான். அவரை மேடைக்குப் பின்புறமாய் அழைத்துச் சென்று எப்படியோ அவரது காருக்குள் ஏற்றி விட்டான்.
இதற்குள் மது மயக்கத்தில் எல்லோரும் கிறங்கிப் போனார்கள். சிலர் பேண்டை அவிழ்த்து அண்ட்ராயரோடு சேர்த்து தூக்கி எறிந்தார்கள். பலர் சிலரை துகிலுரிந்தார்கள். அத்தனையும் அம்மணங்கள். அதில் ஆனந்த பரவசமானார்கள். ஒருவரை ஒருவர் இழுத்துப் போட்டு கவிழ்த்துக் கொண்டார்கள். கவிழ்ந்து கொண்டார்கள்.
{{dhr|2em}}
<section end="1"/><section begin="2"/>
{{larger|<b>2</b>}}
{{dhr|2em}}
படித்துக் கிழித்தான் என்று இளக்காரமாக சொல்வார்களே, அந்த சொல்லடையை சிறிது மாற்றி, செல்வாவை, எழுதிக் கிழித்தான் என்று சொல்லலாம். எழுதுவதும், எழுதிய காகிதத்தை சுக்கு நூறாய் கிழித்துப் போடுவதுமாக இருந்தான். அந்த அறை முழுவதும், குப்பைத் தொட்டிபோல் தோன்றியது. போதாக் குறைக்கு எழுதிக் கிழித்த காகிதக் கூறுகள், மேலே சுற்றிய மின்விசிறியினால், அவன் முகத்தில் அடிப்பது போல அரை குறை வார்த்தைகளோடு முட்டிமோதின. காகிதத்தைக் குத்திய பேனா முள், அவன் தலைக்குள் வண்டாக மாறி குடைந்து கொண்டிருந்தது. களைத்துப் போன தலையும், துடித்துப் போன கண்களும், வலித்துப் போன முன் நெற்றியும் அவனுக்கு எரிச்சலை கொடுத்தன. தலை, பூமியைப் போல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருந்தாலும், அதே பூமி சூரியனைச் சுற்றுவது போல், அடுத்த வீட்டிற்கு அடுத்த வீட்டிலுள்ள கவிதாவை, மானசீகமாகச் சுற்றிக் கொண்டிருந்தது.
கவிதை எழுதுவதற்காக, காகித கற்றைகளை அடுக்கி வைப்பதிலேயே அவனுக்கு அரைமணி நேரம் ஆகிவிட்டது. ஒரு<noinclude></noinclude>
97m4cckh2be608r1g2n0mcp4qc3dmrh
1838270
1838269
2025-07-02T11:58:18Z
மொஹமது கராம்
14681
1838270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||133}}</noinclude>செய்து தனது துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கலாம் என்ற அவர் எண்ணம் “சம்பில் விழாத கார்ப்பரேஷன் தண்ணீர்” போல் ஆனது. ஆளை விட்டால்போதும்.’
மோகனன், நிலமையை புரிந்து கொண்டான். இந்தக் கூட்டத்தை பொறுத்தவரை, காதலுக்கு கண் உண்டு. பெண் இல்லை. இந்த ஐம்பதிலும் அழகாக தோன்றும் காந்தராஜை எவனும் எதுவும் செய்து விடக்கூடாதே என்று எச்சரிக்கையானான். அவரை மேடைக்குப் பின்புறமாய் அழைத்துச் சென்று எப்படியோ அவரது காருக்குள் ஏற்றி விட்டான்.
இதற்குள் மது மயக்கத்தில் எல்லோரும் கிறங்கிப் போனார்கள். சிலர் பேண்டை அவிழ்த்து அண்ட்ராயரோடு சேர்த்து தூக்கி எறிந்தார்கள். பலர் சிலரை துகிலுரிந்தார்கள். அத்தனையும் அம்மணங்கள். அதில் ஆனந்த பரவசமானார்கள். ஒருவரை ஒருவர் இழுத்துப் போட்டு கவிழ்த்துக் கொண்டார்கள். கவிழ்ந்து கொண்டார்கள்.
{{dhr|2em}}
<section end="1"/><section begin="2"/>
{{larger|<b>2</b>}}
{{dhr|2em}}
படித்துக் கிழித்தான் என்று இளக்காரமாக சொல்வார்களே, அந்த சொல்லடையை சிறிது மாற்றி, செல்வாவை, எழுதிக் கிழித்தான் என்று சொல்லலாம். எழுதுவதும், எழுதிய காகிதத்தை சுக்கு நூறாய் கிழித்துப் போடுவதுமாக இருந்தான். அந்த அறை முழுவதும், குப்பைத் தொட்டிபோல் தோன்றியது. போதாக் குறைக்கு எழுதிக் கிழித்த காகிதக் கூறுகள், மேலே சுற்றிய மின்விசிறியினால், அவன் முகத்தில் அடிப்பது போல அரை குறை வார்த்தைகளோடு முட்டிமோதின. காகிதத்தைக் குத்திய பேனா முள், அவன் தலைக்குள் வண்டாக மாறி குடைந்து கொண்டிருந்தது. களைத்துப் போன தலையும், துடித்துப் போன கண்களும், வலித்துப் போன முன் நெற்றியும் அவனுக்கு எரிச்சலை கொடுத்தன. தலை, பூமியைப் போல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருந்தாலும், அதே பூமி சூரியனைச் சுற்றுவது போல், அடுத்த வீட்டிற்கு அடுத்த வீட்டிலுள்ள கவிதாவை, மானசீகமாகச் சுற்றிக் கொண்டிருந்தது.
கவிதை எழுதுவதற்காக, காகித கற்றைகளை அடுக்கி வைப்பதிலேயே அவனுக்கு அரைமணி நேரம் ஆகிவிட்டது. ஒரு<noinclude></noinclude>
2yye83l7et3yi8jnhusqulq9fg07uhh
பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/91
250
209929
1837844
661846
2025-07-01T12:43:30Z
175.157.81.209
கழபம
1837844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="175.157.81.209" /></noinclude>கே. பொன்னையா பிள்ளை 89
செய்து வந்தார்கள். கி.பி. 1576இல் முதல் 1620 வருஷம் வரையில் தஞ்சையை ஆண்டு வந்த இராஜாக்களில் ரகுநாத நாயக்கர் என்பவர் சங்கீத சாகித்தியத்தில் வல்லவராக இருந்து, அதை வளர்ப்பதற்குப் பெரு முயற்சி எடுத்துள்ளார். அவர் வீணை வாசிப்பதில் திறமை வாய்ந்தவர் என்று அக்காலத்து கோவிந்த தீட்சதர், வெங்கிடமகி ஆகிய வித்வான்களால் புகழப் பெற்றவர். அவர் சங்கீத வித்வான்களின் கூட்டுறவின் பேரில் "சங்கீத சுதாநிதி' என்னும் நூல் இயற்றினார். ரெகுநாத வீணை யென்று இவர் பெயரால் ஒரு வீணையும் இருந்திருக்கின்றது.
மகாராஷ்டிர அரசரான ஷாஜி மகாராஜாவும் சங்கீதக் கலையை விருத்தி செய்துள்ளார். அவருக்குப் பின்னர் கி.பி.1760 முதல் 1790 வருஷம் வரையில் ஆண்டு வந்துள்ள ஜாமகாராஜா என்பவர் சங்கீத வளர்ச்சிக்கென்று ஒரு நாடக சாலையை எற்படுத்தி பரதம், வாய்ப்பாட்டு, வாத்தியங்கள் இவைகளைத் தனித்தனியே கவனித்து வளரும்படி செய்துள்ளார். . -
இவர் காலத்தில், தஞ்சை சின்னையா, பொன்னையா, சிவானந்தம் வடிவேலு என்னும் நால்வர், ஒவ்வொருவரும் சங்கீதத்தின் ஒவ்வொரு பாகத் தில் பாண்டித்ய முடையவரா யிருந்து மகாராஜாக் களின் கூட்டுறவினால் சாகித்ய முதலியவைகள் செய்து சங்கீதத்தை விருத்தி பண்ணினார்கள். - * - -
. . . - வடிவேல் என்பவர்தான். பிடில் வாத்தியத்தை முதன் முதலில் தென்னாட்டு சங்கீதத்திற்கு அமைத்து வாசித்துக் கீர்த்தி அடைந்தவரென்று சர். செளரிந்தர மோகன டாகூர் தனது நூலில் எழுதியுள்ளார்.
இதுவரையிலும் நான் சொல்லி வந்த કી, உதாரணங்களினால் தென்னாட்டில் சங்கீதம் வளர்ந்து வந்ததற்குக் காரணம் தமிழ் மக்களின்
போதிய ஆதரவு என்பதற்கு ஐயமில்லை.
சங்கீதத்தின் தற்கால கிலைமையும். நம் கடமையும்
தற்காலம் சங்கீதக் கலையானது ஆதரிப்பாரின்றி நாளுக்கு நாள் குறைவுபட்டு வருகின்றது. இது சமயம் நமது செட்டிநாட்டு அரசர் ராஜா சர். அண்ணாமலையார் சங்கீத பல்கலைக் கழகம் நிறுவி, தமிழ் நாட்டிற்கு ஒரு பேருதவி செய்திருக்கிறார். வள்ளல் ராஜா அவர்களுக்கு, தமிழ் நாட்டார் பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவர்களைச் சங்கீதம் கற்கும்படி அனுப்புவதே ராஜா அவர்களுக்கு நன்றி செலுத்துவதாகும்.<noinclude></noinclude>
7q7et1oalbk01fh6gp420qvpkplgy6c
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/11
250
215974
1838069
820983
2025-07-02T04:37:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1838069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>________________
சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்..
1
மேற்கே தெரிந்த அந்திமச் சூரியன் பானுமதிக்கும் செல்வத்திற்கும், வேறு வேறு விதமாகத் தெரிந்தது. வெள்ளைத் தட்டில் வைக்கப்பட்ட பீட்ரூட் தோசைபோல் செதுக்கிய அவளுக்கும், ஆகாய வெளியை கண்களால்
அவனுக்கு அது ஸ்படிக லிங்க உருவமாகவும் தோன்றியது. கைகளில் மண்ணைப் பிசைந்தபடி இருந்த செல்வம், அந்தக் கதிரவனையே மேல்நோக்கிப் பார்த்தான். அந்த ஆகாய லிங்க வடிவில் சூரியன் குங்குமப் பொட்டாய் அவனுக்குத் தோன்றியது.
எதிர் திசை கடலோரம் ஜோடி ஜோடிகளாய் பிரிந்த காதலர் கூட்டம் பாடி பாடிகளாய் ஒன்றிக் கிடந்தன. சற்று தலைவான மணல் மேட்டில் சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டி ஒன்றை நான்கு சொறி நாய்கள் வட்டமாய்ச் சூழ்ந்து கொண்டு, அதை நெருக்கிக்கொண்டு இருந்தன. காதுகளை நிமிர்த்தி, வால்களை விறைப்பாக்கி வாய்களை அகலப் படுத்திய நாய் பட்டாளத்தின் மையமாய் நின்ற வெள்ளைப் புள்ளிமான் போன்ற ஆட்டுக்குட்டியின் கூக்குரலும், நாய் களின் குரைச்சலும், கடலோர கள்ள நாயக-நாயகிகளுக்குப் பொதுவாகக் கேட்கவில்லை. சுேட்ட ஒருசில ஜோடிகள்,ஓல ஒலியும். உயிர் தின்னி ஒலியும் இரண்டறக்
கலந்த<noinclude></noinclude>
8a6ynjhx19l12rhcl9gl8c2rveym9wy
பக்கம்:பொன் நாணயம்.pdf/5
250
368973
1838257
1316937
2025-07-02T09:49:12Z
Balu1967
5532
1838257
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" /></noinclude>அந்தக் கிழவரின் பெயர் குப்புசாமிப் பிள்ளை. அவர் கதை சொல்லுவதில் கெட்டிக்காரர். பிள்ளைகளுக்குக் கதையின்மேல் மிகவும் ஆசை அல்லவா? ஆதலால் அவர்கள் கதை சொல்லும்படி அடிக்கடி அவரை வேண்டுவார்கள்.
ஒருநாள் இரவு ஏழு மணி இருக்கும்; அப்போது நிலவு பால் போல் அழகாகக் காய்ந்தது. அக்கிழவர் ஒரு திண்ணையின் மீது உட்கார்ந்து இருந்தார். சிறுவர் சிலர் அவரைச் சூழ்ந்து இருந்தனர்.
அன்று சனிக்கிழமை; ஆதலால், அவர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை. தங்கள் பழைய பாடங்களை அவர்கள் சீக்கிரத்திலே படித்துவிட்டனர்; கதை கேட்கக் கிழவரிடம் ஆவலோடு வந்திருந்தனர்.<noinclude></noinclude>
jo4u0q0e7zuou5ep83o6rouugdn9x5a
பக்கம்:பொன் நாணயம்.pdf/6
250
368974
1838258
1317005
2025-07-02T09:49:55Z
Balu1967
5532
1838258
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" /></noinclude>
அப்போது, அந்தக் கிழவர் ஏதோ யோசித்துக் கொண்டு இருந்தார். ஆதலால் அச்சிறுவர்கள் சிறிது நேரம் சும்மா இருந்தார்கள்; பிறகு மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள்:
“தாதா—ஏதோ யோசிக்கிறார்,” என்றான் ஒரு சிறுவன்.
“ஆம்; அவர் நமக்குக் கதை சொல்லவே யோசித்துக் கொண்டு இருக்கிறார்,” என்றான் மற்றொரு சிறுவன்.
அக்கிழவர் அப்போதும் பேசாமலே இருந்தார்; பிறகு பெரு மூச்சு விட்டுக்கொண்டு, “ஆ! நான் சிறு வயதில் என்ன பாடு பட்டேன்!” என்றார்.
“தாதா - தாதா, அது என்ன? அதை எங்களுக்குச் சொல்லுங்கள்,”<noinclude>{{rh||5|}}</noinclude>
qyqruwfqzm2h2uq9okybwsoowblg7ki
பக்கம்:பொன் நாணயம்.pdf/7
250
368975
1838260
1318242
2025-07-02T09:52:46Z
Balu1967
5532
1838260
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" /></noinclude>
என்று அச் சிறுவர் ஆசையோடு கேட்டனர்.
“நல்லது, அவ்விதமே சொல்லுகிறேன்,” என்று சொல்லிக்கொண்டே அக் கிழவர் தம் தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக்கொண்டு தம் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்:
<section end="1"/><section begin="2"/>
{{center|{{Xx-larger|<b>2</b>}}}}
“பிள்ளைகளே, நான் ஒர் ஏழைக் குடும்பத்திலே பிறந்தவன். ஆனாலும் நான் மிகவும் அருமையாகவே வளர்ந்தேன். ஏன் என்றால் எனக்கு முன் இருவர் பிறந்து இறந்து விட்டனர். பிறகு நெடுநாள் சென்று நான் பிறந்தேன். ஆதலால், நான் பிறந்ததும் என்னைக் குப்பையிற் புரட்டி எனக்குக் <u>குப்புசாமி</u> என்று பெயரிட்டார்கள்.
எனக்கு ஐந்து வயது ஆயிற்று. அப்போது என் தந்தை என்னை ஒரு<noinclude>{{rh||6|}}</noinclude>
hjwdl7zbuxlyphwaxqa5kev6dzestjq
பக்கம்:பொன் நாணயம்.pdf/25
250
368993
1838253
1314736
2025-07-02T09:43:27Z
Balu1967
5532
/* சரிபார்க்கப்பட்டவை */
1838253
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" /></noinclude>
என்ன சொல்லுவேன்! ஒரு போலீஸ் உத்தியோகஸ்தன் என் எஜமானரோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அப்போது நான் பட்டபாடு தெய்வத்துக்குத் தான் தெரியும். நான் உடனே ஒரே ஓட்டமாக அவ்வீட்டை விட்டு வெளியே ஓடினேன். பிறகு அருகே இருந்த ஒரு புதலுக்குள் போய் ஒளிந்துகொண்டேன்.
பிள்ளைகளே, நான் அந்தப் புதலுக்குள் நெடுநேரம் ஒளிந்துகொண்டிருந்தேன். அப்போது, நான் என்னென்ன எண்ணினேன் என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது.
‘ஆ தெய்வமே! என்னை இப்படியும் ஆசை காட்டி மோசம் செய்யலாமா ? நீ எனக்கு ஏன் இந்தப் பாழும் பொன் நாணயத்தைக் கொடுத்தாய்?<noinclude>{{rh||24|}}</noinclude>
jtwzwb4owm7pq8vdrt5e693vpshw2pi
விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்
4
411887
1837878
1837499
2025-07-01T14:21:04Z
Info-farmer
232
புதிது = "உயிர்க்காற்று", மொத்தம் = 463 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1837878
wikitext
text/x-wiki
<div style="font-size:90%;">
<!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். -->
{{புதியபடைப்பு |உயிர்க்காற்று|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு | மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2|மேலாண்மை பொன்னுச்சாமி|2012}}
{{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}}
{{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}}
{{புதியபடைப்பு |தாய்மதி|மேலாண்மை பொன்னுச்சாமி|1994}}
{{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}}
{{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}}
{{மொத்தபடைப்பெண்ணிக்கை|448}}
</div>
rm9wnhepply14fxswyth09ursyx1oqs
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/69
250
422447
1838156
1008801
2025-07-02T06:34:18Z
Asviya Tabasum
15539
1838156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|61}}
{{rule}}</noinclude>சுந்தர ராமசாமியைப் பற்றியும் அவரது வளர்ச்சி அல்லது தேய்வு பற்றியும் புதிய கண்ணோட்டத்தில் நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெயகாந்தனைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். ஐம்பதாம் ஆண்டுகளின் பிற்பாதிக் காலத்தில் சிறந்த சிறுகதை எழுத்தாளராகப் பரிணமித்த ஜெயகாந்தன் அறுபதாம் ஆண்டுகளைத் தமது சகாப்தமாகவே ஆக்கிப் பல சிறுகதைகளையும், நெடுங்கதைகளையும், குறுநாவல்களையும் பெருநாவல்களையும் எழுதி வந்தவராவார். இதனால் அவர் பல எழுத்தாளர்களுக்கும் ஆதர்சமாக விளங்கியவர். அவர் எழுதிய கதைகளும் நாவல்களும் ஏராளமானவை. அவை ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையல்ல. அவற்றையும் புதிய சிந்தனையோடு நோக்கி, அவற்றின் குறைநிறைகளை முழுமையாக ஆராய்ந்து மதிப்பிடுவது நமது வருங்காலப் பணிக்குச் சிறந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இவர்களைத் தவீர ‘அலைவாய்க் கரையில்’, ‘கரிப்பு மணிகள்’ போன்ற பல நாவல்களை வழங்கியுள்ள ராஜம் கிருஷ்ணனும் நமது போற்றுதலுக்கும் கவனத்துக்கும் உரிய நாவலாசிரியை ஆவார். இவர் இன்றும் தொடர்ந்து நாவல்களை வழங்கி வருகிறார். நாவல்கள் என்னும்போது, ‘பள்ளி கொண்டபுரம்’ என்ற நாவலை எழுதியுள்ள நீல
பத்மனாபன், ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற நாவலை எழுதியுள்ள சு. சமுத்திரம், ‘நினைவுச்சரம்’ என்ற நாவலை எழுதிய வல்லிக்கண்ணன், ‘கரிசல்’, ‘கொள்ளைக் காரர்கள்’ முதலிய நாவல்களை எழுதியுள்ள பொன்னீலன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். சமீப காலத்தில் வெளிவந்த ஆர்.எஸ்.ஜாக்கப் எழுதிய ‘வாத்தியார்’ என்ற நாவலும் நமது கவனத்துக்கு உரியதாகும். அண்மைக் காலத்தில் வெளிவந்த சூரியகாந்தனின் ‘மானாவரி மனிதர்கள்’, தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ ஆகிய நாவல்கள், புதிய தலைமுறை எழுத்தாளர்களிடம் நாம் மிகச் சிறந்த படைப்புக்களை எதிர்பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு வழங்கியுள்ளன.<noinclude></noinclude>
qviepcv65gvt1dwri7m36j29trdjut8
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/68
250
422448
1837886
1008802
2025-07-01T14:29:17Z
Asviya Tabasum
15539
1837886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|60|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>மூத்த தலைமுறைக் கவிஞர்களில் சிற்பி பாலசுப்பிரமணியமும், ‘மீரா’வும் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இருவரும் தத்தம் வழியில் பாராட்டத்தக்க சாதனைகளைப் புரிந்தவர்கள். கடந்த கால நூற்றாண்டுக் காலத்தில் காட்டு வெள்ளமாய்ப் பெருகி வந்துள்ள புதுக்கவிதைத் துறையில் நீந்திக் கரைசேர்ந்து கவிஞர்களாக நிலை பெற்று நிற்கக் கூடியவர்கள் எத்தனை பேர் என்பது விரிவான ஆராய்ச்சிக்குரியதாகும்.
சிறுகதை மற்றும் நாவல் துறையில் கடந்த ஐம்பதாண்டுகள் பல அருமையான எழுத்தாளர்களை வழங்கியுள்ளது. என்னைப் பொறுத்த வரையில் நான் 1957க்குப் பின் கதை அல்லது நாவல் எதையுமே எழுத
வில்லை. என் கவனமெல்லாம் பாரதி பற்றிய ஆராய்ச்சியிலும், பண்டைய இலக்கியம் பற்றிய சில அடிப்படையான ஆராய்ச்சிகளிலும் திரும்பி விட்டது. என்றாலும் 1953 தொடக்கத்தில் வெளிவந்த எனது ‘பஞ்சும் பசியும்’ நாவலைத் தொடர்ந்து, அதே வழியில் டி. செல்வராஜின் ‘தேநீர்’, ‘மலரும் சருகும்’ போன்ற நாவல்களும், சின்னப்ப பாரதியின் ‘தாகம்’, ‘சங்கம்’ ஆகிய நாவல்களும் சிறந்த சாதனைகளாக விளங்கியுள்ளன. மூத்த தலைமுறை எழுத்தாளர்களில், கடந்த ஐம்பதாண்டுக் காலமாகத் தொடர்ந்து சிறுகதைகள் முதல் வேறுபல இலக்கிய வகைகளையும் படைத்து வந்துள்ள வல்லிக்கண்ணன், ஏராளமான சிறந்த சிறுகதைகளை எழுதிச் சென்ற கு. அழகிரிசாமி, கரிசல்காட்டு மண்ணின் மைந்தர்களையே கொண்டு பல அருமையான சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்துள்ள கி. ராஜநாராயணன், சமுதாயத்தில் அடிநிலையிலுள்ளவர்களையே பாத்திரங்களாகக் கொண்டு நியாயமான
தர்மாவேசத்தோடு கதைகள் எழுதி வந்த விந்தன், ‘தண்ணீர்’; ‘அக்கரைச் சீமையில்’, ‘சீதை மார்க் சீயக்காய்த்தூள்’ போன்ற சிறுகதைகளையும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ என்ற நாவலையும் எழுதிய சுந்தர ராமசாமி ஆகியவர்களையும் குறிப்பிட வேண்டும். சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு சிறந்த, புதுமையான நாவலாகும்.<noinclude></noinclude>
jnpece0kgg9vr1difqykbq1rs79cwk4
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/67
250
422449
1837873
1008803
2025-07-01T14:04:52Z
Asviya Tabasum
15539
1837873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|59}}
{{rule}}</noinclude>கலைத் திறமையைப் பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு அவர்களுக்குப் பொருளாதார ரீதியிலும் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச உத்தரவாதங்களை அளிக்க நாம் முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் இவர்களிற் பலரும் வெறும் கருவேப்பிலை போலவே பயன்படுத்தப்பட்டு விட்டனர். நம்மைச் சார்ந்து நின்ற நாடகக் கலைஞர்கள் விஷயத்திலும் இதே நிலைமைதான் இருந்தது எனலாம். ஏனெனில் தஞ்சை சிவராமன் நாடக மன்றத்தைச் சேர்ந்த ராமலிங்கமும் அவரைச் சார்ந்த தோழர்களும் எத்தனை சிரமங்களை அனுபவித்தனர் என்பதை நானறிவேன்.
கவிதைத் துறையில் நமது கவிஞர்கள் எல்லோருமே பாரதியின் வழிவந்தவர்கள் தாம். பாரதிதாசனால் உருப்பெற்று, 1946 வரையில் திராவிட இயக்கம் தொடர்பைக் கொண்டிருந்து, பின்னர் நமது அணிக்கு வந்து சேர்ந்த கவிஞர் தமிழ் ஒளி ஒரு குறிப்பிடத்தக்க கவிஞர்; சொல்லாட்சித் திறனும் கற்பனைத் திறனும் மிக்கவர்; நாடறிந்த கவிஞர்கள் பலரின் தகுதிக்குக் குறையாத தகுதி பெற்றவர். என்றாலும் ஏனோ நாம் அவரை நினைவிற் கொள்வதில்லை. பாரதி விழா, பட்டுக்கோட்டை விழா, பாரதிதாசன் விழா முதலியவற்றைக் கொண்டாடும் நாம் தமிழ் ஒளியையும் நினைவு கூர்ந்து அவரது பாடல்திறனை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம். நமது
மூத்த கவிஞர்களில் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் நாற்பதாம் ஆண்டுகள் முதற்கொண்டே தமக்கே உரிய ஒரு தனிப்பாணியில் கவிதைகள் இயற்றி வந்தவராவார், கே.சி.எஸ் பாடல்களைத் தவிர, ‘பூர்வீகச் சொத்து’ போன்ற சில நல்ல சிறுகதைகளையும் எழுதியவர். இவர்களது தலைமுறையைச் சேர்ந்த நானும் கவிதைத் துறையில் வெகுகாலமாக ஈடுபட்டு வந்திருக்கிறேன். குறிப்பாக கவியரங்குகளில் நான் கலந்து கொண்டு அரங்கேற்றிய கவிதைகள் பலவும், தமிழ்க் கவிதை உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூற முடியும். இவர்களைத் தவிர நமது<noinclude></noinclude>
2rjqxxnwknkya23okcva0fdata450x6
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/66
250
422450
1837839
1008804
2025-07-01T12:24:47Z
Asviya Tabasum
15539
1837839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|58|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>உரம்பெறச் செய்துள்ளன. மேலும் ஆர்.கே.கண்ணன், எஸ்.ஆர்.கே ஆகியோரும் வேறு சிலரும் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றியுள்ளனர்.
பாடல், கவிதை என்ற துறைகளை எடுத்துக் கொண்டால், மேடைகளில் பாடக் கூடிய இயக்கப் பாடல்களை இயற்றுவதில் ஜீவா வழிகாட்டியாக விளங்கினார். அவருக்குப் பின் இத்தகைய பாடல்களைப் பலரும் ரசிக்கும்
முறையில் தாமே இயற்றி, நாற்பதாம் ஆண்டுகளிலிருந்தே பாடி வந்தவர் கவிஞர் அமரர் வெ.நா. திருமூர்த்தியாவார். சொல்லப்போனால், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துக்கே இவர்தான் முன்னோடியாக விளங்கினார் எனக் கூற வேண்டும். ஆனால் பட்டுக்கோட்டையார் சினிமா உலகில் பங்கேற்றுப் பணியாற்றியதன் பயனாக மிகவும் பிரபலமடைந்தார். அவரது நினைவு நாளை நாம் கொண்டாடி வருகிறோம். என்றாலும் திருமூர்த்தி பட்டுக்கோட்டையாருக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல. எனவே திருமூர்த்தியின் நினைவுநாளை நாம் கொண்டாடவும் அவரது பாடல்களைப் பிரபலப்படுத்தவும் வேண்டும். இவ்வாறு மேடைப்பாடல்களை இயற்றிப் பாடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவற்றில் திருமூர்த்திக்குப் பின் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கியவர்கள் எம்.பி. சீனிவாசன், பாவலர் வரதராஜன், வில்லிசைக் கலைஞர்களாக விளங்கிய சாத்தூர் பிச்சைக்குட்டி, சிவகிரி கார்க்கி ஆகியோராவர். இவர்களை நாம் எந்த அளவுக்கு எந்தவிதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டுமோ, அந்த விதத்தில் அந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எம்.பி. சீனிவாசன் திரைப்படத்துறையில் சிறந்த இசையமைப்பாளராக விளங்கினாலும், அவரைக் கேரளம் பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ளவில்லை, அவரது இளைஞர் இசைக்குழு கோஷ்டிக்கான இசையில் ஒரு புதுமையைப் புரிந்ததாகும். பாவலர் வரதராஜன் போன்றவர்கள் விஷயத்தில் அவர்களது<noinclude></noinclude>
fzzykjii757fplciiyelt6tjxqmbyjg
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/65
250
422451
1837813
1008805
2025-07-01T12:09:04Z
Asviya Tabasum
15539
1837813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|57}}
{{rule}}</noinclude>விளைவாக மக்கள் பிரச்சினைகளைக் குறித்து இலக்கியம் படைத்தவர்களும் சாதித்துள்ள சாதனைகள் மிகப்பலவாகும். இவற்றின் விளைவாக, இன்றைய தமிழ்நாட்டின் இலக்கிய உலகில் நாம் ஏனையோரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய, கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு பெரும் சக்தியாக வளர்ந்திருக்கிறோம் என்பதில் ஐய மில்லை. அதிலும், பத்திரிகை உலகமும் கலை உலகமும் என்பது இன்று வாணிப நோக்கு மலிந்துவிட்ட ஒரு துறையாக, எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் விலைபேசி வாங்கக் கூடிய துறையாக, வாணிய நோக்கத்தோடு இலக்கியத்தையும் கலையையும் கொச்சைப் படுத்தும் துறையாக மாறியுள்ள சூழ்நிலையில் கொள்கைப் பிடிப்போடு நாம் சாதித்து வந்தவை உண்மையில் பாராட்டத் தக்கவையேயாகும் அவையனைத்தையும் இங்குக் கூறுவது சாத்தியமல்ல. என்றாலும், எதார்த்தவாதம், விமர்சன எதார்த்தவாதமும், ஜனநாயக மனிதாபிமானம்,
சோஷலிச எதார்த்தவாதம் என்பன போன்ற அளவு கோல்களுக்குள் அடங்கும் சாதனைகளில் இப்போது என் நினைவுக்கு வரும் சிலவற்றை மட்டும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஆரம்ப காலம் தொட்டும் சரி, 1961 இல் கலை இலக்கியப் பெருமன்றத்தைத் தோற்றுவித்த பின்னரும் சரி, நாம் சாதித்த சாதனைகளில் பாரதியைத் தமிழ் நாட்டு மக்களுக்குச் சரியான முறையில் இனம் காட்டியதோடு, அவனைப் பற்றித் தவறான முறையில் கூறப்பட்டு வந்த கருத்துக்களையும் அவதூறுகளையும் தகர்த்தெறிந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்தப் பணியில் ஜீவா முன்னணியில் நின்றார்; நமக்கு முன்னோடியாகவும் இருந்தார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகளும், ‘பாரதி வழி’ ‘பாரதிபற்றி ஜீவா’ ஆகிய அவரது நூல்களும் இதற்குச் சான்றாகும். அவருக்குப் பின் நான் பாரதியைப் பற்றி எழுதியுள்ள ‘பாரதி - காலமும் கருத்தும்’ என்ற நூல் உள்ளிட்ட பல நூல்களும் இந்தப் பணியை<noinclude></noinclude>
tgruiryymbgn43l3txkpay1dxa8es19
பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/70
250
422478
1838172
1008832
2025-07-02T06:55:15Z
Asviya Tabasum
15539
1838172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|62|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}}
{{rule}}</noinclude>பிந்திய தலைமுறைச் சிறுகதை ஆசிரியர்களில் தனுஷ்கோடி ராமசாமி, களந்தைபீர் முகமது, பா. ஜெயப்பிரகாசம், மேலாண்மை பொன்னுச்சாமி, என்.ஆர். தாசன், ஜெயந்தன், பிரபஞ்சன் முதலிய பலர் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கியுள்ளனர்.
ஆராய்ச்சித் துறையில், குறிப்பாகப் பேராசிரியர் நா. வானமாமலை ‘ஆராய்ச்சி’ப் பத்திரிகையையும், ஆராய்ச்சிக் குழுவையும் தோற்றுவித்த பின்னர், பண்டைக்கால, தற்கால இலக்கியங்கள் பற்றிப் பல குறிப்பிடத்தக்க கட்டுரைகளும், நூல்களும் வெளிவந்துள்ளன. இவற்றில்
நா.வா. தாமே எழுதிய ‘தமிழில் வரலாறும் பண்பாடும்’ முதலிய நூல்களைத்தவிர, கா. சுப்பிரமணியம் எழுதிய ‘சங்க காலச் சமுதாயம்’ நாவல்களைப் பற்றித் தோத்தாத்திரி எழுதிய கட்டுரைகள் மற்றும் நூல்கள் ஆகியனவும் குறிப்பிடத்தக்கவை. இவற்றின் மூலம் பல புதிய தெளிவு
களும் உண்மைகளும் தெரிய வந்துள்ளன. ‘ஆராய்ச்சியைப் பற்றிக் கூறும்போது, சிலப்பதிகாரத்தைப் பற்றி நான் எழுதியுள்ள இளங்கோவடிகள் யார்?’ என்ற நூலைப் பற்றிக் குறிப்பிடுவது வெறும் சுயவிளம்பரமாகாது என்றே நான் நம்புகிறேன். இதேபோல் விமர்சனத்துறையில் தி.க.சி.தி.சு. நடராஜன் முதலியோர் அவ்வப்போது குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வந்துள்ளனர். இந்தத் துறையில் நாம் சாதித்த சாதனைகள், அதன் குறைநிறைகள், நமது பார்வையில் நிலவிய குறைபாடுகள், அதனால் ஏற்பட்ட தவறான கணிப்புகள் அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றையும் நாம் ஆராய வேண்டும்.
1961இல் எடுத்த கலை இலக்கியப் பெருமன்றத்தின் முடிவின்படி, நாட்டுப்புறக் கலைகள் விஷயத்தில் நா. வானமாமலை தொகுத்து வெளியிட்ட தமிழர் நாட்டுப் பாடல்கள், மற்றும் கதைப்பாடல்கள், இவை சம்பந்தமாக அவர் எழுதிய விமர்சனபூர்வமான ஆராய்ச்சிகள் முதலியவை குறிப்பிடத்தக்கவை. இதன் பயனாக, இன்று<noinclude></noinclude>
sxulw6k8kho6g5ij8smprmansp1b1le
பக்கம்:கனிச்சாறு 3.pdf/33
250
446685
1837867
1835568
2025-07-01T13:57:49Z
Booradleyp1
1964
1837867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|4 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
அன்னவரும் அன்னவரின் அடியில்நடப் பாரும்
அல்லாமல் எந்தமிழர் எங்குவாழ் கின்றார்;
முன்னரவர் சொன்னதென்ன? மொழிவதென்ன ஈண்டு?
முடிவுவரை இவ்வாறே முனையாது நின்றால்
தென்னவர்க்குத் தேய்வென்று தெரிந்துகொள் வீரே!
தெருவெல்லாம் அவர்கூச்சல்! தெருக்கடைகள் தோறும்
அன்னவரின் ஆட்கள்! அவர் வீழாது காத்தே
அடிபணிய நம்மாட்கள்! அரித்துவரு கின்றார்!{{float_right|5}}
நொடிக்குநொடி யன்னவர்கள் வந்துகுவி கின்றார்!
நொடிக்குநொடி நந்தமிழர் தாழ்ந்துபோ கின்றார்!
அடிக்கடியத் தீயவரின் அழகுமனை நிற்கும்;
அவரேறும் வண்டிகளை யெந்தமிழர் ஓட்டிப்,
படிக்குப்படி தாழ்ந்திழிவுப் பாதையினை நோக்கிப்
பதைப்பதுவே யல்லால்நந் தமிழரெது கண்டார்?
துடிக்குதடா நம் நெஞ்சம்! துணிவெல்லாம் எங்கே?
தோளெல்லாம் சூம்பிற்றோ? மறமொழிந்து போச்சோ?{{float_right|6}}
சீறியெழு துஞ்சுகின்ற செம்புலியே! முன்னோர்
சேர்த்தமைத்த வீரத்து மாளிகையைக் காக்க,
ஊறிவரும் தோள்தந்தே உயிர்தந்து காப்பாய்!
'உணர்வில்லை' யென்றவர்கள் உரைசெய்யும் முன்னர்,
கூறுசெய் யன்னவரின் கொழுத்துள்ள உடலை!
கோடிபெறும் உன்வீரம் முனிந்துவிடின்; அறிவேன்!
ஏறிவரும் நீர்போல ஏய்ப்பவரை மாய்ப்பாய்;
எழுந்திரு நீ புலித்தமிழா! ஏறே! இந் நொடியே! {{float_right|7}}
{{Right|{{larger|<b>-1952</b>}}}}</poem>}}
<section end="1"/>
<section begin="2"/>
{{larger|<b>2 {{gap+|13}} எந்நாளோ?</b>}}
{{left_margin|3em|<poem>இந்தத் திராவிடத்தை யாள்வதென் மக்களென்று
இயம்புநா ளெந்த நாளோ?
எழிலோடு செந்தமிழை யோதுவதுஞ் செப்புவதும்
யாம்காணும் நாளெந் நாளோ?</poem>}}<noinclude></noinclude>
ozdfrrrx88y5q7yyhjb4f4xonvx2whv
1837868
1837867
2025-07-01T13:58:36Z
Booradleyp1
1964
1837868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|4 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
அன்னவரும் அன்னவரின் அடியில்நடப் பாரும்
அல்லாமல் எந்தமிழர் எங்குவாழ் கின்றார்;
முன்னரவர் சொன்னதென்ன? மொழிவதென்ன ஈண்டு?
முடிவுவரை இவ்வாறே முனையாது நின்றால்
தென்னவர்க்குத் தேய்வென்று தெரிந்துகொள் வீரே!
தெருவெல்லாம் அவர்கூச்சல்! தெருக்கடைகள் தோறும்
அன்னவரின் ஆட்கள்! அவர் வீழாது காத்தே
அடிபணிய நம்மாட்கள்! அரித்துவரு கின்றார்!{{float_right|5}}
நொடிக்குநொடி யன்னவர்கள் வந்துகுவி கின்றார்!
நொடிக்குநொடி நந்தமிழர் தாழ்ந்துபோ கின்றார்!
அடிக்கடியத் தீயவரின் அழகுமனை நிற்கும்;
அவரேறும் வண்டிகளை யெந்தமிழர் ஓட்டிப்,
படிக்குப்படி தாழ்ந்திழிவுப் பாதையினை நோக்கிப்
பதைப்பதுவே யல்லால்நந் தமிழரெது கண்டார்?
துடிக்குதடா நம் நெஞ்சம்! துணிவெல்லாம் எங்கே?
தோளெல்லாம் சூம்பிற்றோ? மறமொழிந்து போச்சோ?{{float_right|6}}
சீறியெழு துஞ்சுகின்ற செம்புலியே! முன்னோர்
சேர்த்தமைத்த வீரத்து மாளிகையைக் காக்க,
ஊறிவரும் தோள்தந்தே உயிர்தந்து காப்பாய்!
'உணர்வில்லை' யென்றவர்கள் உரைசெய்யும் முன்னர்,
கூறுசெய் யன்னவரின் கொழுத்துள்ள உடலை!
கோடிபெறும் உன்வீரம் முனிந்துவிடின்; அறிவேன்!
ஏறிவரும் நீர்போல ஏய்ப்பவரை மாய்ப்பாய்;
எழுந்திரு நீ புலித்தமிழா! ஏறே! இந் நொடியே! {{float_right|7}}
{{Right|{{larger|<b>-1952</b>}}}}</poem>}}
<section end="1"/>
<section begin="2"/>
{{larger|<b>2 {{gap+|13}} எந்நாளோ?</b>}}
{{left_margin|3em|<poem>இந்தத் திராவிடத்தை யாள்வதென் மக்களென்று
இயம்புநா ளெந்த நாளோ?
எழிலோடு செந்தமிழை யோதுவதுஞ் செப்புவதும்
யாம்காணும் நாளெந் நாளோ?</poem>}}<noinclude></noinclude>
5u7g4f4yuj80emhhvyy9v018gky2kns
1837871
1837868
2025-07-01T14:01:13Z
Booradleyp1
1964
1837871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|4 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - மூன்றாம் தொகுதி||}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem>
அன்னவரும் அன்னவரின் அடியில்நடப் பாரும்
அல்லாமல் எந்தமிழர் எங்குவாழ் கின்றார்;
முன்னரவர் சொன்னதென்ன? மொழிவதென்ன ஈண்டு?
முடிவுவரை இவ்வாறே முனையாது நின்றால்
தென்னவர்க்குத் தேய்வென்று தெரிந்துகொள் வீரே!
தெருவெல்லாம் அவர்கூச்சல்! தெருக்கடைகள் தோறும்
அன்னவரின் ஆட்கள்! அவர் வீழாது காத்தே
அடிபணிய நம்மாட்கள்! அரித்துவரு கின்றார்!{{float_right|5}}
நொடிக்குநொடி யன்னவர்கள் வந்துகுவி கின்றார்!
நொடிக்குநொடி நந்தமிழர் தாழ்ந்துபோ கின்றார்!
அடிக்கடியத் தீயவரின் அழகுமனை நிற்கும்;
அவரேறும் வண்டிகளை யெந்தமிழர் ஓட்டிப்,
படிக்குப்படி தாழ்ந்திழிவுப் பாதையினை நோக்கிப்
பதைப்பதுவே யல்லால்நந் தமிழரெது கண்டார்?
துடிக்குதடா நம் நெஞ்சம்! துணிவெல்லாம் எங்கே?
தோளெல்லாம் சூம்பிற்றோ? மறமொழிந்து போச்சோ?{{float_right|6}}
சீறியெழு துஞ்சுகின்ற செம்புலியே! முன்னோர்
சேர்த்தமைத்த வீரத்து மாளிகையைக் காக்க,
ஊறிவரும் தோள்தந்தே உயிர்தந்து காப்பாய்!
'உணர்வில்லை' யென்றவர்கள் உரைசெய்யும் முன்னர்,
கூறுசெய் யன்னவரின் கொழுத்துள்ள உடலை!
கோடிபெறும் உன்வீரம் முனிந்துவிடின்; அறிவேன்!
ஏறிவரும் நீர்போல ஏய்ப்பவரை மாய்ப்பாய்;
எழுந்திரு நீ புலித்தமிழா! ஏறே! இந் நொடியே! {{float_right|7}}
{{Right|{{larger|<b>-1952</b>}}}}</poem>}}
<section end="1"/>
<section begin="2"/>
{{larger|<b>2 {{gap+|13}} எந்நாளோ?</b>}}
{{left_margin|3em|<poem>இந்தத் திராவிடத்தை யாள்வதென் மக்களென்று
இயம்புநா ளெந்த நாளோ?
எழிலோடு செந்தமிழை யோதுவதுஞ் செப்புவதும்
யாம்காணும் நாளெந் நாளோ?</poem>}}<noinclude></noinclude>
127toob8lpu74k304gvu1gqrluwrp19
பக்கம்:கனிச்சாறு 3.pdf/34
250
446686
1837870
1835564
2025-07-01T13:59:50Z
Booradleyp1
1964
1837870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 5}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>
விந்தக் குமரியிடை விரிந்திட்ட தமிழ்நாட்டு
வினைதமை மற்ற நாட்டு
வினையாளர் கேட்டக மகிழ்கின்றா ரெனக்கேட்டு
வீறுகொள் நாளெந் நாளோ?{{float_right|1}}
சொந்தத் திருநாட்டின் மக்களிடை நோநீங்கிச்
சோர்வற் றிருந்து வாழ்வில்
சுறுசுறுப் போடுபல விறுவிறுப் பானமுறை
சுடர்விடும் நாளெந் நாளோ?
வந்தித் திருநாட்டின் எழில்சுரண்டி வாழ்கின்ற
வடநாட்டின் எலிகள் நீங்கி
வாழுவதும், ஆளுவதும் இந்நாட்டு மக்களென
வகைசெய்யும் நாளெந் நாளோ? {{float_right|2}}
ஊர்ப்பெயருந் தெருப்பெயரும்
உயர்ந்ததமிழ்ப் பெயராக
உண்டாகும் நாளெந் நாளோ?
உலகத்து மக்களெலாம்
ஒருமொழியாய்த் தமிழ்மொழியை
உணரும்நா ளெந்த நாளோ?
பார்க்கு ளெங்கும் இந்நாட்டுப்
பண்டைத்தமிழ் நூல்களையும்
பயிலும்நா ளெந்த நாளோ?
பலகலைக ளோடுதமிழ்க் கலைகளையும் வைத்துலகு
பயனெய்தும் நாளெந் நாளோ? {{float_right|3}}
ஊர்க்குவூர்த் தமிழ்ப்புலவ ரோடுபலர் கூடிமகிழ்
வெய்துநா ளெந்த நாளோ?
உணவில்லை; கஞ்சியில்லை; உடையில்லை என்பதெல்லாம்
ஒழியுநா ளெந்த நாளோ?
ஆர்த்தெழுவீ ரந்நாளை நோக்கித் தமிழ நாட்டாரே!
அஞ்சாது வீறு கொள்வீர்!
ஆள்வதுநாம்; அன்றியொன்றாய்
மாள்வதுதான் நன்றெண்ணி
அரசியலார் நோக்கி வாரீர்! {{float_right|4}}
{{Right|{{larger|<b>-1954</b>}}}}
</poem>}}
<section end="2"/>
{{nop}}<noinclude></noinclude>
7qs3nu20z3awh40thvc552s2vqizwk2
பக்கம்:கனிச்சாறு 4.pdf/108
250
446902
1837798
1440738
2025-07-01T11:59:21Z
Fathima Shaila
6101
1837798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}73}}</b></small></noinclude>
<section begin="49"/>
{{larger|<b>{{rh|49||உயர்வும் தாழ்வும் !}}</b>}}
{{left_margin|3em|<poem>கடலில் மிதந்தோம்;
தரையில் ஊர்ந்தோம்;
காற்றில் பறந்தோம்; என்றாலும்,
உடலில் பொறையும்
உளத்தில் நிறையும்
ஒருங்கே இழந்தோம்! உயர்வாமோ?
அழகில் மிளிர்ந்தோம்;
அறிவில் ஒளிர்ந்தோம்;
ஆய்வில் சிறந்தோம்; என்றாலும்
பழகில் பகையும்
பண்பில் புரையும்
பகட்டில் இழந்தோம்! பயனாமோ?
நகர்கள் அமைத்தோம்;
நாடுகள் கண்டோம்;
நாற்புறம் விரிந்தோம்! என்றாலும்,
அகவொளி இருண்டோம்!
அன்பில் தாழ்ந்தோம்!
அழிவில் வீழ்ந்தோம்! அறிவாமோ?</poem>}}
{{Right|{{larger|<b>-1977</b>}}}}
<section end="49"/><noinclude></noinclude>
o5ep4u3c070oxk83zg5c1jws8ucxpxl
பக்கம்:கனிச்சாறு 4.pdf/109
250
446903
1837799
1440739
2025-07-01T11:59:46Z
Fathima Shaila
6101
1837799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|74{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="50"/>
{{larger|<b>{{rh|50||இளமை இழிவானால் வாழ்வு வீணாகும் !}}</b>}}
{{left_margin|3em|<poem>பரட்டைத் தலையும்
பன்னிற ஆடையும்
பாதையில் திரிவதும் அறிவன்று!-வெறும்
வறட்டுப் பேச்சும்
வாய்வெடிச் சிரிப்பும்
வம்பர்க் கியற்கை; பண்பன்று!
தொங்கல் முடியும்
தொளதொள உடையும்
தொம்பர் நடையும் அழகன்று!-நலம்
மங்கும் படிக்கே
இராப்பகல் திரிவது
மாடுகள் இயல்பு; நமதன்று!
தெருவோ ரத்துத்
திண்ணையில் நடையில்
திரளாய்க் கூடிப் பேசுவதும்-அங்கு
வருவோர் போவோர்
வம்புக் கிழுத்து
வாயடி கையடி செய்குவதும்,
ஒருவா றேனும்
உருப்படி யாகா
உலுத்தர் செயல்கள்; இழிவென்க!-இளம்
பருவம், அறிவுப்
பயிர்விளை பருவம்!
பாழாய்ச் செய்தல், அழிவென்க!
இளைஞர் நலமே
எதிர்வரும் நலமாம்!
இன்றே நாளையின் வித்தாகும்!-அதன்
விளைவிழி வாயின்
வீணாம் வாழ்க்கை
வினையே இளமையின் முத்தாகும்!</poem>}}
{{Right|{{larger|<b>-1977</b>}}}}
<section end="50"/><noinclude></noinclude>
h3i1jpmhicw0g8elh2wbj2amszzrdqn
பக்கம்:கனிச்சாறு 4.pdf/110
250
446904
1837800
1440740
2025-07-01T12:01:44Z
Fathima Shaila
6101
1837800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}75}}</b></small></noinclude>
<section begin="51"/>
{{larger|<b>{{rh|51||அழகும் அருவருப்பும்!}}</b>}}
{{left_margin|3em|<poem>அழகாய் உடுப்பதை
அளவில் குறைத்தால்
அருவருப் பாக
இருந்திடும்! அது
தெருவில் யார்க்கும்
விருந்திடும்!-பிறர்
பழகும் முறையில்
பண்பைத் தவிர்த்தால்
பழுதே வந்து
நிறைந்திடும்-உளப்
பான்மை மிகவும்
குறைந்திடும்!
தொடைகள் தெரிய
உடைகள் உடுப்பது
தொந்தரை களையே
விளைத்திடும்!-பெருந்
துன்பம் கூட
முளைத்திடும்!-உயர்
நடையும் ஒழுங்கும்
நம்மைக் காக்கும்;
நாட்டைக் காக்கும்;
நலந்தரும்!-மன
வாட்டம் போக்கும்;
வளந்தரும்!</poem>}}
{{Right|{{larger|<b>-1977</b>}}}}
<section end="51"/><noinclude></noinclude>
pmqyieyaqrjoppo41u3er41ny9k9hu1
பக்கம்:கனிச்சாறு 4.pdf/111
250
446905
1837801
1440742
2025-07-01T12:03:29Z
Fathima Shaila
6101
1837801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|76{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="52"/>
{{larger|<b>{{rh|52||பொருந்தா ஆசையைப் புதைத்து, உடன் விலகு!}}</b>}}
{{left_margin|3em|<poem>உனக்கும்,உன் நிலைக்கும்
உன்அறி வுக்கும்!
ஒத்து வராததை
நினைந்துளம் உருகி
மனக்கற்பனை யாய்
வானள வெண்ணி
மண்ணாய்ப் போகாதே!-தம்பி
மண்ணாய்ப் போகாதே!
நினக்குப் பொருந்தா
நினைவுகள் உன்னை
நிலைகுலைத் தழிக்கும்!
பழியினை நிறுத்தும்!
அனற்காடாம் ஆசை!
அதனிடை வீழ்ந்தே
அழிந்து போகாதே!-தம்பி
அழிந்து போகாதே!
பொருத்த மானதை
எண்ணிடப் பழகு!
பொருந்தா ஆசையைப்
புதைத்துடன் விலகு!
கருத்த மனத்தினால்
கற்பனை மாளிகை
கட்டி யழியாதே!-தம்பி
காற்றில் உலராதே!
இயன்றதை நினைக்கவும்
இயன்றதை அடையவும்
எண்ணுதல் தக்கதாம்!
இல்லெனில் இழிவாம்!
பயன்தரா நினைவைப்
பகல்இரா நினைந்து
பாழாய்ப் போகாதே!- தம்பி
பழியில் வேகாதே!</poem>}}
{{Right|{{larger|<b>-1977</b>}}}}
<section end="52"/><noinclude></noinclude>
553o7hfgofslsrp4iyqpkj6r3r9ergg
பக்கம்:கனிச்சாறு 4.pdf/112
250
446906
1837802
1440743
2025-07-01T12:03:53Z
Fathima Shaila
6101
1837802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}77}}</b></small></noinclude>
<section begin="53"/>
{{larger|<b>{{rh|53||பதற்றம் கொள்ளாதே!}}</b>}}
{{left_margin|3em|<poem>தொலைவில் இருக்கையில்
அழகாய்த் தெரிவது
நெருங்கிப் பார்க்கையில்
நெருடாய் இருக்கும்!
மலைவும் குலைவும்
மனத்தின் இயல்பு!
மயக்கம் கொள்ளாதே!-தம்பி
மாண்பை இழவாதே!
அழகெனப் பெறுவதோ
கட்புலன் அறிவு!
அன்பெனப் பெறுவதோ
மனப்புலன் தெரிவு!
பழகப் பழகவே
பயன்தெளி வாகும்!
பார்வை போதாதே!-தம்பி
பதற்றம் கொள்ளாதே!
பளபளப் புறுவதும்
பகட்டாய்த் தெரிவதும்
பயனில் குறையலாம்;
பண்பில் தாழலாம்!
வளவளப் பேச்சில்
வல்லமை விளங்குமோ?
வம்பில் இறங்காதே! - தம்பி
வாழ்வை இழக்காதே!</poem>}}
{{Right|{{larger|<b>-1977</b>}}}}
<section end="53"/><noinclude></noinclude>
44lqcp6v7yoepl9ygot8js26b3rmy8k
பக்கம்:கனிச்சாறு 4.pdf/113
250
446907
1837803
1440744
2025-07-01T12:04:13Z
Fathima Shaila
6101
1837803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|78{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="54"/>
{{larger|<b>{{rh|54||எதிர்ப்புக்கு இளைக்காதே!}}</b>}}
{{left_margin|3em|<poem>எதிர்ப்பா ளர்கள்
எங்கும் இருப்பர்;
என்றும் இருப்பர்; இளைக்காதே!-பெரும்
புதிர் அது தம்பி!
புதுமை அன்று!
பொதுமைத் தொண்டில் களைக்காதே!
எதிர்மின் ஆற்றல்,
நேர்மின் ஆற்றல்
இரண்டும் உண்டே! அறிவாய்,நீ!-ஓர்
அதிர்வால் அன்றோ
அசைவே உண்டாம்!
ஆக்கம் உண்டாம்! தெளிவாய், நீ!
ஒருவன் உன்னை
எதிர்க்கும் போதே
ஊக்கந் தோன்றும்; உரந் தோன்றும்!-நல்
பெருமிதந் தோன்றும்;
அறிவுந் தோன்றும்!
பேச்சும் செயலும் மிகத் தோன்று
எருவாய்க் கொள்வாய்,
எதிர்ப்பை எல்லாம்!
இயக்கம் யாவும் அதிர்வென்க!-உயிர்
கருவாய் உருவாய்த்
திருவாய்த் தோன்றல்
கருவணு இரண்டின் எதிர் வென்க!
உண்மையை என்றும்
பொய்ம்மை எதிர்க்கும்!
உயிர்ப்பில் ஒளிர்வது மெய்யாகும்!-மனத்
திண்மையே வாழ்க்கை!
தேற்றமே வீரம்!
தெளிவாய்! அழிவது பொய்யாகும்!</poem>}}
{{Right|{{larger|<b>-1977</b>}}}}
<section end="54"/><noinclude></noinclude>
d15quqomq4c6uokptrvh81pcxa3zwee
பக்கம்:கனிச்சாறு 4.pdf/114
250
446908
1837804
1440745
2025-07-01T12:04:34Z
Fathima Shaila
6101
1837804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}79}}</b></small></noinclude>
<section begin="55"/>
{{larger|<b>{{rh|55||தனி நலத்தைத் தவிர்!}}</b>}}
{{left_margin|3em|<poem>உள்ளத்திலே உண்மைஒளி
உதட்டினிலே கனிந்தமொழி
கள்ளமற்ற தொண்டுநலம்
- பாண்டியா - நம்
காலத்திற்குத் தேவையடா
- பாண்டியா!
அண்ணனையும் தம்பியையும்
அடிப்பறிக்கும் வேலையெல்லாம்
எண்ணுதற்கும் நெஞ்சுசுடும்
- பாண்டியா - நம்
இனத்தினையே கீழ்ப்புதைக்கும்
- பாண்டியா!
தப்பிருக்கும் தவறிருக்கும்
தாங்கிலன்றோ உறவிருக்கும்
எப்புடையும் எம்மருங்கும்
- பாண்டியா - அவை
இயற்கையடா மயலறுப்பாய்
- பாண்டியா!
உன்வயிற்றை உன்நலத்தை
ஒக்கநினைத் தே,இனத்தைப்
புன்செயலால் கூறுசெயல்
- பாண்டியா - நமைப்
புதைகுழிக்குள் தள்ளுமடா
- பாண்டியா!
சட்டிசுட்ட தெனக்குதித்து
நெருப்பினிலே சாய்ந்தகதை
எட்டியதோ கண்கவர்ச்சி
- பாண்டியா - இங்கு
இருப்பதன்மேல் அங்கிருக்கும்
- பாண்டியா!</poem>}}
{{Right|{{larger|<b>-1977</b>}}}}
<section end="55"/><noinclude></noinclude>
adywc571x6hf8prvwuc4zczewzjciov
பக்கம்:கனிச்சாறு 4.pdf/115
250
446909
1837805
1440746
2025-07-01T12:04:52Z
Fathima Shaila
6101
1837805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|80{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="56"/>
{{larger|<b>{{rh|56||வாழ்வியல் முப்பது! }}</b>}}
{{left_margin|3em|<poem>புகழ்ச்சியின் மயக்கறு!
புன்மையை உதறு!
இகழ்ச்சியைத் தாங்கு;
எள்ளலை எடுத்தெறி,
நிகழ்ச்சியை வரிசைசெய்
நினைவை உறுதிசெய்!
மகிழ்ச்சியும் துயரமும்
மனத்தின் செயல்களே! {{float_right|1}}
ஊக்கமும் முயற்சியும்
உண்மையும் நேர்மையும்
ஆக்க வினைகளும்
அடிப்படைக் கொள்கைகள்!
ஏக்கம் அகற்று!
ஏறுபோல் வினைசெய்
தாக்கும் இழிவுகள்
தாமே விலகிடும்! {{float_right|2}}
இன்றைய நாள் நினை;
இனிவரும் நாள் நினை;
என்றும் புதியன், நீ!
யாவும் புதியன!
அன்றன்றும் புதுநாள்!
அனைத்தும் இனியன!
ஒன்று, கை போகின்
ஒன்றுன் கைவரும்! {{float_right|3}}
உள்ளம் விழைவதை
அறிவினால் ஓர்ந்துபார்!
தள்ளத் தகுவன
உடனே தள்ளுவாய்!
தள்ளத் தகாதென்
றறிவு தேர்வதைக்
கொள்ள முயற்சிசெய்!
கொடு நினை வகற்று!</poem>}}<noinclude></noinclude>
9duo2oihaep69ushwgw1j34snpl7anh
பக்கம்:கனிச்சாறு 4.pdf/122
250
446919
1837806
1440752
2025-07-01T12:06:13Z
Fathima Shaila
6101
1837806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}87}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>பொருந்துணா விருந்து;
புறவுரை முதுபிணி!
அருந்தலும் அளவுசெய்!
ஆசை அடக்கியாள்!
திருந்துதல் வாழ்க்கை!
தெறுநோய் முன்தவிர்!
மருந்துணல் தீது!
மணிநீர் மருந்து! {{float_right|29}}
பொதுமை உலகிது;
பொதுமை வாழ்விது;
பொதுமை உயிர்நலம்!
பொதுமையே இயக்கம்!
பொதுமைஉன் எண்ணம்;
பொதுமைஉன் வினைகள்!
பொதுமையாய் ஆக்கு, உனை!
புதுநலங் காண்பாய்.{{float_right|30}}</poem>}}
{{Right|{{larger|<b>-1977</b>}}}}
<section end="56"/><noinclude></noinclude>
rlpvsb6td92bgqrjsq2qtcuh39u1pl2
பக்கம்:கனிச்சாறு 4.pdf/123
250
446920
1837807
1440753
2025-07-01T12:06:36Z
Fathima Shaila
6101
1837807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|88{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="57"/>
{{larger|<b>{{rh|57||வாழ்க்கைத் திரிபுகள்!}}</b>}}
{{left_margin|3em|<poem>அறிவின் பெருக்கால்
:அன்பு நசுங்கி
:ஆணவம் கிளைத்தது தம்பி!-வெறும்
பொறிகள் பெருக்கம்
:புன்மையை விளைத்துப்
:போலியை வளர்த்தது தம்பி!
நெறிகள் திறம்பின;
:நேர்மை இறந்தது!
:நெளிவுகள் சேர்ந்தன பண்பில்-உயர்
குறிகள் மாறின;
:கொடுமை நிறைந்தது;
:குலைவுகள் நேர்ந்தன அன்பில்!
உண்மை மறைந்தது;
:ஒழுக்கம் சிதைந்தது;
:உரிமை இழிந்தது வாழ்வில்!-வெறும்
வெண்மை உயர்ந்தது;
:வெறுக்கை மிகுந்தது;
:விழுந்தனர் மக்கள் தாழ்வில்!
திண்மை விளைந்தது;
:திறமை குலைந்தது;
:தேமா பழுத்தது பிஞ்சில்!-உயர்
பெண்மை திரிந்தது;
:ஆண்மை பிழைத்தது;
:பேய்மை நிறைந்தது நெஞ்சில்!
</poem>}}
{{Right|{{larger|<b>-1978</b>}}}}
<section end="57"/><noinclude></noinclude>
sd7a1sz4gh825azuyvb2ivjcbhh7scp
பக்கம்:கனிச்சாறு 4.pdf/124
250
446921
1837808
1440754
2025-07-01T12:07:00Z
Fathima Shaila
6101
1837808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}89}}</b></small></noinclude>
<section begin="58"/>
{{larger|<b>{{rh|58||உழைப்பே வாழ்க்கை!}}</b>}}
{{left_margin|3em|<poem>உழைப்பே அறிவு!
உழைப்பே செல்வம்!
உழைப்பே நலன்கள் தேக்கும்!
உழைப்பே உறக்கம்!
உழைப்பே இன்பம்!
உழைப்பே வாழ்வைத் தூக்கும்!
உழைப்பால் உயர்க!
உழைப்பால் உண்க!
உழைக்கா துண்போன் சிறியோன்!
மழைக்கா லத்தும்
வெயிற்கா லத்தும்
மலையா துழைப்போன் பெரியோன்!</poem>}}
{{Right|{{larger|<b>-1978</b>}}}}
<section end="58"/><noinclude></noinclude>
oocce950rx4ztnw6ccctdcb0upl7a9f
பக்கம்:கனிச்சாறு 4.pdf/125
250
446922
1837809
1440755
2025-07-01T12:07:30Z
Fathima Shaila
6101
1837809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|90{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="59"/>
{{larger|<b>{{rh|59||உயர்வைப் பின்பற்று!}}</b>}}
{{left_margin|3em|<poem>உயர்வும் தாழ்வும்
:உலகில் இருக்கும்;
:உயர்வைப் பின்பற்று!-தாழ்(வு)
:உணர்வை நீ, அகற்று!-அறி(வு)
:ஓங்குக நூல் கற்று!-மன
அயர்வும் சோர்வும்
:அச்சமும் இன்றி
:ஆர்வத் துடன் வினைசெய்-நல்
:ஆக்கங்கள் வரும்; இதுமெய்-உனை
:அழிப்பவை மடி, சினம், பொய்!
பெயரும் புகழும்
:பொருளும் கருதிப்
:பிழையாய் நடக்காதே!-நெறி
:பேணுதல் கடக்காதே;-புறம்
:பேசுதல் தொடுக்காதே!-பெருந்
துயரம் வரினும்
:தூற்றுதல் பெறினும்
:தூய்மை இழக்காதே!-மனந்
:தொய்ந்திடக் கொழுக்காதே!-கீழ்மைத்
:தொழும்பில் வழுக்காதே!</poem>}}
{{Right|{{larger|<b>-1978</b>}}}}
<section end="59"/><noinclude></noinclude>
2jah4sav6k3knh4v7nlj19mkw9nquct
பக்கம்:கனிச்சாறு 4.pdf/126
250
446923
1837810
1440757
2025-07-01T12:07:52Z
Fathima Shaila
6101
1837810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}91}}</b></small></noinclude>
<section begin="60"/>
{{larger|<b>{{rh|60||ஏற்பும் தவிர்ப்பும்!}}</b>}}
{{left_margin|3em|<poem>அடக்கமாயிரு; முடங்கி விடாதே!
ஆழமாய்நினை; அமைந்து விடாதே!
இடக்குகள் தவிர்; இடிந்து விடாதே!
எளிமையா யிரு; இழிவா யிராதே!
துருதுரு வென இரு; துடுக்கா யிராதே!
துள்ளித் திரிவாய்; துன்புசெய் யாதே!
எருதுபோலிரு; எக்களிப் புறாதே!
இனிமையாய்ப்பழகு; ஏமாறி விடாதே!
எல்லைப்படநில்; உரிமையிழ வாதே!
எதிர்நின்று பேசு; எதிரியா காதே!
சொல்லை அளந்து சொல்; சோர்ந்து பேசாதே!
சுறுசுறுப்பாயிரு; படபடப் புறாதே!
மகிழ்ச்சி யாயிரு; மனச்செருக் குறாதே!
மற்றவர் மதிப்பாய்; மனம் இழவாதே!
புகழ்ச்சி விரும்பு; புல்லியர் சொல்தவிர்!
போக்கினை உறுதிசெய்; புறம்போகாதே!
வினைசெய விரும்பு; வேக முறாதே!
வீம்பறை விலக்கு; வெறுப்புக் கொள்ளாதே!
நினைவது ஆய்ந்துதேர்; நிலைத்து விடாதே!
நேயரைப் பெருமை செய்; நினைவிழக் காதே!
ஒற்றுமை யாயிரு; உனையிழக் காதே!
உற்றவர்க் குதவு; உனைத்துற வாதே!
பெற்றவர் பேணு; பிழைசெய் யாதே!
பெருமை யாயிரு; பீற்றிக்கொ ளாதே!
அரசியல் உணர்ந்துகொள்; அறந்தவ றாதே!
ஆக்க வினைசெய்; இழந்து விடாதே!
வரிசை தெரிந்துசெய்; வழுக்கி விழாதே!
வரலாறு வாழ்க்கை; வறிதாய்ப் போகாதே!</poem>}}
{{Right|{{larger|<b>-1980</b>}}}}
<section end="60"/><noinclude></noinclude>
qyk0392xsd1of5p60uv2ly4ozxsdp0r
பக்கம்:கனிச்சாறு 4.pdf/127
250
446924
1837811
1440758
2025-07-01T12:08:19Z
Fathima Shaila
6101
1837811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|92{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="61"/>
{{larger|<b>{{rh|61||ஒவ்வொரு வீட்டிலும்<br>ஒவ்வொரு நூலகம்}}</b>}}
{{left_margin|3em|<poem>ஓய்வு வேளையில்
பிள்ளைகள் படித்திட
ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு நூலகம்
உருவாய் அமைத்திடல் வேண்டும்-அதுதான்
உயர்வாம் அறிவினைத் தூண்டும்!
ஆய்வுரை நூல்கள்,
அறிவியல் நூல்கள்,
தோய்வுறு நெறிமுறை
துலக்கிடும் நூல்கள்,
தொன்மை அறம்புகல் நூல்கள்-அவைதாம்
தூய்மை வாழ்க்கையின் கால்கள்!
பாவியக் கதைகள்,
பயன்தரு உரைகள்,
ஓவியக் காட்சிகள்,
உலகறி கலைகள்,
ஒழுங்காய்ச் சேர்த்திடல் நன்மை-அவைதாம்
உள்ளொளி பெருக்கிடும்; உண்மை!
ஆவியை மலர்த்திய
அருளரும் அறிஞரும்
மேவிய வாழ்முறை
மிளிர்வர லாறு
மிகுதியும் படியுங்கள் பேணி-அவைதாம்
மேல் நமை உயர்த்திடும் ஏணி!
பச்சைப் புளுகுகள்,
பயனிலா நூல்கள்,
பாலியல் உணர்வுசெய்
பளபளப் பிதழ்கள்
நச்சென அறிவினை ஒழிக்கும்-மேலும்
நாட்குநாள் நம்மையே அழிக்கும்!
</poem>}}
{{larger|<b>{{Right|- 1980}}</b>}}
<section end="61"/><noinclude></noinclude>
m6tffvyzi77zh9yzdskbnldks3qwtyg
பக்கம்:கனிச்சாறு 4.pdf/128
250
446925
1837812
1440759
2025-07-01T12:08:41Z
Fathima Shaila
6101
1837812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}93}}</b></small></noinclude>
<section begin="62"/>
{{larger|<b>{{rh|62||ஏமாறிப் போகாதீரே! }}</b>}}
{{left_margin|3em|<poem>தனிநலத்தில் நாட்டமுற்றுத் தமிழினத்தின்
:நோக்கமின்றிக் கட்சிகளின் தலைவ ரெல்லாம்
பனிநிலத்தில் மலத்திரளைக் குவிப்பதுபோல்
:பசும்பச்சை இழிமொழிகள் பரக்கக் கூறிக்
கனிமரத்தில் வீற்றிருக்கக் கல்லெறிந்து
:காயடிக்கும் கயமையினை என்ன சொல்வோம்!
இனிவுரத்த உணர்வுகொள்வீர் இளைஞர்களே!
:இத்தகையோர்க் கேமாறிப் போகாதீரே!
மறுத்தொருவர்க் கொருவர்விடும் அறிக்கைகளும்
:மனங்கூசும் இழிவுரையும் தமிழர் மாண்பை
அறுத்தெடுக்கும் வகையல்லால்-பகைவரெல்லாம்
:அவைகூறி நகைக்கின்ற நிலையே யல்லால்-
நிறுத்தெடுக்கும் விளை வென்ன? கட்சிகளின்
:நிலையறிவீர்! நெடுந்தமிழைப் பேணுதற்கே
சிறுத்தையெனப் பாய்ந்தெழுவீர்; இளைஞர்களே
:இத்தகையோர்க் கேமாறிப் போகா தீரே!</poem>}}
{{Right|{{larger|<b>-1980</b>}}}}
<section end="62"/><noinclude></noinclude>
q5ilr4q2slxyzcxantirc5mjlsv3nbe
பக்கம்:கனிச்சாறு 4.pdf/129
250
446926
1837814
1440760
2025-07-01T12:09:27Z
Fathima Shaila
6101
1837814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|94{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="63"/>
{{larger|<b>{{rh|63||இந்த உலகம் !}}</b>}}
{{left_margin|3em|<poem>இந்த உலகம்
:இயற்கை உலகம்!
{{gap2}}-ஆனால் இன்றோ
:செயற்கை உலகம்!
மந்தம் இன்றி
:வினைபடு உலகம்!
{{gap2}}-ஆனால் இன்றோ
:புனைபடு உலகம்!
இந்த உலகம்
:எழில்மிகு உலகம்!
{{gap2}}-ஆனால் இன்றோ
:தொழில் மிகு உலகம்!
சொந்த நலன்கள்
:சூழ்ச்சிகள் உலகம்!
{{gap2}}-எனவே இஃதொரு
:தாழ்ச்சிகள் உலகம்!
இந்த உலகம்
:ஏர்த்தொழில் உலகம்!
{{gap2}}-ஆனால் இன்றோ
:போர்த்தொழில் உலகம்
வந்தவர் எவரும்
:வாழ்ந்திலா உலகம்!
{{gap2}}-ஆயினும் ஆசையில்
:தாழ்ந்திலா உலகம்!
</poem>}}
{{Right|{{larger|<b>-1980</b>}}}}
<section end="63"/><noinclude></noinclude>
tu82xr1chy54pq40lrlpo9dhctzl7r5
பக்கம்:கனிச்சாறு 4.pdf/130
250
446927
1837815
1440761
2025-07-01T12:09:50Z
Fathima Shaila
6101
1837815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}95}}</b></small></noinclude>
<section begin="64"/>
{{larger|<b>{{rh|64||பொய்யா வாழ்க்கை அறவாழ்க்கை !}}</b>}}
{{left_margin|3em|<poem>உண்பதும் உடுப்பதும்
{{gap2}}உறங்குவ தும்,என
:ஒவ்வொரு நாளும் கழிக்கின்றார்!-அவர்
:உயிரின் சிறப்பைப் பழிக்கின்றார்!-தம்பி
மண்புது வாழ்க்கை
{{gap2}}மக்கள் தோற்றம்
:மனமும் அறிவும் துலங்கிடவே!-நாம்
:மறைந்ததன் பின்னும் விளங்கிடவே!
விலங்கும் பறவையும்
{{gap2}}விழுங்கும்; தூங்கும்!
:வேறென் செய்யும்? இனம்பெருக்கும்!-பின்
:வீழ்ந்தே அழியும்! நிலைமறக்கும்!-தம்பி
துலங்கும் அறிவும்
{{gap2}}தூய்மையின் உளமும்
:துறந்தால் நமக்கும் உயர்வென்ன? நாம்
:தோன்றியே மறையும் பொருளென்ன?
நல்லுயர் கல்வியும்
{{gap2}}நன்னெறி வாழ்வும்
:நாம்கடைப் பிடிக்கும் ஒருநோக்கும்-நம்
:வாழ்வை உயர்த்தும்; புகழ்தேக்கும்!-தம்பி
புல்லியர் வாழ்க்கை
{{gap2}}புதைந்தழிந் தொழியும்!
:பொய்யா வாழ்க்கை அறவாழ்க்கை!-அது
:பொதுவுணர் வால்வரும் மறவாழ்க்கை!</poem>}}
{{Right|{{larger|<b>-1984</b>}}}}
<section end="64"/><noinclude></noinclude>
ck8whliimgtipn8lssxs0ntbhcjx82f
பக்கம்:கனிச்சாறு 4.pdf/131
250
446928
1837816
1440762
2025-07-01T12:10:13Z
Fathima Shaila
6101
1837816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|96 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="65"/>
{{larger|<b>{{rh|65||புன்மையும் நன்மையும் ! }}</b>}}
{{left_margin|3em|<poem>ஆங்கே ஓர் அழுகல் கண்டால்
:ஆயிரம் ஈக்கள் மொய்க்கும்!
தீங்கினைப் பலரும் சூழும்
:திறத்தை அக் காட்சி காட்டும்!
பூவொன்று பூத்து நின்றால்
:புதுத்தேனை விரும்பும் தேனீ,
நாவூன்றிக் குடித்து விட்டு
:நயம்பாடிப் பறந்து போகும்!
நல்லதைப் பற்று தற்கு
:நான்கைந்து பேரே சூழ்வார்!
அல்லதைப் பற்று தற்கோ
:ஆயிரம் பேர்கள் மொய்ப்பார்!
பகட்டாலும் கவர்ச்சி யாலும்
:பலபேர்கள் மயங்கிப் போவார்!
புகட்டுநல் லறிவை நாடும்
:புதுமையைச் சிலரே ஏற்பார்!
புல்லுக்கோ எரு, நீர் விட்டுப்
:போற்றுவார் எவரும் உண்டோ?
நெல்லுக்கே எரு, நீர் வார்ப்பார்!
:எல்லையும் காவல் செய்வார்!
புன்மையும் பொய்யும் நன்கு
:பொலிந்தாலும் எவரும் போற்றார்!
நன்மையும் மெய்யும் கொஞ்சம்
:நலிந்தாலும் போற்றிக் காப்பார்!</poem>}}
{{Right|{{larger|<b>-1984</b>}}}}
<section end="65"/><noinclude></noinclude>
gtzu5j1tvprbqgijkeewlldonailt5o
பக்கம்:கனிச்சாறு 4.pdf/132
250
446929
1837817
1440765
2025-07-01T12:10:36Z
Fathima Shaila
6101
1837817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 97}}</b></small></noinclude>
<section begin="66"/>
{{larger|<b>{{rh|66||மூட்டுக்கு வலிவு செய் !<br>முதுகுக்கு நிமிர்வு தா !}}</b>}}
{{left_margin|3em|<poem>
கேட்டுக்கொள், தம்பி!
::உன்முயல் வாலே
::கிளர்ந்தெழ வேண்டும் நம்இனம்!
பாட்டுக்குத் தாளமாய்
::உன் தொண்டி னாலே,
::பயன்பெற வேண்டும் நம்மொழி!
நாட்டுக்குள் வேட்டை
::நாய்களாய்த் தம்முடை
::நலன்களே வளங்களே தேடுவார்!
காட்டுக்குள் புலியெனக்
::களைப்பின்றி அலைகுவாய்!
::கவனமாய்ப் பொதுநலம் கூட்டுவாய்!
ஏட்டுக்குள் உன்னைப்
::புதைத்துக்கொள் ளாதே!
::எழு, நட; உலகினை நேர் படி!
பூட்டுக்குத் திறவுபோல்
::புதுமைக்கு வழிவிடு!
::புன்மைக்குத் தீவைத்துக் கொளுத்துவாய்!
மூட்டுக்கு வலிவு செய்;
::முதுகுக்கு நிமிர்வு தா;
::முன்கையை எஃகுப் போல் முறுக்கிடு!
கேட்டுக்கு முன்னை நில்!
::கிளர்ச்சிக்கு வித்திடு!
::கீழ்மையும் கயமையும் பொசுக்குவாய்!
</poem>}}
{{Right|{{larger|<b>-1984</b>}}}}
<section end="66"/><noinclude></noinclude>
dy5s463vgtqcrj8hh881lmsyrbrqb7q
பக்கம்:கனிச்சாறு 4.pdf/152
250
446931
1837836
1444176
2025-07-01T12:20:03Z
Fathima Shaila
6101
1837836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 117}}</b></small></noinclude>
<section begin="80"/>
{{larger|<b>{{rh|81||உலக விளக்கம் !}}</b>}}
<b>முன்னுரை.</b>
{{left_margin|3em|<poem>கடுகென முளைத்துக் கல்லென வளர்ந்து
கடுமலை யெனப்பெரி தாகிப்
படுகுழி யிறக்கும் பற்பல பிழைகள்
பழிச்செயல் இவற்றினை நீக்கி
விடுகென மக்களை வேண்டியும், நெஞ்சில்
விரியுல குய்ந்திட, அன்பை
நடுகென வேண்டியும் நவின்றனன் இந்நூல்!
நாட்டினர் யாவர்க்கும் பொதுவே!{{float_right|1}}</poem>}}
<b>1.உலகு.</b>
{{left_margin|3em|<poem>
நீர்பொது; நிலம்பொது; நெடுவான் வெளிபொது;
ஞாயிறும் நிலவதும் பொதுவே;
ஊர்பொது; உயிர்பொது; உயிருடற் காகிடும்
உணவெனும் பல்வகை பொதுவே!
ஏர்பொது; இவற்றின் எவ்வகை விரிவும்
எல்லார்க் கும்,பொது பொதுவே!
பார்பொது; சீர்பொது; பல்வகைப் பொருள்பொது;
பகுத்தலும் வகுத்தலும் ஏனோ?{{float_right|2}}</poem>}}
<b>2. பிறப்பு.</b>
{{left_margin|3em|<poem>
பிறப்பால், பிறங்குடல் உறுப்பால், உணர்வால்
பெருவலி, திறனெனும் இவற்றால்
சிறப்பால் அறிவால் செயிர்ப்புயிர்ப் பிவற்றால்
செரிப்பரிப் பெனும்பிற வகையால்
இறப்பால் மக்களும் மாக்களும் புட்களும்
எனமூ வகையுயிர் உளவால்!
அறப்பால் அறியா தாயிரம் பிறப்பென
அரற்றலும் புரட்டலும் ஏனோ?{{float_right|3}}</poem>}}
<b>3. உறுப்பு.</b>
{{left_margin|3em|<poem>உயிர்ப்பும் உணவும் உயிர்க்கெலாம் பொதுவே!
உறையுளும் உடையுமென் றிவையே
பயிர்ப்புள மாந்தர் பயில்தனிப் பொருளே!
பறவையும் மாக்களுந் துணையே!
பயிர்ப்பில மாக்கள் பறவைகள் இவையே
படுவிளை வுண்டிட, மாந்தர்
புயல்வயல் தம்மால் புலம்விளைத் துண்ணப்
பொதுத்தடை கூட்டிடல் மடமே! {{float_right|4}}</poem>}}<noinclude></noinclude>
o8a5p0rw5alwvw8ldpegndshtuclry9
1837854
1837836
2025-07-01T12:51:39Z
Fathima Shaila
6101
1837854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 117}}</b></small></noinclude>
<section begin="81"/>
{{larger|<b>{{rh|81||உலக விளக்கம் !}}</b>}}
<b>முன்னுரை.</b>
{{left_margin|3em|<poem>கடுகென முளைத்துக் கல்லென வளர்ந்து
கடுமலை யெனப்பெரி தாகிப்
படுகுழி யிறக்கும் பற்பல பிழைகள்
பழிச்செயல் இவற்றினை நீக்கி
விடுகென மக்களை வேண்டியும், நெஞ்சில்
விரியுல குய்ந்திட, அன்பை
நடுகென வேண்டியும் நவின்றனன் இந்நூல்!
நாட்டினர் யாவர்க்கும் பொதுவே!{{float_right|1}}</poem>}}
<b>1.உலகு.</b>
{{left_margin|3em|<poem>
நீர்பொது; நிலம்பொது; நெடுவான் வெளிபொது;
ஞாயிறும் நிலவதும் பொதுவே;
ஊர்பொது; உயிர்பொது; உயிருடற் காகிடும்
உணவெனும் பல்வகை பொதுவே!
ஏர்பொது; இவற்றின் எவ்வகை விரிவும்
எல்லார்க் கும்,பொது பொதுவே!
பார்பொது; சீர்பொது; பல்வகைப் பொருள்பொது;
பகுத்தலும் வகுத்தலும் ஏனோ?{{float_right|2}}</poem>}}
<b>2. பிறப்பு.</b>
{{left_margin|3em|<poem>
பிறப்பால், பிறங்குடல் உறுப்பால், உணர்வால்
பெருவலி, திறனெனும் இவற்றால்
சிறப்பால் அறிவால் செயிர்ப்புயிர்ப் பிவற்றால்
செரிப்பரிப் பெனும்பிற வகையால்
இறப்பால் மக்களும் மாக்களும் புட்களும்
எனமூ வகையுயிர் உளவால்!
அறப்பால் அறியா தாயிரம் பிறப்பென
அரற்றலும் புரட்டலும் ஏனோ?{{float_right|3}}</poem>}}
<b>3. உறுப்பு.</b>
{{left_margin|3em|<poem>உயிர்ப்பும் உணவும் உயிர்க்கெலாம் பொதுவே!
உறையுளும் உடையுமென் றிவையே
பயிர்ப்புள மாந்தர் பயில்தனிப் பொருளே!
பறவையும் மாக்களுந் துணையே!
பயிர்ப்பில மாக்கள் பறவைகள் இவையே
படுவிளை வுண்டிட, மாந்தர்
புயல்வயல் தம்மால் புலம்விளைத் துண்ணப்
பொதுத்தடை கூட்டிடல் மடமே! {{float_right|4}}</poem>}}<noinclude></noinclude>
440jv1dj66p9tk40cg6mtc3qne34ygz
பக்கம்:கனிச்சாறு 4.pdf/133
250
446935
1837818
1440797
2025-07-01T12:10:58Z
Fathima Shaila
6101
1837818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|98 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="67"/>
{{larger|<b>{{rh|67||மக்களை உருவால் மயங்காதே !}}</b>}}
{{left_margin|3em|<poem>நன்னிலை உணர்வுகள்
{{gap2}}நசிந்தன தம்பி!
:நலிவைக் கண்டே அஞ்சாதே!
என்னிலை வரினும்
{{gap2}}இழப்புகள் உறினும்
:இழிந்தவரைப்போய்க் கெஞ்சாதே!
உண்மையும் பொய்யும்
{{gap2}}உறழ்ந்தன தம்பி!
:உருவைக் கண்டு மருளாதே!
பெண்மையும் ஆண்மையும்
{{gap2}}பிறழ்ந்தன தம்பி!
:பேச்சைக் கண்டே வெருளாதே!
மானமும் நாணமும்
{{gap2}}மறைந்தன தம்பி!
:மக்களை உருவால் மயங்காதே!
கூனமும் குழைவும்
{{gap2}}கொழுத்தன தம்பி!
:கொடுமையை எதிர்க்கத் தயங்காதே!</poem>}}
{{Right|{{larger|<b>-1984</b>}}}}
<section end="67"/><noinclude></noinclude>
t7uo3u7vveoopj44oiujb0708aea6js
பக்கம்:கனிச்சாறு 4.pdf/134
250
446936
1837819
1440799
2025-07-01T12:11:24Z
Fathima Shaila
6101
1837819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 99}}</b></small></noinclude>
<section begin="68"/>
{{larger|<b>{{rh|68||எண்ணமும் செயலும் !}}</b>}}
{{left_margin|3em|<poem>எண்ணங்கள் வலியன!
::எண்ணிய வற்றுள்
திண்ணமாய்ச் சரியென
::நினைத்ததை எழுதுக!
எழுதிய வற்றைப்
::பலமுறை படிப்பாய்!
பழுதிலாக் கருத்தையே
::பரப்பிட முயல்வாய்!
பரப்பிய கருத்துக்கு
::மறுப்புக்கள் பலவரும்!
திருப்பி யவற்றைத்
::தேர்வுசெய்! ஒன்றுதேர்!
தேர்ந்து தெளிந்த
::கருத்துக்குச் செயல்படு!
நேர்ந்த செயலுக்கு
::எதிர்ப்புகள் வரலாம்!
எதிர்ப்புகள், ஏளனம்,
::இழிவுகள் கண்டு,
விதிர்விதிர்ப் புறாமல்
::வேகமாய் வினைபடு!
ஊக்கமும் வலிமையும்
::உள்ளத்தின் உரமும்
தாக்குறும் எத்தகை
::எதிர்ப்பையும் தகர்க்குமே!</poem>}}
{{Right|{{larger|<b>-1985</b>}}}}
<section end="68"/><noinclude></noinclude>
flygnv9wpdoaskvy4vq14v4o4umbt5j
பக்கம்:கனிச்சாறு 4.pdf/135
250
446937
1837820
1440800
2025-07-01T12:11:46Z
Fathima Shaila
6101
1837820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|100 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="69"/>
{{larger|<b>{{rh|69||உடல்நலத்தைக் காவாதான்,<br>
உயிர்நலத்தைக் காவாதான்!}}</b>}}
{{left_margin|3em|<poem>உடல்நலத்தைக் காவாதான்,
:உயிர்நலத்தைக் காவாதான்!
:உயிரைச் சார்ந்த
:உளவுணர்வும் அறிவுணர்வும்
:ஒருங்கே காத்துத்
திடமுடனாய் இருப்பவனே
:எச்செயலும் திறமையுடன்
:செய்ய வல்லான்!
:தீங்கின்றி மக்களுக்கும்
:உழைக்க வல்லான்!
குடம்,ஒழுக்காய் இருப்பதனால்
:ஊற்றுகின்ற நீர்நிலையாய்
:இராத தைப்போல்,
:குன்றினைப்போல் சேர்த்துவைத்த
:அறிவும் வாழ்வும்,
முடமாகிப் போகுமன்றோ?
:முழுப்பயனும் இல்லாமல்
:முழுகும் அன்றோ?
:மூவறமும் உடல்நலத்தில்
:முகிழ்க்கும் அன்றோ?
</poem>}}
{{Right|{{larger|<b>-1985</b>}}}}
<section end="69"/><noinclude></noinclude>
h7l190do7lkigk3xbyzc0e3itdolw8a
பக்கம்:கனிச்சாறு 4.pdf/136
250
446938
1837821
1440802
2025-07-01T12:12:12Z
Fathima Shaila
6101
1837821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 101}}</b></small></noinclude>
<section begin="70"/>
{{larger|<b>{{rh|70||தம்பி, உனக்கொன்று சொல்வேன் !}}</b>}}
{{left_margin|3em|<poem>
தம்பி, உனக்கொன்று சொல்வேன்!-இந்தத்
::தமையனின் மொழி கேட்பாய்;
::தமிழ் கற்க வேண்டும்!-எழும்
செம்புது வெள்ளம்,உன் உள்ளம்!-அது
::சீறிடில் குழி,மேட்டைச்
::சீர்செய்யத் தூண்டும்! {{float_right|-(தம்பி)}}
நம்மொழி, இனம்,நாடு தம்பி-ஒரு
::நாளினில் விளங்கின,
::நானிலம் போற்ற!-அட,
வெம்மொழி ஒன்று புகுந்தே-அதன்
::வீறு குறைத்தது;
::விழுந்ததவ் வேற்றம்! {{float_right|-(தம்பி)}}
பாரடா, இன்று,நீ தாழ்ந்தாய்!-இந்தப்
::பாரினில் உள்ள
::மொழிக்குலம் யாவும்-தமிழ்
வேரினில் தோன்றின வன்றோ!-அது
::வீழ்ந்து கிடப்பதும்
::இழிவதும் நன்றோ?{{float_right|-(தம்பி)}}
நம்புது முயற்சிகள் யாவும்-மீண்டும்
::நற்றமிழ்க் கொற்றத்தை
::நாட்டிடல் ஆகும்-தமிழ்த்
தம்பி, அதற்குன்னைப் போலத்-தம்மைத்
::தருதற்கா யிரம்பேர்கள்
::வேண்டும்இந் நாளே! {{float_right|-(தம்பி)}}</poem>}}
{{Right|{{larger|<b>-1985</b>}}}}
<section end="70"/><noinclude></noinclude>
hzptmw3ys5aj6xxi2n5qwza8i0qtn9r
பக்கம்:கனிச்சாறு 4.pdf/137
250
446939
1837822
1440804
2025-07-01T12:12:35Z
Fathima Shaila
6101
1837822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|102 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="71"/>
{{larger|<b>{{rh|71||இடரும் உலகமிது!}}</b>}}
{{left_margin|3em|<poem>
கடைகள் பலவிருக்கும்;
::கருத்தும் பலவிருக்கும்;
::கையில் காசிருப்பார்
::கண்களிலே
உடைகள் பலதெரியும்
::உருவம் பலதெரியும்
::உண்மை உணர்வதில்லை
::உரைகளிலே!
நடைகள் பலவிருக்கும்
::நாட்டம் சிலவிருக்கும்
::நன்மை தேடுபவர்
::செவிகளிலே,
குடையும் கவர்ச்சியுரை
::கொள்கை விளம்பரங்கள்
::கோடி கோடி வரும்
::நிறங்களிலே!
உடலம் பருத்திருக்கும்!
::உள்ளம் சிறுத்திருக்கும்!
::உதிர்க்கும் சிரிப்பிருக்கும்
::உதட்டினிலே!
மடலம் பெருத்திருக்கும்!
::மடமைக் கருத்திருக்கும்!
::மயக்கும் அறிவிருக்கும்,
::பகட்டினிலே!
கடலும் அருகிருக்கும்
::கதிரும் முளைத்திருக்கும்
::கண்கள் இருண்டிருக்கும்
::காட்சியிலே!
இடரும் உலகமிது!
::எண்ணத் துலங்குவதும்
::ஏற்றம் விளங்குவதும்
::எளிதிலையே!
</poem>}}
{{Right|{{larger|<b>-1985</b>}}}}
<section end="71"/><noinclude></noinclude>
jq1uesma0jm2km1b5bp5ho4onf99a7w
பக்கம்:கனிச்சாறு 4.pdf/138
250
446940
1837823
1440806
2025-07-01T12:12:54Z
Fathima Shaila
6101
1837823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 103}}</b></small></noinclude>
<section begin="72"/>
{{larger|<b>{{rh|72||இலகிடும் இன்பங்கள் எத்தனை எத்தனை ?}}</b>}}
{{left_margin|3em|<poem>கண்ணை விழித்தேன்;
::காட்சி தெரிந்தது!
::காட்சி தெரிந்ததும்
::கருத்தும் புலர்ந்தது!
மண்ணும் விண்ணும்
::மலைகளும் சோலையும்
::மலைமேல் தவழ்ந்த
::மாணிக்கப் பரிதியும்
தண்ணிய அருவியும்
::தாவிய ஆறும்
::தாவிய ஆற்றிடை
::மேவிய ஓடமும்,
திண்ணிய நகரமும்
::திரிந்தவான் பறவையும்
::தெரிந்தன தெரிந்தன!
::தெவிட்டாத இன்பமே!
கண்ணில் தெரிந்தஇக்
::காட்சிகள் போலவே
::காதுகள் கேட்டன
::கணக்கிலா ஒலிகள்!
எண்ணிலா ஒலிகளில்
::இசையும் இனிமையும்
::இயற்கையோ டென்னை
::இணைத்துப் பிணித்தன!
மண்ணிலும் விண்ணிலும்
::மலிந்து கிடந்து நம்
::மனத்தையும் அறிவையும்
::மலர்த்தும் இயற்கையில்
நுண்ணிய பேரறி
::வாற்றல்கள் எத்தனை?
::போற்றிக் கொள்ளுக,
::புலன்களால் அவற்றை!</poem>}}<noinclude></noinclude>
bds4110mk2hclc0sngi99ujhrnk6f1w
பக்கம்:கனிச்சாறு 4.pdf/139
250
446941
1837824
1440807
2025-07-01T12:13:10Z
Fathima Shaila
6101
1837824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|104 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>மூக்கினை மணந்த
::மணங்கள் எத்தனை!
::மணங்களை எழுப்பும்
::மலர்கள் எத்தனை?
நாக்கினைத் தழுவும்
::சுவைகள் எத்தனை?
::சுவைகளில் பொலிந்த
::நலன்கள் எத்தனை?
தேக்கிய அறிவும்
::திகழ்கின்ற இன்பமும்
::திகழ்ந்த இன்பம்
::தேய்கின்ற துன்பமும்
தாக்கிய உணர்வுகள்
::தனித்தனி அறிவு!
::தனித்தனி உணர்வையும்
::தம்பியே, உணர்க!
உலகுஉன் னுடையது!
::உற்ற இயற்கையும்
::உற்ற இயற்கையால்
::பெற்ற இன்பமும்
அலகிலா வகையன!
::ஆர்வப் பார்வையால்-
::அங்காந்த நெஞ்சால்-
::அனைத்தையும் விழுங்குக!
இலகிடும் இன்பங்கள்
::எத்தனை எத்தனை?
::பித்தனைப் போல, நீ
::பிரிந்துவா டாதே!
குலவிடு, அவற்றுடன்!
::கூட்டுக உயிரை!
::கொண்ட மகிழ்ச்சியைக்
::கொடுக்கஅனை வர்க்குமே!</poem>}}
{{Right|{{larger|<b>-1985</b>}}}}
<section end="72"/><noinclude></noinclude>
s5mvlo48xvvpx1c0h8i1k5j8ud6fmle
பக்கம்:கனிச்சாறு 4.pdf/140
250
446942
1837825
1440808
2025-07-01T12:13:29Z
Fathima Shaila
6101
1837825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 105}}</b></small></noinclude>
<section begin="73"/>
{{larger|<b>{{rh|73||தொண்டு செய்ய வருபவர்க்கு<br>
இயற்கை வைக்கும் தேர்வு!}}</b>}}
{{left_margin|3em|<poem>அலுவலகப் பணிகளுக்கே
::ஆட்களைநாம் தேர்வதுபோல்,
இலகுகின்ற இயற்கையுமே
::இவ்வுலக மக்களுக்கே,
உழைத்திடமுன் வருபவர்க்கே
::உற்றதுயர், இடர்களெலாம்
இழைத்து, அவர் தொண்டுகளின்
::ஏற்றங்கள் தேர்கிறது!
துன்பத்தில் துவளாமல்,
::தொல்லைகளில் சளைக்காமல்,
இன்பத்தில் மயங்காமல்,
::எவருளரோ, அவர்திறனை,
மக்களுக்குக் காட்டி,அவர்
::மதிநலமும் தொண்டுளமும்
தக்கவையே எனத்தேர்ந்து,
::தகுதிவரை செய்கிறது!
ஒக்கபடி உழைப்பவரை
::உலகமக்கள் தாமறிந்து,
மிக்கநலம் போற்றுதற்கும்
::மேன்மைநிலை இதுவன்றோ!</poem>}}
{{Right|{{larger|<b>-1985</b>}}}}
<section end="73"/><noinclude></noinclude>
oq3e5tkwgl78hixjzp2ndfbz3ogogo5
பக்கம்:கனிச்சாறு 4.pdf/141
250
446943
1837826
1440809
2025-07-01T12:13:51Z
Fathima Shaila
6101
1837826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|106 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="74"/>
{{larger|<b>{{rh|74||மாணவர் எவர் ?}}</b>}}
{{left_margin|3em|<poem>உடைஉடுப் பதுவும்
::ஊர்சுற் றுவதும்
கடைத்தெருக் களிலே
::கைகளைக் கோர்த்து,
நடையில் மிடுக்கொடு
::நகைத்துத் திரிவதும்
மடயர்கள் ஆவர்!
::மாணவர் அல்லர்!
கண்டதைப் பேசிக்
::காலம் போக்கி
உண்டதை உரைத்தே
::உரக்கச் சிரித்துப்
பெண்டிரைச் சுற்றிப்
::பேயாய் அலைவோர்
மண்டுகள் ஆகலாம்;
::மாணவர் ஆகார்!
நுரைப்புநெய் யலைப்பி
::நொய்யக் கழுவிச்
சிரைப்பிலா வளர்முடி
::சிலிர்ப்பச் சீவித்
திரைப்படம், பூங்கா,
::தெருக்கடை நிறைப்பவர்
குரைப்புநாய்க் கூட்டமா?
::கொள்கை,மா ணவரா?
கருத்தொடு கற்பதும்,
::கற்ற கல்வியால்
வருத்தமுற் றறிவை
::வளர்த்துக் கொள்வதும்,
திருத்தமாய்ப் பேசித்
::திருந்த எழுதிப்
பொருத்தமாய் நடக்கும்
::புனிதரே மாணவர்!
</poem>}}
{{Right|{{larger|<b>-1985</b>}}}}
<section end="74"/><noinclude></noinclude>
q6zjrn7b8klv6tt8thg73mt6ibaj9q1
பக்கம்:கனிச்சாறு 4.pdf/142
250
446944
1837827
1440810
2025-07-01T12:14:14Z
Fathima Shaila
6101
1837827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 107}}</b></small></noinclude>
<section begin="75"/>
{{larger|<b>{{rh|75||பெண்டிர் பெருமை !}}</b>}}
{{left_margin|3em|<poem>அறிவும் ஆற்றலும்
::ஆண்களைப் போலவே
::அனைத்துப் பெண்டிர்க்கும்
::இயற்கை அளித்தது!
செறிவுற உயிர்களைப்
::படைத்திடும் தாய்மையும்
::சேய்களைப் புரந்திடும்
::சிறப்பையும் தந்தது!
அன்னையும் அவர்தாம்!
::அருந்துணை அவர்தாம்!
::அறிவிலும் செயலிலும்
::அமைச்சரும் அவர்தாம்!
முன்னையும் பின்னையும்
::முழுவாழ் வுக்கும்
::முதலும் இறுதியும்
::முழுமையும் அவர்தாம்!
ஆக்கவும் அளிக்கவும்
::அழிக்கவும் ஆன
::அருந்திறம் மூன்றையும்
::அன்னைக் குலத்திடம்
தேக்கிய இயற்கையின்
::திறம்அறி யாமல்
::தெய்வப் பெண்டிற்குத்
::தீங்குசெய் யாதீர்!</poem>}}
{{Right|{{larger|<b>-1986</b>}}}}
<section end="75"/><noinclude></noinclude>
o2lf53t1uo8vdj6arnrz1zce2mt4p12
பக்கம்:கனிச்சாறு 4.pdf/143
250
446945
1837828
1440812
2025-07-01T12:14:39Z
Fathima Shaila
6101
1837828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|108 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="76"/>
{{larger|<b>{{rh|76||பாட்டெழுதத் தெரிந்தால் போதாது தம்பி !}}</b>}}
{{left_margin|3em|<poem>பாட்டெழுதத் தெரிந்தால்,போ
::தாது, தம்பி!
பயனுடைய பாட்டாக
::எழுதல் வேண்டும்!
பூட்டறுக்கும் பாட்டுக்குத்
::தேவை என்றால்,
பூப்பாட்டும் புனல்பாட்டும்
::யார்க்கு வேண்டும்?
நாட்டுக்கும் மக்களுக்கும்
::நலிவைப் போக்கும்
நல்லுரிமைப் போராட்டக்
::காலத் தில்போய்க்
கூட்டுக்கும் குயிலுக்கும்
::இலக்கி யங்கள்
குவிக்கின்ற பழக்கங்கள்
::உணர்வைத் தீய்க்கும்!
இயற்கைக்கும் வாழ்க்கைக்கும்
::இலக்கி யத்தை
எருவாக்கும் முயற்சியெலாம்
::தமிழர் வாழ்வைச்
செயற்கைக்கும் அடிமைக்கும்
::சமயத் திற்கும்
சீரழிக்கும் பகைமைக்கும்
::சாதி மைக்கும்
மயற்கைக்கும் போலிமைக்கும்
::கொண்டு சேர்த்த
மாக்கதைகள் பலகோடி!
::உரிமை மீட்கும்
புயற்கைக்(கு)இங்(கு) உணர்வேற்றி
::எரிம லைக்கே
புத்துயிரை ஊட்டுகின்ற
::பாட்டே வேண்டும்!</poem>}}<noinclude></noinclude>
b1ygkzj58u4l38l0vidgig0rihngn8a
பக்கம்:கனிச்சாறு 4.pdf/144
250
446946
1837829
1440813
2025-07-01T12:14:55Z
Fathima Shaila
6101
1837829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 109}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>பாட்டெழுதிப் பொருள்திரட்டிப்
::புகழைச் சேர்க்கும்
பழங்கதைகள் இனிவேண்டாம்!
::இனத்தை மீட்க
வேட்டெழுப்பும் எழுத்தாலே
::அடிமை கொண்ட
விலங்கொடிக்கும் பாட்டன்றோ
::இன்று வேண்டும்!
ஏட்டெழுதும் இலக்கியத்தால்
::அறத்தால் எல்லாம்
ஏமாறிப் போனதல்லால்
::விளைவிங் கென்ன?
கூட்டுயிர்க்கும் ஏழையர்க்கு
::வாழ்வ ளிக்கும்
கொள்கைப்பாட் டன்றோ,ஓர்
::கோடி வேண்டும்!</poem>}}
{{Right|{{larger|<b>-1986</b>}}}}
{{larger|<b>{{rh|77||பாய்ந்தெழுவீர் இளமையோரே !}}</b>}}
{{left_margin|3em|<poem>உழுபவரும் உழைப்பவரும் ஒன்றிணைந்தால்
::ஊராள்வோர் நிலையென்னாகும்?
கொழுமுனைகள் கொடுவாளாய்க் கொல்லுலைகள்
::எரிதழலாய் உருமாறாவோ?
கழுவடைகள் அரசியலில்-கயமையர்கள்
::கலைத்துறையில்-புகுந்ததாலே
பழுதடையும் தமிழகத்தைப் புதுப்பிக்கப்
::பாய்ந்தெழுவீர் இளமையோரே!</poem>}}
{{Right|{{larger|<b>-1986</b>}}}}
<section end="76"/><noinclude></noinclude>
kd2103jo1zjcqneuw1v6vd2xv0sphvb
1837846
1837829
2025-07-01T12:49:17Z
Fathima Shaila
6101
1837846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 109}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>பாட்டெழுதிப் பொருள்திரட்டிப்
::புகழைச் சேர்க்கும்
பழங்கதைகள் இனிவேண்டாம்!
::இனத்தை மீட்க
வேட்டெழுப்பும் எழுத்தாலே
::அடிமை கொண்ட
விலங்கொடிக்கும் பாட்டன்றோ
::இன்று வேண்டும்!
ஏட்டெழுதும் இலக்கியத்தால்
::அறத்தால் எல்லாம்
ஏமாறிப் போனதல்லால்
::விளைவிங் கென்ன?
கூட்டுயிர்க்கும் ஏழையர்க்கு
::வாழ்வ ளிக்கும்
கொள்கைப்பாட் டன்றோ,ஓர்
::கோடி வேண்டும்!</poem>}}
{{Right|{{larger|<b>-1986</b>}}}}
<section end="76"/>
<section begin="77"/>
{{larger|<b>{{rh|77||பாய்ந்தெழுவீர் இளமையோரே !}}</b>}}
{{left_margin|3em|<poem>உழுபவரும் உழைப்பவரும் ஒன்றிணைந்தால்
::ஊராள்வோர் நிலையென்னாகும்?
கொழுமுனைகள் கொடுவாளாய்க் கொல்லுலைகள்
::எரிதழலாய் உருமாறாவோ?
கழுவடைகள் அரசியலில்-கயமையர்கள்
::கலைத்துறையில்-புகுந்ததாலே
பழுதடையும் தமிழகத்தைப் புதுப்பிக்கப்
::பாய்ந்தெழுவீர் இளமையோரே!</poem>}}
{{Right|{{larger|<b>-1986</b>}}}}
<section end="77"/><noinclude></noinclude>
jv6d94xngajxoyd3lke43yzb2uew2fd
பக்கம்:கனிச்சாறு 4.pdf/145
250
446947
1837830
1440814
2025-07-01T12:15:14Z
Fathima Shaila
6101
1837830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|110 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="78"/>
{{larger|<b>{{rh|78||கல்வி நலன்கள் !}}</b>}}
{{left_margin|3em|<poem>உண்மை உணர்வது கல்வி! - நம்
::உயிர்க்கொளி சேர்ப்பது கல்வி!
திண்மை உளத்தினை ஊக்கி - வரும்
::தீமை தவிர்ப்பது கல்வி!
அச்சத்தைக் கொல்வது கல்வி - உள
::ஆற்றலை வளர்ப்பது கல்வி!
மெச்சத் தகுந்தநல் வாழ்வை - இங்கு
::மேம்படச் செய்வது கல்வி!
நன்மை நினைப்பது கல்வி - மக்கள்
::நலத்தை விளைப்பது கல்வி!
புன்மை நினைவுகள் யாவும் - உள்
::பொசுங்க எரிப்பது கல்வி!
இளமையிற் கற்பது கல்வி - உண்மை
::இன்பந் தருவது கல்வி!
வளமைக்கு வளமையைச் சேர்த்து - நம்
::வலிமை மிகுப்பது கல்வி!
முதுமை இலாதது கல்வி வாழ்க்கை
::முழுவதும் துய்ப்பது கல்வி!
பொதுமை உணர்வினைத் தந்து - நலம்
::பொலிந்திடச் செய்வது கல்வி!
பொறுமை நிறைப்பது கல்வி - உளப்
::பொறாமையைத் தீய்ப்பது கல்வி!
வறுமையும் பெருமையென் றெண்ணும் - மன
::வளத்தை வளர்ப்பது கல்வி!
ஒழுக்கம் விளைப்பது கல்வி - நல்
::உயர்வைக் கொடுப்பது கல்வி!
மழுக்கம் இலாதநல் லறிவை - இங்கு
::மலர்ந்திடச் செய்வது கல்வி!</poem>}}<noinclude></noinclude>
kp1dz6791wvmr1aiq2g4z5k24xdtc7b
1837831
1837830
2025-07-01T12:17:06Z
Fathima Shaila
6101
1837831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|110 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="77"/>
{{larger|<b>{{rh|78||கல்வி நலன்கள் !}}</b>}}
{{left_margin|3em|<poem>உண்மை உணர்வது கல்வி! - நம்
::உயிர்க்கொளி சேர்ப்பது கல்வி!
திண்மை உளத்தினை ஊக்கி - வரும்
::தீமை தவிர்ப்பது கல்வி!
அச்சத்தைக் கொல்வது கல்வி - உள
::ஆற்றலை வளர்ப்பது கல்வி!
மெச்சத் தகுந்தநல் வாழ்வை - இங்கு
::மேம்படச் செய்வது கல்வி!
நன்மை நினைப்பது கல்வி - மக்கள்
::நலத்தை விளைப்பது கல்வி!
புன்மை நினைவுகள் யாவும் - உள்
::பொசுங்க எரிப்பது கல்வி!
இளமையிற் கற்பது கல்வி - உண்மை
::இன்பந் தருவது கல்வி!
வளமைக்கு வளமையைச் சேர்த்து - நம்
::வலிமை மிகுப்பது கல்வி!
முதுமை இலாதது கல்வி வாழ்க்கை
::முழுவதும் துய்ப்பது கல்வி!
பொதுமை உணர்வினைத் தந்து - நலம்
::பொலிந்திடச் செய்வது கல்வி!
பொறுமை நிறைப்பது கல்வி - உளப்
::பொறாமையைத் தீய்ப்பது கல்வி!
வறுமையும் பெருமையென் றெண்ணும் - மன
::வளத்தை வளர்ப்பது கல்வி!
ஒழுக்கம் விளைப்பது கல்வி - நல்
::உயர்வைக் கொடுப்பது கல்வி!
மழுக்கம் இலாதநல் லறிவை - இங்கு
::மலர்ந்திடச் செய்வது கல்வி!</poem>}}<noinclude></noinclude>
1bjvreioyna6mgtgpook0nvd1eydqrg
1837848
1837831
2025-07-01T12:49:33Z
Fathima Shaila
6101
1837848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|110 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="78"/>
{{larger|<b>{{rh|78||கல்வி நலன்கள் !}}</b>}}
{{left_margin|3em|<poem>உண்மை உணர்வது கல்வி! - நம்
::உயிர்க்கொளி சேர்ப்பது கல்வி!
திண்மை உளத்தினை ஊக்கி - வரும்
::தீமை தவிர்ப்பது கல்வி!
அச்சத்தைக் கொல்வது கல்வி - உள
::ஆற்றலை வளர்ப்பது கல்வி!
மெச்சத் தகுந்தநல் வாழ்வை - இங்கு
::மேம்படச் செய்வது கல்வி!
நன்மை நினைப்பது கல்வி - மக்கள்
::நலத்தை விளைப்பது கல்வி!
புன்மை நினைவுகள் யாவும் - உள்
::பொசுங்க எரிப்பது கல்வி!
இளமையிற் கற்பது கல்வி - உண்மை
::இன்பந் தருவது கல்வி!
வளமைக்கு வளமையைச் சேர்த்து - நம்
::வலிமை மிகுப்பது கல்வி!
முதுமை இலாதது கல்வி வாழ்க்கை
::முழுவதும் துய்ப்பது கல்வி!
பொதுமை உணர்வினைத் தந்து - நலம்
::பொலிந்திடச் செய்வது கல்வி!
பொறுமை நிறைப்பது கல்வி - உளப்
::பொறாமையைத் தீய்ப்பது கல்வி!
வறுமையும் பெருமையென் றெண்ணும் - மன
::வளத்தை வளர்ப்பது கல்வி!
ஒழுக்கம் விளைப்பது கல்வி - நல்
::உயர்வைக் கொடுப்பது கல்வி!
மழுக்கம் இலாதநல் லறிவை - இங்கு
::மலர்ந்திடச் செய்வது கல்வி!</poem>}}<noinclude></noinclude>
kp1dz6791wvmr1aiq2g4z5k24xdtc7b
பக்கம்:கனிச்சாறு 4.pdf/146
250
446948
1837832
1440815
2025-07-01T12:17:23Z
Fathima Shaila
6101
1837832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 111}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>நேர்மை தருவது கல்வி - நம்மை
::நிமிர்ந்திட வைப்பது கல்வி!
சீர்மை நடுநிலை யோடு - செயல்
சேர்ந்து செழிப்பது கல்வி!
இறைமை உணர்வது கல்வி உயிர்க்
::கேற்றம் கொடுப்பது கல்வி!
மறைபொருள் உண்மைகள் யாவும் - காண
::மனக்கண் திறப்பது கல்வி!
உயிருக் குறுதுணை கல்வி - இவ்
::வுடலின் வழித்துணை கல்வி!
பயிருக்கு நீரினைப் போல -அன்பைப்
::பாய்ச்சி வளர்ப்பது கல்வி!
{{Right|{{larger|<b>-1986</b>}}}}
</poem>}}
<section end="77"/><noinclude></noinclude>
d3dolcszzjtksdwlr9bricyy3akbi0l
1837850
1837832
2025-07-01T12:49:54Z
Fathima Shaila
6101
1837850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 111}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>நேர்மை தருவது கல்வி - நம்மை
::நிமிர்ந்திட வைப்பது கல்வி!
சீர்மை நடுநிலை யோடு - செயல்
சேர்ந்து செழிப்பது கல்வி!
இறைமை உணர்வது கல்வி உயிர்க்
::கேற்றம் கொடுப்பது கல்வி!
மறைபொருள் உண்மைகள் யாவும் - காண
::மனக்கண் திறப்பது கல்வி!
உயிருக் குறுதுணை கல்வி - இவ்
::வுடலின் வழித்துணை கல்வி!
பயிருக்கு நீரினைப் போல -அன்பைப்
::பாய்ச்சி வளர்ப்பது கல்வி!
{{Right|{{larger|<b>-1986</b>}}}}
</poem>}}
<section end="78"/><noinclude></noinclude>
5tysriowvv0ne98xnp3fdt7u9ixdqo2
பக்கம்:கனிச்சாறு 4.pdf/147
250
446949
1837833
1440817
2025-07-01T12:17:59Z
Fathima Shaila
6101
1837833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|112 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="78"/>
{{larger|<b>{{rh|79||எண்ணிப் பாருங்கள் இளந்தலை முறையரே !}}</b>}}
{{left_margin|3em|<poem>உண்ணும் போதிலே
::உணவு விக்கியே
::உயிரை இழப்பவர்
::உலகினில் பலபேர்!
எண்ணி முடித்ததை
::எடுத்துச் சொல்லுமுன்
::இறந்த மக்களும்
::எத்தனைக் கோடியோ?
உறங்கச் சென்றவர்
::காலை எழுந்திலர்!
::ஊர்க்குச் சென்றவர்
::திரும்பி வந்திலர்!
இறங்கிக் கிணற்றிலே
::வாளி எடுத்தவர்
::ஏறி வருதற்குள்
::மூழ்கி இறந்தனர்!
பள்ளி சென்றவன்
::வீடு திரும்பிலன்!
::பகலில் இருந்தவன்
::இரவைப் பார்க்கிலன்!
பிள்ளை பெற்றவள்
::பிணமாய் வருகிறாள்!
::பேசி முடித்தவர்
::மூச்சைப் பிரிகிறார்!
எத்தனை நோய்கள்?
::இறப்பு நேர்ச்சிகள்!
::எவர்க்கும் வாழ்க்கையில்
::இறுதி உறுதியே!
செத்துத் தொலையவா
::மக்களாய்த் தோன்றினோம்?
::செய்ய வேண்டிய
::சிறிதும் நினைக்கிலோம்!</poem>}}<noinclude></noinclude>
7zv8701lmz3st8uq8p3ecvwm5kh4rsm
1837851
1837833
2025-07-01T12:50:11Z
Fathima Shaila
6101
1837851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|112 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="79"/>
{{larger|<b>{{rh|79||எண்ணிப் பாருங்கள் இளந்தலை முறையரே !}}</b>}}
{{left_margin|3em|<poem>உண்ணும் போதிலே
::உணவு விக்கியே
::உயிரை இழப்பவர்
::உலகினில் பலபேர்!
எண்ணி முடித்ததை
::எடுத்துச் சொல்லுமுன்
::இறந்த மக்களும்
::எத்தனைக் கோடியோ?
உறங்கச் சென்றவர்
::காலை எழுந்திலர்!
::ஊர்க்குச் சென்றவர்
::திரும்பி வந்திலர்!
இறங்கிக் கிணற்றிலே
::வாளி எடுத்தவர்
::ஏறி வருதற்குள்
::மூழ்கி இறந்தனர்!
பள்ளி சென்றவன்
::வீடு திரும்பிலன்!
::பகலில் இருந்தவன்
::இரவைப் பார்க்கிலன்!
பிள்ளை பெற்றவள்
::பிணமாய் வருகிறாள்!
::பேசி முடித்தவர்
::மூச்சைப் பிரிகிறார்!
எத்தனை நோய்கள்?
::இறப்பு நேர்ச்சிகள்!
::எவர்க்கும் வாழ்க்கையில்
::இறுதி உறுதியே!
செத்துத் தொலையவா
::மக்களாய்த் தோன்றினோம்?
::செய்ய வேண்டிய
::சிறிதும் நினைக்கிலோம்!</poem>}}<noinclude></noinclude>
nxc4k2ls1fxfb45euqncfqsc00lbkf9
பக்கம்:கனிச்சாறு 4.pdf/148
250
446950
1837834
1440818
2025-07-01T12:19:04Z
Fathima Shaila
6101
1837834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 113}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>நன்மை செய்திலோம்!
::நலன்கள் விளைத்திலோம்!
::நாளும் இருப்பதாய்
::நினைந்து நலிகிறோம்!
புன்மைச் செயல்களே
::போற்றிச் செய்கிறோம்!
::‘பொக்’ கென ஒருநாள்
::போயும் விடுகிறோம்!
மின்னல் வாழ்க்கையில்
::மிதந்து களிப்பதா?
::மேனி மினுக்கலும்
::உண்ண மேய்வதும்
இன்னல் வாழ்க்கையின்
::இலக்கணம் ஆகுமா?
::எண்ணிப் பாருங்கள்
::இளந்தலை முறையரே!
இருக்கும் மட்டிலும்
::ஏற்றம் நினையுங்கள்!
::இருந்து போனதை
::எண்ணப் பண்ணுங்கள்!
செருக்கும் தருக்குமே
::சிதைவைக் கொடுத்திடும்!
::சிறப்பு வாழ்க்கையே
::இறப்பை வென்றிடும்!
{{Right|{{larger|<b>-1986</b>}}}}
</poem>}}
<section end="78"/><noinclude></noinclude>
bmevek94a707qv8lqswirhyaeps1i0l
1837852
1837834
2025-07-01T12:50:28Z
Fathima Shaila
6101
1837852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 113}}</b></small></noinclude>
{{left_margin|3em|<poem>நன்மை செய்திலோம்!
::நலன்கள் விளைத்திலோம்!
::நாளும் இருப்பதாய்
::நினைந்து நலிகிறோம்!
புன்மைச் செயல்களே
::போற்றிச் செய்கிறோம்!
::‘பொக்’ கென ஒருநாள்
::போயும் விடுகிறோம்!
மின்னல் வாழ்க்கையில்
::மிதந்து களிப்பதா?
::மேனி மினுக்கலும்
::உண்ண மேய்வதும்
இன்னல் வாழ்க்கையின்
::இலக்கணம் ஆகுமா?
::எண்ணிப் பாருங்கள்
::இளந்தலை முறையரே!
இருக்கும் மட்டிலும்
::ஏற்றம் நினையுங்கள்!
::இருந்து போனதை
::எண்ணப் பண்ணுங்கள்!
செருக்கும் தருக்குமே
::சிதைவைக் கொடுத்திடும்!
::சிறப்பு வாழ்க்கையே
::இறப்பை வென்றிடும்!
{{Right|{{larger|<b>-1986</b>}}}}
</poem>}}
<section end="79"/><noinclude></noinclude>
b6yxoi4rim3yit94dk0plca9yvyjq0o
பக்கம்:கனிச்சாறு 4.pdf/149
250
446951
1837835
1440819
2025-07-01T12:19:29Z
Fathima Shaila
6101
1837835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|114 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="79"/>
{{larger|<b>{{rh|80||வாழ்க்கைப் புதிரை விளங்கிக்கொள்!}}</b>}}
{{left_margin|3em|<poem>உலகம் எப்படி இருந்தாலும்
உன்னிலை தனிநிலை என்றறிவாய்!
இலகும் உயிர்கள் பலவற்றுள்
இங்குன் உயிரும் ஒன்றாகும்!
பழகும் உயிர்கள் பலவெனினும்
பகைக்கும் உயிர்கள் சிலவெனினும்
அழகும் அறிவும் கொண்டிடுமோர்
அன்புயிர் உனக்குத் துணையாகும்!
ஒவ்வோ ருயிர்க்கும் தனியுணர்வாம்!
ஒவ்வோ ருயிர்க்கும் தனியறிவாம்!
எவ்வோ ருயிர்,உன் உணர்(வு) அறிவுக்(கு)
ஏற்றதாம் அதுவே நட்பாகும்!
பொருந்திய உயிர்களைப் போற்றிக்கொள்!
பொருந்தா உயிர்களைத் தூற்றாதே!
வருந்துதல், மகிழ்தல் உன்விளைவே!
வாழ்க்கைப் புதிரை விளங்கிக் கொள்!
</poem>}}
{{Right|{{larger|<b>-1989</b>}}}}
<section end="79"/><noinclude></noinclude>
lg9kwr752vu4y0uw4vma81th6w44zaq
1837853
1837835
2025-07-01T12:51:07Z
Fathima Shaila
6101
1837853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|114 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<section begin="80"/>
{{larger|<b>{{rh|80||வாழ்க்கைப் புதிரை விளங்கிக்கொள்!}}</b>}}
{{left_margin|3em|<poem>உலகம் எப்படி இருந்தாலும்
உன்னிலை தனிநிலை என்றறிவாய்!
இலகும் உயிர்கள் பலவற்றுள்
இங்குன் உயிரும் ஒன்றாகும்!
பழகும் உயிர்கள் பலவெனினும்
பகைக்கும் உயிர்கள் சிலவெனினும்
அழகும் அறிவும் கொண்டிடுமோர்
அன்புயிர் உனக்குத் துணையாகும்!
ஒவ்வோ ருயிர்க்கும் தனியுணர்வாம்!
ஒவ்வோ ருயிர்க்கும் தனியறிவாம்!
எவ்வோ ருயிர்,உன் உணர்(வு) அறிவுக்(கு)
ஏற்றதாம் அதுவே நட்பாகும்!
பொருந்திய உயிர்களைப் போற்றிக்கொள்!
பொருந்தா உயிர்களைத் தூற்றாதே!
வருந்துதல், மகிழ்தல் உன்விளைவே!
வாழ்க்கைப் புதிரை விளங்கிக் கொள்!
</poem>}}
{{Right|{{larger|<b>-1989</b>}}}}
<section end="80"/><noinclude></noinclude>
mj9qz01uijohb7ptqmwdigzi3yyjk8n
பக்கம்:கனிச்சாறு 4.pdf/159
250
446956
1837838
1444188
2025-07-01T12:21:20Z
Fathima Shaila
6101
1837838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|124 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<b>28. மெய்யறிவு.</b>
{{left_margin|3em|<poem>பிறப்பதுங் கனல்பசி பீடித் தழுவதும்
பில்குபா லொருத்தியூட் டுவதும்,
பறப்பதும் உலகினில் பற்பல துயர்நலம்
படுவதும் பல்வகை யறிவு
சிறப்பதும், சிறக்கத் துறப்பதும், துறக்கச்
சிற்றுயிர் உவப்புற உடலம்
இறப்பதும் ஈங்கிவைக் கைம்பொருள் இருப்பதும்
றையதும் அறிதல்மெய் யறிவே!{{float_right|29}}</poem>}}
<b>29. உலக இறுதி.</b>
{{left_margin|3em|<poem>தனிமை மாய்தலுந் தந்நில மகல்தலும்
தரைவாழ் மக்களொன் றாகி,
குனிமை யொழிதலுங் கோன்மை தவிர்தலும்,
கொள்ளுணர் வொன்றியுள் ளொன்றி
கனிமை நிறைதலுங் கடந்துபல் லுலகுங்
கண்டுபெண் ஆணுமுட் கலந்தே
இனிமை யெய்தலும் இறையுட் காண்டலும்
இவ்வுல கிறுதியென் றுரைப்பாம்!{{float_right|30}}</poem>}}
<b>30. இறைமை.</b>
{{left_margin|3em|<poem>ஒன்றே யொன்றாய் ஒளிர்ந்துள் விளர்ந்தே
ஒன்றினை ஒன்றாய் உயர்ந்தொவ்
வொன்றே யாகிய, ஒவ்வொன் றுள்ளும்
ஒன்றியுள் உதைத்திடு மொன்றாய்,
ஒன்றே ஒன்றினுள் ஒடுங்கியுள் ஒன்றி
ஒவ்வொன் றழித்து,ஒன் றாகி
ஒன்றாய் நிற்குமஃ தொன்றே ஒன்றை
ஓரிறை யென்றுள மொன்றீர்!{{float_right|31}}</poem>}}
{{Right|{{larger|<b>-1952</b>}}}}
<section end="80"/><noinclude></noinclude>
8madhm1yhv6irqvi2lvfqes6or87lpe
1837855
1837838
2025-07-01T12:52:05Z
Fathima Shaila
6101
1837855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|124 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>
<b>28. மெய்யறிவு.</b>
{{left_margin|3em|<poem>பிறப்பதுங் கனல்பசி பீடித் தழுவதும்
பில்குபா லொருத்தியூட் டுவதும்,
பறப்பதும் உலகினில் பற்பல துயர்நலம்
படுவதும் பல்வகை யறிவு
சிறப்பதும், சிறக்கத் துறப்பதும், துறக்கச்
சிற்றுயிர் உவப்புற உடலம்
இறப்பதும் ஈங்கிவைக் கைம்பொருள் இருப்பதும்
றையதும் அறிதல்மெய் யறிவே!{{float_right|29}}</poem>}}
<b>29. உலக இறுதி.</b>
{{left_margin|3em|<poem>தனிமை மாய்தலுந் தந்நில மகல்தலும்
தரைவாழ் மக்களொன் றாகி,
குனிமை யொழிதலுங் கோன்மை தவிர்தலும்,
கொள்ளுணர் வொன்றியுள் ளொன்றி
கனிமை நிறைதலுங் கடந்துபல் லுலகுங்
கண்டுபெண் ஆணுமுட் கலந்தே
இனிமை யெய்தலும் இறையுட் காண்டலும்
இவ்வுல கிறுதியென் றுரைப்பாம்!{{float_right|30}}</poem>}}
<b>30. இறைமை.</b>
{{left_margin|3em|<poem>ஒன்றே யொன்றாய் ஒளிர்ந்துள் விளர்ந்தே
ஒன்றினை ஒன்றாய் உயர்ந்தொவ்
வொன்றே யாகிய, ஒவ்வொன் றுள்ளும்
ஒன்றியுள் உதைத்திடு மொன்றாய்,
ஒன்றே ஒன்றினுள் ஒடுங்கியுள் ஒன்றி
ஒவ்வொன் றழித்து,ஒன் றாகி
ஒன்றாய் நிற்குமஃ தொன்றே ஒன்றை
ஓரிறை யென்றுள மொன்றீர்!{{float_right|31}}</poem>}}
{{Right|{{larger|<b>-1952</b>}}}}
<section end="81"/><noinclude></noinclude>
4qw4ck56l7sokqat9cn9pvxwaxmf0kh
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/29
250
456464
1837876
1837699
2025-07-01T14:16:02Z
Booradleyp1
1964
1837876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||28|}}</noinclude>{{larger|<b>சோழ நாட்டில்</b>}}
தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பற்பல காலங்களில் அரசியல் அதிகாரிகள் காலிங்கராயன் என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கினர். சோற்றால் மடையடைக்கும் சோழ நாட்டில் இப்பெயரோடு விளங்கிய தலைவர்கள் பலர்.
ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் உள்ள மதுரையும் ஈழமும் கொண்ட இராசாதிராச தேவனின் 11ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் ‘காலிங்கராயர்’ என்ற ஒரு அரசியல் அதிகாரியின் பெயரைக் காண்கின்றோம்.
பண்பட்ட தில்லையில் கூத்தரசப் பெருமான் ஆலயக் கல்வெட்டில் ‘காலிங்கராயர் ஓலை’ என்ற பெயரில் ஓர் அரசியல் அதிகாரியின் ஆணை குறிக்கப்பெறுகிறது.
திருவரங்கம் கோயில் கல்வெட்டில் ‘காலிங்கராயர் வைக்கிற அகரம்’ என ஒரு கல்வெட்டில் காணுகின்றோம். பிறிதோர் கல்வெட்டில் ‘காலிங்கராயர் அகரம்’ என்றே அது அழைக்கப் பெறுகிறது. அத்திருவரங்கத்திலேயே ‘உடையார் பெரியபெருமாள் ஆன காலிங்கராயர் கலியுகராமச் சதுர்வேதிமங்கலம்’ என்று அந்தணர்கட்கு ஊர் ஏற்படுத்தியதாக மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது.
திருவிடைமருதூர்ச் சிவாலயத்தில் உள்ள கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில் ‘காலிங்கராயன்’ என்ற அதிகாரி சாட்சிக் கையொப்பமிட்டுள்ளான். நன்னிலம் தாலூக்கா திருமீயச்சூர் சிவாலயக் கல்வெட்டில் ‘உடையார் காலிங்கராயர்; குலசேகர காலிங்கராயர்’ என்று இருவர் குறிப்பிடப்பெறுகின்றனர்.
{{larger|<b>பாண்டிய நாட்டில்</b>}}
திருப்பரங்குன்றம் உமையாண்டான் கோயிலில் உள்ள சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன் கல்வெட்டி-<noinclude></noinclude>
1pjh5ph5ok8q8raxlmrvj8wi4iaiogf
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/33
250
456468
1837881
1837703
2025-07-01T14:23:33Z
Booradleyp1
1964
1837881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||32|}}</noinclude>கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியதேவன் தன் 40ஆம் ஆட்சியாண்டில் உரிமைகள் சிலவற்றை உவந்தளித்தான். அப்பெண்ணின் பெயர் ‘நக்கன் செய்யாளான காலிங்கராயத் தலைக்கோலி’ என இன்றும் நின்று நிலவுகிறது; அங்குள்ள கல்வெட்டு மூலம்!
{{larger|<b>காலிங்கராயன்—நாணயமும் வரியும்</b>}}
‘காலிங்கராய வினியோகம்’ என்ற பெயரில் ஒரு வரி இருந்தது என்று நெரூர், வெஞ்சமாங்கூடல் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். இது காலிங்கராயன் செய்த பணிகட்காக நாட்டு மக்கள் அளித்த வரி என்பார் கல்வெட்டாய்வாளர் திரு தி. நா. சுப்பிரமணியனார். இது காலிங்கராயன் கால்வாயின் பராமரிப்புக்கு மக்கள் செலுத்திய வரியும் ஆகலாம். இன்னும் கொங்கு நாட்டில் ‘காலிங்கராயன் காசு’, ‘காலிங்கராயன் பணம்’ என்ற நாணயங்கள் வழக்கில் இருந்தமையை அறிகின்றோம்.
{{larger|<b>ஒப்புமைப் பெயர்கள்</b>}}
அரசியல் அதிகாரிகட்கு அரசர்கள் வழங்கிய காலிங்கராயன் என்ற பட்டப்பெயரை ஒத்து வேறு பற்பல பட்டப் பெயர்களையும் ஏறக்குறைய அதே காலத்தில் அளித்துள்ளனர். அவர்களுட் சில வருமாறு:
அழகராயன், இராசாண்டராயன், ஈழத்துராயன், கச்சிராயன், களப்பாளராயன், கனகராயன், காங்கேயராயன், காடவராயன், குமணராயன், குருகுலராயன், கொங்கராயன், சிமிஞ்சராயன், தன்மபோதிராயன், தெலுங்கராயன், தென்னவராயன், தொண்ணராயன், பாஞ்சாலராயன், மலையப்பியராயன், மாதவராயன், மழவராயன், மூவேந்தராயன், வத்தவராயன், வாணாதிராயன், வில்லவராயன், வைகைராயன், வைசியராயன், வைதும்பராயன்.
{{nop}}<noinclude></noinclude>
trpb1k6pmh32kkks2hzdld0ym511yim
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/42
250
456477
1837961
1836973
2025-07-01T17:09:08Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||41|}}</noinclude>திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும்போது தடைப்பட்டது என்றும் கால்வாய் வெட்டிச் சபதம் முடிந்தபின் திருமணம் நடைபெற்றது என்றும் கூறுகிறது. 18ஆம் நூற்றாண்டுத் தமிழ் நடையின் அழகை நாமறிய வேண்டுமல்லவா? வமிசாவளியில் உள்ளவாறே அப்பகுதியைக் காண்போம்.
:“பூந்துறை நாட்டிற்கு நாட்டானாய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்காரனாய் இருக்கும் நாளையில் கங்கை குலம் சாத்தந்த கோத்திரம் காலிங்கக் கவுண்டன் என்கின்ற தன்னுடைய குமாரனுக்குக் கலியாணம் பண்ணவேண்டுமென்று நினைச்சு மாமன் மச்சுனனான பண்ண குலத்தாளி வீட்டிலே பெண் கேட்டுக் கலியாணம் செய்யத் தக்கதாக யோசிச்சு பெண் சம்மதமாகி அந்த ராத்திரி சாப்பிடுகிறதுக்குச் சமையல் பண்ணுகிறவன் வந்து இவர்களுக்குச் சமையல் பண்ணுகிறதுக்கு எந்த அரிசி போடுகிறது என்று கேழ்க்க ‘அவாள் கம்பு விளைகிற சீர்மையிலே இருக்கிற பேர்களுக்கு எந்த அரிசி என்று தெரியவா போகிறது. பழ அரிசிதானே போடுபோ’ என்று சொல்ல அது சேதி மேற்படி காலிங்கக் கவுண்டன் கேட்டு அவாள் வீட்டிலே சாப்பிடாதபடிக்கு இருந்து நெல்லு விளையும்படியாக நீர்ப்பாங்கு உண்டுபண்ணிக் கொண்டு உங்கள் வீட்டுப் பெண் கொண்டு சாப்பிடுகிறோமென்று சபதம் கோரிக் கொண்டு வந்து தன் ஊரிலே வந்து சேர்ந்து மனதிலே தனக்குத் தோணியிருக்கும் நாளையில் இவர் இஷ்டமான சர்வேஸ்வரரைத் தன்னுடைய அபீஷ்டம் சித்தியாக வேணுமென்று நினைச்சு இருக்கும் வேளையில் இராத்திரி சொப்பனத்திலே ஒரு விருத்த பிராமண ரூபமாய் வந்து இந்தச் சர்ப்பம் போகிற வழியாக வாய்க்கால் வெட்டி வைக்கச் சொல்லி காரணமாகச் சொப்பனமாச்சுது. அந்தச் சொப்பனமான உடனே கண் விழிச்சுப் பார்க்குமிடத்தில் ஒரு சர்ப்பம் பிரதிட்சமாக இருந்தது. தான் கண்டு இருக்கப்பட்ட சொப்ப-<noinclude>
க.—3</noinclude>
pbnsy3wjncd43u41q09y81pklz8d89q
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/43
250
456478
1838119
1836975
2025-07-02T05:43:41Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||42|}}</noinclude>னத்தைக் கண்டு அறிய வேணுமென்று நினைச்சு வீடுகட்கு வெளியிலே வந்த சமயத்திலே சர்ப்பம் இவனைக் கண்டு முன்னே நடந்தது. அந்தச் சர்ப்பத்தைக் கண்டு தொடர்ந்து போய் இந்த வழியாகப் போகுதென்று அடையாளங்கள் போட்டுக் கொண்டு வருகிறபோது கொடுமுடி சேத்திரத்திலே சர்ப்பம் நின்றது. அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாய்க்காலும் வெட்டி வைக்க வேணுமென்று நினைத்துப் பவானி ஆற்றிலே குறுக்கே அணை கட்டி வைக்கவேணுமென்கிறதாக நினைச்சிருந்த சமயத்தில் பவானிக்கூடல் ஸ்தானத்துக்கு மேல்புறத்தில் பவானி ஆற்றிலே சர்ப்பம் குறுக்கே படுத்துக்கொண்டது. அந்த இடத்திலே அணைகட்டி வைக்கவேணுமென்று பவானிக் கூடலுக்கு வடக்கே வூராச்சி மலையும் தடமும் சுத்தக் கிரயத்துக்கு வாங்கி அணை கட்டுகிற சமயத்திலே வெள்ளை வேட்டுவர் என்கிற பாளையக்காரன் அணை கட்டுகிற எல்லை தன்னதென்று சண்டை பண்ணினமையாலே வெள்ளை வேட்டுவரை ஜெயிச்சு அணையும் கட்டி வெகு திரவியங்கள் செலவளிச்சு சர்ப்பம் போயிருந்த அடையாளங்களைப் பிடிச்சு வாய்க்கால் வெட்டிவைச்சு பவானி அணை முதல் கொடுமுடி ஸ்தானத்து அத்து வரைக்கும் முக்காத வழி தூரத்துக்குச் சர்ப்பம் போன போக்கிலே வாய்க்கால் வெட்டின ஏழு காதவழி நடை கோணக் கோணலாக வாக்கியால் வெட்டி வச்சான்.
அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாக்கியால் வெட்டி வச்சுப் பவானி ஆற்றிலே சர்ப்பம் படுத்துயிருந்த இடத்திலே அணையும் கட்டிவிச்ச படியினாலே காலிங்கக் கவுண்டன் என்று பேர் வரப்பட்டுப் பிரசித்திப் பட்டவனாய் இருக்கும் நாளையில் முன்னாலே சபதம் கோரியிருக்கப்பட்ட பண்ணை குலத்திலே தன் பிள்ளைக்குக் கலியாணமும் செய்து கொண்டு அம்ச புருஷனாய் தெய்வ கடாட்சத்தினாலே சம்பத்து நாமதேயமான ‘காலிங்கன்’ என்கிற நாமதேயமும்<noinclude></noinclude>
ar5xu8cqxw6prqymtnz23cvmu846yzk
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/44
250
456479
1838124
1836987
2025-07-02T05:54:39Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||43|}}</noinclude>:வேளாள சாதியான படியினாலே ‘கவுண்டர்’ என்கிற நாமதேயமும் ரெண்டு நாமதேயமும் சேர்ந்து ‘காலிங்கக் கவுண்டன்’ என்கிற பேர் பிரசித்திப்பட்டவனாய் தான் கட்டி வைச்ச அணைக்குக் காலிங்கக் கவுண்டன் அணையென்றும், காலிங்கக் கவுண்டன் வாக்கியால் என்றும், தான் உண்டுபண்ணின நீர்ப்பாங்கு நிலத்தில் விளையப்பட்ட நெல்லுக்குக் ‘காலிங்க நெல்லு’யென்றும் விளையப் பண்ணிச் சம்பந்த பாத்தியங்களும் செய்து கொண்டு இருந்தான்’’’
என்பதே கால்வாய் வெட்டியதுபற்றி வமிசாவளி கூறும் செய்தியாகும். இன்றும் இந்நினைவு மாறாமல் ‘காலிங்கராயன் அணை’ என்றும், வாய்க்கால் ‘காலிங்கராயன் வாய்க்கால்’ என்றும் அணையின் அருகிலுள்ள ஊர் ‘காலிங்கராயன் பாளையம்’ என்றும் வழங்கப்பெறுகின்றன. இக்கால்வாய் நீர்பாய்ந்து விளையும் நெல்லுக்குக் ‘காலிங்க நெல்லு’ என்று பெயர். இச்செயற்கரிய செயலைச் செய்த பெருந்தகையின் காலத்தில் இவன் பெயரால் காலிங்கராயன் காசு, காலிங்கராயன் பணம் என நாணயங்கள் வழக்கத்தில் இருந்ததாகக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவற்றை நோக்கக் காலிங்கராயன் மீது நாட்டினர் கொண்ட அளப்பரிய பற்றை அறிகின்றோம்.
{{larger|<b>ஆங்கிலநூல் கருத்து</b>}}
‘இந்தியாவின் ஆளுந்தலைவர்களும் பெருமக்களும் நிலக்கிழார்களும்’ என்னும் ஆங்கில வரலாற்று நூலும் வமிசாவளிக் கருத்தைப் பெரும்பாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறது. ஆனால் கனவில் தோன்றிக் கூறியவர் வெள்ளோடு சர்வலிங்கேஸ்வரன் என்பதற்குப் பதிலாகச் சுப்பிரமணிய சுவாமி கூறினார் என்றும், பாம்பு வழிகாட்டிச் சென்றது என்பதற்கு மாறாகப் பாம்பு சென்றிருந்த வழியையே பின்பற்றிக் கால்வாய் வெட்டினான் என்றும், அந்தப் பாம்பையும் மயில் துரத்திக்கொண்டு சென்றது என்றும் ஆங்கில நூல் கூறுகிறது. எனவே, அது முதற்<noinclude></noinclude>
dhrhkxascdz4fp6zp928b9q3139qevr
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/45
250
456480
1838126
1836996
2025-07-02T05:58:14Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||44|}}</noinclude>கொண்டு காலிங்கராயனுக்கும் அவன் பரம்பரையினர்க்கும் இன்றும் மயிலே குலத்தின் சின்னமாக விளங்குகிறது என்றும் கூறுகிறது. காலிங்கராயனுக்கு வழிகாட்டிச் சென்ற பாம்பின் பெயர் ‘காலிங்கராயன்’ என்று இந்நூல் கூறுகிறது. கண்ணபெருமான் அடக்கியது ‘காலிங்கன்’ என்ற பாம்பையே என்று புராணம் கூறும். இதனை உட்கொண்டு அவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும்.
{{larger|<b>காலம்</b>}}
காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டிய ஆண்டு கலியுக சகாப்தம் 2000 என்று வமிசாவளியும் ஆங்கில வரலாற்று நூலும் கூறுகின்றன. இவ்வாண்டு மிகைபடக் கூறலாகவே இருக்கின்றது. ஆனால் அவை இரண்டும் குறிப்பிடும் பரம்பரையினரின் ஆட்சியாண்டுகளின் தொகைகளைக் கூட்டிப்பார்க்கும் பொழுது காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டுதான் வருகிறது. அக்காலமே கல்வெட்டுக்கள் அனைத்திலும் காலிங்கராயன் பெயர் கூறப்படும் காலமாகும். கி.பி. 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலே மட்டுமே காலிங்கராயன் பெயரைக் காணுகின்றோம். தனிப்பாடலில் வீரபாண்டிய வேந்தமைச்சன் என்று கூறப்படுகிறது. கி.பி. 1800இல் எழுதப்பட்ட கைபீது, 582 ஆண்டுகட்கு முன்பு கால்வாய் வெட்டப்பட்டதாகக் 1800இல் கூறுகிறது. கால்வாயைப் பார்வையிட்ட புக்கானன் 400 ஆண்டுகட்கு முன்பு வெட்டப்பட்டது என்று கூறுகின்றார். கல்வெட்டுக்களின் கூற்றுப்படிக் கி.பி. 1253இல் வீரபாண்டியனிடம் அரசியல் அலுவலனாக அமர்ந்த காலிங்கராயன் 12 ஆண்டுக் காலம் முயன்று கி.பி. 1265ஆம் ஆண்டு இப்பணியை முடித்தான் என்று நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.
{{larger|<b>உதவியவர்கள் யார்?</b>}}
வரலாற்றுக் குறிப்பெழுதிய புக்கானன் (1800) ‘காலிங்கராயன் ஒரு செல்வந்தராகவும் செல்வாக்குப் பெற்ற<noinclude></noinclude>
5x4trn0w3vc5zg76vjkp48r911dtwnt
1838127
1838126
2025-07-02T05:58:50Z
Desappan sathiyamoorthy
14764
1838127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||44|}}</noinclude>கொண்டு காலிங்கராயனுக்கும் அவன் பரம்பரையினர்க்கும் இன்றும் மயிலே குலத்தின் சின்னமாக விளங்குகிறது என்றும் கூறுகிறது. காலிங்கராயனுக்கு வழிகாட்டிச் சென்ற பாம்பின் பெயர் ‘காலிங்கராயன்’ என்று இந்நூல் கூறுகிறது. கண்ணபெருமான் அடக்கியது ‘காலிங்கன்’ என்ற பாம்பையே என்று புராணம் கூறும். இதனை உட்கொண்டு அவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும்.
{{larger|<b>காலம்</b>}}
காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டிய ஆண்டு கலியுக சகாப்தம் 2000 என்று வமிசாவளியும் ஆங்கில வரலாற்று நூலும் கூறுகின்றன. இவ்வாண்டு மிகைபடக் கூறலாகவே இருக்கின்றது. ஆனால் அவை இரண்டும் குறிப்பிடும் பரம்பரையினரின் ஆட்சியாண்டுகளின் தொகைகளைக் கூட்டிப்பார்க்கும் பொழுது காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டுதான் வருகிறது. அக்காலமே கல்வெட்டுக்கள் அனைத்திலும் காலிங்கராயன் பெயர் கூறப்படும் காலமாகும். கி.பி. 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலே மட்டுமே காலிங்கராயன் பெயரைக் காணுகின்றோம். தனிப்பாடலில் வீரபாண்டிய வேந்தமைச்சன் என்று கூறப்படுகிறது. கி.பி. 1800இல் எழுதப்பட்ட கைபீது, 582 ஆண்டுகட்கு முன்பு கால்வாய் வெட்டப்பட்டதாகக் 1800இல் கூறுகிறது. கால்வாயைப் பார்வையிட்ட புக்கானன் 400 ஆண்டுகட்கு முன்பு வெட்டப்பட்டது என்று கூறுகின்றார். கல்வெட்டுக்களின் கூற்றுப்படிக் கி.பி. 1253இல் வீரபாண்டியனிடம் அரசியல் அலுவலனாக அமர்ந்த காலிங்கராயன் 12 ஆண்டுக் காலம் முயன்று கி.பி. 1265ஆம் ஆண்டு இப்பணியை முடித்தான் என்று நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.
{{larger|<b>உதவியவர்கள் யார்?</b>}}
வரலாற்றுக் குறிப்பெழுதிய புக்கானன் (1800) ‘காலிங்கராயன் ஒரு செல்வந்தராகவும் செல்வாக்குப் பெற்ற-<noinclude></noinclude>
nykr0a1qs5kg69cvzbuug01d6c53y6n
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/46
250
456481
1838130
1837002
2025-07-02T06:02:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||45|}}</noinclude>வராகவும் இருந்த காரணத்தினால் தன் சாதி மக்களிடமிருந்து கால்வாயின் தேவைக்கான பணத்தை திரட்டினார்’ என்று கூறுகின்றார். இச்செய்தியையும் ‘காலிங்கராயன் வினியோகம்’ என்ற வரியையும் நோக்க இது உண்மைச் செய்தியாக இருக்கலாம் என்று கொள்ளுதல் வேண்டும்.
எலவமலை, காலிங்கராயன் பாளையம், குன்னத்தூர் வெள்ளிரவெளி போன்ற பகுதிகளில் காலிங்கராயர் தன் பங்காளிகளான சாத்தந்தை குலத்தாரைப் புதிய ஊர்களில் குடியேற்றியுள்ளார். எனவே அணை, கால்வாய்த் திருப்பணிகட்குப் பங்காளிகளின் துணை இருந்திருக்க வேண்டும் என உறுதியாக எண்ணலாம்.
பாண்டிய அரசனும் பிற அரசியல் அலுவலர்களும் உதவி செய்தமை குறித்து முன்னர்க் கண்டோம். செவிவழிச் செய்தி கூறுவது போலத் தாயார் தேடி வைத்திருந்த குடும்பச் சொத்தினைக் கொண்டும் காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டியிருக்கலாம். ஆனால் வெள்ளோடு, அந்தியூர், பேரூர்க் கல்வெட்டுக்களின் மூலம் காலிங்கராயன் கம்மாளர் எனப்படும் ஆசாரிமார்களுக்குச் சில உரிமைகள் அளித்தமை குறித்து முன்னர்க் கண்டோம். அணை, கால்வாய்த் திருப்பணிக்கு ஆசாரிமார் மிகுதியும் உழைப்பால் உதவி செய்திருக்க வேண்டும்; அதனாலேயே உரிமைகளை அம்மக்கள் பெற்றிருக்க வேண்டும் என ஊகிக்க வேண்டியிருக்கிறது. பல்வேறு இன மக்களின் உதவியுடன் சாத்தந்தை குலம் பங்காளிகளின் துணையுடன் நாட்டு நன்மைக்காகக் காலிங்கராயன் இப்பணியைச் செய்து முடித்திருக்க வேண்டும்.
{{larger|<b>சாபத்தின் உண்மை என்ன?</b>}}
செவிவழிச் செய்தியாக வழங்கும் வரலாற்றில் மற்றொரு செய்தி குறிக்கப்படுகிறது. காலிங்கராயன் திருப்பணிக்கு அவனுடைய தாயாதிகளான சாத்தந்தை<noinclude></noinclude>
3z9buia22pld7a7sdw8ln0pp792n5oa
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/47
250
456482
1838136
1837014
2025-07-02T06:05:56Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||46|}}</noinclude>குலத்தினர் எவ்வித உதவியும் செய்யவில்லை; சிறிய குட்டைக் கொழுவைக்கூடக் கொடுக்க மறுத்தனர். மறுக்கவே காலிங்கராயன் தான் செய்த மாபெரும் பணி முடிந்தவுடன், தனக்கு ஒரு உதவியும் செய்யாத தன் தாயாதிகளான சாத்தந்தை குலத்தினரை அழைத்து, “நீங்கள் இக்கால்வாய்த் தண்ணீரைக் குடிக்கக்கூடாது. இக்கால்வாயிலிருந்து நீர் பாயும் நிலத்தை நீங்கள் உழுது பயிரிடக்கூடாது; அணை பெருகவேண்டும். உங்கள் குடி கருக வேண்டும்” என்று கூறினார் என்பர். இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஒருவன் ஓர் அறச்செயலைச் செய்கின்றான் என்றால் அவன் வழியினரே, அவன் குடும்பத்தினரே அந்த அறச்செயலின் பயனை நுகர்வதில் பங்கு கொள்ள விரும்பக் கூடாதல்லவா? அதுபோலச் சாத்தந்தை குலத்தாரின் துணையுடன் காலிங்கராயன் செய்த இம்மா பெரும் அறச்செயலில் அவர்கள் வழியினரே பங்கு கொள்வது நன்றன்று; அது பிறர்க்கே முழுவதும் பயன்பட வேண்டும் என்று அணை, கால்வாயைப் பயன்படுத்தாமல் சாத்தந்தை குலத்தினர் ஒதுங்கியிருந்தனர். இதுவே உண்மையாகும்.
காலிங்கராயர் பல்வேறு அறச்செயல்களைச் செய்தவர; கோயில்களைக் கட்டியவர்; குளங்களை வெட்டியவர்; நாடெங்கும் வரி விதித்து வசூலித்தவர். பாண்டியர் அரசியல் அலுவலராகவும் ஆற்றல் படைத்தவராகவும் இருந்தவர். எனவே காலிங்கராயன் வழியினர் அவரை எதிர்த்திருக்க முடியாது. அமைதியான ஆட்சிக்காலத்தில் தான் அறச்செயல்கள் நடக்கும். எனவே பிற்காலத்தில் உண்மையறியாமல் சாப வரலாற்றைக் கற்பனையாக நாட்டில் வழங்கவிட்டிருக்க வேண்டும்.
வெள்ளோடு, கனகபுரம், கவுண்டச்சி பாளையம் கல்வெட்டுக்களிலும், நல்லணவேள் காதல் போன்ற இலக்கியங்களிலும், தனிப்பாடல்களிலும் சாத்தந்தை குலத்தினர் தாங்கள் காலிங்கராயன் வமிசத்தில் வந்தவர்கள் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளுகின்றனர். எனவே<noinclude></noinclude>
bd94ztftnt9ln9vr3wgsj81m0b730o9
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/48
250
456483
1838138
1837025
2025-07-02T06:10:29Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||47|}}</noinclude>எவ்வகையிலும் அவர்கள் காலிங்கராயனை மதித்துள்ளனர். காலிங்கராயனும் பங்காளிகள் மீது பகைகொள்ளவில்லை என்பதனையே அறிகின்றோம்.
{{larger|<b>நாவிதன் கரையும் ஊரும்</b>}}
காலிங்கராயன் அணை கட்டி முடிக்க ஆன 12 ஆண்டுகளும் சபதம் செய்து அது முடியும் வரை தாடி வைத்துக் கொண்டிருந்தார். “சீரில் பொலியும் தவம் இருந்து தெய்வவானி அணைதேக்கி” என்பது பழம்பாடல் பகுதியாகும்.
அணை, கால்வாய் வேலைகள் முடிந்தவுடன் காலிங்கராயன் மிகுந்த சோர்வினால் அப்படியே படுத்து உறங்கிவிட்டார். அப்பொழுது குடும்ப நாவிதன் வந்து அவர் உறக்கம் கெடாத வகையில் தாடியை மழித்து எடுத்து விட்டான். காலிங்கராயன் விழித்து எழுந்தவுடன் மகிழ்ந்து நாவிதனைப் பார்த்து ‘உன்னைப் பாராட்டுகின்றேன்; உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார். அப்போது தன் பெயர் நின்று நிலவ ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாவிதன் இறைஞ்சினான். காலிங்கராயன் மகிழ்ந்து காலிங்கராயன் கால்வாயின் முதல் கரையை நாவிதன் கரையென்று நாவினிக்க அழைத்தார். தன் பெயரிட்ட காலிங்கராயன் பாளையம் என்ற ஊருக்கு அருகில் நாவிதன்பாளையம் என்ற ஊருண்டாக்கிச் சருவமானியமாக அளித்தார்.
இதனை வமிசாவளியும் பின்வருமாறு நயமான நடையில் நவிலுகின்றது.
:“இப்படி வாக்கியால் வெட்டி அணை கட்டி பிள்ளைக்குக் கலியாணம் பண்ணுகிற வரைக்கும் சபதம் கோரி தீட்சை வளர்த்துக் கொண்டுயிருக்கும் சமயத்தில் தெய்வ கடாட்சத்தினாலே மனோபீஷ்டம் நிறைவேறியிருக்கும் சமயத்தில் ஒரு நாசுவன் தீட்சை மயிரை வாங்கிப் போட்டு நிலைக் கண்ணாடியை<noinclude></noinclude>
9oicxozpngqbj68j3pth91ey3udym61
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/49
250
456484
1838140
1837034
2025-07-02T06:14:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||48|}}</noinclude>:எதிரே வச்சு வணக்கத்துடனே நின்று கொண்டுயிருந்தான். நித்திரை தெளிஞ்சு நிலைக் கண்ணாடி பார்த்தவுடனே ஆயுஷ்காரமாய் இருந்தபடியினாலே சந்தோஷம் வந்து நாசுவனைப் பார்த்து உனக்கு என்ன வேணுமென்று கேட்டான். அந்த நாசுவன் என்பேர் விளங்கி இருக்கும்படியாகப் பண்ணவேணுமென்று மனுவு கேட்டுக் கொண்டான், தாம் கட்டி வைச்ச அணை யோரம் தாம் இருக்கப்பட்ட காலிங்கன் பாளையத்துக்குத் தென்புறம் நாசுவன் பேராலே ஊரு உண்டு பண்ணி ‘நாசுவன் பாளையம்’ என்றும் பேர் விளங்கப் பண்ணி அந்த நாசுவனுக்கு அந்தப் பாளையம் சர்வமானியமாகக் கொடுத்தார்.
{{larger|<b>தெய்வீகத் தன்மை</b>}}
காலிங்கராயர் தவமிருந்து அணை கட்டிக் கால்வாய் வெட்டினார் என்று சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழ் கூறுகிறது.
நாட்டுப்பாடல், வானிலிங்கேசுவரர் வேதநாயகி இருவரும் வரம் அருளக் காலிங்கராயர் இத்திருப்பணியை முடித்தார் என்று கூறுகிறது.
காலிங்கராயர் கைபீது வேதியர் வடிவில் கனவில் சிவபெருமான் வந்து கூறினார் என்றும், பாம்பு வழி காட்டியது என்றும் கூறுகிறது.
இவை அனைத்தும் தெய்வீக சக்தியால் அணை கட்டிக் கால்வாய் வெட்டப்பட்டது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
{{larger|<b>பல பெயர்கள்</b>}}
காலிங்கராயன் கால்வாயைப் பல இடங்களில் ‘கோண வாய்க்கால்’ என்று அழைக்கின்றனர். கோணல் கோணலாகக் கால்வாய் இருப்பதே அதற்குக் காரணம். ஈரோட்டில் ‘காரை வாய்க்கால்’ என்று அழைக்கின்றனர். ஈரோட்டில் வாய்க்காலின் கீழே பெரும் பள்ளம் செல்லுகிறது; மேலே<noinclude></noinclude>
07lpum59684zckv7c78sl1jurnhmhg7
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/50
250
456485
1838146
1837265
2025-07-02T06:20:35Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||49|}}</noinclude>காலிங்கராயன் கால்வாய் செல்லுகிறது. நீர் கசியாமல் இருக்கக் கால்வாய் காரையால் கட்டப்பட்டிருக்கிறது. எனவே ‘காரை வாய்க்கால்’ என்று அழைக்கின்றனர். இன்னும் பல இடங்களில் ‘பவானி வாய்க்கால்’ என்றும் சிறியதாக இருப்பதால் ‘சின்ன வாய்க்கால்’ என்றும், புதிதாகக் கீழ்பவானி வாய்க்கால் வெட்டப்பட்டிருப்பதால் காலிங்கராயன் கால்வாயைப் ‘பழைய வாய்க்கால்’ என்றும் பல இடங்களில் பல பெயர்களால் அழைக்கின்றனர். பலர் கால்வாய் என்ற சொல்லைக்கூடப் பின்னர் சேர்க்காமல் ‘காலிங்கராயன்’ என்ற தனிச் சொல்லாலேயே கால்வாயைக் குறிப்பர்.
{{larger|<b>கோணலின் காரணம்</b>}}
பவானி தொடங்கி நொய்யலில் கலக்கும் வரை காலிங்கராயன் கால்வாய் மிகவும் கோணல் கோணலாக இருக்கிறது. அதனால்தான் ‘கோண வாய்க்கால்’ என்று கூறுகின்றனர். எனவேதான் பாம்பு வழிகாட்டியதாகக் கதை நாட்டில் உலவுகின்றது என அறிகின்றோம். ஆனால் இதன் உண்மையான காரணம் என்ன?
பவானி அணை கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். நொய்யலாற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் கடல் மட்டத்திலிருந்து 412.48 அடி உயரம். நேராகப் பவானிக்கும் நொய்யலுக்கும் இடையில் உள்ள தூரம் 32 கல். ஆனால் வளைந்து செல்லுவதால் கால்வாயின் நீளம் 57 கல் ஆகிறது. காலிங்கராயன் கால்வாய் பவானியிலிருந்து நேராக நொய்யல் வரை செல்லுமானால் வயலுக்குத் தண்ணீர் பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும். எனவேதான் நீர் தேங்கி நின்று வயலுக்குப் பாய்ந்து வளப்படுத்துவதாகவும் நீரின் வேகத்தைக் குறைத்துக் கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளைத் தடுப்பதற்காகவும் கால்வாய் வளைந்து வளைந்து மேட்டுப்பாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்லு-<noinclude></noinclude>
jmz0rran1mdapvqyiuo28zuxttii28l
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/51
250
456486
1838153
1837269
2025-07-02T06:29:32Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||50|}}</noinclude>கிறது. இது காலிங்கராயனின் பொறியியல் திறத்தை நன்கு வெளிப்படுத்துகிறது.
{{larger|<b>காஞ்சியில் கலத்தல்</b>}}
காஞ்சி என்ற பெயரையுடைய நொய்யலாற்றில்தான் காலிங்கராயன் கால்வாய் இறுதியாகக் கலக்கிறது என்று முன்பே கண்டோம். ‘மீ கொங்கில் அணிகாஞ்சி’ என்று செந்தமிழ் வல்ல சுந்தரமூர்த்தி நாயனாரும் இந்நதியினைப் போற்றியுரைத்துள்ளார்.
திருப்பாண்டிக் கொடுமுடிக்குத் தெற்கே காலிங்கராயன் கால்வாயைத் தொடர்ந்து நாம் செல்வோமானால் காலிங்கராயன் கால்வாயின் அளவு சுருங்கியிருப்பதைக் காணலாம். ‘வெங்கமேடு’ அருகில் உள்ள நாகமநாயக்கன் பாளையத்தில் மிகச் சுருங்கிக் கழிவு நீர்க் கால்வாய் போல மாறித் தென்கிழக்கில் உள்ள ஆவுடையா பாறை என்றும் ஊரை நோக்கிச் செல்லுகிறது காலிங்கராயன் கால்வாய். ஆவுடையாபாறையில் புகைவண்டிப் பாதையை ஒரு சிறு பாலத்தின் மூலம் கடந்து தெற்கு நோக்கி ஓடி நொய்யலாற்றில் கலக்கின்றது. இந்த இடத்தின் எதிர்க்கரையில் செல்லாண்டியம்மன் கோயில் இருக்கிறது. காலிங்கராயன் நொய்யலோடு கலக்கும் இந்த இடத்தைப் பொது மக்கள் ‘கூடுதுறை’ ‘கூட்டாற்று மூலை’ என அழைக்கின்றனர். இந்த இடத்தில் காலிங்கராயன் கால்வாயின் அகலம் சுமார் 3 அடியேயாகும்.
{{larger|<b>கிளைக் கால்வாய்கள்</b>}}
காலிங்கராயன் கால்வாயில் மூன்று கிளைக்கால்வாய்கள் உள்ளன.
<b>1. மலையம்பாளையம் பிரிவு வாய்க்கால்:-</b> காலிங்கராயன் கால்வாயில் 31.6.430 மைலில் பழனிக்கவுண்டம் பாளையம் அருகே பிரிந்து சுமார் 4 மைல் தூரம் காலிங்கராயன் கால்வாய்க்கு இணையாகவே ஓடி மலையம்<noinclude></noinclude>
s26bj9rc2r1tihpkxqmo9yj8l1vq64m
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/52
250
456487
1838196
1837273
2025-07-02T07:53:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||51|}}</noinclude>பாளையம் அருகே காலிங்கராயன் கால்வாயுடனே கலக்கிறது. இக்கால்வாய் சுமார் 675 ஏக்கர் நிலங்களை வளப்படுத்துகிறது.
<b>2. பெரியபட்டம் பரிசோதனை வாய்க்கால்</b>:- நாகம நாயக்கன் பாளையத்தில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலில் கலப்பதற்காக ஆவுடையா பாறையை நோக்கிப் பாயுமிடத்தில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி அங்கிருந்து ஒரு கால்வாயைத் தென்மேற்காகக் கொண்டு செல்லுகின்றனர். அது பெரியபட்டம் என்ற ஊரைக் கடந்து செட்டிபுள்ளா பாளையம் என்ற ஊரில் நொய்யலோடு கலக்கிறது. அதற்கும் காலிங்கராயன் கால்வாய் என்றே பெயர் கூறி அழைக்கின்றனர். ஆனால் இந்தப் பெரியபட்டம் கிளைக் கால்வாயைப் பற்றி வேறு சில செய்திகளும் இங்கு வழங்கப் பெறுகின்றன. இக்கால்வாய் 625 ஏக்கர் நிலத்திற்கு நீர் அளிக்கிறது. இதன் நீளம் 1.5.600 மைல் ஆகும்.
<b>3. ஆவுடையாபாறை பிரிவு வாய்க்கால்</b>:- ஆவுடையா பாறையில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலோடு கலக்குமிடத்திற்கு அருகில் மைல் 56.5.234 இல் கால்வாயை ஒரு கலிங்கின் மூலமாகத் தடுத்துத் தண்ணீரை மேற்கு நோக்கிக் கொண்டு செல்லுகின்றனர். அதற்கும் ‘காலிங்கராயன் கால்வாய்’ என்றே பெயர் கூறுகின்றனர். இருநூறு ஏக்கர்களை வளப்படுத்தி இக்கால்வாய் ‘புதுத்தோட்டம்’ என்ற இடத்தில் நொய்யலோடு கலக்கிறது. இதற்குக் ‘கல்லுக்கட்டுமடை’ என்றும் பெயர் கூறுகின்றனர். ‘ஆவுடையபாறைப் பிரிவு வாய்க்கால்’ என்பது பொதுப் பணித்துறையினர் பெயர். இதன் நீளம் ¼ மைல்.
<poem>
{{larger|<b>பிற்காலத் திருப்பணி செய்த இருவர்
வட்டக்கல் வலசு சின்னத்தம்பிக் கவுண்டர்</b>}}</poem>
சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் பெருமழை பெய்து வெள்ளப் பெருக்கெடுத்தது. அதன் காரணமாகப் பள்ளங்களில் ஓடிவந்த தண்ணீர் காலிங்கராயன் கால்வாயினுள் புகுந்து பல இடங்களில் கரைகள் உடைந்தன. பொதுப்<noinclude></noinclude>
ohbzvzz9ipockjewrwtvl8nqj211pin
1838197
1838196
2025-07-02T07:53:49Z
Desappan sathiyamoorthy
14764
1838197
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||51|}}</noinclude>பாளையம் அருகே காலிங்கராயன் கால்வாயுடனே கலக்கிறது. இக்கால்வாய் சுமார் 675 ஏக்கர் நிலங்களை வளப்படுத்துகிறது.
<b>2. பெரியபட்டம் பரிசோதனை வாய்க்கால்:-</b> நாகம நாயக்கன் பாளையத்தில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலில் கலப்பதற்காக ஆவுடையா பாறையை நோக்கிப் பாயுமிடத்தில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி அங்கிருந்து ஒரு கால்வாயைத் தென்மேற்காகக் கொண்டு செல்லுகின்றனர். அது பெரியபட்டம் என்ற ஊரைக் கடந்து செட்டிபுள்ளா பாளையம் என்ற ஊரில் நொய்யலோடு கலக்கிறது. அதற்கும் காலிங்கராயன் கால்வாய் என்றே பெயர் கூறி அழைக்கின்றனர். ஆனால் இந்தப் பெரியபட்டம் கிளைக் கால்வாயைப் பற்றி வேறு சில செய்திகளும் இங்கு வழங்கப் பெறுகின்றன. இக்கால்வாய் 625 ஏக்கர் நிலத்திற்கு நீர் அளிக்கிறது. இதன் நீளம் 1.5.600 மைல் ஆகும்.
<b>3. ஆவுடையாபாறை பிரிவு வாய்க்கால்:-</b> ஆவுடையா பாறையில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலோடு கலக்குமிடத்திற்கு அருகில் மைல் 56.5.234 இல் கால்வாயை ஒரு கலிங்கின் மூலமாகத் தடுத்துத் தண்ணீரை மேற்கு நோக்கிக் கொண்டு செல்லுகின்றனர். அதற்கும் ‘காலிங்கராயன் கால்வாய்’ என்றே பெயர் கூறுகின்றனர். இருநூறு ஏக்கர்களை வளப்படுத்தி இக்கால்வாய் ‘புதுத்தோட்டம்’ என்ற இடத்தில் நொய்யலோடு கலக்கிறது. இதற்குக் ‘கல்லுக்கட்டுமடை’ என்றும் பெயர் கூறுகின்றனர். ‘ஆவுடையபாறைப் பிரிவு வாய்க்கால்’ என்பது பொதுப் பணித்துறையினர் பெயர். இதன் நீளம் ¼ மைல்.
<poem>
{{larger|<b>பிற்காலத் திருப்பணி செய்த இருவர்
வட்டக்கல் வலசு சின்னத்தம்பிக் கவுண்டர்</b>}}</poem>
சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் பெருமழை பெய்து வெள்ளப் பெருக்கெடுத்தது. அதன் காரணமாகப் பள்ளங்களில் ஓடிவந்த தண்ணீர் காலிங்கராயன் கால்வாயினுள் புகுந்து பல இடங்களில் கரைகள் உடைந்தன. பொதுப்<noinclude></noinclude>
l9wtwoda4kkwt2w3bj5dm7z1rsq4s1s
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/53
250
456488
1838199
1837276
2025-07-02T07:56:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838199
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||52|}}</noinclude>பணித்துறையினரால் விரைந்து பழுதுபார்க்க முடியாத அளவுக்கு உடைப்பு மிகுதியானதால் உழவர்கள் பெரிதும் துன்புற்றனர்.
அப்போது வட்டக்கல்வலசில் வாழ்ந்த கொங்குவேளாளரில் கண்ண குலத்து நிலக்கிழாரான சின்னத்தம்பிக் கவுண்டர் அவர்கள் பெரும்பகுதிக் கால்வாய்க் கரைகளை அடைக்கத் திட்டமிட்டார்.
தம் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் எடுத்துரைத்தார். வட்டக்கல்வலசுச் சின்னத்தம்பிக் கவுண்டரின் நுண்ணறிவையும் விடாமுயற்சியையும் கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சின்னத்தம்பிக் கவுண்டருக்கு உதவி புரிந்தார். எங்கு வேண்டுமானாலும் சின்னத்தம்பிக் கவுண்டர் எவ்வளவு மரங்களை வேண்டுமானாலும் வெட்டிக்கொள்ளலாம். பாறைகளை உடைக்கலாம். மண் எடுக்கலாம். யாரையும் உதவிக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று சாசனம் எழுதித்தந்தார்.
தம் செல்வத்தாலும், செல்வாக்கினாலும், ஆட்களைத் திரட்டி அரிய முயற்சியால் சின்னத்தம்பிக் கவுண்டர் கால்வாய்க்கரைகளைப் பழுது பார்த்துக் கட்டினார். கால்வாய் முன்பு போலவே நன்றாக அமைந்து தண்ணீர் வந்தது. உழவர்கள் மகிழ்ந்தனர்.
{{larger|<b>மணியம் காளியப்ப கவுண்டர்</b>}}
சுமார் 75 ஆண்டுகட்கு முன்பு மணியம் காளியப்ப கவுண்டர் என்பவர் ஆவுடையாறை அருகே தண்ணீர் வீணாகச் சென்று நொய்யலில் கலப்பதைக் கண்டு வருந்தி ஆவுடையாபாறை அருகிலிருந்து கிளைக்கால்வாய் ஒன்றமைத்துப் பாசனத்திட்டம் ஒன்றை அளித்தார். அவரே முன்னின்று அந்தச் செயலை முடித்தார். இன்று அவர் அமைத்த திட்டம் நன்கு செயல்பட்டுப் பலநூறு ஏக்கர்கள் பாசனம் பெறுகின்றன. பெரியபட்டம் பரிசோதனைக் கால்வாய் என்பது இதன் பெயராகும்.
{{nop}}<noinclude></noinclude>
4tmbp8c27o17iqu6exzqdz1dea2emw2
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/54
250
456489
1838201
1837278
2025-07-02T08:00:39Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838201
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||53|}}</noinclude>பிற்காலத்தில் பணிபுரிந்த இவர்கள் இருவரும் நம் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.
<poem>
{{larger|<b>காலிங்கராயன் பவானியாற்றில் கட்டிய
மற்றொரு அணை</b>}}</poem>
டணாயக்கன் கோட்டை என்பது பவானி ஆற்றங்கரையில் இருந்த புகழ்வாய்ந்த பழைய கோட்டையாகும். இப்போது அக்கோட்டை கீழ்பவானி அணையில் மூழ்கிவிட்டது.
டணாயக்கன் கோட்டைப் பகுதியில் ஊருக்குச் சற்று மேற்கே பவானி ஆற்றில் அணை ஒன்று கட்டிச் சிதைந்த நிலையிலும் 1800 வாக்கில் 400 ஏக்கர் நிலத்திற்குப் பாய்ந்து வந்தது. கீழ்பவானி அணை கட்டியபின் இந்த அணை முழுவதும் அணையினுள் மறைந்து விட்டது. 1799இல் மேக்ளியாட் இந்த அணையைப் பழுதுபார்த்தார். தூர்ந்த கால்வாயைச் செப்பனிட்டார்.
இந்த அணைக்கட்டைக் கட்டியவர் வேளாளர் லிங்கையன் என்பவர் என்று ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது. 1933ஆம் ஆண்டு டிசம்பர் 29இல் வெளிவந்த முல்லைக்கொடி என்னும் மாத இதழில் இந்த அணை பற்றிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது.
காலிங்கராயன் அணை கட்டின பட்டயம் மூலம் காலிங்கராயனின் இயற்பெயர் லிங்கையன் என்பதனை அறிகின்றோம். டணாயக்கன் கோட்டை அணை தொன்மையானதாகவும் உள்ளது. எனவே பவானியின் இறுதியில் அணை கட்டிய காலிங்கராயன் பவானியின் தொடக்கப்பகுதியிலும் அணை கட்டியுள்ளார் என்பதைத் தெளிவாக அறிகின்றோம். இது மிகவும் அரிய செய்தியாகும். புக்கானன் எழுதிய யாத்திரைக் குறிப்புக்களிலும் இந்த அணைபற்றிக் கூறப்பட்டுள்ளது. அவருடைய குறிப்பிலும் இவ்வணை கட்டியவர் பெயர் லிங்கையன் என்றே காணப்படுகிறது.
{{nop}}<noinclude></noinclude>
14c1tfuznp2jadurfb9wmovoq3555og
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/55
250
456490
1838203
1837280
2025-07-02T08:03:26Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838203
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அண்ணலும் அறப்பணிகளும்</b>}}}}
காலிங்கராயன் கொங்கு நாட்டின் அரசியல் தலைவராகப் பூந்துறை நாட்டு வெள்ளோட்டில் வீற்றிருந்தபோது கொங்கு நாடெங்கும் பற்பல அறப்பணிகளைச் சிறப்புடன் செய்துள்ளார். குளங்கள் வெட்டுதல், கோயில் கட்டுதல், பழங்கோயில்களைப் புதுப்பித்தல், ஊர் உண்டாக்குதல், மக்களைக் குடியேற்றுதல், மக்களுக்கு உரிமைகள் அளித்தல் போன்ற பல்வேறு நயத்தகு நற்செயல்களைச் செய்துள்ளமையைக் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் சிறப்பித்துப் பேசுகின்றன.
{{larger|<b>குளங்கள் வெட்டுதல்</b>}}
கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை என்னும் சங்க இலக்கியத்தில் கரிகாலனைப் புகழும்போது அவன் ‘காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினான்’ என்று குறிப்பிடுகின்றார். காவிரிக்குக் கரை கட்டுவித்துக் கல்லணையை உண்டாக்கிய கரிகாலனைப் போலவே கொங்கு நாட்டிலும் பற்பல திருப்பணிகளைக் காலிங்கராயன் செய்துள்ளார். எனவே உருத்திரங் கண்ணனாரின் புகழ்ச்சி காலிங்கராயனுக்கும் பொருந்தும்.
வீரபாண்டியனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் கி.பி. 1255இல் கொங்குக் குறுப்பு நாட்டு விசயமங்கலத்தின் ஒரு பகுதியாகிய வானாகப் புத்தூருக்குக் காலிங்கராயன் சென்றார் அங்கிருந்த வாகைக்குளம் நெடுநாள் பாழ்பட்டுக் கிடப்பதாகக் கேள்விப்பட்டார். அதைப் பழுது பார்க்குமாறு குறுப்பு நாட்டுச் சபையாருக்கு ஆணையிட்டு அதற்கு வேண்டும் பொருட்செலவையும் எதிர்காலத்தில் குளத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஆகும் செலவையும் விசயமங்-<noinclude></noinclude>
9uz0icwhxoe35dt8rgcppzntg6wecs7
1838205
1838203
2025-07-02T08:05:35Z
Mohanraj20
15516
1838205
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அண்ணலும் அறப்பணிகளும்</b>}}}}
காலிங்கராயன் கொங்கு நாட்டின் அரசியல் தலைவராகப் பூந்துறை நாட்டு வெள்ளோட்டில் வீற்றிருந்தபோது கொங்கு நாடெங்கும் பற்பல அறப்பணிகளைச் சிறப்புடன் செய்துள்ளார். குளங்கள் வெட்டுதல், கோயில் கட்டுதல், பழங்கோயில்களைப் புதுப்பித்தல், ஊர் உண்டாக்குதல், மக்களைக் குடியேற்றுதல், மக்களுக்கு உரிமைகள் அளித்தல் போன்ற பல்வேறு நயத்தகு நற்செயல்களைச் செய்துள்ளமையைக் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் சிறப்பித்துப் பேசுகின்றன.
{{larger|<b>குளங்கள் வெட்டுதல்</b>}}
கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை என்னும் சங்க இலக்கியத்தில் கரிகாலனைப் புகழும்போது அவன் ‘காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினான்’ என்று குறிப்பிடுகின்றார். காவிரிக்குக் கரை கட்டுவித்துக் கல்லணையை உண்டாக்கிய கரிகாலனைப் போலவே கொங்கு நாட்டிலும் பற்பல திருப்பணிகளைக் காலிங்கராயன் செய்துள்ளார். எனவே உருத்திரங் கண்ணனாரின் புகழ்ச்சி காலிங்கராயனுக்கும் பொருந்தும்.
வீரபாண்டியனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் கி.பி. 1255இல் கொங்குக் குறுப்பு நாட்டு விசயமங்கலத்தின் ஒரு பகுதியாகிய வானாகப் புத்தூருக்குக் காலிங்கராயன் சென்றார் அங்கிருந்த வாகைக்குளம் நெடுநாள் பாழ்பட்டுக் கிடப்பதாகக் கேள்விப்பட்டார். அதைப் பழுது பார்க்குமாறு குறுப்பு நாட்டுச் சபையாருக்கு ஆணையிட்டு அதற்கு வேண்டும் பொருட்செலவையும் எதிர்காலத்தில் குளத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஆகும் செலவையும் விசயமங்<noinclude></noinclude>
lx7zjs9j5f074giiigm7pi43nz8opno
1838206
1838205
2025-07-02T08:06:48Z
Desappan sathiyamoorthy
14764
1838206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அண்ணலும் அறப்பணிகளும்</b>}}}}
காலிங்கராயன் கொங்கு நாட்டின் அரசியல் தலைவராகப் பூந்துறை நாட்டு வெள்ளோட்டில் வீற்றிருந்தபோது கொங்கு நாடெங்கும் பற்பல அறப்பணிகளைச் சிறப்புடன் செய்துள்ளார். குளங்கள் வெட்டுதல், கோயில் கட்டுதல், பழங்கோயில்களைப் புதுப்பித்தல், ஊர் உண்டாக்குதல், மக்களைக் குடியேற்றுதல், மக்களுக்கு உரிமைகள் அளித்தல் போன்ற பல்வேறு நயத்தகு நற்செயல்களைச் செய்துள்ளமையைக் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் சிறப்பித்துப் பேசுகின்றன.
{{larger|<b>குளங்கள் வெட்டுதல்</b>}}
கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை என்னும் சங்க இலக்கியத்தில் கரிகாலனைப் புகழும்போது அவன் ‘காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினான்’ என்று குறிப்பிடுகின்றார். காவிரிக்குக் கரை கட்டுவித்துக் கல்லணையை உண்டாக்கிய கரிகாலனைப் போலவே கொங்கு நாட்டிலும் பற்பல திருப்பணிகளைக் காலிங்கராயன் செய்துள்ளார். எனவே உருத்திரங் கண்ணனாரின் புகழ்ச்சி காலிங்கராயனுக்கும் பொருந்தும்.
வீரபாண்டியனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் கி.பி. 1255இல் கொங்குக் குறுப்பு நாட்டு விசயமங்கலத்தின் ஒரு பகுதியாகிய வானாகப் புத்தூருக்குக் காலிங்கராயன் சென்றார் அங்கிருந்த வாகைக்குளம் நெடுநாள் பாழ்பட்டுக் கிடப்பதாகக் கேள்விப்பட்டார். அதைப் பழுது பார்க்குமாறு குறுப்பு நாட்டுச் சபையாருக்கு ஆணையிட்டு அதற்கு வேண்டும் பொருட்செலவையும் எதிர்காலத்தில் குளத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஆகும் செலவையும் விசயமங்-<noinclude></noinclude>
9uz0icwhxoe35dt8rgcppzntg6wecs7
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/56
250
456491
1838207
1837285
2025-07-02T08:07:48Z
Mohanraj20
15516
1838207
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||55|}}</noinclude>கலம் ஊர்ச்சபையார் கொடுக்கவேண்டும் என்றுகாலிங்கராயன் கட்டளையிட்டார். திருப்பணி செய்யப்பெற்ற இக்குளத்திற்குத் தன் அரசன் பெயரால் ‘வீரபாண்டியப்பேரேரி’ என்று பெயர் வைத்தார். இன்றும் அக்குளம் விசயமங்கலத்தில் உள்ளது.
கொடுமுடி தேவத்தான ஊராகிய விதரியான திருச்சிற்றம்பல நல்லூரில் ஒரு குளம் பாழ்பட்டு மழை பெய்து நீர் நிறையும் காலத்தில்கூட உடைவு குலைவுபட்டுக் கிடந்தது. கி.பி. 1256 ஆம் ஆண்டு காலிங்கராயன் இக்குளத்தை அடைத்துத் திருத்தி ‘வெள்ளைக்குளம் வரகுணன்’ என்று பெயரிட்டார். இப்பெயர் பாண்டியர் தம் முன்னோர்கள்மீது காலிங்கராயன் கொண்ட பற்றைக் காட்டுகிறது.
வீரபாண்டியனின் பத்தாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1260) வெள்ளோட்டிலுள்ள சிறிய குளத்தையும் பெரிய குளத்தையும் கனகபுரத்தில் ஒரு குளத்தையும் குறுக்குக் குளத்தையும் காலிங்கராயன் வெட்டுவித்தார்.
கி.பி. 1264 ஆம் ஆண்டு (கோபி வட்டம்) எலத்தூரில் உள்ள குளம் உடைத்துக் கொள்ளவே காலிங்கராயன் அதனை அடைத்துத் திருத்தினார்.
வீரபாண்டியனுடைய 24 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1274) சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள நல்லாட்டுக் குளத்தைச் செப்பனிட்டார்.
{{larger|<b>கோயில் கட்டுதல்</b>}}
வெள்ளோட்டுச் சிவன் கோயிலைக் காலிங்கராயன் தான் திருப்பணி செய்து புதுப்பித்துக் கட்டினார் என்று ‘தம்முடைய இஷ்ட தெய்வமான சர்வேஸ்வர பாடகவல்லி நாச்சியார் தேவஸ்தானம் சீரணோத்தாரணம் பண்ணிக் கொண்டு இருந்தான்’ என்னும் பகுதியால் வமிசாவளி தெரிவிக்கின்றது. ‘இந்தியாவை ஆளும் தலைவர்களும்<noinclude></noinclude>
nntri8k8k7kp94xb9rtv920vp1d9ze9
1838209
1838207
2025-07-02T08:20:24Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||55|}}</noinclude>கலம் ஊர்ச்சபையார் கொடுக்கவேண்டும் என்று காலிங்கராயன் கட்டளையிட்டார். திருப்பணி செய்யப்பெற்ற இக்குளத்திற்குத் தன் அரசன் பெயரால் ‘வீரபாண்டியப்பேரேரி’ என்று பெயர் வைத்தார். இன்றும் அக்குளம் விசயமங்கலத்தில் உள்ளது.
கொடுமுடி தேவத்தான ஊராகிய விதரியான திருச்சிற்றம்பல நல்லூரில் ஒரு குளம் பாழ்பட்டு மழை பெய்து நீர் நிறையும் காலத்தில்கூட உடைவு குலைவுபட்டுக் கிடந்தது. கி.பி. 1256ஆம் ஆண்டு காலிங்கராயன் இக்குளத்தை அடைத்துத் திருத்தி ‘வெள்ளைக்குளம் வரகுணன்’ என்று பெயரிட்டார். இப்பெயர் பாண்டியர் தம் முன்னோர்கள்மீது காலிங்கராயன் கொண்ட பற்றைக் காட்டுகிறது.
வீரபாண்டியனின் பத்தாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1260) வெள்ளோட்டிலுள்ள சிறிய குளத்தையும் பெரிய குளத்தையும் கனகபுரத்தில் ஒரு குளத்தையும் குறுக்குக் குளத்தையும் காலிங்கராயன் வெட்டுவித்தார்.
கி.பி. 1264ஆம் ஆண்டு (கோபி வட்டம்) எலத்தூரில் உள்ள குளம் உடைத்துக் கொள்ளவே காலிங்கராயன் அதனை அடைத்துத் திருத்தினார்.
வீரபாண்டியனுடைய 24ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1274) சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள நல்லாட்டுக் குளத்தைச் செப்பனிட்டார்.
{{larger|<b>கோயில் கட்டுதல்</b>}}
வெள்ளோட்டுச் சிவன் கோயிலைக் காலிங்கராயன் தான் திருப்பணி செய்து புதுப்பித்துக் கட்டினார் என்று ‘தம்முடைய இஷ்ட தெய்வமான சர்வேஸ்வர பாடகவல்லி நாச்சியார் தேவஸ்தானம் சீரணோத்தாரணம் பண்ணிக் கொண்டு இருந்தான்’ என்னும் பகுதியால் வமிசாவளி தெரிவிக்கின்றது. ‘இந்தியாவை ஆளும் தலைவர்களும்<noinclude></noinclude>
43msxl8qtqj7nfqt8ehp3wi8ug8s4jz
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/87
250
456532
1837869
1444352
2025-07-01T13:58:43Z
Mohanraj20
15516
1837869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||86|}}</noinclude>அடுத்தடுத்து மிகவும் நெருக்கமாகவும் இருக்கின்றன. அதனால் புது மதகுகள் எதுவும் ஏற்படுத்த முடிவதில்லை. கால்வாயின் 1,2,3,6,9,16ஆம் மைல்களில் பல மண் மதகுகள் இருக்கின்றன. 3,9,15,25,34,36,39,41, 47ஆம் மைல்களில் காட்டாறுகள் வந்து கால்வாயோடு கலக்கின்றன.”
{{larger|<b>ஹன்னான்</b>}}
காலிங்கராயன் கால்வாயிலுள்ள சில குறைகளையும் சுட்டிக் காட்டுகின்றார் ஹன்னான்.
“கால்வாய் முழுவதிலும் நேரடியாகவே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச வசதியாகப் பல மதகுகள் இருக்கின்றன. இந்த மதகுகளின் எண்ணிக்கையைக் குறைத்துச் சிறு கிளைக்கால்வாய்களை அமைத்து நீர் பாய்ச்சினால் இன்னும் ஏராளமான நிலங்கட்கு நீர்பாய்ச்ச முடியும். இக்கால்வாயிலுள்ள மிகப் பெரிய குறைபாடு அது மிகப் பெரியதாக இருப்பதே”
{{larger|<b>என்று குறிப்பிடுகின்றார்.</b>}}
“தொடக்கத்தில் 30,000 ஏக்கர்கள் பாயவேண்டியதற்கு மேல் தண்ணீர் வருகிறது; ஆனால் கால்வாயின் கடைசியில் மிகக் குறைந்த தண்ணீரே செல்கிறது. வாய்க்கால் பெரியது. ஆனால் அதனால் அடையும் பயனோ மிகக் குறைவு”
{{larger|<b>வெட்டர்பர்ன்</b>}}
இவர் ஓர் அற்புதமான திட்டத்தைத் தந்துள்ளார்.
“30,000 ஏக்கர்களுக்கு மேல் பாயக்கூடிய அளவு தண்ணீர் அணையிலிருந்து விடப்படுகிறது. ஆனால் பெரும்பகுதித் தண்ணீர் வீணாகிறது”<noinclude></noinclude>
j63qq5vv5o8ol297cl4qwgvj3hp0xbz
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/88
250
456533
1837872
1444353
2025-07-01T14:02:40Z
Mohanraj20
15516
1837872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||87|}}</noinclude>என்று ஹன்னான் கூறிய குறையை நீக்கவே இத்திட்டத்தைத் தயாரித்துள்ளார் என்றறிகின்றோம். காலிங்கராயன் கால்வாய் இப்பொழுது நொய்யல் வரைதான் செல்லுகிறது. கால்வாய் இறுதியில் நொய்யலாற்றில் கலக்கிறது. ஒரு கால்வாயின் வழியாக மீதியாகும் தண்ணீரை நொய்யலைக் கடந்து செல்லச் செய்து அமராவதி (கரூர்) வரை கொண்டு சென்றால் புதிதாக 13,000 ஏக்கர்கள் பாயும்” என்று காலிங்கராயன் விரிவுத்திட்டத்தை 21-3-1872ஆம் ஆண்டு ரூபாய் 8,71,000 செலவில் தயாரித்துக் கொடுத்தார் வெட்டர்பர்ன். அரசு அனுமதி கொடுத்தும் போதிய பணம் இல்லாத காரணத்தால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின் இத்திட்டம் எவருடைய நினைவிற்கும் இன்றுவரை வரவில்லை.
{{larger|<b>அருண்டேல்</b>}}
காலிங்கராயன் கால்வாயிலுள்ள சிறு குறைகளைச் சுட்டிக் காட்டுகின்றார் கோவை மாவட்டத் தலைவராக இருந்த அருண்டேல்.
“காலிங்கராயன் அணையின் தலை மதகிலேயே 20 அல்லது 30 ஏக்கர்கள் பாய்வேண்டிய நீர் வருகிறது. ஆனால் இரவும் பகலும் இடைவிடாமல் தலை மதகில் நீர் பாய்ந்தும் வளப்படுத்துகின்ற நிலப்பகுதி 2 அல்லது 3 ஏக்கர்தான். மற்றத் தண்ணீர் அனைத்தும் கழிவு நீராக வீணாகச் செல்லுகிறது”
என்று வருந்துகின்றார் அருண்டேல். மதகுகளைப் பற்றியும் பின் வருமாறு கூறுகின்றார்.
“காலிங்கராயன் கால்வாயில் பல மதகுகள் சரியாக அமைக்கப்படவில்லை. பொதுவாக அணையின் அருகில் தலைப்புக் கால்வாயில் இருக்கும் மதகுகளே அவ்வாறு மிக மோசமாக இருக்கின்றன. உறுதியற்ற சாதாரணக் கற்களாலும் மண்ணாலும் ஒரு சுரங்கம் போலக்<noinclude></noinclude>
nujsbwzit5c4mmqym5ubcmgs087hq0x
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/89
250
456534
1837877
1444354
2025-07-01T14:16:58Z
Mohanraj20
15516
1837877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||88|}}</noinclude>காலிங்கராயன் கால்வாயின் மதகுகள் கட்டப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் கடுமழை பெய்தது. அதன் காரணமாகக் கால்வாயின் முதல் 7 மைலுக்குள்ளாகவே இருக்கும் 17 மதகுகள் உடைத்துக் கொண்டன.”
{{larger|<b>பவானியில் பிற அணைகள்</b>}}
1850 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்பவர் பல திட்டங்களை அளித்துள்ளார். மாண்ட் கோமரியும் (1828) மீடு பென்னிகுக் அட்ரி குழுவினரும் (1878) மார்கனும் (1883) காலிங்கராயன் அணையையும் கால்வாயையும் பார்வையிட்டனர். பவானியாற்றில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை நிறை வேற்றுமாறு பரிந்துரை செய்தனர். சத்தியமங்கலத்தின் மேற்கே 4 ஆவது கல்லில் பவானியாற்றைத் தடுத்து அணை கட்டினால் தாராபுரம், பல்லடம் தாலூக்காப் பகுதியில் 50, 000 ஏக்கர் நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சலாம் என்று மாண்ட் கோமரி குறிப்பிடு கின்றார்.
இத்திட்டம் பொதுப்பணித் துறையில் ‘மேல் பவானித் திட்டம்’ (Upper Bhavani project) என அழைக்கப்பட்டது. இது பின்னர்க் ‘கீழ் பவானித் திட்டம்’ (Lower Bhavani project) எனப்படும் திட்டமாக நிறைவேற்றப்பட்டது. கீழ்பவானிக் கால்வால் 1952 செப்டம்பர் மாதம் பூர்த்தி ஆயிற்று. பாசனம் பெறும் நிலம் 2,07,000 ஏக்கர்கள்.
பவானி ஆற்றில் பல்வேறு தடுப்புக்களை (கலிங்குகளை) ஏற்படுத்தினால் பல ஆயிரம் ஏக்கர்களுக்குப் பாய்ச்சும் வண்ணம் நீர் கிடைக்கும் என்று கூறினர் அட்ரி குழுவினர்.
அட்டபாடி என்னும் அமைதிப் பள்ளத்திலிருந்து வரும் பவானியைத் தடுத்து மாயாறு என்னும் பள்ளத்தாக்கினிடையில் போளுவாம்பட்டி அருகே அணை கட்டவேண்டும் என்றார் மார்கன்.
{{nop}}<noinclude></noinclude>
1h5eb0brg7tgk9qzn2mjn3r8mycwyvg
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/90
250
456535
1837875
1444355
2025-07-01T14:09:16Z
Mohanraj20
15516
1837875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||89|}}</noinclude>{{larger|<b>சில குறிப்புக்கள்</b>}}
கோவை மாவட்டக் கெசட்டியர், மானுவல் போன்ற நூல்களிலும், இந்தியாவை ஆண்ட நிலக்கிழார்கள் பற்றிய ஆங்கில வரலாற்று நூலிலும், முத்துசாமிக் கோனாரின் ‘கொங்கு நாடு’ என்ற நூலிலும் காலிங்கராயன் கால்வாயைப் பற்றிய குறிப்பைக் காணுகின்றோம். கொங்கு நாட்டின் முதல் தரமான கால்வாய் ஆகிய இதன் கரையின் எல்லா இடங்களும் சோழ நாட்டைப் போன்ற மிக வளம் பொருந்தியதாகக் காணப்படுகின்றன. கி.பி. 1799 இல் கொளா நல்லிக்கு அப்பால் உள்ள கரையின் பெரும்பகுதி உடைந்துவிட்டது. கொளாநல்லிக்கு அப்பால் தண்ணீரே செல்லவில்லை. அதனால் தான் புக்கானன் 1800ஆம் ஆண்டில் 3459 ஏக்கர்கள் பாய்ந்ததாகக் குறிப்பிடுகின்றார்.
1840 மதகுகளில் 1762 முதல் 1799 வரை ஐதர், திப்புவிற்கும் ஆங்கிலேயர்க்கும் நடைபெற்ற போரில் பல மதகுகள் சீர்குலைந்து சிதைந்துவிட்டன. காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் எடுத்த ஓர் அளவையில் நீர் பாயும் நிலங்களில் 31% வண்டல் கலந்த களிமண் என்றும், 68% செம்மண் என்றும், 1% மணல் என்றும் அறிகின்றோம்.
1880 இல் 7545 ஏக்கர்கள் தாம் நீர் பாய்ந்தது. ஆனால் இப்பொழுது 15, 743 ஏக்கர்கள் நேரடியாக நீர்வளம் பெறுகிறது. பதிவு செய்யப் பெறாத வகையிலும், வலப்புறப் பாசனத்திலும் 5400 ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன. மொத்தம் 21,143 ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன.
கால்வாயின் நீளம் 56 மைல் 5 பர்லாங்கு 350 அடி ஆகும். வினாடிக்கு 650 கியூசெக்ஸ் தண்ணீர் அணையிலிருந்து விடப்படுகிறது.
க.—6
{{nop}}<noinclude></noinclude>
go7ot2h524qtx3jps0m1nnog8esma34
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/91
250
456536
1837880
1444356
2025-07-01T14:23:26Z
Mohanraj20
15516
1837880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||90|}}</noinclude>{{larger|<b>காலிங்கராயன் பாளையம் காலிங்கராயன்
கால்வாய்ப் பாலக் கல்வெட்டு</b>}}
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் துறூறி துரையும் பொறியாளர் பேப்பர் துரையும் 1832 இல் கால்வாயைப் பழுது பார்த்த விபரத்தை இக்கல்வெட்டுக் கூறுகிறது.
{{left_margin|3em|<poem>
மகாராச ஸ்ரீ கனம் பொருந்திய
கும்பினியாரவர்கள் நாளில்
ஜி. டி. துறூறி துரையவர்களுடைய
பிரின்சிபால் கலெக்டர் அதிகாரத்தில்
பேபர் துரையவர்கள்
சிவிலிஞ்சினீரில்
அசூர் மராமத்து
சூப்பரிண்டெண்டு
சுப்பராயர்னாலே யிந்த
பாலம் பாகல்வாடம் பூர்த்தியாய்
கட்டலாச்சுது</poem>}}
{{larger|<b>கொம்பணைக் கல்வெட்டு</b>}}
{{left_margin|3em|<poem>
மகாராஜஸ்ரீ கனம் பொரிந்திய
கும்பினியாரவர்கள் நாளில்
ஜார்ஜி தூ நூரி துரையவர்கள்
பெர்ன்சிபல் கலக்ட்டர் அதிகாரத்தில்
பேபர் துரையவர்கள் சிவிலிஞ்சினீரில்
அசூர் மராமத்து சூபிரிண்டெண்டாண்டு
சுப்பராயர் நாயே யிந்த கீழ்பாலம்
பூர்த்தியாய் கட்டலாச்சுது
1303 u சப்டம்பர் மீ</poem>}}
{{nop}}<noinclude></noinclude>
hdtsutmb6vvl1a7gl8qqhlv5r1l4abr
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/92
250
456537
1837910
1444357
2025-07-01T14:53:33Z
Mohanraj20
15516
1837910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{center|{{x-larger|<b>வாழையடி வாழை</b>}}}}
வெள்ளோட்டுக் கனசு புரம் சாத்தந்தை குல நஞ்சையன் மகன் லிங்கையன் கொங்குப் பாண்டியரின் உயர் அலுவலனாகிக் கொங்கு நாட்டின் அதிகாரம் செலுத்தி வரும் நாளில் மேல்கரைப் பூந்துறை நாடு, மேல்கரை அரைய நாடுகளின் சில பகுதிகள் வளம்பெறக் காலிங்க ராயன் அணை கட்டிக் கால்வாயும் வெட்டி வைத்தார் என்பது வரலாற்று ஆய்வில் கண்டறிந்த உண்மையாகும். இம்மாபெரும் அறப்பணி கி. பி. 1265 வாக்கில் முடிந்திருக்க வேண்டும் என்றும் முன்பு கண்டோம்.
கால்வாய் வெட்டிய காலிங்கராயன் பரம்பரையினர் யார்? அவர்கள் இப்போது எங்குள்ளனர்? என்று அறிந்து கொள்வதும் சிறப்புமிகு அப்பரம்பரை பற்றிய பிற்கால வரலாற்றை அறிவதும் இன்றியமையாததாகும்.
புக்கானன் 7-11-1800 இல் ஈரோட்டில் காலிங்கராயன் கால்வாயைப் பார்த்துப் பாராட்டிவிட்டு ‘அவர் குடும்ப! இன்று இல்லை’ என்று எழுதியுள்ளார். ஆனால் 1-3-1798 இல் எழுதப்பட்ட பாலக்காட்டுக் கோட்டைக் கம்பெனிப் படையின் தளபதி எழுதிய கடிதத்திலும், மக்கென்சியின் கைபீதிலும் கால்வாய் வெட்டிய காலிங்கராயன் பரம்பரையில் வந்த 29 ஆவது பாளையக்காரரான குமாரசாமிக் காலிங்கராயர் பற்றிய செய்திகளையும் அவர் கையெழுத்தையும் காணுகின்றோம். எனவே புக்கானன் காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் அதாவது அவர் கால்வாயைக் கண்ட ஈரோட்டுப் பகுதியில் அதை வெட்டியவர் குடும்பம் இல்லை என்று கூறுவதாகவே நாம் கொள்ள வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
hx7svwqwq3eg7uhbh9popels3q2jb14
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/93
250
456538
1837892
1444358
2025-07-01T14:34:16Z
Mohanraj20
15516
1837892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||92|}}</noinclude>சேரமான் பெருமாள் காலத்தில் காவடிக்கா நாட்டுப் பகுதியில் காலிங்கராயன் குடும்பத்தினருக்குக் கொடையாகப் பூமி அளிக்கப்பட்டிருந்தது. அந்நிலத்தில் மாட்டுப் பண்ணை இருந்தது. ஏராளமான மாடுகள் அங்கு இருந்தன. மாடுகள் தண்ணீர் குடிக்க ஊற்றுக் குழிகள் தோண்டியிருந்தனர். அப்பகுதிக்கே காலிங்கராயன் குடும்பத்தினர் குடியேறினர்.
குல தெய்வமாம் அகத்தூர் அம்மனை எடுத்துக் கொண்டு தன்னுடன் வந்த பங்காளிகள் பலருடன் ஊற்றுக் குழிப் பகுதியில் குடியேறி ஆலயம் கட்டி அரண்மனை அமைத்துப் பண்டைய அரசர்போல் காடு கொன்று நாடாக்கிக் குளம் தோண்டி வளம் பெருக்கி நல்லாட்சி புரிந்து நாடு காத்தனர் காலிங்கராயன் மரபினர்.
வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்கள் காலத்தில் அவர்கள் அலுவலராகிய காலிங்கராயர் பரம்பரைக்கு நல்ல மதிப்பு இருந்தது. பாண்டியர் ஆட்சி மறைந்து ஒய்சளர் ஆட்சி கொங்குப் பகுதியில் ஏற்பட்டபின் காலிங்கராயன் குடும்பத்திற்கு ஏனைய பட்டக்காரர், பாளையக்காரர்கள் தங்களுக்கு அளிக்கும் மதிப்புக்களையும் மரியாதைகளையும் பரம்பரைப் பாளையக்காரர் அல்லாத காலிங்கராயர் குடும்பத்திற்கு அளிக்கக்கூடாது என்று கூறினர்.
இதைக் கண்டு மனம் பொறுக்காத காலிங்கராயர் பரம்பரையினர் காவடிக்கா நாட்டுப் பகுதிக்குச் சென்று விட்டனர். இதனைக் காலிங்கராயர் கைபீது பின்வருமாறு கூறுகிறது.
‘இப்படிக் காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் பிரசித்திப் பட்டவர்களாய் பலாட்டியனாய் வெள்ளோட்டு பூந்துறை நாட்டாதிபத்தியம் ஆண்டு வரும் நாளையிலே கொங்கு இருபத்து நாலு நாட்டுக்கும் பட்டக்காரர்களாய் இருக்கப்பட்டவர்கள் சரி இருப்பும்,<noinclude></noinclude>
qd43270vzl5zno685ffzh6o7ybovycg
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/94
250
456539
1837897
1444359
2025-07-01T14:40:06Z
Mohanraj20
15516
1837897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||93|}}</noinclude>சரி மரியாதைகளும் கொடுக்கப்படாது என்று சொன்ன தினாலேயும் பூர்வத்திலே சேரமான் பெருமாள் சாத்தந்த கோத்திரக்காரர்களுக்குக் காவிடிக்கை நாட்டுப் பிறவுத்வம் பண்ணிக் கொடுத்து இருக்கிற படியினாலேயும் ராயட்டுப் பட்டக்காரர்கள் சரி மரியாதி நடக்க மாட்டாதென்று சொல்லிக் கொண்டபடியினாலே வெள்ளோடு விட்டு மன வெறுப்பினாலே ஆனைமலைச் சருவிலே தங்கள் காணி ஆட்சியான காவிடிக்கா நாடு கொண்டு வனமாய் இருந்த ஸ்தலத்தில் தங்கள் பசுமாடுகளை விட்டுயிருந்த மாடுகளைச் சம்ரட்சனை பண்ணுகிறதுக்காகத் தங்கள் ஜனங்கள் இருந்தபடியினாலே காவிடிக்கா நாட்டு வனத்துக்கு வந்து... தம்முடைய மாட்டுப்பட்டிகள் இருக்கப்பட்ட இடத்தில் சேர்ந்து அரண்மனையும் கட்டி வீடுகள் உண்டுபண்ணி பூர்வத்தில் வனத்திலே மாடுகளுக்கு ஆதாரமாகத் தோண்டி யிருக்கப்பட்ட ஊற்றுக் குழிகள் இருக்கப்பட்ட இடத்தில் ஊருகட்டிவச்சபடியினாலே ஊற்றுக்குழி என்ற கிராம நாமதேயம் உண்டாகி ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப்பட்டவராய் இருந்தார்கள்'
இச்செய்தி ஊத்துக்குழி அகத்தூரம்மன் கோயில் கல்வெட்டு மூலமாகவும் உறுதிப்படுகிறது.
கால்வாய் வெட்டிய காலிங்கராயனுக்குப் பின் அக்குடும்பத்தில் வந்த அனைவரும் காலிங்கராயர் என்றே பெயர் தரித்துக் கொண்டனர்.
பூந்துறை நாட்டை விட்டு ஊத்துக்குழி சென்ற காலிங்கராயர் தமிழகமெங்கும் மாத்திரை செய்தார். கொங்கேழு சிவாலயங்களை வணங்கினார். பல தான தருமங்கள் செய்தார். ஊத்துக்குழியில் அகத்தூர் அம்மன் ஆலயத்தைக் கட்டினார். வடக்கே யாத்திரை சென்று ஒய்சள மன்னனிடம் பல பட்டங்களையும் பரிசுகளையும் பெற்றார்.
{{nop}}<noinclude></noinclude>
56on5w0pwu1au8sirlbum4mbldira1c
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/95
250
456540
1837906
1444360
2025-07-01T14:50:18Z
Mohanraj20
15516
1837906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||94|}}</noinclude>
தமக்கு உரிமையான நிலத்திற்கு எல்லைகளை வகுத்து அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டார்.
எல்லைப்பள்ளத்திற்குத் தெற்கும் பொன் குலுக்கி நாடு தாளக்கரைப் பள்ளத்திற்கு மேற்கும் மணியாறு கம்பளத் துறைக்குக் கிழக்கும் நல்லுருக்கா நாடு பாலாற்றுக்கு வடக்கும் அவர் நிலம் இருந்தது. கிழக்கு மேற்காக நான்கு காத தூரமும் தெற்கு வடக்காக 2 காத தூரமும் காலிங்க ராயனுக்கு உரிய நிலப்பகுதிகளாக இருந்தன. அப்பகுதியே அவருக்குரிய பாளையமாக அமைந்தது.
முதல் காலிங்கராயன் காலத்திலிருந்து அவர் பரம்பரையில் வந்த பலரும் இந்நிலத்தின் உரிமைகளை அனுபவித்துக் கொண்டு பாளையக்காரர்களாக ஊத்துக்குழியில் அதிகாரம் செலுத்தி வந்தனர். வமிசாவளியும் ஆங்கில வரலாற்று நூலும் முதல் காலிங்கராயர் காலத்திலிருந்து முறையாகப் பாளையப் பொறுப்பை ஏற்ற எல்லாப் பாளையக்காரர் பெயர்களையும் வரிசையாகக் கூறுகின்றன. இரண்டிலும் பெயர்கள் ஒத்து வருகின்றன.
{{left_margin|3em|1. காலிங்கராயர்
2. நஞ்சைய காலிங்கராயர்
3. அகத்தூர் காலிங்கராயர்
4. நஞ்சைய காலிங்கராயர்
5. காலிங்கராயர்
6. நஞ்சைய காலிங்கராயர்
7. அகத்தூர் காலிங்கராயர்
8. காலிங்கராயர்
9. பராக்கிரம நஞ்சைய காலிங்கராயர்
10. அகத்தூர் காலிங்கராயர்
11. காலிங்கராயர்
12. நஞ்சைய காலிங்கராயர்
13. விருமாண்ட காலிங்கராயர்
14. அகத்தூர் காலிங்கராயர்}}<noinclude></noinclude>
eoxtal27yo9640aaj9mp7y60xqbfuk2
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/96
250
456541
1837908
1444361
2025-07-01T14:52:10Z
Mohanraj20
15516
1837908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||95|}}</noinclude>{{left_margin|3em|15. காலிங்கராயர்
16. ஈசுவரமூர்த்திக் காலிங்கராயர்
17. காலிங்கராயர்
18. அகத்தூர் காலிங்கராயர்
19. விருமாண்டக் காலிங்கராயர்
20. பிள்ளை முத்துக் காலிங்கராயர்
21. சின்னைய காலிங்கராயர்
22. காலிங்கராயர்
23. நஞ்சைய காலிங்கராயர்
24. காலிங்கராயர்
25. நஞ்சைய காலிங்கராயர்
26. காலிங்கராயர்
27. நஞ்சைய காலிங்கராயர்
28. அகத்தூர் காலிங்கராயர்
29. குமாரசாமிக் காலிங்கராயர்
30. முத்துக்குமாரசாமிக் காலிங்கராயர்
31. முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர்
32. சிவசுப்பிரமணிய திருமூர்த்திக் காலிங்கராயர்
33. முத்துராமசாமிக் காலிங்கராயர்
34. அகத்தூர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர்
35. அகத்தூர் முத்து இராமசாமிக் காலிங்கராயர்}}
இவர்களில் மூத்த பிள்ளைதான் பாளையக்காரராகப் பட்டமேற்கும் வழக்கம் ஏற்பட்டது. பட்டத்திற்குரிய வராகும் மகன் ஒருவருக்கு இல்லாமலிருந்தால் அவருடைய தம்பி பட்டமேற்றார். 7,14,25,28,33ஆம் பாளையக் காரர்கள் தம்பியாக இருந்து பட்டம் எய்தியவர்களாவார்கள். தந்தை பாளையக்காரராக இருந்தால் மூத்த மகனுக்கு ‘குமார பாளையக்காரர்’ என்று பட்டம் சூட்டுவதும் உண்டு. பாளைய நிர்வாகப் பொறுப்பில் அவர்களுக்குப் பயிற்சி ஏற்பட இது மிகச் சிறந்த முறையாகக் கையாளப்பட்டது.
இரண்டாவது பாளையக்காரர் முதல் 8 ஆவது பாளையக் காரர் வரை அமைதியாக இருந்து அவ்வக்காலத்தில் ஆட்சி<noinclude></noinclude>
csctpatopphe07j1heasv6vydntkyy0
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/97
250
456542
1837926
1444362
2025-07-01T15:12:59Z
Mohanraj20
15516
1837926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||96|}}</noinclude>நடத்தும் அரசர்கள் குறிப்பறிந்து வரிவசூல் செய்து ஊத்துக் குழியில் வாழ்ந்து வந்தனர். 9ஆம் பாளையக்காரர் நஞ்சைய காலிங்கராயர் காலத்தில் கொங்கு நாட்டை ஆண்டவர் மதுரை விசுவநாத நாயக்கர் ஆவார். எல்லாப் பாளையக்காரர்களையும் மதுரைக்கு அழைத்துப் பேட்டி யளித்தார் விசுவநாத நாயக்கர். அக்காலத்தில் திருநெல்வேலிச் சீமையில் ‘அஞ்சு ராசாக்கள்’ (5 அரசர்கள்) கோட்டை கட்டிக்கொண்டு மதுரை நாயக்கருக்கு அடங்காமல் கலகம் செய்து வந்தனர். விசுவநாத நாயக்கர் ஆணைப்படி நஞ்சைய காலிங்கராயர் அவர்கள் ஐவரையும் போரில் அடக்கிச் சிறையெடுத்து மதுரைக்குக் கொண்டு வந்தார். நாயக்கர் காலிங்கராயரைப் பாராட்டிப் பல பரிசுகள் அளித்ததோடு ‘பராக்கிரமன்’ என்ற பட்டத்தையும் அளித்தார். மதுரைக் கோட்டையில் 51 ஆம் கொத்தளத்துக்கு அவரைத் தலைவராக்கினான். பாளையத்தைச் சேர்ந்த கிராமங்களின் வரிகள் அனைத்தையும் நீக்கினான். 72 பாளையப்பட்டில் ஊத்துக்குழியை ஒன்றாக மதுரை நாயக்க அரசர்கள் நியமித்தது ஏனைய கொங்கு நாட்டுப் பட்டக்காரருக்கும் பாளையக்காரருக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும்.
19 ஆம் பாளையக்காரர் விருமாண்டக் காலிங்கராயர் காலத்தில் மதுரை அரசுக்கும் மைசூர் அரசுக்கும் போர் ஏற்பட்டது. அப்போர்கள் பெரும்பாலும் ஆனைமலை சூழ்ந்த கொங்குநாட்டுப் பகுதிகளுக்காகவே நடந்தது. எனவே தங்கள் அதிகாரத்தையும் நிலங்களின் உரிமைகளையும் காத்துக் கொள்வதே பாளையக்காரர்களுக்குப் பெரிய பொறுப்பாக இருந்தது. 22 ஆம் பாளையக்காரர் வரைக்கும் இந்த நிலையே நீடித்தது.
23 ஆம் பாளையக்காரர் நஞ்சைய காலிங்கராயர் காலத்தில் ஆனைமலைப் பகுதி மைசூர் இம்முடி ராஜாவின் வசம் இருந்தது. நஞ்சைய காலிங்கராயர் குடகின் மீது<noinclude></noinclude>
syg63b8md3ni4mayqqrmm17l3iyagq7
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/98
250
456543
1837929
1444363
2025-07-01T15:15:14Z
Mohanraj20
15516
1837929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||97|}}</noinclude>படையெடுத்துக் கொண்டு சென்று மைசூருக்காகப் போராடி வென்றார்.
உள்ளம் உவந்து 8 கலசங்களுடன், தங்கப் பல்லக்கும், விலைமதிக்க முடியாத ஆடையணிகளும், 9 கிராமங்களில் 750 பொன் வரிச்சலுகையும் அளித்தார். அப்போது காலிங்கராயரிடம் 5000 காலாட்படையினரும் 5000 குதிரை வீரர்களும் இருந்தனர். ஒரு கடகம் யானைப் படையும் இருந்தது. இவரும் இவருக்குப் பின்னர் வந்தவர்களும் ஆனைமலையில் யானைகள் பிடித்து மைசூர் அரண்மனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டும், அரசர்களுக்கு வேண்டிய காலத்தில் உதவி செய்து கொண்டும் வாழ்ந்தனர். ஆனைமலையையும் மாச்சி நாயக்கன் குட்டையையும் காவல் காத்து வந்தனர். இவ்விடங்களின் வரி வசூல் உரிமைகைளும் இவர்கள் வசமே இருந்தன. எனினும் அரசர்கள் மாறும்போது பாளையக் காரர்களுக்குச் சில தொல்லைகள் இருந்தன. இக்காலத்தில் காவல் படையிலும் பாதி அழிந்து விட்டது.
26 அம் பாளையக்காரர் கோழிக்கோடு அரசர்மீது போர் தொடுத்துத் தோல்வியடைந்த போதும் ஆனை மலை மீதுள்ள உரிமையை விடவில்லை. அவர் காலம் வரை வரி வசூலிக்கும் உரிமை இருந்தது.
27, 28 ஆம் பாளையக்காரர்கள் காலத்தில் ஐதர் அலியின் படைகள் கொங்கு நாட்டில் கொள்ளையடித்தன, கொலைகள் புரிந்தன. வரி வசூலிக்கும் உரிமைகள் அனைத்தும் எல்லாப் பாளையக்காரர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. கி.பி. 1769 முதல் 1799 ஆம் ஆண்டு வரை அதிகாரத்திலிருந்த குமாரசாமிக் காலிங்கராயர் காலத்திலும் ஐதர் அலியின் மகன் திப்பு சுல்தானின் தொல்லைகள் மிகுந்தன. எனவே, திப்புவை ஒழிக்க அவர் கிழக்கிந்தியக் கம்பெனியாரோடு சேர்ந்து கொண்டார். குமாரசாமிக் காலிங்கராயரைப் போலவே மற்றக் கொங்கு நாட்டுப் பட்டக்காரர்கள் பெரும்பாலும் திப்புவின் தொல்லைகள்<noinclude></noinclude>
qmudu22810zpxw31h1x2jq1zh8a55u9
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/99
250
456544
1837931
1444364
2025-07-01T15:18:37Z
Mohanraj20
15516
1837931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||98|}}</noinclude>பொறுக்க மாட்டாமல் திப்புவை ஒழிக்க ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பணம், படை போன்றவைகளை அளித்து எல்லா உதவிகளையும் செய்தனர். அனைவரும் ‘கும்பினி சர்க்கார் அதிகாரம்’ நாட்டில் நிலைக்கத் துணைபுரிந்தனர். இதற்கான பல சான்றுகள் சென்னை அரசினர் பழஞ்சுவடிச் சாலையில் இருக்கின்றன. இறுதியில் திப்புவின் ஆட்சி ஒழிக்கப்பட்டபோது, தம் பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையைக் குமாரசாமிக் காலிங்கராயர் பெற்றார். ஆனால் வசூலில் 10 இல் 7 பங்கைக் கம்பெனிக்கு அளித்துவிட வேண்டிவந்தது. 10 இல் 3 பங்கையே காலிங்கராயர் பரம்பரையினர் வைத்துக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் இருந்தது. 30 ஆம் பாளையக்காரர் முத்துக்குமாரசாமிக் காலிங்கராயர் நாளிலும் அவ்வாறே நடந்தது. ஜமீன் எல்லைக்குள் 19ஆம் நூற்றாண்டில் 10 கிராமங்கள் அடங்கியிருந்தன. 10,600 ரூபாய் வசூல் ஆயிற்று. அரசுக்கு 4393 ரூபாய் அளிக்கப்பட்டது. இது பிற்கால நிலை.
31ஆம் பாளையக்காரர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர் 1832 இல் பிறந்தார். அவர் பட்டத்திற்கு வந்தவுடன் ஆனைமலை, மாச்சி நாய்க்கன் குட்டை போன்ற இடங்களில் சில பகுதிகளை விலைக்கு வாங்கினார். அங்கு மாளிகை களையும் கட்டினார். இவர் சிறுவராய் இருக்கும்பொழுதே இவர் தாயார் நஞ்சையம்மாள் தன் சேமிப்புப் பணத்தைக் கொண்டு அம்பராம் பாளையத்தில் ஒரு பெரிய மாடி வீட்டைக் கட்டினார். அது பிற்காலத்தில் தங்கும் சத்திரமாகப் பயன்படுத்தப்பட்டது. இவர் 23-4-1874 ஆம் ஆண்டு காலமானார்.
அடுத்து 32 ஆம் பாளையக்காரராகச் சிவசுப்பிரமணிய திருமூர்த்திக் காலிங்கராயர் பட்டத்திற்கு வந்தார். ஜமீன் காரியங்களில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். சில புதுக்கிராமங்களையும் விலைக்கு வாங்கினார். தமிழில் மிகப் புலமை கொண்ட அவர் ஆங்கிலத்தையும் தனியாக ஓர் ஆசிரியரிடம் கற்றார். வேதாந்த ஆராய்ச்சியில்<noinclude></noinclude>
5agdtcej5tu4sxjuqr7lhargys32p0m
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/100
250
456545
1837937
1444365
2025-07-01T15:27:29Z
Mohanraj20
15516
1837937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||99|}}</noinclude>தேர்ச்சி பெற்று விளங்கினார். இரண்டாம் சந்திர குப்தரும் ஹர்ஷரும் அக்பரும் தமிழகத்து மன்னர்களில் பலரும் எப்பொழுதும் வேதாந்த வல்லுநர்களைத் தம் அருகிலேயே வைத்துக் கொண்டிருந்தது போல இவரும் வேதாந்தப் பண்டிதர்களையும் தமிழ்ப் புலவர்களையும் தம் அருகிலேயே வைத்துக் கொண்டிருந்தார். எனவே இவரை அனை வரும் ‘வேதாந்த துரை’ என்றழைத்தனர். 7 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த இவர் 1881 ஆம் ஆண்டு காலமானார்.
பின்னர் இவருடைய தம்பி முத்துராமசாமிக் காலிங்கராயர் 33 ஆம் பாளையக்காரர் ஆனார். இவர் 24-1-1864 இல் பிறந்தார். 17 ஆம் வயதில் பாளையக்காரர் ஆனார். இவர் இளமையில் குதிரை ஏற்றத்திலும் வேட்டையாடு வதிலும் சிறந்து விளங்கினார். மற்போரிலும் உடற்பயிற்சி யிலும் ஆர்வம் காட்டினார். இசையை முறையாகக் கற்றதோடு சிறந்த இசைப் புலவர்களையும் ஆதரித்தார். பாளையக்காரரானவுடன் திரு ரைட் என்ற ஆங்கிலேயரிடம் தனியாக ஆங்கிலம் கற்றார். அரண்மனையை அழகுபடுத்து வதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஜமீன் வருமானத்தை உயர்த்தினார். இவர் செய்த எல்லாச் சிறந்த பணிக்கும் திருவனந்தபுரம் மானுப்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார்.
புலவர்க்கு என்றும் ஓய்விலாது உதவு கீர்த்தி ஓங்க வாழ்பவர் சமத்தூர்க் குறுநில மன்னர் வானவராயர் மரபினர். சேர அரசிடம் வானவராயர் பட்டம் பெற்றவர்கள். வணங்காமுடிப் பட்டம் பெற்ற அவர்கள் கொங்கு வேளாளரில் பவள குலத்தின் பண்புடைத் தலைவர்கள். 1894 இல் சமத்தூர்ப் பாளையக்காரர் வானவராயர் நோய் வாய்ப்பட்டார். ஊத்துக்குழிப்பாளையக்காரருக்கு உறவின ரான சமத்தூர்ப் பாளையக்காரர் தன்மகனை ஊத்துக்குழிப் பாளையக்காரரிடம் ஒப்படைத்தார். சமத்தூர்ப் பாளையக் காரரும் ஊத்துக்குழியில் தங்கியிருந்து 14-11-1895 இல்<noinclude></noinclude>
ogbskngk4u149a57wcydisd5pdte9b9
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/101
250
456546
1837942
1444371
2025-07-01T15:32:57Z
Mohanraj20
15516
1837942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||100|}}</noinclude>காலமானார். கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஊத்துக்குழிப் பாளையக்காரரிடமே சமத்தூர்ப் பாளையம் இருக்கட்டும் என்று செய்த பரிவுரையை அரசு ஏற்றுக் கொண்டது. சமத்தூர் ஜமீன் வருமானத்தை உயர்த்திச் சீர்திருத்தங்கள் பல செய்து சமத்தூர் இளைய ஜமீன்தாருக்கும் தன் மகளுக்கும் 1901 இல் மிகச் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.
மைவாடி ஜமீன்தார் இறந்தவுடன் மாவட்ட நீதிபதியின் அதிகாரப் பொறுப்பிலிருந்த இந்த ஜமீனை அரசு வேண்டு கோள்படி 1898 இல் அதன் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றார். தாலூக்காக் கழகம், மாவட்டக் கழகம் இவைகளில் உறுப்பினராக இருந்தார். கோவை வேளாண்மைக் கல்லூரியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல நிலையங்களுக்கும் விழாக்களுக்கும் ஆயிரக் கணக்கில் நன்கொடைகள் அளித்தார். 1912இல் ஊத்துக்குழியில் ஒரு தொடக்கப் பள்ளியை ஏற்படுத்தி 3000 ரூபாய் மானியம் அளித்ததுடன் மாத வருமானம் நிலைத்து மானியமாக வரவும் தக்க ஏற்பாடுகள் செய்திருந்தார்.
மிகச் சிறந்த அறிவாளியான இவர் பணியாட்களிடமும் மிக அன்பாக நடந்து கொண்டார். 1910 ஆம் ஆண்டு கொடிய பிளேக் நோய் உண்டானபோது அரிய பணிகள் பல புரிந்தார். இவருடைய பணியைப் பாராட்டிய அரசாங்கத்தினர் இவருக்கு 1913 இல் திவான்பகதூர் பட்ட மளித்துச் சிறப்பித்தனர். 1917 இல் ஜமீன் தார்கள் பிரதிநிதியாக இந்திய அரசுச் செயலாளர் மாண்டேகுவையும் இந்திய வைசிராய் செம்சுபோர்டையும் சந்தித்தார்.
1917ஆம் ஆண்டு ஆகஸ்டு 19, 20 தேதிகளில் பிராமணரல்லாதோர் மாநாடு {{larger|<b>(Non-Brahmin Conference)</b>}} கூட்டப்பட்டபோது, வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்து முக்கியப் பங்கேற்றார். அவர் காலத்தில் நடத்தப் பட்ட நான்கு மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.
{{nop}}<noinclude></noinclude>
67pq92gk2ha9pxcsd4zlvuzntl5r9ni
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/102
250
456547
1838052
1444372
2025-07-02T04:02:16Z
Mohanraj20
15516
1838052
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||101|}}</noinclude>தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தில் {{larger|<b>(South Indian Liberal Federation)</b>}} உறுப்பினராக இருந்தார். இன்றைய தமிழக அரசியலுக்குக் கால்கோளாக இருந்த அந்த அமைப்புக்களைத் தோற்றுவித்துக் கட்டிக் காத்த பெருமை முத்துராமசாமிக் காலிங்கராயரையே சேரும்.
சென்னை ஜமீன்தார்கள் நிலக்கிழார்கள் சங்கத்தின் {{larger|<b>(Madras Zamindars and Landlords Association)</b>}} துணைத் தலைவராக விளங்கினார். இவர் பொதுமக்களுக்காகப் பல்வேறு நன்கொடைகளைப் பெரிய அளவில் வழங்கினார்.
1. பிராமணரல்லாதோர் மாநாடு
2. இங்கிலாந்து இளவரசரின் திருமணம்
3. சென்னையில் அமைக்கப்பட்ட ராஜ்குமார் கல்லூரி
4. டாக்டர் நாயர் அவர்களின் நினைவு நிதி
5. குன்னூரிலுள்ள பாஸ்டர் நிறுவனம்
6. வேல்ஸ் இளவரசரின் வரவேற்புக்குழு
7. குன்னூரிலுள்ள லாலி மருத்துவமனை
ஆகியவற்றிற்குப் பெருந்தொகை வழங்கினார்.
இவர் 1918இல் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்குன்னூர், கொடைக்கானலில் ஓய்வெடுத்து வந்தார். 1931இல் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார்.
கோவையில் முக்கியமான தெரு ஒன்றிற்குக் காலிங்கராயர் தெரு என்று பெயர் வைத்திருப்பது கோவை மக்களுக்கு இக் குடும்பத்தின் மீது இருந்த பற்றுக்கு எடுத்துக் காட்டாகும்.
{{nop}}<noinclude></noinclude>
d4i66y2pay4xr797vk7366jjjdaokr3
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/103
250
456548
1838055
1444373
2025-07-02T04:12:57Z
Mohanraj20
15516
1838055
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||103|}}</noinclude>34 ஆவது பாளையக்காரராக வந்தவர் அகத்தூர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர். இளமையிலேயே தந்தை இருக்கும்போதே பல பொதுப்பணிகளில் ஈடுபட்டார். முதல் உலகப் பெரும் போரின்போது படைக்கு ஆட்களைச் சேர்ப்பதில் மிக உதவினார். கோவையில் கௌரவ நீதிபதியாக இருந்தார். படையில் பெரிய அதிகாரியாக இருக்கச் சென்னை ஆளுநரால் அழைக்கப் பட்டார். ஆனால் இவர் அப்பதவியில் சேரவில்லை. இவருடைய பணிகளைப் பாராட்டிப் பட்டங்களும் பதக்கங்களும் பல வழங்கப்பட்டன. 1932 இல் வேல்ஸ் இளவரசர் சென்னை வந்தபோது அவரைச் சிறப்புடன் வரவேற்றார். நாடு போற்றும் நல்லோராக விளங்கிய இவர் 1936 இல் மறைந்தார். இவருக்கு அளிக்கப்பட்ட பல பாராட்டுக்களில் மாதிரிக்காக இரண்டு இங்குக் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
{{center|{{x-larger|<b>1</b>}}}}
{{center|{{x-larger|<b>The Kumara Poligar of Uttukuli</b>}}}}
{{larger|Sri Agathur Muthu Krishnaswami Kalingarayar, the eldest son and heir, is now actually managing the affairs of the poliem after the retirement of his revered father. He took a leading part in the year 1919 in the recruitment of men for field service in Mesapatomia. He was appointed Honorary Assistant Recruiting Officer for the Pollachi Taluk. He recruited the largest number of men from Coimbatore District, especially in the Pollachi Taluk. He was awarded a certificate of Merit and a Medal for the valuable Services rendered in the recruitment of men for field service. The following is a copy of the badge and sannad presented;—}}
{{nop}}<noinclude></noinclude>
lxcyt3iygx0njdbkjack1wpqwiycbzm
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/104
250
456549
1838064
1444374
2025-07-02T04:29:32Z
Mohanraj20
15516
1838064
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||103|}}</noinclude>{{larger|Recruiting badge awarded to M. R. Ry. Agathur Muthu Krishna Kalinga Rayar Avargal, Kumara Zamindar of Uttukuli and Member of thie District Board, Coimbatore, the Services rendered in connection with recruiting during the great war.}}
{{Right|{{larger|Sd/- A. H. BINGLEY,}}}}
{{larger|10th December 1919.}}
{{Right|Major General,<br>Secretary to the Government of India,<br>Army Dept.}}
{{center|{{x-larger|<b>11</b>}}}}
The Sanned is presented to M. R. Ry. Agathur Muthu Krishna Kalinga Rayar Avargal, Kumara Zamindar of Uttukuli by order of hris excellency the Viceroy and Governor General of India in recognition of service rendered to the Indian Army during the great war and as a mark of approbation.
{{Right|Sd/- A. H. BINGLEY,}}
{{larger|SIMLA
Dated : 3rd Aug. 1920.}}
{{Right|Major General,<br>Secretary to the Govt. of India,<br>Army Dept.}}
35 ஆவது பாளையக்காரராகப் பட்டமேற்றவர் உயர் திரு அகத்தூர் முத்துராமசாமிக் காலிங்கராயர் ஆவார்கள். 9-4-1918 இல் அகத்தூர் முத்துக்கிருட்டிண சாமிக் காலிங்கராயருக்கும் சண்பகவல்லியம்மாளுக்கும் மகனாகப் பிறந்த இவர் 13-4-1936 இல் ஜமீன் பட்டமேற்று வழிவழிப் பெருமைக்கு உரியவராயினர்.
{{nop}}<noinclude></noinclude>
q1tozhmgh4x11pvpeyinh6czgr80bps
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/105
250
456550
1838066
1444375
2025-07-02T04:32:11Z
Mohanraj20
15516
1838066
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||104|}}</noinclude>இவருடன் பிறந்தவர்கள் திரு அருணகிரிக் காலிங்கராயர் திரு கதிர்வேல் காலிங்கராயர் என்னுமிருவராவர். இவருடைய சகோதரியார் திருமதி அகத்தூர் அம்மாள் அவர்கள் பழையகோட்டைப் பட்டக்காரர் திரு நல்ல சேனாதிபதிச் சர்க்கரை மன்றாடியார் அவர்களின் வாழ்க்கைத் துணைவியாராவார். பட்டக்காரர் அவர்களின் சகோதரியார் திருமதி ருக்மணி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்று வாழ்ந்த இல்வாழ்வில் மக்கட் செல்வங்களாகக் கிருஷ்ணராஜ் காலிங்கராயர், வெற்றிவேல் காலிங்கராயர், மோகன்ராஜ் காலிங்கராயர், அருண்குமார் காலிங்கராயர் எனும் நான்கு ஆண் மக்களும் சித்திரகலா காலிங்கராயர் என்ற பெண்ணும் உள்ளனர். மோகன்ராஜ் காலிங்கராயர் பொள்ளாச்சித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அகத்தூர் முத்து ராமசாமிக் காலிங்கராயர் அவர்கள்தம் மைத்துனர் பழையகோட்டை இளவல் அர்ஜுனன் அவர்கள் போலவே பெரியார், அண்ணா ஆகியோர்மீது மிகுந்த பற்றுக்கொண்டு விளங்கினார். சமூக சீர்திருத்தம், பொதுமைக் கொள்கை ஆகியவற்றின் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். மாவட்டத்தில் அரசியல் இயக்கங்களில் நேரடியாக ஈடுபடாமலேயே அவைகட்கு வழிகாட்டியாக விளங்கினார். அஞ்சாமையும், ஆற்றலும், பேரறிவும் கொண்டு பொதுப் பிரச்சனைகளை அணுகினார். கோவையில் அண்ணா சிலை நிறுவியது இவர்கள் முயற்சியாலே யாகும். அண்ணா நினைவாக இன்னும் பல நிறுவனங்களை ஏற்படுத்துவதாக இருந்தார். அதற்குள் அவர்கள் 20-11.1966 இல் அமரர் ஆனார்கள்.
{{nop}}<noinclude></noinclude>
sqg12ulp0501m81sawb1lzm9ewfsj4y
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/106
250
456551
1838224
1447456
2025-07-02T08:53:41Z
Mohanraj20
15516
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1838224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>
{{Css image crop
|Image = காலிங்கராயன் கால்வாய்.pdf
|Page = 106
|bSize = 393
|cWidth = 374
|cHeight = 242
|oTop = 27
|oLeft = 6
|Location = center
}}
{{center|ஊராட்சிக் கோட்டை மலை}}
{{Css image crop
|Image = காலிங்கராயன் கால்வாய்.pdf
|Page = 106
|bSize = 393
|cWidth = 253
|cHeight = 259
|oTop = 295
|oLeft = 72
|Location = center
}}
{{center|கல் வந்த வழி}}<noinclude></noinclude>
jrxroih4zxkst71urgettc9jj7a4lid
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/107
250
456552
1838225
1447460
2025-07-02T08:54:05Z
Mohanraj20
15516
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1838225
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>
{{Css image crop
|Image = காலிங்கராயன் கால்வாய்.pdf
|Page = 107
|bSize = 393
|cWidth = 351
|cHeight = 263
|oTop = 18
|oLeft = 17
|Location = center
}}
{{center|அணையில் கம்பி இணைப்பு}}
{{Css image crop
|Image = காலிங்கராயன்_கால்வாய்.pdf
|Page = 107
|bSize = 393
|cWidth = 366
|cHeight = 257
|oTop = 306
|oLeft = 14
|Location = center
|Description = காலிங்கராயன் அணை
}}<noinclude></noinclude>
9bikgfya7pzm705byr394e8j705ckw4
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/108
250
456553
1838226
1447459
2025-07-02T08:54:39Z
Mohanraj20
15516
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1838226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>
{{Css image crop
|Image = காலிங்கராயன்_கால்வாய்.pdf
|Page = 108
|bSize = 393
|cWidth = 342
|cHeight = 266
|oTop = 9
|oLeft = 33
|Location = center
|Description = தலைப்பு மதகு
}}
{{Css image crop
|Image = காலிங்கராயன்_கால்வாய்.pdf
|Page = 108
|bSize = 393
|cWidth = 381
|cHeight = 279
|oTop = 290
|oLeft = 8
|Location = center
|Description = ஈரோடு - ஐயனாரப்பன் கோயில்
}}<noinclude></noinclude>
srdqiiirlarzcd2946emu6815y2tpn6
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/109
250
456554
1838227
1447458
2025-07-02T08:54:46Z
Mohanraj20
15516
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1838227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>
{{Css image crop
|Image = காலிங்கராயன்_கால்வாய்.pdf
|Page = 109
|bSize = 393
|cWidth = 275
|cHeight = 270
|oTop = 18
|oLeft = 47
|Location = center
|Description = கால்வாய்க் காட்சி
}}
{{Css image crop
|Image = காலிங்கராயன்_கால்வாய்.pdf
|Page = 109
|bSize = 393
|cWidth = 335
|cHeight = 251
|oTop = 315
|oLeft = 29
|Location = center
|Description = நொய்யலில் கலத்தல்
}}<noinclude></noinclude>
jaoyz4vi6kgs2pqh3fxugnlqizwo0o6
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/110
250
456555
1838070
1444380
2025-07-02T04:38:08Z
Mohanraj20
15516
1838070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{center|{{x-larger|<b>நிருவாகம் - அன்றும் இன்றும்</b>}}}}
காலிங்கராயன் காலத்தில் கால்வாய்ப் பராமரிப்புக்குக் கொங்கு நாட்டில் ‘காலிங்கராய வினியோகம்’ என்ற வரி வசூலிக்கப்பட்டது. சோழநாட்டில் இதுபோன்று ‘காவிரிக் கரை வினியோகம்’ என்ற வரி வாங்கப்பட்டதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
ஆங்காங்கு இருக்கும் ஊர்ச்சபைகள் கால்வாய்க் கரைகளின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் கவனித்துக் கொண்டன. அந்தந்தப் பகுதி விவசாயிகளே தங்கள் பகுதிக் கால்வாயைக் கண்காணித்துக் கொள்ளும் ‘குடி மராமத்து முறை’யும் சில காலங்களில் இருந்தது. பரம்பரைத் தொழிலாளர் பணியமர்ந்து கால்வாயைக் கண்காணிக்கும் வழக்கமும் இருந்தது.
கால்வாய் நீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமைக் காகவும் கால்வாய்ப் பராமரிப்புக்கும் பழங்காலத்தில் பெல்லாகத் தீர்வை வசூல் செய்யப்பட்டது. நெல்லாக அப்பதில் பல குறைகளும் சமச்சீரின்மையும் காணப்படவே தீர்வை காசாக நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது ஊரவை, நாடு, அரசுப் பங்குக்குக் காசாகக் கொடுக்கப் பட்ட பின்பும் கூட உள்ளூர்க் காவல்காரர், தலையாரி போன்ற கீழ்நிலை அலுவலர்கட்குத் தானியமாகவே கூலி கொடுக்கப்பட்டது.
இவ்வாறு வசூல் செய்யப்பட்ட தீர்வை, நிலங்களின் தரத்திற்கு ஏற்ப அமைந்திருந்தது. பாசனப் பகுதியில் நன்செய்க்கு 212 ரூபாயும் ன்செய்க்கு 131 ரூபாயும் மானாவரிக்கு 123 ரூபாயும் வரியாகும். இப்பொழுது வேறுபாடு இன்றி எக்டேருச்கு (2.47 ஏக்கர்) 551 ரூபாய் வசூலிக்கப் படுகிறது.
க.—7
{{nop}}<noinclude></noinclude>
6quwk9t2g6lzpvznz0deg3vt51vmmir
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/111
250
456556
1838228
1447457
2025-07-02T08:55:13Z
Mohanraj20
15516
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1838228
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{Css image crop
|Image = காலிங்கராயன்_கால்வாய்.pdf
|Page = 111
|bSize = 450
|cWidth = 420
|cHeight = 203
|oTop = 21
|oLeft = 17
|Location = center
|Description = காலிங்கராயன் கால்வாய்
}}<noinclude></noinclude>
j0vuobfsvlsqo2d6b6zzd9ga3g6jo4w
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/112
250
456557
1838132
1444382
2025-07-02T06:03:00Z
Mohanraj20
15516
1838132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||106|}}</noinclude>தனிப்பாடல் ஒன்று பாரப்பத்தியம், மேல்மணியம், டபேதார், சுபேதார் இவர்கள் அணை, கால்வாய் நிருவாகிகள் என்றும், தாசில்தார் இவர்கட்கு மேல் அதிகாரி என்றும் இவர்கள் பொருட்டு செய்க்கு 5 வள்ளம் நெல் அளக்க வேண்டும் என்றும் கூறுகிறது. சிவிலிஞ்சினியர், பிரின்சிபல் கலெக்டர் ஆகியோர் இவர்களின் மேல் உயர் அதிகாரிகள் ஆவர். காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் அப்பணிக்காகக் கொடுக்கப்படும் நெல் ‘அணை வள்ளம்’ என்னும் தனி அளவை மூலம் அளந்து தரப்பட்டது என்பதும் தெரிகிறது. அடிக்கடிப் பாலங்கள் பழுதுபார்த்துக் கால்வாய் மராமத்து வேலைகளும் நடக்கவேண்டும் எனக் கூறுகிறது அப்பாடல்.
அரசு, முத்திரைக் காகிதம் அவ்வப்போது அனுப்பும் என்றும், முத்திரைக் காகிதத்தில் கண்டுள்ளபடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்றும் அதற்கு மாறுபட்டால் கையிழுத்துப் பிடித்து கடுந்தண்டனை கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக மதகைப்பிடுங்கி நீர் பாய்ச்சினால் 5 ரூபாய் அபராதம் போட்டுக் கழுத்தில் துடும்பு போட்டு அடித்து வாசியூர் (பாசூர்) முதல் ஆவுடையாபாறை வரை அவன் தவறு எல்லோருக்கும் தெரியும்படி செய்யப்படும்.
சுமார் 170 ஆண்டுகட்கு முன் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தில் கால்வாய் பொதுப் பணித்துறை நிருவாகத் தின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இன்று வரை அணையையும் கால்வாயையும் பொதுப்பணித்துறையே நன்கு கவனித்து வருகிறது. பொதுப்பணித்துறை நிருவாகத்தின்கீழ் அணையும் கால்வாயும் வந்ததும் 1832 இல் பல பகுதிகளில் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் அணைத்தோப்பு, காலிங்கராயன் பாளையம், கொம்பணை ஆகிய இடங்களில் உள்ளன. ஹி.டி. டுறாறி மாவட்ட ஆட்சித்தலைவராகவும் பேப்பர்<noinclude></noinclude>
l6yaar1hjy65wtejhe1yry17esy03zu
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/113
250
456558
1838137
1444383
2025-07-02T06:05:58Z
Mohanraj20
15516
1838137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||107|}}</noinclude>துரை சிவில் எஞ்சினியராகவும் இருந்தபோது 1832... 1833இல் சுப்பராயர் என்பவர் பாலங்கள் அமைத்ததாக அக்கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
1832, 1868, 1891, 1936, 1954, 1962, 1974 ஆகிய ஆண்டுகளில் பெரிய அளவில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றன. 1973-74 இல் 66 லட்சம் ரூபாய் செலவிடப் பட்டது. அதற்காகத் தனிப்பிரிவு ஏற்பட்டது. அத்தனிப் பிரிவு 30.6.1977ல் கலைக்கப்பட்டது .
காலிங்கராயன் கால்வாயில் மொத்தம் 769 மதகுகள் உள்ளன. இம்மதகுகள் யாவும் கால்வாயின் இடது பக்கத்தில் அமைந்துள்ளவையாகும். வலது பக்கம் பெரும்பாலும் நிலம் மேடாக இருக்கும் காரணத்தால் அடைக்கப்பெறாத குழாய் மூலமாகவோ அல்லது கால்வாயின் அருகில் அமைக்கப்பட்டுள்ள உயரமான துலைகளின் மூலமாகவோ மாடுகளைக் கொண்டு இறைத்து நீர்ப்பாசனம் செய்கிறார்கள். அண்மையில் நீர் இறைக்கும் இயந்திரங்களைப் பலர் புதிதாக வலதுபுறம் வைத்துள்ளதால் முதலில் 1950 வரையிலும், பின்னர் 2.10-1961 வரையிலும், பின்னர் தற்போது 1984 வரையிலும் அவ்வாறு வைத்துக் கொண்டவர்களுக்கு அனுமதி வழங்கினர். இப்போது 1984க்குப் பின்னர் இயந்திரம் பொருத்தியவர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது . 1962-73 வரை நீர் இறைக்கும் இயந்திரங்கள் 68% அதிகரித்துள்ளது. வலது புறம் அமைக்கப்பட்ட இந்த இயந்திரங்கள் மாடுகளுக்குப் பதிலாக அமைக்கப்பட்டது தான். வேளாண்மையில் மாடுகட்குப் பதிலாக இயந்திரக்கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கருதி 2-12-1962 பொதுப்பணித்துறை ஆணை எண் 3339 இன்படி அனை வருக்கும் அனுமதி அளிக்கலாம். இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.
தலைப்பு மதகுகள் 1879 ஆம் ஆண்டு கட்டப்பட்டன.
காலிங்கராயன் கால்வாயில் அதிகபட்சம் உயரம் நீர் தேங்கி நிற்கும் அளg 8 அடியாகும்.
{{nop}}<noinclude></noinclude>
5smdqyg9y2duddhq8cd3mvrx3dc0q06
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/114
250
456559
1838144
1444384
2025-07-02T06:19:31Z
Mohanraj20
15516
1838144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||108|}}</noinclude>காலிங்கராயன் கால்வாயில் முதலில் கல் மதகுகள் அமைக்கப்பட்டுப் பூட்டும் வசதியில்லாமல் தண்ணீரை நீர்ப்பாசனத்திற்கு உபயோகித்து வந்தார்கள். தற்போது ஒவ்வொரு மதகிற்கும் பூட்டும் வசதியுள்ளது. இதனால் தண்ணீர் சேதமாவது தடுக்கப்படுகிறது.
கால்வாயில் நீர் பகிர்ந்தளித்தலைக் கவனிக்க கால்வாயை நான்கு பகுதியாகப் பிரித்திருக்கின்றனர். முதல் பகுதிக்கு ஒரு நீர்ப்பதிவாளரும் இரண்டு நீராணிகளும் பொறுப்பாக உள்ளனர். அவர்கள் கால் வாயைக் கவனித்துக் கொண்டு நீர் பகிர்ந்தளித்தலையும் கவனிக்க வேண்டும். ஏனைய மூன்று பகுதிகட்கும் ஒரு கரைக் கண்காணிப்பாளரும் நீராணிகள் நால்வர் வீதமும் கவனித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 16 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நீர்ப்பாசனத்திற்குத் தண்ணீர் அனுமதிக்கப் பட்டு ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 6 மணி வரை பத்தரை மாதங்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும். மிகத் தொன்மையான இப் பவானி யாற்று அணை மூலம் 16 மைலிலிருந்து 56½ மைல் வரை முப்போகத்திற்குக் காலிங்கராயன் கால்வாய்த் தண்ணீர் பெறுவது காலிங்கராயன் கால்வாய்ப் பகுதி உழவர்களின் அடிப்படைப் பூர்வீக உரிமையாகும். இது 2.11-1966 அன்று பொதுப்பணித்துறை வெளியிட்ட 2647 ஆம் எண் அரசு ஆணையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10½ மாதம் தண்ணீர் விடுவதை 9 மாதமாகக் குறைத்துப் பாசனத்தை இருபோகமாக்கித் தாராளமாகப் பாசனத்திற்குத் தண்ணீர் விட வேண்டும் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
கால்வாயில் ஆங்காங்கே சிறு ஓடைகள் மூலம் வெள்ளநீர் வந்து சேர்கிறது. அந்த நீரால் வாய்க்காலின் முழுஅளவு நீர்மட்டம் உயர்ந்து கரைக்கு ஆபத்து உண்டாகும் நிலையில் இருந்தால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தாம்பாங்கிகள் எனப்படும் மணற்போக்கிகளின் மூலமாகப்<noinclude></noinclude>
9wtapaasu0b611ns448swzoxpv4nzvu
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/115
250
456560
1838148
1444385
2025-07-02T06:21:36Z
Mohanraj20
15516
1838148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||109|}}</noinclude>போதிய அளவிற்குத் தண்ணீர் உடனுக்குடன் வெளியேற்றப் பட்டுக் கரை பாதுகாக்கப்படுகிறது. இப்போது அண்மையில் சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் போன்ற இடங்களில் ஓடை நீர் கால்வாயில் கலக்காமல் மேலே செல்லவும் கால்வாய் கீழே குழாய் மூலம் செல்லவும் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் சைபன் எனப்படும் இத்திட்டம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப் பட்டதும் முக்கியமான இடங்களில் தேவையான பழுது பார்க்கப்படுகின்றன. அதற்காகத்தான் குறைந்தது 45 நாட்களாவது தண்ணீர் நிறுத்தப்படும்.
தொலைபேசித் தொடர்பு பொதுப்பணித் துறையினரால் அமைக்கப்பட்டுக் காசிபாளையம் அருகிலும் பவானி அணைக்கட்டிலும் ஈரோடு தலைமை அலுவலகத்திலும் இயங்குகிறது. அவ்வப்போது முக்கியமான செய்திகள் இருப்பின் தொலைபேசி மூலம் தொடர்புடைய அலுவலர்கட்கு அறிவிக்கப்படுகிறது. முழு அளவு நீர் மட்டத்தைக் குறிக்கும் அளவு கோல்கள் கால்வாயில் மொத்தம் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 14 இடங்களிலிருந்தும் அன்றாட அளவு ஈரோட்டிலுள்ள தலைமை நிலையத்திற்குத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் பவானி அணைக்கட்டுக்குச் செய்தி அனுப்பப்படுகிறது. அச்செய்திகட்கு இணங்க அணைக் கட்டில் இருக்கும் நீர்ப்பதிவாளர் நீர் பகிர்ந்தளித்தலைச் செய்வார்.
ஒவ்வொரு நீராணியும் தன்னுடைய பகுதியில் உள்ள மதகுகளைக் கவனித்துக் கொள்வதுடன், தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் தொடர்புடைய மேலதிகாரிகள் ஆணைக்கு இணங்க இரவு நேரங்களில் மதகுகளை அடைத்து வாய்க்காலின் கடைசிப் பாகத்திற்குத் தண்ணீர் சரியான அளவிற்குச் செல்லப் பொறுப்புடன் உதவி புரிகின்றார்கள். நீராணிகள் சரிவரக் கவனிக்கிறார்<noinclude></noinclude>
ggi0br5v19yzlzdjqqz65xstm16goxj
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/116
250
456561
1838150
1444386
2025-07-02T06:26:47Z
Mohanraj20
15516
1838150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||110|}}</noinclude>களா என்பதை மேற்பார்வையிட ஒரு கரைக் கண்காணிப் பாளர் உள்ளார். நீராணிகளையும் கரைக் கண்காணிப் பாளரையும் நீர்ப் பதிவாளரையும் கண்காணித்துக் கொள்ளப் பிரிவு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு பொதுப்பணித்துறைக் கோட்டத்தின் நிருவாகத்தில் உள்ள மேற்குச் சிறுகோட்டத்தினரால் இப்போது காலிங்கராயன் கால்வாய் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அத்துறையினரால் கீழ்க்கண்டவாறு காலிங்கராயன் கால்வாய் நிருவாகம் இன்று நடைபெறுகிறது,
{{center|நிருவாகப் பொறியாளர்}}
{{center|↓}}
{{center|உதவிச் செயற் பொறியாளர்}}
{{center|↓}}
{{center|பிரிவு அதிகாரி அல்லது இளம் பொறியாளர்}}
{{center|↓}}
நீர்ப்பதிவாளர் (அல்லது) கரை கண்காணிப்பாளர்
{{center|↓}}
நீராணி
காலிங்கராயன் அணையில் கால்வாய்க்கு நீர்வரும் தலை மதகுகள் ஆறு கண்ணறைகளாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் அளவுகள் 6'.6”X4'.6” ஆகும்.
மணற்போக்கிகள் மூன்று கண்ணறைகளாக அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொன்றின் அளவுகள் 6'.0”x4'.6” ஆகும்.
காலிங்கராயன் கால்வாயில் காலத்துக்குக் காலம் பல சீரமைப்புக்கள் செய்யப்பட்டுப் பொதுப்பணித்துறையில் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டும் நிர்வகிக்கப் பட்டும் வருகிறது. பொதுப்பணித்துறையில் அவ்வப்போது பின் வரும் சீர்திருத்தங்கள் மிக நல்ல முறையில் செய்யப்பட்டு வருகிறது. 720 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்ட தொன்மையான அணையையும் வெட்டிய கால்வாயையும் கண்மணியை இமைகள் காப்பதுபோல்<noinclude></noinclude>
1vt6ape5v73enbnwco0g0fjroat1gyx
1838152
1838150
2025-07-02T06:27:41Z
Mohanraj20
15516
1838152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||110|}}</noinclude>களா என்பதை மேற்பார்வையிட ஒரு கரைக் கண்காணிப் பாளர் உள்ளார். நீராணிகளையும் கரைக் கண்காணிப் பாளரையும் நீர்ப் பதிவாளரையும் கண்காணித்துக் கொள்ளப் பிரிவு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு பொதுப்பணித்துறைக் கோட்டத்தின் நிருவாகத்தில் உள்ள மேற்குச் சிறுகோட்டத்தினரால் இப்போது காலிங்கராயன் கால்வாய் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அத்துறையினரால் கீழ்க்கண்டவாறு காலிங்கராயன் கால்வாய் நிருவாகம் இன்று நடைபெறுகிறது,
{{center|நிருவாகப் பொறியாளர்}}
{{center|↓}}
{{center|உதவிச் செயற் பொறியாளர்}}
{{center|↓}}
{{center|பிரிவு அதிகாரி அல்லது இளம் பொறியாளர்}}
{{center|↓}}
{{center|நீர்ப்பதிவாளர் (அல்லது) கரை கண்காணிப்பாளர்}}
{{center|↓}}
{{center|நீராணி}}
காலிங்கராயன் அணையில் கால்வாய்க்கு நீர்வரும் தலை மதகுகள் ஆறு கண்ணறைகளாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் அளவுகள் 6'.6”X4'.6” ஆகும்.
மணற்போக்கிகள் மூன்று கண்ணறைகளாக அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொன்றின் அளவுகள் 6'.0”x4'.6” ஆகும்.
காலிங்கராயன் கால்வாயில் காலத்துக்குக் காலம் பல சீரமைப்புக்கள் செய்யப்பட்டுப் பொதுப்பணித்துறையில் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டும் நிர்வகிக்கப் பட்டும் வருகிறது. பொதுப்பணித்துறையில் அவ்வப்போது பின் வரும் சீர்திருத்தங்கள் மிக நல்ல முறையில் செய்யப்பட்டு வருகிறது. 720 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்ட தொன்மையான அணையையும் வெட்டிய கால்வாயையும் கண்மணியை இமைகள் காப்பதுபோல்<noinclude></noinclude>
d2w4q05670tyldnffjxa8yijnpwdhtc
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/117
250
456562
1838155
1444387
2025-07-02T06:33:08Z
Mohanraj20
15516
1838155
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||111|}}</noinclude>பொதுப்பணித் துறையினர் அல்லும் பகலும் அயராது காத்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறை கீழ்வரும் சீரமைப்புக்களைச் செய்துள்ளது.
1. வாய்க்கால் சைபன் கட்டுதல்
2. ரெகுலேட்டர்கள் கட்டுதல்
3. வாய்க்காலினுள் மாதிரிக் கட்டிடங்கள் அமைத்தல்
{{larger|(Model Section)}}
4. நீர் வெளியேறும் பகுதிகள் கட்டுதல் {{larger|(Out lets)}}
5. நீர் தேங்கிக் கீழிறங்கும் பகுதிகள் அமைத்தல்
{{larger|(Drops)}}
6. கரைகளை அகலப்படுத்திச் சாலைகள் அமைத்தல்
7. தூர் எடுத்தல்
8. கரைச் சரிவுகளில் கருங்கல் கட்டிடம் கட்டுதல்
{{larger|(Revetments)}}
9. கரைகளைப் பலப்படுத்துதல்
10. பின் தொட்டிகள் அமைத்தல் {{larger|(Rear cisterns)}}
11. கால்வாயில் தேவைக்கேற்பத் தண்ணீரைத்
தேக்கும் அமைப்பை ஏற்படுத்துதல் {{larger|(Bed Regulaters)}}
இப்பணிகளால் வீணாகும் தண்ணீர் சேமிக்கப்பட்டுப் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்க ஏதுவாகிறது. மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தி வேண்டிய தண்ணீரை நிறுத்தச் செய்து தேவைக்கு ஏற்பச் சமமான தண்ணீரைப் பங்கீடு செய்வதற்கு வழிவகைகள் அமைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் மிகச்சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டுவரும் கால்வாய்களில் தலை சிறந்தது காலிங்கராயன் கால்வாயே ஆகும்.
தடப்பள்ளிக் கால்வாய் சீரமைக்கப்பட்ட போது அதில் உள்ள 448 மதகுகள் 316 ஆகக் குறைக்கப்பட்டன. அரக்கன்<noinclude></noinclude>
ca8233f8tsy9cnst3qqd7nwph84bj6l
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/118
250
456563
1838158
1444388
2025-07-02T06:38:33Z
Mohanraj20
15516
1838158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||112|}}</noinclude>கோட்டைக் கால்வாயில் 207 மதகுகள் 70 ஆகக் குறைக்கப் பட்டன. காலிங்கராயன் கால்வாயில் உள்ள 789 (769+20) மதகுகளை 226 ஆகக் குறைக்க 73-74இல் பொதுப்பணித் துறையினரால் திட்டமிடப்பட்டது. ஆனால் விவசாயிகளின் தீவிர எதிர்ப்பால் இத்திட்டம் நிறைவேற்றப் படவில்லை. கொடிவேரி அணையில் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்கால்களைப் பார்வையிட்டு, இன்னும் கொஞ்சம் மதகுகள் குறைப்பில் மாற்றம் செய்து இத்திட்டம் கொண்டுவந்தால் தண்ணீர் வீணாவதைத் தடுக்கலாம். காலிங்கராயன் கால்வாயில் 18ஆம் நூற்றாண்டில் 1840 மதகுகள் இருந்தன. பின் அவை 769 ஆகக் குறைக்கப் பட்டன என்பதை நினைவில் கொள்ளல் அவசியம்.
பாவனி ஆற்றின் நீளம் 104 மைல் ஆகும். ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி மலைப்பகுதியில் 640 சதுர மைல்கள். ஆற்றின் பயன்பாட்டுப் பகுதி சமவெளியில் 1730 சதுரமைல்கள் ஆகும்.
காலிங்கராயன் முக்கிய அணையின் நீளம் {{Right|757.00}}
சராசரி அளவு {{Right|541.15}}
வெள்ளத் தடுப்புக் கரை நீளம் {{Right|1740.00}}
வெள்ளத் தடுப்புக் கரை உச்சி அளவு {{Right|552.66}}
மைய அணைக்கட்டின் நீளம் {{Right|854.00}}
சராசரி அளவு {{Right|544.13}}
முரியான் அணைக்கட்டு நீளம் {{Right|1350.00}}
சராசரி அளவு {{Right|542.90}}
உயர்ந்த அளவு வெள்ள வருகை 9-12-72 {{Right|548.05}}
உயர்ந்த அளவு தண்ணீர் வெளியேற்றம் 9-12-72 {{Right|1267.77}}
காலிங்கராயன் கால்வாயில் சராசரி 11,000 {{larger|Mc Ft}}. தண்ணீர் பாசனத்திற்காக விடப்படுகிறது.
{{nop}}<noinclude></noinclude>
czou3arvgo4ifl6y7g90vw7xvanum62
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/119
250
456564
1838160
1444389
2025-07-02T06:42:10Z
Mohanraj20
15516
1838160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||113|}}</noinclude>பவானி ஆற்றில் அணைத் தோப்புக்குக் கிழக்கே ஆழமான ஆற்றுப் பகுதியில் தண்ணீர் செல்வதை முரியன் அணை தடுத்து மேற்குப் பக்கம் காலிங்கராயன் அணைப் பக்கம் தண்ணீரை அனுப்புகிறது. பவானியாற்றின் நடுவே கட்டப்பட்டிருக்கும் கலிங்கின் உதவியால் நீர்மட்டம் உயர்ந்து எளிதாகக் காலிங்கராயன் கால்வாய்க்குத் தண்ணீர் வருகிறது. மிக எளிய அமைப்பைத் திட்டமிட்டு 720 ஆண்டுகட்கு முன்பு தேர்ந்த பொறியியல் அறிவுடன் கட்டி முடித்த அணையும் கால்வாயும் அறிஞன் காலிங்கராயன் புகழ்பாடி சந்திரசூரியர் உள்ளவரை நின்று நிலைக்கும் என்பது திண்ணம்!
பேரரசர்கள், அரசர்கள் உருவாக்கிய கால்வாய்களைத் தமிழகமெங்கும் காணுகின்றோம். ஆனால் ஒரு சாதாரணக் குடிமகன் தன் அறிவாற்றலால் பதவி பெற்று நாடு நலம்பெற நன்செய் வளம் செழிக்க இவ்வாறு திட்டமிட்டுச் சொந்தப் பொறுப்பில் கால்வாய் வெட்டி அதனைப் பொது வுடைமையாக்கி அனைவரின் பயனுக்கு விட்ட அரிய செயல் உலகில் வேறெங்கும் நடைபெற்றதில்லை.
கீழ்பவானி, கொடிவேரி போலப் பெரும்பாலும் அதிக நிலம் இல்லாமல் ½ ஏகர் ‘ஏக்கர்’ 2 ஏக்கர் உடைய விவசாயிகளே காலிங்கராயன் பகுதியில் அதிகம். தம் உழைப்பால் அவர்கள் பொன் கொழிக்கச் செய்கிறார்கள். இந்தியாவிலேயே பஞ்சாபிற்கு அடுத்தாற்போல் இங்குதான் கடுமையாக உழைத்து நல்ல வருமானம் பெறுகின்றனர்.
{{nop}}<noinclude></noinclude>
1msxi75pmdf8m281yhfmr3k7i03n6x0
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/120
250
456565
1838162
1444390
2025-07-02T06:44:55Z
Mohanraj20
15516
1838162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{center|{{x-larger|<b>காலிங்கராயன் கரையில்</b>}}}}
‘காடெல்லாம் சிறு செந்நெல் விளையும்’ என்று இலக்கியம் எடுத்துரைத்ததற்கு ஏற்பக் காலிங்கராயன் கால் வாயால் சிறப்பு மிக்க நீர்வளம் ஏற்பட்டு நிலவளம் பெருகி நன்செய் விளைவு ஏற்பட்டுள்ளது எல்லோரும் அறியும் உண்மையாகும்.
‘காலிங்கராயன் கடாட்சத்தி னாலே
சாலவே இந்தத் தரணியில் வாழும்
குடியானவர்கள்’
என்று ஈரோடு ஜயனாரப்பன் பள்ளு கூறுவதற்கு ஏற்பக் காலிங்கராயனால் ஏற்பட்ட நன்மைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
கரையில் கீழ்வரும் ஊர்கள் அமைந்துள்ளன. அடைப்புக்குறிக்குள் இருப்பது கால்வாய் மைல் ஆகும்.
அணை நாசுவம் பாளையம் (0/0)
இராமநாதபுரம் புதூர் (4.21)
பெரிய அக்கிரகாரம் (7.11)
ஈரோடு (14.0)
சாத்தனூர் (20.00)
சாவடிப் பாளையம் (24.0)
காளமங்கலம் (27.2)
பாசூர் (31.13)
பழனிக்கவுண்டம் பாளையம் (32.4)
வட்டக்கல் வலசு (34:4)
மலையம் பாளையம் (35.23)
கொளாநல்லி (37.4)<noinclude></noinclude>
tqxge9e0szizeca8y2y5amtdlbm8v42
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/121
250
456566
1838168
1444391
2025-07-02T06:53:36Z
Mohanraj20
15516
1838168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||115|}}</noinclude>குட்டப் பாளையம் (38.0½)
காரணம் பாளையம் (40.4½)
அமராவதி புதூர் (41.4)
கருக்கம் பாளையம் (42.0)
ஊஞ்சலூர் (43.2½)
கொளத்துப் பாளையம் (44.4)
பனப்பாளையம் (45.6)
கல்வெட்டுப் பாளையம் (47.4)
வெங்கம்பூர் (48.2)
வடக்குப் புதுப்பாளையம் (50.0)
கணபதி பாளைம் (51.3½)
கொடுமுடி (53.7½)
வருந்தியா பாளையம் (54. 2)
சோழக்காளி பாளையம் (55 2½)
இவைகள் இல்லாமல் இவைகளின் அருகில் இன்னும் பல ஊர்கள் நெருக்கமாக ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பல ஊர்கள் மிக நெருக்கமாக ஏற்படக் காரணம் காலிங்கராயன் கால்வாயே ஆகும். சூரியம் பாளையம், தளவாய் பாளையம், வைரா பாளையம், கருங்கல் பாளையம், வெண்டிபாளையம், காங்கயம்பாளையம் குறுக்கபாளையம், செப்பிலி பாளையம், வேலம் பாளையம், மன்னாதம் பாளையம், பாம்பகவுண்டம் பாளையம், கோம்புப் பாளையம், காரநாயக்கன் பாளையம், வள்ளிபாளையம், பனைப்பாளையம், காசிபாளையம், கணபதிபாளைம், அரசம்பாளையம், நாகம நாயக்கன் பாளையம் ஆகியவைகளும் பிற பாளையங்களும் நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்டன வாகும்.
காலிங்கராயன் கால்வாய்ப் பாசனப்பகுதிக்குள் இருந்த பல ஊர்கள் நீரின் மிகுதியால் அழிந்தன. ஊர்ப்பகுதிகள்<noinclude></noinclude>
myym1w4cu5975josijzm9rryptjicek
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/122
250
456567
1838231
1444392
2025-07-02T09:00:08Z
Mohanraj20
15516
1838231
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||116|}}</noinclude>வயல்களாக மாற்றப்பட்டன. மக்கள் மேட்டுப்பகுதிக்கு மேற்கு நோக்கிக் குடி பெயர்ந்தனர். சாத்தம்பூர் மக்கள் நஞ்சை ஊத்துக்குளிக்கு குடி பெயர்ந்ததை இதற்கு எடுத்துக் காட்டாகக் காட்டலாம். பல இடங்களில் கால்வாயினால் இவ்வாறு குடிப் பெயர்வுகள் ஏற்பட்டுள்ளன.
ஊர் அழிவுபட்டதால் பழைய சில ஊர்ப் பகுதிகள் நத்தம் என்று அழைக்கப் பெற்றன. பள்ளர் நத்தம், சத்திர நத்தம், பூச்சக்காட்டு நத்தம் என்பன அவற்றுட் சிலவாகும்.
கால்வாய் வளம் ஏற்பட்டவுடன் சில ஊர்கள் நஞ்சை, புஞ்சை என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. நஞ்சை லக்காபுரம், புஞ்சை லக்காபுரம், நஞ்சைக் காளமங்கலம், புஞ்சைக் காளமங்கலம், நஞ்சைக் கொளாநல்லி, புஞ்சைக் கொளாநல்லி என அவை அழைக்கப்பட்டன.
வயல்வெளியில் நெற்போர் அடிக்கக் களங்கள் அமைக்கப்பட்டு அதன் அருகில் வீடுகள் அமைக்கப்பட்டுச் சில சிற்றூர்கள் அதனால் களம் என்றே அழைக்கப்பட்டன. இலட்சுமண கவுண்டன்களம், ஆலைக்காட்டுக்களம், கம்பங்காட்டுக்களம் என்பன அவ்வாறு அமைந்த ஊர்களாகும்.
கால்வாய் பாய்ந்து வளம் ஏற்பட்ட காரணத்தால் பழைய ஊர்களின் அருகே அப்பெயரில் புது ஊர்களும், புதிய குடியிருப்புக்களும் பல ஏற்பட்டன. அதனால் பிற பகுதியைக் காட்டிலும் காலிங்கராயன் கால்வாய்க் கரையில் ஊர்ப் பெருக்கமும் மக்கள் தொகைப் பெருக்கமும் மிகவும் மிகுதியாக ஏற்பட்டன.
புதுப்பாளையம், அணைக்கட்டுப் புதூர், வடக்குப் புதுப்பாளையம், தெற்குப் புதுப்பாளையம், மிளகாய்ப் புதுப்பாளையம், சேட்டையூர் புதூர், சாத்தம் புதூர், இராயபாளையம் புதூர், இராமநாதபுரம் புதூர், புத்தூர், ஆட்டுக் கவுண்டன் புதூர், குள்ளக்கவுண்டன் புதூர், முத்துக் கவுண்டன் புதூர், சாவடிப்பாளையம் புதூர், அமராவதி<noinclude></noinclude>
t88i2r06x5ahn6uxt5fadpiiqro1s9d
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/123
250
456568
1838232
1444393
2025-07-02T09:03:28Z
Mohanraj20
15516
1838232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||117|}}</noinclude>புதூர், பொறையம்பாளையம் புதூர் என்பன அவ்வாறு புதியன வாக ஏற்பட்ட ஊர்களாகும்.
ஈரோடு, காளமங்கலம், பாசூர், கொளாநல்லி, ஊஞ்சலூர், வெங்கம்பூர், கொடுமுடி போன்ற பல ஊர்களில் புதிய கோயில்கள் பல கட்டப்பட்டன. பழைய கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டன. கொடைகள் பல அளிக்கப்பட்டன. விழாக்கள் விரிவாக நடத்தப்பட்டன. கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டன.
அந்தணர்கட்கு அக்கிரகாரங்கள் பல ஏற்படுத்தப்பட்டன. அவர்கட்குக் கொடையாகப் பிரமதேய நிலங்கள் அளிக்கப்பட்டன. அக்கிரகாரம் என்ற ஊர்ப்பெயரும், பட்டவர்த்தி என்ற நிலப்பெயரும் வழங்குவது இதற்கு எடுத்துக்காட்டாகும். பலர் பூந்துறை நாட்டின் பல பகுதியி லிருந்து கால்வாய்ப் பகுதிக்குப் புதியவர்களாகக் குடியேறினர். கால்வாய்ப் பகுதி மக்களுடன் பூந்துறை நாட்டின் பிற பகுதி மக்கள் அங்குள்ள செல்வச் செழிப்பின் காரணமாக உறவு கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
கால்வாய்க் கரையில் உள்ள ஊர்கள் மிகுதியான செல்வவளம் பெற்றன. பொருளாதாரப் புழக்கம் மிகுதியாக ஏற்பட்டது. ஈரோட்டில் தென்னகத்திலேயே மஞ்சள் வணிகம் சிறந்து விளங்குவதற்குக் காலிங்கராயன் கால்வாய் முக்கியக் காரணம் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
ஈரோடு செல்வச் செழிப்புற்று வாணிகம் மிகுதியாகப் பெருகுவதற்கும், காலிங்கராயன் கால்வாய்ப் பகுதிமக்கள் பலர் ஈரோட்டில் குடியேறி அதன் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மூல காரணமாக அமைவதற்கும் கால்வாய் வளமே காரணமாக அமைந்தது.
கால்வாய்ப் பகுதியில் ஆலயங்கள் பெருகவே விழாக்கள் மிகுதியாக நடைபெற்றன. வாத்தியக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், சமயச் சடங்கு, ஆலய வழிபாடு நடத்துவோர்<noinclude></noinclude>
nzqrj7430tk7e0oumpjv8btkpl1ddrm
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/124
250
456569
1838234
1444394
2025-07-02T09:05:48Z
Mohanraj20
15516
1838234
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||118|}}</noinclude>நன்கு ஆதரிக்கப்பட்டனர். அதனால் கலையும், சமயமும், சிற்பமும் பெருகியது.
புலவர்கள் பலர் ஆதரிக்கப்பட்டனர். இலக்கியங்கள் பல எழுதப்பட்டன. கல்வி அறிவு பெருகியது. விவசாயத்துடன் பல துணைத் தொழில்கள் பெருகியது. விவசாயத் தொழிலாளர்கள் பலர் வளமுற வாழ்ந்தனர்.
மக்கள் வளத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்ததால் பல சமயத்தாரும், பல சாதியினரும் சமய, சாதிப் பூசல் இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இதனை இப்பகுதி வரலாறு சிறப்புடன் கூறுகிறது.
சைவ வைணவக் கோயில்கள் ஒரே தன்மையில் ஏற்றத் தாழ்வின்றி ஆதரிக்கப்பட்டன. பல கல்வெட்டுக்கள் சிவமயம் என்று தொடங்கி ராமஜெயம் என முடிவுற்றது. வேட்டுவர் வேளாளர் ஆகியோர் ஊர்ச்சபைகளில் ஒன்றாக இயங்கிக் கோயில்கட்கும் ஒற்றுமையுடன் கொடைகள் அளித்தனர். கொங்கு வேளாளர் காணித் தெய்வங்கள் பல திருப்பணிகள் செய்யப்பட்டுச் சிறப்பிக்கப் பெற்றன.
10-11-1800 இல் கொடுமுடிக்குப் பகுதி வருகை புரிந்த புக்கானன் ' இந்தியாவிலேயே நான் பார்த்த இடங்களில் இப்பகுதி மிகவும் அழகு வாய்ந்தது' என்று பாராட்டும் அளவுக்கு இப்பகுதியை வளமாக மாற்றியது காலிங்கராயன் கால்வாயே ஆகும்.
பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வளப்படுத்தி ஆயிரக் கணக்கான மக்களை வளத்துடன் வாழச் செய்யும் புனிதன் புகழோன் காலிங்கராயன் கட்டிய அணையும் வெட்டிய கால்வாயும் என்றும் வளம் பெருக்கி அன்னைபோல் அணைத்தூட்டி வாழவைப்பதாகுக!
வாழ்க காலிங்கராயன் புகழ்!
{{nop}}<noinclude></noinclude>
7000frofef7qbllgx9d0zkezzf2pi2p
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/125
250
456570
1838235
1444395
2025-07-02T09:09:01Z
Mohanraj20
15516
1838235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பிற்சேர்க்கை எண்—1</b>}}}}
{{center|{{x-larger|<b>காலிங்கராயன் கல்வெட்டுக்கள்</b>}}}}
{{larger|<b>திங்களூர் அழகப்பெருமாள் கோயில்
தெற்குச்சுவர்க் கல்வெட்டு</b>}}
ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு மூன்றாவது ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் குறுப்பு நாட்டுத் திங்களூர் சுந்தரபாண்டிய விண்ணகரம் பெருமாள் கோயில் திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நம்பிமார்களுக்கும் இந்நாயனார்க்கும் அமுதுபடி உயுள்ளிட்டு வேண்டும் வெஞ்சனங்களுக்கும் இந்நாட்டுத் தாளூன்றி நீர் நிலத்துக்கும் புன் செய்க்கும் இறுக்கும் கடமை ஒட்டச்சும் காலும் கலமும் நத்தவரியும் அந்தராயகாணம் உப்பாயம் தறியிறை உள்ளிட்ட மேலிறை கீழிறையும் எண்ணெயும் காணியும்ஞ் சாமந்த வேண்டுகோளும் குற்ற தெண்டமும் எலவை ஒகவை மற்றும் எப்பேர்ப்பட்டனவும் உட்பட தந்தோம் இந்நாயனார் அழகப் பெருமாளுக்கு இப்படிக்கு சந்திராதித்தவரை செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டி இவ்வூர் குடியேற்றிக் கொள்க இப்படிக்கு காலிங்கராயன் எழுத்து.
{{larger|<b>விசயமங்கலம் நாகேசுவரசுவாமி கோயில்
மகாமண்டபம் வடபுறச் சுவர்க் கல்வெட்டு</b>}}
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரிமேல் கொண்டான் ஸ்ரீ வீரபாண்டிய தேவனேன் எமக்குச் செல்லா நின்ற யாண்டு அஞ்சாவது சகரை யாண்டு ஆயிரத்திரனூத் திரண்டு பெறட்டாசி மாதம் முதல் குறுப்பு நாட்டு விசய<noinclude></noinclude>
5gta369e9jl7ew4f8a8wekynzp6x10h
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/126
250
456571
1838239
1444396
2025-07-02T09:12:10Z
Mohanraj20
15516
1838239
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||120|}}</noinclude>மங்கலத்து ஊரும் ஊராளிகளுக்கும் தங்களுடைய வாகைப் புத்தூரில் வடக்கு வாகசைலில் வாகைக்குளம் நெடுநாள் பாழ்பட்டுக் கிடக்கிறதாகக் கேட்டோம் இக்குளம் தங்களூர் நாயனார் திருநாகீசுரமுடையார் திருக்காமக் கோட்டத்து ஆளுடை நாாச்சியர்க்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட வெஞ்சனம் பலபடி நிமந்தத்துக்கு இக்குளம் வீரபாண்டியப் பேரேரி எனவும் இக்குளமும் இக்குளக்கீழ் நிலமும் நீர்யேறிட மெல்லாம் இறையிலி தேவதானமாக விடுக எனத் தோண்டும் வாரம் குடுக்கப் போதுவார்களாகவும் இக்குளக் காலுள்ள அழிவு சோர்வு தாங்களே செய்வார்களாக இப்படி சந்திராதித்தர் வரை செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டி அனுபவிக்கக் கடவதாக நம் ஓலை குடுத்தோம். இப்படியே நந்தமர்ப்பாற்படுத்திக் கொடுக்கவும் இது பன் மாகேஸ்வரர் ரட்சை இவை காலிங்க ராயன் எழுந்து......இத்தர்மம் இறங்கப் பண்ணினவன் வழி வழி யேழெச்ச மறுவான்.
{{larger|<b>நெரூர் அக்கீனீசுரர் கோயில்
தென்புறத்து மதில் கல்வெட்டு</b>}}
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கிரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் கிழங்கு நாட்டு நெரூரான வீர சோழச் சதுர்வேதிமங்கலத்து உடையார் திரு அக்கினீசுர முடைய நாயனார் கோயில் தானத்தாருக்கும் இந் நாயனாருக்கும் அமுதுபடி உள்ளிட்டு வெஞ்சனங்களுக்கும் தை மாதத்து நம் பிறந்த நாளில் தீர்த்தம் பிரசாதிக்கக் கட்டின திருநாளுக்கும் இந்நாட்டில் நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த வழிப்போக்கி நத்தமும் நான் கெல்லைக்குட்பட்ட நீர் நிலமும் நன்செய் புன்செயும் நத்தமும் தோட்டமும் குளமும் குளப்பரப்பும் உள்பட்ட நிலத்தில் பழந்தேவதானம் பள்ளிச்சந்தம் நீக்கி நின்ற நிலம் ஒட்டச்சு ஆராய்ச்சி நத்தவரியும் மண்டல முதன்மை சந்தி விக்கிரகப் பேறுவரியும் மார் வினியோகமும் எலவை உகவை காணிக்கை காலிங்க<noinclude></noinclude>
lm9yymb1w93j0r3tbvrdpsunemxw3v7
1838264
1838239
2025-07-02T11:08:50Z
Mohanraj20
15516
1838264
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||120|}}</noinclude>மங்கலத்து ஊரும் ஊராளிகளுக்கும் தங்களுடைய வாகைப் புத்தூரில் வடக்கு வாகசைலில் வாகைக்குளம் நெடுநாள் பாழ்பட்டுக் கிடக்கிறதாகக் கேட்டோம் இக்குளம் தங்களூர் நாயனார் திருநாகீசுரமுடையார் திருக்காமக் கோட்டத்து ஆளுடை நாாச்சியர்க்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட வெஞ்சனம் பலபடி நிமந்தத்துக்கு இக்குளம் வீரபாண்டியப் பேரேரி எனவும் இக்குளமும் இக்குளக்கீழ் நிலமும் நீர்யேறிட மெல்லாம் இறையிலி தேவதானமாக விடுக எனத் தோண்டும் வாரம் குடுக்கப் போதுவார்களாகவும் இக்குளக் காலுள்ள அழிவு சோர்வு தாங்களே செய்வார்களாக இப்படி சந்திராதித்தர் வரை செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டி அனுபவிக்கக் கடவதாக நம் ஓலை குடுத்தோம். இப்படியே நந்தமர்ப்பாற்படுத்திக் கொடுக்கவும் இது பன் மாகேஸ்வரர் ரட்சை இவை காலிங்க ராயன் எழுந்து......இத்தர்மம் இறங்கப் பண்ணினவன் வழி வழி யேழெச்ச மறுவான்.
{{larger|<b>நெரூர் அக்கீனீசுரர் கோயில்
தென்புறத்து மதில் கல்வெட்டு</b>}}
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கிரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் கிழங்கு நாட்டு நெரூரான வீர சோழச் சதுர்வேதிமங்கலத்து உடையார் திரு அக்கினீசுர முடைய நாயனார் கோயில் தானத்தாருக்கும் இந் நாயனாருக்கும் அமுதுபடி உள்ளிட்டு வெஞ்சனங்களுக்கும் தை மாதத்து நம் பிறந்த நாளில் தீர்த்தம் பிரசாதிக்கக் கட்டின திருநாளுக்கும் இந்நாட்டில் நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த வழிப்போக்கி நத்தமும் நான் கெல்லைக்குட்பட்ட நீர் நிலமும் நன்செய் புன்செயும் நத்தமும் தோட்டமும் குளமும் குளப்பரப்பும் உள்பட்ட நிலத்தில் பழந்தேவதானம் பள்ளிச்சந்தம் நீக்கி நின்ற நிலம் ஒட்டச்சு ஆராய்ச்சி நத்தவரியும் மண்டல முதன்மை சந்தி விக்கிரகப் பேறுவரியும் மார் வினியோகமும் எலவை உகவை காணிக்கை காலிங்க-<noinclude></noinclude>
1riixtzjtfdrh8djk8cb0zidovz5gnh
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/127
250
456572
1838265
1444397
2025-07-02T11:11:07Z
Mohanraj20
15516
1838265
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||121|}}</noinclude>ராயன் வினியோகமும் ஓலைச் சம்படம் அணியில் பொன்வரியும் வேளைக்காரன் சிரக்காரன் கார்த்திகைப்படியும் சானங்கண்மையும் நல்லெருது நற்பசு காணம் நெய் எண்ணையும் உப்பாயம் தறியிறை செக்கிறையும் தட்டொலிப் பாட்டமும் ஈழம் புஞ்சையும் பாமைக்காணம் கீழிறை தோலொட்டும் மன்றுபாடு தெண்டங்குத்தமும் மத்தும் எப்பேர்ப்பட்ட வரிகளும் உள்பட்டது பன்னிரண்டாவது மாசி மாதம் முதல் தேவதானம் இறையிலியாகத் தந்தோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு நான்கெல்லையிலும் திரிசூலக்கல்லு நாட்டி சந்திராதித்தவர் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொண்டு கச்சிராய நல்லூர் என்று குடியேற்றிக் கொண்டு அனுபவிக்க இவை காலிங்கராயன் எழுத்து... யாண்டு 12 நாள் 256... அக்கினீசுரசுவாமி துணை .
{{larger|<b>எலத்தூர் சோழீச்சுரர் கோயில் கல்வெட்டு</b>}}
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்தி கோனேரிமை கொண்டான் வட பரிசார நாட்டு எலத்தூரு ஊரார்கள் தங்களூருடையாருக்கும் சோளீஸ்வரமுடையாருக்கும் தான் தோன்றீஸ்வரமுடைய நாயனார்க்கும் சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் வெஞ்சனங்களுக்கும் இவ்வூர்க் கொளம் உடைகுளம்...யிருந்தபடியிலே பத்தினால் சித்தார்த்தியாண்டு முதல் குளம் அடைத்துத் திருத்தி பயிர்செய்து பயிர் செய்யு மளவில் திருத்தின நிலத்துக்கு யி...டை... அந்தராயம் இலவை உகவை காணிக்கை மற்றும் எப்பேர்ப்பட்டனவும் இந்நாள் முதல் யிறையிலியாகக் கொண்டோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொண்டு கொளம் அடைத்துத் திருத்தி பயிர் செய்து கூடிய நிலங்களை கொளத்தைத் தானமாக அனுப வித்துக் கொள்ளவும்...காலிங்கராயன் எழுத்து ஆண்டு 14 நாள் 250.
க.—250
{{nop}}<noinclude></noinclude>
gd8j24y3dlttihzuxk15e4klb93z40t
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/128
250
456573
1838266
1444398
2025-07-02T11:14:31Z
Mohanraj20
15516
1838266
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />122</noinclude>{{larger|<b>சர்க்கார் பெரியபாளையும் சுக்ரீவேசுரர் கோயில்
அர்த்தமண்டபம் தென்புறம் பட்டிகைவரிக் கல்வெட்டு</b>}}
ஸவஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரி மேல் கொண்டான் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு ஆண்டு இருபத்தி நாலாவது வீரசோழவளநாட்டு முகுந்தனூருடைய குரக்குத்தளி ஆளுடைய நாயனார் கோயில் தானத்தார்க்கு இந் நாயனார்க்கு அமுதுபடிக்கும் திருநாள் படிக்கும் திருப்பணிக்கும் வேண்டும் வெஞ்சனாதிகளுக்கும் திருமடை விளாகத்துக்கு மேற்கில் நல்லாட்டுக்குளம் அனாதி பாழ்பட்டுக் கெடக்கையில் யிக்குளமும் நீரேறிப் பாயும் நிலமும் திருநாமத்துக் காணியாகக் குடுத்தோம் இதுக்கு இறுக்கும் கடமையில் நிலவச்சு மற்றும் யெப்பேர்ப்பட்ட வரிகளும் கழிச்சுக் குடுத்தோம் யிப்படிக்கு இவ்வோலை பிடி பாடாகக் கொண்டு சந்திராதித்தர்வரை செல்வதாகச் செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்க... இப்படிக்கு காலிங்கராயன் எழுத்து இவை பெருமாள் வீரராசேந்திரச் சோழச் சக்கர வர்த்தி எழுத்தின்படி சிலவு அழிக்க இது பன்மாகேஸ்வரர் ரட்சை இந்த தர்மத்துக்கு விகாதம் பண்ணும் பேர்கள் னாளை நசிச்சு போவார்கள்.
{{larger|<b>குன்னத்தூர் இலட்சுமி நாராயணப்
பெருமாள் கோயில் கல்வெட்டு</b>}}
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கிரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் குறுப்பு நாட்டுக் குன்றத்தூர் இலட்சுமி நாராணப் பெருமாள் வீரபாண்டிய விண்ணகரம் பெருமாள் கோயில் திருப்பதியாருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் இந்நாயனாருக்கு அமுதுபடி உள்ளிட்ட வேண்டும் வெஞ்சனங்களுக்கும் இந்த நாட்டில் காடு பிடித்து அழித்துக்கொண்டு நாடாக்கின வெள்ளிரவெள்ளி நான்கெல்லைக்குட்பட்ட நீர் நிலமும் காடும் குளமும் குளப்பயிராய் உள்பட்ட நிலத்தில்... சந்திராதித்தர் வரை செம்பிலும் சிலையிலும் வெட்டிக்<noinclude></noinclude>
gzuyjodtdbts7a67a6jc84ttkgikv1g
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/129
250
456574
1838263
1444399
2025-07-02T11:07:20Z
Mohanraj20
15516
1838263
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||123|}}</noinclude>கொண்டு குடியேற்றி அனுபவிக்கவும் இவை காலிங்கராயன் எழுத்து.
{{larger|<b>கொடுமுடி அம்மன் சந்நிதி கருவறைக் கல்வெட்டு</b>}}
...... திருப்பாண்டிக்கொடுமுடியாளுடைய நாயநார்க்கு தேவஸ்தானம் விதரியான திருச்சிற்றம்பல நல்லூரில் வெள்ளைக்குளம் வரகுணன் நெறையுங்காலம் ஒடைவு குலைவுப்பட்டு இப்பறம் கெடக்கையில் அடைத்து நீர்நிலம் பயிர்செய்யும் அளவில் பண்ணிரண்டு அடிக்கோலால் அயினூறு குழி கொண்டது ஒரு மாவாக திருப்பாண்டிக் கொடுமுடியில் பல நாயனார்க்கு விதரியான திருச்சிற்றம்பல நல்லூர் நாயனார்க்கு முற்றூட்டு கையில் நெலம் இருபது மாவும் திருப்பாண்டிக் கொடுமுடியாருக்கு விதரியான திருச்சிற்றம்பல நல்லூர் நாயனார்க்கு இவை இறையிலிக்குட்பட்ட நிலம் நாலு மாவும் மேல்கரை அரைய நாட்டாருக்கும் நகரத்தாருக்கும் இறையிலி நீக்கி இவ்வூர் குடிநீங்காத் தேவதானமாக திருப்பாண்டிக் கொடிமுடியாருக்கும் விதரியான திருச்சிற்றம்பல நல்லூர் உடையார்க்கும் இறையிலி தேவஸ்தானமாகக் குடுத்தது யாண்டு ஆறாவது நாள் முப்பத்தாறாவது இவை சுந்தரபாண்டியக் காலிங்கராயன் எழுத்து.
{{larger|<b>வெஞ்சமாங்கூடலூர்க் கல்வெட்டு</b>}}
ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறபன் மரான திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸ்ரீ குல சேகர தேவர்க்கு யாண்டு நாலாவது வைய்யாசி மீ 25 தேதி ஆளுடையார் திருவெஞ்சமாங் கூடலூர் ஆளுடைய நாயனார்க்கு கோயில் ஆதி சண்டேசுவர தேவர்களுக்கு கோயில் கணக்கு ஸ்ரீ காரியஞ் செய்வார்க்கு விலைப் பிரமாணம் பண்ணிக் குடுத்த பரிசாவது தட்டையூர் நாட்டு நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த நத்தம் பூத்துரை செல்லவான கண்ணப்ப நல்லூருக்கு<noinclude></noinclude>
ht811z82abldkbndf043n7q3w8jqqvz
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/131
250
456576
1838154
1444401
2025-07-02T06:32:34Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude>
{{center|{{larger|<b>பிற்சேர்க்கை எண்-2</b>}}}}
{{center|{{x-larger|<b>காலிங்கராயன் அணை கட்டின பட்டயம்</b>}}}}
ஸ்ரீமது சுபநமஸ்து ஸ்ரீமன் மகாமண்டலீசுவரன் பாசைக்கி தப்புவராத கண்டன் ஆரிய தள விபாடன் ஆரிய மோகந்தவிழ்த்தான் துலுக்கர் தள விபாடன் துலுக்கர் மோகந் தவிழ்த்தான் தொட்டிய தள விபாடன், தொட்டிய மோகந் தவிழ்த்தான் ஒட்டிய தள விராடன் ஒட்டிய மோகந் தவிழ்த்தான் பலநாவுக் குறைவராத கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாத கண்டன் வினவிசை கனவிசை ஈழமும் ஆழமும் ஓரப்பான் பட்டணமும் ரதபதி கெசபதி அசுவபதி நரபதி நால்வகைப் படைமோடுங்கூடி கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசமார்த் தாண்டன் ராசகுல திலகன் ராசகெம்பீரன் நாடாளு நாயகன் றாட குலதுங்கன் பூலோக தேவேந்திரன் ஆரண முறையார் ஆறிலொன்று கடமை கொண்டு ஆடுங்கடைமணி நாவசையாமல் அரசாளும் கரிகால் சோழன் மகாராசாவய்யரவர்கள் யகமகிழ்ந்து கொடுக்கும் மக்கள் முறையும் தரிப்பான நன்மையும் பொருந்தியிருத்தியிருந்தபடியினாலே பொன் ஊஞ்சலும் பூந்தேரும் பூச்சக்கரக் குடையும் பெற்றருளிய கங்கா குல திலகன் காராள சிரோமணி மேழிக் கொடியோன் மின் குவளை மாளிகை மார்பன் நாற்பத்தி யெண்ணாயிரம் கோத்திரத்துக்கும் முதன்மையாயிருக்கும் கொங்கு தேசத்துக்குச் சேர்ந்த தென்கரை நாட்டு செட்டி வேணாவுடையான் நரைய நாடு காசிப கோத்திரம் பிரமியணபிள்ளை பொங்கலூரு தெய்வசிகாமணி பூந்துறை நாடு வாரணவாசி வெள்ளோட்டுக் கனகபுரம் நஞ்சையன் ஆருநாட்டு மசக்காளி வேலணன் குருப்பை நாட்டு ரகுநாதணன் ஒடுவெங்க நாடு முத்துவேலப்பன் நல்லுருக்கா நாடு வானவராயன் வாரக்க நாடு பொங்கணன் காவுலுக்கா<noinclude></noinclude>
hlh4j0ab8z5v61t8k4pz8dwr2y0siky
பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/132
250
456577
1838157
1444402
2025-07-02T06:36:23Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />{{rh||126|}}</noinclude>நாடு உடையணன் எங்களைப் பத்துப் பேரையும் காங்கய நாட்டுச் சரவண காங்கேயன் பார்த்துச் சொன்ன வசனம் கனகபுரத்து நஞ்சையன் மகன் லிங்கையன் வானியாற்றில் அணைகட்ட வேணுமென்று நம்மையுந் தாவு துறை பார்த்து வரச் சொல்ல வேணுமென்று யீரோட்டுக்கு யெங்களை அழைத்துக்கொண்டு போய் வானியில் தாவுதுறை அணை கட்டுகிறதற்குப் பார்த்த இடத்தில் வெள்ளோட்டிலிருக்கும் வெள்ள வேட்டுவன் பாளையக்காரன் யென்னுடைய எல்லையிலே தாவுதுறை பார்க்கிறதென்ன அணை கட்டுகிறோமென்று பேசுகிறதென்ன நீங்கள் அணைகட்ட வேண்டாமென்று பிலத்துடனே மறித்தான்.
அதன் பிறகு நாங்கள் பத்துப் பேரும் ஈரோட்டுக்கு வந்து அதுக்குத் தக்கின சோமாசிகளை அனுப்பிவச்சு வெகு பிரீதியுடனே சொல்லக் கேளாதபடியினாலே இவனுடைய கெருவத்தையடக்கி அந்தத் தாவில் அணை கட்டாமல் விட்டுப் போறதில்லையென்று பிரதிக்கிணை செய்து அவையஸ் தங்குடுத்து ரண்டு மூணு மாச வரைக்கும் அவனுடனே சண்டை செய்து யெங்களினாலே செயிக்க மாட்டாமல் எழச்சுப் போயிருக்கும் வேளையிலே எண்ணை மங்கலம் பதியிலேயிருக்கும் காளியண்ணன், மதுரைக்குப் போய் சமஸ்தானம் ஆளப்பட்ட உக்கிர குமார ராசா சமூகத்துக்குப் போயி வெகுமதியும் கட்டக்கயிரும் வெட்ட வாளும் துஷ்ட சம்மாரமும் சிஷ்ட பரிபாலனமும் செய்து கொண்டிருக்கச் சொல்லி வரப்பிரசாதம் வாங்கிக்கொண்டு ஆனைமலை நாட்டு பாளையப்பட்டு செங்கோல் செலுத்திக் கொண்டு இருக்கிற நாளையிலே நாங்கள் பத்துப் பேருங்கூடி காலிங்கராயனை ஆனைமலைக்கு அனுப்பிவிட்டு காளியணனை யீரோட்டுக்கு வரவழைத்து வெள்ளவேட்டுவன் விருத்தாந்தமெல்லாம் வழிவிபரமாய்ச் சொல்லி அவனைச் செயம்பண்ணி அந்த ஆற்றில் அணை கட்டுகிறபடிக்குச் செயிச்சுக் கொடுக்க வேணுமென்று மெத்தவும் பத்துப் பேருங்கூடி வெகுவிதத்திலே கேட்டுக் கொண்டதுனாலே<noinclude></noinclude>
tsdvu4gq1gxz41mohec7g4zm6uwln8s
பயனர்:Booradleyp1/test
2
476049
1837986
1836296
2025-07-02T02:50:17Z
Booradleyp1
1964
/* சோதனை */
1837986
wikitext
text/x-wiki
==சோதனை ==
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" fromsection="" tosection="" />
==சோதனை==
{|width=100% style="border-collapse:collapse;"
|அடைவுச் சோதனைகள்{{gap}}↓
|-
| ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓
|-
|-
| || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓
|-
||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை.
|-
|}
<poem>
அடைவுச் சோதனைகள்
┌────────────┴───────────┐
வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை
┌──────┐─────┴──────────┐
கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை
┌──────┴─────┐
தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை.
</poem>
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
jau33574qmo55x8ivgngba2jrtfa1d5
பயனர்:Booradleyp1/books
2
481457
1838071
1837177
2025-07-02T04:39:23Z
Booradleyp1
1964
/* உதிரிகள் */
1838071
wikitext
text/x-wiki
==அண்ணாத்துரை==
===ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div>
<div class="NavContent" style="display:none;">
{{Multicol}}
#[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024
#[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024
#[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024
#[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024
#[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024
#[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024
#[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024
#[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024
#[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024
#[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024
#[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024
#[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024
#[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024
#[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
# [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024
#[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன்
#[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ்
#[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]]
# [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன்
#[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]]
#[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]]
#[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]]
#[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]]
#[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]
#[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]]
#[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]]
#[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]]
#[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]]
#[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]]
#[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]]
#[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]]
#[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]]
{{Multicol-break}}
#[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]]
#[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]]
#[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]]
#[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]]
#[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]]
#[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]]
#[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]]
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]]
#[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:போராட்டம்.pdf]]
#[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]]
#[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]]
#[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
#[[அட்டவணை:திருமணம்.pdf]]
#[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]]
#[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]
#[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]]
#[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]
#[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]]
#[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]]
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]
{{Multicol-end}}
</div></div></div>
==சங்க இலக்கிய அட்டவணைகள்==
=== ஒருங்கிணைப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}}
# [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}}
#[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]{{tick}}
===மெய்ப்பு முடிந்தவை ===
===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை===
===மேலும்===
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]]
#[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]]
==தொ. பரமசிவன்==
=== ஒருங்கிணைக்கப்பட்டவை===
#[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]]
#[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]
#[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]
#[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]
#[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]
#[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]]
#[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]
#[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]]
#[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]]
==மேலாண்மை பொன்னுச்சாமி==
===ஒருங்கிணைக்கப்பட்டவை ===
#[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]
#[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]]
#[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]
#[[அட்டவணை:என் கனா 1999.pdf]]
#[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]
#[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]
#[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]
#[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]
#[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]
#[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]]
#[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]
#[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]]
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]
#[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]
#[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]]
#[[அட்டவணை:விரல் 2003.pdf]]
#[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]
#[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]
#[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]
#[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]
===முழுமையாக ஒருங்கிணைக்கப் படாதவை===
#[[அட்டவணை:மரம்.pdf]]
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
==உதிரிகள்==
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}}
#[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}}
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}}
=== மெய்ப்பு முடிந்தவை ===
#[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
#[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]]
#[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]
===மெய்ப்பு நடபெற்று வருபவை ===
#[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி
#[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா
#[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-மோகன்
#[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]-பிரீத்தி
#[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]]-கராம்
#[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]-அஜய்
===மெய்ப்பு பார்க்க வேண்டியவை ===
#[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]-202
#[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]]-202
#[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-171
#[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-163
6fpizlvismr3om9kxsuoayrlmjf1phi
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/101
250
489082
1838143
1837524
2025-07-02T06:19:01Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|100 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>52. சேதுபதியாரின் அவையில் சவ்வாதுப் புலவர்<br>(1745-1808)</b>}}}}
சேதுபதி மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி (1762-1795) எமனேசுவரம் என்ற ஊரைச்சேர்ந்த முஹம்மது மீர் ஜவ்வாதுப் புலவர் என்பவரைத் தம் அவைக்களப் புலவராக அமரச் செய்து பெருமைப் படுத்தினார். அத்துடன் சுவாத்தான், வண்ணவயல் ஆகிய இரண்டு ஊர்களின் வருவாய் முழுவதும் அவர் குடும்பத்துக்குக் கிடைக்கும் வண்ணம் சர்வ மானியமாக வழங்கினார்.
சேதுபதி மன்னரின் 7 வயது மகளுக்கு கடும் சுரம் கண்டு நோய் அதிகரித்தது. அரண்மனை வைத்தியர்கள் கைவிட்ட நிலையில் ஜவ்வாது புலவர் அவர்கள் இறையருட் துணையுடன் மன்னர் மகளை பெரிய வாழையிலையில் படுக்கச் செய்து சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மன் மீது ஐந்து பதிகங்கள் பாடி முடித்ததும் நோய் நீங்கிப் பூரண சுகம்பெற்றுக் குழந்தை எழ, மன்னர் மகிழ்ந்து சுவாத்தன், வண்ணவயல் ஆகிய இரு கிராமங்களைப் புலவருக்கு வழங்கினார். அந்தப் பாடல்கள்தாம் ‘இராஜராஜேஸ்வரி அம்மன் பஞ்சரத்ன மாலை’யாகும்.
மற்றும் ஜவாதுப் புலவர் முஹ்யத்தீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள் மற்றும் ஏராளமான அறன்களும் தனிப்பாடல்களும் பாடியுள்ளார்.
சவ்வாதுப் புலவர் சேதுபதி மன்னர், அவர் தம் உயர் அதிகாரிகள், சேதுபதியின் யானை பற்றியும் பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார்.
வணங்காமுடி மன்னர் என்று புகழ்பெற்ற சேதுபதி மன்னரை “நீர் ஒரு வணங்குமுடி மன்னரே” என ஜவ்வாதுப் புலவர் சிலேடையாக அரசவையில் பாடிய பாடல் இதோ:
<poem>{{left_margin|3em|<b>“கிளையாளன் சேதுபதி ரகுநாயகன் கிஞ்சுகவாய்
இளையார் கலவியிடத்தும் தம்மீசரரிடத்து மன்றி
வளையாத பொன்முடிசற்றே வளையு மகுடமன்னர்
தளையாடிய கையில் காளாஞ்சி ஏத்தும் சமயத்துமே!”</b>}}</poem>{{nop}}<noinclude></noinclude>
k4rerawtkhvotnjxgll04bdo12pmt9b
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/102
250
489083
1838145
1837527
2025-07-02T06:20:15Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 101}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>53. மொட்டைப் பக்கிரி தர்காவிற்கு<br>சிவகங்கை மன்னர் கொடை*</b><ref>*சிவகங்கை வரலாற்றுக் கருத்தரங்குக் கட்டுரைகள்</ref>}}}}
சிவகங்கையில் ‘மொட்டைப் பக்கிரி’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இஸ்லாமிய ஞானி ஒருவர் இருந்தார். அவர் செய்த பலவிதமான அற்புதங்களை இன்றும் சிவகங்கை மக்கள் நினைவுகூர்கிறார்கள். இரவு தூங்கும்போது அவர் உடல் உறுப்புகள் வேறு வேறாகச் சிதறிக் கிடக்குமாம். காலையில் எழுந்து வருவாராம். அவருக்கு ஒரு தர்கா கட்டப்பட்டது. அதற்கு ‘மொட்டைப் பக்கிரி தர்கா’ என்றே பெயர். அதற்குச் சிவகங்கை மன்னர் அரசு நிலையிட்ட முத்து வடுகநாதர் பெரிய உடையத்தேவர் பல கொடைகளை வழங்கி செப்பேடும் வெட்டித் தந்துள்ளார்.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
pv3y7tvg2iyfox524068s27fz7hff5n
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/103
250
489084
1838147
1837528
2025-07-02T06:21:11Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|102 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>54. ஜாமி மசூதிக்கு கைக்கோளர் கொடை*</b><ref>*Annual Report on Epigraphy 219 of 1977</ref>}}}}
வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையில் உள்ள ஜாமி மசூதியில் தரையில் பாவப்பட்ட பலகைக்கல் ஒன்றில் திருப்பணி செய்த கைக்கோளர்கள் குறிப்பிடப்படுகின்றனர். கல் முழுதும் தேய்ந்துவிட்டதால் விபரம் தெரியவில்லை. காலக் குறிப்பு அழிந்து விட்டது.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
g17sviubq1lby6ct6aoyujhaqoit9be
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/104
250
489085
1838149
1837533
2025-07-02T06:23:11Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 103}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>55. மதுரை அரசியார் மதித்த இஸ்லாம்*</b><ref>1) List of Anticuities, R. Sewell's Vol I, 40, 268<br>2) “மதுரை நாயக்கர் வரலாறு” அ.கி. பரந்தாமனார். பக்கம் 342</ref>}}}}
மதுரை நாயக்கர் மரபில் இராணி மங்கம்மாள் (1689-1706), இராணி மீனாட்சி (1732-1736) ஆட்சி புரிந்த அரசியர் ஆவர். அவர்கள் இருவரும் திருச்சி நத்ஹர்வலி தர்கா முதலிய பல பள்ளிவாசல்கட்கும், தர்காக்களுக்கும் கொடை கொடுத்ததோடு, பல இஸ்லாமிய ஞானியர்கட்கும் தாராளமாகக் கொடைகள் வழங்கினர். மதுரை நாயக்கர் காலத்தில் இஸ்லாமியர் பலர் உயர் அலுவலராகவும், படைப் பொறுப்பிலும் இருந்துள்ளனர்.
{{Css image crop
|Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf
|Page = 104
|bSize = 425
|cWidth = 245
|cHeight = 291
|oTop = 197
|oLeft = 95
|Location = center
|Description =
}}{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
1na55kb9w2gppsp9s7paah8353dq6qs
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/105
250
489086
1838151
1837536
2025-07-02T06:27:31Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|104 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>56. அகமதுகான் நலத்திற்காக ஊரவர் வெட்டிய வாய்க்கால்*</b><ref>*Annual Report on Epigraphy 268 of 1941</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், சிங்கிகுளம் என்னும் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில் அருகே ஆற்றங்கரையில் உள்ள பாறையில் உள்ள கல்வெட்டு.
|-
| {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}| – ||கி.பி.1722: சுபகிறுது வருடம், சித்திரை மாதம் 24ஆம் தேதி.
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||பூலம் ஆகிய இராசராசபுரத்துக்குத் தென்கீழ்க்கரை ஆற்றில் கான் அசம்சா மகமதுகான் பட்டாயித்து சாயபு அவர்கள் அண்ணன் மீரேகான் பட்டாயித்து சாயிபவர்கள் மகன் அகமது கான் கிமானுகான் பட்டாயித்து சாயிபு அவர்கள் புண்ணியமாக ஆற்றில் வாய்க்கால் வெட்டினர். வெட்டியவர்கள் ஊரவர் என்று தெரிகிறது.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. சகாற்த்தம் 1643ன் மேல் செல்லா
2. நின்ற கொல்லம் 897 வருஷம் சுபகிறுது வருஷம் சித்தி
3. ரை மாதம் 24 தேதி பூருவபட்சத்து பஞ்சமியும் சோ
4. ம வாரமும் சொபயோக சுபகரணமும் பெ
5. ற்ற அனுஷ நட்செத்திரத்து நாளையில்
6. தென்கரை நாட்டு பூலமான ராசரா
7. சபுரத்திலே தென்கீழ்க்கரை ஆத்துக்காலு
8. ண்டு படுத்தினது கான் அசம்சா மகம்ம
9. துகான் பட்டாயித்து சாயிபவர்கள் தமையனா
10. ர் மீரேகான் பட்டாயித்து சாயிபவர்கள் குமா
11. ரன் அம்முதுகான் இமானுகான் பட்டாயித்து
12. சாயிபவர்களுக்குப் புண்ணியமாக ஊறவர்...
............ அயித்துலுதர் திருகு மெச்
13. சாயிபவர்கள்....</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
n8wz86x0n39w68tbpeu0msmaue090lc
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/106
250
489087
1838159
1837552
2025-07-02T06:38:40Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 105}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>57. காசிம் மைதீனுக்கு கோவை மக்கள் கொடை</b><ref>*கோவை, பேரூர், சாந்தலிங்கர் திருமடத்தில் இச்செப்பேடு கோவை கிழார் சி.எம். இராமச்சந்திரச் செட்டியார் தொகுப்பில் உள்ளது. படித்தவர் புலவர் ஐ. இராமசாமி</ref>}}}}
மைசூர் மன்னர் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் (1734 - 1766) காலத்தில் மைசூர் தளவாய்களின் அதிகாரத்திலிருந்து மைசூரை விடுவித்து ஐதர்அலி நாட்டு நிர்வாகத்தை மேற் கொண்டார்.
1765ஆம் ஆண்டு ஐதர்அலி நவாபு பாதர் சாயபு அவர்களின் காரியத்துக்குக் கர்த்தராகக் கோயமுத்தூரில் அட்டவணை, கந்தாசாரம், சுங்கம், பேரம் முதலிய சகல அதிகாரங்களையும் வகித்தவர் குறிக்கார மாதய்யன்.
அவர் காலத்தில் கோயமுத்தூர் அதிகாரிகளும், கணக்கர் முதலிய ஊழியர்களும், குடியானவர்களும் ஆகிய பலரும் ஒன்றாகக் கூடி கோயமுத்தூர்த் தயத்து காசிம் மைதீன் அவர்களுக்கு இரண்டு வள்ளம் தோட்ட நிலமும் (8 ஏக்கர்), ஒரு மா நன்செய் நிலமும் இரண்டு கிணறுகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டது.
கோயமுத்தூர்ப் பேட்டை சாவடி பாரபத்தியம், வெங்கட்ட ரமணய்யர், சேனபோகம் நாகய்யர், கணக்கு அலுவலர் ஆகியோர் குறிக்கப் பெறுகின்றனர். கோயமுத்தூர் அதிகாரிகளில் எவரும் இஸ்லாமியராக இல்லை என்று இச்செப்பேடு மூலம் தெரிகிறது. கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் பலர் உள்ளனர்.
இந்தத் தருமத்திற்கு எவரேனும் தீங்கு செய்தால் அசுவகத்தி, குருகத்தி, சிசுகத்தி செய்த தோசமும், கங்கைக் கரையில் ஏழு காராம் பசுவைக் கொன்ற தோசமும் வரும் என்றும்,
இசுலாமியர்கள் எவரேனும் தீங்கு செய்தால் மக்கா மதினத்திலே கருஞ்சாதி (பன்றி) கழுத்தை அறுத்துக் கொன்று தின்ற பாவம் கிடைக்கும் என்றும் எழுதப்பட்டுள்ளது.
இந்தத் தருமத்தைப் பரிபாலனம் பண்ணின பேர் கோதானம், பூதானம், கன்னியாதானம் செய்த பயனும் பெற்று, புத்திர சந்தானத்துடன் நெடுங்காலம் வாழ்வார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் சித்திரச்சாவடி கணக்குப் பொன்னைய பிள்ளை மகன் செல்லி அண்ணன் என்பவன்.
இச்செப்பேடு கோவைக் கிழார் சி.எம். இராமச்சந்திரச் செட்டியார் அவர்கள் தொகுப்பில் கோவை பேரூராதீனம் சாந்தலிங்கர் திருமடத்தில் உள்ளது.{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
r8jj92cobqma9z91zjr13rot0yrwf5u
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/107
250
489088
1838165
1837549
2025-07-02T06:50:27Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|106 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><b>செப்பேடு</b>
<poem>1. சுபமஸ்து சொஸ்த்தஸ்ரீமன் மகாமண்ட
2. வேசுரன் அரியராயவிபாடன் பாஷைக்குத் தப்புவராத கண்டன்
3. கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதான் எம்மண்டலமுந் தி
4. றைகொண்டருளிய பாண்டிமண்டலத் தாபனாசாரியன் ஒட்டிய மோகந்
5. தவிளத்தான் அரியதளவிபாடன் வில்லுக்கு விசையன் சொல்லுக்கு அ
6. ரிச்சந்திரன் சம்பத்துக்குக் குபேரன் அசுவபதி கெஜபதி நர
7. பதி படைக்கு ராசாதிராசன் ராசபரமேசுபரன் ராச
8. மார்த்தாண்டன் ராசகெம்பீரன் ராசபயங்கரன் அஷ்ட்ட போ
9. க துரந்தரராகிய கிருஷ்ணராசஉடையார் அசுபதிராயர் புசபெல
10. ராயர் சீரங்கராயர் அச்சுதமகாராயர் திப்பயமகாராயரா
11. கிய மைசூர் சமஸ்தானம் சிரீரங்கப்பட்டணம் கிருஷ்ணராசுடைய
12. ராசா ராச்சிய பரிபாலனம் பண்ணி ஆண்டருளிய கலியுக சகா
13. ற்த்தம் 4864 க்கு மேல் செல்லாநின்ற விய வருஷம் அற்பி
14. சை மாதம் 2 பஞ்சமி சுக்கிரவாரம் அஸ்த நட்சத்திரமும் சு
15. பநாமயோகமும் மகாகரணமும் கூடின சுபதினத்தில் சீர
16. ங்கப்பட்டணத்தில் ரற்றின சிம்மாசன ரூடராய் பிறிதி
17. வி ராச்சியஞ்செய்கின்ற னாளையில் அயிதரல்லி நவாபுபாதர்
18. சாயபு அவர்கள் காரியத்துக்குக் கருத்தராகிய கோ
19. யம்புத்தூர் குறிக்கார மாதய்யனவர்கள் அட்டவணை க
20. ந்தாசாரம் சுங்கம் பேரம் தேவஸ்தானம் முதலாகிய
21. சகல அதிகாரமும் செய்கின்ற ராயஸ்திரி மாதய்யன் அ
22. வர்கள் னாளையில் கோயமுத்தூர் பேட்டை சாவடிப்
23. பாரபத்தியம் வெங்கிட்டரமணய்யரவர்கள் சேனபோக
24. னாகையனவர்கள் கணக்கு நீலகண்டம்பிள்ளை அத்த
25. ப்ப பிள்ளை குடியானவர்களின் ராமனாதபள்ளை சாமராச
26. பிள்ளை குமாரவேல்பிள்ளை யெமூராபிள்ளை தாண்டவமூர்த்
27. திசாமி ஆளுவாக் கவுண்டன் ராசப்புடையாக்கவுண்
28. டன் பெத்தாக்கவுண்டன் நல்லதம்பி அங்கணன் முகத்தப்புடையா
29. ன் நாகன் குட்டையன் அங்கணன் மன்னமுத்தன் ராசசேரு
30. வைகாரன் குப்பிசெட்டியார் சுப்பராய செட்டியார் முதலி</poem><noinclude></noinclude>
o3fo7fwobazjfh8dxpir33i4a63p02w
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/108
250
489089
1838170
1837550
2025-07-02T06:53:54Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 107}}
{{rule}}</noinclude><poem>31. யார் அவர்கள் பண்ணையன் தெய்வசிகாமணிக்கவுண்டன்
32. மனவார சுசி ராசையனமுது முதலான குடியானவர்கள்
33. யெல்லோருங் கோயமுத்தூர் தலத்தில் இருக்கும் காசிம்
34. மைய்யதீன் அவர்களுக்குத் தற்மம் சாசனம் சறுவ மா
35. னியம் நடந்து வருகுறபடிக்குப் பேட்டைச் சாவடிக்குச் சே
36. ந்த நிலம் நரசிங்கனய்யனவர்கள் குளத்துப்பத்தில்
37. யேரிக்குங் கீள்த் தெற்குப் புறத்தில் மாதன் தோட்டத்து
38. க்கு வடக்கு சாயபூகான் மகன் உசேனுகான் கும்மந்
39. தான் தோட்டத்துக்கு மேற்கு னாக சேருவைகாரன்
{{center|{{larger|<b>இரண்டாம் பக்கம்</b>}}}}
40. குடி கிணத்துத் தோட்டத்துக்கும் கி
41. ளக்கு இது நடு மத்தியத்தில் பெருக்கு னாகசேருவைகாரன்
42. உளுத தோட்டம் ரண்டு வள்ளம் பூமி ரெண்டு கிணறும்
43. சருவமானியமாகக் கோயமுத்தூர்ப் பெரிய குளத்து
44. யேரிக்குங் கீழே னாட்சிமார் மதகுத் தண்ணீர்ப் பாச்சலி
45. லே காடுவெட்டியில் னாட்சிமார் மதகு வாய்க்காலுக்கும் தெ
46. ற்கு வெள்ளாம்பத்து வாய்க்காலுக்கும் வடக்கு பள்ள அரு
47. ளன் வயலுக்கு மேற்கு எமூராபிள்ளைவயலுக்கும் கிளக்கு
48. இது நடுமத்தியத்தில் பெறாக்குப் பெத்தாக்கவுண்டன் உளு
49. த நிலம் ஒரு மா நிலம் கோயமுத்தூர்க் காசிமையதீ
50. ன் அவர்களுக்குச் சருவ மானியமாகக் குடுத்தது ரண்டு
51. வள்ளத் தோட்டமும் ரண்டு கிணறும் இந்த ஒரு மா நிலமு
52. ங் குடுத்தது இது சந்திரசூரியர் உள்ளவரைக்கும் பூமி ஆகா
53. சம் உள்ளவரைக்கும் இதில் எப்பேர்ப்பட்ட பயிரும் இட்டு
54. அனுபவித்துக் கொள்ளவும் புத்திர பவுத்திர ருள்ளவரைக்
55. கும் அனுபவித்துக் கொள்ளவும் இதுக்குச் சாட்சி
56. காகசீ அல்லிச மாக்கானரு நவாபு சந்தா சா
57. யபூ மகராசா அல்லி கானா இதுக்கு ஒப்பம்
58. --------- --------- --------- -----------
59. சுபையதார் ரகுனானதயன் கரணிக்க நரசிங்கைய
60. ன் கரணிக்கத் திம்மப்பையன் கரணிக்க அரி கிஷ்</poem><noinclude></noinclude>
l6fanflnysu1ooi2itgr172f8xs5gey
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/109
250
489090
1838173
1837551
2025-07-02T07:01:37Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|108 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>61. ண முதலியார் கந்தாசாரத்துச் சேனபோக
62. ர் சவுடய்யன் லிங்கையன் குடியான பேருகள்
63. பேட்டைச் சாவுடிப் பாரபத்தியக்காரர் வெங்கிட்டர
64. மணய்யன் கணக்கு அத்தப்பபிள்ளை யெமூராபிள்ளை சாமி
65. னாதபிள்ளை ராமனாதபிளளை ராசப்புடையாக் கவுண்டன்
66. நல்லதம்பி அங்கண்ணகவுண்டன் குட்டையன் அங்கண்
67. ணகவுண்டன் மன்னமுத்தன் நாங்கள் அனைவரும் கூ
68. டி எழுதிக் குடுத்த தர்மசாதனப் பட்டையம் இந்த தர்
69. மத்துக்கு இடரு செய்த பேருக்கு அசுவத்தி குருவத்தி சிசு
70. வத்தி செய்த தோஷம் கெங்கைக் கரையில் ஏழு காரா
71. ம்பசுவைக் கொன்ற பாவத்திலே போகக் கடவா
72. ராகவும் இதுக்குத் துலுக்கரில் யாதாமொருவன்
73. இடரு செய்தால் மக்கா மதினத்தில் கருஞ்சாதி களு
74. த்தை அறுத்துத் தின்ன பாவத்தில் போவாராகவும்
75. இந்தத் தருமம் பரிபாலனம் செய்த பேருகளுக்கு கோதா
76. னம் பூதானம் கன்னியாதானம் செய்த பலனும் பெ
77. ற்று புத்திரசந்தானமும் பெற்று நீடூளி காலம் வா
78. ள்வாராகவும் இந்தத் தர்ம சாசனப்பட்
79. டையம் எழுதினவன் சித்திரைச் சாவடிக்
80. கணக்குப் பொன்னயபிள்ளை மகன் செல்
81. லிஅண்ணன் குருவே துணை</poem>{{nop}}<noinclude></noinclude>
ashige2l9jlv8fvdfjdlmafqftlbjdw
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/110
250
489091
1837882
1644204
2025-07-01T14:24:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1837882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 109}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>58. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில்<br>பாண்டியர் கல்வெட்டுக்கள்</b>}}}}
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டத்தைச் சேர்ந்த காயல்பட்டினம் தொன்மையான பேரூர். பவித்ரமாணிக்கப் பட்டினம் என்று வரலாற்றிலும் ‘சிறிய மெக்கா’ என்று இஸ்லாமியப் பெருமக்களாலும் அழைக்கப்படும் சிறப்பு மிக்க ஊர். பாண்டியர் வரலாற்றோடு தொடர்புடைய ஊர். அங்குள்ள பள்ளிவாசல்களில் உள்ள கல்வெட்டுக்களில் ஐந்து கல்வெட்டுக்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 1, 4, 5 ஆம் எண் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை முனை ராஜாமுகமது அவர்கள் அன்புடன் உதவியவை.
{{center|{{larger|<b>1) கடற்கரைப் பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
கடற்கரைப் பள்ளியில் இருந்த இக்கல்வெட்டு கற்புடையார் பள்ளியில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. சடையவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி. 1190-1218) கல்வெட்டு. ‘பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப’ என்ற அவன் மெய்க்கீர்த்தியோடு இக்கல்வெட்டு தொடங்குகிறது.
ஐந்து பாண்டியர்களுள் ஒருவனாகிய இம்மன்னன் பவித்திர மாணிக்கப்பட்டினம் என்ற ஊரில் உள்ள கடற்கரைப் பள்ளிக்கு முத்துச் சலாபத்தைக் கொடையாகக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது. “கீழ்க் கடல் படர் காயலந்துறை கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள் வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்லை பவித்திர மாணிக்க நகர்” என்று புகழப்படுகிறது. ‘வணிக சோனகர்’ என்ற தொடரும் காணப்படுகிறது.
<b>கல்வெட்டு</b>
<b><poem>
பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப
மேதினி மாது நீதியில் புணர
.... மடந்தை சயப்புயத் திருப்ப
மாக்கலை மடந்தை வாக்கினில் பொலிய
திசைஇரு நான்கும் இசைநிலா எரிப்ப
மறைநெறி வளர மனுநெறி திகழ்தர
அறநெறிச் சமயங்கள் ஆறும் தழைப்ப
....... ........ ...............எழுகடல் பொழில்
வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்ப
</poem></b>{{nop}}<noinclude></noinclude>
5ey3iymlurbgy8pokn4oed36ylsy4mu
1837883
1837882
2025-07-01T14:25:07Z
ஹர்ஷியா பேகம்
15001
1837883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 109}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>58. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில்<br>பாண்டியர் கல்வெட்டுக்கள்</b>}}}}
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டத்தைச் சேர்ந்த காயல்பட்டினம் தொன்மையான பேரூர். பவித்ரமாணிக்கப் பட்டினம் என்று வரலாற்றிலும் ‘சிறிய மெக்கா’ என்று இஸ்லாமியப் பெருமக்களாலும் அழைக்கப்படும் சிறப்பு மிக்க ஊர். பாண்டியர் வரலாற்றோடு தொடர்புடைய ஊர். அங்குள்ள பள்ளிவாசல்களில் உள்ள கல்வெட்டுக்களில் ஐந்து கல்வெட்டுக்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 1, 4, 5 ஆம் எண் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை முனை ராஜாமுகமது அவர்கள் அன்புடன் உதவியவை.
{{center|{{larger|<b>1) கடற்கரைப் பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
கடற்கரைப் பள்ளியில் இருந்த இக்கல்வெட்டு கற்புடையார் பள்ளியில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. சடையவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி. 1190-1218) கல்வெட்டு. ‘பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப’ என்ற அவன் மெய்க்கீர்த்தியோடு இக்கல்வெட்டு தொடங்குகிறது.
ஐந்து பாண்டியர்களுள் ஒருவனாகிய இம்மன்னன் பவித்திர மாணிக்கப்பட்டினம் என்ற ஊரில் உள்ள கடற்கரைப் பள்ளிக்கு முத்துச் சலாபத்தைக் கொடையாகக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது. “கீழ்க் கடல் படர் காயலந்துறை கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள் வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்லை பவித்திர மாணிக்க நகர்” என்று புகழப்படுகிறது. ‘வணிக சோனகர்’ என்ற தொடரும் காணப்படுகிறது.
<b>கல்வெட்டு</b>
<b><poem>
பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப
மேதினி மாது நீதியில் புணர
.... மடந்தை சயப்புயத் திருப்ப
மாக்கலை மடந்தை வாக்கினில் பொலிய
திசைஇரு நான்கும் இசைநிலா எரிப்ப
மறைநெறி வளர மனுநெறி திகழ்தர
அறநெறிச் சமயங்கள் ஆறும் தழைப்ப
....... ........ ............... எழுகடல் பொழில்
வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்ப
</poem></b>{{nop}}<noinclude></noinclude>
qch8sfui8qkl056ct1g3al92guxktw4
1837890
1837883
2025-07-01T14:32:19Z
ஹர்ஷியா பேகம்
15001
1837890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 109}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>58. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில்<br>பாண்டியர் கல்வெட்டுக்கள்</b>}}}}
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டத்தைச் சேர்ந்த காயல்பட்டினம் தொன்மையான பேரூர். பவித்ரமாணிக்கப் பட்டினம் என்று வரலாற்றிலும் ‘சிறிய மெக்கா’ என்று இஸ்லாமியப் பெருமக்களாலும் அழைக்கப்படும் சிறப்பு மிக்க ஊர். பாண்டியர் வரலாற்றோடு தொடர்புடைய ஊர். அங்குள்ள பள்ளிவாசல்களில் உள்ள கல்வெட்டுக்களில் ஐந்து கல்வெட்டுக்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 1, 4, 5 ஆம் எண் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை முனை ராஜாமுகமது அவர்கள் அன்புடன் உதவியவை.
{{center|{{larger|<b>1) கடற்கரைப் பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
கடற்கரைப் பள்ளியில் இருந்த இக்கல்வெட்டு கற்புடையார் பள்ளியில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. சடையவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி. 1190-1218) கல்வெட்டு. ‘பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப’ என்ற அவன் மெய்க்கீர்த்தியோடு இக்கல்வெட்டு தொடங்குகிறது.
ஐந்து பாண்டியர்களுள் ஒருவனாகிய இம்மன்னன் பவித்திர மாணிக்கப்பட்டினம் என்ற ஊரில் உள்ள கடற்கரைப் பள்ளிக்கு முத்துச் சலாபத்தைக் கொடையாகக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது. “கீழ்க் கடல் படர் காயலந்துறை கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள் வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்லை பவித்திர மாணிக்க நகர்” என்று புகழப்படுகிறது. ‘வணிக சோனகர்’ என்ற தொடரும் காணப்படுகிறது.
<b>கல்வெட்டு</b>
<b><poem>
{{left_margin|3em|பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப
மேதினி மாது நீதியில் புணர
.... மடந்தை சயப்புயத் திருப்ப
மாக்கலை மடந்தை வாக்கினில் பொலிய
திசைஇரு நான்கும் இசைநிலா எரிப்ப
மறைநெறி வளர மனுநெறி திகழ்தர
அறநெறிச் சமயங்கள் ஆறும் தழைப்ப
....... ........ ............... எழுகடல் பொழில்
வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்ப}}
</poem></b>{{nop}}<noinclude></noinclude>
03i479y3jjxca9jcyvnst72rz98pvx2
1838175
1837890
2025-07-02T07:12:33Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 109}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>58. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பாண்டியர் கல்வெட்டுக்கள்</b>}}}}
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டத்தைச் சேர்ந்த காயல்பட்டினம் தொன்மையான பேரூர். பவித்ரமாணிக்கப் பட்டினம் என்று வரலாற்றிலும் ‘சிறிய மெக்கா’ என்று இஸ்லாமியப் பெருமக்களாலும் அழைக்கப்படும் சிறப்பு மிக்க ஊர். பாண்டியர் வரலாற்றோடு தொடர்புடைய ஊர். அங்குள்ள பள்ளிவாசல்களில் உள்ள கல்வெட்டுக்களில் ஐந்து கல்வெட்டுக்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 1, 4, 5 ஆம் எண் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை முனை ராஜாமுகமது அவர்கள் அன்புடன் உதவியவை.
{{center|{{larger|<b>1) கடற்கரைப் பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
கடற்கரைப் பள்ளியில் இருந்த இக்கல்வெட்டு கற்புடையார் பள்ளியில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. சடையவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி. 1190-1218) கல்வெட்டு. ‘பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப’ என்ற அவன் மெய்க்கீர்த்தியோடு இக்கல்வெட்டு தொடங்குகிறது.
ஐந்து பாண்டியர்களுள் ஒருவனாகிய இம்மன்னன் பவித்திர மாணிக்கப்பட்டினம் என்ற ஊரில் உள்ள கடற்கரைப் பள்ளிக்கு முத்துச் சலாபத்தைக் கொடையாகக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது. “கீழ்க் கடல் படர் காயலந்துறை கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள் வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்லை பவித்திர மாணிக்க நகர்” என்று புகழப்படுகிறது. ‘வணிக சோனகர்’ என்ற தொடரும் காணப்படுகிறது.
<b>கல்வெட்டு</b>
<b><poem>{{left_margin|3em|பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப
மேதினி மாது நீதியில் புணர
.... மடந்தை சயப்புயத் திருப்ப
மாக்கலை மடந்தை வாக்கினில் பொலிய
திசைஇரு நான்கும் இசைநிலா எரிப்ப
மறைநெறி வளர மனுநெறி திகழ்தர
அறநெறிச் சமயங்கள் ஆறும் தழைப்ப
....... ........ ............... எழுகடல் பொழில்
வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்ப}}</poem></b>{{nop}}<noinclude></noinclude>
s9x22bw4grp424wx2458exb3islbdmo
1838176
1838175
2025-07-02T07:12:58Z
மொஹமது கராம்
14681
1838176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 109}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>58. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பாண்டியர் கல்வெட்டுக்கள்</b>}}}}
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டத்தைச் சேர்ந்த காயல்பட்டினம் தொன்மையான பேரூர். பவித்ரமாணிக்கப் பட்டினம் என்று வரலாற்றிலும் ‘சிறிய மெக்கா’ என்று இஸ்லாமியப் பெருமக்களாலும் அழைக்கப்படும் சிறப்பு மிக்க ஊர். பாண்டியர் வரலாற்றோடு தொடர்புடைய ஊர். அங்குள்ள பள்ளிவாசல்களில் உள்ள கல்வெட்டுக்களில் ஐந்து கல்வெட்டுக்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 1, 4, 5 ஆம் எண் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை முனை ராஜாமுகமது அவர்கள் அன்புடன் உதவியவை.
{{center|{{larger|<b>1) கடற்கரைப் பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
கடற்கரைப் பள்ளியில் இருந்த இக்கல்வெட்டு கற்புடையார் பள்ளியில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. சடையவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி. 1190-1218) கல்வெட்டு. ‘பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப’ என்ற அவன் மெய்க்கீர்த்தியோடு இக்கல்வெட்டு தொடங்குகிறது.
ஐந்து பாண்டியர்களுள் ஒருவனாகிய இம்மன்னன் பவித்திர மாணிக்கப்பட்டினம் என்ற ஊரில் உள்ள கடற்கரைப் பள்ளிக்கு முத்துச் சலாபத்தைக் கொடையாகக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது. “கீழ்க் கடல் படர் காயலந்துறை கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள் வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்லை பவித்திர மாணிக்க நகர்” என்று புகழப்படுகிறது. ‘வணிக சோனகர்’ என்ற தொடரும் காணப்படுகிறது.
<b>கல்வெட்டு</b>
<b><poem>{{left_margin|3em|பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப
மேதினி மாது நீதியில் புணர
.... மடந்தை சயப்புயத் திருப்ப
மாக்கலை மடந்தை வாக்கினில் பொலிய
திசைஇரு நான்கும் இசைநிலா எரிப்ப
மறைநெறி வளர மனுநெறி திகழ்தர
அறநெறிச் சமயங்கள் ஆறும் தழைப்ப
....... ........ ............... எழுகடல் பொழில்
வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்ப}}</poem></b><noinclude></noinclude>
p9af3idlcrp2yjjcfqvgeh3lqlq4z8f
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/111
250
489092
1837888
1644206
2025-07-01T14:31:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1837888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|110 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><b><poem>{{left_margin|3em|இருநேமி யளவும் ஒருநேமி ஓங்க
சேரலர் பணிய..... மணியணி
மாட கூடப் பாண்டிமண் டலங்கொள்
தென்கீழ்க் கடல்படர் காய லந்துறை
கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள்
வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்கை பவித்திர மாணிக்க
நகர்க்குக் காவலர் ஐவருக் கொருவர்}}</poem></b>
திரிபுவனச் சக்கரவர்த்தி ஆணையாக கடற்கரைப் பள்ளி இறையிலியாகக் குடுக்கும்படிக்கு திருவுளத்தருளிய முத்துச் சலாபம் வாணிகச் சோனகர் குழுக்காய் நாட்டிப் படுத்து.... எல்கை காட்டியும்... வாறெல்லாம்... யாண்டு... விளங்குமுயர் வெள்ளிநாள்.... கல்லில் வெட்டுவித்தேன்.... த்துத்.... மாறென...ரா... க்ண்டனனே... தென்னர் பராக்கிரமனே.... யு.... ஒன்றே யாண்டு கொள்ளவுமாக.... துல்யம்... எழுத்து... ஸ்ரீ...
{{center|{{larger|<b>2) கற்புடையார் பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (1314-1362) காலக் கல்வெட்டு. அரசனின் 11ஆம் ஆட்சியாண்டில் பவித்திர மாணிக்கப் பட்டினத்து வியாபாரி வடவணிகன் என்பவன் சந்தியா தீப விளக்குவைக்க இரண்டு அச்சுக் கொடுத்தான்.
<b>கல்வெட்டு</b>
<poem>ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கர வத்திகள் குலசேகர பாண்டிய தேவர்க்கு யாண்டு ஒன்பதாவதின் எதிர் இரண்டாவது பவித்திர மாணிக்க பட்டினத்து வியாபாரி வடவணிகன்... செய்வதாக சந்தி தீப விளக்குக்குப் பண்டாரத்துக்கு அச்சு இரண்டு இத்தர்மம் சந்திராதித்தவரை செல்வதாக...</poem>
{{center|{{larger|<b>3) இரட்டைக் குளம் பள்ளிவாசல் கல்வெட்டு</b>}}}}
மேல் கல்வெட்டில் கண்ட குலசேகர பாண்டியனின் 16வது ஆட்சியாண்டில் சுல்தான், உய்யவந்தான் திருவனந்தன் ஆகியோர் கொடுத்த கொடை குறிக்கப்படுகிறது.
<b>கல்வெட்டு</b>
<poem>ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலசேகர தேவர்க்கு பராண்டு பதினைந்தாவதுக்கு எதிராவது சுல்தான் உள்ளிட்டாரும் உய்யவந்தான் திருவனந்தன் இவ்வனைவோரும்...</poem>{{nop}}<noinclude></noinclude>
ncatp0wesy4rfuwka60ksral8bjqpla
1838177
1837888
2025-07-02T07:17:30Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|110 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><b><poem>{{left_margin|3em|இருநேமி யளவும் ஒருநேமி ஓங்க
சேரலர் பணிய..... மணியணி
மாட கூடப் பாண்டிமண் டலங்கொள்
தென்கீழ்க் கடல்படர் காய லந்துறை
கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள்
வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்கை பவித்திர மாணிக்க
நகர்க்குக் காவலர் ஐவருக் கொருவர்}}</poem></b>
திரிபுவனச் சக்கரவர்த்தி ஆணையாக கடற்கரைப் பள்ளி இறையிலியாகக் குடுக்கும்படிக்கு திருவுளத்தருளிய முத்துச் சலாபம் வாணிகச் சோனகர் குழுக்காய் நாட்டிப் படுத்து.... எல்கை காட்டியும்... வாறெல்லாம்... யாண்டு... விளங்குமுயர் வெள்ளிநாள்.... கல்லில் வெட்டுவித்தேன்.... த்துத்.... மாறென... ரா... க்ண்டனனே... தென்னர் பராக்கிரமனே.... யு.... ஒன்றே யாண்டு கொள்ளவுமாக.... துல்யம்... எழுத்து... ஸ்ரீ...
{{center|{{larger|<b>2) கற்புடையார் பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (1314-1362) காலக் கல்வெட்டு. அரசனின் 11ஆம் ஆட்சியாண்டில் பவித்திர மாணிக்கப் பட்டினத்து வியாபாரி வடவணிகன் என்பவன் சந்தியா தீப விளக்குவைக்க இரண்டு அச்சுக் கொடுத்தான்.
<b>கல்வெட்டு</b>
ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கர வத்திகள் குலசேகர பாண்டிய தேவர்க்கு யாண்டு ஒன்பதாவதின் எதிர் இரண்டாவது பவித்திர மாணிக்க பட்டினத்து வியாபாரி வடவணிகன்... செய்வதாக சந்தி தீப விளக்குக்குப் பண்டாரத்துக்கு அச்சு இரண்டு இத்தர்மம் சந்திராதித்தவரை செல்வதாக...
{{center|{{larger|<b>3) இரட்டைக் குளம் பள்ளிவாசல் கல்வெட்டு</b>}}}}
மேல் கல்வெட்டில் கண்ட குலசேகர பாண்டியனின் 16வது ஆட்சியாண்டில் சுல்தான், உய்யவந்தான் திருவனந்தன் ஆகியோர் கொடுத்த கொடை குறிக்கப்படுகிறது.
<b>கல்வெட்டு</b>
<poem>ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலசேகர தேவர்க்கு பராண்டு பதினைந்தாவதுக்கு எதிராவது சுல்தான் உள்ளிட்டாரும் உய்யவந்தான் திருவனந்தன் இவ்வனைவோரும்...</poem>{{nop}}<noinclude></noinclude>
roi2auo9rzvxemtp8360uokcsgp503j
1838178
1838177
2025-07-02T07:17:54Z
மொஹமது கராம்
14681
1838178
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|110 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><b><poem>{{left_margin|3em|இருநேமி யளவும் ஒருநேமி ஓங்க
சேரலர் பணிய..... மணியணி
மாட கூடப் பாண்டிமண் டலங்கொள்
தென்கீழ்க் கடல்படர் காய லந்துறை
கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள்
வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்கை பவித்திர மாணிக்க
நகர்க்குக் காவலர் ஐவருக் கொருவர்}}</poem></b>
திரிபுவனச் சக்கரவர்த்தி ஆணையாக கடற்கரைப் பள்ளி இறையிலியாகக் குடுக்கும்படிக்கு திருவுளத்தருளிய முத்துச் சலாபம் வாணிகச் சோனகர் குழுக்காய் நாட்டிப் படுத்து.... எல்கை காட்டியும்... வாறெல்லாம்... யாண்டு... விளங்குமுயர் வெள்ளிநாள்.... கல்லில் வெட்டுவித்தேன்.... த்துத்.... மாறென... ரா... க்ண்டனனே... தென்னர் பராக்கிரமனே.... யு.... ஒன்றே யாண்டு கொள்ளவுமாக.... துல்யம்... எழுத்து... ஸ்ரீ...
{{center|{{larger|<b>2) கற்புடையார் பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (1314-1362) காலக் கல்வெட்டு. அரசனின் 11ஆம் ஆட்சியாண்டில் பவித்திர மாணிக்கப் பட்டினத்து வியாபாரி வடவணிகன் என்பவன் சந்தியா தீப விளக்குவைக்க இரண்டு அச்சுக் கொடுத்தான்.
<b>கல்வெட்டு</b>
ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கர வத்திகள் குலசேகர பாண்டிய தேவர்க்கு யாண்டு ஒன்பதாவதின் எதிர் இரண்டாவது பவித்திர மாணிக்க பட்டினத்து வியாபாரி வடவணிகன்... செய்வதாக சந்தி தீப விளக்குக்குப் பண்டாரத்துக்கு அச்சு இரண்டு இத்தர்மம் சந்திராதித்தவரை செல்வதாக...
{{center|{{larger|<b>3) இரட்டைக் குளம் பள்ளிவாசல் கல்வெட்டு</b>}}}}
மேல் கல்வெட்டில் கண்ட குலசேகர பாண்டியனின் 16வது ஆட்சியாண்டில் சுல்தான், உய்யவந்தான் திருவனந்தன் ஆகியோர் கொடுத்த கொடை குறிக்கப்படுகிறது.
<b>கல்வெட்டு</b>
ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலசேகர தேவர்க்கு பராண்டு பதினைந்தாவதுக்கு எதிராவது சுல்தான் உள்ளிட்டாரும் உய்யவந்தான் திருவனந்தன் இவ்வனைவோரும்...{{nop}}<noinclude></noinclude>
snviv9m2j2s0bz4gh8y1rgk4ydh4m57
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/112
250
489093
1837903
1644205
2025-07-01T14:46:37Z
ஹர்ஷியா பேகம்
15001
1837903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 111}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>4) கற்புடையார்பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
மாறவர்மன் வீரபாண்டியன் காலக் கல்வெட்டு (1334-1367) பவித்திர மாணிக்கப் பட்டினமான காகிற்றூர் நாடாள்வான் கறுப்புடையார் சோனகப்பள்ளிக்குக் கொடையாக சோனக வியாபாரிகள் தலைவனுக்குக் கொடுத்த ஆணையை இக்கல்வெட்டு கூறுகிறது. இரு போகத்துக்கும் நன்செய், புன்செய் விளைவில் அவ்வூரார் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை வரியும் இனிப்பிறக்கும் வரிகளும் கறுப்புடையார் பள்ளிக்கு விட்ட நிலங்களுக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
<b>கல்வெட்டு</b>
<poem>1. ஸ்வஸ்திஸ்ரீ கோமாறப்பன்மரான திரிபுவனச்ச
2. க்கரவர்த்திகள் செம்பிநாடு கொண்டருளின சிறிவீர
3. பாண்டிய தேவற்கு யாண்டு... யாவதின் எதிராமா
4. ண்டு இசப நாயிற்று யிருபத்தெட்டாந் தியதியும் திங்
5. கணாளும் புனர்பூயத்துநாள் கண்டனன்
6. பவித்திரமாணிக்கப்பட்டினமான காகிற்றூர் கண் நாடா
7. ள்வானேன் எட்டடி நெடுந்தெரு வீற்றுள்ள ஆரல் கத்
8. தலை தரள தரங்கத்து சோனக வியாபாரி நாயகற்
9. கு கறுப்புடையார் சோனவப்பள்ளி... குடிக்குள் கோன்
10. செய்யுனென். மேல் குடிமை அந்த
11. ராயம்... கீழ்மேல் எல்லை காயல் கரைக்
12. குப் புள்ளிபுக்க நிலம் புன்செய் நன்செய்.. மாவுக்குப்
13. பாசனம் பொக்கத்து வாயிலைக் கொடிப்புறத்து
14. வாழையுள்பட்டு ஆடி குறுவை அல்பிசி குறுவைக்கு மரத்தால்
15. ... கல நெல்லு தூணிப்பதற்கு நெல்லும்.. அ...
16. ....திரமும் இறுப்பதாக... வும்
17. ........ .............. .............. ..............சோவைப்
18. பள்ளிக் கிதுவகை வரி இல்லாத இருந்திப் பிறக்கும்
19. சையிற் காட்டி....... ............ ..............
20. ............ அஞ்சுவண்ணத் தொழுகை செய்.....
21. துவரற்க.... பவித்திர மாணிக்க நகரூர் காகிற்
22. றூர் நாடென்ற பட்டினத்து..... கறுப்</poem>{{nop}}<noinclude></noinclude>
n2b8nms7jzq9jghsv285olm4lcaa2ys
1838179
1837903
2025-07-02T07:24:36Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 111}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>4) கற்புடையார் பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
மாறவர்மன் வீரபாண்டியன் காலக் கல்வெட்டு (1334-1367) பவித்திர மாணிக்கப் பட்டினமான காகிற்றூர் நாடாள்வான் கறுப்புடையார் சோனகப்பள்ளிக்குக் கொடையாக சோனக வியாபாரிகள் தலைவனுக்குக் கொடுத்த ஆணையை இக்கல்வெட்டு கூறுகிறது. இரு போகத்துக்கும் நன்செய், புன்செய் விளைவில் அவ்வூரார் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை வரியும் இனிப்பிறக்கும் வரிகளும் கறுப்புடையார் பள்ளிக்கு விட்ட நிலங்களுக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
<b>கல்வெட்டு</b>
<poem>1. ஸ்வஸ்திஸ்ரீ கோமாறப்பன்மரான திரிபுவனச்ச
2. க்கரவர்த்திகள் செம்பிநாடு கொண்டருளின சிறிவீர
3. பாண்டிய தேவற்கு யாண்டு... யாவதின் எதிராமா
4. ண்டு இசப நாயிற்று யிருபத்தெட்டாந் தியதியும் திங்
5. கணாளும் புனர்பூயத்துநாள் கண்டனன்
6. பவித்திரமாணிக்கப்பட்டினமான காகிற்றூர் கண் நாடா
7. ள்வானேன் எட்டடி நெடுந்தெரு வீற்றுள்ள ஆரல் கத்
8. தலை தரள தரங்கத்து சோனக வியாபாரி நாயகற்
9. கு கறுப்புடையார் சோனவப்பள்ளி... குடிக்குள் கோன்
10. செய்யுனென். மேல் குடிமை அந்த
11. ராயம்... கீழ்மேல் எல்லை காயல் கரைக்
12. குப் புள்ளிபுக்க நிலம் புன்செய் நன்செய்... மாவுக்குப்
13. பாசனம் பொக்கத்து வாயிலைக் கொடிப்புறத்து
14. வாழையுள்பட்டு ஆடி குறுவை அல்பிசி குறுவைக்கு மரத்தால்
15. ... கல நெல்லு தூணிப்பதற்கு நெல்லும்... அ...
16. .... திரமும் இறுப்பதாக... வும்
17. ........ .............. .............. ..............சோவைப்
18. பள்ளிக் கிதுவகை வரி இல்லாத இருந்திப் பிறக்கும்
19. சையிற் காட்டி....... ............ ..............
20. ............ அஞ்சுவண்ணத் தொழுகை செய்.....
21. துவரற்க.... பவித்திர மாணிக்க நகரூர் காகிற்
22. றூர் நாடென்ற பட்டினத்து..... கறுப்</poem><noinclude></noinclude>
gbij0ta9mwa2c9udedopzomup0kpo5a
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/113
250
489094
1837914
1571541
2025-07-01T14:57:09Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1837914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|112 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>23. புடையான் தலைவன் கணக்கன் புரந்து எளுதிக்காத்து அறப்
24. பகஞ்செய்யக் ..... கடவரால்
25. ....... கு இறுக்கும்படிக்கு.... கல்வெட்டிக்
26. குடுத்தேன்.... ஸ்ரீ.....</poem>
{{center|{{larger|<b>5) கொடிமரத்து சிறுநயினார்பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
அரிகேசரி பராக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டு (கி.பி. 1422-1463) துருக்கநயினாப் பள்ளியில் சிறந்த முறையில் விழாக்கள் நடத்த தென்காயல் மக்கள் எல்லோரும் மகிழ தொழுகை நடத்த அர்த்த மண்டபம் இடைநாழி, பெருமண்டபம், தண்ணீர்க் குளம் அமைத்து ஏற்ற திருப்பணிகளும் செய்யப்பட்டன. இவை அனைத்தும் அரிகேசரி பராக்கிரம பாண்டியனின் 25ஆம் ஆட்சியாண்டில் (கி.பி 1451) நடைபெற்றன.
தென்வாலி நாட்டுப் பொருநையாறு பாயும் பகுதியில் வடபுறம் உமரிக்காட்டு எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் கொடையாகக் கொடுக்கப்பட்டது. புன்னைக் காயலும் குறிக்கப் பெறுகிறது. அரசன் எல்லா வருவாயும் பள்ளிவாசலுக்கு அளிக்க ஓலை கொடுத்தான். இவ்வோலை கல்வெட்டாக வெட்டப்பட்டு செப்பேடும் கொடுக்கப்பட்டது. கொடை நிலங்களுக்கு வரிகளும் நீக்கப்பட்டன.
கொற்கை அதிகாரிகள் சிலர் கையொப்பமிட்டுள்ளனர். தென்காசிக் கோயில் திருப்பணிகள் செய்தவன் சிவபக்தனான இம்ன்னனே யாவான்.
<b>கல்வெட்டு</b>
<poem>{{left_margin|3em|சுபமஸ்து
1. பூமிசை வனிகை மார்பினில் பொலிய
2. நாமிசை கலைமகள் நலமுற விளங்க
3. புயவரை மீது சயமகள் புணர
4. கயலிணை உலகில் கண்ணெனத் திகழ்தரச்
5. சந்திர குலத்து வந்தவ தரித்து
6. முந்தையர் தவத்து முளையென வளர்ந்து
7. தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து
8. மன்பதை புரக்க மணிமுடி புனைந்து
9. சங்கர சரண பங்கயஞ் சூடி}}</poem>{{nop}}<noinclude></noinclude>
gcrmrfmog5ccjk80lw8mw2s70rrbods
1837916
1837914
2025-07-01T15:00:45Z
ஹர்ஷியா பேகம்
15001
1837916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|112 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>23. புடையான் தலைவன் கணக்கன் புரந்து எளுதிக்காத்து அறப்
24. பகஞ்செய்யக் ..... கடவரால்
25. ....... கு இறுக்கும்படிக்கு.... கல்வெட்டிக்
26. குடுத்தேன்.... ஸ்ரீ.....</poem>
{{center|{{larger|<b>5) கொடிமரத்து சிறுநயினார்பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
அரிகேசரி பராக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டு (கி.பி. 1422-1463) துருக்கநயினாப் பள்ளியில் சிறந்த முறையில் விழாக்கள் நடத்த தென்காயல் மக்கள் எல்லோரும் மகிழ தொழுகை நடத்த அர்த்த மண்டபம் இடைநாழி, பெருமண்டபம், தண்ணீர்க் குளம் அமைத்து ஏற்ற திருப்பணிகளும் செய்யப்பட்டன. இவை அனைத்தும் அரிகேசரி பராக்கிரம பாண்டியனின் 25ஆம் ஆட்சியாண்டில் (கி.பி 1451) நடைபெற்றன.
தென்வாலி நாட்டுப் பொருநையாறு பாயும் பகுதியில் வடபுறம் உமரிக்காட்டு எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் கொடையாகக் கொடுக்கப்பட்டது. புன்னைக் காயலும் குறிக்கப் பெறுகிறது. அரசன் எல்லா வருவாயும் பள்ளிவாசலுக்கு அளிக்க ஓலை கொடுத்தான். இவ்வோலை கல்வெட்டாக வெட்டப்பட்டு செப்பேடும் கொடுக்கப்பட்டது. கொடை நிலங்களுக்கு வரிகளும் நீக்கப்பட்டன.
கொற்கை அதிகாரிகள் சிலர் கையொப்பமிட்டுள்ளனர். தென்காசிக் கோயில் திருப்பணிகள் செய்தவன் சிவபக்தனான இம்ன்னனே யாவான்.
<b>கல்வெட்டு</b>
<poem>சுபமஸ்து
1. பூமிசை வனிகை மார்பினில் பொலிய
2. நாமிசை கலைமகள் நலமுற விளங்க
3. புயவரை மீது சயமகள் புணர
4. கயலிணை உலகில் கண்ணெனத் திகழ்தரச்
5. சந்திர குலத்து வந்தவ தரித்து
6. முந்தையர் தவத்து முளையென வளர்ந்து
7. தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து
8. மன்பதை புரக்க மணிமுடி புனைந்து
9. சங்கர சரண பங்கயஞ் சூடி</poem>{{nop}}<noinclude></noinclude>
ohhe329pdfihpil8r39j5fzfyu9xljj
1838183
1837916
2025-07-02T07:30:32Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|112 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude><poem>23. புடையான் தலைவன் கணக்கன் புரந்து எளுதிக்காத்து அறப்
24. பகஞ்செய்யக் ..... கடவரால்
25. ....... கு இறுக்கும்படிக்கு.... கல்வெட்டிக்
26. குடுத்தேன்.... ஸ்ரீ.....</poem>
{{center|{{larger|<b>5) கொடிமரத்து சிறுநயினார்பள்ளிக் கல்வெட்டு</b>}}}}
அரிகேசரி பராக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டு (கி.பி. 1422-1463) துருக்கநயினாப் பள்ளியில் சிறந்த முறையில் விழாக்கள் நடத்த தென்காயல் மக்கள் எல்லோரும் மகிழ தொழுகை நடத்த அர்த்த மண்டபம் இடைநாழி, பெருமண்டபம், தண்ணீர்க் குளம் அமைத்து ஏற்ற திருப்பணிகளும் செய்யப்பட்டன. இவை அனைத்தும் அரிகேசரி பராக்கிரம பாண்டியனின் 25ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1451) நடைபெற்றன.
தென்வாலி நாட்டுப் பொருநையாறு பாயும் பகுதியில் வடபுறம் உமரிக்காட்டு எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் கொடையாகக் கொடுக்கப்பட்டது. புன்னைக் காயலும் குறிக்கப் பெறுகிறது. அரசன் எல்லா வருவாயும் பள்ளிவாசலுக்கு அளிக்க ஓலை கொடுத்தான். இவ்வோலை கல்வெட்டாக வெட்டப்பட்டு செப்பேடும் கொடுக்கப்பட்டது. கொடை நிலங்களுக்கு வரிகளும் நீக்கப்பட்டன.
கொற்கை அதிகாரிகள் சிலர் கையொப்பமிட்டுள்ளனர். தென்காசிக் கோயில் திருப்பணிகள் செய்தவன் சிவபக்தனான இம்ன்னனே யாவான்.
<b>கல்வெட்டு</b>
<poem>சுபமஸ்து
1. பூமிசை வனிகை மார்பினில் பொலிய
2. நாமிசை கலைமகள் நலமுற விளங்க
3. புயவரை மீது சயமகள் புணர
4. கயலிணை உலகில் கண்ணெனத் திகழ்தரச்
5. சந்திர குலத்து வந்தவ தரித்து
6. முந்தையர் தவத்து முளையென வளர்ந்து
7. தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து
8. மன்பதை புரக்க மணிமுடி புனைந்து
9. சங்கர சரண பங்கயஞ் சூடி</poem><noinclude></noinclude>
28kjdtft28rnkxk2oqktkiph25nxpfy
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/114
250
489095
1837924
1571542
2025-07-01T15:11:41Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1837924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 113}}
{{rule}}</noinclude><poem>10. வீர பாண்டிய பட்டினத் துள்திகழ்
11. ஆர்கலி யோதக்கரை...
12. .....கல்தரள வண்மணி தேக்கு
13. புரிசையங் கிருந்து தனிக்குடை திகழ்புரி
14. பவித்ர மாணிக்கப் பட்டினத் துறுபெரும்
15. செயமா துறையும் காயல் பட்டினம்
16. திகழ்தரு துருக்க நயினாப் பள்ளி
17. விழாவணி நடாத்தி வழாவகை நடாத்தற்கு
18. தென்காயல் நாட்டு மண்மக்கள் உவப்ப
19. தொழுகை அர்த்தமண் டபமும் இடைநாழி
20. பெருமண்டபமும் அலம்புநீர் வாலியும் செய்து
21. திருப்பணி செய்து சோனகப் பள்ளி
22. சிரி அரிகேசரி பராக்ரம பாண்டிய தேவர்க்கு யாண்டு இருபத்
23. தெட்டாவதின் மேலாம் எதிரது. ற்று இருபத்தொன்றாம்
24. தியதி பூரணையும் வெள்ளிக்கிழமை சோதிநாள்... யத்து
25. தென்வாரி நாட்டுப் பொருநை பாயும் உத்தரதீரத்து உமரிக்
26. காட்டெல்லை யுட்படு மாத்தூர் காணிக்கு... பராக்கிரம
27. பாண்டிய தேவற்கு எல்கையான புன்னைக் காயற்கு உட்பட்ட
28. வடக்கீழ் எல்கை.... நன்செயும் புன்செயும் மேடும் குளனும்
29. மாவடை மரவடை பட்டைகொடித் தோட்டமும்...
30. செக்கிறை மற்றுமுள்ள சமஸ்தப்பிராப்திகள் யாவும் முப்பதாவது
31. பாசன முப்பெரு முதலுக்கு தேவதானமாக விட்டது இம்
32. மரியாதையிலே இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு...
33. உள்ளளவும் ..... ....... ....... .........
34. கையாண்டு செம்பிலும் கல்லிலும் வெட்டியது இதனால்
35. பள்ளியிற் றொழுகைப் பணிகள் எவையும் முறையோ
36. டாழ்வாற நடாத்திப் போதாவும் பாற்க... இவை
37. கொற்கை பராக்கிரம மாறன் சிறியரிபாண்டியன் தென்னவன்
38. எழுத்து.... துல்யம்... பவித்திரமாணிக்கப் பட்டினப்
39. .......... ........ .......சந்திராதித்தவம்
40. ....... வரியிலார் கணக்கிலும் தவிர்த்து
41. கையாண்டு கொள்ளவும் துல்யம்.... ஸ்வஸ்திஸ்ரீ.....</poem><noinclude>8</noinclude>
4hgz0ccsf0wcjux0bgg0kvc7dd0eoyk
1838185
1837924
2025-07-02T07:33:39Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 113}}
{{rule}}</noinclude><poem>10. வீர பாண்டிய பட்டினத் துள்திகழ்
11. ஆர்கலி யோதக்கரை...
12. ..... கல்தரள வண்மணி தேக்கு
13. புரிசையங் கிருந்து தனிக்குடை திகழ்புரி
14. பவித்ர மாணிக்கப் பட்டினத் துறுபெரும்
15. செயமா துறையும் காயல் பட்டினம்
16. திகழ்தரு துருக்க நயினாப் பள்ளி
17. விழாவணி நடாத்தி வழாவகை நடாத்தற்கு
18. தென்காயல் நாட்டு மண்மக்கள் உவப்ப
19. தொழுகை அர்த்தமண் டபமும் இடைநாழி
20. பெருமண்டபமும் அலம்புநீர் வாலியும் செய்து
21. திருப்பணி செய்து சோனகப் பள்ளி
22. சிரி அரிகேசரி பராக்ரம பாண்டிய தேவர்க்கு யாண்டு இருபத்
23. தெட்டாவதின் மேலாம் எதிரது...ற்று இருபத்தொன்றாம்
24. தியதி பூரணையும் வெள்ளிக்கிழமை சோதிநாள்... யத்து
25. தென்வாரி நாட்டுப் பொருநை பாயும் உத்தரதீரத்து உமரிக்
26. காட்டெல்லை யுட்படு மாத்தூர் காணிக்கு... பராக்கிரம
27. பாண்டிய தேவற்கு எல்கையான புன்னைக் காயற்கு உட்பட்ட
28. வடக்கீழ் எல்கை.... நன்செயும் புன்செயும் மேடும் குளனும்
29. மாவடை மரவடை பட்டைகொடித் தோட்டமும்...
30. செக்கிறை மற்றுமுள்ள சமஸ்தப்பிராப்திகள் யாவும் முப்பதாவது
31. பாசன முப்பெரு முதலுக்கு தேவதானமாக விட்டது இம்
32. மரியாதையிலே இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு...
33. உள்ளளவும் ..... ....... ....... .........
34. கையாண்டு செம்பிலும் கல்லிலும் வெட்டியது இதனால்
35. பள்ளியிற் றொழுகைப் பணிகள் எவையும் முறையோ
36. டாழ்வாற நடாத்திப் போதாவும் பாற்க... இவை
37. கொற்கை பராக்கிரம மாறன் சிறியரிபாண்டியன் தென்னவன்
38. எழுத்து.... துல்யம்... பவித்திரமாணிக்கப் பட்டினப்
39. .......... ........ .......சந்திராதித்தவம்
40. ....... வரியிலார் கணக்கிலும் தவிர்த்து
41. கையாண்டு கொள்ளவும் துல்யம்.... ஸ்வஸ்திஸ்ரீ.....</poem><noinclude>8</noinclude>
oqux0pp2dfn76k39k4y3rliq18wdyv1
1838186
1838185
2025-07-02T07:33:59Z
மொஹமது கராம்
14681
1838186
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 113}}
{{rule}}</noinclude><poem>10. வீர பாண்டிய பட்டினத் துள்திகழ்
11. ஆர்கலி யோதக்கரை...
12. ..... கல்தரள வண்மணி தேக்கு
13. புரிசையங் கிருந்து தனிக்குடை திகழ்புரி
14. பவித்ர மாணிக்கப் பட்டினத் துறுபெரும்
15. செயமா துறையும் காயல் பட்டினம்
16. திகழ்தரு துருக்க நயினாப் பள்ளி
17. விழாவணி நடாத்தி வழாவகை நடாத்தற்கு
18. தென்காயல் நாட்டு மண்மக்கள் உவப்ப
19. தொழுகை அர்த்தமண் டபமும் இடைநாழி
20. பெருமண்டபமும் அலம்புநீர் வாலியும் செய்து
21. திருப்பணி செய்து சோனகப் பள்ளி
22. சிரி அரிகேசரி பராக்ரம பாண்டிய தேவர்க்கு யாண்டு இருபத்
23. தெட்டாவதின் மேலாம் எதிரது...ற்று இருபத்தொன்றாம்
24. தியதி பூரணையும் வெள்ளிக்கிழமை சோதிநாள்... யத்து
25. தென்வாரி நாட்டுப் பொருநை பாயும் உத்தரதீரத்து உமரிக்
26. காட்டெல்லை யுட்படு மாத்தூர் காணிக்கு... பராக்கிரம
27. பாண்டிய தேவற்கு எல்கையான புன்னைக் காயற்கு உட்பட்ட
28. வடக்கீழ் எல்கை.... நன்செயும் புன்செயும் மேடும் குளனும்
29. மாவடை மரவடை பட்டைகொடித் தோட்டமும்...
30. செக்கிறை மற்றுமுள்ள சமஸ்தப்பிராப்திகள் யாவும் முப்பதாவது
31. பாசன முப்பெரு முதலுக்கு தேவதானமாக விட்டது இம்
32. மரியாதையிலே இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு...
33. உள்ளளவும் ..... ....... ....... .........
34. கையாண்டு செம்பிலும் கல்லிலும் வெட்டியது இதனால்
35. பள்ளியிற் றொழுகைப் பணிகள் எவையும் முறையோ
36. டாழ்வாற நடாத்திப் போதாவும் பாற்க... இவை
37. கொற்கை பராக்கிரம மாறன் சிறியரிபாண்டியன் தென்னவன்
38. எழுத்து.... துல்யம்... பவித்திரமாணிக்கப் பட்டினப்
39. .......... ........ .......சந்திராதித்தவம்
40. ....... வரியிலார் கணக்கிலும் தவிர்த்து
41. கையாண்டு கொள்ளவும் துல்யம்.... ஸ்வஸ்திஸ்ரீ.....</poem>{{nop}}<noinclude>8</noinclude>
05s300721etww5q7cxj9o0fvxprfjs5
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/115
250
489096
1837933
1571543
2025-07-01T15:21:44Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1837933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|114 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>59. உதய மார்த்தாண்டன் புதுப்பித்த பள்ளிவாசல்*</b>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன் பட்டினம் காட்டு மகதூம் பள்ளிவாசல்
|-
| காலம் || – ||கொல்லம் 568; உதய மார்த்தாண்ட வர்மன். கி.பி. 31.7.1387
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||நாஞ்சில் நாட்டு மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் கோணாடு கொண்டான் பட்டினத்தில் உள்ள ஜும்மாத்துப் பள்ளிவாசலைப் புதுப்பித்து தன் பெயரால் “உதைய மார்த்தாண்டப் பெரும்பள்ளி” என்று பெயர் வைத்து அவ்வூர்க் காதியாருக்கும் “உதைய மார்த் தாண்டக் காதியார்” என்றும் பெயர் கொடுத்தார்.
துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட் கெல்லாம் நாலு பணத்துக்குத் கால் பணம் மகமைக் கொடையளிக்கவும் ஏற்பாடு செய்தார்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்
2. செயல் கொல்ல
3. ம் 563 வருஷம் சிங்
4. மம் இரண்
5. டாந் தியதியும் ப
6. வுர்ணமியும் புதன்
7. கிழமையும் பெற்ற
8. அவிட்டத்து நாள்
9. சோனாடு கொண்
10. டான் பட்டினத்து ஜு
11. மாத்துப் பள்ளிக்கு
12. உதையமார்த்தாண்
13. டப் பெரும்பள்ளி எ
14. ன்று பேருங்குடுத்
15. து இவ்வூரிற் காதி
16. யார் அபூவக்கற்கு
17. உதையமாத்தாண்</poem>{{nop}}<noinclude></noinclude>
0vm2eyqtd0i05g4krji513z99comgz4
1837934
1837933
2025-07-01T15:23:27Z
ஹர்ஷியா பேகம்
15001
1837934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|114 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>59. உதய மார்த்தாண்டன் புதுப்பித்த பள்ளிவாசல்*</b><ref>*ARE 311 of 1964</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன் பட்டினம் காட்டு மகதூம் பள்ளிவாசல்
|-
| காலம் || – ||கொல்லம் 568; உதய மார்த்தாண்ட வர்மன். கி.பி. 31.7.1387
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||நாஞ்சில் நாட்டு மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் கோணாடு கொண்டான் பட்டினத்தில் உள்ள ஜும்மாத்துப் பள்ளிவாசலைப் புதுப்பித்து தன் பெயரால் “உதைய மார்த்தாண்டப் பெரும்பள்ளி” என்று பெயர் வைத்து அவ்வூர்க் காதியாருக்கும் “உதைய மார்த் தாண்டக் காதியார்” என்றும் பெயர் கொடுத்தார்.
துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட் கெல்லாம் நாலு பணத்துக்குத் கால் பணம் மகமைக் கொடையளிக்கவும் ஏற்பாடு செய்தார்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்
2. செயல் கொல்ல
3. ம் 563 வருஷம் சிங்
4. மம் இரண்
5. டாந் தியதியும் ப
6. வுர்ணமியும் புதன்
7. கிழமையும் பெற்ற
8. அவிட்டத்து நாள்
9. சோனாடு கொண்
10. டான் பட்டினத்து ஜு
11. மாத்துப் பள்ளிக்கு
12. உதையமார்த்தாண்
13. டப் பெரும்பள்ளி எ
14. ன்று பேருங்குடுத்
15. து இவ்வூரிற் காதி
16. யார் அபூவக்கற்கு
17. உதையமாத்தாண்</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude>
bqc2sy35c2hzobecg87nj1xp8lgz9o9
1838188
1837934
2025-07-02T07:39:07Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838188
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|114 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>59. உதய மார்த்தாண்டன் புதுப்பித்த பள்ளிவாசல்*</b><ref>*ARE 311 of 1964</ref>}}}}
{|
|-
| {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன் பட்டினம் காட்டு மகதூம் பள்ளிவாசல்
|-
| காலம் || – ||கொல்லம் 568; உதய மார்த்தாண்ட வர்மன். கி.பி. 31.7.1387
|-
| {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||நாஞ்சில் நாட்டு மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் கோணாடு கொண்டான் பட்டினத்தில் உள்ள ஜும்மாத்துப் பள்ளிவாசலைப் புதுப்பித்து தன் பெயரால் “உதைய மார்த்தாண்டப் பெரும்பள்ளி” என்று பெயர் வைத்து அவ்வூர்க் காதியாருக்கும் “உதைய மார்த் தாண்டக் காதியார்” என்றும் பெயர் கொடுத்தார்.
துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட் கெல்லாம் நாலு பணத்துக்குத் கால் பணம் மகமைக் கொடையளிக்கவும் ஏற்பாடு செய்தார்.
|}
<b>கல்வெட்டு</b>
<poem>1. ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்
2. செயல் கொல்ல
3. ம் 563 வருஷம் சிங்
4. மம் இரண்
5. டாந் தியதியும் ப
6. வுர்ணமியும் புதன்
7. கிழமையும் பெற்ற
8. அவிட்டத்து நாள்
9. சோனாடு கொண்
10. டான் பட்டினத்து ஜு
11. மாத்துப் பள்ளிக்கு
12. உதையமார்த்தாண்
13. டப் பெரும்பள்ளி எ
14. ன்று பேருங்குடுத்
15. து இவ்வூரிற் காதி
16. யார் அபூவக்கற்கு
17. உதையமாத்தாண்</poem>{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
oyzhy4tvrk79jb5or7tna3f7kzthh6v
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/116
250
489097
1837963
1571544
2025-07-01T17:15:16Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1837963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 115}}
{{rule}}</noinclude><poem>18. டக் காதியார் என்று
19. பேருங் குடுத்து இந்
20. தப் பள்ளிக்கு சுவந்
21. தரமாக இந்தச் சோ
22. ணாடு கொண்டான் ப
23. ட்டினத்துத் துறை
24. யில் ஏற்றுமதி இறக்
25. குமதி கொள்ளும்
26. வகைகளுக்கு எ
27. ல்லாம் விலைப்
28. படி உள்ள முதலு
29. க்கு நாலு பணத்து
30. க்கு காற்பணமாக
31. உள்ள விழுக்காடு
32. பெறும்படியும் இ
33. ன்னாள்வரை இப்படியி
34. லே பேரும் வழங்கி
35. இந்தச் சுதந்தரமும் பெற்
36. றுப் போதும்படியும்</poem>{{nop}}<noinclude></noinclude>
d5bo5hvvcavbab1s9scb4omzf040flb
1838189
1837963
2025-07-02T07:40:42Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838189
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 115}}
{{rule}}</noinclude><poem>18. டக் காதியார் என்று
19. பேருங் குடுத்து இந்
20. தப் பள்ளிக்கு சுவந்
21. தரமாக இந்தச் சோ
22. ணாடு கொண்டான் ப
23. ட்டினத்துத் துறை
24. யில் ஏற்றுமதி இறக்
25. குமதி கொள்ளும்
26. வகைகளுக்கு எ
27. ல்லாம் விலைப்
28. படி உள்ள முதலு
29. க்கு நாலு பணத்து
30. க்கு காற்பணமாக
31. உள்ள விழுக்காடு
32. பெறும்படியும் இ
33. ன்னாள்வரை இப்படியி
34. லே பேரும் வழங்கி
35. இந்தச் சுதந்தரமும் பெற்
36. றுப் போதும்படியும்</poem>{{nop}}<noinclude></noinclude>
bz0wlj53nc7dwu7x3ynoxam71585w7u
பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/120
250
489101
1837969
1571548
2025-07-01T17:45:44Z
ஹர்ஷியா பேகம்
15001
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1837969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 119}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்*</b>}}}}
மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. ‘சிவமயம்’ என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது.
அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில் ஆட்சிபுரிந்த சுல்தான் ஆவார். உலுக்கான் அல்லது துக்ளக் என்பது அவர் பெயர். அவர் காலம் 14ஆம் நூற்றாண்டாகும். மதுரைக்கு கி.பி. 1323ல் வந்த அவர் இங்கேயே அடக்கமாகிவிட்டார். அவரை இக்கல்வெட்டு “டில்லி ஒரு கோல் சுல்தான்” என்று கூறுகிறது. ‘வாரங்கல்’ என்பதைக் கல்வெட்டு ‘ஒருகோல்’ என்று குறிக்கிறது.
மதுரைக் கூன்பாண்டியன் நாளில் 14 ஆயிரம் பொன் அளித்து சோளிகுடி, சொக்கிகுளம், வீவிகுளம், கண்ணானேம்பல் சிறுத்தூர், திருப்பாலை என்ற ஊர்களைப் பள்ளி வாசலுக்கு மானியமாக அளித்தான். அக்கிராமங்கட்கு எல்லைக் கல்லும் போடப்பட்டது.
மதுரை நாயக்கர் ஆட்சியில் பள்ளிவாசலுக்கும் அந்த ஊர்களின் நிர்வாகிகளுக்கும் அவ்வூர் உரிமை பற்றிய தகராறு எழுந்தது. மதுரை நாயக்கர் மரபில் அப்போது ஆட்சியிலிருந்த வீரப்பநாயக்கர் நேரில் பள்ளிவாசலுக்குச் சென்று விசாரணை செய்தார். அங்கு பாண்டியன் அப்பள்ளிவாசலுக்கு மேற்கண்ட ஊர்களைக் கொடுத்த ஆவணம் முதலியவற்றைப் பார்வையிட்டார்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து அந்த ஆறு ஊர்களையும் மீண்டும் பள்ளிவாசலுக்கே சந்திர சூரியர் உள்ளவரை அளித்து அதைக் கல்வெட்டாகவும் பொறித்து வைத்தார்.(1573)
சுமார் இரண்டு மீட்டர் உயரமுள்ள அக்கல்லில் நான்கு பக்கங்களிலும் 182 வரிகளில் மேற்கண்ட செய்தி எழுதப் பட்டுள்ளது. இதன் காலம் 1574.
<b>கல்வெட்டு</b>
<poem>சிவமயம். சொஸ்திஸ்ரீரிமன் மகாமண்டலேசுரன் அரியற தளவிபாடன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பூறுவ தெட்சிண பச்சிம உத்தர சதுர் சமுத்திராபதி பாண்டி மண்டல ஸ்தாபனச்சாரியன் சோளமண்டல</poem><noinclude></noinclude>
r151z9omolil524qjr9gmyo9dj3yj0a
1838190
1837969
2025-07-02T07:45:23Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838190
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 119}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்*</b>}}}}
மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. ‘சிவமயம்’ என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது.
அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில் ஆட்சிபுரிந்த சுல்தான் ஆவார். உலுக்கான் அல்லது துக்ளக் என்பது அவர் பெயர். அவர் காலம் 14ஆம் நூற்றாண்டாகும். மதுரைக்கு கி.பி. 1323ல் வந்த அவர் இங்கேயே அடக்கமாகிவிட்டார். அவரை இக்கல்வெட்டு “டில்லி ஒரு கோல் சுல்தான்” என்று கூறுகிறது. ‘வாரங்கல்’ என்பதைக் கல்வெட்டு ‘ஒருகோல்’ என்று குறிக்கிறது.
மதுரைக் கூன்பாண்டியன் நாளில் 14 ஆயிரம் பொன் அளித்து சோளிகுடி, சொக்கிகுளம், வீவிகுளம், கண்ணானேம்பல் சிறுத்தூர், திருப்பாலை என்ற ஊர்களைப் பள்ளி வாசலுக்கு மானியமாக அளித்தான். அக்கிராமங்கட்கு எல்லைக் கல்லும் போடப்பட்டது.
மதுரை நாயக்கர் ஆட்சியில் பள்ளிவாசலுக்கும் அந்த ஊர்களின் நிர்வாகிகளுக்கும் அவ்வூர் உரிமை பற்றிய தகராறு எழுந்தது. மதுரை நாயக்கர் மரபில் அப்போது ஆட்சியிலிருந்த வீரப்பநாயக்கர் நேரில் பள்ளிவாசலுக்குச் சென்று விசாரணை செய்தார். அங்கு பாண்டியன் அப்பள்ளிவாசலுக்கு மேற்கண்ட ஊர்களைக் கொடுத்த ஆவணம் முதலியவற்றைப் பார்வையிட்டார்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து அந்த ஆறு ஊர்களையும் மீண்டும் பள்ளிவாசலுக்கே சந்திர சூரியர் உள்ளவரை அளித்து அதைக் கல்வெட்டாகவும் பொறித்து வைத்தார்.(1573)
சுமார் இரண்டு மீட்டர் உயரமுள்ள அக்கல்லில் நான்கு பக்கங்களிலும் 182 வரிகளில் மேற்கண்ட செய்தி எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் 1574.
<b>கல்வெட்டு</b>
சிவமயம். சொஸ்திஸ்ரீரிமன் மகாமண்டலேசுரன் அரியற தளவிபாடன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பூறுவ தெட்சிண பச்சிம உத்தர சதுர் சமுத்திராபதி பாண்டி மண்டல ஸ்தாபனச்சாரியன் சோளமண்டல<noinclude></noinclude>
9ue8wgw45l53gu3k6jibcyrf7d30qcm
1838191
1838190
2025-07-02T07:45:36Z
மொஹமது கராம்
14681
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1838191
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 119}}
{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்*</b>}}}}
மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. ‘சிவமயம்’ என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது.
அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில் ஆட்சிபுரிந்த சுல்தான் ஆவார். உலுக்கான் அல்லது துக்ளக் என்பது அவர் பெயர். அவர் காலம் 14ஆம் நூற்றாண்டாகும். மதுரைக்கு கி.பி. 1323ல் வந்த அவர் இங்கேயே அடக்கமாகிவிட்டார். அவரை இக்கல்வெட்டு “டில்லி ஒரு கோல் சுல்தான்” என்று கூறுகிறது. ‘வாரங்கல்’ என்பதைக் கல்வெட்டு ‘ஒருகோல்’ என்று குறிக்கிறது.
மதுரைக் கூன்பாண்டியன் நாளில் 14 ஆயிரம் பொன் அளித்து சோளிகுடி, சொக்கிகுளம், வீவிகுளம், கண்ணானேம்பல் சிறுத்தூர், திருப்பாலை என்ற ஊர்களைப் பள்ளி வாசலுக்கு மானியமாக அளித்தான். அக்கிராமங்கட்கு எல்லைக் கல்லும் போடப்பட்டது.
மதுரை நாயக்கர் ஆட்சியில் பள்ளிவாசலுக்கும் அந்த ஊர்களின் நிர்வாகிகளுக்கும் அவ்வூர் உரிமை பற்றிய தகராறு எழுந்தது. மதுரை நாயக்கர் மரபில் அப்போது ஆட்சியிலிருந்த வீரப்பநாயக்கர் நேரில் பள்ளிவாசலுக்குச் சென்று விசாரணை செய்தார். அங்கு பாண்டியன் அப்பள்ளிவாசலுக்கு மேற்கண்ட ஊர்களைக் கொடுத்த ஆவணம் முதலியவற்றைப் பார்வையிட்டார்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து அந்த ஆறு ஊர்களையும் மீண்டும் பள்ளிவாசலுக்கே சந்திர சூரியர் உள்ளவரை அளித்து அதைக் கல்வெட்டாகவும் பொறித்து வைத்தார்.(1573)
சுமார் இரண்டு மீட்டர் உயரமுள்ள அக்கல்லில் நான்கு பக்கங்களிலும் 182 வரிகளில் மேற்கண்ட செய்தி எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் 1574.
<b>கல்வெட்டு</b>
சிவமயம். சொஸ்திஸ்ரீரிமன் மகாமண்டலேசுரன் அரியற தளவிபாடன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பூறுவ தெட்சிண பச்சிம உத்தர சதுர் சமுத்திராபதி பாண்டி மண்டல ஸ்தாபனச்சாரியன் சோளமண்டல<noinclude></noinclude>
4vvfd3qu76671a61nkl1pvcygudglfi
மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்
0
540221
1837879
1837500
2025-07-01T14:21:29Z
Info-farmer
232
புதிது = "{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
", மொத்தம் = 463 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன.
1837879
wikitext
text/x-wiki
{{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}}
{{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}}
{{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}}
{{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}}
{{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}}
{{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}}
{{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}}
{{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}}
{{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}}
{{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}}
{{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}}
{{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}}
{{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}}
{{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}}
{{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}}
{{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}}
{{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}}
{{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}}
{{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}}
{{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}}
{{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}}
{{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}}
{{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}}
{{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}}
{{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}}
{{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}}
{{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}}
{{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}}
{{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}}
{{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}}
{{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}}
{{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}}
{{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}}
{{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}}
{{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}}
{{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}}
{{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}}
{{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}}
{{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}}
{{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}}
{{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}}
{{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}}
{{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}}
{{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}}
{{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}}
{{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}}
{{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}}
{{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}}
{{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}}
{{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}}
{{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}}
{{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}}
{{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}}
{{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}}
{{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}}
{{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}}
{{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }}
{{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }}
{{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }}
{{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}}
{{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}}
{{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}}
{{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}}
{{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}}
{{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}}
{{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }}
{{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }}
{{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}}
{{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}}
{{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}}
{{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}}
{{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}}
{{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}}
{{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}}
{{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}}
{{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}}
{{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}}
{{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}}
{{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}}
{{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}}
{{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}}
{{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}}
{{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}}
{{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}}
{{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}}
{{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}}
{{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}}
{{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}}
{{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}}
{{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}}
{{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}}
{{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }}
{{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}}
{{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}}
{{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}}
{{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}}
{{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}}
{{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}}
{{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}}
# {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986
# {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007
# {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924
# {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986
# {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959
# {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957
# {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984
#{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988
# {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970
#{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968
#{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957
#{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961
#{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993
#{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]'''
#{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]'''
#{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001
#{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]'''
#{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]'''
#{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]'''
#{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]'''
#{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951
#{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995
#{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]'''
#{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]'''
#{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991
#{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000
#{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967
#{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953
#{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}}
#{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952
#{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}}
# {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960
#{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960
#{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993
#{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911
#{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998
#{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004
#{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003
# {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928
#{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]'''
#{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986
#{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966
#{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002
#{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993
#{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993
#{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977
#{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957
#{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007
#{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952
# {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959
#{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966
#{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985
#{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999
#{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002
#{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989
#{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981
{{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}}
#{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}}
#{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978
#{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999
#{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998
#{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003
#{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960
#{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}}
#{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000
#{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994
#{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006
#{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004
#{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}}
#{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001
#{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}}
#{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959
#{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}}
#{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}}
#{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946
#{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947
#{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}}
#{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964
# {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979
# {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982
#{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986
# {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988
#* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990
#{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997
#{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997
#{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988
# {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990
# {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993
#{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999
#{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999
#{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997
#{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994
#{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001
#{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}}
#{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005
#{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999
#{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005
#{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996
#{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006
#{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005
#{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991
#{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977
#* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}}
#{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}}
# {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983
# {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956
#{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960
#{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]'''
#{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]'''
#{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''',
#{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}}
#{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}}
#{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959
#{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}}
# {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003
# {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002
# {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001
#{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002
#{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002
#{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002
#{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]'''
#{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]'''
#{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000
#{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001
# {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}}
#{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]'''
#{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]'''
# {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000
# {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000
#{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998
#{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000
#{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}}
#{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}}
# {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}}
# {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955
# {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007
#{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}}
#{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}}
#* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}}
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001
# {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001
#{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999
#{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999
# {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005
#* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005
#{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011
{{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}}
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002
#{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000
#{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993
#{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993
#* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]'''
#{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]'''
#{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949
#{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964
# {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956
#* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967
#{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985
#{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992
#{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]'''
#{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988
#{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981
#{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968
#{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}}
# {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995
#{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
{{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}}
#{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}}
#{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}}
#{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997
#{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988
#{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]'''
#{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955
#{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]'''
#{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998
#{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000
{{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}}
#* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]'''
#{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992
#{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}}
#{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}}
#{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999
#{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]'''
#{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]'''
{{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}}
#{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]'''
#{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000
#{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002
#{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994
#{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007
#{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009
#{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007
#{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982
#{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007
#{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]'''
#{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979
#{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979
#{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002
#* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}}
#{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}}
# {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996
#{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993
# {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969
#{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]'''
#* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985
#{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989
#{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996
#{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996
#{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]'''
#{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994
#{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993
#{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997
#{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995
#{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}}
#{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006
#{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980
#{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971
#{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975
#* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}}
# {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957
#{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001
#{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}}
#* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}}
#{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}}
#{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}}
# {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987
#{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988
#{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988
#{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991
#{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992
#{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992
#{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001
#* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983
#{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}}
#{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995
#{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}}
#{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004
#* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}}
#{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985
# {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986
# {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990
# {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991
#* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}}
#{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}}
# {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946
#{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964
#{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998
#* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}}
#{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}}
#{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}}
#{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}}
#{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}}
#{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}}
#{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}}
#{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}}
# {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949)
#{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]'''
# {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968
#* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}}
# {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005
# {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005
#{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}}
* <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big>
[[பகுப்பு:படைப்புகள்]]
szpmqk4sof517n4n1zyf5zf7wktkc76
பக்கம்:ஓ மாம்பழமே.pdf/5
250
580673
1837864
1720730
2025-07-01T13:48:09Z
LavanyaMohan vglug
14860
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="LavanyaMohan vglug" /></noinclude>
{{Right|{{rh|||<b>ஓ! மாம்பழமே!</b>}}}}
{{Right|லண்டன், மே 4}}
"நேற்று மாலை ஸவுதாம்டன் துறைமுகம் வந்துசேர்ந்த
'விக்டோரியா' என்னும் கப்பலில் இந்தியா தேசத்து மாம்
பழங்கள் வந்து இறங்கின."
{{Right|-அயல்நாட்டுத் தந்தி}}
மேற்படி செய்தி இந்திய தினசரிப் பத்திரிகைகளில்
சின்ன எழுத்துத் தலைப்புடன் மூலையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனுடைய பின் விளைவுகள் என்ன ஆகப்போகின்றன என்பதுமட்டும் தெரிந்திருந்தால் உப பத்தி ராதிபர்கள் அச் செய்தியை அவ்வளவு அலட்சியம் செய்
திருக்கமாட்டார்கள். அந்தப் பின் விளைவுகள் என்னவென்
பதைக் கேளுங்கள்:
மறுநாள் சாயங்காலம் லண்டனிலுள்ள இந்திய மந்திரி
காரியாலயத்தில் இந்திய மந்திரிக்கும் அவருடைய சகாக்களுக்கும் இந்தியாவின் ஹைகமிஷனரால் ஒரு விருந்து
நடத்தப்பெற்றது. முதன் மந்திரியும், மிஸ்டர் பால்ட்வினும்
உள்படப் பிரமுகர்கள் அநேகர் விஜயம் செய்திருந்தார்கள்.
அடுத்த நாள் காலையில் வெளியான லார்ட் ராதர்
மியரின் 'டெயிலி மெயில்' பத்திரிகையில் கொட்டை
எழுத்தில் கட்டம் கட்டிப் பின்வரும் கேள்வி பிரசுரிக்கப்பட்டிருந்தது: "நேற்று இரவு இந்திய மந்திரி காரியாலயத்தில் ஒரு விருந்து நடந்தது. அந்த விருந்தைப்பற்றிய ஒரு வதந்தி பிரிட்டிஷ் பொதுமக்களின் மனத்தைக் கலக்கி வருகிறது. அந்த வதந்தியைப்பற்றிய உண்மை என்ன? மிஸ்டர் பால்ட்வின் பதில் சொல்வாரா?"<noinclude></noinclude>
dzq0tpht3ptb1gtjlo99oryhlyfeamg
பக்கம்:ஓ மாம்பழமே.pdf/6
250
580674
1837889
1720731
2025-07-01T14:31:52Z
LavanyaMohan vglug
14860
1837889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|2{{gap}}ஓ மாம்பழமே!||}}{{rule}}</noinclude>அன்று சாயங்காலம் வெளியான வார்ட் பீவர்புரூக்கின்
ஈவினிங் ஸ்டாண்டர்டு' பத்திரிகையில், 'மேற்படி விருந்தில்
ஒரு புதிய வகைப் பழம் பரிமாறப்பட்டதென்றும், அந்தப்
பழம் இந்தியாவிலிருந்து வந்ததென்றும் நம்புவதற்குப்
போதிய ஆதாரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. கூடிய
சீக்கிரம் இதைப்பற்றிய முழு உண்மையையும் வெளிப்படுத்
தீயே தீர்வோம்' என்று பிரசுரிக்கப்பட்டது.
மறுநாள் காலையில் 'டெய்லி மெயில்' பத்திரிகையில்
காணப்பட்ட விவரமாவது: "உண்மை வெளியாகிவிட்டது.
இந்திய மந்திரி காரியாலயத்தில் நடந்த விருந்தின்போது
பரிமாறப்பட்ட புதிய பழம் இந்தியாவிலிருந்து வந்த மாம்
பழம் என்று திட்டமாகத் தெரிந்து போயிற்று. ஸர் ஸாமு
வேல் ஹோர் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார் ? அவர்
உண்மையை மறுக்க மாட்டார் என்று நம்புகிறோம்.
ஏனெனில் மறுக்க முடியாத சாட்சியம் நம் வசம் இருக்கிறது.
பின்னர், வேறு என்ன சமாதானம் சொல்லப்போகிறார்
என்று பார்ப்போம்.
மறுநாள் 'டெய்லி எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில், மிஸ்டர்
வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் விசேஷக் கட்டுரை ஒன்றுடன் வெளிவந்தது. (அந்தக் கட்டுரைக்கு அவருக்கு ஆயிரம்
பவுன் சன்மானம் அளிக்கப் பெற்றதென்று எழுத்தாளர்
கூட்டங்களில் வதந்தி உலாவிற்று.)
"பிரிட்டிஷ் ராஜ்யத்தின் பெருமைக்கு அழியாத அவமானம் உண்டாகிவிட்டது. கேவலம், இந்தியாவிலிருந்து வந்த
மாம்பழங்களைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மந்திரிகள் சாப்பிடும்படியான நிலைமைக்கு நாம் தாழ்ந்துவிட்டோம். என்ன
அவமானம்! இந்தியர்களுக்கு நம்மிடமுள்ள மதிப்பில் அரைப்பங்கு இச்சம்பவத்தினால் போயிருக்குமென்பது திண்ணம். முதுகெலும்பில்லாத இந்த மந்திரிசபையை இன்னும்
எத்தனை நாளைக்குப் பிரிட்டிஷ் பொது ஜனங்கள் அதிகாரத்தில் வைத்திருக்கப் போகிறார்கள்?" என்பது சர்ச்சில்
கட்டுரையின் சாராம்சம்.
'மார்னிங் போஸ்ட்' பத்திரிகையில் அடுத்த நாள்
வெளியான செய்தி எல்லாரையும் தூக்கிவாரிப் போட்டு<noinclude></noinclude>
lhafkm10t7sfzt46rqfzg60e0qc6h4p
1837891
1837889
2025-07-01T14:33:14Z
LavanyaMohan vglug
14860
1837891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|2{{gap}}||ஓ மாம்பழமே!}}{{rule}}</noinclude>அன்று சாயங்காலம் வெளியான வார்ட் பீவர்புரூக்கின்
ஈவினிங் ஸ்டாண்டர்டு' பத்திரிகையில், 'மேற்படி விருந்தில்
ஒரு புதிய வகைப் பழம் பரிமாறப்பட்டதென்றும், அந்தப்
பழம் இந்தியாவிலிருந்து வந்ததென்றும் நம்புவதற்குப்
போதிய ஆதாரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. கூடிய
சீக்கிரம் இதைப்பற்றிய முழு உண்மையையும் வெளிப்படுத்
தீயே தீர்வோம்' என்று பிரசுரிக்கப்பட்டது.
மறுநாள் காலையில் 'டெய்லி மெயில்' பத்திரிகையில்
காணப்பட்ட விவரமாவது: "உண்மை வெளியாகிவிட்டது.
இந்திய மந்திரி காரியாலயத்தில் நடந்த விருந்தின்போது
பரிமாறப்பட்ட புதிய பழம் இந்தியாவிலிருந்து வந்த மாம்
பழம் என்று திட்டமாகத் தெரிந்து போயிற்று. ஸர் ஸாமு
வேல் ஹோர் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார் ? அவர்
உண்மையை மறுக்க மாட்டார் என்று நம்புகிறோம்.
ஏனெனில் மறுக்க முடியாத சாட்சியம் நம் வசம் இருக்கிறது.
பின்னர், வேறு என்ன சமாதானம் சொல்லப்போகிறார்
என்று பார்ப்போம்.
மறுநாள் 'டெய்லி எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில், மிஸ்டர்
வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் விசேஷக் கட்டுரை ஒன்றுடன் வெளிவந்தது. (அந்தக் கட்டுரைக்கு அவருக்கு ஆயிரம்
பவுன் சன்மானம் அளிக்கப் பெற்றதென்று எழுத்தாளர்
கூட்டங்களில் வதந்தி உலாவிற்று.)
"பிரிட்டிஷ் ராஜ்யத்தின் பெருமைக்கு அழியாத அவமானம் உண்டாகிவிட்டது. கேவலம், இந்தியாவிலிருந்து வந்த
மாம்பழங்களைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மந்திரிகள் சாப்பிடும்படியான நிலைமைக்கு நாம் தாழ்ந்துவிட்டோம். என்ன
அவமானம்! இந்தியர்களுக்கு நம்மிடமுள்ள மதிப்பில் அரைப்பங்கு இச்சம்பவத்தினால் போயிருக்குமென்பது திண்ணம். முதுகெலும்பில்லாத இந்த மந்திரிசபையை இன்னும்
எத்தனை நாளைக்குப் பிரிட்டிஷ் பொது ஜனங்கள் அதிகாரத்தில் வைத்திருக்கப் போகிறார்கள்?" என்பது சர்ச்சில்
கட்டுரையின் சாராம்சம்.
'மார்னிங் போஸ்ட்' பத்திரிகையில் அடுத்த நாள்
வெளியான செய்தி எல்லாரையும் தூக்கிவாரிப் போட்டு<noinclude></noinclude>
shsemuhbschckmminlnhi9g5c78zer9
1837893
1837891
2025-07-01T14:34:18Z
LavanyaMohan vglug
14860
1837893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|2{{gap}}||ஓ! மாம்பழமே!}}{{rule}}</noinclude>அன்று சாயங்காலம் வெளியான வார்ட் பீவர்புரூக்கின்
ஈவினிங் ஸ்டாண்டர்டு' பத்திரிகையில், 'மேற்படி விருந்தில்
ஒரு புதிய வகைப் பழம் பரிமாறப்பட்டதென்றும், அந்தப்
பழம் இந்தியாவிலிருந்து வந்ததென்றும் நம்புவதற்குப்
போதிய ஆதாரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. கூடிய
சீக்கிரம் இதைப்பற்றிய முழு உண்மையையும் வெளிப்படுத்
தீயே தீர்வோம்' என்று பிரசுரிக்கப்பட்டது.
மறுநாள் காலையில் 'டெய்லி மெயில்' பத்திரிகையில்
காணப்பட்ட விவரமாவது: "உண்மை வெளியாகிவிட்டது.
இந்திய மந்திரி காரியாலயத்தில் நடந்த விருந்தின்போது
பரிமாறப்பட்ட புதிய பழம் இந்தியாவிலிருந்து வந்த மாம்
பழம் என்று திட்டமாகத் தெரிந்து போயிற்று. ஸர் ஸாமு
வேல் ஹோர் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார் ? அவர்
உண்மையை மறுக்க மாட்டார் என்று நம்புகிறோம்.
ஏனெனில் மறுக்க முடியாத சாட்சியம் நம் வசம் இருக்கிறது.
பின்னர், வேறு என்ன சமாதானம் சொல்லப்போகிறார்
என்று பார்ப்போம்.
மறுநாள் 'டெய்லி எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில், மிஸ்டர்
வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் விசேஷக் கட்டுரை ஒன்றுடன் வெளிவந்தது. (அந்தக் கட்டுரைக்கு அவருக்கு ஆயிரம்
பவுன் சன்மானம் அளிக்கப் பெற்றதென்று எழுத்தாளர்
கூட்டங்களில் வதந்தி உலாவிற்று.)
"பிரிட்டிஷ் ராஜ்யத்தின் பெருமைக்கு அழியாத அவமானம் உண்டாகிவிட்டது. கேவலம், இந்தியாவிலிருந்து வந்த
மாம்பழங்களைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மந்திரிகள் சாப்பிடும்படியான நிலைமைக்கு நாம் தாழ்ந்துவிட்டோம். என்ன
அவமானம்! இந்தியர்களுக்கு நம்மிடமுள்ள மதிப்பில் அரைப்பங்கு இச்சம்பவத்தினால் போயிருக்குமென்பது திண்ணம். முதுகெலும்பில்லாத இந்த மந்திரிசபையை இன்னும்
எத்தனை நாளைக்குப் பிரிட்டிஷ் பொது ஜனங்கள் அதிகாரத்தில் வைத்திருக்கப் போகிறார்கள்?" என்பது சர்ச்சில்
கட்டுரையின் சாராம்சம்.
'மார்னிங் போஸ்ட்' பத்திரிகையில் அடுத்த நாள்
வெளியான செய்தி எல்லாரையும் தூக்கிவாரிப் போட்டு<noinclude></noinclude>
1zaaa6yu0tt2e2g9vyerxuh31265ukt
1837895
1837893
2025-07-01T14:35:03Z
LavanyaMohan vglug
14860
1837895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|2{{gap}}||ஓ! மாம்பழமே!}}{{rule}}</noinclude>அன்று சாயங்காலம் வெளியான வார்ட் பீவர்புரூக்கின்
'ஈவினிங் ஸ்டாண்டர்டு' பத்திரிகையில், 'மேற்படி விருந்தில்
ஒரு புதிய வகைப் பழம் பரிமாறப்பட்டதென்றும், அந்தப்
பழம் இந்தியாவிலிருந்து வந்ததென்றும் நம்புவதற்குப்
போதிய ஆதாரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. கூடிய
சீக்கிரம் இதைப்பற்றிய முழு உண்மையையும் வெளிப்படுத்
தீயே தீர்வோம்' என்று பிரசுரிக்கப்பட்டது.
மறுநாள் காலையில் 'டெய்லி மெயில்' பத்திரிகையில்
காணப்பட்ட விவரமாவது: "உண்மை வெளியாகிவிட்டது.
இந்திய மந்திரி காரியாலயத்தில் நடந்த விருந்தின்போது
பரிமாறப்பட்ட புதிய பழம் இந்தியாவிலிருந்து வந்த மாம்
பழம் என்று திட்டமாகத் தெரிந்து போயிற்று. ஸர் ஸாமு
வேல் ஹோர் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார் ? அவர்
உண்மையை மறுக்க மாட்டார் என்று நம்புகிறோம்.
ஏனெனில் மறுக்க முடியாத சாட்சியம் நம் வசம் இருக்கிறது.
பின்னர், வேறு என்ன சமாதானம் சொல்லப்போகிறார்
என்று பார்ப்போம்.
மறுநாள் 'டெய்லி எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில், மிஸ்டர்
வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் விசேஷக் கட்டுரை ஒன்றுடன் வெளிவந்தது. (அந்தக் கட்டுரைக்கு அவருக்கு ஆயிரம்
பவுன் சன்மானம் அளிக்கப் பெற்றதென்று எழுத்தாளர்
கூட்டங்களில் வதந்தி உலாவிற்று.)
"பிரிட்டிஷ் ராஜ்யத்தின் பெருமைக்கு அழியாத அவமானம் உண்டாகிவிட்டது. கேவலம், இந்தியாவிலிருந்து வந்த
மாம்பழங்களைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மந்திரிகள் சாப்பிடும்படியான நிலைமைக்கு நாம் தாழ்ந்துவிட்டோம். என்ன
அவமானம்! இந்தியர்களுக்கு நம்மிடமுள்ள மதிப்பில் அரைப்பங்கு இச்சம்பவத்தினால் போயிருக்குமென்பது திண்ணம். முதுகெலும்பில்லாத இந்த மந்திரிசபையை இன்னும்
எத்தனை நாளைக்குப் பிரிட்டிஷ் பொது ஜனங்கள் அதிகாரத்தில் வைத்திருக்கப் போகிறார்கள்?" என்பது சர்ச்சில்
கட்டுரையின் சாராம்சம்.
'மார்னிங் போஸ்ட்' பத்திரிகையில் அடுத்த நாள்
வெளியான செய்தி எல்லாரையும் தூக்கிவாரிப் போட்டு<noinclude></noinclude>
dzuj1ozqf90xpd3u6s3uflynfowu3d8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/161
250
617229
1838008
1824544
2025-07-02T03:07:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அச்சுறுத்திப் பறித்தல்|125|அச்சுறுத்திப் பறித்தல்}}</noinclude>செருமனியைப் போல் நாடு பிடிக்கும் ஆசையை வளர்த்துக் கொண்டது. எனவே, அந்நாடு அபிசீனியாவைத் தாக்கித் தன்னுடன் இணைத்துக் கொண்ட போது, பிற ஐரோப்பிய நாடுகள் கூட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் இத்தாலிமீது பொருளாதாரத் தடை விதித்தன.
கீழை நாடான சப்பான் பொருளாதார மேம்பாடடைந்து தன் கடற்படையை விரிவுபடுத்த முற்பட்டபோது, இங்கிலாந்தும் அமெரிக்காவும் அதற்குக் குறுக்கே நின்றன. தனது நாடு பிடிக்கும் ஆசைத்தீயும் இதுபோன்றே அணைக்கப்பட்டுவிடும் என்ற கசப்பான உண்மையை உணர்ந்த சப்பான், இட்லரின் நேசக்கரம் நீண்டபோது அதனைப் பற்றிக் கொண்டது. இதன் முடிவாக 1937–ஆம் ஆண்டில் பெர்லின்–ரோம்–டோக்கியோ அச்சு உருவாயிற்று. இத்தாலியின் வல்லாட்சித் தலைவரான பெனிட்டோ முசோலினி இந்த அச்சின் தோற்றத்தைப் பற்றிக் கூறியபோது ‘அமைதியை விரும்பும் எண்ணத்தோடு எல்லா ஐரோப்பிய நாடுகளும் இந்த அச்சினை மையமாகக் கொண்டு ஒருங்கிணையலாம்’ என்றார். மேலும் தொடர்ந்து, ‘இந்த அச்சில் இணைந்துள்ள நாடுகளுக்கும் இணையாத நாடுகளுக்கும் இடையே உறவுப் பேச்சிற்கே இடமில்லை. ஒன்று நாம் அல்லது அவர்கள்,’ என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
இட்லர், “உலகின் மகத்தான அரசியல் முக்கோணமிது; இதில் இணைந்திருப்போர் வலிமையற்ற பொம்மைகள் அல்லர். மூவரும் தங்கள் உரிமைகளையும் இன்றியமையாத நலன்களையும் உறுதியோடு பாதுகாக்க ஆயத்தமாகவும் மனத்திண்மை கொண்டும் இருக்கிறார்கள்” என்றார்.
இங்ஙனம் செருமனி, இத்தாலி, சப்பான் அடங்கிய அச்சுநாடுகள் இணைப்பு ஏற்பட்டு, உலகம் போரை நோக்கி விரைந்து சென்றது.
இரண்டாம் உலகப்போர் 1939-இல் மூண்டது. உலகின் பல பாகங்களில், நிலத்திலும் வானத்திலுமாகப் போர் கடுமையாக நடந்தது. உயிர்ச் தேசமும் பொருட்சேதமும் அளவிறந்து ஏற்பட்டன. முடிவில், செருமனியும் இத்தாலியும் தோற்றன. அமெரிக்கா, இரண்டு அணுகுண்டுகளைச் சப்பான் மீது வீசியபின், சப்பானும் தோல்வியை ஒப்புக் கொண்டது. போர் (1945–இல்) முடிந்தது. அச்சின் சுழற்சி நின்றது. அச்சு நாடுகளின் இணைப்பும் அவிழ்ந்தது.{{float_right|அ.தி.}}
{{larger|<b>அச்சுறுத்திப் பறித்தல்:</b>}} ஒருவரைப் பற்றி அவதூறான செய்தியை வெளியிடப் போவதாக மற்றொருவர் கூறுகிறார். அவ்வாறு வெளியிடாமல் இருக்க வேண்டுமெனில் தமக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த அவதூற்றுக்கு அஞ்சி, முன்னவர் பணம் கொடுக்கிறார். இந்த வகையில் ஒருவர் மற்றொருவரை அச்சுறுத்திப் பணம் பெறுவது அச்சுறுத்திப் பறித்தல் (Extortion) எனப்படும். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஒருவர், உடம்பில் காயம் ஏற்படுத்தப் போவதாக மற்றொருவரை அச்சுறுத்திப் பணம் பெறுவதும், ஒரு கொடையாவணத்தில் (Gift-deed) கையெழுத்துப் பெறுவதும் குற்றமாகும். ஒன்றும் எழுதப்படாத ஒரு வெள்ளைத் தாளில் ஒருவர் மற்றொருவரிடம் ஏதேனும் காரணம் கூறிக் கையெழுத்தைப் பெற்றுக் கொள்கிறார். பின்னர் அத்தாளினை ஒரு கடனுறுதிச் சீட்டாகவோ (Promissory Note) மதிப்பாவணமாகவோ (Valuable Security) மாற்றிக் கொள்கிறார். இவ்வாறு, தீய நோக்குடன் ஒரு வெள்ளைத் தாளில் ஒருவரை அச்சுறுத்திக் கையெழுத்துப் பெறுவதும், கடனுறுதிச் சீட்டு அல்லது மதிப்பாவணத்தில் கையெழுத்துப் பெறுவதும் குற்றமாகும். இவ்வாறு இந்தியக் குற்றவியல் சட்டம் கூறுகிறது.
ஒருவருக்குச் சொந்தமான ஒரு பொருளை அதன் சொந்தக்காரரின் இசைவின்றி எடுத்தல் திருட்டுக் குற்றம்; ஆனால் அதனையே அச்சுறுத்திப் பெறுதல் ‘அச்சுறுத்திப் பறித்தல்’ என்னும் குற்றம்.
ஒருவரின் புகழ், பொருள் இவைகளுக்குக் கேடு விளைவிப்பதாகவோ உள்ளத்தைப் புண்படுத்துவதாகவோ அமைகிற தீங்குகளில் ஏதாவது ஒன்றைச் செய்யப்போவதாக அச்சுறுத்திப் பொருளைப் பெறுதலும் ‘அச்சுறுத்திப் பறித்தல்’ என்ற குற்றமாகும்.
அச்சுறுத்தலின் விளைவாக அச்சுறுத்தப்பட்டவரின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவரின் மனம் குழம்பி நிற்கும் நிலையில், அவர் செய்யும் செயல்கள் தன்னிச்சையான செயல்கள் ஆவதில்லை. இந்நிலையில் அவர் பிறரிடம் பொருள் முதலியன கொடுப்பது அவராக இசைந்து கொடுப்பதாகாது. தமக்கு விளையவிருக்கும் துன்பத்திற்கு அஞ்சியே, தம்முடைய பொருளைப் பிறரிடம் கொடுக்கிறார். இவ்வாறு, அச்சத்தால் கொடுக்கப்பட்ட பொருளைப் பிறர் பெற்றுக் கொள்ளல், அவரது இசைவின்றி வலிந்து எடுத்துக் கொள்ளும் செயலையே ஒக்கும். இத்தகைய குற்றத்திற்குரிய தண்டனையாக மூன்று ஆண்டுச் சிறைத் தண்டனை கொடுக்கலாம்.
அச்சுறுத்தியவர் ஒருவராகவும், அச்சுறுத்தப்பட்டவரிடமிருந்து பொருளைப் பெறுபவர் அவர்<noinclude></noinclude>
kc0h7w3j2rdida8r5bbqhtz78t6i5ie
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/162
250
617230
1838010
1824555
2025-07-02T03:11:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அச்சுறுத்திப் பறித்தல்|126|அசட்ராகான்}}</noinclude>அல்லாத மற்றொருவராகவும் இருக்கலாம். அச்சுறுத்தியவரே பொருளைப் பெற வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை.
அச்சுறுத்துபவர் நேருக்கு நேர் நின்று இன்னொருவரை அச்சுறுத்த வேண்டியதில்லை; அஞ்சல் அனுப்பி ஒருவர் மற்றொருவரை அச்சுறுத்தலாம்; தொலைபேசி மூலமாகவும் அச்சுறுத்தலாம். தீங்கை உடனடியாக விளைவிக்கப் போவதாகக் அச்சுறுத்த வேண்டியதில்லை. சில நாட்கள் கழித்துத் தீங்கு விளைவிக்கப் போவதாகக் கூறியும் அச்சுறுத்தலாம். அச்சுறுத்தியவுடன் பொருளைப் பெறவேண்டும் என்பது கட்டாயமில்லை. அச்சுறுத்தப்பட்டுச் சில நாள்கள் கழிந்த பின்னும், அச்சுறுத்தப்பட்டவரிடமிருந்து பொருளைப் பெறலாம்.
ஒருவர் மீது குற்றம் சுமத்தப் போவதாகக் கூறி அச்சுறுத்தலும், தீங்கு விளைவிப்பதாகக் கூறி அச்சுறுத்தலேயாகும். ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்திருக்கலாம். அதனை வெளிப்படுத்தி வழக்கிடப் போவதாகக் கூறுவதும் அச்சுறுத்தலேயாகும்.
{{larger|<b>துணை நூல்:</b>}}
<b>மா. சண்முகசுப்பிரமணியம்,</b> “குற்றவியல் சட்டம்”, தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1966.
<b>Atchuthan Pillai, P.S.,</b> “Criminal Law”, N.M. Tripathi Private Limited, Bombay, 1983.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 162
|bSize = 480
|cWidth = 100
|cHeight = 216
|oTop = 330
|oLeft = 90
|Location = center
|Description =
}}
{{center|அச்சூலியன் கைக் கோடரி}}
{{larger|<b>அச்சூல்</b>}} பிரான்சின் சோம் பள்ளத்தாக்கிலுள்ள ஓர் ஊர். இது புனிதஅச்சூல் (St. Acheul) என்றும் சொல்லப்படும். இவ்வூரில் கண்டெடுக்கப்பட்ட கைக் கோடரிகள் அச்சூலியன் கைக் கோடரிகள் எனப்படும். இந்தக் கைக்கோடரிகள் அபிவில்லியன் கைக் கோடரிகளைக் காட்டிலும் தரத்திலும் செயல்திறத்திலும் உயர்ந்தவை. வழவழப்பு மிக்க கூர்மையான தாக்குவிசைப் பகுதியை இக்கருவிகள் கொண்டுள்ளன.
{{larger|<b>அச்சோதை</b>}} என்பது ஒரு புனித ஆறு. ஒரு பெண் தன் முன்னோர் சாபத்தால் ஆறாக மாறிய கதை மச்ச புராணத்தில் இடம் பெற்றுள்ளது. சத்தியவதி என்னும் பெண் மீன் வயிற்றில் தோன்றியவள். இவளுக்குப் பரிமள கந்தி என்னும் வேறு பெயரும் உண்டு. இவள் மீனவ மன்னன்பால் வளர்ந்து ஓடம் செலுத்தியபோது, இயமுனை ஆற்றினைக் கடக்க, அங்கு வந்த பராச முனிவர் அவளைக் கூடியதால் வியாசரைப் பெற்றெடுத்தாள். பின்னர்ச் சந்தனுவின் மனைவியாகிச் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்னும் இரு ஆண்மக்களை ஈன்றாள். அதன் பிறகு அவள் அச்சோதை என்னும் புண்ணிய ஆறாக மாறினாள். சாபத்தால் மீன் வயிற்றில் பிறந்து, இறுதியில் ஆறாகிய இவளது முன் வரலாற்றினை மச்ச புராணம் பின்வருமாறு கூறுகிறது.
மரீசியின் மக்களாகிய பிதிர்களுக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் தன் முன்னோரால் அமைக்கப் பெற்ற அச்சோதம் ஆற்றங்கரையிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தாள். அதன் பயனாக அவள் பிதிர்கள் அவள் முன் தோன்றினர். அப்பிதிர்களுள் ஒருவனாகிய மாவசு என்பானைத் தன் கணவனாக எண்ணினாள். அதனால் ஒழுக்கக் கேடுற்ற அவள் சுவர்க்கத்திலிருந்து தள்ளப் பெற்றாள். பூமியில் விழாமல் அந்தரத்தேயிருந்து தவம் புரிந்தாள். அவள் வயப்படாத மாவசு அச்செயல் நிகழ்ந்த நாளை அமாவாசை என்று ஆக்கினான். அந்த நாளில் இறந்த முன்னோர்களை நினைத்துக் கருமம் செய்தால் அது அவர்களுக்கு உவப்பாகி நன்மை தரும் என்று கருதப்பட்டது. மாவசுவின் கூற்றுப்படி அப்பெண்ணே பின்னர்ச் சத்தியவதியாகி, இறுதியில் அச்சோதை என்னும் புண்ணிய நதியாக விளங்கினாள்.
{{larger|<b>அசட்ராகான்</b>}} சோவியத் உருசியாவின் தென் பகுதியில் வால்கா ஆற்றின் கழிமுகத்தில் உள்ளதொரு நகரம். காசுபியன் கடலுடனும், வால்கா ஆற்றுத்துறைமுகங்களுடனும் நல்ல நீர்த் தொடர்புகளைக் கொண்டுள்ளதால், அசட்ராகான் (Astrakhan) சீரிய வாணிக மையமாகக் கருதப்படுகிறது. மீன்<noinclude></noinclude>
n0gcnnhl3009h5na88y3xgyjq38ibd9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/163
250
617231
1838014
1827879
2025-07-02T03:15:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|127|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 163
|bSize = 480
|cWidth = 306
|cHeight = 210
|oTop = 53
|oLeft = 70
|Location = center
|Description =
}}
{{center|அசட்ரகான் நகர்}}
பிடித்தல் இங்கு நடைபெறும் சிறப்புத் தொழில்களுள் ஒன்றாகும். உப்பிட்டு உலர்த்திய உயர்தர மீன்வகையின் கருச்சினையும், அசட்ரகன் என்னும் கவர்ச்சியான ஆட்டுத்தோலும் இப்பகுதியின் செய்பொருள்களாம்.
{{larger|<b>அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்:</b>}} மகாராட்டிர மாநிலத்தில் ஔரங்காபாத்து நகரத்திற்கு 104 கி.மீ. தொலைவில் அசந்தா என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரையடுத்து வண்ண ஓவியங்களும் சிற்பங்களும் நிறைந்த முப்பது பௌத்தக் குகைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் சில முடிக்கப்பெற்ற நிலையிலும் வேறுசில முடிக்கப் பெறாத நிலையிலும் உள்ளன. இவை சயாத்திரி மலைத் தொடரின் ஒரு செங்குத்தான பாறையில் ஓர் அருவியை அடுத்து அரைவட்டமாகக் குடைந்தெடுக்கப்பட்டுள்ளன. இக்குகைகள் கி.மு. 200 முதல் கி.பி. 650 வரை வெவ்வேறு காலங்களில் உருவாக்கப்பட்டிருக்கலாம். அடர்ந்த காடுகளுக்கு இடையே மறைந்திருந்த இக்குகைகள் கி.பி. 1819–ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களும் பெரும்பாலும் புத்தரின் வாழ்க்கையை விளக்குவனவாக இருக்கின்றன. சிற்பங்கள் வாகடக மன்னர்கள் காலத்துச் சிற்பக் கலையைப் பற்றி அறிய உதவுகின்றன. கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஈனயானக் கருத்துக்கள் புத்தரின் உருவச் சிலை அமைப்பதைத் தடுத்தன. ஆனால் கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பௌத்தர்களிடையே நிலவிய மகாயானக் கருத்துகள் சிற்பக் கலையை ஆதரித்தன. புத்தரின் சிற்பங்கள் பல அசந்தாக் குகைகளில் காணப்படுகின்றன.
அசந்தாக் குகைகளின் சுவர்களில் காணப்படும் வண்ண ஓவியம் சுதை ஓவியம் எனப்படும். நெல், உமி, காய்கள், நார், புல் ஆகிய பொருள்கள் நேர்த்தியான மணலுடன் கலக்கப்பட்ட ஒரு வெண்ணிறப் பூச்சு, ஓவியத்தின் அடித்தளமாக அமைகிறது. முதல் குகை ஓர் அழகிய பௌத்த விகாரம் ஆகும், பௌத்தத் துறவிகளின் இருப்பிடமே விகாரம் எனப்படும். இதில் பல அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் காணப்படுகின்றன. சித்தார்த்தர் உலக இன்பங்களைத் துறக்கக் காரணமாயிருந்த நான்கு நிகழ்ச்சிகளையும் இங்குச் சிற்பங்களாகக் காணலாம். ஒரே தலையும் நான்கு உடல்களும் கொண்ட மானின் உருவமும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிரப் பல சுவரோவியங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் இளவரசர் சித்தார்த்தரும் அவர் மனைவி அசோதரையும் கையில் தாமரை மலருடன் அருகில் இருப்பதாகத் தீட்டப்பெற்ற ஓவியமும் ஒன்றாகும். மன்மதனின் உருவமும் சாதகக் கதைகளிலிருந்து பல நிகழ்ச்சிகளும் இங்குச் சுதை ஓவியங்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. சாளுக்கிய மன்னன் புலிகேசி பாரசீகத் தூதர்களை வரவேற்கும் காட்சியும், ஒரு காளைச் சண்டைக் காட்சியும் சுவரோவியங்களாகக் காணப்படுகின்றன. அவலோகிதேசுவரர் (போதிசத்துவர்) ஓவியம் ஒன்றும் காணப்படுகிறது. இது வைணீகம் என்னும் முறையைச் சேர்ந்த ஓவியமாகும். விட்டுணு<noinclude></noinclude>
82sf8jmhbs6kosmw5ty8sj22cde7jx0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/164
250
617232
1838017
1824626
2025-07-02T03:19:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|128|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்}}</noinclude>தருமோத்தரம் என்னும் பண்டைய வடமொழி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நால்வகை ஓவிய முறைகளுள் வைணீகம் ஒன்றாகும். இது கவிதைத் தன்மை பொருந்திய ஓவியங்களைக் குறிக்கும். அவலோகிதேசுவரர் உருவம் காதணிகளையும் அழகிய முத்துச்சரத்தையும் அணிந்து ஒரு நீல அல்லி மலரைக் கையில் ஏந்தியுள்ளது. மங்கலான வண்ணப் பூச்சும் அழுத்தமான வண்ணப் பூச்சும் மாறி மாறித் தீட்டப்பெற்று இவ்வோவியத்தில் இருளும் ஒளியும் சேர்ந்தாற் போன்ற காட்சி அமைந்திருக்கிறது. அசந்தா ஓவியங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்தது அவலோகிதேசுவரர் ஓவியமே ஆகும். அசந்தா வண்ண ஓவியக் கலைக்கு உலகப் புகழ் கிடைத்தது இந்த ஓவியத்தினால்தான் என்று கூறலாம். இதனைத் தவிர, மன்மதன் தோல்வி, களியாட்டக் காட்சிகள், காதற்காட்சிகள், சிபி, நாகர், சாதகக் கதைகள் போன்ற ஓவியங்கள் இங்குச் சிறப்பாக விளங்குகின்றன.
இரண்டாம் குகையும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த முகப்பும் தூண்களும் நிறைந்த ஒரு பௌத்த விகாரம் ஆகும். இங்கு அரண்மனைக் காட்சிகள், இந்திரலோகம், சிராவத்தியின் சாதனை, சாந்திவாதி, மைத்திரிபாலா கதைகள், கூரையின் அடிப்பரப்பு வேலைப்பாடுகள் முதலியன தலைசிறந்த ஓவியங்களாகும். இங்குப் புகழ்பெற்ற பஞ்சிகை, அரிதி ஆகிய பெண்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. மூன்றாம் குகை முடிக்கப்பெறாத நிலையில் உள்ளது.
நான்காம் குகை முடிக்கப்பெறாத விகாரம் ஆகும். இது கி.பி. 7–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இதன் முகப்பில் மலர் பறிக்கும் இளம் பெண்களின் சிற்பங்களைக் காணலாம். இதில் எட்டுத் தூண்கள் உள்ளன. இங்குப் புத்தரின் பெரிய உ உருவச் சிலையும் வச்சிரபாணி, பத்துமபாணி என்னும் போதி சத்துவர்கள் புடைசூழ அறிவுரை கூறும் புத்தரின் மாபெரும் உருவமும் காணப்படுகின்றன. இங்குள்ள சுவரோவியங்கள் எல்லாம் பெரும்பாலும் அழிந்து விட்டன.
ஐந்தாம் குகை முடிக்கப் பெறாத விகாரம் (பௌத்த மடம்) ஆகும். ஆறாம் குகை இரண்டு அடுக்குகள் உள்ள விகாரமாகும். இங்கும் சுவரோவியங்கள் அழிந்துவிட்டன. தாழ்வாரத்தின் இரு ஓரங்களிலும் உள்ள சிறிய அறைகளில் புத்தரின் படிமங்கள் இருக்கின்றன. ஏழாம் குகை இரண்டாம் குகையைப் போன்ற விகாரம் ஆகும். இங்குப் புத்தரின் படிமங்கள் காணப்படுகின்றன. சாதகக் கதைகளின் நிகழ்ச்சிகள் இங்குச் செதுக்கப்பட்டுள்ளன.
எட்டாம் குகை ஒரு சிதைந்த விகாரமாகும். ஒன்பதாம் குகையில் வரிசையாக 23 தூண்கள் காணப்படுகின்றன. இதுவே மிகப் பழமையான குகை என்று கருதப்படுகிறது. இதில் காணப்படும் சுவரோவியங்கள் கி.மு. முதலிரண்டு நூற்றாண்டுகளில் தீட்டப்பெற்றவை ஆகும். இது சைத்தியம் எனப்படும் வழிபாட்டுக் கூடத்தின் வடிவில் உள்ளது.
பத்தாம் குகையும் ஒரு வழிபாட்டுக் கூட்டத்தின் வடிவில் உள்ளது. இங்குப் போதி மர வழிபாடு, சாதகக் கதை நிகழ்ச்சிகள் ஆகியன ஒவியங்களாகக் காட்சியளிக்கின்றன.
பதினோராம் குகை ஒரு சிதைந்த விகாரம் ஆகும். பன்னிரண்டு பதின் மூன்றாம் குகைகள் பௌத்தத் துறவிகளின் மடம் போன்று உள்ளன. பதினான்கு பதினைந்தாம் குகைகளும் பௌத்த மடங்களாகும். பதினாறாம் குகையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை கி.பி. 500-இல் ஏற்பட்டனவாக இருக்கலாம். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களின் முகப்பில் பல சாதகக் கதை நிகழ்ச்சிகள் விளக்கம் பெற்றுள்ளன. பதினேழாம் குகை, கல்வெட்டுகள் நிறைந்த விகாரம் ஆகும். இங்குள்ள ஓவியங்கள் புத்தரின் முற்பிறவியை விளக்குகின்றன. சாதகக் கதைகளும் அவதானக் கதைகளும் (புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் அருஞ்செயல்களும்) விளக்கம் பெற்றுள்ளன.
பத்தொன்பதாம் குகை அழகிய வழிபாட்டுக் கூடம் ஆகும். இங்கு அழகிய முகப்பும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களும் காணப்படுகின்றன. இது ஏறத்தாழ கி.பி. 550–ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம். வழிபாட்டுக் கூடத்தில் புத்தரின் படிமங்கள் காட்சியளிக்கின்றன. இது மகாயானச் சிற்பக்கலையின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இதன் முகப்பில் ஓவியத் தலைகள் அமைந்த பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஆந்திரச் சிற்ப வகையைச் சார்ந்தவையாக இருக்கலாம். புகழ் பெற்ற ஓவியமான அசோதரை–இராகுலன் முன் புத்தர் ஓடு ஏந்திப் பிச்சையெடுக்கும் ஓவியம் இங்குக் காணப்படுகிறது. 20, 21, 22, 23, 24, 28, 29–ஆம் குகைகள் விகாரங்களாகும். முப்பதாம் குகை முடிவு பெறவில்லை.
26–ஆம் குகை வழிபாட்டுக் கூடம் ஆகும். தூபியில் இங்குக் காணப்படும் ஓவியத்தில் புத்தர் பிரலம்ப பாத ஆசனத்தில் அமர்ந்திருப்பதாகக் (நாற்காலியில் அமர்வது போன்று) காட்டப்பட்டுள்ளது. பூத்து நிற்கும் இருசாலை மரங்களுக்கிடையில் வலப்புறம் சாய்ந்து பாதத்தின் மீது பாதம் வைத்துக்கொண்டு ததாகதர் (புத்தர்) வீட்டுநிலை (நிருவாணம்) அடைகிறார். அவர்தம் மாணவர் சுற்றியிருந்து அழுகின்றனர். கந்தருவரும் தேவரும் இன்னிசை பொழிந்து<noinclude></noinclude>
ra3nwkkdhf7dthpvyxieb0a5ooqy8bu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/165
250
617233
1838020
1824648
2025-07-02T03:24:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசமுகி|129|அசரீரி}}</noinclude>கொண்டிருக்கின்றனர். இச்சிற்பம் அசந்தாச் சிற்பக் கலையின் பெருமைக்குச் சான்றாக விளங்குகிறது.{{float_right|என்.எஸ்.இரா.}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Calambur Sivarama Murthy,</b> “The Art of India”, Indian Book House, Bombay.
<b>Calambur Sivarama Murthy,</b> “Indian Painting”, National Book Trust of India, New Delhi, 1970.
<b>Krishna Chaitanya,</b> “The Mural Tradition,” Abinay Publication, New Delhi, 1976.
{{larger|<b>அசமுகி</b>}} என்பவள் சூரபதுமன் தங்கை. இப்பெயர் ஆட்டுமுகம் உடையவள் எனப் பொருள்படும். மாயை என்னும் அசுரப் பெண் நான்காம் சாமத்தில் ஆட்டினுருக்கொண்டு காசிபரைக் கூடியதால் இவள் பிறந்தாள், இவள் துருவாசரை வலிதிற் கூடி வாதாவி வில்லவர்களைப் பெற்றாள், தனித்திருந்த இந்திராணியைத் தன் அண்ணன் சூரனுக்கு மனைவியாக்க விரும்பி வலிந்து இழுக்க முயன்றாள், அப்போது மகாகாளரால் கையறுக்கப்பட்டாள். பின் தனக்கு நேரிட்டதைத் தன் அண்ணனுக்கு உணர்த்தினாள். பிரமனால் கைவளரப் பெற்றாள். கச்சியப்பரின் கந்த புராணத்தில் இவளைப் பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
அவற்றுள் சில வருமாறு; அசமுகி மணம்புரிந்து கொள்ளாதவள்; ஒழுக்கக் கேடானவள்; தேவர்களின் மனைவிகளைத் தன் தமையன்மார்களுக்கு மனைவிகளாக ஆக்குபவள்; முனிவர் இயற்றும் வேள்விகளை அழிப்பவள்; தீமையே வடிவானவள்; அசுரர்களை அழிக்கும் தீவினை போல் எங்கும் உலாவி வருபவள்; தன் கிளைஞரை இகழ்பவர்களைக் கொன்று தின்பவள்; அழகிற்சிறந்த ஆடவர்களைத் தேடி வலிந்து கூடுபவள்.{{float_right|எஸ்.சௌ.}}
{{larger|<b>அசயராசா</b>}} இராசபுதனத்தைச் சார்ந்த சாகம்பரியை ஆண்ட சாகமான அரசர்களுள் ஒருவர். இவர் முதலாம் பிரிதிவிராசனின் மகன். கி.பி. 12–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அசயமேடு அல்லது ஆசுமீர் (Ajmer) என்னும் நகரை இவர் உண்டாக்கினார்.
{{larger|<b>அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி</b>}} கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமிய அருள் தொண்டர். இந்திய நாட்டின் தலைநகர் புதுதில்லிக்கு அண்மையில் அவரது பெயரில் வழிபாட்டுத் தலம் ஒன்றுள்ளது. இவர் கி.பி. 1325-ஆம் ஆண்டில் காலமானார். இவரது உடல் புதைக்கப் பெற்ற இடம் புனிதமானதாக இசுலாமியர்களால் கருதப்படுகிறது. இவர் தில்லி சுல்தான்களின் சமயப் பெரியாராகத் திகழ்ந்தார். புதிய தலைநகரான துக்ளகாபாத்தைக் கட்டிக் கொண்டிருந்த இயாசுதீன் துக்ளக்கு அரசருக்கும் அசரத் நிசாமுதீன் ஒளலியா சிசுடிக்கும் (Hazrat Nizamuddin Aulia Chishti) மோதல் ஏற்பட்டது. அங்கிருந்து தில்லிக்குப் புறப்பட்டு வரும் வழியில் சிசுடி கொல்லப்பட்டார். புதிய தலைநகர் கட்டும் பணியை கியாசுதீனின் மகன் கைவிட்டு விட்டார். இன்றைய தில்லிமாநகர்ப் புகைவண்டி நிலையத்திற்கு அண்மையில் இவர் நினைவாக அசரத்து நிசாமுதீன் என்ற புதிய புகைவண்டி நிலையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
{{larger|<b>அசரத்பால் மசூதி</b>}} இந்தியாவின் சம்மு–காசுமீர மாநிலத்தின் தலைநகரான சிரிநகரில் உள்ள ஒரு சிறப்பான வழிபாட்டு இடம். இங்குள்ள மசூதியில் நபிகள் நாயகத்தின் புனித தலைமுடிகளில் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் போன்ற சிறப்பான சமயங்களில் அது பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களுள் ஒருவரான சையது அப்துல்லா என்பாருக்கு இப்புனித நினைவுப் பொருள் கிட்டியது. அவர் மதீனாலில் உள்ள முத்தாவலி மசூதியில் புரவலர். கி.பி. 1634-ஆம் ஆண்டில் அவர் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். தக்காணத்தில் பீசப்பூரில் 23 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் மகன் சையது அமீது கி.பி. 1692-ஆம் ஆண்டில் தில்லி நகருக்கு வந்தார். அங்கு அவர் காசுமீர வணிகர் ஒருவரைச் சந்தித்தார். அவரிடமிகுந்த தலைமுடிச் சின்னத்தை அவ்வணிகர் தம்முடைய பொருளாகப் பெற்றுக் கொண்டார். அவர் காலப் போக்கில் இலாகூரில் இறந்து போனார். குவாசா மதனிசு (Khwaja Madanish) என்பார் அதைக் காசுமீரத்திற்குக் கொண்டு வந்தார் சில காலம் நவுசி பாந்த்சாகேப் மசூதியில் வைக்கப்பட்டிருந்த அந்த நினைவுச்சின்னம் அசரத்பால் மசூதிக்கு மாற்றப்பட்டது. இந்த அசரத்பால் மசூதியைக் கட்டியவர் பேரரசர் சாசகான் (Shah Jahan) ஆவார். இம்மசூதியின் கட்டிடக்கலை மொகலாயப் பாணியையும் காசுமீரத்துக் கட்டிடக்கலைப் பாணியையும் இணைத்துக் கட்டப்பட்டதாகும். சேக்கு முகமது அப்துல்லாவும் அவர் துணைவர்களும் தீவிரமாக முயன்று மதீனாவில் நபிகள் நாயகத்தின் மசூதியைப் போல இதனையும் கட்டி முடித்தனர்.
{{larger|<b>அசரீரி</b>}} என்பது உடலற்றது என்று பொருள்படும். அசரீரி பேசுவதாகப் பல இடங்களில் வழங்கப்படுகிறது. இது ஆகாயவாணி (வானொலி) எனவும், அறக்கடவுள் எனவும், தரும தேவதை எனவும் வழங்கப்படும். திருக்குறள் அரங்கேறியபோது<noinclude>
<b>வா.க. 1 _ 9{{sup|1}}</b></noinclude>
oud43tvi4gjj9dt7z1b5x1hukofgq9k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/166
250
617305
1838030
1824989
2025-07-02T03:40:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசலாம்பிகை அம்மையார்|130|அசாசியோ}}</noinclude>அதற்குச் சங்கப் புலவர்கள் பலர் சாற்றுக்கவிகள் பாடினர் என்றும் அவற்றின் தொகுப்பே திருவள்ளுவமாலை என்றும் கூறப்படுகிறது. அரங்கேற்றத்தின் போது எல்லோருக்கும் முற்பட்டு அறக்கடவுள் ‘திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு, உருத்தகு நற்பலகை யொக்க, இருக்க உருத்திர சன்மர் எனவுரைத்து வானில், ஒருக்கவோ என்றதோர் சொல்’ என்னும் பாடலைப் பாடியதாகவும் வழங்குகிறது.
இப்பாடல் திருவள்ளுவமாலையின் முதற் பாடலாக உள்ளது. யாண்டும் நிறைந்துள்ள அறக்கடவுள் தக்காரின் தகுதியறிந்து அவர்கட்கு நிகழப் போகும் நன்மை தீமைகளைப் பிறர் வாக்கிற் பொருத்தி நின்று உரைக்கிறது என்பது சான்றோர் துணிபு. உருவமுடைய பிறர் வாக்கிலிருந்து அவ்வுரை வெளிவரினும், ஆண்டு அறக்கடவுள் அமைந்து நிற்றல் கருதி அது அசரீரி என வழங்கலாயிற்று. சில இடங்களில் பிறர் வாயிலிருந்து சொற்கள் புறப்படாமல் விண்ணிலிருந்து உண்டாதலும் உண்டு. அதனால் தான் ஆகாயவாணி எனவும் பெயர் வழங்குகிறது.{{float_right|த.கோ.}}
{{larger|<b>அசலாம்பிகை அம்மையார்</b>}} இரட்டணை என்னும் ஊரில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவராவார். இவர் தந்தையார் பெருமாளையர். இவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் கணவனை இழந்ததால், கல்வி கற்க விழைந்து இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அதனால், இவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார் எனப்பட்டார். தம் இறுதிக் காலத்தில் வடலூரில் வாழ்க்கை நடத்தினார். இவர் திரு.வி. கலியாணசுந்தரனாரிடம் தோழமைகொண்டு அவருடன் பல மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கு பெற்றுச் சொற்பொழிவாற்றியுள்ளார். இதழ்களில் அப்போதைக்கப்போது பல கட்டுரைகள் எழுதியுள்ளார். காந்தியடிகள், திலகர் ஆகியோர் மீது நூல் பாடியுள்ளமை இவர்தம் தேசிய நாட்டத்தினைக் காட்டுகிறது.
இவர் காந்திபுராணம், இராமலிங்கசுவாமிகள் வரலாற்றுப் பாடல்கள், குழந்தை சுவாமிகள் பதிகம், ஆத்திசூடி வெண்பா, திலகர் புராணம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். திருவிடையூர்த் தல புராண முதற் காண்டத்தைப் பாடியுள்ளார். அதன் இரண்டாம் காண்டம் குழந்தைவேலுப் பிள்ளை என்பவரால் பாடப்பட்டது.
{{larger|<b>அசனாலெப்பைப் புலவர்</b>}} இலங்கையில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தையார் பெயர் சுல்தான் முகையிதீன். காலம் கி.பி. 1870-1918. இவர் ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார். இலங்கை அரசுத் துறையில் எழுத்தராகப் பணியாற்றிய முதல் இசுலாமியத் தமிழர் இவரே என்பர். இவரது நெருங்கிய நண்பர் குலாம் காதிறு நாவலர். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்புடையவர்.
அசனாலெப்பைப் புலவர் இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்க சில: ஆசிரிய விருத்தம் (முகையதீன் ஆண்டவர் மீது பாடியது), திருநாகை நிரோட்டக யமகவந்தாதி, நவரத்தினத் திருப்புகழ், குதுபு நாயக அனுசாசனம்.
{{larger|<b>அசாசியோ</b>}} மத்தியதரைக் கடலில் கார்சிகா தீவில் உள்ளதோர் ஊர். சார்டீனியாவின்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 166
|bSize = 480
|cWidth = 325
|cHeight = 150
|oTop = 400
|oLeft = 86
|Location = center
|Description =
}}
{{center|அசாசியோ துறைமுகம்}}
{{nop}}<noinclude></noinclude>
f1e65n1wvzb6vut3eu76xuounn48tkx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/167
250
617308
1838040
1825019
2025-07-02T03:53:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசாதசத்துரு|131|அசாந்தி}}</noinclude>வடக்கே அமைந்திருக்கிறது. இத்தாலிக்கு மேற்கேயும், பிரான்சுக்குத் தென்கிழக்கிலும் உள்ள இத்தீவு பிரான்சு நாட்டிற்குச் சொந்தமானது. அசாசியோ (Ajaccio) என்னும் ஊரில்தால் நெப்போலியன் பிறந்தார்.
{{larger|<b>அசாதசத்துரு:</b>}} (கி.மு. 500-475) முதல் மகதப் பேரரசை நிலைநாட்டிய பிம்பிசாரரின் மகன். அசாதசத்துருவின் தாயார் இலிச்சாலி இளவரசியா, கோசல நாட்டு இளவரசியா என்பதைத் திட்டவட்டமாகக் கூற இயலவில்லை. பிம்பிசாரரும் அசாதசத்துருவும் அரியங்கா (Haryanka) குலத்தைச் சார்ந்தவர்கள். பிம்பிசாரர் ஆட்சி நடத்தியபோது அசாதசத்துரு சம்பாவில் இளவரசராக ஆட்சி செய்தார். தேவதத்தனின் சொற்படி தம் தந்தையைக் கொன்று விட்டு இராசக் கிருகத்தில் அரியணை ஏறியவர் என்று அசாதசத்துருவின் மீது பௌத்தர்கள் பழி சுமத்தினர். வரலாற்றுப் பேராசிரியர் வின்சென்ட்டு சுமித்து (Vincent Smith) இதனைக் கட்டுக்கதை என்று ஐயுறுகிறார். அசாதசத்துரு சமண சமயத்தில் பற்றுக் கொண்டவராதலின் அக்கூற்று அவரைப் பற்றிப் பௌத்தர்கள் கூறிய பொய்க் கூற்று என்பர். அசாதசத்துரு பேரரசரானதும் புத்தரையும் மகாவீரரையும் ஆதரித்தார் என்பது அறிஞர் சிலர் கருத்து. தம் தந்தையைப் போன்று அவரும் நாடு பிடிக்கும் மனப்போக்கு உடையவர். கோசலமும் வைசாலியும் கூட்டாக இணைந்து ஏறத்தாழப் பதினாறு ஆண்டுகள் அவரை எதிர்த்துப் போரிட்டன. ஆனால் இறுதியில் அசாதசத்துருவே வென்றார். கோசலமும் வைசாலியும் மகதத்துடன் இணைக்கப்பட்டன. அதனால் மகதப் பேரரசின் வலிமையும் மதிப்பும் பெரிதும் உயர்ந்தன. இப்போர் நடைபெற்ற காலத்தில் அசாதசத்துரு பாடலிக் கிராமத்தில் கோட்டையொன்றைக் கட்டினார். பாடலிக் கிராமமே பின்னர்ப் பாடலிபுத்திரமாக உருவாகியது. அசாதசத்துருவின் ஆட்சியின் போது சாக்கியர் பெருமளவில் கொலை செய்யப்பட்டனர். இராசக்கிருகத்தில் புத்த சமயத்தின் முதல் மாநாடு கூடியது இக்காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. இது, இப்போது இராசகீர் (Rajgir) என்றழைக்கப்படுகிறது. அசாதசத்துரு தம் தந்தை பிம்பிசாரரைச் சிறை வைத்த இடத்தை இன்றும் அங்குக் காணலாம்.
{{larger|<b>அசாந்தி:</b>}} வடமேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் (Ghana) வாழும் வரலாற்றுப் புகழுடைய ஒரு மக்களினம் அசாந்தி (Ashanti) எனப்படும். இவ்வின மக்கள், சூடான், காங்கோ, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போன்ற நாடுகளின் சில பகுதிகளிலும் ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக வாழ்கின்றனர். இம்மக்கள் தொகை ஏறத்தாழ 7,50,000 ஆகும்.
இவ்வினத்தவர் கொண்டிருக்கும் ‘தங்க மணை’ (Golden Stool) அரசுச் சார்புடையது; புனிதமானது. இன ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் குறிக்கும் சின்னம். இதனை அம்மக்கள் கவனமாகப் பாதுகாத்து வருகின்றனர். தங்கள் அரசியல் தலைவருக்கென்று அமைக்கப்பட்டுள்ள இச்சின்னத்தின்மீது இதன் புனிதத்தன்மை நோக்கி அத்தலைவரும் அமர்வதில்லை.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 167
|bSize = 480
|cWidth = 195
|cHeight = 283
|oTop = 175
|oLeft = 249
|Location = center
|Description =
}}
{{center|தங்க மணையுடன் அசாந்தித் தலைவன்}}
இவர்கள் வேளாண்மையையும் வேட்டையாடுதலையும் தொழில்களாகக் கொண்டவர்கள். இரும்பு, களிமண், மரம் ஆகியவற்றால் சிறந்த கலை வேலைப்பாடுகளைச் செய்வதிலும் இவர்கள் வல்லவர்கள், இம்மக்கள் கடந்த காலங்களில் மனிதனை உண்ணும் பழக்கமுடையவராய் இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களிடையே பலதாரமணம் (Polygamy) நிகழும். முறையற்ற சேர்க்கை (Adultery) கடுமையாகத் தண்டிக்கப்பட்டது. மணமகன் தான்<noinclude>
<b>வா.க. 1 _ 9அ</b></noinclude>
f9dl6cv5u5tkm80iph1opdaaogzsaq8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/168
250
617312
1838045
1825035
2025-07-02T03:57:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838045
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசாபுக்கடல்|132|அசாம்}}</noinclude>மணம் முடிக்க விரும்பும் பெண் வீட்டிற்கு 20 அம்புகளைக் கொடுப்பதன் மூலம் திருமண ஒப்பந்தம் ஏற்படுகிறது. பெண்கள் மிகச் சிறு வயதிலேயே மணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இவ்வினத்தவரிடம் தந்தைவழிக் குலங்கள் (Patriclans) பரவிக் காணப்பட்டதுடன் அவை ஒரே மாதிரியான சமூக வழக்கங்களையும் கொண்டிருக்கின்றன. எளிய மக்கள் தாங்கள் சார்ந்திருந்த குலத்திற்குள் திருமணம் புரிந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அரச பரம்பரையில் வந்தவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அசாந்தி இனத்தவரின் அமைப்பியல் குறியீடுகளை (Structural Symbols) ஒட்டிய பல்வேறு குலங்களின் நம்பிக்கையின்படி, ஒரு மனிதனுக்கு இரண்டு ஆவிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அசாந்தி மதமானது முன்னோர் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். அசாந்தி இனத்தவரைப் பொறுத்தவரையில், இவர்களது கடவுள் நம்பிக்கை மிகவும் தெளிவற்றது. இவர்களிடம் நிலவும் மந்திரம், பில்லி சூனியம் பற்றிய நம்பிக்கை முதலியன குறிப்பிடத்தக்கவை. உடல் நலக் குறைவு, இறப்புப் பற்றிய கவலைகள் தங்களிடம் உள்ள பழி சூழ் போக்கினால் உண்டாகின்றன என்பது இவர்களின் நம்பிக்கை. இந்த மாய மந்திர சக்தியைப் பறவைகட்கு நஞ்சினைச் செலுத்தி அறியலாம் என நம்புகின்றனர். முற்காலத்தில், இக்காரணத்திற்காக மனிதர்கட்கே நஞ்சினைச் செலுத்துவது உண்டு, இத்தகைய கொடிய மந்திரக்காரனை அம்பு எய்து கொன்று விடுகின்றனர். அன்றி, உரிய இழப்பீட்டுத் தொகையும் கேட்பர்.{{float_right|ஆ.செ.}}
{{larger|<b>அசாபுக்கடல்</b>}} தென் உருசியாவில் உள்ள பெரியதும் ஆழம் குறைந்ததுமான உள்நாட்டுக்கடல், இதனைக் கருங்கடலுடன் கெர்ச்சு (Kerch) நீர்ப்பிரிவு இணைக்கிறது. இதன் பரப்பளவு 37,550 ச.கி.மீ. ஆழம் 15 மீ. இக்கடலின் மேற்கு முனையைச் சிவாசு (Sivash) அல்வது பூட்ரிட் (Putrid) கடல் என்பர். இம்முனையில் பல தீநாற்றமுள்ள சதுப்பு நிலங்களும், உப்பங்கழிகளும் உள்ளன. அசாபுக் கடலின் (Azov Sea) பகுதியான தாகான்ராக்கு (Taganrog) வளைகுடாவில் தான் ஆறு (Don) கலக்கிறது. இவ்வளைகுடா, கடலின் வடகிழக்கு முனையில் அமைந்துள்ளது. குளிர் காலத்தில் இக்கடலில் கப்பற் பயணம் செய்வது தொல்லைகள் நிறைந்ததாகும். ஏனெனில், பனியும் புயலும் கப்பற் பயணத்திற்கு ஊறு செய்யவல்லவை.
{{larger|<b>அசாம்</b>}} இந்திய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மாநிலம். வடக்கே, பூடான், அருணாசலப் பிரதேசம், கிழக்கே, நாகாலாந்து, மணிபுரி, தெற்கே, மிசோரம், திரிபுரா, பங்களாதேசம், மேகாலயா, மேற்கே, மேற்கு வங்காள மாநிலம் இவற்றால் சூழப்பட்டதே அசாம் மாநிலமாகும்.
{{center|அசாம்}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 168
|bSize = 480
|cWidth = 199
|cHeight = 177
|oTop = 100
|oLeft = 269
|Location = center
|Description =
}}
{{center|அசாம் மாநிலம்}}
அசாம் மாநிலம் 78,523 ச.கி.மீ. பரப்பளவு உள்ளது. இதன் தலைநகர் திசுபூர் (Dispur) ஆகும். புதிய தலைநகர் பிராக்சோதிசுபூர் (Pagjyotishpur).
அசாம் மாநிலத்துக்கு இமய மலைத் தொடர்களான பாட்காய்புர், நாகர்மலை–பராய் தொடர், காசி, சயிந்திய மமைத்தொடர் போன்றவை எல்லைப்புறங்களாக அமைந்துள்ளன. மாநிலத்தின் நடுவே வெள்ளம் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்திராவும் அதன் கிளை ஆறுகளும் பாய்கின்றன.
அதிக அளவில் மழை பெய்யும் இந்திய மாநிலங்களுள் அசாம் சிறப்பானதாகும். அசாம் என்ற பெயர் வடமொழியில் ‘அசமம்’ - சமமானதன்று என்று பொருள்தரும். மலையும் சமவெளியும் பள்ளத்தாக்குகளும் கொண்ட இம்மாநிலத்திற்கு இப்பெயர் பொருத்தமே. மேலும், ‘அசம்’ என்றால் நிகரற்றது என்றும் பொருள் உண்டு. அசாம் என்ற பெயர் அகோம் மொழியில் உள்ள அசம் என்ற சொல்லிலிருந்து வந்தது என்பர். இதன் பொருள் ‘வெல்லுதற்கரியவர்’ என்பதாம். இச்சொல் ஆசாம் – ஆசம் – ஆகம் – அகோம் என்று மருவி வந்தது. பிறகு ஆங்கிலேயரால் அசாம் என்று உச்சரிக்கப்பட்டுள்ளது.
இராமாயண காலத்தில், அசாம் பரத கண்டத்தின் பகுதியான பிராக்சோதிச அரசாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு விசுவாமித்திரரின் பாட்டனாரான அமிருதராசர் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. மகாபாரதத்தில் இப்பகுதியை நரகாசுரன்<noinclude></noinclude>
4yccu43wrv03d404l0uhfazq48vr793
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/169
250
617318
1838053
1825052
2025-07-02T04:05:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838053
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசாம்|133|அசாம்}}</noinclude>ஆண்டுவந்ததாகக் குறிப்பு உள்ளது. இதனைக் காமரூபம் என்றும் இங்கு வாழ்ந்தவர்களைக் கிரீடர்கள் என்றும் அழைத்தனர். யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பும், கவி வாணர் எழுதிய அர்ச சரித (Harsha Charita) நாடகமும், கல்வெட்டுகளும் அசாம் பற்றி அறிய உதவியாக உள்ளன. இவற்றிலிருந்து, இப்பகுதி காமரூபம் என்று அழைக்கப்பட்டது என்றும், கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியை வர்மன் மரபினைச் சேர்ந்த மன்னர்கள் ஆண்டுவந்தனர் என்றும், இவர்கள் நரகாசுரன் வழிவந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.
வர்மன் மரபிற்குப் பின், அசாம் பகுதியைச் சலசுதம்ப மரபினர், பாலர், கென் மரபினர் போன்றோர் ஆண்டனர். கென் மரபினரின் காலத்தில்தான் முகம்மது கோரியின் படைத்தலைவரான பக்தியார் கில்சி இப்பகுதியை வென்றார் ஆனால், மீண்டும் கென் வமிசத்தினர் அசாமைத் தங்கள் ஆட்சியில் கீழ்க் கொண்டு வந்தனர். கி.பி. 1515-இல் கோரி வமிசத்தினர் அசாமைக் கைப்பற்றினர். விரைவிலேயே அகோம் மரபினர் மீண்டும் அசாமைக் கைப்பற்றிக் கிழக்கிந்தியக் கம்பெனியார் காலம் வரை ஆண்டுவந்தனர். கி.பி. 1819-ஆம் ஆண்டு பர்மியர் இப்பகுதியைக் கைப்பற்றினர். பர்மியரிடமிருந்து ஆங்கிலேயர் அசாம் பகுதியை வென்றனர். பின்னர் அது பிரிட்டீசு இந்தியாவின் (British India) ஒரு பகுதியாக மாறியது.
இந்தியா 1947-ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபொழுது பிரிவினை செய்யப்பட்டது. அதனையொட்டி அசாம் பிரதேசத்தின் பகுதியான சில்கட் மாவட்டம் பாகிசுத்தான் பகுதியான கிழக்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது.
எஞ்சிய அசாம் பகுதி 2,23,590 ச.கி.மீ. பரப்புடையது. ஆயினும், கடந்த சில ஆண்டுகளாக அசாம் பகுதியிலிருந்து வேறு சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இன்றைய அசாமின் பரப்பளவு 78,523 ச.கி.மீ.
அசாமிலிருந்து வடகிழக்கு எல்லைப் பகுதி என்ற அமைப்பு 1948-இல் பிரிக்கப்பட்டது. இப்போது அது அருணாசலப் பிரதேசம் என்றழைக்கப்படுகிறது. 1957-ஆம் ஆண்டு நாகர்மலை மாவட்டம் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. 1963-ஆம் ஆண்டு இப்பகுதி, நாகாலாந்து என்ற தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. 1970-ஆம் ஆண்டு அசாமின் மற்றொரு பகுதியான மேகாலயா மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. 1972-ஆம் ஆண்டு காசி, சயிந்தியா, காரோமலெ மாவட்டங்களைக் கொண்ட இப்பகுதி மேகாலயா என்ற தனி மாநிலமாக மாறியது. அவ்வாண்டே மிசோ மலைப்பகுதி மாவட்டம் அசாமிலிருந்து பிரிக்கப்பட்டு மிசோரம் என்ற பெயரில் மத்திய அரசின் ஆளுகையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. 1962-ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தின் வடக்கில் உள்ள இமாலயப் பகுதிகள் சீனப்படைகளால் தாக்கப்பட்டன. மலைவாழ் மக்களில் பலர் அசாம் மாநிலத்தின் மலைகளிலும் சமவெளிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். நாகூர், நாக்டர், காசி கூட்டத்தினர், சயிந்தியா கூட்டத்தினர், மிசிரியர்கர்பி கூட்டத்தினர், கூகி பிரிவினர், போரே-போடோ பிரிவினர், மிசோலுசாயி பிரிவினர், இலலுங்கு கூட்டத்தினர். சுத்தியா பிரிவினர், மிரி அல்லது மிசிங் பிரிவினர், அகா பிரிவினர், மோரோ அல்லது மடகா பிரிவினர், கம்மதியர், நாரா பிரிவினர், பகியால் பிரிவினர், ஐதன்யர், துருங் பிரிவினர், காம்சங் பிரிவினர் என்னும் பல மலைவாழ்மக்கள் அசாம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர், மற்றும் பார்ப்பனர் காயசுதர், கலிக, கோச், கியோட், கனகா, கைபர்டா, குமாரா, அரி என்ற சாதிப் பிரிவுகளும் உள்ளன. அசாமிய மக்களிடையே ஆவினத்தைப் போற்றும் மரபு உள்ளது. ஆலினம் போற்றும் விழாவாகப் பிகு பண்டிகை அங்குக் கொண்டாடப்படுகிறது. மக்கள் எண்ணிக்கைச் செறிவு, இந்தியா முழுவதன் செறிவை விடக் குறைவு, நாகாலாந்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 31 பேரும், மேகாலயாப் பகுதியில் 45 பேரும் உள்ளனர். அசாமின் சில பகுதிகளில் கல்வி அறிவுத் தரம், இந்திய நாட்டின் பொதுத்தரத்தைவிட உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் மேகாலயாப் பகுதியில் 30 விழுக்காடும், நாகாலாந்துப் பகுதியில் 27 விழுக்காடும் எழுத்தறிவு பெற்றவர்கள். ஆனால், அசாமில் பொதுவாக 29 விழுக்காடு மக்களே எழுத்தறிவு பெற்றுள்ளார்கள்.
இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து அண்டை மாநிலங்களிலிருந்தும் அயல் நாடுகளில் இருந்தும் மக்கள் குடியேற்றம் அசாமில் நடந்து வருகிறது. அதனால் பெரும் அரசியல் கொதிப்பு உருவாகியுள்ளது. வங்காளத்திலிருந்தும் பீகாரிலிருந்தும் பங்களாதேசத்திலிருந்தும் மக்கள் அசாமில் கடந்த 70 ஆண்டுகளாகக் குடியேறியும் ஊடுருவல் செய்தும் வருகின்றனர். 1951-ஆம் ஆண்டு மக்களின் எண்ணிக்கையையும், 1981-ஆம் ஆண்டு மக்கள் எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது 30 ஆண்டுகளில் 35 விழுக்காடு அளவிற்கு இப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இது இந்திய நாட்டின் பொதுமக்கள் எண்ணிக்கைப் பெருக்கத்தைவிட ஒன்றரை மடங்காகும். 1911-ஆம் ஆண்டு அசாமில் இசுலாமியர் 9.4 விழுக்காட்டினராயிருந்தனர். 1974-ஆம் ஆண்டில் அவர்கள் எண்ணிக்கை 34.5 விழுக்காடாக உயர்ந்துள்ளதால் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. காசிப் பிரிவினர்<noinclude></noinclude>
6cmxhu6rlmhtie6wlvp3uv3t75x67ap
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/170
250
617404
1838054
1825487
2025-07-02T04:10:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1838054
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசாம்|134|அசாமிய மொழி}}</noinclude>போன்ற மலைவாழ் மக்களிடையே தாய் வழி அதிகாரம் குடும்பத்திடையே உள்ளது. அசாம் மாநிலத்தில் மலைப் பகுதிகளில் கிறித்தவ சமயத்தினரும், சமவெளிப் பகுதிகளில் இந்து சமயத்தினரும், இசுலாமிய சமயத்தினரும் வாழ்கின்றனர். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை விவரப்படி அசாமில் இந்துக்கள் 71 விழுக்காடும், இசுலாமியர் 24 விழுக்காடும் இருந்தனர். மலைவாழ்மக்களிடையே கிறித்தவ சமயத்தினர் எண்ணிக்கை 51 விழுக்காடாகும். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மிசோரம் பகுதியில் 27 விழுக்காடு கிறித்தவர்கள் இருந்தனர். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி அங்குக் கிறித்தவ சமயத்தினர் 98.09 விழுக்காடாக உள்ளனர்.
இங்குள்ள இந்துக்கள் வைணவ, சைவ, சக்தி வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். வைணவ வழிபாட்டு முறை பெரிதளவு இங்குப் பரவுவதற்குக் காரணமாய் இருந்தவர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரதேவர் என்னும் அடியாராவார். மகாபாரதக் கதைகள், கண்ணன் வழிபாடு, பாகவத நூல் போன்றவை இந்துக்களிடையே பெரிதும் இடம் பெற்றுள்ளன. பட்டிதொட்டிதோறும் உள்ள மக்கள் கண்ணன் பெயரைப் போற்றும் மரபினர். சங்கர தேவர் வைணவ வழிபாட்டு முறையை நாமதர்மமாக அறிமுகப்படுத்தி மக்கள் மன்றங்களை அமைத்துள்ளார். சைவ வழிபாடும் அசாமிய இந்துக்களிடம் சிறப்பாக உள்ளது. பண்டைக்கால அசாமிய இந்துக்களில் பலர் சைவ சமயத்தினர். தேசுபூரில் உள்ள மகா பைரவர் ஆலயம் மற்றும் உமாநாதர் ஆலயம் சிறப்பானவை. சக்தி அல்லது தேவி வழிபாடும் அசாமிய இந்துக்களிடம் உள்ளது. இங்குள்ள காமாக்யா ஆலயம் சிறப்பான சக்தி பீடமாகும். தாந்தரீக முறையில் தேவியை வழிபடும் முறையும் அசாமில் தொன்றியதே.
அசாமில் ஆலயங்களும் தான் என்ற வழிபாட்டு மன்றங்களும் நூற்றுக்கணக்கில் உள்ளன. சிவன், துர்க்கை, திருமால் போன்ற தெய்வங்களுக்கு இவ்வாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை சிவ ஆலயங்கள். அசோ (Hajo) என்ற ஊரில் பெயர்பெற்ற பௌத்த ஆலயம் உள்ளது. பூடான் நாட்டிலிருந்தும் பௌத்தர் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
பிகு அல்லது பைகாச விழா அசாமில் மிகச் சிறப்பான விழா, இது அசாமியப் புத்தாண்டு விழா. இது இளவேனிற் காலத்தில் சித்திரை மாதத் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. கோமாதா-கோலட்சுமி என்ற முறையில் ஆவினத்திற்கு வழிபாடு செய்யப்படுகிறது. மற்றும், தியல் திருவிழா-கண்ணனைப் பற்றிய விழா, அம்பு பசிநோன்பு, சிவராத்திரி போன்றவையும் சிறப்பான விழாக்களாகும். சிவசாகரில் நடத்தப்படும் சிவராத்திரி விழா மிகவும் போற்றத்தக்கதாகும்.
அசாம் நீர்வளம், நிலவளம், வனவளம், கனிவளம் மிக்க மாநிலம். அங்குள்ள மலைச்சாரல் பகுதியில், 756 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அவை 26.3 கோடி கிராம் தேயிலையை உற்பத்தி செய்கின்றன. அதன் மதிப்பு ஏறத்தாழ 400 கோடி உருபாய் ஆகும். இங்கு மழை மிகுதியாகப் பெய்கிறது. இதனால், இம்மாநிலத்தில் அடர்ந்த பசுமை இலைக் காடுகள் மிகுதி. மரம் அறுக்கும் தொழிலுக்கு இவை அடித்தளமாகும். இங்குள்ள மூங்கில் காடுகள் செழிப்பானவை. அவை காகித உற்பத்திக்குப் பயன்படுகின்றன. உலகிலேயே பல வண்ணங்களோடு கூடிய சிறியதும் பெரியதுமானதுமான மலர்கள் மலிந்துள்ளன. நெல் விளைச்சலும் பிரம்மபுத்திர வடிகால் நிலத்தில் சணலும் மிகுதியாக விளைகின்றன. ஆண்டுதோறும் இம்மாநிலம் பிரம்மபுத்திரா ஆறும் அதன் கிளை ஆறுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. இங்குப் பருத்தி, பழவகை, எண்ணெய் விதைகள், கரும்பு, கோதுமை, தேயிலை போன்றவை பயிராகின்றன. கனிவளத்திற்கும் இம்மாநிலம் பெயர் பெற்றது. நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக் கல், பெட்ரோல், எரிவாயு போன்றவை இங்குக் கிடைக்கின்றன. ஓலை முடைதல், கம்பள ஆடை நெய்தல் போன்ற குடிசைத் தொழில்களுடன் உரச் சாலை, காகிதம், பெட்ரோல், மரப்பலகை வெட்டுதல், சர்க்கரை, தேயிலை உற்பத்தி ஆலைத் தொழில்களும் உள்ளன.{{float_right|இரா.சீ.}}
{{larger|<b>அசாமிய மொழி:</b>}} இந்திய தேசிய மொழிகளில் அசாமிய மொழியும் ஒன்றாகும். இந்திய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அசாம் மாநிலத்தில் வாழும் 1,99,00,000 மக்களால் (1981 கணக்குப்படி) பேசப்படுவது இம்மொழி. இவர்கனில் பெரும் பகுதியினர் இம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் மட்டுமன்றி இம்மாநிலத்தில் வாழும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வேற்று மொழியினரும் இம்மொழி பேசுவோராக உள்ளனர்.
அசாம் என்ற சொல் அண்மைக் காலச் சொல்லாகும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டளவில் இப்பகுதியில் படையெடுத்துத் தங்கள் ஆட்சியை நிறுவிய அகோம் அல்லது சான் (Shans) மக்களைக் குறிக்கவே இச்சொல்லை இம்மக்கள் பயன்படுத்தினர். “அழிக்க முடியாதவர்கள்” அல்லது “ஒப்பு உயர்வு இல்லாதவர்கள் (அ+சமா)” எனப் பொருள்படும் இச்சொல், தங்களை வென்ற மக்களைக் குறிக்குஞ் சொல்லாகத்<noinclude></noinclude>
qoat8pheyra77yq3eqex9zz4zoojcg5
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/81
250
619215
1837977
1833874
2025-07-02T00:00:18Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>நிலையாமை</b>}}}}
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல், வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.{{float_right|1}}
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடுமிடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது; அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.{{float_right|2}}
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது; அத்தகைய செல்வத்தைப் பெற்றால், பெற்ற அப்பொழுதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.{{float_right|3}}
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால், நாள் என்பது ஒரு கால அளவுபோல் காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.{{float_right|4}}
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்குமுன்) நல்ல அறச் செயல் விரைந்து செய்யத்தக்கதாகும்.{{float_right|5}}
நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.{{float_right|6}}
அறிவில்லாதவர் ஒருவேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை; ஆனால் வீணில் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல; மிகப் பல எண்ணங்கள்.{{float_right|7}}
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.{{float_right|8}}
இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது; பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.{{float_right|9}}
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ?{{float_right|10}}<noinclude>{{rh|68||}}</noinclude>
e31mnm680t4j5a2ngwabhl93v42emp2
பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/82
250
619216
1837978
1833876
2025-07-02T00:46:57Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1837978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|துறவறவியல்||அதிகாரம் 34}}</noinclude>{{center|{{larger|<b>நிலையாமை</b>}}}}
<poem>நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை{{float_right|331}}
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று{{float_right|332}}
அற்கா இயல்பிற்றுச் செலவம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்{{float_right|333}}
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்{{float_right|334}}
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்{{float_right|335}}
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு{{float_right|336}}
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல{{float_right|337}}
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு{{float_right|338}}
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பாது போலும் பிறப்பு{{float_right|339}}
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு{{float_right|340}}
</poem><noinclude>{{rh||69|69}}
{{rh|3||}}</noinclude>
e7b7nagpe4wqpda9adu9amx2pzbgr8n
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/15
250
619243
1837941
1834514
2025-07-01T15:31:10Z
Info-farmer
232
xx
1837941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தமிழ்நாட்டு</b>}}}}
{{center|{{xx-larger|<b>விளையாட்டுக்கள்</b>}}}}
{{center|<b>[முதற் பகுதி]</b>}}
{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
{{center|{{larger|<b>I இளைஞர் பக்கம்{{rule|10em|align=}}</b>}}}}
ஏறத்தாழ 5 அகவை முதல் 25 அகவை வரையுள்ளோர் ஆடும் விளையாட்டுத் தொகுதி <b>இளைஞர் பக்கம்</b> ஆகும். (அகவை = வயது.)
{{center|{{larger|<b>1. ஆண்பாற் பகுதி</b>}}}}
{{center|<b>(1) பகலாட்டு<br>௧. கோலி</b>}}
{{center|<b>(௧) பாண்டிநாட்டு முறை</b>}}
{{larger|ஆட்டின் பெயர்}} : கல்லாலுங் கண்ணாடியாலும் இயன்ற சிற்றுருண்டைகளைத் தெறித்தும் உருட்டியும் ஆடும் ஆட்டு, <b>கோலி</b> எனப்படும். (கோலி = உருண்டை).
{{larger|ஆடுவார் தொகை}} : சிறுவருள்ளும் இளைஞருள்ளும், பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை மேற்பட்டவரும் இதை ஆடுவர்.
{{larger|ஆடுகருவி }}: ஒன்றற்கொன்று ஏறத்தாழ நாவடித் தொலைவில், அகலளவான வாயும் ஓரங்குல ஆழமுமுள்ளனவாக, வரிசையாய் நிலத்திற் கில்லப்பட்ட மூன்று குழிகளும், ஆடகன் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம்.
{{nop}}<noinclude></noinclude>
3ylwieg6f0j0o23gts3wij4k2wbpec8
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/29
250
619266
1837927
1834828
2025-07-01T15:13:08Z
Info-farmer
232
{{rh|த.வி. —2||}}
1837927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|கோலி|17}}</noinclude>ஆடுகிறவன் அடித்த கோலியும் இன்னொன்றும் அரங்கிற்குள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு நிற்பின், அவன் அவற்றுள் ஒன்றை இன்னொன்று அலுக்காதவாறு. எடுத்தல் வேண்டும். அலுக்கிவிடின் தோற்றவனாவன். அலுங்காமல் எடுத்தற்காக இரண்டிற்கும் இடையில் சிறிது மண்ணைத் தூவுவது வழக்கம். ஆட்டிற் கெலித்தவன் மறு ஆட்டையில் முந்தியாடல் வேண்டும். ஆடகர் பலராயின், தோற்றவன் நீங்கி வேறொருவன் எதிரியாவன்.
{{larger|ஆட்டின் பயன்}} : குறிதப்பாமல் உருட்டியடிக்கப் பயில்வதும், ஒன்றையொன்று தொட்டுநிற்கும் பொருள்களுள் ஒன்றைப் பிறிது அல்லது பிற அலுக்காதவாறு எடுக்கப் பழகுவதும், இவ்வாட்டின் பயனாம்.
{{center|{{larger|<b>IV. முக்குழியாட்டம்<br>(i) சேலம் வட்டார முறை.</b>}}}}
{{dhr|3em}}
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 29
|bSize = 386
|cWidth = 204
|cHeight = 240
|oTop = 294
|oLeft = 90
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude>
{{rh|த.வி. —2||}}</noinclude>
cpkhryy339qim29nz6x0oc2bflmazml
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/1
250
619308
1837896
1834269
2025-07-01T14:39:49Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ +திருத்தம்
1837896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{block_center|<b>கழக வெளியீடு, எ௫௨</b><br>
{{Xx-larger|<b>தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்</b>}}}}
{{dhr|10em}}
{{c|<b>ஆசிரியர்:<br>சேலங்கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர்,</b>}}
{{center|{{larger|<b>திரு ஞா தேவநேயன் அவர்கள், எம் ஏ</b>}}}}
{{dhr|3em}}
{{c|<b>☐</b>}}
{{dhr|5em}}
{{center|{{larger|திருநெல்வேலித் தென்னிந்திய<br>சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,}}<br>
திருநெல்வேலி–6.{{gap|11em}}சென்னை–1.<br>
1962}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
081ayrhsczv8ivtveix4j4p3mouztgj
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/3
250
619309
1837901
1834270
2025-07-01T14:46:26Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ {{left_margin|3em|}}
1837901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முகவுரை</b>}}}}
விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு. (விளை = விருப்பம். ஆட்டு = ஆட்டம்.) அது சிறுவர் பெரியோர் ஆகிய இரு சாரார்க்கும் பொதுவேனும், முன்னவர்க்கே சிறப்பாக உரியதாம். மக்கள் நிலைத்த குடும்பவாழ்க்கை வாழத் தொடங்கிய காலத்திலிருந்து, விளையாட்டுவினை உலகில் நிகழ்ந்து வந்திருக்கின்றது. வேலை செய்யாத பருவத்தில் அல்லது ஓய்வு நேரத்தில், சிறுவர் பெரியோரின் செயலை அல்லது இயற்கை நிகழ்ச்சியை நடித்து மகிழ்ந்த திறமே விளையாட்டுத் தோற்றமாகத் தெரிதலின், அது முதன்முதல் சிறுவரிடையே தோன்றிற்றெனக் கொள்ளுதல் தவறாகாது.
விளையாட்டு நிலைக்களன், வாழ்க்கைத் தொழில், போர், அருஞ்செயல், சிறப்பு நிகழ்ச்சி முதலியவாகப் பலதிறப்படும். உழவர் செய்யும் பயிர்த்தொழிலைச் சிறுவர் நடித்தாடும் ஆட்டு <b>பண்ணை</b>யென்றும்; ஓர் இளங்கன்னிக்குக் களிறு புலி முதலிய விலங்குகளாலும் ஆழ்நீராலும் நேரவிருந்த கேட்டை, தற்செயலாக அவ்வழிவந்த காளைப் பருவத்தானொருவன் நீக்கிய செய்தியைச் சிறார் நடித்தாடுவது <b>கெடவரல்</b> என்றும்; பெயர்பெற்றதாக ஊகிக்க இடமுண்டு. (பண்ணை = வயல்.)
“கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு”
{{float_right|(தொல். உரி. 21)}}
பிற்காலத்தில் அவ்விரு பெயர்களின் சிறப்புப் பொருளையும் அறியாதார், அவற்றை விளையாட்டு என்னும் பொதுப்பொருளிலேயே வழங்கினர் போலும்!
விரும்பப்படுதல், செயற்கெளிமை, இன்பந்தரல் ஆகிய மூன்றும் விளையாட்டின் இயல்பாகும். ஒருவன் ஓர் அருவினையை எளிதாகச் செய்துவிடின், அவன் அதை ஒரு விளையாட்டுப்போற் செய்துவிட்டான் என்பர். விளையாட்டு இன்பந் தருவதுபற்றியே,
{{left_margin|3em|<poem>“செல்வம் புலனே புணர்வு <b>விளையாட்டென்</b>
றல்லல் நீத்த உவகை நான்கே”</poem>}}<noinclude></noinclude>
g31mwak27w3mzqtszuv5jqova6m7zn9
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/4
250
619310
1837905
1834507
2025-07-01T14:48:29Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ {{dhr|3em}}
1837905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{rh|௬|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>என (1205), அதை இன்பவழி நான்கனுள் ஒன்றாகக் கூறியதோடு, இன்ப நுகர்ச்சியையே ‘பண்ணை’ (1195) என்னுஞ் சொல்லாற் குறித்தனர் தொல்காப்பியர். அப் பண்ணை யென்னுஞ் சொற்கு, “முடியுடை மூவேந்தருங் குறுநில மன்னரு முதலாயினோர் நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காம நுகரும் இன்ப விளையாட்டு” என்று பேராசிரியர் உரை கூறியிருத்தல் காண்க. எளியதும் இன்பந் தருவதுமான செயலெல்லாம் விரும்பப்படுவதே. இறைவன் அடியாரைக் காக்கும் திருவருட்செயல்கள் மேற்கூறிய மூவியல்புங் கொண்டன வென்னுங் கொள்கைபற்றியே, அவை திருவிளையாடல் எனப்படுவன.
விளையாட்டால் ஒருவர்க்கு, உடலும், உள்ளக்கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத்திறம், வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, ‘கரும்பு தின்னக் கைக்கூலிபோல்’ விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது. நீண்டகாலமாக வாழ்க்கைத் தொழில்வகையாக இருந்துவரும் நாடக நடங்களும், முதற்காலத்தில் விளையாட்டாகத் தோன்றியவையே.
ஒருசில விளையாட்டுக்கள் உலக முழுமைக்கும் பொதுவேனும், பல விளையாட்டுக்கள் வெவ்வேறு நாட்டிற்குத் தனிச் சிறப்பாகவே யுள்ளன. அவை பெரும்பாலும் நாட்டுப்பற்றையூட்டுவன. ஆங்கில ஆட்சி நீங்கித் தமிழாட்சி வரவிருக்கும்போது, வழக்குக் குன்றிய தமிழ்நாட்டு விளையாட்டுக்களை நாடு முழுதும் பாப்புவது நல்வதென்று கண்டு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சித்தலைவரும் தூயதமிழருமான திருவாளர், வ.சுப்பையா பிள்ளையவர்களின் விருப்பத்திற் கிணங்கி, இச்சிறுநூலை எழுதலானேன்.
வழக்கற்ற விளையாட்டுக்கள் இறுதியிற் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெறாத தமிழ்நாட்டு விளையாட்டுக்களை எவரேனும் எழுதியனுப்பின், அவை நன்றியறிவொடு அடுத்த பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்பெறும்.
{|style="width:100%;"
| style="width: 6em;" |சேலம்,
| rowspan=2|{{brace2|3|r}}
| rowspan=2 colspan="4"|{{right|<b>ஞா. தே.</b>}}
|-
|1—12—'54.
|}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
p2d6gz7xh0k406n7j0uz5hlvrozti2t
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/27
250
619313
1837920
1834519
2025-07-01T15:08:07Z
Info-farmer
232
{| style="margin:auto;"
1837920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|கோலி|13}}</noinclude>{| style="margin:auto;"
|-
|முதன்முறை || || 3 அடி || || 3 தள்ளு
|-
|2 ஆம் முறை|| ||2 அடி|| || 2 தள்ளு
|-
|3 ஆம் முறை|| ||1 அடி|| ||1 தள்ளு
|-
|4 ஆம் முறை|| ||1 அடி|| ||3 தள்ளு
|-
|}
முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குட் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், கீழ்வருமாறு ஒரு வலக்காரத்தைக் கையாள்வதுண்டு. அவனது கோலி அடிக்க முடியாத தொலைவிலிருக்கும்போது, அடிக்கிறவன் தனக்கு வசதியுண்டாகுமாறு மேலுஞ் சற்றுத் தள்ளச் சொல்வான். அப்போது தள்ளுகிறவன், அடிக்கிறவனுக்குத் தெரியாதவாறு தன் கோலியை ஒரு கைக்குளிட்டு மறைத்து இரு கைகளையும் முட்டியாக வைத்துக்கொண்டு, அவற்றுள் ஒன்றைச் சற்று முன்னாக எடுத்து வைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் இன்னொரு முட்டிக் கையை முந்தினதினும் சற்று முன்பாக எடுத்துவைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் மீண்டும் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் மீண்டும் பின்னாக இருக்கும் கையை முன்னாக எடுத்து வைப்பான். அடிக்கிறவன் கோலிக் கை எதுவென்றும் வெறுங்கை எதுவென்றும் நெரியாமல், “போதாது,” “போதாது” என்று மேலும் மேலும் சொல்லச் சொல்லத், தள்ளுகிறவன் தன் இரு கைகளையும் மாறி மாறி முன்னாக எடுத்து வைத்து, இறுதியில் கோலிக்கையைக் குழிமேல் வைத்துக்கொண்டு, “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் குழிக்கையை வெறுங்கை என்று கருதிக்கொண்டு, “போதும்” என்பான்; உடனே தள்ளுகிறவன் தன் கோலியைக் குழிக்குள் இட்டுவிட்டுத் தன் கையை எடுத்துவிடுவான்; அடித்தவன் ஏமாறிப் போவான்; தள்ளினவன் கெலித்துவிடுமான். இதற்கு <b>மீன் பிடித்தல்</b> என்று பெயர்.
தள்ளுகிறவன் மீன் பிடிக்கலாமா பிடிக்கக் கூடாதா என்பது, முட்டி தள்ளு முன்னரே முடிவு செய்யப்பெறும்.<noinclude></noinclude>
934ys6aro53l1w1ze8q2qtnk5u6c74b
1837921
1837920
2025-07-01T15:08:26Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ {| style="margin:auto;"
1837921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{rh|பகுதி]|கோலி|13}}</noinclude>{| style="margin:auto;"
|-
|முதன்முறை || || 3 அடி || || 3 தள்ளு
|-
|2 ஆம் முறை|| ||2 அடி|| || 2 தள்ளு
|-
|3 ஆம் முறை|| ||1 அடி|| ||1 தள்ளு
|-
|4 ஆம் முறை|| ||1 அடி|| ||3 தள்ளு
|-
|}
முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குட் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், கீழ்வருமாறு ஒரு வலக்காரத்தைக் கையாள்வதுண்டு. அவனது கோலி அடிக்க முடியாத தொலைவிலிருக்கும்போது, அடிக்கிறவன் தனக்கு வசதியுண்டாகுமாறு மேலுஞ் சற்றுத் தள்ளச் சொல்வான். அப்போது தள்ளுகிறவன், அடிக்கிறவனுக்குத் தெரியாதவாறு தன் கோலியை ஒரு கைக்குளிட்டு மறைத்து இரு கைகளையும் முட்டியாக வைத்துக்கொண்டு, அவற்றுள் ஒன்றைச் சற்று முன்னாக எடுத்து வைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் இன்னொரு முட்டிக் கையை முந்தினதினும் சற்று முன்பாக எடுத்துவைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் மீண்டும் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் மீண்டும் பின்னாக இருக்கும் கையை முன்னாக எடுத்து வைப்பான். அடிக்கிறவன் கோலிக் கை எதுவென்றும் வெறுங்கை எதுவென்றும் நெரியாமல், “போதாது,” “போதாது” என்று மேலும் மேலும் சொல்லச் சொல்லத், தள்ளுகிறவன் தன் இரு கைகளையும் மாறி மாறி முன்னாக எடுத்து வைத்து, இறுதியில் கோலிக்கையைக் குழிமேல் வைத்துக்கொண்டு, “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் குழிக்கையை வெறுங்கை என்று கருதிக்கொண்டு, “போதும்” என்பான்; உடனே தள்ளுகிறவன் தன் கோலியைக் குழிக்குள் இட்டுவிட்டுத் தன் கையை எடுத்துவிடுவான்; அடித்தவன் ஏமாறிப் போவான்; தள்ளினவன் கெலித்துவிடுமான். இதற்கு <b>மீன் பிடித்தல்</b> என்று பெயர்.
தள்ளுகிறவன் மீன் பிடிக்கலாமா பிடிக்கக் கூடாதா என்பது, முட்டி தள்ளு முன்னரே முடிவு செய்யப்பெறும்.<noinclude></noinclude>
mf95dxjk2bfx46910bmd5rd5t697txf
1837925
1837921
2025-07-01T15:12:13Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1837925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{rh|பகுதி]|கோலி|13}}</noinclude>
{{dhr|3em}}
{| style="margin:auto;"
|-
|முதன்முறை || {{gap}} || 3 அடி || {{gap}}|| 3 தள்ளு
|-
|2 ஆம் முறை|| ||2 அடி|| || 2 தள்ளு
|-
|3 ஆம் முறை|| ||1 அடி|| ||1 தள்ளு
|-
|4 ஆம் முறை|| ||1 அடி|| ||3 தள்ளு
|-
|}
முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குட் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், கீழ்வருமாறு ஒரு வலக்காரத்தைக் கையாள்வதுண்டு. அவனது கோலி அடிக்க முடியாத தொலைவிலிருக்கும்போது, அடிக்கிறவன் தனக்கு வசதியுண்டாகுமாறு மேலுஞ் சற்றுத் தள்ளச் சொல்வான். அப்போது தள்ளுகிறவன், அடிக்கிறவனுக்குத் தெரியாதவாறு தன் கோலியை ஒரு கைக்குளிட்டு மறைத்து இரு கைகளையும் முட்டியாக வைத்துக்கொண்டு, அவற்றுள் ஒன்றைச் சற்று முன்னாக எடுத்து வைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் இன்னொரு முட்டிக் கையை முந்தினதினும் சற்று முன்பாக எடுத்துவைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் மீண்டும் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் மீண்டும் பின்னாக இருக்கும் கையை முன்னாக எடுத்து வைப்பான். அடிக்கிறவன் கோலிக் கை எதுவென்றும் வெறுங்கை எதுவென்றும் நெரியாமல், “போதாது,” “போதாது” என்று மேலும் மேலும் சொல்லச் சொல்லத், தள்ளுகிறவன் தன் இரு கைகளையும் மாறி மாறி முன்னாக எடுத்து வைத்து, இறுதியில் கோலிக்கையைக் குழிமேல் வைத்துக்கொண்டு, “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் குழிக்கையை வெறுங்கை என்று கருதிக்கொண்டு, “போதும்” என்பான்; உடனே தள்ளுகிறவன் தன் கோலியைக் குழிக்குள் இட்டுவிட்டுத் தன் கையை எடுத்துவிடுவான்; அடித்தவன் ஏமாறிப் போவான்; தள்ளினவன் கெலித்துவிடுமான். இதற்கு <b>மீன் பிடித்தல்</b> என்று பெயர்.
தள்ளுகிறவன் மீன் பிடிக்கலாமா பிடிக்கக் கூடாதா என்பது, முட்டி தள்ளு முன்னரே முடிவு செய்யப்பெறும்.<noinclude></noinclude>
rd651d25nutbvomv856oh39zl9gu7j6
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/62
250
619462
1837984
1835616
2025-07-02T02:49:50Z
Info-farmer
232
<b></b>
1837984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|50|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[ஆண்பாற்}}</noinclude>திருப்பது. இதைக் கண்டவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இது அருமையாய் வாய்ப்பதெனினும் எளிதாகவும் ஏராளமாகவும் கிடைப்பதால், திடுமென ஓர் இரவலன் பெற்ற பெரும் பரிசிற்காவது எதிர்பாராது கிட்டிய பெருவருமானத்திற்காவது இதை உவமை கூறுவது வழக்கம். இதனால் ‘கிளியீடு வாய்த்தாற் போல’ என்னும் உவமைப் பழமொழியும் எழுந்தது. இப் பழமொழிக் கருத்தை யமைத்தே,
<poem>::“ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
::<b>கிளிமரீஇய வியன்புனத்து</b>
::<b>மரனணி பெருங்குரல் அனையன்</b> ஆதலின்
::நின்னை வருதல் அறிந்தனர் யாரே”</poem>
{{float_right|(புறம்:133)}}
என்று <b>மருத னிளநாகனூர், நாஞ்சில் வள்ளுவனை</b>ப் பாடினார்.
பாரியின் பறம்புமலை மூவேந்தரால் முற்றுகையிடப் பட்டிருந்தபோது, <b>கபிலர்</b> பல கிளிகளைப் பழக்கி அவற்றால். மலையடிவாரத்துக் கழனிகளிலுள்ள நெற்கதிர்களைக் கொணர்வித்து அவற்றைக்கொண்டு நொச்சிமக்களை உண்பித்தனர் என்றொரு செய்தி வழங்கி வருகின்றது.
கிளிகள் சில சமயங்களில் வெட்டுக்கிளிகள் போலப் பன்னூற்றுக் கணக்கினவாய்ப் படலம் படலமாய் விளை புலங்களில் வந்து விழுந்து கதிர்களை யெல்லாம் கொய்து தாமே அறுவடை செய்துவிடுவதுண்டு. இதனாலேயே,
<poem>::“விட்டில் <b>கிளி</b>நால்வாய் தன்னரசு வேற்றரசு
::நட்டம் கடும்புனல்கால் எட்டு”</poem>
என்று நாட்டுக்குக் கேட்டை விளைப்பவற்றுள் கிளியையும் ஒன்றாகக் கூறினர் முன்னோர்.
விளைபுலங்களில் வந்து விழும் பறவைகளுள் பெருங்கேட்டை விளைப்பது கிளியாதலின், விளைபுலத்திற் பறவை யோட்டுதலுக்குக் கிளி கடிதல் அல்லது கிளியோப்புதல் என்றும், அதனை ஓட்டுங் கருவிக்குக் கிளிகடி கருவி அல்லது கிளிகடி கோல் என்றும் பெயர்.
{{nop}}<noinclude></noinclude>
nmyyrf7h529uqlc8ghl2017b7lh2kq6
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/6
250
619542
1837898
1835177
2025-07-01T14:41:27Z
AjayAjayy
15166
1837898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|அ|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{Right|பக்கம்}}
௬. பம்பரம் 35
I. ஓயாக்கட்டை ❠
ii. உடைத்த கட்டை ❠
III. பம்பரக்குத்து 36
IV. இருவட்டக்குத்து 37
V. தலையாரி 38
க0. பட்டம் 39
(2) இரவாட்டு 40
௧. குதிரைக்குக் காணங் கட்டல் ❠
௨. வண்ணான் தாழி 43
௩. ‘சூ’ விளையாட்டு 46
(க) பாண்டிய நாட்டுமுறை ❠
(உ) சோழ நாட்டுமுறை ❠
(3) இருபொழுதாட்டு 49
க. கிளித்தட்டு ❠
௨. பாரிக்கோடு 54
I. காலாளம்பாரி ❠
II. எட்டாளம்பாரி ❠
௩. அணிற்பிள்ளை 55
௪. சடுகுடு 57
௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை 61
௬. பூக்குதிரை 62
௭. பச்சைக்குதிரை 63
I. ஒருவகை ❠
II. மற்றொருவகை ❠
௮. குதிரைச் சில்லி 64<noinclude></noinclude>
i1o3cv2dsdaysjs6tmyq1vkvdsahtcf
1837900
1837898
2025-07-01T14:45:15Z
AjayAjayy
15166
1837900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{Right|பக்கம்}}
௬. பம்பரம் 35
I. ஓயாக்கட்டை ❠
ii. உடைத்த கட்டை ❠
III. பம்பரக்குத்து 36
IV. இருவட்டக்குத்து 37
V. தலையாரி 38
க0. பட்டம் 39
(2) இரவாட்டு 40
௧. குதிரைக்குக் காணங் கட்டல் ❠
௨. வண்ணான் தாழி 43
௩. ‘சூ’ விளையாட்டு 46
(க) பாண்டிய நாட்டுமுறை ❠
(உ) சோழ நாட்டுமுறை ❠
(3) இருபொழுதாட்டு 49
க. கிளித்தட்டு ❠
௨. பாரிக்கோடு 54
I. காலாளம்பாரி ❠
II. எட்டாளம்பாரி ❠
௩. அணிற்பிள்ளை 55
௪. சடுகுடு 57
௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை 61
௬. பூக்குதிரை 62
௭. பச்சைக்குதிரை 63
I. ஒருவகை ❠
II. மற்றொருவகை ❠
௮. குதிரைச் சில்லி 64<noinclude></noinclude>
mwxb8j8muva2na1wvpk5yrubwdlx36c
1837918
1837900
2025-07-01T15:01:45Z
AjayAjayy
15166
1837918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{dhr}}
{{Right|பக்கம்}}
௬. பம்பரம் 35
I. ஓயாக்கட்டை ❠
ii. உடைத்த கட்டை ❠
III. பம்பரக்குத்து 36
IV. இருவட்டக்குத்து 37
V. தலையாரி 38
க0. பட்டம் 39
(2) இரவாட்டு 40
௧. குதிரைக்குக் காணங் கட்டல் ❠
௨. வண்ணான் தாழி 43
௩. ‘சூ’ விளையாட்டு 46
(க) பாண்டிய நாட்டுமுறை ❠
(உ) சோழ நாட்டுமுறை ❠
(3) இருபொழுதாட்டு 49
க. கிளித்தட்டு ❠
௨. பாரிக்கோடு 54
I. காலாளம்பாரி ❠
II. எட்டாளம்பாரி ❠
௩. அணிற்பிள்ளை 55
௪. சடுகுடு 57
௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை 61
௬. பூக்குதிரை 62
௭. பச்சைக்குதிரை 63
I. ஒருவகை ❠
II. மற்றொருவகை ❠
௮. குதிரைச் சில்லி 64<noinclude></noinclude>
qx323yazjy11u22cfa1u256umqny101
1837979
1837918
2025-07-02T02:45:06Z
Booradleyp1
1964
1837979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>௬. பம்பரம் 35
I. ஓயாக்கட்டை ❠
ii. உடைத்த கட்டை ❠
III. பம்பரக்குத்து 36
IV. இருவட்டக்குத்து 37
V. தலையாரி 38
க0. பட்டம் 39
(2) இரவாட்டு 40
௧. குதிரைக்குக் காணங் கட்டல் ❠
௨. வண்ணான் தாழி 43
௩. ‘சூ’ விளையாட்டு 46
(க) பாண்டிய நாட்டுமுறை ❠
(உ) சோழ நாட்டுமுறை ❠
(3) இருபொழுதாட்டு 49
க. கிளித்தட்டு ❠
௨. பாரிக்கோடு 54
I. காலாளம்பாரி ❠
II. எட்டாளம்பாரி ❠
௩. அணிற்பிள்ளை 55
௪. சடுகுடு 57
௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை 61
௬. பூக்குதிரை 62
௭. பச்சைக்குதிரை 63
I. ஒருவகை ❠
II. மற்றொருவகை ❠
௮. குதிரைச் சில்லி 64<noinclude></noinclude>
q866ow8va27vpojgkxi1w447ux5cqc5
1837987
1837979
2025-07-02T02:51:19Z
Booradleyp1
1964
1837987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>௬. பம்பரம் 35
I. ஓயாக்கட்டை ❠
ii. உடைத்த கட்டை ❠
III. பம்பரக்குத்து 36
IV. இருவட்டக்குத்து 37
V. தலையாரி 38
க0. பட்டம் 39
(2) இரவாட்டு 40
௧. குதிரைக்குக் காணங் கட்டல் ❠
௨. வண்ணான் தாழி 43
௩. ‘சூ’ விளையாட்டு 46
(க) பாண்டிய நாட்டுமுறை ❠
(உ) சோழ நாட்டுமுறை ❠
(3) இருபொழுதாட்டு 49
க. கிளித்தட்டு ❠
௨. பாரிக்கோடு 54
I. காலாளம்பாரி ❠
II. எட்டாளம்பாரி ❠
௩. அணிற்பிள்ளை 55
௪. சடுகுடு 57
௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை 61
௬. பூக்குதிரை 62
௭. பச்சைக்குதிரை 63
I. ஒருவகை ❠
II. மற்றொருவகை ❠
௮. குதிரைச் சில்லி 64
{{nop}}<noinclude></noinclude>
tejjhi7v6ueg1l9aoop5ye1cg0hlm8b
1838001
1837987
2025-07-02T03:00:36Z
Booradleyp1
1964
/* மேம்படுத்த வேண்டியவை */
1838001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>௬. பம்பரம் 35
I. ஓயாக்கட்டை ❠
ii. உடைத்த கட்டை ❠
III. பம்பரக்குத்து 36
IV. இருவட்டக்குத்து 37
V. தலையாரி 38
க0. பட்டம் 39
(2) இரவாட்டு 40
௧. குதிரைக்குக் காணங் கட்டல் ❠
௨. வண்ணான் தாழி 43
௩. ‘சூ’ விளையாட்டு 46
(க) பாண்டிய நாட்டுமுறை ❠
(உ) சோழ நாட்டுமுறை ❠
(3) இருபொழுதாட்டு 49
க. கிளித்தட்டு ❠
௨. பாரிக்கோடு 54
I. காலாளம்பாரி ❠
II. எட்டாளம்பாரி ❠
௩. அணிற்பிள்ளை 55
௪. சடுகுடு 57
௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை 61
௬. பூக்குதிரை 62
௭. பச்சைக்குதிரை 63
I. ஒருவகை ❠
II. மற்றொருவகை ❠
௮. குதிரைச் சில்லி 64
{{nop}}<noinclude></noinclude>
gxssvbzl0rgdam5irrz0z7atcy80nvt
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/7
250
619543
1837907
1835178
2025-07-01T14:52:09Z
AjayAjayy
15166
1837907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude>{{dhr}}
{{Right|பக்கம்}}
<b>2. பெண்பாற் பகுதி:</b> 65
(1) பகலாட்டு ❠
௧. தட்டாங்கல் ❠
I. மூன்றாங்கல் ❠
II. ஐந்தாங்கல் (இருவகை) 66
III. ஏழாங்கல் (இருவகை) 69
IV. பலநாலொருகல் 73
V. பன்னிருகல் 74
VI. பலகல் 75
VII. பதினாறாங்கள் ❠
௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம் 76
௩. குறிஞ்சி (குஞ்சி) 79
(2) இரவாட்டு 80
௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ ❠
௨. நிலாக் குப்பல் 82
௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல் 84
(3) இருபொழுதாட்டு 86
௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ ❠
௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’ 89
௩. ஊதாமணி 90
௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’ 91
௫. தண்ணீர் சேந்துகிறது 92
<b>3. இருபாற் பகுதி :</b> 93
(1) பகலாட்டு ❠
௧. பண்ணாங்குழி ❠<noinclude></noinclude>
cfazkzm80wqdiqhl1pugo1r5idsnyck
1837980
1837907
2025-07-02T02:45:32Z
Booradleyp1
1964
1837980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude><b>2. பெண்பாற் பகுதி:</b> 65
(1) பகலாட்டு ❠
௧. தட்டாங்கல் ❠
I. மூன்றாங்கல் ❠
II. ஐந்தாங்கல் (இருவகை) 66
III. ஏழாங்கல் (இருவகை) 69
IV. பலநாலொருகல் 73
V. பன்னிருகல் 74
VI. பலகல் 75
VII. பதினாறாங்கள் ❠
௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம் 76
௩. குறிஞ்சி (குஞ்சி) 79
(2) இரவாட்டு 80
௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ ❠
௨. நிலாக் குப்பல் 82
௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல் 84
(3) இருபொழுதாட்டு 86
௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ ❠
௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’ 89
௩. ஊதாமணி 90
௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’ 91
௫. தண்ணீர் சேந்துகிறது 92
<b>3. இருபாற் பகுதி :</b> 93
(1) பகலாட்டு ❠
௧. பண்ணாங்குழி ❠<noinclude></noinclude>
dcct5lz7ezn1qt3welpdwyum26ey635
1837985
1837980
2025-07-02T02:50:08Z
Booradleyp1
1964
1837985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude>{{larger|<b>2. பெண்பாற் பகுதி:</b>}} 65
(1) பகலாட்டு ❠
௧. தட்டாங்கல் ❠
I. மூன்றாங்கல் ❠
II. ஐந்தாங்கல் (இருவகை) 66
III. ஏழாங்கல் (இருவகை) 69
IV. பலநாலொருகல் 73
V. பன்னிருகல் 74
VI. பலகல் 75
VII. பதினாறாங்கள் ❠
௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம் 76
௩. குறிஞ்சி (குஞ்சி) 79
(2) இரவாட்டு 80
௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ ❠
௨. நிலாக் குப்பல் 82
௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல் 84
(3) இருபொழுதாட்டு 86
௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ ❠
௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’ 89
௩. ஊதாமணி 90
௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’ 91
௫. தண்ணீர் சேந்துகிறது 92
<b>3. இருபாற் பகுதி :</b> 93
(1) பகலாட்டு ❠
௧. பண்ணாங்குழி ❠<noinclude></noinclude>
g5ieax6j0yjwpjaqxnjosacadihhfox
1837991
1837985
2025-07-02T02:54:50Z
Booradleyp1
1964
1837991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude><b>2. பெண்பாற் பகுதி:</b> 65
(1) பகலாட்டு ❠
௧. தட்டாங்கல் ❠
I. மூன்றாங்கல் ❠
II. ஐந்தாங்கல் (இருவகை) 66
III. ஏழாங்கல் (இருவகை) 69
IV. பலநாலொருகல் 73
V. பன்னிருகல் 74
VI. பலகல் 75
VII. பதினாறாங்கள் ❠
௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம் 76
௩. குறிஞ்சி (குஞ்சி) 79
(2) இரவாட்டு 80
௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ ❠
௨. நிலாக் குப்பல் 82
௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல் 84
(3) இருபொழுதாட்டு 86
௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ ❠
௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’ 89
௩. ஊதாமணி 90
௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’ 91
௫. தண்ணீர் சேந்துகிறது 92
<b>3. இருபாற் பகுதி :</b> 93
(1) பகலாட்டு ❠
௧. பண்ணாங்குழி ❠<noinclude></noinclude>
dcct5lz7ezn1qt3welpdwyum26ey635
1838004
1837991
2025-07-02T03:01:55Z
Booradleyp1
1964
/* மேம்படுத்த வேண்டியவை */
1838004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude><b>2. பெண்பாற் பகுதி:</b> 65
(1) பகலாட்டு ❠
௧. தட்டாங்கல் ❠
I. மூன்றாங்கல் ❠
II. ஐந்தாங்கல் (இருவகை) 66
III. ஏழாங்கல் (இருவகை) 69
IV. பலநாலொருகல் 73
V. பன்னிருகல் 74
VI. பலகல் 75
VII. பதினாறாங்கல் ❠
௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம் 76
௩. குறிஞ்சி (குஞ்சி) 79
(2) இரவாட்டு 80
௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ ❠
௨. நிலாக் குப்பல் 82
௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல் 84
(3) இருபொழுதாட்டு 86
௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ ❠
௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’ 89
௩. ஊதாமணி 90
௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’ 91
௫. தண்ணீர் சேந்துகிறது 92
<b>3. இருபாற் பகுதி :</b> 93
(1) பகலாட்டு ❠
௧. பண்ணாங்குழி ❠<noinclude></noinclude>
m2cgay8n16yhaadhoddmsxx2v3jvxka
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/8
250
619544
1837915
1835179
2025-07-01T15:00:38Z
AjayAjayy
15166
1837915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{dhr}}
{{Right|பக்கம்}}
I. பொதுவகை 93
II. கட்டுக்கட்டல் 96
II. அரசனும் மந்திரியும் சேவகனும் 97
IV. அசோகவனத்தாட்டம் 99
௨. பாண்டி 101
(க) பாண்டிநாட்டு முறை
(௨) சோழ கொங்குநாட்டு முறை 104
I. ஒற்றைச் சில்லி
II. இரட்டைச் சில்லி<br>(மூன்றுவகைகள்) 107
III. வானூர்திச் சில்லி 109
IV. வட்டச் சில்லி 111
V. காலிப்பட்டச் சில்லி 112
VI. கைச் சில்வி 114
௩. கம்ப விளையாட்டு 115
௪. கச்சக்காய்ச் சில்லி 116
௫. குஞ்சு 117
(2) இரவாட்டு 118
௧. கண்ணாம்பொத்தி ❠
௨. புகையிலைக் கட்டையுருட்டல் 120
௩. புகையிலைக் கட்டையெடுத்தல் 121
௪. பூச்சி 122
௫. அரசனுந் தோட்டமும் 123
௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’ 124
(3) இருபொழுதாட்டு 125
௧. கொண்டி ❠
௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ 127<noinclude></noinclude>
o8rwekwcxm2ebrariob62k3rpbyoa1t
1837981
1837915
2025-07-02T02:46:07Z
Booradleyp1
1964
1837981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>I. பொதுவகை 93
II. கட்டுக்கட்டல் 96
II. அரசனும் மந்திரியும் சேவகனும் 97
IV. அசோகவனத்தாட்டம் 99
௨. பாண்டி 101
(க) பாண்டிநாட்டு முறை
(௨) சோழ கொங்குநாட்டு முறை 104
I. ஒற்றைச் சில்லி
II. இரட்டைச் சில்லி<br>(மூன்றுவகைகள்) 107
III. வானூர்திச் சில்லி 109
IV. வட்டச் சில்லி 111
V. காலிப்பட்டச் சில்லி 112
VI. கைச் சில்வி 114
௩. கம்ப விளையாட்டு 115
௪. கச்சக்காய்ச் சில்லி 116
௫. குஞ்சு 117
(2) இரவாட்டு 118
௧. கண்ணாம்பொத்தி ❠
௨. புகையிலைக் கட்டையுருட்டல் 120
௩. புகையிலைக் கட்டையெடுத்தல் 121
௪. பூச்சி 122
௫. அரசனுந் தோட்டமும் 123
௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’ 124
(3) இருபொழுதாட்டு 125
௧. கொண்டி ❠
௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ 127<noinclude></noinclude>
rz00ol814wczmmbo7navcznkfzc9w79
1837994
1837981
2025-07-02T02:56:45Z
Booradleyp1
1964
/* மேம்படுத்த வேண்டியவை */
1837994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>I. பொதுவகை 93
II. கட்டுக்கட்டல் 96
II. அரசனும் மந்திரியும் சேவகனும் 97
IV. அசோகவனத்தாட்டம் 99
௨. பாண்டி 101
(க) பாண்டிநாட்டு முறை
(௨) சோழ கொங்குநாட்டு முறை 104
I. ஒற்றைச் சில்லி
II. இரட்டைச் சில்லி<br>(மூன்றுவகைகள்) 107
III. வானூர்திச் சில்லி 109
IV. வட்டச் சில்லி 111
V. காலிப்பட்டச் சில்லி 112
VI. கைச் சில்லி 114
௩. கம்ப விளையாட்டு 115
௪. கச்சக்காய்ச் சில்லி 116
௫. குஞ்சு 117
(2) இரவாட்டு 118
௧. கண்ணாம்பொத்தி ❠
௨. புகையிலைக் கட்டையுருட்டல் 120
௩. புகையிலைக் கட்டையெடுத்தல் 121
௪. பூச்சி 122
௫. அரசனுந் தோட்டமும் 123
௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’ 124
(3) இருபொழுதாட்டு 125
௧. கொண்டி ❠
௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ 127<noinclude></noinclude>
rufg4m4o3hs4a7s71odnj9vqbkdvktv
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/9
250
619545
1837932
1835180
2025-07-01T15:19:49Z
AjayAjayy
15166
1837932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude>{{dhr}}
{{Right|பக்கம்}}
௩. பருப்புச்சட்டி 128
௪. மோதிரம் வைத்தல் 129
௫. புலியும் ஆடும் 130
௬. ‘இதென்ன மூட்டை?’ 131
௭. கும்மி 133
{{c|II. குழந்தைப் பக்கம்}}
{{rule|10em|align=}}
இருபொழுதாட்டு 134
௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ ❠
௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’ 135
{{c|III. பெரியோர் பக்கம்}}
{{rule|10em|align=}}
<b>1.ஆண்பாற் பகுதி :</b> 136
(1) பகலாட்டு ❠
தாயம் ❠
(2) இரவாட்டு ❠
கழியல் ❠
(3) இருபொழுதாட்டு 137
முக்குழியாட்டம் ❠
<b>2. பெண்பாற் பகுதி :</b> 138
(1) பகலாட்டு ❠
க. பண்ணாங்குழி ❠
௨. தாயம் ❠<noinclude></noinclude>
7efk5mbt78y8gchn1enet9m1giotzyg
1837982
1837932
2025-07-02T02:46:29Z
Booradleyp1
1964
1837982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude>௩. பருப்புச்சட்டி 128
௪. மோதிரம் வைத்தல் 129
௫. புலியும் ஆடும் 130
௬. ‘இதென்ன மூட்டை?’ 131
௭. கும்மி 133
{{c|II. குழந்தைப் பக்கம்}}
{{rule|10em|align=}}
இருபொழுதாட்டு 134
௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ ❠
௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’ 135
{{c|III. பெரியோர் பக்கம்}}
{{rule|10em|align=}}
<b>1.ஆண்பாற் பகுதி :</b> 136
(1) பகலாட்டு ❠
தாயம் ❠
(2) இரவாட்டு ❠
கழியல் ❠
(3) இருபொழுதாட்டு 137
முக்குழியாட்டம் ❠
<b>2. பெண்பாற் பகுதி :</b> 138
(1) பகலாட்டு ❠
க. பண்ணாங்குழி ❠
௨. தாயம் ❠<noinclude></noinclude>
t6pajuzyob8egn2mnlfp8rqjzhma0nt
1837996
1837982
2025-07-02T02:58:55Z
Booradleyp1
1964
/* மேம்படுத்த வேண்டியவை */
1837996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude>௩. பருப்புச்சட்டி 128
௪. மோதிரம் வைத்தல் 129
௫. புலியும் ஆடும் 130
௬. ‘இதென்ன மூட்டை?’ 131
௭. கும்மி 133
{{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}}
இருபொழுதாட்டு 134
௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ ❠
௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’ 135
{{c|III. பெரியோர் பக்கம்{{rule|10em|align=}}}}
<b>1.ஆண்பாற் பகுதி :</b> 136
(1) பகலாட்டு ❠
தாயம் ❠
(2) இரவாட்டு ❠
கழியல் ❠
(3) இருபொழுதாட்டு 137
முக்குழியாட்டம் ❠
<b>2. பெண்பாற் பகுதி :</b> 138
(1) பகலாட்டு ❠
க. பண்ணாங்குழி ❠
௨. தாயம் ❠<noinclude></noinclude>
aebhapa49po3f4hzs38clvv7bsb1shw
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/10
250
619546
1837935
1835181
2025-07-01T15:24:28Z
AjayAjayy
15166
1837935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{dhr}}
{{Right|பக்கம்}}
(2) இருபொழுதாட்டு 138
கும்மி ❠
<b>பின்னிணைப்பு :</b>
I. வழக்கற்ற விளையாட்டுக்கள் 139
1. அறியப்பட்டவை
(1) ஆண்பாற் பகுதி ❠
வட்டு ❠
(2) பெண்பாற் பகுதி ❠
பலபந்து ❠
௨. அம்மானை ❠
௩. குரவை ❠
2. அறியப்படாதவை
II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள் 141
கோழிக் குஞ்சு—1 ❠
கோழிக் குஞ்சு—2 ❠
III. பண்டை விளையாட்டு விழாக்கள் 143
(1) புனல் விளையாட்டு ❠
(2) பொழில் விளையாட்டு 144
{{dhr|3em}}
{{rule|10em|align=}}
{{dhr|2em}}
{{nop}}<noinclude></noinclude>
eyginyydjvhl44he9gjqh2mv2g4qinz
1837983
1837935
2025-07-02T02:47:02Z
Booradleyp1
1964
1837983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>(2) இருபொழுதாட்டு 138
கும்மி ❠
<b>பின்னிணைப்பு :</b>
I. வழக்கற்ற விளையாட்டுக்கள் 139
1. அறியப்பட்டவை
(1) ஆண்பாற் பகுதி ❠
வட்டு ❠
(2) பெண்பாற் பகுதி ❠
பலபந்து ❠
௨. அம்மானை ❠
௩. குரவை ❠
2. அறியப்படாதவை
II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள் 141
கோழிக் குஞ்சு—1 ❠
கோழிக் குஞ்சு—2 ❠
III. பண்டை விளையாட்டு விழாக்கள் 143
(1) புனல் விளையாட்டு ❠
(2) பொழில் விளையாட்டு 144
{{dhr|3em}}
{{rule|10em|align=}}
{{dhr|2em}}
{{nop}}<noinclude></noinclude>
c40t2qbrjooz7ode0rchtbje6im2fiq
1837998
1837983
2025-07-02T02:59:37Z
Booradleyp1
1964
/* மேம்படுத்த வேண்டியவை */
1837998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>(2) இருபொழுதாட்டு 138
கும்மி ❠
<b>பின்னிணைப்பு :</b>
I. வழக்கற்ற விளையாட்டுக்கள் 139
1. அறியப்பட்டவை
(1) ஆண்பாற் பகுதி ❠
வட்டு ❠
(2) பெண்பாற் பகுதி ❠
பலபந்து ❠
௨. அம்மானை ❠
௩. குரவை ❠
2. அறியப்படாதவை
II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள் 141
கோழிக் குஞ்சு—1 ❠
கோழிக் குஞ்சு—2 ❠
III. பண்டை விளையாட்டு விழாக்கள் 143
(1) புனல் விளையாட்டு ❠
(2) பொழில் விளையாட்டு 144
{{dhr|3em}}
{{rule|10em|align=}}
{{dhr|2em}}
{{nop}}<noinclude></noinclude>
2fnqhl0i6wwd6adehj5uv8dlfyy1ga6
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/65
250
619587
1837988
1835624
2025-07-02T02:51:43Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1837988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பகுதி]|கிளித்தட்டு|53}}</noinclude>ஓடிவிட்டதைக் ‘கிளி போய்விட்டது’ என்னும் மரபுத் தொடராற் குறிப்பர்.
{{larger|சோழநாட்டு முறை}} : சோழநாட்டில், இறங்கின கட்சியாருள் ஒருவன் ஒருமுறை கிளிக்குத் தப்பி ஓடினவுடன் ஆட்டை முடிந்துவிடாது. அங்ஙனம் ஓடினவன் குறித்த எல்லையிற் குவித்துவைத்திருக்கும் மண்ணிற் சிறிது ஒரு கையில் அள்ளிக்கொண்டு, மீண்டும் அரங்கிற்குட் புகுந்து, முன்பின்னாகத் திசைமாறித் தட்டுக்கட்டி நிற்கும் எதிர்க்கட்சியார் எல்லார்க்குந் தப்பித், தான் முதலிற் புகுந்த வழியாய் வெளியேறிவிட வேண்டும். அல்லாக்கால் தோல்வியாம்.
{{larger|விளையாட்டு விளக்கம்}} : கிளித்தட்டு விளைபுலம்; கிளித்தட்டின் வரப்பு தவணை தட்டு பாத்தி என்பவை விளைபுலத்தின் வரப்பு தவணை தட்டு பாத்தி என்பவையாம். இறங்குபவர் கிளிகள்; மறிப்பவர் உழவர். இறங்குபவர் வெளியேற முயலுதல் கிளிகள் தாம் கொய்த கதிர்களைக் கௌவிக்கொண்டு பறந்துபோதல். மறிப்பவர் தடுத்தல் அக் கிளிகளைத் துரத்துதலும் அவை கௌவிச்செல்லும் கதிர்களைக் கவர்தலும். கிளி ஓடிப்போதல் கொய்த கதிரைக் கௌவிக்கொண்டு கிளிகள் எட்டாத
உயரத்தில் பறந்துவிடுதல்.
விளையாட்டிற்கேற்பச் சில செய்திகள் மாற்றவும் கூட்டவும் பட்டுள்ளன.
{{larger|விளையாட்டின் பயன்}} :
::௧. பகைவருக்குப் பிடிகொடாமல் தப்பப் பழகுதல்.
::௨. பகைவனையும் திருடனையும் ஓடும்போது படைக் காலத்தால் தாக்கப் பயிலுதல்.
::௩. வேகமாய் ஓடுந்திறனை அடைதல்.
::௪. கிளிகளால் விளையுளுக்குக் கேடு வராதவா முன்விழிப்பாக இருத்தல்.
{{dhr|2em}}
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
a89oras2zc5rn2oq9urs57ibrb2whz7
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/66
250
619589
1837990
1835970
2025-07-02T02:54:22Z
Info-farmer
232
{{larger|}}
1837990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>௨. பாரிக் கோடு <br>I. நாலாளம் பாரி</b>}}}}
{{larger|ஆடுகருவி}} : ஏறத்தாழ நாற்கசச் சதுரமான ஓர் அரங்கு கீறப்படும்.
{{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட எண்மர் வேண்டும்.
{{larger|ஆடிடம்}} : இது பொட்டலிலும் அகன்ற முற்றத்திலும் ஆடப்பெறும்.
{{larger|ஆடு முறை}} : நந்நான்கு பேருள்ள இருகட்சி அமைக்கப்படும். உடன்பாட்டின்படியோ, திருவுளச்சீட்டின்படியோ, பிறவகைத் தேர்தற்படியோ, ஒரு கட்சியார் அரங்கிற்குள் நிற்க, இன்னொரு கட்சியார் பக்கத்திற்கொருவராகக் கோட்டின் மேல் நின்றுகொள்வர். உள்நிற்பார் கோட்டின்மேல் நிற்பாரால் தொடப்படாமல் வெளியேற வேண்டும். அங்ஙனம் ஒருவன் வெளியேறிவிடினும், உள் நிற்பார்க்கு வெற்றியாய் ஆட்டை முடிந்துவிடும். முதலில் வெளியேறுபவன் கோட்டின்மேல் நிற்பாருள் ஒருவனால் தொடப்பட்டுவிடின், மறிப்பார்க்கு (அதாவது கோட்டின் மேல் நிற்பார்க்கு) வெற்றியாய் ஆட்டை முடியும். அதன்பின், மறிப்பார் உள்நிற்பாராகவும் உள்நிற்பார் மறிப்பாராகவும் மாறவேண்டும்.
{{center|{{larger|<b>II. எட்டாளம் பாரி</b>}}}}
இது எண் கசச் சதுரங் கீறிப் பதினறுவரால் ஆடப்படும். எண்மர் உள்நிற்க, எண்மர் பக்கத்திற் கிருவராகக் கோட்டின்மேல் நின்று மறிப்பர். நாலாளம் பாரியும் எட்டாளம் பாரியும் ஆடுமுறை யொன்றே.
{{rule|5em|align=}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
08fwbcgx7wgztfszp2wc09mn9f4gv9q
1837992
1837990
2025-07-02T02:55:29Z
Info-farmer
232
larger
1837992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>௨. பாரிக் கோடு}} <br>{{larger|I. நாலாளம் பாரி</b>}}
}}
{{larger|ஆடுகருவி}} : ஏறத்தாழ நாற்கசச் சதுரமான ஓர் அரங்கு கீறப்படும்.
{{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட எண்மர் வேண்டும்.
{{larger|ஆடிடம்}} : இது பொட்டலிலும் அகன்ற முற்றத்திலும் ஆடப்பெறும்.
{{larger|ஆடு முறை}} : நந்நான்கு பேருள்ள இருகட்சி அமைக்கப்படும். உடன்பாட்டின்படியோ, திருவுளச்சீட்டின்படியோ, பிறவகைத் தேர்தற்படியோ, ஒரு கட்சியார் அரங்கிற்குள் நிற்க, இன்னொரு கட்சியார் பக்கத்திற்கொருவராகக் கோட்டின் மேல் நின்றுகொள்வர். உள்நிற்பார் கோட்டின்மேல் நிற்பாரால் தொடப்படாமல் வெளியேற வேண்டும். அங்ஙனம் ஒருவன் வெளியேறிவிடினும், உள் நிற்பார்க்கு வெற்றியாய் ஆட்டை முடிந்துவிடும். முதலில் வெளியேறுபவன் கோட்டின்மேல் நிற்பாருள் ஒருவனால் தொடப்பட்டுவிடின், மறிப்பார்க்கு (அதாவது கோட்டின் மேல் நிற்பார்க்கு) வெற்றியாய் ஆட்டை முடியும். அதன்பின், மறிப்பார் உள்நிற்பாராகவும் உள்நிற்பார் மறிப்பாராகவும் மாறவேண்டும்.
{{center|{{larger|<b>II. எட்டாளம் பாரி</b>}}}}
இது எண் கசச் சதுரங் கீறிப் பதினறுவரால் ஆடப்படும். எண்மர் உள்நிற்க, எண்மர் பக்கத்திற் கிருவராகக் கோட்டின்மேல் நின்று மறிப்பர். நாலாளம் பாரியும் எட்டாளம் பாரியும் ஆடுமுறை யொன்றே.
{{rule|5em|align=}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
hwrvbw9wjgf7evizl9xsjr4u5oqnyc4
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/73
250
619638
1837999
1835985
2025-07-02T02:59:38Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1837999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>௫. கால் தூக்குகிற கணக்கப் பிள்ளை</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : ஒரு முதலாளியின் காலைத் தூக்கிய கணக்கப் பிள்ளைபோல், ஒருவன் இன்னொருவன் காலைத் தூக்கி ஆடும் ஆட்டு, <b>கால் தூக்குகிற கணக்கப் பிள்ளை</b>யாம்.
{{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட நால்வர் வேண்டும்.
{{larger|ஆடிடம்}} : இது பொட்டலிலும், தெருவிலும் ஆடப்பெறும்.
{{larger|ஆடுமுறை}} : ஒருவன் வலக்கையும் ஒருவன் இடக்கையுமாக இருவர் கை கோத்துக் குடங்கையாகக் கீழே தொங்கவிட்டு முன்னோக்கி நிற்க, மூன்றாமவன் அவ்விருவருள் இடவன் எழுத்தை இடக்கையாலும் வலவன் கழுத்தை வலக்கையாலும் அணைத்துக்கொண்டு, தன் வல முழங்காலை அவருடைய கோத்த குடங்கையில் வைத்தபின், அவனது இட முழங்காலை நாலாமவன் நிலத்தில் ஊன்றாதவாறு இரு கையாலும் தாங்கிப் பிடித்துக்கொள்வான். இந்த நிலையில் மூன்றாமவனைத் தூக்கிக்கொண்டு, முதலிருவரும் நாலாமவனும் அங்கு மிங்கும் இயங்கிக் கொண்டிருப்பர். அங்ஙனம் இயங்கும்போது, முதலிருவரும், “கால் தூக்குகிற கணக்கப் பிள்ளைக்கு மாதம் ஐந்து ரூபா,” என்று மடக்கிக் மடக்கிச் சொல்லிக்கொண்டே செல்வர்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : நோய்ப்பட்ட அல்லது நடக்கவியலாத முதலாளி யொருவர். வீட்டிற்குள் இடம் பெயர வேண்டிய விடத்தும், வெளியே சென்று வண்டியேறிய விடத்தும், அவரைக் கைத்தாங்கலாக இருவர் தாங்கிச்செல்ல, அவருடைய கணக்கப்பிள்ளை அவரது காலொன்றைத் தூக்கிச் சென்றதாகவும், அத் தொண்டுபற்றி அவருக்கு மாதம் ஐந்து ரூபா சம்பளம் கொடுக்கப் பட்டதாகவும், தெரிகின்றது. இச் செய்தியை நடித்துக் காட்டுவதே இவ்விளையாட்டு. பண்டைக் காலத்தில் ஐந்து ரூபா நல்ல சம்பளம் என்றறிதல் வேண்டும்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
o2dl6bg7k2pe1jc7aoe9tkwjz2600wu
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/75
250
619640
1838003
1835987
2025-07-02T03:01:40Z
Info-farmer
232
x-larger
1838003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>௭. பச்சைக் குதிரை</b>}}}}
சிறுவர், குதிரைபோற் குனிந்து விளையாடும் விளையாட்டுக்களுள் ஒன்று <b>பச்சைக் குதிரை</b> ஒரு சிறுவன் குனிந்து நிற்பது ஒரு சிறு குதிரைபோல் தோன்றுவதால், இது இப்பெயர் பெற்றிருக்கலாம். இதில் இருவகையுண்டு.
{{center|{{larger|<b>I. ஒருவகை</b>}}}}
பலர் வரிசையாக இடையிட்டுக் குனிந்துகொண்டு நிற்பர். அவருள் ஒரு கோடியில் இருப்பவன், பிறரையெல்லாந் தாண்டித் தாண்டி மறுகோடியிற்போய்க் குனிந்து நிற்பான். இங்ஙனமே பிறரும் வரிசைப்படி ஒவ்வொருவனாய்த் தாண்டித் தாண்டி மறுகோடியிற் போய் நிற்பர். இவ்வாறு ஆட்டுத் தொடரத் தொடர இடம் பெயர்ந்து கொண்டே யிருப்பர். இந்த ஆட்டு, பல சுவர்களைத் தொடர்ந்து தாண்டுதற்கேற்ற பயிற்சியாகும்.
{{center|{{larger|<b>II. மற்றொரு வகை</b>}}}}
ஏதேனுமொரு தேர்ந்தெடுப்பில் தவறிய சிறுவன் ஒரு காலை நீட்டி உட்கார்ந்திருப்பன். அவனது நீட்டிய காலைப் பிற சிறுவர் ஒவ்வொருவராய்த் தாண்டித் தாண்டிச் செல்வர். அடுத்த முறை அவன் கால்மேற் கால்வைத்து நீட்டியிருப்பான். அதையும் அவ்வாறே தாண்டுவர். அதற்கடுத்த முறை ஒரு கை அதன்மேல் வைத்திருப்பன். பின்பு, முறையே, உட்கார்ந்த நிலையில் தாழக் குனிந்தும், அந்நிலையில் சற்று நிமிர்ந்தும், எழுந்து நின்று தாழக் குனிந்தும், அந்நிலையில் சற்று நிமிர்ந்தும், இவ்வாறு படிப் படியாக உயர்ந்துகொண்டிருப்பன். பிறரும் உடனுடன் தாண்டிக்கொண்டே வருவர். எந்நிலையிலேனும் ஒருவன் தாண்டமுடியாது நின்றால், பின்பு அவன் கீழே உட்கார்ந்து முன்சொன்னவாறு படிப்படியாய் உயர்ந்துகொண்டிருக்க வேண்டும். முன்பு கீழேயிருந்தவன் பின்பு பிறரொடு சேர்ந்து விளையாடுவான். இங்ஙனம் ஆட்டுத் தொடரும். சிறுவர்க்கு இஃதொரு படிமுறை யுயரத் தாண்டற் பயிற்சியாம்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
iwslkx4pymd5kg3ewaqayd696id3r4a
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/76
250
619641
1838006
1835988
2025-07-02T03:02:41Z
Info-farmer
232
x-
1838006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>௮. குதிரைச் சில்லி</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : ஒருவன்மே லொருவன் குதிரையேறிச் சில்லியெறிந்தாடுங் ஆட்டு <b>குதிரைச் சில்லி</b>.
{{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட இருவர் வேண்டும்.
{{larger|ஆடிடம்}} : முற்றத்திலும், தெருவிலும் பிற வெளியிடங்களிலும் இது ஆடப்பெறும்.
{{larger|ஆடுகருவி}} : ஆளுக்கொன்றாக இரு கற்கள் அல்லது ஓடுகளே இதற்குத் தேவை. அவை சில்லியெனப்படும்.
{{larger|ஆடுமுறை}} : இருவர் ஒரு சிறு குழி கில்லி அதனின்று ஐந்தாறு கசத்தொலைவிற் கீறப்பட்ட உத்தியில்நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன்தன் சில்லியை எறிவர். குழிக்குப் பக்கமாக எறிந்தவன் முந்தியாடுவான்.
முந்தியாடுகிறவன் இன்னொருவன் முதுகின்மேல் ஏறிக்கொள்வான். சுமக்கிறவன் தன் சில்லியை முன்னால் சற்றுத் தொலைவிற்கு எறிவான். ஏறியிருப்பவன் அதைத் தன் சில்லியால் அடித்தல் வேண்டும். அடித்துவிடின், மேலிருந்துகொண்டே அடுத்த முறையும் அடிக்கலாம். அடியாவிடின், கீழே இறங்கிவிடல் வேண்டும். அதோடு ஓர் ஆட்டை முடியும். ஒவ்வோர் ஆட்டைக்கும் சில்லி எறிந்து, யார் முந்தியாடுவதென்று துணியப்படும்.
மேலே யிருக்கிறவன், தானே யடிக்காமல், தன்னைச் சுமந்துகொண்டிருக்கிறவனையும் அவன் எறிந்த சில்லியை அடிக்கச் சொல்லாம், அன்று “நீ அடிக்கின்றாயா நானே அடிக்கட்டுமா ?” என்று கேட்பான். சுமக்கிறவன் “நீயே அடி” என்றால், மேலிருக்கிறவன் அடிப்பான்; அன்றி, “நான் அடிக்கிறேன்” என்றால், மேலிருக்கிறவன் சுமக்கிறவனிடம் தன் கில்லியைக் கொடுத்துவிடல் வேண்டும். சுமக்கிறவன் பின்பு அடிப்பான். அடிபட்டுவிடின், மேலிருக்கிறவன் கீழே யிறங்கிவிடல் வேண்டும்; படாவிடின், தான் கெலிக்கும்வரை அல்லது மேலிருக்கிறவன் தோற்கும்வரை, சுமக்கிறவன் சுமந்துகொண்டே யிருத்தல் வேண்டும். மேலிருக்கிறவன் கீழிறங்க ஆட்டை முடியும்.
{{rule|5em|align=}}
{{nop}}<noinclude></noinclude>
4uniik0ay80utu1jjyhlwhv99eibk3o
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/84
250
619710
1838009
1836951
2025-07-02T03:10:52Z
Info-farmer
232
- துப்புரவு
1838009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|72|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[பெண்பாற்}}</noinclude><poem>::(2) “ஈர் ஈர்த்திக்கொள்
::::பூப்பறித்துக்கொள்
::::பெட்டியில் வைத்துக்கொள்.”</poem>
<poem>::(3) “முக்கோண வாசலிலே
::::முத்துத்தட்டுப் பந்தலிலே.”</poem>
<poem>::(4) “நான்கு டோங்கு டம்மாரம்
::::நாங்களாடும் பம்பரம்.”
::::::(அல்லது)
:::::நான்கு டோங்கு
::::நாலுவெற்றிலை வாங்கு</poem>
<poem>::(5) (ஐவர் அரைக்கும் மஞ்சள்
::::தேவர் குளிக்கும் மஞ்சள் )</poem>
<poem>::(6) “கூறு கூறு சித்தப்பா
::::குறுக்கே வந்த பெரியப்பா,”</poem>
<poem>::(7) “ஏழை எண்ணிக் கொள்
::::எண்ணெய் மரம் சேர்த்துக்கொள்
::::பெண்ணை அழைத்துக் கொள்.”</poem>
ஏழாங்கொட்டைக்குப் பின், ஒரு கையில் முக்கல்லும் இன்னொரு கையில் நாற்கல்லுமாக வைத்துக்கொண்டு, நாற்கல்லுள் ஒன்றை மேலெறிந்து எஞ்சிய இருமூன்றையுங் கீழ்வைத்து மேலெறிந்த கல்லைப் பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலெறிந்து அதைக் கீழ்வைத்த இரு மூன்றையும் இருகையாலும் வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும்.
இது <b>சிறுபுதை</b> எனப்படும். இதை ஆடும்போது பாடும் பாட்டு “புதை புதைக்கிற பம்பரம்,செட்டி சிதம்பரம்” என்பதாகும்.<ref>* இப்பாட்டிலுள்ள சில சொற்களின் கொச்சை வடிவம் திருத்தப்பெற்றுளது.
</ref>
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
876k0jr3xr1lssk2jwvnwd48fk6so9u
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/88
250
619714
1838012
1836943
2025-07-02T03:12:36Z
Info-farmer
232
x-
1838012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>௨. கிச்சுக் கிச்சுத் தம்பலம்</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : திரியை மண்ணுள் வைத்து மறைத்துக் ‘கிச்சுக் கிச்சுத் தம்பலம்’ என்று சொல்லியாடும் ஆட்டு, அச்சொல்லையே பெயராகக்கொண்டது. இது பாண்டி நாட்டில் ‘திரித்திரி பொம்முதிரி’ என வழங்கும்.
{{larger|ஆடுவார் தொகை}}: இரு சிறுமியர் இதை ஆடுவர்.
{{larger|ஆடு கருவி}} : ஒரு முழநீளமும் நால்விரல் உயரமு முள்ள ஒரு சிறுமண் அல்லது மணற்கரையும், ஒருவிரல் அகலமும் இருவிரல் நீளமுமுள்ள ஒரு துணித்திரியும், இதை ஆடுகருவியாம். திரிக்குப் பதிலாகச் சிலவிடத்துக் குச்சையும் வைத்துக்கொள்வதுண்டு. பொதுவாக, பாண்டி நாட்டில் திரியும் சோழகொங்கு நாட்டில் குச்சும் வைத்துக்கொள்ளப்படும்.
{{larger|ஆடிடம்}} : மண்ணும் மணலும் உள்ள இடமெல்லாம் இதை ஆடுமிடமாம்.
{{larger|ஆடு முறை}} : ஒருத்தி, திரியைப் பற்றிக்கொண்டிருக்கும் தன் வலக்கைப் பெருவிரல் ஆட்காட்டிவிரல்களை மண் கரையின் வலப்பக்கத்திலும், வெறுமனே பொருத்தியிருக்கும் இடைக்கைப் பெருவிரல் ஆட்காட்டி விரல்களை அதன் இடப்பக்கத்திலும், வைத்து உட்புகுத்தி அதன் ஒரு கோடியினின்று மறு கோடிவரை முன்னும் பின்னுமாகப் பலமுறை நகர்த்தியியக்கி, திரியை மறைவாக ஓரிடத்தில் வைத்துவிட்டுப் பிறிதோரிடத்தில் வைத்ததாக நடித்துக்காட்டி, திரியுள்ள விடத்திற் கைவைக்கும்படி தன் எதிரியைக் கேட்பாள். எதிரி தன் இருகைகளையும் கோத்துத் தான் ஐயுற்றவிடத்திற் கரையின் குறுக்கே பொத்தி வைப்பாள். அவள் சரியான இடத்திலும் வைத்திருக்கலாம்; தவறான இடத்திலும் வைத்திருக்கலாம். சரியான இடத்தில் வைத்திருந்தால் பொத்தினவளும், தவறான இடத்தில் வைத்திருந்தால் திரியை வைத்தவளும்,<noinclude></noinclude>
4xgez9pj0yjo4q45rnyw9pufej8dmjd
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/92
250
619730
1838016
1836953
2025-07-02T03:18:33Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1838016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>(2) இரவாட்டு}}<br>
{{larger|௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : ‘பாக்குவெட்டியைக் காணோமே’ என்று சொல்லித் தொடங்கும் விளையாட்டு, அச்சொல்லையே பெயராகக் கொண்டது: இது வடகொங்கு நாட்டில் ‘பருப்புச்சட்டி’ எனப்படும்.
{{larger|ஆடுவார் தொகை}} : பொதுவாக அறுவர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர்.
{{larger|ஆடிடம்}} : ஊர்ப்பொட்டல் இதை ஆடுமிடமாம்.
{{larger|ஆடு முறை}} : தலைமையான இரு பெதும்பையார்<ref>* 5 அகவை முதல் 11 அகவை வரையுள்ள பெண் பெதும்பை.</ref> அண்ணாவியர்போல் எதிரெதிர் நின்றுகொள்வர். அவருள் ஒருத்தியின் பின்னால், ஏனைச் சிறுமியரெல்லாரும் ஒருத்தி அரையாடையை இன்னொருத்தி பற்றிக்கொண்டு வரிசையாய் நிற்பர். இன்னொருத்தி, அவ்வரிசைக்கு எதிர்நின்று மறுக்காட்டி வலமும் இடமும் சுற்றிச்சென்று, வரிசையாய் நிற்கும் சிறுமியருள் அண்ணாவியொழிந்த பிறருள் ஒருத்தியை அல்லது பலரைத் தொடமுயல்வாள். அவள் வலஞ் செல்லும்போது இடமும், இடஞ் செல்லும்போது வலமுமாக, வரிசையாய் நிற்குஞ் சிறுமியர் வளைந்து வளைந்து இயங்குவர். தொடப்பட்ட பெண் நீங்கிவிடவேண்டும். இங்ஙனம் (அண்ணாவியொழிந்த) எல்லாப் பெண்களும் தொடப்படும்வரை, ஆட்டுத் தொடரலாம்.
ஓர் ஆட்டை முடிந்தபின் மறுமுறையும் முன்போன்றே ஆடப்பெறும்.
ஆட்டு நிகழும்போது, தனித்து நிற்பவளும் வரிசை முதல்வியுமான அண்ணாவியர் இருவரும், பின் வருமாறு பாட்டுப்பாடி நெடுகலும் உறழ்ந்துரைப்பர். பாட்டு முடிந்தவுடன் திருப்பப்படும்.
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
cwdcnk2nofgc6uuibwro12mxsqn2str
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/93
250
619731
1838019
1836957
2025-07-02T03:20:34Z
Info-farmer
232
{{dhr}}
1838019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||பாக்குவெட்டியைக் காணோமே|81}}</noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>பாண்டிநாட்டுப் பாட்டு</b>}}}}
::(1) த : பாக்குவெட்டியைக் காணோமே.
:::வ : தேடி ஓடிப் பிடித்துக்கொள்
::(2) த : வெற்றிலைப் பெட்டியைக் காணோமே.
:::வ : தேடி ஓடிப் பிடித்துக்கொள்.
::(3) த : ஆடுகிடக்கிற கிடையைப் பார்.
:::வ : ஆட்டுப் பிழுக்கையைத் தூர்த்துப் பார்.
::(4) த : குட்டி கிடக்கிற கிடையைப் பார்.
:::வ : குட்டிப் பிழுக்கையைத் தூர்த்துப் பார்.
::(5) த : பல்லே வலிக்குதே.
:::வ : நெல்லைக் கொறித்துக்கொள்.
{{center|{{larger|<b>கொங்குநாட்டுப் பாட்டு</b><ref>* 1, 2. ‘நக்கு’ என்னுஞ் சொற்குப் பதிலாக ‘நொக்கு’ என்று வைத்துக்கொள்ளலாம். நொக்குதல் = உண்டு குறையச் செய்தல், மிகுதியாக வுண்ணுதல்.
</ref>}}}}
::(1) த : பருப்புச் சட்டி.
:::வ : திருப்பி நக்கு.
::(2) த : வாழை யிலை.
:::வ : வழித்து நக்கு.
::(3) த : ஊசியாலே குத்துவேன்.
:::வ : வீட்டுமேலே ஏறுவேன்.
::(4) த : கிணற்றிலே குதிப்பேன்.
:::வ : கல்லெடுத்துப் போடுவேன்.
::(5) த : தலையே நோகுதே.
:::வ : தலையணை போட்டுக்கொள்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : —இந்த ஆட்டு, நரி ஆட்டுக்குட்டிகளையோ, பருந்து கோழிக் குஞ்சுகளையோ, பிடிப்பதினின்று தோன்றியதாகத் தெரிகின்றது.
{{rule|5em|align=}}
{{dhr}}
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}
த.வி.—6</noinclude>
gofp5qu9xnaymj0ee36anemcp6b78wi
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/97
250
619738
1838022
1836964
2025-07-02T03:28:42Z
Info-farmer
232
{{dhr}}
1838022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||பன்னீர்க்குளத்தில் முழுகுதல்|85}}</noinclude>முழுகிவிட்டு வந்தேன்” என்று சொல்வாள். “நீ எந்தக் குளத்தில் முழுகினாய்?” என்று தலைமையானவள் கேட்பாள். அதற்கு அவள், “தயிர்க்குளத்தில் முழுகினேன்” என்று பதிலுரைப்பாள். உடனே, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் வெள்ளையாய்ப் போய்விட்டது” என்று சொல்லி, அவளைத் துரத்திவிடுவாள்.
பின்பு, “இரண்டாவது போன காமாட்சி ஓடிவா” “மூன்றாவது போன காமாட்சி ஓடிவா,” என்று இங்ஙனம் எஞ்சியோருள் ஒவ்வொருத்தியையும் முறையே அழைத்து முன்போற் கேட்பாள். ஒவ்வொரு தடவையும் முன்சொன்னவாறே நிகழும். குளத்தில் முழுகினதைப்பற்றிச் சொல்லும்போது, இரண்டாவது போன காமாட்சி “பருப்புக்குளத்தில் முழுகினேன்” என்பாள். அன்று, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் மஞ்சளாய்ப் போய்விட்டது” என்று சொல்லித் துரத்திவிடுவாள். மூன்றாவதுபோன காமாட்சி “நெய்க் குளத்தில் முழுகினேன்” என்பாள். உடனே, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் எண்ணெயாய்ப் போய்விட்டது” என்று, சொல்லித் துரத்திவிடுவாள். நாலாவது போன காமாட்சி “பவ்வீக்<ref>* இடக்கரான சொல் இடக்கரடக்கி அச்சிடப்பெற்றது.</ref> குளத்தில் முழுகினேன்” என்பாள். உடனே, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் பவ்வீயாய்ப் போய்விட்டது” என்று சொல்லித் துரத்திவிடுவாள். இங்ஙனம் ஒன்பது பெண்கள் ஏற்காத ஒவ்வொன்றைச் சொல்லித் துரத்தப்பட்டபின், பத்தாவது பெண்மட்டும் “நான் பன்னீர்க் குளத்தில் முழுகினேன்” என்பாள். உடனே தலைமையானவள் “வா வா வா” என்று சொல்லி அவளைச் சேர்த்து அணைத்துக் கொள்வாள். அதோடு ஆட்டம் முடியும்.
தலைமையானவளிடம் ஒவ்வொருத்தியும் ஓடி வரும்போது, ஓர் இடக்கரான மரபுரை கூறிக்கொண்டு வருவது வழக்கம்.
{{rule|5em|align=}}
{{dhr}}
{{nop}}<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
7l176ank1brgro5marpxgrzrw121h75
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/98
250
619740
1838024
1836966
2025-07-02T03:33:50Z
Info-farmer
232
{{larger|}}
1838024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>{{larger|(3) இருபொழுதாட்டு}} <br> க. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : “ஒருகுடம் தண்ணீர் ஊற்றி” என்று தொடங்கும் பாட்டைப் பாடி ஆடும் விளையாட்டு, அம்முதற் குறிப்பையே பெயராகக் கொண்டது.
{{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட நால்வர்க்குக் குறையாது வேண்டும்.
{{larger|ஆடிடம்}} : இது தெருவில் ஆடப்பெறும்.
{{larger|ஆடு முறை}} : இருவர் கைகோத்து உயர்த்தி வைத்துக் கொண்டிருக்க அவருக்கிடையே வேறிருவர் அல்லது பலர் ஒருத்திபின் ஒருத்தியாக ஒருத்தி யரையாடையை இன்னொருத்தி பற்றிக்கொண்டு நுழைந்து சென்று, “ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூப் பூத்ததாம், இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டு பூப் பூத்ததாம்” என்று “பத்துக்குடம் தண்ணீர்” வரையும் பாடிக்கொண்டு கைகோத்து நிற்கும் இருவரையும் மாறி மாறிச் சுற்றிக் கொண்டேயிருப்பர்.
“பத்துக்குடம் தண்ணீர் ஊற்றி” என்ற அடி முடிந்தவுடன், அல்லது அதற்குச் சற்று முன்பே, கைகோத்து நிற்கும் இருவரும் கையைத் தாழ்த்தி இரண்டாவது அல்லது கடைசிப் பிள்ளையைப் பிடித்துக்கொள்வர் அல்லது சிறைசெய்வர். அப்போது வரிசை முதல்விக்கும் கைகோத்து நிற்பவருக்கும் பின்வருமாறு உறழுரையாட்டு நிகழும்.
::வ : விடடா துலுக்கா!
::கை : விடமாட்டேன் மலுக்கா!
{{nop}}<noinclude></noinclude>
g8o2qv47aplz8ugu7dgxee653sjyyt8
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/105
250
619754
1838031
1836981
2025-07-02T03:40:26Z
Info-farmer
232
+ சிறு வடிவ மாற்றம்
1838031
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>3. இருபாற் பகுதி</b>}}}}
சிறுவரும் சிறுமியரும் பால் வேறுபாடின்றிக் கலந்தும், பையன்களும் பெதும்பையரும் பால் வேறுபாட்டாற் பிரிந்தும், ஆடும் ஆட்டுத் தொகுதி <b>இருபாற் பகுதியாம்</b>.
{{center|{{larger|<b>(1) {{larger|பகலாட்டு}}<br>௧. பண்ணாங்குழி<br>I. பொதுவகை</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : நெற்குத்தும் பண்ணைபோல் வட்டமான பள்ளம் அல்லது குழிதோண்டி, அதிற் கற்களையிட்டு ஆடும் ஆட்டு <b>பண்ணுங்குழி</b> எனப்படும். பண்ணையென்பது பள்ளம் பண்ணை பறித்தல் குழிதோண்டுதல்.
பண்ணாங்குழி என்னும் பெயர், அவ்வவ் விடத்தைப் பொறுத்துப் பன்னாங்குழி, பல்லாங்குழி, பள்ளாங்குழி எனவெவ்வேறு வடிவில் வழங்கும். பெரும்பாலும் பதினான்கு குழிவைத்து இவ்விளையாட்டு ஆடப் பெறுவதால், பதினான்கு குழி என்பது முறையே பதினாங்குழி பன்னாங்குழி எனத் திரிந்ததாகச் சிலர் கொள்வர். ஆயின், பதினாங்குழி என எங்கேனும் வழங்காமையானும், பன்னான்கு என்பது இலக்கிய வழக்காதலானும், பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்னும் வடிவங்களே பெருவழக்காய் வழங்குதலானும், பதினான்கிற்குக் குறைந்தும் கூடியும் குழிகள் வைத்துக் கொள்ளப்படுதலானும், பள்ளாங்குழி என்பதற்குப் பள்ளமான குழி என்றே பொதுமக்களாற் பொருள்கொள்ளப் படுதலானும், பண்ணாங்குழி அல்லது பள்ளாங்குழி என்பதே திருந்திய வடிவமாம்.
{{larger|ஆடுவார் தொகை}} : இதை இருவர் ஆடுவர்.
{{nop}}<noinclude></noinclude>
duh2nwosfgbytt6kjaclbdsysq2f8or
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/113
250
619762
1838034
1836993
2025-07-02T03:48:48Z
Info-farmer
232
பாண்டி நாட்டு முறை
1838034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude><section begin="பாண்டி நாட்டு முறை"/>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>௨. பாண்டி<br>(க) பாண்டிநாட்டு முறை</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : பல கட்டங்களுள்ளதாய் நிலத்திற் கீறப்பட்ட அரங்கினுள் வட்டெறிந்து, அதை நொண்டியடித்துக் காலால் தள்ளியாடும் ஆட்டு, <b>பாண்டி</b> எனப்படும்.
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 113
|bSize = 386
|cWidth = 138
|cHeight = 224
|oTop = 153
|oLeft = 212
|Location = right
|Description =
}}
இவ்விளையாட்டு, ஏனையிரு தமிழ்நாடுகளிலும், வட்டு என்றும் சில்லி என்றும் சில்லாக்கு என்றும் எறிகருவியாற் பெயர் பெற்றிருப்பதால், ஒருகால் பாண்டி என்பதும் எறிகருவிப் பெயராய் இருக்கலாம்.
பாண்டில் என்னுஞ் சொல் வட்டம் என்று பொருள்படுவதால், அதன் கடைக்குறையான பாண்டி என்பதும் அப்பொருள் படலாம். வட்டு சில்லி (சில்லாக்கு) என்னும் பெயர்கள், வட்டம் என்னும் பொருளையே மொழிப் பொருட் காரணமாகக் கொண்டிருப்பதுபோல், பாண்டி என்பதும் கொண்டிருக்கலாம்.
பாண்டி விளையாட்டிற்கு <b>வட்டு</b> அல்லது <b>வட்டாட்டு</b> என்பது பழம் பெயர். இன்றும் பழஞ்சேர நாடாகிய மலையாளத்தில் அப்பெயரே வழங்குகின்றது.
{{larger|ஆடுவார் தொகை}} : இதை இருவர் ஆடுவர். இது ஏனை வகைகட்கும் ஒக்கும்.
{{larger|ஆடு கருவி}} : வரிசைக்கு மூன்று ஆக இருநட்டு வரிசையாக ஆறு கட்டங்கொண்ட ஒரு நீள்சதுர அரங்கும், ஆடகர் ஒவ்வொருவர்க்கும் அரையங்குலக் கனமும் ஈரங்குல விட்டமுமுள்ள ஒரு வட்டமான கல் அல்லது<noinclude></noinclude>
srkwnpz0vt4uyn72j8gm21u54vhlh0w
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/116
250
619868
1838033
1837000
2025-07-02T03:48:09Z
Info-farmer
232
பாண்டி நாட்டு முறை
1838033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|104|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>தள்ளப்பட்ட வட்டு, அரங்கின் முதற்கட்டத்திலிருந்து ஒரே யெட்டில் மிதிக்கமுடியாதவாறு எட்டத்திலிருப்பவன், ஆடகர் தாம் வைத்த உப்புவழியாக நடந்தேனும் நொண்டியடித்தேனும் சென்று மிதிக்கலாம். இது உப்பு வைத்தவருக்கும் ஏற்படும் வசதி. இவ் வசதி உப்பு மிகுதிக்குத் தக்கவாறு மிகும்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : ஒருகால், இவ்விளையாட்டு, ஒரு நொண்டி வணிகன் பலநாடு கடந்து அரும்பொருள் தேடி வந்ததைக் குறித்ததாக இருக்கலாம்.
{{larger|ஆட்டின் பயன்}} : ஒற்றைக்காற் செலவு, குறித்த இடத்திற்கு ஒரு பொருளை எறிதல், காலால் பொருளைக் குறித்த இடத்திற்குத் தள்ளுதல். பின்புறமாகக் குறித்த இடத்திற்கு ஒன்றை யெறிதல் முதலிய பயிற்சிகள் இவ்விளையாட்டின் பயனாம்.
<section begin="பாண்டி நாட்டு முறை"/>
{{center|{{larger|<b>(௨) சோழ கொங்கு நாட்டுமுறை<br>1. ஒற்றைச் சில்லி</b>}}}}
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 116
|bSize = 386
|cWidth = 104
|cHeight = 186
|oTop = 363
|oLeft = 38
|Location = left
|Description =
}}
{{larger|ஆட்டின் பெயர்}} : பாண்டிநாட்டிற் பாண்டியென வழங்கும் வளையாட்டு, சோழ கொங்கு நாடுகளிற் <b>சில்லி</b> என்றும் சில்லாக்கு என்றும், பெயர் பெறும். ஒற்றைக்கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி <b>ஒற்றைச் சில்லி</b> எனப்படும்.
சில்லிக்குப் பாண்டி என்னும் பெயரும் சிலவிடத்து அருகி வழங்கும்.
{{larger|ஆடுவார் தொகை}} : இருவர் இதை ஆடுவர்.
{{larger|ஆடுகருவி}} : நான்கு சமகட்டங்கள் கொண்டதும், ஏறத்தாழ 6 அடி நீளமும் 2 அடி அகலமும் உள்ளதுமான, ஒரு நீள் சதுர அரங்கும், ஆளுக்கொரு<noinclude></noinclude>
21qpwnbbyv34vvqazye7h31va9qfvu0
1838036
1838033
2025-07-02T03:51:16Z
Info-farmer
232
end
1838036
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|104|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>தள்ளப்பட்ட வட்டு, அரங்கின் முதற்கட்டத்திலிருந்து ஒரே யெட்டில் மிதிக்கமுடியாதவாறு எட்டத்திலிருப்பவன், ஆடகர் தாம் வைத்த உப்புவழியாக நடந்தேனும் நொண்டியடித்தேனும் சென்று மிதிக்கலாம். இது உப்பு வைத்தவருக்கும் ஏற்படும் வசதி. இவ் வசதி உப்பு மிகுதிக்குத் தக்கவாறு மிகும்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : ஒருகால், இவ்விளையாட்டு, ஒரு நொண்டி வணிகன் பலநாடு கடந்து அரும்பொருள் தேடி வந்ததைக் குறித்ததாக இருக்கலாம்.
{{larger|ஆட்டின் பயன்}} : ஒற்றைக்காற் செலவு, குறித்த இடத்திற்கு ஒரு பொருளை எறிதல், காலால் பொருளைக் குறித்த இடத்திற்குத் தள்ளுதல். பின்புறமாகக் குறித்த இடத்திற்கு ஒன்றை யெறிதல் முதலிய பயிற்சிகள் இவ்விளையாட்டின் பயனாம்.
<section end="பாண்டி நாட்டு முறை"/>
{{center|{{larger|<b>(௨) சோழ கொங்கு நாட்டுமுறை<br>1. ஒற்றைச் சில்லி</b>}}}}
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 116
|bSize = 386
|cWidth = 104
|cHeight = 186
|oTop = 363
|oLeft = 38
|Location = left
|Description =
}}
{{larger|ஆட்டின் பெயர்}} : பாண்டிநாட்டிற் பாண்டியென வழங்கும் வளையாட்டு, சோழ கொங்கு நாடுகளிற் <b>சில்லி</b> என்றும் சில்லாக்கு என்றும், பெயர் பெறும். ஒற்றைக்கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி <b>ஒற்றைச் சில்லி</b> எனப்படும்.
சில்லிக்குப் பாண்டி என்னும் பெயரும் சிலவிடத்து அருகி வழங்கும்.
{{larger|ஆடுவார் தொகை}} : இருவர் இதை ஆடுவர்.
{{larger|ஆடுகருவி}} : நான்கு சமகட்டங்கள் கொண்டதும், ஏறத்தாழ 6 அடி நீளமும் 2 அடி அகலமும் உள்ளதுமான, ஒரு நீள் சதுர அரங்கும், ஆளுக்கொரு<noinclude></noinclude>
03iol4i7xnh0181xer90bkgp2trqhpq
1838038
1838036
2025-07-02T03:52:33Z
Info-farmer
232
{{larger|}}
1838038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|104|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>தள்ளப்பட்ட வட்டு, அரங்கின் முதற்கட்டத்திலிருந்து ஒரே யெட்டில் மிதிக்கமுடியாதவாறு எட்டத்திலிருப்பவன், ஆடகர் தாம் வைத்த உப்புவழியாக நடந்தேனும் நொண்டியடித்தேனும் சென்று மிதிக்கலாம். இது உப்பு வைத்தவருக்கும் ஏற்படும் வசதி. இவ் வசதி உப்பு மிகுதிக்குத் தக்கவாறு மிகும்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : ஒருகால், இவ்விளையாட்டு, ஒரு நொண்டி வணிகன் பலநாடு கடந்து அரும்பொருள் தேடி வந்ததைக் குறித்ததாக இருக்கலாம்.
{{larger|ஆட்டின் பயன்}} : ஒற்றைக்காற் செலவு, குறித்த இடத்திற்கு ஒரு பொருளை எறிதல், காலால் பொருளைக் குறித்த இடத்திற்குத் தள்ளுதல். பின்புறமாகக் குறித்த இடத்திற்கு ஒன்றை யெறிதல் முதலிய பயிற்சிகள் இவ்விளையாட்டின் பயனாம்.
<section end="பாண்டி நாட்டு முறை"/>
{{center|{{larger|<b>{{larger|(௨) சோழ கொங்கு நாட்டுமுறை}}<br>1. ஒற்றைச் சில்லி</b>}}}}
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 116
|bSize = 386
|cWidth = 104
|cHeight = 186
|oTop = 363
|oLeft = 38
|Location = left
|Description =
}}
{{larger|ஆட்டின் பெயர்}} : பாண்டிநாட்டிற் பாண்டியென வழங்கும் வளையாட்டு, சோழ கொங்கு நாடுகளிற் <b>சில்லி</b> என்றும் சில்லாக்கு என்றும், பெயர் பெறும். ஒற்றைக்கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி <b>ஒற்றைச் சில்லி</b> எனப்படும்.
சில்லிக்குப் பாண்டி என்னும் பெயரும் சிலவிடத்து அருகி வழங்கும்.
{{larger|ஆடுவார் தொகை}} : இருவர் இதை ஆடுவர்.
{{larger|ஆடுகருவி}} : நான்கு சமகட்டங்கள் கொண்டதும், ஏறத்தாழ 6 அடி நீளமும் 2 அடி அகலமும் உள்ளதுமான, ஒரு நீள் சதுர அரங்கும், ஆளுக்கொரு<noinclude></noinclude>
84jds64hqa9qbzov4ca5onuf8ug3gtz
1838039
1838038
2025-07-02T03:53:18Z
Info-farmer
232
சோழ நாட்டு முறை
1838039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|104|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|[இருபாற்}}</noinclude>தள்ளப்பட்ட வட்டு, அரங்கின் முதற்கட்டத்திலிருந்து ஒரே யெட்டில் மிதிக்கமுடியாதவாறு எட்டத்திலிருப்பவன், ஆடகர் தாம் வைத்த உப்புவழியாக நடந்தேனும் நொண்டியடித்தேனும் சென்று மிதிக்கலாம். இது உப்பு வைத்தவருக்கும் ஏற்படும் வசதி. இவ் வசதி உப்பு மிகுதிக்குத் தக்கவாறு மிகும்.
{{larger|ஆட்டுத் தோற்றம்}} : ஒருகால், இவ்விளையாட்டு, ஒரு நொண்டி வணிகன் பலநாடு கடந்து அரும்பொருள் தேடி வந்ததைக் குறித்ததாக இருக்கலாம்.
{{larger|ஆட்டின் பயன்}} : ஒற்றைக்காற் செலவு, குறித்த இடத்திற்கு ஒரு பொருளை எறிதல், காலால் பொருளைக் குறித்த இடத்திற்குத் தள்ளுதல். பின்புறமாகக் குறித்த இடத்திற்கு ஒன்றை யெறிதல் முதலிய பயிற்சிகள் இவ்விளையாட்டின் பயனாம்.
<section end="பாண்டி நாட்டு முறை"/>
<section begin="சோழ நாட்டு முறை"/>
{{center|{{larger|<b>{{larger|(௨) சோழ கொங்கு நாட்டுமுறை}}<br>1. ஒற்றைச் சில்லி</b>}}}}
{{Css image crop
|Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 116
|bSize = 386
|cWidth = 104
|cHeight = 186
|oTop = 363
|oLeft = 38
|Location = left
|Description =
}}
{{larger|ஆட்டின் பெயர்}} : பாண்டிநாட்டிற் பாண்டியென வழங்கும் வளையாட்டு, சோழ கொங்கு நாடுகளிற் <b>சில்லி</b> என்றும் சில்லாக்கு என்றும், பெயர் பெறும். ஒற்றைக்கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி <b>ஒற்றைச் சில்லி</b> எனப்படும்.
சில்லிக்குப் பாண்டி என்னும் பெயரும் சிலவிடத்து அருகி வழங்கும்.
{{larger|ஆடுவார் தொகை}} : இருவர் இதை ஆடுவர்.
{{larger|ஆடுகருவி}} : நான்கு சமகட்டங்கள் கொண்டதும், ஏறத்தாழ 6 அடி நீளமும் 2 அடி அகலமும் உள்ளதுமான, ஒரு நீள் சதுர அரங்கும், ஆளுக்கொரு<noinclude></noinclude>
6uvterfv8zqqj0yjraywzr8mhxoe6ic
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/126
250
619929
1838041
1837613
2025-07-02T03:54:44Z
Info-farmer
232
<section end="சோழ நாட்டு முறை"/>
1838041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|114|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>சேலம் வட்டாரத்தில், மேற்கூறிய பகுதிகளோடு <b>வெள்ளைக்கை கருப்புக்கை குத்துக்கை தலை கால் ‘அமரேசா’</b> என்பவற்றையும், சேர்த்துக்கொள்வர்.
இனி, உத்தியில் நின்று சில்லியெறிந்து, 4 ஆம் அல்லது 5 ஆம் கட்டத்தில் விழின் உடனே பழமாவதும், பிறகட்டங்களில் விழின் நொண்டியடித்துச் சென்று மிதித்து, உத்திவரை தொண்டியடித்துத் தள்ளிக்கொண்டுபோய்ப் பழமாவதும்; சேலம் வட்டாரத்தில் மற்றொரு வகையாய் இதை ஆடும் முறையாம்.
{{center|{{larger|<b>VI. கைச்சில்லி</b>}}}}
தனியாயிருக்கும் சிறுவன் அல்லது சிறுமி, கீழே உட்கார்ந்து ஒற்றைச் சில்லியரங்கு சிறியதாய் வரைந்து, ஆட்காட்டி விரலைக் கால்போற் பாவித்துக் கட்டங் கட்டமாய் வைத்துச் சென்று, ஆடிக்கொள்ளும் ஆட்டு <b>கைச்சில்லியாம்</b>. இது சேலம் வட்டாரத்தில் ஆடப்பெறும்.
{{dhr|5em}}
{{rule|5em|align=}}
{{dhr}}
<section end="சோழ நாட்டு முறை"/><noinclude></noinclude>
8uqjeg2ggkbut7vebcat954xawrwzi9
பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/130
250
619933
1838051
1837620
2025-07-02T04:01:40Z
Info-farmer
232
{{larger|}}
1838051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{larger|<b>(2) {{larger|இரவாட்டு}}<br>௧. கண்ணாம்பொத்தி</b>}}}}
{{larger|ஆட்டின் பெயர்}} : ஒருவர் ஒரு பிள்ளையின் கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும்போது, பிற பிள்ளைகள் ஓடி ஒளியும் விளையாட்டு <b>கண்ணாம்பொத்தி</b> எனப்படும்.
{{larger|ஆடுமுறை}} : முதியார் ஒருவர், ஆட விரும்பும் பிள்ளைகளை யெல்லாம் ஒருங்கே இருத்திக்கொண்டு, ஒவ்வொருவரையும் சுட்டி ஒரு மரபுத் தொடரைச் சொல்லி, அத்தொடரின் இறுதிச் சொல்லாற் குறிக்கப்பெறும் பிள்ளையின் கண்ணைப் பொத்துவர். இனி, முதியார் ஒருவர் மீது எல்லாப் பிள்ளைகளும் படபடவென்று கையாலடிக்கும்போது, அம்முதியாரின் கையில் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்துவதுமுண்டு. பொத்தும்போது, மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடி ஒளிந்துகொள்வர்.
முதியார் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்திக்கொண்டிருக்கும்போது, அவ்விருவருக்கும் பின்வருமாறு உரையாட்டு நிகழும்.
::{{larger|முதியவர்}} : கண்ணாம் பொத்தியாரே கண்ணாம் பொத்தியாரே!<ref>*‘கண்ணாம் பொத்தியாரே’ என்பது கொச்சை வடிவில் ‘கண்ணாம்பூச்சியாரே’ என்று திரியும்.</ref>
::{{larger|பிள்ளை}} : என்ன?
::மு : எத்தனை முட்டையிட்டாய்?<ref>*விளி உயர்வுப் பன்மையிலிருப்பினும், பயனிலை ஒருமையாகவே யிருக்கும். இது வழுவே.</ref>
::பி : மூன்று முட்டையிட்டேன்.
::மு : அவற்றுள் ஒரு முட்டையைப் பொரித்துத் தின்றுவிட்டு, ஒரு முட்டையைப் புளித்த<noinclude>{{rule}}
{{Reflist}}</noinclude>
hbbeayok3doximpifkifbudfsp0pkna
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/351
250
620082
1837923
2025-07-01T15:11:14Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அது மீட்பு அரசியல் மனிதன் (Homo Politicus) என்ற வடிவில் உருவெடுத்தது. மக்களின் ஒப்புதல் அவனுக்குக் கிடைத்தது, எனவே, அரசியல் மனிதனின் ஆதிக்கம் எங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரப் பொருளாதாரம்|315|அதிகாரப் பொருளாதாரம்}}</noinclude>அது மீட்பு அரசியல் மனிதன் (Homo Politicus) என்ற வடிவில் உருவெடுத்தது. மக்களின் ஒப்புதல் அவனுக்குக் கிடைத்தது, எனவே, அரசியல் மனிதனின் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்தது. இந்நிலையில்தான் அரசியல் மனிதன், பொருளாதார அமைப்பைக் கட்டுப்படுத்தி அனைத்தையும் தனது அதிகாரத்தின்கீழ் கொணர்ந்தான்.
இவ்வதிகாரம் தழுவிய பொருளாதார அமைப்பு ஒரு நாட்டில் போர்க் காலங்களில் தோன்றி அமைதிக் காலங்களில் மறைந்து விடுவதில்லை. அமைதிக் காலங்களிலும் இப்பொருளாதார அமைப்பு இருக்கக் கூடும். பொதுவாக, வல்லாட்சி நாடுகளில் எல்லாம் அதிகாரப் பொருளாதாரம் அமைக்கப்படுவது வழக்கம். சோவியத்து உருசியா, சீனா, செருமனி, இத்தாலி, சூடான், பாகிசுதான், பர்மா, வியட்நாம், அர்செண்டைனா, துருக்கி, அங்கேரி, செக்கோசுலோவேகியா, யூகோசுலோவேகியா, எகிப்து, தான்சானியா, இலிபியா, நைசீரியா ஆகிய நாடுகள் இத்தகைய பொருளாதார அமைப்பை அவற்றின் வரலாற்றில் ஏதேனும் ஒரு காலத்தில் பெற்றிருந்தன.
{{larger|<b>அதிகாரப் பொருளாதாரத்தின் சிறப்புக் கூறுகள்:</b>}} பொருளாதாரத்தின் மீது அதிகாரம் செலுத்தும் நிருவாகத்தின் தன்மையைப் பொறுத்து, அதிகாரப் பொருளாதாரம் மூன்று வகையாக அமையலாம். ஒன்று, சோவியத்து உருசியா, சீனா போன்ற நாடுகளில் உள்ளது போல் ஒரு கட்சியின் அதிகாரம். இவ்வதிகாரப் பொருளாதாரத்திற்கு அதிகார சமத்துவப் பொருளாதாரம் (Authoritarian Socialism) என்பது பெயர். மற்றொன்று, செருமனியில் அதிகாரம் செலுத்திய இட்லர், இத்தாலியின் முசோலினி போன்றவர்களின் தனி மனித ஆதிக்கம் பெற்ற பொருளாதாரம். இது, அதிகாரம் தழுவிய தனியார் முயற்சிப் பொருளாதாரம் (Authoritarian Free Enterprise System) என்று அழைக்கப்பட்டது. மூன்றாவதாக, பாகிசுதானின் அயூப்கான், சியா (zia) போன்ற படைத் தலைவர்களின் ஆட்சிக்குட்பட்ட அதிகாரம். இம்முறைக்குப் படைவலி முதலாளித்துவ அமைப்பு (Military–Based Capitalist Economy) என்பது பெயர். இம்மூன்று அமைப்புகளுக்குள்ளும் பல வகைகளில் ஒற்றுமை இருப்பதால், இவை அனைத்தும் அதிகாரப் பொருளாதாரம் என்றே அழைக்கப்படுகின்றன.
அதிகாரச் சமதரும அமைப்பில், பொருள் உற்பத்திக்கு மூலமான நிலம், காடுகள், சுரங்கங்கள், பள்ளிகள், வங்கிகள் மற்ற வளங்கள் அனைத்தும் அரசின் பொதுவுடைமையாக இருக்கும். தனியாருக்குச் சொத்துரிமை இவ்வமைப்பில் இல்லையாதலின், தனியார் சுரண்டல் ஏற்பட வழியில்லை. இப்பொருளாதாரத்தின் உற்பத்தி, ஆதாயத்தையோ தனி மனிதன் நலனைக் கருதியோ அமையாது. உற்பத்தி என்பது மக்களுக்காக, மக்கள் நலன் கருதி, மக்கள் அனைவராலும் மேற்கொள்ளப்படும்.
ஆனால், மற்ற இரு அதிகாரப் பொருளாதார அமைப்புகளிலும் முதலாளித்துவத்தின் வெளித் தோற்றம் மட்டும் காக்கப்படும். இங்கே, உற்பத்திக் காரணிகள் தனியாரிடம் இருக்க அனுமதிக்கப்படுகின்றன. சில முக்கியத் தொழிற்சாலைகள் கூட நாட்டுடைமையாக்கப்படுவதில்லை. எனவே, தனியார் தொழில் முயற்சி, பொருளாதாரத்தில் காணப்படுவது போல உற்பத்தியாகும் சமூக வருமானம், தனியார்களாலேயே வாரம், கூலி, வட்டி, ஆதாயம் என்ற முறையில் பயிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆயினும், இப்பொருளாதாரத்தில் காணப்படும் கொடூரமான அதிகாரக் கட்டுப்பாடானது, தனியார் தொழில் முயற்சிகளையும் அதனால் ஆதாயம் பெறுதலையும் பெரிதும் பாதித்துவிடுகிறது. ஆகவே, இத்தகைய பொருளாதாரத்தில் பெயரளவில்தான் முதலாளித்துவக் கூறுகள் காணப்படுகின்றனவே தவிர, உண்மையில் அவை அழிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அயூப்கான் பாகிசுதானில் பொறுப்பேற்றபோது பொருள்களின் விலையிலும் ஆதாயத்தின் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். நிலச் சீர்திருத்தங்களைக் கடுமையாக மேற்கொண்டதன் மூலம் தனியாரிடம் நில உடைமை குவிந்திருப்பதைக் கட்டுப்படுத்தினார். செருமனியின் அதிகாரப் பொருளாதார அமைப்பில் தனியார் சொத்துரிமை எந்நேரத்திலும் அரசால் பறிமுதல் செய்யப்படக்கூடிய நிலை இருந்தது, தனியார் தங்கள் சொத்துகளை எவ்விதம் அனுபளிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கூட அரசு விதித்தது. ஒவ்வொரு தனியார் நிறுவனமும் அரசின் பங்கேற்புடன், அரசால் கட்டுப்படுத்தப்பட்ட பொது நிறுவனமாகவே (Public Trust) இயங்கியது. சுருங்கக் கூறின், செருமனியின் ஒவ்வொரு தனித் தொழில் நிறுவனத்திலும் அரசு ஒரு கூட்டாளியாக (Partner) இருந்தது. இட்லர் பதவிக்கு வந்தபோது தனியார் உற்பத்தி அனைத்தும் அவரது மையக் குழுவிடம் இருந்ததால், தனியார் சொத்துரிமைக்கு (Private Ownership) உதட்டளவு மதிப்புதான் இருந்தது.
உற்பத்திக் காரணிகள் அரசின் ஆளுகைக்குக் கீழ் இருப்பதால் அவற்றைச் சிறந்த முறையில் பங்கிட்டு வல்லாட்சியாளரின் (Dictator) சமூக, பொருளாதாரக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குப் பொருளாதாரத்தில் ஓர் அமைப்புத் தேவைப்படுகிறது. அந்த அமைப்பு மையத் திட்டக்குழு என்ற பெயரில் செயற்-<noinclude></noinclude>
knjrdmimyb9nvfy7zcypzrvxs6zbktt
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
0
620083
1837930
2025-07-01T15:18:23Z
Info-farmer
232
+ தொடக்கம்
1837930
wikitext
text/x-wiki
{{Under_construction}}
{{header
| title = தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
| author = ஞா தேவநேயன்
| translator =
| section =
| previous =
| next = [[/001/|001 →]]
| year = 1962
| notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 0 ஆகும்.
}}{{featured download}}<br><br><br>
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="3" to="4" />
{{page break|label=}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" />
{{page break|label=}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:ஞா தேவநேயன்]]
[.[பகுப்பு:Transclusion completed]]
rznxi0w4gnwhjtguyy397zx634t8aku
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/001
0
620084
1837936
2025-07-01T15:27:15Z
Info-farmer
232
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="11" to="14"fromsection="" tosection="" />
1837936
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 1
| previous = [[../]]
| next = [[../002/|002]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="11" to="14"fromsection="" tosection="" />
cplj1zolewkgd1irwbdvre0kvobsx37
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/352
250
620085
1837938
2025-07-01T15:28:40Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுகிறது (Central Planning Board) அனைத்துப் பொருளாதார முடிவுகளையும் இக்குழு திட்டங்களாக வகுக்கும். இக்குழுவின் திட்டங்களுக்கும் வகுக்கப்பட்ட குறிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரப் பொருளாதாரம்|316|அதிகாரப் பொருளாதாரம்}}</noinclude>படுகிறது (Central Planning Board) அனைத்துப் பொருளாதார முடிவுகளையும் இக்குழு திட்டங்களாக வகுக்கும். இக்குழுவின் திட்டங்களுக்கும் வகுக்கப்பட்ட குறிக்கோள்களுக்கும் ஏற்பத் தொழில் முயற்சி மேற்கொள்வோர் பொருள் உற்பத்திவில் ஈடுபடுவர். எனவே, அதிகாரம் தழுவிய பொருளாதாரம் என்பது எப்போதும் மையத் திட்டமிட்ட அதிகாரப் பொருளாதாரமாகவே (Centrally Planned Command Economy) விளங்கும். ஆனால், உலகிலுள்ள திட்டமிட்ட பொருளாதாரம் (Planned Economy) அனைத்தும் அதிகாரப் பொருளாதாரமாக இருக்குமென்பதில்லை.
இத்தகைய திட்டமிடப்பட்ட அதிகாரப் பொருளாதாரத்தில் விலைச் செயற்பாட்டின் (Price Mechanism) பெருமை குறைந்து காணப்படும். பொதுவாக அங்காடி விலை, பொருள்களின் தேவையாலும் (Demand பொருள்களின் அளிப்பாலும் (Supply) வரையறுக்கப்படும். ஆனால், இவை அதிகாரப் பொருளாதாரத்தில் தனித்து இயங்குவதற்கு மறுக்கப்படுவதுடன், பொருள்களின் விவைகளையும் திட்டக்குழுவே தீர்மானிக்கும். இங்கு மேற்கொள்ளப்படும் விலை முறையானது அதிகார விலைமுறை எனப்படும் (Authoritarian Price System). திட்ட அதிகாரிகள் பொதுமக்களின் விருப்ப அளவுகோலுக்கு (Scale of Preference) ஏற்பவும் பொருளாதார முன்னேற்றத் தேவைகளுக்கு ஏற்பவும் விலைகளை உறுதி செய்வர். ஆனால், உறுதி செய்யப்பட்ட விலை மறுபடியும் அலுவலர்களால் மாற்றப்படாதவரை ஒரே நிலையில் இருக்கும். எனவே அதிகாரப் பொருளாதாரத்தில் விலைவாசிகள் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப உற்பத்தி முறை இயங்காது. இதனைக் கருத்தில் கொண்டுதான், சில பொருளியல் அறிஞர்கள், அதிகாரப் பொருளாதாரம் விலைக் கருவியின் உதவியின்றியே தங்கு தடையில்லாமல் செயற்பட முடியும் என்று கூறுகின்றனர். இருப்பினும், கீழ்க்காணும் காரணங்களுக்காக, அதிகாரப் பொருளாதாரத்திலும் விலைக்கருவியின் பங்கு இன்றியமையாததாகிறது. (1) பொருளாதாரத்தில் இயங்கும் ஒவ்வொரு தொழில் நிறுவனமும் மற்ற நிறுவனத்தின் பொருள்களை வாங்குவதற்கு மாற்று விலைமுறை (Transfer Price) தேவைப்படுகிறது. (2) பல்வேறு இயற்பியல் அளவுகளைக் (Physical Units) கொண்ட பண்டங்களை ஒரு முடிவான அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு விவை தேவைப்படுகிறது. (3) உற்பத்தி முறைகளில் மேற்கொள்ளப்படும் செலவினங்களை ஆய்ந்து, மிகக் குறைந்த செலவினம் கொண்ட ஆனால், நிறைந்த பயன் தருகிற உற்பத்தி முறையைச் செயற்படுத்துவதற்கு விலை சிறந்த கருவியாகிறது. ஆனால், மேற் கூறியது போல் முக்கிய முடிவுகளும் வளங்களின் பங்கீடும் (Allocation of Resources) இவ்விலைகளைப் பொறுத்து அமையா. எனவே, அதிகாரப் பொருளாதாரத்தில் பணத்தின் செயற்பாடு குறைந்தே காணப்படும். அது கணக்கின் அலகாகவே (Unit of Account) இருக்கும். நிருவாக நிறுவனங்களுக்குள் ஏற்படும் அனைத்து நடவடிக்கைகளும் காசோலைகளின் (Cheque) மூலமாகத்தான் நிகழும்.
அதிகாரப் பொருளாதாரத்தில், விலைக் கருவியின் பங்கு குறைந்து காணப்படுவதால் ஆதாயம் கட்டுப்படுத்தப்பட்டும் கட்டுப்படுத்தப்படாமலும் இருக்கும். மேலும், உழைப்போர் கூலிகளில் ஏற்றத் தாழ்வு குறைந்தே காணப்படும். இக்காரணங்களால் வருமானமும் செல்வமும் ஒரு சிலரிடையே குவிந்து, பொருளாதார ஏற்றத் தாழ்வு (Economic inequality) குறைந்தே காணப்படுகிறது. பொருளாதாரச் சமநிலை, சம உரிமை, சமவாய்ப்பு ஆகியவை நிறைந்து காணப்படும். பெரும்பாலும், ‘திறமைக்கேற்ப உழைத்துத் தேவைக்கேற்பப் பெறுதல்’ என்ற கொள்கை இப்பொருளாதாரத்தில் காணப்படும்.
ஆனால், அதிகாரப் பொருளாதாரத்தில் தனி மனித உரிமை பெரிதும் கட்டுப்படுத்தப்படும் அல்லது அழிக்கப்படும். பொதுவாக, நாட்டின் அரசியல் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான முயற்சியில் தனி மனித விருப்புகள் தடையாக இருப்பது அனுமதிக்கப்படுவதில்லை. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் அரசனாகக் கருதப்படும் ஒரு நுகர்வோன் அதிகாரப் பொருளாதாரத்தில், ஏறக்குறைய ஓர் அடிமையாகக் காணப்படுகிறான். அவன் என்ன உட்கொள்ள வேண்டும், எத்துணி உடுத்த வேண்டும், எவ்வகை வீட்டில் வசிக்க வேண்டும் என்ற அனைத்தையும் அரசே முடிவு செய்கிறது. அரசால் முடிவு செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் எவற்றையேனும் வாங்கிக் கொள்ள நுகர்வோருக்கு முழு உரிமை உண்டு. அதிகாரச் சமதியைப் பொருளாதாரத்தில் அனைத்துப் பொருள்களும் பங்கீட்டுப் பண்டசாலைகள் (Ration Shops) மூலமாகவே பிரித்தளிக்கப்படும். ஆகவே, பொருள்களின் பங்கீடு அரசால் முடிவு செய்யப்படும். ஆனால், மற்ற இரு அமைப்புகளிலும் பொருள்கள், தனியார் கடைகளில் அரசு விலைக்கு அளிக்கப்படும்.
இதுபோன்றே தொழிலாளர் வேலைவாய்ப்பும் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அமையாது. கூலியின் ஏற்ற இறக்கத்திற்குத் தக்கவாறு இடம்பெயர முடியாது. அரசாங்கம் வரையறை செய்யும் தொழில்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளத் தொழிலாளருக்கு உரிமை அளிக்கப்படும். பெரும்பாலும், தொழிலாளர் திட்ட ஆணைக்கேற்றவாறே செயல்படவேண்டும். திட்டங்களின் குறிக்கோள்களை அடை-<noinclude></noinclude>
tokw1ynrjogzqjehi6qmpmisf4ysgd9
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002
0
620086
1837940
2025-07-01T15:30:29Z
Info-farmer
232
கோலி விளையாட்டு, தெல்லுவும் ஏறத்தாழ ஒரே விளையாட்டு
1837940
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 2
| previous = [[../001/|001]]
| next = [[../003/|003]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="15" to="31"fromsection="" tosection="" />
cbmhlp277gubvf9wjl48e2wcex9xdox
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003
0
620087
1837943
2025-07-01T15:37:56Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837943
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 3
| previous = [[../002/|002]]
| next = [[../004/|004]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="32" to="38"fromsection="" tosection="" />
emxwch8z8ikial6073cree128xru146
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004
0
620088
1837944
2025-07-01T15:40:45Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837944
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 4
| previous = [[../003/|003]]
| next = [[../005/|005]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="39" to="41"fromsection="" tosection="" />
dyr860kug1cmq78n2ufquz3xk2mcxtj
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005
0
620089
1837945
2025-07-01T15:44:50Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837945
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 5
| previous = [[../004/|004]]
| next = [[../006/|006]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="42" to="42"fromsection="" tosection="" />
cnj8n8zapz0zhh8olx3tbtgforbbu2s
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006
0
620090
1837946
2025-07-01T15:45:15Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837946
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 6
| previous = [[../005/|005]]
| next = [[../007/|007]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="43" to="43"fromsection="" tosection="" />
ipng56xuk2koszuz1o1nee4lqxxcps9
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007
0
620091
1837947
2025-07-01T15:45:49Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837947
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 7
| previous = [[../006/|006]]
| next = [[../008/|008]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="44" to="44"fromsection="" tosection="" />
8kmyxr0n2tmob0rnba99zuc4keap2nv
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008
0
620092
1837948
2025-07-01T15:46:17Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837948
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 8
| previous = [[../007/|007]]
| next = [[../009/|009]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="45" to="45"fromsection="" tosection="" />
4xcgsn3g5d6aao6ll37wk4r1puskwmo
1837950
1837948
2025-07-01T15:47:24Z
Info-farmer
232
46
1837950
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 8
| previous = [[../007/|007]]
| next = [[../009/|009]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="45" to="46"fromsection="" tosection="" />
ih5ze3ne1ryinpy0qf8l5urymsqj9mp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/353
250
620093
1837949
2025-07-01T15:46:23Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வதற்கேற்றவாது தொழில் முறை வகுக்கப்பட்டுக் கூலிகள் உறுதி செய்யப்படும். தொழிலாளர்களோ அவர்களை வேலைக்கு ஏற்றுக்கொள்ளும் தொழில் நிறுவனங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரப் பொருளாதாரம்|317|அதிகாரப் பொருளாதாரம்}}</noinclude>வதற்கேற்றவாது தொழில் முறை வகுக்கப்பட்டுக் கூலிகள் உறுதி செய்யப்படும். தொழிலாளர்களோ அவர்களை வேலைக்கு ஏற்றுக்கொள்ளும் தொழில் நிறுவனங்களோ இத்தொழில்முறைக் கட்டுப்பாட்டை எதிர்க்க முடியாது. எடுத்துக்காட்டாக, செருமனியில் 1935–இல் தொழிலாளர் பதிவேடு (Labour Register) ஒன்று உருவாக்கப்பட்டுத் தொழிலாளர் தகுதி, தொழிற் பயிற்சி, தேர்ச்சி ஆகியவை தொடர்பான விவரங்கள் அதில் கொடுக்கப்பட்டன. அப்பதிவேட்டை ஒவ்வொரு தொழிலாளியும் வேலையளிப்போரிடம் வேலையில் சேரும்போது கொடுத்திட வேண்டும். வேலையளிப்போர் ஒரு சில நேரங்களில் அப்பதி வேட்டைத் திருப்பிக் கொடுக்க மறுப்பதன் மூலம் ஒரு தொழிலாளியை அதே தொழிலில் தொடர்ந்து இருக்கச் செய்து விடவாம். ஆகவே, தொழிலாளி தான் விரும்பும் வேலைக்குச் செல்வ முடியாது. பதிவேடுகளின் துணையோடு அரசு, தன் திட்டங்களை நிறைவேற்றீடத் தேவைப்படும் தகுதியான தொழிலாளர்களைத் தேவைப்படும் தொழில் துறையில் தனித்தனியாகவோ கூட்டமாகவோ ஈடுபடுத்தியது.
அதிகாரப் பொருளாதாரத்தில் சேமிப்பதற்கான உரிமை அளிக்கப்பட்டாலும் தனி மனிதன் சேமிப்புக் குறைவாகவே காணப்படும். இப்பொருளாதாரத்தில் தனி மனிதன் வருமானம் குறைவாக இருப்பதும் அரசின் விரிந்த சமூகப் பாதுகாப்பு இருப்பதுமே இதற்குக் காரணங்களாகும். முதலீட்டு முடிவுகள் மையமாக எடுக்கப்படுவதால், தனியார் முதலீடு சமநிலைச் சமுதாய அதிகாரப் பொருளாதாரத்தில் இராது. மற்ற அதிகாரப் பொருளாதார அமைப்புகளில் தனியார் முதலீட்டு உரிமை அரசின் உற்பத்தித் திட்டங்களுக்கேற்ப அரசின் ஆணையுடன் அமையும்.
{{larger|<b>அதிகாரப் பொருளாதாரத்தின் குறிக்கோள்கள்:</b>}} முழுமையான சமுதாயக் கண்காணிப்பை அதிகாரப் பொருளாதாரம் ஒன்றினால்தான் பெறமுடியும் என்பதே இதன் குறிக்கோள். இக்குறிக்கோள் சமயத்திற்கேற்றவாறு ஒரு நாட்டுக்குள்ளும், நாட்டுக்கு நாடும் வேறுபடும். அதிகாரம் தழுவிய பொருளாதாரத்தின் பொதுவான குறிக்கோள்கள் வருமாறு;
போர்த் கொடுமையால் மிகவும் பாதிக்கப்பட்ட பொருளாதாரங்களின் சிறப்பு மிக்க குறிக்கோள் நாட்டுப் பாதுகாப்பாகும். எடுத்துக்காட்டாக, முதல் உலகப் போரில் சீரழிவுக்கு ஆளான மேற்குச் செருமனி, தன் பொருளாதார வளங்களை நாட்டின் படைபலத்தைப் பெருக்கப் பயன்படுத்தியது. இட்லர் தன் போர் முயற்சியில் சொன்னது இதுவே; “ஐரோப்பாவிலே தலைசிறந்தவர்களாக விளங்கப் பிறந்தவர்கள் செருமானிய மக்கள்; வன்முறையின் மூலமே எதனையும் சாதிக்க முடியும்; நான் செருமானிய மக்களை ஓநாய்க் கூட்டங்களாக உருவாக்க விரும்புகிறேன்; செருமனி ஒரு நாடு அன்று; அது நாட்டுருவில் உள்ள ஒரு படைவீடு”. இத்தகைய தேசியப் பாதுகாப்பு செருமனியில் முன்னுரிமை பெற்றது போல, துருக்கி நாட்டுக் கமால் பாட்சாவும் “ஐரோப்பாவின் நோயாளி” என்ற அவமதிப்பைப் போக்குவதே துருக்கி நாட்டு அதிகாரம் தழுவிய பொருளாதாரத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டார். இத்தாலி, மறுமுறையும் உரோமாபுரிப் பேரரசை நிறுவவும் இத்தாலியை வலிமைமிக்க நாடாக மாற்றிடவும் தன் அதிகாரம் தழுவிய பொருளாதாரத்தைப் பயன்படுத்தியது. பின்னர், சோவியத்து உருசியாவும் இதே பாதையைப் பின்பற்றி உருசியாவை வலிமை மிகுந்ததாக்க முயன்றது. ஆகவே, அதிகாரம் தழுவிய பொருணாதாரத்தின் நோக்கம் குறுகிய நாட்டுப்பற்றை வளர்த்துத் தத்தம் நாட்டுப் படைபலத்தைப் பெருக்க வேண்டும் என்பதாகும். உற்பத்தி, நுகர்வு, முதலீடு ஆகிய அனைத்தும் இக்குறிக்கோளை அடைவதற்காகவே முடுக்கிவிடப்பட்டன. மற்ற நோக்கங்கள் அனைத்தும் இரண்டாந்தர நோக்கங்களாகக் கருதப்பட்டன.
அதிகாரம் தழுவிய பொருளாதாரம், தனியார் தொழில் முயற்சி, முதலாளித்துவம் சார்ந்த பொருளாதாரத்தினால் ஏற்படும் அழிவுகள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டது. முதலாளித்துவ அங்காடி விலைகளின் மாற்றங்களால் நேரும் பொருளாதார மந்தம் (Economic Depression) முற்றுரிமைகள் (Monopolies), ஏற்றத்தாழ்வுகள், முதலாளித்துவச் சுரண்டல்கள் ஆகியவற்றைக் களைவதை நோக்கமாகக் கொண்டு அதிகாரம் தழுவிய பொருளாதாரம் இயங்கும்.
இதுபோலவே, விலையேற்றம் அல்லது பணவீக்கம் (Inflation) என்ற கடும் சிக்கலையும் தீர்ப்பது ஒரு குறிக்கோளாகும். விலையேற்றம் என்பது எல்லாப் பகுதியினரையும் பாடுக்கத் தக்கது. ஆயினும், குறிப்பிட்ட வருமானமுள்ளவர், ஏழைத் தொழிலாளர், வேளாண்மைக் கூலிகள் ஆகியோர் இச்சிக்கலால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். செருமனி 1923-இல் கடுமையான விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட போது, மக்கள் ஓரிணை மிதியடி வாங்க ஒருவண்டிக் காகித நோட்டுகளைக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமையிருந்தது. பணத்தின் மதிப்பு வீழ்ச்சியுற்று மக்களிடையே மதிப்பற்றுப்போன காரணத்தால், செருமானியர் காகிதப் பணத்தைச் சுருட்டாகப் (Cigar) பயன்படுத்தினர்.
இப்பொருளாதாரத்தின் மற்ற குறிக்கோள்களாவன: (1) விரைவான தொழில் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் (2) தொழில்-<noinclude></noinclude>
aj6itv200nktv2w8bv5c16tw9ql4gk0
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009
0
620094
1837951
2025-07-01T15:54:03Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837951
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 9
| previous = [[../008/|008]]
| next = [[../010/|010]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="47" to="51"fromsection="" tosection="" />
d038f6lkglvvkv9feqywylsoux6psk4
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010
0
620095
1837952
2025-07-01T15:55:48Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837952
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 10
| previous = [[../009/|009]]
| next = [[../011/|011]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="52" to="54"fromsection="" tosection="" />
dhwxt227qes3lz5q1fb9oyg7gpei1f3
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011
0
620096
1837953
2025-07-01T15:57:00Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837953
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 11
| previous = [[../010/|010]]
| next = [[../012/|012]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="55" to="57"fromsection="" tosection="" />
bo0sg7vm8m2w7szcjg06s0wv4wa1fwk
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012
0
620097
1837954
2025-07-01T15:58:19Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837954
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 12
| previous = [[../011/|011]]
| next = [[../013/|013]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="58" to="60"fromsection="" tosection="" />
dtkb3p47kr3u9nzfdpdja8ls0h7pbrk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/354
250
620098
1837958
2025-07-01T16:35:20Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களைத் தகுந்த இடங்களில் மாற்றியமைத்தல் (3) வேளாண்மையில் புதிய உத்திகளைக் கையாளுதல், தரத்தை உயர்த்துதல் (4) விபத்து நேரிடின் உதவித்தொகை, ஓய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரப் பொருளாதாரம்|318|அதிகாரப் பொருளாதாரம்}}</noinclude>களைத் தகுந்த இடங்களில் மாற்றியமைத்தல் (3) வேளாண்மையில் புதிய உத்திகளைக் கையாளுதல், தரத்தை உயர்த்துதல் (4) விபத்து நேரிடின் உதவித்தொகை, ஓய்வூதியம் வழங்குதல், (5) பொருளாதாரத் தன்னிறைவு காணுதல்.
{{larger|<b>அதிகாரப் பொருளாதாரத்தின் குறிக்கோள்களை வளமைப் பங்கீட்டின் மூலம் அடையும் முறை:</b>}} மேற்கூறிய குறிக்கோள்களை அடைவதற்கு நாட்டின் வளங்கள் நல்ல முறையில் பயன்படுத்தப் பெறல் வேண்டும். நாட்டின் வளங்களைப் பங்கிட்டு, அவற்றின் மூலம் உச்ச விளைவுகளை ஏற்படுத்துவது தலைமையாட்சியாளரின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். இச்சிக்கலைத் தீர்க்கும்போது, முதலில் தலைமை ஆட்சியாளர் பொது நோக்கங்களை வகுப்பார். பிறகு அவர் மையத் திட்டக் குழுவிடம் ஒப்படைப்பார். திட்டக்குழு, நுகர்வுப் பொருள்கள் (Consumer Goods), மூலதனப் பொருள்கள் (Capital Goods) ஆகியவற்றின் தேவைகளை அறிந்து அவற்றின் உற்பத்தியைப் பற்றியும் தேவைப்படும் உற்பத்திக் காரணிகளைப் பற்றியும் அறிந்து, தற்போதைய எதிர்கால உற்பத்திக் காரணிகளின் அளிப்போடு (Supply) ஒப்பிட்டு ஒரு நீண்டகாலத் திட்டத்தைத் தீட்டும். ஆனால், செய்முறையை எளிமைப்படுத்துவதற்காக நீண்ட காலத் திட்டங்கள். வல்லுநர்களின் உதவி கொண்டு குறுகிய காலத் திட்டங்களாக மாற்றியமைக்கப்படும். இத்திட்டங்களின் இடைக்கால உற்பத்தி இலக்குகள் உறுதிசெய்யப்பட்டுத் தொழிற்சாலைகளின் நிருவாகிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். நிருவாகிகள் உள்ளீடு, வெளியீடு உற்பத்தி உறவுகளை (Input-Output Relations) அறிந்தவர்கள். அவர்கள் திட்டக்குழுவினால் அனுப்பப்படும் குறியீடுகளை மதிப்பிட்ட பின், அவற்றின் வாய்ப்புக் கூறுகள் தொடர்பான அறிவுரைகளைத் திட்டக்குழுவிற்குத் திருப்பி அனுப்புவர். இவ்வறிவுரைகளின் அடிப்படையில் திட்டக்குழு இறுதித் திட்டத்தை உருவாக்கும். இத்திட்டங்கள் ஏற்புடையதாயின், அவை அலுவலக உற்பத்தித் திட்டங்களாக மாறுகின்றன. திட்டத்தின் விரிவான உற்பத்தி இலக்குகள் கட்டாய அறிவுரைகளாக மாறுகின்றன. உண்மையில் அவை ஆணைகளாக (Commands) இருப்பதால், அவற்றைச் சிறந்த முறையில் நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகிறது. பின்னர், மையத் திட்டக்குழு திட்டங்களின் குறியீடுகள் எவ்வாறு எட்டப்படுகின்றன என்பதைக் கூர்ந்து கவனித்து எங்கெங்குச் சமமின்மை (Imbalances) ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் அதனை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் தேவையான உற்பத்திக் கருவிகளைப் பெறுவதற்கான வாங்கும் திறன் வழங்கப்படும். இத்திறன் தொழில் நுட்பத்தைக் கொண்டும் திட்டப் பங்களவைக் (Plan Quota) கொண்டும் உறுதி செய்யப்படும். வாங்கும் திறன் (Purchasing Power) உதவிகொண்டு ஒவ்வொரு தொழில் நிறுவனமும் உற்பத்திக் காரணிகளை அமர்த்தித் தம் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். ஆனால், தங்கள் முயற்சியில் ஒரு முக்கியக் கருத்தை மனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, உற்பத்திப் பண்டங்களை மிகக் குறைந்த செலவில் உருவாக்க வேண்டும். நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களுக்கு விலையைத் திட்டக்குழு முன்னதாகவே வரையறை செய்துவிடுகிறது. அந்த விலையோடு நிறுவனத்தின் இறுதிநிலைச் செலவு (Marginal Cost) சமமாகும்போது, அந்நிறுவனத்தின் சராசரிச் செலவு (Average Cost) தனது குறைந்த அளவை எட்டும். அந்த அளவு வரும்வரை ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்தியைப் பெருக்க வேண்டும். எனவே, இவ்வமைப்பில் செயல்படும் அரசுத் தொழில் நிருவாகிகள் ஏறக்குறைய நிறைவுப் போட்டியில் காணப்படும் தனி நிறுவனங்களைப் போலவே நடந்துகொள்ள வேண்டியிருக்கும். எவ்வாறு ஒரு நிருவாகி, தன் பண்டங்கனைக் குறைந்த சராசரிச் செலவில் உற்பத்தி செய்கிறார் என்பதைப் பின்வரும் நிறைவுப் போட்டி விளக்கப் படத்தின் மூலம் உணர்த்தலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 354
|bSize = 480
|cWidth = 174
|cHeight = 130
|oTop = 322
|oLeft = 280
|Location = center
|Description =
}}
{{center|அதிகாரப் பொருளாதாரம்}}
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் OX என்ற படுகிடைக்கோடு உற்பத்தியைக் காட்டுகிறது. OY என்ற செங்குத்துக்கோடு பண்டத்தின் விலையையும் செலவையும் காட்டுகிறது. PR என்ற படுகிடைக்கோடு உற்பத்தியின் எல்லா நிலையிலும் விலை ஒன்றே என்பதைக் காட்டுகிறது. இவ்விலை, திட்டக் குழுவினால் முடிவு செய்யப்படுவதால் இதனை மாற்றுவதற்குத் தொழில் நிருவாகிக்கு உரிமையில்லை தொழிற்சாலையின் உற்பத்திச் செலவுகள், ATC என்ற சராசரி மொத்தச் செலவு வளைகோட்டின் மூலமாகவும், MC என்ற இறுதிநிலைச் செலவு வளை-<noinclude></noinclude>
ie4c2rz457p5ycwc2uyuee6auj5cd1h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/355
250
620099
1837960
2025-07-01T17:03:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோட்டின் மூலமாகவும் காட்டப்பட்டுள்ளன. OM என்ற உற்பத்தி நிகழும்போது, பண்டத்தின் சராசரிச் செலவு மிகக் குறைந்த அளவை எட்டுகிறது. அந்த உற்பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1837960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகாரப் பொருளாதாரம்|319|அதிகாரப் பொருளாதாரம்}}</noinclude>கோட்டின் மூலமாகவும் காட்டப்பட்டுள்ளன. OM என்ற உற்பத்தி நிகழும்போது, பண்டத்தின் சராசரிச் செலவு மிகக் குறைந்த அளவை எட்டுகிறது. அந்த உற்பத்தியில் இறுதிநிலைச் செலவும் சராசரிச் செலவும் சமப்படுகிறது. உற்பத்தியின் இந்நிலையே உகந்த அளவு உற்பத்தி (Optimum Outpur) எனப்படுகிறது. உற்பத்தி அளவும் ஏறக்குறைய திட்டக்குழு வரையறுத்த உற்பத்தியாகவே இருக்கும். பொருள்களை விற்பதன்மூலம் கிடைக்கும் வருமானத்தின் துணை கொண்டு ஒவ்வொரு தொழில் நிறுவனமும் தனது பணநெகிழ்வுத் தன்மையைப் (Liquidity) பாதுகாத்துக் கொள்ளும். அரசு வங்கி எல்லா நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்குகளைத் தன்னகத்தே வைத்திருப்பதனால், நிறுவனங்கள் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட வாங்கும் திறனைத் திட்டக் குறிக்கோளுக்காகப் பயன்படுத்தி உள்ளனவா? இல்லையா என்பதைக் கண்காணிக்க இயலும்.
இரண்டாம் சிக்கலான காரணி விகிதங்களையும் (Factor Proportions) குழுவே தீர்மானிக்கும், தொழிற் சிறப்புக்குத் தக்கவாறு உழைப்பு மிகுதியாகத் தேவைப்பட்டு எந்திரங்கள் குறைவாகத் தேவைப்பட்டால், அதற்கேற்ப விகிதங்கள் முடிவு செய்யப்படும். எப்படியிருப்பினும், தொழிலாளர்களுக்குத் தீங்கு ஏற்படா வகையில் புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி அதிகாரப் பொருளாதாரத்தில் உற்பத்தி பெருக்கப்படும். மூன்றாவது, இறுதியான மூலதனக் குவிப்புப் பற்றியும் திட்டக் குழுவே முடிவு செய்யும். நுகர்வின் அளவைக் குறைப்பதன் மூலம் நாட்டின் முதலீட்டைப் பெருக்குவதற்கான மூலதனக் குவிப்பை (Capital Accumulation) குழு வலியுறுத்தலாம். நுகர்வைக் குறைப்பதற்கு, நுகர்வுப் பொருள்களின் விலையை உயர்த்தலாம். அதற்காக விற்பனைப் புரள் வரியை (Turn-over Tax) மக்கள் மீது சுமத்தலாம். இதன் மூலம் அரசு பெறும் தொகை எதிர்கால முதலீட்டிற்காக ஒதுக்கப்படும்.
தொழிற்சாலைகளிடையே இருக்க வேண்டிய சமநிலை அமையக் குழுவே முடிவு செய்கிறது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உற்பத்திக் காரணிகளின் அளவு, அவற்றாலான உற்பத்தியின் அளவு ஆகியவை குறித்துப் புள்ளி விவரங்கள் முதலில் திரட்டப்படும். அவ்விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு தொழிற்சாலையின் கையிருப்பும் கணக்கிடப்படும். இக்கையிருப்பின் உதவியால் எந்தெந்தத் தொழிற்சாலைக்கு எவ்வளவு உற்பத்திக் காரணிகள் அல்லது உற்பத்தி தேவைப்படும் என்ற நிலையறிந்து, அனைத்துத் தொழிற்சாலைகளின் சமநிலை கொணரப்படும். நாட்டின் வருமானத்தை எவ்வகையில் பகிர்ந்தளிப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பும் மையக் குழுவிடம் ஒப்படைக்கப்படும். இப்பொருளாதாரத்தில் தனியார் உடைமை ஒடுக்கப்படுவதால் வட்டி, ஆதாயம், வாரம் என்ற வருவாய்கள் (பயன்கள்) மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமநிலைப் பொருளாதாரத்தில் இவ்வெகுமதிகள் தோன்றா. வருமானம், கூலியாகி உழைக்கும் இனத்திற்குப் போக மீதம் அரசின் எதிர்கால முதலீட்டிற்காக வைத்துக் கொள்ளப்படும். எனவே, தனியார் பொருளாதாரத்தில் காணப்படுவது போல வருமானம் பிரித்தளிக்கப்படாது.
அதிகாரப் பொருளாதாரம் மனிதனால், மனிதத் தேவைக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். எனவே, அவற்றில் நிறைகளும் குறைகளும் இருப்பது இயற்கையே. இவ்வமைப்பு, எங்கெங்கு நிலை பெற்றிருக்கிறதோ அங்கெல்லாம் வறுமையில் வாடும் மக்களுக்கு நல்வாழ்வை அளிக்க முன்வருகிறது. இது எல்லாத் தரப்பு மக்களின் நலனையும் காக்கும் ஓர் அமைப்பாகும். பொதுமக்களின் நலம், ‘ஒவ்வொருவரும் ஒவ்வொருவரது நலத்திற்காக’ என்ற உன்னத அடிப்படையில் இயங்குகிறது. எனவே, எளிய மனிதனுக்கு இவ்வமைப்பு ஒரு நற்பேறாக அமைகிறது. பல பேரரசுகள் இந்த அமைப்பின் மூலமாகத்தான் தங்களது அரசியல் கூட்டமைப்பையே உருவாக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, முதல் உலகப் போரில் அவமானப்படுத்தப்பட்ட செருமனி, இரண்டாம் உலகப் போரில் தலைநிமிர்ந்து நின்று உலகிற்கே ஓர் அறைகூவல் விடுத்தது. அதுபோன்றே, பாகிசுதான் பொருளாதாரம் இராணுவ ஆட்சிக்கு வந்த பின்னரே தன் பொருளாதார மறுமலர்ச்சியை எட்டியது. அயூப்கான் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளை (1958–1968) பாகிசுதானின் சீரமைப்புப் பத்தாண்டுகள் என்றும், இந்தக் காலத்தில்தான் பாகிசுதானில் ஒரு பொருளாதார அற்புதம் நிகழ்ந்தது என்றும் அறிஞர் கூறுகின்றனர். பாகிசுதானின் நேசிய வருமானமும் முன்பு இருந்த இரண்டு விழுக்காட்டைவிட 5.4 விழுக்காடாக உயர்ந்தது. சோவியத்து உருசியா, சீனா ஆகிய நாடுகளின் அரசியல் சிறப்புக்கு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட அதிகாரப் பொருளாதார முறையே முக்கியக்காரணமாகும்.
இருப்பினும், இந்த அமைப்பின் நீண்ட நாள் விளைவுகள் ஒரு கேள்விக் குறியாகத்தான் உள்ளது. இந்த அமைப்பு பெரும்பாலும் அச்சம், பாதுகாப்பின்மை ஆகியவற்றின் பயனாகத்தான் ஏற்பட்டது. அது ஒரு நெருக்கடி காலச் சித்தாந்தம் மட்டும்தான். அந்த நேரத்தில் மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து, நாட்டின் நலனுக்காகப் பாடுபடுவது இயற்கை. ஆனால், இத்தியாகத்தை மக்கள் நீண்ட நாட்களுக்குச் செய்வார்களா? என்-<noinclude></noinclude>
bal5byluzdpoalw169c8tbdebd94nwx
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013
0
620100
1837989
2025-07-02T02:52:27Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837989
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 13
| previous = [[../012/|012]]
| next = [[../014/|014]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="61" to="65"fromsection="" tosection="" />
n4fjq6u4yoe5zn0cfh01bo1xsax4jb7
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014
0
620101
1837993
2025-07-02T02:55:58Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837993
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 14
| previous = [[../013/|013]]
| next = [[../015/|015]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="66" to="66"fromsection="" tosection="" />
gw7di3zkbi4guj2fgdtlbpw9cl3217f
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015
0
620102
1837995
2025-07-02T02:57:37Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837995
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 15
| previous = [[../014/|014]]
| next = [[../016/|016]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="67" to="68"fromsection="" tosection="" />
d10skhqdcjclswp2veywt49oxi1wrj6
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016
0
620103
1837997
2025-07-02T02:58:59Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1837997
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 16
| previous = [[../015/|015]]
| next = [[../017/|017]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="69" to="72"fromsection="" tosection="" />
cqeabtx5iz2t8b6vpomniad0ujapj5n
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017
0
620104
1838000
2025-07-02T03:00:16Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838000
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 17
| previous = [[../016/|016]]
| next = [[../018/|018]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="73" to="73"fromsection="" tosection="" />
dzl1lhd0ebcrres8a6eph6knnk0sbcn
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018
0
620105
1838002
2025-07-02T03:01:00Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838002
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 18
| previous = [[../017/|017]]
| next = [[../019/|019]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="74" to="74"fromsection="" tosection="" />
cdefohs1r31h8ja6si47kbc4j5ghcp4
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019
0
620106
1838005
2025-07-02T03:02:03Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838005
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 19
| previous = [[../018/|018]]
| next = [[../020/|020]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="75" to="75"fromsection="" tosection="" />
t5s5bxrxtgyf2sxny48tqu1gznoj7xy
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020
0
620107
1838007
2025-07-02T03:03:05Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838007
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 20
| previous = [[../019/|019]]
| next = [[../021/|021]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="76" to="76"fromsection="" tosection="" />
sg2gnmxz6i3dchqmb7vag8k4h9k6gpu
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021
0
620108
1838011
2025-07-02T03:11:52Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838011
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 21
| previous = [[../020/|020]]
| next = [[../022/|022]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="77" to="87"fromsection="" tosection="" />
ngghhnttsx9jm4hzmibiegc0i2ke8b1
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/022
0
620109
1838013
2025-07-02T03:14:01Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838013
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 22
| previous = [[../021/|021]]
| next = [[../023/|023]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="88" to="90"fromsection="" tosection="" />
2iyebkebxxixrtwdn6dsajl6tqzrvty
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/023
0
620110
1838015
2025-07-02T03:16:51Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838015
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 23
| previous = [[../022/|022]]
| next = [[../024/|024]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="91" to="91"fromsection="" tosection="" />
5q6ulvyi0co1u0g35etbsyqfd2fk6vd
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024
0
620111
1838018
2025-07-02T03:19:53Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838018
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 24
| previous = [[../023/|023]]
| next = [[../025/|025]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="92" to="93"fromsection="" tosection="" />
dwjjr192g8nj21xnogpqgh4u488jnzj
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/025
0
620112
1838021
2025-07-02T03:25:26Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838021
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 25
| previous = [[../024/|024]]
| next = [[../026/|026]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="94" to="95"fromsection="" tosection="" />
cdnd9mnhz16g9jzv75ib986j7d8wu5h
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026
0
620113
1838023
2025-07-02T03:28:55Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838023
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 26
| previous = [[../025/|025]]
| next = [[../027/|027]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="96" to="97"fromsection="" tosection="" />
1ytrmdq0hbcx1le6ptcd2mp2zz4ef5m
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027
0
620114
1838025
2025-07-02T03:34:54Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838025
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 27
| previous = [[../026/|026]]
| next = [[../028/|028]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="98" to="100"fromsection="" tosection="" />
iqlg2e55g3tv1xy7hjqh1ywi71ccbjx
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/028
0
620115
1838026
2025-07-02T03:36:02Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838026
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 28
| previous = [[../027/|027]]
| next = [[../029/|029]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="101" to="101"fromsection="" tosection="" />
cmwfpq6x7dizpn4jd94y5trir55r8d6
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/029
0
620116
1838027
2025-07-02T03:36:31Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838027
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 29
| previous = [[../028/|028]]
| next = [[../030/|030]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="102" to="102"fromsection="" tosection="" />
i45y5neausi1embcw6j5hcrjd8mkn59
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/030
0
620117
1838028
2025-07-02T03:37:05Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838028
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 30
| previous = [[../029/|029]]
| next = [[../031/|031]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="103" to="103"fromsection="" tosection="" />
64222lkr65y8d5b4ts2ijcr41asqjke
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/031
0
620118
1838029
2025-07-02T03:38:30Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838029
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 31
| previous = [[../030/|030]]
| next = [[../032/|032]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="104" to="104"fromsection="" tosection="" />
dg7ilts41f6r11gbk9rdg5e6okttcw9
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/032
0
620119
1838032
2025-07-02T03:44:05Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838032
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 32
| previous = [[../031/|031]]
| next = [[../033/|033]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="105" to="112"fromsection="" tosection="" />
gow0ow8se1loa8zqsvyuimtb9elyik2
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033
0
620120
1838035
2025-07-02T03:49:11Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838035
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 33
| previous = [[../032/|032]]
| next = [[../034/|034]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="113" to="116"fromsection="" tosection="" />
5tlk86bucsi18362kcm8owx88ftmv65
1838037
1838035
2025-07-02T03:51:56Z
Info-farmer
232
பாண்டி நாட்டு முறை
1838037
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 33
| previous = [[../032/|032]]
| next = [[../034/|034]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="113" to="116"fromsection="பாண்டி நாட்டு முறை" tosection="பாண்டி நாட்டு முறை" />
6u6gdxfhf6hdvggbw1au2o775uguuvx
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034
0
620121
1838042
2025-07-02T03:54:56Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838042
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 34
| previous = [[../033/|033]]
| next = [[../035/|035]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="116" to="126"fromsection="பாண்டி நாட்டு முறை" tosection="பாண்டி நாட்டு முறை" />
8yknsbeww0fkvda3movrr6s21brofor
1838043
1838042
2025-07-02T03:56:46Z
Info-farmer
232
சோழ நாட்டு முறை
1838043
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 34
| previous = [[../033/|033]]
| next = [[../035/|035]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="116" to="126"fromsection="சோழ நாட்டு முறை" tosection="சோழ நாட்டு முறை" />
6wuy7h3ovr1d3205o66wjo4czombuwb
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035
0
620122
1838044
2025-07-02T03:57:50Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838044
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 35
| previous = [[../034/|034]]
| next = [[../036/|036]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="127" to="127"fromsection="சோழ நாட்டு முறை" tosection="சோழ நாட்டு முறை" />
b44wmqvxl76fkfy9cjgggqy7seadhpf
1838048
1838044
2025-07-02T03:59:54Z
Info-farmer
232
- துப்புரவு
1838048
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 35
| previous = [[../034/|034]]
| next = [[../036/|036]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="127" to="127"fromsection=" " tosection=" " />
rto3pgs3sb0rhqvyb6mdeskbztvt7pg
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036
0
620123
1838046
2025-07-02T03:58:34Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838046
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 36
| previous = [[../035/|035]]
| next = [[../037/|037]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="128" to="128"fromsection="சோழ நாட்டு முறை" tosection="சோழ நாட்டு முறை" />
068b0vq4c0xexe2semcdw7fufgwy0wk
1838049
1838046
2025-07-02T04:00:17Z
Info-farmer
232
- துப்புரவு
1838049
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 36
| previous = [[../035/|035]]
| next = [[../037/|037]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="128" to="128"fromsection=" " tosection=" " />
o3d9cm6lios8zzwm47x6tba09i8pl5m
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037
0
620124
1838047
2025-07-02T03:59:01Z
Info-farmer
232
+ படிவத் தரவு
1838047
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 37
| previous = [[../036/|036]]
| next = [[../038/|038]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="129" to="129"fromsection="சோழ நாட்டு முறை" tosection="சோழ நாட்டு முறை" />
47ohfa8n7zxezm11hyvtz31il1vrqel
1838050
1838047
2025-07-02T04:00:43Z
Info-farmer
232
- துப்புரவு
1838050
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஞா தேவநேயன்
| translator =
| section = 37
| previous = [[../036/|036]]
| next = [[../038/|038]]
| notes =
}}
<pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="129" to="129"fromsection=" " tosection=" " />
22mkw9j3iay6t6x2ygj3a3jd5tmouoc
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/58
250
620125
1838082
2025-07-02T05:23:10Z
TVA ARUN
3777
001_சோதனை
1838082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கடைநர்
பள்ளியெழுச்சிகுறித்து ஒலிப்பினும் யான் நோகின் றேன என்று ஆலத்தூர் கிழார் தாம் பாடிய கையறுநிலைப்பாடலிற் குறித்துள்ளார் (புறம்.225; 9-14). ஓய்மான் வில்லியாதன மிகுதியான பரிசில் வழங்கியமையால் இனித் தன் சிறு கிணைக் குரல் இரவலரை நீக்காத வள்ளியோர் கடைத் தலை களில் தோன்றாது எனப் பொருநன் செருக்கொடு புகனறான் (புறம். 376:16-23),
கடைநர் - கடைசலிடுவோர். சங்குகளை யறுத்து வளை முதலியவற்றைக் கடைநர் - கடைசலிடுவோர் முதலாகக் கண்ணுள் வினைஞர் ஈறாக உள்ள வரும் பிறரும் கூடி நிற்றலால் எழும் மற்றைய ஓசைகளுடன் கலந்து பல்வேறு பண்டம் வந்திறங்கும் துறைமுகப் பட்டினத்து ஓசை போல மதுரை அல்லங்காடியில் ஒலிக்கும் (மது. 511-518). கடைநாள் - 1. கடைசி நாள். தைஇ நின்ற தண் பெயற் கடைநாளில் - கடைசி நாளில் - பகன்றை அரும் புகள் முகில் சிதறும் நுண் துளிகளால் மலர்ந்தன (அகம். 24:3-5). மழை பெய்த கார்ப் பருவத்தின் கடைநாளில் உலகிற்குப் பயன் விளைத்துத் தமக் குரிய காலங் கழிந்து போன வெண்முகில்கள் வான்தோய் மலையுச்சியில் அசைந்தன (அகம். 139:5-7). தண்மழை பெய்து தணிந்த கூதிர்ப் பரு வக் கடைநாளில் தலைவி தமியளாய்ப் பிரிவுத் துபைம் எய்தத் தலைவன் பொருள்வயிற் பிரித் தான் (அகம். 163:2-4). தண் பெயற் கடைநாளில் கொம்பு முழங்கத் தமது வண்டற் பாவையை நீருண்ணும் துறையிடத்தே கொணர்ந்து மகளிர் குரவைக் கூத்தாடினர் (அகம். 269:14-20). சிறுமழை பெய்யும் கார்ப் பருவத்தின் கடைநாள் சேற்றில் நிற்றலை வெறுத்த செங்கட் காரான் நள்ளிரவில் ஐயெனறு ஒலிக்கும் (குறு. 261:2-4). வாடை வந்த சில பெயலையுடைய கடைநாளில் நின் துன்பந் நீர நீ கூறத் தகுவனவற்றைத் தலைவனிடம் கூறி னாலென்ன என்று தோழி தலைவன் கேட்பத் தலைவிக்குக் கூறினாள் (குறு. 332: 1-3). மேகம் மிக்க மழை பெய்தொழிந்த கார்ப் பருவக் கடை நாளில் அன்பற்ற வாடைக் காற்று உழுந்தின் இவைகளெல்லாம் பிதையும்படி வீரித் தலைவியை விட்டு நீங்காது நாள்தோறும் வருத்தும் (நற். 89: 3-7). காட்டில் மழை பொழிந்த கடைநாளில் பால் விலை கூறி ஏகும் இடையன், மழைத்துளி ஒருபக் கம் நனைப்பக் கையின் கோலையூன்றி அதனமேல் கால் வைத்து ஓடுங்கி நின்று வாய் குவித்து ஊதும் சீழ்க்கை ஒலி யறிந்து, யாட்டின் தொகுதி பிற புலம் புகாது வந்து தங்கும் (நற். 142:1-8).
2. கடையாமம். அரிவையின தனிமைத் துன்பம் நீங்
50
கண்
குமாறு தலைவனின் தேர் அச்சிரக் காலத்தில பின் பனியையுடைய கடைநாளில் கடையாமத்தில - வந்து சேர்ந்தது (குறு. 338:5-8).
3. இறக்கும் நாள். கடைநாள் - இறக்கும் நாள் - (இதுவென்று உலகத்திலே அறிந்தவருமில்லை (கவி.
18:15).
கடைமணி - கடைக்கண். வெட்சி மறவர் விடியலிலே ஆனிரையைக் கவர்ந்து வெஞ்சுரத்து நெடுந் தொலைவு சென்றமையால் தாய்பபசுக்களைப் பிரிந்த கன்றுகள் அவற்றை நினைந்து, கடைமணி கடைக்கண் -வழியாக உகுதத துன்பக் கணணீரைக் கரந்தை வீரர் அவவானிரையை மீட்டுத துடைத் தனர் (அகம்.131:6-9). புலியைக் குத்தி வீழத்தியத னால் புலவு நாறும் களிற்றின் மருப்பைப் போன்று தலைவியின் கடைமணி சிவந்தது (நற்.39:5-7). கடைமுகம் - புறக்கடை. மன்னர் பெருமனையின் கடைமுகத்தில் - புறக்கடையில் - பலியாகிய வெண் சோற்றினை எறிவர் (புறம்.331:11,12).
கடைமுறை - இறுதி. உலகில முதனமுறை, இடை முறை, கடைமுறையினும் - இறுதியினும்-படைப்பு, அளிப்பு, அழிப்பு என்னும் தொழில் வேற்றுமை பற்றித் திருமால் பிறவாத பிறப்பில்லை; அவரைப் பிறப்பித்தோரு மில்லை (பரி. 3:71, 72).
கடையத்தார் - வெண்ணாகனின் தந்தை. இவர் குறுந் தொகை 223-ஆம் பாடலைப் பாடிய வெண்ணா கனாரின் தந்தை என்றும் மதுரைக கடையததார் என்று அழைக்கப் பெற்றார் என்றும் அறிகிறோம் (குறு. 223- அடிக்குறிப்பு).
கடையல்
-
கடைதல், கடையல் (தயிர்) கடைதல் போன்ற குரலையுடைய வேங்கை தன் பிணவின் மிருபபொறாது காட்டில் பன்றி வரும் நெறி யினைப் பார்த்திருக்கும் (அகம். 277:5-9). கடையோர் - பின் செல்வோர். நலங்கிள்ளியது படை யின் முன் செல்வோர் பனையின் நுங்கினை யுண்ண, இடைச் செல்வோர் அதன் கனியை யுண்ண, கடையோர் - பின் செல்வோர்- சுடப் பட்ட பனையின் கிழங்கினை உண்ண இவ்வாறு ஒழுங்குடையதாய் அப்படை உலகத்தை வலமுறச் சூழந்தது (புறம். 225:1-4).
கண் - 1. விழி. சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை (புறம், 2:21). மறவர் கையாற் கவிக் கப்பட்ட கண்ணால் குறித்துப் பார்க்கும் பார்வையினை உடையவர் (புறம்.3:19,20).சிறு
கண் யானை (புறம். 6: 13; 170: 10; 316: 12; 398:18; சிறு. 142; முல்லை. 31; அகம்.24; 13;<noinclude></noinclude>
ivzb4e9sx8bvx6hvv4lgoyix6hglz4c
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/70
250
620126
1838084
2025-07-02T05:25:02Z
TVA ARUN
3777
001_சோதனை
1838084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
62
கண்
தலைவியின தனிமைநோக்கு அவன் பெருங்காடு கடந்து போகும்போதும் அவனமுன தோன்றியது (நற. 113:4-12), பொய்கையில மலர்கொய்து வந்த துவட்சியால் வருந்திய தோழியர் குழாம் நம் மெய்ந்நோ வொழித்து கண் இனிது படுவதற்கு (உறங்குதற்கு) அனனையும் சிறிது சினந்தணிந்து உயிர்ப்புடையளானாள் எனறு தோழி தலைவிக்குச் சொனனாள் (நற. 115: 1-3). தலைவன் வரைலிடை வைத்துப பொருள்வயிற் பிரிந்திருந்த நிலையில் ஆற்றாத தலைவியின் கண் வாளாற் பிளக்கப் பட்ட மாவடுப் போன்ற தம் வடிவை யிழந்தன (நற்.133:1,2). முன்பு தலைவன் நினக்கு நெய்தல் மாலை சூட்டியதனைக் கண்ணாலறிந்ததன்றி இம் மூதூர் பிறிதொன்றையும் அறிந்தில தாதலின் அதற்கு நீ ஆற்றாத தென்னோ என்று தோழி தலைவிக்குரைப்பாள் போலத் தலைவனுக்கு அலர் அறிவுறுத்தினாள் (நற்.138:5-11), பெருங்கண் ஆயம் (நற். 140:8). தலைவனுடன் மகளைப் போக்கிய தாய் ஓரை யாடுகின்ற தோழியர் கூட்டத்தையும் ஆடிடமாகிய நொச்சிவேலியை யும் காணுந்தோறும் விரைந்து நீர்வடிகின்ற கண்ணையுடையவளாய்க் கலங்கினாள் (நற்.143: 1-40. இரவுக்குறியிடத்திற்குத் தலைவன் வரும் வழியில் பெரிய களிற்றினைப் புலி தாக்குதலால் கரிய பிடி மேகம் போல் முழங்குதலைக் கேட்டு நடுங்கித் தலைவியின் (நீல) மலர்போன்ற மையுண்ட கண அழ அவள் நெஞ்சமும் கவலைகொண்டது (நற். 144:1-4). தனித்து நின்ற தலைவியை அணங்கு போற் கொண்டு தலைவன் பாராட்டிச் சொல்லா டிய வழி அவள் பற்களினினறு முறுவல் தோனறிப் பல்லிதழ் உணகண்ணினினறு நீர் பரந்தது (நற். 155). 'தலைவர் இரவிலே வருகின்ற வழியை யான் கண்டதில்லை யாயினும் அதுதான் மிக்க இருள் வடிவமாய என்முன நின்று இதுவே அவர்வரும் இருட்பொழுதென்று என் கண்ணைக் கொல்லும்' எனத் தலைவி தோழியிடத்துக் கூறினாள் (தற். 158:1-4,9), குவளை மலரை ஒன்றோடொன்று எதிரெதிர் வைத்துப் பிணைத்த பிணையல் போன்ற தலைவியின செவ்வரி பரந்து மதர்த்த மழைக் கண்ணைக் காணுமுன் யான நயன், நண்பு, நாண் முதலான பண்புகளையும் ஒழுக்கத்தையும் நின்னினும் சிறப்பாகக் கொண்டிருநதேன் எனத் தலைவன் பாங்கனிடம் கூறினன் (நற்.160). கண் போல் நீலம் (நற்.161:8; 273:8). மனையுறை புறவின் பெடையோடு சேவல் சேர அவற்றை நோக்கி மாலைப் பொழுதில் யான் தனியே யிருத்தல் ஆற் றேன் என்று தலைவனிடம் கூறித் தலைவி நீரொழு
கண்
கும் தன் மையுண்ட துன்புற்றனவாய்க் கலுழ நின்றாள் (நற். 168:1-5). தலைவியின் விருப்ப மூட்டும் (குவளை) போதினைப் போலும மையுண்ட கண்ணைக் காண்டொறும் தலைவன் அறநிலை நின்றோர் அடையும் பயனை எய்தினான் (நற். 166: 3-5). மடப்பம் மிக்க கணணையுடையவள் விறலி (நற. 170:1-3). தலைவர் பிரிவாராயின் முன்பு அவரது மார்பிலே கிடந்து துயின்ற கண் இனி எவ்வாறு உறங்கவல்லன என்று தோழி பிரிவறிந்து தலைவியிடம் நொந்து கூறினாள் (நற்.171:5-11). நீயுற்ற காமநோயினை அறியாது நின மேனி வேறுபாட்டினைத் தீர்ப்பது வெறியே யென உணாந்து அயரும் அனனைக்கு முருகன் கண்ணி லும் கனவிலும உண்மையைக் காட்டி 'இவள் நோய் என்னால் வந்ததன்று; அம்மலைகிழவோனே இவளுக்கு இந்நோய செய்தனன' என்று கூறினால் அம்முருகனுக்கு அதனால் ஏத முண்டோ என்று தோழி தலைவியை வினவுவாள் போலத் தலைவ னுக்கு வெறியறிவித்தாள் (தற்.173:4-9). ஓவியர் எழுதத் தகுநத எழிலையுடைய என மையுண்ட கண்ணில் பாவை தோன்றாதபடி வெள்ளம் போலும் நீர் வடிய யான் அவ்வெள்ளத்திலே விழுந்து நீந்தி யுழலும் நாள் வந்தது போலும் என்று தலைவனின் பிரிவுக் குறிப்புணர்ந்து தலைவி நொந்தனள் (நற். 177:8-10). காதலனான துறை
வன் கர்த்துவரும் தேரினை இப்போது கண் ணால் காணவும் கூடவில்லை என்று தோழி தலைவியிடம் கூறுவாள் போல் சிறைப்புறத் தலைவன் கேட்ப அவனுக்குச் செறிப்பறி வித்தாள் (நற்.178:6,7). மையுணட கண்ணின் மணியூடு வாழும் பாவை வெளிவந்து நடை பயின்றாற் போலும் அழகிய சாயலையுடைய என் குறுமகள் விளையாடிய நொசசியையும திண்ணை யையும் நோக்கி நினைந்தால் அவ்வாறு நினையும் உள்ளமும் வெந்தழியும் என்று மகட்போக்கிய தாய் மனையில் மருண்டுரைத்தாள் (நற்.184:6-9). வலை யிலகப்பட்ட மானினது மருட்சிமிக்க விழிபோலும் மழைக்கண்ணையுடைய குறுமகள் தலைவி (நற். 109:8), நெல்லறுக்கும் உழவரின் அரிவாளால் அறு பட்டுப் பல இதழ்கள் விளங்கும் கூம்பாத நெய் தல் மலர் நீரில் மூழ்கி அலைகின்ற தோற்றத்தைப் போலத் தலைவியின் கண் ஈரமுடையனவாய்க் கலுழும் (நற்.195:6-9). வரைபொருட்குப் பிரிந்த தலைவனின பிரிவாற்றாத தலைவியின் கண்கள் நீரைப் பெருக்கின (நற். 197:3), தலைவியைத் தலை வனுடன் போக்கிப் பின தேடிச் சென்ற செவிலி கானிடையிட்ட சுரவழியில் தன்மகள் போலக் கண்<noinclude></noinclude>
a7lcu532vmwxt9eowknil4bwaw9vkoy
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/69
250
620127
1838085
2025-07-02T05:25:08Z
TVA ARUN
3777
001_சோதனை
1838085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
61
கண்
தம் கண்ணில் ஒற்றி அவளிடம் அன்பு பாராட்டி னன் (நற்.28: 1). படுக்கையிடத்துத் தன்னை அணைத்திருந்த தாய் சிறிதே கையை நெகிழ்ப் பினும் தலைவி தன் பேரமர் மழைக்கண் நீர் வடிப் பக் கலங்கியழும் இயல்பினள் (நுற்.29:6-11). தலை வர் பிரியக் கருதுவரெனின் அதனை யாம மறுத் தல் வல்லமோ என்று விம்மும் சொற்களையுடைய ளாய்த் தலைவி என்முகம் நோக்கிய அளவிலேயே அவளுடைய மலர்போலும் கணணிலிருந்து மல்கிய கண்ணீர் மார்பில் விழுந்து பரந்தது என்று தோழி தலைவனிடம் கூறினள் (நற். 33:8-12). களவுக் காலத்தில் தலைவன விலகாமலிருந்து அருள செய் தும் தலைவியின கண் பசந்தது (நற்.35:9, 12). தலைவி கலக்கமுற்றுக் குவளையின் நீர் நிறைந்த கருமலர் போலும் கண் அழுது வடிய அவளிடத்து அன்பின்றி நீர் பிரிவீராயின கார்ப் பருவத்து மாலைப் பொழுதில் அவள் படும் அவலம் என னால் தாங்கப்படுவதன்று எனத் தோழி தலைவ னிடம் சொன்னாள் (நற் 37:4-11). புலி நடுங்க அதன முதுகிலே குத்தி வீழததி விளையாடிய புலவு நாறு களிறறின் மருப்புநுனி போலக் கடைமணி சிவநத நின கண் மட்டுமல்ல எனமேல சினமுடை யன; நின் தோளும் என்னை வருத்துவனவே என்று தலைவன தலைவியிடத்துக் கூறினன (நற். 39: 4-11). தலைவி தன் ஆயத்தாருடன் அருவியாடி நீரலைத்தலால் சிவந்த தனது பேரமா மழைக் சுண்ணிஎ குறியா நோக்கத்தோடு முறுவலையும் தலைவனுக்கு நல்கி மனைக்குச் செனறாள (நற். 44: 1-4), முன்னர் நீர் தலைவியை உடனகொண்டு வருநெறியில் எம் ஐயனமார் பினதொடர்ந்து வரு தலால் நீர் எம்மைக் கைவிட்டு ஒளிந்த காடு இன்றும் எம் கண்ணெதிரில் இருப்பதுபோல் தோன்றிச் சுழல்கினறது என்று தோழி தலைவ னிடம் கூறிப் பிரிவு மறுத்தாள் (நற்.48). கான்யாற் றில் வருகின்ற புதுவரவாகிய இனிய நீரினைத் தண்ணெனப் பருகிக கண்ணால் நோக்கி அதில வெறுக்காமல் ஆடினால் அஃது இவள் நோயைத் தீர்கரும் மருந்துமாகும் எனது தாய் கூறியதாகத தோழி தலைவன கேட்பத் தலைவியிடம் கூறினள் (நற்.58:6-10). இரவுக் குறியில் தலைவன் வந்து தலைவியின் ஆகத்தைப புல்லிச் சென்றதனால் உண்டான மணங்கருதி வண்டுகள் அவன் தோளை மொய்த்தமையின் அவளை அனனை தன கண் ணாற் கொல்பவளைப் போல நோக்கி நீ பணடும் இத்தன்மையையோ என வினவினாள (நற். 55.3-7). குராமரத்தின் நறுமலரில் வண்டுகள் விழுதலால் எழும் மணத்தைத் தெனறல் கலந்து வீச அதனைக்
'தின
காணும கண்மகிழவுற்றது (நற். 58:1-3). கருங்கண வரா அல் (நற். 60:4). 'துஞ்சாயோ என குறு மகளே' என வினவிய அன்னையிடத்து மெல் லிய குரவில, 'நாடனைக் கருதி யிருப்போர்க்குக் கண்ணும் துஞ்சுமோ' என்று எதிர்மொழிந்தேன எனத தோழி தலைவன கேட்குமாறு படைத்து மொழிந்தாள் (தற, 61:4-10). தலைவனுடன் போன தலைவியைக் குறித்து என அழகிய இளம் புதலவி யின் மலர் போனற கண் வெமமை மிகக சுரத்திற் செல்லும் கடுமையால் சிவந்து ஒளிமழுங்கிக கலக்க மடைந்தனவோ எனத் தாய மருணடுரைத்தாள் (நற். 66:5-11). தலைவியின முனனினறு நீர் அவளு டைய கண்ணையும் நெற்றியையும் நீவிப பிரிதற்கு வன்மை யுடையீரோ என்று தோழி தலைவனை வினவிச் செலவழுங்குவிததாள (நற. 71. 5, 6). கான வன் பன்றியைக கொன்று அதன் தசையிற் பாய்ச் சியதனாலே சிவந்த அம்பைப் போலச் செவ்வரி பரந்த தலைவியின் மழைக்கண்ணின கடைப பார்வையுற்றுத் தலைவனது நெஞ்சம் வருந்தியது (pp. 75: 6-10). தலைவியின் குவளை மலரைய போலும் மையுண்ட கண்ணின மகிழமட நோக்கு தலைவனைத் தோழியின்பால் இரந்து பின்னிறகு மாறு செலுத்தியது (நற். 77: 4, 11, 12). வடிவின ஒளி கண்ணில் வீசுதலான யான நின்னை நோக்கல் ஆற்றேனாயினேன' என்று தலைவன் தலைவியைப் புகழந்தான (நற். 82 4, 5). தெளிந்த கண்ணையுடையது கூகை (நற.83 3, 4). 'தலைவர் என் கண்ணையும் தோளையும கதுபபையும் அல குலையும் பலபடப் பாராட்டி நேற்றைப் பொழு தும் இங்கிருந்தார்' என்று தலைவி அவன பிரிவிடை யாற்றாமல் தோழியிடத்துக் கூறினாள் (நற். 84: 1-3). அழகிய (குவளை) மலாபோன்ற தலைவியின மழைககண்ணினின்று நீர் வடிய அது கண்டு ஊர் அவர் தூற்றுமாயினும் ஆரிருனில அசசம் மிக்க நெறியில் தலைவன் அவள் மேலுள்ள விருப்பினால் வாராதொழிக என்று தோழி அவன் கேடகுமாறு தலைவிக்குக் கூறினள் (தற. 88.1-7, 11). பூங்கண ஆயம் (நற். 907:293: 5), பெடையோடு கடலில் துழவி இரைதேடும் நாரை மெல்லிய சிறு கண்ணின சிவந்த கடைப்பகுதியினையுடைய சிறு மீனைப் பற்றியெடுத்துப் போய்ப் பிள்ளையின் வாயிற சொரியும (நற். 91: 3-7). தலைவன இரவுக குறி வருதல சூறித்துத தலைவியின கண் நாள தோறும் பொருந்தித் துயிலாவாயின (நற். 98: 10-12), தலைவன பொருளவயிற பிரிவேன எனற நிலையில் நெயதல் மலரையொத்த மையுண்ட கண வருத்தம் மிகப் பெரிதும் கலங்கித் துன்புற்ற
கூடிசு<noinclude></noinclude>
qaau5id2n9awlfiepx2ipqrwssg62rz
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/68
250
620128
1838086
2025-07-02T05:25:13Z
TVA ARUN
3777
001_சோதனை
1838086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
(குறு. 291). 'கூடியபோது தலைவனைக் கண்ட கண் கூடாத போது வாளாவிருப்பத் தோள் மட்டும் நெகிழ்வது ஏனோ' என்று தலைவி தோழியை வினவினாள் (குறு. 299:4-8). 'தலைவரது தேர் இர வுக் காலங்களில் வாராதாயினும் வருவது போலச் செலியினிடத்து ஒலிக்கும் ஒலியினால் தன் கண் துயில் துறந்தன' என்றாள் தலைவி (குறு. 301:4-8). கண்தரவந்தது காமழள்ளெரி (குறு. 305:1). அமர்க்கண் ஆமான (குறு. 322:1, நற். 165:3), அருஞ் சுரம் கடந்துபோன தலைவரை நினைந்து இரவில் துயிலரீதாய் நீரிடத்துள்ள ஒலியுடைய மலரை ஒக்கும் என் மழைககணணிற்கு நீர்த்துளிகளைத் தோற்றுவிப்பது எனிதாயிருக்கின்றது என்று தலைவி தன் அழுகைக்குக் காரணங் கூறினாள் (குறு. 329: 4-7). கரிய இதழையுடைய குவளை மலரைப் போனற மையுண்ட கண் கலுழுமாறு பசலை யுண்டாகாத முன்னர்த் தலைவிக்குத் தலைவனது நன்மார்பை துவங்குதல மிக இனிதாயிருந்தது
(குறு.339.4-7).இராக்காலங்களில் தலைவிக்குத் தன் இமைகள் பொருந்தாத கணணோடு அன்னையின் அணைப்புக்குள் அகப்பட்டுத் துயிலுதல் இன்னாத தாயிருந்தது (குறு. 353:4-7). நீரில் நெடிது விளை யாடினால் கண்ணும் சிவக்கும் (குறு. 384:1) வெறுத் தற்குரிய துன்பத்தில் உழந்த துயிலற்ற மையுண்ட கண்ணிலிருந்து வழியும் துளி பாயநது தலைவியின் தோள் மெலிருதன (குறு. 357:1-3). 'அணிகள் நெகிழும்படி விமமி நீர்த்துளிகளைச் சிந்தும கண் ணோடு நீ இவ்வாறு மயங்காதே' எனறு தலைவன் தலைவியை வற்புறுத்திப் பிரிந்தான் (குறு. 358:1,2). மடக்கண் வரையா (குறு. 363:3), துணங்கை விழா நாளில் மளளரும் மகளிரும் எதிரெதிர் நின்று ஒருவரோடொருவர் கண மாறுகொள்ளக் கூத் தாடுவர் (குறு. 364:5-8). தலைவன் விரும்பிய தலை வியின் கண் நாள்தோறும் துயிலுதல் இன்றிக் கலங்கி நீர்துளித்தலை நீஙகாவாயின (குறு. 365:1, 3,6). தான் நாடனொடு கொண்ட சிறு நன்னட்பு பூவினை யொத்த மையுண்ட கண்ணின மாணலம் தொலைத்தும் அத்துன்பத்திற்கு மாற்றாகியுள்ளது என்று தலைவி தோழியிடம் கூறினாள் (குறு. 377). போழகண மஞ்ஞை (குறு. 391:7). 'தலைவரது பிரி வில் ஆற்றியிருத்தல வேண்டுமென என்னை வற் புறுத்துவோர் என்துயரைக் களையா ராயினும் தாம் இதே கண் துயில்கின்றனர்" என்று தலைவி குறிப்பாகத் தோழியைச் சுட்டிநொந்துரைத்தாள் (குறு.395.3-5). கயலேர் உணகண் கனங்குழை மக ளிர் (குறு. 398:3). 'மாலைக் காலத்தே காதலர் மீண்டு வத்தாரென விருந்து செய்து உலகையினால் என்னை யணுகி என கண் சிந்தும் நீர்த்துளியைத்
60
கன்
துடைப்போரை யான் அறியேன்' என்று தலைவி தோழியைக் குறித்து வருந்திக் கூறினாள் (குறு. 398:1,5-8). திகிரியோனை (திருமாலை) திங்களொடு ஞாயிற்றையும் கண்ணாகக் கொண்ட வேத முதல் வன் என்ப (நற்.க.வா.4-7). தலைவனின் பிரிவுக் குறிப்பறிந்து தலைவியின் மயங்கிதழ் மழைக்கண் அவனுக்குக் குறிப்பிலே தூது விடுத்தது (நற்.5:9). குவளை மலரை யொதத ஏந்தெழில மழைக் கண்ணையுடைய குறுமகள் தலைவி (நற். 6:3,4). அரி மதர் மழைக்கண் மடவோள் என்று தலைவியைக் குறித்தல் (நற். 8:1,3). கண்போல் நெய்தல் நெற் போரில் மலரும் (நற். 8:8). சிதைவில்லாத செயல் களில் முயலகின்ற ஆர்வமுடையோர் அவை முற்று மாறு தாம் வழிபடும் தெய்வத்தைக் கண்கூடாகக் கண்டாற்போலத் தலைவன் நெடுங்காலம் பெற முயன்றதனாலான அலமரல் வருத்தம் தீரும்படி தலைவியின் நலமென் பணைத்தோளை எய்தி னான் (நற். 9:1-4). தலைவி நும்மொடு வருதலைத் தான் மேற்கொண்டானாயினும் ஆயத்தாரைப் பிலி தல் குறித்து அவள் கண் அலளையும் மீறி அழு கின்றன என்று தோழி தலைவனிடம் கூறி உடன் போக்கு விலக்கினாள் (நற். 12:8-10). தினைக்காவ வர் விலங்குகளை வீழத்தி அவற்றின் உடலினின்று பறித்த பகழிபோன்ற செவ்வரி படர்ந்த மழைக் கண்ணையுடையவள் தலைவி (நற்.13:3-5). தலை வியின் செவ்வரி பரநத மழைக்கண் விரும்பி இனிது நோக்கிய நோக்கத்தால் யான் ஆற்றாழிக்கப் பட்டே னாதலால விழுநிதி பெறுவதாயினும் நின் னொடு வாரேன் என்று தலைவன் பொருள்கடைக் கூட்டிய நெஞ்சினை மறுத்தான (நற. 16:8-11}, மழைபெய்த மலையிலிருந்து இழிந்து வந்த அருவி காட்டினிடத்தே தங்கியோடிய அழகை நோக்கி அங்கே தலைவனை யெதிர்ப்பட்ட முன்னிகழ்ச் சியை நினைந்து அடக்கவும் அடங்காமல் தன ஏந் தெழில் மழைக்கண் அழுததாகத் தலைவி முன்னி லைப் புறமொழியாகத் தோழியிடம் கட்டுரைத் தாள் (நற்.17:1-5). 'நின் காதற்பரத்தை பூபபோ லும் தன் மையுண்டகண் நிலை பெயர்த்து சுழ லும்படி நோக்கி எம் தெருவிற் சென்றதை யாம் கணடோம்' என்று தலைவி தலைவனிடம் கூறி னள் (நற்.20:1,5-7). 'அன்னை காக்கும் தொன்ன லம் சிதைதலைக் காணுந்தோறும் கலங்கியழுவதே யன்றியும் நெய்தல் மலரைப் போலக் கண் அழகும் தொலைந்தது; ஆதலால் தலைவியின் காமநோய் மறைத்தற்கரியது (நற். 23:4-9). கழிசேர்ந்த பகுதி களில் நெய்தல் மலர்கள் கண்போல் பூததன (நற். 27:9-11). தலைவன் தலைவியது கையையெடுத்துத்<noinclude></noinclude>
1jmm57fykwh6r9qsyz65cm12khk4h5m
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/67
250
620129
1838087
2025-07-02T05:25:19Z
TVA ARUN
3777
001_சோதனை
1838087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
தனித்து வருந்தினாள் (குறு. 11:1-3). 'தலைவன காம நோயைத் தந்தமையால தலைவியின் குவளை மலர் போன்ற அழகிய கண் பசலை நிறத்தை நிரம்பப் பெற்றன' (குறு. 13:3-5), 'துயரத்தினால நீரொழு கும் கண்ணை உடையையாய நீ இங்கே தனித்தி ருக்க நின்னைத் தலைவர் பிரிந்து செலலார்' என்று தோழி தலைவியை வற்புறுததினாள் (குறு. 22;1,2), தாடன் இவளுக்கு உரியனாகும் தகுதியிவான் என்பது போல் கட்டுவிச்சி இவளைத தெய்வத் தோடு தொடர்புறுத்திக் கூறினும் அவனையொரு கடுவனும் அறியுமாதலின், அது தன் கண்ணாற் கண்ட நிகழ்ச்சியை மறைத்துப் பொய்ககாது என்று தோழி செவிலிக்கு அறததொடு நின்றாள் (குறு. 26:3-8). 'வாடை வீசும் இக்கூதிர்க்காலத்திலும் பிரிந்துறையும் தலைவர் பொருட்டு அழுதலால் என் கண் உறுதியாக நாணில்லா தனவே' என்று தலைவி கூறுதல் (குறு. 35:1,5), தலைவனுடன் சென்ற தலை வியைத் தேடிப் போன செவிலி இணைந்து எதிர் வருவாரை நோக்கிநோக்கித் தன் கண் ஒளியிழந்தன என்று நொந்து கூறினாள் (குறு.44:1, 2), ஞாயிறு காயும் வெம்மையுடைய பாறையிடத்தே கையில் லாத ஊமன் கண்ணாலேயே காக்க முயலும் வெண்ணெயின் உருகலைப் போலத் தலைவனது காமநோய அவனுடலில் பரந்தது (குறு. 58:3-6). ஆனின் மடக்கண் குழவி தாயை மாலையில் மன் தம நோக்கி தலைநிமிர்ந்து வருந்தியது (ரூறு. 64-1-3), கருங்கண் தாக்கலை (குறு. 69:1). தலைவி யது பெருமழைக்கண அழகினால பூவினை யொத் துச் சுழலும் தன்மையவாயிருந்து பின அம்பினை யொத்து எல்லோரும் அறியும்படி நோய் செய்தன என்று தலைவன் பாஙகனிடம் கூறினான (குறு. 72). அழாதே யெனறு நம் அழுத கண்ணைத் துடைத்த தலைவர் பிரிந்து இப்பனிக்காலத்தும் வாராமையின அவர் நமக்கு யாராகுவரோ என்று கூறித் தலைவி நொந்தனள் (குறு. 82.2-6).சிறு கண் பெருங்களிறு (குறு.88.2). கொலலிக் கருங் கண தெய்வம் (குறு. 89:4,5). பூப்போலும் மையுண்ட கண்ணை யுடையவள தலைவி (குறு. 101:4), நாடனது கேணமை நீர் மலிந்த கண ணோடு நினைந்து துன்புறுதற்கே ஏதுவானது என்று தலைவி இரங்கினள (குறு. 105.5,6). பைங் கண் செந்நாய் (குறு. 141:6; நற.103:6), துயிறகண் மாக்கள் (குறு.145,5). பேய்கள் அடிக்கடி கண் கொட்டி நடுஙகும்படி மழை ஒழிவினறிப் பெய் தது (குறு. 161:1,2), புதுமணத் தலைவி தன கண வனுக்காக இனிய புளிக்குழம்பைக் குவளை மல ரைப் போலும் தன் மையுணட கண்ணில் தாளிப்
59
கண்
புப் புகைபடத் தானே துழாவிச் சமைததாள் (குறு. 167:3,4), 'பரதவா மகளாய தலைவியின் கண வலையிற் படுகின்ற கானலிடத்தே எனனெஞ்ச மும் ஆராயாது அவ்வலையிற்பட்டு அங்கேயே தங் கியது' என்று தலைவன பாங்கனிடம் கூறினன (குறு.184.3-7). 'நாடன பொருட்டுத் தலைவியின கண் துயில் துறந்தன (குறு. 186:3,4). நெருஞ்சி யின் புதுமலர் கண்ணுகசினியது (குறு. 202:3,3). கண்ணாலே காண விரைவில் வருதற்குரிய அணிமை விடத்திலிருந்தும் தலைவன் தலைவியை நீங்கி ஒழுகினன (குறு. 203.3,5). மாரிக்காலததுப பிததி சத்தின் நீரொழுகும் கொழுமுகையது சிலந்த புறத்தையொத்த கொழுங்கடை மழைககண்ணை யுடையவள் தலைவி (குறு. 232:5-7). தலைவியது கண் (தாமரைப்) பூவொடு புரைவது (குறு. 226:1). 'நாம் நம் காமநோயைப் பொறுதது ஆற்றியிருப் பவும் நாடனை முதலில கண்ட கண் தமக்கு நம் பாலுள்ள உரிமையினால் தாமே தலைவரின பிரிவை யெண்ணி அழுதன' என்று தோழியிடம் தலைவி உரைத்தாள் (குறு. 241. 1, 2, 7). 'யான் சேர்ப்பனை இனி நினையேனாதலின என் கண துயிலக' என்று தலைவி தோழியிடம் வன்புறை எதிரழிந்து மொழிந்தாள் (குறு. 243:4,5), ஒன்றை யொனறு எதிர்நத கயல்களிரண்டினை யொத்த மையுணட கண்ணையுடைய தலைவி பிரிவுகு நுன் பத்தால் சுழலுதலினின்றும் நீங்குதற்குத் தேரின் குதிரைகளை விரைந்து செலுத்துவாயாக' என்று வினைமுற்றி மீளும் தலைவன பாகனை ஏவி னான (குறு. 250 4-6). சிறுகண (யானைய) பெருநிரை (குறு. 255:4), தலைவன பிரிவையுணாத்தா முன் னரே தலைவியின கண பழைய நிலையில நில்லா மல அழுதல் ஒழியாது அவனது தேரை விலக்கியது (குறு. 256:6-8). 'பலலிதழ மழைக்கண மாஅயோயே' என்று தோழி தலைவியை விளித்தாள (குறு. 259:4). தோழி, தலைவனைக் குறித்து வருநதி நெஞ்சு புண்ணுற்ற துனபங் காரணமாக என்கண நள ளென் யாமத்தும் துஞ்சாவாயின' என்று தலைவி வருநதிக கூறினாள (குறு.2614-8). குருதியொடு பறித்த சிவந்து திரணட அம்புகள எதிரெதிர் அமைந்தாலொதத மையுண்ட கண்ணையுடைய வள தலைவி (குறு. 272:6-8). பேரமர் மழைக்கண கொடிச்சி (குறு. 2884). தினைப்புனங்காதது நிறை தலைவி கையிற கொண்டு இசைத்த கிளிகடியும் குளிரின் ஓசையை அவள் குரலென கிளிகள புனத்தை விட்டுப் போகாமையால புலந்து அழுத அவள் கண, இதழகள் கலைந்து மழைத் துளிகளை ஏற்ற சுனைக் குவளைமலர் போன்றன
மயங்கிக்<noinclude></noinclude>
nq7vo1llpk88whz00a53ojywlfputq9
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/66
250
620130
1838088
2025-07-02T05:25:23Z
TVA ARUN
3777
001_சோதனை
1838088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
58
கண்
அழகிய நிறத்தினால பொலிவனவாக ஒன்றோ டொன்று எதிாததுப் பொருகின்ற மையுண்ட கண்ணை யுடைய தலைவியை இப்பொழுதே காணபதற்குத தேரினை விரைந்து செலுத்து வாயாக என்று வினமுற்றி மீளும் தலைவன பாகனை ஏவினான (அகம். 334-15-17). பேரமர் மழைக்கண்ணையுடைய தலைவி தனிமையுற்றிருக்க நாம பிரிந்துறைதல் இனிதன்று என்று தலைவனின் நெஞ்சம் இடைச்சுரததே எண்ணி மீண்டது (அகம். 337:3,4,19), வெப்ப மிகக காட்டின் கவர்தத நெறி யில வெள்ளிய பரற்கறகள் கண்ணைப் பறிக்கு மாறு மினனும் (அகம். 337:16, 18). கள்ளாலாகிய மகிழவுபோல மகிழதற்கேதுவாகிய அமிமதர் மழைக் கண்ணை யுடையவள் தலைவி (அகம். 343:16-19). ஏந்தெழில் மழைககண்ணை யுடைய இததலைவி காரணமாக எம் சிறு நல்லூர்க்கு வந்து இன்று தங்கிச் செலவாயாக' என்று தோழி தலைவனை அழைத்தாள (அகம். 350:8,9,15). பொருள்வயிற பிரிந்த தலைவனின் மீட்சியைக் குறிததுச் சுழிதத வட்டங்களைத தலைவி நாள் தோறும் எண்ணி அவை எழுதப்பட்ட சுவர் நனைதற்கேதுவாய அழு கிறை மழைக்கணணிலிருந்து விலகி விழும் நீர் அவ ளது காதில் அணிந்திருக்கும் பொறகுழையில் தெறிக்கும் (அகம். 351:10-12). தலைவி மாட்சிமைப பட்ட மலரொடு மாறுபட்ட மையுண்ட கண்ணை யுடையவள் (அகம். 354:12-14). தலைவர் உம்பற பெருங்காட்டைக் கடந்து சென்றாராயினும் நீலபபூ காற்றினால் அசைந்தாலொத்த அழகிய இதழ் பொருந்திய நின மழைக்கண்ணின அமாதத நோக்கினை, நினையாதிரார் என்று தலைவியைத் தோழி பிரிவுக காலத்தில வற்புறுத்தினாள (அகம். 357:9-16). குவளை மலர் கணணையொத்த இதழ்களை யுடையது (அகம். 358 5). தலைவனின் பிரிவுக்காலத்தில் தலைவியது நீரொழுகும் யுண்ட கண் பிறரறிய வாடுதலுற, அவ்வாட்டத் தினை அவரறியாதவாறு அவள மறைத்திருந்தாள் (அகம்.359 1-3).தாமரைப் பூவினிடத்தில் மாயிதழக் குவளை மலா இரண்டினைப் பிணைத்து வைத்தாற் போனறு திருமுகத்தில் சுழலும் பெருமதா மழைக கண்னை யுடையவள தலைவி (அகம். 361:1-4). பைங் கண வலலயம் (அகம, 362:4), கரிய அழகிய இணை யொத்த எதிரெதிர பொருந்திய மலர்போன்ற நின் மையுண்ட கண்ணின பெண்மானையொத்த பார்வைமிக்க அழகினையுறுமாறு தலைவர் மீண்டு வந்தனா என்று தோழி தலைவியிடம் கூறினாள் (அகம்.363 17-19). வெருகின பைங்கண ஏற்றை (அகம். 367:8). சுனையிலுள்ள ஒளிபொருந்திய
மை
மலா போலும் எனத தேனை விருமபிப் பூக்களை ஆராயும் வணடுகள விருப்புறும காதலியின கண் பிரிந்து வந்த நிலையில் நீரொழுகப் பெற்று என்ன துன்பத்தை எய்துமோ' என்று தலைவன பிரிந்து போகுமிடை வழியில் தன்னெஞ்சொடு கூறினான (அகம். 371.10-14). நம் பிரிவில் அழகிய பூவிதழ போனற மழைக்கண வருததம மிககுத் தோளினை நனைக்குமாறு அழுதலின ஒழுகும் நீர்த்துளி களை விரலால் தெறித்துத் தலைவி துயில் துறந் தாளோ என இடைச்சுரத்துத் தலைவன் எண் ணினான் (அகம். 373:13 - - 15, 19). கொடிய சுரநெறியைக் கடந்து சென்ற நம் தலைவர் தீங்கிலராய் மீண்டு வருதலை அறியின என கண் அழமாட்டா என்று தலைவி தோழியிடம் கூறினாள் (அகம். 375:16-18). குவளை மலரின் இணைநத பூக்களைப் போலும் தன செவ்வரி பரந்த மதர்த்த மழைக்கண நீரைக்கொள்ளுமாறு தலைவி வருந்துவாளோ என்று தலைவன இடைச்சுரத்தே தனனெஞ்சோடு கூறினான (அகம். 381:18-21), தலை வியது செவ்வரி பரந்த மதர்த்த மழைக்கண் கலங்கி யழத் தலைவன பிரிந்து செல்லக் கருதினான (அகம். 387:2). காடைப் பேடை நீலமணி போனற கண்ணை யுடையது (அகம்.387:10). உப்பு விற்று வந்த நெய் தல் நிலத் தலைவியைத் தலைவன் சொல்லாடி மறித்தபோது அவள் தன செவ்வரி படர்ந்த மையுண்ட பெரிய கணணால் அவனை மாறுபட்டு நோக்கினாள் (அகம்.390:8-13). என தலைமுடியை யான் காணுந்தோறும் முனபு அதில் தலைவர் புனைந்த புனைவு நினைக்கப்படுதலால் இன்றோடு இனனும் சினனாள் சென்றாலும் என்கண் உறங் காது என்று பிரிவாற்றாத தலைவி தோழியிடம் கூறினாள் (அகம். 391:7-10). குவளையின மாரிக் காலத்துக் கரிய மலர் மழைக்கு எதிர்ப்படடாற் போலும் நீரொடு நிறைந்த நம் பேரமர் மழைக கண்ணின் நீரொழுகும துனபம் நீஙகுமாறு தலை வர் இப்போது மீண்டுவரின் நன்று என்று தலைவி தோழியிடம் கூறினள் (அகம. 395:1-5). தலைவன வரையாது களவு நீட்டித்த கொடுமை குறித்துத் தலைவியின் அலமரல் மழைக்கணணிலிருந்து நீர் பெருகியது (அகம்.398:7,8). 'மெல்லமபுலமபன பிரிந் தானாகத் தலைலியின் பல்லிதழை யுடைய மலர் போலும் மையுண்ட கண் துயிலாவாயின" (குறு. 5:4,3). கழியினிடத்து இலைக்கு மேலே உயர்ந்து நிற்கும் நெய்தற்பூ, வெளளம் மிகுந்தோறும் மூழகி யெழுதலால் குளததில் மூழ்கியெழும் மகளிரின் கண்ணையொக்கும் (குறு. 9:4-6), பிரிவில் தலைவி நாள்தோறும் துயிலாது கலங்கியழும் கண்ணொடு<noinclude></noinclude>
mbo98wivdfa6ij1mwjodo2ax2sney4l
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/65
250
620131
1838089
2025-07-02T05:25:27Z
TVA ARUN
3777
001_சோதனை
1838089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
57
கண்
கண்ணையுடையையாய்ப் புலம்புகொண்டு அரிய துன்பத்தினை எய்துவித்தனை' என்று அல்லகுறிப் பட்டு மீண்ட தலைவன் தன்னெஞ்சொடு நொந் தான் (அகம். 258:11-15). கோசர் அன்னி மிஞிலி யின் தந்தையை அருளாது கண் களைந்து துன்புறுத் தினர் (அகம். 262:5, 6, 12). புதுப்புனலில் விளை யாடிய பரத்தையர் தம் ஏந்தெழில் மழைக் கண்ணால் நோக்குந்தோறும் தலைவன் விருப்பம் தவிரானாய்க் காமம் சிறத்தவால் நாணிழந்து அவருடன் ஆடினான் (அகம். 266: 5-9). அருஞ்சுரம் இறந்த தலைவர் ஒளிபொருந்திய செங்கழுநீர் மலரையொத்த தலைவியின் கண்ணினின்று வழி யும் நீரைத் துடைக்க விரைந்து மீண்டனர் (அகம். 269: 13,24,25). சேரியோரைக் 'கண்ணுடையீரே' என விளித்து நேற்றுத் தன் தலைவனுடன் போய் விட்ட என்மகள் நொச்சி மரத்தின்கீழ் சிறு விரல் களால் இயற்றிய வண்டற் பாவையை நீர் கண்டீரோ என்று மகட்போக்கிய தாய் வின வினாள் (அகம். 275: 15-19), தலைவனின் பரத்தை தலைவியின் பாங்காயினாரை அரிவேய் உண்கண் பெண்டிர் என்று குறித்தாள் (அகம்.276:8). நம் மேனியின் நலம் தொலையத் துயரம் செய்தோ னாகிய தலைவலில் மலையிலே தோய்ந்து வரும் அருவி நீரில் வெறுப்புத் துன்பம் நீங்கப் பனியை யொக்கும் மழைக்கண் சிவக்குமாறு நாம் மூழ்கு வமோ என்று தோழி தலைவியிடம் கூறினாள் (அகம். 278:11-15). கானவன் யானைக் கொம் பினைக் கொண்டு மலையில் பொன்னை அகழ்ந் தெடுக்கையில் கண்ணை ஒளி மழுங்கச் செய்து விளங்கும் மணிகள் வெளிப்படுதல் (அகம். 282:2-5). நெல்லிக்காயை ஒத்த குறுவிழிக் கண்ணையுடையது குறுமுயல் (அகம். 284: 1,2). குவளை மலரையொத்த மையுண்ட கண்ணையுடைய தலைவியும் தன்னுடன் வருவாள் என்று தலைவன் உடன்போக்கு நேர்ந் தான் (அகம். 285:13,14). தோழி, நம் சேர்ப்பன் வந்து மணப்பதற்கு முன்னும் என் கண் நெய்தற் பூவின் நீலமணியை ஒத்த மாணலம் நீங்கிப் பொன் போலும் நிறத்தைக் கொண்டது யாது காரணத் தால் என்று தலைவி தோழியிடம் வினவினாள் (அகம். 290:8-16), நெஞ்சே, நீ அருஞ்சுரங் கடந்து வந்து நல்லெழில் மழைக் கண்ணையுடைய நம் காதலியின் தோளழகை நினைத்துப் பயனில்லை என்று பொருள்வயிற் பிரிந்து தலவைன் தனக்குள் கூறினான் (அகம்.291:21-25), உகாவின் காய் குயிலின் கண்போன்ற நிறமிக்கது (அகம்.293:6,8). காதலரைப் பிரிந்த கையறு மகளிரது நீரொழுகும் கண்ணைப்போல் கருவிளை மலர்ந்தது (அகம்.294:
4,5). மாரிக் காலத்தே பூக்கும் பித்திக மலரின் குளிர்ந்த இதழை யொக்கும் அழகொழுகும் செங் கடை மழைக்கண்ணையுடைய மடந்தையே என்று தலைவியைத் தோழி விளித்தாள் (அகம். 295:19-21). அரிமதர் மழைக்கண் மாயோள் (அகம். 296:3). தலைவன் தன் பொருள்வயிற் பிரிவை உரைத்த நிலையில் தலைவி அவலத்தோடு முகமிறைஞ்சி நீருடன் கூடிய ஈரம் வாய்ந்த இதழினையுடைய மழைக்கண் துளிகள் மார்பில் சொரியக் கலங்கி னாள் (அகம். 299:10-16). தலைவனின் பரத்தை பொருத்தி தன் சிவந்த அழயே இதழினையுடைய மழைக்கண்ணால் அவனை வருத்தம் மிக நோக்கி அவன் மாலையை யறுத்து ஊடினாள் (அகம். 306: 10-14). மழை பெய்தலையேற்ற மலரைப் போலக் கண் நீரைச் சொரியத் தலைவி இங்கே தனித்து வருந்துவாள் என்று எண்ணாமல் தலைவன் பொரு ளீட்டப் பிரிந்து செல்லுதல் பொருந்தாது எனக் கூறித் தோழி அவன் செலவு விலக்கினாள் (அகம். 307:4-6). 'நீ பன்னாளும் வந்து பணிமொழி பயிற் றுதலால் கருங்குவளை மலர் போன்ற மையுண்ட கண் கலங்கத் தலைவியும் நின்னிடத்துப் பெரும் மயக்கத்தினை அடைந்துள்ளாள்' என்று தலைவனி டம் தோழி கூறினாள் (அகம். 310:4-6), 'பெருமலை நாடன் வரையக் கருதுவானாகலின் நாளை அவன் மார்பு புணையாக மலையருவியில் நம் செவ்வரி பரந்த மதர்த்த மழைக்கண் சிவப்ப உவந்தாடு வோம்; வா' என்று தோழி தலைவியிடம் சொன்னாள் (அகம். 312:3-8), தலைவன் பிரிந்து சென்ற வழி வருத்தத்தை நினைந்து நாள்தோறும் தலைவி நீரில் மூழ்கிப் போரிடும் கயல்மீன் போலும் கண்ணில் நீர் பெருக இரவும் பகலும் வருந்தியிருந் தாள் (அகம்.313:3-6), 'இவள்பெண்ணியல்பு சான்ற னள்' என்று நேற்றும் பலமுறை என் கண் துணையாக நோக்கி என் நெஞ்சம் ஐயு எனினும் அறியாமையினால் அவளை இற்செ காது விட்டேன்' என்று மகட்போக்கிய நம் நொந்து மொழிந்தாள் (அகம்.315:3-6). மலரை யொத்த மையுண்ட கண்ணையுடைய என் தோழி என்று தலைவியைக் குறித்துக் தலைவனி கந்தாரி கூறுதல் (அகம்.320:6). பசித்த யானையின் பொலி வற்ற கண் போன்றது வறிய சுனை (அகம். 321; 1,2). 'பேரமர் மழைக்கண்ணையுடைய குறுமகளா கிய பரத்தையை நோக்கியோர் திறத்து அவள் கண் தைத்தல் தப்பாது (அகம். 326:2,3,13). மைந்நிற உருவின் மணிக்கண் காக்கை (அகம். 327 : 15), தலைவனின் பிரிவில் தலைவி தன் பூங்கண் பரப்ப நோய் கூர்ந்து வருத்தினள் (அகம். 329:1, 2).<noinclude></noinclude>
8i9fmxsbbmxykrd944omghm1r5wwzz3
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/64
250
620132
1838090
2025-07-02T05:25:32Z
TVA ARUN
3777
001_சோதனை
1838090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
56
கண்
சொரிந்தன (அகம். 161-8-14). மலரைப் போல் ஒளி பொருந்திய முகத்தில சுழலும் அழகிய இதழினை யுடைய மழைக்கண்ணினள் தலைவி (அகம. 162:10,11). பாசறைக்குப் பிரிந்த தலைவர் நிலை யாதோ என மயங்கித் தாழும் நீரினைச் சிந்தும் கணணொடு தலைவி மனையில் வருந்தி னாள்
(சிவ
(அகம். 164:8-10). மகட்போக்கிய தாய் மணலிற் கிடந்த பாவையை யெடுத்து அதனை அம்மகள போலக் கருதி அதன் கண்ணும் நுதலும் நீவினாள் (அகம். 165:9-12), அழகிய இதழ்க ளமைந்த மலர் போலும் மையுண்ட கண்ணை யுடையவள் தலைவி (அகம். 172:16). நண்டு வேம் பின் அரும்பினையொத்த நீண்ட கண்ணையுடை யது (அகம், 176:8), தலைவி மலரேர் உண்கண்ணி னள் (அகம்.176:16), சிறுகண் இரும்பிடி (அகம். 177: 3,40, பன்றி நினைக்கதிரை மேய்ந்து இனிது கண்ணுறங்குதல் (அகம். 178:2,18,13). குவளையின் புதுமலரை ஒக்கும் மையுண்ட கண்ணையுடையவள் தலைவி (அகம். 179:12). முக்கட் செல்வன் பெருமான) (அகம்.182:18). இடியொடு மழைபெய்த நடுஇரவில் தலைவன் தனியே வந்த வழிவருத் தத்தை நினைந்து தலைவியின் கண எப்பொழு தும் பனியொடு கலுழும் (அகம். 182:9-19). தலைவி யின குவளை மலர்போலும் மையுண்ட கண் கலங்கியழுமாறு தலைவன் அருளின்றிப் பிரிந்தான் (அகம். 183:1-3). தலைவனைத தலைவி அலமரல் கொண்ட தன் மழைக்கண்ணினால் விரும்பிப் பார்க்காதிருபபவும் அவளை அவனொடு தொடர் புறுத்தி ஊர் அலர் பாடும் (அகம். 190:3-5), யாமரத்தில் கழுகு தன் குஞ்சுக்கு ஊட்டும்போது வழுககிய கொழுங்கண்ணாகிய ஊன்துண்டு தொல்பசி முதுநரிக்கு உணவாயிற்று (அகம்.193:7- 10). மகளைத் தன் காதலனொடு போக்கியமை யால் ஆறாக வருகின்ற நீருடன் கலங்கியழும் எம் கண் கங்குலில் இனிது துயிலுமாறு அவளை அவன் எம் மனைக்கு முதலில அழைத்து வருவானோ என்று நற்றாய வேலனை வினவினாள் (அகம். 195: 14-18). தன தந்தையது கண்ணின கலினை யழித்த தவறறிறகாகக் கோசர்களைக் கொல்வித்து அன்னி மிஞிலி முரண் தணிந்தாள் (அகம். 196.8-12). கரிய (குவளை) மலரின அழகினை யிழந்த கண்ணுடன் தொல் தலமிழந்த துயரொடு தலைவி பிரிவுக் காலத்தில் வருநதியிருந்தாள் (அகம். 197:1-5), தலைவி யின தோளைச் சேர்ந்தாலல்லது என் கண் துயிலா வாம் என்று கூறித் தலைவன நடு யாமத்திலும் புலிதிரியும் பெருமலை வழியே இரவுக் குறியிடத்து வருதலை எளிதென எண்ணினான (அகம். 218:8-13),
பிரிவிடை வேறுபட்ட தலைவியின் நிலை கண்டு தோழி பலபடியாக நீர்மலி கண்ணொடு நெடிது நினைந்து வருந்தினாள் (அகம்.287:1-8). சிலம்பில் கண்ணென மாயிதழ்க் குவளை மலர்ந்தது (அகம். 228:3,4). தலைவனின் பிரிவில் நோய் மலிந்து உகுத்த நீர் பல இதழ்களையுடைய மலர் போலும் மழைக் கண்ணின பாவையை மறைத்திடத் தலைவியின் மேனியழகு தொவைதன் நோக்கித் தோழி அவனை வருந்தாதே என்று வற்புறுத்தினாள் (அகம். 229: 11-15). செங்கண் இருங்குயில் (அகம். 229:19; நற். 118;3;224:5; ஐங்.346:3). சிறு கரு நெய்தல் கண் போல் மாமலர் (அகம். 230:2). சிற்றிலிழைத்து விளையாடியிருந்த தலைவியிடம் சென்ற தலைவன், அவளைத் தன்னொடு கூடி மனையுரிமை கொள்ளு மாறு வினவியது கேட்ட நிலையில் அவள தன் அழகுமிக்க செவ்வரி பரந்த மையுண்ட கண்ணில் உவகை நீர் வருதலை மறைத்துத் தலையைச் சிறிதே இறைஞ்சினள் (அகம். 230:6-15). பிரிவில் வேறு பட்ட தலைவியை நோக்கி, 'கலங்குகினற நின் நீர் மழைக்கண்ணினின்றும் நிறைந்த முலை நனைய அழாதே' என்று தோழி தேற்றினாள் (அகம்.233:1,2), பண் அமை நெடுந்தேர் செலலும் விரைவினால் கண்ணின் நோக்கினைத் தவிர்க்கும் (அகம். 234:8), தன் காதலனை இழந்தமையின் ஆதி மந்தி கலுழ்ந்த கண்ணளானாள் (அகம்.136:19,20). தலைவர் உறந்தையினையே எய்தினும் சிவநது வியக்குமாறு ஒன்றோடொன்று பொரு கின்ற மையுண்ட கணணையுடைய தலைவியின கூரிய வாலெயிறூறிய நீரைப் நீரைப் பொருளீட்டல் காரணமாகத் தவிரலர் (அகம். 237:14-17). மடக் கண் ஆமான் (அகம். 238:6), நீரொழுகும் கண்ணை யுடையேமாக வாடைக்காற்று நமககே துன்பந்தரு வதாயுள்ளது என்று தலைவனின் பிரிவில் (தலைவி வருந்திக் கூறினாள் (அகம். 243:8,13,14), தலைவர் பிரித்து சென்ற இடம் அவர்க்கு இனிது போலும் எனக் கூறித் தலைவி பல இதழ்களை யுடைய மலர்போலும் தன் மழைக் கண்ணின் உள்ளிட மெல்லாம் சிவக்க அருந்துயரை உடையளாயினள் (அகம். 244:7-10). நீரொழுகும் கணணேனாய்ப் பிரிவு நோய் வருத்தத் தனியேனாய் இருத்தலை யான் ஆறறேன் என்று தலைவி நொந்துரைத்தாள் (அகம். 253:7,8). மையுண்ட அழகிய கண்ணை யுடைய பரத்தையுடன் தலைவன வையைப் புனலில் இனபம் நுகர்ந்ததனை ஊரார் அறியாமல் பரத் தையர் கூட்டம் மறைக்கவும் அலர் மிக எழுந்தது (அகம். 256: 10-13). 'நெஞ்சே, இரவுக்குறியிடத்துச் சென்றும் நீ தலைவியைப் பெறாமல் புல்லென்ற
கடை<noinclude></noinclude>
otvgm8yffxj148w8tdrpuzqvlwxhm5v
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/63
250
620133
1838091
2025-07-02T05:25:36Z
TVA ARUN
3777
00
1838091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
55
கண்
ணை யுடையது (அகம்.19:12). பாலை நிலத்தில் காணமாட்டாது கண் கூசுமாறு ஞாயிறு காய்தல் (அகம். 81:6,7). 'அழகிய மையுண்ட கண்ணினளாய எம் தலைவி அழுமாறு அவளைப் பிரிந்து செல்லு வீரோ' என்று கூறித் தோழி தலைவனைப் பிரிவு விலக்கினாள் (அகம். 81:14,15). தலைவனைக் கண் டோர் பவராகவும், அவருள் ஆரிருள் கங்குலின் அணையிடத்திருந்து நீரொழுகும் கண்ணொடு வானொருத்தியே மெலிந்து வருந்துதற்குக் கார ணம் என்ன என்று வினவுவாள் போலத் தலைவி தோழிக்கு அறததொடு நின்றாள் (அகம். 82:14-18). நெய்தலினது முகையவிழ்ந்த ஒளி பொருத்திய மலரையொத்த ஏந்தெழில் மழைக் கண்ணை யுடை யவள் தலைவி (அகம். 83:12-14). பன்றி நெருப்பி னைப் போன்ற சிறுகண்ணை உடையது (அகம். 84: 6). உயர்ந்த மலைப் பக்கங்களில் காண்போர் கண கெடுமாறு மின்னி மழை பொழிதல் (அகம். 02:1,2), செங்கண் இரும்புலி (அகம்.92:4; குறு. 321:6; நற்.148:9). செங்கண் மழவர் (அகம்.101:5). பெருமலைப் பக்கத்தில் தினைக்கதிரைக் கவர வந்த யானை அங்குக் கொடிச்சி குறிஞ்சிப்பண் பாடக கேட்ட நிலைவிலகதிரையும் கவராமல், நின்ற நிலை யிலும் பெயராமல் அதுவரை துயிலப் பெறாத பைங்கண் துயில் வரப்பெற்று உறங்குதல் (அகம். 104:8-9). பல இதழ்களையுடைய மெலலிய மலர் போன்ற மையுண்ட கண்ணையுடையவள் தலைவி (அகம்.109:1,3). யாம் கடற்கரைச் சோலையிடத்து சிற்றீல் பிழைத்துச் சிறுசோறட்டு ஒப்த்திருக்கை யில் விருந்துண்டு சிறுகுடியில் தங்கிச் செல்வேன் என்று கூறித் தன் நெடுந்தேர்க் கொடிஞ்சியைப் பற்றி நின்றவன், இன்றும் என் கண்ணுக்கு
முன்னே நிறபவன் போல காட்சி தருகினறான் எனத் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள் (அகம். 110:5-25), நீதலைவியைக கூடிய களவினை அறியாத எமர் மணம் நிகழ்த்த, நீ அவளை மணந்து கொள்ளும் ஒழுக்கத்தை யாம் கண்ணார நோக்கிப் புதியோர் போல அவளது புதுநாண் ஒடுக்கத்தையும் காண்போம் என்று தோழி தலை வனிடம் கூறி வரைவு கடாவினாள் (அகம. 112:15- 13).ஞாயிறு மறைந்த மாலைக் காலததில் தலைவி தன் மதரெழில் மழைக்கண் கலங்க அழுதனள் (அகம்.120:5,6). கடாம் மாறிய பைங்கண் யானை பெய்து வறிதாகிய மேகத்திறகுவமை (அகம்.125: 7-9). கயல்மீனைப் போன்று ஒன்றனோடொன்று போரிடுகின்ற மையுண்ட பெரிய கண்ணையுடைய வள் குறுமகள் (அகம். 126: 18-21).தலைவி கருங் குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணையுடை
யவள் (அகம்.129:16), வண்டு வாய் திறந்த கழியி லுள்ள நெயதற்பூ புறங்கொடுததற்குக காரண மாகிய தலைவியது அழகிய மையுணட கண்ணின் மதர்த்த நோக்கு தலைவனைக் கவர்ந்தது (அகம். 130:12-14). கொடிச்சி அழகிய மலர் போன்ற மழைக் கண்ணையுடையவள (அகம்.132:6,7). ஓவி யத்தில் எழுதினாறபோலும் பேரழகுடைய மழைக் கண் கலங்கியழுமாறு பிரிவு நோய மிகுந்து தலைவி பேதுற்றாள் (அகம். 135:4-6). திருமணத்தில் தலை வியை மங்கல நீராட்டிய மகளிர் விருபபுற்றுத் தம் மலர்க்கண இமையாமல் அவளது பேரழகை நோக் கினர் (அகம. 136:8,9). தலைவி தன குவளை மலர் போன்ற மையுண்ட கணணில் தெளிந்த நீர்த்துவி கள் நிறைய வீணே வருந்திய துயரத்திற்கு அன்னை வேறொரு காரணம் கருதி ஐயுற்றாள (அகம்.138: 2-4), உபபு விற்று வந்தபோது நாய்க்குரைப்புக்கு வெருவிய கயல்மீன் எதிர்த்துப பொருவது போன்ற தலைவியின் மதர்த்த கண் தலைவனுக்குக் காதல் நோய் தந்தது (அகம், 140:7-15). தலைவனின் பொருள் வயிற்பிரிவை எண்ணிச் சுனையில மழைத்துளியால் மலர்ந்த நிலப்பூப் போன்ற தலைவியினகண நீரைச் சொரிந்தது (அகம். 143: 1,14-16). தலைவர் மீளவ தாகக குறித்த நாள் பொய்ததனால் தலைவியின செவ்வரி பரந்த அழகிய மையுண்ட கண்ணிற பெருகும் துன்பநீரும நிலலாமல் வழிநதது (அகம். 144:1,2).தன கூந்தலைப் பிடிதது அருளின்றி யான எற்கோல சிதைய முதுகில அடிக்கவும் பொறுத்து நின்ற அமர்த்த கணணையுடைய மகளை அவ் வாறு துனபுறுத்திய என கைகள் கடுந்துன்பத்தை அடைவனவாக என்று செவிலி மகடபோக்கிய நிலையில் வருநதிக் கூறினாள் (அகம். 145:14,18-22). மடக்கண் எருமை நாகு (அகம. 146:3). மாயப பரத் தனாகிய தலைவனின் வாய்மொழியை நம்பிக் காற்று வீச அசையும் மழைபெய மலரைப் போலக் கண் நீரினை மார்பிலே சொரியக கணபசந்து அழகினை விழக்கத துணிந்த பரத்தை மிகவும் இரங்கத்தக்காள் என்று தலைவனது பரத்தைமை யைத் தலைவி கூறுதல (அகம். 146:8-13). நீலத்தி னது புதிய மலரைச் சேர்த்துத தொடுத்த பிணை யலைப் போன்ற இவள் அரிமதா மழைக்கண நீரைக் கொளள யான பொருளதேட வாரேன எனத தலைவன தன நெஞ்சொடு கூறிச் செல் வழுங்கினான (அகம். 149:7,17-19). கணபோலும் நெயதல மாமலர் (அகம்.150:8). தலைவி குவளை மலாபோலும் மையுண்ட கண்ணிளை (அகம். 156: 8). தலைவனது பிரிவையுணாந்து தலைவியின பல லிதழ் உண்கண் இளமுலை நனைய நீரைச்<noinclude></noinclude>
5blkvzv2ftcaic1hkgbyv1fh2mnkilm
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/62
250
620134
1838092
2025-07-02T05:25:46Z
TVA ARUN
3777
001_சோதனை
1838092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
54
கண்
கடையிரவு (பட், 115), பேய்க்கண் அன்ன முரசம் (பட். 138). கரிகாற் பெருவளத்தான் பகைவரைத் தன் செங்கண்ணாற் செயிர்த்து நோக்கினான் (பட். 280). மலர்போல் மழைக்கண் மங்கையர் (மலை, 58). சிறுகட் பன்றி (மலை. 153;அகம், 94:9; 277:8;.82:7;98:2, 380:1;.266:1;267:1). அழகிய கண்ணை யுடைய பெரும்பாம்பு (மலை. 258,281). காண்டற் கினியவற்றைக் கண் குளிரக் காணல் (மலை.352). நின்று நோக்கினும் கண்ணின் ஒளி யைத் தன்னழகாலே வாங்கிக் கொள்ளும் மலை (மலை,368,369).செங்கண் மரைவிடை (மலை. 406) செங்கண் வராஅல் (மலை. 457). செங்கண் எருமை (மலை,472). காண்பார் விரும்பும் கண்ணுக்கினிய சேயாற்றினது புதுப்புனல் வருவாய் (மலை. 476,477). சிறுகண் கீரி (மலை. 504). மடக்கண் மரையான் (மலை. 506), மடக்கண் மஞ்ஞை (மலை .509). கண் ணுக்கினிய சேயாறு (மலை. 885). என்னைக் காட்டி லும் என்னெஞ்சு விரைந்து சென்று தலைவியை யடைந்து அவளைக் கண் புதைத்துத் தழுவியதோ என்று வினைமுற்றி மீளும் தலைவன் தேர்ப்பாக னிடம் கூறுதல் (அகம். 9: 17-26), 'தலைவியது நெய் தற்பூவை யொத்த மையுண்ட கண் வருந்தினவாய் அழுமாறு அவளைப் பிரிந்து செல்லக் கருதுவாயா யின நீ பெரிதும் அரியதொன்றை மேற்கொண் டனை யாவாய' என்று தோழி தலைவனிடம் கூறி னாள் (அகம. 10:4-7). பொருள்
வயிற் பிரிந்த
தலைவர் என்னொடும் சென்றிருப்பின் என் குற்ற மற்ற கண் அழுதலைப் பொருந்தாமல உறக்கம் கொண்டிருக்கும்; இப்போது அது கழிந்தது என்று தலைவி வருந்தி மொழிந்தாள் (அகம். 12:7,18, 15). என் தாய் தன் கண்ணினும் இத்தலைவி பிடத்து மிக்க காதலுடையவளாய் இருககின்றாள் எனத் தோழி தலைவனிடம் கூறுதல் (அகம். 12:1). பைங் கண் செந்நாய் ஏற்றை (அகம். 21:17, 18), 'பிரிந்த தலைவர் குறித்த பருவத்து வாராமை பற்றி நோதலையுடைய நின் மையுண்ட கண் நீர் சொரிய நீ வெறுத்த நெஞ்சொடு வருந்தறக' என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள் (அகம். 25:13-16). 'குவ ளைப் பூலின் சிறந்த அழகினை வென்று அதனைக் கெடுத்ததோடு அமையாமல், போர்வெற்றி பொருந் திய வேல் குருதிதோய்ந்து பிறழ்வது போன்ற நின் செவ்வரி பொருந்திய மையுண்ட கண்ணின் மாறு பட்ட பார்வை நின்னைப் பிரியக் கருதிய தலை வரை எங்ஙனம் போகவிடும்' என்று தலைவியின் பிரிவு வேறுபாட்டினைத் தோழி மாற்றினாள் (அகம்.27:1}-17). கத்தியால் அறுக்கப்பெற்று இரு பிளவாகிய வனப்பினையுடைய மாவின் நறுவடுப்
போலக் காணுந்தோறும் களிப்பு மேவுதல் குறை யாத நோக்கமைந்த நின் மையுண்ட கண்ணை நினையாதொழிந்த தாளில் யான் சிறிதும் உயிர் தரித்திருக்க மாட்டேன் என்று தலைவன் தலைவி யைத் தெளிவித்துப் பிரித்தான் (அகம். 29:8-10). கானத்தில் மறவர் அம்பெய்தலால் வழிதோறும் மடிந்து கிடந்தோரது கண்ணைக்கவர்ந்து சென்று கழுகுகள் யாமரக்கிளைகளிலிருக்கும் தம் குஞ்சுக ளுக்கு உமிழ்ந்து கொடுக்கும் (அகம். 31:5-11). மலர் தன் பெருமையினை இழத்தற்குக் காரணமானது தலைவியின் மையுண்ட அழகிய மழைக்கண் (அகம், 33:9). சுனையில் கவின்பெறு நீலப்பூ கண்போல் மலர்ந்தது (அகம். 38:10,11), மாரிக் காலத்துப் பூப்ப தாசிய பித்திகத்தின் எழுச்சி பெற்ற மணம் தங் கிய அரும்பின் சிவத்த பின்புறத்தை யொக்கும் கொழுங்கடை மழைக்கண்ணையுடையவள் தலைவி (அகம். 42:1-4), செங்கண் காரான் (அகம். 46:1;குறு. 261:3). தலைவன் மகளிர் கண்போல் மலர்ந்த அழ கிய ஒளிபொருந்திய செங்கழு நீர்ப் பூக்களாய மாலையன் (அகம். 48.8). இயற்கைப் புணர்ச்சியில் தலைமகன் தலைமகளது மையுண்ட கணணை நோக்கெதிர் நோக்காகப் பலமுறை நோக்கிச் சென்றான (அகம். 48:20-22). அன்றில் மனைசேர் பனையில் துணையொன்று பிரியினும் துஞ்சாகாண் என்று தலைவன் பிரிந்த நிலையில் தலைவி கண் ணில் நிறையும் நீரைக் கொண்டு தன் ஆற்றாமை யைப் பிறரறிவதற்கு அஞ்சிஅதற்கு வேறு காரணம் கூறினாள் (அகம். 80:10-14). பல இதழ்களையுடைய பூப்போலும் மழைக்கண் அமைந்த மாயோள் (அகம். 51:9). காமநோயினால் தலைவியது ஆய்மலர் உண் கண் பசலை பூத்தல் (அகம். 52:14,15), தண் கயத் தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கப் பெற்றுத் தமக்குத் தாமே நிகரான மலர்களைப் போலும் பேரழகினை இழந்துவிட்ட கண்ணையுடையவ ளாய்த் தலைவி தலைவனின் பிரிவில் பெரிதும் வருந்தினாள் (அகம். 59:1-3). குவளை மலர்களை இணைத்து வைத்தாற் போன்ற கரிய இமையினை யுடைய மழைக்கண அமைந்தவள் மாயோள் (அகம். 68:4,5), மகளிர் வரிசையான இதழ்களையுடைய பூப் போலும் மையுண்ட கண்ணினா (அகம். 65:19). பூங் கண் புதல்வன் (அகம். 68:12; நற். 221:11). தலைவனது பிரிவினால் தலைவி கரிய மலரின சிறந்த அழகினை யிழந்த கண்ணள் ஆனாள் (அகம்.69:1,2). கொழுங் கண் அயிலை (அகம், 70:4). தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லக் கருதுவானாயின அவளது நீரொ ழுகும் கண் அவன்முன் தோன்றி அருந்துயர் தரும் (அகம். 77:12,19). பருந்தின் பேடை வெள்ளிய கண்<noinclude></noinclude>
9m6s9c5834z95yseybifk5fpzu2chty
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/61
250
620135
1838093
2025-07-02T05:25:50Z
TVA ARUN
3777
001_சோதனை
1838093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
(பதி. 22:37; 30:35). பல்யானைச் செல்கெழு குட்டு வனின் பகைவர் நாட்டில் மழையின்மையால் அந் நாட்டு மக்கள் கண்ணில பனிக்கின்ற நிறைந்த நீரை அடக்கியவாறு கைபுடைத்து வருந்தினர் (பதி. 26: 6-9,14). பைங்கண் யானை (பதி. 28:2; அகம். 85:7; 91:5; 187:18; D. 333:2; pp. 41:1; 43:9; 287:2). கருங்கண் காக்கை (பதி. 30:39; ஐங். 314:2). கண் ணைக் குத்தும் ஒளியினை யுடைய திகிரிப் படை யேந்தியவர் திருமால் (பதி. 31:8,9). பகைவரது கொடுமையினால் பாசறையில் பவநாள் தங்கித் தூங்குதல் அரிதாகச் சிறுதுயிலும் இயலாமல் சங்கு முதலியவற்றின முழக்கம் எழுப்பும் பெருமை பொருந்திய படைச் செல்வத்திற் பழகிய கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனின் கண் மகளிர் கூந்தல் மெல்லணை வதிந்து புணர்ச்சியாலுண் டான சிறுதுயில் நீங்க எவ்வளவு நாளாகுமோ எனப் பரணர் அவ்வேந்தனின் போர் வேட்கையைப் புலப்படுத்துவர் (பதி. 50:18-26), கண்போல் நெய் தல் (பதி. 51:17; அகம்.170:4; நற். 8:8; ஐங். 181:3). ஈரிதழ் மழைக்கண் பேரியல் அரிவை (பதி. 52:18). ஏந்தெழில் மழைக்கண் விறலியர் (பதி. 54:4,6). ஊடலாற் சினத்து நோக்கும் மகளிருடைய கண் ணுக்கு அஞ்சுவதினும் மிகுதியாக இரவவருடைய துன்பத்திற்கு அஞ்சுபவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (பதி. 57:13-15).இருங்கண் மூரி (பதி. 67:18). தன்னைப் பத்துப் பாடல்களால் பாடிய கபிலர்க்குப் பரிசிலாகச் சிறுபுறமென நூறாயிரம் காணம் கொடுத்த செல்வக் கடுங்கோ வாழியாதன் பின்னும் நன்றாவென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாவற்றையும் காட்டிக் கொடுத்தான் (பதி. ப. 7-அடிக்குறிப்பு). இருங்கண் யானை (பதி.தி.1:1). சினத்தாற் சுழலும் விழி யமைந்த பசுங்கண்ணையும் கழல்கண் கூகை தொங்கும் காதினையு முடைய பேய்மகள் குருதி யளைந்த கூருகிர்க் கொடுவிரலால் கண்ணைத் தோண்டி உண்ட முடை நாற்றத்தை யுடைய கருந்தலையைக் கையிலே ஏந்தித் துணங்கைக் கூத்தாடுமாறு முருகன் அவுணரைக் கொன்று சூர் மாவை வெட்டினான் (முரு. 48-61). கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் (முரு. 78), 'நெஞ்சே, திருப்பரங்குனறில் பன்னிருகைக் கோமானின் பாதத்தைக் கரங்கூப்பியவாறே கண்குளிரக் கண்டு ஆசையால் முருகாற்றுப்படையினைப் பூசையாக் கொண்டே புகல' எனப் புலவர் பாடுவர் (முரு. வெ. 9). பாலை யாழின் துளைவாய் தூர்ந்த முடுக் குதல் அமைந்த ஆணி நண்டின் கண் போனறது (பொரு. 9,10,32). கொழுங்கடை மழைக்கண் (பொரு.
53
கண்
26). கரிகாற் பெருவளத்தான தன்னை நாடி வந்த பொருநனைத் தன் கண்ணிற் காணத்தகும் அணிமையிடத்தே இருக்கச் செயது அருளினன் (பொரு.76,77). திறக்காத கண்ணையுடைய குட்டி முலையிடத்துப் பாலகுடித்தலைத் தன் பசிமிகுதி மாஸ் பொறுக்கமாட்டாது ஈன்றணிமையுடைய நாய் குரைத்தல் (சிறு. 130-132). கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல் (சிறு. 184). கடவுள் மால் வரை (மேருமலை) ஒரு கண்ணை விழித்துப் பார்த்தா லொத்தது நல்லியக் கோடனின் கோபுரவாயில் (சிறு. 208,206). அரியேர் உண்கண் அரிவையர் (சிறு. 215). நல்லெழில் மழைக்கண் மடவரல் மகளிர் (பெரு.386,387). பூப்போல் உண்கண் புலம்பு முத் துறைப்பத் தலைவியழுதாள் (முலலை. 22,23). வாள் நெடுங்கண் (முலலை. வெ. 1:1). மதுரைத்தெரு உண் டமையாத உணவு மிகும் செல்வத்தோடு கண்டமை யாத கண்ணுக்கினிமை வாயந்தது (மது. 16-18). பெருங்கவின பெற்ற சிறுதலை நவ்வி மடக்கண பிணையொடு துள்ளி விளையாடியது (மது. 275,875). மகளிர் மடக்கண் செயிர்த்த நோக்குடையவர் (மது. 412). கண்ணைக் குத்துதல் செய்து சிந்தி விழுமாறு ஒளியமைந்த பூத்தொழிலையுடைய சுலிங்கம் (மது, 433). பாதியிரவில் ஒலியடங்கிய குளிர்ந்த கடலை யொப்பப் படுக்கையில் உறங்குவோர் இனிது கண துயில்வர் (மது.629-6:1), மதுரை ஊர்ககாபபாளர் கவிற்றை இரையாகப் பார்கரும் புலிபோவக் கண மாறாடவரின் பதுங்கிடங்களைப் பார்த்தலினால் துஞ்சாக் கணணராய்த் திரிந்தனர் (மது. 642-647). கண்ணைக் குத்தி ஒளிவிட்டு விலங்கும் மின்னுக் கொடி (மது. 665). பொலிலினையுடைய மகரக் குழையிட்ட அழகிற்குப் பொருந்திய ஏத்தெழில் மழைக்கண் மடவரல் மகளிர் (நெடு.38,39). பாண்டி மாதேவி பிரிவினால கலங்கிக் கரிய இமையினால் தாங்கப்பட்டு மேனமேல் நிறைதலால் விழும் நிலையிலிருந்த நீர்த்துளியைக கடைக்கண்ணிலே விரலை வைத்து ஒற்றியெடுத்துச் சில துனிகளைத் தெறித்தவாறு தனிமைத் துன்பத்தோடிருந்தாள் (நெடு. 164-166). தலைவியும் தோழியும் தவிராத வேட்கையொடு அருவியாடி உள்ளகம் சிவந்த கண்ணராயினர் (குறி. 35-61). தலைவனின் நாய்கள் தமக்குப் புதியராய எதிர்ப்பட்ட தலைவியையும் தோழியையும் கண்டவுடன் இமையாக கண்ணை யுடையனவாய் வளைத்துக் கொண்டு நெருங்கின (குறி.131,132). மடமதர் மழைக்கண இளையர் (குறி. 141). தலைவன் வரும இரவு வழியின் ஏதம் நினைத் துத்தலைவியின பெருமதர் மழைக்கண உகுத்த நீர் மார்பை நனைத்தது (குறி. 243,849). கண்துயின்ற<noinclude></noinclude>
r281wy28m6ir84y9mxftz5qc7xix3ib
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/60
250
620136
1838094
2025-07-02T05:25:53Z
TVA ARUN
3777
001_சோதனை
1838094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
வொடு கண்ணுக்கு இனியராகவும் செவிக்கு இன் னாதவராகவும் இருக்கின்றார்; நீயும் நின்பகைவரும் இனிமைஇன்னாமைகளில் இவ்வாறு ஒத்திருந்தும் இவல்லகம் நின்னையே வியக்கின்றது; அதன் காரணம் என்னோ' என்று வினவுவார் போல ஏனாதி திருக்கிள்ளி மறத்திணைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாராட் டினார் (புறம. 157). அவுணர் கூட்டம் ஞாயிற்றைக் கொண்டு போய் ஒளித்தபோது இருள் உலகத் தாரின் கண்ணை மறைத்தது (புறம். 174:1-3} வேந்தரது உயர்ந்த கோயிலிடத்தே பரிசிலர் தம் கண்ணொளி கெடுமாறு பவநான் நின்ற லர்ந்து பாடி யானைப் பரிசிலைப் பெறுதல் (புறம். 177: 1-3). செங்கண் ஆடவர் (புறம்: 177:8; அகம்.187:4;239:3). கடுங்கண் எயிற்றி (புறம். 181:2). காதலரைப் புணர்ந்த மகளிர் பூவணி அணியவும் பிரிந்த மகளிரின் வருத்தத்தை யுடைய மையுண்கண் நீர்வார்ந்து துளிப்பவும் உலகைப் படைத்தோனைப் பண்பிலாளன் என்பர் பக் குடுக்கை நன்கணியார் (புறம், 194: 3-5). அதியமான் நெடுமானஞ்சியின் மார்பகத்தில் தைத்த வேஸ் அவனால் புரக்கப்படும் சுற்றத்தாரது புல்லிய கண்ணின் பாவை ஒளிமழுங்கப் புலவர் நாவிற் போய் வீழ்ந்தது (புறம். 235: 12-15), 'மாரி இரவில் மரக்கலம் அமிழ்ந்த காலத்துத் துன்புற்ற நெஞ்சு டனே கண்ணில்லாத ஊமன் கடலில் அழுந்தினாற் போலத் துன்பமாகிய மறுசுழியிற்பட்டுச் சுழலு வதை விடவும் இறந்துபடுதலே நன்று' எனப் பெருஞ்சித்திரனார் வெளிமான் துஞ்சிய நிலையில் வருந்திக் கூறினார் (புறம். 238: 14-19). தன் தலை வன் விண்ணுலகடைந்தானாக அவன் கற்புடைய மனைவி அவனுக்கு, உணவு கொடுத்தல் வேண்டிச் சிறிய இடத்தைத் துடைத்து அழுதலமையாத கண்ணையுடையளாய்த் தன் கண் கலுழ்கின்ற நீராலே சாணாகத்தைக் கொண்டு மெழுகினான் (ஏறம். 249:10-14). பசிய கண்ணினையுடைய மறவ னொருவன் கரந்தையாரால் கவர்ந்து செல்லப் பட்ட ஆனிரையைத் தானொருவனே தனித்து நின்று மீட்டான் (புறம். 257: 2-10). தலைவனொரு வனது பெரிய இல்லம் அவன் மாள்வதற்கு முன்னாட்களில் புதுமாந்தருடைய ஒளிமழுங்கிய கண் நிறையுமாறு ஆட்டிறைச்சிப் பொறியலை உண்டாககியது (புறம், 261:8-10). புதிய அகலி டத்தே கொண்ட புலியினது கண்போன்ற நிறத்தை யுடைய வெம்மையான கள்ளுணலை வீரர் ஒரு முறைக்கு இருமுறை உண்டனர் (புறம்.269:4,5). கண்ணுக்கு நிறைவு தரும் நொச்சியினது அழகிய
52
கண்
நிறமுடைய தழையை மகளிர் இடையில் தொடலை யாக அணிந்தனர் (புறம். 271:2-4). போர்ப்புண் பட்டு இறுதிநிலையில் இருந்த மறவகொருவனின் இறப்புறுதியைக் காட்டுனைபோல் திகழ்ந்த குறி களுள் ஒன்றாக அவன் மனைவியது துஞ்சாத கண் துயில் விரும்பியது சுட்டப்படுகிறது (புறம். 280:1-4). மறவனொருவன் முதனாட் போரில் தன் தமை யனை வீழ்த்திய பகைமறவனைக் கொல்லுதற்கு அகலில் பெய்த குன்றிமணியைப் போலச் சினத் தால் சுழலுங் கண்ணையுடையனாய் அவனைத் தேடினான் (புறம்.300:3-6). தலைவ னொருவன போரில் ஒருவரும் தனக்குத் துணையில்லாத தனிமை நிலையில், பகைமறவர் பலரும் தாக்கியதற் கெதிராகச் சிறப்புடைய செங்கண் சினத்தால் புகையத் தானே தன் கேடகத்தைக் கொண்டு தன்னைக் காத்து நின்றனன் (புறம். 311:4-J), சிறு வர் வில்லெடுத்து ஆர்ப்பின் பெருங்கட் குறுமுயல் கருங்கலன் உடைய மன்றிற் பாயும் (புறம். 325: 4-6). தலைவி குவளைப் பூப்போலும் மையுண்ட கண்ணுடையவள் (புறம். 348:6). அரிபரந்து மதர்த் துக் குளிர்ந்த கண்ணையுடையவள் அரிவை (புறம். 349:5; அகம்.114:14,18). இளையோள் வடித்த வேலின் இலைபோலச் சிவந்தனவும் மையுண்டனவு மாகிய கண்ணினள் (புறம்.350:9,10). தேரூர்ந்து சென்ற தலைவனொருவன, வழியிடையே மறவள் மகளொருத்தியது சாயலை நோககித் தேரை நிறுத்தியவனாய் வெளுத்த கண்ணையுடையவ னாய் அவள் யார்மகள் என்று பிறரை வினவி நின்றான் (புறம். 353:4-7). நிலமகள் விசும்பினை முகமாகவும் ஞாயிறும் திங்களுமாகிய இருசுடரைக் கண்ணாகவும் கொண்டவள் (புறம்.365:1,2,10). செங்கண் மகளிரொடு சிறுதுனி கலந்து கட்டேறல் பருகி அறவோன் மகன் கெடவருந் திருவொடு விளங்கினான் (புறம்.366:14-16). மடக்கண் மயில் நடந்தது போல மகளிர் நடத்தல் (புறம்.373:30-12). போரில் எறியுங்கால் உண்டாகும் புண்ணைக் கண்டு ஆற்றாராய்ச் சிலர் கண் கலுழ்ந்தனர் (புறம்.373:22,23). மான்கண் மகளிர் (புறம 374:10). கண்ணன்ன மலர் (புறம. 396:2). இருங்கண் எருமை (பதி. 13:4). கண்ணின் முன்னர் உவபபினை வெளிப் படுத்தி நெஞ்சக் கருத்தை வெளிப்படுத்தலை யறி யாத பகைவரிடத்தும் இமைய வரம்பன் நெடுஞ் சேரலாதன் பொயத்தலை யறியான் (பதி. 20:8,9). கூந்தலினின்றும் நீங்கிய மலர்களைப் போலத் திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண்ணை யுடையவள் சேரமாதேவி (பதி. 21:33-37). கழல்கண் கூகை (பதி.22:36; முரு. 49). கருங்கண் பேயமகள்<noinclude></noinclude>
fq3ck82kmtir59iobmomo7jfqxz0umr
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/59
250
620137
1838095
2025-07-02T05:25:56Z
TVA ARUN
3777
001_சோதனை
1838095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
159:16; 179.4; sb. 2331; 314:3;327:2;355:4; 363: 2). முக்கட் செலலர் (சிவபெருமான) (புறம் 6: 10. கண்ணிற்கு விளங்கும் அழகிய விலலையுடை யவன் கரிகாற் பெருவளத்தான் (புறம்.7:4). நீ பகைப்புலத்தில் தங்கிக் கீழ்க்கடல் பிள்ளதாக மேற் கடலின் அலை நின் குதிரைக் குளம்பை அலைக்கு மாறு வலமாக முறையே வருதலுமுண்டாம் என மனஞ்சுழன்று நெஞ்சு நடுங்கும் அவலம் பரவ, வடநாட்டு அரசுகள் துயிலாத கண்ணையுடைய வாயின என்று சோழன் நலங்கிள்ளியின் மறத்தைக் கோவூர்கிழார் பாராட்டுவர் (புறம், 31:12-17). கிள்ளி வளவனது வெண்கொற்றக் குடை கண்ணைக் குத்துமாறு ஒளிவிட்டு விளங்குவது (புறம். 35:19). கண்ணார் கண்ணி (கண்ணுக்கு நிறைவு தரும் தலைமாலை) (புறம்.38:12; பொரு. 148 ; சிறு. 65). புதல்வர் பூங் கண் (புறம்.41:14), விளங்கில் என்னும் ஊர் கதிர் விடும் மணிகளால் கண்ணைக் குத்துகின்ற மாடத் துறையும் மகளிர் வேதிகையிடத்து விளையாடும் சிறப்புடையது (புறம். 53:2-4). 'முப்புரங்களை எரித் துத் தேவர்க்கு வெற்றியைத் தந்த கறைமிடற்றன் ணலின் நெற்றியில் விளங்கும் ஒப்பற்ற கண் போல ஏனை வேந்தரினும் மேம்பட்ட மாறனே" எனப் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ் சிய நன்மாறனை மருதனிளநாகனார் பாராட் டினார் (புறம்.55:1-6). சேரமான குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பல தடக் கைப் பெருவிற்ற ஒன்ளியும் பொருத களத்திற்குத் தேரேறி வந்த இருதிறத்து மறவரும் தாம் பிடித் திருநத கேடகம் தம் கணணை மறைத்துக் கிடக்க ஒருஙகே மடிந்தனர் (புறம்.53:5,6). 'பகைவேந்த ரைப் புறககொடை காணேனாயின், மையுண்ட கண்ணினையுடைய என் சிறந்த மனைவியாய இவ ளினினறும் யான் பிரிவேனாக; என கணபோலும் நண்பினையுடைய கேளிரொடு கூடிய இனகளி மகிழ்நசையை யான் இழந்தேனாகுக' என்று ஒல லையூர் தந்த பூதப்பாண்டியன் வஞ்சினங் கூறி னான (புறம்.71:3-6,15,16). உண்கண (புறம். 89:2; பதி. 16:18). பொருட்டெழினிக்குத் தோன்றிய பகைகள இரண்டனுள் தன்னைப் பார்த்த மகளி சின் பூப்போலும வடிவினையுடைய மையுண்ட கண் பசப்பத் தோள் மெலிய நெஞ்சு பிணித்து அவர் துனிகூர்தலால் உளதாய பகை ஒன்று (புறம். 26:2-5). பகைவரை வெகுண்டு நோககிய அதிய மானின கண் தன தவமகன பிறந்தானைக் கண்ட விடத்தும் சினசசிவப்பு மாறவிலலை என்று ஒளவை யார் அவனது வீரத்தைப் பாராட்டினார் (புறம். 100:10,113.கிணைமகள் நீலத்தினது இணைந்த இரிபாகதொ 2-4அ
51
கண்
மலரை ஒக்கும் மையுண்ட கண்ணை யுடையவள் (புறம். 111:3,4). 'பெரும்புகழையுடைய பறம்பே, பாரி மாய்ந்து விட்டதனால் யாம் கலங்கிச் செய் வற்று தீரொழுகும் கண்ணுடன் நின்னைத் தொழுது வாழ்த்திச் செலகினறேம்' என்று கபிலர் பாரி மகளிரை அழைத்துக் கொண்டு பறம்பை விடுத்துப் போகையில இரங்கிக் கூறினார் (புறம். 113.5-7). மிக அழகிய குளிர்ந்த கண்ணினையுடை யவர் பாரி மகளிர் (புறம். 116:3). அமர்க்கண் ஆமா (புறம்.117:4, 5) பாணனுடைய சுற்றம் உண்ணாமை யால் உடம்பு வாடிக் கண் தெளிந்த நீரால் நிறைந்து வியர்ப்புற்று வருந்தியது (புறம்.136:6-9). நாஞ்சில் மலையில் மழையால் சொரியப்பட்ட நீர் கோடை காயினும் மகளிர் கண்போன்ற குவளை முதலிய மலர்களைப் பூக்கும் (புறம. 137:7,8). பேகன மனைவி கண்ணகியின் நீல நறு நெய்தல் மலர் போன்று பொலிந்த மையுண்ட கண் தன் கணவன் துறந்தமையால் கலங்கிச சிந்திய துளிகள் அவள் மார்பை நனைத்தன (புறம். 144:4,5), பேகன மனைவி ‘அரி பரந்த மதர்த்த குளிர்ந்த கணணை யுடையவள் (புறம. 147:5). பெருஞ்சிததிரனாரின் நாய் கண்மறைந்து முற்றத்திடத்தினினறும் புறப் பட மாட்டாத மூப்பையுடையவள (புறம். 159:4,5). 'அன்பின்றிப் பிரிந்து சென்றவாக்கு இன்றுடன் ஓராண்டு கழிக' எனச் சொலலிக் கணணொளி மழுஙகிய இரக்கத்துடனே என் மனைவி வலிமை குளறித் துன்புறுவாள்' என்று பெருஞ்சித்திரனார் தம் மனைவி நிலையைக கூறிக் குமணனிடம் பரிசில வேண்டினார் (புறம். 161:10-16), 'சமைத தலை மறந்த அடுப்பினிடத்தே காளான பூக்க உடம்பு மெலியும் பசியால வருந்திப பாலின மையால் தோலொடு சுருஙகித் துளை தூர்ந்த வறுமுலையை வறிதே சுவைக்குந்தோறும் அழு கினற தன் பிள்ளையின முகத்தைப் பார்தது. நிரால நிரம்பிய ஈரமான இமையும மழைக் கண்ணும் கொண்ட மனைவியின் வருத் தததைப பார்த்து அதனைத் தீர்த்தற்குரியவன நீயென நினைந்து நின்பால் வந்தேன்' என்று குமணனிடம் பெருந்தலைச் சாததனார் கூறினார் (புறம்.164:1-8), 'நீதான போரைக் காணின் அப் போரை வென்று பகைவரது படையை விலக்கி எதிர்நிற்றலால் வாள்பட்ட வடுவழுந்திய உடம் பொடு கேள்விப்படும் செவிக்கு இனியனாகவும்
என
காணும் கண்ணுக்கு இன்னாதவனாகவும் இருக் கின்றாய்; நின பகைவரோ நின்னைக் காணின் புறந்தருதலால் புண்ணறியாத உடம்பாகிய வடி<noinclude></noinclude>
6x25fi820ew1vqgswtcm20j9kt12d4k
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/71
250
620138
1838096
2025-07-02T05:27:25Z
TVA ARUN
3777
001_சோதனை
1838096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
63
கண்
ணில்பட்ட வேறொரு தலைவியைக் கண்டு கலங் கினாள் (நற். 198:2-4), குவளை மலரைப் போலும் மையுண்ட கண்ணையுடைய தலைவி தனித்திருக்கத் தலைவன் ஆள்வினைக்கு அகல்வானாயின் அவளது மாமைக்கவின் அழியும் (நற். 205:5-11). தலைவனது பிரிவுக் குறிப்பினை யறிந்து தலைவி தன் இடை முலை நனையுமாறு இடையீடின்றிக் கலங்கியழும் கண்ணோடு பெரிதும் மனமழிந்து வாட்டமுற் றாள் (நற்.208:2-4). கண்ணுக்கு நேருகின்ற துன் பத்தைத் துடைக்கும் கைபோல் உதலித் தனக்கு நேரும் துவரினைக் களையாராயினும் தலைவரில் லாத ஊர் இன்னாததே என்று பரத்தை கூறினாள் (நற்.216:3-5), 'என் கண் பழைய அழகு கெட்டுப் பசலை படர இன்னுயிர் பிரிவதாயினும் வரை விடை வைத்துப் பிரிந்து நீட்டிக்கும் தலைவரொடு யான் புலவேன்' என்று தலைவி தன் ஆற்றா மையை உள்ளடக்கித் தோழியிடம் கூறினாள் (நற். 219:1-4). தலைவியாகிய குறுமகள் கயல்போன்ற மையுண்ட கண்ணையுடையவள் (நற். 220:9). அதிர் குரலையுடைய மேகம் தான் சூல்முதிர்ந்த கடன் திருமாறு மழைபெய்தற்குக் கண் மறையும்படி நடுயாமம் செறிந்த இருளைப் பரப்பியது (நற்.228: 2,3). தலைவனது பிரிவாற்றாமையால் தலைவியின் நீர்வடியும் கண் முன்போலின்றி வேறுபாடு கொண் டது (நற்.237:2). தலைவியின் பல்லிதழ் உண்கண் கலங்கியழத் தலைவன் பொருள்வயிற் பிரிந்தான் (நற்.241:11,12). பிணைமான் மருண்டு விழிக்கின்ற கண்ணையுடைய குட்டியோடு கூட்டத்திலிருந்து இரிந்தோட ஆண்மான் விருப்புடன் அதனைத் தேடியது (நற். 242:7-10). பூங்கண் இருங்குயில் (நற். 243:4). மைதீட்டப்பட்டு (நீல) மலரை எதி ரெதிர் வைத்துப் பிணைத்தாற் போலும் கரிய இமைகளையுடைய மழைக் கண்ணையுடையவள் தலைவி (நற்.252:8,9). கார் காலத்தில் காட் டினிடத்தே பிணையைத் தழுவிய கலைமான் வேல மரத்தின் கண்கவர் வரிநிழலில் தங்கியிருக்கும் (நற்.256:7-10). பசுங்கண் காக்கை (நற். 258:8). வாடைக்காற்று வீசுதலால் கண்போன்ற கரு விளை மாமலர் ஆடுகின்ற மயிலின் பீலி போல் அசையும் (நற்.262:1,2).. தலைவனைக் கண்டு தலைவி பலகால் மறைக்கவும் அவள் மை யுண்ட கண் நீர் நிலை கொள்ளாமல் அளவு கடந்து வெளிப்பட்டு அவனுக்கு ஆற்றாமைத் துயரை உரைத்துவிட்டன (நற்.263:8-10). நண்டின்கண் நொச்சியின் கரிய அரும்புபோன்றது (நற்.267:1,2), தலைவியது திருமுகத்தே அலமருகின்ற கண் துன்ப முற்றுப் பெருமரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடி
போல் நம்மைப் பிணிக்குமென்று கருதாவாய்த் தலைவன் பிரிந்து போவான் (நற். 269:5-8). மகளிரது கண்ணை நேர்பட ஒத்தது நெய்தற்பூ (நற். 28.3:9). பெரிய சுனையில் பூதத (நீல) மலர்களை எதிரெதிர் வைத்துப்பிணைத்தாற்போலும் கரிய இமைகளைக் கொண்ட மழைக்கண்ணை யுடையவள் (நற்.301:2,3). தலைவனது செலவுக்குறிப்பி யுணர்ந்து தலைவி மலர்போலும் மையுண்ட கண் ணில் நீரொழுகக் கலங்கினாள் (நற்.308:1,2). 'கயல் போன்ற மையுண்ட கண்ணையுடையவள் தலைவி (நற்.316:3). 'நாடனே, நின் காதலியொடு நீ கொண்ட கேண்மையினை அன்னை அறிலளாயின் குவளையின் கரிய இதழை யுடைய சிறந்த மலரை யொத்த இவள் கண் நீர் வடியப் பெற்று என்னா கும்' எனத் தோழி தலைவனை வினவி வரைவு கடாவினாள் (நற். 317:5-10), 'பாவையன்ன குறுமக் ளின் சுணங்கணி வனமுலையை முயங்கல் கருதி மீன் கண்துயிலும் இராப்பொழுதின் நடுயாமத்தும் யான் கண் துயிலகில்லேன்' என்று தலைவியைக் காப்பு மிகுதியால் காணப் பெறாத தலைவன் ஆற்றாது கவன்றான் (நற்.319:6-11), பேதும், இவளது பூப்போலும் மையுண்ட கண் புதுநலம் சிதையும்படி மிக்க நீரைச் சித்தல் கண்டும் நீ பிரிந்து செல்லுதல் தகுமோ' என்று தோழிழ் தலை வனைச் செலவழுங்குவித்தாள் (நற்.335 : 5-9). *நாடனே, நீ பங்னாளும் இவனிருக்கும் புளத்திற்கு வந்து போயினும் இன்ன காரணம் என்று உன{ரி" முடியாதவாறு (நீல ) மலரைப் போலும் இவள் கண்ணில் பீர்க்கம் பூவைப் போலப் பசவை ஊர்கின்றது' எனத் தலைவனைத் தோழி 'வ்ரைவு' கடாவினள் (நற். 326:4-10). நம்மை விரும்பிக் கள வொழுக்கத்தில் வந்து கூடும் சான்றோராகிய தலை வரை நாம் விரும்பி யொழுகுதல் பழியுடையதா மெனில் உறங்காதனவாய் அழுகின்ற கண்ணொடு ஏக்கத்தால் இளைத்து இறந்து படுதனும் இனிதே யாகும்' என்று தலைவி தோழியிடத்துரைத்தாள் (நற். 327:1-3). 'நீ இருக்கின்ற சேரியைச் சார வரும் தலைவர்க்கு எக்காலத்தும் அருள் செய்ய வேண்டும்" என்று தலைவியிடத்துத்தோழி கண்ணினால் இலை குறிப்புத் தோன்றக் குறை நயப்பித்துக் கறியும் அவள் அச் சொற்களைத் தெளிந்திலள் (நற் 342:3- 6.) பூங்கண் மடந்தை (நற். 855:19. கொடுங்கண் காக்கை (நற்.367:1). தலைவி, புதல்வனைப் பெற்ற காலத்துத் தலைவன் அவளை அணுகி முதுபெண் டெனச் சொல்லாடி நிற்ப, அவள் மெல்ல முறு வலித்துச்சிறந்த நீலமலர் போன்ற தனது மைண்ட கண்ணைக் கையால் புதைத்து மழ்ச்சி கொன்<noinclude></noinclude>
87c168uv52eu7ob30u2pbdqph7lhy8t
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/86
250
620139
1838099
2025-07-02T05:29:19Z
TVA ARUN
3777
001_சோதனை
1838099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்கூடுதல்
கண்கூடுதல் - ஒருங்கு கூடுதல். போர் மறவர் கண்கூடி ஒருங்கு கூடி-தங்கியிருப்பது பாசறை (புறம். 294:2; 372:4). பொருநன் ஏந்தியிருந்த பாலையாழ் கண் கூடி இருப்புப் பொருந்திய திண்பிணித் திவ வினை யுடையது (பொரு. 15,32) களிறுகள் தம்மில் சேர்ந்து மலைந்தாற் போன்று கண்கூடிய துறு கற்கள் காணப்பெற்றன (மலை. 384,. வாள் மயங்கு போர்க் களத்தில் களிறுகள் கண்கூடின (அகம். 32E17), சூாழற் பூவைப் பறித்துப் பூவும் மயிரும் மயங்க முடித்து வாரிமுடிக்கும்படி கண்கூடிய பயிர் தோளில் காதோடு சிறிது குலைந்து வீழத் தலைவி நடந்தாள் (கலி. 56:2-6).
கண்டம் 1. கண்டத்திரை (ஆகுபெயர்). பாசறையில் ஓரிடத்தில் நெடிய குத்துக் கோலுடனே பண்ணிய கண்டத்தை - கண்டத்திரையை - வளைத்து அரச லுக்குக் கோயிலமைத்தனர் (மூல்லை. 43,44). 2.துண்டு. பரங்குன்றத்திலுள்ள செவ்வேளை வழி படச் சென்றோமில் சிலர் யானைகளை வழியினின் றும் அகற்றி மரங்களில் கட்டி அவற்றிற்கு உண வாகக் கண்டமாக - துண்டாக - முறித்த கரும் பைத் தருவர் (பரி. 19:30-34).
கண்டல் - தாழை. கண்டல் - தாழை - நிறைந்த கடற் கரைச் சோலையில் குருகினம் ஒலித்தது (அகம். 260:3). கொக்கின் பார்வைக்கஞ்சிய நண்டு கண் டல் வேரிடத்தே யுள்ள வளையுட் புகுந்தது (குறு. 117:1-3). கடற்கரையில் நின்ற மலர் நிறைந்த கண் டல் கழிநீர் பெருகும் இடத்தி.. தர்ைத்து வெள் ளம் பெயரும் பொழுது தானும் பெயர்ந்தது (குறு. 340:4-6), தழை உடுப்பவர் கொய்யும் குழை அரும் பிய ஞாழல் தெளிந்த அலையின் புறத்தைத் தட வும் கண்டல் மரவேலியை யுடைய கடற்றுறைக் குரி யவன் தலைவன் (நற். 54:8-11), ஊர் கடற்கரையி லுள்ள கண்டல் மரங்களை வேலியாக வுடையது (நற். 74-- 18). புலால் நாற்றம் வீசும் அலைமோதிய வளைந்த அடியையுடைய கண்டல் மரத்து வேரின் கீழ் இரட்டையாக நெருங்கியிருக்கும் நண்டுகள் செல்லும் (நற்.123:9,10), கண்டல் மரங்களாகிய வேலி சூழ்ந்த சிறுகுடித் தெருவிடத்து நேற்றிரவு ஒரு தேர்வந்தது எனச் சொல்லி ஊர் முழுவதும் அலர் எழுந்தது (நற்.191:5-7). கழிசூழ்த்த கண் டல் மர வேலியை யுடைய கொல்லையில் முள்ளிச் செடிகளால் வேய்ந்த சிறு குடில்களையுடைய பர தவர் உறைகின்ற பாக்க மெங்கும் கல்லென்றும் ஓசை உண்டாகும்படி நெடுந்தேரில் நம் தலைவர் வருவது நிறுத்தப்படுவதொன்றன்று எனத்தோழி செவிலிக்குக் கூறி அறத்தொடு நின்றாள் (நற். 2072
78
கண்டீரக்கோன்
I-9). பெருங்காற்று வீசியதால் கடற்கரைச் சோலையிதுள்ள கண்டல் மரத்திலிருந்து சுழன்று உதிர்ந்த பைங்காய் நீல நிறத்தை உடைய கழியின் உட்பக்கம் வீழ ஆங்குள்ள ஆம்பற் போது மலர்ந் தது (நற்.345:1-5). கண்டல் மரங்களை வேலியாக உடைய கழிசூழ்ந்த கொல்லைகளை உடையவன் நல்ல கடல் நாட்டுத் தலைவன் (நற்.363:1,2). கண்டல் மரத்தை வேலியாகவுடைய கழிசூழ்ந்த நல்லூரில் வீட்டிலிருந்து மகளிர் கழியிடத்து மீனைத் தேடுகின்ற பரதலருடைய படகுகளில் இருக்கும் விளக்குகளை எண்ணுவர் (நற்.372:10- 13). வையையாற்றில் நீராடிய மைந்தரிற் சிலர் நீரின் அலை மேலும் நுரை மேலும் கண்டல் தாதைத் தூவினர் (பரி. 10:101). கண்டிகை - கழுத்தணி, இளமொந்த மணிகளாற் செய்த தன்னிலொத்த முக்கண்டன் கட்டுவடமா கிய பலபல நிறத்தை யுடைய கண்டிகை - கழுத் தனி - அணிந்த (பரத்தையாகிய) குதிரையைத் தலை வன் ஊர்ந்தான் (கலி. 96:14-21).
கண்டி நுண்கோல் - துணிக்கப்பெற்ற நுண்ணியகோல், கண்டி துண்கோலை - துணிக்கப்பெற்ற நுண்ணிய கோலை- கையிலேந்தி ஊர் மன்றத்தேயிருந்து தலைவன் புகழ்களைக் கூறி வாழ்த்தும் அகவலன் -(பாணன்) குதிரைகளைப் பெறுவான் (பதி. 43:26-28). கண்டீரக்கோப்பெருகள்ளி - ஏழு வள்ளல்களுள் ஒருவன், இவன் கண்டீரக்கோ எனவும், கண்டீரக்கோப் பெருநள்ளி எனவும் கூறப்படுவன். இணங்கண்டீரக் கோவும் உண்மையின், இவன் பெருநள்ளி எனப்பட் டான். இவன் இரவலர் வறுமைத் துயர் போக்கும் வீரனாய் விளங்கினான். தோட்டி என்னும் மலையைத் தன்னகத்தே கொண்ட கண்டீர நாட்டிற் குரியவன் (ஔவை. து. புறம், 148 முன்னுரை). இது மலை நாடாதலின் இவன் நளிமலைநாடன் நள்ளி எனப் பாராட்டப் பெற்றான், நன்லி பெருஞ்செல்வம் நல்கியதால் தம் இனத்தார் ஆடல் பாடல்களை அடியோடு மறந்தனர் என்பதைப் புறம் 149, 153- ஆம் பாக்களில் வன்பரணர் புலப்படுத்துவர். இவ் வள்ளல் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளா மல் உணவு, அணிகளில் முதலியவற்றைக் கொடுத் தோம்பிய வண்மையையும் புகழ்வேண்டாப் பெற்றி மையையும் இப்புறவர் சிறப்பித்துள்ளார். நெ பாணாற்றுப்படை நள்ளியை 'நட்டோர் உலப்ப நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்த நளிமலை நாடன்' என்று சிறப்பிக்கும் (193107). கண்டீரக்கோன் - ஓர் அரசன், கண்டீரக்கோப்பெரு நள்ளிக்கு இளையொனாதலின் இலன் இளங்<noinclude></noinclude>
lprz0eunumgbnybc0bel7so09zhp2en
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/85
250
620140
1838100
2025-07-02T05:29:23Z
TVA ARUN
3777
001_சோதனை
1838100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
கன்றுடைய பிடியானை களிற்றுடன் தடவிப் பார்க்கும் (அகம். 321:7-9). குளங்கள் நீர் வற்றும் படி கண்ணழிந்து உலர்ந்த நெடுநெறிகளை யுடைய வெம்முனை அருஞ்சுரத்தில் தலைவன வினைவயிற் சென்றனன் (நற். 224:8-11).
10.பீலிக்கண். பறைபோன்ற வட்டமான கண் - பீலிக்கண் - நிறைந்த தோகைகளையுடையது மயில் (அகம். 15:4,5), பரதவர் மடமகள் மயிலின பீலிக் கண் போனற மாட்சிமைப்பட்ட முடியை யுடைய பாவை போல்பவள் (குறு. 184·8,6).
11.உடம்பு.ஊழி முடிவில் பசுங்கண் கடவுள்- பசிய உடம்பை இடப்பக்கத்தே யுடைய கடவுள் (உருத்திரன்) - எருமையை ஏறுகினற கூற்றுவனது நெஞ்சைப் பிளநதார் (கலி. 101:24,25). பொன் போலும் சிவந்த கண்ணையுடைய பச்சை (காமன்) பசிய கண்ணையுடைய மாஅல் (அநிருத்தன) முதலிய வராகவும் திருமால விளங்குகிறார் (பரி.3:82). 12.வடிவு.நிறம் பொருந்திய கண்ணை-வடிவை- உடையது தினைச்சோறு (மலை. 169). தலைவியின் தந்தையாகிய பரதவன கடலில், கண திரண்ட முத்துக்களைக குளித்தெடுததுக் கொணர்தது கரை யிடத்தே பகுத்துக் கொளளும் துறையினை யுடை யவண (அகம். 280:11-14).
13. மீன் (உவமையாகுபெயர்). திருமால் எழுந்தருளி யிருக்கும் இருந்தையூரின் ஒரு பக்கத்தே, பெரிய மீன்கள் தங்கியிருக்கும் வானம் விரிந்து விளங்கு மாறுபோல் கண்-(கண்போலும) மீன-வாழும் கயம் விளங்கியது (பரி.தி.1:12,13).
14. அறிவுக்கண். ஒளறையும் கலலாமல் மூத்தவ னுடைய கண் - அறிவுக்கண-இல்லாத நெஞ்சு போலே மாலைக காலத்தில் இருள் உலகிற் பரவும்
(கலி.130:6,7).
15. நோக்கம். பசி வருத்த வருந்திய தன் பெரிய சுற்றத்தார்க்கு நிறைந்த உணவு பெற வேண்டு மெனபதில் கண-நோக்கம்-இருப்பதை யறிந்த இர வலன் நாற்றிசையும் புரவலரைத் தேடித திரிந்தான் (புறம். 370:3,4},
16. அன்பு. தலைவி, தனக்குப் பகைவராய பரத் தையர் தலைவனுக்கு அணிவித்த கோதையை, அப் பரத்தையர்மேல தலைவனின் கண் - அன்பு -தேயு மாறு அறுத்து விளையாடும் புதல்வனை உவந்து தலையில் தாஙகிக் கொள்ளுவாள் (கலி. 80:23-26). 17. அருள்நோக்கம். தலைவன் தலைவியின் ஊட லைத் தீர்த்தற்கு அவனிடம், 'தின் கண்ணை.அருள்
77
கண்கள்
நோக்கத்தை-பெற்றாலன்றி இன்னுயிர் வாழமாட் டாத என்னிடத்துத் தவறு யாது' எனப் பணிந்து வினவினான (கலி, 88'8,9).
18. கண்மணி. 'போரில் மாய்நது நடுகலலான மன்னவனது இல்லத்தில் வரையாமல் வழங்கும் மிகக சோற்றையுடைய முற்றம் நீரற்ற ஆற்றினது ஓடத்தின தன்மையதாகக கண்டு தன கண-கண மணி- சோர்ந்து வீழ்வனவாக' என்று ஆவூர் மூலங் கிழார் ஆற்றாது வருநதிக கூறினார் (புறம்.261:
3-6).
19. ஒளி. 'யானுற்ற வெவ்வியகாம நோயைக கூறினால் என்னை வருத்துகினற மதியம தன் கதிர் கண் - ஒளி-மழுங்கி நடுங்குவது போல ஓடிச் சுழனறு திரியும்' எனத் தலைவி தலைவன பிரிந்த கலக்கத்தில் கூறினாள் (கலி. 146.39-41). ('கதிர்கண மழுஙலி' எனற இததொடாக்கு நாசி னார்க்கினியர் எழுதியுள்ள உரை, 'கதிர கண மழுங்கி' எனவும் கதிர்கள் மழுங்கி' எனவும் பிரித்துக் காணுமாறு உள்ளது 'கதிர் கணமழுஙகி'. என இங்கே கொள்ளப்பட்டது, கதிர்கள மழுங்கி' என்று வையாபுரிப்பிள்ளை சங்க இலக்கியப் பதிப் புக் கொள்ளும்).
20. ஒலி (ஆகுபெயா ). அதியமான நெடுமானஞ்சி மன்றினிடத்தே தொங்கும் முழவினது காற் றெறிந்த தெளிந்த ஓசையையுடைய - கண்ணினை (அடிக்குமிடத்தே எழும) ஒலியினை - கேட்பானாயின் அதனைப் போர்ப பறையோசையென மகிழ்வான (புறம். 89.7-9),
21.பொருத்துமிடம். கமுகின பாளையாகிய பூவிரி யாமல் கருவாயிருந்தாற போன்ற இரண்டு கணணும்-பொருத்து மிடமும் -கூடின செறிந்த துளையமைந்த போர்வையினை யுடைய யாழைப பெரும்பாணன் இடத்தோள் பக்கத்தே அணைத திருந்தான (பெரு.7-9,16).
22. வலைக்கண். குறுகிய கணணையுடைய அழகிய
வலை (அசும். 30:1,70:3).
கண்கள் - விழிகள். வெற்பனுடைய மணககோலம் காணாமல் கையால் புதைபெறும் கண்களும் - விழிகளும் - கணகள் என்று கூறப்படுமோ எனத் தோழி தலைவன் வரைய வருகின்றமையைத தலைவிக்குக கூறினாள் (கலி.3941,42). பாண்டிய னின் வையையில நீராடும மகளிர் சிலா சிவிறியி னின்றும் நீரைப் பிறமகளிர்மேல் செலுத்திச தெற அந்நீரை அவர்தம் தூமலாக் கண்கள் ஏற்றுக் கொண்டன (பரி. 7:51-53).<noinclude></noinclude>
9id8dwfhq4ovcc01nmuomktwnyjop2o
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/84
250
620141
1838101
2025-07-02T05:29:27Z
TVA ARUN
3777
001_சோதனை
1838101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
76
கண்
புகழ்வதுபோல் பழித்தார் (புறம். 95:1-3), கண்ண கன் கொழுங்குறை (புறம். 364:5). பன்றியின் கொழுத்த கண்ணையுடைய வெள்ளூனை நெய்யில் பொரித்துக் கிணைருதுக்கு விடியனில் ஓய்மான் வில்லியாதன் சோறளிப்பான் (புறம்.379:8-10). நீர் நிறைந்து மெலி தாயுள்ள பனை நுங்கின் கண் வற்றி வலிதாகுமாறு கோடை வருதல் (புறம்.389; 1,3). நெற்சோற்றைப் பசுங்கண் பொரிக்கறியுடன் மாந்துதல் (புறம். 395:36,37), கண்ணகன்ற வலிய தோளினையுடைய வம்பலர் (பெரு. 74,76). வாளரம் கீறியறுத்த கண் நேரிதான வளையல் (மது. 316). பிரிவில் பாண்டிமாதேவி பெரிய மகரக் குழையைக் களைந்தமையால் குறுங்கண் தாளுருவி அழுத்திய சிறிதே தாழ்ந்த காதினையுடையளாக இருந்தாள் (நெடு.137-140). பருத்த கண்ணையுடைய தசை யுணவு (மலை. 252), பலநிறம் பொருந்திய கண்ணை யுடைய பிணையல் (மலை, 349). வெள்ளாட் டினை அரிந்து அதன் தசையோடே சேர்த்துச் சமைத்த கரிய கண்ணையுடைய சோற்றுணவு (மலை. 441). தேனைக் கண்ணிலே உடைய இறால் (மலை. 525). நீர்நிறைந்த நுங்கின் கண் சிதறி விழுந்தவை போல் ஆலியோடு மழை பெய்தது (அகம். 304:1-4). காட்டுநெறியில் கோடைக்காற்று உதிர்த்த குளிந்த கண்ணையுடைய நெல்லிக்காய் பளிங்குக் காசுகளைப் போல வறுநிலத்தில் சிதறிக் கிடக்கும் (அகம்.315:10-13). கருங்கண் கருனைப் பொரியல் (நற்.367:3), பரதவச் சிறுவர் முயன்று தேடிய இனிய கண்ணை யுடைய நுங்கினைப் பெற்று மகிழ்வர் (நற்.392:3-5). பாறை யிடத்தன வாகிய குறுஞ் சுனைகள் நுங்கினது வெட்டப்பட்ட கண்ணையொத்து நீர்நிறைந்திருக்கும் (கலி. 108:40,
41).
6. முலைக்கண். மாற்றார் படை முழுவதையும் கெட்டோடச் செய்த இளமறவனின் தாய் இரவ மரத்தின் விதைபோலத் திரங்கிய கண் - முலைக்கண் கொண்ட வறிய நகிலினள் (புறம். 276:2-6), கரிய கண்ணையுடைய நெருங்கிய விருப்பத்தையுண்டாக் கும் முலைகளையும் கண்டார்க்கு மயக்கத்தை விளைக்கும் பார்வையினையு முடைய தையலை விரும்பிப் போருக்கெழுந்த வேந்தர் அளியர் (புறம். 345:10-12). தலைவி கரிய கண் மலர்ந்த முலையள் (புறம். 352:14).யானை மருப்பிற்கு இடப்பட்ட பூண் போன்ற அழகுடைய தலைவியது முலையின் கரிய கண் முழுவதும் தன் மார்பகத்துள் அடங்கத் தான் முயங்குதலை விலக்கற்க என்று தலைவன் அவளி டம் கூறினான் (அகம். 26:6-9). இரவுக்குறியில் தலைவி வட்டமான முலைக்கண் பதிந்து வடுக்
செய்யத் தன்னை முயங்கினன் என்று தலைவன் உவந்தான் (அகம். 142:25), மார்பிலணிந்த கச்சு மூட்டறுமாறு கண் சினந்து விம்மி யெழுகின்ற தலைவியின் முலையை நோக்கிச் செவிலி அவளை இற்செறித்தனள் (அகம். 150:2-6). 'கரிய கண்ணை யுடைய விருப்பமிகு முலைகளை நெருங்க அணைத்த படியே எமக்குக் கங்குல் கழிவதாக' எனத் தலைவி யிடத்துக் கூறிய மொழியிற் பொய்த்துத் தலைவன் பிரிந்து சென்றான் (நற்.314:6-8). வையைப் புன லாட்டினால் மகலிரது நிறம் ஒளி பெற்று நீரால் ஏறுண்ட அவர்தம் முகமும் மூலைக்கண்ணும் மிகச் சிவந்தன (பரி. 10.94-96).
7.கண்ணோட்டம். காவனென்ஏயம் கண்ணிலி - கண்ணோட்டமில்லாதவன் - கொண்டுபோக ஆய் அண்டிரன் மேலுலகடைந்தனன் (புறம். 248:3-6). செல்வக் கடுங்கோ வாழியாதன் தன்னொடு நட் புக் கொண்டோர்க்கல்லது பிறர்க்குக் கண்ணஞ்ச மாட்டான் (பதி. 63:5). விசும்பு கண்ணழிய வேனில் நீடியது (அகம்.189:2). கண்ணில்லாத வாடைக் காற்று கல்வென்ற ஒலியொடு விரைந்து வந்து தங்கியது (அகம். 243:7,8). நாடனே, 'என் தோழி யது தோளிலே துயில்வதனை நீ நெஞ்சினால் இன்புறாயாயிலும் என்பால் உள்ள கண் காரண மாக வேனும் நீ அவளிடம் சென்று அருள்வாயாக; ஏனெனில், அவள் நின் கண்ணல்லது வேறொரு பாதுகாப்பும் இல்லாதவள்' என்று தோழி தலை வனிடம் வேண்டினாள் (நற்.388:8-11),
8. தேனடைக்கண். வேங்கைமரக்கிளையில் தொடுக் கப்பட்ட கொழுத்த கண்ணையுடைய தேனடை யில் ஈக்கள் மொய்த்ததனால் கசிந்து கல்லின் குழி களில் வடிந்த தேனில் குறச் சிறுவர் உண்ட மிச்சி லைக் குரங்குக் குட்டிகள் நக்கும் (நற். 168:1-5). கொல்லிமலையின் மேல்பக்கத்தில் காந்தளின் பூங் குலையி லிருந்து தேனீக்கள் தேனைக் கொண்டு வந்து பல கண்ணையுடைய தேனிறாலை இழைக் கும் (நற்.185:7-10). தலைவனது குன்றின் பக்க மலைகளின் மேலே தொடுக்கப்பட்ட தேன் நிறைந்த கண்ணையுடைய இறால் மேகத்தில் நுழையும் திங்களைப்போல் தோன்றும் (கலி. 42:22,23).
9. ஊற்றுக்கண். கானம் வெம்ப வேனில் நீடுதலால் கனைகளின் கண் - ஊற்றுக்கண் - நீரற்றன (அகம். 189:1-3). வேனிற்காலத்தில் சுனைகளில் கண்ணும் வற்றிப் போரும்படி ஞாயிறு தன் வெப்பத்தைப் பரப்பியது (அகம். 263: 2-4). ஆனிரைகள் பருகுதற் குக் கோவலர் வறிய நிலத்தில் கற்களை யுடைத்து இற்றறிமனறுகின்ற கண்ணினையுடைய கூவலைக்<noinclude></noinclude>
3gvnehmoab5f7n62cfu140fay0vvgyo
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/83
250
620142
1838102
2025-07-02T05:29:32Z
TVA ARUN
3777
001_சோதனை
1838102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
75
கண்
அசையும் (புறம். 35:9, 10). பெருஞ்சித்திரனாரின் மனைவி வறுமையினால் குப்பைக் கீரையினது முன்பு கொய்யப்பட்ட கண்ணிலே கிளைத்த இளந் தனிரைப் பறிந்து உப்பின்றியே நீருலையில் வேக வைத்தாள் (புறம். 159: 9-11). தோட்டத்தில் ஆடு மேய்ந்து எஞ்சிநின்ற முன்னைச் செடியின் கொழுத்த கண்ணில் கிளைத்த குறிய இலையை வரகின் சோற்றுடன் பெறும் சீறூர் மன்னரா வினும் தம்மிடத்துச் செய்யும் முறைமையை யறித்து நடக்கும் பண்புடையவரையே தாம் மதிப்பதாக மாடலன் மதுரைக் குமரனார் கூறுகிறார் (புறம். 197: 9-14). குயச்சேரியினர் நெல்லறுப்போர் முழக் கும் முழலோசைக்கு வெருவிக் கண்ணிடத்தே கிளைத்த மடலில் கட்டப்பட்டிருந்த தேன் கூட்டி லிருந்து ஈக்கள் நீங்கியதனால் அத்தேனை வடித் துக் கொள்வர் (புறம். 348:1-3). மூங்கிலின் கண்ணை அறுத்து இயற்றப்படுவது பெருவங்கியம் (பதி.41:40. மூங்கிலிற் பிறந்த நெருப்பு பசுந்தூறுகளை எரித் தலால் கண்திறக்கப்பட்டு உடைந்து தட்டைகள் அழகழிந்தன (மது. 302,305). கண்களின் நடுவே வெளியாகத் திறந்த நெடுவங்கியம் யானையின் கைபோலும் (மலை. 6). மூங்கிலின் கண்ணிடைப் பகுதி தலைவியின் தோளுக்கு உவமை (அகம். 18: 17, 18; 152: 14, 23; 271: 13-15). சூறாவளி மூங்கிலை ஒலியுண்டாகத் தாக்கி வெப்பமூட்டி எழுப்பிய மிக்க தீ மலைப் பக்கங்களில் பரத்த லால் அம் மூங்கிலின் கண் வெடித்து எழும் ஒலி கலைமான் கூட்டத்தைத் துரத்தும் (அகம். 47: 4-7). மூங்கில்களின் கண் பிளந்த வெயில் விளங்கும் அகன்ற பாலை (அகம். 91:7). விறலியர் மூங்கிற்காட் டில் ஆய்ந்து அறுத்த நுண்ணிய கண்ணைக் கொண்ட சிறுகோலினையுடையவர் (அகம்.97:9,10). வேனிற்காலத்து வெப்பமிக்க காட்டிலே விரைந்து கண்களைப் வீசும் பெருங் காற்று மூங்கிலின்
பொருந்தித் தாக்குதலால் தீப்பொறி தோன்றியது (அகம்.183:8-10). கோடை நீடியதால் வற்றிய மூங்கி லின்கண் பிளக்கத் தெறித்த முத்துக்கள் கழங்கு போல் தோன்றும் (அகம். 173:12-15). வெப்பத்தால் கரிந்த மரங்களின் கண்ணில் தளிர்க்கின்ற இளந் தளிர்கள் அவற்றின் அடிமுதல் தாழைந்து அழகுறும் படி வானம் மழைபொழிந்தது (அகம். 283:9-12). இருப்பைப் பூக்களைப் பழையர் மகளிர் கண் திரண்ட நீண்ட மூங்கிற் குழாயில் தொகுத்துக் குன்றகச் சிறுகுடியின் தெருக்கள்தோறும் சென்று விற்பர் (அகம்.331:1-7). கண்ணிடங்களில் தீப்பற்றி யெரிதலால் இருதலையும் கொள்ளியினை யுடைய புழல்தட்டையின் உள்ளிருந்து ஒரு பக்கத்தும்
செல்ல இயலாது எறும்பு இடைநின்று வருந்தியது (அகம்.339:8-10). மூங்கிலின் நீண்ட கண்ணிடையே அமைந்த குழாயில் நெடிதிருந்து முற்றிக் கடுப் பேறிய தோப்பிக் கனினைத் தெய்வமுறையும் மலைக்குப்படைத்துப் பின் மகளிர் மடுப்பக் குறவர் மாந்தினர் (அகம். 348:6-9). மயில் வருடைக் கடாக் களின் ஒலிகேட்டு அஞ்சிப் பறந்து சென்று நீண்ட கண்ணையுடைய மூங்கிலின்மேல் தங்கியிருக்கும் (அகம். 378:5-10). தலைவன் கட ந்து சென்ற மலை வெம்மை மிகுதியால் கவின் அழிந்த பாறையினை யும் கண்ணுடைந்த மூங்கில்கள் நிறைந்த சிமையங் களையு முடையது (அகம். 399:16-18). சுரநெறியில் வாட்டமுற்ற ஒற்றைமூங்கில் யானையால் துகைப் புண்டழிந்த கரும்பின் கண்ணிடையளவே வளர்ந் திருந்தது (குறு.180:2-4). பக்கமலையில் ஆடுகழை நிவந்த பைங்கண் மூங்கில் விண்தவழும் முலைக் கிழிக்கும் (நற்.28:6,8). அன்னை தன் மகளது நெஞ் சைக் கவர்ந்து கொண்ட தலைவனிடத்துச் சினம் பெரிதுடையளாய்க்கண்ணுடைச்சிறுகோலை ஏந்தி யிருந்தாள் (நற். 150:9-11), மூங்கிலின் கண் தோற்று லித்த கோலினின்று குரங்குக்குட்டி வேற்றுக் கினைக்குத் தாவியவுடன் அம் மூங்கிற்கோல் குளத் தில் மீனை எறிகின்ற தூண்டிலைப்போல நிமிர்த் தது (ஐங். 278:1-3). தான் விரும்பிய பெண்யானை யின் சூலால் உண்டான வயாநோய்க்காக ஆண் யானை இனிய கண்ணிடத்தே கிளைத்த நெடிய கிளைகளையுடைய கருப்பங்கோலை முறிக்கும் (கலி. 40:26-28). மானின் செவிபோல் மூங்கில் முளையின் கண்ணைப் பொதிந்த பாளை கழன்று விழும் (கலி. 43:16, 17). 'கண்ணையுடைய கோலை ஏந்திய வளாய் அன்னை என்னை அலைத்தற்கு இவ்வூர் எனக்குப் பொதுவனோடு கூட்டம் உண்டென் எண்ணி அலரை உண்டாக்கி விட்டது' என்று தலைவி தோழியிடம் கூறினாள் (கலி. 105:62 செல்வேளின் திருப்பரங்குன்றத்தில் ஒருப கணுப் பொருந்திய வேய்ங்குழலின் இசைப்ய9, அதற்கெதிராக மற்றொரு பக்கம் பண்ணார்தும்பி இசையூதும் (பரி. 17:11,12).
5. உடலிடம். வாளை கண்ணை
மீனினது பருமை மக்க உடலிடத்தை - உடைய துண்டத்தைப் புதுநெற் சோற்றிற்கு மேலீடாக வைத்து உழவர் மிகுதியும் உண்டனர் (புறம். 61:4-6), தொண்டை.. மானின் படைக்கலக் கொட்டிலைப் பார்த்த ஒளவையார் அக்கலங்களைக் குறித்து, 'இயைதான் பீலியணிந்து மாலை சூட்டிக் கண் திரண்ட. வலிய காம்பு அழகுபடத் தீழ்த்தி நெலிந்து காவலையுடைய கோயிலிடத்தே யுள்ளன' என்று<noinclude></noinclude>
amrlctmr0rzm4q6gorpst24ajjfmoes
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/82
250
620143
1838103
2025-07-02T05:29:35Z
TVA ARUN
3777
001_சோதனை
1838103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
74
கண்
(புறம்.368:15-18). அகன்கண் தடாரி (புறம். 370: 18,385.4). போர்க்களத்தில் பொருநன் தன் தடா ரிப் பறையினை அதன அகன்கண் அதிர முழக்கிய வாறு யானைப் பரிசிலுக்குச் சென்றான் (புற.371: 16-21). ஈயாத மன்னரது முற்றத்தில் தோன்றித் தடாரியின தெளிந்த ஓசையுடைய கண்ணை முழக் ப் பாடும் பாடலால் இரவலர்தம வறுமையை அகற்றல் இயலாது (புறம். 381:11-15), தெளிந்த ஓசை யையுடைய கண்ணமைந்த பெரிய கிணையினது கணணகத்தே அதனை அடித்தற்குரிய நுண்ண ரிச் சிறுகோல் கட்டப்பட்டிருத்தல் (புறம 382:19, ~0). ஒருகண மாக்கிணை (புறம். 392:5,394:7), நீராட்டப் பெற்ற வீர முரசத்தினது கண்ணைத் திறந்து இயவர் குறுந்தடி கொண்டு அடித்தல் (பதி.19:7,8). மயிர் செறிந்ததோல் போர்க்கப்பட்ட முரசினது கரிய கண கடுமையுடன முழங்கப் போர் புரிதல் (பதி. 29:12,13). படைக் கலங்களை வீரர்களுக்கு எடுததெறிதற்காகக் குறுந்தடியால் அடிக்கப்படுதலை யுடைய அகன்ற கண்னை யுடைய முரசம் (பதி. 41:23). படுகண் முரசம் (பதி. 49:14,54*13, மது. 232). மாக்கண் தண்ணுமை (பதி. 51:33). பெருஞ்சேரல இரும்பொறை தன்வழி ஒழு காத வேந்தரின் வில நாணையறுத்து முரசின கண்ணைக கிழித்து, யானைகசோட்டை அறுத் தன்ன
(பதி. 19:9-13), குறுந்தடி புடைத்தலால் ஒலிக்கும் தோலால் போர்க்கப்பட்ட முரசம் கண்ணதிர்ந்தாற் போலக் கார்மேகம முழங்கும் (பதி. 84:1-3). இடி சினந்து முழங்குவதனால் வான் அதிர்வதுபோலக் கடுங்குரல் முரசம கணணதிர்ந்து முழங்கும் (பதி.தி. 1.4,5). கண்ணமைந்த முரசங் களின் கண்ணில் அடித்தலால் எழும் ஓசை கதித் தெழு மாதிரங்களில் சென்று கலலென ஒலித்தல் (பதி. தி.2:8,9), கண்ணகன் தடாரி (பொரு.70). துடியினது கண்போல் துணிக்கப்பட்ட மீன துண டங்கள் (மது,320,மலை. 458; அசும். 196:2,3). விர லூன்றி அடிக்கின்ற படுகண் ஆகுளி (மலை. 140). 'பின்னி வைத்தாற போன்ற கொடி பிணங்கிய இறுகாட்டின வழியிற் போகும்போது முனசெல்ய வன தனது முகத்தில் அடிககாமல வளைத்து விட்ட கடுவிசைக் கணைக்கோல பினசெல்லும் நும் மததளத்தின் கண்ணைக் குத்திக் கிழிககாதவாறு பாதுகாத்து மெல்லப போவீராக' என்று கூததர் விழிப்புடன ஆற்றுப்படுத்தப் பெற்றனா (மலை. 379-383). மழைமுழக்கிற்கு எதிராக முழங்கும் கண்ணையுடைய முழவின கண் ஒலித்தல (மலை. B32). வாரினை இழுத்துக் கட்டிய கடுமையான ஓசையை எழுப்பும கண்ணையுடைய ஏறுகோட்
பாணன
பறையினை வேட்டக்களவர் முழக்குவர் (அகம். 63: 17,18). இமிழகண முழவு (அகம். 66:22). கடுங்கண் மறவர்தம் தணணுமையின் அகன்ற கண்ணினின்று எழும் ஒலி அருஞ்சுரம் செல்வோரின் நெஞ்சம் நடுக்குறச் செய்யும் (அகம். 87:7-10). அடிக்கும தண்ணுமையின கண்போல வருந்துமாறு மகளிர் வயிற்றில் அடித்துக் கொண்டு வருந்துதல் (அகம். 106:12,13). கோவலர் கூவலில தோண்டிய சிறுகுழி நீர் வற்றிச் சேறாயிருக்க; அதில் நீருண்ண வந்த யானை மிதிதத அடியகத்தே மேலும் பதிந்த புலியடி முழவினது கண்ணகத்தே வயிரியர் விர தூன்றி அடித்த வடுப்போலத் தோன்றும் (அகம். 155:8-15). பறைக்கண அன்ன நிறைச்சுனை (அகம். 178:3;324:6). அதியன் இறந்தபின் சிறந்த ஒலியினை யுடைய பெரிய கிணை ஒலித்தலினறிக கண்ணவிந தது (அகம்.325:8,9), பண்ணமை நலயாழப் பாண னொடுமார்ச்சனையமைந்த முழலின கண அதிர்ந்து இயம்பத் தலைவன தன மகிழ்துணைச் சுற்றமொடு கள்ளுணடான் (அகம். 346:13-15), தலைவியது மூதூரில் பழிதூற்றும் சேரிப்பெண்டிருடைய அம் பலும் அலரும் பண்ணமைந்த முரசின் கண அதிர்ந் தாற போன்று ஆரவாரம் மிக்கன (அகம். 347: 5-7). நீர்த்துறையில் கள்ளிருந்த கலத்தைக் கழுவிய நீரினை அருந்திய யாமை தெளிந்த ஓசையினை யெழுப்பும் கண்ணையுடைய கிணை
போலப்
பிறழந்தது (அகம். 356: 1-4), தழங்கு குரல மயிர்க் கண் முரசு (நற். 93: 10, 11). தேர்வண் மலையனின் திருவோலக்கத்திற்கு வேற்று நாட்டிலிருந்து வந்த பேரிசை வயிரியரது முழவின மார்ச்சனை யமைந்த கண் மிக அதிர்வது போலத் தலைவன் நடுங் கினான் (நற்.100:9-12). தெளிந்த ஓசையினை யுடைய கண்ணமைந்த தோலை மடித்துப் போர்த்த தண்ணுமை நடுவே யொலிக்சுத தலைவன் தேரில் வினைவயிற் பிரிந்து சென்றான (நற். 130:1-3), முழ வினது மார்ச்சனை யமைந்த கணபோல இம்மென முழங்குகின்ற இடியுடனே இரவில் மழை பெய்தது (நற.139:5-10). திருவிழாவினை யுடைய ஊரில் முழவினது கண் ஓயாது முழங்கும் (நற்.220:6). இசையெழுதற் கிடமான முழவு முதலிய இசைக் கருவிகளின கண்ணில எழும ஒலியையும் பாட்டி னையும் பயிறை ஆடல்மகளிர் அரங்கினில் ஆடுவர் (பரி. 16.12,13).வையைப்புனலாட்டின்போது மார்ச் சனையமைந்த முழவின் இனிய கணணின் முழக் கததிற்கு எதிராக விண்ணில இடி முழங்கியது (பரி.
22: 36, 37).
4. கணு. தொகுதிகொண்ட வேலின் தோற்றம் போல, கண்-கணு-அமைந்த கரும்பின் வெண்பூ<noinclude></noinclude>
8id6pp2znrcw6dleu0986wsbp8j8w6q
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/81
250
620144
1838104
2025-07-02T05:29:40Z
TVA ARUN
3777
001_சோதனை
1838104
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
கண் மறையும்படி கோக்கப்பட்ட கச்சுக்கட்டி லென்னும் பெயரையுடைய பாண்டில் (நெடு.133, 197). வியன்கண் கானம் (நெடு. 129). மழைபெய்து கண்ணைக் கழுவித் தூய்மை செய்த பாறை (குறி. 98). மாக்கண் அகலறை (பட். 238). கண்ணகன் சிலம்பு (மலை. 14). வியன்கண் இரும்புனம் (மலை. 99). மேட்டுநிலம் தன் கண்ணுடைந்து விண்ட பர லையுடைய பள்ள நிலத்தில் வெடிப்பிலே உள்ள குழிகளில் பாம்பு மறைந்து கிடக்கும் (மலை. 198, 199). ஆழ்ந்த குளங்களுக்கருகே கண்ணை மறைத்த நுண்ணிய நீர்ப்பாசி அடியை வழுக்கச் செய்யும் (மலை. 220-323). அகன்கண் பாறை (மலை. 276; அகம். 893:7). சுரபுன்னையோடு வாழை ஓங்கி வளர்ந்த தாழ்கண் அசும்பில் களிறு விழுந்தது (அகம். 8:8,9). மண்கண் குளிர்ப்ப மேகம் மழையைப் பெய்து ஒலி அடங்கிற்று (அகம்.23:1,2). அருவிகளை உச்சி யிற் கொண்ட உயர்ந்த மலையில் கூப்பிடும் கண்ண தாகிய அதுவே எம்மூரென யான் தலைவனுக்கு அறிவிக்க மறந்தேன் எனறு தோழி கூறினான் (அகம். 38:16-18). பிறர் நாடுகளை வென்று தன் நாட்டின் கண்ணை விரிவுபடுத்தியவன உதியஞ் சேரல் (அகம்.65:5). கண்ணகன் விசும்பு (அகம்.108: 6; நற்.316.8). அங்கண் இருவிசும்பு (அகம்.136:4). காற்றடித்தலால் புதிய கோங்கமலர் கழன்று விழுந்த கண் மணம் கமழும் (அகம்.153:16,17). குரூஉக்கண் நெடுமதில் (அகம்.159:18). நீரைப் பருகி உயிர்ப்பது போன்ற கண்மறைய வீசும் பனித்துளி (அகம். 163:7). வியன்கண் மாநிலம் (அகம். 164:3). அம்பலத்தில் ஈன்றணிமையுடைய நாய் தங்கியிருக்கும் பதிநத கண்ணையுடைய சிற் றில் உள்ளது (அகம்.167:17,20). கடல்கண்டன்ன கண்ணகன் பரப்பு (அகம, 176:1). கண்ணகன் பரப்பு (அகம். 179:6). பூங்கண் வேங்கை (அகம்.182:1), தெண் கண் உவரி (அகம். 207:11). பசுங்கண வானம் (அகம். 283:12), சீறூரின் அம்பலத்தில் நிற்கும் ஆலமரத் தருகே வெண்மையான கண்ணையுடைய பலி மேடை அமைக்கப்பட்டது (அகம். 287:5-7). அங்கண பெண்ணை (அகம். 290:7). காட்டில் கடுங்காற்றி னால் பறிக்கப்பட்ட காம்பொழிந்த தேக்கிலைகள் விசும்புகண மறையப் பரவும் (அகம். 299:5-7). வான் கண அகலறை (அகம். 309.6). களர்கால்யாத்த கண் ணகனபரப்பு (அகம். 327:11), கானம் கண பொரிந்த கவர்த்த நெறிகளையுடையது (அகம்.343:9). காற்றி னால அசைகின்ற இற்றிமரத்தின நெடிய விழுது கீழேயுள்ள கல்லன கண்ணைத் துடைககும (அகம். 345:18-20). போரழித்துக் கடாவிட்ட உழவர் கடுங் காற்றில் நெல்லினைத் தூற்றப் பறந்துபோன துரும்
யானை
73
கண்
புகள் உப்பளத்தின் சிறுபாததிகளில் கண் மறையப் பரவின (அகம். 366:2-5), 'என் பெண்மைநலம் என்னைவிட்டுத் தண்ணந்துறைவனொடு கண் மாறி யது' என்று தலைவி தோழியிடம் கூறினாள் (குறு.125: 4,7). இருங்கண் ஞாலம் (குறு.267:1; தற். 157:1). மழை எங்கும் பரந்து கண் மறைத்தலின் தலைவர் வானத்தைக் காணலர் (பெயல கால் மறைததலின என் றும் பாடமுண்டு) (ரூறு. 355:1). கண்ணகன் தூமணி (குறு.879:3). விசும்பின் கண் மறையும்படி பரந்து முழங்கி மேகம் மழையினைப் பெய்தது (குறு. 380; I-3).தலைவனின் தேர்ப்பாகன் பருககைக கற்களை யுடைய மேட்டுநிலம் கண் உடையுமாறு விரைந்து தேரைச் செலுத்திக் கரமபை நிலத்திலே புதுவழி இயற்றினான் (குறு. 400:4,5), அகனகண கேணி (நற். 92:5) நேரிய கண்ணையுடையது உப்புப் பாத்தி (நற்.354:10). தலைவியின் சீறூர் பனைமரவேலியை யும் அகன்ற கணணையும் உடையது (நற். 392.6). நெல் விளை கழனி நேர்கண் செறு (நற. 400:2). அகன்கண் அருவி (ஐங. 280.1). யானைகள் பூவொடு கூடிய நீரை மேலே சொரிய முறுக்கு நெகிழந்த தாமரை மலரினது அழகிய கண்ணிலே திருமகள் வீறுபெற்று விரும்பியிருத்தல (கலி. 44:5-7). க கன இருவிசும்பு (கலி. 102:1). அகனகண வரைப்பு (கலி.115.18,19). அங்கண் வானம (பரி 1.44). 3. தோற்கருவியின் அடிக்குமிடம். போர்க்களத்தில் மயிர் சீவாது போர்க்கப்பட்ட கண்ணை- அடிக்கு மிடத்தை - உடைய முரசமெல்லாம தம்மைததாங் குவார் மடிந்தமையின தாமும் கெட்டன (புறம். 63:7,8), தெண்கண மாக்கிணை (புறம்.70.3,374.6, 382:18;387:4;397:10). ஊரப்பொது மனறத்துப் பலாமரக கிளையில் வாழும் மந்தி அக்கிளையில் பரிசிலர் தூ ரக்கிலைத்த மததளத்தினது ஓசையினிய தெளிந்த கண்ணைப பலாப்பழமென்று கருதித தட்டும் (புறம. 128:1-3), வன்பரணர் பாணன் T றாக விறலியரை விளித்துப், 'பதலையில் கண்ணை மெல்லென இயககுமின்' என்றார் (ஃகி 152:17), முரசம் கணகிழிந்து உருள
யானைக்கட்
சேய மாந்தரஞ்சேரல் இரும்பொறை மேலுலகம் அடைந்தான (புறம்.229:19,23). வெளிமான துருகி யதனால் தொகுதி கொண்ட முரசங்களும் கண் கிழிந்தன (புறம்.238:5,8). பூதபாண்டியனது கடி யுடைய வியன நகரில் முழவினது கண மார்ச்சனை யுவராது இடையறாது முழங்கும் (புறம். 247.7,8}* இரவலனது ஒருகண இரும்பறை பெரிய களிற்றின் அடிபோலத் தோனறும (புறம். 263:1,2). இரவலர் பரிசு பெறத் தடாரிப் பறையின் தெளிந்த ஓசையுடைய கண் ஒலிக்க இசைத்துப் புரவலரைப டாடுவா<noinclude></noinclude>
jms0jv45q0hw0azzvk4sks62vquhqi1
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/80
250
620145
1838105
2025-07-02T05:29:43Z
TVA ARUN
3777
001_சோதனை
1838105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
72
கண்
ஒருவன் உலந்து பிறர்க்குக் காட்டினான் (பரி, 11:123). வையைப் புனலவிளையாட்டில் தலைவி யொருத்தி புலவிகொண்டு அரக்குநீர் நிறைந்த வட் தலைவன் மார்பில்
டினை
ஊடலுணர்த்தும்
எறிய அந்நீர் அவளது அழகிய மையுண்ட கண் ணின வேலேறு போலும் நோக்கம்பட்ட புண்ணில் குருதி சோர்வது போல் வழிந்தது (பரி. 12:66-70). திருமாலின கண தாமரைமலரை ஒக்கும் (பரி. 13:80,51). ஒளிகிளரும் மையுண்ட கண்ணாகிய கெண்டைமீன், கள், புனலாட்டு, புலவி என்னும் இம்மூன்றினாலும் ஒள்ளிய நிறம் சிவக்கப் பரத்தையர் வையையாற்றில் ஆடுவர் (பரி. 16: 39-43). மின்னற்கொடி காண்போரின் கண்ணைக் குத்திச் சுடர்விட்டு நெருங்கி இருளைப் பிளக் கும் (பரி. 18:24,25), பரத்தை தனக்குப் பொருள் கொடுப்பாரை வெளியே போகவிடாமல் தடுத் துத் தன் மடப்பமுடைய மதர்த்த மையுண்ட கண்ணையே கயிறாகக் கொண்டு தோளாகிய தறியிலே கட்டுவள் (பரி. 20:55,86). "முன்னே கெட்டுப்போன எம் எருதினை யாம் தேடித்திரிந்து இவ்விளையாட்டு மகளிர் கண் காண வையைத் தொழுவத்து வணக்குவோம்' என்று தலைவனை எருதாகக் கொண்டு தலைவியின் ஆயத்தார் பரத் தையிடம் கூறினர் (பரி. 28:58-62). காண்போர் கண்ணுக்கு மின்னற்கொடி போல் ஒளிவீசித் திக ழும் பொத்தகட்டின் இடையிடையே இழைத்துச் செய்த தலைக்கோலம் அசையத் திருப்பரங்குன்றத் தில் துடியினது தாள ஓசைக் கேற்ப முறையாகத் தோளையசைப்பவளது கண் பிறழ்தல் அம்பு புடை
பெயர் தலை ஒத்தது (பரி. 21:54-56,64,65). பாண்டி யன் ஏந்திய, கண்ணுக்கு ஒளிரும் வேலைப் போல வானம் கடிதாக மின்னி மழை பெய்தது (பரி. 22; 7,8). மைந்தரொடு கயல்மீன் போலும் கண்ணை யுடைய மகளிர் செய்த தவப்பயன் பெரிதென்று கண்டோர் கூற இருபாலாரும் வையைப் புன லாட்டிற்கு வந்து கூடிய போது மகளிரால் வையை அழகு பெற்றதோ, வையை வெள்ளத் தால் அவர் அழகு பெற்றனரோ என்பது தேர்தற்கரிதா யிருந்தது (பரி.22:37-34). பூமுடி நாகர் (ஆதிசேடன) திருக்கோயிலில் அரிபடாந்த மையுண்ட கண்ணையுடைய மகளிரொடு ஆடவரும் கூடி இயற்றும் பாடலும் ஆடலும் தோனறும் (பரி.தி. 1:53,54,59). இருந்தையூரில் வரைவாய் தழுவிய கலசேர் கிடககைக குளவாயமர்ந்தான (ஆதிசேடன) திருக்கோயிலைக் களளுண்டு களித்த அரிபடர்ந்த மலர்போன்ற மையுணட கண்ணை யுடைய மகளிர் தத்தம் காதலரொடு வந்து வணங்
குவர் (பரி.தி.1:81-83).
2. இடம். கண்ணகன் - இடமகன்ற - வைப்பு (புறம். 18:24,28; பதி.18:8; பதி. ப. 3:8; நற். 377:2), குண்டு கண் அகழி (புறம்.21:2;37:7; பதி. 48:7;53:8;71:12), கண்ணகன் பறந்தலை (புறம்.35:23;64:3). கண்ண கன் ஞாலம் (புறம். 38:29). அங்கண் விசும்பு (புறம். 56:22; அகம். 208:10). அங்கண் மால்விசும்பு (மது. 384). உழவருடைய சிறுவர் தெங்கம் பழத்தைத் தின்று வெறுத்தால் தந்தையர் தலைகுவிக்காமல் இட்ட குறைக்கண் நெடும்போரில் ஏறித் தாலிப் பனம்பழங்களைப் பறிக்க முயல்வர் (புறம்.61:8-11). வியன்கண் பாசறை (புறம். 62:11), இருங்கண் குழிசி (புறம். 65:2), பாரியின் பறம்புமலை தன அகல நீள உயரத்தால் வான்கண்ணை ஒக்கும் (புறம்.109:9). பரூஉக்கண் மண்டை (புறம். 135:3). அகன்கண் கொல்லை (புறம். 159:16). மலைக்கண் பொடியு மாறு கோடை நீடுதல் (புறம்.114:24,26). கண்ண கன் தாழி (புறம். 228:12). கழைக்கண் நெடுவரை (புறம், 281:4), செம்மண் நிலத்து மடுவின் நீர் நிலையைத் தோண்டியதனால் உண்டாகிய செங் கண் சின்னீரைச் சாடியில் முகந்து முன்றிலில் வைத்திருத்தல் (புறம். 319:1-3), பன்றிகளால் புழுதி யாக்கப்பட்ட விடுநிலத்தில் புதுமழை பெய்து நீங்கப் பள்ளங்களில் தஙகிய சிறிது நீரைக் குரால் உண்டமையின் சேற்றைக் கிளைத்ததனால் கலங்க வாகிய கண்ணில் ஊறிய நீரை அங்கு வாழும் மக்கள் முறையே உண்பர் (புறம்.325:1-6). கடல் கண்டன்ன கண்ணகன் தானை (புறம். 351:4). கர்டு (சுடுகாடு) கண்மறைத்த கல்லென் சுற்றம் (புறம்.368:19).இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம் (புறம். 363:1). கண்ணகன் கிடக்கை (புறம். 369:9). கண்ணகன் பாசறை (புறம்.373:4). யொடு மாறுபட எடுத்த கொடுங்கண் இஞ்சி (பதி. 16:1). நெடுஞ்சேரலாதன் அழித்த பகைவர் நாடு களில் உழுவாரின்றிக் கலப்பைகள் வெறுக்கப்பட்ட தனால் நிலம் கண் வாடிக் கிடந்தது (பதி.19:17). விருந்தினர் கண் மாறிச் செல்லாது உண்ணுமாறு பல்யானைச் செல்கெழுகுட்டுவனது செல்வமனை யில் ஊனுணவு சமைக்கப் பெற்றது (பதி. 21:9-11). அகன் கண் வைப்பு (பதி. 29:10;58:19;66:20;76:15). தெண்கண வறிது கூட்டரியல் (பதி.40:17,18). அமர்க் கண் அமைந்த அவிர்நிணப் பரப்பில கூட்டமாகிய பருந்துகள குருதியை நிரம்ப உண்ணும் (பதி. 67:8,9). அகன்கண் செறு (பதி. 11:1). கண்ணகன் செறு (பெரு.210). கணைகன் பொய்கை (மது. 171; பட். 243). வியன்கண முதுபொழில் (மது.190). அங்கண அகலவயல் (நெடு,21). கச்சினால் நடுவெளியான
மலை<noinclude></noinclude>
bzkdwc0x8jr3aj3gyt06f9vpj0cf4uz
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/79
250
620146
1838106
2025-07-02T05:29:47Z
TVA ARUN
3777
001_சோதனை
1838106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
71
கண்
செய்தான் (கலி.147:55, 56). பிரிந்த தலைவனைக் கனவில கண்டு ஆற்ற விரும்பிய தலைவிக்குக் காமன்கணை செய்யும் கொடுமையினால் கண் துயிலாவாயின (கலி. 147:57-60). தலைவனது பிரி விடைப் பேதுற்ற தலைவி வருந்திக் கண் கலங்கி அழுதாள் (கலி. 147:62). உலகின் பல உயிர்களும் தம கண்ணால் கொள்ளும் பயன் கெடும்படி ஞாயிறு மேற்கு மலையைச் சேர்ந்து மறைந்தது (கலி. 148:1-3). திருமாலின் கண புகழமைந்த தாமரை மலர்கள் இரண்டினைப் பிணைத்த பிணையலை ஒக்கும் (பரி. 2:53). ஆயிரந்தலைப் பாம்பை வாயிற் கொண்ட ஊர்தியாகிய கருடச் சேவலும் திருமாலின் கைவிரற் பாரமும தாங்க இயலாமல் நொந்து செங்கண் மாலே, ஓ' என அலறியது (பரி.3159-61). செங்கட்காரி (சிவந்த கண் ணையுடைய வாசுதேவன) என்று திருமாலைக் கடுவனிள வெயினனார் குறிப்பிடுவர் (பரி.3:81). சினத்தினா லன்றி இயல்பாகவே சிவந்த கண்ணை யுடையவர் திருமால (பரி.4.10;13:57). பைங்கட் பார்ப்பான் என்று சிவபெருமான் குறிக்கப் பெறுகிறார் (பரி. 5:27). யமன கரிய கண்ணையுடைய வெளளாட்டுக் குட்டியை முருகனுக்குப் பரிசாக அளித்தான (பரி. 5: 61, 62). முனனர்த் தலைவன் சேராமையால் அனற்றிய துன்பம் கெடுமாறு பின்னர் அவன் வந்து சேர்நதபோதும் மகளிர் கடுந்து நிரொழுகும் கண்ணையுடையவர் (பரி, 6:84,85). 'நின் மையுண்ட கண்ணின சினச்சிவப்பிற்கு அஞ்சும் தலை வனிடத்து நீ கொண்ட துனி நீங்கி இனி அவ னொடு விளையாடலைத் தொடங்குக' எனக் காதற்பரத்தையிடம் முதுபெணடிர் கூறினர் (பரி. 6:96, 97). வையைப் புனல் விளையாட்டில் பாய்ந்த ஒருத்தியின வாளால பிளக்கப்பட்ட மாவடுலை யொத்து மைவிளங்கும் கணணின ஒளியினால் செம்மையுடைய புதுப்புலை அந்நிறம மாறி இருள் நிறமாயிற்று (பரி. 7:57-60). வையைப் புனலாட்டி னிடையே தன் மெயயீரம் மாறி வெம்மை கொள ளுதறகாகத் தலைவியொருத்தி அருந்த நறவை ஏந்தினபோது அவள் கண நெய்தற்பூவை யொத தன: அந்நறவை அருந்தியபோது அவள் கண் காணபோர்க்கு மிக்க மகிழ்ச்சியை யூட்டும் பெரிய நறவம்பூலை யொததன; அககண்ணின இயலபைக் கண்டு பாராட்டி அவற்றின் காரிகைத்தனமை உடைய நோக்கினை ஆதரித்துத் தலைவன பலவகை யால் பாடிய பாட்டைக கேட்டு வேறொருத்தி அவ னொடு கூடுதற்குத் துடித்தாள்; அது கண்டு தலைவி ஊடுவாளென அஞ்சி, அவன் நடுங்க முன்னமே நறவுண்டு சிவந்த அத்தலைவியின கண்கள், இத
னாலும் குறை கிடந்த ஊடலில் மேலும் சிவந்தன (பரி.7:61-70). மாவடுவின பிளப்பினைவென்ற கண் ணையுடைய மகளிரது காமவின்பத்தைத் தலைவ ரொடு கூட்டும் களவுப் புணர்ச்சியைத் தரும் சிறப் பினையுடையது திருப்பரங்குன்று (பரி.8:38-46). பரத்தையர் பனி மலர்க்கணணை யுடையவர் (பரி. 8:48). 'மலர்போலும் மையுண்ட கணணையுடை யவளே' எனத் தலைவியை விளிததுத் தலைவன் பேசினன் (பரி.8:53), 'இருண்ட மையுண்ட குளிர்த் கண்ணையுடைய இத்தலைவி தன்னை ஈனறாளுக்கு அருமையானவளோ' என்று தலைவன் தோழி
யிடத்து நகையாடினான (பரி.8-59,60). நெயதற் பூவையும் நறவம்பூவின் இதழையும ஒத்த மதர்த்த மையுண்ட கண்ணையுடையவள் தலைவி (பரி.8:74, 75). திருப்பரங்குனறத்துச் சுனையில நீராடிய மகளிர் தம் அழகிய இதழகளமைந்த மையுண்ட கண்ணா கிய தாமரை மலர்கள் அசசுனைத தாமரைகளோடு வேறுபாடின்றித் தோன்றின (பரி. 8:112, 113, 117). மையணிந்த இமைக்கும் கண்ணை யுடைய வள்ளியை முருகன களவில மணந்த அன்று தேவ சேனையின் மலர்போலும் மையுண்டகண நீரைப் பொழிந்தது போலப் பரங்குனறில் மழை பெயதது (பரி. 9:8-11), வானவன மகளாகிய தேவசேனை யின் பாங்கியர் மாட்சிமைப்பட்ட எழிலையுடைய மலர்போலும் மையுண்ட கண்ணை யுடையவர் (பரி.9:58-60). வையைப் புளலாட்டினிடையே காமம் மிகுந்து எழ அதனால் உண்டாகிய கண் ணின களிபபுப் புறத்தார்க்குப் புலப்படவும் ஊராரை அஞ்சி அதனைச சிலர் ஒளித்தனர் (பரி. 10:63,64). வையையில காதலருடன் நெடும்பொழுது நீர்விளையாடிய பின்னும் அப்புனல்மேற் செல கின்ற மகளிர் கண் காமககணையின் கூரமையிடப் பட்ட வாயபோல தோன்றின (பரி. 10.96-99). க ணுக்கு நிறைவைததரும் அழகையுடைய மூங்கிற கழியால் நீரைத் தெறிபபோரமேல அரக்கு நீரை அடக்கிய வட்டினால் எறிந்து வையைப் புனலாட் டில மகளிரும் மைந்தரும விளையாடினர் (பரி. 11: 54,55). வையையில் நீராடறகமைந்த ஆடவரும் மகளிரும் நமக்குள் ஒருவர்ககொருவர் அழகாகிய மதுவைக் கண்ணாலே பருகுவா (பரி. 11 68). வையையுள் வாழைத் தண்டினைத தழுவி நீந்திய ஒருவனது நெஞ்சததை வாங்கிக் கொண்டு நிறகும் நேரிழை ஒருத்தியிடத்தே அவன் கண நிற்ப அவனை அவளிடத்தே செலுத்தாமல் வையை நீர் தனபோக கில் செலுத்தியது (பரி. 11:106-110). வையையாற்றில் தைந்நீராட்டின் போது, ஒருத்தியின் கண காமனு டைய பண்டாரமும் படையுமாய் இருந்ததனை<noinclude></noinclude>
39x4eo3qmshopl8p7yvfazuh0doyd1d
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/78
250
620147
1838107
2025-07-02T05:29:51Z
TVA ARUN
3777
001_சோதனை
1838107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
70
கண்
காணின் போகாமல் தடுத்துப் பல இதழ்களை யுடைய பூப்போறும் அவர்தம் மையுண்ட கண்ணைப் புகழபாடும்படி நும் சுறறத்தார் நுமக்கு நல்லதொரு தொழிலே கறபித்தார்' எனறு தானும் அவனை நகையாடினாள் (கவி. 112:8-10). மாயம் வல்ல பொதுவன் கூறியனலெலலாம் பொய்யா யின். பினனர் நின் அழகிய இதழ்போலும் மையுண்ட கண் பசவைநிறங்கொள்ளத் தோன் மெலியினும் நின மேனி இப்போது அழகைப் பெறுகின்றது காண்' எனத தலைவி தன்னெஞ் சொடு கூறித் தலைவனொடு கூட்டததிறகு உடன் பட்டாள் (கலி.112:21-25). 'சுழலுதலுடையதும் முகத்தொடு பொருந்தியதுமான மையுண்ட கண்ணையுடைய அழகிய நல்லாய்' என்று தலை வியைத் தலைவன் விளித்தான (கலி.118:2). கண வரைக்கூடித் துயிலைப் பெற்ற மகளிரின் கண் போல் தாமரை முதலிய பூக்கள் குவிந்தன (கலி. 119.5). தலைவன வரையாமல் பொருள்வயிற் பிரிந்து ஊர் அலர் தூற்றத் தலைவியைத் துறந்தத னால் அவள் நெடும பெருங்கண் வேல்முனையை ஒக்கும் வெற்றிமிக்க நலததைவிழத்து நீர் நினனு வழியும்படியாக அழுதன (கலி. 124: 13-16). 'தலை வீயின மையுண்ட கண் தோற்றுவித்த நீர் துளித்து விழககணடும் அவள் தொடர்பை நலகாது விடு கின்ற கொண்கன மிகக் கொடியன்' என்று தோழி கூறினாள் (கலி.125:8-11). முன்னர்க் கடிதாகிய நீர் பின்னர் வற்றுதலால் அறுதியுடையதாய் விழு கின்ற கயலையொத்த கண் நீரற்று மல்குமளவாய் நிறகத் தலைவியைத் தலைவன துறந்தான் (கவி. 127:8,9). பிரிவிடை ஆற்றாத தலைவி, 'இம்மாலைப் பொழுதிலே கோவலருடைய இனிய குழலால் நெஞ்சு வருந்தப் பூப்போலும் அழகையுடைய என் மையுண்ட கண தனிமை கொண்டு வருந்தும் என்றனள் (கலி. 130:13-16), 'நோககுங்காலத்து அப்பார்வையாலே பிறர்க்கு வருததமுண்டாக்கு வளவும் தம்மில் இணையொத்துப் பூப்போதும் அழகைக் கொண்டனவுமான புகழசசியமைந்த அழகிய கண்ணினை யுடையவளே' என்று தலைவி யைத தோழி விளித்தாள் (கலி, 131*4,5). மதர்த்த நோக்கினது அழகமைந்த கண்ணையுடையவள் தலைவி (கலி.131.11). கண்கவர் புள்ளினம் (கலி. 131.31). 'பூப்போலும் கண்ணை யுடையவளான தலைவி எனக்குச் செய்த இக்காமநோயின் வருத் தத்தை யறிந்தும் இவ்வூரிலுள்ளார் அதனைத் தீர்ப்பதோர் வழியை யறிநதிலர்' என்று தலை வன் மடலேறும்போது கூறினான் (கலி. 140:22- 24). முன்னா ஆயத்தாரொடு கூடி விளையாடு
கையில் பல்முனை தோன்றாமல் முறுவலையடக்கித் தன் கண்ணினாலும் முகத்தினாலும் நகுபவ ளான தலைவி தலைவனின் பிரிவை யாற்றாத பெருந்திணைக் காதலில் பெருகச் சிரித்துப் பூ மலர்ந்த தன்மையை யொத்த புகழ்சான்ற அழகிய மையுண்ட கணணின அழகமைத்த இமைகள் நீர் மல்க அழுதனள் (கலி. 142:5-12), ‘என் னுள்ளததிலே உரன் இருந்திருக்குமாயின நெய்தல் மலரையொத்த என் கண் பிரிவினால இங்ஙனம் வருத்தத்தை உடையனவாகி மிகப் பசக்குமோ' என்று தலைவனைப் பிரிந்து கலங்கிய தலைவி பேதுற்றுப பேசினள் (கலி. 142:21-23). 'நீரில் மலர்ந்த நீலப்பூ என்று தலைவர் புகழ அவர்க்கு முன்னாளில் பெரிய வருத்தத்தைச் செய்த என் கண இந்நாளில் பீர்க்கம்பூப போலப் பெரிதும் பசந்தன' என்று பெருந்திணைத் தலைவி கலங்கி யுரைத்தாள (கலி. 143:49-51). 'அறனில்லாதவனா கிய தலைவன் தெளிவாய் என கண்ணுள்ளே வந்து தோன்றுதலால இமையை விழித்துப் பிடித் துக் கொள்வேன எனறு யான் விழிக்க, அவன்
உடனே ஓடிப்போய் என்னெஞ்சத்துக்குள்ளே மறைந்து நின்று எனக்குத் துயிலாத காமநோயைத் தருகினறான' எனத தலைவி கடலை நோக்கிக் கலங்கி மொழிந்தாள் (கலி. 144:55-58). தலைவி யொருத்தி தன் பண்புகளை யெல்லாம் நுகர்ந்து தன்னைக் கைவிட்ட தலைவனை நினைத்துக் கயல்மீனை யொக்கும் தன் மையுண்ட கண்ணி னின்றும் விழுகின்ற நீர் முகத்தில வடிய அதனால் அம்முகம் பெயகின்ற மேகத்தைச் சேர்ந்த மதி போலத் தோன்ற ஓயாது அழுதனள (கலி. 145: 3-8). தலைவியது கண்ணுறக்கத்தைக் கைக் கொண்டு தலைவன் அவளை நினையாது விட்ட னன் (கலி.145:24). பிரிந்த தலைவனைத் தலைவி நினைக்குமிடத்து அவன் அவளது நெஞ்சில தோன்றுதலினும கண்ணுள்ளே மிகவும் தோன்று வான் (கலி.145 -52, 53). தலைவியைத் தலைவன் பிரிந்த மையால் அவளுடைய பெரிய அமர்த்த மையுணட கண்ணினில நீர் நிறைந்து அந்நீர் அவளது குவிந்த முலைமேல் வழிந்தது (கலி. 146:7,8). 'தலைவனோடு தலைவியின் கண் கலந்தது (கலி. 147:18). எனக்குச் செயலறவை ஏற்படுத்திய தலைவனை யான் சிறிது துயிலேற்றுக் கலங்கிய கண்ணால் கனவில் கண்டே னாயின் அவனை மெத்தெனப் பார்த்து அவன் தப் பிப் போகாதவாறு துகிலைப் பற்றிக் கொள்வேன்' என்பது பெருந்திணைத் தலைவியின் பேதுற்ற மொழி (கலி. 147:48,49). தலைவன் தன் பிரிவி னால் தலைவியின் மையுண் கண்களைத் துயிலாமற்<noinclude></noinclude>
pq7zqxsaks7b887v2h2hbzymhfyvhzo
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/77
250
620148
1838108
2025-07-02T05:29:55Z
TVA ARUN
3777
001_சோதனை
1838108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
69
கண்
பரத்தையரிடத்தே செலவாயாக' என்று காமக் கிழத்தி தலைவனிடம் கூறினாள் (கலி. 91:12:15). பரத்தையிற் பிரிந்து தங்கிவந்த கடவுளரைக் கண்டு அவரிடத்துத் தங்கி வநததாகக் கூறியவுடன தலைவி அவனிடம், 'பார்வையாலே பிணிக்கும் கண் வருத்துதலால் நீ முதல்நாள் பூவினைப் பலியாக விட்ட கடவுளரைக கண்டாயோ' என இகழ்ந்து வினவினாள (கலி. 33:23,24). பரததையொடு தங்கி வந்த தலைவன புதிய யானையைக் கணடு தாழத்து வநததாகக் கூறக் கேட்ட தலைவி அப்பரத்தையா கிய யானையைச் சீர்மைப்பட நுகர்ந்த சிறுகளிப பினையுடைய அழகிய மையுண்ட கண் நீர் விட ஊர்ந்தாய போலும் எனக் குறிப்பிற் கூறினாள் (கலி. 97:26,27). 'மாட்சிமைப்பட்ட அழகினையுடைய மையுண்ட கண்ணையே கயலாகக கொண்ட புனல்' என்று பரத்தையைத் தலைவி புனலாக உருவகித் தாள (கலி. 98:15,18). கண் நெடுநதொலைவில் நீங் கின பொருள்களைக் காணினும் தன்னிடத்தே உற்ற வடுவைப் பிறர் கண்டு காட்டவும் தான காணாத தன்மையுடையது (கலி. 99:18,19). 'நீ தலைவியிடத்துப் பிரியேன என்று தெளிவித்த சொல்லைத் தெளிந்த அவளுடைய பல இதழை யுடைய மலர்போலும் மையுண்ட கண் நீர் நிறை யக் காணுமிடத்து உலகம் பொய்கூறாய் என நின் னைப் புகழும் தன்மை நினக்குக் கெடாதோ என்று தலைவனைச் சான்றோர் வினவினார் (கலி. 100:7-10). தலைவனைக் கண்டபோது தோழியின் கண்கள் நன்னிமித்தமாக இடந்துடித்தும் வலந் துடியாமலும் வேளாண்மை செய்தன (கலி. 101:45. 46). ஆயன் விழாவில் ஏறு தழுவினமை கண்ட சுற்றத்தார், பெடையை யொத்த மகளிர் தம் கண் பொலிந்து இவ்வழகைப் பார்க்குமிடமெல்லாம் நின்று பார்க்கும் பரணைப் பெறுவாராயின் அது தகைமை யுடையது என்றனர் (கலி. 102,15,16). பொதுவர் ஏறுதழுவித் தொழுவை விட்டுப் போன வுடன நெருங்கிய இதழ்களையுடைய மலர்போலும் மையுண்ட கண்ணையுடைய மகளிரும் அவர் கண வரும் தாதெரு மனறததிலே குரவைக கூத்தாடுவர் (கலி.103.57-62). ஏறுகோள விழாவில், 'குரால் நிறத்தவாகிய கண்ணையுடைய இந்த ஏற்றைத் தழுவுமவன் இந் நல்லாளைக் கூடுவான்' எனச் சொலலி நல்லாயர் அவ்விடத்திட்ட பரண்மேலே தம் மகளிரை நிறுத்தினர் (கலி. 104:23-28). நெற்றி யிலே சிவந்த சுட்டியினையுடைய ஏற்றைத் தழுவி அடக்கிய தலைவனது நீண்ட மார்பிலே அலர் கூறும் மகளிர் நமமை இகழ்ந்து பார்க்கும் கண் அவ்வாறு பாராதிருக்கும்படி யான் சாராமல்
அமைநதிரேன்' என்று தலைவி கூறினாள் (கலி. 104: 65-68). 'ஆயததோடு நாம் ஆடும் குரவைக் கூத்தி னுள ஆயாமகன் நமமை அருமை செய்தான்போல் நோக்கி நமக்கு நோயினைச் செய்தல், நிறம் பொருந்திய கண்ணை யுடைய கொலையேற்றை யான கொண்டேன் எனனும் மனச செருக்கன்றோ' எனத் தலைவி தோழியிடம் சொன்னாள (கலி. 104: 69-72). ஏறுகோள் கருதிய ஆயர் வச்சிரப்படையை யுடையோனின் (இந்திரனின) ஆயிரங் கண்ணை யொக்கும் திரண்ட பலவான புள்ளிகளையும் கடிய சினத்தையு முடைய புகாநிற ஏற்றையும் பிற ஏறு களையும் சுழனது திரியும்படி தொழுவினுள் புக விட்டனர் (கலி.105:15-22). நல்ல ஏற்றினைத் தழுவிய பொதுவன் முகம நோககி ஆயமகள கண் இமையாதிருந்தன (கலி. 1135.51,52). 'கோட்டினத்து ஆயர் மகனோடு யாம கூடியதற்குப் பொறாத அயலார் தம கண் எம கண்ணை நோக்கித் தீயந்து போவது என்ன பயனையுடையது' எனத தோழி தலைவன் ஏறு தழுவிய மகிழசசியில் தலைவியிடத் துக் கூறினாள் (கலி.105.58-60). அலகுல, தோள், கண என்னும் மூன்றிடமும பெருத்த அழகோடு முலலைத் தலைவி ஊரிடத்தே மோர் விற்று மீண டாள் (கலி. 1082-5). 'பெரிய அமா செயயும் மை யுணட கண்ணால் யான் சிறப்புடையேன' எனத் தலைவி தன தகுதியைத் தானே தச்சியிருப்பவன எனத் தலைவன் அவளிடம் கூறினான (கவி. 108:16-18). இளைய மாவடுவைப் பிளந்தாலொத்த கண்ணாலே என் நெஞ்சை நினக்கு இருப்பிடமாக வாங்கிக் கொண்டு என்னை அடிமைத் தொழில் கொண்டாய்; நீ ஒரு கள்வி எனத் தலைவன் தலைவியிடம் உரைத்தான (கலி.108:28,29), 'கண் நினை விட்டு வேறொரு வடிவை நோக்குதலைத் தவிர்க்கும் அழகைப் பெறுகின்ற பெண்டனமை உடையவளே' என்பது தலைவியைக குறித்த தலைவனின் விளி (கலி. 108.37,38). மான மருண்டு நோக்கினாலொதத மழைக்கண்ணை யுடையவர் சிறிய ஆயச்சியா (கவி. 108:46), *கொலைத தொழில் கொண்ட மையுண்ட கண்ணையுடைய மாயோளே' என்று தலைவியைத் தலைவன் விளித்தான (கலி.168 52, 53). வேடகை செலுதடுய கணணால் மனததைக் கலககின் காமநோயை உண்டாக்கும் மகளிரைக கண்டாயாயின போக விடாமல் தடுத்து அவாசெயத நோயை அவரைக கொண்டே நீககிக் கொள எனறு எம் சுற்றத்தார் கூறினார் எனத் தலைவன தலைவியிடத்து நகை யாடி அவளைத தடுதது நிறுத்தினான; அவன அவ் வாறு கூறியது கேட்ட தலைவி, நலல மகளிரைக்<noinclude></noinclude>
menhv2gdlsp7b81n6xck9upevgqhrbl
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/76
250
620149
1838109
2025-07-02T05:29:59Z
TVA ARUN
3777
001_சோதனை
1838109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
68
"கண்
(கலி. 60: 5-8). 'பெரிய அமர்த்த மையுண்ட கண்ணையுடைய நின தோழி உறுத்திய பொறுத் தற்கரிய மனககவலையைச் செய்யும வருத்தம கது மென எனது உயிரை வாங்கும் என்று தோழி யிடத்துத் தலைவன கூறிக் குறையிரந்தான (கலி. 60:15-17). இரும்பினால பிளக்கப்பட்ட வடுவின் வகிரை யொத்த தலைவியின் மையுண்ட கண் தலைவன் அருமை செய்து அயர்த்தமையால் மலர்ந்த செலவி குலைந்து முற்றிய அழகினை யுடைய நீலமலரென்று பிறர் கூறும்படியாக வருத்த முற்றுப் பசந்தன (கலி. 64.20-22). எழிலையுடைய மையுண்ட கண்ணையுடையவர் பரததையர் (கலி. 67:6), 'நீ எம்மை நலம் போக நீங்கிய பின அருளா மல கைவிடுதலால் பலநாளும் துயிலாத எம் கண் ஒருநாள் உறக்கத்தைக் கொள்ளவும கூடும்; ஆயி னும், பரத்தையர் பாராட்ட நீ நாடோறும் மணஞ் செய்யும் முழவோசை வந்து அவ்வுறக்கத்தைப் போக்கும். நீ எம்மை நீஙகத் தாம் துயிலைத் துறந்தமையால் அழுது மாறாத மையுண்ட எம் கண் புதலவனைத தீண்டுகையினால் பொருந்து தலும் கூடும், ஆயினும் நினக் கொத்த இளம பரத்தையரைக் கொண்டு வந்து நின் சுற்றமாகிய பரததையர் நின்று பாடும் துணங்கை யாரவாரம் வந்து அவ்வுறககத்தைப் போக்கும்; நீ இங்கே வாராமையின் யாம் துயிலைத் துறந்தமையால் வருந்திய எமக்கு நீர் லிழும் இதழபோலும் நீர் மாறாத கண் பாயலில இமை பொருந்துதலும் கூடும்; ஆயினும், பரத்தையரைக் கொண்டு வரும் நின தேர்க்குதிரையின மணியோசை வந்து அவ் வுறக்கத்தைப் போக்கும்' (கலி. 70:7-18). கணவனி டத்தே துனி மிருதனால பெருக்கு மாறாது வீழ் கின்ற கணணின நீா காமத்தீயினால் வற்றி இடை யிட்டு ஒழுக அவ்வருத்தத்தைக் கணடு அக்கணவன் அளித்தலால் காதலி மகிழந்து நகுதல (கலி. 71:4-6). கணணைக குத்தும்படி ஒளிவிடும் வெள்ளிவள்ளத் தில பெண் கள்ளுண்டல (கலி. 73:3,4). தம் வயத்த ராதற்குரியாரைத தேடிச் சுழல்கின்ற மையுண்ட கண்ணை யுடையவர் பரததையர் (கலி.73.12). அமர்த்த கண்ணையுடைய ஓரை மகளிர் வயலில் நெயதற்பூவோடு ஆம்பற்பூவையும் பறிக்க ஓடும் ஆரவாரததிற்கு அவ்வயலில மீனுண்ணும் பறவைத் திரள் அஞ்சி எழுந்து உயர்ந்த மரக்கிளையில் தஙகி ஒலியெழுப்பும் (கலி. 75:1-8). பூங்கண் மகளிர் (கலி. 78:31). செல்வரியினையும் செருக்கினையும் கொண்ட மழைக் கண்ணின் நீர் மார்பகத்தே வீழக் காதலி தன் காதலனைக் குறித்து முகங் கவிழந்து அழுதாள் (கலி. 77:3,4). 'பூப்போலும்
அழகையுடைய நலம் போகும்படியாக என் கண் பொனபோலப் பசந்தனவாயினும, நின் பரத்தை யர் நீ செயயும் கொடுமைகளை என்னிடத்தே வந்து நொந்து கூறாமையை யான் பெறுவேனா யின இயற்கை நலத்தையுமிழந்த அக்கண் துயில் பெறுதலை யான விரும்பேன் எனத் தலைவி பரததைமைத் தலைவனிடம் கூறினாள் (கலி. 77: 12-15).பூங்கண் புதல்வன (கலி:79:20). 'நின்னைப் பெற்ற எம் கண நிறையுமாறு அன்பு மாறாத யான நின் வரவைக் காணும்படி அருளி வட்டப் பலகை சுமப்ப நின்ற கைபுனை வேழத்தைப் பைய இழுத்து வருவாயாக' எனத் தலைவி தன மகனை அழைத்தாள் (கலி. 80:3-9). 'மகளிருடைய செவ் வரியினையும் செருக்கினையுமுடைய மையுண்கண் பசக்கும்படி. அவர்க்கு நோவைக் கொடுக்கும் நின் தந்தையரது பரத்தைமைக் குணமொன்றையும் நீ ஒவ்வாதே' எனத் தலைவனுடைய புதல்வனிடத்தே அவன் வழிமுறைத் தாய் கூறினாள் (கலி.82:20,21). தலைவன் புதல்வன் தெருவிலே விளையாடி மீள் கையில் அவன வேற்றுத்தாயர் நீலததின் முறுக்கு நெகிழ்ந்து வரிசைப்பட்ட பூககள் மிகுகாற்றுக்கு அசைவன்போலே சாளரங்களில் ஒதுங்கிப பார்த்த கண்ணையுடையராய் அவனை நோக்கிப் பின் நெருங்கி வந்து, 'தின் கண்ணால் நீ நின் தந்தைக்குச் செய்யும் சிறப்புக்களைப் போலே எமக்கும் செய்து இவ்விரவு எம்மோடே தங்கிப் போ என்றனர் (கலி. 83:10-20). நண்டின் கண்தன்மை யமைய நெருக்கமாய்ப் பல அருப்புத் தொழில் சூழப்பட்ட சில தொடிகளைப் புதல்வன் கைகளில் அணிந்திருந்தான் (கலி.85:6,7), 'நின் தந்தை வாய்ப் பொய்ச்சூளை மெய்யெனத் தெளிந்து பூப்போலும் அழகையுடைய மையுணட கண் நீர் பரக்க மயங்கும் நோய் மிகுதலால் கண் துயிலாத நின் தாய்மார்க்குரிய பகுதியாய்ச் சிஸ் கவளங் களை உண்பாயாக" எனத தலைவி தன் புதல்வ னுக்கு உணவூட்டினாள் (கலி. 85:26-28). 'நின் அணிகளை நனைத தொழுகும் அழகிய வாயினை எம் கண கலந்து கண்டு களிக்க நீ இங்கே வருவா யாக' எனத் தலைவி தன் மகனை அழைத்தாள் (கலி, 86:4,8,10). நீர் விழுதல் நீங்காத துயிலாத சண் துயில் கொள்ளுமாறு தவைவி தோழியின் சொல்லை நினைத்துத் தலைவனொடு ஊடல் தீர்ந் தாள் (கலி. 87:14-16), 'சேரியிலிருந்த செவ்வரியி னையும் செருக்கையுமுடைய மையுண்ட கண்ணா ரது ஆராத முயக்கத்தால் பாடழிந்துசிதறிய சந்த னத்தையுடைய நின் மேனியைக் கண்டு யான்நின னோடு ஊடுதலைத் தவிர்ந்தேன்; இனி, நீ அப்<noinclude></noinclude>
p764r2smuw0nvd7xlfdbbpm1u3nroqw
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/75
250
620150
1838110
2025-07-02T05:30:03Z
TVA ARUN
3777
001_சோதனை
1838110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
கிப் பொறுத்தலாற்றாமல் நீரொழுகின (கலி. 34:14, 18), 'பிரிந்து சென்ற காதவர் நாம் எண்ணியிருந்த நாள் கடவாமல் கண் உறுகின்ற வருத்தத்தைக் கை நீக்கினாற்போல் வந்தார்' எனத் தோழி தலை வியிடம் உவந்து கூறினாள் (கலி. 34:21-24). நிறுத் திய அளவில் நில்லாதனவாய்க் கண் நீரைப் பெருக்கத் தலைவி பிரியும் தலைவனைத் தழுவி விடுததாள் (கலி. 36:11). தலைவர் மீள்வதாகக் குறித்த இவ்விளவேனிற் காலம் மிகவும் அறலொ ழுகுமென்று கருதி அதற்கெதிரே என கண் வெம்மை யான நீரைச் சொரியும் என்று தோழி தலைவி யின் நிலையில் தன்னை வைத்துக் கூறினாள் (கலி. 35.14,15). தோழியரோடு கடும்புனவில் ஆடுகை யில் கால்தளர்ந்து அஞ்சித் தாமரைபோலும் கண் ணைப் புதைத்து அப்புனலோடு சென்ற தலை வியை அருளினால் தழுவிக் காப்பாற்றியவனுக்கு அவள் கற்புக் கடம்பூணடாள் (கலி. 39:1-6). காந தள மணம் கமழும் கரிய மலை பார்ப்பவர் கண் ணைத் தன்னிடத்தே வாங்கிக கொள்ளும் அழகு டையது (சுலி. 39:15). தோழி அறத்தொடு நின்றதை ஐயன்மார்க்குத் தாய் அறிவித்தவுடன் இனத்தி னால் அவர் கண்சிவந்து ஒருபகல் முழுதும் நெஞ் சழன்று பின் இருவரிடத்தும் குற்றமில்லை என உணர்ந்து ஆறினர் (கலி.39:20-35). தலைவியும் தோழியும் குரவையாடிக் கொண்டுநிலை பாடுகை யில் 'தலைவனின் மணவணியைக் காணாமல் நாணிக் கையினால் புதைபெறும கண்களும் கண் களோ என்று தோழி நகையாடக் கேட்ட தலைவி "யான் நின் கண்ணாலே மிகவும் காண்பேன்' எனக் கூறியவுடன, தோழி 'நெய்தல் இதழ்போலும் மை யுண்ட கண்ணாகிய நின்கண் என்கண்ணாகுக' என்றாள் (கலி. 39:41-44). *தலைவன் வரைவு கருதி வந்தானாகலின் பூபபோலும் அழகையுடைய நின் மையுண்ட கண் இனிப் பொலிக' எனத் தோழி தலைவியிடம் கூறினாள் (கலி. 39:50,51). முகத்திற் குப் பொருநதிய கண்ணையுடைய மகளிர் நாணி இறைஞ்சுதல போலத் தினைக்கதிர் முற்றித் தாழந் தன (கலி. 40.1-3), 'கூட்டம் பெறாமையால் வருந் திய தலைவியின பல இதழகளையுடைய மலர் போலும் மையுண்ட கண் பசக்கும்படி நீ கெடுததற் குக் காரணம் அது நின்மலையின் சுனைப்பூவை யொக்குமென்னும் பொறாமையோ' எனத் தோழி தலைவனை வினவினாள் (கலி. 45:8-11). தலைவி யைத் தலைவன கலந்த நோய் அவள ஒழுக்கத்தை மிகுததலினால் அதுகண்டு தோழி கண்துயிலாதவ ளானாள் (கலி. 46:23), 'நின சுனையிடத்து மழை யேற்ற நிலப்பூப்போலத் தலைவியின் கண் அயலார் இபொகரிதா? 5.வு
67
53: 8-11).
கண்
முன் நீர் சொரிகினறதற்கு நின் வரவை விரும்பி வருந்துகின்ற அவளுடைய துயிலில்லாத கணணி டத்து அவை நினக்குச் செய்த பழி ஏதுமுண்டோ என்று தலைவனிடம் வினவினாள் தோழி (கலி. 48: 18-15). 'தலைவியின துயிலிடை எழும் வருந்தத்தக்க கனவினால் வரும் கேடு மலையினும் பெரிதாதல் கண்டு அவள் பூப்போலும கண் துயிலுதற்கும் யான் அஞ்சுகின்றேன்' என்று தோழி தலைவனிடம் சொன்னாள் (கலி. 48:21-23), 'அலர்கின்ற பருவதி ததாய் அழகமைந்த மலர்போலும் மையுண்ட கண்ணை யுடைய தலைவியிடத்துத் தலைவன் இன்றியமையாத காதலைக் கொண்டிருந்தான் எனனும் சொல் இனிதாயினும், மினனலே கண ணாக இடியென்றும மழையெனறும் எண்ணாமல் அரிய வழியிலே தலைவன வருவது இன்னாதது' எனத் தோழி தலைவனிடத்துக கூறி இரவுககுறி மறுத்தாள் (கலி. 49: 10-13). அயலிலுளளார் அலர் தூற்றத தலைவியின் அழகிய நலனிழந்த கணகள் கயலுமிழ்கின்ற நீர்போல நீரைச் சொரிந்தன (கலி. களவினில் தலைவியது மெனலிரற் போதினை எடுத்துத தலைவன் அருளையுடைய தன் செங்கண் மறையும்படி ஒற்றிக் கொண்டு பெருமூச்சு விட்டான (கலி. 54:9-11). தலைவியை நிறுததி வந்த தலைவன அவளது கண நோக்கிப் பின உவமை கூற நினைந்து இதுதான பூவின தனமையைக கொணடிருக்கின்றதாயினும் இது பிறக்கு மிடமான சுனையிவலையே' எனப பாராட்டினான (கலி. 53: 5-8,12), 'கொடியெனறும் மினனெனறும் அணங்கெனறும யாதொன்றும் தெரியாத நின் இடையினிடத்தே என கண விரும்பி யோடப் பந்துடன தளர்ந்து ஒதுங்கிப புறப்படு பவளே, நீலமலரை வென்ற போரையுடைய நின் உண்கண், பாண்டியனின வேல் பகைவரை வருத்து மாறு போலச் சிவந்து எனனை வருத்தம செய்ய நீ இப்படி வருவது நின இளமைக்கு தககதோ' எனக் க்ைகிளைத் தலைவன காமஞசாலா இளமையோளிடம் வினவினான (கலி. 57:4-11), "பேரெழிலை யுடைய மலர்போலும் மையுண்ட கண்ணை யுடையவளே' என்பது காமஞ்சாலா இளமையோள ஒருத்தியைக் குறிதத கைக்கிளைத் தலைவனின் விளி (கலி, 58.2).'உலகில கண்ணுக்கு நிறைந்த நலதடுனை யுடைய மகளிரைசு கண்ட வர்க்கு உளநினற காமநோய மிகும்படி கடுக 2 u'n போகும் துயரைச் செய்தல் ஆலாக்குப் பெண் தன்மையனறு' எனக் கூறிக கணணும் ஒருதமாறு நின்று நடுங்கித் தன்னிடத்துத் தலைவன றை யிரநதான் எனத் தோழி தை
கூனாள<noinclude></noinclude>
8uuxmyc55bn2qv90hwfxxcywg8mscrz
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/74
250
620151
1838111
2025-07-02T05:30:08Z
TVA ARUN
3777
001_சோதனை
1838111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
66
கண்
(ஐங்.378: 3-5). தான் முன்பு கேட்டறியாத பறவை களின ஒலிகளுக்கு அஞ்சி மருண்ட கண்ணை யுடையவளாயத தலைவி தலைவனுடன் அருஞ் சுரங கடந்து சென்றாள (ஐங்.382:1,2), 'பேரமர் மலர்க்கண மடந்தை' என்று அண்மை விளியாகத் தலைவியைத் தலைவன் விளித்தான் (ஐங். 427: 1). காலம் கார்ப்பருவததைத் தொடங்கியும் பிரிந்த தலைவா மீண்டு வாராமையால் தலைவியின் நெடுங்கண் ஆற்றாமல் நீரையுருக்கத் தொடங்கிள (ஐங.453:3-4), தலைவர் பிரிந்தமையின் மாணலம் இழந்து பசந்த தலைவியின் நீர்த்துளி நிறைந்த கணகள மழைத் துளியை ஏற்ற கொன்றை மலர்கள் போன்றன (ஐங்.458). முன்பனிக் காலத்தில் கருவிளை பூக்கள் கண்ணைப் போல மலரும் (ஐங். 464: 1,3), தலைவனின் பிரிவாற்றாது மாவடுப் போலும் அழகையிழந்த தலைவியது கண்ணை நோக்கிப் பாணன் பெரிதும் புலம்பினன் (ஐங். 475: 2,3). குளிர்ந்த மலர்போலும் தன் நெடிய கண் பசலை பாயத் தலைவனின் பிரிவால் தலைவி துனி மலித்த துயரொடு அரும்படர் உழந்தான் (ஐங். 477:1,2). தலைவி, தன மனையிடத்தே தனிமை யுற்று ஈரமான இமைகளையுடைய மையுண்ட கண நீரைச் சிந்திய வருத்தத்தைக் கேள்விப்பட்டும் அவளுக்கு அருளாதவனாய்த் தலைவன் பாசறை யிடத்தே இருந்தான் (ஐங். 480:3-5). பிரிந்த தலை வன குறித்த பருவத்து வந்தமையால் தலைவியின் நீண்ட செவ்வரி பரந்த நெடுங்கண் ஒளிமிக்க அழகைப் பெற்றன (ஐங். 498:2,5). தலைவன் பிரிந்தமையால் கொன்றைப் பூவைப் போல பசந்த தலைவியின மையுண்ட கண்கள் அவன் வந்தவுடன் குவளை மலரைப் போலத் தன் பழைய அழகை யடைந்தன (ஐங்.500). தலைவர் தலைவின் மார்பினைத் தம் கண்ணொடு எதி ராக வைத்துக் கட்டியது என்று கூறும்படி இமை யாமற் பார்த்தும் வேட்கை தணியாது ஒண்ணு தல் நீவுவர் (கலி. 4:17-19). தலைவன் கைச் சரட்டை இறுகக் கட்டி அம்புகளைத் தெரிந் தெடுக்கையிலேயே வருந்தும் பார்வையினை யுடைய தலைவியின் மையுண்ட கண்கள் நீலமலர் மழையை எதிர்கொள்ளும்போது நீர்சொரிபவை போல நீரை நிறுத்தாமல் உதிர்க்கும் (கலி. 7:9-12). பொருள் காரணமாகத் தலைவன் பிரிந்து போவானென்று கூறக் கேட்பின் நீரையுடைய கண மிகவும் உறங்குதலைப் பொருந்தாவாய்த் தலைவி நினைவுத் துன்பம் மிகமாட்டாள்; இறந்து படுவாள்' எனக் கூறித் தோழி தலைவனைச் செலவு விலக்கினாள் (கலி. 10:12, 13), நல்ல எழி
லையுடைய தன் மையுண்ட கண் இடப்புறம் துடிக்கின்றதாகலின் பிரிந்த தலைவர் விரைவில் வருவர் எனத் தலைவி தோழியிடம் உரைத்தாள் (கலி.11:19-23). பிரிவு கருதிய தலைவன தலை வியை எழுச்சி மிக்க நீலத்தின் உயரிய அழக மைந்த இரண்டாகிய மலர்போலும் அகன்ற மையுண்ட கண்ணையுடைய செய்யோள் எனப் புகழ்ந்தான் (கலி. 14:2,6). தலைவன பிரிவில் தலை வியின் முறுக்கவிழந்த நறு நீலத்தை யொக்கும் மையுண்ட கண ஓயாமல் அழுது, எரிகின்ற திரி வடியவிட்ட நெய்போலச் சுடும்படி நீரைத் துளிக் கும் (கலி.15:20,21). தலைவியின துயிலின்றிய பசநத கண் வருத்தத்தை யுடையவாய நீர் மலகத் தலைவன் பொருள்வயிற் பிரிந்து சென்றான் (கலி. 16:1.3). தலைவன் தலைவியைக் கூடியிருக்குங் காலத்துச் செவ்வியைத் தோற்றுவித்து மலரை யொத்த தகையவாய்ப பின சிறிதுபொழுது பிரி யுங்காலத்து அவன் பறிவைத தூற்றி அழுதலடங் காத அவள் கண பிரியக் கருதுகினற அவனுக்கு ஒரு பகையாம் என்று கூறித தோழி அவனைச் செலவு விலக்கினாள் (கலி.25:13,14). தலைவா எம்மை மயலாக்கிக் கரிய அழகிய நீலமலர்போலும் மையுண்ட கண்ணை மகிழச்சி கொள்ளும்படி தம் மோடு மருவுதலூட்டித் தாம் செய்த பொய்யி னால எம் மனம் தம்மிடத்தே விருப்பததைச் செய் யத் தாம் பிரிந்து எம்மை மறந்தார் என்று தலைவி வருநதி மொழிந்தாள் (கலி.27:17,18). இவ்விளவே னிற் காலத்தில் பூப்போலும் அழகையிழந்த தன் கண் உறக்கங்கொண்டு ஆற்றியிராமல் தனிமை நோய் மிகுமாயின் பிரிந்து மறந்த தலைவர் தம்மி டததுச் செய்யும் அருள் என்ன பயனதரும் என்று தலைவி தோழியிடத்து நொத்துரைத்தான் (கவி, 28:16-19). ஆறுகள் கண்ணை விழித்துப் பார்த் தன போலக் குளங்கள் நீர்நிறைந்து பூக்களால் அழகுபெற இளவேனில் வந்ததாயினும், பூப்போ லும் அழகை யுடைய தன் மையுண்ட கண்கள் வருந்துமாறு கைவிட்டுப் போன தலைவர் இனனும் வந்திலர்' எனத் தலைவி வன்பொறை எதிரழிந்து ஆற்றாது கூறினாள் (கலி.33:2,8,9). 'என் கண்போன்று அறுதலையுடைய நீர் இற் றொழுகும் இளவேனிற் காலத்தும் தலைவர் மீண்டு வந்திலர்' என்பது தலைவியின் ஆற் றாமையுரை (கலி. 33:19,20). நிலப்பூப் போதும் மையுண்ட கண்ணையுடையவள் தலைவி (கலி.33: 28). குறித்த பருவததில் தலைவன் வரக் காணாத் தலைவியின் கண, நாடாளும் முறைமை தளர்ந்த அரசன் கீழ் இருந்த குடிமக்களைப் போலக் கலங்<noinclude></noinclude>
oif1bolhwdy2zq20wmhsdlci3poh60g
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/73
250
620152
1838112
2025-07-02T05:30:11Z
TVA ARUN
3777
001_சோதனை
1838112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண்
65
கண்
நின்றாள் (ஐங்.190:3,4), 'குறுக்கிட்டுப் படர்ந்த செல்லரியையுடைய நின் நெடுங்கண்ள நெகிழ்ப் பாயாக' எனத்தோழி தலைவியைத் தலைவனுடன் போக்குதற்குத் துயிலெழுப்பினாள் (ஐங். 200). தலைவன் நாட்டு மணிநிற மலை மாலைப் பொழுது எளில் மறையுத்தோறும் களவுக்காலத் தலைவியின் மலர்போலும் நெடுங்கண் நீர்த்துளிகளால் நிரம் பின (ஐங். 208:3-5). தலைவியின் பேரமர் மழைக் கண் கலங்கியழத் தலைவன் தன் நாட்டிற்குச் செல்வான் (ஐங்.214:3-5) நுண்ணிய அழகிய புருவத் தையுடைய கண் இடந்துடிக்கின்றதாகலின் தலை வன் வரைதற்கு வருகின்றானோ எனத் தோழி தனக்கு உண்டாகும். தற்குறியைத் தலைவி யிடம் கூறினாள் (ஐங். 218:1,5.நாடனது மார்பைத் தழுவாது கழியும் நாளில் தலைவி யின் மயங்கிய இமைகளை யுடைய மழைக் கண் கலங்கி யழும்' எனறு தோழி செவிலி யிடத்து அறத்தொடு நின்றாள் (ஐங்.220). தலைவி இரங்குமாறு தலைவன் ஒருவழித் தணந்ததற்கு அவள் அணிகள் நனையுமாறு கண் நீர் பெய்தலை நீங்காவாயின (ஐங். 232). 'நின்னுடைய நிரல்பட்ட இதழமைந்த அழகிய மலர்போலும் மையுண்ட கண் பசக்க மலைநாடன் செய்த காமநோயை அன்னை அறியாதவாறு நாம் மறைத்திருந்தல் கொடிது" என்று தலைவியிடம் தோழி கூறினாள் (ஐங். 242). "நின்மகனது புதுமலர் போதும் மழைக்கண் புலம் பிய நோயக்கு அறியாமையுடைய வேலன் கடவு ளைப் பேணி வெறியென்று கூறும் காரணத்தை நீ மனங்கொள்கின்றாயே' எனத் தாயின் அறியா மையைத் தோழி எடுத்துக் கூறி வெறிவிலக்கி னாள் (ஐங்.243). 'தலைவியது அழகிய செவ்வரி பரத்த நெடுங்கண் கலங்கியழ நீ பிரியும் நாடு மிகத் தொலைவிலுள்ளது எனத் தோழி தலைவ னிடம் கூறிப் பிரிவு மறுத்தாள் (ஐங்.267). வரைவு முடிதற்கு மலையுறை கடவுளாய குலமுதலை வேங்கை மலர்கொண்டு வழுத்தி மலர்ப்பலி செய்த தலைவி புதுவதாக மலர்ந்த காந்தட் பூவினது மணங்கமழ்ந்து கலங்கிய கணணளாய இருந்தாள் (ஐங். 289). 'சிலம்பனே, நீ விரும்பிய தலைவியது கண் பசலை பூத்தன' எனத் தலைவனிடம் கூறித் தோழி வரைவு முடுக்கினாள் (ஐங். 264:3,4). 'நாடன் விரும்பிய தலைமகளின் கண் நொதுமலர் வரைய வந்தபோது நீர்த்துளியை அரும்பின (ஐங். 266:4). 'நாடனே, குவளை மலரைப் போலும் தலைவியின் அமர்த்த கண் பசலை போர்க்க நீ வரையாது ஒழுகுதற்குக் காரணம் என்ன' என்று கேட்டுத் தோழி தலைவனை வரைவு கடாவினாள்
இரியாக தொ 25
(ஐங். 277:3-5). பேரமர் மழைக்கண்ணை யுடைய கொடிச்சி கடிந் தோட்டவும் ஓடாது கிளிகள் தினைக்கதிரைக் கவர்தல் (ஐங். 262:1-3), தலைவ னது நெஞ்சையறியத் தலைவி அவன்பின் வந்து அவனைக் கண்புதைத்தாள் (ஐங்.193). தலைவி யது கண்போல் மலர்தல் சுனைபூத்த குவளை மலர்க்கும் அரிது எனத் தலைவன தனககுள மகிழ்ந் தான் (ஐங். 299:2-4). தலைவன் பிரிகின்ற காலத் துத் துயில கொண்டிருந்த தன் குளிர்சசிமிக்க மலர் போலும் நெடுங்கணணொடு தலைவி புலந்து கூறும் சொற்களைக் கேளாத அளவு தலைவர் காடு கடந்து நெடுந்தொலைவு சென்று விட்டார் (ஐங்'. 315). கண்ணைக் குத்துமாறு விளங்குகினற ஞாயிறு காயும் வைப்பினையுடைய காட்டின் வழி யைத் தலைவன் கடந்து சென்றான (ஐங்.319-1-3). நம் பிரிவால அழுத கண்ணளாயிருக்கும் நம் காத லியின் தனிமை வருத்தம் நாம வந்த இவ் வெஞ்சுரத்தை நினைக்கச் செய்யும் எனறு தலைவன் இடைவழியில் தன நெஞ்சிறகுக கூறி னான் (ஐங்.330:3-5). பல இதழ்களை யுடைய மலர்போலும் மையுண்ட கண்கள் அழுமாறு தனனைப் பிரிந்த காதலர் கல்லினும் வனமை யுடையவர் என்று தலைவி தோழியிடம் சொன் னாள் (ஐங்.334:4,5). பல இதழகளையுடைய மலர் போலும் மையுண்ட கணணையுடைய மடந்தை எனத் தலைவியைத் தோழி விளித்தாள் (ஐங்.351:4). நீ இடையறாது தலைவரை நினைக்கின்றமையால கலஙகித் துடைக்குந்தோறும் உடைத்துக் கொண்டு பெருகும் வெள்ளம போன்ற நீர் நிறைந்த கண் அவர் பல மலைகளைக் கடந்து செனறிருந்தாலும் அங்கே அவரை நீட்டிததிருகக விடாது எனத் தோழி தலைவியை ஆற்றுவித்தான் (ஐம். 358), புணர்ந்துடன் போகின்ற தலைமகன் இடைச் சுரத்தே தலைமகளை நோக்கி 'நின் கண்ணினும் முலை சினமுடையன எனப பாராட்டினான (ஐங்.361:4). தலைவி மிகவும் பசந்தமைக்குக் கார ணம் யாது எனச் செவிலி சினத்தினால் சிவந்த கண்ணையுடையவளாயத் தோழியை வினவினாள் (ஐங்.366: 1-3). 'பூவையொத்த மையுணட கண்ணை யுடைய மடவரலை உடனபோக்கு நேரப பொருந் திய அறனில்லாத விதி காடுபடு தீயிற கொத்த திடுக' என நற்றாய விதியை வெகுண்டுரைத்தாள் (ஐங்.376). 'தலைவனுடன் போன தலைவிக்கன்றித் துணையைப் பிரிந்தவளாயக் கலங்கும் நெஞ்சினை யுடைய இணையான அழகிய மையுண்ட கண்ணை யுடைய தோழியின் நிலைமைககே யான் பெரிதும் வருந்துகின்றேன்' என்று நதநாள் புலம்பினாய்<noinclude></noinclude>
5mr684rr7tsys4qiu5a0xla7ztlk6is
பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/72
250
620153
1838113
2025-07-02T05:30:16Z
TVA ARUN
3777
001_சோதனை
1838113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________
கண
64
கண்
டாள் (நற்.370 4-11). தன் கையிலிருந்த தேன் கலந்த தீம்பாலைக கலத்தோடு குரங்குக் குட்டி கைப்பற்றிச் செனறமையால் ஓவியா எழுதத் தகுந்த அழகெலலாம் சிதையுமாறு அழுத தலைவியின கண அகழியில் தண்ணியவாய மலாந்த மழை நீரையேற்ற நீலமலர் போன்றன (நற. 379:1-9), 'குவளையின் நீரொழுகும் ஒளிமிக்க மலரைப் போன்ற நின் பேர மர் மழைக்கண நீர் வடிய நின்னைவிட்டு நன்னன் நாட்டு ஏழிற் குனறம் பெறினும் தலைவர் பொருள் வயிற் பிரியாக எனத் தோழி தலைவியை வற்புறுத் தினாள் (நற 31:6-10), பிரிந்து குறித்த பருவத்து மீனாத தலைவன் வருதந்தரிய வழியினை நெடிது நோக்கி ஒளியற்றுத் தலைவியின கண காட்சிப் பொலிவையிழந்தன (நற்.397,1-3), மாலைப் பொழு தில மனைக்குச் செல்லத் தோழி அழைக்கத் தலைவி தலைவனொடு கூடிய அக்கானலகத்தே தன்மார் பின் இளமுலை நனைய மாணெழில மலர்க்கண் நீரைப் பெருக்க அழுது எதிர்மொழி கூறாது நின்றி ருந்தாள் (நற்.398:8-10), 'தன்னை யொத்த ஆய மகளிர்ககுக் கண்ணாற காணத்தகும் ஓர் கடவுள் என்று தலைவியைக் குறித்துத் தோழி தலைவனிடம் கூறினள் (நற். தி 1:6,7). தலைவனை நினைந்து தலை வியின பூப்போலும் மையுண்ட கண்கள் பொன போலும் பசலையைப் போர்த்தன (ஐங். 16:3,4). யான பிரியேன் என்று கூறித தலைவன் தலைவியின் மணம் பொருந்திய மலர் போனற கண் அழுமாறு பரத்தையிற் பிரிந்தான (ஐங், 18:2-4). புறத்தொழுக் கம தனக்கு இல்லையெனறு தலைவன தெளிப்ப வும் அஃது அவனுக்கு உண்டென்ற எண்ணத்தில் தலைவியின மையுண்ட கண பசநதது (ஐங். 21:3,4}, வேம்பின அரும்பு போனற நீண்ட கண்ணையுடைய யது நண்டு (ஐங்.30:1). ஏதிலாளராகிய தலைவர் பொருட்டுப் பசந்த தலைவியின கணகள் ஆம்பலந் தாதினை ஒத்த வண்ணங கொண்டன (ஐங். 34.2-4). கயலபோன்ற நம் கண பசலைக்குத் தளரா திருத்தலைப் பெறுமாயின நம்மை மறந்துறையும் தலைவரை நாமும் மறந்து நினையாதிருக்கலாம் என்று தலைமகள நொந்து கூறினாள் (ஐங்.36). 'மகிழநன தன்னை விரும்பிய மகளிரின மையுண்ட கள பசந்து பனி மலகுமாறு சூள் பொயததல் வலனை' என்று காதற்பரத்தை கூறினள் (ஐங்.37). தலைவனது பரத்தையிற் பிரிவினால் தலைவியின் கண பசப்பணிந்தன (ஐங். 45:4). செவ்வரி பரந்த மழைக்கண்ணையுடையவள் தலைவி (ஐவ. 52:2,3), பலரும் ஆடும் பெருந துறையில் தான் இழைத்த சிற்றிலைப் புனல் கொண்டு சென்றதெனத தன மையுண்ட கண சிவக்குமாறு அழுது நினறாள்
தலைவனின் இளம்பரத்தை (ஐங் 69) தலைவிகுவளை மலர் போன்ற மையுண்ட கணணை யுடையவள் (ஐங். 72:3), பரததையரின தோளுக்குத் தெப்பமாகிப் புதுப்புனலாடியதனால் தலைவனின கண் மிகச் சிவந்தன (ஐங். 80:2-4). 'நின பரத்தைமை பற்றிச் செவியிற கேள்விப் பட்டாலே சொல்லுக் கடங்காத சினங்கொள்வோளாய தலைவி, நீ பரத்தையர் மனையில் தங்கிப் புணர்ச்சிக குறிகளமைந்த மார் பினனாய் வருதலைக் கணணிற கண்டாளாயின் என்னாகுவள்' என்று தோழி தலைவனை வினவி னாள் (ஐங். 84). கருங்கோட்டெருமைச் செங்கண் புனிற்றா (ஐவ். 2:1), 'அனனையே, நின் மகளது பூப்போலும் மையுணட கண்ணிற் பொருந்திய நோய்க்கு மருந்தாகிய கொண்கனின தேர் வந்தது காண்' எனத் தோழி செவிலியிடம் தலைவன் வரைவுக்கு உவந்தமை கூறினள் (ஐங்.101:3-5) தலைவனின் இளம் பரத்தை கடற்கரையில தான இழைத்து விளையாடிய மணற் பாவையை அலை யழித்துப் போகக் கண்டு தன் மையுண்ட கண் சிவக்குமாறு அழுது நின்றாள் (ஐங். 125). தன் மையுண்ட கண்ணை மலரெனக் கருதி வண்டினம் மொய்த்ததை ஓட்டாமல் இளம்பரத்தை கடலலை யில் பாய்ந்து மூழ்கினாள் (ஐங்.126). தலைவனை யான் நினையேனாகலின் என கண உறங்குவதாக என்று தலைவி வரைவு நீட்டிக்கும் தலைவன் கேட்குமாறு தோழியிடம் மொழிந்தான் (ஜன், 142}, தலைவனை நம்பித தலைவியின கண் பசந்தன (ஐங்.166:3,4), 'தலைவர் நெஞ்சிலே உறைவதை யறிந்தும் என கண் எதற்காகப் பசக்கினறது' என்று தலைவி தோழியை வினவினாள் (ஐங. 169:3-5). தலைவன் நல்லவன் என்று நீ கூறுதல் உண்மை யாயின் பல இதழ்களையுடைய மலர் போன்ற என் மையுண்ட கண் பசப்பதற்குக் காரணமெனன என்று தோழியைத் தலைவி வினவினாள் (ஐங். 170). மிகக அரிபரந்த மையுண்ட கண்ணை யுடைய தலைவி பொழிற்குறி நல்கினள என்று தலைவன் உவந்தான (ஐங. 174). நெய்தல் மலரைப் போன்ற மையுண்ட கண்ணையுடைய மகளிர் பொய்தவாடி வெறுப்பின் மணற்குலியலில் ஏறிக் குரவையாடுவர் (ஐங்.181:1-3). தலைவியின் கண் கள வைகறையிலே மலரும் நெய்தல் மலரைப் போலப் பேரழகுடையன (ஐங். 188:3,4). தலைவன் வரைதற்கு வந்ததால் தலைவியின கண்கள் மலர்ச்சி யுடையன வாயின (ஐங்.189:3,4). பல இதழ்களை யுடைய மலரைப போலும் எம் மையுண்ட கண் ணில நீர் துளிக்கச் செயதோன மெல்லம் புலம் பனே என்று தோழி செவிலிக்கு அறததொடு<noinclude></noinclude>
oip0dwulylwx3o69078oooz8m3qyuri
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/235
250
620154
1838133
2025-07-02T06:03:07Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டும். தமக்கு நல்லதன்று என்பதைப் பிறர்க்குச் செய்யலாகாது. நெருப்பு ஆகூரா மசுதாவின் சின்னமாகும். தூய்மைப்படுத்தும் நெருப்புக்கு ஈடு இண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1838133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்க்கோ|211|ஆங்காங்கு}}</noinclude>டும். தமக்கு நல்லதன்று என்பதைப் பிறர்க்குச் செய்யலாகாது. நெருப்பு ஆகூரா மசுதாவின் சின்னமாகும். தூய்மைப்படுத்தும் நெருப்புக்கு ஈடு இணை கிடையாது. அழியா ஆன்மாவையும் அழியும் உடலையும் பெற்றுள்ள மனிதன் இறந்தபின்னும் இப்போராட்டம் தொடரும். ஆகூரா மசுதாதான் 12,000 ஆண்டுகளுக்குத் தொடரும் இப்போராட்ட இறுதியில் வெல்லும். மசுதாவின் வெற்றி நாளிலிருந்து அமைதி நிலவும். இறந்தோர் உயிர் பெற்றெழுவர். அன்றுதான் கடவுளின் இறுதித் தீர்ப்பு நாள். நல்லோர் விண்ணுலகம் செல்வர். பாவம் செய்தவர்கள் அவரவர் செய்த பாவத்திற்கேற்பத் தண்டனை பெற்றுத் தொல்லை அனுபவித்துப் பாவத்தைக் கழித்து, இறுதியில் விண்ணுலகம் செல்வர்.
சமயத்தலைவர் சொராசுடர், ஆகூரா மசுதாத் தெய்வத்தை மட்டிலும் கொண்ட ‘ஒரு கடவுள் கோட்பாடு’ முறையைப் போதித்தாரா, நல்தெய்வம் ஆகூரா மசுதா, சாத்தான் ஆகிரிமான் இரண்டையும் கொண்ட ‘இருகோட்பாடு’ முறையைப் போதித்தாரா என்பது இன்னும் சிக்கலான பொருளாகவே இருக்கிறது. பாரசீக மன்னராகிய முதலாம் தேரியசு (Darius, கி.மு 521-485), ஆகூரா மசுதாவை வணங்கி, தமது வெற்றிக்கெல்லாம் ஆகூாரா மசுதா தான் துணையென்று கூறி, ஆகூரா மசுதா வழிபாட்டைத் தம் நாட்டுச் சமயமாக்கினார். இச்சமய போதனையெல்லாம் செண்டு அவசுதா என்ற சொராசுடிரிய வேத நூலில் அடங்கியுள்ளன. இன்றும் இந்தியாவில் இச்சமயத்தைத் தழுவுகிறவர்கள் பலர் இருக்கின்றார்கள்.{{Right|கி.பி.}}
<b>ஆங்க்கோ</b> சீன நாட்டு நகரம். இக்காலத்தில் ஊகான் (Wuhan) என்பர். ஆங்கோ (Hankow), ஆன்யாங்கு, ஊசாங்க்கு என்னும் அடுத்தடுத்து அமைந்துள்ள நகரங்களின் கூட்டுப்பெயர் ஊகான் என்பதாகும். இந்நகரங்கள் சீனாவில் ஊப்பே (Hupeh) மாநிலத்தில் உள்ளன. இந்நகரங்கள் அனைத்தையும் அரசியல் வகையிலும் பொருளாதார வகையிலும் ஒரே ஊராகக் கருதுவர். ஊசாங்கு யாங்கிட்சி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. ஆங்க்கோவும் ஆன்யாங்கும் வடகரைப் பட்டணங்கள். ஆன் ஆறு (Han River). ஆங்க்கோவையும் ஆன்யாங்கையும் பிரிக்கிறது. ஆன் ஆற்றில் குறுக்கே கட்டப்பெற்றுள்ள பாலமும் படகுத் துறைகளும் இவ்விரு நகரங்களுக்கிடையேயான போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன. யாங்கிட்சி பாலம், ஊசாங்க்கை ஆன்யாங்குடன் இணைக்கிறது. ஊகான் நகரம் தொழிற்சாலைமையம். சீனப்புரட்சி 1911-ஆம் ஆண்டு இவ்வூரில்தான் பிறந்தது. ஊகாவின் மக்கள்தொகை 42,50,000 ஆகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 235
|bSize = 375
|cWidth = 143
|cHeight = 170
|oTop = 40
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|ஆங்கரேசு நகரம்}}
<b>ஆங்கரேசு</b> அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான அலாசுகா (Alaska) மாநிலத்தின் மிகப் பெரிய நகரம். அம்மாநிலத்தின் சிறந்த வாணிகப் போக்குவரத்து மையமுமாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைசிறந்த பாதுகாப்பு மையமாகவும் இது விளங்குகிறது. தென் அலாசுகாவில், குக்கு உட்குடாவில், (Cook Inlet) சகாக்கு (Chugach) மலைத் தொடரின் மேற்கில் இந்நகரம் அமைந்துள்ளது. சிப்பு கிரீக்கு என்றும் பின்னர் உட்ரோ என்றும் சொல்லப்பட்ட இவ்வூர் 1915-இல் தான் ஆங்கரேசு என்னும் பெயர் பெற்றது. கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி இங்கு நின்றமையால் நங்கூரம் பாய்ச்சி எனப் பொருள்படும் ஆங்கரேசு (Anchorage) என்னும் பெயர் இதற்குண்டாயிற்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்நகரம் பல்கிப் பெருகியது. ஆங்கரேசு நகரத்திற்குத் தெற்கில் 1957-இல் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டதால் நகரம் மேலும் விரிவாக வளர வாய்ப்பு ஏற்பட்டது. இந்நகரில் 1964-இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் இறந்துபட்டனர். மக்கள் தொகை 1,74,430 (1980).
<b>ஆங்காங்கு</b> சீனாவின் தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஆங்கிலக் குடியேற்றப் பகுதி: உலகின் அழகிய துறைமுகங்களுள் ஒன்று. ஆங்காங்கு (Hongkong) என்னும் சீனமொழிச் சொல்லுக்கு<noinclude></noinclude>
mfy49xaifaex7tf96ztaivauksgcj3q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/236
250
620155
1838141
2025-07-02T06:17:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘நறுமணத் துறைமுகம்’ என்பது பொருள். பெர்ல் (Pearl) ஆற்றின் கழிமுகத்திற்கு 32 கி.மீ. கிழக்கிலுள்ள ஆங்காங்கு, ஒரு தீவு, இது காண்டன் நகருக்குத் தெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1838141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்காங்கு|212|ஆங்காங்கு}}</noinclude>‘நறுமணத் துறைமுகம்’ என்பது பொருள். பெர்ல் (Pearl) ஆற்றின் கழிமுகத்திற்கு 32 கி.மீ. கிழக்கிலுள்ள ஆங்காங்கு, ஒரு தீவு, இது காண்டன் நகருக்குத் தென்கிழக்கில் 130 கி.மீ. தொலைவிலுள்ளது. இத்தீவின் பரப்பளவு 78.12 ச.கி.மீ. சீனாவின் உள்நாட்டிலிருந்து பிரித்திருக்கும் இது ஓர் அழகிய இயற்கைத் துறைமுகம், இதன் எதிரில் கவுலூன் (Kowloon) என்னும் தீபகற்பம் உள்ளது. அதல் பரப்பளவு 10.48 ச.கி.மீ. அதனைச் சுற்றியுள்ள 235 தீவுகளும் இதனைச் சார்த்தவையே. எனவே ஆங்காங்குத் தீவு, கவுலூன் தீபகற்பம், அதனைச் சுற்றியுள்ள 235 தீவுகள் ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டது. சீனாவின் உள்நாட்டில் இலங்கும் பகுதியை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1. வடக்கிலுள்ள புதிய பகுதிகள், 2. அதன் தென்பால் அமைந்துள்ள கவுலூன் தீபகற்பம். கவுலூன் தீபகற்பத்திற்கு நேர் தெற்கில் உள்ள சிறப்பான தீவே ஆங்காங்குத்தீவாகும்.
ஆங்காங்கு 1916 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதில் 1046 ச.கி.மீ. நிலப்பகுதி; ஏனையது நீர்ப்பகுதி. மக்கள் தொகை 52,30,000 (1982).
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 236
|bSize = 375
|cWidth = 162
|cHeight = 150
|oTop = 225
|oLeft = 15
|Location = center
|Description =
}}
{{center|ஆங்காங்குத் தலைநகர் விக்டோரியா}}
கரடுமுரடான மலைகளையும் வளைந்து நிற்கும் குன்றுகளையும் கொண்டு ஆங்காங்கு விளங்குகிறது. புதிய பகுதியில் உள்ள சில மலைத் தொடர்கள், 910 மீட்டருக்கு மேல் உயரமுள்ளவை. ஆங்காங்கு, தீவின் மலையுச்சியை விக்டோரியா உச்சி என்பர். இதன் உயரம் 554 மீ. மலைப்பாங்கான கடற்கரைகளைக் கொண்ட ஆங்காங்கின் தீவுகளிலும் சீனாவின் உள்நாட்டைச் சார்ந்த ஆங்காங்கின் பகுதியிலும் மீன்பிடிக்கும் சிற்றூர்களைக் கொண்ட பல சிறு துறைமுகங்கள் உள்ளன. பத்து விழுக்காட்டு நிலம் பண்ணைகளுக்கேற்றது. ஆங்காங்கையும் சீனாவையும் சாம்சன் (Shamchun) என்னும் சிற்றாறு பிரிக்கும் எல்லையாயுள்ளது.
ஆங்காங்கு வெப்ப மண்டலத்தைப் போன்ற தட்பவெப்ப நிலையைக் கொண்டது. கோடையில் சூடாகவும் ஈரக்கசிவாகவும் இருக்கும். இங்குப் பொழியும் மழையின் அளவு ஆண்டிற்கு 224 செ.மீ. குளிர்காலம் தண்மையாகவும் வறண்டும் காணப்படும். குடிநீர்ப் பற்றாக்குறையால் ஆங்காங்கு, ஆண்டுதோறும் பலகோடி லிட்டர் தண்ணீரைச் சீனாவிடமிருந்து விலைக்கு வாங்குகிறது.
பன்னாட்டு வாணிகம், செல்வம், சுற்றுலாப் பயணம் போன்றவற்றின் மையமாய் ஆங்காங்கு விளங்குகிறது. மக்கள்தொகையுள் 40 விழுக்காட்டினர் செய்பொருள் நிலையங்களிலும் 40 விழுக்காட்டினீர் பணியாளர்களாக வணிக நிறுவனங்களிலும் ஏனையோர் அரசு ஊழியர்களாக அரசு நிறுவனங்களிலும் வேலை செய்கின்றனர். பண்ணைகளிலும் மீன்பிடிக்கும் தொழிலிலும் 3 விழுக்காட்டிற்கும் குறைந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆங்காங்கு சுங்க வரியற்ற துறைமுகம். அதனால், பல பொருள்களை விலை குறைவாக உற்பத்தி செய்யவும் விற்கவும் இயலும். இங்குள்ள வங்கிகள் வீடுகட்டவும் செய்பொருள் செய்யவும் வாணிகம் செய்யவும் முதலீடு செய்வதுடன், உலகின் ஏனைய பகுதிகளுக்கும் உதவி செய்வதால், இதன் பொருளாதாரம் உயர்ந்த நிலைவிலுள்ளது. ஆண்டுதோறும் இருபது இலட்சம் சுற்றுலாப்பயணிகள் ஆங்காங்கிற்கு வந்து பெருமளவு பொருளைச் செலவழிப்பதால், இதன் பொருளாதாரம் பெருகி வளர்ந்துள்ளது. இக்காலத்தில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் நிறுவப்பெற்றுப் பலவிதமான பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் பொருள்கள், அமெரிக்க ஐக்கிய நாடு, மேற்குச் செருமனி, இங்கிலாந்து, சப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. உணவுப் பொருள்கள், இயந்திரக் கருவிகள், எஃகு, இரும்பு, ஏனைய மூலப்பொருள்கள் ஆகியவை சப்பான், சீனா, அமெரிக்க ஐக்கிய நாடு, தைவான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகின்றன.
விக்டோரியாவும் கவுலூனும் ஆங்காங்கின் வாணிகத்திற்கும் தொழிற்சாலைகள், சுற்றுலாப் பயணம் போன்றவற்றிற்கும் மையங்களாம். இவ்விரு-<noinclude></noinclude>
ipjyksuud517vb7pvx39rgjs3z3fsw3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/237
250
620156
1838161
2025-07-02T06:42:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாநகரங்களிலும் சிறு கடைகள், உயர்ந்த பல மாடிக் கட்டிடங்கள் ஆகியவற்றைக் குறுகிய சாலைகளில் காணலாம். ஆங்காங்குத் தீவையும் கவுலூன் தீபகற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1838161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில இலக்கிய வரலாறு|213|ஆங்கில இலக்கிய வரலாறு}}</noinclude>மாநகரங்களிலும் சிறு கடைகள், உயர்ந்த பல மாடிக் கட்டிடங்கள் ஆகியவற்றைக் குறுகிய சாலைகளில் காணலாம். ஆங்காங்குத் தீவையும் கவுலூன் தீபகற்பத்தையும் நீருக்குள் அமைக்கப்பட்டிருக்கும் 16 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையொன்று இணைக்கிறது.
விக்டோரியா, ஆங்காங்கின் தலைநகரும் பொருளாதார மையமுமாகும். இங்கு மக்கள்தொகை 5½ இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
கவுலூன், விக்டோரியாவைவிடப் பரந்தது; மக்கள் நெரிசல் மிக்கது. இங்கு 22½ இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
ஆங்காங்கு கி.மு. 220-ஆம் ஆண்டிலிருந்தே சீனாவின் பகுதியாய் இருந்தது. அது கி.பி. 1800-ஆம் ஆண்டு வரை மீன் பிடிக்கும் பண்ணைச் சிற்றூராக இருந்தது.
இங்கிலாந்துக்கும் சீனாவுக்கும் நிகழ்ந்த அபினிப் போரில் (கி.பி. 1839) இங்கிலாத்து வெற்றி பெற்றது. அதன் பயனாகக் கி.பி. 1842-ஆம் ஆண்டு ஏற்பட்ட நான்கிங் உடன்படிக்கையின்படி, ஆங்காங்குத் தீவை இங்கிலாந்து பெற்றது. கவுலூன் தீபகற்பம் கி.பி. 1860-இல் கிட்டியது. சீனா கி.பி. 1898. ஆம் ஆண்டில் புதிய பகுதிகளைப் பிரிட்டனுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட்டது. இரண்டாம் உலகப்போரின்போது ஆங்காங்கு, நான்காண்டுகள் சப்பானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.
அண்மையில் பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி 1997-ஆம் ஆண்டில் ஆங்காங்கைச் சீனாவுக்குத் திரும்பக் கொடுத்துவிடப் பிரிட்டன் ஒப்புக் கொண்டுள்ளது.
<b>ஆங்கில இலக்கிய வரலாறு</b> பல கோணங்களிலிருந்து நோக்கப்படவாமெனிலும், பெரும் பெயர் பெற்ற நூலாசிரியர்களின் கால எல்லைகளைக் கொண்டு ஆராய்வது, இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் பலர் மேற்கொண்ட முறையாகும். அவர்கள் சாசருக்கு முன்னுள்ள காலம் (கி.பி. 500-1340), சாசர் காலம் (கி.பி. 1340-1400), சாசரிலிருந்து ‘இடாட்டல்’ தொகுப்பு வரை உள்ள காலம் (கி.பி. 1400-1557). சேக்சுபியர் காலம் (கி.பி. 1557-1625), மில்ட்டன் காலம் (கி.பி. 1625-1660), திரைடன் காலம் (கி.பி. 1660-1700), போப்புக் காலம் (கி.பி. 1700-1745), சான்சன் காலம் (கி.பி. 1754-1798), வேட்சுவொர்த்துக் காலம் (கி.பி. 1798-1832), தென்னிசன் காலம் (கி.பி. 1832-1887), ஆர்டியின் காலம் (கி.பி. 1887- 1920), டி.எஸ். எலியட்டின் காலம் (கி.பி. 1920-1960) எனக்கால வரையறைகளை வகுத்துக் கொண்டுள்ளனர். ஆங்கில இலக்கிய வரலாற்றைத் தொடர்ச்சியாகக் கூறிச் செல்ல இவ்வெல்லைகள் பயன்படும். ஆனால், அவற்றிற்கு அளவுக்கு மீறிய முதன்மை அளித்தல் தவறாகும்.
இங்கிலாந்தில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் குடியேறிய ஆங்கில, சாக்சானிய, சூட் இனத்தவர் (Angles, Saxons, Jutes) கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் கிறித்தவ சமயத்தைத் தழுவினர். இதன் பின்னரே பழைய ஆங்கிலத்தில் (Old English) நூல்கள் தோன்றலாயின, இக்குடியேறிகளால் அவர்கள் தாயகங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கதைப் பாடல்கள், புலவர் ஒருவரால் காவிய உருப்பெற்றுப் பெயவுலப்பு (Beowulf) என்ற பெயரில் ஒரு நூல் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் வெளிவந்தது. இது, பெயவுல்ப்பு என்ற வீரன் கிரெண்டல். கிரெண்டலின் தாய் ஆகிய பூதங்களை வென்று, இறுதியில் நாட்டைக் காக்க ஒரு பெருவிலங்கைக் கொல்லும் முயற்சியில் உயிர்விட்ட கதையைக் கூறுகிறது. அக்கால ஆங்கிலேயரின் வாழ்வு பற்றி அறிய இந்நூல் ஓரளவுக்குத் துணை புரிகிறது.
கேட்மென் (Caedmon) கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், ஆவார். இவர் எழுதியனவாகக் கூறப்படும் கவிதைகள் விவிலிய நூலின் சில பகுதிகளைச் சுருக்கித் தருகின்றன. மனிதனின் தோற்றமும், சுவர்க்க நீக்கமும், இசுரேலியர்கள் எகிப்திலிருந்து தப்பிச் செல்லலும், எகிப்தியர்கள் செங்கடலில் அழிதலும், தேனியலின் (Daniel) வரலாறும் இவற்றுள் அடங்கும்.
கின்உல்ப்பு (Cynewulf) கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தனர். “கிறித்து” (Christ) என்ற கவிதை, கிறித்துவின் வரலாற்றைத் தோற்றத்திலிருந்து தருகிறது. இலத்தீன் மூலங்களுக்குப் புலவர் கடன்பட்டுள்ளார். “சூலியானா” (Juliana) என்ற கவிதை, கன்னியொருத்தி சமயத்திற்காக மரணத்தைத் தழுவிய வரலாற்றைச் சித்திரிக்கிறது. “எலீன்” (Elene) அவரது தலைசிறந்த கவிதையாகும். புனித சிலுவையொன்றை நாடிச் செல்லும்போது ஏற்படும் இடையூறுகளை இது விவரிக்கிறது. “சிலுவைக்கனவு” (The Dream of the Rood) சமயக் கவிதைகளுள் தலைசிறந்த ஒன்றாகும். கவிஞனின் கனவில், சிலுவையொன்று. ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறுவதாக அமைந்துள்ளது.
வெசக்சு அரசரான ஆல்பிரடு (Alfred) கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் சிறந்த அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்தார். இலத்தீனிலிருந்து சில நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவருடைய நூல்களுள் தலைசிறந்தது பொயீத்தியசு (Boethius) எழுதிய ‘தத்துவம் அளிக்கும் மனநிறைவு’ (De Consolatione Philosophiae) மொழி-<noinclude></noinclude>
eculoy1hkps4jcwsa5t94nlqth8v4ya
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/238
250
620157
1838174
2025-07-02T07:07:50Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெயர்ப்பு நூலாகும். இவர் மூலநூலின் கருந்துகளைத் தொகுத்தும் விரித்தும் அழகுபடச் செய்துள்ளார். இம்மன்னர் அளித்த ஊக்கத்தினால் ஆங்கில அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1838174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில இலக்கிய வரலாறு|214|ஆங்கில இலக்கிய வரலாறு}}</noinclude>பெயர்ப்பு நூலாகும். இவர் மூலநூலின் கருந்துகளைத் தொகுத்தும் விரித்தும் அழகுபடச் செய்துள்ளார். இம்மன்னர் அளித்த ஊக்கத்தினால் ஆங்கில அரசுகளின் தொடர்ச்சியான முதல் வரலாறு (Old English Chronicle) எழுதப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த முதல் உரைநடை நூலாகக் கருதலாம்.
நார்மன் மன்னரான வில்லியம் கி.பி. 1066-இல் இங்கிலாந்தை வென்று தம் ஆட்சிக்குட்படுத்தினார். ஆள்வோரில் மொழியாக இல்லாது போயினும், ஆங்கிலம் தன் சொல்வளத்தையும் பொருள் வளத்தையும் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புப் பெற்றது, நார்மன் வெற்றிக்குப் பிறகு ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள் அது தன் செல்வாக்கை இழந்திருந்தாலும், சான் மன்னர் காலத்தில், தேசிய உணர்வு தலைதூக்கியதன் காரணமாக, மீண்டும் தன் உயர்வை நிலைநாட்டி, அழியாத இலக்கியங்களைத் தரத்தொடங்கியது. இலயமன் (Layamon) என்னும் துதவி எழுதிய “பிரட்” (Brut) 30,000 வரிகள் கொண்ட பெருங்கவிதை, இந்நூல் கி.பி. 1205-இல் முற்றுப்பெற்றது: பிரித்தானிய அரசர்கள் பற்றிய கதைகளையும் வரலாற்றையும் கூறுகிறது. ஆர்ம் (Orm) விவிலிய நூல் கருத்துகளை விளக்கும் பொருட்டு ஆர்மூலம் (Ormulum) என்னும் நூலை எழுதினார். 20,000 சிறு வரிகள் கொண்ட இக்கவிதையில் எதுகையும் மோனையும் தவிர்க்கப்பட்டுள்ளன. சொற்கள் பலவற்றில் உச்சரிப்புக்கேற்ற எழுத்துகளைக் கையாண்ட முதல் நூல் என்னும் பெருமை இதற்குண்டு பெயர் தெரியாத ஆசிரியர் ஒருவர், பெண் துறவிகள் கருத்தில் கொள்ள வேண்டிய விதிகளைத் தரும் ‘ஆங்கிரென் ரிவ்லே’ என்னும் நூலைக் கி.பி. 1225-இல் வெளியிட்டார். இது இனிமையும் அழகிய உரைநடைச் சிறப்பும் கொண்டதாகும். “ஆந்தையும் குயிலும்” (The Owl and the Nightingale) என்னும் 1794 வரிக் கவிதை, கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டது. இரண்டு பறவைகள், உலக இன்பம், துறவறம் பற்றி உரையாடுவதாக அமைந்த இக்கவிதையில் பிரெஞ்சு நூல்களின் தாக்கம் உண்டு. மகிழ்வூட்டி நீதி உணர்த்தும். நோக்குடன் எழுதப்பட்ட “உலக வரலாறு” என்னும் கவிதை நூல், 24,000 வரிகளில் பல முனிவர்கள் பற்றிய கதைகளைத் தருகிறது. பெயர் தெரியாத இந்நூலாசிரியரின் பரந்த கல்வியறிலை நூலில் தெளிவாகக் காணலாம்.
இடைக்கால ஆங்கிலத்தில் (Middle English) கவிதை எழுதியோருள் தலைசிறந்தவர் சாசர் (கி.பி. 1340-1400) ஆவார். இவர் தம் வாழ்நாளில் சில ஆண்டுகள் பிரான்சிலும் சில ஆண்டுகள் இத்தாலியிலும் பல ஆண்டுகள் இங்கிலாந்திலும் கழித்தவராதவால், இவருடைய நூல்களில் இம்மூவிலக்கியங்களின் தாக்கத்தையும் காணலாம். முதலில் எழுதப்பட்ட நூல்களுக்குப் பிரெஞ்சு மூலங்களும், இடையில் எழுதப்பட்ட நூல்களுக்கு இத்தாலி மூலங்களும் உண்டு. “உரோசாவின் அற்புதம்” (The Romance of the Rose), “குறைபாடுகள்” (Complaints), “சீமாட்டியின் கதை” (The Book of the Duchess) ஆகியவையும் சில கதைப் பாடல்களும் முதலில் எழுதப்பட்டன. “திராய்லசும் கிரெசிடாவும்” (Troilus and Criseyde), “நல்ல பெண்களின் கதை” (The Legand of Good Women) ஆகியவையும், காண்டர்பரிக் கதைகளுள் நிலவும் இடைக்காலத்தில் எழுதப்பட்டவை. ஏனைய காண்டர்பரிக் கதைகள் (The Canterbury Tales) இறுதியில் தோற்றம் பெற்றன. “சீமாட்டியின் கதை” எண்சீர்வரிகள் 13,000 கொண்ட கவிதையாகும். “குறைபாடுகள்” எனக் கூறப்படும் மூன்று கவிதைகளில் சாசர் சில புதிய சீரமைப்புகளைப் புகுத்தி, யாப்புச் சோதனைகளை நடத்தினார். எனினும், அவை உயர்ந்த தரமுடைய கவிதைகள் அல்ல. “பறவைகளின் கூட்டம்” (The Parliament of Fowls) என்ற கவிதையில் சாசரின் முத்திரை அழுந்தப் பதிந்துள்ளது. “திராய்வசும் கிரெசிடாவும்” பழங்கதையொன்றை அழகுறச் சொல்லும் கவிதையாகும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முதல் உளவியல் புதினமென்று இதனைக் கருதலும் தகும். சாசரின் தலைசிறந்த நூல், “காண்டர்பரிக் கதைகள்” ஆகும். இதில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டைய ஆங்கிலேயர் வாழ்வுபடம் பிடிக்கப்பட்டுள்ளது. பிரபுக்கள், இடைத்தர மக்கள், கிறித்தவத் துறவிகள் முதலான பலதரப்பட்டவர்களின் பண்பு நலன்களும் வாழ்வு முறைகளும் அன்பு கலந்த எள்ளல் மிகுந்த நகைச்சுவை நடையில் சித்திரிக்கப்பட்டுள்ளன. “சீமானின் கதை” (The Knight's Tale) ஒரு காவியமாகவே கருதப்படும் சிறப்புடையது. சாசர் படைத்துள்ள சில கதை மாந்தர்கள். அழியாச் சிறப்புப் பெற்றவர்களாவார்கள்.
சாசர் காலத்துக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் கவரும் (Gower) இலாங்கிலாந்தும் (Longland) ஆவர். இவர்கள் (1332-1408) பிரெஞ்சு, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கவிதைகள் எழுதிய வல்லுநர்கள். பழைமைப் பிடிப்பு மிகுந்த இவர்கள் சாசரிலும் மாறுபட்ட கொள்கையும் குணமும் உடையவராவார்கள். இவர்கள் நூல்களுள் குறிப்பிடத்தக்கது “கன்பெரியோ அமாண்டிசு” (Confessio Amantis) ஆகும். பெரும் பாவங்கள் ஏழினால் விளையும் கேடுகளைப் பற்றிக் கூறும் இக்கவிதை, சாசருடைய நூல்களோடு ஒப்பிடத்தகும் சிறப்புடையது. இலாங்கிலாந்து, மக்கள் கவிஞராவார். இவரது ‘பியர்சு என்னும் உழவன் பற்றிய வில்லியத்தின் காட்சி’ (The Vision-<noinclude></noinclude>
gw47ufgj0bfpqofakcpmntuxhol4yf9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/239
250
620158
1838182
2025-07-02T07:27:49Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "of William Concerning Piers the Ploughman) 15,000 வரிகள் கொண்ட நீண்ட தொடர் உருவகக் கவிதையாகும். இக்கவிதை ஏழைகளின் அவல நிலையையும் செல்வர்களும் மதவாதிகளும் அவர்களுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1838182
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில இலக்கிய வரலாறு|215|ஆங்கில இலக்கிய வரலாறு}}</noinclude>of William Concerning Piers the Ploughman) 15,000 வரிகள் கொண்ட நீண்ட தொடர் உருவகக் கவிதையாகும். இக்கவிதை ஏழைகளின் அவல நிலையையும் செல்வர்களும் மதவாதிகளும் அவர்களுக்குத் தரும் தொல்லைகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
உயர்ந்த கவிதை நூல் ஒன்றும் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் தோன்றவில்லை, முதலாம் சேம்சு மன்னர் எழுதிய “அரசனின் நூல்” (The King's Quair) என்ற நீண்ட காதல் கவிதையும், தன்பார் (Dunbar) எழுதிய “திசுலும் உரோசாவும்” (The Thistle and the Rose) என்ற கவிதையும் குறிப்பிடத்தக்கவை. இசுகாட்லாந்தில் (Scotland) எழுதப்பட்ட கவிதைகளில் தரமுடைய இயற்கை வருணனைகளைக் காணலாம். இந்நூற்றாண்டின் உரைநடைகளில் சிறப்புடையது மாலரி (Malory) எழுதிய ஆர்தரின் மரணம் (Morte D'Arthur) ஆகும். ஆர்தர் அரசரைப் பற்றியும் அவர்தம் வீரமிக்க வட்டமேசைத் தோழர்கள் (Knights of the Round Table) செய்த அருஞ் செயல்களைப் பற்றியும் பிரஞ்சு மொழியில் வளர்ந்திருந்த கதைகளின் தொகுப்பே இந்நூலாகும்.
இத்தாலியில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கிய மறு மலர்ச்சி (The Classical Renaissance) செர்மனி, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் நாளடைவில் பரவத் தொடங்கியது. கிரேக்க, இலத்தீன் இக்கியங்கள் எங்கும் பயிலப்பட்டன. அவற்றின் மொழி பெயர்ப்புகள் ஆங்கில இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. ஆக்சுபோர்டு, கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகங்கள், கல்வி வளர்ச்சிக்கு வழி செய்தன. பதிப்பகத்தின் தோற்றமும் அறிவுப் பெருக்கத்திற்கு உரமிட்டது. வில்லியம் காக்சுடன் (William Caxton) கி.பி. 1476-ல் முதல் பதிப்பகத்தை நிறுவிப் பல நூல்களை வெளியிடலானார். நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆங்கில உரைநடையைச் செம்மைப்படுத்தின. வில்லியம் திண்டேஸ் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார். மைல்சு கவர்டேல் (Miles Goverdale) விவிலிய நூல் முழுவதையும் ஆங்கிலத்தில் தந்தார். சர். தாமசு மோர் (Sir Thomas More) எழுதிய உடோபியா (Utopia) என்னும் நூல் பிளாட்டோவின் “குடியரசு” (Republic) கருத்துகளை அடியொற்றி, வாழ்வு, அரசு, மதம் ஆகியவை பற்றிப் பல சிந்தனைகளை இலத்தீன் மொழியில் வெளியிட்டது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கி.பி. 1551-இல் உருக்கொண்டது. ஆங்கில இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லான இடாட்டலின் தொகுப்பு (Tottel's Miscellany) கி.பி. 1557-இல் பதிப்பிக்கப்பட்டது. வொயட்டு (Wyatt), சர்ரி (Surrey) ஆகியோர் உள்ளிட்ட பல கவிஞர்கள் எழுதிய பாடல்களும் ஈரேழ்வரிப்பாக்களும் (Sonnets) இதில் இடம்பெற்றன. இது புதிய யுகம் ஒன்று பிறக்க வழி வகுத்தது.
ஆங்கில நாடக இலக்கியத் தோற்றத்திற்கு வித்திட்டவர்கள் கிறித்தவப் பாதிரிமார்களேயாவர். அவர்களே எழுதித் தேவாலங்களில் நடித்த கிறித்துப் பற்றியும் அவர்தம் அடியார்கள் பற்றியும் அமைந்த நாட்கங்களே (Mysteries, Miracle Plays) முதலில் தோற்றம் பெற்றன. பின்னர் நீதி புகட்டும் நாடகங்களும் (Morality Plays) அங்கதச்சுவை விரவிய குறு நாடகங்களும் (Interludes) முகிழ்த்தன, இவையும் கிரேக்க இலத்தீன் மொழிகளிலிருந்து பெயர்க்கப்பட்ட இன்பியல் துன்பியல் நாடகங்களும் ஆங்கில நாடக ஆசிரியர்களுக்கு வழிகாட்டிகளாய் அமைந்தன. ஆங்கிலத்தில் முதல் இன்பியல் நாடகம் என்று கருதத்தக்க இராய்சுடர் தாய்சுடச் (Roister Doister), நிகோலாசு யூடல் (Nicholas Udall) என்பவரால் கி.பி. 1550-இல் எழுதப்பட்டது. முதல் துன்பியல் நாடகமான ‘கார்பொடக்’, சாக்வில், நார்டன் என்னும் இரண்டு ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுக் கி.பி. 1561-இல் அரங்கேற்றப்பட்டது. அகவல் நடையில் (Blank verse) அமைந்த முதல் நாடகம் இதுவே யாகும்.
முதலாம் எலிசபெத்தின் காலத்தை ஆங்கில இலக்கியத்தின் பொற்காலம் எனலாம். இதன் தலையாய் கவிஞருள் ஒருவரான இசுபென்சரின் கவிதைகள் பெருஞ் சிறப்புடையவை, இவரது இடையரின் நான்காட்டி (Shepherd's Calender) நீதிகளையும் பிராட்டசுடண்டு மதக்கருத்துகளையும், இடையர் பாடல்களின் உரையாடல்கள் மூலம் தெரிவிக்கிறது. ஈரேழ்வரிப் பாக்களாலான அமாரெட்டி (Amoretti), எலிசபெத்து பயில் என்று நங்கையின் பால் அவர் கொண்ட காதலை விவரிக்கிறது. அப்பெண்ணை மணந்த மகிழ்ச்சியில் எழுதப்பட்ட திருமணப் பாடலான எபிதலேமியம் (Epithalamium) குறிப்பிடத்தக்கதாகும். அவர்தம் ‘தேவதைகளின் அரசி’ (The Fairy Queen), ஏழு பாகங்கள் கொண்ட முற்றுப் பெறாத பெருங்கவிதையாகும். ஆர்தர் அரசரும் அவர்தம் தோழர்களும் நிகழ்த்திய வீரச் செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்நூல் நீதியுணர்த்தும் சிறந்த காவியமாகும். கதை மாந்தர்களும் நிகழ்ச்சிகளும் குறியீட்டுப் பொருள் கொண்டவை.
ஆங்கிலத்தில் திறனாய்வுக் கட்டுரைகள் கி. பி 16-ஆம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டன. ஆசுகம், செக்கு, தாமசு வில்சன் ஆகியோர் “கேம்பிரிட்சு” குழுவைச் சேர்ந்த திறனாய்வாளர்களாவர். இவர்கள் எளிய தூய ஆங்கிலத்தின் சிறப்பை வலியுறுத்தினர். சர் பிலிப்பு சிட்னி (Sir Philip Sidney) எழுதிய ‘கவிதையின் சார்பாக ஒரு விண்ணப்பம்’ (Apologie-<noinclude></noinclude>
52pobu0lefqxbfzyrhpkjs28nv9hw31