விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.8 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/174 250 130257 1839401 816688 2025-07-06T02:59:54Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|172||பாரதிக்குப் பின்}}</noinclude>உற்சாகம் காட்டவானார்கள். இந்த மனோபாவம் எழுத்துக்கும் வளம் சேர்ப்பதில்லை. எழுத்தாளரின் வளர்ச்சிக்கும் வகை செய்வதில்லை. எழுத்தாளனின் திருஷ்டி தேர்ந்தெடுக்கும் பொருளின் விசேஷமும், அவனுடைய கருத்தின் செழுமையும், எண்ணத் தெளிவும், அனுபவ ஆழமும், பார்வை வீச்சும் அவனுடைய படைப்பு கலைத்தன்மை பெறுவதற்குத் துணைபுரிகின்றன. அழகான, வளமான நடை, எழுதி எழுதித் தேர்ந்த பயிற்சியினால் வந்து சேரக் கூடும். ஒரு சிலருக்கு இயல்பாகவே அமையவும் கூடும். புதுமைப்பித்தன் திருநெல்வேலிக்காரர்களின் பேச்சு வழக்குகளைத் திறமையாக எடுத்தாண்டார். அவர் காலத்திய திருநெல்வேலி மாவட்டச் சூழ்நிலைகளையும். அங்கு வசித்த மனிதர்களின் வாழ்க்கையையும், விசித்திரப் போக்குகளையும், விந்தைக்குணங்களையும், குறைபாடுகளையும் தமது கதைகளுக்குரிய விஷயங்களாகக் கொண்டார். என்றாலும், அவர் எல்லாக் கதைகளையும் திருநெல்வேலித் தமிழிலிலேயே எழுதவில்லை. ஒரே ரகமான நடையை அவர் எப்போதும் கையாளவுமில்லை. சொற்களுக்கு ஜீவனூட்டி எப்படி எல்லாம் அற்புதங்கள் பண்ண முடியுமோ அப்படி எல்லாம் நடைநயம் கண்டு வெற்றி பெற்றார். புதுமைப்பித்தனின் உரைநடை பற்றி எழுதிய போதே, இத்தொடரில் இதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். புதுமைப்பித்தனுக்குப் பிறகு, தொ. மு. சி. ரகுநாதன் திருநெல்வேலி வட்டாரப் பேச்சு மொழியைத் திறமையாகச் சில கதைகளில் பயன்படுத்தியுள்ளார். ஆனைத்தீ, ஐந்தாம் படை போன்ற கதைகளில் இதைக் காண முடியும். ‘உள்ளே, மார்பின் மேல் வரிந்துகட்டிய சேலை நெகிழாமல், உடற்கட்டுடன் ஒவ்வொரு அங்கமும்<noinclude></noinclude> rbfrlkgty4q28794dvjzdskdc9ls937 1839413 1839401 2025-07-06T03:56:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|172||பாரதிக்குப் பின்}}</noinclude>உற்சாகம் காட்டலானார்கள். இந்த மனோபாவம் எழுத்துக்கும் வளம் சேர்ப்பதில்லை. எழுத்தாளரின் வளர்ச்சிக்கும் வகை செய்வதில்லை. எழுத்தாளனின் திருஷ்டி தேர்ந்தெடுக்கும் பொருளின் விசேஷமும், அவனுடைய கருத்தின் செழுமையும், எண்ணத் தெளிவும், அனுபவ ஆழமும், பார்வை வீச்சும் அவனுடைய படைப்பு கலைத்தன்மை பெறுவதற்குத் துணைபுரிகின்றன. அழகான, வளமான நடை, எழுதி எழுதித் தேர்ந்த பயிற்சியினால் வந்து சேரக் கூடும். ஒரு சிலருக்கு இயல்பாகவே அமையவும் கூடும். புதுமைப்பித்தன் திருநெல்வேலிக்காரர்களின் பேச்சு வழக்குகளைத் திறமையாக எடுத்தாண்டார். அவர் காலத்திய திருநெல்வேலி மாவட்டச் சூழ்நிலைகளையும். அங்கு வசித்த மனிதர்களின் வாழ்க்கையையும், விசித்திரப் போக்குகளையும், விந்தைக்குணங்களையும், குறைபாடுகளையும் தமது கதைகளுக்குரிய விஷயங்களாகக் கொண்டார். என்றாலும், அவர் எல்லாக் கதைகளையும் திருநெல்வேலித் தமிழிலிலேயே எழுதவில்லை. ஒரே ரகமான நடையை அவர் எப்போதும் கையாளவுமில்லை. சொற்களுக்கு ஜீவனூட்டி எப்படி எல்லாம் அற்புதங்கள் பண்ண முடியுமோ அப்படி எல்லாம் நடைநயம் கண்டு வெற்றி பெற்றார். புதுமைப்பித்தனின் உரைநடை பற்றி எழுதிய போதே, இத்தொடரில் இதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். புதுமைப்பித்தனுக்குப் பிறகு, தொ. மு. சி. ரகுநாதன் திருநெல்வேலி வட்டாரப் பேச்சு மொழியைத் திறமையாகச் சில கதைகளில் பயன்படுத்தியுள்ளார். ஆனைத்தீ, ஐந்தாம் படை போன்ற கதைகளில் இதைக் காண முடியும். ‘உள்ளே, மார்பின் மேல் வரிந்துகட்டிய சேலை நெகிழாமல், உடற்கட்டுடன் ஒவ்வொரு அங்கமும்<noinclude></noinclude> f7c495du6xdxf08o37n5tacqsv88ytl பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/175 250 130259 1839402 816689 2025-07-06T03:07:26Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||173}}</noinclude>பின்னிவிட்ட சாட்டையைப் போல் துவண்டு துவண்டு திமிற, மாடத்தி முற்றத்திலுள்ள கற்குழியில் நெல்லையிட்டு உலக்கை கொண்டு குத்திக்கொண்டிருந்தாள். இரண்டு கையும் மாறிமாறி நெல்லைக் குத்த பாதத்தால் குழியைவிட்டு வெளிவரும் நெல்மணியை ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருந்தாள். வீராசாமியைக் கண்டதும் குத்துவதை நிறுத்தி விட்டு உலக்கையை மார்பின் மேல் சாத்தியவாறே, ‘என்னா கொளுந்தப் பிள்ளே, கோயிலுக்குப் போவெலெ? இன்னிக்கு உங்க வில்லு தானே?’ என்று கேட்டாள். ‘ஆமா, மதினி, எல்லாம் நம்ப சொதை தான். அது சரி அண்ணாச்சியை எங்கே? வெளியே போயிருக்காகளா?’ என்று கேட்டான் வீராசாமி. ‘நல்லாத்தான் கேக்கிய? கோயில்லே கொடையும் நாளுமா வீட்டிலியா இருப்பாக. அதுவும் இன்னைக்கி ஊட்டுப் போட்டுத் தார நாளு கோயிலுக்குப் போறதாவத்தான் சொல்லிட்டுப் போனாக’ என்று சொல்லிவிட்டு, மாடத்தியம்மா உலக்கையைப் பிடித்தாள். ‘சரிதான். கோயிலுக்குத் தான் போயிருப்பாக நானுந்தான் போகனும், வரட்டுமா?’ என்று கூறிவிட்டு நடையிறங்கினான், வீராசாமி. இது ‘ஆனைத்தீ’ கதையின் ஆரம்பத்தில் வருவது, உடனடியாகவே, வசனநடையின் வனப்பையும் வலிமையையும் காட்டும் முறையில் ரகுநாதன் எழுதியிருக்கிறார். “கருப்பன் துறை சுடுகாட்டுப் பிராந்தியம். அந்தப் பிராந்தியம் முழுவதும் ஒரே பனங்காடு. ஆற்றங்கரையை ஒட்டிப்பிடித்தாற் போல் உயரமாக வளர்ந்து, கரையில் வேரோடி நிற்கும் மருத மரங்கள்<noinclude></noinclude> 4x6fqsgsm16ptlaaxs6jkew5hwcjoj4 1839414 1839402 2025-07-06T03:58:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||173}}</noinclude>பின்னிவிட்ட சாட்டையைப் போல் துவண்டு துவண்டு திமிற, மாடத்தி முற்றத்திலுள்ள கற்குழியில் நெல்லையிட்டு உலக்கை கொண்டு குத்திக்கொண்டிருந்தாள். இரண்டு கையும் மாறிமாறி நெல்லைக் குத்த பாதத்தால் குழியைவிட்டு வெளிவரும் நெல்மணியை ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருந்தாள். வீராசாமியைக் கண்டதும் குத்துவதை நிறுத்தி விட்டு உலக்கையை மார்பின் மேல் சாத்தியவாறே, ‘என்னா கொளுந்தப் பிள்ளே, கோயிலுக்குப் போவெலெ? இன்னிக்கு உங்க வில்லு தானே?’ என்று கேட்டாள். ‘ஆமா, மதினி, எல்லாம் நம்ப சொதை தான். அது சரி அண்ணாச்சியை எங்கே? வெளியே போயிருக்காகளா?’ என்று கேட்டான் வீராசாமி. ‘நல்லாத்தான் கேக்கிய? கோயில்லே கொடையும் நாளுமா வீட்டிலியா இருப்பாக. அதுவும் இன்னைக்கி ஊட்டுப் போட்டுத் தார நாளு கோயிலுக்குப் போறதாவத்தான் சொல்லிட்டுப் போனாக’ என்று சொல்லிவிட்டு, மாடத்தியம்மா உலக்கையைப் பிடித்தாள். ‘சரிதான். கோயிலுக்குத் தான் போயிருப்பாக நானுந்தான் போகனும், வரட்டுமா?’ என்று கூறிவிட்டு நடையிறங்கினான், வீராசாமி. இது ‘ஆனைத்தீ’ கதையின் ஆரம்பத்தில் வருவது, உடனடியாகவே, வசனநடையின் வனப்பையும் வலிமையையும் காட்டும் முறையில் ரகுநாதன் எழுதியிருக்கிறார். “கருப்பன் துறை சுடுகாட்டுப் பிராந்தியம். அந்தப் பிராந்தியம் முழுவதும் ஒரே பனங்காடு. ஆற்றங்கரையை ஒட்டிப்பிடித்தாற் போல் உயரமாக வளர்ந்து, கரையில் வேரோடி நிற்கும் மருத மரங்கள்<noinclude></noinclude> gcyrshxj2esxcwilli9v4641n31furf பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/176 250 130261 1839447 816690 2025-07-06T04:33:55Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|174||பாரதிக்குப் பின்}}</noinclude>தாமிரபருணி நதிப் போக்கிற்கு பாரா கொடுப்பது போல் நிற்கும். பனங்காட்டு வரிசையைக் கடந்து விட்டால், விளாகத் துறையின் பக்கம் நாலைந்து மாமரங்கள் கொண்ட தோப்பும், அதை யொட்டிய துரவுகளும், குடிசைகளும், ரோட்டை யடுத்துள்ள கோயில் குளத்தான் சாராய்க் கடையும், செங்கல் சூளையும் ஊழிக்குப் பின் முளைத்தெழுந்த உலகம் போல் புதுமேனியுடன் நிற்கும். ஆற்றங்கரையோரத்தில், மாந்தோப்புக்குச் சமீபமாக, சுடுகாட்டுப் பிராந்திய எல்லைக்குள் சின்னக்கல் கட்டிடம் ஒன்று தெரியும். முன்புறமும் மேல்புறமும் அடைப்பற்றிருக்கும் அந்தக் கட்டிடம் தான் சுடுகாட்டுச் சுடலைமாடன் கோயில். கருப்பன் துறைச் சுடலைமாடன் என்றால் அந்தப் பக்கத்து ஜனங்களுக்கு பயமும் பக்தியும் அதிகம்... ... ... நல்ல கருங்கல்லில் வடித்து, மழழைப்பேற்றிய சுடலை மாடசாமி சிலையில் முகத்தில் குத்தம் தள்ளியது போலுள்ள உருண்டையாக முண்டக் கண்களும், கடைவாயினின்று கிளம்பி, தாடை வரையிலும் ஓடியுள்ள வீரப்பல்லும்; இளித்த வாயில் இடைவெளி தெரியும் பல் வரிசையும் குரூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும். சிலையின் ஒரு கரம் ஒடிந்து ஊனமாயிருந்தது...பிறை நிலாக் காலங்களில், இருளில் முகடற்ற மேல் புறத்தின் மூலம் மங்கிய சந்திர ஒளி சிலையின் மீது வழிந்தோடுவதைப் பார்த்து விட்டால், அங்கேயே பயமடித்து ரத்தம் கக்கிச் செத்துப் போவார்கள் என்றும் சொல்வதுண்டு, சிலை அத்தனை கோர ரூபத்துடன் இருக்கும். மேலும், அது பிணந்தின்னிச் சுடலை.” கட்டாரித் தேவனைப் பற்றி எழுதும் போது, நடை பின்வருமாறு அமைகிறது:{{nop}}<noinclude></noinclude> 8x7xuwr970ai4s0qghhn01ywrugixsj பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/177 250 130264 1839449 816691 2025-07-06T04:42:24Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||175}}</noinclude>“கோடைக் காலம் மட்டுமல்லாது, மற்றக் காலங்களிலும் சுடலையை நேர்நின்று தரிசிக்கும் தெம்பும் திராணியும் பெற்றவன் ஒருவன்தான் உண்டு. அவன்தான் கட்டாரித் தேவன். கோழைப்பட்ட மனசுடையவர்களுக்குக் கட்டாரித் தேவனைக் காணவே தைரியம் வேண்டும் சுடலையே உயிர்பெற்று உலாவுவது போலிருக்கும் அவனுடைய தோற்றம். கருமெழுகிலே திரட்டிச் செய்த யவனப் பொம்மை போல், அடிக்கொரு அசைவும் திமிரும் காட்டி, வரிந்து கட்டிய நரம்பு முடிச்சுகளிடையே திருகி விறைப்பேறும் தசைக் கூட்டம் அவனுடைய மேனி வளத்தை எடுத்துக் காட்டும். கத்தியைக் கொண்டு குத்தினாலும் உள்ளே இறங்காது என்னும்படி இருக்கும் அவனது தேக வலிமை. அவன் வாயிலிருந்து எப்போதும் சாராய நாற்றம் அடித்துக் கொண்டிருக்கும். ரத்தத்திலே தோய்த்தது போன்ற சாயவேட்டியை தார் பாய்ச்சிக் கட்டியிருப்பான். நெற்றியில், வெட்டப்போகும் கிடாவுக்கு வைத்த அரக்கு சிலைப்போல், கோயில் குங்குமம் தீயாய்த் தெரியும்.” இவ்லாறு, எடுத்துக் கொள்ளும் பொருளுக்கு ஏற்றபடி நடையைக் கையாள்வது எழுத்தாற்றல் பெற்றவர்களின் இயல்பாகும். ‘எழிலுடன் நெளிந்தோடும் காவேரி நதிபாயும் தஞ்சை ஜில்லாவின் வாழ்க்கைக் காட்சிகளை தக்ரூபமாக’ சித்திரித்துக் காட்டுகிறார் என்று பெருமை பெற்ற படைப்பாளி தி. ஜானகிராமன். அவருடைய எழுத்துக்களில் ‘தஞ்சாவூர் மண்ணின் மணம்’ கலந்திருக்கிறது என்று சொல்லப்படுவது உண்டு. “அவருக்கு இயல்பாயுள்ளது அநாவாசமாய் துள்ளியோடும் பேச்சு நடை. தஞ்சை ஜில்லாவின் தனிப்பெருமை<noinclude></noinclude> sci6gx4iymrmqdgehb0eaxzmitd763r பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/178 250 130267 1839450 816692 2025-07-06T04:50:50Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|176||பாரதிக்குப் பின்}}</noinclude>என்று கூறத் தகுந்த சில அருமையான சொற்சிதைவுகளும் சேர்ந்து தமிழ் பாஷையை உரிமையுடன் அவரிடம் வளரவைத்திருக்கின்றன” என்று கி. சந்திரசேகரன், தி. ஜானகிராமனின் எழுத்து பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பேச்சு நடையை நன்கு எடுத்தாள்வதற்கு ஏற்ற ஒரு உத்தியை ஜானகிராமன் தனது கதைகளில் பயன்படுத்தியிருக்கிறார். சம்பாஷணையிலேயே கதையை வளர்த்துச் செல்வது. இந்த உத்தியை இங்கிலீஷில் எர்னஸ்ட் ஹெமிங்வே திறமையாகப் பயன்படுத்தியிருக்கிறார். தமிழில், கு. ப. ராஜகோபாலன் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார். அவருக்குப் பிறகு தி. ஜானகிராமன் அதை உபயோகித்து அருமையான சாதனைகள் புரிந்திருக்கிறார். அவருடைய கலை உள்ளமும், ரசனை நோக்கும், விலகி நின்று பரிகாசமாய் விளக்குகிற போக்கும் இந்த உத்திக்கும் ஜானகிராமனின் நடைக்கும் விசேஷ நயங்கள் சேர்த்துள்ளன. ‘ரசிகரும் ரசிகையும்’ என்ற கதையிலிருந்து ஒரு உதாரணம்: ‘பிள்ளைவாள், இப்படி வாருமே, கீழ நின்னுண்டிருப்போம்.’ ‘இருக்கட்டுங்க, காத்து, சில்லாப்பா அடிக்குது. வண்டி கிளம்பு எத்தனை நிமிஷம் இருக்கு?’ ‘அது இருக்கு. பத்து நிமிஷம்.’ ‘குளுரு தாங்கலீங்களே, கீழ நிக்கிறீங்களே.’ ‘என்னையாது! மிருதங்கத்தைத் தட்டப் போறவர் இப்படிப் பயந்து செத்தீர்னா எனக்கு என்னமாய்யா இருக்கும் பாடறவனுக்கு?’{{nop}}<noinclude></noinclude> g6lbv3v352bwpew069extiadj87ol60 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/179 250 130270 1839451 816693 2025-07-06T04:59:17Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||177}}</noinclude>‘அதான் சொல்றேன், உள்ள வந்திருங்கன்னு தொண்டை கட்டிக்கிட்டர் என்ன செய்யறது?’ ‘நன்னாப் பயப்பட்டீர்! வாரும்பா இப்படி.’ ‘எனக்கு இஞ்ச இருந்தே தெரியுதே.’ ‘என்ன தெரியுது?’ ‘உங்களை எல்லாச் சனங்களும், இந்தப் பார்றா மார்க்கண்டம், இந்தப் பார்றா மார்க்கண்டம்னு வேடிக்கை பாத்துக்கிட்டு நிக்கிறது.’ ‘அடயமணே! நான் அதுக்காக நிக்கலைய்யா காத்துக்காக நிக்கிறேன்.’ ‘நல்லா நில்லுங்க. தை மாசத்து ஊதல் தானே. உடம்புக்கு ரொம்ப நல்லது. ஒரே பக்கமாப் பாக்கிறீங்களே, இப்படியும் அப்படியும் திரும்புங்க. கொஞ்சம் அசைஞ்சு கொடுத்தாத்தானே கடுக்கன் டாலடிக்கிறது தெரியும்.’ ‘அப்புறம்?’ ‘உங்களுக்கு என்ன ஐயா? எல்லா வித்வான் மாதிரியா இருக்கீங்க? நல்ல முகவெட்டு, நல்ல ஒசரம், நடு வயசு, நல்ல படிச்சகளையும் இருக்கு’ இப்படி ரசமாகக் கதையை சொல்லிக் கொண்டு போவது ஜானகிராமன் நடைநயங்களில் ஒன்று. வர்ணனை நடையும் அவரிடம் தனி நயம் கொண்டதுதான். ‘சண்பகப் பூ’ கதையின் நாயகி பற்றிய வர்ணிப்பு இதோ— “இந்த இனிமைப் புதையலை எடுத்த தாயும் தந்தையும் விண்ணவள் மேனகையும் மன்னவன் விசுவாமித்திரனுமா? அதெல்லாம் ஒன்றும் இல்லை. கோசலையம்மாள் எல்லாக் குடும்பத்திலும் காண்கிற நடுத்தர ஸ்திரீ தான். பங்கரையா<noinclude></noinclude> o8gaxmjgshv7ikuxm6ctpoenwqmi93o பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/180 250 130272 1839452 816695 2025-07-06T05:10:16Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|178||பாரதிக்குப் பின்}}</noinclude>இருக்கமாட்டாள்; சப்பை மூக்கில்லை; சோழி முழியில்லை. நவக்கிரகப் பல்லில்லை; புஸு புஸு வென்று ஜாடி இரடுப்பில்லை; தட்டு மூஞ்சி இல்லை; எண்ணெய் வழியும் மூஞ்சியில்லை; அவ்வளவுதான். அவலட்சணம் கிடையாது. அழகு என்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. மாநிறம். அவள் புருஷன் ராமையா இருந்தாரே அவரும் அப்படித்தான். குட்டையில்லை; கரளையில்லை; இரட்டை மண்டையோ, பேரிக்காய் மண்டையோ இல்லை; கோட்டுக் கண்ணோ ரத்த முழியோ இல்லை. இவ்வளவெல்லாம் எதற்கு? ஓகோ என்று மாய்ந்து போரும்படியான அழகன் இல்லை. சற்று நின்று பார்க்கத் தேவையில்லாத எத்தனையோ ஆண்களில் ஒருவர். அவர்களுக்குத் தான் இந்தப் பெண் பிறந்திருந்தது— தேங்காய்க்கும் பூவன் பழத்திற்கும் நடுவில் நிற்கிற குத்துவிளக்கைப் போல படைப்பின் எட்டாக மர்மத்தைக் கண்டு வியந்து கொள்ளும் கிழம், காவியத்தில் அழகுக்குப் பஞ்சம் இல்லை. ரம்பையும் அபரஞ்சியும் மலிந்து கிடக்கிற அந்தக் கும்பலில் சாமானியர்களே தென்படுவதில்லை சாமுத்ரிகைச் சின்னங்களை அறுபத்து நாலாகக் கூட விரிக்க முற்பட்டு விட்டார்கள் போல் இருக்கிறது, காவ்ய நாயகிகள். ஆனால் மன்னார்குடி ஒற்றைத் தெருவில், ஒரு தாழ்ந்த வீட்டில், சாமான்யக் கோசலைக்கும் சாமான்ய ராமையாவுக்கும் ஒரு புதையல்!— கிழவர் ஆச்சரியப்பட்டதில் வியப்பில்லை. தெம்புள்ள வீடுகளில் ஊட்டம் உண்டு. நடுத்தரங்கூட ஊட்டத்தில் பொலிவும் மெருகும் பெற்று எடுப்பாக நிற்கிறது. இங்கே அதுவும் இல்லை. ராமையா பள்ளிக்கூட வாத்தியார். அரைப்பட்டினி ஆரம்ப வாத்தியாராயில்லாமல், எல். டி. வாத்தியாரா யிருந்தாலும் பத்தாம்<noinclude></noinclude> lbegbfcnb1qqn0t6mv1lu80wjzxzhvd பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/181 250 130275 1839453 816696 2025-07-06T05:14:30Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||179}}</noinclude>தேதிக்குப் பிறகு கடன் இல்லாமல் வாழ்ந்ததில்லை. செத்தும் போய்விட்டார். வைத்து விட்டுப் போனது குழம்பு ரசத்திற்குக் காணும். இருந்தும், பெண் ஜட்சு வீட்டுப் பெண்மாதிரி இருக்கிறதே!’ என்று கிழவரின் மனைவி திகைப்பாள். மலர்ந்து இரண்டு நாளான கொன்னைப் பூவைப் போன வெண்மையும் மஞ்சளும் ஒன்றித் தகதகத்ததையும் நீரில் மிதந்த கருவிழியையும் வயசான துணிச்சலுடன், கண்ணாரப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தார். அதுஎன்ன பெண்ணா; முகம் நிறையக் கண்; கண் நிறைய விழி; விழி நிறைய மர்மங்கள்; உடல் நிறைய இளமை, இளமை நிறையக் கூச்சம்; கூச்சம் நிறைய தெளிவு; நெளிவு நிறைய இளமுறுவல், இது பெண்ணா? மனிதனாகப் பிறந்த ஒருவன் தன்னது என்று அனுபவிக்கப் போகிற பொருளா? “கிழவருக்கு இந்த எண்ணந்தான் சசிக்க முடியவில்லை.” சாதாரணச் சொற்களுக்கு இனிமையும் எழிலும் புதுமையும், உயிரும் உணர்ச்சியும் ஊட்டக் கூடிய ஆற்றல் சில கலை உள்ளங்களுக்கு இருக்கிறது. தி. ஜானகிராமன் அப்பேர்ப்பட்ட கலைஞர்களில் ஒருவர்.{{nop}}<noinclude></noinclude> cq3lxtmfhv34rdnklwg7ahxsuhvyfps பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/182 250 130278 1839454 816697 2025-07-06T05:19:23Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>21. ஜெயகாந்தன்</b>}}}} {{larger|<b>1960</b>}}களிலிருந்து தமிழ் எழுத்துலகத்தில் ஜெயகாந்தன் ஒரு வலிய சத்தியாக விளங்குகிறார். இளம் எழுத்தாளர்களிடையே அவருடைய பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. அவரைப் பின்பற்றி—ஜெயகாந்தன் மாதிரியே—எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு முயன்றவர்கள் அநேகர் ஆனால் வெற்றிபெற்றவர் எவரும் இலர். ஜெயகாந்தன் பிறரால் பின்பற்ற முடியாத தனி சக்தி ஆவார். அவருக்குக் கிட்டிய அனுபவங்களும், வாழ்க்கையை அவர் தரிசித்த நோக்கும், அவற்றை அடிப்படையாக்கி அவர் வளர்த்த—வளர்க்கிற—சித்தனைகளும், இவற்றை எடுத்துச் சொல்கிற தெளிவும் துணிச்சலும் விசேஷமானவை. தான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை, சிந்தித்ததை அழுத்தமாக எடுத்துச் சொல்கிறார் ஜெயகாந்தன். ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்’ வாக்கினிலே ஒளி உண்டால் என்ற உண்மைக்கு அவருடைய எழுத்துக்கள் நல்ல சான்றுகள் ஆகின்றன. எண்ணங்களை எடுத்துச் சொல்கிற சாதனமாகவே ஜெயகாந்தனின் உரைநடை அமைகிறது. முதலில் அவர் எளிமையாக, சிறு சிறு வாக்கியங்களாகத்தான் ஆரம்பிக்கிறார்.{{nop}}<noinclude></noinclude> ifd7p0jvkosj40yfejhlad51ylzzpjl பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/183 250 130280 1839456 816698 2025-07-06T05:27:59Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||181}}</noinclude>“சொர்க்கம்—ஒன்று உண்டு. அது என்னுள் இல்லை; வெளியில் இருக்கிறது. வெளியெல்லாம் நாகம் என்றால் என்னுள் மட்டும் சொர்க்கம் எப்படி இருக்க முடியும்? அந்தச் சொர்க்கம் முதலில் வெளியில் பிறக்கட்டும். அதன் பிறகு அது என்னுள் வரட்டும்; வரும். நான் வெளியில் திரிகிறேன். வெளியிலேயே வாழ்கிறேன். உலகை, வாழ்வை, மனிதர்களைக் கூர்ந்து நோக்குவதில் மகிழ்கிறேன், கண்டதை, சொன்னதை, கேட்டதை எழுதுகிறேன். எதையும் நான் கற்பனை செய்ததில்லை. உலகில் யாரும் எதையும் கற்பனை செய்ததில்லை. ஒரு தலை இருக்கக் கண்டு தான் மனிதன் பத்துத் தலையைக் ‘கற்பனை’ செய்தான். தலையையே மனிதன் கற்பனை செய்து விடவில்லை. எல்லோருக்கும் தனித் தனியாகத் தெரிந்த உண்மைகளே ஏனோ எல்லோருமே நேர்நின்று பார்க்கக் கூசுகிறோம். இந்தக் கூச்சம் கூடப் போலிக் கூச்சம்நாள். நான் கண்டதை—அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப்பட்டதை நான் கேட்டதை—அதாவது வாழ்க்கை எனக்குக் சொன்னதை நான் உலகத்துக்குத் திரும்பவும் காட்டுகிறேன்; அதையே உங்களிடம் திரும்பவும் சொல்கிறேன். அது அசிங்கமாக, அது அற்பமாக, அது கேவலமாக—அல்லது அதுவே உயர்வாக, உன்னதமாக எப்படி இருந்த போதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்? அப்படிக் காட்டும் கருவியாய், கண்ணாடியாய், ஓவியமாய், கேலிச் சித்திரமாய், சோக இசையாய், என் எழுத்து இருந்தது என்பதைத் தவிர, மற்றதெல்லாம் உங்களுடையதுதானே—அதாவது நம்முடையது தானே!’ {{rh|||(‘இனிப்பும் கரிப்பும்’ முன்னுரையில்)}}{{nop}}<noinclude></noinclude> lpj55ssh59rhejmm2bqdm1fqtnfjnbz 1839460 1839456 2025-07-06T05:37:45Z Sridevi Jayakumar 15329 1839460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||181}}</noinclude>“சொர்க்கம்—ஒன்று உண்டு. அது என்னுள் இல்லை; வெளியில் இருக்கிறது. வெளியெல்லாம் நாகம் என்றால் என்னுள் மட்டும் சொர்க்கம் எப்படி இருக்க முடியும்? அந்தச் சொர்க்கம் முதலில் வெளியில் பிறக்கட்டும். அதன் பிறகு அது என்னுள் வரட்டும்; வரும். நான் வெளியில் திரிகிறேன். வெளியிலேயே வாழ்கிறேன். உலகை, வாழ்வை, மனிதர்களைக் கூர்ந்து நோக்குவதில் மகிழ்கிறேன், கண்டதை, சொன்னதை, கேட்டதை எழுதுகிறேன். எதையும் நான் கற்பனை செய்ததில்லை. உலகில் யாரும் எதையும் கற்பனை செய்ததில்லை. ஒரு தலை இருக்கக் கண்டு தான் மனிதன் பத்துத் தலையைக் ‘கற்பனை’ செய்தான். தலையையே மனிதன் கற்பனை செய்து விடவில்லை. எல்லோருக்கும் தனித் தனியாகத் தெரிந்த உண்மைகளே ஏனோ எல்லோருமே நேர்நின்று பார்க்கக் கூசுகிறோம். இந்தக் கூச்சம் கூடப் போலிக் கூச்சம்நாள். நான் கண்டதை—அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப்பட்டதை நான் கேட்டதை—அதாவது வாழ்க்கை எனக்குக் சொன்னதை நான் உலகத்துக்குத் திரும்பவும் காட்டுகிறேன்; அதையே உங்களிடம் திரும்பவும் சொல்கிறேன். அது அசிங்கமாக, அது அற்பமாக, அது கேவலமாக—அல்லது அதுவே உயர்வாக, உன்னதமாக எப்படி இருந்த போதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்? அப்படிக் காட்டும் கருவியாய், கண்ணாடியாய், ஓவியமாய், கேலிச் சித்திரமாய், சோக இசையாய், என் எழுத்து இருந்தது என்பதைத் தவிர, மற்றதெல்லாம் உங்களுடையதுதானே—அதாவது நம்முடையது தானே!’ {{rh|||(‘இனிப்பும் கரிப்பும்’ முன்னுரையில்)}}{{nop}}<noinclude></noinclude> de5i0mt9eecolj762nqtmx9jitgrukx பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/184 250 130283 1839458 816699 2025-07-06T05:36:34Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|182||பாரதிக்குப் பின்}}</noinclude>சிறு சிறு வாக்கியங்களில் வளர்கிற ஜெயகாந்தனின் உரை நடை, எண்ண ஓட்டம் வலுப்பெறுகிற போது, பல பிரிவுகளையும் விளக்கங்களையும் தன்னிடம் கொண்ட நீள வாக்கியங்களாக (‘காம்பவுண்ட் ஸென்டன்ஸ்’, ‘காம்ப்ளெக்ஸ் ஸென்டன்ஸ்’களாக) இயல்பாக மாறிவிடுகின்றன. இதை அவருடைய கட்டுரைகளிலும் கதைகளிலும் நன்கு காண முடியும். “கதைகளில் சொல்ல முடியாத—சொன்னால் கதைத் தன்மை குலைந்து போகக் கூடிய, ஆனால் நான் கதை எழுதும் நோக்கம் வலுப்பெறச் சொல்லியே தீரவேண்டிய—கதை பற்றிய கருத்துக்களைப் பேசுவதற்கு நூலின் முன்னுரை ஒரு செளகரியமான தளம் என்பதால் இந்தச் சில பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்வது சமுதாயக் கண்ணோட்டத்துடன் இலக்கியப் பணிபுரியும் என் போன்றவர்க்கு இன்றியமையாததுமாகும்” (‘பிரம்மோபதேசம்’ முன்னுரையில்) “எவனொருவன் தன்னலம் மறுத்து, மனித குலத்தின் ஒரு பிரிவின் மீதோ பல பிரிவுகளின் மீதோ துவேஷம் வளர்க்காமல் பொதுவான மனித குலத்தின் வளர்ச்சிக்கும். உன்னத வாழ்க்கைக்கும் பாடுபடுவதற்குத் தானோர் உதாரண புருஷன் என்ற லட்சிய வேட்கையோடு செயலாற்றுகிறானோ, தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொள்கிறானோ அவன் அந்த அளவில் மனித இதயங் கொண்டோரின் மரியாதைக்குரிய முற்போக்குவாதிதான்.” {{rh|||(‘யாருக்காக அழுதான்?’ முன்னுரையில்)}} இத் தன்மைகளை (எளிமையும், போகப் போகப் பின்னல்களும், வளர்த்தல்களும் பெறுவதை) பிரதிபலிக்கும் நடைக்கு ஜெயகாந்தன் கதையிலிருந்து ஒரு உதாரணம்—{{nop}}<noinclude></noinclude> ldx5g31f57qg71464087ebxcogofx6s 1839459 1839458 2025-07-06T05:37:22Z Sridevi Jayakumar 15329 1839459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|182||பாரதிக்குப் பின்}}</noinclude>சிறு சிறு வாக்கியங்களில் வளர்கிற ஜெயகாந்தனின் உரை நடை, எண்ண ஓட்டம் வலுப்பெறுகிற போது, பல பிரிவுகளையும் விளக்கங்களையும் தன்னிடம் கொண்ட நீள வாக்கியங்களாக (‘காம்பவுண்ட் ஸென்டன்ஸ்’, ‘காம்ப்ளெக்ஸ் ஸென்டன்ஸ்’களாக) இயல்பாக மாறிவிடுகின்றன. இதை அவருடைய கட்டுரைகளிலும் கதைகளிலும் நன்கு காண முடியும். “கதைகளில் சொல்ல முடியாத—சொன்னால் கதைத் தன்மை குலைந்து போகக் கூடிய, ஆனால் நான் கதை எழுதும் நோக்கம் வலுப்பெறச் சொல்லியே தீரவேண்டிய—கதை பற்றிய கருத்துக்களைப் பேசுவதற்கு நூலின் முன்னுரை ஒரு செளகரியமான தளம் என்பதால் இந்தச் சில பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்வது சமுதாயக் கண்ணோட்டத்துடன் இலக்கியப் பணிபுரியும் என் போன்றவர்க்கு இன்றியமையாததுமாகும்” (‘பிரம்மோபதேசம்’ முன்னுரையில்) “எவனொருவன் தன்னலம் மறுத்து, மனித குலத்தின் ஒரு பிரிவின் மீதோ பல பிரிவுகளின் மீதோ துவேஷம் வளர்க்காமல் பொதுவான மனித குலத்தின் வளர்ச்சிக்கும். உன்னத வாழ்க்கைக்கும் பாடுபடுவதற்குத் தானோர் உதாரண புருஷன் என்ற லட்சிய வேட்கையோடு செயலாற்றுகிறானோ, தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொள்கிறானோ அவன் அந்த அளவில் மனித இதயங் கொண்டோரின் மரியாதைக்குரிய முற்போக்குவாதிதான்.” {{rh|||(‘யாருக்காக அழுதான்?’ முன்னுரையில்)}} இத் தன்மைகளை (எளிமையும், போகப் போகப் பின்னல்களும், வளர்த்தல்களும் பெறுவதை) பிரதிபலிக்கும் நடைக்கு ஜெயகாந்தன் கதையிலிருந்து ஒரு உதாரணம்—{{nop}}<noinclude></noinclude> ggpku0fwpompnzp7xygbvc8cgs273gs பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/185 250 130286 1839461 816700 2025-07-06T05:46:50Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||183}}</noinclude>“எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத் தானிருக்க வேண்டும். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அங்கே, அந்தத் தெருவில் ஓர் பழங்காலத்து வீட்டின் கர்ப்பக்கிருகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து இப்போது பிரிந்து, இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்து நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவையாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே? நான் பார்த்த ஊரும்—‘இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது’ என்ற உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப் போன அந்த அக்ரஹாரத்து வீடுகளும், ‘இவர்கள் என்றைக்குமே புதுமையுற மாட்டார்கள்’ என்கிற மாதிரி தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதிலே ஒரு அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது.” {{rh|||(அக்ரஹாரத்துப் பூனை)}} பட்டணத்துக் குப்பங்களில் வசிக்கிற சாதாரண மக்களின் பேச்சுநடையையும், பிராமணர்களின் பேச்சுநடையையும் ஜெயகாந்தன் தனது கதைகளில் ஆற்றலுடன்<noinclude></noinclude> i0eizpks9m98mk5xhkamge1efzvtxm2 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/186 250 130289 1839462 816701 2025-07-06T05:54:30Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|184||பாரதிக்குப் பின்}}</noinclude>கையாண்டிருக்கிறார். அழகுக்காக, சோதனைக்காக திறமையைக் காட்டுவதற்காக என்றெல்லாம் அவர் நடைநயம் பயிலனில்லை. “சிக்கலான புதிர்களையோ, ஜாலங்கள் எனும் கழைக் கூத்தாடித்தனத்தையோ, க்ஷணநேரத் துடிப்பு என்ற திருப்பங்களையோ, தித்திப்பை நாக்கில் தடவும் வர்ணனைகளையோ, உடைகளைகிற நிலை வரை உடன் சென்று குறிப்பெழுதும் ‘மார்க்கெட்’ விவகாரங்களையோ எனது வாசகர் என்னிடம் எதிர்பார்க்க மாட்டாரென்று நம்புகிறேன். எனது கதைகளில் பல நயங்களை உணர்ச்ங்களை, அர்த்தங்களை நான் அமைதியாக அதே சமயத்தில் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறேன்” (‘புதிய வார்ப்புகள்’ முன்னுரையில்) என்று அவர் குறிப்பிட்டிருப்பது நினைவுகூரத் தகுந்தது. தனது கதைகள் பற்றி ஜெயகாந்தன் கூறியுள்ள இன்னொரு கருத்தையும் குறிப்பிட வேண்டும்: “பொதுவாக வாழ்க்கையே சிக்கல் மிகுந்தது என்பது ஒரு புரியாத சூத்திரம் அல்ல. சிக்கல் மிகுவதனாலேயே வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமும் அதன் மீதொரு பற்றும் நமக்கு அதிகரிக்கிற தென்பது சற்றுக் சிந்தித்தால் புரிகிற விஷயம். எவ்வளவுதான் சிக்கல் மிகுந்திருந்த போதிலும். வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்னையிலும் முரண்பாடுகளே மலிந்திருப்பினும், மனித வாழ்க்கையின் பொதுவான கதி உன்னதமாய்த்தான் இருக்கிறது என்பது வாழ்க்கையை ஒரு வெறியோடு வாழ்ந்து அனுபவித்தவர்கள் மட்டுமே உணரத்தக்க ஒரு ஞானம். தீயவன் என்று அனைவராலும் தீர்ப்பளிக்கப்பட்டவன் கூடத் தீமையை வெறுப்பதில் அதை நிதர்சனமாய்க்<noinclude></noinclude> jfssj3vsr51jv83c708hcbww4whq1mt பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/187 250 130291 1839463 816702 2025-07-06T06:02:22Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||185}}</noinclude>காணலாம். அறிவு பூர்வமாக மட்டுமல்ல; உணர்வு பூர்வமாகக் கூட மனிதன் நல்லதையே நாடுகிறான். இதைச் சாதாரண சமூகவாழ்க்கையில் சகல கோணங்களிலும் நான் தரிசிக்கிறேன். நான் எப்படித் தரிசிக்கிறேனோ அதை அப்படியே எனது நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்பும் முயற்சியே எனது கதைகள். இந்த எனது நோக்கத்தை ஓர் அர்த்தம் என்று கொண்டால் எனது கதைகளை எல்லாம் அந்த அர்த்தத்தின் பல உருவங்கள் என்று கொள்ளலரம்.” ஜெயகாந்தன் தனது கதைகளுக்குப் பொருளாக எடுத்துக் கொள்கிற வாழ்க்கைப் பிரச்னைகளும் அவற்றைத் தனனு அனுபவ தரிசனம் மூலம் எடுத்துச் சொல்கிறவிதமும் அவருடைய சிந்தனை அவற்றுக்கு ஏற்றுகிற மெருகும், அவருடைய அழுத்தமான நம்பிக்கைகளும் துணிச்சலான வெளியீடுகளும் அவற்றுக்குத் தருகிற கனமும் அவரது உரைநடைக்கு உயிரும் உணர்வும் தனித் தன்மையும் சேர்க்கின்றன. பிரச்னைகள் சம்பந்தமான ஜெயகாந்தன் சிந்தனை ஒன்றை இங்கேஎடுத்தெழுதுவதுபொருத்தமாக இருக்கும்— “இவை கதைகள்! அதாவது மனிதன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள். அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவன கதைகள் என்று யாராவது கூறினால் அவரைப் பார்த்து நான் அனுதாபமுறுகிறேன். பிரச்னைகளுக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையென்று யாராவது கூறினால் அவர்களை நோக்கி நான் சிரிக்கிறேன். ஆனால் உங்களுக்கு மட்டும் ஒன்று சொல்லி வைக்கிறேன். வாழ்க்கை (life) என்பது வாழ்வின் (existence) பிரச்னை; வளர்ச்சி என்பது வாழ்க்கையின் பிரச்னை; கலையும் இலக்கியமும் வளர்ச்சியின் பிரச்னைகள். எனது கதைகள் பொதுவாக, பிரச்னைகளின் பிரசனை!{{nop}}<noinclude>{{rh|பா—12||}}</noinclude> 5b6jqlu8407y8wg5umroe5pofqfn88w பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/188 250 130294 1839464 816703 2025-07-06T06:04:25Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|186||}}</noinclude>பிரச்னைகள் தீர்வது இல்லை; பிரச்னைகளை யாருமே தீர்த்துவைத்ததுமில்லை. எல்லாவற்றையும் தீர்த்துக் கட்டிவிடவா வாழ்கிறோம்? மேலும் மேலும் பிரச்னைகளை உற்பத்தி செய்து கொள்ளுவதே வாழ்க்கை. புதிய புதிய பிரச்னைகளை வளர்த்துக் கொண்டால் போதும். அளவிலும் தரத்திலும் மிகுந்த பிரச்னைகள்; மிகுதியான பிரச்னைகள் மனிதகுலம் வேண்டுவது இவ்வளவே! தீர்வா? யாருக்கு வேண்டும்?”{{nop}}<noinclude></noinclude> edxnwl8kssgfxt64ubdz890y8woxb7f பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/189 250 130296 1839468 816704 2025-07-06T06:09:27Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>22. நீல. பத்மநாபன்</b>}}}} {{larger|<b>த</b>}}மிழ் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் வசிக்கிற எழுத்தாளர்கள், அவரவர் வட்டாரத்துக்கே உரிய பேச்சு மொழியையும் வழக்குச் சொற்களையும் தங்கள் எழுத்துக்களில் தாராளமாகக் கலந்து எழுதும் வழக்கத்தை கைக்கொண்டதும், தமிழ் உரைநடை பல்வேறு சாயல்களையும், பலவிதமான விசேஷத் தன்மைகளையும் ஏற்றது. தமிழ் நாட்டுக்கு வெளியே வாழ்கிற தமிழ் இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கையில் தமிழ் உரைநடை மேலும் புதிய சாயைகளைப் பெற்றிருக்கிறது என்று கூறலாம். ஈழநாட்டின் தமிழும், நாஞ்சில் நாட்டுப் பேச்சு வழக்குகளும், கேரளத் தமிழும் தமிழ் உரைநடைக்கு வளமும் புதுமையும், ஒரு தனித்தன்மையும் சேர்த்துள்ளன. இவ்விதம் தனித்தன்மை பெற்ற உரைநடையைக் கையாள்கிறவர்களில், திருவனந்தபுரம் எழுத்தாளர் நீல. பத்மநாபனை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். நீல. பத்மநாபனின் உரைநடை பற்றி எண்ணுகையில், எழுத்தாளர் அசோகமித்திரன் கல்கத்தா தமிழ் மன்றம் வெளியிட்ட மலர் ஒன்றில் தமிழ் உரைநடை குறித்து எழுதியபோது கூறியுள்ள கருத்துங்கள் என் நினைவுக்கு வருகின்றன. தமிழ் உரைநடையில் உணர்வு பூர்வமாகப் புதுமை செய்திருப்பவர் நீல. பத்மநாபன் தான் என்றும்<noinclude></noinclude> 89ajpy9ckz0ungq90rhtohiah4bn609 1839470 1839468 2025-07-06T06:09:48Z Sridevi Jayakumar 15329 1839470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>22. நீல. பத்மநாபன்</b>}}}} {{larger|<b>த</b>}}மிழ் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் வசிக்கிற எழுத்தாளர்கள், அவரவர் வட்டாரத்துக்கே உரிய பேச்சு மொழியையும் வழக்குச் சொற்களையும் தங்கள் எழுத்துக்களில் தாராளமாகக் கலந்து எழுதும் வழக்கத்தை கைக்கொண்டதும், தமிழ் உரைநடை பல்வேறு சாயல்களையும், பலவிதமான விசேஷத் தன்மைகளையும் ஏற்றது. தமிழ் நாட்டுக்கு வெளியே வாழ்கிற தமிழ் இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கையில் தமிழ் உரைநடை மேலும் புதிய சாயைகளைப் பெற்றிருக்கிறது என்று கூறலாம். ஈழநாட்டின் தமிழும், நாஞ்சில் நாட்டுப் பேச்சு வழக்குகளும், கேரளத் தமிழும் தமிழ் உரைநடைக்கு வளமும் புதுமையும், ஒரு தனித்தன்மையும் சேர்த்துள்ளன. இவ்விதம் தனித்தன்மை பெற்ற உரைநடையைக் கையாள்கிறவர்களில், திருவனந்தபுரம் எழுத்தாளர் நீல. பத்மநாபனை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். நீல. பத்மநாபனின் உரைநடை பற்றி எண்ணுகையில், எழுத்தாளர் அசோகமித்திரன் கல்கத்தா தமிழ் மன்றம் வெளியிட்ட மலர் ஒன்றில் தமிழ் உரைநடை குறித்து எழுதியபோது கூறியுள்ள கருத்துங்கள் என் நினைவுக்கு வருகின்றன. தமிழ் உரைநடையில் உணர்வு பூர்வமாகப் புதுமை செய்திருப்பவர் நீல. பத்மநாபன் தான் என்றும்<noinclude></noinclude> i4ib587sqj53r8zbmdahpn5l3175ctj பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/190 250 130299 1839474 816706 2025-07-06T06:16:37Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|188||பாரதிக்குப் பின்}}</noinclude>தமிழ் உரைநடையின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆக்கபூர்வமாகச் செய்யப் பெற்றுள்ள முதல் முயற்சியே அவருடையது தான் என்று அசோகமித்திரன் கூறுகிறார். வசனநடைச் சிறப்புக்கு உதாரணங்களாகப் பேசப்படுகிற புதுமைப்பித்தன். லா. ச. ராமாமிர்தம் போன்றவர்கள் கூட மரபு ரீதியான, முறையான தமிழ் உரைநடையைத் தான் வளர்த்திருக்கிறார்கள். மாறுபட்ட, புது முயற்சியாக அவர்கள் உரைநடையை ஆண்டு சோதனைகள் பண்ணவில்லை. ஆனால், நீல. பத்மநாபன் ஏழூர் செட்டிமார்கள் என்ற ஒரு தனிப்பட்ட சமூகத்தில் வழங்கப்படுகிற பேச்சு வழக்குகள், பழமொழிகள் முதலியவற்றை, அவர்கள் வசிக்கிற வட்டாரத்தில் இயல்பாகப் பேச்சில் கலந்துவிட்ட மலையாளச் சொற்களோடும் சேர்த்து தனித்த நடை ஒன்றை வெற்றிகரமாக வளர்த்திருக்கிறார் என்பதே அசோகமித்திரனின் கூற்றுக்கு ஆதாரம் ஆகும். நீல. பத்மநாபனின் விசேஷமான உரைநடைக்கு ‘தலைமுறைகள்’ நாவலிலிருந்து சில உதாரணங்கள் தருகிறேன்— “ராத்திரி சமயத்தில், சக்கடா வண்டியில் போவதும் ஒரு சுகம்தான். ரண்டு வண்டி நிறைய ஆளுகள், லொட லொடண்ணு போய்க் கொண்டிருக்கையில் அங்கடி இங்கடி வண்டி ஆட உள்ளே இருக்கப்பட்டவங்களின் தவைகள் மடார் மடார் என்று மோதிக் கொள்ளும், அதனால் திரவி கோச்சுப் பெட்டியில் எப்பவும் இடம் பிடிச்சுக் கொள்வான்... உட்கார்ந்திருந்து கால் மரத்துப் போய் விட்டதால் திரவியும் கீழே இறங்கி வண்டிங்க பின்னாலேயே அப்பாவின் கூட கொஞ்சதூரம் நடந்தான். நிலா வெளிச்சத்தில் வெள்ளி வாளாக பளிச்சிட்ட பனையோலைகளில் காற்று விறுவிறு என்று சுழன்று சலசலக்க வைத்தது. பாதை-<noinclude></noinclude> lo739gc6apy4iw723cpea32w99xzzrk அட்டவணை:ஒத்தை வீடு.pdf 252 179808 1839386 1837166 2025-07-05T14:34:52Z Booradleyp1 1964 1839386 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஒத்தை வீடு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=ஏகலைவன் பதிப்பகம் |Address=சென்னை |Year=முதற்பதிப்பு ஜூன் 2000 |Source=pdf |Image=1 |Number of pages=249 |File size=23.44 |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 5to11=முன்னுரை 12to15= கத்திமேல் நடந்து... 16=ஒத்தைவீடு1 26=ஒத்தைவீடு2 35=ஒத்தைவீடு3 44=ஒத்தைவீடு4 52=ஒத்தைவீடு5 54=ஒத்தைவீடு6 61=ஒத்தைவீடு7 71=ஒத்தைவீடு8 79=ஒத்தைவீடு9 86=ஒத்தைவீடு10 96=ஒத்தைவீடு11 105=ஒத்தைவீடு12 114=ஒத்தைவீடு13 118=ஒத்தைவீடு15 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:Books to repair 201 முதல் 250 வரை பக்கங்கள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] gz8dosroufuc2igypupfsy3klu1yr7r 1839387 1839386 2025-07-05T14:37:02Z Booradleyp1 1964 1839387 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஒத்தை வீடு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=ஏகலைவன் பதிப்பகம் |Address=சென்னை |Year=முதற்பதிப்பு ஜூன் 2000 |Source=pdf |Image=1 |Number of pages=249 |File size=23.44 |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 5to11=முன்னுரை 12to15= கத்திமேல் நடந்து... 16=ஒத்தைவீடு1 26=ஒத்தைவீடு2 35=ஒத்தைவீடு3 44=ஒத்தைவீடு4 52=ஒத்தைவீடு5 54=ஒத்தைவீடு6 61=ஒத்தைவீடு7 70=ஒத்தைவீடு8 79=ஒத்தைவீடு9 86=ஒத்தைவீடு10 96=ஒத்தைவீடு11 105=ஒத்தைவீடு12 114=ஒத்தைவீடு13 118=ஒத்தைவீடு15 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:Books to repair 201 முதல் 250 வரை பக்கங்கள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] jeniwx32ngnpianqlgryoqj0ajpfbk3 1839389 1839387 2025-07-05T14:48:33Z Booradleyp1 1964 1839389 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஒத்தை வீடு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=ஏகலைவன் பதிப்பகம் |Address=சென்னை |Year=முதற்பதிப்பு ஜூன் 2000 |Source=pdf |Image=1 |Number of pages=249 |File size=23.44 |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 5to11=முன்னுரை 12to15= கத்திமேல் நடந்து... 16=ஒத்தைவீடு1 26=ஒத்தைவீடு2 35=ஒத்தைவீடு3 44=ஒத்தைவீடு4 52=ஒத்தைவீடு5 54=ஒத்தைவீடு6 61=ஒத்தைவீடு7 70=ஒத்தைவீடு8 79=ஒத்தைவீடு9 86=ஒத்தைவீடு10 96=ஒத்தைவீடு11 105=ஒத்தைவீடு12 114=ஒத்தைவீடு13 118=ஒத்தைவீடு15 125=புதைமண்1 133=புதைமண்2 136=புதைமண்3 142=புதைமண்4 148=புதைமண்5 157=புதைமண்6 168=புதைமண்7 173=புதைமண்8 183=புதைமண்9 191=புதைமண்10 196=புதைமண்11 202=புதைமண்12 209=புதைமண்13 216=புதைமண்14 222=புதைமண்15 228=புதைமண்16 231=புதைமண்17 238=புதைமண்18 244=புதைமண்19 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:Books to repair 201 முதல் 250 வரை பக்கங்கள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] e983pwtszwqjpe6y947sy0vatrtxxwz 1839395 1839389 2025-07-05T15:19:29Z Booradleyp1 1964 1839395 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஒத்தை வீடு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=ஏகலைவன் பதிப்பகம் |Address=சென்னை |Year=முதற்பதிப்பு ஜூன் 2000 |Source=pdf |Image=1 |Number of pages=249 |File size=23.44 |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 5to11=முன்னுரை 12to15= கத்திமேல் நடந்து... 16=ஒத்தைவீடு1 26=ஒத்தைவீடு2 35=ஒத்தைவீடு3 44=ஒத்தைவீடு4 52=ஒத்தைவீடு5 54=ஒத்தைவீடு6 61=ஒத்தைவீடு7 70=ஒத்தைவீடு8 79=ஒத்தைவீடு9 86=ஒத்தைவீடு10 96=ஒத்தைவீடு11 105=ஒத்தைவீடு12 114=ஒத்தைவீடு13 118=ஒத்தைவீடு15 125=புதைமண்1 133=புதைமண்2 136=புதைமண்3 142=புதைமண்4 148=புதைமண்5 157=புதைமண்6 168=புதைமண்7 173=புதைமண்8 183=புதைமண்9 191=புதைமண்10 196=புதைமண்11 202=புதைமண்12 209=புதைமண்13 216=புதைமண்14 222=புதைமண்15 228=புதைமண்16 231=புதைமண்17 238=புதைமண்18 244=புதைமண்19 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:Books to repair 201 முதல் 250 வரை பக்கங்கள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] 4vpz5365gxjkt95r373qosufxl1hzz3 பக்கம்:ஒத்தை வீடு.pdf/238 250 202766 1839310 762302 2025-07-05T12:20:29Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="18"/> {{larger|<b>18</b>}} {{dhr|2em}} அத்தனை பேரும் மாமூல் நிலைக்கு திரும்பி விட்டார்கள். செல்வாவை சித்திக்காரி அதிகமாக திட்டுவதில்லை. அவனும், அவள் மௌனத்தைத்தான் தவறாக எடுத்துக் கொண்டான். சித்தப்பாவுக்கும், சித்திக்கும் ஏற்படும் ‘சில்லறை தகராறுகள்’ வரும்போது, எந்த பயமும் இன்றி, சித்திக்கே வக்காலத்து வாங்கினான். இதில் சித்தப்பாவுக்கு உள்ளூர பெருமைதான். குழந்தைகள் மீண்டும் செல்வாவுடன் ஒட்டிக் கொண்டன. வேன், ஸ்கூட்டர் ஆனது. கவிதா-செல்வா காதல், அந்த தெருவாசிகளுக்கு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த தெருக்களுக்கும் தெரிந்துவிட்டது. கவிதா, செல்வா வீட்டிற்கு போவதும், செல்வா, கவிதா வீட்டிற்கும் போவதும் வழக்கமாகி விட்டது. ஏற்கெனவே தனது தவறால்தான் மகன் மோகனன் கெட்டழிந்தான் என்ற குற்ற உணர்விலும், கூடவே தன்னோடு சேர்ந்தவளை கவிதா, அம்மா மயமாக்கியதாலும், மூத்த அதிகாரியான, கவிதாவின் தந்தை, லஞ்சம் வாங்குவதை நிறுத்தவில்லையானாலும், அதை குறைத்துக் கொண்டார். அவருள்ளும் ஒரு மாறுதல். கவிதா, மோகனைப்போல் லெஸ்பியன் ஆகாமல், இருப்பதற்கு நல்ல பையனான செல்வாவின் காதலை ஒரு மருந்தாக எடுத்துக் கொண்டார். ஆனாலும், ஒருநாள்... செல்வா, முகத்தில் ஈயாடவில்லை. மோகனன், அவனுக்கு தனது பம்பாய் ஹோமோ வாழ்க்கை பற்றி விலாவாரியாய் குறிப்பிட்டுவிட்டு, தங்கை எப்படி இருக்கிறாள் என்பதை அறிய துடிப்பதாக அவனது கல்லூரி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினான். இதனால் பழைய நினைவுகள், விசுவரூபம் எடுத்தன. இந்த கடிதத்தை கவிதாவிடம் காட்டியபோது, அண்ணன் முகவரி கிடைத்ததும், மகிழ்ந்து போனாள். ஆனாலும், செல்வா சோர்ந்து போனான். அந்த சோர்வை மறைக்கக்கூடிய அளவிற்கு அவனுக்கு திட சித்தமும் இருந்தது. ஆனாலும், அந்தக் கடிதம் ஒரு கலக்கு கலக்கிவிட்டது. கவிதாவோடு பேசும்போது, அவள் காதலனாகவே இருக்கிறவன், இரவு நேரத்தில் மட்டும், மோகனனுக்கு காதலனாகவும், காதலியாகவும் ஆகிப்போனான். மீண்டும் குடும்பத்திலும், கவிதாவுக்கும் குழப்பம் வருமோ என்று பயந்தான். வெளிப்படையான பயம் அல்ல. உள்ளூரத் தோன்றிய பயம். மறைக்கக்கூடிய பயம். ஆனாலும், அந்தப் பயத்தை அடியோடு ஒழிப்பதற்காக, மீண்டும், டாக்டர் சத்தியாவிடம் முன்னதாக தகவல் சொல்லிவிட்டு சென்றான். அவன் வரவை எதிர்பார்த்ததுபோல், அந்தம்மா,<noinclude></noinclude> i37aoy2jyy4hxez6d5h83og17fnzqzz பக்கம்:ஒத்தை வீடு.pdf/239 250 202767 1839314 762303 2025-07-05T12:27:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||239}}</noinclude>“வா தம்பி... வா” என்றாள் உடனே, செல்வா, மோகனன் எழுதிய கடிதத்தையும், அதில் தனது நடவடிக்கைகள் குறித்து, எழுதியதையும், குறிப்பிட்டான். இப்போது அவன், “ஹோமோ பத்திரிகை ஆசிரியனாம் அவன் கடிதம் வந்ததிலிருந்து, எனக்கு என்னவோ போலிருக்கிறது. எல்லாம் தீர்ந்துவிட்டதாக நினைத்தபோது, இப்படி சின்ன அளவில் வருகிற தடுமாற்றம், பெரிய அளவில் வந்துவிடக்கூடாதே என்று பயமாக இருக்குது பரீட்சை வேற நெருங்கிடுது” என்றான். “உங்களுக்கும் ஹோமோ மூடு இருந்திருக்கு செல்வா. பறவை பறந்து போனாலும், அது இருந்த மரத்தின் கொப்பு ஆடுவது மாதிரி உங்கள் மனம் ஆடுகிறது.” “நோ... நோ... மேடம்.” “அதை நான் சொல்லணும். ஆனாலும், உங்கள் ஆண்பால் சேர்க்கை சிறிது வித்தியாசமானது. ஒரு ஆணைப் பெண்ணாகப் பாவித்து பாலியலில் ஈடுபடும் போக்கு.” “அப்படில்லாம்...” “இருக்குது. இனிமேல் இருக்காமல் செய்து விடுகிறேன். நாளமில்லா சுரப்பிகளைப் பற்றி படித்திருப்பீங்க. இது ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டாவது வயதில், ஆண் தன்மை, பெண் தன்மைக்குரிய ஹார்மோன்களை சுரந்து, ரத்தத்தில் கலக்கிறது. அப்போதுதான் அந்தரங்க உறுப்புகளில் முடி முளைக்கிறது. மகரக்கட்டு எனப்படும் குரல் மாற்றம் ஏற்படுகிறது. பதினோரு சிறுவனோட அல்லது சிறுமியோட முதுகெலும்பைத் தடவினால், அவன் அல்லது அவள் மரக்கட்டை மாதிரி இருப்பார்கள். ஆனால், பன்னிரண்டு வயதில், அதே முதுகெலும்பைத் தொட்டால், அவர்கள் சிலிர்த்துப் போவார்கள்.” இந்தப் பருவம்தான் ஆணையும் பெண்ணையும் தனித்தனியாய் பிரிக்கும் பருவம். ஆண்களுக்குக்கூட இந்த வயதில் மார்பகம் நெல்லிக்காய் அளவுக்கு பெருக்கும். காரணம், முமையான ஆண் முழுமையான பெண் என்று யாரும் கிடையாது. இரண்டு தன்மைகளில் எது மேலோங்குகிறதோ அது, பாலியலையும் அதன் உறுப்பையும் தீர்மானித்து விடுகிறது. உங்களுக்கு சிறுமிக்குரிய ஹார்மோன் சிறிது கூடுதலாக இருக்கும் நமது உடம்பில், கோடிக்கணக்கான செல்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஜீன் உள்ளது... உங்களுடைய ஜீனை வைத்து, உங்கள் முப்பட்டானின் ஜீனின் எண்ணிக்கையையும், இயல்பையும் கண்டு பிடித்து விடலாம். இப்போது, இந்த சுரபிகளை கட்டுப்படுத்துவது இந்த<noinclude></noinclude> 4cw290xf365c3n6ymqdccs9au9kss42 1839318 1839314 2025-07-05T12:30:00Z மொஹமது கராம் 14681 1839318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||239}}</noinclude>“வா தம்பி... வா” என்றாள் உடனே, செல்வா, மோகனன் எழுதிய கடிதத்தையும், அதில் தனது நடவடிக்கைகள் குறித்து, எழுதியதையும், குறிப்பிட்டான். இப்போது அவன், “ஹோமோ பத்திரிகை ஆசிரியனாம் அவன் கடிதம் வந்ததிலிருந்து, எனக்கு என்னவோ போலிருக்கிறது. எல்லாம் தீர்ந்துவிட்டதாக நினைத்தபோது, இப்படி சின்ன அளவில் வருகிற தடுமாற்றம், பெரிய அளவில் வந்துவிடக்கூடாதே என்று பயமாக இருக்குது பரீட்சை வேற நெருங்கிடுது” என்றான். “உங்களுக்கும் ஹோமோ மூடு இருந்திருக்கு செல்வா. பறவை பறந்து போனாலும், அது இருந்த மரத்தின் கொப்பு ஆடுவது மாதிரி உங்கள் மனம் ஆடுகிறது.” “நோ... நோ... மேடம்.” “அதை நான் சொல்லணும். ஆனாலும், உங்கள் ஆண்பால் சேர்க்கை சிறிது வித்தியாசமானது. ஒரு ஆணைப் பெண்ணாகப் பாவித்து பாலியலில் ஈடுபடும் போக்கு.” “அப்படில்லாம்...” “இருக்குது. இனிமேல் இருக்காமல் செய்து விடுகிறேன். நாளமில்லா சுரப்பிகளைப் பற்றி படித்திருப்பீங்க. இது ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டாவது வயதில், ஆண் தன்மை, பெண் தன்மைக்குரிய ஹார்மோன்களை சுரந்து, ரத்தத்தில் கலக்கிறது. அப்போதுதான் அந்தரங்க உறுப்புகளில் முடி முளைக்கிறது. மகரக்கட்டு எனப்படும் குரல் மாற்றம் ஏற்படுகிறது. பதினோரு சிறுவனோட அல்லது சிறுமியோட முதுகெலும்பைத் தடவினால், அவன் அல்லது அவள் மரக்கட்டை மாதிரி இருப்பார்கள். ஆனால், பன்னிரண்டு வயதில், அதே முதுகெலும்பைத் தொட்டால், அவர்கள் சிலிர்த்துப் போவார்கள்.” “இந்தப் பருவம்தான் ஆணையும் பெண்ணையும் தனித்தனியாய் பிரிக்கும் பருவம். ஆண்களுக்குக்கூட இந்த வயதில் மார்பகம் நெல்லிக்காய் அளவுக்கு பெருக்கும். காரணம், முமையான ஆண் முழுமையான பெண் என்று யாரும் கிடையாது. இரண்டு தன்மைகளில் எது மேலோங்குகிறதோ அது, பாலியலையும் அதன் உறுப்பையும் தீர்மானித்து விடுகிறது. உங்களுக்கு சிறுமிக்குரிய ஹார்மோன் சிறிது கூடுதலாக இருக்கும் நமது உடம்பில், கோடிக்கணக்கான செல்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஜீன் உள்ளது... உங்களுடைய ஜீனை வைத்து, உங்கள் முப்பட்டானின் ஜீனின் எண்ணிக்கையையும், இயல்பையும் கண்டு பிடித்து விடலாம். இப்போது, இந்த சுரபிகளை கட்டுப்படுத்துவது இந்த<noinclude></noinclude> d8047r81j5sud3zdizdlp8uqtclkplm 1839320 1839318 2025-07-05T12:32:57Z Booradleyp1 1964 1839320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||239}}</noinclude>“வா தம்பி... வா” என்றாள் உடனே, செல்வா, மோகனன் எழுதிய கடிதத்தையும், அதில் தனது நடவடிக்கைகள் குறித்து, எழுதியதையும், குறிப்பிட்டான். இப்போது அவன், “ஹோமோ பத்திரிகை ஆசிரியனாம் அவன் கடிதம் வந்ததிலிருந்து, எனக்கு என்னவோ போலிருக்கிறது. எல்லாம் தீர்ந்துவிட்டதாக நினைத்தபோது, இப்படி சின்ன அளவில் வருகிற தடுமாற்றம், பெரிய அளவில் வந்துவிடக்கூடாதே என்று பயமாக இருக்குது பரீட்சை வேற நெருங்கிடுது” என்றான். “உங்களுக்கும் ஹோமோ மூடு இருந்திருக்கு செல்வா. பறவை பறந்து போனாலும், அது இருந்த மரத்தின் கொப்பு ஆடுவது மாதிரி உங்கள் மனம் ஆடுகிறது.” “நோ... நோ... மேடம்.” “அதை நான் சொல்லணும். ஆனாலும், உங்கள் ஆண்பால் சேர்க்கை சிறிது வித்தியாசமானது. ஒரு ஆணைப் பெண்ணாகப் பாவித்து பாலியலில் ஈடுபடும் போக்கு.” “அப்படில்லாம்...” “இருக்குது. இனிமேல் இருக்காமல் செய்து விடுகிறேன். நாளமில்லா சுரப்பிகளைப் பற்றி படித்திருப்பீங்க. இது ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டாவது வயதில், ஆண் தன்மை, பெண் தன்மைக்குரிய ஹார்மோன்களை சுரந்து, ரத்தத்தில் கலக்கிறது. அப்போதுதான் அந்தரங்க உறுப்புகளில் முடி முளைக்கிறது. மகரக்கட்டு எனப்படும் குரல் மாற்றம் ஏற்படுகிறது. பதினோரு சிறுவனோட அல்லது சிறுமியோட முதுகெலும்பைத் தடவினால், அவன் அல்லது அவள் மரக்கட்டை மாதிரி இருப்பார்கள். ஆனால், பன்னிரண்டு வயதில், அதே முதுகெலும்பைத் தொட்டால், அவர்கள் சிலிர்த்துப் போவார்கள்.” “இந்தப் பருவம்தான் ஆணையும் பெண்ணையும் தனித்தனியாய் பிரிக்கும் பருவம். ஆண்களுக்குக்கூட இந்த வயதில் மார்பகம் நெல்லிக்காய் அளவுக்கு பெருக்கும். காரணம், முமையான ஆண் முழுமையான பெண் என்று யாரும் கிடையாது. இரண்டு தன்மைகளில் எது மேலோங்குகிறதோ அது, பாலியலையும் அதன் உறுப்பையும் தீர்மானிக்கிகிறது. உங்களுக்கு சிறுமிக்குரிய ஹார்மோன் சிறிது கூடுதலாக இருக்கலாம் நமது உடம்பில், கோடிக்கணக்கான செல்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஜீன் உள்ளது... உங்களுடைய ஜீனை வைத்து, உங்கள் முப்பட்டானின் ஜீனின் எண்ணிக்கையையும், இயல்பையும் கண்டு பிடித்து விடலாம். இப்போது, இந்த சுரபிகளை கட்டுப்படுத்துவது இந்த<noinclude></noinclude> 1flesxnpahkf59fpcozw2ppxdz21rlu பக்கம்:ஒத்தை வீடு.pdf/240 250 202768 1839322 762305 2025-07-05T12:34:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|240||புதைமண்}}</noinclude>ஜீன்கள் என்று தெரிய வந்திருக்கிறது. ஆகையால், ஓரினச் சேர்க்கையும் ஒரு வகையில் மரபு வழிப் பிரச்சினை.” “அப்படின்னா... இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாதோ?” “முடியும். ஜீன் மட்டுமே ஒருவரது கேரக்டரை தீர்மானிப்பதில்லை. சுற்றுப்புறச் சூழல், சமூக அமைப்பு, இளமைக்கால அனுபவங்கள், சேரிடம், சேராயிடம் என்று பல காரணிகள் உள்ளன. ஒரே குடும்பத்தில் படிக்காதவர் நடைமுறை வேறு. படித்தவர் நடைமுறை வேறு. இல்லையா? ஆகையால், உடல் ஜீன்களோடு, நம் உடம்பிலுள்ள கோடிக்கணக்கான செல்கள் ஒவ்வொன்றிலும் உள்ள ஜீன்கள், சமூகச் சூழலையும், புதிய அனுபவங்களையும், பதிவு செய்கின்றன. இது உங்களுக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. மனம் அந்த பிரச்சினையை கிளப்பும்போது, ‘நீ பாட்டுக்கு, எதை வேணுமென்றாலும் நினை. எனக்கு அதற்கும் சம்பந்தமில்லை’ என்ற அணுகுமுறையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்” “என்னை மாதிரி நிறைய பேர் இப்படி இருக்காங்களே மேடம்.” “அப்படி இருப்பதா பேர் பண்ணிக்கிறாங்க. இந்த “பயர்” படம் வந்ததும் வந்தது, சமூகத்துல லெஸ்பியன் பெண்கள் அதிகமாக இருக்கிறது போலவும், மாமூல் பெண்கள் குறைவாய் இருப்பது போலவும் ஒரு மாயை ஏற்படுத்திவிட்டது. இயற்கை ஒரு பிரபஞ்ச இன்டர்நெட் மாதிரி. அதில் எல்லா நிகழ்வுகளும் உள்ளடங்கி உள்ளன. ஒரு ஆல விதை, எப்போது செடியாகி, மரமாகி, விழுதாகி, பல்கிப் பரவவேண்டும் என்பது, அந்த விதையிலேயே கணிப்பொறி திட்டங்களாய் உள்ளன இந்த திட்ட நிகழ்வுகள் நிறைவுபெறுவதற்கு, அந்த விதையை விதைப்பதும், விதைத்ததை சுற்றி முள்வேலியைப் போடுவதும், உரமிடுவதும், காடுகளில் தானாகவும், நாடுகளில் நம்மாலும் நடைபெறுகிறது. இந்த பராமரிப்பு தவறும்போது, இந்த நிகழ்வுகளுக்குள் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதேபோல், ஒரு குழந்தைக்குள் இருக்கும், மனிதனை அல்லது மனுஷியை முழுமையாக வெளிக்கொணர, குடும்பத்தளமும், சமூகத்தளமும் ஒத்து வராதபோது, அந்தக் குழந்தை, பாலியல் திரிபு போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடும் மனிதனாகிறது. இவனுக்கு அல்லது இவளுக்கு பாலியல் மீறல், பழக்கமாகிறது.” “மனிதனும் சமூகமும் இயற்கையின் விதிகளை மீறும்போது, இயற்கை ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் போல் பிரம்படி கொடுக்கிறது. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்பதுபோல், அதே இயற்கை மருந்துகளையும், வழிமுறைகளையும் காட்டுகிறது. காடுகளில் சாதுவான மிருகங்கள் அதிகமாகவும், கொடிய மிருகங்கள் குறைவாகவும் இருப்பது, இயற்கையின் சமச்சீர்<noinclude></noinclude> d3wozwe4anusj7c1aeid845f4btxarr பக்கம்:ஒத்தை வீடு.pdf/241 250 202769 1839332 762306 2025-07-05T12:40:50Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||241}}</noinclude>நிலையை பிரதிபலிப்பது. பொதுவாக, அயல் மகரந்த சேர்க்கைதான் தாவரங்களில் ஏற்படுகிறது. ஆனால், வேர்க்கடலையில் அயல் சேர்க்கை ஏற்படாதபடி, அது மொட்டாக கிடக்கிறது சில ஓரினக் சேர்க்கைக்காரர்கள் பெண்களோடும், பாலியல் உறவை வைத்துக் கொள்வதைப்போல், பூவரசு மரத்தில், அயல் மகரந்தச் சேர்க்கையும், சுய மகரந்தச் சேர்க்கையும் நடைபெறுகிறது. இது இயற்கை தனது சமச்சீர் நிலையை பாதிக்காமல் இருப்பதற்கு, ஏற்படுத்திய விதிவிலக்குகளாக இருக்கலாம்.” “நான் எப்படி முழுமையான ஆணாக மாறுவது மேடம்?” “நீங்கள் மாறி விட்டீர்கள். எஞ்சி இருக்கிற பத்து சதவீதம், எல்லோரிடமும் உண்டு. இது இருப்பதால் ஆபத்தில்லை. ஆனால், அது உங்களுடைய பழைய அனுபவங்களை கிளறுவதால் தடுத்தாக வேண்டும். இதற்காக நான் உங்களுக்கு ‘ஸாக்தெராபி’ கொடுக்கப்போறேன்.” “அப்படின்னா மேடம்.” “முதலில் கட்டிலில் போய்ப்படுங்கள்.” கட்டிலில் செல்வா, மல்லாக்க கிடந்தான். டாக்டர் அல்லது முனைவர் சத்தியா, ஸ்டெதாஸ்கோப் மாதிரி ஒரு கருவியை கையில் எடுத்தாள். அதன் முனையிலிருந்த கறுப்புப் பட்டையை செல்வாவின் கையில் சுற்றிக் கட்டினாள். பட்டைக்குள் இருந்து வெளிப்பட்ட இரண்டு ஒயர்களில் ஒன்றை பிளக்கில் செருகினாள். இன்னொன்று இவள் கைக்குள் வட்ட உருளைக்குள், ஊடுருவி இருந்தது. செல்வாவை முன்புபோல், அரை மயக்க நிலைக்கு செலுத்தியதும், சத்தியா, கேள்வி மேல் கேள்வியாக கேட்டாள். ஒவ்வொரு கேள்விக்கும், அவன் பதிலளிக்கும்போது, அந்த உருளையை இயக்கி சூடு போடுவார்களே, அதுபோல, அவன் உடம்பில் பட்டை வழியாக மின் அதிர்ச்சியை கொடுத்தாள். எந்த நினைவும் இப்படிப்பட்ட அதிர்ச்சியோடு இணைக்கப்படும்போது, அந்த நினைவு வேரறற்றுப் போகிறது. “செல்வா! இப்போ மோகனன் உன் முன் தோன்றுகிறான். அவன் எதனால் உனக்கு பிடித்தவனாகிறான்.” “அவனின் கிறக்கமான பார்வை. ஒற்றைக் கண்ணை மேலேற்றி, இன்னொரு கண்ணை தாழ்த்தி பார்க்கும் மோகனப் பார்வை... எம்மா... எப்படி வலிக்குது...” “லேசான வலிதான். அப்புறம் செல்வா! அவனிடம் உங்களுக்கு பிடித்தமானது என்னது?”{{nop}}<noinclude></noinclude> o5ik0b6q1qqbptvhyw7j20siftjeobf பக்கம்:ஒத்தை வீடு.pdf/242 250 202770 1839340 762307 2025-07-05T12:46:26Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|242||புதைமண்}}</noinclude>“அவனது நடனம் ஊழிக்கூத்து மாதிரியான வேக வேகமான இயக்கம். அத்தனை கர்ணங்களையும் அடித்துக் காட்டுவானாம் எப்பாடி... தோளுல வலிக்குதே.” “வலி போயிடும் அவனைப் பார்த்தால் நீ எப்படி ஆகிறாய்?” “அர்த்த நாரீஸ்வரனாய். அவன் எந்த முறைக்கும் சம்மதிப்பான்.” இன்னொரு மின்குத்து. இன்னொரு ‘எம்மா’ “செல்வா, வாய்விட்டுச் சொல்லு! மோகனனே! ‘உன்னை மறக்க முடியலியே... மறக்க முடியலியே...’ இப்படி பல தடவை சொல்லுப் பார்க்கலாம்.” செல்வா, பல தடவை சொன்னான். ஒவ்வொரு தடவையும், மென்மைக்கும் வன்மைக்கும் இடையேயான மின் அதிர்ச்சியில், அவன் கரங்கள், காலோடு சேர்த்து குலுங்கின. “இன்னொரு தடவைச் சொல்லு... மோகனனை மறக்க முடியலியே... மனசுக்குள்ளே சொல்லு...” “சொல்லமாட்டேன் வலிக்குது... வலிக்குது.” டாக்டர். சத்தியா, செல்வாவை வழக்கப்படி எழுப்பிவிட்டாள். அவன் தூக்கத்தையும் துக்கத்தையும் கலைத்தவன்போல் எழுந்து, அவளை புன்முறுவலாய் பார்த்தான். சத்தியா, இறுதியாகச் சொல்வதுபோல் சொன்னாள். “இனிமேல் உனக்கு பிரச்சினை வராது. கவிதாவை, அவள் அண்ணனுக்கு கடிதம் எழுதச் சொல். ஓரினச் சேர்க்கைப் பற்றி ஒரு வரிகூட வரக்கூடாது என்று கண்டிப்புடன் எழுதச் சொல். இனிமேல் எந்தக் கடிதம் வந்தாலும், அவள் மூலம்தான் உனக்கு வரவேண்டும் என்றும் அவளை எழுதச் சொல். அந்தக் கண்டிப்பில் அன்பு கனியவேண்டும். பாசம் பொங்க வேண்டும். காரணம், அவனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி ஆனவன்தான்.” “அவனுக்கும் நீங்க சிகிச்சை...” “அது முற்றின கேஸ் என்னால மட்டுமில்லாமல், யாராலும் முடியாது. அவனாய் நினைத்தால்தான் உண்டு.” “ஒரே ஒரு கேள்வி டாக்டர்! அய்யப்பன் அப்படி பிறக்கலியா? ஆறுமுகம் இப்படி பிறக்கலியா? பிரம்மா என்கிற ஆண், பிள்ளைகளை பெறலியா? விஷ்ணு என்கிற ஆண் வடிவம் பிரம்மாவை பெற்றெடுக்கவில்லையா? இப்படில்லாம் அந்த பசங்க கேட்கிறாங்க. அதுக்கு நாம என்ன பதில் சொல்றது?”{{nop}}<noinclude></noinclude> 3o3jxdcnc5jy7163xadupy0hwlyg4bg பக்கம்:ஒத்தை வீடு.pdf/243 250 202771 1839346 762308 2025-07-05T12:52:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||243}}</noinclude>“சாமர்த்தியசாலி நீ. அவங்க கேட்கிறாங்களோ இல்லையோ, நீ கேட்கிறே. மதங்கள் கடவுளுக்கு எதிரி புராணங்கள் மதங்களுக்கு வைரி. அர்ச்சகர்கள் இந்த மூன்றுக்கும் எதிரி. ஆனாலும், இந்த அய்யப்பன் விவகாரத்தில் ஒரு உள் அர்த்தமும் இருக்கிறது. பரந்தும் விரிந்தும் அண்டங்கோடிகளான நட்சத்திரங்களாய் ஆகி, அவையே ஒரு அணுவாக மாறி, நாடகம் நடத்தும் பிரும்மம் என்பது ஒன்றுதான். அது, ஆணும் இல்லை; பெண்ணும் இல்லை; அலியும் இல்லை. அந்த பெரிய ஒன்று, தன்னையே சின்னச் சின்ன ஒன்றுகளாக பெற்றெடுக்கிறது. பிறகு, இந்த சின்ன ஒன்றுகளை ஆண், பெண்ணாக பிரித்து இறப்பாலும் பிறப்பாலும் ஒழுங்குபடுத்துகிறது. பிரும்மத்தின் சிருஷ்டி வினோதம்தான் அய்யப்பன் என்று எடுத்துக்கொள்ளலாம். கொச்சைப்பட்டவர்கள் தான், அதைக் கொச்சைப்படுத்துவார்கள். எப்படியானாலும் அது புராணம். பொய்களிலே பெரிய பொய் புராணப் பொய்.” செல்வா, அவளை மலைப்போடு பார்த்துவிட்டு, ஒரு கேள்வி கேட்டான். “பொதுவாய் சைக்காட்ரிஸ்ட், சைக்காலஸிஸ்ட் என்கிறவங்க பாதிக் கிராக்காத்தான் இருக்கிறாங்க. நீங்க... விதிவிலக்காய் இருக்கீங்களே.” “நீங்க சொல்கிறவர்கள், தங்கள் உணர்வுகளை தாங்களே பரீட்சித்து பார்ப்பதால், ஏற்படுகிற கோளாறு அது. அதோட மனநோய் என்பது, யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம். என்னைப் பொறுத்த அளவில், நான் அரவிந்தர் ஆசிரமத்தில் தியானப் பயிற்சி பெற்றவள். பிரபஞ்சத்தை ஆராதிக்கும் வள்ளலாரின் அகவலை தினமும் படிப்பவள்.” டாக்டர். சத்தியா, அவனது கேள்வி ஞானத் துடிப்பால் தொடர்ந்தாள். உறுதியான உடம்பில் உறுதியான மனம் இருக்க முடியும். உறுதியான உடலுக்கு யோகாசனம், உடற்பயிற்சி போன்றவைகளை செய்ய வேண்டும். மயிலாப்பூரில், தேசிகாச்சாரியார் என்ற ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் கைநாடி பார்த்தே, ஒவ்வொருவர் உடல் வாகுக்கு ஏற்றபடி, சில யோகாசனப் பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பார். அங்கேயும் நான் பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். உடலை கழுவுவதுபோல் மனதையும் கழுவ வேண்டும். ஒரு விளக்கின் தீபத்தை பார்த்தல், அது நம் உறுப்புக்கள் ஒவ்வொன்றிலும் பொங்கி ஒளியிடுவதாய் கற்பித்தல் போன்ற பயிற்சிகளை செய்யலாம். அல்லது குறைந்தபட்சம் வாக்கிங்காவது<noinclude></noinclude> 1slgr4ej9yyxr5hswexu4mnsh4p8tem 1839349 1839346 2025-07-05T12:54:26Z மொஹமது கராம் 14681 1839349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||243}}</noinclude>“சாமர்த்தியசாலி நீ. அவங்க கேட்கிறாங்களோ இல்லையோ, நீ கேட்கிறே. மதங்கள் கடவுளுக்கு எதிரி புராணங்கள் மதங்களுக்கு வைரி. அர்ச்சகர்கள் இந்த மூன்றுக்கும் எதிரி. ஆனாலும், இந்த அய்யப்பன் விவகாரத்தில் ஒரு உள் அர்த்தமும் இருக்கிறது. பரந்தும் விரிந்தும் அண்டங்கோடிகளான நட்சத்திரங்களாய் ஆகி, அவையே ஒரு அணுவாக மாறி, நாடகம் நடத்தும் பிரும்மம் என்பது ஒன்றுதான். அது, ஆணும் இல்லை; பெண்ணும் இல்லை; அலியும் இல்லை. அந்த பெரிய ஒன்று, தன்னையே சின்னச் சின்ன ஒன்றுகளாக பெற்றெடுக்கிறது. பிறகு, இந்த சின்ன ஒன்றுகளை ஆண், பெண்ணாக பிரித்து இறப்பாலும் பிறப்பாலும் ஒழுங்குபடுத்துகிறது. பிரும்மத்தின் சிருஷ்டி வினோதம்தான் அய்யப்பன் என்று எடுத்துக்கொள்ளலாம். கொச்சைப்பட்டவர்கள் தான், அதைக் கொச்சைப்படுத்துவார்கள். எப்படியானாலும் அது புராணம். பொய்களிலே பெரிய பொய் புராணப் பொய்.” செல்வா, அவளை மலைப்போடு பார்த்துவிட்டு, ஒரு கேள்வி கேட்டான். “பொதுவாய் சைக்காட்ரிஸ்ட், சைக்காலஸிஸ்ட் என்கிறவங்க பாதிக் கிராக்காத்தான் இருக்கிறாங்க. நீங்க... விதிவிலக்காய் இருக்கீங்களே.” “நீங்க சொல்கிறவர்கள், தங்கள் உணர்வுகளை தாங்களே பரீட்சித்து பார்ப்பதால், ஏற்படுகிற கோளாறு அது. அதோட மனநோய் என்பது, யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம். என்னைப் பொறுத்த அளவில், நான் அரவிந்தர் ஆசிரமத்தில் தியானப் பயிற்சி பெற்றவள். பிரபஞ்சத்தை ஆராதிக்கும் வள்ளலாரின் அகவலை தினமும் படிப்பவள்.” டாக்டர். சத்தியா, அவனது கேள்வி ஞானத் துடிப்பால் தொடர்ந்தாள். “உறுதியான உடம்பில் உறுதியான மனம் இருக்க முடியும். உறுதியான உடலுக்கு யோகாசனம், உடற்பயிற்சி போன்றவைகளை செய்ய வேண்டும். மயிலாப்பூரில், தேசிகாச்சாரியார் என்ற ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் கைநாடி பார்த்தே, ஒவ்வொருவர் உடல் வாகுக்கு ஏற்றபடி, சில யோகாசனப் பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பார். அங்கேயும் நான் பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். உடலை கழுவுவதுபோல் மனதையும் கழுவ வேண்டும். ஒரு விளக்கின் தீபத்தை பார்த்தல், அது நம் உறுப்புக்கள் ஒவ்வொன்றிலும் பொங்கி ஒளியிடுவதாய் கற்பித்தல் போன்ற பயிற்சிகளை செய்யலாம். அல்லது குறைந்தபட்சம் வாக்கிங்காவது<noinclude></noinclude> jjpspjtpcu1793xcawb10ebrt3nawev பக்கம்:ஒத்தை வீடு.pdf/244 250 202772 1839351 762309 2025-07-05T12:57:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|244||புதைமண்}}</noinclude>போக வேண்டும். முக்கால் மணிநேரம் வேர்வையே குளியலாகும் வகையில் நடக்க வேண்டும். இனிமேல் எந்த பிரச்சினையும் வராது. அப்படி வந்தால், நீங்களும் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் வரலாம். ஓகே...” டாக்டர். சத்தியா, இருக்கையை விட்டு எழுந்ததால், அட்டை மாதிரி ஒட்டிக் கிடந்த செல்வா எழுந்தான். எழுந்தபடியே நடந்தான். {{dhr|2em}} <section end="18"/><section begin="19"/> {{larger|<b>19</b>}} {{dhr|2em}} கடந்த ஒருமாத காலமாக புதை மண்ணாய் தெரிந்த கடல்மண், அவர்கள் இருவருக்கும் மாலை மஞ்சள் வெயிலில் ஒளி சிந்தும் மரகதத் துகள்களாக தெரிந்தன. கடல் வெள்ளை வெள்ளையான அலைப் பற்களைக் காட்டிக் காட்டி சிரித்தது. முன் எச்சரிக்கையாக வெளிச்சம் பொங்கும் இடத்திலேயே அமர்ந்தார்கள். கைகளை மட்டும் பிடித்துக்கொண்டார்கள். கடற்கரையில் சந்திக்கக்கூடாது என்று, இருவருக்கும் குடும்பத்தினர் விதித்த கட்டளைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, மாதம் ஒரு தடவை சந்திப்பது என்று இவர்களாகவே முடிவெடுத்துக் கொண்டார்கள். மற்ற நாட்களில், இவன் சித்தப்பா, சித்தி அங்கே போவதும், அவள் அம்மா, அம்மா இவர்கள் வீட்டுக்கு வருவதும் வழக்கமாகி விட்டது. இருவரும் எதிர்காலத் தம்பதியினர் என்ற எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று, இரண்டு குடும்பத்துக்கும் இடையே உறுதியாகி விட்டது. “கவிதா, நான் ஒரு கவிதை எழுதி வந்திருக்கிறேன். படித்துக் காட்டட்டுமா?” “அய்யய்யோ இந்த கவிதையால வந்த வினையே போதும்பா. நீங்க படிச்சது போதும்... கிழிந்து எறிங்க. அதோட எனக்கு இந்த கவிஞர்களோட கற்பனையே பிடிக்காது. பூ காதலியாம், வண்டு காதலனாம். இது அபத்தமான கற்பனை. மலருக்கும் மலருக்கும் மகரந்த உறவை ஏற்படுத்தும் வண்டுகள் வெறும் புரோக்கர்கள்தான். காதலன்கள் அல்ல.” “அல்லவோ... இல்லவோ... இது வேற மாதிரியான கவிதை கவிதா... உன்ன மாதிரி வித்தியாசமான கவிதை.”{{nop}}<noinclude></noinclude> sb2yxghmrpw0w8782l5fz7hvfr3pm3t பக்கம்:ஒத்தை வீடு.pdf/245 250 202773 1839352 762310 2025-07-05T12:59:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>“ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க.. கத்துக்கூட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.” செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான்.பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான். {{center|{{larger|<b>பாலினம் என்பது ஈரினம் — அதில் ஓரினம் என்பது பாலின ஊனம்.}} கல்லை கவியாக்கும் சிற்பி கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான். மருந்தை உருவாக்கும் வைத்தியன், மருந்திலும் ஆண் பெண் காண்கிறான். ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன், மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான். மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள். வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த மண்டு மனிதனுக்கு இல்லை. இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு இனிஷியல் இல்லாமல் அழியலாமா? பிறப்பிற்காய் ஆன இருபாலும் ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?"</b>}} நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான். "கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல." 'நல்ல கவிதைன்னு என்னால சொல்லமுடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க.”<noinclude></noinclude> rn3twt9av67lasvsci49q32i6nj8ur1 1839354 1839352 2025-07-05T13:01:09Z மொஹமது கராம் 14681 1839354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>“ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க.. கத்துக்கூட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.” செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான்.பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான். {{center|{{larger|<b>பாலினம் என்பது ஈரினம் — அதில்<br>ஓரினம் என்பது பாலின ஊனம்.}} கல்லை கவியாக்கும் சிற்பி கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான். மருந்தை உருவாக்கும் வைத்தியன், மருந்திலும் ஆண் பெண் காண்கிறான். ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன், மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான். மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள். வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த மண்டு மனிதனுக்கு இல்லை. இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு இனிஷியல் இல்லாமல் அழியலாமா? பிறப்பிற்காய் ஆன இருபாலும் ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?"</b>}} நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான். "கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல." 'நல்ல கவிதைன்னு என்னால சொல்லமுடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க.”<noinclude></noinclude> 5einbycg3424oau69093arj6safyb66 1839355 1839354 2025-07-05T13:01:46Z மொஹமது கராம் 14681 1839355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>“ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க.. கத்துக்கூட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.” செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான்.பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான். {{center|{{larger|<poem><b>பாலினம் என்பது ஈரினம் — அதில் ஓரினம் என்பது பாலின ஊனம்.}} கல்லை கவியாக்கும் சிற்பி கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான். மருந்தை உருவாக்கும் வைத்தியன், மருந்திலும் ஆண் பெண் காண்கிறான். ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன், மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான். மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள். வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த மண்டு மனிதனுக்கு இல்லை. இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு இனிஷியல் இல்லாமல் அழியலாமா? பிறப்பிற்காய் ஆன இருபாலும் ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?"</b></poem>}} நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான். "கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல." 'நல்ல கவிதைன்னு என்னால சொல்லமுடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க.”<noinclude></noinclude> etn4k4dzk0p4vqkk2g7o0a2rui9fwu9 1839357 1839355 2025-07-05T13:02:27Z மொஹமது கராம் 14681 1839357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>“ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க.. கத்துக்கூட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.” செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான்.பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான். <poem>{{center|{{larger|<b>பாலினம் என்பது ஈரினம் — அதில் ஓரினம் என்பது பாலின ஊனம்.}} கல்லை கவியாக்கும் சிற்பி கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான். மருந்தை உருவாக்கும் வைத்தியன், மருந்திலும் ஆண் பெண் காண்கிறான். ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன், மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான். மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள். வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த மண்டு மனிதனுக்கு இல்லை. இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு இனிஷியல் இல்லாமல் அழியலாமா? பிறப்பிற்காய் ஆன இருபாலும் ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?"</b>}}</poem> நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான். "கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல." 'நல்ல கவிதைன்னு என்னால சொல்லமுடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க.”<noinclude></noinclude> d4iru11w86iorxqieleusa2salc3z2k 1839358 1839357 2025-07-05T13:03:17Z மொஹமது கராம் 14681 1839358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>“ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க.. கத்துக்கூட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.” செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான்.பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான். {{center|{{larger|<b>பாலினம் என்பது ஈரினம் — அதில் ஓரினம் என்பது பாலின ஊனம்.}}}} {{left_margin|5em|<poem>கல்லை கவியாக்கும் சிற்பி கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான். மருந்தை உருவாக்கும் வைத்தியன், மருந்திலும் ஆண் பெண் காண்கிறான். ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன், மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான். மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள். வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த மண்டு மனிதனுக்கு இல்லை. இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு இனிஷியல் இல்லாமல் அழியலாமா? பிறப்பிற்காய் ஆன இருபாலும் ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?"</b></poem>}} நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான். "கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல." 'நல்ல கவிதைன்னு என்னால சொல்லமுடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க.”<noinclude></noinclude> gmxrfpekbdpo9zsl6i5wk63mq72l63k 1839361 1839358 2025-07-05T13:06:49Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>“ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க... கத்துக்குட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.” செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான். பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான். {{center|{{larger|<b>பாலினம் என்பது ஈரினம் — அதில்<br>ஓரினம் என்பது பாலின ஊனம்.}}}} {{left_margin|5em|<poem>கல்லை கவியாக்கும் சிற்பி கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான். மருந்தை உருவாக்கும் வைத்தியன், மருந்திலும் ஆண் பெண் காண்கிறான். ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன், மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான். மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள். வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த மண்டு மனிதனுக்கு இல்லை. இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு இனிஷியல் இல்லாமல் அழியலாமா? பிறப்பிற்காய் ஆன இருபாலும் ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?"</b></poem>}} நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான். “கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல.” “நல்ல கவிதைன்னு என்னால சொல்ல முடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க.”{{nop}}<noinclude></noinclude> 7yhrl8vtokwysi8jsedjl4v98ek1lxq 1839362 1839361 2025-07-05T13:07:24Z மொஹமது கராம் 14681 1839362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||245}}</noinclude>“ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க... கத்துக்குட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.” செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான். பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான். {{center|{{larger|<b>பாலினம் என்பது ஈரினம் — அதில்<br>ஓரினம் என்பது பாலின ஊனம்.}}}} {{left_margin|10em|<poem>கல்லை கவியாக்கும் சிற்பி கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான். மருந்தை உருவாக்கும் வைத்தியன், மருந்திலும் ஆண் பெண் காண்கிறான். ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன், மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான். மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள். வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த மண்டு மனிதனுக்கு இல்லை. இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு இனிஷியல் இல்லாமல் அழியலாமா? பிறப்பிற்காய் ஆன இருபாலும் ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?"</b></poem>}} நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான். “கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல.” “நல்ல கவிதைன்னு என்னால சொல்ல முடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க.”{{nop}}<noinclude></noinclude> alogcz546od9qlfsb7cx9mykqrx70wl 1839363 1839362 2025-07-05T13:07:48Z மொஹமது கராம் 14681 1839363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||245}}</noinclude>“ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க... கத்துக்குட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.” செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான். பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான். {{center|{{larger|<b>பாலினம் என்பது ஈரினம் — அதில்<br>ஓரினம் என்பது பாலின ஊனம்.}}}} {{left_margin|13em|<poem>கல்லை கவியாக்கும் சிற்பி கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான். மருந்தை உருவாக்கும் வைத்தியன், மருந்திலும் ஆண் பெண் காண்கிறான். ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன், மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான். மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள். வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த மண்டு மனிதனுக்கு இல்லை. இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு இனிஷியல் இல்லாமல் அழியலாமா? பிறப்பிற்காய் ஆன இருபாலும் ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?"</b></poem>}} நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான். “கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல.” “நல்ல கவிதைன்னு என்னால சொல்ல முடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க.”{{nop}}<noinclude></noinclude> 6ikfuec2upet2pqzwl581o1iar1e8n9 1839364 1839363 2025-07-05T13:08:01Z மொஹமது கராம் 14681 1839364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||245}}</noinclude>“ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க... கத்துக்குட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.” செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான். பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான். {{center|{{larger|<b>பாலினம் என்பது ஈரினம் — அதில்<br>ஓரினம் என்பது பாலின ஊனம்.}}}} {{left_margin|12em|<poem>கல்லை கவியாக்கும் சிற்பி கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான். மருந்தை உருவாக்கும் வைத்தியன், மருந்திலும் ஆண் பெண் காண்கிறான். ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன், மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான். மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள். வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த மண்டு மனிதனுக்கு இல்லை. இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு இனிஷியல் இல்லாமல் அழியலாமா? பிறப்பிற்காய் ஆன இருபாலும் ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?"</b></poem>}} நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான். “கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல.” “நல்ல கவிதைன்னு என்னால சொல்ல முடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க.”{{nop}}<noinclude></noinclude> 9906ag99knn9hn4jd97ih5gytrjsiv9 1839366 1839364 2025-07-05T13:08:17Z மொஹமது கராம் 14681 1839366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||245}}</noinclude>“ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க... கத்துக்குட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.” செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான். பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான். {{center|{{larger|<b>பாலினம் என்பது ஈரினம் — அதில்<br>ஓரினம் என்பது பாலின ஊனம்.}}}} {{left_margin|11.5em|<poem>கல்லை கவியாக்கும் சிற்பி கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான். மருந்தை உருவாக்கும் வைத்தியன், மருந்திலும் ஆண் பெண் காண்கிறான். ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன், மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான். மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள். வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த மண்டு மனிதனுக்கு இல்லை. இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு இனிஷியல் இல்லாமல் அழியலாமா? பிறப்பிற்காய் ஆன இருபாலும் ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?"</b></poem>}} நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான். “கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல.” “நல்ல கவிதைன்னு என்னால சொல்ல முடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க.”{{nop}}<noinclude></noinclude> kcivkw7yqks6t0ro4wrlub89n67ma9v 1839367 1839366 2025-07-05T13:08:58Z மொஹமது கராம் 14681 1839367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||245}}</noinclude>“ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க... கத்துக்குட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.” செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவதுபோல் குரலை உயர்த்தினான். பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான். {{center|{{larger|<b>“பாலினம் என்பது ஈரினம் — அதில்<br>ஓரினம் என்பது பாலின ஊனம்.}}}} {{left_margin|11.5em|<poem>கல்லை கவியாக்கும் சிற்பி கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான். மருந்தை உருவாக்கும் வைத்தியன், மருந்திலும் ஆண் பெண் காண்கிறான். ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன், மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான். மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள். வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த மண்டு மனிதனுக்கு இல்லை. இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு இனிஷியல் இல்லாமல் அழியலாமா? பிறப்பிற்காய் ஆன இருபாலும் ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?”</b></poem>}} நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான். “கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல.” “நல்ல கவிதைன்னு என்னால சொல்ல முடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ளமாட்டாங்க.”{{nop}}<noinclude></noinclude> ta21sh8wr6yge48n6y2o2g3zky7imob பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/1 250 213799 1839400 822520 2025-07-05T16:10:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{nop}}[[File:சமுத்திரம் கட்டுரைகள்.pdf|center|240px]]{{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> 3vjxf6ynbrywqmu31zzso1je2crx02r பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/9 250 213899 1839455 1839077 2025-07-06T05:21:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|||VII}}</noinclude>⬤ பாமர மேதை என்ற கதையிலும் மூலம் போன்றதொரு கட்டுடைப்பு - கொஞ்சம் கிண்டலும் வேதனையும் கலந்ததாக ஒரு விஞ்ஞானியின் மனைவியின் ஏக்கம் தோய்ந்த கரிசனை, ஆராய்ச்சியில் தன் நிலை மறந்த விஞ்ஞானியின் நிபுணத்துவ மிக்க கையாலாகாத்தனம் (‘Potent’ impotency), மூத்தாரின் அதிகாரத்தோரணைக்குள் மறைந்து கிடக்கும் ‘டூப்ளிகேட்’ தன்மை என அறிவியலையும் குடும்பவியலையும் இணைத்து ஆடும் விளையாட்டாகக் கதை அமைந்துள்ளது. ⬤ சிலந்திவலை துணிச்சலாகத் தொடங்குகிறது. ‘இரத்தத்தால் ‘சிவப்பு’ அடிக்கப்பட்டது போன்ற காவல் நிலையம்’ அது. அதற்குள் நடக்கும் ‘போலீஸ் தர்மத்தை’ நிர்த்தாட்சண்யமாக விவரிக்கிறது கதை. “மாமுலும் தொடர்ந்து கொடுக்கனும், மாமா வேலையும் செய்யணும், மெமோவுக்கு மேல மெமோவும் வாங்கணும்...” இதுதான் சிலந்தி வலைக்குள் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர்களின் நிலை, பாவம், இப்படி ‘அசோகச் சக்கர அதிகாரி’களால் அலைக்கழிக்கப்படும் சப்-இன்ஸ்பெக்டர்களின் கோபம் இயல்பாகவே தம்மிடம் அகப்படும் அப்பாவிக் ‘குற்றவாளிகள்’ மீது திரும்புகிறது என்பதையும் நாசூக்காகக் கதை சொல்லி முடிக்கிறது. ⬤ அகலிகைக் கல் நகர்ப்புற ஆயா ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் ஒரு சாம்பிள் நிகழ்வு. அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஓரத்தில் ஓசியாய் வசித்துக்கொண்டு, அங்குள்ள அறுபது வீடுகளுக்குப் பால்வாங்கித் தந்து பிழைப்புநடத்துபவர். அவருக்கென்று ஒரு வாழ்க்கை இருந்தது. குடும்பம் இருந்தது. வீடும் இருந்தது. அத்தனையும் தொலைந்த நிலையில், தன்னைத் தொலைத்து விடாதவர் ஆயா. இதனால்தான், மனிதர்களின் மெல்லிய உணர்வுகளையும் அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. நேரங்கெட்ட நேரத்தில் கதவைத் தட்ட மனசு கேட்கமாட்டேன் என்கிறது.<noinclude></noinclude> 10alv2rjckrr5wzrdsoj3t9ymefllz8 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/10 250 213902 1839457 1839081 2025-07-06T05:29:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|VIII||}}</noinclude>அகலிகைக் கற்களாய் நிற்கும் இந்த ஆயாக்களை அவர்களின் அனுதின வாழ்க்கைப் போராட்டமே மனிதர்களாக ஆக்குகிறது. ⬤ கடைசியர்கள் மையமாகும்போது, தனிப்பட்ட இழப்புக்களே ஒருவரை மனிதநேயமிக்க போராளியாக மாற்றும் என்பதை விரிவாகச் சொல்லும் கதை கடைசியர்கள். இளைஞரைப் புரிந்துகொள்ளும் மனப் பக்குவம் இருந்தால், தலைமுறை இடைவெளிகள் தோன்றுவதில்லை என்பதைத் ‘சித்தப்பா’ மூலமாகத் தெளிவுபடுத்துகிறது இந்தக் கதை. சுயநலமில்லாத் தலைவர்களுக்கும் நல்ல வழிகாட்டிகளுக்கும் தமிழக அரசியல்-பண்பாட்டுக் களத்தில் பெரும் வெற்றிடமுள்ள இக்காலக்கட்டத்தில் தேவை. சித்தப்பாக்கள் (மாமாக்கள் அல்ல). ⬤ சரியான ‘சித்தப்பாக்கள்’ இல்லாதபோது ஒரு சமுதாயத்தில் என்ன நடக்கும் என்பதைச் சித்திரிக்கிறது கலவரப்போதை. சாதி-மதம்-வர்க்கம் எனப் பல்வேறு பிரிவினைகளால் கூறுபட்டுக் கிடக்கும் நமது சமுதாயம் மனப்பிறழ்வுக்கும் மனச்சிதைவுக்கும் ஆளாகியுள்ளது என்பதன் குறியீடாகப் பன்னிர் என்ற மனநோயாளி காட்டப்படுகிறார். “மின்சாரக் குப்பியால சூடுபோடும்” அதிர்ச்சி வைத்தியம் ஒருவேளை பன்னிரைக் குணமாக்கலாம். தன்னைக் கட்டிப்பிடித்த “அம்மாவின் தோளில் முகம் போட்டு அவர் உடல் வழியாய் தரையில் சரிந்தும்” அவர் குணமாகலாம். பன்னீர் கிடக்கட்டும். நாமெல்லாருமே ஒருவிதத்தில் மனநோயாளிகளாக ஆக்கப்படுகிறோம் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர். இன்று கலவரங்கள் திட்டமிட்டு FÚRfû NVÔL LrjRlTÓ ¡u \]. BVpx (spontaneity) என்பது அரங்கேற்றப்படும் ஒரு thriller. ⬤ “எந்தக் குடியிலும் பெண் என்கிறவள் கீழ் குடிதான்” என்ற மையக்கருத்தை வலியுறுத்தும் கதை பெண்குடி. இது முகம் தெரியாத<noinclude></noinclude> c3484c1tg3ti50y3khw0xxdtskwlts3 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/26 250 216004 1839353 1839020 2025-07-05T13:00:16Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|16{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“போயும் போயும் டைப்பிஸ்ட் வேலையான்னு கேட்டீங்களே, அதுக்கு ஒரு சின்ன விளக்கம் கொடுத்தேன்!” பாஸ்கரன், அப்போதுதான் தன் எதிரே உட்கார்ந்திருப்பவனை, சிறிது மரியாதையாய் பார்த்தான். அவன் அழுத்தம் திருத்தமாய் பேசியதை, நம்ப முடியாதவள் போல் இப்படிப்பட்டவனால் எப்படிப் பேச முடியுது என்பதுபோல் சோபாவுக்குப் பின்னால் நின்ற மனைவியை அண்ணாந்து பார்த்தான். அவள் படுக்கறையில், “ஒரு பரதேசிப் பையனிடம் பேச்சில தோத்துட்டீங்களேன்னு” சொல்லக் கூடாது என்பதற்காக பேசமுடியாமல் பேசினான். “நான் சொல்றநை நீங்க தப்பாய் நினைத்தாலும், நான் சொல்ல வேண்டியதை சொல்லியாகணும். எம். ஏ., படிச்சுட்டு எத்தனையோ பேர் ஐ. ஏ. எஸ்., ஐ. பி. எஸ்., என்று இருக்கும்போது, நீங்க டைப்பிஸ்டாய் இருக்கறதுனால, ஒங்களுக்கு இன்டெலிஜென்ஸும், இன்ஷியேட்டிவ்யும் இருக்காதோ என்கிற சந்தேகத்துலதான் கேட்டேன்!” “நீங்க கேட்டதை நான் தப்பா நினைக்கல. அதே சமயம், நான் ஏன் ஐ. ஏ. எஸ். எழுதல என்கிறதைச் சொல்லனும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்ல, ஹையஸ்ட் பீக், லாங்கஸ்ட் கான்டினென்ட். பிக்கஸ்ட் ஒசன் எது எதுன்னுதான் பொதுவா கேள்வி கேட்டுறாங்க, பப்ளிக் ஸ்கூல்ல போலித்தனமான ஆங்கில உச்சரிப்பில் நடமாடுறவங்களாலதான் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி ஐ. ஏ. எஸ். ஆக முடியும். இவங்களுக்கு குட்டாம்பட்டியைப் பத்தியோ, சட்டாம்பட்டியைப் பத்தியோ தெரியாது. அது தெரிந்திருக்க நியாயமுமில்ல. சர்வீஸ் கமிஷன்லயும் இவங்க செளகரியத்துக்குத் தக்கபடி தான் கேள்வி கேட்கிறாங்க.” “இது ஒங்களுக்கு ஒரு நொண்டி சாக்குன்னு நினைக்கிறேன்.” {{nop}}<noinclude></noinclude> dp89pj8rns5k084v0ihnotqu9j0rfby பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/27 250 216006 1839360 1838687 2025-07-05T13:04:32Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||17}}</noinclude>“நொண்டி சாக்கோ... நொண்டாத சாக்கோ... எனக்கு இப்போ இருக்கிற டைப்பிஸ்ட் வேலை பிடிச்சிருக்கு. அதை மாத்திக்கிற உத்தேசமும் இல்ல.” “அப்படின்னா நீங்க, இங்கே வந்திருக்கப்படாது!” பானுமதி, ‘அண்ணா...’ என்று அலறப்போனாள். செல்வத்தின் முகத்தில் புன்னகை புழுக்கமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அண்ணனைக் கோபமாக முறைத்தாள். இதற்குள் மைதிலி, கணவனின் கையை வலுவாகத் திருகி அவனை உள்ளறைக்குள் இழுத்துக்கொண்டு போனாள். தணிகாசலம், எதையுமே கண்டுகொள்ளாதவர்போல், கையீரண்டையும் மார்போடு சேர்த்துக்கட்டி ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தார். ஐந்து நிமிடம்வரை, ஈயாடவில்லை. பானுவுக்கு எதுவும் ஓடவில்லை. செல்வம் எழுத்தான். தணிகாசலம் அவனைப் பார்க்காமலே “உட்கார்” என்றார். பானுமதி, “உட்காருங்க... உட்காருங்க” என்று அறைகுறையாக உளறினாள். தணிகாசலம், இப்போது அவனை நேருக்கு நேராய் பார்த்தார். புன்னகை மாறாமலே பேசினார். “என் பையன் தங்கைமேல இருக்கிற அன்பாலதான் கேட்டான். தன்னோட மைத்துனன் சொத்துக்களை சம்பாதிக்காட்டாலும், அதைக் கட்டிக் காக்கிறவனாகவாவது இருக்கணுமே என்கிற கவலை அவனுக்கு, காரணம் நியாயமானதுதான். ஆனால், கவலைதான் மோசமானது.<noinclude> ச.—2</noinclude> bgdy5lemzrqlafihadn53dcqs3if33o பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/28 250 216008 1839369 1839021 2025-07-05T13:09:54Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|18{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“ஐ ஆம் ஹாப்பி...என் மகள் மேனாமினுக்கிப் பயல்கள் மேல் ஆசைப்படாமல், ஒரு நல்ல பையனை— தனக்குன்னு ஒரு சமுதாயக் கண்ணோட்டம் வைத்திருப்பவனை தேர்ந்தெடுத்ததுக்காக சந்தோஷப்படுகிறேன். இந்த வீட்டுக்குள்ளே, பேசப்போற விவகாரம் தெரிந்தும், இந்தமாதிரி கசங்கிய உடையில் வந்த நீ ஒரு கசங்காத பையன்னு புரிஞ்சுகிட்டேன். பட் என் மகனுக்கும் சம்மதம் வேணும்!” பானு எழுந்தாள். செல்வத்தை நாணத்தோடும். அப்பாவை மகிழ்ச்சியோடும் பார்த்தபடியே வீட்டுக்குள் ஓடினாள். அண்ணனை மடக்க வேண்டுமானால், அண்ணிக்கு கண்ணி போட வேண்டும். “அண்ணி... அண்ணி” என்று மனதுக்குள் கூவியபடியே ஓடியவள், எவரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில், மைதிலி கணவனை வாட்டியெடுத்ததை காதுபடக் கேட்டாள். “ஒங்களுக்கு மூளை இருக்கா? இந்தமாதிரிப் பையன் எங்கே தேடினாலும் கிடைக்காது. நல்லவேளை அசட்டுப் பையனைப் பார்த்துப் பிடிச்சிருக்காள். வீம்பு பிடிச்சவனா இருந்தால் நாளைக்கே பாதி சொத்தைக் கேட்பான். பானுவுக்கு இப்படிப்பட்டவனே தேவை என்கிறதை மறந்துட்டீங்களா... இவன் பிடித்த இடத்துல பிள்ளையார் மாதிரி இருப்பான்!” “சரியான அழுமூஞ்சாய் இருக்காண்டி.” “சிடுமூஞ்சைவிட அழுமூஞ்சி எவ்வளவோ தேவல! இவள் புத்திக்கு இவன் போதும். இவள் ஆட்டத்துக்கும், பாட்டத்துக்கும் இப்படிப்பட்டவன்தான் தேவை. நமக்கும் இப்படிப்பட்டவன் கிடைத்தால்தான், சொத்து சுகம் சிதறாமல் இருக்கும். இப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருக்குது தெரியுமா? ஒங்கப்பா மாட்டேன்டுடப் போறாரோன்னு பயமா இருக்கு— சீக்கிரமா சரி சொல்லுங்க!” {{nop}}<noinclude></noinclude> n5ccadkdlbtvlf5iw666glu4mqc30ay பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/29 250 216010 1839370 1838692 2025-07-05T13:13:36Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||19}}</noinclude>முன் வாங்கிய பானு, பின்வாங்கினாள். அண்ணிக்கு இப்படிப்பட்ட ஒரு நெகட்டிவ் திருப்தியா... எப்படியோ எந்த முறையிலேயோ, அண்ணனை சம்மதிக்க வச்சால்போதும். எனக்கு வேண்டியது சொத்துச் செல்வம் இல்லை. என் செல்வந்தான்... என்னுடைய செல்வந்தான். பானு திரும்பி வந்தபோது, அப்பாவும் ‘அவரும்’ சுவாரஸ்யமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் செல்வத்திற்கு எதிரே உட்காரப் போனாள். பிறகு நாணப்பட்டு அப்பாவின் நாற்காலிக்குப் பின்புறமாய் நின்று கொண்டாள். இதற்குள் பாஸ்கரனும், மைதிலியும் சிரித்தபடியே வந்தார்கள். மைதிலி உட்காரும் முன்பே “சரி நல்ல நாளாய் பாருங்க” என்று சொல்லிவிட்டு. கணவன் எதுவும் குறுக்கே பேசிவிடக்கூடாது என்று அவனைக் கண்டிப்போடு பார்த்தாள். தணிகாசலம் நாற்காலியைத் தூக்கி செல்வத்திற்கு எதிரே போட்டுக்கொண்டு உட்கார்கிறார். வருங்கால மாப்பிள்ளையை வைத்த கண் வைத்தபடி பார்த்தார். இருபத்தாறு வயதில் ஞானி போன்ற முகம். ஆனாலும் பிஞ்சில் பழுக்காத நிர்மலமான முகம்; நீண்ட விரல்கள்; எல்லாவற்றையும் விலகியிருந்து பார்ப்பது போன்ற சலனமற்ற பார்வை; எதையும், எவரையும் பெரிதாகவோ சிறிதாகவோ எடுத்துக்கொள்ளாதது போன்ற தோரணை. இந்த பாஸ்கரனும் இருக்கானே... பகலில் ரேஸ்... நைட்டில் மசாஜ் பார்லர்; இவன்மட்டும் எனக்கு மகனாகப் பிறந்திருந்தால் எனக்கு இப்படிப்பட்ட பிரஷ்ஷரே பிறந்திருக்காது.” தணிகாசலம் குரலை கனைத்துக்கொண்டார். ஏற்ற இரக்கமற்ற குரலில் பேசினார். “ஒன்னை எங்களுக்கு பிடிச்சிருக்கு தம்பி. பானுகொடுத்து வைத்தவள். ஒன்னைமாதிரி குணமுள்ள பையனுக்குத்தான் நானும் காத்திருந்தேன். ஒன்னோட வீட்டு<noinclude></noinclude> 24fnodcbeemjkxs6ninh5u1dwhcolvb பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/30 250 216012 1839372 1839022 2025-07-05T13:19:21Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|20{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>நிலைமையைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என்னோட வீட்டு நிலைமையை நான் சொல்லியாகணும். நானும் ஒன்னை மாதிரி கஷ்டப்பட்டவன் தான். கிராமத்துல இருந்து ஓடிவந்து, ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்து அப்புறம் படிப்படியாய், முன்னுக்கு வந்தவன். இப்போ எனக்கு ஒரு சினிமா தியேட்டர் இருக்குது. இவ்வளவு பெரிய வீடு இருக்குது; அம்பத்தூர்ல ஒரு சின்ன பேக்டரி இருக்குது; பாலவாக்கத்துல நூறு கிரவுன்ட் இடம் இருக்குது; தேனாம்பேட்டையில் பெரிய அரிசி மண்டி இருக்கு; பேங்க் லாக்கர்ல பானுவுக்கு நூறு பவுன் நகை இருக்குது; இதையெல்லாம் கணக்குப் பார்த்து செட்டில் செய்து உயில் எழுதிட்டேன். இந்த வீடு, அம்பத்தூர் பேக்டரி, நூறுபவுன் நகை பானுவுக்கு, அரிசி மண்டி, நூறு கிரவுண்ட் மனை, ரியல் எஸ்டேட், கார் பேங்க்ல இருக்கிற கேஷ் என்னோட மகனுக்கு...” பானு குறுக்கிட்டாள். “இப்போ இந்த பேச்செல்லாம் எதுக்குப்பா...” “நீ சும்மா இரும்மா! தாய் பிள்ளையாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறம்மா. இந்த உயில் விவரத்தை இப்போதான் சொல்றேன். ஒனக்கும் ஒன் அண்ணனுக்கும் செட்டில் பண்ணிட்டேன். ஒண்ணாய் இருக்கணுமா...தனியாய் இருக்கணுமா... என்கிறதை நீங்க, என் காலத்துக்குப் பிறகு முடிவு செய்துகொள்ளலாம். பானு நீகூட யோசிக்கலாம்; நான் ஏன் இவ்வளவு அவசரப்பட்டேன்னா, என உடம்புல ஹையர் டென்ஷன், டயபடிக்ஸ்; ஒனக்கு ஒரு வழி செய்யனு மேன்னுதான் உயிர் ஓடிட்டு இருக்குது. இப்பவோ நாளை யோன்னு...” “அப்பா... அப்பா...” “பொறும்மா... எனக்கு நீங்க கிடைச்சதுல ரொம்ப திருப்தி. நான் சொத்தை செட்டில் செய்திட்டாலும் இந்த சொத்தும், வீடும் பிரியாமல் இருக்கனுமுன்னுதான் விரும்பு-<noinclude></noinclude> p4ehxgumbmobv69i4u7r3r8xgfzk1qp பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/102 250 216156 1839302 820967 2025-07-05T12:05:45Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}93}}</noinclude>மோகினி சட்டென்று குனிந்து அவர் காலைத் தொட்டாள். அவர் தூக்கி நிறுத்துவார் என்று எதிர்பார்த்தாள், அவர் குத்துக்கல் மாதிரி நின்றுகொண்டே இருந்ததால், மோகினி சுயமாகவே எழுந்தாள். அவர் முகத்தை நேராகப் பார்த்தாள். அவர் முகம் உணர்ச்சிவசமாகிக் கொண்டிருந்தது. மோகினி உணர்ச்சிகளைக் கொட்டினாள் “காலுல ஏற்பட்ட காயம் இன்னும் ஆறலியாமே! டயாபெடிஸ்ஸா இருந்தாலும் இருக்கப் போவுது. எதுக்கும் டாக்டர்கிட்ட ‘செக்கப்’ பண்ணுங்கோ மாமா!” அருணாசலம் பதில் சொல்வதற்கு முன்னதாகக் கனகம்மா முந்திக்கொண்டு, “அதை ஏன் கேக்குற? டாக்டர் என்கிற வார்த்தய கேட்டாலே எரிஞ்சி விழுறார். போனவாரம் இப்படித்தான்...” என்று இழுத்து இழுத்துப் பேசப்போனாள். அருணசலத்திற்கு அவள் பேச்சு சங்கடமாக இருந்ததோ அல்லது ஒரு சாக்காக இருந்ததோ தெரியவில்லை. “சரி.. சரி... உன் புகாருங்களை வெளில போயி பேசு” என்றார் சிறிது கடுகடுப்புடன். மோகினிக்கு. அவர் அவளிடம் பேசாதது ஏமாற்றந்தான். கணவனின் இயல்பை உணர்ந்து வைத்திருந்த கனகம்மா, மோகினியின் தோளைக் கையால்தட்டி, கண்ணால் சைகை செய்து வெளியே வந்தாள். மோகினி கிழவனாரை நோட்டம் விட்டுக்கொண்டே பின்னால் வந்தாள். அதுவரை அவள் பிரிவைத் தாங்கியது பெரிய விஷயம்போல் உஷாவும், கமலாவும், சபாபதியும் மோகினியை மொய்த்துக் கொண்டார்கள். சீனிவாசன் அவர்களை ஒரு தடவையும். தன்னை ஒரு தடவையும் பெருமையாய்ப் பார்த்துக்கொண்டான். அவன் இப்போது டைட் பேண்டில் இருந்தான். {{nop}}<noinclude></noinclude> sifrqhm6aeht9d16wk9uta7fmk649c5 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/103 250 216158 1839300 820969 2025-07-05T12:02:38Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|94{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>ஸ்வீட்டுகள் கொடுக்கப்பட்டன. காபிகள் குடிக்கப்பட்டன. மோகினி தான் கல்லூரியில் படித்த விதத்தை விளக்கிக் கொண்டிருந்தாள். பேச்சுவாக்கில் “தலை என்னமா வலிக்குது” என்று உஷா சொன்னபோது. ‘அய்யய்யோ’ என்று பதறிப்போய், அவள் தலையைத் தடவிவிட்டாள். கனகம்மாவின் புடவையில் இரண்டு சொட்டு காபி விழுந்தபோது, தன் இடுப்பில் செருகி வைத்திருந்த கைக்குட்டையை எடுத்துப் புடவையைத் துடைத்துவிட்டாள். எல்லோரும் அவளை ஆச்சரியமாகவும், அவளைக்கொண்டு வந்தவனை அனாவசியமாகவும் பார்த்துக்கொண்டு நின்றபோது, “அய்யய்யோ... நேரமாயிட்டுது” என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து, சீனிவாசனைப் பார்த்தாள்—அவன் வீட்டுக்குள்ளேயே காரைத் தேடுபவன்போல் அங்குமிங்கும் சுற்றிவிட்டு, வெளியே வந்து காரைச் சரியாக வாசலுக்கு முன்னால் அடைத்தான். மோகினி பிரியமில்லாதவள் போல் தயங்கித் தயங்கி வெளியே வந்தாள். கிழவர் அருணாசலம் இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தாள். அவரிடம் சொல்லிக் கொள்ளலாமா என்று நினைத்து வாயைத் திறந்தவள் மூடிக்கொண்டாள். அவர் குடி முழுகிப் போனதுபோல் குப்புறப் படுத்துக்கிடந்தார். “அடிக்கடி வாங்கோ அண்ணி” என்று கமலா எதிர்கால முறையை இப்போதே முறைப்படுத்தினாள். அவள் அடிக்கடி வரவேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாக, சபாபதி சட்டைப் பித்தானை மாட்டிக்கொண்டான். மோகினி காரில் ஏறுவது வரைக்கும் பேசிக்கொண்டே போனாள். “கமலா வீட்டுக்கு வாங்கோ. ஒரேயடியா அடஞ்சிக்கிடந்தா போரடிக்கும்.” “உஷா. வீட்டுக்கு வாம்மா! நான் இங்கிலீஷ் கத்துத்தாரேன்.” {{nop}}<noinclude></noinclude> 1hw78imj4c5zez1jyl8bv0jagpvye85 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/104 250 216160 1839304 820971 2025-07-05T12:09:05Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}95}}</noinclude>“வரட்டுமா அத்தே... வரட்டுமா தம்பி!” கார் ஸ்டார்ட்டாகியது. இப்போது முன் ஸீட்டில் உட்கார்ந்துகொண்ட மோகினி. அந்த வீட்டை ஏற இறங்கப் பார்த்தாள். பழைய காலத்து வீடானாலும் கெட்டியாக இருந்தது. மாடியில் யாரோ வாடகைக்கு இருக்கிறார்கள். கிழவி மேக்கப்' செய்துகொள்வதுபோல் பழைய காலத்தை நவீனப்படுத்தும் வகையில் வீட்டின் வெளிச்சுவரில் சுண்ணாம்பு வெள்ளை நீக்கப்பட்டு ‘டிஸ்டம்பர்’ அடிக்கப்பட்டிருந்தது. வாசற்கதவும் மாற்றப்பட்டதுபோல் தோன்றியது. அந்த வீட்டை மனதுக்குள் நன்றாகப் பதிய வைத்துக்கொண்டு. மோகினி முன் ஸீட்டில் சீனிவாசனுக்கு அருகே உட்கார்ந்தாள். “சீனன் கொடுத்துவச்சவன்” என்று சபாபதி சொல்வது அவளுக்குக் கேட்டது. அதற்குக் கமலாவும் உஷாவும் தலையாட்டுவதும் அவள் பார்வையில் பட்டது. ‘டாடா’, ‘சீரியோக்களுடனும்’ உறுமலோடும் புறப்பட்ட கார். மௌனமாக இயங்கிக்கொண்டிருந்தது. கண் இமைகளைக் கொட்டாமலே. “ஒங்களவங்களுக்கு என்னப் பிடிச்சிருக்குமுன்னு நினைக்கிறேன்” என்றாள் மோகினி. “விஷயம் வேற மாதிரி. ஒனக்கு அவங்கள பிடிச்சிருக்கா என்பதுதான் கேள்வி.” “என்னங்க நீங்க, ஒங்கப்பா எங்கப்பா இல்லியா? ஒங்கம்மா எங்கம்மா இல்லியா?” சீனிவாசனால் உணர்ச்சிப் பெருக்கில் பேச முடியவில்லை. கார் கண்ணாடியில் நடந்தவைகளுக்கெல்லாம் உருவங் கொடுத்துப் பார்த்தான். அதில் பின்னால் வரும் வண்டிகளுக்குப் பதிலாக, அவனும் அவளும் உலவிக்கொண்டிருந்தார்கள். {{nop}}<noinclude></noinclude> t99cdolxmnmjyttep6ks2d7xpksro7a பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/105 250 216162 1839305 820973 2025-07-05T12:13:56Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|96{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருவரும் பி. ஏ. படித்துக்கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தான். கண்டோர் சுருண்டு விழும்படி காட்சியளித்த மோகினியின் பார்வைக்காக, கல்லூரி ஆசிரியர்கள்கூட ஏங்கினார்களாம். ‘அவள் திட்டினால்கூடப் பரவாயில்லை. அதுவும் பேச்சுத்தானே’ என்றுகூட பல மாணவர்கள் ‘அட்டம்ப்ட்’ செய்வார்கள். சீனிவாசன் நினைத்துப் பார்த்துச் சிரித்துக்கொண்டான். சுருட்டுக் கிராப்பன் சுரேஷுக்காக, பல பெண்கள் தவங்கிடந்தபோது. அவன் இந்த மோகினிக்காக தவங் கிடந்தான். ஒருநாள் அவன் பேச் முயற்சித்தபோது. இவள் ‘ஸ்டூபிட்’ என்று சொல்லிவிட்டாள். அதிலிருந்து சக மாணவர்கள் அவனை "ஸ்டுபிட் சுந்தரம்' என்றார்கள். இந்த போல், ஒரு டாக்டரின் மகன்—பளபளப்பான ஆடைகளுக்குள் பளபளப்பாக மினுங்கும் பையன், இவளுக்கு ஒரு காதல் கடிதம் எழுத, அதை அவள் சுக்கு நூறாகக் கிழித்து அவன் தலையில் பப்ளிக்காகப் போட்டாள். முடிவு அவன் ‘பேப்பர் தலைவன்’ என்று பெயர் வாங்கினான். அவள், அந்தக் கல்லூரியில் காலெடுத்து வைப்பதற்கு முன்பு வரை, மாணவர்கள் ஒருவருக்கொருவர் ‘ரெட்டை மண்டையன்’ ‘பஜ்ஜி உதடன்’ என்று செல்லப் பெயர்களை வைத்திருந்தார்கள். வந்ததும், இவள் அவர்களை எந்த முறையில் நடத்துகிறாளோ, அந்த முறையில் பெயர் வைக்கத் துவங்கி விட்டார்கள். இவளை மொய்த்துக்கொண்டிருந்த பெரிய இடத்துப் பையன் ஒருவனை, ‘ஒனக்கெல்லாம் அக்கா தங்கை இல்லியா’ என்று கேட்டாள். அன்றிலிருந்து அவன் ‘அக்கா தங்கை இல்லாதவன்’ என்று அழைக்கப்பட்டான். இப்படித் தன்னைவிட வலுவிலும் வளத்திலும் வாழ்க்கை முறையிலும் மேம்பட்ட பலரைத் துச்சமாக மதித்துவிட்டு, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்த<noinclude></noinclude> izanxkom4hlla44gc6ct1aglnj4x1bh பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/106 250 216164 1839309 820975 2025-07-05T12:20:21Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}97}}</noinclude>தன்மீது அவளுக்குக் காதல் ஏற்பட்டதை நினைக்கும்போது, இப்போதும் சீனிவாசன் ஆச்சரியப்பட்டான். இவ்வளவுக்கும் அவளே அவனிடம் வலியப் பேசி வசீகரித்தாள். அவனை ‘டப்பா’ என்று இடுகுறிப் பெயரில் அழைத்த மாணவர்கள் அவனை அவள் காதலிக்க முடியாது என்று திட்டவட்டமாக நம்பியதுடன் இருவர் சந்திப்பதையும், கிசுகிசு பேசுவதையும் பார்த்துவிட்டு. ‘எவனுக்கோ... லவ் லெட்டர் கொடுக்கத்தான் இவள் இந்த டப்பாப் பையனை பயன்படுத்துகிறாள்’ என்று பேசிக்கொண்டதும் அவனுக்குத் தெரியும். இந்தப் பேச்சை அவன் அவள் காதில் போட்டதும், “நீங்களா டப்பா... இல்லை மோகன் டப்பா; அவனோட அப்பா டப்பா” என்று சொன்னதுடன், சொன்னவர்களை ‘டப்பாய்க்கக் கூட’ப் பார்த்தாள். சீனிவாசன் வாய்விட்டே சிரித்தான். எஞ்ஜினியராக அங்குமிங்கும் சுற்றிவிட்டு, இப்போது ஓய்வு பெற்றுச் சென்னையில் செட்டிலான அப்பாவிடம், தன் காதல் விவகாரத்தை, அம்மா மூலம் தெரியப்படுத்தி. தந்தையின் வேண்டா வெறுப்பான அனுமதி வாங்கி மோகினியை வீட்டிற்குக் கூட்டி வந்திருந்தான். எல்லோருக்குமே அவளைப் பிடித்துவிட்டதை நினைத்து சந்தோஷப்பட்டு, தன்னை இவளுக்கு எப்படிப் பிடித்தது என்று சந்தேகப்பட்டும், பெருமிதப்பட்டும், பின்னர் அவள் தன்னுடன் காலம் முழுவதும் காலத்தைக் கழிக்கப்போகிறாள் என்ற கற்பனை சுகத்தில், கண்ணுக்குத் தெரிய மல் ‘மோகினி’ என்று சொல்லிக்கொண்டே, அவள் தோளைப் பிடித்தான். அவள் சீறினாள். “தொட்டுத் தாலி கட்டுமுன்ன என்னை தொடக்கூடாதுன்னு எத்தன தடவை சொல்றது?” {{nop}}<noinclude> ச.—7</noinclude> chagy5shmpyg4sxyp08adgi4pzviu0s பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/107 250 216166 1839316 820977 2025-07-05T12:28:46Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|98{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>“அதனாலதான் இப்ப தொட்டேன். அப்புறமா தாலிய கட்டுறேன்.” “ஆமாம். என்னப்பத்தி நீங்க என்ன நினைச்சிருக்கிறீங்க? ஒங்க வீட்டுக்கு வந்ததுனால தொடலாமுன்னா? நான் இனிமே ஒங்க வீட்டுக்கு வரமாட்டேன்!” சீனி நடுங்கிப் போனான். மௌனமாகக் காரை ஓட்டினான். அவள் வீட்டு முன் கார் நின்றபோது, உள்ளே ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்த அவள் தந்தை ஏகாம்பரம், வெத்திலை பாக்கு டப்பாவை மடியில் வைத்துக்கொண்டு அதை லேசாகத் தட்டிக்கொண்டு இருந்தவர். “வாங்கோ...மாப்பிள்ளை! உள்ளே வந்துட்டுப் போங்க.” என்றார். இதுவரை அவர் அவனை மிஸ்டர் சீனிவாசன் என்று அழைத்தவர், இப்போது ‘மாப்பிள்ளை’ என்று சொன்னதைக் கேட்டதும், மோகினி ‘உம்’ மென்று உட்கார்ந்திருந்த சீனிவாசனின் விலாவில் செல்லமாக இடித்தாள். அவனுக்குப் போன உயிர் திரும்பவந்தது. “நீ மட்டும் என்னைத் தொடலாமா?” என்று கேட்கலாமா என்றுகூட நினைத்தான். கூடாது. சரியான வீம்புக்காரி. ஓஹோ... அப்படியா? ஒங்க வாடையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு விலகக்கூடியவள். கீழ்ப்படிதலான டிரைவர்போல அவன் அவளுக்குக் கார்க் கதவைத் திறந்துவிட்டான். இருவரும் வீட்டுக்குள் வந்தார்கள். வருங்கால மாமனாருடனும். உள்ளே இன்னொரு அறையில் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நோயாளி மாமியாருடனும் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சீனிவாசன் வெளியே வந்தான். மோகினி அவன் காரை ஸ்டார்ட் செய்த வரைக்கும் அருகிலேயே நின்றாள். கார் இரண்டடி நகர்ந்தபோது. அவள் நாலடி துள்ளி, “ஜாக்கிரதையா வண்டி ஓட்டுங்கோ! உங்களுக்கு ஒண்ணுன்னா என்னால உயிரோட இருக்க<noinclude></noinclude> 45g7cp9ixs5b2rmneg9kdciekd5g983 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/108 250 216168 1839319 820979 2025-07-05T12:32:28Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}99}}</noinclude>முடியாது.” என்று சொல்லிவிட்டு, அவன் பரட்டைத் தலையில் தன் கையைப் பதித்துவிட்டு, பிறகு ‘டாடா’ காட்டினாள். சீனிவாசன் மகிழ்ந்துபோனான். அவள் காட்டிய தாய்மையில் இவன் கிறங்கிப் போனதுபோல், காரும் பின்னால் வந்த சைக்கிள்கள்கூட ‘ஓவர்டேக்’ செய்யுமளவிற்கு, மெது மெதுவாய் ஓடியது. காரை ஷெட்டில் விட்டு விட்டு, அவன் பெருமையோடு வீட்டுக்குள் நுழையப்போனான். அடிக்கடி தன்னை திறமையில்லாதவன். அசடு என்று எவரும் கேட்குமுன்னாலேயே அபிப்பிராயங்களை அள்ளித் தெளிக்கும் அப்பாக்காரர் இவன் செலக்ஷனைப் பார்த்துப் பாராட்டப்போவதை நினைத்துக்கொண்டு அவன் உள்ளே நுழைந்தபோது— முன் அறையில், அவன் தந்தை அருணாசலம் மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தவர், இப்போது அவனுக்கும் கேட்கட்டும் என்று நினைத்தவர் போல் கத்தினார். “இந்தக் கல்யாணம் நடக்க முடியாது. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அவள் என் மருமகளா ஆகமுடியாது.” கனகம்மாள் முகம் வெளிறியிருந்தது. கமலா கடுகடுப்போடு உதடுகளைத் துடிக்க வைத்துக் கொண்டாள். உஷா மட்டும் தந்தையிடம் நேராகக் கேட்டாள். “காரணம் சொல்லாமல் ஒருத்தியை வேண்டாமுன்னா எப்படி?” “அவளைப் பாத்தா ‘பிஞ்சில் பழுத்தவள் மாதிரி தோணுது. அதோட ஒவ்வொருவளுடைய வீக்னஸையும் கண்டு பிடிச்சி அதைத் தனக்கு சாதகமா பயன்படுத்துற டைப்! சீனன் நல்ல நாளுலயே மந்தம். இவள் கையில் பிடிச்சி கொடுத்துட்டா. அவ்வளவுதான்.” {{nop}}<noinclude></noinclude> clntsa7ec52dqdnldsl19p4qz3mf1bw பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/109 250 216170 1839327 820981 2025-07-05T12:37:01Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|100{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>கனகம்மாளுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. கணவன்காரர், தனது மனம் மாறிவிடுமோ என்று தனக்குள்ளேயே பயந்து, தான் மேற்கொண்ட நிலையிலிருந்து தப்பிக்க முடியாமல் இருக்க, தன்னைச் சுற்றியே உறுதிமொழிக் கோடுகளைப் போட்டுக் கொள்வதோடு, அந்தக் கோட்டை அழிக்கவிடவும் மாட்டார் என்பது தெரிந்திருந்தும் அவள் பேசினாள். “பாவம். அறியாத வயது: ஆசையோட பழகினாள். அவள் பேசுவது ஒவ்வொண்ணுக்கும் அர்த்தம் கண்டு பிடிக்கிறது அபத்தம். என் வயசில இந்தமாதிரி ஒரு பொண்ண பாத்ததுல்ல...” “நானும் பாத்ததுல்ல. அதனாலதான் வேண்டாங்கறேன்!” எம்.எஸ்.ஸி. படிக்க நினைத்த கமலா இப்போது அப்பாவை இடைமறித்தாள். “நீங்க சொல்றது உங்களுக்கே நல்லா இருக்கா அப்பா? ஒரு பெண்ணைக் காரணம் காட்டாமலே வேண்டாங்கறது அநியாயம். அக்ரமம்.” அருணாசலம் இப்போது பயங்கரமாக வெறித்தரர். “அவளைப் பற்றி ஆயிரம் விஷயங்கள் தெரியும். அதெல்லாம் ஒங்ககிட்ட சொல்ல முடியாது. சொல்றதும் பண்பில்ல. மொத்தத்துல நான் உயிரோட இருக்கற வரைக்கும் அவள் இந்த வீட்டுக்குள்ள வர முடியது!” பெண்கள் புரிந்தும் புரியாதது போல ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றபோது, சீனிவாசன் நிலை குலைந்து போனவன்போல் வாசற் கதவைப் பிடித்துக்கொண்டான். பின்னர் நொண்டியடித்து அப்பாவை நெருங்கினான். {{nop}}<noinclude></noinclude> m5hk2m60q4e4vkssf5r7ira7joqd97v பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/110 250 216172 1839330 820985 2025-07-05T12:39:53Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{block_right|{{x-larger|<b>3</b>}}}} {{dhr|2em}} <b>‘சா</b>துவுக்குக் கோபம் வந்தால், காடு தாங்காது’ என்பது உண்மையோ பொய்யோ, சீனிவாசனுக்கு வந்த கோபத்தால் அந்த வீடே தாங்க முடியாமல் கிட்டத்தட்ட காடு மாதிரி ஆகியது. ‘சும்மா கத்தாதிங்க அப்பா? நான் மூணு வருஷமா பழகி நல்லவள்னு கண்டுபிடிச்சவளை நீங்க மூணு நிமிஷத்துல, அதுவும் சரியாக்கூடப் பார்க்காம ஒரு முடிவுக்கு வாரிங்கன்னா அது அர்த்தமில்லாத முடிவுதான். இது என்னோட கல்யாணம்! நீங்க வச்சிருக்கிற மிஸ் கன்ஸீவ்டு நோஷன்களுக்கு நான் எக்ஸ்பரிமென்டாய் இருக்க முடியாது. இந்தக் கல்யாணம் நடந்தே தீரும். வேணு முன்னா பாருங்க!’ அருணாசலம், அதிர்ந்துபோனார் பரம சாது என்று நினைத்த தன் மகனா இப்படி மாறிவிட்டான்? இருக்க இருக்காது. அந்த மாய மோகினி மாற்றியிருப்பாள். கல்யாணத்துக்கு முன்னாலேயே இப்படி மாறிவிட்டான் என்றால்... ஆன பிறகு— கனகம்மாளுக்கு எதுவும் ஓடவில்லை. கைகளை நெறித்துக்கொண்டாள். கமலா எந்தப்பக்கம் சேரலாம் என்பது போல் யோசித்துக்கொண்டிருந்தாள். சபாபதி, அண்ணன் பேசுவதை ஆமோதிப்பவன்போல் அவனுக்கருகே நின்று கொண்டான். இப்டி பேசினாத்தான் அவன் கல்யாணத்துல அவன் போராடவேண்டிய அவசியமிருக்காது. {{nop}}<noinclude></noinclude> nwvnbpw8clabs4brg0otfyws3o2wivd பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/111 250 216174 1839341 820987 2025-07-05T12:47:53Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|102{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>அப்பாவை எதிர்த்துப் பேசிய உஷாமட்டும் சீனிவாசன் கைகளைப் பிடித்து பின்னுக்குத் தள்ளி ‘ஒனக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா அண்ணா! அவரு ஏற்கெனவே நோயாளி! தெரிஞ்சும் இப்டி பேசினா...’ என்று சொன்னபோது கனகம்மாளுக்குப் பயம் பிடித்துவிட்டது. மகன் கொடுத்த அட்டாக்கில் அவருக்கு மீண்டும் ‘அட்டாக்’ வந்தால்... ‘ஏண்டா... நேருக்கு நேரா பேசுற அளவுக்கு தைரியம் வந்துட்டுதா! இதவிட அவரைக் கொன்னுருக்கலாண்டா!’ கனகம்மாள் கட்சி மாறி கணவனுக்கு அருகே போய் நின்றுகொண்டாள். அந்தச் சமயத்திலும் எல்லோருக்கும். ‘சீனனா இந்த அளவுக்குப் பேசுறான்? அவனுக்கா இவ்வளவு தைரியம்’ என்று நினைத்து, பிறகு அதே தைரியத்தை திமிராகவும், தான்தோன்றித்தனமாகவும் பிறரைப்பற்றிக் கவலைப்படாத சுயநலமாகவும் பரிணாமப்படுத்திக் கொண்டார்கள். குடும்பத்தினர் இப்படி திடீரென்று பல்டி அடித்ததில் சீனிவாசன் அதிர்ந்துபோனான், பிறர் ஒப்புதல் அளித்தாலொழிய தன் முடிவு நல்ல முடிவாக இருக்க முடியாது என்று தனக்குள்ளேயே ஒரு ‘காம்ப்ளெக்ஸை’ தான் கொண்ட காதல் அளவிற்கு வளர்த்திருந்த அவன் சற்று நிலைதடுமாறி தந்தையிடம் மன்னிப்புக் கேட்கலாமா என்று கூட நினைத்தான். அருணாசலம் அவன் மன்னிப்புக் கேட்பதற்காக அங்கே நிற்கவில்லை. மெளனமாக அவனை ஏற் இறங்கப் பார்த்தார். தன் பையன் கொஞ்சம் கோபக்காரன் தான் என்பதில் அந்த தந்தையுள்ளம் அவரை அறியாமலே லேசாகப் பெருமைப்பட்டுக்கொண்டது. இந்த ‘விபரீத’ மனோபாவத்தை நொடியில் புரிந்துகொண்ட அவர் அதை மறைக்கும் வேகத்திலோ அல்லது மறக்கும் வேகத்திலோ சீனிவாசனைப் பார்த்து ‘ஒண்ணுமட்டுஞ் சொல்றேண்டா...<noinclude></noinclude> 5moqlly3wvd5hgpjn2jwlxa77asaokz பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/112 250 216176 1839348 820989 2025-07-05T12:53:51Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}103}}</noinclude>நீ மட்டும் இந்த கல்யாணத்தால அழிஞ்சி போவதாய் இருந்தாக்கூட நான் அரை குறையா சம்மதிச்சிருப்பேன்! ஆனால் அவள். இங்க உள்ள வந்துட்டால் வீடு ஆமை புகுந்த வீடாயிடும். ஒன் தங்கச்சிங்க இங்கயே இருக்க வேண்டிய கட்டாயம் வந்துடும். அதான் வேண்டாங்றேன். ஒன்ன தொட்டிலிலே இருந்து எடுக்கறதுக்காகத் தலகுனிஞ்சேன். தோளுல தூக்கி விளையாடுறதுக்காக தலகுனிஞ்சேன். அப்போல்லாம் சந்தோஷமா தல குனிஞ்ச நான் இப்ப நீ என் தோளுக்குமேல வளர்ந்து உதவாக்கரையா போனதுக்காகத் தல குனியறேண்டா! அவளோடதான் வாழணுமுன்னா... எங்களோட வாழ முடியாது! அப்புறம் உன் இஷ்டம்.’ என்று சொல்லிவிட்டு, வேசாசு நெஞ்சைப் பிடித்துக்கொண்டே உள்ளே போய்ப் படுத்துக்கொண்டார். கனகம்மாள் அவர் பின்னால் போய் கட்டிலுக்கருகே நின்றாள். அவர் காலை லேசாகத் தொட்டாள். அவர் கத்தாமல் இருந்ததால் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள். சற்று நேரத்திற்கு முன்பு, அண்ணனுக்காக வக்காலத்து வாங்கிய தங்கைகளும் தம்பியும் அப்பா தங்கள் பொருட்டே அவன் திருமணத்தைத் தடுப்பதாகச் சொன்னதில் அர்த்தம்கண்டு பிடித்தவர்கள்போல், அவனைக் கண்களால் ஒதுக்கினார்கள். சீனிவாசனுக்கும் மன்னிப்பு மனோபாவம் கோபரூபமானது. ‘நீ மட்டும் அழிஞ்சிபோறதா இருந்தாக்கூட இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பேன்னு சொல்றாரே... அப்படின்னா என்ன அர்த்தம்? பெற்ற மகனை அதுவும் முதல்ல பெற்ற மகனைவிட மற்ற பிள்ளைங்கள பெரிசா நினைக்கிற ஒருவரை, அதுவும் அவங்களுக்காக மூத்தவனை விஷப் பரீட்சை செய்யுற ஒருவரை நாம ஏன் மதிக்கணும். மதிக்கவும் வேண்டாம். இந்த வீட்ல மிதிக்கவும் வேண்டாம். {{nop}}<noinclude></noinclude> 0xuye3vngrbzk0on7763qxxt72spw97 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/113 250 216178 1839356 820991 2025-07-05T13:02:21Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|104{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>சீனிவாசன் அம்மாவை மட்டும் ஒரு தடவை கனிவாகப் பார்த்துவிட்டு மெளனமாக வெளியேறினான். குடும்பத்தினர் வாசலைத் தாண்டி வந்து கூப்பிட்டாலும் கூப்பிடலாம் என்று நினைத்து முதலில் வேகமாக நடந்தான். பிறகு கூப்பிடட்டுமே என்று நினைத்தவனாய் ஒரு இடத்தில் நின்றான். யாரையும் காணோம். இறுதியில் திரும்பிப் பாராமல் நடந்தான். மோகினியின் வீட்டில் வந்து காலிங்பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்த மோகினி சந்தோஷம் தாங்க முடியாமல் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள். ‘பாத்திங்களா... பேசுற முறையில பேசுனா எல்லாம் சரியாயிடும். ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல தன்மை இருக்கு. அதைத் தொடுற விதமாய் தொட்டால்’ அது கொடுக்கிற விதமா கொடுக்கும். என்னங்க நீங்க! சந்தோஷத்துல் பேச முடியலியா... இதுக்குத்தான் ஒங்கள சின்னப் பையன்னு சொல்றது!’ மோகினி காண்பித்த உற்சாகத்தில், அவர் தந்தை ஏகாம்பரமும் அங்கே வந்தார். வந்தது மட்டுமில்லாமல் வாங்க மாப்பிள்ளை... உள்ளே வாங்க’ என்றார். மெளனமாக உள்ளே வந்த சீனிவாசனின் பேயறைந்த முகத்தைப் பார்த்து, இருவரும் திடுக்கிட்டார்கள். ‘மாப்பிள்ள வந்துருக்காரே என்ன விஷயமாம்...’ என்று உள்ளே படுத்துக்கொண்டே, ஓலக் குரலிட்ட அம்மாவின் குரல் மோகினிக்குக் கேட்கவில்லை. சீனிவாசன் பெரிய தியாகம் செய்துவிட்ட கம்பீரத்தில் நடந்தவற்றைக் கிட்டத்தட்ட நடித்தே காட்டிவிட்டான். வார்த்தைக்கு வார்த்தை மோகினியின் முகத்தைப் பார்த்துக்கொண்டான். மோகினியைப்பற்றித் தந்தை சொன்னதை ஒன்றுவிடாமல் ஒப்பித்தான். அந்த ஒப்பிப்பு முடிந்-<noinclude></noinclude> rodplrmc48zss2pcyt7mct6a7bbkv8w பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/114 250 216180 1839365 820994 2025-07-05T13:08:13Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>ததும், ஏகாம்பரம் பெருமூச்சு விட்டு ‘நீங்க அவசரப்பட்டு இப்டி வந்திருக்கக்கூடாது மிஸ்டர் சீனிவாசன்’ என்றார். இப்போது ‘மாப்பிள்ளை’ மலையேறிவிட்டது. சீனிவாசன் இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் புரிந்துகொள்ளாத போது அந்த சமயத்தில் அந்த நிலையிலும், மோகினிக்கு அப்பாவின் 'மிஸ்டரிலிருந்து தன்னை மிஸஸ் சீனிவாசனாக்க விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டாள். அவளுக்கு ஏமாற்றந்தான். சுற்றமும் நட்பும் சூழ மாங்கல்யம் தரித்து, மணமகளாய் எஞ்ஜினியர் வீட்டுக்குப் போகமுடியாமல் போனதில் வருத்தம்தான். கொஞ்ச நேரம். அவள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். அவளைப் பிடிக்கவில்லை என்று சொன்ன அருணாசலத்தை அவள் விடப்போவதில்லை.எத்தனையோ பெரிய இடத்துப் பையன்கள், முறைப்படி திருமணம் செய்ய முன்வராததாலும் எப்படியோ காரணம் தெரியாமல் பிடித்துப்போன சீனிவாசனை மணக்க முன்வந்த தன்னை, முறையில்லாமல் விமர்சித்த அவரை அவள் இரண்டிலொன்று பார்ப்பதுபோல் மனதைக் கல்லாக்கிக் கொண்டாள். மனிதனின் ஒரு பாதியான நல்ல தன்மையைத் தட்டியெழுப்பாமல் இனிமேல் மறு பாதியான கெட்ட தன்மையைத் தட்டியெழுப்பி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது என்று தீர்மானித்தவள்போல் தன்னையே ஒருமுறை சாய்த்துப் பார்த்துக்கொண்டாள். ‘அப்புறம்... மிஸ்டர் சீனிவாசன்’ என்று இழுத்து இழுத்துப் பேசி மாப்பிள்ளையாக வந்தவனை வெறும் பிள்ளையாகத் துரத்தப்போன தந்தையை, ‘அப்பா எனக்கு என் வாழ்க்கையை எப்படி நிர்ணயிக்கணுமுன்னு தெரியும். நீங்க போய்த் தூங்குங்க’ என்று சொன்னதும் ஏகாம்பரம் மெல்லப்பட்ட வெற்றிலையைத் துப்பிவிட்டு, மனைவி படுத்துக்கிடந்த அறைக்குப் போய்விட்டார். அவள் தன்னைப்<noinclude></noinclude> axr9g8k7qkmgs0afccnozh3595x45we பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/115 250 216182 1839375 820996 2025-07-05T13:24:15Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|106{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>‘பையன்’ மாதிரி பார்த்த சீனிவாசனைக் கனிவாகப் பார்த்துக்கொண்டே ‘இந்த ஸோபா... கம்... பெட்ல தூங்குங்க. தலையணை கொண்டு வாரேன். மற்ற விஷயத்தை நாளைக்குப் பாத்துக்கலாம்.’ என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டு தலையணையையும், பெட்ஷீட்டையும் எடுக்க தன் அறைக்குள் போனாள். <b>ஒ</b>ரு வாரம் ஓடியது. நல்ல நாளில் நல்ல நேரத்தில் சீனிவாசன் ஒரு கோவில் சந்நிதியில் மோகினிக்குத் தாலி கட்டினான். மோகினியின் இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரும் அவள் தூரத்து உறவினர் சிலரும் வந்திருந்தார்கள். விஷயத்தை மற்றவர்கள் மூலமாகக் கேள்விப்பட்ட சீனிவாசனின் தங்கை உஷாவும்,தம்பி சபாபதியும் திருமணத்தில் நேரடியாகக் கலந்து கொண்டார்கள். கனகம்மாள் கோவிலுக்கு வருகிற சாக்கில் அருகே பிறருக்குத் தெரியாத இடத்தில் கண் கலங்க நின்றாள். தாலி கட்டப்படும் வேளையில் மூலவரைக் கை கூப்பித் தொழுது. மகனையும் மருமகளையும் ‘கால்கை கதியாக’ வைக்கும்படி வேண்டிக்கொண்டு வெளியேறிவிட்டாள். மோகினியின் வற்புறுத்தலின் பேரில் உஷாவும் சபாபதியும் ரிஜிஸ்டர் ஆபீசுக்குப் போனார்கள். பழைய காலத்து கட்டிடத்தில், உயரமான மேடையில் போடப்பட்டிருந்த உயரமான நாற்காலியில் ஓணான் மாதிரி உயரமாக இருந்த சப்–ரிஜிஸ்டிரார் திருமணத்தைப் பதிவு செய்தார். இன்னொரு வாரம் ஓடியது. மோகினி அலுவலகத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். கணவனால் கிடைத்த இன்பநுகர்ச்சியை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்கிற தாய்மை உணர்வே அவளை அதிகமாக ஆட்கொண்டிருந்தது. அதேசமயம், கணவன் கூறும் ‘ஸ்வீட் நத்திங்கை<noinclude></noinclude> 4rzxpagca2wf2cbdnc17ff0dypenkzb பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/116 250 216184 1839373 820997 2025-07-05T13:23:26Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}107}}</noinclude>நினைக்கும்போதெல்லாம், அவனைப் பெற்று அவளை உதாசினப்படுத்தி, ஆமையுடன் ஒப்பிட்ட அருணாசலத்தின் மீது தாங்கமுடியாத ஒருவித வெறுப்பு. கிட்டத்தட்ட ஒரு ஃபோபியாவாகவே அவளுக்கு மாறியிருந்தது. இப்படி இன்ப சல்லாபங்களைத் தாய்மையின் எதிர்காலமாகவும் வெறுப்பின் கடந்த காலமாகவும் ஒரே சமயத்தில் நினைத்துக்கொண்டிருந்த மோகினி, அதே நினைவுகள் சுமையாகவும், சுமைதாங்கியாகவும் தோன்ற, கண்ணாடியில் முகத்தைப் பார்த்து குங்குமத்தைச் சரி செய்துகொண்டிருந்தபோது குங்குமக்காரனான சீனிவாசன், லுங்கி பனியனுடன் ‘மொட்டையாக’ உட்கார்ந்திருந்தான். மகளிடம் வெற்றிலை பாக்குக்குக் காசு வாங்குவதற்காக உள்ளே எட்டிப் பார்த்த ஏகாம்பரம் என்ன மாப்பிள்ளை... நீங்க வேலைக்குப் போகலியா” என்று கேட்டார். அவன் அதற்குப் பதில் கூறுவதற்கு முன்னதாக மோகினி, அப்போதுதான் நினைவுவந்தவள் போல், ‘ஆமாம்... இன்னும் ஒங்களுக்கு லீவு முடியலியா?’ என்றாள். சீனிவாசன் கம்பீரமாகப் பதில் சொன்னான். ‘லீவு போட வேண்டிய அவசியமில்லை. வேலைய ராஜினாமா பண்ணிட்டேன்!’ மோகினி சரி செய்ய நினைத்த குங்குமத்தைச் சரிப் படுத்தாமலே அவனை நிமிர்ந்து பார்த்து ‘ஒங்களுக்கு எப்ப விளையாடணுமுன்னு தெரியாது. எப்பவுமே விளையாட்டுத்தான் பையன் மாதிரி’ என்றாள். சீனிவாசன் கம்பீரத்திற்கு சும்பீரம் சேர்த்துப் பேசினான். “அது என் அப்பாவின் சிபாரிசில் கிடச்ச வேலை, அவரே எனக்கு இல்லன்னு ஆகும்போது அவரு கொடுத்த பிச்சக்கார வேல எதுக்கு?” ஏகாம்பரம் இடைமறித்தார். {{nop}}<noinclude></noinclude> 4n3kpc4w9l2b3tj6jnduhgohmegf22d பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/117 250 216186 1839376 820998 2025-07-05T13:27:52Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|108{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>‘அதுக்காகப் பிச்சக்காரனா மாறுவதுன்னு தீர்மானிச் சிட்டிங்களாக்கும்...’ சீனிவாசன் பதில் பேசத் தெரியாமல் திணறியபோது, மோகினி அவனைக் கூர்ந்து பார்த்தாள். பிறகு ‘அப்பாவாலதானே டிகிரி வாங்கினிங்க? அந்த சர்டிபிக்கட்டை கிழிச்சிட்டிங்களா... வச்சிருக்கிங்களா?’ என்று அமைதியாகக் கேட்டாள். ‘இனுமே அந்த சர்டிபிக்கட்டை கிழிச்சா என்ன, கிழிக்காட்டா என்ன... இவரு கெட்ட கேட்டுக்கு எந்தப் பய வேல கொடுப்பான்?’ என்றார் ஏகாம்பரம். சீனிவாசனுக்கு. மனைவி கோபத்தோடு கேட்டாளா. தனது ‘தியாகத்தை’ மெச்சும் வகையில் கேட்டாளா என்பது புரியவில்லை. கிண்டலாகப் பேசிய ஏகாம்பரத்தை அவள் அடக்காததிலிருந்து, அவள் கோபமாகத்தான் கேட்டிருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொண்டான். மோகினியின் உதடுகள் துடித்தன. விழிகள் வெம்மையாக மாறி, பின்பு செம்மையாயின. ஆயிரம் ரூபாய் சம்பளத்தை இவர் அலட்சியமாக விட்டுவிட்டு, லட்சியம் இல்லாமல் பதில் சொன்னா என்னர்த்தம்? நாளைக்குக் குழந்தை பிறக்கும். நாளை இருக்கட்டும்... இன்றைக்கு அம்மாவுக்கு மருந்து வாங்கணும். பொங்கல் வரப்போவுது. துணிமணி எடுக்கணும்... கேஷுவல் லேபராக தினமும் கிடைக்கிற எட்டு ரூபாய்ல என்னத்த பண்றது... இவருகிட்ட பக்குவமா பேசி வேலையை விட்டுட்டு மானேஜர் சுந்தரத்தோட கழுகுக் கண்களைப் பார்க்காம இவர மட்டுமே பாத்துகிட்டு இருக்கணுமுன்னு நினைத்தால்... இவரு... இவரு... அட கடவுளே... ஏகாம்பரத்தால் கோபத்தை நெஞ்சிற்குள் வைக்க முடியவில்லை. ஒருநாளைக்கு எப்படியும் ஒரு கட்டு வெற்றிலையைக் குதப்பும் அவர் வாய். அது இல்லாமல் போய்விடுமோ என்கிற ஆதங்கத்தில் கத்தினார். {{nop}}<noinclude></noinclude> epv12u5xwdl6fnocmj9xbi1fcp20czx பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/118 250 216188 1839377 821000 2025-07-05T13:33:08Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}109}}</noinclude>‘கடைசில என் மவளுக்கு சரியான முருங்க மரந்தானா கிடைச்சுது! என்ன மிஸ்டர் சீனிவாசன்... கொஞ்சமாவது முன்னப் பின்ன யோசிச்சி பாத்திரா? பொம்பிள சம்பாதிச்சி அதுல சாப்புடுற மனுஷன் ஒரு ஆம்புளையா?’ சீனிவாசனுக்கு லேசாகக் கோபம் வந்தது. மோகினியைப் பார்த்தான். அவள் எதுவும் பேசாமல் ‘கல்’ மாதிரி இருந்தாள். ஏகாம்பரமோ என்னவெல்லாமோ பேசிக்கொண்டே போனார். சீனி இறுதியில் வெடித்தான். ‘சும்மா கத்தாதிங்க மாமா! என்கிட்ட படிப்பு இருக்கு! ஒங்க மகள நம்பி நான் வாழல!’ “என்னய்யா சம்பந்தா சம்பந்தமில்லாம பேசுறீரு. ஒப்பனுக்கு நீரு பிறந்தது வாஸ்தவன்னா அப்பன் மேல கேஸ் போட்டு சொத்தில் ஒரு பாகத்தக் கேளும். ஒரு பெண்ணக் கல்யாணம் பண்ணுமுன்னால், அவளை எப்படிக் காப்பாத்தணுமுன்னு நினைக்கிறவன்தான் மனுஷன். பெண்டாட்டி காப்பாத்துவாள்னு நினைக்கிறவன் மனுஷனில்ல. மாமா...எனக்கும் சுயமரியாதை இருக்கு. ரோஷம் இருக்கு இத ஒப்பன்மேல கேஸ்போட்டுக் காட்டும் பாக்கலாம். சீனிவாசன் மனைவியைப் பார்த்தான். அவனைப் பார்க்கப் பிடிக்காதவள்போல், முகத்தைப் வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டு ‘இவருகிட்ட ஏம்பா பேசுறீங்க... இவரா வழக்குப் போடுவாரு? ஆளப் பார்த்தா தெரியாண்டாம். முயல் பிடிக்கப்போற எதையோ மொகத்தப் பார்த்து. தெரிஞ்சிக்கலாமுன்னு சொல்லுவாங்க.’ என்றாள். சீனிவாசன் முயல் பிடிக்கப்போகும் நாய்மாதிரி முகத்தை நிமிர்த்திக்கொண்டு ‘ஆல்ரைட்...என்னை நீங்க. இவ்வளவு நம்பி ஒங்க பொண்ண ஒப்படைச்ச பிறகு நான்<noinclude></noinclude> 57t4f10rfdpd7u06ywxo0lds8d2tld6 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/119 250 216190 1839379 821002 2025-07-05T13:41:10Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|110{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>என் சொத்தை ஒங்ககிட்ட ஒப்படைக்காம இருக்கிறது நியாயமில்ல. இன்னைக்கே மிஸ்டர் அருணாசலத்திற்கு வக்கீல் நோட்டீஸ் விடுறேன்' என்று சொல்லிக்கொண்டே வெறும் பனியனைத் துழாவிவிட்டு பின்னர் மனைவியை அர்த்தத்தோடு பார்த்தான். மோகினி டிரங்க் பெட்டியைத் திறந்து சேமித்து வைத்திருந்த ஐந்து பத்துரூபாய் நோட்டுக்களை எடுத்து அவனிடம் நீட்டிவிட்டு ‘ஆகவேண்டியதைப் பாருங்க, பேச்ச குறச்சிட்டு காரியத்துல இறங்குங்க.’ என்றாள். சீனிவாசன் அவசர அவசரமாக உடையணிந்துகொண்டு அவள் புறப்படும்போது புறப்படப் போகிறவன்போல் நின்றான். இதைப் புரிந்துகொண்ட மோகினி, ‘நீங்க போங்க... நான் எக்கேடும் கெட்டுப்போகிறேன்.’ என்று கத்தினாள். சீனிவாசன் போய்விட்டான். அப்பாவுக்கும், பிள்ளைக்கும் இடையே கோடு கிழிப்பதுபோல் கோர்ட்டைக் கொண்டு வருவதற்காக மோகினி சிறிது வருந்தினாள். சிறிதே நேரந்தான். ஆமையோடு தன்னை ஒப்பிட்ட அந்த மனிதரை, கௌரவமாக குடும்பம் நடத்தி அவர்களோடு ஐக்கயமாக ஒன்றி ஒருமையுடன் வாழ நினைத்த தன்னைப் பிஞ்சில் பழுத்தவள் என்று சொன்ன அந்தக் கிழத்தை, அவர் மகனின் அசுரப் பகுதியைத் தட்டியெழுப்பிப் பழி வாங்குவதென்ற வைராக்கியத்துடன் அலுவலகம் புறப்பட்டாள். மாலையில் திரும்பி வந்ததும், சீனிவாசன் அவளிடம் வக்கீல் நோட்டீஸ் விடப்பட்டதை ஆதியோடந்தமாக விவரித்தான். அவள் கேட்காததுமாதிரி கேட்டாள். அவனுக்கு என்னவோ போலிருந்தது வழக்கமாகக் கேட்கப்படும் ‘நீங்க சாப்பிட்டாச்சா! என்னால ஒங்களுக்குப் பாவம்<noinclude></noinclude> c2tntz2c2unj2fxghf32h54zu6emgen பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/120 250 216192 1839381 821006 2025-07-05T13:47:39Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}111}}</noinclude>சிரமம்’ என்கிற வார்த்தைகள் அவன் காதில் விழாதது வருத்தத்தைக் கொடுத்தது. அதேசமயம் ‘உங்களால் எனக்குச் சிரமம்’ என்று சொல்லாதது சிறிது மகிழ்ச்சியையும் கொடுத்தது. ஒரே கட்டிலில் இருவரும் பிரிந்து படுத்தார்கள். இருவருக்கு மத்தியிலும், கண்ணுக்குப் புலப்படாத அதே சமயம் துல்லியமாகத் தெரிந்த குறுக்குச் சுவரை இருவரும் பார்த்துக்கொண்டார்கள். பத்து பதினைந்துநாள் ஓடியது. சீனிவாசனின் தந்தை எதிர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். கோர்ட்டுக்குப் போகவேண்டுமானால் முதலில் ஐந்நூறு ரூபாயை எண்ணிக் கொடுக்க வேண்டும் என்று வக்கீல் சொல்லிவிட்டார். பணம் இல்லாமல் இரண்டு மூன்று மாதங்கள் ஓடின. மோகினி சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து. இருநூறு ரூபாயை கணவனிடம் நீட்டினாள். அவன் வக்கீலிடம் போக, அவர் ‘திரும்பிப் பார்க்காமல் ஓடு’ என்று சொன்னதை, கணவன் காரன மனைவியிடம் சொன்னான். மோகினி அவனோடுபோய் வக்கீலைப் பார்த்தாள். வக்கீல் நூறு ரூபாய்க்கே சம்மதிப்பதுபோல் தெரிந்தது. கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மோகினிக்கு ஒன்று புரிந்தது. இந்தப் புருஷனையோ இந்தக் கோர்ட்டையோ நம்பி வாழ முடியாது. மூன்று மாத கருவாக இருக்கும் அவள் குழந்தையை எப்படியும் ஓகோன்னு வளர்க்க வேண்டும். எப்படி? ஏழைப் பெண் என்றவுடனே மோசமாகப் பார்க்கும் மோசக்கார ஆண்களிடம் மோசம் போகாமலே முன்னுக்கு வரமுடியும் எனபதை, ஐந்நூறு கேட்ட வக்கீல். இருநூறு ரூபாய்க்கும் ஒரு சின்ன புன்னகைக்கும் விலையாகிவிட்டதிலிருந்து புரிந்துகொண்டாள். {{nop}}<noinclude></noinclude> 9c30xpj57fmvondyp4k3l65cuo0xzp4 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/121 250 216194 1839426 821008 2025-07-06T04:13:51Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|112{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரத்திற்கும் அஸிஸ்டெண்ட் பப்ளிஸிட்டி மானேஜருக்கும் ஆகாது என்பது அவளுக்குத் தெரியும். அதோடு. சீனிவாசனின் ‘கிளாஸ் மேட்டான’ அஸிஸ்டெண்ட் பப்ளிஸிட்டி மானேஜர், அவள் புருஷனை, காதுக்குக் கேட்கும்படியாகவே கிண்டல் செய்திருக்கிறான். அவனுடைய வேலையை அபகரித்துக் கொள்வதில் தப்பில்லை. எப்படி தப்பில்லை? பாவம்! அவன், என்ன செய்வான். என்ன வேணுமுன்னாலும் செய்யட்டும்... சாமர்த்தியக்காரன். அதோடு ஆண்பிள்ளை. அவனுக்கு வேற வேலை கிடைக்கும். இன்னும் ஒரு மாதத்தில் கேஷுவல் வேலை முடிந்துவிடும். அதற்குள் கரு நான்கு மாதமாகிவிடும். பிறக்கப்போகிற குழந்தைக்கு, பிறப்பித்த தந்தைக்கு, சில்லறைச் செலவுக்கு, பிறவி எடுத்ததே நோயில் படுக்கத்தான் என்பதுபோல் இருக்கும் அம்மாவுக்கு. கோர்ட்டுக்குப் போகப் பணம் கேட்கும் கணவனுக்கு, எல்லாவற்றிற்கும் மேலான இவர்கள் வயிற்றுக்கு, எதைப் போடுவது? மோகினி. சிந்தித்தாள். இறுதியில் அவள் முகம் இறுகியது. அஸிஸ்டெண்ட் மானேஜர் பதவியை முடிந்தால் வாங்கிக் கொள்ளவதும், முடியாது போனால், பப்ளிஸிட்டி அஸிஸ்டெண்ட் பதவியாவது வாங்கியே தீருவது என்ற உறுதியும் தன்னம்பிக்கையும் அவள் மனதில் பிறந்தன. கண்ணாடியில் தன் முகத்தையே உற்றுப் பார்த்தாள். பின்னர், தன் வயிற்றையும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். தன் குஞ்சுகள் குதூகலகமாகத் தின்ன வேண்டும். என்பதற்காக. கோழிக் குஞ்சைக் குறிபார்க்கும் கழுகின் பார்வை அது. பழைய தலைமைக் குரங்கால் கருவுற்று. பின்னர் அதை விரட்டிவிட்டு புதிதாகத் தலைமையேற்ற<noinclude></noinclude> hxgz640c7zgc2rdv0sxmjk20bq2omvr பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/122 250 216196 1839425 821010 2025-07-06T04:13:45Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}113}}</noinclude>‘மாற்றான்’ குரங்கிடமிருந்து, தன் கருவைக் காப்பதற்கு, காதல் விளையாட்டுக்கு இடங்கொடுக்காமலே, காதல் செய்வதுபோல் நடிக்கும் பெண் குரங்கின் பார்வை அது. தான் போட்ட குட்டிகளைத் தின்ன வரும் ஆண் புலியைக் கடித்துக் குதறத் தயாராக இருக்கும் பெண் வேங்கையின் பார்வை அது. {{dhr|2em}} {{block_right|{{x-larger|<b>4</b>}}}} {{dhr|2em}} <b>ஐ</b>ந்தாறு டெலெக்ஸ் செய்திகளைப் பப்ளிஸிட்டி மானேஜர் பார்ப்பதற்காக அவர் முன்னால் வைத்துவிட்டு பின்னர் மின்விசிறியில் சிதறிய அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு, அதன்மேல் ஒரு பேப்பர் வெயிட்டையும் போட்டுவிட்டு, எதிரே உள்ள நாற்காலியில் உட்கார்ந்தாள் மோகினி. மானேஜர் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு. பின்னர் தன் உருவம் மிகச் சிறிய அளவில் அவள் வலது கண்ணில் பிரதிபலிப்பதை ரசித்துக்கொண்டே இருந்தபோது, “எடிட் பண்ணிக்கொடுங்க ஸார்...ஹேண்ட் அவுட் பிரபேர் பண்றேன்” என்றாள். அது அவள் வேலை பார்க்கும் நிறுவனம். பாரதத்தின் மிகப் பெரிய கம்பெனிகளில் ஒன்று. அரசாங்க நிறுவனங்களுக்கும், இதர தொழில் நிறுவனங்களுக்கும், பாய்லர்கள். டெலிபோன் கருவிகள், யந்திரங்கள், மின்சார சாதனங்கள். பெட்ரோல் ரசாயன சுத்திகரிப்பிற்கான பிரம்மாண்டமான கருவிகள். பால் பண்ணைகளுக்குத் தேவையான ‘டெய்ரி’ யந்திரங்கள் முதலியவற்றைக் குறித்த தேதிக்குள் குறித்த முறைகளில் செய்து கொடுக்கும் கம்பெனி அது. அல்ஜீரியா, டூனிஷியா, லிபியா போன்ற நாடுகளில் டெண்டர்கள்<noinclude> ச.—8</noinclude> tvwjk119g1v0b0phwfyccd62sn91la8 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/123 250 216198 1839431 821012 2025-07-06T04:16:51Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|114{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>எடுத்து, தனியாகவும், சில வெளிநாட்டுக் கம்பெனிகளுடன் இணைந்தும். பல வேலைகளைப் பூர்த்தி செய்து, அந்நிய செலாவணியை அதிகமாகச் சம்பாதித்துக் கொடுப்பதால். அரசாங்கத்திற்கு அது ஒரு செல்லப்பிள்ளை மாதிரி. என்ஜினியர்கள். சார்ட்டர்ட் அக்கௌண்டண்ட்கள், விஞ்ஞானிகள் முதல் கேஷுவல் லேபர் வரை, பல்லாயிரக்கணக் கானவர்கள் வேலை பார்க்கும் அந்த நிறுவனத்திற்கு நாடு நகரங்களிலெல்லாம் கிளைகள். சென்னைக் கிளையில், பப்ளிஸிட்டி செக்ஷனின் மானேஜர் சுந்தரம் பலே கெட்டிக்காரர். அடிக்கடி பத்திரிகையாளர்களை வரவழைத்து, தம் கம்பெனிகளின் சாதனைகளை விளக்குவார். நிருபர்களை பாரதம் முழுவதும் உள்ள கிளைகளுக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையாவது, அந்த கம்பெனியின் பெயர் தமிழகப் பத்திரிகைகளில் நல்ல விதமாக அடிபடுகிறது என்றால், அதற்கு நாற்பத்தைந்து வயது சுந்தரம்தான் காரணம். ஒரு வாரத்திற்கு முன்பு, அவர் கம்பெனியின் சாதனைப் பட்டியல் வெளியிடுவதற்காகத் தலைமையலுவலகத்திற்கு புள்ளி விவரங்களைக் கேட்டு எழுதியிருந்தார். அங்கேயிருந்து டெலெக்ஸில் புள்ளி விவரங்கள் குவிந்தனர் இவற்றிற்குக் கண், காது, மூக்கு வைப்பதோடு மேக்கப் செய்ய வேண்டியதும் அவர் வேலை. பப்ளிஸிட்டி எக்ஸிகியூட்டியாக வேலை பார்க்கும் லீலா மூன்று மாத விடுமுறையில் போயிருந்தாள். அவள் இடத்தில் தாற்காலிகமாக நியமிக்கப்பட்ட மோகினியை சுந்தரத்துக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. தலை வலிக்கிறது என்று அவர் தற்செயலாகச் சொல்லியிருப்பார். பத்து நிமிடத்தில் பியூன் வந்து, “மோகினியம்மா ஆஸ்ப்ரோ வாங்கிட்டு வரச்சொன்னாங்க” என்று சொல்லி, பிளாஸ்கில் இருந்து காபியை ஊற்றி, மாத்திரையை நீட்டுவான். “அப்பா! ஒரே டயர்டாய் இருக்கு”ன்னு சொன்னால் போதும். மோகினி அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பாள். அவர் மறுத்தால், அவர்<noinclude></noinclude> ixo4y4jer13xke11qo202vyaqec6737 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/124 250 216200 1839435 821014 2025-07-06T04:21:14Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்புகல்{{gap}}115}}</noinclude>வீட்டுக்கு டெலிபோன் செய்து, “மாமி...மாமாவுக்கு டயர்டாய் இருக்காம். நான் போகச் சொன்னால் மாட்டேங்றார். நீங்களாவது சொல்லுங்கோ,” என்பாள். அவள் மனைவியின் மிரட்டலுக்கு பயந்தோ அல்லது வசீகரிக்கப்பட்டோ,புறப்படும்போது, “என்னைவிட ஒங்களுக்கு ஒங்க ஒய்ப்தான் உசத்தி. நான் சொன்னவுடனே போனா என்ன?” என்பாள். சுந்தரம், கிறங்கிப்போவார். அந்தமாதிரி சமயங்களில். லீலாமீது படுகோபம் வரும். இவள் வயதுக்காரிதான். ஆனால் சரியான சிடுமூஞ்சி. அவள் சிரித்து அவர் பார்த்ததில்லை. இவளை சிரிக்காமல் பார்த்ததில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அந்த மூதேவி வந்து, இந்த சீதேவியைத் துரத்திவிடும். மொத்தத்தில் மூன்றாண்டு காலமாகப் பணி புரியும் லீலா மூன்றுமாத பழக்கம் போலவும், மூன்றுமாத மோகினி மூவாண்டு சிநேகிதி போலவும் அவருக்குத் தோன்றியது. அவர் மௌனத்தில் ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டிருந்ததால், மோகினிக்கு போரடிக்க ஆரம்பித்தது. டெலெக்ஸ் சமாசாரங்களை உற்றுநோக்கிக்கொண்டே பேசினாள். “எடிட் பண்ணிக்கொடுங்க ஸார்! அப்புறம் ஒரு விஷயம் ஸார்! நான் பேப்பர்களை உங்ககிட்ட டைரெக்டா வைக்கிறது அவருக்குப் பிடிக்கல. ‘என் மூலந்தான் அனுப்பணுமுன்’னு நேத்து கத்தினார்,” “யாரு, சங்கரா? அவன் கிடக்கான் விடு. இக்நோர் ஹிம்...” “அதெப்படி ஸார்...? அவர் பார்வையே சரியில்ல! எனக்குப் பயமா இருக்கு!” “டோன்ட் ஒர்ரி.ஐ வில் ஷோ ஹிம் ஹிஸ் பிளேஸ்.” “உங்கள் எரும மாட்டுத் தலையன்னு வேற பியூன்க கிட்ட சொல்றார் ஸார்!” {{nop}}<noinclude></noinclude> opy5fo7ai2jedkitlcmpp942gbtps07 1839437 1839435 2025-07-06T04:21:32Z AjayAjayy 15166 1839437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்புகல்{{gap}}115}}</noinclude>வீட்டுக்கு டெலிபோன் செய்து, “மாமி... மாமாவுக்கு டயர்டாய் இருக்காம். நான் போகச் சொன்னால் மாட்டேங்றார். நீங்களாவது சொல்லுங்கோ,” என்பாள். அவள் மனைவியின் மிரட்டலுக்கு பயந்தோ அல்லது வசீகரிக்கப்பட்டோ,புறப்படும்போது, “என்னைவிட ஒங்களுக்கு ஒங்க ஒய்ப்தான் உசத்தி. நான் சொன்னவுடனே போனா என்ன?” என்பாள். சுந்தரம், கிறங்கிப்போவார். அந்தமாதிரி சமயங்களில். லீலாமீது படுகோபம் வரும். இவள் வயதுக்காரிதான். ஆனால் சரியான சிடுமூஞ்சி. அவள் சிரித்து அவர் பார்த்ததில்லை. இவளை சிரிக்காமல் பார்த்ததில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அந்த மூதேவி வந்து, இந்த சீதேவியைத் துரத்திவிடும். மொத்தத்தில் மூன்றாண்டு காலமாகப் பணி புரியும் லீலா மூன்றுமாத பழக்கம் போலவும், மூன்றுமாத மோகினி மூவாண்டு சிநேகிதி போலவும் அவருக்குத் தோன்றியது. அவர் மௌனத்தில் ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டிருந்ததால், மோகினிக்கு போரடிக்க ஆரம்பித்தது. டெலெக்ஸ் சமாசாரங்களை உற்றுநோக்கிக்கொண்டே பேசினாள். “எடிட் பண்ணிக்கொடுங்க ஸார்! அப்புறம் ஒரு விஷயம் ஸார்! நான் பேப்பர்களை உங்ககிட்ட டைரெக்டா வைக்கிறது அவருக்குப் பிடிக்கல. ‘என் மூலந்தான் அனுப்பணுமுன்’னு நேத்து கத்தினார்,” “யாரு, சங்கரா? அவன் கிடக்கான் விடு. இக்நோர் ஹிம்...” “அதெப்படி ஸார்...? அவர் பார்வையே சரியில்ல! எனக்குப் பயமா இருக்கு!” “டோன்ட் ஒர்ரி.ஐ வில் ஷோ ஹிம் ஹிஸ் பிளேஸ்.” “உங்கள் எரும மாட்டுத் தலையன்னு வேற பியூன்க கிட்ட சொல்றார் ஸார்!” {{nop}}<noinclude></noinclude> aj8krrckwqdagnhqbcdrzuaydpi14t9 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/125 250 216202 1839443 821016 2025-07-06T04:25:41Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|116{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>“அப்படியா சொன்னான்! பேஸ்டர்ட்! இப்ப என்ன பண்றேன் பார்!” “இதுக்குத்தான் ஒங்ககிட்ட நான் எதுவுமே சொல்றது கிடையாது. அவன்கிட்ட நேரடியாகக் கேட்டிங்கன்னா உங்க டிக்னிட்டிதான் . ஸ்பாயிலாகும். அதனால் சமயம் வரும்போது கவனிச்சிக்குங்க!” “சமயம் வராட்டாலும் நானே உருவாக்குறேன். நானா எருமத்தலயன்... இவன்தான். இவன் அப்பன்தான். இவன் அம்மாதான். இவனும் அந்த லீலாவும் அடிக்கிற கூத்து எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறான். மாரல் டர்பிட்யூட் கீழ அவனை சார்ஜ் பண்ணலேன்னா நான் சுந்தரம் இல்ல...” “சும்மா பேசாதிங்க ஸார்? ஒங்களுக்கு இளகின மனசு, கையில காலுல விழுந்தான்னா... மாறிடுவிங்க!” “நானா மாறுவேன்? நானா மாறுவேன்? இல்ல, இல்ல, அவனை மாத்திக்காட்டுவேன்! வேணுமுன்னா பாரு! அவனை அந்தமான்ல போடாட்டா...” “வேண்டாம் ஸார்! பாவம், பிழைச்சிட்டுப் போறான்.” “எரும மாடுன்னு சொன்னாலும் பரவாயில்ல. எருமத் தலையன்னு சொன்னா என்ன அர்த்தம்? அவன, அவன...” “சும்மா பல்லக் கடிக்காதிங்க ஸார்! ஏண்டா சொன்னோ முன்னு எனக்குக் கஷ்டமா இருக்கு.” “இந்தப் பியூன் பயலுவளுக்கு எவ்வளவு காசு அழுதிருக்கிகேன். பெஸ்டிவல் அட்வான்ஸ் அது இதுன்னு எவ்வளவு சாங்ஷன் கொடுத்திருக்கேன். ஒரு பயலும் அவனைத் தட்டிக் கேட்கலியா?” “அவங்களா? எரும மாதிரி தலய ஆட்டி குரங்கு மாதிரி கையக் கால ஆட்டி ஒன்ஸ் மோர் கேக்குறாங்க.” {{nop}}<noinclude></noinclude> 850tbvivbl1wq64qecjwjcgkjka0fml பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/126 250 216204 1839418 821018 2025-07-06T04:07:31Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}117}}</noinclude>“என்னால நம்ப முடியல...நேத்துகூட டெப்திரி ராமனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தேன்.” “அந்த ஒரு ரூபாய்ல முக்கால் ரூபாய செலவழிச்சிட்டு மீதிக் காசுக்கு ஒங்களுக்கு எதிராவே மொட்டப் பெட்டிஷன் போட்டிருப்பான்!” “ஓஹோ அதுகூட நடக்குதோ...” “இன்னும் எவ்வளவோ இருக்கு. நீங்க வெளுத்ததெல்லாம் பாலுனு நினைக்கிறீங்க.” “இனிமே நினைக்கமாட்டேனே. நானா எருமைத் தலையன்...” “ஏன் ஸார் அதையே சொல்லிக்கிட்டு... சந்திரனப் பாத்து நாயி குலைச்சா குலைக்குது. ஆனா நான் விடறது இல்ல, இப்படித்தான் போன வெள்ளிக்கிழமை ‘ஏண்டா மானேஜர் கன்னம் வீங்கியிருக்கு. ஒய்ப்கிட்ட உத வாங்குனா னான்னு’ ஏஎம், ராமன்கிட்ட கேட்டாரு. உடனே நான் ‘ஏன் மிஸ்டர் சங்கர்! பாஸ் முன்னால வெண்ணயா குழஞ்சிட்டு பின்னால சுண்ணாம்பா எரிச்சா என்ன அர்த்த’ முன்னு பட்டுன்னு கேட்டேன்.” “தேங்க்யூ. அதுக்கு அவன் என்ன சொன்னான்?” “வேண்டாம் ஸார், விட்டுடுங்க. அனாவசியமா கோபப் படுவீங்க. ஏற்கனவே உங்களுக்கு பிளட் பிரஷர்.” “நோ... நோ... அவன் இப்ப என்ன சொன்னான்னு சொல்லலேன்னாதான் பிரஷர் ஏறும். பிளீஸ், டெல் மி டெல்மி...” “இது என்ன ஸார் வம்பாப் போச்சு.. ‘நீயே டெம்பரரி... இன்னும் ஒரு வாரத்துல உனக்கு ஓலை கிழியப்போவுது. நீ எனக்கு புத்தி சொல்றீயா’ன்னு என்மேல் சீறினான். சீறினா சீறிட்டுப்போறான்... விட்டுத்தள்ளுங்க!” {{nop}}<noinclude></noinclude> k0cpv45mx8ato0qoe9tdkeam3dem3s5 பக்கம்:கனிச்சாறு 4.pdf/162 250 446959 1839517 1838492 2025-07-06T11:09:06Z Info-farmer 232 - துப்புரவு 1839517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}127}}</b></small></noinclude> <section begin="83"/> {{larger|<b>{{rh|83||வாழ்வும் தாழ்வும்!}}</b>}} {{left_margin|3em|<poem>விண்ணை அளந்திடும் வல்லவர் - தொலை வெங்கதிர் தோற்ற முணர்ந்தவர் - இந்த மண்ணை அளந்திடக் கற்றவர் - வான மாவெளி ஊர்ந்திடும் மேதையர் - பொருள் வண்ண மறிந்தவர் மக்களின் - உயிர் மாய்தலை வெல்ல முயல்பவர் - என எண்ணத் தொலைவிலர் தோன்றினும் - மன ஏற்றத்தில் யாவரும் தாழ்கின்றார்!{{float_right|1}} ஊர்ந்தவர் வானில் பறக்கின்றார் - விலங் கொத்தவர் நல்லுடை சேர்க்கின்றார் - மடஞ் சேர்ந்தவர் யாவரும் கற்கின்றார் - பிணி சோர்ந்தவர் நோயினை வெல்கின்றார் - பணி தேர்ந்தவர் இவ்வுல குய்யவே - உயிர்த் தேவைகள் காண்பவர் ஆயினும் - கடல் ஆர்ந்த உலகினில் எங்கணும் - மக்கள் அன்பிலும்; பண்பிலும் தாழ்கின்றார்!{{float_right|2}} சேற்றைக் குழப்பிக் குடில்களைப் - பண்டு செய்துயிர் வாழ்ந்த வழியினர் - விண் காற்றை வளைப்பவர் போலவே - பல கட்டுகின் றார்மனை வாழவே! - சுனை ஊற்றுகள் தேடிக் குடித்தவர் - குழல் ஊன்றிநீ ரோட்டங் கொணர்கின்றார் - பல மாற்றங்கள் காண்கின்றார் ஆயினும் - உள மாண்பினில் யாவரும் தாழ்கின்றார்!{{float_right|3}} ‘அன்பின் விளைநிலம்’ ஆருயிர் - தரும் ‘ஆக்கம்’ எனத்தகும் பெண்டிரும் பெருந் தென்புகள் கொண்டனர் போல்வராய் - உளத் தாய்மையை, மென்மையை நீக்கியே - பல வன்பணி யாற்றப் புகுந்தனர் - அன்பு வாழ்வைத் துறந்தனர்! ஐயகோ! - உள அன்பினி எங்ஙனம் வாழ்ந்திடும்? - மன ஆற்றலில் யாவரும் தாழ்ந்திடின்!{{float_right|4}}</poem>}}<noinclude></noinclude> n09r440yxugeh69d6fya654hptkxifx பக்கம்:கனிச்சாறு 4.pdf/163 250 446960 1839516 1838493 2025-07-06T11:07:35Z Info-farmer 232 <section end="84"/> 1839516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|128{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>வேற்றுல காக்கினும் ஆக்கலாம்! - வான வெளியினை வீழ்த்தினும் வீழ்த்தலாம் - உயிர்க் காற்றுக் குறையினும் ஊதலாம்! - கடற் கொள்புனல் வற்றினும் ஊற்றலாம்! - மலர் தோற்றத்தைச் செய்யினும் செய்யலாம்! - அதில் தேனினைக் கூட்டிடல் ஆகுமோ? - அறி(வு) ஆற்றல்மிகப் பெரு மாட்சியே - அன் பாற்ற லிலாவிடில் வீழ்ச்சியே! {{float_right|5}} {{larger|{{Right|<b>-1957</b>}}}} <section end="83"/> {{dhr|10em}} <section begin="84"/> {{larger|<b>{{rh|84||மதங்காப்பார்!}}</b>}} மாடெனக் கொழுத்து, மரமெனக் குந்தி மக்களும் மனைவியும் இன்றி - நல்ல மாண்புயர் வொழுங்கதும் குன்றி - மயிர்க் காடெனச் சடைகள் களிறெனத் தொந்தி கனிபால் நெய்வகை யோடு நல்ல காற்றமைந் துலவுமோர் வீடு - தனில் வீடெனக் கூறி, விரிசடைக் கடவுள் வியன்கதை நாள்தொறும் பேசி - நல்ல வாழ்விலா மக்களை ஏசி - வெறுங் கூடென உடலைக் கூறுவர் தமக்குக் குருக்கள் எனும்பெயர் சூட்டி - பலர் </poem>}} <section end="84"/><noinclude></noinclude> 2atw7z6m8plyb5ud68fh98oq0a8ebg0 1839518 1839516 2025-07-06T11:10:51Z Info-farmer 232 <section end="83"/> 1839518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|128{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem>வேற்றுல காக்கினும் ஆக்கலாம்! - வான வெளியினை வீழ்த்தினும் வீழ்த்தலாம் - உயிர்க் காற்றுக் குறையினும் ஊதலாம்! - கடற் கொள்புனல் வற்றினும் ஊற்றலாம்! - மலர் தோற்றத்தைச் செய்யினும் செய்யலாம்! - அதில் தேனினைக் கூட்டிடல் ஆகுமோ? - அறி(வு) ஆற்றல்மிகப் பெரு மாட்சியே - அன் பாற்ற லிலாவிடில் வீழ்ச்சியே! {{float_right|5}} {{larger|{{Right|<b>-1957</b>}}}} <section end="83"/> {{dhr|5em}} <section begin="84"/> {{larger|<b>{{rh|84||மதங்காப்பார்!}}</b>}} மாடெனக் கொழுத்து, மரமெனக் குந்தி மக்களும் மனைவியும் இன்றி - நல்ல மாண்புயர் வொழுங்கதும் குன்றி - மயிர்க் காடெனச் சடைகள் களிறெனத் தொந்தி கனிபால் நெய்வகை யோடு நல்ல காற்றமைந் துலவுமோர் வீடு - தனில் வீடெனக் கூறி, விரிசடைக் கடவுள் வியன்கதை நாள்தொறும் பேசி - நல்ல வாழ்விலா மக்களை ஏசி - வெறுங் கூடென உடலைக் கூறுவர் தமக்குக் குருக்கள் எனும்பெயர் சூட்டி - பலர் </poem>}} <section end="84"/><noinclude></noinclude> n44ujj65ev9mcggj9ldozgwzj5e6v35 1839521 1839518 2025-07-06T11:15:29Z Info-farmer 232 84 1839521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|128{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem>வேற்றுல காக்கினும் ஆக்கலாம்! - வான வெளியினை வீழ்த்தினும் வீழ்த்தலாம் - உயிர்க் காற்றுக் குறையினும் ஊதலாம்! - கடற் கொள்புனல் வற்றினும் ஊற்றலாம்! - மலர் தோற்றத்தைச் செய்யினும் செய்யலாம்! - அதில் தேனினைக் கூட்டிடல் ஆகுமோ? - அறி(வு) ஆற்றல்மிகப் பெரு மாட்சியே - அன் பாற்ற லிலாவிடில் வீழ்ச்சியே! {{float_right|5}} {{larger|{{Right|<b>-1957</b>}}}} <section end="83"/> {{dhr|5em}} <section begin="84"/> {{larger|<b>{{rh|84||மதங்காப்பார்!}}</b>}} மாடெனக் கொழுத்து, மரமெனக் குந்தி மக்களும் மனைவியும் இன்றி - நல்ல மாண்புயர் வொழுங்கதும் குன்றி - மயிர்க் காடெனச் சடைகள் களிறெனத் தொந்தி கனிபால் நெய்வகை யோடு நல்ல காற்றமைந் துலவுமோர் வீடு - தனில் வீடெனக் கூறி, விரிசடைக் கடவுள் வியன்கதை நாள்தொறும் பேசி - நல்ல வாழ்விலா மக்களை ஏசி - வெறுங் கூடென உடலைக் கூறுவர் தமக்குக் குருக்கள் எனும்பெயர் சூட்டி - பலர் </poem>}}<noinclude></noinclude> 7lup8cq8kert9l4orubxs2hq7pdm709 1839524 1839521 2025-07-06T11:17:26Z Info-farmer 232 - துப்புரவு 1839524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|128{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem>வேற்றுல காக்கினும் ஆக்கலாம்! - வான வெளியினை வீழ்த்தினும் வீழ்த்தலாம் - உயிர்க் காற்றுக் குறையினும் ஊதலாம்! - கடற் கொள்புனல் வற்றினும் ஊற்றலாம்! - மலர் தோற்றத்தைச் செய்யினும் செய்யலாம்! - அதில் தேனினைக் கூட்டிடல் ஆகுமோ? - அறி(வு) ஆற்றல்மிகப் பெரு மாட்சியே - அன் பாற்ற லிலாவிடில் வீழ்ச்சியே! {{float_right|5}} {{larger|{{Right|<b>-1957</b>}}}} <section end="83"/> <section begin="84"/> {{larger|<b>{{rh|84||மதங்காப்பார்!}}</b>}} மாடெனக் கொழுத்து, மரமெனக் குந்தி மக்களும் மனைவியும் இன்றி - நல்ல மாண்புயர் வொழுங்கதும் குன்றி - மயிர்க் காடெனச் சடைகள் களிறெனத் தொந்தி கனிபால் நெய்வகை யோடு நல்ல காற்றமைந் துலவுமோர் வீடு - தனில் வீடெனக் கூறி, விரிசடைக் கடவுள் வியன்கதை நாள்தொறும் பேசி - நல்ல வாழ்விலா மக்களை ஏசி - வெறுங் கூடென உடலைக் கூறுவர் தமக்குக் குருக்கள் எனும்பெயர் சூட்டி - பலர் </poem>}}<noinclude></noinclude> dk54wqxa2e9hr23sq6n93pp9dgt6biy 1839526 1839524 2025-07-06T11:25:09Z Info-farmer 232 {{left_margin|3em|<poem> 1839526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|128{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem> வேற்றுல காக்கினும் ஆக்கலாம்! - வான வெளியினை வீழ்த்தினும் வீழ்த்தலாம் - உயிர்க் காற்றுக் குறையினும் ஊதலாம்! - கடற் கொள்புனல் வற்றினும் ஊற்றலாம்! - மலர் தோற்றத்தைச் செய்யினும் செய்யலாம்! - அதில் தேனினைக் கூட்டிடல் ஆகுமோ? - அறி(வு) ஆற்றல்மிகப் பெரு மாட்சியே - அன் பாற்ற லிலாவிடில் வீழ்ச்சியே! {{float_right|5}} {{larger|{{Right|<b>-1957</b>}} </poem>}} <section end="83"/> <section begin="84"/> {{larger|<b>{{rh|84||மதங்காப்பார்!}}</b>}} {{left_margin|3em|<poem> மாடெனக் கொழுத்து, மரமெனக் குந்தி மக்களும் மனைவியும் இன்றி - நல்ல மாண்புயர் வொழுங்கதும் குன்றி - மயிர்க் காடெனச் சடைகள் களிறெனத் தொந்தி கனிபால் நெய்வகை யோடு நல்ல காற்றமைந் துலவுமோர் வீடு - தனில் வீடெனக் கூறி, விரிசடைக் கடவுள் வியன்கதை நாள்தொறும் பேசி - நல்ல வாழ்விலா மக்களை ஏசி - வெறுங் கூடென உடலைக் கூறுவர் தமக்குக் குருக்கள் எனும்பெயர் சூட்டி - பலர் </poem>}}<noinclude></noinclude> dwmncczgqxaauz05r8gbyccl5yu51r3 1839527 1839526 2025-07-06T11:26:00Z Info-farmer 232 }} 1839527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|128{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>{{left_margin|3em|<poem> வேற்றுல காக்கினும் ஆக்கலாம்! - வான வெளியினை வீழ்த்தினும் வீழ்த்தலாம் - உயிர்க் காற்றுக் குறையினும் ஊதலாம்! - கடற் கொள்புனல் வற்றினும் ஊற்றலாம்! - மலர் தோற்றத்தைச் செய்யினும் செய்யலாம்! - அதில் தேனினைக் கூட்டிடல் ஆகுமோ? - அறி(வு) ஆற்றல்மிகப் பெரு மாட்சியே - அன் பாற்ற லிலாவிடில் வீழ்ச்சியே! {{float_right|5}} {{larger|{{Right|<b>-1957</b>}}}} </poem>}} <section end="83"/> <section begin="84"/> {{larger|<b>{{rh|84||மதங்காப்பார்!}}</b>}} {{left_margin|3em|<poem> மாடெனக் கொழுத்து, மரமெனக் குந்தி மக்களும் மனைவியும் இன்றி - நல்ல மாண்புயர் வொழுங்கதும் குன்றி - மயிர்க் காடெனச் சடைகள் களிறெனத் தொந்தி கனிபால் நெய்வகை யோடு நல்ல காற்றமைந் துலவுமோர் வீடு - தனில் வீடெனக் கூறி, விரிசடைக் கடவுள் வியன்கதை நாள்தொறும் பேசி - நல்ல வாழ்விலா மக்களை ஏசி - வெறுங் கூடென உடலைக் கூறுவர் தமக்குக் குருக்கள் எனும்பெயர் சூட்டி - பலர் </poem>}}<noinclude></noinclude> 9slbtauzgresq8677ta7nl1i7vwweyx பக்கம்:கனிச்சாறு 4.pdf/164 250 446961 1839523 1838495 2025-07-06T11:16:42Z Info-farmer 232 - துப்புரவு 1839523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}129}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>குவிந்தனர் மதந்தனைக் காட்டி! கோடையில், மழையில், பனியினில் மூழ்கிக், கொடுங்கடல் புகுத்துயிர் வாடி - தங் குடலிட உணவதைத் தேடி - பலர் வாடையில், ஒருசிலர் கடவுளை, மதத்தை வளர்த்ததில் தங்குடல் கழுவி - பல வகையினில் இன்பத்தைத் தழுவி - பட் டாடையில் போர்த்த அணியுடல் மறைத்தே அறுசுவை உணவினை உண்டு - பல, அணங்குகள் தம்நலம் கண்டு - மத ஓடையில் நீந்தி உலகினில் வாழ்வார் உழைத்திடும் மக்களை ஏய்ப்பார் - அவர் உளத்தினை நாள்தொறும் மாய்ப்பார்! உழைப்போர்க் கெல்லாம் ஒவ்வொரு மடமும். ஒவ்வொரு பீடமும் தந்து - பல உணவதும், உடைகளும் தந்து - அவர் அழைப்பார் ஆகில் அனைவரும் அவர்போல் ஆயிரம் பூக்களைக் கொய்து - நாளும் அறுமுறை பூசைகள் செய்து - நன்கு பிழைப்பா ரன்றோ? பெரும்பேரின்பப் பிறவுல கெய்துவ ரன்றோ? - இப் பிறப்பினை அறுப்பா ரன்றோ? - இதை உழைப்போ ரெல்லாம் உணருவ ராகில் உயிர்பெறுமா மதம் இங்கு? - இதற் குழைப்பது அவரவர் பங்கு! {{Right|<b>-1957</b>}} </poem>}} <section end="84"/><noinclude></noinclude> 5x5n3ankvf7jsi29fy8szecnj4rt6e0 பக்கம்:கனிச்சாறு 4.pdf/170 250 446967 1839536 1838503 2025-07-06T11:46:40Z Info-farmer 232 89 1839536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}135}}</b></small></noinclude><section begin="88"/> {{larger|<b>{{rh|88||நாம் தமிழரல்லர் !}}</b>}} {{left_margin|3em|<poem>பள்ளென்போம்; பறையென்போம் நாட்டாரென்போம்! பழிதன்னை யெண்ணாமல் வண்ணா ரென்போம்! பிள்ளையென்போம்; முதலியென்போம்; நாய்க்கர் என்போம்! பிழைநாணா தருந்ததியர், படையா ளென்போம்! எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்! எண்ணுங்கள்; நமைத் ‘தமிழர்’என்கின் றோமா? குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும் கூசுங்கள்; நாணுங்கள்; தமிழ்நாட் டாரே! {{Right|<b>-1959</b>}} <section end="88"/> {{dhr|5em}} <section begin="89"/> {{larger|<b>{{rh|89||நெறி காணீரே !}}</b>}} கல்லாலும் செம்பாலும் பண்ணிவைத்த படிவத்தைக் ‘கடவுள்’ என்றே நல்லாவின் பாலாலும் நெய்யாலும் வழிபாடு நாளும் செய்தே எல்லாரும் அவர்பெற்ற மாந்தரென்பீர்! ஆனாலும் எண்ணற் றோரைச் சொல்லாலும் மக்களெனச் சொல்லுகிலீர்; தாழ்த்துகின்றீர்; நெறிகா ணீரே! {{larger|{{Right|<b>-1960</b>}}}} </poem>}} <section end="89"/><noinclude></noinclude> mof2f0d7cv2as36hyw6yudh5zql4fc1 1839537 1839536 2025-07-06T11:47:38Z Info-farmer 232 {{left_margin|3em|<poem> 1839537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}135}}</b></small></noinclude><section begin="88"/>{{larger|<b>{{rh|88||நாம் தமிழரல்லர் !}}</b>}} {{left_margin|3em|<poem>பள்ளென்போம்; பறையென்போம் நாட்டாரென்போம்! பழிதன்னை யெண்ணாமல் வண்ணா ரென்போம்! பிள்ளையென்போம்; முதலியென்போம்; நாய்க்கர் என்போம்! பிழைநாணா தருந்ததியர், படையா ளென்போம்! எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்! எண்ணுங்கள்; நமைத் ‘தமிழர்’என்கின் றோமா? குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும் கூசுங்கள்; நாணுங்கள்; தமிழ்நாட் டாரே! {{Right|<b>-1959</b>}} </poem>}} <section end="88"/> {{dhr|5em}} <section begin="89"/>{{larger|<b>{{rh|89||நெறி காணீரே !}}</b>}} {{left_margin|3em|<poem> கல்லாலும் செம்பாலும் பண்ணிவைத்த படிவத்தைக் ‘கடவுள்’ என்றே நல்லாவின் பாலாலும் நெய்யாலும் வழிபாடு நாளும் செய்தே எல்லாரும் அவர்பெற்ற மாந்தரென்பீர்! ஆனாலும் எண்ணற் றோரைச் சொல்லாலும் மக்களெனச் சொல்லுகிலீர்; தாழ்த்துகின்றீர்; நெறிகா ணீரே! {{larger|{{Right|<b>-1960</b>}}}} </poem>}} <section end="89"/><noinclude></noinclude> 5ovk7k9raikuwgdd2r328fsy6no8y80 பக்கம்:கனிச்சாறு 4.pdf/172 250 446969 1839539 1838505 2025-07-06T11:50:19Z Info-farmer 232 </poem>}} 1839539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}137}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>பணிவினார் தம்மிடைப் பகைவரைப் பார்த்தேன்! பசியிலார் ஊண்பெறக் கொதித்தேன்! பிணியினார்க் கிரங்கிலாப் பித்தர்கண் டடுத்தேன்! பிணியிலார் மருந்துணச் சினந்தேன்! துணிவினார் நெஞ்சினுட் டுணுக்குகண் டிழித்தேன்! துயரிலார்க் கிடுதல்கண் டகன்றேன். வணிகனார் கைவாய் வரும்படிக் கயர்ந்தேன். வல்லிருள் உலகுகண் டேனே! {{float_right|5}} {{larger|{{Right|<b>-1961</b>}}}} </poem>}} <section end="90"/> {{dhr|10em}} <section begin="91"/> {{left_margin|3em|<poem> {{larger|<b>{{rh|91||அறுவடை செய்கிறார்கள்!}}</b>}} அறுவடை செய்கிறார்கள்! - இங்கே அறுவடை செய்கிறார்கள்! திருவடை யாமலே திண்ணையில் வீதியில் தெருவோரச் சாய்க்கடை புழக்கடை நடுவினில் எருவடை குழிகளில் ஈக்களாய், புழுக்களாய் இறக்காமல் மொய்க்கின்ற ஏழ்மையைச் சொல்லியே, அறுவடை செய்கிறார்கள் - இங்கே அறுவடை செய்கிறார்கள்! </poem>}}<noinclude></noinclude> 4xfr8ewa1gchxoruugg8qo28o6iyigo அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf 252 475344 1839396 1835182 2025-07-05T15:20:32Z Booradleyp1 1964 1839396 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:தேவநேயப் பாவாணர்|தேவநேயப் பாவாணர்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம் லிமிடெட் |Address= |Year=1962 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5to10=உள்ளுறை /> |Remarks={{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/6}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/7}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/8}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/9}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/10}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:விளையாட்டுத்துறை நூல் அட்டவணைகள்]] [[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பாவாணரின் படைப்புகள்]] 3fyv5hoosm208joy47k9wcmbmmo8d7d பயனர்:Booradleyp1/books 2 481457 1839398 1839121 2025-07-05T15:29:12Z Booradleyp1 1964 /* சு. சமுத்திரம் */ 1839398 wikitext text/x-wiki ==அண்ணாத்துரை== ===ஒருங்கிணைப்பு முடிந்தவை === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">ஒருங்கிணைப்பு முடிந்தவை</div> <div class="NavContent" style="display:none;"> {{Multicol}} #[[பவழபஸ்பம்]] -சூலை 29, 2024 #[[மகாகவி பாரதியார்]] -சூலை 30, 2024 #[[பெரியார் — ஒரு சகாப்தம்]] - சூலை 31, 2024 #[[நீதிதேவன் மயக்கம்]] -ஆகத்து 3, 2024 #[[பொன் விலங்கு]] - ஆகத்து 4, 2024 #[[நாடும் ஏடும்]] - ஆகத்து 5, 2024 #[[அறப்போர்]] - ஆகத்து 6, 2024 #[[எட்டு நாட்கள்]] - ஆகத்து 7, 2024 #[[அண்ணாவின் பொன்மொழிகள்]] - ஆகத்து 8, 2024 #[[அன்பு வாழ்க்கை]]- - ஆகத்து 9, 2024 #[[உணர்ச்சி வெள்ளம்]] - ஆகத்து 9, 2024 #[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] - ஆகத்து 10, 2024 #[[தமிழரின் மறுமலர்ச்சி]] - ஆகத்து 11, 2024 #[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 # [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] - ஆகத்து 11, 2024 #[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] -சூன் 12, 2025-தகவலுழவன் #[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]]-பாலாஜிஜகதீஷ் #[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] # [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]]-அருளரசன் #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]] #[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]] #[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]] #[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]] #[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]] #[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]] #[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]] {{Multicol-break}} #[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]] #[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] #[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] #[[அட்டவணை:திருமணம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]] #[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]] #[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]] {{Multicol-end}} </div></div></div> ==சங்க இலக்கிய அட்டவணைகள்== === ஒருங்கிணைப்பு முடிந்தவை === #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]]{{tick}} # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] {{tick}} #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]]{{tick}} #[[அட்டவணை:நற்றிணை 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]]{{tick}} ===மெய்ப்பு முடிந்தவை === ===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை=== ===மேலும்=== #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]] #[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]] ==தொ. பரமசிவன்== === ஒருங்கிணைக்கப்பட்டவை=== #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #[[அட்டவணை:உரைகல்.pdf]] #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]] #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]] #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] ==மேலாண்மை பொன்னுச்சாமி== ===ஒருங்கிணைக்கப்பட்டவை === #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] #[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]] #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]] #[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]] #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]] ===முழுமையாக ஒருங்கிணைக்கப் படாதவை=== #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] ==உதிரிகள்== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]-நூல் ஒருங்கிணைவு{{tick}} #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]]{{tick}} #[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] {{tick}} #[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]{{tick}} === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]] ===மெய்ப்பு நடபெற்று வருபவை === #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-318-சாரதி #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-244-ரம்யா #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]-113 - அஸ்வியா #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-234-ஹர்ஷியா #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-241-ஸ்ரீதேவி #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]-மோகன் #[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]]-பிரீத்தி == சு. சமுத்திரம் == === ஒருங்கிணைவு முழுமையடையாதவை=== #[[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] #[[அட்டவணை:ஆகாயமும் பூமியுமாய்.pdf]] #[[அட்டவணை:காகித உறவு.pdf]] ===மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]] ===மெய்ப்பு நடைபெற்று வருபவை=== #[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]]-அஜய் #[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]-மோகன் #[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]]-கராம் ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை === #[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-171 #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-163 #[[அட்டவணை:சத்திய ஆவேசம்.pdf]] qq8te9mwhpo9zgkmra2jbg9eo0krb5c பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/141 250 489122 1839308 1839068 2025-07-05T12:20:09Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|40 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>70. நரசிங்கபுரம் பள்ளிவாசலுக்கு சையத் அப்துல் ஹாதி கொடை</b><ref>*ஆவணம் 12, 2001, பக் 85; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பாளையம் - அரவக்குறிச்சி சாலையில் குடகனாற்றின் மேல்கரைப் பாலத்தின் தென்புறத்தின் பாறை. |- | காலம் || – ||கி.பி. 18ஆம் நூற்றாண்டு. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||ஹஜ்ரத் சையத் அப்துல் ஹாதி சாயபு என்பவர் நரசிங்கபுலம் அருகில் உள்ள பள்ளிவாசலுக்குக் கொடையாக நிலம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. முதல் மூன்று வரிகள் உருதுவிலும், பிற்பகுதி 5 வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. நேர்வழி காட்டுபவரான அல்லாவின் அடிமை சையத் அப்துல் ஹாதி என்பது இதன் பொருள். |} <b>கல்வெட்டு</b> <poem> 1. அல்லாஹ் 2. அஸ் ஸையது அப் 3. துல் ஹாதி 4. அசரது சயிது அப்துல் (நித்) ஹாதி சாயி 5. ப்பு யவர்கள் பள்ளிவாசலுக்கு 6. விட்ட மாநியம் நகல் நரசிங் 7. கபுரம் எல்லை நடப்பள்ளி 8. வரைக்கும்</poem> {{dhr|2em}} {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 141 |bSize = 425 |cWidth = 221 |cHeight = 140 |oTop = 396 |oLeft = 134 |Location = center |Description = }} {{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> h1kwjimo2dcklfin1zztrtnsd9gaovs பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/142 250 489123 1839311 1839069 2025-07-05T12:21:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 141}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>71. அம்மாபாளையம் தர்காவுக்கு ஹைதர்அலி கொடை</b><ref>*Annual Report on Epigraphy 155 of 1934<br>Epigraphia Carnatica Vol IX, 32, 90</ref>}}}} சேலம் மாவட்டம், சேலம் வட்டம் அம்மாபாளையம் என்ற ஊரில் தெருவில் நடப்பட்டுள்ள ஒருகல் செப்பேட்டின் நகல் என்று எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றுள்ளது. மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையாரின் காரியத்துக்குக் கர்த்தரான ஹைதர்அலி அவர்கள் கி.பி. 1759ஆம் ஆண்டு அம்மாபாளையத்திலுள்ள அகாவல்ல சாயபு தர்காவிற்கு அம்மாபாளையத்தையும், வேறு சில ஊர்களையும் தர்கா நிர்வாகச் செலவு, பராமரிப்புக்காகவும் தர்காவிற்கு வரும் ஃபக்கீர்களுக்கு அளிக்கவும் கொடையாகக் கொடுத்தார். இதற்குரிய பணம் மைசூர் அரண்மனைக் கருவூலத்திலிருந்து கொடுக்கப்பட்டதாக இதில் எழுதப்பட்டுள்ளன. கொடை கொடுக்கப்பட்ட பிரமாதி வருஷம் கி.பி. 1759. 1761ல் தான் ஹைதர்அலி அதிகாரத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 1759ஆம் ஆண்டிலேயே தனியாகக் கொடை கொடுக்கும் உரிமையும் ஹைதர்அலி பெற்றிருந்தது ஹைதர்அலி வரலாற்றில் புதிய தகவலாகும். இதே ஆண்டு ஹைதர்அலி பெங்களூர் அருகில் உள்ள பிங்கிபுரம், சென்னபட்டணம் அருகில் உள்ள மோஹெஹள்ளி ஆகிய ஊர்களில் உள்ள தர்காக்களுக்கும் இதேபோல் ஃபக்கீர் தர்மமாகக் கொடைகள் கொடுத்துள்ளார்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 40eomb6ud4zofkjltwqvonlb5x1jtjf பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/143 250 489124 1839312 1839071 2025-07-05T12:23:14Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|142 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>72. ஹைதர் அலி கொடை தந்த பீர் கயப் தர்கா</b><ref>*‘கொங்கு நாடு’, தி.அ.முத்துசாமிக் கோனார், 1934 பக் 69.</ref>}}}} சேலம் மாவட்டத்தில் சங்ககிரி மலையில் ஒரு கோட்டை உள்ளது. புதுக்கோட்டை வாசல் அருகே ஒரு குகை இருக்கிறது. இது பீர்கயப் என்ற முகமதிய சித்தர் இருந்த இடம் என்று கூறுகிறார்கள். (ஃகைப் என்றால் மறைவானவர் என்று பொருள்!) இக்குகையின் உள்ளே கல்மதம் என்ற மருந்து செய்யப் பயன்படும் ஒருவகைப் பொருள் கிடைக்கிறது. பழக்கமுள்ளவர்கள் உட்புகுந்து எடுக்கிறார்கள். இதற்கு ஐதர்அலி ஒரு கொடையளித்துள்ளார். “விசு வருஷம் வைகாசி மாதம் சுத்த திதிய ஸ்ரீமது சகலகுல சம்பன்னரான ரங்கய்யரவர்களுக்க அயிதரல்லிக்கான் பகதூரவர்கள் சலாம். இப்பவும் சங்ககிரியிலிருக்கும் பீர்கைபு சாஹேபு அவர் தர்காவுக்கு சங்ககிரியில் காடு 20 வள்ளம் வேம்பனேரி சமுத்திரத்தில் விரை வரி கண்டகம் இரண்டு கண்டகம் சகிதமாய் விவரித்து நாலு மூலைக்கும் சிலை பிரதிஷ்டை செய்வித்து மா சூம் சாயபு அவாலத்து செய்வித்து என்னென்னைக்கும் சர்வ மானியமாக ஆசந்திரார்க்கமாய் நடபித்துக் கொண்டு வரவும்” {{rh|<br><br>1 வள்ளம் - 4 ஏக்கர்||இப்படிக்கு<br>(காசு மொகர் செய்யப்பட்டிருக்கிறது)}}{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 688ev3iskrnfyvvu7nwe6oqyp0t7w49 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/144 250 489125 1839313 1839073 2025-07-05T12:26:55Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர். செ. இராசு ❋ 143}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>73. தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் கொடைகள்</b><ref>*ஆவணம் 12, சூலை, 2001, பக் 68-69; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}} கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், தேங்காய்ப் பட்டணம் மாலிக் தினார் பள்ளிவாசலில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. அவை எழுத்தில் மலையாள உச்சரிப்பு வடிவில் காணப்படுகிறது. 1) கி.பி. 1631ல் பள்ளிவாசலுக்கு மணி வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. <b>கல்வெட்டு</b> <poem>1. 806 வருஷம் மாருகெழி 2. மாதம் 2 தேதி கமாசி மெதற் 3. கால்மணி</poem> 2) கி.பி. 1642ஆம் வருடம் குறிக்கப் பெறுகிறது <b>கல்வெட்டு</b> <poem>1. (கொல்லம்) 817 வருஷம் 2. ஆடி மாதம் 22 தேதி 3. தமெத தென காலகுடி</poem> 3) கி.பி. 1632ல் மேற்கு வீதியில் சபை கூடியதைக் குறிக்கிறது <b>கல்வெட்டு</b> <poem>1. 807 வருஷம் தை மாதம் 2. தமாச தமாசி மேக 3. தெரு தாலம் கூடி</poem>{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> p0nqrukgjmtribjt54iiazu4i7g05b5 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/145 250 489126 1839315 1839074 2025-07-05T12:27:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|144 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>74. செஞ்சி மசூதி திருப்பணியில் சையது</b><ref>*Annual Report on Epigraphy 307, 308 of 1939<br>Epigraphia Indo Moslemica 1938 P. 52</ref>}}}} செஞ்சிக் கோட்டை மசூதிச் சுவரிலும் தண்ணீர்த் தொட்டி மத்தியிலும் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. அவை ஹிஜ்ரி 1130ல் (கி.பி. 1718) மசூதி கட்டப்பட்டதையும், ஹிஜ்ரி 1135ல் (கி.பி. 1723) தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கத் தண்ணீர்த் தொட்டி கட்டியதையும் தெரிவிக்கின்றன. அவை பேரரசர் பரூக்கியர் ஆட்சியின்போது செஞ்சி ஆளுநராக இருந்த சையத் அவர்களால் கட்டப்பட்டன.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> jb0wvcs7x5zu048foonxkfri12blhfl பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/146 250 489127 1839317 1839078 2025-07-05T12:29:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 145}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>75. மாபூஸ்கான் கொடுத்த கொடை</b><ref>*தமிழ்நாட்டுச் செப்பேடுகள் - இரண்டாம் தொகுதி, பக் 358, ச. கிருஷ்ணமூர்த்தி</ref>}}}} ஆர்க்காடு நவாப் அசரத் கிபிலே நவாபு சாயபு மகம்மது அன்வர்த்திகான் மகன் மாபூஸ்கான். ஆர்க்காடு நவாபின் பிரதிநிதியாக மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நிர்வாகம் செய்து வந்தார். மாபூஸ்கானின் குரு அசரத் மியா இமாமு சாயபு. அவர் மகன் மாய சேகு அகமது அவர்கட்கு ஆண்டுதோறும் 78 ரேகை பொன் கொடுக்க வேண்டும் என்றும், அதனை மாதாமாதம் 6 பொன் 5 பணம் வீதம் கொடுக்கலாம் என்றும் எழுதிச் செப்பேடு ஒன்று கொடுத்தார் மாபூஸ்கான். கொடை 29.3.1745 அன்று வழங்கப்பட்டது. இந்த 72 ரேகைப் பொன்னும் திருநெல்வேலி அரிப்புத்துறைக் குத்தகையிலிருந்து வழங்கவும் ஏற்பாடு செய்தார். இந்தச் செப்பேட்டை திருநெல்வேலி நாட்டுக் கணக்கு கந்தசாமி எழுதியுள்ளார். தமிழிலும், இந்துஸ்தானியிலும் உள்ள இந்தச் செப்பேடு திருவனந்தபுரத்தில் ஒரு இஸ்லாமியர் வீட்டில் உள்ளது. இந்தச் செப்பேட்டை அறிஞர் டி.ஏ. கோபிநாதராவ் பதிப்பித்துள்ளார்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}} 10</noinclude> 2eoq3o2zrz9a474qihj8rkginzaf82i பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/147 250 489128 1839321 1839079 2025-07-05T12:33:55Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|146 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>76. செஞ்சிக்கோட்டையை வென்ற அம்பர்கான்</b><ref>*Annual Report on Epigraphy (D) 160 of 1964</ref>}}}} செஞ்சிக்கோட்டையின் உட்புறச் சுவரில் சிறிய மசூதியின் மேற்கில் ஒரு கல்வெட்டு உள்ளது. ஹிஜ்ரி ஆண்டு 1058ல் (கி.பி. 1648) அம்பர்கானும், சையது யாகூபும் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றிய செய்தி அழகிய எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளது. அம்பர்கானின் அலுவல் அப்துல்லா என்பவர் இக்கல்வெட்டைப் பொறித்துள்ளார்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 5dw84de015s6lcein3ptvv734eq0ntf பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/148 250 489129 1839323 1839080 2025-07-05T12:34:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 147}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>77. பூந்தமல்லி மசூதி கட்டிய ருஷ்தும்</b><ref>*Annual Report on Epigraphy (B) 303, 304 of 1939<br>Epigraphia Indo - Moslemica 1938, page 52.</ref>}}}} கோல்கொண்டா அரசர் ஹசரத் ஆலம்பன்னா சுல்தான் அப்துல்லா சையத் ஆட்சிபுரியும்போது சென்னைப் பகுதிக்கு அரசப் பிரதிநிதியாக இருந்தவர் நவாப் ஜனாம்லத் உல் முல்கி மீர் முகம்மது என்பவர். அவரிடம் வேலை பார்த்த அலுவலர் அஸ்திராபாத் துல்ஃபிகார் மகன் ருஷ்தம் என்பவர் பூந்தமல்லி மசூதியை முழுவதுமாக 3.9.1653 (ஹிஜ்ரி 1063 ஷவ்வல் 20) அன்று கட்டி முடித்ததை இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அப்போது பூந்தமல்லிக் கோட்டை ஹவில்தாராக இருந்தவர் சுஜாயித ஆசாரி என்பவர்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> bkx4u1w41p4p1fddb48bl5ds6tyk6q5 1839324 1839323 2025-07-05T12:35:52Z Booradleyp1 1964 1839324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 147}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>77. பூந்தமல்லி மசூதி கட்டிய ருஷ்தும்</b><ref>*Annual Report on Epigraphy (B) 303, 304 of 1939<br>Epigraphia Indo - Moslemica 1938, page 52.</ref>}}}} கோல்கொண்டா அரசர் ஹசரத் ஆலம்பன்னா சுல்தான் அப்துல்லா சையத் ஆட்சிபுரியும்போது சென்னைப் பகுதிக்கு அரசப் பிரதிநிதியாக இருந்தவர் நவாப் ஜனாம்லத் உல் முல்கி மீர் முகம்மது என்பவர். அவரிடம் வேலை பார்த்த அலுவலர் அஸ்திராபாத் துல்ஃபிகார் மகன் ருஷ்தம் என்பவர் பூந்தமல்லி மசூதியை முழுவதுமாக 3.9.1653 (ஹிஜ்ரி 1063 ஷவ்வல் 20) அன்று கட்டி முடித்ததை இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அப்போது பூந்தமல்லிக் கோட்டை ஹவில்தாராக இருந்தவர் சுஜாயித ஆசாரி என்பவர்.{{nop}} {{dhr|10em}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 92xbsqssrzuu1ob0w6rd4owzdead9du பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/149 250 489130 1839326 1839083 2025-07-05T12:36:49Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|148 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>78. ஆர்க்காடு நவாப் அரும்பணிகள்</b><ref>*Annual Report on Epigraphy (D) 166-172 of 1964</ref>}}}} திருச்சி ஹசரத் நத்தர்ஷா தர்கா, திருநெல்வேலி பேட்டை ஜாமி மசூதி என்று அழைக்கப்படும் வாலாஜா மசூதி, தாளையூத்து ஷாடிகான் சத்திரம், திருநெல்வேலி கதக் மசூதி ஆகியவற்றிற்குப் பல கட்டிடங்களை ஆர்க்காடு நவாபு முஹம்மது அலி (1750-1795) பல கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்தார். நத்தர்ஷா தர்காவில் புனிதர் நத்தர்ஷா அங்கு ஹிஜ்ரி 375ல் வந்தது குறிக்கப்பட்டுள்ளது.{{nop}} {{dhr|10em}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> jrsce9y5pr5kvz3ju0c3vudj2z21l1q பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/150 250 489131 1839329 1839084 2025-07-05T12:37:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 149}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>79. புனிதரை வணங்க புகழ்மிகு கட்டிடம்</b><ref>*Annual Report on Epigraphy (D) 161 of 1964</ref>}}}} நாகூர் ஹஜ்ரத் காதிர் வலி தர்கா நுழைவாயில் இடப்புறம் உள்ள கல்வெட்டில் ஹிஜ்ரி 1196 ஷாவல் மாதம் (கி.பி. 1782 செப்டம்பர் - அக்டோபர்) புனிதர் ஷாஹுல் ஹமீது சையது அப்துல் காதிர் மானிக்பூரி அவர்களை வழிபடுவதன் பொருட்டு ஹாஜி அப்துல் காதிர் அவர்கள் மேற்பார்வையில் இரு அழகிய கட்டிடம் கட்டப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. (காதிர் - இறைஆற்றல்){{nop}} {{dhr|10em}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1c8s12ncukmu1dp06cu6bnp90eekojp பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/151 250 489132 1839331 1839082 2025-07-05T12:40:10Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|150 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>80. சம்மட்டிவரத்தில் சாகிப் கான் தர்கா</b><ref>* Annual Report on Epigraphy (B) 306 of 1960<br>* Annual Report on Epigraphy (D) 171 of 1960</ref>}}}} ஆர்க்காடு நவாப் முகம்மது அலி, கிழக்கிந்திய கும்பினியர் ஆகியோரால் வரிவசூல் செய்ய 1757ல் அனுப்பப்பட்ட கான்சாகிபு வசூலித்த வரியை மக்கள் நலப்பணிகட்கு செலவிட்டார். கான்சாகிபு பற்றி நன்கு ஆய்ந்த பேராசிரியர் நா. வானமாமலை “திருநெல்வேலி சீமையை வென்ற பெருமையை பறைசாற்றி இச்சீமையின் வரிக்குத்தகையை 7 லட்சத்திற்கு கான்சாகிபு கும்பினியாரிடமிருந்து பெற்றுக் கொண்டான். மாபூஸ்கான் தனது தம்பியான ஆர்க்காடு நவாபு முகமதலியோடு சமாதானம் செய்து கொண்டு திருநெல்வேலிச் சீமையை விட்டு போய்விட்டான். யூசூப்கானது நிலைமை வலுவாகி இருந்தது. கம்பெனியிடம் விசுவாசம் இல்லாமல் அவன் நடந்து கொண்டதாக பிரிட்டிஷார் ஐயுற்றனர். தஞ்சாவூரிலிருந்து அவன் படை திரட்டினான். பாளையக்காரர்களோடு சமாதானம் செய்து கொண்டு நவாபை எதிர்க்க அவர்களது உதவியை நாடினான். அவனது தலைமையில் உள்ள வீரர்களது தொகை 27,000 இருந்ததென்று பிரிட்டிஷ் அதிகாரிகள் நம்பினர். பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும், ஹைதர் அலியிடமிருந்தும் அவன் இராணுவ உதவிகளைப் பெற்றதாக பிரிட்டிஷார் குற்றம் சாட்டினர். சுயாதிக்கமுள்ள அரசனைப் போலவே அவன் கோயில்கட்கும், மசூதிகளுக்கும் நிலங்கள் வழங்கி கல்வெட்டுக்களில் பொறித்துக் கொண்டான். திருநெல்வேலி, மதுரைச் சீமைகளில் குளங்கள் தோண்டி {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 151 |bSize = 425 |cWidth = 321 |cHeight = 167 |oTop = 395 |oLeft = 69 |Location = center |Description = }}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 9i3a2l0vxzk5izv8086wrt3it8zucm1 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/152 250 489133 1839333 1839072 2025-07-05T12:42:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 151}} {{rule}}</noinclude>வாய்க்கால்கள் வெட்டி நிலங்களுக்குப் பாசனவசதி செய்து கொடுத்தான். புலித்தேவனையும், அவனது நண்பர்களையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள முயன்றான்” என்று “கான்சாகிபு சண்டை” என்ற தம் நூல் பதிப்பில் குறிப்பிடுகின்றார் (பக்கம் 11). {{left_margin|3em| ‘கான்சாகிபு சண்டை’ கதைப்பாட்டும், <poem><b>“வருகையிலே கும்தான் என்று வந்தான் – அந்த மதுரைக்கு வந்தபின்பு ராசாவுமானான்”</b></poem>}} என்று கூறுகிறது (பக்கம் 26). எனவே நவாபு முகம்மது அலியே கான்சாகிபுவை பதவியிலிருந்து அகற்றத் தானே படைக்குத் தலைமை தாங்கி வந்தார். கும்பினியார் பெரும் படையும் கர்னல் மன்சார் தலைமையில் வந்தது. போரில் வெல்ல முடியாமல் சிவகங்கைத் தளவாய் தாண்டவராயன் மூலம் சதியில் ஈடுபட்டனர். கான்சாகிபுவின் அலுவலர்கள் சீனிவாசராவ், மார்க்கசந்து (டச்சுக்காரர்), மெய்க்காவல் படைத்தலைவன் சேகுகான் மூவரும் பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு கான்சாகிபுவைக் காட்டிக் கொடுத்தனர். பிடித்த அன்றே 14.10.1764ல் தூக்கிலிட்டனர். மாவீரனின் உடலை நான்காக வெட்டி நான்கு இடங்களில் அடக்கம் செய்தனர். ‘கான்சாகிபு சண்டை’ கதைப்பாடல் நான்கு இடங்கள் என்று கூறி நத்தம், திண்டுக்கல் ஆகிய இடங்களைச் சுட்டிக் கூறுகின்றன. மதுரைக்கு அண்மையில் சம்மட்டி வரத்தில் ‘கான்சாகிபு தர்கா’ உள்ளது. அதனை ஹிஜ்ரி 1222ல் (கி.பி. 1807) ஷேகு அதால் மகன் ஷேக் இமாம் என்பவர் கட்டியுள்ளார். இதைக் குறிக்கும் கல்வெட்டு தர்கா முன்புறச் சுவரில் பதிக்கப்பட்ட பலகைக்கல்லில் வெட்டப்பட்டுள்ளது. பெர்ஷியன் மொழியில் பாடல் வடிவிலும், தமிழிலும் கல்வெட்டு உள்ளது. தமிழில் பிரபவ, தை 23ஆம் தேதி என்று குறிக்கப்பட்டுள்ளது. ‘பள்ளிவாசல்’ என்றும் தமிழிலில் எழுதப்பட்டுள்ளது. <b>கல்வெட்டு</b> <poem>1. பிரபவ வருஷம் தை மாசம் 23 தேதி ரா.ரா. கானுச 2. ாயபு பள்ளிவாசல் சேகு அதால் குமா 3. ரன் சேகு யிமாமு கட்டி வைய்த்தது</poem>{{nop}}<noinclude></noinclude> 6lm0042to67v06lvcyldc9vdr5l028c பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/153 250 489134 1839334 1839212 2025-07-05T12:43:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|152 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>81. மசூதி கட்டி கொடை கொடுத்த சையது மொஹிய்யதின்</b><ref>*ஆவணம் 17, ஜூலை 2006, பக். 21; தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.</ref>}}}} {| |- | {{ts|vtt}}|இடம் || {{ts|vtt}}| – ||வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள அவளூர் மசூதிக்கு எதிரில் நடப்பட்டுள்ள கல். |- | காலம் || – ||1.9.1813. |- | {{ts|vtt}}|செய்தி || {{ts|vtt}}| – ||அவளூரைச் சேர்ந்த சையத் மொஹிதீன் என்பவர் ஒரு மசூதி கட்டி அதைப் பராமரிக்க 40 ஏக்கர் நன்செய் புன்செய் நிலங்களைக் கொடையாக அளித்து அதைப் பராமரிக்கும் பொருட்டு தர்மகர்த்தா ஒருவரையும் நியமித்து அவருக்கு மாதம் 4 ரூபாய் சம்பளம் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். |} <b>கல்வெட்டு</b> <poem>1. 1.9.1813 ஸ்திரிமுக வருஷம் 2. அவளூர் சய்யத் மொஹி 3. ய்யதின் யிந்த மஜீத் முசா 4. வரிகான் கட்டி யிதின் சிப் 5. பந்தி செலவுக்காக தன் பட் 6. டா நஞ்புஞ் 40 ஏக்கர் நெல 7. ம் விட்டிந்றே படியால் 8. யிதன் வறும்படியை மேற்படி 9. மசீத்வுக்கே வைச்ச உபயோ 10. கப் படுத்த வேண்டியது பி 11. ன்வரும் உயிலில் கன் 12. ட தற்ம கற்த்தாவை நேமி 13. த்து மாதம் 1 க்கு சம்பளமாக ரூ 14. பா 4லு சிலவாய் அதிக 15. ப்படுத்தக்கூடாது மேற்படி நி 16. லங்கள் முதலிய தர்ம 17. வீடுகளேயும் விற்க</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 5l0yjk3awaheg9g9i3c4c6rim94irsc பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/154 250 489135 1839337 1839214 2025-07-05T12:44:22Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 153}} {{rule}}</noinclude><poem>18. கூடாது மிஞ்சி வித்தால் 19. சர்காற் முதலிய யிசலாமி 20. னங்கள் றத்து செய்யவேண் 21. டியது யிந்தபடிக்கு சிலா 22. சாசனம் சய்யத் மொ 23. ஹிய்யத்தின்</poem>{{nop}} {{dhr|10em}}<noinclude></noinclude> srf0o331buiek9yoj145yatcvexqmz8 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/155 250 489136 1839338 1839215 2025-07-05T12:45:38Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|154 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>82. நாகூரில் கோபுரம் கட்டிய தாவூதுகான்</b><ref>*Annual Report on Epigraphy (B) 292 of 1964<br>Annual Report on Epigraphy (D) 162 of 1964</ref>}}}} டெல்லிக்கு அருகில் உள்ள ஷாஜகான்பூரில் குடியிருந்த இஸ்மாயில்கான் மகன் தாவூதுகான் சையது அப்துல் காதிர் நாகூர் மானிக்பூரி அவர்களுக்காக உயர்ந்த இரு கோபுரங்கள் அமைத்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. தாவூதுகான் முகம்மது பந்தரில் குடியேறிய செய்தியும் கூறப்பட்டுள்ளது. அப்துல்லா என்பவரால் இக்கல்வெட்டு எழுதப்பட்டது. கோபுரத்தின் வடபுறப் பகுதியில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கி.பி. 19 ஆம் நூற்றாண்டு. (முஹம்மது பந்தர் என்பது பரங்கிப்பேட்டை){{nop}} {{dhr|10em}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> chbdmxx3yv4ndpi3amnttxju3itt9rr பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/156 250 489137 1839342 1839216 2025-07-05T12:48:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 155}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>82-A. கீழக்கரை, ஓடக்கரை மசூதிக் கல்வெட்டு</b>}}}} ஹிஜ்ரி 1230ஆம் ஆண்டு கவீவு முகம்மது மரைக்காயர், அவுதுல்க் காதிறு மரைக்காயர் ஆகிய சகோதரர்கள் ஓடக்கரைப் பள்ளியில் கட்டிடம் கட்டியதை இக்கல்வெட்டுக் கூறுகிறது. <b>கல்வெட்டு</b> <poem>1. இந்த பள்ளி வாசல் அவுதுல் காதிறு மரைக்காயரவர்கள் மருமகன் யிசுமாயிலெவை மரைக்காயர் குமாரர்கள் 2. கலீவு முகம்மது மரைக்காயர் அவுதில்க் காதிறு மரைக்காயர் கட்டினது கிசறத்து 1230</poem>{{nop}} {{dhr|10em}}<noinclude></noinclude> mkcp3sx8ccwqqaica6hqcop3wklj6g8 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/157 250 489138 1839343 1839217 2025-07-05T12:50:03Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|156 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>83. அத்தர் வியாபாரிகள் கட்டிய பள்ளிவாசல்</b><ref>*Annual Report on Epigraphy (C) 55 of 1993</ref>}}}} கோவை மாநகர் பெரியகடை வீதியில் “அத்தர் ஜமாத் பள்ளிவாசல்” உள்ளது. அத்தர் போன்ற பல வாசனைப் பொருள்களை விற்கும் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து ஹிஜ்ரி 1322ஆம் ஆண்டு (1904-1905) அதைக் கட்டி முடித்ததாக அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.{{nop}} {{dhr|10em}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 18dtktvmbilpelkkmp0lgawyx4oji39 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/158 250 489139 1839344 1839218 2025-07-05T12:50:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 157}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>84. கோட்டை முகப்புக் கட்டிய ஹுசைனி</b><ref>Annual Report on Epigraphy 309 of 1939</ref>}}}} பீஜப்பூர் சுல்தான் ஆட்சிக்காலத்தில் செஞ்சிக் கோட்டையை பலமும் வலிமையும் உள்ளதாக ஆக்கக் கோட்டையின் முகப்பைப் பலப்படுத்திக் கட்டியவர் அப்பகுதியின் வட்டார அலுவலராக இருந்த ஹூசைனி என்பவர்.{{nop}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> 1raayq3zfvkxfrvr986qp5hyd3fq5bw 1839345 1839344 2025-07-05T12:50:57Z Booradleyp1 1964 1839345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 157}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>84. கோட்டை முகப்புக் கட்டிய ஹுசைனி</b><ref>Annual Report on Epigraphy 309 of 1939</ref>}}}} பீஜப்பூர் சுல்தான் ஆட்சிக்காலத்தில் செஞ்சிக் கோட்டையை பலமும் வலிமையும் உள்ளதாக ஆக்கக் கோட்டையின் முகப்பைப் பலப்படுத்திக் கட்டியவர் அப்பகுதியின் வட்டார அலுவலராக இருந்த ஹூசைனி என்பவர்.{{nop}} {{dhr|10em}}<noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> c6tb7i7mfwenhxczjogd4a3jfanlisv பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/159 250 489140 1839347 1839219 2025-07-05T12:53:10Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|158 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>85. திருவரம்பூர் பள்ளிவாசல் ஓலைச்சுவடி</b><ref>படித்தவர் செ. இராசு</ref>}}}} 21.10.1880 அன்று எழுதப்பட்ட ஓலை ஆவணம். ஐந்து ரூபாய் மதிப்புடைய முத்திரை ஓலையில் எழுதியுள்ளது. திருவறம்பூர் கிராமம் வருஷை ராவுத்தர் மகன் பாவா நத்தரு ராவுத்தர் தனக்குச் சொந்தமான 500 ரூபாய் பெறுமானமுள்ள இரண்டு இடங்களில் உள்ள மூன்று ஏக்கர் 76 சென்டு நிலத்தில் கலத்து ஊழியத்துக்கு சேகுமுத்த லெப்பைக்கு அளிக்கப்பட்ட 30 சென்டு போக மீதி 3 ஏக்கர் 46 சென்டு நன்செய் நிலத்தைத் திருவறம்பூர் மஜீத் பள்ளிவாசலுக்கு கொடையாக அளித்தார். அதன் வருவாயைக் கொண்டு மஜீத் பள்ளி வாசலில் நாள்தோறும் விளக்கு வைக்க வேண்டும் என்றும், குதுபா ரம்ஜான் நோன்பு முப்பது நாட்கள் செலவிட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். மீதிப் பணம் இருந்தால் மஜீத் பள்ளிவாசலின் மராமத்துச் செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இந்தக் கொடைக்கு இசுலாமியர் பலர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர். குருசாமி அய்யர், வெங்கடாசலமய்யர், அருணாசலம்பிள்ளை மகன் வைத்தியலிங்கம் பிள்ளை, ராம பிள்ளை மகன் அருணாசலம்பிள்ளை, முத்துக் கருப்பு கண்டியன் மகன் ஆறுமுக கண்டியன் ஆகியோரும் சாட்சிக் கையொப்ப மிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மைதீன்சா என்பவர் ‘நாட்டாமை’யாக இருந்துள்ளார். இந்த ஓலையில் எழுதியவர் சய்யது அசன் என்பவர். <b>ஓலைச் சுவடி</b> <poem>1. 1880 வருடம் அக்டோபர் மாதம் 21 தேதி திருச்சிறாப்பள்ளி தாலுக்கா திருவறம்பூர் கிறாமத்தி 2. லிருக்கும் வருஷை றாவுத்தன் குமாறன் துலுக்க ஜாதி அனுபி மதம் விவசாயம் 3. அந்தஸ்துள்ள பாவா நத்தரு றாவுத்தராகிய நான் சரீர சுகத்துடனும் ஒருவருடைய 4. கட்டாயமன்னிலும் அடியில்க் கண்ட மஜீது பள்ளிவாசலுக்கு யெழுதி 5. வைத்த தான சாசனம், யென்னவென்றால் யெனக்கு சொந்தமான திருச்சி 6. றாப்பள்ளி டிஸ்திரிக்கட்டு திருச்சிறாப்பள்ளி தாலுக்கா மேல்படி டிஸ்திரிக்கட்டுது</poem><noinclude>{{rule}} {{Reflist}}</noinclude> jjo56u638ipr5bjdbbk0xfzj71m2jmd பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/160 250 489141 1839350 1839220 2025-07-05T12:56:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 159}} {{rule}}</noinclude><poem>7. வாகுடி மாகாணத்தை சேர்ந்த மேல்படி திருவறம்பூர் கிராமத்தில் ரூ 500 பொருமான 8. சர்வை 131 நெம்பர் கரையவெட்டி நன்செய் யேக்கர் 3 டி 17, 127 நெம்பர் நன்செய் டி 59 ஆக யேக்கர் 9. 3 டி 76 இந்த நிலத்தில் யென்னால் சேகு முத்த லெப்பைக்கு கலத்து வூளி 10. யித்துக்காக விடப்பட்டிருக்குற மேல்க்கண்ட 131 நெம்பர் கலயில் தஞ்சாவூர் றோ 11. ட்டுக்கு தெர்க்கு. றாமசுவாமியின் கணபதி செய்க்கு வடக்கு வைத்திலிங்கம் பி 12. ள்ளை நொச்சியலடிக்கு கிளக்கு. தண்ணிபந்தலுக்கு மேர்க்கு இதர்க்கு 13. ளிப்பட்ட நன்செய் டி 30 போக பாக்கி யேக்கர் 3 டி 46 இந்த நன்செய் நிலத்தை மேற்படி திரு 14. வறம்பூர் கிராமத்தில் யென்னால் சன்னதி குளத்துக்கு போகுறபாதைக்கி கி 15. ளக்கு முத்துவய்யர் கொல்லைக்கும் மேர்க்கு வுசேன் ராவுத்தன் கொ 16. ல்லைக்கு தெர்க்கு சின்ன அக்கறாறத்து வீதிக்கு வடக்கு இதர்க்குள்பட்ட 17. புன்செய் நிலத்தில் கட்டப்பட்டிருக்கிற மேல்படி மஜீதின் பள்ளிவாசலில் தர்ம சிலவுக்காக 18. மேல்படி பள்ளிவாசல் பேறால் நான் சர்வ வில்லங்க சுத்தியாய் தானம் 19. செய்து குடுத்துவிட்டபடியால் மேல்படி நன்செய் நிலத்தில் நாளது தேதி முதல் வருஷாவருஷம் 20. வறப்பட்ட வருமானத்தை கொண்டு மேற்படி பள்ளிவாசலில் நித்ய வெ 21. னக்கு கதிப்பும் வசிளசாடுக மேற்படி வகையரா சாதிலவாரிது சிலவும் பின்னும் 22. வருஷம 1க்கு வரப்பட்ட இத்தொண்டு குதுபா றம்ஜான் மாசம் யெங்கிற 23. 30 நோம்பு இந்த வகையறாவின் சிலவும் நானுள்ளவரையில் நானே 24. மானேஜறாயிருந்து நடுத்திக் கொண்டு வருகிறதும் தவிற யெனக்குப் 25. பிற்க்காலம் யென்புத்திர பவுத்திற பாறம்பரையாயி யெண்ணெண்ணைக்கும் 26. டத்திவறவேண்டியது. ஒருவேளை அவர்களால் நடத்த அட்டி சம்ப 27. வித்தால் ஒடனே அவர்களை நீக்கி திருச்சிறாப்பள்ளி கோட்டையில் 28. ருக்கம் ஒரைவின் முரையார் யாருக்க மேற்படி தர்மம் நடத்த நேமுகம் செய்</poem><noinclude></noinclude> 4t3j5rkfwhy7zrv8n6o5nha23p6tjlj பயனர்:மொஹமது கராம் 2 539999 1839399 1836459 2025-07-05T15:29:51Z Booradleyp1 1964 /* திட்டங்கள் */ 1839399 wikitext text/x-wiki எனது பெயர் மொஹமது கராமத்துல்லா. ==திட்டங்கள்== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #<s>[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf]]</s> #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] #[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]] #[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]] ==ஹர்ஷியா== #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]] #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]] exli6pqf9u760ynmfbkw7ih1j6wdbhd பக்கம்:ஓ மாம்பழமே.pdf/9 250 580677 1839371 1839252 2025-07-05T13:13:58Z LavanyaMohan vglug 14860 1839371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|ஓ ! மாம்பழமே!||5}}{{rule}}</noinclude> தென்று பாராட்டி எழுதின. பின்னால், ராதாமியர் பிரபுவின் கட்டுரை வெளியானபோது தேசீயப் பத்திரிகைகளுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அவை, இனிமேல் ஒரு மாம்பழங்கூட இந்தியாவை விட்டுப் போகாமல் தீவிர பிரசாரம் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தின. அந்த மாதம் வெளியான 'கலைமகள்' பத்திரிகையில் 'மாம்பழக் கவிராய 'ரைப்பற்றி ஒரு கட்டுரையும். 'கலா நிலயம்' பத்திரிகையில் "முக்கனியில் மாங்கனி சேர்ந்த்தா?" என்பதைப்பற்றி ஓர் ஆராய்ச்சியும் வெளியாயின. ஸ்ரீமதி 'காசினி' அம்மாள் மாதர் பக்கத்தில் மாங்காய் ஊறுகாய்களைப்பற்றி நாக்கில் ஜலம் ஊறும்படி எழுதியிருந்தார். 'மாம்பழங்களுக்கே இந்தப் பாடுபடுகிறார்களே! வடுமாங்காயின் ருசியை பார்த்துவிட்டால் என்னதான் சொல்வார்களோ? என்று 'விகடன்' ஹாஸ்யரசத்துடன் எழுதினான். பிரிட்டிஷ் மக்களை இந்திய மாம்பழங்கள் அதிகமாகச் சாப்பிடும்படி தூண்டி இந்தியாவினிடம் சிநேகப்பான் மையை வளர்ப்பதற்காக ஒரு தூதுக் கூட்டத்தை அனுப்ப வேண்டுமென்று மிதவாதப் பிரமுகர்கள் கூறினார்கள். திடீரென்று இந்தப் பிரச்னையில் வகுப்புவாத வாசனை வீசலாயிற்று. மேன்மை தங்கிய ஆகாகான் சாகிப் லண்டனிலிருந்து, "இந்த நெருக்கடியான சமயத்தில் எனது முஸ்லிம் சகோதரர்கள் ஒற்றுமையைக் கடைப்பிடிப்பார்களென்றும், அதே சமயம் ஹிந்துக்களிடம் நேசப்பான்மையுடன் இருப்பார்களென்றும் நம்புகிறேன்' என்று ஒரு செய்தி அனுப்பினார். மெளலானா ஷவுகத் அலி சாகிப் அவர்கள் கிலாபத் கமிட்டியைப் புனருத்தாரணம் செய்து, முஸ்லிம் தொண்டர் படை திரட்டுவதின் அவசியத்தை வற்புறுத்தினார். "இந்தியாவில் பழுக்கும் மாம்பழங்களில் 100க்கு 40 வீதம் எங்களுக்குக் கொடுத்தாலன்றி, இந்த ஹிந்துக்கள் சுயராஜ்யம் அடைவதைப் பார்த்துவிடுகிறேன்" என்று கர்ஜித்தார் டாக்டர் ஷாபத் ஆமத்கான்.<noinclude></noinclude> hn5i6zvwcwfb96bf3n6mbk6moayjgdn 1839393 1839371 2025-07-05T14:55:39Z LavanyaMohan vglug 14860 1839393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|ஓ ! மாம்பழமே!||5}}{{rule}}</noinclude> தென்று பாராட்டி எழுதின. பின்னால், ராதாமியர் பிரபுவின் கட்டுரை வெளியானபோது தேசீயப் பத்திரிகைகளுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அவை, இனிமேல் ஒரு மாம்பழங்கூட இந்தியாவை விட்டுப் போகாமல் தீவிர பிரசாரம் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தின. அந்த மாதம் வெளியான 'கலைமகள்' பத்திரிகையில் 'மாம்பழக் கவிராய 'ரைப்பற்றி ஒரு கட்டுரையும். 'கலா நிலயம்' பத்திரிகையில் "முக்கனியில் மாங்கனி சேர்ந்த்தா?" என்பதைப்பற்றி ஓர் ஆராய்ச்சியும் வெளியாயின. ஸ்ரீமதி 'காசினி' அம்மாள் மாதர் பக்கத்தில் மாங்காய் ஊறுகாய்களைப்பற்றி நாக்கில் ஜலம் ஊறும்படி எழுதியிருந்தார். மாம்பழங்களுக்கே இந்தப் பாடுபடுகிறார்களே! வடுமாங்காயின் ருசியை பார்த்துவிட்டால் என்னதான் சொல்வார்களோ? என்று 'விகடன்' ஹாஸ்யரசத்துடன் எழுதினான். பிரிட்டிஷ் மக்களை இந்திய மாம்பழங்கள் அதிகமாகச் சாப்பிடும்படி தூண்டி இந்தியாவினிடம் சிநேகப்பான் மையை வளர்ப்பதற்காக ஒரு தூதுக் கூட்டத்தை அனுப்ப வேண்டுமென்று மிதவாதப் பிரமுகர்கள் கூறினார்கள். திடீரென்று இந்தப் பிரச்னையில் வகுப்புவாத வாசனை வீசலாயிற்று. மேன்மை தங்கிய ஆகாகான் சாகிப் லண்டனிலிருந்து, "இந்த நெருக்கடியான சமயத்தில் எனது முஸ்லிம் சகோதரர்கள் ஒற்றுமையைக் கடைப்பிடிப்பார்களென்றும், அதே சமயம் ஹிந்துக்களிடம் நேசப்பான்மையுடன் இருப்பார்களென்றும் நம்புகிறேன்' என்று ஒரு செய்தி அனுப்பினார். மெளலானா ஷவுகத் அலி சாகிப் அவர்கள் கிலாபத் கமிட்டியைப் புனருத்தாரணம் செய்து, முஸ்லிம் தொண்டர் படை திரட்டுவதின் அவசியத்தை வற்புறுத்தினார். "இந்தியாவில் பழுக்கும் மாம்பழங்களில் 100க்கு 40 வீதம் எங்களுக்குக் கொடுத்தாலன்றி, இந்த ஹிந்துக்கள் சுயராஜ்யம் அடைவதைப் பார்த்துவிடுகிறேன்" என்று கர்ஜித்தார் டாக்டர் ஷாபத் ஆமத்கான்.<noinclude></noinclude> 56jd1a1wd3rf1bguozppwezxpzgv4jq பக்கம்:ஓ மாம்பழமே.pdf/11 250 580678 1839335 1720735 2025-07-05T12:43:46Z LavanyaMohan vglug 14860 1839335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|ஓ! மாம்பழமே!||7}}{{rule}}</noinclude> வது சுத்த அபத்தமென்று நிரூபித்து 'ஹிந்து' பத்திரிகையில் மூன்று பத்தி எழுதினார். வங்காளத்தில் ஒரு விஞ்ஞானப் புலவர் கிளம்பி,ஸர் சி.வி. ராமன் சொன்னதைத் தாம் மூன்று வருஷத்துக்கு முன் சொன்னதாகவும், தம்மை அவர் காப்பியடித்துவிட்டதாகவும் முறையிட்டார். 'மாடர்ன் ரிவியூ' அவர் கட்சியை ஏற்று, ஸர் சி.வி. ராமனுடைய யோக்கியதையை வெளிப்படுத்த ஆரம்பித்தது! கவி ரவீந்திரநாத தாகூர் அவர்களிடம் இந்த விவாதத்தைப்பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டபோது அவர், "ஓ மாங்கனியே ! நீ நாவிற்கு எவ்வளவு இனிப்பா யிருக்கிறாய்? ஆயினும் உன்னுடைய பெயரால் உலகில் எவ்வளவு அநீதிகள் இழைக்கப்படுகின்றன!" என்று தெரிவித்தார். டேராடூன் சிறைச்சாலைக்குள்ளிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டதாக ஒரு வதந்தி பரவியது. அந்தக் குரல், "மாம்பழம் யாருக்குச் சொந்தம்? மாமரம் வைத்துப்பயிராக்கித் தண்ணீர் ஊற்றி வளர்த்தவனுக்கல்லவா ? அவன் சும்மா இருக்க, இவர்கள் அடித்துக்கொள்கிறார்களே! அடா! இதென்ன அநியாய உலகம்?" என்று சொல்லிற்றாம். சேலம் ஒட்டு மாம்பழ வியாபாரிகள் பத்திரிகைகளின் முதல் பக்கங்களில் பெரிய பெரிய விளம்பரங்கள் செய்தார்கள். அவர்களில் கெட்டிக்காரரான ஒருவர் அச் சமயம் டெல்லியில் தங்கியிருந்த மகாத்மா காந்தியின் பெயருக்கு ஒரு கூடை ஒட்டு மாம்பழம் ரயில் பார்ஸலில் அனுப்பினார். மாம்பழக்கூடையைக் 'கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரஸ்' வேகமாய்க் கொண்டு சேர்த்தது. இரண்டு நாளைக்கெல்லாம் "மகாத்மா ஏழுநாள் உபவாச விரதம் தொடங்கி யிருக்கிறார்" என்னும் பயங்கரமான செய்தி தேசமெங்கும் பரவியது. விசாரித்ததில், மகாத்மா சேலம் ஒட்டு மாம்பழம் ஒன்றின் ரஸத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் ருசியைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும், இவ்வாறு நாவின் ருசிக்கு இடங்<noinclude></noinclude> 3r2ubij8kqwbf1h51yp1fmhbyrbsggz பக்கம்:ஓ மாம்பழமே.pdf/10 250 580679 1839325 1720736 2025-07-05T12:36:40Z LavanyaMohan vglug 14860 1839325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|6||ஓ! மாம்பழமே!}}{{rule}}</noinclude> இதைக் கேட்ட டாக்டர் மூஞ்சி அவர்கள் தாடியை ஒரு கையால் உருவிக்கொண்டு மற்றொரு கையால் கைப் பிரம்பைச் சுழற்றினார் என்றும் முஸ்லிம் பத்திரிகைகள் வெளியிட்டன. ஆதித் திராவிட சமூகத்திலும் கிளர்ச்சி உண்டாயிற்று. டாக்டர் அம்பேத்கரும், எம்.சி. ராஜாவும் ஒருவர் வாய் திறப்பதை இன்னொருவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். முதலில் பேசுகிறவர் எது சொன்னாலும், அதற்கு எதிராக மற்றொருவர் பேசுவதென்று அவர்கள் தீர்மானித்திருந்தனர். அவர்களுடைய சிஷ்யகோடிகள் அதிருப்தியுற்று, "கொண்டு வா மாம்பழம்!" என்று கூச்சலிட்டார்கள். டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் முன்வந்து, எல்லா விஷயங்களிலும் போல இதிலும் ஸ்திரீகள் அலட்சியம் செய்யப்படுவதைக் கண்டித்தார். விசேஷ மாதர் மகாநாடு ஒன்று கூட்டி அதில், "ஸ்திரீகள் என்றால் என்ன? அவர்களுக்கு வாய் கிடையாதா? ருசி கிடையாதா? மாம்பழம் சாப்பிட முடியாதா?" என்று உருக்கமாகப் பேசி, தாமே ஒரு பழத்தைப் பிரத்தியட்சமாய்ச் சாப்பிட்டுக் காட்டினார். பண்டித மதன்மோகன் மாளவியா பத்திரிகைகளுக்கு ஒரு நீண்ட அறிக்கை விடுத்தார். பிரம்மா ஜகத்தைச் சிருஷ்டி செய்ததிலிருந்து தொடங்கி மாம்பழம் இந்தியாவுக்கே உரியது என்று ஸ்தாபித்தார். கிழக்கிந்தியக் கம்பெனியார் வந்ததிலிருந்து, சீமைக்குச் சென்றிருக்கும் இந்தியாவின் செல்வங்களுக்கெல்லாம் ஜாப்தா கொடுத்து, மாம்பழத்தையும் அவ்வாறு போகவிடக்கூடாதென்றும், அதற்காகத் தமது உயிரை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராயிருப்பதாகவும் கூறினார். விஞ்ஞான மேதாவியாகிய ஸர் சி.வி.ராமன் ஒரு சர்வகலாசாலைப் பிரசங்கத்தில் இதைப்பற்றிக் குறிப்பிட்டு, "ஆகையால் மாணாக்கர்களே! புத்தகங்களை வீசி எறிந்து விட்டு மாம்பழம் சாப்பிடுங்கள்" என்று கூறினார். டாக்டர் நாகராஜ சர்மா, ஸர் சி.வி. ராமன் சொல்<noinclude></noinclude> 7xyifrzb9v7aumkv7ct3rjvk8vw1nry பக்கம்:ஓ மாம்பழமே.pdf/12 250 580680 1839339 1720737 2025-07-05T12:46:22Z LavanyaMohan vglug 14860 1839339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|8||ஓ! மாம்பழமே !}}{{rule}}</noinclude> கொடுத்துவிட்டது தவறு என்று பின்னால் உணர்ந்து பிராயச்சித்த உபவாசம் தொடங்கியிருப்பதாகவும் தெரியவந்தன "உலகப் பெரியாரையே மயக்கி உபவாசம் இருக்கச் செய்த ஒப்பற்ற ஒட்டு மாப்பழம்' என்று எங்கெங்கும் விவம்பரங்கள் காணப்பட்டன. நிற்க. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் வேண்டுகோளின்படி தேசத்தின் நானாபாகங்களிலிருந்தும் மகாத்மாவுக்குத் தந்திகள் பறந்தன. "மாம்பழம் சாப்பிட நாங்கள் இருக்கிறோம். தாங்கள் கவலைப்படவேண்டாம். உபவாசத்தை நிறுத்தவும்" என்று இந்திய மக்கள் ஒரு முகமாய் மகாத்மாவை வேண்டிக்கொண்டார்கள். இப்படி வேண்டிக்கொண்டவர்களில் நானும் ஒருவனாதலால், இதோ ஒரு மாம்பழத்தைச் சாப்பிட்டுத் தொலைக்கிறேன்.<noinclude></noinclude> px0hdnjs8aporbpe50myund1bwto4t4 பக்கம்:ஓ மாம்பழமே.pdf/13 250 580681 1839368 1720738 2025-07-05T13:09:07Z LavanyaMohan vglug 14860 1839368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{right|<b>நோயற்ற வாழ்வு</b>}} இந்தக் கட்டுரையின் தலைப்பு வெகு அழகாயமைந் திருக்கிறதல்லவா? ஆனால் உள்ளுறை என்னவோ அவ்வளவு நன்றாயிராது. சந்தேகம் இருந்தால் படித்துப் பார்த்து விடுங்கள். மேற்படி கட்டுரைத் தலைப்பைப் பார்த்ததும், ஏ முதல் இ வரையில் உள்ள விடமின்களைப்பற்றியோ, எனிமா உபயோக தத்துவத்தைப்பற்றியோ, சீர்ஷாசனத்தின் (தலை கீழாய் நிற்பதின்) பெருமையைப்பற்றியோ, சுத்த உபவாசத்தின் சிறப்பைப்பற்றியோ, எழுதப் போகிறேனென்று நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். சுருங்கச் சொல்லின். நோயற்ற வாழ்வுக்கு வழி காட்டுவேனென்று எண்ணுவீர்கள். அதுதான் கிடையாது. மேற்படி விஷயம் எதையும் நான் தொடப் போவதில்லை. பின்னர் என்ன எழுதப்போகிறேனென்று கேட்டால். நோயற்ற வாழ்வு உண்மையில் அவசியந்தானா என்பதைப் பற்றித்தான். நோயற்ற வாழ்வில் அவ்வளவு மேன்மை என்ன இருக்கிறது? நான்தான் கேட்கிறேன். ஆம்; நோயற்ற வாழ்வு, உண்மையில் மிகவும் சாரமற்ற வாழ்வாயிருக்குமென்று எனக்குத் தோன்றுகிறது. அன்பில்லா உலகம் வெறும் பாலைவனமே யாகுமென்று வேத சாஸ்திர புராணங்கள் கதறுகின்றன. கெளதம புத்தர் முதல் மகாத்மா காந்தி வரையில் உபதேசித்ததும், உபதே சிப்பதும் அன்பு - அன்பேயாகும். ஆகையால், வேண்டுவது அன்பு. ஆனால், இருதயப் பெட்டியில் வைத்துப் பூட்டப் பெற்றிருக்கும் அன்பினால் என்ன பயன்? ஒன்றுமில்லை. அது பூதங்காத்த புதையலைப் போலவேயாகும். அன்பு பயன் படவேண்டுமானால் அதை இருதயத்திலிருந்து வெளிக்<noinclude></noinclude> 8g8iptpwt096gdi9wbarkr0n6x2vt8v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/182 250 617702 1839403 1826365 2025-07-06T03:08:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுத்திவர்மன்|146|அசுதெக்கு}}</noinclude>அனந்தராமையர் விளக்கிக் கூறியுள்ளார். அசுணம் பற்றிய இவ்வியல்புகள், நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, நான்மணிக்கடிகை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, கம்பராமாயணம், கூர்மபுராணம், காஞ்சிப்புராணம், பாகவதம் முதலிய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்விலக்கியங்களில் அசுணம் இன்னோசை கேட்டு இன்புறுவதும், வல்லோசை கேட்டுத் துன்புறுவதும் ஆகிய பண்பே, பெரும்பாலும் உவமை வாயிலாகவும் பிற வாயிலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பிடிக்க விரும்புவோர், இது வாழும் காட்டகத்தே சென்று, முதலில் இனிய யாழிசையை இசைப்பர். அதன் இசையில் மயங்கி நிற்கும் நிலையில் வலிய பறையினை முழக்குவர். அவ்வல்லோசையால் துன்புற்று விழும்போது பிடித்துக் கொள்வர். வண்டுகள் மலைச்சாரலில் இமிர்கின்ற இன்னொலியினை அசுணம் யாழோசை எனக் கேட்டின்புறும் செய்தியினை நற்றிணையும் (244) அகநானூறும் (88) கூறுகின்றன. தலைவிக்கு இன்பமும் துன்பமும் உண்டாக்கும் தலைவன் மார்பினுக்கு, இனிய ஒலியையும் வலிய ஒலியையும் அடுத்தடுத்து உண்டாக்கி அசுணத்தைக் கொல்பவர்களின் கை உவமையாகக் கூறப்பட்டுள்ளது (நற்.304). தான் இசைக்கும் யாழோசையைக் கேட்டு இன்புற்றிருக்கும் அசுணத்தின் இன்னுயிர் நீங்குமாறு, அதனைப் பிடிப்போர் பறை முழக்கும் செய்தி கலித்தொகையில் (143) இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களிலேயன்றிச் சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற நூல்களிலும் குறிப்பிடப்படும் அசுணம் இக்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இது காலத்தால் அழிந்துபட்ட உயிரினங்களுள் ஒன்றாகும். இன்னிசையால் மகிழ்ந்தின்புற்றநிலையில் எழுப்பப்படும் வல்லோசை கேட்டுத் துன்புற்று உயிர்விடும் இந்த இயல்பே, சங்க காலத்தில் உவமையாகக் கூறிவிளக்கும் அளவு மக்களால் அறியப் பெற்றிருந்த இந்த உயிரினம், பின்னர் முற்றிலும் அழிந்து போனதற்குக் காரணமாதல் கூடும். {{larger|<b>அசுத்திவர்மன்</b>}} என்னும் அரசன் சாலங்காயன மரபினைச் சார்ந்தவன். இவன் பெத்தவேங்கியிலிருந்து அரசாண்டான். இவ்வூர் ஆந்திரப் பிரதேசத்தில் எல்லூருக்கு 10 கி.மீ. தொலைவிலுள்ளது. குப்த மரபினைச் சார்ந்த சமுத்திர குப்தர் தென்ளாட்டின் மீது படையெடுத்தபோது கோதாவரி ஆற்றிற்கும் கிருட்டிணா ஆற்றிற்கும் இடையிலிருந்து வேங்கியை அசுத்திவர்மன் ஆண்டு வந்தான் என்பதை, அரிசேனர் என்னும் கவிஞர் மெய்க்கீர்த்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இம்மெய்க்கீர்த்தி அசோகரின் அலகாபாத்துக் கற்றூணில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டிலேயே அவன் சாலங்காயன மரபினன் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமுத்திர குப்தர் அசுத்திவர்மனை வென்று கப்பம் கட்டுமாறு பணித்துப் பின் விடுதலையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. {{larger|<b>அசுத்திரியாசு</b>}} என்பது வடமேற்கு இசுபெயினிலுள்ள (Spain) ஒரு பகுதி. இப்பகுதியில் ஒவிடோ என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இங்கே பழத்தோட்டங்கள் மிகுதி. நிலக்கரி, யூக்கலிப்டசு, பீச்சு (Beech) மரங்கள், ஆடு மாடுகள் போன்றவற்றிற்குப் பெயர் பெற்றது அசுத்திரியாசு (Astirias). பரப்பளவு–10,565 ச.கி.மீ. மக்கள் தொகை 1,127,007 (1981). {{larger|<b>அசுதெக்கு</b>}} வட அமெரிக்கக் கண்டத்தின் மெக்சிகோப் பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு செவ்விந்திய மரபு. அசுதெக்குகள் நாடோடிகனாக, கி.பி. 12–ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்தார்கள். கி.பி. 1248–ஆம் ஆண்டு மெக்சிகோவின் வளமிக்க பகுதிக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அங்கிருந்த பிறிதொகு பழங்குடியின் கூலிப்படையினராய்ச் சேர்ந்த அசுதெக்குகள் (Aztecs) பின்னர் நன்கு தேர்ச்சிபெற்ற வீரர்களாகித் தங்களது வல்லமையை நிலை நாட்டினார்கள். கி.பி. 1345 – ஆம் ஆண்டு தெக்சுகோகோ (Texcoco) ஏரிக்கரையினைச் சுற்றி இருந்த சதுப்பு நிலங்களை அழித்து ஒரு புதிய நகரினை உருவாக்கினார்கள். அந்நகரினைச் சுற்றி நாணல் வேலிகளை அமைத்தார்கள். தெனோசிடிட்லான் (Tenochtitlan) என்று அந்நகரம் பெயர்பெற்றது. அக்காலத்தில் மெக்சிகோ பகுதியில் சிறப்பான ஐந்து நகரங்கள் அமைந்திருந்தன. அவற்றுள் தெனோசிடிட்லான் அசுதெக்கு அரசின் தலைநகரமாக விளங்கிற்று. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 182 |bSize = 480 |cWidth = 120 |cHeight = 155 |oTop = 365 |oLeft = 296 |Location = center |Description = }} {{center|அசுதெக்குப் பேரரசு}} அசுதெக்குகளின் அரசியல் தலைவர் அரசா எனப்பட்டார். மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொண்டார்.<noinclude></noinclude> 70qm6bg22vouenjkgxe3jd3ih5q5rlo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/183 250 617707 1839404 1835003 2025-07-06T03:12:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுதெக்கு|147|அசுதெக்கு}}</noinclude>பல்வேறு அரண்மனைகளையும் ஏறக்குறைய 2000 பணியாட்களையும் அவர் கொண்டிருந்தார். பல அதிகாரங்களைத் தம் விருப்பம் போல் பெற்றிருந்தும், அரசர் தாமே செயற்படும் உரிமையினை இழந்திருந்தார். அரசரைத் தேர்ந்தெடுக்கவும் கருத்துரை வழங்கவும் அவருக்கு உதவியாக மேலாண்மை மன்றம் ஒன்று இருந்தது. இராணுவ அமைப்பு அசுதெக்கு அரசின் பிறிதொரு சிறப்பு ஆகும். பெருங்குடி மக்கள் பலர் இராணுவத் தலைவர்களாகவும் ஆளுநர்களாகவும் பணியாற்றினர். பெருங்குடி மக்கள், பொதுமக்கள், ஊழியர்கள், அடிமைகள் என நான்கு பிரிவுகளாக அசுதெக்குகள் பிரிந்திருந்தார்கள். பெருங்குடிமக்களும் பொது மக்களும் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள். பெருங்குடி மக்களின் நிலங்களில் வேலை செய்வோர் ஊழியர் எனப்பட்டனர். போர்க் கைதிகளாக வந்தோர் அடிமைகள் எனப்பட்டனர். அடிமைகள் உடைமைகளாகக் கருதப்பட்டார்கள். அசுதெக்குகள் தம்முடைய ஆண் குழந்தைகளுக்கு 15 வயது வரை வீட்டில் கல்வி கற்றுக் கொடுத்தார்கள். அதன் பின்னர், அவர்களுக்குப் படைக்கலப் பயிற்சியோ சமயம் பற்றிய கருத்துகளோ கற்றுத் தரப்பட்டன. பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே கவனித்து வந்தார்கள். ஆண்களே குடும்பத் தலைவர்களாயிருந்தார்கள். பலதார மணம் பெருங்குடி மக்களிடம் நிலவி வந்தது. மணவிலக்குச் செய்தல், மறுமணம் செய்தல் போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கங்களாம். பருத்தி ஆடைகளையே உயர் வகுப்பினர் அணிந்தனர். ஏழைகள் நாரினால் செய்யப்பட்ட ஆடைகளை உடுத்தினர். பெண்டிர் கைகளில்லா மேல்சட்டையையும் பாவாடையையும் உடுத்தினர். உயர்ந்த வகுப்பினர் பல அணிகலன்களை அணிந்து வாழ்ந்தனர். நாணல் தட்டிகளால் ஆன குடிசைகளில் அசுதெக்குகள் வாழ்ந்தனர். உயர் வகுப்பினர் கல் வீடுகளில் வசித்து வந்தனர். சாம்பல் அல்லது சிவந்த மஞ்சள் நிறமுடைய மட்பாண்டங்களை இவர்கள் பயன்படுத்தினார்கள். அசுதெக்குகள் தங்கள் பொழுதைச் சமய விழாக்களில் கழித்தார்கள். இயற்கையை வழிபட்ட இவர்களின் முதன்மைத் தெய்வம் சூரியன், கடவுளுக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் இவர்களிடம் மிகுந்த அளவில் காணப்பட்டது. இரண்டாம் மொன்ட்சுமா அரசர் (Montezuma) காலத்தில் ஏறக் குறைய 20,000 அடிமைகள் நரபலியிடப்பட்டனர். சமய குருமார் பெரிதும் மதிக்கப்பட்டனர். விதியை நம்பிய இம்மக்கள், போரிட்டு, அடிமைகளைக் கொண்டு வந்து நரபலி இடுவதே இறைவனுக்குத் தாம் செய்யும் தொண்டு எனக் கருதினர். அசுதெக்குகளின் ஆண்டுக் குறிப்பேடு 52 ஆண்டுகளைக் கொண்டது. அவரை, மிளகு, மக்காச்சோளம், புகையிலை, தக்காளி போன்றவை இவர்கள் உற்பத்தி செய்த வேளாண்மைப் பொருள்களாகும். அசுதெக்குகள் உழவுக் கருவிகளைக் கற்களினாலேயே செய்தார்கள். நாணய முறை பற்றி இவர்கள் அறியமாட்டார்கள். பொருள்கள் பண்டமாற்று முறையில் பெறப்பட்டன. நகரங்களில் அடிக்கடி சந்தைகளைக் கூட்டினர். தெலாடிலோல்கா (Tlatelolco) என்னும் இடத்தில் மிகப் பெரிய சந்தையொன்று நடந்தது. ஏறக் குறைய 60,000 மக்கள் இச்சந்தையில் கூடுவர். அசுதெக்குகள் குதிரைகளின் பயன்களை அறியவில்லை. கால்நடையாகவும் நீர்வழியாகவும் இவர்கள் ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்குச் சென்றார்கள். இவர்களின் மொழி செவ்விந்திய மொழிகளுள் ஒன்றாகும். நாகுதல் (Nahutal) அல்லது அசுதெக் டானோன் (Aztec - Tanoan) என இம்மொழி குறிக்கப்பட்டது. சித்திர வடிவ எழுத்து முறையை இவர்கள் அறிந்திருந்தார்கள். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 183 |bSize = 480 |cWidth = 180 |cHeight = 196 |oTop = 290 |oLeft = 250 |Location = center |Description = }} {{center|அசுதெக்கு ஆண்டுக் குறிப்பேடு}} அசுதெக்குகளின் கலைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு கல்லினால் செய்யப்பட்ட வட்டவடிவமான ஆண்டுக் குறிப்பேடாகும். இந்தக்கல், மிகுந்த வேலைப்பாடுடன் சூரியக் கடவுளின் முக அமைப்பை நடுவில் பெற்று அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லின் குறுக்களவு 3.7மீ. அசுதெக்குகளின் வாய் மொழி<noinclude></noinclude> n6zsax1rmo7p3stsuyitfulf7rczw7b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/184 250 617710 1839405 1826374 2025-07-06T03:21:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுநானதாசு|148|அசுவகோசர்}}</noinclude>இலக்கியங்கள் செய்யுள்களையும் மரபுக் கதைகளையும் கொண்டுள்ளன. இசைக் கருவிகளை இயக்குவதிலும் இவர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தார்கள்.{{float_right|கே.இரா.}} {{larger|<b>அசுநான்தாசு</b>}} மராத்திய நாட்டுக் கவிஞருள் ஒருவர். அப்சல்கானுக்கும் சிவாசிக்கும் நடந்த போரில் அப்சல்கான் கொல்லப்பட்டார். அவ்வரலாற்று நிகழ்ச்சியை நாட்டுப் பாடலாகப் பாடியவர் அசுநான்தாசு என்ற கவிஞர், இக்கவிஞரைப் புனேயிலிருந்து பிரதாப்கர் கோட்டைக்குச் சிவாசியின் தாயார் சீசாபாய்தான் அனுப்பி வைத்தார். நாட்டுப் பாடலைப் புனைந்து பாடிக் காட்டியவரும் அசுநான்தாசே ஆவார். அந்நாட்களில் அப்சல்கான் கொலையுண்ட நிகழ்ச்சியை வெளியிட வாய்ப்புகள் இல்லை. நாட்டுப் பாடல் மூலம்தான் அதனை வெளியிட முடியும். அசுநான்தாசின் பாடல்களைச் செவிமடுத்த சீசாபாயும் சிவாசியும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். சிவாசி அதற்குப் பரிசாக ஒரு கிலோ தங்கத்தையும் குதிரையொன்றையும் கொடுத்தார். இப்பாடல்கள் கேட்போரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும். இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் சான்றுகள் இப்பாடல்களைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பாடலாசிரியர் இக்கவிதைகளில் ‘சத்திரபதி’ ‘மகராசன்’ என்னும் சொற்களால் சிவாசியை விளித்துள்ளார். இந்நாட்டுப் பாடலை அக்வொர்த்து என்பார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். {{larger|<b>அசுமாரா</b>}} எத்தியோப்பியாவில் உள்ள ஒரு தொழில் நகரம். எரிட்ரியா மாநிலத்தின் தலைநகரம். செங்கடலில் அமைந்துள்ள மிட்சிவா (Mitsiwa) என்னும் துறைமுக நகரிலிருந்து 105 கி.மீ. தொலைவில் உள்ளது. மிட்சிவாவுடன் இந்நகரம் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு அசுமாராப் பல்கலைக்கழகம் உள்ளது. மக்கள் தொகை 37,3,827 (1978). {{larger|<b>அசுமீர்</b>}} இராசசுத்தான் மாநிலத்தில் உள்ள நகரம். தில்லிக்குத் தென்மேற்கில் 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் ஒரு இருப்புப்பாதைச் சந்திப்பு. வேளாண்மைப் பகுதியின் மையமான இந்நகரம் வாணிகச் சிறப்புப் பெற்ற சந்தையினையுடையது. இராசபுத்திர மரபுகளில் ஒன்றான செளகன் மரபு அரசர்களின் தலைநகர் அசுமீர் (Ajmir). தில்லியில் அடிமை வமிசத்தை நிலை நாட்டிய குதுப்புதீன் அய்பெக்கு என்பார் கட்டிய மசூதியின் அழிவுச் சின்னத்தை இன்றும் இங்குக் காணலாம். 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட முகலாயப் பேரரசர்களின் விருப்பத்திற்குகந்த தலைமையிடமாக அசுமீர் கருதப்பெற்றது. இங்குப் பேரரசர் அக்பர் கட்டிய அரண்மனை இன்று அருங்காட்சியகமாகத் திகழ்கிறது. பேரரசர் சாசகான் காலத்தில் கட்டப்பெற்ற பளிங்கு மண்டபங்களை இந்திய அரசு கண்காணித்து வருகிறது. இங்கு காசா நசுமுத்தீன் சிசுத்தி (Khaja Najmuddin Chisthi) என்ற ஒரு இசுலாமிய முனிவரின் கல்லறை இருப்பதால், இது இசுலாமியருக்கு ஒரு புனிதத் தலமாகவும் இருக்கிறது. கி.பி. 1616–ஆம் ஆண்டில் இந்நகரில்தான் சகாங்கீர் கிழக்கிந்திய வணிகக்குழுவின் தூதரான சர்தாமசு ரோ (Sir Thomas Roe) என்பாரை முகலாய அரண்மனையில் வரவேற்றார். இந்நகரம் ஆங்கில ஆட்சியின்போது அசுமீர்–மீர்வாரா என்ற மாநிலத்தின் தலைநகராக இருந்தது. 1950-க்குப் பின்னர் இது அசுமீர் மாநிலமாயிற்று. இது, 1956–இல் இராசசுத்தான் மாநிலத்தில் இணைக்கப்பெற்றது. மக்கள் தொகை 3,74,350 (1981). {{larger|<b>அசுரர்</b>}} தேவர்களுக்கு மாறானவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களைப் பற்றி இருக்கு வேதம் நிருத்தம், சதபதபிராமணம் ஆகியவை கூறுகின்றன. தேவர்களுடன் ஒத்துநோக்கப்பட்ட இவர்கள் பிற்காலத்தில் கொடியவர்களாகக் கருதப்பட்டார்கள். சிற்பங்களில் இவர்கள் அழகற்ற முகங்களுடனும் கோரைப் பற்களுடனும் அச்சத்தை உண்டாக்கக் கூடிய விரிந்த கண்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளார்கள். பல்வேறு போர்க் கருவிகளுடனும் உடலில் பல அணிகலன்களுடனும் தலையில் முடியுடனும் காணப்படுகிறார்கள். {{larger|<b>அசுவகோசர்</b>}} பெருங்கவிஞர்; தத்துவ ஆசிரியர்; இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ள பேரறிஞர்களுள் ஒருவர். ஏனையோர் நாகார்சுனர், ஆரியதேவர், குமாரிலபட்டர். இந்நால்வருள் அசுவகோசரும் நாகார்சுனரும் ஒரே காலத்தவர்; கனிசுகர் என்னும் இந்தியப் பேரரசரால் புரக்கப் பெற்றவர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்த்தவர்கள். அசுவகோசர் ஒரு பௌத்த அறிஞர். பெளத்த சமயத்தின் ஒரு பிரிவான யோகாசார தத்துவத்தைப் பற்றி முதன் முதலாக எழுதப்பட்ட சிரத்தோத்பாத சூத்திரம் என்னும் நூலின் ஆசிரியர் இவரே யாவர். இவர் பிராகிருதம், வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லுநராய்த் திகழ்ந்தார். கனிசுகர் காலத்தில் பௌத்த மதத்தில் பெருவழி எனப் பொருள்படும் மகாயானம் என்ற ஒரு புதிய பிரிவு தோன்றியது. காசுமீரிலுள்ள குண்டலவன விகாரம் என்னும் பௌத்த மடத்தில் பெளத்த சபை ஒன்று கனிசுகரால் கூட்டப்பட்டது. வசுமித்-<noinclude></noinclude> dqbj3ea52a64ots6ifdqkzsp0i0p8ao பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/185 250 617714 1839406 1826387 2025-07-06T03:27:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுவகோசர்|149|அசுவகோசர்}}</noinclude>திரர் என்னும் பேரறிஞர் அதற்குத் தலைமை வகித்தார். அசுவகோசர் அதன் துணைத்தலைவராக இருந்து பணியாற்றினார். அசுவகோசரின் ஆழ்ந்த புலமையைச் செவியுற்ற கனிசுகர், தாம் கூட்டப் போகும் சபையில் அவர் பணியாற்ற வேண்டிய இன்றியமையாமையை உணர்ந்து, இவரைப் பாடலிபுரத்திலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து வந்தார். இவர் பௌத்த சபையின் முதுகெலும்பாய்த் திகழ்ந்தார். பௌத்த சமயம் பற்றிய கையெழுத்துப் படிகளை எல்லாம் சேகரித்து, அவைகளுக்குப் பேருரை எழுதி வழங்கினார். பௌத்த சமயம் பற்றிய பல்வேறு தத்துவங்களும் இச்சபையால் தொகுக்கப்பெற்றன. சர்வத்திவாதிகள் என்ற பிரிவினரின் கொள்கைகளை விளக்கும் அபிதம்ம பிடகம் என்னும் நூலின் எட்டுப் பிரிவுகளை இச்சபை தொகுத்தது. அவற்றை இலக்கிய நயம்பட எழுதித் தந்தவர் அசுவகோசரே. தொடக்க கால மகாயானக் கொள்கைகளைத் தெளிவாகப் புலப்படுத்தக்கூடிய மகாயான சிரத்தோத்பாதம் என்ற நூலை ஆக்கியவரும் இவரே. வச்சிசூசி என்றும் இவரது நூல் சாதி முறையின் கொடுமைகளை நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது. காந்தித்தோத்திரகாதா என்னும் காப்பிய நூல் இவரது உயர்ந்த கோட்பாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. புத்தசரிதம், செளத்திராநந்தம் ஆகிய இரு பெருங்காப்பியங்களை அசுவகோசர் ஆக்கியுள்ளார். அவற்றில் சமயக் கருத்துகளோடு அரசியல் அறிவுரைகளும் விரவிக் கிடப்பதைக் காணலாம். புத்த சரிதம் 28 பிரிவுகளைப் பெற்று விளங்கியதாக இட்சிங்கு என்ற சீனப் பயணி குறிப்பிடுகிறார். ஆனால், அவற்றுள் 17 பிரிவுகளே இன்று நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றுள்ளும் 13 பிரிவுகனே அசுவகோசரால் எழுதப்பெற்றவை. எஞ்சிய நான்கினை அமிர்தானந்தர் என்ற அறிஞர் பிற்காலத்தே எழுதிச் சேர்த்தார் எனக் கூறப்படுகிறது. புத்தரது வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளை நயம்படத் தொகுத்துக் கூறுவதே புத்த சரிதமாகும், தன் ஒன்று விட்ட சகோதரரான நந்தர் என்பவரைப் புத்தர் எவ்வாறு பௌத்த நெறிக்குத் திருப்பினார் என்பதை அது விதந்தோதுகிறது. தன் மனைவியின் அழகில் மயங்கியவராய், உலக இன்பங்களில் ஆழ்ந்து திளைத்த நந்தருக்கு இம்மை இன்பங்களின் நிலையாமையையும், மறுமை இன்பத்தின் மாண்பினையும் எடுத்துக்காட்டி, மனமாற்றத்தைப் புத்தர் எவ்வாறு ஏற்படுத்தினார் என்பதை இந்நூல் பரக்கக் கூறுகிறது. இந்தூவில் இராமாயணத்தின் சாயல் ஊடாடுவதை ஆங்காங்கே காணலாம். சுத்தோதனர் பாத்திரம் தசரதனையும், சுந்தரியின் பாத்திரம் சீதையையும் நமக்கு நினைவுபடுத்துகின்றன. சித்தார்த்தர் எழுந்தருளும் தேரில் அவரில்லாததைப் பார்த்து மக்கள் புலம்புவது, இராமர் வீற்றிருந்த தேரில் அவரில்லாததைக் கண்ட மக்கள் கதறி அழுத காட்சியை ஒத்துக் காணப்படுகிறது. சௌந்திராந்த காப்பியத்தில், ஒரு நாட்டுக்கு அரசர் ஒருவர் எவ்வாறு இன்றியமையாது வேண்டப்படுபவர் என்பதையும், அவர்தம் கடமைகள் என்னென்ன என்பதையும், அசுவகோசர் நன்கு எடுத்துக் கூறுறொர். குடிமக்களின் ஆசானும் வழிகாட்டியும் அரசரே என அவர் அறுதியிட்டுக் கூறுகிறார். சூத்திராலங்காரம் அல்லது கல்பனா மந்திரிகா என்ற நூலில் இளவரசன் ஒருவனுக்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும் என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இலக்கணம், தேவ இலக்கியம், சொல் வன்மை, எழுத்து வன்மை, இசை, மருத்துவம், ஓவியம், கனவு நலமுரைத்தல், சோதிடம், குதிரை யானை முதலியவைகளைப் பழக்குதல், ஈட்டிகளைச் சுழற்றல், வில்லைப் பயன்படுத்துதல், போர்க்கள ஒழுங்கு பற்றிய அறிவு, அரச தந்திரம் முதலிய பல்வேறு கலைகளில் இளவரசன் பயிற்சி பெறுதல் வேண்டும் என இந்நூல் கூறுகிறது. கனிசுகர் காலத்துக்குப் பின் வாழ்ந்த குமாரலதர் என்பவரால் இத்நூல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்றும், அசுவகோசர் இதன் ஆசிரியரல்லர் என்றும், அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். காளிதாசர், சேக்சுபியர் போன்று அசுவகோசர் ஒரு பெரும் நாடகாசிரியருமாவார். அவரால் எழுதப்பட்ட மூன்று நாடகங்களின் சில பகுதிகள் மத்திய ஆசியாவிலுள்ள சில பௌத்த மடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், சரிபுத்திரர் என்னும் நாடகம் வடமொழியில் கிடைக்கும் நாடகங்களிலேயே மிகத் தொன்மையானதாகும். அது ஒன்பது காட்சிகளை உடையது. முத்கலாயனர், சாரிபுத்திரர் என்ற இரு இளைஞர்களைப் புத்தர் எவ்வாறு தனது சமயத்தில் சேர்த்தார் என்பதையே இந்நாடகம் விரித்துரைக்கிறது. துறவைப் பற்றிக் கூறவந்த ஆசிரியர் ஆங்காங்கே இவ்வுலக இன்பங்களையும் நமக்கு நன்கு எடுத்து விளக்குகிறார். சோதத்தன் என்ற வணிக இளைஞன், தன் வாலிப நண்பர்களுடன் ஒரு குன்றின் உச்சிக்குச் சென்று விழாக் கொண்டாடுவதும், காமக் களியாட்டங்களிலீடுபடுவதும் படிப்போர்க்குச் சிற்றின்பப் போதையை உண்டாக்கும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்நாடகத்தை ஆசிரியர் நாட்டிய சாத்திர விதிகளுக்கேற்ப அமைத்துள்ளார். நாடகத்தின் இறுதிக் காட்சியில் அசுவகோசரின் பெயர் புகுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் புத்தரே வந்து வாழ்த்துக் கூறுவது போன்றும் இறுதிக் காட்சியில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அசுவகோசரின் ஏனைய இரு நாடகங்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை, சில சில பகுதிகளே<noinclude></noinclude> bi2ok4hb90ev4y5nxteh2kc58q27xk5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/186 250 617719 1839407 1826397 2025-07-06T03:33:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுவசாத்திரம்|150|அசுவசேனன்}}</noinclude>வழி வழியாக வந்துள்ளன. அவற்றுள் ஒன்று, பெருந்தத்துவங்களை மறைபொருளாய் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் வரும் பாத்திரங்களின் பெயர்கள், புத்தி, கீர்த்தி, திருட்டி என்று அமைந்துள்ளதிலிருந்தே இது நன்கு பெறப்படும். மற்றும் அப்பாத்திரங்கள் தூய வடமொழியிலேயே உரையாடுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மற்றுமொரு நாடகம் இராட்டிரபாலா எனப்படுவது. இதில் நகைச்சுவை பளிச்சிடுகிறது. இதில் வரும் விதூடகனின் பேச்சு, கேட்போரைக் குலுங்கக் குலுங்க நகைக்க வைக்கும் தன்மையது. பொதுவாக, அசுவகோசரின் நாடகங்களிலும் காப்பியங்களிலும் தூய வடமொழிச் சொல்லாட்சியே காணப்படுகிறது. பிழைகள் மிக அரிதாகவே உள்ளன. ஆங்காங்கே பிராகிருதச் சொற்களும் விரவிக் கிடக்கின்றன. பிராகிருதத்தின் ஒரு கிளை மொழியான மகதியின் பல சிறப்புக் கூறுபாடுகளைத் துட்டன் என்ற கதாபாத்திரத்தின் பேச்சுகளில் காணலாம். கொபெய்ன் என்ற மற்றுமொரு பாத்திரத்தின் உரைகளில் அர்த்தமாகதி என்னும் பிராகிருதக் கிளைமொழியின் சாயல் தென்படுகிறது. விதூடகனின் சொற்களில் செளரசேனி என்ற பிராகிருதக் கிளை மொழியின் கூறுபாடுகள் நன்கு தென்படுகின்றன. முற்காலச் சௌரசேனி சில இடங்களிலும், பிற்காலச் சௌரசேனி வேறு சில இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. புத்தசரிதம், சௌந்தராநந்தம் போன்ற நூல்களில் ஆசிரியர் எளிமையும் தெளிவும் நிறைந்த ஒரு நடையைக் கையாளுகிறார். பிற்காலத்தே வைதருப்பி என்று விவரிக்கப்பட்ட நடையை அது பெரிதும் ஒத்திருக்கிறது. இவ்வாறு, சமயம், உலகியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மக்களுக்குத் தேவையான சீரிய கருத்துகளை அசுவகோசர் மிகத் திறமையாகக் கலந்து அளித்துள்ளார். பிராகிருத இலக்கண ஆசிரியர்களுக்கு முன்னோடியாகவும், வடமொழி வல்லுநர்களுக்கு ஒளிவிளக்காகவும் இவர் திகழ்ந்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிய நாடுகளிலெல்லாம் மிகுதியாகப் பரவிய மகாயான பெளத்த சமயத்தை உண்டாக்கிய பெருமக்களுள் தலைசிறந்த ஒருவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.{{float_right|கி.ரா.அ.}} {{larger|<b>துணை நூல்:</b>}} “The age of Imperial Unity”, Bharatiya Vidya Bhavan, Vol. II, Bombay, 1980. {{larger|<b>அசுவசாத்திரம்</b>}} வடமொழியில் எழுதப்பெற்றுள்ள, குதிரைகளைப் பற்றிய நூல். பலதரப்பட்ட குதிரைகளைப் பற்றியும், அவற்றின் சிறப்பான இயல்புகளைப் பற்றியும் இந்நூலில் காணலாம். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் இந்நூல் கையெழுத்துப் படியுருவில் இன்றும் உள்ளது. இதில் 275 விளக்கப்படங்கள் உள்ளன. இவை தஞ்சை மராட்டியர்களின் காலத்தன, {{larger|<b>அசுவசேனன் தட்சகன்</b>}} என்னும் நாகமன்னனின் மகன். இவனைப்பற்றிய செய்திகள் வில்லிபாரதத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன. கண்ணன் அருச்சுனன் ஆகியோர் துணையுடன் தீக்கடவுள் காண்டவக்காட்டை எரிக்குங்கால், தேவர்க்கரசனான இந்திரன், அக்காட்டில் தன் குடும்பத்துடன் வாழும் தட்சகன் என்னும் பாம்பினைக் குறித்துக் கவலைப்பட்டான். அவனைக் காக்கத் தேவப்படையுடன் புறப்பட்டான். முகில்களை அனுப்பித் தீயை அணைக்கப் பணித்தான். அருச்சுனன் அம்புக் கூடம் அமைத்துத் தீக்கடவுளைக் காத்தான். மேகங்கள் செயலற்றன. தேவர்கள் தட்சகனைத் தேடினார்கள். தட்சகனின் மனைவியான பெண் நாகம் தன் குட்டியை வாயில் பற்றியவாறு வானில் எழுந்தது. அருச்சுனன் அப்பெண்நாகத்தைத் தலை துணித்துக் கொன்றான். இந்திரன் அதன் மகவை, உடன்சென்று காத்தான். தன் அன்னையின் வாயுடன் தன் வாலும் சிறிதே துணிக்கப்பெற்ற தட்சகன் புதல்வன் அசுவசேனன் பெரிதும் வருத்தமுற்றான், அதனால் அருச்சுனன்பால் சீற்றமும் பகைமையும் கொண்டான். அருச்சுன்னுடைய பகைவன் யாரெனப் பலரையும் வினவிக் கன்னனை அடைந்து அவன்பால் கணையாகி அருச்சுனனைப் பழி தீர்க்கும் நோக்கத்துடன் வளரலானான். கன்னன் அருச்சுனனைக் கொல்ல முடிவு செய்தான். காண்டவக் காட்டை அருச்சுனன் எரித்த நாளில் தன்னிடம் கணையாக வந்து தங்கிய பாம்புக் கணையை எடுத்தான். அதற்குத் தீபம், புகை, மலர் ஆகியவற்றால் வழிபாடு இயற்றி வணங்கும்போது. அவனை நோக்கிச் சல்லியன் “சூழ்ச்சித் திறமுள்ள கண்ணன் அங்குள்ளான். ஏதேனும் சூழ்ச்சியால் கணையைத் தடுத்துவிடுவான். ஆகையால், நீ கணையைக் கழுத்திற்கு நேர் குறியாகச் செலுத்தாமல், மார்புக்கு நேரே குறிவைத்துச் செலுத்து” என்று கூறினான். கன்னன் சல்லியன் கூற்றை ஏற்கவில்லை. தன் முடிவுப்படி கழுத்தையே இலக்காக்கி எய்தான். கழுத்து நோக்கிவரும் பாம்புக் கணையைக் கண்ட கண்ணன் தேரைப் பன்னிரண்டு அங்குலம் நிலத்தில் அழுந்தச் செய்தான். அதனால் அப்பாம்புக்கணை கழுத்திற்கும் மேல் ஓடி, அருச்சுனன் மகுடத்தைத் தட்டி இடறிக்கொண்டு சென்றது. அருச்சுனன் பின்புறமாக அம்பெய்து அப்பாம்புக் கணையை இரண்டு துண்டாக்கி வீழ்த்தினான். அழிகின்ற நிலையை அடைந்த அப்பாம்பு, ஐந்து தலையுடன் கூடிய தன்<noinclude></noinclude> t94l27w47lcnm135hu0w1171olf1tj0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/187 250 617751 1839408 1826454 2025-07-06T03:37:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுவத்தாமன்|151|அசுவமேதம்}}</noinclude>உடலின் முற்பகுதியுடன் கன்னன்பால் சென்று மறுமுறை தன்னை அருச்சுனன்மேல் ஏவும்படி வேண்டியது. குந்திக்கு அளித்த உறுதிமொழி கருதிக் கன்னன் கணையை மறுமுறை ஏவ மறுத்திட்டான் அதனால் அப்பாம்பு, கன்னனை நொந்து கூறி உயிர் துறந்தது. இவ்வரலாறு வியாசபாரதத்தில் சிறிது வேறுபாட்டுடன் கூறப்பட்டுள்ளது.{{float_right|எஸ்.செள.}} {{larger|<b>அசுவத்தாமன்</b>}} துரோணாசாரியாரின் மகன். துரோணர் மனைவியாகிய கிருபியின் கற்புச் சிறப்பினை நாரதரால் அறிந்த உருத்திரன், அதனை ஆராய நினைத்து அவளிடம் நிருவாணப்பிச்சை கேட்டுச் சென்றான். அவள் அழகினைக் கண்டு மயங்கித் தன் வீரியத்தைத் தட்டில் விட, அதனை அவள் துரோணரின் குதிரையிடம் வைத்தாள். குதிரையின் முதுகைக் கிழித்துக் கொண்டு பிறந்தமையின் அசுவத்தாமன் என அழைக்கப்பட்டான். இவன் சிவனருள் வாய்க்கப் பெற்றவன். துரியோதனன் ஏவலால் இவன் பாரதப் போரில் ஈடுபட்டுப் பஞ்சபாண்டவர் மக்களாகிய இளம் பஞ்சபாண்டவர்களைப் பாண்டவர் என்றெண்ணிக் கொன்றான். அருச்சுனனைப் போன்ற சிறந்த வில் வீரன்; சாகாவரம் பெற்றவர்களுள் ஒருவனாகக் கருதப்படுபவன். மாளவ மன்னனுடைய பட்டத்து யானை பாரதப் போரில் கொல்லப்பட்டது. கண்ணன் சொற்படி இச்செய்தியைத் தருமர் ‘அசுவத்தாமா அதாகுஞ்சரம்’ என்று கூறித் தெரிவித்தார். இதனைக் கேள்வியுற்ற துரோணர் தம் மகனான அசுவத்தாமன் போரில் இறந்துவிட்டான் என்று தவறாகக் கருதி உயிர்துறந்தார்.{{float_right|த.கு.மு.}} {{larger|<b>அசுவமேதம்</b>}} அரச குலத்தவர் தமது பெருமையை நிலைநாட்டுவதற்குச் செய்யும் ஒரு வேள்வி. வேத கால முதல் பரந்த பேரரசுகள் ஏற்படத் தொடங்கின. வலிமை மிக்க மன்னர்கள் பற்று மிக்க மக்கள் தலைவர்களானார்கள். “சார்வ பெளம”, “ஏகரதன்” முதலிய விருதுகளைச் சூட்டிக் கொண்டதுடன், தங்கள் மதிப்பிற்கொப்ப “இராசசூயம்”, “வாசபேயம்”, “அசுவமேதம்” போன்ற பல வேள்விகளையும் செய்துவந்தார்கள். அசுவமேத வேள்வியில் குறிப்பிட்ட நிறங்கொண்ட குதிரையொன்று, படைக் கலம் ஏந்திய அரசரோ, உயர்குடித் தோன்றல் ஒருவரோ பின்தொடர, நாடெங்கும் சுற்றித் திரிய விடப்படும். ஓராண்டு வரை யாராலும் தடுக்கப் பெறாமல் சுற்றித் திரிந்து மீண்டு வரும் குதிரையை வேள்வியில் பலியிடுவது வழக்கம். தென்னிந்திய அரசர்கள் சிலரும் “இராசசூயம்”, “அசுவமேதம்” போன்ற வேள்விகளைச் செய்தனர். “கிருட்டிண யசுர்வேத தைத்திரிய சம்கிதம்” என்ற நூலில் வேள்வி அமைப்பு நடைபெறும் அரங்கின் நுணுக்கங்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. வரைபடம் அரங்கின் அமைப்பை விளக்குகிறது:– வேள்விக்கூடம், முத்தீ, வேள்வி நடத்துபவர் இருக்கை மற்றும் ஆசான்களின் இருக்கைகள்: {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 187 |bSize = 480 |cWidth = 160 |cHeight = 167 |oTop = 135 |oLeft = 265 |Location = center |Description = }} {{center|அசுவமேத யாககுண்டம்}} 1. காருகபத்தியம், 2. ஆகவனீயம், 3. தட்சிணாக்கினி, 4. வேதி, 5. யசமானன், 6. மனைவி, 7. பிரமன், 8. அத்துவார்யு, 9. கோதா, 10. அக்கித்திரா, 11. உத்தரா, 12. பிரனிதா. ஆட்டுக் கடா ஒன்று முன் செல்லப் பட்டாக்கத்தியைத் தாங்கி வேள்விக் குதிரை உலாவரும். பின்னர்க் குதிரையைப் பலியிடுவார்கள். கொலையுண்ட குதிரையின் உடலைத் தங்க இழையோடிய பட்டு விரிப்பில் கிடத்தி அதன் இறைச்சியை (வபை) “உக்கா” என்ற தனித்ததொரு பானையில் வேக வைத்துத் தீயிலிடுவார்கள். இறைச்சியை வேள்வித் தீயில் படைக்கும்போது யாழிசைத்துப் புகழ்பாடும் வழக்கமும், புரோகிதர் அடுக்கான கதைகளைக் கூறும் வழக்கமும் சடங்கு முறைகளாய் விளங்கின. குதிரையின் 34 விலா எலும்புகளையும், ஆட்டின் 24 எலும்புகளையும் கணக்கிட்டு இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பலியிடப்பெற்ற குதிரையை “ஆதித்தன், திரிதன்யமன்” ஆகிய கடவுளின் பட்டியலில் இணைத்து வேதச் செய்யுள்கள் சிறப்பிக்கின்றன. வேத சூத்திரங்களிலும் பிராமண வகை இலக்கியங்களிலும் இவ்வேள்வி பற்றிய குறிப்புகள் உண்டு. வேள்வியின் இறுதிச் சடங்கு ‘அவப்புருதம்’ எனப்படும், பக்குவப்படுத்தப்பட்ட குதிரை இறைச்சியை (வபை)க் கூடியிருப்பவர்களுக்கு வழங்குவார்கள்.<noinclude></noinclude> 6blujn1h3ij0d9hky1n2h1m5h7dskg7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/188 250 617752 1839409 1826455 2025-07-06T03:44:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுவமேதம்|152|அசுவான்}}</noinclude>மொட்டைத் தலையும் மஞ்சள் நிற ஆந்தைக் கண்களும் நீண்ட பல்வரிசைகளுமுடைய ஒரு குட்டரோகியைத் தேர்ந்து, நீர்த் தொட்டியில் கைகளால் நீரை அளையச் செய்து, பின் யாவரும் அத்தண்ணீரில் மூழ்குவார்கள். அவ்வாறு மூழ்குவதால் பாவங்களை அகற்றித் தூய்மையானவர்கள் ஆகிவிடலாமென்ற நம்பிக்கை இருந்தது. ஒவ்வொரு சடங்கையும் மேற்கொள்வதற்கென நல்ல நாள்களைச் சாத்திரங்கள் வகுத்திருந்தன. இராமாயணம், மகாபாரதம், போன்ற இதிகாசங்களிலும் இவ்வேள்வி பற்றிய செய்திகளுண்டு. இந்திரனின் ஆசியைப் பெற்ற மன்னர் அனைவரும் உலகை வலம் வந்து பகைவர் அனைவரையும் வென்ற பின், குதிரையைப் பலி கொடுப்பர் என ஐதரேய பிராமணம் கூறுகிறது. அசுவமேத வேள்வி நடத்திய மன்னர்களின் பட்டியலொன்றைச் சதபத பிராமணம் தருகிறது. சனகர், பரீக்சிதா, பீமசேனோ, உக்ரசேனா போன்றவர்கள் அதில் குறிப்பிடப்பட்டவர்களுள் முக்கியமானவர்கள். பேரரசன் ஒருவன் தான் இந்த வேள்வியைச் செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. சிற்றரசர்களும் இவ்வேள்வியைச் செய்ததாகத் தைத்ரேய பிராமணம், ஆபசுதம்ப சூத்திரம் போன்ற சாத்திரங்கள் கூறுகின்றன. மகாபாரதக் குறிப்புகளிலிருந்து வேள்வி அரங்கு முக்கோண வடிவுடையதெனத் தெரியவரும். அயோத்தி மன்னன் தசரதன் மக்கட் பேறு பெறுவதற்காக மூன்று நாள்கள் வேள்வியைச் செய்து முடித்தான். இந்திய–ஈரானிய மன்னர்கள் இவ்வேள்வியை விருப்பமுடன் ஏற்றனர். ஆந்திர குல மன்னனொருவன் இரு அசுவமேத வேள்விகள் நடத்தியதாக நானகாட்குகைக் கல்வெட்டு அறிவிக்கிறது. புசியமித்திர சங்கன் அசுவமேத வேள்வி நடத்திய கல்வெட்டுச் செய்தியுமுண்டு. அசுவமேத பராக்கிரமர் எனப் புகழப்பட்ட சமுத்திர குப்தருக்கு முன் வேள்வியைச் செய்த மன்னர் பலர். பராசரி புத்திரர், சர்வதாத, சதகர்ணி, வசிட்ட புத்திர இக்சுவாகு சந்தமூலா, வாகாடக மன்னன் முதலாம் பிரவாரசேனா, பல்லவ மன்னன் சிவகந்த வர்மன், நாகமன்னர் போன்றோர் இவர்களுள் முக்கியமானவராவர். காளிதாசன் இயற்றிய இரகுவம்சத்திலும் மற்ற வடமொழி நூல்களிலும் இது பற்றிய குறிப்புகளைக் காணலாம். நாணயச் சான்றுகளும் இவ்வேள்வியை விளக்குகின்றன. குப்தர்கள் ஆட்சிக்குப் பின்னர் இவ்வேள்வி பற்றிய பேச்சு இல்லை. தமிழக வரலாற்றில் இவ்வேள்வி பற்றிய செய்திகளைக் காண இயலவில்லை. பல்லவ மன்னர் சிலர் இவ்வேள்வி நடத்தியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அசுவமேத நீராழி மண்டபத்தில் நீராடித் தன் பாவங்களைப் புலிகேசி மன்னன் போக்கிக் கொண்டான் என்று கூறப்படுகிறது. பிருதிவி வியாக்கிரன் என்ற நிடத மன்னனைப் பல்லவ நந்திவர்மனின் (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு) தளபதி உதயசந்திரன் முறியடித்த செய்தியைக் கல்வெட்டு ஒன்றின் வாயிலாக அறியலாம். பிருதிவி வியாக்கிரன் அசுவமேத வேள்விக் குதிரையை நடத்திவந்தான் என்று கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. 18-ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் அம்பர் நாட்டு மன்னன் சவாய் செயசிங் அசுவமேத வேள்வி நடத்திய செய்தி கால வரன் முறையில் இறுதியான செய்தியாக தெரியவருகிறது.{{float_right|தி.வி.கு.}} {{larger|<b>அசுவான்</b>}} எகிப்தின் தென்கிழக்கில் உள்ள வாணிகமும் சுரங்கத்தொழிலும் மிக்க நகரம்; நைல் ஆற்றின் கீழ்க் கரையில் அமைந்துள்ள இந்நகரம் கெய்ரோவுக்குத் தெற்கே 692 கி.மீ. தொலைவிலுள்ளது. நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழும் குடியானவர்களின் சந்தை இங்குக் கூடுகிறது. அராபிய நாடோடிகளான பெடூயினினத்தவர்களின் மையமாக அசுவான் (Aswan) உள்ளது. இந்நகரத்தையும் கெய்ரோவையும் இருப்புப்பாதை இணைக்கிறது. இந்நகரில் அமைந்துள்ள அசுவான் உயர் அணைக் கட்டு கெய்ரோ நகருக்குத் தெற்கில் 8 கி.மீ. தொலைவில் நைல் ஆற்றின் குறுக்கே கட்டப்பெற்றுள்ளது. நைல் ஆற்றின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் அசுவான் உயர் அணை சீரிய பொறியியல் நுட்பத்தை வெளிக்காட்டும் திட்டமாகும். இவ்வணை தெற்கு எகிப்தில் நாசர் ஏரியின் வடகரையாய் அமைந்துள்ளது. அசுவான் உயர் அணையைக் கட்டும் பணி 1960–இல் தொடங்கியது. 1968–இல் இவ்வுயர் அணை கட்டி முடிக்கப்பெற்ற போது, தேக்கி வைக்கப்பெற்ற நீரைப் பயன்படுத்தி ஒரு இலட்சம் ஏக்கர் பரப்புள்ள பாலை நிலம் உழவுக்கு வந்தது. 7½ இலட்சம் ஏக்கர் பரப்பில் ஒரு போகம் மட்டும் விளைத்த நிலங்களில் இரு போகமோ முப்போகமோ விளையலாயிற்று. இதன் விளைவாக எகிப்தின் வேளாண்மைப் பொருள் உற்பத்தி இருமடங்காக உயர்ந்தது. அசுவான் உயர் அணையின் உயரம் 110 மீ. நீளம் 3.2 கி.மீ. அசுவான் உயர் அணை அதன் அருகிலுள்ள சிறிய அசுவான் அணையை மிஞ்சி விட்டதுடன், நீர் மின்சக்தி உற்பத்தி செய்யப் பெரிதும் பயன்படுகிறது. நீரினால் மூழ்கவிருந்த சிலைகளையும், சிற்பங்களையும் அபுசிம்பல் என்னுமிடத்திலிருந்து அகற்றி, மலைமுகடுகளில் வைத்துக் காக்கின்றனர். இவ்வணையைக் கட்ட 1100 கோடி உரூபாய் செலவிட்டார்கள். அமெரிக்கா, குவைத்து ஆகியநாடுகளும் ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமும் பொருளுதவி செய்தன. 1971–இல் அசுவான் உயர்<noinclude></noinclude> 77t3g8n612fyc0c7iz9ex0tbcl3jbqz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/189 250 617753 1839410 1826456 2025-07-06T03:46:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசென்சன் தீவு|153|அசே}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 480 |cWidth = 320 |cHeight = 170 |oTop = 60 |oLeft = 59 |Location = center |Description = }} {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 480 |cWidth = 320 |cHeight = 73 |oTop = 248 |oLeft = 59 |Location = center |Description = }} {{center|அசுவான் அணைக்கட்டு}} அணையை எகிப்து அதிபர் அன்வர் சதாத்தும் உருசியாவின் அதிபர் நிகோலாய் பொட்கர்ணியும் திறந்து வைத்தனர். அசுவானுக்கு அருகில் செம்மை நிறக் கற்கள் கிடைப்பதால் அவற்றைக் கொண்டு, சீரிய நினைவுச் சின்னங்கள் மிகத் தொன்மையான காலத்திலிருந்து கட்டப்பெற்று வருகின்றன. அசுவானில் நிலவும் தட்பவெப்ப நிலையால் இந்நகரம், பொதுமக்களைக் கவரும் நல்வாழ்வு மையமாகவும் திகழ்கிறது. மக்கள் தொகை 1,44,377 (1976). {{larger|<b>அசென்சன் தீவு</b>}} தென் அட்லாண்டிக் பெருங்கடலில் செயின்ட் எலீனா தீவுக்கு வடமேற்கே 1100 கி.மீ. தொலைவில் உள்ளது. உலக நடுக்கோட்டிற்கு 800 கி.மீ. தெற்கே இத்தீவு அமைந்துள்ளது. பிரிட்டனுக்குச் சொந்தமான இதன் நிருவாகத்தைச் செயின்ட் எலீனா கவனித்து வருகிறது. இதன் பரப்பளவு 88 ச.கி.மீ.; மக்கள் தொகை 1200. ஆமைகளும் கரிய நிறக் கடற்பறவைகளும் இத்தீவில் பெருகி வளர்கின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 480 |cWidth = 94 |cHeight = 101 |oTop = 355 |oLeft = 290 |Location = center |Description = }} {{center|அசென்சன் தீவு}} {{larger|<b>அசே</b>}} மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்திலிருந்து வடக்காக 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்; வரலாற்றுப் புகழ்பெற்றது. கி.பி. 1803–ஆம் ஆண்டு செப்டம்பர் 23–ஆம் நாள் ஆர்தர் வெல்லெசுலிப் பிரபு அசே (Assaye) என்ற இடத்தில் சிந்தியா, பான்சலே ஆகிய மகாராட்டிர அரசர்களின் கூட்டுச் சேனையைத் தோற்கடித்து வெற்றி கண்டார். {{nop}}<noinclude></noinclude> 5bxj1pof0p3brtkg8w0098p7agsj34k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/190 250 617754 1839411 1826457 2025-07-06T03:50:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசை|154|அசை}}</noinclude>{{larger|<b>அசை</b>}} என்பது மொழியின் மிகச் சிறிய ஒலி அல்லது அலகு ஆகும். அறிவு வளர்ச்சி, செயல் எளிமை ஆகியவற்றின் காரணமாக அசைகளையும் விடச் சிறிய ஒலி வடிவம் எண்ணிப் பார்க்கப்பட்டது. இதுவே, இன்றைய நெடுங்கணக்கு (Alphabet) எழுத்துகளாகும். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க அறிஞர்கள், செமித்திக் மொழியில் தோன்றியிருந்த எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு, அசையின் உறுப்புகளாகிய உயிர், மெய்களைக் குறியீடு செய்தனர். இதனை அடுத்து, அராமிக்கு, ஈபுரு, அரபு, மற்றும் இந்திய மொழிகளில் நெடுங்கணக்கு எழுத்துகள் தோற்றுவிக்கப்பட்டன. அசைகள் உயிர்மெய்களாக உணரப்பட்ட போதிலும், எல்லா மொழிகளிலுமே இவை தனி எழுத்துகளால் குறிப்பிடப்படவில்லை. சில மொழிகளிலேயே இவற்றைக் குறிக்கும் தனி எழுத்துகள் தோன்றின. இன்று உள்ள ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழி எழுத்துகள் இவ்வகையைச் சாரும். தமிழ் போன்ற இந்திய மொழிகளில் உயிர் மெய்களைக் குறிக்கத் தனி எழுத்துகள் இருந்தபோதிலும், மெய்யும் உயிரும் அடுத்தடுத்துத் தோன்றினால் அவற்றை இணைத்து, உயிர்மெய் என்ற ஒரே வடிவாகக் குறியீடு செய்யப்பட்டுள்ளது. {{larger|<b>அசையுணர்வு:</b>}} மொழியின் எழுத்து வரலாற்றில் மிகவும் இன்றியமையாத இடத்தைப் பெறும். அசை, ஒவ்வொரு மனிதனாலும் மிகவும் தெளிவாக உணரப்படும் ஒன்றாகும். எனினும், இதனை முறையாக விளக்கி வரையறை செய்ய இயலவில்லை. ஒருவர் தாம் பேசும் சொற்களில் எத்தனை அசைகள் உள்ளன என்று மிக எளிதில் கூறிவிடலாம்; அவற்றைப் பகுத்தும் காட்டிவிடலாம்; ஆனால் அவ்வாறு பகுத்துக் காட்டுவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிவியல் அடிப்படையில் விளக்குவது மிகவும் கடினம். அசை, மனிதனின் உணர்வு (Feeling) அடிப்படையிலானது. எனவேதான் எல்லைகளைக் குறிப்பிடுவதில், தெளிவான கொள்கையை வகுப்பதில் இடர்ப்பாடு உள்ளது. இதன் விளைவாக ஒரு சொல்லில் உள்ள அசைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுவதிலும், சிலபோது வேறுபாடு தோன்றுகிறது. எனினும் அசைகள் ஒவ்வொரு மனிதனாலும் உணரப்படும் உண்மைக் கூறுகளாகும். {{larger|<b>அசையும் எழுத்தும்:</b>}} அசைகள் உயிர் அல்லது உயிர் மெய்களால் ஆனவை. ‘ஆ’, ‘ஆல்’, ‘வா,’ ‘வாய்’ என்பவை ஓரசைச் சொற்கள், முதலில் உள்ள சொல் உயிர் மட்டும் உள்ள ஓரசையால் ஆன சொல்; பின்னவை மூன்றும் முறையே உயிர் மெய், மெய்–உயிர், மெய்–உயிர்–மெய் என்னும் உறுப்புகளைக் கொண்ட ஓரசைச் சொற்கள், மொழியின் மிகப்பெரிய அலகு தொடர்களாகும். தொடர்கள் அசைகளாக உணரப்படுகின்றன. அசைகள் உயிர், மெய் ஆகிய ஒலிகளாக உணரப்படுகின்றன. ஒன்று அல்லது பல அசைகளை இணைத்து இலக்கண அடிப்படையில் சொற்கள் உண்டாக்கப்பட்டுள்ளன. தனிநிலை மொழி (Isolating language) சொற்கள் குறைந்த அளவு அசைகளை உடையவை. ஒட்டு நிலை மொழிச் (Agglutinative language) சொற்கள் அதிக அளவு அசைகளை உடையவை. தமிழ்ஒட்டு நிலை மொழிவகையைச் சார்ந்த மொழி. இதன்கண் பல அசைகளைக் கொண்ட நீண்ட சொற்கள் உள. ‘ஆ’, ‘ஆல்’, ‘கா’, ‘கால்’, ‘அல்’, ‘கல்’ போன்றவை ஓரசைச்சொற்கள், ‘எடு’, ‘எட்டு’, ‘எட்டில்’, ‘வெடி’, ‘வெட்டி’, ‘வெட்டில்’, ‘ஆடு’, ‘ஆட்டு’, ‘ஆட்டின்’, ‘பாடு’, ‘பாட்டு’ ‘பாட்டின்’ போன்றவை ஈரசைச் சொற்கள். இவ்வாறு தமிழ் மொழிச் சொற்கள், மூவசை, நாலசை என்று விரிந்து கொண்டே போகும். ‘வந்து கொண்டிருந்த பொழுதிலா’ என்னும் தொடரில் உள்ள சொற்களில் பல அசைகள் வருதலைக் காணலாம். சொற்களின் அசைகள், ஒரு மொழியின் இலக்கண விதியையும் யாப்பமைதியையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவை. {{larger|<b>அசை உறுதிசெய்தல்:</b>}} ஒரு சொல்லின் அசைகளின் எல்லையை வரையறுப்பதிலும் எண்ணிக்கையை உறுதி செய்வதிலும் ஒரே மொழி பேசும் மக்களிடையே கூட ஒத்த கருத்து நிலவுவதில்லை. எடுத்துக் காட்டாகத் தமிழில் சொல்லிடையில் மெய்க்குமுன் வரும் ரகர மெய், சில வட்டார வழக்கில் உயிரேற்றி ஒலிக்கப்படும். இதனால் அச்சொல்லின் அசை எண்ணிக்கைக் கூடும். ‘ஆர்வம்’, ‘பார்வை’, ‘சோர்வு’ போன்ற சொற்கள் ‘ஆருவம்’, ‘பாருவை’, ‘சோருவு’ என்று ஒலிக்கப்படும். இங்கு ஈரசைச் சொற்கள் மூவசையாக ஒலிக்கப்படுதலைக் காணலாம். இவ்வாறே ‘கூறுவான்’, ‘வாருவான்’ போன்ற சொற்கள் ‘கூற்வான்’, ‘வார்வான்’ என்று ஓரசை குறைவாக ஒலிக்கப்படுகின்றன. வேறு மொழிகளிலும் இத்தகைய வேறுபாடுகள் உள்ளன. ஆங்கில மொழியில் Predatory என்ற சொல், t, r, ஆகிய ஒலிகளுக்கு இடையே உயிரின்றி மூவசைச் சொல்லாகவும், உயிரிட்டு நாலசைச் சொல்லாகவும் ஒலிக்கப்படுகிறது. Bottling brightening போன்ற சொற்களில் உள்ள லகர, னகரங்களைச் சிலர் தனி அசைகளாக ஒலிக்கின்றனர். எனவே அவர்கள் உச்சரிப்பின்படி இவை மூவசைச் சொற்களாகின்றன. {{larger|<b>அசை எல்லை:</b>}} சொற்களில் உள்ள அசைகளின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது போன்றே, அவ்வசைகளின் எல்லைகளை வரையறை செய்வதிலும்<noinclude></noinclude> l7g2xptrklwx7ihas7y8cj50e8hx8s0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/191 250 617755 1839412 1826458 2025-07-06T03:54:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசை|155|அசை}}</noinclude>வேறுபாடு உள்ளது. தமிழில் ‘ய்’, ‘ர்’, ‘ழ்’ ஆகிய மெய்களை அடுத்து வரும் இரட்டித்த அடைப்பொலி மும்மெய் வரிசையை உண்டாக்கும். இவ்விடங்களில் அசை எல்லையை வரையறுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். சிலர் அடைப்பொலிகளுக்கு இடையில் வரவேண்டிய எல்லையை இடையினத்தை அடுத்து இருப்பதாக உணர்வர். ‘வாய்ப்பு’, ‘வார்ப்பு’ ‘வாழ்த்து’ போன்ற சொற்கள், ‘வாய்ப்-பு’, ‘வார்ப்-பு’, ‘வாழ்த்-து’ என்று பகுக்கப்படுதற்கு மாறாக ‘வாய்-ப்பு’, ‘வார்-ப்பு’, ‘வாழ்-த்து’ என்று தவறாகப் பகுத்துணரப்படுகின்றன. இவ்வாறு பார்க்கும்போது சொற்களின் அசை எண்ணிக்கையில், அசையாகும் ஒலியில், அசையின் எல்லையில் கருத்து வேறுபாடு இருப்பதை உணரலாம். எவ்வாறு இருப்பினும் ஒரே மொழி பேசும் மக்களிடையே சொற்களின் அசை எண்ணிக்கையைப் பொறுத்தவரை வேறுபாடு மிகவும் அருகியே காணப்படும். இது, மொழியில் அசைகள் உண்மையானவை, அவை ஏதோ ஒரு கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளன என்பவற்றை வலியுறுத்துகிறது. {{larger|<b>அசைச் சொற்கள்:</b>}} அசையை விளக்கத் தெளிவானதொரு கொள்கையைப் படைக்கவேண்டுமெனில் முதலில் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட அசை எண்ணிக்கை, எல்லை ஆகியவற்றை உடைய சொற்களை எடுத்துக்கொண்டு அவற்றின் அசைகளை உறுதி செய்யும் விதிமுறைகள் யாவை என்று ஆராய வேண்டும். பிறகு வேறுபாடு உடையனவாகக் கருதப்படும் அசைகளை உடைய சொற்களை எடுத்துக் கொண்டு, அவ்வேறுபாட்டிற்குக் காரணம் என்ன என்று ஆராய வேண்டும். இவ்வாறு பார்க்கும்போது அசைகளை வரையறை செய்வதில் ஒலிகளில் இயல்பாகவே உள்ள ஒலிமுழக்கம் (Sonority) இன்றியமையாப் பங்கினைப் பெறுதலைக் காணலாம். ஒலிமுழக்கம் என்பது, ஓர் ஒலியின் ஒப்புமைச் சத்தம் (Relative loudness) ஆகும். அதாவது ஓர் ஒலி அதே போன்ற நெடிற்றன்மை, அழுத்தம் (Stress), தாயி (Pitch) ஆகியவற்றைக் கொண்ட மற்ற ஒலிகளுடன் ஒப்பிடும் போது அவ்வொலிக்கு உள்ள சத்தத்தின் அளவாகும். {{larger|<b>ஒலி முழக்கக் கொள்கை:</b>}} ‘அ’, ‘இ’, ‘உ’, ‘எ’, ‘ஒ’, ஆகிய உயிர்களை ஒப்பிட்டுப் பார்த்தால், ‘அ’ மற்ற உயிர்களை விட அதிக முழக்கம் உள்ளதை அறியலாம். சற்றுத் தொலைவில் உள்ள ஒருவரை இவ்வுயிரொலிகளை ஒரே சீராக ஒலிக்கச் சொல்லிக் கூர்ந்து கேட்டால், ‘அ’ மற்ற உயிரொலிகளை விடத் தெளிவாகக் கேட்பதை உணரலாம். பிறகு ‘எ’, ‘ஒ’,க்களும், அடுத்து ‘இ’, ‘உ’க்களும் தெளிவு பெறும். இது அவ்வவ்வொலிகளின் உணர்வுரப்பினைப் (Acoustic intensity) பொறுத்துள்ளது. ஒலிகளின் முழக்கத்தை அவற்றின் உணர்வுரப்பின் அடிப்படையில் கருவிகளின் உதவியால் கண்டறியலாம். ஒரேமாதிரியான நெடுமை, அழுத்தம், தாயி ஆகியவற்றைக் கொண்ட பேச்சொலிகளின் ஒப்பீட்டு முழக்கத்தை அடியில் உள்ள பட்டை வரைபடத்தில் காணலாம். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 191 |bSize = 480 |cWidth = 298 |cHeight = 210 |oTop = 330 |oLeft = 77 |Location = center |Description = }} {{center|பேச்சொலி முழக்கம் - ஒப்பீடு}} {{nop}}<noinclude></noinclude> 3yoj4wateydt8cjchdr0todwv64pb2f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/192 250 617923 1839490 1827140 2025-07-06T07:21:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசை|156|அசை}}</noinclude>உயிரொலிகள், மெய்யொலிகள் அனைத்தையும் விட முழக்கமுடையவை. மெய்யொலிகளில் லகர, ரகரங்களே அதிக முழக்கமுடையவை. அவற்றை அடுத்து மூக்கொலிகள் வருகின்றன. இம்மெய்யொலி முழக்கம் ஓரளவிற்கு ஒத்தநிலையுடையது. எஞ்சியவற்றில் உரசொலிகள் தவிர மற்ற ஒலிகளின் முழக்கம் மிகமிகக் குறைவு. அடைப்பொலிகளில் குரலொலியே மிகக் குறைந்த முழக்கம் கொண்ட ஒலியாகும். முழக்கத்தின் அடிப்படையில் அசைகளை வரையறை செய்வது முழக்கக் கொள்கை (Sonority theory) எனப்படும். இதன்படி இரு மிகக் குறைந்த முழக்கமுடைய ஒலிகளுக்கு இடையில் அமையும் ஒலித் தொகுப்பே அசையாகும். இக்கொள்கை பெரும்பாலான சமயங்களில் ஒத்துவந்தாலும் ஒருசில இடங்களில் தடுமாற்றத்தை விளைக்கிறது. எடுத்துக்காட்டாக ‘ஸ்பா’ என்று ஒரு சொல் இருப்பதாகக் கொள்வோம். இச்சொல்லில் ‘ல’கரத்தை அடுத்து ஒலிமுழக்கம் குறைந்த பகரம் இருக்கிறது. எனவே ‘ஸ’கரம், அகரம் இரண்டும் தனித்தனியாக இரண்டு ஒலிமுழக்கம் உள்ள ஒலிகளாகக் கொள்ளப்படவேண்டி உள்ளன. எனவே, இக்கொள்கைப்படி இதை ஈரசைச் சொல்லாகக் கருதவேண்டும். ஆனால் நடைமுறை வழக்கின்படி இஃது ஓரசைச் சொல்லாகவே உள்ளது. இவ்வகை எதிர்ப்பாட்டினைத் தவிர்க்க மூச்சுத் துடிப்புக் (Chest pulse theory) கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. {{larger|<b>மூச்சுத் துடிப்புக் கொள்கை:</b>}} இக்கொள்கையின்படி நாம் பேசும்போது வெளியிடும் மூச்சுக் காற்றில் விளையும் அளவு மாற்றம் ஒவ்வொன்றும் ஒவ்வோர் அசையை உண்டாக்கக் காரணமாக உள்ளது என்பது கூறப்படுகிறது. ஆர்.எச். இசுடெட்சன் என்பவர் இக்கொள்கையை வெளியிட்டார். ஒவ்வோர் அசை உண்டாகும் போதும் விலா எலும்புகளுக்கு இடையே உள்ள தசைகள் ஒருமுறை சுருங்கி, மூச்சுக் காற்றின் வெளியேற்றத்தைத் தனித்தனிப் பந்துகள் உருண்டு வருவதைப்போல் செய்கின்றன. அல்லது இவ்வுருண்டைகளே அசைகளின் தோற்றத்திற்குக் காரணமாக உள்ளன. எனினும் இக்கொள்கையை வலுப்படுத்தும் அளவிற்கு ஆய்வு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. மேலே கண்டவற்றிலிருந்து அசைகளை வரையறை செய்ய இரு கொள்கைகள் உள்ளன என அறியலாம். அவற்றில் ஒன்று ஒலியின் முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இஃது ‘ஒலிமுழக்கக் கொள்கை’ எனப்படும். மற்றது மூச்சுக்காற்று வெளிப்படும் போது விலாத்தசைகளின் இயக்க மாறுபாட்டின் அடிப்படையிலானது. இது ‘மூச்சுத்துடிப்புக் கொள்கை’ எனப்படும். இவ்விருகொள்கைகளும் சேர்ந்தே அசைகளை வரையறை செய்ய உதவுகின்றன. {{larger|<b>அசை உறுப்புகள்:</b>}} அசைகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒலிகளால் ஆனவை. அசையின் முதன்மையான உறுப்பு அசைமுகடு (Peak) அல்லது கரு (Nucleus) எனப்படும். இதுவே அசையின் அதிக முழக்கமுள்ள ஒலியாகும். இது பெரும்பாலும் உயிரொலியாகயே இருக்கும். ஒரு மூச்சுத்துடிப்பின்போது உண்டாக்கப்படும் ஒலிக்குழுவில் உயிரொலி இல்லை எனில், அக்குழுவில் உள்ள அதிக அளவு முழக்கம் உள்ள மெய்யொலி அசை முகடாக இருக்கும். இம்மெய்யொலி அசை மெய் (Syllabic consonant) எனப்படும். ஒரே மூச்சுத் துடிப்பின்போது ஒன்றிற்கு மேற்பட்ட உயிரொலிகள் உண்டாக்கப்பட்டால், இவற்றில் அதிக முழக்கம் உள்ளது அசை முகடாக இருக்கும். மற்ற உயிரொலி(கள்) அசையில் உயிர்(கள்) (Non-syllabic vowel) எனப்படும். அசை முகட்டிற்கு முன் ஒலிகள் அசைமுன்னி (Onset) என்றும், அசை முகட்டிற்குப் பின் உள்ள ஒலிகள் அசை முடிப்பி (Coda) என்றும் சொல்லப் பெறும். ஓர் அசையில் முகடு கட்டாயமாக இருக்கும். முன்னி, முடிப்பிகள் அசையில் இன்றியமையா உறுப்புகளல்ல. இவை இல்லாமலும் அசைகள் காணப்படும். முடிப்பியோடுள்ள அசை மூடசை (Closed syllable) என்றும், முடிப்பி இல்லாத அசை திறந்த அசை (Open syllable) என்றும் வழங்கப் பெறும். கீழே சில சொற்கள் அசை பிரித்துக் காட்டப் பெற்றுள்ளதைக் காணலாம். ::{| |ஓரசை || ஈரசை || பல்லசை |- |ஆ || ஆ/டு || ஆட்/டிற்/கு |- |ஆல் || ஆட்/டின் || ஆட்/டி/னில் |- |கா || கா/டு || காட்/டிற்/கு |- |கால் || கா/லில் || கா/லின்/கண் |- | || || கா/லி/னு/டை/ய |- | || || அ/வ/னோ/ட/வே/தான் |- | || || வந்/து/கொண்/டி/ருந்/த/வ/னா |} {| |ஆ || – ||முகடு மட்டும் உள்ள அசை || ... || திறந்த அசை |- |ஆல் || – || முடிப்பியுடைய அசை || ... || மூடசை |- |கா || – || முன்னியுடைய அசை || ... || திறந்த அசை |- |கால் || – || முன்னியும் முடிப்பியும் உடைய அசை|| ... || மூடசை<br>க.மு. |- |} மரபிலக்கணம் அசையைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் குறிப்பிடும். இஃது எழுத்துகளால் ஆக்கப் பெற்றுச் சீருக்கு அடிப்படையாக அமைவது. எழுத்து-<noinclude></noinclude> 8okj6izy41lal8h9tlre3yuo9tf3qcr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/193 250 617924 1839491 1827141 2025-07-06T07:27:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசை|157|அசோகர்}}</noinclude>கள் ஒன்றோடொன்று சேர்க்கப்படுவதால் - அசைக்கப்படுவதால் - அசை என்பது காரணப் பெயராகும். அசை, நேரசை நிரையசை என இரண்டு வகைப்படும். குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் அமையுமாதலின் நேரசை நான்கு வகையில் உருவாகும். ழி, ஆ, வெள், வேல் என்பன முறையே நேரசை வகை நான்கனுக்கும் எடுத்துக்காட்டுகளாகும். குறில் இணைந்தும், குறில் இணைந்து ஒற்றடுத்தும். குறில் நெடில் இயைந்தும், குறில் நெடில் இயைந்து ஒற்றடுத்தும் அமையுமாதலின் நிரையசையும் நான்கு வகையில் உருவாகும். வெறி, நிறம், சுறா, விளாம் என்பன முறையே நிரையசை வகை நான்கனுக்கும் எடுத்துக் காட்டுகளாம். சொல்லின் முதலில் குறில் தனித்து நின்று நேரசையாகாது. வெறி என்பதில், வெ தனியே நேரசையாகாது. அது அடுத்துள்ள குறிலைச் சேர்ந்து நிரையசையாகும். சொல்லின் முதலில் நின்ற எழுத்துக் குறிலாக அமைந்து, அடுத்த எழுத்து ஒற்றெழுத்தாக இருந்தால், அப்போது குறில் ஒற்றடுத்து வந்த நேரசையாகும். தொடக்கத்தில் ‘விட்டிசை’ அமைந்தால், அப்போது தனிக்குறில் பின்வரும் எழுத்தோடு சேராது நேரசையாகும். ‘அ, ஆ இழந்தான் என்று எண்ணப்படும்’ என்பதன்கண், அ, ஆ நேர், நேர் என அலகிடப்பெறும். அலகிடுங்கால் செய்யுளில் ஒற்றும் குற்றுகரமும் அலகு பெறமாட்டா. அவ்வகையில் நேரசை நிரையசைகளில் வரும் ஒற்றினை நீக்கிக் காண, நேர் ஓரெழுத்தசையாகவும் நிரை ஈரெழுத்தசையாகவும் அமையும். நேர் நிரையாகிய அசைகள் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் கூடச் சீர் என்றும் செய்யுளுறுப்பு உண்டாகிறது. ஈரசைச்சீர் முதலாகச் சீர்கள் அமைகின்றபோது, அவற்றிற்குத் தேமா முதலான வாய்பாடுகளால் பெயர்கள் குறிக்கப்படுகின்றன, ஒரே எழுத்து சொல்லாவது போல, ஒரே அசை சீராக அமையும் இடமும் உண்டு. அஃது அசைச்சீர் எனப்படும். வெண்பாவின் ஈற்றிலும், ஒரோவழி ஆசிரியப்பாவின் இடையிலும் ஓரசைச் சீர் இடம்பெறும். வெண்பா ஈற்றில் ஓரசைச்சீர் வருங்கால் நேராயின் ‘நாள்’ என்றும், நிரையாயின் ‘மலர்’ என்றும் வாய்பாடு கொள்ளப் பெறும். தொல்காப்பியர் அசையினை விளக்கும்போது நேர்நிரை என்பவற்றோடு, அவற்றின் வேறாக நேர்பு நிரைபு என்னும் இரண்டு அசைகளைக் குறிப்பிட்டுள்ளார். நேரசை நிரையசைகளுக்கு இயலசை எனவும், நேர்பசை நிரைபசைகளுக்கு உரியசை எனவும் வேறு பெயர் சுட்டியுள்ளார். குறி்ல் தனித்து வரும் நேரசை வகை நீங்க, எஞ்சிய மூன்றினோடும், நிரையசை வகை நான்கினோடும் குற்றியலுகரம் அல்லது முற்றியலுகர எழுத்து தனித்தனியே சேர்வதால் நேர்பு நிரைபு அசைகள் உண்டாகின்றன. யாப்பருங்கலம் யாப்பருங்கலக் காரிகை தோன்றிச் செல்வாக்குப் பெற்ற பின்னர், இவ்வாறு யாப்பில் நேர்பு, நிரைபு என்று அசை கொள்ளும் தொல்காப்பிய மரபு அருகியது. பிற்கால யாப்பிலக்கணங்கள், நேர் நிரை என்னும் இருவகையாக அசை கொள்ளும் முறையினையே பெரிதும் போற்றி வந்துள்ளன. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Abercrombie, D.,</b> “Elements of General Phonetics”. Edinburgh, 1967. <b>Bell, A. and Hoope, l.B.,</b> “Syllable and Segment”, New York, 1978. <b>Ladefoged. P.,</b> “A course in General Phonetics”, New York, 1975. {{larger|<b>அசோகர் (கி.மு. 273-232)</b>}} தலைசிறந்த மௌரியப் பேரரசர். இவர் தம் தந்தை பிந்துசாரர் இறந்தபின் கி.மு. 273-இல் பட்டத்திற்கு வந்தார். முதலில் உச்சயினியிலும் பின்னர்த் தட்சசீலேத்திலும் அரசப் பிரதிநிதியாக இருந்து, தம் தந்தை இறந்ததும் தம் மூத்த சகோதரர் சுசீமாவைப் போரில் வென்று அரியணை ஏறினார். இரு சகோதரரிடையே நடைபெற்ற போட்டியின் காரணமாக அரியணை ஏறிய நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே, அசோகரின் முடிசூட்டுவிழா நடைபெற்றது. அசோகர் தம் குறிக்கோள்களையும் சாதனைகளையும் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துள்ளார். அவற்றுள் சில முக்கியமான கல்வெட்டுகள்: :{{overfloat left|align=right|padding=1em|1)}} பாறைகளில் பொறிக்கப்பெற்ற 14 பெரிய கல்வெட்டுகள். :{{overfloat left|align=right|padding=1em|2)}} பாறைகளில் பொறிக்கப்பெற்ற சிறிய கல்வெட்டுகள். :{{overfloat left|align=right|padding=1em|3)}} கல் தூண்களில் பொறிக்கப்பெற்ற 7 கல்வெட்டுகள். இக்கல்வெட்டுகள் பிராகிருதம், கிரேக்கம், அராமிக் மொழிகளில் காணப்பட்டாலும் பெரும்பாலானவை பிராகிருத மொழியிலேயே இருக்கின்றன. இக்கல்வெட்டுகளில் மசுதி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டைத் தவிர, மற்றக் கல்வெட்டுகளில் அசோகர் தேவானாம்பிய அல்லது பியதசி என்றே குறிக்கப்பட்டுள்ளார். இவை முறையே தேவர்களால் விரும்பப்பட்டவன், கண்ணுக்கு இனியவன் என்ற<noinclude></noinclude> an2j8fr8b2b3sralvrme5sgzatl2xgx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/194 250 617943 1839492 1827335 2025-07-06T07:27:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசோகர்|158|அசோகர்}}</noinclude>பொருளைத் தருகின்றன. அசோகர் அரியணை ஏறியபோது வடமேற்கில் ஆப்தானித்தானத்தில் இருந்து தெற்கில் மைசூர் வரை மௌரியப் பேரரசு பரவி இருந்தது. முடிசூட்டு விழா நடந்தபின் தம் ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டில், அசோகர், கலிங்க நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, போரில் வென்று, அந்நாட்டை மௌரியப் பேரரசுடன் சேர்த்தார். அப்போரில் பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் உயிரிழந்தும் அடிபட்டும் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர். ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் கொல்லப்பட்டதால் பலர் தங்கள் சுற்றத்தினரை இழந்து, வாழ் வகையின்றித் தவித்தனர். இக்கொடுமையைக் கண்ணுற்ற அசோகரின் உள்ளம் உருகியது. இனி அத்தகைய போர் புரிவதில்லை என்ற முடிவை அன்று முதல் மேற்கொண்டார். அதன் பின் அகிம்சையைப் போற்றிய பௌத்த மதத்தைத் தழுவி, பௌத்த சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 194 |bSize = 480 |cWidth = 291 |cHeight = 383 |oTop = 170 |oLeft = 111 |Location = center |Description = }} {{center|அசோகர் பேரரசு}} {{nop}}<noinclude></noinclude> q7obu66o58rvsbov7t8ix6am61pugez பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/195 250 617960 1839493 1827376 2025-07-06T07:31:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசோகர்|159|அசோகர் கல்வெட்டுகள்}}</noinclude>மேலும், அக்கால முதல் உல்லாசப் பயணங்களை விடுத்தார். பௌத்த மதத்தைச் சார்ந்த புனிதஇடங்களுக்குச் சென்றும், தம் பேரரசு முழுவதும் சுற்றி வந்தும் தம்மக்களைக் கண்டு, அவர்கள் அறவழியில் நடக்கச் செய்வதையே தம் கடமையாகக் கொண்டார். அதற்காகக் கல்வெட்டுகளை மக்கள் அன்றாடம் கூடும் இடங்களில் பொறிக்கச் செய்தார். அக்கல் வெட்டுகளில் மாணவர்கள் ஆசிரியருக்கு அடங்கி மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், துறவிகள், அந்தணர்கள், சிரமணர்கள் ஆகியோரை மதித்து நடக்க வேண்டும் என்றும், சுற்றத்தார், ஊனமுற்றோர், நண்பர் ஆகியோருக்கு அவர்கள் வேண்டிய பொருளைக் கொடுத்து உதவ வேண்டும் என்றும், மக்கள் நல்வழியில் நடந்துகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மற்ற சமயத்தவரை மதித்து நடக்க வேண்டும் என்றும், அவர்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். மக்கள் நல்வழியிலே நடந்து நற்கதி அடைய வேண்டும் என்று எண்ணிய அசோகர், தாமே அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முற்பட்டார். அரச மரபிலே வந்த அவர் விலங்குகளை வேட்டையாடுவதை நிறுத்தினார். அரண்மனையிலே அரச குடும்பத்தினரின் உணவிற்காகக் கொல்லப்பட்ட விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் எண்ணிக்கையைப் பெரிதும் குறைத்தார். ஆனால், இறைச்சி உணவை அறவே நீக்கும்படி மக்களை அவர் கட்டாயப்படுத்தியதாகத் தெரியவில்லை. மற்றவர்களை அன்புடன் நடத்த வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதில் நாட்டம் கொண்ட அவர், மௌரியப் பேரரசின் எல்லைப் புறத்திலே வாழ்ந்த மக்களை வென்று, அவர்களை அடக்காமல், அவர்கள் பிழை செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்ததோடு, தாம் அவர்கள் நாட்டைக் கவர்ந்து கொள்ளக் கூடும் என்ற எண்ணமே அவர்களுக்கு எழாதவாறும் நடந்துகொண்டார். அகிம்சையைக் கடைப்பிடித்த அசோகர் சாலைகளின் இரு மருங்கிலும் ஆலமரங்களை வளர்த்து நிழல் தரச் செய்தார். பயணிகள் தங்குவதற்குச் சத்திரங்களையும் ஆங்காங்கே அமைத்துக் கொடுத்தார், மக்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் அளிப்பதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தார். கிரீசு, எகிப்து, இலங்கை போன்ற நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பித் தாம் கடைப்பிடித்த அறங்களைப் பரப்பினார். மௌரியப் பேரரசில் வாழ்ந்த தம் குடிமக்கள் அறநெறியை அறிந்து கொள்ளவும் அவ்வழியிலே நடக்கவும், அவர்களுக்கு உதவ ‘தரும மகாமாத்திரர்’ என்ற அதிகாரிகளை நியமித்தார். மற்ற அதிகாரிகளும் ஐந்தாண்டிற்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செய்து, மக்களிடையே அறநெறியைப் பரப்ப வழி செய்தார். அசோகர் தாம் புத்த மதத்தைத் தழுவினாலும், அந்தணர்க்கும், ஆசீவகர்க்கும், துறவியர்க்கும், ஆதரவு தந்தார். இவ்வாறு அவர் அக்காலத்திலேயே சமயப் பொறையைக் கடைப்பிடித்தார். மூன்றாம் பௌத்த மத மாநாடு அசோகரின் தலைநகரான பாடலிபுத்திரத்தில் அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகச் சிங்கள பௌத்த நூலான மகாவம்சம் கூறுகிறது. எச்.ஜி.வெல்சு (H.G. Wells) என்ற வரலாற்றாசிரியர் அரசர்களிலேயே தலைசிறந்தவர் அசோகர் என்று கூறியுள்ளார். இந்தியாவிலேயே முதன் முதலில் கல்வெட்டுகளைப் பொறித்தவர் அசோகர் எனப் பொதுவாக நம்பப்படுகிறது. போரின் காரணமாகத் தாம் இழைத்த கொடுமைகளைக் கல்வெட்டுகளில் சுட்டிக்காட்டி, அந்தக் கொடுமைகளுக்காகத் தாம் மிகவும் வருந்தியதாக மக்களுக்குச் சொல்லி, போரில் மூலம் வரும் வெற்றியை வன்மையாகக் கண்டித்த ஒரே அரசர் அசோகரேயாவார். தாம் புத்த சமயத்தைத் தழுவினாலும், மற்றவர்களை மதமாற்றம் செய்யவோ துன்புறுத்தவோ நினைக்கவில்லை. அகிம்சையைப் போற்ற வேண்டும். மக்களிடமும் விலங்குகளிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லித் தம் வாழ்க்கையிலேயே அவற்றைக் கடைப்பிடித்துக் காட்டிய ஒரே அரசரும் அசோகரே ஆவார்.{{float_right|சி.இ.இரா}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Majumdar, R.C. (Ed),</b> “The History and Culture of the Indian People”, Vol II. The Age of Imperial Unity, Bombay, 1980. <b>Mookerji. R.K.,</b> “Asoka (Gaekwad Lectures)”, London, 1928. <b>Majumdar, R.C. & others</b> “An Advanced History of India”, 4th Edition, Macmillan India Ltd, Delhi, 1982. <b>Smith, V.A.</b> “Asoka”, 3rd Ed., Oxford, 1920. {{larger|<b>அசோகர் கல்வெட்டுகள்</b>}} இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளுள் மிகத் தொன்மையானவை. இவரால் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டுகள் இவர் கால வரலாற்றை அறியப் பெரிதும் உதவிபுரிவன. தாம் தழுவிய புத்த சமயக் கொள்கைகளை மக்களுக்கு அறிவிக்கப் பேரரசின் பல்வேறு பகுதிகளில் பாறைகளிலும் தூண்களிலும் அறக்கட்டளைகளாக வெட்டுவித்தார். இக்கல்வெட்டுகள் பிரா-<noinclude></noinclude> pw4acpawtpihidox8kfhum3uhmyxdad பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/196 250 618055 1839494 1827540 2025-07-06T07:34:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசோகர் கல்வெட்டுகள்|160|அசோகர் கல்வெட்டுகள்}}</noinclude>கிருதம் (Prakrit), கிரேக்கம், அராமிய (Aramic) மொழிகளில் வரையப்பட்டன. பிராகிருத மொழிக்கு, பிராமி (Brahmi) எழுத்துகளும், அராமிய மொழிக்கு கரோத்தி (Kharoshthi) எழுத்துகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிரேக்க, அராமிய மொழிக் கல்வெட்டுகள் இன்றைய பாகிசுத்தான், ஆப்கானித்தான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. ஆங்காங்கே வழக்கிலுள்ள மொழியும் எழுத்துகளும் பயன்படுத்தப்பட்டமை தனிச் சிறப்பாகும். கி.பி. 1958–ஆம் ஆண்டு அசோகரின் இரு மொழிக் (Bilingual) கல்வெட்டொன்று, ஆப்கானித்தானத்தில் காந்தகாருக்கருகில் சார்-இ-குனா (Shat–i–Kuna) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு கிரேக்க, அராமிய மொழிகளில் எழுதப்பட்டது. 1963-ஆம் ஆண்டு காந்தகாரில், அசோகரின் கிரேக்கமொழிக் கல்வெட்டுப் பகுதி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அசோகரின் கல்வெட்டுகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. பாறைக்கல்வெட்டுகள், 2. கற்றூண் கல்வெட்டுகள், பாறைக் கல்வெட்டுகனை (அ) சிறுபாறை ஆணைகள் (Minor Rock Edicts), (ஆ) பாறை ஆணைகள் (Rock Edicts) (இ) குகைக் கல்வெட்டுகள் (Cave Inscriptions) என்று மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். கற்றூண் கல்வெட்டுகளையும் (அ) சிறுதூண் ஆணைகள் (Minor Pillar Edicts), (ஆ) தூண் ஆணைகள் (Pillar Edicts), (இ) தூண் கல்வெட்டுகள் (Pillar Inscriptions) என்று மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவற்றுள் சிறுபாறை ஆணைகளையே முதன் முதலாக வெட்டினார். இக்கல்வெட்டுகள் ‘தேவானாம்பிய’ என்றும் ‘பியதசி’ என்றும் பிராகிருத மொழியில் இம்மன்னனின் பெயரைக் குறிப்பிடுகின்றன. மாசுகி, குச்சரா சிறுபாறை ஆணைகள் (Minor Rock Edicts) மட்டுமே அசோகர் என்ற பெயரைப் பொறிக்கின்றன. அசோகர் கல்வெட்டுகள் கீழ்க்கண்ட இடங்களில் காணப்படுகின்றன. ஆப்கானித்தானத்தில் பழைய காந்தகார் (Old Kandahar) அருகில்; பாகிசுத்தானத்தில் மான்சகேரா (Mansehra), சாபசுகார் (Shabar-garhi); நேபாளத்தில் பராரியா (Parariya), நிக்லிவா (Nigliva); இராசசுத்தானத்தில் பைரட் (Bairat); உத்தரப்பிரதேசத்தில் பகாபூர் (Bahapur), அக்ராரா (Ahrmum), கால்சி (Kalsi), அலகாபாத்து, மீரத்து, சாரநாத்து; குசராத்தில் கிரீநார் (Girnar); மத்தியப் பிரதேசத்தில் குசரா (Gujarra), உரூப்நாத் (Rupnath), சாஞ்சி; பீகாரில் சசாரம் (Sahasram) பராபர் குன்றுகள் (Barabar Hills), உலூரியா நந்தன்கர் (Lauriya Nandagarh); ஒரிசாவில் செளகதா (Jaugada), தௌலி (Dhauli); கருநாடகத்தில் கவிமாத்து (Gavimath)-மசுகி (Maski), பிரமகிரி (Bramagiri), சடிங்க இராமேசுவரம் (Jadinga Rameswaram), சித்தபுரம்; ஆந்திரப் பிரதேசத்தில் இராசுல மாந்தகிரி (Rojula Mandagiri), எர்ரகுடி (Erragudi). அசோகரின் கல்வெட்டுகளிலிருந்து புத்தரின் கொள்கைகள், சமய அலுவலர், அரசு அலுவலர், ஆட்சிச் சிறப்பு, அண்டை அரசுகள், நகரங்கள், வெளிநாட்டு அரசர்கள் போன்ற பல விவரங்களைத் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 196 |bSize = 480 |cWidth = 348 |cHeight = 176 |oTop = 385 |oLeft = 80 |Location = center |Description = }} {{center|அசோகரின் முதலாம் கற்றூண் கட்டளை-உலூரியா நந்தன்கர்}}<noinclude></noinclude> hgg8wsxqjo0ovq7bltw3fvxjk1ec4uf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/197 250 618063 1839495 1827608 2025-07-06T07:39:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசோதை{{sup|1}}|161|அஞ்சல் வழித் தொடர் கல்வி}}</noinclude>தெரிந்துகொள்ளலாம். அசோகரின் அலுவலர் மகாமாத்திரர் எனவும், சமயப் பரப்பாளர் தர்ம மகாமாத்திரர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிரதேசிகர், இராசுகர் (Rajukar), இராசுட்டிரிகர் (Rashtrika) போன்றவர்கள் ஆளுநர்கள் என்பதும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் செய்தியாம். இக்கல்வெட்டுகளில் மகதம், உச்சயினி, தட்சசீலம், சுவர்ணகிரி, தோசாலி (தெளலி), சமாபா, ஈசாலம் (சித்தபுரம்) ஆகிய நகரங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆப்கானித்தான் பகுதியில் வாழ்ந்த யவனர்கள், காம்போசர்கள், விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த போசர்கள், இராசுட்டிரிகர்கள், (Rashtrikas) ஆந்திரர்கள், புலிந்தர்கள், நாபகர்கள் (Nubhakos) போன்ற மக்களையும் இக்கல்வெட்டுகள் குறிக்கின்றன. அசோகரது ஆட்சிக்குட்படாத அரசர்களாகச் சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்தியபுத்திரர் ஆகியோர் குறிக்கப்படுவதாகக் கருதுகின்றனர். மேலும், வெளிநாட்டு அரசர்களாகக் கிரேக்கநாட்டு இரண்டாம் ஆண்டியோகசு தியோசு (கி.மு. 261–246), எகிப்தின் இரண்டாம் தாலமி பிலடெல்பசு (கி.மு. 285–247), மாசிடோனியாவின் ஆண்டிகோனசு கோநாடசு (கி.மு. 277–239), கிரேக்கநாட்டு அலெக்சாந்தர் (கி.மு. 272–255) முதலியோர் குறிக்கப்பட்டுள்ளனர். {{larger|<b>அசோதை{{sup|1}}</b>}} ஆயர் குலமகள்; நந்தகோபன் மனைவி. கண்ணனின் வளர்ப்புத் தாய். புகழைக் கொடுப்பவள் என்னும் பொருளில் வடமொழியிலுள்ள ‘யசோதை’ என்னும் பெயர், தமிழில் தற்பவமாய் ‘அசோதை’ என ஆயிற்று. கண்ணனை வளர்க்கும் பேறு பெற்று ஆயர் குலத்திற்கே புகழை அளித்தவள். ஆகையால் இவள் இப்பெயர் பெற்றான். இதற்கு முன் வசுமதி, தரா என்னும் பெயர்களைப் பெற்றிருந்தாள். பாகவதத்திலும் ஆழ்வார்களின் பாசுரங்களிலும் இவளைப் பற்றிய செய்திகள் காணக் கிடக்கின்றன. கண்ணன் வட மதுரைச் சிறைச்சாலையில் தேவகியின் திருவயிற்றில் பிறந்த அன்றே, இவள் வயிற்றிலும் ஒரு பெண் குழந்தை ‘யோக மாயை’யின் அம்சமாய்ப் பிறந்தது. அது பிறந்தவுடனேயே அசோதை, கரு உயிர்த்த துன்பத்தால் உணர்வற்று இருந்தாள். அவளருகில் இருந்தவர்கள் இவள் பட்ட துன்பத்தால் தாமும் உணர்வற்றிருந்தார்கள். அப்போது மழையும் காரிருளும் உலகை மூடின. யாதவ குலத் தோன்றலான வசுதேவன் தன் குழந்தையாகிய கண்ணனை, கஞ்சன் வாளுக்கு இரையாக்காமல் தப்புவிக்க வேண்டும் என்ற கருத்துடன், அவனைக் கொண்டு, நந்தன் மனை புகுந்தான். கண்ணனை அசோதை பக்கம் கிடத்தி, அவள்பெற்ற பெண் மகவைக் கொண்டு சென்று தேவகியின் பக்கலில் விட்டான். அதுவரை வாய் திறவாதிருந்த அப்பெண் குழந்தை, தேவகிபக்கம் கிடத்தப்பட்டவுடன் அழத் தொடங்கியது. அவ்வழு குரல் கேட்ட காவலாளர் கஞ்சனுக்கு அறிவிக்க அவன் ஓடிவந்து, குழந்தையைப் பறித்துத் தரையில் கிடத்திக் கொல்ல வாளை ஓச்சினான் அது கண்ட தேவகி அழுது புலம்பி, “இது பெண் குழந்தையாதலால், தீங்கு நேரிடாது, இதற்கு உயிர்ப் பிச்சையருள்க” என்று வேண்டினாள். கஞ்சன் உடன்படவில்லை, அவன் ஓங்கிய வாள் படு முன்பே அக்குழந்தை வானில் எழுந்து எட்டுக்கைகளுடன் கூடிய ஒளிவடிவாய்த் திகழ்ந்து நின்று, “ஓ! கஞ்சனே! என்னை வீணாய்க் கொல்ல முயன்றாய்! உன்னைக் கொல்ல வந்த சிறுவன் வேறு இடத்தில் வளர்கிறான். அவனால் நீ மடிவது பொய்யாகாது” என்று சொல்லி மறைந்தது. கோகுலத்தில் அசோதை மயக்கம் தீர்ந்து விழித்துப் பார்த்தபோது ‘நீலக்கல்’ போல் ஒளிபடைத்த ஆண் மகவைக் கண்டாள். அதனை நாளொரு மேனியும்பொழுதொரு வண்ணமுமாக வளர்த்தாள். அந்தக் குழந்தையின் உண்மை வரலாறு தெரிந்த பின்னும் தன் அருமைக் கண்மணியாகவே அன்புடன் வளர்த்தாள். கண்ணன் அசோதையிடம் வளர்ந்துவருங்கால் பல்வேறு இளமை விளையாட்டுகள் நிகழ்த்தியுள்ளான். தான் பரம்பொருள் என்பதனை உணர்த்தும் சில செயல்களையும் செய்து காட்டியுள்ளான். இவற்றையெல்லாம் அசோதை கண்ணுற்று மகிழ்ந்தும் வியந்தும் கண்ணனைப் போற்றி வந்துள்ளாள். இச்செயல்கள் பலவும் பாகவதத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அசோதை கண்ணனை உறங்கச் செய்துவிட்டு, யமுனையாற்றுக்குச் சென்றிருந்தபோது, அவன் விழித்தெழுந்து தன் கால்களால் சகடத்தை இறுத்த வரலாற்றை வியாசர் தம் பாரதத்தில் குறிப்பிட்டுள்ளார். அசோதை பற்றிய செய்திகள் பல ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் பல்வேறிடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. {{larger|<b>அசோதை{{sup|2}}:</b>}} சலத்காரு என்னும் முனிவருக்கு நாக கன்னியிடம் தோன்றியவர் அத்திகர். இவர்தான் சனமேசயனின் நாக வேள்விக்குச் சென்று, அவனை வேண்டி, அவ்வேள்வியை நிறுத்தி நாகங்களைக் காத்தார். இந்த அத்திகரின் மனைவி பெயர் அசோதை. இவள் முந்திய அசோதையின் வேறானவள். {{larger|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி:</b>}} அஞ்சல் மூலம் அளிக்கப்படும் கல்வி அஞ்சல் வழிக் கல்வி எனப்படும். இக்கல்வி தனி மனித முயற்சியின்பாற் பட்டதாகும். தனியொருவரின் தேவையை அடிப்படையாகக் கொண்டு, எவ்வித வெளிக்கட்டுப்பாடும் இன்றி, தன் விருப்பத்தின் பேரில், தன் நிலை, வயது, சூழ்நிலை, வேலை நிலை, வாழுமிடம் முதலியவற்றுக்குக் கட்டுப்படாது, தனது கல்வி முன்னேற்றத்திற்காக<noinclude> <b>வா.க. 1 _</b></noinclude> nm0cbd0w0q4hhuwtwuy8zpc29yvlw5h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/198 250 618065 1839497 1827622 2025-07-06T07:43:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அஞ்சல் வழித் தொடர் கல்வி|162|அஞ்சல் வழித் தொடர் கல்வி}}</noinclude>வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவும் கல்வியே அஞ்சல்வழிக் கல்வியாம் (Correspondence Education). கல்வி என்பது குறிப்பிட்ட சில ஆண்டுகட்கு, குறிப்பிட்ட வயதினர்க்கு, அதற்கென்றே அமைந்த நிறுவனங்களின் கற்பித்தல் என்ற பழங்கொள்கையை மாற்றி, திறமைகளையும் அடங்கிக் கிடக்கும் ஆற்றல்களையும் வாழ்நாள் முழுவதும் வெளிக் கொணர்ந்து மலர வைப்பது என்ற கருத்து, இன்று வளர்ச்சியடைந்துள்ளது. வாழ்நாள் முழுதும் கற்றல், பள்ளியில் கற்றல், பள்ளிக்கு வெளியே கற்றல், முறையாகக் கற்றல், முறைசாராமல் கற்றல், தொடர்ந்து கற்றல், பொது நிலையில் கற்றல், தொழில் நுணுக்கம் கற்றல், தொடர்ந்து மீளக் கற்றல் (Continuous and Recurrent Education) ஆகிய பல வழி முறைகளிலும் ஒருவர் தம்முடைய அறிவையும், திறமையையும் வளர்க்க வழிவகுப்பது கல்வியாம். வள்ளுவர் கூறியது போல், ‘சாந்துணையும் கற்றல்’ என்பதே இன்றைய கல்விக் கருத்தாகும். இந்தக் கண்ணோட்டத்தின் பொருள், கற்போர் தேவையானவற்றைத் தமது வசதிப்படி, தம் வேகத்தில் கற்கலாம் என்பதாகும். கற்கும் முறையும் அவரவர்க்கு ஏற்றபடி அமைய முடியும் என்பதே இன்றைய கல்வியின் அணுகு முறையாகும். பல இடர்ப்பாடுகளால் கற்றலை இடையில் நிறுத்தி, மீண்டும் கல்வியைத் தொடர விரும்புகின்றவர்களும், கல்விக்கூடங்கள் இல்லாத சிற்றூர்களில் வாழ்பவர்களும், ஆர்வமின்மையால் கற்பதை விடுத்துப் பின்னர் ஆர்வம் கொண்டு மீண்டும் கல்வி கற்க விழையவர்களும், மேற்படிப்பைத் தொடர விருப்பம் இருந்தும், அடிப்படைத் தகுதிகள் இருந்தும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயில இடமும் வாய்ப்பும் கிடைக்காதவர்களும், கல்வி, வாழ்வு முழுவதற்கும் உரியது என்ற கொள்கைக்காகத் தொடர்ந்து கற்க விரும்புபவர்களும், அறிவை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளவிரும்புபவர்களும், கல்வி கற்பதால் அதிகப்படியான வருவாய், ஊக்குவிப்புத் தொகை முதலியவை பெற இயலும் என்ற நிலையில் உள்ளவர்களும், தமது தொழில் முன்னேற்றம் கருதித் தொடர்ந்து படிக்க நினைப்பவர்களும், தாம் பணியாற்றும் பொறுப்புகட்குத் தக்கவாறு தம்மை ஆயத்தப்படுத்திப் பட்டங்கள் பெற எண்ணுபவர்களும், ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்க விரும்புபவர்களும், ஆர்வம் காரணமாகத் தாம் விரும்பும் பாடத்தை மேன்மேலும் படிக்க எண்ணுபவர்களும் விரும்பக்கூடிய ஒருவகைக் கல்வி முறையே அஞ்சல்வழிக் கல்வி முறையாகும். பணியாற்றிக்கொண்டே கற்க விரும்புவோர், தாம் விரும்பும் துறைகளில் அறிவுவளர்ச்சி அடைய விரும்புவோர், பொருளாதார, சமூக, கல்வி முன்னேற்றங் காண விழைவோர், வேலையின்றி இருக்கும் காலங்களில் தமது தகுதியை வளர்த்துக் கொள்ள நினைப்போர், மற்றும் பணியாற்றாத பெண்டிர், விதவையர், உடல் ஊனமுற்றோர், வயதான, ஓய்வு பெற்ற பிரிவினர் அனைவர்க்கும் கல்வி பயில வழி செய்வது அஞ்சல்வழிக் கல்வியாகும். இந்திய மைய அரசில் கல்வி அமைச்சராக இருந்த கே.எல். சிரிமாலி (Shri Mali) மக்களின் பெருகிவரும் உயர் கல்வித் தேவைகளை உணர்ந்து, அஞ்சல்வழிக் கல்வித் திட்டத்தின் மூலம்தான் மக்களின் கல்வித் தேவைகளை நிறைவு செய்ய இயலும் எனத் தெரிந்து, கோத்தாரியின் தலைமையில் 1969-இல் அஞ்சல் வழிக் கல்வி பற்றி ஆய்ந்திட ஒரு குழு நியமித்தார். அக்குழு, நாட்டின் உயர் கல்வித் தேவைகளை நிறைவு செய்ய அஞ்சல் வழிக் கல்வி முறை இன்றியமையாதது எனத் தீர்மானித்தது. இதையொட்டி, தில்லிப் பல்கலைக்கழகம் 1962–ஆம் ஆண்டு அஞ்சல் வழிக்கல்வித் துறையைத் தொடங்கியது. இதன் பின், பஞ்சாபு, மைசூர், இமாசலப் பிரதேசம், பம்பாய், மதுரை, வேங்கடேசுவரா, ஆந்திரா, மூரத்து, குருச்சேத்திரா, அண்ணாமலை, சென்னைப் பல்கலைக்கழகங்கள் அஞ்சல்வழிக் கல்வித்துறையைத் தொடங்கி நடத்தி வருகின்றன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வித் துறை, 1971–ஆம் ஆண்டு டாக்டர் மு. வரதராசனார் அவர்களால் 1054 மாணாக்கர்களுடன் தொடங்கி வைக்கப்பட்டது. 1972 முதல் புகுமுகவகுப்புத் தொடங்கப்பட்டதன் விளைவாக மாணாக்கர்களின் எண்ணிக்கை பன்மடங்கானது. பாடங்களைத் தமிழ் வழியிற் கற்க ஏற்பாடுகள் செய்த பின்னர், பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 70 விழுக்காடு மிகுதியானது. 1977 முதல் 1982 வரை தமிழ், வரலாறு, ஆங்கிலம், பொருளாதாரம் வணிகவியல், அரசியல், அறிவியல் ஆகிய பாடங்களில், முதுநிலை வகுப்புகள் தொடங்கப்பட்டு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகள் வாயிலாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. புகுமுக வகுப்புகள் 1978–இல் கல்லூரிகளிலிருந்து நீக்கப்பட்டு, மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டன. அம்மேல்நிலைப் பள்ளிகளில் பணியேற்று. ஆசிரியப்பட்டம் பெறாத முதுநிலைப் பட்டதாரிகளின் தேவைகளை நிறைவு செய்ய, பி.எட்., எம்.எட். வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. {{nop}}<noinclude></noinclude> j4h1c0f3zdz85u56ua0bsg66wvmqhu8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/199 250 618069 1839498 1827676 2025-07-06T07:46:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அஞ்சல் வழித் தொடர் கல்வி|163|அஞ்சல் வழித் தொடர் கல்வி}}</noinclude>பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி “காந்தியக் கொள்கை”யை முதன்மைப் பாடமாகக் கொண்ட முதுநிலைப் பாடப்பிரிவு 1982–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் திறந்த வெளிப் பல்கலைக்கழகத் திட்டத்தின் மூலம் (Open University) பட்ட முன்படிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று நிலைகளில் இப்படிப்புத் திட்டம் அமைந்துள்ளது. அறிமுக நிலை ஆறு மாதங்கட்கும், தொடக்க நிலை ஓர் ஆண்டிற்கும், அடிப்படை நிலை ஈராண்டுகட்கும் எனப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பத்தாண்டுப் பள்ளியிறுதி வகுப்பிற்குச் சமமாகத் தொடக்கநிலையும், பழைய 11 ஆண்டும் பள்ளியிறுதி வகுப்பிற்குச் சமமாக, அடிப்படை முதலாம் ஆண்டும், பழைய புகுமுக வகுப்பிற்கும், புதிய 12–ஆம் வகுப்பிற்கும் சமமாக அடிப்படை இரண்டாம் ஆண்டும் எனப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் இக்கல்வித் திட்டத்தில் சேரலாம். அறிமுகநிலையில் சேர்பவர்கள் குறைந்தது 14 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலப் பாடம் தவிர அனைத்துப் பாடங்களும் தமிழ் வழியிற் கற்பிக்கப்படுகின்றன. மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணாக்கர்கட்கு வானொலி மூலம் பாடங்கள் ஒலிபரப்பப்படுகின்றன. திருச்சி, சென்னை, கோயமுத்தூர், திருநெல்வேலி வானொலி நிலையங்கள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. மாணாக்கர்கட்கு முதற்பாடத் தொகுதி அனுப்பும்பொழுது ஒலிபரப்புப் பட்டியலும் அனுப்பப்படுகிறது. அஞ்சல்வழிக் கல்வியில் ஒப்படைகள் (Assignments), மீள்விடைத் தாள்கள் (Response Sheets) ஆகியவை சிறப்பான கூறுகளாகும். பாடங்களோடு அனுப்பப்படும் ஒப்படைகள், வினா விடைப்பகுதிகள், மீள்விடைத்தாள்கள் முதலியவற்றிற்கு மாணாக்கர்கள் விடை அனுப்ப வேண்டும். அவ்வாறு மாணாக்கர்களால் அனுப்பப்பட்ட விடைப் பகுதிகள் ஆசிரியர்களால் திருத்தப்பட்டுத் தேவையான விளக்கங்களோடு மாணாக்கர்கட்கு மீண்டும் அனுப்பப்படுகின்றன. இவ்வாறாக மாணாக்கர்கட்கு எழுத்துப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்த அளவு இத்தனை மீள் விடைத் தாள்கள் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களால் அனுப்பப்பட வேண்டும் என்ற விதி உண்டு. ஆசிரிய, மாணாக்கர்களிடையே நல்லுறவு ஏற்படவும், பாடங்கள் தொடர்பாகத் தங்கள் ஐயங்களைக் களையவும், மாணாக்கர்கட்குப் பாடங்களைக் குறைந்த நேரத்தில் விளக்கமாக மனத்தில் பதியும் வண்ணம் எடுத்துக் கூறவும், தொடர்பு வகுப்புகள் (Contact Classes) பல மையங்களில் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாள்களில் நடத்தப்படுகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழிக் கல்வி இயக்ககம் பி.எட்., எம்.எட் போன்ற கல்வித்துறை வகுப்புகளையும், சமூகவியல், உளவியல், பொருளாதாரம், தமிழ், ஆங்கிலம், வணிகனியல், வரலாறு, இயற்பியல், வேதியல், கணிதம் என்பவற்றை முதன்மைப் பாடங்களாகக் கொண்ட முதுகலைப்பட்ட வகுப்புகளையும் நடத்துகிறது. மேலும், இளங்கலையில் அனைத்துப் பாடப்பிரிவுகளும், சட்டத்துறைச் சான்றிதழ் வகுப்புகளும், அடிப்படைநிலை வகுப்புகளும், அஞ்சல்வழிக் கல்வி மூலம் நடத்தப்படுகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், தமிழ், வரலாறு, பொருளாதாரம் ஆகிய முதன்மைப் பாடங்களைக் கொண்ட இளங்கலை வகுப்புகளும் முதுகலை வகுப்புகளும் அஞ்சல்வழிப் பயிற்றுவிக்கப்படுகின்றன. பல்வேறு மையங்களில் தொடர்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி பற்றி ஓர் ஆய்வு அப்பல்கலைக்கழகக் கல்வித் துறையால் மேற்கொள்ளப்பட்டது. அஞ்சல் வழியில் பயிலும் மாணாக்கர்களில் பெரும்பாலோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தோராவர். ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கினர் மாத வருமானம் ரூ. 500–க்கும் குறைந்தோராவர். அஞ்சல்வழிக் கல்வித்துறையில் படிக்கும் மாணாக்கர்களில், 20–30 வயதுப் பிரிவினரே மிகுதியாகப் பயில்கின்றனர் என்றும், அடுத்தபடியாக 30-40 வயதுப் பிரிவினர் என்றும், ஐந்து விழுக்காட்டினர் 40 வயதிற்கு மேற்பட்டவர் என்றும் அறியப்பட்டது. இந்த ஆய்வில், அலுவலர், பணியாளர், படை வீரர், வங்கியில் பணிபுரிவோர், தொழில் துறையினர், கல்வி நிறுவனத்தினர், பொறியாளர், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர், சுயதொழில் செய்வோர், குடும்பப் பெண்டிர், வேலையற்றிருப்போர், சிறையில் வாடுவோர் எனச் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் இவ்வஞ்சல்வழிக் கல்வி மூலம் பயன் பெறுகின்றனர் என அறியப்பட்டது. பயன் பெறுவோருள் ஆசிரியர், வேலையின்றி இருப்போர் ஆகியோரின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. அஞ்சல்வழிக் கல்வி மூலம் படித்தல், மாணாக்கரின் வாழ்வில் ஏற்படுத்திய விளைவுகளைக் கணக்கிட்டுள்ளனர். சமுதாயத்தில் தம் நிலை உயர்ந்துள்ளது என ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினரும்,<noinclude></noinclude> 8g1xogu3qr6wqgon4mjptcil5iir9t1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/200 250 618070 1839500 1827685 2025-07-06T07:52:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அஞ்சனை{{sup|1}}|164|அஞ்சில் அஞ்சியார்}}</noinclude>கல்விப் பயன்கள் விளைந்துள்ளன என நான்கில் ஒரு பங்கினரும், தொழில் பயன்கள் விளைந்துள்ளன என ஆறில் ஒரு பங்கினரும், கற்றுள்ளோம் என்ற மன உணர்வு சிறக்கின்றது என ஒன்பதில் ஒரு பங்கினரும், பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளோம் எனப் பதினொன்றில் ஒரு பங்கினருமாக மாணாக்கர் தாம் பெற்ற பயன்களைத் தெரிவித்துள்ளனர். அஞ்சல்வழிக் கல்வி முறையை மேலும் வளப்படுத்த வேண்டுமானால், பாடக் குறிப்புகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனுப்புதல், பாடங்களை நிரலாக-வரிசையாக அனுப்புதல், தேர்வு நேரங்களில் மொத்தமாக அனுப்புவதைத் தவிர்த்தல் ஆகியன இன்றியமையாதனவாகும். மேலும், மிகுதியான மாணாக்கர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இருப்பதால், ஐயங்களை நீக்க வழியில்லை; தனிக் கவனம் செலுத்தவும் வழியில்லை. ஆகையால் தொடர்பு வகுப்புகளில், ஒவ்வொரு பிரிவிற்குமுரிய மாணாக்கரின் எண்ணிக்கையை வரையறுத்தல் வேண்டும்.{{float_right|ஜெ.கோ.பி.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bhatia, S.C.,</b> “Continuing Education - Status and Direction”, Indian University Association for Continuing Education, Delhi, 1982. <b>Gupta, S.k.,</b> “Evaluation of Students performance in Correspondence Education”, 1980. <b>Pillai, J.K.,</b> “Pedagogy to Methetics”, “Sarvodaya Illakkiya Pannai” Madurai, 1982. <b>Pillai, J.K., Mohan, S.,</b> “Impact and Performance of Correspondence Education Programme of Madurai Kamaraj University”, Department of Education, Madurai Kamaraj University, 1983. <b>Ron Glutter Wedell, B.G.,</b> “Study by Correspondence”, Longman Group Ltd., London, 1971. <b>Sukdev Singh Chib,</b> “Teaching by Correspondence in India”, Light and Life Publishers, New Delhi, 1977. {{larger|<b>அஞ்சனை{{sup|1}}</b>}} என்பவள் குஞ்சரன் என்னும் வானர வீரனின் மகள்; கேசரி என்னும் வானர வீரன் மனைவி; காற்றுக் கடவுளொடு கூடி அனுமனை ஈன்றெடுத்தவள், இவள் அஞ்சனாதேவி என்றும் அழைக்கப்படுவான். “காற்றின் வேந்தற்கு, அஞ்சனை வயிற்று வந்தேன், நாமமும் அநுமன் என்பேன்” என்று கூறி அநுமன் தன்னை இராம இலக்குவர்களுக்குக் கிட்சிந்தையில் அறிமுகப்படுத்திக் கொண்டனன். அஞ்சனையின் மகனாதலின் அனுமன் ஆஞ்சநேயன் எனவும் அழைக்கப்பெற்றான். வான்மீகி இராமாயணத்தில் அஞ்சனைக்கும் காற்றுக்கடவுளுக்கும் இடையே ஏற்பட்ட உறவு விரித்துரைக்கப்படுகிறது. அவ்வுறவிற் பிறந்தவனே ஆஞ்சநேயன், சாபத்தால் ஒரு கந்தருவப் பெண் காமரூபிணி என்னும் குரங்காகிக் கேசரி என்னும் ஆண்குரங்கினை மணந்தாள், இவள் தன் உண்மை உருவில் உலவுகையில் காற்றுத்தேவன் கண்டு காமுற்றுக் கூடினான். அதனால் பிறந்தவன் அனுமன் என்று இராமாயணம் கூறுகிறது. {{larger|<b>அஞ்சனை{{sup|2}}</b>}} மகப்பேறு வேண்டி வேங்கட மலையில் தவஞ்செய்தாள். மலைவளம் காண அங்குவந்த உருத்திரன், சத்தி ஆகியோர்க்கு முன் ஆணும் பெண்ணுமாய் இரு குரங்குகள் மகிழ்ந்து ஆடிக்கூட அதனைக் கண்ட உருத்திரன்பால் வெளிப்பட்ட வீரியத்தைக் காற்றுத் தேவன் ஏந்தி அங்குத் தவஞ்செய்த அஞ்சனையின் கையிலிட்டான். அதனைப் பழமென்று உட்கொண்ட அவள் அனுமனைப் பெற்றெடுத்தாள் என்று திருவேங்கட புராணம் உரைக்கிறது. {{larger|<b>அஞ்சனை{{sup|3}}</b>}} சாருவபூமம் என்னும் திசையானையின் மனைவி. எட்டுத் திசைகளிலும் காவலாக நிறுத்தப்பட்டுள்ள எட்டு ஆண்யானைகளுள் வடதிசைக்கண் உள்ள யானை சாருவபூமம் என்பதாகும்.{{float_right|ஆர்.கி.}} {{larger|<b>அஞ்சி</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த அரசனும் வள்ளலும் ஆவான். காண்க: அதியமான்(2). {{larger|<b>அஞ்சியத்தை மகள் நாகையார்:</b>}} காண்க: அஞ்சிலாந்தை மகனார். {{larger|<b>அஞ்சில் அஞ்சியார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். அஞ்சில் என்னும் ஊரினராதலின் இவர் ஊரோடு சேர்த்து அஞ்சிலஞ்சியார் என அழைக்கப்பட்டார். என்றுசிலரும், பாடலில் அமைந்துள்ள அஞ்சில் என்னும் தொடரினை அடைமொழியாகக் கொண்டு இவர் இவ்வாறு அழைக்கப்பட்டார் என்று வேறு சிலரும் கருதுகின்றனர். அஞ்சி என்பது தகடூரைத் தலைநகராகக்கொண்ட சிறிய நாட்டை ஆண்டு வந்த அதியரைக் குறிக்க வழங்கிய பெயராகும். எனவே, அஞ்சில் அஞ்சியார் அதியர் குடியில் வந்தவராதல் வேண்டும் என்று கருத இடமுண்டு. இவர் பாடிய பாடலாக நமக்குக் கிடைத்திருப்பது நற்றிணை 90-ஆம் பாடல் ஒன்று மட்டுமேயாம். மருதத் திணையைச் சார்ந்த இப்பாடல், தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயில் மறுக்கும் துறையில் அமைந்துள்ளது. இப்பாடலால் ஆடைக்குக் கஞ்சி தோய்த்து அணியும் பழக்கமும், ஆடைகளில் பூ வேலைப்பாடு செய்யும் திறமும், பனை நாரினால்<noinclude></noinclude> qq5s26447ej5pukpi19atc4j9zqmu1u பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5 250 619541 1839303 1835615 2025-07-05T12:06:43Z Info-farmer 232 இணைப்பு 1839303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr}}{{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}} {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> 1 }} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|(1) பகலாட்டு]] ❠ ௧. கோலி ❠ (௧) பாண்டி நாட்டு முறை ❠ (௨) சோழ கொங்கு நாட்டு முறை 4 I. பேந்தா ❠ (i) சதுரப் பேந்தா ❠ (ii) வட்டப் பேந்தா 7 II. அஞ்சல குஞ்சம் 10 III. இருகுழியாட்டம் (இஷ்டம்) 14 IV. முக்குழியாட்டம் </br>(சேலம்வட்டார முறை) ௨. தெல் 19 ௩. சில்லாங் குச்சு 20 (௧) பாண்டி நாட்டுமுறை ❠ (௨) சோழ கொங்கு நாட்டுமுறை 24 I. கில்லித் தாண்டு ❠ II. கிட்டிப்புள் 26 ௪. பந்து 27 I. பேய்ப்பந்து ❠ II. பிள்ளையார் பந்து 28 ௫. மரக்குரங்கு 30 ௬. “காயா பழமா” 31 ௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’ 32 ௮. குச்சு விளையாட்டு 33<noinclude></noinclude> ke5v7d3xxkum874sabocuukxeot7jqp 1839306 1839303 2025-07-05T12:14:04Z Info-farmer 232 துணைப்பக்கங்களுடன் இணைப்பு 1839306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr}}{{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}} {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> 1 }} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|(1) பகலாட்டு]] ❠ ௧. கோலி ❠ (௧) பாண்டி நாட்டு முறை ❠ (௨) சோழ கொங்கு நாட்டு முறை 4 I. பேந்தா ❠ (i) சதுரப் பேந்தா ❠ (ii) வட்டப் பேந்தா 7 II. அஞ்சல குஞ்சம் 10 III. இருகுழியாட்டம் (இஷ்டம்) 14 IV. முக்குழியாட்டம் </br>(சேலம்வட்டார முறை) ௨. தெல் 19 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] 20 (௧) பாண்டி நாட்டுமுறை ❠ (௨) சோழ கொங்கு நாட்டுமுறை 24 I. கில்லித் தாண்டு ❠ II. கிட்டிப்புள் 26 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]] 27 I. பேய்ப்பந்து ❠ II. பிள்ளையார் பந்து 28 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] 30 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] 31 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] 32 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] 33<noinclude></noinclude> 79dm1qyqscppgauzd6har1svkptvucd 1839359 1839306 2025-07-05T13:03:18Z Booradleyp1 1964 1839359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr}}{{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}} {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> 1 }} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|(1) பகலாட்டு]] ❠ ௧. கோலி ❠ (௧) பாண்டி நாட்டு முறை ❠ (௨) சோழ கொங்கு நாட்டு முறை 4 I. பேந்தா ❠ (i) சதுரப் பேந்தா ❠ (ii) வட்டப் பேந்தா 7 II. அஞ்சல குஞ்சம் 10 III. இருகுழியாட்டம் (இஷ்டம்) 14 IV. முக்குழியாட்டம் </br>(சேலம்வட்டார முறை) ௨. தெல் 19 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] 20 (௧) பாண்டி நாட்டுமுறை ❠ (௨) சோழ கொங்கு நாட்டுமுறை 24 I. கில்லித் தாண்டு ❠ II. கிட்டிப்புள் 26 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]] 27 I. பேய்ப்பந்து ❠ II. பிள்ளையார் பந்து 28 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] 30 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] 31 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] 32 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] 33 {{nop}}<noinclude></noinclude> pi5v7r44pxipo5x26l2wpfaz5wau4ve 1839430 1839359 2025-07-06T04:16:24Z Info-farmer 232 {{dhr|3em}} 1839430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}} {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> 1 }} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|(1) பகலாட்டு]] ❠ ௧. கோலி ❠ (௧) பாண்டி நாட்டு முறை ❠ (௨) சோழ கொங்கு நாட்டு முறை 4 I. பேந்தா ❠ (i) சதுரப் பேந்தா ❠ (ii) வட்டப் பேந்தா 7 II. அஞ்சல குஞ்சம் 10 III. இருகுழியாட்டம் (இஷ்டம்) 14 IV. முக்குழியாட்டம் </br>(சேலம்வட்டார முறை) ௨. தெல் 19 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] 20 (௧) பாண்டி நாட்டுமுறை ❠ (௨) சோழ கொங்கு நாட்டுமுறை 24 I. கில்லித் தாண்டு ❠ II. கிட்டிப்புள் 26 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]] 27 I. பேய்ப்பந்து ❠ II. பிள்ளையார் பந்து 28 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] 30 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] 31 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] 32 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] 33 {{nop}}<noinclude></noinclude> aq8m0io5ezyeqekdb8dggv7yssi8kv8 1839432 1839430 2025-07-06T04:19:42Z Info-farmer 232 {{block_center|width=600px| 1839432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> 1 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|(1) பகலாட்டு]] ❠ ௧. கோலி ❠ (௧) பாண்டி நாட்டு முறை ❠ (௨) சோழ கொங்கு நாட்டு முறை 4 I. பேந்தா ❠ (i) சதுரப் பேந்தா ❠ (ii) வட்டப் பேந்தா 7 II. அஞ்சல குஞ்சம் 10 III. இருகுழியாட்டம் (இஷ்டம்) 14 IV. முக்குழியாட்டம் </br>(சேலம்வட்டார முறை) ௨. தெல் 19 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] 20 (௧) பாண்டி நாட்டுமுறை ❠ (௨) சோழ கொங்கு நாட்டுமுறை 24 I. கில்லித் தாண்டு ❠ II. கிட்டிப்புள் 26 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]] 27 I. பேய்ப்பந்து ❠ II. பிள்ளையார் பந்து 28 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] 30 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] 31 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] 32 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] 33 }} {{nop}}<noinclude></noinclude> ncy45c532vdvdo5hupn0z7axw5y5api 1839444 1839432 2025-07-06T04:28:58Z Info-farmer 232 {{float_right|}} 1839444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> 1 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]] {{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} (௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை 4 I. பேந்தா {{float_right|❠}} (i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா 7 II. அஞ்சல குஞ்சம் 10 III. இருகுழியாட்டம் (இஷ்டம்) 14 IV. முக்குழியாட்டம் </br>(சேலம்வட்டார முறை) ௨. தெல் 19 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] 20 (௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை 24 I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் 26 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]] 27 I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து 28 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] 30 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] 31 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] 32 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] 33 }} {{nop}}<noinclude></noinclude> n3snz7ucmxjm06e2kkjojg5yv0d0f66 1839445 1839444 2025-07-06T04:30:19Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1839445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> 1 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]] {{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை 4}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} (i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா 7 II. அஞ்சல குஞ்சம் 10 III. இருகுழியாட்டம் (இஷ்டம்) 14 IV. முக்குழியாட்டம் </br>(சேலம்வட்டார முறை)}} ௨. தெல் 19 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] 20 (௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை 24 I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் 26 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]] 27 I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து 28 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] 30 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] 31 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] 32 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] 33 }} {{nop}}<noinclude></noinclude> 9iynjo3446m9rk86ysx4crrlzngc0j5 1839446 1839445 2025-07-06T04:32:53Z Info-farmer 232 {{float_right|}} 1839446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]] {{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் 10 III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் </br>(சேலம்வட்டார முறை)}} <b>௨. தெல்</b> {{float_right|19}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] 20 (௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை 24 I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் 26 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]] 27 I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து 28 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] 30 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] 31 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] 32 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] 33 }} {{nop}}<noinclude></noinclude> ep8kmu6k4lkxxh4dj1wmn4sffv975fy 1839448 1839446 2025-07-06T04:34:04Z Info-farmer 232 {{float_right|}} 1839448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]] {{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் </br>(சேலம்வட்டார முறை)}} <b>௨. தெல்</b> {{float_right|19}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] 20 (௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}} I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]] 27 I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] 30 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] 31 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] 32 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] 33 }} {{nop}}<noinclude></noinclude> ls9030e0kqf16lka7uuqw43enez5fk0 1839465 1839448 2025-07-06T06:05:21Z Info-farmer 232 {{Dtpl|symbol= |dottext= | | 1839465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]]{{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் </br>(சேலம்வட்டார முறை)}} <b>௨. தெல்</b> {{float_right|19}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] | {{DJVU page link|20|12}}}} (௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}} I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]] 27 I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] 30 {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] 31 {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] 32 {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] 33 }} {{nop}}<noinclude></noinclude> ol85kneowg1n1kfofn6h4fu76cxdhtj 1839466 1839465 2025-07-06T06:07:30Z Info-farmer 232 | {{DJVU page link|20|12}}}} 1839466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]]{{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் </br>(சேலம்வட்டார முறை)}} <b>௨. தெல்</b> {{float_right|19}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] | {{DJVU page link|20|12}}}} (௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}} I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]]| {{DJVU page link|27|12}}}} I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] | {{DJVU page link|30|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] | {{DJVU page link|31|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] | {{DJVU page link|32|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] | {{DJVU page link|33|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> 8xinyekf7xapm3un6xvuu5vyv7p26rw 1839467 1839466 2025-07-06T06:08:42Z Info-farmer 232 17 1839467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]]{{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் </br>(சேலம்வட்டார முறை)}} {{float_right|17}} <b>௨. தெல்</b> {{float_right|19}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] | {{DJVU page link|20|12}}}} (௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}} I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]]| {{DJVU page link|27|12}}}} I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] | {{DJVU page link|30|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] | {{DJVU page link|31|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] | {{DJVU page link|32|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] | {{DJVU page link|33|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> sacxl588hknhhmr4wmgpp82uz3p77ql 1839469 1839467 2025-07-06T06:09:46Z Info-farmer 232 {{float_right|17}} 1839469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]]{{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் (சேலம்வட்டார முறை) {{float_right|17}} }} <b>௨. தெல்</b> {{float_right|19}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] | {{DJVU page link|20|12}}}} (௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}} I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]]| {{DJVU page link|27|12}}}} I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] | {{DJVU page link|30|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] | {{DJVU page link|31|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] | {{DJVU page link|32|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] | {{DJVU page link|33|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> bhmayvziqszelatmwnwnc3zamqh0w75 1839471 1839469 2025-07-06T06:11:51Z Info-farmer 232 {{left_margin|6em| 1839471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]]{{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் (சேலம்வட்டார முறை) {{float_right|17}} }} <b>௨. தெல்</b> {{float_right|19}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] | {{DJVU page link|20|12}}}} (௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}} {{left_margin|6em| I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]]| {{DJVU page link|27|12}}}} {{left_margin|6em| I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] | {{DJVU page link|30|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] | {{DJVU page link|31|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] | {{DJVU page link|32|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] | {{DJVU page link|33|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> 1i6aro1e5dm0q6jgcjnypyfhtesj4to 1839472 1839471 2025-07-06T06:12:35Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1839472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]]{{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் (சேலம்வட்டார முறை) {{float_right|17}} }} <b>௨. தெல்</b> {{float_right|19}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] | {{DJVU page link|20|12}}}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}}}} {{left_margin|6em| I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]]| {{DJVU page link|27|12}}}} {{left_margin|6em| I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] | {{DJVU page link|30|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] | {{DJVU page link|31|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] | {{DJVU page link|32|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] | {{DJVU page link|33|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> 47a6llb056wrmlp3h74n9z1peafvhvo 1839473 1839472 2025-07-06T06:15:33Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ துணைப்பக்கங்கள் உள்ள தலைப்புகளுக்கு ஒருங்கிணைவு வார்ப்புருக்கள் இடப்பட்டு இணைப்புகள் சரியாக உள்ளன 1839473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} 1. ஆண்பாற் பகுதி: </b> {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]]{{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் (சேலம்வட்டார முறை) {{float_right|17}} }} <b>௨. தெல்</b> {{float_right|19}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] | {{DJVU page link|20|12}}}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}}}} {{left_margin|6em| I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]]| {{DJVU page link|27|12}}}} {{left_margin|6em| I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] | {{DJVU page link|30|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] | {{DJVU page link|31|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] | {{DJVU page link|32|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] | {{DJVU page link|33|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> lrzu7iofubozok40x53f5qlwqtc7abx 1839488 1839473 2025-07-06T06:31:12Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} {{larger| 1. ஆண்பாற் பகுதி:}} </b> {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]]{{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் (சேலம்வட்டார முறை) {{float_right|17}} }} <b>௨. தெல்</b> {{float_right|19}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|௩. சில்லாங் குச்சு]] | {{DJVU page link|20|12}}}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}}}} {{left_margin|6em| I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|௪. பந்து]]| {{DJVU page link|27|12}}}} {{left_margin|6em| I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] | {{DJVU page link|30|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] | {{DJVU page link|31|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] | {{DJVU page link|32|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] | {{DJVU page link|33|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> 3h74zja52ua3jcrkcebd0tsvoroev7b 1839489 1839488 2025-07-06T06:32:16Z Info-farmer 232 <b></b> 1839489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|10em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} {{larger| 1. ஆண்பாற் பகுதி:}} </b> {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|(1) பகலாட்டு}}]]{{float_right|❠}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் (சேலம்வட்டார முறை) {{float_right|17}} }} <b>௨. தெல்</b> {{float_right|19}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|'''௩. சில்லாங் குச்சு''']] | {{DJVU page link|20|12}}}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}}}} {{left_margin|6em| I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|<b>௪. பந்து</b>]]| {{DJVU page link|27|12}}}} {{left_margin|6em| I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] | {{DJVU page link|30|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] | {{DJVU page link|31|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] | {{DJVU page link|32|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] | {{DJVU page link|33|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> j2ljsru3g27aqj2r9yyypc8x63hzdsx பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/6 250 619542 1839374 1838001 2025-07-05T13:24:05Z Booradleyp1 1964 1839374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|௯. பம்பரம்]] 35 I. ஓயாக்கட்டை ❠ II. உடைத்த கட்டை ❠ III. பம்பரக்குத்து 36 IV. இருவட்டக்குத்து 37 V. தலையாரி 38 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|க0. பட்டம்]] 39 (2) இரவாட்டு 40 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|௧. குதிரைக்குக் காணங் கட்டல்]] ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|௨. வண்ணான் தாழி]] 43 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|௩. ‘சூ’ விளையாட்டு]] 46 (க) பாண்டிய நாட்டுமுறை ❠ (உ) சோழ நாட்டுமுறை ❠ (3) இருபொழுதாட்டு 49 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|க. கிளித்தட்டு]] ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௨. பாரிக்கோடு]] 54 I. காலாளம்பாரி ❠ II. எட்டாளம்பாரி ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௩. அணிற்பிள்ளை]] 55 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௪. சடுகுடு]] 57 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] 61 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௬. பூக்குதிரை]] 62 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௭. பச்சைக்குதிரை]] 63 I. ஒருவகை ❠ II. மற்றொருவகை ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021|௮. குதிரைச் சில்லி]] 64 {{nop}}<noinclude></noinclude> 9dc5j2njv6t0e5v393rl5y1iinss7qj 1839378 1839374 2025-07-05T13:34:40Z Booradleyp1 1964 1839378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|௯. பம்பரம்]] 35 I. ஓயாக்கட்டை ❠ II. உடைத்த கட்டை ❠ III. பம்பரக்குத்து 36 IV. இருவட்டக்குத்து 37 V. தலையாரி 38 க0. பட்டம் 39 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|(2) இரவாட்டு]] 40 ௧. குதிரைக்குக் காணங் கட்டல்]] ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|௨. வண்ணான் தாழி]] 43 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|௩. ‘சூ’ விளையாட்டு]] 46 (க) பாண்டிய நாட்டுமுறை ❠ (உ) சோழ நாட்டுமுறை ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|(3) இருபொழுதாட்டு]] 49 க. கிளித்தட்டு ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|௨. பாரிக்கோடு]] 54 I. காலாளம்பாரி ❠ II. எட்டாளம்பாரி ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௩. அணிற்பிள்ளை]] 55 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௪. சடுகுடு]] 57 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] 61 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௬. பூக்குதிரை]] 62 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௭. பச்சைக்குதிரை]] 63 I. ஒருவகை ❠ II. மற்றொருவகை ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௮. குதிரைச் சில்லி]] 64 {{nop}}<noinclude></noinclude> gi97bxm1mxz12dqx76a91s1ko6077fj 1839433 1839378 2025-07-06T04:20:07Z Info-farmer 232 {{block_center|width=600px| 1839433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|௯. பம்பரம்]] 35 {{block_center|width=600px| I. ஓயாக்கட்டை ❠ II. உடைத்த கட்டை ❠ III. பம்பரக்குத்து 36 IV. இருவட்டக்குத்து 37 V. தலையாரி 38 க0. பட்டம் 39 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|(2) இரவாட்டு]] 40 ௧. குதிரைக்குக் காணங் கட்டல்]] ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|௨. வண்ணான் தாழி]] 43 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|௩. ‘சூ’ விளையாட்டு]] 46 (க) பாண்டிய நாட்டுமுறை ❠ (உ) சோழ நாட்டுமுறை ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|(3) இருபொழுதாட்டு]] 49 க. கிளித்தட்டு ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|௨. பாரிக்கோடு]] 54 I. காலாளம்பாரி ❠ II. எட்டாளம்பாரி ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௩. அணிற்பிள்ளை]] 55 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௪. சடுகுடு]] 57 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] 61 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௬. பூக்குதிரை]] 62 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௭. பச்சைக்குதிரை]] 63 I. ஒருவகை ❠ II. மற்றொருவகை ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௮. குதிரைச் சில்லி]] 64 }} {{nop}}<noinclude></noinclude> 7javi6h0yg2kz2nj7r51czwq8491sbk 1839442 1839433 2025-07-06T04:24:58Z Info-farmer 232 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|௯. பம்பரம்]] 35 1839442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|௯. பம்பரம்]] 35 I. ஓயாக்கட்டை ❠ II. உடைத்த கட்டை ❠ III. பம்பரக்குத்து 36 IV. இருவட்டக்குத்து 37 V. தலையாரி 38 க0. பட்டம் 39 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|(2) இரவாட்டு]] 40 ௧. குதிரைக்குக் காணங் கட்டல்]] ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|௨. வண்ணான் தாழி]] 43 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|௩. ‘சூ’ விளையாட்டு]] 46 (க) பாண்டிய நாட்டுமுறை ❠ (உ) சோழ நாட்டுமுறை ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|(3) இருபொழுதாட்டு]] 49 க. கிளித்தட்டு ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|௨. பாரிக்கோடு]] 54 I. காலாளம்பாரி ❠ II. எட்டாளம்பாரி ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௩. அணிற்பிள்ளை]] 55 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௪. சடுகுடு]] 57 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] 61 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௬. பூக்குதிரை]] 62 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௭. பச்சைக்குதிரை]] 63 I. ஒருவகை ❠ II. மற்றொருவகை ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௮. குதிரைச் சில்லி]] 64 }} {{nop}}<noinclude></noinclude> 7f8ckf3ww4wosw7knhozd9ut46crz5c பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/7 250 619543 1839380 1838004 2025-07-05T13:46:46Z Booradleyp1 1964 1839380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude><b>2. பெண்பாற் பகுதி:</b> 65 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021|(1) பகலாட்டு]] ❠ ௧. தட்டாங்கல் ❠ I. மூன்றாங்கல் ❠ II. ஐந்தாங்கல் (இருவகை) 66 III. ஏழாங்கல் (இருவகை) 69 IV. பலநாலொருகல் 73 V. பன்னிருகல் 74 VI. பலகல் 75 VII. பதினாறாங்கல் ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/022|௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம்]] 76 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/023|௩. குறிஞ்சி (குஞ்சி)]] 79 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024|(2) இரவாட்டு]] 80 ௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/025|௨. நிலாக் குப்பல்]] 82 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026|௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்]] 84 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027|(3) இருபொழுதாட்டு]] 86 ௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/028|௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’]] 89 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/029|௩. ஊதாமணி]] 90 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/030|௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’]]91 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/031|௫. தண்ணீர் சேந்துகிறது]] 92 <b>3. இருபாற் பகுதி :</b> 93 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/032|(1) பகலாட்டு]] ❠ ௧. பண்ணாங்குழி ❠ {{nop}}<noinclude></noinclude> 1c9nk5ww2atv9bbzhu34kb0nzp4t3vq 1839434 1839380 2025-07-06T04:20:48Z Info-farmer 232 {{block_center|width=600px| 1839434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude> {{block_center|width=600px| <b>2. பெண்பாற் பகுதி:</b> 65 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021|(1) பகலாட்டு]] ❠ ௧. தட்டாங்கல் ❠ I. மூன்றாங்கல் ❠ II. ஐந்தாங்கல் (இருவகை) 66 III. ஏழாங்கல் (இருவகை) 69 IV. பலநாலொருகல் 73 V. பன்னிருகல் 74 VI. பலகல் 75 VII. பதினாறாங்கல் ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/022|௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம்]] 76 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/023|௩. குறிஞ்சி (குஞ்சி)]] 79 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024|(2) இரவாட்டு]] 80 ௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/025|௨. நிலாக் குப்பல்]] 82 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026|௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்]] 84 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027|(3) இருபொழுதாட்டு]] 86 ௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/028|௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’]] 89 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/029|௩. ஊதாமணி]] 90 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/030|௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’]]91 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/031|௫. தண்ணீர் சேந்துகிறது]] 92 <b>3. இருபாற் பகுதி :</b> 93 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/032|(1) பகலாட்டு]] ❠ ௧. பண்ணாங்குழி ❠ }} {{nop}}<noinclude></noinclude> 50o4nwge10ula9e4zr2l825izc75fmz 1839441 1839434 2025-07-06T04:24:19Z Info-farmer 232 {{Right|<b>பக்கம்</b>}} 1839441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} <b>2. பெண்பாற் பகுதி:</b> 65 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021|(1) பகலாட்டு]] ❠ ௧. தட்டாங்கல் ❠ I. மூன்றாங்கல் ❠ II. ஐந்தாங்கல் (இருவகை) 66 III. ஏழாங்கல் (இருவகை) 69 IV. பலநாலொருகல் 73 V. பன்னிருகல் 74 VI. பலகல் 75 VII. பதினாறாங்கல் ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/022|௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம்]] 76 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/023|௩. குறிஞ்சி (குஞ்சி)]] 79 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024|(2) இரவாட்டு]] 80 ௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/025|௨. நிலாக் குப்பல்]] 82 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026|௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்]] 84 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027|(3) இருபொழுதாட்டு]] 86 ௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/028|௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’]] 89 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/029|௩. ஊதாமணி]] 90 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/030|௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’]]91 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/031|௫. தண்ணீர் சேந்துகிறது]] 92 <b>3. இருபாற் பகுதி :</b> 93 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/032|(1) பகலாட்டு]] ❠ ௧. பண்ணாங்குழி ❠ }} {{nop}}<noinclude></noinclude> 8rr1165fiznoa2koxz634m424l6z3le பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/8 250 619544 1839382 1837994 2025-07-05T14:03:16Z Booradleyp1 1964 1839382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>I. பொதுவகை 93 II. கட்டுக்கட்டல் 96 II. அரசனும் மந்திரியும் சேவகனும் 97 IV. அசோகவனத்தாட்டம் 99 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] 101 (க) பாண்டிநாட்டு முறை [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|(௨) சோழ கொங்குநாட்டு முறை]] 104 I. ஒற்றைச் சில்லி II. இரட்டைச் சில்லி<br>(மூன்றுவகைகள்) 107 III. வானூர்திச் சில்லி 109 IV. வட்டச் சில்லி 111 V. காலிப்பட்டச் சில்லி 112 VI. கைச் சில்லி 114 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|௩. கம்ப விளையாட்டு]] 115 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|௪. கச்சக்காய்ச் சில்லி]] 116 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|௫. குஞ்சு]] 117 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|(2) இரவாட்டு]] 118 ௧. கண்ணாம்பொத்தி ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] 120 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] 121 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|௪. பூச்சி]] 122 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|௫. அரசனுந் தோட்டமும்]] 123 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] 124 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|(3) இருபொழுதாட்டு]] 125 ௧. நொண்டி ❠ ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ 127 {{nop}}<noinclude></noinclude> bjzpn7qra8a6jukaus3tr6xf1yzcs2w 1839436 1839382 2025-07-06T04:21:15Z Info-farmer 232 {{block_center|width=600px| 1839436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{block_center|width=600px| I. பொதுவகை 93 II. கட்டுக்கட்டல் 96 II. அரசனும் மந்திரியும் சேவகனும் 97 IV. அசோகவனத்தாட்டம் 99 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] 101 (க) பாண்டிநாட்டு முறை [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|(௨) சோழ கொங்குநாட்டு முறை]] 104 I. ஒற்றைச் சில்லி II. இரட்டைச் சில்லி<br>(மூன்றுவகைகள்) 107 III. வானூர்திச் சில்லி 109 IV. வட்டச் சில்லி 111 V. காலிப்பட்டச் சில்லி 112 VI. கைச் சில்லி 114 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|௩. கம்ப விளையாட்டு]] 115 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|௪. கச்சக்காய்ச் சில்லி]] 116 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|௫. குஞ்சு]] 117 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|(2) இரவாட்டு]] 118 ௧. கண்ணாம்பொத்தி ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] 120 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] 121 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|௪. பூச்சி]] 122 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|௫. அரசனுந் தோட்டமும்]] 123 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] 124 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|(3) இருபொழுதாட்டு]] 125 ௧. நொண்டி ❠ ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ 127 }} {{nop}}<noinclude></noinclude> 7jjc120c40sf5t82s71hn0rc03llqs4 1839440 1839436 2025-07-06T04:23:56Z Info-farmer 232 {{Right|<b>பக்கம்</b>}} 1839440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} I. பொதுவகை 93 II. கட்டுக்கட்டல் 96 II. அரசனும் மந்திரியும் சேவகனும் 97 IV. அசோகவனத்தாட்டம் 99 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] 101 (க) பாண்டிநாட்டு முறை [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|(௨) சோழ கொங்குநாட்டு முறை]] 104 I. ஒற்றைச் சில்லி II. இரட்டைச் சில்லி<br>(மூன்றுவகைகள்) 107 III. வானூர்திச் சில்லி 109 IV. வட்டச் சில்லி 111 V. காலிப்பட்டச் சில்லி 112 VI. கைச் சில்லி 114 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|௩. கம்ப விளையாட்டு]] 115 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|௪. கச்சக்காய்ச் சில்லி]] 116 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|௫. குஞ்சு]] 117 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|(2) இரவாட்டு]] 118 ௧. கண்ணாம்பொத்தி ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] 120 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] 121 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|௪. பூச்சி]] 122 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|௫. அரசனுந் தோட்டமும்]] 123 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] 124 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|(3) இருபொழுதாட்டு]] 125 ௧. நொண்டி ❠ ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ 127 }} {{nop}}<noinclude></noinclude> aej0qcbrhnv2bmqx89zot5ybyzphgeb பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/9 250 619545 1839383 1837996 2025-07-05T14:16:18Z Booradleyp1 1964 1839383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude>[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|௩. பருப்புச்சட்டி]] 128 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|௪. மோதிரம் வைத்தல்]] 129 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|௫. புலியும் ஆடும் 130]] [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|௬. ‘இதென்ன மூட்டை?’]] 131 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|௭. கும்மி]] 133 {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|இருபொழுதாட்டு]] 134 ௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] 135 {{c|III. பெரியோர் பக்கம்{{rule|10em|align=}}}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1.ஆண்பாற் பகுதி :]]</b> 136 (1) பகலாட்டு❠ தாயம் ❠ (2) இரவாட்டு ❠ கழியல் ❠ (3) இருபொழுதாட்டு 137 முக்குழியாட்டம் ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] 138 (1) பகலாட்டு ❠ க. பண்ணாங்குழி ❠ ௨. தாயம் ❠ {{nop}}<noinclude></noinclude> sv7t8hc6mkr288hrzr03w00mq553hlt 1839438 1839383 2025-07-06T04:22:31Z Info-farmer 232 {{Right|<b>பக்கம்</b>}} 1839438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude>{{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|௩. பருப்புச்சட்டி]] 128 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|௪. மோதிரம் வைத்தல்]] 129 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|௫. புலியும் ஆடும் 130]] [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|௬. ‘இதென்ன மூட்டை?’]] 131 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|௭. கும்மி]] 133 {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|இருபொழுதாட்டு]] 134 ௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] 135 {{c|III. பெரியோர் பக்கம்{{rule|10em|align=}}}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1.ஆண்பாற் பகுதி :]]</b> 136 (1) பகலாட்டு❠ தாயம் ❠ (2) இரவாட்டு ❠ கழியல் ❠ (3) இருபொழுதாட்டு 137 முக்குழியாட்டம் ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] 138 (1) பகலாட்டு ❠ க. பண்ணாங்குழி ❠ ௨. தாயம் ❠ }} {{nop}}<noinclude></noinclude> o6biy0b733ntjkx6qhdojxoiahap2uy பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/10 250 619546 1839384 1837998 2025-07-05T14:22:56Z Booradleyp1 1964 1839384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>(2) இருபொழுதாட்டு 138 கும்மி ❠ <b>பின்னிணைப்பு :</b> [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] 139 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி ❠ வட்டு ❠ (2) பெண்பாற் பகுதி ❠ பலபந்து ❠ ௨. அம்மானை ❠ ௩. குரவை ❠ 2. அறியப்படாதவை [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] 141 கோழிக் குஞ்சு—1 ❠ கோழிக் குஞ்சு—2 ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] 143 (1) புனல் விளையாட்டு ❠ (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} {{rule|10em|align=}} {{dhr|2em}} {{nop}}<noinclude></noinclude> mx6xcw9nzmdy7kz7km22fk0qbd4v97f 1839439 1839384 2025-07-06T04:23:14Z Info-farmer 232 {{block_center|width=600px| 1839439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} (2) இருபொழுதாட்டு 138 கும்மி ❠ <b>பின்னிணைப்பு :</b> [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] 139 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி ❠ வட்டு ❠ (2) பெண்பாற் பகுதி ❠ பலபந்து ❠ ௨. அம்மானை ❠ ௩. குரவை ❠ 2. அறியப்படாதவை [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] 141 கோழிக் குஞ்சு—1 ❠ கோழிக் குஞ்சு—2 ❠ [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] 143 (1) புனல் விளையாட்டு ❠ (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} {{rule|10em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> to6xtlhinmr9cgciwxn6yh80xixrnqx பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/19 250 620036 1839385 1837584 2025-07-05T14:30:05Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>2. திருச்செங்கோடு</b>}}}} {{Css image crop |Image = பாரதப்_பெருமகன்_சுப்பராயன்.pdf |Page = 19 |bSize = 398 |cWidth = 150 |cHeight = 99 |oTop = 92 |oLeft = 227 |Location = right |Description = திருச்செங்கோடு கோயில் வரவேற்பில் சுப்பராயன் }} {{larger|<b>கொ</b>}}ங்கு நாட்டில் மலைகள் மிகுதி. அவற்றுள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் “திருச்செங்கோடும்” ஒன்று. கொங்கு நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற ஏழு தலங்களில் திருச்செங்கோடு ஒன்று. ஏனைய தலங்கள் வெஞ்சமாங்கூடல், கருவூர், கொடுமுடி, பவானி, திருமுருகன்பூண்டி, அவினாசி என்பனவாம். திருச்செங்கோடு குமரமங்கலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. சோழ நாடு, பாண்டிய நாட்டை விட தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் “கொங்கேழு தலங்கள்” எனக் குறைவாக இருப்பினும் கொங்கு நாட்டவர் இத்தலங்கள் மீது மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டு விளங்கினர். நாள்தோறும் தங்கள் நாட்டுத் தேவாரப் பதிகங்கள் பெற்ற திருத்தலங்களை நெஞ்சில் நிறுத்திப் போற்றியுள்ளனர். {{left_margin|3em|<poem> “ஆதி கருவூர் அணிவெஞ்சை மாக்கறைசை நீதி அவிநாசி நீள்நணா - மேதினியின் தஞ்சமாம் செங்குன்றூர் தண்முருகன் பூண்டிதமை நெஞ்சமே நித்தம் நினை”</poem>}} என்பது ஒரு பழம் பாடலாகும். வாய்ப்பும் வசதியும் உடைய பெருமக்கள் சிலர் குதிரை மீதேறி ஒரே நாளில் திருச்செங்கோடு உட்படக் கொங்கேழு தலங்களையும் வணங்கியுள்ளனர். இதனை,<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||7}}</noinclude> iixbqywde0sjjml44g4yhzo0cd7pu69 1839415 1839385 2025-07-06T04:01:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>2. திருச்செங்கோடு</b>}}}} {{Css image crop |Image = பாரதப்_பெருமகன்_சுப்பராயன்.pdf |Page = 19 |bSize = 398 |cWidth = 150 |cHeight = 99 |oTop = 92 |oLeft = 227 |Location = right |Description = திருச்செங்கோடு கோயில் வரவேற்பில் சுப்பராயன் }} {{larger|<b>கொ</b>}}ங்கு நாட்டில் மலைகள் மிகுதி. அவற்றுள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்கும் “திருச்செங்கோடும்” ஒன்று. கொங்கு நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற ஏழு தலங்களில் திருச்செங்கோடு ஒன்று. ஏனைய தலங்கள் வெஞ்சமாங்கூடல், கருவூர், கொடுமுடி, பவானி, திருமுருகன்பூண்டி, அவினாசி என்பனவாம். திருச்செங்கோடு குமரமங்கலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. சோழ நாடு, பாண்டிய நாட்டை விட தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் “கொங்கேழு தலங்கள்” எனக் குறைவாக இருப்பினும் கொங்கு நாட்டவர் இத்தலங்கள் மீது மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டு விளங்கினர். நாள்தோறும் தங்கள் நாட்டுத் தேவாரப் பதிகங்கள் பெற்ற திருத்தலங்களை நெஞ்சில் நிறுத்திப் போற்றியுள்ளனர். {{left_margin|3em|<poem> “ஆதி கருவூர் அணிவெஞ்சை மாக்கறைசை நீதி அவிநாசி நீள்நணா - மேதினியின் தஞ்சமாம் செங்குன்றூர் தண்முருகன் பூண்டிதமை நெஞ்சமே நித்தம் நினை”</poem>}} என்பது ஒரு பழம் பாடலாகும். வாய்ப்பும் வசதியும் உடைய பெருமக்கள் சிலர் குதிரை மீதேறி ஒரே நாளில் திருச்செங்கோடு உட்படக் கொங்கேழு தலங்களையும் வணங்கியுள்ளனர். இதனை,<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||7}}</noinclude> o7j7416w0ss4fi24kql8l4qyzcwjdld தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் 0 620083 1839307 1838355 2025-07-05T12:18:48Z Info-farmer 232 <big>முன்னுரை</big> 1839307 wikitext text/x-wiki {{Under_construction}} {{header | title = தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் | author = ஞா தேவநேயன் | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 1962 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 56 ஆகும். }}{{featured download}}<br><br><br> <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="3" to="4" /> {{page break|label=}} {{c|[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/001|<big>முன்னுரை</big>]]}} {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" /> {{page break|label=}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:ஞா தேவநேயன்]] [.[பகுப்பு:Transclusion completed]] pym3bw3xo7wiowgngdh9y6shh37aqcb கனிச்சாறு 4/058 0 620256 1839294 2025-07-05T11:59:11Z Info-farmer 232 + படிவத் தரவு 1839294 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 58 | previous = [[../057/|057]] | next = [[../059/|059]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="114" to="114"fromsection="55" tosection="55"/> 2mviyz4zmnbrkx80vu4uagy1uict3jm கனிச்சாறு 4/059 0 620257 1839295 2025-07-05T12:00:03Z Info-farmer 232 + படிவத் தரவு 1839295 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 59 | previous = [[../058/|058]] | next = [[../060/|060]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="115" to="122"fromsection="56" tosection="56"/> pmhdc8du47g0jheqkcr7b6t2akezugx கனிச்சாறு 4/060 0 620258 1839296 2025-07-05T12:00:30Z Info-farmer 232 + படிவத் தரவு 1839296 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 60 | previous = [[../059/|059]] | next = [[../061/|061]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="123" to="123"fromsection="57" tosection="57"/> f3p06rt34fmjrydli3kf7zlwl798qq5 கனிச்சாறு 4/061 0 620259 1839297 2025-07-05T12:01:31Z Info-farmer 232 + படிவத் தரவு 1839297 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 61 | previous = [[../060/|060]] | next = [[../062/|062]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="124" to="124"fromsection="58" tosection="58"/> 5su309or9mx31rs12s5h5in371694uz கனிச்சாறு 4/062 0 620260 1839298 2025-07-05T12:01:55Z Info-farmer 232 + படிவத் தரவு 1839298 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 62 | previous = [[../061/|061]] | next = [[../063/|063]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="125125" to="125"fromsection="59" tosection="59"/> 69lg2chit7tpcvbbhaes67x1mvvjr28 1839299 1839298 2025-07-05T12:02:25Z Info-farmer 232 125 1839299 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 62 | previous = [[../061/|061]] | next = [[../063/|063]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="125" to="125"fromsection="59" tosection="59"/> 9xik5ph4ubl5q55n8trbbioltat9t15 கனிச்சாறு 4/063 0 620261 1839301 2025-07-05T12:03:44Z Info-farmer 232 + படிவத் தரவு 1839301 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 63 | previous = [[../062/|062]] | next = [[../064/|064]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="126" to="126"fromsection="60" tosection="60"/> 9f1hcof7pe2x39nj4mxg6cpbui857nb அட்டவணை பேச்சு:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf 253 620262 1839328 2025-07-05T12:37:30Z Info-farmer 232 /* பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் */ புதிய பகுதி 1839328 wikitext text/x-wiki == பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] இந்த நூலின் பொருளடக்கப் பக்கங்கள் மிக விரிவாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எளிமையாக இருக்கும் பொருட்டு, அவற்றை 56 துணைப்பக்கங்களாக ஒருங்கிணைவு செய்துள்ளேன். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்தில், துணைப்பக்கங்களை இணைத்துள்ளேன். இதுபோலவே, மீதமுள்ள துணைப்பக்கங்களை இணைக்க வேண்டும். வாய்ப்பு இருப்பின், பிற பங்களிப்பாளர்களைக் கொண்டு இணைத்துத் தாருங்கள். இந்த இலக்கு முடிந்த பிறகு உரிய வார்ப்புருக்களை இணைத்து, பொருளடக்கப் பக்கங்களை மஞ்சள் ஆக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 5 சூலை 2025 (UTC) 7t0tecvhy4i4atopj2tul934hd16bib 1839336 1839328 2025-07-05T12:44:17Z Info-farmer 232 /* பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் */ இணை 1839336 wikitext text/x-wiki == பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] இந்த நூலின் பொருளடக்கப் பக்கங்கள் மிக விரிவாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எளிமையாக இருக்கும் பொருட்டு, அவற்றை 56 துணைப்பக்கங்களாக ஒருங்கிணைவு செய்துள்ளேன். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்தில், துணைப்பக்கங்களை இணைத்துள்ளேன். இதுபோலவே, மீதமுள்ள துணைப்பக்கங்களை இணைக்க வேண்டும். வாய்ப்பு இருப்பின், பிற பங்களிப்பாளர்களைக் கொண்டு இணைத்துத் தாருங்கள். இந்த இலக்கு முடிந்த பிறகு உரிய வார்ப்புருக்களை இணைத்து, பொருளடக்கப் பக்கங்களை மஞ்சள் ஆக்குகிறேன். இப்படி செய்தால் மட்டுமே, அனைத்துப் பக்கங்களும் பொருத்தமாக பதிவிறக்கம் செய்ய இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 5 சூலை 2025 (UTC) 1h5dn4atk24ebmqnv1c2if4q7rkph9w 1839397 1839336 2025-07-05T15:23:57Z Booradleyp1 1964 /* பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் */ 1839397 wikitext text/x-wiki == பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] இந்த நூலின் பொருளடக்கப் பக்கங்கள் மிக விரிவாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எளிமையாக இருக்கும் பொருட்டு, அவற்றை 56 துணைப்பக்கங்களாக ஒருங்கிணைவு செய்துள்ளேன். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்தில், துணைப்பக்கங்களை இணைத்துள்ளேன். இதுபோலவே, மீதமுள்ள துணைப்பக்கங்களை இணைக்க வேண்டும். வாய்ப்பு இருப்பின், பிற பங்களிப்பாளர்களைக் கொண்டு இணைத்துத் தாருங்கள். இந்த இலக்கு முடிந்த பிறகு உரிய வார்ப்புருக்களை இணைத்து, பொருளடக்கப் பக்கங்களை மஞ்சள் ஆக்குகிறேன். இப்படி செய்தால் மட்டுமே, அனைத்துப் பக்கங்களும் பொருத்தமாக பதிவிறக்கம் செய்ய இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 5 சூலை 2025 (UTC) {{ping|Info-farmer}} pdf/6-10 பக்கங்களில் துணைப் பக்கங்களை இணைத்திருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:23, 5 சூலை 2025 (UTC) 32cubeyifw65ip3yzys8hph08dafuaj 1839475 1839397 2025-07-06T06:22:59Z Info-farmer 232 /* பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் */ பதில் 1839475 wikitext text/x-wiki == பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] இந்த நூலின் பொருளடக்கப் பக்கங்கள் மிக விரிவாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எளிமையாக இருக்கும் பொருட்டு, அவற்றை 56 துணைப்பக்கங்களாக ஒருங்கிணைவு செய்துள்ளேன். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்தில், துணைப்பக்கங்களை இணைத்துள்ளேன். இதுபோலவே, மீதமுள்ள துணைப்பக்கங்களை இணைக்க வேண்டும். வாய்ப்பு இருப்பின், பிற பங்களிப்பாளர்களைக் கொண்டு இணைத்துத் தாருங்கள். இந்த இலக்கு முடிந்த பிறகு உரிய வார்ப்புருக்களை இணைத்து, பொருளடக்கப் பக்கங்களை மஞ்சள் ஆக்குகிறேன். இப்படி செய்தால் மட்டுமே, அனைத்துப் பக்கங்களும் பொருத்தமாக பதிவிறக்கம் செய்ய இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 5 சூலை 2025 (UTC) {{ping|Info-farmer}} pdf/6-10 பக்கங்களில் துணைப் பக்கங்களை இணைத்திருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:23, 5 சூலை 2025 (UTC) :மகிழ்ச்சி. இணைப்புகள் கொடுத்தமையால் அனைத்துப் பக்கங்களும் ஒருங்கிணவு வார்ப்புருக்கள் இல்லாமேலேயே அனைத்துப் பக்கங்களும் வரிசையாக பதிவிறக்கம் ஆகின்றன. இது எனக்கு புதுப்பாடம். இருப்பினும் ஒருங்கிணைவு வார்ப்புருக்களை, [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்திற்க்கு இட்டு, மூலப் பக்கம் போலவே வடிவமாக்கி மஞ்சளாக்கியுள்ளேன். இதுவே போதும் என்று எண்ணுகிறேன். கண்டு கருத்திடவும். பிறகு அனைத்துப் பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றிவிடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:22, 6 சூலை 2025 (UTC) 6es213rr22q5iq3i2g08lyuhg9v2v44 1839476 1839475 2025-07-06T06:23:34Z Info-farmer 232 added [[Category:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. 1839476 wikitext text/x-wiki == பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] இந்த நூலின் பொருளடக்கப் பக்கங்கள் மிக விரிவாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எளிமையாக இருக்கும் பொருட்டு, அவற்றை 56 துணைப்பக்கங்களாக ஒருங்கிணைவு செய்துள்ளேன். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்தில், துணைப்பக்கங்களை இணைத்துள்ளேன். இதுபோலவே, மீதமுள்ள துணைப்பக்கங்களை இணைக்க வேண்டும். வாய்ப்பு இருப்பின், பிற பங்களிப்பாளர்களைக் கொண்டு இணைத்துத் தாருங்கள். இந்த இலக்கு முடிந்த பிறகு உரிய வார்ப்புருக்களை இணைத்து, பொருளடக்கப் பக்கங்களை மஞ்சள் ஆக்குகிறேன். இப்படி செய்தால் மட்டுமே, அனைத்துப் பக்கங்களும் பொருத்தமாக பதிவிறக்கம் செய்ய இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 5 சூலை 2025 (UTC) {{ping|Info-farmer}} pdf/6-10 பக்கங்களில் துணைப் பக்கங்களை இணைத்திருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:23, 5 சூலை 2025 (UTC) :மகிழ்ச்சி. இணைப்புகள் கொடுத்தமையால் அனைத்துப் பக்கங்களும் ஒருங்கிணவு வார்ப்புருக்கள் இல்லாமேலேயே அனைத்துப் பக்கங்களும் வரிசையாக பதிவிறக்கம் ஆகின்றன. இது எனக்கு புதுப்பாடம். இருப்பினும் ஒருங்கிணைவு வார்ப்புருக்களை, [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்திற்க்கு இட்டு, மூலப் பக்கம் போலவே வடிவமாக்கி மஞ்சளாக்கியுள்ளேன். இதுவே போதும் என்று எண்ணுகிறேன். கண்டு கருத்திடவும். பிறகு அனைத்துப் பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றிவிடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:22, 6 சூலை 2025 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] ealr207jy0vndj7ebnnjrp3kglhsez2 பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/20 250 620263 1839388 2025-07-05T14:45:01Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{left_margin|3em|<poem>“பெரிய சர்க்கரை உத்தமக் காமிண்டர் ::பேரன் கொற்றவேல் சர்க்கரை யாரிவர் கரிய குண்டுக் குதிரைமேல் ஏறியே ::காணும் ஓர்பொழுது அத்த மனத்துளே அரிய கொங்குச் சிவாலயம் ஏழையும் ::அணுகிச் சேவித்து அரண்மனை சேர்ந்தஅப் பரியைக் காணுதற்குப் பாத காணிக்கை ::பத்து நூறுடன் ஆயிரம் ஆகுமே”</poem>}} என்ற பாடல் விளக்குகிறது. கொங்குத் தலங்களுக்குச் செல்ல இக்குதிரை என்ன புண்ணியம் செய்ததோ என்று எண்ணி அதற்குக் காணிக்கை வைத்துப் பணிந்து வணங்கியுள்ளனர். இன்னும் பலர் இத்தல யாத்திரையைச் செய்திருக்கக் கூடும். கி.பி. 7ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தேவாரம் பாடிய மூவரில் முதல்வராகிய திருஞான சம்பந்தர் அடியார் குழுவோடு வந்து திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரரைத் தொழுது பதிகம் பாடியுள்ளார். {{left_margin|3em|<poem> “பந்தணவும் விரலாள் ஒரு பாகம்” “மலைமகள் கூறுடையான்” என்று மாதொரு பாகனைப் பற்றிக் கூறிய திருஞான சம்பந்தர், “கொத்தலர் தண்பொழில்சூழ் ::கொடிமாடச் செங்குன்றூர்” “கொங்கணவும் பொழில்சூழ் ::கொடிமாடச் செங்குன்றூர்” எனத் திருச்செங்கோட்டின் வளத்தையும் கூறுகிறார். “குன்றன்ன மாளிகைசூழ் ::கொடிமாடச் செங்குன்றூர்”</poem>}} எனக் கூறுவதால் அன்றைய திருச்செங்கோட்டின் பெருமையை அறிகின்றோம்.<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||8}}</noinclude> 98f6dl2h7j4oyduspe3ikdg7p1sm6po 1839391 1839388 2025-07-05T14:49:51Z Preethi kumar23 14883 1839391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{left_margin|3em|<poem>“பெரிய சர்க்கரை உத்தமக் காமிண்டர் ::பேரன் கொற்றவேல் சர்க்கரை யாரிவர் கரிய குண்டுக் குதிரைமேல் ஏறியே ::காணும் ஓர்பொழுது அத்த மனத்துளே அரிய கொங்குச் சிவாலயம் ஏழையும் ::அணுகிச் சேவித்து அரண்மனை சேர்ந்தஅப் பரியைக் காணுதற்குப் பாத காணிக்கை ::பத்து நூறுடன் ஆயிரம் ஆகுமே”</poem>}} என்ற பாடல் விளக்குகிறது. கொங்குத் தலங்களுக்குச் செல்ல இக்குதிரை என்ன புண்ணியம் செய்ததோ என்று எண்ணி அதற்குக் காணிக்கை வைத்துப் பணிந்து வணங்கியுள்ளனர். இன்னும் பலர் இத்தல யாத்திரையைச் செய்திருக்கக் கூடும். கி.பி. 7ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தேவாரம் பாடிய மூவரில் முதல்வராகிய திருஞான சம்பந்தர் அடியார் குழுவோடு வந்து திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரரைத் தொழுது பதிகம் பாடியுள்ளார். {{left_margin|3em|<poem> “பந்தணவும் விரலாள் ஒரு பாகம்” “மலைமகள் கூறுடையான்” என்று மாதொரு பாகனைப் பற்றிக் கூறிய திருஞான சம்பந்தர், “கொத்தலர் தண்பொழில்சூழ் ::கொடிமாடச் செங்குன்றூர்” “கொங்கணவும் பொழில்சூழ் ::கொடிமாடச் செங்குன்றூர்” எனத் திருச்செங்கோட்டின் வளத்தையும் கூறுகிறார். “குன்றன்ன மாளிகைசூழ் ::கொடிமாடச் செங்குன்றூர்”</poem>}} எனக் கூறுவதால் அன்றைய திருச்செங்கோட்டின் பெருமையை அறிகின்றோம். {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||8}}</noinclude> 6ljm3ngqebujd9qh4d3o8rlaw0o06gv 1839416 1839391 2025-07-06T04:03:03Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{left_margin|3em|<poem>“பெரிய சர்க்கரை உத்தமக் காமிண்டர் ::பேரன் கொற்றவேல் சர்க்கரை யாரிவர் கரிய குண்டுக் குதிரைமேல் ஏறியே ::காணும் ஓர்பொழுது அத்த மனத்துளே அரிய கொங்குச் சிவாலயம் ஏழையும் ::அணுகிச் சேவித்து அரண்மனை சேர்ந்தஅப் பரியைக் காணுதற்குப் பாத காணிக்கை ::பத்து நூறுடன் ஆயிரம் ஆகுமே”</poem>}} என்ற பாடல் விளக்குகிறது. கொங்குத் தலங்களுக்குச் செல்ல இக்குதிரை என்ன புண்ணியம் செய்ததோ என்று எண்ணி அதற்குக் காணிக்கை வைத்துப் பணிந்து வணங்கியுள்ளனர். இன்னும் பலர் இத்தல யாத்திரையைச் செய்திருக்கக் கூடும். கி.பி. 7ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தேவாரம் பாடிய மூவரில் முதல்வராகிய திருஞான சம்பந்தர் அடியார் குழுவோடு வந்து திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரரைத் தொழுது பதிகம் பாடியுள்ளார். {{left_margin|3em|<poem> “பந்தணவும் விரலாள் ஒரு பாகம்” “மலைமகள் கூறுடையான்” என்று மாதொரு பாகனைப் பற்றிக் கூறிய திருஞான சம்பந்தர், “கொத்தலர் தண்பொழில்சூழ் ::கொடிமாடச் செங்குன்றூர்” “கொங்கணவும் பொழில்சூழ் ::கொடிமாடச் செங்குன்றூர்” எனத் திருச்செங்கோட்டின் வளத்தையும் கூறுகிறார். “குன்றன்ன மாளிகைசூழ் ::கொடிமாடச் செங்குன்றூர்”</poem>}} எனக் கூறுவதால் அன்றைய திருச்செங்கோட்டின் பெருமையை அறிகின்றோம். {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||8}}</noinclude> 5rqjt7060ahx71uv286xrohz51nchbu பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/21 250 620264 1839390 2025-07-05T14:49:23Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>திருஞான சம்பந்தர் திருச்செங்கோட்டில் தங்கிக் காவிரிக்கு மேற்கே சென்று சில தலங்களைப் பாடிப் பரவியதாகப் பெரியபுராணத்தில் குறிப்பு வருகிறது. இப்போது காவிரி மேல்கரையில் பவானி தவிர வேறு தலங்கள் இல்லை. திருஞான சம்பந்தர் திருச்செங்கோட்டில் தங்கியிருந்த காலம் குளிர் காலம் ஆதலின் ஊரவர்க்கும் அடியார் சிலர்க்கும் “சுரநோய்” வந்து துன்புறுத்தியது. திருஞான சம்பந்தர், {{left_margin|3em|<poem> “நாம் அடியேம் வெவ்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்”</poem>}} என முடியும் “திருநீலகண்டப்பதிகம்” பாடவே அனைவர் சுரநோயும் அகன்றது என்பர். திருச்செங்கோட்டு மலை கிழக்கே தலையும் மேற்கே வால் பகுதியுமாக நாகம் படுத்திருப்பதுபோல் காணப்படுவதால் “நாகமலை” என்றும் கூறுவர். நாககிரி, பணிமலை, சேடகிரி, அரவகிரி, சர்ப்ப சயிலம் எனவும் குறிப்பர். குறுந்தொகையில் (282) நாகம் என்று வரும் சொல் இம்மலையைக் குறிக்கும் என்பர். மலை “செங்கோடு” எனப் பெயர் பெற்ற காரணம் செம்மை நிறமாகவும், கீழ்ப்பகுதி மிக உயரமாகவும், செங்குத்தாகவும் இருப்பதே காரணம். ஊர் செங்குன்றூர் எனப்பட்டது. சங்ககாலப் புலவரும், திருக்குறளைப் புகழ்ந்து சங்கப் புலவர்கள் பாடியதாகக் கருதப்படும் திருவள்ளுவ மாலை என்னும் நூலில் இடம் பெற்றுள்ள {{left_margin|3em|<poem> “புலவர் திருவள் ளுவர்அன்றிப் பூமேல் சிலவர் புலவர்எனச் செப்பல் - நிலவு பிறங்கொளிமா லைக்கும் பெயராகும் மற்றும் கறங்கிருள்மா லைக்கும் பெயர்”</poem>}} என்ற வெண்பாவைப் பாடிய செங்குன்றூர்க் கிழார் இவ்வூரினர் ஆகலாம். {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||9}}</noinclude> adbckzd6itz7gqjw2o35fcf1di7h83r 1839417 1839390 2025-07-06T04:05:15Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>திருஞான சம்பந்தர் திருச்செங்கோட்டில் தங்கிக் காவிரிக்கு மேற்கே சென்று சில தலங்களைப் பாடிப் பரவியதாகப் பெரியபுராணத்தில் குறிப்பு வருகிறது. இப்போது காவிரி மேல்கரையில் பவானி தவிர வேறு தலங்கள் இல்லை. திருஞான சம்பந்தர் திருச்செங்கோட்டில் தங்கியிருந்த காலம் குளிர் காலம் ஆதலின் ஊரவர்க்கும் அடியார் சிலர்க்கும் “சுரநோய்” வந்து துன்புறுத்தியது. திருஞான சம்பந்தர், {{left_margin|3em|<poem> “நாம் அடியேம் வெவ்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்”</poem>}} என முடியும் “திருநீலகண்டப்பதிகம்” பாடவே அனைவர் சுரநோயும் அகன்றது என்பர். திருச்செங்கோட்டு மலை கிழக்கே தலையும் மேற்கே வால் பகுதியுமாக நாகம் படுத்திருப்பதுபோல் காணப்படுவதால் “நாகமலை” என்றும் கூறுவர். நாககிரி, பணிமலை, சேடகிரி, அரவகிரி, சர்ப்ப சயிலம் எனவும் குறிப்பர். குறுந்தொகையில் (282) நாகம் என்று வரும் சொல் இம்மலையைக் குறிக்கும் என்பர். மலை “செங்கோடு” எனப் பெயர் பெற்ற காரணம் செம்மை நிறமாகவும், கீழ்ப்பகுதி மிக உயரமாகவும், செங்குத்தாகவும் இருப்பதே காரணம். ஊர் செங்குன்றூர் எனப்பட்டது. சங்ககாலப் புலவரும், திருக்குறளைப் புகழ்ந்து சங்கப் புலவர்கள் பாடியதாகக் கருதப்படும் திருவள்ளுவ மாலை என்னும் நூலில் இடம் பெற்றுள்ள {{left_margin|3em|<poem> “புலவர் திருவள் ளுவர்அன்றிப் பூமேல் சிலவர் புலவர்எனச் செப்பல் – நிலவு பிறங்கொளிமா லைக்கும் பெயராகும் மற்றும் கறங்கிருள்மா லைக்கும் பெயர்”</poem>}} என்ற வெண்பாவைப் பாடிய செங்குன்றூர்க் கிழார் இவ்வூரினர் ஆகலாம். {{nop}}<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||9}}</noinclude> kvqfrjid60ybwbr8dgfy3v8g7veprua பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/22 250 620265 1839392 2025-07-05T14:54:45Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>{{left_margin|3em|<poem>“அங்கோட்டு அகல்அல்கும் ஆயிழையாள் நம்மோடு செங்கோடு பாய்துமே என்றாள்மற்று - அங்கோட்டின் மேற்காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து”</poem>}} என்ற நாலடியார் பாடலில் குறிக்கப் பெறும் “செங்கோடு” இம்மலையே என்பர். {{left_margin|3em|<poem>சிலப்பதிகாரத்தில், “குன்றக் குறவர்” “வென்வேலான் குன்று” “நெடுவேள் குன்றம்” “சீர்கெழு செந்திலும் செங்கோடும்”</poem>}} என வரும் இடங்களில் எல்லாம் “கொங்கு நாட்டுத் திருச்செங்கோடு” என்றே அடியார்க்கு நல்லாருக்கு முன்பு அருஞ்சொற்களுக்குப் பொருள் எழுதியமையால் “அரும்பத உரையாசிரியர்” என்று பெயர் பெற்றவர் கூறுகிறார். திருச்செங்கோட்டில் பாவடி மைதானத்தில் உள்ள கல்வெட்டு “முருகப் பெருமான் திருப்படை வீடாகிய திருச்செங்கோடு” என்று கூறுகிறது. பல இலக்கியங்கள் திருச்ங்ெகோட்டை “ஏரகம்” என்றே குறிக்கின்றன. “ஏரக நாயக ஆடுக செங்கீரை” என்பது செங்கோட்டு வேலவர் பிள்ளைத் தமிழ்த் தொடர். “ஏரகத்தார் படித்தரத்துக்கு ஈந்த தாமே” என்பது ஒரு தனிப்பாடல் தொடராகும். கொங்கு நாட்டுப் பெரும் புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் முருகப் பெருமானின் படை வீடாக நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் கூறும் “ஏரகம்” சோழநாட்டுச்<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||10}}</noinclude> r6i59ksxyr49s42kiih2uz7q6uxw1bs 1839419 1839392 2025-07-06T04:07:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{left_margin|3em|<poem>“அங்கோட்டு அகல்அல்கும் ஆயிழையாள் நம்மோடு செங்கோடு பாய்துமே என்றாள்மற்று - அங்கோட்டின் மேற்காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து”</poem>}} என்ற நாலடியார் பாடலில் குறிக்கப் பெறும் “செங்கோடு” இம்மலையே என்பர். {{left_margin|3em|<poem>சிலப்பதிகாரத்தில், “குன்றக் குறவர்” “வென்வேலான் குன்று” “நெடுவேள் குன்றம்” “சீர்கெழு செந்திலும் செங்கோடும்”</poem>}} என வரும் இடங்களில் எல்லாம் “கொங்கு நாட்டுத் திருச்செங்கோடு” என்றே அடியார்க்கு நல்லாருக்கு முன்பு அருஞ்சொற்களுக்குப் பொருள் எழுதியமையால் “அரும்பத உரையாசிரியர்” என்று பெயர் பெற்றவர் கூறுகிறார். திருச்செங்கோட்டில் பாவடி மைதானத்தில் உள்ள கல்வெட்டு “முருகப் பெருமான் திருப்படை வீடாகிய திருச்செங்கோடு” என்று கூறுகிறது. பல இலக்கியங்கள் திருச்செங்கோட்டை “ஏரகம்” என்றே குறிக்கின்றன. “ஏரக நாயக ஆடுக செங்கீரை” என்பது செங்கோட்டு வேலவர் பிள்ளைத் தமிழ்த் தொடர். “ஏரகத்தார் படித்தரத்துக்கு ஈந்த தாமே” என்பது ஒரு தனிப்பாடல் தொடராகும். கொங்கு நாட்டுப் பெரும் புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் முருகப் பெருமானின் படை வீடாக நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் கூறும் “ஏரகம்” சோழநாட்டுச்<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||10}}</noinclude> du8xo4ggobdhka75kd85ap3mzb1f9y4 பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/23 250 620266 1839394 2025-07-05T14:58:05Z Preethi kumar23 14883 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Preethi kumar23" /></noinclude>“சுவாமிமலை” அல்ல. கொங்கு நாட்டுத் திருச்செங்கோடே என்று ஆய்ந்து எழுதியுள்ளார். கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் தமிழகம் எங்கும் யாத்திரை மேற்கொண்டு தன் சந்தக் கவியால் முருகப் பெருமானைப் பாடிப் பரவிய அருணகிரிநாதர் இத்தல முருகப் பெருமான் மீது 21 திருப்புகழ்ப் பாடல்கள் பாடியிருப்பது மிகவும் சிறப்புக்குரியது. {{left_margin|3em|<poem> “செஞ்சாலிமிஞ்சி மஞ்சாடு கின்ற ::செங்கோ டமர்ந்த பெருமாளே” “திதிக்கும் பார்வதியின் மதிப்புண் டாக்கிய ::திருச்செங் கோடுறை பெருமாளே” “கொண்டல் ஆர்த்துச் சிறக்கும் காட்சிக் ::கொங்கு நாட்டுத் திருச்செங்கோட்டுப் பெருமாளே”</poem>}} என்றெல்லாம் பாடிப் பரவியுள்ளார். திருவண்ணாமலையில் கோபுர வாயில் வடவருகே முருகப்பெருமான் காட்சி தந்த போது பாடியதாகக் கருதப் பெறும் கந்தரலங் காரத்தில் பல இடங்களில் திருச்செங்கோட்டு வேலவரைப் பாடி மகிழ்ந்துள்ளார். அவை மிகச் சிறந்த பாடல்களாகும். {{left_margin|3em|<poem> “தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே” “வழிக்குத் துணைவடி வேலும் செங்கோடன் மயூரமுமே” “சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை” “சேலார் வயற்பொழில் செங்கோ டனைச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில னேஅந்த நான்முகனே”</poem>}} என்பன அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரத் தொடர்கள். கந்தர் அனுபூதியிலும் அருணகிரி நாதர் “நாகாசல வேலவ நாலுகவித் தியாகா சுரலோக சிகாமணியே”<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||11}}</noinclude> fnzq78cmpl1bweyrswzt0e3syef0yuq 1839420 1839394 2025-07-06T04:09:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>“சுவாமிமலை” அல்ல. கொங்கு நாட்டுத் திருச்செங்கோடே என்று ஆய்ந்து எழுதியுள்ளார். கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் தமிழகம் எங்கும் யாத்திரை மேற்கொண்டு தன் சந்தக் கவியால் முருகப் பெருமானைப் பாடிப் பரவிய அருணகிரிநாதர் இத்தல முருகப் பெருமான் மீது 21 திருப்புகழ்ப் பாடல்கள் பாடியிருப்பது மிகவும் சிறப்புக்குரியது. {{left_margin|3em|<poem> “செஞ்சாலிமிஞ்சி மஞ்சாடு கின்ற ::செங்கோ டமர்ந்த பெருமாளே” “திதிக்கும் பார்வதியின் மதிப்புண் டாக்கிய ::திருச்செங் கோடுறை பெருமாளே” “கொண்டல் ஆர்த்துச் சிறக்கும் காட்சிக் ::கொங்கு நாட்டுத் திருச்செங்கோட்டுப் பெருமாளே”</poem>}} என்றெல்லாம் பாடிப் பரவியுள்ளார். திருவண்ணாமலையில் கோபுர வாயில் வடவருகே முருகப்பெருமான் காட்சி தந்த போது பாடியதாகக் கருதப் பெறும் கந்தரலங்காரத்தில் பல இடங்களில் திருச்செங்கோட்டு வேலவரைப் பாடி மகிழ்ந்துள்ளார். அவை மிகச் சிறந்த பாடல்களாகும். {{left_margin|3em|<poem> “தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே” “வழிக்குத் துணைவடி வேலும் செங்கோடன் மயூரமுமே” “சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை” “சேலார் வயற்பொழில் செங்கோ டனைச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில னேஅந்த நான்முகனே”</poem>}} என்பன அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரத் தொடர்கள். கந்தர் அனுபூதியிலும் அருணகிரி நாதர் “நாகாசல வேலவ நாலுகவித் தியாகா சுரலோக சிகாமணியே”<noinclude>{{rule}} {{rh|பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்||11}}</noinclude> iqey5gj2v661fu5e7syl7aqpoeg05b7 கனிச்சாறு 4/064 0 620267 1839421 2025-07-06T04:12:06Z Info-farmer 232 + படிவத் தரவு 1839421 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 64 | previous = [[../063/|063]] | next = [[../065/|065]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="127" to="127"fromsection="61" tosection="61"/> 38yvbbwtgsiqj4ainvnqiwsqhtfhhag கனிச்சாறு 4/065 0 620268 1839422 2025-07-06T04:12:42Z Info-farmer 232 + படிவத் தரவு 1839422 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 65 | previous = [[../064/|064]] | next = [[../066/|066]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="128" to="128"fromsection="62" tosection="62"/> bouefdw78qns5c02cv6dj8l7mmwc6vd கனிச்சாறு 4/066 0 620269 1839423 2025-07-06T04:13:02Z Info-farmer 232 + படிவத் தரவு 1839423 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 66 | previous = [[../065/|065]] | next = [[../067/|067]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="129" to="129"fromsection="63" tosection="63"/> 4jbtdokyvj81yti5tzkzm2qkdmjd9d1 கனிச்சாறு 4/067 0 620270 1839424 2025-07-06T04:13:21Z Info-farmer 232 + படிவத் தரவு 1839424 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 67 | previous = [[../066/|066]] | next = [[../068/|068]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="130" to="130"fromsection="64" tosection="64"/> tgf9k0n5ydix9hxdz7lsbxyuuqp4w30 கனிச்சாறு 4/068 0 620271 1839427 2025-07-06T04:14:04Z Info-farmer 232 + படிவத் தரவு 1839427 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 68 | previous = [[../067/|067]] | next = [[../069/|069]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="131" to="131"fromsection="65" tosection="65"/> 9lavkigk3qyohg694otfm1hj58vfgdx கனிச்சாறு 4/069 0 620272 1839428 2025-07-06T04:14:26Z Info-farmer 232 + படிவத் தரவு 1839428 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 69 | previous = [[../068/|068]] | next = [[../070/|070]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="132" to="132"fromsection="66" tosection="66"/> a7d0lyv3t37s35okto496aazeqpgzp2 கனிச்சாறு 4/070 0 620273 1839429 2025-07-06T04:14:44Z Info-farmer 232 + படிவத் தரவு 1839429 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 70 | previous = [[../069/|069]] | next = [[../071/|071]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="133" to="133"fromsection="67" tosection="67"/> 5lgysphexoh2n59tsu0cypev4kvq0yd கனிச்சாறு 4/071 0 620274 1839477 2025-07-06T06:25:14Z Info-farmer 232 + படிவத் தரவு 1839477 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 71 | previous = [[../070/|070]] | next = [[../072/|072]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="134" to="134"fromsection="68" tosection="68"/> tlwehjstown6g0xfjhzkqqiri3jp2g3 கனிச்சாறு 4/072 0 620275 1839478 2025-07-06T06:25:33Z Info-farmer 232 + படிவத் தரவு 1839478 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 72 | previous = [[../071/|071]] | next = [[../073/|073]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="135" to="135"fromsection="69" tosection="69"/> 5zbc6ym1teuty3n7xheri8ml2v8unps கனிச்சாறு 4/073 0 620276 1839479 2025-07-06T06:26:16Z Info-farmer 232 + படிவத் தரவு 1839479 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 73 | previous = [[../072/|072]] | next = [[../074/|074]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="136" to="136"fromsection="70" tosection="70"/> 9ussrlff66tlki4t8yjepfwygh91nl0 கனிச்சாறு 4/074 0 620277 1839480 2025-07-06T06:26:35Z Info-farmer 232 + படிவத் தரவு 1839480 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 74 | previous = [[../073/|073]] | next = [[../075/|075]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="137" to="137"fromsection="71" tosection="71"/> 1qy4q42fnbdzyhee4of6xbqi1rpk37w கனிச்சாறு 4/075 0 620278 1839481 2025-07-06T06:27:07Z Info-farmer 232 + படிவத் தரவு 1839481 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 75 | previous = [[../074/|074]] | next = [[../076/|076]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="138" to="139"fromsection="72" tosection="72"/> f0djj2gqs4al3vzieyzou07x2ukjbxd கனிச்சாறு 4/076 0 620279 1839482 2025-07-06T06:27:27Z Info-farmer 232 + படிவத் தரவு 1839482 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 76 | previous = [[../075/|075]] | next = [[../077/|077]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="140" to="140"fromsection="73" tosection="73"/> pvtb0ffslx0duguv2vp1bc6l92g9es7 கனிச்சாறு 4/077 0 620280 1839483 2025-07-06T06:27:54Z Info-farmer 232 + படிவத் தரவு 1839483 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 77 | previous = [[../076/|076]] | next = [[../078/|078]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="141" to="141"fromsection="74" tosection="74"/> bfdpselbdfcvqth9afc7b34vowk94xk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/366 250 620281 1839484 2025-07-06T06:28:13Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்னும் இரு பெரும் பிரிவினது; 100 அத்தியாயங்களை உடையது; 2526 விருத்தங்களால் இயன்றது; வடமொழி நூலிலிருந்து மொழிபெயர்க்கப் பெற்றது. {{larger|<b>3. கூர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அதினா|330|அந்தகக்கவி வீரராகவ முதலியார்}}</noinclude>என்னும் இரு பெரும் பிரிவினது; 100 அத்தியாயங்களை உடையது; 2526 விருத்தங்களால் இயன்றது; வடமொழி நூலிலிருந்து மொழிபெயர்க்கப் பெற்றது. {{larger|<b>3. கூர்மபுராணம்:</b>}} வடமொழியில் உள்ள பதினெண் புராணங்களுள் ஒன்றான கூர்ம புராணத்தின் மொழிபெயர்ப்பு. உத்தரகாண்டம், பூர்வகாண்டம் என்னும் இரு பெரும் பிரிவு கொண்டது. இதன்கண் 97 அத்தியாயங்களும் 3717 விருத்தங்களும் உள்ளன. இது, சைவ வைணவத் தெய்வங்கள் பற்றியும் சிவ பூசை மரபுகள் பற்றியும் விளக்குவது. {{larger|<b>4. அந்தாதி நூல்கள்:</b>}} கரிவலம் வந்த நல்லூர் என்பது புகழ் பெற்ற ஊராகும். இங்குள்ள சிவன் கோயில் பாடல் பெற்றது. இவ்வூர்ப் பெயரே கருவை என மருவி வழங்குகிறது. கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி, கருவை வெண்பா அந்தாதி, கருவைக் கலித்துறை அந்தாதி என மூன்று அந்தாதி நூல்களும், அதிவீரராம பாண்டியரால் இயற்றப் பெற்றன. எளிய பாடல்களைக் கொண்ட இந்நூல்கள், சிவநெறி பற்றிச் சாற்றுபவை ஆகும். திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, ‘குட்டித் திருவாசகம்’ எனப் புகழப்படுகிறது. {{larger|<b>5. வெற்றிவேற்கை:</b>}} எளிய தமிழில் எழுதப்பட்ட இந்த அறநூலில் எண்பத்திரண்டு அறமொழிகள் இடம் பெற்றுள்ளன. ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’, ‘பெரியோரெல்லாம் பெரியரும் அல்லர்’, ‘பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே’ என்பன போன்ற மரபு மீறிய சிந்தனைகள் சிலவற்றை அதிவீரராம பாண்டியர் சிந்தித்து, அவற்றை எளிமையான மொழியில், இனிமையான முறையில் இதன்கண் வெளியிட்டுள்ளார்.{{float_right|க.ப.அ.}} {{larger|<b>அதினா,</b>}} போர், அறிவு, அறிவியல், கலைகள் ஆகியவற்றிற்குரிய கிரேக்கப் பெண்தெய்வம். சீயசு என்னும் (Zeus) முதன்மைக் கடவுள் அல்லது கடவுள்களின் அரசன், இவன் நெற்றியிலிருந்து தோன்றியவன் என்று கிரேக்கப் புராணக்கதை கூறுகிறது. இவள் போருக்குச் செல்வதுபோல் கவசங்கள் அணிந்து படைக் கருவிகளைக் கொண்டிருப்பவள். கிரேக்கர்கள் கலைக்கும் கைத் தொழிலுக்கும் கடவுளாக இவனை வணங்கினர். அதினா (Athena) கன்னித் தெய்வமாவாள். இவளது கோயில் ஒன்று ஆதென்சிலுள்ள அக்கராபாலிசில் உள்ளது. இக்கோயில் பார்த்தினான் (Parthenon) கோயில் எனக் கூறப்படுகிறது. இவள் மரங்களில் தலைசிறந்த மரமாகிய ஒலிவ மரத்தை (Olive Tree) உண்டாக்கியதால் சிறந்த தெய்வமாகக் கருதப்படுகிறாள். இதனால் ஆதென்சு என்னும் கிரேக்க நகர அரசின் (City State) தலைநகரத்திற்கு இவளுடைய பெயர் சூட்டப்பட்டது. உரோமானிய தேவதை மினர்வா, அதினாவின் உருவத்தையும் பண்புகளையும் கொண்டுள்ளவளாகக் கருதப்படுகிறாள். தொன்மைக்காலச் சிற்பிகள் அதினாவின் சிற்பங்களை {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 366 |bSize = 480 |cWidth = 83 |cHeight = 195 |oTop = 102 |oLeft = 303 |Location = center |Description = }} {{center|அதினா சிலை}} வடிக்கும்பொழுது கவசத்துடன் கையில் மந்திரக் கேடயம் ஒன்றையும் பெற்றிருப்பதுபோல் வடித்துள்ளார்கள். {{larger|<b>அதீசர்</b>}} என்பவர் புத்தசமயத் துறவியும் கொள்கைப் பரப்புநருமாவார். இவர் இயற்பெயர் சந்திரகர்ப்பர் என்பதாகும். கி.பி. 981–ஆம் ஆண்டில் வங்காள மாநிலத்தில் சகோர் என்னும் ஊரில் இவர் பிறந்தவராகக் கருதப்பெறுகிறார். தம் 31–ஆம் வயதில் இவர் புத்தசமயத்தை மேற்கொண்டார். காலப்போக்கில் இவர் புத்த சமயத்தில் வல்லுநரானார், திபேத்து நாட்டு அரசரின் அழைப்பினை ஏற்று இவர் திபேத்து நாட்டிற்குப் போந்தார். அங்குப் பன்னீராண்டுகள் தங்கி, வடமொழியிலும் திபேத்திய மொழியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப் பௌத்த சமயத்தை வளர்த்தார். கி.பி. 1054–ஆம் ஆண்டில் தம் 73–ஆம் வயதில் திபேத்திலேயே காலமானார். திபேத்தியர்கள் இவரைப் போதி சத்துவர் என வழிபடுகிறார்கள். {{larger|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார்</b>}} பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். பிறவிக்குருடராக இருந்தும் ஞானக் கண்ணைத் தம் முயற்சியால் பெற்றுப் பெருங் கவிஞராக விளங்கியமையால், “அந்தகக் கவி” என்னும் சிறப்புப் பெயர்<noinclude></noinclude> nqczz5fpmxenf8dn1ufg20gfpzos2js கனிச்சாறு 4/078 0 620282 1839485 2025-07-06T06:28:21Z Info-farmer 232 + படிவத் தரவு 1839485 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 78 | previous = [[../077/|077]] | next = [[../079/|079]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="142" to="142"fromsection="75" tosection="75"/> kz6okg5r068k4izguw0a78vuexuady8 கனிச்சாறு 4/079 0 620283 1839486 2025-07-06T06:28:48Z Info-farmer 232 + படிவத் தரவு 1839486 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 79 | previous = [[../078/|078]] | next = [[../080/|080]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="143" to="144"fromsection="76" tosection="76"/> 345cc8joy5pf6bhrponb3ggz9lt6re7 கனிச்சாறு 4/080 0 620284 1839487 2025-07-06T06:29:11Z Info-farmer 232 + படிவத் தரவு 1839487 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 80 | previous = [[../079/|079]] | next = [[../081/|081]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="144" to="144"fromsection="77" tosection="77"/> f9770e5p6appu49jj2ua5xsnr0gxinv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/367 250 620285 1839496 2025-07-06T07:40:14Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெற்றுத் திகழ்ந்தார். வீரராகவன் என்பது இவர் தம் இயற்பெயராகும். இவர் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள புதூரில் பிறந்தார் என்று சிலரும் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்தகக்கவி வீரராகவ முதலியார்|331|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்}}</noinclude>பெற்றுத் திகழ்ந்தார். வீரராகவன் என்பது இவர் தம் இயற்பெயராகும். இவர் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள புதூரில் பிறந்தார் என்று சிலரும் பொன்விளைந்த களத்தூரிற் பிறந்தார் என்று வேறு சிலரும் கருதுகின்றனர். இவருடைய தந்தையார் பெயர் வடுகநாத முதலியார். கண்களில்லாமையால் தம் மனத்தையே ஏடாகக் கொண்டு எழுதிப் பன்னூறு நூல்களைப் பயின்று புலமை எய்தினார் என்றும் செய்தியை, “ஏடாயிரம் கோடி எழுதாது தன் மனத்து எழுதிப் படித்த விரகன்” என்று இவர் தம்மைப் பற்றிக் கூறியுள்ளது கொண்டு அறிய முடிகிறது. மேலும் காஞ்சியில் இவர் கல்வி பயின்றார் என்பதும், வீணைப் பயிற்சியும் நன்கு பெற்றிருந்தார் என்பதும், “கவி வீரராகவன் கச்சியிலே தன் நெஞ்சம் ஏடெனக் கற்றான் ஒருமுத்தமிழையுமே” என்று இவரைப் புரந்த ஈழத்து அரசன் பரராச சிங்கன் கூறுவதனால் தெளிவாகின்றன. பழுத்த மரங்களைத் தேடிப் பறவைகள் செல்வது போலத் தம்மைப் பேணத் தக்க வள்ளல்களைத் தேடிப் புலவர்கள் செல்வது இயல்பு. அந்தகக்கவி வீரராகவ முதலியாரும் தம்மைப் பேணும் அரசர்களை நாடிச் சென்றார். முதலாவதாகச் சோழ நாடு சென்று சிலகாலம் தங்கியிருந்தார். பின்னர் ஈழநாடு சென்று அந்நாட்டு மன்னன் பரராசசிங்கன்பால் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். இவருடைய இயல் இசைத் தமிழ்ப் புலமையை நன்குணர்ந்து போற்றிய அம்மன்னன், இவரைப் பாராட்டிப் பல பாடல்கள் இயற்றியதோடு, இவருக்கு யானையும் வளநாடும் பொன்னும் பொற்பந்தரும் அளித்துச் சிறப்பித்தான். உலா, கோவை, பிள்ளைத்தமிழ், கலம்பகம், மாலை, புராணம் ஆகிய இலக்கிய வகைகளில் அமைந்த இவருடைய படைப்புகள் கிடைத்துள்ளன. {{larger|<b>திருவாருர் உலா, கயத்தாற்றரசன் உலா</b>}} என்னும் இவருடைய இரண்டு உலா நூல்களும் இலக்கிய நயமிக்கனவாக இவர் காலப் புலவர்களால் பாராட்டப் பெற்றன. உலா நூல்களுள் மிக்க சிறப்புடையதாய்க் கருதப்படும் திருவாரூருலா, திருவாரூரில் கோயில் கொண்டுள்ள தியாகேசப் பெருமான் மீது பாடப் பெற்றது. இவர் கயத்தாற்றரசன் மீது பாடிய உலாவினைக் கற்றுச் சுவைத்த அக்காலப் புலவர் ஒருவர், “வீரராகவனாம் வேளாளன் பேசும் கவிகேட்டபின், ஒட்டக் கூத்தன் கவியும் ஓங்கிய கம்பன் கவியும், பட்டப் பகல் விளக்காய்ப்பட்டதே” எனப் பாராட்டியுள்ளமை, அந்நூலின் பெருமையை நன்குணர்த்துகிறது. அனந்தை அரசன் சந்திரவாண மகிபாலன் இவரை அழைத்துத் தம்மீது கோவை நூல் ஒன்று பாடவேண்டும் எனக்கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவர் சந்திரவாணன் கோவை என்னும் அகப்பொருள் கோவை நூலை இயற்றினார் என்னும் செய்தி கூறப்படுகிறது. “மின்னு மாளிகை யனந்தை யாதிபதி” எனத் தொடங்கும் இவருடைய சீட்டுக்கவியும் இதனை உறுதி செய்கிறது. {{larger|<b>சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், சேயூர்க் கலம்பகம்</b>}} என்னும் இரு நூல்களும் சேயூர் முருகப் பெருமான் மீது இவர் கொண்டிருந்த பத்தியையும், இவர்தம் கவிதைத் திறத்தையும் காட்டுவனவாயுள்ளன. {{larger|<b>திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை</b>}} ஆகிய இரு நூல்களையும் இவர் திம்மய்ய அப்பய்யன் என்னும் வள்ளலின் வேண்டுகோட்கிணங்கப் பாடினார் என்பதனை, “இந்நாள் இருந்த பேர்” எனத்தொடங்கும் இவரது சீட்டுக்கவி உணர்த்துகிறது. {{larger|<b>சீட்டுக்கவி</b>}} என்னும் ஓர் இலக்கிய வகையிற் சிறந்த பல பாடல்களை இவர் இயற்றியுள்ளார். இவர் காலத்திலிருந்த பல சிற்றரசர்களையும் வள்ளல்களையும் தம் சீட்டுக் கவியால் பாடிப் போற்றியுள்ளார். சந்திரவாண மகிபாலன், ஈழநாட்டு அரசன் பரராச சிங்கன், திம்மய்ய அப்பய்யன், சேலம் செழியதரையன், சிரயன் தினகரன் ஆகியோர் இவரால் புகழப்பட்டவருள் சிலராவர். நிரஞ்சன கவிஞர் என்னும் புலவர் ஒருவர், “சீட்டுக்கவி யென்று சொல்வார் சிலர், அந்தச் சீட்டுக்கவி காட்டுக்கு எரித்த நிலவாகிப்போம்... நாட்டுக்கு இலக்கியம் கவி வீரராகவன் நற்கவியே” எனப் பாராட்டியிருப்பது கொண்டு, இவர்தம் புலமையையும் புகழையும் உணர்தல் கூடும்.{{float_right|அ.அ.ம.}} {{larger|<b>அந்தபாலர்</b>}} நாட்டின் எல்லைகளைக் கண்காணிக்க நியமிக்கப் பெற்ற அரசு ஊழியர். கௌடில்யர் தாம் எழுதிய அர்த்த சாத்திரத்தில் 18 வகையான அரசாங்கப் பணியாளர்களுள் அந்தபாலரும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர், தலைச் சுமையாக வணிகப் பொருள்களைக் கொண்டு வரும் சிறு வணிகர்களிடம் ஒன்றேகால் பணம் சாலை வரியாக வாங்கும் உரிமையினைப் பெற்றிருந்தார். {{larger|<b>அந்தமான்–நிக்கோபார் தீவுகள்</b>}} இந்தியக் குடியரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும் (Union Territory). இத்தீவுகள் வங்கக் கடலில் ஏறத்தாழ 800 கி.மீ. தூரத்திற்கு வடக்கு–தெற்காகப் பரவிக் கிடக்கின்றன. அந்தமான் தீவுகளையும் நிக்கோபார் தீவுகளையும் பத்துப் பாகைக் கடற்சந்தி ஒன்று பிரிக்கிறது. இச்சந்தி, ஏறத்தாழ 150 கி.மீ. அகலமுள்ள நீர்ப்பரப்பாகும். இதன் வடக்கில் அந்தமான் தீவுகளும் தெற்கில் நிக்கோபார் தீவுகளும் உள்ளன. அந்தமான்–நிக்கோபார் தீவுகள் 6–14–ஆம் குறுக்குக் கோடுகளுக்கு இடையிலும் 92–94–ஆம் பாகை நெடுங்-<noinclude></noinclude> omw17pvdd1hs7r0df6gwzvd4z0sfo4v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/251 250 620286 1839499 2025-07-06T07:48:16Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தில் தோல்வியடைந்தார். இந்தியாவில் மராட்டியர்களின் செல்வாக்கும் அதிகாரமும் குறையலாயின. தலைமை ஆளுநராக மிண்டோ (கி.பி. 1807-13) ஆட்சி செய்த கால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|227|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு}}</noinclude>தில் தோல்வியடைந்தார். இந்தியாவில் மராட்டியர்களின் செல்வாக்கும் அதிகாரமும் குறையலாயின. தலைமை ஆளுநராக மிண்டோ (கி.பி. 1807-13) ஆட்சி செய்த காலத்தில் இரஞ்சித் சிங்குடன் கி.பி. 1809-இல் அமிர்தசரசில் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. சட்லெசு ஆறு, இரஞ்சித் சிங் நாட்டின் எல்லையையும் ஆங்கிலேய வாணிகக்குழு அரசின் எல்லையையும் பிரிக்கும் கோடாக அமைந்தது. சிசு சட்லெசுப் (Cissutlej) பகுதி ஆங்கிலேயருக்குக் கிடைத்தது. ஆங்கிலேய எல்லைப் புற ஆதிக்கம் யமுனை ஆற்றங்கரையிலிருந்து சட்லெசு ஆறுவுரை பரவியது. சட்லெசு ஆற்றின் மேற்கில் இரஞ்சித்சிங்கு தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். தலைமை ஆளுநர் ஏசுடிங்சு பிரபுக் (கி.பி. 1813-23) காலத்தில் நேபாளப் போர் (கி.பி. 1814-18) நடைபெற்றது. நேபாள மக்களான கூர்க்கர்கள் பட்வால். சியோரசுப் பகுதிகளைக் கைப்பற்றியதால், ஏசுடிங்க போர் தொடுத்தார். கூர்க்கத் தலைவர் அமிரிசிங்கு ஆங்கிலேயரிடம் சரணடைந்தார்; சாகவ்லி உடன்படிக்கையைச் செய்து கொண்டார். கார்வால், குமாண் மாநிலங்கள் சரணடைந்தன. ஆங்கிலேயர் சிம்லாவைப் பெற்றனர். துணைப்படைத் திட்டத்தை ஏற்க மறுத்த பேசுவா பாசிராவுடன் ஏசுடிங்கு செய்தபோர் மூன்றும் மராத்தியப் (கி.பி. 1817-18) போராகும். ஆங்கிலேயர் பேசுவா பாசிராவைக் கிர்க்கி என்னுமிடத்தில் தோற்கடித்தனர். பேசுவா கி.பி. 1818-இல் சரணடைந்தார். மராட்டியப் படைபலம் அழிக்கப்பட்டது. தலைமை ஆளுநர் ஆம்கர்சுடு பிரபு (கி.பி. 1823-28) ஆட்சிக் காலத்தில் முதல் பர்மியப் போர் (கி.பி. 1824-26) நடைபெற்றது. பர்மியர்கள் சிட்டகாங்கிற்கருகிலுள்ள சாபுரியைக் கி.பி. 1823-இல் தாக்கினார்கள். ஆம்கர்சுடு பர்மியர்களைத் தோற்கடித்துப் பர்மிய அரசருடன் இயண்டபூ (கி.பி. 1826) உடன்படிக்கையைச் செய்து கொண்டார். அரகான், தென்னாசரீம் இடங்கள் வாணிகக் குழுவுக்குக் கிடைத்தன. அரசுரிமையினால் ஏற்பட்ட போட்டியின் காரணமாக ஆம்கர்சுடு பரத்பூரைக் கைப்பற்றினார். தலைமை ஆளுநர் ஆக்லண்டின் (கி.பி. 1836-42) ஆட்சிக் காலத்தில் முதல் ஆப்கானியப் போர் நடைபெற்றது. பெசாவரை இரஞ்சித்சிங்கிடமிருந்து மீட்டுத்தர இயலாதென்று ஆக்லண்டு கூறியதால், ஆப்கானிய அமீர் தோசுத்து முகமது உருசியர்களின் உதவியை நாடினார். தோசுத்து முகமதைப் பதவியினின்றும் நீக்கிச் சமசுசாவைப் பதவியில் அமர்த்த ஆக்வண்டு விரும்பினார். இப்போர் காரணமின்றி மேற்கொள்ளப்பட்டுப் பொறுப்பின்றி முடிக்கப்பட்டது. ஆங்கிலேயர் பல தொல்லைகள் அடைந்தனர். தலைமை ஆளுநர் எல்லன்பரோ (கி.பி. 1842-44) பதவியேற்றதும் முதல் ஆப்கானியப் போரை வெற்றியாக முடித்தார். இவர் சிந்துவைக் (கி.பி. 1843-இல் கைப்பற்றியது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். தலைமை ஆளுநர் ஆர்டிஞ்சு பிரபு (கி.பி. 1844-48) ஆட்சிக் காலத்தில் சீக்கிய இராணுவத்தை ஆங்கிலேயருக்கெதிராகப் போர் புரியும்படி இலல்சிங்கும், இராணி சிந்தன் என்பவரும் தூண்டிவிட்டனர். ஆங்கிலேயருக்குச் சொந்தமான சட்லசுப் பகுதி தாக்கப்பட்டது தான் முதலாம் சீக்கியப் போருக்குக் (கி.பி. 1845-46) காரணமாகும். முத்கி, பிரோசா ஆகிய இடங்களில் சீக்கியர்கள் தோல்வியடைந்தனர். சீக்கியர்கள் இலாகூர் உடன்படிக்கையை கி.பி. 1846-இல் செய்து கொண்டனர். தேவாப், சலந்தர், அசாரா ஆசிய இடங்கள் ஆங்கிலேயருக்குக் கிடைத்தன. ஆங்கிலேய வாணிகக் குழுவின் ஆட்சியை விரிவு படுத்தத் தலைமை ஆளுநர் தல் அவுசி (கி.பி.1848-56) நாடிழக்கும் கொள்கையைப் பின்பற்றினார். அதாவது இந்திய அரசர்கள் குழந்தையில்லாமல் இருந்தால், வாணிகக் குழுவின் அனுமதியுடன் மகன்மை செய்து கொள்ளவேண்டும். வாணிகக் குழுவின் அனுமதியின்றி மகன்மை செய்து கொண்டால் அந்த அரசர்களின் ஆட்சிப்பகுதிகள் அவர்கள் இறந்தவுடன் வாணிகக் குழு ஆட்சியின்கீழ் இணைத்துக்கொள்ளப்படும் என்பதாகும். இக்கொள்கையின்படி கி.பி. 1848-இல் சதாராவும், கி.பி. 1849-இல் செயபுரியும், சாம்பல்புரியும், கி.பி. 1850-இல் பகத்தும், கி.பி. 1852-இல் உதயபுரியும், கி.பி. 1853-இல் சான்சியும் பேராரும், கி.பி. 1854-இல் நாகபுரியும் வாணிகக் குழுவின் ஆட்சிப் பகுதியுடன் இணைக்கப்பட்டன. அயோத்தியும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பர்மிய அரசு இயண்ட பூ உடன்படிக்கையை மீறியதாலும், தல் அவுசியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாததாலும் இரண்டாம் பர்மியப்போர் (கி.பி. 1852) நடைபெற்றது. ஆங்கிலப் படைத்தலைவர் கார்வின் இரங்கூன், புரோம். பெகு ஆகிய இடங்களைக் கைப்பற்றினார். பர்மாவின் கீழ்ப்பகுதி வாணிகக்குழுவின் ஆட்சியின்கீழ் இணைக்கப்பட்டது. ஆங்கிலேயர் கேட்ட பொருளை மூல்தானின் ஆளுநர் மூல்ராசு தர மறுத்ததால். இரண்டாம் சீக்கியப் போர் (கி.பி. 1848-49) மூண்டது. ஆங்கிலப் படைத்தலைவர் ஆண்டர்சன் மூல்ராசைத் தோற்கடித்துக் கி.பி. 1848-இல் மூல்தான் கோட்டையைக் கைப்பற்றினார். ஏர்சிங்கின் தலைமையில் உள்ள சீச்-<noinclude></noinclude> ic8gmg5vv4egsqlp4ubjpt71ir8nruu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/252 250 620287 1839501 2025-07-06T08:04:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கியப் படையை ஆங்கிலேயர் தோற்கடித்தனர். சிலியன்வாலா என்னுமிடத்திலும் சீக்கியப்படை தோல்வியடைந்தது. படைக்கலகத்திற்குப் பின் (கி.பி. 1858) இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில ........|228|ஆங்கிலம் கற்பித்தல்}}</noinclude>கியப் படையை ஆங்கிலேயர் தோற்கடித்தனர். சிலியன்வாலா என்னுமிடத்திலும் சீக்கியப்படை தோல்வியடைந்தது. படைக்கலகத்திற்குப் பின் (கி.பி. 1858) இந்தியாவின் நிருவாகப் பொறுப்புகள், ஆங்கிலேயக் கிழக்கிந்திய வாணிகக் குழுவினிடமிருந்து, இங்கிலாந்தின் அரசி விக்டோரியாவின் நேரடியான அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. கானிங்குப்பிரபு ஆங்கிலேய வாணிகக் குழுவின் இறுதித தலைமை ஆளுநரும் இந்தியாவில் பிரிட்டிசு அரசின் முதல் அரசப் பேராளரும் ஆவர்.{{Right|அ.கே.}} <b>ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு</b> ஆங்கில-சாக்சானியரைப் பற்றி அறிய உதவும் நூல். இது ஆங்கில மொழியில் எழுதப்பட்டதாகும். இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப்பட்டது. பிரிட்டனை உரோமானியர் வெற்றி கண்டது முதல் மகா ஆல்பிரடு முடிய உள்ள காலத்திற்கான வரலாற்று மூலங்களையும் தடயங்களையும் கொண்டு இவ்வரலாற்றுக் குறிப்பேடு உருவாக்கப்பட்டது. இதன் மூலப்படிவுமும் இதன் படிகளும் அழிந்துவிட்டன. திருத்தப் பெற்ற நிலையில் ஏழுபடிகள் இன்றும் நிலைத்துள்ளன. இவை ஆங்கில வரலாற்றின் தொடக்கக் காலத்தைப் பற்றி அறிய உதவும் மதிப்புமிக்க சான்றுகளாம். ஆங்கிலோ-சாக்சன் வரலாற்றுக் குறிப்பேடு (Anglo-Saxon Chronicle) ஆங்கில மொழியின் வளர்ச்சியையும் அறிய உதவுகிறது. <b>ஆங்கிலம் கற்பித்தல்</b>: இந்தியாவில் முதலில் ஆங்கிலம் பள்ளிகளில் சுற்பிக்கப்பட்ட பொழுது மொழிபெயர்ப்பு முறையே (Translation Method) கையாளப்பட்டது. இம்முறையில் ஆங்கிலச் சொற்களையும் ஆங்கிலச் சொற்றொடர்களையும் தாய் மொழியில் மொழிபெயர்த்துக் கற்பித்தனர். இம்முறையில் காலம் வீணானதாலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளின் அடிப்படை வேற்றுமைகளால் இடர்ப்பாடுகள் உண்டானமையாலும். மொழியை நடைமுறையில் பயன்படுத்துவதற்கு இது உதவாததாலும் இம்முறை கைவிடப்பட்டது. இதையடுத்து இலக்கண வழிப்போதனை முறைக்குக் (Grammatical Approach) கவனம் திரும்பியது. இம்முறையில் ஆங்கில மொழி இலக்கண விதிகளை விளக்கி. ஆங்கிலச் சொல். சொற்றொடர் அமைப்புகளைக் கற்பிக்க முற்பட்டனர். இலக்கண முறையின் மூலம் ஆங்கிலம் பயின்ற மாணவர்களுக்குத் தடையின்றி ஆங்கிலம் பேசவும் எழுதவும் இயலவில்லை. ஆகையால் நேர்முக முறை (Direct Method) வற்புறுத்தப்பட்டது. இம்முறையில் சிறிதும் தாய்மொழிக் கலப்பில்லாமல் ஆங்கிலச் சொற்களும் சொற்றொடர்களும் பொருள், சூழல் தொடர்பின் மூலம் நேர்முகமாகக் கற்பிக்கப்பட்டன. நம் பள்ளிகளில் இப்பொழுது ஆங்கிலமொழி, அமைப்பியல் முறையைப் (Structural Approach) பின்பற்றிக் கற்பிக்கப்பட்டு வருகிறது. இம்முறை இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் உருவானதாகும். நேச நாட்டுப்படை வீரர்கள், ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் கிழக்காசிய நாடுகள் பலவற்றிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்ததால், அவர்கள் ஆங்கில மொழி அறிவு சிறிதும் இல்லாமல் இருந்தார்கள். அவர்கள் அமெரிக்கப் படைத்தலைவர் ஆங்கிலப் படைத்தலைவர் ஆகியோரின் கீழ் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. பலநாட்டுப் படை வீரர்களுக்குப் பொதுவாக கட்டளைகள் இடவும் அவைகளைப் படைவீரர்கள் புரிந்து கொண்டு செயற்படவும் தேவையான ஆங்கில மொழிச் சொற்களும் சொற்றொடர் அமைப்புகளும் இம்முறையில் கற்பிக்கப்பட்டன. இம்முறை மிக விரைவில் பயன் தந்ததால் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மிச்சிகனில் இருக்கும் ஆன் ஆர்பர் நகரில் (Ann Arbor) உள்ள மொழிக் கழகம் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்தது. இக்கழகத்தினர், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் பல துறையிலுள்ள ஆண் பெண்கள் ஆகியோரின் உரையாடல்களை அலசி ஆராய்ந்தனர். இதன் மூலம் பெரும்பாலோர் பயன்படுத்தும் சொற்றொடர்கள் ஒரு சில சொற்றொடர் அமைப்புகளுள் (Structures) அடங்கும் என்று தெரிந்து கொண்டனர். மேலும், மொழி இலக்கணத்தை எளிதாக்கலாம் எனவும் கண்டனர். இம்முறைகளைப் பின்பற்றி ஒரு சொற்றொடர் அமைப்பைக் கொண்டு (Sentence Structure) பல சொற்றொடர் அமைப்புகளை உண்டாக்கலாம் என்றும், ஆங்கிலம் செம்மையாகப் பேசவும் எழுதவும் ஒரு சில வாக்கிய அமைப்புகளும் குறிப்பிட்ட சொற்களும் போதும் என்றும் அறிந்தனர். இத்துறையில் தார்ண்டைக்கு (Thorndike) என்பாரின் எண்ணிக்கை அடிப்படையில் அடிக்கடி புழங்கப்படும் சொற்களின் பட்டியலும் (Word Frequency Lists). ஓக்டன் (Ogden) என்பாரின் அடிப்படை ஆங்கில மொழியும் (Basic English) குறிப்பிடத்தக்கவை, இம்முயற்சியை ஒட்டி இந்நாட்டிலும் ஆங்கிலச் சொற்களின் புழங்கல் பட்டியல்கள் (Word (Frequency Lists) உருவாக்கப்பட்டன. ஆங்கில மொழியில் சொற்களின் அமைவிடம் (Word Order) மிகவும் இன்றியமையாததாகும். சொற்றொடர் அமைப்பில் ஒவ்வொரு சொல்லுக்கும் தனியிடமுண்டு. இதை மாற்றினால் அச்சொற்-<noinclude></noinclude> fzlvn05udav90jlul8q65ygr2121sob பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/368 250 620288 1839502 2025-07-06T08:13:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோடுகளுக்கிடையிலும் அமைந்துள்ளன. அந்தமான்–நிக்கோபார் தீவுகளின் மொத்தப் பரப்பு 8136 சதுரக் கி.மீ. இவற்றில், அந்தமான் தீவுகளின் பரப்பு 6,401 ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|332|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்}}</noinclude>கோடுகளுக்கிடையிலும் அமைந்துள்ளன. அந்தமான்–நிக்கோபார் தீவுகளின் மொத்தப் பரப்பு 8136 சதுரக் கி.மீ. இவற்றில், அந்தமான் தீவுகளின் பரப்பு 6,401 சதுரக் கி.மீ. நிக்கோபார் தீவுகளின் பரப்பு 1,645 சதுரக் கி.மீ. ஆகும். இத்தீவுக்கூட்டங்களில் மொத்தம் 293 தீவுகள் உள்ளன. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை மட்டில் 204 ஆகும். இத்தீவுகள் கல்கத்தாவிலிருந்து 1255 கி.மீ. தெற்கிலும், சென்னையிலிருந்து 1,190 கி.மீ. கிழக்கிலும், பர்மாவின் நெகிராய்சு முளைக்கு (Cape Negrais) மேற்கிலும், ஏறத்தாழ 193 கி.மீ. அகலமும் 467 கி.மீ. நீளமும் கொண்டு பரந்து கிடக்கின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 368 |bSize = 480 |cWidth = 206 |cHeight = 250 |oTop = 204 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|அந்தமான் - நிக்கோபார் திவுகள்}} அந்தமான் தீவினைப் பெரிய அந்தமான், சிறிய அந்தமான், சிறு தீவுகள் என்று மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். பெரிய அந்தமான், ஒரே தீவாகக் கருதப்பட்டாலும், இது குறுகிய கடல் நீரோடைகளால் வடக்கு அந்தமான், மத்திய அந்தமான், பரடாங்கு, தென் அந்தமான் என்று நான்கு தனித் தீவுகளாகப் பகுக்கப்படுகிறது. பெரிய அந்தமான், 256 கி.மீ. நீளமும் 32 கி.மீ. அகலமும் கொண்டதாகும். இதன் தெற்கில் அமைந்திருக்கும் சிறிய அந்தமான் 42 கி.மீ. நீளமும் 26 கி.மீ. அகலமும் உடைது. அந்தமான் தீவுகளின் கடற்கரையில் சிறு சிறு கடற்கழிகளும் வளைகுடாக்களும் உள்ளமையால் இயற்கைத் துறைமுகங்கள் பல அங்கு உள்ளன. ஆண்டுக்கு எட்டு மாதங்கள் அங்கு மழைக்காலம். திசம்பர் முதல் மார்ச்சு முடிய நான்கு மாதங்கள் மழை பொழியதில்லை. நில நடுக்கோட்டுக்கு மிக அண்மையில் வடக்கே 10-14-ஆம் பாகைக் குறுக்குக் கோடுகளுக்கிடையில் அமைந்துள்ளமையால், இத்தீவுகளில் வெப்பம் மிகுதி. எனினும், கடல் சூழ்ந்துள்ளதால் இவ்வெப்பம் ஓரளவு தணிகிறது. {{larger|<b>வரலாறு:</b>}} கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோமானிய நிலநூலாசிரியர் தாலமி தமது முதல் உலகப் படத்தில் இத்தீவுகளை நற்பேற்றுத் தீவுகள் (Lands of Good Fortune) என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு வந்த சீனப் பயணியான இத்சீங் (Itsing) என்பவர் கி.பி. 672 ஆம் ஆண்டளவில் அந்தமான் தீவுகளின் வழியாகவே வந்தார் எனத் தெரிகிறது. பின்னர்ப் பல அரபு நாட்டுப் பயணிகள் இத்தீவுகளைக் கண்டு குறிப்புகள் எழுதியுள்ளனர். இராசேந்திர சோழனது கடற்படை, கடாரப் படையெடுப்பு நிகழ்த்தியபோது, நக்கவாரம் (நிக்கோபார்) வழியாகச் சென்றது. வணிகக் கப்பல்களும் போர்க் கப்பல்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அடிக்கடி சென்று வந்தன. 1286–இல் மார்க்கோபோலோவும், 1322-இல் ஒடோரிக் என்ற கிறித்தவத் துறவியும், 1430–இல் நிக்கோலோ காண்டியும் இத்தீவுகளுக்கு வருகை தந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியத் தலைமை ஆளுநரான (Viceroy) காரன்வாலிசுப் பெருமகனாரின் ஆணையின்படி கேப்டன் ஆர்ச்சிபால்டு பிளேர் என்பவர் அந்தமான் சென்று, தென்கிழக்குக் கரையில் குற்றவாளிகள் குடியிருப்பு ஒன்றை 1789–இல் நிறுவினார். அப்போது அது போர்ட்டு காரன்வாலிசு எனப் பெயரிடப்பட்டது. அக்குடியிருப்பு, சில ஆண்டுகளில் பெரிய அந்தமானின் வடகிழக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டது. தென்கிழக்கில் 1858–இல் ஒரு புதிய குடியிருப்பை ஆங்கிலேயர் நிறுவினர். அதற்குப் போர்ட்டு பினேர் (Port Blaire) எனப் பெயரிட்டனர். முதல் இந்திய விடுதலைப் போரில் சிறை பிடிக்கப்பட்ட இந்தியர்களில் பலரைக் கொன்றபின், எஞ்சியவர்களை இங்குத்தான் ஆங்கிலேய அரசு குடியமர்த்திற்று. அவர்களுள் மிகப் பலர் அத்தீவுகளின் மழைப் பகுதியாகிய நிலப்பரப்பில் பல்வேறு கொள்ளை நோய்களுக்கு ஆளாகி மடிந்தனர். உயிருடன் இருந்த ஒரு முகமதியக் குற்றவாளி 1872–இல் போர்ட்டு பிளேருக்கு வந்த தலைமை ஆளுநர் மேயோவைக் கொலை செய்தான். 1866–இல்<noinclude></noinclude> c06bsqodu96wpscdxj1kby4dctqedu4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/253 250 620289 1839503 2025-07-06T08:25:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றொடர் அமைப்பின் பொருளே மாறுபடும். எடுத்துக்காட்டாக, ‘This is a book’ என்ற சொற்றொடர் அமைப்பு ‘இது ஒரு புத்தகம்’ எனப் பொருள்படும். இதிலுள்ள சொற்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கிலம் கற்பித்தல்|229|ஆங்கிலம் கற்பித்தல்}}</noinclude>றொடர் அமைப்பின் பொருளே மாறுபடும். எடுத்துக்காட்டாக, ‘This is a book’ என்ற சொற்றொடர் அமைப்பு ‘இது ஒரு புத்தகம்’ எனப் பொருள்படும். இதிலுள்ள சொற்களை மாற்றியமைத்த ‘Is this a book’ என்னும் சொற்றொடர் ‘இது ஒரு புத்தகமா?’ எனப் பொருள்படும். ஒரு சொற்றொடர் அமைப்பு சொற்களின் மாற்றத்தினால் கேள்வியாக உருப்பெறுகிறது. தமிழைப் பொறுத்தவரை சொற்றொடர்களில் சொற்களின் அமைவிடம் முதன்மையானதன்று. தமிழில் பெயர்களும் விளைகளும் உரிய பின்னொட்டுகளைக் கொண்டு பொருள் மாறி நிற்பதால், இத்தொகுதிகளை இடம் மாற்றினாலும் வாக்கியத்தின் பொருள் மாறுவதில்லை. ஆங்கிலம் இத்தகைய சொல்திரிவு மிகுதியாக இல்லாத மொழியாகும். ஆங்கிலத்தில் சுட்டு, காலம், எண், வேற்றுமை ஆகியவற்றைக் குறிப்பதற்குத் தனித்தனிச் சொற்கள் உள்ளன. ஆனால், தமிழில் ஒரு சொற்றொடரின் பெயரும் வினையும் மாற்றம் பெற்று மேற்கூறிய அனைத்தையும் விளக்கிக் காட்டும். ‘படித்துக் கொண்டிருக்கிறான்’ என்ற சொற்றொடரில் ‘கொண்டிருக்கிறான்’ என்ற சொல் காலம், பால், இடம், எண் ஆகிய அனைத்தையும் காட்டும். மேலும் ‘Rama killed a snake’ என்ற ஆங்கிலச் சொற்றொடரில் சொற்களை மாற்றி ‘A snake killed Rama’ என்று அமைத்தால் பொருள்மாறுபடும். தமிழில் ‘இராமன் பாம்பைக் கொன்றான்’ என்ற சொற்றொடரில் சொற்களை மாற்றியமைத்துப் ‘பாம்பை இராமன் கொன்றான்’ என்று படித்தாலும் பொருள் மாறுபடாது. ஆங்கில மொழியிலுள்ள சொற்கள் இரண்டு வகைப்படும். பேனா, மாணவன், மேசை, வீடு, உணவு, போன்ற பொருள் குறி சொற்கள் ஒரு வகை. இவை ஆங்கிலத்தில் ‘Content Words’ எனப்படும். இத்தகைய சொற்கள் அவற்றைக் குறிக்கும் பொருள்களை நம் கண்முன் தோற்றுவிக்கின்றன. மற்றவை அமைப்புச் சொற்களாகும் (Structural Words). இவை எப்பொருளையும் குறிக்காமல்’ ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும். The book is on the table என்ற சொற்றொடரில், நூலுக்கும் (Book) மேசைக்கும் (Table) உள்ள தொடர்பை ‘மேல்’ (on) என்ற அமைப்புச் சொல் விளக்குகிறது. அமைப்புச் சொற்கள் ஆங்கிலச் சொற்றொடர்களின் பொருளை வரையறை செய்கின்றன. எடுத்துக்காட்டாக ‘Sugar Bag’ என்பது வெற்றுச் சர்க்கரைச் சாக்கையும், ‘Bag of Sugar’ என்பது ஒரு சாக்கில் உள்ள சர்க்கரையையும் குறிக்கும். ஆங்கில மொழியில் அமைப்புச் சொற்களைப் பயன்படுத்தும் முறையில் சில வேளை குழப்பம் ஏற்படும். இதைத் தவறில்லாத சொற்றொடர்களைப் பழகுவதன் மூலம் தீர்க்கலாம். ஆகவே, ஆங்கிலச் சொற்றொடர் அமைப்பியல் முறையில் (Structural Approach) மொழிப் பழக்கமும் மொழிப் பயிற்சியும் மிசுச் சிறந்தனவாகும். அதேபோல் இலக்கண விதிகளைத் தெரித்து கொள்வதைவிடச் சொற்களின் அமைவிடங்களைப் பற்றிய பயிற்சியும் சொற்றொடர் அமைப்புப் பற்றிய அறியும் இன்றியமையாதவை. ஆங்கில மொழி கற்பித்தலில் சொற்றொடர் அமைப்பு விளக்கமும் சொற்களின் ஆட்சியும் நேரடியான வாய்மொழிப் பழக்கமும், இடையறாத மொழிப் பயிற்சியும் இன்றியமையாதவையாகும். ஆனால், இம்முறையில் மொழிப் பழக்கமும் (Habit) மொழிப்பயிற்சியும் (Drill) செயற்கையான சூழ்நிலையில் ஏற்படுவதாகவும், தொடர்ந்த மொழிப் பயிற்சி (Language Drill) எந்திரத் தன்மை கொண்டதாகவும் உணரப்பட்டதால், மற்றுமொரு புதிய கற்பித்தல் முறைக்கு இது வழிகோலியது. அண்மைக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட தொடர்பு வழிக் கற்பித்தல்முறை (Communicational Approach) இன்னும் சோதனை நமது நாட்டில் நிலையிலேயே இருக்கிறது. இதைத் தோற்றுவித்தவர் விடோசன் (H. G. Widdouson) என்பவராவர். இம்முறையில் ஆங்கில மொழியின் சொற்றொடர் அமைப்புகளைவிடச் சொற்றொடர் அமைப்புகளின் புழக்கம் (Usage) அல்லது ஆங்கிலத்தை இயல்பான சூழ்நிலையில் நேரிடையாகப் பயன்படுத்துவது மிகத் தேவையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு சொற்றொடரின் முழுப்பொருளும் அது எந்த நேரத்தில் எந்தச் சூழ்நிலையில் வெளிப்படுகிறது என்பதையே பொறுத்துள்ளது. சொற்றொடரின் உண்மையான முழுப்பொருளும் அது பேசப்படும் முறை. வேகம், அது வெளிப்படும் சூழ்நிலையின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்திருப்பதால், சொற்றொடர் அமைப்புகளை எந்திர முறையில், உண்மைக்குப் புறம்பான சூழ்நிலையில் சொல்லிக்கொடுப்பது பொருந்தாது என்பது எச். சி. விடோசன் என்பவர் கருத்தாகும். மொழி பிறருடன் தொடர்பு கொள்வதற்கே என்ற அடிப்படையில், ஆசிரியர் ஏதேனும் ஒரு செய்கையை அல்லது தலைப்பைத் தழுவி மாணவர்களை ஆங்கிலத்தில் கலந்துரையாடும்படி செய்யவேண்டும். இதனால், அந்தச் சூழ்நிலைக்கேற்ப மாணவர்கள் தங்கள் எண்ணங்களை இலக்கணக் குறுக்கீடு இல்லாமல், நேரிடையாக ஆசிரியர்கள் கற்பிக்கும் மொழியிலேயே வெளிப்படுத்துவர். இதில் மாணவர்கள் கலந்துரையாடும் போது முதலில் தவறுகள் செய்தாலும் பிறகு தாமா-<noinclude></noinclude> 4iseatmu4gn5fqm7yb9yekxmw9kxfwf கனிச்சாறு 4/081 0 620290 1839504 2025-07-06T10:55:32Z Info-farmer 232 + படிவத் தரவு 1839504 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 81 | previous = [[../080/|080]] | next = [[../082/|082]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="145" to="145"fromsection="78" tosection="78"/> 99nd26rms29ftlfo1piezw771a44et2 1839505 1839504 2025-07-06T10:55:57Z Info-farmer 232 146 1839505 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 81 | previous = [[../080/|080]] | next = [[../082/|082]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="145" to="146"fromsection="78" tosection="78"/> d5g8iapwbltglc75tlvbeppjfa526qr கனிச்சாறு 4/082 0 620291 1839506 2025-07-06T10:56:51Z Info-farmer 232 + படிவத் தரவு 1839506 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 82 | previous = [[../081/|081]] | next = [[../083/|083]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="147" to="148"fromsection="79" tosection="79"/> cist8vnqm9z65s4bp6atwegu66sxfit கனிச்சாறு 4/083 0 620292 1839507 2025-07-06T10:57:22Z Info-farmer 232 + படிவத் தரவு 1839507 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 83 | previous = [[../082/|082]] | next = [[../084/|084]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="149" to="149"fromsection="80" tosection="80"/> cjj6ddah73zjanpsxfje1t7lh06909d கனிச்சாறு 4/084 0 620293 1839508 2025-07-06T10:58:04Z Info-farmer 232 + படிவத் தரவு 1839508 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 84 | previous = [[../083/|083]] | next = [[../085/|085]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="150" to="150"fromsection="81" tosection="81"/> 1l8akxg9cgngkh3rp9poncyln8of7ia 1839509 1839508 2025-07-06T10:58:48Z Info-farmer 232 150 1839509 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 84 | previous = [[../083/|083]] | next = [[../085/|085]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="150" to="150"fromsection="" tosection=""/> 0jw4ij6mmoj9uo8bfcg8f4ev4ou59st கனிச்சாறு 4/085 0 620294 1839510 2025-07-06T11:00:18Z Info-farmer 232 + படிவத் தரவு 1839510 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 85 | previous = [[../084/|084]] | next = [[../086/|086]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="152" to="159"fromsection="" tosection=""/> ceoedk3d6u1hkt8r8xzv86bmju7bqtr 1839511 1839510 2025-07-06T11:00:50Z Info-farmer 232 81 1839511 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 85 | previous = [[../084/|084]] | next = [[../086/|086]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="152" to="159"fromsection="81" tosection="81"/> tkyjwa0r7wp41b2vl5ll3hyklq6xfzt கனிச்சாறு 4/086 0 620295 1839512 2025-07-06T11:03:17Z Info-farmer 232 + படிவத் தரவு 1839512 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 86 | previous = [[../085/|085]] | next = [[../087/|087]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="160" to="161"fromsection="81" tosection="81"/> nkg7fjx3cz57j6vwabe0bckza4huk0n 1839513 1839512 2025-07-06T11:03:57Z Info-farmer 232 82 1839513 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 86 | previous = [[../085/|085]] | next = [[../087/|087]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="160" to="161"fromsection="82" tosection="82"/> qwvj8o9x4pui5583r0nusn1vg3khci3 கனிச்சாறு 4/087 0 620296 1839514 2025-07-06T11:05:48Z Info-farmer 232 + படிவத் தரவு 1839514 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 87 | previous = [[../086/|086]] | next = [[../088/|088]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="162" to="163"fromsection="82" tosection="82"/> pr6098ytvx952qblu68olu67l477nkp 1839515 1839514 2025-07-06T11:06:16Z Info-farmer 232 83 1839515 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 87 | previous = [[../086/|086]] | next = [[../088/|088]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="162" to="163"fromsection="83" tosection="83"/> s4oa8uqb7six2isg175k6kttacd7os0 1839525 1839515 2025-07-06T11:17:58Z Info-farmer 232 - துப்புரவு 1839525 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 87 | previous = [[../086/|086]] | next = [[../088/|088]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="162" to="163" fromsection="83" tosection="83"/> g9r8g6mfql6mwce5y8vyk4dhughlvy2 கனிச்சாறு 4/088 0 620297 1839519 2025-07-06T11:13:06Z Info-farmer 232 + படிவத் தரவு 1839519 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 88 | previous = [[../087/|087]] | next = [[../089/|089]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="163" to="163"fromsection="83" tosection="83"/> o9wuxl045jm52x7svaxlg97vzwdqu6a 1839520 1839519 2025-07-06T11:13:32Z Info-farmer 232 84 1839520 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 88 | previous = [[../087/|087]] | next = [[../089/|089]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="163" to="163"fromsection="84" tosection="84"/> hvydkkg6oh1f4pobmn9misr43druqz9 1839522 1839520 2025-07-06T11:16:10Z Info-farmer 232 164 1839522 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 88 | previous = [[../087/|087]] | next = [[../089/|089]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="163" to="164"fromsection="84" tosection="84"/> ojjqyniac25m8ox8dn7wm99uxfoopnl கனிச்சாறு 4/089 0 620298 1839528 2025-07-06T11:28:49Z Info-farmer 232 + படிவத் தரவு 1839528 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 89 | previous = [[../088/|088]] | next = [[../090/|090]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="165" to="165"fromsection="84" tosection="84"/> bc2dklu2ihi4py96ab81a5adxbeqpxn 1839529 1839528 2025-07-06T11:29:19Z Info-farmer 232 85 1839529 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 89 | previous = [[../088/|088]] | next = [[../090/|090]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="165" to="165"fromsection="85" tosection="85"/> 3a6sftzibw7vj26k6g1ojq09fbuf0ld கனிச்சாறு 4/090 0 620299 1839530 2025-07-06T11:39:47Z Info-farmer 232 + படிவத் தரவு 1839530 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 90 | previous = [[../089/|089]] | next = [[../091/|091]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="166" to="166"fromsection="85" tosection="85"/> s79li91epi4ic6d3edzeppewyie5e73 1839531 1839530 2025-07-06T11:40:14Z Info-farmer 232 56 1839531 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 90 | previous = [[../089/|089]] | next = [[../091/|091]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="166" to="166"fromsection="86" tosection="86"/> simizl9j6oyp08r471ho6ho2b48h105 1839532 1839531 2025-07-06T11:40:43Z Info-farmer 232 167 1839532 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 90 | previous = [[../089/|089]] | next = [[../091/|091]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="166" to="167"fromsection="86" tosection="86"/> cv2qqyrf213ho8cg1tbn9w3ry56xeb5 கனிச்சாறு 4/091 0 620300 1839533 2025-07-06T11:43:47Z Info-farmer 232 + படிவத் தரவு 1839533 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 91 | previous = [[../090/|090]] | next = [[../092/|092]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="168" to="169"fromsection="87" tosection="87"/> 7kj9ciyzqrlf48xx5bvwb2kidlihad9 கனிச்சாறு 4/092 0 620301 1839534 2025-07-06T11:44:30Z Info-farmer 232 + படிவத் தரவு 1839534 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 92 | previous = [[../091/|091]] | next = [[../093/|093]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="170" to="170"fromsection="88" tosection="88"/> l1rydlmtppyzo270dzbauwce64dnhlz கனிச்சாறு 4/093 0 620302 1839535 2025-07-06T11:45:00Z Info-farmer 232 + படிவத் தரவு 1839535 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 93 | previous = [[../092/|092]] | next = [[../094/|094]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="170" to="170"fromsection="89" tosection="89"/> rqd7iaa6c3uiwj7ttf8qjrvl4mnp3tj கனிச்சாறு 4/094 0 620303 1839538 2025-07-06T11:49:02Z Info-farmer 232 + படிவத் தரவு 1839538 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 94 | previous = [[../093/|093]] | next = [[../095/|095]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="171" to="172"fromsection="90" tosection="90"/> k85h89alhogqt6hwmfmwh47wrrbw13e கனிச்சாறு 4/095 0 620304 1839540 2025-07-06T11:50:54Z Info-farmer 232 + படிவத் தரவு 1839540 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 95 | previous = [[../094/|094]] | next = [[../096/|096]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="172" to="172"fromsection="91" tosection="91"/> 5bzrb8wvo85aedq7j1jkv0zv4du7dcg 1839541 1839540 2025-07-06T11:55:04Z Info-farmer 232 173 1839541 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 95 | previous = [[../094/|094]] | next = [[../096/|096]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="172" to="173"fromsection="91" tosection="91"/> 87gkzr4vrl0vtwl9l96zr648a15vzrt கனிச்சாறு 4/096 0 620305 1839542 2025-07-06T11:58:28Z Info-farmer 232 + படிவத் தரவு 1839542 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 96 | previous = [[../095/|095]] | next = [[../097/|097]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="174" to="174"fromsection="92" tosection="92"/> dprli8jcrk65npa77z4sf4re7lmh4yy