விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.8 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/158 250 130228 1839131 1838933 2025-07-04T14:58:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>13. சி. சு. செல்லப்பா</b>}}}} {{larger|<b>உ</b>}}ரைநடை குறித்து அதிகம் சிந்தித்த எழுத்தாளர் சி. சு. செல்லப்பா. பேசுவது போல் எழுத வேண்டும். எல்லோருக்கும் புரியக் கூடிய விதத்தில் எழுத்து நடை அமைய வேண்டும் என்ற கருத்து அவருக்கு உடன்பாடாவது அல்ல. “எல்லா விஷயங்களுக்கும் ஒரே மாதிரியான நடை தகுதி உள்ளதாக ஒரு போதும் இருக்காது. அதே போல, நாம் பேசுகிற தோரணை மாதிரியே எல்லாவற்றையும் எழுதிவிட முடியும் என்பதும் இல்லை” என்று உறுதியாக நம்பியவர் அவர். எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அனைத்து விஷயங்களையும் எளிய நடையில் எழுத விரும்புவது ‘ஸ்டாண்டர்ட் தமிழ்’ ஒன்றை உண்டாக்குகிற முயற்சியேயாகும். இம்முயற்சி தமிழை வளமான மொழியாக வளர்க்காது என்று செல்லப்பா அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார். “கருத்துக்களை கொஞ்சமும் தடங்கலோ தடுமாற்றமோ இல்லாமல் முழுமையாகவும் திட்டமாகவும், படிப்பவன் மனதுக்குத் தெரியச் செய்வதுதான் நல்ல உரைநடை என்ற பொதுவான ஒரு விளக்கத்தை ஒரு வரையறுப்பாக வைத்துக் கொள்ளலாம். கைக்குக் கை வளர்ந்து வரும் தமிழ் உரைநடை பற்றி இலக்கணம் அறுதியிட்டுச் சொல்ல<noinclude></noinclude> 9zfdege4mb9o7vcpgbtxt8i5v3c6n9i பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/159 250 130230 1839133 1838940 2025-07-04T15:00:18Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||157}}</noinclude>முடியாமல் இருக்கும் நிலையில் கருத்துக்களைச் சொல்வதற்கு எந்த அளவுக்கு உரைநடையின் எல்லைகள் விரிந்து கொடுக்கக்கூடும் என்று சோதனைகள் செய்து பார்ப்பதுதான் ஒவ்வொரு உரைநடை எழுத்தாளனது முயற்சியாக இருக்க வேண்டும்.” இது சி. சு. செல்லப்பாவின் அபிப்பிராயம். ‘இன்று தேவையான உரைநடை’ என்றொரு கட்டுரையை அவர் எழுதியிருக்கிறார். அதில் அவர் இவ்வாறு கூறுகிறார்— “உரைநடை ஒரு படைப்பாளியின் சொந்தக் குரல். தொனி. அது அவன் கருத்துக்கு ஏற்ப தொனிக்கும், ஒலி கிளப்பும், நீடிக்கும், மாறும், ஏறும், இறங்கும். அந்தக் கருத்தைப் பொறுத்த மணத்தைத்தான் நாம் அதில் காண முடியும். ‘நீ பேசுவது இனிப்பாக இல்லை’ என்று நான் எழுதினால் நான் ஒன்றில் நினைத்து மற்றொன்றில் எழுதிய குற்றத்துக்கு உள்ளாவேன். ஆனால், ‘அட நீ பேசறது இனிக்கிற பேச்சா இல்லியே?’ என்று ஒரு கிராமவாசி மற்றொருவரிடம் கூறும் போது? இங்கிலீஷ் படிக்காதவரும் தங்கள் கருத்துக்களை எல்லாம் தெரிவிக்க வார்த்தை, வாக்கிய அமைதிகளை எப்படியெல்லாம் உபயோகிக்கிறார்கள் என்பதைக் கவனித்தால் இந்த மாதிரி பேச்செல்லாம் கிளம்பாது. “இன்றைக்குத் தேவையான உரைநடை, அற்பமான மனம் சாய்ந்த கருத்துக்களுக்கு மேலாக எழுந்து, வெளியிட வேண்டிய பொருளுக்கும் வெளியீட்டு சக்திக்கும் ஏற்ப, தொற்ற வைத்தலையே முதன்மை நோக்கமாகக் கொண்டு, முன் படைக்கப்பட்டுள்ள அத்தனை வித உரைநடைகளையும் மனதில் கொண்டு, அவைகளில் தனக்கு உபயோகமாகக் கூடிய அளவு போக, போதாதற்கு சோதனை நடத்தி ஒரு படைப்பாளி கையாள வேண்டிய உரைநடைதான்.” {{nop}}<noinclude></noinclude> 5v0edpjbx3bf5p3j894tbg21x6tru7o பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/160 250 130232 1839135 1838952 2025-07-04T15:01:59Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|158||பாரதிக்குப் பின்}}</noinclude>இந்த வாக்கியமே வாசகரை சிரமப்படுத்தக் கூடிய ஒரு நடையில் தான் அமைந்திருக்கிறது. அறிவு ரீதியான விஷயங்களை எழுதும் போது சிரமப்படுத்தும் சிக்கலான நடை தோன்றுவது இயல்பு என்பது செல்லப்பாவின் கருத்து ஆகும். உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளில் நடை இனிமையாய் நேரானதாய், எளிதில் வாசிக்கக் கூடியதாய் இருக்கலாம்; இருக்கும். ஆனால் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுகிற விஷயங்களில் நடை வேறு விதமாகத்தான் இருக்கும். கதைகளில் கையாளப்படுகிற நடையை சிந்தனா பூர்வமான கட்டுரைகளில் எதிர்பார்க்கக் கூடாது. இது அவருடைய நோக்கு. இதை அவர் தனது எழுத்துக்களில் தீவிரமாகவே கையாண்டார். செல்லப்பாவின் கதைகளில் எளிமையான, இனிய உரைநடையைக் காண்கிற வாசகர்கள் அவருடைய கட்டுரைகளில் சுற்றி வளைத்துச் சொல்கிற—சிரமப்பட்டு வாசித்து விளக்கிக்கொள்ள வேண்டிய—தெளிவாகச் சொல்லவேண்டிய, சொல்லிவிடக் கூடிய விஷயங்களைக் கூடக் குழப்பம் உண்டாக்கும் வகையில் விவரிக்கிற—வித்தியாசமான நடையைத்தான் காண்பார்கள். உதாரணத்துக்கு ஒன்று தருகிறேன்: “இந்த ஏன் என்ற ஒரு கேள்வி நிலை கதையின் ஆரம்பம் முதல் கடைசிவரை மென்மையாக நொய்மையாக (ரஷ்யப் படைப்பாளி ஐவான் துர்க்கனேவ்வின் ‘பொய்’, ‘மவுனம்’ இரண்டில் காணப்படுவது போல) சுதாவாக எழுத்து நம்மை பாதிப்பதற்கு பதிலாக, ஆசிரியரின் தலையீட்டினால் பன்னிப் பன்னியும் தேவைக்கு மீறியும்—அதாவது உணர்த்தலுக்குப் போதியதுக்கு மேல் விண்டு சொல்ல விரும்புகிற ஒரு அப்பட்டத் தன்மையுடன்—நமக்கு சங்குப் பாலா<noinclude></noinclude> 38cavfyfho90s188a19yzd0rx74oinu பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/161 250 130234 1839136 1838962 2025-07-04T15:04:15Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||159}}</noinclude>போட்டும் ஒரு ஆசிரிய அக்கரையுடன்—கலந்து இருக்கிறது. கதையின் உச்சநிலையில் அவர்களது ‘ஏன்’ நிலைதான் நமக்குள் ரீங்காரமிடச் செய்வதாக இருந்திருக்க வேண்டும். உச்சநிலை அந்த இடத்திற்கும் சற்று முன் நீண்டு மாதவன் படிப்பை நிறுத்தியது ஏன் என்ற சினேகிதர்களது ஏன், சுசீலாவின் கண்களில் தோன்றும் சோகத் தோற்றம் ஏன் என்ற அவள் கணவனது ஏன், எல்லாம் தெரிந்தும் ஒன்றும் தோன்றாமல் மனம் புகையும் கதை சொல்லி நண்பனது புரியாமை (அதுவும் ஒருவித ஏன் தான்) ஆகியவை கதையின் ஒரு முனைப்புக்கு ஏற்றம் தருவதாக இல்லாதது மட்டும் இன்றி, கதையின் உருவத்துக்கும் உத்தேச நிறைவேற்றலுக்கும் குந்தகமாக, பிரஸ்தாப தகவல்கள் மூலம் நமக்குள் உருவாகி இருக்கும் ஒரு கவனத் தீவிரத்துக்கு தளர்வு தருவதாயும், ஏன், கவன முனைப்புக்கு பராக்கு (கவனத் திருப்பம்) காட்டுவதாகவும் கூட இருக்கிறது.” (“மௌனியின் மனக்கோலம்” கட்டுரையில் ‘ஏன்?’ என்ற கதையைப்பற்றி எழுதியுள்ள பகுதி.) இப்படி வித்தியாசமான வெவ்வேறு வகைப்பட்ட உரை நடையை செல்லப்பா சோதனைரீதியாகக் கையாண்டு பழகி, தனக்கென்று ஒரு இயல்பான நடையை உண்டாக்கிக் கொண்டார். இதனால் எல்லாம், செல்லப்பா நல்ல தமிழ் எழுதுவதை மறந்துவிட்டார் என்றும், தெளிவாக எழுதுவது எப்படி என்பதே செல்லப்பாவுக்குத் தெரியவில்லை என்றும், குறைகூறல்கள் எழுந்தன. அவற்றை அவர் சட்டை செய்யவில்லை. சி. சு. செல்லப்பா உரைநடை குறித்து மற்றொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டினார். உலக இலக்கியத்தில் புகழ்பெற்ற படைப்பாளிகளின் எழுத்துக்களை—உதாரணமாக, டால்ஸ்டாய், செகாவ், துர்கனேவ் முதலியவர்களின் படைப்புகளை—ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள்<noinclude></noinclude> bkfy7ikmje9ndgi27n5s3s5c5w6cry8 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/162 250 130235 1839137 1838977 2025-07-04T15:06:21Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|160||பாரதிக்குப் பின்}}</noinclude>‘ஸடாண்டர்ட் நடை’ எதையும் கையாளவில்லை. அந்த அந்த ஆசிரியர்களின் தனித்தன்மை நன்கு வெளிப்படும் விதத்தில் வித்தியாசமான ஆங்கில நடையில்தான் எழுதியிருக்கிறார்கள். ஆனால் தமிழில் மொழிபெயர்க்கிறவர்கள் எல்லாப் படைப்பாளிகளின் எழுத்துக்களையும் ஒரே மாதிரியான எளியநடையில் தான் பெயர்க்கிறார்கள். இது மூல ஆசிரியனது எழுத்து நடையின் சிறப்பை எடுத்துக் காட்டாது. ‘வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது’ தான் படைப்பாளிக்கு நியாயம் செய்வது ஆகும் என்று சி. சு. செ. வலியுறுத்தினார். அவ்வாறே அவர் அநேக கதைகளை மொழி பெயர்த்து ‘எழுத்து’ பத்திரிகையில் வெளியிட்டார். ஹென்றி ஜேம்ஸின் ‘புரூக் ஸ்மித்’ கதையை மொழிபெயர்த்த செல்லப்பா முன்னுரையாக எழுதிய வரிகள் உரைநடை பற்றிய அவரது கருத்தை தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. “ஹென்ரி ஜேம்ஸின் நடை கருத்தாழமான சிக்கலான, சுழற்சியான நடை, படிக்க முடியாதபடி செய்யும் அளவுக்கு கூடமானது என்று கூடக் கருதப்பட்டது. ஆனால் அதில் ஒரு இறுக்கம், திட்டம், நேர்த்தி இருக்கும். வாக்ய அமைதி புதுத் தோற்றங்களைப் பெற்றிருக்கும். சொற்கள் சேர்க்கை புது அர்த்தச் சாயல்களை ஏற்றி இருக்கும். அதை மொழி பெயர்ப்பது சற்று கடினமானதுதான். “மொழிபெயர்ப்பு சம்பந்தமாக ஒரு வார்த்தை. வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது, கயஓட்டமாக மொழிபெயர்ப்பது என்ற இரண்டு விதங்களிலும் குறை, நிறை இருக்கிறது. இந்த மொழி பெயர்ப்பு முன் வழியில் செய்யப்பட்டிருக்கிறது. மூல ஆசிரியனது உரைநடைப் போக்கிலேயே தமிழுக்கும் ஒரு உரைநடையை இயைலிக்கும் ஒரு தோரணை கையாளப்பட்டிருக்கிறது. கருத்துக்களையும்<noinclude></noinclude> b7ngqty7a4rli8jhfk8ekrcks2cye9k பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/163 250 130237 1839138 1838982 2025-07-04T15:08:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||161}}</noinclude>உணர்ச்சிகளையும் வெளியிடுவதற்கு, எல்லா பருவங்களிலும் உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் படியாக ஒரே மாதிரியான, ‘ஸ்டண்டர்டான’ ஒரு எளிய நடையைத்தான் கையாளவேண்டும். என்பதற்கு சவாலாக உள்ளது ஜேம்ஸின் உரைநடை. இந்த தமிழ்நடையும் அப்படி இருக்கலாம். சற்று ஊன்றி ஈடுபட்டால் இந்த நடையும் இன்பம் தருவதை உணரமுடியும்.” செல்லப்பாவின் மொழிபெயர்ப்பு நடைக்கு உதாரணம் தரவேண்டியது அவசியமாகும். புரூக் ஸ்மித் கதையிலிருந்து சில வரிகள் இங்கே எடுத்தெழுதப் பெற்றுள்ளன— “ஒரு சீமாட்டி வீட்டில் பிரமுகர்கள் வழக்கமாக கூடும் ஒரு ஏற்பாடு பற்றி பலர் நிறைய கேட்டிருக்கிறார்கள். அதில் பெரும்பாலோர் நிச்சயமாக பார்த்ததே இல்லை என்றாலும், சமூக வாழ்விலேயே உத்தம அம்சமான இது இங்கிலீஷ் மொழி பேசப்படும் இடத்தில் மலர மறுக்கிறது என்று உணரும் அளவுக்கு மனச் சோர்வு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். வழக்கமாகச் சொல்லப்படும் சமாதானம். நமது பெண்மணிகளுக்கு அதை—குறிப்புணர்த்தல் கரைகளுக்கு இடையே புன்னகை நிலவழியே ஒரு சுழற்சியான சம்பாஷணை ஓடையை செலுத்திச் செல்லும் வித்தையை—வளர்த்துக்கொள்ளும் ஒரு சாமர்த்தியம் இல்லை என்பதுதான். மிஸ்டர் ஆஃபர்டைப் பற்றி அபிமானமும் மரியாதையும் கலந்த என் ஞாபகங்கள் இந்த அனுமானத்தை மறுப்பதாக இருக்கின்றன. கபடமாக அதை உறுதிப்படுத்துவதற்கோ என்று கூட எனக்கு அச்சம். தன் வாழ்நாளில் கடைசி ஆண்டுகளில் அவ்வளவு பெரும் பகுதியை அவர் கழித்த அந்த பழுப்பேறிய, லேசாகப் புகைபடிந்த கொலுவறை நிச்சயமாக அந்த தனிப் பெரும் பெயரை பெறத்தக்கதுதான்.”{{nop}}<noinclude></noinclude> 64hm2bsdhte9ims3tr5up68osyzv0ku பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/164 250 130239 1839140 1838986 2025-07-04T15:10:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|162||பாரதிக்குப் பின்}}</noinclude>வில்லியம் ஃபாக்னர் கதையான ‘எமிலி கிரீர்ஸன்’ மொழி பெயர்ப்பிலிருந்து சில வரிகள்— “மிஸ் எமிலி கிரீர்ஸன் இறந்த போது எங்கள் டவுன் முழுதுமே அவளது சாச் சடங்குக்கு சென்றது. சரிந்த ஒரு நினைவுச் சின்னத்திடம் கொண்டிருந்த ஒருவித மரியாதை கலந்த அன்புடன் ஆண்களும், தோட்டக்காரனும் சமையல்காரனுமான ஒரு கிழப் பணியாளைத் தவிர குறைந்தது ஒரு பத்து வருஷ காலத்தில் யாரும் பார்த்தே இராத அவள் வீட்டு உட்புறத்தைப் பார்க்கும் ஆவலுடன் பெண்களும். ஒரு காலத்தில் வெண்மையாக இருந்து, ‘எழுபதுக்கள்’ காலத்திய பகட்டு கலந்த சோபையுள்ள பாணியில் கும்மட்டங்கள், ஸ்தூபிகள், முறுக்கின சாளரச் சாய்ப்புகளின் ஜோடனையுடன் எங்கள் தலைசிறந்த தெருவாக ஒரு சமயம் இருந்திருந்த ஒன்றில் அமைந்து இருந்த பெரிய சமசதுர வடிவ வீடு அது. ஆனால், மோட்டார் சாலைகளும் பஞ்சாலைகளும் ஆக்ரமித்து அந்த சுற்றுப்புற பெரும் பெயர்களையும் அழித்து விட்டன. கண்ணராவியிலும் கண்ணராவியாகப்படும் பஞ்சுப்பொதி வண்டிகளுக்கும் காஸோலைன் குழாய்களுக்கும் மேலாக எழுந்து அதன் விடாப்பிடியான ஒய்யாரத் தேய்வை உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்த எமிலியின் வீடு ஒன்றுதான் பாக்கி இருந்தது. அந்தப் பெரும் பெயர்ப் பிரதிநிதிகளோடு சேர்ந்து கொள்ளத்தான் எமிலியும் இப்போது போய்விட்டாள், அங்கேதான், ஜெஃபர்ஸன் சண்டையில் வீழ்ந்த ஐக்ய, சமஷ்டி போர் வீரர்களது அந்தஸ்துக்கிரமமான அநாமதேய கல்லறைகளிடையே தேவதாரு மரங்கள் அடர்ந்த இடுகாட்டில்தான் அவர்கள் கிடந்தார்கள்.” இந்த விதமான மொழிபெயர்ப்பு வாசகர்களுக்கு—அவர்களில் பெரும்பான்மையினருக்கு—பிடிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ‘தமிழ் வாசித்துப் பழக்கப்-<noinclude></noinclude> ji1l7moj4dedt4ks81n5wsc8vf1b5p4 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/165 250 130241 1839141 1838990 2025-07-04T15:11:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||163}}</noinclude>பட்ட’வர்களுக்கு செல்லப்பாவின் உரைநடை உறுத்தல் கொடுக்கிறது என்று பலர் அபிப்பிராயப்பட்டார்கள். உலக இலக்கியப் படைப்பாளிகளின் நடைநயத்தை தமிழ் நடையிலும் பிரதிபலித்துக் காட்ட வேண்டியது அவசியம் தான்; ஆனால் செல்லப்பாவின் மொழிபெயர்ப்பு அவ்வாறு செய்யவில்லை; மூல ஆசிரியர்களின் படைப்பு நயங்களை நன்கு புரிந்து கொண்ட, தமிழ் வளத்தை நன்றாக உணர்ந்து தமிழ் மொழியை ஆற்றலுடன் கையாளத் தெரிந்த திறமைசாலிகள் இந்தக் கதைகளை மொழி பெயர்க்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தார்கள். ஆனாலும் செல்லப்பா தனது முயற்சிகளையும் சோதனைகளையும் கைவிட்டாரில்லை. ‘தமிழ் வாசகர்கள் ஒரு சோதனைக்காரப் படைப்பாளிக்கு ஏற்ப தன்னை பொருந்தச் செய்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது’ என்றே அவர் எண்ணினார். இலக்கணத்தை அப்படியே பின்பற்றி எழுதுகிற முறை உரைநடை வளர்ச்சிக்குத் தடங்கலாகவே இருக்கிறது என்ற கருத்து, உரைநடை பற்றி சிந்தித்த எழுத்தாளர்களுக்கு அவ்வப்போது எழுந்தது உண்டு. முக்கியமாக ‘புணரியல்’ விதிகளும் ‘ஒற்று’ விவகாரமும், பேச்சு நடைக்கும் எழுத்து நடைக்குமிடையே மிகுந்த மாறுபாடுகள் ஏற்படக் காரணமாக இருக்கின்றன என அவர்கள் உணர்ந்தார்கள். ‘கடல் தாவு படலம்’ என்பனத ‘கடறாவு படலம்’ என்றும், ‘முள்—தாள்—தாமரை’ என்பதை ‘முட்டாட்டாமரை’ என்றும் தமிழ் கற்றோர் முன்பு எழுதிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஆதாரமாக இலக்கண விதிகளைச் சொல்லி மிரட்டி வந்தார்கள். பால், கடல் என்ற சொற்கள் சேர்ந்து வருகிற போது ‘பாற்கடல்’ ஆகவேண்டும் என்றும், செங்கல், சுவர் இரண்டும் சேர்ந்தால் ‘செங்கற்சுவர்’ ஆகும் என்றும், புல்,<noinclude></noinclude> pzf28vqx87yllt1b577p03ropietebn பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/166 250 130243 1839142 1838994 2025-07-04T15:12:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|164||பாரதிக்குப் பின்}}</noinclude>தரை புணரியல் விதிப்படி ‘புற்றரை’ என்றே எழுதப்பட வேண்டும் என்றும் பண்டிதர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இதெல்லாம் வீண் வேலை, தேவையற்ற பிரயோகம் என்று முதன் முதலாகக் கண்டித்துச் சொன்ன பெருமை ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாரையே சாரும். பேச்சுத் தமிழில் பாற்கடல், புற்றரை, செங்கற் சுவர் என்றெல்லாம் வருவதில்லை; பின் எதற்காக அப்படி எழுதவேண்டும் என்று அவர் கேட்டார். ஆனாலும், இத்தகைய இரண்டு சொற்கள் சேர்கையில் ஒற்று மிகும் என்று சொல்லி, பால்—கடல் என்பதை ‘பால்க்கடல்’ என்றும், செங்கல்—சுவர் என்பதை ‘செங்கல்ச்சுவர்’ எனவும் புல்—தரையை ‘புல்த்தரை’ என்றும் எழுதலானார். இந்த வகையான ஒற்றுப் பிரயோகங்களை டி. கே. சி. எழுத்துக்களில் நிறையவே காணலாம். உரைநடையில் புதுமைகள் பண்ண விரும்பிய வ. ரா. பேச்சு வழக்கில் ஒற்றுகள் ஒலிப்பதில்லை; எனவே எழுத்திலும் அவை தேவையில்லை என்று வாதிட்டார். செங்கல்—சுவர் செங்கற்சுவர் ஆகவும் வேண்டாம், செங்கல்ச் சுவர் ஆகவும் வர வேண்டாம்; ‘செங்கல் சுவர்’ என்றே இருக்க வேண்டும் என்று வ. ரா. உறுதியாகத் தெரிவித்தார். இந்த ரீதியில், பால்—காரன், கீரை—தண்டு என்றெல்லாம் தான் எழுதப்பட வேண்டுமே தவிர, இரு சொற்களுக்கிடையே ஒற்றுகள் தலைகாட்ட வேண்டிய தேவையே இல்லை என்று அவர் வாதிட்டார். இத்தன்மையில் ஒற்றுகளை நீக்கி அவர் எழுதிப் பிரசுரித்த ஒரு புத்தகம் அந்நாட்களில் பலத்த சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் இலக்காயிற்று. உரைநடை பற்றி சிந்தித்து, உரைநடையில் சோதனைகள் செய்வதில் ஆர்வம் காட்டிய சி. சு. செல்லப்பாவும் வ. ரா. பாதையில் முன்னேறத் துணிந்தார். ஒற்றுகளை நீக்கியும் குறைத்தும் அவர் ‘எழுத்து’<noinclude></noinclude> 2s6z5w7x3eexv1dr9jus9mz4u5qbswo பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/167 250 130245 1839143 1838995 2025-07-04T15:15:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||165}}</noinclude>பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தார். இந்தப் போக்கு ‘எழுத்து’ வாசகர்களிடம் விதம் விதமான அபிப்பிராயங்களை விதைத்தன. ஆதரித்தும், கண்டித்துல், குறைகூறியும் வாசகர்கள் கடிதங்கள் எழுதினார்கள். செல்லப்பா தனது கொள்கையை விளக்க வேண்டிய ஒரு கட்டம் ஏற்பட்டதும், ‘உரைநடை வளமாக’ என்ற தலைப்புடன் ஒரு தலையங்கம் எழுதினார். அதில் ஒரு பகுதி இது— “ஒற்றும் கமாவும் இல்லாமல், வாக்கியத்தை சொல்லுக்காக மட்டும் தொடராமல் அர்த்தத்துக்காகவும் தொடர்ந்து சென்றோமானால் நடையில் அழகை பார்க்கலாம். தவிர ஒற்றை போட்டாலும் நாம் பாதி உச்சரிப்பு தானே செய்கிறோம். இங்கு ஒரு கேள்வி கேட்கத் தோன்றும். ஏன், ஒற்று போட்டுவிட்டு நிறுத்தி அதை பாதி உச்சரித்து வாசிக்கலாமே என்று அதற்கு ஒற்று போடாமலே பாதி உச்சரிப்பை சேர்த்துக் கொள்ளலாமே என்பது தான் பதில். ‘வாங்கிப் படித்துப் பார்த்தேன்’ என்பதுக்கு பதில் ‘வாங்கிபடித்துப் பார்த்தேன்’ நன்றாக இருக்குமே. நமது வல்லினங்கள் புணர்கிற போது இந்த அரை உச்சரிப்புக்கான ஒலியை கிளப்பத்தக்க வீர்யம் அவைகளுக்கு இருக்கத்தானே செய்கிறது. ‘பால்காரன்’ என்பதில், ‘ல்’லையும் ‘கா’வையும் முழுக்க உச்சரித்தால்‘க்’இல்லாமலேயே ‘பால்க்காரன்’ என்ற ஒலி கிளம்புகிறது. அதே போலதான் செங்கல்சுவர். “கொஞ்சம் தொல்காப்பியத்தையும் நன்னூலையம் தாண்டிவந்து சிந்திக்கவேண்டும். இலக்கணம் கற்று மறக்கத்தான். அப்போ தான் இலக்கணமாக பேச, எழுத முடியும். இலக்கணத்தையே சதா நினைத்துக்கொண்டு பேசமுடியாது. பழமை, நிலமை, இன்றய, வாங்கிண்டு அல்லது வாங்கிட்டு (வாங்கிக் கொண்டு), ஏன்னால்<noinclude></noinclude> 29fr0nb1zaytn8alsfil1y54vrodb4i பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/168 250 130247 1839144 1838996 2025-07-04T15:17:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|166||பாரதிக்குப் பின்}}</noinclude>(ஏனென்றால்), எடுத்துக்கலாம் (எடுத்துக் கொள்ளலாம்), பாதுகாத்துக்கிறது (பாதுகாத்துக் கொள்கிறது), காப்பாற்றிக்கிறது, அதுக்கு (அதற்கு) இது மாதிரியான வார்த்தைகளையும் கொச்சை நீக்கிய இலக்கண சுத்த வார்த்தைகளாக அங்கீகரித்தால், இவைகளால் ஆன எழுத்து உரைநடை, பேச்சுநடையின் ஒலி நயம் ஓசை அமைப்புக்கு ஏற்ப அமையும். இன்று எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும் இருக்கிற வித்தியாசம் குறையும். மறையவும் செய்யும். ஒலி இயல்பும் சொல்லமைதியும் சொல் தொகுதியும் சொற்பொருளும் காலத்துக்குக் காலம் மாறி வந்து, இன்றும் வாழும் தமிழ் இல்லையா நம்மது?” செல்லப்பா ‘எழுத்து’ காலத்தில் இந்த விதமான உரைநடையை தனது கட்டுரைகளில் கையாண்டார். அவர் எப்போதும் சிக்கலான, சுற்றி வளைக்கிற, மரபுகளை மீறிய உரைநடையைத் தான் கையாண்டார் என்று எண்ணிவிடக் கூடாது. சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்ற செல்லப்பா பலரகமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். கட்டுரை இலக்கியத்திலும் சோதனை ரீதியில் அவர் பல முயற்சிகள் செய்துள்ளார். “ஷார்ட் ஸ்டோரி என்ற சிறுகதையும் ஆகாத, எஸ்ஸே என்ற கட்டுரையும் ஆகாத, இரண்டும் கெட்டான் நிலையில் ஸ்கெட்ச் என்ற ஒரு பிரிவில்...ஆழ்ந்த கருத்துக்கு உட்பட்டதாகவும், சில ஹாஸ்யப் பாங்கானதாகவும் இருக்கும்” படைப்புகளை அவர் அதிகம் எழுதியிருக்கிறார். அவை தவிர ‘ஸ்கிட்’ என்ற உரைநடைப் பிரிவிலும் அவர் பலப்பல படைத்துள்ளார். இவை குறித்த அவரது விளக்கம் கவனிப்புக்கு உரியது: “ஸ்கெட்ச் என்பது சிறுகதை போலவோ கட்டுரை போலவோ தோன்றும் ஒரு இலக்கிய உருவம். ஆனால்<noinclude></noinclude> fy1yj39b7v44dakczbs3x69ienqvitd பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/169 250 130248 1839145 1838997 2025-07-04T15:19:22Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||167}}</noinclude>‘லைட்டாக’ என்கிறோமே படிக்கும்போது. அலட்டவோ, அழுத்தவோ செய்யாமல், லெகுவாக விழுங்கக் கூடியதும் ஜீரணமாகக் கூடியதுமான தின்பண்டம் போல ருசிக்கக் கூடியதாக இருக்கும். உருவத்தை, விஷயத்தை கையாளும் முறையில், உத்தியில், ஒரு மென்மை, எளிமை, தீவிரமின்மை, மெலிவு இருக்கும். நடையில் எழுத்துப் பாணியில் விஷயத்திலிருந்து தடம் அங்கங்கே லேசாகப் புரண்டும் சிக்கனம் இன்றியும் இறுக்கம் இல்லாமலும் கூட இருக்கும். பழக்கமான விஷயமாகவும் இருக்கும். “ஆனால் ‘ஸ்கிட்’டோ இந்த தன்மைகளை பெரும்பாலும் கொண்டிருந்தாலும் கதை அம்சம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். நகைச் சுவையானதாகவும் ‘சீரியஸ்’ என்கிறோமே ஆழ்ந்த கருத்தானதாகவும் இருக்கும். சிறுகதை அளவுக்கு போயிருப்பது போல தோன்றும். ஆனால் சிறுகதை அளவுக்கு முடிவு கொள்ளாமல், ‘டிரமாடிக்’ என்கிற நாடகத் தன்மை திருப்பம் கொள்ளாமல், ஒரு ஸ்கெட்ச் அளவுக்கும் கொஞ்சம் கூடுதலாக தணிந்த பொருள் தொனியும், அமைப்பு விடைப்பும் கொண்டு, ஸ்கிட்டுக்கும் சிறுகதைக்கும் உள்ள எல்லைக்கோடு கூட அழிந்து விடக் கூடிய ஒரு நிலை கூட ஏற்படும்படியாக ஸ்கிட் மாயத்தோற்றம் காட்டும்.” இவ்வாறு வெவ்வேறு வடிவங்களைப் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து, தெளிவான விளக்கம் தந்துள்ள தமிழ் எழுத்தாளர் சி. சு. செல்லப்பா ஒருவர் தான் என்பது குறிப்பிடத் தகுந்தது. ‘ஸ்கிட்’களில் அவர் எத்தகைய எளிய தமிழ் நடையை கையாண்டுள்ளார். என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தருகிறேன்—{{nop}}<noinclude></noinclude> 61h06z60z0407s9z3xfjhhg6uem1u17 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/170 250 130250 1839146 1838998 2025-07-04T15:36:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|168||பாரதிக்குப் பின்}}</noinclude>“மங்கபதியின் காலண்டர் பைத்தியம் மற்ற யாருடைய பைத்தியத்திற்கும் இம்மியளவு கூட சளைத்ததல்ல. ‘நீரில்லா நெற்றி பாழ், நெய்யில்லா உண்டி பாழ், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ், பாரில் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ், பாழே மடக்கொடியில்லா மனை’ என்ற பாட்டில் கடைசி அடிக்கு பதில் ‘பாழே காலண்டரில்லா வீடு’ என்று மாற்றி அமைப்பதுதான் பொருத்தம் என்று கருதும் அளவுக்கு அவனுக்கு அதில் அவ்வளவு சபலம் உண்டு. காலண்டர் என்றால் அது எத்தகைய உபயோகத்திற்கு பயன்படுமோ அந்த மாதிரி இருந்தால்தான் அவனுக்குப் பிடிக்கும். தேதி பார்ப்பதற்குத் தான் காலண்டர். எனவே தேதி பளிச்சென தெரியாத காலண்டர் எதற்குப் பிரயோசனம்? சுவரில் மாட்டியிருக்கும் காலண்டரில் உள்ள தேதிகள் வீட்டில் தள்ளி எங்கிருந்தாலும் பளிச்செனத் தெரியும்படியாக இருக்க வேண்டாமா? நாம் சிரமப்பட்டு கிழமைகளை விரல் வைத்து உச்சரித்துக் கொண்டே வந்து, அதற்கு நேராக உள்ள வரிசைத் தேதி தப்பிப் போகாமல் விரலால் தடவிக் கொண்டு போய், ஏதோ பெரிய துப்பறிபவன் போல் அன்றையத் தேதியைக் கண்டு பிடிப்பதென்றால்? சில சமயம் இதனால் தவறான தேதியை குறித்துக் கொள்ளவும் ஏற்படுகிறது, படத்தின் உபயோகம் வேறு; காலண்டரின் உபயோகம் வேறு. படம் மாட்ட வேண்டுமென்றால் படமாக மாட்டிக் கொள்ளலாம் என்று மங்கபதி வாதாடுவான்.” (படக் காலண்டர்) சி. சு. செல்லப்பா நகைச்சுவைக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இது பலருக்கு ஆச்சரியம் தரக்கூடும். ‘பகடி’ என்ற புனைபெயரில் அவர் சில பத்திரிகைகளில் அந்த ரகக் கட்டுரைகளை எழுதினார். அவை சுவாரஸ்யமாக அமைந்திருந்தன. இதற்கு ‘வம்பு பேச’ என்ற கட்டுரை-<noinclude></noinclude> qb8ss5j2mjin7ao4eeyct49uvszozu3 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/171 250 130252 1839147 1839003 2025-07-04T15:38:55Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||169}}</noinclude>யிலிருந்து எடுக்கப்பெற்ற சில பகுதிகள் நல்ல ‘சாம்பிள்’களாகும்— ‘உங்களுக்கு வம்பு பேசப் பிடிக்குமோ? என்று யாரையாவது ஒரு கேள்வி கேட்டுப் பாருங்கள். துடியாக என்ன பதில் வரும் தெரியுமா? எனக்குப் பிடிக்காது என்பது தான். பொதுவாக வர்பு பேசுவதை சற்று கண்யக்குறைவான காரியமாகத் தான் யாரும் நினைப்பது சகஜம். இதை மனதில் கொண்டே ஆண்கள் ‘பெண்களைப் போல நம்மால் வம்பு பேச முடியுமா’ என்கிறார்கள். பெண்களோ இந்த ஆண்கள் வம்பு இருக்கிறதே அதற்கு ஈடு கொடுக்க நம்மால் முடியாது’ என்கிறார்கள். இருசாராரும் தங்களுக்கு அந்தத் திறமையில்லை என்றும் மற்றவர்களுக்குத் தான் இருக்கிறது என்றும் பெருமையாகச் சொல்வது போல் இகழ்ந்து பேசிக் கொள்கிறார்கள். இதைவிட ‘ஆமாம், வம்பு பேசும் திறமை எங்களுக்குத்தான் இருக்கிறது. அதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று இருசாராரும் சொல்லிக் கொண்டால் என்ன? சிறுமையாக ஒருவர் கருதி மற்றவருக்குக் கொடுக்கும் அந்தப் பட்டத்தை தாங்களே வலிய அணிந்து கொள்ளக் கூடாது? ஒரு சாராரை மற்றொரு சாரார் இகழ்வதற்கு காரணம் அவரவருக்கு வம்பு பேசும் திறமையின் நம்பிக்கையில்லாதிருப்பது தான். அதை மறக்கவே ஒருவர் மற்றொருவரைக் கேலி செய்யத் தோன்றுகிறது. எனக்குப் படுகிறது இதுதான். வம்பு பேசுவது ஒரு தனிக் கலையாகும். இந்தக் கலையை அப்பசிக்கவோ அல்லது ரசிக்கவோ ஒரு பக்குவம் ஏற்படுவதற்கு பயிற்சி வேண்டும். சாதகம் கூட வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்வேன்.”{{nop}}<noinclude>{{rh|பா—11||}}</noinclude> 2a0f6m47sw3lf7ur8clioadmsx3ur8q பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/172 250 130254 1839148 1839004 2025-07-04T15:40:55Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|170||}}</noinclude>இவ்வாறு வளரும் கட்டுரையின் முடிவுப் பகுதி சிந்தனைக்கு உணவாக அமைந்துள்ளது. “மனிதனுக்கு மனிதன் வாய்கொடுத்துப் பேசுவதில் தான் உலகம் புரண்டு கொடுக்கிறது. கலைஞனுக்கு இது தான் அவசியம். அவன் மனமும் கண்ணும் வாயும் உலகத்தை வம்புக்கு இழுத்து ஆராய வேண்டும். கருத்திலே அதைப் பதியச் செய்ய வேண்டும். வாழ்க்கையின் ஜீவன் வம்பு. இந்த வம்பை சித்திரிப்பவன் கலைஞன். இவ்வளவு பெருமைக்கு இடமாக இருக்கும் வம்பைப்மற்றி எளிதாகப் பேசுபவன் வாழத் தெரியாது வாழ்க்கையை வாழ்ந்தவன் ஆவான். ஆனால் வம்பு பேசுவதிலே ஒரு எச்சரிக்கை! அதிலே காரியார்த்தம் இருக்க வேண்டும். அவ்வளவு தான், ரொம்ப பெரிய காரியம் அது.”{{nop}}<noinclude></noinclude> 8mular8xtx6d8tco1knu4q3k51t3lf1 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/173 250 130256 1839103 816687 2025-07-04T13:24:33Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>20. பலவித நடைகள்</b>}}}} {{larger|<b>பே</b>}}சுவது மாதிரியே எழுத வேண்டும் என்ற நோக்கு எழுத்தில் பலவிதமான பேச்சு வழக்குகளும் இடம்பெறுவதற்கு வழி வகுத்தது. கதைகளில் இது அதிகமாயிற்று. கதைகள் எழுதுகிற படைப்பாளிகள் அவரவர்களுக்கு நன்கு பரிச்சயமான சூழ்நிலைகள், அங்கே வசிப்பவர்களின் வாழ்க்கை முறைகள், குணாதிசயங்கள், போக்குகள் முதலியவற்றை தங்கள் எழுத்துக்களில் பிரதிபலித்துக் காட்டுவது இயல்பாயிற்று. எனவே, வெவ்வேறு வட்டாரங்களின் பேச்சு மொழியும், பழக்க வழக்கங்களும், மனித சுபாவங்களும் எழுத்து மூலம் வடிவம் பெற்றன. காலப் போக்கில், ‘வட்டார இலக்கியம்’ என்று பகுத்துப் பார்க்கிற ஒரு மனோபாவமும் எழுத்தாளர்களிடமும் ரசிகர்கள் மத்தியிலும் தோன்றியது. குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் என்று காட்டிக் கொள்வதற்காக ஒரு சிலர், அந்த வட்டாரத்தின் பேச்சு வழக்குகளையும் அங்கு மட்டுமே வழக்கத்தில் இருக்கிற தனிப் பிரயோகங்களையும் சொல் சிதைவுகளையும் அளவுக்கு அதிகமாகத் தங்கள் எழுத்திலே திணித்து, எழுத்து நடையின் இயல்பான ஓட்டத்தைக் கெடுத்து ஒரு செயற்கைத்தனத்தை சுமத்தி வைப்பதில்<noinclude></noinclude> g04fr8gjknnxsicetdx06kj5gzby9pq 1839149 1839103 2025-07-04T15:41:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>20. பலவித நடைகள்</b>}}}} {{larger|<b>பே</b>}}சுவது மாதிரியே எழுத வேண்டும் என்ற நோக்கு எழுத்தில் பலவிதமான பேச்சு வழக்குகளும் இடம்பெறுவதற்கு வழி வகுத்தது. கதைகளில் இது அதிகமாயிற்று. கதைகள் எழுதுகிற படைப்பாளிகள் அவரவர்களுக்கு நன்கு பரிச்சயமான சூழ்நிலைகள், அங்கே வசிப்பவர்களின் வாழ்க்கை முறைகள், குணாதிசயங்கள், போக்குகள் முதலியவற்றை தங்கள் எழுத்துக்களில் பிரதிபலித்துக் காட்டுவது இயல்பாயிற்று. எனவே, வெவ்வேறு வட்டாரங்களின் பேச்சு மொழியும், பழக்க வழக்கங்களும், மனித சுபாவங்களும் எழுத்து மூலம் வடிவம் பெற்றன. காலப் போக்கில், ‘வட்டார இலக்கியம்’ என்று பகுத்துப் பார்க்கிற ஒரு மனோபாவமும் எழுத்தாளர்களிடமும் ரசிகர்கள் மத்தியிலும் தோன்றியது. குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் என்று காட்டிக் கொள்வதற்காக ஒரு சிலர், அந்த வட்டாரத்தின் பேச்சு வழக்குகளையும் அங்கு மட்டுமே வழக்கத்தில் இருக்கிற தனிப் பிரயோகங்களையும் சொல் சிதைவுகளையும் அளவுக்கு அதிகமாகத் தங்கள் எழுத்திலே திணித்து, எழுத்து நடையின் இயல்பான ஓட்டத்தைக் கெடுத்து ஒரு செயற்கைத்தனத்தை சுமத்தி வைப்பதில்<noinclude></noinclude> 7yav6etndcc8vs9q1jzxezj4y5ktq50 பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/3 250 171058 1839223 1544597 2025-07-05T07:22:36Z 61.1.189.83 1839223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="செண்பகம்" /></noinclude>{{center|{{Xx-larger|<b>தமிழர் தளபதிகள்</b>}}}} {{center|புலவர். கா. கோவிந்தன், எம்.ஏ. எம்.எல்.ஏ.}} {{center|சபாநாயகர்}} {{c|தமிழ்நாடு சட்டப்பேரவை}} {{center|{{Xx-larger|<b>நாதன் பதிப்பகம்</b>}}}} {{center|{{Xx-larger|<b>192 வது மெயின் ரோடு சி.ஐ.டி நகர்</b>}}}} {{center|{{Xx-larger|<b>சென்னை-35</b>}}}}<noinclude></noinclude> mfri09w12g13eahjio3uvn46iya1o20 பக்கம்:ஒத்தை வீடு.pdf/175 250 202665 1839085 1838476 2025-07-04T12:10:43Z Booradleyp1 1964 1839085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||175}}</noinclude>சித்திக்காரியான லட்சுமி வாசல் காலில் நின்றபடியே, கணவனை புருவச் சுழிப்போடு பார்த்தாள். அவர் விளக்கினார். “இவனுக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கும்போல தோணுது. எதுக்கும் கொஞ்சம் பழைய சாதத்த எடுத்துட்டு வா இவன் சிறுநீர கலந்து பார்க்கலாம்.” “நேற்று ராத்திரி நல்லாத்தானே சாப்பிட்டான்.” “நேற்று ராத்திரி கிடக்கட்டும். இப்போ சாப்பிட நினைச்சாலே வயிறு குமட்டுதாம்.” “என்ன வயிறோ.” சித்திக்காரி, பழையபடியும் - அதேசமயம் பாதியளவு மட்டுமே முருங்கை மரத்தில் ஏறினாள். நேற்று கணவரிடம் எதிர்பார்த்தது கிடைக்காததால் அந்தக் கோபத்தை இப்படிக் காட்டினாள். என்றாலும், ஒரு தேங்காய் சிறட்டையில், பழைய சாதத்தை வைத்து குளியலறையில் வைத்து விட்டுப் போனாள். அவள் வெளியே வந்ததும், செல்வா உள்ளே போனான். பத்து நிமிடம் கழித்து சித்தப்பா போனார். வெள்ளைச் சாதம் மஞ்சளாகவில்லை. அவன் இமைகளை விலக்கி, விழிகளைப் பார்த்தார். மஞ்சள் நிறம் இல்லை. காமாலை இல்லை என்று கண்டறிந்ததும் அவருக்கு மகிழ்ச்சி. ஆனாலும், டாக்டரிடம் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். என்றும் நினைத்துக் கொண்டார். உடல் நிலை என்று வரும்போது. சுய அனுமானமும் சுய மருந்தும் தவறானவை என்பதை புரிந்து வைத்திருப்பவர். அண்ணன் மகனுக்கு சிறிது அதட்டலாக ஆணையிட்டார். “சீக்கிரமா டிரெஸ் பண்ணுடா. எனக்குத் தெரிந்து, மஞ்சள் காமாலை இல்லை. ஆனாலும், டாக்டர்கிட்ட டெஸ்ட் செய்து பார்க்கலாம்.” வேறு வழியில்லாமல், செல்வா, அவசர அவசரமாய் லுங்கியில் இருந்து விடுபட்டு, பேண்ட் சட்டைக்குள் போனான். சித்தப்பா, அவனை கைத்தாங்கலாக நடத்தியபடியே, ‘லட்சுமி... இவனை டாக்டர்கிட்ட காட்டிட்டு வாறேன்’ என்ற விளக்கத்திற்கு, ஆங்காரமாக ‘ஊங்’ கொட்டினாள். வீதி வழியாக, அவனை விலாவோடு சேர்த்து அணைத்தபடி நடத்திக் கொண்டு வந்த சித்தப்பா, ‘அந்த ஸ்கூட்டர் ஸ்டாண்டு வரைக்கும் தம்பிடிச்சு நடந்திடு’ என்றார் போவோர் வருவோர் அந்த இருவரையும் போய்க் கொண்டும், நின்றும் பார்த்தார்கள். செல்வாவிற்கு என்ன என்பது மாதிரி கண்களால் கேட்டார்கள்.<noinclude></noinclude> dkomzm5m75zgu8469sy55pmbjopc5l7 பக்கம்:ஒத்தை வீடு.pdf/176 250 202667 1839086 1838480 2025-07-04T12:12:10Z Booradleyp1 1964 1839086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|176||புதைமண்}}</noinclude>சிலர் வாயால் கேட்டார்கள். அந்தத் தெருவாசிகளுக்கு செல்வா மிகவும் பிடித்துப் போன பையன். அவர்களுக்கு அவசர அவசரமாக விளக்கமளித்துக் கொண்டே சித்தப்பாக்காரர், அந்த அரண்மனை வீட்டுப் பக்கம் வந்தபோது, ஒரு இண்டிகா கார் வெளிப்பட்டது. அவர்கள் அருகே நின்றது. மோகனன் கேட்டான். “எங்க போறீங்க அங்கிள்?” “என்ன மோகனனா! ஒன்னை ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கொரு தடவைதான் பார்க்க முடியுது. இன்னிக்கு நிச்சயம் மழை வரும்.” “அப்போவும் புழல் ஏரி பெருகாமல், நம்மை சிரமப்படுத்தும். இவனோட எங்க அங்கிள் போறீங்க...” “இவனுக்கு சாப்பாட்டை, நினைத்தாலே வாந்தி வருதாம். அதனால மஞ்சள் காமாலையான்னு கண்டுபிடிக்க டாக்டர்கிட்ட போறேன்.” “நல்லவேளை என்கிட்ட சொன்னீங்க அங்கிள்! எனக்கும் சாப்பாட்ட நினைத்தால் குமட்டுது. இதனால் எங்க பேமிலி டாக்டருக்கு போன் செய்தேன். சென்னையில மெட்ராஸ் ஐ மாதிரி, இது ஒரு விதமான வயிற்று நோயாம். நிறைய பேருக்கு வந்திருக்காம். ஆனால், மஞ்சள் காமாலை போல, நாற்பது நாள் தங்காமல் ஒரு ஊசியோட போயிடுமாம். நானும், இப்ப டாக்டர்கிட்ட போறேன். இவனையும் வேணுமுன்னா கூட்டிட்டுப் போறேன். உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். டோண்ட் ஒர்ரி இவனை என்கிட்ட ஒப்படைச்சுடுங்க. மாமுலாயிடுவான்.” செல்வா, மிரண்டான். அரண்டான். மோகனன் அவனை தானாக காரில் ஏறிக் கொள்ளும்படி பேசினான். “சும்மா சொல்லப்படாது அங்கிள். உங்கப் பையன் ரொம்பவும் நல்லவன். ஒரு தடவை அவன் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தேன். முத்து முத்தான கையெழுத்து. மனசுல எந்த கல்மிஷமும் இல்லாதவங்களுக்குத்தான், எழுத்துக்கள் அச்சடிச்சது மாதிரி வருமாம்.” “டி.டி.பி. போட்டது மாதிரின்னு சொல்லு என்னோட எழுத்தும் முத்து முத்தாத்தான் இருக்கும்.” “நீங்களும் கல்மிஷம், இல்லாத மனிதர்தானே. ஒங்க இலாகாவிலேயே கை நீளாத ஒரே ஊழியர் நீங்கதானே. ஆனால், ஒங்களுக்கும் சேர்த்து எங்கப்பன் கொள்ளை அடிக்கான்.”{{nop}}<noinclude></noinclude> c2vjtf6i4rwmtczdt1aqc53s5a6bci8 பக்கம்:ஒத்தை வீடு.pdf/206 250 202728 1839102 1838904 2025-07-04T13:11:18Z Booradleyp1 1964 1839102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|206||புதைமண்}}</noinclude>பிரிட்ஜ் இன்னும் ஒரு மணிநேரத்துல ரிப்பேராகி விடும். எங்கப்பா, டூர்ல இருந்தே, எலக்ட்ரிசிட்டி போர்டு சேர்மன்கிட்ட பேசிட்டாரு...” இருவர் சிந்தனைகளும், தத்தம் உள் உலகிற்குள் சஞ்சரித்த போது, அதை கலைப்பதுபோல் மேற்கு அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அதிலிருந்து எட்டிப்பார்த்த செல்வாவைப் பார்த்து, சித்தி முகம் சுழித்தாள். கவிதா, சித்திக்காரிக்கு தெரியாமல், அவளுக்கு பின்னால் நகர்ந்து கொண்டு, தலைக்கு மேலே கையை வைத்து, அவனுக்கு சமிக்ஞை செய்தாள். செல்வா, கவிதாவை பார்த்ததுதான் தாமதம். ஏற்கெனவே நொந்து போயிருந்த கதவை படாரென்று சாத்திக்கொண்டான். சித்திக்காரி, கவிதாவிடம் ஒருபாடு அழுதாள். “என் வீட்லேயே இருந்துக்கிட்டு, எப்படி என்னை மூஞ்சில அறையறது மாதிரி சாத்துறான் பாரு... பால் கொடுக்கிற மாட்ட, பல்ல பிடித்து பார்க்கிறான். நீ, பெரிய இடத்துப் பெண்ணு... ஆனாலும், எப்படி ஒரு ஆம்பள வரான்னு என் பின்பக்கமா மறஞ்சிக்கிடறே... இதுக்குப் பேர்தாம்மா வளர்ப்பு முறை...” அந்தக் கதவுச் சத்தம், கவிதாவையும் பேயாய் அறைந்தது. ஆனாலும், ஒரு ஆறுதல். அவன் லுங்கியில் இருப்பதை பார்த்துவிட்டு, தனது சமிக்ஞையினால் அவன் பேண்ட், சர்ட்டை போட்டுக் கொண்டு சிறிது காலம் தாழ்த்தி வருவான் என்று அனுமானித்தாள். ‘அவர் சட்டை தொலளதொளப்பாய் இருக்கிற பார்த்தால், என்னை பார்க்காம இளைச்சிட்டார் போலிருக்கே... சாதாரண இளைப்பல்ல... பாதி இளைப்பு... முக மெலிவில் பற்கள்தான் பெரிதாய் தோன்றின.’ அவள் கிள்ளி விளையாடிய கன்னங்கள், கிண்ணக் குழிகளாய் தோன்றின. அந்தச் சமயத்தில், அவன் கௌரவத்தில், தன் வீட்டு கெளரவமும் இருப்பதை புரிந்துகொண்ட சித்தி, சிறிது விட்டுக் கொடுத்துப் பேசினாள். “ஒரு வாரமாத்தான் இப்படி எதையோ பறி கொடுத்தது மாதிரி இருக்கான். மற்றபடி, நல்ல பையன்தான். இவருக்கு கூடப்பிறந்த அண்ணன் மகன். நான் இவனை என் சொந்த மகன் மாதிரிதான் நினைக்கேன். ஆனால், அவன்தான் இந்த ஒரு வாரமா...” கவிதா, நகத்தை கடித்தபடியே மெல்லச் சிரித்தாள். அவர் தன்னால்தான் அப்படி இளைத்துப் போயிருக்கிறார். சொல்லாமல் கொள்ளாமல் போனது தப்புத்தான். ஆனால், கதவு மூடித்தானே கிடந்தது. என் மீது இருக்கும் உரிமையான கோபத்தை, இப்படி கதவைச் சாத்தி காட்டுகிறாரா... அல்லது தனக்கும் அவருக்கும்<noinclude></noinclude> kcdaj9jp6iaiiy5pgovfqet3l62shot பக்கம்:ஒத்தை வீடு.pdf/221 250 202749 1839087 762284 2025-07-04T12:17:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||221}}</noinclude>“ஹலோ... நீங்க மோகனனோட பார்ட்னர் செல்வாதானே? ஐ அம் தாமோதரன். அன்றைக்கு கிளப்ல பார்த்திருப்பீங்களே?” “அதிருக்கட்டும். அந்தப் பையன் யார்?” “இதுவெல்லாம் சொல்லியா தெரியணும். என் பக்கத்து வீட்டு குடிசைப் பையன். அவனுக்கு பிடித்தமான குலோப் ஜாம், கட்லட், சென்னா பூரி - இதுங்கல வாங்கிக் கொடுப்பேன். கை நிறைய காசும் கொடுப்பேன். அவனுக்கு பிடித்ததை நான் கொடுக்குறதால, எனக்கு பிடித்ததை அவனும் செய்யுறான். அவ்வளவுதான்.” செல்வா, அந்த சிறுவனை தூக்கி நிறுத்தினான். கன்னத்தில் மாறி மாறி அடித்தான். தலையில் கை நிறைய குட்டினான். பிறகு, கத்தினான். “இந்த அயோக்கியன்கிட்ட மாட்டிக்காதடா. பெண்டாளப் பிறந்தவங்கள மாதிரி... இவன் ஆணாளப் பிறந்த அயோக்கியன் திரும்பி பாராமல் வீட்டுக்கு ஓடுடா. முதல்ல ஒன் வீட்டு அட்ரஸை சொல்லு.” “அப்பா பேரு ஜெயபால். மயிலாப்பூர் கபாலித் தோட்டத்துல மூனாவது சந்துல எட்டாம் நம்பர் வீடு.” அந்தப் பெரியவர்... பெரியவர் என்ன பெரியவர்... கிழட்டுப் பயல்... அவசர அவசரமாக பேண்ட் பட்டன்களை மூடியபோது, செல்வா. அந்த பையனின் பிடரியில் ஒரு அடி போட்டான். “இனிமேல் இந்த மாதிரி காரியத்துக்கு சம்மதிப்பியா? சம்மதிப்பியா?” என்று கேட்டபடியே அடித்தான். “அடிக்காதண்னா... அடிக்காதண்னா... மாட்டேன்... மாட்டேன்... மாட்டவே மாட்டேன்...” அந்தச் சிறுவன், பையை உப்ப வைத்த பைவ் ஸ்டார் சாக்லேட்டுகளையும், பூமர் பப்லுகாம்களையும், அந்த கிழவரின் முகத்தில் கல்லெறிவதுபோல் எறிந்தான். பிறகு கைகளே காலாகும்படி, அவற்றை தொங்க போட்டபடியே ஓடினான். ஓடிக்கொண்டே இருந்தான். இன்னும் பிரமிப்பிலிருந்து மீளாத தாமோதரக் கிழவன்மேல், செல்வா பாய்ந்தான். அவரை மல்லாக்கத் தள்ளி வயிற்றில் ஏறிக்கொண்டு முகத்திலும் கழுத்திலும் மார்பிலும் குத்தினான். கால்களால் இரண்டு காதுகளையும் நசுக்கினான். கூப்பாடு போடப்போன அவர் வாயில் மண்ணை அள்ளிப் போட்டு குத்து<noinclude></noinclude> qumtxfevqgljuopljhbtq9gbiwuw1qu பக்கம்:ஒத்தை வீடு.pdf/222 250 202750 1839091 762285 2025-07-04T12:27:38Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|222||புதைமண்}}</noinclude>குத்தாய் குத்தினான். தாமோதரனின் வாய் உரலானது. அதற்குள், கிடந்த மண், தானியமானது. செல்வா, கை உலக்கையானது. கவிதா, ஓடோடி வந்தாள். அவள் பின்னால் வேடிக்கை கூட்டமும் ஓடி வந்தது. அதற்குள் பூங்காவின் வாட்ச் அண்டு வார்டு வீரர்கள், செல்வாவை கீழே தள்ளி முன் கைகளை பின்புறமாய் வளைத்துப் பிடித்தார்கள். அந்தக் கிழவர் சிறிதுநேரம் வெட்கத்தால் தலை கவிழ்ந்தார். அந்த தலையை நிமிர்த்துவதுபோல், "இவனை ஒரு வாரமா வாட்ச் பண்ணிகிட்டிருக்கேன். சரியான பைத்தியம். மேலதிகாரிகள்கிட்ட சொன்னால், 'பைத்தியத்துக்கு, எல்லாரும் பைத்தியம் மாதிரி தெரியுமுன்னு' என்னை நக்கல் பண்றாங்க..." என்றான் ஒரு வார்டு. தாமோதரன் கிழவருக்கு தப்பிக்க வழி கிடைத்ததுபோல் தோன்றியது. மண் கலந்த கையோடு செல்லுலார் போனை எடுத்தார். {{dhr|2em}} <section end="14"/><section begin="15"/> {{larger|<b>15</b>}} {{dhr|2em}} குய்யோ முறையோ' கூப்பாடோ, ஒப்பாரியோ கேட்க முடியாத இருண்டு அறையில், செல்வா, போய்ச் சேர்ந்தான். முழங்கால் இரண்டிலும் ரூல் தடியை வைத்து உருட்டல், கை நகங்களில் குண்டூசிகளால் குத்தல், காதுகளை நெட்டெடுத்தல், முகக் குத்து, உச்சி முடி இழுப்பு, லத்திக் கம்படி, ஐசில் கிடத்தல் போன்ற அத்தனை தடாலடிகளுக்கும் உட்பட்ட செல்வா, மீண்டும் லாக்கப் அறையில் ஜட்டியோடு நிறுத்தப்பட்டான். ஆரம்பத்தில் கொடாக்கண்டனாக இருந்ததால், விடாக் கண்டரான இன்ஸ்பெக்டரின் ஆணையின் பேரில், காவலர்கள் நடத்திய 'விசாரணையில்'; செல்வா கக்கிய உண்மைகள் பொய்களைவிட பயங்கரமாய் தோன்றின. புகார் கொடுத்த தாமோதரன். புள்ளிகளிலே முக்கியமான புள்ளி. அவரா அந்தச் சிறுவனிடம் அப்படி நடந்து கொண்டார் என்பதை இன்ஸ்பெக்டரால் ஜீரணிக்க முடியவில்லை. 'இவனுங்க தாய்யா இப்படி நடப்பானுங்க' என்று காவலர்கள் அவரிடம் சொன்னபோது, அந்த இன்ஸ்பெக்டருக்கு, செல்வா மீது சிறிது அனுதாபம் ஏற்பட்டது சட்டப்படி பெரிய குற்றவாளியான ஒருவர், சின்னக் குற்றவாளி மீது புகார் கொடுத்ததும், அந்த விசாரணையின் போக்கு எதில்<noinclude></noinclude> 70ergwu404zdguirbralctk1p10uymw 1839221 1839091 2025-07-05T05:05:04Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|222||புதைமண்}}</noinclude>குத்தாய் குத்தினான். தாமோதரனின் வாய் உரலானது. அதற்குள், கிடந்த மண், தானியமானது. செல்வா, கை உலக்கையானது. கவிதா, ஓடோடி வந்தாள். அவள் பின்னால் வேடிக்கை கூட்டமும் ஓடி வந்தது. அதற்குள் பூங்காவின் வாட்ச் அண்டு வார்டு வீரர்கள், செல்வாவை கீழே தள்ளி முன் கைகளை பின்புறமாய் வளைத்துப் பிடித்தார்கள். அந்தக் கிழவர் சிறிதுநேரம் வெட்கத்தால் தலை கவிழ்ந்தார். அந்த தலையை நிமிர்த்துவதுபோல், “இவனை ஒரு வாரமா வாட்ச் பண்ணிகிட்டிருக்கேன். சரியான பைத்தியம். மேலதிகாரிகள்கிட்ட சொன்னால், ‘பைத்தியத்துக்கு, எல்லாரும் பைத்தியம் மாதிரி தெரியுமுன்னு’ என்னை நக்கல் பண்றாங்க...” என்றான் ஒரு வார்டு. தாமோதரன் கிழவருக்கு தப்பிக்க வழி கிடைத்ததுபோல் தோன்றியது. மண் கலந்த கையோடு செல்லுலார் போனை எடுத்தார். {{dhr|2em}} <section end="14"/><section begin="15"/> {{larger|<b>15</b>}} {{dhr|2em}} ‘குய்யோ முறையோ’ கூப்பாடோ, ஒப்பாரியோ கேட்க முடியாத இருண்டு அறையில், செல்வா, போய்ச் சேர்ந்தான். முழங்கால் இரண்டிலும் ரூல் தடியை வைத்து உருட்டல், கை நகங்களில் குண்டூசிகளால் குத்தல், காதுகளை நெட்டெடுத்தல், முகக் குத்து, உச்சி முடி இழுப்பு, லத்திக் கம்படி, ஐசில் கிடத்தல் போன்ற அத்தனை தடாலடிகளுக்கும் உட்பட்ட செல்வா, மீண்டும் லாக்கப் அறையில் ஜட்டியோடு நிறுத்தப்பட்டான். ஆரம்பத்தில் கொடாக்கண்டனாக இருந்ததால், விடாக் கண்டரான இன்ஸ்பெக்டரின் ஆணையின் பேரில், காவலர்கள் நடத்திய ‘விசாரணையில்’; செல்வா கக்கிய உண்மைகள் பொய்களைவிட பயங்கரமாய் தோன்றின. புகார் கொடுத்த தாமோதரன். புள்ளிகளிலே முக்கியமான புள்ளி. அவரா அந்தச் சிறுவனிடம் அப்படி நடந்து கொண்டார் என்பதை இன்ஸ்பெக்டரால் ஜீரணிக்க முடியவில்லை. ‘இவனுங்க தாய்யா இப்படி நடப்பானுங்க’ என்று காவலர்கள் அவரிடம் சொன்னபோது, அந்த இன்ஸ்பெக்டருக்கு, செல்வா மீது சிறிது அனுதாபம் ஏற்பட்டது சட்டப்படி பெரிய குற்றவாளியான ஒருவர், சின்னக் குற்றவாளி மீது புகார் கொடுத்ததும், அந்த விசாரணையின் போக்கு எதில்<noinclude></noinclude> kvywfgr4hln55ed8879a8dikkd7glkz பக்கம்:ஒத்தை வீடு.pdf/223 250 202751 1839222 762286 2025-07-05T05:17:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||223}}</noinclude>கொண்டு போய்விடும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படாததும், இன்ஸ்பெக்டருக்கு குழப்பத்தைக் கொடுத்தது. புள்ளியோ பெரிய புள்ளி. அதோடு கரும்புள்ளி. ஆகையால், கிரைம் இன்ஸ்பெக்டரான இவர், ‘இது லா அண்டு ஆர்டர் பிராப்ளம்’ என்று அருகே உள்ள இருக்கையில் இருந்த எல் அண்ட் ஓ இன்ஸ்பெக்டரிடம் சொன்னார். அந்த எல் அண்ட் ஓ வோவோ, ‘பப்ளிக்கா நடப்பதாலேயே, லாவும் ஆர்டரும் சிதைந்ததாக அர்த்தம் இல்லை. இது கிரைம். ஆகையால், கிரைம் இன்ஸ்பெக்டரான நீதான் இதை விசாரிக்கணும். என்னை விடுப்பா...’ என்றார். லாக்கப் அறையில், வழக்கமாக வாடிக்கையாளர்கள், வம்படித்து சிரித்தபோது, தான் மட்டும் ஜட்டியோடு நிற்பது செல்வாவிற்கு அவமானமாகத் தோன்றியது. ஆனாலும், லுங்கி கிடைத்தால் எப்படியாவது தூக்குப் போட்டோ, இல்லையானால் எப்படியாவது தப்பித்து தண்டவாளத்தில் தலை வைத்தோ, பஸ் முன் பாய்ந்தோ, தீக்குளித்தோ, சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவிற்கு வந்துவிட்டான். இதனால் அவன் முகம் உறுதிப்பட்டது. இதயம் வலுப்பட்டது. பார்வை தீட்சண்யமானது 'சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் காலளவு' என்ற பழமொழியை நிரூபிப்பவன்போல் நெஞ்சு நிமிர்த்தி நின்றான்.உடலெங்கும், வரிக்குதிரை மாதிரி வரி வரியாய், லத்திக் கம்பு தடயங்கள், ஒரு விரல் பரிமாணத்திற்கு குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள் போட்டிருந்தன. கண் இமைகள் வீங்கிப் போயிருந்தன காதுகளில் ரத்தச் சிதைவுகள். ஆனாலும், இவற்றை பற்றி கவலைப்படாதவன் போல் கைகளை வீரக்கட்டு என்பார்களே விவேகானந்தர் கட்டு அப்படி கட்டிக்கொண்டு, நின்றான். ஒரு டெலிபோன் கூச்சலை மௌனமாக்கிய காவலாளர் ஒருவர், அதன் குமிழை அப்படியே வைத்துவிட்டு, இன்ஸ் பெக்டரின் காதில் கிசுகிசுத்தார் அவரும் அலறியடித்து, பேசவேண்டிய குமிழின் பொந்திற்குள் காதை வைத்தும், கேட்க வேண்டிய குமிழில் வாய் வைத்தும், "எஸ் ஸார்." என்று சொல்லி விட்டு, எதிர்முனை ஆணைக்கு காத்து நின்றார். உடனே, கான்ஸ்டபிள் வாலிபர், அந்த டெலிபோன் கருவியை பலவந்தமாய் பிடுங்கி, உள்ளபடியே வாய்க்கும் காதுக்கும் வைத்து பொருத்தியபோது, கோபக்கார இன்ஸ்பெக்டர், "என்னடா. செய்யுறே நாய்ப்பயலே' என்றார். எதிர்முனையில் என்ன கிடைத்ததோ? இன்ஸ்பெக்டரின் காக்கிச் சட்டை. நனைந்தது.<noinclude></noinclude> 1zais8h062nsanxkpky28okv1sn7pru 1839241 1839222 2025-07-05T09:22:30Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||223}}</noinclude>கொண்டு போய்விடும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படாததும், இன்ஸ்பெக்டருக்கு குழப்பத்தைக் கொடுத்தது. புள்ளியோ பெரிய புள்ளி. அதோடு கரும்புள்ளி. ஆகையால், கிரைம் இன்ஸ்பெக்டரான இவர், ‘இது லா அண்டு ஆர்டர் பிராப்ளம்’ என்று அருகே உள்ள இருக்கையில் இருந்த எல் அண்ட் ஓ இன்ஸ்பெக்டரிடம் சொன்னார். அந்த எல் அண்ட் ஓ வோவோ, ‘பப்ளிக்கா நடப்பதாலேயே, லாவும் ஆர்டரும் சிதைந்ததாக அர்த்தம் இல்லை. இது கிரைம். ஆகையால், கிரைம் இன்ஸ்பெக்டரான நீதான் இதை விசாரிக்கணும். என்னை விடுப்பா...’ என்றார். லாக்கப் அறையில், வழக்கமாக வாடிக்கையாளர்கள், வம்படித்து சிரித்தபோது, தான் மட்டும் ஜட்டியோடு நிற்பது செல்வாவிற்கு அவமானமாகத் தோன்றியது. ஆனாலும், லுங்கி கிடைத்தால் எப்படியாவது தூக்குப் போட்டோ, இல்லையானால் எப்படியாவது தப்பித்து தண்டவாளத்தில் தலை வைத்தோ, பஸ் முன் பாய்ந்தோ, தீக்குளித்தோ, சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவிற்கு வந்துவிட்டான். இதனால் அவன் முகம் உறுதிப்பட்டது. இதயம் வலுப்பட்டது. பார்வை தீட்சண்யமானது ‘சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் காலளவு’ என்ற பழமொழியை நிரூபிப்பவன்போல் நெஞ்சு நிமிர்த்தி நின்றான். உடலெங்கும், வரிக்குதிரை மாதிரி வரி வரியாய், லத்திக் கம்பு தடயங்கள், ஒரு விரல் பரிமாணத்திற்கு குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள் போட்டிருந்தன. கண் இமைகள் வீங்கிப் போயிருந்தன காதுகளில் ரத்தச் சிதைவுகள். ஆனாலும், இவற்றை பற்றி கவலைப்படாதவன் போல் கைகளை வீரக்கட்டு என்பார்களே விவேகானந்தர் கட்டு அப்படி கட்டிக்கொண்டு, நின்றான். ஒரு டெலிபோன் கூச்சலை மௌனமாக்கிய காவலாளர் ஒருவர், அதன் குமிழை அப்படியே வைத்துவிட்டு, இன்ஸ்பெக்டரின் காதில் கிசுகிசுத்தார் அவரும் அலறியடித்து, பேசவேண்டிய குமிழின் பொந்திற்குள் காதை வைத்தும், கேட்க வேண்டிய குமிழில் வாய் வைத்தும், “எஸ் ஸார்.” என்று சொல்லிவிட்டு, எதிர்முனை ஆணைக்கு காத்து நின்றார். உடனே, கான்ஸ்டபிள் வாலிபர், அந்த டெலிபோன் கருவியை பலவந்தமாய் பிடுங்கி, உள்ளபடியே வாய்க்கும் காதுக்கும் வைத்து பொருத்தியபோது, கோபக்கார இன்ஸ்பெக்டர், “என்னடா, செய்யுறே நாய்ப்பயலே” என்றார். எதிர்முனையில் என்ன கிடைத்ததோ? இன்ஸ்பெக்டரின் காக்கிச் சட்டை நனைந்தது.<noinclude></noinclude> 54j8m6w7p3rb7pqhb4qr38q5is2xmwb பக்கம்:ஒத்தை வீடு.pdf/224 250 202752 1839244 762287 2025-07-05T09:38:20Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|224||புதைமண்}}</noinclude>வேர்வையா? சிறுநீரா? என்று அனுமானிக்க முடியவில்லை. பிறகு, “கான்ஸ்டபிளைத்தான், நான் திட்டினேன் ஸார். தப்புத்தான் ஸார். கான்ஸ்டபிளையும் அப்படி திட்டக்கூடாதுதான் ஸார்” என்று கெஞ்சினார். எதிர்முனைக்காரர், ‘ரிலீஸ் த பாய் செல்வா. நோ எப் ஐ ஆர். எங்கே நான் சொன்னதைச் திருப்பி சொல்லு’ என்று கேட்டிருக்க வேண்டும் உடனே இன்ஸ்பெக்டர், “ரிலீஸ் த பாய் செல்வா. நோ எப்.ஐ.ஆர்” என்று சத்தம் போட்டு கூவினார். எதிர்முனையில் இருந்து என்ன கிடைத்ததோ, ‘எஸ் ஸார்’ செல்வாவை விடுதலை பண்ணிடுறேன். கேஸ் புக் பண்ணல ஸார். அந்த தாமோதரன் பெரிய புள்ளி ஸார். நீங்கதான் அவர் கிட்டயும்... ஓகே... ஓகே... ஸார். உங்க உத்தரவுதான் முக்கியம். அப்புறம், என் மேல போட்ட சார்ச்சீட்டு விசாரணை அறிக்கை உங்க டேபிள்லதான் இருக்குதாம். ‘தப்புத்தான் ஸார்... சமய சந்தர்ப்பம் தெரியாம பேசுறேன் ஸார்.’ என்று சொல்லிவிட்டு, ஆயாசத்தோடு போனை கீழே வைத்தார். முன்பெல்லாம் டெலிபோனில், ‘எஸ் ஸார்’ என்று சொல்லிவிட்டு, பிறகு, தனது ஜூனியர் சகாக்களிடம், சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி தனது ஆலோசனையை கேட்டதாக தம்பட்டம் அடிக்கும் இவர், இப்போது குட்டு வெளியானதால் குட்டுப்பட்டவர்போல் கிடந்தார். எவ்வளவு பெரிய பதவியிலும் இருக்கும், தப்புத் தண்டா ஆசாமி எவருக்கும், மேலதிகாரி என்று வந்துவிட்டால், வேர்வை சுரப்பிகள் விரைந்து செயல்படும். என்பதும், அசல் பிச்சைக்காரர்கள் மாதிரி கெஞ்சுவார்கள் என்பது போலவும் இன்ஸ்பெக்டர் ஒரு நாடமாடும் வெறும் காக்கித் துணியானார். காலவர்கள் திறந்தால் நேரமாகும் என்று நினைத்தவர்போல், சுவரில் அடித்த பித்தளை கம்பிகளில் தொங்கிய சாவிகளில் ஒன்றை எடுத்து லாக்கப் அறையை திறந்தார். கான்ஸ்டேபிள் ஒருவர், மொபைல் போலீஸ் ஒப்படைத்த செல்வாவை, பய பக்தியோடு பார்த்தார். எங்கிருந்தோ கொண்டு வந்த லுங்கியை அவனை அணியும்படி கெஞ்சினார். ரத்தம் பிசிறிய சதைக் கோடுகளை மறைப்பதற்கு சட்டை இல்லை. அடித்த அடியில் அது நூல் கற்றைகளாகி விட்டன. எதிர்முனைக்காரரின் மகள் வரப் போகிறாளாம். அதற்குள், இந்த பயலின் இடுப்புக்கு மேல் நிர்வாணமான பகுதியை எப்படி மறைப்பது? இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரின் காதில் கிசுகிசுத்தார். அவர் லாக்கப்பிற்குள் போய் அங்கே நின்று கொண்டிருந்த ஒருத்தனின் சட்டையை கழட்டி, செல்வாவிற்கு அவரே மாட்டிவிட்டு, அவனை வி.ஐ.பி. போல் சர்வ சலாம்களுடன் இன்ஸ்பெக்டருக்கு முன்னால் உள்ள நாற்காலியில் உட்கார<noinclude></noinclude> 6c23m08xrrygccfxsge4ersndjuwmpw பக்கம்:ஒத்தை வீடு.pdf/225 250 202753 1839247 762288 2025-07-05T09:45:49Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||225}}</noinclude>வைத்துவிட்டு, தனது ஆபீஸ் முதலாளி பார்த்த திசையை பார்த்தார். ஒரு அழகான பெண். அநேகமாக எதிர்முனைக்காரரின் மகளாக இருக்கவேண்டும். அவளோடு, நாற்பது வயது மதிக்கத்தக்க பிள்ளைக்குட்டி தம்பதியினர். இன்ஸ்பெக்டர், தானே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியேறியவர் போல் உடனடியாய் எழுந்து அவர்களை நோக்கி நடந்து, வரவேற்றார். “நீங்க மிஸ் கவிதாதானே?” “ஆமாம் ஸார்.” “என்ன மேடம்? நான் இன்னார் மகள்னு நீங்களே சொல்லியிருந்தால் இவனை எப்பவோ திருப்பி அனுப்பியிருப்பேன்.” “நானும், நீங்க சொன்னது மாதிரி இன்னார் மகள்னு போன் செய்தேன். யாரோ ஒருத்தன் ‘வைடி போனைன்’னு சொன்னான்” அப்படிச் சொன்னது யாராக இருக்கும் என்பதுபோல், கடுமையாய் பாவலா செய்தபடியே இன்ஸ்பெக்டர், காவலர்களைப் பார்க்க, அவர்கள் “நீதான்... நீயேதான்” என்பதுபோல் எதிர்பார்வை பார்த்தார்கள். ஆனாலும், இன்ஸ்பெக்டர் சமாளித்தார். “இங்கே யாரும் அப்படி பேசுறவங்க கிடையாது மேடம். நீங்க கேட்டது டெலிபோன் கிராஸ் டாக்கா இருக்கும்.” இதற்குள், இரும்பாய் உட்கார்ந்திருந்த செல்வா, மெழுகாய் குழைந்து எழுந்து, நின்றான். சித்தப்பாவின் காலில் அப்படியே விழுந்து, “உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன் சித்தப்பா. என்னை மன்னிச்சிடுங்க சித்தப்பா” என்று காலைக் கட்டி அழுதான். அவர், அவனை தூக்கி நிறுத்திவிட்டு, தனது கண்களை துடைத்தபோது, செல்வா, சித்திக்காரியின் தோளில் சாய்ந்து, “சித்தி! எங்கம்மா திட்டாத திட்ட, நீங்க திட்டல... எங்கம்மா போடாத அளவுக்கு எனக்கு சோறு போட்டீங்க... நான் உங்ககிட்ட நன்றியில்லாம நடந்துட்டேன். நீங்களும் என்னை மன்னிக்கணும். உங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படியா பண்ணிட்டேனே” என்று விம்மினான். கவிதாவையும் நன்றியோடு பார்த்தான். அந்த பார்வையில் நளினம் இல்லை. ‘ஆனாலும், எல்லோரையும் மோசடி பண்ணிட்டேனே’ என்று, கவிதாவை பார்த்தபடியே, கண்களை கைகளால் மறைத்துக் கொண்டான். குழந்தைகளை இருபக்கமாக அணைத்துக் கொண்டான். கவிதா, மட்டும் சிறிது விலகிப்போய் துப்பாக்கி அப்பிய சுவர் பக்கம் முகம் போட்டு, அந்தச் சுவரில் கண்ணீர் கோடுகளை<noinclude></noinclude> ahr2pvojxxrz2heeai5tltevm5eprcj பக்கம்:ஒத்தை வீடு.pdf/226 250 202754 1839249 762289 2025-07-05T10:01:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|226||புதைமண்}}</noinclude>போட்டுக் கொண்டிருந்தாள். இவளை, நோட்டமிட்ட இன்ஸ்பெக்டர், எல்லா விவகாரத்தையும் சொன்ன பயல், இவள் காதல் விவகாரத்தை மட்டும் சொல்லாமல் விட்டதில் திகைத்தார். “ஒருவேளை விசாரிப்பு சரியாக கிடைக்கவில்லை என்று பொருளா? அல்லது ஒரு பெண்ணின் பெயரை அம்பலப்படுத்தக்கூடாது என்ற பெருந்தன்மையா?” என்று ஆய்வு செய்தார். எல்லோரும் பேசி, இடக்கு மடக்காய் விவகாரம் விகாரமாகி விடக்கூடாது என்று நினைத்த இன்ஸ்பெக்டர், பொதுப்படையாகக் கேட்டார். “நீங்க தானே இவரோட சித்தப்பா சிவனுப்பாண்டி? அந்தம்மா உங்க ஒய்ப் லட்சுமி. இது அருண், அவள் சுபேதா. சரியா...” சரிதான் என்பதுபோல், குழந்தைகள் உட்பட எல்லோரும் தலையாட்டினார்கள். இன்ஸ்பெக்டர், மீண்டும் கேட்டார். “மோகனன் என்கிறவன் யாரு?” செல்வா, குடும்பத்தினர் மௌனமாய் நின்றபோது, கவிதா, கண்ணீரை துடைத்துக்கொண்டு, “அவன் ஒரு சமூக விரோதி. என் கூடப்பிறந்த அண்ணன்.” என்றாள். இன்ஸ்பெக்டருக்கு, போன மூச்சு திரும்பி வந்தது. இந்த மோகனனை வைத்தே, எதிர்முனை கொம்பனை மடக்கி விடலாம். தனக்கு எதிராக போடப்பட்ட சார்ச்சீட்டும், விசாரணை அறிக்கையும், பதவி உயர்வாக மாறும் என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை ஆனாலும், அந்த சமயத்தில், அவர் மனிதனாகவே பேசினார் சிவனுப்பாண்டியை நேரடியாகவும், கவிதாவை மறைமுகமாகவும் பார்த்தபடியே பேசினார். “இந்தப் பையன் உங்க எல்லார் மேலயும் உயிரையே வைத்திருக்கான். விதி வசத்தால் தன்னையும் மீறி இப்படி ஆயிட்டான். இவன் வேணுமுன்னே உங்கள நோகடிக்கல. இப்போ... இவன் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளி மாதிரி.” செல்வா, குறுக்கிட்டான். “எல்லா விஷயத்தையும் சொல்லிடுங்க இன்ஸ்பெக்டர் ஸார். இல்லாட்டி, எங்க சித்தியாலதான் இப்படி ஆயிட்டேன்னு, எங்க சித்தப்பா எங்க சித்தியைத் திட்டுவார்.” “பேசாம இருடா. பெரியவங்க பேசும்போது குறுக்கிடப்படாது என்கிற பண்பாட்டை கத்துக்கோ மிஸ்டர். சிவனுப்பாண்டி! இவன் எல்லா விஷயங்களையும் என்கிட்ட சொல்லிட்டான். இவன் ரோசமா ஓடிப்போனதும், செல்லமாய் பழகின குழந்தைகளை<noinclude></noinclude> s2lo5pckrtnl47njkydwpij4mrhqk5o பக்கம்:ஒத்தை வீடு.pdf/227 250 202755 1839250 762290 2025-07-05T10:09:06Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||227}}</noinclude>வெறுத்ததும், இவன் தானாய் செய்ததல்ல. அதுக்கு காரணங்கள்ன் இருக்கு. அது உங்களுக்கு தெரிய வேண்டாம். அதற்கு உரியவர்களை கவனிக்க வேண்டியது என்னோட பொறுப்பு. இப்போது, இவனுக்கு தேவை மனோதத்துவ ரீதியான சிகிச்சை என் தங்கை சத்தியா, கிளீனிக்கல் சைக்காலஸிஸ்ட் அவள்கிட்ட ஒரு கேசை கொடுக்கிறதா நினைக்காதிங்க. பையனோட சிக்கல்கள்களை சரிப்படுத்திடுவாள். இல்லையானால், அப்பாய்மெண்ட் வாங்கவே ரெண்டு மாதம் ஆகும்.” இன்ஸ்பெக்டர், டெலிபோனில், தங்கையிடம் பேசினார். பிறகு, இவர்களிடம், “நாளைக்கு காலையில் பத்து மணிக்கு அப்பாய்மெண்ட் கொடுத்திருக்காள். இந்த விசிட்டிங் கார்டுதான் அவளுடைய அட்ரஸ். என்னுடைய மைத்துனரும், அதாவது தங்கையின் கணவரும் மனோதத்துவத்தில் லண்டனில் ‘டாக்டர் ஆப் லெட்டர்ஸ்’ என்று பட்டம் பெற்ற இரண்டு இந்தியர்களில் ஒருவர். ஆனாலும், தொழிலுக்கு மதிப்பு கொடுக்காத தேசமாச்சே நமது நாடு. எதுக்காக சொல்றேன்னா, என் தங்கையால் முடியாட்டாலும், அவர் சரிப்படுத்திவிடுவார் என்கிறதுக்காகத்தான் சொன்னேன் நீங்க எல்லாரும் இந்த மேடம் கவிதாவுக்கு நன்றி சொல்லணும். இவங்க அப்பாதான் இந்த மேடத்தோட பெயரை என்கிட்ட சொன்னவரு. செல்வா! ‘ஆயிரம் மனச்சிக்கல்லயும் நீ கிரேட்டுடா.’ என்று கவிதாவையும், அவனையும் மாறி மாறி பார்த்தபடி, பேசினார். கவிதா, புரிந்து கொண்டாள். செல்வா, வலிக்கிற தசைக்கோடுகளை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.” சித்திக்காரி, ஒரு ‘லா’ பாயிண்டை கிளப்பினாள். “அந்தம்மாகிட்ட இவனுக்கு என்ன சிக்கலுன்னு நீங்க சொல்லலியே அய்யா...” “உங்களுக்கு தெரியக்கூடாது என்கிறதுக்காகத்தான் சொல்லல இனிமேல் என் தங்கைபாடு... இந்தப் பையன் பாடு... உங்ககிட்ட எந்த பணமும் வாங்க மாட்டாளாம். காரணம்... இவன் பிரச்சினை, அவள் தொழிலில் ஒரு சவாலாம். சரி... போயிட்டு...” குழந்தைகள் தவிர, எல்லோரும் முகத்தில் ஈயாடாமல் போனார்கள் வாசலுக்கு போய்க் கொண்டிருக்கும்போது, இன்ஸ்பெக்டர், “மிஸ் கவிதா... இங்க வாறீங்களா... நீங்க மட்டும்.” என்றார். கவிதாவும், இன்ஸ்பெக்டரும் பாதி வழியில் சந்தித்துக் கொண்டார்கள். “மிஸ் கவிதா! இவனை நீங்க நண்பனாகவோ இல்ல காத... ஸாரி அண்டை வீட்டுக்காரனாகவோ அடைந்ததற்கு பெருமைப்<noinclude></noinclude> i8kdc8vhw2aonpdr4z19r664kqj2gx3 பக்கம்:ஒத்தை வீடு.pdf/228 250 202756 1839251 762291 2025-07-05T10:23:32Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|228||புதைமண்}}</noinclude>படணும். நீ காதலித்த பெண் யாருடான்னு ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அடி என்கிற மாதிரி அடி கொடுத்தோம். அப்படியும் அவன் மூச்சு விடல. ஆனால், உங்கண்ணன் மோகனன் மேல, நான் ஆக்ஷன் எடுக்கலாமுன்னு யோசிக்கேன்.” “எடுத்தாலும் நான் கவலப்படமாட்டேன். செல்வாவை, எங்கிட்ட இருந்து பிரித்த கொடியவன் அவன்.” இன்ஸ்பெக்டர், சிறிது ஏமாந்தார். சுருதி மாற்றிப் பேசினார். “தட்ஸ் ஆல் ரைட் நான் ஆக்ஷன் எடுக்கிறதாய் இல்ல. இப்போ அது முக்கியமில்ல. உங்க காதலுக்காக நீங்க பெருமைப்படலாம். பையனை, என் சிஸ்டர் உங்ககிட்ட முன்னால எப்படி இருந்தானோ, அப்படி ஒப்படைத்துடுவாள் ‘பை தி பை’ என் பிரமோஷன் பைலும், விசாரணை அறிக்கையும் உங்கப்பா டேபிள்ல இருக்கு.” “கண்டிப்பா அப்பா உதவுவார் ஸார். நீங்களும் ஒங்க சிஸ்டர்கிட்ட பழையபடியும் அழுத்தமாகப் பேசி...” “கவலைப்படாதீங்க மேடம். உங்கள மாதிரி. என்ன மாதிரி நல்லவங்களுக்கு நல்லதே நடக்கும். நான் செய்த நல்ல காரியத்தை, நானே உங்க அப்பாகிட்ட டெலிபோன்ல சொல்லட்டுமா? இல்ல நீங்க சொல்றீங்களா?” “நானே சொல்லிடுறேன் ஸார். அதுதான் அவர் டேபிள்ல இருக்கிற உங்க பைலுக்கு எபெக்டா இருக்கும் தேங்க் யூ ஸார்.” கவிதா, மனதிற்குள் சிரிப்பும் அழுகையுமாய் தேக்கி வைத்துக்கொண்டு, கால்களை தேய்த்து தேய்த்து நடந்தாள். {{dhr|2em}} <section end="15"/><section begin="16"/> {{larger|<b>16</b>}} {{dhr|2em}} அண்ணன் அனுப்பிய அத்தனை பேரோடும், டாக்டர். சத்தியா, தனித்தனியாகப் பேசினாள் குழந்தைகளோடு பேசும்போது குழந்தைபோலவே பேசினாள். இறுதியாக அவர்களில் யாராவது ஒருவர், வெளியே இருக்கலாம் என்று சொன்னாள். எல்லோருமே இருக்கப்போவதாக தர்ணா முறையில் பதிலளித்தார்கள். பிறகு, செல்வாவை கூப்பிட்டாள். சுமார் முக்கால் மணி நேரம்வரை அவனது பிரச்சினைகளை கேட்டறிந்தாள் கேள்விகளில் அளவுக்கு மீறாத அனுதாபம். அவன் பதில்களுக்கு தலையாட்டியதில், இது<noinclude></noinclude> coz9kapt5e4k87dusy3nvmbnm4xfyv8 பக்கம்:ஒத்தை வீடு.pdf/229 250 202757 1839253 762292 2025-07-05T10:32:26Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||17}}</noinclude>சகஜந்தான்... சாதாரணமானது என்று காட்டும் தோரணை... சிற்சில சமயங்களில், லேசாய் அதிர்ந்த பார்வை. டாக்டர். சத்தியா, அவன் சொன்னவற்றை தற்காலிகமாக ஒதுக்கி வைத்ததுபோல், செயல்பட்டாள். உடம்பையும், மனதையும் எப்படி ஆசுவாசப்படுத்திக் கொள்வது என்பதை நாற்காலியில் இருந்தபடியே செய்து காட்டினாள். பரந்து விரிந்த பெரிய அறை. சித்தப்பா வீட்டு படுக்கை அறையையும், செல்வா, குழந்தைகள் அறையையும் விழுங்கிவிட்டு, பாதி வயிறு நிறைந்தது போல் இருக்கும் அறை. தென் முனையில் சுவரோடு சுவராக ஒரு ஒற்றைப் படுக்கை. இருபக்கமும் தேக்குக் குமிழ்களைக் கொண்ட கட்டில். இதன் எதிர்ச்சுவரில், ‘நம்முடைய அணுகுமுறையே நம்மை தீர்மானிக்கிறது’ என்ற வாசகப் பொறி. பளபளப்பான மரப்பலகையில் இடம் பெற்றிருந்தது. கட்டிலின் வடமுனையில் கால்களுக்கு மேலே இன்னொரு பச்சை பலகை. அதில், ‘அஞ்சுவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை’ என்ற அப்பர் பிரானின் மேலாண்மை வரிகள், வெள்ளை வரிகள். மனோதத்துவ நிபுணர் டாக்டர் சத்தியாவின் வேண்டுகோள்படி, அவளிடம், செல்வா, எல்லாவற்றையும் ஒப்பித்துவிட்டான். அவளைப் பார்க்க பார்க்க, இவன் பதட்டம் பரவசமானது. சுமார் முப்பது வயதுக்காரி. அசல் கிராமத்து அக்காவின் நகர்ப்புற வார்ப்பு. மனிதச் சதையாலும், எலும்பு நரம்புகளாலும் கடைந்தெடுக்கப்பட்டது போன்ற உடல். நெற்றியில் உச்சிக்கு சிறிது கீழேயும், நடுவிலும் இரண்டு நிசமான குங்குமப் பொட்டுக்கள். புருவ மத்தியில் ஒளி சிந்தும் முத்துக்களால் ஆனது போன்ற அம்பு வடிவப் பொட்டு. அரவிந்தர் ஆசிரமத்தின், அந்த அன்னையின் லேமினேட்டட் புகைப்படம் மேஜையின் பின் சாய்வோடு இருந்தது. அன்னைக்கு தீட்சண்யமான பார்வை. திடப்படுத்தும் நோக்கு. எல்லாமே அன்பு மயம் என்ற போக்கு. செல்வா, அந்த கட்டிலில் மல்லாக்க படுத்திருந்தான். டாக்டர் சத்தியா, அவன் அருகே சென்றாள். டாக்டர் என்றால் ஸ்டெதாஸ்கோப் டாக்டர் அல்ல. மனோதத்துவத்தில் வாங்கிய டாக்டர் பட்டக்காரி. செல்வாவை சிறிது நேரம் பார்த்தாள். அவனோ, இதுவரை படுத்தறியாத சுகமான கட்டிலில், அதன் மெத்தையோடு பறப்பதுபோல், கிடந்தான். மயிலிறகால் செய்தது போன்ற மெத்தை. மேலேயும் கீழேயும் அவனை மென்மையாய் தாலாட்டியது. தானும் ஆடிக் கொண்டது சத்தியா, ‘நான் சொன்னது மாதிரியே நீ செய்து காட்டணும்’ என்று சொல்லிவிட்டு, அவன் தலைப்பக்கம் வந்தாள். அந்தக் குரல், ஆகாயத்து<noinclude></noinclude> s6mall3yzc3a01ewgsek8uh4tu5cwid 1839254 1839253 2025-07-05T10:32:42Z மொஹமது கராம் 14681 1839254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||229}}</noinclude>சகஜந்தான்... சாதாரணமானது என்று காட்டும் தோரணை... சிற்சில சமயங்களில், லேசாய் அதிர்ந்த பார்வை. டாக்டர். சத்தியா, அவன் சொன்னவற்றை தற்காலிகமாக ஒதுக்கி வைத்ததுபோல், செயல்பட்டாள். உடம்பையும், மனதையும் எப்படி ஆசுவாசப்படுத்திக் கொள்வது என்பதை நாற்காலியில் இருந்தபடியே செய்து காட்டினாள். பரந்து விரிந்த பெரிய அறை. சித்தப்பா வீட்டு படுக்கை அறையையும், செல்வா, குழந்தைகள் அறையையும் விழுங்கிவிட்டு, பாதி வயிறு நிறைந்தது போல் இருக்கும் அறை. தென் முனையில் சுவரோடு சுவராக ஒரு ஒற்றைப் படுக்கை. இருபக்கமும் தேக்குக் குமிழ்களைக் கொண்ட கட்டில். இதன் எதிர்ச்சுவரில், ‘நம்முடைய அணுகுமுறையே நம்மை தீர்மானிக்கிறது’ என்ற வாசகப் பொறி. பளபளப்பான மரப்பலகையில் இடம் பெற்றிருந்தது. கட்டிலின் வடமுனையில் கால்களுக்கு மேலே இன்னொரு பச்சை பலகை. அதில், ‘அஞ்சுவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை’ என்ற அப்பர் பிரானின் மேலாண்மை வரிகள், வெள்ளை வரிகள். மனோதத்துவ நிபுணர் டாக்டர் சத்தியாவின் வேண்டுகோள்படி, அவளிடம், செல்வா, எல்லாவற்றையும் ஒப்பித்துவிட்டான். அவளைப் பார்க்க பார்க்க, இவன் பதட்டம் பரவசமானது. சுமார் முப்பது வயதுக்காரி. அசல் கிராமத்து அக்காவின் நகர்ப்புற வார்ப்பு. மனிதச் சதையாலும், எலும்பு நரம்புகளாலும் கடைந்தெடுக்கப்பட்டது போன்ற உடல். நெற்றியில் உச்சிக்கு சிறிது கீழேயும், நடுவிலும் இரண்டு நிசமான குங்குமப் பொட்டுக்கள். புருவ மத்தியில் ஒளி சிந்தும் முத்துக்களால் ஆனது போன்ற அம்பு வடிவப் பொட்டு. அரவிந்தர் ஆசிரமத்தின், அந்த அன்னையின் லேமினேட்டட் புகைப்படம் மேஜையின் பின் சாய்வோடு இருந்தது. அன்னைக்கு தீட்சண்யமான பார்வை. திடப்படுத்தும் நோக்கு. எல்லாமே அன்பு மயம் என்ற போக்கு. செல்வா, அந்த கட்டிலில் மல்லாக்க படுத்திருந்தான். டாக்டர் சத்தியா, அவன் அருகே சென்றாள். டாக்டர் என்றால் ஸ்டெதாஸ்கோப் டாக்டர் அல்ல. மனோதத்துவத்தில் வாங்கிய டாக்டர் பட்டக்காரி. செல்வாவை சிறிது நேரம் பார்த்தாள். அவனோ, இதுவரை படுத்தறியாத சுகமான கட்டிலில், அதன் மெத்தையோடு பறப்பதுபோல், கிடந்தான். மயிலிறகால் செய்தது போன்ற மெத்தை. மேலேயும் கீழேயும் அவனை மென்மையாய் தாலாட்டியது. தானும் ஆடிக் கொண்டது சத்தியா, ‘நான் சொன்னது மாதிரியே நீ செய்து காட்டணும்’ என்று சொல்லிவிட்டு, அவன் தலைப்பக்கம் வந்தாள். அந்தக் குரல், ஆகாயத்து<noinclude></noinclude> a050uxzgpkizk5gzquocjjewkqmrjri பக்கம்:ஒத்தை வீடு.pdf/230 250 202758 1839259 762294 2025-07-05T10:48:26Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|230||புதைமண்}}</noinclude>அசரீரி குரல்போல் செல்வாவிற்கு ஒலித்தது. மெல்லிய குரல் கொண்ட ஏசி. வெள்ளை விளக்குகள் அணைந்து, பட்டும் படாமலும் எரியும் மஞ்சள் விளக்கு. சத்தியா, இப்போது அவன் கால்மாட்டு பக்கம் வந்து ஆணைபோல் பேசினாள். “கமான் யங்மேன். இப்போ நான் சொல்லிக் கொடுத்த பதினெட்டு உடல் மையங்களில் ஒவ்வொன்றாக உங்கள் பதட்டத்தை ஏற்றப் போறீங்க. அப்புறம் ரிலாக்ஸ் பண்ணப் போறீங்க... முதலாவதாக, இரண்டு கைகளையும் முஷ்டியாக்குங்கள். இந்த இரண்டு முஷ்டிகளிலும், உங்கள் உடம்பிலும் உள்ளத்திலும் உள்ள அத்தனை பதட்டங்களையும் முஷ்டிகளுக்கு கொண்டு வாருங்கள்.” செல்வா, இரண்டு கைகளையும், மூடிக்கொண்டு, பெருவிரல்கள் மட்டும் நீட்டிக் கொண்டிருக்க, உச்சி முதல் பாதம் வரை உள்ளும்-புறமுமான பதட்டங்களையும், பயங்களையும், நடுக்கங்களையும் அங்கே கொண்டு வந்தான். முஷ்டிகள் வலித்தன. வெளியேறப்போன விரல்களை உள்ளங்கைகளோடு அழுத்தினான். இந்த முஷ்டிகள் தவிர உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளும், நாடி நரம்புகளும் லேசானது போன்ற உணர்வு. இரண்டு நிமிடம் ஆனது. சத்தியா, ஒரு தோழனிடம் சொல்வதுபோல் சொன்னாள். “இப்போது முஷ்டிகளை விரல்களாக்குங்கள். விரல்களுக்கு இடைவெளி கொடுத்து, உள்ளங்கையோடு சேர்த்து, ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் மை பாய்... ரிலாக்ஸ்...” செல்வா, விரல்களை விரித்து, அவற்றையும் உள்ளங்கைகளையும் மென்மையாய் விரிவாக்கி, ஆசுவாசப்படுத்தினான். கைகளில் கட்டிப் போட்டிருந்த ஏதோ ஒரு கல் கீழே விழுந்தது போன்ற உணர்வு. “எப்படி இருக்கிறது பிரதர்.” “கைகள் பஞ்சு மாதிரி மென்மையாய் இருக்குதும்மா.” ரொம்ப நல்லதாப் போச்சு. நீங்கள் ஓரினச்சேர்க்கை என்கிற புதை மண்ணிலிருந்து நிச்சயம் விடுதலை ஆவீர்கள். இப்போ அந்த மண்ணிலிருந்து கைகள் வெளிப்பட்டு விட்டன. இனிமேல் முழங்கைகள், மேற் கைகள் ஆகிய நான்கு மையங்கள், நெற்றி, கண், வாய், கழுத்து, மார்பு, வயிறு ஆகிய ஆறு மையங்கள், இரண்டு தொடைகள், இரண்டு முழங்கால்கள். இரண்டு பாதங்கள் ஆகமொத்தம் பதினாறு இடங்களில் உடற்பாரத்தையும், மனப்பாரத்தையும் ஒவ்வொன்றுக்கு இரண்டு நிமிட நேரம் கொடுத்து ஏற்றுங்கள். மூன்று நிமிடம் ஒவ்வொரு உறுப்பையும்<noinclude></noinclude> ls453jfap9eolcl6anysdk0pgeaunvg 1839260 1839259 2025-07-05T10:49:39Z மொஹமது கராம் 14681 1839260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|230||புதைமண்}}</noinclude>அசரீரி குரல்போல் செல்வாவிற்கு ஒலித்தது. மெல்லிய குரல் கொண்ட ஏசி. வெள்ளை விளக்குகள் அணைந்து, பட்டும் படாமலும் எரியும் மஞ்சள் விளக்கு. சத்தியா, இப்போது அவன் கால்மாட்டு பக்கம் வந்து ஆணைபோல் பேசினாள். “கமான் யங்மேன். இப்போ நான் சொல்லிக் கொடுத்த பதினெட்டு உடல் மையங்களில் ஒவ்வொன்றாக உங்கள் பதட்டத்தை ஏற்றப் போறீங்க. அப்புறம் ரிலாக்ஸ் பண்ணப் போறீங்க... முதலாவதாக, இரண்டு கைகளையும் முஷ்டியாக்குங்கள். இந்த இரண்டு முஷ்டிகளிலும், உங்கள் உடம்பிலும் உள்ளத்திலும் உள்ள அத்தனை பதட்டங்களையும் முஷ்டிகளுக்கு கொண்டு வாருங்கள்.” செல்வா, இரண்டு கைகளையும், மூடிக்கொண்டு, பெருவிரல்கள் மட்டும் நீட்டிக் கொண்டிருக்க, உச்சி முதல் பாதம் வரை உள்ளும்-புறமுமான பதட்டங்களையும், பயங்களையும், நடுக்கங்களையும் அங்கே கொண்டு வந்தான். முஷ்டிகள் வலித்தன. வெளியேறப்போன விரல்களை உள்ளங்கைகளோடு அழுத்தினான். இந்த முஷ்டிகள் தவிர உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளும், நாடி நரம்புகளும் லேசானது போன்ற உணர்வு. இரண்டு நிமிடம் ஆனது. சத்தியா, ஒரு தோழனிடம் சொல்வதுபோல் சொன்னாள். “இப்போது முஷ்டிகளை விரல்களாக்குங்கள். விரல்களுக்கு இடைவெளி கொடுத்து, உள்ளங்கையோடு சேர்த்து, ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் மை பாய்... ரிலாக்ஸ்...” செல்வா, விரல்களை விரித்து, அவற்றையும் உள்ளங்கைகளையும் மென்மையாய் விரிவாக்கி, ஆசுவாசப்படுத்தினான். கைகளில் கட்டிப் போட்டிருந்த ஏதோ ஒரு கல் கீழே விழுந்தது போன்ற உணர்வு. “எப்படி இருக்கிறது பிரதர்.” “கைகள் பஞ்சு மாதிரி மென்மையாய் இருக்குதும்மா.” “ரொம்ப நல்லதாப் போச்சு. நீங்கள் ஓரினச்சேர்க்கை என்கிற புதை மண்ணிலிருந்து நிச்சயம் விடுதலை ஆவீர்கள். இப்போ அந்த மண்ணிலிருந்து கைகள் வெளிப்பட்டு விட்டன. இனிமேல் முழங்கைகள், மேற் கைகள் ஆகிய நான்கு மையங்கள், நெற்றி, கண், வாய், கழுத்து, மார்பு, வயிறு ஆகிய ஆறு மையங்கள், இரண்டு தொடைகள், இரண்டு முழங்கால்கள். இரண்டு பாதங்கள் ஆகமொத்தம் பதினாறு இடங்களில் உடற்பாரத்தையும், மனப்பாரத்தையும் ஒவ்வொன்றுக்கு இரண்டு நிமிட நேரம் கொடுத்து ஏற்றுங்கள். மூன்று நிமிடம் ஒவ்வொரு உறுப்பையும்<noinclude></noinclude> e983proa7ah1akhku9afg22fh6hloz5 பக்கம்:ஒத்தை வீடு.pdf/231 250 202759 1839261 762295 2025-07-05T10:54:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||231}}</noinclude>ஆசுவாசப்படுத்துங்கள். இரண்டு மையங்களாக உள்ளங்கைகளில் செய்தாயிற்று. இனிமேல் இதர பதினாறு மையங்களில் பாரத்தை ஒப்படையுங்கள்.” செல்வா, அந்த அம்மா, முன்னர் சொல்லிக் கொடுத்ததுபோல், தனது அத்தனை பாரங்களையும் பதினாறு மையங்களில் ஒற்றையாகவும், ரெட்டையாகவும் ஏற்றி, அவற்றை கனக்க வைத்தான். பிறகு, அந்த பாரங்களை இறக்கி, அவற்றை லகுவாக்கினான். கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆயிற்று. சத்தியா, கேட்டாள். “இப்போ எப்படி இருக்குதுப்பா?” “உடல் காற்றில் மிதப்பதுபோல் இருக்கிறது மேடம். மனம் என்ற ஒன்று இல்லாதது போல் தோணுது மேடம்.” “நல்ல அறிகுறி. ஆனால், ஒரு எச்சரிக்கை. கவிதாவோடு, நான் சொல்வது வரைக்கும், பழகவேண்டாம். அப்புறம், வட்டியும் முதலுமாய் பழகலாம்.” “பழகவே முடியாது மேடம்...” “முடிய வைக்கிறேன். சரி... அடுத்த வாரம் இதேநாள், இதே நேரம் வாங்க... நான் சொல்லிக் கொடுத்த பயிற்சியை, அன்றாடம் செய்யுங்க... நீங்க போய்ட்டு, கவிதாவை வரச்சொல்லுங்க...” செல்வா, சிறிது மிடுக்கோடு எழுந்தான். அந்த அம்மாவை, தன் அம்மாவைப் பார்ப்பதுபோல் பார்த்தபடியே, வெளியேறினான். {{dhr|2em}} <section end="16"/><section begin="17"/> {{larger|<b>17</b>}} {{dhr|2em}} டாக்டர். சத்தியா, குறிப்பிட்ட அதே வாரம், அதே நாளில், அதே நேரத்தில், செல்வா, அவளைச் சந்தித்தான். அவள் கேட்கும் முன்பே, ‘இப்போ பரவாயில்லை மேடம்...! என்னை நானே வெல்ல முடியும் போலத் தோணுது’ என்றான். உடனே அவள், ‘அழகாய் பேசுறீங்களே... அப்புறம், கவிதா எப்படி இருக்காள்?’ என்று போகிற போக்கில் கேட்கிறவள்போல் கேட்டாள். “பொதுப்படையாய் பேசிக்குவோம் தனித்து சந்திக்கல ஆச்சரியமாய் இருக்கு... அவளும் மாறிட்டாளோ என்னமோ...?”{{nop}}<noinclude></noinclude> 5ucsexg1uyj9g5y3e3t1h337oll7o23 பக்கம்:ஒத்தை வீடு.pdf/232 250 202760 1839264 762296 2025-07-05T10:59:55Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|232||புதைமண்}}</noinclude>“உண்மையான பெண், ஒருவனை நினைத்தால், அது குரங்குப் பிடிதான் நான் சொல்வது வரைக்கும், உன்னோட தனித்துப் பழகக்கூடாதுன்னுதான் அந்தப் பெண்ணுகிட்ட சொல்லி இருக்கேன்.” இப்போது, செல்வாவின் பூட்டிய உதடுகளில், ஒரு கீறல். டாக்டர். சத்தியாவும், காரியத்திற்கு வந்தாள். அவனை, அருகே உள்ள கட்டிலில் படுக்கும்படி சைகை செய்தாள் அந்த சைகையை, அவன் செயலாக்கியதும், அவன் அருகே சென்று, நின்றபடியே பேசினாள். “இப்போ கால், கைகளை விரித்துப் பரப்புங்கள். உச்சி முதல் பாதம் வரை ரிலாக்ஸ் செய்யுங்கள். நான் சொல்லிக் கொடுத்தபடி உங்கள் கவனம், பாதங்களிலிருந்து உச்சிக்கு ஒவ்வொரு உறுப்பையும் மென்மைப்படுத்தியே வரட்டும். பிறகு, அதே கவனம் பிடரி வழியாய், முதுகுத் தண்டு மூலமாய், கால் பதங்களுக்கு போகட்டும். உடம்பை அப்படியே மிதக்க விடுங்கள். ஆழ்ந்து மூச்சு விடுங்கள். உள்வாங்கும் மூச்சுக்கு ஒரு நிமிடம் என்றால், வெளிவாங்கும் மூச்சுக்கு இரண்டு நிமிடம் ஆகட்டும். ஆழ்ந்து, வயிற்றை விம்மியும், எக்கியும்... ஆமாம்... இப்படித்தான்... இப்படியேதான் மூச்சு விடவேண்டும். ‘இப்போது அஞ்சுவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை’ என்ற இரண்டு வரிகளுக்கு இடையே இருக்கக்கூடிய வட்டத்தை பாருங்கள். அந்த வட்டத்தில் இருக்கும் மையத்தைப் பாருங்கள். அந்த மையத்தை மட்டுமே பாருங்கள்.” செல்வா, அவள் சொன்னபடியே செய்தான். கண்ணுக்கு வந்த வரிகள் மறைந்தன. வட்டமடித்த வட்டம் மறைந்தது மையம் மட்டுமே நின்றது. அதுவும் சிறுகச் சிறுக சென்றது அப்படிச் செல்லச் செல்ல, அவன் இறப்பிற்கும் பிறப்பிற்குமான இடைவெளியாய், தூக்கத்திற்கும் கனவிற்குமான எல்லையாய் கண்களை மூடியபடி, அரை மயக்க நிலையில் கிடந்தான். சத்தியாவின் குரல், இசை நிபுணர்போல ஏற்ற இறக்கத்தோடு குழைவாகவும், உறுதியாகவும் தோழியாகவும், தாயாகவும் பல்வேறு விதங்களில் ஒலித்தது. “இப்போது உன் ஆழ்மனம் விழிக்கிறது. அந்த மனம் என் வசமாகிறது. என் சத்தத்தைத் தவிர, எந்த சத்தமும் உனக்கு கேட்காது. நான் சொல்லுகிறபடி நீ செய்யப்போறே. சரியா?” “சரிதான்.”{{nop}}<noinclude></noinclude> ldnznut73ldrn92vaohmqloz75gz4p3 பக்கம்:ஒத்தை வீடு.pdf/233 250 202761 1839266 762297 2025-07-05T11:05:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||17}}</noinclude>“இப்போ உனக்கு வயசு எட்டு. தோட்டத்துக்கு போற... யாரோடு போறே...?” “எங்க மாமா மகன் குமாரோட போறேன்.” “தோட்டத்துல என்ன செய்றீங்க?” “பரணுல ஏறி காக்கா குருவிகளை கல் கட்டுன கயிற்றுக் கம்பை சுழற்றி சுழற்றி துரத்துறோம்.” “அப்புறம்?” “அம்மா அப்பா விளையாட்டு விளையாடினோம்.” “அப்படின்னா?” “கொஞ்ச நேரம் அவன் கீழே படுப்பான். நான் மேல் படுப்பேன். அப்புறம், நான் கீழே படுப்பேன், அவன் மேலே படுப்பான்.” “அப்புறம்?” “அவனுக்கு குழந்தை பிறக்கிறது மாதிரி ஒரு பொம்மையை எடுத்து ரெண்டு பேருக்கும் மத்தியில் போட்டுக்கிறோம். அதைத் தாலாட்டுறோம். கொஞ்சுறோம்... குலாவுறோம்...” “இந்த மாதிரி, அப்பா-அம்மா விளையாட்டுக்கள நீங்க மட்டும்தான் செய்வீங்களா? இல்ல எல்லாரும் செய்வாங்களா?” “மத்த பசங்க எங்களைவிட மோசம். ஆடு, மாடுன்னு அதுங்க மேல ஏறி, அட்டூழியம் பண்ணுவாங்க.” “அப்போ நீ அவங்களைவிட மேலு... சரியா?” “சரிதான்.” “எல்லாக் குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் செய்கிற, இந்த மாதிரி காரியம், சிறுபிள்ளை விளையாட்டு. இதை பெரிசா எடுத்துக்க கூடாது. எடுத்துக்குவியா?” “மாட்டேன்.” டாக்டர் சத்தியா, சிறிது இடைவெளி கொடுத்தாள். அவனையே உற்றுப் பார்த்தாள். மீண்டும் ஆணைக்குரலில் பேசினாள். “இப்போ உனக்கு பதினெட்டு வயசு. உங்கப்பா சீட்டு போட்டு நொடித்திட்டார். ஆனாலும், நிலம், புலனை விற்று சீட்டுப் பணத்தை கொடுத்திட்டு என்ன செய்யுறார்?” “ஒரு பெட்டிக் கடைக்குள் சிறைபட்டு கிடக்கார்.”{{nop}}<noinclude></noinclude> 20m71hek2oc9ncjxs3dcvz4vo1q5op0 1839267 1839266 2025-07-05T11:06:23Z மொஹமது கராம் 14681 1839267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||233}}</noinclude>“இப்போ உனக்கு வயசு எட்டு. தோட்டத்துக்கு போற... யாரோடு போறே...?” “எங்க மாமா மகன் குமாரோட போறேன்.” “தோட்டத்துல என்ன செய்றீங்க?” “பரணுல ஏறி காக்கா குருவிகளை கல் கட்டுன கயிற்றுக் கம்பை சுழற்றி சுழற்றி துரத்துறோம்.” “அப்புறம்?” “அம்மா அப்பா விளையாட்டு விளையாடினோம்.” “அப்படின்னா?” “கொஞ்ச நேரம் அவன் கீழே படுப்பான். நான் மேல் படுப்பேன். அப்புறம், நான் கீழே படுப்பேன், அவன் மேலே படுப்பான்.” “அப்புறம்?” “அவனுக்கு குழந்தை பிறக்கிறது மாதிரி ஒரு பொம்மையை எடுத்து ரெண்டு பேருக்கும் மத்தியில் போட்டுக்கிறோம். அதைத் தாலாட்டுறோம். கொஞ்சுறோம்... குலாவுறோம்...” “இந்த மாதிரி, அப்பா-அம்மா விளையாட்டுக்கள நீங்க மட்டும்தான் செய்வீங்களா? இல்ல எல்லாரும் செய்வாங்களா?” “மத்த பசங்க எங்களைவிட மோசம். ஆடு, மாடுன்னு அதுங்க மேல ஏறி, அட்டூழியம் பண்ணுவாங்க.” “அப்போ நீ அவங்களைவிட மேலு... சரியா?” “சரிதான்.” “எல்லாக் குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் செய்கிற, இந்த மாதிரி காரியம், சிறுபிள்ளை விளையாட்டு. இதை பெரிசா எடுத்துக்க கூடாது. எடுத்துக்குவியா?” “மாட்டேன்.” டாக்டர் சத்தியா, சிறிது இடைவெளி கொடுத்தாள். அவனையே உற்றுப் பார்த்தாள். மீண்டும் ஆணைக்குரலில் பேசினாள். “இப்போ உனக்கு பதினெட்டு வயசு. உங்கப்பா சீட்டு போட்டு நொடித்திட்டார். ஆனாலும், நிலம், புலனை விற்று சீட்டுப் பணத்தை கொடுத்திட்டு என்ன செய்யுறார்?” “ஒரு பெட்டிக் கடைக்குள் சிறைபட்டு கிடக்கார்.”{{nop}}<noinclude></noinclude> 70lijjgmx65vkurt2hnvitcnnip4ten பக்கம்:ஒத்தை வீடு.pdf/234 250 202762 1839268 762298 2025-07-05T11:12:23Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|234||புதைமண்}}</noinclude>“நீ என்ன செய்யுறாய்?” “அழுகிறேன்.” “எப்படி அழுதே?” செல்வா, அழுது காட்டினான். தலையில் அடித்துக் காட்டினான். முகத்தை மோதிக் காட்டினான். “எப்பா... எப்பா...” என்ற ஒற்றைச் சொல்லால் புலம்புகிறான்; ஆர்ப்பரிக்கிறான். “சரி அழுகையை நிறுத்து நீ சிறுமைப்படவேண்டியவன் இல்லை. உங்கப்பாவை பார்த்து பெருமைப்பட வேண்டியவன். இந்த சென்னையில் சிட் பண்ட் நடத்தியவர்கள், தங்கள் பணங்களை வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, திவாலாகி விட்டதாக நாடகம் போடுகிறார்கள். கோடி கோடியாக சம்பாதித்த ஹர்ஷத் மேத்தா இன்னும் கம்பீரமாய் திரியுறான். ஆனால், சொத்தையும், நகையையும் விற்று அத்தனை பணத்தையும் அடைத்த நவீன அரிச்சந்திரன் உங்கப்பா. இதுக்கு நீ பெருமைப்படணுமா? சிறுமைப்படணுமா?” “பெருமைப்படணும்.” “நல்லது. அப்படித்தான் எடுத்துக்கணும் இப்போ உனக்கு பத்தொன்பது வயது. சென்னையில் இருக்கே. பக்கத்து வீட்டு கவிதாவை எப்படி பிடித்தே?” “நான் பிடிக்கல்ல... அவள்தான் பிடித்தாள்.” “சரி யார் பிடித்தீர்கள் என்பது முக்கியமில்ல. கவிதா நல்லவளா? கெட்டவளா?” “ஆக மொத்தத்தில் நல்லவள்.” “அது என்ன ஆக மொத்தம்?” “டூப்ளிகேட் அம்மாவ பற்றி சொல்லல” “கவிதா, ஓடிப்போன தன் அம்மாவைவிட இந்த அம்மாவை உசத்தியாய் நினைத்திருக்கலாம் இல்லியா? பெற்று போட்ட கடமைய முடிக்கும் முன்னால, ஓடிப்போனவளவிட, வலிய வந்து இவளுக்கு தானே அம்மாவான ஒருத்தி மேலானவள்தானே...?” “ஆமாம்... ஆமாம்...” “கணவன் மனைவியாய் இருந்தால்கூட, ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் இருக்கலாம். ‘தாயாய் பிள்ளையாய் இருந்தாலும், வாயும் வயிறும் வேறதானே?’ சொந்த அம்மாவாய் ஒன்றிப்போன ஒரு பெண்ணைப் பற்றி உன்னிடம் மாற்றிப் பேச, அவளுக்கு மனம்<noinclude></noinclude> nxf3j0rhy4hm0c750q7br2gmlqd32vt 1839269 1839268 2025-07-05T11:12:51Z மொஹமது கராம் 14681 1839269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|234||புதைமண்}}</noinclude>“நீ என்ன செய்யுறாய்?” “அழுகிறேன்.” “எப்படி அழுதே?” செல்வா, அழுது காட்டினான். தலையில் அடித்துக் காட்டினான். முகத்தை மோதிக் காட்டினான். “எப்பா... எப்பா...” என்ற ஒற்றைச் சொல்லால் புலம்புகிறான்; ஆர்ப்பரிக்கிறான். “சரி அழுகையை நிறுத்து நீ சிறுமைப்படவேண்டியவன் இல்லை. உங்கப்பாவை பார்த்து பெருமைப்பட வேண்டியவன். இந்த சென்னையில் சிட் பண்ட் நடத்தியவர்கள், தங்கள் பணங்களை வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, திவாலாகி விட்டதாக நாடகம் போடுகிறார்கள். கோடி கோடியாக சம்பாதித்த ஹர்ஷத் மேத்தா இன்னும் கம்பீரமாய் திரியுறான். ஆனால், சொத்தையும், நகையையும் விற்று அத்தனை பணத்தையும் அடைத்த நவீன அரிச்சந்திரன் உங்கப்பா. இதுக்கு நீ பெருமைப்படணுமா? சிறுமைப்படணுமா?” “பெருமைப்படணும்.” “நல்லது. அப்படித்தான் எடுத்துக்கணும் இப்போ உனக்கு பத்தொன்பது வயது. சென்னையில் இருக்கே. பக்கத்து வீட்டு கவிதாவை எப்படி பிடித்தே?” “நான் பிடிக்கல்ல... அவள்தான் பிடித்தாள்.” “சரி யார் பிடித்தீர்கள் என்பது முக்கியமில்ல. கவிதா நல்லவளா? கெட்டவளா?” “ஆக மொத்தத்தில் நல்லவள்.” “அது என்ன ஆக மொத்தம்?” “டூப்ளிகேட் அம்மாவ பற்றி சொல்லல.” “கவிதா, ஓடிப்போன தன் அம்மாவைவிட இந்த அம்மாவை உசத்தியாய் நினைத்திருக்கலாம் இல்லியா? பெற்று போட்ட கடமைய முடிக்கும் முன்னால, ஓடிப்போனவளவிட, வலிய வந்து இவளுக்கு தானே அம்மாவான ஒருத்தி மேலானவள்தானே...?” “ஆமாம்... ஆமாம்...” “கணவன் மனைவியாய் இருந்தால்கூட, ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் இருக்கலாம். ‘தாயாய் பிள்ளையாய் இருந்தாலும், வாயும் வயிறும் வேறதானே?’ சொந்த அம்மாவாய் ஒன்றிப்போன ஒரு பெண்ணைப் பற்றி உன்னிடம் மாற்றிப் பேச, அவளுக்கு மனம்<noinclude></noinclude> 8y6bmh3m756jqrtzcekb8lsifskli5u பக்கம்:ஒத்தை வீடு.pdf/235 250 202763 1839271 762299 2025-07-05T11:20:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||235}}</noinclude>இல்லாமல் இருந்திக்கலாம். இதனால் மறைத்திருக்கலாம். இப்படி மறைப்பதற்கு அவளுக்கு உரிமை உண்டா இல்லையா?” “உண்டு. ஆனால், மோகனன்கிட்ட என்னை கூட்டிக் கொடுத்தாள். வீடு திறந்திருந்தால் வரச்சொல்லிவிட்டு, டூர் போயிட்டாள்.” “அவள் அண்ணன், வீட்டுக்கு வருவதை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள். பூட்டிய கதவை அவன் திறந்தது அவளுக்கு தெரியாது. இது அவள் வேண்டுமென்றே செய்த காரியமா?” “இல்லை... இல்லை...” “நான் சொல்வது மாதிரிச் சொல். கவிதா வேண்டுமென்றே செய்யவில்லை.” “கவிதா வேண்டுமென்றே செய்யவில்லை.” “அப்போ அவளை வெறுக்கலாமா?” “கூடாது... கூடாது... கூடவே கூடாது.” “சரி... இப்போ உன்னை மோகனன், உன் அறைக்கு கூட்டிட்டு போகிறான். என்ன செய்யுறான்?” “நான் கவிதாவுக்கு எழுதிய லெட்டரை காட்டி மிரட்டுனான். நான் நடுநடுங்கி போறேன். என்னைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க ஒரு உதவி கேட்கிறான். நான் வாயைத் திறக்கிறேன்.” “அப்புறம்... அந்த வெள்ளைக்காரனோட உறவாடும்போது?” “முதலில் கஷ்டமாய் இருந்தது. அப்புறம் நான் இயங்கும்போது ஒரு சுகம் கிடைத்தது.” “அப்புறம் மோகனனோடு டீலக்ஸ் நிரோத்தோட ஈடுபடும்போது?” “ஒரு தனி வாசனை; தனிச் சுகம். என்னையும் மதித்து அவன், செண்பக வாசனை டீலக்ஸை கொடுத்தான். நான் அவனானேன். அவன் நானானான்.” “உனக்கு இப்போ யாரை அதிகமாய் பிடிச்சிருக்கு?” “மோகனனை.” “ஓ.கே. அவனோட அந்த உறுப்பு புண்ணாகி, சீழ்பிடித்து, நாற்றம் அடித்து, புண் புண்ணாய் இருக்கிறதாய் கற்பனை செய்து பார் செய்துட்டியா?”{{nop}}<noinclude></noinclude> b81it9rklvn79vtsft15dv7j8a9cowp பக்கம்:ஒத்தை வீடு.pdf/236 250 202764 1839274 762300 2025-07-05T11:26:14Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|236||புதைமண்}}</noinclude>“செய்துட்டேன். அய்யோ! சகிக்கல.” “இப்போ புழு அரிக்கும் உறுப்பை கொண்ட அவனை, நீ காலால் உதைத்து, மல்லாக்க கிடத்துறே. கிடத்துறியா?” செல்வாவின் கால்கள், கட்டில் சட்டங்களை உதைக்கின்றன. கைகள் அங்குமிங்குமாய் ஆகாயத்தில் குத்து விடுகின்றன. லட்சுமி, இதமாகக் கேட்கிறாள். “இப்போ இப்படி சீழ் பிடித்து ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலமாகி’ உன்னைக் கெடுத்த அந்த மோகனனுக்கும், நீ உதைத்தியே அந்த தாமோதரன் கிழவனுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குதா?” “இல்ல... இல்லவே இல்ல... அவன் பொறுக்கி... இவன் புறம்போக்கு.” “மீண்டும் பெயர் சொல்லி திட்டு.” “தாமோதரன் கிழவன் பொறுக்கி. மோகனப் பயல் புறம்போக்கு” “மோகனனை இன்னும் நல்லாத்திட்டு.” “அயோக்கியப் பயலே... திருட்டுப் பயலே... பொறுக்கி நாயே... புண் பிடிச்ச பிசாசே... சீழ்வடியும் சிறங்கா” “சரி... இப்போ நான் பத்து எண்ணுவதற்குள் நீ எழுந்து விடுவாய். நான் சொன்னது எதுவும் உன் உள் மனதில் பதியுமே தவிர, வெளி மனதிற்கு வராது. சரி. ஒன்று... இரண்டு... மூன்று...” செல்வா, மெல்ல எழுந்தான். அங்குமிங்குமாய் கண்களை சுழற்றினான். சத்தியா, அந்த பெயருக்குரிய பொருள்போல், அமைதியாய்ச் சிரித்தாள். பிறகு ஒரு கேள்வி கேட்டாள். “இப்போ எப்படி இருக்குது தம்பி?” “உடம்பு முழுக்க ஏதோ ஒரு சுகம். ஆகாயத்தில் பறக்கிறது மாதிரியான லகு. நடந்ததை நினைக்க மறுக்கும் மனம். நல்லதை மட்டுமே நாடும் இதயம். நான் கவிஞனாயிட்டேன் இல்லியா மேடம்?” “நீ கவிஞனேதான். கவிதாவைப் பற்றி மட்டும் கவிதை எழுதாதே. சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றியும் எழுது. உன் பெயரை வெளியிடாமல் ஓரினச் சேர்க்கையால் ஏற்படும் கேடுகளைப் பற்றி கட்டுரை எழுதி எனக்குக் கொடு. நான் அதை<noinclude></noinclude> 5ov052o766fe5jimbu8nlyab07p3qm9 பக்கம்:ஒத்தை வீடு.pdf/237 250 202765 1839277 762301 2025-07-05T11:33:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||237}}</noinclude>ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஏதாவது ஒரு நல்ல பத்திரிகையில் வெளியிடுறேன். சரி, வெளியில உனக்காக உன் சித்தப்பா குடும்பமும், கவிதாவும் கண்ணீரும் கம்பலையுமா நிற்கிறாங்க. உனக்கு சுகமாயிட்டுதுன்னு சொல்லு.” “அப்பா நான் இனிமே வரவேண்டியதில்லியா மேடம்?” மனம் என்பது ஒரு மாயப் பிசாசு. என் முன்னால் உன் மனம் ஆரோக்கிய வேடம் போடும். ஆனால், சில சமயம் அது அற்ப ஆயுளில் முடிந்து, மீண்டும் அதே மனம் பேயாட்டம் போடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்துல, நீ வேறு, மனம் வேறுன்னு நினைத்துக்கோ. இது ஒரு செஷன்ல முடியுற மெஸ்மரிசம் ட்ரீட்மெண்ட் இல்ல. குறைஞ்சது ஐந்தாறு தடவையாவது நீ வரவேண்டியதிருக்கும். ஏன் மூஞ்சை தூக்குறே? நல்ல வேளை உன்னுடைய அனுபவம் ஒரு வாரம் என்கிறதுனால தேறிடுவே. பார்க்குல பார்த்தியே அந்தப் பையன். அவன் வயசுல துவங்கி இருந்தா உன்னை திருத்தியிருக்கவே முடியாது. அப்புறம், எய்ட்ஸோடதான் திரிய வேண்டியதிருக்கும். “நல்லவேள ஒன் ரத்தத்த டெஸ்ட் பண்ணியதில் உனக்கு அது இல்ல இனிமேலும், இதையே தொழிலா வச்சா நீ உருப்பட மாட்டேன்னு புரியுதா?” “புரியுது, மேடம். இப்போ அதுமேல அதிகமாய் ஆசையில்ல. திருந்திடுவேனா மேடம்?” “திருந்திட்டே... திருந்திட்டே... சில திருத்தங்கள்தான் செய்யணும். சரி உனக்கும் வேலை இருக்கும். எனக்கும், ஆட்கள் காத்திருக்காங்க... அப்புறம்...” செல்வா, சத்தியாவின், பேச்சு இழுப்பை ஊன்றுகோலாய் ஆக்கியதுபோல் எழுந்து, வெளியேறினான். பிறகு, திரும்பிவந்து, ஒரு கேள்வி கேட்டான். “கவிதாவோட பழகலாமா மேடம்...?” “லேசு... லேசாய்...” {{***|12|1em|char=—}} <section end="17"/>{{nop}}<noinclude></noinclude> 9gk1w96fqpdleef730c97vlqxy4tq7z 1839278 1839277 2025-07-05T11:33:31Z மொஹமது கராம் 14681 1839278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||237}}</noinclude>ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஏதாவது ஒரு நல்ல பத்திரிகையில் வெளியிடுறேன். சரி, வெளியில உனக்காக உன் சித்தப்பா குடும்பமும், கவிதாவும் கண்ணீரும் கம்பலையுமா நிற்கிறாங்க. உனக்கு சுகமாயிட்டுதுன்னு சொல்லு.” “அப்பா நான் இனிமே வரவேண்டியதில்லியா மேடம்?” மனம் என்பது ஒரு மாயப் பிசாசு. என் முன்னால் உன் மனம் ஆரோக்கிய வேடம் போடும். ஆனால், சில சமயம் அது அற்ப ஆயுளில் முடிந்து, மீண்டும் அதே மனம் பேயாட்டம் போடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்துல, நீ வேறு, மனம் வேறுன்னு நினைத்துக்கோ. இது ஒரு செஷன்ல முடியுற மெஸ்மரிசம் ட்ரீட்மெண்ட் இல்ல. குறைஞ்சது ஐந்தாறு தடவையாவது நீ வரவேண்டியதிருக்கும். ஏன் மூஞ்சை தூக்குறே? நல்ல வேளை உன்னுடைய அனுபவம் ஒரு வாரம் என்கிறதுனால தேறிடுவே. பார்க்குல பார்த்தியே அந்தப் பையன். அவன் வயசுல துவங்கி இருந்தா உன்னை திருத்தியிருக்கவே முடியாது. அப்புறம், எய்ட்ஸோடதான் திரிய வேண்டியதிருக்கும். “நல்லவேள ஒன் ரத்தத்த டெஸ்ட் பண்ணியதில் உனக்கு அது இல்ல இனிமேலும், இதையே தொழிலா வச்சா நீ உருப்பட மாட்டேன்னு புரியுதா?” “புரியுது, மேடம். இப்போ அதுமேல அதிகமாய் ஆசையில்ல. திருந்திடுவேனா மேடம்?” “திருந்திட்டே... திருந்திட்டே... சில திருத்தங்கள்தான் செய்யணும். சரி உனக்கும் வேலை இருக்கும். எனக்கும், ஆட்கள் காத்திருக்காங்க... அப்புறம்...” செல்வா, சத்தியாவின், பேச்சு இழுப்பை ஊன்றுகோலாய் ஆக்கியதுபோல் எழுந்து, வெளியேறினான். பிறகு, திரும்பிவந்து, ஒரு கேள்வி கேட்டான். “கவிதாவோட பழகலாமா மேடம்...?” “லேசு... லேசாய்...” {{***|12|1em|char=-}} <section end="17"/>{{nop}}<noinclude></noinclude> 9idci0hxrtqwjg0k3ht4ywqzb21sqfd 1839279 1839278 2025-07-05T11:33:45Z மொஹமது கராம் 14681 1839279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||237}}</noinclude>ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஏதாவது ஒரு நல்ல பத்திரிகையில் வெளியிடுறேன். சரி, வெளியில உனக்காக உன் சித்தப்பா குடும்பமும், கவிதாவும் கண்ணீரும் கம்பலையுமா நிற்கிறாங்க. உனக்கு சுகமாயிட்டுதுன்னு சொல்லு.” “அப்பா நான் இனிமே வரவேண்டியதில்லியா மேடம்?” மனம் என்பது ஒரு மாயப் பிசாசு. என் முன்னால் உன் மனம் ஆரோக்கிய வேடம் போடும். ஆனால், சில சமயம் அது அற்ப ஆயுளில் முடிந்து, மீண்டும் அதே மனம் பேயாட்டம் போடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்துல, நீ வேறு, மனம் வேறுன்னு நினைத்துக்கோ. இது ஒரு செஷன்ல முடியுற மெஸ்மரிசம் ட்ரீட்மெண்ட் இல்ல. குறைஞ்சது ஐந்தாறு தடவையாவது நீ வரவேண்டியதிருக்கும். ஏன் மூஞ்சை தூக்குறே? நல்ல வேளை உன்னுடைய அனுபவம் ஒரு வாரம் என்கிறதுனால தேறிடுவே. பார்க்குல பார்த்தியே அந்தப் பையன். அவன் வயசுல துவங்கி இருந்தா உன்னை திருத்தியிருக்கவே முடியாது. அப்புறம், எய்ட்ஸோடதான் திரிய வேண்டியதிருக்கும். “நல்லவேள ஒன் ரத்தத்த டெஸ்ட் பண்ணியதில் உனக்கு அது இல்ல இனிமேலும், இதையே தொழிலா வச்சா நீ உருப்பட மாட்டேன்னு புரியுதா?” “புரியுது, மேடம். இப்போ அதுமேல அதிகமாய் ஆசையில்ல. திருந்திடுவேனா மேடம்?” “திருந்திட்டே... திருந்திட்டே... சில திருத்தங்கள்தான் செய்யணும். சரி உனக்கும் வேலை இருக்கும். எனக்கும், ஆட்கள் காத்திருக்காங்க... அப்புறம்...” செல்வா, சத்தியாவின், பேச்சு இழுப்பை ஊன்றுகோலாய் ஆக்கியதுபோல் எழுந்து, வெளியேறினான். பிறகு, திரும்பிவந்து, ஒரு கேள்வி கேட்டான். “கவிதாவோட பழகலாமா மேடம்...?” “லேசு... லேசாய்...” {{***|12|0em|char=-}} <section end="17"/>{{nop}}<noinclude></noinclude> ngh1uklgz5zg86zw38upuaxwm4clkf3 1839280 1839279 2025-07-05T11:34:02Z மொஹமது கராம் 14681 1839280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||237}}</noinclude>ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஏதாவது ஒரு நல்ல பத்திரிகையில் வெளியிடுறேன். சரி, வெளியில உனக்காக உன் சித்தப்பா குடும்பமும், கவிதாவும் கண்ணீரும் கம்பலையுமா நிற்கிறாங்க. உனக்கு சுகமாயிட்டுதுன்னு சொல்லு.” “அப்பா நான் இனிமே வரவேண்டியதில்லியா மேடம்?” மனம் என்பது ஒரு மாயப் பிசாசு. என் முன்னால் உன் மனம் ஆரோக்கிய வேடம் போடும். ஆனால், சில சமயம் அது அற்ப ஆயுளில் முடிந்து, மீண்டும் அதே மனம் பேயாட்டம் போடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்துல, நீ வேறு, மனம் வேறுன்னு நினைத்துக்கோ. இது ஒரு செஷன்ல முடியுற மெஸ்மரிசம் ட்ரீட்மெண்ட் இல்ல. குறைஞ்சது ஐந்தாறு தடவையாவது நீ வரவேண்டியதிருக்கும். ஏன் மூஞ்சை தூக்குறே? நல்ல வேளை உன்னுடைய அனுபவம் ஒரு வாரம் என்கிறதுனால தேறிடுவே. பார்க்குல பார்த்தியே அந்தப் பையன். அவன் வயசுல துவங்கி இருந்தா உன்னை திருத்தியிருக்கவே முடியாது. அப்புறம், எய்ட்ஸோடதான் திரிய வேண்டியதிருக்கும். “நல்லவேள ஒன் ரத்தத்த டெஸ்ட் பண்ணியதில் உனக்கு அது இல்ல இனிமேலும், இதையே தொழிலா வச்சா நீ உருப்பட மாட்டேன்னு புரியுதா?” “புரியுது, மேடம். இப்போ அதுமேல அதிகமாய் ஆசையில்ல. திருந்திடுவேனா மேடம்?” “திருந்திட்டே... திருந்திட்டே... சில திருத்தங்கள்தான் செய்யணும். சரி உனக்கும் வேலை இருக்கும். எனக்கும், ஆட்கள் காத்திருக்காங்க... அப்புறம்...” செல்வா, சத்தியாவின், பேச்சு இழுப்பை ஊன்றுகோலாய் ஆக்கியதுபோல் எழுந்து, வெளியேறினான். பிறகு, திரும்பிவந்து, ஒரு கேள்வி கேட்டான். “கவிதாவோட பழகலாமா மேடம்...?” “லேசு... லேசாய்...” {{***|12|0em|char=—}} <section end="17"/>{{nop}}<noinclude></noinclude> 4vhmh42tz03sa8h14cj13u84tgp8yh1 1839282 1839280 2025-07-05T11:34:15Z மொஹமது கராம் 14681 1839282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||237}}</noinclude>ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஏதாவது ஒரு நல்ல பத்திரிகையில் வெளியிடுறேன். சரி, வெளியில உனக்காக உன் சித்தப்பா குடும்பமும், கவிதாவும் கண்ணீரும் கம்பலையுமா நிற்கிறாங்க. உனக்கு சுகமாயிட்டுதுன்னு சொல்லு.” “அப்பா நான் இனிமே வரவேண்டியதில்லியா மேடம்?” மனம் என்பது ஒரு மாயப் பிசாசு. என் முன்னால் உன் மனம் ஆரோக்கிய வேடம் போடும். ஆனால், சில சமயம் அது அற்ப ஆயுளில் முடிந்து, மீண்டும் அதே மனம் பேயாட்டம் போடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்துல, நீ வேறு, மனம் வேறுன்னு நினைத்துக்கோ. இது ஒரு செஷன்ல முடியுற மெஸ்மரிசம் ட்ரீட்மெண்ட் இல்ல. குறைஞ்சது ஐந்தாறு தடவையாவது நீ வரவேண்டியதிருக்கும். ஏன் மூஞ்சை தூக்குறே? நல்ல வேளை உன்னுடைய அனுபவம் ஒரு வாரம் என்கிறதுனால தேறிடுவே. பார்க்குல பார்த்தியே அந்தப் பையன். அவன் வயசுல துவங்கி இருந்தா உன்னை திருத்தியிருக்கவே முடியாது. அப்புறம், எய்ட்ஸோடதான் திரிய வேண்டியதிருக்கும். “நல்லவேள ஒன் ரத்தத்த டெஸ்ட் பண்ணியதில் உனக்கு அது இல்ல இனிமேலும், இதையே தொழிலா வச்சா நீ உருப்பட மாட்டேன்னு புரியுதா?” “புரியுது, மேடம். இப்போ அதுமேல அதிகமாய் ஆசையில்ல. திருந்திடுவேனா மேடம்?” “திருந்திட்டே... திருந்திட்டே... சில திருத்தங்கள்தான் செய்யணும். சரி உனக்கும் வேலை இருக்கும். எனக்கும், ஆட்கள் காத்திருக்காங்க... அப்புறம்...” செல்வா, சத்தியாவின், பேச்சு இழுப்பை ஊன்றுகோலாய் ஆக்கியதுபோல் எழுந்து, வெளியேறினான். பிறகு, திரும்பிவந்து, ஒரு கேள்வி கேட்டான். “கவிதாவோட பழகலாமா மேடம்...?” “லேசு... லேசாய்...” {{***|12|0em|char=-}} <section end="17"/>{{nop}}<noinclude></noinclude> ngh1uklgz5zg86zw38upuaxwm4clkf3 1839283 1839282 2025-07-05T11:34:29Z மொஹமது கராம் 14681 1839283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||237}}</noinclude>ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஏதாவது ஒரு நல்ல பத்திரிகையில் வெளியிடுறேன். சரி, வெளியில உனக்காக உன் சித்தப்பா குடும்பமும், கவிதாவும் கண்ணீரும் கம்பலையுமா நிற்கிறாங்க. உனக்கு சுகமாயிட்டுதுன்னு சொல்லு.” “அப்பா நான் இனிமே வரவேண்டியதில்லியா மேடம்?” மனம் என்பது ஒரு மாயப் பிசாசு. என் முன்னால் உன் மனம் ஆரோக்கிய வேடம் போடும். ஆனால், சில சமயம் அது அற்ப ஆயுளில் முடிந்து, மீண்டும் அதே மனம் பேயாட்டம் போடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்துல, நீ வேறு, மனம் வேறுன்னு நினைத்துக்கோ. இது ஒரு செஷன்ல முடியுற மெஸ்மரிசம் ட்ரீட்மெண்ட் இல்ல. குறைஞ்சது ஐந்தாறு தடவையாவது நீ வரவேண்டியதிருக்கும். ஏன் மூஞ்சை தூக்குறே? நல்ல வேளை உன்னுடைய அனுபவம் ஒரு வாரம் என்கிறதுனால தேறிடுவே. பார்க்குல பார்த்தியே அந்தப் பையன். அவன் வயசுல துவங்கி இருந்தா உன்னை திருத்தியிருக்கவே முடியாது. அப்புறம், எய்ட்ஸோடதான் திரிய வேண்டியதிருக்கும். “நல்லவேள ஒன் ரத்தத்த டெஸ்ட் பண்ணியதில் உனக்கு அது இல்ல இனிமேலும், இதையே தொழிலா வச்சா நீ உருப்பட மாட்டேன்னு புரியுதா?” “புரியுது, மேடம். இப்போ அதுமேல அதிகமாய் ஆசையில்ல. திருந்திடுவேனா மேடம்?” “திருந்திட்டே... திருந்திட்டே... சில திருத்தங்கள்தான் செய்யணும். சரி உனக்கும் வேலை இருக்கும். எனக்கும், ஆட்கள் காத்திருக்காங்க... அப்புறம்...” செல்வா, சத்தியாவின், பேச்சு இழுப்பை ஊன்றுகோலாய் ஆக்கியதுபோல் எழுந்து, வெளியேறினான். பிறகு, திரும்பிவந்து, ஒரு கேள்வி கேட்டான். “கவிதாவோட பழகலாமா மேடம்...?” “லேசு... லேசாய்...” {{***|12|0.5em|char=-}} <section end="17"/>{{nop}}<noinclude></noinclude> 0tfh6ku5v4jr6zx22nb92f21nj1vq6w பக்கம்:ஒத்தை வீடு.pdf/246 250 202774 1839088 762311 2025-07-04T12:22:36Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|246||புதைமண்}}</noinclude>“நீ ஏற்றுக் கொண்டாயே, அதுவே போதும். இன்று முதல் நான் வெறும் செல்வா இல்லை. கவிஞன் செல்வா. சிறிது நாளில் பெருங்கவிக்கோ... அல்லது சிறுங்கவிக்கோ... கவிப்பேரரசு...” “கவிதை மனிதன் தோன்றிய காலத்திலிருந்து, நம்மை ஆள்கிறது. அந்த ஆளுமையின் வலிவுதான் கவிஞன். இவன் கவிதைக்கு அரசன், பேரரசன் என்பது அசல் பித்துக்குளித்தனம். சரி அது கிடக்கட்டும் உங்க கவிதையில என்னை பற்றி ஒரு வார்த்தை வரலியே?” “இந்தக் கவிதையே, உனக்காக நான் எழுதியது. நீ மட்டும் இல்லையென்றால், நான் தேங்காய் சிதறலாய் சிதறி, பம்பாய்க்குப் போய் படாதபாடு பட்டிருப்பேன். அந்த டாக்டர் சத்தியாம்மா சொன்னது மாதிரி தாயான பிரும்மம், எனக்கு காதலியாக வந்திருக்கிறது.” கவிதா, சிரிக்கப் போனாள். அதற்குள், செல்வாவின் தழுதழுத்த குரலும், பொங்கிய கண்ணீரும் அவள் சிரிப்பை கட்டிப்போட்டது. ஒன்றை ஒன்று பிடித்துக்கொண்டும், பிடிபட்டுக் கொண்டும் இருந்த, இருவரின் கரங்களும், இப்போது ஒன்றை ஒன்று கோர்த்துக் கொண்டன. {{Css image crop |Image = ஒத்தை_வீடு.pdf |Page = 246 |bSize = 383 |cWidth = 38 |cHeight = 48 |oTop = 428 |oLeft = 171 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> qy1ylg2dot92up7xm4378d3249exzec 1839089 1839088 2025-07-04T12:25:39Z மொஹமது கராம் 14681 1839089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|246||புதைமண்}}</noinclude>“நீ ஏற்றுக் கொண்டாயே, அதுவே போதும். இன்று முதல் நான் வெறும் செல்வா இல்லை. கவிஞன் செல்வா. சிறிது நாளில் பெருங்கவிக்கோ... அல்லது சிறுங்கவிக்கோ... கவிப்பேரரசு...” “கவிதை மனிதன் தோன்றிய காலத்திலிருந்து, நம்மை ஆள்கிறது. அந்த ஆளுமையின் வலிவுதான் கவிஞன். இவன் கவிதைக்கு அரசன், பேரரசன் என்பது அசல் பித்துக்குளித்தனம். சரி அது கிடக்கட்டும் உங்க கவிதையில என்னை பற்றி ஒரு வார்த்தை வரலியே?” “இந்தக் கவிதையே, உனக்காக நான் எழுதியது. நீ மட்டும் இல்லையென்றால், நான் தேங்காய் சிதறலாய் சிதறி, பம்பாய்க்குப் போய் படாதபாடு பட்டிருப்பேன். அந்த டாக்டர் சத்தியாம்மா சொன்னது மாதிரி தாயான பிரும்மம், எனக்கு காதலியாக வந்திருக்கிறது.” கவிதா, சிரிக்கப் போனாள். அதற்குள், செல்வாவின் தழுதழுத்த குரலும், பொங்கிய கண்ணீரும் அவள் சிரிப்பை கட்டிப்போட்டது. ஒன்றை ஒன்று பிடித்துக்கொண்டும், பிடிபட்டுக் கொண்டும் இருந்த, இருவரின் கரங்களும், இப்போது ஒன்றை ஒன்று கோர்த்துக் கொண்டன. {{Css image crop |Image = ஒத்தை_வீடு.pdf |Page = 246 |bSize = 383 |cWidth = 38 |cHeight = 48 |oTop = 428 |oLeft = 171 |Location = center |Description = }} <section end="19"/>{{nop}}<noinclude></noinclude> hsjrsn58uz2se20b9qt4jv1142yxagt 1839090 1839089 2025-07-04T12:25:48Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|246||புதைமண்}}</noinclude>“நீ ஏற்றுக் கொண்டாயே, அதுவே போதும். இன்று முதல் நான் வெறும் செல்வா இல்லை. கவிஞன் செல்வா. சிறிது நாளில் பெருங்கவிக்கோ... அல்லது சிறுங்கவிக்கோ... கவிப்பேரரசு...” “கவிதை மனிதன் தோன்றிய காலத்திலிருந்து, நம்மை ஆள்கிறது. அந்த ஆளுமையின் வலிவுதான் கவிஞன். இவன் கவிதைக்கு அரசன், பேரரசன் என்பது அசல் பித்துக்குளித்தனம். சரி அது கிடக்கட்டும் உங்க கவிதையில என்னை பற்றி ஒரு வார்த்தை வரலியே?” “இந்தக் கவிதையே, உனக்காக நான் எழுதியது. நீ மட்டும் இல்லையென்றால், நான் தேங்காய் சிதறலாய் சிதறி, பம்பாய்க்குப் போய் படாதபாடு பட்டிருப்பேன். அந்த டாக்டர் சத்தியாம்மா சொன்னது மாதிரி தாயான பிரும்மம், எனக்கு காதலியாக வந்திருக்கிறது.” கவிதா, சிரிக்கப் போனாள். அதற்குள், செல்வாவின் தழுதழுத்த குரலும், பொங்கிய கண்ணீரும் அவள் சிரிப்பை கட்டிப்போட்டது. ஒன்றை ஒன்று பிடித்துக்கொண்டும், பிடிபட்டுக் கொண்டும் இருந்த, இருவரின் கரங்களும், இப்போது ஒன்றை ஒன்று கோர்த்துக் கொண்டன. {{Css image crop |Image = ஒத்தை_வீடு.pdf |Page = 246 |bSize = 383 |cWidth = 38 |cHeight = 48 |oTop = 428 |oLeft = 171 |Location = center |Description = }} <section end="19"/>{{nop}}<noinclude></noinclude> 0wx0k8kjq4gkoesx0x05acvzgdhl8cc பக்கம்:ஒத்தை வீடு.pdf/247 250 202775 1839104 1836695 2025-07-04T13:38:06Z Booradleyp1 1964 1839104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புகள்</b>}} {{box|padding=2px|பல பல்கலைக்கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்பட்டவை;<br>முனைவர், எம்பிஎல். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டவை.}}}} {{u|<b>நாவல்கள்}} 1. ஒரு கோட்டுக்கு வெளியே</b> பதினான்கு இந்திய மொழிகளில், பொழி பெயர்க்கப்படுகிறது பதினான்கு மொழிகளில், வானொலியில் ஒலிபரப்பானது - கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1997; மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 1992. <b>2. சோற்றுப் பட்டாளம்</b> சென்னை தொலைக்காட்சி நிலையத்தில், முதன் முதலாய் முழுநீள நாடகமாய் ஒளிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1977; மணிவாசகர் பதிப்பகம், 1992. இந்தப் படைப்பையும், ‘உயரத்தின் தாழ்வுகள்’, ‘காமன் அறிந்த ஈசனையும்’ இணைத்து, கங்கை பதிப்பகம், 1997ல் புதிதாக வெளியிட்டுள்ளது. {| |- | {{ts|vtt}}|<b>3. இல்லந்தோறும் இதயங்கள்</b> || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1982.<br>{{gap}}இரண்டாம் பதிப்பு, 1997-ல் வானதி. |- | {{ts|vtt}}|<b>4. நெருப்புத் தடயங்கள்</b> || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1983.<br>{{gap}}இரண்டாம் பதிப்பு - கங்கைப்<br>{{gap}}பதிப்பகம். |- | {{ts|vtt}}|<b>5. வெளிச்சத்தை நோக்கி</b> || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1989. |- | {{ts|vtt}}|<b>6. ஊருக்குள் ஒரு புரட்சி</b> || {{gap}}தமிழக அரசு முதல் பரிசு பெற்றது<br>{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1980<br>{{gap}}1992 (ஐந்து பதிப்புகள்). |- | {{ts|vtt}}|<b>7. வளர்ப்பு மகள்</b> || {{gap}}மணிவாசகர் பதிப்பகம்,<br>{{gap}}1980-1987 (ஐந்து பதிப்புகள்). |- | {{ts|vtt}}|<b>8. நிழல் முகங்கள்</b> || {{gap}}தமிழ்ப் புத்தகாலயம், 1991. |- | {{ts|vtt}}|<b>9. சாமியாடிகள்</b> || {{gap}}மீனாட்சி புத்தக நிலையம்,<br>{{gap}}மதுரை - 1991. |- | {{ts|vtt}}|<b>10. தாழம்பூ</b> || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1992. |- | {{ts|vtt}}|<b>11. மூட்டம்</b> || {{gap}}அன்னம் வெளியீடு, 1994;<br>{{gap}}ஏகலைவன் வெளியீடு, 1996. |- | {{ts|vtt}}|<b>12. அவளுக்காக</b> || {{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | {{ts|vtt}}|<b>13. வாடாமல்லி</b> || {{gap}}வானதி பதிப்பகம், 1994.<br>{{gap}}இரண்டாம் பதிப்பு - 1997.<br>{{gap}}அமரர் ஆதித்தனார் பரிசு பெற்றது. |- | {{ts|vtt}}|<b>14. சத்திய ஆவேசம்</b> || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1987. |- | {{ts|vtt}}|<b>15. பாலைப்புறா</b> || {{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1998. |}{{nop}}<noinclude></noinclude> m7gggl56xm6e610puzndstrhnjij78f 1839108 1839104 2025-07-04T13:44:39Z Booradleyp1 1964 1839108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புகள்</b>}} {{box|padding=2px|பல பல்கலைக்கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்பட்டவை;<br>முனைவர், எம்பிஎல். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டவை.}}}} {{u|<b>நாவல்கள்}} 1. ஒரு கோட்டுக்கு வெளியே</b> பதினான்கு இந்திய மொழிகளில், பொழி பெயர்க்கப்படுகிறது பதினான்கு மொழிகளில், வானொலியில் ஒலிபரப்பானது - கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1997; மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 1992. <b>2. சோற்றுப் பட்டாளம்</b> சென்னை தொலைக்காட்சி நிலையத்தில், முதன் முதலாய் முழுநீள நாடகமாய் ஒளிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1977; மணிவாசகர் பதிப்பகம், 1992. இந்தப் படைப்பையும், ‘உயரத்தின் தாழ்வுகள்’, ‘காமன் அறிந்த ஈசனையும்’ இணைத்து, கங்கை பதிப்பகம், 1997ல் புதிதாக வெளியிட்டுள்ளது. {| |- | {{ts|vtt}}|<b>3. இல்லந்தோறும் இதயங்கள்</b> || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1982.<br>{{gap}}இரண்டாம் பதிப்பு, 1997-ல் வானதி. |- | {{ts|vtt}}|<b>4. நெருப்புத் தடயங்கள்</b> || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1983.<br>{{gap}}இரண்டாம் பதிப்பு - கங்கைப்<br>{{gap}}பதிப்பகம். |- | {{ts|vtt}}|<b>5. வெளிச்சத்தை நோக்கி</b> || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1989. |- | {{ts|vtt}}|<b>6. ஊருக்குள் ஒரு புரட்சி</b> || {{gap}}தமிழக அரசு முதல் பரிசு பெற்றது<br>{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1980<br>{{gap}}1992 (ஐந்து பதிப்புகள்). |- | {{ts|vtt}}|<b>7. வளர்ப்பு மகள்</b> || {{gap}}மணிவாசகர் பதிப்பகம்,<br>{{gap}}1980-1987 (ஐந்து பதிப்புகள்). |- | {{ts|vtt}}|<b>8. நிழல் முகங்கள்</b> || {{gap}}தமிழ்ப் புத்தகாலயம், 1991. |- | {{ts|vtt}}|<b>9. சாமியாடிகள்</b> || {{gap}}மீனாட்சி புத்தக நிலையம்,<br>{{gap}}மதுரை - 1991. |- | {{ts|vtt}}|<b>10. தாழம்பூ</b> || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1992. |- | {{ts|vtt}}|<b>11. மூட்டம்</b> || {{gap}}அன்னம் வெளியீடு, 1994;<br>{{gap}}ஏகலைவன் வெளியீடு, 1996. |- | {{ts|vtt}}|<b>12. அவளுக்காக</b> || {{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | {{ts|vtt}}|<b>13. வாடாமல்லி</b> || {{gap}}வானதி பதிப்பகம், 1994.<br>{{gap}}இரண்டாம் பதிப்பு - 1997.<br>{{gap}}அமரர் ஆதித்தனார் பரிசு பெற்றது. |- | {{ts|vtt}}|<b>14. சத்திய ஆவேசம்</b> || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1987. |- | {{ts|vtt}}|<b>15. பாலைப்புறா</b> || {{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1998. |-<noinclude>|}</noinclude> chtttkluxg0djlsz5k391zfq5g1lo79 பக்கம்:ஒத்தை வீடு.pdf/248 250 202776 1839105 1836838 2025-07-04T13:40:35Z Booradleyp1 1964 1839105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{u|<b>குறுநாவல்கள்</b>}} {| |- | {{ts|vtt}}|<b>1. புதிய திரிபுரங்கள்</b><br>{{gap}}(+ கேள்வித் தீ) || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1982,<br>{{gap}}இரண்டாம் பதிப்பு, 1997 -<br>{{gap}}வானதி பதிப்பகம். |- | {{ts|vtt}}|<b>2. வேரில் பழுத்த பலா</b><br>{{gap}}(+ ஒரு நாள் போதுமா) || {{gap}}சாகித்திய அக்காதெமி விருது<br>{{gap}}பெற்றது. மணிவாசகர் பதிப்பகம்,<br>{{gap}}1988, 1994. |- | <b>3. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்</b><br>{{gap}}(+ பிற்பகல்) ||{{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | <b>4. ஒத்தை வீடு</b> (+ புதைமண்) ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 2000. |- |{{u|<b>சிறுகதைத் தொகுப்புகள்</b>}} |- | {{ts|vtt}}|<b>1. குற்றம் பார்க்கில்</b> || {{gap}}தமிழக அரசு முதல் பரிசு பெற்றது.<br>{{gap}}கல்வி வெளியீடு, 1977;<br>{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1992. |- | <b>2. காகித உறவு</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1979-1982. |- | <b>3. ஒரு சத்தியத்தின் அழுகை</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1979-1985. |- | <b>4. உறவுக்கு அப்பால்</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1979. |- | <b>5. மானுடத்தின் நாணயங்கள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1989. |- | <b>6. பிணம் தின்னும் சாஸ்திரங்கள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987. |- | <b>7. சமுத்திரம் கதைகள்</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1983. |- | <b>8. ஏவாத கணைகள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1990-1993. |- | {{ts|vtt}}|<b>9. மண் சுமை</b> || {{gap}}தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது.<br>{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1991. |- | <b>10. யானைப் பூச்சிகள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994. |- | <b>11. காலில் விழுந்த கவிதைகள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994. |- | <b>12. மனம் கொத்தி மனிதர்கள்</b> ||{{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | <b>13. இன்னொரு உரிமை</b> ||{{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | <b>14. பூ நாகம்</b> ||{{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | <b>15. ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1996. |- | <b>16. பொய்யாய் - புதுக்கனவாய்</b> ||{{gap}}கங்கை பதிப்பகம், 1993. |- | <b>17. சிக்கி முக்கிக் கற்கள்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1999. |- | <b>18. ஆகாயமும் பூமியுமாய்...</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1999. |- |{{u|<b>நாடகம்</b>}} |- | <b>1. லியோ டால்ஸ்டாய்</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1987. |- |{{u|<b>கட்டுரைத் தொகுப்பு</b>}} |- | <b>1. எனது கதைகளின் கதைகள்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1996. |- | <b>2. சமுத்திரம் கட்டுரைகள்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1999. |}{{nop}}<noinclude></noinclude> hkck6seyjrq63pnxbzsc23zvj650fxm 1839109 1839105 2025-07-04T13:45:51Z Booradleyp1 1964 1839109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{|</noinclude>|- {{u|<b>குறுநாவல்கள்</b>}} | {{ts|vtt}}|<b>1. புதிய திரிபுரங்கள்</b><br>{{gap}}(+ கேள்வித் தீ) || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1982,<br>{{gap}}இரண்டாம் பதிப்பு, 1997 -<br>{{gap}}வானதி பதிப்பகம். |- | {{ts|vtt}}|<b>2. வேரில் பழுத்த பலா</b><br>{{gap}}(+ ஒரு நாள் போதுமா) || {{gap}}சாகித்திய அக்காதெமி விருது<br>{{gap}}பெற்றது. மணிவாசகர் பதிப்பகம்,<br>{{gap}}1988, 1994. |- | <b>3. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்</b><br>{{gap}}(+ பிற்பகல்) ||{{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | <b>4. ஒத்தை வீடு</b> (+ புதைமண்) ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 2000. |- |{{u|<b>சிறுகதைத் தொகுப்புகள்</b>}} |- | {{ts|vtt}}|<b>1. குற்றம் பார்க்கில்</b> || {{gap}}தமிழக அரசு முதல் பரிசு பெற்றது.<br>{{gap}}கல்வி வெளியீடு, 1977;<br>{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1992. |- | <b>2. காகித உறவு</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1979-1982. |- | <b>3. ஒரு சத்தியத்தின் அழுகை</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1979-1985. |- | <b>4. உறவுக்கு அப்பால்</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1979. |- | <b>5. மானுடத்தின் நாணயங்கள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1989. |- | <b>6. பிணம் தின்னும் சாஸ்திரங்கள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987. |- | <b>7. சமுத்திரம் கதைகள்</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1983. |- | <b>8. ஏவாத கணைகள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1990-1993. |- | {{ts|vtt}}|<b>9. மண் சுமை</b> || {{gap}}தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது.<br>{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1991. |- | <b>10. யானைப் பூச்சிகள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994. |- | <b>11. காலில் விழுந்த கவிதைகள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994. |- | <b>12. மனம் கொத்தி மனிதர்கள்</b> ||{{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | <b>13. இன்னொரு உரிமை</b> ||{{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | <b>14. பூ நாகம்</b> ||{{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | <b>15. ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1996. |- | <b>16. பொய்யாய் - புதுக்கனவாய்</b> ||{{gap}}கங்கை பதிப்பகம், 1993. |- | <b>17. சிக்கி முக்கிக் கற்கள்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1999. |- | <b>18. ஆகாயமும் பூமியுமாய்...</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1999. |- |{{u|<b>நாடகம்</b>}} |- | <b>1. லியோ டால்ஸ்டாய்</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1987. |- |{{u|<b>கட்டுரைத் தொகுப்பு</b>}} |- | <b>1. எனது கதைகளின் கதைகள்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1996. |- | <b>2. சமுத்திரம் கட்டுரைகள்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1999. |- |}{{nop}}<noinclude></noinclude> 8zdvm6p2p4wqm2w0lyje683lcl69tb8 1839110 1839109 2025-07-04T13:47:14Z Booradleyp1 1964 1839110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{|</noinclude>|- |{{u|<b>குறுநாவல்கள்</b>}} |- | {{ts|vtt}}|<b>1. புதிய திரிபுரங்கள்</b><br>{{gap}}(+ கேள்வித் தீ) || {{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1982,<br>{{gap}}இரண்டாம் பதிப்பு, 1997 -<br>{{gap}}வானதி பதிப்பகம். |- | {{ts|vtt}}|<b>2. வேரில் பழுத்த பலா</b><br>{{gap}}(+ ஒரு நாள் போதுமா) || {{gap}}சாகித்திய அக்காதெமி விருது<br>{{gap}}பெற்றது. மணிவாசகர் பதிப்பகம்,<br>{{gap}}1988, 1994. |- | <b>3. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்</b><br>{{gap}}(+ பிற்பகல்) ||{{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | <b>4. ஒத்தை வீடு</b> (+ புதைமண்) ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 2000. |- |{{u|<b>சிறுகதைத் தொகுப்புகள்</b>}} |- | {{ts|vtt}}|<b>1. குற்றம் பார்க்கில்</b> || {{gap}}தமிழக அரசு முதல் பரிசு பெற்றது.<br>{{gap}}கல்வி வெளியீடு, 1977;<br>{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1992. |- | <b>2. காகித உறவு</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1979-1982. |- | <b>3. ஒரு சத்தியத்தின் அழுகை</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1979-1985. |- | <b>4. உறவுக்கு அப்பால்</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1979. |- | <b>5. மானுடத்தின் நாணயங்கள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1989. |- | <b>6. பிணம் தின்னும் சாஸ்திரங்கள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987. |- | <b>7. சமுத்திரம் கதைகள்</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1983. |- | <b>8. ஏவாத கணைகள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1990-1993. |- | {{ts|vtt}}|<b>9. மண் சுமை</b> || {{gap}}தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது.<br>{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1991. |- | <b>10. யானைப் பூச்சிகள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994. |- | <b>11. காலில் விழுந்த கவிதைகள்</b> ||{{gap}}நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994. |- | <b>12. மனம் கொத்தி மனிதர்கள்</b> ||{{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | <b>13. இன்னொரு உரிமை</b> ||{{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | <b>14. பூ நாகம்</b> ||{{gap}}வானதி பதிப்பகம், 1992. |- | <b>15. ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1996. |- | <b>16. பொய்யாய் - புதுக்கனவாய்</b> ||{{gap}}கங்கை பதிப்பகம், 1993. |- | <b>17. சிக்கி முக்கிக் கற்கள்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1999. |- | <b>18. ஆகாயமும் பூமியுமாய்...</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1999. |- |{{u|<b>நாடகம்</b>}} |- | <b>1. லியோ டால்ஸ்டாய்</b> ||{{gap}}மணிவாசகர் பதிப்பகம், 1987. |- |{{u|<b>கட்டுரைத் தொகுப்பு</b>}} |- | <b>1. எனது கதைகளின் கதைகள்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1996. |- | <b>2. சமுத்திரம் கட்டுரைகள்</b> ||{{gap}}ஏகலைவன் பதிப்பகம், 1999. |- |}{{nop}}<noinclude></noinclude> 0d9i53ckgqdk46x77i8vvl29mf96hv2 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/4 250 213886 1839093 1441596 2025-07-04T12:34:58Z Mohanraj20 15516 1839093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>நூல் : {{larger|<b>சமுத்திரக் கதைகள்</b>}}<br> முதற் பதிப்பு : டிசம்பர், 2001<br> வடிவம் : “டெமி“<br> பக்கங்கள் : 185<sup>+</sup>15=200<br> விலை : ரூ.60/<br> உரிமை : ஆசிரியருக்கு<br>}} {{dhr|5em}} {{center|{{larger|<b>வெளியிடு :</b>}} <br> ஏகலைவன் பதிப்பகம் <br> 9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br> டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br> சென்னை - 600 041.<br>}} {{center|{{larger|<b>ஒளி அச்சு :</b>}}<br> ஏகலைவன், சென்னை - 41.<br>}} {{center|{{larger|<b>அச்சிட்டோர் :</b>}}<br> மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்,<br> சென்னை-600 021,<br> தொலைபேசி : 5954528 </b>}}<noinclude></noinclude> 4jf7sb7kdobkseryemnxzjhkm9c9ohe 1839094 1839093 2025-07-04T12:37:37Z Mohanraj20 15516 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1839094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>நூல் : {{larger|<b>சமுத்திரக் கதைகள்</b>}}<br> முதற் பதிப்பு : டிசம்பர், 2001<br> வடிவம் : “டெமி“<br> பக்கங்கள் : 185<sup>+</sup>15=200<br> விலை : ரூ.60/<br> உரிமை : ஆசிரியருக்கு<br>}} {{dhr|5em}} {{center|{{larger|<b>வெளியிடு :</b>}} <br> ஏகலைவன் பதிப்பகம் <br> 9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br> டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br> சென்னை - 600 041.<br>}} {{center|{{larger|<b>ஒளி அச்சு :</b>}}<br> ஏகலைவன், சென்னை - 41.<br>}} {{center|{{larger|<b>அச்சிட்டோர் :</b>}}<br> மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்,<br> சென்னை-600 021,<br> தொலைபேசி : 5954528 </b>}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 394prud5z4ryqw7k88nbi7d75tha6fo 1839153 1839094 2025-07-04T17:09:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|5em}} நூல் : {{larger|<b>சமுத்திரக் கதைகள்</b>}}<br> முதற் பதிப்பு : டிசம்பர், 2001<br> வடிவம் : “டெமி“<br> பக்கங்கள் : 185{{sup|+}}15=200<br> விலை : ரூ.60/-<br> உரிமை : ஆசிரியருக்கு {{dhr|4em}} {{larger|<b>வெளியீடு :</b>}}<br> ஏகலைவன் பதிப்பகம்<br> 9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br> டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br> சென்னை - 600 041. {{dhr|2em}} {{larger|<b>ஒளி அச்சு :</b>}}<br> ஏகலைவன், சென்னை - 41. {{dhr|2em}} {{larger|<b>அச்சிட்டோர் :</b>}}<br> மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்,<br> சென்னை-600 021,<br> தொலைபேசி : 5954528 {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 9h4xg0q8amjhnvl85c20db3pzr2zz1z 1839154 1839153 2025-07-04T17:10:19Z Desappan sathiyamoorthy 14764 1839154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|4em}} நூல் : {{larger|<b>சமுத்திரக் கதைகள்</b>}}<br> முதற் பதிப்பு : டிசம்பர், 2001<br> வடிவம் : “டெமி“<br> பக்கங்கள் : 185{{sup|+}}15=200<br> விலை : ரூ.60/-<br> உரிமை : ஆசிரியருக்கு {{dhr|4em}} {{larger|<b>வெளியீடு :</b>}}<br> ஏகலைவன் பதிப்பகம்<br> 9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br> டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br> சென்னை - 600 041. {{dhr|2em}} {{larger|<b>ஒளி அச்சு :</b>}}<br> ஏகலைவன், சென்னை - 41. {{dhr|2em}} {{larger|<b>அச்சிட்டோர் :</b>}}<br> மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்,<br> சென்னை-600 021,<br> தொலைபேசி : 5954528 {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 43h9ifecps7lwd0ivh26ggwu988awjl பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/5 250 213888 1839092 1839005 2025-07-04T12:29:54Z Mohanraj20 15516 1839092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}} {{Box|<b>{{X-larger|பன்முகக் க/வி/தை}}</b>}} <b>{{center|{{X-larger|பன்முகக் க/வி/தை}}}}</b> {{Right|பேராசிரியர் ச. ராஜநாயகம்<br> லொயோலா கல்லூரி, சென்னை.}} 01. திருவாங்கூர் சமஸ்தானத்து முகவரியில்லாக் குக்கிராமக் குடிசைமண்டி ஒன்றில் தொடங்கி, முகவரி தேவையில்லாத நம் பக்கத்துத் தெரு வரை பதிமூன்று கதை - அலைகளை வீசும் இலக்கியப் படைப்பாக மலர்ந்துள்ளது சமுத்திரக் கதைகள் எனும் தொகுப்பு. இன்றில் நிலைகொண்டு, நேற்றில் அழுந்தி மீண்டு, நாளையை நோக்கிப் பாயக் காத்திருக்கும் அம்புகளாய்க் கதைகள். முதுகில் பாயாதவை - நெஞ்சில் பாய்கின்றன / பாய்ச்சுகின்றன - ஈரமும் வீரமும். எனவே இத் தொகுப்பை ஒரு கவிதை எனலாம் - கதை. கவிதை விதை, சில இடங்களில் கதை கவிதையாகிறது; சில இடங்களில் கவிதை கதையாகிறது. ஆனால் எல்லாக் கதைகளும் விளிம்புநிலைகளில் மையம் கொண்டுள்ள விதைகள். 02. முகம் தெரியாத மனுஷி ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றின் மீட்சிக்கான போராட்டத்தில் முகமிழந்த பெண் போராளிகளின் முகங்களை மீளுருவாக்கும் முயற்சி - ராசம்மா வடிவில். ராசம்மா ஒரு கலகக்காரரல்ல. தன்னுடைய உடம்பை முடிக்கொள்ளும் உரிமையுள்ள, மனுவழியாக வாழத் துடிக்கும், தன்மானமிக்க ஒரு சாதாரணப் பெண். ஆனால் அதுவே ஒரு கலகத்துக்கான காரணமாக அமைந்திருந்தது. நவீனத் தமிழகத்தில் பெண்ணுரிமைக்கான முதல் குரல் ராசம்மாவைப் போன்ற முகம் தெரியாத ஒடுக்கப்பட்ட நம் அன்னையரின் குரல். அதுவும்கூட ஒரு கட்டத்தில் வெறும் கூக்குரலாய், அவலமாய், ஓலமாய் இருந்ததுதான். ஆனால் கூக்குரல் கூட்டுக்குரலாய் ஆகும்போது, சில-பல உடல்கள் விழ நேர்ந்தாலும்<noinclude></noinclude> bdto76erw2bavu1xui8etx6r469eumv 1839155 1839092 2025-07-04T17:14:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{Box|<b>{{X-larger|பன்முகக் க/வி/தை}}</b>}}}} {{Right|பேராசிரியர் ச. ராஜநாயகம்<br>லொயோலா கல்லூரி, சென்னை.}} <b>01.</b> திருவாங்கூர் சமஸ்தானத்து முகவரியில்லாக் குக்கிராமக் குடிசைமண்டி ஒன்றில் தொடங்கி, முகவரி தேவையில்லாத நம் பக்கத்துத் தெரு வரை பதிமூன்று கதை - அலைகளை வீசும் இலக்கியப் படைப்பாக மலர்ந்துள்ளது சமுத்திரக் கதைகள் எனும் தொகுப்பு. இன்றில் நிலைகொண்டு, நேற்றில் அழுந்தி மீண்டு, நாளையை நோக்கிப் பாயக் காத்திருக்கும் அம்புகளாய்க் கதைகள். முதுகில் பாயாதவை - நெஞ்சில் பாய்கின்றன / பாய்ச்சுகின்றன - ஈரமும் வீரமும். எனவே இத்தொகுப்பை ஒரு க/வி/தை எனலாம் - கதை. கவிதை விதை. சில இடங்களில் கதை கவிதையாகிறது; சில இடங்களில் கவிதை கதையாகிறது. ஆனால் எல்லாக் கதைகளும் விளிம்புநிலைகளில் மையம் கொண்டுள்ள விதைகள். <b>02.</b> முகம் தெரியாத மனுஷி ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றின் மீட்சிக்கான போராட்டத்தில் முகமிழந்த பெண் போராளிகளின் முகங்களை மீளுருவாக்கும் முயற்சி - ராசம்மா வடிவில். ராசம்மா ஒரு கலகக்காரரல்ல. தன்னுடைய உடம்பை முடிக்கொள்ளும் உரிமையுள்ள, மனுவழியாக வாழத் துடிக்கும், தன்மானமிக்க ஒரு சாதாரணப் பெண். ஆனால் அதுவே ஒரு ‘கலகத்துக்கான’ காரணமாக அமைந்திருந்தது. நவீனத் தமிழகத்தில் பெண்ணுரிமைக்கான முதல் குரல் ராசம்மாவைப் போன்ற முகம் தெரியாத ஒடுக்கப்பட்ட நம் அன்னையரின் குரல். அதுவும்கூட ஒரு கட்டத்தில் வெறும் கூக்குரலாய், அவலமாய், ஓலமாய் இருந்ததுதான். ஆனால் கூக்குரல் கூட்டுக்குரலாய் ஆகும்போது, சில-பல உடல்கள் விழ நேர்ந்தாலும்<noinclude></noinclude> pe60i6n3ln5dl0f6f9yykz1gymtirg6 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/6 250 213890 1839156 1839075 2025-07-04T17:19:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|IV||}}</noinclude>அவை வாழ்வின் வித்துக்களாய் எழும் என்ற வரலாற்று உண்மையை அழுத்தமாக முன்வைக்கிறது ராசம்மாவின் கதை. ராசம்மா, பூமாரி போன்ற வீர மகளிர் வாழ்ந்த கிராமத்துப் பெயரில்லை. ஏனென்றால், அது திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்த “குடிசைமண்டி” மட்டுமல்ல, இன்றைக்குக்கூட தமிழகத்தின் விளிம்புகளில் அடையாளமற்றுக் கிடக்கும் எந்தக் கிராமமாகவும் அது இருக்கலாம். அடையாளமற்ற அனைத்துலக ஆண்சந்தைகளில் நடக்கும் அழகிப் போட்டிகளில் தங்களை அவி(ழ்)த்துக்கொள்ளும் இந்தத் தலைமுறையில் ராசம்மாக்களும் ஏராளமாக இருக்கிறார்கள். உதிரிகளாகச் சிதறிக் கிடக்கும் இவர்கள் ஒருங்கிணைந்து எழுப்பும் கூட்டுக்குரலில்தான் சந்தைகளின் கூச்சல்கள் கரையேறும் - முகமுள்ள மனுஷிகளாய் - மனிதர்களாய். ⬤ பொருள்மிக்க பூஜ்யம் உருவகமாய்ப் பேசுகிறது. இது ஒரு காட்டு மாட்டுக் கன்று பூஜ்யமாய்ப் போவதைப் பற்றிய கதை. காட்டுநாய்களின் வெறியாட்டத்துக்குத் தன் தாய் பலியாவதைப் பார்க்கின்றது கன்று. அந்நாய்களைத் தற்போதைக்குத் தன்னால் எதிர்த்துத் தாக்க முடியாது என்பதைக் கன்று உணர்கிறது. அவற்றிடமிருந்து தப்பியோடுவதே ஒரே வழி. தப்பி வெகுதூரம் செல்ல முடியாதபடி, சுற்றி வளைத்திருக்கும் நாய்கள். அங்குச் சோர்ந்து கிடக்கும் புலிக்கு வலியச்சென்று தன்னை இரையாக்கிக் கொள்ள முடிவுசெய்கிறது. அந்தப் புலியின் கதையும், சோகமானதுதான். தன் குட்டியை அந்த நாய்களிடம் பறிகொடுத்த புலி அது. துக்கத்தின் அழுத்தத்தில் துவண்டு கிடந்த புலி, வலிய வந்து உணவான கன்றைத் தின்றபின் தெளிச்சி பெறுகிறது, எழுச்சி கொள்கிறது, சினந்து தாக்குகிறது. தன் குட்டியைச் சூறையாடிய நாய்களைப் பழிதீர்த்துக் கொள்கிறது. அதன் வழியாக அந்தக் காட்டு மாட்டுக் கன்றும் தன் இறப்புக்குப் பொருள்தேடிக் கொள்கிறது. இது கதை.<noinclude></noinclude> rxany1y40jo3bgeeule4wnet61ywupa பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/7 250 213893 1839157 1839076 2025-07-04T17:27:51Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|||V}}</noinclude>சில மனிதர்களை, சில வர்க்கங்களின் பிரதிநிதிகளை உருவகப்படுத்தியுள்ள இக்கதை, பன்முக வாசிப்புக்கு வழிவகுக்கிறது. தாயான காட்டு மாடு, அதன் கன்று, எண்ணிக்கையில் பலவான காட்டு நாய்கள், தாயான புலி, அதன் குட்டி என ஐந்து கதை மாந்தர்களுடன் கதைசொல்பவரும், இரண்டு தலைமுறைகள். தாயை இழந்த கன்று, வாரிசான குட்டியை இழந்த புலி என இருவேறு இழப்புக்கள். தாயும் கன்றும் (இரண்டு தலைமுறைகள்) விழுங்கப்படுகின்றன. ஆனால் புலி தன்னை மீட்டுக்கொள்கிறது. இழப்புகளுக்குக் காரணமான நாய்கள் அழிக்கப்படுகின்றன. யாருடைய பார்வையில் கதையை வாசிப்பது? எந்த இருப்பியல் சூழலுடன் இக்கதை நிகழ்வுகளைப் பொருத்திப் பார்ப்பது?... கேள்விகள் மூலமாகத் தொடர் விவாதத்துக்கு வழிவகுக்கும் கதை. பன்முக வாசிப்புக்குரிய இத்தகைய படைப்புக்களால்தான் சிந்திக்கும் வாசகரை உருவாக்க முடியும். ⬤ நீருபூத்த நெருப்பு மிகச் சாவகாசமாக நகர்ந்து, ஒரு பெரும் பாய்ச்சலுடன் முடிகிறது. முன்றாவது நபர் கண்களுக்கு எடுத்துக்காட்டான தம்பதியர். ஆண்டவன் - அகிலா,, மிகப் பொருத்தமான பெயர்கள். ஆள்வதால் ஆண்டவன்; (அவனுக்கு) அனைத்துமாகி, அனைத்தையும் தாங்குவதால் அகிலா. கணவன் தேவையறிந்து நடந்துகொள்ளும் மனைவி. மனைவியின் சேவையைப் புரிந்துகொள்ளும் கணவன். ஆனால் புறத்தோற்றம் அகத்தின் வெளிப்பாடாய் இருக்கவேண்டிய அவசியமில்லை. “ஆண்டவன் சாருக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே அவரோட பையனுக்கு இருக்கு அகிலாம்மாவுக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே இந்தப் பெண்ணுக்கு இருக்கு... உங்க ரெண்டு பேரையும் போலவே, இவாள் ரெண்டு பேரும் பிரமாதமாய் வாழ்வாள். ஒங்களோட மறு பதிப்புத்தான் இவாள். உடனே முடிச்சிடுங்கோ,” என்கிறார் சாஸ்திரி. ஆனாலும் - ஆண்டவனை ‘நேருக்கு நேராய்ப்’ பார்த்து, ‘திட்டவட்டமாக, தீர்ப்பளிப்பதுபோல்’ அகிலா சொல்கிறார்: “இது பொருத்தமில்லாத ஜாதகம். விட்டுத் தள்ளுவோம்.”<noinclude></noinclude> t1gjfjxemhbyq25rvt98ignac9wy2kv பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/10 250 213902 1839081 1441853 2025-07-04T12:05:18Z Mohanraj20 15516 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1839081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|VIII||}}</noinclude>அகலிகைக் கற்களாய் நிற்கும் இந்த ஆயாக்களை அவர்களின் அனுதின வாழ்க்கைப் போராட்டமே மனிதர்களாக ஆக்குகிறது. ⬤ கடைசியர்கள் மையமாகும்போது, தனிப்பட்ட இழப்புக்களே ஒருவரை மனிதநேயமிக்க போராளியாக மாற்றும் என்பதை விரிவாகச் சொல்லும் கதை கடைசியர்கள். இளைஞரைப் புரிந்துகொள்ளும் மனப் பக்குவம் இருந்தால், தலைமுறை இடைவெளிகள் தோன்றுவதில்லை என்பதைத் 'சித்தப்பா’ மூலமாகத் தெளிவுபடுத்துகிறது இந்தக் கதை. சுயநலமில்லாத் தலைவர்களுக்கும் நல்ல வழிகாட்டிகளுக்கும் தமிழக அரசியல்-பண்பாட்டுக் களத்தில் பெரும் வெற்றிடமுள்ள இக்காலக்கட்டத்தில் தேவை. சித்தப்பாக்கள் (மாமாக்கள் அல்ல). ⬤ சரியான 'சித்தப்பாக்கள்' இல்லாதபோது ஒரு சமுதாயத்தில் என்ன நடக்கும் என்பதைச் சித்திரிக்கிறது கலவரப்போதை. சாதி-மதம்-வர்க்கம் எனப் பல்வேறு பிரிவினைகளால் கூறுபட்டுக் கிடக்கும் நமது சமுதாயம் மனப்பிறழ்வுக்கும் மனச்சிதைவுக்கும் ஆளாகியுள்ளது என்பதன் குறியீடாகப் பன்னிர் என்ற"மனநோயாளி காட்டப்படுகிறார். ‘மின்சாரக் குப்பியால சூடுபோடும்" அதிர்ச்சி வைத்தியம் ஒருவேளை பன்னிரைக் குணமாக்கலாம். தன்னைக் கட்டிப்பிடித்த “அம்மாவின் தோளில் முகம் போட்டு அவர் உடல் வழியாய் தரையில் சரிந்தும்" அவர் குணமாகலாம். பன்னிர் கிடக்கட்டும். நாமெல்லாருமே ஒருவிதத்தில் மனநோயாளிகளாக ஆக்கப்படுகிறோம் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர். இன்று கலவரங்கள் திட்டமிட்டு FÚRfû NVÔL "LrjRlTÓ ¡u \] . B Vpx (spontaneity) என்பது அரங்கேற்றப்படும் ஒரு thriller. ⬤ “எந்தக் குடியிலும் பெண் என்கிறவள் கீழ் குடிதான்” என்ற மையக்கருத்தை வலியுறுத்தும் கதை பெண்குடி இது முகம் தெரியாத<noinclude></noinclude> nbni8ey1jdg9uocdfbc2v5yaptkjym6 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/11 250 213905 1839096 1442569 2025-07-04T12:46:29Z Mohanraj20 15516 1839096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|||IX}}</noinclude>மனுஷியின் மற்றொரு வரலாற்று முகம் ஒரு பெண் அடிமை அல்லது தெய்வம் ஆகலாமேயன்றி, ஒருபோதும் சகமனிதராக ஆண்களால் கருதப்படுவதில்லை. ஒரு அடிமை தொட்ட மாத்திரத்தின் எஜமானியான ஒரு பெண்கூட அடிமையாகிவிடுகிறார் பெண்களைப் பொருத்தமட்டில் சாதிச் சுவர்கள் எவ்வளவு சன்னமானவையாக உள்ளன: பாருக்குட்டிகளும் இசக்கிமாடத்திகளும் ‘அல்லாடி, தள்ளாடி’ நடந்துகொண்டிருக்கிறார்கள். ஒப்பாரிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும் - முகம் தெரியாத மனுஷியை வாசிக்கவும். ⬤ ‘மக்கள் பத்திரிகையில் வந்த கிண்டி ரேஸ் பற்றிய செய்தி ஏழை மாடசாமிக்கு வண்ணக் கனவுகளை உருவாக்க, குதிரையாட்டத்தில் ஈடுபட்ட அவர் தனது குடும்பத்தையும் எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டதாக மாடசாமியின் ஊர்வலம் சொல்கிறது. 1976-இல் தொடங்கிய மாடசாமிகளின் ஊர்வலம் இன்றைக்கும் தொடர்கிறது, வெவ்வேறு வடிவங்களில் மக்கள் பத்திரிக்கைகளுக்குப் பதிலாக மக்கள் தொலைக்காட்சிகள்; பிரபல பத்திரிக்கைகளைவிட, சில இலக்கியப் பிதாமகர்களின் சிறு (இலக்கிய) பத்திரிக்கைகள்; அரசு நடத்தும் லாட்டரி திட்டங்கள்; சினிமாக் கனவுகள்; உலகவங்கிக் கடன்கள்... ⬤ சற்று எக்குத்தப்பான உரையாடல்கள் விரவிய மனிதநேயக் கதை முதுகில் பாயாத அம்புகள். சீனியம்மாவும் சக்கரையம்மாவும் பப்பாளிக் கொப்பை முன்னிட்டுச் சண்டையில் இறங்குகிறார்கள். இவர்களுக்கிடையில் ராசகுமாரி - புதிதாக வந்த சீனியம்மாவின் மருமகள். ராசகுமாரி திருமணத்துக்கு முன்பே கருச்சிதைவு செய்துகொண்ட விஷயம் எதிராளி சக்கரையம்மாவுக்குத் தெரியும், சீனியம்மாவுக்குத் தெரியாது. சண்டை உச்சத்தை நெருங்குகிறது. ராசகுமாரிக்குத் தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் “நாங்கல்லாம் பட்டுப்போன வாழைய வெட்டுவோம்; குலைபோட்டு முடிஞ்ச வாழைமரத்தை சாய்ப்போம்... ஆனால். துளிர்த்துவார<noinclude></noinclude> 7kb3is35vp5dfrpcixit0sj642jnwxy 1839097 1839096 2025-07-04T12:47:57Z Mohanraj20 15516 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1839097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|||IX}}</noinclude>மனுஷியின் மற்றொரு வரலாற்று முகம் ஒரு பெண் அடிமை அல்லது தெய்வம் ஆகலாமேயன்றி, ஒருபோதும் சகமனிதராக ஆண்களால் கருதப்படுவதில்லை. ஒரு அடிமை தொட்ட மாத்திரத்தின் எஜமானியான ஒரு பெண்கூட அடிமையாகிவிடுகிறார் பெண்களைப் பொருத்தமட்டில் சாதிச் சுவர்கள் எவ்வளவு சன்னமானவையாக உள்ளன: பாருக்குட்டிகளும் இசக்கிமாடத்திகளும் ‘அல்லாடி, தள்ளாடி’ நடந்துகொண்டிருக்கிறார்கள். ஒப்பாரிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும் - முகம் தெரியாத மனுஷியை வாசிக்கவும். ⬤ ‘மக்கள் பத்திரிகையில் வந்த கிண்டி ரேஸ் பற்றிய செய்தி ஏழை மாடசாமிக்கு வண்ணக் கனவுகளை உருவாக்க, குதிரையாட்டத்தில் ஈடுபட்ட அவர் தனது குடும்பத்தையும் எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டதாக மாடசாமியின் ஊர்வலம் சொல்கிறது. 1976-இல் தொடங்கிய மாடசாமிகளின் ஊர்வலம் இன்றைக்கும் தொடர்கிறது, வெவ்வேறு வடிவங்களில் மக்கள் பத்திரிக்கைகளுக்குப் பதிலாக மக்கள் தொலைக்காட்சிகள்; பிரபல பத்திரிக்கைகளைவிட, சில இலக்கியப் பிதாமகர்களின் சிறு (இலக்கிய) பத்திரிக்கைகள்; அரசு நடத்தும் லாட்டரி திட்டங்கள்; சினிமாக் கனவுகள்; உலகவங்கிக் கடன்கள்... ⬤ சற்று எக்குத்தப்பான உரையாடல்கள் விரவிய மனிதநேயக் கதை முதுகில் பாயாத அம்புகள். சீனியம்மாவும் சக்கரையம்மாவும் பப்பாளிக் கொப்பை முன்னிட்டுச் சண்டையில் இறங்குகிறார்கள். இவர்களுக்கிடையில் ராசகுமாரி - புதிதாக வந்த சீனியம்மாவின் மருமகள். ராசகுமாரி திருமணத்துக்கு முன்பே கருச்சிதைவு செய்துகொண்ட விஷயம் எதிராளி சக்கரையம்மாவுக்குத் தெரியும், சீனியம்மாவுக்குத் தெரியாது. சண்டை உச்சத்தை நெருங்குகிறது. ராசகுமாரிக்குத் தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் “நாங்கல்லாம் பட்டுப்போன வாழைய வெட்டுவோம்; குலைபோட்டு முடிஞ்ச வாழைமரத்தை சாய்ப்போம்... ஆனால். துளிர்த்துவார<noinclude></noinclude> lg2p5kjuatuerx5t80ato6o16jgd16x பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/12 250 213908 1839098 1442570 2025-07-04T12:48:03Z Mohanraj20 15516 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1839098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|X||}}</noinclude>வாழக்குருத்த வெட்டமாட்டோம்...” என்ற சக்கரையம்மாவின் பன்மைப் பேச்சோடு சண்டை முடிந்துவிடுகிறது. சமுத்திரக் கதைகள் தொகுப்பும்தான். 03. சமுத்திரத்தின் பல முகங்கள் இந்தத் தொகுப்பில் வெளிப்படுகின்றன - அமைதி விரும்பும் கோபக்காரர், பெண்ணியவாதத்தை முன்வைக்கும் ஆண். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களை அனுபவபூர்வமாக அலசும் சமூக அறிவியல் விஞ்ஞானி, புதிய தலைமுறையின் குறைநிறைகளைப் புரிந்துகொண்டுள்ள உளவியல் அறிஞர், கல்மிஷமில்லா மனசுக்காரர், கிண்டல்காரரும்கூட - இப்படிப் பன்முகங்கள் இருப்பதாலேயே இவரின் கதைகளும் பன்முக வாசிப்புக்கும் விவாதத்துக்கும் இடமளிக்கின்றன. ⬤ இவரிடம் வார்த்தை ஜாலமில்லை, விரயமுமில்லை. வார்த்தைகள் ஆற்றொழுக்குப்போல் மனித மாண்பு என்னும் ஒற்றைத் திசைநோக்கிப் பயணிக்கின்றன. இவர் மனிதத்தை நேசிக்கும் எழுத்தாளர். உணர்ச்சிப்பூர்வமாய் இதயத்தில் சிந்திக்கும் எழுத்தாளர். வாழ்க்கையின் மேல் அபரிமிதமான பற்றுக் கொண்டுள்ள நம்பிக்கை எழுத்தாளர். இலக்கிய விசாரப் போதையில் மிதக்காமல், ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களோடு தன்னை இணைத்துக் கொண்டுள்ள செயல்படும் எழுத்தாளர். 04. சமுத்திரத்திற்கு எந்த முன்னுரையும் அணிந்துரையும் தேவையில்லை. இந்த உரையும் சேர்த்து. ஆனால் சமுத்திரக் கதைகளுக்கு முன்னுரை எழுத அவர் என்னைத் தேர்ந்தெடுத்தது எனக்குக் கிடைத்த பெருமை. 05. சமுத்திரம் வற்றாது. கொஞ்சம் ஏற்றம் இறக்கம் இருக்கலாம் என்றாலும். எனவே அடுத்தடுத்த தொகுப்புகள் வரவேண்டும் வரும்.<noinclude></noinclude> d6vakqxoepm73gdvjzoezd2cdzaiox4 1839099 1839098 2025-07-04T12:50:10Z Mohanraj20 15516 1839099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|X||}}</noinclude>வாழக்குருத்த வெட்டமாட்டோம்...” என்ற சக்கரையம்மாவின் பன்மைப் பேச்சோடு சண்டை முடிந்துவிடுகிறது. சமுத்திரக் கதைகள் தொகுப்பும்தான். 03. சமுத்திரத்தின் பல முகங்கள் இந்தத் தொகுப்பில் வெளிப்படுகின்றன - அமைதி விரும்பும் கோபக்காரர், பெண்ணியவாதத்தை முன்வைக்கும் ஆண். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களை அனுபவபூர்வமாக அலசும் சமூக அறிவியல் விஞ்ஞானி, புதிய தலைமுறையின் குறைநிறைகளைப் புரிந்துகொண்டுள்ள உளவியல் அறிஞர், கல்மிஷமில்லா மனசுக்காரர், கிண்டல்காரரும்கூட - இப்படிப் பன்முகங்கள் இருப்பதாலேயே இவரின் கதைகளும் பன்முக வாசிப்புக்கும் விவாதத்துக்கும் இடமளிக்கின்றன. ⬤ இவரிடம் வார்த்தை ஜாலமில்லை, விரயமுமில்லை. வார்த்தைகள் ஆற்றொழுக்குப்போல் மனித மாண்பு என்னும் ஒற்றைத் திசைநோக்கிப் பயணிக்கின்றன. இவர் மனிதத்தை நேசிக்கும் எழுத்தாளர். உணர்ச்சிப்பூர்வமாய் இதயத்தில் சிந்திக்கும் எழுத்தாளர். வாழ்க்கையின் மேல் அபரிமிதமான பற்றுக் கொண்டுள்ள நம்பிக்கை எழுத்தாளர். இலக்கிய விசாரப் போதையில் மிதக்காமல், ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களோடு தன்னை இணைத்துக் கொண்டுள்ள செயல்படும் எழுத்தாளர். 04. சமுத்திரத்திற்கு எந்த முன்னுரையும் அணிந்துரையும் தேவையில்லை. இந்த உரையும் சேர்த்து. ஆனால் சமுத்திரக் கதைகளுக்கு முன்னுரை எழுத அவர் என்னைத் தேர்ந்தெடுத்தது எனக்குக் கிடைத்த பெருமை. 05. சமுத்திரம் வற்றாது. கொஞ்சம் ஏற்றம் இறக்கம் இருக்கலாம் என்றாலும். எனவே அடுத்தடுத்த தொகுப்புகள் வரவேண்டும் வரும். {{nop}}<noinclude></noinclude> 2dg7wxhvb0lfeu6cvgggqa1p1806d6v பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/13 250 213911 1839100 1442571 2025-07-04T12:50:29Z Mohanraj20 15516 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1839100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}} <b>{{center|{{X-larger|என்னுரை}}}}</b> இந்தத் தொகுப்பு தவிர்த்து, இதுவரை வெளியான எனது சிறுகதைத் தொகுப்புகள் அனைத்தும், எனக்கு முழுமையான மனநிறைவைக் கொடுத்ததில்லை. பத்திரிகைகள் ‘எடிட்’ செய்து வெளியிட்ட கதைகளையே தொகுப்புகளாக கொண்டு வந்தேன். இந்த கதைகளுக்கு மூலங்களை கைவசம் வைத்திருக்காததால் ஏற்பட்ட கோளாரே காரணம். ஆனால், இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் கணிப்பொறியில் தக்க வைக்கப்பட்டவை. எனவே, இந்தத் தொகுப்பில் நான் முழுமையான எழுதிய கதைகளை அப்படியே கொண்டு வந்திருக்கிறேன். இதுவே, இந்தத் தொகுப்பின் பலம், பலவீனமும். ஒரு சில கதைகள், பத்திரிகைகளில் கத்தரித்து வந்ததைவிட, சிறப்புக் குறைவாய் உள்ளதாக எனக்குப் படுகிறது. ஆனாலும், முன்னைய தொகுப்புகளைப் போல் அல்லாமல் பெரும்பாலான கதைகள், எலும்பு கூடாக காட்சி காட்டாமல், ரத்தமும், சதையுமான உள்ளடக்கத்தோடு, எலும்பு,தோல் போர்த்த உருவமாகவும் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன். இந்தத் தொகுப்பில், இன்னொரு முக்கிய சிறப்பு அல்லது அந்த சொல்லுக்கு மாறானது, இவை அத்தனையும் கடந்த இரண்டாண்டு காலத்தில் எழுதப்பட்டவை. எழுத்தைப் பொறுத்த அளவில், என் நோக்கும், போக்கும், அன்று முதல் இன்றுவரை அப்படியேதான் உள்ளது. ஆனாலும், கதை சொல்லித்தனமும், மொழி நடையும், காலத்திற்கேற்ப, என்னை அறியாமலே மாறியிருப்பதாகவே கருதுகிறேன். இதற்கு, இந்தத் தொகுப்பு ஒரு எடுத்துக்காட்டு. முகம் தெரிய மனுசியும், பெண் குடியும், அந்தக் காலத்து திருவாங்கூர் சமஸ்தானத்தின் சாமானியர்வரலாற்றைகண்டுபிடித்து எழுதப்பட்டமெய்யான கதைகள். இத்தகைய கதைகளை எழுதுவதற்கு தமிழாலய நிறுவனர் பச்சையம்மால் அவர்களே, முழுமுதற் காரணம். இதரக் கதைகளில் பெரும்பாலானவை நான் கண்டதும், கேட்டதுமான நிகழ்வுகள் அல்லது அமங்கலங்கள். இவற்றை நடந்தது நடந்தபடி இயல்பாக எழுதாமல், அதற்கு யதார்த்த முத்திரை மட்டுமே நான் கொடுத்திருக்கிறேன். மற்றபடி, இந்த கதைகளின் உரிமையாளர்கள் இன்றைய நமது மக்களே. இந்தத் தொகுப்பிற்கு விரிவான முன்னுரை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், பேராசிரியர். ராஜநாயகம் அவர்களின்<noinclude></noinclude> fz1n7lv5lk4a1zob95yhrmes154rgcd பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/14 250 213914 1839101 1442579 2025-07-04T12:52:21Z Mohanraj20 15516 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1839101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|XII||}}</noinclude>முன்னுரையைப் படித்த பிறகு, என்னுரைகூட தேவையற்றதாகவே எனக்குப் படுகிறது. பேராசிரியர் ராஜநாயகம் நவீனத்துவ எழுத்தாளர். எளிமையும், இனிமையும் - அதே சமயத்தில் ஆழமும் ஒருங்கே பெற்ற படைப்பாளி. இவருடைய சிறுகதைத் தொகுப்புப்பான <b>கடைசிப் பெய், புதினங்களான சில முடிவுகளும் சில தொடக்கங்களும், சாமிக்கண்ணு எனச் சில மனிதரின் கதைகள்,</b> நவீன தமிழ் இலககியத்திற்கு அணி சேர்ப்பவை. பிற படைப்பாளிகளால், நவீனத்துவம் எதிர்மறையில் செலுத்தப்படும்போது, அதை இழுத்துப்பிடித்து நெறிப்படுத்துபவை. சமூகப்போராளியான பேராசிரியர் எழுதிய இந்த முன்னுரையின் வாசிப்பு, என்னை ஆங்கில இலக்கிய அறிஞர் பாஸ்வெல்லை நினைவுப் படுத்துகிறது. ஆங்கில இலக்கிய மேதை டாக்டர். ஜான்சனை, பாஸ்வெல்லின் தயாரிப்பு என்று கூறுவார்கள். டாக்டர்.ஜான்சனின் வரலாற்றை எழுதியவர் பாஸ்வெல். ‘சரக்கு முடுக்கு’ அதிகமாக இல்லாத டாக்டர் ஜான்சனுக்கு ‘செட்டியார்’ முடுக்கைகொடுத்தவர் பாஸ்வெல் என்பார்கள். இது உண்மையோ, பொய்யோ, என்வரைக்கும் இது நிகழ்ந்திருக்கிறது. பேராசிரியர். ராஜநாயகம் இந்தத் தொகுப்பை கட்டிக்காட்டியவிதம், என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கதாயாசிரியரான என்னை, உரையாசிரியரான அவர், நான் என்னை கண்டுபிடித்ததைவிட, அதிகமாக கண்டுபிடித்திருக்கிறார். இது பிற இலக்கியமுன்னுரைகளிலும் நிகழ்ந்துள்ளன.என்றாலும்,என்தொகுப்பு இந்த கருப்பொருளுக்கு, உரிப்பொருளாகி இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இப்போது முக்கியமான ஒரு ஆய்வில் ஈடுப்பட்டிருக்கும் பேராசிரியர் ராஜநாயகம் அவர்கள், இந்தத் தொகுப்பிற்கு நாட்களை ஒதுக்கி ஒவ்வொரு கதைக்கும் ஒரு திருக்குறளைபோல் தெளிவுரை எழுதி இருப்பது எனக்குக் கிடைத்த இலக்கியக் கெளரவம். வழக்கம்போல், இந்த நூலை அச்சடித்துக் கொடுக்கும் பொறுப்பை மேற்கொண்ட மணிவாசக நூலகத்திற்கு நன்றியுடையேன். எனது சிறுகதைகளை இன்முகத்தோடு வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர், பாலசுப்ரமணியன் அவர்களுக்கும், பொறுப்பாசிரியர் வி.யெஸ்.வீ. அவர்களுக்கும், ஓம் சக்தி பொறுப்பாசிரியர் கவிஞர் பெ. சிதம்பரநாதன் அவர்களுக்கும் மற்றும் பல முகமரியா உதவி ஆசிரியத் தோழர்களுக்கும், இந்தத் தொகுப்பிற்கு ஒலியச்சுதந்த என் உதவியாளர் விஜயகுமார் அவர்களுக்கும் நன்றி மறக்காத நன்றி. இந்தப் பட்டியலில் குமுதம், புதிய பார்வை, தாமரை ஆகிய பத்திரிகைகளையும் இணைத்துக் கொள்கிறேன். {{Right|<b>- சு. சமுத்திரம்</b>}} {{nop}}<noinclude></noinclude> 4s9esnr90asih5hnnocyl2a52xezvwb பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/15 250 213917 1839255 1443801 2025-07-05T10:42:31Z Mohanraj20 15516 1839255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{dhr|3em}} {{center|{{Box|<b>{{X-larger|உள்ளடக்கம்}}</b>}}}} {{Dtpl|dotline=...|1. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/முகம் தெரியா மனுசி|முகம் தெரியா மனுசி]]|{{DJVU page link|1|15}}}} {{Dtpl|dotline=...|2. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/பொருள் மிக்க பூஜ்யம்|பொருள் மிக்க பூஜ்யம்]]|{{DJVU page link|19|15}}}} {{Dtpl|dotline=...|3. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/நீரு பூத்த நெருப்பு|நீரு பூத்த நெருப்பு]]|{{DJVU page link|29|15}}}} {{Dtpl|dotline=...|4. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/முதிர் கன்னி|முதிர் கன்னி]]|{{DJVU page link|40|15}}}} {{Dtpl|dotline=...|5. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/மூலம்|மூலம்]]|{{DJVU page link|57|15}}}} {{Dtpl|dotline=...|6. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/பாமர மேதை|பாமர மேதை]]|{{DJVU page link|67|15}}}} {{Dtpl|dotline=...|7. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/சிலந்தி வலை|சிலந்தி வலை]]|{{DJVU page link|81|15}}}} {{Dtpl|dotline=...|8. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/அகலிகைக் கல்|அகலிகைக் கல்]]|{{DJVU page link|94|15}}}} {{Dtpl|dotline=...|9. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/கடைசியர்கள்|கடைசியர்கள்]]|{{DJVU page link|109|15}}}} {{Dtpl|dotline=...|10.{{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/கலவரப் போதை|கலவரப் போதை]]|{{DJVU page link|126|15}}}} {{Dtpl|dotline=...|11.{{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/பெண் குடி|பெண் குடி]]|{{DJVU page link|139|15}}}} {{Dtpl|dotline=...|12.{{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/மாடசாமியின் ஊர்வலம்|மாடசாமியின் ஊர்வலம்]]|{{DJVU page link|158|15}}}} {{Dtpl|dotline=...|13.{{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/முதுகில் பாயாத அம்புகள்|முதுகில் பாயாத அம்புகள்]]|{{DJVU page link|173|15}}}}<noinclude></noinclude> ezclsv1cquka51mhfs9baolsafe7ba4 1839256 1839255 2025-07-05T10:43:35Z Mohanraj20 15516 1839256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{dhr|3em}} {{center|{{Box|<b>{{X-larger|உள்ளடக்கம்}}</b>}}}} {{Dtpl|dotline=...|1. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/முகம் தெரியா மனுசி|முகம் தெரியா மனுசி]]|{{DJVU page link|1|15}}}} {{Dtpl|dotline=...|2. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/பொருள் மிக்க பூஜ்யம்|பொருள் மிக்க பூஜ்யம்]]|{{DJVU page link|19|15}}}} {{Dtpl|dotline=...|3. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/நீரு பூத்த நெருப்பு|நீரு பூத்த நெருப்பு]]|{{DJVU page link|29|15}}}} {{Dtpl|dotline=...|4. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/முதிர் கன்னி|முதிர் கன்னி]]|{{DJVU page link|40|15}}}} {{Dtpl|dotline=...|5. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/மூலம்|மூலம்]]|{{DJVU page link|57|15}}}} {{Dtpl|dotline=...|6. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/பாமர மேதை|பாமர மேதை]]|{{DJVU page link|67|15}}}} {{Dtpl|dotline=...|7. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/சிலந்தி வலை|சிலந்தி வலை]]|{{DJVU page link|81|15}}}} {{Dtpl|dotline=...|8. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/அகலிகைக் கல்|அகலிகைக் கல்]]|{{DJVU page link|94|15}}}} {{Dtpl|dotline=...|9. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/கடைசியர்கள்|கடைசியர்கள்]]|{{DJVU page link|109|15}}}} {{Dtpl|dotline=...|10.{{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/கலவரப் போதை|கலவரப் போதை]]|{{DJVU page link|126|15}}}} {{Dtpl|dotline=...|11.{{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/பெண் குடி|பெண் குடி]]|{{DJVU page link|139|15}}}} {{Dtpl|dotline=...|12.{{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/மாடசாமியின் ஊர்வலம்|மாடசாமியின் ஊர்வலம்]]|{{DJVU page link|158|15}}}} {{Dtpl|dotline=...|13.{{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/முதுகில் பாயாத அம்புகள்|முதுகில் பாயாத அம்புகள்]]|{{DJVU page link|173|15}}}} {{nop}}<noinclude></noinclude> liz3hmuwojh50nggpbn3otyzsu2x5ud பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/16 250 213920 1839257 1443503 2025-07-05T10:46:14Z Mohanraj20 15516 1839257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{X-larger|முகம் தெரிய மனுசி}}</b>}} {{dhr|3em}} தண்டோராக்காரன், தான் செல்வதற்கு, அந்த குக்கிராம குடிசை மண்டிக்கு தகுதியில்லை என்று கருதியதுபோல், ஊருக்கு புறம்பாக உள்ள மயானத்தில் நின்று நெளித்தபடி, டும் டும் ஒலிகளோடு, திருவாங்கூர் சமஸ்தான அரச அறிவிப்பை வெளியிட்டான். “ஸ்ரீ உத்திரம் திருநாள் மகாராஜா திருமனஸ் அவர்கள், பூர் பத்மநாபதாச வஞ்சிபால மார்த்தாண்ட வர்மா குலசேகர கிரீடபதி, மன்னை சுல்தான் மகாராஜா, ராஜ்ய பாக்கியோதைய ராமராஜா பகதூர்ஷம் ஷெர்ஜங் மகராஜா, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத் தேர்விழாவை தரிசிக்க நாளை மறுநாள் வந்து, ரெண்டு நாள் தாமசிக்கிறார்”. இதை முன்னிட்டு சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், ஊழியக்கார இளப்ப சாதிகள், விருத்திக்காரர்கள், அத்தனைபேரும் காணிக்கை, கைப்பொருளோடு வந்து சுசிந்திரம் கச்சேரிக்கு 96அடி தள்ளி நிற்கும்படி ஆக்ஞை இடப்படுகிறார்கள். மகாராஜாவின் வருகைக்கு முன்னதாக நிலவரியான புருசங்தாரம், வாரிசு வரியான அடியறா, வீட்டு வரியான குப்பகாழ்ச்சா மற்றும் பனைவரி, பனையேறும் ஏணிக்கான ஏணிக்காணம், பனை நாருக்கான தலைக்காணம், தலைவரி, முலைவரி, மீசைவரி, தாலிவரி, தாவரவரிகள் போன்ற அத்தனை வரிகளையும் செலுத்திவிட வேண்டும். அதோடு சாதிய அனுஷ்டானங்களை கடைபிடிக்காத தாழ்ந்த சாதியினரைப் பற்றி மேல் அதிகாரிகளுக்கு, பார்த்தவர்கள், கேட்டவர்கள், விசாரிப்பு மூலம் தெரிந்தவர்கள் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். இவற்றை மீறும் பட்சத்தில், இந்த தகவல்களை சொல்லாதவர்களுக்கும் சிரச்சேதம் உட்பட எந்தவிதமான தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.” {{nop}}<noinclude></noinclude> ry2fhs3uu2m07cssc8u13mx0iv15yof பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/17 250 213923 1839258 1443522 2025-07-05T10:48:20Z Mohanraj20 15516 1839258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|2|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>திருவாங்கூர் சமஸ்தான மன்னரைப் பற்றிய அலங்கார வார்த்தைகளுக்கு உச்ச சத்தமாய் முரசொலித்தும், ஒவ்வொரு அறிவிப்புக்கும் மூன்று தடவை டும் போட்டும், இறுதியில் டமர... டகர... டக்கா என்று பீதியை ஏற்படுத்தும் அதிகார தாளத்தோடு அடிக்கப்பட்ட தமுக்குச் சத்தம் அந்த குக்கிராமத்திற்குள் அசரீரி குரலாய் ஒக்கலித்தது. ஆறடி உயரமுள்ள அய்ம்பது, அறுபது பனையோலை குடிசைகள் எதிர் எதிராய், வரிசை வரிசையாய் இருந்தன. இந்த வரிசைகளுக்குப் பின்னால் மேலும் அடுக்கடுக்கான குடிசை வரிசைகள், ஊராய்க் காட்டின. ஒவ்வொரு குடிசையின் மண் சுவரும், இன்னொரு குடிசையின் சுவராயிற்று. இந்த இருபக்க குடிசை வரிசைக்கும் இடையே சுயம்பாக ஒரு குறுகிய தெரு ஏற்பட்டது. இந்தக் குடிசை வரிசைகளுக்கு மேல்பக்கம் உள்ள திட்டில் முக்கோண வடிவத்தில் சுண்ணாம்பு பூச்சு இற்றுப் போய் செம்மண் சுவராக நின்ற கள்ளிமாடன் பீடத்திற்கு முன்னால் வம்படி, வழக்கடியாய் பேசிக்கொண்டிருந்த அத்தனை ஆண்களும், பீதியோடு குரல் வந்த திக்கை எட்டிப் பார்த்தார்கள். அவர்கள் தத்தம் வரிபாக்கியை நினைத்தும், ஊழியம் செய்ய வேண்டிய கட்டாயம் குறித்தும், கலங்கிப்போய் ஒருவர் முகத்தை ஒருவர் ஆறுதலாக பார்த்துக் கொண்டார்கள். அப்போது தோள்வரை நீண்ட காதுகளில் அவர்கள் போட்டிருந்த ஈயக்குண்டலங்கள், அவர்களது பீதியை வெளிகாட்டுவதுபோல் மேலும், கிழுமாய் ஆடின. காதுகளை ஆட்டுவித்தன. ஊழியம் என்றால் கூலி இல்லாத ஒசி வேலைகள். முகாமிடும் மன்னரின் யானைகளுக்கு தென்னை ஒலைகளை வெட்டி, கட்டுக் கட்டாக சுமந்து செல்ல வேண்டும். குதிரைகளுக்கு, கொள்ளு கொண்டு போக வேண்டும். ஆங்காங்கே உள்ள நதி சுருங்கிய காயல்கள் எனப்படும் குளங்களை துர்வார வேண்டும். மன்னரின் பரிவாரங்களுக்கு தேங்காய்கள், நுங்குகள், பனங்கிழங்குகள், பயிர் வகைகள் முதலியவற்றை காணிக்கையாக்க வேண்டும். உப்பளங்களில் இருந்து உப்பு மூட்டைகளை சுமந்துபோக வேண்டும். {{nop}}<noinclude></noinclude> e3bpgdpai8xex5vpfchzyes878fjh17 1839262 1839258 2025-07-05T10:55:29Z Mohanraj20 15516 1839262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|2|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>திருவாங்கூர் சமஸ்தான மன்னரைப் பற்றிய அலங்கார வார்த்தைகளுக்கு உச்ச சத்தமாய் முரசொலித்தும், ஒவ்வொரு அறிவிப்புக்கும் மூன்று தடவை டும் போட்டும், இறுதியில் டமர... டகர... டக்கா என்று பீதியை ஏற்படுத்தும் அதிகார தாளத்தோடு அடிக்கப்பட்ட தமுக்குச் சத்தம் அந்த குக்கிராமத்திற்குள் அசரீரி குரலாய் ஒக்கலித்தது. ஆறடி உயரமுள்ள அய்ம்பது, அறுபது பனையோலை குடிசைகள் எதிர் எதிராய், வரிசை வரிசையாய் இருந்தன. இந்த வரிசைகளுக்குப் பின்னால் மேலும் அடுக்கடுக்கான குடிசை வரிசைகள், ஊராய்க் காட்டின. ஒவ்வொரு குடிசையின் மண் சுவரும், இன்னொரு குடிசையின் சுவராயிற்று. இந்த இருபக்க குடிசை வரிசைக்கும் இடையே சுயம்பாக ஒரு குறுகிய தெரு ஏற்பட்டது. இந்தக் குடிசை வரிசைகளுக்கு மேல்பக்கம் உள்ள திட்டில் முக்கோண வடிவத்தில் சுண்ணாம்பு பூச்சு இற்றுப் போய் செம்மண் சுவராக நின்ற கள்ளிமாடன் பீடத்திற்கு முன்னால் வம்படி, வழக்கடியாய் பேசிக்கொண்டிருந்த அத்தனை ஆண்களும், பீதியோடு குரல் வந்த திக்கை எட்டிப் பார்த்தார்கள். அவர்கள் தத்தம் வரிபாக்கியை நினைத்தும், ஊழியம் செய்ய வேண்டிய கட்டாயம் குறித்தும், கலங்கிப்போய் ஒருவர் முகத்தை ஒருவர் ஆறுதலாக பார்த்துக் கொண்டார்கள். அப்போது தோள்வரை நீண்ட காதுகளில் அவர்கள் போட்டிருந்த ஈயக்குண்டலங்கள், அவர்களது பீதியை வெளிகாட்டுவதுபோல் மேலும், கிழுமாய் ஆடின. காதுகளை ஆட்டுவித்தன. ஊழியம் என்றால் கூலி இல்லாத ஒசி வேலைகள். முகாமிடும் மன்னரின் யானைகளுக்கு தென்னை ஒலைகளை வெட்டி, கட்டுக் கட்டாக சுமந்து செல்ல வேண்டும். குதிரைகளுக்கு, கொள்ளு கொண்டு போக வேண்டும். ஆங்காங்கே உள்ள நதி சுருங்கிய காயல்கள் எனப்படும் குளங்களை துர்வார வேண்டும். மன்னரின் பரிவாரங்களுக்கு தேங்காய்கள், நுங்குகள், பனங்கிழங்குகள், பயிர் வகைகள் முதலியவற்றை காணிக்கையாக்க வேண்டும். உப்பளங்களில் இருந்து உப்பு மூட்டைகளை சுமந்துபோக வேண்டும்.<noinclude></noinclude> pjne3ginwl5hhvajgxgkq9o9zvzusdc பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/18 250 213926 1839263 1443523 2025-07-05T10:55:43Z Mohanraj20 15516 1839263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|3}} {{rule}}</noinclude>ஊட்டுப்புரை எனப்படும் சத்திரங்களுக்கு விறகு வெட்டிக் கொடுக்க வேண்டும். குடியான்கள், வண்டி வாகனங்களையும், உழவு மாடுகளையும் அதிகார கச்சேரியில் ஒப்படைக்க வேண்டும். இப்படி இளப்ப சாதிகளுக்காக விதிக்கப்பட்ட 120 ஊழியங்களில் பாதியையாவது மகாராஜாவின் வருகையின்போது செய்தாக வேண்டும். இல்லையென்றால் சிரச்சேதம்தான். ஆனாலும் இவர்களுக்கு கூலி கிடையாது. கூலி கிடக்கட்டும். குடிப்பதற்கு கூழ் கூட கிடைக்காது. ஊட்டுப் புரைகளில் வீசியெறியப்படுகிற எச்சில் சோறு கூட கிட்டாது. காரணம், அந்தப்பக்கம் இவர்கள் போகமுடியாது. ஆனாலும், ஊழியம் செய்ய சுணங்கினால் சவுக்கடி... வரிகட்ட தாமதித்தால் குனித்து வைக்கப்பட்டு முதுகுமேல் கல்லேற்றப்படும். இந்த ஊழியத்திலிருந்து நோயாளிகளும், வயோதிகர்களும் கூட தப்பிக்க முடியாது. எனவே, தோள்வரை தொங்கிய செவ்வக வடிவமான காதுகளில், மாட்டப்பட்ட ஈயக்குண்டலங்களோடும், முட்டிக்கால்களுக்கு கீழே போகாத முண்டுகளோடும், பிடரியை மறைக்கும் குடுமிகளோடும் தோன்றிய ஆடவர்கள், சொல்லாமல் கொள்ளாமல் ஓடினார்கள். “சுடலமாடா காப்பாத்து, கள்ளிமாடா காப்பாத்து” என்று அலறியடித்து ஓடினார்கள். மனைவி, மக்கள் இல்லாதவர்கள் ஒளிந்து கொள்ளவும், குடும்பஸ்தர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்துக் கொள்வதற்காகவும் ஒடிக் கொண்டிருந்தார்கள். இந்த ஓட்டத்தினால் அந்த பனையோலை குடிசைப்பகுதி, காலடி தமுக்காக ஒலமிட்டபோது அந்தத் தெருவில் ஆங்காங்கே பேசிக்கொண்டும், திருவுரலில் கேழ்வரகு அரைத்துக் கொண்டும், உரலில் சோளத்தை உலக்கையால் இடித்துக் கொண்டும், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே வேலையாற்றிய பெண்கள், பணிக்கருவிகளை கைவிட்டு விட்டு, ஒன்று திரண்டார்கள். இந்தப் பெண்களின் இடுப்புக்கு கீழே, முழங்கால்களுக்கு சிறிது இரக்கமாய் ஒற்றைச் சேலை முண்டுகள்... இடுப்புக்கு மேலேயோ முழு நிர்வாணம்.<noinclude>{{rh|ச. 2.||}}</noinclude> 36p5qw1f3j1x67amqsfwb7lsj5f7vpn பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/19 250 213929 1839265 1443524 2025-07-05T11:02:44Z Mohanraj20 15516 1839265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|4|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>தொள்ளைக் காதுகளில் மட்டும் ஆண்களைப் போல் ஈயக் குண்டலங்கள். மற்றபடி திறந்தவெளி மார்புக்காரிகள்... மார்பகங்கள், வயதுக்கேற்ப மாங்கனியாய் பெருத்தும், பாவக்காயாய் சிறுத்தும், சுரைக்கூடாய் சுண்டியும் கிடந்தன. நேற்றுவரை, இந்த மார்பகங்களை, கை, கால்களைப் போல் வெறுமனே ஒரு உறுப்பாக பார்த்துப் பழகிய இந்தப் பெண்கள், அந்த தெற்குப்பக்க குடிசை வரிசையில் மேற்கோர எல்லையாய் நிற்கும் பனையோலை வீட்டின் முன்னால், அவ்வப்போது வெளிப்பட்ட ரவி க்கைகாரியைப் பார்த்து லேசாய் சிறுமைப்பட்டார்கள். ஓரளவு, பொறாமைப் பட்டார்கள். அவள் ரவிக்கையை மானசீகமாக கழட்டி இடுப்புக்கு மேல் மாட்டிப் பார்த்தார்கள். மேல்சாதி பெண்கள் கூட, இவளை மாதிரி ரவிக்கை போடாமல் மார்பகங்களில் கச்சை கட்டியிருப்பார்கள். சிலசமயம் தோள்சிலையை (மாராப்பு) முதுகுமுழுக்கக இறுகச் சுற்றி, இடுப்பில் இன்னொரு சுற்றாய் சுற்றி சொருகிக் கொள்வார்கள். ஆனால், இவளோ தோள்களின் இருபக்கமும் டக்கு, டக்கான துணிப் பூக்களோடு மார்பகத்திற்கும் கிழே போன அந்த சட்டைக்கு மேலே, வரிவளியாய் சுற்றிய கண்டாங்கி சேலையோடு நிற்கிறாள். கேட்டால், ரவிக்கை என்கிறாள். ‘எங்கள் ஊர் பழக்கம்’ என்கிறாள். ‘நீங்களும் போட்டுக்கணும்’ என்கிறாள். ஒருத்திக்கு தாலியை விட இதுதான் முக்கியம் என்கிறாள். இவளோடு சேருவது எலியும், தவளையும் கூட்டுச் சேர்ந்த கதைதான்... அந்த தண்டோராவிற்கு முன்பு வரை, அந்த ரவிக்கைகார இளம்பெண்ணை சுபதேவதையாய் அதிசயத்துப் பார்த்த பெண்கள் இப்போது கோபம், கோபமாய் பார்த்தார்கள். பயத்தால் ஏற்பட்ட கோபம். ‘சரியான சிமிட்டாக்காரி, இவள் இப்படி போட்டு இருக்கிறத ஏமான்க கிட்ட சொல்லாட்டா, நம்மபாடு கிறிச்சானுக்கு மறிச்சானாயிடும். அவள்கிட்ட இப்பவே போயி, மேல்சட்டையை கழட்டி, தோள்சிலையை தூக்கி எறியச் செய்யணும். இல்லாட்டா, நம்ம தலைமுடிக்குள்ள உலக்கைய உட்டு அதுல தல முடிய சுத்தோ சுத்துன்னு சுத்தி, குனிய வச்சி முதுகுல பாறாங்கல்ல ஏத்துவாங்க.<noinclude></noinclude> drf8mo8golmt8ml9krefm1s3llu6rv6 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/21 250 213935 1839270 1444012 2025-07-05T11:16:06Z Mohanraj20 15516 1839270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|6|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>குட்டி முதுகை பம்மவைத்து, அவள் முகத்தை முகர்ந்தபோது, இடம்தெரியா ஊரில் இடறிவிழுந்த துக்கத்தை மறந்தாள். அந்தப் பெண்களுக்கு, எடுத்த எடுப்பிலேயே ரவிக்கைகாரியை விமர்சிக்க மனமில்லை. “நீ கேளு... நீயே கேளு...” என்பது மாதிரி ஒவ்வொருத்தியும் மற்றவள்களின் முகத்தைப் பார்த்தபோது, ஒரு நடுத்தர வயதுப் பெண், பூமாரிக் கிழவியிடம் பீடிகை போட்டாள். “பனவிள... விடிலில பயனி காய்க்காம, இங்க எதுக்காவ காய்க்க சித்தி?” “ஒன் காது செவிடா? தமுக்குச் சத்தம் கேக்கல? விளயில பயினி காய்ச்சா, சிறட்ட கூட மிஞ்சாது. யான போன கரும்புத் தோட்டமாவது கொஞ்சம் நஞ்சம் ஒப்பேரும், ஆனா, மவராசா பரிவாரப் பயலுக போன இடத்தல புல்லு கூட முளைக்காதே.” கன்றுக்குட்டியின் முதுகை தடவிவிட்டபடியே மாமியார் சொல்வதை அதிசயமாய் கேட்பதுபோல் முகத்தை அண்ணாந்து வைத்த ரவி க்கைக்காரி, அந்தப் பெண்களின் அம்மண மார்பகங்களை, அறுவெறுப்பாகவும், பின்னர் அனுதாபமாகவும் பார்த்து, முகஞ் சுழித்தபோது, ஒரு முன்கோபிப்பெண் முரட்டுத்தனமாக கிழவியைச் சிண்டினாள். “தண்டோராச் சத்தம் வயசான ஒனக்கு கேக்கும்போது, எங்களுக்கு கேக்காதா? சாதி அனுஷ்டானத்த விட்டோமுன்னா மாறு கால் மாறு கை வாங்கிடுவாவ... பேசாம உன் மருமவள எங்கள மாதிரி மேல்துளி இல்லாம நிக்கச் சொல்லு. கச்சேரியில போயிநாங்களே சொல்லும்படியா வச்சிப்புடாத.” ரவிக்கைக்காரி, அவர்களை சுட்டெரித்துப் பார்த்தபொழுது, பூமாரி கிழவி மன்றாடினாள். “காலங்காலமா இந்தமாதிரி சட்ட போட்டிருக்காளாம்... இப்படி போடுறது அவ ஊரு பழக்கமாம். உங்கச் சிலைய களைஞ்சா எப்படி ஒங்களுக்கு இருக்குமோ, அப்படி மேல்சட்டைய கழுட்டுனா, அவளுக்கு இருக்குமாம். அத கழட்டுறதுக்கு கூச்சப்படுறா. இந்த சட்டம்பி பய... அதான் என் மவன்... இவளை எப்படியோ மசக்கி கூட்டி<noinclude></noinclude> 8fguz53q6o2dg0e9ihbm4ccpr7l5wks பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/23 250 213941 1839272 1444213 2025-07-05T11:21:34Z Mohanraj20 15516 1839272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|8|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>செய்யறதுல என்ன தப்பு..? நீங்க இவள மாதிரி செய்யாம இருக்கதுதான் தப்பு.” “சரி எங்களயும் ஒரு வழி பண்ண பாக்கே. ஒன்பாடு...ஒன் மருமவ பாடு... சர்க்கார் பாடு...” “அப்படி நாம விடமுடியுமா? காரியக்கார ஆளுக வந்தா நம்ம முதுகுலயும் கல்லேறுமே... கண்ணால கண்டத சொல்லணுமுன்னு தமுக்குக்காரன் சொல்லிட்டுப் போயிருக்கானே” ரவிக்கைக்காரி, அந்தப் பெண்களைச் சிறிப் பார்த்தபோது, ஒருத்தி, இன்னொருத்தியின் இடுப்பில் கிள்ள, அவள் மற்றவளின் தோளைக் கிள்ள அது தொடர்கிள்ளல்களாக, அத்தனை பெண்களும் கிழக்கு பக்கமாய் எக்கிப் பார்த்துவிட்டு, அங்குமிங்குமாய் சிதறி ஓடினார்கள். அங்கிருந்து, பத்து. பதினைந்து ஏவலாட்கள் புடைசூழ வந்த வலிய கணக்கெழுத்து வேலப்பனும், மணியம் கச்சேரி தாணுலிங்கமும் தங்கள் பக்கமாய் ஓடிவந்த பெண்களை சவுக்காலும், பிரம்பாலும் ‘விளையாட்டாக’ விளாசினார்கள். உடம்பை புடைக்கவைக்கும் வினையான விளையாட்டு. அந்தப் பெண்களும் வலியைப் பொறுத்துக் கொண்டு, ஏதோ மகத்தான பட்டம் ஒன்றை பெற்றதுபோல் வலியச் சிரித்துக் கொண்டே ஓடினார்கள். இதற்குள் பூமாரி உஷாரானாள். ரவிக்கைக்கார மருமகளை ஆறடி உயர வீட்டின் மூன்றடி வாசலுக்குள் கூனிக்குறுக்கி திணித்துவிட்டு, பனைமட்டக் கதவைச் சாத்தினாள். பதநீர் பானையைப் பதம் பார்ப்பதுபோல், பாசாங்கு போட்டாள். நிறைபானை பதநீர், கொதித்து கொதித்து, சுண்டிச் சுண்டி கூப்பனியாகி பானையின் கால்பகுதி வரை சுருங்கியது. திடீரென்று ‘ஏய்’ என்ற சொல்லோடு காலில் பிரம்படியும், முதுகில் சவுக்கடியும் பெற்ற பூமாரி ஏறிட்டு பார்த்தாள். உடனடியாய் எழுந்தாள். இடது கைகைய மார்பில் குறுக்காய் மடித்து, வலது கையை கொண்டு வாயில் பாதியை மூடியபடியே ‘ஏமானே ஏமானே’ அடியேன் என்ன செய்யனும்” என்று அரற்றினாள். {{nop}}<noinclude></noinclude> 02jth8r55vz73oxd4kkyhxsa8j5h6ds பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/24 250 213944 1839273 1444942 2025-07-05T11:25:13Z Mohanraj20 15516 1839273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|9}} {{rule}}</noinclude>வலிய கணக்கெழுத்தும், மணியக்காரரும், பட்டு வேட்டியும், ஜரிகை தலைப்பாகையும், வைரக்கடுக்கனும், பச்சைக்கல் டோலக்கும், மார்பில் வைரப் பதக்கமும், வலது கையில் தங்கத்தாலான வீரகாண்டாமணியும், தோளில் பட்டு நேரியலுமாய், மீசைகளை முறுக்கியபடியே, கிழவியிடம் பேசுவது தங்கள் தகுதிக்கு குறைவு என்பதுபோல் சிறிது விலகி நின்றார்கள். வெப்பமற்ற, இதமான காற்று அடித்த அந்த வேளையிலும், அவர்களுக்கு இரண்டுபேர் குடைபிடித்துக் கொண்டிருந்தார்கள். பூமாரி நெடுஞ்சாண் கிடையாக அவர்கள் கால்களில் விழுந்தாள். ‘எந்தத் தப்பு செய்திருந்தாலும் என்னை காலால இடறி கையால உதறிப்போடுங்க சாமிகளா’ என்று ஒலமிட்டாள். இதற்குள் வலிய கணக்கெழுத்து, பனையோலைச் சுவடிகளில் ஒன்றை எடுத்து, ஏவலாள் ஒருவனிடம் கிசுகிசுத்தார். அந்த ஏவலாளி, பூமாரியிடம் எதிர்ப்பாளியாய் கேட்டான். “ஏய் கிழவி! நீ குப்பாச்சா கட்டல. பனையிரை கட்டல, ஏணிப்பாணம் கொடுக்கல. ஒன் மனசுல என்னழா நினைச்சுகிட்டே?” “ஏமானே! இன்னைக்கு கருப்பெட்டி வித்துட்டா வரிக்காசு முழுசும் சேர்ந்துரும். நாளிக்கு அதிகார கச்சேரியில வந்து கட்டிடுவேன் ஏமானே” “ஒன் புருஷன் இசக்கிமாடன ஊழியம் செய்ய வரச்சொல்லு. கிழட்டுப்பய எங்கழா போயிட்டான்?” “வந்துருவாவு. ஏமானே... திங்கள் சந்தையில ஒரு கன்னிப்பேய ஒட்டுறதுக்கு போயிருக்காவ'... வந்தவுடனே ஊழியத்துக்கு அனுப்பி வைக்கேன். சர்க்காருக்கு ஊழியமுன்னா சந்தோஷமா செய்யற மனுஷன்.” வலிய கணக்கெழுத்தும், மணியம் கச்சேரியும் திருப்தியாக தலையாட்டியபடியே புறப்பட்டபோது, ஏவலாளிகளின் வலுவான ஒருவன் அருகேயுள்ள மாட்டுத் தொழுவத்திற்கு சென்று பூவரசு<noinclude></noinclude> j8i8oczwb83s5w0igdsjbhvoc8zogeg பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/25 250 213947 1839275 1444943 2025-07-05T11:27:16Z Mohanraj20 15516 1839275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|10|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>முளைகளில் கட்டப்பட்ட மூன்று மாடுகளின் வால்களை துக்கிப் பிடித்து கீழே பார்த்துவிட்டு, அங்கிருந்தபடியே, தனது கண்டுபிடிப்பை பிரகடனப்படுத்தி, ஏமான்களின் கால்களுக்கு நங்கூரம் பாய்ச்சினான். “எசமானரே! இந்த கள்ளச்செறுக்கி... பசுமாடு வச்சிருக்கா. ஈனசாதிக, பசுமாடு வளக்கப்படாதுன்னு தெரிஞ்சும், இந்த கிழட்டு முண்ட நல்ல பசுவா... காராமணி பசுவா வச்சிருக்கா பாருங்க.” மணியம் கச்சேரிக்கும், வலிய கணக்கிற்கும் கண்கள் சிவந்தன. பற்கள் கடித்தன. கிழவி பசுமாடு வளர்க்கிறாள் என்பதைவிட, அவள், தங்களை முட்டாளாக்கி விட்டாள் என்கிற கோபம். போதாக்குறைக்கு தங்களை இவர்கள் புத்திசாலிகளாய் நினைத்துக் கொண்டதால் அவர்களின் கோபம் முட்டாள் தனமாகவும், முரட்டுத் தனமாகவும் வெளிப்பட்டது. மணியம் கச்சேரியின் கண்ணசைப்பில் வலிய கணக்கெழுத்தின் கையசைப்பில், நான்கு ஏவலாட்கள் அந்த பசுமாட்டையும், அதை வளர்த்ததற்கு பிராயச்சித்தமாக (அபராதமாக) இரண்டு மாடுகளையும், ஒரு கன்றுக்குட்டியையும் இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். முட்டப்போன மாடுகளை சவுக்கால் வழிப்படுத்தினார்கள். பின்னர் அதே சவுக்கை வைத்துக் கொண்டு, வலியக் கணக்கெழுத்தின் கண்சிமிட்டலில், ஒரு ஏவலாளி, பூமாரி கிழவியின் உடம்பிற்கு ரத்தக்கோடுகளைப் போட்டான் இன்னொருத்தன் கணுக்கணுவாய் புடைத்திருந்த பிரம்பால் அவள் தலையை குத்தினான். இடுப்பை இடித்தான். பூமாரி சுருண்டு வீழ்ந்தாள். அம்மா என்று அழப்போனவளின் வாயில் ஒரு குத்துக் குத்திய பிரம்பு, ரத்தச் சிதறல்களோடு வெளிப்பட்டது. பூமாரி, உருண்டு சுருண்டு கிடந்தபோது. எதிர்ப்பக்க குடிசையின் பனம்பலகை கதவு வாசலை பிய்த்துக் கொண்டு மல்லாக்க விழுந்தது. ரவிக்கைக்காரி ஆங்காளியாய் வெளிப்பட்டாள். வேகவேகமாய் நடந்து, கிழே கிடந்த மாமியார் பக்கமாய் குனிந்தபோது, ஒரு ஏவலாளியின் பிரம்பு அவள் கழுத்தை நிமிட்டி நிற்க வைத்தது. மாமியார் முக்கி முனங்கி, எழுந்திருக்க<noinclude></noinclude> 55jideqzrreaxklk4l75doolr4ysrvz பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/27 250 213953 1839276 1446044 2025-07-05T11:31:46Z Mohanraj20 15516 1839276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|12|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>கயிற கழட்டி மூணுதடவ தலயச்சுத்தி, காறித்துப்பி, அவன் மூஞ்சில எறிஞ்சுட்டு வீட்டுக்கு ஒடியாந்தேன். ஆனா, ஊரும், உலகமும் கள்ளத்தாலியோ, நல்ல தாலியோ, அத கட்டுணவனுக்குத்தான், நான் வாக்கப்படனுமுன்னு சொன்னாவ. அய்யாவும் ஊருக்கு பயந்து சம்மதிச்சுட்டாரு. இதனால, தாம்பரபரணி கரையில ஒரு புளியமரத்துல தூக்குப்போடப் போனேன். அப்போ என்னை தற்செயலாய் பார்த்த இவியளோட மவன், தடுத்தாரு. எங்கப்பக்கத்து பிள்ளவாள் வக்கில் அய்யாவுக்கு குதிரை வண்டி ஒட்டுனவரு. ஏற்கெனவே அவருக்கும் எனக்கும் தொடாத, கெடாத பழக்கம். என் கதைய கேட்டுட்டு.... நெல்லையப்பர் கோயிலுக்கு முன்னால, கழுத்துல தாலிய போட்டு, இங்கு கூட்டிக் கிட்டு வந்துட்டாரு.” அவள் சொல்வதை ஏனோ தானோவாய் கேட்டுக் கொண்டிருந்த, ஏவளாளிகளின் ஒருவன், தனது ஏமானர்களை உசுப்பி விட்டான். “இந்த கிழவி சரியான மஞ்ச கடஞ்சா மகனப் பத்தியோ, மருமவள பத்தியோ மூச்சு வுடல. இவள கச்சேரிக்கு தூக்கிட்டுப் போகனும். அப்பதான் அந்தப் பய வந்து தலவரி கட்டுவான். பனையோலையில, அவன் செத்துட்டான்னு கிழவி பொய்சொல்லியிருக்கா. அவன நோகடிக்கணும். இவள சாகடிக்கணும். சரி அது அப்புறம் சங்கதி. உன் புருசன எங்கழா” “வடக்கன்குளம் வரைக்கும் போயிருக்காவ” வலிய கணக்கப்பிள்ளை பற்களை கடித்தபோது, மணியம் கச்சேரி அவளை மயக்கமாக ரசித்து மானசீகமாகப் பார்த்தார். கட்டான கட்டழகு... பேசமா அடிமையா வச்சுக்கலாம். இப்போதைய சந்தை நிலவரப்படி ஒரு அடிமையோட விலை ஒன்பது ரூபா. பூமாரி கிழவிக்கு மூணு ரூபா கொடுத்தா போதும். அவளுக்கும், வரிபாக்கிய தித்தாப்போல இருக்கும். நமக்கும் ஒரு வப்பாட்டி அடிமை கிடைச்சாப் போல இருக்கும். இதமாக கேட்டார். “உன் பேரு என்னழா?” “ராசம்மா” {{nop}}<noinclude></noinclude> l7ohsvy2h3axnxy1vq9mlhhq8a7sl3l பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/28 250 213956 1839281 1446064 2025-07-05T11:34:09Z Mohanraj20 15516 1839281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|13}} {{rule}}</noinclude>“நீ பேருக்கு ஏத்தபடிதான் இருக்கே. ஆனாலும், இளப்பசாதிக இந்த மாதிரி பேரெல்லாம் வெக்கப்படாது. பேசாம நீசம்மான்னு வச்சுக்க” மணியக்காரர் பல்லிளித்துப் பேசுவது, வலிய கணக்கிற்குப் பிடிக்கவில்லை. ஏவலாளிகளுக்கு உத்தரவிட்டார். “இவளோட மேல்சட்டையையும், தோள் சிலையையும் அவுத்துப் போடுங்கடா... சேலையில பாதியை கிழிச்சி எறியுங்கடா...” அந்த ஏவலாளிகள், கரங்களை கூர்கத்திகள் ஆக்கியதுபோல் கைகளை நீட்டி, கம்புகள் போல் விறைக்க வைத்து, அவளை கண்போட்டுப் பார்த்தபடியே நெருங்க நெருங்க, அவள், ஒதுங்கி ஒதுங்கி பின்புறமாய் நடந்து ஏமான்களைப் பார்த்து, குரல் உயர்த்தி முறையிட்டாள். ‘வேண்டாங்கய்யா... ஒங்களுக்கு கோடிப்புண்ணியம் அய்யா. ஒருநாள் ஒரு பொழுது கொடுங்கய்யா... நான் அவிய வந்ததும் சொல்லிட்டு, கண்காணாத இடமா பார்த்து ஒடிப்போறேய்யா” “ஏல தீவட்டி தடியன்களா, நான் சொன்னது உங்க காதுல ஏறல. அவள அம்மணமாக்குங்கடா” “வேண்டாங்கய்யா... ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கூட, ‘அது’ மறவாத்தான் இருக்குது. மனுசங்களுக்கு அப்படித்தானய்யா இருக்கணும்? ஒங்க பெண்டு பிள்ளைகள இப்படி செய்தா நீங்க பொறுப்பியளா?” ‘படுகளத்துள ஒப்பாரிய கேட்கப்படாதுடா...இவா...இந்த பக்கத்த நாற வக்க வந்தவ. எளப்ப சாதிகள தூண்டி விடுறவ... இவள... முளையிலேயே கிள்ளி எறியணும். அவள அம்மணமாக்குங்கடா’ ஏவலாளிகள், துச்சாதனர்களாய் ஆனார்கள். ஒருவன் ராசம்மாவின் கரங்களை பின்புறமாக வளைத்து பிடித்துக் கொள்ள, இன்னொருத்தன் அவள் தலையை பக்கவாட்டில் சாய்த்துப் பிடித்தான். மூன்றாமவன், அவள் முந்தானையை இறக்கினான். நான்காவது ஆசாமி அவள் ரவி க்கையின் முன்பக்கம்<noinclude></noinclude> 66hr60wwucx5ojfgh18qb2y7o76vi7j பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/29 250 213959 1839284 1446076 2025-07-05T11:35:44Z Mohanraj20 15516 1839284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|14|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>ஆணிபோன்ற விரல்களை உள்ளேவிட்டு இழுத்து கிழித்தான். மற்றொருவன் பின்பக்கமாக கையை விட்டு ரவி க்கையை இரண்டாக்கினான். இதற்கிடையே கிழே சுருண்டு கிடந்த பூமாரி, தரையில் நெஞ்சாண்கிடையாய் குப்புறப்படுத்து ஒவ்வொருவர் காலாய், பிடித்து பிடித்துக் கெஞ்சினாள். இதை வன்முறையாக நினைத்தோ என்னமோ ஏவலாளிகளில் இருவர், அவள் கழுத்தை செருப்புக் கால்களால் மிதிமிதியென்று மிதித்தார்கள். அவள் விறைத்துப் போவது வரைக்கும் கழுத்திலிருந்து கால்களை எடுக்கவில்லை. இதற்குள் ஒற்றைத் துணி பெண்கள் அருகே ஓடிவந்தும், ஒடிய வேகத்திலேயே திரும்பி ஓடியும் ‘எய்யாே... எம்மோ...’ என்று மாரடித்தார்கள். வலிய கணக்கு, எதுவுமே நடக்காததுபோல், தொலைநோக்காய் பார்த்தார். ராசம்மா, விறைத்துக் கிடந்த மாமியாரைப் பார்த்தாள். வெறித்துப் பார்த்தாள், வெறியோடுப் பார்த்தாள், அப்படிப் பார்க்கப் பார்க்க, அவளுக்கு அழுகை வரவில்லை. மாறாக கண்ணிர் சிந்தவேண்டிய கண்கள் வீரியப்பட்டன. கந்தல்கோலமான ரவிக்கை, அவள் உடம்பை இரும்புச் சுருள் கம்பியாய் முறுக்கேற்றின. அத்தை மகனை எப்படி உலுக்கிப் போட்டாளோ, அப்படி தன்னைப் பற்றியவர்களை ஒரு உலுக்கு உலுக்கி நிலைகுலைய வைத்தாள். அந்த இடைவேளையில், கீழே குனிந்து கொதித்துக் கொண்டிருந்த கூப்பனிப் பானையை கைச் சூட்டோடு எடுத்தபடியே, மேலே நிமிர்ந்து நிமிர்ந்து ஆவேசியானாள். அந்தப் பானைக் கழுத்தை லேசாய் சாய்த்து, ஒவ்வொரு ஏவலாளியின் முகத்திலும் பானையை குலுக்கிக் குலுக்கி ஊத்தினாள். அத்தனை ஏவலாளிகளும், அரண்டு மிரண்டு கூக்குரலிட்டு அங்கும் இங்குமாய் ஒடியபோது, கூப்பனி மண்டிக் கிடந்த பானையை, தலைக்கு மேல் கொண்டுபோய் இரட்டைத்தலை உருவங்களாய் நின்ற வலியக்கணக்கின் மீதும், மணியக் கச்சேரியின் மீதும் குறிபார்த்து ஊற்றிவிட்டு, அந்தப் பானையை அவர்கள் முகங்களில் வீசி அடித்தாள். அவர்கள் தலையில் கூப்பனி திரண்டு கண்களுக்குள்<noinclude></noinclude> 3pdma7ioixdsecuhgiwvws91bavji24 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/30 250 213962 1839285 1446093 2025-07-05T11:49:54Z Mohanraj20 15516 1839285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|15}} {{rule}}</noinclude>நீர்வீழ்ச்சியாக விழுந்து கொண்டிருந்தது. அந்த அதிகாரிகளும், ஏவல் பூதங்களாக வந்தவர்களும், வெட்கத்தைவிட்டு “அய்யோ.. அம்மா....” என்று கதறினார்கள். வலிபொறுக்க முடியாமல் அங்குமிங்குமாய் துள்ளினார்கள். அதே சமயம் ‘அவளைப் பிடிங்க பிடிங்க’ என்று ஒலமிட்டார்கள். ஓலமிட்ட வாய்க்குள் கூப்பனி கூழ் ஊடுருவி, நாக்குகளை சுட்டெரித்ததுதான் மிச்சம். ராசம்மா, மேற்கோர தொழுவத்தை ஊடுருவி, இன்னொரு குடிசை வரிசையின் இடுக்கு வழியாக ஓடி, ஒரு எருக்குழியைத் தாண்டி, ஒரு வீட்டின் செறுவையைத் தாண்டினாள். அப்போது ‘பிடிங்க பிடிங்க' என்ற சத்தம், அடுத்த பக்கத்து அடுக்கு குடிசை வரிசையிலும் எதிரொலித்தது. நடந்ததை நேரில் பார்த்த பெண்கள் ராசாத்தியை பிடிப்பதுபோல் பாவலா செய்து, சிக்கிரமாக போகும்படி கண்ணசைத்தார்கள். ஊருக்கு வெளியே வந்து குதிகால் பாய்ச்சலில் ஒடி, காலங்காலமாய் ஓடிக்கொண்டிருக்கும் பழையாற்றுக்குள் ராசம்மா இறங்கினாள். வடக்கு மலையில் உற்பத்தியாகி, நாஞ்சில் நாடு முழுக்க, கிழக்கு கடல்நோக்கி நெடுநீளமாக பாயும் அந்த ஆறு, அவள் முட்டிக்கால்கள் வரை வியாபித்து அவளைச் சில்லிடச் செய்தது. ராசாத்தி சிறிது நிதானித்தாள். கரிகாலனின் காவிரி கல்லணையைப் போல் எந்தக் காலத்திலோ வலுவாக கட்டப்பட்ட அந்த ஆற்றின் கல்பாலத்தின் அடிவாரத் துண்கள் ஒன்றில் அப்படியே சாய்ந்து, ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். சாலைப்பக்கம், ஈட்டியும், வேல்கம்புமாய் ஆட்கள் ஓடிவருவது கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும், காதுக்குக் கேட்டது. ராசம்மா, நதியோர தாழை மடல்களுக்குள் தவழ்ந்து, தவழ்ந்து, நாணற்செடிகளின் நடுவே பாய்ந்து, ஒணான் செடி குவியல்களுக்குள் உட்புகுந்து, பூணிக்குருவிகளும், வால்குருவிகளும் பயந்து பறக்க, காட்டுப்பூனைகள் மரங்களுக்குள் தாவ, பத்து, பன்னிரெண்டு மைல் தூரம் ஆமையாகவும், முயலாகவும், அணில் பாய்ச்சலாகவும், நகர்ந்தும், தவழ்ந்தும், தாவி யும் போய்க் கொண்டிருந்தவள், களைப்பு மேலிட்டு மூச்சு முட்டியபோது ஒரிடத்தில் கரையேறினாள். {{nop}}<noinclude></noinclude> jq5s6jhn5ybe3l7t32wzzehrp9xt6o8 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/21 250 215994 1839126 1838673 2025-07-04T14:43:35Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||11}}</noinclude>“ஆனால் ஒரு கன்டிஷன். என்கிட்டே ஒங்க அப்பா, உன் ஜாதி எதுன்னு கேட்டால் என்னால ஒங்க ஜாதின்னு சொல்ல முடியாது. உண்மையான பொருளை உண்மையான வழியில்தான் அடையனும்.” “அய்யய்யோ...இது நீங்க வீட்டுக்கு வராமல் இருக்கறத விட மோசம்.” “அதனாலதான் வரலேன்னேன்!” “பழையபடி ஒங்க புத்தியைக் காட்டுறீங்க, பாருங்க... என்ன டியர், நாம் ஜாதிகளை அங்கீகரிக்கலை; அதனாலேயே அது இல்லனு ஆயிடாது. அப்பாகிட்ட நீங்க நம்ம ஜாதின்னு சொல்லியிருக்கேன்.” “தர்மர் அஸ்வத்தமா செத்துட்டார்ன்னு சொன்ன மாதிரி...” “தப்பு! அவர் பொய்க்கு உண்மை முலாம் பூசினார். நான் உண்மைக்கு பொய் முலாம் போட்டுப் பார்த்தேன்! உலகத்துல நம்ம ஜாதி என்கிற மனித ஜாதியைத் தவிர, எந்த ஜாதியும் கிடையாது. இந்த உண்மையை பொய்யாச் சொன்னேன். நீங்களும் சொல்லணும் அவ்வளவு தான்...” “ஸாரிம்மா...” “சரி, ஒரு காம்ரமைஸ்... நீங்களா எதுவும் சொல்ல வேண்டாம்! அப்பா இதைப்பற்றி பேசும்போது நீங்க மௌனமாய் இருக்கணும். என்ன சொல்றீங்க? ஏன் பேசாமல் இருக்கீங்க...” “மௌனம் மூலம் பேசுறேன். சம்மதமுன்னு சொல்லாமல் சொல்றேன். ஏய்... ஏய்... இது பப்ளிக் பிளேஸ்... கழுத்தை விடு!” இருவரும் சாலையை நோக்கி நடந்தார்கள். அவன் வேட்டியில் படிந்த மண் துகள்களை அவள் தட்டிவிட்டாள். பஸ் நிலையத்தை நோக்கி நடக்கப் போனவனை, அவள்<noinclude></noinclude> bk9uobd4pdzjx1bsy8w9wfoah5xa1n1 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/22 250 215996 1839128 1839018 2025-07-04T14:48:46Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|12{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>கைப்பிடித்தாள், அவர்களுக்காகவே தவமிருப்பதுபோல் நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். பானு ஆணையிட்டாள். “எங்கள்ல யாரும் ஜம்ப் பண்ணமுடியாதபடி, ஸ்பீடாய் போங்க!” செல்வம் அவளின் உட்பொருளை உணர்ந்தது போல் சிரித்தபடி பேசினான். “அதுக்காக ஆட்டோ ஜம்ப் பண்ணிடப்படாது. பார்த்து ஓட்டுங்க.” ஆட்டோ டிரைவர் பார்த்து ஓட்டினார். ஒருத்தருக்கு ஒருத்தர் என்று பிறக்கவில்லையானாலும், இறக்கத் தயாராய் இருப்பவர்கள்போல தோன்றிய அந்த இளம் ஜோடியை பார்த்துத்தான் ஓட்டினார். பல்வேறு ஜோடிகளை அனுபவத்தால் கண்டுணர்ந்த அந்த டிரைவர், ஒரு நிஜ ஜோடியைப் பார்த்த திருப்தியில் நிமிர்ந்து ஓட்டினார். {{dhr|2em}} {{block_right|{{x-larger|<b>2{{gap2}}</b>}}}} {{dhr|2em}} {{larger|<b>அ</b>}}சோக மரங்களும், தூங்குமூஞ்சி மரங்களும் நிறைந்த புல்வெளியின் நடுநாயகமான பங்களா. அதன் வரப்பு போலிருந்த குரோட்டன்ஸ் செடிகளை வேலையாள் ஒருவர் அழகுபட சிகையலங்காரம் செய்துகொண்டிருந்தார். டிரைவர், காரை கழுவிக்கொண்டிருந்தார். ஆட்டோவில் பானுவோடு இறங்கியவனைப் பார்த்ததும், இவர்களுக்கெல்லாம் தங்கள் இனத்தவனைப் பார்த்தது போன்ற திருப்தி, அல்லது அதிருப்தி. ஆனாலும் அவனின் கம்பீரமான தோற்றத்தையும் பங்களாவையும், பகட்டான காரையும் பார்த்து மயங்தவன்போல் நடந்த செல்வத்தைப் பார்த்த கண்களோடு, அவர்கள் தங்களுக்குள்ளே கண்ணடித்துக்<noinclude></noinclude> hsdthzxvpwlk9pxqf87s1fwwwh48hzq பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/23 250 215998 1839130 1838676 2025-07-04T14:54:43Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||13}}</noinclude>கொண்டார்கள். சற்று தொலைவில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த முத்தம்மா அந்த ஜோடி உள்ளே போனதும், “காதலுக்குக் கண்ணில்லை என்கிறது சரிதான்” என்றாள். உடனே தோட்டக்காரர் “கண்ணில்லாட்டிலும் மூளை இருக்குற மாதிரி தெரியுது.” என்றார். முத்தம்மா அதை அங்கீகரிப்பவள்போல பேசினாள். நாற்பது வயதுக்காரி. உழைப்பு உளியால் செதுக்கப்பட்ட காமாட்சி அம்மன் சிலை போன்ற மேனி, மின்னல்போல் வெட்டும் கருப்பு உதடுகளால், சிவப்பு வார்த்தைகளைப் பேசினாள். “காதலுக்கு, கண்களைவிட மனசுதான் காரணம். இன்னைக்கு நாட்ல வரதட்சணை கொடுமைன்னு பேசுறாங்க. இது நம்மை மாதிரி ஏழைகள்கிட்டே இல்லாத பிரச்சனை. பெரிய இடத்துப் பிரச்னைக. சின்ன இடத்துல போட்டுட்டு, சின்ன இடத்து பிரச்சனையை, சில்லரைப் பிரச்சனையாய் நினைக்கிற காலம் இது. இதை எதுக்கு சொல்ல வந்தேன்னா, நாட்ல படிச்ச பெண்கள், தன்னைவிட எல்லா வகையிலிம் உயர்ந்தவனை புருஷனாய் கேட்கிறாங்க. இது கிடைக்கலன்னா, வரதட்சணை கொடுமையாம். இவள்கள் ஏன் வசதியில்லாத அதே சமயம் நல்ல பையன்களை கல்யாணம் பண்ணப்படாது! ஏதோ அம்மா பானு செய்து காட்டிருக்கு. அந்தப் பையன் பார்க்கறதுக்கு அன்னக்காவடி, பரதேசி மாதிரி இருந்தாலும், எவ்வளவு அழுத்தமாய் போகுது பாரு...” “ஏதேது! இவங்க ரெண்டுபேருக்கும் இடையில், நீதான் லவ் லட்டரை கொடுத்திருப்பே போலிருக்கு!” முத்தம்மா, விகற்பம் இல்லாமல் சிரித்தாள். இந்த வெளிப்பட்ட, ஓசைப்படாத சிரிப்புக்கு உள்வட்டமான வரவேற்பு அறையில். பானுவின் அண்ணன் பாஸ்கரனிடம் எதையோ பேசிக்கொண்டிருந்த செல்வம், தணிகாசலத்தைப் பார்த்துவிட்டு, எழுந்து கும்பிட்டான். பிறகு<noinclude></noinclude> e7my5fqckbhm3ptgtmlpg39fitf7u66 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/24 250 216000 1839134 1839019 2025-07-04T15:01:51Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|14{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>மணப்பெண்போல் நாணி நின்றான். சினிமாவில் வருகிற பண்ணையார் மாதிரி இல்லாமல், கதர் ஜிப்பாவும், கதர் வேட்டியுமாய் தோற்றங்காட்டி தணிகாசலம் அவனை “உட்காரு தம்பி” என்றார். அந்தக் கனிவான குரலைக் கேட்டதும், செல்வத்திற்கு தைரியம் வந்தது. நாற்காலியில் உட்காரப்போனான் பிறகு, அவர் உட்காராமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, நாற்காலி சட்டத்தில் பிடித்த கையை எடுத்துவிட்டு நின்றான். தணிகாசலம், பயல் நடிக்கிறானோ என்பதுபோல் நோட்டம் விட்டபடியே உட்கார்ந்து, அவனையும் உட்காரும்படி சைகை செய்தார். செல்வம், அவரையும் அவருக்கு எதிர்ப்பட்ட சோபா செட்டில், கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருந்த அவர் மகன் பாஸ்கரனையும் ஒரு சேரப் பார்த்தான் இது அறுபது; அது முப்பது; இது கதர் மயம்; அது டெர்லின் மயம்; அதன் கண்களில் சொத்தின் சுமை, இதன் கண்ணில் அதன் சுவை. அப்பனும் மகனும் தன்னை மாறி மாறி நோட்டம் விடுவதை நோட்டம் விட்டு ஆறுதலுக்குகாக பானுவைப் பார்த்தான். அவளோ கையில் உயிரை வைத்திருப்பவள்போல், அதைப் பிடித்துக்கொண்டிருந்தாள். நீண்ட மெளனம். விழிகளின் கண்காணிப்பு, உணர்வுகளை, எடைக் கற்களாய் கொண்டு மனத் தராசுத் தட்டுக்கள் அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்தன. இதற்குள் மைதிலி, ஒரு தட்டில் பிஸ்கட்டுகளையும், அதனோடு நான்கு டீயையும் கையேந்தி நடந்து வந்தாள். அவளுக்கு இருபத்தெட்டு வயதிருக்கலாம். சிவப்பு நிறம் இல்லையென்றாலும், உடலில் பரவிய செழுமையும், முகத்தில் பூத்த மதர்ப்பும் ஒருவித கட்டழகு கவர்ச்சியைக் காட்டிக்கொண்டுதான் இருந்தது. அண்ணி செல்வத்தையே பார்த்தபடி நடந்து வருவதால், இடறி விழுவாளோ என்று பயந்தவள்போல், பானுமதி எழுந்து அண்ணியிடமிருந்து தட்டை வாங்கி டீபாயில் வைத்தாள். அவளுக்கு, பலமான<noinclude></noinclude> 10vvxdewalg3jsotp6o9p0nhzckqz92 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/25 250 216002 1839139 1838682 2025-07-04T15:09:01Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||15}}</noinclude>லேசான நாணம். இரண்டையும் ஒன்று சேர்த்த உறுதி; தணிகாசலம் ஒரு பிஸ்கட்டைக் கொறித்தபடியே செல்வத்தைப் பார்த்து, ‘பிஸ்கட் எடுத்துக்கப்பா’ என்றார். ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு, தணிகாசலமே பேச்சைத் துவக்கினார். “ஒன் பேரு என்னப்பா?” “செல்வம்” “என்ன படிச்சிருக்கே?” “எம். ஏ. எக்னாமிக்ஸ்!” “இப்போ வேலை பார்க்கிறியா?” “ஆமாம் கே. ஆர். அன்ட்கோவ்ல டைப்பிஸ்டா இருக்கேன்.” பாஸ்கரன் முகத்தை சுழித்தபடியே கேட்டான். “எம். ஏ. படிச்சுட்டு, போயும் போயும் டைப்பிஸ்டாவா இருக்கீங்க.” “எந்த தொழிலும் இளக்காரமுன்னு இல்ல. நம்ம நாட்ல மட்டுமில்ல உலகத்துலயும், கஷ்டமான தொழிலை செய்ய முடியாத, பிரபுக்களும், முதலாளிகளும், அப்படிப்பட்ட தொழிலையே இழிவாக்கி வச்சுட்டாங்க. நம் தமிழ்நாட்ல பனையேறுற தொழிலும், மரம் வெட்டும் தொழிலும் நெஞ்சுத்திடமும், உடம்புத்திடமும், உள்ளவங்க செய்யுற வேலை. இந்த வேலைகளை செய்ய முடியாத பண்ணையாருகளும், முதலாளிகளும் இந்தத் தொழிலைக் கேவலப்படுத்தி அந்தத் தொழிலாளிகளை... அதைவிடக் கேவலமாய் வச்சுட்டாங்க. நீங்களும் அப்படி....” பாஸ்கரன் நிமிர்ந்து உட்கார்ந்தபடியே அவனையே பார்த்தான். பிறகு கேட்டான். “எதுக்காக இவ்வளவு பெரிய லெக்சர் அடிக்கிறீங்க.” {{nop}}<noinclude></noinclude> 4sqrbe1aicxg7e7nna5y1nlp98nylff பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/81 250 216114 1839114 821257 2025-07-04T14:14:22Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{block_right|{{x-larger|<b>12</b>}}}} {{dhr|2em}} <b>போ</b>லீஸ் இன்ஸ்பெக்டர் திம்மைய்யா வேறு யாருமில்லை. பாஸ்கரன் கொடுத்த பார்ட்டியின் ‘பதவியுயர்வு கதா நாயசனான’ அதே திம்மையாதான். சுந்தரம் அவர் முன்னால் வந்து நின்று முறையிட்டார். “இவர், மிஸ்டர் பாஸ்கரரோட பிரதர் இன்ஸார்! நீங்ககூட இடுகாட்டுக்கு வந்திருக்கிறீங்களே! அந்தப் பெண்ணோட ஹஸ்பென்ட் சார்! இவரை பாஸ்கரன் வீட்டுக்குள் சேர்க்க மறுக்கிறார் சார்! இவ்வளவுக்கும் அந்த வீடு இவர் ஒய்ப் பேர்லதான் இருக்கு சார்! சட்டப்படி ஒய்புக்கு வாரிசு புருஷன்தானே!” திம்மைய்யா, தில்லோடு பேசினார். “இது சிவில் கேஸ்—கிரிமினல் இல்லே! பொஸ்ஸஷன் இஸ் நைன்டி பர்சென்ட் ஆப் தி லா. அதாவது, இவரும் வீட்டுக்குள்ளே இருந்து—மிஸ்டர் பாஸ்கரன் இவரை கழுத்தைப் பிடித்தோ, பிடிக்காமலோ வெளியே தள்ளினால், அது கிரிமினல் அபென்ஸ்! பட் இவர் போனபிறகு—அவர் கேட்டைப் பூட்டினால். அது சிவில் அபென்ஸ். கோர்ட்டுக்கு போங்க!” சுந்தரம் புரிந்துகொண்டார்; இவனுக்கும் பாஸ்கரனுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்குது. இல்லன்னா. நான் சொல்லாமலே பாஸ்கரன் கேட்டைப் பூட்டின விஷயம் இவருக்கு எப்படித் தெரியும்? சுந்தரம் ஆவேசமானார். {{nop}}<noinclude></noinclude> 0aqmiq0aqpruywyd6zhs8bmibohdn7g பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/82 250 216116 1839117 821259 2025-07-04T14:17:49Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|72{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“இன்ஸ்பெக்டர் சார்! நீங்க ஆக்ஷன் எடுக்காட்டால் நாங்க பார்க்க வேண்டியவங்களைப் பார்க்கவேண்டி வரும். அப்புறம் பாஸ்கரும் நீங்களும் கூட்டாய் வருத்தப்பட வேண்டி வரும்!” திம்மையா, அதட்டினார். “யோவ் பேமானி! ராஸ்கல்! ஸ்கவுன்டரல்? இடியட்! என்னையா மிரட்டுறே! ஒன்னையும்—ஒன் அப்பனையும் பார்த்தவன் நான்! மரியாதையாய் இவனைக் கூட்டிட்டுப் போறியா—இல்ல இரண்டுபேரையும் உள்ளே தள்ளனுமா! திருட்டு ராஸ்கல்! போலீஸ்ன்னு நினைச்சியா—ஒன் மச்சான்னு நினைச்சியா?” சுந்தரம், செல்வத்தை நோக்கினார். “நடங்க தம்பி! இவர் மட்டுந்தான் போலீஸ் டிபார்ட்மென்டுன்னு இல்ல. இந்த டிபார்ட்மென்ட்லயும் நல்லவங்க இருக்காங்க. நடங்க தம்பி!” செல்வம் நடக்கவில்லை. சுந்தரத்தினால் நகர்த்தப்பட்டான். அவரால் அவனைத் தள்ள முடியவில்லை; மூச்சு இரைத்தது. மூச்சிளைக்கப் பேசினார். “கவலப்படாதிங்க தம்பி! என் வீட்லயே நீங்க இருக்கலாம். இங்கேயே இருங்க. நான் ஒரு டாக்சி பிடிச்சுட்டு வாரேன்—எங்கேயும் போயிடாதிங்க.” சுந்தரம் போய்விட்டார். இப்போது செல்வம் தன்பாட்டுக்கு நடந்தான். ‘பானு பானு’ என்று வாய் சளைக்காமல் பேசிக்கொண்டு எங்கெங்கெல்லாமோ நடந்தான். இறுதியில் பானு புதைக்கப்பட்ட இடுகாட்டுக்கு அவன் வந்தபோது—<noinclude></noinclude> 607ek4mht08oxusmtvwiyar9m1o00w7 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/83 250 216118 1839118 821261 2025-07-04T14:21:01Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||73}}</noinclude>நான்கைந்து போலீஸ்காரர்கள். அவனைச் சூழ்ந்தார்கள். “ஒன்பேரு செல்வந்தானே! நடடா ஸ்டேஷனுக்கு. அயோக்கிய ராஸ்கல்! கட்டுன பெண்டாட்டியைக் கொன்னுட்டு பாசாங்கா செய்யுற! அயோக்கியப் பயலே!” செல்வம் எதுவுமே பேசவில்லை. அவர்களுக்கு நடுவில் போய் நின்றுகொண்டான். {{dhr|2em}} {{block_right|{{x-larger|<b>13</b>}}}} {{dhr|2em}} <b>இ</b>ரவு முழுதும் லாக்கப் கம்பிகளைப் பிடித்தபடியே, நின்ற கோலத்திலேயே நின்ற செல்வத்திடம், மறுநாள் காலையில் திம்மையா வந்து, கண்ணில் விரல் விட்டு ஆட்டுவதுபோல், கம்பிகளுக்கு இடையே கைவிட்டு ஆட்டியபடி ஒரு பத்திரிகையை அவன் முன்னால் காட்டி “பாருடா ஒன் பவுசு” என்றார். பிறகு உள்ளே அதை வீசியெறிந்தார். செல்வம் பார்க்கவில்லை. இன்னொரு லாக்கப் வாசி அதை எடுத்து சத்தம் போட்டுப் படித்தார். இளம் மனைவிக்கு விஷம் கொடுத்துக் கொன்ற கணவன் கைது? சடலத்தைப் போலீசார் கைப்பற்றினார்கள்! அந்த லாக்கப்வாசி, அந்தத் தலைப்புச் செய்தியை படித்துவிட்டு, பிறகு ‘பாடி’ செய்தியையும் முடித்துவிட்டு, செல்வத்தை திகைப்போடு பார்த்தார்; வெறுப்போடு பார்த்தார். ஆனால் செல்வமோ தன்னை மறந்து, தன்னிலை இழந்து ‘பானு...பானு’ என்ற மனம் கூவிய வார்த்தைகளை, காதுக்குள் வாங்கிக்கொண்டே ஸ்தம்பித்து நின்றான். {{nop}}<noinclude></noinclude> trcder5xdsdzu0pisigwfu5vxsy935q பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/84 250 216120 1839119 821263 2025-07-04T14:25:10Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|74{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>சிறிது நேரத்தில் சுந்தரமும் முத்தம்மாவும் தனித் தனியாய் வந்தார்கள். செல்வம் அவர்களை வெறுமையாகப் பார்த்தான். அடையாளம் கண்டுகொண்டது போன்ற லேசான தூக்கலான பார்வை. மீண்டும் பானுவை நினைத்ததுபோல் நெஞ்செலும்பை தொட்ட தலை. முத்தம்மாவால் பேச முடியவில்லை. சத்தம் போட்டு அழுதால் போலீஸ்காரர்கள் அடிப்பார்கள் என்று பயந்தாளோ என்னவோ... முந்தானை முனையை பந்துபோல் சுருட்டி வாய்க்குள் திணித்தபடியே குலுங்கினாள். சுந்தரம் ஆவேசமாகப் பேசினார். “கவலப்படாதிங்க சார்! எனக்கும் பெரிய இடத்துல ஆள் இருக்காங்க, ஒங்களையும் மீட்டி பேக்டரியையும் மீட்டிக் காட்டுறேன்! முத்தம்மா, எல்லா விஷயத்தையும் சொன்னாள். வேணுமுன்னால் பாருங்க. நீங்க நிற்கிற இடத்துல—பாஸ்கரும், அவள் மனைவியும் நிற்கப்போறாங்க!” முத்தம்மா விக்கி விக்கிப் பேசினாள். “நீங்களும் அம்மாவும் நைட்ல வந்தப்போ, மைதிலி என்னை ஒரு நாளும் இல்லாத திருநாளாய் வீட்டுக்குப் போகச் சொன்னதில் ஆச்சரியம் தாங்க முடியல? அப்புறம் அம்மா செத்தது தெரிந்து, நான் வீட்டுக்கு வந்தப்போ, மைதிலி சும்மா அழுதுகிட்டே, ஆம்புடையான் காதை அடிக்கடி கடிச்சாள். அப்போதான் - எனக்கு சந்தேகம் வந்தது. மைதிலி அம்மாவுக்கு பால் கொடுத்துட்டுக். கழுவாமல் போட்ட டம்ளரை எடுத்து வச்சிருக்கேன். இது சந்தேகமில்லாமல் கொலை சாமி] ஒன் மச்சானும் மைதிலியும் அம்மாவை கூட்டாய் கொலை செய்திருக்காங்க. சொத்துக்கு ஆசைப்பட்டு—ஒங்க ஒரே சொத்தை கொன்னுட்டாங்கய்யா! நீங்களும் அம்மாவுமாய் சேர்ந்து எனக்காக வாதாடுனது இன்னும் இந்தப் பாழும் மனசில் அப்படியே நிற்கிறது சாமி!” {{nop}}<noinclude></noinclude> 62fv4hhyyphk8mtw9j2wjdglroewnnr பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/85 250 216122 1839120 821265 2025-07-04T14:28:47Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||75}}</noinclude>முத்தம்மா கேவினாள். மீண்டும் தொடர்ந்தாள்: “கவலப்படாதிங்க சாமி! ஒங்களுக்கே இந்த நிலைன்னா... ஒங்களை இப்படி ஆக்குனவங்களுக்கு என்ன கதியோ? நாங்க இதை விடப்போவதில்லை. இந்த சத்தியத்தை ஜெயிக்க முடியாது! சத்தியத்துக்குக் கட்டுப் படுறவங்களுக்கு, சத்தியமும் கட்டுப்பட்டே ஆகணும்.” முத்தம்மா—முற்றுப்பெறாத போராட்டத்துக்கு முன்னுரை கூறிவிட்டு செல்வத்தையே பார்த்தாள். அவன் அவளை ஒருகணம் ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, மறுகணம் தலையைத் தொங்கப் போட்டான். பானுவின் ஆயுள் முடிந்த பிறகு, தனது ஆயுளே ஒரு தண்டனையானதால், இனிமேல் தூக்குத் தண்டனை கிடைத்தாலும் அது பெரிதல்ல என்பதுபோல். அவன் கண்கள் உள்நோக்கிப் பார்த்தன—தங்களைத் தாங்களே பார்ப்பதுபோல் தோன்றின. சுந்தரத்தாலும் அவனைப் புரியமுடியவில்லை. அதேசமயம் அவனுள் இருந்த சத்தியம் புரிந்தது. சுந்தரமும், முத்தம்மாவும் ஆவேசமாக வெளியேறினார்கள். ஆகவேண்டிய ஆட்களைப் பார்ப்பதற்காக, அணி வகுத்து நடப்பதுபோல் நடந்தார்கள். நடையே மூச்சாக, மூச்சே நடையாக முற்போக்காய் நடந்தார்கள். செல்வத்தின் காதில், முத்தம்மா பேசியது,பானு. பேசுவதுபோல் இப்போது ஒலித்தது. ஒலி ஒலியாய், வளையல் தாள லயத்தோடு, நம்பிக்கை முதலில் கேட்டது. <poem>::‘சத்தியத்துக்கு, கட்டுப்படுறவங்களுக்கு ::சத்தியமும் கட்டுப்பட்டே ஆகணும்.’</poem> {{c|✽}} {{nop}}<noinclude></noinclude> 1hmq8p5sz844a0tev973p0k0sr5abov பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/86 250 216124 1839125 821267 2025-07-04T14:39:34Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{block_right|{{x-larger|<b>பிற்பகல்...</b>}}}} {{dhr|2em}} {{block_right|{{x-larger|<b>1</b>}}}} {{dhr|2em}} <b>க</b>ண்டக்டர்கள், ‘டபுள் விசில்’ கொடுத்து ஓடுகின்ற காலம். பல்லவ பஸ் சக்கரவர்த்தி உதயமாகாத காலம். பஸ்கள் ஒன்றை ஒன்று முண்டியடித்து, மோதாக் குறையாய், தலைவிரி கோலமாய், தலையைத் துண்டிக்கும் கோலமாய் ஓடாத காலம். எல்லாவற்றிற்கும் மேலாக மாணவ—பஸ் ஊழியர் மகாயுத்தங்கள் தோன்றாத காலம். அப்போது சுடுகாடுபோல் இருந்த அடையாறு சாலையில், நாணப்பட்டு மெதுவாய் நடக்கும் கல்யாணப் பெண்ணைப்போல், மெதுவாகப் போய்கொண்டிருந்த அந்த அரசாங்க பஸ்ஸை, ஒரு சுற்றுலா பஸ் முந்த முயன்றபோது, பெண்கள் இருக்கையில், முதல் வரிசையில் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் எவரும் உட்கார முடியாதபடி நடுவில் அமர்ந்திருந்த மோகினி. “என்ன டிரைவர். காலேஜ் பசங்க பஸ்... நம்ம பஸ்ஸை ஓவர்டேக் பண்றதா... நீங்க அதபொறுத்துக்கிட்டு இருக்கிறதா? சுத்த மோசம்!” என்று குரல் கொடுத்ததும், ‘ஸ்டியரிங்கில்’ தலையை வைத்துத் தூங்கலாமா என்று சிந்திப்பவர்போல் கிழட்டு மாடு மாதிரி ‘அம்பேலாக’ இருந்த டிரைவர், குரல் வந்த திசையை எரிச்சலோடு பார்த்தார். குரல் கொடுத்தவள் இருபது வயதுக்காரி என்பதாலும், அவளின் எழிலான அதரங்கள் கெஞ்சுவதுபோல் பார்த்ததையும் நளினத்தோடு நாணமுங்-<noinclude></noinclude> 8i6w7g22qtlbr5rxaououa4e9nfjb9m பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/87 250 216126 1839123 821269 2025-07-04T14:37:58Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|78{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>கொண்டதுபோல் ஒயிலாகத் தோன்றிய கரங்கள், வேகமாய் ஓட்டுங்க... என்ற இனிமையான குரலுக்குத் தட்டாமல் தாளம் போடுவதுபோல் லேசாக ஆடுவதையும் அவள் கால்மேல் கால்போட்டு இருந்த காட்சியையும் பார்த்த கிழட்டு டிரைவருக்கு உற்சாகம் பிறந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவரைவிடக் கிழடு தாண்டிய, பாழடைந்த பல்லக்கு போல் தோன்றிய அந்த பஸ்ஸை, வலது பக்கமாய் ஓடித்து, இடது பக்கமாய் நகர்த்தி, பிளாட் பாரத்தில் நின்றவர்கள் ஓடும்படியும், நடந்தவர்கள் நிற்கும் படியும் அனாவசியமாக ஓட்டியிருக்கமாட்டார். “அங்க முத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்...” என்றும், மெடிகல் காலேஜ் லேடி—ஒன் ஸ்டெதாஸ் கோப்பைத் தாடி என்றும் கல்லூரி மாணவர்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் கும்மாளமிட, கம்பீரமாகப் போய்க்கொண்டிருந்ததை அறிய சுற்றுலா பஸ்ஸை ஓவர் டேக் செய்திருக்கமாட்டார். கல்லூரி மாணவர்கள். சுற்றுலா பஸ் பாகனைச் சுற்றிச் சுற்றி வந்து குரல் கொடுத்தாலும், ‘ஓவர்டைம்’ சம்பளம் வாங்க நினைத்த டிரைவர், “நம்மளால இவ்வளவுதான் ஓட்ட முடியும். வேணுமுன்னா நீங்க ஓட்டுங்க” என்று சொன்னதும் மட்டுமில்லாமல், மாணவர்கள் கேட்டதுக்கு அபராதம் விதிப்பவர்போல் வண்டியை மெதுவாய் ஓட்டினார். என்றாலும், பஸ் ஸ்டாப்பில் நின்ற அரசாங்க பஸ்ஸை முந்திக்கொண்டு, அந்த சுற்றுலா பஸ் போனபோது மாணவர்கள், தங்கள் பஸ் வெற்றி பெற்றுவிட்டதுபோல் ‘டப்பா பஸ்... டப்பா பஸ்...’ என்று மோகினியின் பஸ்ஸைக் கிண்டல் செய்து, வெளியே தெரியும்படி கைகளை ஆட்டினார்கள். மோகினி. டிரைவரை தான் சம்பளம் கொடுக்கும் சொந்த டிரைவராக நினைத்தவள்போல், “வண்டிய<noinclude></noinclude> bqy187m8wb9clsgulwicng1gwcprn35 1839124 1839123 2025-07-04T14:39:22Z AjayAjayy 15166 1839124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|78{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>கொண்டதுபோல் ஒயிலாகத் தோன்றிய கரங்கள், “வேகமாய் ஓட்டுங்க...” என்ற இனிமையான குரலுக்குத் தட்டாமல் தாளம் போடுவதுபோல் லேசாக ஆடுவதையும் அவள் கால்மேல் கால்போட்டு இருந்த காட்சியையும் பார்த்த கிழட்டு டிரைவருக்கு உற்சாகம் பிறந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவரைவிடக் கிழடு தாண்டிய, பாழடைந்த பல்லக்கு போல் தோன்றிய அந்த பஸ்ஸை, வலது பக்கமாய் ஓடித்து, இடது பக்கமாய் நகர்த்தி, பிளாட் பாரத்தில் நின்றவர்கள் ஓடும்படியும், நடந்தவர்கள் நிற்கும் படியும் அனாவசியமாக ஓட்டியிருக்கமாட்டார். “அங்க முத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்...” என்றும், மெடிகல் காலேஜ் லேடி—ஒன் ஸ்டெதாஸ் கோப்பைத் தாடி என்றும் கல்லூரி மாணவர்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் கும்மாளமிட, கம்பீரமாகப் போய்க்கொண்டிருந்ததை அறிய சுற்றுலா பஸ்ஸை ஓவர் டேக் செய்திருக்கமாட்டார். கல்லூரி மாணவர்கள். சுற்றுலா பஸ் பாகனைச் சுற்றிச் சுற்றி வந்து குரல் கொடுத்தாலும், ‘ஓவர்டைம்’ சம்பளம் வாங்க நினைத்த டிரைவர், “நம்மளால இவ்வளவுதான் ஓட்ட முடியும். வேணுமுன்னா நீங்க ஓட்டுங்க” என்று சொன்னதும் மட்டுமில்லாமல், மாணவர்கள் கேட்டதுக்கு அபராதம் விதிப்பவர்போல் வண்டியை மெதுவாய் ஓட்டினார். என்றாலும், பஸ் ஸ்டாப்பில் நின்ற அரசாங்க பஸ்ஸை முந்திக்கொண்டு, அந்த சுற்றுலா பஸ் போனபோது மாணவர்கள், தங்கள் பஸ் வெற்றி பெற்றுவிட்டதுபோல் ‘டப்பா பஸ்... டப்பா பஸ்...’ என்று மோகினியின் பஸ்ஸைக் கிண்டல் செய்து, வெளியே தெரியும்படி கைகளை ஆட்டினார்கள். மோகினி. டிரைவரை தான் சம்பளம் கொடுக்கும் சொந்த டிரைவராக நினைத்தவள்போல், “வண்டிய<noinclude></noinclude> hdggwl41dquvttd3smnr45b5dup0a2l பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/88 250 216128 1839127 821271 2025-07-04T14:43:45Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}79}}</noinclude>சீக்கிரமா எடும் தாத்தா! அந்தப் பசங்க கையை ஒடிக்கிறது மாதிரி உரசிக்கொண்டு போங்க ப்ளீஸ்! சீக்கிரமா ஸ்டார்ட் பண்ணுங்கோ” என்றாள். ‘ஒனக்கேண்டி திமிரு!’ என்பது மாதிரி இதர பெண்களும், ‘சரியான ராங்கிக்காரி’ என்று கிழட்டுப் பிரயாணிகளும், ‘நாமும் டிரைவரை உற்சாகப் படுத்தலாமா’ என்று அசல் இளைஞர்களும் இளைஞர்களாக தங்களை இன்னமும் நினைத்துக்கொண்டிருந்த முப்பத்தைந்து வயதுக்காரர்களும். சிந்தித்து தங்கள் சிந்தனைகளுக்கு ஏற்றாற்போல் முகபாவங்களைக் கோணல் மாணல்களாக வைத்துக்கொண்டிருந்தபோது, ‘தாத்தா’ என்ற வார்த்தையைத் தகாத வார்த்தையாக எடுத்துக்கொண்ட டிரைவர், தான் தாத்தா இல்லை என்பதை நிரூபிக்க நினைத்தவராய், ஆக்ஸிலேட்டரை அழுத்த சுற்றுலா பஸ் பின்னுக்குத தள்ளப்பட்டது. மோகினி இப்போது மாணவ—பிரயாணிகளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் ‘டாடா’ காட்டியபோது, இதர பிரயாணிகள் முகத்திலும் களை கொட்டியது. அவர்களும், மாணவர்களுக்கு ‘டாடா’ காட்டிவிட்டு, மோகினியை பிர்லாவின் பேத்தியைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். ஆனால் சீனிவாசன் அவளை அப்படிப் பார்க்கவில்லை. அவள் பார்வை, தன் பக்கம் திரும்பும் போதெல்லாம் தன் ஆள்காட்டி விரலை எடுத்து நெஞ்சைத் தொட்டுவிட்டு, பின்பு அதே விரலை லேசாகத் தூக்கி வட்டம்மாதிரி செய்து, பின்பு நேராக நீட்டி அவள் இருக்கைக்கருகே இருந்த காலி இடத்தைச் சுட்டிக்காட்டி கண்களால் கெஞ்சினான். அதாவது, அவளருகே தான் வந்து அமரலாமா என்று சமிக்ஞை காட்டுகிறானாம். மோகினி அந்த சமிக்ஞையை கண்டுக்காமல் இருந்தபோது இன்னொரு சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு போலீஸ்காரர். காலி இடத்தைச் சுட்டிக் காட்டியவனை காலியாக நினைத்து, கேஸ் கிடைக்கப் போகிற—அதுவும் மாதக் கடைசியில் கிடைக்கப் போகிற—பெருமிதத்தில் அவனை நோக்கி நகர்ந்தபோது, விஷயத்-<noinclude></noinclude> dlryjirbcdij4psc4pdyr6sxv8lgoxt பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/89 250 216130 1839129 821273 2025-07-04T14:51:32Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|80{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>தைப் புரிந்துகொண்ட மோகினி ‘பேசாம அங்கேயே உட்காருங்க’ என்பது மாதிரி வலதுகையைத் தூக்கி, விரல்களை தாழ்த்தி ஒரு அழுத்தங் கொடுத்தாள். அந்த சமிக்ஞையைப் போலீஸ்காரர் பார்த்தபடி என்பது மாதிரியும், அந்த சிவப்புத் தொப்பியைப் பார்த்தாள். சிவப்புத் தொப்பிக்கும். புரிந்திருக்க வேண்டும். இல்லையானால் தொப்பியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, வேறு எதற்கோ நகரப் போனவர்போல் அவர் இன்னொரு ‘ரோவில்’ போய் உட்கார்ந்திருக்க மாட்டார். சீனிவாசனுக்கு அவளருகே உட்கார வேண்டும் போலிருந்தது. அப்படி அவன் உட்காருவான் என்று நினைத்தவள் போல், பாதி இடத்தை வேகன்ஸியாக வைக்காமல் மோகினி படர்ந்து உட்கார்ந்திருந்ததன் மர்மம், போலீஸ் காரருக்குப் புரிந்தது. சாதுவான முகபாவத்துடனும், சந்தன நேர்த்தியுடனும், கொஞ்சம் நோஞ்சான்போல் தோன்றினாலும், களைகாட்டும் நயனத்துடன் தோன்றிய சீனிவாசனை மோகினியுடன் மனதுக்குள் ஜோடி சேர்த்து, போலீஸ்காரர் திருப்திப்பட்டுக் கொண்டார். பஸ் மெரீனா ஸ்டாப்பிங்கில் நின்றது. முதலில் இறங்கிய சீனிவாசன். இறங்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அந்த ஸ்டாப்பில் ஏறிய ஒருத்தியின் கைக்குழந்தையின் கன்னங்களைச் செல்லமாகக் கிள்ளிக்கொண்டு, தன்னை மறந்து நின்ற மோகினியை கண்ணடித்தான். ‘இறங்கு... என்பது மாதிரி, தலையை ஏற்றி இறக்கி ஆட்டினான். ஆனால் மோகினியோ, அந்தக் குழந்தை சிரிப்பதில் தன்னை மறந்து. அதன் உதடுகளை கையால் அழுத்திக்கொண்டிருந்தாள். டிரைவர், சீனிவாசன் கையைக் காலை ஆட்டுவதைப் பார்த்தார். ‘பயல் இங்கயே நிக்கட்டும்...நாம ஆக்ஸி லேட்டரை அழுத்தலாமா’ என்றுகூட நினைத்தார்.<noinclude></noinclude> jrii56azv8sn1ru6v8obomhkgu8pkf0 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/90 250 216132 1839132 821278 2025-07-04T14:59:12Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}81}}</noinclude>பின்னர் அப்படி நினைத்ததற்குப் பிராயச்சித்தமாக ‘சிவ சிவா...’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே மோகினியைப் பார்த்து, “பாப்பா... இங்கதானமா நீ இறங்கணும்?” என்று கேட்டபோது, மோகினி அப்போதுதான் நினைவு வந்தவள்போல், அந்தக் குழந்தையைப் பிரிய மனமில்லாமல் அதன் தலைமுடியைத் தடவிவிட்டு இறங்கினாள். இருவரும் காதலர் பாதை வழியாக நடந்தார்கள். ‘எவ்வளவு அழகா இருக்கு... எவ்வளவு அழகா இருக்கு’ என்று சொல்லிக்கொண்டே மோகினி, சீனிவாசனைப் பார்த்தாள். சீனி பதில் பேசாமல் இருப்பானா? இருக்கவில்லை. “இந்த சட்டைதானே ... கெஜம் நாற்பது ரூபா; நல்லா இல்லாம எப்படி இருக்கும்?” “மண்ணாங்கட்டி. நான் பஸ்லே பார்த்தேனே...அந்தக் குழந்தையச் சொன்னேன். குறஞ்சுது இன்னும் ஒரு வாரத்துககு அந்தப் பையனை என்னால மறக்க முடியாது.” “அந்தப் பையன் கிடக்கிறான் விடு! இப்ப இந்தப் பையனப் பாரு!” “நீங்க.. உண்மையிலேயே பையன்தான்... இன்னும் மெச்சூரிட்டி வரல!” “ஏன் அப்படிச் சொல்றே...” “பின்ன என்னவாம்... பஸ்ல நாலுபேரு பாக்றாப்போல அப்படித்தான் கையைக் கால ஆட்டுறதா...” சீனிவாசன் ‘நீ மட்டும் ஆண்பிள்ளமாதிரி ஓவர்டேக் பண்ணும்படியா டிரைவர்கிட்ட சொல்லவாமா...’ என்று கேட்கலாமா என்று நினைத்தான். அப்படிச் சொன்னால் அவள் அங்கேயே அவனை விட்டுவிட்டுப் போய்விடுவாள் என்ற ‘ரியாக்ஷனை’ நினைத்து வயதுவராத பையன் மாதிரி அவளுக்கு இணையாக நடக்கப் பயந்தவன்போல் பின்னால் நடந்தான். {{nop}}<noinclude> ச.—6</noinclude> qcbrg43fmhouo5duedck7drchxhzo9q பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/91 250 216134 1839234 821280 2025-07-05T08:55:56Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|82{{gap}}சு.சமுத்திரம்||}}</noinclude>இருவரும் ஒரு தோணிக்கருகே வந்து உட்கார்ந்தார்கள். காலை ஒன்றுக்குமேல் ஒன்றாக மடக்கி இடது கையை ஊன்றி அதில் லேசாகச் சாய்ந்துகொண்டு உட்கார்ந்த மோகினி, வலது கையால் தன்னைச் சுற்றி ஒரு வட்டக்கோட்டைப் போட்டாள். சீனிவாசனுக்கு அந்தக் கோட்டின் அர்த்தம் புரியும், அந்தக் கோட்டுக்கு உள்ளே அவனோ அவன் கைகால்களோ போகக்கூடாது என்கிற தடைக்கோடு அது. “இன்னிக்கி இந்தக் கோட்டைத் தாண்டி வராட்டா என்பேரு சீனியில்ல” என்று தினமும் சொல்லி பின்னர் அவள் கண்களின் உருட்டலுக்குப் பயந்து, கிழித்த கோட்டைத் தாண்டாத அவன், அன்று பேசாமல் ‘சவலைப் பிள்ளைமாதிரி’ உட்கார்ந்திருந்ததில் மோகினி ஆச்சரியப்பட்டாள். சிரித்துக்கொண்டே கேட்டாள். ‘ஏன் உம்முன்னு இருக்கிங்க! என்ன வந்தது உங்களுக்கு?’ ‘அவனவன் காதலிச்ச மூணு நாளையில் ஒண்ணா உக்காருராங்க, தோளோட தோள் இடிக்கும்படியா நடக்கறாங்க, நீ என்னடான்னா... ‘சொல்லுங்க! என்னடான்னா.... ‘என்னை நீ நேராவே ‘டா’ போடலாமே... ‘அளவுக்கு மீறிப்போனா அதுவும் போடுவேன் இல்ல. சொல்ல வந்ததைச் சொல்லுங்க.’ ‘நீயே சொல்லு; நாம மூணு வருஷமா பழகுறோம். ஒரு நாளாவது உன் பக்கத்துல உட்கார விடுறியா?’ ‘நெருப்பைப் பஞ்சு பக்கத்துல விடப்படாது. ‘எதுக்கும் பொருத்தமா பேசிடுவே! என் மனசு ஒனக்கு புரியமாட்டேங்குது. ஒன் பக்கத்துல உட்கார்ந்து சினிமா-<noinclude></noinclude> r9zp7u9140rffd262lz4mp6t063dady பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/92 250 216136 1839235 821282 2025-07-05T09:00:04Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}83}}</noinclude>வுக்குப் போகணும்னு மூணு வருஷமா நினைக்கிறேன். முடிஞ்சுதா. உண்மையிலேயே நீ ஒரு யந்திரமா இருப்பியோன்னு கூட நினைக்கத் தோணுது!” மோகினி அவனை யந்திரம்போல ஆடாது அசையாது பார்த்தாள் அந்தப் பார்வையில் அவன் யந்திரமயமானவன் போல் இருந்தபோது, ‘அப்பாகிட்ட சொல்லிட்டிங்களா’ என்றாள் அமைதியாக. சீனிவாசன் பேசாமல் இருந்தான். மோகினி பொரிந்தாள். ‘எத்தன தடவங்க ஒங்களுக்குச் சொல்றது. அப்பாகிட்ட சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கத் தைரியம் இல்லை. என்கிட்ட காட்டற கோபத்தை அவர்கிட்ட காட்டியிருந்தா நான் இப்படிக் கோபப்படவேண்டிய அவசியம் வந்திருக்காது,இன்னைக்கு எனக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும். ஒங்களால எனக்குத் தாலிகட்ட முடியுமா முடியாதா? ஒங்களால வெட்டியா இருக்கவும் முடியாது. என்னால வெட்டியா வரவும் முடியாது. ஒரு தாலிக்கயிறு இல்லாத தால நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும்!’ ‘என்ன சொல்ற?’ ‘சுண்டக்காய்க்கு உப்பில்லென்னு சொல்றேன். எங்க மானேஜர் சுந்தரத்தோட பார்வை சரியில்ல! பாவிப்பய சொந்த பெண்டாட்டியகூட அப்டிப் பார்க்கமாட்டான். அப்பு உரிமையோட பேசமாட்டான். ஒரு தாலிக்கயிறு இருந்தாலாவது மனம் மாறுகிறானான்னு பாக்கப்போறேன்!’ ‘நான்தான் ஒனக்குப் படிச்சிப் படிச்சிச் சொன்னேன். அவன் கூப்புடுற நேரத்துல்லாம் ஆபீஸ் ஆபீஸின்னு போனா இப்படித்தான் நடக்கும்!’ ‘என்னங்க நீங்க, பையன்மாதிரி பேசுறீங்க. எங்க கம்பெனில...’ {{nop}}<noinclude></noinclude> 0f3y6n8zu4kjhd7qutcqxyn3hpu2ihq பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/93 250 216138 1839237 821283 2025-07-05T09:05:31Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|84{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>என்டயர் பப்ளிஸிட்டியயே நாங்கிதான் பாத்துக்கிறோம். பப்ளிஸிட்டி மினுங்கணும்னா அதல வேல பார்க்கிறவங்க கசங்குனாத்தான் முடியும். ஒங்களுக்குப் புரியும்படியாவே ஒரு உதாரணம் சொல்றேன். நீங்க சாப்பிடுற மசால்தோசை சூடா வரணுமுன்னா தோசை போடுறவரு. நெருப்பு பக்கத்துல சூடு படாம் இருக்க முடியுமா? எங்களுக்குக் கஸ்டமர்தான் முக்கியமே தவிர கஷ்டங்கள் முக்கியமல்ல. உங்கமாதிரி அஸிஸ்டெண்ட் மானேஜர் மாதிரி உத்தியோகமுன்னா பரவாயில்ல. பவர் இல்லாத போஸ்ட்டு. பப்ளிஸிட்டி வேலை. ஆனால் அதை பவர்புல். போஸ்டாயும் மாத்த முடியும். சும்மா சொல்லப்படாது. அந்த ஆளு சுந்தரம் வேலயில் எமன். அதனாலயே எனக்கு அவர்கிட்ட மரியாதை. அந்த மரியாதையை அவன் மரியாதை கெட்ட தரமா நினைக்கிறான்!’ ‘போசுட்டும்.நீ ஏன் அவன் வீட்டுக்குப் போற!’ ‘என்னங்க நீங்க, இன்னும் நான் கன்ஃபர்ம் ஆகலை. நோயாளியான அம்மா, ஜாதகம் தவிர எதையும் படிக்கத்தெரியாத அப்பா. இவங்களைக் காப்பாத்துற பொறுப்பு என்னோடது. கேஷவல் வேலய என்னால எப்டி கேஷுவலா எடுத்துக்க முடியும்? அது போகட்டும். இன்னிக்கி ரெண்டுல ஒண்ணு தெரியணும். ஒங்களால என் கழுத்துல தாலி கட்டமுடியுமா முடியாதா? சொல்லுங்க!’ ‘மோகினி! பிளட்பிரஷர் தொத்து வியாதியா?’ ‘ஏன் சம்பந்தமில்லாம உளறுறீங்க.’ ‘அப்பாவுக்கு இருக்கிற பிளட் பிரஷ்ஷால அவர் கத்துறதுலயும் திட்டுறதுலயும் எங்களுக்கும் பிளட்பிரஷர் வந்துடும் போலிருக்கு. அம்மாவுக்குக் கிட்டத்தட்ட வந்துட்டுது.’ ‘அதாவது ஒங்களால அப்பாகிட்டச் சொல்ல முடியாது. அவ்வளவுதானே?’ {{nop}}<noinclude></noinclude> 27tuu4287n6n0aw1qc7fvt05dqhxj71 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/94 250 216140 1839238 821285 2025-07-05T09:09:20Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}85}}</noinclude>‘பிளீஸ்... எழுந்திருக்காதே! அம்மா காதுல ஒரு நாள் போட்டேன். அவள் அப்பா காதுல போட்டாள். அவ்வளவுதான். அவரு போட்ட கூச்சலில் என் அம்மா என்கிட்ட வந்து டேய்... உன்னிஷ்டமா கல்யாணம் நடந்தா இந்த வீட்ல அதுக்கு முன்னாலயோ. பின்னாலேயோ ஒரு இழவு தாண்டா நடக்கும் னு அழுதுகிட்டே சொன்னாள். அதனாலதான் யோசிக்கிறேன். அப்பா வாழ்க்கையில ரொம்பக் கஷ்டப்பட்டவரு. சொந்தக்காரங்களால மோசம் போனவரு. ஆபீஸ்ல உண்மையா இருந்ததுனால் புரமோஷன் இல்லாம அழுத்தி வச்சிருக்காங்க. இதனால் எந்தப் பிரசினையையும் தன் மானத்துக்கு விடப்பட்ட சவாலா நினைக்கிறவரு. அதனாலதான் யோசிக்கிறேன்.’ ‘என்னங்க நீங்க.. எங்கப்பாகூட வாழ்க்கையில் ஏமாந்து போனவராம்! தஞ்சாவூர்ல நிறைய சொத்து இருந்திருக்கு! அவ்வளவையும் எவள் எவளுக்கெல்லாமோ எழுதிக்குடுத்து... ரொம்ப அப்பாவி அம்மா எனக்கு விவரம் தெரிஞ்ச நாளையில இருந்து ஒரே படுக்கைதான்.’ ‘மோகினி அவனையே பார்த்தாள். சிரிப்பவள்போல் சிறிது கண்களை மூடினாள். பிறகு முதன்முதலாக அவன் பெருவிரலை லேசாசுப் பிடித்துக்கொண்டே; மனிதர்கள்ல நல்லவங்கன்னும் கிடையாது. கெட்டவங்கன்னும் கிடையாது. சொல்ற விதமாச் சொன்னா எல்லாரையும் நம்ம பக்கம் இழுத்துடலாம். நீங்க சரியான மண் குதிரை.’ ‘நான் நிலைமையைச் சொன்ன பிறகும் நீ இப்படிப் பேசினா எப்டி?’ ‘எப்டின்னு சொல்றேன் கேளுங்க. நான் பப்ளிஸிட்டி வேலையில் இருக்கிறவள். ஆட்களை எப்படி ‘கவர்’ பண்றது என்கிற டெக்னிக் தெரிஞ்சவள். ஒரு ஆளோட இமேஜை ஊதவச்சா அதுக்குள்ளே இருக்கிறத நம்ம இஷ்டத்துக்கு மாத்திட முடியும். நீங்க ஒங்க அப்பாவோட சுபாவத்தை<noinclude></noinclude> tl5vzb5wmdtq91l5bfrnnwovxxn7gzp பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/95 250 216142 1839239 821287 2025-07-05T09:14:35Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|86{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>சொன்னது மாதிரி உங்க குடும்பத்தைப் பத்தி எல்லா விவரமும் சொல்லுங்க. அவங்கள எனக்குச் சாதகமா மாத்திக் காட்டுறேனா இல்லையான்னு பாருங்க. ஆனால் ஒண்ணு, ஒங்க அப்பாகிட்ட போய் ‘அப்பா, அப்பா, எனக்குப் பிடிச்ச பெண்ணை ஒரு தடவை ஒரே ஒரு தடவ பாருங்க. அதுக்கப்புறமும் ஒங்களுக்குப் பிடிக்கலன்னா எனக்கு வேண்டாமுன்னு’ ஒரு வார்த்த போட்டுவையுங்க’ ‘டிரை பண்றேன்!’ ‘அதப்பத்தி எனக்குத் தெரியாது. வார வெள்ளிக்கிழமை நான் ஒங்க வீட்டுக்கு வரேன்!’ சீனிவாசன் அவள் அருகில் நெருங்கிக்கொண்டான். யாரும் இல்லாத அந்த இடத்தில், வீட்டு விவரங்களை, ரகசியமாகச் சொன்னான். மோகிளியிடம் புதிய உறுதி பிறந்தது. அவளை விரும்பாத ஒருவர் இருக்க முடியுமா? பார்த்துடலாம். பாத்துட வேண்டியதுதான். மோகினி, கால்களில் கைகளை ஊன்றிக்கொண்டே எழுந்தாள். சீனிவாசன், சற்றுத் துணிச்சலோடு அவள் கைகளைப் பற்றிக்கொண்டு எழுந்தான். பின்னர் அப்போதே கல்யாணமாகி விட்டதுபோன்ற உரிமையில், ‘இனிமே சுந்தரம் வீட்டுக்குப் போகாதே’ என்றான். ‘அந்த மாமி நல்லவர். சுந்தரத்தின் பையன் ஒருவன்... நாலு வயசு இருக்கும். அவன் ஆன்ட்டின்னு கூப்பிடும்போது எனக்கு இந்த உலகமே தூசி மாதிரி தெரியும். நான் அந்த வார்த்தய கேக்கத்தான் போறேன்! அந்த ஆளு என்னடான்னா என் ‘ஆன்ட்டி’ நிலமையை எக்ஸ்பிளாயிட் பண்ணப் பாக்குறான்!’ ‘எதுக்கும் நீ...’ ‘நீங்க எனக்கு ஒண்ணும் சொல்லாண்டாம். நீங்க மட்டும் என் கழுத்துல ஒரு மஞ்சள் கயிற்ற போட்டுடுங்க. அப்புறம் பாருங்க அந்த சுந்தரம் என்ன பாடுபடப் போறான்னு!’ {{nop}}<noinclude></noinclude> 25w8almafbnov60904wzjv7o4wqve31 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/96 250 216144 1839240 821290 2025-07-05T09:18:11Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}87}}</noinclude>மோனாலிஸா புன்னகை தவழ நடந்த மோகினிக்கு, திருமணத்தைவிட, திருமணத்திற்கு அவன் குடும்பத்தினரைச் சம்மதிக்க வைப்பது தன் திறமைக்கும் சுய மரியாதைக்கும் ஒரு பரீட்சையாக நினைத்து நடந்தாள். அந்தப் பரீட்சை எப்படி இருக்கும் என்பதற்குக் கட்டியங் கூறுவதுபோல், சந்திரன், அக்கினிப் பிழம்பாக, வித்தியாசமான தோற்றத்தில் தோன்றியது. {{dhr|2em}} {{block_right|{{x-larger|<b>2</b>}}}} {{dhr|2em}} <b>அ</b>ந்தக் கார் வாசலுக்கு முன்னால் வந்தபிறகும் அங்கே நிற்க வேண்டுமென்ற அனுமானத்துடன். இருபதடி தூரத்துக்கு முன்னதாகவே சீனிவாசன் பிரேக் மீது காலை அட்டை மாதிரி உதைத்துக்கொண்டு ஒட்டி வைத்திருந்தாலும், அது என்னமோ, வாசலுக்கு அப்பால் பதினைந்தடிவரை நொண்டியடித்துக்கொண்டு நின்றது. அதுவரை அவனையும், அவனது ‘இவளையும்’ எதிர்பார்த்து வீட்டுக்குள்ளேயே நின்றுகொண்டிருந்தவர்கள், கார் நிற்பதைப் பார்த்ததும் வாசலுக்கு வந்தார்கள். பின் ஸீட்டில் இருந்து இறங்கிய மோகினி தோளோடு சேர்ந்து முழங்கைகள் வரை சேலையை இழுத்துவிட்டுக் கொண்டபோது வீட்டு வராந்தாவில் நின்ற கனகம்மாள், பையனின் வருங்கால மனைவியை இம்ப்ரஸ் செய்ய நினைத்தவள்போல் தன் புடவைத் தலைப்பை முழங்கைக்கு அப்பாலும் கொண்டு வர முயற்சித்து, அது முடியாமல் போகவே கைகளைப் புடவைக்குள் மடக்கிக்கொண்டாள். கல்லூரிக்காரன் சபாபதி, வழக்கத்திற்கு விரோதமாக சட்டைப் பொத்தான்களை மாட்டிக்கொண்டதுடன், டைட்<noinclude></noinclude> rs1vdolnanpprnwfuj2bbfsqgz2dbux பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/97 250 216146 1839242 821292 2025-07-05T09:26:58Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|88{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>பேண்ட் போடாமல் லுங்கி கட்டிக்கொண்டதற்காகச் சங்கடப்பட்டவன்போல், லுங்கியைக் கிழிக்கப்போறவன் போல் அதைத் தொடையில் அழுந்தத் தேய்த்தான். பி .யூ. ஸி . க்காரியான உஷா, காரிலிருந்து இறங்கியவளை வரவேற்பதுபோல், ஒரு புன்னகையை உலவ விட்டாள். கல்லூரியில் சமூக சேவை அணியில் உள்ள அவளுக்கு காரணமில்லாமல் புன்னகை செய்வது பழகிப்போனதால். இப்பொழுது காரணத்தோடு புன்னகை செய்வது எளிதாக இருந்தது. பி. எஸ். ஸி. முடித்துவிட்டு, தனக்கு எ. எஸ். ஸி. படிக்க இடம் கிடைக்காததால் உலகில் அணுவாயுதப் போர் நடந்தாலும் அதை வரவேற்கத் துடிப்பவள்போல் தோன்றிய கமலா. முகத்தைத் தூக்கிவிட்டு பின்னால் அதை இறக்கிக்கொண்டாள். இதுதான் அவளின் உயர்ந்தபட்ச வரவேற்பு. மோகினி, அளவான இடைவெளியில் அழகு குலுங்க நடந்துபோய், சீனிவாசன் அவளுக்கு இணையாக நடக்க விரும்பி நடக்கமுடியாமல் முன்னால் போயும், பின்னால் கால்களை நகர்த்தி அவளுக்கு ஏற்றாற்போல் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டும் நடந்தான். வீட்டுக்குரியவர்கள் அனைவரும் அந்த ஜோடியை அளவெடுத்துக் கொண்டிருந்தாக்கள். ‘இந்த அண்ணா சரியான விளக்கெண்ணெய். அவளை மாதிரிதான் அழகா இருக்க முடியாது: டிரஸ்ஸாவது ஒழுங்கா போட்டிருக்கலாம். இவனும் இவன் தொளதொள பேண்டும், சகிக்கல’ என்று சகிக்க முடியாமல் உஷா சபாபதியின் காதை மைக் மாதிரி நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டே போனாள். ‘என் பையன் நிறத்துக்கு இவள் கொஞ்சம் மட்டமின்னாலும் பரவாயில்லை. இவனுக்குன்னு பிறந்தவள் மாதிரியே இருக்காளே’ என்று பொன்குஞ்சைப் பெற்றகனகம் பெருமைப்பட்டுக் கொண்டாள். சிறிது ‘இன்டிபரன்டாக’ இருந்த கமலா கூட மோகினியைப் பார்த்ததும் தாற்காலிகமாக எம். எஸ். ஸியை மறந்தாள். {{nop}}<noinclude></noinclude> c0cwajorb3dy3fdrzfm3yoqm0h7fusc பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/98 250 216148 1839243 821294 2025-07-05T09:37:50Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}89}}</noinclude>இருபது வயதுக்கேற்ற வளர்ச்சி. மாநிறம். என்றாலும் நிறமா என்று அந்த வார்த்தையைத் தலை கீழாகப்போட்டு சொல்லமுடியாத வண்ணம். அழகைத் தேக்கி வைத்திருந்த கண்கள் அங்குமிங்கும் ஆலவட்டமிட்டபோது அழகனைத்தும், பூமி சூரியனைச் சுற்றுவதுபோல் அந்தக் கண்களைச் சுற்றுவது போன்ற பிரமையை உண்டு பண்ணும். அந்தப் பிரமையைக் கலைக்காமலும் மேலும் வலுப்படுத்தும் கூர்மையாக முடியாமல் வட்டக்கோடு போல் முடியும் மூக்கு; ‘ஹேங்கரின்’ மேல் பகுதி மாதிரி, வளைவது தெரியாமல் வளைந்திருந்த மேல் உதடும், அதைத் தாங்கிக்கொண்டிருப்பது போல் நேர்க்கோடு போல இருந்த கீழ் உதடும், வெண்மைப் பற்களை அடக்கி வைத்திருக்கும் அழகான ஆணவத்தைக் காட்டும் தோரணை, அந்த பெளவியமான நடையில், தன் கனபரிமாணத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது. மோகினி வீட்டு வாசலைத் தாண்டி உள்ளே வந்ததும், ‘வாம்மா...’ என்று அன்பு கனிய வரவேற்ற கனகம்மாள், உடனே தலைகுனிய வேண்டியதாயிற்று. ஏனென்றால், அவள் மேற்கொண்டு வரவேற்பு வார்த்தைகளைப் பேசப் போனபோது மோகினி இரண்டு கைகளையும் குவித்து அவள் பாதத்தைத் தொட்டதால். கனகம்மாள் குனிந்து. அவள் தோள்களைப் பற்றி நிமிர்த்தி, லேசாக அணைத்துக் கொண்டாள். மோகினி குடும்பத்தாரை உற்று நோக்கினாள். முதலில் மொத்தமாக, எல்லோரையும் ‘பேர்ட்ஸ் ஐ வியூவில்’ பார்த்துவிட்டு, பிறகு ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தாள். புன்னகை புத்திரி உஷா ஏதோ பேசப்போனாள். அதற்குள் மோகினி சிரித்துக்கொண்டே கேட்டாள்: “நீதானே உஷா? ஏம்மா, இங்கிலீஷ்ல குறைவா மார்க் எடுத்திருக்கியாமே! இங்லீஷ் இண்டர் நாஷனல் லாங்க்வேஜ். கவனிச்சுப் படி!” {{nop}}<noinclude></noinclude> p2fagtx2b5ijpxrnceen5mb340visp6 1839245 1839243 2025-07-05T09:38:28Z AjayAjayy 15166 1839245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}89}}</noinclude>இருபது வயதுக்கேற்ற வளர்ச்சி. மாநிறம். என்றாலும் நிறமா’ என்று அந்த வார்த்தையைத் தலை கீழாகப்போட்டு சொல்லமுடியாத வண்ணம். அழகைத் தேக்கி வைத்திருந்த கண்கள் அங்குமிங்கும் ஆலவட்டமிட்டபோது அழகனைத்தும், பூமி சூரியனைச் சுற்றுவதுபோல் அந்தக் கண்களைச் சுற்றுவது போன்ற பிரமையை உண்டு பண்ணும். அந்தப் பிரமையைக் கலைக்காமலும் மேலும் வலுப்படுத்தும் கூர்மையாக முடியாமல் வட்டக்கோடு போல் முடியும் மூக்கு; ‘ஹேங்கரின்’ மேல் பகுதி மாதிரி, வளைவது தெரியாமல் வளைந்திருந்த மேல் உதடும், அதைத் தாங்கிக்கொண்டிருப்பது போல் நேர்க்கோடு போல இருந்த கீழ் உதடும், வெண்மைப் பற்களை அடக்கி வைத்திருக்கும் அழகான ஆணவத்தைக் காட்டும் தோரணை, அந்த பெளவியமான நடையில், தன் கனபரிமாணத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது. மோகினி வீட்டு வாசலைத் தாண்டி உள்ளே வந்ததும், ‘வாம்மா...’ என்று அன்பு கனிய வரவேற்ற கனகம்மாள், உடனே தலைகுனிய வேண்டியதாயிற்று. ஏனென்றால், அவள் மேற்கொண்டு வரவேற்பு வார்த்தைகளைப் பேசப் போனபோது மோகினி இரண்டு கைகளையும் குவித்து அவள் பாதத்தைத் தொட்டதால். கனகம்மாள் குனிந்து. அவள் தோள்களைப் பற்றி நிமிர்த்தி, லேசாக அணைத்துக் கொண்டாள். மோகினி குடும்பத்தாரை உற்று நோக்கினாள். முதலில் மொத்தமாக, எல்லோரையும் ‘பேர்ட்ஸ் ஐ வியூவில்’ பார்த்துவிட்டு, பிறகு ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தாள். புன்னகை புத்திரி உஷா ஏதோ பேசப்போனாள். அதற்குள் மோகினி சிரித்துக்கொண்டே கேட்டாள்: “நீதானே உஷா? ஏம்மா, இங்கிலீஷ்ல குறைவா மார்க் எடுத்திருக்கியாமே! இங்லீஷ் இண்டர் நாஷனல் லாங்க்வேஜ். கவனிச்சுப் படி!” {{nop}}<noinclude></noinclude> 0keow48wxoykjyoy5wva3qfkb3zrm87 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/99 250 216150 1839246 821296 2025-07-05T09:43:15Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|90{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>அவளிடம் தன் ‘இன்டலிஜன்ஸைக்’ காட்டத் துடித்த உஷா, இப்போது தாழ்மை மனப்பான்மையில் தவித்தாள். ‘இந்த அண்ணா சரியான முசுடு. காதலிகிட்ட தன்னப்பத்தி பேசாம என்னப்பத்தி பேசினா என்ன அர்த்தம்?’ என்று முதலில் முனகிக் கொண்டாள். பிறகு “நான் இங்லீஷைப் பொறுத்த அளவுல எங்க பெரியண்ணா மாதிரிதான்.” என்று சொல்லிவிட்டு அண்ணியாகப் போகிறவள் சிரிக்காமல் இருந்துவிடுவாளோ என்று தடுமாறியபோது. மோகினி கமலாவை நோட்டம் விட்டாள். “நீங்கதானே மிஸ் சுமலா?” சனியனே என்று அம்மாவாலும், மூதேவி என்று அப்பாவாலும், சிடுமூஞ்சி என்று உஷாவாலும், நேரடி வர்ணனையில் சிக்கித் தவிக்கும் கமலாவுக்கு, ‘மிஸ்’ என்ற வார்த்தை தேனாக ஒலித்தது. அந்த வார்த்தையை மிஸ் பண்ண விரும்பாதவள்போல் இன்னொரு தடவை கேட்க விரும்பினாள். அதோடு ‘என் பேரு மிஸ் கமலான்னு எப்படித் தெரியும்?’ என்று கூறி, தன் பெயருக்கு முன்னால் தானாகவே மிஸ் பட்டத்தைப் போட்டுக்கொண்டாள். மோகினி சிரித்துக்கொண்டே பேசினாள். “ஒங்கண்ணாவுக்கு நீங்கன்னா உயிரு, ஆமாம். எம். எஸ். ஸி. ஸீட் கிடைக்கலங்கறதுக்காக சரியாகக் கூட சாப்பிடாம இருக்கிங்களாமே. பரவாயில்லை. நெக்ஸ்ட் இயர்ல நான் மேடத்துக்கிட்ட சொல்லி வாங்கித்தந்திடுறேன்!” எந்த மேடத்துக்கிட்ட என்று கேட்கப்போன கமலா, மோகினி லுங்கிக்காரத் தம்பியை நோட்டம் போடுவதைப் பார்த்து, தன் ‘டர்னுக்கு’க் காத்திருக்க விரும்பியவள் போல், அவளுக்கருகே வந்து நின்று கொண்டாள். மருமகள் தன்னைப் பற்றி விசாரிப்பதற்கு எப்படி விடையளிக்க வேண்டும் என்று வாயில் வார்த்தைகளைச் சுமந்து கொண்-<noinclude></noinclude> bshjb7axyo5r5pny5ssfn8utugb8kge பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/100 250 216152 1839248 820963 2025-07-05T09:47:42Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}97}}</noinclude>டிருந்த கனகம்மாள், அவள் பார்வை இளைய மகனிடம் போனதைப் பார்த்ததும், அடுப்பு இதற்குமேல் தாங்காது என்று நினைத்தவளாய் சமையலறைக்குள் போய்விட்டாள் கணவனுக்கு ஒரு தடவை உத்தியோகத்தில் சீனியாரிட்டி கொடுக்காததுபோல். தன் சீனியாரிட்டியும் பயனளிக்காமல் போனதில் அவளுக்கு வருத்தந்தாள். லுங்கிக்காரன் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தபோது, டென்னிஸ் நல்லா விளையாடுவீங்களாமே... டென்னிஸ் எப்ப வேணுமின்னாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் எக்னாமிக்ஸை இப்ப மட்டுந்தான் சுத்துக்க. முடியும்.’ என்று மோகினி சொன்னாள். லுங்கிக்காரன் இன்னொரு அறைக்குள் போக முயற்சித்தபோது. “விளையாட்டைப் படிப்பாய் நினைக்கிறதுல தப்பில்ல. ஆனால் படிப்பைத்தான் விளையாட்டா நினைக்கக்கூடாது. நான் சொல்றது ஒங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்” என்று அவள் மேலும் சிரித்துக்கொண்டு மேலும் மேலும் பேசியபோது, சபாபதி அண்ணனை மேலுங்கீழும் பார்த்துக்கொண்டே கண்களால் அவனைப் பிறாண்டினான். அண்ணன்காரனோ மிகப்பெரிய லட்சியத்தை எட்டிப்பிடித்து விட்டவன்போல் இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே ‘உலா’ வந்துகொண்டிருந்தான். மோகினி சமையலறைக்குள் நுழைந்தாள். பால் பாத்திரத்தை இறக்கப்போன கனகம்மாவை, கொஞ்சம் வன்முறையாகத் தள்ளிவிட்டு இவள் இறக்கி வைத்தாள். “நீங்களும் இருக்கியளடி. இங்க வந்து பாருங்க!” என்று கூச்சல் போட்டு, இரண்டு மகள்களின் கூட்டத்தைச் சேர்க்கப்போன அவளை. ‘உஷ்’ என்று வாயில் விரலை வைத்து அடக்கிவிட்டு, “இப்ப இருமல் எப்படி அத்தே இருக்கு? நீங்க தினமும் சுக்கைத் தட்டிக் காப்பி போட்டு சாப்பிடணும். ஒரு மாதத்துல இருமல் போயிடும்” என்று<noinclude></noinclude> 0d9gudh5n0gf5a7szkksk9zhmomuh1z பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/101 250 216154 1839292 820965 2025-07-05T11:58:09Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|92{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>ஆதரவாகக் கேட்டாள். கனகம்மாவால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. இந்த ஐம்பது வயதில், அவள் கணவராகட்டும், பிள்ளையாகட்டும், இப்படி ஒரு தடவைகூடக் கேட்டதில்லை. இவள் பழகிய ஐந்து நிமிடத்தில் கேட்கக் கூடியதைக் கேட்டுட்டாளே! பெரியவனைப் பாசமில்லாதவன்னு நினைச்சது எவ்வளவு தப்பு? இவள்கிட்ட என்னோட கஷ்டத்த சொல்லியிருக்கானே! கனகம்மா சிந்தித்துக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. சுக்கைத் தட்டிச் சாப்பிடச் சொன்ன மோகினியின் கன்னத்தைச் சுக்காக நினைத்து தடவிக்கொண்டிருந்தாள். மோகினி அவளிடமிருந்து விடுபட்டுக்கொண்டே, “மாமா எங்கேத்த இருக்கார்...” என்றாள். “அவர் ஒரு தனிப்பிறவி. எதையாவது ஒண்ணைச் செய்தார்னா அதையேதான் செய்துகிட்டிருப்பார். இடையில என்ன வந்தாலும் அசையமாட்டாரு!” “இப்போ என்ன பண்றார்?” “எதையாவது பண்ணுவார். வார் அவருகிட்ட போகலாம், கண்ணில் தூசிமாதிரி இருக்கு. தட்டிவிடும்மா.” மோகினியும், கனகம்மாவும் வராந்தாவின் ஓரத்தை ஒட்டியிருந்த அறைக்குள் நுழைந்தபோது, அருணாசலம் ‘எதையாவது பண்ணாமல் இவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்பதைக் கவனித்துக்கொண்டு நிற்பவர்போல், கதவிடுக்கில் கண்களை விட்டுக்கொண்டு நின்றார். அவர்களைப் பார்த்ததும், கட்டிலை ஒட்டிப் போட்டுக்கொண்டிருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தார். அறுபது வயதுக்காரர். இளமையில் ‘ஆடாமல்’ டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை மட்டுமே ஆடியதைக் காட்டும் கட்டு மஸ்தான உடல். பனியனுடன் அவர் நின்ற தோரணை யாருடனோ சண்டைக்குப் போகப்போகிறவர் போல் தோன்றியது. {{nop}}<noinclude></noinclude> kp44e72s2xb7qifh6smqh0nzuva5mys ஆசிரியர்:சு. சமுத்திரம் 102 412666 1839116 1677709 2025-07-04T14:16:44Z Booradleyp1 1964 1839116 wikitext text/x-wiki {{author | firstname = சு. சமுத்திரம் | lastname = | last_initial = ச | birthyear = 1941 | deathyear = 2003 | description = சு. சமுத்திரம் ஒரு தமிழ் எழுத்தாளர். [[வேரில் பழுத்த பலா]] என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர். | wikipedia = சு. சமுத்திரம் | image = Su. Samuthiram.jpg }} ==படைப்புகள்== *{{export|சிக்கிமுக்கிக் கற்கள்}} [[சிக்கிமுக்கிக் கற்கள்]] *{{export|என் பார்வையில் கலைஞர்}} [[என் பார்வையில் கலைஞர்]] *{{export|எனது கதைகளின் கதைகள்}} [[எனது கதைகளின் கதைகள்]] *{{export|வளர்ப்பு மகள்}} [[வளர்ப்பு மகள்]] *{{export|ஒரு கோட்டுக்கு வெளியே}} [[ஒரு கோட்டுக்கு வெளியே]] *{{export|பாலைப்புறா}} [[பாலைப்புறா]] *{{export|நெருப்புத் தடயங்கள்}} [[நெருப்புத் தடயங்கள்]] *{{export|இன்னொரு உரிமை}} [[இன்னொரு உரிமை]] *{{export|ஈச்சம்பாய்}} [[ஈச்சம்பாய்]] *{{export|ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்}} [[ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்]] *{{export|சிக்கிமுக்கிக் கற்கள்}}[[சிக்கிமுக்கிக் கற்கள்]] {{PD-TamilGov/ta}} {{அதிகாரக் கட்டுப்பாடு}} [[பகுப்பு:சு. சமுத்திரம்|0]] [[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]] glal62rlazk03uhkayvw6li5tgw8g1f பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/82 250 422466 1839115 1008820 2025-07-04T14:15:41Z Asviya Tabasum 15539 1839115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|74|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>செய்யவும் கலை இலக்கிய அமைப்புகள் உருவாக்கும் முயற்சி தொடங்கப்படவில்லை. 20-ம் நூற்றாண்டில் பாரதி பாண்டிச்சேரியில் இருந்த போது பாரதிதாசனை அவருடைய ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பாடலுடன் கதேசமித்திரனுக்கு அறிமுகம் செய்யும்போது பாரதி கவிதா மண்டலம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகின்றார். நெசவுத் தொழிலோடு கவிதைத் தொழிலை ஒப்பிட்டு, கவிதை எப்படி உருவாக வேண்டும் என்று அவருடைய ‘தராசு’ விளக்குகிறது. தன் கலை இலக்கியக் கொள்கையை விளக்கவும், இளைஞர்களை அந்தப் போக்கில் வளர்க்கவும் பாரதியின் விருப்பத்தைக் ‘கவிதா மண்டலம்’ என்ற தொடர் சுட்டுகிறது. ஆயினும் அது அமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனமாக விதிமுறைகளுடன் செயல்பட்டதாகத் தெரியவில்லை. சுனக சுப்புரத்தினத்தை அது பாவேந்தர் பாரதிதாசனாக உருவாக்கிற்று. பாரதிதாசன் தன் பங்குக்குத் தமிழ்க் கவிஞர் மன்றம் என்ற நோக்கங்களும், வடிவமும் தெளிவுபடுத்தப்பட்ட அமைப்பை உருவாக்கினார். கவிதைத் துறையின் பாரதிதாசனின் உருவ உள்ளடக்க மரபுகளை உள் வாங்கி, வளரும் ஒரு கவிதை ஸ்தாபனமாக அது உருப்பெற்றது. இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் கடற்கரைக் கவியரங்கம் தமிழகக் கவியரங்கங்களுக்கு ஒரு முன்னோடி. 30-களில் தேச விடுதலை என்ற உணர்வோடு, தேசீய இனங்கள் தங்கள் தங்கள் பண்பாடுகளைச் செழுமைப்படுத்த தன்னிச்சையான முயற்சிகளும் தொடங்கின. தேசிய இன உணர்வு பொங்கி எழுந்தது. தமிழ் மொழிப் பற்றும், தமிழ் இசைப்பற்றும், இக்காலத்தில் வலுப்பெற்றன. கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள் போன்ற பெருங் கவிஞர்களின் பெயரால் அமைப்புகள் தோன்றி வளர்ந்தன. இவை அந்த அந்தக் கவிஞர்களின் நூல்களின் சிறப்பைச் சொற்பொழிவுகள் வாயிலாக மக்களிடம் பிரபலப்படுத்தின. செட்டி நாட்டில் தமிழ் நூல்கள், கட்டுரைகள், வெளியிட<noinclude></noinclude> ay17ohisvd6nvgejpet0t4896lhx75a பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/81 250 422467 1839112 1008821 2025-07-04T13:55:47Z Asviya Tabasum 15539 1839112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|73}} {{rule}}</noinclude>ரசத்தைப் போற்றி வளர்ப்பதையே முக்கிய லட்சியமாகக் கொண்டிருந்தாகத் தெரிகிறது. இசை, நடனம் போன்ற கலைகளில் பிற மொழி மரபுகளே அதிகம் போற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த இடைக்காலத்தில் தமிழ்க் கலை இலக்கியத்தைப் பேணும் பணியை ஓரளவுக்குச் சைவ, வைணவ மடங்கள் செய்துள்ளன. கலை இலக்கியத் துறையில் பக்தி பிரதான உள்ளடக்கம் ஆயிற்று. இந்த மடங்களில் துறைபோகிய தமிழறிஞர்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் சமகாலத் தமிழறிஞர்களோடு இலக்கணம், உரை, அணிகள் போன்றவற்றை விவாதம் செய்தார்கள். ஆர்வமுள்ள இளைஞர்களுக்குத் தமிழ் கற்பித்தார்கள். என்றாலும் இது மத எல்லை என்ற வட்டத்துக்குள்ளேயே நடந்தது. இவர்களுடைய சமயப் பார்வைகள் கலை இலக்கியங்களைப் பாதித்தன. பிற சமயத்தினரின் சிறந்த படைப்புகளையும் சமயக் காழ்ப்போடு நிராகரித்தார்கள் இருட்டடிப்புச் செய்தார்கள். இசை போன்ற நுண்கலை களை சமணர்கள் புறக்கணித்தார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சா. கூட கும்பகோணம் கல்லுாரியில் பணியாற்றிடத் தொடங்கிய பின்னர்தான் சீவக சிந்தாமணியை அறிந்து கொண்டார். அவர் பயின்ற சைவச் சூழல் அப்படிச் செய்திருக்கிறது. ஆங்கிலேயரின் வரவால் மேற்கத்திய இலக்கியங்களும், இலக்கியவிமர்சனப் போக்குகளும் இங்கே நுழைந்தன. இலக்கியத்தைப் பிரதானமாக அதன் உள்ளடக்க அடிப்படையில் ஆய்வு செய்யும் போக்கு அறிமுகம் ஆயிற்று. கலை இலக்கியத்தை சமூக வரலாற்றுப் பின் னணியோடு வைத்துப் பார்க்கவேண்டும் என்ற போக்கும் உருவாயிற்று. ஆனாலும் இந்தப் போக்குகளைச் செழுமைப்படுத்தவும் இவற்றை உள்வாங்கி இலக்கியப் பணி<noinclude></noinclude> lniccp5yp3pe0yrfal7747a8sjslg5y பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/80 250 422468 1839106 1008822 2025-07-04T13:41:19Z Asviya Tabasum 15539 1839106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கிய<br>இயக்கங்கள்</b>}} {{x-larger|<b>பொன்னீலன்</b>}}}} வரலாற்றுக் காலம் முளுவதுமே தமிழகத்தில் கலையையும், இலக்கியத்தையும் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தின் முக்கியமாக வெளிப்பாடுகளாகக் கருதிப்பேணும் போக்கு இருந்து வந்திருக்கிறது. மன்னர்களின் அவைகள் ஒரு அம்சத்தில், ஓரளவுக்குக் கலை இலக்கிய அமைப்புகளாகவே இருந்து வந்திருக்கின்றன. “கொங்கு தேர் வாழ்க்கை” என்ற சங்க இலக்கியப் பாடல் பிற்காலத்தில் உருவம் உள்ளடக்கம் பற்றி பெரிய விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. அதாவது கவிதையின் உள்ளடக்கம் உணர்ச்சி பூர்வமாக இருக்க வேண்டுமா, அறிவு பூர்வமாக இருக்க வேண்டுமா என்ற கடுமையான விவாதமே கதை வடிவத்தில் அந்தப் பாடல் மீது ஏற்றப்பட்டுள்ளது. இலக்கியத்துக்காகத் தனியான சங்கங்கள் அமைக்கப் பட்டதாகவும் செய்திகள் உள்ளன. அன்றைய மாபெரும் விமர்சன இலக்கியங்களான இலக்கண நூல்கள் பெரும் பான்மையும் இச் சங்கங்களில் விவாதித்து, அங்கீகரிக்கப் பட்டவையாக இருக்கலாம். பேரிலக்கியங்கள் பல மன்னர்கள் அல்லது கலை இலக்கியச் சான்றோர்களின் அவைகளில் அரங்கேற்றப்பட்டு விவாதிக்கப்பட்டதாகச் செய்திகள் சொல்லுகின்றன. இம்மாதிரியான நல்ல மரபுகள் இடைக்காலத் தமிழகத்தால் சீரழிவு அடைந்ததாகத் தெரிகிறது. குறிப்பாகத் தமிழ் மன்னர்கள் அல்லாதாரின் ஆட்சிகாலங்களில் தமிழக மன்னரவைகளும், மேலோர் அவைகளும், சிருங்கார<noinclude></noinclude> erccx2yxbbcazsaa8qyy2pb6d81ps3t பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/79 250 422469 1839095 1008823 2025-07-04T12:39:42Z Asviya Tabasum 15539 1839095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|71}} {{rule}}</noinclude>நினைவூட்டி என் வழிகாட்டியுரையை முடிக்க விரும்புகிறேன். லெனின் இவ்வாறு எழுதியுள்ளார்: “மார்க்சியத்தின் கர்த்தாக்கள் ஜனநாயகவாதிகளாக இருந்த பின்னரே சோஷலிஸ்டுகளாக மாறினர்; அரசியல் எதேச்சாதிகாரத்தின்பால் கொண்ட வெறுப்பினால் ஏற்பட்ட ஜனநாயகபூர்வமான உணர்ச்சி அவர்களிடம் மிக மிக வலுவாக இருந்தது, இதனால் புரட்சிகரமான ஜனநாயக மனிதாபிமானமும் சுரண்டப்பட்ட மக்களின்பால், உழைக்கும் மனிதனின்பால் ஏற்பட்ட உளமார்ந்த பாசமுமே சித்தாந்த வளர்ச்சிக்குத் தொடக்க நிலையாக இருந்தன; இவையே மார்க்ஸையும் எங்கெல்ஸையும் தொழிலாளிவர்க்கத்தின் நிலைக்கு இட்டுச் சென்றன; அவர்களைச் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தினது புரட்சிகர இயக்கத்தின் சித்தாந்திகளாகவும் தலைவர்களாகவும் ஆக்கின.” (The founders of Marxism became Socialists after being democrats and the democratic feeling of hatred for political despostism was exceedingly strong in them. Thus revolutionary - democratic humanism and warm affection for the exploited people, for the working man, were the starting point of ideological development that led Marx and Engels to the position of the working class and made them theorists and leaders of the revolutionary movement of international proletariat".)<noinclude></noinclude> knob7wq7elkn9muvsrlhymkwwofrsly பயனர்:Booradleyp1/test 2 476049 1839107 1837986 2025-07-04T13:41:48Z Booradleyp1 1964 /* சோதனை */ 1839107 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="ஒத்தை வீடு.pdf" from="247" to="249" fromsection="" tosection="" /> <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : n35lkcmzie0spyac2e7sirayzn8mswx 1839111 1839107 2025-07-04T13:48:02Z Booradleyp1 1964 /* சோதனை */ 1839111 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 3fn7l7j7iit3vhvrkwxjihdrgb31e00 பயனர்:Booradleyp1/books 2 481457 1839121 1838960 2025-07-04T14:34:15Z Booradleyp1 1964 /* சு. சமுத்திரம் */ 1839121 wikitext text/x-wiki ==அண்ணாத்துரை== ===ஒருங்கிணைப்பு முடிந்தவை === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div> <div class="NavContent" style="display:none;"> {{Multicol}} #[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024 #[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024 #[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024 #[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024 #[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024 #[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024 #[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024 #[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024 #[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024 #[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024 #[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024 #[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024 #[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024 #[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 # [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 #[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன் #[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ் #[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] # [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன் #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]] #[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]] #[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]] #[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]] #[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]] #[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]] #[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]] {{Multicol-break}} #[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]] #[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] #[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] #[[அட்டவணை:திருமணம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]] #[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]] #[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]] {{Multicol-end}} </div></div></div> ==சங்க இலக்கிய அட்டவணைகள்== === ஒருங்கிணைப்பு முடிந்தவை === #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}} # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}} #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]{{tick}} ===மெய்ப்பு முடிந்தவை === ===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை=== ===மேலும்=== #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]] #[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]] ==தொ. பரமசிவன்== === ஒருங்கிணைக்கப்பட்டவை=== #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #[[அட்டவணை:உரைகல்.pdf]] #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]] #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]] #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] ==மேலாண்மை பொன்னுச்சாமி== ===ஒருங்கிணைக்கப்பட்டவை === #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] #[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]] #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]] #[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]] #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]] ===முழுமையாக ஒருங்கிணைக்கப் படாதவை=== #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] ==உதிரிகள்== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}} #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}} === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]] ===மெய்ப்பு நடபெற்று வருபவை === #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-மோகன் #[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]-பிரீத்தி == சு. சமுத்திரம் == === ஒருங்கிணைவு முழுமையடையாதவை=== #[[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] #[[அட்டவணை:ஆகாயமும் பூமியுமாய்.pdf]] #[[அட்டவணை:காகித உறவு.pdf]] ===மெய்ப்பு நடைபெற்று வருபவை=== #[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]]-கராம் #[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]-அஜய் #[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]-மோகன் ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை === #[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]]-202 #[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-171 #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-163 #[[அட்டவணை:சத்திய ஆவேசம்.pdf]] bvw4736gc27njhkwpocdm16l045h5ud பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/131 250 489112 1839224 1838992 2025-07-05T08:17:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|130 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|5em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 131 |bSize = 425 |cWidth = 329 |cHeight = 362 |oTop = 140 |oLeft = 65 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> 9nsg3h559u4djgjfcsqlgytdj1jf6ds பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/132 250 489113 1839225 1838993 2025-07-05T08:19:59Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 131}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>66. இராமநாதபுரம் ஆவணங்களில் பள்ளிவாசல் கொடைகள்</b><ref>*இராமநாதபுரம் அரண்மனை அலுவலகம்</ref>}}}} இராமநாதபுரம் சேதுபதிகளின் செப்பேடுகள் கல்வெட்டுக்கள் இல்லாமல் அரண்மனையில் ஏராளமான ஓலை ஆவணங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் கோயில்கட்குக் கொடுத்த கொடைகளைக் குறிக்கின்றன. சிறுபான்மை தனிப்பட்டவர்கட்கு அளிக்கப்பட்ட கொடைகளைக் குறிக்கின்றன. அவற்றில் பல்வேறு ஆவணங்கள் இசுலாம் தொடர்பானவை. பூலாங்கால் பள்ளிவாசலுக்கு முத்து விசைய ரகுநாத சேதுபதியும் முத்துவிசைய ரகுநாத செல்லத் தேவரய்யா சேதுபதியும் நிலக் கொடை வழங்கியுள்ளனர். அபிராமம் பள்ளிவாசலுக்குத் திருவிளக்குக்காக முகவூரணி அய்யா நாளையில் ஆதிநாராயணபிள்ளை என்பவர் நிலம் வாங்கிக் கொடையாக அளித்தார். நாரணமங்கலம் சுல்தானுக்கு குமார முத்துவிசைய ரகுநாத சேதுபதி நிலக் கொடையளித்தார். இதுபற்றிய செப்பேடு உள்ளது என்றும் எழுதப்பட்டுள்ளது. தேரூர் தாலுக்கா தொண்டி ஆலிம்ஷா பள்ளிவாசல் பற்றிய கொடைச் செய்தி நவாபு ஆணையில் உள்ளது என்று பள்ளிவாசல் லெப்பை ஆலிம்ஷா கூறிய செய்தி ஓலையில் எழுதப்பட்டுள்ளது. மற்றும் பூலாங்கால், போந்தப்புளி, தொண்டி, காட்டுபாவா சத்திரம், புல்லுக்குடி, திருச்சுழியல், காரேந்தல், சொக்கிகுளம், கொக்காடி, நாடாகுளம், குச்சனேரி, லட்சுமிபுரம் போன்ற பல ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கும், தர்காக்களுக்கும் நிலம், பொன், பொருள் கொடையாகச் சேதுபதி மன்னர்களால் கொடுக்கப்பட்டுள்ளன. திருவிளக்குகள் ஏற்றவும், கந்தூரி நடத்தவும் அன்னதானம் ஆடை அளிக்கவும் இக்கொடைகள் பயன்படுத்தப்பட்டன.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 9dnk64hniuu2x5n6q1ejqc4bwn8batx பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/133 250 489114 1839226 1839052 2025-07-05T08:21:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|132 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>ஓலை ஆவணங்கள்<br>1) பூலாங்கால் பள்ளிவாசல் கொடை</b>}}}} பூலாங்கால் கிராமத்து நிலத்தில் சில பகுதிகளையும் பூலாங்கால் பள்ளிவாசலுக்காகப் பிலவ வருடம் தை மாதம் 17ஆம் தேதி முத்து விசைய ரெகுநாத சேதுபதியும் வெகுதானிய வருடம் மாசி மாதம் 13ஆம் தேதி முத்து விசைய ரெகுநாத செல்லத் தேவரய்யா சேதுபதியும் அளித்துள்ளனர் - 2 ஓலை. {{center|{{larger|<b>2) அபிராமம் பள்ளி வாசல் கொடை</b>}}}} அபிராமம் பள்ளிவாசலுக்கு அபிராமம் ஊர் நிலம் மானியம். பள்ளிவாசல் திருவிளக்குக்கு முகவூரணி அய்யா நாளையில் ஆதிநாராயணபிள்ளை நிலம் வாங்கி விட்டது பிங்கள வருடம் ஆடி 8 தேதி. {{center|{{larger|<b>3) நாரணமங்கலம் சுல்தான் மானியம்</b>}}}} இராசசிங்கமங்கலம் தாலுகா பொட்டக வயல் மாகாணத்தைச் சேர்ந்த நாரணமங்கலத்தில் சுல்தானுக்கு நில மானியம் குமார முத்து விசைய ரெகுநாத சேதுபதி விட்டது. சகம் 1702 சார்வரி வருடம் மாசி 24 தேதி - தாமிர சாசனம். {{center|{{larger|<b>4) தேரூர் தாலுகா தொண்டி ஆலிம்ஷா பள்ளிவாசல் கொடை</b>}}}} ஆலிம்ஷா பள்ளிவாசல் திருவிளக்கு பூசை நெய்வேத்தியம் சிலவுக்காக தேவதானம் புல்லுக்குடி கயிலாதநாதசுவாமி கிராமம் தண்டலக்குடியில் நிலம் சர்வ மானியம். ஊர்கள் ஆக்களூர் மாகாணத்தைச் சேர்ந்தது. இதற்கு நவாபு நாளையில் வாங்கிய பாலானாக் காகிதம் தஸ்தாவேசுகள் உண்டு. மதுரைக்கு ரிஜிஸ்டாரில் பதியும்படியாய் மேற்படி தாஸ்தாவேசுகளை அனுப்பி வைத்திருக்கிறதாக மேற்படி பள்ளிவாசல் லெப்பை ஆலிம்ஷா சொன்னதாய் தேரூர் சேவுகன் பெருமான் வந்து சொன்னது.{{nop}}<noinclude></noinclude> kwal3g69zwssflabs11jdmxto69q7j7 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/134 250 489115 1839227 1839055 2025-07-05T08:23:44Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 133}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>67. மராட்டிய மன்னர் ஆவணங்களில் இஸ்லாம்</b>}}}} தஞ்சையில் படையில் பணியாற்றவும், யூனானி மருத்துவத்தின் பொருட்டும், வியாபாரத்திற்காகவும் பல இஸ்லாமியர் நிலையாக வாழ்ந்து வந்தனர். தஞ்சை வட்டாரத்தில் மட்டும் இஸ்லாமியர் பள்ளிவாசல் தர்காக்கள் 42 இருந்தன என்பர். அவைகட்கு நாயக்க, மராட்டிய மன்னர்கள் பலர் கொடை கொடுத்தனர். இன்றும் தஞ்சாவூர் படே உசேன் போன்றவை பல மராட்டிய மன்னர் குடும்ப நிர்வாகத்தில் உள்ளன. பிரதாப சிங் 1739இல் அரசரானவர்; இவர் 1740இல் நாகூருக்குச் செல்கிறபொழுது வழியில் “வடயாரங்குடி”க்கு அருகில் “பாவாசாகேப்பின் தர்கா” மசூதி குளம் மண்டபம் இவை பற்றி விண்ணப்பம் அளிக்கப்பெற்றது. அதில் தீபாநகரப் பேட்டை சுங்கத்தினின்று ஒரு காசுவீதம் அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் இருந்தது. அரசர் “அங்ஙனமே தருக” என ஆணை பிறப்பித்தார். துளஜா ராஜா 1765இல் அரசரானார். இவர் கி.பி. 1776இல் மகம்மது ஸேக்குக்கு மன்னார்குடிக்குச் செல்லும் வழியில் “காகிதத்தின் மூட்டைகளின் குவியலுக்கு அருகில் 12 அடிக்கோலினால் 2 வேலி நிலம் இனாம் கொடுத்தார்.” (காகிதத் தொழிற்சாலையாக இருக்கலாம்) கி.பி. 1776இல் துளஜாராஜா தங்கத்திலும் வெள்ளியிலும் ஆக 34 அல்லாக்களும், தங்கக் குடைகள் இரண்டும் செய்தார் என்றோர் ஆவணக் குறிப்பால் அறியப் பெறுகின்றோம். கி.பி. 1773இல் மல்லிம் சாஹேப் என்பார் கடைவீதியின் கோட்டையின் பக்கம் ஒரு மசூதி கட்டினார். அந்த மசூதியை நடத்துவதற்கும் ஃபக்கீர்களுக்கு உணவு அளிக்கவும், சாலியமங்கலம் வட்டத்தில் கடதம்பட்டு என்ற ஊரில் 10229 குழிகளும், வல்லார்பட்டு என்ற ஊரில் 2419 குழிகளும், ஆக 12648 குழிகள் இனாமாக அளிக்கப்பெற்றன. அங்கு ஓர் ஊர் அமைத்து “முகமதுபுரம்” என்று பெயரிடப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> 9st6tx68m0eb7t0x6mr7jxbyvzjf8dz பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/135 250 489116 1839228 1839056 2025-07-05T08:26:09Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|134 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>கி.பி. 1785இல் திருப்பூந்துருத்தியில் 1963 குழி நிலமும், மரஞ்செடி கொடி வகைகளில் நிலம் {{sfrac|1|4}} வேலி 3{{sfrac|1|4}} மா ஹிஸ்லேக்மல் என்ற ஃபக்கீருக்கு இனாம் அளிக்கப்பட்டது. சூல மங்கலத்தில் 2{{sfrac|3|4}} வேலி நிலம் 700 சக்ரம் கொடுத்து விலைக்கு வாங்கி அங்கு தர்கா அமைக்கப்பட்டது. அதனைச் சர்க்கார் ஜப்தி செய்தனர். அங்கு ‘தர்கா’வை ஜப்தியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று 1787இல் ஹஸன்னா ஃபக்கீர் வேண்டிக் கொண்ட வண்ணம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அல்லாப் பண்டிக்கைக்காக மன்னர் எல்லா தர்காக்களுக்கும் போய் வருதலுண்டு; அங்ஙனம் போகுங்கால் இனாம் அளிப்பதுண்டு. அல்லாப் பண்டிகை நடத்தவும் நன்கொடை அளிப்பதுண்டு. “அல்லாப் பண்டிகைக்கு பகீர்களுக்குக் கொடுப்பதற்காக மாதுஸ்ரீ ஆவுசாயேப் ரூ 30; சைதம்பாயி சாகேப் ரூ 30; காமாட்சியம்மா பாயி சாகேப் ரூ 25; சுலக்ஷணபாயி அமணி ராஜேசாகேப் ரூ 10; சக்வாரம்பா பாயி அம்மணி ராஜே ரூ 10; ஆக 105” - என்ற ஆவணக் குறிப்பால் அரசமாதேவியாரும் சமயப் பொறையுடையவர்களாய் அல்லாப் பண்டிகைக்கு நன்கொடை அளித்தனர் எனத் தெரிய வருகிறது. அப்தர்கானாவில் ஒரு அல்லா வைப்பதற்கு ‘லாடு’ வாங்கிய வகையில் ரூ 150 என்ற குறிப்பாலும் அல்லாப் பண்டிகைக்காக அப்தர்கானாவில் அல்லா வைக்கிற இடத்தில் ‘ஹிந்துஸ்தானி சேவை செய்வதற்கு டக்காவின் ஜோடியொன்றைத் தயார் செய்ய’ என்ற ஆவணக் குறிப்பாலும் அரண்மனையில் அப்தார்கானாவில் ஓரல்லா வைக்கப்பட்டிருந்தமை போதரும். இதில் முன்னது 1852க்கும் பின்னது 1825க்குமுரியது. பின்னதில் “ஹிந்துஸ்தானி சேவை செய்தற்கு டக்காவின் ஜோடியொன்று” என்பது சிந்திக்கத்தகுவது. அல்லா வைக்கிற இடத்தில் இந்துஸ்தானி மொழியில் ஃபக்கீர் வழிபாடு செய்வர் என்றும், அப்பொழுது டக்கா எனும் இசைக்கருவி அடிக்கப்பெறும் என்றும் தெரியவருகிறது. “1827 நாகூர் காதிர்சாயபு தர்காவுக்கு... கந்தூரி உற்சவத்துக்காகச் சர்க்காரிலிருந்து மூடுகிற வஸ்திரத்தை<noinclude></noinclude> ak7yu07mfs9z48qtxhyxstqml63u8jv பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/136 250 489117 1839229 1839059 2025-07-05T08:28:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 135}} {{rule}}</noinclude>வழக்கப்படி அனுப்புவதற்கு சக்கரம் 20” என்ற குறிப்பால் நாகூர் தர்காவுக்குத் திருவிழாக் காலத்தில் ஆண்டுதோறும் ஆடை அனுப்பி வந்தனர் என்பது போதரும்.<ref>*இன்றும் இவ்வழக்கம் நடக்கிறது.</ref> மக்கான்தார்களுக்கும் துனியாதார்களுக்கும் வேறுபாட்டுணர்ச்சி யேற்படுவதுண்டு. அவர்கள் தம் வழக்கை அரசரிடம் முறையிடுவர். இத்தகைய வழக்கொன்று கூறும் ஆவணம் மோடிப்பலகணியில் உள்ளது. அல்லா ஊர்வலத்துக்கு அரண்மனையிலிருந்து எடுபிடிகளைக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. நாகூர் காதிர் சாயேப் தர்காவுக்கு நகரா வாத்தியம் செய்து அளிக்கப்பட்டது. அல்லாவைத் திருவிழா 9ஆம் நாளில் ஊர்வலம் செய்வதற்கு கி.பி. 1834ல் தங்கத்தேர், வெள்ளித்தேர், யானைத்தந்தத்தேர் பெரியது, சிறியது, சங்கீதத்தேர் ஆக ஐந்து தேர்கள் வழங்கப் பெற்றன.<ref>*நாகூர் சந்தனக் கூடு உரூஸ் திருவிழாவைக் குறிக்கிறது. விழாவின் பெருஞ்சிறப்பு இதன்மூலம் தெரிகிறது.<br>(“தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்”. கே.எம். வேங்கடராமையா. தமிழ்ப்பல்கலைக் கழகம். 1984. பக்கம் 208-210).</ref> இங்ஙனம் அல்லாப் பண்டிகை காலத்தில் நன்கொடைகளும் தேர் முதலியனவும் அளித்து முகமதிய சமயத்தாரின் நன்மதிப்பையும் ஆதரவையும் மராட்டிய மன்னர் பெற்றிருந்தனர்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> k8e8cls33qttpex96p8hb0xgtxx2ec8 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/137 250 489118 1839230 1839063 2025-07-05T08:31:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|136 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>68. இஸ்லாமியரை வணங்கும் இந்துக்கள்</b><ref>*ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், முதல் தொகுதி எண் 43.<br>‘கொங்குநாடு’ (1934) தி.சு. முத்துசாமிக் கோனார், பக்கம் 90</ref>}}}} ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் காகம் என்ற ஊரிலும், பெருந்துறை வட்டத்தில் உள்ள காஞ்சிக்கோயில் என்ற ஊரிலும் கொங்கு வேளாளர்களில் கண்ண குலத்தார் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு ஊரில் உள்ள கண்ணகுலப் பெருமக்களும் அவ்வூர்களிலிருந்து குடியேறி மற்ற ஊர்களில் வாழும் பலநூற்றுக்கணக்கான குடும்பங்களும் குலதெய்வமாக வணங்கும் சுவாமியின்பெயர் ‘ராவுத்தனசாமி’. ஆண்குழந்தைகட்கு ராவுத்தனன் என்றும், பெண் குழந்தைகட்கு ராவுத்தமா என்றும் பெயர் வைக்கின்றனர். ராவுத்தனசாமியின் பெயரைக் கேட்டால் ‘டில்லி பட்டாணி துலுக்கர்’ என்று கூறுகிறார்கள். தங்கள் குல முதல்வருக்கு அவர் பேருதவி செய்து காப்பாற்றியதால் அவரைக் குல தெய்வமாக வணங்குகிறோம் என்று கூறுகிறார்கள். ஈரோடு வட்டம் கொளாநல்லியில் வாழும் கண்ண குலப் பெருமக்களின் குலதெய்வம் பொன்குழலியம்மன் ஆகும். அம்மன் கோயிலில் அவர்கள் வணங்கும் மற்றொரு தெய்வத்தின் பெயர் துலுக்கணசாமியாகும். பொன்குழலியம்மனை வணங்கும் கண்ண குலத்தார் ‘துலுக்கண கவுண்டர்’ என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர். நாமக்கல் வட்டம் திருச்செங்கோட்டில் இதே கண்ண குலத்தார் வழிபடும் பனிமலைக் காவலர் சுவாமி கோயிலில் ‘பங்கடு சுல்தான்’ அடக்கத் தலம் உள்ளது. பங்கடு சுல்தானை இஸ்லாமியர்களும் வந்து தங்கள் சமய ஞானி என்று வணங்குகின்றனர். பனிமலைக் காவலர் கோயிலில் பூசை செய்யும் பூசாரியின் பெயர் ஏறருள்முத்து துலுக்கப் பூசாரி என்பது. கொங்கு வேளாளரில் கண்ண குலத்தாருக்கும் இஸ்லாமியருக்கும் உள்ள மேற்கண்ட தொடர்புகள் மேலும் ஆய்வுக்குரியதாகும்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 471cliu9jmcg4qkdsaj31ii5bcejdlc பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/138 250 489119 1839231 1839065 2025-07-05T08:33:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 137}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>69. மகமதுதம்பி சாகிபுக்கு சரவணப் பெருமாள் சீட்டுக்கவி*</b><ref>*“சீட்டுக்கவித் திரட்டு” - விசாகப் பெருமாள் அய்யர் பதிப்பித்தது.</ref>}}}} <poem>அவ்வொன்றும் அவதானி தமிழொன்று வெகுமானி அறிவொன்று சேதுபதிபால் அணியொன்று வெகுமானி சோமசுந் தரகுருவின் அருளொன்றும் அடிமைவெள்ளைக் கவ்வொன்றும் அலைநாவல் நதியொன்று கோத்திரன் கணியொன்று குவளைமார்பன் கதியொன்று சரவணப் பெருமாள் கவீசுரன் கையொன்றும் எழுதும் ஓலை தெவ்வென்று சமர்வென்று திகழ்மகம் மதுதம்பி தீரானிதிர் கொண்டு காண்க செழுஞ்சென்ன பட்டினம் அதிற்கேழு வோம்வழிச் செலவுக்கு வேண்டுமதனால் உவ்வொன்று யவ்வொன்று லவ்வொன்று டவ்வொன்று சவ்வென்று மவ்வொன்றுவவ் வொன்றுரவ் வொன்றுசவ் வொன்றுகவ் வொன்றுனவ் வொன்றுவர விடல்வேண்டுமே!</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> c0aedvp07wlqwlj1ymq8dbijmg8hzwf பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/139 250 489120 1839232 1839066 2025-07-05T08:34:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|138 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>69-A. கிறித்தவ தேவாலயத்தில் அரபு மொழிக் கல்வெட்டு</b>}}}} ஆஸ்திரேலியாவிலிருந்து 1894ல் கிறித்தவ பணிக்காக இந்தியா வந்த மறைதிரு அந்தோணி வாட்சன் பிரப் 1894ல் கோவை வந்தார். 1897இல் ஈரோடு வந்தார். 1904ல் ஈரோடு நகர பரிபாலன சபைத் தலைவராக விளங்கினார். அவர் நினைவாக ஈரோடு மையப் பகுதியில் உள்ள கிறித்தவ தேவாலயம் ‘பிரப் நினைவு தேவாலயம்’ என்ற பெயருடன் விளங்குகிறது. 1930ல் திட்டமிடப்பட்டு 1933ல் “இந்தோசரோனிக்” கட்டிடக் கலையில் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தின் முகப்பில் “கடவுள் ஒருவரே” என்று பொருள்படும் “யா குதா” என்ற சொற்றொடர் பெரிய அரபு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 139 |bSize = 425 |cWidth = 227 |cHeight = 311 |oTop = 246 |oLeft = 123 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> c6qk2vosjoz68trgxjukt9un2cybw4z பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/140 250 489121 1839233 1839067 2025-07-05T08:35:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 139}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>69-B. ஈரோட்டில் ‘கோஷா’ ஆஸ்பத்திரி</b>}}}} ஈரோட்டில் 1897 முதல் கிறித்தவப் பணியாற்றிய அந்தோணி வாட்சன் பிரப் 1909ல் தன் பங்களாவின் ஒரு பகுதியிலே சிறு மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். டாக்டர் மைகன் ரீஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். மருத்துவமனை தொடங்க 1912ல் ‘பனங்காடு’ என்ற பகுதியை வாங்கினார். மருத்துவமனை கட்டினார். 1914-15 ஆம் ஆண்டுகளில் மலேரியா, இன்புளூயன்சா, காய்ச்சல் ஈரோட்டில் அதிகமாகப் பரவியது. மருத்துவமனைப் பணி நடக்கும்போதே பாயில் படுக்க வைத்து நோயாளிகளைக் கவனித்தார். பெரும்பாலும் ஆண் மருத்துவர்களே இருந்த காரணத்தால் நோயினால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள் பலர் மருத்துவ வசதியின்றி இறந்தனர். பிரப் வேலூரிலிருந்து பெண் டாக்டர் ஹில்டா போலார்டு என்பவரை அழைத்துக் கொண்டு வந்து இஸ்லாமியப் பெண்களுக்கு மருத்துவம் செய்தார். இதனால் தான் கட்டிய மருத்துவமனைக்கு “கோஷா” ஆஸ்பத்திரி என்று பெயரிட்டார். பெண்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட அம்மருத்துவமனை ஆண்களுக்கு சிகிச்சை அளித்தபோதும் 1961வரை “கோஷா ஆஸ்பத்திரி” என்ற பெயரிலேயே இருந்துவந்தது. பின்னர் சி.எஸ்.ஐ. மருத்துவமனை என்று பெயர் மாற்றப்பட்டாலும் இன்னும் அந்த ஆஸ்பத்திரியை கோஷா ஆஸ்பத்திரி என்றே மக்கள் அழைத்து வருகின்றனர்.{{nop}}<noinclude></noinclude> 3arf4kgsdxfrr2pvuy21oiokdedbcy5 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/148 250 489129 1839080 1838926 2025-07-04T11:59:41Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 147}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>77. பூந்தமல்லி மசூதி கட்டிய ருஷ்தும்*</b><ref>*Annual Report on Epigraphy (B) 303, 304 of 1939<br>Epigraphia Indo - Moslemica 1938, page 52.</ref>}}}} கோல்கொண்டா அரசர் ஹசரத் ஆலம்பன்னா சுல்தான் அப்துல்லா சையத் ஆட்சிபுரியும்போது சென்னைப் பகுதிக்கு அரசப் பிரதிநிதியாக இருந்தவர் நவாப் ஜனாம்லத் உல் முல்கி மீர் முகம்மது என்பவர். அவரிடம் வேலை பார்த்த அலுவலர் அஸ்திராபாத் துல்ஃபிகார் மகன் ருஷ்தம் என்பவர் பூந்தமல்லி மசூதியை முழுவதுமாக 3.9.1653 (ஹிஜ்ரி 1063 ஷவ்வல் 20) அன்று கட்டி முடித்ததை இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அப்போது பூந்தமல்லிக் கோட்டை ஹவில்தாராக இருந்தவர் சுஜாயித ஆசாரி என்பவர்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 3bqkg00ph9swio1z3c12mczi1kvz778 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/149 250 489130 1839083 1838929 2025-07-04T12:08:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|148 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>78. ஆர்க்காடு நவாப் அரும்பணிகள்*</b><ref>*Annual Report on Epigraphy (D) 166-172 of 1964</ref>}}}} திருச்சி ஹசரத் நத்தர்ஷா தர்கா, திருநெல்வேலி பேட்டை ஜாமி மசூதி என்று அழைக்கப்படும் வாலாஜா மசூதி, தாளையூத்து ஷாடிகான் சத்திரம், திருநெல்வேலி கதக் மசூதி ஆகியவற்றிற்குப் பல கட்டிடங்களை ஆர்க்காடு நவாபு முஹம்மது அலி (1750-1795) பல கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்தார். நத்தர்ஷா தர்காவில் புனிதர் நத்தர்ஷா அங்கு ஹிஜ்ரி 375ல் வந்தது குறிக்கப்பட்டுள்ளது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> dm3xi2i28qmmzy47jb5ri0idkltxdj5 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/150 250 489131 1839084 1838931 2025-07-04T12:10:02Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 149}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>79. புனிதரை வணங்க புகழ்மிகு கட்டிடம்*</b><ref>*Annual Report on Epigraphy (D) 161 of 1964</ref>}}}} நாகூர் ஹஜ்ரத் காதிர் வலி தர்கா நுழைவாயில் இடப்புறம் உள்ள கல்வெட்டில் ஹிஜ்ரி 1196 ஷாவல் மாதம் (கி.பி. 1782 செப்டம்பர் - அக்டோபர்) புனிதர் ஷாஹுல் ஹமீது சையது அப்துல் காதிர் மானிக்பூரி அவர்களை வழிபடுவதன் பொருட்டு ஹாஜி அப்துல் காதிர் அவர்கள் மேற்பார்வையில் இரு அழகிய கட்டிடம் கட்டப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. (காதிர் - இறைஆற்றல்){{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> rulffha1ckihyvvw38oekt2zw6xs3e6 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/151 250 489132 1839082 1838959 2025-07-04T12:07:30Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|150 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>80. சம்மட்டிவரத்தில் சாகிப் கான் தர்கா*</b><ref>* Annual Report on Epigraphy (B) 306 of 1960<br>* Annual Report on Epigraphy (D) 171 of 1960</ref>}}}} ஆர்க்காடு நவாப் முகம்மது அலி, கிழக்கிந்திய கும்பினியர் ஆகியோரால் வரிவசூல் செய்ய 1757ல் அனுப்பப்பட்ட கான்சாகிபு வசூலித்த வரியை மக்கள் நலப்பணிகட்கு செலவிட்டார். கான்சாகிபு பற்றி நன்கு ஆய்ந்த பேராசிரியர் நா. வானமாமலை “திருநெல்வேலி சீமையை வென்ற பெருமையை பறைசாற்றி இச்சீமையின் வரிக்குத்தகையை 7 லட்சத்திற்கு கான்சாகிபு கும்பினியாரிடமிருந்து பெற்றுக் கொண்டான். மாபூஸ்கான் தனது தம்பியான ஆர்க்காடு நவாபு முகமதலியோடு சமாதானம் செய்து கொண்டு திருநெல்வேலிச் சீமையை விட்டு போய்விட்டான். யூசூப்கானது நிலைமை வலுவாகி இருந்தது. கம்பெனியிடம் விசுவாசம் இல்லாமல் அவன் நடந்து கொண்டதாக பிரிட்டிஷார் ஐயுற்றனர். தஞ்சாவூரிலிருந்து அவன் படை திரட்டினான். பாளையக்காரர்களோடு சமாதானம் செய்து கொண்டு நவாபை எதிர்க்க அவர்களது உதவியை நாடினான். அவனது தலைமையில் உள்ள வீரர்களது தொகை 27,000 இருந்ததென்று பிரிட்டிஷ் அதிகாரிகள் நம்பினர். பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும், ஹைதர் அலியிடமிருந்தும் அவன் இராணுவ உதவிகளைப் பெற்றதாக பிரிட்டிஷார் குற்றம் சாட்டினர். சுயாதிக்கமுள்ள அரசனைப் போலவே அவன் கோயில்கட்கும், மசூதிகளுக்கும் நிலங்கள் வழங்கி கல்வெட்டுக்களில் பொறித்துக் கொண்டான். திருநெல்வேலி, மதுரைச் சீமைகளில் குளங்கள் தோண்டி {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 151 |bSize = 425 |cWidth = 321 |cHeight = 167 |oTop = 395 |oLeft = 69 |Location = center |Description = }}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> c3fry0as62rsg5oqfq3oycl0o0m2wak பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/153 250 489134 1839163 1571581 2025-07-04T17:43:25Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|152 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>81. மசூதி கட்டி கொடை கொடுத்த சையது மொஹிய்யதின்*</b><ref>*ஆவணம் 17, ஜூலை 2006, பக். 21; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள அவளூர் மசூதிக்கு எதிரில் நடப்பட்டுள்ள கல் |- | காலம் || – ||1.9.1813 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||அவளூரைச் சேர்ந்த சையத் மொஹிதீன் என்பவர் ஒரு மசூதி கட்டி அதைப் பராமரிக்க 40 ஏக்கர் நன்செய் புன்செய் நிலங்களைக் கொடையாக அளித்து அதைப் பராமரிக்கும் பொருட்டு தர்மகர்த்தா ஒருவரையும் நியமித்து அவருக்கு மாதம் 4 ரூபாய் சம்பளம் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். |} <b>கல்வெட்டு</b> 1. 1.9.1813 ஸ்திரிமுக வருஷம் 2. அவளூர் சய்யத் மொஹி 3. ய்யதின் யிந்த மஜீத் முசா 4. வரிகான் கட்டி யிதின் சிப் 5. பந்தி செலவுக்காக தன் பட் 6. டா நஞ்புஞ் 40 ஏக்கர் நெல 7. ம் விட்டிந்றே படியால் 8. யிதன் வறும்படியை மேற்படி 9. மசீத்வுக்கே வைச்ச உபயோ 10. கப் படுத்த வேண்டியது பி 11. ன்வரும் உயிலில் கன் 12. ட தற்ம கற்த்தாவை நேமி 13. த்து மாதம் 1 க்கு சம்பளமாக ரூ 14. பா 4லு சிலவாய் அதிக 15. ப்படுத்தக்கூடாது மேற்படி நி 16. லங்கள் முதலிய தர்ம 17. வீடுகளேயும் விற்க {{nop}}<noinclude></noinclude> cxxr6k92zmki1x24qelsg3cld4p25eb 1839164 1839163 2025-07-04T17:43:45Z ஹர்ஷியா பேகம் 15001 1839164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|152 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>81. மசூதி கட்டி கொடை கொடுத்த சையது மொஹிய்யதின்*</b><ref>*ஆவணம் 17, ஜூலை 2006, பக். 21; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள அவளூர் மசூதிக்கு எதிரில் நடப்பட்டுள்ள கல் |- | காலம் || – ||1.9.1813 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||அவளூரைச் சேர்ந்த சையத் மொஹிதீன் என்பவர் ஒரு மசூதி கட்டி அதைப் பராமரிக்க 40 ஏக்கர் நன்செய் புன்செய் நிலங்களைக் கொடையாக அளித்து அதைப் பராமரிக்கும் பொருட்டு தர்மகர்த்தா ஒருவரையும் நியமித்து அவருக்கு மாதம் 4 ரூபாய் சம்பளம் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். |} <b>கல்வெட்டு</b> 1. 1.9.1813 ஸ்திரிமுக வருஷம் 2. அவளூர் சய்யத் மொஹி 3. ய்யதின் யிந்த மஜீத் முசா 4. வரிகான் கட்டி யிதின் சிப் 5. பந்தி செலவுக்காக தன் பட் 6. டா நஞ்புஞ் 40 ஏக்கர் நெல 7. ம் விட்டிந்றே படியால் 8. யிதன் வறும்படியை மேற்படி 9. மசீத்வுக்கே வைச்ச உபயோ 10. கப் படுத்த வேண்டியது பி 11. ன்வரும் உயிலில் கன் 12. ட தற்ம கற்த்தாவை நேமி 13. த்து மாதம் 1 க்கு சம்பளமாக ரூ 14. பா 4லு சிலவாய் அதிக 15. ப்படுத்தக்கூடாது மேற்படி நி 16. லங்கள் முதலிய தர்ம 17. வீடுகளேயும் விற்க {{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> mcgrwwvcipb2nzqz6icvqlf4sz4wd43 1839165 1839164 2025-07-04T17:44:31Z ஹர்ஷியா பேகம் 15001 1839165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|152 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>81. மசூதி கட்டி கொடை கொடுத்த சையது மொஹிய்யதின்*</b><ref>*ஆவணம் 17, ஜூலை 2006, பக். 21; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}|– ||வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள அவளூர் மசூதிக்கு எதிரில் நடப்பட்டுள்ள கல் |- | காலம் || – ||1.9.1813 |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}|– ||அவளூரைச் சேர்ந்த சையத் மொஹிதீன் என்பவர் ஒரு மசூதி கட்டி அதைப் பராமரிக்க 40 ஏக்கர் நன்செய் புன்செய் நிலங்களைக் கொடையாக அளித்து அதைப் பராமரிக்கும் பொருட்டு தர்மகர்த்தா ஒருவரையும் நியமித்து அவருக்கு மாதம் 4 ரூபாய் சம்பளம் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். |} <b>கல்வெட்டு</b> <poem> 1. 1.9.1813 ஸ்திரிமுக வருஷம் 2. அவளூர் சய்யத் மொஹி 3. ய்யதின் யிந்த மஜீத் முசா 4. வரிகான் கட்டி யிதின் சிப் 5. பந்தி செலவுக்காக தன் பட் 6. டா நஞ்புஞ் 40 ஏக்கர் நெல 7. ம் விட்டிந்றே படியால் 8. யிதன் வறும்படியை மேற்படி 9. மசீத்வுக்கே வைச்ச உபயோ 10. கப் படுத்த வேண்டியது பி 11. ன்வரும் உயிலில் கன் 12. ட தற்ம கற்த்தாவை நேமி 13. த்து மாதம் 1 க்கு சம்பளமாக ரூ 14. பா 4லு சிலவாய் அதிக 15. ப்படுத்தக்கூடாது மேற்படி நி 16. லங்கள் முதலிய தர்ம 17. வீடுகளேயும் விற்க</poem> {{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> cfmw4xyp76lkojzrczu5ycrilg96sgs 1839212 1839165 2025-07-05T04:43:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|152 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>81. மசூதி கட்டி கொடை கொடுத்த சையது மொஹிய்யதின்*</b><ref>*ஆவணம் 17, ஜூலை 2006, பக். 21; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள அவளூர் மசூதிக்கு எதிரில் நடப்பட்டுள்ள கல். |- | காலம் || – ||1.9.1813. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||அவளூரைச் சேர்ந்த சையத் மொஹிதீன் என்பவர் ஒரு மசூதி கட்டி அதைப் பராமரிக்க 40 ஏக்கர் நன்செய் புன்செய் நிலங்களைக் கொடையாக அளித்து அதைப் பராமரிக்கும் பொருட்டு தர்மகர்த்தா ஒருவரையும் நியமித்து அவருக்கு மாதம் 4 ரூபாய் சம்பளம் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். |} <b>கல்வெட்டு</b> <poem>1. 1.9.1813 ஸ்திரிமுக வருஷம் 2. அவளூர் சய்யத் மொஹி 3. ய்யதின் யிந்த மஜீத் முசா 4. வரிகான் கட்டி யிதின் சிப் 5. பந்தி செலவுக்காக தன் பட் 6. டா நஞ்புஞ் 40 ஏக்கர் நெல 7. ம் விட்டிந்றே படியால் 8. யிதன் வறும்படியை மேற்படி 9. மசீத்வுக்கே வைச்ச உபயோ 10. கப் படுத்த வேண்டியது பி 11. ன்வரும் உயிலில் கன் 12. ட தற்ம கற்த்தாவை நேமி 13. த்து மாதம் 1 க்கு சம்பளமாக ரூ 14. பா 4லு சிலவாய் அதிக 15. ப்படுத்தக்கூடாது மேற்படி நி 16. லங்கள் முதலிய தர்ம 17. வீடுகளேயும் விற்க</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 4rmhgr1tg3no6q2z2s83tn7px3x8qla பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/154 250 489135 1839166 1571582 2025-07-04T17:46:21Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 153}} {{rule}}</noinclude><poem> 18. கூடாது மிஞ்சி வித்தால் 19. சர்காற் முதலிய யிசலாமி 20. னங்கள் றத்து செய்யவேண் 21. டியது யிந்தபடிக்கு சிலா 22. சாசனம் சய்யத் மொ 23. ஹிய்யத்தின்</poem>{{nop}}<noinclude></noinclude> po7cze19btshwjvw11lg12qo476kaoo 1839214 1839166 2025-07-05T04:45:33Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 153}} {{rule}}</noinclude><poem>18. கூடாது மிஞ்சி வித்தால் 19. சர்காற் முதலிய யிசலாமி 20. னங்கள் றத்து செய்யவேண் 21. டியது யிந்தபடிக்கு சிலா 22. சாசனம் சய்யத் மொ 23. ஹிய்யத்தின்</poem>{{nop}}<noinclude></noinclude> b1cy1w7ho7nsrl2ed8zjr3wreuapnk0 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/155 250 489136 1839168 1571583 2025-07-04T17:50:24Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|154 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>82. நாகூரில் கோபுரம் கட்டிய தாவூதுகான்*</b><ref>*Annual Report on Epigraphy (B) 292 of 1964<br>Annual Report on Epigraphy (D) 162 of 1964</ref>}}}} டெல்லிக்கு அருகில் உள்ள ஷாஜகான்பூரில் குடியிருந்த இஸ்மாயில்கான் மகன் தாவூதுகான் சையது அப்துல் காதிர் நாகூர் மானிக்பூரி அவர்களுக்காக உயர்ந்த இரு கோபுரங்கள் அமைத்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. தாவூதுகான் முகம்மது பந்தரில் குடியேறிய செய்தியும் கூறப்பட்டுள்ளது. அப்துல்லா என்பவரால் இக்கல்வெட்டு எழுதப்பட்டது. கோபுரத்தின் வடபுறப் பகுதியில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கி.பி. 19 ஆம் நூற்றாண்டு. (முஹம்மது பந்தர் என்பது பரங்கிப்பேட்டை){{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> punscmelllhw67our6ko5if75vpbwmn 1839215 1839168 2025-07-05T04:46:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|154 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>82. நாகூரில் கோபுரம் கட்டிய தாவூதுகான்*</b><ref>*Annual Report on Epigraphy (B) 292 of 1964<br>Annual Report on Epigraphy (D) 162 of 1964</ref>}}}} டெல்லிக்கு அருகில் உள்ள ஷாஜகான்பூரில் குடியிருந்த இஸ்மாயில்கான் மகன் தாவூதுகான் சையது அப்துல் காதிர் நாகூர் மானிக்பூரி அவர்களுக்காக உயர்ந்த இரு கோபுரங்கள் அமைத்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. தாவூதுகான் முகம்மது பந்தரில் குடியேறிய செய்தியும் கூறப்பட்டுள்ளது. அப்துல்லா என்பவரால் இக்கல்வெட்டு எழுதப்பட்டது. கோபுரத்தின் வடபுறப் பகுதியில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கி.பி. 19 ஆம் நூற்றாண்டு. (முஹம்மது பந்தர் என்பது பரங்கிப்பேட்டை){{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 353v77x0u29pjvyxwqdm7ai3vyf3tth பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/156 250 489137 1839170 1571584 2025-07-04T17:59:49Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 155}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>82-A. கீழக்கரை, ஓடக்கரை மசூதிக் கல்வெட்டு</b>}}}} ஹிஜ்ரி 1230ஆம் ஆண்டு கவீவு முகம்மது மரைக்காயர், அவுதுல்க் காதிறு மரைக்காயர் ஆகிய சகோதரர்கள் ஓடக்கரைப் பள்ளியில் கட்டிடம் கட்டியதை இக்கல்வெட்டுக் கூறுகிறது. <b>கல்வெட்டு</b> <poem>1. இந்த பள்ளி வாசல் அவுதுல் காதிறு மரைக்காயரவர்கள் மருமகன் யிசுமாயிலெவை மரைக்காயர் குமாரர்கள் 2. கலீவு முகம்மது மரைக்காயர் அவுதில்க் காதிறு மரைக்காயர் கட்டினது கிசறத்து 1230</poem>{{nop}}<noinclude></noinclude> mc4vaiqrsh2pjyp933izs8xlkvzbrkq 1839216 1839170 2025-07-05T04:48:26Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 155}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>82-A. கீழக்கரை, ஓடக்கரை மசூதிக் கல்வெட்டு</b>}}}} ஹிஜ்ரி 1230ஆம் ஆண்டு கவீவு முகம்மது மரைக்காயர், அவுதுல்க் காதிறு மரைக்காயர் ஆகிய சகோதரர்கள் ஓடக்கரைப் பள்ளியில் கட்டிடம் கட்டியதை இக்கல்வெட்டுக் கூறுகிறது. <b>கல்வெட்டு</b> <poem>1. இந்த பள்ளி வாசல் அவுதுல் காதிறு மரைக்காயரவர்கள் மருமகன் யிசுமாயிலெவை மரைக்காயர் குமாரர்கள் 2. கலீவு முகம்மது மரைக்காயர் அவுதில்க் காதிறு மரைக்காயர் கட்டினது கிசறத்து 1230</poem>{{nop}}<noinclude></noinclude> 6fbh6p6sx6j12eq1v31k4q34kc6zx6r பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/157 250 489138 1839171 1571585 2025-07-04T18:03:01Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|156 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>83. அத்தர் வியாபாரிகள் கட்டிய பள்ளிவாசல்*</b><ref>*Annual Report on Epigraphy (C) 55 of 1993</ref>}}}} கோவை மாநகர் பெரியகடை வீதியில் “அத்தர் ஜமாத் பள்ளிவாசல்” உள்ளது. அத்தர் போன்ற பல வாசனைப் பொருள்களை விற்கும் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து ஹிஜ்ரி 1322ஆம் ஆண்டு (1904-1905) அதைக் கட்டி முடித்ததாக அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> n3fxva299320m74h7ygs9dcns63bnji 1839217 1839171 2025-07-05T04:49:21Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|156 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>83. அத்தர் வியாபாரிகள் கட்டிய பள்ளிவாசல்*</b><ref>*Annual Report on Epigraphy (C) 55 of 1993</ref>}}}} கோவை மாநகர் பெரியகடை வீதியில் “அத்தர் ஜமாத் பள்ளிவாசல்” உள்ளது. அத்தர் போன்ற பல வாசனைப் பொருள்களை விற்கும் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து ஹிஜ்ரி 1322ஆம் ஆண்டு (1904-1905) அதைக் கட்டி முடித்ததாக அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> dguy0j0iq9mkvtrj40975aff5vmqx9l பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/158 250 489139 1839172 1571586 2025-07-04T18:07:57Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 157}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>84. கோட்டை முகப்புக் கட்டிய ஹுசைனி</b><ref>Annual Report on Epigraphy 309 of 1939</ref>}}}} பீஜப்பூர் சுல்தான் ஆட்சிக்காலத்தில் செஞ்சிக் கோட்டையை பலமும் வலிமையும் உள்ளதாக ஆக்கக் கோட்டையின் முகப்பைப் பலப்படுத்திக் கட்டியவர் அப்பகுதியின் வட்டார அலுவலராக இருந்த ஹூசைனி என்பவர்.{{nop}}<noinclude></noinclude> 2vxq2d4k0705u336mprift1iht8vbkt 1839173 1839172 2025-07-04T18:08:13Z ஹர்ஷியா பேகம் 15001 1839173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 157}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>84. கோட்டை முகப்புக் கட்டிய ஹுசைனி</b><ref>Annual Report on Epigraphy 309 of 1939</ref>}}}} பீஜப்பூர் சுல்தான் ஆட்சிக்காலத்தில் செஞ்சிக் கோட்டையை பலமும் வலிமையும் உள்ளதாக ஆக்கக் கோட்டையின் முகப்பைப் பலப்படுத்திக் கட்டியவர் அப்பகுதியின் வட்டார அலுவலராக இருந்த ஹூசைனி என்பவர்.{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> tnn0vcm5fbdw5mxeedy2dv82bbe958h 1839218 1839173 2025-07-05T04:50:07Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 157}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>84. கோட்டை முகப்புக் கட்டிய ஹுசைனி</b><ref>Annual Report on Epigraphy 309 of 1939</ref>}}}} பீஜப்பூர் சுல்தான் ஆட்சிக்காலத்தில் செஞ்சிக் கோட்டையை பலமும் வலிமையும் உள்ளதாக ஆக்கக் கோட்டையின் முகப்பைப் பலப்படுத்திக் கட்டியவர் அப்பகுதியின் வட்டார அலுவலராக இருந்த ஹூசைனி என்பவர்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> jjcssoomhrdqyczy4v2rv166q9aj853 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/159 250 489140 1839174 1571587 2025-07-04T18:15:12Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|158 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>85. திருவரம்பூர் பள்ளிவாசல் ஓலைச்சுவடி</b>}}}} 21.10.1880 அன்று எழுதப்பட்ட ஓலை ஆவணம். ஐந்து ரூபாய் மதிப்புடைய முத்திரை ஓலையில் எழுதியுள்ளது. திருவறம்பூர் கிராமம் வருஷை ராவுத்தர் மகன் பாவா நத்தரு ராவுத்தர் தனக்குச் சொந்தமான 500 ரூபாய் பெறுமானமுள்ள இரண்டு இடங்களில் உள்ள மூன்று ஏக்கர் 76 சென்டு நிலத்தில் கலத்து ஊழியத்துக்கு சேகுமுத்த லெப்பைக்கு அளிக்கப்பட்ட 30 சென்டு போக மீதி 3 ஏக்கர் 46 சென்டு நன்செய் நிலத்தைத் திருவறம்பூர் மஜீத் பள்ளிவாசலுக்கு கொடையாக அளித்தார். அதன் வருவாயைக் கொண்டு மஜீத் பள்ளி வாசலில் நாள்தோறும் விளக்கு வைக்க வேண்டும் என்றும், குதுபா ரம்ஜான் நோன்பு முப்பது நாட்கள் செலவிட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். மீதிப் பணம் இருந்தால் மஜீத் பள்ளிவாசலின் மராமத்துச் செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இந்தக் கொடைக்கு இசுலாமியர் பலர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர். குருசாமி அய்யர், வெங்கடாசலமய்யர், அருணாசலம்பிள்ளை மகன் வைத்தியலிங்கம் பிள்ளை, ராம பிள்ளை மகன் அருணாசலம்பிள்ளை, முத்துக் கருப்பு கண்டியன் மகன் ஆறுமுக கண்டியன் ஆகியோரும் சாட்சிக் கையொப்ப மிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மைதீன்சா என்பவர் ‘நாட்டாமை’யாக இருந்துள்ளார். இந்த ஓலையில் எழுதியவர் சய்யது அசன் என்பவர். <b>ஓலைச் சுவடி</b> 1. 1880 வருடம் அக்டோபர் மாதம் 21 தேதி திருச்சிறாப்பள்ளி தாலுக்கா திருவறம்பூர் கிறாமத்தி 2. லிருக்கும் வருஷை றாவுத்தன் குமாறன் துலுக்க ஜாதி அனுபி மதம் விவசாயம் 3. அந்தஸ்துள்ள பாவா நத்தரு றாவுத்தராகிய நான் சரீர சுகத்துடனும் ஒருவருடைய 4. கட்டாயமன்னிலும் அடியில்க் கண்ட மஜீது பள்ளிவாசலுக்கு யெழுதி 5. வைத்த தான சாசனம், யென்னவென்றால் யெனக்கு சொந்தமான திருச்சி 6. றாப்பள்ளி டிஸ்திரிக்கட்டு திருச்சிறாப்பள்ளி தாலுக்கா மேல்படி டிஸ்திரிக்கட்டுது{{nop}}<noinclude></noinclude> d65giff96ez3pctdwviiblr8xg8xvdk 1839175 1839174 2025-07-04T18:15:45Z ஹர்ஷியா பேகம் 15001 1839175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|158 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>85. திருவரம்பூர் பள்ளிவாசல் ஓலைச்சுவடி</b>}}}} 21.10.1880 அன்று எழுதப்பட்ட ஓலை ஆவணம். ஐந்து ரூபாய் மதிப்புடைய முத்திரை ஓலையில் எழுதியுள்ளது. திருவறம்பூர் கிராமம் வருஷை ராவுத்தர் மகன் பாவா நத்தரு ராவுத்தர் தனக்குச் சொந்தமான 500 ரூபாய் பெறுமானமுள்ள இரண்டு இடங்களில் உள்ள மூன்று ஏக்கர் 76 சென்டு நிலத்தில் கலத்து ஊழியத்துக்கு சேகுமுத்த லெப்பைக்கு அளிக்கப்பட்ட 30 சென்டு போக மீதி 3 ஏக்கர் 46 சென்டு நன்செய் நிலத்தைத் திருவறம்பூர் மஜீத் பள்ளிவாசலுக்கு கொடையாக அளித்தார். அதன் வருவாயைக் கொண்டு மஜீத் பள்ளி வாசலில் நாள்தோறும் விளக்கு வைக்க வேண்டும் என்றும், குதுபா ரம்ஜான் நோன்பு முப்பது நாட்கள் செலவிட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். மீதிப் பணம் இருந்தால் மஜீத் பள்ளிவாசலின் மராமத்துச் செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இந்தக் கொடைக்கு இசுலாமியர் பலர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர். குருசாமி அய்யர், வெங்கடாசலமய்யர், அருணாசலம்பிள்ளை மகன் வைத்தியலிங்கம் பிள்ளை, ராம பிள்ளை மகன் அருணாசலம்பிள்ளை, முத்துக் கருப்பு கண்டியன் மகன் ஆறுமுக கண்டியன் ஆகியோரும் சாட்சிக் கையொப்ப மிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மைதீன்சா என்பவர் ‘நாட்டாமை’யாக இருந்துள்ளார். இந்த ஓலையில் எழுதியவர் சய்யது அசன் என்பவர். <b>ஓலைச் சுவடி</b> <poem>1. 1880 வருடம் அக்டோபர் மாதம் 21 தேதி திருச்சிறாப்பள்ளி தாலுக்கா திருவறம்பூர் கிறாமத்தி 2. லிருக்கும் வருஷை றாவுத்தன் குமாறன் துலுக்க ஜாதி அனுபி மதம் விவசாயம் 3. அந்தஸ்துள்ள பாவா நத்தரு றாவுத்தராகிய நான் சரீர சுகத்துடனும் ஒருவருடைய 4. கட்டாயமன்னிலும் அடியில்க் கண்ட மஜீது பள்ளிவாசலுக்கு யெழுதி 5. வைத்த தான சாசனம், யென்னவென்றால் யெனக்கு சொந்தமான திருச்சி 6. றாப்பள்ளி டிஸ்திரிக்கட்டு திருச்சிறாப்பள்ளி தாலுக்கா மேல்படி டிஸ்திரிக்கட்டுது</poem>{{nop}}<noinclude></noinclude> abbh9yeem5ywfymj2wgbqbhp882m5na 1839176 1839175 2025-07-04T18:17:04Z ஹர்ஷியா பேகம் 15001 1839176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|158 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>85. திருவரம்பூர் பள்ளிவாசல் ஓலைச்சுவடி</b><ref>படித்தவர் செ. இராசு</ref>}}}} 21.10.1880 அன்று எழுதப்பட்ட ஓலை ஆவணம். ஐந்து ரூபாய் மதிப்புடைய முத்திரை ஓலையில் எழுதியுள்ளது. திருவறம்பூர் கிராமம் வருஷை ராவுத்தர் மகன் பாவா நத்தரு ராவுத்தர் தனக்குச் சொந்தமான 500 ரூபாய் பெறுமானமுள்ள இரண்டு இடங்களில் உள்ள மூன்று ஏக்கர் 76 சென்டு நிலத்தில் கலத்து ஊழியத்துக்கு சேகுமுத்த லெப்பைக்கு அளிக்கப்பட்ட 30 சென்டு போக மீதி 3 ஏக்கர் 46 சென்டு நன்செய் நிலத்தைத் திருவறம்பூர் மஜீத் பள்ளிவாசலுக்கு கொடையாக அளித்தார். அதன் வருவாயைக் கொண்டு மஜீத் பள்ளி வாசலில் நாள்தோறும் விளக்கு வைக்க வேண்டும் என்றும், குதுபா ரம்ஜான் நோன்பு முப்பது நாட்கள் செலவிட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். மீதிப் பணம் இருந்தால் மஜீத் பள்ளிவாசலின் மராமத்துச் செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இந்தக் கொடைக்கு இசுலாமியர் பலர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர். குருசாமி அய்யர், வெங்கடாசலமய்யர், அருணாசலம்பிள்ளை மகன் வைத்தியலிங்கம் பிள்ளை, ராம பிள்ளை மகன் அருணாசலம்பிள்ளை, முத்துக் கருப்பு கண்டியன் மகன் ஆறுமுக கண்டியன் ஆகியோரும் சாட்சிக் கையொப்ப மிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மைதீன்சா என்பவர் ‘நாட்டாமை’யாக இருந்துள்ளார். இந்த ஓலையில் எழுதியவர் சய்யது அசன் என்பவர். <b>ஓலைச் சுவடி</b> <poem>1. 1880 வருடம் அக்டோபர் மாதம் 21 தேதி திருச்சிறாப்பள்ளி தாலுக்கா திருவறம்பூர் கிறாமத்தி 2. லிருக்கும் வருஷை றாவுத்தன் குமாறன் துலுக்க ஜாதி அனுபி மதம் விவசாயம் 3. அந்தஸ்துள்ள பாவா நத்தரு றாவுத்தராகிய நான் சரீர சுகத்துடனும் ஒருவருடைய 4. கட்டாயமன்னிலும் அடியில்க் கண்ட மஜீது பள்ளிவாசலுக்கு யெழுதி 5. வைத்த தான சாசனம், யென்னவென்றால் யெனக்கு சொந்தமான திருச்சி 6. றாப்பள்ளி டிஸ்திரிக்கட்டு திருச்சிறாப்பள்ளி தாலுக்கா மேல்படி டிஸ்திரிக்கட்டுது</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 3jxoptoty7urq04kigf0t76n0ix0fja 1839219 1839176 2025-07-05T04:54:18Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|158 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>85. திருவரம்பூர் பள்ளிவாசல் ஓலைச்சுவடி</b><ref>படித்தவர் செ. இராசு</ref>}}}} 21.10.1880 அன்று எழுதப்பட்ட ஓலை ஆவணம். ஐந்து ரூபாய் மதிப்புடைய முத்திரை ஓலையில் எழுதியுள்ளது. திருவறம்பூர் கிராமம் வருஷை ராவுத்தர் மகன் பாவா நத்தரு ராவுத்தர் தனக்குச் சொந்தமான 500 ரூபாய் பெறுமானமுள்ள இரண்டு இடங்களில் உள்ள மூன்று ஏக்கர் 76 சென்டு நிலத்தில் கலத்து ஊழியத்துக்கு சேகுமுத்த லெப்பைக்கு அளிக்கப்பட்ட 30 சென்டு போக மீதி 3 ஏக்கர் 46 சென்டு நன்செய் நிலத்தைத் திருவறம்பூர் மஜீத் பள்ளிவாசலுக்கு கொடையாக அளித்தார். அதன் வருவாயைக் கொண்டு மஜீத் பள்ளி வாசலில் நாள்தோறும் விளக்கு வைக்க வேண்டும் என்றும், குதுபா ரம்ஜான் நோன்பு முப்பது நாட்கள் செலவிட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். மீதிப் பணம் இருந்தால் மஜீத் பள்ளிவாசலின் மராமத்துச் செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இந்தக் கொடைக்கு இசுலாமியர் பலர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர். குருசாமி அய்யர், வெங்கடாசலமய்யர், அருணாசலம்பிள்ளை மகன் வைத்தியலிங்கம் பிள்ளை, ராம பிள்ளை மகன் அருணாசலம்பிள்ளை, முத்துக் கருப்பு கண்டியன் மகன் ஆறுமுக கண்டியன் ஆகியோரும் சாட்சிக் கையொப்ப மிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மைதீன்சா என்பவர் ‘நாட்டாமை’யாக இருந்துள்ளார். இந்த ஓலையில் எழுதியவர் சய்யது அசன் என்பவர். <b>ஓலைச் சுவடி</b> <poem>1. 1880 வருடம் அக்டோபர் மாதம் 21 தேதி திருச்சிறாப்பள்ளி தாலுக்கா திருவறம்பூர் கிறாமத்தி 2. லிருக்கும் வருஷை றாவுத்தன் குமாறன் துலுக்க ஜாதி அனுபி மதம் விவசாயம் 3. அந்தஸ்துள்ள பாவா நத்தரு றாவுத்தராகிய நான் சரீர சுகத்துடனும் ஒருவருடைய 4. கட்டாயமன்னிலும் அடியில்க் கண்ட மஜீது பள்ளிவாசலுக்கு யெழுதி 5. வைத்த தான சாசனம், யென்னவென்றால் யெனக்கு சொந்தமான திருச்சி 6. றாப்பள்ளி டிஸ்திரிக்கட்டு திருச்சிறாப்பள்ளி தாலுக்கா மேல்படி டிஸ்திரிக்கட்டுது</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> hf50srxet87qnv76kuvuy301w35medw பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/160 250 489141 1839177 1571588 2025-07-04T18:31:29Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 159}} {{rule}}</noinclude><poem> 7. வாகுடி மாகாணத்தை சேர்ந்த மேல்படி திருவறம்பூர் கிராமத்தில் ரூ 500 பொருமான 8. சர்வை 131 நெம்பர் கரையவெட்டி நன்செய் யேக்கர் 3டி 17, 127 நெம்பர் நன்செய் டி 59 ஆக யேக்கர் 9. 3டி 76 இந்த நிலத்தில் யென்னால் சேகு முத்த லெப்பைக்கு கலத்து வூளி 10. யித்துக்காக விடப்பட்டிருக்குற மேல்க்கண்ட 131 நெம்பர் கலயில் தஞ்சாவூர் றோ 11. ட்டுக்கு தெர்க்கு. றாமசுவாமியின் கணபதி செய்க்கு வடக்கு வைத்திலிங்கம் பி 12. ள்ளை நொச்சியலடிக்கு கிளக்கு. தண்ணிபந்தலுக்கு மேர்க்கு இதர்க்கு 13. ளிப்பட்ட நன்செய் டி30 போக பாக்கி யேக்கர் 3 டி 46 இந்த நன்செய் நிலத்தை மேற்படி திரு 14. வறம்பூர் கிராமத்தில் யென்னால் சன்னதி குளத்துக்கு போகுறபாதைக்கி கி 15. ளக்கு முத்துவய்யர் கொல்லைக்கும் மேர்க்கு வுசேன் ராவுத்தன் கொ 16. ல்லைக்கு தெர்க்கு சின்ன அக்கறாறத்து வீதிக்கு வடக்கு இதர்க்குள்பட்ட 17. புன்செய் நிலத்தில் கட்டப்பட்டிருக்கிற மேல்படி மஜீதின் பள்ளிவாசலில் தர்ம சிலவுக்காக 18. மேல்படி பள்ளிவாசல் பேறால் நான் சர்வ வில்லங்க சுத்தியாய் தானம் 19. செய்து குடுத்துவிட்டபடியால் மேல்படி நன்செய் நிலத்தில் நாளது தேதி முதல் வருஷாவருஷம் 20. வறப்பட்ட வருமானத்தை கொண்டு மேற்படி பள்ளிவாசலில் நித்ய வெ 21. னக்கு கதிப்பும் வசிளசாடுக மேற்படி வகையரா சாதிலவாரிது சிலவும் பின்னும் 22. வருஷம 1க்கு வரப்பட்ட இத்தொண்டு குதுபா றம்ஜான் மாசம் யெங்கிற 23. 30 நோம்பு இந்த வகையறாவின் சிலவும் நானுள்ளவரையில் நானே 24. மானேஜறாயிருந்து நடுத்திக் கொண்டு வருகிறதும் தவிற யெனக்குப் 25. பிற்க்காலம் யென்புத்திர பவுத்திற பாறம்பரையாயி யெண்ணெண்ணைக்கும் 26. டத்திவறவேண்டியது. ஒருவேளை அவர்களால் நடத்த அட்டி சம்ப 27. வித்தால் ஒடனே அவர்களை நீக்கி திருச்சிறாப்பள்ளி கோட்டையில் 28. ருக்கம் ஒரைவின் முரையார் யாருக்க மேற்படி தர்மம் நடத்த நேமுகம் செய் </poem>{{nop}}<noinclude></noinclude> qdj1i49aiakzv046ahtt9tbi4mkd0tz 1839220 1839177 2025-07-05T05:00:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 159}} {{rule}}</noinclude><poem>7. வாகுடி மாகாணத்தை சேர்ந்த மேல்படி திருவறம்பூர் கிராமத்தில் ரூ 500 பொருமான 8. சர்வை 131 நெம்பர் கரையவெட்டி நன்செய் யேக்கர் 3 டி 17, 127 நெம்பர் நன்செய் டி 59 ஆக யேக்கர் 9. 3 டி 76 இந்த நிலத்தில் யென்னால் சேகு முத்த லெப்பைக்கு கலத்து வூளி 10. யித்துக்காக விடப்பட்டிருக்குற மேல்க்கண்ட 131 நெம்பர் கலயில் தஞ்சாவூர் றோ 11. ட்டுக்கு தெர்க்கு. றாமசுவாமியின் கணபதி செய்க்கு வடக்கு வைத்திலிங்கம் பி 12. ள்ளை நொச்சியலடிக்கு கிளக்கு. தண்ணிபந்தலுக்கு மேர்க்கு இதர்க்கு 13. ளிப்பட்ட நன்செய் டி 30 போக பாக்கி யேக்கர் 3 டி 46 இந்த நன்செய் நிலத்தை மேற்படி திரு 14. வறம்பூர் கிராமத்தில் யென்னால் சன்னதி குளத்துக்கு போகுறபாதைக்கி கி 15. ளக்கு முத்துவய்யர் கொல்லைக்கும் மேர்க்கு வுசேன் ராவுத்தன் கொ 16. ல்லைக்கு தெர்க்கு சின்ன அக்கறாறத்து வீதிக்கு வடக்கு இதர்க்குள்பட்ட 17. புன்செய் நிலத்தில் கட்டப்பட்டிருக்கிற மேல்படி மஜீதின் பள்ளிவாசலில் தர்ம சிலவுக்காக 18. மேல்படி பள்ளிவாசல் பேறால் நான் சர்வ வில்லங்க சுத்தியாய் தானம் 19. செய்து குடுத்துவிட்டபடியால் மேல்படி நன்செய் நிலத்தில் நாளது தேதி முதல் வருஷாவருஷம் 20. வறப்பட்ட வருமானத்தை கொண்டு மேற்படி பள்ளிவாசலில் நித்ய வெ 21. னக்கு கதிப்பும் வசிளசாடுக மேற்படி வகையரா சாதிலவாரிது சிலவும் பின்னும் 22. வருஷம 1க்கு வரப்பட்ட இத்தொண்டு குதுபா றம்ஜான் மாசம் யெங்கிற 23. 30 நோம்பு இந்த வகையறாவின் சிலவும் நானுள்ளவரையில் நானே 24. மானேஜறாயிருந்து நடுத்திக் கொண்டு வருகிறதும் தவிற யெனக்குப் 25. பிற்க்காலம் யென்புத்திர பவுத்திற பாறம்பரையாயி யெண்ணெண்ணைக்கும் 26. டத்திவறவேண்டியது. ஒருவேளை அவர்களால் நடத்த அட்டி சம்ப 27. வித்தால் ஒடனே அவர்களை நீக்கி திருச்சிறாப்பள்ளி கோட்டையில் 28. ருக்கம் ஒரைவின் முரையார் யாருக்க மேற்படி தர்மம் நடத்த நேமுகம் செய்</poem><noinclude></noinclude> 0amrfdtvfp29to0091tnet9c2pcfyhf பக்கம்:ஓ மாம்பழமே.pdf/8 250 580676 1839236 1720733 2025-07-05T09:03:55Z LavanyaMohan vglug 14860 1839236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|4||ஓ! மாம்பழமே!}}{{rule}}</noinclude> "இந்த மாம்பழப் பிரச்னையைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எங்கள் தொழிற்கட்சி அதிகாரத்துக்கு வந்ததும் திருப்திகரமாகத் தீர்த்து வைத்து விடுகிறோம். அது வரையில் ஒற்றுமையைக் கைவிடாதிருங்கள்." லண்டன் 'டைம்ஸ்' பத்திரிகையில் மாம்பழத்தில் என்னென்ன வகை விடமின்கள் உண்டு என்பதைப்பற்றியும் அது உடம்புக்கு நல்லதா இல்லையா என்பதைப்பற்றியும் விவாதம் நடந்துவந்தது. டாக்டர்களும், விஞ்ஞானப் புலவர்களும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிட்டு வந்தனர். 'பஞ்ச்' பத்திரிகையில், மிஸ்டர் ஜான் புல் கையில் ஒரு மாம்பழத்தை வைத்துக்கொண்டு, "தின்பதா; வேண்டாமா? என்று யோசிப்பதுபோல் ஒரு கார்ட்டூன் படம் வெளியாற்று. அதைப் பார்த்துவிட்டு, 60,000 வாசகர்கள் பிரித்தார்கள். "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்றதற்கு, "என்னவோ சிரித்தோம்" என்று பதில் சொன்னார்கள். இந்த விவாதத்தைப்பற்றி ஆசிரியர் பெர்னாட் ஷா அவர்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ளச் சில பத்திரிகை நிருபர்கள் சென்றார்கள். அவர் தம் அபிப்பிராயத்தை இரண்டே வார்த்தையில் தெரிவித்துவிட்டார். அதாவது, 'செத்துப்போங்கள்!' என்று சொன்னார். இங்கிலாந்தின் நிலைமை இவ்வாறிருக்க, இனி இந்தியாவில் இது சம்மந்தமாக நிகழ்ந்த சம்பவங்களைச் சற்றுக் கவனிப்போம். இந்தியாவிலுள்ள தினசரிப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும், இங்கிலாந்தில் நடந்த மேற்படி விவாவதத்தைப் பற்றிய சகல விவரங்களும் தந்தியில் வந்து பிரசுரமாயின. ஆனால் அவைகளுக்கு இந்த விவாதத்தைப்பற்றி அபிப்பிராயம் எழுதுவதில் மிகக தொல்லை ஏற்பட்டது. முதலில் மிதவாதப் பத்திரிகைகள் சர்ச்சிலின் கூற்றைப் பலமாகக் கண்டித்துப் பிரிட்டிஷ் மந்திரிகள் இந்திய மாம்பழம் சாப்பிட்டது அவர்களுடைய சமரச நோக்கத்தைக் காட்டுகிற<noinclude></noinclude> 76maebw9cf9k11rmg7valjbpn6adzk9 பக்கம்:ஓ மாம்பழமே.pdf/9 250 580677 1839252 1720734 2025-07-05T10:31:27Z LavanyaMohan vglug 14860 1839252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|ஓ ! மாம்பழமே!||5}}{{rule}}</noinclude> தென்று பாராட்டி எழுதின. பின்னால், ராதாமியர் பிரபுவின் கட்டுரை வெளியானபோது தேசீயப் பத்திரிகைகளுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அவை, இனிமேல் ஒரு மாம்பழங் கூட இந்தியாவை விட்டுப் போகாமல் தீவிர பிரசாரம் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தின. அந்த மாதம் வெளியான 'கலைமகள்' பத்திரிகையில் 'மாம்பழக் கவிராய 'ரைப்பற்றி ஒரு கட்டுரையும். 'கலா நிலயம்' பத்திரிகையில் "முக்கனியில் மாங்கனி சேர்ந்த்தா?" என்பதைப்பற்றி ஓர் ஆராய்ச்சியும் வெளியாயின. ஸ்ரீமதி 'காசினி' அம்மாள் மாதர் பக்கத்தில் மாங்காய் ஊறுகாய்களைப்பற்றி நாக்கில் ஜலம் ஊறும்படி எழுதியிருந்தார். 'மாம்பழங்களுக்கே இந்தப் பாடுபடுகிறார்களே! வடுமாங்காயின் ருசியை பார்த்துவிட்டால் என்னதான் சொல்வார்களோ? என்று 'விகடன்' ஹாஸ்யரசத்துடன் எழுதினான். பிரிட்டிஷ் மக்களை இந்திய மாம்பழங்கள் அதிகமாகச் சாப்பிடும்படி தூண்டி இந்தியாவினிடம் சிநேகப்பான் மையை வளர்ப்பதற்காக ஒரு தூதுக் கூட்டத்தை அனுப்ப வேண்டுமென்று மிதவாதப் பிரமுகர்கள் கூறினார்கள். திடீரென்று இந்தப் பிரச்னையில் வகுப்புவாத வாசனை வீசலாயிற்று. மேன்மை தங்கிய ஆகாகான் சாகிப் லண்டனிலிருந்து, "இந்த நெருக்கடியான சமயத்தில் எனது முஸ்லிம் சகோதரர்கள் ஒற்றுமையைக் கடைப்பிடிப்பார்களென்றும், அதே சமயம் ஹிந்துக்களிடம் நேசப்பான்மையுடன் இருப்பார்களென்றும் நம்புகிறேன்' என்று ஒரு செய்தி அனுப்பினார். மெளலானா ஷவுகத் அலி சாகிப் அவர்கள் கிலாபத் கமிட்டியைப் புனருத்தாரணம் செய்து, முஸ்லிம் தொண்டர் படை திரட்டுவதின் அவசியத்தை வற்புறுத்தினார். "இந்தியாவில் பழுக்கும் மாம்பழங்களில் 100க்கு 40 வீதம் எங்களுக்குக் கொடுத்தாலன்றி, இந்த ஹிந்துக்கள் சுயராஜ்யம் அடைவதைப் பார்த்துவிடுகிறேன்" என்று கர்ஜித்தார் டாக்டர் ஷாபத் ஆமத்கான்.<noinclude></noinclude> gf9vze9191my968ymrfubox28hmkmxh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/172 250 617429 1839203 1825575 2025-07-05T03:50:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசாமிய மொழி|136|அசாமிய மொழி}}</noinclude>நூல்களை இயற்றியுள்ளனர். இக்காலப் பகுதியில் சமய நூல்கள் மட்டுமன்றி, நாடகங்கள் போன்ற வேறு இலக்கியவகை நூல்களும் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசாமிய மொழியில் எழுதப்பட்டிருப்பினும் இந்நூல்களில் வடமொழிக் கலப்பும் செல்வாக்கும் அதிகமாகவே உள்ளன என்பர். அகோம் மன்னர்களின் கீழ் அரசவைக் கவிஞர்களாக வாழ்ந்த பலர் வடமொழி நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கவிச் சக்கரவர்த்தி என்ற புலவர். இவர் சில சிங்கா என்ற மன்னனின் (கி.பி. 1714-44) அரசவைப் புலவராக இருந்தவர். சங்கராசுரவதம், கீத கோவிந்தா போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இவரைப் போன்ற பல்வேறு கவிஞர்கள் வாழ்ந்த காலம் இது. எனினும் இக்காலக் கவிதைகள் செறிவுடைய இலக்கியங்களாக இல்லை என்றே அறிஞர் கருதுகின்றனர். கி.பி. 17-ஆம் நூற்றாண்டு முதல் இன்றுவரையுள்ள காலப் பகுதியே இக்காலம் என்று கருதப்படுகிறது. ஆங்கிலேயர் வரவிற்குப் பின்னர் அசாமிய மொழியில் ஏற்பட்ட பலவேறு மாற்றங்கள் இம்மொழியையும் வளரும் மொழியாக ஆக்கியுள்ளன. பல்வேறு அகராதிகள், இலக்கணங்கள், கவிதை நூல்கள், நாடகங்கள், உரைநடைகள் போன்ற பல துறைகள், இம்மொழி வளர்ந்துள்ளமைக்குச் சான்று பகர்கின்றன. 1836-இல் வங்காள மொழி இப்பகுதியில் பல நிலைகளில் நுழைந்த போதிலும், நாட்டு விடுதலைக்குப் பின்னர் அசாமிய மொழி நன்கு வளரத் தலைப்பட்டது. 1836-இல் இங்குவந்த பிரௌன் (Dr. Wathan Brown), காட்டர் (O.T. Cotter) போன்றவர்களும், பின்னர் வந்த ஆங்கிலேயப் பாதிரிகளான கரே (Carey), மார்சுமன் (Marshman) போன்றவர்களும் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கன. அசாமிய மொழியில் எழுதப்பட்ட வேதாகமம் 1813-இல் முதல் அச்சு நூலாக வெளிவந்தது. பின்னர்ப் பல்வேறு இலக்கண நூல்களும் (A grammar of the Assamese Language (W. Robinson); Grammatical Notice of the Assamese Language) உருவாயின. இவர்களைப் போன்றே அசாமிய அறிஞர்களுள் சிலரும் இம்மொழி வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இவர்களுள் ஆனந்தராம் தெக்கியல் புக்கன் (Anandaram Dhekial Phukan), குணாகிராம் பருவா (Gunahiram Barua, 1837–95), ஏமச்சந்திர பருவா (1835-96) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுல் ஏமச்சந்திர பருவா இக்கால அசாமிய மொழியின் தந்தையாகக் கருதப்படுகிறார். இக்காலத்தில்தான் அசாமியமொழி புது வேகத்துடன் வளர்ந்தது எனக் கருதலாம். கவிதை, நாடகம், உரைநடை போன்ற துறைகளில் இது நன்கு வளர்ந்துள்ளது. இலட்சுமிநாத பெசு பருவா (1868-1938) மிகச் சிறந்த கவிஞர்; உரைநடையாளர்; இதழாசிரியர். இவர் எழுதிய படைப்பிலக்கியங்கள் பலவாகும். அசாமியமொழியின் சொற்களஞ்சியம் இவரால் வலுப்பெற்றது. இவர் தேசியப் பாடல்களும் பல புனைந்தார். மக்களிடையே நல்ல விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்த பெருமை இக்கவிஞரைச் சாரும். இவர் இயற்றிய ‘என் திருநாடே’ (Oh my Beautiful Land) என்ற கவிதையே இன்றைய அசாமிய நாட்டின் தேசப்பாட்டாகக் (State Anthem) கருதப்படுகிறது. இவரைப் போன்றே பல கவிஞர்கள் அசாம் மொழிக் கவிஞர்களாகக்காலம் கடந்து நிற்கும் கவிதைகளை யாத்துள்ளனர். பத்மநாத கோகெய்ம் பருவா (Padmanath Gohim Barua), சந்திரகுமார் அகர்வாலா, ஆனந்த சந்திர அகர்வாலா (1874–1940), இதேசுவர் பார்பருவா (1876–1939), சந்திரதர் பருவா, இலட்சுமி ராம் பருவா, தயானந்தர் பட்டாச்சாரியா, உமேசு சந்திர சௌத்திரி, பரேந்திர குமார் பட்டாச் சாரியா போன்ற பல கவிஞர்கள் இம்மொழியின் கவிதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கவர்கள். கவிதையைப் போன்றே பிற துறைகளும் இம்மொழியில் நன்கு வளர்ந்துள்ளன. நாடகம், புதினம், குறு நாவல், சிறு கவிதைகள் போன்ற பல துறைகள் நன்கு வளர்ந்துள்ளன. அசாமிய மொழியில் பல்வேறு கிளை மொழிகள் {Dialects) உள்ளன. பொதுவாக இவற்றைக் கிழக்கு, மேற்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மேற்குப் பிரிவையும் இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பர். கோவல்பாரா மாவட்டத்தில் பேசப்படும் கிளைமொழி காமரூபி (Kamrupi) எனப்படும். கிழக்குக் கிளைமொழியே நிலைமொழியாகக் (Standard) கருதப்படுகிறது. இது சிபசாகர் போன்ற மாவட்டங்களில் பேசப்படுகிறது. எனினும், பண்டை இலக்கியங்கள் மேற்குக் கிளை மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இம்மொழியில் எட்டு உயிர் ஒலியன்களும் இருபத்தாறு மெய் ஒலியன்களும் உள்ளன. உயிர் ஒலியன்களில் குறில் நெடில் வேற்றுமை இல்லை. பிற இந்திய மொழிகளைப் போன்றே அசாமிய மொழியிலும் பெயர், வினை, இடை (Particles) என்ற மூன்று வகைச் சொற்களைக் காணலாம். இவற்றுள் இடைச்சொற்கள் மிகக்குறைவாகவே உள்ளன. பிற மொழிகளைப் போன்றே இம்மொழியிலும் பெயர்ச் சொற்கள் அமைந்துள்ளன. பொதுவாக<noinclude></noinclude> 44a2lahmqgyix6zxe8r7jfccnyt3wri பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/173 250 617474 1839204 1825729 2025-07-05T03:56:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசாமிய மொழி|137|அசிசி}}</noinclude>இவை எண், பால், வேற்றுமைத் திரிவொட்டுகளைக் (Inflexional suffix) கொண்டு இவ்விலக்கணக் கூறுகளைக் காட்டி நிற்கின்றன. ஒருமை, பன்மை என்ற இரு எண்களே இதன்கண் உள்ளன. இம்மொழி இலக்கணத்தில் பால் பகுப்பு இல்லை என்பர். எனினும் ஆண், பெண் பால்களையும், ஒன்றன்பாலினையும் (Neuter: காணமுடிகிறது. முன்னர்க் குறிப்பிட்டபடி பல்வேறு பெயர்கள் பல ஒட்டுகளையும் பெண் (Maiki), ஆண் (Mota) போன்ற சொற்களையும் கொண்டு ஆண், பெண் பால்களைக் காட்டுகின்றன (manuh–to ‘மனிதன்’; manuh–zni ‘பெண்’). இம்மொழியில் காணப்படும் வேற்றுமைகளை எழுவாய், செயப்படு பொருள், கருவி, கு வேற்றுமை, உடைமை வேற்றுமை, இடவேற்றுமை என ஆறு வேற்றுமைகளாகப் பிரிப்பர், இவற்றை உணர்த்தும் ஒட்டுகளும் உள்ளன. எழுவாய் வேற்றுமை ஒட்டோடும் ஒட்டின்றியும் காணப்படுகிறது. ::{| |manuh || || ‘மனிதன்’ |- |manuh–e || || ‘மனிதன்’ |- |manuh–k || || ‘மனிதனை’ |- |manuh–ini || || ‘மனிதனுக்கு’ |- |manuh–r || || ‘மனிதனுடைய’ |- |manuh–t || || ‘மனிதனிடம்’ |- |manuh–re || || ‘மனிதனால்’ |} மேலும், இம்மொழியில் குறிப்பிட்ட பண்பை (Definiteness) உணர்த்தும் ஒட்டுகளும் சொற்களும் காணப்படுகின்றன. தமிழ் போன்ற மொழிகளில் இப்பண்பு (manuh ‘மனிதன்’ manuh–to ‘குறிப்பிட்ட மனிதன்’) காணப்படுவதில்லை. இவ்வொட்டுகளிலும் பல வகைகள் உள்ளன. பதிலிடு பெயர்களும் (Pro–nouns) பல உள்ளன. தன்மை, முன்னிலை, படர்க்கைப் பதிலிடு பெயர்களுடன் சுட்டுப் பெயர்களும் காணப்படுகின்றன. தன்மை, முன்னிலைப் பெயர்கள் பால் காட்டுவதில்லை. பிற பதிலிடு பெயர்கள் பால் காட்டுவதுடன் உணர்வு ஒருமையையும் சுட்டுகின்றன. உணர்வு ஒருமையிலும் பொதுவான உயர்வு, சிறப்பு உயர்வு என இருவகை உயர்வுப் பண்புகளையும் காணலாம். எடுத்துக்காட்டாக, முன்னிலையில் வரும் ti என்ற சொல் நீ என்றும், tumi என்பது நீர் என்றும், apuni என்பது நீங்கள் என்றும் பொருள்படும். சுட்டுப் பெயர்களிலும் அண்மைச் சுட்டு என்றும் (i ‘இவன்’, ei ‘இவள்’, ei–to ‘இது’) சேய்மைச் சுட்டென்றும் இரு பிரிவுபடும். இவற்றில் சேய்மைச் சுட்டு அண்மைச் சேய்மைச் சுட்டு என்றும், தொலைவுச் சேய்மைச் சுட்டு என்றும் பிரிவுபடும். வினைச்சொற்கள் தொழில்காட்டும் சொற்களே. இவை இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் திரிவொட்டுகளை அடுத்து வரும். ஆனால் எண் காட்டுவதில்லை; பாலும் காட்டுவதில்லை. இதனால் ஒரே வினைமுற்று ஒருமை, பன்மை காட்டும் எழுவாய்களுடன் வர முடியும். mizao ‘நான் போகிறேன்’ iamza0 ‘நாம் போகிறோம்’ எனக் கூறமுடியும். எண், பால் ஆகியவை எழுவாயால்தான் காட்டப்படுகின்றன. பல்வேறு காலங்களைக் காட்டும் கால ஒட்டுகளாலேயே காலம் காட்டப்படுகின்றது. ::{| |mikha–o || || ‘நான் உண்கிறேன்’ |- |mikha–lo || || ‘நான் உண்டேன்’ |- |mikha–m || || ‘நான் உண்பேன்’ |} போன்ற எடுத்துக் காட்டுகள் இப்பண்பைக் காட்டும். எதிர்மறை n என்ற முன்னொட்டால் காட்டப்படுகின்றது.{{float_right|எஸ்.அ.}} {{larger|<b>அசாய்கர்:</b>}} மத்திய பிரதேச மாநிலத்தில் பன்னா மாவட்டத்தில் உள்ளதோர் ஊர். மத்திய பிரதேசத்துடன் இணையும் முன்னர் இப்பகுதியை விந்தியப் பிரதேசம் என்றனர். இங்கு, கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற வரலாற்றுப் புகழ் மிக்க கோட்டை ஒன்றுள்ளது. இங்குள்ள சமணக் கோயில்களில் அழகு மிக்க சிற்பங்கள் உள்ளன. மக்கள் தொகை, 8366 (1981). {{larger|<b>அசிசி</b>}} என்னும் நகரம் இத்தாலியில் அம்பிரியா (Umbria) பகுதியில் பெரூசியா (Perugia) மாநிலத்தில் உள்ளது. பெரூசியாவிற்கு 24 கி.மீ. தென்கிழக்கில் அசிசி (Assisi) அமைந்துள்ளது, சுபாசியோ (Subacio) மலை முகட்டில் 400 மீ. உயரத்தில் அமைந்துள்ள இந்நகரத்திலிருந்து தைபர் (Tiber), தோபினோ (Topino) ஆறுகளைக் கண்குளிரக் காணலாம். இங்குச் சணல், தேனிரும்புப் பொருள்கள், செயற்கை உரங்கள், விசைக் குழாய்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனையொட்டியுள்ள பகுதியில் ஒலிவத் (Olive) தோட்டங்களும், கனிப்பொருள் ஊற்றுகளும் (Mineral springs) உள்ளன. பிரான்சிசுகன் மடாலய முறையை (Franciscan Order) உருவாக்கிய பிரான்சிசு முனிவர் (St. Francis) இவ்வூரில்தான் பிறந்தார். இங்கு, இடைக்காலத்தில் கட்டப்பட்ட கோட்டையொன்று உள்ளது. 17–ஆம் நூற்றாண்டிலிருந்து இந்நகரின் மக்கள் தொகையில் பெரும் மாற்றம் ஒன்றுமில்லையெனலாம். இங்கு உள்ள பெர்டோனோ-டி-அசிசி (Perdono-de-Assisi) என்னும் பயணத்தலம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. பிரான்சிசு முனிவர் கட்டிய திருச்சபை இந்நகரின்<noinclude></noinclude> h2w21ubv36op5jtg9namfgalgb76gol பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/174 250 617489 1839205 1825767 2025-07-05T04:00:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசிசியா|138|அசிதன்}}</noinclude>வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. அசிசியின் மக்கள் தொகை ஏறத்தாழ 20,000 ஆகும் (1980). {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 174 |bSize = 480 |cWidth = 194 |cHeight = 160 |oTop = 109 |oLeft = 38 |Location = center |Description = }} {{center|அசிசியில் உள்ள திருச்சபை}} {{larger|<b>அசிசியா</b>}} உலகத்தில் வெப்பம் மிகுந்த ஊர். வட ஆப்பிரிக்காவில் இலிபியா (Libya) நாட்டின் தலைநகரான திரிபோலிக்கு அண்மையில் இவ்வூர் உள்ளது. இதனை அல் அசிசியா (Al-Azizia) என்றும் கூறுவர். இது ஒரு வணிக மையம். இங்கு 60. 6 சென்டிகிரேடு வெப்பம் பதிவாகியுள்ளது. (141° பாகை பாரன்கீட்). {{larger|<b>அசித கேச கம்பளி</b>}} என்பவர் புத்தர் காலத்தில் வாழ்ந்தவர். இவர் சமய நிந்தனையாளர்கள் அறுவருள் ஒருவர். பீடகங்கள், சாமண்ணாபால சுத்தம், திகநிகாயம் போன்ற பௌத்த சமய நூல்கள் இவர் பெயரைக் குறித்துள்ளன. புராண கசியப்பர், மாக்காளி கோசாலர் போன்றவர்களைப் போல் இவரும் ஒருகாலத்தில் வேலைக்காரராக இருந்தவரே. தம் குருநாதரிடமிருந்து தப்பியோடிய இவர் வாழ வசதியற்ற நிலையில் துறவியாக மாறியவர். மானிடரின் முடியிலிருந்து (கேசம்–முடி) தயாரிக்கப் பெற்ற தரங் குறைந்த கம்பளத்தைப் பயன்படுத்தியதால் இவருக்குக் கேச கம்பளி என்ற சிறப்புப் பெயர் வந்தது போலும். ஆடைகளிலேயே வெறுப் பூட்டுவதான இக்கம்பளியை இவர் ஆண்டு முழுதும் எல்லாப் பருவங்களிலும் பயன்படுத்திக் கொண்டார். ஏனைய துறவிகளைப் போன்று இவரும் தலையை மழித்துக் கொண்டார். தீவிரமான சமய நிந்தனையாளரான இவர் வேதங்கள் மற்றும் பிராமணக் கோட்பாடுகளைப் புறக்கணித்து ஒதுக்குவதில் சிறிதும் அச்சப்படாதவர், மறு பிறப்பு, பழி பாவம், மற்றும் சடங்குகளைப் பற்றிய கொள்கை கோட்பாடுகளை மறுத்தவர். உலகம் நால் வகைப் பூதங்களின் சேர்க்கை என்றும், உணர்வுகளும், ஆன்மாவும் பொருள்களின் இரசாயன விளைவேயன்றி வேறொன்றுமில்லை எனவும் கொண்டவர். பாவபுண்ணியக் கோட்பாடுகளை நம்பாதவர். கச்சாயனர் போதித்த இரு பொருளுண்மைக் கோட்பாட்டை எதிர்த்தவர் (பருப்பொருள், உயிர் இருவேறெனக் கொள்ளும் கோட்பாடு). புத்தரும் மகாவீரரும் அசிதரின் தத்துவத்தைச் செயலின்மைக் கோட்பாடெனக் கூறினர். அசாத சத்துரு மன்னர் அசிதரைச் சென்று பார்த்ததாகத் தெரிகிறது. அசிதர் அவருக்கு ஊழிக் காலத்தின் முடிவில் அனைத்தும் அழிந்துவிடும் என்னும் கோட்பாட்டைப் போதித்தார். அசிதர் புத்தரைவிட வயதில் மூத்தவர் {{larger|<b>அசிதர்{{sup|1}}</b>}} என்பவர் சித்தார்த்தர் பிறந்த பொழுது அவர் உடற்கூறுகளைப் பார்த்து, வருங்காலத்தில் அவர் இவ்வுலக இன்பங்களைத் துறந்து மெய்யறிவு பெறுவார் என்று பாராட்டியவர். ஒருவரைப் பார்த்த உடனேயே அவரது எதிர்காலம் உணர்த்த வல்லவர். 2. இந்திரனது வெகுளியால் நெறி தவறி ஒழுகியவர்; பின்னர், இடையறாது சிவபெருமானை வழிபட்டுத் திருந்தியவர்; அறவுணர்வு மீளப் பெற்றவர். பெருமான் அருளால் நெடிது வாழும் பேறும் பெற்றவர். {{larger|<b>அசிதன்{{sup|1}}</b>}} மகாபாரதத்தில் கவுரவர் தலைவனாகிய திருதராட்டிரனின் நூறு மக்களுள் ஒருவன். 2. உதிட்டிரன் எனப்படும் தருமனுக்கு அறத்தின் சிறப்பினை எடுத்து விளக்கிய முனிவர்களுள் ஒருவர். 3. ஞாயிற்றின் மரபில் தோன்றிய மன்னர்களுள் ஒருவர். இவர் இறந்த போது, உடன் உயிர் துறக்க முற்பட்ட இவர் மனைவி கருவுற்றிருப்பதனை அறிந்த சியவனமுனிவர், அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தனால் அம்மரபு தழைத்து விளங்கவிருக்கும் உண்மையை எடுத்துக் கூறி, அவளைச் சாவாது தடுத்துக் காத்தார். 4. தீர்த்தங்கரர் எனப்படும் சமண சமயாசாரியர்களுள் ஒருவர். மத்திய காஸத் தீர்த்தங்கரர் 24 பேர்களுள் இவர் இரண்டாமவராக விளங்குபவர். இவர் சீதசத்துரு மாமன்னருக்கும் விசயசேனைக்கும் பிறந்தவர் என்றும் 450 வில் உயரமுடைய உருவங்கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. {{nop}}<noinclude></noinclude> ifhinl4bt3tqb2ktleowldrow3386b5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/175 250 617517 1839206 1825807 2025-07-05T04:09:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசிமுல்லாக்கான்|139|அசிரிய நாகரிகம்}}</noinclude>5. அங்க நாட்டு மன்னனுக்கு வைதிக கருமம் ஆற்றுபவர்களுள் ஒருவர். சிவன் கோயிலிலிருந்து வாழையினைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்தி அதன் விளைவாக நரகம் எய்தினார் என்று கூறப்பட்டுள்ளது. {{larger|<b>அசிமுல்லாக்கான் (1834-1859)</b>}} இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகளுள் ஒருவர். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கான்பூர் மாநகரில் 1834–ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் அரசாங்கப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தனிப் பெரும் திறமையின் காரணமாக இவர் நானா சாகேபின் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று நானா சாகேபின் வழக்கில் வாதாடினார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவுக்குத் திரும்பியவுடன் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முற்பட்டார். வெள்ளையர் ஆட்சியை வேரறுக்க நானா சாகேபு செய்த போராட்டத்தில் உறுதுணையாக நின்றார். 1857–ஆம் ஆண்டு மூண்ட பெரும் புரட்சி தோற்ற போது, ஆங்கில அரசுக்கு அகப்படாமல் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று, நானா சாகேபுடன் நேபாள நாட்டு எல்லைக்குச் சென்றுவிட்டார். அங்கு இவர், 1859-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் காலமானார். {{larger|<b>அசிர்கர்</b>}} என்பது ஒரு கோட்டை; தக்காணத்திலுள்ள காந்தேசம் (Khandesh) என்னும் பகுதியில் உள்ளது. இதனை மாளவ அரசர் கட்டினார் என்பர். இக்கோட்டை கட்டப்பெற்றுள்ள இடம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, அசிர்கர் (Asirgarh) கோட்டையைக் கைப்பற்ற எண்ணிய அக்பர் தம் வாழ்நாளின் இறுதியில் அதன் மீது படையெடுத்தார். இக்கோட்டை முற்றுகையிடப்பட்டது. பல மாதங்கள் கடந்தும் அக்பரால் இதைப்பிடிக்க இயலவில்லை. இறுதியாகப் பெருந்தொகையைக் கையூட்டாகக் கொடுத்து கி பி. 1601–இல் அசிர்கர் கோட்டையை அக்பர் கைப்பற்றினார். அசிர்கர் கோட்டையின் வாயிலைப் பொன் திறவுகோலால் அக்பர் திறந்தார் என்று இந்நிகழ்ச்சியை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். {{larger|<b>அசிரிய நாகரிகம்</b>}} பண்டைய நாகரிகங்களுள் ஒன்று. ஆற்றங்கரைகளில் தோன்றிய பழம்பெரும் நாகரிகங்களுள் எகிப்திய நாகரிகத்துக்கு அடுத்த படியாக வைத்து எண்ணப்படக் கூடியது மெசபடோமிய நாகரிகமாகும். நைல் நதிக்கரையில் எகிப்திய நாகரிகம் தோன்றியது போலவே, தைகிரிசு (Tigris), யூப்ரடிசு (Euphrates) என்ற இரு ஆறுகளின் இடையில் செழிப்பான சமவெளியில் மெசபடோமிய நாகரிகம் தோன்றியது. அந்நாகரிகம் பல கிளைகளாகக் கவடுவிட்டுச் சுமேரிய, பாபிலோனிய, அசிரிய, சாலடிய நாகரிகங்கள் என்னும் பெயரில் விளங்குகின்றன. இவை நான்கும் ஒன்றோடொன்று பெரிதும் தொடர்பு கொண்டவை. எனினும், இவற்றுள் பெரிதும் தனிப்பட்ட இயல்புடையது அசிரிய நாகரிகமாகும் (Assyrian Civilization). அசிரிய நாகரிகம் படைவலிமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. போர் வெறி மக்களிடம் மிகுந்திருந்தது. சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்கள் போர்வீரர்கள். போரில் வெற்றி பெறுதல் ஒன்றே இவர்களின் உயர் குறிக்கோளாயிருந்தது. போரால் வெல்லப்பட்ட நாடுகள் அடக்கு முறையாலேயே ஆளப்பட்டன. எப்போதும் போரிலீடுபட்ட காரணத்தால் விரைவிலேயே இவர்களது வலிமை குன்றியது. அடக்குமுறைக்குட்பட்ட நாடுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டன. இதனால், அசிரியப் பேரரசு அழிந்தொழிந்தது. அடக்கு முறையின் அடிப்படையில் அமைந்த படைவீரர் ஆட்சி நெடுநாள் நீடிக்காது என்ற வரலாற்று உண்மைக்கு அசிரிய நாகரிகம் ஒரு சான்றாகும். மெசபடோமியாவின் வடக்குப் பகுதியில் அசிரிய நாடு அமைந்துள்ளது. மெசபடோமியாவின் மேற்குப் பகுதி ஒரே சமவெளியாகக் காட்சியளித்த போதிலும், அதன் வடபகுதி மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டிருந்தது. அசிரிய நாட்டின் பெரும்பான்மையான பகுதி மலைப்பாங்கான இடமாகும். தைகிரிசு ஆற்றங்கரையில் அது அமைந்திருந்தாலும் அந்நீரைப் பயன்படுத்தக்கூடிய சமவெளிகள் அங்கு ஒரு சிலவே இருந்தன. எனவேதான், அசிரியர்கள் அண்டை நாடுகளைப் பிடிப்பதில் பெரிதும் அக்கறை காட்டலாயினர். வளமாக வாழ்வதற்கான வசதிகளில்லாமையாலும் சுற்றிலும் பகைவர்களின் தாக்குதலுக்கு உட்படக்கூடிய நிலையிலிருந்ததாலும் அசிரியர்கள் போர்க்குணத்தையும் வல்லாட்சி வெறியையும் இயல்பாகவே பெற்றிருந்தார்கள். ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டளவில், தைகிரீசு ஆற்றின் வடபாகத்தில் ஒருவகை செமிடிக் இனத்தவர் குடியேறினர். அசுர் என்னும் சூரியக் கடவுளை அவர்கள் வணங்கி வந்ததால் அவர்களுக்கு அசிரியர் என்ற பெயர் வழங்கலாயிற்று. பாபிலோனியா முதலிய இடங்களிலிருந்து வந்த செமிடிக் இனத்தவர்களோடு மலைகளில் வாழ்ந்த செமிடிக் அல்லாத இட்டைட்டு, குர்திசு இனத்தவர்களும் நாளடைவில் கலந்துவிட்டார்கள். இக்கலப்பு இனத்தவர் ஒரே தேசிய இனமாக மாறித் தமக்கென ஓர் அரசனை நினவா (Nineveh) என்ற தலைநகரில் ஏற்படுத்திக் கொண்டனர். தைகிரீசு ஆற்றின் கிழக்குக் கரையில்<noinclude></noinclude> rne4c7mofedfqq4jtirghoyd7lc69c4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/176 250 617572 1839158 1826059 2025-07-04T17:36:01Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசிரிய நாகரிகம்|140|அசிரிய நாகரிகம்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 176 |bSize = 480 |cWidth = 349 |cHeight = 294 |oTop = 52 |oLeft = 79 |Location = center |Description = }} {{center|அசிரியப் பேரரசு}} அமைத்திருந்த அந்நகரிலிருந்து அசிரியர் சிறிது சிறிதாகத் தங்களது நாட்டை விரிவுபடுத்தலாயினர். தெற்கேயிருந்த பாபிலோனியர்க்கும் அசிரியர்க்கும் அடிக்கடி போர் மூண்டது. இறுதியில் கி.மு. 1200 ஆம் ஆண்டளவில் பாபிலோனியாவை அசிரியர் கைப்பற்றினர். கி.மு. 1100–இல் முதலாம் திக்லாத் பிலாசர் என்ற மன்னர் மேற்கேயிருந்த பாலசுதீனத்தைக் கைப்பற்றினார். இட்டைட்டு மக்களை வென்று அவர்கள் நகரங்களைத் தம் நாட்டோடு இணைத்தார். ஏறக்குறைய 1000 சிங்கங்களை வேட்டையாடிக் கொன்றதாகக் கருதப்படும் இவ்வீர மன்னருக்குப் பின் அவர் கைப்பற்றிய நாடுகள் தன்னாட்சி பெற்றன. எனினும், இரும்புக் கனிகள் நிறைந்த கம்போடீசியாவை அவர்கள் கைப்பற்றி, அதன் மூலம் இரும்பாலாய போர்க்கருவிகளைச் செய்து அவற்றைப் பயன்படுத்தி, மீண்டும் ஒரு பேரரசை நிறுவினர். இரண்டாம் சார்கன் (கி.மு. 722-705), சென்னகேரீப் (கி.மு. 785-681). ஆசுர்பானிபல் (கி.மு. 668-626) என்ற அரசர்கள் காலத்தில் அசிரியப் பேரரசு விரிவடைந்தது. அதன் தலைநகரான நினவா ஈடும் எடுப்புமற்ற வாணிப நகராக விளங்கியது. உலகிலேயே மிகப் பெரிய நூல் நிலையம் ஒன்றை ஆசுர்பானிபல் அங்கு நிறுவினார். அவரது மறைவுக்குப் பின் பேரரசு நலியத் தொடங்கியது. பரந்து கிடந்த பேரரசைக் கட்டியாளக்கூடிய திறமை மிக்க ஆட்சி முறையை அமைக்க அசிரியப் பேரரசர் தவறிவிட்டனர். எனவே ஆங்காங்கே கலகங்கள் மூண்டன. தெற்கே தோன்றிய சால்டியர் கவசுக்காரர்களுக்குத் தலைமை தாங்கினர். பாரசீகத்திலிருந்து வந்த மீடியர் ஒரு புறமும் சால்டியர் மற்றொரு புறமும் தாக்கிய போது அசிரியப் பேரரசு நிலை குலைந்தது. நினவா நகரம் கி.மு. 612-இல் சால்டியர் வசமாயிற்று. அந்நகரை அவர்கள் அழித்துத் தரைமட்டமாக்கினர். அசிரியர்களின் ஆட்சி அங்கு நடைபெற்றது என்பதற்குரிய அடையாளம் ஒரு சிறிதும் இல்லாத வகையில் அவ்வழிவு வேலை நடைபெற்றது. {{nop}}<noinclude></noinclude> rqwzzcuyvscgcmmtnzewuscbqb127yk 1839162 1839158 2025-07-04T17:39:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1839162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசிரிய நாகரிகம்|140|அசிரிய நாகரிகம்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 176 |bSize = 480 |cWidth = 349 |cHeight = 294 |oTop = 52 |oLeft = 79 |Location = center |Description = }} {{center|அசிரியப் பேரரசு}} அமைத்திருந்த அந்நகரிலிருந்து அசிரியர் சிறிது சிறிதாகத் தங்களது நாட்டை விரிவுபடுத்தலாயினர். தெற்கேயிருந்த பாபிலோனியர்க்கும் அசிரியர்க்கும் அடிக்கடி போர் மூண்டது. இறுதியில் கி.மு. 1200 ஆம் ஆண்டளவில் பாபிலோனியாவை அசிரியர் கைப்பற்றினர். கி.மு. 1100–இல் முதலாம் திக்லாத் பிலாசர் என்ற மன்னர் மேற்கேயிருந்த பாலசுதீனத்தைக் கைப்பற்றினார். இட்டைட்டு மக்களை வென்று அவர்கள் நகரங்களைத் தம் நாட்டோடு இணைத்தார். ஏறக்குறைய 1000 சிங்கங்களை வேட்டையாடிக் கொன்றதாகக் கருதப்படும் இவ்வீர மன்னருக்குப் பின் அவர் கைப்பற்றிய நாடுகள் தன்னாட்சி பெற்றன. எனினும், இரும்புக் கனிகள் நிறைந்த கம்போடீசியாவை அவர்கள் கைப்பற்றி, அதன் மூலம் இரும்பாலாய போர்க்கருவிகளைச் செய்து அவற்றைப் பயன்படுத்தி, மீண்டும் ஒரு பேரரசை நிறுவினர். இரண்டாம் சார்கன் (கி.மு. 722-705), சென்னகேரீப் (கி.மு. 785-681). ஆசுர்பானிபல் (கி.மு. 668-626) என்ற அரசர்கள் காலத்தில் அசிரியப் பேரரசு விரிவடைந்தது. அதன் தலைநகரான நினவா ஈடும் எடுப்புமற்ற வாணிப நகராக விளங்கியது. உலகிலேயே மிகப் பெரிய நூல் நிலையம் ஒன்றை ஆசுர்பானிபல் அங்கு நிறுவினார். அவரது மறைவுக்குப் பின் பேரரசு நலியத் தொடங்கியது. பரந்து கிடந்த பேரரசைக் கட்டியாளக்கூடிய திறமை மிக்க ஆட்சி முறையை அமைக்க அசிரியப் பேரரசர் தவறிவிட்டனர். எனவே ஆங்காங்கே கலகங்கள் மூண்டன. தெற்கே தோன்றிய சால்டியர் கவசுக்காரர்களுக்குத் தலைமை தாங்கினர். பாரசீகத்திலிருந்து வந்த மீடியர் ஒரு புறமும் சால்டியர் மற்றொரு புறமும் தாக்கிய போது அசிரியப் பேரரசு நிலை குலைந்தது. நினவா நகரம் கி.மு. 612-இல் சால்டியர் வசமாயிற்று. அந்நகரை அவர்கள் அழித்துத் தரைமட்டமாக்கினர். அசிரியர்களின் ஆட்சி அங்கு நடைபெற்றது என்பதற்குரிய அடையாளம் ஒரு சிறிதும் இல்லாத வகையில் அவ்வழிவு வேலை நடைபெற்றது. {{nop}}<noinclude></noinclude> 2g1qmc65v92q81jcczwqisc2bmek8yz 1839207 1839162 2025-07-05T04:20:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசிரிய நாகரிகம்|140|அசிரிய நாகரிகம்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 176 |bSize = 480 |cWidth = 349 |cHeight = 294 |oTop = 52 |oLeft = 79 |Location = center |Description = }} {{center|அசிரியப் பேரரசு}} அமைத்திருந்த அந்நகரிலிருந்து அசிரியர் சிறிது சிறிதாகத் தங்களது நாட்டை விரிவுபடுத்தலாயினர். தெற்கேயிருந்த பாபிலோனியர்க்கும் அசிரியர்க்கும் அடிக்கடி போர் மூண்டது. இறுதியில் கி.மு. 1200 ஆம் ஆண்டளவில் பாபிலோனியாவை அசிரியர் கைப்பற்றினர். கி.மு. 1100–இல் முதலாம் திக்லாத் பிலாசர் என்ற மன்னர் மேற்கேயிருந்த பாலசுதீனத்தைக் கைப்பற்றினார். இட்டைட்டு மக்களை வென்று அவர்கள் நகரங்களைத் தம் நாட்டோடு இணைத்தார். ஏறக்குறைய 1000 சிங்கங்களை வேட்டையாடிக் கொன்றதாகக் கருதப்படும் இவ்வீர மன்னருக்குப் பின் அவர் கைப்பற்றிய நாடுகள் தன்னாட்சி பெற்றன. எனினும், இரும்புக் கனிகள் நிறைந்த கம்போடீசியாவை அவர்கள் கைப்பற்றி, அதன் மூலம் இரும்பாலாய போர்க்கருவிகளைச் செய்து அவற்றைப் பயன்படுத்தி, மீண்டும் ஒரு பேரரசை நிறுவினர். இரண்டாம் சார்கன் (கி.மு. 722-705), சென்னகேரீப் (கி.மு. 785-681). ஆசுர்பானிபல் (கி.மு. 668-626) என்ற அரசர்கள் காலத்தில் அசிரியப் பேரரசு விரிவடைந்தது. அதன் தலைநகரான நினவா ஈடும் எடுப்புமற்ற வாணிப நகராக விளங்கியது. உலகிலேயே மிகப் பெரிய நூல் நிலையம் ஒன்றை ஆசுர்பானிபல் அங்கு நிறுவினார். அவரது மறைவுக்குப் பின் பேரரசு நலியத் தொடங்கியது. பரந்து கிடந்த பேரரசைக் கட்டியாளக்கூடிய திறமை மிக்க ஆட்சி முறையை அமைக்க அசிரியப் பேரரசர் தவறிவிட்டனர். எனவே ஆங்காங்கே கலகங்கள் மூண்டன. தெற்கே தோன்றிய சால்டியர் கலகக்காரர்களுக்குத் தலைமை தாங்கினர். பாரசீகத்திலிருந்து வந்த மீடியர் ஒரு புறமும் சால்டியர் மற்றொரு புறமும் தாக்கிய போது அசிரியப் பேரரசு நிலை குலைந்தது. நினவா நகரம் கி.மு. 612-இல் சால்டியர் வசமாயிற்று. அந்நகரை அவர்கள் அழித்துத் தரைமட்டமாக்கினர். அசிரியர்களின் ஆட்சி அங்கு நடைபெற்றது என்பதற்குரிய அடையாளம் ஒரு சிறிதும் இல்லாத வகையில் அவ்வழிவு வேலை நடைபெற்றது. {{nop}}<noinclude></noinclude> r8dq1u1nwrt49hjaybjr1qejsbyfc5u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/177 250 617573 1839208 1826060 2025-07-05T04:23:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசிரிய நாகரிகம்|141|அசிரிய நாகரிகம்}}</noinclude>அசிரியர்களின் ஆட்சி இராணுவ வலிமையையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. முதலில் பாதுகாப்புக்கென அமைக்கப்பெற்ற இராணுவம், விரைவில் அக்காலத்து நாடுகள் எவற்றிலும் காணப் பெறாத அளவுக்குப் பெருகியது. ஒரு பெரும் இராணுவப் பொறியாகவே அரசு மாறிவிட்டது. போர்த் தளபதிகள் நாட்டிலேயே செல்வாக்கு மிக்க வகுப்பினராக விளங்கினர். போரில் வெல்லப்பட்ட நாடுகளில் இருந்த நிலங்கள் யாவும் அவர்களுக்கே பிரித்து வழங்கப்பட்டன. அதனால், அவர்களுள் ஒரு சிலர் அரசர்களையே நீக்குமளவுக்கு அதிகாரம் பெற்றனர். இரண்டாம் சார்கன் என்னும் தளபதி அவ்வாறு ஆட்சியைக் கைப்பற்றியவர். அசிரியர்களின் நிலைப் படைக்கு நிகராக அக்காலத்தே எந்த நாட்டிலும் படை இல்லை. அசிரியர்கள் சென்றவிடமெல்லாம் வெற்றி பெற்றதற்குப் போர்க் கருவிகளின் வலிமையும் புதுமையும் ஒரு பெருங் காரணமாகும். மற்றும், குதிரைப் படையிலும் அவர்கள் வல்லுநராக விளங்கினர். அவற்றின் மின்னல் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் எதிரிகள் தவித்தனர். தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய முப்படையுடன் அவர்கள் சென்று எதிரிகளின் கோட்டைகளைத் தாக்கினர். கோட்டைகளைத் தகர்க்க, இரும்பாலாகிய முனைகளைக் கொண்ட மதில் தகர் கருவிகளைப் பயன்படுத்தினர். நகர்ந்து செல்லும் முற்றுகைத் தேர்களில் வீரர்கள் அமர்ந்து சென்று எதிரியின் கோட்டைகள் மீது நின்றிருந்த வீரர்களை நேரடியாகத் தாக்கினர். இரும்பாலாகிய வாள்கள், ஈட்டிகள், மெய்யுறைகள், கேடயங்கள், தலைக் கவசங்கள், கனமான விற்கள், இரும்பு முனை கொண்ட அம்புகள் இவற்றுடன் போர் புரிந்த வீரர்களை வெற்றி கொள்ள முடியாமல் ஏனைய வீரர்கள் தவித்தனர். இவ்வாறு தலைசிறந்த போர்க்கருவிகளைப் பயன்படுத்தியதால் மட்டுமே அசிரியர்கள் எதிரிகளை வெல்லவில்லை. பலவகையான அச்சுறுத்தல் முறைகளையும் அவர்கள் கையாண்டு எதிரிகளைப் பணிய வைத்தனர். கைது செய்யப்பட்ட போர் வீரர்களை அவர்கள் ஈவிரக்கமின்றிக் கொன்றனர். தளபதிகளின் உடல்கள் கண்டதுண்டமாக்கப்பட்டு நகரின் பல பகுதிகளில் எறியப்பட்டன. சிறைப்பட்ட கைதிகளின் தோல்கள் உரிக்கப்பட்டன. காது, கை போன்ற உறுப்புகள் வெட்டி எறியப்பட்டன. போர் வீரர்களை மட்டுமன்றி எளிய குடிமக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் அவர்கள் அதே முறையில் துன்பத்துக்குள்ளாக்கினர். நாட்டை ஆட்சி புரிவதில் அசிரியர் தமக்கே உரிய பாணியைக் கையாண்டனர். பேரரசைப் பல மாநிலங்களாகப் பிரித்து அவற்றின் ஆளுநர்களை அவர்களே நியமித்தனர். அவர்களை அவ்வளவாக மன்னர்கள் கட்டுப்படுத்தவில்லை. ஓரளவு மாநிலத் தன்னாட்சியை அவர்கள் வழங்கினர். மத்திய அரசுக்கு எதிராகச் சதி செய்தவர்களும், திறை செலுத்தத் தவறியவர்களும் மட்டுமே கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். நன்கு பயிற்சி பெற்ற ஆட்சித் துறை அலுவலர்கள் மூலம் நாட்டின் நிருவாகம் நடைபெற்றது. தகுதிக்கேற்பவே பதவி உயர்வு வழங்கப்பட்டது. சட்டங்களை மன்னரே ஆக்கினார். அவற்றைச் செயற்படுத்தும் அதிகாரிகளை அவரே நியமித்தார். உள்ளூர் ஆட்சி, வரி வசூல் ஆசி ஆகியவற்றைப் பெரியவர்களே மேற்கொண்டனர். அசிரியச் சட்டங்கள் பாபிலோனியச் சட்டங்களினின்றும் வேறுபட்டிருந்தன. வெவ்வேறு நிலையிலிருந்த மக்களுக்கேற்பத் தண்டனைகள் மிகக் கடுமையாக இருந்தன. சிறு குற்றங்களுக்கும் கூட மரண தண்டனை வழங்கப்பட்டது. அசிரிய சமுதாயம் ஐந்து பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. நிலம்படைத்த பிரபுக்கள், படைத்தளபதிகள் ஆகியோர் சமுதாய மாடியின் மேல்தளத்தில் உலவினர். அவர்களுக்குக் கீழ் பல்வேறு தொழில்களைச் செய்வோரும் கைவினைஞரும் இருந்தனர். அவர்களுக்கும் கீழாகக் கூலி வேலை செய்வோரும். வயலில் வேலை செய்வோரும் நான்காம் வகுப்பினராகக் கருதப்பட்டனர். சமுதாயத்தின் அடித்தளத்தில் உலவியவர்கள் வீட்டிலும் நிலத்திலும் உழைத்த அடிமைகளாவர். அடிமைகளுக்கு நிலம் சொத்து முதலியன கிடையா விலங்குகள்போல் அவர்கள் நடத்தப்பட்டனர். அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டித் தலையை மொட்டையடித்துக் கொள்ளுமாறும், காதுகுத்திக் கொள்ளுமாறும் அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். மக்கள் பெருக்கத்தை அசிரிய அரசு ஆதரித்தது. படைக்கு ஆள் சேர்க்கவே அவர்கள் அத்தகைய கொள்கையைக் கடைப்பிடித்தனர். அதனாலேயே அவர்கள் கருச் சிதைவுக்கு மரண தண்டனை விதித்தனர். பெண்டிரை அசிரியர்கள் மிக இழிவாக நடத்தினர். விலங்குகள் போல் அவர்கள் விலைக்கு வாங்கப்பட்டார்கள். கணவன், மனைவியை எவ்விதம் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம். ஒரு மனைவியிருக்கும் போதே வேறு பல மகளிரை மணந்து கொள்ளவும், வேண்டாத மனைவியரை மணவிலக்குச் செய்யவும், காமக் கிழத்தியர்களோடு உறவு கொள்ளவும், கணவனுக்கு உரிமை தரப்பட்டது. மேலும், சோரம்போன மனைவியைக் கணவர்கள் கொல்லவும் உரிமை பெற்றிருந்தனர். பெண்கள் பொது இடங்களில் முகமூடி இன்றி உலலக் கூடாது. வீட்டில் தனி இடங்களில் அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்தப் பர்தா முறை இன்றும் மேற்கு<noinclude></noinclude> 4s71gf1p7pdh3n9d1g8917s3qi7gwm6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/178 250 617575 1839209 1826062 2025-07-05T04:27:50Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசிரிய நாகரிகம்|142|அசிரிய நாகரிகம்}}</noinclude>ஆசிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம். சமயச் சடங்குகளிலும் பொதுப் பணிகளிலும் ஈடுபட மகளிருக்கு உரிமை இல்லை. பரத்தைமை (Prostitution) சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டது. போர்த் தொழிலில் நாட்டம் கொண்டிருந்த அசிரியர்கள், வேளாண்மை, வாணிகம் போன்ற துறைகளில் போதிய ஆர்வம் காட்டவில்லை. அத்தகைய தொழில்களில் ஈடுபடுதல் தமது குலப் பெருமைக்கே இழுக்கென்று அவர்கள் கருதினர். பெரிய நில புலங்களைப் பிரபுக்கள் வைத்திருந்த போதும் அவற்றைச் சாகுபடி செய்தவர்கள் நிலமற்ற அடிமைகளேயாவர். வாணிகத்தில் ஈடுபட்டவர்கள் அராபியர்கள் என்ற அயலவர்களேயாவர். எனவே நாட்டின் மூலதனம் அயலவர்களின் ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டது. பழைய பாபிலோனிய முறையிலேயே நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டன. நிலக் கிழார்கள் நகரங்களில் இன்பக் களிப்பில் மூழ்கிக் கிடக்க, நாட்டுப் புறங்களில் உழவர்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றித் தவித்தனர். முதலில் செம்பு, பித்தளை ஆகிய உலோகங்களையும், இறுதியில் இரும்பையும் தோண்டி எடுத்து உருக்கிப் பல கருவிகளைச் செய்யக் கற்றிருந்தனர். இந்தியாவிலிருந்து பருத்தியைக் கொணர்ந்து நூல் நூற்று ஆடை நெய்வதிலும் ஒரு சிலர் வல்லவராயிருந்தனர். அழகிய அணிகலன்களை ஆக்கவும் பானைகளை வனையவும் அவர்களுள் பலர் தெரிந்திருந்தனர். பண்டமாற்று முறையில்தான் பெரும்பாலும் வாணிகம் நடைபெற்றது. வெள்ளியாலும் ஈயத்தாலுமான ஒரே நிறையுள்ள உலோகக் கட்டிகளையும் வணிகர்கள் சில சமயங்களில் பண்டமாற்றுக்குப் பயன்படுத்தினர். வங்கி முறையும், கடன்கொடுத்து வாங்கும் முறையும் வழக்கத்திலிருந்தன. 25 விழுக்காடு வரை வட்டி வசூலிக்கப்பட்டது. உள்ளூர் வாணிகமே அன்றி, உலக வாணிகத்திலும் சிலர் ஈடுபட்டனர். அவர்கள் ஒன்றுசேர்ந்து வணிகக் குழுக்களை அமைத்துக் கொண்டனர். அசிரியர்களின் சமயம் எளிமையானது. அசுர் என்ற சூரியக் கடவுளே அவர்களின் முக்கிய தெய்வம். அதனை மகிழ்விக்கவே அவர்கள் போரிலீடுபட்டனர். அசுர் அல்லாத ஏனைய தெய்வங்களை வணங்குபவர்கள் மீது படையெடுத்து அவர்களைக் கொல்வதை அவர்கள் ஒரு புனிதச் செயலாகக் கருதினர். சிறைக் கைதிகளை நரபலியாக அவருக்குப் படைப்பதில் அவர்கள் பேருவகை கொண்டனர். ஆடுமாடு போன்ற விலங்குகளையும் அவர்கள் தெய்வத்துக்குப் பலியிட்டனர். இசுடார் என்ற பெண் தெய்வத்தையும் அவர்கள் வணங்கினர், பிள்ளைப் பேற்றை வழங்கும் தேவதையாக அதனை அசிரியர்கள் கருதினர். கருதினர். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மாயம், மந்திரம் முதலியவைகளிலும் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தாயத்துகளை அவர்கள் அணிந்தனர். போர்த் தளபதிகளை அடுத்து, சமய குருமார்களுக்கே மிகுதியாக நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டன. வரப் போகும் இடையூற்றைக் சுட்டிக் காட்டும் சகுனங்கள் பலவற்றை அவர்கள் மக்களுக்கு எடுத்துக் கூறி வந்தனர். வருங்காலமுணர்த்தும் கலையில் விற்பன்னர்களாக அவர்கள் விளங்கினார்கள். போர் வாழ்க்கையில் மட்டுமே பெரிதும் இன்பங் கண்ட அசிரியர்கள், கலை இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டாததில் வியப்பில்லை. எனினும், போரில் வெற்றி பெறுதற்காக அவர்கள் ஒரு சில கலைகளை வளர்த்தனர். மதில்களை இடிக்க அவர்கள் முற்றுகை இரதங்களையும் தகர்க்குங் கருவிகளையும் கையாண்டனர். போர்க்களத்தில் ஏற்படக் கூடிய வெற்றி தோல்விகளை முன் கூட்டியே அறியச் சோதிடக் கலையை வளர்த்தனர். அதனால், கணிதமும் இலக்கணமும் வளர்ந்தன. ஒரு வட்டத்தை 360 பாகைகளாகப் பிரிக்கவும், பூமியின் மேற்பரப்பிலுள்ள இடங்களைச் சுட்டிக்காட்டக் குறுக்குக்கோடு, நேர்க்கோடு போன்ற கோடுகளைப் பயன்படுத்தவும் அவர்கள் அறிந்திருந்தார்கள். ஐந்து கோள்களின் இருப்பை அவர்கள் உணர்ந்திருந்ததோடு கிரகணங்களைத் துல்லியமாகக் கணிக்கும் முறையையும் நன்கு கற்றிருந்தனர். போர் வீரர்களின் உடல்நலம் மிக முக்கியமாதலால் மருத்துவக் கலையை அவர்கள் நன்கு வளர்த்தனர். 500-க்கும் மேற்பட்ட மருந்துகளை அவர்கள் தயாரிக்கத் தெரிந்திருந்தனர். நோய்க்கான அறிகுறிகளைப் பற்றியும் அவர்கள் விரித்துரைத்தனர். நோய் நீக்க மருந்துகளும் மந்திர முறைகளும் பயன்படுத்தப்பட்டன. அசிரியர்கள் சிற்பக்கலையில் சிறந்து விளங்கினர். கல்லாலாய விலங்குருவங்களும், வெண்கலத்தால் செய்யப்பட்ட சிறகுகளைக் கொண்ட எருதுகளும் அரண்மனையின் வாயில்களை அழகுபடுத்தின. அரண்மனைச் சுவர்களைப் புடைப்போவியங்கள் அழகு செய்தன. வீரர்களின் துணிச்சலான செயல்களையும் விலங்கு வேட்டைகளையும் காட்டும் ஓவியங்களில் உயிரோட்டம் தெரிகிறது. மனித உருவங்களில் கை, கால்கள் எல்லாம் விறைப்பாகவும், நேராகவும் வரையப்பட்டுள்ளன. ஆனால் விலங்குகளின் உருவங்களில் நெளிவு சுளிவுகள் காணப்படுகின்றன. சிறப்பாகச் சிங்கங்களின் பாய்ச்சலும் வீரமும் நன்கு தீட்டப்பட்டுள்ளன. அசுர்பானிபல் என்னும் மன்னரின் சிற்பத்-<noinclude></noinclude> ds571j7oxzxsw09slxjeoh1af42o4f2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/179 250 617577 1839159 1826064 2025-07-04T17:37:16Z Desappan sathiyamoorthy 14764 1839159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசிரிய நாகரிகம்|143|அசின்கோர்ட் போர்}}</noinclude>தில் அவரது எடுப்பான தோற்றமும் வீரமும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அது இன்று இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிகாகோவில் உள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட அசிரியப் பறக்கும் எருதின் வேகம், வலிமை ஆகிய இரண்டும் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 1.pdf |Page = 179 |bSize = 468 |cWidth = 147 |cHeight = 183 |oTop = 130 |oLeft = 42 |Location = center |Description = }} {{center|அசிரியாவிலுள்ள பறக்கும் மருதுச் சிற்பம்}} கட்டிடக் கலையில் அசிரியர்கள் பெரிதும் முன்னேறவில்லை. எனினும், அவர்கள் கல்லைப் பயன்படுத்திக் கோயில்களையும் அரண்மனைகளையும் கட்டினர். வட்டம், வளைவு, குவிமாடம் போன்ற சிறப்பியல்புகளை அவற்றில் புகுத்தினர். அளவில் மிகப் பெரியதாகக் கட்டிடங்களைக் கட்டுவதில் அசிரியர்கள் பெரிதும் இன்பங் கண்டனர். தூண் வரிசைகளை அவர்கள் அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை. அசிரியர்கள், குறிப்பாக அரசர்கள், இலக்கியத்தைப் பெரிதும் பேணி வளர்த்தனர். சான்றாக, அசுர்பானிபல் என்னும் மன்னன் பாபிலோனிய இலக்கியங்கள் பலவற்றைத் தேடி எடுத்து நினவா நகரிலிருந்த நூல் நிலையத்தில் சேர்த்தார். ஏறக்குறைய 22,000 அசிரிய ஆப்பு வடிவ எழுத்துகள் பொறிக்கப்பட்ட களிமண் பலகைகளை அவர் சேகரித்ததாகத் தெரிகிறது. அவற்றுள் பல மந்திர தந்திரங்களைப் பற்றியவை. இன்னும் பல வாணிகம், இராணுவம், வரலாறு, மருந்து தொடர்பான கடிதங்கள் ஆகும். இக்களி மண்பலகைகள் இப்போது இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அம்மன்னா தம் வரலாற்றை ஒரு நூலாக எழுதியுள்ளார். அவர் கடிதங்களில் இலக்கியச் சுவை இருப்பதைக் காணலாம். போர்க்களங்களில் நடைபெற்ற வீரச் செயல்கள் பல நூல்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்த அசிரியப் பேரரசு உச்சநிலை அடைந்த ஒரே நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. இராணுவ வலிமையை மட்டும் நம்பி வாணிகத்தையும் வேளாண்மையையும் புறக்கணித்தது, அசிரியர்கள் செய்த பெருந்தவறாகும். நாட்டின் பொருளாதாரத்தில் அயலவரின் ஆதிக்கம் புக அது வழிவகுத்தது. நாட்டில் வேளாண்மையில் பெரும்பான்மையான உழவர்களை விலங்குகளைப் போல் நடத்தியது, அசிரியர்களின் மற்றொரு தவறாகும். அயலவர் படையெடுப்பு வந்தபோது அத்தகைய அடிமைகள் எதிரிகளோடு சேர்ந்து கொண்டு, அசிரியப் பெருங்குடி மக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டனர். மன்னர்களின் செல்லப் பிள்ளைகளாகப் போர்த் தலைவர்களும், சமய குருமார்களும் நடத்தப்பட்டது மற்றுமொரு தலறாகும். அதனால் அவர்கள் ஒழுக்கமும் வீரமும் நாளடைவில் மங்கின. இன்பக் களிப்பில் மூழ்கி அவர்கள் நாட்டைக் காக்கும் திறனை இழந்தனர். இப்படிப் பல குறைகளைக் கொண்டிருந்த அசிரியப் பேரரசு, மேற்கு ஆசியாவில் ஓர் ஒற்றுமையை உண்டாக்கியது. பிற்காலத்தே தோன்றிய பாரசீகப் பேரரசு, உரோமானியப் பேரரசு, ஆங்கிலப் பேரரசு போன்றவற்றிற்கு அஃது ஒரு வழிகாட்டியாய் விளங்கியது. பெரும் சாலைகளாலும், அஞ்சல் முறையாலும், நாடுகளைப் பிணைக்கும் கலையை அசிரியர் உலகுக்குக் காட்டிச் சென்றனர். உலக அமைதிக்காக நாடுகளை ஒன்று சேர்ப்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டாக விளங்கினர் என்றால் அது மிகையாகாது.{{float_right|கி.ர.அ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Durrant, W.,</b> “The Story of Civilization–Part I–”, Our Oriental Heritage Simon & Schnoter, 1954. <b>Wallbank & Taylor,</b> “Civilization – Past and present, Vol.I”. <b>Tull, G.k.,</b> “Early Civilizations”, Blandford Press, London, 1968. <b>Stipp, John L. Warrent Holliester, C Dirrim, Allen W.,</b> “The rise and development of Western Civilization, Part I: Beginnings to 1500”, John Wiley & Sons, INC, New York, 1967. <b>அனுமந்தன், கி.ர.,</b> “பண்டைய உலக வரலாறு”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1976. {{larger|<b>அசின்கோர்ட் போர்</b>}} இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் என்றும் நினைவில் நிலைத்துவிட்ட<noinclude></noinclude> 3l7ufk0zwj5zg64jwzwbmmakqmosjz0 1839210 1839159 2025-07-05T04:35:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசிரிய நாகரிகம்|143|அசின்கோர்ட் போர்}}</noinclude>தில் அவரது எடுப்பான தோற்றமும் வீரமும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அது இன்று இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிகாகோவில் உள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட அசிரியப் பறக்கும் எருதின் வேகம், வலிமை ஆகிய இரண்டும் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 1.pdf |Page = 179 |bSize = 468 |cWidth = 147 |cHeight = 183 |oTop = 130 |oLeft = 42 |Location = center |Description = }} {{center|அசிரியாவிலுள்ள பறக்கும் மருதுச் சிற்பம்}} கட்டிடக் கலையில் அசிரியர்கள் பெரிதும் முன்னேறவில்லை. எனினும், அவர்கள் கல்லைப் பயன்படுத்திக் கோயில்களையும் அரண்மனைகளையும் கட்டினர். வட்டம், வளைவு, குவிமாடம் போன்ற சிறப்பியல்புகளை அவற்றில் புகுத்தினர். அளவில் மிகப் பெரியதாகக் கட்டிடங்களைக் கட்டுவதில் அசிரியர்கள் பெரிதும் இன்பங் கண்டனர். தூண் வரிசைகளை அவர்கள் அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை. அசிரியர்கள், குறிப்பாக அரசர்கள், இலக்கியத்தைப் பெரிதும் பேணி வளர்த்தனர். சான்றாக, அசுர்பானிபல் என்னும் மன்னன் பாபிலோனிய இலக்கியங்கள் பலவற்றைத் தேடி எடுத்து நினவா நகரிலிருந்த நூல் நிலையத்தில் சேர்த்தார். ஏறக்குறைய 22,000 அசிரிய ஆப்பு வடிவ எழுத்துகள் பொறிக்கப்பட்ட களிமண் பலகைகளை அவர் சேகரித்ததாகத் தெரிகிறது. அவற்றுள் பல மந்திர தந்திரங்களைப் பற்றியவை. இன்னும் பல வாணிகம், இராணுவம், வரலாறு, மருந்து தொடர்பான கடிதங்கள் ஆகும். இக்களி மண்பலகைகள் இப்போது இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அம்மன்னர் தம் வரலாற்றை ஒரு நூலாக எழுதியுள்ளார். அவர் கடிதங்களில் இலக்கியச் சுவை இருப்பதைக் காணலாம். போர்க்களங்களில் நடைபெற்ற வீரச் செயல்கள் பல நூல்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்த அசிரியப் பேரரசு உச்சநிலை அடைந்த ஒரே நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. இராணுவ வலிமையை மட்டும் நம்பி வாணிகத்தையும் வேளாண்மையையும் புறக்கணித்தது, அசிரியர்கள் செய்த பெருந்தவறாகும். நாட்டின் பொருளாதாரத்தில் அயலவரின் ஆதிக்கம் புக அது வழிவகுத்தது. நாட்டில் வேளாண்மையில் பெரும்பான்மையான உழவர்களை விலங்குகளைப் போல் நடத்தியது, அசிரியர்களின் மற்றொரு தவறாகும். அயலவர் படையெடுப்பு வந்தபோது அத்தகைய அடிமைகள் எதிரிகளோடு சேர்ந்து கொண்டு, அசிரியப் பெருங்குடி மக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டனர். மன்னர்களின் செல்லப் பிள்ளைகளாகப் போர்த் தலைவர்களும், சமய குருமார்களும் நடத்தப்பட்டது மற்றுமொரு தலறாகும். அதனால் அவர்கள் ஒழுக்கமும் வீரமும் நாளடைவில் மங்கின. இன்பக் களிப்பில் மூழ்கி அவர்கள் நாட்டைக் காக்கும் திறனை இழந்தனர். இப்படிப் பல குறைகளைக் கொண்டிருந்த அசிரியப் பேரரசு, மேற்கு ஆசியாவில் ஓர் ஒற்றுமையை உண்டாக்கியது. பிற்காலத்தே தோன்றிய பாரசீகப் பேரரசு, உரோமானியப் பேரரசு, ஆங்கிலப் பேரரசு போன்றவற்றிற்கு அஃது ஒரு வழிகாட்டியாய் விளங்கியது. பெரும் சாலைகளாலும், அஞ்சல் முறையாலும், நாடுகளைப் பிணைக்கும் கலையை அசிரியர் உலகுக்குக் காட்டிச் சென்றனர். உலக அமைதிக்காக நாடுகளை ஒன்று சேர்ப்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டாக விளங்கினர் என்றால் அது மிகையாகாது.{{float_right|கி.ர.அ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Durrant, W.,</b> “The Story of Civilization–Part I–”, Our Oriental Heritage Simon & Schnoter, 1954. <b>Wallbank & Taylor,</b> “Civilization – Past and present, Vol.I”. <b>Tull, G.k.,</b> “Early Civilizations”, Blandford Press, London, 1968. <b>Stipp, John L. Warrent Holliester, C Dirrim, Allen W.,</b> “The rise and development of Western Civilization, Part I: Beginnings to 1500”, John Wiley & Sons, INC, New York, 1967. <b>அனுமந்தன், கி.ர.,</b> “பண்டைய உலக வரலாறு”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1976. {{larger|<b>அசின்கோர்ட் போர்</b>}} இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் என்றும் நினைவில் நிலைத்துவிட்ட<noinclude></noinclude> 4ifto0h0jxd54px6fl0wsxpyp8e12if பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/180 250 617579 1839160 1826066 2025-07-04T17:38:32Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசின்கோர்ட் போர்|144|அசின்கோர்ட் போர்}}</noinclude>போர்களுள் ஒன்று. கி.பி. 1415–ஆம் ஆண்டில் பிரான்சிலுள்ள சிற்றூராகிய அசின்கோர்ட்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் நடந்த கடும் போரினால் அந்த இடம் உலகப் புகழ் பெற்றுவிட்டது. இருநூறு ஆண்டுகளாக ஆங்கில அரசர்களும் குறுநில மன்னர்களும் பிரெஞ்சு நாட்டிலுள்ள நிலங்களுக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதையொட்டி நடந்த போராட்டங்கள் நூற்றாண்டுப் போர் எனக் குறிக்கப்படுகிறது. ஆங்கிலேயருக்கு வெற்றி தோல்வி மாறி மாறிக் கிடைத்து வந்தது. மூன்றாம் எட்வர்டு காலத்தில் வெற்றி பெற்ற அவர்கள், இரண்டாம் ரிச்சர்டு காலத்தில் தோல்வியுற்றுச் சில நிலங்களை இழந்தனர். இழந்த நிலங்களை மீட்கவும் பிரெஞ்சு அரியணையைக் கைப்பற்றவும் ஆங்கிலேயர் உறுதி கொண்டனர். ஐந்தாம் என்றி (Henry V) பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான ஆர்பிளார் என்னுமிடத்தைக் கைப்பற்றினார். கைப்பற்றிய பின், வேண்டிய உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், பல போர் வீரர்கள் உடல் நலக் குறைவுற்றதாலும், தமக்குச் சொந்தமான கலே என்ற இடத்திற்குச் சென்று, கப்பல் மூலம் இங்கிலாந்து செல்ல அவர் முடிவு செய்தார். அவ்வாறே தமது படையை அணிவகுத்துக் கலேயை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இந்த வாய்ப்பினைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணி, கலேக்கு 72 கி.மீ. தொலைவில் உள்ள அசின்கோர்ட், திராம்கோர்ட் என்ற இரண்டு சிற்றூர்களுக்கு இடையேயுள்ள நீண்டதும் மிக ஒடுக்கமானதுமான காட்டு வழியில், பிரான்சு தனது படையை நிறுத்தி, கலேக்குச் செல்லும் வழியைத் தடுத்துவிட்டது. வடவெளியில் அசின்கோர்ட்டிவ் சார்லசு டி ஆல்பர்ட் என்பாரின் தலைமையில் படை வீரர்கள் நின்றனர். நல்ல மழையால் ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடின. அதனால், ஆங்கிலேயர் சோம் என்ற ஆற்றைக்கடந்து வரக் காலதாமதமானது. இந்தச் சமயத்தைப் பிரான்சு தன் வீரர்களின் எண்ணிக்கையைப் பெருக்கப் பயன்படுத்திக் கொண்டது. ஆர்பிளார் இடத்தை வேண்டுமானால் திரும்பக் கொடுத்து விடுவதாகவும், அதற்குப் பதிலாக கலேக்குச் செல்ல வழி விடுமாறும் ஆங்கிலேயர் வேண்டினர். ஆனால், பிரெஞ்சுக்காரர் அவ்வேண்டுகோளை ஏற்க மறுத்தனர். கி.பி. 1415, அக்டோபர் 24–ஆம் நாள் இரவெல்லாம் மழை. படைகள் வெளித் தரையிலேயே இரவைக் கழித்தன. ஆங்கிலப் படைக்கு ஒதுக்கிடமே கிடைக்கவில்லை. அப்படை பசியுடன் உறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பிரெஞ்சுப் பாசறையில் ஒளிவிட்டு தீ எரிந்தது. வெற்றி கிட்டிவிடும் என்ற ஆர்வமும் களிப்பும் பிரெஞ்சுக் காரர்க்கு உண்டாயின. கி.பி. 1415, அக்டோபர், 25 விடிந்தது. என்றியினிடம் (Henry) ஆயிரம் வீரர்களும் 6000 நீண்ட வில் வீரர்களும் இருந்தனர். படைக்கலம் தாங்கிய வீரர்களை நான்கு அடுக்கு வரிசையாக மையப் படுத்தி நிறுத்தி, வில் வீரர்களைப் படை வகுப்பின் பக்க அணியாக இருபக்கமும் அவர் நிறுத்தினார். அவரே மையப் படைக்குத் தலைமை தாங்கினார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 180 |bSize = 480 |cWidth = 400 |cHeight = 165 |oTop = 363 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|அசின்கோர்ட் போர்முனை}} எதிர்ப்பக்கத்தில் இருந்த பிரெஞ்சுப் படைக்கும், அவர்களுக்கும் 333மீ. இடைவெளிதான் இருந்தது. அவர்கள் எண்ணிக்கையோ ஆங்கிலேயர் படையை விட நான்கு மடங்கு மிகுதியாக இருந்தது. ஐந்து ஆறு வீரர்களைக் கொண்ட அடுக்கு வரிசையாகப் படைக்கலம் தாங்கிய வீரர்கள் முதல் இரண்டு வரி-<noinclude></noinclude> 8c744kqaa1obay1eigtc8ocztnu2578 1839161 1839160 2025-07-04T17:39:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1839161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அசின்கோர்ட் போர்|144|அசின்கோர்ட் போர்}}</noinclude>போர்களுள் ஒன்று. கி.பி. 1415–ஆம் ஆண்டில் பிரான்சிலுள்ள சிற்றூராகிய அசின்கோர்ட்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் நடந்த கடும் போரினால் அந்த இடம் உலகப் புகழ் பெற்றுவிட்டது. இருநூறு ஆண்டுகளாக ஆங்கில அரசர்களும் குறுநில மன்னர்களும் பிரெஞ்சு நாட்டிலுள்ள நிலங்களுக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதையொட்டி நடந்த போராட்டங்கள் நூற்றாண்டுப் போர் எனக் குறிக்கப்படுகிறது. ஆங்கிலேயருக்கு வெற்றி தோல்வி மாறி மாறிக் கிடைத்து வந்தது. மூன்றாம் எட்வர்டு காலத்தில் வெற்றி பெற்ற அவர்கள், இரண்டாம் ரிச்சர்டு காலத்தில் தோல்வியுற்றுச் சில நிலங்களை இழந்தனர். இழந்த நிலங்களை மீட்கவும் பிரெஞ்சு அரியணையைக் கைப்பற்றவும் ஆங்கிலேயர் உறுதி கொண்டனர். ஐந்தாம் என்றி (Henry V) பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான ஆர்பிளார் என்னுமிடத்தைக் கைப்பற்றினார். கைப்பற்றிய பின், வேண்டிய உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், பல போர் வீரர்கள் உடல் நலக் குறைவுற்றதாலும், தமக்குச் சொந்தமான கலே என்ற இடத்திற்குச் சென்று, கப்பல் மூலம் இங்கிலாந்து செல்ல அவர் முடிவு செய்தார். அவ்வாறே தமது படையை அணிவகுத்துக் கலேயை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இந்த வாய்ப்பினைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணி, கலேக்கு 72 கி.மீ. தொலைவில் உள்ள அசின்கோர்ட், திராம்கோர்ட் என்ற இரண்டு சிற்றூர்களுக்கு இடையேயுள்ள நீண்டதும் மிக ஒடுக்கமானதுமான காட்டு வழியில், பிரான்சு தனது படையை நிறுத்தி, கலேக்குச் செல்லும் வழியைத் தடுத்துவிட்டது. வடவெளியில் அசின்கோர்ட்டிவ் சார்லசு டி ஆல்பர்ட் என்பாரின் தலைமையில் படை வீரர்கள் நின்றனர். நல்ல மழையால் ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடின. அதனால், ஆங்கிலேயர் சோம் என்ற ஆற்றைக்கடந்து வரக் காலதாமதமானது. இந்தச் சமயத்தைப் பிரான்சு தன் வீரர்களின் எண்ணிக்கையைப் பெருக்கப் பயன்படுத்திக் கொண்டது. ஆர்பிளார் இடத்தை வேண்டுமானால் திரும்பக் கொடுத்து விடுவதாகவும், அதற்குப் பதிலாக கலேக்குச் செல்ல வழி விடுமாறும் ஆங்கிலேயர் வேண்டினர். ஆனால், பிரெஞ்சுக்காரர் அவ்வேண்டுகோளை ஏற்க மறுத்தனர். கி.பி. 1415, அக்டோபர் 24–ஆம் நாள் இரவெல்லாம் மழை. படைகள் வெளித் தரையிலேயே இரவைக் கழித்தன. ஆங்கிலப் படைக்கு ஒதுக்கிடமே கிடைக்கவில்லை. அப்படை பசியுடன் உறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பிரெஞ்சுப் பாசறையில் ஒளிவிட்டு தீ எரிந்தது. வெற்றி கிட்டிவிடும் என்ற ஆர்வமும் களிப்பும் பிரெஞ்சுக் காரர்க்கு உண்டாயின. கி.பி. 1415, அக்டோபர், 25 விடிந்தது. என்றியினிடம் (Henry) ஆயிரம் வீரர்களும் 6000 நீண்ட வில் வீரர்களும் இருந்தனர். படைக்கலம் தாங்கிய வீரர்களை நான்கு அடுக்கு வரிசையாக மையப் படுத்தி நிறுத்தி, வில் வீரர்களைப் படை வகுப்பின் பக்க அணியாக இருபக்கமும் அவர் நிறுத்தினார். அவரே மையப் படைக்குத் தலைமை தாங்கினார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 180 |bSize = 480 |cWidth = 400 |cHeight = 165 |oTop = 363 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|அசின்கோர்ட் போர்முனை}} எதிர்ப்பக்கத்தில் இருந்த பிரெஞ்சுப் படைக்கும், அவர்களுக்கும் 333மீ. இடைவெளிதான் இருந்தது. அவர்கள் எண்ணிக்கையோ ஆங்கிலேயர் படையை விட நான்கு மடங்கு மிகுதியாக இருந்தது. ஐந்து ஆறு வீரர்களைக் கொண்ட அடுக்கு வரிசையாகப் படைக்கலம் தாங்கிய வீரர்கள் முதல் இரண்டு வரி-<noinclude></noinclude> aqg8uzsi7c262cweye6mor730pt9y2d 1839211 1839161 2025-07-05T04:38:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசின்கோர்ட் போர்|144|அசின்கோர்ட் போர்}}</noinclude>போர்களுள் ஒன்று. கி.பி. 1415–ஆம் ஆண்டில் பிரான்சிலுள்ள சிற்றூராகிய அசின்கோர்ட்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் நடந்த கடும் போரினால் அந்த இடம் உலகப் புகழ் பெற்றுவிட்டது. இருநூறு ஆண்டுகளாக ஆங்கில அரசர்களும் குறுநில மன்னர்களும் பிரெஞ்சு நாட்டிலுள்ள நிலங்களுக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதையொட்டி நடந்த போராட்டங்கள் நூற்றாண்டுப் போர் எனக் குறிக்கப்படுகிறது. ஆங்கிலேயருக்கு வெற்றி தோல்வி மாறி மாறிக் கிடைத்து வந்தது. மூன்றாம் எட்வர்டு காலத்தில் வெற்றி பெற்ற அவர்கள், இரண்டாம் ரிச்சர்டு காலத்தில் தோல்வியுற்றுச் சில நிலங்களை இழந்தனர். இழந்த நிலங்களை மீட்கவும் பிரெஞ்சு அரியணையைக் கைப்பற்றவும் ஆங்கிலேயர் உறுதி கொண்டனர். ஐந்தாம் என்றி (Henry V) பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான ஆர்பிளார் என்னுமிடத்தைக் கைப்பற்றினார். கைப்பற்றிய பின், வேண்டிய உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், பல போர் வீரர்கள் உடல் நலக் குறைவுற்றதாலும், தமக்குச் சொந்தமான கலே என்ற இடத்திற்குச் சென்று, கப்பல் மூலம் இங்கிலாந்து செல்ல அவர் முடிவு செய்தார். அவ்வாறே தமது படையை அணிவகுத்துக் கலேயை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இந்த வாய்ப்பினைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணி, கலேக்கு 72 கி.மீ. தொலைவில் உள்ள அசின்கோர்ட், திராம்கோர்ட் என்ற இரண்டு சிற்றூர்களுக்கு இடையேயுள்ள நீண்டதும் மிக ஒடுக்கமானதுமான காட்டு வழியில், பிரான்சு தனது படையை நிறுத்தி, கலேக்குச் செல்லும் வழியைத் தடுத்துவிட்டது. வடவெளியில் அசின்கோர்ட்டிவ் சார்லசு டி ஆல்பர்ட் என்பாரின் தலைமையில் படை வீரர்கள் நின்றனர். நல்ல மழையால் ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடின. அதனால், ஆங்கிலேயர் சோம் என்ற ஆற்றைக்கடந்து வரக் காலதாமதமானது. இந்தச் சமயத்தைப் பிரான்சு தன் வீரர்களின் எண்ணிக்கையைப் பெருக்கப் பயன்படுத்திக் கொண்டது. ஆர்பிளார் இடத்தை வேண்டுமானால் திரும்பக் கொடுத்து விடுவதாகவும், அதற்குப் பதிலாக கலேக்குச் செல்ல வழி விடுமாறும் ஆங்கிலேயர் வேண்டினர். ஆனால், பிரெஞ்சுக்காரர் அவ்வேண்டுகோளை ஏற்க மறுத்தனர். கி.பி. 1415, அக்டோபர் 24–ஆம் நாள் இரவெல்லாம் மழை. படைகள் வெளித் தரையிலேயே இரவைக் கழித்தன. ஆங்கிலப் படைக்கு ஒதுக்கிடமே கிடைக்கவில்லை. அப்படை பசியுடன் உறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பிரெஞ்சுப் பாசறையில் ஒளிவிட்டு தீ எரிந்தது. வெற்றி கிட்டிவிடும் என்ற ஆர்வமும் களிப்பும் பிரெஞ்சுக்காரர்க்கு உண்டாயின. கி.பி. 1415, அக்டோபர், 25 விடிந்தது. என்றியினிடம் (Henry) ஆயிரம் வீரர்களும் 6000 நீண்ட வில் வீரர்களும் இருந்தனர். படைக்கலம் தாங்கிய வீரர்களை நான்கு அடுக்கு வரிசையாக மையப் படுத்தி நிறுத்தி, வில் வீரர்களைப் படை வகுப்பின் பக்க அணியாக இருபக்கமும் அவர் நிறுத்தினார். அவரே மையப் படைக்குத் தலைமை தாங்கினார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 180 |bSize = 480 |cWidth = 400 |cHeight = 165 |oTop = 363 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|அசின்கோர்ட் போர்முனை}} எதிர்ப்பக்கத்தில் இருந்த பிரெஞ்சுப் படைக்கும், அவர்களுக்கும் 333மீ. இடைவெளிதான் இருந்தது. அவர்கள் எண்ணிக்கையோ ஆங்கிலேயர் படையை விட நான்கு மடங்கு மிகுதியாக இருந்தது. ஐந்து ஆறு வீரர்களைக் கொண்ட அடுக்கு வரிசையாகப் படைக்கலம் தாங்கிய வீரர்கள் முதல் இரண்டு வரி-<noinclude></noinclude> pd2zk1g8cer4hq8f2ikz271snxm2p1e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/181 250 617674 1839213 1826298 2025-07-05T04:44:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசின் கோர்ட் போர்|145|அசுணம்}}</noinclude>சைகளிலும், வீரப் பெருந்தகை எனப்பட்டம் பெற்று, உயர்குடிப் பிறப்பாளர்களைக் கொண்ட குதிரைப் படைகள் மூன்றாம் வரிசையிலும், பக்கத்திற்கு 600 பீரங்கிகளைக் கொண்ட பீரங்கிப் படைகள் இரு மருங்கிலும் நிற்க, குறு வில்லாளர்கள் இறுதியிலுமாக மிகப் பெரும் படை உருவாக்கப்பட்டது. ஆங்கிலப் படைகள் போர்புரிய வேண்டும் அல்லது பசியினாலும் குளிரினாலும் மாண்டுமடிய வேண்டும் என்ற நெருக்கடியான நிலை. மூன்று மணி நேரம் படைகள் அசையாது நின்றன. என்றி (Henry), தலைசிறந்த படைத் தலைவர்; படை வீரர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். அவர்களின் கடந்த கால வெற்றிகளை நினைவில் கொள்ளவும், தாயகமாகிய இங்கிலாந்து இப்போரில் வாகை சூடவும், அவர்களின் மனைவிமார்களையும் குழந்தைகளையும் பெற்றோர்களையும் நினைவிற் கொண்டு போர் புரியவேண்டுமென அரசர் அவர்களை ஊக்குவித்தார். தங்கக் கவசத்தையும் விலை மதிப்பற்ற கற்கள் பதித்த தங்க முடியையும் அணிந்து கொண்டு அவர் படைகளுக்குத் தலைமை தாங்கினார்; முன்னேறும்படி கட்டளையிட்டார். வில் வீரர்களை எதிரிகளுக்கு அருகில் சென்று அம்பு எய்யும்படி கூறினார். அதன்படி அம்பு மாரி பொழித்தனர். குதிரைப்படை வீரர்களும் படைக்கல வீரர்களும் அம்புகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை. பிரெஞ்சுப் படை முன் வர முயன்றது. மிகப் பளுவான கவசங்கள் ஒரு பக்கம்; கால்கள் மண்ணில் புதைந்து கொள்ளும் நிலை மற்றொரு பக்கம். அம்பு மாரிக்குத் தப்பி மையத்தினை நெருங்கினர் வீரர்கள். மிகக் குறுகிய இடம். மேலும், பெரும் எண்ணிக்கையில் படைவீரர்களின் குழப்பமும் நெரிசலும் மிகுந்தன. கவசம் அணிந்த வீரர்கள் சுடுவதற்குக் கையைத் தூக்கப் போதுமான இடமில்லை. பின்வரிசை முன்னேற முன் இருந்தவர் பலர் நெரிசலில் கீழே உருண்டனர். இச்சமயத்தில் ஆங்கிலப் படை வீரர்கள் சிறு கோடரியையும் கத்தியையும் எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தத்தளிக்கும் பிரெஞ்சுப் படைக்குள் புகுந்து அவர்களைக் கொன்று குவித்தனர். பிரெஞ்சுக் குதிரைப் படை ஆங்கிலப்படைக்குப் பின் சென்று என்றியைப் பிடிக்க முயன்றது; முடியவில்லை, பிரெஞ்சுத் தலைவரும் கொல்லப்பட்டார். பிரெஞ்சுப் படை பட்டறிவைப் பயன்படுத்திச் செயற்பட மறுத்து விட்டது. தொன்றுதொட்டு வரும் போர்த் தள வாடங்களைப் புதிய தேவைக்கேற்ப மாற்றி அமைக்கத் தவறியதால் பிரெஞ்சுக்காரரிடம் மிகப் பெரிய படையிருந்தும் அவர்கள் பெரும் தோல்வியே அடைந்தார்கள். ஆங்கிலப்படை சூழ்ச்சித் திறனைப் பயன்படுத்தி வெற்றி பெற்றது, என்றிக்கு இது மாபெரும் வெற்றியாகும். செகப்பிரியர் (Shakespeare) தம் நாடகத்திலும் அசின்கோர்ட் போரைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.{{float_right|எச்.நி.}} {{larger|<b>அசுக்காபாத்து,</b>}} சோவியத் உருசியாவில் தர்க்குமெனிசுதான் (Turkmenistan) குடியரசின் தலைநகரம். இதன் பழைய பெயர் போல்டோராட்சுகு (Poltoratsk) என்பதாகும். தர்க்குமெனிசுதான், சார்தோசு (Chardzhou), மெரூய் (Maruy), அசுக்காபாத்து (Ashkhabad), தசுவாசு (Tashauz), கிராசுநோவட்சுகு (Krasnovodsk) என்று ஐந்து பகுதிகளாகப் பிரிந்துள்ளது. அசுக்காபாத்தின் மக்கள் தொகை 3,25,000 ஆகும். (1981). அசுக்காபாத்திலிருந்து ஈரான் நாட்டிலிருக்கும் மெசடு (Meshed} நகரம் வரை பேருந்துச் சாலை ஒன்று செல்கிறது. அசுக்காபாத்திலிருந்து செல்லும் விமான வழி, சோவியத்து நாட்டின் மேற்கு, வடக்கு, கிழக்குப் போன்ற தொலைதூரப் பகுதிகளை இணைக்கிறது. {{larger|<b>அசுட்டோரியா</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரேகான் மாநிலத்தில் உள்ளதோர் நகர். இது கொலம்பியா ஆற்றின் நுழை வாயிலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுகப்பட்டினமாகும். இது ஒரேகான் மாநிலத்தின் வடமேற்கில் இருக்கும் கிளாட்சாபு மாவட்டத்தின் (County) தலைநகராகும். மீன் பிடித்தல், அவற்றைப் பெட்டிகளில் அடைத்தல், மரமறுத்தல், கப்பற்கட்டுதல் போன்றவை அசுட்டோரியாவின் சிறப்பான தொழில்களாகும். சான் சாகப் அசுட்டர் என்பவர் கி.பி. 1811-ஆம் ஆண்டில் இங்கு ஒரு குழுவினை அனுப்பி, மென்யிருடன் கூடிய மெல்லிய தோல் வாணிக மையத்தை ஏற்படுத்தினார். அசுட்டர் என்பாரின் பெயரே அசுட்டோரியா நகரின் பெயராயிற்று. இராக்தி மலைத் தொடருக்கு மேற்கில் முதன் முதலாக நிலைநாட்டப் பெற்ற அமெரிக்கச் குடியேற்றம் (Colony) இதுதான். மக்கள் தொகை 10,244. {{larger|<b>அசுணம்,</b>}} பழந்தமிழிலக்கியங்களால் அறியப்படும் உயிரினங்களுள் ஒன்று. இது ஒருவகை விலங்கு என்றும் பறவை என்றும் கூறப்படுகிறது. இதனைக் குறிப்பிடுங்கால், “அசுணம் என்பது விலங்குகளுள் ஒன்று என்று பலவிடத்தும், பறவைகளுள் ஒன்றென்று சிலவிடத்தும் குறிக்கப்படுகிறது. இதற்கு, யாழ் ஒலி (குழல் ஒலி, வண்டொலி, பாட்டொலி) முதலிய மெல்லிசையால் இன்புறுதல் முதலியனவும், பறையொலி (முரசொலி, வெடியொலி)முதலிய வல்லிசையால் துன்புறுதல் முதலியனவும் இயல்பு. இதனைக் குறிஞ்சி நிலத்துக்குரியதென்றும், புகை போன்ற மேனி உடையதென்றும், அச்சப்பொருள்களுள் ஒன்றென்றும், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தனுள் ஓசையில் ஈடுபட்டு உயிரையும் இழப்பது” என்றும் இ.வை.<noinclude> <b>வா.க. 1 _ 10</b></noinclude> glzqqjth2qn9h4m81l13qtosbrpjg22 பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/84 250 619218 1839150 1833878 2025-07-04T15:45:03Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|துறவறவியல்||அதிகாரம் 35}}</noinclude>{{center|{{larger|<b>துறவு</b>}}}} <poem>யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்{{float_right|341}} வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல{{float_right|342}} அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு{{float_right|343}} இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து{{float_right|344}} மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை{{float_right|345}} யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்{{float_right|346}} பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு{{float_right|347}} தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்{{float_right|348}} பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்{{float_right|349}} பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு{{float_right|350}}</poem><noinclude>{{rh||71|71}}</noinclude> nu6z62m9tzytmx1syo3qvgiuq62mfom பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/363 250 620227 1839113 2025-07-04T14:06:54Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவன் இவ்வேந்தனது இரண்டாம் கலிங்கப் படையெடுப்பில் கலந்துகொண்டு வடகலிங்க வேந்தரை வெற்றி கொண்டான். இப்படைத்தலைவன் விக்கிரம சோழனது காலத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதியமான் கோட்டை|327|அதியமான் நெடுமானஞ்சி}}</noinclude>இவன் இவ்வேந்தனது இரண்டாம் கலிங்கப் படையெடுப்பில் கலந்துகொண்டு வடகலிங்க வேந்தரை வெற்றி கொண்டான். இப்படைத்தலைவன் விக்கிரம சோழனது காலத்திலும் பணிபுரிந்தான். பொன்பற்றி உடையான் சேந்தன் கோணம்பியான அதியமானும் முதலாம் குலோத்துங்கனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அரசியல் தலைவன் ஆவான்.{{float_right|ம.இரா.}} {{larger|<b>அதியமான் கோட்டை</b>}} தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். இவ்வூர் தர்மபுரியிலிருந்து மேற்காகச் சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் எட்டுக் கி.மீ. தொலைவிலுள்ளது. சங்க நூல்களில் கூறப்படும் அதியமான்கள் என்னும் குறுநில மன்னர்களின் தலையாய நகரமாக இவ்வூர் கருதப்படுகிறது. சங்ககாலத்தில் இவ்வூரில் மக்கள் குடியிருந்ததற்கான சான்றுகளாக அவர்கள் பயன்படுத்திய கருப்புசிவப்பு வண்ணம் கொண்ட மட்கலச் சிதைவுகள் கிடைத்துள்ளள. இங்கு முற்காலத்தில் கோட்டை ஒன்று இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஊரினைச் சுற்றிக் கோட்டைச் சுவர் போன்ற மண்மேடு காணப்படுகிறது. இவ்வூரில் ஒய்சாளர் காலத்திய கோயில் ஒன்றும், பிற்காலச்சோழர் காலக் கோயிலொன்றும் உள்ளன. சமண தீர்த்தங்கரரின் சிலையொன்றும் சமணத்தோடு உள்ள தொடர்பைப்பறைசாற்றிக் கொண்டுள்ளது. இவ்வூரில் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 363 |bSize = 480 |cWidth = 166 |cHeight = 127 |oTop = 315 |oLeft = 32 |Location = center |Description = }} {{center|சுடுமண் பொம்மைகள்}} சோழர், ஒய்சாளர், விசயநகர அரசர் ஆகியோரின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இங்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் 1981, 1982–ஆம் ஆண்டுகளில் அகழாய்வினை மேற்கொண்டனர். இவ்வூரில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டன. குழிகளின் அடிமட்டத்தில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு மட்கலன்கள் கிடைத்தன. சோழர் காலத்தைச் சார்ந்த செங்கல் மேடையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அகழாய்வில் கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், கருப்பு மட்பாண்டங்கள், சிவப்புக் கலவை பூசப்பட்ட மட்கலன்கள், ரௌலட்டட் என்னும் உரோமானிய நாட்டு மட்கலத் துண்டுகள் ஆகியவை கிடைத்தன. மணிகள், இரும்புக் கருவிகள், செம்பு, பித்தளைப் பொருள்கள், சுடுமண் பொம்மைகள், கண்ணாடி வளையல்கள், பொன்னை உருக்குகின்ற சிமிளிகள் ஆகியனவும் கிடைத்தன. {{larger|<b>அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி,</b>}} சங்ககாலத்தில் வாழ்ந்த ஒரு மன்னன்; வீரமிக்கவன்; அக்காலத்தில் வாழ்ந்த வள்ளல்களுள் ஒருவன். எழினி என்பது இவன் இயற்பெயராகும். தன் எதிரியொடு தகடூரில் போர் செய்து இறந்தவன் என்பது இவன் பெயரிலமைந்த அடையினால் தெரிகிறது. இவன் இறந்தபோது அரிசில் கிழார் கையறு நிலைத்துறையில் ஒரு பாடல் (புறம். 230) இயற்றினார். அதில், அவர் எழினியை, ‘விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்’ உடையவன் என்றும், ‘வையகம் புகழ்ந்த வயங்குவினை யொள்வாள்’ உடையவன் என்றும், பொய்யாதவன் என்றும் பாராட்டியுள்ளார். {{larger|<b>அதியமான் நெடுமானஞ்சி,</b>}} எழினி என்றும் (புறம். 158), அஞ்சி என்றும் (புறம். 91), வழங்கப்பட்டுச் சங்க காலத்தில் வாழ்ந்த வள்ளலும் பெரு வீரனுமாவான். கடைஎழு வள்ளல்களுள் ஒருவன். இவன் ஒளவையாருக்களித்த நெல்லிக்கனிக் கொடையினை ‘அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக்கீந்த’ எனச் சிறுபாணாற்றுப்படை (சிறு. 101–103) பாராட்டுகிறது. தமக்களித்த இக்கொடைச் சிறப்பினை ஒளவையாரும் புறப்பாடலில் போற்றியுள்ளார் (புறம். 91). இவன் மழவர்கள் என்னும் வீரர்களுக்குத் தலைவனாக விளங்கினான் (புறம். 88, 90). இவன் ஒளவையாரைத் தன்னுடைய அரசியல் தூதுவராகத் தொண்டைமான் பால் அனுப்பினான் (புறம். 95). அதியர் குடியில் தோன்றிச் சிறந்தவனாக இவன் விளங்கியமையால், அதியர் கோமான் எனப்பட்டான் (புறம். 91). இவன் முன்னோர் தேவர்களை வழிபட்டு, விண்ணுலகிலிருந்து கரும்பினை இவ்வுலகிற்குக் கொண்டுவந்தனர் என்று கூறப்பட்டுள்ளது (புறம். 99). இவன் சேரர் குடியினைச் சார்ந்தவனாதலின், பனந்தோட்டினாலாகிய மாலையினை அணிந்திருந்தான் (புறம். 99); ஏழு மன்னர்களோடு போர் செய்து வென்றான். இவனது கோவலூர் வெற்றியைப் பரணர் பாராட்டியுள்ள செய்தியினை ஒளவையார் புகழ்ந்துள்ளார் (புறம். 99). குதிரை மலை இவனுக்குரியது. இவன் மகன் பொகுட்டெழினி எனப்படுவான். இப்பொகுட்டெழினியும் புலவர் போற்றும் பெருவீரனாக விளங்கினாள் (புறம். 102). பெருஞ்சேரலிரும்பொறை பெரும் படையொடு சென்று தகடூரை முற்றுகையிட்டு அழித்து. அதிகமானையும் ஏனை இரு பெருவேந்தரையும் வென்றான் என்று<noinclude></noinclude> 8l1fbo0xnjfjp81fh8e4d8d71vvk1cx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/364 250 620228 1839122 2025-07-04T14:34:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்துப் பதிகம் கூறுகிறது. அதிகமான் என்று அப்பதிகம் குறிப்பிடுவது இந்த அதியமானையேயாகும். சேரமான் வரும்வரை அத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதியன் விண்ணத்தனார்|328|அதிராம்பட்டினம்}}</noinclude>பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்துப் பதிகம் கூறுகிறது. அதிகமான் என்று அப்பதிகம் குறிப்பிடுவது இந்த அதியமானையேயாகும். சேரமான் வரும்வரை அதியமான் தகடூர்க் கோட்டையின் உள்ளே இருந்த செய்தி, தொல்காப்பியப் புறத்திணை நூற்பா ஒன்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய குறிப்பாலும் அறிய முடிகிறது (தொல்.புறம். 7. நச்.), அதியமான், மார்பில் வேல்பட்டு மாய்ந்தபோது, ஔவையார் பெரிதும் இரங்கிக் கையறுநிலைச் செய்யுளொன்று பாடியுள்ளார். அதன்கண் இவனது பெருங்கொடையும் பெரு வீரமும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. ‘ஆசாரு எந்தையாண்டுளன் கொல்லோ? இனிப் பாடுநருமில்லை, பாடுநர்க்கு ஒன்று ஈகுநருமில்லை’ (புறம். 235) என்று ஏங்கியுரைக்கும் கூற்றில் ஒளவையார் எய்திய அவலத்தின் ஆழம் புலனாகிறது. இவனை ஒளவையார், பரணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார் ஆகியோர் பாடியுள்ளனர். {{larger|<b>அதியன் விண்ணத்தனார்,</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்றிய பாடல் ஒன்று அகநானூற்றின் 301–ஆம் பாடலாகச் சேர்க்கப் பெற்றுள்ளது. இவர் அதியமான் நெடுமானஞ்சியின் இனத்தினைச் சேர்ந்தவராக இருத்தல் கூடும். அதியன் என்பது குடிப்பெயர். இக்குடி சேரர் குடியொடு தொடர்புடையது. சிலர் அதியன் என்பான் விண்ணத்தனாரின் தந்தை என்பர். விண்ணத்தனார் என்பதனை விண்ணன் + அத்தன் எனக்கொண்டு விண்ணன் என்பானின் தந்தை என்று பொருள் கொள்வர். அவ்வாறாயின் அதியன் விண்ணத்தனார் என்னும் பெயர், தந்தை–மகன்–பெயரன் என்னும் முறையில் மூவரையும் சுட்டி அமைந்த ஒன்றாகக் கொள்ளப்படும். தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி உயிர் நீங்கும் அளவிற்கு வருந்தினாளாக, அது கண்டு தோழி ஆறுதல் கூறி வற்புறுத்த, அதற்கு விடையாகத் தலைவி கூறுவதாக அமைந்துள்ளது இவர் பாட்டு. இவர் இப்பாடலில், ஊர் தோறும் சென்று பரிசில் பெற்று வந்த பாணர் முதலியோர் ஊர் மன்றத்தில் மகிழ்வுடன் தங்கிப் பண்ணிசைத்து மகிழ்வுறுத்தி நீங்கிய பின், மறுநாள் அம்மன்றினைக் காணும் ஊரார்க்கு அஃது இன்னாததாக விளங்கும் என்பதனை, “இரும்பேர் ஒக்கல் கோடியர் பிறந்த, புன்தலை மன்றம் காணின் வழிநாள், அழுங்கல் முதூர்க்கு இன்னாதாகும்” எனக் காட்டியுள்ளார். {{larger|<b>அதிர்ச்சி மருத்துவம்:</b>}} காண்க: உளமருத்துவ முறைகள். {{larger|<b>அதிரதர்</b>}} தேர்ப்பாகனாகப் பிறந்தவர்; திருதராட்டிரரின் நண்பர்; இராதா என்பாளின் கணவர்; கர்ணனின் வளர்ப்புத் தந்தை. அதிரதர் கர்ணனை வாசுசேனன் என்றழைத்ததோடு, அவரை அத்தினா புரத்திற்கு அனுப்பித் துரோணாசாரியாரின் கீழ்க் கல்வி கற்கக் கூறியவர். கர்ணன் விளையாட்டரங் சுத்தில் விளையாடிக் கொண்டிருந்தஞான்று, அதிரதர் அரங்கத்தில் நின்று கர்ணனை அங்க நாட்டு அரசரென வாழ்த்தினார். அதிரதர் என்று கர்ணனுக்கு அடைமொழிப் பெயரும் உண்டு. {{larger|<b>அதிர வீசியாடுவார்</b>}} என்பது சிவபெருமானுக்கு அவர் ஆடுங்கோலம் ஒன்றினால் அமைந்த பெயராகும். ஆடல் வல்லானாகிய சிவபெருமான் மதுரையம்பதியில் கால் மாறி ஆடிய அமைப்பில் உள்ளார். நடனக்கலை பயின்ற சிவபக்தனான பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்கிக் கூத்தர் பெருமானாகிய சிவபெருமான் மதுரையில், இயல்புக்கு மாறாகக் கால் மாறி ஆடி அருளினார். மன்னன் வேண்டியவாறு என்றும் யாவரும் காண இறைவன் மதுரை மன்றில் கான்மாறி ஆடிய கோலத்தில் காட்சியளிக்கின்றார் என்பது புராண வரலாறு. தமிழிலுள்ள இரண்டு திருவிளையாடற் புராணங்களும் இத்திருவிளையாடலைப் பாடிப் போற்றுகின்றன. இந்நடனக்கோலத்தில் சிவபெருமானுடைய இடக் கால் சற்றே வளைந்து முயலகன் மீது சிறிதே ஊன்றப்பட்டு விளங்கும். வலக் கால் உயர்த்தி வீசி ஆடும் பாங்கில் விளங்கும். இந்த நடனக் கோலம் அதிர வீசியாடுதல் எனப்படும். சிவபெருமானது இத்திருக்கோலத்தைச் சுட்டித் திருஞானசம்பந்தர் ‘அதிரவீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ’ என்று போற்றுகின்றார். இதனைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி தம் திருவிளையாடற் புராணத்தில், “முன்னம், மெய்ப்பட ஆடுங்கூத்தை விட்டு மேல் வலத்தாள் குஞ்சித்து, அப்பெரும் புதுமைக் கூத்தை ஆடினான் அதிரவீசி” என்றும், அதனால் சிவபெருமான் ‘அதிரவீசி ஆடுவார்’ வழங்கப்பட்டார் என்னும் குறிப்பிட்டுள்ளார். {{larger|<b>அதிராசேந்திரன்</b>}} தஞ்சைச் சோழ அரசர்களுள் ஒருவன். இவன் கி.பி. 11–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன். வேங்கிச் சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்தியர், அதிராசேந்திரனைச் சோழ அரசனாகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டுவித்தார். மக்கள் கிளர்ந்தெழுந்த கலகமொன்றில் இவன் உயிர் துறந்தாள். இவன் சைவ சமயத்தினன்; குறுகிய காலமே ஆட்சி செய்தவன். {{larger|<b>அதிராம்பட்டினம்</b>}} தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள துறைமுகப் பட்டினம். இங்கு முசுலிம்கள் மிகுதியாக வாழ்கின்றனர். இவ்வூர் அதிவீரராம பாண்டியனுடைய பெயரைக் கொண்டது என்பார். இங்கிருந்து இலங்கைக்குத் தேங்காய், அரிசி போன்ற பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. இங்கு உப்பளங்களும் உள்ளன. இவ்-<noinclude></noinclude> 6gr8sv8193hydhl5a2lzcpfn93nwing பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/365 250 620229 1839151 2025-07-04T16:58:12Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிராவடிகள்|329|அதிவீரராமபாண்டியன்}}</noinclude>வூரில் சிவன் கோயிலும் புகைவண்டி நிலையமும் உள்ளன. இங்கு ஒரு கல்லூரியும் உள்ளது. {{larger|<b>அதிராவடிகள்</b>}} சைவத் திருமுறை நூல்களுள் பதினோராந் திருமுறையினைப் பாடியருளிய ஆசிரியர்களுள் ஒருவர். இறை நினைவின் உறைப்பால் வினைத் துன்பங்களைக் கண்டு கலங்காத மனம் உடையவர் என்பதால் இவர் அதிராவடிகள் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றார். இவர் நூலாகிய ‘மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை’ பதினோராந் திருமுறையில் 25–ஆம் நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. இது, அகலம், வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூவகைச் செய்யுட்கள் முறையே அடுத்தடுத்து வருமாறு அமைந்த 30 பாடல்களைக் கொண்டது. மூவகையான மணிகளைக் கொண்டு அமையும் அணிக்கோவை போல்வதாதலின் இவ்வகை நூல்கள், மும்மணிக் கோவை எனப்பட்டன. இதன் செய்யுட்கள் அந்தாதியாக அமைந்துள்ளன. இந்நூலின் இறுதியிலுள்ள 7 செய்யுட்கள் கிடைக்காமையால், இதன்கண் இப்பொழுது 23 செய்யுட்களே உள்ளன. மூத்த பிள்ளையார் என்பது விநாயகரைக் குறிக்கும். யானைமுகக் கடவுளாகிய மூத்த பிள்ளையாரின் திருவடித் துணையன்றி உயிர்களுக்கு வேறு துணையில்லை. அவர், தம்மை அன்பினால் வழிபடும் மெய்யடியார்களின் பிறவிப் பிணியைப் போக்க வல்லவர்; அவருடைய திருவடியைச் சிந்தித்து வாழ்வார் மனக் கவலை இல்லை என்பன போன்ற கருத்துகளை ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். அதிராவடிகள் பிறந்த ஊர், பெற்றோர் பெயர் போன்றவற்றை அறிய இயலவில்லை. இவ்வாசிரியர் வாழ்ந்த காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமுமாம் என்று கருதப்படுகிறது. சப்பாணி கொட்டுதல், செங்கீரையாடுதல் என்று பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளை மூத்த பிள்ளையார் மேற்கொண்டு உலக உயிர்களுக்கு இன்பஞ்செய்தார் என ஆசிரியர் சிறப்பித்துப் பாடியுள்ளார். {{larger|<b>அதிலாபாத்து,</b>}} தில்லிக்கருகில் இருக்கும் ஒரு சிறு கோட்டை. இது துக்ளகாபாத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. இக்கோட்டை முகம்மது-பின்-துக்ளக்கு என்பவரால் கட்டப்பட்டது. இதன் சுவர்கள் துக்ளகாபாத்துக் கோட்டையின் சுவர்களுடன் இணைந்துள்ளன. இக்கோட்டை இருவாயில்களைக் கொண்டது, ஒரு நுழைவாயில், தென்கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு காவல் அரண்களுக்கு இடையில் இருக்கும் புற அரணிலும், மற்றொன்று, தென் மேற்கிலும் அமைந்துள்ளன. இதன் இரு பிரிவுகளும் ஒரு வெளிச் சுவர் மூலம் தடுக்கப்பட்டுள்ளன. இதன் உள் அரண், சுவர்களுடனும் காவல் அரண்களுடனும் வாயில்களுடனும் காட்சி அளிக்கிறது. இதனுள் அரண்மனை உள்ளது. இவ்வரண் முகமதாபாத்து என்றும் அழைக்கப்படுகிறது. {{larger|<b>அதிவீரராமபாண்டியன்</b>}} விசயநகர வேந்தர் காலத்து வாழ்ந்த பாண்டிய அரசத் தலைமுறையினைச் சேர்ந்த மன்னர். இவர் கி.பி. 1564–1603 ஆகிய ஆண்டுகளில், தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர், நாட்டுக் காவலராக மட்டுமல்லாமல், ஏட்டுப் பாவலராகவும் சிறந்து விளங்கினார். சில வரலாற்றறிஞர் இவரைத் திருநெல்வேலிப் பெருமாள் புதல்வர் என்று கூறுவர். எனினும் இவர் திருநெல்வேலிப் பெருமாளின் ஏற்பு மகனும், வரதுங்கராமரின் இளவலும், பராக்கிரம பாண்டியனின் மூன்றாம் புதல்வருமாவார் என்று சிலர் முடிவு செய்து தெளிவுபடுத்தியுள்ளனர். இவர் இயற்பெயர் அதிவீர ராமன்; சடையவர்மன் என்ற பட்டப் பெயருடையார்; தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் மிகவுடையவர். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவை:- 1. நைடதம் 2. காசிகாண்டம், 3. கூர்மபுராணம் 4. கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி 5. கருவை வெண்பா அந்தாதி 6. கருவைக் கலித்துறையந்தாதி 7. வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை. {{larger|<b>1. நைடதம்:</b>}} மகாபாரதத்தில் முதலாவதாக நளன் கதை இடம் பெற்றுள்ளது. ஈதன்றி நளோதயம் என்னும் ஒரு நாலும் வடமொழியில் வழங்குகிறது. புரவலனும் புலவனுமாக விளங்கிய அர்சர், வடமொழியில் நைடதத்தைச் சிறப்புற எழுதியுள்ளார். தமிழில் புகழேந்தி, வெண்பா யாப்பில் நளன் வரலாற்றை எழுதியுள்ளார். வடமொழி, தமிழ் நூல்களை எல்லாம் அடியொற்றி எழுதப்பட்ட நூலே நைடதம் ஆகும். இந்நூல் நாட்டுப்படலம் தொடங்கி அரசாட்சிப் படலம் என்னும் இருபத்தெட்டாவது படலத்துடன் நிறைவுறுகிறது. 1173 விருத்தச் செய்யுட்களால் இந்நூல் அமைந்துள்ளது. புலவர் பலரும் போற்றி வந்த சிறந்த நூல் என்பதால், “நைடதம் புலவர்க்கு ஒளடதம்” என்னும் பழமொழியும் தோன்றுவதாயிற்று. நூலின் நடை, வேட்டை நாய் நடைபோலிருக்கிறதென்றும் நூலின் சுவை கரும்பினை அடியிலிருந்து தொடங்கி நுனிவரை தின்பது போல், போகப் போகச் சுவை குறைகிறது என்றும் இவர்தம் அண்ணியாரால் குறைகூறப்பட்டது என்பர். இக்குறையைக் களையவே காசிகாண்டம் இயற்றப்பெற்றது. {{larger|<b>2. காசிகாண்டம்:</b>}} காசி நகரப் பெருமையைப் பறைசாற்றும் நூல். பூர்வகாண்டம், உத்தரகாண்டம்<noinclude> 1-42</noinclude> ergf3evba7b1v51qcyok8jw2epdfwcf 1839152 1839151 2025-07-04T16:58:21Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1839152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதிராவடிகள்|329|அதிவீரராமபாண்டியன்}}</noinclude>வூரில் சிவன் கோயிலும் புகைவண்டி நிலையமும் உள்ளன. இங்கு ஒரு கல்லூரியும் உள்ளது. {{larger|<b>அதிராவடிகள்</b>}} சைவத் திருமுறை நூல்களுள் பதினோராந் திருமுறையினைப் பாடியருளிய ஆசிரியர்களுள் ஒருவர். இறை நினைவின் உறைப்பால் வினைத் துன்பங்களைக் கண்டு கலங்காத மனம் உடையவர் என்பதால் இவர் அதிராவடிகள் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றார். இவர் நூலாகிய ‘மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை’ பதினோராந் திருமுறையில் 25–ஆம் நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. இது, அகலம், வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூவகைச் செய்யுட்கள் முறையே அடுத்தடுத்து வருமாறு அமைந்த 30 பாடல்களைக் கொண்டது. மூவகையான மணிகளைக் கொண்டு அமையும் அணிக்கோவை போல்வதாதலின் இவ்வகை நூல்கள், மும்மணிக் கோவை எனப்பட்டன. இதன் செய்யுட்கள் அந்தாதியாக அமைந்துள்ளன. இந்நூலின் இறுதியிலுள்ள 7 செய்யுட்கள் கிடைக்காமையால், இதன்கண் இப்பொழுது 23 செய்யுட்களே உள்ளன. மூத்த பிள்ளையார் என்பது விநாயகரைக் குறிக்கும். யானைமுகக் கடவுளாகிய மூத்த பிள்ளையாரின் திருவடித் துணையன்றி உயிர்களுக்கு வேறு துணையில்லை. அவர், தம்மை அன்பினால் வழிபடும் மெய்யடியார்களின் பிறவிப் பிணியைப் போக்க வல்லவர்; அவருடைய திருவடியைச் சிந்தித்து வாழ்வார் மனக் கவலை இல்லை என்பன போன்ற கருத்துகளை ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். அதிராவடிகள் பிறந்த ஊர், பெற்றோர் பெயர் போன்றவற்றை அறிய இயலவில்லை. இவ்வாசிரியர் வாழ்ந்த காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமுமாம் என்று கருதப்படுகிறது. சப்பாணி கொட்டுதல், செங்கீரையாடுதல் என்று பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளை மூத்த பிள்ளையார் மேற்கொண்டு உலக உயிர்களுக்கு இன்பஞ்செய்தார் என ஆசிரியர் சிறப்பித்துப் பாடியுள்ளார். {{larger|<b>அதிலாபாத்து,</b>}} தில்லிக்கருகில் இருக்கும் ஒரு சிறு கோட்டை. இது துக்ளகாபாத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. இக்கோட்டை முகம்மது-பின்-துக்ளக்கு என்பவரால் கட்டப்பட்டது. இதன் சுவர்கள் துக்ளகாபாத்துக் கோட்டையின் சுவர்களுடன் இணைந்துள்ளன. இக்கோட்டை இருவாயில்களைக் கொண்டது, ஒரு நுழைவாயில், தென்கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு காவல் அரண்களுக்கு இடையில் இருக்கும் புற அரணிலும், மற்றொன்று, தென் மேற்கிலும் அமைந்துள்ளன. இதன் இரு பிரிவுகளும் ஒரு வெளிச் சுவர் மூலம் தடுக்கப்பட்டுள்ளன. இதன் உள் அரண், சுவர்களுடனும் காவல் அரண்களுடனும் வாயில்களுடனும் காட்சி அளிக்கிறது. இதனுள் அரண்மனை உள்ளது. இவ்வரண் முகமதாபாத்து என்றும் அழைக்கப்படுகிறது. {{larger|<b>அதிவீரராமபாண்டியன்</b>}} விசயநகர வேந்தர் காலத்து வாழ்ந்த பாண்டிய அரசத் தலைமுறையினைச் சேர்ந்த மன்னர். இவர் கி.பி. 1564–1603 ஆகிய ஆண்டுகளில், தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர், நாட்டுக் காவலராக மட்டுமல்லாமல், ஏட்டுப் பாவலராகவும் சிறந்து விளங்கினார். சில வரலாற்றறிஞர் இவரைத் திருநெல்வேலிப் பெருமாள் புதல்வர் என்று கூறுவர். எனினும் இவர் திருநெல்வேலிப் பெருமாளின் ஏற்பு மகனும், வரதுங்கராமரின் இளவலும், பராக்கிரம பாண்டியனின் மூன்றாம் புதல்வருமாவார் என்று சிலர் முடிவு செய்து தெளிவுபடுத்தியுள்ளனர். இவர் இயற்பெயர் அதிவீர ராமன்; சடையவர்மன் என்ற பட்டப் பெயருடையார்; தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் மிகவுடையவர். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவை:- 1. நைடதம் 2. காசிகாண்டம், 3. கூர்மபுராணம் 4. கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி 5. கருவை வெண்பா அந்தாதி 6. கருவைக் கலித்துறையந்தாதி 7. வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை. {{larger|<b>1. நைடதம்:</b>}} மகாபாரதத்தில் முதலாவதாக நளன் கதை இடம் பெற்றுள்ளது. ஈதன்றி நளோதயம் என்னும் ஒரு நாலும் வடமொழியில் வழங்குகிறது. புரவலனும் புலவனுமாக விளங்கிய அர்சர், வடமொழியில் நைடதத்தைச் சிறப்புற எழுதியுள்ளார். தமிழில் புகழேந்தி, வெண்பா யாப்பில் நளன் வரலாற்றை எழுதியுள்ளார். வடமொழி, தமிழ் நூல்களை எல்லாம் அடியொற்றி எழுதப்பட்ட நூலே நைடதம் ஆகும். இந்நூல் நாட்டுப்படலம் தொடங்கி அரசாட்சிப் படலம் என்னும் இருபத்தெட்டாவது படலத்துடன் நிறைவுறுகிறது. 1173 விருத்தச் செய்யுட்களால் இந்நூல் அமைந்துள்ளது. புலவர் பலரும் போற்றி வந்த சிறந்த நூல் என்பதால், “நைடதம் புலவர்க்கு ஒளடதம்” என்னும் பழமொழியும் தோன்றுவதாயிற்று. நூலின் நடை, வேட்டை நாய் நடைபோலிருக்கிறதென்றும் நூலின் சுவை கரும்பினை அடியிலிருந்து தொடங்கி நுனிவரை தின்பது போல், போகப் போகச் சுவை குறைகிறது என்றும் இவர்தம் அண்ணியாரால் குறைகூறப்பட்டது என்பர். இக்குறையைக் களையவே காசிகாண்டம் இயற்றப்பெற்றது. {{larger|<b>2. காசிகாண்டம்:</b>}} காசி நகரப் பெருமையைப் பறைசாற்றும் நூல். பூர்வகாண்டம், உத்தரகாண்டம்<noinclude> 1-42</noinclude> g5a86vfdqwdju6flvbm1283432wtvjf கனிச்சாறு 4/032 0 620230 1839167 2025-07-04T17:48:58Z Info-farmer 232 + படிவத் தரவு 1839167 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 32 | previous = [[../031/|31]] | next = [[../033/|33]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="82" to="82" fromsection="29" tosection="29"/> 08umft1xkrmgrb9ztsy6ph4w5s1n2rm கனிச்சாறு 4/033 0 620231 1839169 2025-07-04T17:52:58Z Info-farmer 232 + படிவத் தரவு 1839169 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 33 | previous = [[../032/|32]] | next = [[../034/|34]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="83" to="83" fromsection="30" tosection="30"/> 56cywv6ih4i5pmpssrmqvnerj6gcqw2 கனிச்சாறு 4/034 0 620232 1839178 2025-07-05T01:29:40Z Info-farmer 232 + படிவத் தரவு 1839178 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 31 | previous = [[../30/|30]] | next = [[../032/|032]] | notes = }} {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 34 | previous = [[../33/|33]] | next = [[../035/|035]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="84" to="84"fromsection="31" tosection="31"/> 1kpoeenwv16fyg897fblblj4hz8cyfc 1839179 1839178 2025-07-05T01:32:41Z Info-farmer 232 - துப்புரவு 1839179 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 34 | previous = [[../33/|33]] | next = [[../035/|035]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="84" to="84"fromsection="31" tosection="31"/> kvg060uc4a827kx8n9n8a413exifbtl 1839180 1839179 2025-07-05T01:33:23Z Info-farmer 232 0 1839180 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 34 | previous = [[../033/|33]] | next = [[../035/|035]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="84" to="84"fromsection="31" tosection="31"/> hfrgzjl1cj0xpwpfmx1u71gyzh0yyl0 கனிச்சாறு 4/035 0 620233 1839181 2025-07-05T01:36:28Z Info-farmer 232 + படிவத் தரவு 1839181 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 34 | previous = [[../33/|33]] | next = [[../035/|035]] | notes = }} {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 35 | previous = [[../34/|34]] | next = [[../036/|036]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="85" to="85"fromsection="32" tosection="32"/> d8lzyyodos3q0ls9rcb0l7kucsht76j 1839182 1839181 2025-07-05T01:37:38Z Info-farmer 232 0 1839182 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 35 | previous = [[../034/|34]] | next = [[../036/|036]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="85" to="85"fromsection="32" tosection="32"/> j6o8y2jzikponatrelfdaz9ngvyd06j கனிச்சாறு 4/036 0 620234 1839183 2025-07-05T01:57:13Z Info-farmer 232 + படிவத் தரவு 1839183 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 36 | previous = [[../35/|35]] | next = [[../037/|037]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="86" to="88"fromsection="33" tosection="33"/> 9zcf5t3pdgo1upti05ljjf30v9gqqle 1839185 1839183 2025-07-05T01:58:38Z Info-farmer 232 1839185 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 36 | previous = [[../035/|35]] | next = [[../037/|037]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="86" to="88"fromsection="33" tosection="33"/> nimhnm0q3bvt9h1ra61kxe9elwha9eo கனிச்சாறு 4/037 0 620235 1839184 2025-07-05T01:58:09Z Info-farmer 232 + படிவத் தரவு 1839184 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 37 | previous = [[../36/|36]] | next = [[../038/|038]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="89" to="90"fromsection="34" tosection="34"/> ko82a826kkys4mpor1g2or7qd31ebkj 1839186 1839184 2025-07-05T01:58:58Z Info-farmer 232 0 1839186 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 37 | previous = [[../036/|36]] | next = [[../038/|038]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="89" to="90"fromsection="34" tosection="34"/> lf1roduou8ezxncsb1bett58uvv8wl7 கனிச்சாறு 4/038 0 620236 1839187 2025-07-05T02:01:56Z Info-farmer 232 + படிவத் தரவு 1839187 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 38 | previous = [[../37/|037]] | next = [[../039/|039]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="91" to="91"fromsection="35" tosection="35"/> suih9m49zwjl493j2xrqah9a9qfbf8r 1839188 1839187 2025-07-05T02:02:35Z Info-farmer 232 - துப்புரவு 1839188 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 38 | previous = [[../037/|37]] | next = [[../039/|039]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="91" to="91"fromsection="35" tosection="35"/> trzjcf2jyn81kqhmq7v06am1nmyundq கனிச்சாறு 4/039 0 620237 1839189 2025-07-05T02:04:11Z Info-farmer 232 + படிவத் தரவு 1839189 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 39 | previous = [[../038/|38]] | next = [[../040/|040]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="92" to="92"fromsection="36" tosection="36"/> fjiy9rpzccys4qeb0ui66u8fary7p1p கனிச்சாறு 4/040 0 620238 1839190 2025-07-05T02:05:06Z Info-farmer 232 + படிவத் தரவு 1839190 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 40 | previous = [[../039/|39]] | next = [[../041/|041]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="93" to="93"fromsection="37" tosection="37"/> 1wmbhjy9z0xicnykcporlpxs11ca55n கனிச்சாறு 4/042 0 620239 1839191 2025-07-05T02:06:54Z Info-farmer 232 + படிவத் தரவு 1839191 wikitext text/x-wiki phoiac9h4m842xq45sp7s6u21eteeq1 1839194 1839191 2025-07-05T02:11:06Z Info-farmer 232 39 1839194 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 42 | previous = [[../041/|41]] | next = [[../043/|043]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="95" to="95"fromsection="39" tosection="39"/> o4td53dwnrjrvmr1779bg2nccktj7ht கனிச்சாறு 4/041 0 620240 1839192 2025-07-05T02:08:53Z Info-farmer 232 + படிவத் தரவு 1839192 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 40 | previous = [[../039/|39]] | next = [[../041/|041]] | notes = }} {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 41 | previous = [[../040/|40]] | next = [[../042/|042]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="94" to="94"fromsection="38" tosection="38"/> 3cv5rhwurkwhab74azr4ckrpzhuda2a 1839193 1839192 2025-07-05T02:09:17Z Info-farmer 232 - துப்புரவு 1839193 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 41 | previous = [[../040/|40]] | next = [[../042/|042]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="94" to="94"fromsection="38" tosection="38"/> b779ie35mblfomdeihotu52uxje5hqj கனிச்சாறு 4/043 0 620241 1839195 2025-07-05T02:12:21Z Info-farmer 232 + படிவத் தரவு 1839195 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 43 | previous = [[../042/|42]] | next = [[../044/|044]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="96" to="96"fromsection="40" tosection="40"/> kre7n5y1rev5ox5188n24o9yg6pmc0f கனிச்சாறு 4/044 0 620242 1839196 2025-07-05T02:17:22Z Info-farmer 232 + படிவத் தரவு 1839196 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 44 | previous = [[../043/|43]] | next = [[../045/|045]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="97" to="97"fromsection="41" tosection="41"/> m2hvnqn0yn6eoclwy6tcnwa852t9my7 கனிச்சாறு 4/045 0 620243 1839197 2025-07-05T02:24:06Z Info-farmer 232 + படிவத் தரவு 1839197 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 45 | previous = [[../044/|044]] | next = [[../046/|046]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="98" to="98"fromsection="42" tosection="42"/> t8szkktivt3g4wl96kyafboytj5a54q கனிச்சாறு 4/046 0 620244 1839198 2025-07-05T02:25:12Z Info-farmer 232 + படிவத் தரவு 1839198 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 46 | previous = [[../045/|045]] | next = [[../047/|047]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="99" to="99"fromsection="43" tosection="43"/> 7iqd05glg7i95zk7jjzvrzxpytdgrr7 கனிச்சாறு 4/047 0 620245 1839199 2025-07-05T02:31:50Z Info-farmer 232 + படிவத் தரவு 1839199 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 47 | previous = [[../046/|046]] | next = [[../048/|048]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="100" to="100"fromsection="44" tosection="44"/> mcatee4tq1il8s1upl9msv60jcy3skl கனிச்சாறு 4/048 0 620246 1839200 2025-07-05T02:32:48Z Info-farmer 232 + படிவத் தரவு 1839200 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 48 | previous = [[../047/|047]] | next = [[../049/|049]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="101" to="104"fromsection="45" tosection="45"/> dijdli3qjy4fsg8f24ljdt2ga924s2g கனிச்சாறு 4/049 0 620247 1839201 2025-07-05T02:33:21Z Info-farmer 232 + படிவத் தரவு 1839201 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 49 | previous = [[../048/|048]] | next = [[../050/|050]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="104" to="105"fromsection="46" tosection="46"/> j92ocsw659ydrisdaow4z0unpgckljf கனிச்சாறு 4/050 0 620248 1839202 2025-07-05T02:34:20Z Info-farmer 232 + படிவத் தரவு 1839202 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 50 | previous = [[../049/|049]] | next = [[../051/|051]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="106" to="106"fromsection="47" tosection="47"/> rtrtf5ehcp9y4sokebeatpfcd59vlcr கனிச்சாறு 4/051 0 620249 1839286 2025-07-05T11:55:26Z Info-farmer 232 + படிவத் தரவு 1839286 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 51 | previous = [[../050/|050]] | next = [[../052/|052]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="107" to="107"fromsection="48" tosection="48"/> nkubilz8ximb2x0em33l8mbx9adxco3 கனிச்சாறு 4/052 0 620250 1839287 2025-07-05T11:55:52Z Info-farmer 232 + படிவத் தரவு 1839287 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 52 | previous = [[../051/|051]] | next = [[../053/|053]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="108" to="108"fromsection="49" tosection="49"/> bhrphilodcj3lxco8mxzb6y62ylwagq கனிச்சாறு 4/053 0 620251 1839288 2025-07-05T11:56:17Z Info-farmer 232 + படிவத் தரவு 1839288 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 53 | previous = [[../052/|052]] | next = [[../054/|054]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="109" to="109"fromsection="50" tosection="50"/> nh6ie2igzvc3u9hhasurngudivzqf66 கனிச்சாறு 4/054 0 620252 1839289 2025-07-05T11:57:03Z Info-farmer 232 + படிவத் தரவு 1839289 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 54 | previous = [[../053/|053]] | next = [[../055/|055]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="110" to="110"fromsection="51" tosection="51"/> fe6ubu5m5xlmbquap64dufq7hogj7vj கனிச்சாறு 4/055 0 620253 1839290 2025-07-05T11:57:28Z Info-farmer 232 + படிவத் தரவு 1839290 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 55 | previous = [[../054/|054]] | next = [[../056/|056]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="111" to="111"fromsection="52" tosection="52"/> 7yzo7lwd0c1d6fzslzrkcand67txpcq கனிச்சாறு 4/056 0 620254 1839291 2025-07-05T11:57:53Z Info-farmer 232 + படிவத் தரவு 1839291 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 56 | previous = [[../055/|055]] | next = [[../057/|057]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="112" to="112"fromsection="53" tosection="53"/> 8svte84hncg6s44ze0rnsqud7hao224 கனிச்சாறு 4/057 0 620255 1839293 2025-07-05T11:58:39Z Info-farmer 232 + படிவத் தரவு 1839293 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 57 | previous = [[../056/|056]] | next = [[../058/|058]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="113" to="113"fromsection="54" tosection="54"/> 5efb08iiv596fnrm6f7dneplx4mwf6d