விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.8 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/145 250 130205 1838643 816656 2025-07-03T11:21:21Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>17. லா. ச. ரா—வும் மௌனியும்</b>}}}} {{larger|<b>சி</b>}}றுகதைக் கலையில் அற்புதங்களைச் சாதித்துள்ள படைப்பாளிகள் மெளனியும், லா. ச. ரா.வும் விசேஷமானவர்கள். அவ்விருவரது சிறுகதைகளையும் ஒப்பிட்டு ஆராய்வது இலக்கிய மாணவர்களுக்குப் பயனுள்ள விஷயமாக அமையலாம். இருவரும் தனி நபர்களின் அக உளைச்சல்களையும், சிந்தனைகளையும், நினைவு ஓட்டங்களையும் திறமையோடு சித்திரித்திருக்கிறார்கள். ஆண் பெண்ணை எண்ணி ஏங்குவதை உணர்ச்சி பூர்வமாகக் கதையாக்கியிருக்கிறார்கள். மெளனியை விட, லா. ச. ரா. அதிகமான விஷயங்களை—பலதரப்பட்ட விஷயங்களை—கதைப் பொருளாக்கியிருக்கிறார், லா. ச. ரா. கதை கூறும் முறையிலும் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டிருக்கிறார். கொச்சை நடையை மிகுதியாகப் பயன்படுத்தியிருக்கிறார். உரையாடல், நினைவு கூர்தல் ரீதியில் அதிகம் எழுதியிருக்கிறார். இத்தகைய தன்மைகள் பலவற்றையும் சுவைத்து ஒப்பிடுவது இலக்கிய ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான விஷயம் ஆகக்கூடும். அவ்வித ஆய்வில் ஈடுபடுவது என் நோக்கம் அல்ல. நான் எடுத்துக் கொண்டுள்ள விஷயத்துக்கு—வசனநடை—சம்பந்தப்பட்ட சில அம்சங்களை மட்டுமே இங்கு எடுத்துச்சொல்ல விரும்புகிறேன்.{{nop}}<noinclude></noinclude> 3rrbvco5w0zt0n9v9jslmc86s4r4v5r பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/146 250 130206 1838655 816657 2025-07-03T11:39:21Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|144||பாரதிக்குப் பின்}}</noinclude>விரக்தியும் நம்பிக்கை வரட்சியும் தொனிக்கும் விதத்திலேயே மௌனி தமது கதைகளைப் படைத்திருக்கிறார், அதற்கு ஏற்றாற்போல்தான் அவருடைய எழுத்து நடையும் அமைந்திருக்கிறது. ஒரு பெண் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்ட நிலையை. அவளான் வசீகரிக்கப் பெற்றவன், கூறுவது போல மௌனி ஒரு கதையில் வரிணிக்கிறார். “அது திருவிழா தான் அல்ல. அவளும் வந்திருத்தாள்... அவள் பின்னோடு நான் சென்றேன். அநேகம் தரம், அவளைத் தொடக்கூடிய அளவு, அவ்வளவு சமீபம் நான் நெருங்கியதும் உண்டு. அடிக்கடி என் வாய் ஏதோ முணுமுணுத்ததும் உண்டு. அது, எதையும் சொல்வதற்கல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. ஈசுவர சந்நிதியில் நின்று, தலைகுனிந்து, அவள் மௌனமாகத் தியானத்தில் இருந்தாள். அவளுக்குப் பின், வெகு சமீபத்தில் நான் நின்று இருந்தேன். அவளுடைய கூப்பிய சரங்களின் இடை வழியாகக் கர்ப்பக்கிருக சர விளக்குகள் மங்கி வெகு தூரத்திற்கு அப்பாலே பிரகாசிப்பதைக் கண்டேன். அவள் கண்கள், விக்கிரகத்திற்குப் பின் சென்று வாழ்க்கையின், ஆரம்ப இறுதி எல்லைகளைத் தாண்டி இன்ப மயத்தைக் கண்டு களித்தன போலும். எவ்வளவு நேரம் அப்படியோ, தெரியறது. காலம் அவள் உருவில் அந்தச் சந்நிதியில் சமைந்து நின்றுவிட்டது. தியானத்தினின்றும் விடுபட்டு என் பக்கம் அவள் திரும்பியபோது, ஒரு பரவசம் கொண்டவனே போல் என்னையும் அறியாமலே ‘உனக்காக நான் எது செய்யவும்<noinclude></noinclude> 52bebn52iovgfyolxwfpni0q6ixcj2g பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/147 250 130208 1838663 816658 2025-07-03T11:46:32Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||145}}</noinclude>காத்திருக்கிறேன்; எதையும் செய்ய முடியும்’ என்று சொல்லிவிட்டேன். உங்கள் காதுகளில் அவ்வார்த்தைகள் விழவில்வை. ஆனால் அவள் காதில் விழுந்தன என்பது நிச்சயம். அவள் சிரித்தாள். அவளுக்கு மட்டும்தானா நான் சொன்னது கேட்டது என்பதில் எனக்கு அப்பொழுதே சந்தேகம். உள்ளிருந்த விக்கிரகம், எதிர்த்தூணில் ஒன்றி நின்ற யாளி. அவையும் கேட்டு நின்றன என்று எண்ணினேன். எதிரே லிங்கத்தைப் பார்த்தபோது, கீற்றுக்கு மேலே, சந்தனப் பொட்டுடன் விபூதி அணிந்த அந்த விக்கிரகம், உருக்கொண்டு புருவஞ் சுழித்துச் சினங்கொண்டது. தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிக மருண்டு பயந்து கோபித்து முகம் சுளித்தது. பின் கால்களில் எழுந்து நின்று பயமூட்டியது. அவளைப் பார்த்தேன். அவள் மறுபக்கம் திரும்பியிருந்தாள். பின்னிய ஜடை பின் தொங்க, மெதுவாகத் தன்னுடன் கூட வந்தவர்களுடன் சென்றாள், நான் அவளைச் சிறிது தொடர்ந்து நோக்கி நின்றேன். ஆழ்ந்து அமுங்கிய உலக நிசப்தத்தைக் குலைக்க, அவளுடைய சதங்கைகள் அணிந்த அடிச்சுவடு இன்றி முடியாது போலும். வந்தவர்களுடன் குதூகலமாகப் பேசி, வார்த்தைகளாடிக் கொண்டே, கால் சதங்கைகள் கணீர் என்று ஒலிக்கப் போய்விட்டாள். சந்நிதியின் மெளனம், அவளால் உண்டான சப்தத்தின் எதிரொலியில், சிதைவுற்றது. வௌவால்கள் கிரீச்சிட்டுக் கொண்டு குலுக்கும் நெடுக்குமாகப் பறந்தன.” (அழியாச்சுடர்) இதே போன்றதொரு கட்டம், லா. ச. ரா. கதையில் ஒருத்தி தெய்வ வழிபாடு பண்ணுகிற போது அவளுடைய அன்பன் அவளையே கவனித்திருக்கிற நிலை. அது பின்வருமாறு சித்திரிக்கப்படுகிறது—{{nop}}<noinclude></noinclude> guwpwbo49bpfzyiosw0cmbrqmq0w2sx அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf 252 182166 1838554 1700856 2025-07-03T08:45:57Z Booradleyp1 1964 1838554 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=கங்கை புத்தக நிலையம் |Address=சென்னை |Year=முதற் பதிப்பு : டிசம்பர் 1992 |Source=pdf |Image=1 |Number of pages=210 |File size=14.97 |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 11=அத்தியாயம்1 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:Books to repair 201 முதல் 250 வரை பக்கங்கள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] 2d7tcbemq0azyira5q4xxi9rhmn58c6 பக்கம்:ஒத்தை வீடு.pdf/109 250 202530 1838315 1837955 2025-07-02T14:42:41Z Booradleyp1 1964 1838315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|108||ஒத்தை வீடு}}</noinclude>டாக்டர் சந்திரசேகர், மேற்கொண்டு படிக்க முடியாமல், மனோகரை நிமிர்ந்து பார்த்தார். அவர் மனதில், அவரே முன்னால் சொன்ன இலக்கிய நயமும், வாசிப்புச் சுகமும் மரித்துப் போயின. மரித்தவை, மனித நேயமாய் உயிர் பெற்றன. அவர், மனோகரின் தோளைத் தட்டிக் கொடுத்தார். அவனோ, தட்டப்பட்டது தெரியாமல் தலை தாழ்த்திக் கிடந்தான். அந்த மொஸைக் தரை, சாணம் பூசிய வெறுந்தரையானது. மேல் தளம் பனையோலைகள் பதித்த கூரையாகிறது. ‘அப்பா செத்துக் கிடக்கிறார். வெளியே அம்மா, ஊரைத் தூற்றி மண்வாரிப் போடுகிறாள். சிலர் திட்டுகிறார்கள். ஊர் வழியில் பிணம் போவாது என்று அவளை மிரட்டுகிறார்கள். பாவாடை-தாவணி அக்கா, அவன் தலையில் முகம் போட்டு விம்முகிறாள். ஈரப் பசையில், இருவர் விழிகளும் ஒட்டிக் கொள்கின்றன.’ விநாடிகள், நிமிடங்களாய் மாறுகின்றன. எப்படிப் பேச்சைத் துவக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்த டாக்டருக்கு, மனோகரே இறுதியில் அடியெடுத்துக் கொடுக்கிறான். “அப்போதான்... அப்படின்னனா... இப்பவும் இப்படி... பட்ட காலுலயே படும்; கெட்ட குடியே கெடும் மாதிரி ஆகிட்டு.” டாக்டர், அவன் பேச்சைப் பிடித்துக் கொள்கிறார். “அப்போ... அப்படி இருந்ததால்தான், இப்போ இப்படி இருக்குது. ஆமாப்பா... ஒன்னோட பிரச்சினை, அடிப்படையில் செக்ஸ் பிரச்சினை அல்ல. ஆழ் மனதில் வேரூன்றிய பாதுகாப்பின்மை உணர்வு. அதுதான பீலிங் ஆப் இன் செக்யூரிட்டி. வெளி மனதில் பாலியல் இயலாமை வெளிப்பாடுகளாய் வேடம் போடுது. இந்த அடிமனப் பெரும் பயத்தை, நீக்கினால் தவிர, செக்ஸ் முயலாமையைப் போக்க முடியாது. ஒங்க அம்மா, சிறுமைப் படுத்தப்பட்ட போதெல்லாம் சிறுவனான நீ, எதிரிகளை அடிக்கக் கைகளைத் தூக்கி இருக்கே... பற்களைத் கடித்திருக்கே. பெரியவனாகாமல், போயிட்டமேன்னு வருத்தப் பட்டிருக்கே. இயலாமையில் துடித்திருக்கே. கற்களைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவற்றை எறிந்தால் என்ன ஆவோமோ என்று நினைத்து சும்மா இருந்திருக்கே.” “பன்னிரண்டு வயதில், அம்மா தாக்கப்பட்ட போது, நீயும் ஒரு பெரிய பையனால் தாக்கப்பட்டு, அவனை மாதிரி பெரியவனாய் ஆகாமல், போனதுக்கு வருத்தப்பட்டே... சரியா?” ஆனாலும், யதார்த்தத்தின் சூடு தாங்காமல், பேன்டஸி எனப்படும் ஒரு கற்பனை உலகில் உலவி இருக்கே. எதிரிகளின் பெண்கள் ஒனக்கு ஆறுதல் சொல்வது போல் ஒரு கற்பனை. அவர்கள் ஒன் முகத்தோடு<noinclude></noinclude> cyg1prlbr9sovqow29qk3nnpvfsgmn4 பக்கம்:ஒத்தை வீடு.pdf/114 250 202541 1838325 1837964 2025-07-02T14:51:40Z Booradleyp1 1964 1838325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||113}}</noinclude>பொருத்தி வைக்கிற சிகிச்சை முறை. ஆனால், இதுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவாகும். இதுவும் மிச்சம். அதோட உங்க உயிரணுக்கள் சரியான அளவில் இருக்குது. இதனால் அடுத்த வருஷம் நீங்க ஒரு குழந்தையை பெற்றெடுத்தாக் கூட ஆச்சரியமில்லை.” மனோகர், தன்னை புதிதாய் கண்டுபிடித்ததுபோல், தன்னையே பார்த்துக் கொண்டபோது, டாக்டர், சந்திரசேகரன், இன்னொரு ஆலோசனையும் வழங்கினார். “உடம்பை லகுவா வச்சுக்கணும். கொத்துக்கறி, குலை கறி உடம்பு பாலியல் உறவைப் பாதிக்கும். பாரதி சொன்னதுபோல், காற்றில் ஏறி விண்ணைச் சாடுவது மாதிரியான, மிதப்பான உடம்பு தேவை. இதை ஆசனப் பயிற்சியாலும், அளவான உணவாலும், ஆக்கிக் கொள்ளும்போது, நாமே உணரக்கூடியது மாதிரி நமக்குள்ளே ஒரு வாசனை எழும். பொதுவாய், ஒவ்வொரு மனிதருக்கும், பல வாசனைகள் உண்டு. இதில் பாலியல் வாசனை முக்கியமானது. இந்த வாசனையைப் பிற வாசனைகள் மூழ்கடிக்காமல், பார்த்துக்கணும். உதாரணமாய், ஒரு குழந்தையைக் கொஞ்சும்போது, ஒரு ஆணுக்குப் பெண் மீதோ, பெண்ணுக்கு ஆண் மீதோ ஆசை ஏற்படாது. காரணம், குழந்தையிடம் பீறிடும் வாசனை, பாலியல் வாசனையை அமுக்கிவிடும். இதனால்தான் படுக்கை அறையில், மலர் தூவும் வழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டு வந்தார்கள். இப்போது, நான் உங்களுக்கு மலர் தூவ வேண்டிய அவசியமில்லை. அந்த விடுதி நிகழ்ச்சியே, உங்கள் மனதை வைரப்படுத்தியதுடன், அதே மனதில், பாலியல் மலர்களையும் தூவிவிட்டது.” மனோகருக்கு, தான் புதிதாய் வளர்ந்தது போன்ற எண்ணம் ஏற்பட்டது. {{dhr|2em}} <section end="12"/><section begin="13"/> {{larger|<b>13</b>}} {{dhr|2em}} “ஒரு பெண், தாம்பத்ய உறவில் சுகம் பெற வேண்டும்; நிறைவு பெற வேண்டும். இதற்கு, அவளுக்கு முழுமையான உரிமை உண்டு. இந்த உரிமை மறுக்கப்பட்டால், அது சட்டப்படி, மனைவிக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிறக்கும்போதே, கோடிக்கணக்கான சின்னஞ்சிறு முட்டைகளை உள்ளடக்கிய ஒரு பெண், தாய்மை அடைவதற்கும் தடங்கல் ஏதும்<noinclude></noinclude> 83wtvo3whir3qr1qcnrgl6rwouqiypy 1838328 1838325 2025-07-02T14:52:36Z Booradleyp1 1964 1838328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||113}}</noinclude>பொருத்தி வைக்கிற சிகிச்சை முறை. ஆனால், இதுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவாகும். இதுவும் மிச்சம். அதோட உங்க கணவரோட உயிரணுக்கள் சரியான அளவில் இருக்குது. இதனால் அடுத்த வருஷம் நீங்க ஒரு குழந்தையை பெற்றெடுத்தாக் கூட ஆச்சரியமில்லை.” மனோகர், தன்னை புதிதாய் கண்டுபிடித்ததுபோல், தன்னையே பார்த்துக் கொண்டபோது, டாக்டர், சந்திரசேகரன், இன்னொரு ஆலோசனையும் வழங்கினார். “உடம்பை லகுவா வச்சுக்கணும். கொத்துக்கறி, குலை கறி உடம்பு பாலியல் உறவைப் பாதிக்கும். பாரதி சொன்னதுபோல், காற்றில் ஏறி விண்ணைச் சாடுவது மாதிரியான, மிதப்பான உடம்பு தேவை. இதை ஆசனப் பயிற்சியாலும், அளவான உணவாலும், ஆக்கிக் கொள்ளும்போது, நாமே உணரக்கூடியது மாதிரி நமக்குள்ளே ஒரு வாசனை எழும். பொதுவாய், ஒவ்வொரு மனிதருக்கும், பல வாசனைகள் உண்டு. இதில் பாலியல் வாசனை முக்கியமானது. இந்த வாசனையைப் பிற வாசனைகள் மூழ்கடிக்காமல், பார்த்துக்கணும். உதாரணமாய், ஒரு குழந்தையைக் கொஞ்சும்போது, ஒரு ஆணுக்குப் பெண் மீதோ, பெண்ணுக்கு ஆண் மீதோ ஆசை ஏற்படாது. காரணம், குழந்தையிடம் பீறிடும் வாசனை, பாலியல் வாசனையை அமுக்கிவிடும். இதனால்தான் படுக்கை அறையில், மலர் தூவும் வழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டு வந்தார்கள். இப்போது, நான் உங்களுக்கு மலர் தூவ வேண்டிய அவசியமில்லை. அந்த விடுதி நிகழ்ச்சியே, உங்கள் மனதை வைரப்படுத்தியதுடன், அதே மனதில், பாலியல் மலர்களையும் தூவிவிட்டது.” மனோகருக்கு, தான் புதிதாய் வளர்ந்தது போன்ற எண்ணம் ஏற்பட்டது. {{dhr|2em}} <section end="12"/><section begin="13"/> {{larger|<b>13</b>}} {{dhr|2em}} “ஒரு பெண், தாம்பத்ய உறவில் சுகம் பெற வேண்டும்; நிறைவு பெற வேண்டும். இதற்கு, அவளுக்கு முழுமையான உரிமை உண்டு. இந்த உரிமை மறுக்கப்பட்டால், அது சட்டப்படி, மனைவிக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிறக்கும்போதே, கோடிக்கணக்கான சின்னஞ்சிறு முட்டைகளை உள்ளடக்கிய ஒரு பெண், தாய்மை அடைவதற்கும் தடங்கல் ஏதும்<noinclude></noinclude> 0fnwqn6h7i1cl2omevb8yn35wdgxefp பக்கம்:ஒத்தை வீடு.pdf/115 250 202543 1838331 1837967 2025-07-02T14:54:31Z Booradleyp1 1964 1838331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|114||ஒத்தை வீடு}}</noinclude>இருக்கக்கூடாது. இதனாலேயே ஒங்க கணவரை, தொழில் மரபையும் மீறி அதட்டுனேன். ஆனாலும்...” கட்டில் சட்டத்தில், தலையணையை சுவரோடு சுவராய் போட்டு, அதன் மேல் தலை சாய்த்து கிடந்த சங்கரி, எதிரே பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தபடி, தனது முகம் பார்த்துப் பேசியவளின் வார்த்தைகளை, வேத வாக்காகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ‘ஆனாலும்’ என்று அவள் நாக்கை இழுத்துப் பிடித்தபோது, இவள் முகமும், தொலைக்காட்சிப் பெட்டியில் தடங்கல் ஏற்படும்போது வருமே, சுழிப்புக் கோடுகள், அவை போல் ஆனது. இந்த ‘ஆனாலும்’ என்கிற வார்த்தை, சொன்னது அனைத்திற்கும் சூடுபோடும் பதம் என்பதை உணர்ந்தவள்போல், சங்கரி, அந்தக் ‘கவுன்சிலிங்’ பெண்ணை கண்களால் பரிசீலித்தாள். சம வயதுக்காரி; மனோ தடுமாற்றங்களை தீர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்டவள். உடம்பு பளபளத்தாலும், உடையில் படாடோபம் இல்லை. குண்டு மாம்பழ முகம். ஒவ்வொரு வார்த்தையும் கேட்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவள். சங்கரிக்கு, தனது அடுத்த கருத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தம் கொடுத்துவிட்டு, அவள் தொடர்ந்தாள். “பாலியல், இனப்பெருக்கம் போன்றவற்றில், நாம் இயற்கையிடம், குறிப்பாகத் தாவரங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ளவேண்டும். நம் முழங்கால் உயரத்திற்குச் சுருட்டை இலைகளோடு கிடக்குதே பிரளிச் செடி... அது வண்ணத்துப் பூச்சி, ஆரம்பத்தில் புழுவாய் இருப்பதுபோல், தரையோடு தரையாய் சின்ன சுருட்டை முளையாய்த் தோன்றும். இப்படிப் பல முளைகள் சிதறிக் கிடக்கும். இந்த முளைகள் எல்லாமே பெண் பாலாய் இருந்தால், இந்த முளைகளில் ஒன்று வேகமாய் வளர்ந்து, பெண் செடியாகி, ஒருவித இனமாற்றத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம், தரைக்கு வந்து, நீரில் கரைந்து, பிற முளைகளில் ஊடுருவி, அத்தனை பெண் முளைகளையும், ஆண் செடிகளாக்கி விடும். இதில் இருந்து ஒங்களுக்கு ஏதாவது புரியுதா சங்கரி...?” சங்கரி, தலையணையை எடுத்துக் கட்டிலில் போட்டுவிட்டு, சம்மணம் போட்டு உட்கார்ந்து, முதல் தடவையாகப் பேசினாள். “புரியுது. சொல்ல வந்ததை முழுசா... முடியுங்க.” “அப்படில்ல. ஒங்களுக்கு என்ன புரிந்திருக்கு என்கிறது எனக்கும் புரிந்தால்தான், நான் மேற்கொண்டு, சொன்னதைப் புரிஞ்சுகிட்டே பேச முடியும். நாம் என்ன பேசுகிறோம் என்கிறதைப்<noinclude></noinclude> 8nyeqdz8f3v8jrkj1g3kvk4mn5cv0g4 பக்கம்:ஒத்தை வீடு.pdf/116 250 202545 1838334 1837968 2025-07-02T14:56:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||115}}</noinclude>புரிஞ்சிட்டுப் பேசினால், பிரச்சினையில் பாதியளவு போயிடும். சொல்லுங்க மேடம்?” “அதாவது, கணவனை, முழுமையான ஆணாக்குவதில், ஒரு மனைவிக்கும் பொறுப்பு இருக்குதுன்னு சொல்ல வாரீங்க... நான் இதுல தோற்றுப் போயிட்டேன்.” “தோற்கல. தோற்றுப் போனதாய் நினைக்கிறீங்க. கணவன் மனைவி உறவில், மூன்று மாத காலத்தில் ஏற்படும் முட்டுக்கட்டை, ஒரு முட்டுச் சந்தல்ல. ஆண்டுக் கணக்கில், உங்களைவிட மோசமான நிலையில் இருந்தவர்களுடைய பிரச்சினைகளை அடியோடு தீர்த்து வைத்திருக்கிறோம். ஒங்க பிரச்சினை ஒங்களுக்கு அசாதாரணம். ஆனால், எங்களுக்கு சாதாரணம். மனோகரை, கணவராய்ப் பார்க்காமல், ஆண்மைக் குறைவில் அல்லாடுகிற ஒரு வாலிபனாய்ப் பாருங்க!” “ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், எப்படி நடப்பாங்கன்னு அந்தக் காலத்திலேயே விஞ்ஞான ஜாதகம் கணித்திருக்காங்க. அதன்படிதான், ஒங்க கணவர் நடந்துக்கிட்டார். அதே ஜாதகத்தில் பரிகாரமும் இருக்குது. அந்தப் பரிகாரம், ஒங்க கணவருக்குக் கொடுக்கப்பட்டு வருது. பொதுவாய், பணக்காரக் குடும்பங்களில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தால், ஓசைப்படாமல் விவாகரத்து ஏற்படும். அடிமட்டக் குடும்பங்களில் ஏற்பட்டால், கட்டிய பெண்ணே ‘ஓட்டை வண்டின்னு’ கணவனை வெளிப்படையாய் திட்டித் தீர்ப்பாள். நானே பலதடவை இப்படிப்பட்ட வசவுகளை கேட்டிருக்கேன். ஆனால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிப்பது, நாம் இருக்கிற நடுத்தர வர்க்கந்தான்.” “என்னை... என்னதான் செய்யச் சொல்றீங்க...?” “அவருக்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்க. இன்னும் இரண்டு மாத புரபேசன். அதாவது பரீட்சார்த்த காலம் இந்தக் கால வரம்புல, நீங்க அவரை குத்திக் காட்டக்கூடாது. அவரைப் பாசத்தோடு அணுகணும். ஏமாற்றத்தை எந்த வகையிலும் காட்டிக்கப்படாது. ‘இன்றைக்குப் பரவாயில்லிங்க’ன்னு பொய்கூடச் சொல்லணும். இது வள்ளுவர் சொல்றது மாதிரி, ‘புரை தீர்ந்த பொய்’ அதுலயும் முடியலைன்னா, அப்புறம் இருக்கவே இருக்கு. விவாகரத்து... மறுமணம்.” “நீங்க தப்புக் கணக்குப் போட்டுட்டிங்க! அவர் கிட்ட இருந்து, நான் விலகிப் போக நினைக்கிறது உண்மைதான் என்<noinclude></noinclude> hzhstg7pb944mm89f9a47tkk7vaplk8 பக்கம்:ஒத்தை வீடு.pdf/120 250 202553 1838341 1837974 2025-07-02T15:01:19Z Booradleyp1 1964 1838341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||119}}</noinclude>என்பதுபோல், அவனைப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க தனது மகிழ்ச்சி, மடிந்து, அவனது கோலம் மனதைக் குடைந்தது. பத்து நாளையத் தாடி; கசங்கிப் போன உடை; உள்ளுக்குள் போன கன்னங்கள். ‘அய்யோ, இது என்ன அலங்கோலம்.’ மனோகர், தட்டுத் தடுமாறி தழுதழுத்த குரலில் விளக்கினான். “நீ சேரவேண்டிய அலுவலகத்துக்குப் போய், தலைமை அதிகாரியைச் சந்தித்தேன். உனக்கு சுகமானதும், வேலையில் சேர்த்திடுவேன்னு அவகாசம் கேட்டேன். உடனே, அந்தப் பெரிய மனிதர், ‘வெளியூர்ல அவங்க அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ சீரியஸ்னும், இதனால் ஒங்க ஒய்பு அங்கே போயிருக்காங்கன்னும்’ ஒரு லெட்டர் எழுதிக் கொடுக்கச் சொன்னார். ஒனக்கு சுகமில்லைன்னு சொன்னால், மெடிகல் சர்டிபிகேட்டில் பிரச்சினை வரும் என்றார். நானும், ஒங்கம்மா, மதுரையில் படுத்த படுக்கையாய் இருக்கிறதாய் எழுதிக் கொடுத்தேன். எந்த நேரம் பொய் சொன்னேனோ, அது எங்கம்மா விஷயத்துல மெய்யாயிட்டு...” சங்கரி, அவனை நேருக்கு நேராய்ப் பார்த்து, முதல் தடவையாக அதே சமயம், எதார்த்தமான குரலில் கேட்டாள். “என்னாச்சு... என்னால எல்லாருக்குமே பிரச்சினைதான். என்னாச்சு...” “பயப்படும்படியா இல்ல... நாலு நாள் படுக்கை வாசம். இப்போ பக்கத்து வீட்டுக்காரனைத் திட்டுற அளவுக்குத் தேறிட்டாங்க. ஐ... ஆம் ஸாரி சங்கரி... ஒன் விஷயத்துல, அரக்கத்தனமா நடந்துக்கிட்டேன்னு, எங்கம்மாவே என்னைத் திட்டுறாங்க...” சங்கரி, சகவாச தோசத்தில் கேட்பதுபோல, கேட்டாள். “ஒங்க அக்காவுக்கு ஏதாவது செய்தீங்களா...” “ஆமாம். என் போலீஸ் எஸ்.பி. பிரெண்டைப் பார்த்தேன். அவரு, எங்க மாவட்ட எஸ்.பி. கிட்டே பேசினார். இரண்டு நாளுல் அக்காகிட்டே தகராறுக்குப் போன அத்தனை பேரும், இங்கே வீட்டுக்கு வந்தாங்க. என் காதைப் பிடித்துத் திருகுனவன் முதல் இளக்காரமாய்ப் பார்த்தவனுங்க வரை அத்தனை பேரும் வந்தாங்க... காலுல விழாத குறையாக் கெஞ்சினாங்க. அக்காவும் சமரசத்திற்குச் சம்மதிச்சிட்டாள். பிரச்சினை தீர்ந்துட்டு.” “கடைசில... எல்லாரும் தர்மத்தை விட, போலீஸுக்குத்தான் பயப்படுறாங்க... ஒங்க அக்காவுக்கு... நீங்க இருக்கீங்க<noinclude></noinclude> dcuq1q8614t5huqnb0aiyxvpiuh9bot பக்கம்:ஒத்தை வீடு.pdf/124 250 202561 1838343 1836794 2025-07-02T15:04:24Z Booradleyp1 1964 1838343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|20em}} {{center|{{Xxx-larger|<b>புதைமண்</b>}}}}{{nop}}<noinclude></noinclude> swwuc99qndkg93lc9zkmckx55qqopxt பக்கம்:ஒத்தை வீடு.pdf/128 250 202569 1838350 1838218 2025-07-02T15:08:52Z Booradleyp1 1964 1838350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|128||புதைமண்}}</noinclude>குருவான நட்டுவனாரை கைகூப்பி, அப்படியே திரும்பிய இடத்திற்கு திரும்பி, அவைக்கு வணக்கம் போட்டான். பின்னர் உடம்பின் நடுப்பகுதியில் பூமத்தியரேகை மாதிரியான ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து “சம பங்கமாய்” நின்றான். அப்போது தாள லயத்துடன் பாடல் அனுபல்லவியாய் ஒலித்தது. {{c|பல்லவி}} {{left_margin|3em|<poem><b>ஆணும் ஆணும் உறவு கொண்டால் — நீங்கள் அலட்டிக்க என்னய்யா இருக்குது? ஓரின உறவு, எங்களின் உரிமை — இந்த உரிமையை பறிப்பது, உங்களின் மடமை!</b> {{c|அனுபல்லவி}} <b>என்னய்யா நியாயம்? இதுதான் அநியாயம்!</b></poem>}} பலத்த கைத்தட்டலுக்கு, இடையே இப்படி பாட்டு ஒலித்தபோது, மோகனன் ஒரு பக்கம் சாய்ந்தாடி, “அபங்கம்” செய்தான். முக்கோணமாய் உடலாட்டி “திரிபங்கம்” போட்டான். பின்னர் அய்யப்ப சாமிபோல் குத்துக்காலில் உட்கார்த்து அவற்றில் இரு கைகளையும் வேலியாக்கி வேக வேகமாய் உட்கார்ந்தான். அப்படியே அவன் எழுந்தபோது, இன்னொருவன் அலங்கார மேடைக்கு வந்தான். இவனை அடிக்கப் போவது போல் துரத்திக்கொண்டே கையை ஓங்கினான். மோகனன், அவனுக்குப் பயந்தவன் போல் கை நடுங்கி, கால் நடுங்கி மேடையின் மறுமுனைக்கு அபிநயமாய் போனான். உடனே, உச்ச கட்டத்தில் இசையொலி விடாதே பிடி என்பது மாதிரி ஒலித்தது. அவ்வளவுதான்... மோகனன் அடிக்க வந்தவனை காலை வாரி குப்புறப் போட்டான். அவன் மேல் கவிழ்ந்து படுத்தான். “அய்யோ அய்யோ” என்று சிறிது நேரம் கீழே கிடந்தவன் அலறினான். பிறகு “ஆகா ஆகா” என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் குப்புறப்படுத்த மோகனனின் கழுத்தை பிடித்துக்கொண்டான். உடனே பேரவையில் இருந்து “ஒன்ஸ்மோர்” என்று பல “மோர்கள்” ஒலித்தன. அதற்குள் அது முடிந்து, மீண்டும் மோகனனின் தனித்துவ நாட்டியம். பல்லவி பல தடவை ஒலித்தது ஒவ்வொரு தடவைக்கும் ஒவ்வொரு விதமாக மோகனன் ஆடினான் “வர்ணம்” என்ற நாட்டிய இலக்கணப்படி சுழன்றான்; சுற்றினான்; சரணத்திற்கு ஏற்ப பாடுவதுபோல் வாயசைத்தான்.{{nop}}<noinclude></noinclude> 2pcqyjrr34rldk79j8grz905ornlblu பக்கம்:ஒத்தை வீடு.pdf/130 250 202573 1838354 1838252 2025-07-02T15:11:44Z Booradleyp1 1964 1838354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|130||புதைமண்}}</noinclude>மேலே தூக்கி எம்பினான். எம்பி எம்பி குதித்தான். கை தட்டல்கள் வலுத்தன. மேடை குலுங்கியது. பின்னர் ஒரு காலை தரையில் ஊன்றிக் கொண்டே கண் புருவங்கள் வேக வேகமாய் அசைய அசைய, இன்னொரு காலை வட்ட வட்டமாய்ச் சுற்றி உடம்பையே பம்பரமாக்கினான். பூவாய் விரிந்தாடினான். மொட்டாய் குவிந்தாடினான். அந்தரத்தில் பல்டி அடித்தான். குறுக்கு நெடுக்குமாய் துள்ளினான். மோகனன், ஆட்டத்தை முடித்துவிட்டு, அவையோரைப் பார்த்தான். அங்குள்ள அனைவருக்கும் சீருடை வேலைக்காரர்கள் ஒவ்வொரு வெள்ளைக் கிளாசிலும் கால்வாசியை ரத்தக் கலராக்கி கொடுத்தார்கள். இன்னும் சிலர் கிளாஸ்களோடு வரிசையில் அமர்ந்தவர்கள் முன்னே, தட்டுக்களோடு பணிந்து குனிந்து நகர்ந்தார்கள். அப்போது, மோகனன் அவைக்கு ஒரு அறிவிப்பு கொடுத்தான். “பெண்ணாதிக்கதிலிருந்து விடுபட்ட “கேய்” தோழர்களே! இப்போது உங்களுக்கு, ஒரு நல்லவரை வல்லவரை அறிமுகப்படுத்தப்போகிறேன். ஆனால் அவர் “கேய்” இல்லை. கேய்களோடு நட்பாக இருப்பவர். தமிழக அரசின் எய்ட்ஸ் பிரிவில் இணை இயக்குநராக இருந்த, சிறந்த பேச்சாளர். இப்போது அரசாங்க பொது மருத்துவமனையில் எஸ்.டி.டி. - அதுதான் பாலியல் நோய் பிரிவிற்கு தலைவராக இருக்கிறார். ஒரு முன்னாள் அமைச்சரின் தம்பி. இவர் நினைத்திருந்தால், அமெரிக்காவிற்கு என்ன, அண்ணனின் உதவியால் நிலவுக்கே போயிருக்கலாம். ஆனாலும், சுயமரியாதைக்காரர். இன்னும் டெப்டி டைரக்டர் அந்தஸ்துலேயே இருப்பவர். இவர் எய்ட்ஸ் நோயில் ஒரு அதாரிட்டி. நமது தோழர். பார்ப்பதற்கு அழகாக இருப்பார். அவரை ஏதும் செய்து விடாதீர்கள். இப்போது அவர் மேடைக்கு வரப்போகிறார். அவர்தான் டாக்டர் காந்தராஜ். காந்தராஜ் அவர்களே! மேடைக்கு வாருங்கள்.” டாக்டர். காந்தராஜ், மேடையில் போடப்பட்டிருந்த அலங்கார நாற்காலியில் விட்டு விட்டுத் தட்டப்பட்ட கைதட்டுக்களோடும், விசில் சத்தங்களோடும் உட்கார்ந்தார். அவையைப் பார்த்தார். அவருக்கு பழக்கப்பட்ட டாக்டர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வகையறாக்களும் இருப்பதைக் கண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார். அத்தனை பேரும் மிளகாய் பஜ்ஜி, மீன் வறுவல், சிக்கன் பிரைகள் சாட்சியாக மதுக் கிண்ணத்தை வாயில் சொருகியபோது, டாக்டர் காந்தராஜ், முன்னால் இருந்த மைக்கில், பொதுப்படையாகப் பேசினார்.{{nop}}<noinclude></noinclude> 23d49ak8kn26i0ra7tw1qc46f1v4g26 பக்கம்:ஒத்தை வீடு.pdf/134 250 202581 1838271 762188 2025-07-02T12:04:19Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|134||புதைமண்}}</noinclude>கவிதையின் தரம், அதைத் தாங்கும் காகிதத்தில் இருப்பது போல், ஒரு மடிப்போ, பிடிப்போ, கரும்புள்ளியோ, செம்புள்ளியோ இல்லாத காகிதங்களை “பேடில்” சொருகினான். ஆனாலும் அவன் எழுதியவை “பேடாக” இருப்பது, அவனுக்கே துல்லியமாக தெரிந்தது கவிதையின் தரத்தை உயர்த்துவதற்காக, சித்தப்பா வைத்துவிட்டுப் போன கோப்பிலிருந்த கணிப்பொறி காகிதங்களை எடுத்தான். எவ்வளவுக்கு எவ்வளவு அவை லேசாய் இருந்தனவோ, அவ்வளவுக் அவ்வளவு பளபளப்பாக இருந்தன. செல்வா, கவிதாவை மானசீகமாக முகத்திற்கு எதிராக முன்னிருத்திக் கொண்டே, எழுதப் போனான். மனதிற்குள் அந்த கவிதாதான் சுரந்தாளே தவிர, கவிதை சுரக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் மனதிற்குள் அவள் வெள்ளப் பிரவாகமாக வந்து கொஞ்சம் நஞ்சம் உழைத்த கவிதைப் பயிர்களை அடித்துக் கொண்டு போய்விட்டாள். செல்வா, தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். ஒரு படைப்பாளியின் படைப்பை படிக்கும்பொழுது, ‘நாமும் இப்படி எழுதலாம் போலிருக்கிறதே’ என்று ஓர் உணர்வு வந்தால், அது படைப்பாளிக்கும் படைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்று எங்கேயோ ஒரு இலக்கியக் கூட்டத்தில் இவன் நிசமாகவே மழைக்கு ஒதுங்கியபோது, ஒரு பிரபல எழுத்தாளர் பேசியது நினைவுக்கு வந்தது. அப்படிச் சொன்னவர் கவிஞர்கள் <b>பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன்,</b> உடுமலை <b>நாராயணகவி,</b> பட்டுக்கோட்டை <b>கல்யாணசுந்தரம், சுரதா, கே.சி.எஸ். அருணாசலம்,</b> டாக்டர் <b>தயானந்தன் பிரான்ஸிஸ், தணிகைச் செல்வன், இன்குலாப், வைரமுத்து, வாலி, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, அறிவுமதி, பழனிபாரதி</b> ஆகியவர்களை மேற்கோள் காட்டினார். இவர்களுடைய கவிதைகளை இவன் படித்தானோ படிக்கவில்லையோ, அந்த எழுத்தாளர் மேற்கோள் காட்டிய வரிகளை தன்னாலும் எழுத முடியும் என்ற ஒரு நம்பிக்கை வந்தது. அப்போதே, தானும் ஒரு கவிஞன்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் ஆனால், ஒரு வரிகூட கவித்துவ வரியாக வரவில்லை. செல்வாவுக்குள் ஒரு பொறி... எலிப்பொறி மாதிரியான திருட்டுப் பொறி. இந்தக் கவிஞர்களின் கவிதைகளையே திருடி அங்குமிங்குமாய் மாற்றி அசல் சினிமாக் கவிஞனாய் ஆகிவிடலாமா என்று நினைத்தான். பள்ளிக்கூடத்தில் இவன் படித்த சங்ககால, இடைக்கால, சிற்றிலக்கிய கால கவிதைகளை கையாண்டு<noinclude></noinclude> t7rra4fc041g8c207o5kssdipbl8pyt 1838358 1838271 2025-07-02T15:18:17Z Booradleyp1 1964 1838358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|134||புதைமண்}}</noinclude>கவிதையின் தரம், அதைத் தாங்கும் காகிதத்தில் இருப்பது போல், ஒரு மடிப்போ, பிடிப்போ, கரும்புள்ளியோ, செம்புள்ளியோ இல்லாத காகிதங்களை “பேடில்” சொருகினான். ஆனாலும் அவன் எழுதியவை “பேடாக” இருப்பது, அவனுக்கே துல்லியமாக தெரிந்தது கவிதையின் தரத்தை உயர்த்துவதற்காக, சித்தப்பா வைத்துவிட்டுப் போன கோப்பிலிருந்த கணிப்பொறி காகிதங்களை எடுத்தான். எவ்வளவுக்கு எவ்வளவு அவை லேசாய் இருந்தனவோ, அவ்வளவுக் அவ்வளவு பளபளப்பாக இருந்தன. செல்வா, கவிதாவை மானசீகமாக முகத்திற்கு எதிராக முன்னிருத்திக் கொண்டே, எழுதப் போனான். மனதிற்குள் அந்த கவிதாதான் சுரந்தாளே தவிர, கவிதை சுரக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் மனதிற்குள் அவள் வெள்ளப் பிரவாகமாக வந்து கொஞ்சம் நஞ்சம் உழைத்த கவிதைப் பயிர்களை அடித்துக் கொண்டு போய்விட்டாள். செல்வா, தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். ஒரு படைப்பாளியின் படைப்பை படிக்கும்பொழுது, ‘நாமும் இப்படி எழுதலாம் போலிருக்கிறதே’ என்று ஓர் உணர்வு வந்தால், அது படைப்பாளிக்கும் படைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்று எங்கேயோ ஒரு இலக்கியக் கூட்டத்தில் இவன் நிசமாகவே மழைக்கு ஒதுங்கியபோது, ஒரு பிரபல எழுத்தாளர் பேசியது நினைவுக்கு வந்தது. அப்படிச் சொன்னவர் கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, கே.சி.எஸ். அருணாசலம், டாக்டர் தயானந்தன் பிரான்ஸிஸ், தணிகைச் செல்வன், இன்குலாப், வைரமுத்து, வாலி, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, அறிவுமதி, பழனிபாரதி ஆகியவர்களை மேற்கோள் காட்டினார். இவர்களுடைய கவிதைகளை இவன் படித்தானோ படிக்கவில்லையோ, அந்த எழுத்தாளர் மேற்கோள் காட்டிய வரிகளை தன்னாலும் எழுத முடியும் என்ற ஒரு நம்பிக்கை வந்தது. அப்போதே, தானும் ஒரு கவிஞன்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் ஆனால், ஒரு வரிகூட கவித்துவ வரியாக வரவில்லை. செல்வாவுக்குள் ஒரு பொறி... எலிப்பொறி மாதிரியான திருட்டுப் பொறி. இந்தக் கவிஞர்களின் கவிதைகளையே திருடி அங்குமிங்குமாய் மாற்றி அசல் சினிமாக் கவிஞனாய் ஆகிவிடலாமா என்று நினைத்தான். பள்ளிக்கூடத்தில் இவன் படித்த சங்ககால, இடைக்கால, சிற்றிலக்கிய கால கவிதைகளை கையாண்டு<noinclude></noinclude> i6u3ujfyt5b9osqmly08qvpgqo5x36h பக்கம்:ஒத்தை வீடு.pdf/135 250 202583 1838273 762189 2025-07-02T12:11:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||135}}</noinclude>இப்போது பல சினிமாக் கவிஞர்கள் காரோடும், பேரோடும் இருப்பதை அறிவான். ஆனாலும், எழுத்தாளர் கோடி காட்டிய கவிஞர்களில் பலர் காதல் சுவை சொட்டச் சொட்ட எழுதவில்லை. “காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும்தானே மிச்சம்” என்ற பட்டுக்கோட்டையார் பாடலை இப்படி மாற்றி எழுதலாமா? “கடற்கரை தனித்திருக்கு... கை காலு குறுகுறுக்கு... கடலோரம் போய் கண்ணே... கற்பனையை ஈடேற்ற வா பெண்ணே” என்று உல்டாவாக்கலமா...? ‘வா’வுக்கு இருபொருள் கொடுக்கலாமா...? செல்வாவிற்கு, மனசாட்சி உறுத்தியது. அதோடு கவிதா, அவன், தன்னை பற்றி புதுக் கவிதையில் வர்ணிக்க வேண்டும் என்றாள். மரபுக் கவிதை கூடவே கூடாது என்று ஆணையிட்டாள். இவன், இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கேட்டபோது, ‘செல்வம் என்றால் மரபு. செல்வா என்றால் புதுக்கவிதை’ என்று ஒரு ஆசிரியை போல் அச்சுறுத்திச் சொன்னாள். அவ்வப்போது பத்திரிகைகளில் புதுக்கவிதைகளை படித்து அனுபவத்தில், ‘இம்புட்டுதானா’ என்கிற அலட்சியத்தோடு, அவளிடம் ஒப்புக்கொண்டான். இப்போதுதான் புரிந்தது அனுபவத்தில். அவள் இடக்கு மடக்கில் மாட்ட வைத்து விட்டாள் என்பது; முதலில் கவிதையாம். அதற்கு பிறகுதான் குறைந்த பட்ச தீண்டலாம். அவளை சந்திக்க வேண்டும் என்றால் புதுக்கவிதையோடு வரவேண்டுமாம். இன்று மாலையில், கடற்கரையில் அவளைச் சந்திப்பதாக ஏற்பாடு. இப்போதோ நள்ளிரவு. சித்தப்பாவின் குழந்தைகள் ஏழு வயது அருணும், மூன்று வயது சுபேதாவும் அவன் படுக்கைக்கு இருபுறமாக படுத்திருக்கிறார்கள். குறட்டைக்கூட விடுகிறார்கள். அந்த குறட்டை அளவிற்குக்கூட கவிதை வரவில்லை. ஒருவரி கிடக்கட்டும், ஒரு வார்த்தைகூட வரவில்லை. இதற்குள் சித்திக்காரி பாத்ரூமுக்கு போய்விட்டு வந்தாளோ என்னமோ, விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு ஷாக் அடிப்பது மாதிரி கத்தினாள். “இப்படி விளக்கெரிஞ்சா கரண்ட் பில் யார் கொடுக்கிறது? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்? பெரிய படிப்பு படிக்காராம். பொல்லாத படிப்பு. லைட் ஆப் பண்ணுடா குழந்தைங்க தூக்கம் கெடும் என்கிற எண்ணமாவது வேண்டாம்? ‘அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரியில குடை பிடிப்பானாம்’ தூங்குற ராத்திரியிலுமா லைட்டு.”{{nop}}<noinclude></noinclude> jwokqxk1yi17zufjihiqinqn4t0y8jx பக்கம்:ஒத்தை வீடு.pdf/136 250 202585 1838274 762190 2025-07-02T12:17:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|136||புதைமண்}}</noinclude>செல்வாவின் முகம் சுண்டிப் போயிற்று. சித்திக்காரி, இப்படி குத்திக் காட்டுவது வழக்கம்தான். அந்த வழக்கமான ஏச்சை வாங்கிக் கொள்வதை, இவன் ஒரு பழக்கமாக்கிக் கொண்டவன்தான். ஆனாலும், கவிதா உள்ளத்தில் இருக்கும் இந்த சமயத்தில், சித்தி அப்படிக் கத்தியது சுய அனுதாபத்தை கொடுத்தது. விளக்கை அணைக்க மறந்தவனாய், தனது வருத்தத்திற்கு அடைக்கலம் தேடுவதுபோல், கவிதாவின் காதலையும், கடற்கரையையும் நினைத்துக் கொண்டான். அவன் கண் முன்னால் கடற்கரை தோன்றியது. கவிதா தோன்றினாள். மற்ற யாரும் தோன்றவில்லை அந்தச் சந்திப்பு நிகழ்ச்சி பிம்பங்களாய் வந்து கொண்டிருந்தன. {{dhr|2em}} <section end="2"/><section begin="3"/> {{larger|<b>3</b>}} {{dhr|2em}} கள்ளக் காதலர்களையும், கள்ளங் கபடமற்ற காதலர்களையும் கண்ணகி சிலை, ஒற்றைச் சிலம்போடு மறைத்து வைத்தாளோ அல்லது தனக்கு கிடைக்காத சுகங்கள் எல்லாம் இவர்களுக்கு கிடைக்கிறதே என்ற ஆதங்கத்தில் முகம் திருப்பி, அவர்களுக்கு முதுகைக் காட்டுகிறாளோ... அன்றைய இளங்கோ அடிகளுக்கும் இன்றைய பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் மட்டுமே வெளிச்சம். கவிதாவும், செல்வாவும் மெரினா கடற்கரையில் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடைப்பட்ட இரண்டும், கெட்டான் மண்வெளியில் உட்கார்ந்தார்கள். ‘எதுக்கும் கைய கொஞ்சம் தள்ளி வையுங்க’ என்று அவனைத் தள்ளிக் கொண்டே கவிதா செல்லச் சிணுங்களாய் சிணுங்கினாள். அதோடு முன்னெச்சரிக்கை... வாய்க்கு வந்தது. வயிற்றுக்கு வந்துவிடக்கூடாதே என்ற பயம். அது பயமுறுத்தலாக வெடித்தது. திடீரென்று, வீட்டில் நடந்த ரகளை நினைவுக்கு வந்தது. செல்வா அங்கே இல்லாதது போல் அனுமானித்துக் கொண்டதுபோல், கவிதா, தலையைத் தொங்கப் போட்டாள். உடனடியாக அவளது மாற்றத்தை புரிந்து கொண்ட செல்வா, இப்படிக் கேட்டான். “ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே கவிதா...” “இன்னைக்கு வீட்ல ஒரே ரகளை... எங்கண்ணன் மோகனன், வீட்டுக்கு எப்பவாவது ஒரு தடவை வருவான். வந்த உடனேயே, அப்பா கிட்ட பணம் கேட்பான் அடிக்கப்போறது மாதிரி கையை ஓங்குவான் நான் தடுக்கப் போனால், என்னையும் கெட்ட கெட்ட<noinclude></noinclude> 285v7vvu70ssrkenar6rf8dhf1tr4i0 பக்கம்:ஒத்தை வீடு.pdf/137 250 202587 1838275 762191 2025-07-02T12:24:57Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||137}}</noinclude>வார்த்தையால திட்டுவான். அப்பாவையும் மீறி பீரோவை, உடைத்து, பணத்தை எடுத்துக்கிட்டு போயிடுவான். அவன் நடவடிக்கையும் சரியாய் இல்ல... ஐ.ஏ.எஸ். ஆபீசரான எங்கப்பாவால், ஒரு நிமிஷத்துல அவனை உள்ள தள்ள முடியும். ஆனால், பெற்ற மகனாச்சே... திடீரென்று ஏனோ அந்த ரகள நினைப்பு வந்துட்டுது.” “ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில ஒரு பிரச்சினை இருக்கு. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வும் இருக்கு... கவலப்படாத கவிதா... எப்போதாவது ஒருநாள் ஒங்கண்ணன் திருந்துவார். பல பெரிய இடத்துப் பிள்ளிங்க இப்படித்தான் இருக்குதுங்க...” கவிதா சிறிது விலகி உட்கார்ந்தாள். காய்ந்த மண்ணை குடைந்து குடைந்து ஈர மண்ணை எடுத்து வலது கையால் பிசைந்தபடியே, இடது கையை அவன் தோளில் போட்டாள். போட்டபடியே கேட்டாள். “எனக்கு பயமா இருக்குது செல்வா! பேசாம படிப்பும் வேண்டாம் கிடிப்பும் வேண்டாமுன்னு உதறிவிட்டு, ஓங்க கிராமத்துலப் போயி செட்டில் ஆயிடலாமா?” “ஒவ்வொரு நாளும் இப்படி கிளிப்பிள்ளை மாதிரி கேட்டதையே கேட்டால் எப்படி கவிதா? நீ இப்போ பிளஸ் டூ. நானோ காலேஜ்ல முதலாம் வருடம் பட்டப்படிப்பை முடித்து எப்படியும் வேலைக்குப் போகணும். நீயும் உன் ஆசைப்படி டாக்டருக்கு படித்து கிளினிக் வைக்கணும். அதுக்குப்பிறகுதான் கல்யாணம்.” “அதுக்குள்ள நான் கிழவியாயிடுவேன்... நீங்க கிழவனாயிடுவிங்க...” “காதலர்களுக்கு முதுமை, வந்தாலும் காதல் என்றுமே இளமைதான் கவிதா” “அதுவும் சரிதான். எப்போதோ வரப்போற கல்யாணத்தப் பற்றி இப்போ எதுக்கு பேசணும்?” “காதல் என்கிறது கல்யாணம் வரையுன்னு கண்ணதாசன் பாடினாரே! நாம் காதலர்களாகவே இருப்போம்.” “தத்து புத்துன்னு உளறாதீங்க செல்வா! நான் ஒங்ககூட சுத்துறது எங்கப்பா காதுல விழுந்துட்டுதுன்னு வச்சுக்கவும் அவர் மூணுல ஒன்றை செய்வார் இல்லையான்னா மூன்றையும் செய்வார் ஒன்று, இந்த வயசிலேயே காதலாடின்னு அடி அடின்னு அடிப்பார்<noinclude></noinclude> tnniyuowr4uqun0na8osl3mvz5stc4e பக்கம்:ஒத்தை வீடு.pdf/138 250 202589 1838276 762192 2025-07-02T12:33:40Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|138||புதைமண்}}</noinclude>இல்லன்னா அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்கள போலீஸ்ல பிடிச்சுக் கொடுப்பார்.” “மூணாவது?” “என் படிப்பை நிறுத்திட்டு, ஏதாவது ஒரு பெரிய இடத்துப் பயலுக்கு கல்யாணம் செய்து வைப்பார்.” “நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கட்டும். கவலைப்படாதே. இன்னும் சில வருஷத்துல நாம் சொந்தக் காலுல நிற்கப் போறோம். அதுவரைக்கும் இலைமறைவு காய்மறைவா மூணு மாதத்திற்கு ஒரு தடவையோ அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு தடவையோ சந்திப்போம்.” சுடிதாரோடு, அவள் நிறத்தைப் போன்ற புதுநிற துப்பட்டாவோடு அவனோடு இணைந்து உட்கார்ந்திருந்த கவிதா, அவன் அப்போதே தன்னை கைவிட்டு விட்டதுபோல் அழாக் குறையாய் பேசினாள். “என்ன செல்வா நீங்க...? வாரத்துல ஒரு நாள்தானே சந்திக்கிறோமுன்னு நான் ஒரு வாரத்துல ஒரு நாள்தான் இருக்கணுமுன்னு ஆசைப்படுகிறேன். ஆனா நீங்க என்னடான்னா, மாதக் கணக்கில வாய்தா போடுறீங்க... போகட்டும் உங்களுக்கு வேலை கிடைச்சதும் உங்கப்பா உங்க சாதியிலே ஒரு பெரிய இடத்துப் பெண்ணா நிச்சயிச்சாருன்னா என்ன செய்வீங்க? நீங்கதான் அப்பா பிள்ளையாச்சே!” செல்வா, சிறிதுநேரம் கண்களை மூடினான் அந்தக் கண்களில், உள் உருவமாய் அப்பா வந்து நின்றார். ஆண் சரஸ்வதி போன்ற வெள்ளாடைத் தோற்றம். அதிர்ந்து பேசமாட்டார். ஆனால், அவர் பேச்சு அழுத்தமாக இருக்கும். கிராமத்தில் எல்லாத் தந்தைகளும், தம் பிள்ளைகளைத் திட்டும்போது, இவனை அவர் “டா” போட்டு பேசக்கூட யோசிப்பார். அவர் தன்னையோ பிறரையோ திட்டி ஒரு நாளும் கேட்டதில்லை அப்படிப்பட்ட அப்பா இப்போ... சொந்தக் கிராமத்துக்கு மானசீகமாய் போய், தந்தையின் தரிசனத்தில் மூழ்கிப் போன செல்வாவை, கவிதா, ஒரு உலுக்கு உலுக்கினாள். அவன் சோகம் அவளுக்குப் புரிந்தது பேச்சை மாற்றுவதற்காக அவன் இடுப்பில் கைபோட்டுக் கொண்டு கேட்டாள். “ஆமா... ஒங்கப்பா, அந்தக் காலத்துல கிராமத்துல ஆண்கள்ல பெண்கள்ல பலரை காதலிக்க செய்ததாய் திருக்குறள் மாதிரி<noinclude></noinclude> tpxnabtdn3uuwx7b3n29q2j233esg46 பக்கம்:ஒத்தை வீடு.pdf/139 250 202591 1838279 762193 2025-07-02T12:40:31Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||139}}</noinclude>சொன்னீங்களே. இந்த ‘அதுக்கு’ ஒரு குறளோவியம் கொடுக்கிறீங்களா...” செல்வா, மீண்டும் கடற்கரைக்கு வந்தான். தந்தையின் தரிசனத்தை அரைகுறையாய் விட்ட அதிருப்தியோடு அவளைப் பார்த்தான். அவள் ‘சொல்லுங்க’ என்று அவன் முடியை பிடித்து இழுத்தபோது, இவன் மூளைக்குள் பதிவான அப்பாவின் பேச்சு இவன் பேச்சானது. “அந்தக் காலத்துல, அதாவது அறுபது வருஷத்திற்கு முன்னால், கிராமங்களில் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் எல்லா வகையிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டதாம். குறிப்பா கலைஞரோட “பராசக்தி”, “மனோகரா” வசனங்கள், ஒரு உலுக்கு உலுக்கியதாம். “பராசக்தி” நாடகங்களை போடாத கிராமங்களே கிடையாதாம். அதுக்கு முந்தன காலத்துல, கல்யாணமான கணவன் மனைவி, ஒருவாரம் வரைக்கும் நாணிக்கோணி, அப்புறந்தான் படுக்கையை பகிர்ந்து கொள்வார்களாம். அப்புறம் காய்ஞ்ச மாடு கம்பம் புல்ல மேய்ஞ்ச கதையாம். கல்யாணமான பதினோறாவது மாசத்திலே ஒன்பதாவது மாசம் வந்திடுமாம். கம்மாக்கரைவரை தோள்மேல் கைபோட்டு, கையோடு கைசேர்த்து, பேசிக்கிட்டே போகிற இந்தத் தம்பதி, ஊருக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில், புருஷன்காரன் முன்னால் நடப்பானாம். பெண்டாட்டியானவள் அவன் யாரோ தான் யாரோ என்பது மாதிரி, அரை கிலோமீட்டர் பின்னால் நடப்பாளாம். இதை எங்கப்பா ஒரு உதாரணமா சொன்னாரு... எங்கப்பாவோட குட்டாம்பட்டி வாத்தியாருக்கும், வெட்டாம்பட்டி வாத்தியாரம்மாவுக்கும் கல்யாணம். கல்யாணம் முடிந்த ஒரு மணி நேரத்துல அந்த வாத்தியாரம்மா புருஷனாகிப் போன வாத்தியாருக்கு நாலுபேரு முன்னால காபி டம்ளரை நீட்டினாளாம். “சூடு ஆறு முன்னால குடிங்கன்னு” சொன்னாளாம். அவ்வளவுதான்... ரெண்டு பட்டி வாய்களுக்கும் அவல் கிடைச்சது மாதிரியாம். இப்படி ஒரு பொம்பள இருப்பாளா?ன்னு ரெண்டு ஊர்க்காரர்களும் ரெண்டு மாசம் வரைக்கும் சிரிப்பா சிரிச்சாங்களாம்.” “அப்போ உங்கப்பாவும் அம்மாவும் காதலித்து, கல்யாணம் பண்ணினாங்க என்கிறதா நீங்க சொன்னது பொய்தானே?” “பொய் இல்ல கவி! நிசம்தான் எங்கம்மாவும் அப்பாவும் அந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை அதாவது கலைஞரோட வசனக்கால தலைமுறை. எங்கப்பா, எட்டாவது படிக்கும்போது<noinclude></noinclude> bx8jbffjr2pkmgl7wr9k72zj005i2b8 பக்கம்:ஒத்தை வீடு.pdf/140 250 202593 1838281 762195 2025-07-02T12:58:31Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|140||புதைமண்}}</noinclude>நல்ல தமிழ் வருமாம். கலைஞர் தமிழை கண் மூடிக்கிட்டே ஒப்பிப்பாராம் அந்தக் காலத்துல பெண்கள் ஆறு, அஞ்சு படிச்சிட்டு பீடி சுத்துனாங்க... எட்டாவது வகுப்பான இ.எஸ்.எல்.சி. படித்துட்டு ரெண்டு வருஷம் டிரெயினிங் படிச்சுட்டு வாத்தியாரம்மாவா வந்தவங்க. பின் கொசுவம் கட்டுகிற பெண்கள் மத்தியில் இவங்க முன் கொசுவம் வச்சு புடவை கட்டினாங்களாம். வாத்தியாரம்மாக்களுக்கு செகண்டிரி கிரேட் டீச்சர், இல்லன்னா அந்தக் காலத்து பெரிய படிப்பான எஸ்.எஸ்.எல்.சி. வாலிபர்கள் பிடிக்குமாம். பீடி சுத்துற பெண்களுக்கு ஹீரோ டெய்லர், ஒயர்மேன், பீடிக்கடை ஏஜெண்டு, கணக்கப்பிள்ளை, பெட்டிக்கடை இளைஞன், சைக்கிளில் மிட்டாய் போடும் வியாபாரி. ஆக மொத்தத்துல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொருத்தி மேல கண்ணாம். ஆனால், தமிழ்தான் வராதாம். அப்பாகிட்ட வந்து ‘லவ் லெட்டர்’ எழுதித் தரும்படி கேட்பாங்களாம். உடனே எங்கப்பா கலைஞர் பாணியில, ‘கண்ணே... பெண்ணே... முத்தே... மாணிக்கமே... இடையில்லா இளம் பெண்ணே... வானத்துச் சந்திரனே... பூமியில் உதித்த புதுமலரே... காணியில் பூக்கும் செண்பகமே... உன் புருவங்கள் வேல்... உன் விழிகள் மீன்... உன் கழுத்தோ சங்கு’ என்கிற பாணியில் எழுதிக் கொடுப்பாராம். ஒருவேளை காதலுக்கு பதிலாக, எழுதிக் கொடுத்தவரையும், எழுதச் சொன்னவரையும் கம்பத்தில் கட்டி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதைமேல் ஏற்றிவிடலாம் என்ற அச்சத்தில், எங்கப்பாவே சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய வர்ணனையை, மார்பகத்திற்கு மேலே தான் வைத்துக் கொள்வாராம்.” “சீ! போங்க இந்த மாதிரி பேசுறதெல்லாம் எனக்குப் பிடிக்காது. சரி மேற்கொண்டு சொல்லுங்க... பிடிக்காட்டியும் கேட்டுத் தொலைக்கேன்.” “வீட்ல அப்பா அம்மாகிட்டயும் அண்ணன்மார் கிட்டயும் ‘முண்டக்கண்ணி, கட்டையில போறவள், மூதேவி, மேனா மினுக்கி, க்வுகண்ணி, சண்டாளி, சதிகாரி, பிடாரி, பேய், வீட்டக்கெடுக்கிற ஊமச்சி, பல்லிளிச்சாள்’ என்று பல்வேறு பட்டங்களை வாங்கிக் கொள்ளும் இந்தப் பெண்களுக்கு ‘கண்ணே கண்மணியே’ என்ற வசன நடையில் எழுதிய கடிதத்தை, எழுத்து கூட்டிப் படித்தபிறகு, எழுதியவன் மீது ஒரு கிக் வந்துவிடுமாம். அப்புறம் புளியந்தோப்பாம்... இல்லன்னா கரும்புத்தோட்டம்...” அப்போ ஒங்கப்பாவுக்கு ஏகப்பட்ட காதலிகளா? “நீ வேற... எங்கப்பாவுக்கு, அப்போ வயதே பதினாலுதான். டெய்லர், ஒயர்மேன் மாதிரி ஆட்களுக்கு இந்த மாதிரி லெட்டர்கள,<noinclude></noinclude> kdk9lcss7km7lxvqp3mrlol7mibs5lf பக்கம்:ஒத்தை வீடு.pdf/141 250 202595 1838286 762196 2025-07-02T13:13:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||141}}</noinclude>அவங்க பேரில எழுதிக் கொடுத்திருக்கிறார். இதுல எல்லாப் பெண்களுமே விழுந்துட்டாளுகளாம். ஒரு ஸ்டேஜ்ல, அதாவது எங்கப்பாவுக்கு பதினெட்டு வயசு வந்தபோது, ‘நாம ஏன் இப்படி ஒரு லெட்டர் எழுதி ஒரு பெண்ணுக்கு கொடுக்கக்கூடாது’ன்னு ஒரு நினைப்பு வந்துட்டுதாம். இதுக்காக சிறப்புக் காதல் கடிதம் எழுதியிருக்கார். இந்த லெட்டரில் விழுந்தவள்தான் எனது அம்மா. இன்னும் எழுந்திருக்கல... எங்கப்பா, அவ்வளவு பெரிய உள்ளூர் மேதை. கிராமத்திலேயே அந்தக் காலத்துலயே எஸ்.எஸ்.எல்.சி பாஸான முதல் படிப்பாளி. மற்றவங்க அதைத் தாண்டல... அதோட பொது அறிவுப் புத்தகங்கள நிறையப் படிப்பாரு... வீட்ல இந்து பத்திரிகையத்தான் வாங்குவாரு... அந்தக் காலத்து வில்லுப் பாட்டாளிகளுக்கு சில சமயம் இவரே பாட்டு எழுதிக் கொடுப்பாரு... நாடகங்களுக்கு கதை வசனம் எழுதி அரங்கேற்றினவரு... லேசுப்பட்டவரு இல்ல...” “எப்பாடி சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாச்சு. போகட்டும். உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி. புலிக்கு பிறந்தது எதுவாய் இருக்கும்.” “என்ன பைத்தியக்காரத்தனமாக கேள்வி. புலியாத்தான் இருக்கும்.” “அதனால வர்ணனைப் புலியான லட்சுமணன் என்கிறவருக்கு பிறந்த செல்வா என்கிற நீங்க, உங்க பேருக்கு ஏத்தாப்போல, என்னை வர்ணித்து ஒரு புதுக்கவிதை எழுதி இதே இந்த இடத்துல அடுத்த வாரம் வாசித்துக்காட்டணும். இல்லாட்டி நீங்க வரவேண்டியதில்ல... சரியா?” “சரியில்லம்மா... பள்ளிக்கூடத்துல ‘நேர் நேர் புளிமா’ என்று தமிழாசிரியர் சொல்லும்போது, இதை ஏன் “மடையா” என்று சொல்லக்கூடாது சார் என்று கிண்டலடித்தவன் நான் தமிழ்ல தட்டுத் தடுமாறித்தான் தேறினேன். என்னை விட்டுடும்மா.” “புளிமா என்கிற வார்த்தைக்கு இணையாக ஒரு வார்த்தையை கண்டுபிடித்தலிருந்தே உங்களிடம் இலக்கிய ஆர்வம் இருப்பது தெரிகிறது. அதனால நீங்க எனக்கு புதுக்கவிதையில ஒரு அன்பளிப்பு கொடுக்கணும்.” “எனக்கு மேடைப்பேச்சுதான் வரும். கவிதை வராதும்மா.” “ஒரு துறையில கொடி கட்டிப் பறக்கறவங்களால மற்ற துறையிலும் பிரகாசிக்க முடியும். காரணம் இது ஒரு வகையன சக்தி. இந்த சக்தியை அழிக்க முடியாது. மாற்றிக் காட்ட முடியும் கமான்! உங்கள் கல்லூரி மேடைப் பேச்சுத் திறனை ஒரு<noinclude></noinclude> 4n4upj18akwy0zjf2fslfl4c8aj3fwb பக்கம்:ஒத்தை வீடு.pdf/142 250 202597 1838295 762197 2025-07-02T13:39:27Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|142||புதைமண்}}</noinclude>புதுக்கவிதையாய் வடித்துக் கொண்டு வாங்க... வரணும்... வந்தாகணும்...” “கவிதையா? நானா?” “ரெண்டுந்தான்.” கவிதா வெட்டொன்று துண்டு ரெண்டாய் பேசப் பேச, செல்வா அப்படி ஆனவன்போல் துடி துடித்தான். கவிதை... அதுவும் புதுக்கவிதை... அய்யகோ... (இது அவன் தந்தை, கலைஞரின் தாக்கத்தால் அடிக்கடி சொல்லும் வார்த்தை). கவிதாவிடம் அடைக்கலமாகவும் அநாதையாகவும் நினைவலைகளில் பயணம் செய்த செல்வா, அப்படியே தூங்கிப் போனான். நள்ளிரவில் செல்வாவை, சித்திக்காரி யதார்த்தத்திற்கு கொண்டு வந்தாள். “உன் மனசுல என்னடா நினைப்பு? இன்னும் விளக்கை அணைக்காமல் இருக்கே? நான் சொன்னதுக்கு ஒரு மட்டு மரியாதை வேண்டாம்? அவர் வரட்டும். நாளைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்.” செல்வா, இரண்டு துண்டாய் ஆனவன்போல், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான். {{dhr|2em}} <section end="3"/><section begin="4"/> {{larger|<b>4</b>}} {{dhr|2em}} காலை ஐந்து மணிக்கெல்லாம், கடிகார அலாரம் அலறியது. அதை அப்படியே விட்டால், சித்தி வந்து திட்டுவாள். சித்தப்பா இருக்கும் சமயத்தில் ஆறு மணிக்கும், இல்லாத சமயத்தில் ஏழு ஏழரை மணிக்கும் தூக்கத்திலிருந்து விடுபடுபவள். ஆகையால் செல்வா, படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்து அலாரப் பட்டனை ஒரே அமுக்காக அமுக்கினான். இரவில் கடைசியாக தோன்றும் நினைவு, காலையில் எழுந்ததும் மனதில் முதலாக வரும் என்பார்கள். இதற்கேற்ப செல்வாவிற்கும் புதுக்கவிதையும் கவிதாவும் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். புதிதாக ஐந்தாறு காகிதங்களை அடுக்கிக் கொண்டு கவிதை எழுதப் போனான். அது, கழுதைமேல் சவாரி செய்வதுபோல் ஆகிவிட்டது. வடிவத்திற்கு<noinclude></noinclude> 3whs97wh32166il2up10s9m5ipahimu பக்கம்:ஒத்தை வீடு.pdf/143 250 202599 1838299 762198 2025-07-02T13:54:05Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||143}}</noinclude>ஏற்ற உள்ளடக்கம் இல்லை. உள்ளடக்கத்திற்கு ஏற்ற உருவம் இல்லை உலகத்தில் உள்ள அத்தனை கவிஞர்களையும் திட்டினான். அவள் கேட்டபடி, ஒரு கவிதை எழுத முடியவில்லை என்றால், தன்னுடைய மரியாதை கடற்கரை காற்றோடு கலந்து போய்விடுமே என்று கலங்கினான் இப்ப மட்டும் தனது மரியாதை சித்தியிடம் என்ன வாழ்கிறதாம் என்று நினைத்துக் கொண்டான். ஒருவேளை கவிதையோடு போகவில்லை என்றால், தனக்கு இருக்கக்கூடிய ஒரே ஆதரவான கவிதா தன்னை நிராகரித்து விடுவாளோ என்று கலங்கினான். ஒருவேளை அப்படி நிராகரிப்பதற்குத்தான் பெரிய இடத்துப் பெண்ணான அவள் தன்னை கவிதை எழுதும்படி சதி செய்கிறாளோ என்றும் அளவுக்கு மீறி சிந்தித்தான். சித்தப்பா இருக்கும்போது, சித்திதான் காபி போடுவாள் அவர் இல்லாதபோது, இவன் போட வேண்டும். காபியோடு சித்தியை எழுப்பவேண்டும். அதுவும் ஏழேகால் மணிக்கு, குழந்தைகளுக்கோ ஆறுமணிக்கெல்லாம் காபி தேவை. ஆகையால் புதுக்கவிதையை விட்டுவிட்டு, குளியலறைக்குப் போய் அத்தனை காரியங்களையும் முடித்துவிட்டு, வெளியே வந்தபோது மணி ஐந்தரை. அவசர அவசரமாக சமையல் அறைக்குள் ஓடினான். கேஸ் சிலிண்டரை பற்ற வைத்தான். பிறகு பால் வாங்க மறந்து போய்விட்டோமே என்று அடுப்பை அணைத்து விட்டு, ஒரே ஓட்டமாய் ஓடினான். புதுக்கவிதையையும் இப்போது பழைய கவிதையையும் சேர்த்து திட்டிக்கொண்டே ஓடினான். ஆவின் பூத்திற்குள் போய் இரண்டு பால் உறைகளை கையில் எடுத்துக்கொண்டு வந்தபோது, அவை அவன் கையை உருக வைத்தன. கவிதை நினைவிலும், கவிதா நினைவிலும், பாலித்தின் பையை கொண்டு போக மறந்து, கையுருக திரும்பி வந்தான். அடுப்பை பற்ற வைத்தபோது, ஆறரை மணி இதற்குள் சித்தப்பா குழந்தைகள் அருணும், சுபேதாவும் “அண்ணா அண்ணா” என்று கூவினார்கள். காபி டம்ளர்களோடு அவர்களைப் பார்த்து அந்த அறைக்குள் ஓடினான். கான்வென்ட் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் என்பதால், பல்லை பிரஷ் செய்யாமலே காபி குடித்து பழகியவர்கள். அருணை முகத்தை கழுவச் சொல்லிவிட்டு, சுபேதாவை தூக்கிக் கொண்டுபோய் முகத்தை கழுவினான். சுபேதாவோ தனது பல்லைக் காட்டி ‘வாட் கலர் திஸ்’ என்றாள். உடனே, இவன், “வெள்ளை நிறம்” என்றான். பிறகு, அவள் உதட்டை மடித்துக் காட்டி ‘வாட் ஈஸ் திஸ் கலர்’ என்றாள். இவன் “சிகப்பு” என்றான் உடனே அந்தக் குழந்தை தனது கவுனை தூக்கிப் பிடித்துக் கொண்டு ‘நோ அண்ணா நோ. திஸ் ஈஸ் ஒயிட்... திஸ் ஈஸ் பிங்க்’ என்றாள்.{{nop}}<noinclude></noinclude> l0sdyw5w9qwipl6as3ofzm6rlt02zud பக்கம்:ஒத்தை வீடு.pdf/144 250 202601 1838306 762199 2025-07-02T14:06:36Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|144||புதைமண்}}</noinclude>படுக்கை அறையிலிருந்து, சித்தியின் பயங்கரமான அலறல் கேட்டது. “இங்கிலீஷ்ல பேசற பிள்ளிங்கள கெடுத்துடுவே போலிருக்கே... இதுக்காகவே மாசா மாசம் இந்த பேய்களை, இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல போட்டு மாசம் அறுநூறு ரூபாய் அழுவுறோம்... ஏற்கெனவே டாடின்னு சொல்ற பிள்ளைங்கள அப்பாவாக்கிட்டே மம்மியான என்னை அம்மாவாக்கிட்டே... இதுல்லாம் சரிப்படாதுப்பா... தமிழாம் பொல்லாத தமிழு...” செல்வா, மனதிற்குள் ஏற்பட்ட வேதனையை அதே விகிதாச்சாரத்தில் அன்பு மயமாக உரக்கக் கேட்டான். “உங்களுக்கு காபி போடட்டுமா சித்தி.” “நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறது ஒனக்கு பொறுக்காதே...” இதற்குள், அருண் ஒரு விரலையும், சுபேதா இருவிரலையும் காட்டினார்கள். அருணை மேற்கத்திய டாய்லெட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு, சுபேதாவை தனியாக இருந்த இந்திய டாய்லெட்டுக்கு கூட்டிப் போனான். பிறகு, அவர்களை பல்லில் பிரஷ் செய்ய வைத்தான். இரண்டு குழந்தைகளையும் ஒருசேர குளியலறைக்குள் கொண்டு போனான். அருண் தானாகக் குளித்தான். இவன், அவனுக்கு சோப்பை எடுத்து உடலெங்கும் தேய்த்தான். சுபேதாவை குளிப்பாட்டினான். துணியால் துவட்டினான். இரண்டு பேரையும் வெளியே கொண்டு வந்து, அருணுக்கு வெள்ளை மேல் சட்டையும், நீல கால் சட்டையும் அணிவித்தான். சுபேதாவிற்கு வெள்ளையும் பச்சையும் கலந்த கவுணை அணிவித்தான். சுபேதாவின் தலையை வாரிக் கொண்டிருந்தபோது, சித்தியின் குரல் சிறிது இறங்கியது போல் கேட்டது. “கீசரை போடு. நான் இன்னிக்கி வெந்நீர்ல குளிக்கணும். அப்படியே காபி கொண்டு வா...” செல்வா, குழந்தைகளிடம் ஹோம் வொர்க் நோட்டுகளை கொடுத்துவிட்டு, சமையலறைக்குள் ஓடி, காபி தயாரித்தான் அப்போதுதான் வந்த ஐம்பது வயது வேலைக்காரம்மாவிற்கு சித்தியின் அறையை நோட்டமிட்டபடியே ஒரு கப் காபி கொடுத்தான். இன்னொரு கப்பை சித்தியின் அறைக்கு கொண்டு போனான். ‘சித்தி... சித்தி...’ என்றான். அவளோ கட்டில் சுகத்திலிருந்து மீள முடியாமல் ‘வைத்துவிட்டுப் போ’ என்றாள்.{{nop}}<noinclude></noinclude> n3oanoqhih779ppxiaqhitda0n6ads6 பக்கம்:ஒத்தை வீடு.pdf/145 250 202603 1838308 762200 2025-07-02T14:17:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||145}}</noinclude>செல்வா, குழந்தைகளும் தானும் இருக்கும் அறைக்கு ஓடி வந்தான். அவர்கள் ஹோம் வொர்க்கை முடிக்க இன்னும் நேரமிருப்பதை அறிந்தான். அந்தச் சமயம் கவிதைக் கற்பனை வந்தது. மீண்டும் நான்கைந்து தாள்களை வைத்துக்கொண்டு, அவனும் கவிதையும் போராடிக் கொண்டிருந்தபோது, சித்தி குளிப்பதற்காக உள்ளே வந்தாள். இவன் பாட்டுக்கு எழுதுவதைப் பார்த்து, மெல்லிய குரலில், அதேசமயம் அழுத்தம் திருத்தமாக ஒரு கேள்வி கேட்டாள். “பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறதை விட்டுவிட்டு, என்னத்த எழுதிக்கிட்டு இருக்கே? முடியாதுன்னா சொல்லிடுப்பா... நான் டியூஷன் வச்சுக்கிடுறேன்... நீ வந்ததிலிருந்து குழந்தைங்க மார்க்கும் குறைஞ்சிட்டுது... அதுங்க பேசுற தமிழும் கூடிட்டுது... முடியாதுன்னா சொல்லிடுப்பா... ஒனக்கு மாதிரி ஒரு டீச்சருக்கும் தண்டம் போடணும் அவ்வளவுதான்...” “இல்ல சித்தி. முன்னைவிட இப்போதான் மார்க் நல்லா வாங்குறாங்க” “பொய் பேச வேற கத்துக்கிட்டியா?” “நிசமாய் சித்தி. நீங்கதான் தப்பா நெனைக்கிறீங்க” “எதிர்த்துவேற பேசுறீயா?” அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தின் தாத்பரியம் புரியாமலே, அருண், அம்மாவின் இடுப்பில் ஒரு குத்து குத்தினான். அண்ணனைப் போல் பழகத் துடிக்கும் சுபேதாவும் அம்மாவின் பிட்டத்தில் ஒரு குத்து குத்தினாள். சித்திக்காரி கூச்சலிட்டாள். “முட்டாப்பய பிள்ளிகளா... மூதேவிகளா... அம்மாவை அடிக்கிற அளவுக்கு வந்துட்டிங்களா... ஓங்க பெரியப்பா மகன் உங்களுக்கு நல்லாதான் சொல்லிக் கொடுத்திருக்கான். இன்னும் கத்தியை மட்டும் எடுத்து கையில கொடுக்கல...” செல்வா, கோபத்தில் பிள்ளைகளின் காதுகளை திருகினான். உடனே, சித்திக்காரி மீண்டும் கத்தினாள். “என் கண்ணு முன்னாலேயே என் பிள்ளைகளை இப்படி பண்றீயே... நான் இல்லாட்டால் என்ன பாடுபடுத்துவே...? ஏய் பேய்ப்பய பிள்ளிகளா... இனிமே நீங்க என்கூடத்தான் படுக்கணும்...” “போ... மாத்தோம்” என்றான் அருண். “அண்ணாகூடத்தான் படுப்பேன்” என்று சுபேதா மழலை மொழியில் பேசினாள்.<noinclude></noinclude> 1ny5ukg8z9jhlkrpjkes2hz727w8gsj 1838386 1838308 2025-07-03T04:14:56Z Booradleyp1 1964 1838386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||145}}</noinclude>செல்வா, குழந்தைகளும் தானும் இருக்கும் அறைக்கு ஓடி வந்தான். அவர்கள் ஹோம் வொர்க்கை முடிக்க இன்னும் நேரமிருப்பதை அறிந்தான். அந்தச் சமயம் கவிதைக் கற்பனை வந்தது. மீண்டும் நான்கைந்து தாள்களை வைத்துக்கொண்டு, அவனும் கவிதையும் போராடிக் கொண்டிருந்தபோது, சித்தி குளிப்பதற்காக உள்ளே வந்தாள். இவன் பாட்டுக்கு எழுதுவதைப் பார்த்து, மெல்லிய குரலில், அதேசமயம் அழுத்தம் திருத்தமாக ஒரு கேள்வி கேட்டாள். “பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறதை விட்டுவிட்டு, என்னத்த எழுதிக்கிட்டு இருக்கே? முடியாதுன்னா சொல்லிடுப்பா... நான் டியூஷன் வச்சுக்கிடுறேன்... நீ வந்ததிலிருந்து குழந்தைங்க மார்க்கும் குறைஞ்சிட்டுது... அதுங்க பேசுற தமிழும் கூடிட்டுது... முடியாதுன்னா சொல்லிடுப்பா... ஒனக்கு மாதிரி ஒரு டீச்சருக்கும் தண்டம் போடணும் அவ்வளவுதான்...” “இல்ல சித்தி. முன்னைவிட இப்போதான் மார்க் நல்லா வாங்குறாங்க” “பொய் பேச வேற கத்துக்கிட்டியா?” “நிசமாய் சித்தி. நீங்கதான் தப்பா நெனைக்கிறீங்க” “எதிர்த்துவேற பேசுறீயா?” அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தின் தாத்பரியம் புரியாமலே, அருண், அம்மாவின் இடுப்பில் ஒரு குத்து குத்தினான். அண்ணனைப் போல் பழகத் துடிக்கும் சுபேதாவும் அம்மாவின் பிட்டத்தில் ஒரு குத்து குத்தினாள். சித்திக்காரி கூச்சலிட்டாள். “முட்டாப்பய பிள்ளிகளா... மூதேவிகளா... அம்மாவை அடிக்கிற அளவுக்கு வந்துட்டிங்களா... ஒங்க பெரியப்பா மகன் உங்களுக்கு நல்லாதான் சொல்லிக் கொடுத்திருக்கான். இன்னும் கத்தியை மட்டும் எடுத்து கையில கொடுக்கல...” செல்வா, கோபத்தில் பிள்ளைகளின் காதுகளை திருகினான். உடனே, சித்திக்காரி மீண்டும் கத்தினாள். “என் கண்ணு முன்னாலேயே என் பிள்ளைகளை இப்படி பண்றீயே... நான் இல்லாட்டால் என்ன பாடுபடுத்துவே...? ஏய் பேய்ப்பய பிள்ளிகளா... இனிமே நீங்க என்கூடத்தான் படுக்கணும்...” “போ... மாத்தோம்” என்றான் அருண். “அண்ணாகூடத்தான் படுப்பேன்” என்று சுபேதா மழலை மொழியில் பேசினாள்.<noinclude></noinclude> 1syfrqgemjqiiflmbcrv235cvzz98ug பக்கம்:ஒத்தை வீடு.pdf/146 250 202605 1838312 762201 2025-07-02T14:30:01Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|146||புதைமண்}}</noinclude>சித்திக்காரியும் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள் குழந்தைகளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் இன்று அவர் டூரிலிருந்து திரும்பி வருகிற நாள். இதுகளையும் படுக்கை அறையில் போட்டால் திட்டோ திட்டென்று திட்டுவார். செல்வாவிற்கும் இது தெரியும் அது என்னமோ தெரியவில்லை பகலில் அடிக்காத குறையாக சண்டைபோடும் சித்தப்பாவும் சித்தியும், இரவில் சிரிப்பும் கும்மாளமுமாய் கிடப்பார்கள். அந்த அறையை பெருக்க வந்த வேலைக்காரம்மா, செல்வாவை, பரிதாபமாகப் பார்த்தாள். இவன் ஒரு சமயம், சித்தியினுடைய ஏச்சு தாங்கமுடியாமல், கட்டிய லுங்கியோடும், போட்ட சட்டையோடும் வெளியேறப் போனபோது, இந்த வேலைக்கார அம்மாதான், அவன் மோவாயைத் தாங்கி, ‘ரெண்டு வருஷம் பல்லைக் கடிச்சு பொறுத்துக்கோ ராசா பாலப் பார்க்கிறதா... பால் காய்ச்சின பானையைப் பார்க்கிறதா ஒன் சித்தப்பா ஒன்மேல உயிரையே வெச்சிருக்காருப்பா... ஏடா கோடமா எங்கேயும் போயிடாதேப்பா’ என்று மட்டும் ஆலோசனை சொல்லவில்லையானால், செல்வா, இந்நேரம் ஏதோ ஒரு நகரில், பொறுக்கிக் கொண்டு இருந்திருப்பான். சித்திக்காரி, குளித்து முடித்துவிட்டு அடுப்பறைக்கு போனாள். அரைமணி நேரத்தில் “சாப்பிட்டுத் தொலையுங்க... நான் கொஞ்ச நேரம் படுக்கணும்... உடம்பு சரியில்ல.” என்றாள். செல்வா, குழந்தைகளை யூனிபாரமாக கூட்டி வந்தான். சித்திக்காரி தட்டில் இட்லிகளை போட்டபடியே, ‘உடம்புக்கு சுபமில்லன்னு சொல்றேனே என்ன சித்தி உடம்புக்குன்னு கேட்டியா?’ என்று அவனை வம்புக்கு இழுத்தாள் உடனே செல்வா, “எதுக்கும் டாக்டரை போய்ப் பாருங்க சித்தி... நான் வேணுமுன்னா லீவு போட்டுட்டு உங்களை கூட்டிகிட்டுப் போகட்டுமா?” என்று நேயத்தோடு கேட்டான் சித்திக்காரி கனிந்து போனாள் “நாலு இட்லி மட்டும் சாப்பிடுறியே... வயிறு கேட்குமா... இன்னையிலிருந்து ஆறு இட்லி சாப்பிட்டாகணும் இந்தா ஒனக்கு பிடிச்சமான மிளகாய்ப் பொடி... ஏய் மூதேவிகளா! இன்னுமா உங்க அண்ணன் உங்களுக்கு ஊட்டணும். சீக்கிரமாகட்டும் அவனும் காலேஜுக்கு போகணுமில்ல...” என்றாள். செல்வாவும், வேலைக்காரம்மாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டார்கள் இந்த சித்தியை பாம்பென்று அடிக்கவும் முடியாது, பழுதென்று தள்ளவும் முடியாது சாப்பாட்டு விஷயத்தில் செல்வாவிற்கு என்றுமே அவள் குறை வைத்ததில்லை ஒருசில சமயங்களில் இவன் துணியையும்<noinclude></noinclude> fn2qt0w3jnjq7ea5gcolw9iue6tdk4o பக்கம்:ஒத்தை வீடு.pdf/147 250 202607 1838313 762202 2025-07-02T14:36:27Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||147}}</noinclude>துவைத்துப் போட்டிருக்கிறாள். செல்வா பாதி இட்லி வாயோடு, “டாக்டருக்கிட்ட போகலாமா சித்தி.” என்றான். “உங்க சித்தப்பா, காலையிலே வருவாரு அவர் கூட்டிட்டுப் போவாரு... நீ குழந்தைகளை விட்டுட்டு காலேஜுக்குப் போ...” “எனக்கு ஆஸ்மா இருக்குமான்னு சந்தேகமா இருக்குது. மூச்சு வாங்குது... இன்னிக்கு ஒன் சித்தப்பாவ கூட்டிட்டுப் போகச் சொல்கிறேன் என்றாள்.” ‘இது கத்துவதால் ஏற்படுகிற இளைப்பு... ஆஸ்மா இல்லை’ என்று வாயெடுக்கப் போன செல்வா, அதற்கு முன்னெச்சரிக்கையாக அதே வாயை இட்லித் துண்டுகளால் அடைத்துக் கொண்டான். செல்வா, ஸ்கூட்டரில், சுபேதாவை முன்னால் நிறுத்திக்கொண்டும், அருணை பின்னால் இருத்திக் கொண்டும் புறப்பட்டான். ஆரம்ப காலத்தில் அப்படியே அதே வண்டியில் கல்லூரிக்குப் போவான். என்றைக்கு சித்தி “பெட்ரோல் என்ன கொட்டியா கிடக்குது...” என்று தன்பாட்டுக்குச் சொன்னாளே, அன்றையிலிருந்து குழந்தைகளை விட்டுவிட்டு, அந்த இரு சக்கர வாகனத்தை வீட்டில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு, பேருந்து நிலையத்தைப் பார்த்து ஓடுவான். குறைந்தது ஐந்தாறு நிமிடம் தாமதமாகத்தான் முதல் வகுப்பிற்கே போக முடிகிறது. இதனால் மாணவர்கள் இவனுக்கு ‘லேட்டன்’ என்று பெயர் வைத்தார்கள். ‘டே... லேட்டா...’ என்றுதான் இவனை செல்லமாகக் கூப்பிடுவார்கள். இவன் லேட்டாக வருவதால் இவனை மாணவ தாதாவாக நினைத்துக் கொண்டு ஆசிரியர்கள் எதுவுமே சொல்ல மாட்டார்கள். கல்லூரிக்குப் போன செல்வாவிற்கு, பாடத்தில் கவனம் போகவில்லை. பொதுவாக விரிவுரையாளர் சொல்லச் சொல்ல அப்படியே தானும் சொல்லி மனதுக்குள் பதிவு செய்துக் கொள்வான். ஆனால் இன்றோ, அவர் என்ன சொல்கிறார் என்பதே புரியவில்லை. முதல் மூன்று வகுப்புக்களிலும் கவிதை மயமானான். இடைவேளையில் எழுதிப் பார்த்தான். இயலவில்லை ஆனாலும், அதுவே ஒரு வைராக்கியமாகி விட்டது. மாலை வகுப்புக்களை கட்டடித்துவிட்டு, கல்லூரி நூலகத்திற்குள் நுழைந்தான். நீண்ட மேஜையில் பல்வேறு இதழ்கள் துண்டு துண்டாக கிடந்தன. பெரிய இதழ்கள், சிற்றிதழ்கள், அறிவு ஜீவிகள் நடத்தும் தனிச்சுற்றுப் பத்திரிகைகள் என்று பல்வேறு வகை ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு வகையில் கவிதை இருந்தது இவனுக்கு தெம்பு கொடுத்தது. கூடவே கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று ஒரு பிரபல கவிஞர், லோக்கல் கவிஞர்களுக்கு<noinclude></noinclude> bsullviztd6qa55bfvat350rbu6pezm பக்கம்:ஒத்தை வீடு.pdf/148 250 202609 1838316 762203 2025-07-02T14:42:49Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|148||புதைமண்}}</noinclude>சொல்லிக் கொடுப்பதுபோல் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். செல்வா அந்தக் கட்டுரையை மூன்று தடவை படித்தான். அந்தக் கட்டுரைக்கு ஏற்ப எழுதத் துவங்கினான். வார்த்தைகள் மடமடவென்று வந்தன. அவனுக்கு ஒரு அறிவு ஜீவியாகிவிட்டதுபோல் ஒரு ஆனந்தம். கவிதா, மோவாயில் கை வைத்து அவனைப் பார்த்து வியக்கப் போகிறாள் என்ற கற்பனையில், வகுப்புக்களை கட்டடித்ததுகூட அவனுக்கு தவறாய் தோன்றவில்லை. {{dhr|2em}} <section end="4"/><section begin="5"/> {{larger|<b>5</b>}} {{dhr|2em}} அந்த மெரினா கடற்கரை பூத்துக் குலுங்கியது. ஆண்கள் செடிகளாகவும், பெண்கள் கொடிகளாகவும் பின்னிப் பிணைந்திருந்த பகுதி. இருள்மயமே அவர்களுக்கு ஒளி மயமாக தோன்றிய இடம். என்றாலும், அங்கே சென்ற செல்வாவை கவிதா இழுத்துப் பிடித்துக் கொண்டே, ‘முதலில் உங்க கவிதையை சொல்லுங்க’ என்று கடற்கரையின் விளிம்புப் பகுதிக்கு வந்து உட்கார்ந்தாள். அவன் கையைப் பிடித்து அவனையும் உட்கார வைத்தாள். அவள் கை வலுவை பார்த்த செல்வா கேட்டான் ஒரு கேள்வி. “நீ என்ன கராத்தே பெண்ணா? உன் பிடி இரும்புப் பிடியாய் இருக்கே?” “ஒரு பெண்ணோட கடைக்கண் பார்வையில் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒரு கடுகாம் என்றார் பாரதிதாசன். இது ஒரு ஆணாதிக்கப் பார்வை. அவரே பெண்ணாக இருந்தால், காதலியின் கைப்பிடியில் காதலனும் ஓர் கடுகாமுன்னு பாடியிருப்பார். இப்போ நீங்க என் தோளில கிடக்கிற கையை எடுக்கறீங்க... அதே கையால பைக்குள்ள இருக்கிற கவிதைய எடுத்துப் படிக்கிறீங்க... நிறைய எழுதியிருக்கீங்களோ... உங்க சட்டைப்பை கர்ப்பம் தரிச்ச பெண்ணு மாதிரி துருத்திக்கிட்டு நிற்குது...” செல்வா, பெருமிதமாகச் சொன்னான். “இது கவிதைக் கற்பம். இப்போது பிரவசம் நடக்கும் பார்.” செல்வா, இலக்கியக் கர்வத்தோடு இரண்டாய் மடித்த அந்தத் தாள் கற்றைகளை எடுத்து சத்தம் போட்டே படித்தான்.{{nop}}<noinclude></noinclude> 6zozrowc4vyd5uynymkezp340pcbsyb பக்கம்:ஒத்தை வீடு.pdf/149 250 202612 1838323 762204 2025-07-02T14:51:00Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||149}}</noinclude>{{left_margin|3em|<poem><b>“கானல் சதுரத்தின் வேனல் வெளிப்பாடு வேனல் வெளிப்பாடுகளில் கோணல் சரிவுகள் கானலும் சதுரமும் கலந்தவள் கவிதா வினைப்பாலின் திணைப்பயனோ? திணைப்பாலின் வினைப்பயனோ? ஊடகத்தின் பூடகம் பூடகத்தின் ஊடகம் ஊடகமும் பூடகமும் ஒன்றித்த லாகவங்கள்”</b></poem>}} கவிதா ‘ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்’ என்று சொன்னபடியே அவன் வாயை பொத்தி, கையை ஈரப்படுத்தினாள். அந்தக் காகித கற்றையில் லயித்துப் போய் வாசித்த செல்வா அவள் கையை விலக்கிக் கொண்டே கேட்டான். “என்ன கவிதா! நான் நல்ல தமிழில் கவிதை படிக்கும்போது, நீ இங்கிலீஷ்ல திட்டுறியே... திட்டுறதா இருந்தாலும் கவிதையில் திட்டு...” “ஒங்க கவிதை லட்சணத்துக்கு, திட்டப்படாது. நாக்குல சூடு போடணும். எழுதுற கைய முறிக்கணும்...” “இப்படித்தான் எல்லா ஜனரஞ்சக வாசகர்களும் கேட்கிறாங்க... இந்தக் கவிதை, அறிவு ஜீவிகளுக்காக ஒரு அறிவு ஜீவி எழுதிய புதுக்கவிதை...” “புரியாததற்குப் பெயர்தான் புதுக்கவிதையா?” செல்வா, தான் படித்த கட்டுரையின் சில பகுதிகளை தானே சொல்வது போல் ஒப்பித்தான். “எடுத்த எடுப்பிலேயே புரிவது கவிதையல்ல. கவிதையின் நோக்கம் வாசிப்பு சுகம் அல்ல. மூன்று நான்கு தடவை படித்த பிறகுதான், அதன் பொருள் புரியவேண்டும் அப்படித்தான் நான் எழுதியிருக்கேன்... ஒரு கவிதையில் வாசிப்பு, மறுவாசிப்பு, அசை போடல், அடிமனத் தேடல், மறு பரிசீலனை, சுய பரிசீலனை, சுயத்தை இழந்த பார்வை, பார்வையை இழந்த சுயம் இப்படி ஆயிரம் இருக்குது... ஒரு மாதம் டைம் கொடுக்கறேன்... உனனை அறிவு ஜீவியாய் மாற்றிக்கொள். அப்புறம் இந்தக் கவிதையின் பொருள் புரியும்.” கவிதா, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஒருவேளை இவனுக்கு பித்து பிடித்துப் போய்விட்டதோ. இனிமேல் குறுந்தாடி வைக்க வேண்டியதும், ஒரு ஜோல்னா பையை போட்டுக்<noinclude></noinclude> gjcvc670l1rfcyg0rffx3sqzm29expr 1838327 1838323 2025-07-02T14:52:28Z மொஹமது கராம் 14681 1838327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||149}}</noinclude>{{left_margin|3em|<poem><b>“கானல் சதுரத்தின் வேனல் வெளிப்பாடு வேனல் வெளிப்பாடுகளில் கோணல் சரிவுகள் கானலும் சதுரமும் கலந்தவள் கவிதா வினைப்பாலின் திணைப்பயனோ? திணைப்பாலின் வினைப்பயனோ? ஊடகத்தின் பூடகம் பூடகத்தின் ஊடகம் ஊடகமும் பூடகமும் ஒன்றித்த லாகவங்கள்”</b></poem>}} கவிதா ‘ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்’ என்று சொன்னபடியே அவன் வாயை பொத்தி, கையை ஈரப்படுத்தினாள். அந்தக் காகித கற்றையில் லயித்துப் போய் வாசித்த செல்வா அவள் கையை விலக்கிக் கொண்டே கேட்டான். “என்ன கவிதா! நான் நல்ல தமிழில் கவிதை படிக்கும்போது, நீ இங்கிலீஷ்ல திட்டுறியே... திட்டுறதா இருந்தாலும் கவிதையில் திட்டு...” “ஒங்க கவிதை லட்சணத்துக்கு, திட்டப்படாது. நாக்குல சூடு போடணும். எழுதுற கைய முறிக்கணும்...” “இப்படித்தான் எல்லா ஜனரஞ்சக வாசகர்களும் கேட்கிறாங்க... இந்தக் கவிதை, அறிவு ஜீவிகளுக்காக ஒரு அறிவு ஜீவி எழுதிய புதுக்கவிதை...” “புரியாததற்குப் பெயர்தான் புதுக்கவிதையா?” செல்வா, தான் படித்த கட்டுரையின் சில பகுதிகளை தானே சொல்வது போல் ஒப்பித்தான். “எடுத்த எடுப்பிலேயே புரிவது கவிதையல்ல. கவிதையின் நோக்கம் வாசிப்பு சுகம் அல்ல. மூன்று நான்கு தடவை படித்த பிறகுதான், அதன் பொருள் புரியவேண்டும் அப்படித்தான் நான் எழுதியிருக்கேன்... ஒரு கவிதையில் வாசிப்பு, மறுவாசிப்பு, அசை போடல், அடிமனத் தேடல், மறு பரிசீலனை, சுய பரிசீலனை, சுயத்தை இழந்த பார்வை, பார்வையை இழந்த சுயம் இப்படி ஆயிரம் இருக்குது... ஒரு மாதம் டைம் கொடுக்கறேன்... உனனை அறிவு ஜீவியாய் மாற்றிக்கொள். அப்புறம் இந்தக் கவிதையின் பொருள் புரியும்.” ‘கவிதா, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஒருவேளை இவனுக்கு பித்து பிடித்துப் போய்விட்டதோ. இனிமேல் குறுந்தாடி வைக்க வேண்டியதும், ஒரு ஜோல்னா பையை போட்டுக்<noinclude></noinclude> tmnc3km3mp7afrm2hpml8ruiuemjgm4 1838388 1838327 2025-07-03T04:20:42Z Booradleyp1 1964 1838388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||149}}</noinclude>{{left_margin|3em|<poem><b>“கானல் சதுரத்தின் வேனல் வெளிப்பாடு வேனல் வெளிப்பாடுகளில் கோணல் சரிவுகள் கானலும் சதுரமும் கலந்தவள் கவிதா வினைப்பாலின் திணைப்பயனோ? திணைப்பாலின் வினைப்பயனோ? ஊடகத்தின் பூடகம் பூடகத்தின் ஊடகம் ஊடகமும் பூடகமும் ஒன்றித்த லாகவங்கள்”</b></poem>}} கவிதா ‘ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்’ என்று சொன்னபடியே அவன் வாயை பொத்தி, கையை ஈரப்படுத்தினாள். அந்தக் காகித கற்றையில் லயித்துப் போய் வாசித்த செல்வா அவள் கையை விலக்கிக் கொண்டே கேட்டான். “என்ன கவிதா! நான் நல்ல தமிழில் கவிதை படிக்கும்போது, நீ இங்கிலீஷ்ல திட்டுறியே... திட்டுறதா இருந்தாலும் கவிதையில் திட்டு...” “ஒங்க கவிதை லட்சணத்துக்கு, திட்டப்படாது. நாக்குல சூடு போடணும். எழுதுற கைய முறிக்கணும்...” “இப்படித்தான் எல்லா ஜனரஞ்சக வாசகர்களும் கேட்கிறாங்க... இந்தக் கவிதை, அறிவு ஜீவிகளுக்காக ஒரு அறிவு ஜீவி எழுதிய புதுக்கவிதை...” “புரியாததற்குப் பெயர்தான் புதுக்கவிதையா?” செல்வா, தான் படித்த கட்டுரையின் சில பகுதிகளை தானே சொல்வது போல் ஒப்பித்தான். “எடுத்த எடுப்பிலேயே புரிவது கவிதையல்ல. கவிதையின் நோக்கம் வாசிப்பு சுகம் அல்ல. மூன்று நான்கு தடவை படித்த பிறகுதான், அதன் பொருள் புரியவேண்டும் அப்படித்தான் நான் எழுதியிருக்கேன்... ஒரு கவிதையில் வாசிப்பு, மறுவாசிப்பு, அசை போடல், அடிமனத் தேடல், மறு பரிசீலனை, சுய பரிசீலனை, சுயத்தை இழந்த பார்வை, பார்வையை இழந்த சுயம் இப்படி ஆயிரம் இருக்குது... ஒரு மாதம் டைம் கொடுக்கறேன்... உன்னை அறிவு ஜீவியாய் மாற்றிக்கொள். அப்புறம் இந்தக் கவிதையின் பொருள் புரியும்.” ‘கவிதா, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஒருவேளை இவனுக்கு பித்து பிடித்துப் போய்விட்டதோ. இனிமேல் குறுந்தாடி வைக்க வேண்டியதும், ஒரு ஜோல்னா பையை போட்டுக்<noinclude></noinclude> 5q2joicrolu6fxcoksx98u5rot7vn71 பக்கம்:ஒத்தை வீடு.pdf/150 250 202614 1838336 762206 2025-07-02T14:57:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|150||புதைமண்}}</noinclude>கொள்ளவேண்டியதும், அரக்கப் பரக்கப் பார்க்க வேண்டியதும் தான் பாக்கி. அய்யய்யோ! இவரை இனிமேல் கவிதை எழுதவே சொல்லக்கூடாது.’ கவிதா, அவனது வலது காதை செல்லமாக அல்லாமல், வலிக்கும்படி முறுக்கியபடியே கேட்டாள். “ஒழுங்கா பதில் சொல்லுங்க! இது நீங்க எழுதுன கவிதை இல்ல. இப்போ நீங்க பேசுற பேச்சுக்கு உங்களுக்கு எவனோ பின்னணிக் குரல் கொடுக்கான். கொடுத்தவன் யார் சொல்லுங்க...” “நான்தான்... நானேதான்...” “நம்ப மாட்டேன்... நம்பவே மாட்டேன். இந்தக் கவிதை, நம்ம, அந்தரங்கத்தை நீங்க எவன் கிட்டயோ சொல்லி, அவன், உங்க அப்பா எழுதிக் கொடுத்தது மாதிரி, இப்படி எழுதிக் கொடுத்திருக்கிறான். இப்போது உங்கள் காதல் மீதே எனக்குச் சந்தேகம்.” கவிதா, அவன் காதை அவனிடமே ஒப்படைத்துவிட்டு, கால்களைத் தூக்கி முட்டிகளின் முனையில் முகம் போட்டாள். செல்வா, அவள் முகத்தை நிமிர்த்தப் போனான். அவள் பற்களால் கடிபட்ட கைகளை உதறியபடியே, அவள் முன்னால் எழுந்து, மூன்று முறை தோப்புக் கரணம் போட்டபடியே விளக்கமளித்தான். “என்னை நம்பு கவிதா... நம்ம காதலைப் பற்றி எந்த பயல் கிட்டயும் மூச்சு விடல... கல்லூரி நூலகத்திற்குப் போனேன். அங்கே வந்த எங்க இணை தமிழ்ப் பேராசிரியர்கிட்ட புதுக்கவிதை பற்றி விளக்கம் கேட்டேன். பல இலக்கிய கூட்டங்களுக்கு போனவர் அவர். பல கூட்டங்களில் அடித்துப் பேசுவார். அடிபட்டும் வருவார். இந்தக் கவிதையை அவரிடம் காட்டினேன் ‘இதற்கு ஈடாக இனிமேல்தான் ஒரு கவிதை பிறக்க வேண்டும்’ என்றார். பச்சையாக சொல்லப்போனால், ஒரு இலக்கிய இதழில் வந்த கவிதையை அப்படியே காப்பி அடித்து கொண்டு வந்தேன்.” கவிதா, மீண்டும் அவன் காதைத் திருகியபடியே இன்னொரு கேள்வி கேட்டாள். “இனிமேல் அறிவு ஜீவிகளின் பக்கம் போவீங்களா?” “மாட்டேன். மாட்டவே மாட்டேன்.” “சரி போகட்டும். இந்தக் கவிதை மண்ணாங்கட்டி எதுவும் வேணாம் என்னை சந்திப்பதற்கு முன்னால் நீங்க எப்படி இருந்தீங்க.<noinclude></noinclude> ffwmdx3rrleznvon9jxcoakaatigwpy பக்கம்:ஒத்தை வீடு.pdf/151 250 202616 1838373 762207 2025-07-03T03:01:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||151}}</noinclude>என் சந்திப்புக்குப் பிறகு எப்படி ஆனீங்கன்னு யதார்த்தமா, செயற்கைத்தனம் இல்லாமல் கட்டுரை மாதிரி எழுதுங்க... உரைநடையாவது உங்களுக்கு வருதான்னு பார்ப்போம்... என்னைப் பற்றி ஒரு வர்ணணைகூட இருக்கக்கூடாது. அதை பதிவு செய்ய கவிஞனோ, எழுத்தாளனோ தேவையில்லை. கண்ணாடி போதும். அதேசயமம், நான் உங்களிடம் ஏற்படுத்திய மாற்றத்தை குறிப்பிடணும்.” “இதைத்தான் பல தடவை நேர்லயே சொல்லிவிட்டேனே... இந்த புதுக்கவிதை அனுபவத்திற்குப் பிறகு, எழுதுறதுன்னா எனக்கு பயமாய் இருக்குதும்மா... இப்பவே நேருக்கு நேருக்கு நேராய் சொல்லிடுறேன்...” “நாம் கைப்பட ஒரு கதை எழுதுறோம். அது பத்திரிகையில பிரசுரமானால், என்ன சுகம் கிடைக்குமோ, அதைவிட அதிக சுகம் நீங்க கைப்பட எழுதின கடிதத்தில் கிடைக்கும். இதய உணர்வுகளுக்கு உங்க வாய் ஈடாகாது. நீங்கள் எழுதித் தருகிற கடிதத்தை ரகசியமான இடத்தில வச்சு கண்ணுல ஒற்றி ஒற்றி ஒரு நாளைக்கு ஒன்பது தடவையாவது படிப்பேன். அந்த அளவுக்கு நீங்க எழுதுவிங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்குது...” “மொதல்ல நான் உன்னிடம் ஏற்படுத்திய மாற்றத்தை விலாவாரியா நீ எழுதிக் கொடு.” “நம்மளால முடியாதுப்பா.” “ஏன் முடியாது? உன்னால் முடியும் கவிதா. ஆனாலும் பிற்காலத்துல நம்ம காதல் தோல்வியுற்றால் அந்த லட்டரை வச்சு சினிமாவுல வாறது மாதிரி நான் உன்னை பிளாக் மெயில் செய்வனோன்னு பயப்படுற...” “அப்படிப் பயப்பட்டாலும் தப்பில்லியே...” செல்வாவிற்கு, என்னவோ போல் இருந்திருக்க வேண்டும். அப்படியே எழுந்தான். தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தான். அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதுவும் வாகன விளக்குகள், விட்டில் பூச்சிகளாய் தெரிந்த கடற்கரைச் சாலையை நோக்கி நடந்தான். கவிதா, தான் சொன்னதன் வலிமையையும், தவறையும் உணர்ந்தவள் போல் அவன் பின்னால் ஓடினாள். சரியாக கண்ணகி சிலைக்குப் பின்பக்கமாக, அவன் சட்டைக் காலரை பிடித்து விட்டாள் சுற்றும் முற்றும் போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்த பெரிசுகள் என்னமோ ஏதோவென்று<noinclude></noinclude> 35xgqpurht1m5waycrp3wgqzzpdbqep 1838389 1838373 2025-07-03T04:23:02Z Booradleyp1 1964 1838389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||151}}</noinclude>என் சந்திப்புக்குப் பிறகு எப்படி ஆனீங்கன்னு யதார்த்தமா, செயற்கைத்தனம் இல்லாமல் கட்டுரை மாதிரி எழுதுங்க... உரைநடையாவது உங்களுக்கு வருதான்னு பார்ப்போம்... என்னைப் பற்றி ஒரு வர்ணணைகூட இருக்கக்கூடாது. அதை பதிவு செய்ய கவிஞனோ, எழுத்தாளனோ தேவையில்லை. கண்ணாடி போதும். அதேசயமம், நான் உங்களிடம் ஏற்படுத்திய மாற்றத்தை குறிப்பிடணும்.” “இதைத்தான் பல தடவை நேர்லயே சொல்லிவிட்டேனே... இந்த புதுக்கவிதை அனுபவத்திற்குப் பிறகு, எழுதுறதுன்னா எனக்கு பயமாய் இருக்குதும்மா... இப்பவே நேருக்கு நேராய் சொல்லிடுறேன்...” “நாம் கைப்பட ஒரு கதை எழுதுறோம். அது பத்திரிகையில பிரசுரமானால், என்ன சுகம் கிடைக்குமோ, அதைவிட அதிக சுகம் நீங்க கைப்பட எழுதின கடிதத்தில் கிடைக்கும். இதய உணர்வுகளுக்கு உங்க வாய் ஈடாகாது. நீங்கள் எழுதித் தருகிற கடிதத்தை ரகசியமான இடத்தில வச்சு கண்ணுல ஒற்றி ஒற்றி ஒரு நாளைக்கு ஒன்பது தடவையாவது படிப்பேன். அந்த அளவுக்கு நீங்க எழுதுவிங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்குது...” “மொதல்ல நான் உன்னிடம் ஏற்படுத்திய மாற்றத்தை விலாவாரியா நீ எழுதிக் கொடு.” “நம்மளால முடியாதுப்பா.” “ஏன் முடியாது? உன்னால் முடியும் கவிதா. ஆனாலும் பிற்காலத்துல நம்ம காதல் தோல்வியுற்றால் அந்த லட்டரை வச்சு சினிமாவுல வாறது மாதிரி நான் உன்னை பிளாக் மெயில் செய்வனோன்னு பயப்படுற...” “அப்படிப் பயப்பட்டாலும் தப்பில்லியே...” செல்வாவிற்கு, என்னவோ போல் இருந்திருக்க வேண்டும். அப்படியே எழுந்தான். தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தான். அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதுவும் வாகன விளக்குகள், விட்டில் பூச்சிகளாய் தெரிந்த கடற்கரைச் சாலையை நோக்கி நடந்தான். கவிதா, தான் சொன்னதன் வலிமையையும், தவறையும் உணர்ந்தவள் போல் அவன் பின்னால் ஓடினாள். சரியாக கண்ணகி சிலைக்குப் பின்பக்கமாக, அவன் சட்டைக் காலரை பிடித்து விட்டாள் சுற்றும் முற்றும் போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்த பெரிசுகள் என்னமோ ஏதோவென்று<noinclude></noinclude> d6ufhbwnj9atmriqb04bvveznst8diu பக்கம்:ஒத்தை வீடு.pdf/152 250 202618 1838374 762208 2025-07-03T03:09:23Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|152||புதைமண்}}</noinclude>எழுந்துவிட்டன போய்க்கொண்டும், வந்து கொண்டும் இயங்கியவர்கள் நின்றார்கள் ஒருசிலர் கவிதா பக்கமாய் போய் நின்று “பொறுக்கிப் பயல்களுக்கு இதுவே பொழைப்பா போச்சு... ஒன்னை என்னம்மா செய்தான்? நடந்ததைச் சொல்லு... அதோ தெரியுதா உங்கள் நண்பன். அதாம் போலீஸ் போஸ்ட். அதுல இவனை ஒப்படைத்திடலாம்.” என்று பரிந்துரைத்தார்கள். செல்வா, வெலவெலத்தான். அவன் பற்கள்கூட தானாய் ஆடுவது போல் தோன்றியது. சுற்றி வளைத்த கூட்டத்தைப் பார்த்து கவிதா, கையெடுத்துக் கும்பிட்டபடியே கெஞ்சினாள். “இவன் என்னோட கஸின் பிரதர். எங்க வீட்டுல தங்கித்தான் படிக்கான். வீட்ல ஒரு சண்டை ரெண்டு நாளா ஆளக்காணோம். இங்கே தேடிவந்தால் ஆள் அகப்பட்டான். என்னைப் பார்த்ததும் ஓடுறான். அவ்வளவுதான். பார் உன்னால... உன்னால எத்தனை பேர் வேடிக்கைப் பார்க்கிறாங்க பாரு...” கவிதா, நிசமாகவே அழுதாள். வேடிக்கை பார்த்த கூட்டத்திற்கு ஒரு விக்கல். அந்தரங்கம் அம்பலம் ஏறியதற்காக ஒரு கேவல். கூட்டத்தில் அப்பாவுக்கு தெரிந்தவர் யாராவது இருக்கலாம். அவ்வளவுதான் ரகளை ஏற்படும். தன் ஒழுக்கத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள் தான் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் கண்டிப்பாக இருப்பார்கள். அப்பா அந்த வகை. இந்த செல்வா, எந்த வகை? கூட்டத்தினர், ஒருவரை ஒருவர் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டார்கள் இந்த “கஸின் சிஸ்டர், கஸின் பிரதர் விவகாரம்” அவர்களுக்கும் அத்துபடி இந்தச் சமயம் பார்த்து, கழிவறை பக்கம் ஒரு அடிதடி கூட்டம் இவர்களை விட்டுவிட்டு அங்கே ஓடியது. முன்னெச்சரிக்கையாக, பின்வாங்கியும் முன் வாங்கியும் உஷாராக ஓடிப்போய் தங்களுக்கு ஆபத்து ஏற்படாத ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு, இரண்டு பேரின் சொற்போரோடு கூடிய மற்போரை வேடிக்கை பார்த்தது. கவிதாவும் செல்வாவும், ஒருவரோடு ஒருவர் பேசாமல் கண்ணகிச் சிலையிலிருந்து தெற்குப் பக்கமாக பிளாட்பாரத்தில் நடந்து கொண்டே போனார்கள். அவனுக்கு பின்னால் நடந்த கவிதா பேசிக் கொண்டே நடந்தாள். “உங்க பித்துக்குளி தனத்தால நடக்கக்கூடாதது நடந்தது பார்த்தீங்களா... சரியான கிராக்கு...” “நான் கிராக்கு இல்ல... மானஸ்தன்... நான் பிளாக்மெயில் செய்தாலும் செய்யலாமுன்னு உனக்கு ஒரு எண்ணம் வந்தது பாரு...<noinclude></noinclude> 652z46uagf4r7supqq12n2axjzv464e பக்கம்:ஒத்தை வீடு.pdf/153 250 202620 1838375 762209 2025-07-03T03:16:46Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||153}}</noinclude>அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தை நான் ஏற்படுத்தியிருக்கேன் பாரு... இதுக்காக எனக்கு நானே தண்டனை வழங்குறது மாதிரி பிரியுறேன்.” “ஸாரி... செல்வா. சும்மா ஜோக்காத்தான் சொன்னேன். விலகிப் விலகிப் போன உங்களை வளைத்துப் போட்டது நான்தான். உங்க வீட்டு வேலைக்காரம்மா நீங்க படுற பாட்டை சொன்னபோது நிசமாவே அழுதுட்டேன். பெண்களை மானபங்கபடுத்துற இந்தக் காலத்துல, நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்னு அந்தம்மா சொன்னாங்க... காலேஜ்ல நல்லா பேசி மெடல் மெடலாய் வாங்கியிருக்கீங்கன்னு வேலைக்காரம்மா சொன்னாங்க... அதனால் ஒங்க மூஞ்சு முகரக் கட்டைக்காக நான் உங்களை காதலிக்கல... உங்க டேலண்டுக்காகவும் நல்ல குணத்துக்காகவும்தான் காதலிக்கிறேன்.” “எங்க சித்தப்பா மகன் ஐ.ஏ.எஸ். டிரெயினிங் போயிருந்தான். அவன்கிட்ட ஒரு வங்காளப் பொண்ணு... ஒரு ஒரிசா பொண்ணு... காஷ்மீரி பொண்ணு இவங்களும் ஐ.ஏ.எஸ். தான். இவன்கிட்ட ஒவ்வொருத்தரும் என்னை கட்டிக்கிறீங்களான்னு கேட்டிருக்காங்க... உடனே இவன் நானோ கருப்பிலேயோ கருப்பு அண்டங் கருப்பு... மொழியும் மதமும் வேற வேற... நான் ஒரு புத்தகப் புழு... என்ன ஏன் விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு, அவளுக ஒவ்வொருத்தியும் என் கணவருக்கு அழகு முக்கியமில்ல. ஆரோக்கியமான உடம்பு முக்கியம். எந்தக் கெட்டப் பழக்கமும் இருக்கக்கூடாது. பெண்களை மதிக்கத் தெரியணும்... அதனால நீங்க எனக்கு கணவரா வந்தா சந்தோஷப்படுவேன்னு, சொல்லியிருக்காங்க... அதாவது இந்தக் காலத்து பெரிய பதவி பெண்களுக்கு, கணவன் என்கிறவன், அவளை மதிக்கத் தெரிந்தவனாகவும், நல்லவனாகவும், தோழனாகவும் இருக்கணும்...” “உங்க சித்தப்பா மகன் என்ன செய்தான்?” “அந்தப் பெண்களை உதறிட்டு, நான் உங்கள காதலிக்கிறது மாதிரி ஒரு தொட்டாச்சிணுங்கி பொண்ண காதலிக்கிறான். முகம் போற போக்க பாரு... உங்களுக்கு சென்ஸ் ஆப் ஹுமரே இல்ல... சரி போகட்டும். உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்கிறதை நிரூபிக்கிறதுக்கு, நானே ஒரு லவ் லெட்டர் எழுதி உங்களுக்குத் தரப் போறேன்.” “எழுது. எழுதாமல் போ. நான்தான் முதல்ல எழுதுவேன்.” “ஒங்க மேல இருக்கிற நம்பிக்கையை நிரூபிக்கிறதுக்காக இதுவரைக்கும் போகாத சீரணி அரங்கத்திற்குப் பின் பக்கம் போவோமா? இன்னிக்கு உங்களுக்கு அதிக சலுகை...”{{nop}}<noinclude></noinclude> c9gn88jexicd7fzy1ny7nf1nhyojxzu பக்கம்:ஒத்தை வீடு.pdf/154 250 202622 1838376 762210 2025-07-03T03:23:40Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|154||புதைமண்}}</noinclude>“கொடுக்கணுமா... எடுக்கணுமா...” “ரெண்டும்.” இருவரும், கடல் மண்ணில் தடம் போட்டார்கள். அந்தத் தடங்கள், ரெட்டை ரெட்டையாகவும், இரண்டு அடுக்குகளாகவும், ஒன்றின் மேல் ஒன்றாகவும் ஆழப் பதிந்தன. கால் பின்ன கை பின்ன அப்படிப் பின்னியது தெரியாமலேயே சீரணியின் பின்பக்கம் உட்கார்ந்தார்கள். ஆங்காங்கே ஜோடிகள் அருகருகே ஒன்றுக்கு ஒன்று பாதுகாவலாய் கட்டிப் பிடித்து கிடந்தன. முகமறியா ஜோடிகள். செல்வாவும் கவிதாவும் அந்த ஜோடிகளிடமிருந்து சிறிது விலகி உட்கார்ந்தார்கள். கவிதா, அவன் தோளில் தலை சாய்த்தாள். அப்போது பார்த்து, ஒரு வேர்க்கடலைப் பயல் முன்னால் போய் உட்கார்ந்தான். மூன்று ரூபாய்க்கு வேர்க் கடலையை வாங்கிய பிறகு, ஒரு பூக்காரி முழம் ஆறு ரூபாய் என்றாள். கவிதா, அவசர அவசரமாக இரண்டு முழம் வாங்கி, செல்வாவை, தன் தலையில் வைக்கும்படி குனிந்தாள். அவன் அவள் பின்னலை பூச்சரமாக்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு மூன்று பேர் அவர்களை சுற்றிச் சுற்றியே வட்டமடித்தார்கள். எங்கிருந்தோ வந்த ஒரு பேண்ட் போட்ட எருமை அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்து ரசனையோடு பார்த்தது. செல்வாவும் கவிதாவும் அந்த இடத்திலிருந்து, வடக்குப் பக்கமாக நடந்து, இன்னொரு இருட்டு வெளியில் கையோடு கை சேர்த்து உட்கார்ந்தார்கள். அவன் தோளில் இவள் கையும், இவள் தோளில் அவன் கையும் படரப் போன நேரத்தில், அங்கே சுற்றிக் கொண்டிருந்தவர்கள், இங்கே வந்துவிட்டார்கள். போதாக்குறைக்கு, அந்த பேண்ட் போட்ட எருமையும் இவர்களுக்கு முன்னால் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தது. கவிதா பயந்து போனாள். “போகலாம்... போகலாம்...” என்று சொன்னபடியே எழுந்தாள். ‘எதுக்குப் பயப்படணும்’ என்றான் செல்வா. ‘இது பயப்படுற விஷயம் மட்டுமல்ல... கற்புப் பிரச்சினை’ என்றாள். பிறகு ஒரு சந்தேகம் கேட்டாள் ‘எத்தனையோ ஜோடிகள் இருக்கும்போது, நம்மை மட்டும் ஏன் இந்த தடியன்கள் சுத்துறாங்க’ என்றாள். அவளுக்கு பதிலளிக்க முடியாமல், செல்வா குழம்பியபோது, அதே வேர்க்கடலை பையன், வந்தான். அவர்களுக்கு உபதேசம் செய்தான். “நீங்க ரெண்டு பேரும் பசங்க... அதாவது சின்ன வயசுப் பசங்க... ஒங்கள மாதிரி சின்ன வயசுக்காரங்கள மிரட்டி கற்பழிக்கிறது இதோ சுத்துறாங்களே இந்தப் பயல்களுக்கு ஒரு பொழுது போக்கு. ஏன்னா உங்களால வெளில் சொல்ல முடியாது பாருங்க... ஆனால், மத்த ஜோடிங்க அப்படி இல்ல நல்லாப் பாருங்க. ஒவ்வொருவரும்<noinclude></noinclude> pzkitzt4enzcre5bd8yjaqw3zx9fm93 பக்கம்:ஒத்தை வீடு.pdf/155 250 202624 1838377 762211 2025-07-03T03:30:33Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||155}}</noinclude>ஒரு தடியன்... இப்படில்லாம் நடக்கலாம் என்று எதிர்பார்த்து அதை சமாளிக்கிற தைரியத்தோட வர்றவங்க... இவங்ககிட்ட அந்தப் பயலுவ பாச்சா நடக்காது. இவனுகளோட ஜோடிகளும் காசுக்காகவோ எதுக்காகவோ வருகிற பஜாரிங்க.” “அதனால் இந்த பெரிசு ஜோடிங்ககிட்ட போகமாட்டாங்க... நீங்க திரும்பிப் பாராம ஓடுங்க... எப்போ காதலிக்கிறதுன்னு வந்துட்டிங்களோ அதுக்கு ஏத்தபடி நடந்துக்கணும். அதாவது சுற்றிச் சுற்றி வராவங்களை ஓரக்கண்ணாலதான் பார்க்கணும். அவங்கள அலட்சியப்படுத்துறது மாதிரி இருக்கணும். நீங்க என்னடான்னா வாரவனையும் போறவனையும் பயந்துகிட்டே பார்க்கிறீங்க... இதனால் உங்களை என்ன வேணுமுன்னாலும் செய்யலாமுன்னு அந்த கடற்கரை பொறுக்கிகளுக்கு ஒரு எண்ணம் வந்துடுது. அதனால உங்களுக்கு இந்த ஏரியா ஒத்துவராது. வேர்க்கடலை வேணுமா?” கவிதாவும், செல்வாவும் வேர்க்கடலை வாங்கும் சமயத்தில், ஏதாவது நடந்துவிடக்கூடாதே என்ற பயத்தில், வேதாந்திபோல் பேசிய அந்த பிஞ்சுப் பழத்தின் கையில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை திணித்து விட்டு, வேக வேகமாக வெளிச்சம் நிலவும் பகுதிக்கு வந்தார்கள். கூடவே ஆள்கூட்டம் அதிகம். பழக்கப்பட்ட குரல் கேட்டு கவிதா தெற்குப் பக்கமா திரும்பினாள். அவள் அண்ணன் மோகனன் நாலைந்து பேரோடு நாட்டியமாடிக் கொண்டிருக்கிறான் மத்தியில் ஒருவன் டேப் அடித்துக் கொண்டு கானா பாட்டை பாடுகிறான். அண்ணன் குதிக்கிறான்; தரையை மிதிக்கிறான். அங்குமிங்குமாய் தாவுகிறான். கவிதா, செல்வாவின் முதுகைத் தள்ளிக் கொண்டே கடற்கரையின் விளிம்பிற்கு ஓடினாள் அவனிடம் பதட்டத்தோடு பேசினாள். “இனிமேல் இந்தப் பக்கம் வரப்படாது செல்வா. அங்கே குதிச்சுக்கிட்டிருக்கே ஒரு கூட்டம் அதுல ஆடிக்கிட்டு இருக்கிறவன் எங்கண்ணன் மோகனன்... அவன் கண்ணுல பட்டால் அவ்வளவுதான்...” “நானும் அதைத்தான் சொல்லணுமுன்னு நெனச்சேன்... ஒங்கண்ணன் நல்லாவே ஆடுறான்.” “எங்கண்ணன் பரத நாட்டியம் நல்லா கற்றுக் கொண்டவன். பதினாலு வயசிலேயே இவன் நாட்டியம் அரங்கேறியது. அப்புறம் குடும்பத்துல என்னல்லாமோ நடந்தது இவன் சித்தன் போக்கு சிவன் போக்காய் ஆகிட்டான் இனிமேல் அவன் எக்கேடு<noinclude></noinclude> qs31a0sj6cuk8dv2dfff5y0k9l0p3dz பக்கம்:ஒத்தை வீடு.pdf/156 250 202626 1838378 762212 2025-07-03T03:38:09Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|156||புதைமண்}}</noinclude>கெட்டாலும் சரிதான். எங்கப்பா அவனை தண்ணி தெளிச்சு விட்டுட்டாரு. பெற்ற கடனுக்காக அவன் கொடுக்கிற ஏச்சையும் பேச்சையும் வாங்கிக்கிட்டு, அதுக்கு பதிலாக அவன் பணம் எடுக்கும்போது சும்மா இருக்காரு... சரி அதை விடுங்க... நாம், இனிமேல் எப்படி சந்திக்கிறது? எங்கே சந்திக்கிறது? இந்தக் கடற்கரையில வெளிச்சத்துல சந்திச்சா தெரிஞ்சவங்க பார்ப்பாங்க... இருட்டுல சந்திச்சா தெரியாதவங்ககிட்ட அகப்படணும்.” “அதுதான் எனக்குப் புரியல...” “ஒரு குட் நியூஸ்... நாளைக்கு எங்கப்பாவும் அம்மாவும் டூர் போறாங்க. ஆபிஸ் கார்ல போறாங்க. அம்மா என்னையும் கூப்பிடுறாங்க. உங்களை பிரிந்து என்னால் இருக்க முடியுமா? அதனால் நான் முடியாதுன்னுட்டேன். நல்லவேளை நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. எங்க வீட்டுக்கு வந்துடுங்க.” “எனக்கு பயமா இருக்குது கவிதா... ஒருவேளை தப்பித் தவறி யாராவது இருந்தால்... ஒங்கண்ணன்கூட இருக்கலாமே...” “போன வாரம்தான் மூவாயிரம் ரூபாய் எடுத்துட்டு போனான். இனிமேல், அடுத்த மாசம் ஒண்ணாந் தேதிதான் வருவான். ஒருவேளை எங்கப்பா, நானும் அவரோட போகணுமுன்னு அடம் பிடித்தால், என்னால தட்ட முடியாது. அதனால, நான் மட்டும் வீட்ல இருக்கிறதா இருந்தால் கம்பவுண்டு கதவுல ஒரு பக்கம் திறந்திருக்கும். மூடி இருந்தால், நான் இல்லன்னு அர்த்தம்.” “வாட்ச்மேன் இருக்கலாம் இல்லியா?” “அவனையும் கூடமாட ஒத்தாசைக்கு அப்பா கூட்டிட்டுப் போறார்.” “கொஞ்சம்கூட பொறுப்பில்லாத அப்பா. அம்மாவை கூட்டிக்கிட்டு ஒன்னை மட்டும் விடலாமா... நீயும் போ...” “ஒங்க மனசு கல் மனசு செல்வா. எனக்கு இருக்கிற துடிப்பு உங்களுக்கு இல்ல...” “நீ சொல்லிட்ட... நான் சொல்லல.... அவ்வளவுதான் வித்தியாசம்...” “சமையல்காரம்மா வீட்டோட இருக்காங்க. அந்தத் தைரியத்துல அப்பா என்னைப் பற்றி கவலைப்படமாட்டார். அதோட, ‘அம்மா - அப்பா விளையாட்டுக்கு’ நான் இடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு நினைப்பார்.” “சமையல்காரம்மா அப்பா வந்ததும் போட்டுக் கொடுத்தால்?”{{nop}}<noinclude></noinclude> fkdeg64jpj158kex3rnnyhmfn2bokmx பக்கம்:ஒத்தை வீடு.pdf/157 250 202628 1838379 762213 2025-07-03T03:44:45Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||157}}</noinclude>“அந்தம்மாவுக்கு சாப்பாடு மட்டும்தான் போட்டுக் கொடுக்கத் தெரியும். மற்றபடி பெருந்தூக்கக்காரி அவங்கள சமாளிக்கிறது என் பொறுப்பு. கேட்ல ஒரு பக்கம் திறந்திருந்தால், நீங்க வாறீங்க... மூடி இருந்தால், போறீங்க...” கவிதா, தனது மாருதி காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி, இடது பக்க முன்னிருக்கைக் கதவை செல்வாவிற்கு திறந்து விடப் போனாள். அந்தக் கதவின் உள் சதுரம் பிய்ந்து போய் முரண்டு செய்து கதவை திறக்க மறுத்தது. இதனால் செல்வா, நீண்டு நெடிந்த பின்னிருக்கையில் கைகளையும் கால்களையும் தாரளமாகப் பரப்பிக் கொண்டு உட்கார்ந்தான். {{dhr|2em}} <section end="5"/><section begin="6"/> {{larger|<b>6</b>}} {{dhr|2em}} செல்வா, மத்தியானம் பன்னிரண்டு மணி வரை, கவிதாவைப் பற்றி, தான் எழுதிய உரை வீச்சை அடித்தும் திருத்தியும் அல்லோகலப்படுத்தினான். சுமாரான காகிதங்களில் எழுதப் பட்டதை நல்ல காகிதங்களில் நகல் எடுத்தபோது, “உனக்குன்னு தனியா பறிமாறணுமா?” என்ற சித்திக்காரியின் சத்தம் அவன் காதுகளில் குத்தியது. அவன், அந்தக் காகிதங்களை பயபக்தியோடு தனது நோட்டுப் புத்தகத்தில் வைத்தபோது “தனியா சாப்பிட்டால் என்ன நாய்களா?” என்று, பிள்ளைகளுக்கு குரல் கொடுத்தாள் சித்தி. செல்வா, அவசர அவசரமாக சாப்பாட்டு மேஜைக்கு ஓடினான். குழந்தைகள் ஏற்கெனவே அங்கே உட்கார்ந்திருந்தன. சித்திக்காரியும் உட்கார்ந்திருந்தாள். ஞாயிற்றுக்கிழமை என்றாலும் அலுவலகத்திற்குப் போய்விட்ட கணவன் மீது கடும் கோபமாக இருப்பது, அவள் சாதத்தை பிசைந்து கஞ்சியாக்குவதிலிருந்து தெரிந்தது. செல்வா, ஒரு கவளத்தை சுபேதாவுக்கு ஊட்டிக்கொண்டே மறு கவளத்தை தனது வாயில் போட்டுக் கொண்டான். சித்திக்காரி அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, ஒரு செம்பு தண்ணீரையும் மடக் மடக் என்று தொண்டைக் குழிக்குள் அருவியாக்கிவிட்டு போய்விட்டாள். செல்வாவும், குழந்தைகளும் சாப்பிட்டு முடித்தபோது, சித்திக்காரியின் குறட்டைச் சத்தம் தோசைக்கல்லில் ஊற்றப்பட்ட ஈர மாவு மாதிரியான ஒலியை எழுப்பியது. செல்வா, சுபேதாவின் கையையும் வாயையும் கழுவிவிட்டு, அருணையும் அப்படி கழுவச்<noinclude></noinclude> niwxgrxm09po9ftgy90qfrq5f424k23 பக்கம்:ஒத்தை வீடு.pdf/158 250 202630 1838380 762214 2025-07-03T03:51:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|158||புதைமண்}}</noinclude>செய்துவிட்டு தங்களுக்கு என்று ஒதுக்கிய மேற்குப் பக்கத்து அறைக்கு வந்தான். குழந்தைகளை மெத்தைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, அவன் அந்த இருவர்களுக்கிடையே படுத்துக்கொண்டான். அந்த இருவரும் தூங்குவதற்கு உந்துகோலாக ஒவ்வொரு கையாலும் ஒவ்வொருத்தர் தலையையும் கோதி விட்டான். இந்த முடிக்கோதல் ஒரு அலாதி இன்பம். அதுவும் மிகவும் வேண்டியவர்கள் வருடி விடும்போது, அது ஒரு தனித்துவ சுகத்தை கொடுக்கிறது. மகிழ்ச்சித் திரள்கள் ஒன்றாய் திரள்கின்றன. ஆறுதலுக்கு ஆறுதல். நெருக்கத்திற்கு நெருக்கம். உடலெங்கும் சுக மயம். உள்ளமெங்கும் நிர்மலம். இதனால்தான், குரானில் ‘ஒருவரின் துக்கத்தை குறைப்பதற்கு அவரது பிடரியை தடவி விட வேண்டும்’ என்று விஞ்ஞான பூர்வமாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விஞ்ஞானம், அந்த இரு குழந்தைகளிடமும் எடுபடவில்லை. அவன் கை இரண்டையும் பிடித்துக் கொண்டு ‘கதை சொல்லுங்க அண்ணா’ என்றன. சுபேதா பஞ்ச தந்திரக்கதை வேண்டும் என்பது மாதிரி கேட்டாள். அருண் சக்திமான் டைப்பில் கதை கேட்டான். இந்தப் போட்டியில் இரண்டு குழந்தைகளும் அண்ணன் மார்புக்குமேல் பாய்ந்து ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டன. அருணை முறைத்துக் கொண்டும், சுபேதாவின் கண்ணீரை துடைத்துக் கொண்டும் அவர்கள் இருவரையும் தன் மார்பில் தலைசாய்க்க செய்து முதுகைத் தட்டிக் கொடுத்தான். குழந்தைகள் தூங்கி விட்டன. செல்வா, மெல்ல அவர்களின் தலைகளை படுக்கைக்கு இறக்கி, அவர்கள் விழிக்கிறார்களா என்று நோட்டம் போட்டான். ‘அண்ணா’ என்ற குரல் எழுப்பி குழந்தைகள் தன்னை காணாமல் அலறி விடக்கூடாதே என்ற அச்சம். மணியை பார்த்தான். சரியாக பிற்பகல் ஒன்று. உடனே அணிச்சையாக ஆவின் நினைவு வந்தது. பால் கார்டை எடுத்துக்கொண்டு, சமையலறையிலிருந்த பிளாஸ்டிக் கூடையையும் தூக்கிக்கொண்டு புறப்பட்டான். சித்தி விழிப்பதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதும், ஆவின்காரன் பிற்பகல் மூன்று மணிவரை இருப்பான் என்பதும் அவனுக்கு ஆறுதல் கொடுத்தது. செல்வா, தெருவுக்கு வந்து, அடுத்த வீட்டை தாண்டி, அதற்கு அடுத்த வீட்டின் கேட்டை நெருங்க நெருங்க இதயமும் மூளையும் ஒன்றை ஒன்று நெருக்கிக் கொண்டன. கால்கள், பின்னியபடியே நடந்தன. மனம் “போ” என்றும் மூளை “போகாதே” என்றும் மாறி மாறி ஆணையிட்டன. ‘இன்றைக்கு மட்டும்தான்’ என்று மூளைக்குச் சொன்னான் ‘இன்றைக்கு பேச வேண்டியதையெல்லாம் பேசிவிடுவோம்’ என்று மனதிற்குச் சொன்னான். இந்த மனதிற்கும்<noinclude></noinclude> 2glv7lseoeyz2yvvfjydnpijptxf5j8 பக்கம்:ஒத்தை வீடு.pdf/159 250 202632 1838381 762215 2025-07-03T03:58:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||159}}</noinclude>மூளைக்கும் இடைப்பட்ட குரல் எதுவாக இருக்குமென்று எண்ணிப் பார்த்தான். மனசாட்சியோ என்னவோ... தன்னை நம்பும் சித்தப்பாவிற்கு துரோகம் இழைப்பது போன்ற நெருடல். மகன் மீது மகத்தான பாசமும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் தந்தை முன்னால் வந்து தடுப்பது போல் ஒரு பிரமை. கூடவே சித்திக்காரியின் திட்டுக்கள். என்றாலும், இதுவரை உயிரோடும் படிப்போடும் இருக்கிறான் என்றால் அதற்கு, அந்த வேலைக்காரம்மாவும் இந்த கவிதாவும்தான் காரணங்கள் என்று நினைக்க நினைக்க, அவனது பின்னிய கால்கள் பிரிந்தன. செல்வாவின் மனம் துள்ளியது. மணிக்கணக்கில் பொறுத்தவனால் வினாடிக் கணக்கில்கூட பொறுக்க முடியவில்லை. கம்பௌண்ட் கதவில் ஒன்று திறந்திருந்தது. அக்கம் பக்கம் பார்த்தபடியே உள்ளே ஓடினான் கவிதா, அவனுக்காக முன்வாசல் வளாகத்தில் காத்திருக்காதது லேசாய் வலித்தது. முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்று அந்த வலியை வருடலாக மாற்றிக்கொண்டான். ஆறு கிரவுண்டுகளை ஆக்கிரமித்த அரண்மனை வீடு. சுவர்களுக்கு நான்கு புறத்திலும் ஒரு பனை உயரத்திற்கான ஏழெட்டு வெண்மையான தூண்கள். இவற்றிற்கு இடையே அலங்கார வளைவுகள். இரண்டு மாடி கட்டிடம் என்றாலும், அது மூன்று மாடியாய் தோன்றியது. பர்மா தேக்குகள் மாதிரி அதேசமயம் நவீனப் பாங்கில் செய்யப்பட்ட கதவு பழமையும் புதுமையும் இணைந்த அது சொக்கத் தங்க நிறத்தில் மின்னியது. நுணுக்கமான நெளிவு சுளிவுகளோடு கோபுரமாய், தேராய், சின்னஞ்சிறு பதுமைகளாய் தோன்றிய அந்த கதவில் வெறுமையான பகுதி என்று எதுவும் காணமுடியாது. கதவு திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் கவிதாவைக் காணவில்லை. ஒருவேளை சினிமாக் காட்சிகளில் வருவதுபோல் மறைந்திருந்து தாவுவாள் என்று நினைத்துக் கொண்டான். பைக்குள் இருந்த உரைவீச்சை தட்டிக் கொடுத்தான் இதுவரை அதிகமாய் சொல்லாத சுமைகளை கொண்ட அந்தக் கடிதத்தை படித்துவிட்டு, கவிதா அழமாக அழுதுவிடக்கூடாதே என்ற ஆதங்கம். அதேசமயம் அவள் அழுகைக் கண்ணீரில், தனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும் என்றும் நினைத்தான். தன்னை நேசிக்கும் ஒருவரிடம் தனது பாரங்களை ஏற்றிவிட்டு ஏற்றப்பட்டவர்களின் பாரங்களை திருப்பி வாங்கிக் கொள்ளும்போது எப்படிப்பட்ட சுகமும், நன்றி உணர்வும், பெருமிதமும் கிடைக்குமோ அப்படிப்பட்டவை அவனுக்குக் கிடைத்தன.{{nop}}<noinclude></noinclude> gbky5fhza8gkmkm740qfcy7j80flehi 1838382 1838381 2025-07-03T03:58:53Z மொஹமது கராம் 14681 1838382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||159}}</noinclude>மூளைக்கும் இடைப்பட்ட குரல் எதுவாக இருக்குமென்று எண்ணிப் பார்த்தான். மனசாட்சியோ என்னவோ... தன்னை நம்பும் சித்தப்பாவிற்கு துரோகம் இழைப்பது போன்ற நெருடல். மகன் மீது மகத்தான பாசமும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் தந்தை முன்னால் வந்து தடுப்பது போல் ஒரு பிரமை. கூடவே சித்திக்காரியின் திட்டுக்கள். என்றாலும், இதுவரை உயிரோடும் படிப்போடும் இருக்கிறான் என்றால் அதற்கு, அந்த வேலைக்காரம்மாவும் இந்த கவிதாவும்தான் காரணங்கள் என்று நினைக்க நினைக்க, அவனது பின்னிய கால்கள் பிரிந்தன. செல்வாவின் மனம் துள்ளியது. மணிக்கணக்கில் பொறுத்தவனால் வினாடிக் கணக்கில்கூட பொறுக்க முடியவில்லை. கம்பௌண்ட் கதவில் ஒன்று திறந்திருந்தது. அக்கம் பக்கம் பார்த்தபடியே உள்ளே ஓடினான் கவிதா, அவனுக்காக முன்வாசல் வளாகத்தில் காத்திருக்காதது லேசாய் வலித்தது. முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்று அந்த வலியை வருடலாக மாற்றிக்கொண்டான். ஆறு கிரவுண்டுகளை ஆக்கிரமித்த அரண்மனை வீடு. சுவர்களுக்கு நான்கு புறத்திலும் ஒரு பனை உயரத்திற்கான ஏழெட்டு வெண்மையான தூண்கள். இவற்றிற்கு இடையே அலங்கார வளைவுகள். இரண்டு மாடி கட்டிடம் என்றாலும், அது மூன்று மாடியாய் தோன்றியது. பர்மா தேக்குகள் மாதிரி அதேசமயம் நவீனப் பாங்கில் செய்யப்பட்ட கதவு பழமையும் புதுமையும் இணைந்த அது சொக்கத் தங்க நிறத்தில் மின்னியது. நுணுக்கமான நெளிவு சுளிவுகளோடு கோபுரமாய், தேராய், சின்னஞ்சிறு பதுமைகளாய் தோன்றிய அந்த கதவில் வெறுமையான பகுதி என்று எதுவும் காணமுடியாது. கதவு திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் கவிதாவைக் காணவில்லை. ஒருவேளை சினிமாக் காட்சிகளில் வருவதுபோல் மறைந்திருந்து தாவுவாள் என்று நினைத்துக் கொண்டான். பைக்குள் இருந்த உரைவீச்சை தட்டிக் கொடுத்தான் இதுவரை அதிகமாய் சொல்லாத சுமைகளை கொண்ட அந்தக் கடிதத்தை படித்துவிட்டு, கவிதா ஆழமாக அழுதுவிடக்கூடாதே என்ற ஆதங்கம். அதேசமயம் அவள் அழுகைக் கண்ணீரில், தனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும் என்றும் நினைத்தான். தன்னை நேசிக்கும் ஒருவரிடம் தனது பாரங்களை ஏற்றிவிட்டு ஏற்றப்பட்டவர்களின் பாரங்களை திருப்பி வாங்கிக் கொள்ளும்போது எப்படிப்பட்ட சுகமும், நன்றி உணர்வும், பெருமிதமும் கிடைக்குமோ அப்படிப்பட்டவை அவனுக்குக் கிடைத்தன.{{nop}}<noinclude></noinclude> 9tapeqdfs5pzfv9d7wig1mvteg8dprm 1838385 1838382 2025-07-03T04:08:15Z Booradleyp1 1964 1838385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||159}}</noinclude>மூளைக்கும் இடைப்பட்ட குரல் எதுவாக இருக்குமென்று எண்ணிப் பார்த்தான். மனசாட்சியோ என்னவோ... தன்னை நம்பும் சித்தப்பாவிற்கு துரோகம் இழைப்பது போன்ற நெருடல். மகன் மீது மகத்தான பாசமும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் தந்தை முன்னால் வந்து தடுப்பது போல் ஒரு பிரமை. கூடவே சித்திக்காரியின் திட்டுக்கள். என்றாலும், இதுவரை உயிரோடும் படிப்போடும் இருக்கிறான் என்றால் அதற்கு, அந்த வேலைக்காரம்மாவும் இந்த கவிதாவும்தான் காரணங்கள் என்று நினைக்க நினைக்க, அவனது பின்னிய கால்கள் பிரிந்தன. செல்வாவின் மனம் துள்ளியது. மணிக்கணக்கில் பொறுத்தவனால் வினாடிக் கணக்கில்கூட பொறுக்க முடியவில்லை. கம்பௌண்ட் கதவில் ஒன்று திறந்திருந்தது. அக்கம் பக்கம் பார்த்தபடியே உள்ளே ஓடினான் கவிதா, அவனுக்காக முன்வாசல் வளாகத்தில் காத்திருக்காதது லேசாய் வலித்தது. முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்று அந்த வலியை வருடலாக மாற்றிக்கொண்டான். ஆறு கிரவுண்டுகளை ஆக்கிரமித்த அரண்மனை வீடு. சுவர்களுக்கு நான்கு புறத்திலும் ஒரு பனை உயரத்திற்கான ஏழெட்டு வெண்மையான தூண்கள். இவற்றிற்கு இடையே அலங்கார வளைவுகள். இரண்டு மாடி கட்டிடம் என்றாலும், அது மூன்று மாடியாய் தோன்றியது. பர்மா தேக்குகள் மாதிரி அதேசமயம் நவீனப் பாங்கில் செய்யப்பட்ட கதவு பழமையும் புதுமையும் இணைந்த அது சொக்கத் தங்க நிறத்தில் மின்னியது. நுணுக்கமான நெளிவு சுளிவுகளோடு கோபுரமாய், தேராய், சின்னஞ்சிறு பதுமைகளாய் தோன்றிய அந்த கதவில் வெறுமையான பகுதி என்று எதுவும் காணமுடியாது. கதவு திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் கவிதாவைக் காணவில்லை. ஒருவேளை சினிமாக் காட்சிகளில் வருவதுபோல் மறைந்திருந்து தாவுவாள் என்று நினைத்துக் கொண்டான். பைக்குள் இருந்த உரைவீச்சை தட்டிக் கொடுத்தான் இதுவரை அதிகமாய் சொல்லாத சுமைகளை கொண்ட அந்தக் கடிதத்தை படித்துவிட்டு, கவிதா அதிகமாக அழுதுவிடக்கூடாதே என்ற ஆதங்கம். அதேசமயம் அவள் அழுகைக் கண்ணீரில், தனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும் என்றும் நினைத்தான். தன்னை நேசிக்கும் ஒருவரிடம் தனது பாரங்களை ஏற்றிவிட்டு ஏற்றப்பட்டவர்களின் பாரங்களை திருப்பி வாங்கிக் கொள்ளும்போது எப்படிப்பட்ட சுகமும், நன்றி உணர்வும், பெருமிதமும் கிடைக்குமோ அப்படிப்பட்டவை அவனுக்குக் கிடைத்தன.{{nop}}<noinclude></noinclude> k34n696aflnas81kc8n3qd8uvonc0ex பக்கம்:ஒத்தை வீடு.pdf/160 250 202634 1838384 762217 2025-07-03T04:07:09Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|160||புதைமண்}}</noinclude>செல்வா, உப்பிப் போன தனது சட்டைப் பையை அழுந்தப் பிடித்தபடியே, “கவிதா... கவிதா...” என்று காந்தக் குரலோடு சோபா செட்டுகளை கொண்ட வரவேற்பறையின் நடுவில் நின்று கூவினான். உடனே கதவில்லாதது போல் தோன்றிய பிளைவுட்டால் ஆன கிழக்கத்திய தடுப்பிலிருந்து ஒரு தேக்குப் பலகை திறந்தது. மோகனன், இரண்டு ஆண்கள் கட்டி அணைக்கும் முத்திரை படம் கொண்ட பனியனோடு நின்றான். லாகவமான உதட்டோரப் புன்னகை. சுருள் சுருளான புல்தரை மாதிரியான கிராப்பு. பிடரியைத் தாண்டிய முடி ஒற்றைக் கடுக்கன். கையில் ஒற்றை வளையம். நீளவாக்கு முகம், மாம்பழ நிறம், முகத்தில் கொய்யாக்காய் போன்ற வடுக்கள். செல்வா, வெலவெலத்துப் போனான். எங்கே நிற்கிறோம், யார் முன்னால் நிற்கிறோம் என்பதுகூட தெரியாத அதிர்ச்சி. ஒரே ஓட்டமாய் ஓடிவிடலாம் என்பதுபோன்ற திருப்புமுனை பார்வை. அதுவே குற்றத்தைக் காட்டி கொடுக்கும் என்ற ஞானம். ஆனாலும், மோகனன் அவனை சிரித்தபடியே பார்த்தான். அந்த சிரிப்பை புன்னகையாக்கியபடியே, அவன் மெல்ல நடந்து வந்தபோது, செல்வாவின் பயம் லேசாய் தெளிந்தது. கூடவே சிரிப்பாய் வரவேற்கும் மோகனன் மீது அன்பும், இப்படித் தன்னை மாட்ட வைத்த கவிதா மீது கோபமும் வந்தது. மோகனன், செல்வாவை நெருங்கி, ‘ஐ எம் மோகனன்’ என்று கையை நீட்டினான் இடுப்போடு ஒட்டிக் கிடந்த செல்வாவின் வலது கையை பிடித்துக் குலுக்கினான். “நீ யார்” என்று அவனை கேட்காததிலிருந்து, அவனை அவன் தெரிந்து வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. செல்வாவின் கையை பிடித்த மோகனன், சிறிது நேரம் அதை வருடிக் கொடுத்தபடியே நின்றான். செல்வாவிற்கு பயம் போய்விட்டது. ‘இவன் ஜென்டில்மேன். இவனைப் போய் கவிதா அசல் போக்கிரி என்றாளே. அதோடு அசிங்கம் பிடித்தவன் என்றும் கத்தினாளே...’ மோகனன், செல்வாவின் கரத்தை விடுவித்துவிட்டு, அறைக் கதவை நோக்கிப் போட்ட ஒற்றைச் சோபா இருக்கையில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தான் எதிரே உள்ள சோபா செட்டில் செல்வாவை உட்காரும்படி சைகை செய்தான். அவன் உட்கார்ந்து முடித்ததும், மோகனன் தோழமையோடு கேட்டான். “நீங்க பக்கத்து வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற கிச்சன் வீட்டு பையன்தானே?”{{nop}}<noinclude></noinclude> 6ln42gdzsi82fv4iqb3ohkpprxrzi75 பக்கம்:ஒத்தை வீடு.pdf/161 250 202636 1838387 762218 2025-07-03T04:15:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||161}}</noinclude>செல்வாவிற்கு கோபமும் வந்தது. ரோசமும் வந்தது. அவன் சித்தப்பா நேர்மையானவர். கடனே என்று கட்டிய வீடு. அதாவது அரசாங்கக் கடனில் கட்டிய வீடு. சித்தியின் நகைகளை அடகு வைத்து சுமாராக கட்டப்பட்ட அந்த வீட்டை, இவன் கிச்சன் வீடு என்று சொன்னது என்னவோ போல் இருந்தது. இவன் அப்பன் ஐ.ஏ.எஸ். காரனைப் போல் கொள்ளையடித்துக் கட்டிய வீடல்ல. இப்படி சொல்லி விடலாமா என்று கூட அவன் நினைத்தான். உடனே காரியம் பெரிதா... வீரியம் பெரிதா... என்ற கிராமத்துப் பழமொழி அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதோடு இவன், அவன் உயிருக்குயிரான கவிதாவின் அண்ணன் தமாஷ் பேர்வழி. மனதில் எந்த விகற்பமும் இல்லாமல் அப்படி கேட்டிருப்பான். “ஏன் யோசிக்கிறே? பதில் சொல்லு?” “ஆமாம் ஸார். அது எங்க சித்தப்பா வீடு. ரொம்ப ரொம்ப நேர்மையானவர். அவரால கிச்சன் வீடுதான் கட்ட முடியும். நான், அவரோட அண்ணன் மகன். கிராமத்துல அப்பாம்மா இருக்காங்க... நான் இங்கே சித்தப்பா வீட்ல தங்கி காலேஜ் படிக்கிறேன்.” “ஒன்னைப் பார்த்தால், படித்தவன் மாதிரி தெரியலியே?” “நோ... நோ... சார்... நான் பி.எஸ்.ஸி. பிசிக்ஸ் ஸார்... கிளாஸ்ல பஸ்டு ஸார்... பல கல்லூரிப் பேச்சுப் போட்டிகள்ல பஸ்ட்ல வந்திருக்கேன் ஸார்...” “குட்... அப்படித்தான் இருக்கணும். ஆனா டிரெஸ்லேயும் கவனம் செலுத்தணும்... நான் ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீசர் மகனாய் பிறந்தாலும், பத்தாவது வகுப்புக்கு மேல புத்தி போகல... ஆனாலும் எவ்வளவு ஸ்டைலாக இருக்கேன் பார். ஒன் நன்மைக்காகத்தான் நான் சொன்னேன்... தப்பா பேசியிருந்தால் மன்னிச்சுடு...” “மன்னிக்கும்படியாய் நீங்க எதுவும் பேசல ஸார்... உங்கள ரெண்டு மூணு தடவதான் பார்த்திருக்கேன். நீங்க விதிவிலக்கான இளைஞராம். டான்ஸ் மாஸ்டராம். ஸ்டண்ட் பயிற்சியாளராம். டி.வி.யில நிகழ்ச்சிகளுல அந்தர் பல்டி அடிச்சுக்கிட்டே பாடுவீங்களாம். ஆக மொத்தத்துல சகலகலா வல்லவராம். ஆனாலும், ஐ.ஏ.எஸ். அப்பாக்கூட மட்டும் ஒத்துப் போனால் எங்கேயோ போயிருப்பீங்களாம்... இதனால உங்க டேலண்ட் வேஸ்ட் ஆகுதாம்...” “இப்படி சொன்னது யார் உனக்கு?” “எங்க சித்தி ஸார். உங்க அம்மாவோட பிரண்டு ஸார்.” “அப்போ உங்க சித்தியை நான் ‘டாவ்’ அடிக்கட்டுமா? உட்காருடா... எழுந்துட்டதாலேயே நீ போகமுடியாது. இப்படிச்<noinclude></noinclude> san5cge6dgmupbqjyug9hhoua4wrbg4 பக்கம்:ஒத்தை வீடு.pdf/162 250 202638 1838390 762219 2025-07-03T04:26:51Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|162||புதைமண்}}</noinclude>சொன்னது என் சிஸ்டர் கவிதாதானே... நேரா உண்மைக்கு வரவேண்டியது தானடா...” செல்வா, தலை குனிந்தபடியே, மோகனனுக்கு முகம் காட்டாமல் கிடந்தான் போதாக்குறைக்கு ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல் இடது பக்க சட்டைப் பையை வலது கையால் மூடினான் அது துருத்திக் கொண்டிருப்பதை ஏற்கெனவே கவனித்த மோகனன், அவனை உச்சி முதல் பாதம் வரை பார்த்தான். மானசீகமாக பருகினான் மோப்பக் குழையும் அனிச்ச முகம். நாட்டுக் கட்டை உடம்பு என்றாலும் அதில் ஒரு நளினம். மன்மதனின் மனைவியான ரதியக்கா தன்னைப்போல் ஒரு மனிதச் சதையை செதுக்கியது போன்ற தோரணை. கருப்பும் மின்னும் என்பதுபோல் காட்டிய உடம்பில் சந்தனக் குழைவு. “இரண்டுக்கும் பயன்படுவான்.” இப்போது, மோகனனின் புன்னகை போலித்தனமான கோபமானது. நாட்டியக்காரன் என்பதால் கண்கள் உருண்டு திரண்டு ஒரே நிலையில் நின்றன. “கவிதாவை பார்க்கத்தானே வந்தே?” “ஆமாம் ஸார். இனிமேல் இந்தப் பக்கம் வரமாட்டேன் ஸார்” “நான் காதலுக்கு எதிரியில்லை மச்சி... பையில இருக்கிற அந்த லவ் லெட்டரை எடு. எனக்குத் டமிழ்ன்னா உயிரு... அதோட ஒன்னை மாதிரி காலேஜ் பசங்களோட டமில் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.” “லவ் லெட்டர் இல்ல ஸார்... ஆவின் கார்டு ஸார்...” “எனக்கு காதுல பூ வச்சு பழக்கமே தவிர, வைக்க விடுறதில்ல. மரியாதையா கையில இருக்கிறத நீட்டு... இல்லன்னா போலீஸுக்கு போன் பண்ண வேண்டியது வரும். ஒரு மைனர் பெண்ணை கடத்த வந்த குற்றத்திற்கு, போலீஸ்ல லத்தியால லொத்து லொத்துன்னு வாங்குவாங்க. ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீசர் மகன் போலீஸுக்கு போன் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? கம்பி எண்ணனுமா... லெட்டர தாரீயா...” “லவ் லெட்டர்தான் ஸார்... கவிதாவுக்குத் தெரியாமல் நானே எழுதின டர்டி லெட்டர் ஸார்...” “டர்டின்னு சொல்லாத மச்சி... ஸ்வீட் நத்திங்ஸுன்னு சொல்லு. நான் காதலுக்கு எதிரியில்லை அதை ஆதரிப்பவன். நீ எப்போ என் தங்கைய லவ் பண்றதா தெரிஞ்சிதோ, அப்பவே, நான் ஒனக்கு மச்சான்... நீ எனக்கு மச்சி. சரி லெட்டரை எடு...”{{nop}}<noinclude></noinclude> 982pjlupu5d5ce3ucz9xdsquu7eqeq2 பக்கம்:ஒத்தை வீடு.pdf/163 250 202641 1838393 762220 2025-07-03T04:58:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||163}}</noinclude>“இது ஒருதலைக் காதல் ஸார்... கவிதா என்கிட்ட பேசினதே கிடையாது ஸார்...” “அத, ஒன் லெட்டரைப் பார்த்து தெரிஞ்சுக்கிடுறேன்... அப்புறம் ஒன்னை போக விடுறேன். ஏன்னா... கொலை மிரட்டல் மாதிரி எதுவும் எழுதியிருக்கப்படாது பாரு... சரி... கொடு...” செல்வாவின் உடல் வேர்வையில் நனைந்தது. தலை சுற்றியது. ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டு, தரைக்கு வராமல் தவிப்பதுபோல் இருந்தது. தயங்கித் தயங்கி ஆவின் கார்டையும் கவிதாவிற்கு எழுதிய கடிதத்தையும் கை நடுங்க, கால் ஒடுங்க மோகனனிடம் கொடுத்தான் அவனோ ஆவின் கார்டை பின் அட்டைபோல் வைத்துக் கொண்டு அந்தக் கடிதத்தை மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டு, பிறகு கண்ணூன்றி படித்தான். “என் இனிய சுமை தாங்கியே!” “வணக்கம். வணக்கமம்மா. நீ கடற்கரையில் ஆணையிட்டதால் மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. எனக்கு ஏற்பட்ட ஆசையாலும், இதை எழுதுகிறேன். இதை வாசிக்க வாசிக்க, நீ மகிழ்ந்தால் நானும் மகிழ்வேன். ஆனாலும், இந்தக் கடிதம் உன்னை அழ வைக்குமோ என்று அஞ்சுகிறேன். ஒருவர் மனதில் இருப்பதை அப்படியே எழுதினால் பிரச்சினையில் பாதி குறையும் என்பார்கள்.” “எனக்கு காலில் முள் குத்தினால் உனக்குக் கண் வலிக்கும். இதே போல்தான் எனக்கும். மன அலையோ... உள்ளுணர்வோ... முற்பிறவியோ ஏதோ ஒன்று நம் இருவரையும் இனிமையாக கட்டிப் போட்டிருக்கிறது. அது மலையையும் பாதாளத்தையும் இணைக்கும் ஏதோ ஒரு காதல் சங்கிலி. இந்தச் சங்கிலியிலிருந்து நீ கீழே இறங்கக் கூடாது. நான்தான் மேலே ஏறி வரவேண்டும். பி.எஸ்.ஸி. முடித்ததும் வேலையில் சேர்ந்தபடியே நிச்சயம் எம்.எஸ்.ஸி. படித்து ஐ.ஏ.எஸ். எழுதி உன்னை கைப்பிடிப்பேன் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. எல்லாம் அடியேனின் உழைப்பில் எழும் ஆண்டவன் சித்தம்.” உன்னை நான் சுமைதாங்கி என்று அழைத்தற்கு, வேறு ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால் கொச்சையான பொருளில் எடுத்துக் கொள்வாள். ஆனால், நீயோ அசாதாரணமான பெண். தாய்மையின் உருவம். எல்லோர் மீதும் படரும் உன் தாய்மை, எனக்கு மட்டும் காதலாக கவிழ்ந்தது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், நீ எல்லோருக்கும் தாய் மாதிரியான அமைதியும் அன்பும் ஊடாடும் மெளனப் பார்வைக்காரி என்னைத் தவிர்த்து, மற்றவர்களிடம் நிதானமாக உதடு அசைத்து, மெல்லவும், அதே<noinclude></noinclude> nofcx695n0lbo20n2yvv8vfw9z2tb6r 1838394 1838393 2025-07-03T04:58:30Z மொஹமது கராம் 14681 1838394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||163}}</noinclude>“இது ஒருதலைக் காதல் ஸார்... கவிதா என்கிட்ட பேசினதே கிடையாது ஸார்...” “அத, ஒன் லெட்டரைப் பார்த்து தெரிஞ்சுக்கிடுறேன்... அப்புறம் ஒன்னை போக விடுறேன். ஏன்னா... கொலை மிரட்டல் மாதிரி எதுவும் எழுதியிருக்கப்படாது பாரு... சரி... கொடு...” செல்வாவின் உடல் வேர்வையில் நனைந்தது. தலை சுற்றியது. ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டு, தரைக்கு வராமல் தவிப்பதுபோல் இருந்தது. தயங்கித் தயங்கி ஆவின் கார்டையும் கவிதாவிற்கு எழுதிய கடிதத்தையும் கை நடுங்க, கால் ஒடுங்க மோகனனிடம் கொடுத்தான் அவனோ ஆவின் கார்டை பின் அட்டைபோல் வைத்துக் கொண்டு அந்தக் கடிதத்தை மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டு, பிறகு கண்ணூன்றி படித்தான். “என் இனிய சுமை தாங்கியே!” “வணக்கம். வணக்கமம்மா. நீ கடற்கரையில் ஆணையிட்டதால் மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. எனக்கு ஏற்பட்ட ஆசையாலும், இதை எழுதுகிறேன். இதை வாசிக்க வாசிக்க, நீ மகிழ்ந்தால் நானும் மகிழ்வேன். ஆனாலும், இந்தக் கடிதம் உன்னை அழ வைக்குமோ என்று அஞ்சுகிறேன். ஒருவர் மனதில் இருப்பதை அப்படியே எழுதினால் பிரச்சினையில் பாதி குறையும் என்பார்கள்.” “எனக்கு காலில் முள் குத்தினால் உனக்குக் கண் வலிக்கும். இதே போல்தான் எனக்கும். மன அலையோ... உள்ளுணர்வோ... முற்பிறவியோ ஏதோ ஒன்று நம் இருவரையும் இனிமையாக கட்டிப் போட்டிருக்கிறது. அது மலையையும் பாதாளத்தையும் இணைக்கும் ஏதோ ஒரு காதல் சங்கிலி. இந்தச் சங்கிலியிலிருந்து நீ கீழே இறங்கக் கூடாது. நான்தான் மேலே ஏறி வரவேண்டும். பி.எஸ்.ஸி. முடித்ததும் வேலையில் சேர்ந்தபடியே நிச்சயம் எம்.எஸ்.ஸி. படித்து ஐ.ஏ.எஸ். எழுதி உன்னை கைப்பிடிப்பேன் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. எல்லாம் அடியேனின் உழைப்பில் எழும் ஆண்டவன் சித்தம்.” “உன்னை நான் சுமைதாங்கி என்று அழைத்தற்கு, வேறு ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால் கொச்சையான பொருளில் எடுத்துக் கொள்வாள். ஆனால், நீயோ அசாதாரணமான பெண். தாய்மையின் உருவம். எல்லோர் மீதும் படரும் உன் தாய்மை, எனக்கு மட்டும் காதலாக கவிழ்ந்தது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், நீ எல்லோருக்கும் தாய் மாதிரியான அமைதியும் அன்பும் ஊடாடும் மெளனப் பார்வைக்காரி என்னைத் தவிர்த்து, மற்றவர்களிடம் நிதானமாக உதடு அசைத்து, மெல்லவும், அதே<noinclude></noinclude> or8xz6mhzorftztktapyqboil9b2bhy பக்கம்:ஒத்தை வீடு.pdf/164 250 202643 1838395 762221 2025-07-03T05:07:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|164||புதைமண்}}</noinclude>சமயம் உறுதியாகவும் பேசக் கூடியவள். ஆடை அலங்காரத்தில் ஆசை கொள்ளாதவள். பிறர் துன்பத்தை தன் துன்பமாய் எடுத்துக் கொள்கிறவள். என் துன்பத்தை நீ பகிர்ந்து கொண்டதால், அது எவ்வளவோ குறைந்திருக்கிறது. நீ என் தோளைத் தட்டும் போதெல்லாம், அந்தத் தோளுக்கு ஒரு வலிமை கிடைத்தது. கண்களை துடைத்த போதெல்லாம் என் கண்களுக்கு பிரகாசம் கிடைத்தது.” இருக்கை விளிம்பில் கையூன்றி திரிசங்கு நிலையில் நடுங்கிப் போய் நின்ற செல்வாவை ஏற இறங்கப் பார்த்த மோகனன் ‘எனக்கு டமில் புரியாது. பத்து வரைக்கும் கான்வெட்டில் படிச்சவன் இதுக்கு பேர்தான் ஒருதலைக் காதலோ’ என்றான். செல்வா, அவனை கையெடுத்துக் கும்பிடப் போனபோது, அதற்குள்ளேயே மோகனன் கடிதத்துள் மூழ்கினான். “நம் காதலுக்கு, முதலில் எங்கள் வீட்டு வேலைக்காரம்மாவிற்கு நன்றி சொல்லவேண்டும். நான் அங்கே படும் பாடுகளை அவள் உன்னிடம் சொல்லாவிட்டால் உனக்கு என்னிடம் ஈர்ப்பு ஏற்பட்டிருக்காது. அதே வேலைக்காரம்மா என் கதையை கேட்டு நீ கண்ணிர் சிந்தியதாக சொல்லாவிட்டால், பெரிய இடத்துப் பெண்ணான உன்னிடம் என் மனம் நிச்சயமாக ஈடுபட்டிருக்காது.” “ஆக பலருக்கு, காதல் கண்ணிரில் முடியும். நமக்கோ, கண்ணிரில் துவங்கியது. நிச்சயமாகச் சொல்கிறேன். தற்செயலாக உனது காரில் எனக்கு நீ லிப்ட் கொடுக்காமல் இருந்தால், நான் தற்கொலை செய்திருப்பேன். அதற்காகத்தான் அந்தப் பூங்கா பக்கம் போனேன். என்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்பதுபோல் நீ பேசிய பேச்ச என் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாகிவிட்டது. நீ என் காதலிதான். கண்ணம்மா என் காதலி என்று பாரதி பாடினாரே அப்படிப்பட்ட காதலி நீ.” “உன் அறிவுரைப்படி பலர் முன்னிலையில் என்னை இழிவுபடுத்தும் சித்தியின் பிள்ளைகளாக அந்த குழந்தைகளை அனுமானிக்காமல், அண்ணன் மகனை முன்னுக்கு கொண்டு வரத் துடிக்கும் சித்தப்பாவின் அருமை செல்வங்களாக நினைத்து நினைத்து, இப்போது அவர்களை என் குழந்தைகளாக நினைக்கிறேன். இதற்கு பெருமைப்படாமல் சித்தி, பொறாமைப் படுகிறாள். ஆனாலும், அவள் என்னை ஏச வேண்டும். அதை நான் உன்னிடம் ஒப்பிக்க வேண்டும். நீ வழக்கம்போல் ஆறுதல் கூறவேண்டும் என்று என்னை அறியாமலேயே ஒரு எண்ணம் வருகிறது. சித்தியையும் அதிகமாக குறை சொல்ல முடியவில்லை. என்னை திட்டுவது போலத்தான், தான் பெற்ற குழந்தைகளையும்<noinclude></noinclude> 8x3ynd2rqrreprokc6vlyfkjgwkd9e8 பக்கம்:ஒத்தை வீடு.pdf/165 250 202645 1838397 762222 2025-07-03T05:14:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||165}}</noinclude>திட்டுகிறாள். வஞ்சகம் இல்லாமல் எனக்கு உணவளிக்கிறான். ஆபீசர் சித்தப்பாவிடம் அதிக எதிர்பார்ப்புகளோடு வந்தவளுக்கு, அவரது நேர்மை விலங்கிட்டிருக்குமோ என்று ஐயப்படுகிறேன். சித்தப்பா மீது காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறாளோ என்னவோ. ஆனாலும், சித்தி என்னை திட்டும் போதெல்லாம், நீ அங்கே தோன்றி அவளிடம் எதிர் கேள்வி கேட்டு அடக்குவதுபோல் கற்பித்து கொள்கிறேன். யதார்த்தமான நிசத்திலிருந்து தப்பிக்கத் தோன்றும் முட்டாளின் சொர்க்கம் என்று நினைக்காதே. நீதான் என் சொர்க்கம்.” “எதை நீக்க முடியாதோ, அதை சகித்துக் கொள்ள வேண்டும் என்பது ஆங்கிலப் பழமொழி. சித்தியின் ஏச்சான ‘எச்சிக்கல பயலே... வாங்கிக் குடித்த பய மவனே... எறப்பாளி...’ என்பன போன்ற வார்த்தைகளை ‘நீங்கள் நேர்மையானவர்... வெள்ளந்தி... எதிர்கால வி.ஐ.பி.’ என்று நீ சொல்லும் வார்த்தைகள் சித்தியின் வார்த்தைகளை துரத்தி விடுகின்றன.” “சித்தியின் ஏச்சை நான் பொறுத்துக் கொள்வதால், நான் சுயமரியதைக்காரன் அல்ல என்று பொருள் அல்ல. என் பெற்றோர், என்னை அப்படியும் வளர்க்கவில்லை. நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம். என் தந்தை, தனது தம்பியான என் சித்தப்பாவை சக்திக்கு மீறி படிக்க வைத்தவர் இதர சித்தப்பாக்கள் அவனை ஏன் படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டபோது, அவர்களுக்கு வாயால் சூடு போட்டவர். எப்போதுமே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுமாய் ஒரு தூசி தும்பு படாமல் இருப்பவர். விவசாய உழைப்பாளி அல்ல. அதேசமயம் பத்தாயிரம், இருபதாயிரம், ஐம்பதாயிரம் என்று சீட்டுப் போட்டு, அதில் மாதா மாதம் கிடைக்கும் ஏழாயிரம், எட்டாயிரம் ரூபாயை சேமித்து தனது இரண்டு தங்கைகளை கரையேற்றியவர். இதனாலேயே ஊரில் அவருக்கு நல்ல பெயர்.” “ஆனாலும், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதித் தீ, எங்கள் கிராமத்தையும் பற்றிக் கொண்டது. இந்தச் சாக்கில், சீட்டுப் பணத்தை ஏலத்தில் எடுத்த பிற சாதியினர், மீதி பணத்தை கட்டவில்லை. அப்பாவிடம் சீட்டுக் கட்டியதற்கான எந்தவித ரசீதும் இல்லாததால், அவரால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதேபோல், அவரும் ஆதாரம் இல்லை என்ற சாக்கில் சீட்டை ஏலத்தில் எடுக்காதவர்களுக்கு பட்டை நாமம் போட்டிருக்கலாம். அப்படி அவர் செய்ய மனம் வரவில்லை. சீட்டு கட்டியவர்கள், தத்தம் மகள்களை கரையேற்றுவதற்காக பணம் போட்டவர்கள். இக்கட்டான நிலையில் இருந்த அப்பாவுக்கு, வசதியான கிராமத்து சித்தப்பாக்கள் உதவிக்கு வராமல் தங்களது<noinclude></noinclude> rp2h1489iosvyol6wg8ywrf1nvjh9qp பக்கம்:ஒத்தை வீடு.pdf/166 250 202647 1838405 762223 2025-07-03T05:29:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|166||புதைமண்}}</noinclude>சீட்டுப் பணத்தையும் அவர் தந்தாக வேண்டுமென்று அரிவாள் கம்போடு வந்தார்கள். அத்தைமார்களோ, உதவப் போன கணவன் மார்களை ஏலத்தில் குரல் எழும்புவது போல் திட்டித் தீர்த்தார்கள். எனக்கு ஒரு புதிராகவே இருக்கிறது கவிதா. பொதுவாக வறுமைப்பட்ட ஒரு குடும்பத்தில் அனைவரையும் கரையேற்றும் மூத்த அண்ணன் அல்லது மூத்த சகோதரி கடைசியில் அதே குடும்பத்தாரால் உதாசீனப்படுத்தப்படுகிறார். இது எங்கப்பாவுக்கு மட்டும் நேருவது அல்ல. பலருக்கு நடந்திருக்கிறது. சமூக இயல் நிபுணர்களும், மனோதத்துவ நிபுணர்களும்தான் இத்தகைய உதாசீனத்திற்கு காரணங்கள் கூறவேண்டும். சரி விஷயத்திற்கு வருகிறேன்.” “என் தந்தையிடம் மஞ்சள் கடிதாசு கொடுக்கும்படி சண்டைக்கு வந்த சாதிக்காரர்களே ஆலோசனை சொன்னார்கள். ஆனாலும் என் தந்தை கொஞ்சநஞ்சமிருந்த சொத்தையும் அம்மாவின் நகைகளையும் விற்று, அத்தனை பேருக்கும் கட்டிய பணத்தை திருப்பிக் கொடுத்தார். இப்போது ஒரு சின்னப் பெட்டிக் கடை வைத்திருக்கிறார். ஆனாலும் அவரது குனிந்த தலை குனிந்தபடியே இருக்கிறது. அந்த தலையை நிமிர்த்துவதுதான் என் முதல் பணி. இரண்டாவதுதான் நீ. இதை நீ தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. காரணம் மூன்றாவதுதான் நான்.” “ஊருக்கு வந்த பிறகுதான், சித்தப்பாவுக்கும் சித்திக்கும் விவகாரமே தெரியும். மாதச் சம்பளக்காரரான சித்தப்பாவாலும் ஏதும் பெரிதாய் உதவ முடியவில்லை. தனது பங்குக்கு உரிய சொத்தையும் விற்கும்படி சொன்ன சித்தப்பாவை, அப்பா கண்ணீர் மல்கி கட்டித் தழுவி அழுதார். ஆனால், மறுத்துவிட்டார். அப்பா அழுவதை அப்போதுதான் பார்த்தேன். ஒரு தாய் மக்கள், பங்காளிகளாக மாறும்போது எனது தந்தையும் சித்தப்பாவும் ராம லட்சுமணர்கள். ராமரும், லட்சுமணரும், வெவ்வேறு தாய்க்கு பிறந்தவர்கள். ஆகையால், அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிந்தது. ஆனால், ஒருதாய் மக்கள் என்றைக்குமே ஒற்றுமையாக இருந்ததில்லை. இதற்கு விதிவிலக்கு என்னுடைய அப்பா-சித்தப்பா. பிளஸ் டூ முடித்த என்னை கல்லூரியில் படிக்க வைப்பதாக சித்தப்பா அப்பாவிடம் கேட்டுக் கொண்டார் அதுவும் அழுதபடியே கேட்டார். சொத்து என்று வந்தபோது அழுது மறுத்த அப்பா, எனது படிப்பு என்று வந்தபோது ‘உன் பிள்ளை எடுத்துக்கோ’ என்றார். சித்தியும், “நீ, நான் பெறாமல் பெற்ற பிள்ளை” என்றாள். இந்த சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. சித்திக்கு நம்பிக்கையான ஒரு வேலைக்காரன் வேண்டும் என்று. பால் கொடுக்கும் மாட்டை பல்லை பிடித்து பார்க்கக்கூடாதுதான்.<noinclude></noinclude> qfrnsn5joi3tj5ldbdug0l2pkh6pu80 பக்கம்:ஒத்தை வீடு.pdf/167 250 202649 1838407 762224 2025-07-03T05:38:00Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||167}}</noinclude>ஆனாலும், உன்னிடம் மட்டுமே இதை தெரிவித்தேன். தெரிவிக்கிறேன்.” “இன்று, உன் வீட்டில், நான் உன்னை சந்திப்பது இதுவே முதலாவதாகவும் கடைசியாகவும் இருக்க வேண்டும். அதேசமயம், புனைப் பெயர்களில், நீ, என் கல்லூரி முகவரிக்கும், நான் உன் பள்ளி முகவரிக்கும் கடிதம் எழுதிக் கொள்வோம். உன் பெயர் கவியரசன். என் பெயர் செல்வி. நான் நம் இருவருக்கும் சூட்டியிருக்கும் பெயர்களின் பொருள் புரிகிறதா மக்கே... காதல் என்று வரும்போது காதலன் காதலியாகிறான். காதலி காதலனாகிறாள்.” “உன் அண்ணன் மோகனனைப் பற்றி அதிகமா நீ அலட்டிக்க வேண்டாம். அவரை வெறுக்கவும் வேண்டாம். எனக்கு என்னமோ, அவர் நல்லவர் போலவே படுகிறது. நீயும் உன் தந்தையும் கெளரவத்தை பார்க்காமல் அவரிடம் கனிவாக பேசினால் அவரும் கனிந்து விடுவார். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த விவகாரத்தை நான் எழுப்புவது உனக்கு எரிச்சலை கொடுக்கலாம். ஆனால், என் மைத்துனர் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன?” {{rh|||இப்படிக்கு முத்தங்களுடன்,<br><b>செல்வா.</b>}} மோகனன், கடிதத்தின் முன்னுரையை படித்துவிட்டு கண் கலங்கினான். சுழித்த புருவங்கள் இறங்கின. செல்வாவை பாசத்தோடு பார்த்தான். கொடுமைக்குள்ளாகும் பெரிய இடத்துப் பெண்களுக்கு திரௌபதி வேடம் போடுகிறவன்மீது ஒன்றிப்பு ஏற்படுவதுபோல, இவனுக்கும் செல்வாவிடம் ஒரு ஒன்றிப்பு ஏற்பட்டது. ஆனால், செல்வாவோ- “என்னை விட்டுடுங்க ஸார்... வேணுமுன்னால் அடியுங்க ஸார்... இப்படி எழுதுனது தப்புதான் ஸார்... இதை மட்டும் நீங்க என் சித்தப்பா கிட்டயோ, சித்தி கிட்டயோ சொன்னால், என் படிப்பு கெடும். அதைப் பற்றிக்கூட நான் கவலைப்படல ஸார். ஆனால், சித்தப்பா, நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டனேன்னு என்னைப் பார்க்கிற பார்வையையோ, என் பெற்றோர் தலைகள் மேலும் தாழ்வதையோ பார்த்துகிட்டு நான் உயிரோட இருக்கமாட்டேன் ஸார்... நீங்கதான் ஸார் என்னை காப்பாத்தணும்...” எதிர்பாராத விதமாக, செல்வா, மோகனனின் காலில் விழுந்தான். அந்தக் காலை கட்டிக்கொண்டே தலையை முட்டினான், மோதினான். மோகனனும், எந்தவித விகற்பமும்<noinclude></noinclude> 3my7q6qdjnvuoolsvfohc5zdlnppg7l பக்கம்:ஒத்தை வீடு.pdf/168 250 202651 1838411 762225 2025-07-03T05:47:49Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|168||புதைமண்}}</noinclude>இல்லாமல், மனித நேயத்தோடு செல்வாவை தூக்கி நிறுத்தினான். அவன் கண்ணீரை துடைத்து விட்டான். தலையை கோதிவிட்டான் அழாதடா... அழாதடா... நீ நினைக்கிறபடி எதுவும் நடக்காதுடா... என்றபோது செல்வா, விம்மி வெடித்து அவன் மார்பில் சாய்ந்தான். மோகனனின் அகமும் புறமும் தீப்பற்றியது. இதயத்திலிருந்து ரத்தம் கீழ்நோக்கிப் பெருகி ஓடியது. நரம்புகள் புடைத்தன. ரத்தக் கோளங்கள் அகலமாகி, ஆழமாயின. மோகனன் ‘பயப்படாதடா... பயப்படாதடா... என்னால உன் காதலுக்கோ படிப்புக்கோ தடங்கல் வராது... வா கண்ணு... உள்ளே போய் விலாவாரியாய் பேசலாம்...’ என்றான். மோகனனின் அறைக்கதவு. அவனையும் செல்வாவையும் உள்ளே அனுப்பியபடியே, தானாக ஒட்டிக் கொண்டது. அப்படிப்பட்ட பூட்டு கொண்ட கதவு. அதாவது ஆட்டோமேடிக் கதவு சாதாரண கதவல்ல... அசாதரணமாய் தாளிடும் கதவு. {{dhr|2em}} <section end="6"/><section begin="7"/> {{larger|<b>7</b>}} {{dhr|2em}} சித்திக்காரி, வாசலுக்கும், தெருவுக்குமாய் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். பற்கள் ஒன்றை ஒன்று கடித்துக் குதறப் போயின வாய், செல்வாவை கொண்டு வந்த கணவனையும், அதற்கு உடந்தையாக இருந்த தன்னையும் திட்டிக் கொண்டது. ‘மணி இப்போதே நான்கு. காபி குடித்தால்தான் சமையல் செய்கிற மூடு வரும். குழந்தைகளா அவை? அசல் பேய்கள். அப்பன் மௌனசாமி என்றால், அதற்கு எதிரான குரங்குகள். ‘அம்மா அம்மா’ என்று அரற்றினால்கூட, ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். ஆனால், அண்ணனாம்... அண்ணன்... வரட்டும் இந்த அண்ணன்... வரட்டும் அந்த மனுஷர்...’ நல்லவேளையாக, சித்தப்பாவின் வீட்டிலிருந்து அந்த அரண்மனை வீட்டை பார்க்க முடியாது. இது உள்ளே தள்ளியும், அது வெளியே துருத்தியும் இருந்தன. செல்வா வீதியில் வருவதைத்தான், சித்தி, பார்த்தாள். தட்டுத் தடுமாறி வந்த அவனை நோக்கி, அதுவரைக்கும் பொறுக்க முடியாமல் வேக வேகமாய் நடந்தாள் ஆத்திரத்தில் அவன் உருவம் மட்டுமே அவளுக்கு மங்கலாகப் பதிந்தது. அந்த உருவத்தின் தடயங்கள் தட்டுப்படவில்லை.{{nop}}<noinclude></noinclude> ons3utlz631krp946ujbjh61ohnht8s பக்கம்:ஒத்தை வீடு.pdf/169 250 202653 1838416 762226 2025-07-03T05:57:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||169}}</noinclude>“நாயை குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும், அது காளு காளுன்னு கத்துற புத்திய விடாதாம். பால் எங்கேடா... பை எங்கேடா...” செல்வா, தட்டுத் தடுமாறி பதில் அளித்தான். அதில் முன்னெச்சரிக்கையும் உள்ளடங்கி இருந்தது. புரைதீர்ந்த பொய்யே மெய்யாய் பேசியது. “போகிற வழியில் மயங்கி விழுந்துட்டேன் சித்தி. இன்னும்கூட மயக்கம் முழுசா போகல சித்தி.” சித்திக்காரி, அப்போதுதான் அவனை ஏற இறங்கப் பார்த்தாள். செல்வா முகத்தில் கடிக்காயங்கள். கைகளில் சிறாப்புகள். கழுத்தில் நகக் கீறல்கள். கண்கள் பசுமையற்ற தரிசு நிலமாய் தோன்றியது. சட்டைப் பித்தான்கள் முன்னுக்குப் பின் முரணாக மாட்டப் பட்டிருந்தன. மனச் சிதைவுகளை மறைக்க முடிந்த தன்னால், இந்த உடல் சிதைவுகளுக்கு எப்படி விளக்கம் அளிப்பது என்று அவன் குழம்பியபோது, சித்தியின் கேள்வியிலேயே பதில் கிடைத்தது. அவள் குரல் கனிவாக வரவில்லையானாலும், காய்ப் பழுப்பாய் ஒலித்தது. “முள்ளுச் செடியில விழுந்திட்டியாடா...” “ஆமாம். கருவேல முள்ளுச் செடி...” “எப்போ நடந்தது.” “எது?” “உனக்கு கிறுக்கு புடிச்சுட்டா... எப்போ மயங்கி விழுந்தன்னு கேட்டேன்...” “பால் வாங்கிட்டு வரும்போதுதான் சித்தி. ஆவின் வேன் லேட்டா வந்துது... பால் வாங்கிட்டு வரும்போதுதான் மயங்கி விழுந்துட்டேன்.” “பால் கிடக்கட்டும்... பால் கார்டு எங்க?” “எனக்கே தெரியல சித்தி. எப்படி நடந்ததோ... என்ன நடந்ததோ...” “சரி விழுந்த இடத்தையாவது காட்டித் தொல...” “அதோ அந்த முனையில முள்ளுச் செடி குவியல் இருக்குதே. அதுலதான் சித்தி.” “சரி நீயும் வா. தேடிப் பார்க்கலாம்.”{{nop}}<noinclude></noinclude> 5lyxm6n35b3t7hew2ho32g0qk5kn2x6 1838418 1838416 2025-07-03T05:57:43Z மொஹமது கராம் 14681 1838418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||169}}</noinclude>“நாயை குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும், அது காளு காளுன்னு கத்துற புத்திய விடாதாம். பால் எங்கேடா... பை எங்கேடா...” செல்வா, தட்டுத் தடுமாறி பதில் அளித்தான். அதில் முன்னெச்சரிக்கையும் உள்ளடங்கி இருந்தது. புரைதீர்ந்த பொய்யே மெய்யாய் பேசியது. “போகிற வழியில் மயங்கி விழுந்துட்டேன் சித்தி. இன்னும்கூட மயக்கம் முழுசா போகல சித்தி.” சித்திக்காரி, அப்போதுதான் அவனை ஏற இறங்கப் பார்த்தாள். செல்வா முகத்தில் கடிக்காயங்கள். கைகளில் சிறாப்புகள். கழுத்தில் நகக் கீறல்கள். கண்கள் பசுமையற்ற தரிசு நிலமாய் தோன்றியது. சட்டைப் பித்தான்கள் முன்னுக்குப் பின் முரணாக மாட்டப் பட்டிருந்தன. மனச் சிதைவுகளை மறைக்க முடிந்த தன்னால், இந்த உடல் சிதைவுகளுக்கு எப்படி விளக்கம் அளிப்பது என்று அவன் குழம்பியபோது, சித்தியின் கேள்வியிலேயே பதில் கிடைத்தது. அவள் குரல் கனிவாக வரவில்லையானாலும், காய்ப் பழுப்பாய் ஒலித்தது. “முள்ளுச் செடியில விழுந்திட்டியாடா...” “ஆமாம். கருவேல முள்ளுச் செடி...” “எப்போ நடந்தது.” “எது?” “உனக்கு கிறுக்கு புடிச்சுட்டா... எப்போ மயங்கி விழுந்தன்னு கேட்டேன்...” “பால் வாங்கிட்டு வரும்போதுதான் சித்தி. ஆவின் வேன் லேட்டா வந்துது... பால் வாங்கிட்டு வரும்போதுதான் மயங்கி விழுந்துட்டேன்.” “பால் கிடக்கட்டும்... பால் கார்டு எங்க ?” “எனக்கே தெரியல சித்தி. எப்படி நடந்ததோ... என்ன நடந்ததோ...” “சரி விழுந்த இடத்தையாவது காட்டித் தொல...” “அதோ அந்த முனையில முள்ளுச் செடி குவியல் இருக்குதே. அதுலதான் சித்தி.” “சரி நீயும் வா. தேடிப் பார்க்கலாம்.”{{nop}}<noinclude></noinclude> 21jlfq8mnn24jxgs79469ww66253gw3 பக்கம்:ஒத்தை வீடு.pdf/170 250 202655 1838423 762228 2025-07-03T06:04:52Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|170||புதைமண்}}</noinclude>செல்வா, பிட்டத்தைப் பிடித்தபடியே அவள் முன்னால் நடந்தான் இடையில் வயிறு குமட்டியது. குடலே வெளியே வருவது போன்ற வாதையோடு வாந்தி எடுத்தான். வெள்ளை வெள்ளையான வாந்தி கோளையைப் போலவோ இல்லாமல், சாப்பிட்ட உணவுக் குழம்புபோல் அல்லாமல், வெள்ளை வெள்ளையாக, வெள்ளைத் திரள்போல் வெளிப்பட்ட வாந்தி. எல்லாம் முடிந்தபிறகு, அந்த அறைக்குள்ளேயே மோகனன் உடைகளை சரிப்படுத்திக் கொண்டிருந்தபோது, மோகனனின் கண் முன்னாலேயே, வாய்க்குள் விரல்விட்டு, தொண்டை வரைக்கும் விரல்களை துழவவிட்டு, மஞ்சள் பூசியது போன்ற வெள்ளை திரவத்தை வாந்தி வாந்தியாய் எடுத்தான். வாய்க்குள் விட்ட கையால் மோகனனின் வயிற்றில் குத்தியபடியே, ‘தேவடியா மவனே... இதோடயாவது என்னை விடுடா... நீ நாசமாய் போக... கவிதா சொன்னது மாதிரி நீ ஒரு காட்டுமிராண்டி... அசிங்கம் பிடிச்சவன்னு அவள் சொன்ன அர்த்தத்துக்கு இப்பதாண்டா அர்த்தம் புரியுது. ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாத ஒனக்கு தங்கைக்கும் தாரத்துக்கும்கூட வித்தியாசம் தெரியாது. அவளையாவது விட்டு வையுடா... என்னைப் போக விடுடா... புறம்போக்குப் பயலே. போக்கிரி நாயே...’ என்று பிரமை கலைந்தும், கலைத்தும் கொதித்து கொதித்துப் பேசினான். தலைகுனிந்து நின்ற மோகனன், கதவை திறந்துவிட்டு, கட்டிலில் படுத்து விழியாடாது கிடந்தான். அப்போது செயற்கையாக வரவழைக்கப்பட்ட வாந்தி, இப்போது சித்தியின் முன்னிலையில் இயற்கையாக வந்தது. குடலைக் கழுவி விட்டதுபோல் உணவுக் கூழ்களையும், கத்தரிக்காய் துண்டுகளையும் வெளியே கொட்டியது. அவனுக்கு உடனே, அம்மாவின் ஞாபகம் வந்தது. கிராமத்தில் ஒரு தடவை மஞ்சள் மஞ்சளாய் அவன் பிந்த வாந்தி எடுத்தபோது, அம்மா, இவன் தலையை பிடித்துக் கொண்டாள். முகத்தை நிமிர்த்தி, அதில் படிந்த வாந்தியை தனது முந்தானையால் துடைத்துக் கொண்டு தோளுக்கு மேலே போன தன் பிள்ளையை, தனது தோளில் சாய்த்துக் கொண்டாள் அப்பா ஓடோடி வந்து துடித்துப் போய் நின்றார். அக்காக்கள் அவன் கரங்களை ஆளுக்கு ஒன்றாய் பிடித்துக்கொண்டு அவனை சோகத்தோடு பார்த்தார்கள். பெரிய அக்கா அவன் கலைந்து போன சட்டையை சரிப்படுத்தினாள் சின்னக்கா, அவன் வாயை துடைத்து விட்டாள். இப்படி அவன் நினைத்துக் கொண்டிருந்த போது, சித்திக்காரி அவன் வாந்திக்கு நேர்முக வர்ணனை கொடுத்தாள்.{{nop}}<noinclude></noinclude> c4m2p1e0szop8c66wzavr4hxbe2cpii பக்கம்:ஒத்தை வீடு.pdf/171 250 202657 1838425 762229 2025-07-03T06:06:07Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||171}}</noinclude>"கொஞ்சமா தின்னாத்தானே..? வயிறு முட்ட சாப்பிடலாம்- வாய் முட்ட சாப்பிட்டால், இப்படித்தான் வாந்தி வரும்..சரி. புறப்படு. பால் கார்டை தேடிப் பார்க்கலாம்." செல்வா, தெருவில் அப்படியே உட்கார்ந்தான். திக்கித் திக்கி பதிலளித்தான். என்னால ஒரு அடிகூட நகர முடியல... நீங்க போய் தேடிப்பாருங்க சித்தி..." "எல்லாம் என் தலைவிதி. வேலியில போற ஓணானை பிடிச்சு காதுல விட்ட கதை." சித்திக்காரி, அந்த மூலை முடுக்கு முட்புதர் பக்கம் ஓடினாள். இதற்குள் அந்த தெருவாசிகளில் ஒரு சிலர் வழியில் வாந்தி சாட்சியாக உட்கார்ந்திருந்த செல்வாவை கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டுபோய் வீட்டில் விட்டார்கள். அருணும், சுபேதாவும் அவனை ஓடி வந்து பிடித்துக் கொண்டார்கள். இந்த இரண்டு பிள்ளைகளையும் இடுப்போடு சேர்த்து அணைத்தபடியே அறைக்குள் போனான். கட்டிலில் குப்புறப் படுத்தான். குழந்தைகள் 'அண்ணா.. அண்ணா..' என்று அவனை உசுப்பின. அவன், கண்களை மூடிக்கொண்டு, ஒரு அனுமானத்துடன் அந்த பிள்ளைகளை இருபுறமும் இணைத்துக் ணைத்துக் கொண்டு கேவிக்கேவி அழுதான் குமைந்து குமைந்து புகைந்தான். பிறகு, ஆவேசமாக எழுந்து பேஸ்டை பிரஷ்ஷில் தடவி, பற்களில் தேய்த்தான். உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் தேய்த்தான். வாஷ்பேஷன் தண்ணீரை வாய்க்குள் ஊற்றி தொண்டைக் குழி வரைக்கும் செலுத்தி, கவளம் கவளமாய் துப்பினான். தன் பக்கமாய் ஓடி வந்த பிள்ளைகளை அணைத்துக் கொண்டே கட்டிலில் மல்லாக்க விழுந்தான். மோகனன் பயன்படுத்திய வாயை கழுவியாயிற்று. வயிற்றை கழுவியாயிற்று. பின் பக்கத்தை கழுவியாயிற்று. ஆனால், மனதை எப்படி கழுவுவது? இது விபத்து என்று விட்டு விடுவதா? அல்லது சித்தியிடம் சொல்லி புலம்புவதா? சித்தப்பா பஞ்சும் இரும்பும் கலந்து செய்யப்பட்ட மனசுக்காரர். அலுவலகப் போராளி. விவகாரம் தெரிந்தால், அந்த மோகனன் பயலை, கை காலை எடுத்து விடுவார். இல்லயைானால் காவல் துறைக்குப் போவார். விசாரணை, அடிதடி என்று எல்லாமே வெளிப்படும். கவிதா வெளிப்படுவாள். இவன் வெளிப்படுவான். ஏற்கெனவே தாழ்ந்து போன தந்தையின் தலை கழுத்துக்குக்கீழே போகும். சித்தப்பாவின் பாசமே பாதகமாகும். ராம லட்சுமணரான அண்ணன் தம்பிகளுக்குக்கூட மனஸ்தாபம் ஏற்படலாம்.{{nop}}<noinclude></noinclude> 2hzlyc01wpuml98gjz8r0sclui3kssi 1838439 1838425 2025-07-03T06:40:52Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||171}}</noinclude>“கொஞ்சமா தின்னாத்தானே...? வயிறு முட்ட சாப்பிடலாம்... வாய் முட்ட சாப்பிட்டால், இப்படித்தான் வாந்தி வரும்... சரி. புறப்படு. பால் கார்டை தேடிப் பார்க்கலாம்.” செல்வா, தெருவில் அப்படியே உட்கார்ந்தான். திக்கித் திக்கி பதிலளித்தான். “என்னால ஒரு அடிகூட நகர முடியல... நீங்க போய் தேடிப்பாருங்க சித்தி...” “எல்லாம் என் தலைவிதி. வேலியில போற ஓணானை பிடிச்சு காதுல விட்ட கதை...” சித்திக்காரி, அந்த மூலை முடுக்கு முட்புதர் பக்கம் ஓடினாள். இதற்குள் அந்த தெருவாசிகளில் ஒரு சிலர் வழியில் வாந்தி சாட்சியாக உட்கார்ந்திருந்த செல்வாவை கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டுபோய் வீட்டில் விட்டார்கள். அருணும், சுபேதாவும் அவனை ஓடி வந்து பிடித்துக் கொண்டார்கள். இந்த இரண்டு பிள்ளைகளையும் இடுப்போடு சேர்த்து அணைத்தபடியே அறைக்குள் போனான். கட்டிலில் குப்புறப் படுத்தான். குழந்தைகள் ‘அண்ணா... அண்ணா...’ என்று அவனை உசுப்பின. அவன், கண்களை மூடிக்கொண்டு, ஒரு அனுமானத்துடன் அந்த பிள்ளைகளை இருபுறமும் இணைத்துக் கொண்டு கேவிக்கேவி அழுதான் குமைந்து குமைந்து புகைந்தான். பிறகு, ஆவேசமாக எழுந்து பேஸ்டை பிரஷ்ஷில் தடவி, பற்களில் தேய்த்தான். உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் தேய்த்தான். வாஷ்பேஷன் தண்ணீரை வாய்க்குள் ஊற்றி தொண்டைக் குழி வரைக்கும் செலுத்தி, கவளம் கவளமாய் துப்பினான். தன் பக்கமாய் ஓடி வந்த பிள்ளைகளை அணைத்துக் கொண்டே கட்டிலில் மல்லாக்க விழுந்தான். மோகனன் பயன்படுத்திய வாயை கழுவியாயிற்று. வயிற்றை கழுவியாயிற்று. பின் பக்கத்தை கழுவியாயிற்று. ஆனால், மனதை எப்படி கழுவுவது? இது விபத்து என்று விட்டு விடுவதா? அல்லது சித்தியிடம் சொல்லி புலம்புவதா? சித்தப்பா பஞ்சும் இரும்பும் கலந்து செய்யப்பட்ட மனசுக்காரர். அலுவலகப் போராளி. விவகாரம் தெரிந்தால், அந்த மோகனன் பயலை, கை காலை எடுத்து விடுவார். இல்லயைானால் காவல் துறைக்குப் போவார். விசாரணை, அடிதடி என்று எல்லாமே வெளிப்படும். கவிதா வெளிப்படுவாள். இவன் வெளிப்படுவான். ஏற்கெனவே தாழ்ந்து போன தந்தையின் தலை கழுத்துக்குக்கீழே போகும். சித்தப்பாவின் பாசமே பாதகமாகும். ராம லட்சுமணரான அண்ணன் தம்பிகளுக்குக்கூட மனஸ்தாபம் ஏற்படலாம்.{{nop}}<noinclude></noinclude> ozz9nfoeib6ya3kzdvm2es5oc6em4zh பக்கம்:ஒத்தை வீடு.pdf/172 250 202659 1838445 762230 2025-07-03T06:52:15Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|172||புதைமண்}}</noinclude>செல்வா, திகைத்து நின்ற குழந்தைகளின் தோள்களில் கையூன்றியபடியே, படுக்கையில் இருந்து எழுந்தான். பிறகு அப்படியே விழுந்தான். ஒரு சாய்த்து படுத்தான். மீண்டும் அந்த குழந்தைகளை பிடித்துக் கொண்டு ஒப்பாரி குரலில் அழுதான். இதற்குள் சித்திக்காரியும் கூக்குரலோடு வந்தாள். அவள் கை எங்கும் முள் துவாரங்கள். ஒருச் சாய்ந்து கிடந்தவனுக்கு முன்னால் தன் கைகளை நீட்டி நீட்டி பேசினாள். “காபி இல்லாமலும் பண்ணிட்டே... கையிலேயும் முள்ள குத்த வச்சுட்டே... கார்டையும் தொலைச்சுட்டே... இப்போ ஒனக்கு திருப்தி தானடா? ஏ! நாய்ங்களா... இன்னிக்கு மட்டும் காப்பி கீப்பி கேட்டிங்கன்னா... தோலை உரிச்சுடுவன்... எல்லாம் என் தலைவிதி... வீட்டுக்குள்ள ஆமை வந்தது மாதிரி.” செல்வா, தலையை மட்டும் பாம்பு படம் மாதிரி தூக்கிக்கொண்டு பதிலளித்தான். இதுவரை நேருக்கு நேராய் பார்க்க அஞ்சிய சித்தியை, நேரடியாக பார்த்தபடியே பேசினான். “வேணுமுன்னா, என்ன ஒரேயடியா வெட்டிப் போடுங்க சித்தி. ஏற்கெனவே நொந்து போயிருக்கேன். இந்த பிள்ளைகளுக்காக பார்க்கிறேன். இல்லாட்டா இப்பவே இந்த வீட்டை விட்டு ஓடிடுவேன். எல்லாரும் சாகப் போறதே போறம். இடையில் எப்படி வாழ்ந்தால் என்ன. படிக்காதவன்லாம் வாழாமலா போயிட்டான். ஓடிப் போனவங்களும் உருப்பட்டிருக்காங்க சித்தி... தப்பா பேசியிருந்தால், மன்னிச்சிடுங்க சித்தி... என்ன பேசறதுன்னே எனக்குத் தெரியல...” சித்திக்காரி, வாயடைத்துப் போனாள். அவனுக்குள்ளும் ஒரு மனமும், அந்த மனதிற்குள் ஒரு ரோசமும் இருப்பதை முதல் தடவையாக புரிந்து கொண்டாள். பதில் ஏதும் பேசாமல் அப்படியே சிறிது நேரம் சுய பரிசீலனையில் ஈடுபட்டவள்போல் நின்றாள். அப்போது பார்த்து, ‘மேடம்’ என்ற குரல். சித்திக்கு அடையாளம் காண முடியாத குரல். ஆனால், செல்வாவிற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பரிட்சயப்பட்ட குரல். சித்தி வெளியே வந்தாள். வந்தவனைப் பார்த்ததும் “உட்காருங்க ஸார்... உட்காருங்க ஸார்...” என்று பரபரப்பான குரலோடு பேசினாள். அங்குமிங்குமாய் அலை மோதினாள். செல்வா, துள்ளிக் குதித்து, வாசல் பக்கமாய் நின்று கொண்டான். காட்டுமிராண்டிப் பயல், ‘உன் சித்தியை டாவடிக்கட்டுமா’ என்று தன்னிடமே கேட்ட பயல்... கெட்ட பயல்... என்ன ஆனாலும் சரி. அவனை ஒரே வெட்டாய் வெட்டி சித்தியின்<noinclude></noinclude> nxv8u6f67e81jomuqes6mvehwa8p6o6 பக்கம்:ஒத்தை வீடு.pdf/173 250 202661 1838449 762231 2025-07-03T06:58:07Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||173}}</noinclude>கற்பை காப்பாற்றணும்... செல்வா, அரிவாளை தேடிக் கொண்டிருந்தபோது, மோகனன் குரல் மீண்டும் கேட்டது. “உங்க பால் கார்டுன்னு நினைக்கேன். வழியில் கிடந்தது.” சித்தி, அந்த பால் கார்டை வாங்கி உற்றுப் பார்த்தபடியே, “ரொம்ப நன்றி ஸார்” என்றாள். கண்களை சுழலவிட்ட மோகனனுக்கு கதவிடுக்கில், செல்வா, அரிவாளோடு நிற்பது தெரிந்தது. சித்திக்காரிக்கு பதிலளிப்பதுபோல் அவனுக்கு பதிலளித்தான். “ஸார்ன்னு கூப்பிடாதிங்கம்மா... சத்தியமாச் சொல்றேன். உங்களைப் பார்க்கிறதுக்கும் கேட்கிறதுக்கும் எங்கம்மாவைவிட ஒசத்தியாவே நீங்க தோணுது... நான் இனிமேல் எந்தத் தப்பும் செய்யக்கூடாதுன்னு என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா...” மோகனன், செல்வாவை கண் தாழ்த்திப் பார்த்துவிட்டு, தலை தாழ்த்திப் போய்க் கொண்டிருந்தான். சித்திக்காரி, செல்வாவின் அறைக்குள் வந்தாள். “ஐ.ஏ.எஸ் ஆபீசர் மகன். பெத்த தாய்கிட்ட பேசுறது மாதிரி பேசுறான். உனக்கு நான் தாய் மாதிரி. நீ என்னடான்னா, சொல்லப் பொறுக்கல... ஒன்னை திட்டுறதுக்கு எனக்கு உரிமை கிடையாதா?” செல்வா, சித்தியின் கைகள் இரண்டையும் பிடித்து, கண்களில் ஒற்றிக்கொண்டு, மாங்கு மாங்கென்று அழுதான். {{dhr|2em}} <section end="7"/><section begin="8"/> {{larger|<b>8</b>}} {{dhr|2em}} அன்றிரவு, சித்திக்காரியே, அவனுக்கு அறைக்குள்ளேயே தட்டோடு உணவை கொண்டு வந்தாள். “சாப்பிடுப்பா” என்று ஊட்டிவிடாத குறையாக, “டா”வை, “பா”வாக்கினாள் உடனே, சாப்பாட்டு மேஜையிலிருந்த குழந்தைகளும் தட்டுக்களோடு உள்ளே ஓடி வந்தன. சித்தியிடம் ஏற்பட்ட மாற்றத்தை புரிந்துகொள்ளும் நிலையில் செல்வா இல்லை. ஆனாலும், குப்புறக் கிடந்தவன், அவளுக்கு மரியாதை காட்டுவது போல் பரபரப்பாக உடல் நிமிர்த்தி எழுந்தான். கடந்த ஆறு மாத காலத்தில் அம்மா ஊட்டிய சாதத்தை குழந்தைகள் வேண்டா வெறுப்பாய் உண்டுவிட்டு, அண்ணனோடு தூங்கி விட்டன.{{nop}}<noinclude></noinclude> 7nge40xakt99ekilat7g06e157u6zx0 பக்கம்:ஒத்தை வீடு.pdf/174 250 202663 1838471 762232 2025-07-03T07:38:07Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|174||புதைமண்}}</noinclude>செல்வா, தன்னையே சித்தி பார்த்துக் கொண்டிருப்பதை ஓரக் கண் போட்டுப் பார்த்தான். அவசர அவசரமாக கத்தரிக்காய் சாம்பாரை வெள்ளை சாதத்தில் பிசைந்து இலை தளை கலவையாக்கி ஒரு கவளத்தை வாய்க்குள் கொண்டு போனான். அவனை அறியாமலேயே வாய்க்குள் சோறு போனபோது, மத்தியானம் நடந்தது சோற்றோடு கலப்படமானது. குமட்டிக்கொண்டு வந்தது. இதற்குள் சித்திக்காரி, தானும் நல்லவள்தான் என்ற நினைப்போடு திருப்தியோடு போய்விட்டாள். அவள் போனதும் செல்வா, பத்து நிமிடம் வரை சோற்று தட்டையே வெறித்துப் பார்த்தான். பின்னர், முன்னெச்சரிக்கையாக, கதவை தாளிட்டுக்கொண்டான். மேற்குப் பக்கமாக உள்ள ஜன்னல் வழியாக ஒவ்வொரு கவளமாக எடுத்து வெளியே வீசினான். ஒரு பக்கம் வீசினால், வாசல் பெருக்கும் வேலைக்காரம்மாவுக்கு சந்தேகம் வரலாம் என்று நினைத்ததுபோல், இன்னொரு பக்க ஜன்னல் வழியாக எஞ்சியவற்றை பன்னீர் தெளிப்பதுபோல் அங்குமிங்குமாய் வீசினான். முழுமையான முட்டையை கசக்கி சிதைத்து வெளியே வீசியபோது, சித்தியின் உழைப்பை வீணாக்குவது போன்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. பின்னர், உச்சி முதல் பாதம் வரை மூடிக் கொண்டு உருத் தெரியாமல் கிடந்தான். இரவு பத்து மணி அளவில் வந்த சித்தப்பா சிவனுப்பாண்டி, காலையில் காபியோடு அவனை எழுப்பினார். உடம்புக்கு என்னடா என்று கேட்டபடியே, காபி டம்ளரை அவன் பக்கம் நீட்டினார். தாட்சண்யம் கருதியும், சித்தப்பா மீது வைத்திருக்கும் பய பக்தியாலும் அந்த காபியை குடிக்கப் போனான். மீண்டும் குமட்டல். ஒரு சொட்டு காப்பியும் உதடோரத்தில் நீர்க் கோடுகளாய் வெளிப்பட்டன. ஒல்லியானாலும் சாட்டைக் கம்பு போல் உறுதியான உடல் படைத்த சித்தப்பா பதறியபடியே கேட்டார். “என்னடா செய்யுது.” “சாப்பிடவோ குடிக்கவோ நினைத்தால் வாந்தி வருவது மாதிரி இருக்குது சித்தப்பா... என்னால உங்களுக்கும், சித்திக்கும் சிரமம் சித்தப்பா...” “எங்கண்ணன் - அதான். உங்கப்பா எனக்காக பட்டிருக்கிற சிரமங்களில் இது ஆயிரத்துல ஒண்ணாக்கூட வராதுடா... வயிறு எதையும் ஏற்க மாட்டேங்குதுன்னா, அது மஞ்சள் காமாலையாய் இருக்கலாம். லட்சுமி... கொஞ்சம் வாயேன்.”{{nop}}<noinclude></noinclude> rn2p3pu3g1z1r42xh3rkzd563esejml பக்கம்:ஒத்தை வீடு.pdf/175 250 202665 1838476 762233 2025-07-03T07:45:18Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||175}}</noinclude>சித்திக்காரியான லட்சுமி வாசல் காலில் நின்றபடியே, கணவனை புருவச் சுழிப்போடு பார்த்தாள். அவர் விளக்கினார். “இவனுக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கும்போல தோணுது. எதுக்கும் கொஞ்சம் பழைய சாதத்த எடுத்துட்டு வா இவன் சிறுநீர கலந்து பார்க்கலாம்.” “நேற்று ராத்திரி நல்லாத்தானே சாப்பிட்டான்.” “நேற்று ராத்திரி கிடக்கட்டும். இப்போ சாப்பிட நினைச்சாலே வயிறு குமட்டுதாம்.” “என்ன வயிறோ.” சித்திக்காரி, பழையபடியும் - அதேசமயம் பாதியளவு மட்டுமே முருங்கை மரத்தில் ஏறினாள். நேற்று கணவரிடம் எதிர்பார்த்தது கிடைக்காததால் அந்தக் கோபத்தை இப்படிக் காட்டினாள். என்றாலும், ஒரு தேங்காய் சிறட்டையில், பழைய சாதத்தை வைத்து குளியலறையில் வைத்து விட்டுப் போனாள். அவள் வெளியே வந்ததும், செல்வா உள்ளே போனான். பத்து நிமிடம் கழித்து சித்தப்பா போனார். வெள்ளைச் சாதம் மஞ்சளாகவில்லை. அவன் இமைகளை விலக்கி, விழிகளைப் பார்த்தார். மஞ்சள் நிறம் இல்லை. காமாலை இல்லை என்று கண்டறிந்ததும் அவருக்கு மகிழ்ச்சி. ஆனாலும், டாக்டரிடம் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். என்றும் நினைத்துக் கொண்டார். உடல் நிலை என்று வரும்போது. சுய அனுமானமும் சுய மருந்தும் தவறானவை என்பதை புரிந்து வைத்திருப்பவர். அண்ணன் மகனுக்கு சிறிது அதட்டலாக ஆணையிட்டார். “சீக்கிரமா டிரெஸ் பண்ணுடா. எனக்குத் தெரிந்து, மஞ்சள் காமாலை இல்லை. ஆனாலும், டாக்டர்கிட்ட டெஸ்ட் செய்து பார்க்கலாம்.” வேறு வழியில்லாமல், செல்வா, அவசர அவசரமாய் லுங்கியில் இருந்து விடுபட்டு, பேண்ட் சட்டைக்குள் போனான். சித்தப்பா, அவனை கைத்தாங்கலாக நடத்தியபடியே, ‘லட்சுமி... இவனை டாக்டர்கிட்ட காட்டிட்டு வாறேன்’ என்ற விளக்கத்திற்கு, ஆங்காரமாக ‘ஊங்’ கொட்டினாள். வீதி வழியாக, அவளை விலாவோடு சேர்த்து அணைத்தபடி நடத்திக் கொண்டு வந்த சித்தப்பா, ‘அந்த ஸ்கூட்டர் ஸ்டாண்டு வரைக்கும் தம்பிடிச்சு நடந்திடு’ என்றார் போவோர் வருவோர் அந்த இருவரையும் போய்க் கொண்டும், நின்றும் பார்த்தார்கள். செல்வாவிற்கு என்ன என்பது மாதிரி கண்களால் கேட்டார்கள்.<noinclude></noinclude> 401oyllfm7amt3d7fcjtx8ab2ql5nga பக்கம்:ஒத்தை வீடு.pdf/176 250 202667 1838480 762234 2025-07-03T07:52:32Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|176||புதைமண்}}</noinclude>சிலர் வாயால் கேட்டார்கள். அந்தத் தெரு வாசிகளுக்கு செல்வா மிகவும் பிடித்துப் போன பையன். அவர்களுக்கு அவசர அவசரமாக விளக்கமளித்துக் கொண்டே சித்தப்பாக்காரர், அந்த அரண்மனை வீட்டுப் பக்கம் வந்தபோது, ஒரு இண்டிகா கார் வெளிப்பட்டது. அவர்கள் அருகே நின்றது. மோகனன் கேட்டான். “எங்க போறீங்க அங்கிள்?” “என்ன மோகனனா! ஒன்னை ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கொரு தடவைதான் பார்க்க முடியுது. இன்னிக்கு நிச்சயம் மழை வரும்.” “அப்போவும் புழல் ஏரி பெருகாமல், நம்மை சிரமப்படுத்தும். இவனோட எங்க அங்கிள் போறீங்க...” “இவனுக்கு சாப்பாட்டை, நினைத்தாலே வாந்தி வருதாம். அதனால மஞ்சள் காமாலையான்னு கண்டுபிடிக்க டாக்டர்கிட்ட போறேன்.” “நல்லவேளை என்கிட்ட சொன்னீங்க அங்கிள்! எனக்கும் சாப்பாட்ட நினைத்தால் குமட்டுது. இதனால் எங்க பேமிலி டாக்டருக்கு போன் செய்தேன். சென்னையில மெட்ராஸ் ஐ மாதிரி, இது ஒரு விதமான வயிற்று நோயாம். நிறைய பேருக்கு வந்திருக்காம். ஆனால், மஞ்சள் காமாலை போல, நாற்பது நாள் தங்காமல் ஒரு ஊசியோட போயிடுமாம். நானும், இப்ப டாக்டர்கிட்ட போறேன். இவனையும் வேணுமுன்னா கூட்டிட்டுப் போறேன். உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். டோண்ட் ஒர்ரி இவனை என்கிட்ட ஒப்படைச்சுடுங்க. மாமுலாயிடுவான்.” செல்வா, மிரண்டான். அரண்டான். மோகனன் அவனை தானாக காரில் ஏறிக் கொள்ளும்படி பேசினான். “சும்மா சொல்லப்படாது அங்கிள். உங்கப் பையன் ரொம்பவும் நல்லவன். ஒரு தடவை அவன் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தேன். முத்து முத்தான கையெழுத்து. மனசுல எந்த கல்மிஷமும் இல்லாதவங்களுக்குத்தான், எழுத்துக்கள் அச்சடிச்சது மாதிரி வருமாம்.” “டி.டி.பி. போட்டது மாதிரின்னு சொல்லு என்னோட எழுத்தும் முத்து முத்தாத்தான் இருக்கும்.” “நீங்களும் கல்மிஷம், இல்லாத மனிதர்தானே. ஒங்க இலாகாவிலேயே கை நீளாத ஒரே ஊழியர் நீங்கதானே. ஆனால், ஒங்களுக்கும் சேர்த்து எங்கப்பன் கொள்ளை அடிக்கான்.”{{nop}}<noinclude></noinclude> fkjtwmdx6gbz5afcpqbg82e1j5f8sn0 பக்கம்:ஒத்தை வீடு.pdf/177 250 202669 1838512 762235 2025-07-03T08:10:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||177}}</noinclude>“ஆயிரந்தான் இருந்தாலும் அவர் ஒன்னை பெத்தவரு... அவன் இவன்னு பேசப்படாது... டேய் செல்வா! காருல ஏறுடா... சித்தப்பாவுக்கும், கொஞ்சம் ஆபிஸுல வேலை காத்திருக்கு.” இயக்குநர் இருக்கையில் மோகனனையும், அதே மாதிரியான இடதுபக்க முன்னிருக்கையில் செல்வாவையும் சுமந்து கொண்டு, அந்தப் கார் பறந்தது. மென்மையான ஏ.சி. குளியல் அது உடம்பு முழுவதும் குவிந்த சுகம். உள்ளே இருந்து பார்த்தால் வெளியே தெரியப்படுத்தியும், வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பவர்களை காட்டாததுமான பச்சைக் கண்ணாடி கண்ணாடியின் அருகே செஞ்சதுரமாய் இருந்த ஒரு சின்ன பெட்டியிலிருந்து மல்லிகை செண்டு, ஏ.சி. காற்றோடு கலந்து முகத்திற்கும் மனதிற்கும் மோகனத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. செல்வா, தலைக்கு மேல் சாணும் முழமுமாய் போன விரக்தியில், எடுத்த எடுப்பிலேயே திட்ட வட்டமாகக் கேட்டான். “என்னை என்ன செய்யப் போறடா பாவி?” “சத்தியமாய் என்னை நம்பு மறப்பாய் மன்னிப்பாய்ன்னு ஒன்கிட்ட மன்னிப்பு கேட்கிறதுக்குத்தான் ஒன்னை காரில் ஏற்றியிருக்கிறேன். உன்னிடம் நான் நடந்து கொண்டது காட்டுமிராண்டித்தனம்தான். உன்னை நான் மிஸ் யூஸ் செய்தது தப்புத்தான்.” “நீ செய்தது மிஸ் யூஸ் இல்ல. அபியூஸ்.” “இந்த ரெண்டு வார்த்தைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கிற அளவுக்கு நான் படித்தவனில்ல. எல்லாம் வெளி வேடந்தான். நீ என் தங்கையை கட்டிக்கப் போற மைத்துனன் என் தங்கை மீது எவ்வளவு வாஞ்சை இருக்குதோ, அவ்வளவு வாஞ்சை உன்கிட்டயும் எனக்கு இருக்குது. நீ என்னை மாதிரி ஆயிடக்கூடாது என்கிறதுல நான் கறாரா இருக்கேன். தங்கைக்கு உதவாக் கரையா போன நான், அவளுக்கு உன்னையும் உதவாக் கரையாய் போக விடமாட்டேன் இது சத்தியம்.” “இதை நிரூபித்துக் காட்டுறதுக்கு கவிதாவுக்கு நான் எழுதுன லெட்டரை இப்பவே என்கிட்ட தா.” “ஐ எம் ஸாரி பிரதர் இன் லா... வீட்ல, என் நெம்பர் லாக் சூட்கேஸ்ல வைத்திருக்கேன். சத்தியமா... நிச்சயமா... உண்மையாய்... உறுதியாய்... தந்துடுறேன். நான் ஒரு ஹோமாசெக்ஸ்காரன்தான் அதுவும் குடும்பச் சூழலில், என் கதையை உன்கிட்ட சொல்லி<noinclude></noinclude> lno95e3svtd54o31l11obozz5hak75z பக்கம்:ஒத்தை வீடு.pdf/178 250 202671 1838526 762236 2025-07-03T08:16:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|178||புதைமண்}}</noinclude>எப்படி ஒருத்தன் சந்தர்ப்ப வசத்தால் ஓரினச் சேர்க்கையாளனாய் ஆகிறான் என்பதை உன்கிட்ட சொல்லப்போறேன். இதன் மூலம் கேய் பாய்ஸ் மீது விதிவசமா உனக்கு ஏற்பட்டிருக்கிற வெறுப்பை, நீக்கப் போறேன் அந்த லெட்டரை உன் கிட்டயே கொடுத்துட்டு, என்கிட்ட இருந்து, உனக்கு ஒரு விடுதலை உணர்வை தரப் போறேன் ஒருவேளை, நான் சொல்றது ஒனக்கு ஒரு மெண்டல் சிகிச்சையாக்கூட இருக்கலாம். சரி. அதோ அந்த மோட்டலுல போய் மரத்தடி இருக்கையில் உட்கார்ந்து சாவகாசமா பேசலாம். பேசி முடித்ததும் உன்னை உன் வீட்டுலயே டிராப் செய்றேன் ஒப்புக்கு வழியில சில வைட்டமின் மாத்திரைகளை வாங்கித் தாரேன். இப்ப, நீதான் என் பாஸ். மோட்டலுக்கு போகலாமா?” “வேண்டாம். காரை ஓட்டியபடியே உன் கதையைச் சொல்லு...” “சொல்றேன். மோட்டலுல ரூம்ல, ஒன்னை, நான், பழைய படியும் மிஸ்யூஸ் பண்ணிடுவேன்னு நீ பயப்படுறது நியாயம்தான். அதனால் காரை ஓட்டிக்கிட்டே பேசுறேன். ஏதாவது விபத்து வந்தா நீதான் பொறுப்பு.” “என்னைத்தான் ஏற்கெனவே விபத்தாக்கிட்டியே...” “உன் காலுல வேணுமுன்னாலும் விழுகிறேன். என் தங்கையோட எதிர்கால கணவனிடம் அப்படி நடந்துகிட்டது தப்புதான். நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். அதுக்கு முன்னால் என் கதைய கேளு.” செல்வா, மௌனமாக இருந்தான். கார் ஒரே சீராக ஓடிக் கொண்டிருந்தது. சில சமயம் தாறுமாறாகவும் ஓடியது. ஏ.சி. கார் என்பதால் முன்னாலும் பின்னாலும் போகும் லாரிக்காரர்களும், இரண்டு சக்கர வாகனக்காரர்களும் திட்டோ திட்டோ என்று திட்டுவது, இவர்களுக்கு கேட்கவில்லை. மோகனன், ஒரு கேள்வியோடு தன் கதையைத் துவக்கினான். “எங்க பேலஸ்ல இருக்கிற எங்கம்மாவை நீ பார்த்திருக்கியா?” “இது என்ன கேள்வி? ஒரே தெருவுல இருக்கிறவங்கள பார்க்காம இருக்க முடியுமா? ஒங்கம்மாவ பார்த்தால், கையெடுத்துக் கும்பிடலாம் போலிருக்கு அப்படிப்பட்டவளுக்கு இப்படி ஒரு பிள்ள... சீ...” “ஒனக்கு அப்படி ஆனால், எனக்கு அந்த நாயை கல்லால் அடிச்சுக் கொல்லலாம் போலத் தோன்றும்.”{{nop}}<noinclude></noinclude> q04yxl3p8z0g4tdbtdnf0vbdxi3tw9q பக்கம்:ஒத்தை வீடு.pdf/179 250 202673 1838539 762237 2025-07-03T08:22:49Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||179}}</noinclude>“பெற்ற தாயை இப்படியா பேசுறது? தாய்கிட்ட அன்பு செலுத்தாத எவனும், வேறு யார் கிட்டயும் அன்பு காட்ட முடியாது அதனாலதான் ஒனக்கு நான் பலியாயிட்டேன்.” “நான் தான் ஸாரி சொல்லிட்டேனே... பிரதர் இன் லா... அந்த மேனா மினுக்கி எங்கம்மாவே இல்ல. டூப்ளிகேட் அம்மா...” “அய்யய்யோ” “என்னைப் பெற்றவள் இன்னொருத்தனோட இருக்காள்.” “அடக் கடவுளே” “முழுசாக் கேள். இந்த பெரிய மனுஷன் வேணுகோபால் ஐ.ஏ.எஸ். இருக்கானே, அவனோட மகனான நான், ஏ.சி. கார்லேயே கான்வெட்டுக்கு போய்கிட்டு இருந்தேன். பரத நாட்டியத்துல இவன்தான் சேர்த்தான். அந்த சாக்குல நான் கதக், ஒடிசி போன்ற நம் நாட்டு நாட்டியங்களையும், வெஸ்டன் டான்ஸ்களையும் கத்துக்கிட்டேன் இங்கிலீஷ் பேச்சுப் போட்டியிலயும், கட்டுரைப் போட்டியிலயும் முதலாவது வந்தேன். பதினாலு வயசிலேயே முதலமைச்சர் தலைமையில என் பரதநாட்டியம் அரங்கேறியது. அதை செய்தியாய் போடாத பத்திரிகை இல்லை... டி.வி. இல்லை. விமர்சனம் செய்யாத இதழ்கள் இல்லை.” “எங்கம்மா என்கிறவள் ரெண்டு பிள்ளை பெற்றாள். எனக்கு பதினாலு வயசுல, எங்க வீட்டு மாடியில ஒரு சினிமாக்காரன் குடி வந்தான். கட்டுன பெண்டாட்டிய விட்டுட்டு இன்னொருத்தியோட வாழ்ந்துகிட்டு இருந்தான். இது தெரிஞ்சும், எங்கப்பன் பணத்துக்கு ஆசைப்பட்டு அவனுக்கும், அவன் கள்ளக் குடும்பத்துக்கும் வீட்ட வாடகைக்கு விட்டான் அம்மா என்கிறவள் நாட்டுப்புறப் பாடல்ல கெட்டிக்காரி. எங்கப்பனோ பொம்பள பொறுக்கி. அதனால் மனைவியோட டேலண்ட அமுக்கி வச்சான். நான் அவளுக்கும் நியாயம் வழங்கணும் பாரு... அதனால சொல்றேன். எப்படியோ மாடியிலிருந்த சினிமாக்காரனுக்கும் எங்கம்மாவுக்கும் தொடர்பு உண்டாயிட்டு. ஒருநாள் ரெண்டு பேரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிட்டாங்க.” “அந்த சினிமாக்காரனோட கீப்பு நேரா எங்கப்பன்கிட்ட வந்திருக்காள். ‘ஒங்க பெண்டாட்டி ஒங்கள விட்டு ஓடிட்டாள். என்கூட வாழ்ந்தவன் என்னை விட்டுட்டு ஓடிட்டான். அதனால் நாம ரெண்டு பேரும், ஏன் ஒன்றாய் சேரக்கூடாதுன்’னு வாதிட்டிருக்காள். அவளும் கிளாஸ் ஒன் ஆபீசர். அதாவது பெரிய<noinclude></noinclude> rrknpv8d0tkrcj5hpf67wcoqosffook பக்கம்:ஒத்தை வீடு.pdf/180 250 202675 1838546 762239 2025-07-03T08:31:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|180||புதைமண்}}</noinclude>அதிகாரி. அவர் சம்பளத்துக்கு ஆசைப்பட்டோ அல்லது அவளுக்கு ஆசப்பட்டோ, இல்லன்னா எங்கம்மா கூட்டிகிட்டு போனவனை பழி வாங்கிறதுக்காகவோ, இவனும் அவளை சேர்த்துக்கிட்டான். ரெண்டு பேருக்கும் ஒரே குடி. ஏச்சு பேச்சு... எப்படியோ எல்லா ஐ.ஏ.எஸ். பிள்ளைகளையும் போல, நல்லா இருக்க வேண்டிய நான், குறைந்த பட்சம் நாட்டியத்தில் இரண்டாவது தனஞ்செயனாக உலகம் முழுவதும் சுற்ற வேண்டிய நான், இப்போ ஒவ்வொரு பயல்கள் பின்னாலயும் சுற்றிக்கிட்டு இருக்கேன்.” “அய்யோ... இதுக்கு மேல சொல்லாதப்பா... என்னால தாங்க முடியாதுப்பா...” “என்னை நீ இனிமேல் பகிர வேண்டாம். என் பாரத்தையாவது பகிர்ந்து கொள். எவளுக்கும், ரெண்டு பிள்ள பிறந்த பிறகும், கணவனை டைவர்ஸ் பண்றதுக்கு உரிமை உண்டுதான். ஆனால், அதுக்கு முன்னால பிள்ளைகளை பற்றி ரெண்டு பேரும் ஒரு செட்டில்மெண்டுக்கு வரணும். இப்படி இல்லாமல் பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல், ஒரு தாய், ஓடிப் போகிறாள் என்றால், அவள் அசல் தேவடியாளத்தான் இருக்கணும். காரணம், பெண்மை என்பதே தாய்மை. அந்தத் தாய்மைக்கு மிஞ்சி ஒருத்திக்கு திமிர் - செக்ஸ் திமிர் ஏற்பட்டால், அவள் பெண்ணே இல்ல... இப்படி ஓடிப்போனவளுக்கு நானும் கவிதாவும் பிறந்தது நிசம். ஆனால், அம்மா என்கிறவள் எங்கள் இந்த லஞ்சப் பேர்வழி வேணுகோபாலுக்கு பெத்தாளோ, இல்ல வேறு யாருக்காவது பெத்தாளோ...” “அப்படி இருக்க முடியாது. உங்கப்பா சாயல்தான் ஒனக்கும், கவிதாவுக்கும் இருக்குது...” “அப்படி இருந்தால் வெட்கப்படுறேன். டூப்ளிகேட் அம்மாவ, கவிதாவால் ஏற்க முடிஞ்சுது. ஆனால், என்னால முடியல. எங்கப்பன் லஞ்ச வாங்குறதுல சமர்த்தன். இவளும் பணம் வாங்குறதுல ஒரு பழைய பெருச்சாளி இயல்பிலேயே நேர்மையானவன் நான். எங்கப்பன நினைத்தாலே, ஒனக்கு குமட்டுறது மாதிரி எனக்கும் குமட்டுது. வேலை போட்டு தருகிறேன் என்கிற வாக்குறுதியை நம்பி வந்தவள்கள், அலுவலக சகாக்களை பழி வாங்குவதற்காக இவனோடு படித்தவள்கள் - எல்லாம், எங்க கண் முன்னாலேயே நடந்தது. இந்த லட்சணத்துல எங்களுக்கு ஒழுக்கத்தின் உயர்வு பற்றி போதிப்பான் இந்த யோக்கியன்.” “எனக்கு டூப்ளிகேட் அம்மாவை ஏற்றுக்க முடியல. அந்தச் சமயத்துல திரைப்படங்களுல எக்ஸ்ட்ரா வேடம் கிடைச்சுது.<noinclude></noinclude> 4o0zkghex7fq3khbmctbjwpzb7c2mnv பக்கம்:ஒத்தை வீடு.pdf/181 250 202677 1838549 762240 2025-07-03T08:36:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||17}}</noinclude>பெரிய பெரிய கதாநாயகர்களெல்லாம் டான்ஸ் ஆடுறது மாதிரி காட்டுவாங்களே அது குளோசப்பாக இருக்கும். லாங் ஷாட்ல ஆடுறது என்னை மாதிரி டூப்ளிகேட்கள்தான். அவங்களுக்கு லட்ச லட்சமா பணம். எங்களுக்கு நாயே பேயேன்னு திட்டு. இந்தச் சமயத்துல, தமிழ் திரைப்படக் காட்சிய பார்க்க வந்த ஒரு ஐரோப்பியருக்கு, என்னை ரொம்ப பிடித்துப் போச்சு. நல்ல டிரெஸ் வாங்கிக் கொடுத்தார். நல்ல சாப்பாடு போட்டார். நல்ல படுக்கையில போட்டார். அதுவும் ஸ்டார் ஓட்டல்ல. அப்போ அவனோட ஏற்பட்ட சேர்க்கையை நான் தட்ட நினைத்தாலும் முடியல. ஒன்னை மாதிரிதான் வாந்தி எடுத்தேன். அப்புறம் அதுவே ஒரு டேஸ்ட்டாயிட்டுது. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விதமான பையன் தேவைப்படுது; தேவைப்படுறேன். அப்போ பிடித்த இந்த ஓரினச் சேர்க்கை, இப்போ ஒரு போதை மாதிரி ஆயிட்டுது. என் தங்கையின் எதிர்கால கணவனுக்கு, என்னை மாதிரி ஒரு நிலமை ஆகிவிடக் கூடாதுன்னுதான், ஒனக்கு இதைச் சொல்றேன்.” “கவிதா, ஒங்கம்மாவைப் பற்றி என்கிட்ட ஒருவார்த்தை சொல்லுலியே.” “பாவம் அவள். நான், என் அம்மாவை ஒரு தாசியாக நினைத்து ஒதுக்கிட்டேன்; ஒதுங்கிட்டேன். அவளுக்கோ ரெண்டு அம்மாக்கள். ஓடிப்போன அம்மாவை சொல்வாளா? ஓடிவந்த அம்மாவைச் சொல்வாளா? நல்லவேளை, ஒன்னோட காதல் அவளுக்கு கிடைத்திருக்கு. இல்லன்னா என்னை மாதிரி அவள் சீரழிந்திருப்பாள். லிம்போ மேனியாக்கா, அதாவது ஒரு நாளைக்கு ஒருத்தன தேடுறவளாய் ஆகியிருப்பாள். இல்லன்னா லெஸ்பியனா மாறியிருப்பாள்.” “யாரைச் சொன்னாலும் கவிதாவைச் சொல்லாதே.” ஒன்னைவிட அனுபவத்திலும் வயதுலும் பெரியவன் என்கிற முறையில் நான் சொல்றதை கேளு. ஒரு காதலுலயோ அல்லது காமத்திலேயோ செக்ஸ் என்கிறது கால்வாசிதான். முக்கால்வாசி உள்ளத்தால் ஒன்றுபடுதல். அதேசமயம், தம்பதிகளுக்குள்ளே செக்ஸுவல் அட்ஜெஸ்மெண்ட் இருக்க வேண்டும். இல்லையானால், புருஷன் கொடுமைக்காரனாவான். மனைவி பத்தினியா வாழ நினைத்தால் ஸ்டீரியாவுல தவிப்பாள். இல்லாட்டால், பலரோட படுப்பாள். இப்படி படுப்பதுகூட செக்ஸ் அல்ல. கணவனின் இயலாமைக்கு அல்லது அவனது கொடுமைக்கு அல்லது அவன் பிற பெண்களோடு உறவாடுவதற்கு காட்டுகிற எதிர்ப்பே இந்த கள்ள உறவின் முதல்படி அல்ல செக்ஸ்.<noinclude></noinclude> q4fieogg3e9gp0zsjpyjmqy3vmn3pek 1838551 1838549 2025-07-03T08:36:43Z மொஹமது கராம் 14681 1838551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||181}}</noinclude>பெரிய பெரிய கதாநாயகர்களெல்லாம் டான்ஸ் ஆடுறது மாதிரி காட்டுவாங்களே அது குளோசப்பாக இருக்கும். லாங் ஷாட்ல ஆடுறது என்னை மாதிரி டூப்ளிகேட்கள்தான். அவங்களுக்கு லட்ச லட்சமா பணம். எங்களுக்கு நாயே பேயேன்னு திட்டு. இந்தச் சமயத்துல, தமிழ் திரைப்படக் காட்சிய பார்க்க வந்த ஒரு ஐரோப்பியருக்கு, என்னை ரொம்ப பிடித்துப் போச்சு. நல்ல டிரெஸ் வாங்கிக் கொடுத்தார். நல்ல சாப்பாடு போட்டார். நல்ல படுக்கையில போட்டார். அதுவும் ஸ்டார் ஓட்டல்ல. அப்போ அவனோட ஏற்பட்ட சேர்க்கையை நான் தட்ட நினைத்தாலும் முடியல. ஒன்னை மாதிரிதான் வாந்தி எடுத்தேன். அப்புறம் அதுவே ஒரு டேஸ்ட்டாயிட்டுது. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விதமான பையன் தேவைப்படுது; தேவைப்படுறேன். அப்போ பிடித்த இந்த ஓரினச் சேர்க்கை, இப்போ ஒரு போதை மாதிரி ஆயிட்டுது. என் தங்கையின் எதிர்கால கணவனுக்கு, என்னை மாதிரி ஒரு நிலமை ஆகிவிடக் கூடாதுன்னுதான், ஒனக்கு இதைச் சொல்றேன்.” “கவிதா, ஒங்கம்மாவைப் பற்றி என்கிட்ட ஒருவார்த்தை சொல்லுலியே.” “பாவம் அவள். நான், என் அம்மாவை ஒரு தாசியாக நினைத்து ஒதுக்கிட்டேன்; ஒதுங்கிட்டேன். அவளுக்கோ ரெண்டு அம்மாக்கள். ஓடிப்போன அம்மாவை சொல்வாளா? ஓடிவந்த அம்மாவைச் சொல்வாளா? நல்லவேளை, ஒன்னோட காதல் அவளுக்கு கிடைத்திருக்கு. இல்லன்னா என்னை மாதிரி அவள் சீரழிந்திருப்பாள். லிம்போ மேனியாக்கா, அதாவது ஒரு நாளைக்கு ஒருத்தன தேடுறவளாய் ஆகியிருப்பாள். இல்லன்னா லெஸ்பியனா மாறியிருப்பாள்.” “யாரைச் சொன்னாலும் கவிதாவைச் சொல்லாதே.” ஒன்னைவிட அனுபவத்திலும் வயதுலும் பெரியவன் என்கிற முறையில் நான் சொல்றதை கேளு. ஒரு காதலுலயோ அல்லது காமத்திலேயோ செக்ஸ் என்கிறது கால்வாசிதான். முக்கால்வாசி உள்ளத்தால் ஒன்றுபடுதல். அதேசமயம், தம்பதிகளுக்குள்ளே செக்ஸுவல் அட்ஜெஸ்மெண்ட் இருக்க வேண்டும். இல்லையானால், புருஷன் கொடுமைக்காரனாவான். மனைவி பத்தினியா வாழ நினைத்தால் ஸ்டீரியாவுல தவிப்பாள். இல்லாட்டால், பலரோட படுப்பாள். இப்படி படுப்பதுகூட செக்ஸ் அல்ல. கணவனின் இயலாமைக்கு அல்லது அவனது கொடுமைக்கு அல்லது அவன் பிற பெண்களோடு உறவாடுவதற்கு காட்டுகிற எதிர்ப்பே இந்த கள்ள உறவின் முதல்படி அல்ல செக்ஸ்.<noinclude></noinclude> 7caigi76kt55i6h0oulp91l2uo3js0e பக்கம்:ஒத்தை வீடு.pdf/182 250 202679 1838572 762241 2025-07-03T09:31:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|182||புதைமண்}}</noinclude>இரண்டாம் படிதான். ஆக மொத்தத்துல பலரோடு படுக்கைகளை பகிர்ந்து கொள்வதும், ஓரினச் சேர்க்கையும், ஒரு நோயின் அறிகுறியே தவிர நோய் அல்ல.” “உங்க கதையை கேட்கிறதுக்கு மனசுக்கு சங்கடமா இருக்குது. ஆனாலும், ஆயிரம் சங்கடங்கள் வந்தாலும், அதனால ஒழுக்கச் சிதைவு ஏற்படக்கூடாது.” “முதல்ல எது ஒழுக்கம்? எது சிதைவு? இதை தீர்மானிக்கவே பல பட்டி மன்றங்கள் நடத்தணும். இந்திரனால் கற்பழிக்கப்பட்ட அகலிகையையும், நளாயினியாய் இருக்கும்போது தனக்கு ஐந்து கணவர்கள் வேண்டுமென்று கேட்டு, மறுபிறவியில் நெருப்பில் பிறந்த திரௌபதியையும், ராவணன் படத்தை வரைந்த சீதையையும், சுக்ரீவனோடு கூடிக்குலாவிய வாலியின் மனைவியான தாராவையும், கணவன் போக்கு தவறென்று நினைத்த மண்டோதரியையும் பஞ்ச பத்தினிகள் என்று நமது புராணங்கள் கூறுகின்றன முதலில் இதற்கு பதில் சொல். கற்பு என்பது என்ன? ஒழுக்கம் என்பது என்ன? இந்த ஐந்து பெண்களின் அடிப்படையில் பதில் சொல் பார்க்கலாம். இந்த ஐவரில் மண்டோரிதான் விதிவிலக்கு. அவளையும் ஆராய்ந்து பார்த்தால், ஒருவேளை தேறமாட்டாள். ஆகையால், நமது புராணங்கள் பத்தினித் தன்மையை கற்போடு இணைக்கவில்லை. உன்னை மாதிரி ஆசாமிகள்தான் இணைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கை என்பதும் புராணச் செய்திகள் தான்.” “அய்யோ எனக்கு தலை சுத்துது... காரை வீட்டைப் பார்த்து திருப்புங்க.” “வந்ததே வந்துட்டோம். பக்கத்துல இருக்கிற கிளப்புக்கு போயிட்டு போகலாம். கேய் பாய்ஸ் - அதுதான் ஓரினச் சேர்க்கைக்காரர்கள் கிளப். நான் அந்த கிளப்போட பொதுச் செயலாளர். இதுவரைக்கும் வந்துட்டு, அங்கே போகலன்னா என்னுடைய பதவியும், எனக்கு கிடைக்கிற வெளி நாட்டுப் பணமும் போயிடும்.” “பார்த்தியா... பார்த்தியா... உன் செயலுக்கும் பேச்சுக்கும் வித்தியாசம் தெரியுதே. அங்கே கொண்டு போய் என்னை என்ன செய்யப்போறே?” தட்டுக்கெட்ட முண்ட எங்கம்மா மேலேயோ, பொம்பள பொறுக்கியான எங்கப்பன் மேலயோ சத்தியம் செய்ய முடியாது இதோ என் தலையிலேயே சத்தியம் செய்றேன் ஒன்மேல ஒரு துரும்புகூடப் படாது. நீ கார்லேயே இரு நான் கால் மணி நேரத்துக்குள்ள திரும்பி வந்துடுறேன் நாளைக்குத்தான் எங்க<noinclude></noinclude> 738mz08xbsubwx6hlatj2lpfpoykw7a 1838573 1838572 2025-07-03T09:33:32Z மொஹமது கராம் 14681 1838573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|182||புதைமண்}}</noinclude>இரண்டாம் படிதான். ஆக மொத்தத்துல பலரோடு படுக்கைகளை பகிர்ந்து கொள்வதும், ஓரினச் சேர்க்கையும், ஒரு நோயின் அறிகுறியே தவிர நோய் அல்ல.” “உங்க கதையை கேட்கிறதுக்கு மனசுக்கு சங்கடமா இருக்குது. ஆனாலும், ஆயிரம் சங்கடங்கள் வந்தாலும், அதனால ஒழுக்கச் சிதைவு ஏற்படக்கூடாது.” “முதல்ல எது ஒழுக்கம்? எது சிதைவு? இதை தீர்மானிக்கவே பல பட்டி மன்றங்கள் நடத்தணும். இந்திரனால் கற்பழிக்கப்பட்ட அகலிகையையும், நளாயினியாய் இருக்கும்போது தனக்கு ஐந்து கணவர்கள் வேண்டுமென்று கேட்டு, மறுபிறவியில் நெருப்பில் பிறந்த திரௌபதியையும், ராவணன் படத்தை வரைந்த சீதையையும், சுக்ரீவனோடு கூடிக்குலாவிய வாலியின் மனைவியான தாராவையும், கணவன் போக்கு தவறென்று நினைத்த மண்டோதரியையும் பஞ்ச பத்தினிகள் என்று நமது புராணங்கள் கூறுகின்றன முதலில் இதற்கு பதில் சொல். கற்பு என்பது என்ன? ஒழுக்கம் என்பது என்ன? இந்த ஐந்து பெண்களின் அடிப்படையில் பதில் சொல் பார்க்கலாம். இந்த ஐவரில் மண்டோரிதான் விதிவிலக்கு. அவளையும் ஆராய்ந்து பார்த்தால், ஒருவேளை தேறமாட்டாள். ஆகையால், நமது புராணங்கள் பத்தினித் தன்மையை கற்போடு இணைக்கவில்லை. உன்னை மாதிரி ஆசாமிகள்தான் இணைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கை என்பதும் புராணச் செய்திகள் தான்.” “அய்யோ எனக்கு தலை சுத்துது... காரை வீட்டைப் பார்த்து திருப்புங்க.” “வந்ததே வந்துட்டோம். பக்கத்துல இருக்கிற கிளப்புக்கு போயிட்டு போகலாம். கேய் பாய்ஸ் - அதுதான் ஓரினச் சேர்க்கைக்காரர்கள் கிளப். நான் அந்த கிளப்போட பொதுச் செயலாளர். இதுவரைக்கும் வந்துட்டு, அங்கே போகலன்னா என்னுடைய பதவியும், எனக்கு கிடைக்கிற வெளி நாட்டுப் பணமும் போயிடும்.” “பார்த்தியா... பார்த்தியா... உன் செயலுக்கும் பேச்சுக்கும் வித்தியாசம் தெரியுதே. அங்கே கொண்டு போய் என்னை என்ன செய்யப்போறே?” “தட்டுக்கெட்ட முண்ட எங்கம்மா மேலேயோ, பொம்பள பொறுக்கியான எங்கப்பன் மேலயோ சத்தியம் செய்ய முடியாது இதோ என் தலையிலேயே சத்தியம் செய்றேன் ஒன்மேல ஒரு துரும்புகூடப் படாது. நீ கார்லேயே இரு நான் கால் மணி நேரத்துக்குள்ள திரும்பி வந்துடுறேன் நாளைக்குத்தான் எங்க<noinclude></noinclude> itp1wzeayygq3t786hpua2gnzkgnae5 பக்கம்:ஒத்தை வீடு.pdf/183 250 202681 1838574 762242 2025-07-03T09:37:21Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||183}}</noinclude>ஐரோப்பிய பாஸ் வரார். அப்போ மட்டுந்தான் பிஸியா இருப்பேன்.” “எப்படியோ சதி செய்து என்னை கூட்டிட்டு வந்துட்டே.” “இதுக்குத்தான் பத்து கிலோ மீட்டருக்கு முன்னால உள்ள மோட்டலுல பேசிட்டு திரும்பலாமுன்னு நினைத்தேன் காரியத்த கெடுத்ததே நீதான். என்னை மீறி ஒனக்கு எதுவும் நடக்காது. நான், நாட்டியக்காரன் மட்டுமல்ல குஸ்தி கத்துக்கிட்டவன். பயப்படாதே.” செல்வா மெளனமானான். அந்தக் கார், கேய் பாய்ஸ் கிளப்பை நோக்கி போகலாமா? வேண்டாமா? என்பது போல் தள்ளாடித் தள்ளாடி ஓடியது. {{dhr|2em}} <section end="8"/><section begin="9"/> {{larger|<b>9</b>}} {{dhr|2em}} சென்னையிலிருந்து முன்பு மகாபலிபுரத்திற்கும், இப்போது பாண்டிச்சேரிக்கும் அழைத்துச் செலுத்தும் கிழக்கு கடற்கரைச் சாலை. பெருநகரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் சாலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் பதுங்கிக் கிடந்த தர்பார் கட்டிடம், ஏக்கர் கணக்கில் சுற்றி வளைத்து, இரும்புக் கம்பி இழைகளால் வேலி போடப்பட்ட அதன் வளாகத்தில், அசோக, ஆல, அத்தி போன்ற மரங்கள் அந்த கட்டிடத்தை மறைத்துக் கொண்டிருந்தன. அதற்குள் போவது காடு மலை தாண்டி போவது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும். இடையிடையே பாறைக் குவியல்கள். மூன்று கிலோ மீட்டரில் முக்கால் வாசியை முடித்து விட்டால், கத்தரித்த ஆடாகவும் மாடாகவும் புலியாகவும் சிங்கமாகவும் பல்வேறு வடிவங்களில் மேக்கப் செய்யப்பட்ட புல் வகையறாக்கள். சிகை அலங்காரம் செய்யப்பட்ட கற்றாழைகள். பல்வேறு வண்ணத்தில் அமைந்த தாமரைகள். இதன் மேல்தளத்திற்கு, ஒரு பெருந்தூணில் சுற்றி வளைத்த படிகள் வழியாகத்தான் போகவேண்டும் ஏனோ லிப்ட் வைக்கவில்லை. மேல்தளத்தின் அடிவாரத்தில், பூவாய் விரிந்த விளக்குகள். வானவில் போன்ற மின்சார வரவேற்பு வளைவுகள். நான்கடி உயரத்தில் நவீன மேடை. அரைகுறை ஆடைகளோடு ஒரு சில முதியவர்களும், பல நடுத்தர வயதுக்காரர்களும், பெரும்பாலான இளைஞர்களும் மண்டிக் கிடந்தார்கள் இந்த<noinclude></noinclude> e6mkan1f4lysyjd8qipxf8r0h55nirm பக்கம்:ஒத்தை வீடு.pdf/184 250 202683 1838578 762243 2025-07-03T09:46:33Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|184||புதைமண்}}</noinclude>வளாகத்திற்கு முன்னால் மிகப்பெரிய கட்-அவுட் அதில், ஒரு வெள்ளைக்காரரின் மிகப்பெரிய உருவம். ஆங்கிலத்திலான வரவேற்பு வாசகங்கள். தமிழிலும் சில சொற்றொடர்கள். “மறுவாழ்வு கொடுக்கும் மணியே வருக! ஓரினச்சேர்க்கையின் உருவே வருக!” மோகனனின் கார், அந்த வளாகத்திற்குள் வந்தபோது, மேலே கேட்கும் கூச்சலை கேட்ட செல்வா, இப்போது, ‘அய்யோ அய்யோ’ என்றான். உனக்கு எத்தனை தடவை சொல்றேன்... ‘உனக்கு ஒன்றும் பங்கம் ஏற்படாது. காருக்குள்ளேயே கண்ணாடிகளை இறக்காமல் ஏ.சி.யை போட்டுக்கொண்டு பேசாமல் இரு. நான் பத்து நிமிடத்தில் வந்துடுவேன். தலையை மட்டும்தான் காட்டணும். மற்றதை காட்டுறது நாளைக்குத்தான்’ என்று சொல்லிக்கொண்டே, கார் கதவை திறந்து கொண்டு இறங்கினான் மோகனன். அப்போது, இன்னொரு கார் வந்து நின்றது. இவனுடைய காரைவிட இரு மடங்கு பெரிய கார். மும்மடங்கு பளபளப்பு. அந்தக் காரிலிருந்து செக்கச் செவேலென்ற ஒரு மனிதர் இறங்கினார். உடனே, அத்தனை பேரும் அவரை மொய்த்துக் கொண்டார்கள். அவர், எதேச்சையாக மோகனனை பார்த்துவிட்டார். கூட்டத்துக்கு உள்ளே ஊடுறுவி, அந்தக் கார் பக்கம் வந்து ‘ஹலோ’ என்று கை குலுக்கிவிட்டு, இடதுபக்க இருக்கையில் ஒடுங்கிக் கிடந்த செல்வாவை வைத்த கண் வைத்தபடி பார்த்தார். பிறகு, ‘யூ புராட் எ பிராப்பர் பாய்... தேங்ஸ் எ லாட்’ என்றார். மோகனன், அதிர்ந்து போனான். மரகத பச்சை சட்டையை, பொன் வண்ண பேண்டுக்குள் இன் பண்ணி சிவப்பு, டை கட்டி அழகாகத் தோன்றிய அந்த நாற்பது வயது மனிதர், உலக நிறுவனம் ஒன்றின் இயக்குநர். தங்கச் சங்கிலி காதில் தொங்க, மூக்குக் கண்ணாடி மார்பில் பதியத் தோன்றிய அந்த மனிதர், செல்வாவை பார்த்துக் கொண்டே மீண்டும் மோகனனிடம் குசலம் விசாரித்தார். மோகனனுக்குத் தெரிந்த அளவில், இன்று அவர் வருவதாக இல்லை. நாளைக்கு காலையில் பிளைட்டில் வரவேண்டும். இவன்தான், அவரை விமான நிலையத்தில் வரவேற்க வேண்டும் என்ற ஏற்பாடு. இவர்தான் எங்கேயோ சினிமாக்காரர்களுக்குடையே உதிரியாய் சுற்றிக் கொண்டிருந்த இவனை, ஓரினச்சேர்க்கை மூலம் கரையேற்றியவரோ? கரைபடுத்தியவரோ...? இந்த நிலத்தையும், அதன் முகம் போன்ற கட்டிடத்தையும் உலக நிறுவனத்தின் சார்பில் வாங்கிப் போட்டவர். ஓரினச்சேர்க்கைக்காரர்களின் மறுவாழ்வு மையம் என்ற பெயரில் ஏகப்பட்ட பணம் அனுப்புகிறார் ஆனால் நடப்பதோ மறுவாழ்வு அல்ல. மருவாழ்வு. எல்லாம் இவருடைய சம்மத்தோடுதான்.{{nop}}<noinclude></noinclude> 283bwkr24fdmommhe6j2hm8i4s0bc4l பக்கம்:ஒத்தை வீடு.pdf/185 250 202685 1838589 762244 2025-07-03T09:57:41Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||185}}</noinclude>மோகனன், தவியாய் தவித்தான் பாலுக்கு காவலாகவும், பூனைக்குத் தோழனாகவும் இருக்க வேண்டிய நிலைமை. செல்வாவிடம் ஓடி விடு என்று தமிழில் சொல்லலாம் என்றால், இந்த மையத்தின் துணைச் செயலாளர், அந்த உலக நிறுவன இயக்குநருக்கு போட்டுக் கொடுத்துவிடுவான் பழையபடியும் சினிமா உதிரியாக வேண்டும். இதற்குள் அந்த மனிதர், உடனடியாய், புரியாத ஆங்கிலத்தில் பேசினார். “லெட்டஸ் கோ மோக்...” மோகனன், செல்வாவை, கண்டுக்காமல் அதே சமயம் முதுகுக்கு பின்னால் கையை வளைத்து அவனை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, மிஸ்டர் ஜான் ஜோவுடன் இணையாக நடக்கப் போனான். உடனே அவர், ‘பிரிங் தட் பாய்... லெட் இம் ஆல்சோ என்ஜாய்.’ என்றார். உடனே இவன் ‘அவன் என் மைத்துனன். தங்கையின் “உட்பி”’ என்றான். ‘சோ வாட்’ என்றார் அவர். இதற்குள் துணைச் செயலாளர் சத்ருக்கன், குலுங்கிக் குலுங்கி நடந்து, செல்வாவை வெளியே இழுத்து, அந்த வெள்கைக்காரர் முன்னால் நிறுத்தினான். எல்லோரும் மேல்தளத்திற்கு ஏறிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக தயங்கி நின்ற செல்வாவிடம் ‘எப்படியாவது இங்கிருந்து ஓடிடு. இவர் என்னுடைய பாஸ்... இவர் சொல்லை என்னால தட்ட முடியாது என்று கிசுகிசுத்தான். உடனே செல்வா, வார வழியில தேக்குத் தோப்புல நரிகளப் பார்த்தேன். நான் எப்படித் தனியா போறது? என்னை கொண்டு போய் விடுறது உன்னுடைய டூட்டி...’ என்றான். ‘சரி வா... பார்த்துக்குவோம்’ என்று சொல்லிக்கொண்டே செல்வாவையும் இழுத்துக் கொண்டு படியேறினான். அந்த வெள்ளைக்காரர், மேடையேறி, அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, மோகனன் செல்வாவிடம் ‘அதோ அந்த அறைக்குள் போய் பதுங்கிக்கோ. நான் வருவது வரைக்கும் கதவைத் திறக்காதே’ என்றான். செல்வா திருப்பிக் கேட்டான். “நீ வாறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்.” “எப்படியும் மிட் நைட் ஆயிடும்.” “அய்யோ... சித்தப்பாவுக்கு என்ன சொல்றது? என்னாச்சோ ஏதாச்சோன்னு துடியா துடிச்சிகிட்டு இருக்கப் போறார்.” “உன்னை அப்சர் பண்ணுவதற்காக கிளினிக்கில் வைத்திருக்கிறதாய், உங்க சித்தப்பாவுக்கு போன் செய்யுறேன். நீ இந்த அறைக்குள்ளேயே இரு. மீண்டும் சத்தியமாய் சொல்லுறேன். அந்த வெள்ளைக்காரன் என்னை வேலைய விட்டுத் துரத்தினாலும், உன்னை இழிவாய் பயன்படுத்த அனுமதிக்கமாட்டேன்.”{{nop}}<noinclude></noinclude> mowx30fwry58p85seqhm8790fygvyeo பக்கம்:ஒத்தை வீடு.pdf/186 250 202687 1838607 762245 2025-07-03T10:06:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|186||புதைமண்}}</noinclude>மோகனன், அவசர அவசரமாக மேடைக்குப் போய், மிஸ்டர் ஜான் ஜோவிடம் பேசிக் கொண்டிருந்தான். பிறகு, மேடையை விட்டு படி வழியாக இறங்காமல் அப்படியே கீழே குதித்து சுழல் படிகளில் கீழே இறங்கி, அருகே உள்ள ஹே பாய்ஸ் மறுவாழ்வு மைய அலுவலகத்திற்கு ஓடினான். இதற்குள், மோகனன் காட்டிய அறைக்கதவை, செல்வா தொட்டான். தொடப் பொறுக்காமல் அது திறந்தது. உள்ளே ஓரடி வைத்தவன் தனது சித்தியை பார்த்ததுபோல் பயந்து திடுக்கிட்டான். அந்த அறைக்குள் ஆண்களும் ஆண்களும் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து கிடந்தார்கள் ஒவ்வொருவர் வாயிலும், இடுப்புக்குக் கீழேயும் பல்வேறு நபர்களின் உறுப்புக்கள். ஒவ்வொருவரும் ஏழெட்டு பேருக்கு ஈடு கொடுத்தும், ஈடு செய்தும் முழு நிர்வாணக் கோலத்தில் அலங்கோலமாக கிடந்தார்கள். இலை தழைகளோடு பூத்துக் குலுங்க வேண்டிய பூக்கள் காய்ந்து போன காம்புகளாய், கிழிந்து போன இதழ்களாய், சிதறிப் போன மகரந்த தூள்களாய், வண்டுகளே பூக்களாய்... பூக்களே வண்டுகளாய்... எட்டறக் கலந்து கிடந்தார்கள் (அதாவது எட்டுபேர்.) இவர்களின் வலுவான குலுக்கலுக்கும் புரட்டலுக்கும் இடையே மென்மையான ‘டிங்... டிங்...’ இசை. வெளியே வந்த செல்வாவுக்கு, உறுப்புகளில் ஒன்றுகூட இயங்கவில்லை. நினைத்துப் பார்க்கவே அசிங்கமாய்... அருவெருப்பாய் தெரிந்தது. மிருகங்களுக்குக்கூட பாலியல் உறுப்புக்கள் இலை மறைவு காய்மறைவாய் உள்ளன. பசு மாட்டின் வால், அதன் உறுப்பை மறைக்கிறது. நாய்க்கு அடிவாரத்தில்தான் அதன் உறுப்பு உள்ளது. காகங்கள் உள்ளிட்ட சில பறவைகள் புணர்வதை பார்க்க முடியாது. ஆனால், இவர்களோ மிருகங்களை விடக் கேவலமாய், அசிங்கம் பிடித்த அம்மணமாய், அலங்கோலமாக கிடக்கிறார்கள். செல்வாவிற்கு மீண்டும் குமட்டிக் கொண்டு வந்தது. பத்து நிமிடம் ஒரு தூண் மறைவில் நின்றான். மோகனனைக் காணவில்லை. ஒருவேளை, அவன் வேண்டும் என்றே தன்னை இங்கே கூட்டிக்கொடுத்துவிட்டு போயிருப்பானோ என்ற சந்தேகம். அதுவே கோபமாக, தாபமாக அந்த தூணை இரண்டு கைகளாலும் மாறி மாறி குத்திக் கொண்டிருந்தபோது, மிஸ்டர் ஜான் ஜோ ஓடி வந்தார். அவனை, தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். “டேக் இட் ஈஸி மை எங் மேன்... டிட் யூ ஈட்.” “டோன் வாண்ட் ஈட்... எனக்குப் பசிக்கல. என்னை விட்டா போதும். மோகனன் பயல் எங்கே?” என்று வெள்ளைக்காரருக்கு<noinclude></noinclude> 9c8qod1y7spa9djimpb1go9hj5s2597 பக்கம்:ஒத்தை வீடு.pdf/187 250 202689 1838626 762246 2025-07-03T10:18:18Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||187}}</noinclude>அரைகுறை ஆங்கிலத்திலும், அவரைச் சூழ்ந்து நின்ற கேய் பையன்களுக்கு தமிழிலும் பேசினான். உடனே, துணைச் செயலாளர் வெள்ளைக்காரரிடமும், இந்தப் பையனிடமும் மாறி மாறிப் பேசினார். வாசகர்களின் வசதிக்காக தமிழாக்கம் செய்யப்படுகிறது. “இவன் உங்களுக்கு பயன்படக்கூடாது என்பதற்காக, தன்னோட தங்கையை கட்டிக்கப்போறதாய், மோக், அப்போ சொன்னது நினைவிருக்குதா பாஸ்.” “ஏஸ்... புரசீட்...” “அதாவது, இவனை அவன் மட்டுமே கீப் செய்யணுமுன்னு நினைக்கிறான். ஒரு அறைக்குள்ள தங்கும்படி இவனுக்கு எச்சரிக்கை செய்தான். உங்க பணத்தை வாங்கிக்கிட்டு உங்களுக்கே துரோகம் பண்றான்.” “தட்ஸ் ஆல் ரைட்... ஹீ வில் பே பார் இட்... (பரவாயில்லை. அதற்கான பலனை அனுபவிப்பான்)” வெள்ளைக்காரர் உடம்பைச் சொறிந்து கொண்டே, தூணோடு தூணாய் ஒடுங்கிக் கிடந்த செல்வாவை உற்றுப் பார்த்தார். “பயல், கேய் கேம்முக்கு புதுசு... இந்த மாதிரி ‘கன்றிவுட் பாயை’ விடவே முடியாது. சோதா பயல்களோட சோரம் போனது போதும்.” என்றாலும், மிஸ்டர் ஜான் ஜோ, நாலுந்தெரிந்தவர். கிளப்பின் துணைச் செயலாளரான சத்ருக்கன் பொருள்பட பார்த்தார். அவன், அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தான். விட்டுப் பிடிக்க வேண்டிய கிராக்கியாம். செல்வாவின் அருகே, அவனுக்குத் தெரியாமல் ஒரு முரடனை நிறுத்திவிட்டு அவர்கள் மேடைக்குப் போய் விட்டார்கள். உடனே ‘ஆடல் பாடல்', அம்மண அமர்க்களங்கள். நமக்கு மறுவாழ்வு அளிக்கும் மிஸ்டர் ஜோ என்று துணைச் செயலாளர் சத்ருக்கன் ஓங்கிக் கத்த, மேடையில் நின்றவர்களும், தளத்தில் கிடந்தவர்களும் “வாழ்க வாழ்கவே” என்றார்கள். பிறகு ஒரு பாடல் {{left_margin|3em|<poem><b>“இருப்பது கொஞ்ச காலம் — அதுவே கொஞ்சும் காலமாகட்டும். இறப்பது நிச்சயம் — அதனால் இருப்பதைப் பகிர்வோம். ஆணென்ன பெண்ணென்ன அனுபவ இன்பமே முக்கியம்.”</b></poem>}} இந்தப் பல்லவி, தான் எழுதியது என்றும், அதன் பொருளையும் சத்ருக்கன், ஜோவிடம் விளக்கிக் கொண்டிருந்தான். பல பேர்<noinclude></noinclude> 02im8ke1df21ebwx87ohgxdn6otap24 பக்கம்:ஒத்தை வீடு.pdf/188 250 202691 1838634 762247 2025-07-03T10:25:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|188||புதைமண்}}</noinclude>மேடையில் பாட்டிற்கேற்ப கொஞ்சுக் குலாவினார்கள். இதற்குள் துணைச் செயலாளனின் மோவாய் அசைப்பில் ஒருத்தன் தட்டு நிறைய பிரியாணியோடு செல்வாவிடம் போனான். ‘உன்னை எதுவும் செய்ய மாட்டோம். பேசாம சாப்பிடு’ என்றான். இரண்டு நாள் முழுக்க பட்டினி கிடந்த செல்வா, அந்த தட்டை பாய்ந்து பிடிக்கப் போனான் உடனே தட்டுக்காரன் மொதல்ல வயித்துக்குள்ள கனமான சாப்பாட்ட திணிக்கும் முன்னால, பழரசம், சூப் எதையவாது குடிக்கனும், உனக்கு என்ன வேணும் என்றான். பசி வேகத்தில் செல்வா, இரண்டும் என்றான். உடனே, தட்டுக்காரன் செல்வாவை கவனித்துக் கொண்டிருந்த முரட்டுத் தோற்றக்காரணை பார்த்து கண்ணடிக்க அவன் சூப்போடும், பழரசத்தோடும் வந்தான். செல்வா, மாங்கு மாங்கு என்று குடித்தான். பிரியாணியில் மூன்று கவளங்களை போட்டிருப்பான். மீண்டும் ஜூஸ், சூப் என்றான். கேட்டது கிடைத்தது. கிடைக்கக் கிடைக்க அவன் தலை சுற்றியது. சிறிது நேரத்திற்குள் செல்வா, இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடைவெளி கொடுக்கும் சுரணையற்ற திலைக்கு போய்விட்டான். கண் முன்னாலேயே கலர் கலராய் பல்வேறு விதமான படங்கள். யதார்த்தம் - மாந்தரீக இயல்பானது. தலை சுழன்றது. கண்கள் வெட்ட வெளியாயின. அப்படியே தரையில் சாயப் போனவனை, துணைச் செயலாளன் சாய்த்துப் பிடித்து தரையில் குப்புறக் கிடத்தினான். பேண்டை உருவினான். ஜட்டியை கழட்டினான். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகும் சாதனையாளன் போல் மேடைக்குப் போய், மிஸ்டர் ஜான் ஜோவை கூட்டி வந்தான். அவரும் ஜட்டி போடாத பேண்டை கழட்டி தோளில் துண்டு மாதிரி போட்டுக் கொண்டு, கையிலிருந்த கோப்பையை ஒரே மடக்காய் வாயில் கவிழ்த்துவிட்டு ஓடோடி வந்தார். இதற்குள் அத்தனை பேரும் அம்மணமாக ஆங்காங்கே சுருண்டார்கள். உலக நிறுவன இயக்குநர், செல்வா மீது கவிழ்ந்து படுத்தார். பத்து நிமிடம் ஆகியிருக்கும். கால நேர வர்த்தமானங்களைத் தாண்டிய முப்பரிமாண நிலை. அரை மணிநேரமோ கால் மணி நேரமோ லேசாய் கண் விழித்த செல்வாவிற்கு, பாதி உண்மையாகவும், மீதி கற்பனை போலவும் தோன்றியது. ஆனாலும், தன் மேல் ஒரு சுமையை உணர்ந்தான். உடனே அவனுள் ஒரு வெறி. பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற வெறி. மிஸ்டர் ஜான் ஜோவை, ஒரே உதறலாய் கீழே தள்ளி, குப்புறப் போட்டு அவர்மீது கவிழ்ந்தான். அவரை ஒரு பெண்ணாக நினைத்துக் கொண்டான். கிராமத்தில் ஆட்டை மரத்தில் கட்டி கிடாயை ஏவி விடுவதும், காளை மாடு பசுவின் மேல் கால்<noinclude></noinclude> 2zw1rn57nkbu61tfoy2b1173sbzw06q பக்கம்:ஒத்தை வீடு.pdf/189 250 202694 1838637 762248 2025-07-03T10:33:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||189}}</noinclude>போடுவதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. இதுவரை பசுவாக, ஆடாக கிடந்த இவன், இப்போது கட்டிளங் காளையாய், அசல் மாடாய் ஆகிப் போனான். ஆனாலும், கீழே கிடக்கும் வெள்ளையரை ஒரு பெண்ணாகப் பாவித்துக் கொண்டான். கால்மணி நேரத்தில், அவனுள் ஒரு சுகம் தெரிந்தது. இதுவரை அனுபவித்தறியாத சுகம். கன்னி கழியாதவனுக்கு கிடைத்த முதல் தீனி. சுவையான தீனி. சுகமான தீனி. தீனி முடிந்ததும் உடலெங்கும் ஒரு ஆயாசம். ஒரு குற்ற உணர்வு. செல்வா, மிஸ்டர் ஜான் ஜோவிடமிருந்து புரண்டு தரையில் குப்புற விழுந்தான். அவன் மீது மது வெறியிலும், மோக வெறியிலும் பாயப்போன துணைச் செயலாளரை அப்போதுதான் வந்த மோகனன் பிடித்துக்கொண்டான். கீழே கிடந்த மிஸ்டர் ஜான் ஜோ, “மோக்... நோ வயலன்ஸ்... வெரி பேட் லெட் தம் என்ஜாய்... டோண் பி எ கில் ஜாய்... (மோகனா, நீ செய்வது தவறு. அவர்கள் மகிழட்டும். மகிழ்ச்சிக்கு கொலைகாரனாகாதே.) என்று தான் நடத்தியதில் திருப்தியும், செல்வா நடத்திக் காட்டிய மகிழ்ச்சியும் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும் என்பதுபோல், கை கால்களை அங்குமிங்குமாய் ஆட்டினார். செல்வாவும், அவனைப் பார்த்து கையை ஆட்டி “ஐ லைக் இட்... ஐ லைக் இட்” என்றான். இடுப்புக்கு கீழே அம்மணமாய் கிடந்த செல்வாவை, தூக்கி நிறுத்திய மோகனன், எவனோ கழட்டிப் போட்ட பேண்டை எடுத்து அவனை மாட்டச் செய்தான். கழுத்து வரைக்கும் சுருக்கி வைக்கப்பட்ட பனியனையும், பனியன் மேலான சட்டையையும் கீழே இழுத்து விட்டான். அந்தக் கூட்டத்தை அனல் கக்க பார்த்துவிட்டு, செல்வாவுடன் சுழல் படிகளில் இறங்கி, தரை தட்ட நின்றான். செல்வாவை, அணைத்தபடியே தனது காருக்குள் ஏற்றினான். அந்தக் கார் நான்கு சக்கர பாய்ச்சலில் கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில்... இந்த இரவில்... இவனை சித்தப்பாவிடம் ஒப்படைக்க முடியாது. காரை ஓட்டிக் கொண்டே இருக்க வேண்டும். பெட்ரோல், ரிசர்வ்க்கு வரும்போது, அதே இடத்தில் நிறுத்த வேண்டும். இருட்டு மயமான சாலையில், எதிரே வரும் வாகன ஒளியை வைத்தே ஒரு அனுமானத்தோடு, கார் ஓட்ட வேண்டும். அந்த ஒளியின் பரிமாணத்திற்கு ஏற்ப வண்டியின் எதிர் வாகனத்தின் கன பரிமாணத்தை உணர்ந்து, காயை நகர்த்துவதுபோல் காரை நகர்த்த வேண்டும். பின்னால் வரும் வண்டிகளின் விளக்கு வெளிச்சம், கார் கண்ணாடியில் பிரதிபலிப்பதை அனுமானமாகக் கொண்டு<noinclude></noinclude> hte0xnrzqm1mu336ewf11qwiarel35d பக்கம்:ஒத்தை வீடு.pdf/190 250 202696 1838646 762250 2025-07-03T11:26:03Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|190||புதைமண்}}</noinclude>அதற்கேற்ற இடைவெளி கொடுத்து ஓட்ட வேண்டும். லாரிகள் மொய்க்கும் தேசியச் சாலையில் இரவில் கார் ஓட்டுவது என்பதே ஒரு தனிக்கலை. இதில் மோகனன் தேர்ந்தவன் என்றாலும், இப்போது அவன் கார் இரு தடவை விபத்துக்குள்ளாகப் போனது. இவன் வழிவிடவில்லை என்று ஒரு லாரி இவன் காரை ‘அணைப்பது’போல் ஓடியது. எதிரே நான் வருகிறேன் என்பதுபோல் பிரகாசமாக வெளிச்சம் போட்டும். வேக வேகமாய் ஓடிய இவன் காரை மோதப் போவதுபோல் பாவலா செய்து கொண்டே ஒரு லாரி பின்நோக்கி போனது. இவனே காரை நிறுத்தலாமா என்று நினைத்தபோது, பின்னிருக்கையில் படுத்துக் கிடந்த செல்வா மயக்கம் தெளிந்ததுபோல் கத்தினான். அலறியடித்து எழுந்து மோகனனின் சட்டைக் காலரின் பின் பக்கத்தை பிடித்திழுத்தபடியே, “சதிகாரப் பயலே... என்னை... அந்த மிருகக் கூட்டத்துல மாட்ட வச்சிட்டு... எங்கேடா போனே...” என்று கத்தினான். கார் நின்றது. முன் கதவு திறந்தது. பின் கதவு திறக்கப்பட்டது. மோகனன், செல்வாவை வெளியே இழுத்துப் போட்டான். கன்னத்தில் ஓங்கி ஓங்கி அறைந்தான். இடுப்பில் காலால் எகிறினான். கீழே விழுந்த செல்வாவை தூக்கி நிறுத்தி, கழுத்தை, கையால் பிடித்தபடியே அந்த அந்தகார இருளில் பேய் போல் கத்தினான். “பொறுக்கிப் பயலே... முட்டாப் பயலே... நான் ஒன்னை ஒளிஞ்சுக்கோன்னு சொன்னால்... இப்படி பண்ணிட்டியே... உன்னையே நம்பி இருக்கிற என் சிஸ்டர் என்ன பாடுபடப்போகிறாளோ...” “உன் சிஸ்டர் யாருக்குடா வேணும்? நீதாண்டா போக்கிரி புறம்போக்கு... கூட்டிக் கொடுத்த பயல்... பத்து நிமிஷத்துல சித்தப்பாவுக்கு டெலிபோன் செய்துட்டு வாறதா போக்குக் காட்டிட்டு, ரெண்டு மணி நேரமா என்னடா செய்தே...? தோ பாரு... இதுக்கு மேல கைய நீட்டுன... மவனே... ஒன் முதுகிலயும் நான் சவாரி செய்வேன்.” மோகனன், புரிந்து கொண்டான். பயலுக்கு போதை மாத்திரையை கலக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இப்போதுதான் லேசாக அவனுக்கு மயக்கம் தெளிந்திருக்கிறது. சொல்லிப் பார்ப்போம். கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் போறான்... மோகனன், தன்னிலை விளக்கமாக பேசினான். “நான் சொல்வதை கேளுடா நாயே... போன் செய்வதுக்காக, கேய் அலுவலகத்துக்குப் போனேன். அது அவுட் ஆப் ஆடர்.<noinclude></noinclude> 0ixjfnr2yzrl8895y0ymgdm4l8x0i43 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/3 250 215958 1838457 821173 2025-07-03T07:13:31Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சத்தியத்துக்குக்<br>கட்டுப்பட்டால்...</b>}}}} {{dhr|10em}} {{center|{{larger|<b>சு. சமுத்திரம்</b>}}}} {{dhr|10em}} {{box|background=white|align=center|border size=2px|text color=black|text align=center|{{x-larger|<b>கங்கை புத்தகநிலையம்</b>}}}} {{c|13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை–600017}} {{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> 9fyqubpudaiyj0fzy5auhn8bjvchvli பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/4 250 215960 1838460 821184 2025-07-03T07:15:57Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} முதற் பதிப்பு : டிசம்பர் 1992 {{dhr|10em}} <b>விலை : ரூ.26–00</b> {{dhr|10em}} {{rule}} நேரு அச்சகம் 43 அம்மையப்பன் தெரு சென்னை–600 014 {{nop}}<noinclude></noinclude> ok1ldagbn5ddmf5e839ub7uaez3sb16 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/5 250 215962 1838463 821195 2025-07-03T07:21:47Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>முன்னுரை</b>}}}} {{c|<b>ஜி. லட்சுமிநாராயணன் M. A., B.L.,<br>(தேசிய முழக்கம்—கரிகாலன்)</b>}} ‘சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்...’ என்ற தலைப்புடன் அச்சிடப்பட்ட தாள்களை அடியேனின் கைகள் பெற்றபோது அதிர்ச்சி அடைந்தேன்—உடலெங்கும் புதுமை வெள்ளம் பரவிப் பாய்ந்தால் பெறும் ஒரு இன்ப அதிர்ச்சி. நெடுநாளைய நண்பர் திரு. தர்மலிங்கம், நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு பல இடங்களில் தோண்டித் துருவி என்னைத் தேடிக் கண்டுபிடித்து என் கைகளில் அச்சுத்தாள்களைத் திணித்தபோது நான அடைந்த இன்பம் இவ்வுலகை நான் கையில் பெற்றது போலிருந்தது. இனிய முகத்துடன் என் எதிரில் இருந்த நண்பர் எனக்கு இமயமெனத் தோன்றினார். அலுவலகச் சிக்கல்கள், அன்றாடத் தொழிற் பிரச்னைகள். இவற்றிலே சிக்குண்டு இதயத்தை எங்கோ மறந்து, உணர்வுகளை ஆழப் புதைத்துவிட்டு, சமுதாயத்திலே இன்று இயந்திரமாய் இரு கைகளும் பிணைக்கப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதியாய் இருந்த எனக்கு அவர் விடுதலை அளித்தார். கூற்றுகளை வடித்துக் குவலயத்திற்குத் தர வேண்டிய நீங்கள் குறிப்பாணைகளை எழுதிக் கூலிக்கு உழைப்பதோ என்று கண்களாலே கேட்டு கூண்டுக் கதவுகளைத் திறந்து விட்டார். {{nop}}<noinclude></noinclude> lv7tjs8wxnpqeq8jisq012wap9a350u பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/6 250 215964 1838467 821207 2025-07-03T07:32:32Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||iv|}}</noinclude>சுத்தக் காற்றை சுவாசித்து சுதந்திரமாக வெளி உலகைக்காண வந்த என் இதயத்திலே உணர்ச்சிப் பெருக்காக ஓடிவந்த வரிகளை இங்கே வடிக்கின்றேன். சத்தியம் என்றால் என்ன என்று ஆராயும் காலம் இது. ‘சத்தியமாகச் சொல்கிறேன்’ என்றால், ‘உண்மையாகச் சொல்கிறேன்’ என்று பதிவாகிறது. சத்தியம் என்பது வெறும் உண்மை மட்டும்தானா? ஆழ்கடலின் முத்தை மூழ்கி எடுப்பது போன்று சத்தியத்தின் பொருளை ஆய்ந்து, அனுபவித்து அறிஞர்தம் துணைகொண்டுதான் சத்தியத்தின் பொருளை நாம் அறிய முடியும். என்றாலும் நானறிந்த வரையில் சத்தியம் என்பது ஒரு உயர் நெறி! ஓப்பற்ற ஒரு வழி! பழுதில்லாதொரு பண்பு! காசினியினை மேம்படுத்தும் கலாச்சாரம்! நட்பு இறவாதது—இது ஒரு நெறி. நண்பர் தர்மலிங்கம் நட்பை மறவாது, தன்னை வருத்திக்கொண்டு, முப்பதாண்டுகளுக்கு முன்னே பார்த்த என்னை, தேடிக் கண்டுபிடித்தது சத்தியத்திற்கு சாவில்லை என்பதைத்தானே பறைசாற்றுகிறது. கண்டவுடன் என் கைகளில் திணித்த கதைத் தொகுப்போ இன்னொரு நண்பர் திரு. சமுத்திரத்தின் சிந்தனைக் கடலில் தோன்றிய ஒளிமுத்துக்கள்- இப்பொழுது சொல்லுங்கள் நட்பு நெறியும் ஒரு சத்தியந்தானே! நண்பர் தர்மலிங்கத்தைப் போன்றே தளராத உழைப்பினால் இன்று தமிழர் உள்ளங்களிலே கொலுவிருப்பவர். கல்லூரி நாட்களிலிருந்தே நாங்கள் இணைந்திருந்தோம். சமுத்திரம் தடைகளைத் தாண்டி வந்தவரல்ல—தகர்த்தெறிந்து வந்தவர்—சவால்களைச் சந்தித்து—சதிகளை சவக்குழியிலிட்டு முன்னேறியவர். சமுத்திரத்திலே ஆர்ப்பரிக்கும் அலைகளும் உண்டு—அழகிய முத்தும் உண்டு—எரிமலை முகட்டுகளும் உண்டு—எழில் கொஞ்சும் பவழப் பாறைகளும் உண்டு. {{nop}}<noinclude></noinclude> ijs21gdfjkiy5rah4tqqoeh311555rm பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/7 250 215966 1838472 821228 2025-07-03T07:38:14Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||V|}}</noinclude>சமுத்திரத்தின் படைப்புகளிலே இவை அத்தனையும் உண்டு. வாய்மையைப் போற்றி வெஞ்சமர் புரியும் இந்தப் பேனா வீரன் எந்தச் சூழ்நிலையிலும் வளைந்து கொடுத்ததில்லை. சத்தியத்தைக் கட்டுப்பாடாக வாழ்வில் இலட்சியமாகக் கொண்டவர். சமுதாயத்திலுள்ள சதிகாரர்களைச் சாம்பலாக்கி சூதாடிகளைக் கழுவிலேற்றிடும் வரை சமர் புரிவேன், சத்தியத்திற்குக் கட்டுப்படுவேன் என்று சூளுரைக்கும் இளைஞர். ‘சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்’ என்ற தலைப்பைப் பார்த்ததும் அச்சுறுத்துகிறாரோ என்று பயந்தேன். இன்றைய உலகில் சத்தியம் துன்பத்தைத் தருகிறது! சோதனைக் குள்ளாக்குகிறது! உண்மை பல நேரங்களில் புதைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களே மிஞ்சும் காலமிது. ‘உண்மை’ ஓரிருவர் அறிந்த சொல்—ஊழல் உலகிலுள்ளோர். அத்தனைபேரும் ஜெபிக்கும் மந்திரம். சிந்தையிலே ஊழல், செயலிலே ஊழல், வாழ்விலே ஊழல்—ஏன் வையகம் முழுவதையுமே ஊழல் சேற்றிலே அமுக்கி, மனித இனத்தையே மரணக் குழியிலே போட்டு மூடும் மாபாதகம் பெருகி வருகிறது. இந்த கோர முடிவினினின்றும் சமுதாயம் விடுபட வேண்டுமானால் சத்தியத்திற்கு நாம் கட்டுப்பட்டால் போதும். சத்தியத்துக்குக் கட்டுப்படுவது கடினம்தான். அண்ணல் காந்தி அடிகளும் தனது வாழ்க்கைச் சரிதத்தை ‘சத்திய சோதனை’ என்றே அழைத்தார். சத்தியம் சோதிக்கும். ஆனால் முடிவில் சாதிக்கும். வெற்றி வாகை சூடும்போது பட்ட துன்பமெல்லாம் பறந்துபோகும். இமாலயச் சாதனை ஒன்றைப் புரிந்துவிட்ட பெருமை, இன்பமே சூழ்ந்திருந்து இந்நிலவுலகே சுவர்க்கமாகும் மேன்நிலை-இத்தனையும் தோன்றும். இன்றையச் சமுதாயத்தின் சீரழிவிற்கு பல காரணங்கள் உண்டு—ஆனால் எளிதில் தெரியாத ஆலகால விஷமாகப்<noinclude></noinclude> stiehovri1iusi7tk5tcgm3fm5r6uxs பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/8 250 215968 1838474 821253 2025-07-03T07:41:50Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||vi|}}</noinclude>பரவி நிற்பது அடுத்தவரை அடக்கியாள வேண்டுமென்ற வெறி, அராஜகத்திற்கு அஸ்திவாரமிட்டு அநீதிச் சுவர் எழுப்பி அநியாய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறது. குடும்பம், அரசியல், சமூகம், வணிகம் அத்தனைக்கும் இது பொருந்தும். ‘ஆளுமை உணர்வு’ எத்தனை கொடிய நஞ்சை கிடுக்கிப் பிடியில் அடக்குவதுபோல் இரண்டே சொற்களில் வெளிக்கொணர்ந்துவிட்டார் சமுத்திரம். புற்றிலிருந்த பாம்பை பலர்காணக் காட்டிவிட்டார். மனித சமுதாயம் இந்த ஆளுமை உணர்விலிருந்து விடுபட்டால்தான் அமைதியும் ஆனந்தமும் பெற முடியும். இரணகளரிகளிலிருந்து, இரத்தச் சேற்றிலிருந்து கரையேற ஒரே வழிதான்—சத்தியத்திற்குக் கட்டுப்படுவது. சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமானால் மனதில் தூய்மை வேண்டும்—தணிகாசலத்தைப்போல. ஆனால் தணிகாசலத்திடம தூய்மை இருந்ததே தவிர துணிவு இல்லை. அதனால்தான் சோதனை! நமக்கு இரண்டும் வேண்டும். சமுத்திரம் இலட்சியத்திற்காக எழுத்தைத் தொட்டவர். எளிய நடையிலே ஏற்றமிகு கருத்துக்களை எடுத்துச் சொல்கிறார். தேசியம் வேரூன்ற வேண்டும்—தேமதுரத் தமிழ் பட்டி தொட்டியெல்லாம் பரவ வேண்டும் என்று வாதிடுபவர். தேசிய அரசு 1947–ல் ஏற்பட்டதாலேதான் முதன் முறையாக தமிழ் கட்டாய பாடமாகக் கல்விக்கூடங்களிலே வந்தது. தமிழ் நாட்டு மாணவன் தமிழ் படிக்காமலேயே தாய்மொழியைத் தூக்கியெறிந்துவிட்டு பட்டம் பெற முடியும் என்ற அவல நிலையைப் போக்கியவர் திரு. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். தமிழ்த் தலைநகரில் பொறுப்பேற்ற முதல் தேசிய முதலமைச்சர். அன்னைத் தமிழ் அரியணையிலேறியது கர்ம வீரரின் காலம். பட்டிதொட்டிகளிலே பாமரர்கள், பாட்டாளிகளின் மத்தியிலே<noinclude></noinclude> 6merzhza9niurahm52w8ii2x75dcbn2 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/9 250 215970 1838485 821275 2025-07-03T07:56:53Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||vii|}}</noinclude>தமிழிலே சங்கநாதம் செய்தவர் சத்தியமூர்த்தி. இவர்களின் காலடிச் சுவடுகளை கண்ணில் ஒற்றி கடமையாற்றும் சமுத்திரத்தை இளைஞர் சமுதாயம் சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட செந்தமிழர் கூட்டம் என்றும் ஏற்கும்—பாராட்டும். இதே நேரத்தில் விளக்கிற்கு தூண்டுகோலாக பல நல்ல படைப்புகளை தமிழ் மக்களுக்குத் தந்து, சீரிய எண்ணங்களை வரிகளிலே வடித்துத் தரும், எண்ணற்ற எழுத்தாளர்களை ஊக்குவித்து வாழ்வளிக்கும் வானதி திருநாவுக்கரசு அவர்களைப்பற்றி நான் எண்ணாமல் இருக்க முடியாது. இந்து தியாலஜிகல் பள்ளியின் ஒன்பதாவது வகுப்பு மாணவனாக இருந்தபோது தம்பு செட்டித் தெருவில் இருந்தேன். மாலை நேரங்களில் தெருவில் விளையாடுவது உண்டு. ஒரு நாள் மூன்றாவது வீட்டிலிருந்த ஒருவர் அழைத்தார். ‘தம்பி பள்ளியில் படிக்கும் நீ எழுத்தாளனாகலாமே’ என்றார். அந்தக் காலகட்டத்தில் வை. கோவிந்தனின் ‘அணில்’ பள்ளி மாணவர்களின் சொத்தாக இருந்தது. ‘எனக்கு எழுத வராதுங்க’ என்றேன். ‘நிச்சயம் வரும் முயற்சி செய்—நாளை வந்து பார்’ என்றார். காளிதாசனின் நாவில் அன்னை எழுதியவுடன் காளிதாசன் கவிமேகமானான் என்பதுபோல் மறுநாளே எழுதவேண்டும் என்ற ஆசை வந்தது. இவ்வளவிற்கு நான் தமிழில் முப்பதுக்கும் குறைவாக மதிப்பெண் பெறுபவன். “டேய், நான் தேன் சொட்டச் சொட்ட ஒரு கதை எழுதியிருக்கேன்—படிக்கிறேன் கேளுடா”—இது ஒரு நண்பன். “வேண்டாம்டா-வீடெல்லாம் எறும்பு வந்திடும்—வா வீதிக்குப் போவோம்—அங்கே படி” இதுதான் என் கன்னிப் படைப்பு—கண்ணுற்ற அவர் ‘தம்பி ஜோராக இருக்கிறது—‘ஜில் ஜில்’ பத்திரிகையில் வரும் பார்’<noinclude></noinclude> 73vpqx1yl0m14lgtkrib7j45ezl50on பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/10 250 215972 1838494 820962 2025-07-03T08:01:45Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||viii|}}</noinclude>என்று சொல்லி ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றைப் பரிசளித்தார். ‘ஜில் ஜில்’ பத்திரிகையில் ஓவியர் ரெஸாக்கின் படத்துடன் அட்டைப் படத்திலே இந்தத் துணுக்கு பிரசுரமானது. பிரசுரித்தவர் ஜில்ஜில் திருநாவுக்கரசு-இன்றைய வானதி திருநாவுக்கரசு. இன்றைக்கு நான் மீண்டும் எழுத முயலுகிறேன் என்றால், சில ஆண்டுகள் முன்பு வரை எழுதினேன் என்றால் என் இரத்தத்திலே, சிந்தையிலே வானதியார் தந்த எழுச்சி ஊக்கம் தான் காரணம் நண்பரை சந்தித்ததிலே துவக்கி வழிகாட்டி வானதியாரை நினைப்பதிலேயே இதை முடிக்கிறேன். தந்தையின் அடிச்சுவட்டில் தனயனும் ஈடுபட்டு இந்நாவலை வெளியிடும் கங்கை பதிப்பக அதிபர் திரு. இராமநாதன் அவர்களைப் பாராட்டுகிறேன். சமுத்திரத்தின் கதைகளைப் படிப்பது மட்டும் போதாது. சமுதாயக் கொடுமைகளைச் சாடிட, அலைகடலின் அலைகளாய் ஆர்ப்பரித்து எழுங்கள். ஏய்ப்பர்களையும் மேய்ப்பர்களையும் எரித்து சாம்பலாக்கும் எரிமலைகளாய் குமுறி எழுங்கள். ‘பாதகம் செய்தோரைக் கண்டால் பயங் கொள்ளலாகாது—மோதி மிதித்திடுவோம் அவர்கள் முகத்தில் உமிழ்ந்திடுவோம்’ என்று அமரகவி நமக்காகவே பாடினான். வீறு கொண்டு எழுங்கள்—புதிய விடுதலைப் போரைத் துவக்குங்கள்! ஆனால் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு! {{block_right|அன்பன்<br><b>ஜி.இலட்சுமிநாராயணன்</b><br>(தேசிய முழக்கம்—கரிகாலன்)}} {{nop}}<noinclude></noinclude> 513kz43iwvu12bb3netcrp04b5cubw6 1838496 1838494 2025-07-03T08:02:31Z AjayAjayy 15166 1838496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||viii|}}</noinclude>என்று சொல்லி ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றைப் பரிசளித்தார். ‘ஜில் ஜில்’ பத்திரிகையில் ஓவியர் ரெஸாக்கின் படத்துடன் அட்டைப் படத்திலே இந்தத் துணுக்கு பிரசுரமானது. பிரசுரித்தவர் ஜில்ஜில் திருநாவுக்கரசு—இன்றைய வானதி திருநாவுக்கரசு. இன்றைக்கு நான் மீண்டும் எழுத முயலுகிறேன் என்றால், சில ஆண்டுகள் முன்பு வரை எழுதினேன் என்றால் என் இரத்தத்திலே, சிந்தையிலே வானதியார் தந்த எழுச்சி ஊக்கம் தான் காரணம் நண்பரை சந்தித்ததிலே துவக்கி வழிகாட்டி வானதியாரை நினைப்பதிலேயே இதை முடிக்கிறேன். தந்தையின் அடிச்சுவட்டில் தனயனும் ஈடுபட்டு இந்நாவலை வெளியிடும் கங்கை பதிப்பக அதிபர் திரு. இராமநாதன் அவர்களைப் பாராட்டுகிறேன். சமுத்திரத்தின் கதைகளைப் படிப்பது மட்டும் போதாது. சமுதாயக் கொடுமைகளைச் சாடிட, அலைகடலின் அலைகளாய் ஆர்ப்பரித்து எழுங்கள். ஏய்ப்பர்களையும் மேய்ப்பர்களையும் எரித்து சாம்பலாக்கும் எரிமலைகளாய் குமுறி எழுங்கள். ‘பாதகம் செய்தோரைக் கண்டால் பயங் கொள்ளலாகாது—மோதி மிதித்திடுவோம் அவர்கள் முகத்தில் உமிழ்ந்திடுவோம்’ என்று அமரகவி நமக்காகவே பாடினான். வீறு கொண்டு எழுங்கள்—புதிய விடுதலைப் போரைத் துவக்குங்கள்! ஆனால் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு! {{block_right|அன்பன்<br><b>ஜி.இலட்சுமிநாராயணன்</b><br>(தேசிய முழக்கம்—கரிகாலன்)}} {{nop}}<noinclude></noinclude> 3t8a48h5po7usvijub9ej2t5fc64j1c பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/11 250 215974 1838542 1838069 2025-07-03T08:24:46Z AjayAjayy 15166 1838542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Right|{{x-larger|<b>சத்தியத்துக்குக்<br>கட்டுப்பட்டால்.. </b>}}}} {{dhr|3em}} {{Right|{{x-larger|<b>1</b>}}}} <b>மே</b>ற்கே தெரிந்த அந்திமச் சூரியன் பானுமதிக்கும் செல்வத்திற்கும், வேறு வேறு விதமாகத் தெரிந்தது. வெள்ளைத் தட்டில் வைக்கப்பட்ட பீட்ரூட் தோசைபோல் அவளுக்கும், ஆகாய வெளியை கண்களால் செதுக்கிய அவனுக்கு அது ஸ்படிக லிங்க உருவமாகவும் தோன்றியது. கைகளில் மண்ணைப் பிசைந்தபடி இருந்த செல்வம், அந்தக் கதிரவனையே மேல்நோக்கிப் பார்த்தான். அந்த ஆகாய லிங்க வடிவில் சூரியன் குங்குமப் பொட்டாய் அவனுக்குத் தோன்றியது. எதிர் திசை கடலோரம் ஜோடி ஜோடிகளாய் பிரிந்த காதலர் கூட்டம் பாடி பாடிகளாய் ஒன்றிக் கிடந்தன. சற்று தொலைவான மணல் மேட்டில் சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டி ஒன்றை நான்கு சொறி நாய்கள் வட்டமாய்ச் சூழ்ந்துகொண்டு, அதை நெருக்கிக்கொண்டு இருந்தன. காதுகளை நிமிர்த்தி, வால்களை விறைப்பாக்கி வாய்களை அகலப் படுத்திய நாய் பட்டாளத்தின் மையமாய் நின்ற வெள்ளைப் புள்ளிமான் போன்ற ஆட்டுக்குட்டியின் கூக்குரலும், நாய்களின் குரைச்சலும், கடலோர கள்ள நாயக–நாயகிகளுக்குப் பொதுவாகக் கேட்கவில்லை. சுேட்ட ஒருசில ஜோடிகள், ஓல ஒலியும். உயிர் தின்னி ஒலியும் இரண்டறக் கலந்த<noinclude></noinclude> 04dtp7sxh4y8j6anwablra3aojhslb2 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/12 250 215976 1838543 821004 2025-07-03T08:29:38Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|2 சு.சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>இடத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு, தங்கள் ஸ்வீட்—நத்திங் உரையாடலுக்கு அவை இடையூறாக இருப்பதுபோல், கடலோரம் பார்த்து, தங்கள் மேனிகளை நகர்த்திக் கொண்டார்கள். செல்வம் வீறிட்டு எழுந்தான். அவன் கரத்தை கீழே இருந்தபடியே செல்லமாக இழுத்த பானு, அவன் பார்வை பட்ட இடத்தில் நடந்துகொண்டிருந்த விபரீத சம்பவத்தைக் கண்டு, “அய்யயோ” என்று கத்தியபடியே, அவன் கையை விடுவித்தபோது, விடுபட்டவன் ஒரே ஓட்டமாய் ஓடினான். காலை இடறிய கல் ஒன்றை எடுத்துக்கொண்டே மூச்சைப் பிடித்தபடி, முன் நெஞ்சை நிமிர்த்தி, நாய்ப்பட்டாளத்தின் மீது எறிந்தான். அவனைக்கூட குரைத்துப் பார்த்த நாய்கள், இறுதியில், ஆட்டுக்குட்டியைக் கறுவியபடியே பார்த்த வண்ணம், ஓட்டமெடுத்தன. செல்வம் திரும்பி நடக்கப்போனான். இதற்குள் ‘மே மே’ என்றபடி அந்த ஆட்டுக்குட்டி அவனையும், தொலைவில் நாக்குகளை தொங்கப் போட்டுக்கொண்டிருந்த நாய்களையும் மாறி மாறிப் பார்த்தது. அவன் அதன் உயிர் அச்ச உணர்வுகளைப் புரிந்து கொண்டவன்போல் அவன் நடக்காமல் நின்றபோது. எங்கிருந்தோ ஓடிவந்த தாய் ஆடு, தன் குட்டியை வயிற்றுக்குள் அடைக்கலமாக்கி, ஏதோ நடந்திருக்கிறது என்பதைப் புரிந்ததுபோல் தலையை நிமிர்த்தி சுற்றுப்புறத்தை நோட்டம் விட்டது. செல்வம், தன்னையறியாமலே, அந்த வாயில்லா ஜீவன்கள் பக்கம் போனான். திடீரென்று இருபது வருடத்திற்கு முன்பு கிராமத்தில் தன்னை படிப்பில் ஜெயிக்க முடியாத சில பெரிய இடத்துப் பையன்கள், அவனை வாயால் திட்டி. கையால் குதறப்போனதும், ஊர்ப் பெரியவர் ஒருவர் அவர்களைத் துரத்தியதும், விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்த அம்மா, அவனைத் தன் வயிற்றோடு ஒட்டிப்பிடித்து, தலையைக் கோதி விட்டதும் நினைவுக்கு வந்தது. ஆட்டில்<noinclude></noinclude> k9mgig0j7u4q04yj8jj36jrzikpr1c9 1838545 1838543 2025-07-03T08:30:08Z AjayAjayy 15166 1838545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|2 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>இடத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு, தங்கள் ஸ்வீட்—நத்திங் உரையாடலுக்கு அவை இடையூறாக இருப்பதுபோல், கடலோரம் பார்த்து, தங்கள் மேனிகளை நகர்த்திக் கொண்டார்கள். செல்வம் வீறிட்டு எழுந்தான். அவன் கரத்தை கீழே இருந்தபடியே செல்லமாக இழுத்த பானு, அவன் பார்வை பட்ட இடத்தில் நடந்துகொண்டிருந்த விபரீத சம்பவத்தைக் கண்டு, “அய்யயோ” என்று கத்தியபடியே, அவன் கையை விடுவித்தபோது, விடுபட்டவன் ஒரே ஓட்டமாய் ஓடினான். காலை இடறிய கல் ஒன்றை எடுத்துக்கொண்டே மூச்சைப் பிடித்தபடி, முன் நெஞ்சை நிமிர்த்தி, நாய்ப்பட்டாளத்தின் மீது எறிந்தான். அவனைக்கூட குரைத்துப் பார்த்த நாய்கள், இறுதியில், ஆட்டுக்குட்டியைக் கறுவியபடியே பார்த்த வண்ணம், ஓட்டமெடுத்தன. செல்வம் திரும்பி நடக்கப்போனான். இதற்குள் ‘மே மே’ என்றபடி அந்த ஆட்டுக்குட்டி அவனையும், தொலைவில் நாக்குகளை தொங்கப் போட்டுக்கொண்டிருந்த நாய்களையும் மாறி மாறிப் பார்த்தது. அவன் அதன் உயிர் அச்ச உணர்வுகளைப் புரிந்து கொண்டவன்போல் அவன் நடக்காமல் நின்றபோது. எங்கிருந்தோ ஓடிவந்த தாய் ஆடு, தன் குட்டியை வயிற்றுக்குள் அடைக்கலமாக்கி, ஏதோ நடந்திருக்கிறது என்பதைப் புரிந்ததுபோல் தலையை நிமிர்த்தி சுற்றுப்புறத்தை நோட்டம் விட்டது. செல்வம், தன்னையறியாமலே, அந்த வாயில்லா ஜீவன்கள் பக்கம் போனான். திடீரென்று இருபது வருடத்திற்கு முன்பு கிராமத்தில் தன்னை படிப்பில் ஜெயிக்க முடியாத சில பெரிய இடத்துப் பையன்கள், அவனை வாயால் திட்டி. கையால் குதறப்போனதும், ஊர்ப் பெரியவர் ஒருவர் அவர்களைத் துரத்தியதும், விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்த அம்மா, அவனைத் தன் வயிற்றோடு ஒட்டிப்பிடித்து, தலையைக் கோதி விட்டதும் நினைவுக்கு வந்தது. ஆட்டில்<noinclude></noinclude> djduntx3iu6ovroh7sybev790ra8o62 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/13 250 215978 1838548 821026 2025-07-03T08:35:12Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||3}}</noinclude>அம்மாவையும், குட்டியில் தன்னையும் ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தவன் தோளில் பட்ட வளைக்கரத்தை நிமிர்த்தியபடியே. அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். பானு படபடப்பில் கேட்டாள். “நாயுங்கள நல்லா துரத்திபிட்டிங்களா, பழைய படியும் வரப்போகுதுங்க. இங்கேயே உட்காருவோமா?” உட்கார்ந்தார்கள். மீண்டும் மண் கொள்ளப்போன அவன் கையை அவள் பிடித்துக்கொண்டாள். மஞ்சள் நிறப் புடவை மங்கலப் புடவைபோல் தோன்ற, சிவப்பு கரங்களில் உராய்ந்த தங்கக் காப்புகள் முத்து மேடுகளோடு குலுங்க, அவன் இடையில் கைக்கோர்த்தபடியே, பானு கடலைப் பார்த்தாள். இந்தச் சமயத்தில்தான் வாங்குவார்கள் என்பதுபோல், கடலைகொண்டு வந்த விடலைப் பையனை கண்களால் தூரத்தினாள். பிறகு அவனை உசுப்பினாள். “போவோமா? அப்பா காத்திருப்பார்.” “எனக்கு பயமா இருக்கு பானு!” “வெண்ணெய் திரளும்போது தாழியை உடைக்கிறீங்களே!” “இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்!” “என்ன டியர்... உளறுறீங்க, சொல்றது சினிமாவுக்குப் பொருந்தும். டிராமாவுக்குப் பொருந்தும். பட் இதுக்குப் பொருந்துமா? ஞாபகம் இருக்கட்டும். இன்னைக்கு நடக்கப் போறது பாதிக் கல்யாணம்...” “நீ பாதியை நினைக்கிறே! நான் மீதியை நினைக்கிறேன். எனக்கு பயமா இருக்கு பானு!” “அப்படின்னா ஒன்னு செய்யலாம்... அதோ, அந்த படகு பக்கமாப் போவோம். என் புடவையை நீங்க கட்டிக்கலாம். ஒங்க வேட்டியை நான் கட்டிக்கிறேன்.” {{nop}}<noinclude></noinclude> h1v05xgyjf5die3zrpaa66d1bmumija பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/14 250 215980 1838560 821053 2025-07-03T09:06:40Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|4 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“சட்டையையும், ஜாக்கெட்டையும் மாற்றிக்கணுமா... அதையும் சொல்லிடு.” பானு வாய்விட்டு சிரித்து, மனம் விட்டுப் பூரித்தாள். அவனோ அனிச்சையாக ஜோக்கடித்தவன்போல், அவள் சிரிப்பில் தன் சிரிப்பை சிந்தவிடாமல், சீரியசாக சொன்னான் : “ப்ளீஸ்... நான் சொல்றதைக் கேளு பானு! எனக்கு என்னமோ இன்னைக்கு மனசே சரியில்ல. இன்னொரு நாளைக்கு...” “இன்றைக்கு முடிந்தாகணும்; இன்னொரு நாளைக்கு என்றால். இனிமேல் அது கல்யாணமாகத்தான் இருக்கணும். எழுந்திருங்க, போயும் போயும் இன்னைக்குப் பார்த்து குட்டாம்பட்டி வேட்டியைக் கட்டிட்டு வந்திருக்கீங்க பாருங்க... அசல் சந்நியாசி மாதிரி இருக்குது. சரி புறப்படுங்க.” “வேண்டாம் பானு!” “என்னங்க நீங்க? ஆனானப்பட்ட அப்பாவே சம்மதிச் சுட்டார். ஆறு மாதமாய் யோசிக்க டயம் கேட்டவரு. ‘சரிம்மா, பையனைக் கூட்டிவாம்மா. பார்த்துட்டு முடிவு சொல்றே’ன்னு சொல்லிட்டார். நீங்க என் திட்டத்துக்கே முடிவு கட்டுறீங்களே.” “எனக்குக் கூச்சமா இருக்குது.” “இது எனக்கு வரவேண்டியது.” “வெட்கம் வேற, கூச்சம் வேற, நல்லது நடக்கும்போது பெண்களுக்கு வெட்கம் வரும். இல்லன்னா அவள் பெண்ணில்ல! நல்லது நடக்கும்போது ஆணுக்குக் கூச்சம் வரணும். இல்லன்னா அவன் ஆணில்ல.” “சுவாமிகளே! உங்க தத்துவத்தை, போய்கிட்டே பேசலாமா? எழுந்திருங்க.” {{nop}}<noinclude></noinclude> 8x5z2bicpb64qsbiczhyr5g2ov2npzu பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/15 250 215982 1838563 821076 2025-07-03T09:11:16Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||5}}</noinclude>“ஒன் வீட்லே. நான் சொத்துக்கு ஆசைப்பட்டு வரதா நினைக்கப் போறாங்களோன்னு எனக்கு ஒரு மாதிரி இருக்கு...” “இதுக்கு பேர் தான் தாழ்வு மனப்பான்மை என்கிறது.” “தப்பு. தாழ்வு மனப்பான்மை இல்லை. சுயமரியாதை உணர்வு” “அளவுக்கு மீறிய சுயமரியாதை, ஒருவித தாழ்வு மனப்போக்குதான்.” “சரி அப்படியே இருக்கட்டும். இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்.” “சொல்றதை நல்லா கேளுங்க டியர். இன்னொரு நாளைக்குன்னா அது என்னை இன்னொருவருடன் நீங்க மணவறையில் பார்க்கிறதாய்தான் இருக்கும். அதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியல. ஒவ்வொரு தற்கொலைக்கும் பின்னணியாய் பல கொலைகாரங்க இருப்பாங்க. ஓ...கே...யு...கேன்...கோ... என் பிரச்சனைக்கு முடிவு கிடைக்கலன்னா, வாழ்க்கைக்காவது முடிவு வரட்டும்.” பானு எழுகிறாள், அவனின் நீட்டிய கரத்தை முரட்டுத் தனமாய் தட்டிவிட்டபடி. சிறிது தூரம் நடந்து, கண்களை இமைகளாலும், முகத்தை கரங்களாலும் மூடியபடி நின்றாள். செல்வம் படபடத்து எழுந்து, அவள் கையை பிரிக்கப்போனபோது, அவள் உள்ளங்கை விரல் கண்ணீரால் அலம்பப்பட்டது போலிருந்ததது. “என்ன பானு! பைத்தியம்மாதிரி...” “ஆமாம்! நான் பைத்தியமேதான். இந்தப் பைத்தியத்தை, அதன் போக்கிலேயே விடுங்க.யூ கேன் கோ” “பானு...” {{nop}}<noinclude></noinclude> b48sjl3qkjz60ft202u48d1te0yur9j பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/16 250 215984 1838564 821096 2025-07-03T09:15:03Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|6 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“பின்ன என்ன ஸார்! மூணு வருஷத்திற்கு முன்னாடியே இதை நீங்க யோசித்திருக்கணும். சின்ன வயசில இருந்து ஒன்னா பழகுன என் மாமா பையன். என் பின்னாலயே சுற்றிக்கிட்டு இருந்தாலும், அவன்மேல பாசம் வருதே தவிர, ஆசை வர்ல! ஒங்கமேலேகூட எடுத்த எடுப்பிலேயே எனக்கு எதுவும் வர்ல! “உங்க மறந்துபோற நினைவுக்காக நம் சந்திப்பின் துவக்கத்தை நான் சொல்றேன். அப்புறம் முடிவையோ அல்லது முடிவு கட்டுறதையோ நீங்க சொல்லுங்க. ஒங்க கம்பெனி, என் காலேஜ் பக்கத்துலேயே இருக்கது என் தப்பில்ல. அங்கே ஒரு அட்டெஸ்டேஷனுக்காகவும். டிராமா ஸ்கிரிப்டை டைப் அடிக்கவும் நான் வந்ததுதான் தப்பு. பத்து பக்கம் டைப் அடித்த உங்களுக்கு நான் பத்து ரூபாயை நீட்டியபோது. என்னை கோபத்தோடு முறைச்சதையும், நான் உடனே கூட ஐந்து ரூபாயை நீட்டியதும், ‘நீங்க என்றைக்கும் உதவிக்குப் பிச்சை போடாதிங்க’ என்று சொல்லி,ரூபாயை திருப்பிக் கொடுத்திங்க, அதனால்தானோ என்னவோ, அதுல வந்த காதலையும் திருப்பி எரியுறிங்க. “ஒங்களைவிட ஒங்களோட மனப்போக்கும், நல்லதோ கெட்டதோ... உங்களுக்குன்னு இருக்கிற பிரின்ஸ்பிள்களும், எனக்கு பிடிச்சுப்போச்சு! படிப்படியா உங்களைக் காதலிக்கிறது தெரியாமலே காதலிச்சேன். அப்பா மாமா பையனை ஃபிக்ஸ் பண்ணப் போனபோதுதான், ஒங்கமேல உயிரையே நான் வச்சிக்கிட்டு இருக்கிறது எனக்கு புரிஞ்சுது. ஓடோடி வந்து ஒங்ககிட்டேயே நான் முறையிட்டேன். அப்போவாவது நீங்க எனக்கு புத்திமதி சொல்லியிருக்கலாம்; நான்தான் உங்களிடம் வலியப் பேசினேன் என்கிறதை மறக்கலே! நான்தான் உங்களுக்குக் காதல் நிர்பந்தம் கொடுத்தேன் என்கிறதையும் நான் நினைக்காமல் இல்ல அதேசமயம் உங்களுக்கு என்மேல் காதல் இல்லங்கறதை அப்போதே சொல்லியிருக்கலாம். {{nop}}<noinclude></noinclude> 3ab79binndmwssy38kd6uxpymsiatk6 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/17 250 215986 1838565 821119 2025-07-03T09:18:22Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||7}}</noinclude>செல்வம் குழைந்தான் : “ஒன்மேல எனக்கு இருக்கிற காதல் ஒரு பிரச்சனைக் குரிய விவகாரம் இல்ல! நீ சொல்லிட்டே... நான் சொல்லல? அவ்வளவுதான் விஷயம்; உயிரை அதன் வெளிப்பாடுலதான் பார்க்க முடியும்; தனித்துப் பார்க்க முடியாது. அதுமாதிரி நீ இல்லாமல் என்னைத் தனித்துப் பார்க்கமுடியாது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், உயிரை... அதை விடுறவனால் எப்படிப் பார்க்க முடியாதோ...அப்படி என்னை என்னையே பார்க்க முடியாது. தாயில்லாமல் தனித்து ஹாஸ்ட்டல்ல படித்த எனக்கு, தாய் மாதிரி வாஞ்சை காட்டியவள் நீர் ஒன்மேல எனக்குக் காதல் இல்லங்கறது... என்மேல எனக்கு உயிர் இல்லை என்கிறது மாதிரி. உனக்கோ நான் உறவில் ஒரு கூறு... உனக்கு அப்பா இருக்கார். அண்ணன் இருக்கார். சொந்த பந்தம் இருக்குது. ஆனால் எனக்கு என் உறவின் முழுக்கூறே நீதான். நீ இல்லாமல் ஒருவேளை நான் வாழலாம்! ஆனால் அந்த வாழ்க்கை சுமையாய் இருக்குமேதவிர சுவையாய் இருக்காது பானு...” செல்வத்தின் குரல் தழுதழுத்தது. அவன் உடம்பெல்லாம் ஆடியது. விழப்போகிறவன்போல் துடித்த அவன் கரங்களை அவள் பிடித்துக்கொண்டாள், கண்ணீர் கரங்களால் அவன் கண்களைத் துடைத்துவிட்டாள். அவ்வப்போது மனதுக்குள் எட்டிப் பார்த்த சந்தேகம் ஒரேயடியாய் தேகத்தை விட்டும், தேகத்துடன் நீக்கமற நிறைந்த மனதை விட்டும் போவது போன்ற திருப்தி; செல்லச் சிணுங்கலோடு—பொய்க் கோபத்தோடு. ஆள்காட்டி விரலால். அவன் நெற்றிப்பொட்டை அடித்தபடியே கேட்டாள். “ஒவ்வொருவரும் மனதால் தீர்மானிக்கப்படுறது கிடையாது. செய்கையால்தான் நிர்ணயிக்கப்படுறாங்க. காதல் பூஜைக்குத் தயாராகும்போது, அதன் மூலவரே கரடியானால் எப்படி...” {{nop}}<noinclude></noinclude> clc8q56lyunca5j61xrmpwmt9ez9xox பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/18 250 215988 1838568 821130 2025-07-03T09:23:08Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|8 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“நான் அதைத் தள்ளிவைக்கச் சொல்றனே தவிர, தடை போடச் சொல்லலியே!” “ஒரு பிரச்சனைக்கு தீர்வு... அதை எதிர்நோக்குவதில் தான் இருக்குது. அதிலிருந்து ஓடுறதுலயோ... தள்ளிப் போறதுலயோ இல்லன்னு சொல்ற நீங்க, இப்போ தள்ளிப் போடுறது, ஓடுறதைவிட மோசமானது! நீங்க வீட்டுக்கு வரதை தள்ளி வைக்கிறது மூலம் என்னை தள்ளி வைக்கிற தாய்தான் அர்த்தம் பண்ண முடியும். “நாள் சொத்துக்கு ஆசைப்படுகிறதாய்...!” “சொத்து சொத்து—மண்ணாங்கட்டி சொத்து... இது உங்களோட சொத்தை விவாதம் சார்! இதே புடவையோடு ஒங்க பின்னால வாறேன்; கோயிலிற்குப் போவோமா, ரிஜிஸ்டர் ஆபீஸிற்கு போவோமா, இல்லன்னா... குட்டாம் பட்டியில் ஓங்க சித்திகிட்டே போவோமா! எனக்கு இப்பவே முடிவு தெரியணும்! ஏன் யோசிக்கிறீங்க.” “நீ நினைக்கிற மாதிரி விஷயம் சிம்பிள் இல்ல பானு!” “இப்படி நெனச்சுதான் பலர் சிம்பிள் விஷயத்தை, காம்ளிகேட் செய்துடுறாங்க. வீட்ல ஒங்களைக் கடித்தா தின்னப்போறாங்க? ஒங்ககிட்டே சில கேள்விகள் கேட்கப் போறாங்க. வீட்டுக்கு வார மாப்பிள்ளை, நல்ல பையன் தான்னு உறுதிபடுத்த நினைக்கிறாங்க. அதுக்கு, அவங்களுக்கு உரிமை உண்டு. அதை நிறைவேத்துற கடமை ஒங்களுக்கு. சரி இன்னும் ஒங்க மனசு மாறல்லன்னா. நான் இங்கே நிற்கிறதுல அர்த்தமில்ல! அப்பா பங்சுவாலிட்டிக்கு மதிப்பு கொடுக்கிறவர். நிச்சயித்த நேரம் போய் கால்மணி நேரம் ஆகுது, அப்புறம் ஒங்க இஷ்டம். சரி நான் போசுட்டுமா!” “அவள் கேள்விக்குப் பதிலை வாயால் சொல்ல முடியாதவன்போல் செல்வம் மெள்ள நகர்கிறான். அவள் கரங்கள் இரண்டையும் கூம்பாய் எடுத்து கண்களில் ஒற்றிக்-<noinclude></noinclude> buxhm6x08dy9r4y1xx43k7awmj7vg01 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/19 250 215990 1838570 821141 2025-07-03T09:25:55Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||9}}</noinclude>கொண்டபின், தலைகவிழ்ந்து கடலை நோக்கி நடக்கிறான். இதை சற்றும் எதிர்பாராத அவள் தொப்பென்று மணலில் உட்கார்ந்தாள். குறுகி வைத்த கால்களில், முகத்தைப் புதைத்து, பிடறியில் கை பின்னியபடியே, உயிரற்றவள்போல் கிடந்தாள். சிறிது தூரம் நடந்த செல்வம், திரும்பிப் பார்த்தான். அவனால் தாளமுடியவில்லை. ஒரே பாய்ச்சலில் ஓடிவந்து, அவளின் அருகே வேக வேகமாய் உட்கார்ந்து, அவள் முகத்தை “பானு...பானு” என்று சொன்னபடியே தொடப்போனான். அவளோ. அவன் கையை பலவந்தமாய் விலக்கினாள். அவனை நேருக்கு நேராய் பார்த்தாள். “நீங்கள் ஒரு ஆண் மகனா?” என்றுகூட கேட்கப்போனாள். ஆனால் நிர்மலமான முகங்காட்டி, அப்பாவிக் குழந்தைபோல். மோகனமாய், கேள்விக்குறியாகிய அவனைப் பார்த்ததும். அவளால் கேட்கப்போனதைக் கேட்க முடியவில்லை. ஆனாலும் அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள். “நீங்க யார்? நான் யார்? என்னைத் தொடாதீங்க... என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லன்னுதான் எழுதப்போறேன். சாகிறதே சாகிறாள்... எதுக்காக லட்டர் எழுதி வச்சுட்டு சாகணுமுன்னு நினைக்கிறீங்களா... என் தற்கொலையை, கொலையாய் நெனச்சு போலீஸ் உங்களுக்கு தொல்லை கொடுக்கப்படாது பாருங்க, அதுக்காகத்தான். நீங்க போகலாம்!” “நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். எழுந்திரு போகலாம்! ஒன்னைத்தான் பானு, நான் உன்னோடவாறேன் எழுந்திரு! ஒன்னைத்தான்... ஒன்னோடு தற்கொலை செய்ய வாறேன்னு சொல்ல... ஒன் வீட்டுக்கு வாறேன்னு சொல்றேன்!” இரண்டு சுரங்களையும், பக்கவாட்டில் சிறகுகள்போல் மடித்து வைத்த வண்ணத்துப் பூச்சிபோல் கிடந்த பானுமெள்ள மெள்ள முகத்தை மெல்ல மெல்ல தூக்கினாள்.<noinclude></noinclude> 6nyfk3m3w5lsjrmrjxlx4ptncnx0han பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/20 250 215992 1838571 821152 2025-07-03T09:30:25Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|10 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>கலங்கிய கண்ணிமைக்குள் கிடந்த நீலக் கருமணிகள். அங்குமிங்கும் அரைவட்டமடித்தன. விழிகள். உதடுகள்போல் துடித்தன. செக்க சிவந்த மேனி உயரமாகிக்கொண்டிருந்தது. நெற்றி முனைகளில் படர்ந்த மோதிர நெளிவு முடி கற்றைகளை அனிச்சையாய் தடவியபடியே, அவனையே நிதர்சனமாய் பார்த்தாள். பிறகு அவன் கழுத்தில் கரங்களை சங்கிலி வளையமாக்கியபடியே “பழையபடியும் முருங்கை மரத்தில் ஏறமாட்டீங்களே” என்றாள். அவன், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே சொன்னான். “நான் வாறேன். நீ எனக்கு முன்கூட்டியே சொல்லாமல், இப்போ சொன்னதாலதான் என்னால நிலைப்படுத்த முடியல!” “அரசியல் சதிக்கும். கொலை, கொள்ளைக்கும்தான் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேணும். உண்மைக்கு எதுக்கு நோட்டீஸ்?” “உண்மைக்கில்ல. உண்மையை நம்ப வைக்கிறதுக்கு. சூரியன் கூட. காலையில் சேவலை கூவவைத்துத்தான். படுக்கையில் இருந்து எழுந்திருக்கிறான்.” “தப்பு! சூரியன் உதிக்கப் போறதாலதான், சேவல் கூவுது. சேவல் கூவுறதனால் சூரியன் உதிக்கல! என்னை நீங்க மனதார விரும்புறதாலதான், என்னோடு வீட்டுக்கு வாறீங்க. வீட்டுக்கு வாரதால விரும்பல!” “ஒன்கிட்டே பேசி ஜெயிக்க முடியுமா?” “காதல் ஊடல்ல தோற்கிறவங்கதான் ஜெயிக்கிறதாய் அர்த்தமாம் உம்... புறப்படுங்க.” {{nop}}<noinclude></noinclude> 6uxinz0nyvjd1071xx1yurrj7hy52rq பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/21 250 215994 1838673 821163 2025-07-03T11:53:44Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||11}}</noinclude>“ஆனால் ஒரு கன்டிஷன். என்கிட்டே ஒங்க அப்பா. உன் ஜாதி எதுன்னு கேட்டால் என்னாவ ஒங்க ஜாதின்னு சொல்ல முடியாது. உண்மையான பொருளை உண்மையான வழியில்தான் அடையனும்.” “அய்யய்யோ...இது நீங்க வீட்டுக்கு வராமல் இருக்கறத விட மோசம்.” “அதனாலதான் வரலேன்னேன்!” “பழையபடி ஒங்க புத்தியைக் காட்டுறீங்க,பாருங்க... என்ன டியர், நாம் ஜாதிகளை அங்கீகரிக்கலை; அதனாலேயே அது இல்லனு ஆயிடாது. அப்பாகிட்ட நீங்க நம்ம ஜாதின்னு சொல்லியிருக்கேன்.” “தர்மர் அஸ்வத்தமா செத்துட்டார்ன்னு சொன்ன மாதிரி...” “தப்பு! அவர் பொய்க்கு உண்மை முலாம் பூசினார். நான் உண்மைக்கு பொய் முலாம் போட்டுப் பார்த்தேன்! உலகத்துல நம்ம ஜாதி என்கிற மனித ஜாதியைத் தவிர, எந்த ஜாதியும் கிடையாது. இந்த உண்மையை பொய்யாச் சொன்னேன். நீங்களும் சொல்லணும் அவ்வளவுதான்...” “ஸாரிம்மா...” “சரி, ஒரு காம்ரமைஸ்... நீங்களா எதுவும் சொல்ல வேண்டாம்! அப்பா இதைப்பற்றி பேசும்போது நீங்க மௌனமாய் இருக்கணும். என்ன சொல்றீங்க? ஏன் பேசாமல் இருக்கீங்க...” “மௌனம் மூலம் பேசுறேன். சம்மதமுன்னு சொல்லாமல் சொல்றேன். ஏய்... ஏய்... இது பப்ளிக் பிளேஸ்... கழுத்தை விடு” இருவரும் சாலையை நோக்கி நடந்தார்கள். அவன் வேட்டியில் படிந்த மண் துகள்களை அவள் தட்டிவிட்டாள். பஸ் நிலையத்தை நோக்கி நடக்கப் போனவனை, அவள்<noinclude></noinclude> ju6j26dbin908r1inp6fjfqm6bc3zbp பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/22 250 215996 1838668 821165 2025-07-03T11:52:19Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|12 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>கைப்பிடித்தாள், அவர்களுக்காகவே தவமிருப்பதுபோல் நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். பானு ஆணையிட்டாள். “எங்கள்ல யாரும் ஜம்ப் பண்ணமுடியாதபடி, ஸ்பீடாய் போங்க!” செல்வம் அவளின் உட்பொருளை உணர்ந்தது போல் சிரித்தபடி பேசினான். “அதுக்காக ஆட்டோ ஜம்ப் பண்ணிடப்படாது. பார்த்து ஓட்டுங்க.” ஆட்டோ டிரைவர் பார்த்து ஓட்டினார். ஒருத்தருக்கு ஒருத்தர் என்று பிறக்கவில்லையானாலும். இறக்கத் தயாராய் இருப்பவர்கள்போல தோன்றிய அந்த இளம் ஜோடியை பார்த்துத்தான் ஓட்டினார், பல்வேறு ஜோடிகளை அனுபவத்தால் கண்டுணர்ந்த அந்த டிரைவர், ஒரு நிஜ ஜோடியைப் பார்த்த திருப்தியில் நிமிர்ந்து ஓட்டினார். {{dhr|2em}} {{Right|{{x-larger|<b>2</b>}}}} {{dhr|2em}} <b>அ</b>சோக மரங்களும், தூங்குமூஞ்சி மரங்களும் நிறைந்த புல்வெளியின் நடுநாயகமான பங்களா. அதன் வரப்பு போலிருந்த குரோட்டன்ஸ் செடிகளை வேலையாள் ஒருவர் அழகுபட சிகையலங்காரம் செய்துகொண்டிருந்தார். டிரைவர், காரை கழுவிக்கொண்டிருந்தார். ஆட்டோவில் பானுவோடு இறங்கியவனைப் பார்த்ததும், இவர்களுக்கெல்லாம் தங்கள் இனத்தவனைப் பார்த்தது போன்ற திருப்தி. அல்லது அதிருப்தி. ஆனாலும் அவனின் கம்பீரமான தோற்றத்தையும் பங்களாவையும், பகட்டான காரையும் பார்த்து மயங்தவன்போல் நடந்த செல்வத்தைப் பார்த்த கண்களோடு, அவர்கள் தங்களுக்குள்ளே கண்ணடித்துக்<noinclude></noinclude> l1xylqvmvfvljfo53o2o3328f7lrsp2 1838672 1838668 2025-07-03T11:53:06Z AjayAjayy 15166 1838672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|12 சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>கைப்பிடித்தாள், அவர்களுக்காகவே தவமிருப்பதுபோல் நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். பானு ஆணையிட்டாள். “எங்கள்ல யாரும் ஜம்ப் பண்ணமுடியாதபடி, ஸ்பீடாய் போங்க!” செல்வம் அவளின் உட்பொருளை உணர்ந்தது போல் சிரித்தபடி பேசினான். “அதுக்காக ஆட்டோ ஜம்ப் பண்ணிடப்படாது. பார்த்து ஓட்டுங்க.” ஆட்டோ டிரைவர் பார்த்து ஓட்டினார். ஒருத்தருக்கு ஒருத்தர் என்று பிறக்கவில்லையானாலும். இறக்கத் தயாராய் இருப்பவர்கள்போல தோன்றிய அந்த இளம் ஜோடியை பார்த்துத்தான் ஓட்டினார், பல்வேறு ஜோடிகளை அனுபவத்தால் கண்டுணர்ந்த அந்த டிரைவர், ஒரு நிஜ ஜோடியைப் பார்த்த திருப்தியில் நிமிர்ந்து ஓட்டினார். {{dhr|2em}} {{block_right|{{x-larger|<b>2</b>}}}} {{dhr|2em}} <b>அ</b>சோக மரங்களும், தூங்குமூஞ்சி மரங்களும் நிறைந்த புல்வெளியின் நடுநாயகமான பங்களா. அதன் வரப்பு போலிருந்த குரோட்டன்ஸ் செடிகளை வேலையாள் ஒருவர் அழகுபட சிகையலங்காரம் செய்துகொண்டிருந்தார். டிரைவர், காரை கழுவிக்கொண்டிருந்தார். ஆட்டோவில் பானுவோடு இறங்கியவனைப் பார்த்ததும், இவர்களுக்கெல்லாம் தங்கள் இனத்தவனைப் பார்த்தது போன்ற திருப்தி. அல்லது அதிருப்தி. ஆனாலும் அவனின் கம்பீரமான தோற்றத்தையும் பங்களாவையும், பகட்டான காரையும் பார்த்து மயங்தவன்போல் நடந்த செல்வத்தைப் பார்த்த கண்களோடு, அவர்கள் தங்களுக்குள்ளே கண்ணடித்துக்<noinclude></noinclude> liud6dp7ddrmbzc83x9p0v4t099i3mc பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/23 250 215998 1838676 821166 2025-07-03T11:57:52Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||13}}</noinclude>கொண்டார்கள். சற்று தொலைவில் துணிகளை துவைத்துக் கொண்டிருநத முத்தம்மா அந்த ஜோடி உள்ளே போனதும், “காதலுக்குக் கண்ணில்லை என்கிறது சரிதான்” என்றாள். உடனே தோட்டக்காரர் “கண்ணில்லாட்டிலும் மூளை இருக்குற மாதிரி தெரியுது.” என்றார். முத்தம்மா அதை அங்கீகரிப்பவள்போல பேசினாள். நாற்பது வயதுக்காரி. உழைப்பு உளியால் செதுக்கப்பட்ட காமாட்சி அம்மன் சிலை போன்ற மேனி, மின்னல்போல் வெட்டும் கருப்பு உதடுகளால், சிவப்பு வார்த்தைகளைப் பேசினாள். “காதலுக்கு, கண்களைவிட மனசுதான் காரணம். இன்னைக்கு நாட்ல வரதட்சணை கொடுமைன்னு பேசுறாங்க. இது நம்மை மாதிரி ஏழைகள்கிட்டே இல்லாத பிரச்சனை. பெரிய இடத்துப் பிரச்னைக. சின்ன இடத்துல போட்டுட்டு, சின்ன இடத்து பிரச்சனையை, சில்லரைப் பிரச்சனையாய் நினைக்கிற காலம் இது. இதை எதுக்கு சொல்ல வந்தேன்னா, நாட்ல படிச்ச பெண்கள். தன்னைவிட எல்லா வகையிலிம் உயர்ந்தவனை புருஷனாய் கேட்கிறாங்க. இது கிடைக்கலன்னா. வரதட்சணை கொடுமையாம். இவள்கள் ஏன் வசதியில்லாத அதே சமயம் நல்ல பையன்களை கல்யாணம் பண்ணப்படாது! ஏதோ அம்மா பானு செய்து காட்டிருக்கு. அந்தப் பையன் பார்க்கறதுக்கு அன்னக்காவடி, பரதேசி மாதிரி இருந்தாலும், எவ்வளவு அழுத்தமாய் போகுது பாரு...” “ஏதேது! இவங்க ரெண்டுபேருக்கும் இடையில், நீதான் லவ் லட்டரை கொடுத்திருப்பே போலிருக்கு!” முத்தம்மா, விகற்பம் இல்லாமல் சிரித்தாள். இந்த வெளிப்பட்ட, ஓசைப்படாத சிரிப்புக்கு உள்வட்டமான வரவேற்பு அறையில். பானுவின் அண்ணன் பாஸ்கரனிடம் எதையோ பேசிக்கொண்டிருந்த செல்வம், தணிகா சலத்தைப் பார்த்துவிட்டு, எழுந்து கும்பிட்டான். பிறகு<noinclude></noinclude> 60xxhqawras565x5qkkeraapv4ltte5 விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் 4 411887 1838356 1837878 2025-07-02T15:16:39Z Info-farmer 232 புதிது = "கனிச்சாறு 3", மொத்தம் = 464 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன. 1838356 wikitext text/x-wiki <div style="font-size:90%;"> <!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். --> {{புதியபடைப்பு |கனிச்சாறு 3|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}} {{புதியபடைப்பு |உயிர்க்காற்று|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு | மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2|மேலாண்மை பொன்னுச்சாமி|2012}} {{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}} {{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}} {{புதியபடைப்பு |தாய்மதி|மேலாண்மை பொன்னுச்சாமி|1994}} {{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{மொத்தபடைப்பெண்ணிக்கை|449}} </div> 8qd2tveo88wii2mzpo0mue88e9ngal3 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/76 250 422472 1838314 1008826 2025-07-02T14:41:59Z Asviya Tabasum 15539 1838314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|68|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்கள் மீது அபிமானம் கொள்வது - அதுவே மனிதாபிமானமாகும், அவர்கள் மீது கொள்ளும் பாசமும் நேசமுமே மனிதாபிமானமாகும். இங்கு இன்னொரு விஷயத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். மனிதர்கள்பால் பிறக்கும் இந்த மனிதாபிமானம், மனிதநேயம் ஆகியவற்றின் விளைவாய், மனித உள்ளத்தில் பிறக்கும் கருணை, தயை, கழிவிரக்கம், தரும சிந்தனை, பரோபகாரம் ஆகியவற்றையெல்லாம் கூட, முதலாளித்துவச் சமுதாயம் போற்றிப் புகழும் மதிப்புக்களாகவே கருதத் தூண்டும் ஒரு போக்கும், சோஷலிச எதார்த்தவாதத்தை அர்த்தப்படுத்துவதில் புகுந்த வக்கிரமான பார்வையினால் தலைதூக்கி நின்றதுண்டு. அன்னசத்திரம் வைத்துப் பசிப்பிணியைப் போக்க முடியாதுதான்; வறுமையை ஒழித்துவிட முடியாதுதான். அதனால் பசித்து வந்து கையேந்துபவனுக்கு ஒரு வேளை சோறு கொடுப்பது மானிட மதிப்பாக இல்லாது போய்விடுமா? தருமம் செய்வதால் பிச்சைக்காரர்களே இல்லாமல் செய்துவிட முடியாதுதான். அதனால் பிச்சைக்காரனுக்குத் தருமம் செய்வதில் பயனில்லை என்று கருதுவதோ, தருமம் செய்வதே அதர்மம் என்று கருதுவதோ மனிதாபிமானமாகி விடுமா? அன்னதான வினியோகத்தையும் தரும் காரியங்களையும் தம்மைத் தருமப் பிரபுக்கள் என்று விளம்பரம் செய்துகொள்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் வசதிபடைத்த ‘வள்ளல் பிரபுக்களை’ப் பற்றி இங்குக்குறிப்பிடவில்லை. அவர்கள் ஒரு பக்கத்தில் தொழிலாளியின் வயிற்றில் அடித்து விட்டு மறுபுறம் தானதருமம் செய்து தமது சுரண்டலை மூடி மறைத்துத் தமக்கு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். ஆனால் சாதாரண மனிதன் தனது சோதரனான இன்னொரு மனிதன்பால் காட்டும் கருணை, தயை, கழிவிரக்கம் ஆகியவையெல்லாம் முதலாளித்துவ மதிப்புக்கள் ஆகிவிடுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.<noinclude></noinclude> d5k2y94pkpoj3h88sijqqojlj55resc பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/75 250 422473 1838309 1008827 2025-07-02T14:19:14Z Asviya Tabasum 15539 1838309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|67}} {{rule}}</noinclude>போனால், மதாபிமானியான தாயுமானவரும் கூட, “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்று பாடும்போது, அதில் அவரது மனிதாபிமானம்தானே பிரதிபலிக்கிறது அவர் மதாபிமானி என்பதால், அவரது மனிதாபிமானத்தை நாம் ஏன் சந்தேகிக்க வேண்டும்? ஆன்மிக மதிப்புக்கள் என்னும் போது நமது அர்த்தபாவத்தில் மனிதகுலம் வாழ்வதற்கு, ஒன்றுபட்டு வாழ்வதற்கு நித்தக் கவலைகள் நீங்கி, அதாவது தமது பெளதிகத் தேவைகளைப் பூர்த்தி செய்து மானிடப் பண்பாட்டை உயர்த்திக் கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் பண்புகள் என்பதையே நாம் குறிப்பிடுகிறோம். இந்த மானிட மதிப்புக்களைப் போற்றுவதே மனிதாபிமானமாகும். எனவே மனிதாபிமானம் என்பதை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்துகிறோம், அர்த்தப்படுத்த வேண்டும் என்பது முக்கியமானது. மனிதாபிமானம் என்பது மனிதப்பிறவியின் மகத்துவத்தை, மனிதனின் பேராற்றலை உணர்வதும் ஒப்புக் கொள்வதுமாகும். அதே சமயம் மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதிகள், கொடுமைகள் ஆகியவற்றைக் கண்டு கழிவிரக்கம் கொள்வதோடு மட்டும் நின்று விடாமல், அவற்றைக் கண்டு கொதித்தெழுகின்ற தார்மிக ஆவேசமும் ஆகும். சொல்லப்போனால், “தாழ்த்தப்பட்ட மனிதனுக்குத்தாரக மந்திரத்தை உபயோகித்ததன் காரணமாக, நான் நரகத்தில் தள்ளப்படுவேன் என்றால் அந்த நரகவாசத்தையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளத் தயார்”, என்று கோயிலின் மீது ஏறி நின்று கூறிய ராமானுஜருக்கும். “மனிதனுக்குப் பணிபுரிவதற்காக நான் இங்கு பிறவி எடுக்க வேண்டுமென்றால், அதற்காக நான் ஆயிரம் பிறவிகளையும் எடுக்கத் தயார்” என்று முழங்கிய விவேகானந்தருக்கும் இருந்த மனிதாபிமானம் அது, அதாவது மனிதாபிமானம் என்பது வெறும் மரக்கறிவாதமான ஜீவகாருண்யம் அல்ல. மறியாடுகளாக மதிக்கப்பட்டு வரும் மக்களை மனிதர்களாக மதிப்பது. அவர்களும் எவ்வாறு மனிதர்களாக இருக்<noinclude></noinclude> 4q8l3tanyao7jmya8fz84w7nvolh8oy பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/74 250 422474 1838303 1008828 2025-07-02T14:01:29Z Asviya Tabasum 15539 1838303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|66|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>காலதேசச் சூழ்நிலைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, அதனை நெளிவு சுழிவோடு பிரயோகிக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். சொல்லப்போனால், முற்போக்கு இலக்கியம் என வரையறை செய்வதற்கே மனிதாபிமானம் அல்லது மனிதநேயம் தான் அதன் அடிப்படையான அளவு கோலாக இருக்க வேண்டும் என்றும், மனிதகுலத்தக்கு நன்மை பயக்கும் ஆன்மீக மதிப்புக்களை, மானிட மதிப்புக்களைப் போற்றுபவை எல்லாமே முற்போக்கானவை என்றுமே நான் கருதுகிறேன். ஏனெனில் எந்தவோர் உண்மையான மனிதாபிமானியும் கம்யூனிச விரோதியாக இருக்க மாட்டார். இருக்க முடியாது என்பதே இதற்குக் காரணமாகும். ‘ஆன்மீக மதிப்புக்கள்’ என்று சொன்னவுடன் நம்மில் முகம் சுழிப்போர் சிலரும் உண்டு என்பதை நான் மறந்துவிடவில்லை. 1961இல் நடந்த பேரவைக் கூட்டத்தில் ஜீவா ஆற்றிய உரையின்போது, “இன்றைய விஞ்ஞான அறிவோடும், நமது மக்கள் பௌதிக, ஆன்மீக வளர்ச்சித் துறைகளில் முன்னேற முயல்வதில் வெற்றி பெற உதவுவதே” நமது கடமையாகும் என்று குறிப்பிட்டார். (த.க.இ. பெருமன்றக் கொள்கை - குறிக்கோள் பற்றிய விளக்கக்குறிப்பு. பக்கம் 17). இதனை 1968இல் நான் சமர்ப்பித்த அறிக்கையிலும் வலியுறுத்தியிருந்தேன். இந்த இரு சமயங் களிலும் ‘ஆன்மீகம்’ என்ற இந்தச் சொல்லை ஆட்சேபித்தவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்தனர். இதன் பின்னர் கலை இலக்கியப் பெருமன்றத்தின் புதிய கொள்கை அறிக்கைக்கு ஒரு நகலைத் தயாரித்து அனுப்பிய அதன் துணைத் தலைவர்களில் ஒருவரான திருச்சி தியாகராஜன் ‘ஆன்மிகம்’ என்று சொன்னாலே நாம் ஏதோ பண்டார சந்நிதிகளாக மாறி விடுவதுபோல் அஞ்சி, அந்தச் சொல்லையே நாம் கைவிட்டுவிடவேண்டும் என்று கூறியிருந்தார். ]ஆனால் ‘ஆன்மிகம்’ என்ற சொல்லை, நாம் மனிதா பிமானியாக இருந்து சொல்கிறோமே தவிர, மதாபிமானிகள் கொள்கிற அர்த்தபாவத்தில் சொல்லவில்லை. சொல்லப்<noinclude></noinclude> m472dwg3w3cjb9y7d91slmwwcsc5ezj பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/73 250 422475 1838282 1008829 2025-07-02T13:06:57Z Asviya Tabasum 15539 1838282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|65}} {{rule}}</noinclude>அமைந்தாலும் அவற்றை நாம் வரவேற்கிறோம்” என்று நாம் பிரகடனம் செய்தோம். நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் “தீபம்” பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், “எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு தத்துவ தரிசனம் இருக்கத்தான் வேண்டும்.... அதனைத் தேர்ந்து தெளிந்து உருவாக்கிக் கொள்வது அவனது பொறுப்பு. எந்தவொரு தத்துவமும் ஒரு வழிகாட்டிதான்; விலங்கல்ல. ஒரு தத்துவத்தின் மீது குருட்டுப் பக்தி கொண்டு, அதனை விலங்காகத் தரித்துக்கொண்டு, அதற்கு அடிமையாவதைப் போன்ற கொடுமை வேறு கிடையாது. அவ்வாறு அடிமைப்பட்டு விட்டால், பிறகு வாய்பாட்டுச் சூத்திரங்களை வைத்துக் கொண்டு, எதையும் அளந்து பார்த்து ஏமாறும் நிலைதான் ஏற்படும். அப்போது அந்தத் தத்துவம் படைப்பாளிக்குத் தேக்க நிலையைத்தான் உண்டாக்கும். மாறாக, அவன் அதைக்காலில் கட்டிய விலங்காக்கிக் கொள்ளாமல், கடலில் மிதக்கும் கட்டுமரமாக மாற்றிக் கொண்டு விட்டால், காற்றில் திசையறிந்து அதைச் செலுத்தவும் கற்றுக் கொண்டு விட்டால், பின்னர் அது அவனுக்குப் பேராக்கத்தை அளிக்கும். எந்தக் கடலிலும் அவனால் முன்னேறிச் செல்லமுடியும்” என்று கூறியிருந்தேன். இதையேதான் நான் இன்றும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். எனவே சோஷலிச எதார்த்தவாதமே நமது கலை இலக்கியத்தின் இறுதியான குறிக்கோள் என்று நாம் கூறிக் கொண்டாலும், அதனை அர்த்தப்படுத்துவதில் ஏற்பட்ட வக்கிரமான போக்குகளையும் விகாரங்களையும் நன்றாக இனம் கண்டு, அதனை வெறும் வறட்டுச் சூத்திரமாக, வாய்பாடாகக் கொள்ளாமல், ‘சோஷலிசம்’ என்ற வார்த்தை இடம் பெற்றுவிட்டதால், கலை இலக்கியமானது அடி முதல் முடி வரையில் சோஷலிசக் கருத்தையே தன்னுள் கருக்கொண்டிருக்க வேண்டும் என்று கருதிவிடாமல், அதன் பொருளை மேலும் அகலப்படுத்த வேண்டும், அதுவும்<noinclude></noinclude> 2pz5x6ivyefvwklxfc98s97v9uqjly3 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/72 250 422476 1838280 1008830 2025-07-02T12:45:41Z Asviya Tabasum 15539 1838280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|64|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>குறிப்பிட வேண்டும் . அறந்தை நாராயணன் எழுதிய ‘மூர் மார்க்கெட்’, பிரபஞ்சன் எழுதிய ‘முட்டை’ ஆகிய நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை. ஓவியத்துறையில் நமது சாதனைகள் மிகமிகக் குறைவு. இது சம்பந்தமாக என் நினைவுக்கு வருவது கடலூர் பாலன் நமது மாநாடுகளிலும், இளசை அருணா எட்டயபுரம் பாரதி விழாவிலும் இடம்பெறச் செய்த ஒவியக் கண்காட்சிகள்தான். இந்தத் துறையில் நாம் இப்போதுதான் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம். இது சம்பந்தமாக அண்மையில் திருவண்ணாமலையில் நடந்த ஓவியப் பயிற்சி முகாம், இந்தத் துறையில் வருங்காலத்தில் நாம் நிச்சயமாகச் சில சாதனைகளைப் புரிவோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. <b>முடிவுரை</b> நமது சாதனைகள் பற்றிய இந்தச் சுருக்கமான பருந்துப் பார்வையோடு இந்த வழிகாட்டி உரையின் இறுதிப் பகுதிக்கு வருகிறேன். முன்னர்க் கூறியபடி, அறுபதாம் ஆண்டுகளுக்கு முந்திய காலம் வரையிலும், அல்லது ஐம்பதாம் ஆண்டுகளின் மத்தியக் காலம் வரையிலும் நாம் கையாண்டு வந்த வறட்டுத்தனமான குறுகிய கண்ணோட்டமும் கருத்தோட்டமும் நமது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாகவே இருந்தன. சுருங்கக்கூறின், நாம் தான் விஞ்ஞானக் கண்ணோட்டம் கொண்டவர்கள், எனவே நாம்தான் விஞ்ஞானிகள், மற்றவர்கள் அஞ்ஞானிகள் என்பது போன்றதொரு மனப்பான்மையே அப்போது நம்மிடம் இருந்து வந்தது. இதிலிருந்து விடுபட்டு 1961இல் நாம் நடத்திய கலை இலக்கியப் பெருமன்றத்தின் அமைப்புக் கூட்டமாகக் கோவையில் நடந்த பேரவைக் கூட்டத்தில்தான் தோழர் ஜீவா குறிப்பிட்டது போல், “மனிததத்துவப் பண்பை வளர்க்கும், போற்றும் ரீதியில் எவ்விதக் கலை வடிவங்கள், கலைப்படைப்புக்கள்<noinclude></noinclude> a8cqjtf64jdu5ozinq088kz32hj1o4t பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/71 250 422477 1838272 1008831 2025-07-02T12:07:52Z Asviya Tabasum 15539 1838272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|63}} {{rule}}</noinclude>இந்தத் துறையில் ஆ. சிவசுப்பிரமணியன், கே.ஏ. குணசேகரன் முதலியோர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இருவரும் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நாட்டுப்புறச் சமய நம்பிகைகள் முதலியன பற்றி எழுதியுள்ள நூல்களும் குறிப்பிடத்தக்கவை. இவற்றின் தாக்கம் பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சியிலும் பிரதிபலித்து வருகின்றது. சினிமா, நாடகம் ஆகிய துறைகளில் நமது சாதனைகள் என்று பெருமையடித்துக் கொள்வதற்கு அதிகமாக ஒன்றுமில்லை. திரைப்படத் துறையில் ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’, ஆர்.கே. கண்ணன் கதை வசனம் எழுதிய ‘பாதை தெரியுது பார்’, முகவை ராஜமாணிக்கம் வசனம் எழுதிய ‘காலம் மாறிப் போச்சு’ முதலியவற்றைக் குறிப்பிட வேண்டும். இவற்றிலும் குறைநிறைகள் உண்டு. இவை தவிர, பாளை சண்முகம் தயாரித்த ‘காணி நிலம்’, ‘ஏழாவது மனிதன்’ ஆகியவையும் நினைவில் கொள்ளத்தக்கவை, நாடகத்துறையில் நாற்பதாம் ஆண்டுகளிலேயே நாம் சில முயற்சிகளை மேற்கொண்ட துண்டு. அந்தக் காலத்தில் அரசியல் பிரசாரத்துக்காகப் ‘புதுமைக் கலா மண்டலம்’ என்ற பெயரில் ஒரு மன்றம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் ‘கந்தன் காட்டிய வழி’, ‘வங்கப்பஞ்சம்’ போன்ற நாடகங்களை நடத்தியதுண்டு. ஆனால் அந்த முயற்சி தொடரவில்லை; செழுமை பெறவில்லை. இதன்பின் நமது சார்புடைய மன்றங்களாகத் தொடங்கிய தச்சநல்லூர் முல்லை நாடக மன்றம், பொன்மலை வள்ளுவர் நாடக மன்றம், தஞ்சை சிவராமன் நாடக மன்றம், பொள்ளாச்சி செஞ்சுடர் கலா மன்றம் முதலியவை சில முற்போக்கான நாடகங்களை நடத்தி வந்ததுண்டு. என்றாலும் அவை சரியான போஷனையும் வழிகாட்டலும் இல்லாமல் தேய்ந்து இற்றுப் போய் விட்டன. நாடகங்கள் எனக் கூறும்போது அறுபதாம் ஆண்டுகளில் ‘புதிய பாதை’ என்ற நாடகத்தோடு தொடங்கி இன்றுவரையிலும் பல சிறந்த முற்போக்கான நாடகங்களை வழங்கி வரும் கோமல் சுவாமிநாதனைச் சிறப்பாகக்<noinclude></noinclude> kou20erpyi61yfy0pytefaeixsflabw பக்கம்:கனிச்சாறு 4.pdf/180 250 446808 1838514 1444441 2025-07-03T08:10:38Z Fathima Shaila 6101 1838514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}145}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>உலகம் புரக்கின்ற உனையொன்று கேட்பேன்: பெறுவ தொன்றும் இன்றி,நின் பிழைப்பிடை ஒருநா ளாகிலும் ஒருவேளை யாகிலும் உன்னினும் ஏழை ஒருவனுக்கு உளமுவந்து அன்போடு உண்ணக் கொடுத்ததும் உண்டோ இல்லையோ? உழவுக் காரனே! உடை,நெய் வோனே! உடை,நெய் வோனே! கொடையாளன் அல்லன்,நீ; உழைக்கும் குடிமகன்! பஞ்சிழை நூற்றுக் கஞ்சி தோய்த்துப் பாவினி லேற்றிப் பகலும் இரவும் அற்ற இழை முடிந்தே, அறாஇழை பின்னி, உற்றவுடை நெய்தே, ஊர்க்குஉடுக் கின்றாய்! உண்ணவும் இன்றி உடுக்கவும் இன்றி,வே றெண்ணமும் இன்றி இளைத்தனை; அறிகுவேன்! பட்டுடை நெய்து பணக்காரர்க் கீவாய்; வட்டுடை யின்றி,உன் வளைமக்கள் வாடுவர். உழைக்கும் பெருமகன் உனையொன்று கேட்பேன்; பெறுவதொன்றும் இன்றி நின் பிழைப்பிடை ஒருநா ளாகிலும் ஒருமடி யாகிலும் உன்னினும் ஏழை ஒருவன் உடுத்திட அன்போ(டு) ஒருமுழம் அளித்ததும் உண்டோ இல்லையோ? உடைநெய் வோனே! மீன்வலை யோனே! மீன்வலை யோனே! வான்தொடு கடல்நீர் வலைபட வீசியும், கட்டு மரத்தொடு கட்டுண் டிருந்தும், அலையும் படகோ டாடி யிருந்தும் புயலொடும், வெயிலொடும் போரிட்டு வென்றும், ஆழிக் களத்தே அறுவடை சாய்க்கும் உன்றன் வாழ்வோ உழைப்பினில் பெருங்கடல்! வென்று நீ வரும்வரை நின்று,நிலை யிருந்து,உன் அன்றில் மகிழ்வொடு கூடை வாங்கிய ஒப்பிலா விளைவோ ஒருமலை யிருக்கும்! உப்புடற் காரனே! உனையொன்று கேட்பேன். பெறுவ தொன்றும் இன்றி,நின் பிழைப்பிடை ஒருநா ளாகிலும் ஒருவலைக் காகிலும் உன்னினும் ஏழை ஒருவற்கு மீன்கறி அன்போடு எடுத்துக் கொடுத்ததும் உண்டோ இல்லையோ? மீன்வலை யோனே!</poem>}} {{larger|{{Right|<b>-1970</b>}}}} <section end="96"/><noinclude></noinclude> pazvi9kzrn3eoa92dr3avznblpkbq5u பக்கம்:கனிச்சாறு 4.pdf/181 250 446809 1838515 1444442 2025-07-03T08:10:59Z Fathima Shaila 6101 1838515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|146 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="97"/> {{larger|<b>{{rh|97||புரட்சிதான் எல்லை !}}</b>}} {{left_margin|3em|<poem>என்ன எழுதினும் என்ன பேசினும் ஏழைக் கொருபயன் சேர்ந்ததா? அவன் எரியும் சாப்பசி தீர்ந்ததா? - செம் பொன்னை உருக்கினோம்: புதுமை பெருக்கினோம்; பொதுமை மலர்ந்ததா? இல்லையே? - பெரும் புரட்சிதான் அதன் எல்லையே! தென்னை காய்த்தது; மாவும் பழுத்தது; தெண்ணீர் வயல் பயிர் சாய்த்தது! - நல்ல தேட்டமும் நாள்தொறும் வாய்த்தது இனுஞ் சின்னஞ் சிறியவன் பென்னம் பெரியனால் சீரழி யும்நிலை தொடர்ந்ததே - மனச் செருக்குடன் கொடுந்துயர் படர்ந்ததே. மண்மிக விளையினும் மழைமிகப் பொழியினும் மாற்றங்கள் கோடி நிகழினும் - பலர் மக்கள் தலைவராய்ப் புகழினும் - புதுப் பண்முழக் கெழுந்ததா? பழமை கழன்றதா? பசிப்பிணி தீர்ந்ததா? இல்லையே! - மேலும் பணிவதும் குனிவதும் தொல்லையே. </poem>}}<noinclude></noinclude> b1hqynigowzguupaaf5t9dohxn3uxeq பக்கம்:கனிச்சாறு 4.pdf/182 250 446810 1838516 1444443 2025-07-03T08:11:25Z Fathima Shaila 6101 1838516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 147}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>சட்டங்கள் தீட்டினோம்; திட்டங்கள் காட்டினோம்; சரிசமம் எனும் நிலை வாய்ந்ததா? - பழஞ் சாத்திரச் சகதியும் காய்ந்ததா? - பணக் கொட்டங்கள் எத்தனை? கொள்கைகள் எத்தனை? கூச்சலிட்டோம்; பயன் இல்லையே; - ஒரு கொடிய புரட்சிதான் எல்லையே!</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} <section end="97"/> <section begin="98"/> {{larger|<b>{{rh|98||நாட்டை மலர்த்திட நடையிடு தம்பி !}}</b>}} {{left_margin|3em|<poem>மலர்க்கூடை தூக்கிப் போவாள் ஒருத்தி; மலக்கூடை தூக்கி வாழ்வாள் ஒருத்தி! இலையெனில் ஒருத்தி இழிவைச் சுமப்பதா? இந்நிலை ஒழிந்திடல் எந்தநாள் தம்பி? இழுத்துச் செல்லும் வண்டியில் ஒருவன் ஏறிப் போவான்; இழுப்பான் ஒருவன்! புழுத்த குமுகாயப் புரையினை மண்ணில் புதைத்திடல் என்றோ? புகலுவாய் தம்பி! காலையி லிருந்து மாலை வரைக்கும் கழுத்துநரம் பொடியக் கருகுவான் ஒருவன்; வேலையொன் றின்றி விலாவரை உண்ணும் வீணரை வீழ்த்துநாள் எந்தநாள் தம்பி? உலகம் உண்டிட உழுவான் ஒருவன்; உண்டு,ஊர் சுற்றி உறங்குவான் ஒருவன்! புலையுங் கொடுமையும் புரைமிகப் புழுக்கும் மேலும் புன்மை வழக்கினைப் பொசுக்குவாய் தம்பி!</poem>}}<noinclude></noinclude> dvkh21ux90hb6i923xv1114qhf91ld4 பக்கம்:கனிச்சாறு 4.pdf/240 250 446811 1838617 1444563 2025-07-03T10:11:12Z Fathima Shaila 6101 1838617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 205}}</b></small></noinclude> <section begin="149"/> {{larger|<b>{{rh|149||எதிர்பார்க்காதே ! ஏமாற மாட்டாய் !}}</b>}} {{left_margin|3em|<poem>எதிர் பார்க் காதே! ::ஏமாற மாட்டாய்! புதிராய் இராதே! ::பொத்தக மாய்இரு! அதிரப் பே சாதே! ::அமைவாய்ப் பேசு! முதிர முதிர ::முனிவை அடக்கு! அன்புக்கு அன்புசெய்! ::அறிவைப் புகழ்ந்துரை! தென்பொடு நில்;நட! ::தெளிவொடு பேசு;செய்! வன்பொடு செயல்தவிர்! ::வாய்மையே வெல்லும்! துன்பினில் சோர்வுஏன்? ::தோள்களை நிமிர்த்து! கனிவொடு பேசு! ::கல்,இறக் கும்வரை! தனிமையும் பழகு! ::தவ உளம் வளம்தரும்! இனிமையும் அளவுகாண்! ::இருளிலும் விழித்திரு! குனிதொழில் இழிதரும்! ::கொள்கை நிலைத்திரு!</poem>}} {{Right|{{larger|<b>-1994</b>}}}} <section end="149"/><noinclude></noinclude> o5iyfsxtzas2ptcagps0x1gnr2ovnt4 பக்கம்:கனிச்சாறு 4.pdf/247 250 446812 1838621 1444628 2025-07-03T10:14:01Z Fathima Shaila 6101 1838621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|212 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="153"/> {{larger|<b>{{rh|153||வலிய ஓர் இயக்கம் செய்வோம் – அதன்<br>வளர்ச்சிக்குக் கைகொடுப்போம்!}}</b>}} {{left_margin|3em|<poem>வாருங்கள் தமிழர்களே! வாழ்வைச் சமைத்திட, தாழ்வை அகற்றிட, வழி ஒன்று கண்டிடுவோம்! - நம் இழிவுகள் போக்கிடுவோம்! வாருங்கள் அறிஞர்களே! - நம் வண்தமிழ் காத்திட, செந்தமிழ் போற்றிட, வகையினை ஆய்ந்திடுவோம்! - அதை வையம் பரப்பிடுவோம்! வாருங்கள் தோழர்களே! - கொடும் வறுமை இலாதொரு பொதுமை அமைப்பினை வடித்திட நாம் இணைவோம்! - புதுக் குடித்தனம் நாம் அமைப்போம்! வாருங்கள் இளைஞர்களே! - நல்ல வாய்மையும் நேர்மையும் தூய்மையும் அரசியல் வரம்பொன்று கூவிடுவோம்! - அதைத் திறங்கொண்டு கட்டமைப்போம்! வாருங்கள் தாய்க்குலத்தீர்! - தீய வன்மையும் கொடுமையும் புன்மையும் அற்றொரு வளமை இனம் படைப்போம்! - அதற் கிளமை மனம் கொடுப்போம்! </poem>}}<noinclude></noinclude> 7216v0bz5b3squg4v8dhr1xe7vkhniq பக்கம்:கனிச்சாறு 4.pdf/160 250 446957 1838488 1444189 2025-07-03T07:59:52Z Fathima Shaila 6101 1838488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 125}}</b></small></noinclude> <section begin="82"/> {{larger|<b>{{rh|82||சாலையின் ஓரத்திலே !}}</b>}} {{left_margin|3em|<poem> சாலையின் ஓரத்திலே - ஓடுஞ் சாக்கடை நாற்றம்என் மூக்கைத் துளைத்திட காலைவி ரைந்துவைத்தேன் - இரு கண்களி ழந்தவன் மண்ணிற் புரண்டனன்! மாலைப் பொழுதெனவே - பெரும் மக்கள் குழாம்இரு பக்கத்திலும், கடும் வேலை முடிந்தவகை - என வீடு திரும்பிய வாறிருந்தார்! - அந்தச் சாலையின் ஓரத்திலே! {{float_right|1}} தொண்டை கிழியும்வகை - அந்த நொள்ளையன், ‘கஞ்சியும் இல்லைஇல்லை’ என மண்டை உடைத் தழுதான் - அவன் மாளாத சொற்களைக் கேளாத வாறாக, அண்டை நடப்போ ரெலாம் - உடல் ஆட்டுவதும் பல்லைக் காட்டுவதும், எனக் கண்டுங் காணாதவர் போல் - போய்க் கொண்டிருந் தாரதைக் கண்டு நின்றேன்! - அந்தச் சாலையின் ஓரத்திலே! {{float_right|2}} பட்டில் உடை உடுத்தி - இரு பாவைய ரோடெழில் மேவிச் சிரிப்பதும், வட்டிக் கணக்கை எண்ணி - உள்ளம் வாங்குவதும், உடல் வீங்குவதும், பணப் பெட்டியின் திறவுக் கொத்தைத் தொட்டுப் பார்ப்பதுவும், இன்பம் சேர்ப்பதுவும், குடை தட்டி நடப்பது மாய்ப் - பலர் சென்றிருந்தார் அதை நின்றுகண்டேன்! - அந்தச் சாலையின் ஓரத்திலே! {{float_right|3}} ஓடும் இயங்கி செல்லும் - இன்ப ஊர்தி செல்லும், பல பேர்அங்குச் சென்றனர். ஏடு படித்த வரும் - சில எத்தர்களும் பணப் பித்தர்களும், இந்த</poem>}}<noinclude></noinclude> lyncr6rjwjwiqc6nykg7shd23z6igcz பக்கம்:கனிச்சாறு 4.pdf/161 250 446958 1838490 1444191 2025-07-03T08:00:11Z Fathima Shaila 6101 1838490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|126{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem>நாடு திருத்து தற்கே - பல நாட்டங்களை, மக்கள் கூட்டத்திலே சொல்லிப் ‘பாடு படுங்க’ ளென - நன்கு பேசியரும் கைகள் வீசிச்சென்றார்! - அந்தச் சாலையின் ஓரத்திலே!{{float_right|4}} உண்டி செரிப்பதற்கே - வழி ஒன்றினை யெண்ணியே சென்றவரும், இளம் பெண்டி ரெலா முடலைப் - பற்றிப் பேசுவதும், எழில் வீசுவதும், புதுச் செண்டு மலரணிந்து - குழற் சீவி முடிந்ததை நீவிச்செல் வாரிதைக் கண்டுளம் வெந்து நின்றேன் - அந்தக் குருடனைச் சென்றாரில் ஒருவரும் காணோரே! சாலையின் ஓரத்திலே!{{float_right|5}} கத்திப் புரண்டழுதான் - ஒரு காசு கொடுப்பவர் யாருமில்லை; பலர் செத்துக் கொண்டே யிருக்க - சிலர் செல்வத்தினை, அதன் இன்பத்தினை என்றும், எத்தித் திருடுவதேன்? - இதை ஏனென்று கேட்டிட, நானென்று நிற்பவர் பத்தி லொருவ ருண்டோ? - எனப் பார்த்திருந் தேன்;உளம் ஆர்த்துநின்றேன்!-அந்தச் சாலையின் ஓரத்திலே!{{float_right|6}}</poem>}} {{larger|<b>{{Right|-1956}}</b>}} <section end="82"/><noinclude></noinclude> lmh39yfqeim92pk2hpc3kh3oqrzsn6q பக்கம்:கனிச்சாறு 4.pdf/162 250 446959 1838492 1444193 2025-07-03T08:00:35Z Fathima Shaila 6101 1838492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}127}}</b></small></noinclude> <section begin="83"/> {{larger|<b>{{rh|83||வாழ்வும் தாழ்வும்!}}</b>}} {{left_margin|3em|<poem>விண்ணை அளந்திடும் வல்லவர் - தொலை வெங்கதிர் தோற்ற முணர்ந்தவர் - இந்த மண்ணை அளந்திடக் கற்றவர் - வான மாவெளி ஊர்ந்திடும் மேதையர் - பொருள் வண்ண மறிந்தவர் மக்களின் - உயிர் மாய்தலை வெல்ல முயல்பவர் - என எண்ணத் தொலைவிலர் தோன்றினும் - மன ஏற்றத்தில் யாவரும் தாழ்கின்றார்!{{float_right|1}} ஊர்ந்தவர் வானில் பறக்கின்றார் - விலங் கொத்தவர் நல்லுடை சேர்க்கின்றார் - மடஞ் சேர்ந்தவர் யாவரும் கற்கின்றார் - பிணி சோர்ந்தவர் நோயினை வெல்கின்றார் - பணி தேர்ந்தவர் இவ்வுல குய்யவே - உயிர்த் தேவைகள் காண்பவர் ஆயினும் - கடல் ஆர்ந்த உலகினில் எங்கணும் - மக்கள் அன்பிலும்; பண்பிலும் தாழ்கின்றார்!{{float_right|2}} சேற்றைக் குழப்பிக் குடில்களைப் - பண்டு செய்துயிர் வாழ்ந்த வழியினர் - விண் காற்றை வளைப்பவர் போலவே - பல கட்டுகின் றார்மனை வாழவே! - சுனை ஊற்றுகள் தேடிக் குடித்தவர் - குழல் ஊன்றிநீ ரோட்டங் கொணர்கின்றார் - பல மாற்றங்கள் காண்கின்றார் ஆயினும் - உள மாண்பினில் யாவரும் தாழ்கின்றார்!{{float_right|3}} ‘அன்பின் விளைநிலம்’ ஆருயிர் - தரும் ‘ஆக்கம்’ எனத்தகும் பெண்டிரும் பெருந் தென்புகள் கொண்டனர் போல்வராய் - உளத் தாய்மையை, மென்மையை நீக்கியே - பல வன்பணி யாற்றப் புகுந்தனர் - அன்பு வாழ்வைத் துறந்தனர்! ஐயகோ! - உள அன்பினி எங்ஙனம் வாழ்ந்திடும்? - மன ஆற்றலில் யாவரும் தாழ்ந்திடின்!{{float_right|4}}</poem>}}<noinclude></noinclude> cned2hmhrqkmzbqu3xdpuvuqifu59ck பக்கம்:கனிச்சாறு 4.pdf/163 250 446960 1838493 1444195 2025-07-03T08:01:19Z Fathima Shaila 6101 1838493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|128{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>வேற்றுல காக்கினும் ஆக்கலாம்! - வான வெளியினை வீழ்த்தினும் வீழ்த்தலாம் - உயிர்க் காற்றுக் குறையினும் ஊதலாம்! - கடற் கொள்புனல் வற்றினும் ஊற்றலாம்! - மலர் தோற்றத்தைச் செய்யினும் செய்யலாம்! - அதில் தேனினைக் கூட்டிடல் ஆகுமோ? - அறி(வு) ஆற்றல்மிகப் பெரு மாட்சியே - அன் பாற்ற லிலாவிடில் வீழ்ச்சியே! {{float_right|5}} {{larger|{{Right|<b>-1957</b>}}}} <section end="83"/> {{dhr|10em}} <section begin="84"/> {{larger|<b>{{rh|84||மதங்காப்பார்!}}</b>}} மாடெனக் கொழுத்து, மரமெனக் குந்தி மக்களும் மனைவியும் இன்றி - நல்ல மாண்புயர் வொழுங்கதும் குன்றி - மயிர்க் காடெனச் சடைகள் களிறெனத் தொந்தி கனிபால் நெய்வகை யோடு நல்ல காற்றமைந் துலவுமோர் வீடு - தனில் வீடெனக் கூறி, விரிசடைக் கடவுள் வியன்கதை நாள்தொறும் பேசி - நல்ல வாழ்விலா மக்களை ஏசி - வெறுங் கூடென உடலைக் கூறுவர் தமக்குக் குருக்கள் எனும்பெயர் சூட்டி - பலர் </poem>}} <section end="84"/><noinclude></noinclude> mxrn76r2hiivgkjtkcn0q77sn41gtcn பக்கம்:கனிச்சாறு 4.pdf/164 250 446961 1838495 1444196 2025-07-03T08:01:49Z Fathima Shaila 6101 1838495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}129}}</b></small></noinclude>{{block_center|<poem></poem>}} {{left_margin|3em|<poem>குவிந்தனர் மதந்தனைக் காட்டி! கோடையில், மழையில், பனியினில் மூழ்கிக், கொடுங்கடல் புகுத்துயிர் வாடி - தங் குடலிட உணவதைத் தேடி - பலர் வாடையில், ஒருசிலர் கடவுளை, மதத்தை வளர்த்ததில் தங்குடல் கழுவி - பல வகையினில் இன்பத்தைத் தழுவி - பட் டாடையில் போர்த்த அணியுடல் மறைத்தே அறுசுவை உணவினை உண்டு - பல, அணங்குகள் தம்நலம் கண்டு - மத ஓடையில் நீந்தி உலகினில் வாழ்வார் உழைத்திடும் மக்களை ஏய்ப்பார் - அவர் உளத்தினை நாள்தொறும் மாய்ப்பார்! உழைப்போர்க் கெல்லாம் ஒவ்வொரு மடமும். ஒவ்வொரு பீடமும் தந்து - பல உணவதும், உடைகளும் தந்து - அவர் அழைப்பார் ஆகில் அனைவரும் அவர்போல் ஆயிரம் பூக்களைக் கொய்து - நாளும் அறுமுறை பூசைகள் செய்து - நன்கு பிழைப்பா ரன்றோ? பெரும்பேரின்பப் பிறவுல கெய்துவ ரன்றோ? - இப் பிறப்பினை அறுப்பா ரன்றோ? - இதை உழைப்போ ரெல்லாம் உணருவ ராகில் உயிர்பெறுமா மதம் இங்கு? - இதற் குழைப்பது அவரவர் பங்கு! {{Right|<b>-1957</b>}} </poem>}} <section end="84"/><noinclude></noinclude> l9006slsh2jo7ynzv2cbl41vkhyc9xi பக்கம்:கனிச்சாறு 4.pdf/165 250 446962 1838497 1444197 2025-07-03T08:02:44Z Fathima Shaila 6101 1838497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|130{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="85"/> {{larger|<b>{{rh|85||பிறப்பொக்கும்!}}</b>}} {{left_margin|3em|<poem>பிள்ளை பிறந்தது; பிறக்கும் போதே கொள்ளை அழகதன் கூடப் பிறந்தது! உறுப்புகள் யாவும் அதனுடன் பிறந்தன. கறுப்பு நிறமும் கூடவே பிறந்தது. மற்றவர் பெற்ற மருத்துவ மனையில்தான், பெற்றெடுத் தாளதைப் பெற்ற பொற்றொடி! “பிறந்தது ஆணா பெண்ணா” என்றனர்; அரும்பெரும் மகிழ்வோ “டாணே” என்றாள். “அச்செலாம் உன்போல்” என்றனர்; அதன்பின் உச்சி குளிர்ந்தாள்; உவகை வழிந்தது. “பிறந்த குழந்தையின் பிறப்பென்ன” என்றனர்; “பிறந்தது மாந்தப் பிறப்பே” என்றாள். "குழந்தையின் குலத்தைக் கேட்டோம்' என்றனர்; “பழந்தமிழ்க் குல”மெனப் பாவை மொழிந்தாள். “அப்படி என்றால் அதுவென்ன ‘சாதி’?” - இப்படிக் கேட்கவே எழுந்தாள் நங்கை; “கண்ணொடு பிறந்தது; காதொடு பிறந்ததே உண்ணும் வாயொடும் உடலொடும் பிறந்ததே; நலத்தொடு பிறந்தது; நானறிய எந்தக் குலத்தொடும் பிறக்கிலை; குணத்தொடும் பிறக்கிலை; தூய்மை உடலொடும் தூய்மை அறிவொடும் தூய்மை உளத்தொடும் தோன்றிய குழந்தைக்கு ஏது ‘சாதி’? இழிவுயர் வெல்லாம்? தீதிலாப் பிறப்பைத் தீப்பிறப் பாக்குகிறீர்!” என்று மொழிந்தாள் ஏந்திழை; நின்று கேட்டவர் நீட்டினர் நடையே! {{larger|<b>{{Right|-1958}}</b>}} </poem>}} <section end="85"/><noinclude></noinclude> n6ltv81n0tdtsx7om9l9h0qkm60mpes பக்கம்:கனிச்சாறு 4.pdf/166 250 446963 1838498 1444199 2025-07-03T08:03:02Z Fathima Shaila 6101 1838498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}131}}</b></small></noinclude> <section begin="86"/> {{larger|<b>{{rh|86||உள்ளத்தனைய துயர்வு!}}</b>}} {{left_margin|3em|<poem>பரிதி நடந்துசெலும் பாதையிலும் தண்ணின் அரிதாம் நிலவொளியின் ஆட்சியிலும் நன்கமைந்து, காலப் பிரிவாலும் காற்றாலும் சீர்பெற்ற கோலத் தமிழகத்தைக் கோள நூல் வல்லார்கள் பாராட்டிப் பேசுகின்றார் என்னும் பெருமையொடு, சேரனென்னும் வீரன் செழுந்தமிழர் பாட்டனென்றும், சோழனென்னும் வேந்தனுக்குச் சொந்தம்யா மென்றுரைத்தும், வாழும் பழமதுரை வாழ்ந்திருந்த பாண்டியராம் வித்தில் விளைந்திருக்கும் வீரஞ்சேர் கூட்டமென்றும், கத்திப் பழங்கதைகள் கூறி வருவதல்லால், {{float_right|10}} நம்மில் வளர்ந்துவரும் நச்சடிமைக் கீழ்க்குணத்தை இம்மி யளவேனும் எண்ணி நாம் பார்த்ததில்லை! வீரத் துயர்ந்திருந்த வேந்தரென்று பேசுகின்ற சேரரொடு பாண்டியரும், சோழத் தமிழரசும், தம்முள் குலைவுற்றுத் தாழ்வெய்தி மாண்டதனை, நம்முன் அறிந்திருந்தும் நல்லுறவு கொண்டதில்லை! பண்டைப் பெருந்தமிழன் பான்மையினைக் கூறிடுங்கால் அண்டை இருப்பவனை அன்பொழுகப் பார்த்ததில்லை! பாரியென்றும், ஓரியென்றும் பைந்தமிழின் வள்ளலரைக் கூறிடுவ தல்லால் குறுணையள வீந்ததில்லை! {{float_right|20}} பாவியங்கள் ஐந்தென்று பாடிக் களிப்பதல்லால் பாவியஞ்சொல் நல்லுரையைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை! கீரன் துணிவுபற்றிக் கூறிமகிழ் வேற்பதல்லால் வீரத் துணிவில்லை; நெஞ்சில் வலிவில்லை! சாதிப் பெருமடமும், சாத்திரமும், பன்னூலை ஓதி விடுவதனால் ஓய்ந்துவிடப் போவதில்லை! </poem>}}<noinclude></noinclude> spb7mim3saa0qx33y149fjrq4m6er4n பக்கம்:கனிச்சாறு 4.pdf/167 250 446964 1838499 1444200 2025-07-03T08:03:18Z Fathima Shaila 6101 1838499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|132{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem> கீழென்றும், மேலென்றும் கொள்ளுதலால் இந்நாடு பாழடைவ தல்லால் பயனடையப் போவதில்லை! செல்வச் சிறப்பென்றும், ஏழ்மைச் சிறுமையென்றும், பல்வாறு கூறிப் பயனெதுவும் கண்டதில்லை!{{float_right|30}} கோளறிந்து திங்கள் குடியேறுங் காலத்தில் வாளெறிந்து, வில்லேவி வாழ்ந்துவிடப் போவதில்லை. அண்டத் திருவுலகை ஆய்வாளர் நாளும் போய்க் கண்டறியும் காலத்தில் காலமொன்றும் செய்வதில்லை! மெய்யில் அழுக்கேறி, நெஞ்சில் இருள்வைத்துக் கைகூப்பிப் போற்றக் கடவுளருள்(!) சேர்வதில்லை, தம்மைப்போ லோருயிரைத் தாழ்த்தி நடக்கையிலே, செம்மையாய்ப் பண்டைச் சாத்திரங்கள் பேசுவதில் நாணமில்லை! மக்களுள்ளே நல்லொழுங்கு தானுமில்லை! மாணப் பெரும் பேச்சில் மக்களுயர் வேற்பதில்லை!{{float_right|40}} “எவ்வுயிரும் ஓருயிராய் எண்ணீர்! பெருமையுறுஞ் செவ்வை ஒழுங்கேற்பீர்! சேர்ந்தொருங்கே வாழ்வீர்! உயரன்பு கொள்வீர்! உறுந்தமிழ்நூல் கற்பீர்! அயர்வின்றி எப்பணியும் ஆற்றி உயர்வடைவீர்! நன்றல்ல நீக்குவீர்” என்று நவின்றொருவன் ஒன்றினையும் கொள்ளா தொழிந்து விடின் நாமவனை என்னென்று கொள்ளுவோம்? எள்ளி இகழோமா? பொன்னென்றா கொள்ளுவோம்? போவென்று தள்ளோமா? உள்ளத் துயர்வில்லா ஓதுகல்வி கல்வியன்று; வள்ளுவரும் உள்ளத்து வாய்மை உயர்வென்றார்!{{float_right|50}} வெள்ளைத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு. </poem> {{larger|{{Right|<b>-1958</b>}}}}}} <section end="85"/><noinclude></noinclude> jwcm18a3cywchh4yk0brguc854rx3ts 1838500 1838499 2025-07-03T08:03:50Z Fathima Shaila 6101 1838500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|132{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem> கீழென்றும், மேலென்றும் கொள்ளுதலால் இந்நாடு பாழடைவ தல்லால் பயனடையப் போவதில்லை! செல்வச் சிறப்பென்றும், ஏழ்மைச் சிறுமையென்றும், பல்வாறு கூறிப் பயனெதுவும் கண்டதில்லை!{{float_right|30}} கோளறிந்து திங்கள் குடியேறுங் காலத்தில் வாளெறிந்து, வில்லேவி வாழ்ந்துவிடப் போவதில்லை. அண்டத் திருவுலகை ஆய்வாளர் நாளும் போய்க் கண்டறியும் காலத்தில் காலமொன்றும் செய்வதில்லை! மெய்யில் அழுக்கேறி, நெஞ்சில் இருள்வைத்துக் கைகூப்பிப் போற்றக் கடவுளருள்(!) சேர்வதில்லை, தம்மைப்போ லோருயிரைத் தாழ்த்தி நடக்கையிலே, செம்மையாய்ப் பண்டைச் சாத்திரங்கள் பேசுவதில் நாணமில்லை! மக்களுள்ளே நல்லொழுங்கு தானுமில்லை! மாணப் பெரும் பேச்சில் மக்களுயர் வேற்பதில்லை!{{float_right|40}} “எவ்வுயிரும் ஓருயிராய் எண்ணீர்! பெருமையுறுஞ் செவ்வை ஒழுங்கேற்பீர்! சேர்ந்தொருங்கே வாழ்வீர்! உயரன்பு கொள்வீர்! உறுந்தமிழ்நூல் கற்பீர்! அயர்வின்றி எப்பணியும் ஆற்றி உயர்வடைவீர்! நன்றல்ல நீக்குவீர்” என்று நவின்றொருவன் ஒன்றினையும் கொள்ளா தொழிந்து விடின் நாமவனை என்னென்று கொள்ளுவோம்? எள்ளி இகழோமா? பொன்னென்றா கொள்ளுவோம்? போவென்று தள்ளோமா? உள்ளத் துயர்வில்லா ஓதுகல்வி கல்வியன்று; வள்ளுவரும் உள்ளத்து வாய்மை உயர்வென்றார்!{{float_right|50}} வெள்ளைத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு. </poem> {{larger|{{Right|<b>-1958</b>}}}}}} <section end="86"/><noinclude></noinclude> 928lllux3904q2ehz7v75y3p060r6xv பக்கம்:கனிச்சாறு 4.pdf/168 250 446965 1838501 1444201 2025-07-03T08:04:12Z Fathima Shaila 6101 1838501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}133}}</b></small></noinclude> <section begin="87"/> {{larger|<b>{{rh|87||குச்சுக் குடிசையிலே !}}</b>}} {{left_margin|3em|<poem>ஆராரோ ஆரரிரோ, ஆராரோ ஆரரிரோ! ஆரரிரோ ஆரரிரோ, ஆராரோ ஆராரோ! பாராளும் அன்பே! பணிவே,நீ கண்ணுறங்கு; சீராளும் வேந்தே! செதுக்காத பொற்சிலையே! வாடாத பூவே! வயிறுவக்க வந்தவனே! தேடாத செல்வமே! தேனுருவே கண்ணுறங்கு! முத்தெடுத்துக் கோத்த முழுவயிரத் தொட்டிலில்லை; பத்துத்திங்கள் சேர்த்துப் பணம்போட்ட தொட்டிலடா! மேலே கிளிகொஞ்ச மின்னிழையார் ஆட்டுவதற் கேலாத ஏழையடா! ஏந்தியுனைப் பெற்றவர்கள்! மெத்தென்று பஞ்சுமெத்தை மேனிவருந் தாமலிட, சொத்தறியாப் பஞ்சையடா! சீரே உனைப்பெற்றோர்! ஏதுமில்லா ஏழையர்பால் ஏன்பிறந்தோம் என்றுனது தீதில்லா நெஞ்சத்தில் தேனே நினைக்காதே! நெய்மணக்கப் பால்காய்ச்சிச் சோற்றைப் பிசைந்தெடுத்தே கைமணக்க ஊட்டும் குடும்பமில்லை உன்குடும்பம்! பாற்சோறு மில்லையென்று பாவியவள் சொன்னவுடன் வேறுபட்டுப் போனதென்ன வேந்தே,உன் பூமுகமும்? வானத்தே பூத்துவரும் வெண்ணிலவை நீயென்றும் காணும் படியிருக்கும் கூரையடா உன்குடிலும்! ஏங்கிக் கிடக்கையிலே ஏதுமில்லா என்வயிறு தாங்கிப் பிறந்தவனே! தேடரிய செல்வமே! வாய்மணக்க என்றன் வயிறும் மணந்திடவே சேயாகப் பிறந்திருக்கும் செல்வமே கண்ணுறங்கு! </poem>}}<noinclude></noinclude> b0w0tta71xf5yb2kxvedlpzjpqxx2qx பக்கம்:கனிச்சாறு 4.pdf/169 250 446966 1838502 1444202 2025-07-03T08:05:21Z Fathima Shaila 6101 1838502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|134{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>புத்தகத்தை நீதூக்கிப் போகையிலும் நீகற்ற வித்தாரப் பேச்சுகளை வீடுவந்து சொல்கையிலும், காது மணக்குமிரு கண்குளிரும்! செந்தமிழில் ஓது கலைபயின்றால் உன்னாடு பூக்குமடா! சாதி சமயமென்று சாத்திரங்கள் பேசியதை மோதி முரித்தாலிம் முத்தமிழ்நா டேத்துமடா! குச்சுச் குடிசையிலே கோவேநீ பூத்தாலும் மச்சில் குடியேறி மானேநீ வாழ்ந்திடடா! வேலையெனப் போயிருக்கும் வேந்தனே, உன்தகப்பன் மாலை திரும்பிவந்து மார்மே லுனைப்போட்டுச் சேரன் கதைபாடிச் சோழன் புகழ்கூறித் தார்நெஞ்சன் பாண்டியனாம் தாயகத்தைக் காத்த மறம்பாடிச் சொல்வார்! மரகதமே! வள்ளுவரின் அறம்பாடிச் சொல்வார்! அழாமல் நீ கண்ணுறங்கு! ஆண்ட தமிழ்மறவர் அச்சே நீ கண்ணுறங்கு! நீண்ட கதை பாட நேரமில்லை கண்ணுறங்கு! {{larger|{{Right|<b>-1958</b>}}}} </poem>}} <section end="87"/><noinclude></noinclude> jmr6onvt8ryf81005dhuv077z509z3h பக்கம்:கனிச்சாறு 4.pdf/170 250 446967 1838503 1444204 2025-07-03T08:06:09Z Fathima Shaila 6101 1838503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}135}}</b></small></noinclude> <section begin="88"/> {{larger|<b>{{rh|88||நாம் தமிழரல்லர் !}}</b>}} {{left_margin|3em|<poem>பள்ளென்போம்; பறையென்போம் நாட்டாரென்போம்! பழிதன்னை யெண்ணாமல் வண்ணா ரென்போம்! பிள்ளையென்போம்; முதலியென்போம்; நாய்க்கர் என்போம்! பிழைநாணா தருந்ததியர், படையா ளென்போம்! எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்! எண்ணுங்கள்; நமைத் ‘தமிழர்’என்கின் றோமா? குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும் கூசுங்கள்; நாணுங்கள்; தமிழ்நாட் டாரே! {{Right|<b>-1959</b>}} <section end="88"/> {{dhr|10em}} <section begin="89"/> {{larger|<b>{{rh|89||நெறி காணீரே !}}</b>}} கல்லாலும் செம்பாலும் பண்ணிவைத்த படிவத்தைக் ‘கடவுள்’ என்றே நல்லாவின் பாலாலும் நெய்யாலும் வழிபாடு நாளும் செய்தே எல்லாரும் அவர்பெற்ற மாந்தரென்பீர்! ஆனாலும் எண்ணற் றோரைச் சொல்லாலும் மக்களெனச் சொல்லுகிலீர்; தாழ்த்துகின்றீர்; நெறிகா ணீரே! {{larger|{{Right|<b>-1960</b>}}}} </poem>}} <section end="89"/><noinclude></noinclude> g7vudy6icuo7ay8sec2u5sp37omm9fp பக்கம்:கனிச்சாறு 4.pdf/171 250 446968 1838504 1444206 2025-07-03T08:06:29Z Fathima Shaila 6101 1838504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|136{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="90"/> {{larger|<b>{{rh|90||இருள் உலகம் !}}</b>}} {{left_margin|3em|<poem>பொறியிலார் புல்லுரைக் கென்செவி யிளைத்தேன்; பொய்யர்முன் மெய்யுரைத் திழிந்தேன்; குறியிலார்க் கொருவழி கூறிநாத் தடிந்தேன்; கொடியர்முன் பணிந்துளம் நொடிந்தேன்; நெறியிலார் அழிவதை எண்ணிநெஞ் சொடிந்தேன்; நீர்மையர் வறுமைகண் டழுதேன்! அறிவிலார் மேன்மேல் உயர்வதை அறிந்தேன்; அழலென உளங்கொதித் தேனே! {{float_right|1}} உயர்விலார் தொடர்பை உண்டுளங் கசந்தேன்! உழைப்பவர் துயர்க்குயிர் துடித்தேன். மயர்விலார் சிறப்பற மடிவதைக் கண்டேன்! மாண்பிலார் பிழைக்கநெஞ் செரிந்தேன்! அயர்விலார் இழிநிலை அடைவதை நினைந்தேன்! அன்பிலார் இன்மொழி இகழ்ந்தேன். வெயர்விலார் நிழல்படுத் துறங்கநெஞ் சழன்றேன்! வெறுவெளி துயில்வர்கண் டேனே! {{float_right|2}} பெட்பிலா மகளிரைப் பார்த்துளம் வெயர்த்தேன்! பெண்டிர்தம் துயர்க்குளம் நைந்தேன். நட்பிலா நெஞ்சினர் நட்பினுக் கொடிந்தேன்! நண்பருக் கலைந்துகால் கடுத்தேன்! உட்புகா நெஞ்சினர் உறவுகண் டுமிழ்ந்தேன்! ஊர்விழுங் குவர்க்குளம் உடைந்தேன்! கட்புகா தீவினைக் கயவருக் கொளிந்தேன்! காதலில் இழிவுகண் டேனே! {{float_right|3}} பொருட்பெற வாயிரம் பொய்ப்பரைக் கண்டேன்! பொருள்மக ளிர்க்குளம் புகைந்தேன்! இருட்புகு கோயிலின் இழிசெயற் குலைந்தேன்; ஏதுமி லார்க்குநெஞ் சவிழ்ந்தேன்! அருட்புகு நெஞ்சரென் றார்ப்பரை வியந்தேன்; அழுக்கறு வார்க்குடல் பொடிந்தேன். மருட்புகு கல்வியர் மயல்சீர்க் குயிர்த்தேன். மானமி லார்க்கஞ் சினனே! {{Right|4}} </poem>}}<noinclude></noinclude> 0mcvlgsn8mw8w9vzust53cmm218q43x பக்கம்:கனிச்சாறு 4.pdf/172 250 446969 1838505 1444208 2025-07-03T08:06:57Z Fathima Shaila 6101 1838505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}137}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>பணிவினார் தம்மிடைப் பகைவரைப் பார்த்தேன்! பசியிலார் ஊண்பெறக் கொதித்தேன்! பிணியினார்க் கிரங்கிலாப் பித்தர்கண் டடுத்தேன்! பிணியிலார் மருந்துணச் சினந்தேன்! துணிவினார் நெஞ்சினுட் டுணுக்குகண் டிழித்தேன்! துயரிலார்க் கிடுதல்கண் டகன்றேன். வணிகனார் கைவாய் வரும்படிக் கயர்ந்தேன். வல்லிருள் உலகுகண் டேனே! {{float_right|5}} {{larger|{{Right|<b>-1961</b>}}}} <section end="90"/> {{dhr|10em}} <section begin="91"/> {{larger|<b>{{rh|91||அறுவடை செய்கிறார்கள்!}}</b>}} அறுவடை செய்கிறார்கள்! - இங்கே அறுவடை செய்கிறார்கள்! திருவடை யாமலே திண்ணையில் வீதியில் தெருவோரச் சாய்க்கடை புழக்கடை நடுவினில் எருவடை குழிகளில் ஈக்களாய், புழுக்களாய் இறக்காமல் மொய்க்கின்ற ஏழ்மையைச் சொல்லியே, அறுவடை செய்கிறார்கள் - இங்கே அறுவடை செய்கிறார்கள்! </poem>}}<noinclude></noinclude> l9myg62dm02tuwykasazgzd7bdzf3m2 பக்கம்:கனிச்சாறு 4.pdf/173 250 446970 1838506 1444429 2025-07-03T08:07:19Z Fathima Shaila 6101 1838506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|138{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>மாருக்குத் துணியின்றி வாடிடும் பெண்டிர்! மானத்தைக் காவாத வெறுமேனித் தோல்கள்! - பேருக்கு உழைப்பதாய்ப் பேசியே தங்கள் பிழைப்புக்கு வழிதேடும் பெரும்பெருந் தலைகள்! அறுவடை செய்கிறார்கள் - இங்கே அறுவடை செய்கிறார்கள்! ஊருக்கே இராப்பகல் உழைப்பதாய்ச் சொல்லி உண்மைக்குப் பூட்டிட்டே உயர்மாடி கட்டித் தூருக்குத் தோண்டியாய் உதவுவோம் என்றே தொண்டைக்கு மருந்திட்டு மாநாடு கூட்டி, அறுவடை செய்கிறார்கள் - இங்கே அறுவடை செய்கிறார்கள்! கந்தைக்கு மாற்றில்லை! கடுக்கின்ற வயிறு! காற்றுக்குத் தடையில்லை; கருஞ்சுவர்க் குடிசை! மந்தைக்கு நிகரான மக்கட்செல் வங்கள்! மற்று, அவர் பெயர்சொல்லிக் கொழுக்கின்ற நாய்கள், அறுவடை செய்கிறார்கள்! - இங்கே அறுவடை செய்கிறார்கள்! கட்சிகள் தலைவர்கள் பெயர்சொல்லிச் சொல்லிக் கண்ணீரும் இருசொட்டு வழிவதாய்த் துடைத்து, மெச்சிடும் திட்டங்கள் பலதீட்டி னாலும் மீளாத ஏழ்மைக்கு மெப்பாகப் பேசி, அறுவடை செய்கிறார்கள் - இங்கே அறுவடை செய்கிறார்கள்! உழைப்பாளர் தொழிலாளர்க் குழைக்கின்றோம் என்றே ஒருகோடித் தலைவர்கள் கத்தினார் நன்றே! பிழைப்பவர் அவர்களா, இவர்களா? - கண்டோம்! பீற்றலும் கந்தலும் அற்றதா? பேச்சில்; அறுவடை செய்கிறார்கள்! - இங்கே அறுவடை செய்கிறார்கள்!</poem>}} {{larger|<b>{{Right|<b>-1967</b>}}</b>}} <section end="91"/><noinclude></noinclude> cyaxtdqt1gvui12xfn4hz6g4erefm9l பக்கம்:கனிச்சாறு 4.pdf/174 250 446971 1838507 1444431 2025-07-03T08:08:25Z Fathima Shaila 6101 1838507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}139}}</b></small></noinclude> <section begin="92"/> {{larger|<b>{{rh|92||பணப்பதுக்கல் பறிமுதல் செய்க !}}</b>}} {{left_margin|3em|<poem>அடிக்கின்ற கொள்ளையரை - பணம் பதுக்கும் முதலைகளை அழித்தி டாமல், துடிக்கின்ற ஏழைகளின் துயரத்தைக் கண்ணீரைத் துடைப்போம் என்னும் நடிக்கின்ற நடிப்பெதற்கு? நயமான பேச்செதற்கு? நடுக்கு எதற்கு? பிடிக்கின்ற பிடியினிலே பணப்பதுக்கல் பறித்தொருமை பேணு வீரே!</poem>}} {{larger|<b>{{Right|-1967}}</b>}} <section end="92"/> <section begin="93"/> {{larger|<b>{{rh|93||புதுமை இலக்கியம் புனைக இளைஞனே !}}</b>}} {{left_margin|3em|<poem>இலக்கியஞ் செய்க! இலக்கியஞ் செய்க! இளைய தமிழனே! இலக்கியஞ் செய்க! கலக்குறும் மூடக் களஞ்சியம் எல்லாம் விலக்கியே புதுமை விளைவித் திடுக! புராணக் குப்பைகள் தமிழில் புகுந்தன; இராத பொய்ம்மைகள் எழுந்தன தமிழில்! மடமைக் கதைகளால் மக்கள் இழிந்தனர்; கடமை மறந்தனர்; கயமை மிகுந்தது! துலக்கமற் றிருக்கும் அவர்துயர் துடைக்கும் இலக்கியஞ் செய்க, இளைய தமிழனே! {{float_right|10}} ‘பிரமன்’ என்பவன் பெயர்த்தெழு தியதிது; ‘அரன்’தன் மனைவிக்கு அறிவித் ததுவிது; 'நாரத’ முனிவன் நவின்றது, இந்நூல்! ‘பாரதம்’ பாடிய வியாசனின் கருத்திது! வால்மீகி எழுதிய வடமொழிக் கதையினை நூலாய்ப் புளுகிய கம்பனின் நூற்பிது. - எனப்பல வாறாய் எழுந்த நூலெலாம் மனத்தையுங் கெடுத்து அறிவையும் மாய்த்தே ஒருசிலர் வாழவும் மிகப்பலர் வீழவும்- நெருநலும், இன்றும் நாளையும் நின்று {{float_right|20}} மக்கள் குலத்தினை மட்கிடச் செய்வன! </poem>}}<noinclude></noinclude> 4z0q4s4p0l6yx959ku056hi0lbzxlcf பக்கம்:கனிச்சாறு 4.pdf/188 250 446972 1838521 1444470 2025-07-03T08:14:02Z Fathima Shaila 6101 1838521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 153}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>புனைதற்குடை தருவார், வெறும் புழுவாய் உருள் வதுவோ? உடல் புழுதி படி வதுவோ? பனியும் மழை வெயிலும் குளிர் பாரா துழைத் திடுவார் - பயிர் பலவும் விளைத் திடுவார் - இங் கினியும் பசித் துயரால், உயிர் இழத்தல் தொடர் கதையோ? - சிலர் இறுமாந் திடல் நிலையோ? உலகம் பொது; உழைப்பும் பொது; உரிமை பொது வைப்போம்! - அதன் உடைமை நலந் துய்ப்போம் - மிகச் சிலரால் பலர் நலியும் நிலை சிதைப்போம்; துயர் புதைப்போம் - பொதுச் சீர்மை நலம் விதைப்போம்!</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} <section end="101"/> <section begin="102"/> {{larger|<b>{{rh|102||ஆர்ப்பாட்ட உலகம் !}}</b>}} {{left_margin|3em|<poem>ஆர்ப்பாட்ட உலகமடா - தம்பி ஆர்ப்பாட்ட உலகமடா; -இது ஆர்ப்பாட்ட உலகமடா! போர்ப் பாட்டும் புகழ்ப்பாட்டும் பொய்ப்பாட்டு மே,நிறைந்த ஊர்ப்பாட்டுக் கென்றென்றும் உழைப்போருக் குதவாத {{float_right|(ஆர்ப்பாட்ட)}} மண்ணென்றும் மனையென்றும் மதிப்பான வாழ்வென்றும் பெண்ணென்றும் மிகப்பேசிப் பேயாட்டம் போடுகின்ற {{float_right|(ஆர்ப்பாட்ட)}}</poem>}}<noinclude></noinclude> tng2cl2646koy2smuulx1xvhmqlnknd பக்கம்:கனிச்சாறு 4.pdf/187 250 446973 1838520 1444469 2025-07-03T08:13:36Z Fathima Shaila 6101 1838520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|152 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>மனமும் ஒன்றுதான்; மக்களும் ஒருவரே! இறைபல இருந்ததால் மதம்பல விருந்தன. மதம்பல விருந்ததால் குலம்பல வெழுந்தன; குலம்பல வெழுந்ததால் கொடுமைகள் நிறைந்தன;{{float_right|65}} உலகம் எல்லாம் ஒருகுலம் என்னும் உயர்ந்த கொள்கைக்கு உரமிட்டு வளர்க்க! அயர்வின்றி உழைக்க! ஆக்கம் உறுதி உழைப்பிலார் சேர்த்த உடைமையை உலுக்குக! உழைப்போர் இழந்த உடைமையை மீட்க!{{float_right|70}} வயிறு காயும் வறுமையைக் கொல்க! உயிருவந் தூட்டும் உழவரைப் பேணுக! பொதுமை உலகம் புதுக்கிடும் புதுமை நினைவொடு புறப்படு இளைஞனே!</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} <section end="100"/> <section begin="101"/> {{larger|<b>{{rh|101||பொதுமை உலகம் !}}</b>}} {{left_margin|3em|<poem>ஒருதாய் நிலம்! ஒருதாய் மொழி! உருவம், நிறம் ஒன்றே! - வாழ் வுரிமை தனி அன்றே! - எனிற் கருதாய் உடன் பிறந்தோர் பலர் கண்ணீர் விடல் நன்றோ? - அவர் கவலை யறல் என்றோ! உருகாய் மனம்; உணராய் நிலை; உழைப்போர் துயர் ஒருநாள் - கரை உடைத்தே வெளி வருநாள் - புயல் உருவாய் வரும்; பெறுவார் பலன்! உண்மை இதை உணர்வாய்! - பொது வுடைமை மனம் புணர்வாய்! மனைகள் பல வெடுப்பார், தெரு மண்ணில் புரள் வதுவோ? - உளம் மறுகிக்குலை வதுவோ? - நாம்</poem>}}<noinclude></noinclude> tbwea44z4tuj07od90tjlbkhc565kbp பக்கம்:கனிச்சாறு 4.pdf/185 250 446975 1838519 1444467 2025-07-03T08:12:37Z Fathima Shaila 6101 1838519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|150 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="100"/> {{larger|<b>{{rh|100||பொதுமை உலகம் புதுக்குக இளைஞனே!}}</b>}} {{left_margin|3em|<poem>அன்றைய வாழ்வில் அமைதி இருந்தது! நன்றே செய்யும் நாட்டம் இருந்தது! மெய்சொலல் உயர்வெனும் மேன்மை இருந்தது; பொய்சொலல் தீதெனும் போக்கு வாழ்ந்தது, அறியாமை இருந்தது; எனினும் கல்வி {{float_right|5}} நெறியே பெரிதென மக்கள் நினைத்தனர்; வறுமை இருந்தது; எனினும் வாழ்க்கை வெறுமை என்னும் நினைவால், விளைந்ததைப் பங்கிட்டு உண்ணும் பழக்கம் இருந்தது! ‘ஈ’யென் றிரப்பதை இழிவாய் எண்ணினர்; {{float_right|10}} ‘கொள்’எனக் கொடுப்பதை உயர்வாய்க் கொண்டனர்! கலைகள் இருந்தன; கயமைகள் இல்லை; கொலையுங் களவும் இருந்தன வாயினும் அறமுறை, நடுநிலை - அவற்றைக் குறைத்தன. வாணிகம் இருந்தது; வாய்மையும் இருந்ததால் {{float_right|15}} தூணெனத் துரும்பை அளக்கும் வழக்கிலை! நறுஞ்செயல் யாவும் மிகுத்துநம் தமிழகம் அறஞ்செய் உலகமாய் அன்றைக் கிருந்தது. இப்படி இருந்த இனியநம் நாட்டில் செப்படி வேலைகள் சிறிது சிறிதாய் {{float_right|20}} மிகுந்த வந்தன! மேற்கிலும் வடக்கிலும் புகுந்தனர் மாந்தப் புல்லியர் ஒருசிலர்! வந்தவர் தாமும் வாழ விரும்பினர்! ‘மந்திரம்’ என்றனர்; ‘மாயம்” என்றனர்; தந்திரம் பலவும் செய்து தமிழரைக் {{float_right|25}} குலம்பல வாக்கினர்; புதுநெறி கூறினர்; வலக்கா ரத்தால் வாழ முனைந்தனர்! ‘சாதி’ புகுந்தது; மிகுந்தது, சழக்கு! </poem>}}<noinclude></noinclude> 211bh5n6pic69yxzq5njgd6zs4lph55 பக்கம்:கனிச்சாறு 4.pdf/184 250 446976 1838518 1444465 2025-07-03T08:12:10Z Fathima Shaila 6101 1838518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 87}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>மருத்துவம் படிக்கிறோம்; மனவியல் தேர்கிறோம்; தெருத்தொறும் ஊர்தொறும் தீராத நோய்களால் வருத்த முறுகின்ற மக்களை வாட்டியே பருத்த கைகளால் பணத்தைப் பறிக்கிறோம்! பதவி எதற்குத் தம்பி? - மக்களுக் குதவி செய்யவா? ஊரை உறிஞ்சவா? கட்சி அமைக்கிறோம்; கழகம் சமைக்கிறோம்; மெச்சுந் தலைவராய்ச் செயலராய்ப் பொருளராய் உச்சி குளிர்ந்திட ஊர்வலம் வருகிறோம்! எச்செய லாகிலும் ஏழைக் குதவுமா? பதவி எதற்குத் தம்பி - மக்களுக் குதவி செய்யவா? ஊரை உறிஞ்சவா? மேடை அதிர்ந்திட மின்விளக் கொளியிலே கூடை கூடையாய்க் கூப்பாடு போடுவோம்! ஓடியும் கெஞ்சியும் ஒப்போலை பெற்றபின் நாடிய அமைச்சராய் நாமே வாழ்கிறோம்! பதவி எதற்குத் தம்பி - மக்களுக் குதவி செய்யவா? ஊரை உறிஞ்சவா?</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} <section end="99"/><noinclude></noinclude> i78g2cvs0p6usnwqhay5mkk7iurkx33 பக்கம்:கனிச்சாறு 4.pdf/183 250 446977 1838517 1444464 2025-07-03T08:11:49Z Fathima Shaila 6101 1838517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|148 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>பசியால் வாடிடும் பாட்டாளி ஒருவன்; பசித்திட மருந்துணும் பழிமகன் ஒருவன்! நசியா நிலையினை நசுக்குவ தென்றோ? நாட்டை மலர்த்திட நடையிடு தம்பி! மண்ணையுங் கல்லையும் மனத்தையும் வருத்தி மாட மாளிகை எழுப்புவான் ஒருவன் திண்ணையு மின்றித் தெருவில் வாழ்வதா? தேன்,பால் பழமுண்டு வீணர் திரிவதா? நெய்யுந் தொழில்செய் நெசவாளித் தோழன் நீட்டிப் படுக்கக் கந்தையும் இல்லாப் பொய்யும் புலையும் மலிந்திடும் போக்கின் பூண்டை யறுக்குநாள் எந்தநாள் தம்பி! நடந்து நடந்து, நலிவதா ஒருவன்? நலமிகு ஊர்தியில் நயப்பதா ஒருவன்? கடந்தடு போர்செயுங் காலமும் வந்தது; களிறே புறப்படு; ஆற்றுக கடமையே!</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} <section end="98"/> <section begin="99"/> {{larger|<b>{{rh|99||பதவி எதற்கு? உதவி செய்யவா?<br>ஊரை உறிஞ்சவா?}}</b>}} {{left_margin|3em|<poem>படித்துத் தேறிப் பட்டம் பெறுகிறோம்; துடித்தலைந் தொரு தொழில் துழாவிப் பிடிக்கின்றோம்; அடித்துப் பிடித்தே அதிகாரஞ் செய்கிறோம்; கடித்து விழுகிறோம்; கையூட்டு வாங்குவோம்; பதவி எதற்குத் தம்பி - மக்களுக் குதவி செய்யவா? - ஊரை உறிஞ்சவா?</poem>}}<noinclude></noinclude> brqln8xxryiwoktu273a7l25ec83tj8 பக்கம்:கனிச்சாறு 4.pdf/179 250 446978 1838513 1444440 2025-07-03T08:10:19Z Fathima Shaila 6101 1838513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|144{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="96"/> <b>{{larger|{{rh|96||ஏழைக்கு ஏழை இரங்குவதுண்டா?}}}}</b> {{left_margin|3em|<poem>ஓடம் விடுகிறாய்! ஓடக் காரனே! மாடம் அன்று,உன் வீடு;மண் குடிசை! ஏந்தல் இல்லை,நீ; ஏழைக் குடிமகன். காந்தும் பசியினால் காய்ந்ததுன் வயிறு. நெளித்து நீட்டி ஓடம் வலித்தபின் புளித்த கூழுக்கு அலைகின்றாய்; அறிவேன்! கருக்கும் வெயிலில் கருகிய துன்உடல்; உருக்குலைந் திருக்கும் உனையொன்று கேட்பேன்; பெறுவ தொன்றும் இன்றி,நின் பிழைப்பிடை ஒருநா ளாகிலும் ஒருநடை யாகிலும் உன்னினும் ஏழை ஒருவனை, உளமிரங்கி அன்போ டக்கரை சேர்த்ததும் உண்டோ இல்லையோ? ஓடக்காரனே! செருப்புத் தைக்கும் சிறுதொழில் தோழனே! வெறுப்புறு வாழ்க்கையில் வீழ்ந்து கிடக்கிறாய் எருமைத் தோலை,நின் இருதோள் தூக்கிப் பெருமை குன்றிடப் பேச்சும் இன்றிச் சாக்காட்டு வாழ்க்கை வாழ்கின்றாய்; அறிவேன்! ஈக்காட்டில் உன்குடில்; இழிவான பள்ளம்! மலக்கூடை சுமக்குநின் மனைவியும் நீயும் நிலக்கோள மாந்தர்க்கு நித்தமும் செய்யும் தொண்டுக்கு வானமே தூசாய்ப் போகும்! உண்மையோ இல்லையோ? - உனையொன்று கேட்பேன்: பெறுவ தொன்றும் இன்றி,நின் பிழைப்பிடை ஒருநா ளாகிலும் ஒருபொழு தாகிலும் உன்னினும் ஏழை ஒருவன் செருப்புக்கு அன்போடு ஆணியொன் றறைந்ததும் உண்டோ இல்லையோ? சிறுதொழில் தோழனே! உழவு செய்கிறாய், உழவுக் காரனே! முழவுகொல் அரசின் முழக்கமும் ஒடுக்கமும் உன்கை எடுப்பிலும் படுப்பிலும் உருள்வது! பெருமைதான்; என்னினும் நின்பிழைப் பெளிமையே! பருத்தி விளைக்கிறாய்; பஞ்சுநின் ஆடை! நெல்லைக் கொழிக்கிறாய்; நினக்கோ பழங்கூழ்! கண்மழை பொழிந்து, கைக்கொண் உழுது மண்ணெலாம் பொன்னாய் மலர்த்துகின் றாய்,நீ! </poem>}}<noinclude></noinclude> 0u8n6t9t99v9dza131muqabcqnhijpq பக்கம்:கனிச்சாறு 4.pdf/178 250 446979 1838511 1444436 2025-07-03T08:10:03Z Fathima Shaila 6101 1838511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}143}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>வெட்ட வெளியிலோ, வீதி விளிம்பிலோ கொட்டும் மழையிலோ, கொளுத்தும் வெயிலிலோ, சாய்க்கடை யோடு சாய்க்கடை யாக- நாய்க ளோடு நாய்க ளாக- கொட்டிய இலைகளைக் குடைந்த வாறாய் வாய்க்கும் வயிற்றுக்கும் போராடிச் சாகும் உருவமும் மாந்த உருவமே! - அந்த உருவமும் மாந்த உருவமே! வானை அளாவக் கட்டிய வளமனை! நீணிலம் அளக்கும் நெடிய ஊர்திகள்! நிலவுக்குத் தாவும் அளவுக்கு அறிவியல்; நாகரிக வாழ்க்கை; ஆரவா ரங்கள்! விழாக்கள்; விருந்துகள்; உழாத விளைவுகள்! செல்வக் கொழிப்பு! ஆயினும் ஒருபுறம் இல்லாமை என்னும் இழிந்த பாழ்நிலை! அந்த நிலையினில் அமிழ்ந்து சாகும் உருவமும் மாந்த உருவமே! - அந்த உருவமும் மாந்த உருவமே! புழுப்பிறப் பல்லர்; புழுவினும் தாழ்ந்த இழுக்குடை வாழ்வில் இன்னுஞ் சாவதா? விலங்குகள் அல்லர்; விலங்கினும் தாழ்ந்த நலமிலா வாழ்வில் நலிவுற் றிறப்பதா? நாய்போல் இருப்பின் நாய்களும் உதவும்; பன்றிபோல் இருப்பின் பன்றியும் உதவும்! நன்றி யுணர்விலா நம்மவர் நடுவில் குன்றி ஒடுங்கிக் குலைந்து சாகின்ற உருவமும் மாந்த உருவமே! - அந்த உருவமும் மாந்த உருவமே!</poem>}} {{larger|{{Right|<b>-1970</b>}}}} <section end="95"/><noinclude></noinclude> 4s2amsl9nvdi3x179u5vpjbhg3io3uf பக்கம்:கனிச்சாறு 4.pdf/177 250 446980 1838510 1444435 2025-07-03T08:09:45Z Fathima Shaila 6101 1838510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|142{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="95"/> {{larger|<b>{{rh|95||மாந்த உருவமே!}}</b>}} {{left_margin|3em|<poem>தெருத்தெரு வாக, வீடுவீ டாக, ஒருவேளைச் சோற்றுக்கு இரந்து திரிகின்ற உருவமும் மாந்த உருவமே! - அந்த உருவமும் மாந்த உருவமே! மெய்யும் நம்போல்; மேனியும் நம்போல்; கைகால் உண்டு; கண்கா துண்டு; அழுக்கிருந் தாலும் அழகும் இருக்கும்; ஒழுக்கமும் இருக்கும்; உயர்வும் இருக்கும்; இருப்பினும் நம்போல் வாழ்க்கை இல்லையே! உருவமும் மாந்த உருவமே! - அந்த உருவமும் மாந்த உருவமே! உருக்குலைந் திட்ட உருவம்! ஒளியிலாது ஒட்டி உலர்ந்த கன்னம்! திரிபோல் கட்டித் திரண்டு காய்ந்த தலைமயிர்! குழிந்த கண்கள்! கரும்பினில் சாறு பிழிந்த சக்கையே கைகளும் கால்களும்! வாடிய மாம்பழத் தோலின் மீதில் ஓடிய சுருக்கம் உடம்பெலாந் தோய்ந்த உருவமும் மாந்த உருவமே - அந்த உருவமும் மாந்த உருவமே! மொச்சை நாற்றம் வீசிடும் அழுக்குடை! கொச்சைப் பேச்சு! கூனிய முதுகு! தளர்ந்த தோள்கள்! தள்ளாடும் மென்னடை! கிளர்ந்த தீப்பசி; கெஞ்சிய வாழ்க்கை! பெருமையே இல்லாச் சருகுகள்! - ஆயினும் உருவமும் மாந்த உருவமே - அந்த உருவமும் மாந்த உருவமே! </poem>}}<noinclude></noinclude> k3gf0snsm3mi8ab8gtup4w956w3rfhg பக்கம்:கனிச்சாறு 4.pdf/176 250 446981 1838509 1444434 2025-07-03T08:09:29Z Fathima Shaila 6101 1838509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}141}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>‘ஒருவனே இறைவன்’ - என் றுரைப்பது நாம்தாம்! உருவமோ, பெயரோ ஒருகோடி இருக்கும்! தெருவெலாம் கோயில்கள்; திருவிழா, பலவகை! ஒருநொடி யாகிலும் உணர்ந்திருப் போமா? படிப்ப தெதற்குத் தம்பி - கடைப் பிடிப்ப தற்கா? பீற்றுவ தற்கா? ‘யாவரும் ஒரு நிறை’- இனிக்க உரைக்கிறோம்! ‘ஏவலன் செல்வன்’-என் றிருப்பதை மறைக்கிறோம்! கூவி, இரந்து குலைபவர் உழைப்போர்; மூவேளை உண்டு மூடர் கொழுப்பதா? படிப்ப தெதற்குத்தம்பி? - கடைப் பிடிப்ப தற்கா? பீற்றுவ தற்கா? ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ - என்கிறோம். பொல்லாப் பிழையுரை! பொன்போன்ற மண்ணுரை! கல்லாரும் கயவரும் கள்ளரும் மன்னரா? கல்வியும் ஒழுங்கும், கயமையும் ஒன்றா? படிப்ப தெதற்குத் தம்பி - கடைப் பிடிப்ப தற்கா? பீற்றுவ தற்கா?</poem>}} {{larger|<b>{{Right|-1970}}</b>}} <section end="94"/><noinclude></noinclude> fpwwz2cid76ucsgutfusel66hejxgsa பக்கம்:கனிச்சாறு 4.pdf/175 250 446982 1838508 1444433 2025-07-03T08:08:56Z Fathima Shaila 6101 1838508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|140{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>தக்கவே அவற்றைத் தரைமட்ட மாக்கி எந்தமிழ் மக்கள் எழுச்சிபெற் றுய்ந்திடச் செந்தமிழ் இலக்கியஞ் செய்க இளைஞனே! கொடுமை சான்ற குலப்பிரி வினைகளை- கெடுமை புகட்டும் சமயக் கீழ்மையை- செல்வச் செருக்கினைச் செந்தமிழ்ச் சொற்களால் கல்லி யெறிந்திடும் இலக்கியங் கழறுக! வாழ்க்கை பொதுவெனும் வாழ்த்தினைப் பாடி வீழ்க்கை யுற்றவர் விலாவலி வேறவும், {{float_right|30}} நொடிந்தவர் குருதி நுரைத்துப் பொங்கவும், இடிந்தவர் வாழ்க்கை எழுச்சிபெற் றுய்யவும், புதுமை இலக்கியம் புனைக இளைஞனே! பொதுமை இலக்கியம் பூக்கட்டும் இன்றே!</poem>}} {{larger|<b>{{Right|-1970}}</b>}} <section end="93"/> {{dhr|10em}} <section begin="94"/> {{larger|<b>{{rh|94||படிக்கின்றோம்; பேசுகின்றோம்; செய்கின்றோமா?}}</b>}} {{left_margin|3em|<poem>‘ஒன்றே குலம்’ - என உரக்கப் படிக்கின்றோம்! மன்றினில் மேடையில் வான்பட முழக்குவோம்! என்றைக் காகிலும் எவ்விடத் தாகிலும் நின்(று) அதன் பொருளை நினைத்திருப் போமா? படிப்ப தெதற்குத் தம்பி? - கடைப் பிடிப்பதற்கா? பீற்றுவதற்கா?</poem>}}<noinclude></noinclude> kcp5023wgbb3287ae7av2udb22l0k8g பக்கம்:கனிச்சாறு 4.pdf/189 250 446983 1838522 1444472 2025-07-03T08:15:00Z Fathima Shaila 6101 1838522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|154{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>அருளென்றும் அன்பென்றும் அறமென்றும் வெளிப்பேசிப் பொருளொன்றே குறிக்கோளாய்ப் புனைவிட்டுத் திரிகின்ற அடிக்கின்ற பணங்காசில் அரைக்காசுக் கறஞ்செய்து குடிக்கின்ற குடம்பாலில் குவளைப்பால் கொடைவார்க்கும்{{float_right|(ஆர்ப்பாட்ட)}} புலைகோடி செய்தேனும் பொருள்கோடி தொகுத்தோர்கள் கலைகோடி உருச்செய்து கடவுட்குத் தேர்செய்யும்{{float_right|(ஆர்ப்பாட்ட)}} படுக்கப்பூ மெத்தையிட்டு பன்னீரில் உடல் கழுவி உடுக்கப்பட் டுடைகேட்கும் உன்மத்தர் நிறைந்தவெறும்{{float_right|(ஆர்ப்பாட்ட)}}</poem>}} {{larger|<b>{{Right|-1971}}</b>}} <section end="102"/> <section begin="103"/> {{larger|<b>{{rh|103||தப்பித் தவறியே மாந்தனாய்ப் பிறந்தவன்!}}</b>}} {{left_margin|3em|<poem>தப்பித் தவறியே மாந்தனாய்ப் பிறந்தவன் ஒப்புக்கு வாழ்கிறான் உலகில் - கொஞ்சம் உப்புக்கு விடிவில்லை வாழ்வில் - அவன் வாழ்வில் - வெறும் மெப்புக்குப் பேசியே மேலுக்குப் பூசியே தப்புக்குப் பூட்டிடுவீர்கள்- ‘சரி தான்’-என நாட்டிடுவீர்கள்! காலுக்குச் செருப்பின்றிக் கையிலோர் காசின்றி மேலுக்குத் துணியின்றி வாழ்வான் - உடல் தோலுக்குக் காப்பின்றி நோவான் - நொந்து சாவான் - ஆவின்</poem>}}<noinclude></noinclude> 8rfefxaqhc94ybqa6os5lc80856nqhc பக்கம்:கனிச்சாறு 4.pdf/190 250 446984 1838523 1444473 2025-07-03T08:15:17Z Fathima Shaila 6101 1838523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 155}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>பாலுக்குத் தேன் விட்டுப் பருப்புக்கு நெய் விட்டுக் காலுக்கு மெத்தைகேட் பீர்கள் - அவன் கதையினைச் சொத்தையென் பீர்கள்! படுக்கைக்குப் பாயின்றி, பதுங்கவும் குடிலின்றிக் கடுக்கின்ற வயிற்றுக்குக் கஞ்சி - கொஞ்சம் கொடுக்கவே புகழ்ந்துமைக் கெஞ்சி - மிக, அஞ்சி - குளிர் நடுக்கிடக் கைபோர்த்து முடக்கிடும் மெய்சேர்த்து ஒடுக்கிய வாறுயிர் தீய்ப்பான் - தெரு ஓரங்களில் உயிர் சாய்ப்பான்! வினைவிதைத் தானென்றும் விளைவிது தானென்றும் புனைகதை பற்பல சொல்வீர்! - உயிர் போனாலும் போகட்டும் என்பீர் - தெற்றித் தின்பீர் - உம் மனைமாடு பெரிதென்று மக்களே உயிரென்று மனைவிக்குப் பட்டெடுப் பீர்கள்! - அவன் மண்டை, கல் விட்டுடைப் பீர்கள்! வாட்டமுற் றிருப்பவர் வாழ்க்கையில் நொந்தவர் கூட்டமெல் லாம்,ஒன்று சேரும் - நம் ஈட்டமெல் லாம் எண்ண நேரும் இந்தப் பாரும் - அதன் ஊட்ட மும் பொதுவாக்கி உழைப் பையும் பொதுவாக்கித் தேட்ட மெல் லாம்வகுத் தீயும் - அந்தத் தீமைக ளும்அடி சாயும்! </poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}} <section end="103"/><noinclude></noinclude> hlss01ilvao9pnuuvdsc44urkeqhawr பக்கம்:கனிச்சாறு 4.pdf/191 250 446985 1838524 1444475 2025-07-03T08:15:40Z Fathima Shaila 6101 1838524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|156{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="104"/> {{larger|<b>{{rh|104||கேட்கின்றான்; கொடு !}}</b>}} {{left_margin|3em|<poem>நல்லவனோ, இல்லை பொல்லா தவனோ, நாணம் விட்டே, உனை இரக்கின்றான் - மானந் துறக்கின்றான் தம்பி ‘இல்லை’யென் னாதே; ‘தொல்லை’யென் னாதே! இருப்பதில் ஒரு துளி எடுத்துக்கொடு இது சரி;இது தவறெனும் ஆய்வை விடு! குருடோ நொண்டியோ, கூனோ கிழமோ, கூசிடாமல் உனைக் கேட்கின்றான் - வாழ வேட்கின்றான் - தம்பி திருடனென் னாதே; தீயனென் னாதே! தேய்ந்திடா(து); இருப்பதில் சிறிதுகொடு - இது தீது;இது சரி -எனும் ஆய்வை விடு! நோயனோ பேயனோ நோஞ்சானோ தடியனோ நூறுபேர் நடுவில்கை யேந்துகின்றான் - உயிர் காந்துகின்றான் - தம்பி “போய் வா” என்பதும் புகலு(ம்)உன் அறிவதும் புன்மையென் றறிகுவாய்! கொடை பெரிது-இது பொய்;இது மெய்-எனும் எடை சிறிது! பொய்யனோ மெய்யனோ போலியோ காலியோ போக்கின்றி வந்துகை நீட்டுகின்றான்-பல்லைக் காட்டுகின்றான்-தம்பி வெய்ய உரைப்பதும் வேண்டி மறைப்பதும் விரும்பத் தகாதன; கொடை விரும்பு-பல வீண்செல வில்இது சிறுதுரும்பு!</poem>}} {{larger|{{Right|<b>-1971</b>}}}} <section end="104"/><noinclude></noinclude> 1oqoyjktnnyv0pa83vetq2zfilznokt பக்கம்:கனிச்சாறு 4.pdf/192 250 446986 1838525 1444476 2025-07-03T08:16:06Z Fathima Shaila 6101 1838525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 157}}</b></small></noinclude> <section begin="105"/> {{larger|<b>{{rh|105||எதிர்காலந்தனைச் சமைப்பாய் !}}</b>}} {{left_margin|3em|<poem>பித்தனென் பார் சிலர்; பேயனென் பார் சிலர்; பிதற்றுவோன் என்றுரைப்பார்!-பெரும் எத்தனென் பார்; சிலர் ஏய்ப்பனென் பார்;உனை எள்ளல்செய் தே,நகைப்பார்!-தூய புத்தம் புதுவுணர் வால் அவர் போக்கினைப் பூழ்க்கையென் றே,தவிர்ப்பாய்!-தம்பி நித்தமும் இத்தரை மக்கள் நிமிர்ந்திட நேர்மைகொண் டே, வுழைப்பாய்! குறைகளும் கூறுவார்; குற்றங்கள் சாற்றுவார்; கோடித் துயர்கொடுப்பார்-தலை மறைவாகப் பேசுவார்; மனம் நோக ஏசுவார்; மக்கள்முன் பல வீசுவார்!-நெஞ்சப் பொறையோடு நீ யவர் புரையான போக்கினைப் புறந்தள்ளி மேலேறுவாய்!-தம்பி நிறைவான கருத்தினை நெகிழ்வின்றிக் கூறுவாய்! நிலையான பயன்விளைப் பாய்! துணைவரு வார் சிலர்; தோள்தரு வார் சிலர்; துவண்டுளம் இடைநெகிழ்வார்!-வினைக்(கு) அணைபோடு வார் சிலர்; அகம்வேகு வார் சிலர்; அடிவீழக் குழிவெட்டு வார்!-எய்த கணைபோலும் பார்வையால் கவண்போலும் சொல்லினால் கலங்காமல் வினைசெய்குவாய்!-தம்பி இணையற்ற தொண்டுசெய்! ஏறுபோல் பீடுகொள்! எதிர்காலந் தனைச் சமைப்பாய்!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}} <section end="105"/><noinclude></noinclude> h8c3q2q8jo55b0hohln6ak7ysxlvd3i பக்கம்:கனிச்சாறு 4.pdf/193 250 446987 1838527 1444478 2025-07-03T08:17:43Z Fathima Shaila 6101 1838527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|158{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="106"/> {{larger|<b>{{rh|106||பொதுமை உலகம் வரல் வேண்டும் !}}</b>}} {{left_margin|3em|<poem>“யார்தான் எப்படிப் போனா லென்?என் ஏர்தான் நிலத்தை உழல் வேண்டும்-என் பேர்தான் ஊன்றி எழல் வேண்டும்;என் வேர்தான் உலகம் தொழல் வேண்டும்”-என் போர்தாம் பெருகிப் படர்ந்தார், தம்பி! பொதுமை உலகம் வரல் வேண்டும்-ஒரு புதுமை விளைவு பெறல் வேண்டும்! “என்றன் மனைவி மக்கள் தாமே என்றும் நலமாய் இருந்திடுக-பிறர் தின்றால் என்ன? தேய்ந்தால் என்ன? திசைகள் தோறும் திரிந்தென்ன?”-இவ் வொன்றே குறியாய் உழல்வார், தம்பி! உழைப்போர் உலகம் வரல் வேண்டும்!-ஒவ் வொருவர் நலமும் பெறல் வேண்டும்! “என்வீ டொன்றே இப்பெருந் தெருவில் எடுப்பாய் நின்றே விளங்கிடுக!-பிறன் தன்வீ டெல்லாந் தரையாய்ப் போக; தரையும் வெடித்துக் குழிவிழுக!”-என் றின்னே நினைப்பார் பெருகினர், தம்பி! இனிதோர் உலகம் வரல் வேண்டும்-இங் கெவரும் சமமாம்-எனல் வேண்டும். “பெய்யும் மழையென் வயலிற் பெய்க; பிணிகள் இன்றி நான் வாழ்க;-என் கையும் காலும் தூண்போல்-ஆகுக; கடவு ளே,துணை துணை” யென்று-தான் உய்யும் வழியே நினைப்பார், தம்பி ஒருமை உலகம் வரல் வேண்டும்-பிறர் உளர் எனும் நினைவும் பெறல் வேண்டும்.</poem>}} {{larger|{{Right|<b>-1971</b>}}}} <section end="106"/><noinclude></noinclude> lkf9yj9uzw7p2hmrmgb1tczo6uvy9oo பக்கம்:கனிச்சாறு 4.pdf/194 250 446988 1838528 1444479 2025-07-03T08:18:03Z Fathima Shaila 6101 1838528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 159}}</b></small></noinclude> <section begin="107"/> {{larger|<b>{{rh|107||தெய்வமும் உண்மைகொல்!}}</b>}} {{left_margin|3em|<poem>உலகும் பொறுக்குமோ! உலகும் பொறுக்குமோ! நிலத்துளி ஆளுமோர் நெஞ்சச் செருக்குடன் <b>யாகியா கான்</b>-எனும் மாகய வாளி கூகையும் குருவியும் போல், பொது மக்களைச் சுட்டுப் பொசுக்கியும் சூறை யாடியும்,{{float_right|5}} மொட்டையும் பூவையும் பிஞ்சையும் சிதைத்தல் போல், கட்டிளங் கன்னியர் கற்பைக் குடித்தும், குழவிகள் இளையவர் குருதியை உறிஞ்சியும், கிழவரும் அறிஞரும் எனப்பாராமல், கோடிக் கோடியாய்க் கூட்டங் கூட்டமாய்{{float_right|10}} ஓடிப் பிடித்தும் உயிரொடு கொளுத்தியும், வேட்டம் ஆடிடும் வெறிமையும் பேய்மையும் காட்டுத் தீயினுங் கடுமையாய்க் கொடுமையாய் வீறிடக் கண்டும், வெடித்து விழுங்காமல், உலகும் பொறுக்குமோ! உலகும் பொறுக்குமோ!{{float_right|15}} அரசும் இருக்குமோ! அரசும் இருக்குமோ! கரிசெலாம் சேர்ந்துரு வாயஓர் களிமகன் மனம்போன வாறெல்லாம் மக்களைத்-தம்முடை இனமென்றும் உயிரென்றும் எண்ணாது, இராப்பகல், என்றும் இலாதுபோல்-இனியும் இராதுபோல் {{float_right|20}} கொன்று குவிக்குமோர் கொலையிற் கொடுஞ் செயல்- கண்ட பின்னரும், காதுகள் புண்படக் கேட்ட பின்னரும் கிளர்ச்சியுற் றெழாமல்- ‘நில்லடா’ எனுமோர் வல்லொலி கொடாமல் கல்லென இருந்து, காணியாள் கின்ற,பே- {{float_right|25}} ரரசும் இருக்குமோ! அரசும் இருக்குமோ! மக்களும் இருப்பரோ! மக்களும் இருப்பரோ! பொக்கெலாம் இ ணைந்துரு வானஓர் புல்லியன் அரசுத் தலைவனென் றமைந்(து)-ஒரு சிறுநிலத்(து)</poem>}}<noinclude></noinclude> 0pgwotzcp53eku96ch5xut8w8y8sv0c பக்கம்:கனிச்சாறு 4.pdf/196 250 446990 1838529 1444484 2025-07-03T08:19:28Z Fathima Shaila 6101 1838529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 161}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாமெனும் உரையிற் பராவிடும் உண்மைத் தமிழர் தம் {{float_right|60}} அறமும் உண்டுகொல்! அறமும் உண்டுகொல்! தெய்வமும் உண்மை கொல்! தெய்வமும் உண்மை கொல்! செய்தவத் தோர்தாம் செப்பிய மாத்திறன்- மெய்யறி வோருளம் மொய்த்திடு பேரிறை- கையற் றார்தமைக் காத்திடுங் கடிகா- {{float_right|65}} செய்வினைக் குறுதுணை செயும்பே ராற்றல்- இடர்ப்படு வார்தமை எற்றும்,ஏ மப்புணை- சுடரொளி-அருட் கடல்- சூழ்ந்த பரம் பொருள்- பொய்ம் மையும் புன்மையும் போழ்க்குமென் றுரைத்த தெய்வமும் உண்மைகொல்! தெய்வமும் உண்மைகொல்! {{float_right|70}}</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}} {{dhr|10em}} <section end="107"/> <section begin="108"/> {{larger|<b>{{rh|108||ஊரைத் திருத்துமுன்... !}}</b>}} {{left_margin|3em|<poem>ஊரைத் திருத்துமுன், உலகைத் திருத்துமுன் உன்னைத் திருத்தடா தமிழா-நீ உன்னைத் திருத்தடா தமிழா! பாரைத் திருத்திடல் நல்ல முயற்சியே! பாட்டனும் பூட்டனும் செய்த பயிற்சியே! யாரைத் திருத்தினர்; யாது வளர்ச்சியே? யாங்கணும் யாங்கணும் வாழ்க்கை தளர்ச்சியே!{{float_right|(ஊரைத்)}}</poem>}}<noinclude></noinclude> 6twagpzxlkm3ip4e7w542e729gkvwae பக்கம்:கனிச்சாறு 4.pdf/197 250 446991 1838530 1444487 2025-07-03T08:19:46Z Fathima Shaila 6101 1838530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|162 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem> வேரைத் திருத்துதல் பயனளித் திடலாம்! வினையத் திருத்திடும் முயற்சியோ கடலாம்! கூரை திருத்தினால் நிற்குமோ சுவரே? குழியைத் திருத்தாமல் இருப்பது தவறே! {{float_right|(ஊரைத்)}} உலகைத் திருத்திட வலம்வரு கின்றாய்! உன்னைத் திருத்தெனில் உள்ளம்நோ கின்றாய்! அலகிலா முயற்சிகள் அறங்கள், சட்டங்கள் ஆரைத் திருத்தின? பணயம்கட் டுங்கள்! {{float_right|(ஊரைத்)}} ஆயிரம் ஆண்டுக்கு முன்னும் இருந்தனர்; அம்மண மாகவே உண்டு திரிந்தனர்; ஏயின திருத்தங்கள் என்னென்ன கண்டாய்? எழிலுடை! தலைமயிர்! மற்றென்ன விண்டாய்? {{float_right|(ஊரைத்)}} வெள்ளுடை மேனியில் புரள்வதோ நேர்மை? விரிமயிர் வாரி முடித்தலோ சீர்மை? உள்ளத்துள் கள்ளமும் கரவும் கிடப்பதா? ஊரினை ஏமாற்றி, மறைந்தே நடப்பதா? {{float_right|(ஊரைத்)}} பொதுமையைக் காணாத உளம்என்ன உளமோ? பூசலை விளைத்திடும் வளம்என்ன வளமோ? புதுமைஎன் றுரைப்பது செல்வர்க்குச் செழிப்பு! போக்கற்ற ஏழையர்க் கேதுஅதால் விழிப்பு? {{float_right|ஊரைத்}} மன்றங்கள் எத்தனை? எத்தனைக் கோயில்? மடிபவர் எத்தனைப் பேர் தீமை நோயில்? இன்றைக்கும் நேற்றைக்கும் வேற்றுமை யாது? இழிவினை, அழகினால் மூடல்அன் றேது? {{float_right|(ஊரைத்)}} கல்வியும் செல்வமும் ஓங்குதல் மேலோ? கணக்கிலா இழிவுகள் குவிதல்எப் பாலோ? சொல்,வினை உளத்தோடு பொருந்துதல் வாழ்வே! சொக்கட்டான் காய்போல் உருளுதல் தாழ்வே! {{float_right|(ஊரைத்)}} </poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}} <section end="108"/><noinclude></noinclude> jqvd1zll9nc5xl1yiukda2bunvc3h85 பக்கம்:கனிச்சாறு 4.pdf/198 250 446992 1838531 1444490 2025-07-03T08:20:17Z Fathima Shaila 6101 1838531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 163}}</b></small></noinclude> <section begin="109"/> {{larger|<b>{{rh|109||ஒரு வாய்ச்சொல் கேளீர் !}}</b>}} {{left_margin|3em|<poem>வான முழுதும் அளக்கச் சென்றீர்-மற வானவரீர்! ஒரு வாய்ச்சொல் கேளீர்-உடற் கூனலுற்ற உழைப் பாளரினம்-உய்யக் கூர்த்த வழியொன்றை இங்குச் செய்வீர்!-பின்னர் கோள்களை ஆண்டிட அங்குச் செல்வீர்! கோள்களை ஞாயிற்றை ஆய்வதனால்-ஒரு கூலிமகன் பசி நீங்கலுண்டோ?-அட, நீள்விளை யாடல்கள் செய்திடலாம்-வாழும் நிலத்தை முழுதும் முன்நினைப்பீர்;-வானை நீட்டி அளப்பதைப் பின்நினைப்பீர்! அறிவியல் ஆய்கலை செய்வதெல்லாம்-உல(கு) ஆண்டிடும் மாந்தர் நிலைப்பதற்கே!-ஒரு நெறியினில் அறிவு நிலைக்கிலையேல்-உயிர் நேர்ச்சியிலே ஒரு வீழ்ச்சியுண்டாம்!-வாழ்க்கை நிலையினிலே ஒரு தாழ்ச்சியுண்டாம்! பாரை நடுங்கிடச் செய்திடுவீர்-நிலப் போர்வெறியீர்! ஒரு வாய்ச்சொல் கேளீர்-பல பேரை உயர்த்திடும் பாட்டாளிகள் வாழ்வைப் பேணிடும் எண்ணம் உமக்கிலையோ?-கொலை பெய்திடும் உங்கட்(கு) உயிர்நிலையோ? வீடுகள் இன்றிக் குளிர் மழையில்-வெட்ட வெளியினில் மாந்தர்கள் வாழ்க்கையிலே-பெரும் நாடு நகர்களைத் தூள்கள் செய்வீர்-பயிர் நண்ணும் வயல்களைப் பாலை செய்வீர்-இந்த நாற்றிசையும் சென்(று) உயிர்கள் கொய்வீர்! போரில் அழித்திடும் செல்வத்தினால்-ஒரு புத்தம் புதுஉல காக்கிலென்ன?-உயிர் வேரில் புதுப்புனல் வார்ப்பதனால்-இன்ப வீழ்ச்சியைத் தூக்கி நிறுத்தோமா?-துன்பம் விளைக்கும் மடமை திருத்தோமா? வாழும் உயிர்களைக் காத்திடலாம்-இந்த வையத்தில் நல்வளம் சேர்த்திடலாம்-நித்தம் தாழும் ஏழைகட்குத் தோள்கொடுத்தே-உயிர் தாங்கும் உழவரைத் தாங்கிடலாம்!-இன்பம் தழைத்திடவே உயர்ந்த தோங்கிடலாம்!</poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}} <section end="109"/><noinclude></noinclude> 2ysnixrifpy8n37dkqc02lrqgiyfb73 பக்கம்:கனிச்சாறு 4.pdf/199 250 446993 1838532 1444493 2025-07-03T08:20:40Z Fathima Shaila 6101 1838532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|164 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="110"/> {{larger|<b>{{rh|110||ஏழ்மையின் நிலைமை மாறியதுண்டா?}}</b>}} {{left_margin|3em|<poem>புதிய புதிய அரசுகள் வந்தன! புதிய புதிய கொடிகள் பறந்தன! திட்டங்கள் பற்பல தீட்டிக் குவிந்தன; சட்டங்கள் பற்பல செய்து சாய்ந்தன; அமைச்சர்கள் மாறி மாறி அமர்ந்தனர்! சமைப்போம் பொதுமை எனவே சாற்றினர்! இருந்தும் என்ன? ஏழையின் நிலைமை மருந்துக் காகிலும் மாறிய துண்டா? அணிகளும் மணிகளும் புதிதாய் ஆயின; துணிகளில் வண்ணமும் எண்ணமும் மாறின; மனைகள் புதிது புதிதாய் எழுந்தன; மாடிகள் உயர்ந்தன? அளாவின வானை; உணவுப் பண்டமோ ஒருநூறு வகைகள்! ஊட்டச் சாரங்கள் குளிகையாய் உலாவின! மயங்கு பொருள்களில் மக்களும் மயங்கினர்! இயங்கிகள் பலவகை! எழிலும் புதுமையும் வீட்டிலும் நாட்டிலும் விளைந்தவை கோடி! ஏட்டிலும் எழுத்திலும் எண்ணிலும் அடங்கா! இருந்தும் என்ன?-ஏழையின் நிலைமை மருந்துக் காகிலும் மாறிய துண்டா? ஊருக்கு ஊர்பல உண்டுறை விடுதிகள்! நேருக்கு நேராய் நிலவறை ஆட்டம்! தொழிற்கூ டங்களின் தொகைகள் கணக்கில! எழிற்கூ டங்களின் எண்ணிக்கை மிகுதி! இப்படி உலகம் இமைக்கிமை-நாட்குநாள் செப்படி திறம்போல் மாறிச் செல்கையில் ஏழையர் வாழ்க்கை எப்படித் தெரியுமா? வாழை யடியில் வாழை வளர்ச்சிதான்! கொடிகள் மாறின; குடிசைகள் பழம்படி! குடிசைக் கூரைமேல் நைந்த ஓலைகள், பிய்ந்த பாய்கள், சணற்பைக் கிழிசல்கள், கரிநெய் பூசிய கருநிறத் தாள்கள்! </poem>}}<noinclude></noinclude> qvzy5f4bhjrhlnm9hjjsmiebhhzw8j6 பக்கம்:கனிச்சாறு 4.pdf/200 250 446994 1838533 1444495 2025-07-03T08:21:05Z Fathima Shaila 6101 1838533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 165}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>நரிப்புழை போலக் குடிசையின் நுழைமுகம்! புதைகுழி போலக் குடிசையின் உட்புறம்! கதைப்பட நடிக நடிகையர், விலங்குகள், உரிமை முழக்கிய உலகத் தலைவர்கள் பெருமை பேசிடும் கட்சிப் பெம்மான்கள்- வெட்டுப் படங்களை ஒட்டிய சுவர்கள்! தட்டு முட்டுகள்! கந்தை கழிசல்கள்! சப்பை சுவடுகள்! சதவல் சகதிகள்; குப்பை கூளங்கள்! குண்டுகள் குழிகள்! குக்கல் கோழிகள்! குடும்பொடு பன்றிகள்! அடிகள், உதைகள், அவிழ்ந்த பேச்சுகள், குடி,கூத் தாட்டம், குத்து வெட்டுகள்! இப்படி இங்கோர் உலகம் இருப்பதை முப்படியாக முன்னேறிச் செல்லும் நாக ரிகந்தோய் உலகம் நம்புமா? வேகமும் புதுமையும் விளைப்போர் விளக்குக!</poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}} <section end="110"/> <section begin="111"/> {{larger|<b>{{rh|111||ஒருநாள் வரத்தான் போகிறது !}}</b>}} {{left_margin|3em|<poem>ஓங்கிக் கட்டிய உயர்ந்த மாளிகை! உலாவக் கட்டிய மேற்புற மாடிகள்! தூங்கக் கட்டிய தனிநிலை அறைகள்; தொங்கு மாடங்கள்; ஊஞ்சல் தூலிகை! தாங்கிய விளக்குகள்! பலகணித் திரைகள்! தரையெலாம் விரிப்புகள்! பல்வண்ண ஓவம்! பாங்காய் இவற்றுளே குபுகுபு குபு-வெனப் பாட்டாளி மக்கள் புகுகின்றார் பாருங்கள்! ஓங்கிய செல்வரே, உணருங்கள்! அப்படி ஒருநாள் வரத்தான் போகிறது-இவ் வுலகம் பொதுவென ஆகிறது! {{float_right|1}}</poem>}}<noinclude></noinclude> q4f10xy8r2qjxkwn0gxes3wa3dzcf9m பக்கம்:கனிச்சாறு 4.pdf/201 250 446995 1838534 1444496 2025-07-03T08:21:22Z Fathima Shaila 6101 1838534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|166 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>பூவகை வகையாய் மலர்ந்த பூங்கா; புதுபுதுப் பழவகை; காய்கறி விளைச்சல்! தூவுநீர் வாவிகள்; செதுக்கிய சிலைகள்; தொலையாப் புல்வெளி; பரந்த தோட்டம்! தாவுமான் குட்டிகள்; ஊடாடு மயில்கள்! தங்கி வாழ்வரோ இரண்டொரு பேர்கள்! மேவும்-இவற்றுளே திபுதிபு திபு-வென மெலிகின்ற ஏழைகள் புகுகின்றார் பாருங்கள்! ஓ!ஓ! செல்வரே, எண்ணுங்கள்! அப்படி ஒருநாள் வரத்தான் போகிறது-இவ் வுலகம் பொதுவென ஆகிறது! {{float_right|2}} இழைப்பாய் இழைத்துப் பூசிய சுவர்களை எழுப்பிக் கொடுத்து மாளிகை சமைத்திட உழைப்பாய் உழைத்தவர்-பிறந்த மேனியர்- உறங்குவர் பாதையில்! உங்கட்கு அடடா, அழைப்புக் கெடுபிடி ஆயிரம் ஆட்கள்! ஆட்ட மயில்களைப் போல்பல பெண்டிர்! அழைப்பின்றி, இவற்றுளே திமுதிமு திமு-வென அங்காந்த மக்கள் புகுகின்றார் பாருங்கள்! உழைப்பிலாச் செல்வரே, ஓருங்கள்! அப்படி ஒருநாள் வரத்தான் போகிறது-இவ் வுலகம் பொதுவென ஆகிறது! {{float_right|3}} தின்று தின்று தெவிட்டுநெய் உணவு; தீரப் பிழிந்த தீம்பழச் சாறு; அன்றை அன்றை புதியபட் டாடை; ஆடிக் களித்திடக் கலைக்களி யாட்டம்; சென்றுலா மீண்டிட மெத்தென் ஊர்திகள்! செருக்குச் சிரிப்புகள்; எக்காளப் பேச்சு; நன்றுநன் றிவற்றுளே திடுதிடு திடு-வென நலிகின்ற ஏழைகள் புகுகின்றார் பாருங்கள்! ஒன்றாத செல்வரே, நினையுங்கள்! அப்படி ஒருநாள் வரத்தான் போகிறது-இவ் வுலகம் பொதுவென ஆகிறது!{{float_right|4}}</poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}} <section end="111"/><noinclude></noinclude> ni3b6s87kjjcd1qu84i7wi16iqpv6sr பக்கம்:கனிச்சாறு 4.pdf/202 250 446996 1838535 1444497 2025-07-03T08:21:39Z Fathima Shaila 6101 1838535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 167}}</b></small></noinclude> <section begin="112"/> {{larger|<b>{{rh|112||அன்றைய நாள் வருமோ ?}}</b>}} {{left_margin|3em|<poem>நட்ட நடுத்தெருவில்-தம்பி நால்வர் நடக்கையிலே-நல்ல வெட்ட வெளிச்சத்திலே-பெரும் வீரர் எதிரினிலே-கடை கெட்ட இழிசெயல்கள்-கொடுங் கீழ்மை இருள்வினைகள்-பழி சொட்ட நடக்குதடா-வெளிச் சொல்ல முடிவதில்லை!-பார், நட்ட நடுத்தெருவில்! {{float_right|1}} பட்டப் பகலினிலே-இப் பாழ்மை நடக்கையிலே-இங்கு நட்ட நடுஇரவில்-தம்பி நால்வரில் லாப்பொழுதில்-முன் திட்டமிட் டேபலர்செய்-பெருந் தீமையைக் கேட்பவர்யார்?-பலர் கொட்டங்கள் என்னசொல்வேன்?-இழி கூத்தைஎவ் வாறுரைப்பேன்?-அட பட்டப் பகலினிலே! {{float_right|2}} பொட்டல் பெருங்காடே-முள் போர்த்த புதர்நிலமே!-நிலை கெட்ட தமிழ்நாடே!-வெறுங் கீழ்மை மணல்மேடே!-உனைத் திட்டி நெரிப்பதற்கும்-அறத் தீய்த்துப் பொசுக்குதற்கும்-மனம் எட்டிஎட் டிப்பாயும்-தமிழ் ஏக்கந் தடுத்துவிடும்!-ஓ! பொட்டல் பெருங்காடே! {{float_right|3}} செங்கட் புலிபாயும்மருள் சேர்ந்த பெருங்காடும்-பெருங் கங்குல் நிறைந்திருக்கும்-மலைக் கற்புழை நீள்முழைஞ்சும்-வளம்</poem>}}<noinclude></noinclude> 3mi3dwb5u78yqniqxm76hmhzibyegms பக்கம்:கனிச்சாறு 4.pdf/203 250 446997 1838536 1444498 2025-07-03T08:22:01Z Fathima Shaila 6101 1838536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|168 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>பொங்கும் பசுஞ்சோலை-எனப் பூரிக்கச் செய்கையிலே-பழி தங்கும் தமிழ்நிலமே!-உனைத் தாழ எண்ணும் உளமே!-ஓ தண்டமிழ்த் தாய்நிலமே! {{float_right|4}} எண்ணப் பசுஞ்சுவடும்-அட எண்ணத் தொலைவிலதாம்-பல வண்ணப் பெரும்புகழும்-அக வாழ்வும் புற மறமும்-என் கண்ணிலே நீருகுக்கும்-பழங் காட்சிக் குளந்துயி லும்!-இன்று புண்ணில்வே லிட்டதைப் போல்-இழி போக்கிற் குளம்வெதும்பும்!-ஓ புன்மைத் தமிழ்நிலமே! {{float_right|5}} அன்றைய நாள் வருமோ!-தமிழ் ஆண்டிடுமோ மீண்டும்?-அட இன்றைய புன்மையெல்லாம்-நிலை இற்றிற்றுச் செத்திடுமோ?-உயிர்க் கன்றுக்குப் பாலருந்தி-அகக் காட்சிக்கு மீட்சிதரும்-எனை வென்ற தமிழ்க்குயிலே-செயல் வீழ்ந்த தமிழ் மறமே-சொல் அன்றைய நாள் வருமோ? {{float_right|6}}</poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}} <section end="112"/><noinclude></noinclude> bqz99j5iymchyjdk3r1iskptltmzjjq பக்கம்:கனிச்சாறு 4.pdf/204 250 446998 1838538 1444508 2025-07-03T08:22:24Z Fathima Shaila 6101 1838538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 169}}</b></small></noinclude> <section begin="113"/> {{larger|<b>{{rh|113||வாழ்நாள் சிறியது; வாழ்க்கையோ பெரிது !}}</b>}} {{left_margin|8em|<poem>என்றும் நினைத்திரு; இந்நிலம் பெரிது! குன்றமும் வானும் கோடி ஆண்டுகள் நின்று நிலைப்பன! நீயோ அழிபவன்! என்றும் இருப்பதாய் இறுமாந்து விடாதே! {{float_right|1}} ஒருநாள் நம்முடல் உலகினில் அழியும்! திருநாள் போலத் திரிந்த வாழ்வெலாம் இருளுள் மூழ்கும்; இல்லாமற் போவோம்! அருமை உறவினர் அழ அழ அழிவோம்! {{float_right|2}} பிறப்பனஎல்லாம் பின்னொரு நாளில் இறப்பதும் உறுதி!- இதுவே இயற்கை! மறப்பிலா இந்நிலை மனத்தினுள் இறுத்திச் சிறப்புற எண்ணவும் செய்யவும் முனைக! {{float_right|3}} உன்புது வாழ்வை உவப்புடன் நடத்து! அன்பும் அறமுமே அனைத்தினும் உயர்வாம்! இன்பம் வருகையில் எக்களிப் புறாதே! துன்புற நேரினும் துவண்டு விடாதே! {{float_right|4}}</poem>}}<noinclude></noinclude> ne0npfktv9e0jtc65ur0dveopm85kbq பக்கம்:கனிச்சாறு 4.pdf/205 250 446999 1838540 1444507 2025-07-03T08:23:00Z Fathima Shaila 6101 1838540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|170 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|8em|<poem>ஒருநலம் பெறுகையில் உலக நலம் நினை! வருநலம் யாவும் வகுத்துண்டு வாழ்வாய்! பெருநிலம், விளைவுகள், பிறவெலாம் பொதுவே! மருவிலா உள்ளமும் வாழ்வுமே மகிழ்ச்சி! {{float_right|5}} வாழ்நாள் சிறியது; வாழ்க்கையோ பெரிது! வீழ்நாள் வரினும் வீழாது நற்செயல்! தாழ்வும் உயர்வும் தம்தம் செயல்களே! சூழ்வன மீறிச் சுடர்வன செய்வாய்! {{float_right|6}}</poem>}} {{Right|{{larger|<b>-1973</b>}}}} <section end="113"/> <section begin="114"/> {{larger|<b>{{rh|114||ஏழையை உயர்த்திடப் பாடுவாய் !}}</b>}} {{left_margin|3em|<poem>ஏடெடுக் கின்றாய்; தூவலை யெடுத்தாய்! எந்தப் பாடலை எழுதிட நினைத்தாய்? காடுடுக் கின்றவோர் இன்னிள வேனிலின் காட்சியை யா? நறுங் கார்தரு மாட்சியா? கோடுடுக் கின்றபூந் துணரின தழகையா? கூடிடப் பாடிடுங் குயில்களின் இசையையா? ஓடெடுக் கின்றஓர் ஏழையைப்-பாவல, உயர்த்து கின்றநற் பாடலைப் பாடுவாய்! {{float_right|1}} ஊரெலாம் உறங்கையில் உன்விழி உறங்கா துயிர்க்குங் கற்பனை உலுக்கிட எழுந்தாய்! யாரெலாம் நினைந்து பாடிட முனைந்தாய்? யாழையும் மயிலையும் பழித்தவள் அழகையா? பாரெலாந் திரிந்துன் நினைவுப் பறவையும் பார்த்து மகிழ்ந்திடும் எழிலையா வரைந்தாய்? நீரிலாப் பயிரெனும் ஏழையைப்-பாவல, நிமிர்த்தி உயர்த்திடும் பாடலைப் பாடுவாய்! {{float_right|2}}</poem>}}<noinclude></noinclude> biif3z6ni9aqjx1qjovozoozucls12j பக்கம்:கனிச்சாறு 4.pdf/206 250 447000 1838541 1444509 2025-07-03T08:23:31Z Fathima Shaila 6101 1838541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 171}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>கருக்கொளும் கற்பனை உலகினிற் புகுந்து காதலுங் கன்னியும் பாடிட விழைந்தாய்! திருக்கொளும் காட்சியை நினைவுப் பசிக்கே தீனியாய் எண்ணிநின் தூவலை எடுத்தாய்! உருக்கொளும் மாந்தரிற் பற்பல கோடி உணவும் உடைகளும் கூரையும் இன்றித் தெருக்களிற் புரளும் மக்களைப் - பாவல, தேற்றி உயர்த்திடும் பாடலைப் பாடுவாய்! {{float_right|3}} இலக்கணப் புலமையால் மொழிமழை பொழிந்தே இலக்கியம் பாடிட ஏடெடுக் கின்றாய்! துலக்கிய காட்சிகள் ஆயிரங் கோடி தூவல் மையினால் படம்பிடிக் கின்றாய்! புலக்கவின் கொண்டவை அவையெனப் பேசியே புகழ்ந்துரை யாடிடப் போற்றிடச் செய்வாய்! கலக்குறும் வறுமை மாந்தரைப்-பாவல, கவின்கொள உயர்த்திடும் பாடலைப் பாடுவாய்! {{float_right|4}} காலமும் வானையும் கதிரையும் நிலவையும் காற்றையும் மலைதரும் ஊற்றையும் கண்டு, கோலமும் காட்சியும் உன்மனக் கூர்மையால் கொண்ட விளக்கமும் பற்பல விண்டாய்! ஞாலமும் நாளையும் நாளையும் பாடி நலிவினும் மெலிவிலும் தப்பிய துண்டா? ஓலமும் நீருமாய் உழல்வரைப்-பாவல, உயர்த்தி மலர்த்திடும் பாடலைப் பாடுவாய்! {{float_right|5}} விண்ணையும் மண்ணையும் உலாவரப் போந்தாய்! வீட்டையும் நாட்டையும் விளைத்திட மறந்தாய்! எண்ணரும் புதுமையால் செயல்பல செய்தாய்! ஏழ்மையை விரட்டிட என்பயன் கண்டாய்? திண்ணருஞ் சொல்லையும் பொருளையும் திணித்துத் தினவுறும் மனத்தினை அமைவுறச் செய்வாய்! உண்ணரும் பசியினால் நலிவரைப்-பாவல, ஊக்கி உயர்த்திடும் பாடலைப் பாடுவாய்! {{float_right|6}} </poem>}} {{Right|{{larger|<b>-1974</b>}}}} <section end="114"/><noinclude></noinclude> h3yd2disga3b9at83irt4nqzzcg9ml8 பக்கம்:கனிச்சாறு 4.pdf/207 250 447001 1838576 1444510 2025-07-03T09:45:56Z Fathima Shaila 6101 1838576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|172 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="115"/> {{larger|<b>{{rh|115||மறந்துவிடாதே!}}</b>}} {{left_margin|3em|<poem>உன்றன் குடும்பம், உன்றன் வாழ்க்கை, உன்றன் நலன்கள், உன்றன் வளங்கள்- என்று மட்டும் நீ ஒதுங்கி இருந்து விடாதே!-நீ இறந்த பின்னும் உலகம் இருக்கும் மறந்து விடாதே! உனக்கு மட்டும் நீ உழைத்தால் உலகம் உன்னை நினைக்குமா? தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த தனியன் வாழ்வை மதிக்குமா? சொந்தம் பேசிச் சொந்தம் வாழ, சொத்து நிலங்கள் மனைகள் சேர்க்க இந்த மட்டும் வாழ்ந்து போக எண்ணி விடாதே!-நீ இருந்து சென்ற கதையை மறக்கப் பண்ணி விடாதே! உனக்கு மட்டும் நீ உழைத்தால் உலகம் உன்னை நினைக்குமா? தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த தனியன் வாழ்வை மதிக்குமா? அன்னை நிலமும் அன்னை மொழியும் அனைத்து மக்களும் வாழ நினைக்கும் உன்னை உலகம் மறப்பதில்லை; ஒதுங்கி விடாதே!-நீ உழைக்கும் உழைப்பில் உலகம் செழிக்கும் பதுங்கி விடாதே! உனக்கு மட்டும் நீ உழைத்தால் உலகம் உன்னை நினைக்குமா? தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த தனியன் வாழ்வை மதிக்குமா?</poem>}} {{Right|{{larger|<b>-1974</b>}}}} <section end="115"/><noinclude></noinclude> krko2apj2rc82nvjotmcm4zdj8hub06 பக்கம்:கனிச்சாறு 4.pdf/208 250 447002 1838577 1444511 2025-07-03T09:46:16Z Fathima Shaila 6101 1838577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 173}}</b></small></noinclude> <section begin="116"/> {{larger|<b>{{rh|116||வறுமை ஒழிந்ததா ? செயலில் காட்டுவோம்!}}</b>}} {{left_margin|3em|<poem>எண்ணருங் கோடிப் புதுமைகள் செய்தார்; இலக்கியம் பற்பல கோடி வரைந்தார்! விண்ணெழுந் தளாவிக் கோள்களை யளந்தார்; வேற்றுல கங்களைக் காணத் துடித்தார்! பண்ணெழுந் திசைத்துத் தாளங்கள் சேரப் பற்பல கலைகளில் ஆடித் திளைத்தார்! மண்ணெழுந் துயிர்த்தே ஏழையாய் மாளும் மாந்தனும் உயர்ந்திட யாதுசெய் தாரே? {{float_right|1}} வானுயர் மாளிகை, கோபுர வாயில், வளாகப் பொழில்மனை, குளிநீர்க் குளங்கள் கானல் அறைகள், கடற்கரைச் சோலை, கண்ணைக் கருத்தை மயக்கிடுங் காட்சி, தேனவிழ் பூங்கா, திரைப்படக் கூத்தெனத் தேடா நலன்கள் ஆயிரஞ்செய்தார்; ஊனிலா உடம்பில் எலும்புகள் தைக்க உலாவிடும் மக்களுக் கென்னசெய் தாரே? {{float_right|2}} முத்தும் பவழமும் யாத்தபொன் னகைகள்; முகத்திலும் கழுத்திலும் நறுமணப் பொடிகள்! புத்தம் புதியவாய்ப் பொலிந்திடும் உடைகள், போய்வரும் ஊர்திகள்-யாவையும் செய்தார்; தொத்தும் குழந்தைகள்-தோலுரு வங்களைத் தூக்கிய தாய்களா கூடுக ளா-வெனச் செத்தும் பிழைத்தும் வாழலும் இன்றிச் சீரழி கின்றவர்க் கேதுசெய் தாரே? {{float_right|3}} சட்டமும் திட்டமும் பற்பல செய்தார்; சாலைகள் சோலைகள் ஆலைகள் செய்தார்! கட்டிய அணைகளால் நீரையும் வளைத்தார்; கழனிகள் ஆயிரம் விளைந்திடச் செய்தார்! கிட்டிய பற்களும் கிடத்திய உடலுமாய்க் கீழ்மைத் தெருவில் குளிரினில் தூங்கி, ஒட்டிய வயிற்றோ டுலாவரு கின்ற உயிர்வாழ் கூடுகள் வாழஎன் செய்தார்? {{float_right|4}}</poem>}}<noinclude></noinclude> ljmtmpy2g0ru08gu4ayle2axqhchq13 பக்கம்:கனிச்சாறு 4.pdf/209 250 447003 1838579 1444513 2025-07-03T09:46:39Z Fathima Shaila 6101 1838579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|174 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>பாலிலும் தேனிலும் பழச்சுளை கலந்து பனிக்குழை யிட்டுப் பசியிலா தருந்திக் காலிலும் கையிலும் மண்படா துலவும் கயமை மாந்தர் கைதொழற் கென்று, மாலையும் சிவனையும் தேரினில் ஏற்றி மத்தளங் கொட்டி விழாப்பல செய்தார்! சேலையும் வேட்டியும் வானமாய் நிற்கும் சில்லறை உயிர்கள் வாழஎன் செய்தார்? {{float_right|5}} திருப்பதி பழனி குருவா யூரெனத் திரைப்பட நடிகரும் நடிகையும் வாங்கும் கருப்பண உண்டியல் கொட்டி யளக்கும் கணக்கிலாக் கோயில்கள் பற்பல வெடுத்தே, உருப்பசி அரம்பையர் மேனகை என்ன உலாவரும் பெண்டிரைக் குலாவிடச் செய்தார்! தெருப்படி யோரம் இராப்பகல் வீழ்ந்து தீப்பசி தின்றிடும் அவர்க்கெது செய்தார்? {{float_right|6}} கணக்கிலாக் கட்சியும் தலைவரும் தோன்றிக் காலையும் மாலையும் கூக்குர லிட்டார்! பணக்குவை மாலைகள் பொன்னிழை ஆடை பளபளத் திடவும் உலாப்பல வந்தார்! உணக்கிடுங் கருவா டாய்த்தெரு வோரம் உலர்ந்திடும் வயிறுகள் வாய்களும் காயப் பிணக்குவி யல்போல் புழுதியிற் புரளும் பீற்றல் உடைகளுக் கென்னலம் செய்தார்? {{float_right|7}} பொத்தகங் கோடி எழுதிக் குவித்தோம்; புன்மைக் காட்சிகள் படங்களாய் எடுத்தோம்! மெத்தவும் நாடகம், திரைப்படம், மேடை, மேன்மை வானொலி யாவிலும் “வறுமை செத்தது; வளமை செழித்த” தென் றேபல சிந்துகள் இசைத்தோம்; கதைகளும் வடித்தோம்! கத்தலில் காட்சிகள் மறைவது மில்லை; கைகளால் செய்து காட்டுவோம் வாரீர்! {{float_right|8}}</poem>}} {{Right|{{larger|<b>-1975</b>}}}} <section end="116"/><noinclude></noinclude> rg08ua56wntdj4a71npu4di0btrl7fr பக்கம்:கனிச்சாறு 4.pdf/210 250 447004 1838580 1444515 2025-07-03T09:47:06Z Fathima Shaila 6101 1838580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 175}}</b></small></noinclude> <section begin="117"/> {{larger|<b>{{rh|117||உலகுக்கு உழைப்பவரே, என் உண்மைத் தெய்வம்!}}</b>}} {{left_margin|3em|<poem>ஒருதுணை யின்றி, உறுபொரு ளின்றி, உலகினுக் குழைப்பவர் எவரோ-ஓர் உண்மை வினையினர் எவரோ-அவர் ஊரெது வெனினும், பேரெது வெனினும் உறவினர் அவரே எமக்கு!-அவர் ஒளிதரும் அருங்சுடர் விளக்கு! தனிநலம் இன்றித் தளர்வெதும் இன்றித் தமிழ்மொழிக் குழைப்பவர் எவரோ-அதைத் தாயென மதிப்பவர் எவரோ-அவர் தகுதிஎன் னெனினும் தரம்எது வெனினும் தம்பியும் அண்ணணும் அவரே!-அவர் தங்கிட நான்ஒரு சுவரே! தூக்கமும் இன்றித் துயர்உணர் வின்றித் தொண்டராய் அலைபவர் எவரோ-மனந் துவளா உரத்தினர் எவரோ-அவர் தொடர்பிலர் எனினும் தொலைவினர் எனினும் தோள்களில் சுமந்திட வருவேன்!-அவர் தூங்கவும் என்மடி தருவேன்! மனைவியை மறந்து, மக்களைத் துறந்து, மன்பதைக் குழைப்பவர் எவரோ-தமிழ் மக்களைக் காப்பவர் எவரோ-அவர் மதித்திலர் எனினும் மகிழ்ந்திலர் எனினும் மலர்களை அவர்அடிக் கிடுவேன்!-அவர் மனம்நினைந் திராப்பகல் தொழுவேன்!</poem>}} {{Right|{{larger|<b>-1975</b>}}}} <section end="117"/><noinclude></noinclude> 1mttl8lhlgsnx3m2kalv3d7ldkfggo4 பக்கம்:கனிச்சாறு 4.pdf/211 250 447005 1838581 1444516 2025-07-03T09:47:43Z Fathima Shaila 6101 1838581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|176 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="118"/> {{larger|<b>{{rh|118||உழைப்பை அவமதிக்கும் செயல் !}}</b>}} {{left_margin|3em|<poem>உழைப்பதிகம் காண்கின்ற முன்னேற்ற நாடுகளில் பருவமழை உதவா விட்டால், தழைப்பதிகம் காண்கின்றார் அறிவியலால்! விளைவங்கே முப்பொழுதும் தளிர்க்கச் செய்வார்! பிழைப்பதிகம் இல்லாத வறுமைமிகும் இந்நாட்டில் புனிதமெனும் பெருமை பேசி மழைப்பதிகம் பாடுகின்றார்! மந்திரத்தை ஓதுகின்றார்! உழைப்பைஅவ மதிக்கின் றாரே! குடுமியெலாம் ஒன்றிணைந்து நீர்புகுந்து குளத்தவளை போல்வேதக் கூச்ச லிட்டால், கிடுகிடென மழைபொழியும் எனநினைத்து வான்நோக்கும் முழுமூடக் கீழ்மை யோரே, அடுமழைதான் பொழிந்தாலும் விளைந்தாலும் செல்வர்களால் ஏழையர்க்கிங் காவ தென்ன? ‘படுமின்’என இயற்கையதே நெறிபிறழ்ந்த நும்போக்கை மழைகரந்து பழித்தல் கண்டீர்!</poem>}} {{Right|{{larger|<b>-1975</b>}}}} <section end="118"/><noinclude></noinclude> keth1squ7tlcmhjwxcwkeelhhlc6lh5 பக்கம்:கனிச்சாறு 4.pdf/212 250 447006 1838582 1444517 2025-07-03T09:48:15Z Fathima Shaila 6101 1838582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}177}}</b></small></noinclude> <section begin="119"/> {{larger|<b>{{rh|119||பொதுமை வரட்டும் !}}</b>}} {{left_margin|3em|<poem>ஓங்கட்டும் கைகள்; ஒலிக்கட்டும் வன் முழக்கம்; நீங்கட்டும் அடிமை நிலை, இந்நிலத்திலே! - இனி நிலைக்கட்டும் பொதுவுணர்வு நம் உளத்திலே! நடக்கட்டும் கால்கள்; நடுங்கட்டும் ஆட்சியினர்; வடக்கெட்டும் முழக்கங்கள் வலிமை வரட்டும்!-இனி வரையட்டும் புதுக்கொள்கை; வாழ்க்கை தரட்டும்! கேட்கட்டும் உரிமைஒலி; கிளரட்டும் வல்லுணர்வு; ஏற்கட்டும் சூளுரைகள்; இளைஞர் எழட்டும்! - இனி எழுதட்டும் பொதுவுரிமை; எழுச்சி பெறட்டும்! திரளட்டும் மக்கள்குலம்; தெளியட்டும் கொள்கை நலம்; மிரளட்டும் ஆளவந்தார்; மீட்சி தரட்டும்! - இனி, மேலுமில்லை; கீழுமில்லை; பொதுமை வரட்டும்! </poem>}} {{larger|<b>{{Right|-1979}}</b>}} <section end="119"/><noinclude></noinclude> 0hs0jc0ety23tp6ry43ctd72l0wuse4 பக்கம்:கனிச்சாறு 4.pdf/213 250 447007 1838583 1444523 2025-07-03T09:48:39Z Fathima Shaila 6101 1838583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|178 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="110"/> {{larger|<b>{{rh|120||உலகம்வாழ் தொழிலாளர்<br> ஒன்றுபடும் நன்னாள்!}}</b>}} {{block_center|<poem> {{c|<b>எடுப்பு</b>}} உலகம்வாழ் தொழிலாளர் ::ஒன்றுபடும் நன்னாள்! இலகுபெரு மேநாள்! ::எல்லார்க்கும் பொன்னாள்! {{gap2}}{{float_right|(உலகம் <br>வாழ்)}} {{c|<b>தொடுப்பு</b>}} விலகிற்று வல்லடிமை! ::விளங்கியதே ஒருமை! வெற்றிபெறத் தொடங்கியதே ::உழைப்பாளர் உரிமை! {{gap2}}{{float_right|(உலகம்<br> வாழ்)}} {{c|<b>முடிப்பு</b>}} வெயர்வைக்கடல் பொங்கிற்று! ::வெடித்ததடா புரட்சி! வீழ்ந்ததடா மாய்ந்ததடா ::முதலாளர் திரட்சி! அயர்வென்ப தில்லையினி; ::ஆர்த்தது,மு ழக்கம்! அகன்றபெரும் உலகம்,இனி ::உழைப்பாளர் பக்கம்! {{gap2}}{{float_right|(உலகம்<br> வாழ்)}} பாடுபடும் கைகளெல்லாம் ::இணைந்தன,காண் ஒன்றாய்! பாட்டாளர் உழைப்பெல்லாம் ::விளைந்தன,நெல் குன்றாய்! மேடுபள்ளம் தூர்ந்ததினி! ::வெளுத்ததடா சாயம்! மேலோங்கி வளர்ந்தது காண் ::பொதுமைக்குமு காயம்! {{gap2}}{{float_right|(உலகம்<br> வாழ்)}}</poem>}}<noinclude></noinclude> kd3gubp9rhwtg9vlg9sscd5nw82z321 1838584 1838583 2025-07-03T09:49:31Z Fathima Shaila 6101 1838584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|178 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="120"/> {{larger|<b>{{rh|120||உலகம்வாழ் தொழிலாளர்<br> ஒன்றுபடும் நன்னாள்!}}</b>}} {{block_center|<poem> {{c|<b>எடுப்பு</b>}} உலகம்வாழ் தொழிலாளர் ::ஒன்றுபடும் நன்னாள்! இலகுபெரு மேநாள்! ::எல்லார்க்கும் பொன்னாள்! {{gap2}}{{float_right|(உலகம் <br>வாழ்)}} {{c|<b>தொடுப்பு</b>}} விலகிற்று வல்லடிமை! ::விளங்கியதே ஒருமை! வெற்றிபெறத் தொடங்கியதே ::உழைப்பாளர் உரிமை! {{gap2}}{{float_right|(உலகம்<br> வாழ்)}} {{c|<b>முடிப்பு</b>}} வெயர்வைக்கடல் பொங்கிற்று! ::வெடித்ததடா புரட்சி! வீழ்ந்ததடா மாய்ந்ததடா ::முதலாளர் திரட்சி! அயர்வென்ப தில்லையினி; ::ஆர்த்தது,மு ழக்கம்! அகன்றபெரும் உலகம்,இனி ::உழைப்பாளர் பக்கம்! {{gap2}}{{float_right|(உலகம்<br> வாழ்)}} பாடுபடும் கைகளெல்லாம் ::இணைந்தன,காண் ஒன்றாய்! பாட்டாளர் உழைப்பெல்லாம் ::விளைந்தன,நெல் குன்றாய்! மேடுபள்ளம் தூர்ந்ததினி! ::வெளுத்ததடா சாயம்! மேலோங்கி வளர்ந்தது காண் ::பொதுமைக்குமு காயம்! {{gap2}}{{float_right|(உலகம்<br> வாழ்)}}</poem>}}<noinclude></noinclude> 6ggp1yphbnkh184ajpc0tyn9kgqh6l9 பக்கம்:கனிச்சாறு 4.pdf/214 250 447008 1838585 1444525 2025-07-03T09:55:14Z Fathima Shaila 6101 1838585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 179}}</b></small></noinclude> {{block_center|<poem>அடிமைத்தீ அவிந்ததடா! ::முதலாளர் ஆட்சி அகன்றதடா; எழுந்ததடா ::தொழிலாளர் மாட்சி! குடிமைநலம் சிறந்ததுகாண்! ::உழைப்பாளர் கூட்டம் கூடினகாண்! பாடினகாண்! ::குவிந்ததடா ஈட்டம்! {{gap2}}{{float_right|(உலகம்<br> வாழ்)}} நீல்வானம் செங்கதிரால் ::சிவந்தது,பார் எங்கும்! நிலமெல்லாம் தொழிலாளர் ::புரட்சிஇனிப் பொங்கும்! மேல்கீழாம் வேற்றுமைகள் ::அகன்றன பார்! இன்பமும், மேம்பட்டு வளர்ந்ததடா! ::இல்லையினித் துன்பம்!{{gap}} {{float_right|(உலகம்<br> வாழ்)}}</poem>}} {{Right|{{larger|<b>-1983</b>}}}} <section end="120"/><noinclude></noinclude> 03csrbspibacjz2iiw57uui4cg1s9i9 பக்கம்:கனிச்சாறு 4.pdf/215 250 447009 1838587 1444526 2025-07-03T09:56:01Z Fathima Shaila 6101 1838587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|180 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="121"/> {{larger|<b>{{rh|121||இன்றை உலகம் புரட்சி உலகம்!}}</b>}} {{block_center|<poem>இன்றை உலகம் புரட்சி உலகம்! ::எழுக விடிவை நோக்கியே! குன்றை இடிக்கும் ஆற்றல் மறவர் ::கொள்கைக் கொடியைத் தூக்கியே! இன்றை இளைஞர் புதுமை வீரர்! ::எழுக துயிலை நீக்கியே! ஒன்றை நினைக, உரிமை வெல்க, ::உணர்வை நெஞ்சில் தேக்கியே! நீண்ட நெடிய அடிமைத் தன்மை ::நிலவும் நிலையைப் போக்கவே, மூண்ட உரிமைக் கனலை உணர்க! ::முனைக, விளைவை ஊக்கவே! வாட்டும் வறுமை, ஆட்சிக் கொடுமை, ::வாழ்க்கை நலிவில் நடப்பதோ? கேட்டும் பார்த்தும் கிளர்ச்சி யின்றிக் ::கீழ்மை யுற்றுக் கிடப்பதோ? பொங்கும் வளமை! பொலிக பொதுமை! ::பூக்கும் உரிமை விரைவிலே! எங்கும் புதுமை! எவரும் சமன்மை! ::எதுவும் இல்லை மறைவிலே!</poem>}} {{Right|{{larger|<b>-1984</b>}}}} <section end="121"/><noinclude></noinclude> h0msancjm318oraxv4oyhg77yv0rn0t பக்கம்:கனிச்சாறு 4.pdf/216 250 447010 1838588 1444527 2025-07-03T09:56:42Z Fathima Shaila 6101 1838588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 181}}</b></small></noinclude> <section begin="122"/> {{larger|<b>{{rh|122||மக்களின் வெள்ளம் கடலெனத் திரள்கவே !}}</b>}} {{left_margin|3em|<poem>பொய்யர்கள் புளுகர்கள் பொல்லாக் கயவர்கள் பொழுதெலாம் தந்நலம் கருதும் பேயர்கள் மெய்யர்கள் போலவே உலாவரு கின்றனர்; மேலுக் குழைப்பதாய் உரையளக் கின்றனர்! வெய்ய உழைப்பினில் மேனித் தசைகளை விளர்ந்துள நாடி நரம்புமண் டிலங்களை நெய்யாய் உருக்கி உழைக்கும் மக்களோ நித்தமும் செத்துப் புதைகின்றார் நாட்டிலே! பிழைக்கவும் வழியிலை; பேசவும் பொழுதிலை! பின்னும் இருப்பதால் யார்க்கும் பயனிலை! உழைக்கும் மக்களும் உழவரும் தொழிலரும் ஒன்றிணைந் தெழுந்திடில் உண்மை சாகுமோ? அழைக்கும் விடுதலை ஆர்ப்பரிப் பெழுந்தது! அனைவரும் ஒன்றெனும் நாளும் கிளர்ந்தது! மழைக்கும் வெயிற்கும் மலைத்தது போதும்! மக்களின் வெள்ளம் கடலெனத் திரள்கவே! </poem>}} {{Right|{{larger|<b>-1985</b>}}}} <section end="122"/><noinclude></noinclude> bgfskf9za17efhfy4d32shfnzs2ik2x பக்கம்:கனிச்சாறு 4.pdf/217 250 447011 1838590 1444530 2025-07-03T09:57:49Z Fathima Shaila 6101 1838590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|182 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="123"/> {{larger|<b>{{rh|123||படித்தவர் யாருக்கும் வெட்கமில்லை!}}</b>}} {{block_center|<poem>ஓங்கிய செல்வரின் குழந்தைகள் ஒருபுறம் ஓடுவர் ஆடுவர் பந்தடித்தே! தேங்கிய வறுமையால் ஏழையர் குழந்தைதாம் தேடுவர் வாடுவர் திரிந்தலைந்தே! இலங்கு பறவைகள் எழில்சேர் மலர்களுள் ஏழைகள் உண்டோ இயம்பிடுவீர்! விலங்குகள் வாழ்வில் விண்ணுயர் மரங்களில் செல்வரும் உண்டோ விளக்கிடுவீர்! அறிவுடை இனமென அளக்கிறோம் பெரிதாய்! ஐயகோ, இங்குதான் அவலநிலை! வறியவர் ஒருபுறம்! வளமையர் ஒருபுறம்! வாழ்க்கையோ பலருக்கு வெறுமைநிலை! அரசியல் என்கிறோம்! பொருளியல் என்கிறோம்! ஆருக்கு வேண்டுமிங்(கு) அவையெல்லாம்! </poem>}}<noinclude></noinclude> l92foz0s9pejbirgaqyjnxagi1u18g8 பக்கம்:கனிச்சாறு 4.pdf/218 250 447012 1838591 1444531 2025-07-03T09:58:19Z Fathima Shaila 6101 1838591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 183}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>உரைகள் பெருகின! உழைப்புகள் பெருகின! ஊரைச் சுரண்டுவோர் பெருகினரே! கல்விகள் கற்கிறோம்! கலைகள் பயில்கிறோம்! கவலைகள் தீர்ந்திடக் காணவில்லை! செல்வங்கள் குவிந்தன! சிறப்புகள் வளர்ந்தன! சிறுமைகள் தொலைந்திட வழியுமில்லை! பாட்டாளி தாழ்கிறான்! பணக்காரன் வாழ்கிறான்! படித்தவர் யாருக்கும் வெட்கமில்லை! ஏட்டிலே எழுதுவோர் எழுந்து போராடினால் இருநிலை மாய்ந்திடும் ஐயமில்லை</poem>}} {{Right|{{larger|<b>-1986</b>}}}} <section end="123"/><noinclude></noinclude> gswpz700omad06yh3toaxhzaxdd79yu பக்கம்:கனிச்சாறு 4.pdf/219 250 447013 1838592 1444533 2025-07-03T09:59:00Z Fathima Shaila 6101 1838592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|184 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="124"/> {{larger|<b>{{rh|124||புரட்சி செய் தம்பி, கனல்போல!}}</b>}} {{block_center|<poem> மின்னலாய் மின்னு! ::இடியாக இடி! ::மேலேறு தம்பி மேலேறு! இன்னலாய் வாழும் ::ஏழையர்க் கெல்லாம் ::எப்போது விடிவது? வழிகூறு! புயலாகச் சீறு! ::பொழுதாகக் காய்ச்சு! ::புரட்சி செய் தம்பி, கனல்போல! வயலாக விளைந்தாலும் ::வாய்க்காது, உழவர்க்கு! ::வழிபறிப் பாரைத் தீய், அனல்போல!</poem>}} {{Right|{{larger|<b>-1986</b>}}}} {{larger|<b>{{rh|125||இயற்கை அன்னையின் ஈகை !}}</b>}} {{block_center|<poem>அன்னை இயற்கை ::அளப்பரும் ஆற்றலை உன்னுள் தந்து, நல் ::உடலையும் தந்தே, நீ, உல வுதற்கொரு ::நிலமும் தந்து, ஈவும், இரக்கமும், ::இனியஅன் புணர்வும், உள்ளத்து விதைத்தே ::உணரவும் விளங்கவும் ஒள்ளிய அறிவையும் ::உனக்குத் தந்தது! அரிய பொருள்களை ::ஆக்கம் கருதி உரிய முறைகளில் ::ஊக்குவிக் காமல்,</poem>}}<noinclude></noinclude> agvhxf964telp2f0ekvbzbifwuoket9 1838593 1838592 2025-07-03T09:59:48Z Fathima Shaila 6101 1838593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|184 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="124"/> {{larger|<b>{{rh|124||புரட்சி செய் தம்பி, கனல்போல!}}</b>}} {{block_center|<poem> மின்னலாய் மின்னு! ::இடியாக இடி! ::மேலேறு தம்பி மேலேறு! இன்னலாய் வாழும் ::ஏழையர்க் கெல்லாம் ::எப்போது விடிவது? வழிகூறு! புயலாகச் சீறு! ::பொழுதாகக் காய்ச்சு! ::புரட்சி செய் தம்பி, கனல்போல! வயலாக விளைந்தாலும் ::வாய்க்காது, உழவர்க்கு! ::வழிபறிப் பாரைத் தீய், அனல்போல!</poem>}} {{Right|{{larger|<b>-1986</b>}}}} <section end="124"/> <section begin="125"/> {{larger|<b>{{rh|125||இயற்கை அன்னையின் ஈகை !}}</b>}} {{block_center|<poem>அன்னை இயற்கை ::அளப்பரும் ஆற்றலை உன்னுள் தந்து, நல் ::உடலையும் தந்தே, நீ, உல வுதற்கொரு ::நிலமும் தந்து, ஈவும், இரக்கமும், ::இனியஅன் புணர்வும், உள்ளத்து விதைத்தே ::உணரவும் விளங்கவும் ஒள்ளிய அறிவையும் ::உனக்குத் தந்தது! அரிய பொருள்களை ::ஆக்கம் கருதி உரிய முறைகளில் ::ஊக்குவிக் காமல்,</poem>}}<noinclude></noinclude> o3ejfuue4vmai6huzlrdknayokrvog9 பக்கம்:கனிச்சாறு 4.pdf/220 250 447014 1838594 1444535 2025-07-03T10:00:27Z Fathima Shaila 6101 1838594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 185}}</b></small></noinclude> {{block_center|<poem>கோணலாய் மாணலாய்க் ::குப்பையில் இடல்போல் வீணாய்ப் பண்ணியே ::வீழ்வதும் சரியோ? எண்ணிப் பார்ப்பாய்! ::எண்ணிப் பார்ப்பாய்! மண்ணில் நிலைபெற ::எண்ணிப் பார்ப்பாய்!</poem>}} {{Right|{{larger|<b>-1987</b>}}}} <section end="125"/> <section begin="126"/> {{larger|<b>126 {{gap+|11}} ஆடுக ஊஞ்சல்!</b>}} {{block_center|<poem>வானவெளிப் பரப்பினிலே வளையவரும் உலகம்! வளையவரும் உலகத்தில் வாழ்ந்திருக்கும் உயிர்கள்! வாழ்ந்திருக்கும் உயிர்களிலே வளர்ந்த உயிர் மக்கள்! வளர்ந்த உயிர் மக்களிலே வந்து பிறந் தோம், நாம்!</poem>}} {{left_margin|3em|<poem>வந்துயிர்த்த பெருமையெண்ணி ஆடுக ஊஞ்சல்! வானவெளிக் காற்றினிலே ஆடுக ஊஞ்சல்!</poem>}} {{block_center|<poem>பேரறிவின் உயிர்க்குலத்தில் பிறந்துவிட்டோம் நாமும்! பிறந்துவிட்ட பெருமையொன்றே பேசிடப் போ தாது! பேசிடத்தான் வேண்டுமெனில் பெரும் புகழும் வேண்டும்! பெரும் புகழைப் பெறுவதென்னில் பெருஞ்செயலும் செய்வோம்!</poem>}} {{left_margin|3em|<poem>பெருஞ்செயலைச் செய்யவெண்ணி ஆடுக ஊஞ்சல்! பேரண்ட வீதியிலே ஆடுக ஊஞ்சல்!</poem>}} {{Right|{{larger|<b>-1987</b>}}}} <section end="126"/><noinclude></noinclude> 1yuvofyxl102gv7el3g8lmgsz77fwks பக்கம்:கனிச்சாறு 4.pdf/221 250 447015 1838595 1444536 2025-07-03T10:00:45Z Fathima Shaila 6101 1838595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|186 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="127"/> {{larger|<b>{{rh|127||அறம், பொருள், இன்பம் !}}</b>}} {{left_margin|3em|<poem>ஒவ்வொரு நொடியும் ::உன்னையே, நம்பு! ஒவ்வோர் அடியும் ::உறுதியாய் எடுத்துவை! எவ்வோர் அசைவும், ::எண்ணியே இயங்கு! செவ்வையாய் எண்ணினால் ::செயல்கள் செவ்வையாம்! வயிற்றுத் தசையினை ::வளர்த்திடும் நோக்கில் பயிற்றிக் கொள்வது ::பழிப்புறும் வாழ்க்கை! முயற்றி உன்றன் ::முழுத்திறம் காட்டி வியற்றகு மாறு ::விளங்குக தம்பி! அரசுப் பதவியை ::அண்டிப் பிழைத்திட உரசித் திரிந்தே ::உதவிகேட் காதே! முரசதிர் வதுபோல் ::அறிவினை முழக்கு! சரசர வென்றே ::சடுதிமுன் னேறுவாய்! உடலும் அறிவும் ::உள்ளமும் என்றும் திடமுடன் ஒளிபெற ::தேர்ந்த பயிற்சிசெய்! கெடவிடில் உடன்அவை ::கீழ்மையை நாடும்! மடமையே மேல், அவை, ::மாண்புஇழத் தற்கே! </poem>}}<noinclude></noinclude> 47631iix3jxahbfuy6rrg0hxhbr95vy பக்கம்:கனிச்சாறு 4.pdf/222 250 447016 1838596 1444537 2025-07-03T10:01:24Z Fathima Shaila 6101 1838596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 187}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>நோயினால் உடல்கெடும்; ::நூலிலா(து) அறி(வு) அழிம்! வாயினால் உளம்கெடும்! ::வாழ்க்கையே அவைதாம்! ஏயுநல் இன்பமும் ::எதிர்வரும் பொருளும் ஆயுநல் அறமும் ::அவையெனப் போற்றுவோம்! </poem>}} {{Right|{{larger|<b>-1987</b>}}}} <section end="127"/> <section begin="128"/> {{larger|<b>{{rh|128||ஊர் மக்கள் நலன் கருது !}}</b>}} {{left_margin|3em|<poem> ஊர்மக்கள் நலன் கருதி ::உண்மைக்குத் துணை நின்று, நேர்மைக்குக் குரல்கொடுப்பாய், தம்பி -பொது ::நிகழ்ச்சிக்குத் தோள்தருவாய், தம்பி! எந்தவொரு தீச்செயலும் ::எவர்செய்த போதினிலும் முந்திநின்று நீ, கடிவாய், தம்பி! -மக்கள் ::முன்னேற்றம் கருதிடுவாய், தம்பி! எதுநடந்த நிலையினிலும் ::எனக்கென்ன என்றிராமல், அதன்நன்மை, தீமையினை நன்றாய் -நீ ::ஆய்ந்தறிந்து கூறிடுவாய், தம்பி! அரசினரே செய்திடினும், ::அதிகாரி உதவிடினும், தரமிலதைத் தவறுகளைத் தம்பி - நீ ::தட்டிக்கேட்கப் பழகிடுவாய்த் தம்பி! பொதுநன்மைக் குழைக்கையிலே ::புதுக்கருத்தை உரைக்கையிலே, புதிய இடர், துன்பம் வந்தால், தம்பி -அவை ::புன்மையென ஒதுக்கிடுவாய், தம்பி.</poem>}} {{Right|{{larger|<b>-1987</b>}}}} <section end="128"/><noinclude></noinclude> qxod8wgaa52871vi8dieye9mvpix4jj பக்கம்:கனிச்சாறு 4.pdf/223 250 447017 1838597 1444538 2025-07-03T10:01:50Z Fathima Shaila 6101 1838597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|188 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="129"/> {{larger|<b>{{rh|129||கண்ணீர் வாழ்வில்<br>கரையும் குழந்தைகள் !}}</b>}} {{left_margin|3em|<poem>பெண்ணாய்ப் பிறந்தால், குழந்தை முதலே, பெருஞ்சுமை தாங்கிட வேண்டுமோ? புண்ணாய் உடம்பும் உள்ளமும் புழுங்கப் புழுவாய் நெளிந்திடல் ஞாயமோ? மண்ணாய்ப் போகும் பிறவியுள் பெண்ணே மற்றவர்க் கென்றே வாழ்பவள்! கண்ணாய்க் கருத்தாய்க் காப்பதற் கென்றே காதலில் தாய்மையில் ஆழ்பவள்! பெண்ணிலும் ஏழைப் பிறவியாய்ப் பிறந்தால் பிறந்தது முதலே துன்பந்தான்! எண்ணிலாப் பெண்கள் இந்திய நாட்டில் ஏழையர் எனவே துயரந்தான்! கண்ணீர் வாழ்வில் கரைந்து போவதே கணக்கிலாக் குழந்தைகள் வாழ்வாகும்! உண்ணீர் இன்றி உடுக்கையும் இன்றி உழல்கிறார்! அதுமிகத் தாழ்வாகும்! </poem>}} {{Right|{{larger|<b>-1988</b>}}}} <section end="129"/><noinclude></noinclude> sznmdqh236ocp73moco3rzoq3j49pli பக்கம்:கனிச்சாறு 4.pdf/224 250 447018 1838598 1444539 2025-07-03T10:02:25Z Fathima Shaila 6101 1838598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 189}}</b></small></noinclude> <section begin="130"/> {{larger|<b>{{rh|130||சுற்றுச்சூழலை வெற்றி கொள்வாய் !}}</b>}} {{left_margin|3em|<poem>சுற்றுச் சூழலை வெற்றி கொள்பவர் ::சிந்தனை மிக்கவர்; துணிந்தவர்! -தம் வெற்றுணர் வாலே அதற்கே அஞ்சுவார் ::வெற்றியை அடையார்; பணிந்தவர்! ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகையால் ::உலகின் இயற்கை இருப்பதில்லை! -அது வெவ்வே றாகப் பொதுவென அமையும்! ::வேடிக்கை காட்டும்; வெறுப்பதில்லை! நமக்கோர் உணர்வும் நமக்கோர் அறிவும் ::நாட்டமும் இருக்கும்! மயங்காதே! - அதில் உமக்கெது விருப்பம் உமக்கென்ன போக்கென்(று) ::உற்றுணர்ந்(து) இயங்குவாய்! தயங்காதே! அனைவர்க்கும் ஆனவை அனைத்தும் உள்ளன! ::அவரவர் தேவையே உருவாக்கம்! -நம் வினைத்திறம் மனத்திறம் சூழ்வுத் திறங்களால் ::விளைவித் திடுவதே அறிவூக்கம்!</poem>}} {{Right|{{larger|<b>-1988</b>}}}} <section end="130"/> <section begin="131"/> {{larger|<b>{{rh|131||பொருளை விரும்பிப் புன்மை செய்யாதே!}}</b>}} {{left_margin|3em|<poem>நடைமுறை உலகம் எவ்வா றிருப்பினும் ::நல்லன வற் கடைப்பிடி. முடைநாற் றத்தை எவருமே விரும்பார்! ::முல்லையை விரும்பார் எவரே? பொய்யும் பொறாமையும் நெஞ்சைநஞ் சாக்கும்! ::புன்மையை உளத்தினில் வளர்க்கும்! மெய்யும் அன்புமே உளத்தைமேம் படுத்தும்! ::மேன்மைக் குணங்களை விதைக்கும்!</poem>}}<noinclude></noinclude> 8fetkqdy72fguuld35zze3o2m1esixq பக்கம்:கனிச்சாறு 4.pdf/225 250 447019 1838599 1444540 2025-07-03T10:03:04Z Fathima Shaila 6101 1838599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|190 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>நல்லவை என்றும் நலத்தையே கொடுக்கும்! ::நன்மையே அவற்றால் விளையும்! அல்லவை என்றும் துன்பமே அளிக்கும்! ::அழிவையும் இழிவையும் சேர்க்கும்! பொருளினை விரும்பிப் புன்மைசெய் யாதே! ::பொய்தரும் பொருள் பொய் யாகும்! இருளினை விரும்பி ஒளி வெறுப் பாரோ? ::என்றுமே மெய்ம்மையே மெய்யாம்! {{Right|{{larger|<b>-1988</b>}}}}</poem>}} {{dhr|10em}} <section end="131"/> <section begin="132"/> {{larger|<b>{{rh|132||வாழ்க்கைக் கூறுகள்!}}</b>}} {{left_margin|3em|<poem>பொருளியலால் முன்னேறப் ::பாடுபடல் பிழையன்று; ::பொருளியலே வாழ்க்கை யன்று! இருள்தீர்க்கும் நல்லறிவும் ::எண்ணத்தூய் மைச்செயலும் ::எப்பொழுதும் வாழ்வில் வேண்டும்! மருள்சேர்க்கும் உளந்தவிர்த்து ::மடிசேர்க்கும் வளம்ஒதுக்கி ::மாளாத உழைப்பும் வேண்டும்! அருள்உளமும் ஒளியறிவும் ::ஆக்கஞ்சேர் நற்பண்பும் ::அமைந்ததே வாழ்க்கை ஆகும்! </poem>}} {{Right|{{larger|<b>-1989</b>}}}} <section end="132"/><noinclude></noinclude> sqvq6mr672h35lzgk4j37wimytou2pl பக்கம்:கனிச்சாறு 4.pdf/226 250 447020 1838600 1444541 2025-07-03T10:03:42Z Fathima Shaila 6101 1838600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 191}}</b></small></noinclude> <section begin="133"/> {{larger|<b>{{rh|133||பொலிந்திடும் பொதுமையே !}}</b>}} {{left_margin|3em|<poem>சாதியை விட்டொழி; ::சமையத்தைப் புறக்கணி! ஓதி உணர்ந்த ::உணர்வினால் மெய்யுணர்! அனைத்து நிலையினும் ::பிறவி எடுத்துள அனைத்துமாந் தரையும் ::அன்பினால் ஒன்றென! எண்ணும் உணர்வினை ::இனியேனும் வளர்த்து வா! உண்ணலும் உடுத்தலும் ::உறையுளும் பொதுவே! உடைமையைச் சமன்செய்! ::‘உளன்’ எனும் ‘இலன்’ எனும் நடைமுறை நிலைகளை ::நடு நின்று மாற்று! வையம் புதுமைசெய்! ::வருந்தடைகள் உடை! பொய்யைத் தகர்த்தெறி! ::பொலிந்திடும் பொதுமையே!</poem>}} {{Right|{{larger|<b>-1989</b>}}}} <section end="133"/><noinclude></noinclude> hgj3qcx0jxci5aperqdwhyacrr3on2x பக்கம்:கனிச்சாறு 4.pdf/227 250 447021 1838601 1444542 2025-07-03T10:04:13Z Fathima Shaila 6101 1838601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|192 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="134"/> {{larger|<b>{{rh|134||பொதுவுடைமை !}}</b>}} {{left_margin|3em|<poem>ஒற்றுமை என்பதோ ::உளத்தால் இணைவது! ::உடல்கள் திரள்வதோ ஒரு கூட்டம்! வெற்றுரை முழக்கால் ::வேற்றுமை போம் - எனல் ::வேடிக்கைக் கனவு நடப்பதில்லை! அன்புணர் வால்தான் ::அகலும் வேற்றுமை! ::அதுவும் பொருளால் பிளவுபடும்! இன்பமும் துன்பமும் ::மக்களைப் பிரிக்கும்! ::எனவே சமநிலை வலிவுபெறும்! உழைப்பில் லாமல் ::உணவில் லாமல்- ::ஒருவரும் இருத்தல் கூடாது! பிழைப்பெல் லார்க்கும் ::பொதுவென இருந்தால் ::பிழையே எதனிலும் நேராது! அனைவர்க்கும் உழைப்பு; ::அனைவர்க்கும் உணவு; ::அனைவர்க்கும் பொதுவாம் வாழ்வுடைமை! அனைவர்க்கும் ஓய்வு: ::அனைவர்க்கும் மகிழ்வு; ::அவையே மார்க்சியப் பொதுவுடைமை!</poem>}} {{Right|{{larger|<b>-1989</b>}}}} <section end="134"/><noinclude></noinclude> 8whk31v0vk03piwl4tca2bdjnkizzpc பக்கம்:கனிச்சாறு 4.pdf/229 250 447022 1838603 1444546 2025-07-03T10:05:20Z Fathima Shaila 6101 1838603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|194 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="136"/> {{larger|<b>{{rh|136||தம்பி ! உனக்கொரு செய்தி சொல்வேன் !}}</b>}} {{block_center|<poem>தம்பி! உனக்கொரு :செய்தி சொல்வேன் - தமிழ்த் தாயைக் குறித்தொரு :கொள்கை சொல்வேன்! வெம்பி வதங்கியே :வாடுகின்றாள்! -அவள் வீரரை எங்கணும் :தேடுகின்றாள்! {{gap2}}{{gap2}}{{float_right|(1)}} தனக்கென ஆட்சித் :தகுதியில்லை -அவன் தாளைப் பிடித்தார்க்கும் :மீட்சியில்லை! மினுக்கும் கவர்ச்சியும் :மிக்குடைய பல மிடுக்கு மொழிகளால் :சாம்புகின்றாள்! {{gap2}}{{gap2}}{{float_right|(2)}} இந்திக்கும் ஆங்கில :மொழியினுக்கும் -தமிழ் இளைஞர் தருகின்ற :மதிப்பினைப்போல் சிந்திக்கும் ஆற்றலைத் :தாம் மிகுக்கும் -நம்மின் செந்தமிழ்த் தாய்க்குத் :தருவதில்லை! {{gap2}}{{gap2}}{{float_right|(3)}} இந்த நினைவினால் :வாடுகின்றாள்! -உளம் ஏங்கியே நம்துணை :நாடுகின்றாள்! வந்துநம் அணியினில் :சேர்ந்துகொள்வீர் -தமிழ் வாழ்கவே வாழ்கென :ஆர்ந்து செல்வீர்! {{gap2}}{{gap2}}{{float_right|(4)}} </poem>}} {{Right|{{larger|<b>-1990</b>}}}} <section end="136"/><noinclude></noinclude> 0k5twhyojgcn2tjnuv9x4dyxknkevwn பக்கம்:கனிச்சாறு 4.pdf/230 250 447023 1838604 1444548 2025-07-03T10:05:51Z Fathima Shaila 6101 1838604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 195}}</b></small></noinclude> <section begin="137"/> {{larger|<b>{{rh|137||சிந்தித்துப் பார்ப்பீர்களே !}}</b>}} {{left_margin|3em|<poem>சிந்தித்துப் பார்ப்பீர்களே!-எதிலும் சிறந்தவற்றை ஏற்பீர்களே!-நன்றாய்ச் சிந்தித்துப் பார்ப்பீர்களே!</poem>}} <poem>முந்திச்செய் தார்என்ப தாலோ-ஒன்றை மூத்தோர்எல் லாரும்செய் தார்என்ப தாலோ, வந்திட்ட பழக்கமிது வென்றோ- எங்கள் வழிவழி வழக்கமிது வென்றோ எண் ணாமல் {{float_right|(சிந்தித்துப்)}} பழைமையிது பெருமையிது வென்றோ-எங்கள் பாட்டனார் சொன்னதிது செய்ததிது வென்றோ பிழையான கருத்துகளை எல்லாம்-எண்ணிப் பாராமல் ஓராமல் செய்வதற்கு முன்னம் {{float_right|(சிந்தித்துப்)}} புதுமையிது கவர்ச்சியிது வென்றோ-மேற்குப் புறநாட்டார் கீழ்நாட்டார் புகழ்ந்ததிது வென்றோ கதுமெனவே உணர்வுகொள் ளாமல்-முழுக் கவனமாய் அமைதியாய் அறிவுடனே எதையும் {{float_right|(சிந்தித்துப்)}}</poem> {{Right|{{larger|<b>-1990</b>}}}} <section end="137"/> <section begin="138"/> {{larger|<b>{{rh|138||எல்லா நிலையிலும் உயர்வடை !}}</b>}} {{left_margin|3em|<poem>ஆரவார அரசியல் நிலைகள்; ::ஆடம்பரப் போலிமை வாழ்க்கை; ஈரமிலாத மக்கள் மனநிலை; :எடுத்தெறிந்து பேசும் பேச்சுகள்; பொய்,புரட் டான வாணிகம்; ::பூசல்கள் நிறைந்த உறவுகள்; கையூட்டுக் கல்வி! ஆட்சிகள்; ::கயமை நிறைந்த கலைகள்;</poem>}}<noinclude></noinclude> onnhj386dnunxadcnrt6arhjsek4nmc பக்கம்:கனிச்சாறு 4.pdf/231 250 447024 1838606 1444550 2025-07-03T10:06:34Z Fathima Shaila 6101 1838606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|196 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{block_center|<poem>இவைதாம் இன்றைய உலகம்! ::இருப்பினும் சோர்வடை யாதே! எவை உயர் வானவை எண்ணிவா! ::எல்லா நிலையிலும் உயர்வடை! கரடுமுரு டான மலையிலும் ::காவளம் கனிவளம் காணலாம்! திருடரும் மாந்தரே! என்னினும் ::மாந்தர் அனைவரும் திருடரா?</poem>}} {{Right|{{larger|<b>-1990</b>}}}} <section end="138"/> <section begin="139"/> {{larger|<b>{{rh|139||மடிவதோ இன்னமும்?<br> உரிமை முழக்கடா!}}</b>}} {{left_margin|3em|<poem>அறிவுறு நலன்களும் தேவை யில்லை-தம்பி :அன்பதும் தேவை யில்லை! செறிவுறு பண்புகள் தேவை யில்லை-நல்ல :சிந்தனை தேவை யில்லை! நறுவுணர் வெல்லாமும் அடிமைப் படிகளே!-நாளும் :நாளுமே உனைக்கீழ் இறக்கும்! பெறுவது தமிழருக்(கு) உரிமை ஒன்றே!-அதைப் :பெறும் போதே அவைதாமும் சிறக்கும்! அடிமைக்கோ அறிவென்ப தெதிரிக்கு ஆக்கம்-தம்பி :அன்பாக நடப்பதும் தேக்கம்! மிடிமையர்க் கெதற்குப்பண் பாடுகள் எல்லாம்?-தம்பி :மேலும் மேலும் அவை தாக்கம்! விடிவதற் குள்ளே, நீ எழுந்திடல் வேண்டும்!-தம்பி :விடியலுன் துயரினைப் போக்கும்! மடிவதோ இன்னமும்? உரிமை முழக்கடா!-இனி :வருங்காலம் உனதுதான் நோக்கம்!</poem>}} {{Right|{{larger|<b>-1991</b>}}}} <section end="139"/><noinclude></noinclude> gfvbc7kdkx4flr7zxsed3qv0zh0zddt பக்கம்:கனிச்சாறு 4.pdf/232 250 447025 1838609 1444551 2025-07-03T10:07:17Z Fathima Shaila 6101 1838609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 197}}</b></small></noinclude> <section begin="140"/> {{larger|<b>{{rh|140||விண்வரை புகழ்கொள் !}}</b>}} {{left_margin|3em|<poem>நீ, விரும் பாமல், உன் ::பிறவி நிகழ்ந்தது! நீ, விரும் பாமல், உன் ::இறுதியும் நிகழும்! இடையில் உன் வாழ்க்கை! ::எவரும் மதிக்கவும், கடைசி வரை உனைக் ::கருதவும் நிலை பெறு! வியன் பிறர் கொள்ளவும் ::விரும்பவும் நடந்து கொள்! பயனுடை வாழ்வாய்ப் ::பண்ணிக் கொள்க, நீ! உனக்கு வாழ் வதினும் ::உலகுக்கு நீ, வாழ்! மனக்குறை வின்றி ::மக்கட்குத் தொண்டு செய்! உன் அறிவு பெரியது! ::உள்ளமும் இனியது! வன்மையது உடலும்! ::அவற்றை வாழ வை! காண்பவை அனைத்தும் ::கனவென்று நீ, நினை! வீண்பகை யின்றி ::வெறுப்பின்றி நீ, இரு! உன் மொழிக்கு நீ, உழை! ::உழை, உன் இனத்துக்கு! தின்பதும் உடுப்பதும் ::திரிவதும் வாழ்வு இலை! தலைவனாய் நீ வளர்! ::தறுதலை ஆகாதே! விலையிலை உனக்கு! ::விண்வரை புகழ்கொள்!</poem>}} {{Right|{{larger|<b>-1991</b>}}}} <section end="140"/><noinclude></noinclude> llvn1ahw590kmvatxnlivhtf35omitn பக்கம்:கனிச்சாறு 4.pdf/233 250 447026 1838610 1444552 2025-07-03T10:07:40Z Fathima Shaila 6101 1838610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|198 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="141"/> {{larger|<b>{{rh|141||எவற்றினிலும் நேற்றைவிட<br>இன்றுயர்தல் வாழ்க்கை !}}</b>}} {{left_margin|3em|<poem>ஓடுநடை, பரபரப்பு, ::ஓலங்கள், இரைச்சல், தேடுபொருள் நோக்கம்-என்றே ::திரிந்தலைதல் வாழ்வா? அன்புசெய்தல், அறிவுபெறல், ::ஆழ்ந்து அகலக் கற்றல், தின்பதிலும் முறை ஒழுகல், ::தெளிவுபெறல்-வாழ்க்கை! எண்ணியெண்ணிச் செயப்பழகல், ::இயற்கையிலே தோய்தல், பண்ணுவதில் செப்பநுட்பம் ::பயன்கருதல்-வாழ்க்கை! பெற்றநலம் பிறர்க்காக்கல், ::பிறர்நலத்துக் குழைத்தல், கற்றவற்றை மற்றவர்க்கும் ::கனிந்துதரல்-வாழ்க்கை! தவற்றினிலும் திருத்தமுறல், ::தாழ்ச்சியின்றி நிற்றல், எவற்றினிலும் நேற்றைவிட ::இன்றுயர்தல்-வாழ்க்கை!</poem>}} {{Right|{{larger|<b>-1992</b>}}}} <section end="141"/><noinclude></noinclude> 5uscmhplns2rfvoazfxluq93bvdtarc பக்கம்:கனிச்சாறு 4.pdf/234 250 447027 1838611 1444553 2025-07-03T10:08:04Z Fathima Shaila 6101 1838611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 199}}</b></small></noinclude> <section begin="142"/> {{larger|<b>{{rh|142||நிலை என நிறுத்துவாய் உனை !}}</b>}} {{left_margin|3em|<poem> மதம் ஒரு புறம்உனைப் ::பற்றி யிழுக்கும்; மடமை தரும்! நிதம் உனைச் சாதிப் ::பிறவியும் நின்றே நினைவூட்டும்! பதவிகள் பணங்கள் ::பளிச்சிடும் அரசியல் பழகவரும்! எதெதற்கு நீ, உனை ::இழப்பது? தம்பி,நன்(கு) எண்ணிடுவாய்! கலை,காமக் கனவுகள் ::உன்மனம் கலைக்கும்; கால்இழுக்கும்! வலைகள் அவை! உனை ::வயப்பட வைக்கும்; வாழ்வழிக்கும்! விலைமதிப் பற்றதுன் ::நிலையென நிறுத்துவாய், வாழ்க்கை! விலங்கில்லை; பறவையில்லை! ::உனை! நல் அறிவினால், நெடுந்தொண்டால்!</poem>}} {{Right|{{larger|<b>-1992</b>}}}} <section end="142"/><noinclude></noinclude> tt42gis030dykcnc4wxjsfpahbwnkuv பக்கம்:கனிச்சாறு 4.pdf/235 250 447028 1838612 1444554 2025-07-03T10:08:35Z Fathima Shaila 6101 1838612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|200 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="143"/> {{larger|<b>{{rh|143||நெருப்பு உழைப்பு அல்லவோ<br>சிறப்புகள் நிகழ்த்தும்!}}</b>}} {{left_margin|3em|<poem>இருப்பதில் குறைசொல்ல ::எல்லார்க்கும் தெரியும்! விருப்பமில் லாததை ::வெறுப்பதும் இயல்பே! உருப்படி யாய்எதும் ::உருவாக்கல் கடினம்! நெருப்புழைப் பல்லவோ ::சிறப்புகள் நிகழ்த்தும்! உண்மையும் உறுதியும் ::ஒழுக்கமும் உழைப்பும் திண்மையும் நேர்மையும் ::தெளிவுளமும் அன்றோ அண்மையும் சேய்மையும் ::ஆக்கங்கள் செய்யும்! பெண்மையர் ஆண்மையர் ::பிரிவின்றி செய்க!</poem>}} {{Right|{{larger|<b>-1992</b>}}}} <section end="143"/><noinclude></noinclude> gwd3cf2z7vi183gqi3xfdo7coiofrx1 பக்கம்:கனிச்சாறு 4.pdf/236 250 447029 1838613 1444555 2025-07-03T10:09:29Z Fathima Shaila 6101 1838613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 201}}</b></small></noinclude> <section begin="144"/> {{larger|<b>{{rh|144||தன்னலம் கருதாத தம்பி, நீ !}}</b>}} {{left_margin|3em|<poem>எங்குமே எதிலுமே எவருமே இழிஞராய் ::இருக்கின்றார் எனில், உளம் சோராதே!-எதும் தங்கமாய் இருந்திடில் தனிமதிப் பதற்குண்டோ? ::தனியன், நீ! பிறர் நிலை பாராதே! உண்பதில் உடுப்பதில் உடலின்பம் துய்ப்பதில் ::உலகினர் யாவரும் ஒன்றுதான்!-உன் கண்பொது, வாய்பொது, செவிபொது-எனநலம் ::கருதினால் உனக்கது நன்றுதான்! உன்நலன் பொதுநலன்; உன்நடை புதுநடை; ::உன்பயன் யாவர்க்கும்-என்றுசொல்-ஒரு தன்னலம் கருதாத தம்பி, நீ என்பதே ::தகுதிசேர் உரையென நின்று சொல்!</poem>}} {{Right|{{larger|<b>-1992</b>}}}} <section end="144"/> <section begin="145"/> {{larger|<b>{{rh|145||துணிவு, ஊக்கம், கடமைதாம் நிலைப்பன !}}</b>}} {{left_margin|3em|<poem>பொய்யான செயல்கள், ::புளுகிடும் உரைகள் ::பொருளுக்கே அலைந்திடும் நெஞ்சுகள், மெய்யேதும் இல்லாத ::மேனி மினுக்குகள், ::மேன்மையாம் இவையெனப் பேச்சுகள், வெய்யவாம் கொடுமைகள் ::மேன்மேலும் வளர்ந்தன! ::மேலோட்ட வாழ்க்கையே போதுமாம்! தொய்யவும் வேண்டா; ::துவளவும் வேண்டா; ::துணிவு, ஊக்கம், கடமைதாம் நிலைப்பன!</poem>}} {{Right|{{larger|<b>-1992</b>}}}} <section end="145"/><noinclude></noinclude> i63st7pdap1mgm9sbzdys86dbbppbah பக்கம்:கனிச்சாறு 4.pdf/228 250 447030 1838602 1444544 2025-07-03T10:04:55Z Fathima Shaila 6101 1838602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 193}}</b></small></noinclude> <section begin="135"/> {{larger|<b>{{rh|135||மக்களைச் சமம் – எனச் செய்வோம் !}}</b>}} {{left_margin|3em|<poem>பிறப்பினால் மக்களை நால்வகை வருணமாய்ப் ::பிரிப்பதும், அவர்களை மேலும் சிறப்பிலாப் பலநூறு சாதியாய்ப் பகுப்பதும் ::சிந்தித்துப் பார், தம்பி, இழிவே! உறுப்புகள் எல்லாம் ஒன்றுபோல் உள்ளன! ::உணர்வதும் அறிவதும் பொதுவே! மறுப்பிதற் குண்டோ? வேற்றுமை உண்டோ? ::மக்களைச் சமம்எனச் செய்வோம்! இறையவன் என்றோர் உணர்வினைக் கொண்டே ::எத்தனைப் பிரிவுகள் மதங்கள்! மறைவென்ன தம்பி! மறுப்பென்ன தம்பி! ::மதங்களால் எத்தனைச் சண்டை? நிறைவுற மக்களின் நலன்கள் கருதிடும் ::நிலைதான் அரசியல் என்றால், குறைவறக் கட்சிகள் பற்பல வேண்டுமோ? ::கொள்கையென்(று) ஒன்றுபோ தாதோ? மக்களைச் சுரண்டியே பிழைக்குமோர் கூட்டம்! ::மற்றவர் ஏழைகள் ஆமோ? தக்கவா றெல்லா உடைமையும் பொதுவெனத் ::தகுதிசெய் தால்அது தீதோ? மிக்கவே நலன்களை ஒருவனே நுகர்வதும் ::மிகுதியோர் சாவதும் நன்றோ? ஒக்கவே அனைவரும் உண்பதும் உடுப்பதும் ::உறைவதும் சமம்எனச் செய்வோம்!</poem>}} {{Right|{{larger|<b>-1990</b>}}}} <section end="135"/><noinclude></noinclude> 49g4ipytrvo001unmpoevskgf84lyn7 பக்கம்:கனிச்சாறு 4.pdf/237 250 447031 1838614 1444556 2025-07-03T10:09:59Z Fathima Shaila 6101 1838614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|202 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="146"/> {{larger|<b>{{rh|146||ஊக்கத்தைக் கைவிடாதே!}}</b>}} {{block_center|<poem>குறை சொல்ல ஆயிரம் ::பேர் வருவார் ஒரு ::கோலை நடமாட்டார்!-சென்று மறைவினில் ஆயிரம் ::சொள்ளை சொல்வார்-செய்ய ::மனங் கொண் டிடவும் மாட்டார்! ஆக்கிப் படைப்பதில் ::சுவை தேறுவார் - ஒன்றை ::ஆக்க வரமாட்டார்! - உழைத்துத் தேக்கிய விளைவுக்குக் ::கணக்குக் கேட்பார் பங்கு ::கேட்கவும் கூச மாட்டார்! இவ்வாறு பற்பலர் ::இருந்திடுவார் தம்பி ::எண்ணி வருந்தாதே! - உனக்கு ஒவ்வாத பேர்களை ::ஒதுக்கிச் செய்வாய் - தம்பி ::ஊக்கத்தைக் கைவிடாதே! </poem>}} {{Right|{{larger|<b>-1992</b>}}}} <section end="146"/><noinclude></noinclude> sx9q8vtkyiob1du0letxcpamxuy2hkw பக்கம்:கனிச்சாறு 4.pdf/238 250 447032 1838615 1444561 2025-07-03T10:10:25Z Fathima Shaila 6101 1838615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 203}}</b></small></noinclude> <section begin="147"/> {{larger|<b>{{rh|147||கவர்ச்சிக் கலைகளால் நாடு வீழ்ந்திடும் !}}</b>}} {{left_margin|3em|<poem>கவர்ச்சிக் கலைகளில் ::மனம் மொய்த்துக் கிடக்கும் ::கணக்கிலா இளைஞரைப் ::பார்க்கிறோம்! - உளம் ::வேர்க்கிறோம்! - வெறும் சுவர்ச்சித் திரங்களை ::அடித்தடித் தொட்டுவார் ::சுரண்டல் திரைப்படக் ::காரர்கள் -கொலை -காரர்கள்! பள்ளிக் குழந்தைகள், ::கல்லூரி இளைஞர்கள், ::பாவையர், முதுமையர் ::எவருமே - நெறி ::தவறவே - பகற் கொள்ளை யடி த்திடும் ::கூட்டமே திரைப்படக் ::கொலைஞர்கள், கலைஞர்கள் ::என்பவர்- மூளை தின்பவர்! இளைஞர்கள் இ ளைஞைகள் ::இல்லற மகளிரும் ::எச்சரிக் கையுடன் ::இருக்கவும் அரசை ::நெருக்கவும்! - நல்ல விளைவுகள் இலாவிடில் ::வீழ்ந்திடும் பண்புகள்; ::வீழ்ந்திடும் பெருமைகள்! ::வீழ்ந்திடும் நாடும் ஆழவே!</poem>}} {{Right|{{larger|<b>-1993</b>}}}} <section end="147"/><noinclude></noinclude> jztkkq2vlvzj178agdfnl48ga42aje7 பக்கம்:கனிச்சாறு 4.pdf/239 250 447033 1838616 1444562 2025-07-03T10:10:50Z Fathima Shaila 6101 1838616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|204 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="148"/> {{larger|<b>{{rh|148||வெற்றி எதிர் வருமே !}}</b>}} {{left_margin|3em|<poem>மயக்கு கின்ற கவர்ச்சி கண்டு ::மனம் மயங் காதே! - உலகம் வியக்கும் அரிய செயலைச் செய்ய ::உளம் தயங் காதே! ஊக்கம் தளர்த்தும் ஆசைக் குன்றன் ::உணர்வி ழக்காதே! - மக்கள் ஊக்கம் கொள்ளும் செயலைச் செய்ய ::அறிவி ழக்காதே! தோல்வி கண்டு தூற்றல் கண்டு ::துவண்டு போகாதே! - இடையில் நால்வ கையாய் வரும்து ணைகள்; ::நலிந்து சாகாதே! உண்மை, ஒழுக்கம், ஊக்கம், முயற்சி, ::உறுபயன் தருமே! - மனத்தில் திண்மை வேண்டும்; நேர்மை வேண்டும்; ::வெற்றி எதிர் வருமே! </poem>}} {{Right|{{larger|<b>-1993</b>}}}} <section end="148"/><noinclude></noinclude> 51j8ta9xn3qvrylwi68xjhiw20ayvbz பக்கம்:கனிச்சாறு 4.pdf/241 250 447034 1838618 1444564 2025-07-03T10:11:37Z Fathima Shaila 6101 1838618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|206 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="150"/> {{larger|<b>{{rh|150|| வாழ்வுக்கு நோக்கம் தேவை !}}</b>}} {{left_margin|3em|<poem>‘நோக்கம்’ எனஒன்(று) இல்லாது போனால், :வாழ்க்கை நொய்ந்தே போகும்! - நம் :உள்ளம் நொடிந்தே சாகும்! ஊக்கம் குறையும்: உழைப்பும் சலிக்கும்; :உலகில் எதுவும் புளிக்கும்! - நம் :உறவுகள் பார்த்தே இளிக்கும்! ஆக்கம் குறையும்; அறிவும் மயங்கும்! :அல்லல் படையொடு ஊன்றும்! - பிறர் :அன்பும் கசப்பாய்த் தோன்றும்! தாக்கம் வந்தே உடலை வருத்தும்! :தவிப்பும் நெஞ்சினை இறுக்கும் - நமைத் :தற்கொலை செய்திடச் சறுக்கும்! பணத்தை ஈட்டுதல் நோக்கம் ஆகாது; :பதுக்கவும் பெருக்கவும் தூண்டும்! - பல :பயன்களுக் கதில்வழி வேண்டும்! குணத்தால் சிறப்பதும் வாழ்வில் போதாது; :குடிநலம் பெறல்அதில் இல்லை; பல :கொடுமைகள் எதிர்வரின் தொல்லை! பொதுநல உணர்வே உயர்வான நோக்கம்; :புதுப்புது விளைவுக்கும் ஊக்கம்! - கொடும் :போரிலா உலகுக்கும் ஆக்கம்!. எதுஉயர்(வு) எதுஇழி(வு) என்றெண்ணிச் செய்க! :இனிவரும் மக்கட்குப் புதுமை! - மக்கள் :எல்லார்க்கும் எல்லாமே பொதுமை! </poem>}} {{Right|{{larger|<b>-1994</b>}}}} <section end="150"/><noinclude></noinclude> g0h0gvypy86nzb3u8rjh57ehl2gylng பக்கம்:கனிச்சாறு 4.pdf/242 250 447035 1838619 1444565 2025-07-03T10:12:49Z Fathima Shaila 6101 1838619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 207}}</b></small></noinclude> <section begin="151"/> {{larger|<b>{{rh|151||எண்ணிப் பார்க்க வேண்டும் ! - தம்பி<br>எதற்கும் துணிய வேண்டும் !}}</b>}} {{left_margin|3em|<poem>எண்ணிப் பார்க்க வேண்டும்! - தம்பி ::எதற்கும் துணிய வேண்டும்! பன்னிப் பன்னிச் சொல்லும் - கருத்தின் ::பயனை உணர வேண்டும்! - அதனைப் ::பரப்பும் முயற்சி வேண்டும்! மொழியைப் பேண வேண்டும் - நம்தாய் ::மொழியைப் போற்ற வேண்டும்! வழியைத் தேர வேண்டும் தமிழை ::வாழ வைக்க வேண்டும்! - அதனின் ::வளத்தைப் பெருக்க வேண்டும்! இழிவைப் போக்க வேண்டும் தமிழர்க்(கு) ::ஏற்றம் விளைக்க வேண்டும்! அழிவைத் தடுக்க வேண்டும்! - தமிழர் ::அரசை நிறுவ வேண்டும் - தமிழ் ::ஆட்சி அமைக்க வேண்டும்! பொருளைப் பெருக்க வேண்டும் - இங்கு ::பொதுமை மலர்த்த வேண்டும்! இருளை விரட்ட வேண்டும் அதனை ::எண்ணிச் செய்தல் வேண்டும் - மக்கள் ::எவர்க்கும் வாழ்க்கை வேண்டும்!</poem>}} {{Right|{{larger|<b>-1994</b>}}}} <section end="151"/><noinclude></noinclude> 25mbudtcji8q5clwttzevi510yz5123 பக்கம்:கனிச்சாறு 4.pdf/246 250 447039 1838620 1444626 2025-07-03T10:13:38Z Fathima Shaila 6101 1838620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 211}}</b></small></noinclude> <section begin="152"/> {{larger|<b>{{rh|152||உலகத் தமிழினம்<br>ஒன்றெனத் திரண்டது!}}</b>}} {{left_margin|3em|<poem>உரிமைகள் எழுந்தன! கொள்கைகள் முழங்கின! ஊமைக் கனவுகள் மழுங்கின! - நில வுருண்டையில் வளமைகள் விளைந்தன! நரிமைகள் ஒடுங்கின! நாய்மைகள் நடுங்கின! நம்நிலம் புதுமையால் மலர்ந்தது! - பொது நலமிகும் உயிர்க்குலம் கிளர்ந்தது! எண்ணங்கள் இணைந்தன! எழுச்சிகள் முனைந்தன! ஏழைகள் உழவர்கள் கூடினர்! - பெரும் ஏய்ப்பரை - மேய்ப்பரைச் சாடினர்! பண்ணெலாம் உரிமைகள்! பாட்டெலாம் விடுதலை! பாட்டாளிக் கைகளின் எழுச்சிகள்! - பார் பாராளும் முதலைகள் வீழ்ச்சிகள்! உலகத் தமிழினம் ஒன்றெனத் திரண்டது! உரமிகு கொள்கையை அமைத்தது! - அதற் குயிரெனும் செயல்முறை சமைத்தது! கலகக் கொள்கைகள் கலகலத் துதிர்ந்தன! கவின்மிகு தமிழ்நிலம் மகிழ்ந்தது! - அக் காட்சியில் உலகெலாம் ஒளிர்ந்தது!</poem>}} {{Right|{{larger|<b>-1981</b>}}}} <section end="152"/><noinclude></noinclude> i2duwt41i7unp42pu78ayjeupy7ylu8 பக்கம்:கனிச்சாறு 4.pdf/248 250 447040 1838622 1444629 2025-07-03T10:14:26Z Fathima Shaila 6101 1838622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 213}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>வாருங்கள் கலைஞர்களே! - இழி வழுக்கலும் இழுக்கலும் அழுக்கும் இலாமலே வளர்கலை நாம் சமைப்போம்! - பண்பு வளமைக்குத் துணையிருப்போம்! வாருங்கள் நண்பர்களே! - உங்கள் வாழ்த்தினைக் கூறுங்கள்! வல்லமை தாருங்கள்! வலிய ஓர் இயக்கம் செய்வோம்! - அதன் வளர்ச்சிக்குக் கைகொடுப்போம்! </poem>}} {{Right|{{larger|<b>-1981</b>}}}} {{dhr|5em}} <section end="153"/> <section begin="154"/> {{larger|<b>{{rh|154||இணைபவர்கள் இணையட்டும் !}}</b>}} {{left_margin|3em|<poem>பேசியவர் எல்லாரும் பேசிக்கொண் ::டிருக்கட்டும்; பின்பு றம்போய் ஏசியவர்கள் எல்லாரும் ஏசிக்கொண் ::டிருக்கட்டும்; இறுமாப் பாய்க்கை வீசியவர் எல்லாரும் வீசிக்கொண் ::டிருக்கட்டும்; வினைகள் செய்வோம்! பாசியகன் றிவ்வினத்தின் பளிங்குநீர் ::தெளிவிப்போம்! பங்கேற் பீரே! முகந்திருப்பிக் கொள்பவர்கள் முணுமுணுப்புச் ::செய்யட்டும்; முரண்பா டுற்றே அகந்திருப்பிக் கொள்பவர்கள் அண்ணாந்து ::விம்மட்டும்; அகல்நி லத்தை நுகந்தூக்கித் தோள்வலிக்க உழுதுபயிர் ::விளைத்திடுவோம்! நோகா தங்கே உகந்துண்ண வருவோர்க்கே உவந்தளிப்போம்! ::உழைப்பளிக்க உதவு வீரே!</poem>}}<noinclude></noinclude> qjogqrasthf9viocagsj4gjqimrh6lw பக்கம்:கனிச்சாறு 4.pdf/249 250 447041 1838623 1444630 2025-07-03T10:14:47Z Fathima Shaila 6101 1838623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|214{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>தூங்குபவர் தூங்கட்டும்; துலங்குபவர் ::துலங்கட்டும்; தொளைகள் எண்ணி வீங்குபவர் வீங்கட்டும்; விக்குபவர் ::விக்கட்டும்; விளைவைக் கண்டே ஏங்குபவர் ஏங்கட்டும்; எந்தமிழர் ::நலங்காண இருகை ஏந்தித் தாங்குபவர் தாங்கட்டும்! தயங்க, இனி ::நேரமில்லை; தாவு வீரே! இருப்பவர்கள் இருக்கட்டும்; இணைபவர்கள் ::இணையட்டும்; இன்றும் நேற்றும் தெருப்படியில் அமர்ந்தபடி படிப்படியாய் ::நமையளந்து தேறிப் பார்த்தே, உருப்படியாய் ஒருபடியும் அளக்காதார் ::உட்கார்ந்தே வான்பார்க் கட்டும்! நெருப்படியும் குளப்படியும் நீள்வினையார்க் ::கொருபடியென் றிணைவீர் வந்தே! நெடுங்காலம் உழைத்திட்டோம்! நின்றவரார்? ::படுத்தவரார்? நிலையா வாழ்க்கை? அடுங்காலம் வந்திடுமுன் பெருங்கொள்கை ::சிறுமுயற்சி - ஆற்றல் வேண்டும்! கெடுங்காலம் பற்றியவர் கீழ்நினைப்பர்; ::நாமவரைக் கிளற வேண்டா! நடுங்காத நாவினராய் நலஞ்செய்வோம், ::மொழி, இனத்தை - நாட்டைக் காத்தே!</poem>}} {{larger|<b>{{Right|1981}}</b>}} <section end="154"/><noinclude></noinclude> pyes6rt1g9v3c7c87pwctnp3givd6mx பக்கம்:கனிச்சாறு 4.pdf/250 250 447042 1838624 1444631 2025-07-03T10:15:16Z Fathima Shaila 6101 1838624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 215}}</b></small></noinclude> <section begin="155"/> {{larger|<b>{{rh|155||உலகத் தமிழினம் ஒன்று படுக்கும்<br>கழக முன்னேற்றம் காண்குறுவோமே!}}</b>}} {{left_margin|3em|<poem>அன்னைத் <b>தமிழ்மொழி</b> அழகும் <b>தூய்மையும்</b> முன்னைப் பழம்பெரு மொய்ம்பும் எய்துதல்! உழைப்பவர், அறிஞர், உயர்ந்தோர், தாழ்ந்தோர், இழைத்த சாதிகள், மதங்கள் -எனும் பல தெரிநிலை வேற்றுமைத் தீங்குகள் அற்ற சரிநிகர் என்னும் சமநிலைக் <b>குமுகம்!</b> இழிவும் பூசலும் ஏமாற்றும் இலதாய்ப் பழிவரின் விலகிடும் <b>பண்பமை</b> அரசியல்! இயற்கைப் பொருள்களும் இயற்றல் பொருள்களும் மயற்கை யின்றி, மக்கள் அனைவரும் தேர்தலின் அமைத்த திறவோர் அரசினைச் சார்தலின் அல்லது தனியவர் சாராது, பொதுமை உரிமை, பொதுமை உழைப்பெனும் புதுமை நோக்கிய <b>பொருளியல்</b> கொள்கை! மனமும் அறிவும் வாழ்க்கையும் மாண்புறும் இனநலன் கெடாத இனியநற் <b>கலைகள்!</b> பழந்தமிழ் மரபும் பரந்தநல் லெண்ணமும் இழந்தசீர் ஒழுக்கமும் எங்கணும் பரப்பி மாந்தவியல் சிறக்க மற்றவர் மரபில் ஏய்ந்தவை தழுவும் இனிய<b>பண் பாடு!</b> அறுவகைத் துறையினும் அன்றன்று துலங்கும் <b>அறிவியல்</b> தழுவிய செறிவியல் <b>போக்கு!</b> -என்றிவ் வெழுநிலைக் கொள்கைகள் ஏந்தி அன்றைத் தமிழினம் அனைத்து நாட்டினும் வாழ்முறை தேறி வழங்குநலம் கோரித் தாழ்வுநிலை போக்கித் தக்கநிலை ஊக்கி, உலகத் தமிழினம் ஒன்று படுக்கும் கழக முன்னேற்றம் காண்குறு வோமே!</poem>}} {{Right|{{larger|<b>_1981</b>}}}} <section end="155"/><noinclude></noinclude> inborsgmn89m2ujcq1425p0eg1qab4q பக்கம்:கனிச்சாறு 4.pdf/251 250 447043 1838625 1444634 2025-07-03T10:15:55Z Fathima Shaila 6101 1838625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|216 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="156"/> {{larger|<b>{{rh|156||வந்து பொருந்துக !}}</b>}} {{left_margin|3em|<poem>உண்மையர் நேர்மையர் ஊக்க உழைப்பினர் திண்மையர் ஒழுங்கினர் தீந்தமிழ் நெஞ்சினர் அண்மையர் சேய்மையர் ஆக்கம் கருதுவர் ஒண்மையர் யாவரும் உடன்வந் திணைகவே! தொண்டு கருதிடும் தூய உளத்தினர் மண்டு காதலால் மணித்தமிழ் பேணுநர் விண்டு விளக்கிடும் வீறுகொள் அறிவினர் கண்டு தொடங்கிடும் கழகத் திணைகவே! பொதுமை பேணிடும் பூந்தமிழ் நெஞ்சினர் புதுமை வேண்டிடும் பொய்யறு காட்சியர் முதுமை இளமையர் முரிபடாக் கொள்கையர் இதுமெய் அணியென எண்ணி இணைகவே! வாழ்வழி வையத்து வாழும் நினைவினர் சூழ்வழி சூழ்ந்துளம் சுழிபடா நோக்கினர் பாழ்வழி பலகண்டு பதைக்கும் உயிரினர் வீழ்வழி ஈதென் விரைந்துவந் திணைகவே! துளியொடுந் துளியெனத் தோளொடுந் தோளென ஒளியொடும் ஒளியென உயிர்ப்பொடும் உயிர்ப்பென வளியொடும் வளியென வார்ந்த வலிவென தெளிவொடுந் துணிவொடும் தேர்ந்துவந் திணைகவே! நந்தமிழ் காக்கவும் நம்மினம் மீட்கவும் செந்தமிழ் நாட்டினைச் சீருறப் பேணவும் முந்து தமிழின் முன்னேற்றக் கழகத்து வந்து பொருந்துக! வாய்மையின் உழைக்கவே!</poem>}} {{Right|{{larger|<b>-1981</b>}}}} <section end="156"/><noinclude></noinclude> oow5ss0eiebup5evn6qim2p0sc6fzpw பக்கம்:கனிச்சாறு 4.pdf/252 250 447044 1838627 1444635 2025-07-03T10:18:53Z Fathima Shaila 6101 1838627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 217}}</b></small></noinclude> <section begin="157"/> {{larger|<b>{{rh|157||உலகப் பேரியக்கம் இங்கே உருவாதல் காண்பீர் !}}</b>}} {{left_margin|3em|<poem>உயர்ந்தபணி தொடங்கிடுவோம்! உயிர்முயற்சி செய்வோம்! ::ஒப்பற்ற தமிழினத்தை ஓரணிசெய் துய்வோம்! அயர்ந்தஇனம், தளர்ந்தமனம், அடிமைநிலை நீக்கி, ::ஆக்கவழி நடப்பதெனில் அருஞ்செயலும் அன்றோ! பெயர்ந்தநிலம் யாதெனினும் பெறுநிலையென் னெனினும் ::பெருந்தமிழால் ஒன்றிணைவோம்! பெருமைபெற வாழ்வோம்! மயர்ந்தமனம், தயங்குநிலை, மாசுதவழ் எண்ணம் ::மாய்ந்தொழிந்து போகட்டும்! மறுமலர்ச்சி திண்ணம்! பேரன்பு கொண்டவரே! பெரியோரே! எம்மைப் ::பெற்றதமிழ்த் தாய்மாரே! பெறாதஉடன் பிறப்பீர்! ஈரந்தோய் நெஞ்சினராய் இறைஞ்சுகின்றோம், உம்மை! ::இன்றிணைதல் இல்லையெனில் என்றுமினி இல்லை. சாரம்போய் மணமும்போய்ச் சக்கையராய் நிற்போம்! ::‘சகுனி’குணம் போகவில்லை; சழக்ககல வில்லை! காரம்போய்ப் பயனென்ன? கடைநிலைக்குத் தாழ்ந்தோம்! ::காத்திடுவீர் இனநலத்தைக் காலத்தால் இன்றே! நாளுக்கொரு கட்சியினில் நாம்நழுவி வாழ்ந்தோம்! ::நலன்துளியும் விளையவில்லை; நடுக்கடலில் வீழ்ந்தோம்! ஆளுக்கொரு பாத்திகட்டி அதில்விளைவு செய்தோம்! ::அரைவிளைவு கால்விளைவே! அளந்ததெலாம் சோர்வே! சூளுக்கொரு குறைவில்லை; சுழற்றுகிறோம் பேச்சை! ::சொன்னதென்ன? சொல்வதென்ன? யாரளந்து சொல்வார்? தோளுக்கொரு துணைதேடித் துணைதேடிச் சோர்ந்தோம்! ::தொட்டபணி விட்டபணி! தோல்விகளே எச்சம்! சேரன்பேர் சோழன்பேர் பாண்டியன்பேர் சிலம்பிச் ::செருக்குரையும் நெருப்புரையும் செய்தனதான் என்ன? நேரம்போய் எண்ணுவதில் நீள்பயனும் உண்டோ? ::நெடுங்காலம் கடத்திவிட்டோம்! நிலைத்தவிளை வென்ன? வீரம்பொய், அன்பும்பொய், விருந்தும்பொய், நம்மின் ::வென்றவர லாறும்பொய், விளைவும்பொய் - என்றால் ஓரம்போய் நில்லுங்கள்! ஒதுங்குங்கள்! நாளை ::உலகப்பே ரியக்கமிங்கே உருவாதல் காண்பீர்!</poem>}} {{Right|{{larger|<b>-1981</b>}}}} <section end="157"/><noinclude></noinclude> 9b8bo3rz5rfh9nrs8phfa5k6em6ui6r பக்கம்:கனிச்சாறு 4.pdf/253 250 447045 1838628 1444636 2025-07-03T10:21:16Z Fathima Shaila 6101 1838628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|218 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="158"/> {{larger|<b>{{rh|158||தமிழின ஒன்றிணைப்புப் பாடல்.}}</b>}} {{left_margin|3em|<poem>ஒன்றிணைக! ஒன்றிணைக! உலகத் தமிழினம் ஒன்றிணைக! மன்றிருந்த தமிழ் மனத்தினால் ணைக! மற்றதன் பண்பாடு கலைகளால் இணைக! நின்றறம் பயில்திருக் குறளினால் இணைக! நீண்ட நெடும்புகழ் மரபினால் இணைக! {{float_right|(ஒன்றிணைக!)}} வென்ற தமிழ்மறம் விளங்கிட இணைக! வீறுடன் திகழ்ந்த,அந் நினைவினால் இணைக! சென்றுல கெங்கணும் பரவிவாழ்ந் திடினும் செந்தமிழ் மறவாத நெஞ்சினால் இணைக! {{float_right|(ஒன்றிணைக!)}} இன்றினி திணைக! ஏற்றமோ டிணைக! எண்திசை நாட்டினும் இருப்பவர் இணைக! நன்றென இணைக! நாடிவந் திணைக! நாமினி ஒன்றெனும் நாட்டத்தோ டிணைக! {{float_right|(ஒன்றிணைக!)}}</poem>}} {{Right|{{larger|<b>-1981</b>}}}} <section end="158"/><noinclude></noinclude> 40wspsp46fqebffzvfs1jkwkwnam7zx பக்கம்:கனிச்சாறு 4.pdf/254 250 447046 1838629 1444637 2025-07-03T10:21:46Z Fathima Shaila 6101 1838629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 219}}</b></small></noinclude> <section begin="159"/> {{larger|<b>{{rh|159||அதுதான் எனக்குத் திருநாள்!}}</b>}} {{left_margin|3em|<poem>{{c|<b>(எடுப்பு)</b>}} அதுதான் எனக்குத் திருநாள்! அதுவன்றிப் பிற யாவும் மனம்நோகும் வெறுநாள்! {{Right|(அதுதான்)}} <b>{{c|(தொடுப்பு)}}</b> எதுநாளில் தமிழர்கள் வாழ்வுரிமை கொண்டோராய் எந்தமிழ்த்தேன் மொழிபேணி, இனம்பேணி இருப்பாரோ {{Right|(அதுதான்)}} <b>{{c|(முடிப்பு)}}</b> புதுஆடை நெய்ப்பொங்கல் பண்ணியம் பலகாரம் பூமாலை நறும்படையல் இவற்றிலென்ன சாரம்? சிதையாமல் தமிழ்மானம் இனமானம் பேணும் செழிப்புற்ற மறுமலர்ச்சி இருவிழிகள் காணும் {{Right|(அதுதான்)}} உலகெங்கும் சிதர்ந்தோடி உயிர்நைந்து வாடும் உவப்பில்லா நிலைமாறிச் செந்தமிழர் கூடும் நிலமெங்கள் நிலமென்ற தன்னுரிமை யோடும் நிகழ்த்துகின்ற விழவன்றோ மகிழ்ச்சிப்பண்பாடும் {{Right|(அதுதான்)}} அறவியலைச் சாராத அறிவியல்முன் னேற்றம் ஆருக்குப் பயன்நல்கும்? வெறும் பொய்ம்மைத் தோற்றம்! திறமிலராய்க் கரவுளமும் காரறிவும் கொண்டே தித்திரிப்பாய் வாழும்நிலை ஒழிந்திடுநாள் என்றோ! {{Right|(அதுதான்)}} காதிரைச்சல் தூளிபடும் ஒலிபெருக்கிக் கத்தல், கலைக்கூத்தர் அரித்தெடுக்கும் மனத்தில்விழும் பொத்தல், ஊதிரைச்சல் வண்டியுலா - இவைஇல்லாப் பெருநாள் உளம் அமைதி கொள்ளும்படி வாய்த்திடுமே ஒருநாள்! {{float_right|(அதுதான்)}} </poem>}}<noinclude></noinclude> 35j47sguckrsrq4ysu9280zsrdrles3 பக்கம்:கனிச்சாறு 4.pdf/255 250 447047 1838630 1444639 2025-07-03T10:22:42Z Fathima Shaila 6101 1838630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|220 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>புதைசாணிப் புழுக்களென நெளிகின்ற ஏழை பொய்வாழ்க்கை நீங்கி நலம் மேலேறும் நாளை எதிர்நோக்கிக் கிடக்கின்றேன்; எழுச்சிநிலை வந்தே எல்லாமிங் கெல்லார்க்கும் என்றிடும்நாள் என்றோ! {{Right|(அதுதான்)}}</poem>}} {{Right|{{larger|<b>1982</b>}}}} {{dhr|10em}} <section end="159"/> <section begin="160"/> {{larger|<b>{{rh|160||மன்னிய கொள்கை ஏழும்<br> மலர்க இத் தமிழ்ஞாலத்தே!}}</b>}} {{block_center|<poem>மின்னிய தமிழும், சாதி ::மதமிலா இனமும், வாய்மை முன்னிய அரசும், மக்கள் ::முரண்படா உடைமைப் பேறும், நன்னறு கலையும், பண்பும் ::நல்லறி வியலும் என்றிம் மன்னிய கொள்கை ஏழும் ::மலர்கவித் தமிழ்ஞா லத்தே!</poem>}} {{larger|<b>{{Right|-1982}}</b>}} <section end="160"/><noinclude></noinclude> 53vp58wx1said8hbwe53hlgrwoaezp8 பக்கம்:கனிச்சாறு 4.pdf/256 250 447048 1838631 1444644 2025-07-03T10:23:50Z Fathima Shaila 6101 1838631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Aasathmatheena" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 221}}</b></small></noinclude> <section begin="161"/> {{larger|<b>{{rh|161||கொடி ஏற்றுவோம் ! நிலை மாற்றுவோம் !}}</b>}} {{left_margin|8em|<poem>உலகத் தமிழின முன்னேற்றம் என உரைக்கும் கொடி,இது! - ஏற்றுவோம்! -நம் ஒருமை உணர்வினைப் போற்றுவோம்! வினை ஆற்றுவோம்! நிலை மாற்றுவோம்!</poem>}} {{left_margin|3em|<poem>விலகியே இருந்தோம், வேறுபட்டுத் தயங்கி! வீழ்ச்சிகள் அடைந்தோம் கூறுபட்டுத் தியங்கி! மலைவுகள் கொண்டோம் மாறுபட்டு மயங்கி! மற்றுய்வோம் இனிமேல் ஒன்றுபட்டே இயங்கி! {{float_right|(உலகத்)}} ஆளுக்கோர் கொள்கை! ஆயிரம் போக்குகள்! அடடா,ஓ! நமக்குள் எத்தனைத் தாக்குகள்! வாளுக்குக் கூர்மையாய் வாய்ந்த, நம் நாக்குகள்! வாருங்கள், இனியில்லை வழிமாறும் போக்குகள்! {{float_right|(உலகத்)}} முயற்சிக்கும் புரட்சிக்கும் முழுநிறச் சிவப்பு! முடிவினில் சமமெனும் உள்வட்டம் வெளுப்பு! அயர்ச்சிக்கும் மயற்சிக்கும் இனியில்லை, வேலை! அனைத்துலகத் தமிழினமும் ஒன்றாம்,இந் நாளை! {{float_right|(உலகத்)}} அரசியல் மலர்ச்சிதான் அனைவரின் நோக்கம்! ஆனாலும் தமிழர்க்குள் ஏனிந்த தாக்கம்? உரசிடும் கரவுகள் களவுகள் ஓக்கம்! உருப்பட வேண்டாமா? ஓரின ஆக்கம்? {{float_right|(உலகத்)}} கருத்துகள் விளரலாம், கிளைகளைப் போல! காணுவோம் ஒற்றுமை அடிமரம் போல! பெருத்தஓர் வீழ்ச்சி, பிளவுக ளாலே! பிறப்பிலே ஓரினம் தமிழர்,இந் நாளே! {{float_right|(உலகத்)}} சாதிப் பிளவுகள் இனத்தையே சாய்த்தன! சாய்க்கடை மதங்களும் போட்டியிட் டேய்த்தன! மோதிப் பார்ப்பனப் பூசல்கள் மாய்ந்தன! முழுமையாய் இழக்குமுன் மாற்றங்கள் வாய்த்தன! {{float_right|(உலகத்)}} வாருங்கள், தமிழரே! ஒன்றென ஆர்ப்போம்! வழிவழி யாய்நமை அழித்தவை தூர்ப்போம்! சேருங்கள் ஓரணி! எண்ணங்கள் வார்ப்போம்! சிற்சிறி தேனுமிங் குள்ளொளி சேர்ப்போம்! {{float_right|(உலகத்)}} </poem>}} {{Right|{{larger|<b>-1981</b>}}}} <section end="161"/><noinclude></noinclude> 2obi3qfwxilwsiy34xsffabjchop1b7 பக்கம்:கனிச்சாறு 4.pdf/257 250 447049 1838632 1444646 2025-07-03T10:24:39Z Fathima Shaila 6101 1838632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Aasathmatheena" /><small><b>{{rh| {{gap+|1}} {{gap+|1}} 222 ☐ கனிச்சாறு - நான்காம் தொகுதி ||}}</b></small></noinclude> <section begin="162"/> {{larger|<b>{{rh|162||ஓங்கிப் பெருகுக உ.த.மு.க.!}}</b>}} {{block_center|<poem>உலகத் தமிழின முன் ::னேற்றக் கழகம் இலகத் தரைநெடுகல் ::எங்கும் - அலகற்(று) ஓங்கு கிளைபல்கி ::ஒன்றுபல நூறாகித் தேங்கு நலம்பெருகத் ::தேர்ந்து!</poem>}} {{larger|{{Right|<b>-1982</b>}}}} {{dhr|10em}} <section end="162"/> <section begin="163"/> {{larger|<b>{{rh|163||உ.த.மு.க. உண்மைக் கழகம்!}}</b>}} {{left_margin|3em|<poem>உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் உண்மைக் கழகம் பாருங்கள்! -இதில் உறுப்பினராகச் சேருங்கள்! - அதற்கு உங்கள் துணையைத் தாருங்கள்! - அதன் உழைப்பை எவர்க்கும் கூறுங்கள்! கூறுங்கள்! கூறுங்கள்! நிலவும் சாதி மதங்களை எல்லாம் நில்லா தறவே தொலைப்பது! - அது நின்று விளங்கும் செந்தமிழ் - மொழியை நிலத்தில் எங்கும் விளைப்பது! - அது நேர்மைத் தொண்டில் தழைப்பது! தழைப்பது! தழைப்பது!</poem>}}<noinclude></noinclude> 6tkv82uih1v3g670t3qqcttlgef4u6w பக்கம்:கனிச்சாறு 4.pdf/258 250 447050 1838633 1444647 2025-07-03T10:25:34Z Fathima Shaila 6101 1838633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Aasathmatheena" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 223}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>அரசியல் பூசல் இழிவுக ளெல்லாம் அறவே தவிர்க்க முயல்வது உண்மை அறத்தை என்றும் பயில்வது! - உயர் ஆளுமை நெறியோ டியல்வது! - முறை யற்றவர் சீய்க்கும் புயல்அது! புயல்அது! புயல்அது! கரவாய்க் களவாய் ஏழையைச் சுரண்டும் கயவரை அழிக்கும் வாளாகும்! - அவர் கயமைகள் இதன்முன் தூளாகும்! - ஏழைக் கனவுகட் குரிமைத் தாளாகும்! - அவர் கடமைகட் குழைக்கும் ஆளாகும்! ஆளாகும்! ஆளாகும்! இயற்கை வளங்கள் விளைவுகள் எல்லாம் எவர்க்கும் பொதுமை எனக்கூறும்! - இதற் கெழுதுக சட்டம் எனக்கோரும்! - மக்கட் கெல்லா நலன்களும் மிகச்சேரும்! - எனவே இணைத்துக் கொள்வீர் உடன்வாரும்! உடன்வாரும்! உடன்வாரும்! மயற்கை செய்யும் கழிசடை, காம மலிவுக் கலைகளைக் கட்டழிக்கும்! - அவை மனங்கொள் வாரைச் சுட்டெரிக்கும்! - தமிழ் மானமி லாரை விட்டொழிக்கும்! - இன மலர்ச்சிக் கென்றே நெட்டுயிர்க்கும். நெட்டுயிர்க்கும்! நெட்டுயிர்க்கும்!</poem>}} {{larger|{{Right|<b>-1982</b>}}}} <section end="163"/><noinclude></noinclude> g16hjku4h2klciqvg4ot94vo21235p4 பக்கம்:கனிச்சாறு 4.pdf/259 250 447051 1838638 1444651 2025-07-03T10:35:00Z Fathima Shaila 6101 1838638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Aasathmatheena" /><small><b>{{rh|224 {{gap+|1}} ☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="164"/> {{larger|<b>{{rh|164||உ.த.மு. கழகம் நிலைக்க!}}</b>}} {{left_margin|3em|<poem>தூய்தமிழ் ஓங்குக! ::தொலைக, மதம், சாதி! ஏயும் அரசியல் ::இழிவுகள் அகல்க! பொருந்துக தமிழியப் ::பொதுமைப் பொருளியல்! திருந்துக கலைகள்! ::திகழ்க,பண் பாடு! அறிவியல் நோக்கொடு ::வாழ்க்கை அமைக! நெறியிவை கொண்ட ::கழகம் நிலைக்கவே!</poem>}} {{Right|{{larger|<b><b>-1982</b></b>}}}} {{dhr|5em}} <section end="164"/> <section begin="165"/> {{larger|<b>{{rh|165||தொண்டர்க்கு ஒன்றுரைப்பேன் !}}</b>}} {{left_margin|3em|<poem>தொண்டுசெய்ய முன்வந்த ::தூணவர்க்கிங் கொன்றுரைப்பேன்; ::துவளா நெஞ்சம், மண்டுதுயர் யாவினுக்கும் ::மழுங்கலிலாச் செந்துணிவு, ::மயங்கா உள்ளம், கொண்டகொள்கை தனில்நெகிழ்ச்சி ::கொள்ளாத வன்பிடிப்பு, ::குலையாப் போக்கு, பெண்டுபிள்ளை உறவினர்மேல் ::பெரும்பிடிப்பு வையாமை ::பேணு வீரே!</poem>}}<noinclude></noinclude> 5fhh00ayp6yzz9ay9lnu1i4xc7y6qr6 பக்கம்:கனிச்சாறு 4.pdf/260 250 447052 1838639 1444653 2025-07-03T10:35:20Z Fathima Shaila 6101 1838639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Aasathmatheena" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 225}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>‘ஏற்றநறுந் தலைமைக்கே ::எள்ளளவும் எதிராமை, ::எக்க ருத்தும் போற்றுநிலை உண்டாயின் ::புகழ்ந்தேற்கும் நல்லமனம், ::புகன்ற ஒன்று தோற்றநிலை பெறுமாயின் ::உவந்தேற்கும் பெருந்தன்மை, ::பிறர்க ருத்தில் மாற்றுநிலை உளதாயின் ::மனங்கொள்ள மறுத்துரைக்கும் ::மாண்பும் வேண்டும்! தொடக்கத்தில் விறுவிறுப்பும், ::படிப்படியாய் விளர்விளர்ப்பும், ::தொய்வும் வேண்டா! படக்கத்திப் போராட்டப் ::படபடப்பும் துடிதுடிப்பும் ::பயனே இல்லை! இடக்கற்ற அமைந்தவுரை ::எள்ளலில்லா நறும்பேச்சோ ::டெதிரி கட்கும் அடக்கத்தைக் கற்பிக்கும் ::பண்புநடை, அயர்வின்மை- ::அனைத்தும் வேண்டும்!</poem>}} {{larger|<b>{{Right|-1986}}</b>}} <section end="165"/><noinclude></noinclude> qsvx74j51mf7ylwrph567rnx0nx70qg பக்கம்:கனிச்சாறு 4.pdf/261 250 447053 1838640 1444654 2025-07-03T10:35:52Z Fathima Shaila 6101 1838640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Aasathmatheena" /><small><b>{{rh|226 {{gap+|1}} ☐ {{gap+|1}}கனிச்சாறு – முதல் தொகுதி ||}}</b></small></noinclude> <section begin="166"/> {{larger|<b>{{rh|166||தொண்டுக்கு இலக்கணம் !}}</b>}} {{block_center|<poem>அறிவின் பன் எனும் ::‘விவேகா னந்தர்’ ::அருமை யாய்,ஒரு ::கருத்தைச் சொல்கிறார்! செறிவுற மக்கட்கோர் ::கொள்கை கூறுவோர் ::செவிகொள வேண்டிய ::கருத்து, அது; சிந்திப்பீர்! புதியதோர் கொள்கையை ::மக்கட்குப் புகல்வரைப் ::போலிகள் முன்வந்தே ::ஏளனப் படுத்துவர்! அதையும் மீறியே ::அவர்கள் இயங்கினால் ::அரம்பர்கள் இழிவுசெய்(து) ::அவர்களை வருத்துவர்! இழிவையும் கடந்து, அவர் ::இயங்கினால், மறுபடி ::இழிஞர்கள் அவர்களை ::எதிர்த்திடத் தொடங்குவார்! பழியெலாம் தாங்கிநற் ::பாதையில் மேற்செலின் ::பகைவரும் அவர்களை ::ஏற்றுப் பணிகுவார்! ஆகவே மக்களுக்(கு) ::ஆக்கம் கருதுவோர் ::அடுத்தடுத் தேவரும் ::எதிர்ப்புகள் அறிந்து, பின் சாகவே நேரினும் ::கொண்ட கொள்கையைச் ::சலித்தோ வெறுத்தோ ::கைவிடல் சால்பிலை!</poem>}}<noinclude></noinclude> ra6p72haivq2rwhh1bo5lu93yn38jeg பக்கம்:கனிச்சாறு 4.pdf/262 250 447054 1838641 1444655 2025-07-03T10:36:08Z Fathima Shaila 6101 1838641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Aasathmatheena" /> <small><b>{{rh||| பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 227}}</b></small></noinclude> {{block_center|<poem>ஏளனம், இழிவுகள் ::எதிர்ப்புகள் -இவைதமை ::எதிர்கொண்டு தாண்டினால் ::இறுதியில் யாவரும் தோள்மேல் தாங்கியே ::ஏற்றுத் தொழுவது ::தொண்டுக் கிலக்கணம்! ::தோல்வியிங் கில்லையே!</poem>}} {{Right|{{larger|<b>-1988</b>}}}} <section end="166"/><noinclude></noinclude> dvtlhbntvgiy33m7abgggkp8xytqu04 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/57 250 456492 1838277 1837286 2025-07-02T12:34:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||56|}}</noinclude>பெருமக்களும் ஜமீன்தார்களும்’ என்ற ஆங்கில வரலாற்று நூலும் அதை உறுதிப்படுத்துகின்றது. திங்களூரில் உள்ள பெருமாள் கோயிலைக் கட்டி அதற்குச் ‘சுந்தர பாண்டிய விண்ணகரம்’ என்று காலிங்கராயன் பெயரிட்டதாய்த் திங்களூர்க் கல்வெட்டுக் கூறுகின்றது. நாகமலை என்று சிறப்புப் பெயரையுடைய திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர்க்குக் காலிங்கராயன் பல திருப்பணிகளைச் செய்ததாகவும் கொடைகள் அளித்ததாகவும் அறிகின்றோம். இதனைத் திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை சிறப்புடன் குறிப்பிடுகிறது. வெள்ளோட்டின் வடக்கே கவுண்டச்சிபாளையம் அருகேயுள்ள பாலமடை அம்மன் கோயிலை அணை கட்டுவதற்கு முன்பாகக் காலிங்கராயன் கட்டினார். பாலமடை அம்மனை அணைப்பகுதிக்கே எடுத்துக் கொண்டு சென்று பிரதிட்டை செய்யக் காலிங்கராயன் எண்ணியதாகவும் ஆனால் இப்பொழுது அம்மன் கோயில் இருக்குமிடம் வந்தவுடன் அம்மன் பெயர மறுத்து அங்கேயே குடிகொண்டதாகவும் ஆகவே அந்த அம்மனைக் காலிங்கராயன் தான் கட்டிய அணையை நோக்கி இருக்கும்படிப் பிரதிட்டை செய்ததாகவும் கூறுவர். அக்கோயில் கல்வெட்டில் அம்மன் பெயர் பாலமுடி அம்மன் என உள்ளது. ஊற்றுக்குழியிலேயுள்ள அகத்தூர் அம்மன் ஆலயத்தைக் கட்டியவர் காலிங்கராயரே! இச்செய்தியைப் பின்வரும் வமிசாவளிப் பகுதி விளக்கும். :“ஊத்துக்குழிக்கு வந்து, பின்னர் இராய சமஸ்தானத்திலே தமக்கு கனவிலே பிரசன்னமான இஷ்ட தெய்வத்தைக் கோரி பிரார்த்தனை பண்ணி அகத்தூர் அம்மனென்று நிதர்சனமாக்கப்பட்ட தேவாலயம், சீரணோத்தாரணம் பண்ணி அகத்தூர் அம்மன் என்று<noinclude></noinclude> 5smh9x31tdmngl82l4528fp1mke25ys பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/58 250 456493 1838278 1837335 2025-07-02T12:38:07Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||57|}}</noinclude>:பேர் பிரசித்தி படும்படியாய்ப் பூசை நைவேத்தியங்கள் செய்விச்சுக் கொண்டு” எனவரும் பகுதியால் அறியலாம். அகத்தூர் அம்மன் கோயில் கல்வெட்டுக்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இன்றும் காலிங்கராயர் வமிசத்தினரின் குலதெய்வம் அகத்தூர் அம்மன் எனப் புகழ்பெற்றுச் சிறப்புடன் விளங்குகிறது. இன்னும் பல கோயில்கட்கு நந்தா விளக்கெரிக்கவும் கோயில் திருப்பணிகட்காகவும் திருநாள் கொண்டாடவும் காலிங்கராயன் நிவந்தம் விட்டதாகக் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். வேறு பலர் செய்த இவைபோன்ற பல்வேறு அறச்செயல்களை முன்னின்று திறம்பட நடத்தியதாகவும் கல்வெட்டுக்கள் முரசறைகின்றன. {{larger|<b>ஊர் உண்டாக்குதல்</b>}} காலிங்கராயன் செய்த பல அறச்செயல்களுக்கு மிகவும் உதவியாக இருந்தவர் கச்சிராயன் என்ற பாண்டியர் அரசியல் அதிகாரி ஒருவர். கச்சிராயன் செய்த உதவிகளை எண்ணிச் செய்ந்நன்றி மறவாச் செம்மலாகிய காலிங்கராயன் அவர் பெயர் என்றும் நாட்டில் நின்று நிலவும் பொருட்டு அவர் பெயரில் கச்சிராயநல்லூர் என்னும் ஊர் ஒன்றை உண்டாக்கினார். கி.பி. 1263ஆம் ஆண்டு வீரபாண்டியனின் பிறந்த நாளன்று கரூர் அருகே உள்ள அவ்வூர்ப் பகுதியில் நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த வழிப்போக்கி நத்தத்தைத் திருத்தினார். நன்செய், புன்செய், தோட்டம் இவைகளைச் செப்பனிட்டு அப்பகுதியில் மக்களைக் குடியேற்றினார். குறுப்பு நாட்டில் குன்னத்தூர் (குன்றத்தூர்) அருகே காடாக இருந்த பகுதியை அழித்து நாடாக்கி வெள்ளிர வெளி என்ற ஊரை உண்டாக்கினார். குன்னத்தூர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கல்வெட்டு இவ்வூரைக் ‘காடுபிடித்தழித்துக் கொண்ட வெள்ளிரவெளி’ என்று குறிப்பிடுகின்றது. {{nop}}<noinclude> க—4</noinclude> dv53oy8d9frfckel0dnzpqx0a4k77ah பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/59 250 456494 1838367 1837338 2025-07-02T17:18:27Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||58|}}</noinclude>காலிங்கராயன் அணைப்பகுதியில் உள்ள காலிங்கராயன் பாளையம் என்று வழங்கப்பெறும் நாவிதம் பாளையம் காலிங்கராயன் உண்டாக்கிய ஊரேயாகும். இவ்வூர் அணை நாசுவம் பாளையம், மேட்டு நாசுவம் பாளையம் என இரண்டு பகுதிகளாக வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி அருகேயுள்ள ஊத்துக்குளியைக் காலிங்கராயன்தான் முதன் முதலில் மக்கள்வாழும் வண்ணம் ஊராக அமைத்தவர். ஊத்துக்குளி உள்ள காவிடிக்கா நாட்டின் பல பகுதிகள் முன்பு சேரமான் பெருமாள் நாயனாரால் சாத்தந்தை குலத்தாருக்கு மானியமாக விடப்பட்டிருந்தன. ஏற்கெனவே காலிங்கராயனுடைய மாட்டுப் பட்டிகள் அங்கு இருந்தன. வெள்ளோட்டை விட்டுச் சென்ற காலிங்கராயர் நேராக அங்கு சென்றார். மாடுகள் நீர் குடிக்க ஊற்றுக்கள் தோண்டியுள்ள இடத்தில் ஊர் அமைத்தார். அதனை ‘ஊற்றுக்குழி’ என்றனர். இன்று ஊற்றுக்குழியில் உள்ள கிணறே அவர் ஏற்படுத்திய ‘ஊற்றுக்குழி’ என்பர். அங்கு கல்வெட்டும் உள்ளது. இன்று அப்பெயரே மக்கள் நாவில் மருவி ஊத்துக்குளி என்று வழங்கி வருகின்றது. வேறு ஊத்துக்குளிகளிலிருந்து பிரித்துக் காட்டும் பொருட்டு அதனை ஜமீன் ஊத்துக்குளி என அழைத்தனர். {{larger|<b>மக்களுக்கு உரிமைகள் அளித்தல்</b>}} கொங்கு நாட்டில் வேளாளர் வாழுமிடங்களில் கம்மாளர் எனப்படும் ஆசாரிகள் குலத்தார் வாழ்ந்தால் கால்களுக்குச் செருப்பு அணிந்துகொண்டு செல்லக்கூடாது; வீடுகட்குச் சுண்ணாம்பு முதலிய சாந்துகள் எவையும் பூசக்கூடாது; அவர்கள் வீடுகளில் மங்கல காரியங்கள் நடந்தால் அல்லது தீய காரியங்கள் நடந்தால் மங்கலவாத்தியங்கள், பேரிகை முதலியன வாசிக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துக் கட்டளையிட்டனர். ஆனால் வீரபாண்டியன் ஆட்சியின் 15ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1265 முதல் அவர்களுக்கு இத்தடை நீங்கியது. இத்தடையை நீக்கி அவர்கட்கு அரசன் சார்பில் உரிமை அளித்தவர் நமது<noinclude></noinclude> d1zg4we9zo7x3p5qoxjpvzjzecexlag பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/60 250 456495 1838368 1837343 2025-07-02T17:21:55Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||59|}}</noinclude>காலிங்கராயர்தான்! இவ்வுரிமையைச் சோழ மன்னர் அளித்ததாகக் கொங்கு மண்டல சதகம் கூறுகிறது. ஆனால் வெள்ளோட்டுக் கல்வெட்டில் வீரபாண்டியன் காலத்தில் இவ்வுரிமைகள் அளிக்கப்பெற்றதாகத் தெளிவாக உள்ளது. கொங்கு நாட்டின் பிற பகுதிக் கல்வெட்டுக்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அக்கல்வெட்டுப் பகுதியைக் கீழே காணலாம். ::“சுபமஸ்து ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு 15ஆவது சுபமஸ்து ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்திகள் கோனேரிமேல் கொண்டான் காங்கய நாடும் பூந்துறை நாடும் உள்ளிட்ட பற்றில் கண்மாளர்க்குத் தங்களுக்கு நன்மை தின்மைக்குப் பதினஞ்சாவது ஆடிமாதம் முதல் இரட்டைச் சங்கும் ஊதிப் பேரிகை உள்ளிட்டன கொட்டுவித்துக் கொள்வதாகவும் தங்கள் வீடுகளுக்குச் சாந்திட்டுக் கொள்ளவும் தாங்கள் புறப்பட வேண்டுமிடங்களுக்குப் பாதரட்சை கோத்துக் கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு நம்மோலை பிடிபாடாகக் கொண்டு ஆசந்திராதித்தவரை செல்வதாகத் தங்களுக்கு வேண்டுமிடங்களிலே கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்க இவை காலிங்கராயன் எழுத்து யாண்டு 15 நாள் 129” இக்கல்வெட்டிலிருந்து காலிங்கராயன் காலம் வரை இந்தத் தடை இருந்ததென்றும் காலிங்சராயன் இந்தத் தடையை உடைத்தெறிந்தான் என்றும் அறிகின்றோம். கொங்கு தந்த வரலாற்று ஆய்வாளர் கோவைக் கிழார் அவர்கள் கோனேரின்மை கொண்டான் என்ற பெயர் சோழன் எனக் கொண்டு இவ்வுரிமைகளை அளித்தவன் சோழன் என்பார். இவ்வாறு பாண்டியர்களும் கோனேரின்மை கொண்டான் என்று பெயர் வைத்துக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். வெள்ளோடு சிவாலயத்தில் கோனேரின்மை கொண்டான் என்ற பெயரோடு ஸ்ரீ வீரபாண்டிய தேவன் என்ற பெயரும் இணைந்து வருகிறது. கல்வெட்டின்<noinclude></noinclude> fvog0uqadj9ld48vqgzr7cdgb3m3yq2 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/61 250 456496 1838369 1837344 2025-07-02T17:26:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||60|}}</noinclude>இறுதியில் காலிங்கராயன் கையொப்பமும் உள்ளது. எனவே இவ்வுரிமைகளை பாண்டியர் சார்பில் கொங்கு நாட்டுப் பகுதியில் அளித்து நிறைவேற்றியவர் காலிங்கராயரே என்று அறியலாம். காலிங்கராயன் அளித்த கம்மாளரின் உரிமைகள் எங்கெங்கு மறுக்கப்படுகிறதோ அவ்விடங்களிலும், கம்மாளர் விரும்பும் பிற இடங்களிலும் “கல்லிலும் செம்பிலும் இந்த ஆணையை வெட்டிக் கொள்க” என்று காலிங்கராயன் உரிமை அளித்துள்ளான். இதுபோன்ற உரிமைச் சாசனங்கள் பூந்துறை காங்கேய நாட்டு உரிமைக்காக வெள்ளோடு சர்வலிங்கேசுவரன் கோயிலிலும் தென் கொங்கு நாட்டு உரிமைக்காகப் பேரூர்ப் பட்டீசுவரர் கோயிலிலும், வடகொங்கில் வடகரை நாட்டு உரிமைக்காக அந்தியூர் செல்லீசுவரசுவாமி கோயிலிலும் குடிமங்கலம் சோழீசுவரர் கோயிலில் தென்கொங்கு நாட்டிற்காகவும் கரூர்ப் பசுபதீசுவரர் கோயிலில் வெங்கால நாட்டிற்காகவும் பாரியூர் அமரபரணீசுவரர் கோயிலில் காஞ்சிக் கூவல் நாட்டிற்காகவும் மொடச்சூர் மெய்ப்பொருள் நாதர் கோயிலில் தலையூர் நாடு முதலிய ஏழு நாடுகளுக்காகவும் கல்வெட்டுக்கள் இருப்பதை இன்றும் காணலாம். இவைகளின் மூலம் காலிங்கராயன் மக்கள் நல்வாழ்க்கையில் நாட்டம் கொண்டிருந்தவர் என்றும், எளியோர்க்கிரங்கும் இதயம் கொண்டவர் என்றும் அறிகின்றோம். பாண்டிய மன்னர்களின் பண்புடைத் தலைவராக விளங்கிய காலிங்கராயன் மக்கள் நலம் பேணி நாட்டு நலத்தின் பொருட்டு நல்லாட்சி நடத்திய நல்லமைச்சராக விளங்கி அழியாப் புகழ்பெற்று விளங்கினார். அவர் ஆற்றிய அரும்பணிகள் இன்றும், என்றென்றும் அவர் புகழ்பாடும் அழியாக் காவியமாக நின்று நிலவுகிறது. ‘மாவிசயம் பெறு காலிங்கன்’ என்று கொங்குமண்டல சதகம் கூறுவதால் பாண்டியர் பொருட்டுப் படைநடத்திக் காலிங்கராயன் கவினுறு வெற்றிகளும் அடைந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது. {{nop}}<noinclude></noinclude> rfsmd5vrkqwp213aiqyde4eh2n3en64 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/62 250 456497 1838440 1837497 2025-07-03T06:44:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>தெய்வமாகக் கொள்ளல்</b>}}}} {{left_margin|3em|<poem> “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்”</poem>}} என்பது வான்புகழ் வள்ளுவரின் வாய்மொழி. கொங்கு நாட்டு வேளாளர்களின் உரிமையுடைய காணித் தெய்வங்கள் பலவும் உலகில் பிறந்து தலைமைப் பண்புகளுடன் பிறர்க்காக வாழ்ந்த பெருமக்களே ஆவர். குடித்தலைவர்களாக விளங்கிக் கோயிலில் குடிகொள்ளும் தெய்வங்களாக அவர்கள் வாழ்வில் உயர்ந்தனர். குன்றுடையாக் கவுண்டர் மக்களான பொன்னரும் சங்கரும் அண்ணன்மார்களாகக் கொங்கு நாடெங்கும் வீற்றிருந்து கொங்கு நாட்டுக் குடிமக்கள் அனைவருக்கும் அருள் தந்து வாழ்வித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நாமெல்லாம் அறிந்த உண்மையாகும். அப்பிச்சிமார், குப்பியண்ணன், ராவுத்தணன், நாட்டுராயன் முதலிய கொங்கு வேளாளர்களின் காணித் தெய்வங்களும் இவ்வுலகில் பிறந்து இணையில்லாப் புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த பெருமக்களே ஆவர். காலிங்கராயன் பிறந்த சாத்தந்தை குலத்துக் குலதெய்வமான வெள்ளோடு ‘இராசா’வும் இவ்வுலகில் தோன்றிப் பீடுற வாழ்ந்த ஒரு தெய்வீகப் பெருமகனே ஆவார். வெள்ளோடு இராசாக் கோயிலில் தெய்வமாக நின்று என்றும் அந்த இணையற்ற தெய்வத்திருஉரு மக்களை வாழ்வித்து வருகிறது. {{larger|<b>காலிங்கராய தெய்வம்!</b>}} எல்லையில்லாப் பெரும் புகழுடன் பாண்டிய மன்னர் படைத்தலைவராகவும் அமைச்சராகவும் விளங்கி, உலகு போற்றும் உயர்பணிகள் பலவற்றைக் கொங்கு நாட்டினர் பொருட்டுச் செய்த நம் கொங்குவேளாள சாத்தந்தை குலக்-<noinclude></noinclude> 75c68f2f0ckebi77w5dw8yvz26uc89z பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/63 250 456498 1838441 1837514 2025-07-03T06:47:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||62|}}</noinclude>குரிசில் காலிங்கராயனைப் பிற்காலத்தில் தெய்வமாகவே கொங்கு நாட்டு மக்கள் வழிபட்டனர். காலிங்கராயன் அணையின் இடையில் வளமுடன் அமைந்துள்ள தீவான அணைத்தோப்பு என்னும் சோலையில் காலிங்கராயனுக்குக் கோயில் ஒன்று கட்டியுள்ளனர். ஆண்டுதோறும் அக்கோயிலுக்கு விழாவும் நடத்தி வந்தனர். காலிங்கராயனுக்கு மட்டுமல்ல அவருக்குக் கால்வாய் வெட்ட வழிகாட்டிய பாம்புக்கும் கோயில் அமைத்தனர் என்பதையும் சில சான்றுகளால் நாம் அறிகின்றோம். {{larger|<b>அணைத்தோப்பில் ஆலயம்</b>}} காலிங்கராயன் அணையின் இடையில் உள்ள தீவில் அமைந்துள்ள தோப்பில் ‘உத்தரராயன் கோயில்’ என்னும் பெயருடன் கோயில் ஒன்றுள்ளது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கொங்கு நாடு பாண்டியர் ஆட்சிக்குட்பட்டுப் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாக இருந்தது. எனவே வீரபாண்டியன் தன் நாட்டின் வடபகுதியாகிய கொங்கு நாட்டிற்கு அரசனைப் போல விளங்கிய அரசியல் அதிகாரியாகிய காலிங்கராயனுக்கு ‘உத்தரராயன்’ என்ற பட்டப் பெயரை அளித்தனன் (உத்தரம்—வடக்கு; ராயன்—ராசன்-அரசன்). காலிங்கராயனுக்கு ‘உத்தர மந்திரி’ என்ற பட்டப் பெயரும் இருப்பதைத் திருமுருகன்பூண்டி முருகநாதர் கோயில் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. பாண்டியனுக்காக ஆணையிடும் அமைச்சர் என்றும் உத்தர மந்திரி என்பதற்குப் பொருள் கொள்ளலாம். இன்று அந்த உத்தரராயன் கோயிலில் உருவ அமைப்பில் சிலைகள் ஒன்றும் இல்லை. உத்தரராயன் என்ற சிறப்புப் பெயரையுடைய காலிங்கராயனுக்கு முன்பு சிலை வடித்துப் பிரதிட்டை செய்து வணங்கியிருப்பர். காலவெள்ளத்தில் அஃது அழிந்துவிட்டது போலும். அக்கோயிலில் உள்ள வேறு ஒரு கடவுளுக்குப் ‘பெத்தாரையன்’ என்று பெயர் கூறுகின்றனர். அது<noinclude></noinclude> rpwf4qi9dcdoe6sz8lvlzb2i8rsbd0s பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/64 250 456499 1838444 1837515 2025-07-03T06:51:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||63|}}</noinclude>பெற்றாரையன் என்னும் சொல்லின் திரிபாகஇருக்கலாம். அவர் ‘காலிங்கராயனைப் பெற்றாரையனாக’ அதாவது காலிங்கராயனின் தந்தையாக இருக்கவேண்டும். ஒரு சிறந்த தலைவனைப் பெற்றெடுத்த பெற்றோருக்குச் சிலை வைத்து வழிபடுவது பண்டைய வழக்கம். உத்தம சோழனின் தாயார் செம்பியன் மாதேவிக்குச் சிலை வைத்து வழிபட்டனர். அவரை ‘ஸ்ரீ மதுராந்தக சோழ தேவரான உத்தம சோழ தேவரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் செம்பியன் மாதேவி’ என்று கல்வெட்டுக்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. எனவே காலிங்கராயனுக்கும் காலிங்கராயனின் தந்தைக்கும் நாட்டினர் நன்றி மறவாது அக்கோயிலைக் கட்டினர் என்பது புலனாகும். {{larger|<b>தலைமதகில் தெய்வத் திருவுரு</b>}} காலிங்கராயன் அணையின் தலைமதகின் அருகில் உள்பக்கம் இடப்புறம் கிழக்கு நோக்கி ஒரு சிறிய மேடையும் அதன்மீது ஒரு பாம்பின் சிலையும் இருக்கின்றது. பாம்பின் அருகில் மேடையில் ஒருசிலை இருக்க வேண்டிய இடம் காலியாக உள்ளது. அங்குச் சிலை இல்லை; ஆனால் காலிங்கராயனின் சிலையைப் பிரதிட்டை செய்திருந்த இடம் அதுவாகவே இருக்கலாம் என ஊகிக்க முடியும். பீடத்தில் கிழக்கு நோக்கி ஒரு தூண் பதிக்கப்பட்டுள்ளது. அதில் அரசக்கோலத்துடன் சிலை ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. அந்தச்சிலை காலிங்கராயன் சிலையாக இருக்கலாம். கல்வெட்டு ஒன்றும் அங்கே காணப்படவில்லை. சாசனம் இருப்பதாக வமிசாவளி கூறுகிறது. ஆனால் அஃதிருக்கும் இடம் தெரியவில்லை . மேலே குறிப்பிட்ட இவ்விரண்டிடங்களில் ஒன்றுதான் முதலில் காலிங்கராயனுக்கு ஏற்பட்ட கோயிலாக இருக்க வேண்டும். முதலில் அணைத்தோப்பில்தான் கோயில் கட்டியிருப்பர். பவானியாற்றில் மிகுதியாக நீர் வரும் காலங்களில் ஆற்றைக் கடந்து அங்கு சென்று வழிபட இடையூறாக<noinclude></noinclude> hhcybz0o4519pwzfiw4fp6iy739gcux பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/65 250 456500 1838448 1837517 2025-07-03T06:55:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||84|}}</noinclude>இருந்திருக்கும். எனவே அணைமுகப்பில் தலைமதகின் அருகில் வேறு கோயில் அமைந்திருக்க வேண்டும் இக்கோயில் அமைப்பை வமிசாவளியும் ஏற்றுக் கொள்கிறது. {{larger|<b>வமிசாவளியில் தெய்வீகக் குறிப்பு</b>}} வமிசாவளி பின்வருமாறு கோயில் கட்டிச் சிலையெடுத்து வழிபட்ட அச்செய்தியைக் குறிப்பிடுகிறது. ::“காலிங்கக் கவுண்டன் கட்டியிருக்கப்பட்ட அணையிலே கவுண்டனையும் சர்ப்பத்தையும் சிலா பிரதிமை ரூபமாகக் கல் வெட்டி வச்சுச் சிலா சாசனமும் எழுதியிருக்கிறது. அந்த அணை போட்டு இருக்கப்பட்ட இடத்தில் குடிகள் பரம்பரையாய் வருஷப் பிரதியும் உற்சவம் பண்ணிக் கொண்டு வருகிறது. வருஷப் பிரதியும் காலிங்கக் கவுண்டன் பிரதிமைக்குப் பூசை நைவேத்தியம் பண்ணிக்கொண்டு வந்தால் வெள்ளம் வந்து வெள்ளாண்மை விளைஞ்சு கொண்டு வருகிறது இப்படி ஈஸ்வரர் அனுக்கிரகத்தினாலே ரொம்ப மூர்த்தி கரம் உண்டாயிருக்கிறது” இதன்படிக் காலிங்கராயன் பிரதிமைக்கு வருடம்தோறும் வழிபாடு நடத்துவதன் மூலமே தவறாமல் மழை பெய்கிறதென்றும் அதன் மூலமாக வானியாற்றில் வெள்ளம் வந்து பூமி விளைகிறது என்றும் மக்கள் நம்பினர் என்பதையும் காலிங்கராயன் மீது முன்னோராகிய கொங்குநாட்டுக் குடிமக்கள் அளவிறந்த பற்றுக் கொண்டிருந்தனர் என்பதையும் நாமறிகின்றோம். {{larger|<b>ஆங்கில நூலின் கருத்து</b>}} காலிங்கராயன் பரம்பரையில் வந்தவர்கள் மட்டுமல்ல, கொங்கு நாட்டு வேளாளர்கள் அனைவரும் காலிங்கராயனையும் வழிகாட்டிய பாம்பையும் தெய்வமாகவே வழிபட்டனர் என்பதை ‘இந்தியாவின் ஆளுந்தலைவர்களும்<noinclude></noinclude> 3llymizeinrv0q67wbdfoybr0qm7npp பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/66 250 456501 1838450 1837521 2025-07-03T07:01:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||65|}}</noinclude>பெருமக்களும் நிலக்கிழார்களும்’ என்னும் ஆங்கில வரலாற்று நூல் கூறுகிறது. ::Stone statues of Kalingarayar and the serpent were placed near the anicut, and festivals and Pujas were performed by his descendants and other ryots என்பது அந்நூல் கூறும் பகுதியாகும். {{larger|<b>பள்ளு நூலில்</b>}} ‘ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு’ என்னும் நயத்தகு நாடக நூலில் காலிங்கராயன் பெற்ற தெய்வத் தன்மை இரண்டு முக்கியமான இடங்களில் விளக்கப்படுகிறது. அப்பள்ளு நாடக நூலை மேடையில் நடித்துக் காட்டியவர் சஞ்சீவி என்பவர். எங்கு? வோளாளர்கள் கூடிய அவையில்; இதைக் கூறுகின்ற ஆசிரியர் புலவர் கரூர் முத்துக்கருப்பனார். அந்த வேளாளர்கள் காலிங்கராயனின் கருணையினால் தான் வாழ்கிறார்கள் என்றும், அவர்கள் வாழ்வும் உழவுத் தொழிலும் மேன்மேலும் ஓங்குவதற்குக் காரணம் அவர்களுக்குக் காலிங்கராயன் கருணை இருப்பதுதான் என்றும் பாடுகின்றார். {{left_margin|3em|<poem> “காலிங்க ராயன் கடாட்சத்து னாலே சாலவே இந்தத் தரணியில் வாழும் குடியான வர்கள் கூடிய சபையில் வடிவான பள்ளை வந்துமே ஆடிய”</poem>}} தாகவும் சஞ்சீவி தனக்குச் சதுருடன் செம்பொன்னை அவர்கள் கொடுத்ததாகவும் அறிகின்றோம். பள்ளு நூலில் மற்றுமொரு இன்றியமையாத குறிப்பைக் காண்கின்றோம். மழைவேண்டும் என்று ஆண்டானிடம் பணிபுரியும் பள்ளர்கள் வேண்டிக் கொள்ளுமுன் மணியகாரன் வந்து இச்சையாகிய தேவதை தங்கட்கு ஏற்கவே<noinclude></noinclude> t9n4gevkuhkj8rfru4te8ic7mvulgbi பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/67 250 456502 1838452 1837636 2025-07-03T07:04:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||66|}}</noinclude>பூசை செய்யுமாறு கட்டளையிடுகின்றான். அதைக் கேட்ட பள்ளர்கள் ஈரோட்டுத் தலத்தில் உள்ள விநாயகன், முருகன், வள்ளி, தெய்வயானை, ஐயனார், தொண்டீசுவரர், வாரணியம்மன், கலியுகவரதர், கமலவல்லித்தாயார், கொங்கிலம்மன், கொல்லிவாய்க் கருப்பன் போன்ற எல்லாத் தெய்வங்கட்கும் பூசை நடத்துகின்றனர். தெய்வத் திருமேனிகட்கும் வழிபாட்டுக்கும் வேண்டிய பொருள் அனைத்தும் விரும்பிக் கொடுக்கின்றனர். வாரணி அம்மனுக்குப் பொன் கலமும், மங்கலகிரிவாசருக்குத் தங்கக் கிரீடமும் அளிக்கின்றனர். இத்தெய்வங்களை வழிபடுவதற்கிடையில் காலிங்கராயனையும் அவர்கள் மறக்கவில்லை. பள்ளர்களின் வேளாண்மையைச் சிறப்படையச் செய்து குடியை வாழ்விக்கும் தெய்வமல்லவா காலிங்கராயன்! எனவே, {{left_margin|3em|<poem><b> ‘கங்கை கோத்திரம் காலிங்க ராயற்குக் கண்ட சரமும் உத் தொண்டியும் சாற்றுங்கள்’</b></poem>}} என்று மணியகாரர் கட்டளையிட, அவ்வாறே பள்ளர்கள் செய்கின்றனர். காலிங்கராயனின் இனத்தவராகிய வேளாளர்கள் மட்டுமல்லர், கொங்கு நாட்டவர் அனைவரும் இதன் மூலம் காலிங்கராயனைத் தெய்வமாக வழிபட்டனர் என்பது விளங்குகின்றது. ஈரோட்டில் காலிங்கராயன் கால்வாய்க் கரையிலேயே இப்பள்ளு நாடகத்தைப் பெற்றுச் சிறப்புற்ற ஐயனாரப்பன் கோவில் இன்றும் இருக்கிறது. {{larger|<b>பள்ளர் வழிபட்ட கோயில் எது?</b>}} பள்ளர்கள் வழிபட்ட எல்லாத் தெய்வங்களும் ஈரோட்டிலும் ஈரோட்டைச் சூழ்ந்தும் அருகில் இருப்பனவே! பள்ளர்கள் ஈரோட்டில் வாழ்ந்தமையே அதற்குக் காரணம். எனவே காலிங்கராயனைப் பள்ளர்கள் வாழ்த்தி வணங்கிய காரணத்தால் காலிங்கராயன் கோயில் ஈரோட்டிலும் ஒன்று இருந்திருக்கவேண்டும். அக்கோயில் எங்கிருந்தது என்ப-<noinclude></noinclude> fwfmsau8hzrqq2fx8d5kl6yu513b11p பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/68 250 456503 1838454 1837631 2025-07-03T07:10:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||67|}}</noinclude>தற்குச் சில சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஈரோட்டின் கிழக்கு எல்லையில் காலிங்கராயன் கரையில் ‘காரைவாய்க்கால் மைதானம்’ என்னுமோர் இடம் இருக்கிறது. அதனருகில் பாம்புக் கோயில் ஒன்றுள்ளது. சுமார் 10 அடி நீளத்திற்குக் கிழக்கு - மேற்காகப் பாறையில் அழகிய புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுச் சுற்றியும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அக்கோயிலில் மற்றுமொரு சிறப்பு உண்டு. அப்பாம்பிற்கு அபிடேகம் செய்யும் நீர் எல்லாம் ஓர் ஆழக்குழியில் சென்று பின் புதைகால் வழியாகக் காலிங்கராயன் கால்வாயையே அடைகிறது. அக்கழிவு நீர்க்கால்வாய் வெளியே தெரிவதில்லை. இங்கு முன்பு ஓர் ஆண் தெய்வத்தின் சிலை இருந்ததாகவும் கூறுகின்றனர். அதுவே காலிங்கராயன் தெய்வத்தின் சிலையாக இருக்க வேண்டும் என்று எண்ணலாம். காலிங்கராயனுக்கும் வழி காட்டிய பாம்புக்கும் கோயில் எடுக்கப்பட்டதாக ஆங்கில வரலாற்று நூலும் வமிசாவளியும் கூறுகின்றன. இங்குப் பாம்புக்கோயில் மட்டும் எஞ்சியிருக்க, காலிங்கராயன் கோயில் அழிந்துவிட்டது போலும். {{larger|<b>கட்டியது யார்?</b>}} இக்கோயிலை யார் கட்டியது? உரிமையுடையவர்கள் யார் என்று இக்கோயில் பூசை செய்யும் திருவேங்கடராமசாமி என்ற முதியவரைக் கேட்டால் அவர் கூறும் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்தும். ::‘ஆசாரிமார்கள் இக்கோயிலைக் கட்டினார்கள், அவர்கள் இக்கோயிலுக்கு உரிமையுடையவர்கள். கொங்கு நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஆசாரிமார்கள் இக்கோயிலுக்கு வருவார்கள். அவர்கள்தாம் விழா முதலியன நடத்தினார்கள். அருகில் இருக்கும் மண்டபமும் அவர்களுடையதே! ஆனால் சிலகாலமாக இக்கோயில் ஐயர்கள் கைக்கு மாறிவிட்டது’ என்று கூறுகின்றார் அப்பெரியவர். {{nop}}<noinclude></noinclude> r81mkxy0twf7494kihof22j7qir8cgh பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/69 250 456514 1838456 1837632 2025-07-03T07:12:42Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||68|}}</noinclude>வேட்டுவர் - வேளாளர் போராட்டத்தின் காரணமாக ஆசாரிமார்களின் உரிமைகள் சில பறிக்கப்பட்ட செய்தியையும் பின்னர்க் காலிங்கராயன் அவர்கட்கு மீண்டும் உரிமை அளித்த செய்தியையும் முன்னரே கண்டோம். காலிங்கராயன் அவர்களுக்கு உரிமை அளித்த மாபெரும் நன்மைக்காக ஆசாரிமார்கள் தங்கள் நன்றியைக் காட்டக் காலிங்கராயனுக்கும் வழிகாட்டியதாகக் கருதப்பட்ட பாம்புக்கும் ஈரோட்டில் கோயில் கட்டியிருக்கலாம். {{larger|<b>வெள்ளோட்டில் உருவச்சிலை</b>}} வெள்ளோட்டில் உள்ள சருவலிங்கேசுவரர் கோயிலின் தெற்கு வாயில் முன்மண்டபத்தின் தென்மேற்குத் தூணில் ஒரு தலைவர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவ்வூர் மக்களும் அக்கோயில் அர்ச்சகர்களும் அச்சிற்பம் காலிங்கராயன் சிற்பமே என்று கூறுகிறார்கள். காலிங்கராயன் வெள்ளோட்டில் தங்கியிருந்தார் என்பதும் இச்சருவலிங்கேசுவரன் கோயிலில் பல திருப்பணிகள் செய்து கொடைகளும் அளித்துள்ளார் என்பதாலும் மேற்கண்ட செய்தி உண்மையாக இருக்கலாம். {{larger|<b>பாலமடை அம்மன் கோயிலில்</b>}} கவுண்டச்சிபாளையம் அருகேயுள்ள பாலமடை அம்மன் கோயில் மகாமண்டபக் கிழக்குச் சுவரின் வெளியே ஒரு கொங்குத் தலைவரின் சிற்பம் உள்ளது. பாலமடை அம்மன் ஆலயத்திற்கும் காலிங்கராயன் கால்வாய்க்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நோக்க அச்சிற்பம் காலிங்கராயன் சிற்பமாக இருக்கக் கூடும் என எண்ண இடமுள்ளது. {{larger|<b>கலைமகள் கலைக்கூடத்தில்</b>}} கொங்குக் கலைக்கூடம் ஒன்று ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டின் அருகேயுள்ள பிராமணப் பெரிய அக்கிரகாரம் என்னும்<noinclude></noinclude> r2bdtwfj8jl6msqioe8pq8wj8b99544 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/70 250 456515 1838459 1837634 2025-07-03T07:15:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||69|}}</noinclude>ஊரில் காலிங்கராயன் கால்வாய்க் கரையில் சிதைந்த ஒரு கோயிலில் இருந்த ஒரு சிலையை அவ்வூர்ப் பொது மக்கள் கலைமகள் கலைக்கூடத்திற்கு அனுப்பினர். அச்சிலையை அவ்வூர்ப் பொது மக்கள் ‘காலிங்கராய சுவாமி’ என்றே குறிப்பிட்டுக் கூறுகின்றனர். எனவே அந்த அக்கிரகாரப் பகுதியில் காலிங்கராயனுக்குக் கோயில் ஒன்று இருந்தது என்பது திண்ணம். அச்சிலையைத் தேடி எடுத்துப் பாதுகாத்துவரும் கலைமகள் பள்ளிகளின் நிருவாகி செல்வி எம். முத்தையா அவர்கள் நம் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்கள் ஆகின்றார்கள். இவைகளின் மூலம் கொங்கு நாட்டவர் அனைவரும் காலிங்கராயனைத் தெய்வமாக வழிபட்டதையும் அணையில் மட்டுமல்ல, ஈரோடு போன்ற பல இடங்களில் பல மக்களும் கோயில் அமைத்து வணங்கி வரம் பெற்று வாழ்ந்தனர் என்பதையும் நாமறிகின்றோம். {{larger|<b>இராசாக் கோயிலில்</b>}} வெள்ளோடு இராசாக் கோயிலில் சாத்தந்தை குலத்தலைவர்கள் சிலருடைய சிற்பங்கள் தூண்களில் அழகிய சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. சில சிற்பங்கள் அடியார் போலவும், சில சிற்பங்கள் அரசியல் அலுவலர் போலவும், சில சிற்பங்கள் அரசர் போலவும் அமைக்கப்பட்டுள்ளன. அச்சிற்பங்களில் ஏதாவது ஒன்று சாத்தந்தை குலச் செம்மல், இராசாவைக் குல தெய்வமாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளல் நம் காலிங்கராயன் சிற்பமாக இருக்க வேண்டும். கல்வெட்டுக் குறிப்புக்கள் ஏதும் இல்லாத நிலையில் அவைகளில் எந்தச் சிற்பம் காலிங்கராயனுக்கு உரியது என்று நம்மால் அறிய முடியவில்லை. {{nop}}<noinclude></noinclude> oct602w15ftdnq9hwkl9il3psy8s6qv பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/71 250 456516 1838461 1837635 2025-07-03T07:18:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>புலவர் பாடிய புகழ்</b>}}}} {{left_margin|3em|<poem> “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்”</poem>}} என்னும் வள்ளுவர் வாய்மொழி உயிருக்கு ஊதியமாகப் புகழ்ப் பேற்றைச் சிறப்புறக் கூறுகிறது. சங்க காலத்தில் வாழ்ந்த பாரியைப் போன்ற வள்ளல்கள் இன்றும் சாகா வரம் பெற்றுப் புகழுடன் விளங்குகின்றனர். பாவலர்கள் அவர்களைத் தம் படையல்கள் மூலம் என்றும் வாழும் சிறப்பினராகச் செய்துள்ளனர்; இறவா வரம் ஈந்துள்ளனர். அவ்வள்ளல் பெருமக்களும் புலவர்களால் தாம் பாடப்படுவதைப் பெருமதிப்பாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். காலிங்கராயன் வாழ்ந்த காலத்தில் புலவர்கள் பலர் அவர் செய்த அரும் பெரும் செயலைப் பாடிப் புகழ்ந்திருக்க வேண்டும். அப்பாடல்களில் இப்பொழுது ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் காலிங்கராயன் காலத்திற்குப் பின்னர் அவர் செய்த பணிகளால் நாடு பல நற்பயன்கள் பெறுவதைக் கண்டு புலவர்கள் பலர் காலிங்கராயன் செயலைப் பாராட்டிப் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். கொங்கு மண்டல சதகம், சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழ், ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு, திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை, பூந்துறைப் புராணம் நல்லணவேள் காதல் முதலிய இலக்கியங்களும், பல தனிப் பாடல்களும் காலிங்கராயனின் அழியாப்புகழை அழகுற முரசறைந்து முழக்கிக் கொண்டிருக்கின்றன. {{larger|<b>கொங்கு மண்டல சதகம்</b>}} தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்த புலவர்கள் அவரவர்கள் வாழ்ந்த பகுதிகளின் இயற்கையமைப்பு, வரலாற்றுச் சிறப்பு, சமயச் சிறப்பு, தமிழ் வளர்ச்சி, அரசர்கள், கொடைவள்ளல்கள், பெருமக்களின் வாழ்வியல்<noinclude></noinclude> fb5ie9uuwjdpiinl40b0fly17r6io34 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/72 250 456517 1838464 1837637 2025-07-03T07:22:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||71|}}</noinclude>சிறப்பு இவைகளையெல்லாம் தொகுத்து மண்டல சதகங்களாகப் பாடிச்சென்றுள்ளனர். அவையெல்லாம் மிகச்சிறந்த வரலாற்றுண்மைகள் நிறைந்த நூல்களாகும். சோழ மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம், மகதமண்டல சதகம், பாண்டிமண்டல சதகம் முதலியன அவ்வகையில் தோன்றிய சதக நூல்களாகும். ஆனால் கொங்கு நாட்டிற்கு மூன்று சதக நூல்கள் இருக்கின்றன. கார்மேகக் கவிஞர் பாடிய ‘கொங்குமண்டல சதகம்’ அச்சில் வெளிவந்துள்ளது. அதனைத் திருச்செங்கோடு தி.அ. முத்துசாமிக் கோனார் முதலில் பதிப்பித்துள்ளார். வாலசுந்தரக் கவிராயர் பாடிய கொங்குமண்டல சதகத்தை வேலம்பாளையம் பெரும் புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அச்சிட்டார். அவைகள் இரண்டுடன் கம்பநாதர் பாடிய கொங்குமண்டல சதகத்தையும் சேர்த்துப் பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தினர் மூன்று கொங்குமண்டல சதகங்களையும் ஒன்றாக வெளியிட்டுள்ளனர். கார்மேகக் கவிஞரின் பாடலில் காவிரியில் கலக்கும் பவானியில் அணைகட்டிப் பூக்கள் விரியும் புகழ்மிகு வயல்களுக்குப் பாய்ந்து நொய்யலில் கலக்கும் கால்வாய் வெட்டிய செயல் புகழப்படுகிறது. {{left_margin|3em|<poem> “காவிரி யோடு கலக்குறு வானியைக் கட்டணைநீர் பூவிரி செய்களுக் கூட்டிநற் காஞ்சி புகுதவிசை தேவர்கள் சாம்பவர் பாவாணர் எல்லாம் தினம்மகிழ மாவிச யம்பெறு காலிங்க னும்கொங்கு மண்டலமே!”</poem>}} எனப்படும் பாடல் காலிங்கராயன் புகழினைக் கவினுறச் சுட்டுகின்றது. {{larger|<b>சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழ்</b>}} மேல்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் சென்னிமலைக்குப் புராணம், யமக அந்தாதி,<noinclude></noinclude> qvwaj1cdic1z7f1obe1g6531rlksmdi பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/73 250 456518 1838465 1837639 2025-07-03T07:25:55Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||72|}}</noinclude>காதல், பிள்ளைத்தமிழ் போன்ற பல பிரபந்தங்கள் உள்ளன. சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழைப் பாடியவர் வெள்ளோட்டில் வாழ்ந்த குந்தாணி சாமிநாதக் கவிராயர் ஆவார். அந்நூலில் தாலப்பருவப் பாடல் ஒன்றில் காலிங்கராயன் கால்வாய் வெட்டியதன் நோக்கத்தையும் வெட்டிய முறையையும் கூறுகின்றார் அதன் ஆசிரியர். உலகில் பாவம் நம்மைவிட்டு நீங்கவும் பல காலமாக வரும் வழிவழிப் பெருமை சிறந்து விளங்கவும் விரிந்து பரந்து செல்லுகின்ற காவிரியாற்றின் புகழ் உலகில் மேன்மேலோங்கவும் சிறந்து விளங்கும்படியாகத் தவமிருந்து தெய்வத் தன்மை பொருந்திய பவானியாற்றில் காலிங்கராயன் அணை தேக்கிக் கால்வாய் வெட்டியதாகக் கூறுகின்றார் சாமிநாதக் கவிஞர். அவர் கூறும் சுவையான பாடலைப் பாருங்கள்! {{left_margin|3em|<poem> “பாரில் பவம்விட் டொழிந்தகலப் பலகால் நியமம் பண்பிலங்கப் படரும் தென்கா விரிப்பெருமை படைக்கக் கொங்கு மிகச்செழிக்கச் சீரில் பொலியும் தவமிருந்து தெய்வ வானி அணைதேக்கிச் சிறுகால் வீச வானுறங்கச் சில்லை ஒலிக்கத் தண்டலைகள் பூரித் தெழுந்த செழுந்தீம்பால் போதமுனிவர் சிவயோக புனிதஞ் செய்ய நீதிசெயும் புகழோன் குலம்பேர் பெறவிளங்கும் சாரித் திரப்பூந் துறைநாடாள் சைவா தாலோ தாலேலோ சதுமா மறைசூழ் சிரகிரிவாழ் தலைவா தாலோ தாலேலோ!”</poem>}} {{nop}}<noinclude></noinclude> mofu2njc6e4lj2kuftbwpx2dpnovo0l பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/74 250 456519 1838466 1837643 2025-07-03T07:31:09Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||73|}}</noinclude>காலிங்கராயன் கால்வாய் விளங்குவதால் புகழ்பெற்றது பூந்துறை நாடு. அப்பூந்துறை நாட்டில் அருளாட்சி செய்பவன் சென்னிமலை முருகப் பெருமான் என்று பாடிப்பரவுகிறார் புலவர். {{larger|<b>திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை</b>}} கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்குவது அறுபடை வீட்டில் ஒன்றாகிய ஏரகம் என்னும் திருச்செங்கோடு. திருச்செங்கோட்டிற்கு யார் யார் திருப்பணி செய்தார்களோ அவர்கள் பெயருடன் அவர்கள் செய்த திருப்பணிகளையும் தனித்தனிச் செய்யுள் வடிவில் தொகுத்துக் கூறுவது திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை என்னும் சிறந்த வரலாற்று நூலாகும். காலிங்கராயன் திருச்செங்கோட்டுக்குச் செய்த திருப்பணியையும் அந்நூல் கூறுகிறது. பசுவின் வடிவாகவும் இலிங்க வடிவும் கொண்டு விளங்கும் நாகமலை என்னும் திருச்செங்கோட்டில் குடிகொண்டுள்ள உமையொருபாகனுக்குக் காலிங்கராயன் ஏழுமா நிலம் ஈந்தான். அதனால் பெரும்புகழ் பெற்றான் என்று அந்நூல் கூறுகிறது. {{left_margin|3em|<poem> “ஆலிங்க நாகமலை அர்த்தநா ரீசுரர்க்குக் காலிங்க ராயன்எனும் காராளன்—மாலிங்க மென்றேமா மாந்தை நிலமெழுமா வுங்கொடுத்தான் அன்றே புகழ்எய்தி னான்”</poem>}} என்பது திருப்பணிமாலைச் செய்யுள் ஆகும். {{larger|<b>ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு</b>}} பள்ளர்களின் வாழ்க்கை முறையை ஒட்டிப் பாடப்படும் சுவையான பிரபந்த நூல்களில் ஒன்று பள்ளு. ஈரோட்டில் கோயில் கொண்டுள்ள ஐயனாரப்பன் மீது பாடப்பட்டது ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு நூலாகும். காலிங்கராயன் கால்வாய்க் கரைமீதே இக்கோயில் அமைந்துள்ளது. அந்-<noinclude> க.—5</noinclude> h2n827aez1cgcq4pg3kgeqprh27oenx பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/75 250 456520 1838468 1837650 2025-07-03T07:34:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||74|}}</noinclude>நூலின் இறுதியில் பள்ளு நூலை இயற்றிய முத்துக்கருப்பனுக்கும் மேடையில் பள்ளுநூலை நாடகமாக நடித்துக் காட்டிய சஞ்சீவி என்பவனுக்கும் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன. பரிசுகள் வழங்கப்பெற்ற இடம் எது? {{left_margin|3em|<poem> “காலிங்க ராயன் கடாட்சத்து னாலே சாலவே இந்தத் தரணியில் வாழும் குடியா னவர்கள் கூடிய சபையில்”</poem>}} பரிசுகள் வழங்கப்பெற்றன என்று அந்நூல் கூறுகின்றது. பள்ளர்கள் தாம் வழிபடும் கடவுளர்கட்கெல்லாம் பல சிறப்புக்களைச் செய்யுமாறு கட்டளையிடும் இடத்தில் {{left_margin|3em|<poem> “கங்கை கோத்திரம் காலிங்க ராயற்குக் கண்ட சரமும்உத் தொண்டியும் சாற்றுங்கள்”</poem>}} என்று குறிப்பிடப்பெறுவதைக் காண்கின்றோம். ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு நூலின் வாயிலாக இப்பகுதி வேளாளர்கள் சிறப்பெய்தி இவ்வுலகில் வாழக் காலிங்கராயன் கால்வாய்தான் காரணம் என்றும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து அக்கால்வாய் வெட்டிய காலிங்கராயன் உலகினரால் தெய்வமாக வணங்கப்பட்டான் என்ற செய்தியையும் அறிகின்றோம். {{larger|<b>நல்லணவேள் காதல்</b>}} வாழ்வாங்கு வளமுடன் வாழும் ஒரு தலைவனின் இல்வாழ்க்கைச் சிறப்பினைக் கூறி, அவனது பெருமையும் புகழும் பேசி, விருந்தோம்பித் தன் குழுவுடன் அவன் வேட்டைக்குச் செல்லுவதாகக் கூறித் தலைவன் அங்கு அழகிய பெண்ணொருத்தியைக் கண்டு காமுறுவதாகப் பாடும் இலக்கியவகை காதல் பிரபந்தம் எனப்படும். கூளப்பநாயக்கன் காதல், கொடுமணல் கந்தசாமிக் காதல் என்பன அவற்றுட் சில. {{nop}}<noinclude></noinclude> sktuvu1vh2xwxtvn841cz3h7q2z80jt பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/76 250 456521 1838470 1837652 2025-07-03T07:37:51Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||75|}}</noinclude>வெள்ளோடு சாத்தந்தை குல நல்லண கவுண்டர் பற்றிச் சுவாமிநாதக் கவிராயர் பாடிய நூல் நல்லணவேள் காதல் என்பது. அந்நூலில் அவர்தம் குடிப்பெருமை கூறுமிடத்துப் பவானி ஆற்றைக் கொண்டு ஐந்து காத நீளத்துக்குக் கால்வாய் வெட்டிய காலிங்கராயன் மரபினர் அவர் என்று பெருமையாகக் கூறப்படுகிறது. {{left_margin|3em|<poem> ‘வானிநதி யைக்கொண்டு வாய்க்கால்ஐங் காதவழி தானுயர்வாய்க் கொண்டுபோய்த் தான்நடத்தும் மெய்க்குலத்தோன்’</poem>}} என்பது அந்நூல் பகுதியாகும். {{larger|<b>பூந்துறைப் புராணம்</b>}} நாடு நகரச் சிறப்புக்களுடன் ஓரிடத்தின் வரலாற்றுப் பெருமைகளையும் புராணச் சிறப்புக்களையும் உயர்வு நவிற்சிகளுடன் பலபடப் புகழ்ந்து பாடும் நூல் புராணம் ஆகும். பூந்துறைப் புராணம் என்பது அவற்றுள் ஒன்று. காளியண்ணக் கவிராயர் பாடிய இப்பூந்துறைப் புராணத்தில் இரண்டு இடங்களில் காலிங்கராயன் கால்வாய்ச் செய்தி சுட்டிக் கூறப்படுகிறது. {{left_margin|3em|<poem> ‘..................வானி முகூர்த்தமிடக் கால்வாய்கள் முந்திவயல் பாயும்’</poem>}} என்பது பூந்துறைப் புராணப் புகழ் வரிகளஎகும். {{larger|<b>வனமும் வயலாகும்</b>}} காலிங்கராயன் கால்வாய் பற்றிய தனிப்பாடல்கள் பல கிடைத்துள்ளன. காவிரியாறொடு கலக்கும் பவானி ஆறானது இடையிலேயே மடங்கும் வண்ணம் வீரபாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் அமைச்சராக<noinclude></noinclude> 4b8f1jw5r1hp09loekdtnt39uqgqvyw பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/77 250 456522 1838473 1837653 2025-07-03T07:41:22Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||76|}}</noinclude>விளங்கியவரும் கல்வியை நன்கு கற்றவருமான காலிங்கராயன் வெட்டிய கால்வாயின் கழிவுநீர்கூட வனத்தை நல்ல வயலாக்கும் தன்மையுடையது என்று பாடுகின்றார் அப்பாடலைப் பாடிய ஆசிரியர். இதோ அப்புகழ்மணம் கமழும் தனிப்பாடல்..... {{left_margin|3em|<poem> ‘எற்று திரைப்பொன்னி கூடுறு வானி இடைமடங்க வெற்றி மிகுத்த அதிவீர பாண்டிய வேந்தமைச்சன் கற்ற அறிவினன் காலிங்க ராயன்செய் கால்கழிநீர் உற்ற வனத்தை உறுவய லாக உயர்த்தியதே’</poem>}} {{larger|<b>பூந்துறை நன்னாடு வாழ</b>}} உலகில் மூன்று மிகப்பெரிய ஆற்றல்மிகு தீரச் செயல்கள் நிகழ்ந்துள்ளனவாம். முதலாவது சீதா பிராட்டியைச் சிறை மீட்கும் பொருட்டு இராமபிரான் இலங்கைக்குச் செல்லச் சேது அணை கட்டியது. இரண்டாவது காவிரியாறு பெருகி நாட்டை அழித்தபோது கரிகால் பெருவளத்தான் காவிரிக்குக் கரை எழுப்பியும் கல்லணை கட்டியும் நாட்டுக்கு நலன் விளைத்த அரிய செயலாகும். அதனை ஒத்த மூன்றாவது பெரிய செயல் எது தெரியுமா? மலைகளையுடைய பூந்துறை எனப்படும் நல்ல நாடு வளம்பெற்று வாழும்பொருட்டுப் பவானி ஆற்றில் கரையிட்டு அடைத்துக் காலிங்கராயன் அணை கட்டியதாகும். இந்தப் போற்றுதற்கரிய செயலைச் செய்தவன் வெள்ளோடு சாத்தந்தை குலக் காலிங்கராயன் ஆவான் என்று கூறுகின்றார் சிறப்புமிகு இத்தனிப்பாடலைப் பாடிய ஆசிரியர். {{left_margin|3em|<poem> ‘திரைகொண்ட வாரியை மாலடைத் தான்செழுங் காவிரியை உரைகொண்ட சோழன்மு னாளடைத் தான்உலகு ஏழறிய வரைகொண்ட பூந்துறை நன்னாடு வாழ்கஅவ் வானிதனைக் கரைகொண் டடைத்தவன் வெள்ளோடைச் சாத்தந்தை காலிங்கனே’</poem>}} {{nop}}<noinclude></noinclude> jrv0f1heqsczi8g4i8xtkuaavj68mjv பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/78 250 456523 1838475 1837655 2025-07-03T07:44:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||77|}}</noinclude>{{larger|<b>மங்காத கீர்த்தி</b>}} காலிங்கராயனின் வழித்தோன்றலாகச் சாத்தந்தை குலத்தில் தோன்றி விளங்கிக் கனகபுரத்தில் வாழ்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் சிறப்புப் பெற்றுப் பெருநிலக் கிழாராகவும் புகழ்பெற்ற கிராம நிருவாகியாகவும் வாழ்ந்தவர் கனகபுரம் பழனிவேல் கவுண்டர் மகன் குழந்தைவேல் கவுண்டர் ஆவார். அவர் பாலமடை அம்மன் கோயிலில் திருப்பணி செய்தவர். புலவர்கள் பலரை ஆதரித்தவர். அவரைப் பற்றிய சில தனிப்பாடல்கள் கிடைத்துள்ளன. அப்பாடல் ஒன்றில் காலிங்கராயன் பெருமை பலபடப் புகழ்ந்து கூறப்படுகிறது. சூரிய சந்திரர் உள்ளவரை காலிங்கராயன் கால்வாய்ப் பெருமை நின்று நிலவும் என்ற குறிப்பு இப்பாடலில் காணப்படுகிறது. {{left_margin|3em|<poem> வானி அணைகட்டி வாய்க்கால்ஐங் காதம் வழிநடந்து பானும தியும்உள் ளமட்டும் கீர்த்தி படைத்தவன்நீ தானவன் காலிங்க ராயன் பழனிவேல் தந்தைசுதா வானின்ற கீர்த்தி குழந்தைவேல் என்றிடும் மன்னவனே</poem>}} {{larger|<b>நாட்டுப்புறப் பாடல்</b>}} காலிங்கராயன் கால்வாய் உள்ள ஊர்களில் கால்வாய் அமைப்பு, நிர்வாகம்பற்றிப் பல பாடல்கள் பாடப்படுகின்றன. அவற்றுள் ஒன்று காலிங்கராயர் வரத்தினால் அணை கட்டுவித்தார். குரங்கன்பள்ளம், ஈரோடு பெரும் பள்ளம் ஆகிய இடங்களில் பாலங்கள் கட்டுவித்தார். பல அதிகாரிகள் கால்வாய் நிருவாகத்தில் இருந்தனர். அவர்கட்குச் செய்க்கு 5 வள்ளம் கொடுக்கவேண்டும். அதிகாரிகளின் ஆணைப்படியே நீர் பாய்ச்சவேண்டும். இல்லாவிடில் அபராதமும் தண்டனையும் உண்டு என்று கூறுகிறது. {{nop}}<noinclude></noinclude> 4tcny3mfczyxp3ecqj4or9h9p4th3jt பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/79 250 456524 1838477 1837660 2025-07-03T07:46:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||78|}}</noinclude>{{left_margin|3em|<poem> மண்டலம் தன்னிலே ஈரோடு கடிகரா மறுகடிகள் நிகராகுமோ வானிலிங் கேசுரர் வேதநா யகியம்மை வந்துமுன் சாட்சிசெய்ய வாய்த்தபுகழ் சாத்தந்தை காலிங்க ராயர் அணை வரத்தினால் கட்டிவைத்தார் வானிமுதல் ஆதிகரூர் அறுகாத மும்வளர் வெகுசனம் பிழைக்கவே தான் அண்டனவர் இப்புவியில் உற்பனம தாகவே அதிகவெள் ளாமையாக அடிக்கடி பாலங்கள் மராமத்து வேலைகள் அதிலுள்ள குரங்கன் கட்டி அசையாத கல்லின்மேல் பிசகாம லேநல்ல ஆயிரம் சேரியமுது அசைவிட்டு துளையிட்டு சிலம்பிட்டு மேநல்ல அசையாமல் தூண்நிறுத்தி அகாண்டமாய் வருகின்ற பெரும்பள்ளம் தன்னிலே அதுவுமொரு பாலமாக ஆறுக்கு ஆர்திறணை நாலுக்கு நால்செவுதி ஆறுபோல் பெருகிவரவும் அதற்குள்ள பாற்பத்தியம் மேல்மணியம் டபேதார் அப்புறம் சுபேதாரும் அவர்களுக் கோநிகுதி செய்க்கைந்து வள்ளம் அணைவள்ளத் தால்அளக்கவும் கண்டிதம தாகவே வருகின்ற தண்ணீரும் காய்தாப் படிபாயவும் காய்தா முத்திரை பேதகம் தப்பினால் கையிழுத் தேபிடித்துக்</poem>}}<noinclude></noinclude> n9g5t9m1grsh1r68exx5st7j0nm3l03 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/80 250 456525 1838479 1837664 2025-07-03T07:49:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||79|}}</noinclude>{{left_margin|3em|<poem> கக்கிவிக்கித் தின்ற குக்கலைப் போலவே கனமான சன்மானமும் துட்டத் தனத்துடன் ராத்திரியில் மதகைத் துணிவுடன் பிடிங்கிவிட்டால் சோட்டால் அடித்து ஐந்து ரூபாயும் வாங்கியே சோடுகைக் குட்டையாடி துனித்தபெரு வாசியூர்முதல் ஆவுடைபாறைவரை அவன்கழுத்தில் தோல்துடும்பு போட்டடித்துத் துரந்தரீகமாகவே அனந்தசேகரம் பிள்ளை தாசில்தார் தொட்டு இப்படித் தோறாமல் மாற்றாமல் வெங்கட்ட நரசிம்மன் சொன்னதில் பாதியாவும் தொச்சம் இதையன்றியே மிச்சமிலை இன்றியே துகையிலாப் பேர்கள் ரொம்ப சுகமுலவும் பெருந்துறை கிருஷ்ணப்ப சுவாமியவர் சூட்சமுடன் வாழ்க நன்றே”</poem>}} {{larger|<b>சக்திக்கனல் வாழ்த்து</b>}} கொங்கு நாட்டின் சீர்மிகு செந்தமிழ்க் கவிஞர் சக்திக்கனல் அவர்கள். காலிங்கராயன் கரையில் உள்ள கல்வெட்டுப் பாளையம் அவரது ஊராகும். (அவரது இயற்பெயர் கே.பி. பழனிசாமி) காலிங்கராயன் கால்வாய் பற்றி அவரது அழகிய பாடலைக் கீழே காணலாம். {{left_margin|3em|<poem> காவிரி பவானியோடு கைகுலுக்குமாம்—கூடல் கழனியெல்லாம் முத்து முத்தாய் நெல்கொடுக்குமாம்! பூவிரியும் தாழைமடல் மணம்விரிக்குமாம்—கொங்கு பூத்தமலர் மணம்பரப்பி வாழ்த்திசைக்குமாம்! பூந்துறைவெள் ளோடருகில் வெண்மணற்பரப்பு—அது பூசை வாங்கும் குலதெய்வம் இராசாவின்இருப்பு சாந்தமிகு சாத்தந்தை நஞ்சையன்மகனாம்—அவன் தமிழ்ப்பெயரோ லிங்கையகா லிங்கராயனாம்!</poem>}}<noinclude></noinclude> bnbxhate6e24052a2ue5bui9sdheqzq பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/81 250 456526 1838482 1837669 2025-07-03T07:53:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||80|}}</noinclude>{{left_margin|3em|<poem> வெள்ளோட்டில் சருவலிங்கர் கோவில்கட்டினான்—அங்கும் மேலும்மேலும் கனகபுரம் குளங்கள்வெட்டினான் குன்னத்தூரில் மங்கலத்தில் நீரைத்தேக்கினான்—குண்டு குழிகளில்லா சாலைகளை நிறுவிக்காட்டினான்! வீரபாண்டி ஏரியின்நீர் இவன்புகழ் சொல்லும்—ஊரில் வேலையற்ற கொடியவரை இவன்பலம்வெல்லும் ஆரவாரம் எதுவுமில்லா ஆட்சி யமைத்தான்—அன்பால் அனைத்துமக்கள் உள்ளத்திலே மாட்சிமைபெற்றான்! பவானிமுதல் ஆவுடையார் பாறைவரையுமே—இவன் பாத்திகட்டி நாற்றுவளர் பாசனம்தந்தான் அவன்இலையேல் காலிங்கன் கால்வாய் ஏது?—அது அற்புதமாய் வளைந்துசெல்லும் அழகினைஓது! நாவிதனைக் கூடநன்றி யோடுநோக்கினான்—மக்கள் நலம்பெறவே திட்டமிட்டுப் பசுமையாக்கினான்! பூவிதழின் மென்மைஉள்ளம் காலிங்கன்உள்ளம்—அதோ பொங்குதுபார் காலிங்கன்கால் வாயினில்வெள்ளம்!</poem>}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 9ri9atuis1eh0av3rv9gfo9aogoisss பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/82 250 456527 1838486 1837674 2025-07-03T07:56:57Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>வெளிநாட்டார் குறிப்புக்கள்</b>}}}} காலிங்கராயன் கால்வாயின் அமைப்பு, அணையின் தன்மை, அதன் சிறப்புமிக்க பொறியியல் திறன், சிறப்புத் தன்மை, அதன் பெருமை, வரலாற்றுத் தொன்மை ஆகியவை வெளிநாட்டார் பலரை மிகவும் கவர்ந்துள்ளது. கி.பி. 18, 19ஆம் நூற்றாண்டில் கொங்குப் பகுதிக்கு வந்த பல வெளிநாட்டினரும் பிற நாட்டு அரசியல் அலுவலர்களும் பொறியியல் நிபுணர்களும் ஆட்சித் தலைவர்களும் காலிங்கராயன் கால்வாய் குறித்துச் சுவையான முக்கியத் தகவல்களை எழுதி வைத்துள்ளனர். {{left_margin|3em|<poem> சுவார்ட்சு (Swartze) புக்கானன் (Dr. Bhuchanan) மெக்கென்சி (Lt. colonel colin Meckanzie) ரௌட்டன் (Wroughton) ஹன்னான் (Hannan) வெட்டர்பர்ன் (Colonel Wedderburn) அருண்டேல் (Arundels ICS) மாண்ட் கோமரி (Colonel Montgomerie) மீடு பென்னி குக் (Mead Penny Cuick) அட்ரி (Awdry) மார்கன் (General Morgan) சர் ஆர்தர் காட்டன் (Sir Arthar cotton)</poem>}} போன்ற பலரின் பயனுடைய குறிப்புக்கள் பழைய வரலாற்றுச் செய்திகளைக் கூறுவதுடன் எதிர்காலப் பாசனத்திட்டங்களுக்கும் இன்றியமையாத பல கருத்துக்களைத் தருகின்றன. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கட்கும் மைசூர்த் தலைவர்கட்கும் நடைபெற்ற கொங்கு நாடு<noinclude></noinclude> rsh1cqtikxjn89tnvp95n24b3tcyma8 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/83 250 456528 1838537 1837675 2025-07-03T08:22:09Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||82|}}</noinclude>பற்றிய உரிமைப் போரில் காலிங்கராயன் கால்வாய்ப் பகுதி பெரிதும் இடம் பெற்றிருந்தது. இக்கால்வாயின் பெரும் பகுதி இப்போர்களினால் அழிந்து சிதைந்து விட்டது என்றறிகிறோம். பல ஆங்கில வரலாற்று நூல்களிலும் மாவட்டக் கெசட்டியர்களிலும் அரசாங்க நிருவாக அறிக்கைகளிலும் காலிங்கராயன் கால்வாயைப் பற்றிய அக்காலத்திய பல வரலாற்றுச் சான்றுகள் விரிவாகக் கிடைக்கின்றன. {{larger|<b>சுவார்ட்சு</b>}} தமிழ் நாட்டிற்குக் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணிக்கென வந்த பல பாதிரிமார்கள் கல்வியைப் பரப்பும் பணியையும் மருத்துவப் பணியையும், தமிழ் இலக்கியப் பணியையும், இலக்கண ஆய்வையும் செய்து தமிழ் நாட்டிற்கு அரிய பல தொண்டுகள் செய்ததை நாடு நன்கறியும். அவர்களில் பலர் வரலாற்றுச் செய்திகளையும் குறித்திருக்கின்றனர். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தஞ்சை, மைசூர் வரலாற்றோடு மிகத் தொடர்புடைய சுவார்ட்சு பாதிரியார் (1726—1798) கொங்கு நாட்டின் பல இடங்களைப் பார்த்துக் குறிப்பெழுதி வைத்துள்ளார். அவர் 1779ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் நாள் பவானிக்கும் ஈரோட்டிற்கும் வந்துள்ளார். 1769இல் முதல் மைசூர்ப் போர் முடிந்து ஐதர் அலியும் ஆங்கிலேயரும் 11 ஆண்டுக் காலம் (1780 வரை) நட்புறவோடு இருந்த காலம் அது. அப்போது காலிங்கராயன் கால்வாயைப் பார்த்துப் புகழ்ந்துள்ளார் சுவார்ட்சு பாதிரியார். {{larger|<b>புக்கானன்</b>}} நான்காம் மைசூர்ப் போர் 1799இல் முற்றுப் பெற்றது. அவ்வாண்டு ஏற்பட்ட சீரங்கப்பட்டணம் வீழ்ச்சியில் (4-5-1799) பெருவீரனாகிய திப்பு மறைந்தான். அவன் மறைவிற்குப் பின் கொங்குநாடு முழுவதும் ஆங்கிலேயர்<noinclude></noinclude> 8uu256obw7o4kx9t164z2tkyom2y8nz பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/84 250 456529 1838544 1837678 2025-07-03T08:29:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||83|}}</noinclude>கைக்கு மாறிவிட்டது. உடனடியாகக் கொங்குநாடு இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. நொய்யலாற்றின் தெற்கே ஒரு பிரிவையும் நொய்யலாற்றின் வடக்கே ஒரு பிரிவையும் அமைத்தனர். தென் பிரிவிற்குத் தாராபுரமும், வட பிரிவிற்குப் பவானியும் தலைநகரங்களாக அமைக்கப்பட்டன. 6-7-1799இல் வடபிரிவிற்குக் கேப்டன் மாக்ளியாட்டும் (Captain Colonel W. Macleod) தென்பிரிவிற்கு ஹர்டிசும் (Hurdis) முதல் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இக்காலத்தில்தான் கிழக்கிந்தியக் கம்பெனியார் டாக்டர் புக்கானன் என்ற ஆங்கில வரலாற்றாசிரியரைக் கொங்கு, கருநாடக, மலையாள நாடுகளுக்கு அனுப்பி அப்பகுதிகள் பற்றிய செய்திகள் எல்லாவற்றையும் ஆய்ந்து அறிக்கை அளிக்கும்படி நியமித்தார்கள். டாக்டர் புக்கானன் கோவை மாவட்டம் முழுவதையும் மைசூரையும் சுற்றிப் பார்த்து விரிவாக, “சென்னையிலிருந்து மைசூர் கன்னடம் மலபார் வழியாக யாத்திரை” (Journey from Madras through Mysore Canara and Malabar) என்ற அருமையான நூலொன்றினை எழுதியுள்ளார். 1800ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன் யாத்திரையைத் தொடங்கிய புக்கானன் 1800ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி ஈரோட்டிற்கு வந்துள்ளார். ஈரோட்டில்தான் காலிங்கராயன் கால்வாயைப் புக்கனான் பார்த்து மிக மகிழ்ந்திருக்கின்றார். அதன் வியத்தகு வேலைப்பாட்டைப் பார்த்து மெய்மறந்து நின்று விட்டார். பின் அதன் வரலாற்றினையும் இம்மாபெரும் பணியைச் செய்து முடித்த காலிங்கராயன் வரலாற்றையும் கேட்டறிந்தார். தன் குறிப்பில் ஈரோடு நகரத்தைப்பற்றியும் தான் கண்டு மகிழ்ந்த காலிங்கராயன் கால்வாயைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். அப்பகுதியைக் காண்போம். ::“பவானியிலிருந்து புறப்பட்டு ஈரோட்டுக்குப் பக்கத்தில் ஓடுகிற கால்வாய் ஒரு சிறந்த வேலைப்பாடுள்ள கால்வாய். இதன் நீளம் 15 மணி<noinclude></noinclude> fy1km429ki5uu4kiun6pg3z3axxgz7f பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/85 250 456530 1838547 1837682 2025-07-03T08:33:25Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||84|}}</noinclude>::பயணத் தூரம். பாசன நில அளவின் பரப்பு பல இடங்களில் பலவகையாக அமைந்துள்ளது. இந்த இடத்தில் (ஈரோட்டில்) ஒருசிறு பாலத்தின் மேல் இக்கால்வாய் ஓடுகிறது. முன்பு இக்கால்வாய் கரூர்வரை இருந்ததாகவும் நொய்யலாற்றை ஒரு பாலத்தின் வழியாகக் கடந்தது. இது ஒரு அருமையான வேலைப்பாடாக அமைந்துள்ளது. இக்கால்வாய்ப் பணி முழுவதும் காலிங்கராய வேளாளர் என்பவரால் செய்யப்பட்டது. அவர் ஒரு செல்வராகவும் செல்வாக்குப் பெற்றவராகவும் இருந்த காரணத்தால் தன் சாதி மக்களிடம் இருந்து கால்வாயின் தேவைக்கான பணத்தைத் திரட்டினார். இது சற்றேறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. ::அவரது சந்ததியினர் இப்பொழுது இல்லை. அவரது குடும்பத்தினர் இச்சிறந்த பணிக்காக நிலங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை. ::சற்றேறக்குறைய 1045 ‘மா’ நிலங்கள் அதாவது 3459 ஏக்கர்கள் இக்கால்வாயினால் பாசனவசதி பெறுகிறது. புன்செய் நிலம், ஏறக்குறைய 1713 ஏக்கர் கள் (400 புல்லாக்கள்) இருக்கின்றன” அக்காலத்தில் (1800) மைல் பழக்கத்திற்கு வரவில்லை. அதனால் 15 மணி மலபார் பயணத்தூரம் என்கின்றார். அத்தூரம் சுமார் 60 மைல்கள் ஆகும். புல்லா என்பது 1 வள்ளம் ஆகும். 1 வள்ளம் 4 ஏக்கருக்குச் சமம். எனவே 400 புல்லாக்கள் ஏறக்குறைய 1600 ஏக்கர்கள் ஆகும். {{larger|<b>மெக்கென்சி</b>}} கர்னல் மெக்கென்சி இந்தியாவின் நில அளவுத்தலைமை இயக்குநராகப் பதவியேற்றவர் (1753-1821). வரலாற்று உணர்ச்சி மிகுந்த அவர் தமிழகத்தில் இருந்த<noinclude></noinclude> cactu27a5neql04m04gnwn8uj1adi3c பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/86 250 456531 1838550 1837689 2025-07-03T08:36:38Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||85|}}</noinclude>பொழுது எண்ணற்ற கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகளையும், பாளையக்காரர்களின் பரம்பரை பற்றிய செய்திகளையும், ஓலைச்சுவடிகளையும், பிற எண்ணற்ற புராண, இலக்கிய வரலாற்றுச் செய்திகளையும் பொருள்களையும் பல மொழிகள் தெரிந்த ஆட்களைக் கொண்டு கம்பெனியார் உதவியின்றி அவர் சொந்தப் பணத்தில் ஏறக்குறைய ரூ 15,000 செலவில் தொகுத்து வைத்தார். அவைகளில் காலிங்கராயன் பரம்பரையில் வந்த குமரசாமிக் காலிங்கராயர் தம் பரம்பரைபற்றி எழுதிக் கொடுத்த குறிப்பும் ஒன்றாக இருக்கின்றது. காலிங்கராயனைப் பற்றியும் கால்வாயைப் பற்றியும் பல அரிய குறிப்புக்களை நாம் அதில் காணலாம். அதன் நகல் சென்னை அரசினர் பழஞ்சுவடிச் சாலையில் இன்றும் உள்ளது. அதன் தலைப்பு “Calinga Ray Gauunden pattagar of uootoocoolie in Malabar” என உள்ளது. அந்த ஆவணம் முழுமையாக இந்நூலின் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது. {{larger|<b>ரௌட்டன்</b>}} பவானி ஆற்றைப் பற்றியும் காலிங்கராயன் கால்வாயைப் பற்றியும் ரௌட்டன் 1845ஆம் ஆண்டு பல சுவையான புள்ளி விவரங்களைத் தருகின்றார். ::“காலிங்கராயன் அணை கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். நொய்யலில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412.48 அடி உயரம். இடையில் உள்ள தூரம் 32 மைல். பவானியிலிருந்து தெற்காகவும் தென்கிழக்காகவும் மைலுக்கு 3.79 அடி தாழ்வாகக் கால்வாய் ஓடுகிறது. காலிங்கராயன் கால்வாயின் நீளம் ஏறக்குறைய 57 மைல். கால்வாய் நீர் 8866 ஏக்கர்களுக்குப் பாய்கிறது. காலிங்கராயன் கால்வாயில் 1840 மதகுகள் இருக்கின்றன. ஒரு மதகிலிருந்து செல்லும் நீர் 4.8 ஏக்கர் பாய்கிறது. மதகுகள் மிகமிக அதிகமாக இருக்கின்றன. பல இடங்களில் அவைகள்<noinclude></noinclude> d55d2cvzc5qckti3cg7fx47b5g5sxef பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/87 250 456532 1838552 1837869 2025-07-03T08:40:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||86|}}</noinclude>::அடுத்தடுத்து மிகவும் நெருக்கமாகவும் இருக்கின்றன. அதனால் புது மதகுகள் எதுவும் ஏற்படுத்த முடிவதில்லை. கால்வாயின் 1,2,3,6,9,16ஆம் மைல்களில் பல மண் மதகுகள் இருக்கின்றன. 3,9,15,25,34,36,39,41,47ஆம் மைல்களில் காட்டாறுகள் வந்து கால்வாயோடு கலக்கின்றன.” {{larger|<b>ஹன்னான்</b>}} காலிங்கராயன் கால்வாயிலுள்ள சில குறைகளையும் சுட்டிக் காட்டுகின்றார் ஹன்னான். ::“கால்வாய் முழுவதிலும் நேரடியாகவே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச வசதியாகப் பல மதகுகள் இருக்கின்றன. இந்த மதகுகளின் எண்ணிக்கையைக் குறைத்துச் சிறு கிளைக்கால்வாய்களை அமைத்து நீர் பாய்ச்சினால் இன்னும் ஏராளமான நிலங்கட்கு நீர் பாய்ச்ச முடியும். இக்கால்வாயிலுள்ள மிகப் பெரிய குறைபாடு அது மிகப் பெரியதாக இருப்பதே” என்று குறிப்பிடுகின்றார். ::“தொடக்கத்தில் 30,000 ஏக்கர்கள் பாயவேண்டியதற்கு மேல் தண்ணீர் வருகிறது; ஆனால் கால்வாயின் கடைசியில் மிகக் குறைந்த தண்ணீரே செல்கிறது. வாய்க்கால் பெரியது. ஆனால் அதனால் அடையும் பயனோ மிகக் குறைவு” {{larger|<b>வெட்டர்பர்ன்</b>}} இவர் ஓர் அற்புதமான திட்டத்தைத் தந்துள்ளார். ::“30,000 ஏக்கர்களுக்கு மேல் பாயக்கூடிய அளவு தண்ணீர் அணையிலிருந்து விடப்படுகிறது. ஆனால் பெரும்பகுதித் தண்ணீர் வீணாகிறது”<noinclude></noinclude> 5t190y5esyx204tl0s77lhyg2la7j09 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/88 250 456533 1838555 1837872 2025-07-03T08:49:11Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||87|}}</noinclude>என்று ஹன்னான் கூறிய குறையை நீக்கவே இத்திட்டத்தைத் தயாரித்துள்ளார் என்றறிகின்றோம். காலிங்கராயன் கால்வாய் இப்பொழுது நொய்யல்வரைதான் செல்லுகிறது. கால்வாய் இறுதியில் நொய்யலாற்றில் கலக்கிறது. ஒரு கால்வாயின் வழியாக மீதியாகும் தண்ணீரை நொய்யலைக் கடந்து செல்லச் செய்து அமராவதி (கரூர்) வரை கொண்டு சென்றால் புதிதாக 13,000 ஏக்கர்கள் பாயும்” என்று காலிங்கராயன் விரிவுத்திட்டத்தை 21-3-1872ஆம் ஆண்டு ரூபாய் 8,71,000 செலவில் தயாரித்துக் கொடுத்தார் வெட்டர்பர்ன். அரசு அனுமதி கொடுத்தும் போதிய பணம் இல்லாத காரணத்தால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின் இத்திட்டம் எவருடைய நினைவிற்கும் இன்றுவரை வரவில்லை. {{larger|<b>அருண்டேல்</b>}} காலிங்கராயன் கால்வாயிலுள்ள சிறு குறைகளைச் சுட்டிக் காட்டுகின்றார் கோவை மாவட்டத் தலைவராக இருந்த அருண்டேல். ::“காலிங்கராயன் அணையின் தலை மதகிலேயே 20 அல்லது 30 ஏக்கர்கள் பாய்வேண்டிய நீர் வருகிறது. ஆனால் இரவும் பகலும் இடைவிடாமல் தலை மதகில் நீர் பாய்ந்தும் வளப்படுத்துகின்ற நிலப்பகுதி 2 அல்லது 3 ஏக்கர்தான். மற்றத் தண்ணீர் அனைத்தும் கழிவு நீராக வீணாகச் செல்லுகிறது” என்று வருந்துகின்றார் அருண்டேல். மதகுகளைப் பற்றியும் பின் வருமாறு கூறுகின்றார். ::“காலிங்கராயன் கால்வாயில் பல மதகுகள் சரியாக அமைக்கப்படவில்லை. பொதுவாக அணையின் அருகில் தலைப்புக் கால்வாயில் இருக்கும் மதகுகளே அவ்வாறு மிக மோசமாக இருக்கின்றன. உறுதியற்ற சாதாரணக் கற்களாலும் மண்ணாலும் ஒரு சுரங்கம் போலக்<noinclude></noinclude> ol7gdlgkh9apy03kt6pdo7y0kf0v5xy பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/89 250 456534 1838556 1837877 2025-07-03T08:52:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||88|}}</noinclude>::காலிங்கராயன் கால்வாயின் மதகுகள் கட்டப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் கடுமழை பெய்தது. அதன் காரணமாகக் கால்வாயின் முதல் 7 மைலுக்குள்ளாகவே இருக்கும் 17 மதகுகள் உடைத்துக் கொண்டன.” {{larger|<b>பவானியில் பிற அணைகள்</b>}} 1850ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்பவர் பல திட்டங்களை அளித்துள்ளார். மாண்ட் கோமரியும் (1828) மீடு பென்னிகுக் அட்ரி குழுவினரும் (1878) மார்கனும் (1883) காலிங்கராயன் அணையையும் கால்வாயையும் பார்வையிட்டனர். பவானியாற்றில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுமாறு பரிந்துரை செய்தனர். சத்தியமங்கலத்தின் மேற்கே 4 ஆவது கல்லில் பவானியாற்றைத் தடுத்து அணை கட்டினால் தாராபுரம், பல்லடம் தாலூக்காப் பகுதியில் 50,000 ஏக்கர் நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சலாம் என்று மாண்ட் கோமரி குறிப்பிடுகின்றார். இத்திட்டம் பொதுப்பணித் துறையில் ‘மேல் பவானித் திட்டம்’ (Upper Bhavani project) என அழைக்கப்பட்டது. இது பின்னர்க் ‘கீழ் பவானித் திட்டம்’ (Lower Bhavani project) எனப்படும் திட்டமாக நிறைவேற்றப்பட்டது. கீழ்பவானிக் கால்வால் 1952 செப்டம்பர் மாதம் பூர்த்தி ஆயிற்று. பாசனம் பெறும் நிலம் 2,07,000 ஏக்கர்கள். பவானி ஆற்றில் பல்வேறு தடுப்புக்களை (கலிங்குகளை) ஏற்படுத்தினால் பல ஆயிரம் ஏக்கர்களுக்குப் பாய்ச்சும் வண்ணம் நீர் கிடைக்கும் என்று கூறினர் அட்ரி குழுவினர். அட்டபாடி என்னும் அமைதிப் பள்ளத்திலிருந்து வரும் பவானியைத் தடுத்து மாயாறு என்னும் பள்ளத்தாக்கினிடையில் போளுவாம்பட்டி அருகே அணை கட்டவேண்டும் என்றார் மார்கன். {{nop}}<noinclude></noinclude> luftn42yh82ez2etoej5s5uutqosfhb பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/90 250 456535 1838557 1837875 2025-07-03T08:56:05Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||89|}}</noinclude>{{larger|<b>சில குறிப்புக்கள்</b>}} கோவை மாவட்டக் கெசட்டியர், மானுவல் போன்ற நூல்களிலும், இந்தியாவை ஆண்ட நிலக்கிழார்கள் பற்றிய ஆங்கில வரலாற்று நூலிலும், முத்துசாமிக் கோனாரின் ‘கொங்கு நாடு’ என்ற நூலிலும் காலிங்கராயன் கால்வாயைப் பற்றிய குறிப்பைக் காணுகின்றோம். கொங்கு நாட்டின் முதல்தரமான கால்வாய் ஆகிய இதன் கரையின் எல்லா இடங்களும் சோழ நாட்டைப் போன்ற மிக வளம் பொருந்தியதாகக் காணப்படுகின்றன. கி.பி. 1799இல் கொளாநல்லிக்கு அப்பால் உள்ள கரையின் பெரும்பகுதி உடைந்துவிட்டது. கொளாநல்லிக்கு அப்பால் தண்ணீரே செல்லவில்லை. அதனால்தான் புக்கானன் 1800ஆம் ஆண்டில் 3459 ஏக்கர்கள் பாய்ந்ததாகக் குறிப்பிடுகின்றார். 1840 மதகுகளில் 1762 முதல் 1799 வரை ஐதர், திப்புவிற்கும் ஆங்கிலேயர்க்கும் நடைபெற்ற போரில் பல மதகுகள் சீர்குலைந்து சிதைந்துவிட்டன. காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் எடுத்த ஓர் அளவையில் நீர் பாயும் நிலங்களில் 31% வண்டல் கலந்த களிமண் என்றும், 68% செம்மண் என்றும், 1% மணல் என்றும் அறிகின்றோம். 1880இல் 7545 ஏக்கர்கள் தாம் நீர் பாய்ந்தது. ஆனால் இப்பொழுது 15,743 ஏக்கர்கள் நேரடியாக நீர்வளம் பெறுகிறது. பதிவு செய்யப் பெறாத வகையிலும், வலப்புறப் பாசனத்திலும் 5400 ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன. மொத்தம் 21,143 ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன. கால்வாயின் நீளம் 56 மைல் 5 பர்லாங்கு 350 அடி ஆகும். வினாடிக்கு 650 கியூசெக்ஸ் தண்ணீர் அணையிலிருந்து விடப்படுகிறது. {{nop}}<noinclude> க.—6</noinclude> nob32coomirgcqdrzzqwgqomb0kjgz6 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/91 250 456536 1838559 1837880 2025-07-03T09:02:42Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||90|}}</noinclude><poem> {{larger|<b>காலிங்கராயன் பாளையம் காலிங்கராயன் கால்வாய்ப் பாலக் கல்வெட்டு</b>}}</poem> கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் துறூறி துரையும் பொறியாளர் பேப்பர் துரையும் 1832இல் கால்வாயைப் பழுது பார்த்த விபரத்தை இக்கல்வெட்டுக் கூறுகிறது. {{left_margin|3em|<poem> மகாராச ஸ்ரீ கனம் பொருந்திய கும்பினியாரவர்கள் நாளில் ஜி.டி. துறூறி துரையவர்களுடைய பிரின்சிபால் கலெக்டர் அதிகாரத்தில் பேபர் துரையவர்கள் சிவிலிஞ்சினீரில் அசூர் மராமத்து சூப்பரிண்டெண்டு சுப்பராயர்னாலே யிந்த பாலம் பாகல்வாடம் பூர்த்தியாய் கட்டலாச்சுது</poem>}} {{larger|<b>கொம்பணைக் கல்வெட்டு</b>}} {{left_margin|3em|<poem> மகாராஜஸ்ரீ கனம் பொரிந்திய கும்பினியாரவர்கள் நாளில் ஜார்ஜி தூநூரி துரையவர்கள் பெர்ன்சிபல் கலக்ட்டர் அதிகாரத்தில் பேபர் துரையவர்கள் சிவிலிஞ்சினீரில் அசூர் மராமத்து சூபிரிண்டெண்டாண்டு சுப்பராயர்நாயே யிந்த கீழ்பாலம் பூர்த்தியாய் கட்டலாச்சுது 1303 ஹு சப்டம்பர் மீ</poem>}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 62axvwgtiqljs2su5xifj9we5aq1qoe பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/92 250 456537 1838561 1837910 2025-07-03T09:08:05Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>வாழையடி வாழை</b>}}}} வெள்ளோட்டுக் கனகபுரம் சாத்தந்தை குல நஞ்சையன் மகன் லிங்கையன் கொங்குப் பாண்டியரின் உயர் அலுவலனாகிக் கொங்கு நாட்டின் அதிகாரம் செலுத்தி வரும் நாளில் மேல்கரைப் பூந்துறை நாடு, மேல்கரை அரைய நாடுகளின் சில பகுதிகள் வளம்பெறக் காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாயும் வெட்டி வைத்தார் என்பது வரலாற்று ஆய்வில் கண்டறிந்த உண்மையாகும். இம்மாபெரும் அறப்பணி கி.பி. 1265 வாக்கில் முடிந்திருக்க வேண்டும் என்றும் முன்பு கண்டோம். கால்வாய் வெட்டிய காலிங்கராயன் பரம்பரையினர் யார்? அவர்கள் இப்போது எங்குள்ளனர்? என்று அறிந்து கொள்வதும் சிறப்புமிகு அப்பரம்பரை பற்றிய பிற்கால வரலாற்றை அறிவதும் இன்றியமையாததாகும். புக்கானன் 7-11-1800இல் ஈரோட்டில் காலிங்கராயன் கால்வாயைப் பார்த்துப் பாராட்டிவிட்டு ‘அவர் குடும்ப இன்று இல்லை’ என்று எழுதியுள்ளார். ஆனால் 1-3-1798இல் எழுதப்பட்ட பாலக்காட்டுக் கோட்டைக் கம்பெனிப் படையின் தளபதி எழுதிய கடிதத்திலும், மக்கென்சியின் கைபீதிலும் கால்வாய் வெட்டிய காலிங்கராயன் பரம்பரையில் வந்த 29ஆவது பாளையக்காரரான குமாரசாமிக் காலிங்கராயர் பற்றிய செய்திகளையும் அவர் கையெழுத்தையும் காணுகின்றோம். எனவே புக்கானன் காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் அதாவது அவர் கால்வாயைக் கண்ட ஈரோட்டுப் பகுதியில் அதை வெட்டியவர் குடும்பம் இல்லை என்று கூறுவதாகவே நாம் கொள்ள வேண்டும். {{nop}}<noinclude></noinclude> afmofqw4r7rh2lmyim98crf2yyd0wto பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/93 250 456538 1838562 1837892 2025-07-03T09:11:02Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||92|}}</noinclude>சேரமான் பெருமாள் காலத்தில் காவடிக்கா நாட்டுப் பகுதியில் காலிங்கராயன் குடும்பத்தினருக்குக் கொடையாகப் பூமி அளிக்கப்பட்டிருந்தது. அந்நிலத்தில் மாட்டுப் பண்ணை இருந்தது. ஏராளமான மாடுகள் அங்கு இருந்தன. மாடுகள் தண்ணீர் குடிக்க ஊற்றுக் குழிகள் தோண்டியிருந்தனர். அப்பகுதிக்கே காலிங்கராயன் குடும்பத்தினர் குடியேறினர். குல தெய்வமாம் அகத்தூர் அம்மனை எடுத்துக் கொண்டு தன்னுடன் வந்த பங்காளிகள் பலருடன் ஊற்றுக் குழிப் பகுதியில் குடியேறி ஆலயம் கட்டி அரண்மனை அமைத்துப் பண்டைய அரசர்போல் காடு கொன்று நாடாக்கிக் குளம் தோண்டி வளம் பெருக்கி நல்லாட்சி புரிந்து நாடு காத்தனர் காலிங்கராயன் மரபினர். வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்கள் காலத்தில் அவர்கள் அலுவலராகிய காலிங்கராயர் பரம்பரைக்கு நல்ல மதிப்பு இருந்தது. பாண்டியர் ஆட்சி மறைந்து ஒய்சளர் ஆட்சி கொங்குப் பகுதியில் ஏற்பட்டபின் காலிங்கராயன் குடும்பத்திற்கு ஏனைய பட்டக்காரர், பாளையக்காரர்கள் தங்களுக்கு அளிக்கும் மதிப்புக்களையும் மரியாதைகளையும் பரம்பரைப் பாளையக்காரர் அல்லாத காலிங்கராயர் குடும்பத்திற்கு அளிக்கக்கூடாது என்று கூறினர். இதைக் கண்டு மனம் பொறுக்காத காலிங்கராயர் பரம்பரையினர் காவடிக்கா நாட்டுப் பகுதிக்குச் சென்று விட்டனர். இதனைக் காலிங்கராயர் கைபீது பின்வருமாறு கூறுகிறது. ::‘இப்படிக் காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் பிரசித்திப் பட்டவர்களாய் பலாட்டியனாய் வெள்ளோட்டு பூந்துறை நாட்டாதிபத்தியம் ஆண்டு வரும் நாளையிலே கொங்கு இருபத்து நாலு நாட்டுக்கும் பட்டக்காரர்களாய் இருக்கப்பட்டவர்கள் சரி இருப்பும்,<noinclude></noinclude> 411fdi5890g5pgnu89dmywurz6c9e66 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/94 250 456539 1838566 1837897 2025-07-03T09:18:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||93|}}</noinclude>::சரி மரியாதைகளும் கொடுக்கப்படாது என்று சொன்னதினாலேயும் பூர்வத்திலே சேரமான் பெருமாள் சாத்தந்த கோத்திரக்காரர்களுக்குக் காவிடிக்கை நாட்டுப் பிறவுதவம் பண்ணிக் கொடுத்து இருக்கிற படியினாலேயும் ராயட்டுப் பட்டக்காரர்கள் சரி மரியாதி நடக்க மாட்டாதென்று சொல்லிக் கொண்டபடியினாலே வெள்ளோடு விட்டு மனவெறுப்பினாலே ஆனைமலைச் சருவிலே தங்கள் காணி ஆட்சியான காவிடிக்கா நாடு கொண்டு வனமாய் இருந்த ஸ்தலத்தில் தங்கள் பசுமாடுகளை விட்டுயிருந்த மாடுகளைச் சம்ரட்சனை பண்ணுகிறதுக்காகத் தங்கள் ஜனங்கள் இருந்தபடியினாலே காவிடிக்கா நாட்டு வனத்துக்கு வந்து...தம்முடைய மாட்டுப்பட்டிகள் இருக்கப்பட்ட இடத்தில் சேர்ந்து அரண்மனையும் கட்டி வீடுகள் உண்டுபண்ணி பூர்வத்தில் வனத்திலே மாடுகளுக்கு ஆதாரமாகத் தோண்டியிருக்கப்பட்ட ஊற்றுக் குழிகள் இருக்கப்பட்ட இடத்தில் ஊருகட்டிவச்சபடியினாலே ஊற்றுக்குழி என்ற கிராம நாமதேயம் உண்டாகி ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப்பட்டவராய் இருந்தார்கள்' இச்செய்தி ஊத்துக்குழி அகத்தூரம்மன் கோயில் கல்வெட்டு மூலமாகவும் உறுதிப்படுகிறது. கால்வாய் வெட்டிய காலிங்கராயனுக்குப் பின் அக்குடும்பத்தில் வந்த அனைவரும் காலிங்கராயர் என்றே பெயர் தரித்துக் கொண்டனர். பூந்துறை நாட்டை விட்டு ஊத்துக்குழி சென்ற காலிங்கராயர் தமிழகமெங்கும் யாத்திரை செய்தார். கொங்கேழு சிவாலயங்களை வணங்கினார். பல தானதருமங்கள் செய்தார். ஊத்துக்குழியில் அகத்தூர் அம்மன் ஆலயத்தைக் கட்டினார். வடக்கே யாத்திரை சென்று ஒய்சள மன்னனிடம் பல பட்டங்களையும் பரிசுகளையும் பெற்றார். {{nop}}<noinclude></noinclude> rg0mhgpl17z6l74vmjssycxge5un6cp பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/95 250 456540 1838567 1837906 2025-07-03T09:22:41Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||94|}}</noinclude>தமக்கு உரிமையான நிலத்திற்கு எல்லைகளை வகுத்து அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டார். எல்லைப்பள்ளத்திற்குத் தெற்கும் பொன்குலுக்கி நாடு தாளக்கரைப் பள்ளத்திற்கு மேற்கும் மணியாறு கம்பளத் துறைக்குக் கிழக்கும் நல்லுருக்கா நாடு பாலாற்றுக்கு வடக்கும் அவர் நிலம் இருந்தது. கிழக்கு மேற்காக நான்கு காத தூரமும் தெற்கு வடக்காக 2 காத தூரமும் காலிங்கராயனுக்கு உரிய நிலப்பகுதிகளாக இருந்தன. அப்பகுதியே அவருக்குரிய பாளையமாக அமைந்தது. முதல் காலிங்கராயன் காலத்திலிருந்து அவர் பரம்பரையில் வந்த பலரும் இந்நிலத்தின் உரிமைகளை அனுபவித்துக் கொண்டு பாளையக்காரர்களாக ஊத்துக்குழியில் அதிகாரம் செலுத்தி வந்தனர். வமிசாவளியும் ஆங்கில வரலாற்று நூலும் முதல் காலிங்கராயர் காலத்திலிருந்து முறையாகப் பாளையப் பொறுப்பை ஏற்ற எல்லாப் பாளையக்காரர் பெயர்களையும் வரிசையாகக் கூறுகின்றன. இரண்டிலும் பெயர்கள் ஒத்து வருகின்றன. {{left_margin|3em|<poem> 1. காலிங்கராயர் 2. நஞ்சைய காலிங்கராயர் 3. அகத்தூர் காலிங்கராயர் 4. நஞ்சைய காலிங்கராயர் 5. காலிங்கராயர் 6. நஞ்சைய காலிங்கராயர் 7. அகத்தூர் காலிங்கராயர் 8. காலிங்கராயர் 9. பராக்கிரம நஞ்சைய காலிங்கராயர் 10. அகத்தூர் காலிங்கராயர் 11. காலிங்கராயர் 12. நஞ்சைய காலிங்கராயர் 13. விருமாண்ட காலிங்கராயர் 14. அகத்தூர் காலிங்கராயர்</poem>}}<noinclude></noinclude> 341lorasgit506nmqrtegxgtekus189 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/96 250 456541 1838642 1837908 2025-07-03T11:17:31Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||95|}}</noinclude>{{left_margin|3em|<poem> 15. காலிங்கராயர் 16. ஈசுவரமூர்த்திக் காலிங்கராயர் 17. காலிங்கராயர் 18. அகத்தூர் காலிங்கராயர் 19. விருமாண்டக் காலிங்கராயர் 20. பிள்ளை முத்துக் காலிங்கராயர் 21. சின்னைய காலிங்கராயர் 22. காலிங்கராயர் 23. நஞ்சைய காலிங்கராயர் 24. காலிங்கராயர் 25. நஞ்சைய காலிங்கராயர் 26. காலிங்கராயர் 27. நஞ்சைய காலிங்கராயர் 28. அகத்தூர் காலிங்கராயர் 29. குமாரசாமிக் காலிங்கராயர் 30. முத்துக்குமாரசாமிக் காலிங்கராயர் 31. முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர் 32. சிவசுப்பிரமணிய திருமூர்த்திக் காலிங்கராயர் 33. முத்துராமசாமிக் காலிங்கராயர் 34. அகத்தூர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர் 35. அகத்தூர் முத்து இராமசாமிக் காலிங்கராயர்</poem>}} இவர்களில் மூத்த பிள்ளைதான் பாளையக்காரராகப் பட்டமேற்கும் வழக்கம் ஏற்பட்டது. பட்டத்திற்குரியவராகும் மகன் ஒருவருக்கு இல்லாமலிருந்தால் அவருடைய தம்பி பட்டமேற்றார். 7,14,25,28,33ஆம் பாளையக்காரர்கள் தம்பியாக இருந்து பட்டம் எய்தியவர்களாவார்கள். தந்தை பாளையக்காரராக இருந்தால் மூத்த மகனுக்கு ‘குமார பாளையக்காரர்’ என்று பட்டம் சூட்டுவதும் உண்டு. பாளைய நிர்வாகப் பொறுப்பில் அவர்களுக்குப் பயிற்சி ஏற்பட இது மிகச் சிறந்த முறையாகக் கையாளப்பட்டது. இரண்டாவது பாளையக்காரர் முதல் 8ஆவது பாளையக்காரர் வரை அமைதியாக இருந்து அவ்வக்காலத்தில் ஆட்சி<noinclude></noinclude> 3ytbdip0qav94thn0hfiroq0a1bdq4m பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/97 250 456542 1838644 1837926 2025-07-03T11:21:51Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||96|}}</noinclude>நடத்தும் அரசர்கள் குறிப்பறிந்து வரிவசூல் செய்து ஊத்துக் குழியில் வாழ்ந்து வந்தனர். 9ஆம் பாளையக்காரர் நஞ்சைய காலிங்கராயர் காலத்தில் கொங்கு நாட்டை ஆண்டவர் மதுரை விசுவநாத நாயக்கர் ஆவார். எல்லாப் பாளையக்காரர்களையும் மதுரைக்கு அழைத்துப் பேட்டியளித்தார் விசுவநாத நாயக்கர். அக்காலத்தில் திருநெல்வேலிச் சீமையில் ‘அஞ்சு ராசாக்கள்’ (5 அரசர்கள்) கோட்டை கட்டிக்கொண்டு மதுரை நாயக்கருக்கு அடங்காமல் கலகம் செய்து வந்தனர். விசுவநாத நாயக்கர் ஆணைப்படி நஞ்சைய காலிங்கராயர் அவர்கள் ஐவரையும் போரில் அடக்கிச் சிறையெடுத்து மதுரைக்குக் கொண்டு வந்தார். நாயக்கர் காலிங்கராயரைப் பாராட்டிப் பல பரிசுகள் அளித்ததோடு ‘பராக்கிரமன்’ என்ற பட்டத்தையும் அளித்தார். மதுரைக் கோட்டையில் 51ஆம் கொத்தளத்துக்கு அவரைத் தலைவராக்கினான். பாளையத்தைச் சேர்ந்த கிராமங்களின் வரிகள் அனைத்தையும் நீக்கினான். 72 பாளையப்பட்டில் ஊத்துக்குழியை ஒன்றாக மதுரை நாயக்க அரசர்கள் நியமித்தது ஏனைய கொங்கு நாட்டுப் பட்டக்காரருக்கும் பாளையக்காரருக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். 19ஆம் பாளையக்காரர் விருமாண்டக் காலிங்கராயர் காலத்தில் மதுரை அரசுக்கும் மைசூர் அரசுக்கும் போர் ஏற்பட்டது. அப்போர்கள் பெரும்பாலும் ஆனைமலை சூழ்ந்த கொங்குநாட்டுப் பகுதிகளுக்காகவே நடந்தது. எனவே தங்கள் அதிகாரத்தையும் நிலங்களின் உரிமைகளையும் காத்துக் கொள்வதே பாளையக்காரர்களுக்குப் பெரிய பொறுப்பாக இருந்தது. 22ஆம் பாளையக்காரர் வரைக்கும் இந்த நிலையே நீடித்தது. 23ஆம் பாளையக்காரர் நஞ்சைய காலிங்கராயர் காலத்தில் ஆனைமலைப் பகுதி மைசூர் இம்முடி ராஜாவின் வசம் இருந்தது. நஞ்சைய காலிங்கராயர் குடகின் மீது<noinclude></noinclude> 6kg0dvopygab8pdjb1e2mzhd5vey1cj பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/98 250 456543 1838645 1837929 2025-07-03T11:25:57Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||97|}}</noinclude>படையெடுத்துக் கொண்டு சென்று மைசூருக்காகப் போராடி வென்றார். உள்ளம் உவந்து 8 கலசங்களுடன், தங்கப் பல்லக்கும், விலைமதிக்க முடியாத ஆடையணிகளும், 9 கிராமங்களில் 750 பொன் வரிச்சலுகையும் அளித்தார். அப்போது காலிங்கராயரிடம் 5000 காலாட்படையினரும் 5000 குதிரை வீரர்களும் இருந்தனர். ஒரு கடகம் யானைப் படையும் இருந்தது. இவரும் இவருக்குப் பின்னர் வந்தவர்களும் ஆனைமலையில் யானைகள் பிடித்து மைசூர் அரண்மனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டும், அரசர்களுக்கு வேண்டிய காலத்தில் உதவி செய்து கொண்டும் வாழ்ந்தனர். ஆனைமலையையும் மாச்சி நாயக்கன் குட்டையையும் காவல் காத்து வந்தனர். இவ்விடங்களின் வரிவசூல் உரிமைகைளும் இவர்கள் வசமே இருந்தன. எனினும் அரசர்கள் மாறும்போது பாளையக்காரர்களுக்குச் சில தொல்லைகள் இருந்தன. இக்காலத்தில் காவல் படையிலும் பாதி அழிந்து விட்டது. 26ஆம் பாளையக்காரர் கோழிக்கோடு அரசர்மீது போர் தொடுத்துத் தோல்வியடைந்த போதும் ஆனை மலை மீதுள்ள உரிமையை விடவில்லை. அவர் காலம் வரை வரி வசூலிக்கும் உரிமை இருந்தது. 27, 28ஆம் பாளையக்காரர்கள் காலத்தில் ஐதர் அலியின் படைகள் கொங்கு நாட்டில் கொள்ளையடித்தன, கொலைகள் புரிந்தன. வரி வசூலிக்கும் உரிமைகள் அனைத்தும் எல்லாப் பாளையக்காரர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. கி.பி. 1769 முதல் 1799ஆம் ஆண்டு வரை அதிகாரத்திலிருந்த குமாரசாமிக் காலிங்கராயர் காலத்திலும் ஐதர் அலியின் மகன் திப்பு சுல்தானின் தொல்லைகள் மிகுந்தன. எனவே, திப்புவை ஒழிக்க அவர் கிழக்கிந்தியக் கம்பெனியாரோடு சேர்ந்து கொண்டார். குமாரசாமிக் காலிங்கராயரைப் போலவே மற்றக் கொங்கு நாட்டுப் பட்டக்காரர்கள் பெரும்பாலும் திப்புவின் தொல்லைகள்<noinclude></noinclude> f0opql5z7hs0ztcsvhpwq47w8waef3x பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/99 250 456544 1838648 1837931 2025-07-03T11:30:14Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||98|}}</noinclude>பொறுக்க மாட்டாமல் திப்புவை ஒழிக்க ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பணம், படை போன்றவைகளை அளித்து எல்லா உதவிகளையும் செய்தனர். அனைவரும் ‘கும்பினி சர்க்கார் அதிகாரம்’ நாட்டில் நிலைக்கத் துணைபுரிந்தனர். இதற்கான பல சான்றுகள் சென்னை அரசினர் பழஞ்சுவடிச் சாலையில் இருக்கின்றன. இறுதியில் திப்புவின் ஆட்சி ஒழிக்கப்பட்டபோது, தம் பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையைக் குமாரசாமிக் காலிங்கராயர் பெற்றார். ஆனால் வசூலில் 10இல் 7 பங்கைக் கம்பெனிக்கு அளித்துவிட வேண்டிவந்தது. 10இல் 3 பங்கையே காலிங்கராயர் பரம்பரையினர் வைத்துக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் இருந்தது. 30ஆம் பாளையக்காரர் முத்துக்குமாரசாமிக் காலிங்கராயர் நாளிலும் அவ்வாறே நடந்தது. ஜமீன் எல்லைக்குள் 19ஆம் நூற்றாண்டில் 10 கிராமங்கள் அடங்கியிருந்தன. 10,600 ரூபாய் வசூல் ஆயிற்று. அரசுக்கு 4393 ரூபாய் அளிக்கப்பட்டது. இது பிற்கால நிலை. 31ஆம் பாளையக்காரர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர் 1832இல் பிறந்தார். அவர் பட்டத்திற்கு வந்தவுடன் ஆனைமலை, மாச்சி நாய்க்கன்குட்டை போன்ற இடங்களில் சில பகுதிகளை விலைக்கு வாங்கினார். அங்கு மாளிகைகளையும் கட்டினார். இவர் சிறுவராய் இருக்கும்பொழுதே இவர் தாயார் நஞ்சையம்மாள் தன் சேமிப்புப் பணத்தைக் கொண்டு அம்பராம் பாளையத்தில் ஒரு பெரிய மாடி வீட்டைக் கட்டினார். அது பிற்காலத்தில் தங்கும் சத்திரமாகப் பயன்படுத்தப்பட்டது. இவர் 23-4-1874 ஆம் ஆண்டு காலமானார். அடுத்து 32ஆம் பாளையக்காரராகச் சிவசுப்பிரமணிய திருமூர்த்திக் காலிங்கராயர் பட்டத்திற்கு வந்தார். ஜமீன் காரியங்களில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். சில புதுக்கிராமங்களையும் விலைக்கு வாங்கினார். தமிழில் மிகப் புலமை கொண்ட அவர் ஆங்கிலத்தையும் தனியாக ஓர் ஆசிரியரிடம் கற்றார். வேதாந்த ஆராய்ச்சியில்<noinclude></noinclude> r6e19udr1utyjdzs9adlnzj4bwvk4ud பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/100 250 456545 1838654 1837937 2025-07-03T11:39:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||99|}}</noinclude>தேர்ச்சி பெற்று விளங்கினார். இரண்டாம் சந்திர குப்தரும் ஹர்ஷரும் அக்பரும் தமிழகத்து மன்னர்களில் பலரும் எப்பொழுதும் வேதாந்த வல்லுநர்களைத் தம் அருகிலேயே வைத்துக் கொண்டிருந்தது போல இவரும் வேதாந்தப் பண்டிதர்களையும் தமிழ்ப் புலவர்களையும் தம் அருகிலேயே வைத்துக் கொண்டிருந்தார். எனவே இவரை அனை வரும் ‘வேதாந்த துரை’ என்றழைத்தனர். 7 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த இவர் 1881 ஆம் ஆண்டு காலமானார். பின்னர் இவருடைய தம்பி முத்துராமசாமிக் காலிங்கராயர் 33ஆம் பாளையக்காரர் ஆனார். இவர் 24-1-1864இல் பிறந்தார். 17ஆம் வயதில் பாளையக்காரர் ஆனார். இவர் இளமையில் குதிரை ஏற்றத்திலும் வேட்டையாடுவதிலும் சிறந்து விளங்கினார். மற்போரிலும் உடற்பயிற்சியிலும் ஆர்வம் காட்டினார். இசையை முறையாகக் கற்றதோடு சிறந்த இசைப் புலவர்களையும் ஆதரித்தார். பாளையக்காரரானவுடன் திரு ரைட் என்ற ஆங்கிலேயரிடம் தனியாக ஆங்கிலம் கற்றார். அரண்மனையை அழகுபடுத்துவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஜமீன் வருமானத்தை உயர்த்தினார். இவர் செய்த எல்லாச் சிறந்த பணிக்கும் திருவனந்தபுரம் மானுப்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். புலவர்க்கு என்றும் ஓய்விலாது உதவு கீர்த்தி ஓங்க வாழ்பவர் சமத்தூர்க் குறுநில மன்னர் வானவராயர் மரபினர். சேர அரசிடம் வானவராயர் பட்டம் பெற்றவர்கள். வணங்காமுடிப் பட்டம் பெற்ற அவர்கள் கொங்கு வேளாளரில் பவள குலத்தின் பண்புடைத் தலைவர்கள். 1894இல் சமத்தூர்ப் பாளையக்காரர் வானவராயர் நோய்வாய்ப்பட்டார். ஊத்துக்குழிப்பாளையக்காரருக்கு உறவினரான சமத்தூர்ப் பாளையக்காரர் தன்மகனை ஊத்துக்குழிப் பாளையக்காரரிடம் ஒப்படைத்தார். சமத்தூர்ப் பாளையக்காரரும் ஊத்துக்குழியில் தங்கியிருந்து 14-11-1895இல்<noinclude></noinclude> 0irtrin53lejk62bwcrenugx7chaacm பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/101 250 456546 1838657 1837942 2025-07-03T11:42:11Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||100|}}</noinclude>காலமானார். கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஊத்துக்குழிப் பாளையக்காரரிடமே சமத்தூர்ப் பாளையம் இருக்கட்டும் என்று செய்த பரிவுரையை அரசு ஏற்றுக் கொண்டது. சமத்தூர் ஜமீன் வருமானத்தை உயர்த்திச் சீர்திருத்தங்கள் பல செய்து சமத்தூர் இளைய ஜமீன்தாருக்கும் தன் மகளுக்கும் 1901இல் மிகச் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார். மைவாடி ஜமீன்தார் இறந்தவுடன் மாவட்ட நீதிபதியின் அதிகாரப் பொறுப்பிலிருந்த இந்த ஜமீனை அரசு வேண்டுகோள்படி 1898இல் அதன் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றார். தாலூக்காக் கழகம், மாவட்டக் கழகம் இவைகளில் உறுப்பினராக இருந்தார். கோவை வேளாண்மைக் கல்லூரியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல நிலையங்களுக்கும் விழாக்களுக்கும் ஆயிரக் கணக்கில் நன்கொடைகள் அளித்தார். 1912இல் ஊத்துக்குழியில் ஒரு தொடக்கப் பள்ளியை ஏற்படுத்தி 3000 ரூபாய் மானியம் அளித்ததுடன் மாத வருமானம் நிலைத்து மானியமாக வரவும் தக்க ஏற்பாடுகள் செய்திருந்தார். மிகச் சிறந்த அறிவாளியான இவர் பணியாட்களிடமும் மிக அன்பாக நடந்து கொண்டார். 1910ஆம் ஆண்டு கொடிய பிளேக் நோய் உண்டானபோது அரிய பணிகள் பல புரிந்தார். இவருடைய பணியைப் பாராட்டிய அரசாங்கத்தினர் இவருக்கு 1913இல் திவான்பகதூர் பட்டமளித்துச் சிறப்பித்தனர். 1917இல் ஜமீன்தார்கள் பிரதிநிதியாக இந்திய அரசுச் செயலாளர் மாண்டேகுவையும் இந்திய வைசிராய் செம்சுபோர்டையும் சந்தித்தார். 1917ஆம் ஆண்டு ஆகஸ்டு 19, 20 தேதிகளில் பிராமணரல்லாதோர் மாநாடு (Non-Brahmin Conference) கூட்டப்பட்டபோது, வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்து முக்கியப் பங்கேற்றார். அவர் காலத்தில் நடத்தப்பட்ட நான்கு மாநாடுகளிலும் கலந்து கொண்டார். {{nop}}<noinclude></noinclude> ltac7hrg7d7g0vsglx219fjyy73p5qu பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/102 250 456547 1838662 1838052 2025-07-03T11:46:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||101|}}</noinclude>தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தில் (South Indian Liberal Federation) உறுப்பினராக இருந்தார். இன்றைய தமிழக அரசியலுக்குக் கால்கோளாக இருந்த அந்த அமைப்புக்களைத் தோற்றுவித்துக் கட்டிக் காத்த பெருமை முத்துராமசாமிக் காலிங்கராயரையே சேரும். சென்னை ஜமீன்தார்கள் நிலக்கிழார்கள் சங்கத்தின் (Madras Zamindars and Landlords Association) துணைத் தலைவராக விளங்கினார். இவர் பொதுமக்களுக்காகப் பல்வேறு நன்கொடைகளைப் பெரிய அளவில் வழங்கினார். {{left_margin|3em|<poem> 1. பிராமணரல்லாதோர் மாநாடு 2. இங்கிலாந்து இளவரசரின் திருமணம் 3. சென்னையில் அமைக்கப்பட்ட ராஜ்குமார் கல்லூரி 4. டாக்டர் நாயர் அவர்களின் நினைவு நிதி 5. குன்னூரிலுள்ள பாஸ்டர் நிறுவனம் 6. வேல்ஸ் இளவரசரின் வரவேற்புக்குழு 7. குன்னூரிலுள்ள லாலி மருத்துவமனை</poem>}} ஆகியவற்றிற்குப் பெருந்தொகை வழங்கினார். இவர் 1918இல் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக் குன்னூர், கொடைக்கானலில் ஓய்வெடுத்து வந்தார். 1931இல் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார். கோவையில் முக்கியமான தெரு ஒன்றிற்குக் காலிங்கராயர் தெரு என்று பெயர் வைத்திருப்பது கோவை மக்களுக்கு இக்குடும்பத்தின் மீது இருந்த பற்றுக்கு எடுத்துக் காட்டாகும். {{nop}}<noinclude></noinclude> 2k1uarh3tsjyj59fy0z3rosw6fvvbun பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/103 250 456548 1838669 1838055 2025-07-03T11:52:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||102|}}</noinclude>34ஆவது பாளையக்காரராக வந்தவர் அகத்தூர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர். இளமையிலேயே தந்தை இருக்கும்போதே பல பொதுப்பணிகளில் ஈடுபட்டார். முதல் உலகப் பெரும் போரின்போது படைக்கு ஆட்களைச் சேர்ப்பதில் மிக உதவினார். கோவையில் கௌரவ நீதிபதியாக இருந்தார். படையில் பெரிய அதிகாரியாக இருக்கச் சென்னை ஆளுநரால் அழைக்கப்பட்டார். ஆனால் இவர் அப்பதவியில் சேரவில்லை. இவருடைய பணிகளைப் பாராட்டிப் பட்டங்களும் பதக்கங்களும் பல வழங்கப்பட்டன. 1932இல் வேல்ஸ் இளவரசர் சென்னை வந்தபோது அவரைச் சிறப்புடன் வரவேற்றார். நாடு போற்றும் நல்லோராக விளங்கிய இவர் 1936இல் மறைந்தார். இவருக்கு அளிக்கப்பட்ட பல பாராட்டுக்களில் மாதிரிக்காக இரண்டு இங்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. {{center|{{larger|<b>I</b>}}{{larger|<b>The Kumara Poligar of Uttukuli</b>}}}} Sri Agathur Muthu Krishnaswami Kalingarayar, the eldest son and heir, is now actually managing the affairs of the poliem after the retirement of his revered father. He took a leading part in the year 1919 in the recruitment of men for field service in Mesapatomia. He was appointed Honorary Assistant Recruiting Officer for the Pollachi Taluk. He recruited the largest number of men from Coimbatore District, especially in the Pollachi Taluk. He was awarded a certificate of Merit and a Medal for the valuable Services rendered in the recruitment of men for field service. The following is a copy of the badge and sannad presented;— {{nop}}<noinclude></noinclude> da5xx5g0ydq5kiqw17d2vpkcxot76it 1838671 1838669 2025-07-03T11:53:02Z Desappan sathiyamoorthy 14764 1838671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh||102|}}</noinclude>34ஆவது பாளையக்காரராக வந்தவர் அகத்தூர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர். இளமையிலேயே தந்தை இருக்கும்போதே பல பொதுப்பணிகளில் ஈடுபட்டார். முதல் உலகப் பெரும் போரின்போது படைக்கு ஆட்களைச் சேர்ப்பதில் மிக உதவினார். கோவையில் கௌரவ நீதிபதியாக இருந்தார். படையில் பெரிய அதிகாரியாக இருக்கச் சென்னை ஆளுநரால் அழைக்கப்பட்டார். ஆனால் இவர் அப்பதவியில் சேரவில்லை. இவருடைய பணிகளைப் பாராட்டிப் பட்டங்களும் பதக்கங்களும் பல வழங்கப்பட்டன. 1932இல் வேல்ஸ் இளவரசர் சென்னை வந்தபோது அவரைச் சிறப்புடன் வரவேற்றார். நாடு போற்றும் நல்லோராக விளங்கிய இவர் 1936இல் மறைந்தார். இவருக்கு அளிக்கப்பட்ட பல பாராட்டுக்களில் மாதிரிக்காக இரண்டு இங்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. {{center|{{larger|<b>I</b>}}<br>{{larger|<b>The Kumara Poligar of Uttukuli</b>}}}} Sri Agathur Muthu Krishnaswami Kalingarayar, the eldest son and heir, is now actually managing the affairs of the poliem after the retirement of his revered father. He took a leading part in the year 1919 in the recruitment of men for field service in Mesapatomia. He was appointed Honorary Assistant Recruiting Officer for the Pollachi Taluk. He recruited the largest number of men from Coimbatore District, especially in the Pollachi Taluk. He was awarded a certificate of Merit and a Medal for the valuable Services rendered in the recruitment of men for field service. The following is a copy of the badge and sannad presented;— {{nop}}<noinclude></noinclude> lbw84pmk8t8gqkc6qmrnffxkqr3xjmc பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/130 250 456575 1838310 1482168 2025-07-02T14:26:13Z Mohanraj20 15516 1838310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" />{{rh||124|}}</noinclude>எல்லை துறையூருக்கு வடக்கு இந் நான்கெல்லையும் எல்லைக்குட்பட்ட நிலமும் நஞ்சையும் புஞ்சையும் நத்தமும் குளமும் குளப்பரப்பும் கீழ்நோக்கிய கிணறும் மேல் நோக்கிய மரமும் இதில் எப்பேர்ப்பட்ட வரியும் மண்டல முதல் மகமையும்..... வைய்யாசி முதல் தேவதானமாக இறையிலியாகத் தந்தோம்.......யாண்டு 4 நாள் 267...இவை காலிங்கராயன் எழுத்து. {{nop}}<noinclude></noinclude> 0ffv6xvnxaq6fu1u47ssj6tz3w2hg7u 1838359 1838310 2025-07-02T16:13:43Z Mohanraj20 15516 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1838359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||124|}}</noinclude>எல்லை துறையூருக்கு வடக்கு இந் நான்கெல்லையும் எல்லைக்குட்பட்ட நிலமும் நஞ்சையும் புஞ்சையும் நத்தமும் குளமும் குளப்பரப்பும் கீழ்நோக்கிய கிணறும் மேல் நோக்கிய மரமும் இதில் எப்பேர்ப்பட்ட வரியும் மண்டல முதல் மகமையும்..... வைய்யாசி முதல் தேவதானமாக இறையிலியாகத் தந்தோம்.......யாண்டு 4 நாள் 267...இவை காலிங்கராயன் எழுத்து. {{nop}}<noinclude></noinclude> 8dup810rejb2jselkrdisid2p9pm5gq பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/131 250 456576 1838360 1838154 2025-07-02T16:16:06Z Mohanraj20 15516 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1838360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude> {{center|{{larger|<b>பிற்சேர்க்கை எண்-2</b>}}}} {{center|{{x-larger|<b>காலிங்கராயன் அணை கட்டின பட்டயம்</b>}}}} ஸ்ரீமது சுபநமஸ்து ஸ்ரீமன் மகாமண்டலீசுவரன் பாசைக்கி தப்புவராத கண்டன் ஆரிய தள விபாடன் ஆரிய மோகந்தவிழ்த்தான் துலுக்கர் தள விபாடன் துலுக்கர் மோகந் தவிழ்த்தான் தொட்டிய தள விபாடன், தொட்டிய மோகந் தவிழ்த்தான் ஒட்டிய தள விராடன் ஒட்டிய மோகந் தவிழ்த்தான் பலநாவுக் குறைவராத கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாத கண்டன் வினவிசை கனவிசை ஈழமும் ஆழமும் ஓரப்பான் பட்டணமும் ரதபதி கெசபதி அசுவபதி நரபதி நால்வகைப் படைமோடுங்கூடி கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசமார்த் தாண்டன் ராசகுல திலகன் ராசகெம்பீரன் நாடாளு நாயகன் றாட குலதுங்கன் பூலோக தேவேந்திரன் ஆரண முறையார் ஆறிலொன்று கடமை கொண்டு ஆடுங்கடைமணி நாவசையாமல் அரசாளும் கரிகால் சோழன் மகாராசாவய்யரவர்கள் யகமகிழ்ந்து கொடுக்கும் மக்கள் முறையும் தரிப்பான நன்மையும் பொருந்தியிருத்தியிருந்தபடியினாலே பொன் ஊஞ்சலும் பூந்தேரும் பூச்சக்கரக் குடையும் பெற்றருளிய கங்கா குல திலகன் காராள சிரோமணி மேழிக் கொடியோன் மின் குவளை மாளிகை மார்பன் நாற்பத்தி யெண்ணாயிரம் கோத்திரத்துக்கும் முதன்மையாயிருக்கும் கொங்கு தேசத்துக்குச் சேர்ந்த தென்கரை நாட்டு செட்டி வேணாவுடையான் நரைய நாடு காசிப கோத்திரம் பிரமியணபிள்ளை பொங்கலூரு தெய்வசிகாமணி பூந்துறை நாடு வாரணவாசி வெள்ளோட்டுக் கனகபுரம் நஞ்சையன் ஆருநாட்டு மசக்காளி வேலணன் குருப்பை நாட்டு ரகுநாதணன் ஒடுவெங்க நாடு முத்துவேலப்பன் நல்லுருக்கா நாடு வானவராயன் வாரக்க நாடு பொங்கணன் காவுலுக்கா<noinclude></noinclude> lptxx24wlazctfk6pcvj1q0oosbctuw பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/132 250 456577 1838361 1838157 2025-07-02T16:16:06Z Mohanraj20 15516 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1838361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh||126|}}</noinclude>நாடு உடையணன் எங்களைப் பத்துப் பேரையும் காங்கய நாட்டுச் சரவண காங்கேயன் பார்த்துச் சொன்ன வசனம் கனகபுரத்து நஞ்சையன் மகன் லிங்கையன் வானியாற்றில் அணைகட்ட வேணுமென்று நம்மையுந் தாவு துறை பார்த்து வரச் சொல்ல வேணுமென்று யீரோட்டுக்கு யெங்களை அழைத்துக்கொண்டு போய் வானியில் தாவுதுறை அணை கட்டுகிறதற்குப் பார்த்த இடத்தில் வெள்ளோட்டிலிருக்கும் வெள்ள வேட்டுவன் பாளையக்காரன் யென்னுடைய எல்லையிலே தாவுதுறை பார்க்கிறதென்ன அணை கட்டுகிறோமென்று பேசுகிறதென்ன நீங்கள் அணைகட்ட வேண்டாமென்று பிலத்துடனே மறித்தான். அதன் பிறகு நாங்கள் பத்துப் பேரும் ஈரோட்டுக்கு வந்து அதுக்குத் தக்கின சோமாசிகளை அனுப்பிவச்சு வெகு பிரீதியுடனே சொல்லக் கேளாதபடியினாலே இவனுடைய கெருவத்தையடக்கி அந்தத் தாவில் அணை கட்டாமல் விட்டுப் போறதில்லையென்று பிரதிக்கிணை செய்து அவையஸ் தங்குடுத்து ரண்டு மூணு மாச வரைக்கும் அவனுடனே சண்டை செய்து யெங்களினாலே செயிக்க மாட்டாமல் எழச்சுப் போயிருக்கும் வேளையிலே எண்ணை மங்கலம் பதியிலேயிருக்கும் காளியண்ணன், மதுரைக்குப் போய் சமஸ்தானம் ஆளப்பட்ட உக்கிர குமார ராசா சமூகத்துக்குப் போயி வெகுமதியும் கட்டக்கயிரும் வெட்ட வாளும் துஷ்ட சம்மாரமும் சிஷ்ட பரிபாலனமும் செய்து கொண்டிருக்கச் சொல்லி வரப்பிரசாதம் வாங்கிக்கொண்டு ஆனைமலை நாட்டு பாளையப்பட்டு செங்கோல் செலுத்திக் கொண்டு இருக்கிற நாளையிலே நாங்கள் பத்துப் பேருங்கூடி காலிங்கராயனை ஆனைமலைக்கு அனுப்பிவிட்டு காளியணனை யீரோட்டுக்கு வரவழைத்து வெள்ளவேட்டுவன் விருத்தாந்தமெல்லாம் வழிவிபரமாய்ச் சொல்லி அவனைச் செயம்பண்ணி அந்த ஆற்றில் அணை கட்டுகிறபடிக்குச் செயிச்சுக் கொடுக்க வேணுமென்று மெத்தவும் பத்துப் பேருங்கூடி வெகுவிதத்திலே கேட்டுக் கொண்டதுனாலே<noinclude></noinclude> 31iydcez9mohvnhjbh96s2dlkdymvf8 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/133 250 456578 1838362 1444403 2025-07-02T16:23:02Z Mohanraj20 15516 1838362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||127|}}</noinclude>நல்லது என்று சம்மதிச்சு அந்த வெள்ளவேட்டுவன் இருக்கும் வெள்ளோட்டுக்கு ஒருரவு கொண்டு போயி அவன் ஊடையத்தையும் தகர்த்து ஊரையும் கொள்ளைப்பண்ணி சிறிது ராணுவங்களையும் வெட்டி அவன் தலையும் வெட்டிக்கொண்டு வந்து எல்லோரும் காணத்தக்கதாயி வய்த்தபடியினாலே நாங்களிருபத்து நாலு நாட்டாருங்கூடிச் செட்டி வர்த்தகங்கள் பலபட்டரைச் சாதிகளையும் வரவழைத்து நம்ம சனங்கள் மேற்கு நல்லூருக்கா நாடு ஆனைமலைநாடு காவிலுக்கா நாடு வாரக்க நாடு ஆருநாடு குருப்புநாடு ஒடுவங்க நாடு யிந்த ஏழு நாட்டுலெயும் சீவார்த்தனஞ் செய்ய வேண்டிய நிமுத்தியமாக பரந்து போயிருக்கும் சனங்கள் அந்தந்தச் சாதிகளுக்குண்டான வரமுறைமை தாய் தகப்பனுக்கு அமுதுபடையாதவன் புருசன் பெண்சாதியை முடுக்கிவிட்டவன் பெண்சாதியானவள் புருஷன் வார்த்தைக்கு ஏறுமாறாகப் பேசினவள் ஒருத்தருக் கொருத்தர் மித்துருபேதம் செய்கிற பேர்கள் இப்படி நாலு விதமாயி முறைமை தப்பி நடவாமல் தரும் நீதமாய் நடக்கும்படிக்கு இருபத்திநாலு நாட்டாருங்கூடி செட்டி வர்த்தகர்களும் பலபட்டரைச் சாதிகளும் சம்மதிச்சு காளியணனுக்கு சாதிப்பட்டயம் நேமுகம் செய்து கொடுக்க வேணுமென சகலமான செனங்களும் அனைவருங்கூடி யீரோட்டுக் கொங்கிலியம்மன் சன்னதிக்குப் போயி அம்மனுக்குப் பதினாயிரம் பழம் நெய்வேதினஞ் செய்து பின்பு காளியணனுக்குச் சாதிப் பட்டயங் குடுத்தபோது பொங்கலூரு நாட்டு தெய்வசிகாமணி வந்து இந்தப்பட்டயம் எனக்குச் சேர வேணுமென்று மரித்துச் சொன்னான் நல்லதுயென்று தாராபுரம் பிரமியணன் சொல்லும் வசனம்—உங்கள் ரெண்டு பேர் படிக்குத் திருவுளச் சீட்டெழுதி அம்மன் பாதத்திலே வய்த்து ரெண்டு பேரையும் பார்த்துச் சுனையிலே ஸ்னாநஞ் செய்து அம்மனைப் பிரதட்சினை வலமாயிவந்து தெய்வசிகாமணி நான் முன்னமே எடுப்பேனென்று சமத்துச் சொன்னான்<noinclude></noinclude> hnptwdigqy3cpj9qmqn1h34bsxd5fmm பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/134 250 456579 1838365 1444404 2025-07-02T17:15:44Z Mohanraj20 15516 1838365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh|123||}}</noinclude>சரவண காங்கேயன் சொல்லும் வசனம் நீ போயி இந்தப் பேர்ப் படிக்கி இந்தச் சீட்டு உன் கயிக்கு வந்தால் உனக்கே நேமுகஞ் செய்து முடிக்கிறோமென்று சொன்னார்கள். அப்போ கோவிலுக்குள்ளே அடியெடுத்து வைக்கவும் அம்மன் மடியிடையில் வயிலாயிருந்து ஒரு நீர்ச்சர்ப்பம் வடமுகாக்கினி போலும் சீறிக் கோபித்தெழுந்தது கண்டு பயந்து நடு நடுங்கி பிரண்டு கொண்டு பின்னிட்டுவந்து சோபந்தட்டி மயங்கி விழுந்தவனை காளியணன் எடுத்து மார்போடணைத்து நெஞ்சத்தட்டி அம்மனைத் தியானிச்சு தண்ணீர் முகத்துக்கெரச்சு பயத்தை நிறுத்தி அவன் மனசைத் தைரியப்படுத்திப் பண்ணினான். அதன் பிற்பாடு பத்துப் பேருங்கூடி காளியண்ணனை உன் பேர்ப்படிக்கிச் சீட்டு எடுத்து தரச் சொன்னார்கள். அதன் பிறகு சுனையிலே ஸ்நானஞ் செய்து அம்மனை வலப்பிரதட்சிணமாய் சுத்திவந்து கோவிலுக்குள் புகவும் நாகசர்ப்பம் கோவம் மாறி மாயமாய்ப் போய்விட்டது. அதன் பிறகு அம்மன் பாதத்திலேயிருந்த திருவுளச்சீட்டு எடுத்து வந்து பத்துப்பேருங் காணத்தக்கதாகச் சபையிலே வைத்தான் பத்துப் பேரும் சீட்டெடுத்துப் பார்த்து உன் பேரு படிக்குச் சீட்டுயிருக்குதென்று அனைவருங்கூடிச் சொன்னார்கள். யெண்ணை மங்கலத்திலேயிருக்குற ஆனைமலை காளியண்ணனுக்குச் சாதிப் பட்டயங்குடுத்து பாகுபச்சடமும் ரெட்டப்படி பாக்கு வெத்திலையும் குதிரை குடை தீவட்டி யும் ஒத்தைக் கொம்பும் ஒத்த கும்பமும் மகப்பட்டையும் கட்டக்கயிறும் வெட்ட வாளும் அடிக்க ஆத்தி யாக்கையும் அஷ்டாவுக்காரமும் வேண்டிய விருதுகளும் அளியாத தருமமும் சிலா சாசின பட்டயம் அமைந்தது. {{nop}}<noinclude></noinclude> 0baimyvbve08m2kp1nc88tb9yk2cls2 1838366 1838365 2025-07-02T17:16:33Z Mohanraj20 15516 1838366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh|123||}}</noinclude>சரவண காங்கேயன் சொல்லும் வசனம் நீ போயி இந்தப் பேர்ப் படிக்கி இந்தச் சீட்டு உன் கயிக்கு வந்தால் உனக்கே நேமுகஞ் செய்து முடிக்கிறோமென்று சொன்னார்கள். அப்போ கோவிலுக்குள்ளே அடியெடுத்து வைக்கவும் அம்மன் மடியிடையில் வயிலாயிருந்து ஒரு நீர்ச்சர்ப்பம் வடமுகாக்கினி போலும் சீறிக் கோபித்தெழுந்தது கண்டு பயந்து நடு நடுங்கி பிரண்டு கொண்டு பின்னிட்டுவந்து சோபந்தட்டி மயங்கி விழுந்தவனை காளியணன் எடுத்து மார்போடணைத்து நெஞ்சத்தட்டி அம்மனைத் தியானிச்சு தண்ணீர் முகத்துக்கெரச்சு பயத்தை நிறுத்தி அவன் மனசைத் தைரியப்படுத்திப் பண்ணினான். அதன் பிற்பாடு பத்துப் பேருங்கூடி காளியண்ணனை உன் பேர்ப்படிக்கிச் சீட்டு எடுத்து தரச் சொன்னார்கள். அதன் பிறகு சுனையிலே ஸ்நானஞ் செய்து அம்மனை வலப்பிரதட்சிணமாய் சுத்திவந்து கோவிலுக்குள் புகவும் நாகசர்ப்பம் கோவம் மாறி மாயமாய்ப் போய்விட்டது. அதன் பிறகு அம்மன் பாதத்திலேயிருந்த திருவுளச்சீட்டு எடுத்து வந்து பத்துப்பேருங் காணத்தக்கதாகச் சபையிலே வைத்தான் பத்துப் பேரும் சீட்டெடுத்துப் பார்த்து உன் பேரு படிக்குச் சீட்டுயிருக்குதென்று அனைவருங்கூடிச் சொன்னார்கள். யெண்ணை மங்கலத்திலேயிருக்குற ஆனைமலை காளியண்ணனுக்குச் சாதிப் பட்டயங்குடுத்து பாகுபச்சடமும் ரெட்டப்படி பாக்கு வெத்திலையும் குதிரை குடை தீவட்டியும் ஒத்தைக் கொம்பும் ஒத்த கும்பமும் மகப்பட்டையும் கட்டக்கயிறும் வெட்ட வாளும் அடிக்க ஆத்தி யாக்கையும் அஷ்டாவுக்காரமும் வேண்டிய விருதுகளும் அளியாத தருமமும் சிலா சாசின பட்டயம் அமைந்தது. {{nop}}<noinclude></noinclude> 3zxnoirvloumgi3zlfqjvhfub52rtbv பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/135 250 456580 1838371 1444405 2025-07-02T17:33:37Z Mohanraj20 15516 1838371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{center|{{larger|பிற்சேர்க்கை எண்—3}}}} {{center|{{x-larger|<b>காலிங்கராயன் கைபீது1</b>}}}} தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுக்கா ஊற்றுக் குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டன் என்னப் பட்டவருடைய வமிசாவளி முதலான கைபீது என்ன வென்றால்:- {{larger|<b>பூர்வீகம்</b>}} பூர்வத்தில் சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளரென்று பேர் பிரசித்திப்பட்ட நற்குடி நாற்பத் தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஆக அரவதுனாயிர கோத்திரக்காரர்களில் பிற்காலும் ரிஷபகிரிச் சோளராசா மகளை மோரைச் சரிந்த சேரராஜா பாணிகிரகணம் பண்ணிக் கொண்ட படியினாலே சோளராசாவின் மகள்தனக்கு சீதனம் தன் தகப்பனாரைக் கேட்டுக் கொண்ட படியினாலே அந்தச் சமயத்தில் நற்குடி நாற்பத் தெண்ணாயிரம் குடியில் எண்ணாயிரம் குடி சீதனம் கொடுத்தபடியினாலே அப்போ வரப்பட்ட வேளாளனுக்கு தென் திசை நோக்கி வந்தபடியினாலே தென் திசை வேளாளர் என்று பேர்வரப் பட்டது. {{larger|<b>கொங்கில் குடியேற்றம்</b>}} சேர தேசத்துக்கு வரப்பட்ட வேளாளருக்கு சேரனுக்கு கொங்கரென்றும் பேர் இருக்கிற படியினாலே கொங்கு வேளாளரென்றும் கொங்கு இருபத்துனாலுநாடு என்றும் {{rule|10em|align=}} 1இதன் பிரதி தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ளது. இது அங்குப் பிரதி செய்யப்பெற்றது. எண். டி. 3044.<noinclude></noinclude> s6axv19tyzr0m4gytlx5yr691bdrxpl பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/136 250 456581 1838370 1444406 2025-07-02T17:33:20Z Mohanraj20 15516 1838370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||130|}}</noinclude>ஏற்படுத்தியிருக்கும் நாளையில் அக்காலத்தில் என் வமிசத்தானான காலிங்க கவுண்டன் என்கிறவன் பூந்துரை நாட்டுக்கு காணியாளனாய் மேல்கரை முப்பத்து ரெண்டு கிராமத்துக்குச் சேர்ந்த வெள்ளோடு குடியிருப்பு காரனுக்குத் தம்முடைய இஷ்ட தெய்வமான சர்வேஸ்வர பாடகவல்லி நாய்ச்சியார் தேவஸ்தானம் சீர்னோத்தாரணம் பண்ணிக்கொண்டு இருந்தான். {{larger|<b>அணை கட்டக் காரணம்</b>}} பூந்துறை நாட்டுக்கு நாட்டானாய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்காரனாய் இருக்கும் நாளையில் கங்கை குலம் சாத்தந்த கோத்திரம் காலிங்கக் கவுண்டன் என்கிற தன்னுடைய குமாரனுக்குக் கலியாணம் பண்ண வேணுமென்று நினைச்சு மாமன் மச்சுனனான பண்ண குலத்தாளி வீட்டிலே பெண் கேட்டுக் கலியாணம் செய்யத்தக்கதாக யோசிச்சு பெண் சம்மதமாகி அந்த ராத்திரி சாப்பிடுகிறதுக்கு சமையல் பண்ணுகிறவன் வந்து இவர்களுக்குச் சமையல் பண்ணுகிறதுக்கு எந்த அரிசி போடுகிறது என்று கேட்க்க, அவாள் கம்பு விளைகிற சீர்மையிலே இருக்கிற பேர்களுக்கு எந்த அரிசி என்று தெரியவா போகிறது பழ அரிசி தானே போடு போவென்று சொல்ல அது சேதி ஷை காலிங்கக் கவுண்டன் கேட்டு அவாள் வீட்டிலே சாப்பிடாதபடிக்கு இருந்து நெல்லு விளையும் படியாக நீர்ப்பாங்கு உண்டு பண்ணிக்கொண்டு உங்கள் வீட்டுப் பெண் கொண்டு சாப்பிடுகிரோமென்று சபதம் கோரிக்கொண்டு வந்து தன் ஊரிலே வந்து சேர்ந்து மனதிலே தனக்குத் தோணியிருக்கும் நாளையில் இவர் இஷ்டமான சர்வேசுரரைத் தன்னுடைய அபீஷ்டம் சித்தியாக வேணுமென்று நினைச்சு இருக்கும் வேளையில் இராத்திரி சொப்பனத்திலே ஒரு விருத்த பிராமண ரூபமாய் வந்து இந்த சர்ப்பம் போகிற வழியாக வாய்க்கால் வெட்டிவைக்கச் சொல்லி காரணமாக சொப்பனமாச்சுது. அந்தச்<noinclude></noinclude> ix7a2zbfpgbq4pdp4g0do7h8img78wy பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/137 250 456582 1838396 1444407 2025-07-03T05:12:43Z Mohanraj20 15516 1838396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||131|}}</noinclude>சொப்பனமான உடனே கண் விழித்துப் பார்க்குமிடத்தில் ஒரு சர்ப்பம் பிரதிட்சமாக இருந்தது தான் கண்டு இருக்கப் பட்ட சொப்பனத்தைக் கண்டு அறிய வேண்டு மென்று நினைச்சு வீடுகட்கு வெளியிலே வந்த சமயத்தில் சர்ப்பம் இவனைக் கண்டு முன்னே நடந்தது அந்தச் சர்ப்பத்தைக் கண்டு தொடர்ந்து போய் இந்த வழியாகப் போகுதென்று அடையாளங்கள் போட்டுக் கொண்டு வருகிறபோது கொடுமுடி க்ஷேத்திரத்தில் சர்ப்பம் நின்றது. {{larger|<b>வாய்க்கால்</b>}} அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாய்க்காலும் வெட்டி வைக்க வேணுமென்று நினைத்து பவானி ஆற்றிலே குறுக்க அணை கட்டி வைக்க வேணுமென்கிறதாக நினைத் திருந்த சமயத்திலே பவானிக் கூடல் ஸ்தானத்துக்கு மேல் புறத்தில் பவானி ஆத்துலே சர்ப்பம் குறுக்கே படுத்துக் கொண்டது. அந்த இடத்திலே அணை கட்டி வைக்க வேணுமென்று பவானி கூடலுக்கு வடக்கே வூராச்சிமலையும் தடமும் சுத்தக் கிரயத்துக்கு வாங்கி அணைகட்டுகிற சமயத் திலே வெள்ளை வேட்டுவர் என்கிற பாளையக்காரன் அணை கட்டுகிற எல்லை தன்னதென்று சண்டை பண்ணினமையாலே வெள்ளை வேட்டுவரை ஜெயிச்சு அணையும் கட்டி வெகு திரவியங்கள் செலவளிச்சு சர்ப்பம் போயிருந்த அடையாளங்களைப் பிடிச்சு வாய்க்கால் வெட்டி கொடுமுடி வரைக்கும் வாய்க்கால் வெட்டி வைச்சு பவானி அணை முதல் கொடுமுடி ஸ்தானத்துக்கு அத்து வரைக்கும் முக்காத வழி தூரத்துக்கு சர்ப்பம் போன போக்கிலே வாய்க்கால் வெட்டின ஏழுகாதவழி நடை கோணக் கோணலாக வாக்கியால் வெட்டி வச்சான். {{larger|<b>பெயர்க் காரணம்</b>}} அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாக்கியால் வெட்டி வச்சு பவானி ஆற்றிலே சர்ப்பம் படுத்துயிருந்த யிடத்திலே<noinclude></noinclude> ledr578lntx5hyfmvfh3eygd2zldnlt பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/138 250 456584 1838398 1444444 2025-07-03T05:14:53Z Mohanraj20 15516 1838398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||132|}}</noinclude>அணையும் கட்டி வச்சபடியினாலே காலிங்கக் கவுண்டன் என்றும் பேர் வரப்பட்டுப் பிரிசித்திப்பட்டவனாய் இருக்கும் நாளையில் முன்னாலே சபதம் கோரியிருக்கப்பட்ட பண்ணை குலத்திலே தன் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொண்டு அம்ச புருஷனாய் தெய்வ கடாட்சத்துனாலே சம்பத்துனாம தேயமான காலிங்கன் என்கிற நாமதேயமும் வேளாள சாதியானபடியினாலே கவுண்டர் என்கிற நாம தேயமும் ரெண்டு நாமதேயமும் சேர்ந்து காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் பிரசித்திப்பட்டவனாய் தான் கட்டி வச்ச அணைக்குக் காலிங்கக் கவுண்டன் அணையென்றும் காலிங்கக் கவுண்டன் வாக்கியாவென்றும் தான் உண்டு பண்ணின நீர்ப்பாங்கு நிலத்தில் விளையப்பட்ட காலிங்க நெல்லு யென்று விளையப் பண்ணி சம்பந்த பாந்தியங்களும் செய்து கொண்டு யிருந்தான். {{larger|<b>நாவிதனுக்கு மானியம்</b>}} இப்படி வாக்கியால் வெட்டி அணைகட்டி பிள்ளைக்குக் கலியாணம் பண்ணுகுற வரைக்கும் சபதம் கோரி தீட்சை வளர்த்துக் கொண்டு யிருக்கும் சமயத்தில் தெய்வ கடாட்சத் தினாலே மனோபீஷ்டம் நிறைவேறியிருக்கும் சமயத்தில் ஒரு நாள் ஆயாசத்துடனே நித்திரை பண்ணிக் கொண்டுயிருக்கும் சமயத்திலே ஒரு நாசுவன் தீட்சை மயிரை வாங்கிப் போட்டு நிலைக் கண்ணாடியை எதிரே வச்சு வணக்கத்துடனே நின்று கொண்டுயிருந்தான். நித்திரை தெளிஞ்சு நிலைக் கண்ணாடி பார்த்தவுடனே ஆயுஷ் காரமாய் இருந்த படியினாலே சந்தோஷம் வந்து நாசுவனைப் பார்த்து உனக்கு என்ன வேணுமென்று கேட்டான். அந்த நாசுவன் என் பேர் விளங்கி இருக்கும் படியாக பண்ணவேணுமென்று மனுவு கேட்டுக் கொண்டான் தாம் கட்டி வச்ச அணையோரம் தாம் இருக்கப்பட்ட காலிங்கன் பாளையத்துக்கு தென்புறம் நாசுவன் பேராலே ஊரு உண்டு பண்ணி நாசுவன் பாளையம் என்றும் பேர்<noinclude></noinclude> 76y9tspkwoajpsk306vl0jq8hpm43et பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/139 250 456585 1838399 1444445 2025-07-03T05:17:04Z Mohanraj20 15516 1838399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||133|}}</noinclude>விளங்கப் பண்ணி அந்த நாசுவனுக்கு அந்த பாளையம் சர்வமானியமாகக் கொடுத்தார். இப்படிக்கு காலிங்கராய கவுண்டர் என்கிறபேர் பிரசித்திப்பட்டவராய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்கார ராய் பூந்துறை நாட்டுக்கு நாட்டாதிபத்தியத்தால் உண்டு பண்ணின அணை வாக்கியால் பரிபாலனம் பண்ணிக் கொண்டு பிள்ளை பிள்ளை தலைமுறைக்கும் காலிங்கக் கவுண்டன் என்கிற நாமதேயம் உண்டானவர்களாய் இருந்தார்கள். {{larger|<b>தெய்வமானான்</b>}} பவானிக் கூடலிலே காலிங்கராயன் என்கிறவன் அணை கட்டி வச்சு பேர் பிரசித்தி பண்ணினது கலியுகாப்தம் 2000. காலிங்க கவுண்டன் கட்டி இருக்கப்பட்ட அணையிலே க்ஷ கவுண்டனையும் சர்ப்பத்தையும் சிலாபிரதிமை ரூபமாக கல்வெட்டி வச்சு சிலா சாசனமும் எழுதியிருக்கிறது. அந்த அணை போட்டு இருக்கப்பட்ட இடத்தில் குடிகள் பரம்பரையாய் வருஷப் பிரதியும் உற்சவம் பண்ணிக் கொண்டுவருகிறது. வருஷப்பிரதியும் காலிங்கக் கவுண்டன் பிரதிமைக்கு பூசை நைய்வேத்யம் பண்ணிக்கொண்டு வந்தால் வெள்ளம் வந்து வெள்ளாண்மை விளைஞ்சு கொண்டு வருகிறது. இப்படி ஈஸ்வரர் அனுக்கிரகத்தினாலே மூர்த்திகரம் உண்டாகியிருக்கிறது. ஈஸ்வர அனுக்கிரகத்துனாலே காலிங்க கவுண்டன் என்கிற அம்சை புருஷன் வம்ச பரம்பரையிலே காலிங்க சுவுண்டன் என்று பேர் வச்சுக்கொண்டு வருகிறது. {{larger|<b>ஆனைமலை போன காரணம்</b>}} இப்படிக் காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் பிரசித்திப் பட்டவர்களாய் பலாட்டியனாய் வெள்ளோட்டு பூந்துறை நாட்டாதிபத்தியம் ஆண்டுகொண்டு வரும் நாளையிலே<noinclude></noinclude> gphb69prsffusufhm38bczf9ck5rx6b பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/140 250 456586 1838400 1444446 2025-07-03T05:19:47Z Mohanraj20 15516 1838400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||134|}}</noinclude>கொங்கு இருபத்து நாலு நாட்டுக்கும் பட்டக்காரர்களா இருக்கப்பட்டவர்கள் சரி இருப்பும் சரி மரியாதிகளும் கொடுக்கப்படாது என்று சொன்னதினாலேயும் பூர்வத்திலே சேரமான் பெருமாள் சாத்தந்த கோத்திரக்காரர்களுக்கு காவிடிக்கை நாட்டு பிறவுத்வம் பண்ணிக்கொடுத்து இருக்கிற படினாலேயும் ராயட்டுப் பட்டக்காரர்கள் சரி மரியாதி நடக்க மாட்டாதென்று சொல்லிக்கொண்டபடியினாலே வெள்ளோடுவிட்டு மனவெறுப்பினாலே ஆனைமலை சருவுலே தங்கள் காணியாட்சியான காவிடிக்கா நாடு காடு கொண்டு வனமாய் இருந்த ஸ்தலத்தில் தங்கள் பசுமாடுகளை விட்டுயிருந்து மாடுகளை சம்ரட்சணை பண்ணுகிறதுக்காக தங்கள் ஜனங்கள் இருந்தபடியினாலே காவிடிக்கா நாட்டு வனத்து வந்து மாடுகளையும் பார்த்து மாடுகளுக்கு சம்ரட்சணைக்காகப் பட்டிகளும்போடுவிச்சு அஞ்சாறு சாலைகளும் கட்டிவிச்சு கொங்கு இருபத்து நாலு நாட்டுக்கும் பாளையப்பட்டுகளுக்கும் இவர்களுச்கெல்லாம் அதிக மரியாதைகள் உண்டு பண்ணிக்கொள்ளவேணு மென்று நினைச்சு ராய சமஸ்தானத்துக்குப் போனார். {{larger|<b>ராயர் பேட்டி</b>}} ராய சமஸ்தானத்தில் காத்துக்கொண்டிருக்கும் நாளையில் பண்ணிரண்டு வருஷம் வரைக்கும் ராயரவர்கள் பேட்டியில்லாமல் கையிலே கொண்டு போன திரவியங்கள் எல்லாம் செலவழிந்து போய் கஷ்டப்பட்டுக்கொண்டு அதிவிசனத்தை அடைந்தவனாய் தன்னுடைய இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொண்டு மன வயிரத்தை அடைஞ்ச வனாய் பெனுகொண்டைப் பட்டணத்துக்கு வெளியிலே தென்புறம் காளி கோவிலிலே போய் உசெத்திரமாகப் படுத்துக்கொண்டு இருந்தார். சுத்த உபவாசத்துடனே காளி கோவிலிலே இருக்கப் பட்ட காலிங்கக் கவுண்டன் சொப்பனத்திலே பன்னிரண்டா நாள் இராத்திரி ராயர் குமாரனுக்கு சித்தப் பிரமை பிடிச்ச<noinclude></noinclude> 96f23khwf4cqh8gk2u0sowqyckm3tms பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/141 250 456587 1838401 1444447 2025-07-03T05:22:22Z Mohanraj20 15516 1838401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||135|}}</noinclude>அது நிவாரணம் இல்லாமல் இருக்கிறபடியினாலே என்னுடைய சன்னிதானத்திலே இருக்கப்பட்ட விபூதியைக் கையிலே கொண்டுபோய் அந்தச் சித்தப் பிரமையாய் இருக்கப்பட்டவன் பேரில் போட்டால் சித்தப் பிரமை தீர்ந்து ராச குமாரனாக அரண்மனை போய்ச் சேர்ந்துயிருப்பான். ராயரவர்கள் உன்பேரிலே சந்தோஷமாய் உன் மனோ பீஷ்டம் சித்தியாகும் என்று சொப்பன மாச்சுது. அந்தச் சொப்பனத்தைக் கண்டவுடனே பனிரெண்டு நாள் பட்டினி இருக்கப்பட்டவன் விபூதி யெடுத்துக்கொண்டு பெனுகொண்டா பட்டணத்துக்கு வந்து இது சொப்பனத்து சோதனை பார்த்துக்கொண்டு வருகுற சமயத்தில் ராசகுமாரன் பட்டணத்து வீதிகளிலே சித்த பிரமை பிடிச்சு தன்னப்போலே திரிகிற குறிப்பைக் கண்டு பிடிச்சு ராசகுமாரன் பேரிலே காளியை நினைச்சு விபூதி பேட்டான். அந்த விபூதி தூளி ராசகுமாரன் பேரிலே விழுந்தவுடனே சித்தபிரமை தெளிஞ்சவனாய் ராஜ சின்னங்களுடனே அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான். அக்காலத்து நரபதி சிம்ஹஸ்னாதிபதியான பெனு கொண்டை விசய நகரம் ஆளப்பட்ட தேவராயர் அவர்கள் தம்முடைய குமாரனானவனுக்குச் சித்தப் பிரமை விடுதலை பண்ணின வனைத் தருவிக்கக் சொல்லி மந்திரி பிரதானிகளுக்கு உத்தரவு செய்தபடியினாலே அந்த சமயத்தில் தரிவிச்சு ராயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷத் தினாலே காலிங்கக் கவுண்டனைப் பார்த்து உன் சென்மப் பூமி முதலான விருத்தாந்தங்கள் என்னவென்று கேள்கு மிடத்தில் பவானி கூடல் சமீபத்தில் உண்டுபண்ணின அணை - வாய்க்கால் முதலான சங்கதிகளும் தெய்வ கடாட்சத்துனாலே காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் வழங்கப்பட்ட வரலாறும் கொங்கு இருபத்து நாலு நாட்டுலே பட்டக்காரர்களாய் சமானிடை...சி மரியாதிகள் தாள்வு நடக்கப்பட்டு சமுஸ்தானத்திலே காத்துக்கொண்டிருந்து காளிகாதேவி அனுக்கிரகமம் பண்ணின நாள்<noinclude></noinclude> r7kkw2hx4dcu2pvesjlvjuf4b03ftst பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/142 250 456588 1838402 1444448 2025-07-03T05:25:43Z Mohanraj20 15516 1838402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||136|}}</noinclude>வரைக்கும் வரலாறு அறியப்பண்ணிக் கொண்ட படியினாலே ராயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு உன்னுடைய நாமதேயம் என்னவென்று கேட்டார்கள். அப்போ பேர் அறியப் பண்ணிக் கொண்டபடியினாலே ராயர் அவர்கள் உத்திரவு செய்து எண்னுடைய வம்சம் உத்தாரம்பண்ணி இருக்கிறபடினாலே என்னுடைய பேர் தெய்வ கடாட்சத் துனாலே உண்டாகிய பேருடனே ராச கடாட்சத்துனாலே கொடுக்கப்பட்ட ராயச புத்தகத்துடனே காலிங்கராய கவுண்டன் என்று பேர் வச்சு உனக்கு என்ன வேணுமென்று கேட்டார்கள். அந்த சமயத்தில் என் காணியாட்சியான ஆனைமலை சரிவுலே காவிடிக்கை நாடு என்னப்பட்ட பூமியை தயவு செய்ய வேணுமென்று கேட்டுக் கொண்டார். {{larger|<b>ராயரிடம் பெற்ற வரிசை</b>}} ராயவர்கள் கடாட்சம் செய்து சிபஹல்லா பல்லாக்கு, உபயசாமரம், சுருட்டி, சூரியபான், ஆலவட்டம், வெள்ளைக் கொடை, பச்சைக் கொடை, பஞ்சவர்ணக் கொடை, பஞ்சவர்ண வெட்டுப் பாவாடை, அனுமடால்-கெறுடடால் மகரடால் பசவசங்கரடால் பஞ்சவர்ணடால், ஆனைமேல் பேரிகை ஒட்டைமேல் நகாரு, குதிரைமேல் டகாரி எருதுமேல் தம்பட்டம், தாரை, சின்னம் எக்காளம் பேரிகை சிக்கு மௌம் இது முதலான வாத்தியங்கள் பிருதுகளும் கொடுத்து ரண பாஷிகரம் கலிகிதுருயி முத்தொண்டி பஞ்சொண்டி ஒண்டி ரேக்கு வீர சங்கிலினாக ககாணும் புலி செறமம் கரடி மயிர் வக்கிய பிரீதங்கனிகளம் வீர கண்டாமணி சாமதுரோகா வெண்டையம் தங்க பிஞ்சு இது முதலான ஆபரணங்களை யெல்லாம் அலங்கரிச்சு குதிரைக்கு புலித் தோல் மேல் மடக்கு அடை சல்லி முக சல்லி பக்க சல்லி கால் தண்டை கலிகிதுருயி இது முதலான ஆபரணங்களை தறீச்சு பட்டத்துக் குதிரையென்று நேமுகம் செய்து பட்டணப் பிரவேசம் பண்ணிவிச்சு ஆனைமலை சரிவிலே காவிடிக்கை நாட்டு பூமிக்கு நீயே மனச புதாரனாக ஆண்டு கொண்டு சந்திராதித்தியர் உள்ள வரைக்கும் வம்ச பரம்பரெயாய்<noinclude></noinclude> m2wn58t8n4epr2tqtbrjf4x9iep6bzi பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/143 250 456589 1838403 1444449 2025-07-03T05:28:27Z Mohanraj20 15516 1838403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||137|}}</noinclude>மனசபுதாரனாக ஆண்டு அனுபவிச்சுக்கொண்டு வரவேணு மென்று பட்டாபிஷகம் செய்து பட்டத்து ஆயுதம் கையிலே கொடுத்து அறுபத்து நாலு அமரகாரை நேமுகம் செய்து இரட்டை வாள் பச்ச ஈட்டி, கரீட்டி, வெள்ளி ஈட்டி, தங்கக்கட்டு துப்பாக்கி வெள்ளி முலாம் துபாகி சீறு மாறுடை இது முதலான ஆயுதங்களும் கொடுத்தார்கள். {{larger|<b>பாளையக்காரன்</b>}} முன்னாலே நாடூர் பாளைப்பட்டு பட்டக்காரர்கள் சரிசமமான மரியாதை கொடுக்கிறது இல்லை என்று சொன்ன மனவெறுப்புனாலே ராய சமஸ்தானத்திலே காத்து இருந்து தெய்வ கடாட்சத்துனாலே சகல பிருதுகள் ஆயுதங்களும் உண்டாய் காவிடிக்கை நாட்டுக்குப் பாளையக் காரராக காலிங்கராயக் கவுண்டர் என்கிற பேர் பிரசித்திப் பட்டவனாய்ப்பட்டு கட்டியங்களுடனே புறப்பட்டு ஆனை மலைச் சரிவிலே வனாந்திரத்திலே தம்முடைய மாட்டுப் பட்டிகள் இருக்கப்பட்ட இடத்தில் சேர்ந்து அரண்மனையும் கட்டி வீடுகள் உண்டுபண்ணி பூர்வத்தில் வனத்திலே மாடுகளுக்கு ஆதாரமாகத் தோண்டியிருக்கப்பட்ட ஊற்றுக் குளிகள் இருக்கப்பட்ட இடத்தில் ஊரு கட்டிவிச்ச படியினாலே ஊற்றுக்குழி என்று கிராம நாமதேயம் உண்டாகி ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவனாய் இருந்தார்கள். ராயர் சமஸ்தானத்திலே காலிங்கராயக் கவுண்டன் என்கிற பேர் தெய்வ கடாட்சத்துனாலேயும் பாளையக்காரர் என்று பிரசித்திப் பட்டு பாளையப்பட்டு உண்டான நாள் முதல் சாலிவாகன சகாபுதம் 1120 முதல் சகாபுதம் 1702 வரைக்கும் 582 பட்டங்களுடைய வரிசைகளும் அவாளவாளுடைய சரிதைகளும் இதன் கீழே எழுதி வருகிறது. {{larger|<b>பரம்பரை</b>}} வம்ச பரம்பரையாய் தெய்வ கடாட்சத்துனாலேயும் ராஜ கடாட்சத்துனாலேயும் சாலிங்கராயன் என்கிற பேர் க.—9<noinclude></noinclude> r4xnqlf1hsu4nagmkc84xirrq89t862 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/144 250 456590 1838406 1444450 2025-07-03T05:35:55Z Mohanraj20 15516 1838406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||138|}}</noinclude>வமுச பரம்பரையாய் பட்டக்காரர்களுக்குப் பேர் உண்டாகி வருகிறது. தெய்வ கடாட்சத்துனாலே சர்ப்பம் போன போக்கில் வாக்கியாலும் வெட்டி வச்சு அணையும் கட்டி விச்சு காலிங்கனென்கிற பேர் பிரசித்திப்பட்டு வமுசாபிவிருத் தியிலே காலிங்கராயனென்கிறவர் காவிடிக்கா நாட்டுக்கு மனபுதாரனாயி காலிங்கராயனென்கிற பேராலே ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பட்டாபிஷேகம் அன்னாருடைய நாள்வரைக்கும் காலிங்கராயன் அணை யென்றும் காலிங்கராயன் வாக்கியாலென்றும் பேர் பிரசித்திப்படலாச்சுது. 1. காலிங்கராயக் கவுண்டர் பட்டமாண்ட வருஷம் {{Right|50}} 2. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{Right|40}} 3. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கராய கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{Right|23}} 4. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராய கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{Right|20}} 5. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{Right|19}} 6. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{Right|21}} 7. இவருடைய தம்பி அகத்தூர் - காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{Right|12)} 8. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{Right|23}} 9. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{Right|27}} 10. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{Right|16}}<noinclude></noinclude> spr6za32v26lo67mg581qh4a95psfjm 1838408 1838406 2025-07-03T05:41:11Z Mohanraj20 15516 1838408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||138|}}</noinclude>வமுச பரம்பரையாய் பட்டக்காரர்களுக்குப் பேர் உண்டாகி வருகிறது. தெய்வ கடாட்சத்துனாலே சர்ப்பம் போன போக்கில் வாக்கியாலும் வெட்டி வச்சு அணையும் கட்டி விச்சு காலிங்கனென்கிற பேர் பிரசித்திப்பட்டு வமுசாபிவிருத் தியிலே காலிங்கராயனென்கிறவர் காவிடிக்கா நாட்டுக்கு மனபுதாரனாயி காலிங்கராயனென்கிற பேராலே ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பட்டாபிஷேகம் அன்னாருடைய நாள்வரைக்கும் காலிங்கராயன் அணை யென்றும் காலிங்கராயன் வாக்கியாலென்றும் பேர் பிரசித்திப்படலாச்சுது. 1. காலிங்கராயக் கவுண்டர் பட்டமாண்ட வருஷம் {{float_right|50}} 2. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|40}} 3. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கராய கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|23}} 4. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராய கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|20}} 5. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|19}} 6. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|21}} 7. இவருடைய தம்பி அகத்தூர் - காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|12}} 8. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|23}} 9. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|27}} 10. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|16}}<noinclude></noinclude> drzgbick8z85iebki5xwo6tk4k293nd பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/145 250 456591 1838410 1444451 2025-07-03T05:46:09Z Mohanraj20 15516 1838410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||139|}}</noinclude>11. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|9}} 12. இவர் குமாரன் நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|28}} 13. இவர் குமாரன் விருமாண்டக் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|30}} 14. இவர் தம்பி அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|11}} 15. இவர் குமாரர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|20}} 16. இவர் குமாரன் ஈசுரமூர்த்திக் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|6}} 17. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|15}} 18. இவர் குமாரன் - அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|31}} 19. இவர் குமாரன் விருமாண்டக் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|23}} 20. இவர் குமாரன் பிள்ளை முத்து காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|13}} 21. இவர் குமாரன் சின்னைய காலிங்கராயக் கவுண்டன் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|19}} 22. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|20}} 23. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|30}} 24. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|20}}<noinclude></noinclude> fmpse9t5kc5g42ackzynvvurymgz1w8 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/146 250 456592 1838412 1444452 2025-07-03T05:49:04Z Mohanraj20 15516 1838412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||140|}}</noinclude>25. இவர் தம்பி நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|12}} 26. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டன் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|29}} 27. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|2}} 28. இவர் தம்பி அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் {{float_right|4}} {{larger|<b>முதல் பட்டம்</b>}} முதல் பட்டக்காரனாகிய காலிங்கராயக் கவுண்டன் நாளையிலே ஊத்துக்குளி புரமும் உண்டு பண்ணி ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவர்களாய் கொங்கேளு சிவாலயம் முதலாகிய ஸ்ரீரங்கம் சிதம்பரம் கும்பகோணம் மாயூரம் திருக்கடவூர் ஆவடயார் கோவில் ராமேஸ்வரம் தர்ப்ப சேணம் மதுரை பழனியாண்டர் பிரதட்சணமாய் இந்த பிரதீரத்து மஹாஸ்தலங்களை எல்லாம் யாத்திரை செய்து அந்தந்த ஸ்தலங்களுக்கு தருமங்கள் தானங்கள் பண்ணி யாத்திரங்கள் தீர்ந்தவுடனே ஊத்துக்குழிக்கு வந்து ராய சமுஸ்தானத்திலே தமக்கு பிரசன்னமான இஷ்ட தெய்வத்தைக் கோரி பிரார்த்தனை பண்ணி அகத்தூர் அம்மனென்று நிதர்சனமாகப்பட்ட தேவாலயம் சீரணோதாரணம் பண்ணி அகத்தூர் அம்மனென்று பேர் பிரசித்தி படும்படியாய் பூஜை நெயிவேத்தியங்கள் செய்விச்சுக் கொண்டு ராய சமுஸ் தானத்திலே தனக்கு மனசபுதார யிலாவுக்குச் சேர்ந்த வாரக்கனாட்டு யெல்லை பள்ளத்துக்குத் தெற்கு நல்லுருக்கா நாடு பாலாத்துக்கு வடக்கு புங்குலுக்கே நாடு தானசாரை பள்ளத்துக்கு மேற்கு கம்பால துரை மண லியாறுக்கும் கிழக்கு இந்த நான்கெல்லைக்குட்பட்ட கீழ்மேல் நாற்காதம் தென்வடல் இருகாதம் இந்த அத்துக் காவிடிக்கா நாட்டு<noinclude></noinclude> 7kpqlaoib9n2ol5jpmfl07jkxcm8lkn பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/147 250 456593 1838413 1444453 2025-07-03T05:53:01Z Mohanraj20 15516 1838413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||141|}}</noinclude>காடுகளையெல்லாம் வெட்டி வச்சு அந்தந்தயிடங்களிலே நீர்ப்பாங்கு உண்டு பண்ணி வீடேத்தி ஊர்களும் உண்டு பண்ணிக்கொண்டு நஞ்சை புஞ்சை நிலங்களும் திட்டப்படுத்தி நாடு வூர் பாளைப் பட்டுக்களுக்கு அரண்மனையிலே அதிக மரியாதைகாரனாய் ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவர்களாய் அதிதிறமைசாலிகளாய் பிரபுத்துவம் பண்ணிக் கொண்டு வந்தார். {{larger|<b>இரண்டாவது பட்டம்</b>}} முதல் 8வரை ரெண்டான் பட்டக்காரனான நஞ்சய் காலிங்கராயக் கவுண்டன் நாள் முதல் எட்டாம் பட்டக்காரனான காலிங்கராயன் கவுண்டர் நாள் வரைக்கும் ஊற்றுக்குழி பாளையக் காரர் என்று பேர் பிரசித்திப்பட்டவர்களாய் வம்ச பரம்பரையாய்ப் பண்ணப்பட்ட தருமங்களைப் பரிபாலனம் பண்ணிக் கொண்டு அந்தந்த காலத்திலே ராய சமுஸ்தானாதிபதிகள் கட்டளையிட்டபடிக்கு சமுஸ்தானத்திலே ஆஜரிலே இருந்து நடந்து கொண்டு மனசு புதாரனாய் பாளையப்பட்டு ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வந்தார்கள். {{larger|<b>கால்வழியினர்</b>}} ஒன்பதாம் பட்டக்காரனாகிய நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் நாளையில் அக் காலத்தில் பாண்டிய சிம்மாசனாதி பதியாகிய விசுவநாத நாயக்கர் எழுந்தருளியிருக்குற நாளையில் சமுஸ்தானத்துக்குச் சேர்ந்து இருந்து பாளையக் காரர்களையெல்லாம் பேட்டிக்குத் தருவிச்சு மதுரைக்குப் போய் இருக்கும் நாளையில் அக்காலத்து தட்சிண பிரதேசத்திலே திறன்னவல்லி சீர்மையிலே அஞ்சு கோட்டை போட்டுக் கொண்டு அஞ்சுராசாசளயென்றவாள் சமுஸ்தானத்துப் பிரபுக்களை நிராகரிச்சு யெதிர் பாளையம் போட்டுக் கொண்டுயிருக்கும் நாளையில் அந்த சமயத்தில் நாயக்கரவர்கள் உத்தரவுப்படிக்கு என் சமஸ்தான நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் சேன சேகரத்துடனே திர்ன்ன<noinclude></noinclude> 3462twvqhji3htb17qscll5vq2u2xnv 1838417 1838413 2025-07-03T05:57:37Z Mohanraj20 15516 1838417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||141|}}</noinclude>காடுகளையெல்லாம் வெட்டி வச்சு அந்தந்தயிடங்களிலே நீர்ப்பாங்கு உண்டு பண்ணி வீடேத்தி ஊர்களும் உண்டு பண்ணிக்கொண்டு நஞ்சை புஞ்சை நிலங்களும் திட்டப்படுத்தி நாடு வூர் பாளைப் பட்டுக்களுக்கு அரண்மனையிலே அதிக மரியாதைகாரனாய் ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவர்களாய் அதிதிறமைசாலிகளாய் பிரபுத்துவம் பண்ணிக் கொண்டு வந்தார். {{larger|<b>இரண்டாவது பட்டம்</b>}} முதல் 8வரை ரெண்டான் பட்டக்காரனான நஞ்சய் காலிங்கராயக் கவுண்டன் நாள் முதல் எட்டாம் பட்டக்காரனான காலிங்கராயன் கவுண்டர் நாள் வரைக்கும் ஊற்றுக்குழி பாளையக் காரர் என்று பேர் பிரசித்திப்பட்டவர்களாய் வம்ச பரம்பரையாய்ப் பண்ணப்பட்ட தருமங்களைப் பரிபாலனம் பண்ணிக் கொண்டு அந்தந்த காலத்திலே ராய சமுஸ்தானாதிபதிகள் கட்டளையிட்டபடிக்கு சமுஸ்தானத்திலே ஆஜரிலே இருந்து நடந்து கொண்டு மனசு புதாரனாய் பாளையப்பட்டு ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வந்தார்கள். {{larger|<b>கால்வழியினர்</b>}} ஒன்பதாம் பட்டக்காரனாகிய நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் நாளையில் அக் காலத்தில் பாண்டிய சிம்மாசனாதி பதியாகிய விசுவநாத நாயக்கர் எழுந்தருளியிருக்குற நாளையில் சமுஸ்தானத்துக்குச் சேர்ந்து இருந்து பாளையக் காரர்களையெல்லாம் பேட்டிக்குத் தருவிச்சு மதுரைக்குப் போய் இருக்கும் நாளையில் அக்காலத்து தட்சிண பிரதேசத்திலே திறன்னவல்லி சீர்மையிலே அஞ்சு கோட்டை போட்டுக் கொண்டு அஞ்சுராசாசளயென்றவாள் சமுஸ்தானத்துப் பிரபுக்களை நிராகரிச்சு யெதிர் பாளையம் போட்டுக் கொண்டுயிருக்கும் நாளையில் அந்த சமயத்தில் நாயக்கரவர்கள் உத்தரவுப்படிக்கு என் சமஸ்தான நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் சேன சேகரத்துடனே திர்ன்ன-<noinclude></noinclude> bglfrhurffsow8ufbaue580n5pbd5kr பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/148 250 456594 1838419 1444454 2025-07-03T05:59:44Z Mohanraj20 15516 1838419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||142|}}</noinclude>வல்லி சீமைக்குப் போய் அஞ்சு ராசாக்களுடனே யுத்தம் செய்து ஒரு கோட்டையிலே இருக்கிற அஞ்சுராசா வெட்டிப் போட்டு கோட்டையைக் கைவசம் பண்ணிக்கொண்டு யெதிராளிகளையும் கொண்டுவந்து நாய்க்கரவர்கள் சமஸ் தானத்திலே வைத்தார். அப்போ நாயக்கரவர்கள் நீ பராக்கிரமசாலி' என்று நிரம்பவும் சந்தோஷப்பட்டுதங்க னிகளத்திலே சுற தைத்து அதிலே தலைபோல பண்ணிப் போட்டு யெதிராளி தலையென்று காலுக்குப் போடுகுற பிறிதும் கொடுத்து பராக்கிரம நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் என்று பேரும் கொடுத்து ஆடையாபரணங்கள் முதலான ஆபரணங்களும் கொடுத்து சகல வெகுமதிகளும் பண்ணி மதுரை ஆஸ்தானக் கோட்டைக்கு அன்பத் தோரான் கொத்தளத்துக்கு தலமை வயிக்கும் படியாக நிகுதிசெய்து பாளையப்பட்டு கிராமங்களை சுத்த ஜாரியாக அனுபவிச்சுக் கொண்டு வரும்படியாக நிகுதி செய்தபடியினாலே அந்த நாள் முதல் பதினெட்டாம் பட்டம் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் நாள் வரைக்கும் மதுரை சமஸ் தான கர்த்தராகிய நாயக்கரவர்கள் பரம்பரையிலே கட்டு பண்ணின நிகுதி தீட்டுக்கு அரண்மனைக்கு நடந்து கொண்டு வமிச பரம்பரையாய் பாளையப்பட்டு ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வந்தார்கள். பத்தொன்பதாம் பட்டக்காரனான விருமாண்டக் காலிங்கராயக் கவுண்டர் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்து மதுரை சமஸ்தானத்துக்கும் கனுவா இக்கு கீள்ப்பட்ட கெடிகளுக்காக யுத்த சன்னாஹமாகயிருந்தார் கள். இருபத்து மூன்றாம் பட்டக்காரரான நஞ்சிய காலிங்கராயக் கவுண்டர் நாளையில் கணுவாய்க்கு கீள்பட்ட கெடிகள் எல்லாம் மைசூர் சமஸ்தானத்துக்குச் சேர்ந்துயிருக்கும் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்துக் கர்த்தராகிய இம்முடிராஜ உடையாரவர்கள் பேட்டிக்குப் போய் இருக்கும் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்<noinclude></noinclude> 33zgg65as3sdolt4g6huieqftmn3eaw 1838420 1838419 2025-07-03T06:00:17Z Mohanraj20 15516 1838420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||142|}}</noinclude>வல்லி சீமைக்குப் போய் அஞ்சு ராசாக்களுடனே யுத்தம் செய்து ஒரு கோட்டையிலே இருக்கிற அஞ்சுராசா வெட்டிப் போட்டு கோட்டையைக் கைவசம் பண்ணிக்கொண்டு யெதிராளிகளையும் கொண்டுவந்து நாய்க்கரவர்கள் சமஸ் தானத்திலே வைத்தார். அப்போ நாயக்கரவர்கள் நீ பராக்கிரமசாலி' என்று நிரம்பவும் சந்தோஷப்பட்டுதங்க னிகளத்திலே சுற தைத்து அதிலே தலைபோல பண்ணிப் போட்டு யெதிராளி தலையென்று காலுக்குப் போடுகுற பிறிதும் கொடுத்து பராக்கிரம நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் என்று பேரும் கொடுத்து ஆடையாபரணங்கள் முதலான ஆபரணங்களும் கொடுத்து சகல வெகுமதிகளும் பண்ணி மதுரை ஆஸ்தானக் கோட்டைக்கு அன்பத் தோரான் கொத்தளத்துக்கு தலமை வயிக்கும் படியாக நிகுதிசெய்து பாளையப்பட்டு கிராமங்களை சுத்த ஜாரியாக அனுபவிச்சுக் கொண்டு வரும்படியாக நிகுதி செய்தபடியினாலே அந்த நாள் முதல் பதினெட்டாம் பட்டம் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் நாள் வரைக்கும் மதுரை சமஸ் தான கர்த்தராகிய நாயக்கரவர்கள் பரம்பரையிலே கட்டு பண்ணின நிகுதி தீட்டுக்கு அரண்மனைக்கு நடந்து கொண்டு வமிச பரம்பரையாய் பாளையப்பட்டு ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வந்தார்கள். பத்தொன்பதாம் பட்டக்காரனான விருமாண்டக் காலிங்கராயக் கவுண்டர் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்து மதுரை சமஸ்தானத்துக்கும் கனுவா இக்கு கீள்ப்பட்ட கெடிகளுக்காக யுத்த சன்னாஹமாகயிருந்தார் கள். இருபத்து மூன்றாம் பட்டக்காரரான நஞ்சிய காலிங்கராயக் கவுண்டர் நாளையில் கணுவாய்க்கு கீள்பட்ட கெடிகள் எல்லாம் மைசூர் சமஸ்தானத்துக்குச் சேர்ந்துயிருக்கும் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்துக் கர்த்தராகிய இம்முடிராஜ உடையாரவர்கள் பேட்டிக்குப் போய் இருக்கும் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்-<noinclude></noinclude> t49eq23owwa5myustrk7awpj99be1d3 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/149 250 456595 1838422 1444455 2025-07-03T06:02:55Z Mohanraj20 15516 1838422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||143|}}</noinclude>துக்குச் சேர்ந்த கொடகர் சமஸ்தானத்துக்கு யெதுத்துயிருக்கிற றகளையென்று யென் வம்சத்தார்களில் சனசேகரத் துடனே குடகு போகச் சொல்லி உத்தரவு ஆனபடியினாலே சனசேகரத்துடனே கொடகு ராஜாவின் பேரிலே போய்யுத்தம் செய்து ஜெயிச்சு வந்தார்கள். அப்போ மைசூர் சமஸ்தான கர்த்தாக்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு அஷ்ட கோண தண்டிகைக்கு தங்க முலாம் பூசியெட்டு கலசத்துடனே தண்டிகையுங் கொடுத்து ஆடையாபரணங்களும் கொடுத்து ஊற்றுக்குழி பாளையப் பட்டுக்கு அக்காலத்து சேர்ந்து இருந்த கிராமங்கள் ஒன்பதுக்கும் வருஷம் ஒண்ணுக்கு ராசகோபாலி 756 நிகுதி செய்து உத்தரவு செய்தார்கள். அந்த நாள் முதல் என் சகோதரரான நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்டு கொண்டு வந்த நாள் வரைக்கும் மைசூர் சமஸ்தானத்தார் கட்டளையிட்ட நிகுதிப் படிக்கு அரமணைக்கு நடந்து கொண்டு ஊற்றுக்குழி பாளையக்காரர் என்கிறவாளாய் பட்டம் ஆண்டு கொண்டு வந்தார்கள். பூர்வம் முதலாக என் வமுசத்திலுள்ள பாளையப்பட்டு ஆண்டு கொண்டு வரப்பட்டவர்கள் செவுறிய வுதார கெம்பீர குணாதிசயங்கள் உள்ளவர்களாய் இருந்து மற்ற பாளையக்காரர்களிலே அந்தந்த காலத்திலே அரமனைக்கு நிராகரிச்சுயிருக்கப் பட்டவர்களையும் தமக்கு யெதிரியா யிருக்கப்பட்டவர்களையும் மடக்கிக் கொண்டு ஊத்துக்குளியிலே கோட்டையும் பந்தோபஸ்தும் பண்ணிக்கொண்டு கால் தளம் அய்யாயிரம் நூறு குதிரை ஆயுதங்கள் வச்சு இருக்கப்பட்ட சனம் அய்யாயிரம் ஒரு கடகம் யானை இதுகளுடனே ஆனைமலை கானல்களிலே ஆனைகள் பிடிச்சு அரண்மனைக்குக் கொடுத்துக் கொண்டு அரமனையார் கட்டளையிட்டபடி நடந்து கொண்டு அரமனையார் கட்டளையிட்ட ஆனைமலை மாச்ச நாயக்கன் பாளையம் பாதிகாவலும் முன்னாள்<noinclude></noinclude> et26xw778bw5tsv6ka7zl5z370nkrs7 பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/150 250 456596 1838424 1444456 2025-07-03T06:05:50Z Mohanraj20 15516 1838424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||144|}}</noinclude>மூலை போதிக்கு ஒரு ரூபாயும் மகமை நடந்து வந்தபடியினாலே அந்தப் பாதிகாவலும் மகமையும் அனுபவிச்சுக் கொண்டு அரமனையிலே கட்டுப்பண்ணின நிகுதி பணமும் செலுத்திக் கொண்டு ஆண்டு அனுபவித்துக்கொண்டு வரும் நாளையில் என் முப்பாட்டனார் நாளிலே பாதிகாவல் விட்டுட்டுப்போய் மலையாளத்து கோளிகூடு ராசாவின் பேரிலே யுத்த கனுகத்திலே யெலைபள்ளியிலே விளுந்து போய் விட்டார்கள் என் தோப்பனார் நாள் முதல் சுங்கம் மகமை நடந்து வந்தது. என் தமையனார் ரெண்டுபேர் நாளையிலேயும் திப்புசுல்தான் அங்காமி நாள் வரைக்கும் ஒரு நிகுதியில்லாமல் சில்லரை கள்ளர் அங்காமிகளுக்கும் தொந்தரைகள் பட்டுக்கொண்டு யிருந்தார்கள். பூர்வம் முதலாக வமுசாவளி முதலானதுகளுக்கு உண்டான ஆதாரங்கள் முதலானதுகளும் காலாந்திரங்களிலே ராசீகங்களிலே கைசோர்ந்து போய்விட்டபடியினாலே அகப்பட்ட பூர்வத்திய பளமுளி கிரந்தங் களினாலேயும் ஒளுகுகள்யாலேயும் பரம்பரையிலே அனுபவித்த கேள்வியினாலேயும் தெரிந்து கொண்டு கைபீது தெரியப்படுத்திக் கொள்ளலாச்சுது. {{larger|<b>கம்பெனி ஆட்சி</b>}} கலியுகாபுதம் 4891 மேல் செல்லா நின்ற விரோதிகிருது வருஷம் மாசி மாதம் 4 தேதி சுபதினத்தில் எனக்குப் பட்டமாய் குமாரசாமி காலிங்கராயக் கவுண்டர் என்னப் பட்ட பேர் விளங்கிக் கொண்டவனாகயிருந்து திப்புசுல்தான் துரைத்தனத்தில் சில்லரை கள்ளர் தொந்தரவுகள் பட்டுக்கொண்டு இருக்கும் நாளையில் மகாராஜ ராஜஸ்ரீ கும்பினி துரைத்தனமாகிறது என்று ரொம்பவும் சந்தோஷத்தை அடைந்தவனாய் குஞ்சு குழந்தைகளை யெல்லாம் பெம்பாயி சீர்மையிலே வச்சுப் போட்டு நான் ஊற்றுக் குழியிலே ஹாஜரிலே காத்துக்கொண்டு கும்பினி-<noinclude></noinclude> pns0g5hkpqsmocr6qp98n655tn2vosl பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/151 250 456597 1838426 1444457 2025-07-03T06:11:03Z Mohanraj20 15516 1838426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||145|}}</noinclude>தயவு கோரியிருக்கும் நாளையில் சித்தார்த்தி வருஷத்திலே மகாராஜ ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் இன்சீபு (ஜேம்சு) ரமலி சாயபு அவர்கள் மஹா ராஜராஜஸ்ரீ பெம்பாயி பவுசுதார்களுக்கு யெல்லாம் பெரிய சேர்வை துரைகளாகிய இற்றியொட்டு சாயபு அவர்கள் மகாராஜராஜஸ்ரீ செண்டறல் அட்டலி சாயபு அவர்கள் மேல் எழுதப்பட்ட துரையள் என் பேரிலே கடாட்சம் செய்து வந்த படியினாலே நானும் துரையள் கடாட்சயத்தும்படி நடந்து கொண்டு வந்தவனாய் இருந்தபடியினாலே என்னிடத்திலே பூரண தயவாகக் கடாட்சம் பண்ணிக் கொண்டு வந்தார்கள். மகாராஜராஜஸ்ரீ கும்பினி துரையள் கடாட்சம் செய்து யென் மான மரியாதிகளைப் பரிபாலனம் பண்ணி ஊத்துக் குழிக்குச் சேர்ந்த ஒன்பது கிராமமும் கண்டு முதலான பேரீஜுலே சாதலவார் சிப்பந்தி தவிர பத்தில் மூணு பாளையக்கார மிறாசு பத்தில் மூணு சாரி செய்துயிருக்கிறபடி யினாலே சாதலவார் சிப்பந்தி தவிர பத்தில் ஏழு சருகாருக் குச் செலுத்திக் கொண்டு யென் பட்டத்து ஆயுதங்கள் தயவு செய்து இருக்கிறபடியினாலே ஊற்றுக்குழி பாளையக்காரர் என்ற பேராய் இருக்கிறேன். மகாராஜராஜஸ்ரீ கும்பினி துரையவர்கள் கடாட்சத்துக்குப் பாத்திரனாய் குமாரசாமி காலிங்கராயக் கவுண்டன் என்கிற பேர் உள்ளவனாய் என் வம்ச பரம்பரையிலே சம்ரட்சணை பண்ணப்பட்டவாளுடைய சந்ததியிலே சேரப் பட்ட அடுத்த சனம் சயிதமாய் முந்நூறு ஜனத்துக்கு அஹமனனியானியாய் காலட்சேபத்துக்கு மார்க்கமாய் நடப்பிவிச்சுக் கொண்டு துரையள் கட்டளையிட்டபடிக்கு நடந்துகொண்டு மஹாராஜ ராஜஸ்ரீ கம்பெனி துரையள் கடாட்சத்துக்குப் பாத்திரனாக இருக்கிறேன். {{center|ஊற்றுக்குழி காலிங்கராயக் கவுண்டன் ருசு 25 பங்குனி விஷூ}} {{nop}}<noinclude></noinclude> 5g2wdjrt47xsfk1ifdk18jeskue82hy 1838438 1838426 2025-07-03T06:40:08Z Mohanraj20 15516 1838438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||145|}}</noinclude>தயவு கோரியிருக்கும் நாளையில் சித்தார்த்தி வருஷத்திலே மகாராஜ ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் இன்சீபு (ஜேம்சு) ரமலி சாயபு அவர்கள் மஹா ராஜராஜஸ்ரீ பெம்பாயி பவுசுதார்களுக்கு யெல்லாம் பெரிய சேர்வை துரைகளாகிய இற்றியொட்டு சாயபு அவர்கள் மகாராஜராஜஸ்ரீ செண்டறல் அட்டலி சாயபு அவர்கள் மேல் எழுதப்பட்ட துரையள் என் பேரிலே கடாட்சம் செய்து வந்த படியினாலே நானும் துரையள் கடாட்சயத்தும்படி நடந்து கொண்டு வந்தவனாய் இருந்தபடியினாலே என்னிடத்திலே பூரண தயவாகக் கடாட்சம் பண்ணிக் கொண்டு வந்தார்கள். மகாராஜராஜஸ்ரீ கும்பினி துரையள் கடாட்சம் செய்து யென் மான மரியாதிகளைப் பரிபாலனம் பண்ணி ஊத்துக் குழிக்குச் சேர்ந்த ஒன்பது கிராமமும் கண்டு முதலான பேரீஜுலே சாதலவார் சிப்பந்தி தவிர பத்தில் மூணு பாளையக்கார மிறாசு பத்தில் மூணு சாரி செய்துயிருக்கிறபடி யினாலே சாதலவார் சிப்பந்தி தவிர பத்தில் ஏழு சருகாருக் குச் செலுத்திக் கொண்டு யென் பட்டத்து ஆயுதங்கள் தயவு செய்து இருக்கிறபடியினாலே ஊற்றுக்குழி பாளையக்காரர் என்ற பேராய் இருக்கிறேன். மகாராஜராஜஸ்ரீ கும்பினி துரையவர்கள் கடாட்சத்துக்குப் பாத்திரனாய் குமாரசாமி காலிங்கராயக் கவுண்டன் என்கிற பேர் உள்ளவனாய் என் வம்ச பரம்பரையிலே சம்ரட்சணை பண்ணப்பட்டவாளுடைய சந்ததியிலே சேரப் பட்ட அடுத்த சனம் சயிதமாய் முந்நூறு ஜனத்துக்கு அஹமனனியானியாய் காலட்சேபத்துக்கு மார்க்கமாய் நடப்பிவிச்சுக் கொண்டு துரையள் கட்டளையிட்டபடிக்கு நடந்துகொண்டு மஹாராஜ ராஜஸ்ரீ கம்பெனி துரையள் கடாட்சத்துக்குப் பாத்திரனாக இருக்கிறேன். {{center|ஊற்றுக்குழி காலிங்கராயக் கவுண்டன் ருசு<br> 25 பங்குனி விஷூ}} {{nop}}<noinclude></noinclude> l7hcq3bw7ynjqmrakfhbjrzfn077e6y பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/152 250 456598 1838429 1444458 2025-07-03T06:31:46Z Mohanraj20 15516 1838429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|பிற்சேர்க்கை எண்-4}}}} {{center|{{x-larger|<b>கும்பினிக் கடிதம்</b>}}}} ஊற்றுக்குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டருக்கு 1798 ஆம் ஆண்டு பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் எழுதிய கடிதம்1 :- ஸ்ரீமன் சகல குண சம்பன்னரான சகல தர்ம பிரீதி பாலகனான பந்து சன சிந்தாமணியனான அகண்டித லட்சுமி பிரசன்னனான வெகுசன பரிபாலகனான நித்தியா தான விநோதரான மகா மேருவுக்கு சரிசமான தீரனான மகா-ா-ா-ஸ்ரீ ஊத்துக்குளி காலிங்கராயக் கவுண்டர் அவர்களுக்கு ராஜமானிய ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேசர் கமாண்டர் சேம்சு ரமலீ சாயபு அவர்கள் மெத்தமெத்த சலாம். பெம்பாயில் பவுசுதாற மகாறாச ராஜஸ்ரீ றாசமானியறாஜஸ்ரீ சகல பவிசுக்கெல்லாம் பெரிய சென்றல் அவர்கள் இற்றியோட்டு சாயபு அவர்கள்............சென்டறால் அட்டலீ சாயபு அவர்கள் மலையாளத்துக்கெல்லாம் கமசல சாயபுதுரை அவர்கள் இவர்களெல்லாம் ஒருமனதாக யோஜனை செய்து நமக்கு அப்பணை தந்தார்கள் உங்களுக் குச் சொல்லச் சொல்லி உம்முடைய காரியத்திலே மெத்த மெத்த சந்தோஷமாய் தங்கள் மனசுலே யென்ன காரியம் வேண்டியிருந்தாலும் வெகுமானப் பட்ட இங்கிலீஷ கம்பெனிக்காரரோடே ராஜியாக இருக்க வேணும் சொல்லியிருந்த பிரகாரத்துக்கு அதே மேரைக்கு நமக்கு அப்பணையாச்சுது. {{rule|10em|align=}} 1. தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ள கடிதத்தில் நகல். எண். டி. 3045.<noinclude></noinclude> 72e6mcxwxzd131pbnabdkobuh7d021b பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/153 250 456599 1838430 1444459 2025-07-03T06:35:00Z Mohanraj20 15516 1838430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||147|}}</noinclude>அது காரியத்துக்கு இப்போ சர்க்கார் காரியத்திலே தாங்கள் கும்பினிக்கு செய்து நடக்கவேண்டிய காரியத்துக்கு யிப்பச் சம்மதமான படியினாலே தாங்கள் அறியவேண்டி தங்களுக்கு தாக்கீதா எழுதியிருக்கிறோம். பின்னையும் நமக்கு அம்பணையான தலங்களுக்கும் தங்கள் வகையிலே தங்களைச் சேர்ந்த கவுண்டமாரும் தங்களுக்குச் சினேசித மாகயிருக்கிற கவுண்டமார் ஆனார் தங்களைச் சேர்ந்து இருக்கிறார்களோ அவர்களும் தாங்களுமாக கும்பினி சருகாறத்துக்கு எந்தப் பிரகாரம் குமுக்கு செய்வீர்களோ அந்தப் பிரகாரம் பிரயாசைப்பட்டு நடந்துகொள்ள வேணுமோ அந்தப்படி நடக்க வேண்டியது. அந்தப்படி நடந்து கொண்டால் தங்களுட குமுக்கு வேண்டி தங்களுக்கும் தங்கள் குஞ்சு குளந்தையள் தங்கள் சீர்மையும் மோதலும் தங்களைச் சேர்ந்த கவுண்டமாரேயும் இதுக்கெல்லாம் தங்களுக்கு வேண்டி இங்கிலீஷ் கம்பெனி சர்க்கார் உங்களை வச்சு ரட்சிக்கிறாப்போலே நம்முடைய வசம் உம்மிட சீமையும் தங்களையும் கம்பெனி சர்க்கார் உள்ளவரைக்கும் ரட்சிக்கிறாப்போலே செய்து தருகிறோம். தங்கள் கையிலே எந்தப் பிரகாரம் ஆகுமோ. பாலக்காட்டுச் சேரியிலிருக்கிற ஜனத்தோடே கூடி தாங்களும் தங்களைச் சேர்ந்த ஜனங்களும் நமக்குத் துசுமனாக இருக்கிறவனை அலாக்கு செய்ய வேண்டுமோ அப்படிக்குச் செய்யவும் அல்லாதே போனால் திண்டுக்கல்லிலே பவுசுகளத்தோடகூட நிண்ணு தாங்கல் செய்விக்கிறதானால் செய்யவும் இல்லாதே போனால் பளனியிலே யிருக்கிற பவுசோடே கூடனின்று செய்யர தானால் செய்யவும் அல்லாதே போனால் தாங்களும் தங்களைச் சேர்ந்த ஜனங்களுமாக அவனையெந்த படியே சாரு செய்யவேணுமோ அந்தப்படி செய்யவும் மகா ராஜராஜஸ்ரீ சென்றல் இற்றியோட்டு சாயபு அவர்களும் றாசஸ்ரீ சென்டறால் அட்டலீ சாயபு அவர்களும் கமசல சாயபு அவர்களும் இவர்கள் முன்னதாக தங்களை யெந்தபடி பெரியவாக்கி வைக்கவேணுமோ அந்தப்படியாக்கி இருக்கிற படியினாலே தங்கள் காரியக்காரர் ஒருத்தர் நம்மண்டை<noinclude></noinclude> aaulvtz7hncsbze6oprgj8tplgvn9k7 1838431 1838430 2025-07-03T06:35:51Z Mohanraj20 15516 1838431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||147|}}</noinclude>அது காரியத்துக்கு இப்போ சர்க்கார் காரியத்திலே தாங்கள் கும்பினிக்கு செய்து நடக்கவேண்டிய காரியத்துக்கு யிப்பச் சம்மதமான படியினாலே தாங்கள் அறியவேண்டி தங்களுக்கு தாக்கீதா எழுதியிருக்கிறோம். பின்னையும் நமக்கு அம்பணையான தலங்களுக்கும் தங்கள் வகையிலே தங்களைச் சேர்ந்த கவுண்டமாரும் தங்களுக்குச் சினேசித மாகயிருக்கிற கவுண்டமார் ஆனார் தங்களைச் சேர்ந்து இருக்கிறார்களோ அவர்களும் தாங்களுமாக கும்பினி சருகாறத்துக்கு எந்தப் பிரகாரம் குமுக்கு செய்வீர்களோ அந்தப் பிரகாரம் பிரயாசைப்பட்டு நடந்துகொள்ள வேணுமோ அந்தப்படி நடக்க வேண்டியது. அந்தப்படி நடந்து கொண்டால் தங்களுட குமுக்கு வேண்டி தங்களுக்கும் தங்கள் குஞ்சு குளந்தையள் தங்கள் சீர்மையும் மோதலும் தங்களைச் சேர்ந்த கவுண்டமாரேயும் இதுக்கெல்லாம் தங்களுக்கு வேண்டி இங்கிலீஷ் கம்பெனி சர்க்கார் உங்களை வச்சு ரட்சிக்கிறாப்போலே நம்முடைய வசம் உம்மிட சீமையும் தங்களையும் கம்பெனி சர்க்கார் உள்ளவரைக்கும் ரட்சிக்கிறாப்போலே செய்து தருகிறோம். தங்கள் கையிலே எந்தப் பிரகாரம் ஆகுமோ. பாலக்காட்டுச் சேரியிலிருக்கிற ஜனத்தோடே கூடி தாங்களும் தங்களைச் சேர்ந்த ஜனங்களும் நமக்குத் துசுமனாக இருக்கிறவனை அலாக்கு செய்ய வேண்டுமோ அப்படிக்குச் செய்யவும் அல்லாதே போனால் திண்டுக்கல்லிலே பவுசுகளத்தோடகூட நிண்ணு தாங்கல் செய்விக்கிறதானால் செய்யவும் இல்லாதே போனால் பளனியிலே யிருக்கிற பவுசோடே கூடனின்று செய்யர தானால் செய்யவும் அல்லாதே போனால் தாங்களும் தங்களைச் சேர்ந்த ஜனங்களுமாக அவனையெந்த படியே சாரு செய்யவேணுமோ அந்தப்படி செய்யவும் மகா ராஜராஜஸ்ரீ சென்றல் இற்றியோட்டு சாயபு அவர்களும் றாசஸ்ரீ சென்டறால் அட்டலீ சாயபு அவர்களும் கமசல சாயபு அவர்களும் இவர்கள் முன்னதாக தங்களை யெந்தபடி பெரியவாக்கி வைக்கவேணுமோ அந்தப்படியாக்கி இருக்கிற படியினாலே தங்கள் காரியக்காரர் ஒருத்தர் நம்மண்டை-<noinclude></noinclude> eg9r5swbb5k2b0pjr5set3n0whbgh2y பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/154 250 456600 1838432 1444460 2025-07-03T06:36:44Z Mohanraj20 15516 1838432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" />{{rh||144|}}</noinclude>யிலே எந்நேரமும் பிரியாமல் காத்து இருக்கிறாப்போலே செய்யவும். சர்க்கார் காரியம் எந்த வேளை எந்தப்படி வருமோ? ஆனபடியினாலே தங்கள் மனுஷரைப் பிரியாமல் இருக்கச் செய்யவேண்டியது. தாங்கள் இவ்விடத்துக்கு எந்த வேளை வந்தாலும் தங்களைக் காணுகிறது மெத்த சந்தோஷம். ராஜ மானிய ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேசர் கமாண்டர் ஜேம்ஸ் ரமலீ சாயபு. {{center|{{c|<b>1798 மார்ச்சு -1</b>}}}} {{nop}}<noinclude></noinclude> rp95s0kga8lai3ebh1h1hgipprn6b7j பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/155 250 456601 1838434 1444461 2025-07-03T06:39:12Z Mohanraj20 15516 1838434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{dhr|20em}} {{rule|10em|align=}} {{center|SRI GOMATHI ACHAGAM<br> MADRAS-5 PH: 844554}}<noinclude></noinclude> t0t6t62wkdo2e6luh1l9wryoud7q29t பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/101 250 489082 1838283 1838143 2025-07-02T13:08:54Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|100 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>52. சேதுபதியாரின் அவையில் சவ்வாதுப் புலவர்<br>(1745-1808)</b>}}}} சேதுபதி மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி (1762-1795) எமனேசுவரம் என்ற ஊரைச்சேர்ந்த முஹம்மது மீர் ஜவ்வாதுப் புலவர் என்பவரைத் தம் அவைக்களப் புலவராக அமரச் செய்து பெருமைப் படுத்தினார். அத்துடன் சுவாத்தான், வண்ணவயல் ஆகிய இரண்டு ஊர்களின் வருவாய் முழுவதும் அவர் குடும்பத்துக்குக் கிடைக்கும் வண்ணம் சர்வ மானியமாக வழங்கினார். சேதுபதி மன்னரின் 7 வயது மகளுக்கு கடும் சுரம் கண்டு நோய் அதிகரித்தது. அரண்மனை வைத்தியர்கள் கைவிட்ட நிலையில் ஜவ்வாது புலவர் அவர்கள் இறையருட் துணையுடன் மன்னர் மகளை பெரிய வாழையிலையில் படுக்கச் செய்து சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மன் மீது ஐந்து பதிகங்கள் பாடி முடித்ததும் நோய் நீங்கிப் பூரண சுகம்பெற்றுக் குழந்தை எழ, மன்னர் மகிழ்ந்து சுவாத்தன், வண்ணவயல் ஆகிய இரு கிராமங்களைப் புலவருக்கு வழங்கினார். அந்தப் பாடல்கள்தாம் ‘இராஜராஜேஸ்வரி அம்மன் பஞ்சரத்ன மாலை’யாகும். மற்றும் ஜவாதுப் புலவர் முஹ்யத்தீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள் மற்றும் ஏராளமான அறன்களும் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். சவ்வாதுப் புலவர் சேதுபதி மன்னர், அவர் தம் உயர் அதிகாரிகள், சேதுபதியின் யானை பற்றியும் பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். வணங்காமுடி மன்னர் என்று புகழ்பெற்ற சேதுபதி மன்னரை “நீர் ஒரு வணங்குமுடி மன்னரே” என ஜவ்வாதுப் புலவர் சிலேடையாக அரசவையில் பாடிய பாடல் இதோ: <poem>{{left_margin|3em|<b>“கிளையாளன் சேதுபதி ரகுநாயகன் கிஞ்சுகவாய் இளையார் கலவியிடத்தும் தம்மீசரரிடத்து மன்றி வளையாத பொன்முடிசற்றே வளையு மகுடமன்னர் தளையாடிய கையில் காளாஞ்சி ஏத்தும் சமயத்துமே!”</b>}}</poem>{{nop}}<noinclude></noinclude> 8c0798abho1ycs8x2rnvicz9anky7fj பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/102 250 489083 1838284 1838145 2025-07-02T13:10:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 101}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>53. மொட்டைப் பக்கிரி தர்காவிற்கு<br>சிவகங்கை மன்னர் கொடை</b><ref>*சிவகங்கை வரலாற்றுக் கருத்தரங்குக் கட்டுரைகள்</ref>}}}} சிவகங்கையில் ‘மொட்டைப் பக்கிரி’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இஸ்லாமிய ஞானி ஒருவர் இருந்தார். அவர் செய்த பலவிதமான அற்புதங்களை இன்றும் சிவகங்கை மக்கள் நினைவுகூர்கிறார்கள். இரவு தூங்கும்போது அவர் உடல் உறுப்புகள் வேறு வேறாகச் சிதறிக் கிடக்குமாம். காலையில் எழுந்து வருவாராம். அவருக்கு ஒரு தர்கா கட்டப்பட்டது. அதற்கு ‘மொட்டைப் பக்கிரி தர்கா’ என்றே பெயர். அதற்குச் சிவகங்கை மன்னர் அரசு நிலையிட்ட முத்து வடுகநாதர் பெரிய உடையத்தேவர் பல கொடைகளை வழங்கி செப்பேடும் வெட்டித் தந்துள்ளார்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> roi059miew57gmfjuql6ms5ij4qdowt பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/103 250 489084 1838287 1838147 2025-07-02T13:14:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|102 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>54. ஜாமி மசூதிக்கு கைக்கோளர் கொடை</b><ref>*Annual Report on Epigraphy 219 of 1977</ref>}}}} வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையில் உள்ள ஜாமி மசூதியில் தரையில் பாவப்பட்ட பலகைக்கல் ஒன்றில் திருப்பணி செய்த கைக்கோளர்கள் குறிப்பிடப்படுகின்றனர். கல் முழுதும் தேய்ந்துவிட்டதால் விபரம் தெரியவில்லை. காலக் குறிப்பு அழிந்து விட்டது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> c7rvxqbma7r0n310dy9i7qrp9w9ybe3 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/104 250 489085 1838288 1838149 2025-07-02T13:16:09Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 103}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>55. மதுரை அரசியார் மதித்த இஸ்லாம்</b><ref>1) List of Anticuities, R. Sewell's Vol I, 40, 268<br>2) “மதுரை நாயக்கர் வரலாறு” அ.கி. பரந்தாமனார். பக்கம் 342</ref>}}}} மதுரை நாயக்கர் மரபில் இராணி மங்கம்மாள் (1689-1706), இராணி மீனாட்சி (1732-1736) ஆட்சி புரிந்த அரசியர் ஆவர். அவர்கள் இருவரும் திருச்சி நத்ஹர்வலி தர்கா முதலிய பல பள்ளிவாசல்கட்கும், தர்காக்களுக்கும் கொடை கொடுத்ததோடு, பல இஸ்லாமிய ஞானியர்கட்கும் தாராளமாகக் கொடைகள் வழங்கினர். மதுரை நாயக்கர் காலத்தில் இஸ்லாமியர் பலர் உயர் அலுவலராகவும், படைப் பொறுப்பிலும் இருந்துள்ளனர். {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 104 |bSize = 425 |cWidth = 245 |cHeight = 291 |oTop = 197 |oLeft = 95 |Location = center |Description = }}{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> hp1n7jmmvr9gpa9oxcli0tg0y1gbjbo பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/105 250 489086 1838289 1838151 2025-07-02T13:19:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|104 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>56. அகமதுகான் நலத்திற்காக ஊரவர் வெட்டிய வாய்க்கால்</b><ref>*Annual Report on Epigraphy 268 of 1941</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், சிங்கிகுளம் என்னும் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில் அருகே ஆற்றங்கரையில் உள்ள பாறையில் உள்ள கல்வெட்டு. |- | {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}| – ||கி.பி.1722: சுபகிறுது வருடம், சித்திரை மாதம் 24ஆம் தேதி. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||பூலம் ஆகிய இராசராசபுரத்துக்குத் தென்கீழ்க்கரை ஆற்றில் கான் அசம்சா மகமதுகான் பட்டாயித்து சாயபு அவர்கள் அண்ணன் மீரேகான் பட்டாயித்து சாயிபவர்கள் மகன் அகமது கான் கிமானுகான் பட்டாயித்து சாயிபு அவர்கள் புண்ணியமாக ஆற்றில் வாய்க்கால் வெட்டினர். வெட்டியவர்கள் ஊரவர் என்று தெரிகிறது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. சகாற்த்தம் 1643ன் மேல் செல்லா 2. நின்ற கொல்லம் 897 வருஷம் சுபகிறுது வருஷம் சித்தி 3. ரை மாதம் 24 தேதி பூருவபட்சத்து பஞ்சமியும் சோ 4. ம வாரமும் சொபயோக சுபகரணமும் பெ 5. ற்ற அனுஷ நட்செத்திரத்து நாளையில் 6. தென்கரை நாட்டு பூலமான ராசரா 7. சபுரத்திலே தென்கீழ்க்கரை ஆத்துக்காலு 8. ண்டு படுத்தினது கான் அசம்சா மகம்ம 9. துகான் பட்டாயித்து சாயிபவர்கள் தமையனா 10. ர் மீரேகான் பட்டாயித்து சாயிபவர்கள் குமா 11. ரன் அம்முதுகான் இமானுகான் பட்டாயித்து 12. சாயிபவர்களுக்குப் புண்ணியமாக ஊறவர்... ............ அயித்துலுதர் திருகு மெச் 13. சாயிபவர்கள்....</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> t5zxvfw6sn7eugv4g28hbsk7v7hz6tq பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/106 250 489087 1838290 1838159 2025-07-02T13:22:37Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 105}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>57. காசிம் மைதீனுக்கு கோவை மக்கள் கொடை</b><ref>*கோவை, பேரூர், சாந்தலிங்கர் திருமடத்தில் இச்செப்பேடு கோவை கிழார் சி.எம். இராமச்சந்திரச் செட்டியார் தொகுப்பில் உள்ளது. படித்தவர் புலவர் ஐ. இராமசாமி</ref>}}}} மைசூர் மன்னர் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் (1734 - 1766) காலத்தில் மைசூர் தளவாய்களின் அதிகாரத்திலிருந்து மைசூரை விடுவித்து ஐதர்அலி நாட்டு நிர்வாகத்தை மேற் கொண்டார். 1765ஆம் ஆண்டு ஐதர்அலி நவாபு பாதர் சாயபு அவர்களின் காரியத்துக்குக் கர்த்தராகக் கோயமுத்தூரில் அட்டவணை, கந்தாசாரம், சுங்கம், பேரம் முதலிய சகல அதிகாரங்களையும் வகித்தவர் குறிக்கார மாதய்யன். அவர் காலத்தில் கோயமுத்தூர் அதிகாரிகளும், கணக்கர் முதலிய ஊழியர்களும், குடியானவர்களும் ஆகிய பலரும் ஒன்றாகக் கூடி கோயமுத்தூர்த் தயத்து காசிம் மைதீன் அவர்களுக்கு இரண்டு வள்ளம் தோட்ட நிலமும் (8 ஏக்கர்), ஒரு மா நன்செய் நிலமும் இரண்டு கிணறுகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டது. கோயமுத்தூர்ப் பேட்டை சாவடி பாரபத்தியம், வெங்கட்ட ரமணய்யர், சேனபோகம் நாகய்யர், கணக்கு அலுவலர் ஆகியோர் குறிக்கப் பெறுகின்றனர். கோயமுத்தூர் அதிகாரிகளில் எவரும் இஸ்லாமியராக இல்லை என்று இச்செப்பேடு மூலம் தெரிகிறது. கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் பலர் உள்ளனர். இந்தத் தருமத்திற்கு எவரேனும் தீங்கு செய்தால் அசுவகத்தி, குருகத்தி, சிசுகத்தி செய்த தோசமும், கங்கைக் கரையில் ஏழு காராம் பசுவைக் கொன்ற தோசமும் வரும் என்றும், இசுலாமியர்கள் எவரேனும் தீங்கு செய்தால் மக்கா மதினத்திலே கருஞ்சாதி (பன்றி) கழுத்தை அறுத்துக் கொன்று தின்ற பாவம் கிடைக்கும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தத் தருமத்தைப் பரிபாலனம் பண்ணின பேர் கோதானம், பூதானம், கன்னியாதானம் செய்த பயனும் பெற்று, புத்திர சந்தானத்துடன் நெடுங்காலம் வாழ்வார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் சித்திரச்சாவடி கணக்குப் பொன்னைய பிள்ளை மகன் செல்லி அண்ணன் என்பவன். இச்செப்பேடு கோவைக் கிழார் சி.எம். இராமச்சந்திரச் செட்டியார் அவர்கள் தொகுப்பில் கோவை பேரூராதீனம் சாந்தலிங்கர் திருமடத்தில் உள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> kzqfusx798319gaqrltemv5k9qahp9o பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/107 250 489088 1838291 1838165 2025-07-02T13:25:53Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|106 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><b>செப்பேடு</b> <poem>1. சுபமஸ்து சொஸ்த்தஸ்ரீமன் மகாமண்ட 2. வேசுரன் அரியராயவிபாடன் பாஷைக்குத் தப்புவராத கண்டன் 3. கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதான் எம்மண்டலமுந் தி 4. றைகொண்டருளிய பாண்டிமண்டலத் தாபனாசாரியன் ஒட்டிய மோகந் 5. தவிளத்தான் அரியதளவிபாடன் வில்லுக்கு விசையன் சொல்லுக்கு அ 6. ரிச்சந்திரன் சம்பத்துக்குக் குபேரன் அசுவபதி கெஜபதி நர 7. பதி படைக்கு ராசாதிராசன் ராசபரமேசுபரன் ராச 8. மார்த்தாண்டன் ராசகெம்பீரன் ராசபயங்கரன் அஷ்ட்ட போ 9. க துரந்தரராகிய கிருஷ்ணராசஉடையார் அசுபதிராயர் புசபெல 10. ராயர் சீரங்கராயர் அச்சுதமகாராயர் திப்பயமகாராயரா 11. கிய மைசூர் சமஸ்தானம் சிரீரங்கப்பட்டணம் கிருஷ்ணராசுடைய 12. ராசா ராச்சிய பரிபாலனம் பண்ணி ஆண்டருளிய கலியுக சகா 13. ற்த்தம் 4864 க்கு மேல் செல்லாநின்ற விய வருஷம் அற்பி 14. சை மாதம் 2 பஞ்சமி சுக்கிரவாரம் அஸ்த நட்சத்திரமும் சு 15. பநாமயோகமும் மகாகரணமும் கூடின சுபதினத்தில் சீர 16. ங்கப்பட்டணத்தில் ரற்றின சிம்மாசன ரூடராய் பிறிதி 17. வி ராச்சியஞ்செய்கின்ற னாளையில் அயிதரல்லி நவாபுபாதர் 18. சாயபு அவர்கள் காரியத்துக்குக் கருத்தராகிய கோ 19. யம்புத்தூர் குறிக்கார மாதய்யனவர்கள் அட்டவணை க 20. ந்தாசாரம் சுங்கம் பேரம் தேவஸ்தானம் முதலாகிய 21. சகல அதிகாரமும் செய்கின்ற ராயஸ்திரி மாதய்யன் அ 22. வர்கள் னாளையில் கோயமுத்தூர் பேட்டை சாவடிப் 23. பாரபத்தியம் வெங்கிட்டரமணய்யரவர்கள் சேனபோக 24. னாகையனவர்கள் கணக்கு நீலகண்டம்பிள்ளை அத்த 25. ப்ப பிள்ளை குடியானவர்களின் ராமனாதபள்ளை சாமராச 26. பிள்ளை குமாரவேல்பிள்ளை யெமூராபிள்ளை தாண்டவமூர்த் 27. திசாமி ஆளுவாக் கவுண்டன் ராசப்புடையாக்கவுண் 28. டன் பெத்தாக்கவுண்டன் நல்லதம்பி அங்கணன் முகத்தப்புடையா 29. ன் நாகன் குட்டையன் அங்கணன் மன்னமுத்தன் ராசசேரு 30. வைகாரன் குப்பிசெட்டியார் சுப்பராய செட்டியார் முதலி</poem><noinclude></noinclude> kviakm2f49loc9xwekln39819nn45iw பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/108 250 489089 1838292 1838170 2025-07-02T13:30:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 107}} {{rule}}</noinclude><poem>31. யார் அவர்கள் பண்ணையன் தெய்வசிகாமணிக்கவுண்டன் 32. மனவார சுசி ராசையனமுது முதலான குடியானவர்கள் 33. யெல்லோருங் கோயமுத்தூர் தலத்தில் இருக்கும் காசிம் 34. மைய்யதீன் அவர்களுக்குத் தற்மம் சாசனம் சறுவ மா 35. னியம் நடந்து வருகுறபடிக்குப் பேட்டைச் சாவடிக்குச் சே 36. ந்த நிலம் நரசிங்கனய்யனவர்கள் குளத்துப்பத்தில் 37. யேரிக்குங் கீள்த் தெற்குப் புறத்தில் மாதன் தோட்டத்து 38. க்கு வடக்கு சாயபூகான் மகன் உசேனுகான் கும்மந் 39. தான் தோட்டத்துக்கு மேற்கு னாக சேருவைகாரன் {{center|{{larger|<b>இரண்டாம் பக்கம்</b>}}}} 40. குடி கிணத்துத் தோட்டத்துக்கும் கி 41. ளக்கு இது நடு மத்தியத்தில் பெருக்கு னாகசேருவைகாரன் 42. உளுத தோட்டம் ரண்டு வள்ளம் பூமி ரெண்டு கிணறும் 43. சருவமானியமாகக் கோயமுத்தூர்ப் பெரிய குளத்து 44. யேரிக்குங் கீழே னாட்சிமார் மதகுத் தண்ணீர்ப் பாச்சலி 45. லே காடுவெட்டியில் னாட்சிமார் மதகு வாய்க்காலுக்கும் தெ 46. ற்கு வெள்ளாம்பத்து வாய்க்காலுக்கும் வடக்கு பள்ள அரு 47. ளன் வயலுக்கு மேற்கு எமூராபிள்ளைவயலுக்கும் கிளக்கு 48. இது நடுமத்தியத்தில் பெறாக்குப் பெத்தாக்கவுண்டன் உளு 49. த நிலம் ஒரு மா நிலம் கோயமுத்தூர்க் காசிமையதீ 50. ன் அவர்களுக்குச் சருவ மானியமாகக் குடுத்தது ரண்டு 51. வள்ளத் தோட்டமும் ரண்டு கிணறும் இந்த ஒரு மா நிலமு 52. ங் குடுத்தது இது சந்திரசூரியர் உள்ளவரைக்கும் பூமி ஆகா 53. சம் உள்ளவரைக்கும் இதில் எப்பேர்ப்பட்ட பயிரும் இட்டு 54. அனுபவித்துக் கொள்ளவும் புத்திர பவுத்திர ருள்ளவரைக் 55. கும் அனுபவித்துக் கொள்ளவும் இதுக்குச் சாட்சி 56. காகசீ அல்லிச மாக்கானரு நவாபு சந்தா சா 57. யபூ மகராசா அல்லி கானா இதுக்கு ஒப்பம் 58. --------- --------- --------- ----------- ----------- ----------- 59. சுபையதார் ரகுனானதயன் கரணிக்க நரசிங்கைய 60. ன் கரணிக்கத் திம்மப்பையன் கரணிக்க அரி கிஷ்</poem><noinclude></noinclude> n4ootpon2yw0of7863wu1t2pskosaap பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/109 250 489090 1838293 1838173 2025-07-02T13:31:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|108 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>61. ண முதலியார் கந்தாசாரத்துச் சேனபோக 62. ர் சவுடய்யன் லிங்கையன் குடியான பேருகள் 63. பேட்டைச் சாவுடிப் பாரபத்தியக்காரர் வெங்கிட்டர 64. மணய்யன் கணக்கு அத்தப்பபிள்ளை யெமூராபிள்ளை சாமி 65. னாதபிள்ளை ராமனாதபிளளை ராசப்புடையாக் கவுண்டன் 66. நல்லதம்பி அங்கண்ணகவுண்டன் குட்டையன் அங்கண் 67. ணகவுண்டன் மன்னமுத்தன் நாங்கள் அனைவரும் கூ 68. டி எழுதிக் குடுத்த தர்மசாதனப் பட்டையம் இந்த தர் 69. மத்துக்கு இடரு செய்த பேருக்கு அசுவத்தி குருவத்தி சிசு 70. வத்தி செய்த தோஷம் கெங்கைக் கரையில் ஏழு காரா 71. ம்பசுவைக் கொன்ற பாவத்திலே போகக் கடவா 72. ராகவும் இதுக்குத் துலுக்கரில் யாதாமொருவன் 73. இடரு செய்தால் மக்கா மதினத்தில் கருஞ்சாதி களு 74. த்தை அறுத்துத் தின்ன பாவத்தில் போவாராகவும் 75. இந்தத் தருமம் பரிபாலனம் செய்த பேருகளுக்கு கோதா 76. னம் பூதானம் கன்னியாதானம் செய்த பலனும் பெ 77. ற்று புத்திரசந்தானமும் பெற்று நீடூளி காலம் வா 78. ள்வாராகவும் இந்தத் தர்ம சாசனப்பட் 79. டையம் எழுதினவன் சித்திரைச் சாவடிக் 80. கணக்குப் பொன்னயபிள்ளை மகன் செல் 81. லிஅண்ணன் குருவே துணை</poem>{{nop}}<noinclude></noinclude> icvl1tvlkitdrfdl3wwjgo607objb22 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/110 250 489091 1838294 1838176 2025-07-02T13:34:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 109}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>58. காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பாண்டியர் கல்வெட்டுக்கள்</b>}}}} திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டத்தைச் சேர்ந்த காயல்பட்டினம் தொன்மையான பேரூர். பவித்ரமாணிக்கப் பட்டினம் என்று வரலாற்றிலும் ‘சிறிய மெக்கா’ என்று இஸ்லாமியப் பெருமக்களாலும் அழைக்கப்படும் சிறப்பு மிக்க ஊர். பாண்டியர் வரலாற்றோடு தொடர்புடைய ஊர். அங்குள்ள பள்ளிவாசல்களில் உள்ள கல்வெட்டுக்களில் ஐந்து கல்வெட்டுக்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 1, 4, 5 ஆம் எண் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை முனை ராஜாமுகமது அவர்கள் அன்புடன் உதவியவை. {{center|{{larger|<b>1) கடற்கரைப் பள்ளிக் கல்வெட்டு</b>}}}} கடற்கரைப் பள்ளியில் இருந்த இக்கல்வெட்டு கற்புடையார் பள்ளியில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. சடையவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி. 1190-1218) கல்வெட்டு. ‘பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப’ என்ற அவன் மெய்க்கீர்த்தியோடு இக்கல்வெட்டு தொடங்குகிறது. ஐந்து பாண்டியர்களுள் ஒருவனாகிய இம்மன்னன் பவித்திர மாணிக்கப்பட்டினம் என்ற ஊரில் உள்ள கடற்கரைப் பள்ளிக்கு முத்துச் சலாபத்தைக் கொடையாகக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது. “கீழ்க் கடல் படர் காயலந்துறை கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள் வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்லை பவித்திர மாணிக்க நகர்” என்று புகழப்படுகிறது. ‘வணிக சோனகர்’ என்ற தொடரும் காணப்படுகிறது. <b>கல்வெட்டு</b> <b><poem>{{left_margin|3em|பூவின் கிழத்தி மேவி வீற்றிருப்ப மேதினி மாது நீதியில் புணர .... மடந்தை சயப்புயத் திருப்ப மாக்கலை மடந்தை வாக்கினில் பொலிய திசைஇரு நான்கும் இசைநிலா எரிப்ப மறைநெறி வளர மனுநெறி திகழ்தர அறநெறிச் சமயங்கள் ஆறும் தழைப்ப ....... ........ ............... எழுகடல் பொழில் வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்ப}}</poem></b><noinclude></noinclude> gp655u69csfcr1njpi5ibfqgreofz7g பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/111 250 489092 1838296 1838178 2025-07-02T13:48:57Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|110 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><b><poem>{{left_margin|3em|இருநேமி யளவும் ஒருநேமி ஓங்க சேரலர் பணிய..... மணியணி மாட கூடப் பாண்டிமண் டலங்கொள் தென்கீழ்க் கடல்படர் காய லந்துறை கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள் வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்கை பவித்திர மாணிக்க நகர்க்குக் காவலர் ஐவருக் கொருவர்}}</poem></b> திரிபுவனச் சக்கரவர்த்தி ஆணையாக கடற்கரைப் பள்ளி இறையிலியாகக் குடுக்கும்படிக்கு திருவுளத்தருளிய முத்துச் சலாபம் வாணிகச் சோனகர் குழுக்காய் நாட்டிப் படுத்து.... எல்கை காட்டியும்... வாறெல்லாம்... யாண்டு... விளங்குமுயர் வெள்ளிநாள்.... கல்லில் வெட்டுவித்தேன்.... த்துத்.... மாறென... ரா... க்ண்டனனே... தென்னர் பராக்கிரமனே.... யு.... ஒன்றே யாண்டு கொள்ளவுமாக.... துல்யம்... எழுத்து... ஸ்ரீ... {{center|{{larger|<b>2) கற்புடையார் பள்ளிக் கல்வெட்டு</b>}}}} மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (1314-1362) காலக் கல்வெட்டு. அரசனின் 11ஆம் ஆட்சியாண்டில் பவித்திர மாணிக்கப் பட்டினத்து வியாபாரி வடவணிகன் என்பவன் சந்தியா தீப விளக்குவைக்க இரண்டு அச்சுக் கொடுத்தான். <b>கல்வெட்டு</b> ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கர வத்திகள் குலசேகர பாண்டிய தேவர்க்கு யாண்டு ஒன்பதாவதின் எதிர் இரண்டாவது பவித்திர மாணிக்க பட்டினத்து வியாபாரி வடவணிகன்... செய்வதாக சந்தி தீப விளக்குக்குப் பண்டாரத்துக்கு அச்சு இரண்டு இத்தர்மம் சந்திராதித்தவரை செல்வதாக... {{center|{{larger|<b>3) இரட்டைக் குளம் பள்ளிவாசல் கல்வெட்டு</b>}}}} மேல் கல்வெட்டில் கண்ட குலசேகர பாண்டியனின் 16வது ஆட்சியாண்டில் சுல்தான், உய்யவந்தான் திருவனந்தன் ஆகியோர் கொடுத்த கொடை குறிக்கப்படுகிறது. <b>கல்வெட்டு</b> ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலசேகர தேவர்க்கு பராண்டு பதினைந்தாவதுக்கு எதிராவது சுல்தான் உள்ளிட்டாரும் உய்யவந்தான் திருவனந்தன் இவ்வனைவோரும்...{{nop}}<noinclude></noinclude> 87t275qldanvuclfqxn2bjlelmslfna 1838297 1838296 2025-07-02T13:52:14Z Booradleyp1 1964 1838297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|110 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><b><poem>{{left_margin|3em|இருநேமி யளவும் ஒருநேமி ஓங்க சேரலர் பணிய..... மணியணி மாட கூடப் பாண்டிமண் டலங்கொள் தென்கீழ்க் கடல்படர் காய லந்துறை கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள் வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்கை பவித்திர மாணிக்க நகர்க்குக் காவலர் ஐவருக் கொருவர்}}</poem></b> திரிபுவனச் சக்கரவர்த்தி ஆணையாக கடற்கரைப் பள்ளி இறையிலியாகக் குடுக்கும்படிக்கு திருவுளத்தருளிய முத்துச் சலாபம் வாணிகச் சோனகர் குழுக்காய் நாட்டிப் படுத்து.... எல்கை காட்டியும்... வாறெல்லாம்... யாண்டு... விளங்குமுயர் வெள்ளிநாள்.... கல்லில் வெட்டுவித்தேன்.... த்துத்.... மாறென... ரா... கண்டனனே... தென்னர் பராக்கிரமனே.... யு.... ஒன்றே யாண்டு கொள்ளவுமாக.... துல்யம்... எழுத்து... ஸ்ரீ... {{center|{{larger|<b>2) கற்புடையார் பள்ளிக் கல்வெட்டு</b>}}}} மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (1314-1362) காலக் கல்வெட்டு. அரசனின் 11ஆம் ஆட்சியாண்டில் பவித்திர மாணிக்கப் பட்டினத்து வியாபாரி வடவணிகன் என்பவன் சந்தியா தீப விளக்குவைக்க இரண்டு அச்சுக் கொடுத்தான். <b>கல்வெட்டு</b> ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கர வத்திகள் குலசேகர பாண்டிய தேவர்க்கு யாண்டு ஒன்பதாவதின் எதிர் இரண்டாவது பவித்திர மாணிக்க பட்டினத்து வியாபாரி வடவணிகன்... செய்வதாக சந்தி தீப விளக்குக்குப் பண்டாரத்துக்கு அச்சு இரண்டு இத்தர்மம் சந்திராதித்தவரை செல்வதாக... {{center|{{larger|<b>3) இரட்டைக் குளம் பள்ளிவாசல் கல்வெட்டு</b>}}}} மேல் கல்வெட்டில் கண்ட குலசேகர பாண்டியனின் 16வது ஆட்சியாண்டில் சுல்தான், உய்யவந்தான் திருவனந்தன் ஆகியோர் கொடுத்த கொடை குறிக்கப்படுகிறது. <b>கல்வெட்டு</b> ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலசேகர தேவர்க்கு பராண்டு பதினைந்தாவதுக்கு எதிராவது சுல்தான் உள்ளிட்டாரும் உய்யவந்தான் திருவனந்தன் இவ்வனைவோரும்...{{nop}}<noinclude></noinclude> s5jgrp5dhvyavl7050s3g6h8tf374n2 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/112 250 489093 1838300 1838179 2025-07-02T13:55:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 111}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>4) கற்புடையார் பள்ளிக் கல்வெட்டு</b>}}}} மாறவர்மன் வீரபாண்டியன் காலக் கல்வெட்டு (1334-1367) பவித்திர மாணிக்கப் பட்டினமான காகிற்றூர் நாடாள்வான் கறுப்புடையார் சோனகப்பள்ளிக்குக் கொடையாக சோனக வியாபாரிகள் தலைவனுக்குக் கொடுத்த ஆணையை இக்கல்வெட்டு கூறுகிறது. இரு போகத்துக்கும் நன்செய், புன்செய் விளைவில் அவ்வூரார் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை வரியும் இனிப்பிறக்கும் வரிகளும் கறுப்புடையார் பள்ளிக்கு விட்ட நிலங்களுக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. <b>கல்வெட்டு</b> <poem>1. ஸ்வஸ்திஸ்ரீ கோமாறப்பன்மரான திரிபுவனச்ச 2. க்கரவர்த்திகள் செம்பிநாடு கொண்டருளின சிறிவீர 3. பாண்டிய தேவற்கு யாண்டு... யாவதின் எதிராமா 4. ண்டு இசப நாயிற்று யிருபத்தெட்டாந் தியதியும் திங் 5. கணாளும் புனர்பூயத்துநாள் கண்டனன் 6. பவித்திரமாணிக்கப்பட்டினமான காகிற்றூர் கண் நாடா 7. ள்வானேன் எட்டடி நெடுந்தெரு வீற்றுள்ள ஆரல் கத் 8. தலை தரள தரங்கத்து சோனக வியாபாரி நாயகற் 9. கு கறுப்புடையார் சோனவப்பள்ளி... குடிக்குள் கோன் 10. செய்யுனென். மேல் குடிமை அந்த 11. ராயம்... கீழ்மேல் எல்லை காயல் கரைக் 12. குப் புள்ளிபுக்க நிலம் புன்செய் நன்செய்... மாவுக்குப் 13. பாசனம் பொக்கத்து வாயிலைக் கொடிப்புறத்து 14. வாழையுள்பட்டு ஆடி குறுவை அல்பிசி குறுவைக்கு மரத்தால் 15. ... கல நெல்லு தூணிப்பதற்கு நெல்லும்... அ... 16. .... திரமும் இறுப்பதாக... வும் 17. ........ .............. .............. ..............சோவைப் 18. பள்ளிக் கிதுவகை வரி இல்லாத இருந்திப் பிறக்கும் 19. சையிற் காட்டி....... ............ .............. 20. ............ அஞ்சுவண்ணத் தொழுகை செய்..... 21. துவரற்க.... பவித்திர மாணிக்க நகரூர் காகிற் 22. றூர் நாடென்ற பட்டினத்து..... கறுப்</poem><noinclude></noinclude> qwsg390c9pfwvnqkhd2d7h6qarrwsby பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/113 250 489094 1838301 1838183 2025-07-02T13:58:15Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|112 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>23. புடையான் தலைவன் கணக்கன் புரந்து எளுதிக்காத்து அறப் 24. பகஞ்செய்யக் ..... கடவரால் 25. ....... கு இறுக்கும்படிக்கு.... கல்வெட்டிக் 26. குடுத்தேன்.... ஸ்ரீ.....</poem> {{center|{{larger|<b>5) கொடிமரத்து சிறுநயினார்பள்ளிக் கல்வெட்டு</b>}}}} அரிகேசரி பராக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டு (கி.பி. 1422-1463) துருக்கநயினாப் பள்ளியில் சிறந்த முறையில் விழாக்கள் நடத்த தென்காயல் மக்கள் எல்லோரும் மகிழ தொழுகை நடத்த அர்த்த மண்டபம் இடைநாழி, பெருமண்டபம், தண்ணீர்க் குளம் அமைத்து ஏற்ற திருப்பணிகளும் செய்யப்பட்டன. இவை அனைத்தும் அரிகேசரி பராக்கிரம பாண்டியனின் 25ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1451) நடைபெற்றன. தென்வாலி நாட்டுப் பொருநையாறு பாயும் பகுதியில் வடபுறம் உமரிக்காட்டு எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் கொடையாகக் கொடுக்கப்பட்டது. புன்னைக் காயலும் குறிக்கப் பெறுகிறது. அரசன் எல்லா வருவாயும் பள்ளிவாசலுக்கு அளிக்க ஓலை கொடுத்தான். இவ்வோலை கல்வெட்டாக வெட்டப்பட்டு செப்பேடும் கொடுக்கப்பட்டது. கொடை நிலங்களுக்கு வரிகளும் நீக்கப்பட்டன. கொற்கை அதிகாரிகள் சிலர் கையொப்பமிட்டுள்ளனர். தென்காசிக் கோயில் திருப்பணிகள் செய்தவன் சிவபக்தனான இமன்னனே யாவான். <b>கல்வெட்டு</b> <poem>சுபமஸ்து 1. பூமிசை வனிகை மார்பினில் பொலிய 2. நாமிசை கலைமகள் நலமுற விளங்க 3. புயவரை மீது சயமகள் புணர 4. கயலிணை உலகில் கண்ணெனத் திகழ்தரச் 5. சந்திர குலத்து வந்தவ தரித்து 6. முந்தையர் தவத்து முளையென வளர்ந்து 7. தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து 8. மன்பதை புரக்க மணிமுடி புனைந்து 9. சங்கர சரண பங்கயஞ் சூடி</poem><noinclude></noinclude> t4yg5nd4mpptd3q6qwf72h2b15h67vr பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/114 250 489095 1838302 1838186 2025-07-02T14:01:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 113}} {{rule}}</noinclude><poem>10. வீர பாண்டிய பட்டினத் துள்திகழ் 11. ஆர்கலி யோதக்கரை... 12. ..... கல்தரள வண்மணி தேக்கு 13. புரிசையங் கிருந்து தனிக்குடை திகழ்புரி 14. பவித்ர மாணிக்கப் பட்டினத் துறுபெரும் 15. செயமா துறையும் காயல் பட்டினம் 16. திகழ்தரு துருக்க நயினாப் பள்ளி 17. விழாவணி நடாத்தி வழாவகை நடாத்தற்கு 18. தென்காயல் நாட்டு மண்மக்கள் உவப்ப 19. தொழுகை அர்த்தமண் டபமும் இடைநாழி 20. பெருமண்டபமும் அலம்புநீர் வாலியும் செய்து 21. திருப்பணி செய்து சோனகப் பள்ளி 22. சிரி அரிகேசரி பராக்ரம பாண்டிய தேவர்க்கு யாண்டு இருபத் 23. தெட்டாவதின் மேலாம் எதிரது...ற்று இருபத்தொன்றாம் 24. தியதி பூரணையும் வெள்ளிக்கிழமை சோதிநாள்... யத்து 25. தென்வாரி நாட்டுப் பொருநை பாயும் உத்தரதீரத்து உமரிக் 26. காட்டெல்லை யுட்படு மாத்தூர் காணிக்கு... பராக்கிரம 27. பாண்டிய தேவற்கு எல்கையான புன்னைக் காயற்கு உட்பட்ட 28. வடக்கீழ் எல்கை.... நன்செயும் புன்செயும் மேடும் குளனும் 29. மாவடை மரவடை பட்டைகொடித் தோட்டமும்... 30. செக்கிறை மற்றுமுள்ள சமஸ்தப்பிராப்திகள் யாவும் முப்பதாவது 31. பாசன முப்பெரு முதலுக்கு தேவதானமாக விட்டது இம் 32. மரியாதையிலே இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு... 33. உள்ளளவும் ..... ....... ....... ......... 34. கையாண்டு செம்பிலும் கல்லிலும் வெட்டியது இதனால் 35. பள்ளியிற் றொழுகைப் பணிகள் எவையும் முறையோ 36. டாழ்வாற நடாத்திப் போதாவும் பாற்க... இவை 37. கொற்கை பராக்கிரம மாறன் சிறியரிபாண்டியன் தென்னவன் 38. எழுத்து.... துல்யம்... பவித்திரமாணிக்கப் பட்டினப் 39. .......... ........ .......சந்திராதித்தவம் 40. ....... வரியிலார் கணக்கிலும் தவிர்த்து 41. கையாண்டு கொள்ளவும் துல்யம்.... ஸ்வஸ்திஸ்ரீ.....</poem>{{nop}}<noinclude></noinclude> 2nbws2bamrws7ik6nhxcj9gpk35fch6 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/115 250 489096 1838304 1838188 2025-07-02T14:05:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|114 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>59. உதய மார்த்தாண்டன் புதுப்பித்த பள்ளிவாசல்</b><ref>*ARE 311 of 1964</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன் பட்டினம் காட்டு மகதூம் பள்ளிவாசல் |- | காலம் || – ||கொல்லம் 568; உதய மார்த்தாண்ட வர்மன். கி.பி. 31.7.1387 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||நாஞ்சில் நாட்டு மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் கோணாடு கொண்டான் பட்டினத்தில் உள்ள ஜும்மாத்துப் பள்ளிவாசலைப் புதுப்பித்து தன் பெயரால் “உதைய மார்த்தாண்டப் பெரும்பள்ளி” என்று பெயர் வைத்து அவ்வூர்க் காதியாருக்கும் “உதைய மார்த் தாண்டக் காதியார்” என்றும் பெயர் கொடுத்தார். துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட் கெல்லாம் நாலு பணத்துக்குத் கால் பணம் மகமைக் கொடையளிக்கவும் ஏற்பாடு செய்தார். |} <b>கல்வெட்டு</b> <poem>1. ஸ்வஸ்திஸ்ரீ அருளிச் 2. செயல் கொல்ல 3. ம் 563 வருஷம் சிங் 4. மம் இரண் 5. டாந் தியதியும் ப 6. வுர்ணமியும் புதன் 7. கிழமையும் பெற்ற 8. அவிட்டத்து நாள் 9. சோனாடு கொண் 10. டான் பட்டினத்து ஜு 11. மாத்துப் பள்ளிக்கு 12. உதையமார்த்தாண் 13. டப் பெரும்பள்ளி எ 14. ன்று பேருங்குடுத் 15. து இவ்வூரிற் காதி 16. யார் அபூவக்கற்கு 17. உதையமாத்தாண்</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> pza65bcaa118zdepuldl9vvkk82fbvo பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/116 250 489097 1838305 1838189 2025-07-02T14:06:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1838305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 115}} {{rule}}</noinclude><poem>18. டக் காதியார் என்று 19. பேருங் குடுத்து இந் 20. தப் பள்ளிக்கு சுவந் 21. தரமாக இந்தச் சோ 22. ணாடு கொண்டான் ப 23. ட்டினத்துத் துறை 24. யில் ஏற்றுமதி இறக் 25. குமதி கொள்ளும் 26. வகைகளுக்கு எ 27. ல்லாம் விலைப் 28. படி உள்ள முதலு 29. க்கு நாலு பணத்து 30. க்கு காற்பணமாக 31. உள்ள விழுக்காடு 32. பெறும்படியும் இ 33. ன்னாள்வரை இப்படியி 34. லே பேரும் வழங்கி 35. இந்தச் சுதந்தரமும் பெற் 36. றுப் போதும்படியும்</poem>{{nop}}<noinclude></noinclude> 20yn2dmixcmyyca3ab6b8erbxr69agb பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/117 250 489098 1838404 1571545 2025-07-03T05:28:31Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|116 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>60. மண்ணையார்கள் தந்த பள்ளிவாசல் கொடை*</b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– || தஞ்சாவூர் நகரம் சமசுப்ரு பள்ளிவாசலில் நடப் பட்டுள்ள குத்துக்கல் |- | {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}|– ||தஞ்சை நாயக்க மரபில் முதல் மன்னன் செவ்வப்ப நாயக்கர் காலம் (1549-1572); சாதாரண வருடம் மார்கழி 14 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||நாஞ்சிக் கோட்டையில் உள்ள கள்ளர் மரபினரில் ஐந்து மண்ணையார்களை அழைத்து இப்பள்ளி வாசலுக்கு ஏழு வேலி நிலம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி அவர்கள் நிலம் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. (கள்ளர் சமூகத்தில் ஒரு பிரிவினர் மண்ணையார்). நிலத்தின் எல்லைகள் கூறப்படுகின்றன. சூத்திரரும், பிராமணரும் இத்தர்மத்துக்குத் தீங்கு செய்தால் காசி, ராமேசுவரத்தில் காராம் பசுவைக் கொன்ற பாவமும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் மக்கத்துப் பள்ளியிலே தாயைச் சேர்ந்த பாவமும் வரும் என்று கூறப் பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 1550. |} <b>கல்வெட்டு</b> <poem>{{Multicol}} 1. சாதா 3. வருஷம் மா 5. மாதம் 14 தேதி 7. வூரில் இ 9. சுமுசுப்பி 11. க்கீருகளுக் 13. வேணுமெ 15. ல்வப்ப 17. நாஞ்சி 19. டையி 21. கும் மண் 23. ர்களை 25. பிச்சு உ {{Multicol-break}} 2. ருண 4. ர்கழி 6. தஞ்சா 8. ருக்கும் 10. ரு பள்ளி ப 12. கு நிலம் விட 14. ன்று செ 16. னாயக்கர் 18. க்கோட்டை 20. இருக் 22. ணையா 24. அழைப் 26. ங்கள் எ {{Multicol-end}}</poem>{{nop}}<noinclude></noinclude> d4gl7d10hcgyj2kaav1byk6506pf23m 1838427 1838404 2025-07-03T06:20:46Z ஹர்ஷியா பேகம் 15001 1838427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|116 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>60. மண்ணையார்கள் தந்த பள்ளிவாசல் கொடை*</b><ref>*ARE 294 of 1964;425 of 1984.<br>ஆவணம், 4 சனவரி 1994, பக்கம் 102, 103</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– || தஞ்சாவூர் நகரம் சமசுப்ரு பள்ளிவாசலில் நடப் பட்டுள்ள குத்துக்கல் |- | {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}|– ||தஞ்சை நாயக்க மரபில் முதல் மன்னன் செவ்வப்ப நாயக்கர் காலம் (1549-1572); சாதாரண வருடம் மார்கழி 14 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||நாஞ்சிக் கோட்டையில் உள்ள கள்ளர் மரபினரில் ஐந்து மண்ணையார்களை அழைத்து இப்பள்ளி வாசலுக்கு ஏழு வேலி நிலம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி அவர்கள் நிலம் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. (கள்ளர் சமூகத்தில் ஒரு பிரிவினர் மண்ணையார்). நிலத்தின் எல்லைகள் கூறப்படுகின்றன. சூத்திரரும், பிராமணரும் இத்தர்மத்துக்குத் தீங்கு செய்தால் காசி, ராமேசுவரத்தில் காராம் பசுவைக் கொன்ற பாவமும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் மக்கத்துப் பள்ளியிலே தாயைச் சேர்ந்த பாவமும் வரும் என்று கூறப் பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 1550. |} <b>கல்வெட்டு</b> <poem>{{Multicol}} 1. சாதா 3. வருஷம் மா 5. மாதம் 14 தேதி 7. வூரில் இ 9. சுமுசுப்பி 11. க்கீருகளுக் 13. வேணுமெ 15. ல்வப்ப 17. நாஞ்சி 19. டையி 21. கும் மண் 23. ர்களை 25. பிச்சு உ {{Multicol-break}} 2. ருண 4. ர்கழி 6. தஞ்சா 8. ருக்கும் 10. ரு பள்ளி ப 12. கு நிலம் விட 14. ன்று செ 16. னாயக்கர் 18. க்கோட்டை 20. இருக் 22. ணையா 24. அழைப் 26. ங்கள் எ {{Multicol-end}}</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> sizh50ttzqywg0fgc3er6mid7uum35x 1838649 1838427 2025-07-03T11:31:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|116 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>60. மண்ணையார்கள் தந்த பள்ளிவாசல் கொடை*</b><ref>*ARE 294 of 1964;425 of 1984.<br>ஆவணம், 4 சனவரி 1994, பக்கம் 102, 103</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – || தஞ்சாவூர் நகரம் சமசுப்ரு பள்ளிவாசலில் நடப்பட்டுள்ள குத்துக்கல். |- | {{ts|vtt}}|காலம் || {{ts|vtt}}| – ||தஞ்சை நாயக்க மரபில் முதல் மன்னன் செவ்வப்ப நாயக்கர் காலம் (1549-1572); சாதாரண வருடம் மார்கழி 14. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||நாஞ்சிக் கோட்டையில் உள்ள கள்ளர் மரபினரில் ஐந்து மண்ணையார்களை அழைத்து இப்பள்ளி வாசலுக்கு ஏழு வேலி நிலம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி அவர்கள் நிலம் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. (கள்ளர் சமூகத்தில் ஒரு பிரிவினர் மண்ணையார்). நிலத்தின் எல்லைகள் கூறப்படுகின்றன. சூத்திரரும், பிராமணரும் இத்தர்மத்துக்குத் தீங்கு செய்தால் காசி, ராமேசுவரத்தில் காராம் பசுவைக் கொன்ற பாவமும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் மக்கத்துப் பள்ளியிலே தாயைச் சேர்ந்த பாவமும் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 1550. |} <b>கல்வெட்டு</b> <poem>{{Multicol}} 1. சாதா 3. வருஷம் மா 5. மாதம் 14 தேதி 7. வூரில் இ 9. சுமுசுப்பி 11. க்கீருகளுக் 13. வேணுமெ 15. ல்வப்ப 17. நாஞ்சி 19. டையி 21. கும் மண் 23. ர்களை 25. பிச்சு உ {{Multicol-break}} 2. ருண 4. ர்கழி 6. தஞ்சா 8. ருக்கும் 10. ரு பள்ளி ப 12. கு நிலம் விட 14. ன்று செ 16. னாயக்கர் 18. க்கோட்டை 20. இருக் 22. ணையா 24. அழைப் 26. ங்கள் எ {{Multicol-end}}</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> bsz2osi6w990vqahtbljk80e4vsytus பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/118 250 489099 1838414 1571546 2025-07-03T05:55:40Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 117}} {{rule}}</noinclude><poem>{{Multicol}} 27. ல்லையி 29. வேலி நி 31. என்று 33. ன்படி 35. னாயக்க 37. ன் அவ 39. த்தார 41. சம்மதி 43. சிலம்பாம 45. வேல்மண்ணை 47. மண்ணையாத் 49. யார் தம்பம 51. இந்த அஞ்சு மண் 53. தித்து எங்கள் எல் 55. நிலம் விட்டதுக் 57. ங்குளம் உள்பட 59. க்கு வடக்கு ண்ட 61. க்கு கிழக்கும் 63. அழகிய குளத்து 65. க்கு இந்த நாங் 67. பட்ட நிலத்தை 69. ரைக்கும் ஆ 71. ச்சு கொள்ள 73. வும் இந்தபடி 75. அய்யன் அவ 77. ணையார்க 79. தித்து விட் 81. யாதாமொ 83. ரரிலே 85. ணரி 87. கினம்ப் 89. னார்க {{Multicol-break}} 28. லே ஏழு 30. லம் விடு 32. சொன் 34. யினாலே 36. ர் அய்ய 38. ர்கள் உ 40. படிக்கி 42. த்து 44. ண்ணையார் 46. யார் கோபால் 48. மண்ணை 50. ண்ணையார் 52. ணையாரும் சம்ம 54. லையிலே ஏழு வேலி 56. கு எல்லை கரும் 58. கருங்குளத்து 60. கோட்டை 62. கரைக்கி தெற்கு 64. வாரிக்கு மேற் 66. கெல்லைக்குள் 68. சந்திராதித்தவ 70. ண்டனுபவி 72. க் கடவோராக 74. க்கு னாயக்கர 76. ர்களும் மண் 78. ளும் சம்ம 80. டது இதுக்கு 82. ருவர் சூத்தி 84. பிராம 86. லேவிக் 88. பண்ணி 90. ஆனால் {{Multicol-end}}</poem>{{nop}}<noinclude></noinclude> o6qc3tyaji0n9huswh6aa1dhintukux 1838415 1838414 2025-07-03T05:56:44Z ஹர்ஷியா பேகம் 15001 1838415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 117}} {{rule}}</noinclude><poem>{{Multicol}} 27. ல்லையி 29. வேலி நி 31. என்று 33. ன்படி 35. னாயக்க 37. ன் அவ 39. த்தார 41. சம்மதி 43. சிலம்பாம 45. வேல்மண்ணை 47. மண்ணையாத் 49. யார் தம்பம 51. இந்த அஞ்சு மண் 53. தித்து எங்கள் எல் 55. நிலம் விட்டதுக் 57. ங்குளம் உள்பட 59. க்கு வடக்கு ண்ட 61. க்கு கிழக்கும் 63. அழகிய குளத்து 65. க்கு இந்த நாங் 67. பட்ட நிலத்தை 69. ரைக்கும் ஆ 71. ச்சு கொள்ள 73. வும் இந்தபடி 75. அய்யன் அவ 77. ணையார்க 79. தித்து விட் 81. யாதாமொ 83. ரரிலே 85. ணரி 87. கினம்ப் 89. னார்க {{Multicol-break}} 28. லே ஏழு 30. லம் விடு 32. சொன் 34. யினாலே 36. ர் அய்ய 38. ர்கள் உ 40. படிக்கி 42. த்து 44. ண்ணையார் 46. யார் கோபால் 48. ....... மண்ணை 50. ண்ணையார் 52. ணையாரும் சம்ம 54. லையிலே ஏழு வேலி 56. கு எல்லை கரும் 58. கருங்குளத்து 60. கோட்டை 62. கரைக்கி தெற்கு 64. வாரிக்கு மேற் 66. கெல்லைக்குள் 68. சந்திராதித்தவ 70. ண்டனுபவி 72. க் கடவோராக 74. க்கு னாயக்கர 76. ர்களும் மண் 78. ளும் சம்ம 80. டது இதுக்கு 82. ருவர் சூத்தி 84. பிராம 86. லேவிக் 88. பண்ணி 90. ஆனால் {{Multicol-end}}</poem>{{nop}}<noinclude></noinclude> esfk903uhzw9wuzpqpkidjbd152t7zm 1838650 1838415 2025-07-03T11:34:00Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 117}} {{rule}}</noinclude><poem>{{Multicol}} 27. ல்லையி 29. வேலி நி 31. என்று 33. ன்படி 35. னாயக்க 37. ன் அவ 39. த்தார 41. சம்மதி 43. சிலம்பாம 45. வேல்மண்ணை 47. மண்ணையாத் 49. யார் தம்பம 51. இந்த அஞ்சு மண் 53. தித்து எங்கள் எல் 55. நிலம் விட்டதுக் 57. ங்குளம் உள்பட 59. க்கு வடக்கு ண்ட 61. க்கு கிழக்கும் 63. அழகிய குளத்து 65. க்கு இந்த நாங் 67. பட்ட நிலத்தை 69. ரைக்கும் ஆ 71. ச்சு கொள்ள 73. வும் இந்தபடி 75. அய்யன் அவ 77. ணையார்க 79. தித்து விட் 81. யாதாமொ 83. ரரிலே 85. ணரி 87. கினம்ப் 89. னார்க {{Multicol-break}} 28. லே ஏழு 30. லம் விடு 32. சொன் 34. யினாலே 36. ர் அய்ய 38. ர்கள் உ 40. படிக்கி 42. த்து 44. ண்ணையார் 46. யார் கோபால் 48. ....... மண்ணை 50. ண்ணையார் 52. ணையாரும் சம்ம 54. லையிலே ஏழு வேலி 56. கு எல்லை கரும் 58. கருங்குளத்து 60. கோட்டை 62. கரைக்கி தெற்கு 64. வாரிக்கு மேற் 66. கெல்லைக்குள் 68. சந்திராதித்தவ 70. ண்டனுபவி 72. க் கடவோராக 74. க்கு னாயக்கர 76. ர்களும் மண் 78. ளும் சம்ம 80. டது இதுக்கு 82. ருவர் சூத்தி 84. பிராம 86. லேவிக் 88. பண்ணி 90. ஆனால் {{Multicol-end}}</poem><noinclude></noinclude> pi02sqwfrigzzdoxacfcf2m2r6rx9rs பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/119 250 489100 1838428 1571547 2025-07-03T06:24:37Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|118 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>{{Multicol}} 91. காசி ரா 93. ரத்தி 95. பசுவை 97. தோசத் 99. வார் 101. லே யாதா 103. ர் விக்கிந 105. னார் 107. பள்ளி 109. யெ தனா செ 111. திலே போ 113. யிதுக்கு 115. யான 117. படி {{Multicol-break}} 92. மேசு 94. லே குரால் 96. கொன்ற 98. திலேபோ 100. துலுக்கரி 102. மொருவ 104. ம் பண்ணி 106. ல் மக்கத்து 108. லே பெத்த தா 110. ய்த பாவத் 112. வார் 114. வெட்டி 116. கல்லு {{Multicol-end}}</poem> {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 119 |bSize = 425 |cWidth = 210 |cHeight = 234 |oTop = 285 |oLeft = 150 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> 8norxifdmtmu9zb0dccze59gg7oso41 1838652 1838428 2025-07-03T11:35:07Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|118 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>{{Multicol}} 91. காசி ரா 93. ரத்தி 95. பசுவை 97. தோசத் 99. வார் 101. லே யாதா 103. ர் விக்கிந 105. னார் 107. பள்ளி 109. யெ தனா செ 111. திலே போ 113. யிதுக்கு 115. யான 117. படி {{Multicol-break}} 92. மேசு 94. லே குரால் 96. கொன்ற 98. திலேபோ 100. துலுக்கரி 102. மொருவ 104. ம் பண்ணி 106. ல் மக்கத்து 108. லே பெத்த தா 110. ய்த பாவத் 112. வார் 114. வெட்டி 116. கல்லு {{Multicol-end}}</poem> {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 119 |bSize = 425 |cWidth = 210 |cHeight = 234 |oTop = 285 |oLeft = 150 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> bria9imd9wt0485q7g8iph5r4z2ally பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/120 250 489101 1838433 1838191 2025-07-03T06:38:08Z ஹர்ஷியா பேகம் 15001 1838433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 119}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்*</b><ref>*இஸ்லாமியக் கல்வெட்டுக்கள் - ஒரு கண்ணோட்டம், செ. இராசு. இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரி கருத்தரங்கு மலர்.</ref>}}}} மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. ‘சிவமயம்’ என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது. அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில் ஆட்சிபுரிந்த சுல்தான் ஆவார். உலுக்கான் அல்லது துக்ளக் என்பது அவர் பெயர். அவர் காலம் 14ஆம் நூற்றாண்டாகும். மதுரைக்கு கி.பி. 1323ல் வந்த அவர் இங்கேயே அடக்கமாகிவிட்டார். அவரை இக்கல்வெட்டு “டில்லி ஒரு கோல் சுல்தான்” என்று கூறுகிறது. ‘வாரங்கல்’ என்பதைக் கல்வெட்டு ‘ஒருகோல்’ என்று குறிக்கிறது. மதுரைக் கூன்பாண்டியன் நாளில் 14 ஆயிரம் பொன் அளித்து சோளிகுடி, சொக்கிகுளம், வீவிகுளம், கண்ணானேம்பல் சிறுத்தூர், திருப்பாலை என்ற ஊர்களைப் பள்ளி வாசலுக்கு மானியமாக அளித்தான். அக்கிராமங்கட்கு எல்லைக் கல்லும் போடப்பட்டது. மதுரை நாயக்கர் ஆட்சியில் பள்ளிவாசலுக்கும் அந்த ஊர்களின் நிர்வாகிகளுக்கும் அவ்வூர் உரிமை பற்றிய தகராறு எழுந்தது. மதுரை நாயக்கர் மரபில் அப்போது ஆட்சியிலிருந்த வீரப்பநாயக்கர் நேரில் பள்ளிவாசலுக்குச் சென்று விசாரணை செய்தார். அங்கு பாண்டியன் அப்பள்ளிவாசலுக்கு மேற்கண்ட ஊர்களைக் கொடுத்த ஆவணம் முதலியவற்றைப் பார்வையிட்டார். பள்ளிவாசல் நிர்வாகிகள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து அந்த ஆறு ஊர்களையும் மீண்டும் பள்ளிவாசலுக்கே சந்திர சூரியர் உள்ளவரை அளித்து அதைக் கல்வெட்டாகவும் பொறித்து வைத்தார்.(1573) சுமார் இரண்டு மீட்டர் உயரமுள்ள அக்கல்லில் நான்கு பக்கங்களிலும் 182 வரிகளில் மேற்கண்ட செய்தி எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் 1574. <b>கல்வெட்டு</b> சிவமயம். சொஸ்திஸ்ரீரிமன் மகாமண்டலேசுரன் அரியற தளவிபாடன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பூறுவ தெட்சிண பச்சிம உத்தர சதுர் சமுத்திராபதி பாண்டி மண்டல ஸ்தாபனச்சாரியன் சோளமண்டல<noinclude></noinclude> swloosp1qjeghtd4qy1d2usz0cgkt96 1838435 1838433 2025-07-03T06:39:15Z ஹர்ஷியா பேகம் 15001 1838435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 119}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்*</b><ref>*இஸ்லாமியக் கல்வெட்டுக்கள் - ஒரு கண்ணோட்டம், செ. இராசு. இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரி கருத்தரங்கு மலர்.</ref>}}}} மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. ‘சிவமயம்’ என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது. அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில் ஆட்சிபுரிந்த சுல்தான் ஆவார். உலுக்கான் அல்லது துக்ளக் என்பது அவர் பெயர். அவர் காலம் 14ஆம் நூற்றாண்டாகும். மதுரைக்கு கி.பி. 1323ல் வந்த அவர் இங்கேயே அடக்கமாகிவிட்டார். அவரை இக்கல்வெட்டு “டில்லி ஒரு கோல் சுல்தான்” என்று கூறுகிறது. ‘வாரங்கல்’ என்பதைக் கல்வெட்டு ‘ஒருகோல்’ என்று குறிக்கிறது. மதுரைக் கூன்பாண்டியன் நாளில் 14 ஆயிரம் பொன் அளித்து சோளிகுடி, சொக்கிகுளம், வீவிகுளம், கண்ணானேம்பல் சிறுத்தூர், திருப்பாலை என்ற ஊர்களைப் பள்ளி வாசலுக்கு மானியமாக அளித்தான். அக்கிராமங்கட்கு எல்லைக் கல்லும் போடப்பட்டது. மதுரை நாயக்கர் ஆட்சியில் பள்ளிவாசலுக்கும் அந்த ஊர்களின் நிர்வாகிகளுக்கும் அவ்வூர் உரிமை பற்றிய தகராறு எழுந்தது. மதுரை நாயக்கர் மரபில் அப்போது ஆட்சியிலிருந்த வீரப்பநாயக்கர் நேரில் பள்ளிவாசலுக்குச் சென்று விசாரணை செய்தார். அங்கு பாண்டியன் அப்பள்ளிவாசலுக்கு மேற்கண்ட ஊர்களைக் கொடுத்த ஆவணம் முதலியவற்றைப் பார்வையிட்டார். பள்ளிவாசல் நிர்வாகிகள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து அந்த ஆறு ஊர்களையும் மீண்டும் பள்ளிவாசலுக்கே சந்திர சூரியர் உள்ளவரை அளித்து அதைக் கல்வெட்டாகவும் பொறித்து வைத்தார்.(1573) சுமார் இரண்டு மீட்டர் உயரமுள்ள அக்கல்லில் நான்கு பக்கங்களிலும் 182 வரிகளில் மேற்கண்ட செய்தி எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் 1574. <b>கல்வெட்டு</b> சிவமயம். சொஸ்திஸ்ரீரிமன் மகாமண்டலேசுரன் அரியற தளவிபாடன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பூறுவ தெட்சிண பச்சிம உத்தர சதுர் சமுத்திராபதி பாண்டி மண்டல ஸ்தாபனச்சாரியன் சோளமண்டல<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 5t0ez6a6q4zzex9yy0tst55ze28ru5z 1838653 1838435 2025-07-03T11:35:47Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 119}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>61. வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்*</b><ref>*இஸ்லாமியக் கல்வெட்டுக்கள் - ஒரு கண்ணோட்டம், செ. இராசு. இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரி கருத்தரங்கு மலர்.</ref>}}}} மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. ‘சிவமயம்’ என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது. அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில் ஆட்சிபுரிந்த சுல்தான் ஆவார். உலுக்கான் அல்லது துக்ளக் என்பது அவர் பெயர். அவர் காலம் 14ஆம் நூற்றாண்டாகும். மதுரைக்கு கி.பி. 1323ல் வந்த அவர் இங்கேயே அடக்கமாகிவிட்டார். அவரை இக்கல்வெட்டு “டில்லி ஒரு கோல் சுல்தான்” என்று கூறுகிறது. ‘வாரங்கல்’ என்பதைக் கல்வெட்டு ‘ஒருகோல்’ என்று குறிக்கிறது. மதுரைக் கூன்பாண்டியன் நாளில் 14 ஆயிரம் பொன் அளித்து சோளிகுடி, சொக்கிகுளம், வீவிகுளம், கண்ணானேம்பல் சிறுத்தூர், திருப்பாலை என்ற ஊர்களைப் பள்ளி வாசலுக்கு மானியமாக அளித்தான். அக்கிராமங்கட்கு எல்லைக் கல்லும் போடப்பட்டது. மதுரை நாயக்கர் ஆட்சியில் பள்ளிவாசலுக்கும் அந்த ஊர்களின் நிர்வாகிகளுக்கும் அவ்வூர் உரிமை பற்றிய தகராறு எழுந்தது. மதுரை நாயக்கர் மரபில் அப்போது ஆட்சியிலிருந்த வீரப்பநாயக்கர் நேரில் பள்ளிவாசலுக்குச் சென்று விசாரணை செய்தார். அங்கு பாண்டியன் அப்பள்ளிவாசலுக்கு மேற்கண்ட ஊர்களைக் கொடுத்த ஆவணம் முதலியவற்றைப் பார்வையிட்டார். பள்ளிவாசல் நிர்வாகிகள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து அந்த ஆறு ஊர்களையும் மீண்டும் பள்ளிவாசலுக்கே சந்திர சூரியர் உள்ளவரை அளித்து அதைக் கல்வெட்டாகவும் பொறித்து வைத்தார்.(1573) சுமார் இரண்டு மீட்டர் உயரமுள்ள அக்கல்லில் நான்கு பக்கங்களிலும் 182 வரிகளில் மேற்கண்ட செய்தி எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் 1574. <b>கல்வெட்டு</b> சிவமயம். சொஸ்திஸ்ரீரிமன் மகாமண்டலேசுரன் அரியற தளவிபாடன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பூறுவ தெட்சிண பச்சிம உத்தர சதுர் சமுத்திராபதி பாண்டி மண்டல ஸ்தாபனச்சாரியன் சோளமண்டல<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> neyhaj9lfnb5n78qkce595nvl32alvk பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/121 250 489102 1838436 1571549 2025-07-03T06:39:38Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|120 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>பிறதிட்டாபனாசாரியன் தொண்ட மண்டல சண்டப் பிரசண்டன். ஈழமும் கொங்கு கம்பழமும் யாழ்ப்பாணப் பட்டணமும் கேசரி வேட்டை கொண்டருளிய ராச பரமேசுவரன் ராசமார்த்தாண்டன் ராசகெம்பீரன் வெகுநீதி ராசபரிபாலகன் ராசாக்கள் தம்பிரான் கிஷ்ட்டணராயர் அவர்கள் காரியத்துக் கர்த்தராகிய விசுவநாதநாயக்கன் கிருஷ்ண நாயக்கன் வீரப்ப நாயக்கன் அய்யன் அவர்கள் ராச்சிய பரிபாலனம் பண்ணிச் செய்தருளாநின்ற சாலிவாகன சகாப்தம் 1495 மேல் செல்லாநின்ற பவ வருஷம் தை மாசம் 10 தேதி சுபயோக சுபகரணமம் கூடிய சுபதினத்தில் மதுரை நாட்டில் வைகை நதிக்கு வடகரையாகிய கோரி பாளையத்தில் ல்லி ஒருகோல் சுலுத்தான் பள்ளிவாசல் கோரிக்கு சோளிகுடி சொக்கிகுளம் வீவிகுளக் கண்ணானேம்பல் சிறுத்தூர் திருப்பாவை இந்த ஆறு கிராமமும் முன் கூன்பாண்டியராசா 14 ஆயிரம் தங்கத்துக்கு வாலை பிரமாணம் பண்ணிக் குடுத்து நடந்துவந்த படியினாலே யிதன் பிறகு றாசாக்களுக்கும் மஸ்கருக்கும் தகராறு வந்து நாம் நாயம் விசாரிக்கும்போது பாண்டியன் கோரிக்கு விலைப்பிரமாணம் பண்ணிக் குடுத்த அத்தாட்சி நியாயமானபடி யினாலே முன் நடந்தபடிக்கு நாமும் அபிமானிச்சுக் குடுத்தோம் எல்கை முன் பாண்டிய நாட்டின் கல்லு எல்கைப்படிக்கு இந்த ஆறு கிராமத்தில் சகல சமஸ்த ஆதாயமும் சுகமே என்னென்னைக்கும் சூரியப் பிரவேசம் உள்ளமட்டுக்கும் சுகமே அனுபவித்துக் கொள்வார்களாக.{{nop}}<noinclude></noinclude> 03z4ic130551qfn8z27xp8p46gu810f 1838656 1838436 2025-07-03T11:40:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|120 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>பிறதிட்டாபனாசாரியன் தொண்ட மண்டல சண்டப் பிரசண்டன். ஈழமும் கொங்கு கம்பழமும் யாழ்ப்பாணப் பட்டணமும் கேசரி வேட்டை கொண்டருளிய ராச பரமேசுவரன் ராசமார்த்தாண்டன் ராசகெம்பீரன் வெகுநீதி ராசபரிபாலகன் ராசாக்கள் தம்பிரான் கிஷ்ட்டணராயர் அவர்கள் காரியத்துக் கர்த்தராகிய விசுவநாதநாயக்கன் கிருஷ்ண நாயக்கன் வீரப்ப நாயக்கன் அய்யன் அவர்கள் ராச்சிய பரிபாலனம் பண்ணிச் செய்தருளாநின்ற சாலிவாகன சகாப்தம் 1495 மேல் செல்லாநின்ற பவ வருஷம் தை மாசம் 10 தேதி சுபயோக சுபகரணமம் கூடிய சுபதினத்தில் மதுரை நாட்டில் வைகை நதிக்கு வடகரையாகிய கோரி பாளையத்தில் ல்லி ஒருகோல் சுலுத்தான் பள்ளிவாசல் கோரிக்கு சோளிகுடி சொக்கிகுளம் வீவிகுளக் கண்ணானேம்பல் சிறுத்தூர் திருப்பாவை இந்த ஆறு கிராமமும் முன் கூன்பாண்டியராசா 14 ஆயிரம் தங்கத்துக்கு வாலை பிரமாணம் பண்ணிக் குடுத்து நடந்துவந்த படியினாலே யிதன் பிறகு றாசாக்களுக்கும் மஸ்கருக்கும் தகராறு வந்து நாம் நாயம் விசாரிக்கும்போது பாண்டியன் கோரிக்கு விலைப்பிரமாணம் பண்ணிக் குடுத்த அத்தாட்சி நியாயமானபடியினாலே முன் நடந்தபடிக்கு நாமும் அபிமானிச்சுக் குடுத்தோம் எல்கை முன் பாண்டிய நாட்டின் கல்லு எல்கைப்படிக்கு இந்த ஆறு கிராமத்தில் சகல சமஸ்த ஆதாயமும் சுகமே என்னென்னைக்கும் சூரியப் பிரவேசம் உள்ளமட்டுக்கும் சுகமே அனுபவித்துக் கொள்வார்களாக.{{nop}}<noinclude></noinclude> mioi0jwtic9zr6di3yqa5hjsdhi99fz பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/122 250 489103 1838442 1571550 2025-07-03T06:50:30Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 121}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>82. ரணசிங்க தேவரின் காட்டுபாவா பள்ளிவாசல் கொடை*</b><ref>*புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள், எண் 901, பக் 594</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யம் வட்டம், காட்டுபாவா பள்ளிவாசல் முன்பு நடப்பட்டுள்ள கல். |- | காலம் || – ||தாது வருடம், ஐப்பசி 13, கி.பி. 1690 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||சேதுபதி மன்னர் காத்த ரகுனாதத் தேவர் மகன் ரணசிங்கத் தேவர் காட்டுபாவா பள்ளிவாசலுக்கு அடுங்குளம், காஞ்சவான் குளம் ஆகியவற்றை நீர் பாயும் நிலத்துடன் கொடை கொடுத்தார். கல்வாசல் நாட்டாரும், கானாட்டாரும். காலூர் பள்ளி வாசலுக்குக் கொடுத்த கொடையும் இறுதியில் கூறப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. தாது வருஷம் 2. அற்பசி மாதம் 13 தேதி 3. சேதுபதி காத்த 4. ரெகுனாதத் தேவ 5. ர் குமாரன் ரண 6. சிங்குத் தேவர் உ 7. த்தாரம் நாடுகா 8. த்த சேருவை 9. லக்கி சேருவைகா 10. ரன் சீவிதம் நல் 11. லூர் புரவில் அ 12. டுக்குளமும் வ 13. யலும் காஞ்ச 14. வன் குளமும் 15. வயலும் இது 16. சூழ்ந்த புரவும்கா 17. ட்டுவாவா பள்ளி 18. வாசல் தன்முத் 19. துக்கு விட்டது</poem>{{nop}}<noinclude></noinclude> d8ruuw2m67qjgdswtwq4jquunrbgsnc 1838443 1838442 2025-07-03T06:50:51Z ஹர்ஷியா பேகம் 15001 1838443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 121}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>82. ரணசிங்க தேவரின் காட்டுபாவா பள்ளிவாசல் கொடை*</b><ref>*புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள், எண் 901, பக் 594</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யம் வட்டம், காட்டுபாவா பள்ளிவாசல் முன்பு நடப்பட்டுள்ள கல். |- | காலம் || – ||தாது வருடம், ஐப்பசி 13, கி.பி. 1690 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||சேதுபதி மன்னர் காத்த ரகுனாதத் தேவர் மகன் ரணசிங்கத் தேவர் காட்டுபாவா பள்ளிவாசலுக்கு அடுங்குளம், காஞ்சவான் குளம் ஆகியவற்றை நீர் பாயும் நிலத்துடன் கொடை கொடுத்தார். கல்வாசல் நாட்டாரும், கானாட்டாரும். காலூர் பள்ளி வாசலுக்குக் கொடுத்த கொடையும் இறுதியில் கூறப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. தாது வருஷம் 2. அற்பசி மாதம் 13 தேதி 3. சேதுபதி காத்த 4. ரெகுனாதத் தேவ 5. ர் குமாரன் ரண 6. சிங்குத் தேவர் உ 7. த்தாரம் நாடுகா 8. த்த சேருவை 9. லக்கி சேருவைகா 10. ரன் சீவிதம் நல் 11. லூர் புரவில் அ 12. டுக்குளமும் வ 13. யலும் காஞ்ச 14. வன் குளமும் 15. வயலும் இது 16. சூழ்ந்த புரவும்கா 17. ட்டுவாவா பள்ளி 18. வாசல் தன்முத் 19. துக்கு விட்டது</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> bj5doix70irnimylenslrfv08cmvenv 1838658 1838443 2025-07-03T11:42:52Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 121}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>82. ரணசிங்க தேவரின் காட்டுபாவா பள்ளிவாசல் கொடை*</b><ref>*புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள், எண் 901, பக் 594</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யம் வட்டம், காட்டுபாவா பள்ளிவாசல் முன்பு நடப்பட்டுள்ள கல். |- | காலம் || – ||தாது வருடம், ஐப்பசி 13, கி.பி. 1690 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||சேதுபதி மன்னர் காத்த ரகுனாதத் தேவர் மகன் ரணசிங்கத் தேவர் காட்டுபாவா பள்ளிவாசலுக்கு அடுங்குளம், காஞ்சவான் குளம் ஆகியவற்றை நீர் பாயும் நிலத்துடன் கொடை கொடுத்தார். கல்வாசல் நாட்டாரும், கானாட்டாரும். காலூர் பள்ளி வாசலுக்குக் கொடுத்த கொடையும் இறுதியில் கூறப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. தாது வருஷம் 2. அற்பசி மாதம் 13 தேதி 3. சேதுபதி காத்த 4. ரெகுனாதத் தேவ 5. ர் குமாரன் ரண 6. சிங்குத் தேவர் உ 7. த்தாரம் நாடுகா 8. த்த சேருவை 9. லக்கி சேருவைகா 10. ரன் சீவிதம் நல் 11. லூர் புரவில் அ 12. டுக்குளமும் வ 13. யலும் காஞ்ச 14. வன் குளமும் 15. வயலும் இது 16. சூழ்ந்த புரவும்கா 17. ட்டுவாவா பள்ளி 18. வாசல் தன்முத் 19. துக்கு விட்டது</poem><noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> nthcxheszrivyi5ilce7bqg7ze3tc5d 1838659 1838658 2025-07-03T11:43:06Z மொஹமது கராம் 14681 1838659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 121}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>82. ரணசிங்க தேவரின் காட்டுபாவா பள்ளிவாசல் கொடை*</b><ref>*புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள், எண் 901, பக் 594</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யம் வட்டம், காட்டுபாவா பள்ளிவாசல் முன்பு நடப்பட்டுள்ள கல். |- | காலம் || – ||தாது வருடம், ஐப்பசி 13, கி.பி. 1690. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||சேதுபதி மன்னர் காத்த ரகுனாதத் தேவர் மகன் ரணசிங்கத் தேவர் காட்டுபாவா பள்ளிவாசலுக்கு அடுங்குளம், காஞ்சவான் குளம் ஆகியவற்றை நீர் பாயும் நிலத்துடன் கொடை கொடுத்தார். கல்வாசல் நாட்டாரும், கானாட்டாரும். காலூர் பள்ளி வாசலுக்குக் கொடுத்த கொடையும் இறுதியில் கூறப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. தாது வருஷம் 2. அற்பசி மாதம் 13 தேதி 3. சேதுபதி காத்த 4. ரெகுனாதத் தேவ 5. ர் குமாரன் ரண 6. சிங்குத் தேவர் உ 7. த்தாரம் நாடுகா 8. த்த சேருவை 9. லக்கி சேருவைகா 10. ரன் சீவிதம் நல் 11. லூர் புரவில் அ 12. டுக்குளமும் வ 13. யலும் காஞ்ச 14. வன் குளமும் 15. வயலும் இது 16. சூழ்ந்த புரவும்கா 17. ட்டுவாவா பள்ளி 18. வாசல் தன்முத் 19. துக்கு விட்டது</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1y8ujsfjuoqosa5ea8nwpg4hqkgj7jn 1838660 1838659 2025-07-03T11:43:39Z மொஹமது கராம் 14681 1838660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 121}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>62. ரணசிங்க தேவரின் காட்டுபாவா பள்ளிவாசல் கொடை*</b><ref>*புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள், எண் 901, பக் 594</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யம் வட்டம், காட்டுபாவா பள்ளிவாசல் முன்பு நடப்பட்டுள்ள கல். |- | காலம் || – ||தாது வருடம், ஐப்பசி 13, கி.பி. 1690. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||சேதுபதி மன்னர் காத்த ரகுனாதத் தேவர் மகன் ரணசிங்கத் தேவர் காட்டுபாவா பள்ளிவாசலுக்கு அடுங்குளம், காஞ்சவான் குளம் ஆகியவற்றை நீர் பாயும் நிலத்துடன் கொடை கொடுத்தார். கல்வாசல் நாட்டாரும், கானாட்டாரும். காலூர் பள்ளி வாசலுக்குக் கொடுத்த கொடையும் இறுதியில் கூறப்பட்டுள்ளது. |} <b>கல்வெட்டு</b> <poem>1. தாது வருஷம் 2. அற்பசி மாதம் 13 தேதி 3. சேதுபதி காத்த 4. ரெகுனாதத் தேவ 5. ர் குமாரன் ரண 6. சிங்குத் தேவர் உ 7. த்தாரம் நாடுகா 8. த்த சேருவை 9. லக்கி சேருவைகா 10. ரன் சீவிதம் நல் 11. லூர் புரவில் அ 12. டுக்குளமும் வ 13. யலும் காஞ்ச 14. வன் குளமும் 15. வயலும் இது 16. சூழ்ந்த புரவும்கா 17. ட்டுவாவா பள்ளி 18. வாசல் தன்முத் 19. துக்கு விட்டது</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> n97hm64t47uqsnhe1119g5d5h8rb00s பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/123 250 489104 1838446 1571551 2025-07-03T06:54:33Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|122 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>20. சந்திராதித்தவ 21. ரைக்கும் நடக்கக் 22. கடவதாகவும் 23. கல்வாசல் நாட்டா 24. ரும் கானானாட்டா 25. ருங் காலூர் பள்ளி 26. வாசல் காணி 27. இக் காணி 28. புத்திரபவுத்திர 29. வரைக்கும் அ 30. னுபவிக்கவும்</poem>{{nop}}<noinclude></noinclude> flbp4pv7a1zkq5yxi9lyd477e9rz94u 1838661 1838446 2025-07-03T11:44:57Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|122 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>20. சந்திராதித்தவ 21. ரைக்கும் நடக்கக் 22. கடவதாகவும் 23. கல்வாசல் நாட்டா 24. ரும் கானானாட்டா 25. ருங் காலூர் பள்ளி 26. வாசல் காணி 27. இக் காணி 28. புத்திரபவுத்திர 29. வரைக்கும் அ 30. னுபவிக்கவும்</poem>{{nop}}<noinclude></noinclude> 1jhi4lko0m4cingj5ybg42dyqmkbqxc பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/124 250 489105 1838451 1571552 2025-07-03T07:03:28Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 123}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>63. தொண்டைமான் அகமது சாயபுக்கு அளித்த கொடை*</b>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், லெட்சுமணப் பட்டியில் நடப்பட்டிருக்கும் ஒரு கல். |- | காலம் || – ||இரகுநாதத் தொண்டைமான் காலம் |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||புதுக்கோட்டை மனனர் ரெகுனாத ராய தொண்டைமானார் (1686-1730) அவர்கள் அசரது அகம்மது சாயபு குருக்களவர்கட்கு லெட்சுமண பாண்டியப் பள்ளி கிராமத்தில் நான்கு எல்லைகட்கு உட்பட்ட பகுதிகளையும் நன்செய் நிலமும், குளம் வருவாயில் இருபதும் கொடையாக அளித்தார். |} <b>கல்வெட்டு</b> <poem>1. ........ 2. 1 தேதி அச 3. ரது நவாபு சாய 4. பு உளமந்தயத் 5. தல் உமுற வுபர அதுர 6. யவர்கள் உத்தாரப் ப 7. டிக்கி அசரது அகம்ம 8. து சாயபு குருக்களவ 9. ர்களுக்கு ரா ரெகுனா 10. த ராய தொண்டை மா 11. னாரவர்கள் லெட்சு 12. மன்பாண்டிய பட்டி 13. கிராமம் குடியெ சேந் 14. த எல்லை நாங்கு 15. ம் நஞ்சை குள 16. ம் துகை இருபது 17. இதில் சேந்த புஞ் 18. சை நிலம் கி 19. ராமம் சந்தி 20. ரர் வரைக்கும்</poem>{{nop}}<noinclude></noinclude> 5bdithdpbfspdrjt9va2zzeeogcmk8z 1838453 1838451 2025-07-03T07:04:59Z ஹர்ஷியா பேகம் 15001 1838453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 123}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>63. தொண்டைமான் அகமது சாயபுக்கு அளித்த கொடை*</b><ref>*புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள் எண் 978, பக்கம் 626</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், லெட்சுமணப் பட்டியில் நடப்பட்டிருக்கும் ஒரு கல். |- | காலம் || – ||இரகுநாதத் தொண்டைமான் காலம் |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||புதுக்கோட்டை மனனர் ரெகுனாத ராய தொண்டைமானார் (1686-1730) அவர்கள் அசரது அகம்மது சாயபு குருக்களவர்கட்கு லெட்சுமண பாண்டியப் பள்ளி கிராமத்தில் நான்கு எல்லைகட்கு உட்பட்ட பகுதிகளையும் நன்செய் நிலமும், குளம் வருவாயில் இருபதும் கொடையாக அளித்தார். |} <b>கல்வெட்டு</b> <poem>1. ........ 2. 1 தேதி அச 3. ரது நவாபு சாய 4. பு உளமந்தயத் 5. தல் உமுற வுபர அதுர 6. யவர்கள் உத்தாரப் ப 7. டிக்கி அசரது அகம்ம 8. து சாயபு குருக்களவ 9. ர்களுக்கு ரா ரெகுனா 10. த ராய தொண்டை மா 11. னாரவர்கள் லெட்சு 12. மன்பாண்டிய பட்டி 13. கிராமம் குடியெ சேந் 14. த எல்லை நாங்கு 15. ம் நஞ்சை குள 16. ம் துகை இருபது 17. இதில் சேந்த புஞ் 18. சை நிலம் கி 19. ராமம் சந்தி 20. ரர் வரைக்கும்</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> pnqg3joymuq9396i120jui0dfy3ib62 1838664 1838453 2025-07-03T11:49:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 123}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>63. தொண்டைமான் அகமது சாயபுக்கு அளித்த கொடை*</b><ref>*புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள் எண் 978, பக்கம் 626</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், லெட்சுமணப் பட்டியில் நடப்பட்டிருக்கும் ஒரு கல். |- | காலம் || – ||இரகுநாதத் தொண்டைமான் காலம். |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||புதுக்கோட்டை மனனர் ரெகுனாத ராய தொண்டைமானார் (1686-1730) அவர்கள் அசரது அகம்மது சாயபு குருக்களவர்கட்கு லெட்சுமண பாண்டியப் பள்ளி கிராமத்தில் நான்கு எல்லைகட்கு உட்பட்ட பகுதிகளையும் நன்செய் நிலமும், குளம் வருவாயில் இருபதும் கொடையாக அளித்தார். |} <b>கல்வெட்டு</b> <poem>1. ........ 2. 1 தேதி அச 3. ரது நவாபு சாய 4. பு உளமந்தயத் 5. தல் உமுற வுபர அதுர 6. யவர்கள் உத்தாரப் ப 7. டிக்கி அசரது அகம்ம 8. து சாயபு குருக்களவ 9. ர்களுக்கு ரா ரெகுனா 10. த ராய தொண்டை மா 11. னாரவர்கள் லெட்சு 12. மன்பாண்டிய பட்டி 13. கிராமம் குடியெ சேந் 14. த எல்லை நாங்கு 15. ம் நஞ்சை குள 16. ம் துகை இருபது 17. இதில் சேந்த புஞ் 18. சை நிலம் கி 19. ராமம் சந்தி 20. ரர் வரைக்கும்</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> mr7tnumzhyjde2m235jkxyuapnpilpt பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/125 250 489106 1838458 1571553 2025-07-03T07:14:07Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|124 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>21. காவேரியும் பில் 22. லும் உள்ளவரைக்கும் 23. ஆண்டு கொள்ளுவாராக 24. வும் இந்ததர்மத்து 25. க்கு தமிளரிலே ஆதா 26. மொருவர் பிசகு ப 27. ண்ணினால் கெ 28. ங்கைக் கரையிலே காராம் 29. பசுவைக் கொண்ண 30. தோஷத்திலே போ 31. வாராகவும் துலுக்கரி 32. லே யாதாமொருவர் பி 33. சகு பண்ணினால் மக் 34. காவிலே மிருகத்தினால் வ 35. யிறு சாப்பிட்ட தோஷ 36. த்துலே போவாராக 37. வும் இப்படிக்கு சாதன 38. கல்லில் வெட்டிவிச்சோ 39. ம் யிந்த சாதனத்தை 40. யெளுதினது மரு 41. தமுத்து மதி... மன் 42. கையி எழுத்து</poem>{{nop}}<noinclude></noinclude> 4zx7fwo4uqa4rdmnhhm4bqzb6g0hzul 1838666 1838458 2025-07-03T11:51:05Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|124 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>21. காவேரியும் பில் 22. லும் உள்ளவரைக்கும் 23. ஆண்டு கொள்ளுவாராக 24. வும் இந்ததர்மத்து 25. க்கு தமிளரிலே ஆதா 26. மொருவர் பிசகு ப 27. ண்ணினால் கெ 28. ங்கைக் கரையிலே காராம் 29. பசுவைக் கொண்ண 30. தோஷத்திலே போ 31. வாராகவும் துலுக்கரி 32. லே யாதாமொருவர் பி 33. சகு பண்ணினால் மக் 34. காவிலே மிருகத்தினால் வ 35. யிறு சாப்பிட்ட தோஷ 36. த்துலே போவாராக 37. வும் இப்படிக்கு சாதன 38. கல்லில் வெட்டிவிச்சோ 39. ம் யிந்த சாதனத்தை 40. யெளுதினது மரு 41. தமுத்து மதி... மன் 42. கையி எழுத்து</poem>{{nop}}<noinclude></noinclude> 7p4jcxzwnptfsjdyc2wvstzoma8r7w2 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/126 250 489107 1838462 1571554 2025-07-03T07:19:38Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 125}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>64. லாலுகான் நலத்தின் பொருட்டு சுப்பிரமணியருக்குப் பூசை*</b><ref>*Annual Report on Epigraphy (A)48 of 1946</ref>}}}} கர்நாடக நவாப் ஆலம்கான் சுலைமான் சாகிப் அவர்கள் ஆட்சியின்போது ஷேக் தாவூது சாகிப் என்பவர் கொத்தவால் என்னும் அதிகாரியாக இருந்தார். அப்போது திருநெல்வேலிப் பேராயத்தைச் சேர்ந்த 12 வணிகக் குழுவினர் மகமைப் பணம் வசூல் செய்து அதிகாரி லாலுகான் சாகிப் அவர்களின் நலத்தின் பொருட்டு திருநெல்வேலிக் குறவன் தெருவில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் தொடர்ந்து பூசை செய்ய 28.8.1751 அன்று முடிவு செய்து செப்பேட்டில் எழுதித் தந்தனர். தமிழில் எழுதப்பட்டுள்ள இச்செப்பேடு திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அலுவலகத்தில் இன்றும் உள்ளது.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> hms01cukh00rj5bly400bn5c3g98jds 1838674 1838462 2025-07-03T11:54:30Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 125}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>64. லாலுகான் நலத்தின் பொருட்டு சுப்பிரமணியருக்குப் பூசை*</b><ref>*Annual Report on Epigraphy (A)48 of 1946</ref>}}}} கர்நாடக நவாப் ஆலம்கான் சுலைமான் சாகிப் அவர்கள் ஆட்சியின்போது ஷேக் தாவூது சாகிப் என்பவர் கொத்தவால் என்னும் அதிகாரியாக இருந்தார். அப்போது திருநெல்வேலிப் பேராயத்தைச் சேர்ந்த 12 வணிகக் குழுவினர் மகமைப் பணம் வசூல் செய்து அதிகாரி லாலுகான் சாகிப் அவர்களின் நலத்தின் பொருட்டு திருநெல்வேலிக் குறவன் தெருவில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் தொடர்ந்து பூசை செய்ய 28.8.1751 அன்று முடிவு செய்து செப்பேட்டில் எழுதித் தந்தனர். தமிழில் எழுதப்பட்டுள்ள இச்செப்பேடு திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அலுவலகத்தில் இன்றும் உள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> cjwktuibalqwsxg0mxkhpht5aw1el2i 1838675 1838674 2025-07-03T11:54:47Z மொஹமது கராம் 14681 1838675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 125}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>64. லாலுகான் நலத்தின் பொருட்டு சுப்பிரமணியருக்குப் பூசை*</b><ref>*Annual Report on Epigraphy (A) 48 of 1946</ref>}}}} கர்நாடக நவாப் ஆலம்கான் சுலைமான் சாகிப் அவர்கள் ஆட்சியின்போது ஷேக் தாவூது சாகிப் என்பவர் கொத்தவால் என்னும் அதிகாரியாக இருந்தார். அப்போது திருநெல்வேலிப் பேராயத்தைச் சேர்ந்த 12 வணிகக் குழுவினர் மகமைப் பணம் வசூல் செய்து அதிகாரி லாலுகான் சாகிப் அவர்களின் நலத்தின் பொருட்டு திருநெல்வேலிக் குறவன் தெருவில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் தொடர்ந்து பூசை செய்ய 28.8.1751 அன்று முடிவு செய்து செப்பேட்டில் எழுதித் தந்தனர். தமிழில் எழுதப்பட்டுள்ள இச்செப்பேடு திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அலுவலகத்தில் இன்றும் உள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1e01r51reqiayu5c4c7jqqxd2ks60rv பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/127 250 489108 1838469 1571555 2025-07-03T07:37:36Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||126 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>65. ஈரோடு கோட்டை அதிகாரிகளின் பள்ளிவாசல் கொடை*</b><ref>S.I.T Vol III Part 1 1218</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||ஈரோடு மாவட்டம், ஈரோடு நகரம் காவிரிக் கரையில் உள்ள சேகு அலாவுதீன் சாயபு மஜீத் தர்கா நுழைவாயில் வலப்புறம் நடப்பட்டுள்ள குத்துக்கல். |- | காலம் || – ||கி.பி. 12.6.1761 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||மைசூர் மன்னன் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் காலத்தில் ஈரோடு மாவட்டப் பகுதி அவர் ஆட்சியில் இருந்தது. ஈரோடு கோட்டை அதிகாரியாக (தளவாய்) இருந்த ரங்கய்யநாத திம்மரசய்யன் என்பவர். அவரும் கோட்டையில் கந்தாசாரம், அட்டவணை, சேனபோகம், சேருவைகாரர் ஆக இருந்த ஏனைய நான்கு அதிகாரிகளும் காவிரிக்கரை ஷேக் அலாவுதீன் தர்காவிற்கு வரும் அரதேசி பரதேசி பக்கிரிகளுக்கு நாள்தோறும் அன்னமிடவும், அவர்களுக்கு ஆடை கொடுக்கவும் காலிங்கராயன் பாச நன்செய் நிலத்தில் 4 மாநிலம் கொடையாகக் கொடுத்தனர். கல்லும், காவிரியும், சந்திரர், சூரியர், நட்சத்திரங்கள் உள்ளவரை இந்தத் தர்மம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தனர். இந்தத் தர்மத்திற்கு இந்துவாக இருந்து தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவமும், தாயைச் சேர்ந்த பாவமும் பெறுவான். இசுலாமியர்கள் தீங்கு செய்தால் மக்காவில் பன்றியைக் குத்திக் கொன்று தின்ற பாவம் கிடைக்கும். தாயாரையும், மகளையும் சேர்ந்த பாவமும் வரும். பூமி ஆகாயம் கேடுகள் உண்டாக்கும். மக்கட்பேறு இல்லாமல் போகும். 1761ஆம் ஆண்டு ஐதர்அலி முழு அதிகாரத்தைப் பெற்ற ஆண்டு, அவருடைய ஆணையில் இக்கொடை வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் கல்வெட்டில் அதுபற்றிய குறிப்பு இல்லை. |} {{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> ibikepbmdpa3jrzmdwtl9oxtgmq8xsr 1838677 1838469 2025-07-03T11:58:07Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||126 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>65. ஈரோடு கோட்டை அதிகாரிகளின் பள்ளிவாசல் கொடை*</b><ref>S.I.T Vol III Part 1 1218</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||ஈரோடு மாவட்டம், ஈரோடு நகரம் காவிரிக் கரையில் உள்ள சேகு அலாவுதீன் சாயபு மஜீத் தர்கா நுழைவாயில் வலப்புறம் நடப்பட்டுள்ள குத்துக்கல். |- | காலம் || – ||கி.பி. 12.6.1761 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||மைசூர் மன்னன் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் காலத்தில் ஈரோடு மாவட்டப் பகுதி அவர் ஆட்சியில் இருந்தது. ஈரோடு கோட்டை அதிகாரியாக (தளவாய்) இருந்த ரங்கய்யநாத திம்மரசய்யன் என்பவர். அவரும் கோட்டையில் கந்தாசாரம், அட்டவணை, சேனபோகம், சேருவைகாரர் ஆக இருந்த ஏனைய நான்கு அதிகாரிகளும் காவிரிக்கரை ஷேக் அலாவுதீன் தர்காவிற்கு வரும் அரதேசி பரதேசி பக்கிரிகளுக்கு நாள்தோறும் அன்னமிடவும், அவர்களுக்கு ஆடை கொடுக்கவும் காலிங்கராயன் பாச நன்செய் நிலத்தில் 4 மாநிலம் கொடையாகக் கொடுத்தனர். கல்லும், காவிரியும், சந்திரர், சூரியர், நட்சத்திரங்கள் உள்ளவரை இந்தத் தர்மம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தனர். இந்தத் தர்மத்திற்கு இந்துவாக இருந்து தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவமும், தாயைச் சேர்ந்த பாவமும் பெறுவான். இசுலாமியர்கள் தீங்கு செய்தால் மக்காவில் பன்றியைக் குத்திக் கொன்று தின்ற பாவம் கிடைக்கும். தாயாரையும், மகளையும் சேர்ந்த பாவமும் வரும். பூமி ஆகாயம் கேடுகள் உண்டாக்கும். மக்கட்பேறு இல்லாமல் போகும். 1761ஆம் ஆண்டு ஐதர்அலி முழு அதிகாரத்தைப் பெற்ற ஆண்டு, அவருடைய ஆணையில் இக்கொடை வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் கல்வெட்டில் அதுபற்றிய குறிப்பு இல்லை. |}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> gaqqx211nd9kpwpu8tb7n60tug84auu 1838678 1838677 2025-07-03T11:58:38Z மொஹமது கராம் 14681 1838678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|126 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>65. ஈரோடு கோட்டை அதிகாரிகளின் பள்ளிவாசல் கொடை*</b><ref>S.I.T Vol III Part 1 1218</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||ஈரோடு மாவட்டம், ஈரோடு நகரம் காவிரிக் கரையில் உள்ள சேகு அலாவுதீன் சாயபு மஜீத் தர்கா நுழைவாயில் வலப்புறம் நடப்பட்டுள்ள குத்துக்கல். |- | காலம் || – ||கி.பி. 12.6.1761 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||மைசூர் மன்னன் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் காலத்தில் ஈரோடு மாவட்டப் பகுதி அவர் ஆட்சியில் இருந்தது. ஈரோடு கோட்டை அதிகாரியாக (தளவாய்) இருந்த ரங்கய்யநாத திம்மரசய்யன் என்பவர். அவரும் கோட்டையில் கந்தாசாரம், அட்டவணை, சேனபோகம், சேருவைகாரர் ஆக இருந்த ஏனைய நான்கு அதிகாரிகளும் காவிரிக்கரை ஷேக் அலாவுதீன் தர்காவிற்கு வரும் அரதேசி பரதேசி பக்கிரிகளுக்கு நாள்தோறும் அன்னமிடவும், அவர்களுக்கு ஆடை கொடுக்கவும் காலிங்கராயன் பாச நன்செய் நிலத்தில் 4 மாநிலம் கொடையாகக் கொடுத்தனர். கல்லும், காவிரியும், சந்திரர், சூரியர், நட்சத்திரங்கள் உள்ளவரை இந்தத் தர்மம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தனர். இந்தத் தர்மத்திற்கு இந்துவாக இருந்து தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவமும், தாயைச் சேர்ந்த பாவமும் பெறுவான். இசுலாமியர்கள் தீங்கு செய்தால் மக்காவில் பன்றியைக் குத்திக் கொன்று தின்ற பாவம் கிடைக்கும். தாயாரையும், மகளையும் சேர்ந்த பாவமும் வரும். பூமி ஆகாயம் கேடுகள் உண்டாக்கும். மக்கட்பேறு இல்லாமல் போகும். 1761ஆம் ஆண்டு ஐதர்அலி முழு அதிகாரத்தைப் பெற்ற ஆண்டு, அவருடைய ஆணையில் இக்கொடை வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் கல்வெட்டில் அதுபற்றிய குறிப்பு இல்லை. |}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> ahgi0n5gk9l14bwjnvrt822e62334m2 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/128 250 489109 1838478 1571556 2025-07-03T07:46:40Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 127}} {{rule}}</noinclude>1890வாக்கில் தனியார் சிலர் அனுபவித்து வந்த நிலத்தை வழக்கு மன்றம் சென்று நிர்வாகிகள் மீட்டுள்ளனர். தனியார் ஒருவர் மங்கம்மாள் சத்திரத்தில் சேகு அலாவுதீன் சாய்பு அடக்கம் ஆனதாகக் கூறியுள்ளார். மங்கம்மாள் காலம் கி.பி. 1689-1706 ஆகும். <b>கல்வெட்டு</b> <poem>1. சாலிவாகன சகார்த்தம் 16 2. 83 கலியுக சகார்த்தம் 48 3. 62 க்கு மேல் செல்லாநின்ற விசு 4. வருஷம் சேத்ய சுத்தவஸ் வெள்ளிக்கிழ 5. மை சுவாதி நட்சேத்திரம் பெத்த சு 6. ப தினத்தில் ஸ்ரீமது ராசாகிராச 7. ராசபரமேசுரன் பிறதிஷ் 8. டைப் பிரதாப கிருஷ்ணமாரா 9. சாஉடைய்யனவர்கள் 10. சீரங்கப் பட்டணத்தில் 11. ரத்ன சிம்மாசன ரூடராய் பிறித் 12. வி சாம்ராச்சியமாளு 13. கிற னாளயில் ஸ்ரீம 14. த் யீரோட்டுத் தள 15. வாய் ஸ்ரீரங்கய 16. நாத திம்மரைசயன் 17. வர்கள் கந்தாசா 18. ரம் அட்டவணை சேனை 19. பாகம் சேருவைகார் 20. ர் முதலான பேரும் 21. காவேரி ஓரத்திலி 22. ருக்கிற சேகுமசாய்கு 23. சேகு அலாவுதீன் ஸாய 24. பு மசீத் தர்மத்து சிலாசா 25. சனம் அப்பணைப் பிறகா</poem>{{nop}}<noinclude></noinclude> 0fmamnsvz1artj8urmp1h0rkty1n4n3 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/129 250 489110 1838481 1571557 2025-07-03T07:52:48Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|128 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><ref>26. ரத்திற்கு எழுதிக் குடுத்த விபரம் 27. அணை ஓபளிக்குச் சேர்ந்த 28. வயிறாபாளைய வதிகரை 29. யில் மாறுகால்க்கரையில் மாத்த 30. பீளமேட்டில் தோப்படியில் மானிய 31. ம் நஞ்சை 4 மாநிலம் சுத்தக் கிறைய மா 32. னியமாய் அனுபவித்துக்கொ 33. ண்டு அன்னாடகம் அரதேசி பரதே 34. சி பக்கிரியலுக்க அன்னம் வஸ்த்தி 35. ரங் கொடுத்துக்கொண்டு க 36. ல்லும் காவேரியுள்ளவரை ஆசந்தி 37. ரார்க்கம் சுகமாயிருக்கவும் யிந்தத்த 38. ர்மத்துக்கு ஆராமொருவர் விகா 39. தம் பண்ணினால் காசி 40. கங்கைக்கரையில் கா 41. ராம் பசுவைக் கொன்றவனும் 42. தாயைக் கோழ்த்தவன்</ref> {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 129 |bSize = 425 |cWidth = 308 |cHeight = 206 |oTop = 348 |oLeft = 90 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> 4umtw5a4e7w9vyrqrz17ruqn8swratg 1838483 1838481 2025-07-03T07:53:25Z ஹர்ஷியா பேகம் 15001 1838483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|128 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>26. ரத்திற்கு எழுதிக் குடுத்த விபரம் 27. அணை ஓபளிக்குச் சேர்ந்த 28. வயிறாபாளைய வதிகரை 29. யில் மாறுகால்க்கரையில் மாத்த 30. பீளமேட்டில் தோப்படியில் மானிய 31. ம் நஞ்சை 4 மாநிலம் சுத்தக் கிறைய மா 32. னியமாய் அனுபவித்துக்கொ 33. ண்டு அன்னாடகம் அரதேசி பரதே 34. சி பக்கிரியலுக்க அன்னம் வஸ்த்தி 35. ரங் கொடுத்துக்கொண்டு க 36. ல்லும் காவேரியுள்ளவரை ஆசந்தி 37. ரார்க்கம் சுகமாயிருக்கவும் யிந்தத்த 38. ர்மத்துக்கு ஆராமொருவர் விகா 39. தம் பண்ணினால் காசி 40. கங்கைக்கரையில் கா 41. ராம் பசுவைக் கொன்றவனும் 42. தாயைக் கோழ்த்தவன்</poem> {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 129 |bSize = 425 |cWidth = 308 |cHeight = 206 |oTop = 348 |oLeft = 90 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> kmtznpkvwkl4dm61p47jxm19saz11fg 1838484 1838483 2025-07-03T07:53:48Z ஹர்ஷியா பேகம் 15001 1838484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|128 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>26. ரத்திற்கு எழுதிக் குடுத்த விபரம் 27. அணை ஓபளிக்குச் சேர்ந்த 28. வயிறாபாளைய வதிகரை 29. யில் மாறுகால்க்கரையில் மாத்த 30. பீளமேட்டில் தோப்படியில் மானிய 31. ம் நஞ்சை 4 மாநிலம் சுத்தக் கிறைய மா 32. னியமாய் அனுபவித்துக்கொ 33. ண்டு அன்னாடகம் அரதேசி பரதே 34. சி பக்கிரியலுக்க அன்னம் வஸ்த்தி 35. ரங் கொடுத்துக்கொண்டு க 36. ல்லும் காவேரியுள்ளவரை ஆசந்தி 37. ரார்க்கம் சுகமாயிருக்கவும் யிந்தத்த 38. ர்மத்துக்கு ஆராமொருவர் விகா 39. தம் பண்ணினால் காசி 40. கங்கைக்கரையில் கா 41. ராம் பசுவைக் கொன்றவனும் 42. தாயைக் கோழ்த்தவன்</poem> {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 129 |bSize = 425 |cWidth = 308 |cHeight = 206 |oTop = 348 |oLeft = 90 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> eb0o34qailo056gcliylyp06keoooto 1838670 1838484 2025-07-03T11:53:02Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|128 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>26. ரத்திற்கு எழுதிக் குடுத்த விபரம் 27. அணை ஓபளிக்குச் சேர்ந்த 28. வயிறாபாளைய வதிகரை 29. யில் மாறுகால்க்கரையில் மாத்த 30. பீளமேட்டில் தோப்படியில் மானிய 31. ம் நஞ்சை 4 மாநிலம் சுத்தக் கிறைய மா 32. னியமாய் அனுபவித்துக்கொ 33. ண்டு அன்னாடகம் அரதேசி பரதே 34. சி பக்கிரியலுக்க அன்னம் வஸ்த்தி 35. ரங் கொடுத்துக்கொண்டு க 36. ல்லும் காவேரியுள்ளவரை ஆசந்தி 37. ரார்க்கம் சுகமாயிருக்கவும் யிந்தத்த 38. ர்மத்துக்கு ஆராமொருவர் விகா 39. தம் பண்ணினால் காசி 40. கங்கைக்கரையில் கா 41. ராம் பசுவைக் கொன்றவனும் 42. தாயைக் கோழ்த்தவன்</poem> {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 129 |bSize = 425 |cWidth = 308 |cHeight = 206 |oTop = 348 |oLeft = 90 |Location = center |Description = }}<noinclude></noinclude> 5ek274blre9scrre0a7btivvkd2rsvd பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/130 250 489111 1838487 1571558 2025-07-03T07:59:01Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 129}} {{rule}}</noinclude>43. துலுக்கரானால் மக்காவில் 44. பன்றியைக் கொன்று தின்ற 45. வன் தாயாருமகள்க்கோழ்த்த 46. வன் பூமியாகாசங் 47. கெடுக்கும் புத்திரசம்பத்தும் 48. இல்லாமல் போமென்றவாறு உ {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 130 |bSize = 425 |cWidth = 281 |cHeight = 356 |oTop = 162 |oLeft = 65 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> tdaew7gfxa530y8udkp2tigqqbqmnqr 1838489 1838487 2025-07-03T08:00:04Z ஹர்ஷியா பேகம் 15001 1838489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 129}} {{rule}}</noinclude><poem>43. துலுக்கரானால் மக்காவில் 44. பன்றியைக் கொன்று தின்ற 45. வன் தாயாருமகள்க்கோழ்த்த 46. வன் பூமியாகாசங் 47. கெடுக்கும் புத்திரசம்பத்தும் 48. இல்லாமல் போமென்றவாறு உ</poem> {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 130 |bSize = 425 |cWidth = 281 |cHeight = 356 |oTop = 162 |oLeft = 65 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> romj25ctom85l2a6or00cnwbxb674nq 1838491 1838489 2025-07-03T08:00:24Z ஹர்ஷியா பேகம் 15001 1838491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 129}} {{rule}}</noinclude><poem>43. துலுக்கரானால் மக்காவில் 44. பன்றியைக் கொன்று தின்ற 45. வன் தாயாருமகள்க்கோழ்த்த 46. வன் பூமியாகாசங் 47. கெடுக்கும் புத்திரசம்பத்தும் 48. இல்லாமல் போமென்றவாறு உ</poem> {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 130 |bSize = 425 |cWidth = 281 |cHeight = 356 |oTop = 162 |oLeft = 65 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> pgookwn4h9djq2w90sas2nvb8qbiapi 1838667 1838491 2025-07-03T11:51:43Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 129}} {{rule}}</noinclude><poem>43. துலுக்கரானால் மக்காவில் 44. பன்றியைக் கொன்று தின்ற 45. வன் தாயாருமகள்க்கோழ்த்த 46. வன் பூமியாகாசங் 47. கெடுக்கும் புத்திரசம்பத்தும் 48. இல்லாமல் போமென்றவாறு உ</poem> {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 130 |bSize = 425 |cWidth = 281 |cHeight = 356 |oTop = 162 |oLeft = 65 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> hnxl5owi7jsaqz7a09yfhda6fts14xd பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/132 250 489113 1838553 1571560 2025-07-03T08:41:42Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 131}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>66. இராமநாதபுரம் ஆவணங்களில் பள்ளிவாசல் கொடைகள்*</b><ref>*இராமநாதபுரம் அரண்மனை அலுவலகம்</ref>}}}} இராமநாதபுரம் சேதுபதிகளின் செப்பேடுகள் கல்வெட்டுக்கள் இல்லாமல் அரண்மனையில் ஏராளமான ஓலை ஆவணங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் கோயில்கட்குக் கொடுத்த கொடைகளைக் குறிக்கின்றன. சிறுபான்மை தனிப்பட்டவர்கட்கு அளிக்கப்பட்ட கொடைகளைக் குறிக்கின்றன. அவற்றில் பல்வேறு ஆவணங்கள் இசுலாம் தொடர்பானவை. பூலாங்கால் பள்ளிவாசலுக்கு முத்து விசைய ரகுநாத சேதுபதியும் முத்துவிசைய ரகுநாத செல்லத் தேவரய்யா சேதுபதியும் நிலக் கொடை வழங்கியுள்ளனர். அபிராமம் பள்ளிவாசலுக்குத் திருவிளக்குக்காக முகவூரணி அய்யா நாளையில் ஆதிநாராயணபிள்ளை என்பவர் நிலம் வாங்கிக் கொடையாக அளித்தார். நாரணமங்கலம் சுல்தானுக்கு குமார முத்துவிசைய ரகுநாத சேதுபதி நிலக் கொடையளித்தார். இதுபற்றிய செப்பேடு உள்ளது என்றும் எழுதப்பட்டுள்ளது. தேரூர் தாலுக்கா தொண்டி ஆலிம்ஷா பள்ளிவாசல் பற்றிய கொடைச் செய்தி நவாபு ஆணையில் உள்ளது என்று பள்ளிவாசல் லெப்பை ஆலிம்ஷா கூறிய செய்தி ஓலையில் எழுதப்பட்டுள்ளது. மற்றும் பூலாங்கால், போந்தப்புளி, தொண்டி, காட்டுபாவா சத்திரம், புல்லுக்குடி, திருச்சுழியல், காரேந்தல், சொக்கிகுளம், கொக்காடி, நாடாகுளம், குச்சனேரி, லட்சுமிபுரம் போன்ற பல ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கும், தர்காக்களுக்கும் நிலம், பொன், பொருள் கொடையாகச் சேதுபதி மன்னர்களால் கொடுக்கப்பட்டுள்ளன. திருவிளக்குகள் ஏற்றவும், கந்தூரி நடத்தவும் அன்னதானம் ஆடை அளிக்கவும் இக்கொடைகள் பயன்படுத்தப்பட்டன.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> pauss8sptn7qcxe7y89x92sz1rfezhr பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/133 250 489114 1838558 1571561 2025-07-03T08:56:40Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|132 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>ஓலை ஆவணங்கள்<br>1) பூலாங்கால் பள்ளிவாசல் கொடை</b>}}}} பூலாங்கால் கிராமத்து நிலத்தில் சில பகுதிகளையும் பூலாங்கால் பள்ளிவாசலுக்காகப் பிலவ வருடம் தை மாதம் 17ஆம் தேதி முத்து விசைய ரெகுநாத சேதுபதியும் வெகுதானிய வருடம் மாசி மாதம் 13ஆம் தேதி முத்து விசைய ரெகுநாத செல்லத் தேவரய்யா சேதுபதியும் அளித்துள்ளனர் - 2 ஓலை. {{center|{{larger|<b>2) அபிராமம் பள்ளி வாசல் கொடை</b>}}}} அபிராமம் பள்ளிவாசலுக்கு அபிராமம் ஊர் நிலம் மானியம். பள்ளிவாசல் திருவிளக்குக்கு முகவூரணி அய்யா நாளையில் ஆதிநாராயணபிள்ளை நிலம் வாங்கி விட்டது பிங்கள வருடம் ஆடி 8 தேதி. {{center|{{larger|<b>3) நாரணமங்கலம் சுல்தான் மானியம்</b>}}}} இராசசிங்கமங்கலம் தாலுகா பொட்டக வயல் மாகாணத்தைச் சேர்ந்த நாரணமங்கலத்தில் சுல்தானுக்கு நில மானியம் குமார முத்து விசைய ரெகுநாத சேதுபதி விட்டது. சகம் 1702 சார்வரி வருடம் மாசி 24 தேதி - தாமிர சாசனம். {{center|{{larger|<b>4) தேரூர் தாலுகா தொண்டி ஆலிம்ஷா பள்ளிவாசல் கொடை</b>}}}} ஆலிம்ஷா பள்ளிவாசல் திருவிளக்கு பூசை நெய்வேத்தியம் சிலவுக்காக தேவதானம் புல்லுக்குடி கயிலாதநாதசுவாமி கிராமம் தண்டலக்குடியில் நிலம் சர்வ மானியம். ஊர்கள் ஆக்களூர் மாகாணத்தைச் சேர்ந்தது. இதற்கு நவாபு நாளையில் வாங்கிய பாலானாக் காகிதம் தஸ்தாவேசுகள் உண்டு. மதுரைக்கு ரிஜிஸ்டாரில் பதியும்படியாய் மேற்படி தாஸ்தாவேசுகளை அனுப்பி வைத்திருக்கிறதாக மேற்படி பள்ளிவாசல் லெப்பை ஆலிம்ஷா சொன்னதாய் தேரூர் சேவுகன் பெருமான் வந்து சொன்னது.{{nop}}<noinclude></noinclude> t5a0zamrkn3wtj3l8lzn54ymhqqo9ru பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/134 250 489115 1838569 1571562 2025-07-03T09:23:38Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 133}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>67. மராட்டிய மன்னர் ஆவணங்களில் இஸ்லாம்</b>}}}} தஞ்சையில் படையில் பணியாற்றவும், யூனானி மருத்துவத்தின் பொருட்டும், வியாபாரத்திற்காகவும் பல இஸ்லாமியர் நிலையாக வாழ்ந்து வந்தனர். தஞ்சை வட்டாரத்தில் மட்டும் இஸ்லாமியர் பள்ளிவாசல் தர்காக்கள் 42 இருந்தன என்பர். அவைகட்கு நாயக்க, மராட்டிய மன்னர்கள் பலர் கொடை கொடுத்தனர். இன்றும் தஞ்சாவூர் படே உசேன் போன்றவை பல மராட்டிய மன்னர் குடும்ப நிர்வாகத்தில் உள்ளன. பிரதாப சிங் 1739இல் அரசரானவர்; இவர் 1740இல் நாகூருக்குச் செல்கிறபொழுது வழியில் “வடயாரங்குடி”க்கு அருகில் “பாவாசாகேப்பின் தர்கா” மசூதி குளம் மண்டபம் இவை பற்றி விண்ணப்பம் அளிக்கப்பெற்றது. அதில் தீபாநகரப் பேட்டை சுங்கத்தினின்று ஒரு காசுவீதம் அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் இருந்தது. அரசர் “அங்ஙனமே தருக” என ஆணை பிறப்பித்தார். துளஜா ராஜா 1765இல் அரசரானார். இவர் கி.பி. 1776இல் மகம்மது ஸேக்குக்கு மன்னார்குடிக்குச் செல்லும் வழியில் “காகிதத்தின் மூட்டைகளின் குவியலுக்கு அருகில் 12 அடிக்கோலினால் 2 வேலி நிலம் இனாம் கொடுத்தார்.” (காகிதத் தொழிற்சாலையாக இருக்கலாம்) கி.பி. 1776இல்துளஜாராஜா தங்கத்திலும் வெள்ளியிலும் ஆக 34 அல்லாக்களும், தங்கக் குடைகள் இரண்டும் செய்தார் என்றோர் ஆவணக் குறிப்பால் அறியப் பெறுகின்றோம். கி.பி. 1773இல் மல்லிம் சாஹேப் என்பார் கடைவீதியின் கோட்டையின் பக்கம் ஒரு மசூதி கட்டினார். அந்த மசூதியை நடத்துவதற்கும் ஃபக்கீர்களுக்கு உணவு அளிக்கவும், சாலியமங்கலம் வட்டத்தில் கடதம்பட்டு என்ற ஊரில் 10229 குழிகளும், வல்லார்பட்டு என்ற ஊரில் 2419 குழிகளும், ஆக 12648 குழிகள் இனாமாக அளிக்கப்பெற்றன. அங்கு ஓர் ஊர் அமைத்து “முகமதுபுரம்” என்று பெயரிடப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> q0k304p9j6x6uf5b9r6cwqk3jwepniw பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/135 250 489116 1838575 1571563 2025-07-03T09:43:07Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|134 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>கி.பி. 1785இல் திருப்பூந்துருத்தியில் 1963 குழி நிலமும், மரஞ்செடி கொடி வகைகளில் நிலம் 1/4 வேலி 31/4 மா ஹிஸ்லேக்மல் என்ற ஃபக்கீருக்கு இனாம் அளிக்கப்பட்டது. சூல மங்கலத்தில் 2 3/4 வேலி நிலம் 700 சக்ரம் கொடுத்து விலைக்கு வாங்கி அங்கு தர்கா அமைக்கப்பட்டது. அதனைச் சர்க்கார் ஜப்தி செய்தனர். அங்கு ‘தர்கா’வை ஜப்தியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று 1787இல் ஹஸன்னா ஃபக்கீர் வேண்டிக் கொண்டவண்ணம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அல்லாப் பண்டிக்கைக்காக மன்னர் எல்லா தர்காக்களுக்கும் போய் வருதலுண்டு; அங்ஙனம் போகுங்கால் இனாம் அளிப்பதுண்டு. அல்லாப் பண்டிகை நடத்தவும் நன்கொடை அளிப்பதுண்டு. “அல்லாப் பண்டிகைக்கு பகீர்களுக்குக் கொடுப்பதற்காக மாதுஸ்ரீ ஆவுசாயேப் ரூ 30; சைதம்பாயி சாகேப் ரூ 30; காமாட்சியம்மா பாயி சாகேப் ரூ 25; சுலக்ஷணபாயி அமணி ராஜேசாகேப் ரூ 10; சக்வாரம்பா பாயி அம்மணி ராஜே ரூ 10; ஆக 105” - என்ற ஆவணக் குறிப்பால் அரசமாதேவியாரும் சமயப் பொறையுடையவர்களாய் அல்லாப் பண்டிகைக்கு நன்கொடை அளித்தனர் எனத் தெரிய வருகிறது. அப்தர்கானாவில் ஒரு அல்லா வைப்பதற்கு ‘லாடு’ வாங்கிய வகையில் ரூ 150 என்ற குறிப்பாலும் அல்லாப் பண்டிகைக்காக அப்தர்கானாவில் அல்லா வைக்கிற இடத்தில் ‘ஹிந்துஸ்தானி சேவை செய்வதற்கு டக்காவின் ஜோடியொன்றைத் தயார் செய்ய’என்ற ஆவணக் குறிப்பாலும் அரண்மனையில் அப்தார்கானாவில் ஓரல்லா வைக்கப்பட்டிருந்தமை போதரும். இதில் முன்னது 1852க்கும் பின்னது 1825க்குமுரியது. பின்னதில் “ஹிந்துஸ்தானி சேவை செய்தற்கு டக்காவின் ஜோடியொன்று” என்பது சிந்திக்கத்தகுவது. அல்லா வைக்கிற இடத்தில் இந்துஸ்தானி மொழியில் ஃபக்கீர் வழிபாடு செய்வர் என்றும், அப்பொழுது டக்கா எனும் இசைக்கருவி அடிக்கப்பெறும் என்றும் தெரியவருகிறது. “1827 நாகூர் காதிர்சாயபு தர்காவுக்கு... கந்தூரி உற்சவத்துக்காகச் சர்க்காரிலிருந்து மூடுகிற வஸ்திரத்தை<noinclude></noinclude> g54gst4w8zzm3o91ctkc60c494ccrma 1838586 1838575 2025-07-03T09:55:24Z ஹர்ஷியா பேகம் 15001 1838586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|134 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>கி.பி. 1785இல் திருப்பூந்துருத்தியில் 1963 குழி நிலமும், மரஞ்செடி கொடி வகைகளில் நிலம் {{sfrac|1|4}} வேலி 3{{sfrac|1|4}} மா ஹிஸ்லேக்மல் என்ற ஃபக்கீருக்கு இனாம் அளிக்கப்பட்டது. சூல மங்கலத்தில் 2 {{sfrac|3|4}} வேலி நிலம் 700 சக்ரம் கொடுத்து விலைக்கு வாங்கி அங்கு தர்கா அமைக்கப்பட்டது. அதனைச் சர்க்கார் ஜப்தி செய்தனர். அங்கு ‘தர்கா’வை ஜப்தியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று 1787இல் ஹஸன்னா ஃபக்கீர் வேண்டிக் கொண்டவண்ணம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அல்லாப் பண்டிக்கைக்காக மன்னர் எல்லா தர்காக்களுக்கும் போய் வருதலுண்டு; அங்ஙனம் போகுங்கால் இனாம் அளிப்பதுண்டு. அல்லாப் பண்டிகை நடத்தவும் நன்கொடை அளிப்பதுண்டு. “அல்லாப் பண்டிகைக்கு பகீர்களுக்குக் கொடுப்பதற்காக மாதுஸ்ரீ ஆவுசாயேப் ரூ 30; சைதம்பாயி சாகேப் ரூ 30; காமாட்சியம்மா பாயி சாகேப் ரூ 25; சுலக்ஷணபாயி அமணி ராஜேசாகேப் ரூ 10; சக்வாரம்பா பாயி அம்மணி ராஜே ரூ 10; ஆக 105” - என்ற ஆவணக் குறிப்பால் அரசமாதேவியாரும் சமயப் பொறையுடையவர்களாய் அல்லாப் பண்டிகைக்கு நன்கொடை அளித்தனர் எனத் தெரிய வருகிறது. அப்தர்கானாவில் ஒரு அல்லா வைப்பதற்கு ‘லாடு’ வாங்கிய வகையில் ரூ 150 என்ற குறிப்பாலும் அல்லாப் பண்டிகைக்காக அப்தர்கானாவில் அல்லா வைக்கிற இடத்தில் ‘ஹிந்துஸ்தானி சேவை செய்வதற்கு டக்காவின் ஜோடியொன்றைத் தயார் செய்ய’என்ற ஆவணக் குறிப்பாலும் அரண்மனையில் அப்தார்கானாவில் ஓரல்லா வைக்கப்பட்டிருந்தமை போதரும். இதில் முன்னது 1852க்கும் பின்னது 1825க்குமுரியது. பின்னதில் “ஹிந்துஸ்தானி சேவை செய்தற்கு டக்காவின் ஜோடியொன்று” என்பது சிந்திக்கத்தகுவது. அல்லா வைக்கிற இடத்தில் இந்துஸ்தானி மொழியில் ஃபக்கீர் வழிபாடு செய்வர் என்றும், அப்பொழுது டக்கா எனும் இசைக்கருவி அடிக்கப்பெறும் என்றும் தெரியவருகிறது. “1827 நாகூர் காதிர்சாயபு தர்காவுக்கு... கந்தூரி உற்சவத்துக்காகச் சர்க்காரிலிருந்து மூடுகிற வஸ்திரத்தை<noinclude></noinclude> qxixkl0hfqchfmsv0a3bla3mbo4gyq6 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/136 250 489117 1838605 1571564 2025-07-03T10:06:17Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 135}} {{rule}}</noinclude>வழக்கப்படி அனுப்புவதற்கு சக்கரம் 20” என்ற குறிப்பால் நாகூர் தர்காவுக்குத் திருவிழாக் காலத்தில் ஆண்டுதோறும் ஆடை அனுப்பி வந்தனர் என்பது போதரும்.* <ref>*இன்றும் இவ்வழக்கம் நடக்கிறது</ref> மக்கான்தார்களுக்கும் துனியாதார்களுக்கும் வேறுபாட்டுணர்ச்சி யேற்படுவதுண்டு. அவர்கள் தம் வழக்கை அரசரிடம் முறையிடுவர். இத்தகைய வழக்கொன்று கூறும் ஆவணம் மோடிப்பலகணியில் உள்ளது. அல்லா ஊர்வலத்துக்கு அரண்மனையிலிருந்து எடுபிடிகளைக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. நாகூர் காதிர் சாயேப் தர்காவுக்கு நகரா வாத்தியம் செய்து அளிக்கப்பட்டது. அல்லாவைத் திருவிழா 9ஆம் நாளில் ஊர்வலம் செய்வதற்கு கி.பி. 1834ல் தங்கத்தேர், வெள்ளித்தேர், யானைத்தந்தத்தேர் பெரியது, சிறியது, சங்கீதத்தேர் ஆக ஐந்து தேர்கள் வழங்கப் பெற்றன.* <ref>*நாகூர் சந்தனக் கூடு உரூஸ் திருவிழாவைக் குறிக்கிறது. விழாவின் பெருஞ்சிறப்பு இதன்மூலம் தெரிகிறது. (“தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்”. கே.எம். வேங்கடராமையா. தமிழ்ப்பல்கலைக் கழகம். 1984. பக்கம் 208-210).</ref> இங்ஙனம் அல்லாப் பண்டிகை காலத்தில் நன்கொடைகளும் தேர் முதலியனவும் அளித்து முகமதிய சமயத்தாரின் நன்மதிப்பையும் ஆதரவையும் மராட்டிய மன்னர் பெற்றிருந்தனர்.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 2a4memy2ihny4w4stdu1kjuu83rpk4n 1838608 1838605 2025-07-03T10:06:46Z ஹர்ஷியா பேகம் 15001 1838608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 135}} {{rule}}</noinclude>வழக்கப்படி அனுப்புவதற்கு சக்கரம் 20” என்ற குறிப்பால் நாகூர் தர்காவுக்குத் திருவிழாக் காலத்தில் ஆண்டுதோறும் ஆடை அனுப்பி வந்தனர் என்பது போதரும்.* <ref>*இன்றும் இவ்வழக்கம் நடக்கிறது</ref> மக்கான்தார்களுக்கும் துனியாதார்களுக்கும் வேறுபாட்டுணர்ச்சி யேற்படுவதுண்டு. அவர்கள் தம் வழக்கை அரசரிடம் முறையிடுவர். இத்தகைய வழக்கொன்று கூறும் ஆவணம் மோடிப்பலகணியில் உள்ளது. அல்லா ஊர்வலத்துக்கு அரண்மனையிலிருந்து எடுபிடிகளைக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. நாகூர் காதிர் சாயேப் தர்காவுக்கு நகரா வாத்தியம் செய்து அளிக்கப்பட்டது. அல்லாவைத் திருவிழா 9ஆம் நாளில் ஊர்வலம் செய்வதற்கு கி.பி. 1834ல் தங்கத்தேர், வெள்ளித்தேர், யானைத்தந்தத்தேர் பெரியது, சிறியது, சங்கீதத்தேர் ஆக ஐந்து தேர்கள் வழங்கப் பெற்றன.* <ref>*நாகூர் சந்தனக் கூடு உரூஸ் திருவிழாவைக் குறிக்கிறது. விழாவின் பெருஞ்சிறப்பு இதன்மூலம் தெரிகிறது.<br>(“தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்”. கே.எம். வேங்கடராமையா. தமிழ்ப்பல்கலைக் கழகம். 1984. பக்கம் 208-210).</ref> இங்ஙனம் அல்லாப் பண்டிகை காலத்தில் நன்கொடைகளும் தேர் முதலியனவும் அளித்து முகமதிய சமயத்தாரின் நன்மதிப்பையும் ஆதரவையும் மராட்டிய மன்னர் பெற்றிருந்தனர்.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 93hz0avhd7rjac09554n55z2uxxvg8v பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/137 250 489118 1838635 1571565 2025-07-03T10:30:25Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|136 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>68. இஸ்லாமியரை வணங்கும் இந்துக்கள்*</b><ref>*ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், முதல் தொகுதி எண் 43.<br>‘கொங்குநாடு’ (1934) தி.சு. முத்துசாமிக் கோனார், பக்கம் 90</ref>}}}} ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் காகம் என்ற ஊரிலும், பெருந்துறை வட்டத்தில் உள்ள காஞ்சிக்கோயில் என்ற ஊரிலும் கொங்கு வேளாளர்களில் கண்ண குலத்தார் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு ஊரில் உள்ள கண்ணகுலப் பெருமக்களும் அவ்வூர்களிலிருந்து குடியேறி மற்ற ஊர்களில் வாழும் பலநூற்றுக் கணக்கான குடும்பங்களும் குலதெய்வமாக வணங்கும் சுவாமியின்பெயர் ‘ராவுத்தனசாமி’. ஆண்குழந்தைகட்கு ராவுத்தனன் என்றும், பெண் குழந்தைகட்கு ராவுத்தமா என்றும் பெயர் வைக்கின்றனர். ராவுத்தனசாமியின் பெயரைக் கேட்டால் ‘டில்லி பட்டாணி துலுக்கர்’ என்று கூறுகிறார்கள். தங்கள் குல முதல்வருக்கு அவர் பேருதவி செய்து காப்பாற்றியதால் அவரைக் குல தெய்வமாக வணங்குகிறோம் என்று கூறுகிறார்கள். ஈரோடு வட்டம் கொளாநல்லியில் வாழும் கண்ண குலப் பெருமக்களின் குலதெய்வம் பொன்குழலியம்மன் ஆகும். அம்மன் கோயிலில் அவர்கள் வணங்கும் மற்றொரு தெய்வத்தின் பெயர் துலுக்கணசாமியாகும். பொன்குழலியம்மனை வணங்கும் கண்ண குலத்தார் ‘துலுக்கண கவுண்டர்’ என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர். நாமக்கல் வட்டம் திருச்செங்கோட்டில் இதே கண்ண குலத்தார் வழிபடும் பனிமலைக் காவலர் சுவாமி கோயிலில் ‘பங்கடு சுல்தான்’ அடக்கத் தலம் உள்ளது. பங்கடு சுல்தானை இஸ்லாமியர்களும் வந்து தங்கள் சமய ஞானி என்று வணங்குகின்றனர். பனிமலைக் காவலர் கோயிலில் பூசை செய்யும் பூசாரியின் பெயர் ஏறருள்முத்து துலுக்கப் பூசாரி என்பது. கொங்கு வேளாளரில் கண்ண குலத்தாருக்கும் இஸ்லாமி யருக்கும் உள்ள மேற்கண்ட தொடர்புகள் மேலும் ஆய்வுக் குரியதாகும். {{nop}}<noinclude></noinclude> 9z7pih13dtt1adpn67i1nhh72xxlnvw 1838636 1838635 2025-07-03T10:31:39Z ஹர்ஷியா பேகம் 15001 1838636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|136 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>68. இஸ்லாமியரை வணங்கும் இந்துக்கள்*</b><ref>*ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், முதல் தொகுதி எண் 43.<br>‘கொங்குநாடு’ (1934) தி.சு. முத்துசாமிக் கோனார், பக்கம் 90</ref>}}}} ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் காகம் என்ற ஊரிலும், பெருந்துறை வட்டத்தில் உள்ள காஞ்சிக்கோயில் என்ற ஊரிலும் கொங்கு வேளாளர்களில் கண்ண குலத்தார் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு ஊரில் உள்ள கண்ணகுலப் பெருமக்களும் அவ்வூர்களிலிருந்து குடியேறி மற்ற ஊர்களில் வாழும் பலநூற்றுக் கணக்கான குடும்பங்களும் குலதெய்வமாக வணங்கும் சுவாமியின்பெயர் ‘ராவுத்தனசாமி’. ஆண்குழந்தைகட்கு ராவுத்தனன் என்றும், பெண் குழந்தைகட்கு ராவுத்தமா என்றும் பெயர் வைக்கின்றனர். ராவுத்தனசாமியின் பெயரைக் கேட்டால் ‘டில்லி பட்டாணி துலுக்கர்’ என்று கூறுகிறார்கள். தங்கள் குல முதல்வருக்கு அவர் பேருதவி செய்து காப்பாற்றியதால் அவரைக் குல தெய்வமாக வணங்குகிறோம் என்று கூறுகிறார்கள். ஈரோடு வட்டம் கொளாநல்லியில் வாழும் கண்ண குலப் பெருமக்களின் குலதெய்வம் பொன்குழலியம்மன் ஆகும். அம்மன் கோயிலில் அவர்கள் வணங்கும் மற்றொரு தெய்வத்தின் பெயர் துலுக்கணசாமியாகும். பொன்குழலியம்மனை வணங்கும் கண்ண குலத்தார் ‘துலுக்கண கவுண்டர்’ என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர். நாமக்கல் வட்டம் திருச்செங்கோட்டில் இதே கண்ண குலத்தார் வழிபடும் பனிமலைக் காவலர் சுவாமி கோயிலில் ‘பங்கடு சுல்தான்’ அடக்கத் தலம் உள்ளது. பங்கடு சுல்தானை இஸ்லாமியர்களும் வந்து தங்கள் சமய ஞானி என்று வணங்குகின்றனர். பனிமலைக் காவலர் கோயிலில் பூசை செய்யும் பூசாரியின் பெயர் ஏறருள்முத்து துலுக்கப் பூசாரி என்பது. கொங்கு வேளாளரில் கண்ண குலத்தாருக்கும் இஸ்லாமி யருக்கும் உள்ள மேற்கண்ட தொடர்புகள் மேலும் ஆய்வுக் குரியதாகும். {{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> ormywggh3o7zkdd1rrl10hdyc774dhm பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/138 250 489119 1838647 1571566 2025-07-03T11:29:07Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 137}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>69. மகமதுதம்பி சாகிபுக்கு சரவணப் பெருமாள் சீட்டுக்கவி*</b><ref>*“சீட்டுக்கவித் திரட்டு” - விசாகப் பெருமாள் அய்யர் பதிப்பித்தது.</ref>}}}} <poem> அவ்வொன்றும் அவதானி தமிழொன்று வெகுமானி அறிவொன்று சேதுபதிபால் அணியொன்று வெகுமானி சோமசுந் தரகுருவின் அருளொன்றும் அடிமைவெள்ளைக் கவ்வொன்றும் அலைநாவல் நதியொன்று கோத்திரன் கணியொன்று குவளைமார்பன் கதியொன்று சரவணப் பெருமாள் கவீசுரன் கையொன்றும் எழுதும் ஒலை தெவ்வென்று சமர்வென்று திகழ்மகம் மதுதம்பி தீரானிதிர் கொண்டு காண்க செழுஞ்சென்ன பட்டினம் அதிற்கேழு வோம்வழிச் செலவுக்கு வேண்டுமதனால் உவ்வொன்று யவ்வொன்று லவ்வொன்று டவ்வொன்று சவ்வென்று மவ்வொன்றுவவ் வொன்றுரவ் வொன்றுசவ் வொன்றுகவ் வொன்றுனவ் வொன்றுவர விடல்வேண்டுமே!</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> jgdxyy2vac2q5y4wb729b2x4u5wwxa2 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/139 250 489120 1838651 1571567 2025-07-03T11:34:34Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|138 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>69-A. கிறித்தவ தேவாலயத்தில் அரபு மொழிக் கல்வெட்டு</b>}}}} ஆஸ்திரேலியாவிலிருந்து 1894ல் கிறித்தவ பணிக்காக இந்தியா வந்த மறைதிரு அந்தோணி வாட்சன் பிரப் 1894ல் கோவை வந்தார். 1897இல் ஈரோடு வந்தார். 1904ல் ஈரோடு நகர பரிபாலன சபைத் தலைவராக விளங்கினார். அவர் நினைவாக ஈரோடு மையப் பகுதியில் உள்ள கிறித்தவ தேவாலயம் ‘பிரப் நினைவு தேவாலயம்’ என்ற பெயருடன் விளங்குகிறது. 1930ல் திட்டமிடப்பட்டு 1933ல் “இந்தோசரோனிக்” கட்டிடக் கலையில் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தின் முகப்பில் “கடவுள் ஒருவரே” என்று பொருள்படும் “யா குதா” என்ற சொற்றொடர் பெரிய அரபு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 139 |bSize = 425 |cWidth = 227 |cHeight = 311 |oTop = 246 |oLeft = 123 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> 60loyz2cyshvafs9fobv27eusrjwrzx பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/140 250 489121 1838665 1571568 2025-07-03T11:50:30Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1838665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 139}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>69-B. ஈரோட்டில் ‘கோஷா’ ஆஸ்பத்திரி</b>}}}} ஈரோட்டில் 1897 முதல் கிறித்தவப் பணியாற்றிய அந்தோணி வாட்சன் பிரப் 1909ல் தன் பங்களாவின் ஒரு பகுதியிலே சிறு மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். டாக்டர் மைகன் ரீஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். மருத்துவமனை தொடங்க 1912ல் ‘பனங்காடு’ என்ற பகுதியை வாங்கினார். மருத்துவமனை கட்டினார். 1914-15 ஆம் ஆண்டுகளில் மலேரியா, இன்புளூயன்சா, காய்ச்சல் ஈரோட்டில் அதிகமாகப் பரவியது. மருத்துவமனைப் பணி நடக்கும்போதே பாயில் படுக்க வைத்து நோயாளிகளைக் கவனித்தார். பெரும்பாலும் ஆண் மருத்துவர்களே இருந்த காரணத்தால் நோயினால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள் பலர் மருத்துவ வசதியின்றி இறந்தனர். பிரப் வேலூரிலிருந்து பெண் டாக்டர் ஹில்டா போலார்டு என்பவரை அழைத்துக் கொண்டு வந்து இஸ்லாமியப் பெண்களுக்கு மருத்துவம் செய்தார். இதனால் தான் கட்டிய மருத்துவமனைக்கு “கோஷா” ஆஸ்பத்திரி என்று பெயரிட்டார். பெண்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட அம்மருத்துவமனை ஆண்களுக்கு சிகிச்சை அளித்தபோதும் 1961வரை “கோஷா ஆஸ்பத்திரி” என்ற பெயரிலேயே இருந்துவந்தது. பின்னர் சி.எஸ்.ஐ. மருத்துவமனை என்று பெயர் மாற்றப்பட்டாலும் இன்னும் அந்த ஆஸ்பத்திரியை கோஷா ஆஸ்பத்திரி என்றே மக்கள் அழைத்து வருகின்றனர். {{nop}}<noinclude></noinclude> 4w6xv9ud4v7jbr3ww7x4ko4v7zt6bco பயனர்:Illiyas noor mohammed 2 537225 1838392 1820184 2025-07-03T04:36:32Z Booradleyp1 1964 /* அஜய் */ 1838392 wikitext text/x-wiki என் பெயர் '''இலியாஸ்''', பொறியியல் மாணவன். ==உதவிக்கு== [[/notes]] ==குடும்பக் கிளை == *[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]]-family tree *[[பயனர்_பேச்சு:Balajijagadesh#Family_tree_by_table_code]] *[[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி#குடும்பக் கிளைகள்]] ==நூல்கள் == #[[அட்டவணை:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf]] - 41 பக்கங்கள்{{tick}} #[[அட்டவணை:பவழபஸ்பம்.pdf]]-98 பக்கங்கள்{{tick}} #[[அட்டவணை:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf]] -90 பக்கங்கள்{{tick}} #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]]-131 {{tick}} #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]] #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf]] #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf]] ==தேசப்பன்== #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] == அஜய்== #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]] 7q45t05qoflt1habdmuc32cc2stiz7b மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் 0 540221 1838357 1837879 2025-07-02T15:17:03Z Info-farmer 232 புதிது = "{{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}} ", மொத்தம் = 464 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன. 1838357 wikitext text/x-wiki {{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}} {{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}} {{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}} {{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}} {{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}} {{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}} {{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}} {{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}} {{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}} {{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}} {{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}} {{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}} {{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}} {{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}} {{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}} {{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}} {{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}} {{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}} {{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}} {{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}} {{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}} {{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}} {{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}} {{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}} {{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}} {{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}} {{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}} {{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}} {{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}} {{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}} {{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}} {{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}} {{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}} {{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}} {{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}} {{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}} {{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}} {{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}} {{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}} {{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}} {{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}} {{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}} {{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}} {{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}} {{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}} {{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}} {{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}} {{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}} {{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}} {{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}} {{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}} {{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}} {{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}} {{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}} {{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}} {{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}} {{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }} {{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }} {{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }} {{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}} {{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}} {{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}} {{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}} {{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}} {{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}} {{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }} {{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }} {{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}} {{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}} {{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}} {{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}} {{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}} {{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}} {{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}} {{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}} {{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}} {{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}} {{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}} {{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}} {{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}} {{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}} {{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}} {{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}} {{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}} {{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}} {{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}} {{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}} {{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}} {{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}} {{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}} {{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}} {{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }} {{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}} {{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}} {{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}} {{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}} {{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}} {{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}} # {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986 # {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007 # {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924 # {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986 # {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959 # {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957 # {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984 #{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988 # {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970 #{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968 #{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957 #{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961 #{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993 #{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]''' #{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]''' #{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001 #{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]''' #{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]''' #{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]''' #{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]''' #{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951 #{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995 #{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]''' #{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]''' #{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்‎|அ. மு. பரமசிவானந்தம்‎]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991 #{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000 #{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967 #{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953 #{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}} #{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952 #{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}} # {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960 #{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960 #{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993 #{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911 #{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998 #{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004 #{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003 # {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928 #{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]''' #{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986 #{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966 #{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002 #{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993 #{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993 #{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977 #{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957 #{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007 #{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952 # {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959 #{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966 #{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985 #{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999 #{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002 #{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989 #{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்‎|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981 {{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}} #{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978 #{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999 #{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998 #{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003 #{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}} #{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960 #{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}} #{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000 #{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994 #{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006 #{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004 #{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}} #{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001 #{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}} #{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959 #{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}} #{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு‎|நெ. து. சுந்தரவடிவேலு‎]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}} #{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}} #{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991 #* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946 #{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947 #{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}} #{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964 # {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979 # {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982 #{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986 # {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988 #* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990 #{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997 #{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997 #{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003 #* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988 # {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990 # {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993 #{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999 #{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999 #{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997 #{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} # {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994 #{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001 #{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994 #* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}} #{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005 #{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999 #{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005 #{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996 #{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006 #{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005 #{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991 #{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977 #* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}} #{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}} # {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983 # {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956 #{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960 #{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]''' #{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]''' #{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003 #{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''', #{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}} #{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}} #{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959 #{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956 #* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}} # {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003 # {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002 # {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001 #{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002 #{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002 #{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002 #{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]''' #{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''' #{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''' #{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001 # {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002 #* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}} #{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}} #{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}} #{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]''' #{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]''' # {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000 # {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000 #{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998 #{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000 #{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}} #{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}} # {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}} # {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955 # {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007 #{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}} #{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}} #* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}} # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001 #{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999 #{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999 # {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005 #* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005 #{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011 {{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}} #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000 #{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993 #{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993 #* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]''' #{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]''' #{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949 #{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964 # {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956 #* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967 #{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985 #{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992 #{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]''' #{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988 #{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981 #{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968 #{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}} # {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995 #{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}} #{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}} #{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}} #{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997 #{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988 #{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]''' #{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955 #{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]''' #{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998 #{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000 {{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}} #* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]''' #{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992 #{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}} #* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}} #{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}} #{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999 #{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]''' #{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]''' {{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}} #{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]''' #{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000 #{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002 #{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994 #{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007 #{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009 #{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007 #{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982 #{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007 #{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997 #* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}} # {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]''' #{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979 #{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979 #{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979 #{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002 #* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} # {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996 #{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993 # {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969 #{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]''' #* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}} #{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985 #{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989 #{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996 #{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996 #{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]''' #{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994 #{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993 #{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997 #{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995 #{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006 #{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980 #{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971 #{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975 #* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}} # {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957 #{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001 #{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}} #* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}} #{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}} #{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}} # {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987 #{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988 #{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988 #{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991 #{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992 #{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992 #{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001 #* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983 #{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995 #{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}} #{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004 #* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}} #{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985 # {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986 # {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990 # {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991 #* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}} #{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}} # {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946 #{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964 #{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998 #* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}} #{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}} #{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}} #{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}} #{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}} #{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}} #{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}} # {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949) #{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]''' # {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968 #* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005 # {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005 #{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}} * <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big> [[பகுப்பு:படைப்புகள்]] ahiqpy147k1dbjo46ga07m5ymvtxc16 பயனர்:AjayAjayy 2 601914 1838391 1833548 2025-07-03T04:36:05Z Booradleyp1 1964 /* நூல்கள் */ 1838391 wikitext text/x-wiki என் பெயர் அஜய், பி.ஏ.ஆங்கில இலக்கிய மாணவன். ==நூல்கள்== #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]]-மே6 #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]-மே12 #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]]-மே15 #[[அட்டவணை:மரம்.pdf]]-மே25 #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]-மே31 #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]-ஜுன்20 #[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]-ஜுலை3 k1h1357v2abceys62f43h3b4ecrrdxo பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/83 250 619217 1838372 1833877 2025-07-03T00:44:40Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1838372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude>{{center|{{larger|<b>துறவு</b>}}}} ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.{{float_right|1}} துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால், எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயே துறக்க வேண்டும்; துறந்தபின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.{{float_right|2}} ஐம்பொறிகளுக்கு உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும். அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒருசேர விடல்வேண்டும்.{{float_right|3}} தவம் செய்வதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும்: பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.{{float_right|4}} பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள்; ஆகையால் அதற்குமேல் வேறதொடர்பு கொள்வது ஏனோ?{{float_right|5}} உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக் கருதலுமாகிய மயக்கத்தைப் போக்குகின்றவன் தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.{{float_right|6}} யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொணடு விடாதவரை, துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.{{float_right|7}} முற்றத் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவர். அவ்வாறு துறக்காத மற்றவர், அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.{{float_right|8}} இருவகைப் பற்றும் அற்ற பொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும்; இல்லையானால் (பிறவித் துன்பம் மாறிமாறி வந்து) நிலையாமை காணப்படும்.{{float_right|9}} பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றைமட்டும் பற்றிக் கொள்ளவேண்டும்; உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்றவேண்டும்.{{float_right|10}}<noinclude>{{rh|70||}}</noinclude> pzutzqm2ca19bunhz3jianuzen2aao1 தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/056 0 619450 1838285 1834984 2025-07-02T13:13:40Z Booradleyp1 1964 1838285 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = செ. இராசு | section = 56 | previous = [[../055/|← 055]] | next = [[../057/|057→]] | notes = }} <pages index="தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf" from="102"to="102"fromsection="" tosection="" /> stt0fzgv2u3p8k2pci6t751g92nbcj2 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/156 250 620026 1838352 1837672 2025-07-02T15:10:07Z Info-farmer 232 {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 156 |bSize = 386 |cWidth = 77 |cHeight = 27 |oTop = 551 |oLeft = 158 |Location = center |Description = }} 1838352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|144|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> நீராட்டு விழா உஞ்சை நகரத்தில் 21 நாள் நிகழ்ந்ததெனப் பெருங்கதை கூறும். இக் காலத்துக் கொண்டாடப்பெறும் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு, பண்டைப் புனலாட்டை ஒரு புடையொக்கும். {{center|{{larger|<b>(2) பொழில் விளையாட்டு</b>}}}} நகரவாணர், இளவேனிற் காலத்தில், ஊருக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு சோலைக்குச் சென்று, தனித் தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் ஒரு பகல் சமைத்துண்டு மகிழ்ந்த விழா, பொழில் விளையாட்டு எனப்பட்டது. இஃது இக்காலத்தில் உறவினரும் நண்பருமாக ஒரு சிலர் சென்றுண்ணும் காட்டுணாப்போன்றதாகும். சோலையை அடைந்தபின், அடிசில் தொழிலில் ஈடுபட்டவரொழிந்த ஏனையரெல்லாம் வெவ்வேறு வினைபற்றி வெவ்வேறிடஞ்சென்று விடுவர். ஆடவருள் பெரியோர் வேட்டையாடவும், சிறியோர் மரமேறுதல் காய்கனி பறித்துண்டல் விளையாடுதல் முதலிய வினை நிகழ்த்தவும், பிரிந்துவிடுவர். பெண்டிருள் மூத்தோர் அடிசில் தொழிலில் அமர; இளையோர், மலர் கொய்து மாலை தொடுக்கவும், பாவை புனைந்து பாராட்டி மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும், சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைக்கவும், ஆங்காங்கு அகன்றுவிடுவர். சிலர் கட்டமுது கொண்டுசெல்வதுமுண்டு. அங்ஙனமாயின், அன்னார் அனைவரும் இன்ப விளையாட்டில் ஈடுபடுவர். நண்பகல் உணவுண்டபின், சில நாழிகை நேரம் இளைப்பாறி மாலைக் காலம் வீடு திரும்புவது இயல்பாகும். புதிதாய் மணந்த காதலர், தாமே சென்று ஆடும் பொழிலாட்டும், மேற்கூறியவாறு பொது நகர மாந்தர் கொண்டாடும் பொழிலாட்டும், வெவ்வேறாம். {{rule|5em|align=}} {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 156 |bSize = 386 |cWidth = 77 |cHeight = 27 |oTop = 551 |oLeft = 158 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> 7f441rcngnwbz94ljdldb6mq27wmulm 1838383 1838352 2025-07-03T04:03:27Z Booradleyp1 1964 1838383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|144|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> நீராட்டு விழா உஞ்சை நகரத்தில் 21 நாள் நிகழ்ந்ததெனப் பெருங்கதை கூறும். இக் காலத்துக் கொண்டாடப்பெறும் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு, பண்டைப் புனலாட்டை ஒரு புடையொக்கும். {{center|{{larger|<b>(2) பொழில் விளையாட்டு</b>}}}} நகரவாணர், இளவேனிற் காலத்தில், ஊருக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு சோலைக்குச் சென்று, தனித் தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் ஒரு பகல் சமைத்துண்டு மகிழ்ந்த விழா, பொழில் விளையாட்டு எனப்பட்டது. இஃது இக்காலத்தில் உறவினரும் நண்பருமாக ஒரு சிலர் சென்றுண்ணும் காட்டுணாப்போன்றதாகும். சோலையை அடைந்தபின், அடிசில் தொழிலில் ஈடுபட்டவரொழிந்த ஏனையரெல்லாம் வெவ்வேறு வினைபற்றி வெவ்வேறிடஞ்சென்று விடுவர். ஆடவருள் பெரியோர் வேட்டையாடவும், சிறியோர் மரமேறுதல் காய்கனி பறித்துண்டல் விளையாடுதல் முதலிய வினை நிகழ்த்தவும், பிரிந்துவிடுவர். பெண்டிருள் மூத்தோர் அடிசில் தொழிலில் அமர; இளையோர், மலர் கொய்து மாலை தொடுக்கவும், பாவை புனைந்து பாராட்டி மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும், சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைக்கவும், ஆங்காங்கு அகன்றுவிடுவர். சிலர் கட்டமுது கொண்டுசெல்வதுமுண்டு. அங்ஙனமாயின், அன்னார் அனைவரும் இன்ப விளையாட்டில் ஈடுபடுவர். நண்பகல் உணவுண்டபின், சில நாழிகை நேரம் இளைப்பாறி மாலைக் காலம் வீடு திரும்புவது இயல்பாகும். புதிதாய் மணந்த காதலர், தாமே சென்று ஆடும் பொழிலாட்டும், மேற்கூறியவாறு பொது நகர மாந்தர் கொண்டாடும் பொழிலாட்டும், வெவ்வேறாம். {{Css image crop |Image = தமிழ்நாட்டு_விளையாட்டுக்கள்.pdf |Page = 156 |bSize = 386 |cWidth = 77 |cHeight = 27 |oTop = 551 |oLeft = 158 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> e6sh42yfk5241o0fop1yqb0gsy2zq3q தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் 0 620083 1838355 1837930 2025-07-02T15:12:40Z Info-farmer 232 56 1838355 wikitext text/x-wiki {{Under_construction}} {{header | title = தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் | author = ஞா தேவநேயன் | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 1962 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 56 ஆகும். }}{{featured download}}<br><br><br> <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="3" to="4" /> {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" /> {{page break|label=}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:ஞா தேவநேயன்]] [.[பகுப்பு:Transclusion completed]] q9w47xfuhf0ouddrdzu55b7rqypzpos பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/356 250 620159 1838298 2025-07-02T13:52:15Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பதே இந்தப் பொருளாதாரத்தின் வெற்றியைக் குலைக்கக் கூடும். மேலும், அதிகாரங்கள் ஒருவரிடம் குவிந்திருப்பதால், அவருடைய தனிப்பட்ட விருப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1838298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகார வரம்பு|320|அதிகார வரம்பு}}</noinclude>பதே இந்தப் பொருளாதாரத்தின் வெற்றியைக் குலைக்கக் கூடும். மேலும், அதிகாரங்கள் ஒருவரிடம் குவிந்திருப்பதால், அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் நாட்டில் பஞ்சத்தையோ போரையோ உண்டாக்கலாம். மேலும், திட்டமிடுவதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே, அதிகாரப் பொருளாதாரம் சிறந்ததா? இல்லையா என்ற கேள்வி கொள்கைச் சிக்கல் உடையதாகும்.{{float_right|எம்.இரா.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Dickinson, H.D.,</b> “Economics of Socialism”, Oxford University Press, New York, 1939. <b>Gustav Stoeper,</b> “German Economy 1870–1940”, Reynal and Hitch Cock, New York, 1940. <b>Halm, G.N.,</b> “Economic Systems: A Comparative Analysis”, Oxford and I.B.M. Publishing Company, Calcutta, 1978. <b>Maurice Dobb,</b> “Soviet Economic Development: Since 1917”, International Publishers, New York, 1948. <b>Schumpeter J.A.,</b> “Capitalism, Socialism & Democracy”, Harper and Row Publishers, New York, 1942. <b>William N. Loucks,</b> “Comparative Economic Systems”, Harper and Row Publishers, New York, 1965. {{larger|<b>அதிகார வரம்பு:</b>}} நீதிமன்றங்களின் அதிகார எல்லையை இரு கூறுகளாகப் பிரிக்கலாம். ஒன்று நிதி வழி அதிகார வரம்பு (Pecuniary Jurisdiction); மற்றொன்று நிலவரை அதிகார வரம்பு (Territorial Jurisdiction). ஒவ்வொரு நீதிமன்றமும் இந்த இருவகைப்பட்ட அதிகார எல்லைக்குள்தான் இயங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தொகைக்கென்றோ சொத்தின் குறிப்பிட்ட மதிப்பிற்கென்றோ அமையும் நீதிமன்ற அதிகாரம் (வழக்கு) மதிப்பு முறை அதிகார வரம்பு எனப்படும். ஒரு மாவட்டம் அல்லது இதற்கு உட்பட்ட எல்லைக்குள் மட்டுமே வழக்குகளை ஏற்றுத் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் நீதிமன்றம் நிறைவேற்ற இயலும் என்ற வரம்பு, ‘நிலவரை அதிகார வரம்பு’ அல்லது ‘வட்டார அதிகார வரம்பு’ எனப்படும். இந்த இருவகை அதிகார எல்லையைத் தாண்டி எந்த ஒரு வழக்கும் அந்தக் குறிப்பிட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டதன்று. இவ்விதமாக நடைமுறையிலிருக்கும் அதிகார எல்லை, வரையறுக்கப்பட்ட அதிகார எல்லை (Limited Jurisdiction) என்று வழங்கப்படுகிறது. வரையறுக்கப்படாத அதிகார எல்லை வரம்பில்லா அதிகாரம் என்று கூறப்படும். இந்திய நீதிமன்றங்கள் மொத்தத்தில் செலுத்துகின்ற அதிகார வரம்பைக் கீழ்க்கண்டவாறு பல்வேறு வகையாகப் பிரிக்கலாம். முதலேற்பு அதிகார வரம்பு (Original Jurisdiction) என்பது ஒரு நடவடிக்கையை முதல் எடுப்பில் ஏற்கும் நீதிமன்றத்தின் அதிகாரம். இந்த அதிகார வரம்பில் முதல் வழக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேர்முக விசாரணைக்கு உட்பட்டவை. பெரும்பான்மையாக எல்லாத் தரப்பட்ட, நீதிமன்றங்களும் இந்த முதலேற்பு அதிகார வரம்பு கொண்டிருக்கின்றன. ஆனால், அது அதற்குரிய நிதிநிலை அதிகார வரம்புக்கும் வட்டார அதிகார வரம்புக்கும் கட்டுப்பட்டுச் செயற்படும். மேலேற்பு அதிகார வரம்பு (Appellate Jurisdiction) கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகள்மீது வரும் மேல்முறையீடுகளை வளர்ப்பதற்குள்ள அதிகாரம், இந்த மேலேற்பு அதிகார வரம்பைச் செலுத்துவதில் மேல் வழக்காக விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை (Trial Court) எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டவற்றை ஆய்ந்து முடிவு கூறவேண்டும். மேல் வழக்கை ஆய்வதில் நேரடி விசாரணையில்லாததால், ஏற்கெனவே எடுக்கப்பட்ட சான்றுகளைக் கொண்டு, அதனடிப்படையில் முடிவு கூறப்படும். இந்த அதிகாரம், சமூக உரிமை நடைமுறைச் சட்டத்தின் 96-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து இரண்டாவது மேல் வழக்குக்கான அதிகார வரம்பு உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது (பிரிவு 100). இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்பு, மேல் வழக்கு விசாரணை அதிகார வரம்புகள் குறித்துச் சமூக உரிமை நடைமுறைச் சட்டத்தின் 109, 110–ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது; மேலும் இந்திய அரசியல் சட்டத்தின் 132, 133, 136–ஆகிய பிரிவுகளிலும் கூறப்பட்டுள்ளது. இந்திய நீதிமன்றங்களில் உயர்ந்தது நாட்டின் தலைநகரான புதுதில்லியில் இயங்கிவரும் உச்ச நீதிமன்றம். இந்நாட்டு மக்களின் உரிமையியல் வழக்குகளிலும் குற்றவியல் வழக்குகளிலும் அரசியல் சட்டம் பற்றிய வழக்குகளிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுநியானது. உச்ச நீதிமன்றத்திற்குக்கீழ் பலதரப்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. நீதிமன்றங்கள் அதிகார வரம்பின் அடிப்படையில் பல வகைப்படும். :1. வரையறுக்கப்பட்ட அதிகாரமுள்ளவை. :2. வரையறுக்கப்படாத அதிகாரமுள்ளவை. :3. மேல் முறையீட்டு நீதிமன்றங்கள்.<noinclude></noinclude> rnjz0xli3q80yskskkuojhmioe1dg2z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/357 250 620160 1838307 2025-07-02T14:12:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":4. தனி நீதிமன்றங்கள். :5. சிறப்பு அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள். {{larger|<b>வரையறுக்கப்பட்ட அதிகாரமுள்ள நீதிமன்றங்கள்:</b>}} உரிமையியல் வழக்குகளில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1838307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகார வரம்பு|321|அதிகார வரம்பு}}</noinclude>:4. தனி நீதிமன்றங்கள். :5. சிறப்பு அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள். {{larger|<b>வரையறுக்கப்பட்ட அதிகாரமுள்ள நீதிமன்றங்கள்:</b>}} உரிமையியல் வழக்குகளில் வழக்கைப் பற்றிய சொத்து மதிப்பு உரூ. 15,000/-உம் அதற்குக் குறைவாகவும் உள்ள சொத்துகளைப் பற்றிய வழக்குகள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன்பு தாக்கல் செய்யப்படவேண்டும். குற்றவியல் வழக்குகளில் ஓர் ஆண்டு தண்டனை பெறத்தக்க குற்றங்கள், இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நீதிபதியால் விசாரிக்கப்படவேண்டும். குற்றவியல் வழக்குகளில் மூன்று ஆண்டுகள் தண்டனை பெறத்தக்க குற்றங்கள் முதல் வகுப்புக் குற்றவியல் நீதிபதியால் விசாரிக்கப்படவேண்டும். {{larger|<b>வரையறுக்கப்படாத அதிகாரமுள்ள நீதிமன்றங்கள்:</b>}} உரிமையியல் வழக்குகளில் உரூ. 15,000/–க்கு மேல் சொத்து மதிப்புள்ள வழக்குகள் உரிமையியல் சார்பு நீதிமன்றம் முன்பு தாக்கல் செய்யப்படவேண்டும். குற்றவியல் வழக்குகளில் மாவட்டக் குற்றவியல் நீதிபதி, மரணதண்டனைவரை விதிக்கப்படத்தக்க குற்றவியல் வழக்குகளை ஏற்று நடத்த அதிகாரம் உண்டு. {{larger|<b>மேல் முறையீட்டு நீதிமன்றங்கள்:</b>}} உரிமையியல் வழக்குகளில் மாவட்ட உரிமையியல் மன்றத்தின் தீர்ப்பின் பேரில், மாவட்ட உரிமையியல் சார்பு நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யலாம். உரிமையியல் சார்பு நீதிமன்றங்களின் தீர்ப்பின் பேரில் உரூ. 50,000/– சொத்து மதிப்புள்ள வழக்குகளைப் பொறுத்து, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு உண்டு. மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களின் மேல் முறையீட்டுத் தீர்ப்பின் பேரில், சட்ட நுணுக்கங்கள் இருப்பின் அவற்றைப் பொறுத்து உயர் நீதிமன்றத்திற்கு இரண்டாவது மேல் முறையீடு செய்ய வாய்ப்புண்டு. உரிமையியல் சார்பு நீதிமன்றங்களின் தீர்ப்பின் பேரில் உரூ. 50,000/–க்கு மேல் மதிப்புள்ள வழக்குகளைப் பொறுத்து உயர்நீதிமன்றத்திற்கு முதல் மேல்முறையீடு உண்டு, மாவட்டக் குற்றவியல் நீதிபதியின் குற்றவியல் வழக்குகள் தீர்ப்பின் பேரிலும் உயர் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு உண்டு. உரிமையியல் வழக்கு மேல் முறையீடுகளில் உரு. 20,000/–க்குக் கீழ் மதிப்புள்ளவை ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியால் விசாரிக்கப்படும், அந்தத் தீர்ப்பின் பேரில் இரு நீதிபதிகள் கொண்ட குழுவிற்கு மேல் முறையீடு செய்யலாம். உரிமையியல் வழக்குகளில் உரூ. 20,000/–க்கு மேல் சொத்து மதிப்புள்ள வழக்குகள் இரு நீதிபதிகள் கொண்ட குழுவால் விசாரணை செய்யப்படும். உயர்நீதிமன்றத்தின் உரிமையியல் தீர்ப்புகளின் பேரிலும் குற்றவியல் தீர்ப்புகளின் பேரிலும் உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய சட்ட நுணுக்கங்கள் உண்டு என்று உயர்நீதிமன்றமோ உச்ச நீதிமன்றமோ கருதினால் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உண்டு. {{larger|<b>தனி நீதிமன்றங்கள்:</b>}} ஒரு சில வழக்குகளைத் தீர்வு செய்யத் தனித்தனி நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. தொழில் வழக்குகளைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட ‘தொழில் வழக்கு மன்றம்’ போன்றவை தனி நீதிமன்றங்களாகும். பல சிறப்புச் சட்டங்களின் கீழ்த் தொடரப்பட்ட வழக்குகளைத் தீர்வு செய்ய இத்தகைய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. {{larger|<b>சிறப்பு அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள்:</b>}} சட்ட விதிகளால் தீர்க்க இயலாத தவறுகளைத் தீர்க்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு. இத்தகைய வழக்குகள் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியாலோ முக்கிய வழக்காக இருக்குமானால் இரு நீதிபதிகளாலோ விசாரிக்கப்படும். ஒரு நீதிபதியில் தீர்ப்பின் பேரில் இரு நீதிபதிகள் கொண்ட குழுவிற்கு மேல் முறையீடு உண்டு. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்பேரில் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடும் உண்டு. இவை தவிர உயர் நீதிமன்றத்திற்குக் கப்பல் போக்குவரத்தைப் பற்றிய வழக்குகனை விசாரிக்க அதிகாரம் உண்டு. {{larger|<b>நீதிமன்றங்களின் அதிகார வரம்பின் அமைப்பைக் காட்டும் அட்டவணை:</b>}} {{block_center|<poem> {{larger|<b>உரிமையியல்</b>}} உச்ச நீதிமன்றம் ↓ உயர்நீதிமன்றம் ↓ மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ↓ உரிமையியல் சார்பு நீதிமன்றம் ↓ மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் (சொத்து மதிப்பு உரூ. 15,000/– வரை) </poem> }}<noinclude></noinclude> 446km7zjxkudn61msjubbjj0waw09ae பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/358 250 620161 1838311 2025-07-02T14:27:56Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{block_center|<poem> {{larger|<b>குற்றவியல்</b>}} உச்ச நீதிமன்றம் ↓ உயர்நீதிமன்றம் ↓ மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ↓ முதல் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1838311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகார வருக்கம்|322|அதிகார வருக்கம்}}</noinclude>{{block_center|<poem> {{larger|<b>குற்றவியல்</b>}} உச்ச நீதிமன்றம் ↓ உயர்நீதிமன்றம் ↓ மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ↓ முதல் வகுப்புக் குற்றவியல் நீதிமன்றம் ↓ இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நீதிமன்றம் </poem> }} {{float_right|ஆர்.செ.}} {{larger|<b>அதிகார வருக்கம்</b>}} என்பது, அரசாங்கத்தின் நிருவாக அமைப்பைக் குறிக்கக் கூடியதாகும். இஃது அரசாங்க நிருவாகத்தில் இடம்பெறுகிற அரசாங்கத் துறைகள், அரசாங்க இணையங்கள், அரசாங்கச் செயலாண்மைகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. அதிகார வருக்கம் (Bureaucracy) என்பது, பரந்தவகையில் பல பொருள்தரும் வகையில் பயன்படுத்தப்படுவதும் உண்டு. எடுத்துக்காட்டாகச் சமூகவியலில் இது, பொது அமைப்புகளின் அதிகாரங்களைப் பயன்படுத்துகிற விதத்தையும், அமைப்பின் செயல்களின் தனித் தன்மையையும் விளக்கும் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. மாக்சு வீபர் (Max weber) அதிகார வருக்கத்தைச் சமூக அமைப்பாகக் கருதி, அதற்குக் குறிப்பிட்ட பண்புநலன்கள் உள்ளன என வரையறுத்துள்ளார். நிருவாகத் திறமைகளைச் சமூக நிறுவனம், அதிகார வருக்கம் ஆகியவை மிகுதியாக்கும் என்பது மாக்சு வீபரின் கருத்து. பீட்டர் பிளா (Peter Blau) இக்கருத்தைச் சிறிது மாற்றியமைத்து, நிருவாகத் திறமைகளை உயர்த்தும் நிருவாக அமைப்பு அதிகார வருக்கம் என்கிறார். கூட்டான பெரிய நிருவாக அமைப்புகளில் திறமையையும் நிலைத்தன்மையையும் பாதுகாக்க உதவும் ஒருவகை நிருவாக அமைப்பு முறைதான், அதிகார வருக்கம் எனப் பிரான்சிசு (Francis), இசுடோன் (Stone) ஆகியோர் கூறியுள்ளனர். ஆகவே அதிகார வருக்கம் என்பது, அரசுப் பணியின் திறமையை உயர்த்துவதில் தொடர்புடையது என்பதால், அரசுப் பணியின் திறமையின்மையை வெளிப்படுத்தி, அதன்மூலம் நிருவாகத் திறமையை உயர்த்த முயற்சி செய்யும் வேறுபட்ட அரசியல் முறைகளைக் குறிப்பிடுவது, அதிகார வருக்கமென அரசியல் அறிவியல் கூறுகிறது. அரசியல் கட்சிகள், சட்டமன்ற அவைகள். அரசாங்கத்தின் ஆட்சித்துறை ஆகியன அதிகார வருக்கமென அரசியல் அறிவியல் விளக்குகிறது. அரசாங்கப் பணியாளர்களை அரசனுக்குத் தரவல்ல உதவியாளர்கள், அரசாங்கத்திற்குப் பணிபுரியக் கூடிய அலுவலர்கள் ஆகிய இருதிறத்தாரும் தனித் தனியாகப் பிரியாமல், அரசனுடைய அரசாங்கத்தில் பணிபுரிந்தனர். இதுதான் அன்றைய நிருவாக முறை தொடக்கக்கால நிருவாகம் இன்றுபோல் ஓடத்தில் தலைநகர் அமைத்து அங்கிருந்து ஆட்சி செய்யப்படவில்லை. மாறாக, அரசன் ஒவ்வோர் ஊராகச் சென்று நிருவாகத்தை நடத்தி வந்தான். நீதி வழங்கலும் நிதி வசூலித்தலும் அரசனுடைய தலையாய பணிகளாக இருந்தன. அவனுடைய உதவியாளர்களும் தொடர்ந்து பயணம் செய்தனர். அரசனுடைய தேவைகளை நிறைவு செய்வதும் நாட்டை ஆள்வதும் இணைந்தே சென்று கொண்டிருந்தன. மேலும் அப்போது போக்குவரத்தும் பிற தொடர்புகளும் வளர்ச்சி பெறவில்லை. அரசன் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று நிருவகிப்பது என்பது இயலாததாயிற்று. நிருவாகமும் வளர்ந்துகொண்டே இருந்ததால் ஊர் விட்டு ஊர் செல்லும் அலுவலர்களின் மூலமாக நிருவகித்தல் முடியாமலிருந்தது. இக்காரணங்களால் துறைகளின் தலைமையிடங்கள், குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு அவ்விடங்கள் ஒவ்வொன்றிலும், ஒரு குறிப்பிட்ட சில வேலைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இவ்விடங்களில் பணியாற்றிய பணியாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்து, அவற்றை எழுத்து வடிவமாக ஆவணங்களில் (Records) பதிவு செய்து பாதுகாத்தனர். எனவே, இவ்வாறு பல்வேறு இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் என்றும், அரசனுடன் சென்று அவனுக்கு உதவி செய்பவர்கள் என்றும் இருவகையினராக அலுவலர்கள் பிரிக்கப்பட்டனர். துறைகளைப் பல்வேறு இடங்களில் நிலையாக முதன்முதலாக அமைத்த அரசன் இரண்டாம் என்றி. நிதித்துறை, முதன்முதலாகத் தனியாக இயங்கத் தொடங்கிய துறையாகும். நிருவாகம் நிலையாகப் பல இடங்களிலிருந்து செய்ய வழிவகுத்தாலும், திறமையான பணியாளர்கள் கிடைக்கவில்லை. பணியினைத் திறம்பட நடத்தப் போதுமான மூலப் பொருள்கள் (Resources) கிடைக்காததால், நிருவாகப் பணி தொடக்க நிலையில்தான் இருந்தது. இருப்பினும் பணியாளர்கள் எல்லாவகைச் செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதனால் மிகுதியான சிக்கல்கள் எழுந்ததால் நிதித்துறை தனியாகப் பிரிக்கப்பட்டது. நிதித்துறையில் முதன் முதலாக மத குருமார்கள் அரசனுடைய அலுவலகச் செய்திகளை எழுதும் பணியில் ஈடுபட்டார்கள். மதத் தொடர்பான வேலைகள் முடிந்த பின்னர், இவர்கள் நிதித்துறைப் பணியில்<noinclude></noinclude> kv6dqxngykw0l55e5g4i8w24ybvkcd3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/359 250 620162 1838317 2025-07-02T14:44:24Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஈடுபட்டார்கள். மத குருமார்களுள் ஒருவர் வேந்தராகத் (Chancellor) திகழ்ந்தார். இவர்தாம் அரசனுடைய முத்திரையைப் பாதுகாத்தார். அஞ்சல் போக்குவரத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1838317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகார வருக்கம்|323|அதிகார வருக்கம்}}</noinclude>ஈடுபட்டார்கள். மத குருமார்களுள் ஒருவர் வேந்தராகத் (Chancellor) திகழ்ந்தார். இவர்தாம் அரசனுடைய முத்திரையைப் பாதுகாத்தார். அஞ்சல் போக்குவரத்துகளில் அரசனுடைய முத்திரை இன்றியமையாது தேவைப்பட்டதால், இவர் நம்பிக்கைக்குரிய எழுத்தராக மாறினார். நாளடைவில் இவர்கள் அரசன் சார்பில் கடிதங்களுக்குப் பதில் எழுதக் கூடியவர்களாகவும் மாறினர். பின்னர் இவ்வலுவலகம் தலைமை அமைச்சர் அலுவலகமாக மாறியது. இது போலவே பல துறைகளிலும் பிற செயலாண்மைகளும் அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்டன. அதிகார வருக்கத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கலாமென மார்க்சு (Marx) கூறுகிறார். அவை காவல் அதிகார வருக்கம், இன அதிகார வருக்கம், மரபார்ந்த ஆதரவு அதிகார வருக்கம், தகுதி அதிகார வருக்கம் ஆகியனவாகும். காவல் அதிகார வருக்கம் பொதுமக்களின் நலன்களுக்குக் காவலாகத் திகழக் கூடியதாகும். இது சீனாவில் சுங் மரபு தொடங்கிய காலத்தில் (கி.பி. 960) நிலவியிருந்தது; பிரெசியாவில் (Prussia) கி.பி. 1640–இலிருந்து 1740 வரை நிலவியிருந்தது. ஆனால் இந்த அதிகார வருக்கம், பொது மக்கள் கருத்தினின்று தனித்தும் ஏனென்று கேளாத நிலையுடையதாயுமிருந்தது. உயர் இனத்தவர்கள் மட்டுமே நிருவாகியாக வரலாமென்ற நிலையை உருவாக்கியது இன அதிகார வருக்கம். இதனால் இந்தியாவில் பிராமணர்கள், சத்திரியர்கள் ஆகியோர் மட்டுமே நிருவாகத்திற்கு வர முடிந்தது. இதனால் மக்களோடு நிருவாகம் இயைந்து செல்லவில்லை. மூன்றாவதாக மரபார்ந்த ஆதரவு அதிகார வருக்கத்தில், அரசாங்கப் பதவிகள் தனிச்சலுகையாகவோ அரசியல் பரிசளிப்பாகவோ வழங்கப்பட்டன. ஆளும் கட்சி தனது கட்சிக்காரர்களுக்கு உயர் பதவிகளை வழங்குவது, மரபார்ந்த ஆதரவு அதிகார வருக்கம், இதனால் நிருவாகத்தில் பொது நலனைக்காட்டிலும் கட்சிக் கண்ணோட்டம் மேலோங்கியது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் காரிபீல்டு இதற்குப் பலியானார். எனவே புதிய அதிகார வருக்கம் உருவானது. இதுதான் தகுதி அதிகார வருக்கம். அரசாங்கப் பணியில் திறமையானவர்களைச் சேர்க்க வேண்டுமென்று தகுதி அடிப்படையில் ஆள் சேர்ப்பு நடைபெற்றது. இது குறித்து மாக்சு வீபர் விளக்கமாகக் கூறியுள்ளார். மாக்சு வீபர் அதிகார வருக்கத்தின் தன்மைக ளைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றார்; ஒரு நிருவாக அமைப்பிலுள்ள பணியாளர்கள், ஒப்பந்தத்தாலோ கட்டாயத்தாலோ சில சட்டவரையறைகளைத் (Legal Norms) தங்களுக்குள் வரையறுத்துக் கொண்டு, அவற்றை ஏற்றுச் செயல்படுத்துகின்றனர். இச்சட்ட வரையறைகள், நிருவாக அமைப்புத் திறமையாகச் செயற்படுவதற்காக உருவாக்கப்படுகின்றன. இச்சட்டவரையறைகளைப் பணியாளர்கள் ஏற்பதால், அவர்களுக்குள் கீழ்ப்படிதல் என்ற தன்மை உருவாகிறது. இதனால் பணியாளர்கள் சட்டத்தின் கட்டுப்பாடுகளுக்கு இலக்காகின்றனர். இக்கட்டுப்பாடுகள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் உருவாக்கப்படுகின்றன. இக்கட்டுப்பாட்டினைப் பணியாளர்கள் ஏற்றுக்கொள்ளாமல் நடுநிலை வகித்தாலும் பரவாயில்லை; ஆனால் மனநிறைவில்லாமலோ ஏற்றுக் கொள்ளாமலோ இருக்கக்கூடாது. நிருவாக அமைப்பில் அதிகாரம்பெற்ற ஒருவர் அலுவலகத்திற்கு வந்துவிட்டால் அவர் ஆணைகள் இட அதிகாரம் பெற்றவராகி விடுகிறார். அவர் நிருவாக அமைப்பின் கண் உள்ள பிறரோடு ஒப்புநோக்கும்போது பதவியிலும் சிறிது உயர்வு பெற்றவராகி விடுகிறார். இருப்பினும், அவர் தம்முடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றத் தனிப்பட்ட ஆணைகளை வழங்க முடியாது. ஆனால் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்ற ஆணையிடும் அதிகாரம், ஆளில்லாத் தன்மையில் உருவாக்கப்படுகின்றது. இந்த ஆளில்லாத்தன்மை அதிகாரம், அமைப்பின் அதிகாரிகளுக்கு மட்டுமன்று, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தலைமைப் பதவிகளுக்கும் பொருந்தும், அமைப்பின் ஆளில்லாத் தன்மையால்தான் பணியாளர்கள் அவர்களுக்கு மேலுள்ள அதிகாரிகளின் ஆணைகளுக்குக் கட்டுப்படுகின்றனர். தனிப்பட்ட அதிகாரிக்குப் பணியாளர்கள் கீழ்ப்படிவது கிடையாது. அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்குமிடையே உள்ள தொடர்புகளைச் சட்டப்படி வரையறுத்து நன்முறையில் நடைபெறச் செய்யக் கீழ்க்கண்ட அம்சங்கள் இடம்பெற வேண்டுமென மாக்சு வீபர் கூறுகின்றார். அலுவலகப் பணிகள் வரையறுக்கப்பட்டு முறையாகத் தொடர்ந்து செய்யப்பட வேண்டும், அலுவலகப் பணிகள் ஒவ்வொன்றும் செயல்களின் தன்மையில் பிரிக்கப்படுவதால், ஒவ்வொரு செயலைச் செய்யவும் பொருத்தமான அதிகாரங்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் கொடுக்க வேண்டும். அலுவலகப் பணிகள் பிரிக்கப்படுவதால் வேலைப் பங்கீட்டுமுறை வளர்கிறது. வேலைப்பங்கீட்டின் மூலம் தனித்தன்மை வளரும். ஒவ்வொரு செயலைச் செய்யவும் பொருத்தமான அதிகாரங்கள் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படுவதால், பணியாளர்கள் வேலை செய்ய மறுக்கும்போது அவர்களைக் கட்டாயப்படுத்தி, வேலையைச் செய்யவைக்கும் அதிகாரத்தையும் அதிகாரிகன் கொண்டிருக்க வேண்டும். இதனையே நிருவாக உறுப்பு (Administrative Organ) என்பர். குடியரசுத்தலைவர், அமைச்சரவை போன்றவை நிருவாக உறுப்பில் அடங்கும். திருவாக அமைப்பீல் அலுவலகங்கள் அடுக்கு வரிசையாக ஏணி போல்<noinclude></noinclude> guvdg1tvrcmyzqwntw5w1opxfjxlgl0 தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038 0 620163 1838318 2025-07-02T14:46:53Z Info-farmer 232 + படிவத் தரவு 1838318 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 38 | previous = [[../037/|037]] | next = [[../039/|039]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="130" to="131"fromsection=" " tosection=" " /> 59a10ak5wf9ld6dof9d0m6o3gkituar தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039 0 620164 1838319 2025-07-02T14:48:18Z Info-farmer 232 + படிவத் தரவு 1838319 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 39 | previous = [[../038/|038]] | next = [[../040/|040]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="132" to="132"fromsection=" " tosection=" " /> j348kf3wrrjdnv3ansfsuxmrxhqsgxh தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040 0 620165 1838320 2025-07-02T14:49:02Z Info-farmer 232 + படிவத் தரவு 1838320 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 40 | previous = [[../039/|039]] | next = [[../041/|041]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="133" to="133"fromsection=" " tosection=" " /> 8q91q4rz73rrh8punrmqvvwv535rkcb தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041 0 620166 1838321 2025-07-02T14:50:02Z Info-farmer 232 + படிவத் தரவு 1838321 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 41 | previous = [[../040/|040]] | next = [[../042/|042]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="134" to="134"fromsection=" " tosection=" " /> rctnl2norx853fji1xwh8nsv6mxi2fj தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042 0 620167 1838322 2025-07-02T14:50:39Z Info-farmer 232 + படிவத் தரவு 1838322 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 42 | previous = [[../041/|041]] | next = [[../043/|043]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="135" to="135"fromsection=" " tosection=" " /> 5tduk83r62v7fb5kk53t4guw9gb8r3q தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043 0 620168 1838324 2025-07-02T14:51:12Z Info-farmer 232 + படிவத் தரவு 1838324 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 43 | previous = [[../042/|042]] | next = [[../044/|044]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="136" to="136"fromsection=" " tosection=" " /> 42w22pqoai9yzjgvli5tq5q6xgy3jni தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044 0 620169 1838326 2025-07-02T14:52:06Z Info-farmer 232 + படிவத் தரவு 1838326 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 44 | previous = [[../043/|043]] | next = [[../045/|045]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="137" to="138"fromsection=" " tosection=" " /> l00rwbmszf0dzsuttmhcs32ootoi8gv 1838330 1838326 2025-07-02T14:54:20Z Info-farmer 232 139 1838330 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 44 | previous = [[../043/|043]] | next = [[../045/|045]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="137" to="139"fromsection=" " tosection=" " /> kr6gy92ecdcg2jf3q34hn0hyiqz177c தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045 0 620170 1838329 2025-07-02T14:52:37Z Info-farmer 232 + படிவத் தரவு 1838329 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 45 | previous = [[../044/|044]] | next = [[../046/|046]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="140" to="140"fromsection=" " tosection=" " /> 6x0mb6idhn689cwnzlkfpx1ijepk9do தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046 0 620171 1838332 2025-07-02T14:55:20Z Info-farmer 232 + படிவத் தரவு 1838332 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 46 | previous = [[../045/|045]] | next = [[../047/|047]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="141" to="141"fromsection=" " tosection=" " /> kzeg1h3gjas3rmx63ya7g9pxnk0p0hb தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047 0 620172 1838333 2025-07-02T14:55:47Z Info-farmer 232 + படிவத் தரவு 1838333 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 47 | previous = [[../046/|046]] | next = [[../048/|048]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="142" to="142"fromsection=" " tosection=" " /> kdngv0rqmph825xk5r2fn6oqr7iu6rj தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048 0 620173 1838335 2025-07-02T14:56:49Z Info-farmer 232 + படிவத் தரவு 1838335 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 48 | previous = [[../047/|047]] | next = [[../049/|049]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="143" to="144"fromsection=" " tosection=" " /> 5wl0b8mds639msg2s3o2snw8pt59qs4 தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049 0 620174 1838337 2025-07-02T14:58:08Z Info-farmer 232 + படிவத் தரவு 1838337 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 49 | previous = [[../048/|048]] | next = [[../050/|050]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="145" to="145"fromsection=" " tosection=" " /> p52jkw703pqy93qzae5htnlct6b1gqh தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050 0 620175 1838338 2025-07-02T14:58:41Z Info-farmer 232 + படிவத் தரவு 1838338 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 50 | previous = [[../049/|049]] | next = [[../051/|051]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="146" to="146"fromsection=" " tosection=" " /> gi53g65n14akyhx08pzklmkszg9191u தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051 0 620176 1838339 2025-07-02T14:59:37Z Info-farmer 232 + படிவத் தரவு 1838339 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 51 | previous = [[../050/|050]] | next = [[../052/|052]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="147" to="147"fromsection=" " tosection=" " /> g5r3894koazawc8nzfkthdhmnp3k6v0 தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052 0 620177 1838340 2025-07-02T15:00:16Z Info-farmer 232 + படிவத் தரவு 1838340 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 52 | previous = [[../051/|051]] | next = [[../053/|053]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="148" to="149"fromsection=" " tosection=" " /> q7mqcj934ked7cnev941cnehrwokt9h தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053 0 620178 1838342 2025-07-02T15:02:46Z Info-farmer 232 + படிவத் தரவு 1838342 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 53 | previous = [[../052/|052]] | next = [[../054/|054]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="150" to="152"fromsection=" " tosection=" " /> 18g1eflth1ui2fqrxe9gfwdr2s0yhpf 1838344 1838342 2025-07-02T15:04:27Z Info-farmer 232 151 1838344 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 53 | previous = [[../052/|052]] | next = [[../054/|054]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="150" to="151"fromsection=" " tosection=" " /> 0fyzgbgnljlzolv2io36h553w25b817 1838346 1838344 2025-07-02T15:05:07Z Info-farmer 232 150 1838346 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 53 | previous = [[../052/|052]] | next = [[../054/|054]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="150" to="150"fromsection=" " tosection=" " /> trum4w680376llzy2i8et377kzy9a0h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/360 250 620179 1838345 2025-07-02T15:04:44Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒன்றின்கீழ் ஒன்றாக அமைப்பு முழுவதையும் இணைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு அலுவலகமும் அதற்குக்கீழ் உள்ள அலுவலகத்தைக் கண்காணிக்கவும் கட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1838345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகார வருக்கம்|324|அதிகார வருக்கம்}}</noinclude>ஒன்றின்கீழ் ஒன்றாக அமைப்பு முழுவதையும் இணைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு அலுவலகமும் அதற்குக்கீழ் உள்ள அலுவலகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய பொறுப்பினைப் பெற்றிருக்க வேண்டும். அமைப்பின் உயர் அலுவலகங்கள், அதன் கீழ் அலுவலகங்களின் குறைபாடுகளைக் களைவதாகவும் மேல் விசாரணை (Appeal) செய்யும் இடங்களாகவும் இருக்க வேண்டும், அமைப்பின் பணிகளைச் செய்வதால், அந்த ஒழுங்கு விதிகள் தொழில் நுட்பம் நிறைந்தனவாகவோ சட்டப்படி செய்யப்பட்டனவாகவோ இருக்க வேண்டும். எனவே இவ்வொழுங்கு விதிகளைச் செயற்படுத்தப் பயிற்சி பெற்ற திறமையாளர்கள் இருக்க வேண்டும் அமைப்பில் தகுதி நிறைந்தவர்கள் இருந்தால்தான் அமைப்புத் திறமையாகச் செயல்பட முடியும். இது நிருவாக அமைப்புக்கு மட்டுமன்று; அரசியல், சமயம், பொருளாதாரம் மற்றும் எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும், அமைப்பில் இருக்கிற மூலப் பொருள்கள் அதில் பணியாற்றும் பணியாளர்களிடமிருந்து வேறுபட்டன. அமைப்பில் மூலப் பொருள்கள் தங்களுடையனவெனச் சொந்தம் கொண்டாடக் கூடாது பணியாளர்கள் அமைப்பில் பணியாற்றுவதால் அவர்களுக்குப் பணமாகவோ வேறு பொருள்களாகவோ ஊதியம் போலக் (Compensation) கொடுக்க வேண்டும். பணியாளர்கள் வாழ்கின்ற இடத்தையும் அலுவலகத்தையும் தனித் தனியாகப் பிரிக்க வேண்டும். அலுவலகம் பொதுத் தன்மை பெற்றிருப்பதால் பணியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதுடன், தன் விருப்பப்படியே அமைப்புச் செயற்படும் வண்ணம் பொருத்தமாக அமைக்கப்படுதல் வேண்டும். நிருவாகச் செயல்கள், நிருவாக முடிவுகள், ஒழுங்கு விதிகள் போன்றவற்றை உருவாக்கி, அவை செயற்படுவதை எழுதிப் பதிவு செய்ய வேண்டும். வாய்மொழி ஒழுங்கு விதிகளைக்கூட எழுத்தால் பதிவு செய்ய வேண்டும். அலுவலகம் என்பது, நிருவாக அமைப்பின் செயல்கள், ஒழுங்கு விதிகள், நடைமுறை விதிகள் ஆகியவற்றைக் கொண்டதாகும். அமைப்பின் நிருவாகப் பணியாளர்கள் எங்ஙனம் பணி அமர்த்தப்படல் வேண்டுமென்பதையும், அவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பதையும் வீபரே கூறுகிறார். அமைப்பின் பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் அமைப்பிலிருந்து பிரிந்து உரிமையோடு செயற்பட வேண்டும். நிருவாக அமைப்பின் கடமையை, அஃதாவது ஆள்தன்மையற்ற பொதுச் செயல்களைச் செய்யக் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அமைப்பில் அலுவலகப் பதவிகள், ஒன்றின்கீழ் ஒன்றாக அடுக்கு வரிசையாகத் தெளிவாக ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலகப் பதவிக்கும் சட்டப்படி தகுதிகள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். அலுவலகப் பதவிகளுக்குப் பணியாளர்கள் ஒப்பந்த முறையில் பணி அமர்த்தப்படவேண்டும். பணியாளர்களைத் தொழில்நுட்பத் தகுதி அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும். தேர்தல் மூலம் பணியில் அமர்த்தக் கூடாது. பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியங்கள் உட்பட அனைத்தும் ஊதியத்தில் இடம்பெற வேண்டும், பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களைப் பதவிகளை வரிசைப்படுத்தியதற் கேற்பப் பொருத்தமாக வரையறுக்க வேண்டும். பணியாளர்களுக்கு அலுவலகப் பணியே அவர்களது பணியாக இருக்க வேண்டும். பணியாளர்களை பிற பணிகள் செய்ய அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் அவர்களது அலுவலக ஈடுபாடு, பொறுப்புணர்வு ஆகியன சிதறலுக்கு இடம் கொடுத்தால், அமைப்பு செம்மையாக இயங்க முடியாது. பணியாளர்கள் தங்களது பணியை வாழ்க்கைப் பணியாக (Career Service) ஏற்பதால் பணியமைவு முறை, பதவி உயர்வுகள் பெறும் வகையில் அமைய வேண்டும். பதவி உயர்வுகள் தகு தியின் அடிப்படையிலோ (Merit) பதவி முதன்மை பின் (Seniority) மூலமோ வழங்கப்படலாம். பதவி உயர்வுகள் உயர் அதிகாரிகளின் கணிப்பின் பேரில் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பணியமைவு முறையில், கண்காணிப்பு அதிகாரத்தோடு அமைப்பை இயக்கக் கூடியவர்களாகவும் இவர்கள் திகழ்கின்றனர். அலுவலகப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும் என்பது பற்றியும், தனிப்பட்ட அலுவலர்கள் ஆற்ற வேண்டும் பணிபற்றியும் வீபர் கூறியுள்ளார். அதிகார வருக்கம் ஆள்தன்மையற்றதாக நெகிழ்வில்லாத் தன்மையுடன் இருப்பதால், பல குறைகளுக்கு இலக்காகியுள்ளது. நிருவாக அமைப்புகன் மனிதர்களுக்காக மனிதர்களைக் கொண்டு இயங்குவதால், இயந்திரங்கள் போல நிருவாகத்தை இயக்க முடியாது. ஏனெனில் மனிதர்கள் இயந்திரங்கள் போலச் செயற்படக்கூடியவர்கள் அல்லர். தவிர, தனி மனிதன் தனக்குத் தேவையான செயல்களைத் தானே செய்து கொண்டு வருவானேயானால், சிக்கல் ஏதுமின்றிச் சீராகச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். மனிதர்கள் கூடி அவர்களது சிக்கல்களை அல்லது தேவைகளை நிறைவு செய்ய வேண்டிவரும்போது, அவர்களுள் ஓரிருவர் வேலை செய்ய இயலாமல் இருக்கலாம், அல்லது வேலை செய்வதற்குரிய போதுமான தகுதிகள் நிரம்பாதவராகவும் இருக்கலாம். அல்லது தகுதியும் ஆற்றலும் நிறைந்தவர்கள் பணி செய்ய மறுக்கும்போது, அமைப்பின் வேலைகளைத் தாக்கும்<noinclude></noinclude> 1u4mb7jex4bg2bkcq09gp7a0zesu06r தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054 0 620180 1838347 2025-07-02T15:05:46Z Info-farmer 232 + படிவத் தரவு 1838347 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 54 | previous = [[../053/|053]] | next = [[../055/|055]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="151" to="152"fromsection=" " tosection=" " /> 6q183s6a8afjnft4xparnkdstywgdh1 தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055 0 620181 1838348 2025-07-02T15:06:32Z Info-farmer 232 + படிவத் தரவு 1838348 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 55 | previous = [[../054/|054]] | next = [[../056/|056]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="153" to="154"fromsection=" " tosection=" " /> jsby1i8dp5zhso0yp7bce1tc3y916h4 தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056 0 620182 1838349 2025-07-02T15:07:31Z Info-farmer 232 + படிவத் தரவு 1838349 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 56 | previous = [[../055/|055]] | next = [[../057/|057]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="" to="155"fromsection=" " tosection=" " /> ccofv2hnz06jnfmgiqu1bdx135t2t19 1838351 1838349 2025-07-02T15:09:00Z Info-farmer 232 156 1838351 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 56 | previous = [[../055/|055]] | next = [[../057/|057]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="155" to="156"fromsection=" " tosection=" " /> 5ub7pspucl9luwa8vfcaivsni0dsctk 1838353 1838351 2025-07-02T15:10:45Z Info-farmer 232 - துப்புரவு 1838353 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = ஞா தேவநேயன் | translator = | section = 56 | previous = [[../055/|055]] | next = | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="155" to="156"fromsection=" " tosection=" " /> j31vffomqgtb0f0w8hkfhhd2sgflgnm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/361 250 620183 1838363 2025-07-02T16:50:03Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிக்கல்கள் எழுகின்றன, அமைப்புச் சிறிதாக இருந்தால், சிக்கல்களை எளிதில் அறிந்து கொண்டு அவற்றை விரைவில் நீக்கிவிடலாம். மேலும் சிறிய அமைப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1838363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிகை|325|அதிபத்த நாயனார்}}</noinclude>சிக்கல்கள் எழுகின்றன, அமைப்புச் சிறிதாக இருந்தால், சிக்கல்களை எளிதில் அறிந்து கொண்டு அவற்றை விரைவில் நீக்கிவிடலாம். மேலும் சிறிய அமைப்புகளில் சிக்கலும் குறைவாகத்தான் இருக்கும். சிறிய அமைப்பே பெரிதாக வளரும்போது சிக்கல்களும் மிகுகின்றன. அமைப்பில் சிக்கல்கள், அதில் சேர்கின்ற சேர்க்கைகளை (Composition) பொறுத்தே மிகுதியாகின்றன. எனவே நிருவாக அமைப்பின் சிக்கல், அமைப்பின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இரண்டாவதாக அமைப்பின் உருவத்தைப் பொறுத்தும் சிக்கல் அமைகிறது. அமைப்பிலுள்ள அடுக்கு வரிசை, கட்டுப்பாட்டு அளவு அல்லது வீச்சுப் போன்றவை அமைவதற்கிணங்கச் சிக்கல் அமைகிறது. மூன்றாவதாக, அமைப்பில் உள்ள பிரிவுகள் அனைத்தும் தனித்தன்மை பெற்றுச் செயற்படுவது கடினம். ஒரு பகுதி தனித்தன்மை பெறுவது, அமைப்பின் பெரும் பகுதிக்கு மனநிறைவின்மையை உண்டாக்கி விடுகிறது, இதனாலும் சிக்கல் மிகுகிறது. அமைப்பின் ஒழுங்கு விதிகளும் வரையறுப்புகளும் கடுமையாக இருப்பதால், நெகிழ்வின்மை இல்லாததும் ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து விடுகிறது. அமைப்பு தனித்தன்மைகளைப் பல வகைகளில் பெறுவதால், அத்துணைத் தனித்தன்மைகளையும் மேலாதிக்கம் செய்யக்கூடிய தலைமை கிடைப்பதென்பது அரிது. எனவே தனித்தன்மைகள் வளர்ந்து தனித்தனிப் பிரிவுபோலச் செயற்படுவதாலும் சிக்கல்கள் மிகுதியாகின்றன. அமைப்பின் திறமையை மிகுவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆலோசனைப் பிரிவினாலும் சிக்கல் உருவாகிறது. இந்தச் சிக்கல்களை அறிந்து, அவற்றைக் களையவும் வேண்டும்; அவை மறுபடியும் எழாதவாறு பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இதற்காக நிருவாக அமைப்பிலுள்ள ஒவ்வொருவர் பணி, பொறுப்பு ஆகியன குறித்தும் விளக்க வேண்டும். நிருவாகத்தை ஒட்டு மொத்தமாகக் கணிக்கும் அரசியல் ஆட்சியாளர்கள், பணியாளர்களையும் நிருவாக அமைப்பையும் முழுமையாகத் தெரிந்து ஆட்சி செலுத்த வேண்டும்.{{float_right|என்.எஸ்.ச.}} {{larger|<b>அதிகை,</b>}} தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இது திருவதிகை வீரட்டானம் எனவும் வழங்கப்படும். இது தென்னார்க்காடு மாவட்டம் பண்ணுருட்டிக்கு அருகில் ஒருகல் தொலைவில் கெடில ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மூவர் தேவாரமும் பெற்ற இத்தலம், சிவபெருமான் தன் வீரம் விளங்குமாறு செயற்பட்டுத் திகழ்ந்த அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. இங்கிருந்து அவர் முப்புரங்களையும் எரித்தருளினார் என்பது கூறப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனாருடைய தமக்கையாராகிய திலகவதியார் சிவபெருமானை வழிபட்டிருந்ததும், திருநாவுக்கரசர் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்” என்னுந் திருப்பதிகம் பாடித் தாமுற்ற சூலைநோய் தீரப் பெற்றதும் இத்திருநகரிலாகும். அவர் தாம் மேற்கொண்ட உழவாரத் தொண்டினை இங்குத் தொடங்கினார். மகேந்திரவர்மன் காலத்தில் இங்கே சமணப் பள்ளிகளும் பாழிகளும் இருந்தன. இங்குள்ள திருக்கோயிலின் கருவறை மேலுள்ள கோபுரம் தேர்போல, நிழல் தரையில் சாயாதவாறு அமைக்கப் பெற்றுள்ளது. இங்குத் திருநாவுக்கரசர் திலகவதியார் ஆகியோர் திருவுருவச் சிலைகள் உள்ளன. இறைவன் – வீரட்டேசுரர்; இறைவி – திரிபுரசுந்தரி. இவ்வூர் அதி அரையமங்கலம், அதிராச மங்கலம், அதிராச மங்களியபுரம் என்னும் பெயர்களால் வழங்கப்பட்டமை கல்வெட்டுகளால் தெரியவருகிறது. மணவிற் கூத்தனான காலிங்கராயன் இவ்வூர்க் கோயிலுக்குப் பொன்வேய்ந்து, நூற்றுக்கால் மண்டபம், மடைப் பள்ளி போன்றவற்றை அமைத்துத் திருப்பணி புரிந்த செய்தியினையும் கல்வெட்டுகள் கூறுகின்றன. உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த சாத்திர நூலாசிரியராகிய மனவாசகம் கடந்தார் இவ்வூரில் பிறந்தார். {{larger|<b>அதிதாரத்தாயி</b>}} என்பது கருநாடக இசையில் தாரத்தாயிக்கு மேல் உள்ள ஒலி எல்லையினைக் குறிக்கும். இதைக் குரலால் பாடமுடியாது. இசைக் கருவிகளிலும் சிலவற்றால்தான் இசைக்க முடியும். இதைச் சுரங்கட்கு மேலே இரண்டு புள்ளிகள் வைத்துக் குறிப்பிடுவர். ::எ.டு:– ரிரி, ககக, மம {{larger|<b>அதிபத்த நாயனார்,</b>}} பெரியபுராணம் சிறப்பிக்கும் சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். அலைவளமும் கலைவளமும் தவழும் சோழ நாட்டுக் கடற்கரையில் அமைந்துள்ளது நாகப்பட்டினமென்னும் துறைமுக நகரம். அங்கு வாழ்ந்த பரதவர் குலத்தில் தோன்றியவர் அதிபத்தர். அவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து பெருஞ் செல்வராகத் திகழ்ந்தார். நாள்தோறும் அவர் பிடிக்கும் மீன்களுள் தலைமையான மீன் ஒன்றினைச் ‘சிவபெருமானுக்கு ஆகுக’ என்று அன்புடன் கடலில் விட்டு வந்தார். ஒரு நாளில் ஒரு மீனே கிடைப்பினும் அதனையும் அவ்வாறேவிட்டுவிடுவதனை அவர் கொள்கையாகக் கொண்டொழுகினார். பல நாட்களாக அவருக்கு நாள்தோறும் ஒரு மீனே கிடைத்து வந்தது. தம் கொள்கைக்கு மாறுபடாமல் அதனையும் முறைப்படி அவர் கடலில்<noinclude></noinclude> 7qygdwul0ajf3q1oryu05m93mlced3h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/362 250 620184 1838364 2025-07-02T17:13:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விட்டு மகிழ்ந்தார், அதனால் அவர் செல்வமிழந்து வறுமையால் தளர்வுற்றார். கற்றத்தார் வாடினர். ஆயினும் அதிபத்தர் தம் கொள்கையினின்று மாறாது,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1838364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிமதுரகவி|326|அதியமான்கள்}}</noinclude>விட்டு மகிழ்ந்தார், அதனால் அவர் செல்வமிழந்து வறுமையால் தளர்வுற்றார். கற்றத்தார் வாடினர். ஆயினும் அதிபத்தர் தம் கொள்கையினின்று மாறாது, திருத்தொண்டினைத் தொடர்ந்து செய்து வந்தார். ஒரு நாள் பசும்பொன் மயமான நவமணி ஒளியோடு கூடிய உறுப்புகள் பொருந்திய மீன் ஒன்றினை இறைவன், அவர் வலையில் அகப்படுமாறு செய்தார். விலை மதிக்க முடியாததாக அது சுடர் விட்டுத் திகழ்ந்தது. பரதவர் வாயிலாக இதனையறிந்த அதிபத்தர், “என்னை ஆளுடையவர்க்கு ஆவதிது – அவர் பொற்கழல் சேர்க” என்று அதனைக் கடலில் புகவிடுத்தனர். இங்ஙனம் பொருட் பற்றினை முற்றிலும் துறந்து விளங்கிய அதிபத்தருக்கு இறைவன் காட்சியளித்துச் சிவலோகத்தில் அடியார்களுடன் இனிதிருக்கும் பேற்றினை அருளினார். இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் ‘விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்’ என்று தம் திருத்தொண்டத் தொகையில் போற்றிப் பரவியுள்ளார். இவருடைய வரலாற்றினைச் சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத்தில் விரிவாகப் பாடியுள்ளார்கள்.{{float_right|ஈ.வே.மா.}} {{larger|<b>அதிமதுரகவி (கி.பி. 15 நூ.)</b>}} விசயநகரப் பேரரசின் சார்பாகச் சோழநாட்டின் ஒருபகுதியை ஆண்டு வந்த திருமலைராயன் என்பானின் அவைக்களத் தலைமைப் புலவராய் வீற்றிருந்தவர். அவ்வவையில் இருந்த 64 தண்டிகைப் புலவர்களுக்கு இவர் தலைவர். ஒருகால் காளமேகப்புலவர் அரசவைக்கு வந்த போது, அவரை இப்புலவரும் அரசனும் உரிய மரியாதையுடன் வரவேற்காமலும் அவையில் இடங்கொடாமலும் இகழ்ந்தனர். அப்போது காளமேகப்புலவர், கலைமகளைக் குறித்து “வெள்ளைக் கலையுடுத்து” என்று தொடங்கும் வெண்பாவினைப் பாடிப் பரவ, அரசனது அரியணை விரிந்து அவருக்கு இடங்கொடுத்தது. அதனைக் கண்டு பொறாத அதிமதுரகவி, அவரையழிக்கும் தீய எண்ணத்துடன் அவரை எமகண்டம் பாடுமாறு அறை கூவினார். காளமேகம் அதற்கிணங்கி எமகண்டம் பாடி வெற்றி பெற்றார். பின்னர் இருவரும் நட்புப் பூண்டு வாழ்த்தனர். இவர் மிக இனிமையான கவிகளை இயற்றியதால் ‘அதிமதுரகவி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் கோவலூரைச் சார்ந்தவர்.{{float_right|ஆர்.கி.}} {{larger|<b>அதியமான்கள்</b>}} தமிழகக் குறுநில மன்னர்கள், இவர்கள் தகடூரைத் தலைநகராகக் கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதிகளை ஆண்டு வந்தார்கள். இன்றைய தருமபுரியே அன்றைய தகடூர். இவர்கள் அதியன், அதிகள், அதிகமான், அதிகைமான், அதியேந்திரன் முதலான பெயர்களாலும் அழைக்கப் பெற்றார்கள். இவர்கள் சேரர் மரபைச் சார்ந்தவர்கள். இவர்கள் சங்காலம் முதல் கி.பி. 13–ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள். கொங்கு நாட்டின் ஒரு பகுதியை இவர்கள் ஆண்டார்கள். இது தகடூர் நாடு என்று குறிக்கப்பட்டது. சங்க காலத்தில் அதியமான் நெடுமிடல், அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் பொருட்டெழினி, அதியமான் அஞ்சி, அதியமான் எழினி முதலானோர் ஆண்டனர். சங்கத் தொகை நூல்கள் அதியமான் நெடுமான் அஞ்சியின் பெருமையைக் கூறுகின்றன. அதியமான் நெடுமான் அஞ்சி, மலையமான் திருமுடிக்காரியை வென்று, திருக்கோவலூரைக் கைப்பற்றினான் என்று ஔவையாரும் பரணரும் பாடியுள்ளனர். இதனைத் திருக்கோவலூர்ப் பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன மாமன்னன் அசோகனின் கல்வெட்டில் இவர்கள் குறிக்கப் பெறுவதால், இவர்களின் கீர்த்தி புலனாகும். சங்க காலத்தை அடுத்து, புகழ்ச்சோழனின் ஆட்சிக் காலத்தில் ஒருவன் தகடூர்ப் பகுதியை ஆண்டதாகப் பெரியபுராணம் கூறும். அதியமான்கள் கி.பி 6–ஆம் நூற்றாண்டளவில், பல்லவரது மேலாண்மையை ஏற்றுக் கொண்டார்கள். இறுதியில் மேலைக்கங்க வேந்தனான துர்விநீதன் கி.பி. 6–ஆம் நூற்றாண்டின் இறுதியில் தகடூர்ப் பகுதியை வென்றான். கி.பி. 7–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதியமான்கள் மீண்டும் பல்லவரின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. தகடூர் நாட்டில் கி.பி. 9–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நுளம்ப பல்லவரின் ஆட்சி ஏற்பட்டது. முதலாம் இராசராசனின் ஆட்சிக்காலம் முதல் இவர்கள் சோழரது ஆதிக்கத்திற்கு உட்பட்டார்கள். அதியமான் மன்னருள் அதியேந்திரன் என்று குறிக்கப் பெறும் குணசீலன், ஒரு புகழ்மிக்க அரசன். இவனைப்பற்றி நாமக்கல் குகைக்கோயில் சுல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அதியேந்திர விட்டுணுக்கிரகம் என்னும் குடைவரைக் கோயிலை நாமக்கல்லில் குடை வித்தவன் இவனேயாவான். தெளிணியார் என்னும் அதியர் தலைவன் மேலைக்கங்க வேந்தனான சிரீபுருசனுடன் போரிட்டுள்ளான். வலிமதுரன் என்பான், தகடூர் நாட்டின் தலைவனாக மேலைக் கங்க வேந்தனான கோவிசய நரசிம்மவர்மனது கீழ்முட்டுகூர் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளான். அதியர், நெடுங்காலம் சோழருக்கு அடங்கியிருந்து, அவர்தம் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதில் உதவிவந்தனர், படைத்தலைவன் வீரராசேந்திர அதிகைமான் என்பான், முதலாம் குலோத்துங்கனது ஆட்சிக்காலத்தில் போற்றத் தக்கவனாகத் திகழ்ந்தான்.<noinclude></noinclude> j3e9wnjgd9teoqf7binrzvdpznvk6cy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/240 250 620185 1838409 2025-07-03T05:45:16Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "for Poetrie) ஓர் இலக்கிய விவாதத்தின் காரணமாகத் தோற்றம் பெற்றது. இசுடீபன் காசன் (Stephen Gossen) என்பார், கவிதையையும் கவிஞர்களையும் தாக்கி எழுதிய நூலுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1838409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில இலக்கிய வரலாறு|216|ஆங்கில இலக்கிய வரலாறு}}</noinclude>for Poetrie) ஓர் இலக்கிய விவாதத்தின் காரணமாகத் தோற்றம் பெற்றது. இசுடீபன் காசன் (Stephen Gossen) என்பார், கவிதையையும் கவிஞர்களையும் தாக்கி எழுதிய நூலுக்கு விடையளிக்கு முகமாகச் சிட்னி, கவிதையின் சிறப்புகளையும், அது எவ்வாறு தத்துவம், வரலாறு ஆகியவற்றிலும் உயர்ந்தது என்பதையும் நிலைநாட்டுகிறார். தமக்கு முன்னும் சமகாலத்தும் வாழ்ந்த கவிஞர்களின் நூல்களைப் பற்றித் தமது மதிப்பீட்டையும் புலப்படுத்துகிறார். எலிசபெத்துக் கால இலக்கிய வகைகளுள் பெருமபீடு எய்தியது நாடகமேயாகும். இலில்லி (Lyly), கிடு (Kyd), பீல் (Peele) இலாட்சு (Lodge), கிரீன் (Greene), மார்லோ (Marlowe), நாசே (Nashe) ஆகிய பல்கலைக்கழக மேதைகள் நாடகத் துறையில் சேக்சுபியரின் முன்னோடிகளாவர். இலில்லியின் இன்பியல் நாடகங்களில் அலங்கரிக்கப்பட்ட செயற்கையான உரைநடை புகுத்தப்பட்டது. உயர்வருக்கத்தாரும் காணத்தக்க முறையில் கண்ணியமும் அழகும் நுண்மையும் கொண்ட நாடகங்களை ஆங்கிலத்தில் முதலில் எழுதிய பெருமையும் இவருக்குண்டு, கிடு எழுதிய இசபானிசு துயரம் (The Spanish Tragedy) என்னும் துன்பியல் நாடகம், பெரு வெற்றி பெற்றது. இது வஞ்சம் தீர்த்தலைக் கருவாகக் கொண்ட முதல் ஆங்கிலத் துன்பியல் நாடகமாகும். உரோம் நாட்டுச் செனெகாவின் நாடகங்களை அடியொற்றிச் சென்று, சேக்சுபியரின் ஆம்லெட்டிற்கு முன்னோடியாக அமைந்தது. கிடு எழுதிய நாடகங்களில் மக்களைக் கவரும் நாடக மேடைக் கூறுகள் பல புகுத்தப்பட்டன. பீல் சில ஆண்டுகளே எழுதினாராயிலும், பலதரப்பட்ட நாடகங்களை உருவாக்கினார். இவர் நாடகங்களுள் தலையாயதான முதியோரின் கதை (The Old Wives Tale) அங்கதச் சிறப்புடையது, இதன் நகைச்சுவையில் இலக்கியத்திறனாய்வும் இரண்டறக் கலந்திருக்கக் காணலாம். நாடக வளர்ச்சியில் இலாட்சின் பங்கு மிகவும் குறைவானதே. துண்டுப்பிரசுரங்கள். கதைகள் ஆகியவை எழுதிப் பெயர் பெற்ற நாட்சே, நாடகத் துறையிலும் நுழைந்தாராயினும் இதில் அவரது பணி சிறப்பாக அமையவில்லை. ‘சம்மரின் இறுதி விருப்பமும் ஏற்பாடும்’ (Summer's Last Will and Testament) என்ற நாடகமும், அவரது முழுத்திறமையைக் காட்டும் தன்மையதன்று. இக்குழுவில் அருஞ்செயல் ஆற்றியவர் மார்லோ ஆவார். அவரே ஆங்கிலத்தில் உண்மையான துன்பியல் நாடகங்களை முதலில் உருவாக்கினார். அதற்கேற்ற அகவல் நடைக்கு மெருகூட்டியவரும் அவரே. அவர் நாடகங்களான மாவீரன் தாம்பர்லின் (Temburlaine the Great). டாக்டர் பாசுடசு (Dr. Faustus). மால்டாவின் யூதன் (The Jew of Malta) இரண்டாம் எட்வர்டு (Edward the Second) ஆகியவை அழியாவரம் பெற்றவை. ஏதேனும் ஒருவகையான பேராசையால் உந்தப்பட்டு அழிவை நோக்கி நடைபோடும் தலைவனைக் கொண்ட துன்பியல் நாடகமே இவருக்குக் கைவந்ததாகும். ஆங்கில இலக்கியப் பேரரசின் முடிசூடாமன்னர் வில்லியம் சேக்சுபியர் (கி.பி. 1564—1616) ஆவார். இவரது வாழ்வு பற்றி நமக்கு அதிகம் தெரியவில்லை. இவர்தம் நாடகங்கள் இவருக்குப் பெரும் வெற்றி ஈட்டித் தந்தன என்பது உறுதி, இவர் கல்வி பல்கலைக்கழகக் பெறாவிடினும் ஆழ்ந்த நோக்கும் தெளிந்த சிந்தனையும் கூர்த்த மதியும் உடையவராதலின், மனித வாழ்வைப் பல கோணங்களிலிருந்து படம் பிடித்துக் காட்டினார். இவர் இயற்றிய ‘வீனசும் அடோனிசும்’ (Venus and Adonis), இலுக்ரீசின் மானபங்கம் (The Rape of Lucrece) என்னும் கவிதைகளும், ஈரேழ்வரிப் பாக்களும் இவரது கவிதையாற்றலுக்குக் கட்டியம் கூறுபவை. தவறுகள் விளைத்த நகை (The Comedy of Errors) காதல் உழைப்பின் தோல்வி, (Love's Labour's Lost) வெரோனாவின் சீமான்கள் இருவர் (The Two Gentlemen of Verona), நன்மையாக முடிவனவெல்லாம் நன்றே (All's Well That Ends Well), அடங்காப் பிடாரியின் ஒடுக்கம் (The Taming of the Shrew) என்பன போன்ற நாடகங்களிலேயே இவரது ஆழப்பதிந்த முத்திரையைக் காணலாம், பாத்திரப் படைப்பிலும் வசன அமைப்பிலும் நல்ல பயிற்சியை இந்நாடகங்களில் பெற்றார். உரோமியோவும் சூலியட்டும் (Romeo and Juliet) காதல் நாடகங்களுள் வெற்றிச் சிகரத்தை எட்டியது. ஒரு கோடையிரவின் கனவு (Midsummer Night's Dream) என்னும் நாடகத்தை நீண்ட கற்பனைக் கவிதையெனவே கூறலாம். மன்னர்கள் நான்காம் என்றி, ஐந்தாம் என்றி, ஆறாம் என்றி, இரண்டாம் இரிச்சர்டு, மூன்றாம் இரிச்சாடு, சான் பற்றிய வரலாற்று நாடகங்களில் இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றின் சாரத்தைப் பிழிந்து தருகிறார். அற்பத்தைப் பற்றிய கூக்குரல் (Much Ado About nothing), நீ விரும்பியபடியே (As You Like it), பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) ஆகிய மூன்றும் முதிர்ச்சியுற்ற இன்பியல் நாடகங்களாகும். திராய்லசும் கிரெசிடாவும் (Froilus and Cressida), ஏதென்சின் தைமன் (Timon of Athens) என்னும் கிரேக்கத் தொடர்புடைய இரு நாடகங்களும், சூலியசு சீசர் (Julius Ceasar), காரியலேனசு (Coriolanus), அந்தோனியும் கிளியோபாத்ராவும், (Antony and Cleopatra) என்னும் உரோம் நாட்டுத் தொடர்பு-<noinclude></noinclude> l9oipptj17vhh5sx0472a87oyvl7q22 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/241 250 620186 1838421 2025-07-03T06:02:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டைய மூன்று நாடகங்களும், இவரது ஆற்றல் வளர்ச்சியைக் காட்டுகின்றன. இவர்தம் ஆம்லெட்டு, ஓதெல்லோ, இலியர்மன்னன், மாக்பெத்து என்னும் நான்கு து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1838421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில இலக்கிய வரலாறு|217|ஆங்கில இலக்கிய வரலாறு}}</noinclude>டைய மூன்று நாடகங்களும், இவரது ஆற்றல் வளர்ச்சியைக் காட்டுகின்றன. இவர்தம் ஆம்லெட்டு, ஓதெல்லோ, இலியர்மன்னன், மாக்பெத்து என்னும் நான்கு துன்பியல் நாடகங்களும் நாடக இலக்கியத்தின் மணிமுடிகளாகக் கருதத்தக்கன. சிம்பலீன் (Symbeline), கார்காலக் கதை (The Winter's Tale) பெரிக்லிசு (Pericles), புயல் (The Tempest) ஆகிய நான்கும் இறுதியில் எழுதப்பட்ட நாடகக் கவிதைகளாகும். இவற்றில், அன்பும் மன்னிக்கும் தன்மையும் மனிதக்குலத்திற்குத் தேவையானவை என்பது சுட்டப்படுகிறது. சேக்சுபியரின் நாடகங்கள் புனைவியல் நாடகப் போக்குடையன. அவர் காலத்து அறிஞரான பென்சான்சனின் (Ben Jonson) நாடகங்கள் செவ்வியல் நாடகங்களாகும். இவர் நாடகத்தில் மனிதர்களை உள்ளவாறு படைக்க வேண்டுமென்றும், அவர்கள் மொழியும் செயலும் வாழ்க்கையில் காணுமாறு அமைய வேண்டுமென்றும் கருதினார். மனிதர்களின் குறைகளை நன்றியுணர்வோடு சுட்டலே சிறப்பென்றும் கருதினார். அற்புத நவிற்சி நாடகங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். இவரது நாடகக் கோட்பாடு, இடைக்கால மனிதவுணர்வுக் கோட்பாட்டை (Medieval Theory of Humours) அடிப்படையாகக் கொண்டது. உடலில் சுரக்கும் நான்கு வகை நீர்களைக் குறிக்க, முன்னாளில் ‘கியூமர்’ (Humour) என்ற சொல்லைப் பயன்படுத்தினர். அவர்கள், ஒரு மனிதனின் உள்ளத் தன்மையைக் குருதி, (Blood) சடைவு (Melancholy), மதம் (Cholor), கபம் (Phlegm) ஆகிய நான்கு வகை நீர்களே முடிவு செய்வதாகக் கருதினார்கள். இவற்றில் ஏதேனும் ஒரு நீரின் ஆதிக்கத்தால் ஏற்படுகிற மனிதக் குறைபாட்டை எள்ளல் சுவையோடு தருவனவே இவர் நாடகங்கள். இரசவாதி (The Alchemist), பார்த்தலோமியோ சந்தை (Barthalomew Fair), வால்பொனி (Valpone) என்பன, இவர்தம் இன்பியல் நாடகங்களாகும். செசானசு (Sejanus), கேடிலின் (Catiline) என்னும் இரண்டும் துன்பியல் நாடகங்களாகும். கட்டுக்கோப்புடைய கதையையும் அரிய பாத்திரப் படைப்பையும் வேகமுள்ள அகவல் நடையையும் இவர்தம் நாடகங்களில் காணலாம். இவரை அடுத்து, கி.பி. 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த நாடகாசிரியர்களுன் சாப்மென் (Chapmen), மார்சுடன் (Marston), தெக்கச் (Dekker), மிடில்ட்டன் (Middleton). ஏவுடு (Heywood), போமெண்ட்டு (Beaumont), பிளெட்சர் (Fletcher), மாசிஞ்சர் (Massinger) தேனர் (Tourneur), வெப்சுடர் (Webster), போர்டு (Ford), சர்லி (Shirley) ஆகியோர் இலக்கிய வரலாற்றில் இடம் பெறத் தக்கவர், தெக்கர் எழுதிய செருப்புத் தைப்போரின் விடுமுறை (The Shoemaker's Holiday) என்னும் நூல், செருப்புத் தைப்போன் ஒருவன் மேயரான கதையை நயம்படக் கூறுகிறது. மிடில்ட்டன் எழுதிய மாற்றப்பட்ட குழந்தை (The Changeling) என்னும் துன்பியல் நாடகம், சிறப்பான பாத்திரப்படைப்பிற்காக இன்னும் படிக்கப்படுகிறது. ஏவுடு எழுதிய அன்பால் கொல்லப்பட்ட ஒரு நங்கை (A Women Killed with Kindness), குடும்பத் துன்பியல் நாடகங்களுள் பெருமை பெற்றது. போமெண்ட்டும் பிளெட்சரும் கூட்டாக எழுதிய நாடகங்கள் பல. பிளாசுடரின் கன்னியின் துயரம் (The Maid's Tragedy), மன்னனும் மன்னன் அல்லோனும் (A King and No King) என்பன போன்ற நாடகங்களில் விறுவிறுப்பும் விந்தைகளும் நிறைந்த கதைகளை இவர்கள் திறம்பட நடத்திச்செல்லக் காணலாம். மாசிஞ்சர் இளைஞர் உள்ளங்களை இழுக்கும் பாலுணர்வுக் காட்சிகளைத் தம் நாடகங்களில் புகுத்தினார். இவரது கண்ணியமுள்ள கன்னி (The Maid of Honour) ஓர் உண்மை வீரமுள்ள மங்கையை நாடகத் தலைவியாகக் கொண்டது. பழைய கடனை நீக்க ஒரு புதிய வழி (A New Way to Pay Old Debts) என்னும் இன்பியல் நாடகம், பல ஆண்டுகள் நடிக்கப் பெதும் வாய்ப்புப் பெற்றது. தேனர் எழுதியவையாகக் கருதப்படும் வஞ்சம் தீர்ப்போனின் துன்ப முடிவு (The Revenger's Tragedy), நாத்திகனின் துன்பமுடிவு (The Atheist's Tragedy) என்னும் இரண்டும் வஞ்சம் தீர்க்கும் நாடகங்களாகும். இரண்டாம் நாடகத்தில் வஞ்சம் தீர்த்தலின் குறைபாடும் மன்னித்தலின் பெருமையும் வெளிப்படுகின்றன. லெப்சுடர் எழுதிய வெள்ளைப் பேய் (The White Devil), மால்பி நகரச் சீமாட்டி (The Duchess of Malfin) ஆகிய இரண்டும் இத்துறையைச் சார்ந்தவையே. பழி தீர்ப்பது ஒரு கொடிய மனித உணர்வாகவும், பழி தீர்ப்போர் கொடியோராகவும் காட்டப்படுகின்றனர். இனி கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சான்டன் (John Donne) எர்பர்ட்டு (Herbert) வான் (Vaughan), கிராசா (Crashaw) மார்வெல் (Marvell) ஆகியோர் எழுதிய கவிதைகளை நுண்புலக் கவிதை (Metaphysical Poetry) என்ற தொடரால் குறிப்பர். இவர்கள் கவிதைகளில் அறிவாற்றல், பொருள்களின் வேற்றுமைகளில் உள்ள ஒற்றுமைகளைக் காணப் பயன்படுகிறது. செயற்கை நுண்புலவுவமைகளைப் (Concepts) பயன்படுத்தி, இவர்கள் விளையாட்டுத் தனத்தையும் கருத்தாழத்தையும் ஒருங்கிணைக்கிறார்கள். இவர்கள் நடை, பேச்சு மொழியைச் சார்ந்ததாயிலும் ஆழமுடையது. எர்பர்ட்டு, கிராசா,<noinclude></noinclude> g154zffxa9l70u8i02svn9367txxxao பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/242 250 620187 1838437 2025-07-03T06:40:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வான் ஆகியோரின் சமயக் கவிதைகள் உள்ளத்தை உருக்கும் தன்மையன. மில்ட்டன் (கி.பி. 1608-74) கி.பி. 17-ஆம் நூற்றாண்டு இலக்கியத்தின் விடிவெள்ளி ஆவார். பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1838437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில இலக்கிய வரலாறு|218|ஆங்கில இலக்கிய வரலாறு}}</noinclude>வான் ஆகியோரின் சமயக் கவிதைகள் உள்ளத்தை உருக்கும் தன்மையன. மில்ட்டன் (கி.பி. 1608-74) கி.பி. 17-ஆம் நூற்றாண்டு இலக்கியத்தின் விடிவெள்ளி ஆவார். பெரும் புலவராகிக் கால வெள்ளம் அழிக்க இயலாத ஒப்பற்ற நூலைப் படைக்க வேண்டும் என்ற நோக்குடன் நிறை கல்வி பெற்ற மில்ட்டன் உரைநடை, கவிதை ஆகிய இரண்டையும் திறம்படக் கையாண்டார். இவர் மன்னராட்சிக்கு எதிராகப் போராடியோர்க்கு எழுத்து மூலம் துணைபுரிந்து இன்னல்களுக்காளாளார். அரியோபசிடிகா என்னும் நூலில் எழுத்துரிமைக்காக வாதாடினார். விவாகரத்துப் பற்றிய ஒழுங்கும் கோட்பாடும் (The Doctrine and Discipline of Divorce) என்னும் நூலில், விவாகரத்தின் இன்றியமையாமையை விளக்கினார். கிறித்துவின் பிறப்புப் பற்றிய செய்யுள் (Ode on the Morning of Christ's Nativity), கற்பின் சிறப்பைப் போற்றும் கோமசு (Comus), மக்களைப் புறக்கணித்த மதத்துறவிகளைக் கண்டிக்கும் இலிசிடாக (Lycidas) என்னும் கையறு நிலைப் பாடல் ஆகியவை இளமையிலேயே எழுதப்பட்டன. மில்ட்டனின் தலைசிறந்த நூல் சுவர்க்க நீக்கம் (Paradise Lost) ஆகும். பன்னிரண்டு பாகங்களைக் கொண்ட இக்காவியம், கடவுள், ஆதாம் ஏவாளுக்கு அளித்த தண்டனை முறையானதே என்று வாதிடுகிறது. முதல் மனித தம்பதியர்க்குச் சாத்தாள் இழைத்த கொடுமையையும் அவன் கடவுளோடு போராடித் தோற்றதையும் ஒலிநயமும் பொருள் ஆழமும் உடைய இப்பெருங் கவிதை சித்திரிக்கிறது. சுவர்க்க மீட்சி (Paradise Regained) இதன் தொடர்ச்சியாகும். சாம்சன் அகொனிசுடசு (Samson Agonistes) என்னும் துன்பியல் நாடகம், மில்டனின் வாழ்வு நிகழ்ச்சிகள் பலவற்றை மறைமுகமாகக் கூறுகிறது. மில்ட்டனைப் போன்றே பியுரிடன் பிரிவைச் சார்ந்த பன்யன் (Bunyan) புனிதப் பயணியின் முன்னேற்றம் (The Pilgrim's Progress) என்னும் தொடர் உருவகத்தை எளிய இனிய உரைநடையில் எழுதினார். மனிதன் வாழ்க்கையில் நிகழ்த்த வேண்டிய போராட்டங்களையும் நன்மைக்கும் தீமைக்கும் உள்ள தீராத பகையையும் சிறு நிகழ்ச்சிகளாலும் உருவகப் பாத்திரங்களாலும் இந்நூல் விளக்குகிறது. புனிதப்போர் (The Holy War), ஏழைத் தொழிலாளி பற்றி எழுதப்பட்ட மற்றொரு தொடர் உருவகமாகும். திரைடன் (இ.பி. 1631-1700) கவிதை, நாடகம், உரைநடை, திறனாய்வு ஆகிய பலதுறைகளிலும் முயன்று வெற்றி பெற்றார். இவர் எழுதிய கவிதைகளில் அப்சலமும் அகிடாபெலும் (Absalom and Achitophel) என்ற அரசியல் அங்கதம், பெருஞ் சிறப்புடையதாகும். இதில் வருணிக்கப்படும் பாத்திரங்கள் மறக்க முடியாதவை. மாவோ பிளெக்னோ (Mao Flecknoe) ஆங்கிலத்தில் உள்ள முதல் கேலிக் காப்பியம் (Mock Epic) ஆகும். ஐந்து சீர் கொண்டு, ஏற்ற இறக்கச் சந்தத்துடனும் எதுகை மோனையோடும் அமைந்த இணையடிக் குறள் (Heroic Couplet) இவரால் திறம்படக் கையாளப்பட்டது. மானும் சிறுத்தையும் என்ற நீண்ட கவிதையில் தம் சமயச் சார்பு பற்றிய கொள்கைக்கு விளக்கம் தந்தார். இவர்தம் நாடகங்களில் ‘எல்லாம் காதலுக்கே’ (All for Love) என்பது, சேக்சுபியர் கையாண்ட கதையில் திரைடனின் முத்திரை பெற்றதாகும். இவர் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளும், நாடகக் கவிதை ஒரு கட்டுரை (of Dramatic Poesy, An Essay) என்ற நீண்ட உரையாடல் வடிவில் அமைந்த கட்டுரையும், இவர் காலத்துக் கவிதைக் கொள்கையைத் தெள்ளிய உரைநடையில் எடுத்தியம்புகின்றன. இங்கிலாந்தில் முடியாட்சி மீட்சியிலிருந்து (கி.பி. 1660) கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஒரு குறிப்பிட்ட வகையான செயற்கைத் தன்மையுள்ள இன்பியல் நாடகங்கள், மக்களைக் கவர்ந்தன. சிந்திக்க வைக்கும் நகைச்சுவையும் காம உணர்வுகளைத் தூண்டும் உரையாடலும் கொண்ட இந்நாடகங்கள், காங்கிரீவ் (Congreve கி.பி. 1670-1729), வான்புரு (Vanbrugh கி.பி. 1664-1726), பார்கா (Fanguhar கி.பி. 1678-1707) போன்றோரால் எழுதப்பட்டன. ஒழுக்கக் கேட்டுடன் வாழ்ந்த பிரபுத்துவ உலகினைப் பின்னணியாகக் கொண்டு, திருமணம் முதலிய சமூகக் கட்டுப்பாடுகளையும் எள்ளி நகையாடும் முறையில் இந்நாடகங்கள் அமைந்தன. துண்டுப் பிரசுரங்கள் மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட தேனியல் டீபோ (கி.பி 1659-1731) புதின இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராவார். இவர்தம் இராபின்சன் குரூசோ (Robinson Grusoe) மால்பிலாண்டர்சு (Moll Flanders) ஆகியவை, புதினக் கூறுகளில் பலவற்றைப் பெற்றிருந்தன. இரண்டாம் நூலில் சமூகத்தின் கீழ்த்தட்டு மக்கள் வாழ்க்கையை, அதன் உண்மை நிலையில் சித்திரித்துள்ளார். அடிசன் (Addison) இசுடீல் (Steele) ஆகியோர் எழுதிய பல சமூக, இலக்கியக் கட்டுரைகள் தரம் வாய்ந்தவை, இவர்கள், தாட்லர், இசுபெக்டேட்டர், கார்டியன் போன்ற இதழ்களை நடத்திச் சமுதாயத்திற்கும் இலக்கியத்திற்கும் தொண்டாற்றினர். அலெக்சாண்டர் போப்பு (கி.பி. 1688-1744) தம் அங்கதக் கவிதைகளில் தனிப்பட்ட மனிதர்<noinclude></noinclude> r94bw74o16a77hvtr2surqewdh7gemh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/243 250 620188 1838447 2025-07-03T06:55:45Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களைத் தாக்கினாலும், சமுதாயச் சீர்குலைவைச் சுட்டிக் காட்டினார். முடி பற்றி (The Rape of the Lock), தான்சியடு (The Dunciad) என்ற கவிதைகளில் இணையடிக் குறளை யாவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1838447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில இலக்கிய வரலாறு|219|ஆங்கில இலக்கிய வரலாறு}}</noinclude>களைத் தாக்கினாலும், சமுதாயச் சீர்குலைவைச் சுட்டிக் காட்டினார். முடி பற்றி (The Rape of the Lock), தான்சியடு (The Dunciad) என்ற கவிதைகளில் இணையடிக் குறளை யாவரும் வியக்கும் வண்ணம் கையாண்டார். அர்பூத்நாட்டுக்குக் கடிதம் (Edpistle to Dr. Arbuthnot) என்னும் நூல் சுயசரிதக் குறிப்புகள் கொண்ட சொல்லோவியமாகும். உரைநடை அங்கதத்தை உயர் நிலைக்குக் கொண்டு சென்றவர் சுவிப்ட்டு (Swift, கி.பி. 1667-1754) ஆவர். இவர் எழுதிய ‘நூல்களின் போர்’ (The Battle of the Books) பழைய தலைமுறை ஆசிரியர்க்கும் புதிய தலைமுறையினர்க்கும் நடக்கிற கற்பனைப் போர் வாயிலாக அவர்களின் நிறைகுறைகளை எடையிடுகிறது. ஒரு தொட்டியின் கதை (A Tale of a Tub) சமய வாதிகளைச் சாடுகிறது. கலிவரின் பயணங்கள் (Gulliver's Travels) நான்கு பாகங்களில் மனிதக் குலத்தின் சிறுமையை விவரிச்சிறது. இவர்தம் கவிதைகள் அத்துணைச் சிறப்புடையனவல்ல. ஆங்கிலப் புதினங்கள் கி. பி. 18-ஆம் நூற்றாண்டில் தலைதூக்கின. இரிச்சர்டுசன் (Richardson) (கி. பி. 1689-1754) தம் பமீலா (Pamela), கிளாரிசா என்னும் புதினங்கள் வாயிலாக, இதற்கு வலுமிக்க அடிக்கல் நாட்டினார். பீல்டிங்கு (Henry Fielding) (கி. பி. 1707-1754) தம் சோசப்பு ஆண்டரூசு, தாம் சோன்சின் வரலாது, அமீலியா ஆகியவற்றின் வாயிலாகப் புதின வளர்ச்சிக்கு மேலும் வழி செய்தார். இசுமாலட்டு (கி.பி. 1721-1771) எழுதிய அம்பிரி கிளிங்கர் (Humphrey Glinker) இதற்குத் துணை செய்தது. இசுடெர்ன் (Sterne, கி. பி. 1713-68) தம் திரிசுடிசம்சாண்டி, ஓர் உணர்ச்சிப் பயணம் (A Sentimental Journey) என்னும் புதினங்களில், புதிய உத்திகளைக் கையாண்டார். கிரே (Grey, கி. பி. 1716-71) குறைந்த அளவில் எழுதினராயினும் சிறந்த கவிஞராக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். இவரும் காலின்சு, கோல்டு சுமித்து, கூப்பர், பிளேக்கு (Blake) ஆகியோரும் புனைவியல் இயக்கத்திற்கு முன்னோடிகளாக அமைந்தனர். சான்சனின் (கி. பி. 1709-84) படைப்புகள். திறனாய்வுக் கட்டுரைகளிலும் செவ்வியல் நோக்கிலிருந்து புனைவியல் நோக்கிற்குச் செல்லுதலைச் காணலாம். இவர் பல புலவர்களின் வாழ்க்கைச் சாதனைகள் பற்றிய ‘புலவர்களின் வரலாறுகள்’ (The Lives of the Poets) என்னும் நூலை எழுதினார். சேக்சுபியரின் நிறைகுறைகளைத் தமக்கே உரிய நுண்மாண் நுழைபுலன் கொண்டு முன்னுரை யொன்றில் ஆராய்ந்தார், இராசலசு (Rasselas) என்ற கதைவில் பல நீதிகளைப் புகட்டினார். தனியொருவராக அரிதின் முயன்று ஆங்கில அகராதி ஒன்று தொகுத்தார், இவர்தம் இலண்டன், மனித விருப்பங்களின் வியர்த்தம் (The Vanity of Human Wishes) ஆகிய கவிதைகளும் நீதி புகட்டுவதையே தலைமை நோக்காகக் கொண்டவை. இவர் மாணவரான பாசுவெல் எழுதிய சான்சனின் வாழ்க்கை (The life of Samuel Johnson), வாழ்க்கை வரலாற்று நூல்களுள் ஒப்புயர்வற்றது. புனைவியற் கவிஞர்களுள் மூத்தவர் வோர்ட்சு வொர்த்து (கி. பி. 1770-1850) ஆவர். இவர்தம் டின்டொன் ஆபி (Tintern Abbey), ‘பிரெல்யூடு’ (The Prelude), அமரநிலை அமைகள் பற்றிய இசைப்பாடல் (Ode on the Intimation of Immortality) முதலியவற்றை, இயற்கை அன்னையே இவர் மூலம் எழுதினாள் என்பது தகும், இவர் தம் கவிதைகளுக்கெழுதிய முன்னுரையொன்றில் எச்சொல்லையும் கவிதையில் முறையாகக் கையாள முடியுமென்றும், எளிய நடையே சிறப்புடையதென்றும், சிற்றூர்களில் வாழும் பாமர மக்களே கவிதைக்குரிய சிறப்பான பாத்திரங்களென்றும் வாதிடுகிறார். புனைவியல் இயக்கத்தின் பெரும் சிந்தனையாளர் கோலரிட்சு (கி.பி. 1772-1834) ஆவார். இவர் தம் பயோ கிரேபியா லிடரேரியா (Biographia Literaria) என்னும் நூலில் கற்பனாசக்தி, கவிதை பற்றிய கொள்கைகளைத் தத்துவம், மனோதத்துவம், இலக்கியம் ஆகியவற்றின் துணைக்கொண்டு விளக்குகிறார். இவர்தம் “கிறிசுடபெல்” (Christabel), குப்லாகான் (Kubla Khan), பழைய கப்பலோட்டி (The Ancinet Mariner) என்ற கவிதைகளில் இயற்கை இகந்த நிகழ்ச்சிகளை, நடந்தவை போலத் தம் கவித்திறன் வாயிலாகப் படைத்துள்ளார். பிளேக்கின் அநுபவம் பற்றிய பாடல்கள் (Songs of Experience). சுவர்க்க நரகக் கூட்டு (The Marriage of Heaven and Hell) ஆகிய இரண்டு தொகுப்பும், கள்ளமின்மை பற்றிய பாடல்கள் (Songs of Innocence) என்ற உரைநடை நூலும், இவரது தனித்தன்மையைப் பறை சாற்றுவன. பர்னசு (Burns) என்ற இசுகாட்லாந்துக் கவிஞர் கிராமியப் பின்னணி கொண்ட உழவர்கள் பற்றிய கவிதைகளில் சிறந்து விளங்குகிறார். வால்டர் இசுகாட்டு (Sir Walter Scott. கி.பி. 1771-1832) எழுதிய கவிதைகளை விட அவர் தம் வரலாற்றுப் புதினங்கள் புகழ்மிக்கன. அவர் பதினெட்டே ஆண்டுகளில் பல புதினங்கள் எழுதினாராயினும் மிட்லோதியனின் இதயம் (The Heart of Midlothian), இலாமர்மூரின் மணப்பெண் (The Bride of Lammermoor), ஐவன்கோ, கெனில்வோர்த்து. குவெண்டின் தர்வர்டு ஆகியவை பின்னால் வந்த புதின ஆசிரியர்களுக்கு வழிகாட்டிகளாய் அமைந்தன. அவர் எடுத்துக்கொண்ட காலத்து மக்களின்<noinclude></noinclude> j655l8357wn7nwvhya9j3zczzfce7nr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/244 250 620189 1838455 2025-07-03T07:11:41Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாழ்க்கை முறையை உள்ளபடியே வருணிக்கும் வல்லமை அவருக்கிருந்தது. பைரன் (கி.பி. 1788-1824) புனைவியல் கவிஞராயினும் செவ்வியல் கூறுகளும் கொண்ட கவித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1838455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில இலக்கிய வரலாறு|220|ஆங்கில இலக்கிய வரலாறு}}</noinclude>வாழ்க்கை முறையை உள்ளபடியே வருணிக்கும் வல்லமை அவருக்கிருந்தது. பைரன் (கி.பி. 1788-1824) புனைவியல் கவிஞராயினும் செவ்வியல் கூறுகளும் கொண்ட கவிதைகளை யாத்தார். மான்பிரெடு கெயின், சுவர்க்கமும் பூவுலகும் முதலிய கவிதைகளில் புனைவியல் கூறுகளும், மரினோ பலியரோ (Marino Faliero), இரண்டு பசுகரி (The Two Foscari) ஆகியவற்றில் செவ்வியல் கூறுகளும் மேலோங்கி நிற்கக் காணலாம். தான்சுவான் (Don Juan) இவரது வெற்றிச் சிகரமாகும். செல்லி (கி.பி. 1792-1822) தம் புரட்சிக் கருத்துகளையும் இலட்சிய நோக்கையும் நீண்ட கவிதைகளிலும் தன்னுணர்ச்சிப் பாக்களிலும் புலப்படுத்தினார். “இசுகைலார்க்கு”, “மேல்காற்று”, “மேகம்” ஆகியவை பற்றிய கவிதைகளில் இசைச் சிறப்பையும் இவர்தம் விஞ்ஞான அறிவையும், விடுதலை பெற்ற புரோமீதியசு (Prometheus Unbound) என்ற நாடகக் கவிதையில், மனிதக் குலம் மேம்பட வேண்டுமென்ற இவர்தம் அவாவையும், செஞ்சி (The Cenci) என்ற துன்பிவல் நாடகத்தில் இவர் பெண் குலத்தின்பால் கொண்ட பரிவையும் காணலாம் இவரது ‘கவிதையின் இன்றியமையாமை’ (A Defence of Poetry) என்னும் நூல், கவிதை நடையில் அமைந்த கட்டுரையாகும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த கீட்சு (கி.பி. 1795-1821) இருபத்தாறு ஆண்டுகளே வாழ்ந்தாராயினும் நிலைத்த புகழுடைய தன்னுணர்ச்சிப் பாக்கள் பலவும் எண்டீமியன் (Endymion) என்ற நீண்ட கவிதையும், இசபெல்லா (Isaballa) என்னும் அழகிய கதைப் பாடலும், முற்றுப்பெறாத ஐபீரியன் (Hyperion) என்னும் மில்டனின் அடியொற்றிய கவிதையும் எழுதி முடித்தார். வறுமையும் காதல் தோல்வியும் உறவினர் இழப்பும் இவரை வாட்டியபோதும், கவிதையின் பால் கொண்டிருந்த மாளாக்காதல் இவரைப் பெரும் புலவர்கள் வரிசைக்கு உயர்த்தியது. புனைவியல் காலத்தில் வாழ்ந்த உரைநடை ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆசுலிட்டு (Hazlitt), இலாம்பு (Lamb), இலாண்டார் (Landor). திக்வின்சி (De quincey) ஆகிய நால்வராவர். ஆசுலிட்டின் ‘கவிஞர்களுடன் எனது முதல் சந்திப்பு’ (My first Acquaintance with Poets), கோலரிட்சு பற்றிய அவரது மதிப்பீட்டைத் தருகிறது. சேக்சுபியர் நாடகங்களின் கதைமாந்தர்கள் (Characters of Shakes. Peare's Plays) என்னும் நூலில், இன்றைய திறனாய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க பல கருத்துகளைத் தந்துள்ளார். அவர் காலத்தில் வாழ்ந்த புலவர்களின் பெருமை சிறுமைகளைக் காலவுணர்வு (The Spirit of the Age) என்னும் நூலில், காய்தல் உவத்தல் இன்றி வெளிப்படுத்தியுள்ளார். இறுதிக் காலத்தில் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை நான்கு பாகங்களில் எழுதினார். இலாம்பின் கட்டுரைகள் பல பொருள் பற்றியவை; மனித இதயத்தை ஊடுருவிப் பார்ப்பவை; உள்ளத்தைத் தொடுபவை. தமக்கென ஒரு விந்தையான நடையை இவர் உருவாக்கிக் கொண்டார், “தென்கடல் இல்ல நினைவுகள்” (Recollections of the South-Sea House), “பழையசீனம்” (Old China), “முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கிறித்து ஆசுபிடல்” (Christ's Hospital Five and Thirty Years Ago), “சுடப்பட்ட பன்றிபற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை” (A Dissertation upon Roast pig) என்பவையெல்லாம் கவித்துவம் நிறைந்த கட்டுரைகள், தம் திறனாய்வுக் கட்டுரைகள் வாயிலாகக் கி.பி. 16,17-ஆம் நூற்றாண்டு நாடக ஆசிரியர்களுக்குப் புத்துயிர் அளித்த பெருமையும் இவருக்கு உண்டு. இலாண்டார் (W.S. Landor) எழுதிய கட்டுரை, கவிதை ஆகிய இரண்டிலும் செவ்வியல் கூறுகள் பல காணலாம். கற்பனை உரையாடல்கள் (Imaginary Conversations) என்னும் நூலில் அவரது வீச்சும், அவர் கையாளும் உத்திகளும் வியக்கத்தக்கவை. திக்வின்சியின் ‘ஒரு ஆங்கிலப் போதைப் பொருள் நுகர்வோனின் ஒப்புதல்கள்’ (The Confessions of an English Opium Eater) என்னும் நூலில் அவர் தம் வாழ்வு நிகழ்ச்சிகள் பலவற்றை அழகுபடக் கூறியுள்ளார். ஆசுடின் சேன் (கி.பி. 1775-1817) நார்த்தாங்கர் ஆபி (Northanger Abbey), மென்சுபீல்டு பார்க்கு (Mansfield Park), தற்பெருமையும் தவறான மதிப்பீடும் (Pride and Prejudice). அறிவும் உணர்வும் (Sense and Sensibility), எம்மா (Emma), ஏற்கச் செய்தல் (Persuasion) ஆகிய புதினங்களில் மனித வாழ்வில் நடைபெறும் எளிய நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் பார்க்காத நிகழ்ச்சிகளையும் ஒதுக்கித் தள்ளியதால், உயிருள்ள கலைப் படைப்புகளை உருவாக்க முடிந்தது. உரைநடையைக் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் சிறப்புறக் கையாண்டவர்களுள் நீயுமென் (Newman). கார்லைல் (Carlyle), இரசுகின் (Ruskin) ஆகியோர் முறையே சமயம், சமூகம், கலை பற்றித் தம் கருத்துகளைப் படிப்போர் உளங்கொள வெளிப்படுத்தினர். கார்லைல், வீரர்களின் குணச்சிறப்புகள், உண்மைத் தொண்டின் உயர்வு. நல்ல தலைமையின் இன்றியமையாமை ஆகியவை பற்றித் தம் கட்டுரைகளில் இடியென முழங்கினார். இரசும், ஒலியம், சிற்பம் பற்றியும், கலையில் நீதியும் நேர்மையும் பெறவேண்டிய பங்கு பற்றியும், விவிலிய நூல் நடையில் விளக்கினார். அரசி விக்டோரியா காலத்துக் கவிஞர்களுள்<noinclude></noinclude> rbtba7x7b9x1ccbax2953wdrsi1yhtp