விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.8 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/3 250 102191 1839965 855766 2025-07-07T11:24:20Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{{Css image crop |Image = மனைவியுடன்_மகிழ்ச்சியாக_வாழ்வது_எப்படி.pdf |Page = 3 |bSize = 425 |cWidth = 423 |cHeight = 593 |oTop = 3 |oLeft = 5 |Location = center |Description = }} <noinclude></noinclude> 38vebkd47ai5h275t1z4ioqekrrntoo பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/35 250 102256 1839964 1062614 2025-07-07T11:23:31Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839964 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>கணவனை அடைந்திருக்கின்ற பெண்ணும்; தன் கணவனால் இனி குழந்தையே கிடைக்காது என்று உறுதியாகத் தெரிந்து கொண்ட பெண்ணும்; நிச்சயம் குழந்தை தனக்கு வேண்டும் என்று தீராத ஏக்கம் கொண்டவளும்; உடலுறவை ஒரு பொழுதுபோக்காக எண்ணும் சொகுசுக்காரியும் ஒழுக்கம் தவறிப்போக வாய்ப்பிருக்கிறது என்பதும் முன்னோர்கள் கண்டறிந்த உண்மைகளாகும். அதைத்தான் இப்படி சுருக்கமாக உனக்குக் கூறுகிறேன். அப்படியென்றால் ஒரு பெண்ணை எளிதில் வயப்படுத்தவும், காதலிக்கவும் முடியும் என்கிறீர்களா?... எல்லோரையும் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. அது தவறான எண்ணம். அதற்கேற்ற நிலையில் இருப்பவர்களைத் தானே இழுக்க முடியும்!. மழைபொழிகிறது. சங்குகள் கடல் நீர் மேல் வந்து வாய்பிளந்து கிடக்கின்றன. வாய்ப்பு கிடைக்கின்ற சங்கில் மட்டும்தானே மழைத்துளி விழுகின்றது. முத்தாகின்றது. சந்தர்ப்பம் அமைந்தால் தான் பெண் சம்மதம் தெரிவிப்பாள். எந்தெந்த வாழ்க்கை நிலையில் உள்ளவர்கள் காதலுக்கு எளிதில் வயப்படுவார்கள் என்பதனையும் கூறி வைத்த நம்மவர்களின் அபிப்ராயத்தைக் கூறுகிறேன். அவசரப்படாமல் தெளிவாகத் தெரிந்துகொள். “இளமையிலேயே விதவையாகிவிட்டவள்; ஏழையாக பிறந்தாலும் எப்படியாவது பணக்கார வாழ்க்கையை இன்பமாக, உல்லாசமாக அனுபவித்து விடவேண்டும் என்று தற்பெருமை கொண்டு திரிபவள்; கணவனை எட்டிக்காயாக வெறுப்பவள்; கணவனால் நிர்த்தாட்சண்யமாகக் கைவிடப்பட்<noinclude></noinclude> 43vbai7jd5cmkibz7lwqi8jyyh423ff பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/60 250 102330 1839911 1062528 2025-07-07T09:42:52Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839911 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|58||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> மீண்டும் நல்ல உடல் நலம் வந்திருக்கும் பொழுதும்; நாட்டியம் நடனம் போன்ற உடலுழைப்பில், கலையுழைப்பில் ஈடுபட்டதற்குப் பிறகும்; மகப்பேறு முடிந்து ஓரிருமாதங்கள் கழிந்தபோதும், பெண்கள் உடலுறவில் அதிகமாகத் தீவிரம் காட்டுவார்கள் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். தம்பதியர் நீண்ட நாள் பிரிந்திருந்து ஒன்று சேருங்காலத்தும்; ஊடல் அல்லது சிறு சச்சரவு ஏற்பட்டு மீண்டும் தொடங்குகின்ற சமாதான நேரத்திலும்: மாதவிடாய் நாட்கள் முடிந்துவிட்ட மறுநாளிலும்: மதுபானம் போன்ற வெறியேற்றும் போதை தரும் பானங்களை அருந்தியுள்ள நேரத்திலும், பெண்கள் நிறைந்த வேகம் உள்ளவர்களாக இருப்பார்கள். உடலுறவு தேவையில்லை என்றால்?..... உடலுறவு தேவையில்லை என்றால். ஒன்று உடல் நலக்குறைவாக இருக்க வேண்டும் அல்லது உடலுறவு வேண்டாம் என்ற மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், மனைவி கணவன்மீது கோபமாக இருக்கிறாள் என்ற ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். கணவன் மனைவி வெறுக்கிறாள், கோபமாக இருக்கிறாள் என்பதை எப்படி அறிந்து கொள் முடியும்?.. நேரடியாகக் கோபத்தைக் காட்டி, பேசி விட்டால், எளிதாகப் புரிந்து கொள்ளலாம். எதுவும் சொல்லாமல், கோபமாக இருக்கிறாள், கணவனை வெறுக்கிறாள் என்பதை அவள் செயல்கள் மூலமாகவே புரிந்து கொள்ள வேண்டும். கோபமடைந்த மனைவி, தன் கணவனை ஏறெடுத்துப் பார்க்கமாட்டான். ஏதாவது ஒரு வேலையை வைத்துக் கொண்டு அவனிருக்கும் பக்கமே வரமாட்டாள்.<noinclude></noinclude> tcgmkafvugrzro87w1leycmlukk8u2m பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/61 250 102333 1839912 1062529 2025-07-07T09:47:11Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||59}}{{rule}}</noinclude> வராத சூழ்நிலையை உண்டுபண்ணிக் கொள்வாள்.வந்தாலும் திரும்பிக்கூட பார்க்கமாட்டாள். அப்படி ஏதாவது கணவன் கேட்டாலும் அவள் மறுமொழி கூறாமல், மௌனமாக இருந்து விடுவாள்... அவன் மீறி, தன் முன்னால் வந்தாலும் கணவனைப் பார்க்க எரிச்சல் பட்டுக் கொண்டு. அந்தச் சூழ்நிலையை மிகவும் வெறுப்பாள். அவனைப் பார்க்காமல் இருப்பதையே ஆனந்தமாகக் கொள்வாள். அவனுடன் எந்தக் காரியத்திலும் இணைந்து செயல்படமாட்டாள். சொன்னாலும் அதைத் தான் கேட்காதது போல, தன் காரியங்களையே செய்து கொண்டிருப்பாள். கணவனது நண்பர்கள் வந்தாலும் அவர்களையும் அலட்சியம் செய்து தான் வெறுக்கும் நிலையை, கணவனுக்கு கோடிட்டுக் காட்டுவாள். படுக்கையில் படுத்திருக்கும் பொழுது, முன்புறமாகத் திரும்பாது பின் புறத்தைக் காட்டியவாறு சுருண்டு படுத்துக் கொள்வாள். இத்தனையையும் புரிந்துக்கொண்டு, மனைவியை சாந்தப்படுத்துவது ஒரு சாகசச் கலைதான். அந்த அற்புதக்கலையை அறிந்திருக்கும் கணவனே மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழமுடியும். அந்த சாகசச் கலையை என்னவென்று எனக்கும் சொல்லித் தாங்களேன்? ஊடுதல் காமத்திற்கு இன்பம். அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின் என்பதுபோல, ஆத்திரம் கொண்டு ஒதுங்கிவிடும் மனைவியிடம், மெதுவாகப் பேச்சைக் கொடுத்து, அவளுக்கு கோபம் வந்த காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.<noinclude></noinclude> cuf8iowgo7gaj2r9toknfdpavcjxyrt பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/62 250 102337 1839913 1313230 2025-07-07T09:47:54Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|60||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> தன் பக்கம் தவறு இருக்கிறது என்று தெரிந்து கொண்டால், கொஞ்சமும் கெளரவம் பாராட்டாமல் தாராளமாக ஒத்துக் கொள்ள வேண்டும். அவள் செய்திருப்பது தவறு என்று தெரிந்தால், அதைப் பெரிதுப்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். அதாவது மன்னித்து விடுகிறோம் என்பதை அவள் உணர்ந்து கொள்ளும் பாவனையில் நாசூக்காக பேசி மாற்றி விட வேண்டும். அதே நேரத்தில், மனைவிக்குரிய சிறந்த குணங்களைப் பாராட்டிப் பேசவும் தயங்கக்கூடாது. முன்னரே ஏதாவது வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தாலும், மறந்துபோய்விட்டதாகக் கூறி, வேறு ஒரு நாளில் வாங்கித் தருகிறேன் என்பதுபோல கூறி, வசப்படுத்திக் கொள்ளல் வேண்டும். இன்னும் வேறு பல உபாயங்களை அதற்குரிய அத்தியாயங்களில் கூறுவேன். உடலுறவு முறையில் எத்தனை விதங்கள் என்று நீங்கள் கூறுவில்லையே? பலர் பலவிதமாகக் கூறுகிறார்கள். பல வசதிகளுக்கேற்ப பிரித்துக்காட்டி, அறுபத்தி நான்கு (கோணங்களில்) விதமாக ஆணும் பெண்னும் ஐக்கியமாகலாம் என்கிறார்கள். அதையெல்லாம் அனுபவபூர்வமாக, மனைவியின் ஒத்துழைப்புடன் அறிந்து கொள்ளுதல் தான் முறையாகும். அந்த அறுபத்திநான்கு முறைகளையும் நான்கு விதங்களில் நடத்தலாம். அதனையும், அதிலிருந்து கிளைவிடும் முறைகளையும் அவரவர் யூகத்திற்கு விட்டு விடுவோம்.<noinclude></noinclude> f6jy9uo8n61hgw0zomtr7j7daiw5r8d பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/63 250 102340 1839914 1062531 2025-07-07T09:49:32Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||61}}{{rule}}</noinclude> முன்னரே கூறியதுபோல, ஆண் பெண் இருவரின் உடலமைப்பை மன உணர்ச்சியைப் பொறுத்தே முறைகள் (Method) அமையும். அதற்கு முன்னே, பெண்ணின் பிறப்புறுப்பின் தன்மையையும் விதங்களையும் புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். கருவாய் (Vagina) என்பது தாமரை மலர்ந்திருப்பது போன்ற தன்மையில், மிகமிக மிருதுவான அமைப்புடன் விளங்குவதாகும். விரல்களை மடக்கி கட்டப்பட்டிருப்பது போல, ஒரு சிலருக்கு மிகவும் இருக்கமானதாகவும் இருக்கும். இன்னும் பலருக்கு அந்தக் கருவாய் மடிப்பும் சுருக்கமும் நிறைந்ததாகவும் இருக்கும். வேறு சிலருக்குப் பசுவின் நாக்கைப் போன்ற வடிவத்துடனும் அமைந்திருக்கும். ஆகவே உடல் உறவு என்பது அதனதன் அமைப்புக்கேற்பவே ஆனந்தமளிக்கும் என்பது தான் மிக முக்கியமான கருத்தாகும். பெண்களை பொதுவாக சந்தோஷப்படுத்துவது எப்படி? உடலுறவு கொள்ளும்பொழுது, கணவன்மனைவி இணைந்து, ஒருவித லயிப்புடன் ஈடுபட்டு, செயல்படும் பொழுது தேவையான ஒத்துழைப்பையும் தந்து, திறம்பட அனுசரித்தால்தான், நிறைவான இன்பம் பெறமுடியும். அதே நேரத்தில் பெண்ணின் வயதிற்கேற்பவும் உடலுறவு கொள்வது மிகவும் நுண்ணியதாகப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. பதினாறு வயதுக்குட்பட்டபெண்களுக்குத் திருமணம் நடக்கக் கூடாது. அப்படியும் மீறி நடந்து விட்டிருந்தால், அவர்களை உடலுறவில் அதிகமாக ஈடுபடுத்தினால் அவர்களுக்கு அதிக ஆனந்தம் கிடைக்காது. அவர்களின்<noinclude></noinclude> e6c9i3sx7paxy75g4ky376fgekw694b பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/64 250 102344 1839915 1062532 2025-07-07T09:50:38Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839915 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude> அன்பையும் நம்பிக்கையையும் முதலில் பெற்றால் தான் இன்பம் விரிவடையும். அவர்கள் விரும்புகின்ற பூ, பழம், சிற்றுண்டி, உணவு, வளையல், கைக்குட்டை போன்றவைகளை வாங்கி வந்து பரிசளிப்பதன் மூலம், அவர்கள் உற்சாகத்தை அதிகப்படுத்தலாம். ஆபரணங்கள் அணிந்து கொள்வதில் அவர்கள் மனம் லயித்திருந்தால், அவசியம் வாங்கித்தந்தால் பின்னும் பேரின்பம் பெருகலாம். உடலுறவை விட, பேசும் விதத்திலும், பழகும் முறைகளிலும் அன்பை விரிவாக்கிக்கொண்டு, சீரான முறையில் இதமாக, பதமாக உடலுறவு கொள்ள வேண்டும். பதினாறு வயதிலிருந்து முப்பத்தி ஐந்து வரையில் உள்ள பெண்களிடம், அன்புடன் பழகி, ஆதரவைப் பெற்று, கொஞ்சங் கொஞ்சமாக உடலுறவு முறைகளில் அதிகமாக ஈடுபாடு கொள்ளச் செய்துவிட வேண்டும். பழகிக் கொண்டபிறகு, அதில் பற்றுக்கொண்ட பிறகு, உடலுறவில் அதிக வலிமையுடன் (Force) செய்வதையே அவர்கள் அதிகம் விரும்புவார்கள். நல்ல அனுபவம், நிறைந்த வயது, உணர்ந்ததை அனுபவிக்க விரும்பும் உடலமைப்பு, வேகமாக ஈடுபடவும் கூடிய வாய்ப்பு இருப்பதால், உண்மையிலேயே வாழ்வை அனுபவிக்கும் பருவமாக இந்த வயதுப்பெண்கள் இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு பழகிய பிறகு, உடலுறவில் நல்ல பழக்கம் ஏற்பட்ட பிறகு, பற்றும் அதில் கொண்டுவிட்ட பிறகு, உடலுறவில் அதிக வலிமையுடன் செய்தால், அது அவர்களை அதிகம் மகிழ்விக்கும். இது போன்ற ஆழ்ந்த உறவில், ஆணுக்கு<noinclude></noinclude> 1fs4bkuysu5vqgymc5sr9vmc4j2er19 பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/65 250 102347 1839916 1062533 2025-07-07T09:53:39Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||63}}{{rule}}</noinclude> ஊன்றுகோல் தேவைப்படும். அதற்கேற்ற பிடிப்பு பெண்ணிடம் தானே உள்ளது. உடலுறவு காலத்தில், பெண்ணின் தோள்கள், கழுத்து, கொங்கைகள், புட்டங்கள் இன்னும் துடைகள் அல்லது முதுகுப்புறம் போன்ற ஏதாவது ஒன்றை கெட்டியாகப் பிடித்தவண்ணம் செயல்படுவது இதமாக இருக்கும். முப்பத்து ஐந்து வயதுக்கு மேற்பட்டு ஐம்பது வயது வரை நடுத்தர வயது பெண்கள் என்று முன்னோர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். இவர்களிடம் உடலுறவு அதிக அளவில் நடத்த அவசியம் இருக்காது என்றும் அபிப்ராயப்படுகின்றனர். இந்த வயதுப் பெண்களுக்கு, ஆழ்ந்த அன்பும் உணர்ச்சிப்பூர்வமான உறவும், கணவரது அன்புகரமான உடையாடலுமே தேவைப்படுகிறது. அந்தப்பெண்கள் விரும்புகிற நேரத்தில், அவர்கள் விரும்புகின்றவண்ணம் இணைந்து உடலுறவில் ஒத்துழைக்கும் ஆண்கள், ஏற்ற இன்பப் பரிசைப் பெற்றுக் கொள்கின்றனர். அனுபவம் முதிர்ந்த உடல், மனம், அல்லவா! அங்கே அனுபவம் பேசுகிறது. அவ்வளவுதான். அடுத்து வயோதிகப் பருவம். இதற்கு மேல் பெண்களுக்கு உடலுறவு வேண்டுமா வேண்டாமா என்பது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தாகும். ஒரு மேல்நாட்டறிஞர், தன்மாமியாரைப் பார்த்து, ஒரு கேள்வியை கேட்டாராம். பெண்களுக்கு ஆண்கள் மேல் உள்ள ஆசையும் அன்பும், உடல் உறவில் உள்ள ஈடுபாடும் எப்பொழுது மாறும் மறையும் என்று தான் கேட்டாராம். என்னைப் போய் கேட்கிறீங்களே! என்னைவிட வயது ஆனவர்களைப் பார்த்துக் கேட்டால் ஒரு வேளை<noinclude></noinclude> ltftvosslhxg2j939dqrtczlqui7oi0 பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/66 250 102350 1839917 1062534 2025-07-07T09:55:58Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude> உங்களுக்குப் பதில் கிடைக்கும் என்று அந்த அம்மையார் பதில் கூறினாராம். அப்பொழுது அம்மையாருக்கு வயது 99. ஆகவே, உடல்நலம் நிறைவாக இருக்கின்ற வரை, உடல் உறவில் நாட்டமும், நனிசால் ஊட்டமும் இருக்கும். உடல் உறவு தினந்தோறும் கொள்வது நல்லதா? உங்கள் அபிப்ராயம் என்னவென்று கூறுங்கள். ‘மாதத்துக்கு இருவிசை மாதரைப் புணர்தல்’ என்றும் பழம் பாடல் ஒன்று கூறுகின்றது. மாதத்தில் இருமுறை இரு தடவை என்று அந்த கவிஞனும் பாடாமல். இருவிசை என்று பாடியிருக்கிறார். விசை என்றால் வேகம், வலிமை என்று பொருள்படும். ஆணும் பெண்ணும் விசையோடும் நசை(விருப்பம்)யோடும் மாதத்திற்கு இருமுறை புணர்ந்துவிட்டால், அந்த இன்பம் நாளெல்லாம் தொடரும். நெஞ்சத்தில் படரும். நலமும் கெடாதவாறு, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கேற்ற வேலைகளை சுறுசுறுப்பாக செய்யவும், நிம்மதியாக உறங்கவும் கூடும். அத்துடன் விந்து நீற்றுப் போகாமல் இருப்பதால் உடல் உறவில் உண்மையாக ஈடுபட முடியும். இக்காலத்தில் சினிமா, நாடகம், பத்திரிகை பற்றிய விளம்பரங்களில், பேச்சுக்களில் நடைமுறைகளில் எல்லாம் இன உறவு பற்றி, இன உணர்வை எழுப்பும் தன்மையே அதிகம் இருப்பதால், இரவில் அந்தக் கிளர்ச்சியும் எழுச்சியும் நிமிர்ந்து நிற்பது இயல்பே! மனக்கட்டுப்பாடுள்ளவர்கள் அந்த மாயா சக்தியிலிருந்து தப்பித்துக்கொண்டுவிட முடியும். உடல் இச்சைக்கு அடிமையாகி விடுவபவர்கள் உண்ணுவதும்,<noinclude></noinclude> irtylddjzvfbn3jvd37qlq9hz7rkyt4 பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/67 250 102356 1839918 1062535 2025-07-07T10:03:22Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839918 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||65}}{{rule}}</noinclude> உறங்குவதும் ஒரு நாளைக்கு எப்படி முக்கியமோ, அது போல உடலுறவும் முக்கியம் என்று வாழ்கின்றனர். இன்னும் ஒரு சிலர், ஒரு நாளைக்கு இருமுறை என்றவாறும் வாழ்கின்றனர். ஒரு சொட்டு விந்தின் துளியானது, 72 சொட்டு இரத்தத்தால் உருவாக்கப்படுகிறது என்பர் விஞ்ஞானிகள். ஒரு முறை விந்து வெளியாகும் பொழுது, ஒரு தேக்கரண்டியளவு வெளியேறுகிறது. அதற்கு எவ்வளவு ரத்தம் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிட்டால், உண்மை புரியும். அத்துடன் அந்த உயிர்ச்சத்தான விந்தினை வெளியேற்ற உடலை முறுக்கி, இயக்கி, சூடேற்றுத்தானே காரியம் ஆற்ற வேண்டியிருக்கிறது! ஒரு துணியை அடிக்கடி உடுத்தி, அடித்து முறுக்கி, கசக்கி பிழிந்து கொண்டே இருந்தால் துணி என்ன ஆகும்? சீக்கிரம் நூலிழைகள் நைந்து போக, துணி கிழிந்து போகாதோ? அதுபோலவே, உடல் என்பது திசுக்களாலும், நரம்புகளாலும் ஆனது தானே! நரம்புகளும், திசுக்களும் நாளுக்கு நாள் முறுக்கப்பட்டு, கசக்கப்பட்டால் என்ன ஆகும்? நலிந்து போகாதா? எவ்வளவு தான் ஊட்டம் கொடுத்தாலும் இழந்து போன உயிர்சக்தியை (விந்து) மீட்க முடியுமோ? நோயென்று நாம் படுத்து விட்டால், நொந்து போன உடல் மேலும் நோவது மட்டுமல்லாமல், மீண்டும் முன்போன்ற நிலைமை வருமா? முன்னிருந்த உடல் வலிவும் முகப் பொலிவும் வராது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். கையிலே பணம் இருக்கிறது என்பதற்காக, கண்டபடி இறைத்து விடுவதா? பானையில் சோறு இருக்கின்றது<noinclude></noinclude> c8j6bchk2e39j0hjgiyob33ywiwi47i பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/68 250 102362 1839919 1062536 2025-07-07T10:04:42Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839919 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|66||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> என்பதற்காக நினைத்தபொழுதெல்லாம் நாம் சாப்பிட்டு விடுவதில்லை. அப்படியே அளவுக்கு மீறி சாப்பிட்டால் வயிறு என்னவாகும்? அஜீரணம் மட்டுமல்ல, அதையடுத்து எத்தனை எத்தனை நோய்கள் தொடரும்? தொந்தரவு செய்யும்? துன்பத்தைக் கொடுக்கும்? அதுபோலவே, உடலுறவு கொள்வதற்காக துணைவி இருக்கிறாள் என்பதற்காக, நினைத்த நேரமெல்லாம் நடைபெற்றாக வேண்டும் என்பது இருவருக்குமே நல்லது அல்ல. அது அறிவுடைமையும் ஆகாது. அழுக்குத் தீர குளித்தவர்கள் இல்லை, ஆசைதீர உடலுறவில் திளைத்தவர்களும் இல்லை என்பது பழமொழிதான். ஆகவே, உடலுக்குத் தேவையான பொழுதுதான் உடலுறவு வேண்டுமே தவிர, உள்ளம் தூண்டும் பொழுதெல்லாம் ஈடுபடலாம் என்பது அல்ல. ஏன் உள்ளம் தூண்டுகிறது என்கிறீர்கள்? உள்ளம் என்பது எப்பொழுதும் இளமையாக இருக்கக்கூடியது. அது ஆவி போன்றது. தேகம் என்பது வலிமை இழந்து, முதுமை அடையக் கூடியது. காலம் நம்மை நாளாக நாளாக மாற்றி மெதுவாக முதுமையாக்கும். அதை விட்டு விட்டு, நாமே விரைவாக முதுமையைத் தேடி ஓடி, நம்மை நாமே கிழடுகளாக மாற்றிக்கொண்டு, கையாலாகாதவர்களாக மாற்றிக் கொள்கின்ற செயலை எப்படி மன்னிக்க முடியும்? அதனால்தான் இளமையான மனம் தூண்டுவதற்கேற்ப உடல் இயங்கக் கூடாது என்கிறோம் அதையேதான். நம்மவர்கள் மனக்கட்டுப்பாடு. சுயக்கட்டுப்பாடு (selfcontrol) என்கின்றனர். அக்காலத்தில் மாதத்திற்கு இருமுறை என்றனர். ஆனால் நம் காலத்தில் அந்த கொள்கை நடைமுறைக்குக்<noinclude></noinclude> 6aqtc2bxwcnehq6s4k80s3aye87ufi2 பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/69 250 102366 1839921 1062537 2025-07-07T10:06:00Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839921 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||67}}{{rule}}</noinclude> கொண்டு வர சிறிது கடினம் என்று நினைத்தால் இப்படி நடந்து கொள்ளலாம். வாரத்திற்கு ஒருமுறை என்பது கரும்பு, வாரத்திற்கு இருமுறை என்பது வரம்பு தினம்தினம் என்பது குறும்பு. குறும்பு நலிவுக்குக்கொண்டு ஆளை நசுக்கியே விடும் என்பதால், ஆண் பெண் இருவரும் அறிவுள்ளோராக நடந்து கொள்வதே நல்லது. அந்தக் குறும்பால் என்ன ஆகும் என்பதையும் கூறினால் தானே அதன் அபாயமும் எனக்கு விளங்கும்! உடலுறவு அதிகமாக ஆக, உடலில் களைப்பும் இளைப்பும் அதிகமாகும். அதனால் நரம்புக் தளர்ச்சி ஏற்படும். அன்றாட செயல்களில் ஈடுபட அதிக நாட்டம் இல்லாமல் அசந்து போகும். அசதி நிறையும். அசதி அதிகம் உள்ள உடம்பில் ஆர்வம் இருக்காது. ஆர்வம் குறையக்குறைய, முன்னேற்றம் தடைபடும். வருவாய் குறையத் தொடங்கும். நாளுக்கு நாள் கவலைதோன்றத் தொடங்கும். பிறகு 'ஆண்குறி' எழாமையால் இயலாமையும் ஏற்பட்டு விடும். இயலாமை ஆணுக்கு வந்துவிட்டால் அது கணவன் மனைவி உறவில் பெரும் பிளவினை உண்டாக்கிவிடும். ஒன்றே ஒன்றை இறுதியாகச் சொல்கிறேன். கரும்பு இனிக்கிற தென்றால் வேரோடு பிடுங்கி தின்னக் கூடாது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு. இது உடலுறவுக்கு மட்டுமல்ல. பெண்ணோடு சேர்ந்து வாழ்வதற்கும் பொருந்தும் என்று உலகநாதர் கூறிமுடித்தார்.<noinclude></noinclude> s741ofe5m7vdr4evr97hkbnak7yyem6 பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/70 250 102372 1839922 1062538 2025-07-07T10:08:06Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839922 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|68||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>{{dhr|1em}} {{border|maxwidth=370px|bstyle=dotted|bthickness=5px|color=black|align=center|{{c|{{x-larger|<b>5. மகிழ்ச்சியுடன் வாழும் ரகசியம்!</b>}}}}}} பகல் முழுவதும் வாசுவின் எண்ணத்தில், உலநாதர் கருத்துக்கள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. சில சமயங்களில் தன்னையே அவன் இழந்து கொண்டிருப்பது போல ஒரு நினைப்பு. தவிப்பு. இன்னும் எத்தனையோ சந்தேகங்கள் கேட்க வேண்டியிருக்கிறதே. இன்று மாலை ஊருக்குப் போவதாக வேறு சொல்லியிருக்கிறாரே. என்ன செய்யலாம் என்றும் குழப்பத்தில் ஊறியிருந்தான். ஆளும் மாறியிருந்தான். மாலை சிற்றுண்டிக்குப் பிறகு உலகநாதரே அவனை அழைத்தபோது, வாசு மனம் உற்சாகத்தால் ததும்பியது. என்னப்பா வாசு! உனக்குள்ளே இத்தனை சந்தோஷம் என்று பேச்சைத் தொடங்கினார் உலகநாதர். பெண்ணோடு சேர்ந்து வாழ்வது பெரிய தந்திரம் என்று கூறினீர்களே?அதைப்பற்றித்தான் எனக்கு ஒரு சந்தேகம் என்று வாசுவும் ஆரம்பித்தான். ஆமாம்! ஆணும் பெண்ணும் திருமணத்தில் ஒன்று சேர்கின்றார்கள் என்றால் அது பிரயாணத்தின்போது<noinclude></noinclude> m9gg5owrvmfpv6v2jqv2zn2qo4cjyp8 பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/71 250 102376 1839925 1062539 2025-07-07T10:11:28Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||69}}{{rule}}</noinclude> ஏற்படுகின்ற பழக்கம் போல, கொஞ்ச நேரம் பேசிச்சிரித்து விட்டு பிரிந்து போகின்ற காரியமல்ல. வாழ்கின்ற காலம் வரை, இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாது மகிழ்ச்சியாக வாழ்வதைத்தான் ‘இல்லறம்’ என்றனர். அதையே ‘நல்லறம்’ என்றதற்குக் காரணம். அந்த இல்லறம் மூலமாக பல நல்ல காரியங்கள் புரிவதற்குப் பயன்படுவதால்தான் என்று உலகநாதர் கூறினார். வாசு சாய்ந்து கொண்டிருந்தவன், இப்பொழுது நன்றாக உட்கார்ந்து கொண்டு கேள்வியைக் கேட்டான். கணவனும் மனைவியும் இணைந்தே எங்கு வாழ்கின்றார். அதற்குரிய சூழ்நிலைதான் குடும்பத்தில் அமைவதே இல்லையே? குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை அமைவதெல்லாம் மனதால் தான் என்பதை, மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான். ‘மனம் போல் வாழ்வு’ என்றனர் நமது முன்னோர்கள். மனமே எல்லாவற்றிற்கும் காரணம். கடவுளை எதிர்த்து, தேவலோகத்தின் புரட்சி செய்தான் சாத்தான்.கடவுள் மேல் படையெடுத்தான். தாக்கினான். அவனைத் தண்டிக்க விரும்பிய கடவுள், மின்னல் படையை ஏவி அவனையும் அவனது படையையும் வீழ்த்தி நரகலோகத்தைப் படைத்து அதில் தள்ளி மூடிவிட்டார். விழுந்த மயக்கம் தெளிந்த சாத்தான், என்ன கூறினானாம் தெரியுமா? “சொர்க்கமும் நரகமும் இடத்தால் அமைவது அல்ல சொர்க்கமும் நரகமும் மனதால்தான் அமைகிறது. மனதாலேயே இந்த நரக வாழ்வையும் சொர்க்கமாக்கி விடுவேன்” என்று கூறியதாக மேனாட்டுப் பெருங்கவிஞன் மில்ட்டன் தனது நூலில் கூறுகிறார்.<noinclude></noinclude> qodjztc6l2ges7r5eywmtn2ymy3sp9v பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/72 250 102381 1839926 1312725 2025-07-07T10:12:50Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|70||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> இல்லறத்தில் ஈடுபட்ட இருவரும், உடலால் இணைந்து அன்பைப் பகிர்ந்து கொண்ட நேரம் போக, மற்ற எல்லா நேரங்களிலும் மனத்தால் தான் பகிர்ந்து கொண்டு வாழ வேண்டும். மனத்தினால் எப்படி வாழ முடியும்? மனம் என்பது உணர்வுடன் நிறைந்த மாபெரும் கடலாகும். அதிலே,நொடிக்கொரு நினைவலைகள் நிறைந்து பொங்கித் துள்ளி, முன்னேறிக் கொண்டே வரும். அலைகளின் வேகத்திற்கேற்ப மனநிலை மாறுபடும். அவ்வாறு ஆழ்ந்து எழுகின்ற அலைகளை அறிவு கொண்டு அடக்கி, சீராக சிறப்பாக செயல்பட வேண்டியது தான் தம்பதிகளின் கடமையாகும். அதனால்தான், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். என்று முன்னமேயே கூறினேன். கணவனது இல்லத்தை ஆள்பவளாக, உள்ளத்தில் வாழ்பவளாக மனைவி என்று மங்கள பெயருடன், புனிதப் பயணமாகிய வாழ்க்கையை மேற்கொள்ள ஒரு பெண் வருகிறாள். வருகின்ற மங்கையிடம் பெறுகின்ற சுகமும் சொர்க்கமும் தருகின்ற அன்பும் இன்பமும் இருவருக்குமே சொந்தம் என்பதைவிட, அவர்களைச் சார்ந்துள்ள உற்றார் உறவினர்களுக்கும் உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும். தம்பதியர் மகிழ்வாக வாழவேண்டும் என்பது தானே சுற்றத்தாரின் ஆசை! இவ்வாறு, வாழ வருகின்ற பெண்ணுக்கென்று, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கள் உண்டு. எண்ணங்கள்<noinclude></noinclude> 8d026aab7t6vuae5swp90jjgfcq38xi பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/73 250 102386 1839927 1062541 2025-07-07T10:15:38Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude> நோக்கங்களும் உண்டு என்பதை கணவன் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மனைவியின் மேற்கூறிய மனநிலையைப் புரிந்து கொண்டு, அவளது நோக்கங்களுக்கு, ஆசைகளுக்கேற்ப, தன்னை முதலில் இயைபுபடுத்திக் கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற்றுக் கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். அவளது லட்சியமும் நோக்கமும் தனது வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகவும் பயன்படும் என்று அறிந்து கொள்ள நேர்ந்தால், அவற்றை நிறைவேற்றும் முயற்சிகளில் தங்கு தடையின்றி, தாராளமாக ஈடுபடுதல் நல்லதாகும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால்,பெண்ணையே பின் பற்றி வாழ்ந்தால் தான் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்கிறீர்கள்.! அப்படித்தானே! இங்கு தான் நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். பெண்ணைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்பது ‘பெண்டாட்டி தாசனாக வாழ், அவள் முந்தானையைப் பிடித்துக் கொண்டே பின்னாடி செல்’ என்பது அல்ல. வாழ்க்கை என்பது உடலால், அறிவால் நன்கு வளர்ந்து, முதிர்ச்சி பெற்ற இருவர் இணைந்து, துணிந்து வாழ்கின்ற நிலையாகும். மனைபுகுகின்ற மனைவியை மனமார வரவேற்க முனைவது போலவே, அகம் உருக அன்புடன் நேசிக்க வேண்டும். நீ நேசிக்கிறாய் என்பதை அவன் உணரும் பொழுது தானே, உன் நிழலாக வர அவள் துணிகிறாள். அதனால் தான் அவளது நினைவோடு உன்னை நிலைநிறுத்திக் கொள்ளுமாறு கூறினேன். கணவன் உட்பட, கணவனின் பெற்றோர்கள், தங்கை, தம்பி, அக்காள், அண்ணன், மற்றும் உடன் பிறப்பு<noinclude></noinclude> 8ndkivwuz2rq23jhbkmjzdmcijgwfr8 பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/74 250 102390 1839928 1312748 2025-07-07T10:16:19Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|72||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> எல்லோருமே அவளுக்குப் புதியவர்கள். அது ஒரு புதிய சூழ்நிலை. அந்தப் புதிய சூழ்நிலையில் பழகிக்கொள்ளுமாறு தூண்டுவது கணவன் தானே! அவளது லட்சியம் நோக்கம் புரிந்தால் தானே, தன் குடும்பத்துடன் எளிதாக இணைக்க முடியும்.! மனைவியைப் பெருந்தன்மையுடன் நடத்தி, தன் கணவனும் மற்றவர்களும் தன்னுடன் பிரியமாகவே நடத்துகிறார்கள், நடக்கின்றார்கள் என்ற நம்பிக்கையை கணவன் தன் மனைவிக்கு ஊட்ட வேண்டும். அவளுக்கென்று ஒரு அந்தஸ்து வீட்டில் இருக்கிறது. பொறுப்புக்கள் இருக்கின்றன என்ற நினைவினை அவளுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகப் புகுத்தவேண்டும். ஆரம்ப காலத்தில் இந்த நம்பிக்கையை, இனிய உணர்வை ஊட்டி, புதிய சூழ்நிலையிலிருந்து அவளை விடுவித்து, புதிரைப் போக்கினால்தான், மனைவிக்கு அந்த இல்லத்திலும், நடத்தவிருக்கும் இல்லறத்திலும் இயல்பான பிடிப்பு ஏற்படும். மனைவியை உடலால் திருப்திபடுத்திவிட்டால் போதும் எல்லாம் சுகமாக சுமுகமாக நடந்துவிடும் என்று முன்பு கூறினர்களே? உண்மைதான் , மனைவியை உடலால் திருப்திபடுத்தினால் போதும் என்பது அடிப்படை ஆதாரமானது கிடைத்துவிட்டால், அதனால் மனம்மகிழும், வாழ ஆசை ஏற்படும். அந்த ஆசைக்குரிய பிடிப்பு அங்கு இருக்க வேண்டாமா? உடலால் மனைவியை கவர்வது போலவே, உணர்வாலும் மனைவியைக் கவர்ந்து, கலந்து வாழ்வதும் ஒரு ஒப்பற்ற கலைதான்.<noinclude></noinclude> 5aytayhxhns90k410vj5j9i71qe113o பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/75 250 102394 1839931 1312842 2025-07-07T10:31:00Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||73}}{{rule}}</noinclude> உயிருக்கும் மேலான பெற்றோர்கள் உடன்பிறந்தோர்களை உரிய சுற்றத்தை, பிறந்த வீட்டில் பெற்றிருந்த உரிமையை, சுதந்திரத்தை, செல்வத்தை, புதிதாக வரும் கணவன் என்ற ஒருவனுக்காக, எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு தியாகம் செய்துவிட்டு, மனைவி என்ற பெயரில் நுழைகின்ற, வலது காலடிவைத்து வீட்டுக்குள் வருகின்ற பெண்ணுக்கு தன் கணவனால் பரிபூரண அன்புடன் விருப்பத்துடன்தான், ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதில் ஏற்படுவது போல கணவன் நடந்து கொள்ள வேண்டும். கணவனைப் போலவே, கணவனது தாயும் தந்தையும், குடும்பத்தாரும், அந்தப் பெண்ணை அந்தரங்க சுத்தியுடன் தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டது போலவே ஆதரவு தந்து நடந்துகொள்ள வேண்டும். நாங்கள் இப்பொழுது உன்னை இனிமையாக ஏற்றுக்கொண்டோம். தொடர்ந்தும் இதுபோலவே, எல்லோரும் இருப்போம் என்று நடைமுறையில் காட்டவிருக்கும் கடமையை கணவனே ஏற்றுக்கொண்டு, எந்தவிதக் குறைவுமில்லாமல் செய்யவேண்டும். அந்தக் கடமை எவ்வாறிருக்கும் என்பதைக் கொஞ்சம் விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும்? கணவன் வீட்டில் புதிதாக வந்திருப்பதால், என்ன செய்வதென்றே மனைவி புரியாமல் தடுமாறுவாள். எந்தெந்தக் காரியங்கள் இங்கு வழக்கமாக நடக்கும்? எப்படிச் செய்தால் இந்த வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடிக்கும்? எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்பன போன்ற முக்கியமான வீட்டுக் காரியங்களை மனைவிக்குப் பயம் ஊட்டாமல் பக்குவமாக, மனதில் படும்படி<noinclude></noinclude> il8ut1un75x8pi6ja1f4yxeprm3la8w பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/76 250 102400 1839932 1312865 2025-07-07T10:35:48Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|74||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> பதமாகவே,சொல்லித் தரவேண்டியது, கணவன் கடமையாகும். உதாரணத்திற்குக் கூறினேன், அவ்வப்போது தேவையானதெல்லாம் கணவனே அறிவித்தால் நல்லது. மனைவி செயல்படும்பொழுது, தவறு நேரலாம், குறைகள் நிகழலாம், மீறி சேதமும் விளையலாம். அதையெல்லாம் இயற்கைதான் என்று மேம்போக்காகச் சொல்லிவிட்டு, தள்ளிவிட்டு, தவறுகள் மீண்டும் நேராவண்ணம் மனைவியை ஊக்குவிக்க வேண்டும். மனைவியின் திறமையை புகழ்வதன்மூலம். மேலும் குடும்பக்காரியங்களில் ஒருவித பிடிப்பு ஏற்படும்படியும், நடப்புக்காரியங்களில் நலமாக ஈடுபடும்படியும் மேலும் துண்டமுடியும். மனைவியின் தவறுகளைக் குத்திக் காட்டுவதும், உடனே கோபித்துக்கொண்டு குதிப்பதும், கொடுமையான வார்த்தைகளைக் கொட்டுவதும், மனைவியின் மனதைப் புண்படுத்துவதும். தேநீர் குடிக்கும்போது நாக்கு சுட்டுக்கொண்டால் குளிர்ந்த பானம் குடிக்கும் போது கூட ஊதி ஊதித்தான் குடிக்கத்தோன்றும் என்பது போல, கோபமுள்ள கணவனிடம், மனைவி பயந்தே காரியங்களைச் செய்வாள், அந்தப் பதட்டத்தால், மீண்டும் தவறுகள் அதிகம் நேரிடுமே தவிர குறையாது. எனவே மனைவிக்குத்தைரியம் தந்து, பழக்குவது கணவன் கடமையாகும். கண்போன்று அமைவதால்தான் ‘கணவன்’ எனப்படுகிறான் என்பார்கள். துணையாக இருப்பதால்தான் துணைவன் என்றும் ஆகிறான். நான் துணைவருவேன் ஒன்று ஒருவன் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டிருப்பதனால் மட்டுமே, அந்தப் பெண்ணுக்கு தைரியம் வந்துவிடாது. ஆகவே, மனைவியின்<noinclude></noinclude> 52iy3lqwywx6gtr71ggzg2b4lp9etdm பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/77 250 102403 1839936 1062619 2025-07-07T10:42:14Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude> மனநிலைக்கேற்ப, ஒரு சில நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து நடந்து கொள்வது மிகமிக நலம் பயக்கும். ஒருசில நிகழ்ச்சிகள் என்றால்? இருவரும் முதன் முதலாக சந்தித்த நாளை, நினைவுப்படுத்திப் பேசுவது! சந்தித்த வேளையில் பேசிக் கொண்டதை ஞாபகம் வைத்து உரையாடுவது! இருவருக்கும் திருமண நாள்! இதுபோன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒரு பரிசினைத் தந்து அல்லது கொண்டாடி மகிழ்வது. இவ்வாறு மனைவியை திகைப்பூட்டித் திருப்தி செய்யும் பொழுது, இன்னும் ஒன்றை ஆண் நன்றாக நினைவூட்டிக் கொள்ள வேண்டும். தன் தாயின் குணநலன்களைப் பற்றியும், கொள்கை பற்றியும் தன் மனைவிக்கு அறிவூட்டி, அவைகளுக்கேற்ப நடந்து கொள்ளுமாறு குறியிட்டுக் காட்டுவதுடன், மாமியாருக்கும் மருமகளுக்கும் சுமுகமான உறவு வர, சுலபமான வழிகளைக் கூறவும், கணவன் முயலவேண்டும். இருவருக்கும் ஒரு பாலமாக இருப்பது நல்லது. அதனால் இருவரின் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் வழியமைத்த பணியைத் திறம்பட மேற்கொண்டவனாகிறான். இன்னும் ஒருசில குடும்பத்தில், குடியிருக்கும் இடம் சிறிதாகவும், இருப்பவர்கள் அதிகமாகவும் இருக்க, கணவனும் மனைவியும், நேருக்கு நேர் நின்று பேசிக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கூட கிடைக்காத சூழ்நிலையும் அமைந்திருக்கும். அதே சமயத்தில், கணவனும் மனைவியும் கூடிப்பேசி, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற கட்டுக்கடங்கா ஆசையும் கரை கடந்திருக்கும். அத்தகைய சூழ்நிலையில், தன் மனைவியின் அந்தரங்க ஆசைகளையும் உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ளுதற்கேற்ற சூழ்நிலையினை அறிந்து கணவனே<noinclude></noinclude> iv8p4k546y0you6qcni7jofrlog1i58 பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/78 250 102407 1839937 1312919 2025-07-07T10:43:51Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|76||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> பொறுப்பேற்றுக் கொண்டு, சந்தர்ப்பங்களை உண்டுபண்ணித் தரவேண்டும். மேலே கூறியவற்றை கணவனுக்குரிய கடமையும் பொறுப்பும் என்று நீ உணர்ந்து கொண்டாலும், இன்னும் சில கருத்துக்களைக் கூறுகிறேன். கணவன் மனைவியின் கண்களுக்கு எப்பொழுதும் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். அந்தக் கவர்ச்சிக்காக எங்கே போவது என்று கேட்க வேண்டியதில்லை. இருக்கும் ஆடைகளில் சுத்தமானதாக இருப்பதை எப்பொழுதும் அணிந்து கொள்ள வேண்டும். கம்பீரமாக நிற்பது, நடப்பது, சிரிப்புடன் செழிப்புடன் வீட்டில் உலா வருவது போன்ற காரியங்கள் மனைவியின் மனதைக் கவர்வனவாகும். இவ்வாறு மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, நம்முடைய வசதிக்கேற்ப அவளைத் திருப்பிவிட்டு விட்டால், வாழ்வில் நிச்சயம் மகிழ்ச்சியே நிலவும். மேலே கூறிய கருத்துக்களுக்கு அப்பாலும், பல சந்தர்ப்பசூழ்நிலைகள் ஏற்படலாம். அவ்வப்போது ஏற்படும் நிலைமைக்கு ஏற்ப, எதையும் அறிவுபூர்வமாகவே அணுகி, சமாளிக்க வேண்டியது தான் முறையாகும். உணர்ச்சிபூர்வமாக பிரச்சினையை அணுகுவது தவறாகும். உடலாலும் உணர்வாலும் மனைவியிடம் அணுகி மகிழ்வுடன் வாழும் முறைகளைப் புரிந்து கொண்டது போலவே, சமூக அந்தஸ்து நிலையில் அவளுடன் வாழும் வகைகளையும் தெரிந்து கொள்ளலாம். <b>சமூக நிலை</b> மனைவிக்கென்று அந்தஸ்து உண்டா? எந்த<noinclude></noinclude> 2yrmos5n3d2qrtz7sbjopt7qytz5ez2 1839946 1839937 2025-07-07T11:07:00Z Balu1967 5532 1839946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|76||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> பொறுப்பேற்றுக் கொண்டு, சந்தர்ப்பங்களை உண்டுபண்ணித் தரவேண்டும். மேலே கூறியவற்றை கணவனுக்குரிய கடமையும் பொறுப்பும் என்று நீ உணர்ந்து கொண்டாலும், இன்னும் சில கருத்துக்களைக் கூறுகிறேன். கணவன் மனைவியின் கண்களுக்கு எப்பொழுதும் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். அந்தக் கவர்ச்சிக்காக எங்கே போவது என்று கேட்க வேண்டியதில்லை. இருக்கும் ஆடைகளில் சுத்தமானதாக இருப்பதை எப்பொழுதும் அணிந்து கொள்ள வேண்டும். கம்பீரமாக நிற்பது, நடப்பது, சிரிப்புடன் செழிப்புடன் வீட்டில் உலா வருவது போன்ற காரியங்கள் மனைவியின் மனதைக் கவர்வனவாகும். இவ்வாறு மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, நம்முடைய வசதிக்கேற்ப அவளைத் திருப்பிவிட்டு விட்டால், வாழ்வில் நிச்சயம் மகிழ்ச்சியே நிலவும். மேலே கூறிய கருத்துக்களுக்கு அப்பாலும், பல சந்தர்ப்பசூழ்நிலைகள் ஏற்படலாம். அவ்வப்போது ஏற்படும் நிலைமைக்கு ஏற்ப, எதையும் அறிவுபூர்வமாகவே அணுகி, சமாளிக்க வேண்டியது தான் முறையாகும். உணர்ச்சிபூர்வமாக பிரச்சினையை அணுகுவது தவறாகும். உடலாலும் உணர்வாலும் மனைவியிடம் அணுகி மகிழ்வுடன் வாழும் முறைகளைப் புரிந்து கொண்டது போலவே, சமூக அந்தஸ்து நிலையில் அவளுடன் வாழும் வகைகளையும் தெரிந்து கொள்ளலாம். <b>சமூக நிலை</b> மனைவிக்கென்று அந்தஸ்து உண்டா? எந்த<noinclude></noinclude> hxifryxpds8p3r3jnn7wg3rfbk4gbks பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/79 250 102411 1839938 1312981 2025-07-07T10:45:38Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||77}}{{rule}}</noinclude> கொடுத்தால், மடம் பிடுங்குவாள் என்று பழமொழி இருக்கிறதே?. கணவனுக்கு கட்டுப்பட்டு, மனைவி வாழவேண்டி வந்தவள் என்றாலும், மனைவிக்கும் உணர்ச்சிகள், ஆசைகள், மனப்பூர்வமான விருப்பங்கள் உண்டு என்பதை உனக்கு முன்னரே கூறியிருக்கிறேன். அதைத்தான், பெண்ணுக்கு ஆசாபாசங்கள் உண்டு, மானாபிமானங்கள் உண்டு என்பதுடன், ஆறறிவுள்ள அருமையான புனிதப் பிறவி என்றும் கணவன் உணர்வதில்தான், குடும்ப வாழ்க்கையின் அடித்தளமே அடங்கிக்கிடக்கிறது. அந்தரங்கத்தில் எவ்வளவு அந்நியோன்னியமாக தம்பதிகள் வாழ்ந்தாலும், சுற்றுப்புற சூழ்நிலையில், சமுதாயத்தின் முன்னிலையில் மனைவிக்கென்று ஒரு அந்தஸ்தை, கணவன் நிச்சயமாகத் தரவேண்டும். அந்த அந்தஸ்தானது, மற்றவர்கள் முன்னிலையில் அவளுக்கென்று தகுதியான ஒரு நிலையினை அமைத்துத் தருவதாக இருப்பதுதான் முறையாகும். மனைவி பெறுகின்ற மதிப்பும் மரியாதையும், பெருமையும் புகழும் கணவனையே சாரும் என்பதால், மனைவியை மற்றவர்கள் முன்னிலையில் கௌரவமாக நடத்த வேண்டும் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்வது நல்லது. மற்றவர்கள் முன்னிலையில் கடூரமான வார்த்தைகளைப் பேசுவதும், கேலியும் கிண்டலும் செய்து கேவலப்படுத்துவதும், அலட்சியமாகப் பேசி அவமானப்படுத்துவதும் மன்னிக்க முடியாத தவறாகும். இது போன்ற தவறுகளை கணவன்மார்கள் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.<noinclude></noinclude> 1xvxj3yfvvpjhuox9332k7ao7vp5qyk பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/80 250 102415 1839939 1313004 2025-07-07T10:46:33Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|78||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> ஏன் இப்படி கூறுகிறேன் என்றால், மற்றவர்கள் முன்னிலையில் மனைவியின் தரம் குறைந்து போகும்பொழுது கணவன் மனைவி இருவரது மதிப்பும் தானே பாழாகிறது? அதை நினைத்துப் பார்க்க வேண்டாமா? இன்னும் சிலர் இருக்கிறாள்கள். மனைவியின் சாதாரண தவற்றைக்கூட மற்றவர்களிடம் போய் விமர்சிப்பது. விமர்சனம்செய்வதுமட்டுமல்லாமல், அவர்கள் முன்னாலேயே கண்டிப்பதும், தண்டிப்பதும், திட்டுவதும் அடிப்பதுமாக, தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். இதை மிருகத்தனமான ஆடவர் நடத்தை என்று பெரியோர்கள் கூறுகின்றார்கள். மனைவியின் தவறுகளைத் தனியான இடத்திலே வைத்து தகுந்த முறையில் அறிவுரை கூறி, திருத்தமுயல்வதே தரமுள்ளவர்களின் பண்பாகும். குற்றம் கடுமையாக இருந்தால் கூட தண்டிக்கக் கூடாதா? சிறுதவறென்றால் பெரிதுபடுத்தாது விட்டு விடலாம். இல்லையென்றால், அன்புடன் அறிவுரை கூறலாம். எதையும் அதிக விவாதத்திற்குக் கொண்டு வந்தால், வாக்குவாதம் எல்லை மீறிப்போய், அதுவே புதிய தொல்லையாகப் படமெடுத்து ஆடுமே? துயரத்தைப் போக்க வாதத்தைத் தொடங்கி, அந்தத் துயரத்தைப் பெரிதாக்கிக் கொண்டு, அதற்குள்ளே புதைந்து போவது அறிவுடையோர்க்கு அழகாகுமா? கடுமையான குற்றம் என்று கணவன் கருதினால், கட்டாயம் தண்டித்துத்தான் ஆக வேண்டும் என்றால், அதுவே சரியான செயல்முறை என்றால், தண்டித்தால்தான் தன் மனம் சாந்தியடையும் என்று கணவன் முடிவெடுத்தால், அதற்காக எவ்வாறு தண்டிக்க முடியுமோ, அதைத்தான்<noinclude></noinclude> 5tt45ytbcnufq6hqio0ipavdj8nnjaz பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/81 250 102419 1839941 1312166 2025-07-07T11:00:33Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||79}}{{rule}}</noinclude> செய்ய வேண்டும்! அக்கம்பக்கம் உள்ளவர்கள் என்ன ஏது என்று கேட்டு, வீட்டிற்குள் வந்து, விசாரிக்கின்ற அளவுக்குப் போனால், அது விரசத்திலும் விரசமாகத் தோன்றாதா? மறைமுகமாக செயல்படுவதுதான் முறை, எந்த சண்டையும் கணவன் மனைவிக்குள் இருப்பதுதான், அவர்களது பெருமையை உயர்த்தும். மீறி வெளியே வந்து பரவி விட்டால் அது இருவருக்குமே தீராத அவமானம் அல்லவா? கோபம் வரும்பொழுது கொஞ்ச நேரம் ஒதுங்கி வந்தால், ஆத்திரம் மறையும். ஆத்திரம் மறைய மறைய, அறிவு செயல்படத் தொடங்கும். நிதான நிலை வந்ததும், என்ன செய்ய வேண்டும் என்ற நினைவும் துலங்கும். ஆகவே, எப்பொழுதும் பொறுமையுடன் பிரச்சினையை அணுகவே பழகிக்கொள்ளுதல் வேண்டும். மனைவியைத் தண்டிக்காமல் விட்டுவிடவேண்டும் என்கிறீர்கள்! பிரச்சினையை பேசியே தீர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறீர்களா? குழந்தையென்றால் அடித்துத் திருத்தி விடலாம். வளர்ந்து விட்டவள் அல்லவா மனைவி அறிவுரை கூறி திருத்த முயல வேண்டுமே தவிர, தீர்மானமாகத் தண்டித்தால் தான் அறிவு வரும் என்பது இயற்கைக்கு முரணானதாகும். அடித்துப் பணிய வைக்கப்போய், அதுவே இரண்டு மடங்காக, இடக்காக ஏற்பட்டுப்போனால் என்ன செய்வது? மனைவியின் தவறை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும். மீண்டும் அந்தத் தவறினை செய்யாத அளவுக்கு பக்குவப்படுத்த வேண்டும். அன்புதான் அனைத்துக்கும்<noinclude></noinclude> m0ka9gajdfrk2690qoe1g60t9gb0tf1 பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/82 250 102423 1839942 1062620 2025-07-07T11:02:45Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|80||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> ஆத்திரம் அனைத்தையும் கெடுக்கும் என்பதால் மனைவியை வாட்டி வதைத்துத்தான் புரிய வைக்க வேண்டும் என்பது பொருந்தாத கொள்கையாகும். மனைவியை அடித்தால்தான் வழிக்கு வருவாள் என்று அடிக்கடி அடித்துத் துன்புறுத்தித் தன் வழிக்குக் கொண்டு வர முயன்று தோற்றுப்போய், கணவன் என்ற மதிப்பையும் இழந்து, இறுதியில் தன் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டவர்களை, எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். கொடிய அடிதடி முறையில் மனைவியை தன் வழிக்குக் கொண்டுவர முயற்சிப்பது இருட்டு அறையில் கறுப்பு பூனையைப் பிடிக்க முயன்றவன் நிலைபோல் ஆகிவிடும். ஆகவே, எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும், மனைவியின் மதிப்பும் பெருமையும், உயர்நிலையும் மற்றவர்கள் முன்னால் தாழ்ந்துவிடாமல், தணிந்து போய்விடாமல் இருக்குமாறு, கணவன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தில் மனைவி பெறுகிற மதிப்பானது கணவனது செயலால் தான் உண்டாகிறது என்பதால் கணவனின் பழக்க வழக்கம், அன்றாட நடைமுறைகள் சொல், செயல் அத்தனையும் சிறப்பாக, பிறர் போற்றும்படி அமைந்திருக்க வேண்டும் என்பதனையும் கணவன் மறக்காமல் கடைபிடித்தொழுக வேண்டியது கடமையாகும். சிலரது குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி கசப்பும் வெறுப்பும் மீறி சண்டை சச்சரவு ஏற்படக் காரணம் என்ன? மகிழ்ச்சியாக வாழத்தான் மண வாழ்க்கையைத் தேடுகிறோம். மனக் குமைச்சலையும், நமைச்சலையும்<noinclude></noinclude> 1s7yug0gtkn26gjkjb7dee6b1ir5xm7 பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/83 250 102427 1839943 1313065 2025-07-07T11:03:39Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா||81}}{{rule}}</noinclude> நடைபெறுகின்ற அனைத்துக்கும் நாமேதான் காரணம் என்பதை குடும்பம் நடத்தும் தம்பதிகள் உணர்ந்து கொள்ளாததே முதற்காரணமாகும். திருமணத்திற்கு முன்னர், தனியாக வானம்பாடி போல் அலைந்த ஆண் பெண் இருவருடைய மனதிலும், அபரிதமான ஆசைகள் ஆலோலம் பாடிக்கொண்டிருந்திருக்கும். அவைகள் அனைத்தும் திருமண வாழ்க்கையில் கிடைக்காமற் போகும்பொழுது, நடைமுறையில் வராத பொழுது, இருவருடைய மனதிலும் சற்று ஏமாற்றம் ஏற்படுகிறது. இடைவெளி உண்டாகிறது. எரிச்சலும் பெருமூச்சும் மேலும் மேலும் பெருக, பேரிழப்பு ஏதோ தன் வாழ்வில் நேர்ந்துவிட்டதுபோல பூகம்ப உணர்ச்சிகளுக்கு ஆளாகி, பொங்கி வரும் கோபத்திற்கு உள்ளாகிவிடுவதால், கணவன் மனைவி இருவரும் கீரியும் பாம்பும் போல ஆகி விடுகின்றனர். எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏமாற்றம் ஏற்படுவது சகஜமே! இது பொதுவான அதிருப்திதான். நினைத்ததெல்லாம் வாழ்க்கையில் நடந்து விட்டால், நிறைவேறி விட்டால், பிறகு உலகம் என்பது சர்வசாதாரணமாகிவிடுமே! அதனால் தான், வாழ்க்கையை, “பாதையில்லாத பாதாளலோகம்” என்று சிலர் வருணிப்பார்கள். எது எப்பொழுது நடக்கும் என்று யார் கண்டது? அறியாமையால் தங்களை அவதிப்படுத்திக் கொண்டதால், கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சச்சரவு ஏற்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வரும் நடைமுறை என்றீர்களே? அந்த நடைமுறை என்றால் என்ன பின்பதைக் கூறுங்கள் மாமா?<noinclude></noinclude> sqtbongqjylb1em7fekpaejr088y0kb பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/84 250 102430 1839944 1062553 2025-07-07T11:05:00Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude> வாழ்க்கையை வளமாக வாழ்வதற்கு என்று ஒரு சில அடிப்படையான தேவைகள் உண்டு, அடிப்படை தேவை என்பது உடற்பசிக்கும், வயிற்றுப் பசிக்கும், நாகரிகப் பசிக்கும் பொருந்தும். தம்பதிகளுக்குள்ளே பெறும் இனிய, உடல் உறவுகள்; அதற்குப்பிறகு பெறுகின்ற வயிற்றுப் பசிக்குத் தேவையான சுவையான உணவு வகைகள்; அத்தனைக்கும் ஈடாக, மற்றவரிடையே மதிப்புடன் வாழ உடை, உறையுள், அணிகலன்கள் போன்றவற்றிற்கான பொருளாதார வசதிகள், இவை எல்லாம் நிறைவாகக் கிடைக்கவேண்டும் என்றே எல்லோரும் ஆசைப்படுகின்றனர். நிறைய கிடைக்கும் பொழுதுதான் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். நடைமுறையில் இவை கிடைக்காத பொழுது, வாழ்க்கைக் கசந்து போவது உண்மைதான். இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன். உடலுறவு கொள்ளும்போது இப்படி இருக்கலாம். அப்படி சிரிக்கலாம் என்றெல்லாம் திருமணத்திற்குமுன் இமாலயக் கனவு கண்டு, தேனிலவுக் காட்சிகளையெல்லாம் கற்பனை செய்து மனதில் ஏற்றுக்கொண்டு, பின்னர் செயல்முறையில் இருவரும் இறங்கும்பொழுது, எதிர்பார்த்த இனிய சுகநிலை கிடைக்காது போனால், இன்ப உணர்ச்சியின், தேகக்கிளர்ச்சியின் உச்சநிலையினை எட்ட முடியாத நிலையில் சறுக்கி விழுந்தால், அடிக்கடி அந்த நிலைக்கு ஆளாகும் ஆண் பெண் இருவருக்கும் சண்டை வரத்தானே செய்யும். <b>பொருளாதாரநிலை</b> வாழ்க்கை கசந்து போவதற்கு உடலுறவு மட்டுமே ஆதாரம் என்கிறீர்கள் இல்லையா!<noinclude></noinclude> pmmr549vuckpoubyei4gur1xdjx2l0y 1839945 1839944 2025-07-07T11:06:16Z Balu1967 5532 1839945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude> வாழ்க்கையை வளமாக வாழ்வதற்கு என்று ஒரு சில அடிப்படையான தேவைகள் உண்டு, அடிப்படை தேவை என்பது உடற்பசிக்கும், வயிற்றுப் பசிக்கும், நாகரிகப் பசிக்கும் பொருந்தும். தம்பதிகளுக்குள்ளே பெறும் இனிய, உடல் உறவுகள்; அதற்குப்பிறகு பெறுகின்ற வயிற்றுப் பசிக்குத் தேவையான சுவையான உணவு வகைகள்; அத்தனைக்கும் ஈடாக, மற்றவரிடையே மதிப்புடன் வாழ உடை, உறையுள், அணிகலன்கள் போன்றவற்றிற்கான பொருளாதார வசதிகள், இவை எல்லாம் நிறைவாகக் கிடைக்கவேண்டும் என்றே எல்லோரும் ஆசைப்படுகின்றனர். நிறைய கிடைக்கும் பொழுதுதான் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். நடைமுறையில் இவை கிடைக்காத பொழுது, வாழ்க்கைக் கசந்து போவது உண்மைதான். இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன். உடலுறவு கொள்ளும்போது இப்படி இருக்கலாம். அப்படி சிரிக்கலாம் என்றெல்லாம் திருமணத்திற்குமுன் இமாலயக் கனவு கண்டு, தேனிலவுக் காட்சிகளையெல்லாம் கற்பனை செய்து மனதில் ஏற்றுக்கொண்டு, பின்னர் செயல்முறையில் இருவரும் இறங்கும்பொழுது, எதிர்பார்த்த இனிய சுகநிலை கிடைக்காது போனால், இன்ப உணர்ச்சியின், தேகக்கிளர்ச்சியின் உச்சநிலையினை எட்ட முடியாத நிலையில் சறுக்கி விழுந்தால், அடிக்கடி அந்த நிலைக்கு ஆளாகும் ஆண் பெண் இருவருக்கும் சண்டை வரத்தானே செய்யும். <b>பொருளாதாரநிலை</b> வாழ்க்கை கசந்து போவதற்கு உடலுறவு மட்டுமே ஆதாரம் என்கிறீர்கள் இல்லையா!<noinclude></noinclude> ioq9w3si793at7e8jjmolnn822gddwg பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/85 250 102434 1839947 1313091 2025-07-07T11:07:50Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||83}}{{rule}}</noinclude> பல காரணங்களுக்கிடையில், உடல் உறவுக் காரணம் தலையாய இடம் வகிக்கின்றது. இனிய வாழ்க்கைக்கு அடிப்படை பொருளாதாரம் தான். பண வசதியில் தடுமாற்றம் ஏற்பட்டால், மன அமைதியில் விரிசல் ஏற்படும். இத்தகைய பணவசதியை படைத்துக்கொள்வதும், பராமரித்து பாதுகாத்துக் கொள்வதும் தம்பதிகள் கையில் தான் இருக்கிறது. ஆணுக்கு ஆண்மை உண்டு. வலிமை உண்டு. செயல்படும் திறமை உண்டு. சீரான முடிவெடுக்கும் ஆற்றலும், முன்னேறிப் போகின்ற வேகமும், ஆராய்ந்தறியும் பண்பும், காரியத்தை நிறைவேற்றும் கடமை உணர்வும் நிறைய உண்டு. பெண்ணுக்கோ, பெண்மையும், மென்மையும், நியாய உணர்வுத் தன்மையும், உணர்ச்சி வயப்படும் தன்மையுடன் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நெகிழ்ந்து தரும் தன்மையும் நிறைய இயல்பாகவே உண்டு. இத்தகைய ஆற்றல் படைத்தத் தம்பதிகள் இருவரும், இணைந்து செயல்பட்டால் இருவரின் வாழ்க்கையும் இனிதாகவே அமையும். இரண்டு உள்ளங்களும் மாறுபடுகிறபொழுது, அங்கே சுயநலம் சுழன்றுவீசும். அந்த சுழற்சியிலே அன்பும் பாசமும் கலைந்தோடி விடுகிறது. வெறும் ஏமாற்றுச்சிரிப்பும் வாய்ப்பேச்சும், பசப்புத்தன்மையும், வெறும் வாய்ப் பந்தலும் அன்றாட வாழ்வு நிகழ்ச்சிகளாய் அமைந்து விடுகின்றன. விருந்துக்கு போய் வயிற்று வலியுடன் வந்த கதை போல, மகிழ்ச்சிதேடப் போய், வேதனையை சுமந்து கொண்டு வந்த நிலையாய் மாறிப் போய்விடும்.<noinclude></noinclude> 106il1pydi2ne0dd2exvdjvs4j73i92 1839948 1839947 2025-07-07T11:08:03Z Balu1967 5532 1839948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||83}}{{rule}}</noinclude> பல காரணங்களுக்கிடையில், உடல் உறவுக் காரணம் தலையாய இடம் வகிக்கின்றது. இனிய வாழ்க்கைக்கு அடிப்படை பொருளாதாரம் தான். பண வசதியில் தடுமாற்றம் ஏற்பட்டால், மன அமைதியில் விரிசல் ஏற்படும். இத்தகைய பணவசதியை படைத்துக்கொள்வதும், பராமரித்து பாதுகாத்துக் கொள்வதும் தம்பதிகள் கையில் தான் இருக்கிறது. ஆணுக்கு ஆண்மை உண்டு. வலிமை உண்டு. செயல்படும் திறமை உண்டு. சீரான முடிவெடுக்கும் ஆற்றலும், முன்னேறிப் போகின்ற வேகமும், ஆராய்ந்தறியும் பண்பும், காரியத்தை நிறைவேற்றும் கடமை உணர்வும் நிறைய உண்டு. பெண்ணுக்கோ, பெண்மையும், மென்மையும், நியாய உணர்வுத் தன்மையும், உணர்ச்சி வயப்படும் தன்மையுடன் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நெகிழ்ந்து தரும் தன்மையும் நிறைய இயல்பாகவே உண்டு. இத்தகைய ஆற்றல் படைத்தத் தம்பதிகள் இருவரும், இணைந்து செயல்பட்டால் இருவரின் வாழ்க்கையும் இனிதாகவே அமையும். இரண்டு உள்ளங்களும் மாறுபடுகிறபொழுது, அங்கே சுயநலம் சுழன்றுவீசும். அந்த சுழற்சியிலே அன்பும் பாசமும் கலைந்தோடி விடுகிறது. வெறும் ஏமாற்றுச்சிரிப்பும் வாய்ப்பேச்சும், பசப்புத்தன்மையும், வெறும் வாய்ப் பந்தலும் அன்றாட வாழ்வு நிகழ்ச்சிகளாய் அமைந்து விடுகின்றன. விருந்துக்கு போய் வயிற்று வலியுடன் வந்த கதை போல, மகிழ்ச்சிதேடப் போய், வேதனையை சுமந்து கொண்டு வந்த நிலையாய் மாறிப் போய்விடும்.<noinclude></noinclude> 00czbrn4y19s2grw05gsyffmy5809pv பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/86 250 102438 1839949 1313458 2025-07-07T11:09:16Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|84||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> ஆகவே, கணவனும் மனைவியும் உண்மையுடன் பேசி உறவாடி, அதன்வழியே உண்மையான சூழலின் சிக்கலை உணர்ந்து, அதிலிருந்து மீண்டுவரும் வழியை திட்டமிட்டு வெற்றியுடன் வாழ முயலவேண்டும். அவ்வாறு முயற்சிக்காமல், தங்களுடைய வாழ்வு மற்றவர்களுடைய வாழ்வைப் போல் அமையவில்லையே என்ற மனக்குறையுடன் எப்பொழுதும் வாழவே கூடாது. ஒவ்வொரு குடும்பத்திலும் கோபதாபம் உண்டு. கஷ்டநஷடம் உண்டு. ஏற்றத்தாழ்வு உண்டு. வறுமை செழுமை உண்டு. ‘சாவே இல்லாத குடும்பத்தில் கடுகு வாங்கி வா! உன் புத்திரனை உயிர்ப்பித்துத் தருகிறேன்’ என்ற புத்தபிரான் ஒரு பெண்ணுக்கு உண்மை நிலையை உணர்த்தியதாக ஒரு நிகழ்ச்சி உண்டு. அதுபோல், ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்ற பழமொழியின் உண்மை தெளிந்து, சச்சரவு கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். சச்சரவினை பெரிதுபடுத்தாமல், சமாதான முறையிலே, சச்சரவுக்குரிய வழியைச் தீர்த்துக் கொள்வதே அறிவுடையோர்க்கு அழகாகும். சச்சரவு வந்தால் எப்படி தீர்த்துக் கொள்வது? குடும்பத்தில், பணம் பற்றி பேச்சு வந்தால்தான், சச்சரவு அதிகம் எழும். குடும்பத்தில், யார் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்வது? என்பதில்தான் பிணக்கும் போராட்டமும். கணவனிடம் பணம் இருந்தால் கண்டபடி செலவழித்துவிடுவார் என்றும் கடுகடுக்கும் மனைவியும்; மனைவியிடம் இருந்தால் விருப்பம் போல் ஏதாவது செலவு செய்துவிடுவாள்; தன்னை மதிக்க மாட்டாள் என்று<noinclude></noinclude> 61kx6p7whulhnc93m5an4qfcs4kyzed பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/87 250 102442 1839950 1313288 2025-07-07T11:09:53Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||85}}{{rule}}</noinclude> முணுமுணுக்கும் கணவனும், தன்னிடமே பணம் இருக்க வேண்டும் என்று முயல்கிறபொழுது தான் சிக்கலே சிலிர்த்தெழுகின்றது. பணம் வைத்து செலவு செய்பவருக்குத்தான் அதிக கெளரவம். அதிக பெருமை என்ற எண்ணத்திலேதான் இவ்வாறு தம்பதிகளுக்குள் சண்டை எழுகிறது. ஒருசிலர், மனைவியிடம் கொடுக்கும் பணத்திற்கு பைசாவுக்குக்கூட கணக்கு வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து சண்டைபோடுவார்கள். இன்னும் சிலர், தேவையில்லாததையெல்லாம் ஏன் வாங்கித் தொலைக்கிறாய் என்று திட்டுவார்கள். கணவனிடம் சில வேண்டாத செலவு முறைகள் இருக்கும். அதை மனைவி குத்திக்காட்டி, ஏன் பணத்தைப் பாழாக்குகின்றீர்கள் என்று போராடுவாள். இவ்வாறு பணப் பிரச்சினை எழும்பொழுதெல்லாம், வீட்டிலே அமைதி நிலைக்காது. ஆனந்தம் தலை தூக்காது. இந்தப் பிரச்சினையை அமைதியாக கணவனும் மனைவியும் தீர்த்துக்கொள்ள வேண்டும். மனைவிக்குப் பணம் எதற்கு என்று வாதாடுபவர்களும் உண்டு. மனைவிக்கு பணம் தேவையில்லை யென்றாலும் அவளிடம் செலவுக் கென்று பணம் கொடுத்தால், கஞ்சத்தனமாக, கண்டதற்கெல்லாம் கணக்குக் கேட்காத பெருந்தன்மையுடன் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். மனைவிக்கென்று தருகின்ற பணத்தை, அவள் மனம் போல் செலவு செய்ய அனுமதிப்பதானது, பல வழிகளில் நல்ல பயனையும் தரும்.<noinclude></noinclude> esauiftxwiyzc7yemukr9uaozb4rczn பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/88 250 102446 1839951 1313296 2025-07-07T11:10:50Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|86||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> தனக்கென்று செலவு செய்ய, தன்கையில் கொஞ்சம் பணமிருக்கிறது என்று எண்ணும்பொழுது, மனைவிக்கு ஒருவித உரிமைப் பற்றும், மனத்தெம்பும், செழிப்பும் உண்டாகும். தன் தோழிகள் மத்தியிலும் கம்பீரமாக நடைபோடக் கூடிய ஒருவித சக்தியும் இருக்கும். இல்லையேல், ‘சோற்றுக்காக உழைக்கும் ஒரு வேலைக்காரி; கணவனுக்கு தேவைப்படும் பொழுது இச்சையைத் தீர்க்க இருக்கும் தாலி கட்டிய ஒரு தாசி’ என்ற நிலைமைக்கு மனைவியைத் தூண்டிவிடும் ஒரு விபரீத புத்தியைத் தந்துவிடும். எனவே, மனைவியின் மணமறிந்து பண விஷயத்தில், பக்குவமாக நடந்துகொண்டால், கணவனுக்கு கவலைகள் வர நியாயமில்லை. இன்னும் சொல்லப் போனால், பண விஷயத்தில் கொஞ்சம் மனைவிக்கு அதிகமாகவே உரிமை வந்து, குடும்பப் பொறுப்பை ஏற்கச்செய்து, குடும்பத்தையும் நடத்திச் செல்லும் உரிமையையும் கொடுத்துவிட்டால், கணவனுக்குரிய குடும்பச்சுமை பாதி இறங்கினாற் போலவும் இருக்கும். பெண்கள், எதையும் சமாளிக்கும் சக்தி படைத்தவர்கள். ஆகவே சுமுகமாகவே குடும்பத்தை நடத்திச் செல்லும் சாகசச் கலை அவர்களுக்கு இருக்கிறபடியால், நம்பிக்கையுடன், குடும்பத்தை நடத்தும் பொறுப்பை மனைவியிடம் விடும் கணவன், மகிழ்ச்சியாகவே வாழமுடியும் என்பது என் அனுபவம், என் நண்பர்களைப் பார்த்தும் அறிந்து கொண்ட பாடம் என்றார் உலகநாதர்.<noinclude></noinclude> fu0r0elvyswux2g4lcpmuzkpnhhbrlq பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/89 250 102449 1839952 1313502 2025-07-07T11:11:31Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையான||87}}{{rule}}</noinclude> மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால், கணவன்தான் முயற்சிக்க வேண்டும் என்கிறீர்களா? மனைவிக்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லையா மாமா? இரண்டு கைகளும் தட்டினால் தான் ஒசை. இரண்டு விழிகளும் பார்த்தால்தான் காட்சி. இதை என்றும் மறந்து விடக்கூடாது வாசு. மனைவியும் கணவனுடன் ஒத்துழைத்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். ஆகவே, மனைவி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு சில குறிப்புக்களைக் கூறுகிறேன். மனைவியானவள், தன் கணவன் தன்னை மனமார நேசிக்க வேண்டும் என்று விரும்புவது போலவே, தானும் தன் கணவனை உளமார நேசிக்க வேண்டும். மனமார மதிக்க வேண்டும். கணவனது லட்சியங்களை, நோக்கங்களை, கருத்துக்களைப் புரிந்துகொண்டு அவைகளுக்கேற்ப கணவனுடன் ஒத்துழைப்பதுதான் கற்புள்ள மங்கைக்கு கடமையாகும். தன்மேல் படுகின்ற சூரிய ஒளியை உடனே அழகாகப் பிரதிபலிக்கின்ற கண்ணாடியைப் போல, தன்மீது அன்பு செய்யும் கணவனுக்கு தங்குதடையில்லாமல், திருப்பித் தந்து திருப்திபடுத்தும் பொறுப்பை மனைவி நன்கு ஏற்று, அதன் வழி நடக்க வேண்டும். ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள் என்பார்கள். அடிக்கடி நெருங்கிப் பழகுவதற்குரிய வாய்ப்பு தம்பதிகளுக்கு இருக்கிறது. பழகப்பழகப் பாலும் புளிக்கும். அதுபோன்ற எண்ணம் மனதில் இடம்பெறும்படி நடந்து<noinclude></noinclude> 3vqo816pcrq6bihg90r7bpy43eouc2i பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/90 250 102453 1839953 1313536 2025-07-07T11:12:07Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.||87}}{{rule}}</noinclude> கொள்ளாமல், அன்றாடம் பூக்கும் புதுமலர்போல, அன்பால் தினமும், கணவனைப் பராமரித்து காத்துவரும் மனப்பான்மையை மனைவி அறிந்து நடக்க வேண்டும். கணவனது பணி என்ன, கடமை என்ன என்பதை அறிந்து, முடிந்தால் கணவனுக்கு ஒத்தாசை செய்யலாம். முடியவில்லை என்றால் துணையாகவே சேவை செய்யலாம். இல்லையென்றால் தேவையானதைத் தந்து பக்கபலமாக விளங்கலாம். தன் கணவனுடைய உடல் சக்தியும், மன வலிமையும் தான் வாழ்வின் முன்னேற்றக் காரியங்களுக்குப் பயன்படுவதுபோல, மனைவியின் ஒத்துழைப்பு இருக்கவேண்டும். சில்லரைத் தனமாக சிறு காரியங்களுக்குக்கெல்லாம் சண்டைபோட முயல்வதும், பணத் தகராறு போன்றவற்றிலும் பூசல்களுக்கு முயல்வதும், அற்பத்தனமானவைகளுக்கு கூட ஆர்ப்பாட்டம் செய்வதும், நல்ல குடும்பப் பெண்ணுக்கு அழகல்ல. சஞ்சலம் கொடுக்காது, மனைவியே கணவனைக் காக்கவேண்டும். சில சமயங்களில் கருத்து வேறுபாடு வரும். வராது என்று சொல்வதற்கில்லை. அப்படி வந்துவிட்டால் வார்த்தை தடித்து, வாதம் அதிகமாகி, அடிதடியில் இறங்கி விடுகின்ற சூழ்நிலையும் அமையலாம். அப்படிவராமல் தவிர்த்துக் கொள்வதுதான் அறிவுடையோர்க்கு அழகாகும். வாக்குவாதம் வருவது தவிர்க்க முடியாததாகி விட்டால், அதனால் ஊடல் நிகழ்ந்தால், அந்த சிறு பூசல் அவர்கள் மனத்திலிருக்கும் அறியாமை அழுக்கைப் போக்குவதற்காகப் பயன்பட்ட அருமையான அனுபவமாக அவர்கள் கருதவேண்டுமே தவிர, வேறல்ல என்று கொள்ளவேண்டும்<noinclude></noinclude> ggo5x3de1rg3bjorv4ghy699bbcm2ww பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/91 250 102457 1839954 1312648 2025-07-07T11:12:52Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||89}}{{rule}}</noinclude> உடுத்திக் கொள்கின்ற ஆடையில் அழுக்கு படிந்து விட்டால், அதனை சுத்தப்படுத்திட துவைக்கிறோம்; அதுபோல, மன அழுக்கைப் போக்கும் வேலையாக இந்த சிறு பூசலை மதிக்கவேண்டும். ஆடை அழுக்கானால், அதைக் கிழித்து எறிவேன் என்று ஒருவர் முரண்டு பிடித்தால், அவரை எப்படி அழைப்பது? குழப்பத்தை உண்டு பண்ணக்கூடிய விஷயம் எதுவும் வந்தால், அதனைக் காரசாரமாக விவாதிக்க மனைவி இடம் தரவே கூடாது. அதனை ஆறப் போடுகின்ற பொறுப்பை மனைவியே ஏற்க வேண்டும். பிரச்சினை பெரிதாகாமல் சூடாகாமல் மனைவி பாாத்துக் கொண்டால், கோபம் அடங்கியவுடன், தவறு யார் மேல் என்று தெளிவாகத் தெரியும். வந்த தகராறில், தன்பக்கமே ஜெயித்தது என்று தம்பதிகளில் யாராவது ஒருவர் சுட்டிக் காட்டுவதோ, அடுத்தவரைக் குத்திக் காட்டுவதோ கூடாது. அந்தப் பழக்கம் இருந்தால், அறவே ஒழித்து விட வேண்டும். இல்லையென்றால் தோற்றவர் தன் தன்மானத்தைக் காப்பாற்றுவதற்காக, மீண்டும் வேறு ஒரு பிரச்சினையைக் கிளப்ப வேண்டியிருக்கும். தன்பக்கம் தவறிருந்தால், கணவனோ, அல்லது மனைவியோ தைரியமாக தன் தவறினை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றுக் கொள்ள வேண்டும். வீண் கெளரவம் பார்க்காது வாழ்க்கையை இனிமையாக்கி கொள்வதற்காகவாவது, தவறை ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால், கணவன் 'மனைவி இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை<noinclude></noinclude> nv2pxk1ndwgu6log4syycpjbo3uj20q பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/92 250 102462 1839955 1312658 2025-07-07T11:13:52Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|90||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையானது, தான் என்ற அகங்காரம் இல்லாதபோது தான் வரும். ‘இது நம் குடும்பம், இவர் என் கணவர், இவர் நிம்மதியாக இருந்தால்தான் என் வாழ்வும் இன்பமாக இருக்கும்,’ என்ற எண்ணத்துடன் மனைவி இணைந்து இசைந்து நடக்க வேண்டும். கணவன் சில சமயங்களில் பெருமைக்காக செலவு செய்வதும், தன்னைப்பற்றியே பெருமையாகப் பேசி மகிழ்வதும் உண்டு. பிறர் முன்னிலையில் மனைவி அவரைத் திருத்த முயல்வதும், கண்டிக்க முயல்வதும் தவறாகும். தனிமையில் இருக்கும்பொழுதுதான், சமாதான முறையில் குறைகளை களையுமாறு அவள் மனதில் படும்படி கேட்கவேண்டும். அன்றாட வாழ்க்கை முறையில், கணவன் செய்வது மனைவிக்கும், மனைவி செய்வது கணவனுக்கும் பிடிக்காமற் போகலாம். அதனைத் தீர்ப்பதற்காக அடுத்தவர்கள் உதவியை நாடக்கூடாது. குற்றம் சாட்டக்கூடாது. இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் வருமல்லவா! அப்பொழுது தங்களுடைய எண்ணத்தைக்கூறி, தேவையான பழக்கத்தை மேற்கொள்ள பரஸ்பரம் இருவரும் கருத்தைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். எதையும் கேட்கும் முறையில் கேட்டால், நிச்சயம் கொடுக்கப்படும் என்பது இறைமொழியல்லவா! குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்துவதுதான் தன் கடமை என்பதைத் தெரிந்து மனைவி நடந்து கொள்ளவேண்டும்.<noinclude></noinclude> 59919vzzrzms8f6a8re1hfvlbrgutzz பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/93 250 102466 1839956 1312653 2025-07-07T11:14:50Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||91}}{{rule}}</noinclude> ‘இல்லாள் அகத்திருக்க, இல்லாதது ஒன்றுமில்லை’ என்று பாடுகின்ற ஒளவையார், இல்லத்திற்கு இசைந்துவராத பெண் மண் என்றும் பாடுகிறாரே! பெண் இதனைப் புரிந்து கொண்டால் போதும். கணவனுக்கு உடலால், உள்ளத்தால், மனைவி தேவைப்படும்பொழுதெல்லாம் மனைவி நிலையுணர்ந்து பயன்படவேண்டும். அவ்வாறு தேவை நிறைவேறும் பொழுதெல்லாம் இருவரிடையே அன்பும் முகிழ்ந்து வளமாகிறது என்பதே உண்மையாகும். அதுபோலவே, மனைவிக்கும் சிறுசிறு தேவைகள் உண்டு என்பதைக் கணவனும் கண்டு கொண்டு, நிறைவேற்றி மகிழவும், மகிழ்விக்கவும் வேண்டும். கணவன்மார்களில் பலவிதம் உண்டு. மனைவியிடம் அழகும், கவர்ச்சியுமே அதிகமாக இருக்க வேண்டும் என்பார் சிலர். சரச லீலைகளில் ஈடுபாடும், உடலுறவில் பிடிப்பும் அதிகமாக உள்ளவளே மனைவியாக இருக்க வேண்டும் என்பாரும்; எப்பொழுதும் சந்தோஷமும் கலகலப்பும் உள்ளவளே மனைவியாக வேண்டும் என்பாரும், செலவு செய்யாத சிக்கனக்காரியாக அமையவேண்டும் என்பாரும் உண்டு. இவற்றை மனைவிமார்கள் புரிந்து கொண்டு தன் கணவன் விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டால், நிச்சயம் அங்கு அமைதியே நிலவும். தம்பதிகளுக்கு ஒரு சில குறிப்புக்கள். மற்றவர் குறையை மறக்கவும் மன்னிக்கவும் தெரிந்து கொண்டு, குணத்தைப் பாராட்டும் பழக்கத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஒருவர் மனதில் ஒருவர் உயர்ந்த<noinclude></noinclude> kb1jwae98xes4vk37hc16kj29qrsfpi பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/94 250 102470 1839957 1312661 2025-07-07T11:15:39Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|92||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> இடத்தைப் பிடித்துக்கொள்வது போலவே, உறுதுணையாக வாழவேண்டும். சிறுசிறு சச்சரவு வந்தாள் முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும். நீரோடு நீர் மோதுவதால் என்ன ஆகிவிடும். கணவன் மனைவி உறவு கீழே விழுந்தால் உடையும் மட்குடம் அல்ல. தப்பிக்கொள்ளும் தங்கக்குடம். குறைபார்த்துக் கோபித்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது! எந்தப்பொருளுக்கும் குறை உண்டு. நீருக்கு நுரையுண்டு. நெல்லுக்கு உமியுண்டு. நிலவுக்கும் கறையுண்டு. பூவுக்கும் புல்லிதழ் உண்டு என்று பழம்பாடல் கூறுவதுபோல், மனிதர்களுக்கும் குறை உண்டு. ஆகவே, குறையைப் பெரிதுபடுத்தாது, அனுசரித்து வாழ்வதே ஆனந்த மயமான வாழ்க்கையாகும். இவ்வாறு நடந்து கொள்வது, மனப்பக்குவம் பெறுவது மிகவும் கடினம் என்கிறார்களே? ‘மனைவி தனக்கு அடிமை போன்றவள். தான் இடும் வேலைகளைச் செய்பவள்: என்னைக் காப்பதுதான் அவளுக்குத் தலையாய கடமை’ என்று எந்தக் கணவனாவது நினைத்தால், அங்குதான் சிக்கலே எழுகின்றது. எவன் தன்னுடைய மனைவியை ஒரு நண்பனாக, நல்ல தோழனாக கருதுகிறானோ, அவனே மகிழ்ச்சியாக வாழ்கிறான். நல்ல நண்பன் நாலாயிரங்கோடிக்குச் சமம் என்கிறார்களே! உயிர் காப்பான் தோழன் என்பது தானே பழமொழி. தனது வாழ்க்கைப் பயணத்திற்குத் தொடர்ந்துவரும் துணையென்று மனைவியை ஏற்றுக் கொண்டால்,<noinclude></noinclude> ksfa0jvsltfkb431g8iv005g8ua2txa பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/95 250 102473 1839958 1312665 2025-07-07T11:16:28Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839958 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||93}}{{rule}}</noinclude> நினைவெல்லாம் இன்பந்தான். தனது இலட்சியங்களை நண்பனுக்குக் கூறி நல்லாதரவு கேட்பதுபோலவே, வாழ்வின் இலட்சியங்களுக்கு மனைவியைத் துணையாகச் சேர்த்துக் கொண்டு, அந்தரங்க உறவுக்கு அருமையான உறவாக, பணிகளை மேற்கொள்ளும் பக்குவமுள்ள பாங்கராக மாற்றிக்கொண்டால், மகிழ்ச்சியே வாழ்வில் விளையுமே தவிர, மறு எண்ணத்திற்கு அங்கு இடமே இல்லை. பெண்ணைப் புரிந்து கொண்டு விட்டால் பேரின்பம் என்றாரே புலவர்கள். அது உண்மைதான் என்று முடித்தார் உலகநாதர். சுமையாக இருக்கும் என்றல்லவா நினைத்தேன். குடும்ப வாழ்வை, சுவையானது என்றல்லவா நீங்கள் கூறிவீட்டீர்கள்! ஆமாம்! இது என் வாழ்க்கை அனுபவம்! வழிவழியாக வந்த முன்னோர்கள் வழங்கிச்சென்ற நல்ல நூல்களில் நான் கற்ற பாடம். வாழ்க்கைப் பயணம் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். அதில், வாழ்வின் இலட்சியம் மகிழ்ச்சியான வாழ்வு என்பது, எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்றுதான். ஒரு கோயிலை அடைய பல வழிகள் இருப்பதுபோல, மகிழ்ச்சிக் குறிக்கோளை அடைய பல முறைகள் உள்ளன. நல்லபாதையில், நல்ல மனதுடன் நடந்து செல்லும் தம்பதிகள் நலமாகவே நடந்து, நலமாகவே மகிழ்ச்சிக் கோயிலை அடைகின்றனர். இருபுறமும் முகத்தைத் திருப்பிக்கொண்டு புறப்படும் தம்பதிகள், இழுத்துப் பறித்துக்கொண்டு நுகத்தடியில் பூட்டப்பட்ட முரண்பட்ட காளைகள் வெவ்வெறு திசை<noinclude></noinclude> ddvngb5v7fcd2rcd4rdm7mneeb7th0w பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/96 250 102478 1839959 1313553 2025-07-07T11:17:15Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|94||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude>நோக்கி இழுப்பதுபோல, வேதனையும் விசாரமும் அடைந்து வாழ்க்கையையே நரகமாக்கிக் கொள்கின்றனர். இறுதியாக கணவன்மார்களுக்கு ஒரு வார்த்தை! உங்கள் உயர்ந்த லட்சியத்தை உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள். அதற்குரிய முயற்சியிலேயே நில்லுங்கள். ஆதரவையும் பெற்றுக்கொள்ளுங்கள் அவளுடன் லட்சியப்பயணம் செல்லுங்கள். சுறுசுறுப்பான மூளை சொர்க்கத்தின் வழிகாட்டி, சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற்சாலை என்பார்களே, அதுபோல நல்நோக்கும் நேர்மையான உழைப்பும் உள்ள கணவனை நிச்சயம் மனைவி நேசிப்பாள். துணையாக இருந்து தூணாக நின்று உதவுவாள். தேனாக விருந்தளிப்பாள். மனைவி மனங்கலந்து விட்டால் மகிழ்ச்சிக்குக் குறைவேது! தானே தனக்குத் தலைவனும் என்ற பாடல் போல, தானே தனக்குரிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தெரிந்தவனே தலைவன்! அவனே நல்ல கணவன் என்றார் உலகநாதர். நானும் தலைவனாக இருப்பேன் என்று உணர்ச்சிப் பெருக்குடன் வாசு கூறினான். தனது முயற்சியில் வெற்றி பெற்றதாக உலகநாதர் மகிழ்ந்தார். தன் தாயாரை நோக்கி, தன் முடிவை சொல்ல வாசு வீட்டிற்குள் விரைந்தான். ‘மனம் போல் வாழ்க’ என்று உலகநாதனின் மனம், வருங்காலத் தம்பதியர்களை வாழ்த்தியது.<noinclude></noinclude> jszm5194qtzxyqfskb0pqnk2y22fpd5 பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/97 250 102481 1839960 1312676 2025-07-07T11:18:20Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா||95}}{{rule}}</noinclude> வாசுவைப் போன்ற வாலிபர்கள், நாட்டிலேயே நிறையபேர்கள் இருக்கின்றனர். இதயத்திலே எழுகின்ற சந்தேகங்களை யாரிடம் கேட்பது, எங்ஙனம் தெளிவுபடுத்திக் கொள்வது, என்றெல்லாம் மன உளைச்சலில் ஊறியவர்கள் அநேகம், அநேகம். கேட்கக் கூடாதவர்களிடம் கேள்விகளைக் கேட்டு, கிடைக்கத் தகாத பதில்களை கிடைக்கப்பெற்று, கிளர்ச்சி பெற்று, கீழான செயல்களில் ஈடுபட்டு கேடுற்றவர்களும் நிறைய பேர்கள் உண்டு. ‘சொல்லித் தெளிவதோ சுந்தரக்கலை’ என்று உடல் உறவுக் கலையை விவரிப்பார்கள். நாம் இங்கே அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சொல்லித் தெரியாமல், நாளாக, நாளாக மேற்கொள்ளும் பழக்க வழக்கங்களில் கண்டு, மாறி, மாற்றிக் கொண்டு, தெளிவும் பொலிவும் பெற வேண்டும் என்பதே நமது ஆசை. அதற்கும் மேலே, மனைவியுடன் சேர்ந்து வாழ்வது, மகிழ்ந்து வாழ்வது எவ்வாறு என்பது தான் அடுத்து நிற்கும் தலையாயப் பிரச்சினை. அதனைத்தான் அதிகமாகத் தெளிவுபடுத்த முனைந்தோம். வாலிப நண்பர்கள், வாழ்க்கையரின் முக்கியத்துவத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வந்து சேருகின்ற மனைவியின் லட்சியத்தை, ஆசைகளை, மனோபாவங்களை, செயல்முறைகளை நோக்கித் தெரிந்து கொள்ளவேண்டும்.<noinclude></noinclude> dj7gw884n8s65mpq7qx1xebmxhneqaf பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/98 250 102485 1839961 1313556 2025-07-07T11:19:35Z Balu1967 5532 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Balu1967" />{{rh|96||மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி}}{{rule}}</noinclude> நமது வாழ்க்கை வசதி என்ன? அதற்கேற்றாற் போல வாழ்க்கை முறையினை அமைத்துக்கொள்ள முடிவு செய்திடவேண்டும். வரவு என்ன செலவு என்ன என்பதைவிட, எல்லா செயலிலும் நிலையிலும் இருவரின் பங்கு என்ன என்பது தான் மிகவும் முக்கியம். உள்ளத்தால் ஈடுபாடு கொண்டு, உடலால் நல்லுறவு கண்டு, பொருளாதாரத்தால் மேன்மை நிலை கொண்டு, சமூகத்தில் சகலமரியாதைகளையும் பெற்று வாழ இன்றைய இளைஞர்கள், இல்லறத்தின் மூலமாக முயலவேண்டும். முடித்திட வேண்டும். மகிழ்ந்திடவேண்டும். மாபெரும் பணியில் திகழ்ந்திடவேண்டும். வெற்றி வாழ்க்கையை வாழ்ந்திடவேண்டும் என்று விரும்பி வாழ்த்துகிறோம். {{Css image crop |Image = மனைவியுடன்_மகிழ்ச்சியாக_வாழ்வது_எப்படி.pdf |Page = 98 |bSize = 425 |cWidth = 177 |cHeight = 62 |oTop = 447 |oLeft = 134 |Location = center |Description = }}<noinclude></noinclude> c2u2brmb6mtyflkv7uz0vngwzmpsotu பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/99 250 102488 1839963 1062568 2025-07-07T11:22:18Z Balu1967 5532 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{{Css image crop |Image = மனைவியுடன்_மகிழ்ச்சியாக_வாழ்வது_எப்படி.pdf |Page = 99 |bSize = 425 |cWidth = 398 |cHeight = 600 |oTop = 3 |oLeft = 2 |Location = center |Description = }}<noinclude></noinclude> qzi4mu71gvoogm052fzta5onc4c42cd பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/176 250 130261 1839570 1839447 2025-07-06T13:44:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|174||பாரதிக்குப் பின்}}</noinclude>தாமிரபருணி நதிப் போக்கிற்கு பாரா கொடுப்பது போல் நிற்கும். பனங்காட்டு வரிசையைக் கடந்து விட்டால், விளாகத் துறையின் பக்கம் நாலைந்து மாமரங்கள் கொண்ட தோப்பும், அதை யொட்டிய துரவுகளும், குடிசைகளும், ரோட்டை யடுத்துள்ள கோயில் குளத்தான் சாராய்க் கடையும், செங்கல் சூளையும் ஊழிக்குப் பின் முளைத்தெழுந்த உலகம் போல் புதுமேனியுடன் நிற்கும். ஆற்றங்கரையோரத்தில், மாந்தோப்புக்குச் சமீபமாக, சுடுகாட்டுப் பிராந்திய எல்லைக்குள் சின்னக்கல் கட்டிடம் ஒன்று தெரியும். முன்புறமும் மேல்புறமும் அடைப்பற்றிருக்கும் அந்தக் கட்டிடம் தான் சுடுகாட்டுச் சுடலைமாடன் கோயில். கருப்பன் துறைச் சுடலைமாடன் என்றால் அந்தப் பக்கத்து ஜனங்களுக்கு பயமும் பக்தியும் அதிகம்... ... ... நல்ல கருங்கல்லில் வடித்து, மழமழப்பேற்றிய சுடலை மாடசாமி சிலையில் முகத்தில் குத்தம் தள்ளியது போலுள்ள உருண்டையாக முண்டக் கண்களும், கடைவாயினின்று கிளம்பி, தாடை வரையிலும் ஓடியுள்ள வீரப்பல்லும்; இளித்த வாயில் இடைவெளி தெரியும் பல் வரிசையும் குரூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும். சிலையின் ஒரு கரம் ஒடிந்து ஊனமாயிருந்தது...பிறை நிலாக் காலங்களில், இருளில் முகடற்ற மேல் புறத்தின் மூலம் மங்கிய சந்திர ஒளி சிலையின் மீது வழிந்தோடுவதைப் பார்த்து விட்டால், அங்கேயே பயமடித்து ரத்தம் கக்கிச் செத்துப் போவார்கள் என்றும் சொல்வதுண்டு, சிலை அத்தனை கோர ரூபத்துடன் இருக்கும். மேலும், அது பிணந்தின்னிச் சுடலை.” கட்டாரித் தேவனைப் பற்றி எழுதும் போது, நடை பின்வருமாறு அமைகிறது:{{nop}}<noinclude></noinclude> 0t1vki6dlzyi6a4iwxzqzcmb3u54y6u பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/177 250 130264 1839571 1839449 2025-07-06T13:45:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||175}}</noinclude>“கோடைக் காலம் மட்டுமல்லாது, மற்றக் காலங்களிலும் சுடலையை நேர்நின்று தரிசிக்கும் தெம்பும் திராணியும் பெற்றவன் ஒருவன்தான் உண்டு. அவன்தான் கட்டாரித் தேவன். கோழைப்பட்ட மனசுடையவர்களுக்குக் கட்டாரித் தேவனைக் காணவே தைரியம் வேண்டும். சுடலையே உயிர்பெற்று உலாவுவது போலிருக்கும் அவனுடைய தோற்றம். கருமெழுகிலே திரட்டிச் செய்த யவனப் பொம்மை போல், அடிக்கொரு அசைவும் திமிரும் காட்டி, வரிந்து கட்டிய நரம்பு முடிச்சுகளிடையே திருகி விறைப்பேறும் தசைக் கூட்டம் அவனுடைய மேனி வளத்தை எடுத்துக் காட்டும். கத்தியைக் கொண்டு குத்தினாலும் உள்ளே இறங்காது என்னும்படி இருக்கும் அவனது தேக வலிமை. அவன் வாயிலிருந்து எப்போதும் சாராய நாற்றம் அடித்துக் கொண்டிருக்கும். ரத்தத்திலே தோய்த்தது போன்ற சாயவேட்டியை தார் பாய்ச்சிக் கட்டியிருப்பான். நெற்றியில், வெட்டப்போகும் கிடாவுக்கு வைத்த அரக்கு சிலைப்போல், கோயில் குங்குமம் தீயாய்த் தெரியும்.” இவ்லாறு, எடுத்துக் கொள்ளும் பொருளுக்கு ஏற்றபடி நடையைக் கையாள்வது எழுத்தாற்றல் பெற்றவர்களின் இயல்பாகும். ‘எழிலுடன் நெளிந்தோடும் காவேரி நதிபாயும் தஞ்சை ஜில்லாவின் வாழ்க்கைக் காட்சிகளை தக்ரூபமாக’ சித்திரித்துக் காட்டுகிறார் என்று பெருமை பெற்ற படைப்பாளி தி. ஜானகிராமன். அவருடைய எழுத்துக்களில் ‘தஞ்சாவூர் மண்ணின் மணம்’ கலந்திருக்கிறது என்று சொல்லப்படுவது உண்டு. “அவருக்கு இயல்பாயுள்ளது அநாவாசமாய் துள்ளியோடும் பேச்சு நடை. தஞ்சை ஜில்லாவின் தனிப்பெருமை<noinclude></noinclude> sekr4ywjwatptgvhi267og6m6nomwby பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/178 250 130267 1839572 1839450 2025-07-06T13:46:53Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|176||பாரதிக்குப் பின்}}</noinclude>என்று கூறத் தகுந்த சில அருமையான சொற்சிதைவுகளும் சேர்ந்து தமிழ் பாஷையை உரிமையுடன் அவரிடம் வளரவைத்திருக்கின்றன” என்று கி. சந்திரசேகரன், தி. ஜானகிராமனின் எழுத்து பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பேச்சு நடையை நன்கு எடுத்தாள்வதற்கு ஏற்ற ஒரு உத்தியை ஜானகிராமன் தனது கதைகளில் பயன்படுத்தியிருக்கிறார். சம்பாஷணையிலேயே கதையை வளர்த்துச் செல்வது. இந்த உத்தியை இங்கிலீஷில் எர்னஸ்ட் ஹெமிங்வே திறமையாகப் பயன்படுத்தியிருக்கிறார். தமிழில், கு. ப. ராஜகோபாலன் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார். அவருக்குப் பிறகு தி. ஜானகிராமன் அதை உபயோகித்து அருமையான சாதனைகள் புரிந்திருக்கிறார். அவருடைய கலை உள்ளமும், ரசனை நோக்கும், விலகி நின்று பரிகாசமாய் விளக்குகிற போக்கும் இந்த உத்திக்கும் ஜானகிராமனின் நடைக்கும் விசேஷ நயங்கள் சேர்த்துள்ளன. ‘ரசிகரும் ரசிகையும்’ என்ற கதையிலிருந்து ஒரு உதாரணம்: ‘பிள்ளைவாள், இப்படி வாருமே, கீழ நின்னுண்டிருப்போம்.’ ‘இருக்கட்டுங்க, காத்து, சில்லாப்பா அடிக்குது. வண்டி கிளம்பு எத்தனை நிமிஷம் இருக்கு?’ ‘அது இருக்கு. பத்து நிமிஷம்.’ ‘குளுரு தாங்கலீங்களே, கீழ நிக்கிறீங்களே.’ ‘என்னையாது! மிருதங்கத்தைத் தட்டப் போறவர் இப்படிப் பயந்து செத்தீர்னா எனக்கு என்னமாய்யா இருக்கும் பாடறவனுக்கு?’{{nop}}<noinclude></noinclude> 21jq9mnx0nsokvcw315knbs7sh3koeh பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/179 250 130270 1839573 1839451 2025-07-06T13:48:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||177}}</noinclude>‘அதான் சொல்றேன், உள்ள வந்திருங்கன்னு தொண்டை கட்டிக்கிட்டா என்ன செய்யறது?’ ‘நன்னாப் பயப்பட்டீர்! வாரும்பா இப்படி.’ ‘எனக்கு இஞ்ச இருந்தே தெரியுதே.’ ‘என்ன தெரியுது?’ ‘உங்களை எல்லாச் சனங்களும், இந்தப் பார்றா மார்க்கண்டம், இந்தப் பார்றா மார்க்கண்டம்னு வேடிக்கை பாத்துக்கிட்டு நிக்கிறது.’ ‘அடயமணே! நான் அதுக்காக நிக்கலைய்யா காத்துக்காக நிக்கிறேன்.’ ‘நல்லா நில்லுங்க. தை மாசத்து ஊதல் தானே. உடம்புக்கு ரொம்ப நல்லது. ஒரே பக்கமாப் பாக்கிறீங்களே, இப்படியும் அப்படியும் திரும்புங்க. கொஞ்சம் அசைஞ்சு கொடுத்தாத்தானே கடுக்கன் டாலடிக்கிறது தெரியும்.’ ‘அப்புறம்?’ ‘உங்களுக்கு என்ன ஐயா? எல்லா வித்வான் மாதிரியா இருக்கீங்க? நல்ல முகவெட்டு, நல்ல ஒசரம், நடு வயசு, நல்ல படிச்சகளையும் இருக்கு’ இப்படி ரசமாகக் கதையை சொல்லிக் கொண்டு போவது ஜானகிராமன் நடைநயங்களில் ஒன்று. வர்ணனை நடையும் அவரிடம் தனி நயம் கொண்டதுதான். ‘சண்பகப் பூ’ கதையின் நாயகி பற்றிய வர்ணிப்பு இதோ— “இந்த இனிமைப் புதையலை எடுத்த தாயும் தந்தையும் விண்ணவள் மேனகையும் மன்னவன் விசுவாமித்திரனுமா? அதெல்லாம் ஒன்றும் இல்லை. கோசலையம்மாள் எல்லாக் குடும்பத்திலும் காண்கிற நடுத்தர ஸ்திரீ தான். பங்கரையா<noinclude></noinclude> 6xnybazuxf50l2iq41ysvov8jv9alka பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/180 250 130272 1839574 1839452 2025-07-06T13:51:10Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|178||பாரதிக்குப் பின்}}</noinclude>இருக்கமாட்டாள்; சப்பை மூக்கில்லை; சோழி முழியில்லை. நவக்கிரகப் பல்லில்லை; புஸு புஸு வென்று ஜாடி இடுப்பில்லை; தட்டு மூஞ்சி இல்லை; எண்ணெய் வழியும் மூஞ்சியில்லை; அவ்வளவுதான். அவலட்சணம் கிடையாது. அழகு என்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. மாநிறம். அவள் புருஷன் ராமையா இருந்தாரே அவரும் அப்படித்தான். குட்டையில்லை; கரளையில்லை; இரட்டை மண்டையோ, பேரிக்காய் மண்டையோ இல்லை; கோட்டுக் கண்ணோ ரத்த முழியோ இல்லை. இவ்வளவெல்லாம் எதற்கு? ஓகோ என்று மாய்ந்து போகும்படியான அழகன் இல்லை. சற்று நின்று பார்க்கத் தேவையில்லாத எத்தனையோ ஆண்களில் ஒருவர். அவர்களுக்குத் தான் இந்தப் பெண் பிறந்திருந்தது— தேங்காய்க்கும் பூவன் பழத்திற்கும் நடுவில் நிற்கிற குத்துவிளக்கைப் போல படைப்பின் எட்டாத மர்மத்தைக் கண்டு வியந்து கொள்ளும் கிழம். காவியத்தில் அழகுக்குப் பஞ்சம் இல்லை. ரம்பையும் அபரஞ்சியும் மலிந்து கிடக்கிற அந்தக் கும்பலில் சாமானியர்களே தென்படுவதில்லை. சாமுத்ரிகைச் சின்னங்களை அறுபத்து நாலாகக் கூட விரிக்க முற்பட்டு விட்டார்கள் போல் இருக்கிறது, காவ்ய நாயகிகள். ஆனால் மன்னார்குடி ஒற்றைத் தெருவில், ஒரு தாழ்ந்த வீட்டில், சாமான்யக் கோசலைக்கும் சாமான்ய ராமையாவுக்கும் ஒரு புதையல்!— கிழவர் ஆச்சரியப்பட்டதில் வியப்பில்லை. தெம்புள்ள வீடுகளில் ஊட்டம் உண்டு. நடுத்தரங்கூட ஊட்டத்தில் பொலிவும் மெருகும் பெற்று எடுப்பாக நிற்கிறது. இங்கே அதுவும் இல்லை. ராமையா பள்ளிக்கூட வாத்தியார். அரைப்பட்டினி ஆரம்ப வாத்தியாராயில்லாமல், எல். டி. வாத்தியாராயிருந்தாலும் பத்தாம்<noinclude></noinclude> jyjhvt6i7r205qdslmj9r8lvan757ps பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/181 250 130275 1839575 1839453 2025-07-06T13:53:47Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||179}}</noinclude>தேதிக்குப் பிறகு கடன் இல்லாமல் வாழ்ந்ததில்லை. செத்தும் போய்விட்டார். வைத்து விட்டுப் போனது குழம்பு ரசத்திற்குக் காணும். இருந்தும், பெண் ஜட்சு வீட்டுப் பெண்மாதிரி இருக்கிறதே!’ என்று கிழவரின் மனைவி திகைப்பாள். மலர்ந்து இரண்டு நாளான கொன்னைப் பூவைப் போல வெண்மையும் மஞ்சளும் ஒன்றித் தகதகத்ததையும் நீரில் மிதந்த கருவிழியையும் வயசான துணிச்சலுடன், கண்ணாரப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தார். அதுஎன்ன பெண்ணா; முகம் நிறையக் கண்; கண் நிறைய விழி; விழி நிறைய மர்மங்கள்; உடல் நிறைய இளமை, இளமை நிறையக் கூச்சம்; கூச்சம் நிறைய நெளிவு; நெளிவு நிறைய இளமுறுவல், இது பெண்ணா? மனிதனாகப் பிறந்த ஒருவன் தன்னது என்று அனுபவிக்கப் போகிற பொருளா?” “கிழவருக்கு இந்த எண்ணந்தான் சசிக்க முடியவில்லை.” சாதாரணச் சொற்களுக்கு இனிமையும் எழிலும் புதுமையும், உயிரும் உணர்ச்சியும் ஊட்டக் கூடிய ஆற்றல் சில கலை உள்ளங்களுக்கு இருக்கிறது. தி. ஜானகிராமன் அப்பேர்ப்பட்ட கலைஞர்களில் ஒருவர்.{{nop}}<noinclude></noinclude> 9qwpzm17ej5q2qmohem8neqm33j73i4 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/182 250 130278 1839577 1839454 2025-07-06T13:56:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>21. ஜெயகாந்தன்</b>}}}} {{larger|<b>1960</b>}}களிலிருந்து தமிழ் எழுத்துலகத்தில் ஜெயகாந்தன் ஒரு வலிய சத்தியாக விளங்குகிறார். இளம் எழுத்தாளர்களிடையே அவருடைய பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. அவரைப் பின்பற்றி—ஜெயகாந்தன் மாதிரியே—எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு முயன்றவர்கள் அநேகர் ஆனால் வெற்றிபெற்றவர் எவரும் இலர். ஜெயகாந்தன் பிறரால் பின்பற்ற முடியாத தனி சக்தி ஆவார். அவருக்குக் கிட்டிய அனுபவங்களும், வாழ்க்கையை அவர் தரிசித்த நோக்கும், அவற்றை அடிப்படையாக்கி அவர் வளர்த்த—வளர்க்கிற—சித்தனைகளும், இவற்றை எடுத்துச் சொல்கிற தெளிவும் துணிச்சலும் விசேஷமானவை. தான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை, சிந்தித்ததை அழுத்தமாக எடுத்துச் சொல்கிறார் ஜெயகாந்தன். ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்’ வாக்கினிலே ஒளி உண்டாம் என்ற உண்மைக்கு அவருடைய எழுத்துக்கள் நல்ல சான்றுகள் ஆகின்றன. எண்ணங்களை எடுத்துச் சொல்கிற சாதனமாகவே ஜெயகாந்தனின் உரைநடை அமைகிறது. முதலில் அவர் எளிமையாக, சிறு சிறு வாக்கியங்களாகத்தான் ஆரம்பிக்கிறார்.{{nop}}<noinclude></noinclude> 2hbaud1cyilc8uuw9hoh62q8syv8zrx பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/183 250 130280 1839578 1839460 2025-07-06T13:58:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||181}}</noinclude>“சொர்க்கம்—ஒன்று உண்டு. அது என்னுள் இல்லை; வெளியில் இருக்கிறது. வெளியெல்லாம் நரகம் என்றால் என்னுள் மட்டும் சொர்க்கம் எப்படி இருக்க முடியும்? அந்தச் சொர்க்கம் முதலில் வெளியில் பிறக்கட்டும். அதன் பிறகு அது என்னுள் வரட்டும்; வரும். நான் வெளியில் திரிகிறேன். வெளியிலேயே வாழ்கிறேன். உலகை, வாழ்வை, மனிதர்களைக் கூர்ந்து நோக்குவதில் மகிழ்கிறேன், கண்டதை, சொன்னதை, கேட்டதை எழுதுகிறேன். எதையும் நான் கற்பனை செய்ததில்லை. உலகில் யாரும் எதையும் கற்பனை செய்ததில்லை. ஒரு தலை இருக்கக் கண்டு தான் மனிதன் பத்துத் தலையைக் ‘கற்பனை’ செய்தான். தலையையே மனிதன் கற்பனை செய்து விடவில்லை. எல்லோருக்கும் தனித் தனியாகத் தெரிந்த உண்மைகளே ஏனோ எல்லோருமே நேர்நின்று பார்க்கக் கூசுகிறோம். இந்தக் கூச்சம் கூடப் போலிக் கூச்சம்தான். நான் கண்டதை—அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப்பட்டதை நான் கேட்டதை—அதாவது வாழ்க்கை எனக்குக் சொன்னதை நான் உலகத்துக்குத் திரும்பவும் காட்டுகிறேன்; அதையே உங்களிடம் திரும்பவும் சொல்கிறேன். அது அசிங்கமாக, அது அற்பமாக, அது கேவலமாக—அல்லது அதுவே உயர்வாக, உன்னதமாக எப்படி இருந்த போதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்? அப்படிக் காட்டும் கருவியாய், கண்ணாடியாய், ஓவியமாய், கேலிச் சித்திரமாய், சோக இசையாய், என் எழுத்து இருந்தது என்பதைத் தவிர, மற்றதெல்லாம் உங்களுடையதுதானே—அதாவது நம்முடையது தானே!’ {{rh|||(‘இனிப்பும் கரிப்பும்’ முன்னுரையில்)}}{{nop}}<noinclude></noinclude> 94ha4g3qarhd0xtragu7wnz5czh0m39 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/184 250 130283 1839579 1839459 2025-07-06T14:00:17Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|182||பாரதிக்குப் பின்}}</noinclude>சிறு சிறு வாக்கியங்களில் வளர்கிற ஜெயகாந்தனின் உரை நடை, எண்ண ஓட்டம் வலுப்பெறுகிற போது, பல பிரிவுகளையும் விளக்கங்களையும் தன்னிடம் கொண்ட நீள வாக்கியங்களாக (‘காம்பவுண்ட் ஸென்டன்ஸ்’, ‘காம்ப்ளெக்ஸ் ஸென்டன்ஸ்’களாக) இயல்பாக மாறிவிடுகின்றன. இதை அவருடைய கட்டுரைகளிலும் கதைகளிலும் நன்கு காண முடியும். “கதைகளில் சொல்ல முடியாத—சொன்னால் கதைத் தன்மை குலைந்து போகக் கூடிய, ஆனால் நான் கதை எழுதும் நோக்கம் வலுப்பெறச் சொல்லியே தீரவேண்டிய—கதை பற்றிய கருத்துக்களைப் பேசுவதற்கு நூலின் முன்னுரை ஒரு செளகரியமான தளம் என்பதால் இந்தச் சில பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்வது சமுதாயக் கண்ணோட்டத்துடன் இலக்கியப் பணிபுரியும் என் போன்றவர்க்கு இன்றியமையாததுமாகும்” (‘பிரம்மோபதேசம்’ முன்னுரையில்) “எவனொருவன் தன்னலம் மறுத்து, மனித குலத்தின் ஒரு பிரிவின் மீதோ பல பிரிவுகளின் மீதோ துவேஷம் வளர்க்காமல் பொதுவான மனித குலத்தின் வளர்ச்சிக்கும், உன்னத வாழ்க்கைக்கும் பாடுபடுவதற்குத் தானோர் உதாரண புருஷன் என்ற லட்சிய வேட்கையோடு செயலாற்றுகிறானோ, தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொள்கிறானோ அவன் அந்த அளவில் மனித இதயங் கொண்டோரின் மரியாதைக்குரிய முற்போக்குவாதிதான்.” {{rh|||(‘யாருக்காக அழுதான்?’ முன்னுரையில்)}} இத் தன்மைகளை (எளிமையும், போகப் போகப் பின்னல்களும், வளர்த்தல்களும் பெறுவதை) பிரதிபலிக்கும் நடைக்கு ஜெயகாந்தன் கதையிலிருந்து ஒரு உதாரணம்—{{nop}}<noinclude></noinclude> o8mxduq13vec8bszmy9aj59p5y69lxu பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/185 250 130286 1839580 1839461 2025-07-06T14:01:49Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||183}}</noinclude>“எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத் தானிருக்க வேண்டும். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அங்கே, அந்தத் தெருவில் ஓர் பழங்காலத்து வீட்டின் கர்ப்பக்கிருகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து இப்போது பிரிந்து, இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்து நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவையாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே? நான் பார்த்த ஊரும்—‘இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது’ என்ற உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப் போன அந்த அக்ரஹாரத்து வீடுகளும், ‘இவர்கள் என்றைக்குமே புதுமையுற மாட்டார்கள்’ என்கிற மாதிரி தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதிலே ஒரு அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது.” {{rh|||(அக்ரஹாரத்துப் பூனை)}} பட்டணத்துக் குப்பங்களில் வசிக்கிற சாதாரண மக்களின் பேச்சுநடையையும், பிராமணர்களின் பேச்சுநடையையும் ஜெயகாந்தன் தனது கதைகளில் ஆற்றலுடன்<noinclude></noinclude> r8ili367gfpnlak5n28gguabvbiglsa பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/186 250 130289 1839581 1839462 2025-07-06T14:03:24Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|184||பாரதிக்குப் பின்}}</noinclude>கையாண்டிருக்கிறார். அழகுக்காக, சோதனைக்காக திறமையைக் காட்டுவதற்காக என்றெல்லாம் அவர் நடைநயம் பயிலனில்லை. “சிக்கலான புதிர்களையோ, ஜாலங்கள் எனும் கழைக் கூத்தாடித்தனத்தையோ, க்ஷணநேரத் துடிப்பு என்ற திருப்பங்களையோ, தித்திப்பை நாக்கில் தடவும் வர்ணனைகளையோ, உடைகளைகிற நிலை வரை உடன் சென்று குறிப்பெழுதும் ‘மார்க்கெட்’ விவகாரங்களையோ எனது வாசகர் என்னிடம் எதிர்பார்க்க மாட்டாரென்று நம்புகிறேன். எனது கதைகளில் பல நயங்களை உணர்ச்சிகளை, அர்த்தங்களை நான் அமைதியாக அதே சமயத்தில் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறேன்” (‘புதிய வார்ப்புகள்’ முன்னுரையில்) என்று அவர் குறிப்பிட்டிருப்பது நினைவுகூரத் தகுந்தது. தனது கதைகள் பற்றி ஜெயகாந்தன் கூறியுள்ள இன்னொரு கருத்தையும் குறிப்பிட வேண்டும்: “பொதுவாக வாழ்க்கையே சிக்கல் மிகுந்தது என்பது ஒரு புரியாத சூத்திரம் அல்ல. சிக்கல் மிகுவதனாலேயே வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமும் அதன் மீதொரு பற்றும் நமக்கு அதிகரிக்கிற தென்பது சற்றுக் சிந்தித்தால் புரிகிற விஷயம். எவ்வளவுதான் சிக்கல் மிகுந்திருந்த போதிலும். வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்னையிலும் முரண்பாடுகளே மலிந்திருப்பினும், மனித வாழ்க்கையின் பொதுவான கதி உன்னதமாய்த்தான் இருக்கிறது என்பது வாழ்க்கையை ஒரு வெறியோடு வாழ்ந்து அனுபவித்தவர்கள் மட்டுமே உணரத்தக்க ஒரு ஞானம். தீயவன் என்று அனைவராலும் தீர்ப்பளிக்கப்பட்டவன் கூடத் தீமையை வெறுப்பதில் அதை நிதர்சனமாய்க்<noinclude></noinclude> 5frdoxistmyq9ywlciwtfd98eka1hfv பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/187 250 130291 1839582 1839463 2025-07-06T14:06:40Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||185}}</noinclude>காணலாம். அறிவு பூர்வமாக மட்டுமல்ல; உணர்வு பூர்வமாகக் கூட மனிதன் நல்லதையே நாடுகிறான். இதைச் சாதாரண சமூகவாழ்க்கையில் சகல கோணங்களிலும் நான் தரிசிக்கிறேன். நான் எப்படித் தரிசிக்கிறேனோ அதை அப்படியே எனது நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்பும் முயற்சியே எனது கதைகள். இந்த எனது நோக்கத்தை ஓர் அர்த்தம் என்று கொண்டால் எனது கதைகளை எல்லாம் அந்த அர்த்தத்தின் பல உருவங்கள் என்று கொள்ளலாம்.” ஜெயகாந்தன் தனது கதைகளுக்குப் பொருளாக எடுத்துக் கொள்கிற வாழ்க்கைப் பிரச்னைகளும் அவற்றைத் தனது அனுபவ தரிசனம் மூலம் எடுத்துச் சொல்கிறவிதமும் அவருடைய சிந்தனை அவற்றுக்கு ஏற்றுகிற மெருகும், அவருடைய அழுத்தமான நம்பிக்கைகளும் துணிச்சலான வெளியீடுகளும் அவற்றுக்குத் தருகிற கனமும் அவரது உரைநடைக்கு உயிரும் உணர்வும் தனித் தன்மையும் சேர்க்கின்றன. பிரச்னைகள் சம்பந்தமான ஜெயகாந்தன் சிந்தனை ஒன்றை இங்கே எடுத்தெழுதுவது பொருத்தமாக இருக்கும்— “இவை கதைகள்! அதாவது மனிதன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள். அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவன கதைகள் என்று யாராவது கூறினால் அவரைப் பார்த்து நான் அனுதாபமுறுகிறேன். பிரச்னைகளுக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையென்று யாராவது கூறினால் அவர்களை நோக்கி நான் சிரிக்கிறேன். ஆனால் உங்களுக்கு மட்டும் ஒன்று சொல்லி வைக்கிறேன். வாழ்க்கை (life) என்பது வாழ்வின் (existence) பிரச்னை; வளர்ச்சி என்பது வாழ்க்கையின் பிரச்னை; கலையும் இலக்கியமும் வளர்ச்சியின் பிரச்னைகள். எனது கதைகள் பொதுவாக, பிரச்னைகளின் பிரச்னை!{{nop}}<noinclude>{{rh|பா—12||}}</noinclude> fndqc42xsi2333ftq8ntr72n8fz022e பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/188 250 130294 1839583 1839464 2025-07-06T14:07:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|186||}}</noinclude>பிரச்னைகள் தீர்வது இல்லை; பிரச்னைகளை யாருமே தீர்த்து வைத்ததுமில்லை. எல்லாவற்றையும் தீர்த்துக் கட்டிவிடவா வாழ்கிறோம்? மேலும் மேலும் பிரச்னைகளை உற்பத்தி செய்து கொள்ளுவதே வாழ்க்கை. புதிய புதிய பிரச்னைகளை வளர்த்துக் கொண்டால் போதும். அளவிலும் தரத்திலும் மிகுந்த பிரச்னைகள்; மிகுதியான பிரச்னைகள் மனிதகுலம் வேண்டுவது இவ்வளவே! தீர்வா? யாருக்கு வேண்டும்?”{{nop}}<noinclude></noinclude> 2q6l2vzlxakiy4c2yc87eorsa4w4sd2 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/189 250 130296 1839584 1839470 2025-07-06T14:10:15Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>22. நீல. பத்மநாபன்</b>}}}} {{larger|<b>த</b>}}மிழ் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் வசிக்கிற எழுத்தாளர்கள், அவரவர் வட்டாரத்துக்கே உரிய பேச்சு மொழியையும் வழக்குச் சொற்களையும் தங்கள் எழுத்துக்களில் தாராளமாகக் கலந்து எழுதும் வழக்கத்தை கைக்கொண்டதும், தமிழ் உரைநடை பல்வேறு சாயல்களையும், பலவிதமான விசேஷத் தன்மைகளையும் ஏற்றது. தமிழ் நாட்டுக்கு வெளியே வாழ்கிற தமிழ் இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கையில் தமிழ் உரைநடை மேலும் புதிய சாயைகளைப் பெற்றிருக்கிறது என்று கூறலாம். ஈழநாட்டின் தமிழும், நாஞ்சில் நாட்டுப் பேச்சு வழக்குகளும், கேரளத் தமிழும் தமிழ் உரைநடைக்கு வளமும் புதுமையும், ஒரு தனித்தன்மையும் சேர்த்துள்ளன. இவ்விதம் தனித்தன்மை பெற்ற உரைநடையைக் கையாள்கிறவர்களில், திருவனந்தபுரம் எழுத்தாளர் நீல. பத்மநாபனை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். நீல. பத்மநாபனின் உரைநடை பற்றி எண்ணுகையில், எழுத்தாளர் அசோகமித்திரன் கல்கத்தா தமிழ் மன்றம் வெளியிட்ட மலர் ஒன்றில் தமிழ் உரைநடை குறித்து எழுதியபோது கூறியுள்ள கருத்துங்கள் என் நினைவுக்கு வருகின்றன. தமிழ் உரைநடையில் உணர்வு பூர்வமாகப் புதுமை செய்திருப்பவர் நீல. பத்மநாபன் தான் என்றும்<noinclude></noinclude> g1w7vk5w530cztxvyytgrrcfji3dolf பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/190 250 130299 1839585 1839474 2025-07-06T14:15:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|188||பாரதிக்குப் பின்}}</noinclude>தமிழ் உரைநடையின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆக்கபூர்வமாகச் செய்யப் பெற்றுள்ள முதல் முயற்சியே அவருடையது தான் என்று அசோகமித்திரன் கூறுகிறார். வசனநடைச் சிறப்புக்கு உதாரணங்களாகப் பேசப்படுகிற புதுமைப்பித்தன். லா. ச. ராமாமிர்தம் போன்றவர்கள் கூட மரபு ரீதியான, முறையான தமிழ் உரைநடையைத் தான் வளர்த்திருக்கிறார்கள். மாறுபட்ட, புது முயற்சியாக அவர்கள் உரைநடையை ஆண்டு சோதனைகள் பண்ணவில்லை. ஆனால், நீல. பத்மநாபன் ஏழூர் செட்டிமார்கள் என்ற ஒரு தனிப்பட்ட சமூகத்தில் வழங்கப்படுகிற பேச்சு வழக்குகள், பழமொழிகள் முதலியவற்றை, அவர்கள் வசிக்கிற வட்டாரத்தில் இயல்பாகப் பேச்சில் கலந்துவிட்ட மலையாளச் சொற்களோடும் சேர்த்து தனித்த நடை ஒன்றை வெற்றிகரமாக வளர்த்திருக்கிறார் என்பதே அசோகமித்திரனின் கூற்றுக்கு ஆதாரம் ஆகும். நீல. பத்மநாபனின் விசேஷமான உரைநடைக்கு ‘தலைமுறைகள்’ நாவலிலிருந்து சில உதாரணங்கள் தருகிறேன்— “ராத்திரி சமயத்தில், சக்கடா வண்டியில் போவதும் ஒரு சுகம்தான். ரண்டு வண்டி நிறைய ஆளுகள், லொட லொடண்ணு போய்க் கொண்டிருக்கையில் அங்கடி இங்கடி வண்டி ஆட உள்ளே இருக்கப்பட்டவங்களின் தலைகள் மடார் மடார் என்று மோதிக் கொள்ளும், அதனால் திரவி கோச்சுப் பெட்டியில் எப்பவும் இடம் பிடிச்சுக் கொள்வான்... உட்கார்ந்திருந்து கால் மரத்துப் போய் விட்டதால் திரவியும் கீழே இறங்கி வண்டிங்க பின்னாலேயே அப்பாவின் கூட கொஞ்சதூரம் நடந்தான். நிலா வெளிச்சத்தில் வெள்ளி வாளாக பளிச்சிட்ட பனையோலைகளில் காற்று விறுவிறு என்று சுழன்று சலசலக்க வைத்தது. பாதை-<noinclude></noinclude> liksya8guibu0h5t4ub9c85055ibdui பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/191 250 130302 1839806 816707 2025-07-07T06:05:37Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||189}}</noinclude>யோரத்தில் இருந்த பனைமரங்களில் இருந்து பனங்காய்கள் பழுத்து டொப்டொப்புண்ணு கீழே விழுந்தன. திரவி அதை எடுக்க ஓடினபோது பொணமு ஆச்சி சத்தம் போட்டாள்: லே, சும்மா எடுத் திராதலெ கொல்லா! காறித் துப்பிட்டு எடு. பனை முட்டில் ராத்திரி காலத்தில் பூதத்தான் நிப்பான். அவ்வாறு காறித் துப்பிவிட்டு பனங்காய்களை எடுத்துக்கிட்டு ஓடிவந்தான் திரவி. சும்மாவா? பனங்காய்க்கு இருக்கும் ஒரு பிரத்தேக மணத்தையும் ருசியையும் அதைத் திண்ணுப் பாத்திருக்கும் அவனுக்குத் தானே தெரியும்!” “தெரு நடையை பெருக்குவதற்கிடையில் ‘யோக்கியரு வாறாரு, செம்பெடுத்து உள்ளே வை’யிண்ணு பொணமு ஆச்சி மரியாதை ராமியாக ‘சவச்களிஞ்ச பேச்சு’ பேசத் தொடங்கி விட்டதைக் கேட்டு, ஆச்சி திரவியத்தைப் பார்த்து ஒரு கள்ளச் சிரிப்பு சிரித்தாள்.” “மனசு மொலு மொலூண்ணு தவிச்சுக்கிட்டே இருந்தது. வீட்டிலே இருக்கும்போது ஆனாலும் சரி, பள்ளிக்கூடத்துலே இருக்கப்பட்ட சமயம் ஆனாலும் சரி, மனசுலே என்னமோ பாரம் எடுத்து வச்சாப்பலே ஒரு வேவலாதி! புஸ்தகத்தை எடுத்துப் படிக்கக் கூட வீட்டிலே தன்னை அஞ்சாறு நாளா ஆரும் நிர்ப்பந்திப்பது கிடையாது. கூட்டாளிகளுக் கெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சு எல்லாவனும் ஒரு மாதிரியா பாக்க அரம்பிச்சப்பம் கொறச்சலாட்டு இருந்தது. தெருவிலும் ரோட்டிலும் நடக்கப்பட்ட சமயம் ஆளுகளின் உபத்திரவம் கேக்காண்டாம்!”{{nop}}<noinclude></noinclude> tg7fw522sn3sxd0swpngh11lgs9ba6d பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/192 250 130305 1839811 816708 2025-07-07T06:15:50Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|190||பாரதிக்குப் பின்}}</noinclude>இப்படி எவ்வளவோ எடுத்துக் காட்டலாம். கேரளத் தமிழரின் பேச்சில் சகஜமாகக் கலந்து ஒலிக்கிற மலையாளச் சொற்களும் நீல. பத்மநாபன் உரைநடையில் விரவித் கிடக்கின்றன. ‘ஏளு ஊரிலே மட்டும்தான் தாமசிச்சா’ ‘நீ சொல்லுது ஒண்ணும் மனசிலாகல்லே’ ‘நூலும் எல்லாப் பவளத்திலையும் கணக்காட்டு கொருக்கப்பட்டிருந்தது.’ ‘தயாராட்டு மேலே நிண்ண தனக்க ஆளுகளிடம் சொல்லிவிட்டு அவரும் சாடிட்டாராம்.’ ‘பெரிய பெரிய பூங்கொத்துக அலங்கார மாட்டு இருந்தன.’ ‘அப்பாக்கும் சிரி பொத்துக்கொண்டு வந்தது.’ இவ்வாறான பிரயோகங்களை பத்மநாபன் எழுத்தில் நெடுகிலும் காணலாம். நீல. பத்மநாபன், தான் கையாள்கிற நடை குறித்து எழுதியிருக்கும் ஒரு விளக்கம் வாசகர்கள் கருத்தில் கொள்ளத்தக்கதாகும். “சுதை நடக்கும் சமூகத்தின் இயற்கையான—தன்னிச்சையான ஒரு யதார்த்த நடைதான் இந்நாவலுக்கு நிதானம், கதை நிகழும் சமூகத்தின் நடைமுறையிலிருக்கும் வாக்கிய அமைப்புகளையும், வார்த்தை விசேஷங்களையும் தொனிமுறைகளையும், பழமொழிகளையும் எல்லாம் தேனீயைப் போல் கவனமாய் சேகரித்துக் கலாபூர்வமாக உலவ விடுவதை விட வாழும் சமூகத்தை அறியாமல் கூட பார்த்து விடாமலிருக்க, வாசல்களையும் சானரங்களையும்<noinclude></noinclude> t2avv2v4gs7b1a1utm4eqrp46m59jua பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/193 250 130306 1839818 816709 2025-07-07T06:27:06Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||191}}</noinclude>எல்லாம் செப்புப்போல் அடைத்து பந்தோபஸ்து செய்து கொண்டு லட்டாந்தரை நாற்சுவர்கள், மேற்கூரை—இப்படியொரு காற்று பதமாக்கப்பட்ட பெட்டகத்திற்குள் வசதியாக உட்கார்ந்து கொண்டு முழுக்க முழுக்கத் தூய்மை சொட்டச் சொட்டும் கனகம்பீரமான ஒரு படாடோப நடையில் ஒரு காப்பியம் நெய்தெடுத்து விடுவது என்பது எப்படிப் பார்த்தாலும் அப்படியொன்றும் சிரமமான காரியமில்லை என்பதுதான் இவ்விஷயத்தில் என்னுடைய அபிப்பிராயம்? நான் கையாள எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மனித சமூகத்தின் பேச்சிலும் சிந்தனைகளிலும் இருக்கும் தனித் தன்மையைச் சௌகரியமாக உதாசீனம் பண்ணிவிட்டு—பலிகொடுத்து விட்டு, நான் ஒரு மனிதாபிமானி, மொழி அபிமானி என்றெல்லாம் வீம்பாய் சுயப்பிரதாபம் அடித்துக் கொண்டால் அது வெறும் கேலிக் கூத்தாகிவிடாதா? இந்நாவலில் வரும் மக்கள் சமூகத்தினர்களிடம் இருக்கும் பிராந்தியவாடையிலிருந்து இவர்கள் மலையாளிகள் என்று பேதம் காட்டி தீண்டாமை கற்பித்துப் பிரித்து வைத்து விடுபவர்களுக்கு, தனித்தன்மை கொண்ட வெவ்வேறு வார்த்தை அமைப்புகளும், உச்சரிப்பு முறைகளும் கொண்ட செட்டிநாடு, நெல்லை, தஞ்சை, கொங்குநாடு, இலங்கை, மலேசியா இங்கெல்லாம் வாழும் தமிழர்களைப் போலத்தான், குமரி மாவட்டத்திலும் கேரள மாகாணத்தில் பல இடங்களிலும் வாழும் இவர்களும் அசல் தமிழர்கள் தான் என்று அறிவிக்கக் கூடத்தான் இந்த நடை. இவர்களின் தமிழில் மலையாளத்தின் பாதிப்பு அறவே இல்லை என்று நான் வாதிட வரவில்லை. ஆனால் முதலில் மலையாளமோ என்று தோன்றினாலும் உண்மையில் எலையாளத்திலோ, தூய தமிழிலோ இன்று பழக்கத்தில்<noinclude></noinclude> citse3iy8fxgnfi3cj8yd6e46xm4zfj பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/194 250 130309 1839823 816710 2025-07-07T06:40:33Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|192||பாரதிக்குப் பின்}}</noinclude>இல்லாத எத்தனை எத்தனையோ வழக்கொழிந்த சொற்கள் இவர்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் அனாயாசமாகக் கையாளப்படுகின்றன. வார்த்தைகள் புதிதாய்ச் செய்தெடுக்க முயற்சிகள் நடக்கும் இக்காலத்தில், நம் பழந்தமிழ் மக்கள் சமூகத்தில் கொஞ்சம் பேர்களுக்கிடையிலாவது வாழையடி வாழையாய் இப்போதும் வழக்கில் இருந்துவரும் சில சொற்களை சுவீகரித்துக் கொள்வதால் நம் மொழியின் தூய்மையோ, புனிதமோ ஒன்றும் கற்பழிந்து போய்விடாது என்பதுதான் என் தாத்புரியம்.” இம் மேற்கோள் நீல, பத்மநாபனின் கருத்துக்களை தெளிவுபடுத்த உதவுவதோடு அவருடைய உரைநடையின் மற்றொரு வகையை—கட்டுரைகளில் அவர் கையாள்கிற நடையின் தன்மையை—காட்டுகிற சான்று ஆகவும் அமைகிறது. நீல. பத்மநாபனின் உரைநடையில் மலையாளக் சொற்களோடு சமஸ்கிருத பதங்களும் தாராளமாய் கலந்து வருகின்றன. “சிங்க வினாயக தேவஸ்தானத்து பிள்ளையார் கோயில் நிர்மால்ய பூஜையின் தீபாராதனையில் எழும்பிய மணியோசைச் சிதறல்கள் மார்கழி மாத வைகறைக் குளிரின் ஊடே கன்னங்கரு இருளில் பிரவகித்துக் கிழக்கு நோக்கி நின்ற கோவிலை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, கிழக்கு மேற்கில் கிடந்த நெடுந்தெரு முனையில் சென்று சேருகையில், ஆன்மீகத்தின் அடக்கத் தொனி மட்டுமே மிஞ்சியிருந்தது.” ‘நாதஸ்வரமும் கொட்டு மேளமும் கர்ணத்தமாக லேசாக கேட்டுக்கொண்டிருந்தது.’{{nop}}<noinclude></noinclude> k7dd92y9w62mpu4h99yvr88qdwm5als பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/195 250 130312 1839830 816711 2025-07-07T06:53:12Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||193}}</noinclude>‘கண்முன்னால் பிரத்யட்சப்பட்டு விடும்’ ‘ஆச்சி வியாக்கியானித்தாள்.’ ‘அனைத்தையும் வேதாந்தீகரித்துக்காட்ட’ ‘தன்னுடைய வாழ்வில் ஒரு துர்பல நிமிஷத்தில் ஒரு சபல எண்ணம் சாட்சாத்கரிக்கப்படுவதை வெளிச்சத்தில் தரிசிக்க அவன் கண்கள் கூசத்தான் செய்தன.’ ‘மினுக் மினுக்கென்று தூங்கி வழிந்து கொண்டிருந்த சிம்ணி விளக்கும் அரூபியாகி விட்டதால் குடிசையும் அப்பிரத்யக்ஷமாகி இருந்தது.’ உதாரணங்கள் போதும், இவற்றை கவனித்தாலே, இவர் தேவையில்லாமல் சமஸ்கிருத பதங்களை அளவுக்கு அதிகமாகக் கையாள்கிறார் என்பது புரிந்து விடும். வாசகர்களில் பலர் இதைப் பெரும் குறையாகக் கருதுகிறார்கள். இதையும் ஒரு தனிச் சிறப்பாக நீல. பத்மநாபன் மதிக்கிறாரோ என்னவோ! சில இடங்களில் இவர் தமிழில் வழக்கமாக எழுதப்படாத விதத்தில் சொற்களைக் கையாள்கிறார். ‘பிரத்யேகமாக’ என்பதை ‘பிரத்தேகமாக’ என்றே எழுதுகிறார். ‘அவனிடம் அறிவித்தான்’ என்ற அர்த்தத்தில் ‘அவனை அறிவித்தான்’ என்று தான் எழுதுகிறார். ‘அவன் ஒளியை பயந்தான்’ என்று குறிப்பிடுகிறார். ஆங்கில வார்த்தை அமைப்புகளின் நேரடி மொழிபெயர்ப்பு போல் தொனிக்கும் இத்தகைய பிரயோகங்கள் கேரளத் தமிழில் வழக்கில் இருக்கின்றனவோ என்னவோ—எனக்குத் தெரியாது. கேரளத் தமிழின் சில வழக்குச் சொற்கள் தமிழக வாசகர்களுக்குப் புரியாது போகலாம் என்ற நினைப்பில்<noinclude></noinclude> rzc5dk9f4usjasa3oc6liuiljykwm5k பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/196 250 130315 1839834 816712 2025-07-07T07:01:33Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|194||}}</noinclude>இவர் பல இடங்களில் உரிய பொருளை அடைப்புக்குறிகளினுள் தந்திருப்பதையும் குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக— ‘குற்றித் தொறப்பையால் (சின்னத் துடைப்பத்தால்) சுத்தமாய் பெருக்குவாள்.’ ‘ஊசி அடிக்கவும் (கேலி பண்ணவும்) துணிந்தான்.’ ‘சாலம் அதன் கூட்டுக்காரிகளையும் (தோழிகளையும்) கூட்டிகிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போனாள்.’ ‘கிட்டே யிருந்த பச்சக்காரங்கள் (கூட்டாளிகள்) யாருகிட்டையும் பேசவே தோணல்லை.’ மொத்தத்தில் பார்க்கிற போது, ஒரு கதம்பத்தின் வசீகரத்தைப் பெற்றுள்ள தனி ரகமான நடையை நீல. பத்மநாபன் கையாள்கிறார் என்று கூறத் தோன்றுகிறது.{{nop}}<noinclude></noinclude> 3ak1mzcu517j0laquqx5r2le5gkcxy6 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/197 250 130317 1839850 816713 2025-07-07T07:16:15Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>23. ஆ. மாதவன்</b>}}}} {{larger|<b>கே</b>}}ரளத் தமிழ் தனிரகமான வசீகரம் உடையது என்பதை ஆ. மாதவன் எழுத்துக்களின் வாயிலாக நன்கு உணரமுடியும். நீல. பத்மநாபன் ஏழூர் செட்டிமார் சமூகத்தில் வழங்கி வரும் பேச்சுவழக்குகள், பழமொழிகள், மலையாளச் சொற்கள் எல்லாம் கலந்த ஒரு உரைநடையை உருவாக்கியிருக்கிறார். ஆ. மாதவன் திருவனந்தபுரம் சாலைக் கடைத் தெருவில் பல தரப்பட்ட மக்களிடையே ஜீவனோடு இயங்கும் மலையாளத் தமிழைக் கொண்டு ஒரு உரைநடையை ஆக்கியிருக்கிறார். சிறிது கொச்சைத் தன்மை வாய்ந்த எளிய, தெளிவான நடையில் அவர் கடைத் தெருவில் காணப்படுகிற குணச்சித்திரங்களைக் கொண்டு இனிமையான கதைகளைப் படைத்திருக்கிறார். திருவனந்தபுரம் ‘சாலைக் கம்போளம்’ வட்டாரமும், அங்குள்ள வேடிக்கை மனிதர்களும் மாதவன் எழுத்தில் உயிர்த் துடிப்புடன் இயங்குகிறார்கள். அதற்கு அவர் கையாள்கிற உரைநடை தான் காரணம். ‘எட்டாவது நாள்’ கதையில் ‘ஓடைக்காரன்—கட்டை கோவிந்தன்’ என்ற பாத்திரம் பற்றியவர்ணனை இது: “என்ன உறச்ச தேகம். கறுகறு வென்று குண்டலப் புழு போல இருக்கான், செவத்த கண்ணும், உருண்டை முகமும்<noinclude></noinclude> 6mnfkfw80t1uguf3hdv0g7hcnnxcfqs பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/198 250 130320 1839860 816714 2025-07-07T07:28:44Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|196||பாரதிக்குப் பின்}}</noinclude>புஷ்டிச்ச தேசமும், கைகளும் நெஞ்சும், அவன் காக்கி நிக்கரும் உடுப்பும், கோவிந்தன் கல்லுளி மங்கன் தான்; அனாலும் நல்ல மனசொள்ளவன். நண்ணி உள்ளவள். அவன் வேலையெல்லாம் தீந்து வந்திருந்தான். அவன்பாடு ராஜகாரியம்.” கோவிந்தனும் சாலைப் பட்டாணினும் பேசுகிற சம்பாஷணையில் கேரளத் தமிழின் தன்மையைக் காணலாம்— “நீரும் அந்த செம்மாடிகளுக்கு ஒற்றைக்கு ஒற்றை சொல்லுதினாலே தானே—அவனுகளும் கூத்து காண உம்மைம் போட்டு கொமைக்கான். அவனுக ஒண்ணெ சொன்னா செவி கேக்கலேண்ணு போயிர வேண்டியது தானே.” “இத்தரையும் நாளு அப்படி பளகலியே கோவிந்தா. எப்படிப்பட்டவன் நான் எப்பிடி இருந்தவன் நான். காலை கடையிலே என்னைக் காட்டியும் வலிய ஊச்சாளி ஆரு இருந்தா? எனக்கு ஆனகாலத்திலே இந்த மாதிரி ஒரு சுண்டைக்காய் மோன் நேரிலே வந்து நிப்பானா? இப்போ வாய் அறைக்காமெ சாளப் பட்டாணிண்ணு நடுரோட்டிலே நிண்ணு கூப்பிடுதான். பொறுக்கல்லே எனக்கு.” “நீருகெடந்து வெட்ராளப் படாமெ கெடயும். எட்டு நாளத்தெ பாடும் போவட்டும். ஒரு பச்சே இந்த எட்டு நாளத்தெ மருந்து குத்தி வைப்பினாலே, கை நீரும், வலியும் பழுப்பும் கொறையும், கொஞ்சம் சமாதானமாக இரியும்.” இவ்வாறு ‘சாலை பஜார்’ தமிழ் ஒலிக்கும் கதைகள் பலவற்றை மாதவன் எழுதியிருக்கிறார். அவருடைய ‘புனலும் மணலும்’ நாவலிலும் உழைப்பாளிகளின் பேச்சில் அடிபடுகிற மலையாளத் தமிழை அவர் திறமையாக எடுத்தாண்டிருக்கிறார்.{{nop}}<noinclude></noinclude> q4yfw3h80vfgcm4n8uhzfxdzk1o3utb பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/199 250 130322 1839876 816715 2025-07-07T07:38:43Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||197}}</noinclude>“ஒரு வண்டி மணலுக்கு பத்து குட்டை அளவு தான் வரும். நல்லா வெள்ளம் வடிஞ்சு ஒணங்கிய மணலுதரலாம். வெலை அது தான். கொறையாது. கேக்காண்டாம்” (கேட்க வேண்டாம்) என்பான். ‘ஒரு சாற்ற மழை வந்தாகூடெ எல்லா மண்ணும் ஒலிச்ச (ஒழுகி) ஆற்றிலேயே எறங்கீரும்.’ ‘வெயில் மேலே ஏறினத்தாச்சு கோரி (வாரி) இடப்பா சீக்கிரம், பாதி வள்ளம் மண்ணு கூட ஆவல்லியே. இல்லாட்டா தூம்பாவை இங்கே கொண்டாருங்கோ. நான் காணிச்சு தாரேன்.’ ‘இதுக்கொரு அறும்பாதம் வருத்தாமே (முடிவு தேடாமல்) ஒண்ணும் காணலியே கேக்கலியேண்னு இருந்தா அது ஓட்டும் நல்லதல்ல. முப்பன் இந்தஒரு விஷயத்திலேயும் இவ்வளவு மோசமாயிட்டு நடந்திர வேண்டாமாயிருந்தது. இப்போ இந்து கடவிலுள்ள (துறையில் உள்ள, இக்கண்ட ஜனங்கள் எல்லாம் கூடிட்டும் முப்பனுக்கு ஒரு அனக்கவுமில்லே (அசைவுமில்லை).’ இப்படி நாவல் முழுவதும் வட்டாரத் தமிழ் கலந்து வந்துள்ளது. மாதவன் இந்த ரக உரைநடை எழுதுவதில்தான் தேர்ந்தவர் என்று எண்ண வேண்டியதில்லை. அழகிய, இனிய நடையில் இடவர்ணனை, பாத்திர வர்ணனை முதலியவற்றை எழுதக் கூடியவர் என்பதற்கு அவருடைய ‘புனலும் மணலும்’ நாவலே சான்று கூறும். அதில் ஒரு இடம், தாமோதரன் என்பவனைப் பற்றியது நல்ல உதாரணமாகும். “காலம் தான் எப்படியெல்லாம் வளர்ந்து உருமாறி வந்து விட்டது. ஆனாலும், தாமோதரன் மட்டும் அதே விசுவாச மனம் கொண்டவனாக அப்படியே இருக்கிறான். இந்தக் காலத்தில் இப்படியொருவனா என்று வியப்பாகத் தான்இருக்கிறது.{{nop}}<noinclude></noinclude> fmuszu2xjbp33wo1ffxzipkb7vgfo84 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/200 250 130325 1839883 816717 2025-07-07T07:44:41Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839883 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|193||பாரதிக்குப் பின்}}</noinclude>சிரித்தமுகம். கறுகறுவென்று, திடமான, நடுத்தர உயரமுடைய உருவம். யாரிடமும் அதட்டலாகக் கூட பேசமாட்டான். யாருமே கண்டதும் வெறுக்கும் பங்கியிடம், இவன் எத்தனை இதமாக பழகுகிறான். தாமோதரன் நல்லவன். அன்பு மனம் கொண்டவன். பரோபகாரி. சோம்பலில்லாத வேலைக்காரன். ஆறு அவனது விளையாட்டரங்கம். வள்ளம் அவனது வாகனம். ஆற்றில் மூழ்கி, முக்குளித்து மண் எடுப்பதும், நீரில் அழுத்தமான எதிர் ஒழுக்கில் கூட மூங்கில் கழியை ஊன்றி செலுத்தி நுழைந்து வரும் அவன் ஆற்றின் செல்லப் பிள்ளை. ஆற்றின் வளர்ப்பு மகன். ஆறே அவனுக்கு வாழ்க்கை. அதனால் அவன் ஆறு போல குளிர் நிறைந்தவன், நிறைவானவன்.” கலைநயமும் கற்பனைச் செறிவும், அனுபவ ஒளியும், சொல் அலங்காரமும் நிறைந்த வேறு ரகமான கதைகளையும் ஆ. மாதவன் எழுதியிருக்கிறார். அவற்றில் உரை நடை தனித்தன்மையுடன் விளங்குகிறது. மோகக் கிறக்கத்தோடு ஒருவன் ஒரு பெண்ணை வியக்கிறான். அந்த வர்ணிப்பு கவிதை மெருகோடு அமைந்துள்ளது. “உதவி நடிகைப் பிழைப்பென்றால் இரவில் தான் வேலை இருக்குமோ? மாலையில் போய் விட்டு விடிய விடிய தான் கார்த்தி திரும்பி வருவாள். வரும்போது ஒரு உற்சாக மினு மினுப்பு, வேஷக் குலைவு, தூக்கச் சடைவு, உடன் எவனாவது. தொத்திக் கொண்டு ஒரு துணை. இதுதான் கார்த்தி! இவள் தான் கார்த்தி. பட்டுச் சேலையின் தளர்ச்சி, அலங்காரத்தின் அலட்சியம், அழகாக இருக்கிறோம் என்ற நிமிர்வு. வஞ்சக-<noinclude></noinclude> gecl2v1qw9hbpirv0le2jhwjovuh54h பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/201 250 130328 1839888 816718 2025-07-07T07:50:47Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||199}}</noinclude>மில்லாத வளர்ச்சி. பரந்த முகம். தேவையே ஆன சிரிப்பு...எண்ணும் தோறும் உள்ளே ஊறிக் கொண்டு வருகிறது, விவரிக்க முடியாத மனச் சபலம்.” “கார்த்தி படியிறங்கி வந்து கொண்டிருந்தாள். இவளா கார்த்தி? பாதத்தைத் தொடுகிறது பின்னல். கேவலம் இந்த உபநடிகைக்கு நெற்றியில் அந்த குங்குமப் பொட்டு எவ்வளவு அழகாக ஜ்வலிக்கிறது. எத்தனை பேர் அழிய அழிய இட்ட பொட்டோ? கண்ணும் பேசுகிறது. உதடும் பேசுகிறது. இதற்கெல்லாம் தானே அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். மணக்க மணக்க அத்தர் பூசிக் கொண்டு வரும் செருக்குக்கும், வழிய வழிய வெற்றிலை குழப்பிக் கொண்டு வரும் அழுமூஞ்சிக்கும், சிரிக்கச் சிரிக்க புகை ஊதிக் கொண்டு வரும் அலட்சியத்திற்கும் இந்த அழகு அர்ச்சித்து எறியப்படுகிறதே...தூ!” (மோக பல்லவி) சொற்கள் உயிர் பெறும்படியான உணர்ச்சிக் சித்திரிப்பு என்பார்களே, அந்த ரகமான ஜீவசித்திரங்களை மாதவன் தனது கதைகளில் உருவாக்கியிருக்கிறார். அதற்கு அவருடைய எளிய, இனிய உரை நடை துணைபுரிகிறது. ஒரு பெண்ணின் மனநிலையை அவர் வர்ணிக்கிற விதம் இது. “முப்பத்து ஐந்து வயது வரையில் அம்மா துணையுடன் மட்டும் வாழும் ஒரு பெண். நான் எட்டிப் படர்ந்துகொள்ள எனக்கு எதுவும் தேவையில்லை. ஆனால் நான் என் தேவைகளையும் வளர்ச்சிகளையும் உணர்கிறேன். இரவில் தனிமை எனக்கு குளிராக இருக்கிறது. உறக்கத்தில் கனவு எனக்குத் தீயாக இருக்கிறது. விழிப்பின் அர்த்தம் எனக்கு புதிராக இருக்கிறது. நடையின் அழுத்தம் எனக்கு மலையாக<noinclude></noinclude> rw11n7pme2ega3kej423ujvifj1wz0e பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/202 250 130331 1839891 816719 2025-07-07T07:57:49Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|200||}}</noinclude>தெரிகிறது. பார்வையின் காட்சி எனக்கு பசியாக கனிகிறது. ஆனால் எல்லாம் எனது அறிவின் முன் புல்லாக, முளைத்த இதழ் முளைத்தபடி விரித்த கைகள் விரித்தபடி, மணந்த மணம் மணத்தபடி, அழிக்க முடியாத நிழல் போல சாரமற்றதாகி விடுகின்றன.” (‘தியானம்’ கதையில்) இப்படி அவர் பின்னும் சொற்கோலங்கள் ரசனைக்கு நல் விருந்து ஆகும். சாதாரண விஷயங்களைக் கூட தனித் தன்மையோடு மாதவன் சொல்கிறபோது, அவருடைய உரை நடை பாராட்டப்பட வேண்டிய அழகைப் பெறுகிறது. உதாரணம்: ‘அடக்கம் அங்கே அமைதியாக வீற்றிருந்தது; அல்லது, அழகு அங்கே அடக்கமாகக் கொலுவிருந்தது.’ “மங்கல் ஒளிக்கு குடை பிடித்த மாவின் கிளைகள் இருட்டிற்கு கறுப்புச் சட்டை இட்டிருந்தது.” ‘நான் மிருகத்தின் தீனி வேளை போல இருட்டானவன்’ ‘என் மவுனம் அணைத்து விட்ட இருட்டாக வீடெங்கும் பரவியிருந்தது.’ ‘இருளான பிராகாரத்திற்கு அந்த ஒளி விளக்குகளின் ஒளி சத்தியத்தின் பலவீனம் போல எட்டமாட்டேன் என்கிறது.’ இவ்வாறு பல்வேறு தன்மைகளிலும் உரைநடையை கையாள்கிற மாதவனின் எழுத்தில் அவருடைய கலைத்தேர்ச்சியும், அனுபவ ஆழமும், கூரிய நோக்கும் நன்கு பிரதிபலிக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> qr7zr6c0kx6atcrmbf1kry7998nnsmi பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/1 250 213799 1839785 1839400 2025-07-07T04:20:30Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{nop}}[[File:சமுத்திரம் கட்டுரைகள்.pdf|center|240px]]{{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> pekusgirm1fuolskri587ddu2ooiza8 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/3 250 213803 1839647 670870 2025-07-06T16:19:49Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{c|<b>{{X-larger|சமுத்திரம் கட்டுரைகள்}} {{float_right|—சு. சமுத்திரம்}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 3 |bSize = 380 |cWidth = 39 |cHeight = 38 |oTop = 354 |oLeft = 176 |Location = center |Description = }} {{X-larger|ஏகலைவன் பதிப்பகம்}} 9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br>டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர், சென்னை -600 041. ©: 4917594</b>}}<noinclude></noinclude> bib6ivrfhqizpro6kgebffb2zot1r5e 1839648 1839647 2025-07-06T16:22:34Z மொஹமது கராம் 14681 1839648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|6em}} {{c|<b>{{Xxx-larger|சமுத்திரம் கட்டுரைகள்}}<br>{{float_right|—சு. சமுத்திரம்}} {{dhr|10em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 3 |bSize = 380 |cWidth = 39 |cHeight = 38 |oTop = 354 |oLeft = 176 |Location = center |Description = }} {{X-larger|ஏகலைவன் பதிப்பகம்}}<br>9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br>டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br>சென்னை — 600 041.<br>✆: 4917594</b>}}{{nop}}<noinclude></noinclude> 6jq6rg19f13n0z3c6f4nqyr7arra9w4 1839649 1839648 2025-07-06T16:23:06Z மொஹமது கராம் 14681 1839649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|10em}} {{c|<b>{{Xxx-larger|சமுத்திரம் கட்டுரைகள்}}<br>{{float_right|—{{larger|சு. சமுத்திரம்}}}} {{dhr|10em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 3 |bSize = 380 |cWidth = 39 |cHeight = 38 |oTop = 354 |oLeft = 176 |Location = center |Description = }} {{X-larger|ஏகலைவன் பதிப்பகம்}}<br>9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br>டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br>சென்னை — 600 041.<br>✆: 4917594</b>}}{{nop}}<noinclude></noinclude> 9m77lz24w9k8wb2jeoociaplr4nocka 1839650 1839649 2025-07-06T16:23:37Z மொஹமது கராம் 14681 1839650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|10em}} {{c|<b>{{Xxx-larger|சமுத்திரம் கட்டுரைகள்}}<br>{{float_right|—{{larger|சு. சமுத்திரம்}}}} {{dhr|20em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 3 |bSize = 380 |cWidth = 39 |cHeight = 38 |oTop = 354 |oLeft = 176 |Location = center |Description = }} {{X-larger|ஏகலைவன் பதிப்பகம்}}<br>9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br>டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br>சென்னை — 600 041.<br>✆: 4917594</b>}}{{nop}}<noinclude></noinclude> 8arz04vxppr0d1g2gzxy3l7b90glhbi 1839651 1839650 2025-07-06T16:24:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|10em}} {{c|<b>{{Xxx-larger|சமுத்திரம் கட்டுரைகள்}}<br>{{float_right|—{{larger|சு. சமுத்திரம்}}}} {{dhr|20em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 3 |bSize = 380 |cWidth = 39 |cHeight = 38 |oTop = 354 |oLeft = 176 |Location = center |Description = }} {{X-larger|ஏகலைவன் பதிப்பகம்}}<br>9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br>டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br>சென்னை — 600 041.<br>✆: 4917594</b>}}{{nop}}<noinclude></noinclude> iu0ccfa1w5hgps4qyqff1vxr7r9mc6p 1839786 1839651 2025-07-07T04:24:35Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|10em}} <poem>{{c|<b>{{Xxx-larger|சமுத்திரம் கட்டுரைகள்}} {{larger|-சு. சமுத்திரம்}}}}</poem> {{dhr|20em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 3 |bSize = 380 |cWidth = 39 |cHeight = 38 |oTop = 354 |oLeft = 176 |Location = center |Description = }} {{c|{{X-larger|ஏகலைவன் பதிப்பகம்}}<br>9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br>டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br>சென்னை — 600 041.<br>✆: 4917594</b>}}}} {{nop}}<noinclude></noinclude> nupy9i3tj2xw5d6fezq9nhwo3kubr1s 1839787 1839786 2025-07-07T04:25:11Z Booradleyp1 1964 1839787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|10em}} <poem>{{c|<b>{{Xxx-larger|சமுத்திரம் கட்டுரைகள்}} {{larger|-சு. சமுத்திரம்}}}}</poem> {{dhr|20em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 3 |bSize = 380 |cWidth = 39 |cHeight = 38 |oTop = 354 |oLeft = 176 |Location = center |Description = }} {{c|{{X-larger|ஏகலைவன் பதிப்பகம்}}<br>9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br>டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br>சென்னை — 600 041.<br>✆: 4917594</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 78y451czxev8bc9x7gti9efwrx9ug3z பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/4 250 213805 1839652 670881 2025-07-06T16:25:07Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|8em}} நூல் : சமுத்திரம் கட்டுரைகள் முதற் பதிப்பு : டிசம்பர், 1999. வடிவம் : "டெமி" பக்கங்கள் : 187+13- 200 விலை: ரூ.45-00 உரிமை : ஆசிரியருக்கு வெளியீடு : ஏகலைவன் பதிப்பகம் 9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர்.இராதாகிருஷ்ணன் நகர், சென்னை 1 600 041. ஒளி அச்சு: ஏகலைவன், சென்னை - 41. - அச்சு பி.கே.ஆப்செட் பிரஸ், சென்னை - 600 013.<noinclude></noinclude> d0sgskiefujahytx8ijfuvwyw9pwfsy 1839653 1839652 2025-07-06T16:25:29Z மொஹமது கராம் 14681 1839653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|8em}} நூல் : சமுத்திரம் கட்டுரைகள் முதற் பதிப்பு : டிசம்பர், 1999. வடிவம் : "டெமி" பக்கங்கள் : 187+13- 200 விலை: ரூ.45-00 உரிமை : ஆசிரியருக்கு {{dhr|15em}} வெளியீடு : ஏகலைவன் பதிப்பகம் 9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர்.இராதாகிருஷ்ணன் நகர், சென்னை 1 600 041. ஒளி அச்சு: ஏகலைவன், சென்னை - 41. - அச்சு பி.கே.ஆப்செட் பிரஸ், சென்னை - 600 013.<noinclude></noinclude> 2h3z54vyux2i90k1sx7bsvvdf1bdcu5 1839654 1839653 2025-07-06T16:26:25Z மொஹமது கராம் 14681 1839654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|8em}} {{block_left|<poem>நூல் : சமுத்திரம் கட்டுரைகள் முதற் பதிப்பு : டிசம்பர், 1999. வடிவம் : "டெமி" பக்கங்கள் : 187+13- 200 விலை: ரூ.45-00 உரிமை : ஆசிரியருக்கு</poem>}} {{dhr|16em}} வெளியீடு : ஏகலைவன் பதிப்பகம் 9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர்.இராதாகிருஷ்ணன் நகர், சென்னை 1 600 041. ஒளி அச்சு: ஏகலைவன், சென்னை - 41. - அச்சு பி.கே.ஆப்செட் பிரஸ், சென்னை - 600 013.<noinclude></noinclude> 49kz1fdoapo405rtaka17tslvuihcor 1839655 1839654 2025-07-06T16:32:05Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|9em}} {{block_left|<poem>நூல் : <b>சமுத்திரம் கட்டுரைகள்</b> முதற் பதிப்பு : <b>டிசம்பர், 1999.</b> வடிவம் : <b>“டெமி”</b> பக்கங்கள் : <b>187+13= 200</b> விலை: <b>ரூ. 45—00</b> உரிமை : <b>ஆசிரியருக்கு</b>}} {{dhr|16em}} {{block_right|வெளியீடு : ஏகலைவன் பதிப்பகம் 9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர், சென்னை — 600 041. ஒளி அச்சு: ஏகலைவன், சென்னை - 41. அச்சு: பி.கே. ஆப்செட் பிரஸ், சென்னை — 600 013.</poem>}}{{nop}}<noinclude></noinclude> 6u9gpu5bt7rxju870y6x3sbqnainsmt 1839656 1839655 2025-07-06T16:32:49Z மொஹமது கராம் 14681 1839656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|9em}} <poem>நூல் : <b>சமுத்திரம் கட்டுரைகள்</b> முதற் பதிப்பு : <b>டிசம்பர், 1999.</b> வடிவம் : <b>“டெமி”</b> பக்கங்கள் : <b>187+13= 200</b> விலை: <b>ரூ. 45—00</b> உரிமை : <b>ஆசிரியருக்கு</b> {{dhr|16em}} {{block_right|வெளியீடு : ஏகலைவன் பதிப்பகம் 9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர், சென்னை — 600 041. ஒளி அச்சு: ஏகலைவன், சென்னை - 41. அச்சு: பி.கே. ஆப்செட் பிரஸ், சென்னை — 600 013.</poem>}}{{nop}}<noinclude></noinclude> l9boii94yxc7249i8sedjvm6cks3uus 1839658 1839656 2025-07-06T16:35:34Z மொஹமது கராம் 14681 1839658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|9em}} <poem>நூல் : <b>சமுத்திரம் கட்டுரைகள்</b> முதற் பதிப்பு : <b>டிசம்பர், 1999.</b> வடிவம் : <b>“டெமி”</b> பக்கங்கள் : <b>187+13= 200</b> விலை: <b>ரூ. 45—00</b> உரிமை : <b>ஆசிரியருக்கு</b></poem> {{dhr|16em}} {{block_right|வெளியீடு :<br> ஏகலைவன் பதிப்பகம்<br> 9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br> டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br> சென்னை — 600 041.<br> ஒளி அச்சு:<br> ஏகலைவன், சென்னை - 41.<br> அச்சு:<br> பி.கே. ஆப்செட் பிரஸ்,<br> சென்னை — 600 013.}}{{nop}}<noinclude></noinclude> 41ab65iva20h0jllnmjdpva50sph862 1839659 1839658 2025-07-06T16:36:24Z மொஹமது கராம் 14681 1839659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|9em}} நூல் : <b>சமுத்திரம் கட்டுரைகள்</b><br> முதற் பதிப்பு : <b>டிசம்பர், 1999.</b><br> வடிவம் : <b>“டெமி”</b><br> பக்கங்கள் : <b>187+13= 200</b><br> விலை: <b>ரூ. 45-00</b><br> உரிமை : <b>ஆசிரியருக்கு</b> {{dhr|16em}} {{block_right|வெளியீடு :<br> ஏகலைவன் பதிப்பகம்<br> 9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br> டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br> சென்னை — 600 041.<br> ஒளி அச்சு:<br> ஏகலைவன், சென்னை - 41.<br> அச்சு:<br> பி.கே. ஆப்செட் பிரஸ்,<br> சென்னை — 600 013.}}{{nop}}<noinclude></noinclude> a7r9sluzmphl0slmoyzvwonps1y3kkf 1839660 1839659 2025-07-06T16:37:11Z மொஹமது கராம் 14681 1839660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|9em}} நூல் : <b>சமுத்திரம் கட்டுரைகள்</b><br> முதற் பதிப்பு : <b>டிசம்பர், 1999.</b><br> வடிவம் : <b>“டெமி”</b><br> பக்கங்கள் : <b>187+13= 200</b><br> விலை: <b>ரூ. 45-00</b><br> உரிமை : <b>ஆசிரியருக்கு</b> {{dhr|16em}} {{block_right|<b>வெளியீடு :<br> ஏகலைவன் பதிப்பகம்<br> 9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br> டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br> சென்னை — 600 041.<br> ஒளி அச்சு:<br> ஏகலைவன், சென்னை - 41.<br> அச்சு:<br> பி.கே. ஆப்செட் பிரஸ்,<br> சென்னை — 600 013.</b>}}{{nop}}<noinclude></noinclude> i58chkyfuah4eehz0t6to3vbdoz6hui 1839661 1839660 2025-07-06T16:38:11Z மொஹமது கராம் 14681 1839661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|9em}} நூல் : <b>சமுத்திரம் கட்டுரைகள்</b><br> முதற் பதிப்பு : <b>டிசம்பர், 1999.</b><br> வடிவம் : <b>“டெமி”</b><br> பக்கங்கள் : <b>187+13= 200</b><br> விலை: <b>ரூ. 45-00</b><br> உரிமை : <b>ஆசிரியருக்கு</b> {{dhr|15em}} {{block_right|<b>வெளியீடு :<br> ஏகலைவன் பதிப்பகம்<br> 9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br> டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br> சென்னை — 600 041.<br> ஒளி அச்சு:<br> ஏகலைவன், சென்னை - 41.<br> அச்சு:<br> பி.கே. ஆப்செட் பிரஸ்,<br> சென்னை — 600 013.</b>}}{{nop}}<noinclude></noinclude> h198t0oa11ehcy5igk34ki7hd2qa24t 1839662 1839661 2025-07-06T16:38:36Z மொஹமது கராம் 14681 1839662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|9em}} நூல் : <b>சமுத்திரம் கட்டுரைகள்</b><br> முதற் பதிப்பு : <b>டிசம்பர், 1999.</b><br> வடிவம் : <b>“டெமி”</b><br> பக்கங்கள் : <b>187+13= 200</b><br> விலை: <b>ரூ. 45-00</b><br> உரிமை : <b>ஆசிரியருக்கு</b> {{dhr|14em}} {{block_right|<b>வெளியீடு :<br> ஏகலைவன் பதிப்பகம்<br> 9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br> டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br> சென்னை — 600 041.<br> ஒளி அச்சு:<br> ஏகலைவன், சென்னை - 41.<br> அச்சு:<br> பி.கே. ஆப்செட் பிரஸ்,<br> சென்னை — 600 013.</b>}}{{nop}}<noinclude></noinclude> nzxj36d9c5ysvvtd1wxm42bzmuhnexz 1839788 1839662 2025-07-07T04:26:39Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|9em}} நூல் : <b>சமுத்திரம் கட்டுரைகள்</b><br> முதற் பதிப்பு : <b>டிசம்பர், 1999.</b><br> வடிவம் : <b>“டெமி”</b><br> பக்கங்கள் : <b>187+13= 200</b><br> விலை: <b>ரூ. 45-00</b><br> உரிமை : <b>ஆசிரியருக்கு</b> {{dhr|14em}} {{right|<b>வெளியீடு :<br> ஏகலைவன் பதிப்பகம்<br> 9, இரண்டாவது குறுக்குத் தெரு,<br> டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,<br> சென்னை — 600 041.<br> ஒளி அச்சு:<br> ஏகலைவன், சென்னை - 41.<br> அச்சு:<br> பி.கே. ஆப்செட் பிரஸ்,<br> சென்னை — 600 013.</b>}}{{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> s08evw3qkb6lkoucsl96x6rgb37rjkf பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/5 250 213807 1839664 670892 2025-07-06T16:40:51Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே! - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி}}</poem></b>}}{{nop}}<noinclude></noinclude> bsr7gon5m5kw6p8m81vjna8gz3tqz69 1839665 1839664 2025-07-06T16:41:37Z மொஹமது கராம் 14681 1839665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|10em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே! - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி}}</poem></b>}}{{nop}}<noinclude></noinclude> ocq3dkswljv1vl9rx5z4kn5imtmton1 1839666 1839665 2025-07-06T16:41:55Z மொஹமது கராம் 14681 1839666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|10em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே! - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி}}</poem></b>}}{{nop}}<noinclude></noinclude> 75pm5bj0qhbgoh3bpaf9hwob0c63eg6 1839667 1839666 2025-07-06T16:42:08Z மொஹமது கராம் 14681 1839667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|10em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே! - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி}}</poem></b>}}{{nop}}<noinclude></noinclude> ddnxx9fogclzdi1kkcp3u0qcvgd6k02 1839668 1839667 2025-07-06T16:42:24Z மொஹமது கராம் 14681 1839668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|10em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே! - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி}}</poem></b>}}{{nop}}<noinclude></noinclude> mw714s91lb2jy6j92m8lslxfxlsryvd 1839669 1839668 2025-07-06T16:42:45Z மொஹமது கராம் 14681 1839669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|10em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே! - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி}}</poem></b>}}{{nop}}<noinclude></noinclude> 88sfwxmagcjhmr4l81yghdq90u8yak4 1839670 1839669 2025-07-06T16:43:14Z மொஹமது கராம் 14681 1839670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|10em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே! - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி}}</poem></b>}}{{nop}}<noinclude></noinclude> 3wxoc08w1efxeawoql5dth7vukkefzn 1839671 1839670 2025-07-06T16:43:37Z மொஹமது கராம் 14681 1839671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே! - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி}}</poem></b>}}{{nop}}<noinclude></noinclude> 7dno1m4o0kujlhbf2taxjyq5q995v2j 1839672 1839671 2025-07-06T16:44:17Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே! {{box|- ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி}}</poem></b>}}}}{{nop}}<noinclude></noinclude> o0rutospt5uyhiasiotql1inqpqhx0u 1839674 1839672 2025-07-06T16:46:04Z மொஹமது கராம் 14681 1839674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே! {{box| - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி}}</poem></b>}} }}{{nop}}<noinclude></noinclude> i2fkfib1xnuie14w6chwwyyqy7ad4wt 1839675 1839674 2025-07-06T16:46:24Z மொஹமது கராம் 14681 1839675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே!}} {{box| - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி}}</poem></b> }}{{nop}}<noinclude></noinclude> 7mrlxbwczsc7v0cg2ez9sxkarmfjdli 1839676 1839675 2025-07-06T16:46:58Z மொஹமது கராம் 14681 1839676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே!}}</poem></b> {{box| - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி}} }}{{nop}}<noinclude></noinclude> kjpqrhw9d0fshdmc5p0zqidoix9n11e 1839677 1839676 2025-07-06T16:47:23Z மொஹமது கராம் 14681 1839677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே!}} {{box| - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி</b>}}</poem> }}{{nop}}<noinclude></noinclude> 1hjfq98awccx1zdn0q7y3tmy04alpl6 1839678 1839677 2025-07-06T16:47:39Z மொஹமது கராம் 14681 1839678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே!}} {{box| - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி</b>}} }}</poem>{{nop}}<noinclude></noinclude> r3snyp5uxtfzt12mt7iiinndqv3jt8r 1839679 1839678 2025-07-06T16:48:01Z மொஹமது கராம் 14681 1839679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே!</poem>}} {{box| - ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி</b>}} }}{{nop}}<noinclude></noinclude> dr0g12b4g8wv7d6hkf9frn67vmll1xk 1839680 1839679 2025-07-06T16:48:30Z மொஹமது கராம் 14681 1839680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே!</poem>}} {{c|{{box|- ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி</b>}}}}}}{{nop}}<noinclude></noinclude> lpg158hnvx8ieam0qg1xi3pt46z0g71 1839681 1839680 2025-07-06T16:48:44Z மொஹமது கராம் 14681 1839681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே!</poem>}} {{c|{{box|- ஆன்மீகப் போரானி {{larger|வைகுண்டசாமி</b>}}}}}}{{nop}}<noinclude></noinclude> ittv96nfo1i3i8g8y5ly49dbe7iztgg 1839682 1839681 2025-07-06T16:49:10Z மொஹமது கராம் 14681 1839682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|15em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே!</poem>}} {{c|{{box|- {{smaller|ஆன்மீகப் போரானி}} {{larger|வைகுண்டசாமி</b>}}}}}}{{nop}}<noinclude></noinclude> a2t57z01tx8co66qrba6pjgyuqv5e0r 1839847 1839682 2025-07-07T07:15:20Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|15em}} {{c|<b><poem>குகையாளப் பிறந்தவனே! என் குழந்தாய்! எழுந்திரடா! சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பு தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே!</poem>}} {{c|{{box|- {{smaller|ஆன்மீகப் போராளி}} {{larger|வைகுண்டசாமி</b>}}}}}}{{nop}}<noinclude></noinclude> 9otvbouz4er0rlq3y9xr1gwda14lazs பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/6 250 213809 1839683 670903 2025-07-06T16:57:15Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{c|{{box|{{larger|எனது உயில் வரைவு...}}}}}} வரலாற்றைத் திருப்பிய ஆன்மீகப் போராளியான வைகுண்ட சாமியின் சில கவித்துவ வரிகளை இங்கே திட்டமிட்டே எடுத்துப் போட்டிருக்கிறேன். அன்று அவர் சொன்னது இன்றும் நடைபெறவில்லை என்பதை நினைக்கும்போது, வேதனை ஏற்படுகிறது. தனிப்பட்ட முறையில் என் வேதனைக்கு எந்தக் காரணமும் இல்லை. ஒரு பாட்டாளி வர்க்கத்தில் - அதுவும் காய்கறிகளை வண்டியில் ஏற்றிச் சென்று, மாடு தள்ளாடும்போது, அந்த மாட்டை விலக்கிவிட்டு தானே ஒரு மாடாகி, வண்டியை ஒட்டிய ஒரு பாட்டாளியின் மகன் நான். இப்போது எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைவான வாழ்க்கையே. நாடறிந்த எழுத்தாளன். ஆயிரக்கணக்கான தோழர்களின் அன்பைப் பெற்றவன். சொந்த வீட்டோடும், காரோடும், இனிமையான மனைவி, மக்களோடும் எந்தக் குறைவுமின்றி வாழ்கிறவன். ஆனாலும், நான் வேதனைப்படுகிறேன். காரணம் இளமையிலிருந்தே என் மனதை ஆட்டுவிப்பது சமூகக காரணிகளே. அன்று, ‘ஃபோர்த் பாம்’ எனப்படும் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது, அப்போதைய அரசியல், சமூக நடவடிக்கைகளால் இந்தத் தமிழகம் எப்படி மனநோயாளி மாநிலமாக மாறக்கூடும் என்று நினைத்து வருந்தினேனோ, அந்த வருத்தம் என் விருப்பதிற்கு விரோதமாக நிறைவேறியிருக்கிறது. அன்று துவங்கிய சினிமாத்தனங்களும், தனிநபர் வழிபாடுகளும், லஞ்ச லாவண்யங்களும் இன்று, பல்கி பரவி இருக்கிறது. அன்றாவது, எங்கள் தலைமுறைக்கு ஒரு சமூகப் பிரக்ஞை இருந்தது. இன்றைய இளைய தலைமுறையைப்போல் நாங்கள் கணிப்பொறி வகையறாக்களிலும், பொது அறிவிலும், திறமையானவர்கள் அல்ல. ஆனால், எங்களுக்குத் தாய்மொழியான தமிழில் பிழையின்றி எழுதவரும். தமிழ்வழி கல்வியில் படித்தாலும், கல்லூரிக் காலத்திலேயே ஆங்கிலத்தில் தேறி நன்றாக எழுதவரும். ஆனால், இன்றைக்கு ஒரு பட்டதாரி மாணவருக்கு மூன்று வரி தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுத முடியவில்லை. அன்று சினிமா நடிகர்-நடிகைகள் மானத்தை பெரிதாக நினைத்தார்கள். இன்றோ முதலிரவைவிட வெளிப்படையான காட்சிகளைப் பார்க்கிறோம். தமிழ் செத்துச் செத்து, ஒரு புதுத் தொலைக்காட்சி தமிழ் உருவாகி வருகிறது அந்தக் காலத்து வேசிகள் எப்படி மாடங்களில் நின்று சீவி சிங்காரித்து கை ஆட்டுவார்களோ, அப்படிப்பட்ட அறிவிப்பாளத் தனங்கள் இருக்கின்றன. பெண்ணியம் வலுப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்கூட, பாவப்பட்ட பெண்கள் அவர்கள் விருப்பத்திற்கு விரோதமாக, தொழில் ரீதியில் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> bplcfbl4kss3awqxuha5jbfpwtq8n13 1839684 1839683 2025-07-06T16:57:45Z மொஹமது கராம் 14681 1839684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{c|{{box|{{larger|<b>எனது உயில் வரைவு...</b>}}}}}} வரலாற்றைத் திருப்பிய ஆன்மீகப் போராளியான வைகுண்ட சாமியின் சில கவித்துவ வரிகளை இங்கே திட்டமிட்டே எடுத்துப் போட்டிருக்கிறேன். அன்று அவர் சொன்னது இன்றும் நடைபெறவில்லை என்பதை நினைக்கும்போது, வேதனை ஏற்படுகிறது. தனிப்பட்ட முறையில் என் வேதனைக்கு எந்தக் காரணமும் இல்லை. ஒரு பாட்டாளி வர்க்கத்தில் - அதுவும் காய்கறிகளை வண்டியில் ஏற்றிச் சென்று, மாடு தள்ளாடும்போது, அந்த மாட்டை விலக்கிவிட்டு தானே ஒரு மாடாகி, வண்டியை ஒட்டிய ஒரு பாட்டாளியின் மகன் நான். இப்போது எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைவான வாழ்க்கையே. நாடறிந்த எழுத்தாளன். ஆயிரக்கணக்கான தோழர்களின் அன்பைப் பெற்றவன். சொந்த வீட்டோடும், காரோடும், இனிமையான மனைவி, மக்களோடும் எந்தக் குறைவுமின்றி வாழ்கிறவன். ஆனாலும், நான் வேதனைப்படுகிறேன். காரணம் இளமையிலிருந்தே என் மனதை ஆட்டுவிப்பது சமூகக காரணிகளே. அன்று, ‘ஃபோர்த் பாம்’ எனப்படும் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது, அப்போதைய அரசியல், சமூக நடவடிக்கைகளால் இந்தத் தமிழகம் எப்படி மனநோயாளி மாநிலமாக மாறக்கூடும் என்று நினைத்து வருந்தினேனோ, அந்த வருத்தம் என் விருப்பதிற்கு விரோதமாக நிறைவேறியிருக்கிறது. அன்று துவங்கிய சினிமாத்தனங்களும், தனிநபர் வழிபாடுகளும், லஞ்ச லாவண்யங்களும் இன்று, பல்கி பரவி இருக்கிறது. அன்றாவது, எங்கள் தலைமுறைக்கு ஒரு சமூகப் பிரக்ஞை இருந்தது. இன்றைய இளைய தலைமுறையைப்போல் நாங்கள் கணிப்பொறி வகையறாக்களிலும், பொது அறிவிலும், திறமையானவர்கள் அல்ல. ஆனால், எங்களுக்குத் தாய்மொழியான தமிழில் பிழையின்றி எழுதவரும். தமிழ்வழி கல்வியில் படித்தாலும், கல்லூரிக் காலத்திலேயே ஆங்கிலத்தில் தேறி நன்றாக எழுதவரும். ஆனால், இன்றைக்கு ஒரு பட்டதாரி மாணவருக்கு மூன்று வரி தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுத முடியவில்லை. அன்று சினிமா நடிகர்-நடிகைகள் மானத்தை பெரிதாக நினைத்தார்கள். இன்றோ முதலிரவைவிட வெளிப்படையான காட்சிகளைப் பார்க்கிறோம். தமிழ் செத்துச் செத்து, ஒரு புதுத் தொலைக்காட்சி தமிழ் உருவாகி வருகிறது அந்தக் காலத்து வேசிகள் எப்படி மாடங்களில் நின்று சீவி சிங்காரித்து கை ஆட்டுவார்களோ, அப்படிப்பட்ட அறிவிப்பாளத் தனங்கள் இருக்கின்றன. பெண்ணியம் வலுப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்கூட, பாவப்பட்ட பெண்கள் அவர்கள் விருப்பத்திற்கு விரோதமாக, தொழில் ரீதியில் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> 11gk37phm3icb8nbrzlm0o2g73fteyu 1839852 1839684 2025-07-07T07:17:49Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{c|{{box|{{larger|<b>எனது உயில் வரைவு...</b>}}}}}} வரலாற்றைத் திருப்பிய ஆன்மீகப் போராளியான வைகுண்ட சாமியின் சில கவித்துவ வரிகளை இங்கே திட்டமிட்டே எடுத்துப் போட்டிருக்கிறேன். அன்று அவர் சொன்னது இன்றும் நடைபெறவில்லை என்பதை நினைக்கும்போது, வேதனை ஏற்படுகிறது. தனிப்பட்ட முறையில் என் வேதனைக்கு எந்தக் காரணமும் இல்லை. ஒரு பாட்டாளி வர்க்கத்தில் - அதுவும் காய்கறிகளை வண்டியில் ஏற்றிச் சென்று, மாடு தள்ளாடும்போது, அந்த மாட்டை விலக்கிவிட்டு தானே ஒரு மாடாகி, வண்டியை ஓட்டிய ஒரு பாட்டாளியின் மகன் நான். இப்போது எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைவான வாழ்க்கையே. நாடறிந்த எழுத்தாளன். ஆயிரக்கணக்கான தோழர்களின் அன்பைப் பெற்றவன். சொந்த வீட்டோடும், காரோடும், இனிமையான மனைவி, மக்களோடும் எந்தக் குறைவுமின்றி வாழ்கிறவன். ஆனாலும், நான் வேதனைப்படுகிறேன். காரணம் இளமையிலிருந்தே என் மனதை ஆட்டுவிப்பது சமூகக் காரணிகளே. அன்று, ‘ஃபோர்த் பாம்’ எனப்படும் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது, அப்போதைய அரசியல், சமூக நடவடிக்கைகளால் இந்தத் தமிழகம் எப்படி மனநோயாளி மாநிலமாக மாறக்கூடும் என்று நினைத்து வருந்தினேனோ, அந்த வருத்தம் என் விருப்பதிற்கு விரோதமாக நிறைவேறியிருக்கிறது. அன்று துவங்கிய சினிமாத்தனங்களும், தனிநபர் வழிபாடுகளும், லஞ்ச லாவண்யங்களும் இன்று, பல்கி பரவி இருக்கிறது. அன்றாவது, எங்கள் தலைமுறைக்கு ஒரு சமூகப் பிரக்ஞை இருந்தது. இன்றைய இளைய தலைமுறையைப்போல் நாங்கள் கணிப்பொறி வகையறாக்களிலும், பொது அறிவிலும், திறமையானவர்கள் அல்ல. ஆனால், எங்களுக்குத் தாய்மொழியான தமிழில் பிழையின்றி எழுதவரும். தமிழ்வழி கல்வியில் படித்தாலும், கல்லூரிக் காலத்திலேயே ஆங்கிலத்தில் தேறி நன்றாக எழுதவரும். ஆனால், இன்றைக்கு ஒரு பட்டதாரி மாணவருக்கு மூன்று வரி தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுத முடியவில்லை. அன்று சினிமா நடிகர்-நடிகைகள் மானத்தை பெரிதாக நினைத்தார்கள். இன்றோ முதலிரவைவிட வெளிப்படையான காட்சிகளைப் பார்க்கிறோம். தமிழ் செத்துச் செத்து, ஒரு புதுத் தொலைக்காட்சி தமிழ் உருவாகி வருகிறது அந்தக் காலத்து வேசிகள் எப்படி மாடங்களில் நின்று சீவி சிங்காரித்து கை ஆட்டுவார்களோ, அப்படிப்பட்ட அறிவிப்பாளத் தனங்கள் இருக்கின்றன. பெண்ணியம் வலுப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்கூட, பாவப்பட்ட பெண்கள் அவர்கள் விருப்பத்திற்கு விரோதமாக, தொழில் ரீதியில் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> fl5kk8jflqqeleaop1ljpx36ic0k9aa பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/7 250 213812 1839685 670914 2025-07-06T17:05:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||V}}</noinclude>எந்த மாநிலத்திலாவது கட்-அவுட்கள் பெரிதாக இருந்தால் அங்கே தமிழர்கள் வசிக்கிறார்கள் என்று அர்த்தம். இங்கே உள்ள தமிழன், அங்கே உள்ள தமிழனையும் சினிமாத்தனமாக்கி விட்டான். எந்த மாநிலத்திலும் நடிகர்களுக்கு சங்கங்கள் வைத்து, தோரணம் கட்டி. கற்பூர ஆராதனை செய்து, அவர்கள் காலடியில் மூளையை அடகு வைக்கும் முட்டாள்தனம் இல்லை. இங்கேதான் இந்த மாநிலம் ஒரு மனநோயாளி பூமியாகிவிட்டது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் தத்தம் தகுதிகளால் தனிநபர் வழிபாட்டுக்கு உள்ளானார்கள். ஆனால், இன்றோ தகுதி இல்லாத தலைவரைக்கூட, அவர் பேரை சொல்லி அழைக்க முடியாத அளவிற்கு அடிமைத்தனமான தொண்டர்களும், ஆணவத்தனமான தலைவர்களும் தோன்றி விட்டார்கள். குனிந்து விழுந்தால் இந்த ஆணவக்காரர்களுக்கு அல்லது காரிகளுக்கு கோபம் வரும் என்று அப்படியே தொப்பென்று விழுகின்றவர்களும், நமது பிரதிநிதிகளாக பல்வேறு அவைகளில் இருக்கிறார்கள். அன்று நான் கண்ட விபரீத நிலைமை, இப்போது விபத்தாகியிருக்கிறது. எந்த மண்ணை நேசிக்கிறேனோ அந்த மண்ணில் துகள்கள் கண்ணை உறுத்துகின்றன. மேலே குறிப்பிட்ட சங்கதிகளிலிருந்து, நமது தமிழனை மீட்டு, பெரியவர் என்று வியக்காமலும், சிறியவர் என்று இகழாமலும் இருக்கவேண்டுமென்று நமது முன்னோர்களான கணியன் பூங்குன்றனும், வைகுண்டர், வள்ளலார் போன்றவர்களும் அறிவுறுத்தியதை, செயலாக்க வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டதை காட்டுவதற்கே இந்த கட்டுரைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பு, பல தோழர்கள், கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது எழுதும் ஆய்வுக் கட்டுரைகள் மாதிரியல்ல. சாமான்யர்களுக்காக ஒரு சாமான்யன் மேற்கொண்ட கருத்துப் பகிர்வே இது. எனவே, இன்றைய தமிழனை மீட்டு நாளைய நல்லதோர், வல்லதோர் தாயகத் தமிழனை உருவாக்க இப்போதே முயல வேண்டும். இல்லையானால் எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் குண்டர்களின் குண்டு கலாச்சாரத்திற்கு பலியாகலாம். இதற்கு ஒரு கலாச்சார புரட்சி தேவைப்படுகிறது. இல்லையானால் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தாயகத் தமிழனும், தமிழும் காணாமல் போய்விடுவார்கள். இதையே, வாழ்க்கையின் மாலைப் பொழுதில் உள்ள இந்த தாயகத் தமிழ்ச் சமுதாயத்தின் தொண்டனாக கருதும் நான், இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு உயிலின் வரைவுபோல் எழுதி முடிக்கிறேன். எனது கட்டுரைகளை பிரசுரித்த-பிரசுரிக்கும் அத்தனை பத்திரிகைகளுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். {{rh|||தோழமையுடன்,<br>சு. சமுத்திரம்.}}{{nop}}<noinclude></noinclude> m2grtw2wruk4w3qr5r00cufwm2bzmw3 1839853 1839685 2025-07-07T07:19:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||V}}</noinclude>எந்த மாநிலத்திலாவது கட்-அவுட்கள் பெரிதாக இருந்தால் அங்கே தமிழர்கள் வசிக்கிறார்கள் என்று அர்த்தம். இங்கே உள்ள தமிழன், அங்கே உள்ள தமிழனையும் சினிமாத்தனமாக்கி விட்டான். எந்த மாநிலத்திலும் நடிகர்களுக்கு சங்கங்கள் வைத்து, தோரணம் கட்டி. கற்பூர ஆராதனை செய்து, அவர்கள் காலடியில் மூளையை அடகு வைக்கும் முட்டாள்தனம் இல்லை. இங்கேதான் இந்த மாநிலம் ஒரு மனநோயாளி பூமியாகிவிட்டது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் தத்தம் தகுதிகளால் தனிநபர் வழிபாட்டுக்கு உள்ளானார்கள். ஆனால், இன்றோ தகுதி இல்லாத தலைவரைக்கூட, அவர் பேரை சொல்லி அழைக்க முடியாத அளவிற்கு அடிமைத்தனமான தொண்டர்களும், ஆணவத்தனமான தலைவர்களும் தோன்றி விட்டார்கள். குனிந்து விழுந்தால் இந்த ஆணவக்காரர்களுக்கு அல்லது காரிகளுக்கு கோபம் வரும் என்று அப்படியே தொப்பென்று விழுகின்றவர்களும், நமது பிரதிநிதிகளாக பல்வேறு அவைகளில் இருக்கிறார்கள். அன்று நான் கண்ட விபரீத நிலைமை, இப்போது விபத்தாகியிருக்கிறது. எந்த மண்ணை நேசிக்கிறேனோ அந்த மண்ணில் துகள்கள் கண்ணை உறுத்துகின்றன. மேலே குறிப்பிட்ட சங்கதிகளிலிருந்து, நமது தமிழனை மீட்டு, பெரியவர் என்று வியக்காமலும், சிறியவர் என்று இகழாமலும் இருக்கவேண்டுமென்று நமது முன்னோர்களான கணியன் பூங்குன்றனும், வைகுண்டர், வள்ளலார் போன்றவர்களும் அறிவுறுத்தியதை, செயலாக்க வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டதை காட்டுவதற்கே இந்த கட்டுரைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பு, பல தோழர்கள், கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது எழுதும் ஆய்வுக் கட்டுரைகள் மாதிரியல்ல. சாமான்யர்களுக்காக ஒரு சாமான்யன் மேற்கொண்ட கருத்துப் பகிர்வே இது. எனவே, இன்றைய தமிழனை மீட்டு நாளைய நல்லதோர், வல்லதோர் தாயகத் தமிழனை உருவாக்க இப்போதே முயல வேண்டும். இல்லையானால் எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் குண்டர்களின் குண்டு கலாச்சாரத்திற்கு பலியாகலாம். இதற்கு ஒரு கலாச்சார புரட்சி தேவைப்படுகிறது. இல்லையானால் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தாயகத் தமிழனும், தமிழும் காணாமல் போய்விடுவார்கள். இதையே, வாழ்க்கையின் மாலைப் பொழுதில் உள்ள இந்த தாயகத் தமிழ்ச் சமுதாயத்தின் தொண்டனாக கருதும் நான், இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு உயிலின் வரைவுபோல் எழுதி முடிக்கிறேன். எனது கட்டுரைகளை பிரசுரித்த-பிரசுரிக்கும் அத்தனை பத்திரிகைகளுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். {{rh|||தோழமையுடன்,<br>சு. சமுத்திரம்.}}{{nop}}<noinclude></noinclude> lhnjks4zu70q3j9c5ffj76gkemryma6 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/8 250 213814 1839686 670925 2025-07-06T17:32:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|VI||}}</noinclude>{{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 8 |bSize = 381 |cWidth = 26 |cHeight = 24 |oTop = 41 |oLeft = 170 |Location = center |Description = }} {{center|{{X-larger|<b>ஏகலைவன் வெளியீடுகள்</b>}}}} 1. ஒரு மாமரமும், சிறுகதைத் தொகுப்புகள் மரங்கொத்திப் பறவைகளும் ரூ.40-00 2. கோரைப்புற்கள் ரூ.35-00 3. ஈச்சம்பாய் ரூ.35-00 4. ஆகாயமும் பூமியுமாய்... ரூ.40-00 5. சிக்கிமுக்கிக் கற்கள் ரூ.35-00 நாவல்கள் 7. மூட்டம் 2.பாலைப்புறா கட்டுரைத் தொகுப்புகள் ரூ.30-00 ரூ.75-00 1. எனது கதைகளின் கதைகள் ரூ.45-00 2. சமுத்திரம் கட்டுரைகள் ரூ.45-00 3.சு.சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம் (முனைவர் நளினிதேவி) ரூ.35-00 கிடைக்கும் இதுப் பதிப்பகங்கள் மணிவாசகர் பதிப்பகம், 8/7. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS) பார்க் டவுன், சென்னை - 600 003 வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17 விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை - 641 001.<noinclude></noinclude> 1dqr1voxy9iqqth0jtf3rynnv3xhfsx 1839687 1839686 2025-07-06T17:33:18Z மொஹமது கராம் 14681 1839687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|VI||}}</noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 8 |bSize = 381 |cWidth = 26 |cHeight = 24 |oTop = 41 |oLeft = 170 |Location = center |Description = }} {{center|{{X-larger|<b>ஏகலைவன் வெளியீடுகள்}}}} {{U|சிறுகதைத் தொகுப்புகள்</b>}} 1. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும் ரூ.40-00 2. கோரைப்புற்கள் ரூ.35-00 3. ஈச்சம்பாய் ரூ.35-00 4. ஆகாயமும் பூமியுமாய்... ரூ.40-00 5. சிக்கிமுக்கிக் கற்கள் ரூ.35-00 நாவல்கள் 7. மூட்டம் 2.பாலைப்புறா கட்டுரைத் தொகுப்புகள் ரூ.30-00 ரூ.75-00 1. எனது கதைகளின் கதைகள் ரூ.45-00 2. சமுத்திரம் கட்டுரைகள் ரூ.45-00 3.சு.சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம் (முனைவர் நளினிதேவி) ரூ.35-00 கிடைக்கும் இதுப் பதிப்பகங்கள் மணிவாசகர் பதிப்பகம், 8/7. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS) பார்க் டவுன், சென்னை - 600 003 வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17 விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை - 641 001.<noinclude></noinclude> e91acxtcte1btj3ff97u35htafjnq08 1839688 1839687 2025-07-06T17:51:00Z மொஹமது கராம் 14681 1839688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|VI||}}</noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 8 |bSize = 381 |cWidth = 26 |cHeight = 24 |oTop = 41 |oLeft = 170 |Location = center |Description = }} {{center|{{X-larger|<b>ஏகலைவன் வெளியீடுகள்}}}} {{U|சிறுகதைத் தொகுப்புகள்</b>}} {| |- |1. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும் || ரூ. 40-00 |- |2. கோரைப்புற்கள் || ரூ. 35-00 |- |3. ஈச்சம்பாய் || ரூ. 35-00 |- |4. ஆகாயமும் பூமியுமாய்... || ரூ. 40-00 |- |5. சிக்கிமுக்கிக் கற்கள் || ரூ. 35-00 |} {{U|<b>நாவல்கள்</b>}} {| |- |1. மூட்டம் || ரூ. 30-00 |- |2. பாலைப்புறா || ரூ. 75-00 |} {{U|<b>கட்டுரைத் தொகுப்புகள்</b>}} {| |- |1. எனது கதைகளின் கதைகள் || ரூ. 45-00 |- |2. சமுத்திரம் கட்டுரைகள் || ரூ. 45-00 |- |3. சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம் (முனைவர் நளினிதேவி) || ரூ. 35-00 |} கிடைக்கும் இதுப் பதிப்பகங்கள் மணிவாசகர் பதிப்பகம், 8/7. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS) பார்க் டவுன், சென்னை - 600 003 வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17 விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை - 641 001.<noinclude></noinclude> kw7r11i03amcfykbow7xuyt0akto0t8 1839689 1839688 2025-07-06T17:53:23Z மொஹமது கராம் 14681 1839689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|VI||}}</noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 8 |bSize = 381 |cWidth = 26 |cHeight = 24 |oTop = 41 |oLeft = 170 |Location = center |Description = }} {{center|{{X-larger|<b>ஏகலைவன் வெளியீடுகள்}}}} {| |- |{{U|சிறுகதைத் தொகுப்புகள்</b>}} |- |1. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும் || ரூ. 40-00 |- |2. கோரைப்புற்கள் || ரூ. 35-00 |- |3. ஈச்சம்பாய் || ரூ. 35-00 |- |4. ஆகாயமும் பூமியுமாய்... || ரூ. 40-00 |- |5. சிக்கிமுக்கிக் கற்கள் || ரூ. 35-00 |- |{{U|<b>நாவல்கள்</b>}} |- |1. மூட்டம் || ரூ. 30-00 |- |2. பாலைப்புறா || ரூ. 75-00 |} {{U|<b>கட்டுரைத் தொகுப்புகள்</b>}} {| |- |1. எனது கதைகளின் கதைகள் || ரூ. 45-00 |- |2. சமுத்திரம் கட்டுரைகள் || ரூ. 45-00 |- |3. சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம் (முனைவர் நளினிதேவி) || ரூ. 35-00 |} கிடைக்கும் இதுப் பதிப்பகங்கள் மணிவாசகர் பதிப்பகம், 8/7. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS) பார்க் டவுன், சென்னை - 600 003 வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17 விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை - 641 001.<noinclude></noinclude> ca6r8lvzbs42ke21iyg6qcj48measl4 1839690 1839689 2025-07-06T17:55:05Z மொஹமது கராம் 14681 1839690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|VI||}}</noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 8 |bSize = 381 |cWidth = 26 |cHeight = 24 |oTop = 41 |oLeft = 170 |Location = center |Description = }} {{center|{{X-larger|<b>ஏகலைவன் வெளியீடுகள்}}}} {| |- |{{U|<b>சிறுகதைத் தொகுப்புகள்</b>}} |- |1. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும் || ரூ. 40-00 |- |2. கோரைப்புற்கள் || ரூ. 35-00 |- |3. ஈச்சம்பாய் || ரூ. 35-00 |- |4. ஆகாயமும் பூமியுமாய்... || ரூ. 40-00 |- |5. சிக்கிமுக்கிக் கற்கள் || ரூ. 35-00 |- |{{U|<b>நாவல்கள்</b>}} |- |1. மூட்டம் || ரூ. 30-00 |- |2. பாலைப்புறா || ரூ. 75-00 |- |{{U|<b>கட்டுரைத் தொகுப்புகள்</b>}} |- |1. எனது கதைகளின் கதைகள் || ரூ. 45-00 |- |2. சமுத்திரம் கட்டுரைகள் || ரூ. 45-00 |- |3. சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம் (முனைவர் நளினிதேவி) || ரூ. 35-00 |} கிடைக்கும் இதுப் பதிப்பகங்கள் மணிவாசகர் பதிப்பகம், 8/7. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS) பார்க் டவுன், சென்னை - 600 003 வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17 விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை - 641 001.<noinclude></noinclude> tubtvkeuyyhhid9dk5nyig5zmo5k0yg 1839691 1839690 2025-07-06T17:55:49Z மொஹமது கராம் 14681 1839691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|VI||}}</noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 8 |bSize = 381 |cWidth = 26 |cHeight = 24 |oTop = 41 |oLeft = 170 |Location = center |Description = }} {{center|{{X-larger|<b>ஏகலைவன் வெளியீடுகள்</b>}}}} {| |- |{{U|<b>சிறுகதைத் தொகுப்புகள்</b>}} |- |1. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும் || ரூ. 40-00 |- |2. கோரைப்புற்கள் || ரூ. 35-00 |- |3. ஈச்சம்பாய் || ரூ. 35-00 |- |4. ஆகாயமும் பூமியுமாய்... || ரூ. 40-00 |- |5. சிக்கிமுக்கிக் கற்கள் || ரூ. 35-00 |- |{{U|<b>நாவல்கள்</b>}} |- |1. மூட்டம் || ரூ. 30-00 |- |2. பாலைப்புறா || ரூ. 75-00 |- |{{U|<b>கட்டுரைத் தொகுப்புகள்</b>}} |- |1. எனது கதைகளின் கதைகள் || ரூ. 45-00 |- |2. சமுத்திரம் கட்டுரைகள் || ரூ. 45-00 |- |3. சு. சமுத்திரத்தின் சிறுகதை<br>இயக்கம் (முனைவர் நளினிதேவி) || ரூ. 35-00 |} கிடைக்கும் இதுப் பதிப்பகங்கள் மணிவாசகர் பதிப்பகம், 8/7. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS) பார்க் டவுன், சென்னை - 600 003 வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17 விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை - 641 001.<noinclude></noinclude> qysxo1niqlkhgbb8e3eawzuoxsviw7j 1839692 1839691 2025-07-06T17:57:45Z மொஹமது கராம் 14681 1839692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|VI||}}</noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 8 |bSize = 381 |cWidth = 26 |cHeight = 24 |oTop = 41 |oLeft = 170 |Location = center |Description = }} {{center|{{X-larger|<b>ஏகலைவன் வெளியீடுகள்</b>}}}} {| |- |{{U|<b>சிறுகதைத் தொகுப்புகள்</b>}} |- |1. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும் || ரூ. 40-00 |- |2. கோரைப்புற்கள் || ரூ. 35-00 |- |3. ஈச்சம்பாய் || ரூ. 35-00 |- |4. ஆகாயமும் பூமியுமாய்... || ரூ. 40-00 |- |5. சிக்கிமுக்கிக் கற்கள் || ரூ. 35-00 |- |{{U|<b>நாவல்கள்</b>}} |- |1. மூட்டம் || ரூ. 30-00 |- |2. பாலைப்புறா || ரூ. 75-00 |- |{{U|<b>கட்டுரைத் தொகுப்புகள்</b>}} |- |1. எனது கதைகளின் கதைகள் || ரூ. 45-00 |- |2. சமுத்திரம் கட்டுரைகள் || ரூ. 45-00 |- |3. சு. சமுத்திரத்தின் சிறுகதை<br>இயக்கம் (முனைவர் நளினிதேவி) || ரூ. 35-00 |} {{U|<b>கிடைக்கும் இதுரப் பதிப்பகங்கள்</b>}} மணிவாசகர் பதிப்பகம், 8/7. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS) பார்க் டவுன், சென்னை - 600 003 வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17 விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை - 641 001.<noinclude></noinclude> bmrlg4x327iziycg8cdfcvvhfj8k6ks 1839693 1839692 2025-07-06T18:04:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|VI||}}</noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 8 |bSize = 381 |cWidth = 26 |cHeight = 24 |oTop = 41 |oLeft = 170 |Location = center |Description = }} {{center|{{X-larger|<b>ஏகலைவன் வெளியீடுகள்</b>}}}} {| |- |{{U|<b>சிறுகதைத் தொகுப்புகள்</b>}} |- |1. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும் || ரூ. 40-00 |- |2. கோரைப்புற்கள் || ரூ. 35-00 |- |3. ஈச்சம்பாய் || ரூ. 35-00 |- |4. ஆகாயமும் பூமியுமாய்... || ரூ. 40-00 |- |5. சிக்கிமுக்கிக் கற்கள் || ரூ. 35-00 |- |{{U|<b>நாவல்கள்</b>}} |- |1. மூட்டம் || ரூ. 30-00 |- |2. பாலைப்புறா || ரூ. 75-00 |- |{{U|<b>கட்டுரைத் தொகுப்புகள்</b>}} |- |1. எனது கதைகளின் கதைகள் || ரூ. 45-00 |- |2. சமுத்திரம் கட்டுரைகள் || ரூ. 45-00 |- |3. சு. சமுத்திரத்தின் சிறுகதை<br>இயக்கம் (முனைவர் நளினிதேவி) || ரூ. 35-00 |} {{dhr|3em}} {{block_right|{{U|{{larger|<b>கிடைக்கும் இதரப் பதிப்பகங்கள்</b>}}}}<br> மணிவாசகர் பதிப்பகம்,</b><br> 8/7, சிங்கர் தெரு,<br> பாரிமுனை, சென்னை - 600 108.<br> <b>கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS)</b><br> பார்க் டவுன், சென்னை - 600 003.<br> <b>வானதி பதிப்பகம்,</b><br> 13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை - 17. <b>விஜயா பதிப்பகம்,</b><br> 20, ராஜவீதி, கோவை - 641 001.}}{{nop}}<noinclude></noinclude> gwsutu5zbgmjj9nd0empnjr7dhtlwsv 1839694 1839693 2025-07-06T18:05:07Z மொஹமது கராம் 14681 1839694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|VI||}}</noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 8 |bSize = 381 |cWidth = 26 |cHeight = 24 |oTop = 41 |oLeft = 170 |Location = center |Description = }} {{center|{{X-larger|<b>ஏகலைவன் வெளியீடுகள்</b>}}}} {| |- |{{U|<b>சிறுகதைத் தொகுப்புகள்</b>}} |- |1. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும் || ரூ. 40-00 |- |2. கோரைப்புற்கள் || ரூ. 35-00 |- |3. ஈச்சம்பாய் || ரூ. 35-00 |- |4. ஆகாயமும் பூமியுமாய்... || ரூ. 40-00 |- |5. சிக்கிமுக்கிக் கற்கள் || ரூ. 35-00 |- |{{U|<b>நாவல்கள்</b>}} |- |1. மூட்டம் || ரூ. 30-00 |- |2. பாலைப்புறா || ரூ. 75-00 |- |{{U|<b>கட்டுரைத் தொகுப்புகள்</b>}} |- |1. எனது கதைகளின் கதைகள் || ரூ. 45-00 |- |2. சமுத்திரம் கட்டுரைகள் || ரூ. 45-00 |- |3. சு. சமுத்திரத்தின் சிறுகதை<br>இயக்கம் (முனைவர் நளினிதேவி) || ரூ. 35-00 |} {{dhr|3em}} {{block_right|{{U|{{larger|<b>கிடைக்கும் இதரப் பதிப்பகங்கள்}}}}<br> மணிவாசகர் பதிப்பகம்,</b><br> 8/7, சிங்கர் தெரு,<br> பாரிமுனை, சென்னை - 600 108.<br> <b>கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS)</b><br> பார்க் டவுன், சென்னை - 600 003.<br> <b>வானதி பதிப்பகம்,</b><br> 13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை - 17. <b>விஜயா பதிப்பகம்,</b><br> 20, ராஜவீதி, கோவை - 641 001.}}{{nop}}<noinclude></noinclude> f72zawgwng5beelhsef5yvoe6l9lehz 1839854 1839694 2025-07-07T07:21:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|VI||}}</noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>ஏகலைவன் வெளியீடுகள்</b>}}}} {| |- |{{U|<b>சிறுகதைத் தொகுப்புகள்</b>}} |- |1. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும் || ரூ. 40-00 |- |2. கோரைப்புற்கள் || ரூ. 35-00 |- |3. ஈச்சம்பாய் || ரூ. 35-00 |- |4. ஆகாயமும் பூமியுமாய்... || ரூ. 40-00 |- |5. சிக்கிமுக்கிக் கற்கள் || ரூ. 35-00 |- |{{U|<b>நாவல்கள்</b>}} |- |1. மூட்டம் || ரூ. 30-00 |- |2. பாலைப்புறா || ரூ. 75-00 |- |{{U|<b>கட்டுரைத் தொகுப்புகள்</b>}} |- |1. எனது கதைகளின் கதைகள் || ரூ. 45-00 |- |2. சமுத்திரம் கட்டுரைகள் || ரூ. 45-00 |- |3. சு. சமுத்திரத்தின் சிறுகதை<br>இயக்கம் (முனைவர் நளினிதேவி) || ரூ. 35-00 |} {{dhr|3em}} {{right|{{U|{{larger|<b>கிடைக்கும் இதரப் பதிப்பகங்கள்}}}}<br> மணிவாசகர் பதிப்பகம்,</b><br> 8/7, சிங்கர் தெரு,<br> பாரிமுனை, சென்னை - 600 108.<br> <b>கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS)</b><br> பார்க் டவுன், சென்னை - 600 003.<br> <b>வானதி பதிப்பகம்,</b><br> 13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை - 17. <b>விஜயா பதிப்பகம்,</b><br> 20, ராஜவீதி, கோவை - 641 001.}}{{nop}}<noinclude></noinclude> poimgkfhnbbh735mqkcvxotn4m7lcek பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/9 250 213815 1839695 1248970 2025-07-06T18:09:01Z மொஹமது கராம் 14681 1839695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{U|சிப்பிகள்}} 1. ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி 2. எனது முதல் படைப்பு சள 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179<noinclude></noinclude> c4f33oyg6wjpmvajd1bvxf70xyuhc2b 1839696 1839695 2025-07-06T18:13:20Z மொஹமது கராம் 14681 1839696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.9em}}|{{border|bthickness=1px|style={{border-radius|.7em}}|{{center|{{Xxxx-larger|{{U|சிப்பிகள்}}}}}} 1. ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி 2. எனது முதல் படைப்பு சள 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179<noinclude></noinclude> fgslexdwhs6f2tsl8sv0gclcauemtpx 1839697 1839696 2025-07-06T18:14:41Z மொஹமது கராம் 14681 1839697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} <pre>{{{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.9em}}|{{border|bthickness=1px|style={{border-radius|.7em}}|{{center|{{Xxxx-larger|{{U|சிப்பிகள்}}}}}}</pre> 1. ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி 2. எனது முதல் படைப்பு சள 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179<noinclude></noinclude> 34wturpmd6donhdrqtdckmdxvf757lb 1839698 1839697 2025-07-06T18:16:13Z மொஹமது கராம் 14681 1839698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.9em}}|{{border|bthickness=1px|style={{border-radius|.7em}}|'''{{center|{{Xxxx-larger|{{U|சிப்பிகள்}}}}''' 1. ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி 2. எனது முதல் படைப்பு சள 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179<noinclude></noinclude> 0b1hb64ns5kveuwlabe3l8r0r71bztp 1839699 1839698 2025-07-06T18:18:25Z மொஹமது கராம் 14681 1839699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{U|சிப்பிகள்}} {{{border|2=500px|bthickness=4px|style={{border-radius|.9em}}|{{border|bthickness=1px|style={{border-radius|.7em}}|{{center|{{Xxxx-larger|ஆசிரியரின் பிற நூல்கள்}}}} 1. ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி 2. எனது முதல் படைப்பு சள 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179<noinclude></noinclude> hbepsj92186qugj6akltnu4l6302sba 1839700 1839699 2025-07-06T18:19:41Z மொஹமது கராம் 14681 1839700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{box|{{U|சிப்பிகள்}}}} 1. ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி 2. எனது முதல் படைப்பு சள 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179<noinclude></noinclude> n0alf7rpz5cs9vx6ydhtmrulwt5fvp8 1839789 1839700 2025-07-07T04:52:10Z மொஹமது கராம் 14681 1839789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{box|{{U|{{larger|<b>சிப்பிகள்</b>}}}}}} {{Dtpl|dotline=...|1. | [[சமுத்திரம் கட்டுரைகள்/001 | ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி]] | {{DJVU page link| 1 | ̟+1}}}} 1. 2. எனது முதல் படைப்பு சள 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179<noinclude></noinclude> huvng5ozn1us0g70ehsfqrb8q1fo0bv 1839790 1839789 2025-07-07T04:54:04Z மொஹமது கராம் 14681 1839790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{box|{{U|{{larger|<b>சிப்பிகள்</b>}}}}}} {{block_center/s|width=700px|}} {{Dtpl|dotline=...|1. | [[சமுத்திரம் கட்டுரைகள்/001 | ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி]] | {{DJVU page link| 1 |+1}}}} 1. ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி 2. எனது முதல் படைப்பு சள VII 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179<noinclude></noinclude> sb3g08gfy76itwissr6292qhoziriyt 1839791 1839790 2025-07-07T04:54:58Z மொஹமது கராம் 14681 1839791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{c|{{box|{{U|{{larger|<b>சிப்பிகள்</b>}}}}}}}} {{block_center/s|width=700px|}} {{Dtpl|dotline=...|1. | [[சமுத்திரம் கட்டுரைகள்/001 | ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி]] | {{DJVU page link| 1 |+8}}}} 1. ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி 2. எனது முதல் படைப்பு சள VII 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179<noinclude></noinclude> 6zsv7f67qb2e280hvcqfl08ui768xot 1839792 1839791 2025-07-07T04:55:17Z மொஹமது கராம் 14681 1839792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{c|{{box|{{U|{{larger|<b>சிப்பிகள்</b>}}}}}}}} {{block_center/s|width=700px|}} {{Dtpl|dotline=...|1. | [[சமுத்திரம் கட்டுரைகள்/001 | ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி]] | {{DJVU page link| 1 |+7}}}} 1. ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி 2. எனது முதல் படைப்பு சள VII 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179<noinclude></noinclude> 5d4ed582jjsvqdfjh5hhwx043k997zt 1839793 1839792 2025-07-07T04:55:47Z மொஹமது கராம் 14681 1839793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{c|{{box|{{U|{{larger|<b>சிப்பிகள்</b>}}}}}}}} {{block_center/s|width=700px|}} {{Dtpl|dotline=...|1. | [[சமுத்திரம் கட்டுரைகள்/001 | ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி]] | {{DJVU page link| 1 |+9}}}} 1. ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி 2. எனது முதல் படைப்பு சள VII 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179<noinclude></noinclude> q323i3ifq755jo56xrce6m12atcbgnj 1839794 1839793 2025-07-07T04:57:28Z மொஹமது கராம் 14681 1839794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{c|{{box|{{U|{{larger|<b>சிப்பிகள்</b>}}}}}}}} {{block_center/s|width=700px|}} {{Dtpl|dotline=...|1. | [[சமுத்திரம் கட்டுரைகள்/001 | ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி]] | {{DJVU page link| 1 |+9}}}} {{Dtpl|dotline=...|2. | [[சமுத்திரம் கட்டுரைகள்/002 | எனது முதல் படைப்பு]] | {{DJVU page link| 9 |+9}}}} 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179 {{block center/e}}<noinclude></noinclude> hxtisa1wcdsva6hlybtintzdit73dto 1839795 1839794 2025-07-07T04:57:52Z மொஹமது கராம் 14681 1839795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{c|{{box|{{U|{{larger|<b>சிப்பிகள்</b>}}}}}}}} {{dhr|2em}} {{block_center/s|width=700px|}} {{Dtpl|dotline=...|1. | [[சமுத்திரம் கட்டுரைகள்/001 | ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி]] | {{DJVU page link| 1 |+9}}}} {{Dtpl|dotline=...|2. | [[சமுத்திரம் கட்டுரைகள்/002 | எனது முதல் படைப்பு]] | {{DJVU page link| 9 |+9}}}} 8. எழுத்தாணி ஊர்வலம் 4. உயிர்க்கொல்லி விளம்பரங்கள் 5. வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர் 6.சீர்வரிசை முகமூடிகள் 7.படைப்பாளியும் தாய்மொழியும் 8. செல்லரிக்கும் கரையான்கள் 9. மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும் 10. திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும் 11. போராளித் துறவி சாலய்யார்... 14 19 25 29 35 41 48 55 66 12. அரவானிகள் 73 13. வீட்டைக் கட்டிப் பார் 80 14. ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக... 88 இரசா 15. பெரியவரும், தோழரும் 93 76. காரச் சுவையான கலந்துரையாடல் 98 17. பாரதி என்ற மனிதன் 104 18. அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் 110 19. முகடுகளிலும், அடிவாரங்களிலும் 115 20. ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள் 122 21. வேரில் பழுத்த பலா............ .......... 128 22. தாழ்த்தப்பட்ட தமிழிசை ... 23. உலகம்மை-என் அம்மை 24. பதிவு பெறாத படைப்பாளிகள் 25. திராவிட இயக்கப் படைப்பாளிகள் 26. நான் கண்ட காமராசர்- அண்ணா பெரியார் ........ 147 153 162 168 ..... 179 {{block center/e}}<noinclude></noinclude> cymkmj4w3vkrdro13mpyw2olf7ey1kq 1839796 1839795 2025-07-07T05:14:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{c|{{box|{{U|{{larger|<b>சிப்பிகள்</b>}}}}}}}} {{dhr|2em}} {{block_center/s|width=700px|}} {{Dtpl|dotline=...|1. | [[சமுத்திரம் கட்டுரைகள்/001 | ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி]] | {{DJVU page link| 1 |+9}}}} {{Dtpl|dotline=...|2. | [[சமுத்திரம் கட்டுரைகள்/002 | எனது முதல் படைப்பு]] | {{DJVU page link| 9 |+9}}}} {{Dtpl|dotline=...|3. | [[சமுத்திரம் கட்டுரைகள்/003 | எழுத்தாணி ஊர்வலம்]] | {{DJVU page link| 14 |+9}}}} {{Dtpl|dotline=...|4. | [[சமுத்திரம் கட்டுரைகள்/004 | உயிர்க்கொல்லி விளம்பரங்கள்]] | {{DJVU page link| 19 |+9}}}} {{Dtpl|dotline=...|5. | [[சமுத்திரம் கட்டுரைகள்/005 | வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர்]] | {{DJVU page link| 25 |+9}}}} {{Dtpl|dotline=...|6. | [[சமுத்திரம் கட்டுரைகள்/006 | சீர்வரிசை முகமூடிகள்]] | {{DJVU page link| 29 |+9}}}} {{Dtpl|dotline=...|7. | [[சமுத்திரம் கட்டுரைகள்/007 | படைப்பாளியும் தாய்மொழியும்]] | {{DJVU page link| 35 |+9}}}} {{Dtpl|dotline=...|8. | [[சமுத்திரம் கட்டுரைகள்/008 | செல்லரிக்கும் கரையான்கள்]] | {{DJVU page link| 41 |+9}}}} {{Dtpl|dotline=...|9. | [[சமுத்திரம் கட்டுரைகள்/009 | மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும்]] | {{DJVU page link| 48 |+9}}}} {{Dtpl|dotline=...|10. | [[சமுத்திரம் கட்டுரைகள்/010 | திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும்]] | {{DJVU page link| 55 |+9}}}} {{Dtpl|dotline=...|11. | [[சமுத்திரம் கட்டுரைகள்/011 | போராளித் துறவி சாலய்யார்...]] | {{DJVU page link| 66 |+9}}}} {{Dtpl|dotline=...|12. | [[சமுத்திரம் கட்டுரைகள்/012 | அரவானிகள்]] | {{DJVU page link| 73 |+9}}}} {{Dtpl|dotline=...|13. | [[சமுத்திரம் கட்டுரைகள்/013 | வீட்டைக் கட்டிப் பார்]] | {{DJVU page link| 80 |+9}}}} {{Dtpl|dotline=...|14. | [[சமுத்திரம் கட்டுரைகள்/014 | ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக...]] | {{DJVU page link| 88 |+9}}}} {{Dtpl|dotline=...|15. | [[சமுத்திரம் கட்டுரைகள்/015 | பெரியவரும், தோழரும்]] | {{DJVU page link| 93 |+9}}}} {{Dtpl|dotline=...|16. | [[சமுத்திரம் கட்டுரைகள்/016 | காரச் சுவையான கலந்துரையாடல்]] | {{DJVU page link| 98 |+9}}}} {{Dtpl|dotline=...|17. | [[சமுத்திரம் கட்டுரைகள்/017 | பாரதி என்ற மனிதன்]] | {{DJVU page link| 104 |+9}}}} {{Dtpl|dotline=...|18. | [[சமுத்திரம் கட்டுரைகள்/018 | அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள்]] | {{DJVU page link| 110 |+9}}}} {{Dtpl|dotline=...|19. | [[சமுத்திரம் கட்டுரைகள்/019 | முகடுகளிலும், அடிவாரங்களிலும்]] | {{DJVU page link| 115 |+9}}}} {{Dtpl|dotline=...|20. | [[சமுத்திரம் கட்டுரைகள்/020 | ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள்]] | {{DJVU page link| 122 |+9}}}} {{Dtpl|dotline=...|21. | [[சமுத்திரம் கட்டுரைகள்/021 | வேரில் பழுத்த பலா]] | {{DJVU page link| 128 |+9}}}} {{Dtpl|dotline=...|22. | [[சமுத்திரம் கட்டுரைகள்/022 | தாழ்த்தப்பட்ட தமிழிசை]] | {{DJVU page link| 147 |+9}}}} {{Dtpl|dotline=...|23. | [[சமுத்திரம் கட்டுரைகள்/023 | உலகம்மை-என் அம்மை]] | {{DJVU page link| 153 |+9}}}} {{Dtpl|dotline=...|24. | [[சமுத்திரம் கட்டுரைகள்/024 | பதிவு பெறாத படைப்பாளிகள்]] | {{DJVU page link| 162 |+9}}}} {{Dtpl|dotline=...|25. | [[சமுத்திரம் கட்டுரைகள்/025 | திராவிட இயக்கப் படைப்பாளிகள்]] | {{DJVU page link| 168 |+9}}}} {{Dtpl|dotline=...|26. | [[சமுத்திரம் கட்டுரைகள்/026 | நான் கண்ட காமராசர்-அண்ணா-பெரியார்]] | {{DJVU page link| 179 |+9}}}} {{block center/e}}{{nop}}<noinclude></noinclude> rez415abm6zrm0an867hjvif0ubcxzx 1839797 1839796 2025-07-07T05:15:43Z மொஹமது கராம் 14681 1839797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{c|{{box|{{box|{{U|{{larger|<b>சிப்பிகள்</b>}}}}}}}}}} {{dhr|2em}} {{block_center/s|width=700px|}} {{Dtpl|dotline=...|1. | [[சமுத்திரம் கட்டுரைகள்/001 | ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி]] | {{DJVU page link| 1 |+9}}}} {{Dtpl|dotline=...|2. | [[சமுத்திரம் கட்டுரைகள்/002 | எனது முதல் படைப்பு]] | {{DJVU page link| 9 |+9}}}} {{Dtpl|dotline=...|3. | [[சமுத்திரம் கட்டுரைகள்/003 | எழுத்தாணி ஊர்வலம்]] | {{DJVU page link| 14 |+9}}}} {{Dtpl|dotline=...|4. | [[சமுத்திரம் கட்டுரைகள்/004 | உயிர்க்கொல்லி விளம்பரங்கள்]] | {{DJVU page link| 19 |+9}}}} {{Dtpl|dotline=...|5. | [[சமுத்திரம் கட்டுரைகள்/005 | வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர்]] | {{DJVU page link| 25 |+9}}}} {{Dtpl|dotline=...|6. | [[சமுத்திரம் கட்டுரைகள்/006 | சீர்வரிசை முகமூடிகள்]] | {{DJVU page link| 29 |+9}}}} {{Dtpl|dotline=...|7. | [[சமுத்திரம் கட்டுரைகள்/007 | படைப்பாளியும் தாய்மொழியும்]] | {{DJVU page link| 35 |+9}}}} {{Dtpl|dotline=...|8. | [[சமுத்திரம் கட்டுரைகள்/008 | செல்லரிக்கும் கரையான்கள்]] | {{DJVU page link| 41 |+9}}}} {{Dtpl|dotline=...|9. | [[சமுத்திரம் கட்டுரைகள்/009 | மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும்]] | {{DJVU page link| 48 |+9}}}} {{Dtpl|dotline=...|10. | [[சமுத்திரம் கட்டுரைகள்/010 | திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும்]] | {{DJVU page link| 55 |+9}}}} {{Dtpl|dotline=...|11. | [[சமுத்திரம் கட்டுரைகள்/011 | போராளித் துறவி சாலய்யார்...]] | {{DJVU page link| 66 |+9}}}} {{Dtpl|dotline=...|12. | [[சமுத்திரம் கட்டுரைகள்/012 | அரவானிகள்]] | {{DJVU page link| 73 |+9}}}} {{Dtpl|dotline=...|13. | [[சமுத்திரம் கட்டுரைகள்/013 | வீட்டைக் கட்டிப் பார்]] | {{DJVU page link| 80 |+9}}}} {{Dtpl|dotline=...|14. | [[சமுத்திரம் கட்டுரைகள்/014 | ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக...]] | {{DJVU page link| 88 |+9}}}} {{Dtpl|dotline=...|15. | [[சமுத்திரம் கட்டுரைகள்/015 | பெரியவரும், தோழரும்]] | {{DJVU page link| 93 |+9}}}} {{Dtpl|dotline=...|16. | [[சமுத்திரம் கட்டுரைகள்/016 | காரச் சுவையான கலந்துரையாடல்]] | {{DJVU page link| 98 |+9}}}} {{Dtpl|dotline=...|17. | [[சமுத்திரம் கட்டுரைகள்/017 | பாரதி என்ற மனிதன்]] | {{DJVU page link| 104 |+9}}}} {{Dtpl|dotline=...|18. | [[சமுத்திரம் கட்டுரைகள்/018 | அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள்]] | {{DJVU page link| 110 |+9}}}} {{Dtpl|dotline=...|19. | [[சமுத்திரம் கட்டுரைகள்/019 | முகடுகளிலும், அடிவாரங்களிலும்]] | {{DJVU page link| 115 |+9}}}} {{Dtpl|dotline=...|20. | [[சமுத்திரம் கட்டுரைகள்/020 | ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள்]] | {{DJVU page link| 122 |+9}}}} {{Dtpl|dotline=...|21. | [[சமுத்திரம் கட்டுரைகள்/021 | வேரில் பழுத்த பலா]] | {{DJVU page link| 128 |+9}}}} {{Dtpl|dotline=...|22. | [[சமுத்திரம் கட்டுரைகள்/022 | தாழ்த்தப்பட்ட தமிழிசை]] | {{DJVU page link| 147 |+9}}}} {{Dtpl|dotline=...|23. | [[சமுத்திரம் கட்டுரைகள்/023 | உலகம்மை-என் அம்மை]] | {{DJVU page link| 153 |+9}}}} {{Dtpl|dotline=...|24. | [[சமுத்திரம் கட்டுரைகள்/024 | பதிவு பெறாத படைப்பாளிகள்]] | {{DJVU page link| 162 |+9}}}} {{Dtpl|dotline=...|25. | [[சமுத்திரம் கட்டுரைகள்/025 | திராவிட இயக்கப் படைப்பாளிகள்]] | {{DJVU page link| 168 |+9}}}} {{Dtpl|dotline=...|26. | [[சமுத்திரம் கட்டுரைகள்/026 | நான் கண்ட காமராசர்-அண்ணா-பெரியார்]] | {{DJVU page link| 179 |+9}}}} {{block center/e}}{{nop}}<noinclude></noinclude> kkd5ati1is7ihgm0tghn1w2s3m96ovc 1839857 1839797 2025-07-07T07:25:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||VII}}</noinclude>{{dhr|3em}} {{c|{{box|{{box|{{U|{{larger|<b>சிப்பிகள்</b>}}}}}}}}}} {{dhr|2em}} {{block_center/s|width=700px|}} {{Dtpl|dotline=...|1. | [[சமுத்திரம் கட்டுரைகள்/001 | ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி]] | {{DJVU page link| 1 |+9}}}} {{Dtpl|dotline=...|2. | [[சமுத்திரம் கட்டுரைகள்/002 | எனது முதல் படைப்பு]] | {{DJVU page link| 9 |+9}}}} {{Dtpl|dotline=...|3. | [[சமுத்திரம் கட்டுரைகள்/003 | எழுத்தாணி ஊர்வலம்]] | {{DJVU page link| 14 |+9}}}} {{Dtpl|dotline=...|4. | [[சமுத்திரம் கட்டுரைகள்/004 | உயிர்க்கொல்லி விளம்பரங்கள்]] | {{DJVU page link| 19 |+9}}}} {{Dtpl|dotline=...|5. | [[சமுத்திரம் கட்டுரைகள்/005 | வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர்]] | {{DJVU page link| 25 |+9}}}} {{Dtpl|dotline=...|6. | [[சமுத்திரம் கட்டுரைகள்/006 | சீர்வரிசை முகமூடிகள்]] | {{DJVU page link| 29 |+9}}}} {{Dtpl|dotline=...|7. | [[சமுத்திரம் கட்டுரைகள்/007 | படைப்பாளியும் தாய்மொழியும்]] | {{DJVU page link| 35 |+9}}}} {{Dtpl|dotline=...|8. | [[சமுத்திரம் கட்டுரைகள்/008 | செல்லரிக்கும் கரையான்கள்]] | {{DJVU page link| 41 |+9}}}} {{Dtpl|dotline=...|9. | [[சமுத்திரம் கட்டுரைகள்/009 | மிளகாய்ச் சாதமும், மூங்கில் கம்புகளும்]] | {{DJVU page link| 48 |+9}}}} {{Dtpl|dotline=...|10. | [[சமுத்திரம் கட்டுரைகள்/010 | திரைப்பட அபத்தங்களும், ஆபத்துக்களும்]] | {{DJVU page link| 55 |+9}}}} {{Dtpl|dotline=...|11. | [[சமுத்திரம் கட்டுரைகள்/011 | போராளித் துறவி சாலய்யார்...]] | {{DJVU page link| 66 |+9}}}} {{Dtpl|dotline=...|12. | [[சமுத்திரம் கட்டுரைகள்/012 | அரவானிகள்]] | {{DJVU page link| 73 |+9}}}} {{Dtpl|dotline=...|13. | [[சமுத்திரம் கட்டுரைகள்/013 | வீட்டைக் கட்டிப் பார்]] | {{DJVU page link| 80 |+9}}}} {{Dtpl|dotline=...|14. | [[சமுத்திரம் கட்டுரைகள்/014 | ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக...]] | {{DJVU page link| 88 |+9}}}} {{Dtpl|dotline=...|15. | [[சமுத்திரம் கட்டுரைகள்/015 | பெரியவரும், தோழரும்]] | {{DJVU page link| 93 |+9}}}} {{Dtpl|dotline=...|16. | [[சமுத்திரம் கட்டுரைகள்/016 | காரச் சுவையான கலந்துரையாடல்]] | {{DJVU page link| 98 |+9}}}} {{Dtpl|dotline=...|17. | [[சமுத்திரம் கட்டுரைகள்/017 | பாரதி என்ற மனிதன்]] | {{DJVU page link| 104 |+9}}}} {{Dtpl|dotline=...|18. | [[சமுத்திரம் கட்டுரைகள்/018 | அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள்]] | {{DJVU page link| 110 |+9}}}} {{Dtpl|dotline=...|19. | [[சமுத்திரம் கட்டுரைகள்/019 | முகடுகளிலும், அடிவாரங்களிலும்]] | {{DJVU page link| 115 |+9}}}} {{Dtpl|dotline=...|20. | [[சமுத்திரம் கட்டுரைகள்/020 | ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள்]] | {{DJVU page link| 122 |+9}}}} {{Dtpl|dotline=...|21. | [[சமுத்திரம் கட்டுரைகள்/021 | வேரில் பழுத்த பலா]] | {{DJVU page link| 128 |+9}}}} {{Dtpl|dotline=...|22. | [[சமுத்திரம் கட்டுரைகள்/022 | தாழ்த்தப்பட்ட தமிழிசை]] | {{DJVU page link| 147 |+9}}}} {{Dtpl|dotline=...|23. | [[சமுத்திரம் கட்டுரைகள்/023 | உலகம்மை-என் அம்மை]] | {{DJVU page link| 153 |+9}}}} {{Dtpl|dotline=...|24. | [[சமுத்திரம் கட்டுரைகள்/024 | பதிவு பெறாத படைப்பாளிகள்]] | {{DJVU page link| 162 |+9}}}} {{Dtpl|dotline=...|25. | [[சமுத்திரம் கட்டுரைகள்/025 | திராவிட இயக்கப் படைப்பாளிகள்]] | {{DJVU page link| 168 |+9}}}} {{Dtpl|dotline=...|26. | [[சமுத்திரம் கட்டுரைகள்/026 | நான் கண்ட காமராசர்-அண்ணா-பெரியார்]] | {{DJVU page link| 179 |+9}}}} {{block center/e}}{{nop}}<noinclude></noinclude> ply0yj8xdjwf6spcdy1mf9b6d8ghzca பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/10 250 213817 1839848 670743 2025-07-07T07:15:41Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude><b>{{larger|ஆன்மீகப் போராளி}}<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> அவர்னர்கள் என்று இழிவாய் அழைக்கப்பட்ட பதினெட்டு சாதியினர், தோளில் துண்டு போடுவதற்கோ, காலணி அணியவோ, ஓட்டு வீடுகளைக் கட்டவோ, பெண்கள் தோளில் மாரர்ப்பு போடவோ, தடை செய்யப்பட்ட காலத்தில்- இவர்களுக்கு 'குகையாளப் பிறந்த என். குழந்தாய் எழுந்திருடா' என்று அத்தனை பேருக்கும் தலைப்பாகை கட்டி விட்டவர். 'தாழக்கிடப் போரை தற்காப்பதே தர்மம்' என்று முழங்கியவர். வள்ளலாருக்கு முன்பே அன்புக் கொடி கண்டவர். இந்தியா முழுவதும் 80 ஆம் சதவீத மக்கள் தீண்டாமை, தோன்றாமை, காணாமை போன்ற சாதியத் தீமைகளில் முடக்கப்பட்டிருந்த 18 நூற்றாண்டின் தொடக்க காலம். அண்ணல் அம்பேத்கார் பின்னர் குறிப்பிட்டதுபோல், சாதியும் வர்க்கமும் ஒன்றான கொடுங் காலம். இந்தக் கொடுமைகளின் உச்சமாக விளங்கியது தென் திருவாங்கூர் சமஸ்தானம். இந்த உச்சத்தின் மையுமாக கெட்டுப் போனது, இந்த சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியா குமரி. இந்தப் பகுதியில் இரணியல் போன்ற இடங்களில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தாய் வேறு, சேய்வேறாய் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். ந ம் பூதிரி, நாயர்கள் போன் சொக்கத்தங்கத் திற்கு ணையான கவர்னர்' என்ற மேட்டுக்குடியாகவும் வைகுண்டரின் 'அகிலத் திரட்டு அம்மானை' குறிப்பிட்டதுபோல். 'சாணான், இடையன், வணிகன், துலுக்கப் வணியன். பறையன், பட்டர், தோல் சாதி வணிகன். கம்மாளன், ஈழன், கருமறவன், பரவன், கவுண்டன். 1<noinclude></noinclude> 04dcsu1gvkk5wcmxwxt18j27xst0af7 1839849 1839848 2025-07-07T07:16:15Z மொஹமது கராம் 14681 1839849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude><b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> அவர்னர்கள் என்று இழிவாய் அழைக்கப்பட்ட பதினெட்டு சாதியினர், தோளில் துண்டு போடுவதற்கோ, காலணி அணியவோ, ஓட்டு வீடுகளைக் கட்டவோ, பெண்கள் தோளில் மாரர்ப்பு போடவோ, தடை செய்யப்பட்ட காலத்தில்- இவர்களுக்கு 'குகையாளப் பிறந்த என். குழந்தாய் எழுந்திருடா' என்று அத்தனை பேருக்கும் தலைப்பாகை கட்டி விட்டவர். 'தாழக்கிடப் போரை தற்காப்பதே தர்மம்' என்று முழங்கியவர். வள்ளலாருக்கு முன்பே அன்புக் கொடி கண்டவர். இந்தியா முழுவதும் 80 ஆம் சதவீத மக்கள் தீண்டாமை, தோன்றாமை, காணாமை போன்ற சாதியத் தீமைகளில் முடக்கப்பட்டிருந்த 18 நூற்றாண்டின் தொடக்க காலம். அண்ணல் அம்பேத்கார் பின்னர் குறிப்பிட்டதுபோல், சாதியும் வர்க்கமும் ஒன்றான கொடுங் காலம். இந்தக் கொடுமைகளின் உச்சமாக விளங்கியது தென் திருவாங்கூர் சமஸ்தானம். இந்த உச்சத்தின் மையுமாக கெட்டுப் போனது, இந்த சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியா குமரி. இந்தப் பகுதியில் இரணியல் போன்ற இடங்களில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தாய் வேறு, சேய்வேறாய் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். ந ம் பூதிரி, நாயர்கள் போன் சொக்கத்தங்கத் திற்கு ணையான கவர்னர்' என்ற மேட்டுக்குடியாகவும் வைகுண்டரின் 'அகிலத் திரட்டு அம்மானை' குறிப்பிட்டதுபோல். 'சாணான், இடையன், வணிகன், துலுக்கப் வணியன். பறையன், பட்டர், தோல் சாதி வணிகன். கம்மாளன், ஈழன், கருமறவன், பரவன், கவுண்டன். 1<noinclude></noinclude> 8a3wfnvf20al170gnxjkm199lde5oaa 1839851 1839849 2025-07-07T07:17:25Z மொஹமது கராம் 14681 1839851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} <b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80 ஆம் சதவீத மக்கள் தீண்டாமை, தோன்றாமை, காணாமை போன்ற சாதியத் தீமைகளில் முடக்கப்பட்டிருந்த 18 நூற்றாண்டின் தொடக்க காலம். அண்ணல் அம்பேத்கார் பின்னர் குறிப்பிட்டதுபோல், சாதியும் வர்க்கமும் ஒன்றான கொடுங் காலம். இந்தக் கொடுமைகளின் உச்சமாக விளங்கியது தென் திருவாங்கூர் சமஸ்தானம். இந்த உச்சத்தின் மையுமாக கெட்டுப் போனது, இந்த சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியா குமரி. இந்தப் பகுதியில் இரணியல் போன்ற இடங்களில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தாய் வேறு, சேய்வேறாய் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். ந ம் பூதிரி, நாயர்கள் போன் சொக்கத்தங்கத் திற்கு ணையான கவர்னர்' என்ற மேட்டுக்குடியாகவும் வைகுண்டரின் 'அகிலத் திரட்டு அம்மானை' குறிப்பிட்டதுபோல். 'சாணான், இடையன், வணிகன், துலுக்கப் வணியன். பறையன், பட்டர், தோல் சாதி வணிகன். கம்மாளன், ஈழன், கருமறவன், பரவன், கவுண்டன். 1 அவர்னர்கள் என்று இழிவாய் அழைக்கப்பட்ட பதினெட்டு சாதியினர், தோளில் துண்டு போடுவதற்கோ, காலணி அணியவோ, ஓட்டு வீடுகளைக் கட்டவோ, பெண்கள் தோளில் மாரர்ப்பு போடவோ, தடை செய்யப்பட்ட காலத்தில்- இவர்களுக்கு 'குகையாளப் பிறந்த என். குழந்தாய் எழுந்திருடா' என்று அத்தனை பேருக்கும் தலைப்பாகை கட்டி விட்டவர். 'தாழக்கிடப் போரை தற்காப்பதே தர்மம்' என்று முழங்கியவர். வள்ளலாருக்கு முன்பே அன்புக் கொடி கண்டவர்.<noinclude></noinclude> pmm62udee4jdtmenbehqjt3vhok92j4 1839858 1839851 2025-07-07T07:25:40Z மொஹமது கராம் 14681 1839858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} அவர்னர்கள் என்று இழிவாய் அழைக்கப்பட்ட பதினெட்டு சாதியினர், தோளில் துண்டு போடுவதற்கோ, காலணி அணியவோ, ஓட்டு வீடுகளைக் கட்டவோ, பெண்கள் தோளில் மாரர்ப்பு போடவோ, தடை செய்யப்பட்ட காலத்தில்- இவர்களுக்கு 'குகையாளப் பிறந்த என். குழந்தாய் எழுந்திருடா' என்று அத்தனை பேருக்கும் தலைப்பாகை கட்டி விட்டவர். 'தாழக்கிடப் போரை தற்காப்பதே தர்மம்' என்று முழங்கியவர். வள்ளலாருக்கு முன்பே அன்புக் கொடி கண்டவர்.<noinclude></noinclude> 240jyjyjt271hsw6pgg5pscyn8rk920 1839859 1839858 2025-07-07T07:26:04Z மொஹமது கராம் 14681 1839859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} அவர்னர்கள் என்று இழிவாய் அழைக்கப்பட்ட பதினெட்டு சாதியினர், தோளில் துண்டு போடுவதற்கோ, காலணி அணியவோ, ஓட்டு வீடுகளைக் கட்டவோ, பெண்கள் தோளில் மாரர்ப்பு போடவோ, தடை செய்யப்பட்ட காலத்தில்- இவர்களுக்கு 'குகையாளப் பிறந்த என். குழந்தாய் எழுந்திருடா' என்று அத்தனை பேருக்கும் தலைப்பாகை கட்டி விட்டவர். 'தாழக்கிடப் போரை தற்காப்பதே தர்மம்' என்று முழங்கியவர். வள்ளலாருக்கு முன்பே அன்புக் கொடி கண்டவர்.<noinclude></noinclude> g4hcqs55sci7sqnskcpawsmtxmkf98p 1839861 1839859 2025-07-07T07:30:09Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{box|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}<noinclude></noinclude> ngay4lwei7l2t1ahq6jmeowp1gz2jhx 1839862 1839861 2025-07-07T07:31:41Z மொஹமது கராம் 14681 1839862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{border|2=350px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}<noinclude></noinclude> 7kv7by9s1e7rqu3q2hmpkp8j4d7u6lz 1839863 1839862 2025-07-07T07:32:15Z மொஹமது கராம் 14681 1839863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{border|2=100px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}<noinclude></noinclude> on2jgb542b83264pgvh8j2ufg5yyf6o 1839864 1839863 2025-07-07T07:32:28Z மொஹமது கராம் 14681 1839864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{border|2=300px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}<noinclude></noinclude> sdewjwvjshvr52zk4xw5dmpyqre1xwh 1839865 1839864 2025-07-07T07:32:55Z மொஹமது கராம் 14681 1839865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{border|2=300px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}<noinclude></noinclude> 3sclybhazh6hgksxijv7ojkozl4tlgv 1839866 1839865 2025-07-07T07:33:22Z மொஹமது கராம் 14681 1839866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{block_left|{{border|2=300px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}}}<noinclude></noinclude> c3etgk62iephtppkp963zzkcn3w8l04 1839868 1839866 2025-07-07T07:35:14Z மொஹமது கராம் 14681 1839868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{dhr|-10em}} {{block_left|{{border|2=300px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}}}<noinclude></noinclude> 9njdsu97ferc06rxnv2ilt7b2u2o70z 1839869 1839868 2025-07-07T07:35:29Z மொஹமது கராம் 14681 1839869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{dhr|-20em}} {{block_left|{{border|2=300px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}}}<noinclude></noinclude> n7yeetggclcqkqo6i5lnvcem021f4gb 1839870 1839869 2025-07-07T07:35:54Z மொஹமது கராம் 14681 1839870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_left|{{border|2=300px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}}<noinclude></noinclude> qdj78208475007j4cmt6g6xi3cdpqgb 1839871 1839870 2025-07-07T07:36:15Z மொஹமது கராம் 14681 1839871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|30em}} {{block_left|{{border|2=300px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}}<noinclude></noinclude> j4h52yglkzjqu8au1wzoap0lepv2juv 1839873 1839871 2025-07-07T07:36:41Z மொஹமது கராம் 14681 1839873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{block_left|{{border|2=300px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}}}<noinclude></noinclude> tnxekj6qay9lfwkvdf4qwzd9jn6uf3u 1839874 1839873 2025-07-07T07:37:19Z மொஹமது கராம் 14681 1839874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{dhr|-50em}} {{block_left|{{border|2=300px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}}}<noinclude></noinclude> nklw2iokvs5ldw8my6kbp6bgv9xez4p 1839877 1839874 2025-07-07T07:39:24Z மொஹமது கராம் 14681 1839877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{Multicol}} {{block_left|{{border|2=300px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}}} {{Multicol-break}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{Multicol-end}}<noinclude></noinclude> kv1k0yifznp4s5zbz1ikl4yy3nlmazl 1839878 1839877 2025-07-07T07:39:46Z மொஹமது கராம் 14681 1839878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_left|{{border|2=300px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}}} {{Multicol-break}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{Multicol-end}}<noinclude></noinclude> 0ykx0cijwtyg2mq37ly68gz0xqryuca 1839880 1839878 2025-07-07T07:40:28Z மொஹமது கராம் 14681 1839880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{Multicol}} {{dhr|31em}} {{block_left|{{border|2=300px|bthickness=4px|style={{border-radius|.7em}}|அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.}}}} {{Multicol-break}} {{block_right|<b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன்.}} {{Multicol-end}}<noinclude></noinclude> 7rqtpauac2n1t560b4w345y2sek0wav 1839886 1839880 2025-07-07T07:48:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Multicol}} {{dhr|31em}} {{block_right|{{border|2=300px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.</b>}}}} {{Multicol-break}} <b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன். {{Multicol-end}}<noinclude></noinclude> 9lgrho175qsmyqxcg72qd0blswhjzmv 1839924 1839886 2025-07-07T10:11:18Z மொஹமது கராம் 14681 1839924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="1"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|31em}} {{block_right|{{border|2=300px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>அவர்னர்கள் என்று இழிவாய்<br>அழைக்கப்பட்ட பதினெட்டு<br>சாதியினர், தோளில் துண்டு<br>போடுவதற்கோ, காலணி<br>அணியவோ, ஓட்டு வீடுகளைக்<br>கட்டவோ, பெண்கள் தோளில்<br>மாராப்பு போடவோ, தடை<br>செய்யப்பட்ட காலத்தில்-<br> {{dhr|1em}} இவர்களுக்கு ‘குகையாளப்<br>பிறந்த என் குழந்தாய்<br>எழுந்திருடா’ என்று அத்தனை<br>பேருக்கும் தலைப்பாகை கட்டி<br>விட்டவர். ‘தாழக்கிடப் போரை<br>தற்காப்பதே தர்மம்’ என்று<br>முழங்கியவர். வள்ளலாருக்கு<br>முன்பே அன்புக் கொடி கண்டவர்.</b>}}}} {{Multicol-break}} <b>ஆன்மீகப் போராளி<br>{{X-larger|''வைகுண்டசாமி''}}</b> {{dhr|4em}} இந்தியா முழுவதும் 80<br>சதவீத மக்கள் தீண்டாமை,<br>தோன்றாமை, காணாமை<br>போன்ற சாதியத் தீமைகளில்<br>முடக்கப்பட்டிருந்த 18 ஆம்<br>நூற்றாண்டின் தொடக்க காலம்.<br>அண்ணல் அம்பேத்கார் பின்னர்<br>குறிப்பிட்டதுபோல், சாதியும் -<br>வர்க்கமும் ஒன்றான கொடுங்<br>காலம். இந்தக் கொடுமைகளின்<br>உச்சமாக விளங்கியது தென்<br>திருவாங்கூர் சமஸ்தானம். இந்த<br>உச்சத்தின் மையுமாக கெட்டுப்<br>போனது, இந்த சமஸ்தானத்தின்<br>ஒரு பகுதியாக இருந்த கன்னியா<br>குமரி. இந்தப் பகுதியில்<br>இரணியல் போன்ற இடங்களில்,<br>தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட<br>மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்<br>அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.<br>நம்பூதிரி, நாயர்கள் போன்<br>றோர் சொக்கத்தங்கத்<br>திற்கு இணையான கவர்னர்<br>என்ற மேட்டுக்குடியாகவும்,<br>வைகுண்டரின் ‘<b>அகிலத் திரட்டு<br>அம்மானை</b>’ குறிப்பிட்டதுபோல்,<br>சாணான், இடையன், வணிகன்,<br>துலுக்கப் பட்டர், தோல்<br>வணியன், சாதி வணிகன்,<br>பறையன், கம்மாளன், ஈழன்,<br>கருமறவன், பரவன், கவுண்டன். {{Multicol-end}}<noinclude></noinclude> cytj4cpcpeztedindj3lgorpbxisd5r பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/11 250 213819 1839902 670754 2025-07-07T08:19:18Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839902 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|2||ஆள்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>சக்கிலியர் முதலிய பதினெட்டு சாதிகள் அவர்னர்கள் என்றும் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்தது. இந்த இரண்டாவது வகை மக்கனான அவர்னர்கள், இடுப்புக்குக் கீழே துணி உடுத்தவோ, காலணி அணியவோ, ஓடு வேய்ந்த வீடுகளைக் கட்டவோ, குடை பிடிக்கவோ கூடாது. பள்ளிகளிலும், நீதி மன்றங்களிலும், ஆலயங்களிலும் இவர்களுக்கு முழு அடைப்பு. இவர்கள் பசுமாடு வளர்க்கலாகாது. சுவர்னர்களும், அரசாங்கமும் ஏவும் எந்த வேலையையும் கூலி இல்லாமலே செய்து முடிக்க வேண்டும். மேட்டுக் குடியினரிடம் ‘தூங்கப் போகிறேன்’ என்று சொல்லக் கூடாது. ‘தரையில் விழப்போகிறேன்’ என்றே சொல்ல வேண்டும். இந்தக் கொடுமைகளுக்கும் கொடுமையாக இவர்களது பெண்கள் இடுப்புக்கு மேலே எந்த ஆடையும் அணியலாகாது. இடுப்பிலோ செப்புக்குடம் ஏந்தலாகாது. எந்த நகையும் அணியக் கூடாது. இவை போதாது என்று இவர்கள் தாலிக்கு வரி, கையிலுள்ள தடிக்கு வரி, அரிவாளுக்கு வரி, தலைவரி, தாவர வரி, பெண்கள் மார்பகம் துளிர்த்தால் அதற்கும் வரி என்று வரிவரியாக வதைக்கப்பட்டார்கள். இந்த விதிகளை மீறுகிற ஒரு அவர்னரை, எந்த சுவர்னரும் வெட்டிக் கொல்லலாம். இத்தகையக் காலக் கட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, பனையேறித் தொழிலாளியாய் வாழ்க்கையைத் துவக்கிய ஒரு ஆன்மீகப் போராளி சுவர்னர்களான இந்தப் பதினெட்டு சாதி மக்களின் ஆண்களுக்கு தலைப்பாகை கட்டி விடுகிறார். பெண்களை தோள் சீலை அணியச் சொல்கிறார். இவர்களிடம் சாதி என்பது கொடிப்பாம்பு என்றும், <b>‘எல்லோர்க்கும் கொடிப்பாம்பு இருக்குதப்பா சத்ருவாய்... முச்சந்திக்குள் இருந்த பாம்பு உச்சம் பெற்று வருகுதய்யா...’</b> என்று அப்போதே எச்சரிக்கிறார். அனைத்து சாதி மக்களையும் தம் மக்கள் என்கிறார். கூனிக் குறுகிக் கிடந்த இந்த மக்களை <b>‘குகையாளப் பிறந்த என் குழந்தாய்! எழுந்திரிடா!’</b> என்கிறார். ‘அவனவன் செய்த முதலை அவனவன் வைக்க வேண்டும் - அதாவது சமஸ்தானத்துக்கு வரி கொடுக்கலாகாது’ என்று சூளுரைக்கிறார். கும்பினி ஆட்சிக்கார வெள்ளையர்களை ‘வெண்நீசன்’ என்றும், திருவாங்கூர் மன்னனை ‘கலிநீசன் அனந்த நீசன்’ என்றும் பிரகடணப்படுத்துகிறார். தாழக் கிடப்போரை தற்காப்பாதே தர்மம் என்றும் முழங்குகிறார். தன்னைச் சுற்றி அத்தனை அவர்ன சாதிகளையும் ஈர்க்கிறார். இவர்தான், வைகுண்டசாமி என்று பின்னரும், முத்துக்குட்டி சாமி என்று முன்னரும் அழைக்கப்பட்ட மெய்யான வீரத் துறவி. இப்படிப்பட்ட போராளியைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும்? இதனால் இழப்பு அவருக்கா, இந்த சமுதாயத்திற்கா?{{nop}}<noinclude></noinclude> fpy7zpjngjbhsjbdofsvmnr0zd1i53d 1839904 1839902 2025-07-07T08:19:40Z மொஹமது கராம் 14681 1839904 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|2||ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>சக்கிலியர் முதலிய பதினெட்டு சாதிகள் அவர்னர்கள் என்றும் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்தது. இந்த இரண்டாவது வகை மக்கனான அவர்னர்கள், இடுப்புக்குக் கீழே துணி உடுத்தவோ, காலணி அணியவோ, ஓடு வேய்ந்த வீடுகளைக் கட்டவோ, குடை பிடிக்கவோ கூடாது. பள்ளிகளிலும், நீதி மன்றங்களிலும், ஆலயங்களிலும் இவர்களுக்கு முழு அடைப்பு. இவர்கள் பசுமாடு வளர்க்கலாகாது. சுவர்னர்களும், அரசாங்கமும் ஏவும் எந்த வேலையையும் கூலி இல்லாமலே செய்து முடிக்க வேண்டும். மேட்டுக் குடியினரிடம் ‘தூங்கப் போகிறேன்’ என்று சொல்லக் கூடாது. ‘தரையில் விழப்போகிறேன்’ என்றே சொல்ல வேண்டும். இந்தக் கொடுமைகளுக்கும் கொடுமையாக இவர்களது பெண்கள் இடுப்புக்கு மேலே எந்த ஆடையும் அணியலாகாது. இடுப்பிலோ செப்புக்குடம் ஏந்தலாகாது. எந்த நகையும் அணியக் கூடாது. இவை போதாது என்று இவர்கள் தாலிக்கு வரி, கையிலுள்ள தடிக்கு வரி, அரிவாளுக்கு வரி, தலைவரி, தாவர வரி, பெண்கள் மார்பகம் துளிர்த்தால் அதற்கும் வரி என்று வரிவரியாக வதைக்கப்பட்டார்கள். இந்த விதிகளை மீறுகிற ஒரு அவர்னரை, எந்த சுவர்னரும் வெட்டிக் கொல்லலாம். இத்தகையக் காலக் கட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, பனையேறித் தொழிலாளியாய் வாழ்க்கையைத் துவக்கிய ஒரு ஆன்மீகப் போராளி சுவர்னர்களான இந்தப் பதினெட்டு சாதி மக்களின் ஆண்களுக்கு தலைப்பாகை கட்டி விடுகிறார். பெண்களை தோள் சீலை அணியச் சொல்கிறார். இவர்களிடம் சாதி என்பது கொடிப்பாம்பு என்றும், <b>‘எல்லோர்க்கும் கொடிப்பாம்பு இருக்குதப்பா சத்ருவாய்... முச்சந்திக்குள் இருந்த பாம்பு உச்சம் பெற்று வருகுதய்யா...’</b> என்று அப்போதே எச்சரிக்கிறார். அனைத்து சாதி மக்களையும் தம் மக்கள் என்கிறார். கூனிக் குறுகிக் கிடந்த இந்த மக்களை <b>‘குகையாளப் பிறந்த என் குழந்தாய்! எழுந்திரிடா!’</b> என்கிறார். ‘அவனவன் செய்த முதலை அவனவன் வைக்க வேண்டும் - அதாவது சமஸ்தானத்துக்கு வரி கொடுக்கலாகாது’ என்று சூளுரைக்கிறார். கும்பினி ஆட்சிக்கார வெள்ளையர்களை ‘வெண்நீசன்’ என்றும், திருவாங்கூர் மன்னனை ‘கலிநீசன் அனந்த நீசன்’ என்றும் பிரகடணப்படுத்துகிறார். தாழக் கிடப்போரை தற்காப்பாதே தர்மம் என்றும் முழங்குகிறார். தன்னைச் சுற்றி அத்தனை அவர்ன சாதிகளையும் ஈர்க்கிறார். இவர்தான், வைகுண்டசாமி என்று பின்னரும், முத்துக்குட்டி சாமி என்று முன்னரும் அழைக்கப்பட்ட மெய்யான வீரத் துறவி. இப்படிப்பட்ட போராளியைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும்? இதனால் இழப்பு அவருக்கா, இந்த சமுதாயத்திற்கா?{{nop}}<noinclude></noinclude> f8l727tno70sj03v2fahe5ljnp4gkfo பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/12 250 213821 1839906 670765 2025-07-07T08:25:53Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839906 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||3}}</noinclude>வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது என்றான் மக்கள் எதிரியாக விளங்கிய இட்லர். வரலாற்றில் உண்மையை மறைப்பதும் ஒருவிதப் பொய்யே என்றார் மனிதநேயப் படைப்பாளியான லியோ டால்ஸ்டாய். இந்த இரண்டு எதிர்முனைகளுக்கும் இடையே மெய்யும், மெய்கலந்த பொய்யும், மெய்தவிர்த்த பொய்யுமாய் எழுதப்பட்டதே வரலாறு. இதனால்தான், ஜான் கந்தர், அண்ணல் காந்தியை ‘நழுவும் ஆசாமி’ என்றான். 1857ல் கல்கத்தாவில் ஏற்பட்ட சிப்பாய்க் கலகம், முதல் சுதந்திரப் போராக வரலாற்றுச் சிறப்பு பெற்று, அதற்கு முன்பே வேலூரில் ஏற்பட்ட சிப்பாய்க் கலகம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. விடுதலைப் போர், வங்காள சந்நியாசிகளால் துவக்கப்பட்டது என்பது பொய் கலந்த மெய்யென்றால், இவர்களுக்கு முன்பே வாழ்ந்த வைகுண்டசாமியைப் பற்றிய மௌனம் மெய்தவிர்த்த பொய்யாகும். இத்தகைய வரலாற்றுப் புதை மண்ணிலிருந்து வைகுண்டசாமி போன்ற ஆன்மீகப் போராளிகளை மீட்டெடுத்து, சாதிக்குப் பலியாகும் இன்றைய சராசரித் தமிழனிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது இப்போதையக் கட்டாயக் கடமையாகும். ஒரு லட்சியப் போராட்டத்திற்கான வரலாற்றில் இறுதிக் கட்டத்தில் வெல்கிறவர்களே அறியப்படுகிறார்கள். இதே லட்சியத்திற்காக, ஆரம்பத்தில் போராடியவர்கள் வரலாற்று வெள்ளத்தில் மூழ்கிப் போகிறார்கள். அப்படிப்பட்ட வெள்ளமும் இதற்கு ஏதுவாக, அதன் போக்கில் விடப்படாமல் விருப்பு, வெறுப்பு என்ற அணைகளால் கட்டப்பட்டு தேக்கப்படுகிறது. இதனால்தான் ஒரு அம்பேத்காரை தெரியும் நமக்கு, ஒரு அயோத்தி தாசரையோ, இரட்டை மலை சீனிவாசனையோ அதிகம் தெரியாது. அண்ணல் காந்தியைத் தெரிந்த அளவிற்கு, ஒரு திலகரையோ, ஒரு வ.உ.சி.யையோ தெரியாது. பகத்சிங்கைத் தெரிந்த அளவிற்கு ஒரு வாஞ்சி நாதனைத் தெரியாது. திருத்தணிப் போராட்டத்தை நடத்திய மா.பொ.சிவஞானம் அவர்களைத் தெரியும். ஆனால் அவருக்கு முன்பே திருத்தணி தமிழகத்தோடு சேர வேண்டும் என்று வீடு வீடாக இயக்கம் நடத்திய மங்கலம் கிழாரைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும்? இது வரலாற்றுக் குற்றத்தோடு வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளாத குற்றமும் ஆகும். இந்தக் குற்றங்களால் மக்களுக்கு பரந்த அளவில் எடுத்துச் சொல்ல முடியாதபடி முடக்கப்பட்ட போராளிகளில் வைகுண்டரும் ஒருவர். <b>சாமித்தோப்பு சாமி</b> கன்னியாகுமரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள பூவண்டன் தோப்பில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்<noinclude></noinclude> 2sv859fd11jg8vo4l5id5bwcxktlp9a பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/13 250 213823 1839907 670776 2025-07-07T08:49:03Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839907 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|4||ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>இப்போது வைகுண்ட சாமி என்று பயபக்தியோடு கூறப்படும். அழைக்கப்படும் முத்துக்குட்டி சாமி. ஆரம்பத்தில் பெற்றோர்கள் இவருக்கு ‘முடி சூடிய பெருமாள்’ என்றுதான் பெயரிட்டார்கள். ஆனால் சுவர்னர்களும், அரசுப் பிரதிநிதிகளும் எளிய சாதியினர் இந்தப் பெயரை வைக்கலாகாது என்று இவரது பெற்றோரை அச்சுறுத்தவே, முடி சூடிய பெருமாள், <b>‘முத்துக்குட்டி’</b> ஆனார். 1809ஆம் ஆண்டில் பிறந்த இவர், இருபத்தி நான்கு வயது வரை ஒரு பனையேறித் தொழிலாளியாகவோ அல்லது சிறு விவசாயியாகவோ வாழ்ந்திருக்கிறார். இதற்குப் பிறகு சரும நோயால் அவதிப்பட்டு பெற்றோரால் திருச்செந்தூர் கொண்டு போகப்பட்டு, கடலுக்குள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு கடலில் இருந்து ‘விஞ்சை’ (ஞானம்) பெற்று மீண்டு, பூவண்டன் தோப்பிற்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. அங்கே, கலிநீசன் ஆட்சி முடிய இரண்டாண்டுகள், பெண்ணடிமை ஒழிய ஒழிய இரண்டாண்டுகள், செங்கோலாட்சி மலர இரண்டாண்டுகள் என்று ஆறாண்டு காலம் தவமிருந்திருக்கிறார். <b>சிறையும்-எதிர்வினையும்</b> அந்தத் தவக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் இவரை தரிசித்து, தலையில் தலைப்பாகையோடும், தோளில் சேலையோடும் புது மனிதர்களாய் மாறியிருக்கிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த மேட்டுக்குடியினரின் தூண்டுதலால் சுவாதித் திருநாள் மன்னன் 1836ஆம் ஆண்டு இவரைப் பிடித்து, திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள சிங்காரத் தோப்பில் சிறை வைத்து, சித்தரவதை செய்வித்திருக்கிறான். இறுதியில் ஒரு கூண்டில் பசியோடு இருந்த புலியோடு இவரைத் தள்ளியதாகவும், ஆனால் முத்துக்குட்டி சாமியிடம் அந்தப் புலி மண்டியிட்டதாகவும் கூறப்படுகிறது. மன்னன் பயந்துபோய், இவரை நூற்றுப்பத்துநாள் சிறைவாசத்திற்குப் பிறகு சொந்த சாதி அல்லாத எந்தச் சாதியோடும் சேரலாகாது என்ற நிபந்தனையோடு விடுதலை செய்ததாகவும் அறியப்படுகிறது. இதுமுதல் முத்துக்குட்டி, <b>“வைகுண்ட சாமியானார்”</b> சொந்த ஊருக்கு மீண்ட வைகுண்டர் மேலும் வேகமாகத்தான் செயல்பட்டிருக்கிறார். மன்னனின் அறிவுரைக்கு எதிர் வினையாகவே இயங்கி இருக்கிறார். மதத்தை அறிவுப் பூர்வமாகவும், ஞான ஒளியாகவும் எடுத்துக்கொண்ட மேட்டுக்குடி மக்கள், அதே மதத்தை இந்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உணர்வு மயமாக ஆக்கி இருப்பதை புரிந்துகொண்ட வைகுண்டர், ஆடுகோழி பலியிடுவது ஆயனுக்குத்<noinclude></noinclude> sljcl7dr0w0wqx6wjt4ic0vn5bam2kd 1839908 1839907 2025-07-07T08:49:23Z மொஹமது கராம் 14681 1839908 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|4||ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>இப்போது வைகுண்ட சாமி என்று பயபக்தியோடு கூறப்படும். அழைக்கப்படும் முத்துக்குட்டி சாமி. ஆரம்பத்தில் பெற்றோர்கள் இவருக்கு ‘முடி சூடிய பெருமாள்’ என்றுதான் பெயரிட்டார்கள். ஆனால் சுவர்னர்களும், அரசுப் பிரதிநிதிகளும் எளிய சாதியினர் இந்தப் பெயரை வைக்கலாகாது என்று இவரது பெற்றோரை அச்சுறுத்தவே, முடி சூடிய பெருமாள், <b>‘முத்துக்குட்டி’</b> ஆனார். 1809ஆம் ஆண்டில் பிறந்த இவர், இருபத்தி நான்கு வயது வரை ஒரு பனையேறித் தொழிலாளியாகவோ அல்லது சிறு விவசாயியாகவோ வாழ்ந்திருக்கிறார். இதற்குப் பிறகு சரும நோயால் அவதிப்பட்டு பெற்றோரால் திருச்செந்தூர் கொண்டு போகப்பட்டு, கடலுக்குள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு கடலில் இருந்து ‘விஞ்சை’ (ஞானம்) பெற்று மீண்டு, பூவண்டன் தோப்பிற்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. அங்கே, கலிநீசன் ஆட்சி முடிய இரண்டாண்டுகள், பெண்ணடிமை ஒழிய ஒழிய இரண்டாண்டுகள், செங்கோலாட்சி மலர இரண்டாண்டுகள் என்று ஆறாண்டு காலம் தவமிருந்திருக்கிறார். <b>சிறையும்—எதிர்வினையும்</b> அந்தத் தவக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் இவரை தரிசித்து, தலையில் தலைப்பாகையோடும், தோளில் சேலையோடும் புது மனிதர்களாய் மாறியிருக்கிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த மேட்டுக்குடியினரின் தூண்டுதலால் சுவாதித் திருநாள் மன்னன் 1836ஆம் ஆண்டு இவரைப் பிடித்து, திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள சிங்காரத் தோப்பில் சிறை வைத்து, சித்தரவதை செய்வித்திருக்கிறான். இறுதியில் ஒரு கூண்டில் பசியோடு இருந்த புலியோடு இவரைத் தள்ளியதாகவும், ஆனால் முத்துக்குட்டி சாமியிடம் அந்தப் புலி மண்டியிட்டதாகவும் கூறப்படுகிறது. மன்னன் பயந்துபோய், இவரை நூற்றுப்பத்துநாள் சிறைவாசத்திற்குப் பிறகு சொந்த சாதி அல்லாத எந்தச் சாதியோடும் சேரலாகாது என்ற நிபந்தனையோடு விடுதலை செய்ததாகவும் அறியப்படுகிறது. இதுமுதல் முத்துக்குட்டி, <b>“வைகுண்ட சாமியானார்”</b> சொந்த ஊருக்கு மீண்ட வைகுண்டர் மேலும் வேகமாகத்தான் செயல்பட்டிருக்கிறார். மன்னனின் அறிவுரைக்கு எதிர் வினையாகவே இயங்கி இருக்கிறார். மதத்தை அறிவுப் பூர்வமாகவும், ஞான ஒளியாகவும் எடுத்துக்கொண்ட மேட்டுக்குடி மக்கள், அதே மதத்தை இந்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உணர்வு மயமாக ஆக்கி இருப்பதை புரிந்துகொண்ட வைகுண்டர், ஆடுகோழி பலியிடுவது ஆயனுக்குத்<noinclude></noinclude> a1xvvwb48ff38orz4u1q6i45gcu409b 1839909 1839908 2025-07-07T08:49:48Z மொஹமது கராம் 14681 1839909 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|4||ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>இப்போது வைகுண்ட சாமி என்று பயபக்தியோடு கூறப்படும். அழைக்கப்படும் முத்துக்குட்டி சாமி. ஆரம்பத்தில் பெற்றோர்கள் இவருக்கு ‘முடி சூடிய பெருமாள்’ என்றுதான் பெயரிட்டார்கள். ஆனால் சுவர்னர்களும், அரசுப் பிரதிநிதிகளும் எளிய சாதியினர் இந்தப் பெயரை வைக்கலாகாது என்று இவரது பெற்றோரை அச்சுறுத்தவே, முடி சூடிய பெருமாள், <b>‘முத்துக்குட்டி’</b> ஆனார். 1809ஆம் ஆண்டில் பிறந்த இவர், இருபத்தி நான்கு வயது வரை ஒரு பனையேறித் தொழிலாளியாகவோ அல்லது சிறு விவசாயியாகவோ வாழ்ந்திருக்கிறார். இதற்குப் பிறகு சரும நோயால் அவதிப்பட்டு பெற்றோரால் திருச்செந்தூர் கொண்டு போகப்பட்டு, கடலுக்குள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு கடலில் இருந்து ‘விஞ்சை’ (ஞானம்) பெற்று மீண்டு, பூவண்டன் தோப்பிற்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. அங்கே, கலிநீசன் ஆட்சி முடிய இரண்டாண்டுகள், பெண்ணடிமை ஒழிய ஒழிய இரண்டாண்டுகள், செங்கோலாட்சி மலர இரண்டாண்டுகள் என்று ஆறாண்டு காலம் தவமிருந்திருக்கிறார். <b>சிறையும்—எதிர்வினையும்</b> அந்தத் தவக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் இவரை தரிசித்து, தலையில் தலைப்பாகையோடும், தோளில் சேலையோடும் புது மனிதர்களாய் மாறியிருக்கிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த மேட்டுக்குடியினரின் தூண்டுதலால் சுவாதித் திருநாள் மன்னன் 1836ஆம் ஆண்டு இவரைப் பிடித்து, திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள சிங்காரத் தோப்பில் சிறை வைத்து, சித்தரவதை செய்வித்திருக்கிறான். இறுதியில் ஒரு கூண்டில் பசியோடு இருந்த புலியோடு இவரைத் தள்ளியதாகவும், ஆனால் முத்துக்குட்டி சாமியிடம் அந்தப் புலி மண்டியிட்டதாகவும் கூறப்படுகிறது. மன்னன் பயந்துபோய், இவரை நூற்றுப்பத்துநாள் சிறைவாசத்திற்குப் பிறகு சொந்த சாதி அல்லாத எந்தச் சாதியோடும் சேரலாகாது என்ற நிபந்தனையோடு விடுதலை செய்ததாகவும் அறியப்படுகிறது. இதுமுதல் முத்துக்குட்டி, <b>“வைகுண்ட சாமியானார்.”</b> சொந்த ஊருக்கு மீண்ட வைகுண்டர் மேலும் வேகமாகத்தான் செயல்பட்டிருக்கிறார். மன்னனின் அறிவுரைக்கு எதிர் வினையாகவே இயங்கி இருக்கிறார். மதத்தை அறிவுப் பூர்வமாகவும், ஞான ஒளியாகவும் எடுத்துக்கொண்ட மேட்டுக்குடி மக்கள், அதே மதத்தை இந்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உணர்வு மயமாக ஆக்கி இருப்பதை புரிந்துகொண்ட வைகுண்டர், ஆடுகோழி பலியிடுவது ஆயனுக்குத்<noinclude></noinclude> o738qahm1by1la7tublougxfdrzx011 1839910 1839909 2025-07-07T08:50:03Z மொஹமது கராம் 14681 1839910 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|4||ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>இப்போது வைகுண்ட சாமி என்று பயபக்தியோடு கூறப்படும். அழைக்கப்படும் முத்துக்குட்டி சாமி. ஆரம்பத்தில் பெற்றோர்கள் இவருக்கு ‘முடி சூடிய பெருமாள்’ என்றுதான் பெயரிட்டார்கள். ஆனால் சுவர்னர்களும், அரசுப் பிரதிநிதிகளும் எளிய சாதியினர் இந்தப் பெயரை வைக்கலாகாது என்று இவரது பெற்றோரை அச்சுறுத்தவே, முடி சூடிய பெருமாள், <b>‘முத்துக்குட்டி’</b> ஆனார். 1809ஆம் ஆண்டில் பிறந்த இவர், இருபத்தி நான்கு வயது வரை ஒரு பனையேறித் தொழிலாளியாகவோ அல்லது சிறு விவசாயியாகவோ வாழ்ந்திருக்கிறார். இதற்குப் பிறகு சரும நோயால் அவதிப்பட்டு பெற்றோரால் திருச்செந்தூர் கொண்டு போகப்பட்டு, கடலுக்குள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு கடலில் இருந்து ‘விஞ்சை’ (ஞானம்) பெற்று மீண்டு, பூவண்டன் தோப்பிற்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. அங்கே, கலிநீசன் ஆட்சி முடிய இரண்டாண்டுகள், பெண்ணடிமை ஒழிய ஒழிய இரண்டாண்டுகள், செங்கோலாட்சி மலர இரண்டாண்டுகள் என்று ஆறாண்டு காலம் தவமிருந்திருக்கிறார். <b>சிறையும்—எதிர்வினையும்</b> அந்தத் தவக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் இவரை தரிசித்து, தலையில் தலைப்பாகையோடும், தோளில் சேலையோடும் புது மனிதர்களாய் மாறியிருக்கிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த மேட்டுக்குடியினரின் தூண்டுதலால் சுவாதித் திருநாள் மன்னன் 1836ஆம் ஆண்டு இவரைப் பிடித்து, திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள சிங்காரத் தோப்பில் சிறை வைத்து, சித்தரவதை செய்வித்திருக்கிறான். இறுதியில் ஒரு கூண்டில் பசியோடு இருந்த புலியோடு இவரைத் தள்ளியதாகவும், ஆனால் முத்துக்குட்டி சாமியிடம் அந்தப் புலி மண்டியிட்டதாகவும் கூறப்படுகிறது. மன்னன் பயந்துபோய், இவரை நூற்றுப்பத்துநாள் சிறைவாசத்திற்குப் பிறகு சொந்த சாதி அல்லாத எந்தச் சாதியோடும் சேரலாகாது என்ற நிபந்தனையோடு விடுதலை செய்ததாகவும் அறியப்படுகிறது. இதுமுதல் முத்துக்குட்டி, <b>“வைகுண்ட சாமியானார்”.</b> சொந்த ஊருக்கு மீண்ட வைகுண்டர் மேலும் வேகமாகத்தான் செயல்பட்டிருக்கிறார். மன்னனின் அறிவுரைக்கு எதிர் வினையாகவே இயங்கி இருக்கிறார். மதத்தை அறிவுப் பூர்வமாகவும், ஞான ஒளியாகவும் எடுத்துக்கொண்ட மேட்டுக்குடி மக்கள், அதே மதத்தை இந்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உணர்வு மயமாக ஆக்கி இருப்பதை புரிந்துகொண்ட வைகுண்டர், ஆடுகோழி பலியிடுவது ஆயனுக்குத்<noinclude></noinclude> gdrul2zciaxzt7m2dp0g4zk1ye07k0d பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/14 250 213825 1839920 670787 2025-07-07T10:05:38Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839920 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||5}}</noinclude>தேவையில்லை என்றும் பரம்பொருளுக்கு காணிக்கையோ, காவடியோ அவசியமில்லை என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். கடவுளை வேட்டையாடும் மாடன்களாகவும், பயமுறுத்தும் பேச்சியம்மாக்களாகவும் பார்த்துக் கொண்டிருந்த தாழக்கிடந்த மக்களை அதே மதத்தை மேட்டுக்குடியினர் போல் அறிவுப் பூர்வமாக அணுகச் செய்திருக்கிறார். பெரும்பாலான கிராமங்களில் நிழல் தாங்கல்கள் என்ற சிறு சிறு கோவில்களை நிறுவி, அங்கே தீபமேற்றி அந்தத் தீபத்தின் அருவ வழிபாட்டில் இந்த மக்களை ஈடுபடுத்தியிருக்கிறார். மேட்டுக்குடியினரே அரைகுறை ஆடையோடு ஆலயம் சென்று வழிபட்டபோது, இந்த ஏழை எளிய மக்கள் தலைப்பாகை கட்டி கோவிலுக்குள் சென்றது வைகுண்டரின் மிகப்பெரிய ஆன்மீகப் புரட்சியாகும். அதோடு இவர்களை ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவதற்காக காவி நிறத்தில் தீபம் பொறித்த அன்புக் கொடி ஒன்றையும் ஆக்கியிருக்கிறார். இவரது முறையில் வழிபடும் மக்கள், <b>“அன்புக் கொடி மக்கள்”</b> என்று இப்போதும் அழைக்கப்படுகிறார்கள். சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவி சாதிபேதமற்ற சமயக் கொடியை ஏற்றுவித்த வள்ளலாருக்கு முன்பே, வைகுண்டர், இப்படி ஒரு கொடியை உருவாக்கியது இன்றைய ஆன்மீகவாதிகளுக்கே தெரியாது. <b>துவையல் பந்தி—முத்திரிக் கிணறு...</b> மேட்டுக்குடியினர், கீழ்க் குடியினரை அழுக்காக்கியும், அந்த அழுக்கிலேயே ஆழ்த்தியும் கைகொட்டி நகைத்த காலத்தில் தூய்மையின் அவசியத்தை உணர்ந்த வைகுண்டர், துவையல் பந்தி என்ற ஒரு செயல் முறைமையை கொண்டு வந்திருக்கிறார். இதன்படி அத்தனை சாதியினரும், கடலில் நீராடி, மதியம் பச்சரிசி, பயிறு சாதத்துடன் ஒன்றாய் உண்டு-ஒன்றாய் உறவாடி இருக்கிறார்கள். இந்தப் பந்தி, வையம்பதி என்ற இடத்தில் வைகுண்டரின் தலைமையில் ஆறு மாத காலம் நடந்திருக்கிறது. இதனால் வெகுண்ட மேட்டுக் குடியினர் இந்தப் பந்தியில் கலந்து கொண்ட மக்களைச் சிதறடித்ததாகவும், இதையும் மீறி இந்தத் துவையல் பந்தி பல இடங்களில் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. இன்று சமபந்தி போஜனம் தொலைக்காட்சி, பத்திரிகைகள் சாட்சியாக நடத்தப்படுகிறது. இதற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே, இதைவிடச் சிறப்பான முத்திரிக் கிணறு என்ற இன்னொரு செயல்பாட்டு முறைமையை வைகுண்டர் கொண்டு வந்திருக்கிறார். இதன்படி இவர் தவமிருந்த தாமரைப்பதிக்கு அருகே, ஒரு கிணறு வெட்டப்பட்டுள்ளது. ஊர்க் கிணறுகளில் எட்டிப் பார்க்கக்கூட உரிமை<noinclude></noinclude> mlafrbpadel9atq04d6d3mzat3uxg9j பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/15 250 213828 1839923 670799 2025-07-07T10:10:27Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839923 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|6||ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>இல்லாத அத்தனை எளிய மக்களும் இந்தக் கோவில் குளத்தில் குளித்து விட்டு, வைகுண்டரின் வேண்டுகோளின்படி கொண்டுவந்த அரிசி, பருப்பு வகையறாக்களை சமைத்து இவரது முன்னிலையில் ஒன்றாக உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். இப்போது, தமிழக அரசு சாதியச் சண்டைகளை தீர்ப்பதற்கு சமத்துவபுரங்களை அமைத்து வருகிறது. கலைஞர் இதற்கு பெருமுயற்சி எடுக்கிறார். ஆனால், எங்கேயோ ஒரு மூலையில் ஒரு சாமானியனாய்ப் பிறந்த வைகுண்டரோ அனைத்து அவர்னர் சாதிகளும் ஒன்றாக ஒரே இடத்தில் வீடுகட்டி வாழ்வதற்கு வழி செய்திருக்கிறார். ஓடு வேய்ந்த வீடுகளை எளிய சாதியினர் கட்டக்கூடாது என்று மேட்டுக்குடியினரும், அவர்களுக்காகவே ஆட்சி செய்த அரசும் கொடிய சட்டத்தைப் போட்டிருந்தபோது, வைகுண்டர் இதற்கு சவால் இடுவதுபோல் முட்டம்பதி என்ற இடத்தில் அனைத்துச் சாதிகளையும் கொண்ட ஒரு குல குடியிருப்பை நிறுவியிருக்கிறார். ஆனாலும் யாது காரணத்தாலோ இந்த குடியிருப்புக்கள் பரவலாகவில்லை. <b>தோள் சீலைப் போராட்டம்</b> எல்லாவற்றிற்கும் மேலாக எளிய சாதிப் பெண்கள் ஆடு மாடுகளைப்போல் இடுப்புக்கு மேல் எதுவுமின்றி அலைந்து கொண்டிருந்த காலத்தில் - அதுவும் அண்மையில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் மேலாடை போட்டு வாழ்ந்த பெண்கள்கூட கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்யாணமாகி விட்டால் மேலாடையை எடுத்துவிட வேண்டும் என்ற விதிவிலக்கில்லாத கொடூரச் சட்டம் இருந்தபோது, இத்தகையப் பெண்களுக்கு சுய மரியாதையைக் கொடுத்தவர் வைகுண்டர். இவருக்கு முன்பே <b>மீட்பாதிரியார்</b> போன்ற கிறிஸ்தவ மத போதகர்கள் அந்த மதத்தில் சேர்ந்த பெண்களை குப்பாயம் போட வைத்து, அதனால் எழுந்த தோள் சீலை போராட்டத்திற்கு தலைமை தாங்கியிருக்கிறார்கள். மூன்று கட்டங்களில் முப்பத்தேழு ஆண்டுகள் நடந்த கன்னியாகுமரி பகுதி பெண்களின் தோள் சீலை போராட்டத்தின் இறுதிக் கட்டம் அழுத்தம் பெறவும், எளிய சாதி இந்துப் பெண்கள் அதில் ஈடுபடுவதற்கும் வைகுண்டரின் தாக்கம் முக்கிய காரணம். நமது பெண்ணியவாதிகளுக்கும், பெண்ணிய இயக்கங்களுக்கும் தெரியாத இந்த தோள் சீலை போராட்டம் சிவகங்கை வரை வந்துள்ளது. எளிய சாதியைச் சேர்ந்த ஏராளமான ஆடவர்களும் பெண்களும் இதற்காக உயிர்ப் பலியானார்கள். நீதிமன்றங்கள்கூட இந்த தோள் சீலை<noinclude></noinclude> ckocavr3k8v1m5box2aqjgppd8kmzzb பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/16 250 213830 1839929 670811 2025-07-07T10:19:20Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||7}}</noinclude>போராட்டத்திற்கு எதிராக தீர்ப்பளித்தபோது, கிறிஸ்தவ பாதிரிமார்களும், வைகுண்டரும் இந்தப் பெண்களுக்கு உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் ஒரு மரியாதை கொடுத்திருக்கிறார்கள். வைகுண்டர் குறித்த புராணப் பொய்களையும் செவிவழிக் கதைகளையும் புறந்தள்ளி விட்டுப் பார்க்கும்போதுகூட, அவர் இப்போதைய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அப்போதைய அவர்னர்களுக்கு ஒரு சின்னமாக விளங்கி இருக்கிறார். இவரை, திருவாங்கூர் அரசு சிறைபிடித்தபோது வைகுண்டரைப் பகைக்க வேண்டாம் என்று சுவாதித் திருநாள் மன்னரிடம், வாதாடிப் போராடி, அதனாலேயே அந்த மன்னனால் சிறையில் வைக்கப்பட்டவர் பூவண்டன் என்ற இடையர் சாதியைச் சேர்ந்த பெருமான். இவர் அரசில் உயர்ந்த பதவி வகித்தவர். இதேபோல் தாமரைப் பதியில் 96 வளைவுகளைக் கொண்ட தத்துவக் கொட்டகையை அமைத்துக் கொடுத்தவர் முத்துக்குட்டி ஆசாரி என்பவர். ‘சாரையோடு’ வண்ணார்குல பிச்சையம்மாள், ‘வடீவீஸ்வரம்’ வெங்கடாச்சல அய்யர், ‘தென் தாமரைக்குளம்’ கிறிஸ்தவரான ‘அருமைநாயகம்’, ‘தொண்டைமான்’ ராமலிங்கம், ‘மணவாளன் குறிச்சி’ கடவுள் செட்டியார், ‘தச்சநல்லூர்’ வெள்ளாளர் அழகப்பப் பிள்ளை, ‘அரியநந்தல்’ வீரய்யாத் தேவர், ‘குறும்பர்’ இனத்தின் குபேரன் போன்ற அத்தனை சாதி மாந்தர்களும் வைகுண்டரின் ஒரே சாதியில் இரண்டறக் கலந்த சமகாலத்து தொண்டர்கள். அருளாளர்களில் இரண்டு வகை உண்டு. முதலாவது சாதியை மறுத்தவர்கள், இரண்டாவது தன்னளவில் சாதியைத் தாண்டியவர்கள். பொதுவாக நமது அருளாளர்களான சங்காராச்சாரியார்களும், சாமி தயானந்த சரஸ்வதியும், இராமகிருஷ்ண பரமஹம்சரும், ரமண ரிஷியும் தங்கள் அளவில் சாதிகளைத் தாண்டியவர்கள். ஆனால் வைகுண்டரும், வள்ளலாரும் சாதியை மறுத்தவர்கள். அதற்காக பாடுபட்டவர்கள். இதனால் வைகுண்டர் சிறை வைக்கப்பட்டார். அப்போதைய மதவாதிகளால் கல்லடியும், சொல்லடியும் பட்டார். <b>‘சாதி சமயம் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி’</b> என்று செம்மாந்து சொன்ன வள்ளலாரை, தீவிர சைவர்கள் இன்று கூட ஏற்பதில்லை. இவரது திருவருட்பாவை மருட்பா என்று அறிவிக்கக் கோரி கடலூர் நீதிமன்றம் சென்றவர் யாழ்பாணத்துத் தமிழறிஞர் ஆறுமுக நாவலர். இந்த இரண்டு பெரிய ஆன்மீகப் போராளிகளும் இன்றைய சாதித் தமிழனுக்கு தேவைப்படுகிறது. இவர்களோடு, மேட்டுக்குடியான பாளைய அரசை பாஞ்சாலங்குறிச்சியில்<noinclude></noinclude> 0keitpzdmylo5lvh4zvbzbb1ehw40bw பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/17 250 213832 1839930 670822 2025-07-07T10:26:06Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|8||ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>தாற்காலிகமாக மீட்டெடுத்த ஊமைத் துரைக்காக படையோடு சென்று கோட்டையில் ஏறி, அந்தக் கோட்டையைச் சுற்றி வெள்ளையர்கள் வைத்த வெடி மருந்தில் தனது உடம்பு முழுவதும் வெண்ணெயைத் தடவி வெடி மருந்துகளின் விபரீதங்களை தவிர்த்து உயிர்த் தியாகம் செய்த ஆதி திராவிட <b>வீரன் சுந்தரலிங்கத்தையும்,</b> சித்தர் மரபு வழியில் வந்த சாதிய மறுப்பாளர் <b>குணங்குடி மஸ்தான்,</b> சாஸ்திரக் கும்மி எழுதிய <b>வேதநாயகம் சாஸ்திரி,</b> தோள் சீலைப் போராட்டத்தை துவக்கிய <b>மீட்பாதிரியார்</b> சாதிப் பேரால் கையெழுத்துப் போட மாட்டேன் என்று பிரகடனப்படுத்திய தேவர் இனத்தைச் சேர்ந்த, அந்தக்காலத்து மதுரை ஜில்லா போர்டு தலைவரான <b>ராமச்சந்திரனாரையும், தந்தை பெரியாரை</b> எடுத்துச் செல்வதுபோல் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எத்தனையோ சிலைகளுக்கும், நினைவு மண்டபங்களுக்கும் கோடி கோடியாய் பணம் கொட்டும் அரசு, இந்தப் போராளிகளை குறும்படங்கள், கூத்துக்கள், வில்லுப்பாட்டு, வீதி நாடகம், நாட்டுப்புற இசை போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் சாதாரண மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும். ஆமாம் அறிமுகம் தான். ஆழப்படுத்தல் அல்ல. காரணம், இன்று சாதியின் பேரால் சண்டையிடும் தலைவாங்கித் தமிழனுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. இது, இவனுடைய குற்றமும் அல்ல. இவர்களைத் தெரியப்படுத்தாத வரலாற்றின் குற்றம். நமது குற்றம். அரசின் குற்றம். இந்த முப்பெருங் குற்றங்களை நீக்குவதோடு, இதற்கு எதிர்வினையாய் ஆக்க ரீதியான செயல்களை அனைவரும் மேற்கொண்டால் சாதிச் சண்டைகள் போகிறதோ இல்லையோ குறைந்தது குறையும். இதன் முதல் கட்டமாக தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட <b>வள்ளலார் மனிதநேயப் பேரவை</b> என்ற ஒரு அமைப்பு அண்மையில் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் வள்ளலாரை மட்டுமல்லாது, அவருக்கு முன்னால் வாழ்ந்த வைகுண்டர் முதல் பின்னால் வாழ்ந்த தந்தை பெரியார் வரை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம். என்றாலும், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் எல்லாம் வல்ல அரசிற்கே பெரும் பொறுப்பு உள்ளது. {{rh|||<b>தினமணி நாளிதழ்-1999</b><br>(தலையங்க பக்கக் கட்டுரை)}} <section end="1"/>{{nop}}<noinclude></noinclude> etom3vtrmwsvlv7ehjhyu45voy46fgr பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/18 250 213834 1839933 670835 2025-07-07T10:38:15Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="2"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|31em}} {{block_right|{{border|2=300px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>இந்தக் கட்டுரையை சுருக்கி<br>தினமணிகதிரில் முதல் பிரசவம்<br>என்ற தலைப்பு வரிசையில் எழுதி<br>இருந்தேன். முதல்வர்<br>கலைஞருக்கு ஒரு அழைப்பு<br>இதழை கொடுக்கச் சென்ற<br>போது- {{dhr|1em}} ‘வாருங்கள் அங்கே<br>கல்யானாம், இங்கே கலாட்டா’<br>என்று என்னை அழைத்தார். நான்<br>பொருள் புரியாது திகைத்தபோது<br>‘உங்கள் கட்டுரையைத்தான்<br>சொல்கிறேன்’ என்றார். இந்த<br>மேதையின் சொல்லாடலுக்கு<br>முன்னால் எனக்கு எந்த இலக்கிய<br>கௌரவம் பெரிதாக இருக்க<br>முடியும்?}}}} {{Multicol-break}} {{X-larger|''எனது முதல்<br>படைப்பு''</b>}} {{dhr|4em}} என் முதல் படைப்பு எது<br>என்று கண்டுபிடிப்பது எனக்கே,<br>சற்று சிரமமாக இருந்தது. பத்து<br>வயதில், நானே எழுதி, நானே<br>பாடி, நானே கேட்ட வில்லுப்<br>பாட்டைச் சொல்வதா? அல்லது<br>எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்<br>கொண்டிருந்தபோது, நான் எழுதி,<br>ஆணே பெண்வேடம் போட்டு,<br>அரங்கம் ஏறிய நாடகத்தைச்<br>சொல்வதா? அல்லது உயர்நிலைப்<br>பள்ளி மலர்களிலும், கல்லூரி<br>மலர்களிலும் எழுதிய கவிதை<br>களைச் சொல்வதா? எது முதல்<br>படைப்பு? {{dhr|1em}} இந்த சிந்தனை, படைப்பு<br>என்றால் என்ன? என்று<br>இன்னொரு எண்ணத்திற்கு<br>என்னை இட்டுச் சென்றது.<br>பாடுபவை எல்லாம் எப்படிப்<br>பாட்டாகாதோ, அப்படி எழுது<br>பவை எல்லாம் எழுத்தாகாது.<br>படைப்பு என்று வரும்போது,<br>குறைந்தபட்சம் அது படைப்பாளி<br>யிடம் ஒரு தாக்கத்தை<br>ஏற்படுத்தவேண்டும். அந்த<br>தாக்கம் வாசகர்களிடமும் தாவ<br>வேண்டும். எழுத்தாளன் எந்த<br>உணர்வோடு எழுதுகின்றானோ<br>அந்த உணர்வு படிப்பவனிடமும் {{Multicol-end}}<noinclude></noinclude> tf4cnnopqnbu2m0f681bnpbvqonr3dr 1839934 1839933 2025-07-07T10:38:39Z மொஹமது கராம் 14681 1839934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="2"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|31em}} {{block_right|{{border|2=300px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>இந்தக் கட்டுரையை சுருக்கி<br>தினமணிகதிரில் முதல் பிரசவம்<br>என்ற தலைப்பு வரிசையில் எழுதி<br>இருந்தேன். முதல்வர்<br>கலைஞருக்கு ஒரு அழைப்பு<br>இதழை கொடுக்கச் சென்ற<br>போது- {{dhr|1em}} ‘வாருங்கள் அங்கே<br>கல்யானாம், இங்கே கலாட்டா’<br>என்று என்னை அழைத்தார். நான்<br>பொருள் புரியாது திகைத்தபோது<br>‘உங்கள் கட்டுரையைத்தான்<br>சொல்கிறேன்’ என்றார். இந்த<br>மேதையின் சொல்லாடலுக்கு<br>முன்னால் எனக்கு எந்த இலக்கிய<br>கௌரவம் பெரிதாக இருக்க<br>முடியும்?</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''எனது முதல்<br>படைப்பு''</b>}} {{dhr|4em}} என் முதல் படைப்பு எது<br>என்று கண்டுபிடிப்பது எனக்கே,<br>சற்று சிரமமாக இருந்தது. பத்து<br>வயதில், நானே எழுதி, நானே<br>பாடி, நானே கேட்ட வில்லுப்<br>பாட்டைச் சொல்வதா? அல்லது<br>எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்<br>கொண்டிருந்தபோது, நான் எழுதி,<br>ஆணே பெண்வேடம் போட்டு,<br>அரங்கம் ஏறிய நாடகத்தைச்<br>சொல்வதா? அல்லது உயர்நிலைப்<br>பள்ளி மலர்களிலும், கல்லூரி<br>மலர்களிலும் எழுதிய கவிதை<br>களைச் சொல்வதா? எது முதல்<br>படைப்பு? {{dhr|1em}} இந்த சிந்தனை, படைப்பு<br>என்றால் என்ன? என்று<br>இன்னொரு எண்ணத்திற்கு<br>என்னை இட்டுச் சென்றது.<br>பாடுபவை எல்லாம் எப்படிப்<br>பாட்டாகாதோ, அப்படி எழுது<br>பவை எல்லாம் எழுத்தாகாது.<br>படைப்பு என்று வரும்போது,<br>குறைந்தபட்சம் அது படைப்பாளி<br>யிடம் ஒரு தாக்கத்தை<br>ஏற்படுத்தவேண்டும். அந்த<br>தாக்கம் வாசகர்களிடமும் தாவ<br>வேண்டும். எழுத்தாளன் எந்த<br>உணர்வோடு எழுதுகின்றானோ<br>அந்த உணர்வு படிப்பவனிடமும் {{Multicol-end}}<noinclude></noinclude> 0ctwpxpnhzcufz0aug33568yiwvp4md 1839935 1839934 2025-07-07T10:40:49Z மொஹமது கராம் 14681 1839935 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="2"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|31em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>இந்தக் கட்டுரையை சுருக்கி<br>தினமணிகதிரில் முதல் பிரசவம்<br>என்ற தலைப்பு வரிசையில் எழுதி<br>இருந்தேன். முதல்வர்<br>கலைஞருக்கு ஒரு அழைப்பு<br>இதழை கொடுக்கச் சென்ற<br>போது- {{dhr|1em}} ‘வாருங்கள் அங்கே<br>கல்யானாம், இங்கே கலாட்டா’<br>என்று என்னை அழைத்தார். நான்<br>பொருள் புரியாது திகைத்தபோது<br>‘உங்கள் கட்டுரையைத்தான்<br>சொல்கிறேன்’ என்றார். இந்த<br>மேதையின் சொல்லாடலுக்கு<br>முன்னால் எனக்கு எந்த இலக்கிய<br>கௌரவம் பெரிதாக இருக்க<br>முடியும்?</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''எனது முதல்<br>படைப்பு''</b>}} {{dhr|4em}} என் முதல் படைப்பு எது<br>என்று கண்டுபிடிப்பது எனக்கே,<br>சற்று சிரமமாக இருந்தது. பத்து<br>வயதில், நானே எழுதி, நானே<br>பாடி, நானே கேட்ட வில்லுப்<br>பாட்டைச் சொல்வதா? அல்லது<br>எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்<br>கொண்டிருந்தபோது, நான் எழுதி,<br>ஆணே பெண்வேடம் போட்டு,<br>அரங்கம் ஏறிய நாடகத்தைச்<br>சொல்வதா? அல்லது உயர்நிலைப்<br>பள்ளி மலர்களிலும், கல்லூரி<br>மலர்களிலும் எழுதிய கவிதை<br>களைச் சொல்வதா? எது முதல்<br>படைப்பு? {{dhr|1em}} இந்த சிந்தனை, படைப்பு<br>என்றால் என்ன? என்று<br>இன்னொரு எண்ணத்திற்கு<br>என்னை இட்டுச் சென்றது.<br>பாடுபவை எல்லாம் எப்படிப்<br>பாட்டாகாதோ, அப்படி எழுது<br>பவை எல்லாம் எழுத்தாகாது.<br>படைப்பு என்று வரும்போது,<br>குறைந்தபட்சம் அது படைப்பாளி<br>யிடம் ஒரு தாக்கத்தை<br>ஏற்படுத்தவேண்டும். அந்த<br>தாக்கம் வாசகர்களிடமும் தாவ<br>வேண்டும். எழுத்தாளன் எந்த<br>உணர்வோடு எழுதுகின்றானோ<br>அந்த உணர்வு படிப்பவனிடமும் {{Multicol-end}}<noinclude></noinclude> n2rd55hz6yb4vihrwcmkzd9sqe3ha88 1839972 1839935 2025-07-07T11:44:46Z மொஹமது கராம் 14681 1839972 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="2"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|31em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>இந்தக் கட்டுரையை சுருக்கி<br>தினமணிகதிரில் முதல் பிரசவம்<br>என்ற தலைப்பு வரிசையில் எழுதி<br>இருந்தேன். முதல்வர்<br>கலைஞருக்கு ஒரு அழைப்பு<br>இதழை கொடுக்கச் சென்ற<br>போது- {{dhr|1em}} ‘வாருங்கள் அங்கே<br>கல்யானாம், இங்கே கலாட்டா’<br>என்று என்னை அழைத்தார். நான்<br>பொருள் புரியாது திகைத்தபோது<br>‘உங்கள் கட்டுரையைத்தான்<br>சொல்கிறேன்’ என்றார். இந்த<br>மேதையின் சொல்லாடலுக்கு<br>முன்னால் எனக்கு எந்த இலக்கிய<br>கௌரவம் பெரிதாக இருக்க<br>முடியும்?</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''எனது முதல்<br>படைப்பு.''</b>}} {{dhr|4em}} என் முதல் படைப்பு எது<br>என்று கண்டுபிடிப்பது எனக்கே,<br>சற்று சிரமமாக இருந்தது. பத்து<br>வயதில், நானே எழுதி, நானே<br>பாடி, நானே கேட்ட வில்லுப்<br>பாட்டைச் சொல்வதா? அல்லது<br>எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்<br>கொண்டிருந்தபோது, நான் எழுதி,<br>ஆணே பெண்வேடம் போட்டு,<br>அரங்கம் ஏறிய நாடகத்தைச்<br>சொல்வதா? அல்லது உயர்நிலைப்<br>பள்ளி மலர்களிலும், கல்லூரி<br>மலர்களிலும் எழுதிய கவிதை<br>களைச் சொல்வதா? எது முதல்<br>படைப்பு? {{dhr|1em}} இந்த சிந்தனை, படைப்பு<br>என்றால் என்ன? என்று<br>இன்னொரு எண்ணத்திற்கு<br>என்னை இட்டுச் சென்றது.<br>பாடுபவை எல்லாம் எப்படிப்<br>பாட்டாகாதோ, அப்படி எழுது<br>பவை எல்லாம் எழுத்தாகாது.<br>படைப்பு என்று வரும்போது,<br>குறைந்தபட்சம் அது படைப்பாளி<br>யிடம் ஒரு தாக்கத்தை<br>ஏற்படுத்தவேண்டும். அந்த<br>தாக்கம் வாசகர்களிடமும் தாவ<br>வேண்டும். எழுத்தாளன் எந்த<br>உணர்வோடு எழுதுகின்றானோ<br>அந்த உணர்வு படிப்பவனிடமும் {{Multicol-end}}<noinclude></noinclude> 2jr8s684jrm7ne9bn52g7mvusxvsuqb பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/19 250 213836 1839940 670846 2025-07-07T10:49:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|10||எனது முதல் படைப்பு}}</noinclude>எற்பட வேண்டும். <b>“நல்லுணர்வு ஏற்பட்டால் நல்லிலக்கியம், நச்சுணர்வு ஏற்பட்டால் நச்சிலக்கியம்”</b> என்றார் லியோ டால்ஸ்டாய். இதுதான் படைப்பிலக்கியத்திற்குச் சரியான அளவுகோல் என்று கருதுகிறேன். இந்த அளவின்படி மட்டுமல்ல, மனதில் சட்டென்று நினைவுக்கு வரும்படியும் தோன்றுவது எனது முதல் சிறுகதையான “அங்கே கல்யாணம் - இங்கே கலாட்டா” என்ற படைப்புதான். 1974-ம் ஆண்டு இறுதிவாக்கில் இது ஆனந்தவிகடனில் வெளியானது. இந்த சிறுகதைதான் என்னை ‘உடனடி’ எழுத்தாளனாக்க உதவியது. இந்த சிறுகதையை எழுதும்போது நான் எழுத்தாளனாக மாறப் போகிறேன் என்று நினைத்ததில்லை. பத்துப்பேரோடு பதினோராவது நபராக ஒரு கதையை எழுதித்தான் பார்ப்போமே என்ற தோரணையில்தான் எழுதினேன். கதையைத் திருப்பி வாங்குவதற்கு தபால் தலைகளைக்கூட இணைக்கவில்லை. அந்தச் சிறுகதையை எந்த சூழலில் எழுதினேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, இதோ இந்தத் தருணத்திலும் இனிமையாக இருக்கிறது. <b>எழுத்தாளச் சவால்</b> அப்போது நான், டில்லியில் வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். உள்ளூரில் நான் ஏறெடுத்தும் பாராத வாரப் பத்திரிகைகள் அங்கே மிகவும் பிடித்துப் போயின. என்ன எழுதினாலும் தமிழை சுமந்து வருகின்றவை என்ற பாசம். ஆனாலும் இந்த பத்திரிகையில் வெளியான சிறுகதைகள் பெரும்பாலும் பிடிக்கவில்லை. பிடிபடவும் இல்லை. அப்போது டில்லியில் என்னுடன் பணியாற்றியவரும், எனது குடும்பத்தோழருமான செல்வராஜிடம், “ஒரு கதைகூட உருப்படியாக இல்லை” என்று அடிக்கடி அலுத்துக் கொள்வது வழக்கம். அவரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, பிறகு பொறுமைக்கு எல்லை கட்ட விரும்பாதவர் போல், “சும்மா குறை சொல்வதில் அர்த்தமில்லை சமுத்திரம்! குறை சொல்வது எளிது. எழுதுவதுதான் கடினம். நீங்கள் உண்மையிலேயே இலக்கிய ஆர்வம் உள்ளவராய் இருந்தால், ஒரு கதை எழுதி பத்திரிகையில் வரவழைத்துக் காட்டுங்கள். அதற்குப் பிறகு பிறத்தியார் கதைகளைப் பற்றி விமர்சியுங்கள்” என்றார். நண்பரின் பேச்சு என்னுள் ஒரு வேகத்தை ஏற்படுத்தியது. அவர் என் திறமைக்கே சவால் இடுவதுபோல் இருந்தது. ஆரம்பப் பள்ளிக்கூட காலத்தில் வில்லுப்பாட்டாளியாகவும்.<noinclude></noinclude> l8mpqkgzxf912g9nnbpti7mcfgu1qk3 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/20 250 213838 1839962 670857 2025-07-07T11:21:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||11}}</noinclude>கல்லூரிக் காலத்தில் கவிதை எழுதுபவனாகவும் இருந்தது, அப்போது என்னுள்ளே கும்பகர்ணனாய் முடங்கிக் கிடந்த கலைத்தன்மை துகில் களைந்து எழுதுவதுபோல் இருந்தது. சிறுகதை ஆசிரியனாக மாறவேண்டும் என்பதைவிட நண்பரின் சவாலுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அன்று இரவே காகிதத்தை எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் எனது சொந்த கிராமத்தில் நடந்த, நடக்கும் நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தேன். பெரும்பாலான ஏழை-எளியயவர்கள். எங்கேயோ இருக்கின்ற தலைவர்களுக்கு உயிரைக் கொடுக்கவும் தயார் என்பதைக் காட்ட, தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் அவல நிலையை எண்ணிப் பார்த்தேன். கோவில் திருவிழாக்களிலும், கல்யாண காரியங்களிலும் கட்சி-அரசியல் புகுந்து, கிராம மக்கள் அடித்துக் கொள்வதை கண்ணால் கண்டவன் நான். மக்களை ஒன்று திரட்டி ஒருமைப்படுத்துவதற்காக எழுந்த திருவிழாக்களும், கல்யாணச் சடங்குகளும் கட்சி அரசியலின் பீடங்களாகிப் போனதை நினைத்து, கதை எழுதப் போவதை மறந்து, அந்தக் காட்சிகளிலேயே நினைத்தபடி இருந்தேன். அரைமணி நேர சிந்தனைக்குப்பின் நண்பரின் சவாலும் கதை எழுதுவதற்கே காகிதத்தை வைத்திருக்கிறேன் என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது. உடனடியாக எழுதினேன். மடைதிறந்த வெள்ளம்போல் வார்த்தைகள் வரிகளாயின. கதை இதுதான். குட்டாம்பட்டி என்ற சிறு கிராமம். அங்கே சண்முகம் என்ற வாலிபன் கல்லூரி வரைக்கும் கால் வைத்தவன். உள்ளூரில் ஆசிரியையாக வேலைபார்க்கும் அமுதா என்ற பெண்ணை நேசிக்கிறான். ஓரிருதடவை சந்திப்புக்கள் கூட நடக்கின்றன. இருவருமே சொந்தக்காரர்கள். இந்த இரு இளம் உள்ளங்களையும் இணைத்துவைக்க பெற்றோர்கள் தீர்மானித்து விடுகிறார்கள். பெண் வீட்டில் நிச்சய தாம்பூல விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாழைக்குலை, வெத்திலை பாக்கு எல்லாம் வாங்கியாகி விட்டது. ரொக்கம், நகைநட்டு வகையறாக்கள் எல்லாம் முடிவாகி விட்டன. இதில் எந்த தகராறும் எழவில்லை. கல்யாணத் தேதியை நிச்சயிக்க வேண்டியதுதான் பாக்கி. எல்லோரும் நல்ல காரியம் ஒன்றிற்கு உடன்பட்ட திருப்தியோடு புன்னகைக்கின்றனர். திடீரென்று மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ஒரு பி.யு.ஸி. பெயிலன் கல்யாண விழாவிற்கு நல்லார் கட்சித் தலைவர்<noinclude></noinclude> gh5kmel261528ddu413nohndds60w41 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/21 250 213840 1839968 670861 2025-07-07T11:34:28Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|12||எனது முதல் படைப்பு}}</noinclude>நல்லசிவம் தலைமைத் தாங்கவேண்டும் என்றான். உடனே பெண் வீட்டுப் பிள்ளையாண்டான் ஒருவன் இன்னொரு கட்சித் தலைவர் வெண்சாமரம் தலைமை தாங்க வேண்டும் என்றான். மாப்பிள்ளை பங்காளிகள், வெண்சாமரம் திருடன், அவன் கருமாந்திரத்திற்குத்தான் லாயக்கு என்றார்கள். பிள்ளை வீட்டார் சொன்னது நல்லார் கட்சி நல்லசிவத்திற்கே பொருந்தும் என்றனர் பெண் வீட்டுப் பங்காளிகள். வார்த்தைகள் தடிக்கின்றன. பிரச்சனை கௌரவப் பிரச்னையாகியது. தலைவர்களைத் திட்டிய பங்காளித் தொண்டர்கள் பிறகு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கிறார்கள். இரண்டு தலைவர்களும் வராமலே கல்யாணத்தை நடத்தலாம் என்று அய்யாசாமி தாத்தா சொன்னது மற்றவர்களின் காதில் விழுந்ததே தவிர, கருத்தில் விழவில்லை. நிலைமை அந்த அளவிற்குப் போனது. மாப்பிள்ளை வீட்டார் போய்விடுகிறார்கள். அமுதா வீட்டுக்குள்ளேயே அழுகிறாள். காதலை மறக்க முடியாமலும் கல்யாணத்தை நினைக்க முடியாமலும் போன சண்முகம், ராணுவத்தில் சேர்ந்து தொலை தூரத்திற்குப் போய் விடுகிறான். ஒரு மாதம் கழித்து எல்லாப் பத்திரிக்கைகளிலும் ஒரு பெரிய செய்தி வருகிறது. கிராமத்து மக்கள் அதைப் படித்துவிட்டு விக்கித்துப் போகிறார்கள். செய்தி இதுதான். “தலைவர் வெண்சாமரத்தின் மகளுக்கும், தலைவர் நல்லசிவத்தின் மகனுக்கும் திருமணம். சர்வகட்சித் தலைவர்கள் வாழ்த்து.” இந்தச் சிறுகதை விரைவில் பிரகரமாகும் என்று ஆனந்தவிகடன் பத்திரிகை கடிதம் எழுதிய நாளிலிருந்து பிரசுரமாகும் நாளை எதிர்பார்த்திருந்தேன். மாதக்கணக்காக கதை பிரசுரமாகவில்லை. பிறகு நானே சலித்துப் போயிருந்த ஒருநாளில், டில்லியின் வி.ஜி.பி.யான <b>பாக்யராஜ்,</b> “நீங்கதானே சமுத்திரம்” என்றார். எனக்கு ஆச்சர்யம். ஓரளவு பரிச்சயமான நண்பர். பெயர் தெரியாமல் போகுமோ? நான் அவரை நெருங்கியபோது இது உங்க கதையா? என்று பத்திரிக்கையைப் பிரித்துக் காட்டினார். நான் ஒரு கதை எழுதியிருக்க முடியாது என்று எப்படி அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டு, அதுவே என் பெயரையே சந்தேகிக்க வைத்ததோ, அதுபோல் எனக்கும் ஒரு சந்தேகம். நம் கதைதானோ? நம் பெயர் தானா? என்று, சந்தேகமில்லை. என் கதைதான். என் பெயர்தான்.{{nop}}<noinclude></noinclude> nrw6btxfk1i2k9ci0o3v7lbzu2uzb22 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/22 250 213842 1839971 670862 2025-07-07T11:42:58Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839971 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||13}}</noinclude>இந்தக் கதையை நகைச்சுவையாக பலரும் ரசித்தபோது அப்போது டில்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மூத்த செய்தியாளரான திரு. சீனிவாசன் அவர்கள் இந்தக் கதையில் ஒரு ‘பொடி’ வைத்திருக்கிறீர்கள் என்று வாஞ்சையோடு சொன்னார். அன்றைய பொடிதான் எனது பல படைப்புகளில் வேட்டுகளாக வெடிக்கின்றன. இந்தச் சிறுகதை வெளியானதும் Lல சிறுகதைகளை எழுதி பல பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். அத்தனையும் பிரசுரமாயின. இப்போதும் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், “அங்கே கல்யாணம் - இங்கே கலாட்டா” என்ற சிறுகதையை என்னால் மறக்க இயலாது. காரணம், அது முதல் கதை என்பதால் அல்ல. அதில் நான் வைத்திருந்த சில நிலைகலன்களைத்தான் இப்போது என் படைப்புகளில் பயன்படுத்துகிறேன். அந்த சிறுகதையில் வந்த கிராமத்தின் பெயர் குட்டாம்பட்டி. இந்த குட்டாம்பட்டியையே, பழைமைப் பிடிப்பும், புதுமை நுழைவும் கொண்ட இன்றைய சராசரி கிராமமாக எடுத்துக் கொண்டு நாவல்களிலும் இதே ஊரையே குறிப்பிட்டு வருகிறேன். இதுபோல் நல்லது நினைத்து அதைச் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ள அய்யாசாமி தாத்தாவையும், பல சிறுகதைகளிலும் நாவல்களிலும் கொண்டு வந்திருக்கிறேன். மொத்தத்தில் இந்தக் கதையில் வந்த கிராமமும், கதா பாத்திரங்களும் சமூகப் பொருளாதார தாக்கத்தில் எப்படி மாறிவருகின்றனர் என்று காட்டுவது என் படைப்பிலக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். அடுத்து இந்த சிறுகதையில், ஓரளவு ‘நஹற்ண்ழ்ங்’ கொண்டு வந்தேன். “சொந்தபந்தம் இல்லாத தலைவர்கள் கல்யாண வீட்ல் சந்தித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுறாங்க; நீங்க என்னடான்னா சொந்தக்காரர்களா இருந்தும் கட்சிபிரிந்து கருமாந்திரத்திலகூட கலந்துக்க மாட்டேங்கறீங்களடா” என்று அய்யாசாமி தாத்தா வேதனையோடு சொல்வது என் படைப்புக்களில் ஆதார சுருதியாக பத்தாண்டுகள் வரை இருந்தது. மொத்தத்தில் குட்டாம்பட்டியையும், அய்யாசாமி தாத்தாவையும், கிராமிய நடையையும், ஓரளவு அங்கதச் சுவையையும் ஆக்கித்தந்த அந்த சிறுகதை, வாசகர்களுக்கு ஒரு சிறுகதை! எனக்கோ பெருங்கதை! {{rh|||<b>சென்னை வானொலி நிலையம் — 15—1—1983</b>}} <section end="2"/>{{nop}}<noinclude></noinclude> k5l0zoflq8xo2qcektymthm878sf47c பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/23 250 213844 1839975 670863 2025-07-07T11:54:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839975 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="3"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|31em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>மலையாள மொழியின் பிதா<br>மகனாக கருதப்படும் எழுத்<br>தச்சனின், நினைவில் அனைத்து<br>மலையாளப் படைப்பாளிகளையும்<br>ஒருசேர திரட்டுகிறார் சிறந்த<br>படைப்பாளியான எம்டி வாசுதேவ<br>நாயர் அவர்கள். {{dhr|1em}} மகத்தான படைப்பாளியான<br>கலைஞரும், திருவள்ளுவரையோ,<br>தமிழ்த்தாயையோ, தொல்<br>காப்பியரையோ அல்லது இவர்கள்<br>மூவரையுமோ முன்னிலைப்<br>படுத்தி மிகப்பெரிய தமிழ்<br>வளாகத்தை உருவாக்கிட<br>வேண்டும். வள்ளுவர் கோட்டம்<br>இதற்கு மாற்றாகாது.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''எழுத்தாணி<br>ஊர்வலம்''</b>}} {{dhr|4em}} சென்ற மாதம், கேரளத்தில்<br>மலபார் பகுதியில் உள்ள<br>திருவூரில், துஞ்சன்- எழுத்தச்சன்<br>நினைவுவிழா நடைபெற்றது.<br>மலையாள இலக்கியத்தில் தடம்<br>பதித்த மக்கள் எழுத்தாளரான<br>எம்.டி. வாசுதேவ நாயரைத்<br>தலைவராகக் கொண்ட குழு<br>ஒன்று கடந்த நீண்டகாலமாக<br>எழுத்தச்சன் நினைவை இலக்கிய<br>விழாவாகக் கொண்டாடி<br>வருகிறது. அகில இந்திய<br>அளவில் பிறமொழி எழுத்தாளர்<br>களையும் வரவழைத்து,<br>இலக்கியம் பற்றிய தேசிய கருத்<br>தரங்கையும் நடத்துகிறது. இந்த<br>ஆண்டு தமிழகத்திலிருந்து<br>சிந்தனையாளர் வலம்புரிஜானும்,<br>நானும் கலந்து கொண்டோம்.<br><b>‘இலக்கியம் எதிரொலிக்கும்<br>சுற்றுப்புற நயங்கள்’</b>என்பது<br>கருத்தரங்கின் தலைப்பு,<br>எழுத்தாளர் <b>சிவசங்கரி</b> அவர்கள்<br>தான் எங்கள் பயணத்திற்கு<br>பரிந்துரைத்தவர். {{Multicol-end}}{{nop}}<noinclude></noinclude> qbet5d2j2bajnydazl8evr7tqwbaezz 1839976 1839975 2025-07-07T11:55:58Z மொஹமது கராம் 14681 1839976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="3"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|28em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>மலையாள மொழியின் பிதா<br>மகனாக கருதப்படும் எழுத்<br>தச்சனின், நினைவில் அனைத்து<br>மலையாளப் படைப்பாளிகளையும்<br>ஒருசேர திரட்டுகிறார் சிறந்த<br>படைப்பாளியான எம்டி வாசுதேவ<br>நாயர் அவர்கள். {{dhr|1em}} மகத்தான படைப்பாளியான<br>கலைஞரும், திருவள்ளுவரையோ,<br>தமிழ்த்தாயையோ, தொல்<br>காப்பியரையோ அல்லது இவர்கள்<br>மூவரையுமோ முன்னிலைப்<br>படுத்தி மிகப்பெரிய தமிழ்<br>வளாகத்தை உருவாக்கிட<br>வேண்டும். வள்ளுவர் கோட்டம்<br>இதற்கு மாற்றாகாது.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''எழுத்தாணி<br>ஊர்வலம்''</b>}} {{dhr|4em}} சென்ற மாதம், கேரளத்தில்<br>மலபார் பகுதியில் உள்ள<br>திருவூரில், துஞ்சன்- எழுத்தச்சன்<br>நினைவுவிழா நடைபெற்றது.<br>மலையாள இலக்கியத்தில் தடம்<br>பதித்த மக்கள் எழுத்தாளரான<br>எம்.டி. வாசுதேவ நாயரைத்<br>தலைவராகக் கொண்ட குழு<br>ஒன்று கடந்த நீண்டகாலமாக<br>எழுத்தச்சன் நினைவை இலக்கிய<br>விழாவாகக் கொண்டாடி<br>வருகிறது. அகில இந்திய<br>அளவில் பிறமொழி எழுத்தாளர்<br>களையும் வரவழைத்து,<br>இலக்கியம் பற்றிய தேசிய கருத்<br>தரங்கையும் நடத்துகிறது. இந்த<br>ஆண்டு தமிழகத்திலிருந்து<br>சிந்தனையாளர் வலம்புரிஜானும்,<br>நானும் கலந்து கொண்டோம்.<br><b>‘இலக்கியம் எதிரொலிக்கும்<br>சுற்றுப்புற நயங்கள்’</b>என்பது<br>கருத்தரங்கின் தலைப்பு,<br>எழுத்தாளர் <b>சிவசங்கரி</b> அவர்கள்<br>தான் எங்கள் பயணத்திற்கு<br>பரிந்துரைத்தவர். {{Multicol-end}}{{nop}}<noinclude></noinclude> b6i4xieg4liyvxss9ec7x76phz09r50 1839977 1839976 2025-07-07T11:56:15Z மொஹமது கராம் 14681 1839977 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="3"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|25em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>மலையாள மொழியின் பிதா<br>மகனாக கருதப்படும் எழுத்<br>தச்சனின், நினைவில் அனைத்து<br>மலையாளப் படைப்பாளிகளையும்<br>ஒருசேர திரட்டுகிறார் சிறந்த<br>படைப்பாளியான எம்டி வாசுதேவ<br>நாயர் அவர்கள். {{dhr|1em}} மகத்தான படைப்பாளியான<br>கலைஞரும், திருவள்ளுவரையோ,<br>தமிழ்த்தாயையோ, தொல்<br>காப்பியரையோ அல்லது இவர்கள்<br>மூவரையுமோ முன்னிலைப்<br>படுத்தி மிகப்பெரிய தமிழ்<br>வளாகத்தை உருவாக்கிட<br>வேண்டும். வள்ளுவர் கோட்டம்<br>இதற்கு மாற்றாகாது.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''எழுத்தாணி<br>ஊர்வலம்''</b>}} {{dhr|4em}} சென்ற மாதம், கேரளத்தில்<br>மலபார் பகுதியில் உள்ள<br>திருவூரில், துஞ்சன்- எழுத்தச்சன்<br>நினைவுவிழா நடைபெற்றது.<br>மலையாள இலக்கியத்தில் தடம்<br>பதித்த மக்கள் எழுத்தாளரான<br>எம்.டி. வாசுதேவ நாயரைத்<br>தலைவராகக் கொண்ட குழு<br>ஒன்று கடந்த நீண்டகாலமாக<br>எழுத்தச்சன் நினைவை இலக்கிய<br>விழாவாகக் கொண்டாடி<br>வருகிறது. அகில இந்திய<br>அளவில் பிறமொழி எழுத்தாளர்<br>களையும் வரவழைத்து,<br>இலக்கியம் பற்றிய தேசிய கருத்<br>தரங்கையும் நடத்துகிறது. இந்த<br>ஆண்டு தமிழகத்திலிருந்து<br>சிந்தனையாளர் வலம்புரிஜானும்,<br>நானும் கலந்து கொண்டோம்.<br><b>‘இலக்கியம் எதிரொலிக்கும்<br>சுற்றுப்புற நயங்கள்’</b>என்பது<br>கருத்தரங்கின் தலைப்பு,<br>எழுத்தாளர் <b>சிவசங்கரி</b> அவர்கள்<br>தான் எங்கள் பயணத்திற்கு<br>பரிந்துரைத்தவர். {{Multicol-end}}{{nop}}<noinclude></noinclude> hq6sz41mtud64gpbk67zyzd1evjz3c1 1839978 1839977 2025-07-07T11:56:36Z மொஹமது கராம் 14681 1839978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="3"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|24em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>மலையாள மொழியின் பிதா<br>மகனாக கருதப்படும் எழுத்<br>தச்சனின், நினைவில் அனைத்து<br>மலையாளப் படைப்பாளிகளையும்<br>ஒருசேர திரட்டுகிறார் சிறந்த<br>படைப்பாளியான எம்டி வாசுதேவ<br>நாயர் அவர்கள். {{dhr|1em}} மகத்தான படைப்பாளியான<br>கலைஞரும், திருவள்ளுவரையோ,<br>தமிழ்த்தாயையோ, தொல்<br>காப்பியரையோ அல்லது இவர்கள்<br>மூவரையுமோ முன்னிலைப்<br>படுத்தி மிகப்பெரிய தமிழ்<br>வளாகத்தை உருவாக்கிட<br>வேண்டும். வள்ளுவர் கோட்டம்<br>இதற்கு மாற்றாகாது.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''எழுத்தாணி<br>ஊர்வலம்''</b>}} {{dhr|4em}} சென்ற மாதம், கேரளத்தில்<br>மலபார் பகுதியில் உள்ள<br>திருவூரில், துஞ்சன்- எழுத்தச்சன்<br>நினைவுவிழா நடைபெற்றது.<br>மலையாள இலக்கியத்தில் தடம்<br>பதித்த மக்கள் எழுத்தாளரான<br>எம்.டி. வாசுதேவ நாயரைத்<br>தலைவராகக் கொண்ட குழு<br>ஒன்று கடந்த நீண்டகாலமாக<br>எழுத்தச்சன் நினைவை இலக்கிய<br>விழாவாகக் கொண்டாடி<br>வருகிறது. அகில இந்திய<br>அளவில் பிறமொழி எழுத்தாளர்<br>களையும் வரவழைத்து,<br>இலக்கியம் பற்றிய தேசிய கருத்<br>தரங்கையும் நடத்துகிறது. இந்த<br>ஆண்டு தமிழகத்திலிருந்து<br>சிந்தனையாளர் வலம்புரிஜானும்,<br>நானும் கலந்து கொண்டோம்.<br><b>‘இலக்கியம் எதிரொலிக்கும்<br>சுற்றுப்புற நயங்கள்’</b>என்பது<br>கருத்தரங்கின் தலைப்பு,<br>எழுத்தாளர் <b>சிவசங்கரி</b> அவர்கள்<br>தான் எங்கள் பயணத்திற்கு<br>பரிந்துரைத்தவர். {{Multicol-end}}{{nop}}<noinclude></noinclude> 0ug6c9fqu6bte95gnkvja5i8h9ddfwp பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/44 250 213894 1839856 670886 2025-07-07T07:25:01Z Booradleyp1 1964 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>________________ படைப்பாளியும் தாய்மொழியும் நமது தேசியக்கொடி வெறும் துணியினால் ஆனதுதான். ஆனால் அது புனிதமாக போற்றப் படுகிறது. இந்தக் கொடி அவமரியாதை செய்யப்பட்டால் விளைவுகள் விபரீதங்களாகும். மொழி என்பதும் எழுத்துக் களால் ஆனதாய் இருக்கலாம். ஆனாலும் தேசிய கொடியைப் போல் இதுவும் புனிதமானது. இன்னும் ஒரு படி அதிகமானது. இப்படிப்பட்ட தாய்மொழியை சிதைப்பதற்கோ, படிக்கமுடியாது என்று மார்தட்டுவதற்கோ எந்த எந்த எழுத்தாளனுக்கும் உரிமை இல்லை. ஒரு படைப்பாளிக்கு தாய் மொழி ஞானமும், பற்றும் தேவையா? பல்வேறு பத்திரிகைகளில், தொலைக் காட்சிகளில் இந்தக் கேள்விக்கு எதிர்மறையாக, இலைமறைவு காய்மறைவாய் பேசப்பட்ட கருத்து அண்மையில் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடந்த, இந்திய பல்கலைக் கழக தமிழ் ஆசிரியர் மன்றத்தின் 30-வது கருத்தரங்கில் ஒரு விவகாரமாக மாறியிருப்பது வரவேற்கத்தக்கது. 'தொல்காப்பியம் படித்துவிட்டு, நான் எழுத வரவில்லை.' என்று 'வாழும்போதே வரலாறான' ஒரு எழுத்தாளர் தெரிவித்த கருத்து தாய்மொழியை மதிக்காமல், அவர் புறக்கணிப்பதாக அனுமானித்து காரசாரமாக விவாதிக்கப் பட்டுள்ளது. இதில் உரை யாற்றிய மன்றத் தலைவர் முனைவர் தமிழண்ணல், இந்தப் போக்கை முறியடிப்பதற்காக, அடுத்த ஆண்டில் இருந்து தமிழாசிரியர்கள் படைக்கும் ஆய்வுக்கோவைகளில் ஒன்று<noinclude></noinclude> 5t8hw05lo3m8wfifwrqwtdp6ukoemkj பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/11 250 213905 1839663 1839097 2025-07-06T16:39:24Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|||IX}}</noinclude>மனுஷியின் மற்றொரு வரலாற்று முகம் ஒரு பெண் அடிமை அல்லது தெய்வம் ஆகலாமேயன்றி, ஒருபோதும் சகமனிதராக ஆண்களால் கருதப்படுவதில்லை. ஒரு அடிமை தொட்ட மாத்திரத்தின் எஜமானியான ஒரு பெண்கூட அடிமையாகிவிடுகிறார் பெண்களைப் பொருத்தமட்டில் சாதிச் சுவர்கள் எவ்வளவு சன்னமானவையாக உள்ளன: பாருக்குட்டிகளும் இசக்கிமாடத்திகளும் ‘அல்லாடி, தள்ளாடி’ நடந்துகொண்டிருக்கிறார்கள். ஒப்பாரிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும் - முகம் தெரியாத மனுஷியை வாசிக்கவும். ⬤ ‘மக்கள் பத்திரிகையில் வந்த கிண்டி ரேஸ் பற்றிய செய்தி ஏழை மாடசாமிக்கு வண்ணக் கனவுகளை உருவாக்க, குதிரையாட்டத்தில் ஈடுபட்ட அவர் தனது குடும்பத்தையும் எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டதாக மாடசாமியின் ஊர்வலம் சொல்கிறது. 1976-இல் தொடங்கிய மாடசாமிகளின் ஊர்வலம் இன்றைக்கும் தொடர்கிறது, வெவ்வேறு வடிவங்களில் மக்கள் பத்திரிக்கைகளுக்குப் பதிலாக மக்கள் தொலைக்காட்சிகள்; பிரபல பத்திரிக்கைகளைவிட, சில இலக்கியப் பிதாமகர்களின் சிறு (இலக்கிய) பத்திரிக்கைகள்; அரசு நடத்தும் லாட்டரி திட்டங்கள்; சினிமாக் கனவுகள்; உலகவங்கிக் கடன்கள்... ⬤ சற்று எக்குத்தப்பான உரையாடல்கள் விரவிய மனிதநேயக் கதை முதுகில் பாயாத அம்புகள். சீனியம்மாவும் சக்கரையம்மாவும் பப்பாளிக் கொப்பை முன்னிட்டுச் சண்டையில் இறங்குகிறார்கள். இவர்களுக்கிடையில் ராசகுமாரி - புதிதாக வந்த சீனியம்மாவின் மருமகள். ராசகுமாரி திருமணத்துக்கு முன்பே கருச்சிதைவு செய்துகொண்ட விஷயம் எதிராளி சக்கரையம்மாவுக்குத் தெரியும், சீனியம்மாவுக்குத் தெரியாது. சண்டை உச்சத்தை நெருங்குகிறது. ராசகுமாரிக்குத் தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் “நாங்கல்லாம் பட்டுப்போன வாழைய வெட்டுவோம்; குலைபோட்டு முடிஞ்ச வாழைமரத்தை சாய்ப்போம்... ஆனால். துளிர்த்துவார<noinclude></noinclude> 90dpjbtn53neklnwjtxb8dpaoo6c5fk பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/12 250 213908 1839673 1839099 2025-07-06T16:44:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|X||}}</noinclude>வாழக்குருத்த வெட்டமாட்டோம்...” என்ற சக்கரையம்மாவின் பன்மைப் பேச்சோடு சண்டை முடிந்துவிடுகிறது. சமுத்திரக் கதைகள் தொகுப்பும்தான். <b>03.</b> சமுத்திரத்தின் பல முகங்கள் இந்தத் தொகுப்பில் வெளிப்படுகின்றன - அமைதி விரும்பும் கோபக்காரர், பெண்ணியவாதத்தை முன்வைக்கும் ஆண், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களை அனுபவபூர்வமாக அலசும் சமூக அறிவியல் விஞ்ஞானி, புதிய தலைமுறையின் குறைநிறைகளைப் புரிந்துகொண்டுள்ள உளவியல் அறிஞர், கல்மிஷமில்லா மனசுக்காரர், கிண்டல்காரரும்கூட - இப்படிப் பன்முகங்கள் இருப்பதாலேயே இவரின் கதைகளும் பன்முக வாசிப்புக்கும் விவாதத்துக்கும் இடமளிக்கின்றன. ⬤ இவரிடம் வார்த்தை ஜாலமில்லை, விரயமுமில்லை, வார்த்தைகள் ஆற்றொழுக்குப்போல் மனித மாண்பு என்னும் ஒற்றைத் திசைநோக்கிப் பயணிக்கின்றன. இவர் மனிதத்தை நேசிக்கும் எழுத்தாளர். உணர்ச்சிப்பூர்வமாய் இதயத்தில் சிந்திக்கும் எழுத்தாளர். வாழ்க்கையின் மேல் அபரிமிதமான பற்றுக் கொண்டுள்ள நம்பிக்கை எழுத்தாளர். இலக்கிய விசாரப் போதையில் மிதக்காமல், ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களோடு தன்னை இணைத்துக் கொண்டுள்ள செயல்படும் எழுத்தாளர். <b>04.</b> சமுத்திரத்திற்கு எந்த முன்னுரையும் அணிந்துரையும் தேவையில்லை. இந்த உரையும் சேர்த்து. ஆனால் சமுத்திரக் கதைகளுக்கு முன்னுரை எழுத அவர் என்னைத் தேர்ந்தெடுத்தது எனக்குக் கிடைத்த பெருமை. <b>05.</b> சமுத்திரம் வற்றாது. கொஞ்சம் ஏற்றம் இறக்கம் இருக்கலாம் என்றாலும். எனவே அடுத்தடுத்த தொகுப்புகள் வரவேண்டும் வரும். {{nop}}<noinclude></noinclude> pqbansinrnkqxog0nc5ief31dp22df2 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/197 250 214295 1839798 670854 2025-07-07T05:21:09Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}}} {{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}} {{U|<b>நாவல்கள்}} 1. ஒரு கோட்டுக்கு வெளியே</b> பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992. 2. இல்லந்தோறும் இதயங்கள் (ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997. 3. சத்திய ஆவேசம் (தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு) மணிவாசகர் பதிப்பகம், 1987. 4. நெருப்புத் தடயங்கள் (சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1983. கங்கை புத்தக நிலையம், 1998. 5. வெளிச்சத்தை நோக்கி (ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை) மணிவாசகர் பதிப்பகம், 1989. 6. ஊருக்குள் ஒரு புரட்சி (கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு) தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்) 7. வளர்ப்பு மகள் (சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது<noinclude></noinclude> 5hb55p7zr3enxccpdm7s34eecylxxxr 1839799 1839798 2025-07-07T05:21:43Z மொஹமது கராம் 14681 1839799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}}} {{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}} {{U|<b>நாவல்கள்}} 1. ஒரு கோட்டுக்கு வெளியே</b> பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992. 2. இல்லந்தோறும் இதயங்கள் (ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997. 3. சத்திய ஆவேசம் (தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு) மணிவாசகர் பதிப்பகம், 1987. 4. நெருப்புத் தடயங்கள் (சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1983. கங்கை புத்தக நிலையம், 1998. 5. வெளிச்சத்தை நோக்கி (ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை) மணிவாசகர் பதிப்பகம், 1989. 6. ஊருக்குள் ஒரு புரட்சி (கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு) தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்) 7. வளர்ப்பு மகள் (சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது<noinclude></noinclude> h22r6ij7l6wd2yaky24v3638yayao7h 1839800 1839799 2025-07-07T05:22:59Z மொஹமது கராம் 14681 1839800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}}} {{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}} {{larger|{{U|<b>நாவல்கள்}} ::1. ஒரு கோட்டுக்கு வெளியே</b>}}<br> {{left_margin|3em|பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.}} 2. இல்லந்தோறும் இதயங்கள் (ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997. 3. சத்திய ஆவேசம் (தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு) மணிவாசகர் பதிப்பகம், 1987. 4. நெருப்புத் தடயங்கள் (சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1983. கங்கை புத்தக நிலையம், 1998. 5. வெளிச்சத்தை நோக்கி (ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை) மணிவாசகர் பதிப்பகம், 1989. 6. ஊருக்குள் ஒரு புரட்சி (கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு) தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்) 7. வளர்ப்பு மகள் (சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது<noinclude></noinclude> sqtnohpe20jxihiyzvfq98vkqrgwcje 1839801 1839800 2025-07-07T05:23:41Z மொஹமது கராம் 14681 1839801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}}} {{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}} {{larger|{{U|<b>நாவல்கள்}} {{gap}}1. ஒரு கோட்டுக்கு வெளியே</b>}}<br> {{left_margin|3em|பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.}} 2. இல்லந்தோறும் இதயங்கள் (ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997. 3. சத்திய ஆவேசம் (தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு) மணிவாசகர் பதிப்பகம், 1987. 4. நெருப்புத் தடயங்கள் (சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1983. கங்கை புத்தக நிலையம், 1998. 5. வெளிச்சத்தை நோக்கி (ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை) மணிவாசகர் பதிப்பகம், 1989. 6. ஊருக்குள் ஒரு புரட்சி (கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு) தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்) 7. வளர்ப்பு மகள் (சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது<noinclude></noinclude> qylf011wfxtwjk53ezuay5f45qorgx4 1839802 1839801 2025-07-07T05:24:21Z மொஹமது கராம் 14681 1839802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}}} {{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}} {{larger|{{U|<b>நாவல்கள்}}}} {{gap}}{{larger|1. ஒரு கோட்டுக்கு வெளியே</b>}}<br> {{left_margin|3em|பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.}} 2. இல்லந்தோறும் இதயங்கள் (ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997. 3. சத்திய ஆவேசம் (தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு) மணிவாசகர் பதிப்பகம், 1987. 4. நெருப்புத் தடயங்கள் (சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1983. கங்கை புத்தக நிலையம், 1998. 5. வெளிச்சத்தை நோக்கி (ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை) மணிவாசகர் பதிப்பகம், 1989. 6. ஊருக்குள் ஒரு புரட்சி (கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு) தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்) 7. வளர்ப்பு மகள் (சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது<noinclude></noinclude> d1612spprshn5di6rh1w3qdnegtlve1 1839803 1839802 2025-07-07T05:25:13Z மொஹமது கராம் 14681 1839803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}}} {{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}} {{larger|{{U|<b>நாவல்கள்}}}} {{gap}}1. ஒரு கோட்டுக்கு வெளியே</b><br> {{left_margin|3em|பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.}} 2. இல்லந்தோறும் இதயங்கள் (ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997. 3. சத்திய ஆவேசம் (தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு) மணிவாசகர் பதிப்பகம், 1987. 4. நெருப்புத் தடயங்கள் (சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1983. கங்கை புத்தக நிலையம், 1998. 5. வெளிச்சத்தை நோக்கி (ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை) மணிவாசகர் பதிப்பகம், 1989. 6. ஊருக்குள் ஒரு புரட்சி (கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு) தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்) 7. வளர்ப்பு மகள் (சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது<noinclude></noinclude> 5alwz33q5qdp5ahdqoksubf3dyfmxuf 1839804 1839803 2025-07-07T05:27:31Z மொஹமது கராம் 14681 1839804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}}} {{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}} {{larger|{{U|<b>நாவல்கள்}}}} {{gap}}1. ஒரு கோட்டுக்கு வெளியே</b><br> {{left_margin|3em|பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.}} {{gap}}<b>2. இல்லந்தோறும் இதயங்கள்</b><br> {{left_margin|3em|(ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்)<br> மணிவாசகர் பதிப்பகம், 1982.<br> கங்கை புத்தக நிலையம், 1997.<br>}} 3. சத்திய ஆவேசம் (தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு) மணிவாசகர் பதிப்பகம், 1987. 4. நெருப்புத் தடயங்கள் (சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1983. கங்கை புத்தக நிலையம், 1998. 5. வெளிச்சத்தை நோக்கி (ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை) மணிவாசகர் பதிப்பகம், 1989. 6. ஊருக்குள் ஒரு புரட்சி (கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு) தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்) 7. வளர்ப்பு மகள் (சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது<noinclude></noinclude> 2jp0wob66ff9mjnlwqxnnkxfvohcwak 1839805 1839804 2025-07-07T05:28:06Z மொஹமது கராம் 14681 1839805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}}} {{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}} {{larger|{{U|<b>நாவல்கள்}}}} {{gap}}1. ஒரு கோட்டுக்கு வெளியே</b><br> {{left_margin|3em|பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.}} {{gap}}<b>2. இல்லந்தோறும் இதயங்கள்</b><br> {{left_margin|3em|(ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்)<br>மணிவாசகர் பதிப்பகம், 1982.<br>கங்கை புத்தக நிலையம், 1997.<br>}} 3. சத்திய ஆவேசம் (தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு) மணிவாசகர் பதிப்பகம், 1987. 4. நெருப்புத் தடயங்கள் (சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1983. கங்கை புத்தக நிலையம், 1998. 5. வெளிச்சத்தை நோக்கி (ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை) மணிவாசகர் பதிப்பகம், 1989. 6. ஊருக்குள் ஒரு புரட்சி (கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு) தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்) 7. வளர்ப்பு மகள் (சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது<noinclude></noinclude> ow8jry2yiqbayw1f1evb2yyccgjawmp 1839808 1839805 2025-07-07T06:10:36Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}}} {{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}} <poem>{{larger|{{U|<b>நாவல்கள்}}}} {{gap}}1. ஒரு கோட்டுக்கு வெளியே</b> {{left_margin|3em|பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. <b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.</b>}} {{gap}}<b>2. இல்லந்தோறும் இதயங்கள்</b> {{left_margin|3em|(ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்) <b>மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997.</b>}} {{gap}}<b>3. சத்திய ஆவேசம்</b> {{left_margin|3em|(தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு) <b>மணிவாசகர் பதிப்பகம், 1987.</b>}} {{gap}}<b>4. நெருப்புத் தடயங்கள்</b> {{left_margin|3em|(சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்) <b>மணிவாசகர் பதிப்பகம், 1983. கங்கை புத்தக நிலையம், 1998.</b>}} {{gap}}<b>5. வெளிச்சத்தை நோக்கி</b> {{left_margin|3em|(ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை) <b>மணிவாசகர் பதிப்பகம், 1989.</b>}} {{gap}}<b>6. ஊருக்குள் ஒரு புரட்சி</b> {{left_margin|3em|(கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு) <b>தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.</b> மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்).}} {{gap}}<b>7. வளர்ப்பு மகள்</b> {{left_margin|3em|(சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது.</poem>}}{{nop}}<noinclude></noinclude> idsamehhi8phufgkzweim6w8ese7v89 1839809 1839808 2025-07-07T06:11:23Z மொஹமது கராம் 14681 1839809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}}} {{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}} <poem>{{larger|{{U|<b>நாவல்கள்}}}} {{gap}}1. ஒரு கோட்டுக்கு வெளியே</b> {{left_margin|3em|பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. <b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.</b>}} {{gap}}<b>2. இல்லந்தோறும் இதயங்கள்</b> {{left_margin|3em|(ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்) <b>மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997.</b>}} {{gap}}<b>3. சத்திய ஆவேசம்</b> {{left_margin|3em|(தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு) <b>மணிவாசகர் பதிப்பகம், 1987.</b>}} {{gap}}<b>4. நெருப்புத் தடயங்கள்</b> {{left_margin|3em|(சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்) <b>மணிவாசகர் பதிப்பகம், 1983. கங்கை புத்தக நிலையம், 1998.</b>}} {{gap}}<b>5. வெளிச்சத்தை நோக்கி</b> {{left_margin|3em|(ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை) <b>மணிவாசகர் பதிப்பகம், 1989.</b>}} {{gap}}<b>6. ஊருக்குள் ஒரு புரட்சி</b> {{left_margin|3em|(கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு) <b>தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.</b> மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்).}} {{gap}}<b>7. வளர்ப்பு மகள்</b> {{left_margin|3em|(சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது.}}</poem>{{nop}}<noinclude></noinclude> bkur5mous3lrwmaxegkfkuee25nr8hv 1839810 1839809 2025-07-07T06:12:03Z மொஹமது கராம் 14681 1839810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>சு. சமுத்திரத்தின் படைப்புச் சுருக்கம்</b>}}}} {{box|பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன}} <poem>{{larger|{{U|<b>நாவல்கள்}}}} {{gap}}1. ஒரு கோட்டுக்கு வெளியே</b> {{left_margin|3em|பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. <b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.</b>}} {{gap}}<b>2. இல்லந்தோறும் இதயங்கள்</b> {{left_margin|3em|(ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்) <b>மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997.</b>}} {{gap}}<b>3. சத்திய ஆவேசம்</b> {{left_margin|3em|(தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு) <b>மணிவாசகர் பதிப்பகம், 1987.</b>}} {{gap}}<b>4. நெருப்புத் தடயங்கள்</b> {{left_margin|3em|(சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்) <b>மணிவாசகர் பதிப்பகம், 1983. கங்கை புத்தக நிலையம், 1998.</b>}} {{gap}}<b>5. வெளிச்சத்தை நோக்கி</b> {{left_margin|3em|(ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை) <b>மணிவாசகர் பதிப்பகம், 1989.</b>}} {{gap}}<b>6. ஊருக்குள் ஒரு புரட்சி</b> {{left_margin|3em|(கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு) <b>தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.</b> மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்).}} {{gap}}<b>7. வளர்ப்பு மகள்</b> {{left_margin|3em|(சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை) மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது.}}</poem>{{nop}}<noinclude></noinclude> 0sc8h84yal59q4iceb9nde41fo3hpyf பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/198 250 214296 1839812 670855 2025-07-07T06:16:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|||II}}</noinclude><poem>{{gap}}<b>8. நிழல் முகங்கள்</b> {{left_margin|3em|(இரயில்வே தொழிலாளர்கள் ரயிலிலேயே தத்தெடுத்து வளர்க்கும் ஒரு ஊமைச் சிறுவனைப் பற்றிய சித்தரிப்பு) <b>தமிழ்ப் புத்தகாலயம், 1991.</b>}} {{gap}}<b>9. சாமியாடிகள்</b> {{left_margin|3em|(கிராமங்களில் ஏற்படும் ஆடியோ-வீடியோ தாக்கங்கள்) <b>மீனாட்சி புத்தக நிலையம் மதுரை, 1991.</b>}} {{gap}}<b>10. தாழம்பூ</b> {{left_margin|3em|(சாராயத் தொழிலில் இருந்து விடுபடும் ஒரு சேரிப் பெண்ணின். சிக்கல்கள் - சென்னை வானொலி ஒலிபரப்பு ) <b>மணிவாசகர் பதிப்பகம், 1992.</b>}} 17. மூட்டம் (அயோத்தி மசூதி தகர்ப்பை அடுத்து ஒரு இஸ்லாமிய கிராம மக்கள் சந்தித்த இடர்பாடுகள் - சென்ற ஆண்டு, சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் விடியல் கலைக் குழுவினரால் நாடகமாய் நடந்தது) அன்னம் வெளியீடு, 1994; ஏகலைவன், 1996. 12. அவளுக்காக (திரைப்பட தயாரிப்பு என்ற பெயரில் சீரழிந்த ஒருவனின் கதை) வானதி பதிப்பகம், 1992. 13.வாடாமல்லி (அலிகளைப் பற்றிய மனிதநேயச் சித்தரிப்பு ஆதித்தனார் இலக்கியப் பரிசு பெற்ற படைப்பு) வானதி பதிப்பகம், 1994-1996. 14. பாலைப்புறா (ஒரு அப்பாவி எய்ட்ஸ் நோயாளிப் பெண்ணின் போராட்டக் கதை). சென்னை வானொலி நிலைய வாசிப்பு.ஏகலைவன் பதிப்பகம், 1998. குறுநாவல்கள் 1. புதிய திரிபுரங்கள் கேள்வித் தீ) (ஒரு ஆன்மீகவாதி போராளியாவதையும், பள்ளிக்கூட நிர்வாகச் சீரழிவுகளையும் சித்தரிப்பவை. மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997.</poem><noinclude></noinclude> o4gxm4nnvebyso0vbcqboxty3fprq11 1839813 1839812 2025-07-07T06:16:59Z மொஹமது கராம் 14681 1839813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|||II}}</noinclude><poem>{{gap}}<b>8. நிழல் முகங்கள்</b> {{left_margin|3em|(இரயில்வே தொழிலாளர்கள் ரயிலிலேயே தத்தெடுத்து வளர்க்கும் ஒரு ஊமைச் சிறுவனைப் பற்றிய சித்தரிப்பு) <b>தமிழ்ப் புத்தகாலயம், 1991.</b>}} {{gap}}<b>9. சாமியாடிகள்</b> {{left_margin|3em|(கிராமங்களில் ஏற்படும் ஆடியோ-வீடியோ தாக்கங்கள்) <b>மீனாட்சி புத்தக நிலையம் மதுரை, 1991.</b>}} {{gap}}<b>10. தாழம்பூ</b> {{left_margin|3.5em|(சாராயத் தொழிலில் இருந்து விடுபடும் ஒரு சேரிப் பெண்ணின். சிக்கல்கள் - சென்னை வானொலி ஒலிபரப்பு ) <b>மணிவாசகர் பதிப்பகம், 1992.</b>}} 17. மூட்டம் (அயோத்தி மசூதி தகர்ப்பை அடுத்து ஒரு இஸ்லாமிய கிராம மக்கள் சந்தித்த இடர்பாடுகள் - சென்ற ஆண்டு, சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் விடியல் கலைக் குழுவினரால் நாடகமாய் நடந்தது) அன்னம் வெளியீடு, 1994; ஏகலைவன், 1996. 12. அவளுக்காக (திரைப்பட தயாரிப்பு என்ற பெயரில் சீரழிந்த ஒருவனின் கதை) வானதி பதிப்பகம், 1992. 13.வாடாமல்லி (அலிகளைப் பற்றிய மனிதநேயச் சித்தரிப்பு ஆதித்தனார் இலக்கியப் பரிசு பெற்ற படைப்பு) வானதி பதிப்பகம், 1994-1996. 14. பாலைப்புறா (ஒரு அப்பாவி எய்ட்ஸ் நோயாளிப் பெண்ணின் போராட்டக் கதை). சென்னை வானொலி நிலைய வாசிப்பு.ஏகலைவன் பதிப்பகம், 1998. குறுநாவல்கள் 1. புதிய திரிபுரங்கள் கேள்வித் தீ) (ஒரு ஆன்மீகவாதி போராளியாவதையும், பள்ளிக்கூட நிர்வாகச் சீரழிவுகளையும் சித்தரிப்பவை. மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997.</poem><noinclude></noinclude> lcuesd02rgja7jzyp7zs9vzgnrz5ywk 1839814 1839813 2025-07-07T06:23:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||II}}</noinclude><poem>{{gap}}<b>8. நிழல் முகங்கள்</b> {{left_margin|3em|(இரயில்வே தொழிலாளர்கள் ரயிலிலேயே தத்தெடுத்து வளர்க்கும் ஒரு ஊமைச் சிறுவனைப் பற்றிய சித்தரிப்பு) <b>தமிழ்ப் புத்தகாலயம், 1991.</b>}} {{gap}}<b>9. சாமியாடிகள்</b> {{left_margin|3em|(கிராமங்களில் ஏற்படும் ஆடியோ-வீடியோ தாக்கங்கள்) <b>மீனாட்சி புத்தக நிலையம் மதுரை, 1991.</b>}} {{gap}}<b>10. தாழம்பூ</b> {{left_margin|3.5em|(சாராயத் தொழிலில் இருந்து விடுபடும் ஒரு சேரிப் பெண்ணின். சிக்கல்கள் - சென்னை வானொலி ஒலிபரப்பு ) <b>மணிவாசகர் பதிப்பகம், 1992.</b>}} {{gap}}<b>11. மூட்டம்</b> {{left_margin|3.5em|(அயோத்தி மசூதி தகர்ப்பை அடுத்து ஒரு இஸ்லாமிய கிராம மக்கள் சந்தித்த இடர்பாடுகள்-சென்ற ஆண்டு, சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் விடியல் கலைக் குழுவினரால் நாடகமாய் நடந்தது) <b>அன்னம் வெளியீடு, 1994; ஏகலைவன், 1996.</b>}} {{gap}}<b>12. அவளுக்காக</b> {{left_margin|3.5em|(திரைப்பட தயாரிப்பு என்ற பெயரில் சீரழிந்த ஒருவனின் கதை) <b>வானதி பதிப்பகம், 1992.</b>}} {{gap}}<b>13. வாடாமல்லி</b> {{left_margin|3.5em|(அலிகளைப் பற்றிய மனிதநேயச் சித்தரிப்பு - ஆதித்தனார் இலக்கியப் பரிசு பெற்ற படைப்பு) <b>வானதி பதிப்பகம், 1994-1996.</b>}} {{gap}}<b>14. பாலைப்புறா</b> {{left_margin|3.5em|(ஒரு அப்பாவி எய்ட்ஸ் நோயாளிப் பெண்ணின் போராட்டக் கதை). சென்னை வானொலி நிலைய வாசிப்பு. <b>ஏகலைவன் பதிப்பகம், 1998.</b>}} {{larger|{{U|குறுநாவல்கள்}}}} {{gap}}<b>1. புதிய திரிபுரங்கள் (கேள்வித் தீ)</b> {{left_margin|3em|(ஒரு ஆன்மீகவாதி போராளியாவதையும், பள்ளிக்கூட நிர்வாகச் சீரழிவுகளையும் சித்தரிப்பவை. <b>மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997.</b>}}</poem>{{nop}}<noinclude></noinclude> p4ajcxauauncamgrwckgeey054w0xte 1839815 1839814 2025-07-07T06:24:41Z மொஹமது கராம் 14681 1839815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||II}}</noinclude><poem>{{gap}}<b>8. நிழல் முகங்கள்</b> {{left_margin|3em|(இரயில்வே தொழிலாளர்கள் ரயிலிலேயே தத்தெடுத்து வளர்க்கும் ஒரு ஊமைச் சிறுவனைப் பற்றிய சித்தரிப்பு) <b>தமிழ்ப் புத்தகாலயம், 1991.</b>}} {{gap}}<b>9. சாமியாடிகள்</b> {{left_margin|3em|(கிராமங்களில் ஏற்படும் ஆடியோ-வீடியோ தாக்கங்கள்) <b>மீனாட்சி புத்தக நிலையம் மதுரை, 1991.</b>}} {{gap}}<b>10. தாழம்பூ</b> {{left_margin|3.5em|(சாராயத் தொழிலில் இருந்து விடுபடும் ஒரு சேரிப் பெண்ணின். சிக்கல்கள் - சென்னை வானொலி ஒலிபரப்பு ) <b>மணிவாசகர் பதிப்பகம், 1992.</b>}} {{gap}}<b>11. மூட்டம்</b> {{left_margin|3.5em|(அயோத்தி மசூதி தகர்ப்பை அடுத்து ஒரு இஸ்லாமிய கிராம மக்கள் சந்தித்த இடர்பாடுகள்-சென்ற ஆண்டு, சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் விடியல் கலைக் குழுவினரால் நாடகமாய் நடந்தது) <b>அன்னம் வெளியீடு, 1994; ஏகலைவன், 1996.</b>}} {{gap}}<b>12. அவளுக்காக</b> {{left_margin|3.5em|(திரைப்பட தயாரிப்பு என்ற பெயரில் சீரழிந்த ஒருவனின் கதை) <b>வானதி பதிப்பகம், 1992.</b>}} {{gap}}<b>13. வாடாமல்லி</b> {{left_margin|3.5em|(அலிகளைப் பற்றிய மனிதநேயச் சித்தரிப்பு - ஆதித்தனார் இலக்கியப் பரிசு பெற்ற படைப்பு) <b>வானதி பதிப்பகம், 1994-1996.</b>}} {{gap}}<b>14. பாலைப்புறா</b> {{left_margin|3.5em|(ஒரு அப்பாவி எய்ட்ஸ் நோயாளிப் பெண்ணின் போராட்டக் கதை). சென்னை வானொலி நிலைய வாசிப்பு. <b>ஏகலைவன் பதிப்பகம், 1998.</b>}} {{larger|{{U|<b>குறுநாவல்கள்</b>}}}} {{gap}}<b>1. புதிய திரிபுரங்கள் (கேள்வித் தீ)</b> {{left_margin|3em|(ஒரு ஆன்மீகவாதி போராளியாவதையும், பள்ளிக்கூட நிர்வாகச் சீரழிவுகளையும் சித்தரிப்பவை. <b>மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997.</b>}}</poem>{{nop}}<noinclude></noinclude> 1oh4i277sx2vfxtcs6f8odrwchrqf0l 1839816 1839815 2025-07-07T06:25:10Z மொஹமது கராம் 14681 1839816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||II}}</noinclude><poem>{{gap}}<b>8. நிழல் முகங்கள்</b> {{left_margin|3em|(இரயில்வே தொழிலாளர்கள் ரயிலிலேயே தத்தெடுத்து வளர்க்கும் ஒரு ஊமைச் சிறுவனைப் பற்றிய சித்தரிப்பு) <b>தமிழ்ப் புத்தகாலயம், 1991.</b>}} {{gap}}<b>9. சாமியாடிகள்</b> {{left_margin|3em|(கிராமங்களில் ஏற்படும் ஆடியோ-வீடியோ தாக்கங்கள்) <b>மீனாட்சி புத்தக நிலையம் மதுரை, 1991.</b>}} {{gap}}<b>10. தாழம்பூ</b> {{left_margin|3.5em|(சாராயத் தொழிலில் இருந்து விடுபடும் ஒரு சேரிப் பெண்ணின். சிக்கல்கள் - சென்னை வானொலி ஒலிபரப்பு ) <b>மணிவாசகர் பதிப்பகம், 1992.</b>}} {{gap}}<b>11. மூட்டம்</b> {{left_margin|3.5em|(அயோத்தி மசூதி தகர்ப்பை அடுத்து ஒரு இஸ்லாமிய கிராம மக்கள் சந்தித்த இடர்பாடுகள்-சென்ற ஆண்டு, சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் விடியல் கலைக் குழுவினரால் நாடகமாய் நடந்தது) <b>அன்னம் வெளியீடு, 1994; ஏகலைவன், 1996.</b>}} {{gap}}<b>12. அவளுக்காக</b> {{left_margin|3.5em|(திரைப்பட தயாரிப்பு என்ற பெயரில் சீரழிந்த ஒருவனின் கதை) <b>வானதி பதிப்பகம், 1992.</b>}} {{gap}}<b>13. வாடாமல்லி</b> {{left_margin|3.5em|(அலிகளைப் பற்றிய மனிதநேயச் சித்தரிப்பு - ஆதித்தனார் இலக்கியப் பரிசு பெற்ற படைப்பு) <b>வானதி பதிப்பகம், 1994-1996.</b>}} {{gap}}<b>14. பாலைப்புறா</b> {{left_margin|3.5em|(ஒரு அப்பாவி எய்ட்ஸ் நோயாளிப் பெண்ணின் போராட்டக் கதை). சென்னை வானொலி நிலைய வாசிப்பு. <b>ஏகலைவன் பதிப்பகம், 1998.</b>}} {{larger|{{U|<b>குறுநாவல்கள்}}}} {{gap}}1. புதிய திரிபுரங்கள் (கேள்வித் தீ)</b> {{left_margin|3em|(ஒரு ஆன்மீகவாதி போராளியாவதையும், பள்ளிக்கூட நிர்வாகச் சீரழிவுகளையும் சித்தரிப்பவை. <b>மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997.</b>}}</poem>{{nop}}<noinclude></noinclude> nd7x7b9sq6fu1ltejlxf5fbmhr4khls பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/199 250 214299 1839821 670856 2025-07-07T06:36:20Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|III||}}</noinclude><poem>{{gap}}<b>2. சோற்றுப் பட்டாளம் {{left_margin|3em|(+உயரத்தின் தாழ்வுகள்+காமனை அறிந்த ஈசன்)</b> (ஒரு கிழவருக்கு நிச்சயித்த இளம்பெண்ணின் போராட்டம். மலைமக்களின் போராட்டம், பாதுகாப்பின்மையை பாலியலாக கருதும் ஒரு பெண்ணின் மனச்சிக்கல் - சோற்றுப்பட்டாளம் சென்னை தொலைக்காட்சியில் முதன்முதலாக எடுக்கப்பட்ட முழு நீள நாடகம். கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1977. <b>மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997.</b>}} {{gap}}<b>3. வேரில் பழுத்த பலா (+ஒரு நாள் போதுமா)</b> {{left_margin|3em|(அரசு அலுவலக சாதியங்கள், கட்டிடத் தொழிலாளர்களின் போராட்டம் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.) <b>சாகித்ய அகாதமி விருது பெற்றது மணிவாசகர் பதிப்பகம், 1989-1994.</b>}} {{gap}}<b>4. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால் (+பிற்பகல்)</b> {{left_margin|3em|(சத்தியம் ஒரு கேடயம் என்பதையும், முற்பகல் ஆக்கிரமிப்பு பிற்பகல் இன்னல்களாகும் என்பதையும் விளக்குபவை. <b>வானதி பதிப்பகம், 1982.</b>}} {{larger|{{U|<b>சிறுகதைத் தொகுப்புகள்}}}} {{gap}}1. குற்றம் பார்க்கில் {{left_margin|3em|தமிழக அரசின் முதற்பரிசு</b> மணிவாசகர் பதிப்பகம், 1992.}} {{gap}}<b>2. காகித உறவு</b> {{left_margin|3em|மணிவாசகர் பதிப்பகம், 1979-1982.}} {{gap}}<b>3. ஒரு சத்தியத்தின் அழுகை</b> {{left_margin|3em|மணிவாசகர் பதிப்பகம், 1979-1985.}} {{gap}}<b>4. உறவுக்கு அப்பால்</b> {{left_margin|3em|மணிவாசகம் பதிப்பகம், 1979.}} {{gap}}<b>5. மானுடத்தின் நாணயங்கள்</b> {{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1982-1989.}}</poem>{{nop}}<noinclude></noinclude> ljyff9t02mqvojpiqudcisx8nvlto5o பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/200 250 214301 1839825 670858 2025-07-07T06:44:25Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||IV}}</noinclude><poem>{{gap}}<b>6. பிணம் தின்னும் சாஸ்திரங்கள்</b> {{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987.}} {{gap}}<b>7. சமுத்திரம் கதைகள்</b> {{left_margin|3em|மணிவாசகர் பதிப்பகம், 1983.}} {{gap}}<b>8. ஏவாத கணைகள்</b> {{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1990-1998.}} {{gap}}<b>9. மண்சுமை {{left_margin|3em|தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது</b> மணிவாசகர் பதிப்பகம், 1991.}} {{gap}}<b>10. யானைப் பூச்சிகள்</b> {{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.}} {{gap}}<b>11. காலில் விழுந்த கவிதைகள்</b> {{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.}} {{gap}}<b>12. மனம் கொத்தி மனிதர்கள்</b> {{left_margin|3em|வானதி பதிப்பகம், 1992.}} {{gap}}<b>13. இன்னொரு உரிமை</b> {{left_margin|3em|வானதி பதிப்பகம், 1992.}} {{gap}}<b>14. பூநாகம்</b> {{left_margin|3em|வானதி பதிப்பகம், 1992.}} {{gap}}<b>15. பொய்யாய் புதுக்கனவாய்</b> {{left_margin|3em|கங்கை புத்தக நிலையம், 1997.}} {{gap}}<b>16. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும்</b> {{left_margin|3em|ஏகலைவன் பதிப்பகம், 1996.}} {{gap}}<b>17. கோரைப்புற்கள். {{gap}}18. ஈச்சம்பாய். {{gap}}19. சிக்கிமுக்கிக் கற்கள்.</b></poem>{{nop}}<noinclude></noinclude> pxyo43hwelb8a9jyqy736ae559wczon 1839826 1839825 2025-07-07T06:45:12Z மொஹமது கராம் 14681 1839826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|||IV}}</noinclude><poem>{{gap}}<b>6. பிணம் தின்னும் சாஸ்திரங்கள்</b> {{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987.}} {{gap}}<b>7. சமுத்திரம் கதைகள்</b> {{left_margin|3em|மணிவாசகர் பதிப்பகம், 1983.}} {{gap}}<b>8. ஏவாத கணைகள்</b> {{left_margin|3em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1990-1998.}} {{gap}}<b>9. மண்சுமை {{left_margin|3em|தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது</b> மணிவாசகர் பதிப்பகம், 1991.}} {{gap}}<b>10. யானைப் பூச்சிகள்</b> {{left_margin|3.5em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.}} {{gap}}<b>11. காலில் விழுந்த கவிதைகள்</b> {{left_margin|3.5em|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.}} {{gap}}<b>12. மனம் கொத்தி மனிதர்கள்</b> {{left_margin|3.5em|வானதி பதிப்பகம், 1992.}} {{gap}}<b>13. இன்னொரு உரிமை</b> {{left_margin|3.5em|வானதி பதிப்பகம், 1992.}} {{gap}}<b>14. பூநாகம்</b> {{left_margin|3.5em|வானதி பதிப்பகம், 1992.}} {{gap}}<b>15. பொய்யாய் புதுக்கனவாய்</b> {{left_margin|3.5em|கங்கை புத்தக நிலையம், 1997.}} {{gap}}<b>16. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும்</b> {{left_margin|3.5em|ஏகலைவன் பதிப்பகம், 1996.}} {{gap}}<b>17. கோரைப்புற்கள். {{gap}}18. ஈச்சம்பாய். {{gap}}19. சிக்கிமுக்கிக் கற்கள்.</b></poem>{{nop}}<noinclude></noinclude> 1lky56c622jo6as6gkxpyetmt2z0i1k பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/201 250 214304 1839828 670859 2025-07-07T06:49:45Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|V||}}</noinclude><poem>{{gap}}<b>20. ஆகாயமும் பூமியுமாய்....</b> {{left_margin|3.5em|(சு. சமுத்திரத்தின் வழக்கத்திற்கு மாறான வேறுபட்ட தளத்தில் - ஆன்மீக முற்போக்கு சிறுகதைகள்) <b>ஏகலைவன் பதிப்பகம், 1998-1999.</b>}} கட்டுரைத் தொகுப்பு 1. எனது கதைகளின் கதைகள், (ஆசிரியரின் படைப்பிலக்கிய அனுபவப் பின்னணி) ஒவ்வொரு சிறுகதைக்கும், ஒவ்வொரு நாவலுக்கும் பின்தளமாக இருந்த அனுபவங்களை சுவையாகக் கூறும் கட்டுரைத் தொகுப்பு. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் நூல்) ஏகலைவன் பதிப்பகம், 1996. 2. சமுத்திரம் கட்டுரைகள் (பல்வேறு கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் படைப்பு) ஏகலைவன் பதிப்பகம், 1999. நாடக நூல் 1. லியோ டால்ஸ்டாய் (இலக்கிய மாமேதை லியோ டால்ஸ்டாய்யின் எண்பத்தொன்பது வயது இறுதிக்கால வாழ்வை அவரது மனைவியான சோன்யாவிற்கும் நீதி வழங்கி, உள்ளது உள்ளபடியாய் வரலாற்று சாட்சியங்களோடு எழுதப்பட்ட நாடக நூல். இது, அப்போதைய சோவியத் கலாச்சார மையத்திலும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திலும், கலைமாமணி பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் குழுவினரால் நாடகமாக நடிக்கப்பட்டது.) கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1979. மணிவாசகர் பதிப்பகம், 1987. சு. சமுத்திரம் படைப்புகள் - ஆய்வு நூல்கள்: முனைவர் i. சு.சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம் நளினிதேவி. (பெரும்பாலான சிறுகதைகளின் ஆய்வு) ஏகலைவன் பதிப்பகம், 1998. 2. சு. சமுத்திரம் படைப்புகளில் பெண்ணியம் முனைவர் ச.தியாகமணியின் ஆய்வு நூல். கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1993.</poem> {{***|3|5em|char=<b>—</b>}}{{nop}}<noinclude></noinclude> rfnqyrlna0lptcesgshm1v6swxjzk2w 1839829 1839828 2025-07-07T06:50:14Z மொஹமது கராம் 14681 1839829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" />{{rh|V||}}</noinclude><poem>{{gap}}<b>20. ஆகாயமும் பூமியுமாய்....</b> {{left_margin|3.5em|(சு. சமுத்திரத்தின் வழக்கத்திற்கு மாறான வேறுபட்ட தளத்தில் - ஆன்மீக முற்போக்கு சிறுகதைகள்) <b>ஏகலைவன் பதிப்பகம், 1998-1999.</b>}} கட்டுரைத் தொகுப்பு 1. எனது கதைகளின் கதைகள், (ஆசிரியரின் படைப்பிலக்கிய அனுபவப் பின்னணி) ஒவ்வொரு சிறுகதைக்கும், ஒவ்வொரு நாவலுக்கும் பின்தளமாக இருந்த அனுபவங்களை சுவையாகக் கூறும் கட்டுரைத் தொகுப்பு. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் நூல்) ஏகலைவன் பதிப்பகம், 1996. 2. சமுத்திரம் கட்டுரைகள் (பல்வேறு கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் படைப்பு) ஏகலைவன் பதிப்பகம், 1999. நாடக நூல் 1. லியோ டால்ஸ்டாய் (இலக்கிய மாமேதை லியோ டால்ஸ்டாய்யின் எண்பத்தொன்பது வயது இறுதிக்கால வாழ்வை அவரது மனைவியான சோன்யாவிற்கும் நீதி வழங்கி, உள்ளது உள்ளபடியாய் வரலாற்று சாட்சியங்களோடு எழுதப்பட்ட நாடக நூல். இது, அப்போதைய சோவியத் கலாச்சார மையத்திலும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திலும், கலைமாமணி பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் குழுவினரால் நாடகமாக நடிக்கப்பட்டது.) கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1979. மணிவாசகர் பதிப்பகம், 1987. சு. சமுத்திரம் படைப்புகள் - ஆய்வு நூல்கள்: முனைவர் i. சு.சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம் நளினிதேவி. (பெரும்பாலான சிறுகதைகளின் ஆய்வு) ஏகலைவன் பதிப்பகம், 1998. 2. சு. சமுத்திரம் படைப்புகளில் பெண்ணியம் முனைவர் ச.தியாகமணியின் ஆய்வு நூல். கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1993.</poem> {{***|6|2em|char=<b>—</b>}}{{nop}}<noinclude></noinclude> 7f7qodd2pk9gi1sag1mbwxqiowq2pam 1839832 1839829 2025-07-07T07:01:01Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|V||}}</noinclude><poem>{{gap}}<b>20. ஆகாயமும் பூமியுமாய்....</b> {{left_margin|3.5em|(சு. சமுத்திரத்தின் வழக்கத்திற்கு மாறான வேறுபட்ட தளத்தில் - ஆன்மீக முற்போக்கு சிறுகதைகள்) <b>ஏகலைவன் பதிப்பகம், 1998-1999.</b>}} {{larger|{{U|<b>கட்டுரைத் தொகுப்பு}}}} {{gap}}1. எனது கதைகளின் கதைகள்,</b> {{left_margin|3em|(ஆசிரியரின் படைப்பிலக்கிய அனுபவப் பின்னணி) ஒவ்வொரு சிறுகதைக்கும், ஒவ்வொரு நாவலுக்கும் பின்தளமாக இருந்த அனுபவங்களை சுவையாகக் கூறும் கட்டுரைத் தொகுப்பு. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் நூல்) <b>ஏகலைவன் பதிப்பகம், 1996.</b>}} {{gap}}<b>2. சமுத்திரம் கட்டுரைகள்</b> {{left_margin|3em|(பல்வேறு கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் படைப்பு) <b>ஏகலைவன் பதிப்பகம், 1999.</b>}} {{larger|{{U|<b>நாடக நூல்}}}} {{gap}}1. லியோ டால்ஸ்டாய்</b> {{left_margin|3em|(இலக்கிய மாமேதை லியோ டால்ஸ்டாய்யின் எண்பத்தொன்பது வயது இறுதிக்கால வாழ்வை அவரது மனைவியான சோன்யாவிற்கும் நீதி வழங்கி, உள்ளது உள்ளபடியாய் வரலாற்று சாட்சியங்களோடு எழுதப்பட்ட நாடக நூல். இது, அப்போதைய சோவியத் கலாச்சார மையத்திலும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திலும், கலைமாமணி <b>பி.ஏ. கிருஷ்ணன்</b> அவர்களின் குழுவினரால் நாடகமாக நடிக்கப்பட்டது.) <b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1979. மணிவாசகர் பதிப்பகம், 1987.}} {{larger|{{U|சு. சமுத்திரம் படைப்புகள் - ஆய்வு நூல்கள் :}}}} {{gap}}1. சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம்</b> - முனைவர் <b>நளினிதேவி.</b> (பெரும்பாலான சிறுகதைகளின் ஆய்வு) <b>ஏகலைவன் பதிப்பகம், 1998. {{gap}}2. சு. சமுத்திரம் படைப்புகளில் பெண்ணியம்</b> - முனைவர் <b>ச. தியாகமணியின்</b> ஆய்வு நூல். <b>கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1993.</b></poem> {{***|6|2em|char=<b>—</b>}}{{nop}}<noinclude></noinclude> 71v5gflag1y3nrylkf5zwxzdw5drekp 1839838 1839832 2025-07-07T07:02:26Z மொஹமது கராம் 14681 1839838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|V||}}</noinclude><poem>{{gap}}<b>20. ஆகாயமும் பூமியுமாய்....</b> {{left_margin|3.5em|(சு. சமுத்திரத்தின் வழக்கத்திற்கு மாறான வேறுபட்ட தளத்தில் - ஆன்மீக முற்போக்கு சிறுகதைகள்) <b>ஏகலைவன் பதிப்பகம், 1998-1999.</b>}} {{larger|{{U|<b>கட்டுரைத் தொகுப்பு}}}} {{gap}}1. எனது கதைகளின் கதைகள்,</b> {{left_margin|3em|(ஆசிரியரின் படைப்பிலக்கிய அனுபவப் பின்னணி) ஒவ்வொரு சிறுகதைக்கும், ஒவ்வொரு நாவலுக்கும் பின்தளமாக இருந்த அனுபவங்களை சுவையாகக் கூறும் கட்டுரைத் தொகுப்பு. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் நூல்) <b>ஏகலைவன் பதிப்பகம், 1996.</b>}} {{gap}}<b>2. சமுத்திரம் கட்டுரைகள்</b> {{left_margin|3em|(பல்வேறு கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் படைப்பு) <b>ஏகலைவன் பதிப்பகம், 1999.</b>}} {{larger|{{U|<b>நாடக நூல்}}}} {{gap}}1. லியோ டால்ஸ்டாய்</b> {{left_margin|3em|(இலக்கிய மாமேதை லியோ டால்ஸ்டாய்யின் எண்பத்தொன்பது வயது இறுதிக்கால வாழ்வை அவரது மனைவியான சோன்யாவிற்கும் நீதி வழங்கி, உள்ளது உள்ளபடியாய் வரலாற்று சாட்சியங்களோடு எழுதப்பட்ட நாடக நூல். இது, அப்போதைய சோவியத் கலாச்சார மையத்திலும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திலும், கலைமாமணி <b>பி.ஏ. கிருஷ்ணன்</b> அவர்களின் குழுவினரால் நாடகமாக நடிக்கப்பட்டது.) <b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1979. மணிவாசகர் பதிப்பகம், 1987.}} {{larger|{{U|சு. சமுத்திரம் படைப்புகள் - ஆய்வு நூல்கள் :}}}} {{gap}}1. சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம்</b> - {{left_margin|3em|முனைவர் <b>நளினிதேவி.</b> (பெரும்பாலான சிறுகதைகளின் ஆய்வு) <b>ஏகலைவன் பதிப்பகம், 1998.}} {{gap}}2. சு. சமுத்திரம் படைப்புகளில் பெண்ணியம்</b> - {{left_margin|3em|முனைவர் <b>ச. தியாகமணியின்</b> ஆய்வு நூல். <b>கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1993.</b></poem>}} {{***|6|2em|char=<b>—</b>}}{{nop}}<noinclude></noinclude> kt3nvmq4hl7ypqo3igso2a8faqeq6ll 1839840 1839838 2025-07-07T07:02:55Z மொஹமது கராம் 14681 1839840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|V||}}</noinclude><poem>{{gap}}<b>20. ஆகாயமும் பூமியுமாய்....</b> {{left_margin|3.5em|(சு. சமுத்திரத்தின் வழக்கத்திற்கு மாறான வேறுபட்ட தளத்தில் - ஆன்மீக முற்போக்கு சிறுகதைகள்) <b>ஏகலைவன் பதிப்பகம், 1998-1999.</b>}} {{larger|{{U|<b>கட்டுரைத் தொகுப்பு}}}} {{gap}}1. எனது கதைகளின் கதைகள்,</b> {{left_margin|3em|(ஆசிரியரின் படைப்பிலக்கிய அனுபவப் பின்னணி) ஒவ்வொரு சிறுகதைக்கும், ஒவ்வொரு நாவலுக்கும் பின்தளமாக இருந்த அனுபவங்களை சுவையாகக் கூறும் கட்டுரைத் தொகுப்பு. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் நூல்) <b>ஏகலைவன் பதிப்பகம், 1996.</b>}} {{gap}}<b>2. சமுத்திரம் கட்டுரைகள்</b> {{left_margin|3em|(பல்வேறு கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் படைப்பு) <b>ஏகலைவன் பதிப்பகம், 1999.</b>}} {{larger|{{U|<b>நாடக நூல்}}}} {{gap}}1. லியோ டால்ஸ்டாய்</b> {{left_margin|3em|(இலக்கிய மாமேதை லியோ டால்ஸ்டாய்யின் எண்பத்தொன்பது வயது இறுதிக்கால வாழ்வை அவரது மனைவியான சோன்யாவிற்கும் நீதி வழங்கி, உள்ளது உள்ளபடியாய் வரலாற்று சாட்சியங்களோடு எழுதப்பட்ட நாடக நூல். இது, அப்போதைய சோவியத் கலாச்சார மையத்திலும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திலும், கலைமாமணி <b>பி.ஏ. கிருஷ்ணன்</b> அவர்களின் குழுவினரால் நாடகமாக நடிக்கப்பட்டது.) <b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1979. மணிவாசகர் பதிப்பகம், 1987.}} {{larger|{{U|சு. சமுத்திரம் படைப்புகள் - ஆய்வு நூல்கள் :}}}} {{gap}}1. சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம்</b> - {{left_margin|3em|முனைவர் <b>நளினிதேவி.</b> (பெரும்பாலான சிறுகதைகளின் ஆய்வு) <b>ஏகலைவன் பதிப்பகம், 1998.}} {{gap}}2. சு. சமுத்திரம் படைப்புகளில் பெண்ணியம்</b> - {{left_margin|3em|முனைவர் <b>ச. தியாகமணியின்</b> ஆய்வு நூல். <b>கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1993.</b>}}</poem> {{***|6|2em|char=<b>—</b>}}{{nop}}<noinclude></noinclude> llhzdpc0d5cwf9rlbicztscjz70smpp 1839841 1839840 2025-07-07T07:03:38Z மொஹமது கராம் 14681 1839841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|V||}}</noinclude><poem>{{gap}}<b>20. ஆகாயமும் பூமியுமாய்....</b> {{left_margin|3.5em|(சு. சமுத்திரத்தின் வழக்கத்திற்கு மாறான வேறுபட்ட தளத்தில் - ஆன்மீக முற்போக்கு சிறுகதைகள்) <b>ஏகலைவன் பதிப்பகம், 1998-1999.</b>}} {{larger|{{U|<b>கட்டுரைத் தொகுப்பு}}}} {{gap}}1. எனது கதைகளின் கதைகள்,</b> {{left_margin|3em|(ஆசிரியரின் படைப்பிலக்கிய அனுபவப் பின்னணி) ஒவ்வொரு சிறுகதைக்கும், ஒவ்வொரு நாவலுக்கும் பின்தளமாக இருந்த அனுபவங்களை சுவையாகக் கூறும் கட்டுரைத் தொகுப்பு. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் நூல்) <b>ஏகலைவன் பதிப்பகம், 1996.</b>}} {{gap}}<b>2. சமுத்திரம் கட்டுரைகள்</b> {{left_margin|3em|(பல்வேறு கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் படைப்பு) <b>ஏகலைவன் பதிப்பகம், 1999.</b>}} {{larger|{{U|<b>நாடக நூல்}}}} {{gap}}1. லியோ டால்ஸ்டாய்</b> {{left_margin|3em|(இலக்கிய மாமேதை லியோ டால்ஸ்டாய்யின் எண்பத்தொன்பது வயது இறுதிக்கால வாழ்வை அவரது மனைவியான சோன்யாவிற்கும் நீதி வழங்கி, உள்ளது உள்ளபடியாய் வரலாற்று சாட்சியங்களோடு எழுதப்பட்ட நாடக நூல். இது, அப்போதைய சோவியத் கலாச்சார மையத்திலும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திலும், கலைமாமணி <b>பி.ஏ. கிருஷ்ணன்</b> அவர்களின் குழுவினரால் நாடகமாக நடிக்கப்பட்டது.) <b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1979. மணிவாசகர் பதிப்பகம், 1987.}} {{larger|{{U|சு. சமுத்திரம் படைப்புகள் - ஆய்வு நூல்கள் :}}}} {{gap}}1. சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம்</b> - {{left_margin|3em|முனைவர் <b>நளினிதேவி.</b> (பெரும்பாலான சிறுகதைகளின் ஆய்வு) <b>ஏகலைவன் பதிப்பகம், 1998.}} {{gap}}2. சு. சமுத்திரம் படைப்புகளில் பெண்ணியம்</b> - {{left_margin|3em|முனைவர் <b>ச. தியாகமணியின்</b> ஆய்வு நூல். <b>கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1993.</b>}}</poem> {{***|6|2em|char=<b>—</b>}}{{nop}}<noinclude></noinclude> sdeycd8t3p59x6hjwp02snfcvqub4j2 1839842 1839841 2025-07-07T07:03:59Z மொஹமது கராம் 14681 1839842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|V||}}</noinclude><poem>{{gap}}<b>20. ஆகாயமும் பூமியுமாய்....</b> {{left_margin|3.5em|(சு. சமுத்திரத்தின் வழக்கத்திற்கு மாறான வேறுபட்ட தளத்தில் - ஆன்மீக முற்போக்கு சிறுகதைகள்) <b>ஏகலைவன் பதிப்பகம், 1998-1999.</b>}} {{larger|{{U|<b>கட்டுரைத் தொகுப்பு}}}} {{gap}}1. எனது கதைகளின் கதைகள்,</b> {{left_margin|3em|(ஆசிரியரின் படைப்பிலக்கிய அனுபவப் பின்னணி) ஒவ்வொரு சிறுகதைக்கும், ஒவ்வொரு நாவலுக்கும் பின்தளமாக இருந்த அனுபவங்களை சுவையாகக் கூறும் கட்டுரைத் தொகுப்பு. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் நூல்) <b>ஏகலைவன் பதிப்பகம், 1996.</b>}} {{gap}}<b>2. சமுத்திரம் கட்டுரைகள்</b> {{left_margin|3em|(பல்வேறு கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் படைப்பு) <b>ஏகலைவன் பதிப்பகம், 1999.</b>}} {{larger|{{U|<b>நாடக நூல்}}}} {{gap}}1. லியோ டால்ஸ்டாய்</b> {{left_margin|3em|(இலக்கிய மாமேதை லியோ டால்ஸ்டாய்யின் எண்பத்தொன்பது வயது இறுதிக்கால வாழ்வை அவரது மனைவியான சோன்யாவிற்கும் நீதி வழங்கி, உள்ளது உள்ளபடியாய் வரலாற்று சாட்சியங்களோடு எழுதப்பட்ட நாடக நூல். இது, அப்போதைய சோவியத் கலாச்சார மையத்திலும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திலும், கலைமாமணி <b>பி.ஏ. கிருஷ்ணன்</b> அவர்களின் குழுவினரால் நாடகமாக நடிக்கப்பட்டது.) <b>கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், 1979. மணிவாசகர் பதிப்பகம், 1987.}} {{larger|{{U|சு. சமுத்திரம் படைப்புகள் - ஆய்வு நூல்கள்:}}}} {{gap}}1. சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம்</b> - {{left_margin|3em|முனைவர் <b>நளினிதேவி.</b> (பெரும்பாலான சிறுகதைகளின் ஆய்வு) <b>ஏகலைவன் பதிப்பகம், 1998.}} {{gap}}2. சு. சமுத்திரம் படைப்புகளில் பெண்ணியம்</b> - {{left_margin|3em|முனைவர் <b>ச. தியாகமணியின்</b> ஆய்வு நூல். <b>கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1993.</b>}}</poem> {{***|6|2em|char=<b>—</b>}}{{nop}}<noinclude></noinclude> c8ixa1pzmu8jpa2ye5ikn88xq8h4hre பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/202 250 214306 1839844 670860 2025-07-07T07:07:36Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 202 |bSize = 383 |cWidth = 329 |cHeight = 237 |oTop = 48 |oLeft = 30 |Location = center |Description = }} அதிகச் சுவையும், ஆழமும் கொண்டவை சு. சமுத்திரத்தின் படைப்பிலக்கியங்களா? அல்லது கட்டுரைகளா? என்று ஒரு பட்டிமண்டபமே நடத்தலாம். அந்த அளவிற்கு, இவரது கட்டுரைகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. தினமலர், தினத்தந்தி, ஆனந்தவிகடன், குங்குமம், கல்கி, குமுதம், நவசக்தி ஆகிய பிரபல பத்திரிகைகளிலும், செம்மலர் உள்ளிட்ட இலக்கியப் பத்திரிகைகளிலும், இவரது கட்டுரைகள் எடுத்தாளப்படுகின்றன. 1941-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதியன்று பிறந்து பெற்றோர் அற்ற பிள்ளையாய் பாட்டன், பாட்டி, வளர்த்தம்மா, தாய்மாமா, அத்தை ஆகியோரின் கிராமிய அரவணைப்பிலும், சித்தப்பா, சித்தி ஆகியோரின் நகரிய சேரி அரவணைப்பிலும், பட்டப்படிப்பை முடித்த இவர், பள்ளி ஆசிரியராகவும், கூட்டுறவுத் துறை மூத்த ஆய்வாளராகவும், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாகவும், பின்னர் மத்திய அரசில் தொலைக்காட்சி- வானொலி செய்தி ஆசிரியர், களவிளம்பரத் துறையின் இணை இயக்குநர் ஆகிய பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். பல தமிழ்ச் சிந்தனையாளர்களைக் கொண்ட வள்ளலார் மக்கள் நேயப் பேரவையை நிறுவியர். பல்வேறு இலக்கிய பரிசுகளைப் பெற்ற இவர், இதுவரை ஏராளமான படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வாய்மூடி மக்களின் மனச்சாட்சியாக எழுதியும், பேசியும். அதற்கேற்றபடி வாழ்ந்தும் வருகிறவர். {{rh|||{{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 202 |bSize = 383 |cWidth = 21 |cHeight = 17 |oTop = 554 |oLeft = 312 |Location = center |Description = }}<br><b>- ஏகலைவன்</b>}}{{nop}}<noinclude></noinclude> t87gke4enfqyy9ya56rw3v819g243qz 1839845 1839844 2025-07-07T07:07:56Z மொஹமது கராம் 14681 1839845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 202 |bSize = 383 |cWidth = 329 |cHeight = 237 |oTop = 48 |oLeft = 30 |Location = center |Description = }} அதிகச் சுவையும், ஆழமும் கொண்டவை சு. சமுத்திரத்தின் படைப்பிலக்கியங்களா? அல்லது கட்டுரைகளா? என்று ஒரு பட்டிமண்டபமே நடத்தலாம். அந்த அளவிற்கு, இவரது கட்டுரைகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. தினமலர், தினத்தந்தி, ஆனந்தவிகடன், குங்குமம், கல்கி, குமுதம், நவசக்தி ஆகிய பிரபல பத்திரிகைகளிலும், செம்மலர் உள்ளிட்ட இலக்கியப் பத்திரிகைகளிலும், இவரது கட்டுரைகள் எடுத்தாளப்படுகின்றன. 1941-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதியன்று பிறந்து பெற்றோர் அற்ற பிள்ளையாய் பாட்டன், பாட்டி, வளர்த்தம்மா, தாய்மாமா, அத்தை ஆகியோரின் கிராமிய அரவணைப்பிலும், சித்தப்பா, சித்தி ஆகியோரின் நகரிய சேரி அரவணைப்பிலும், பட்டப்படிப்பை முடித்த இவர், பள்ளி ஆசிரியராகவும், கூட்டுறவுத் துறை மூத்த ஆய்வாளராகவும், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாகவும், பின்னர் மத்திய அரசில் தொலைக்காட்சி- வானொலி செய்தி ஆசிரியர், களவிளம்பரத் துறையின் இணை இயக்குநர் ஆகிய பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். பல தமிழ்ச் சிந்தனையாளர்களைக் கொண்ட வள்ளலார் மக்கள் நேயப் பேரவையை நிறுவியர். பல்வேறு இலக்கிய பரிசுகளைப் பெற்ற இவர், இதுவரை ஏராளமான படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வாய்மூடி மக்களின் மனச்சாட்சியாக எழுதியும், பேசியும். அதற்கேற்றபடி வாழ்ந்தும் வருகிறவர். {{rh|||{{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 202 |bSize = 383 |cWidth = 21 |cHeight = 17 |oTop = 554 |oLeft = 312 |Location = center |Description = }}<b>- ஏகலைவன்</b>}}{{nop}}<noinclude></noinclude> dku2bwmf4d9uxojc3c60gf9gz75jibl 1839846 1839845 2025-07-07T07:11:57Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 202 |bSize = 383 |cWidth = 329 |cHeight = 237 |oTop = 48 |oLeft = 30 |Location = center |Description = }} அதிகச் சுவையும், ஆழமும் கொண்டவை சு. சமுத்திரத்தின் படைப்பிலக்கியங்களா? அல்லது கட்டுரைகளா? என்று ஒரு பட்டிமண்டபமே நடத்தலாம். அந்த அளவிற்கு, இவரது கட்டுரைகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. தினமலர், தினத்தந்தி, ஆனந்தவிகடன், குங்குமம், கல்கி, குமுதம், நவசக்தி ஆகிய பிரபல பத்திரிகைகளிலும், செம்மலர் உள்ளிட்ட இலக்கியப் பத்திரிகைகளிலும், இவரது கட்டுரைகள் எடுத்தாளப்படுகின்றன. 1941-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதியன்று பிறந்து பெற்றோர் அற்ற பிள்ளையாய் பாட்டன், பாட்டி, வளர்த்தம்மா, தாய்மாமா, அத்தை ஆகியோரின் கிராமிய அரவணைப்பிலும், சித்தப்பா, சித்தி ஆகியோரின் நகரிய சேரி அரவணைப்பிலும், பட்டப்படிப்பை முடித்த இவர், பள்ளி ஆசிரியராகவும், கூட்டுறவுத் துறை மூத்த ஆய்வாளராகவும், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாகவும், பின்னர் மத்திய அரசில் தொலைக்காட்சி-வானொலி செய்தி ஆசிரியர், களவிளம்பரத் துறையின் இணை இயக்குநர் ஆகிய பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். பல தமிழ்ச் சிந்தனையாளர்களைக் கொண்ட “வள்ளலார் மக்கள் நேயப் பேரவை”யை நிறுவியர். பல்வேறு இலக்கிய பரிசுகளைப் பெற்ற இவர், இதுவரை ஏராளமான படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வாய்மூடி மக்களின் மனச்சாட்சியாக எழுதியும், பேசியும், அதற்கேற்றபடி வாழ்ந்தும் வருகிறவர். {{rh|||{{Css image crop |Image = சமுத்திரம்_கட்டுரைகள்.pdf |Page = 202 |bSize = 383 |cWidth = 21 |cHeight = 17 |oTop = 554 |oLeft = 312 |Location = center |Description = }}<b>- ஏகலைவன்</b>}}{{nop}}<noinclude></noinclude> 4yer1tveh58skfqokyceztjxegu4r5o பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/26 250 216004 1839586 1839353 2025-07-06T14:25:26Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|16{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“போயும் போயும் டைப்பிஸ்ட் வேலையான்னு கேட்டீங்களே, அதுக்கு ஒரு சின்ன விளக்கம் கொடுத்தேன்!” பாஸ்கரன், அப்போதுதான் தன் எதிரே உட்கார்ந்திருப்பவனை, சிறிது மரியாதையாய் பார்த்தான். அவன் அழுத்தம் திருத்தமாய் பேசியதை, நம்ப முடியாதவள் போல் இப்படிப்பட்டவனால் எப்படிப் பேச முடியுது என்பதுபோல் சோபாவுக்குப் பின்னால் நின்ற மனைவியை அண்ணாந்து பார்த்தான். அவள் படுக்கறையில், “ஒரு பரதேசிப் பையனிடம் பேச்சில தோத்துட்டீங்களேன்னு” சொல்லக் கூடாது என்பதற்காக பேசமுடியாமல் பேசினான். “நான் சொல்றநை நீங்க தப்பாய் நினைத்தாலும், நான் சொல்ல வேண்டியதை சொல்லியாகணும். எம். ஏ., படிச்சுட்டு எத்தனையோ பேர் ஐ. ஏ. எஸ்., ஐ. பி. எஸ்., என்று இருக்கும்போது, நீங்க டைப்பிஸ்டாய் இருக்கறதுனால, ஒங்களுக்கு இன்டெலிஜென்ஸும், இன்ஷியேட்டிவ்யும் இருக்காதோ என்கிற சந்தேகத்துலதான் கேட்டேன்!” “நீங்க கேட்டதை நான் தப்பா நினைக்கல. அதே சமயம், நான் ஏன் ஐ. ஏ. எஸ். எழுதல என்கிறதைச் சொல்லணும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்ல, ஹையஸ்ட் பீக், லாங்கஸ்ட் கான்டினென்ட். பிக்கஸ்ட் ஓசன் எது எதுன்னுதான் பொதுவா கேள்வி கேட்டுறாங்க, பப்ளிக் ஸ்கூல்ல போலித்தனமான ஆங்கில உச்சரிப்பில் நடமாடுறவங்களாலதான் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி ஐ. ஏ. எஸ். ஆக முடியும். இவங்களுக்கு குட்டாம்பட்டியைப் பத்தியோ, சட்டாம்பட்டியைப் பத்தியோ தெரியாது. அது தெரிந்திருக்க நியாயமுமில்ல. சர்வீஸ் கமிஷன்லயும் இவங்க செளகரியத்துக்குத் தக்கபடி தான் கேள்வி கேட்கிறாங்க.” “இது ஒங்களுக்கு ஒரு நொண்டி சாக்குன்னு நினைக்கிறேன்.” {{nop}}<noinclude></noinclude> rnebtt7rtcdnnxj8d0vlxfll4f27psz பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/27 250 216006 1839587 1839360 2025-07-06T14:30:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கட்டுப்பட்டால்||17}}</noinclude>“நொண்டி சாக்கோ... நொண்டாத சாக்கோ... எனக்கு இப்போ இருக்கிற டைப்பிஸ்ட் வேலை பிடிச்சிருக்கு. அதை மாத்திக்கிற உத்தேசமும் இல்ல.” “அப்படின்னா நீங்க, இங்கே வந்திருக்கப்படாது!” பானுமதி, ‘அண்ணா...’ என்று அலறப்போனாள். செல்வத்தின் முகத்தில் புன்னகை புழுக்கமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அண்ணனைக் கோபமாக முறைத்தாள். இதற்குள் மைதிலி, கணவனின் கையை வலுவாகத் திருகி அவனை உள்ளறைக்குள் இழுத்துக்கொண்டு போனாள். தணிகாசலம், எதையுமே கண்டுகொள்ளாதவர்போல், கையிரண்டையும் மார்போடு சேர்த்துக்கட்டி ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தார். ஐந்து நிமிடம்வரை, ஈயாடவில்லை. பானுவுக்கு எதுவும் ஓடவில்லை. செல்வம் எழுத்தான். தணிகாசலம் அவனைப் பார்க்காமலே “உட்கார்” என்றார். பானுமதி, “உட்காருங்க... உட்காருங்க” என்று அறைகுறையாக உளறினாள். தணிகாசலம், இப்போது அவனை நேருக்கு நேராய் பார்த்தார். புன்னகை மாறாமலே பேசினார். “என் பையன் தங்கைமேல இருக்கிற அன்பாலதான் கேட்டான். தன்னோட மைத்துனன் சொத்துக்களை சம்பாதிக்காட்டாலும், அதைக் கட்டிக் காக்கிறவனாகவாவது இருக்கணுமே என்கிற கவலை அவனுக்கு, காரணம் நியாயமானதுதான். ஆனால், கவலைதான் மோசமானது.<noinclude> ச.—2</noinclude> n4blw7rwt6j8ew1ao1tk1kmrwlrn6el பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/29 250 216010 1839590 1839370 2025-07-06T14:34:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|கட்டுப்பட்டால்||19}}</noinclude>முன் வாங்கிய பானு, பின்வாங்கினாள். அண்ணிக்கு இப்படிப்பட்ட ஒரு நெகட்டிவ் திருப்தியா... எப்படியோ எந்த முறையிலேயோ, அண்ணனை சம்மதிக்க வச்சால்போதும். எனக்கு வேண்டியது சொத்துச் செல்வம் இல்லை. என் செல்வந்தான்... என்னுடைய செல்வந்தான். பானு திரும்பி வந்தபோது, அப்பாவும் ‘அவரும்’ சுவாரஸ்யமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் செல்வத்திற்கு எதிரே உட்காரப் போனாள். பிறகு நாணப்பட்டு அப்பாவின் நாற்காலிக்குப் பின்புறமாய் நின்று கொண்டாள். இதற்குள் பாஸ்கரனும், மைதிலியும் சிரித்தபடியே வந்தார்கள். மைதிலி உட்காரும் முன்பே “சரி நல்ல நாளாய் பாருங்க” என்று சொல்லிவிட்டு, கணவன் எதுவும் குறுக்கே பேசிவிடக்கூடாது என்று அவனைக் கண்டிப்போடு பார்த்தாள். தணிகாசலம் நாற்காலியைத் தூக்கி செல்வத்திற்கு எதிரே போட்டுக்கொண்டு உட்கார்கிறார். வருங்கால மாப்பிள்ளையை வைத்த கண் வைத்தபடி பார்த்தார். இருபத்தாறு வயதில் ஞானி போன்ற முகம். ஆனாலும் பிஞ்சில் பழுக்காத நிர்மலமான முகம்; நீண்ட விரல்கள்; எல்லாவற்றையும் விலகியிருந்து பார்ப்பது போன்ற சலனமற்ற பார்வை; எதையும், எவரையும் பெரிதாகவோ சிறிதாகவோ எடுத்துக்கொள்ளாதது போன்ற தோரணை. இந்த பாஸ்கரனும் இருக்கானே... பகலில் ரேஸ்... நைட்டில் மசாஜ் பார்லர்; இவன்மட்டும் எனக்கு மகனாகப் பிறந்திருந்தால் எனக்கு இப்படிப்பட்ட பிரஷ்ஷரே பிறந்திருக்காது.” தணிகாசலம் குரலை கனைத்துக்கொண்டார். ஏற்ற இரக்கமற்ற குரலில் பேசினார். “ஒன்னை எங்களுக்கு பிடிச்சிருக்கு தம்பி. பானுகொடுத்து வைத்தவள். ஒன்னைமாதிரி குணமுள்ள பையனுக்குத்தான் நானும் காத்திருந்தேன். ஒன்னோட வீட்டு<noinclude></noinclude> krwo0gqawxzm0ed0roq6xd50l01f83h பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/30 250 216012 1839591 1839372 2025-07-06T14:37:13Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|20{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>நிலைமையைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என்னோட வீட்டு நிலைமையை நான் சொல்லியாகணும். நானும் ஒன்னை மாதிரி கஷ்டப்பட்டவன் தான். கிராமத்துல இருந்து ஓடிவந்து, ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்து அப்புறம் படிப்படியாய், முன்னுக்கு வந்தவன். இப்போ எனக்கு ஒரு சினிமா தியேட்டர் இருக்குது. இவ்வளவு பெரிய வீடு இருக்குது; அம்பத்தூர்ல ஒரு சின்ன பேக்டரி இருக்குது; பாலவாக்கத்துல நூறு கிரவுன்ட் இடம் இருக்குது; தேனாம்பேட்டையில் பெரிய அரிசி மண்டி இருக்கு; பேங்க் லாக்கர்ல பானுவுக்கு நூறு பவுன் நகை இருக்குது; இதையெல்லாம் கணக்குப் பார்த்து செட்டில் செய்து உயில் எழுதிட்டேன். இந்த வீடு, அம்பத்தூர் பேக்டரி, நூறுபவுன் நகை பானுவுக்கு, அரிசி மண்டி, நூறு கிரவுண்ட் மனை, ரியல் எஸ்டேட், கார் பேங்க்ல இருக்கிற கேஷ் என்னோட மகனுக்கு...” பானு குறுக்கிட்டாள். “இப்போ இந்த பேச்செல்லாம் எதுக்குப்பா...” “நீ சும்மா இரும்மா! தாய் பிள்ளையாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறம்மா. இந்த உயில் விவரத்தை இப்போதான் சொல்றேன். ஒனக்கும் ஒன் அண்ணனுக்கும் செட்டில் பண்ணிட்டேன். ஒண்ணாய் இருக்கணுமா...தனியாய் இருக்கணுமா... என்கிறதை நீங்க, என் காலத்துக்குப் பிறகு முடிவு செய்துகொள்ளலாம். பானு நீகூட யோசிக்கலாம்; நான் ஏன் இவ்வளவு அவசரப்பட்டேன்னா, என் உடம்புல ஹையர் டென்ஷன், டயபடிக்ஸ்; ஒனக்கு ஒரு வழி செய்யனுமேன்னுதான் உயிர் ஓடிட்டு இருக்குது. இப்பவோ நாளையோன்னு...” “அப்பா... அப்பா...” “பொறும்மா... எனக்கு நீங்க கிடைச்சதுல ரொம்ப திருப்தி. நான் சொத்தை செட்டில் செய்திட்டாலும் இந்த சொத்தும், வீடும் பிரியாமல் இருக்கனுமுன்னுதான் விரும்பு-<noinclude></noinclude> 7coro35rlpm4jagmhvhqjbp75p8p982 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/31 250 216014 1839566 1838844 2025-07-06T13:25:17Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||21}}</noinclude>கிறேன். நீயும் என் மகனும் ஆயுள் முழுதும் ஒரே வீட்ல ஒரு தாய் பிள்ளை மாதிரி வாழணும் என்பதுதான் என் ஆசை. சொல்லு தம்பி... இந்தக் குடும்பமும் என் பிள்ளைகளும் வாழ்நாள் வரைக்கும் ஒண்ணா இருப்பதுக்கு என் பொறுப்புன்னு ஒரு வார்த்தை சொல்லு தம்பி...” சுவர் கடிகாரத்தையும், வீடியோ கேஸட் செட்டையும், வால் பேப்பரையும் பிளாஸ்டிக் தரையையும் ஏகாந்தாய் பார்த்துக்கொண்டிருந்த செல்வம், அவரையே உற்று நோக்கினான். பிறகு அமைதியாகச் சொன்னான். தனிப்பட்ட முறையில் என் கருத்தைக் கேட்டிங்கன்னா, இந்த சொத்து விவகாரத்தை அண்ணன் தங்கை முடிவுக்கே விட்டிருக்கணும். ஆனாலும் இது உங்க பெர்ஸனல் விவகாரம். எனக்கு சம்பந்தமில்லை; அதே சமயம் என் அம்மா ஸ்தானத்துல ஒங்களை வச்சு உறுதியாய் சொல்றேன். உலகத்தில் இன்பத்திலேயே பெரிய இன்பம் எல்லாரும் ஒன்றாய் கூடி, ஒன்றாய் சாப்பிட்டு, ஒன்றாய் இருக்கிறதுதான். தனிப்பட்ட முறையில், நட்சத்திர ஹோட்டல்களுக்குப் போய் சாப்பிடுறதைவிட, கூழானாலும் அதை வீட்டில் ஒன்றாய் சாப்பிடுறதுல இருக்கிற திருப்தி எதுலயும் கிடையாதுங்க அய்யா. நான் சின்ன வயசுல கிராமத்தில இருக்கும்போது எங்க பங்காளிப் பையன்களை ஒன்றாய் சேர்த்து, குருகுலம் மாதிரி குடிசை போட்டு இருந்தவன். தோட்டத்துக்குக் காவலுக்குப் போகும்போது, சரல் மேட்ல எல்லாப் பையன்களும் ஒண்ணா படுப்போம், வீட்ல இருந்து கொண்டுபோற சாப்பாட்டை, ஒன்றாய் கலந்து சாப்பிடுவோம். அந்த ஆனந்தத்தை நினைக்கும்போது இப்போ கூட என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இதை எதுக்கு சொல்றேன்னா ஒங்க சொத்து விவகாரத்துல நான் சம்பந்தப்படப் போறதில்ல! பானுவை என் சொத்தாகவும்; பாஸ்கரனை என் மைத்துனராகவும், இவங்களை என் சகோதரியாவும் நினைக்கிற உரிமை மட்டும் கிடைத்தால் எனக்குப் போதும்.”{{nop}}<noinclude></noinclude> inxxn5bp9uorwmprhq7b54q57t70ds5 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/32 250 216016 1839567 1839023 2025-07-06T13:30:11Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|22{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>உயில் விவகாரத்தை ஓசைப்படாமல் எழுதிய அப்பாவை கருவியபடியே பார்த்த பாஸ்கரன், சிறிது தெம்படைந்தான் “பார்த்தீங்களா... ஒன் அப்பா செயத காரியத்தை” என்று கணவனின் இடுப்பை அரவம் இல்லாமல் கிள்ளி செய்கையால் பேசிக்கொண்டிருக்கிறாள் மைதிலி. பானுமதி தன் காரியம் இவ்வளவு எளிதாய் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்காதவள்போல், தரையில் கால் பாவாதவளாய் அங்குமிங்குமாய் நடந்தாள். பரவாயில்லையே... செல்வம் வெளுத்து வாங்கிவிட்டாரே!... போடி அவரு வெளுத்தும் வாங்கல, மறுத்தும் வாங்கல. மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிட்டார். அண்ணிமாதிரி அமுக்கத் தேவையில்லாதவர். மகாத்மா காந்தி சொன்னது மாதிரி வாழ்க்கையையே ஒரு செய்தியாக்க நினைத்தவரு. உண்மைக்கு எதுக்கு மேக்கப்?’ தணிகாசலம், செல்வத்தை வாஞ்சையோடு பார்த்தார். பிறகு பின்னால் நின்ற பானுவின் கையைப் பிடித்து முன் பக்கமாய் கொண்டு வந்து, அவள் இடையைப் பிடித்தபடியே பேசினார். “எப்படியோ... எல்லாம் நல்லவிதமாய் முடியுது. என்னோட அனுபளத்தை வச்சு, ஒன்னை பார்த்தபோது. நீ திறந்த மனசுக்காரன். பழி பாவம், பொய், மோசடி இதுக்குத் தவிர, எதுக்கும் பயப்படாதவன் என்கிறது எனக்கு புரிஞ்சுட்டுது. இந்த வீட்ல மூணும் மூணு விதம். இவன் முன்கோபி; சின்னவயசிலேயே செல்வமாய் வளர்த்ததால் கஷ்டத்தைத் தவிர, எல்லாவற்றையும் தெரிஞ்சவன். பானு சென்ஸிட்டிவ், தொட்டால் சுருங்கி; என் மருமகளோ தொடாமலே சுருங்கி. நீ குடும்பத்துல ஒரு ஆளாய் ஆயிட்டதால ஒன்கிட்டே இதை சொல்லறதுல தப்பில்ல. ஆனாலும் மூணுபேரும் ஒருவர் குறையை இன்னொருவர் நிறை-<noinclude></noinclude> aqn5pdsp55rekxb18w6svwhn4gc6sq0 1839595 1839567 2025-07-06T14:45:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|22{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>உயில் விவகாரத்தை ஓசைப்படாமல் எழுதிய அப்பாவை கருவியபடியே பார்த்த பாஸ்கரன், சிறிது தெம்படைந்தான் “பார்த்தீங்களா... ஒன் அப்பா செய்த காரியத்தை” என்று கணவனின் இடுப்பை அரவம் இல்லாமல் கிள்ளி செய்கையால் பேசிக்கொண்டிருக்கிறாள் மைதிலி. பானுமதி தன் காரியம் இவ்வளவு எளிதாய் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்காதவள்போல், தரையில் கால் பாவாதவளாய் அங்குமிங்குமாய் நடந்தாள். பரவாயில்லையே... செல்வம் வெளுத்து வாங்கிவிட்டாரே!... போடி அவரு வெளுத்தும் வாங்கல, மறுத்தும் வாங்கல. மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிட்டார். அண்ணிமாதிரி அமுக்கத் தேவையில்லாதவர். மகாத்மா காந்தி சொன்னது மாதிரி வாழ்க்கையையே ஒரு செய்தியாக்க நினைத்தவரு. உண்மைக்கு எதுக்கு மேக்கப்?’ தணிகாசலம், செல்வத்தை வாஞ்சையோடு பார்த்தார். பிறகு பின்னால் நின்ற பானுவின் கையைப் பிடித்து முன் பக்கமாய் கொண்டு வந்து, அவள் இடையைப் பிடித்தபடியே பேசினார். “எப்படியோ... எல்லாம் நல்லவிதமாய் முடியுது. என்னோட அனுபவத்தை வச்சு, ஒன்னை பார்த்தபோது. நீ திறந்த மனசுக்காரன். பழி பாவம், பொய், மோசடி இதுக்குத் தவிர, எதுக்கும் பயப்படாதவன் என்கிறது எனக்கு புரிஞ்சுட்டுது. இந்த வீட்ல மூணும் மூணு விதம். இவன் முன்கோபி; சின்னவயசிலேயே செல்வமாய் வளர்த்ததால் கஷ்டத்தைத் தவிர, எல்லாவற்றையும் தெரிஞ்சவன். பானு சென்ஸிட்டிவ், தொட்டால் சுருங்கி; என் மருமகளோ தொடாமலே சுருங்கி; நீ குடும்பத்துல ஒரு ஆளாய் ஆயிட்டதால ஒன்கிட்டே இதை சொல்லறதுல தப்பில்ல. ஆனாலும் மூணுபேரும் ஒருவர் குறையை இன்னொருவர் நிறை-<noinclude></noinclude> p9pctmpod6ysrzb5xbre4f77gpt1bvc பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/33 250 216018 1839609 1838846 2025-07-06T15:28:45Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|சுட்டுப்பட்டால்||23}}</noinclude>வேற்றுவதுமாதிரி... மொத்தத்தில நல்லவங்கதான். என் ஆசையெல்லாம் நான் கண் மூடினபிறகும் என் பிள்ளைங்க இப்போ இருக்கறமாதிரியே இருக்கணும். அதனால ஒனக்கு இந்த வீட்ல தகப்பன் ஸ்தானம், பாஸ்கரன் ஒனக்கு திருப்திதானடா... மைதிலி ஒனக்கு...?” “பிடிக்காட்டி அப்பவே சொல்லியிருப்பேனே மாமா... அண்ணனை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. பானுவைவிட அதிகமாகவே பிடிச்சிருக்கு.” எல்லோருமே சிரித்தார்கள்; செல்வம் அவர்கள் காட்டிய வாஞ்சையில் திக்குமுக்காடினான். இப்படிப்பட்ட பாசபாங்கை பார்த்தறியாத, செல்வத்தின் நெஞ்சம் நெகிழ. மேனி நெக்குருக, தலையை சாய்த்தபடி ஒவ்வொருவரையும் பாசம் பொங்கப் பார்த்தான். தணிகாசலம் முடிவுரை கூறினார். “நாளைக்கு ஜோஸ்யரைப் பார்த்து நல்லநாள் பார்க்கிறேன். டேய் பாஸ்கர்...ராஜேஸ்வரி கல்யாண மண்டத்தை புக் பண்றதுக்கு ஏற்பாடு செய். எங்க ஜாதியிலேயே இப்படி ஒரு பையன் கிடைச்சதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். வேற ஜாதிக்காரன், அவன் கடவுளாய் இருந்தாலும், என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆமாம் தம்பி, நம்ப ஆட்கள் பொதுவாய் தஞ்சாவூர்லயும் திருச்சியிலயும் தான் அதிகமாய் இருக்காங்க... திருநெல்வேலியில நம்ம சாதிக்காரங்க எந்தப் பக்கம் அதிகமாய் இருக்காங்க? மைனாரிட்டியாதான் இருப்பாங்கன்னு நினைக்கேன்; இல்லியா...” செல்வம் நினைவற்றவன்போல் தவித்தான். இதற்கு எப்படி பதிலளிப்பது? பதிலளிக்க முடியும் எஸ். எஸ். எல். சி. முடித்தவுடன், சென்னைக்கு வந்துவிட்டதால், சரியாய் தெரியாது என்று சொல்லிவிடலாம். அது பதிலுரையல்ல;<noinclude></noinclude> snhf3p26iv6vhlesl9gynq44znpxt6c பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/34 250 216020 1839614 1839024 2025-07-06T15:34:50Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|24{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>பழியுரை. மனந்திறந்து பேசிய ஒருவரிடம்—வாஞ்சையோடு பார்க்கும் ஒரு குடும்பத்திடம்—உண்மையையே மறைப்பது பஞ்சமா பாதகங்களில் படுபாதகம். நான் வேறு ஜாதிக்காரன் என்று சொல்லி, இவர்கள் என்னை உதாசீனம் செய்தால்... நான் என்னாவது பானு? என்னாவது? இது இருவர் பிரச்சினைதான். ஆனாலும் நம்பிக்கை பிரச்சினையும் கூட. ஜாதிகள் போலிதான். அதற்காக அந்த போலித்தனத்தை மறைப்பதும் ஒரு போலிதானே! உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். அது சுட்டாலும் தாங்கிக்கொள்ள வேண்டும். என்னை இந்த வீட்டுக்கு தகப்பன் ஸ்தானத்தில் வைப்பதாகக் கூறும் ஒரு பெரியவரிடம் நான் பொய்யுரைக்கக்கூடாது. தப்பு... பெருந்தப்பு! செல்வம் எழுந்தான். தணிகாசலத்தைப் பார்த்தான். பிறகு ஒப்புவித்தான். “இதுவரைக்கும் ஒரு உண்மையை நான் சொல்லாமல் இருந்ததுக்காக நீங்க என்னை மன்னிக்கணும். எனக்கு ஜாதிகளில் நம்பிக்கை கிடையாது. ‘ஜாதிகள் இருக்கென்று சொல்வாறும் இருக்கின்றானே’ என்ற பாரதிதாசன் வரிகளை அடிக்கடி சொல்லிக்கொள்பவன் நான்; அந்தப் பின்னணியில் தான் இப்போ சொல்றேன்; நான் உங்க ஜாதியில்ல... வேற ஜாதிக்காரன். அப்பா, ஊர்ல பிறத்தியார் நிலத்துல கூலிவேலை செய்துட்டு இருந்தவரு. அஞ்சாறு வயசிலேயே என் அம்மா இறந்துட்டார். அதுக்கு ஆறாவது மாசமே அப்பா இரண்டாவது கல்யாணம் செய்துட்டார். எங்க சித்தி என்னை செய்யாத கொடுமை இல்ல; எப்படியோ பல்லை கடிச்சிட்டு எஸ்.எஸ்.எல்.சி. வரை படிததேன். அப்புறம் அரசாங்க ஹாஸ்டல்ல தங்கி எம்.ஏ. வரைக்கும் ஒரு வழியாய் படிச்சுட்டேன். நான் ஒரு அனாதை. பானுவுக்கு இது தெரியும். அவள், “ஸார், நீங்க எங்க ஜாதின்னே சொல்லுங்க” என்று சொன்னபோது, ஜாதி போலி என்கிறதாலயும், அவங்களோட காதலுக்கு உட்பட்டும் சம்மதிச்-<noinclude></noinclude> c73gbtv3afmndyovnij92joi46b1h6j பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/35 250 216022 1839616 1838851 2025-07-06T15:40:18Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||25}}</noinclude>சுட்டேன். ஆனாலும், நீங்க என்மேல் இவ்வளவு அன்பு காட்டும்போது நான் என்னைப்பற்றி சொல்லாவிட்டால் அது பெரிய துரோகம். நான் வேற ஜாதிக்காரன்தான்; இப்போ சொல்லுங்க... ஒங்களுக்கு பானுவைக் கொடுக்கச் சம்மதமுன்னா, உட்காரச் சொல்லுங்க. உட்காருறேன்... இல்லேன்னா, போறேன்!” எல்லோரும் மெளன முகமாகிறார்கள். ஆயிரம் மரபுகளை உதறினாலும், ஜாதியை உதறமுடியாத தணிகாசலம் நிலைக்குத்திய கண்களோடு மௌனம் சாதித்தார். உயில் விவகாரம் இருக்கும் வரை, ஜாதி விவகாரம் இருக்கட்டும் என்பதுபோல், பாஸ்கரன் தம்பதி ஊமையானார்கள். பானுதான் படபடத்து அவன் முன்னால் வந்தாள். “உட்காருங்க... உட்காருங்க...” என்று கத்தினாள். “அப்பா, அவரை உட்காரச் சொல்லுங்க. அண்ணி, அவரை இருக்கச் சொல்லுங்க! அண்ணா ஆஸ்கிம் டு சிட்” என்று ஆவேசக் குரலில் அச்சப்பட்டது போலவும், அச்சுறுத்துவது போலவும் கூவினாள். தணிகாசலம், தன்பாட்டுக்கு உட்கார்ந்திருந்தார். பாஸ்கரன், அவனை அங்கே இல்லாததுபோல் பாவித்தான். மைதிலி “பானு கொஞ்சம் அடக்கமாய் பேசு” என்று எச்சரித்தாள். செல்வம், அந்த அறையையும், அதன் வாசிகளையும் கண்களால் சுற்றிப் பார்த்தான். பிறகு மௌனமாய், வேகமாய் வெளியேறினான். {{dhr|2em}} {{block_right|{{x-larger|<b>3</b>{{gap2}}}}}} {{dhr|2em}} {{larger|<b>செ</b>}}ல்வம், தனித்திருந்தான். பத்து நாட்களில் முகத்தில் ரோமக்கணைகள், அம்புக்குறிகளாய் நின்றன. அலுவலகத்திற்கு, பானு பல தடவை டெலிபோன் செய்-<noinclude></noinclude> k38ptan3ygimoumhd65zbtii116sa75 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/36 250 216024 1839623 1839025 2025-07-06T15:44:54Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|26{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>தாள். எப்படியோ, அவன் அவற்றைத் தள்ளுபடி செய்துவிட்டான். கடைசியாக ஒரு நாள் தீர்மானமாகச் சொல்லிவிட்டான். “ஒன் அப்பாவாய் மனம் மாறி, என்னைக் கூப்பிடும் முன்னால், நாம் தனித்துப் பேசுவதில் அர்த்தமில்லை” என்று கூறிவிட்டான். ஆனால், அன்றைக்கு அவனுக்குப் பிரிவின் உச்சகட்டம். அவளைப் பார்க்காமல் இருக்க முடியாத தவிப்பு; பார்த்துத்தான் ஆக வேண்டும் என்ற துணிவு; அவளில்லாமல் வாழ முடியாது என்ற நிதர்சனம். அதேசமயம், ஒரு குடும்பத்திற்குள் ஆமைபோல் புகலாகாது என்ற கண்டிப்பான எண்ணம். வாழ்க்கை, காதலைவிடப் பெரியது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். ஆனாலும், கண் முன்னால் அவளே வந்தாள். கடற்கரையும் அவ்வப்போது அவளோடு பார்த்த திரைப்படங்களும், அவனை அலைக்கழித்தன. அலுவலகத்திற்கு அவள் டெலிபோன் செய்வாள் என்று எதிர்பார்த்தான். அவளும் வைராக்கியமாயிருந்தால். அதில் தவறில்லை என்றும் மனதுக்கு புத்திமதி சொன்னான். அறைக்கு வந்தவனால், நிலைப்பட முடியவில்லை. தன்னையும்மீறி, மளிகைக் கடைக்குப் போய், அவள் வீட்டுக்கு டெலிபோன் செய்யப் போனான். ரிஸீவரைக்கூட எடுத்துவிட்டான். ஏனோ டெலிபோன் செய்ய இயலவில்லை ; திரும்பி அறைக்கு வந்து அலைமோதினான். ஒரு வேளை தான் நடந்துகொண்ட விதம் தவறுதானோ என்று நினைத்துக்கொண்டான். இருக்க முடியவில்லை. எழுந்தான். எழமுடியவில்லை இருந்தான். இரண்டையும் செய்ய முடியாமல் படுத்தான். வளையல் சத்தம் கேட்டும், அவன் கண் திறக்கவில்லை. காதுக்கு இப்படிப்பட்ட சத்தத்தை பல நாளாய் கேட்கிற அவனுக்கு, அப்போது அந்தச் சத்தமும் ஒரு பிரமை போல் தான் தோன்றியது. ஆனாலும், முகத்தில் ஏதோ ஒன்று தடவுவதைப் பார்த்துவிட்டுக் கண் விழித்தான்.{{nop}}<noinclude></noinclude> 57gtoilz7rvzcd8hvgbnbm7z31gv86u பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/127 250 216206 1839819 821020 2025-07-07T06:29:42Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|118{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>“நோ... நோ... ஒன்ன இங்க ரீடெய்ன் பண்றனா இல்லியான்னு பாரு, இதற்காக டில்லிக்கு வேணுமுன்னாலும் ஒருவாட்டி போயிட்டு வருவேன்!” மானேஜர் காலிங்பெல்லை அழுத்தினார். ஸ்டெனோ வந்தாள். தேனாம்பேட்டையில் நடக்கவிருக்கும் பிரும் மாண்டமான எக்ஸிபிஷனில், கம்பெனி ஒரு ஸ்டால் போட விருப்பதால், திறமையாக வேலை பார்க்கும் மோகினியின் சர்வீஸை மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று ஒரு நோட் டிக்டேட் செய்தார். பிறகு ‘கீப் இட் சீக்ரட்’ என்று அவளை எச்சரிக்க, அவளோ மோகினியை எச்சரிக்கையோடு பார்த்துக்கொண்டு வெளியேறினாள். மோகினி கண்களில் நன்றி குலுங்க அவரை நோக்கினாள். பிறகு, “என்னால ஒங்களுக்கு சிரமம்” என்றாள். அப்படிச் சொல்லும்போது அவள் உதடுகளைக் குவித்தவிதமும், உடம்பைக் குழைத்த விதமும். நாற்பத்தைந்து வயது சுந்தரத்தை, இருபத்தைந்தில் கொண்டுவந்து நிறுத்தியது. ஆகையால், அவர் சிறிதுநேரம் பேசாமல் இருந்தார். பிறகு அவளுக்கு நல்லது செய்துவிட்ட திருப்தியில் அவர் படிப்படியாக சுயமாகிக் கொண்டிருந்தார். ‘பிரஷரும்’ இறங்கியிருக்க வேண்டும். ஹீரோ மாதிரி பேசினார். “டோண்ட் ஒர்ரி. மானேஜிங் டைரெக்டர் என் பெர்ஸனல் பிரண்ட். எப்படியாவது இன்னொரு அடிஷனல் போஸ்ட் வாங்கி உன்னை போடுறேன். ஆனால் இந்த ஜெனரல் மானேஜர் ஒரு சும்பன்... தலைக்கிறுக்கன். எப்டி சரிக்கட்டுறதுன்னு யோசிக்கிறேன். இல்லன்னா மேலதிகாரியைத் தரக்குறவா பேசின சங்கரை இப்பவே சஸ்பெண்ட் பண்ணியிருக்கலாம். எதுக்கும் யோசிக்கிறேன்! ஒண்ணும் முடியாமபோனா லீலாவ எப்டியாவது தூக்கிட்டு உன்னை போட்டுறேன்.” “ஒரு பொண்ணக் கெடுத்துவர்ற உத்தியோகம் ஒரு உத்தியோகமா? எனக்கு வேண்டாம் ஸார்!ஆமா, லீலா சரியான கர்வியாமே!” {{nop}}<noinclude></noinclude> o6bnrtf4crfwauir6jnw5wxq52d5rc3 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/128 250 216208 1839820 821022 2025-07-07T06:32:51Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}119}}</noinclude>“அதேயேன் கேக்குற! கண்ணன்னு நினைப்பு! இவ்வளவுக்கும், திறமையில ஒன் கால் தூசு பெறமாட்டா!” “சும்மா இருங்க ஸாரி! ஒருத்திய திட்டி இன்னொருத்திய புகழ்வது எனக்குப் பிடிக்காது. பிளீஸ் ஸ்டாப் திஸ் டாபிக்...” சுந்தரம் அவளையே வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சின்ன வயதிலேயே எவ்வளவு பரந்த மனப்பான்மை. எவ்வளவு விசுவாசம். உத்தியோகத்திலேயும் பிரின்ஸிபில்ஸ் பாக்குறான்னா, இவ மனுஷப் பிறவியில்ல... மனுஷப் பிறவியில்ல. தன்னிடம் அக்கறை காட்டிய மோகினிக்கு. தானும் அக்கறை காட்ட வேண்டும் என்று சுந்தரம் துடித்தார். ‘ரிலாக்ஸ்’ செய்பவர்போல், சுழல் நாற்காலியில் சாய்ந்துகொண்டே கேட்டார். “கடைசியில... ஒன் ஹஸ்பண்ட் அப்பாமேலே கேஸே போட்டுட்டானே?” மோகினி பதில் சொல்வதற்குப் பதிலாக மௌனமாகத் தலைகுனிந்தாள். பிறகு புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். சுந்தரம் திடுக்கிட்டார். அவர் இப்படி எதிர்பார்க்கலில்லை. அவர் “என்னம்மா...” என்று பதறியபோது லேசாக அழுதாள். “அடடே! நான் என்னமோ சொல்லிட்டேன்... நீ எதுக்கும்மா அழவுற!” மோகினி அவருக்குப் பதிலளிக்கவில்லை. முதலில் மெளனமாகத் தலைகுனிந்தாள். பிறகு கண்ணீர் விட்டாள். அதைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள். அவர் ‘என்னம்மா...இது’ என்று பதறிப்போது லேசாக<noinclude></noinclude> d9p34br6kyakz3jdmaphyph8glc0528 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/129 250 216210 1839822 821024 2025-07-07T06:39:19Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|120{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>அழுதாள். ‘அடடே, நான் என்னம்மா சொன்னேன். நீ ஏன் இப்படி அழுவுற’ என்று பதட்டப்பட்டபோது சத்தம் போட்டே அழுதாள். ‘இதோ பாரு. நான் ஏற்கனவே பிரஷ்ஷர்ல கஷ்டப்படுறவன், தயவுசெய்து அழகுறத நிறுத்து’ என்று சொன்னபோது, அவளும் அழுகையை நிறுத்திவிட்டு விக்கி விக்கிப் பேசினாள். “நான் பொறந்திருக்கக்கூடாது ஸார்... நான் பாவிஸார்! அவர்கிட்ட எவ்ளவோ சொன்னேன். ‘ஓங்கப்பாவுக்கு என்னைப் பிடிக்கல. நான் ஒங்க குடும்பத்துல குழப்பத்த கொடுக்க விரும்பல. என்னை மறந்துடுங்கன்னு’ எத்தனையோ தடவ சொன்னேன். ஆனால் அவரு ‘நீ என்னைக் கட்டிக்காட்டா கடலுல விழுந்து சாவேன். இல்லன்னா விஷத்த குடிப்பேன்’னார். ஒருநாள் விஷப்பாட்டிலைப் பையில இருந்து எடுத்தார். எனக்கு ஒன்னும் புரியல! கடைசில அவரோட உயிரக் காப்பாத்துறதுக்காவ ஊரு உலகத்தைப்பத்திப் பாராம சம்மதிச்சேன். எங்க மாமா சொத்துங் கிடையாது. சுகமும் கிடையாதுன்னுட்டார். இவரு குதிச்சாரு. நான்தான் ‘நீங்களும் சம்பாதிக்கிறீங்க. நானும் சம்பாதிப்பேன். அவரு சொத்தை அவரே வச்சிக் கிடட்டு’ முன்னேன், ஆனால் அவரு எனக்குத் தெரியாமலே வக்கீல் நோட்டீஸ் கொடுத்து வழக்கு போட்டிருக்கார். ஏன்னு கேட்டா இதுல தலையிடாதேன்னு சொல்லிட்டாரு. அதுக்குமேல பேசினா அடிச்சிருப்பாரு. நான் என்ன ஸார் பண்றது? ஒவ்வொரு ஜனமும் என்னத்தான் தப்பாநெனக்கிது. நான்தான் அவர மயக்கி அப்பனுக்கும் பிள்ளைக்கும் ஆகவிடாம பண்ணிட்டேன்னு கசாமுசான்னு பேசுதுங்க. நீங்களே சொல்லுங்க ஸார். நான் என்ன ஸார் பண்ண முடியும்? நான் பாவி ஸார்! நான் பிறந்திருக்கவே கூடாது ஸார்...!” மோகினி மீண்டும் அழுதாள். மானேஜர் இப்போது அவள் தோளைத் தட்டிக்கொடுக்கத் துடித்த கைகளை அடக்கிக்கொண்டார். {{nop}}<noinclude></noinclude> pwsrzwjpcouz3e2pkifm4q0o2v11sq8 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/130 250 216212 1839824 821028 2025-07-07T06:41:48Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}181}}</noinclude>மோகினி சொன்னதையும், அழுததையும் நிறுத்தி அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள். சுந்தரம் ஆறுதல் சொன்னார் “ஆல் ரைட்... நடந்தது நடந்துபோச்சி. யூ ஆர் விக்டிம் ஆப் சர்கம்ஸ்டன்ஸஸ். எதையுமே ஹார்ட்டுக்குள்ள வச்சுக்காதே! அப்படி வச்சிக்கிட்டா ஹார்ட் வெளில வந்துடும். எனிஹௌ ஒனக்கு ஒரு அருமையான புருஷன் கிடச்சிருக்கான். நீ அந்த சந்தோஷத்த நினைச்சி மற்ற கஷ்டங்களை மறந்திருக்கணும்.” “அவரை நீங்கதான் மெச்சிக்கணும்.” மோகினி,புருஷனைப்பற்றி சொல்லிவிட்டோமே என்று பதறிப்போய்,நாக்கைக் கடித்தாள். அவள் பயந்ததுபோல் ஆசாமி பேய்முழி விழித்தான். அவளைச் சினிமாவுக்குக் கூப்பிடலாமா என்று யோசித்தார் சுந்தரம். பிறகு நாசூக்காக, “ எனக்கு ஈவினிங்ல போரடிக்குது” என்றார். மோகினி புரிந்துகொண்டாள். இனிமேல் இருந்தால் ஆபத்து. அவசர அவசரமாகப் பதில் சொன்னாள். “எனக்கு ஒன் அவர் பெர்மிஷன் வேணும் சார்! ஈவினிங்ல கெஸ்ட் வராங்க. அவருடைய பிரண்ட் தில்லியில் உத்தியோகம். போனவாரம் கல்யாணம் நடந்துது. இன்னிக்கு டின்னருக்குக் கூப்பிட்டிருக்கோம். இவர ‘பெரிய’ புரட்சிக்காரர்னு பிரண்ட் சொல்வாரு.” சுந்தரம் மெளனமாகத் தலையாட்டி விடை கொடுத்தார். மோகினி வெளியே வந்தாள். வீட்டுக்குப் போகப் பிடிக்கவில்லை. சுந்தரத்தின்மீது எவ்வளவு எரிச்சல் ஏற்படுகிறதோ, அந்த அளவுக்கு கணவன்மீதும் எரிச்சல் ஏற்பட்டது. குழந்தையின் சுமை வயிற்றை அழுத்துவதைவிட அவள் நெஞ்சை அதிகமாக அழுத்தியது. நிலையில்லாத உத்தியோகத்தையும், அதை நிலைப்படுத்த சுந்தரம்<noinclude></noinclude> fw9d2ah27z7esi985zweqbqmdrivryo பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/131 250 216214 1839966 821034 2025-07-07T11:29:02Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|182{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>கேட்கப்போகும் விலையையும், விலைமதிக்க முடியா பிள்ளையையும், கோர்ட்டுக்குப் பணங் கேட்கும் ‘ராஜினாமா’ கணவனையும் நினைத்து, சுமைதாங்க முடியாமல் கால்போன போக்கில் நடந்து இறுதியில் கடற்கரையில் போய் மணிச்சுணக்காக உட்கார்ந்திருந்தாள். <b>இ</b>ரவு மணி ஒன்பதுக்கு மேலாகியும், மோகினி வராததைக் கண்டு சீனிவாசன் புழுங்கினான். ‘பேபிக்கு, வேலை இருந்திருக்கும்’ என்று மாமனார் ஏகாம்பரம் சொன்னது அவன் காதில் விழாமல் போனதுக்குக் காரணம் இருந்தது. அவன் நண்பன் டில்லிக்காரன், அவனை இளக்காரமாகப் பார்த்துவிட்டு. எட்டுமணிக்கெல்லாம் மனைவியுடன் “போயிட்டு வாரேன்” என்றுகூட சொல்லாமலே போனது இவனுக்கு என்னமோ போலிருந்தது. அவன் தன்னை ‘மாரேஜ் நக்ஸலைட்’ என்று அடிக்கடி வர்ணிப்பதை கடிதங்களில் எழுதுவதைப் பெருமையாக நினைத்து தான் உண்மையிலேயே ஒரு புரட்சிக்காரன் என்று நம்பிய சீனனுக்கு நண்பன் பார்வையில் தான் புழுவாகப்போனதற்காசு, பூச்சி போல் துடித்தான். வரவர மோகினியின் போக்கு அவனுக்குப் பிடிக்கவில்லை. முதல்நாள், தன் வீட்டில் கமலா. உஷாவிடம் அன்பொழுகப் பேசியவள், கல்யாணத்திற்குப் பிறகு, அப்பாவுக்குத் தெரியாமல் அவர்கள் இங்கே வந்தபோது, இவள் அவர்களிடம் பேசாமல் அறைக்குள் போனாள். அவர்களும் இப்போது வருவதை நிறுத்திவிட்டார்கள். மனைவியே ஆச்சரியத்தில் மூழ்கும்படி. தந்தைமீது வழக்குப் போட்டான். இவள் என்னடாவென்றால்... சீச்சீ... எவரிடமாவது பகலில் டெலிபோன் பேசினாலும். இன்னார் இன்னதுக்காக டெலிபோன் பேசினார் என்று சொல்பவள், இப்போது இரவில் படுக்கையறைவரை வரும்<noinclude></noinclude> e18twel5ri2q1pnnizcqvvngwj3icih பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/132 250 216216 1839967 821036 2025-07-07T11:34:15Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839967 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}123}}</noinclude>டெலிபோன் ‘கால்களை’ சிரித்துக்கொண்டே பயன்படுத்திவிட்டு, இவனிடம் எதுவுமே அதைப்பற்றிப் பேசுவதில்லை. ஒரு சொத்தும் இல்லாமல் வந்துவிட்டானே என்று மனைவிக்காரி நினைக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது. போகட்டும்... இன்றைக்காவது பொழுதோடு வந்திருக்கலாம். பத்து மணியாயிற்று. மோகினி வந்தாள். “அப்பா சாப்பிட்டாச்சா... அம்மா சாப்பிட்டாச்சா” என்று கேட்டாள். குற்றவுணர்வில் விருந்தாளிகளைப்பற்றிக் கேட்கவில்லை. அவன் சாப்பிட்டாச்சா என்று கேட்கவில்லை. அவன் கையில் இருந்த ஒரு காகிதக்கட்டை வலியப் பிடுங்கிக்கொண்டு, “என்னது?” என்றாள். சீனிவாசன் நிதானமாகப் பதில் சொன்னான். “எங்கப்பா அடையாறு வீட்டை என் பேருக்கு மாத்தி இந்தப் பத்திரத்தை அனுப்பியிருக்காரு. கோர்ட்டுன்னதும். பயந்துட்டாரு...” இப்போது அவளுக்கு பேசுவதில் ஒரு ‘இன்ட்டரெஸ்ட் ஏற்பட்டது. “அடபாவமே! மைலாப்பூர்ல இருக்கிற சின்ன வீட்டை எழுதி வச்சிருக்கலாமே? அடையாறு வீடு எவ்வளவு பெறும்?” “ஒரு லட்சம்.” “இது என்னடா வம்பாப் போச்சு! அவ்வளவு பெரிய வீடு நமக்கு எதுக்கு? ஐ ஆம் ஸாரி டார்லிங்... இன்னிக்கு. எக்ஸிபிஷன் ஸைட்டை பார்க்கப் போக வேண்டியதாயிட்டுது. இதுக்குத்தான் நான் வேலையை வேண்டாமுன்னேன். ஐ ஆம் வெரி ஸாரி! என்மேல கோபமா? வர்ற வெள்ளிக்கிழம நாம ரெண்டுபேருமா அவங்கள ஸ்டேஷன்ல போயி வழியனுப்பலாம், அடையார் வீடு பழசா புதுசா?” {{nop}}<noinclude></noinclude> 05wx8ybg1pfpeeehio1lltsk68bxc3f பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/133 250 216218 1839969 821038 2025-07-07T11:37:51Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|124{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>“பழசுதான். ஆனால் புதுசு மாதிரி தோணுது.” மோகினி அவனை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டாள். பிறகு. “இன்னிக்கு மூணுமணி நேரமா ஸைட்லயே இருந்தோம். இருந்தோங்கறது தப்பு. நின்னு நின்னு காலே மரத்துப்போச்சு. அடையார்ல வீடு எந்தப் பக்கம்?” என்றாள். சுந்தரம் பதில் பேசவில்லை. அப்பாவைக் கோர்ட் வரை அழைத்துவிட்ட வேதனையில் தவித்துக்கொண்டிருந்தான். மோகினி பாத்ரூமிற்குள் போய்விட்டாள். மனைவியின் ‘அன்புக் கட்டளைக்கு’ மதிப்பளித்து சிகரெட் குடிப்பதை அறவே விட்டுவிட்ட அவனுக்கு, இப்போது ஒரு சிகரெட் பிடிக்கவேண்டுமென்று தோன்றியது. பையைத் துழாவினான். காசில்லை. மனைவியிடம் கேட்க வெட்கம், பயம் எல்லாம். தலை கனக்க, உடல் கொதிக்க, அவன் படுக்கையில்போய் விழுந்தான். அவ்வளவு தான் அவனுக்குத் தெரியும். இரவு பன்னிரண்டு மணி சுமாருக்கு அவனை உசுப்பி, அவன் மனைவி டெலிபோனை நீட்டிக்கொண்டே, “ஒங்கப்பா ஹார்ட் அட்டாக்கில் செத்துட்டாராம். நீங்க ஒடனே போகணுமாம்” என்றாள். அவன் கை நடுங்கியதில் டெலிபோன் நடுங்கியது. தம்பி சபாபதிதான் பேசினான். அவன் பேச்சில் அழுகையைப் பிரித்து. வார்த்தைகளை எடுப்பது கஷ்டமாக இருந்தது. மேலும் விளக்கம் கேட்குமுன்னால், அவன் டெலிபோனை வைத்துவிட்டான். என்றாலும், அப்பா சாகையில் ‘சீனி சீனி’ என்று சொல்லிக்கொண்டே செத்தார் என்று தம்பி சொன்னதை நினைத்து, தலையில் அடித்துக்கொண்டான். எல்லாமே கனவு மாதிரி தோன்றியது, மனைவியின் முகத்தை ஒரு குழந்தையின் குழப்பத்தோடு பார்த்தான்.<noinclude></noinclude> t07p88w26ecvpelg479arzvs3itro5t பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/134 250 216220 1839970 821040 2025-07-07T11:42:24Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}125}}</noinclude>அவள் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தாள். இறுதியில் விரக்தியில் ஏற்பட்ட உறுதி, அவன் நெஞ்சைக் கெட்டியாக்கியது. அவளைப் பார்த்து, “வா... போகலாம்” என்றான். “நான் எதுக்கு? நீங்க போயிட்டு வாங்க!” “என்ன பேசுறன்னு யோசித்துப் பாத்தியா, ஒன் மாமனார் இறந்துட்டாரு.” “அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?” “ஒன்ன இறக்கச் சொல்லல! நாம ரெண்டுபேருமா போய் அம்மாவோட கஷ்டத்த இறக்குவோம்.” “என்னக்கி என்னை மருமகளா ஏத்துக்க மாட்டேன்னு அவரு தள்ளிவச்சாரோ... அன்னைக்கே அவரை நானும் தள்ளிவச்சிட்டேன். என்னைப் பொறுத்த அளவுல அவரு மூணாவது மனுஷன். மூணாவது மனுஷங்க சாவுக்கெல்லாம் நான் போறதுல்ல!” “நீ வாரியா இல்லியா.” “மூணு மணிநேரமா ஸைட்ல நின்னு காலுல்லாம். வலிக்கிறது. என்னால் முடியாது” “வாரியா...இல்லியா?” “முடியாதுன்னா, முடியாது.” மனைவியின் கழுத்தை அங்கேயே நெறித்துவிடலாமா என்ற வேகம் வந்தது அவனுக்கு. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, அவளை வெறித்துப் பார்த்தான். பின்னர் ‘ஒன்னைக் கட்டுன எனக்கு இன்னமும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும்’ என்று தன்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டே வெளியேறினான். {{nop}}<noinclude></noinclude> m7h3u5lndl7411bf3fg453po5b3ks8y பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/135 250 216222 1839973 821043 2025-07-07T11:46:20Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839973 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{block_right|{{x-larger|<b>5</b>}}}} {{dhr|2em}} <b>சி</b>ல காரியங்கள் ஆமை வேகத்தில் துவங்கி, மின்னல் வேகத்தில் முடியும். சில மின்னல் வேகததில் துவங்கி ஆமை வேகத்தில் முடியும். ஆனால் மோகினியின் திருமணம் மின்னல்போல் தோன்றி, மின்னல்போல மறைந்தது. அவள் கழுத்தில் தாலி ஏறுவதற்காவது ரிஜிஸ்டர்ட் ஆபீஸ் அப்புறம் கோயில் குளம் என்று சிலவாரம் ஆகியது. ஆனால் ஏறிய தாலி இறங்க அவ்வளவு நாள் கூட ஆகவில்லை. மோகினியின் கழுத்தை நெறித்துக்கொண்டிருந்த சீனிவாசன், அவள் கழுத்தை விட்டுவிட்டு, தன் கழுத்தைக் குத்திக்கொள்வதற்காக கத்தியையோ அரிவாளையோ ஓடிக் கண்டுபிடித்து எடுத்தபோது உள்ளே ஓடிவந்த மோகினியின் அப்பா ஏகாம்பரம் ‘கொலகாரன்... கொல பண்றான். கொல பண்றான்’ என்று கத்த, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூடி அவனை ‘நியும் மனுஷனா’ என்று கேட்க, தான் உண்மையிலேயே மனுஷன் இல்லை என்பதை அவர்கள் சொல்வதற்கு முன்பாகவே உணர்ந்திருந்த சீனிவாசன் மௌனமாக வெளியே போகப்போனான். அப்போது, “என் பொண்ணுக்கு மூணு மாசம்... அவளுக்கும் அவள் குழந்தைக்கும் ஒரு வழி சொல்லிட்டுப் போடா,” என்று மரியாதைமிகு மாமனார் சொல்வதையும் பொருட்படுத்தாமல், ஹார்ட் அட்டாக்கில் இறந்துபோன அப்பாவிற்காக வேகமாக இயங்கிய தன் இருதயம் இப்போது இயங்காததுபோல் இயங்க, அவன் பரிதாபமாக வெளியேறினான். {{nop}}<noinclude></noinclude> ga9x50gxeaq6tgaqun1g8cbcf946bck பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/136 250 216224 1839974 821045 2025-07-07T11:53:10Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}127}}</noinclude>மோகினிக்குச் சிரமம் எதும் இல்லை.ஜீவானாம்சம் கோரி வழக்குப் போடப்போவதாக மறுநாளே ‘வக்கீல் நோட்டீஸ்’ விட்டாள். வக்கீல் இளைஞர். அவள், அவருக்கு ‘பீஸ்’ கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அதோடு தனக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம், சீனிவாசன் அவளுக்கு ஒரு வழி செய்யவில்லை என்றால், அவன் ஒரு ‘வழியாகி’ விடுவான் என்று வேறு மிரட்டப்பட்டான். மான அவமானத்திற்குப் பயந்த அம்மாவின் வேண்டுகோள் பேரிலும், வீட்டு விவகாரங்கள் கோர்ட்டுக்குப் போனால், தங்கைகள் இருவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியது வரும் என்பதை உணர்ந்ததாலும் சீனிவாசன் தந்தை தன் பெயருக்கு எழுதிக் கொடுத்திருந்த அடையாறு வீட்டுப்பத்திரத்தை அவள் பெயருக்கு மாற்றிவிட்டு அவள் கையெழுத்துப் போட்ட விடுதலைப் பத்திரத்தை வாங்கிக் கொண்டுபோனவன் போனவன்தான். எல்லாம் மூன்று நாட்களில் முடிந்துவிட்டன. கணவனைப் பிரிந்தாலும், அவன் நினைவைப் பெரிதும் போற்றிப் புகழ நினைத்த மோகினி, நான்காவது நாளே, அவன் கொடுத்த அடையாறு வீட்டிற்குக் குடிபோய் விட்டாள். தாலி கட்டிய நேரம் நல்லநேரமாக இல்லையென்றாலும், தாலி இறங்கிய நேரமும் அவள் அந்த வீட்டுக்குப் போன நேரமும் நல்லநேரமாகத்தான் இருக்க வேண்டும். பப்ளிஸிட்டி மானேஜரின் வேண்டுகோள்படி, கம்பெனியின் தலைமையிடம் அவள் மூன்றுமாதம் மேற்கொண்டும் வேலையில் நீடிப்பதற்கு அனுமதியளித்தது. அதற்காக, அவள் வீட்டிலேயே ஒரு ‘பார்ட்டி’ கொடுத்தாள். பப்ளிஸிட்டி மானேஜர், அவரைப் பிடிக்காத மேலதிகாரியான ஜெனரல் மானே ஜர், பீஸ் வாங்காத வக்கீல் ‘குடும்ப’ விவகாரங்களைக் கோர்ட் வழக்கென்று விடாமல் பார்த்துக்கொள்ளும் குடும்ப இன்ஸ் பெக்டர்—அவர்—இவர் என்று பல ரக<noinclude></noinclude> hmppglw081xwtrmxpnumwdaqx1bvej7 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/137 250 216226 1839979 821047 2025-07-07T11:57:01Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|128{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>மனிதர்கள் குவிந்தார்கள். மோகினியின் தந்தை ஏகாம்பரமும் ஒவ்வொருவரிடமும் “எங்கே நீங்க வராம போயிடுவீங்களோன்னு பேபி பயந்துட்டுது. என்னைக்கூட ஒங்ககிட்ட இருந்து கையோட கூட்டிக்கிட்டு வரச் சொல்லிச்சு. நல்ல வேள வந்திட்டீங்க... இல்லன்னா, பப்ளிஸிட்டி மானேஜர், ஜெனரல் மானேஜர், இன்ஸ்பெக்டர், வக்கீல் ஸார் (இதில் மூன்றுபேர்களை நான்குமுறை அழித்துக்கொண்டார்) போய் கூட்டிக்கிட்டு வராம போயிட்டிங்களேன்னு என்மேல பாய்ஞ்சியிருப்பா! நல்லவேள வந்திட்டிங்க” என்று சீவல் பாக்கைக் கொறித்துக்கொண்டு, வெற்றிலையை வாய்க்குள் வைத்துக்கொண்டு ரகசியமாகக் குதப்பினார். இதனால் ஒவ்வொருவரும் தான்தான் ‘சீப் கெஸ்ட்’ என்று நினைத்துக் கொண்டும், இதர மூவரை ‘சீப்பாசு’ அனுமானித்துக் கொண்டும் ஏகாம்பரத்தின் ‘ரகசியத்தை’ மனத்திற் குள்ளேயே ரசித்துக்கொண்டு புன்னகை சிந்தினார்கள். வெளியே இவர்களுக்காகக் காத்துக்கிடந்த டிரைவர்கள். எப்படிப் ‘பச்சையாக’ப் பேசிக் கொண்டார்கள் என்பதை சென்ஸார் செய்துகூட எழுத முடியாது. பப்ளிஸிட்டி எக்ஸிக்யூடிவ்வான லீலாவும் மூன்று மாத விடுமுறைக்குப் பிறகு வேலையில் சேர்ந்தாள். திருநெல்வேலியில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பெற்றோருடன் மூன்றுமாத காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தபோது, அஸிஸ்டெண்ட் பப்ளிஸிட்டி மானேஜர் சங்கரை நினைத்துக்கொண்டே அவனை எப்போது பார்க்கலாம் என்று துடித்துக் கொண்டிருந்தவள் அவள், இப்போது மானேஜரிடம் திட்டுக்கள் வாங்கிக் கொண்டிருக்கும் சங்கர், லீலாவின் செல்லமான காதல் திட்டுக்களையும்' சீரியஸாக எடுத்துக்கொண்டு, மானேஜரை எப்படி எப்படியெல்வாம் கேட்கலாம் என்று மனதுக்குள் அடக்கி வைத்திருந்தானோ, அவற்றைக் காதலி மீது அம்புகளாக்கினான். போதாக்குறைக்கு, அவனுக்கு அருகில் இருந்த நாற்காலியில் மோகினி ‘டெம்பரரி கேஷுவல்’ பெண்—உட்கார்ந்திருந்தாள். அது லீலாவுடைய<noinclude></noinclude> 8m7rwhijnggj6fh3o8b6m6tkvb83aca பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/150 250 216252 1839588 821078 2025-07-06T14:32:15Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh||பிற்பகல்|141}}</noinclude>மோகினி சுந்தரதையோ அவர் கொடுத்த வேலையையோ சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘அம்மா’ என்று சொல்லும் மகளை செல்லமாக அடக்கி அவளை ‘மம்மி’ என்று சொல்லவைக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. ஆனால் குடும்ப நேரம் சரியாக இல்லை. ஏகாம்பரத்தை விட்டு, சினிமா யோகம், கழற்றிக் கொண்டது. அங்கே பல ஏகாம்பரங்கள் பற்பல ஜாதகக் கட்டுக்களோடு கிளம்பியதே காரணம். அதோடு, நமது ஏகாம்பரம் ஆயிரக்கணக்கில் பொய் சொன்னால், புதிய ஏகாம்பரங்கள் லட்சக்கணக்கில் பொய் சொல்லத் துவங்கினதால் இந்த சின்னப் புளுகர்களின் பொய் எடுபடவில்லை. அதோடு, நூறுநாள் ஓடும் என்று அவர் கணித்த ஒரு படம் நூறு ‘ஷோ’ கூட ஓடாததால், முன்னூறு ரூபாயைத் தட்சணையாகக் கொடுத்த அந்த படத்தயாரிப்பாளர், இப்போது அந்தப் பணத்தைக் கடனாகக் கொடுத்ததாக வாதாடி,ஏகாம்பரத்தை புரட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த லட்சணத்தில், அடையாறு வீட்டில் குடியிருந்தவர்கள் நொடித்துப்போய் வாடகைப் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். காலி பண்ணச் சொன்னால் கோர்ட்டுக்குக் கூப்பிட்டார்கள். மோகினி, தானும் அம்மாவும் அப்பாவும் பட்டினியாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால் கலா... அவள் கண்ணுக்குக் கண்ணாக வளர்க்கும் கலாவிற்கு, கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதை. அவளால் தாங்க முடியவில்லை. அந்த சமயம் பார்த்து, கலாவிற்கு நல்ல ஜூரம். லேசாக பிட்ஸ் வருவதுபோலவும் இருந்தது. 102 டிகிரியைத் தாண்டிவிட்டது.ஏகாம்பரம் ஒப்பாரியே வைக்கத் துவங்கி. {{nop}}<noinclude></noinclude> cmz769fx8shdy9nvuqrpvbwoogk7wcr 1839589 1839588 2025-07-06T14:32:56Z AjayAjayy 15166 1839589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல் 141}}</noinclude>மோகினி சுந்தரதையோ அவர் கொடுத்த வேலையையோ சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘அம்மா’ என்று சொல்லும் மகளை செல்லமாக அடக்கி அவளை ‘மம்மி’ என்று சொல்லவைக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. ஆனால் குடும்ப நேரம் சரியாக இல்லை. ஏகாம்பரத்தை விட்டு, சினிமா யோகம், கழற்றிக் கொண்டது. அங்கே பல ஏகாம்பரங்கள் பற்பல ஜாதகக் கட்டுக்களோடு கிளம்பியதே காரணம். அதோடு, நமது ஏகாம்பரம் ஆயிரக்கணக்கில் பொய் சொன்னால், புதிய ஏகாம்பரங்கள் லட்சக்கணக்கில் பொய் சொல்லத் துவங்கினதால் இந்த சின்னப் புளுகர்களின் பொய் எடுபடவில்லை. அதோடு, நூறுநாள் ஓடும் என்று அவர் கணித்த ஒரு படம் நூறு ‘ஷோ’ கூட ஓடாததால், முன்னூறு ரூபாயைத் தட்சணையாகக் கொடுத்த அந்த படத்தயாரிப்பாளர், இப்போது அந்தப் பணத்தைக் கடனாகக் கொடுத்ததாக வாதாடி,ஏகாம்பரத்தை புரட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த லட்சணத்தில், அடையாறு வீட்டில் குடியிருந்தவர்கள் நொடித்துப்போய் வாடகைப் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். காலி பண்ணச் சொன்னால் கோர்ட்டுக்குக் கூப்பிட்டார்கள். மோகினி, தானும் அம்மாவும் அப்பாவும் பட்டினியாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால் கலா... அவள் கண்ணுக்குக் கண்ணாக வளர்க்கும் கலாவிற்கு, கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதை. அவளால் தாங்க முடியவில்லை. அந்த சமயம் பார்த்து, கலாவிற்கு நல்ல ஜூரம். லேசாக பிட்ஸ் வருவதுபோலவும் இருந்தது. 102 டிகிரியைத் தாண்டிவிட்டது.ஏகாம்பரம் ஒப்பாரியே வைக்கத் துவங்கி. {{nop}}<noinclude></noinclude> azgwg4femfxzzfnhyliex0q8884csrt 1839599 1839589 2025-07-06T14:53:57Z AjayAjayy 15166 1839599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{gap}|பிற்பகல் 141}</noinclude>மோகினி சுந்தரதையோ அவர் கொடுத்த வேலையையோ சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘அம்மா’ என்று சொல்லும் மகளை செல்லமாக அடக்கி அவளை ‘மம்மி’ என்று சொல்லவைக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. ஆனால் குடும்ப நேரம் சரியாக இல்லை. ஏகாம்பரத்தை விட்டு, சினிமா யோகம், கழற்றிக் கொண்டது. அங்கே பல ஏகாம்பரங்கள் பற்பல ஜாதகக் கட்டுக்களோடு கிளம்பியதே காரணம். அதோடு, நமது ஏகாம்பரம் ஆயிரக்கணக்கில் பொய் சொன்னால், புதிய ஏகாம்பரங்கள் லட்சக்கணக்கில் பொய் சொல்லத் துவங்கினதால் இந்த சின்னப் புளுகர்களின் பொய் எடுபடவில்லை. அதோடு, நூறுநாள் ஓடும் என்று அவர் கணித்த ஒரு படம் நூறு ‘ஷோ’ கூட ஓடாததால், முன்னூறு ரூபாயைத் தட்சணையாகக் கொடுத்த அந்த படத்தயாரிப்பாளர், இப்போது அந்தப் பணத்தைக் கடனாகக் கொடுத்ததாக வாதாடி,ஏகாம்பரத்தை புரட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த லட்சணத்தில், அடையாறு வீட்டில் குடியிருந்தவர்கள் நொடித்துப்போய் வாடகைப் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். காலி பண்ணச் சொன்னால் கோர்ட்டுக்குக் கூப்பிட்டார்கள். மோகினி, தானும் அம்மாவும் அப்பாவும் பட்டினியாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால் கலா... அவள் கண்ணுக்குக் கண்ணாக வளர்க்கும் கலாவிற்கு, கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதை. அவளால் தாங்க முடியவில்லை. அந்த சமயம் பார்த்து, கலாவிற்கு நல்ல ஜூரம். லேசாக பிட்ஸ் வருவதுபோலவும் இருந்தது. 102 டிகிரியைத் தாண்டிவிட்டது.ஏகாம்பரம் ஒப்பாரியே வைக்கத் துவங்கி.<noinclude></noinclude> o82a85390hrnaus5xcyr3qisuno4maz பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/151 250 216254 1839592 821080 2025-07-06T14:43:41Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh 142|சு.சமுத்திரம்||}}</noinclude>விட்டார். மோகினியால் அழ முடியவில்லை. கண்ணீரும் வரவில்லை. குழந்தைக்கு அருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். அம்மாக்காரி தட்டுத் தடுமாறி வந்து, ஈரத்துணி களால் பேத்தியின் நெற்றியில் ‘ஒத்தடம்’ கொடுத்தாள். கலா லேசாகப் புலம்பத் துவங்கினாள். மோகினியால் தாள முடியவில்லை. டாக்டரிடம் போகப் பணமில்லை. கணவனைச் சபித்துக் கொண்டாள். ஆமை என்று எந்த நேரத்திலோ வாயைத் திறந்து. வார்த்தை பலிக்கும்படி செய்த அவன் அப்பாவைத் திட்டிக் கொண்டாள்.காலி செய்யாமல் சண்டித்தனம் செய்யும் அடையாறு வாடகை வகையறாக்களைத் திட்டிக்கொண்டாள். அவர்களைக் காலி செய்துவைக்க ஆளில்லாமல் போன தன் அவல நிலைக்காகத் தன்னையே திட்டிக்கொண்டு, தலையிலும் அடித்துச் கொண்டாள். அந்தச் சமயத்தில் பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம் அங்கே வந்தார். எதையோ, சொல்ல வந்தவர். நிலைமையைப் புரிந்து கொண்டு, ‘சீக்கிரமா... குழந்தையை ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுப்போகலாம்... நல்லவேளை... என் கார்லயே வந்தேன்’ என்று அவர் சொல்லி முடிக்குமுன்னாலே, மோகினி குழந்தையைத் தூக்கி, தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். இருவரும் குழந்தையுடன் காரில் பறந்தார்கள், டாக்டர் குழந்தைக்கு ஒரு ஊசி போட்டு. மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். வழியில் சுந்தரம் மாத்திரைகளை வாங்கிக் கொண்டார். மோனி தன் இயலாமையை நினைத்து, வெட்கித் தலைகுனிந்தாள். அதேசமயம், கலா லோாகக் கண்ணை உருட்டி அவள் தோளைத் தட்டியதும். அவளுக்குத் தெம்பு பிறந்தது. சுந்தரத்தை நன்றியோடு பார்த்தாள். {{nop}}<noinclude></noinclude> e6e2hu23oappxwbxt3s4k8ejks8fob1 1839593 1839592 2025-07-06T14:44:38Z AjayAjayy 15166 1839593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|142 சு.சமுத்திரம்||}}</noinclude>விட்டார். மோகினியால் அழ முடியவில்லை. கண்ணீரும் வரவில்லை. குழந்தைக்கு அருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். அம்மாக்காரி தட்டுத் தடுமாறி வந்து, ஈரத்துணி களால் பேத்தியின் நெற்றியில் ‘ஒத்தடம்’ கொடுத்தாள். கலா லேசாகப் புலம்பத் துவங்கினாள். மோகினியால் தாள முடியவில்லை. டாக்டரிடம் போகப் பணமில்லை. கணவனைச் சபித்துக் கொண்டாள். ஆமை என்று எந்த நேரத்திலோ வாயைத் திறந்து. வார்த்தை பலிக்கும்படி செய்த அவன் அப்பாவைத் திட்டிக் கொண்டாள்.காலி செய்யாமல் சண்டித்தனம் செய்யும் அடையாறு வாடகை வகையறாக்களைத் திட்டிக்கொண்டாள். அவர்களைக் காலி செய்துவைக்க ஆளில்லாமல் போன தன் அவல நிலைக்காகத் தன்னையே திட்டிக்கொண்டு, தலையிலும் அடித்துச் கொண்டாள். அந்தச் சமயத்தில் பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம் அங்கே வந்தார். எதையோ, சொல்ல வந்தவர். நிலைமையைப் புரிந்து கொண்டு, ‘சீக்கிரமா... குழந்தையை ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுப்போகலாம்... நல்லவேளை... என் கார்லயே வந்தேன்’ என்று அவர் சொல்லி முடிக்குமுன்னாலே, மோகினி குழந்தையைத் தூக்கி, தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். இருவரும் குழந்தையுடன் காரில் பறந்தார்கள், டாக்டர் குழந்தைக்கு ஒரு ஊசி போட்டு. மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். வழியில் சுந்தரம் மாத்திரைகளை வாங்கிக் கொண்டார். மோனி தன் இயலாமையை நினைத்து, வெட்கித் தலைகுனிந்தாள். அதேசமயம், கலா லோாகக் கண்ணை உருட்டி அவள் தோளைத் தட்டியதும். அவளுக்குத் தெம்பு பிறந்தது. சுந்தரத்தை நன்றியோடு பார்த்தாள். {{nop}}<noinclude></noinclude> glcsrwcwbc79cg03yo72fuj34jrq5ug 1839594 1839593 2025-07-06T14:45:53Z AjayAjayy 15166 1839594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|142 சு.சமுத்திரம்||}}</noinclude>விட்டார். மோகினியால் அழ முடியவில்லை. கண்ணீரும் வரவில்லை. குழந்தைக்கு அருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். அம்மாக்காரி தட்டுத் தடுமாறி வந்து, ஈரத்துணி களால் பேத்தியின் நெற்றியில் ‘ஒத்தடம்’ கொடுத்தாள். கலா லேசாகப் புலம்பத் துவங்கினாள். மோகினியால் தாள முடியவில்லை. டாக்டரிடம் போகப் பணமில்லை. கணவனைச் சபித்துக் கொண்டாள். ஆமை என்று எந்த நேரத்திலோ வாயைத் திறந்து. வார்த்தை பலிக்கும்படி செய்த அவன் அப்பாவைத் திட்டிக் கொண்டாள்.காலி செய்யாமல் சண்டித்தனம் செய்யும் அடையாறு வாடகை வகையறாக்களைத் திட்டிக்கொண்டாள். அவர்களைக் காலி செய்துவைக்க ஆளில்லாமல் போன தன் அவல நிலைக்காகத் தன்னையே திட்டிக்கொண்டு, தலையிலும் அடித்துச் கொண்டாள். அந்தச் சமயத்தில் பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம் அங்கே வந்தார். எதையோ, சொல்ல வந்தவர். நிலைமையைப் புரிந்து கொண்டு, ‘சீக்கிரமா... குழந்தையை ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுப்போகலாம்... நல்லவேளை... என் கார்லயே வந்தேன்’ என்று அவர் சொல்லி முடிக்குமுன்னாலே, மோகினி குழந்தையைத் தூக்கி, தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். இருவரும் குழந்தையுடன் காரில் பறந்தார்கள், டாக்டர் குழந்தைக்கு ஒரு ஊசி போட்டு. மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். வழியில் சுந்தரம் மாத்திரைகளை வாங்கிக் கொண்டார். மோனி தன் இயலாமையை நினைத்து, வெட்கித் தலைகுனிந்தாள். அதேசமயம், கலா லோாகக் கண்ணை உருட்டி அவள் தோளைத் தட்டியதும். அவளுக்குத் தெம்பு பிறந்தது. சுந்தரத்தை நன்றியோடு பார்த்தாள். {{nop}}<noinclude></noinclude> qltu8k7gw9q5p79ov9fqxxe9ormjmy0 1839596 1839594 2025-07-06T14:47:38Z AjayAjayy 15166 1839596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh 142|சு.சமுத்திரம்||}}</noinclude>விட்டார். மோகினியால் அழ முடியவில்லை. கண்ணீரும் வரவில்லை. குழந்தைக்கு அருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். அம்மாக்காரி தட்டுத் தடுமாறி வந்து, ஈரத்துணி களால் பேத்தியின் நெற்றியில் ‘ஒத்தடம்’ கொடுத்தாள். கலா லேசாகப் புலம்பத் துவங்கினாள். மோகினியால் தாள முடியவில்லை. டாக்டரிடம் போகப் பணமில்லை. கணவனைச் சபித்துக் கொண்டாள். ஆமை என்று எந்த நேரத்திலோ வாயைத் திறந்து. வார்த்தை பலிக்கும்படி செய்த அவன் அப்பாவைத் திட்டிக் கொண்டாள்.காலி செய்யாமல் சண்டித்தனம் செய்யும் அடையாறு வாடகை வகையறாக்களைத் திட்டிக்கொண்டாள். அவர்களைக் காலி செய்துவைக்க ஆளில்லாமல் போன தன் அவல நிலைக்காகத் தன்னையே திட்டிக்கொண்டு, தலையிலும் அடித்துச் கொண்டாள். அந்தச் சமயத்தில் பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம் அங்கே வந்தார். எதையோ, சொல்ல வந்தவர். நிலைமையைப் புரிந்து கொண்டு, ‘சீக்கிரமா... குழந்தையை ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுப்போகலாம்... நல்லவேளை... என் கார்லயே வந்தேன்’ என்று அவர் சொல்லி முடிக்குமுன்னாலே, மோகினி குழந்தையைத் தூக்கி, தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். இருவரும் குழந்தையுடன் காரில் பறந்தார்கள், டாக்டர் குழந்தைக்கு ஒரு ஊசி போட்டு. மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். வழியில் சுந்தரம் மாத்திரைகளை வாங்கிக் கொண்டார். மோனி தன் இயலாமையை நினைத்து, வெட்கித் தலைகுனிந்தாள். அதேசமயம், கலா லோாகக் கண்ணை உருட்டி அவள் தோளைத் தட்டியதும். அவளுக்குத் தெம்பு பிறந்தது. சுந்தரத்தை நன்றியோடு பார்த்தாள். {{nop}}<noinclude></noinclude> e6e2hu23oappxwbxt3s4k8ejks8fob1 1839597 1839596 2025-07-06T14:49:12Z AjayAjayy 15166 1839597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh |142|சு.சமுத்திரம்|}}</noinclude>விட்டார். மோகினியால் அழ முடியவில்லை. கண்ணீரும் வரவில்லை. குழந்தைக்கு அருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். அம்மாக்காரி தட்டுத் தடுமாறி வந்து, ஈரத்துணி களால் பேத்தியின் நெற்றியில் ‘ஒத்தடம்’ கொடுத்தாள். கலா லேசாகப் புலம்பத் துவங்கினாள். மோகினியால் தாள முடியவில்லை. டாக்டரிடம் போகப் பணமில்லை. கணவனைச் சபித்துக் கொண்டாள். ஆமை என்று எந்த நேரத்திலோ வாயைத் திறந்து. வார்த்தை பலிக்கும்படி செய்த அவன் அப்பாவைத் திட்டிக் கொண்டாள்.காலி செய்யாமல் சண்டித்தனம் செய்யும் அடையாறு வாடகை வகையறாக்களைத் திட்டிக்கொண்டாள். அவர்களைக் காலி செய்துவைக்க ஆளில்லாமல் போன தன் அவல நிலைக்காகத் தன்னையே திட்டிக்கொண்டு, தலையிலும் அடித்துச் கொண்டாள். அந்தச் சமயத்தில் பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம் அங்கே வந்தார். எதையோ, சொல்ல வந்தவர். நிலைமையைப் புரிந்து கொண்டு, ‘சீக்கிரமா... குழந்தையை ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுப்போகலாம்... நல்லவேளை... என் கார்லயே வந்தேன்’ என்று அவர் சொல்லி முடிக்குமுன்னாலே, மோகினி குழந்தையைத் தூக்கி, தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். இருவரும் குழந்தையுடன் காரில் பறந்தார்கள், டாக்டர் குழந்தைக்கு ஒரு ஊசி போட்டு. மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். வழியில் சுந்தரம் மாத்திரைகளை வாங்கிக் கொண்டார். மோனி தன் இயலாமையை நினைத்து, வெட்கித் தலைகுனிந்தாள். அதேசமயம், கலா லோாகக் கண்ணை உருட்டி அவள் தோளைத் தட்டியதும். அவளுக்குத் தெம்பு பிறந்தது. சுந்தரத்தை நன்றியோடு பார்த்தாள். {{nop}}<noinclude></noinclude> illqk6uyqzeaq311dx0og5b4k8uf491 1839600 1839597 2025-07-06T14:56:45Z AjayAjayy 15166 1839600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|142{{gapசு.சமுத்திரம்|}}|}}</noinclude>விட்டார். மோகினியால் அழ முடியவில்லை. கண்ணீரும் வரவில்லை. குழந்தைக்கு அருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். அம்மாக்காரி தட்டுத் தடுமாறி வந்து, ஈரத்துணி களால் பேத்தியின் நெற்றியில் ‘ஒத்தடம்’ கொடுத்தாள். கலா லேசாகப் புலம்பத் துவங்கினாள். மோகினியால் தாள முடியவில்லை. டாக்டரிடம் போகப் பணமில்லை. கணவனைச் சபித்துக் கொண்டாள். ஆமை என்று எந்த நேரத்திலோ வாயைத் திறந்து. வார்த்தை பலிக்கும்படி செய்த அவன் அப்பாவைத் திட்டிக் கொண்டாள்.காலி செய்யாமல் சண்டித்தனம் செய்யும் அடையாறு வாடகை வகையறாக்களைத் திட்டிக்கொண்டாள். அவர்களைக் காலி செய்துவைக்க ஆளில்லாமல் போன தன் அவல நிலைக்காகத் தன்னையே திட்டிக்கொண்டு, தலையிலும் அடித்துச் கொண்டாள். அந்தச் சமயத்தில் பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம் அங்கே வந்தார். எதையோ, சொல்ல வந்தவர். நிலைமையைப் புரிந்து கொண்டு, ‘சீக்கிரமா... குழந்தையை ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுப்போகலாம்... நல்லவேளை... என் கார்லயே வந்தேன்’ என்று அவர் சொல்லி முடிக்குமுன்னாலே, மோகினி குழந்தையைத் தூக்கி, தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். இருவரும் குழந்தையுடன் காரில் பறந்தார்கள், டாக்டர் குழந்தைக்கு ஒரு ஊசி போட்டு. மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். வழியில் சுந்தரம் மாத்திரைகளை வாங்கிக் கொண்டார். மோனி தன் இயலாமையை நினைத்து, வெட்கித் தலைகுனிந்தாள். அதேசமயம், கலா லோாகக் கண்ணை உருட்டி அவள் தோளைத் தட்டியதும். அவளுக்குத் தெம்பு பிறந்தது. சுந்தரத்தை நன்றியோடு பார்த்தாள். {{nop}}<noinclude></noinclude> 7v7u2h6lzog8clqp9c42tlyn1oghpne 1839602 1839600 2025-07-06T15:02:31Z AjayAjayy 15166 1839602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|142{{gap}}சு.சமுத்திரம்||}}</noinclude>விட்டார். மோகினியால் அழ முடியவில்லை. கண்ணீரும் வரவில்லை. குழந்தைக்கு அருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். அம்மாக்காரி தட்டுத் தடுமாறி வந்து, ஈரத்துணி களால் பேத்தியின் நெற்றியில் ‘ஒத்தடம்’ கொடுத்தாள். கலா லேசாகப் புலம்பத் துவங்கினாள். மோகினியால் தாள முடியவில்லை. டாக்டரிடம் போகப் பணமில்லை. கணவனைச் சபித்துக் கொண்டாள். ஆமை என்று எந்த நேரத்திலோ வாயைத் திறந்து. வார்த்தை பலிக்கும்படி செய்த அவன் அப்பாவைத் திட்டிக் கொண்டாள்.காலி செய்யாமல் சண்டித்தனம் செய்யும் அடையாறு வாடகை வகையறாக்களைத் திட்டிக்கொண்டாள். அவர்களைக் காலி செய்துவைக்க ஆளில்லாமல் போன தன் அவல நிலைக்காகத் தன்னையே திட்டிக்கொண்டு, தலையிலும் அடித்துச் கொண்டாள். அந்தச் சமயத்தில் பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம் அங்கே வந்தார். எதையோ, சொல்ல வந்தவர். நிலைமையைப் புரிந்து கொண்டு, ‘சீக்கிரமா... குழந்தையை ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுப்போகலாம்... நல்லவேளை... என் கார்லயே வந்தேன்’ என்று அவர் சொல்லி முடிக்குமுன்னாலே, மோகினி குழந்தையைத் தூக்கி, தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். இருவரும் குழந்தையுடன் காரில் பறந்தார்கள், டாக்டர் குழந்தைக்கு ஒரு ஊசி போட்டு. மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். வழியில் சுந்தரம் மாத்திரைகளை வாங்கிக் கொண்டார். மோனி தன் இயலாமையை நினைத்து, வெட்கித் தலைகுனிந்தாள். அதேசமயம், கலா லோாகக் கண்ணை உருட்டி அவள் தோளைத் தட்டியதும். அவளுக்குத் தெம்பு பிறந்தது. சுந்தரத்தை நன்றியோடு பார்த்தாள். {{nop}}<noinclude></noinclude> g4rxkgiy0a7wzvqimkkebi2li269090 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/152 250 216256 1839607 821082 2025-07-06T15:26:53Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல் {{gap}}1 4 3}}</noinclude> “டோண்ட்’ ஒர்ரி மோகினி. குழந்தைச்கு சரியாயிடும்! அப்புறம் ஒரு விஷயம்! நாளைக்கு அந்த லீலா சனியன் லீவுல போவுது. உனக்குத் தற்காலிகமாய் உத்தியோக உயர்வு தருகிறேன்.” தேங்க் யு ஸார்! என்னால ஓங்களுக்குச் சிரமம்... என்ன மோகினி நீ, நமக்குள்ள எதுக்கு பார்மாவிட்டி... நீ என்னை மூணாவது மனுஷன் மாதிரி பேசுவதுதான் பிடிக்கல. இன்னொரு விஷயம். அதிர்ச்சி அடையாதே! உன் ஹஸ்பெண்டை பம்பாய்ல பாத்தேன். சாராய பாட்டி லோட... கட்டத்தட்ட பொறுக்கியாயிட்டான். என்னை எப்படியோ பாத்துட்டு டேய்! நீதான என் ஒய்ப வச்சிக் கிட்டு இருக்கேன்’னு கேட்டான். நான் எப்படியோ சமாளிச் சிட்டு தப்பினேன். பிக்பாக்கட் வேற அடிக்கிறானாம். நினைச்சுப் பார்க்கவே கஷ்டமாய் இருக்கு. மோகினியின் முகம்—முன்பு கல்போல் அடிக்கடி மாறும் அந்த அழகான முகம், இப்போது இரும்பு மாதிரி கொல்லன் உலையில் உருக்கப்பட்டு கெட்டியான இரும்பு மாதிரி இறுகியது. வீட்டில் அவளை விட்டுவிட்டு விடைபெறப் போன சுந்தரம், அவள் தோளை லேசாகத் தட்டி. பின்பு பலமாக அழுத்தியபோது, அவள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஏன் எதிர்ப்பு காட்ட வேண்டும்? மகள் வாழ்வதற்காக நாம அழிஞ்சாலும் பரவாயில்ல; இனி மேல் எப்படி வேணுமுன்னாலும் வாழ்வேன். நான் பழைய காதல் மோகினியல்ல. மகளை வாழவைக்கப் போகிற கர்மயோக மோகினி. அதுக்காக எந்த லெவலுக்கும் போகத் தயார். எந்த பாதையிலும் நடக்கத் தயார். அந்த பாதையில குறுக்கிடும் எவரையும் அழிககத் தயார். பிறர் அழிவுலதான் நம் ஆக்கம் இருக்குன்னா அதுக்குத் தயார்... அதுக்காக... எதுக்கும் தயார். {{nop}}<noinclude></noinclude> ok9p46cie8gszc0ldnzg4q10kqqjo6j பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/153 250 216258 1839618 821084 2025-07-06T15:40:29Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||7{{gap}}}}</noinclude>மீண்டுமொரு முறை ‘நியாயம்’ சஞ்சிகையை வெளிக் கொணரும் பொறுப்பு மோகினியிடம் வந்தது. அதை அவளிடம் சுந்தரம் கொடுத்திருந்தார். அனுபவமில்லாத மோகினி அந்த இதழைக் குட்டிச்சுவராக்கியிருந்தாள். ஜெனரல் மானேஜர் லீலாவைக் கூப்பிட்டனுப்பிக் கோபத்தில் குதித்தார். அட்டையில் வெளியாகியிருந்த அவருடைய படம் ஒரே கறுப்பாக இருந்தது. வாசகர்கள் அதைக் கேலி செய்து கடிதம் போட்டிருந்தார்கள். விரக்தியாக வந்த லீலாவைப் பார்த்ததும், வழக்கம் போல் அவர் புன்னகை செய்யவில்லை. அவள் “குட்மார்னிங்”கிற்கு, இவர் நோ... நோ... பேட்... பேட்’ என்றார். கூப்பிட்டீங்களாமே ஸ்ார்... “யெஸ்...இந்த இதழ் ஏன் இவ்வளவு மட்டமா இருக்கு ஒங்களெல்லாம் ஒரே இடத்துல வைக்கறது தப்பு. இனிமே இதை மோகினிகிட்ட ஒப்படைக்கப் போறேன்!” “லார். இது மோகினியோட...” நோ எக்ஸ்பிளனேஷன். நோ நொண்டிச் சாக்கு. “ஸார்... நான் சொல்றதக் கொஞ்சம்....” “இதுக்கு மேல பேசினா ஐ வில் சஸ்பென்ட் யூ. தப்பை ஒத்துக்காமல் கூடக்கூடப் பேசினா என்ன அர்த்தம்?” “சதப்புதான் ஸார்...” {{nop}}<noinclude></noinclude> eb1v4iiyudbj7aluu5b53299m1bal53 1839620 1839618 2025-07-06T15:41:36Z AjayAjayy 15166 1839620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||7{{gap}}}}</noinclude>மீண்டுமொரு முறை ‘நியாயம்’ சஞ்சிகையை வெளிக் கொணரும் பொறுப்பு மோகினியிடம் வந்தது. அதை அவளிடம் சுந்தரம் கொடுத்திருந்தார். அனுபவமில்லாத மோகினி அந்த இதழைக் குட்டிச்சுவராக்கியிருந்தாள். ஜெனரல் மானேஜர் லீலாவைக் கூப்பிட்டனுப்பிக் கோபத்தில் குதித்தார். அட்டையில் வெளியாகியிருந்த அவருடைய படம் ஒரே கறுப்பாக இருந்தது. வாசகர்கள் அதைக் கேலி செய்து கடிதம் போட்டிருந்தார்கள். விரக்தியாக வந்த லீலாவைப் பார்த்ததும், வழக்கம் போல் அவர் புன்னகை செய்யவில்லை. அவள் “குட்மார்னிங்”கிற்கு, இவர் நோ... ‘நோ... பேட்... பேட்’ என்றார். கூப்பிட்டீங்களாமே ஸ்ார்... “யெஸ்...இந்த இதழ் ஏன் இவ்வளவு மட்டமா இருக்கு ஒங்களெல்லாம் ஒரே இடத்துல வைக்கறது தப்பு. இனிமே இதை மோகினிகிட்ட ஒப்படைக்கப் போறேன்!” “லார். இது மோகினியோட...” நோ எக்ஸ்பிளனேஷன். நோ நொண்டிச் சாக்கு. “ஸார்... நான் சொல்றதக் கொஞ்சம்....” “இதுக்கு மேல பேசினா ஐ வில் சஸ்பென்ட் யூ. தப்பை ஒத்துக்காமல் கூடக்கூடப் பேசினா என்ன அர்த்தம்?” “சதப்புதான் ஸார்...” {{nop}}<noinclude></noinclude> b73thtj7aw562x8jxtrejylh83gxz1d பக்கம்:கனிச்சாறு 4.pdf/13 250 446851 1839642 1439519 2025-07-06T16:04:47Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1839642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|கஉ||கனிச்சாறு நான்காம் தொகுதி}}</b></noinclude> {{center|{{larger|<b>கனிச்சாறு நான்காம் தொகுதி</b>}} <br> (இளைய தலைமுறை, பொதுமை, இயக்கம்)}} {| | || {{larger|<b>பொருளடக்கம்</b>}} || |- | பாடல் எண் || பாடல் தலைப்பு || பக்க எண். |- | <b>இளையதலைமுறை</b> || || |- | 1. || கடவுள் நம்பிக்கை! || 3 |- | 2. || சுருட்டும் பீடியும் ! || 4 |- | 3. || பெற்றவள் உவகை! || 5 |- | 4. || கோழையின் தாய் ! || 6 |- | 5. || ஏன் பிறந்தாய் ? || 7 |- | 6. || வேண்டாத இந்தி! || 9 |- | 7. || கல்வி யொழுங்கு ! || 10 |- | 8. || இளைஞர் எழுச்சி || 11 |- | 9. || தமிழர் படை ! || 12 |- | 10. || போலியர் வாழ்வு! || 13 |- | 11. || தமிழ்க்கு மூவுடைமை! || 14 |- | 12. || நொச்சிப் போர் ! || 15 |- | 13. || ஓ. மாணவச்செல்வரே! || 19 |- | 14. || தம்பி நீ புதிய தமிழன் ! || 23 |- | 15. || மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார் ! || 26 |- | 16. || தமிழத்தம்பியே! உலகைத் திருத்தடா! || 27 |- | 17. || தம்பி! நீதான் நாளைய தலைவன் ! || 31 |- | 18. || வாழ்க்கை பொது! || 32 |- | 19. || விளம்பர உலகில் விலைபோகாதே ! || 33 |- | 20. || அயர்வைக் கொல்லடா! தோளை உயர்த்தடா! || 35 |- | 21. || உனை அழிக்கும் எல்லை! || 36 |- | 22. || மக்கள் என்று திருந்துவரோ? || 37 |- | 23. || போலியரைக் கண்டுகொள் தம்பி ! || 39 |- | 24. || சிற்றூர்! || 40 |- | 25. || பூத்த தாமரைப் புதுமுகம்! || 41 |- | 26. || தொண்டன் நீ! || 42 |- | 27. || பாட்டெழுது! || 43 |- | 28. || பழைய மனமே புதிய உலகம்! || 45 |- | 29. || மனத்தில் அறிவில் ஒளி ஏற்றுவாய் ! || 47 |- | 30. || வாழ்க்கையில் பீடுசேர் 1 || 48 |- | 31. || பள்ளியை மூடுங்கள்! || 49 |- | 32. || நிறையக் கேள்! குறையப்பேசு! || 50 |}<noinclude></noinclude> pdog8ds731q668ffy1cj37e0vrnodra 1839770 1839642 2025-07-07T03:13:17Z Info-farmer 232 + பக்க ஒருங்கிணைவினை எளிமையாக்க, வடிவ மாற்றம். 1839770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|கஉ||கனிச்சாறு நான்காம் தொகுதி}}</b></noinclude> {{center{{larger<b>கனிச்சாறு நான்காம் தொகுதி</b>}} <br> (இளைய தலைமுறை, பொதுமை, இயக்கம்)}} {{larger<b>பொருளடக்கம்</b>}} பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண். <b>இளையதலைமுறை</b> 1. கடவுள் நம்பிக்கை! 3 2. சுருட்டும் பீடியும் ! 4 3. பெற்றவள் உவகை! 5 4. கோழையின் தாய் ! 6 5. ஏன் பிறந்தாய் ? 7 6. வேண்டாத இந்தி! 9 7. கல்வி யொழுங்கு ! 10 8. இளைஞர் எழுச்சி 11 9. தமிழர் படை ! 12 10. போலியர் வாழ்வு! 13 11. தமிழ்க்கு மூவுடைமை! 14 12. நொச்சிப் போர் ! 15 13. ஓ. மாணவச்செல்வரே! 19 14. தம்பி நீ புதிய தமிழன் ! 23 15. மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார் ! 26 16. தமிழத்தம்பியே! உலகைத் திருத்தடா! 27 17. தம்பி! நீதான் நாளைய தலைவன் ! 31 18. வாழ்க்கை பொது! 32 19. விளம்பர உலகில் விலைபோகாதே ! 33 20. அயர்வைக் கொல்லடா! தோளை உயர்த்தடா! 35 21. உனை அழிக்கும் எல்லை! 36 22. மக்கள் என்று திருந்துவரோ? 37 23. போலியரைக் கண்டுகொள் தம்பி ! 39 24. சிற்றூர்! 40 25. பூத்த தாமரைப் புதுமுகம்! 41 26. தொண்டன் நீ! 42 27. பாட்டெழுது! 43 28. பழைய மனமே புதிய உலகம்! 45 29. மனத்தில் அறிவில் ஒளி ஏற்றுவாய் ! 47 30. வாழ்க்கையில் பீடுசேர் 1 48 31. பள்ளியை மூடுங்கள்! 49 32. நிறையக் கேள்! குறையப்பேசு! 50<noinclude></noinclude> p723h5ke9j45mebzhk2tqrp818bvxui 1839771 1839770 2025-07-07T03:14:27Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|கஉ||கனிச்சாறு நான்காம் தொகுதி}}</b></noinclude> {{center|{{larger<b>கனிச்சாறு நான்காம் தொகுதி</b>}} <br> (இளைய தலைமுறை, பொதுமை, இயக்கம்)}} {{larger|<b>பொருளடக்கம்</b>}} பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண். <b>இளையதலைமுறை</b> 1. கடவுள் நம்பிக்கை! 3 2. சுருட்டும் பீடியும் ! 4 3. பெற்றவள் உவகை! 5 4. கோழையின் தாய் ! 6 5. ஏன் பிறந்தாய் ? 7 6. வேண்டாத இந்தி! 9 7. கல்வி யொழுங்கு ! 10 8. இளைஞர் எழுச்சி 11 9. தமிழர் படை ! 12 10. போலியர் வாழ்வு! 13 11. தமிழ்க்கு மூவுடைமை! 14 12. நொச்சிப் போர் ! 15 13. ஓ. மாணவச்செல்வரே! 19 14. தம்பி நீ புதிய தமிழன் ! 23 15. மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார் ! 26 16. தமிழத்தம்பியே! உலகைத் திருத்தடா! 27 17. தம்பி! நீதான் நாளைய தலைவன் ! 31 18. வாழ்க்கை பொது! 32 19. விளம்பர உலகில் விலைபோகாதே ! 33 20. அயர்வைக் கொல்லடா! தோளை உயர்த்தடா! 35 21. உனை அழிக்கும் எல்லை! 36 22. மக்கள் என்று திருந்துவரோ? 37 23. போலியரைக் கண்டுகொள் தம்பி ! 39 24. சிற்றூர்! 40 25. பூத்த தாமரைப் புதுமுகம்! 41 26. தொண்டன் நீ! 42 27. பாட்டெழுது! 43 28. பழைய மனமே புதிய உலகம்! 45 29. மனத்தில் அறிவில் ஒளி ஏற்றுவாய் ! 47 30. வாழ்க்கையில் பீடுசேர் 1 48 31. பள்ளியை மூடுங்கள்! 49 32. நிறையக் கேள்! குறையப்பேசு! 50<noinclude></noinclude> 7xx6e1a7lnhuctfunnnpghz2owdti3k 1839773 1839771 2025-07-07T03:15:57Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|கஉ||கனிச்சாறு நான்காம் தொகுதி}}</b></noinclude> {{center|{{larger|<b>கனிச்சாறு நான்காம் தொகுதி</b> (இளைய தலைமுறை, பொதுமை, இயக்கம்) {{larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{rh|பாடல் எண் | பாடல் தலைப்பு | பக்க எண்.}} <b>இளையதலைமுறை</b> 1. கடவுள் நம்பிக்கை! 3 2. சுருட்டும் பீடியும் ! 4 3. பெற்றவள் உவகை! 5 4. கோழையின் தாய் ! 6 5. ஏன் பிறந்தாய் ? 7 6. வேண்டாத இந்தி! 9 7. கல்வி யொழுங்கு ! 10 8. இளைஞர் எழுச்சி 11 9. தமிழர் படை ! 12 10. போலியர் வாழ்வு! 13 11. தமிழ்க்கு மூவுடைமை! 14 12. நொச்சிப் போர் ! 15 13. ஓ. மாணவச்செல்வரே! 19 14. தம்பி நீ புதிய தமிழன் ! 23 15. மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார் ! 26 16. தமிழத்தம்பியே! உலகைத் திருத்தடா! 27 17. தம்பி! நீதான் நாளைய தலைவன் ! 31 18. வாழ்க்கை பொது! 32 19. விளம்பர உலகில் விலைபோகாதே ! 33 20. அயர்வைக் கொல்லடா! தோளை உயர்த்தடா! 35 21. உனை அழிக்கும் எல்லை! 36 22. மக்கள் என்று திருந்துவரோ? 37 23. போலியரைக் கண்டுகொள் தம்பி ! 39 24. சிற்றூர்! 40 25. பூத்த தாமரைப் புதுமுகம்! 41 26. தொண்டன் நீ! 42 27. பாட்டெழுது! 43 28. பழைய மனமே புதிய உலகம்! 45 29. மனத்தில் அறிவில் ஒளி ஏற்றுவாய் ! 47 30. வாழ்க்கையில் பீடுசேர் 1 48 31. பள்ளியை மூடுங்கள்! 49 32. நிறையக் கேள்! குறையப்பேசு! 50<noinclude></noinclude> 9twgoavyu7497jtrbkylwpyowuhep7e 1839775 1839773 2025-07-07T03:20:08Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|கஉ||கனிச்சாறு நான்காம் தொகுதி}}</b></noinclude> {{block_center|width=600px| {{center| {{x-larger|<b>கனிச்சாறு நான்காம் தொகுதி</b>}} (இளைய தலைமுறை, பொதுமை, இயக்கம்) {{x-larger|<b>பொருளடக்கம்</b>}} }} {{rh|பாடல் எண் | பாடல் தலைப்பு | பக்க எண்.}} <b>{{larger|இளையதலைமுறை}}</b> 1. கடவுள் நம்பிக்கை! 3 2. சுருட்டும் பீடியும் ! 4 3. பெற்றவள் உவகை! 5 4. கோழையின் தாய் ! 6 5. ஏன் பிறந்தாய் ? 7 6. வேண்டாத இந்தி! 9 7. கல்வி யொழுங்கு ! 10 8. இளைஞர் எழுச்சி 11 9. தமிழர் படை ! 12 10. போலியர் வாழ்வு! 13 11. தமிழ்க்கு மூவுடைமை! 14 12. நொச்சிப் போர் ! 15 13. ஓ. மாணவச்செல்வரே! 19 14. தம்பி நீ புதிய தமிழன் ! 23 15. மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார் ! 26 16. தமிழத்தம்பியே! உலகைத் திருத்தடா! 27 17. தம்பி! நீதான் நாளைய தலைவன் ! 31 18. வாழ்க்கை பொது! 32 19. விளம்பர உலகில் விலைபோகாதே ! 33 20. அயர்வைக் கொல்லடா! தோளை உயர்த்தடா! 35 21. உனை அழிக்கும் எல்லை! 36 22. மக்கள் என்று திருந்துவரோ? 37 23. போலியரைக் கண்டுகொள் தம்பி ! 39 24. சிற்றூர்! 40 25. பூத்த தாமரைப் புதுமுகம்! 41 26. தொண்டன் நீ! 42 27. பாட்டெழுது! 43 28. பழைய மனமே புதிய உலகம்! 45 29. மனத்தில் அறிவில் ஒளி ஏற்றுவாய் ! 47 30. வாழ்க்கையில் பீடுசேர் 1 48 31. பள்ளியை மூடுங்கள்! 49 32. நிறையக் கேள்! குறையப்பேசு! 50 }}<noinclude></noinclude> kf2xxxcx7914t709vgzg5ej0jloxp70 பக்கம்:கனிச்சாறு 4.pdf/14 250 446852 1839643 1439520 2025-07-06T16:05:17Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1839643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||க௩}}</b></noinclude>{| | பாடல் எண் || பாடல் தலைப்பு || பக்க எண் |- | 33. || கணக்கும் எழுத்துமே கல்வி என்றாகுமோ? || 51 |- | 34. || நெஞ்சை அகலப்படுத்து! அறிவை ஆழப்படுத்து!<br> தோளை உயரப்படுத்து! || 54 |- | 35. || உண்மை கடைப்பிடி! உழைப்பில் உறுதிகொள்! || 56 |- | 36. || அருமைச் சிறுவர்காள்! || 57 |- | 37. || யாருக்காக, நீ? || 58 |- | 38. || குழந்தை... || 59 |- | 39. || என்றன் பாட்டு ! || 60 |- | 40. || தமிழத்தம்பி நல்லதம்பி ! || 61 |- | 41. || எங்கும் எதிலும் ஒழுங்கு உண்டு! || 62 |- | 42. || துணிந்துநில்! குனிந்து சாகாதே ! || 63 |- | 43. || அச்சுரை எல்லாம் அறிவுரையன்று! || 64 |- | 44. || தோற்றம் வேறு, செயல் வேறு ! || 65 |- | 45. || நம்பிக்கை! || 66 |- | 46. || மதப்பற்று! || 69 |- | 47. || உன்னை நம்பிக்கிடக்குது நாடு! || 71 |- | 48. || குறைகளும் குணங்களும் ! || 72 |- | 49. || உயர்வும் தாழ்வும்! || 73 |- | 50. || இளமை இழிவானால் வாழ்வு வீணாகும் ! || 74 |- | 51. || அழகும் அருவருப்பும்! || 75 |- | 52. || பொருந்தா ஆசையைப் புதைத்து, உடன்விலகு! || 76 |- | 53. || பதற்றம் கொள்ளாதே! || 77 |- | 54. || எதிர்ப்புக்கு இளைக்காதே! || 78 |- | 55. || தனி நலத்தைத் தவிர் ! || 79 |- | 56. || வாழ்வியல் முப்பது! || 80 |- | 57. || வாழ்க்கைத் திரிபுகள் ! || 88 |- | 58. || உழைப்பே வாழ்க்கை ! || 89 |- | 59. || உயர்வைப் பின்பற்று! || 90 |- | 60. || ஏற்பும் தவிர்ப்பும் ! || 91 |- | 61. || ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நூலகம்! || 92 |- | 62. || ஏமாறிப் போகாதீரே! || 93 |- | 63. || இந்த உலகம்! || 94 |- | 64. || பொய்யா வாழ்க்கை அறவாழ்க்கை! || 95 |- | 65. || புன்மையும் நன்மையும் ! || 96 |- | 66. || மூட்டுக்கு வலிவு செய் ; முதுக்கு நிமிர்வு தா! || 97 |- | 67. || மக்களை உருவால் மயங்காதே! || 98 |- | 68. || எண்ணமும் செயலும் ! || 99 |- | 69. || உடல் நலத்தைக் காவாதான் உயிர்நலத்தைக் காவாதான் ! || 100 |}<noinclude></noinclude> 34m3hprz06qhed2epbrqlsnpuykvyaj 1839872 1839643 2025-07-07T07:36:37Z Info-farmer 232 + பக்க ஒருங்கிணைவினை எளிமையாக்க, வடிவ மாற்றம். 1839872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||க௩}}</b></noinclude>பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண் 33. கணக்கும் எழுத்துமே கல்வி என்றாகுமோ? 51 34. நெஞ்சை அகலப்படுத்து! அறிவை ஆழப்படுத்து!<br> தோளை உயரப்படுத்து! 54 35. உண்மை கடைப்பிடி! உழைப்பில் உறுதிகொள்! 56 36. அருமைச் சிறுவர்காள்! 57 37. யாருக்காக, நீ? 58 38. குழந்தை... 59 39. என்றன் பாட்டு ! 60 40. தமிழத்தம்பி நல்லதம்பி ! 61 41. எங்கும் எதிலும் ஒழுங்கு உண்டு! 62 42. துணிந்துநில்! குனிந்து சாகாதே ! 63 43. அச்சுரை எல்லாம் அறிவுரையன்று! 64 44. தோற்றம் வேறு, செயல் வேறு ! 65 45. நம்பிக்கை! 66 46. மதப்பற்று! 69 47. உன்னை நம்பிக்கிடக்குது நாடு! 71 48. குறைகளும் குணங்களும் ! 72 49. உயர்வும் தாழ்வும்! 73 50. இளமை இழிவானால் வாழ்வு வீணாகும் ! 74 51. அழகும் அருவருப்பும்! 75 52. பொருந்தா ஆசையைப் புதைத்து, உடன்விலகு! 76 53. பதற்றம் கொள்ளாதே! 77 54. எதிர்ப்புக்கு இளைக்காதே! 78 55. தனி நலத்தைத் தவிர் ! 79 56. வாழ்வியல் முப்பது! 80 57. வாழ்க்கைத் திரிபுகள் ! 88 58. உழைப்பே வாழ்க்கை ! 89 59. உயர்வைப் பின்பற்று! 90 60. ஏற்பும் தவிர்ப்பும் ! 91 61. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நூலகம்! 92 62. ஏமாறிப் போகாதீரே! 93 63. இந்த உலகம்! 94 64. பொய்யா வாழ்க்கை அறவாழ்க்கை! 95 65. புன்மையும் நன்மையும் ! 96 66. மூட்டுக்கு வலிவு செய் ; முதுக்கு நிமிர்வு தா! 97 67. மக்களை உருவால் மயங்காதே! 98 68. எண்ணமும் செயலும் ! 99 69. உடல் நலத்தைக் காவாதான் உயிர்நலத்தைக் காவாதான் ! 100<noinclude></noinclude> 0ip952edv4xjn2wjsewoiutk5jktpif 1839875 1839872 2025-07-07T07:37:43Z Info-farmer 232 + பக்க ஒருங்கிணைவினை எளிமையாக்க, வடிவ மாற்றம். 1839875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||க௩}}</b></noinclude>பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண் 33. கணக்கும் எழுத்துமே கல்வி என்றாகுமோ? 51 34. நெஞ்சை அகலப்படுத்து! அறிவை ஆழப்படுத்து!<br> தோளை உயரப்படுத்து! 54 35. உண்மை கடைப்பிடி! உழைப்பில் உறுதிகொள்! 56 36. அருமைச் சிறுவர்காள்! 57 37. யாருக்காக, நீ? 58 38. குழந்தை... 59 39. என்றன் பாட்டு ! 60 40. தமிழத்தம்பி நல்லதம்பி ! 61 41. எங்கும் எதிலும் ஒழுங்கு உண்டு! 62 42. துணிந்துநில்! குனிந்து சாகாதே ! 63 43. அச்சுரை எல்லாம் அறிவுரையன்று! 64 44. தோற்றம் வேறு, செயல் வேறு ! 65 45. நம்பிக்கை! 66 46. மதப்பற்று! 69 47. உன்னை நம்பிக்கிடக்குது நாடு! 71 48. குறைகளும் குணங்களும் ! 72 49. உயர்வும் தாழ்வும்! 73 50. இளமை இழிவானால் வாழ்வு வீணாகும் ! 74 51. அழகும் அருவருப்பும்! 75 52. பொருந்தா ஆசையைப் புதைத்து, உடன்விலகு! 76 53. பதற்றம் கொள்ளாதே! 77 54. எதிர்ப்புக்கு இளைக்காதே! 78 55. தனி நலத்தைத் தவிர் ! 79 56. வாழ்வியல் முப்பது! 80 57. வாழ்க்கைத் திரிபுகள் ! 88 58. உழைப்பே வாழ்க்கை ! 89 59. உயர்வைப் பின்பற்று! 90 60. ஏற்பும் தவிர்ப்பும் ! 91 61. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நூலகம்! 92 62. ஏமாறிப் போகாதீரே! 93 63. இந்த உலகம்! 94 64. பொய்யா வாழ்க்கை அறவாழ்க்கை! 95 65. புன்மையும் நன்மையும் ! 96 66. மூட்டுக்கு வலிவு செய் ; முதுக்கு நிமிர்வு தா! 97 67. மக்களை உருவால் மயங்காதே! 98 68. எண்ணமும் செயலும் ! 99 69. உடல் நலத்தைக் காவாதான் உயிர்நலத்தைக் காவாதான் ! 100<noinclude></noinclude> 5h4om5ou488bnvmu2y7ciguon1xw9i5 1839879 1839875 2025-07-07T07:40:15Z Info-farmer 232 - துப்புரவு 1839879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||க௩}}</b></noinclude> பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண் 33. கணக்கும் எழுத்துமே கல்வி என்றாகுமோ? 51 34. நெஞ்சை அகலப்படுத்து! அறிவை ஆழப்படுத்து!<br> தோளை உயரப்படுத்து! 54 35. உண்மை கடைப்பிடி! உழைப்பில் உறுதிகொள்! 56 36. அருமைச் சிறுவர்காள்! 57 37. யாருக்காக, நீ? 58 38. குழந்தை... 59 39. என்றன் பாட்டு ! 60 40. தமிழத்தம்பி நல்லதம்பி ! 61 41. எங்கும் எதிலும் ஒழுங்கு உண்டு! 62 42. துணிந்துநில்! குனிந்து சாகாதே ! 63 43. அச்சுரை எல்லாம் அறிவுரையன்று! 64 44. தோற்றம் வேறு, செயல் வேறு ! 65 45. நம்பிக்கை! 66 46. மதப்பற்று! 69 47. உன்னை நம்பிக்கிடக்குது நாடு! 71 48. குறைகளும் குணங்களும் ! 72 49. உயர்வும் தாழ்வும்! 73 50. இளமை இழிவானால் வாழ்வு வீணாகும் ! 74 51. அழகும் அருவருப்பும்! 75 52. பொருந்தா ஆசையைப் புதைத்து, உடன்விலகு! 76 53. பதற்றம் கொள்ளாதே! 77 54. எதிர்ப்புக்கு இளைக்காதே! 78 55. தனி நலத்தைத் தவிர் ! 79 56. வாழ்வியல் முப்பது! 80 57. வாழ்க்கைத் திரிபுகள் ! 88 58. உழைப்பே வாழ்க்கை ! 89 59. உயர்வைப் பின்பற்று! 90 60. ஏற்பும் தவிர்ப்பும் ! 91 61. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நூலகம்! 92 62. ஏமாறிப் போகாதீரே! 93 63. இந்த உலகம்! 94 64. பொய்யா வாழ்க்கை அறவாழ்க்கை! 95 65. புன்மையும் நன்மையும் ! 96 66. மூட்டுக்கு வலிவு செய் ; முதுக்கு நிமிர்வு தா! 97 67. மக்களை உருவால் மயங்காதே! 98 68. எண்ணமும் செயலும் ! 99 69. உடல் நலத்தைக் காவாதான் உயிர்நலத்தைக் காவாதான் ! 100<noinclude></noinclude> hwr8meyazufbbcbb1q27wyjlxw38x4w 1839884 1839879 2025-07-07T07:44:42Z Info-farmer 232 {{block_center|width=600px| 1839884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||க௩}}</b></noinclude> {{block_center|width=600px| பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண் 33. கணக்கும் எழுத்துமே கல்வி என்றாகுமோ? 51 34. நெஞ்சை அகலப்படுத்து! அறிவை ஆழப்படுத்து!<br> தோளை உயரப்படுத்து! 54 35. உண்மை கடைப்பிடி! உழைப்பில் உறுதிகொள்! 56 36. அருமைச் சிறுவர்காள்! 57 37. யாருக்காக, நீ? 58 38. குழந்தை... 59 39. என்றன் பாட்டு ! 60 40. தமிழத்தம்பி நல்லதம்பி ! 61 41. எங்கும் எதிலும் ஒழுங்கு உண்டு! 62 42. துணிந்துநில்! குனிந்து சாகாதே ! 63 43. அச்சுரை எல்லாம் அறிவுரையன்று! 64 44. தோற்றம் வேறு, செயல் வேறு ! 65 45. நம்பிக்கை! 66 46. மதப்பற்று! 69 47. உன்னை நம்பிக்கிடக்குது நாடு! 71 48. குறைகளும் குணங்களும் ! 72 49. உயர்வும் தாழ்வும்! 73 50. இளமை இழிவானால் வாழ்வு வீணாகும் ! 74 51. அழகும் அருவருப்பும்! 75 52. பொருந்தா ஆசையைப் புதைத்து, உடன்விலகு! 76 53. பதற்றம் கொள்ளாதே! 77 54. எதிர்ப்புக்கு இளைக்காதே! 78 55. தனி நலத்தைத் தவிர் ! 79 56. வாழ்வியல் முப்பது! 80 57. வாழ்க்கைத் திரிபுகள் ! 88 58. உழைப்பே வாழ்க்கை ! 89 59. உயர்வைப் பின்பற்று! 90 60. ஏற்பும் தவிர்ப்பும் ! 91 61. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நூலகம்! 92 62. ஏமாறிப் போகாதீரே! 93 63. இந்த உலகம்! 94 64. பொய்யா வாழ்க்கை அறவாழ்க்கை! 95 65. புன்மையும் நன்மையும் ! 96 66. மூட்டுக்கு வலிவு செய் ; முதுக்கு நிமிர்வு தா! 97 67. மக்களை உருவால் மயங்காதே! 98 68. எண்ணமும் செயலும் ! 99 69. உடல் நலத்தைக் காவாதான் உயிர்நலத்தைக் காவாதான் ! 100 }}<noinclude></noinclude> t4edthz7ldj2oclv2g2hzj2msoe4qjx பக்கம்:கனிச்சாறு 4.pdf/15 250 446853 1839644 1439521 2025-07-06T16:05:42Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப்பிழைகள் இல்லை வடிவ மேம்பாடு வேண்டும் 1839644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|க௪||கனிச்சாறு நான்காம் தொகுதி}}</b></noinclude>{| | பாடல் எண் || பாடல் தலைப்பு || பக்க எண் |- | 70. || தம்பி, உனக்கொன்று சொல்வேன்! || 101 |- | 71. || இடரும் உலகமிது! || 102 |- | 72. || இலகிடும் இன்பங்கள் எத்தனை? எத்தனை? || 103 |- | 73. || தொண்டுசெய்ய வருபவர்க்கு இயற்கை வைக்கும் தேர்வு! || 105 |- | 74. || மாணவர் எவர்? || 106 |- | 75. || பெண்டிர் பெருமை ! || 107 |- | 76. || பாட்டெழுதத் தெரிந்தால் போதாது தம்பி! || 108 |- | 77. || பாய்ந்தெழுவீர் இளமையோரே! || 109 |- | 78. || கல்வி நலன்கள் ! || 110 |- | 79. || எண்ணிப் பாருங்கள் இளந் தலைமுறையரே! || 112 |- | 80. || வாழ்க்கைப் புதிரை விளங்கிக்கொள்! || 114 |- | || || |- | || பொதுமை || |- | || || |- | 81. || உலக விளக்கம்! || 117 |- | 82. || சாலையின் ஓரத்திலே! || 125 |- | 83. || வாழ்வும் தாழ்வும்! || 127 |- | 84. || மதங்காப்பார்! || 128 |- | 85. || பிறப்பொக்கும் ! || 130 |- | 86. || உள்ளத்தனைய துயர்வு! || 131 |- | 87. || குச்சுக் குடிசையிலே ! || 133 |- | 88. || நாம் தமிழரல்லர் ! || 135 |- | 89. || நெறி காணீரே1 || 135 |- | 90. || இருள் உலகம் ! || 136 |- | 91. || அறுவடை செய்கிறார்கள்! || 137 |- | 92. || பணப்பதுக்கல் பறிமுதல் செய்க! || 139 |- | 93. || புதுமை இலக்கியம் புனைக இளைஞனே! || 139 |- | 94. || படிக்கின்றோம்; பேசுகின்றோம்; செய்கின்றோமா? || 140 |- | 95. || மாந்த உருவமே! || 142 |- | 96. || ஏழைக்கு ஏழை இரங்குவதுண்டா? || 144 |- | 97. || புரட்சிதான் எல்லை! || 146 |- | 98. || நாட்டை மலர்த்திட நடையிடு தம்பி! || 147 |- | 99. || பதவி எதற்கு? உதவி செய்யவா? ஊரை உறிஞ்சவா? || 148 |- | 100. || பொதுமை உலகம் புதுக்குக இளைஞனே! || 150 |- | 101. || பொதுமை உலகம்! || 152 |- | 102. || ஆர்ப்பாட்ட உலகம்! || 153 |- | 103. || தப்பித் தவறியே மாந்தனாய்ப் பிறந்தவன்! || 154 |- | 104. || கேட்கின்றான்; கொடு| || 156 |- | 105. || எதிர்காலந்தனைச் சமைப்பாய்! || 157 |}<noinclude></noinclude> coxlxulhklyo7crovhk6h4rv2hwm4zl 1839881 1839644 2025-07-07T07:41:45Z Info-farmer 232 + பக்க ஒருங்கிணைவினை எளிமையாக்க, வடிவ மாற்றம். 1839881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|க௪||கனிச்சாறு நான்காம் தொகுதி}}</b></noinclude>பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண் 70. தம்பி, உனக்கொன்று சொல்வேன்! 101 71. இடரும் உலகமிது! 102 72. இலகிடும் இன்பங்கள் எத்தனை? எத்தனை? 103 73. தொண்டுசெய்ய வருபவர்க்கு இயற்கை வைக்கும் தேர்வு! 105 74. மாணவர் எவர்? 106 75. பெண்டிர் பெருமை ! 107 76. பாட்டெழுதத் தெரிந்தால் போதாது தம்பி! 108 77. பாய்ந்தெழுவீர் இளமையோரே! 109 78. கல்வி நலன்கள் ! 110 79. எண்ணிப் பாருங்கள் இளந் தலைமுறையரே! 112 80. வாழ்க்கைப் புதிரை விளங்கிக்கொள்! 114 பொதுமை 81. உலக விளக்கம்! 117 82. சாலையின் ஓரத்திலே! 125 83. வாழ்வும் தாழ்வும்! 127 84. மதங்காப்பார்! 128 85. பிறப்பொக்கும் ! 130 86. உள்ளத்தனைய துயர்வு! 131 87. குச்சுக் குடிசையிலே ! 133 88. நாம் தமிழரல்லர் ! 135 89. நெறி காணீரே1 135 90. இருள் உலகம் ! 136 91. அறுவடை செய்கிறார்கள்! 137 92. பணப்பதுக்கல் பறிமுதல் செய்க! 139 93. புதுமை இலக்கியம் புனைக இளைஞனே! 139 94. படிக்கின்றோம்; பேசுகின்றோம்; செய்கின்றோமா? 140 95. மாந்த உருவமே! 142 96. ஏழைக்கு ஏழை இரங்குவதுண்டா? 144 97. புரட்சிதான் எல்லை! 146 98. நாட்டை மலர்த்திட நடையிடு தம்பி! 147 99. பதவி எதற்கு? உதவி செய்யவா? ஊரை உறிஞ்சவா? 148 100. பொதுமை உலகம் புதுக்குக இளைஞனே! 150 101. பொதுமை உலகம்! 152 102. ஆர்ப்பாட்ட உலகம்! 153 103. தப்பித் தவறியே மாந்தனாய்ப் பிறந்தவன்! 154 104. கேட்கின்றான்; கொடு 156 105. எதிர்காலந்தனைச் சமைப்பாய்! 157<noinclude></noinclude> nmnzej7jyrl2najfce4o40fk17fqix5 1839882 1839881 2025-07-07T07:43:59Z Info-farmer 232 {{block_center|width=600px| 1839882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|க௪||கனிச்சாறு நான்காம் தொகுதி}}</b></noinclude> {{block_center|width=600px| பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண் 70. தம்பி, உனக்கொன்று சொல்வேன்! 101 71. இடரும் உலகமிது! 102 72. இலகிடும் இன்பங்கள் எத்தனை? எத்தனை? 103 73. தொண்டுசெய்ய வருபவர்க்கு இயற்கை வைக்கும் தேர்வு! 105 74. மாணவர் எவர்? 106 75. பெண்டிர் பெருமை ! 107 76. பாட்டெழுதத் தெரிந்தால் போதாது தம்பி! 108 77. பாய்ந்தெழுவீர் இளமையோரே! 109 78. கல்வி நலன்கள் ! 110 79. எண்ணிப் பாருங்கள் இளந் தலைமுறையரே! 112 80. வாழ்க்கைப் புதிரை விளங்கிக்கொள்! 114 பொதுமை 81. உலக விளக்கம்! 117 82. சாலையின் ஓரத்திலே! 125 83. வாழ்வும் தாழ்வும்! 127 84. மதங்காப்பார்! 128 85. பிறப்பொக்கும் ! 130 86. உள்ளத்தனைய துயர்வு! 131 87. குச்சுக் குடிசையிலே ! 133 88. நாம் தமிழரல்லர் ! 135 89. நெறி காணீரே1 135 90. இருள் உலகம் ! 136 91. அறுவடை செய்கிறார்கள்! 137 92. பணப்பதுக்கல் பறிமுதல் செய்க! 139 93. புதுமை இலக்கியம் புனைக இளைஞனே! 139 94. படிக்கின்றோம்; பேசுகின்றோம்; செய்கின்றோமா? 140 95. மாந்த உருவமே! 142 96. ஏழைக்கு ஏழை இரங்குவதுண்டா? 144 97. புரட்சிதான் எல்லை! 146 98. நாட்டை மலர்த்திட நடையிடு தம்பி! 147 99. பதவி எதற்கு? உதவி செய்யவா? ஊரை உறிஞ்சவா? 148 100. பொதுமை உலகம் புதுக்குக இளைஞனே! 150 101. பொதுமை உலகம்! 152 102. ஆர்ப்பாட்ட உலகம்! 153 103. தப்பித் தவறியே மாந்தனாய்ப் பிறந்தவன்! 154 104. கேட்கின்றான்; கொடு 156 105. எதிர்காலந்தனைச் சமைப்பாய்! 157 }}<noinclude></noinclude> qyhibs95d6w3j2xlrwema3rf3ewfzwm பக்கம்:கனிச்சாறு 4.pdf/16 250 446854 1839645 1439522 2025-07-06T16:06:01Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப்பிழைகள் இல்லை வடிவ மேம்பாடு வேண்டும் 1839645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||கரு}}</b></noinclude>{| | பாடல் எண் || பாடல் தலைப்பு || பக்க எண் |- | 106. || பொதுமை உலகம் வரல் வேண்டும்! || 158 |- | 107. || தெய்வமும் உண்மைகொல்! || 159 |- | 108. || ஊரைத் திருத்து முன்...! || 161 |- | 109. || ஒரு வாய்ச்சொல் கேளீர்! || 163 |- | 110. || ஏழையின் நிலைமை மாறியதுண்டா? || 164 |- | 111. || ஒருநாள் வரத்தான் போகிறது! || 165 |- | 112. || அன்றைய நாள் வருமோ? || 167 |- | 113. || வாழ்நாள் சிறியது; வாழ்க்கையோ பெரியது! || 169 |- | 114. || ஏழையை உயர்த்திடப் பாடுவாய் ! || 170 |- | 115. || மறந்துவிடாதே! || 172 |- | 116. || வறுமை ஒழிந்ததா? செயலில் காட்டுவோம்! || 173 |- | 117. || உலகுக்கு உழைப்பவரே, என் உண்மைத் தெய்வம் ! || 175 |- | 118. || உழைப்பை அவமதிக்கும் செயல்! || 176 |- | 119. || பொதுமை வரட்டும்! || 177 |- | 120. || உலகம் வாழ் தொழிலாளர்கள் ஒன்றுபடும் நன்னாள்! || 178 |- | 121. || இன்றைய உலகம் புரட்சி உலகம்! || 180 |- | 122. || மக்களின் வெள்ளம் கடலெனத் திரள்கவே! || 181 |- | 123. || படித்தவர் யாருக்கும் வெட்கமில்லை! || 182 |- | 124. || புரட்சி செய்! தம்பி, கனல்போல ! || 184 |- | 125. || இயற்கை அன்னையின் ஈகை ! || 184 |- | 126. || ஆடுக ஊஞ்சல் ! || 185 |- | 127. || அறம் பொருள் இன்பம் ! || 186 |- | 128. || ஊர் மக்கள் நலம் கருது ! || 187 |- | 129. || கண்ணீர் வாழ்வில் கரையும் குழந்தைகள்! || 188 |- | 130. || சுற்றுச்சூழலை வெற்றி கொள்வாய்! || 189 |- | 131. || பொருளை விருப்பிப் புன்மை செய்யாதே! || 189 |- | 132. || வாழ்க்கைக் கூறுகள்! || 190 |- | 133. || பொலிந்திடும் பொதுமையே! || 191 |- | 134. || பொதுவுடைமை! || 192 |- | 135. || மக்களைச் சமம் எனச் செய்வோம்! || 193 |- | 136. || தம்பி! உனக்கொரு செய்தி சொல்வேன் ! || 194 |- | 137. || சிந்தித்துப் பார்ப்பீர்களே! || 195 |- | 138. || எல்லா நிலையிலும் உயர்வடை! || 195 |- | 139. || மடிவதோ இன்னமும்? உரிமை முழக்கடா! || 196 |- | 140. || விண்வரை புகழ்கொள்! || 197 |- | 141. || எவற்றினிலும் நேற்றைவிட இன்றுயர்தல் வாழ்க்கை! || 198 |- | 142. || நிலைஎன நிறுத்துவாய் உனை ! || 199 |- | 143. || நெருப்பு உழைப்பு அல்லவோ சிறப்புகள் நிகழ்த்தும் ! || 200 |}<noinclude></noinclude> hikwgarh6bohim2blvzwojjldfdbom8 1839887 1839645 2025-07-07T07:49:10Z Info-farmer 232 + பக்க ஒருங்கிணைவினை எளிமையாக்க, வடிவ மாற்றம். 1839887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||கரு}}</b></noinclude>பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண் 106. பொதுமை உலகம் வரல் வேண்டும்! 158 107. தெய்வமும் உண்மைகொல்! 159 108. ஊரைத் திருத்து முன்...! 161 109. ஒரு வாய்ச்சொல் கேளீர்! 163 110. ஏழையின் நிலைமை மாறியதுண்டா? 164 111. ஒருநாள் வரத்தான் போகிறது! 165 112. அன்றைய நாள் வருமோ? 167 113. வாழ்நாள் சிறியது; வாழ்க்கையோ பெரியது! 169 114. ஏழையை உயர்த்திடப் பாடுவாய் ! 170 115. மறந்துவிடாதே! 172 116. வறுமை ஒழிந்ததா? செயலில் காட்டுவோம்! 173 117. உலகுக்கு உழைப்பவரே, என் உண்மைத் தெய்வம் ! 175 118. உழைப்பை அவமதிக்கும் செயல்! 176 119. பொதுமை வரட்டும்! 177 120. உலகம் வாழ் தொழிலாளர்கள் ஒன்றுபடும் நன்னாள்! 178 121. இன்றைய உலகம் புரட்சி உலகம்! 180 122. மக்களின் வெள்ளம் கடலெனத் திரள்கவே! 181 123. படித்தவர் யாருக்கும் வெட்கமில்லை! 182 124. புரட்சி செய்! தம்பி, கனல்போல ! 184 125. இயற்கை அன்னையின் ஈகை ! 184 126. ஆடுக ஊஞ்சல் ! 185 127. அறம் பொருள் இன்பம் ! 186 128. ஊர் மக்கள் நலம் கருது ! 187 129. கண்ணீர் வாழ்வில் கரையும் குழந்தைகள்! 188 130. சுற்றுச்சூழலை வெற்றி கொள்வாய்! 189 131. பொருளை விருப்பிப் புன்மை செய்யாதே! 189 132. வாழ்க்கைக் கூறுகள்! 190 133. பொலிந்திடும் பொதுமையே! 191 134. பொதுவுடைமை! 192 135. மக்களைச் சமம் எனச் செய்வோம்! 193 136. தம்பி! உனக்கொரு செய்தி சொல்வேன் ! 194 137. சிந்தித்துப் பார்ப்பீர்களே! 195 138. எல்லா நிலையிலும் உயர்வடை! 195 139. மடிவதோ இன்னமும்? உரிமை முழக்கடா! 196 140. விண்வரை புகழ்கொள்! 197 141. எவற்றினிலும் நேற்றைவிட இன்றுயர்தல் வாழ்க்கை! 198 142. நிலைஎன நிறுத்துவாய் உனை ! 199 143. நெருப்பு உழைப்பு அல்லவோ சிறப்புகள் நிகழ்த்தும் ! 200<noinclude></noinclude> m7x5g863sumo1zhrbwdkju766ho241l பக்கம்:கனிச்சாறு 4.pdf/17 250 446855 1839646 1439526 2025-07-06T16:06:18Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப்பிழைகள் இல்லை வடிவ மேம்பாடு வேண்டும் 1839646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|க௯||கனிச்சாறு நான்காம் தொகுதி}}</b></noinclude>{| | பாடல் எண் || பாடல் தலைப்பு || பக்க எண் |- | 144. || தன்னலம் கருதாத தம்பி, நீ! || 201 |- | 145. || துணிவு, ஊக்கம், கடமைதாம் நிலைப்பன! || 201 |- | 146. || ஊக்கத்தைக் கைவிடாதே! || 202 |- | 147. || கவர்ச்சிக் கலைகளால் நாடு வீழ்ந்திடும்! || 203 |- | 148. || வெற்றி எதிர்வருமே! || 204 |- | 149. || எதிர்பார்க்காதே! ஏமாற மாட்டாய்! || 205 |- | 150. || வாழ்வுக்கு நோக்கம் தேவை! || 206 |- | 151. || எண்ணிப் பார்க்க வேண்டும்! தம்பி எதற்கும் துணிய வேண்டும்! || 207 |- | <b>இயக்கம்</b> |- | 152. || உலகத்தமிழினம் ஒன்றெனத் திரண்டது! || 211 |- | 153. || வலிய ஓர் இயக்கம் செய்வோம்-அதன் வளர்ச்சிக்குக் கைகொடுப்போம்! || 212 |- | 154. || இணைபவர்கள் இணையட்டும் ! || 213 |- | 155. || உலகத்தமிழினம் ஒன்றுபடுக்கும் கழக முன்னேற்றம் காண்குறுவோமே! || 215 |- | 156. || வந்து பொருந்துக! || 216 |- | 157. || உலகப் பேரியக்கம் இங்கே உருவாதல் காண்பீர்! || 217 |- | 158. || தமிழின ஒன்றிணைப்புப் பாடல்! || 218 |- | 159. || அதுதான் எனக்குத் திருநாள்! || 219 |- | 160. || மன்னிய கொள்கை ஏழும் மலர்க இத் தமிழ் ஞாலத்தே! || 220 |- | 161. || கொடி ஏற்றுவோம்! நிலை மாற்றுவோம்! || 221 |- | 162. || ஓங்கிப் பெருகுது உ.த.மு.க. || 222 |- | 163. || உ.த.மு.க. உண்மைக் கழகம். || 222 |- | 164. || உ.த.மு.கழகம் நிலைக்க! || 224 |- | 165. || தொண்டர்க்கு ஒன்றுரைப்பேன்! || 224 |- | 166. || தொண்டுக்கு இலக்கணம்! || 226 |}<noinclude></noinclude> t7fqv4mycendgjgfd9vrph2x7rpawrj பக்கம்:கனிச்சாறு 4.pdf/217 250 447011 1839636 1838590 2025-07-06T15:58:06Z Info-farmer 232 {{left_margin|3em| 1839636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|182 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> <section begin="123"/> {{larger|<b>{{rh|123||படித்தவர் யாருக்கும் வெட்கமில்லை!}}</b>}} {{left_margin|3em|<poem>ஓங்கிய செல்வரின் குழந்தைகள் ஒருபுறம் ஓடுவர் ஆடுவர் பந்தடித்தே! தேங்கிய வறுமையால் ஏழையர் குழந்தைதாம் தேடுவர் வாடுவர் திரிந்தலைந்தே! இலங்கு பறவைகள் எழில்சேர் மலர்களுள் ஏழைகள் உண்டோ இயம்பிடுவீர்! விலங்குகள் வாழ்வில் விண்ணுயர் மரங்களில் செல்வரும் உண்டோ விளக்கிடுவீர்! அறிவுடை இனமென அளக்கிறோம் பெரிதாய்! ஐயகோ, இங்குதான் அவலநிலை! வறியவர் ஒருபுறம்! வளமையர் ஒருபுறம்! வாழ்க்கையோ பலருக்கு வெறுமைநிலை! அரசியல் என்கிறோம்! பொருளியல் என்கிறோம்! ஆருக்கு வேண்டுமிங்(கு) அவையெல்லாம்! </poem>}}<noinclude></noinclude> obwuf8c1cbeeyae1g8ylt0vsnbfuz52 பக்கம்:கனிச்சாறு 4.pdf/220 250 447014 1839640 1838594 2025-07-06T16:01:36Z Info-farmer 232 {{left_margin|3em| 1839640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 185}}</b></small></noinclude> {{block_center|<poem>கோணலாய் மாணலாய்க் ::குப்பையில் இடல்போல் வீணாய்ப் பண்ணியே ::வீழ்வதும் சரியோ? எண்ணிப் பார்ப்பாய்! ::எண்ணிப் பார்ப்பாய்! மண்ணில் நிலைபெற ::எண்ணிப் பார்ப்பாய்!</poem>}} {{Right|{{larger|<b>-1987</b>}}}} <section end="125"/> <section begin="126"/>{{larger|<b>126 {{gap+|11}} ஆடுக ஊஞ்சல்!</b>}} {{left_margin|3em|<poem>வானவெளிப் பரப்பினிலே வளையவரும் உலகம்! வளையவரும் உலகத்தில் வாழ்ந்திருக்கும் உயிர்கள்! வாழ்ந்திருக்கும் உயிர்களிலே வளர்ந்த உயிர் மக்கள்! வளர்ந்த உயிர் மக்களிலே வந்து பிறந் தோம், நாம்!</poem>}} {{left_margin|3em|<poem>வந்துயிர்த்த பெருமையெண்ணி ஆடுக ஊஞ்சல்! வானவெளிக் காற்றினிலே ஆடுக ஊஞ்சல்!</poem>}} {{left_margin|3em|<poem>பேரறிவின் உயிர்க்குலத்தில் பிறந்துவிட்டோம் நாமும்! பிறந்துவிட்ட பெருமையொன்றே பேசிடப் போ தாது! பேசிடத்தான் வேண்டுமெனில் பெரும் புகழும் வேண்டும்! பெரும் புகழைப் பெறுவதென்னில் பெருஞ்செயலும் செய்வோம்!</poem>}} {{left_margin|3em|<poem>பெருஞ்செயலைச் செய்யவெண்ணி ஆடுக ஊஞ்சல்! பேரண்ட வீதியிலே ஆடுக ஊஞ்சல்!</poem>}} {{Right|{{larger|<b>-1987</b>}}}} <section end="126"/><noinclude></noinclude> qqd1yas76pb9e85eu5prlhdbou04e0d 1839641 1839640 2025-07-06T16:03:12Z Info-farmer 232 - துப்புரவு 1839641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 185}}</b></small></noinclude> {{block_center|<poem>கோணலாய் மாணலாய்க் ::குப்பையில் இடல்போல் வீணாய்ப் பண்ணியே ::வீழ்வதும் சரியோ? எண்ணிப் பார்ப்பாய்! ::எண்ணிப் பார்ப்பாய்! மண்ணில் நிலைபெற ::எண்ணிப் பார்ப்பாய்!</poem>}} {{Right|{{larger|<b>-1987</b>}}}} <section end="125"/> <section begin="126"/>{{larger|<b>126 {{gap+|11}} ஆடுக ஊஞ்சல்!</b>}} {{left_margin|3em|<poem>வானவெளிப் பரப்பினிலே வளையவரும் உலகம்! வளையவரும் உலகத்தில் வாழ்ந்திருக்கும் உயிர்கள்! வாழ்ந்திருக்கும் உயிர்களிலே வளர்ந்த உயிர் மக்கள்! வளர்ந்த உயிர் மக்களிலே வந்து பிறந் தோம், நாம்!</poem>}} <poem>வந்துயிர்த்த பெருமையெண்ணி ஆடுக ஊஞ்சல்! வானவெளிக் காற்றினிலே ஆடுக ஊஞ்சல்!</poem> {{left_margin|3em|<poem>பேரறிவின் உயிர்க்குலத்தில் பிறந்துவிட்டோம் நாமும்! பிறந்துவிட்ட பெருமையொன்றே பேசிடப் போ தாது! பேசிடத்தான் வேண்டுமெனில் பெரும் புகழும் வேண்டும்! பெரும் புகழைப் பெறுவதென்னில் பெருஞ்செயலும் செய்வோம்!</poem>}} <poem>பெருஞ்செயலைச் செய்யவெண்ணி ஆடுக ஊஞ்சல்! பேரண்ட வீதியிலே ஆடுக ஊஞ்சல்!</poem> {{Right|{{larger|<b>-1987</b>}}}} <section end="126"/><noinclude></noinclude> jnqcsf1dgoovjo22m7fq8difey3h8ug பக்கம்:கனிச்சாறு 4.pdf/231 250 447024 1839727 1838606 2025-07-07T01:19:31Z Info-farmer 232 - துப்புரவு 1839727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|196 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{left_margin|3em|<poem>இவைதாம் இன்றைய உலகம்! ::இருப்பினும் சோர்வடை யாதே! எவை உயர் வானவை எண்ணிவா! ::எல்லா நிலையிலும் உயர்வடை! கரடுமுரு டான மலையிலும் ::காவளம் கனிவளம் காணலாம்! திருடரும் மாந்தரே! என்னினும் ::மாந்தர் அனைவரும் திருடரா?</poem>}} {{Right|{{larger|<b>-1990</b>}}}} <section end="138"/> <section begin="139"/>{{larger|<b>{{rh|139||மடிவதோ இன்னமும்?<br> உரிமை முழக்கடா!}}</b>}} {{left_margin|3em|<poem>அறிவுறு நலன்களும் தேவை யில்லை-தம்பி :அன்பதும் தேவை யில்லை! செறிவுறு பண்புகள் தேவை யில்லை-நல்ல :சிந்தனை தேவை யில்லை! நறுவுணர் வெல்லாமும் அடிமைப் படிகளே!-நாளும் :நாளுமே உனைக்கீழ் இறக்கும்! பெறுவது தமிழருக்(கு) உரிமை ஒன்றே!-அதைப் :பெறும் போதே அவைதாமும் சிறக்கும்! அடிமைக்கோ அறிவென்ப தெதிரிக்கு ஆக்கம்-தம்பி :அன்பாக நடப்பதும் தேக்கம்! மிடிமையர்க் கெதற்குப்பண் பாடுகள் எல்லாம்?-தம்பி :மேலும் மேலும் அவை தாக்கம்! விடிவதற் குள்ளே, நீ எழுந்திடல் வேண்டும்!-தம்பி :விடியலுன் துயரினைப் போக்கும்! மடிவதோ இன்னமும்? உரிமை முழக்கடா!-இனி :வருங்காலம் உனதுதான் நோக்கம்!</poem>}} {{Right|{{larger|<b>-1991</b>}}}} <section end="139"/><noinclude></noinclude> 820no61s55zvhnu7dtsxqwd7eucozga பக்கம்:கனிச்சாறு 4.pdf/244 250 447037 1839741 1441138 2025-07-07T01:29:53Z Info-farmer 232 {{dhr|10em}} 1839741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Nethania Shalom" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}209}}</b></small></noinclude> {{dhr|10em}} <big><big><big><big><big> <div style="width:5em;border:1px;background-color:black;border-radius:100%;"> <b>{{block center|{{white|இயக்கம்}}}}</b> </div> </big></big></big></big></big><noinclude></noinclude> 84okeirntr9946e62r25wl8k3hauc4r 1839742 1839741 2025-07-07T01:30:10Z Info-farmer 232 - துப்புரவு 1839742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Nethania Shalom" /></noinclude> {{dhr|10em}} <big><big><big><big><big> <div style="width:5em;border:1px;background-color:black;border-radius:100%;"> <b>{{block center|{{white|இயக்கம்}}}}</b> </div> </big></big></big></big></big><noinclude></noinclude> kiyd5j1a2wmpni22wnwnubz5al3v79y பக்கம்:கனிச்சாறு 4.pdf/254 250 447046 1839753 1838629 2025-07-07T01:38:58Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 219}}</b></small></noinclude> <section begin="159"/> {{larger|<b>{{rh|159||அதுதான் எனக்குத் திருநாள்!}}</b>}} {{left_margin|3em|<poem>{{c|<b>(எடுப்பு)</b>}} அதுதான் எனக்குத் திருநாள்! அதுவன்றிப் பிற யாவும் மனம்நோகும் வெறுநாள்! {{Right|(அதுதான்)}} <b>{{c|(தொடுப்பு)}}</b> எதுநாளில் தமிழர்கள் வாழ்வுரிமை கொண்டோராய் எந்தமிழ்த்தேன் மொழிபேணி, இனம்பேணி இருப்பாரோ {{Right|(அதுதான்)}} <b>{{c|(முடிப்பு)}}</b> புதுஆடை நெய்ப்பொங்கல் பண்ணியம் பலகாரம் பூமாலை நறும்படையல் இவற்றிலென்ன சாரம்? சிதையாமல் தமிழ்மானம் இனமானம் பேணும் செழிப்புற்ற மறுமலர்ச்சி இருவிழிகள் காணும் {{Right|(அதுதான்)}} உலகெங்கும் சிதர்ந்தோடி உயிர்நைந்து வாடும் உவப்பில்லா நிலைமாறிச் செந்தமிழர் கூடும் நிலமெங்கள் நிலமென்ற தன்னுரிமை யோடும் நிகழ்த்துகின்ற விழவன்றோ மகிழ்ச்சிப்பண்பாடும் {{Right|(அதுதான்)}} அறவியலைச் சாராத அறிவியல்முன் னேற்றம் ஆருக்குப் பயன்நல்கும்? வெறும் பொய்ம்மைத் தோற்றம்! திறமிலராய்க் கரவுளமும் காரறிவும் கொண்டே தித்திரிப்பாய் வாழும்நிலை ஒழிந்திடுநாள் என்றோ! {{Right|(அதுதான்)}} காதிரைச்சல் தூளிபடும் ஒலிபெருக்கிக் கத்தல், கலைக்கூத்தர் அரித்தெடுக்கும் மனத்தில்விழும் பொத்தல், ஊதிரைச்சல் வண்டியுலா - இவைஇல்லாப் பெருநாள் உளம் அமைதி கொள்ளும்படி வாய்த்திடுமே ஒருநாள்! {{float_right|(அதுதான்)}} </poem>}}<noinclude></noinclude> 2oi7x1ip4bp7wd1jhthv41fl6frtzsv 1839754 1839753 2025-07-07T01:39:58Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 219}}</b></small></noinclude> <section begin="159"/> {{larger|<b>{{rh|159||அதுதான் எனக்குத் திருநாள்!}}</b>}} {{block_center|<poem>{{c|<b>(எடுப்பு)</b>}} அதுதான் எனக்குத் திருநாள்! அதுவன்றிப் பிற யாவும் மனம்நோகும் வெறுநாள்! {{Right|(அதுதான்)}} <b>{{c|(தொடுப்பு)}}</b> எதுநாளில் தமிழர்கள் வாழ்வுரிமை கொண்டோராய் எந்தமிழ்த்தேன் மொழிபேணி, இனம்பேணி இருப்பாரோ {{Right|(அதுதான்)}} <b>{{c|(முடிப்பு)}}</b> புதுஆடை நெய்ப்பொங்கல் பண்ணியம் பலகாரம் பூமாலை நறும்படையல் இவற்றிலென்ன சாரம்? சிதையாமல் தமிழ்மானம் இனமானம் பேணும் செழிப்புற்ற மறுமலர்ச்சி இருவிழிகள் காணும் {{Right|(அதுதான்)}} உலகெங்கும் சிதர்ந்தோடி உயிர்நைந்து வாடும் உவப்பில்லா நிலைமாறிச் செந்தமிழர் கூடும் நிலமெங்கள் நிலமென்ற தன்னுரிமை யோடும் நிகழ்த்துகின்ற விழவன்றோ மகிழ்ச்சிப்பண்பாடும் {{Right|(அதுதான்)}} அறவியலைச் சாராத அறிவியல்முன் னேற்றம் ஆருக்குப் பயன்நல்கும்? வெறும் பொய்ம்மைத் தோற்றம்! திறமிலராய்க் கரவுளமும் காரறிவும் கொண்டே தித்திரிப்பாய் வாழும்நிலை ஒழிந்திடுநாள் என்றோ! {{Right|(அதுதான்)}} காதிரைச்சல் தூளிபடும் ஒலிபெருக்கிக் கத்தல், கலைக்கூத்தர் அரித்தெடுக்கும் மனத்தில்விழும் பொத்தல், ஊதிரைச்சல் வண்டியுலா - இவைஇல்லாப் பெருநாள் உளம் அமைதி கொள்ளும்படி வாய்த்திடுமே ஒருநாள்! {{float_right|(அதுதான்)}} </poem>}}<noinclude></noinclude> ka1az6ti3qcs9gjwcnjovy02ao8gxfu பக்கம்:கனிச்சாறு 4.pdf/255 250 447047 1839756 1838630 2025-07-07T01:41:27Z Info-farmer 232 }}3 1839756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><small><b>{{rh|220 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> {{block_center|<poem>புதைசாணிப் புழுக்களென நெளிகின்ற ஏழை பொய்வாழ்க்கை நீங்கி நலம் மேலேறும் நாளை எதிர்நோக்கிக் கிடக்கின்றேன்; எழுச்சிநிலை வந்தே எல்லாமிங் கெல்லார்க்கும் என்றிடும்நாள் என்றோ! {{Right|(அதுதான்)}}</poem>}} {{Right|{{larger|<b>1982</b>}}}} {{dhr|10em}} <section end="159"/> <section begin="160"/>{{larger|<b>{{rh|160||மன்னிய கொள்கை ஏழும்<br> மலர்க இத் தமிழ்ஞாலத்தே!}}</b>}} {{block_center|<poem>மின்னிய தமிழும், சாதி ::மதமிலா இனமும், வாய்மை முன்னிய அரசும், மக்கள் ::முரண்படா உடைமைப் பேறும், நன்னறு கலையும், பண்பும் ::நல்லறி வியலும் என்றிம் மன்னிய கொள்கை ஏழும் ::மலர்கவித் தமிழ்ஞா லத்தே!</poem>}} {{larger|<b>{{Right|-1982}}</b>}} <section end="160"/><noinclude></noinclude> 91486eqw5lm98uoln2kfnjjpz3ys1o6 பக்கம்:கனிச்சாறு 4.pdf/263 250 447055 1839767 1444657 2025-07-07T01:48:53Z Info-farmer 232 left 1839767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{Css image crop |Image = கனிச்சாறு_4.pdf |Page = 263 |bSize = 369 |cWidth = 134 |cHeight = 135 |oTop = 215 |oLeft = 11 |Location = left |Description = }} {{left_margin|5em|<poem>ஊரைத் திருத்துமுன், உலகைத் திருத்துமுன் உன்னைத் திருத்தடா தமிழா–நீ உன்னைத் திருத்தடா தமிழா! பாரைத் திருத்திடல் நல்ல முயற்சியே! பாட்டனும் பூட்டனும் செய்த பயிற்சியே! யாரைத் திருத்தினர்; யாது வளர்ச்சியே? யாங்கணும் யாங்கணும் வாழ்க்கை தளர்ச்சியே! வேரைத் திருத்துதல் பயனளித் திடலாம்! வினையத் திருத்திடும் முயற்சியோ கடலாம்! கூரை திருத்தினால் நிற்குமோ சுவரே? குழியைத் திருத்தாமல் இருப்பது தவறே! உலகைத் திருத்திட வலம்வரு கின்றாய்! உன்னைத் திருத்தெனில் உள்ளம்நோ கின்றாய்! அலகிலா முயற்சிகள் அறங்கள், சட்டங்கள் ஆரைத் திருத்தின? பணயம்கட் டுங்கள்! ஆயிரம் ஆண்டுக்கு முன்னும் இருந்தனர்; அம்மண மாகவே உண்டு திரிந்தனர்; ஏயின திருத்தங்கள் என்னென்ன கண்டாய்? எழிலுடை! தலைமயிர்! மற்றென்ன விண்டாய்? வெள்ளுடை மேனியில் புரள்வதோ நேர்மை? விரிமயிர் வாரி முடித்தலோ சீர்மை? உள்ளத்துள் கள்ளமும் கரவும் கிடப்பதா? ஊரினை ஏமாற்றி, மறைந்தே நடப்பதா? பொதுமையைக் காணாத உளம்என்ன உளமோ? பூசலை விளைத்திடும் வளம்என்ன வளமோ? புதுமைஎன் றுரைப்பது செல்வர்க்குச் செழிப்பு! போக்கற்ற ஏழையர்க் கேதுஅதால் விழிப்பு? மன்றங்கள் எத்தனை? எத்தனைக் கோயில்? மடிபவர் எத்தனைப் பேர் தீமை நோயில்? இன்றைக்கும் நேற்றைக்கும் வேற்றுமை யாது? இழிவினை, அழகினால் மூடல்அன் றேது? கல்வியும் செல்வமும் ஓங்குதல் மேலோ? கணக்கிலா இழிவுகள் குவிதல்எப் பாலோ? சொல்,வினை உளத்தோடு பொருந்துதல் வாழ்வே! சொக்கட்டான் காய்போல் உருளுதல் தாழ்வே!</poem>}}<noinclude></noinclude> lp5n7yeuxzlgh67h3ig3stt0vu71ggp 1839768 1839767 2025-07-07T01:50:19Z Info-farmer 232 center 1839768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{block_center|{{Css image crop |Image = கனிச்சாறு_4.pdf |Page = 263 |bSize = 369 |cWidth = 134 |cHeight = 135 |oTop = 215 |oLeft = 11 |Location = center |Description = }} {{clear}} {{left_margin|5em|<poem>ஊரைத் திருத்துமுன், உலகைத் திருத்துமுன் உன்னைத் திருத்தடா தமிழா–நீ உன்னைத் திருத்தடா தமிழா! பாரைத் திருத்திடல் நல்ல முயற்சியே! பாட்டனும் பூட்டனும் செய்த பயிற்சியே! யாரைத் திருத்தினர்; யாது வளர்ச்சியே? யாங்கணும் யாங்கணும் வாழ்க்கை தளர்ச்சியே! வேரைத் திருத்துதல் பயனளித் திடலாம்! வினையத் திருத்திடும் முயற்சியோ கடலாம்! கூரை திருத்தினால் நிற்குமோ சுவரே? குழியைத் திருத்தாமல் இருப்பது தவறே! உலகைத் திருத்திட வலம்வரு கின்றாய்! உன்னைத் திருத்தெனில் உள்ளம்நோ கின்றாய்! அலகிலா முயற்சிகள் அறங்கள், சட்டங்கள் ஆரைத் திருத்தின? பணயம்கட் டுங்கள்! ஆயிரம் ஆண்டுக்கு முன்னும் இருந்தனர்; அம்மண மாகவே உண்டு திரிந்தனர்; ஏயின திருத்தங்கள் என்னென்ன கண்டாய்? எழிலுடை! தலைமயிர்! மற்றென்ன விண்டாய்? வெள்ளுடை மேனியில் புரள்வதோ நேர்மை? விரிமயிர் வாரி முடித்தலோ சீர்மை? உள்ளத்துள் கள்ளமும் கரவும் கிடப்பதா? ஊரினை ஏமாற்றி, மறைந்தே நடப்பதா? பொதுமையைக் காணாத உளம்என்ன உளமோ? பூசலை விளைத்திடும் வளம்என்ன வளமோ? புதுமைஎன் றுரைப்பது செல்வர்க்குச் செழிப்பு! போக்கற்ற ஏழையர்க் கேதுஅதால் விழிப்பு? மன்றங்கள் எத்தனை? எத்தனைக் கோயில்? மடிபவர் எத்தனைப் பேர் தீமை நோயில்? இன்றைக்கும் நேற்றைக்கும் வேற்றுமை யாது? இழிவினை, அழகினால் மூடல்அன் றேது? கல்வியும் செல்வமும் ஓங்குதல் மேலோ? கணக்கிலா இழிவுகள் குவிதல்எப் பாலோ? சொல்,வினை உளத்தோடு பொருந்துதல் வாழ்வே! சொக்கட்டான் காய்போல் உருளுதல் தாழ்வே!</poem>}} }}<noinclude></noinclude> odtjkn7vh6k8dbbvh1er3br0xxjqhn1 பயனர்:Booradleyp1 2 471764 1839900 1836060 2025-07-07T08:08:56Z Booradleyp1 1964 /* வார்ப்புருக்கள் */ 1839900 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Multicol]] *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki>அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும். **[[:en:Template:Rotate]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ==கிளையமைப்பு == *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude> *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் *[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] **[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] **[[பயனர்:Asviya Tabasum]] பங்களிப்புகள்- [https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Asviya_Tabasum] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[[பயனர்:Illiyas noor mohammed|இலியாஸ்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed] *[[பயனர்:Sarathi shankar|சாரதி சங்கர்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sarathi_shankar] * [[பயனர்:AjayAjayy]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AjayAjayy அஜய்] *[[பயனர்:மொஹமது கராம்|கராம்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D] **[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி] *[[பயனர்:Inbavani Anandan|இன்பவாணி]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Inbavani_Anandan] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] == திட்டங்கள்== [[/books]] l2v781prbqmxiljeca31lptg271fig7 அட்டவணை:என் கனா 1999.pdf 252 475632 1839905 1814529 2025-07-07T08:24:41Z Booradleyp1 1964 1839905 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[என் கனா]] |Language=ta |Author=[[ஆசிரியர்:மேலாண்மை பொன்னுச்சாமி|மேலாண்மை பொன்னுச்சாமி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=வைகறைப் பதிப்பகம் |Address=திண்டுக்கல் |Year=முதற்பதிப்பு - அக்டோபர் 1999 |Source=pdf |Image=1 |Number of pages=158 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 5to6=அணிந்துரை 7to9=என்னுரை 10=1.இழந்தஉலகம் 23=2.என்கதை 33=3.ரோஷாக்னி 48=4.என்கனா 58=5.கண்ணகி 69=6.கள்வம் 79=7.கைநாட்டு 92=8.உறவின் நிஜம் 102=9.மண் 110=10.இந்தக்காலத்துத்தாய்! 123=11.அதீதம் 158=பின்னட்டை /> |Remarks={{block_center|{{x-larger|<b>சிறுகதைகள்</b>}} * [[என் கனா/001|இழந்த உலகம்]] * [[என் கனா/002|என் கதை]] * [[என் கனா/003|ரோஷாக்னி]] * [[என் கனா/004|என் கனா]] * [[என் கனா/005|கண்ணகி]] * [[என் கனா/006|கள்வம்]] * [[என் கனா/007|கைநாட்டு]] * [[என் கனா/008|உறவின் நிஜம்]] * [[என் கனா/009|மண்]] * [[என் கனா/010|இந்தக் காலத்துத் தாய்!]] * [[என் கனா/011|அதீதம்]] * [[என் கனா/012|பின்னட்டை]] }} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]] [[பகுப்பு:மேலாண்மை பொன்னுச்சாமி அட்டவணைகள்]] [[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] a1okwywp1soqqzqcnr4mxhoaf84g6c4 பயனர்:Booradleyp1/test 2 476049 1839576 1839111 2025-07-06T13:55:34Z Booradleyp1 1964 /* சோதனை */ 1839576 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf" from="179" to="181" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 2ago49513wpy69615e8rwsmjuoujhgh 1839784 1839576 2025-07-07T04:10:12Z Booradleyp1 1964 /* சோதனை */ 1839784 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="220" to="221" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : p9dlg1n643tadaj70j2h42rnfyor66l பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/161 250 489142 1839701 1571589 2025-07-06T18:42:40Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|160 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem> 29. குறார்களோ அவர்கள் நடத்திவற வேண்டியது. மேல்க்கண்ட சிலவுகள் 30. போக யேதாவது பாக்கி இருந்தால் மேற்படி பள்ளிவாசலில் 31. மறாமத்து நடத்திவற வேண்டியது. மேற்படி நன்செய் நிலத்துக்கு நான் வகையறா ஒருவரும் 32. கிறம் ஒத்தி இனாம்வகையறா செய்யக்கூடாது. செய்தாலும் செல்லத் தக்கதில்லை 33. இந்தப்படி யென்மனோ றாசியில் யெழுதி வைத்த தான சாசனம் மேற்படி பள்ளிவாசல் வே 34. லை யார் பார்த்துவருகுறார்களோ அவர்கள் மேல்கண்ட நன்செய் நிலத்தின் தீர்வை கு 35. டுத்துவற வேண்டியது. பாவா நத்தரு றாவுத்தன் சம்மதி சாட்சிகள் குருசாமி 36. அய்யன் வெங்கடாசலம்மய்யர் அறிவேன். தி.அ. அப்துல்காதர் சாயபு அறிவேன் 37. அருணாசலம்பிள்ளை குமாறன் வய்த்திலிங்கம் பிள்ளை அறிவேன். றாமபிள்ளை குமாறன் 38. அருணாசலம்பிள்ளை அறிவேன். முத்துக்கறுப்பு கண்டியன் மகன் ஆருமுக கண்டியன் 39. அறிவேன். மேல்ப்படி கிறாமத்திய குடி சைய்யது சாயபு அறிவேன் னாட்டாமை மய்தின்சா 40. அறிவேன். வேதடி அப்துல் காதர் அறிவேன். மேற்படியூரிலிருக்கும் சின்னக்குட்டி 41. றாவுத்தன் மகன் இபுறாமும் சாயபு அறிவேன். மேற்படியூர் உசலி றாவுத்தர் குமாறன் அல்லாப் பிச்சை 42. என்று பேர் விளங்கிய வருசை யிபுறாமு சாயபு அறிவேன். திருச்சிராப்பள்ளி 43. கோட்டை அஸறத் சம்ஸ்பிறான் பள்ளிவாசல் தெருவிலிருக்கும் யிஸ்மால் சாயபு கு 44. மாறன் மகம்மது சாயபு அறிவேன். இந்தப்பயிர்வதி சாயபு அப்துற் சிபாற் அறிவேன் 45. சா துலிகா அப்பு சாயபு அறிவேன். நெட்டெழுத்து சய்யத்து அசன் நெ. 5767 தி.தா. திருவறம்பூர் பாவா நத்தரு றாவுத்தருக்கு அஞ்சு ரூபாய் கடுதாசி விர்க்கலாச்சுது. தி.தா. 14.07.80</poem>{{nop}}<noinclude></noinclude> aehtzwg6yextj585cdfno3zetc2r22m பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/162 250 489143 1839702 1571590 2025-07-06T18:55:18Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 161}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>86. துயிலிடக் கல்வெட்டுக்கள்</b>}}}} வரலாற்று ஆவணங்களில் இஸ்லாமிய சமயப் பெரியோர்களின் அடக்கத்தலங்களில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் அடங்கும். கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் அடங்கிய அடக்கத் தலங்கள் முப்பதுக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில பாரசீகம், அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் தமிழிலேயே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் தமிழ், அரபு இருமொழிக் கல்வெட்டுக்களும் உள்ளன. காயல்பட்டினத்தில் உள்ள பெரிய பள்ளிவாசல், கொடிமரப் பள்ளிவாசல், ரெட்டைக்குளம் பள்ளிவாசல், கீழக்கரையில் உள்ள குத்பு செய்யது ஷஹீது ஒலியுல்லாஹ் என்னும் பழைய குத்பு பள்ளிவாசல், முகம்மது காசிம் அப்பா தர்கா என்னும் கடற்கரை பள்ளிவாசல், காட்டுப்பள்ளிவாசல் வேதானை ஜும்மா பள்ளிவாசல் என்னும் கூரைப்பள்ளிவாசல் ஆகிய இடங்களில் உள்ள அடக்கத் தலங்களில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன. பராசீக, அரபு மொழிக் கல்வெட்டுக்களில் ஹிஜ்ரி ஆண்டு முறை குறிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்க் கல்வெட்டுக்களில் தமிழ் ஆண்டு முறையே எழுதப்பட்டுளளது. எங்கும் கலியுக ஆண்டோ சாலிவாகன சக ஆண்டோ குறிக்கப்படாமல் கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாகவும், தமிழ்நாட்டில் சிறுபான்மையாகவும் பயின்றுவரும் கொல்லம் ஆண்டு முறையே எழுதப்பட்டுள்ளது. <poem>கொல்லம் 835 வருக்ஷம் விளம்பி வருக்ஷம் பங் குனி மாசம் 22 தேதி கொல்லம் 6 44 ஆவது வைகாசி மாதம் 17 தேதி வியாளக் கிழமை</poem> என எழுதப்பட்டுள்ளன. கொல்லம் ஆண்டுடன் 824 கூட்ட நேரான கி.பி. ஆண்டு கிடைக்கும். கொல்லம் 835+824=கி.பி. 1659 ஆகும்.{{nop}}<noinclude></noinclude> 7l830w7ejsn6ynygwdfu3zefkukvvll 1839705 1839702 2025-07-06T19:11:28Z ஹர்ஷியா பேகம் 15001 1839705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 161}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>86. துயிலிடக் கல்வெட்டுக்கள்</b>}}}} வரலாற்று ஆவணங்களில் இஸ்லாமிய சமயப் பெரியோர்களின் அடக்கத்தலங்களில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் அடங்கும். கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் அடங்கிய அடக்கத் தலங்கள் முப்பதுக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில பாரசீகம், அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் தமிழிலேயே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் தமிழ், அரபு இருமொழிக் கல்வெட்டுக்களும் உள்ளன. காயல்பட்டினத்தில் உள்ள பெரிய பள்ளிவாசல், கொடிமரப் பள்ளிவாசல், ரெட்டைக்குளம் பள்ளிவாசல், கீழக்கரையில் உள்ள குத்பு செய்யது ஷஹீது ஒலியுல்லாஹ் என்னும் பழைய குத்பு பள்ளிவாசல், முகம்மது காசிம் அப்பா தர்கா என்னும் கடற்கரை பள்ளிவாசல், காட்டுப்பள்ளிவாசல் வேதானை ஜும்மா பள்ளிவாசல் என்னும் கூரைப்பள்ளிவாசல் ஆகிய இடங்களில் உள்ள அடக்கத் தலங்களில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன. பராசீக, அரபு மொழிக் கல்வெட்டுக்களில் ஹிஜ்ரி ஆண்டு முறை குறிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்க் கல்வெட்டுக்களில் தமிழ் ஆண்டு முறையே எழுதப்பட்டுளளது. எங்கும் கலியுக ஆண்டோ சாலிவாகன சக ஆண்டோ குறிக்கப்படாமல் கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாகவும், தமிழ்நாட்டில் சிறுபான்மையாகவும் பயின்றுவரும் கொல்லம் ஆண்டு முறையே எழுதப்பட்டுள்ளது. <poem><b>கொல்லம் 835 வருக்ஷம் விளம்பி வருக்ஷம் பங் குனி மாசம் 22 தேதி கொல்லம் 6 44 ஆவது வைகாசி மாதம் 17 தேதி வியாளக் கிழமை</b></poem> என எழுதப்பட்டுள்ளன. கொல்லம் ஆண்டுடன் 824 கூட்ட நேரான கி.பி. ஆண்டு கிடைக்கும். கொல்லம் 835+824=கி.பி. 1659 ஆகும்.{{nop}}<noinclude></noinclude> s9tlwatci4fj86ebb7dvpwilex2t3c2 1839706 1839705 2025-07-06T19:11:49Z ஹர்ஷியா பேகம் 15001 1839706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 161}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>86. துயிலிடக் கல்வெட்டுக்கள்</b>}}}} வரலாற்று ஆவணங்களில் இஸ்லாமிய சமயப் பெரியோர்களின் அடக்கத்தலங்களில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் அடங்கும். கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் அடங்கிய அடக்கத் தலங்கள் முப்பதுக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில பாரசீகம், அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் தமிழிலேயே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலவற்றில் தமிழ், அரபு இருமொழிக் கல்வெட்டுக்களும் உள்ளன. காயல்பட்டினத்தில் உள்ள பெரிய பள்ளிவாசல், கொடிமரப் பள்ளிவாசல், ரெட்டைக்குளம் பள்ளிவாசல், கீழக்கரையில் உள்ள குத்பு செய்யது ஷஹீது ஒலியுல்லாஹ் என்னும் பழைய குத்பு பள்ளிவாசல், முகம்மது காசிம் அப்பா தர்கா என்னும் கடற்கரை பள்ளிவாசல், காட்டுப்பள்ளிவாசல் வேதானை ஜும்மா பள்ளிவாசல் என்னும் கூரைப்பள்ளிவாசல் ஆகிய இடங்களில் உள்ள அடக்கத் தலங்களில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன. பராசீக, அரபு மொழிக் கல்வெட்டுக்களில் ஹிஜ்ரி ஆண்டு முறை குறிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்க் கல்வெட்டுக்களில் தமிழ் ஆண்டு முறையே எழுதப்பட்டுளளது. எங்கும் கலியுக ஆண்டோ சாலிவாகன சக ஆண்டோ குறிக்கப்படாமல் கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாகவும், தமிழ்நாட்டில் சிறுபான்மையாகவும் பயின்றுவரும் கொல்லம் ஆண்டு முறையே எழுதப்பட்டுள்ளது. <poem><b>கொல்லம் 835 வருக்ஷம் விளம்பி வருக்ஷம் பங் குனி மாசம் 22 தேதி கொல்லம் 6 44 ஆவது வைகாசி மாதம் 17 தேதி வியாளக் கிழமை</b></poem> என எழுதப்பட்டுள்ளன. கொல்லம் ஆண்டுடன் 824 கூட்ட நேரான கி.பி. ஆண்டு கிடைக்கும். கொல்லம் 835+824=கி.பி. 1659 ஆகும்.{{nop}}<noinclude>11</noinclude> 3x4l56r0f04ylingwpovbc57oaye3kt பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/163 250 489144 1839703 1571591 2025-07-06T19:00:25Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|62 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>சில இடங்களில், <poem>இராச்சத வருக்ஷம் அற்பிசி மாதம் 5 தேதி வியாழக் கிழமை</poem> எனக் கொல்லம் ஆண்டு குறிக்கப் பெறாமல் தமிழ் ஆண்டு மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வருசம், மாதம், தேதி குறியீடுகளால் ஹா, மீ, உ எனக் குறிக்கப்பட்டுள்ளது. தேதி தீ என்ற மாதிரியும் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளது. பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட பெரியவர்கள் எந்த நாள், எப்பொழுது இறந்தார்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 163 |bSize = 425 |cWidth = 213 |cHeight = 323 |oTop = 228 |oLeft = 120 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> s1hazq56vqcu5btm3g6td4z267r04ud 1839707 1839703 2025-07-06T19:14:09Z ஹர்ஷியா பேகம் 15001 1839707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|62 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>சில இடங்களில், <poem><b>இராச்சத வருக்ஷம் அற்பிசி மாதம் 5 தேதி வியாழக் கிழமை</b></poem> எனக் கொல்லம் ஆண்டு குறிக்கப் பெறாமல் தமிழ் ஆண்டு மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வருசம், மாதம், தேதி குறியீடுகளால் ஹா, மீ, உ எனக் குறிக்கப்பட்டுள்ளது. தேதி தீ என்ற மாதிரியும் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளது. பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட பெரியவர்கள் எந்த நாள், எப்பொழுது இறந்தார்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 163 |bSize = 425 |cWidth = 213 |cHeight = 323 |oTop = 228 |oLeft = 120 |Location = center |Description = }}{{nop}}<noinclude></noinclude> 6p8nn5ogo0yxmacxm8y3wp6odvjrikl பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/164 250 489145 1839704 1571592 2025-07-06T19:07:50Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராக ❋ 163}} {{rule}}</noinclude><poem>வெள்ளிக் கிழமை பகல் மரித்தார் புதன் கிழமை இரவு மரித்தார் வியாழக் கிழமை காலை மரித்தார்</poem> என இறந்த நேரம் குறிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கல்வெட்டுக்களில் மரித்தார் எனவே யுள்ளது. ஒரு அடக்கத் கல்வெட்டில் “மவுத்தானார்” என எழுதப்பட்டுள்ளது. பெண்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அவர்கள் இன்னாருடைய ‘மகளார்’ என்று ‘ஆர்’ விகுதி கொடுத்துச் சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளனர். பெண்களை ‘நாச்சியார்’ எனக் குறிக்கும் வழக்கும் இருந்துள்ளது. ஒரு கல்வெட்டில் ஒரு பெண் ‘பீபியார்’ எனக் குறிக்கப்பட்டுள்ளார். ஒரு கல்வெட்டில் ஒரு பெண் இன்னாருடைய மருமகள் (மருமத்தி) எனக் குறிக்கப்பட்டுள்ளார். வேலூரில் 1834ல் காலமான திப்பு சுல்தானின் மனைவி பேகம்பாதுஷா, மகள் ஃபாதிமா பேகம் ஆகியோர் அடக்கத் தலங்கள் உள்ளன (1834) நல்லடக்கம் செய்யப்பட்டவரது தந்தை, தாத்தா பெயர் குறிக்கப்படுவது பெரும்பாலும் வழக்கம். சில கல்வெட்டுக்களில் பல தலைமுறைகள் குறிக்கப்பட்டுள்ளன. காயல்பட்டினம் பெரிய பள்ளியில் 21.5.1581 அன்று அவதுல் சுபாரு நயினா நல்லடக்கம் செய்யப்பட்டார். அவர் முன்னோர்களாக, <poem>சையது அகமது நயினா சேக் அவதுல்லா நயினா சையது அகமது நயினா சமால் நயினா ஓசு நயினா இஷுபு நயினா அசன் நயினா</poem> ஆகியோர் வரிசையாகக் குறிக்கப்பட்டுள்ளனர். இன்னாருடைய மகன் இன்னார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஷேக் அலி நயினார் என்ற செண்பகராம முதலியார் என்பவரின் முன்னோராக,<noinclude></noinclude> 1kqhaplohz9983d6zxeqtfzq1bg9i4g 1839708 1839704 2025-07-06T19:14:45Z ஹர்ஷியா பேகம் 15001 1839708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராக ❋ 163}} {{rule}}</noinclude><poem><b>வெள்ளிக் கிழமை பகல் மரித்தார் புதன் கிழமை இரவு மரித்தார் வியாழக் கிழமை காலை மரித்தார்</b></poem> என இறந்த நேரம் குறிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கல்வெட்டுக்களில் மரித்தார் எனவே யுள்ளது. ஒரு அடக்கத் கல்வெட்டில் “மவுத்தானார்” என எழுதப்பட்டுள்ளது. பெண்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அவர்கள் இன்னாருடைய ‘மகளார்’ என்று ‘ஆர்’ விகுதி கொடுத்துச் சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளனர். பெண்களை ‘நாச்சியார்’ எனக் குறிக்கும் வழக்கும் இருந்துள்ளது. ஒரு கல்வெட்டில் ஒரு பெண் ‘பீபியார்’ எனக் குறிக்கப்பட்டுள்ளார். ஒரு கல்வெட்டில் ஒரு பெண் இன்னாருடைய மருமகள் (மருமத்தி) எனக் குறிக்கப்பட்டுள்ளார். வேலூரில் 1834ல் காலமான திப்பு சுல்தானின் மனைவி பேகம்பாதுஷா, மகள் ஃபாதிமா பேகம் ஆகியோர் அடக்கத் தலங்கள் உள்ளன (1834) நல்லடக்கம் செய்யப்பட்டவரது தந்தை, தாத்தா பெயர் குறிக்கப்படுவது பெரும்பாலும் வழக்கம். சில கல்வெட்டுக்களில் பல தலைமுறைகள் குறிக்கப்பட்டுள்ளன. காயல்பட்டினம் பெரிய பள்ளியில் 21.5.1581 அன்று அவதுல் சுபாரு நயினா நல்லடக்கம் செய்யப்பட்டார். அவர் முன்னோர்களாக, <poem><b>சையது அகமது நயினா சேக் அவதுல்லா நயினா சையது அகமது நயினா சமால் நயினா ஓசு நயினா இஷுபு நயினா அசன் நயினா</b></poem> ஆகியோர் வரிசையாகக் குறிக்கப்பட்டுள்ளனர். இன்னாருடைய மகன் இன்னார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஷேக் அலி நயினார் என்ற செண்பகராம முதலியார் என்பவரின் முன்னோராக,<noinclude></noinclude> dl0c65gzjwydtlla7rhx0ppqnnsqajt பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/165 250 489146 1839709 1571593 2025-07-06T19:23:30Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|164 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>சமால் நயினார் சையது அகமது நயினார் சமால் நயினார் சையது அகமது நயினார் என்ற வீரபாண்டிய முதலியார் சாது நயினார்</poem> என்பவர்கள் வரிசையாக குறிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நல்லடக்கக் கல்வெட்டுக்களையும் நோக்கும்போது தாத்தாவின் பெயரைப் பேரனுக்கு வைக்கும் வழக்கம் இருந்தமை நன்கு புலப்படுகிறது. ‘பெயரன்’ என்ற சொல்லே ‘பேரன்’ என ஆயிற்று என்பர். சையது அகமது நயினா அவர்கள் பேரன் பெயரும் சையது அகமது நயினா என்பதே. சமால் நயினா பேரன் பெயரும் சமால் நயினார் என்பதே. என்பதே. நயினார் என இரு மாதிரியாகவும் எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் கிரந்த எழுதுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இபுறாகீம், இவுறாகீம் என்றும் அப்துல் அவ்துல் என்றும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. பலருக்கு மரக்காயர் அல்லது மரைக்காயர் என்ற பெயர் இணைந்து வந்துள்ளது. சிலர் பெயர்களில் ‘கப்பல்’ என்ற சொல் பெயருடன் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மரபுப் பெயர்களின் இடையில் பலருக்கு, <poem>{{Multicol}} இம்முடி செண்பகராமமுதலியார் வீரபாண்டிய முதலியார் நொளம்பாதராய முதலியார் மார்த்தாண்ட மரக்காயர் சேனாபதி இராசகண்ட கோபாலர் பெத்தனா மரைக்காயர் மழமரைக்காயர் {{Multicol-break}} செண்பகராம முதலியார் அய்யா முதலியார் ஷோர முதலியார் அய்வ முதலியார் வெட்டும் பெருமாள் அப்பு மரக்காயர் {{Multicol-end}}</poem> போன்ற சிறப்புப் பட்டப் பெயர்கள் 15, 16 ஆம் நூற்றாண்டு இஸ்லாமியப் பெரியவர்கட்கு வழங்கியிருப்பது மிகவும் சிறப்புக்குரியது. முதன்மையானவர் என்ற பொருளில் முதலியார் பட்டம் வழங்கப் பெற்றிருக்க வேண்டும். தமிழகச் சமுதாய<noinclude></noinclude> dg1tam90mj41hadpygzlld4zkj7kkx0 1839710 1839709 2025-07-06T19:23:46Z ஹர்ஷியா பேகம் 15001 1839710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|164 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>சமால் நயினார் சையது அகமது நயினார் சமால் நயினார் சையது அகமது நயினார் என்ற வீரபாண்டிய முதலியார் சாது நயினார்</poem> என்பவர்கள் வரிசையாக குறிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நல்லடக்கக் கல்வெட்டுக்களையும் நோக்கும்போது தாத்தாவின் பெயரைப் பேரனுக்கு வைக்கும் வழக்கம் இருந்தமை நன்கு புலப்படுகிறது. ‘பெயரன்’ என்ற சொல்லே ‘பேரன்’ என ஆயிற்று என்பர். சையது அகமது நயினா அவர்கள் பேரன் பெயரும் சையது அகமது நயினா என்பதே. சமால் நயினா பேரன் பெயரும் சமால் நயினார் என்பதே. என்பதே. நயினார் என இரு மாதிரியாகவும் எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் கிரந்த எழுதுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இபுறாகீம், இவுறாகீம் என்றும் அப்துல் அவ்துல் என்றும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. பலருக்கு மரக்காயர் அல்லது மரைக்காயர் என்ற பெயர் இணைந்து வந்துள்ளது. சிலர் பெயர்களில் ‘கப்பல்’ என்ற சொல் பெயருடன் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மரபுப் பெயர்களின் இடையில் பலருக்கு, <poem>{{Multicol}} இம்முடி செண்பகராமமுதலியார் வீரபாண்டிய முதலியார் நொளம்பாதராய முதலியார் மார்த்தாண்ட மரக்காயர் சேனாபதி இராசகண்ட கோபாலர் பெத்தனா மரைக்காயர் மழமரைக்காயர் {{Multicol-break}} செண்பகராம முதலியார் அய்யா முதலியார் ஷோர முதலியார் அய்வ முதலியார் வெட்டும் பெருமாள் அப்பு மரக்காயர் {{Multicol-end}}</poem> போன்ற சிறப்புப் பட்டப் பெயர்கள் 15, 16 ஆம் நூற்றாண்டு இஸ்லாமியப் பெரியவர்கட்கு வழங்கியிருப்பது மிகவும் சிறப்புக்குரியது. முதன்மையானவர் என்ற பொருளில் முதலியார் பட்டம் வழங்கப் பெற்றிருக்க வேண்டும். தமிழகச் சமுதாய<noinclude></noinclude> 59hh1la0yceoe2gyysv2375yp448uj2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/65 250 535305 1839604 1830091 2025-07-06T15:22:38Z Info-farmer 232 வடிவ மாற்றம் 1839604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||65}}{{rule}}</b></noinclude><poem><b> வா:{{gap+|5}} எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா? தலைவிதி தடுக்கற் பாற்றே? தொலைய அனுபவித் தன்றே அகலும்? மனையில் தந்தையுங் கொடியன்; தாயுங் கொடியள்! {{gap+|5}}35{{gap+|1}} சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை. என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும் இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம் முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர். யாரொடு நோவேன்! யார்க்கெடுத் துரைப்பேன்? {{gap+|5}}40{{gap+|1}} வார்கடல் உலகில் வாழ்கிலன். மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே. {{float_right|8}} மனோ:{{gap+|4}} முல்லையின் முகையும் முருக்கின் இதழுங் காட்டுங் கைரவ வாயாய்! உனக்கும் முரண்டேன்? பலதே வனுக்கே மாலை {{gap+|5}}45{{gap+|1}} சூடிடிற் கேடென்? காதால் வள்ளியி னழகெலாங் கொள்ளை கொ ளணங்கே! வா:{{gap+|5}} அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி. நஞ்சும் அஞ்சிலேன்; நின்சொல் அஞ்சினேன். இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும் {{gap+|5}}50{{gap+|1}} மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை? ஆடவ ராகமற் றெவரையும் நாடுமோ நானுள் வளவுமென் உளமே? {{float_right|10}} மனோ:{{gap+|4}} வலம்புரிப் புறத்தெழு நலந்திகழ் மதியென வதியும் வதன மங்காய்! வாணி </b></poem> {{rule|15em|align=left}} "முதலையின் பிடிபோல்" - இது, மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்னும் பழமொழியைக் குறிக்கிறது. கைரவம் - ஆம்பல். முரண்டு - பிடிவாதம். வள்ளை - வள்ளை இலை, இது காதுக்கு உவமை. மன்னிய - நிலைத்திருக்கிற.ஒருவர் - இங்கு நடராஜனைக் குறிக்கிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> 9m2uw314wjeejbvme0ei54teqjmw5zn 1839605 1839604 2025-07-06T15:24:03Z Info-farmer 232 \n 1839605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||65}}{{rule}}</b></noinclude><poem><b> வா:{{gap+|5}} எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா? தலைவிதி தடுக்கற் பாற்றே? தொலைய அனுபவித் தன்றே அகலும்? மனையில் தந்தையுங் கொடியன்; தாயுங் கொடியள்! {{gap+|5}}35{{gap+|1}} சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை. என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும் இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம் முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர். யாரொடு நோவேன்! யார்க்கெடுத் துரைப்பேன்? {{gap+|5}}40{{gap+|1}} வார்கடல் உலகில் வாழ்கிலன். மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே. {{float_right|8}} மனோ:{{gap+|4}} முல்லையின் முகையும் முருக்கின் இதழுங் காட்டுங் கைரவ வாயாய்! உனக்கும் முரண்டேன்? பலதே வனுக்கே மாலை {{gap+|5}}45{{gap+|1}} சூடிடிற் கேடென்? காதால் வள்ளியி னழகெலாங் கொள்ளை கொ ளணங்கே! வா:{{gap+|5}} அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி. நஞ்சும் அஞ்சிலேன்; நின்சொல் அஞ்சினேன். இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும் {{gap+|5}}50{{gap+|1}} மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை? ஆடவ ராகமற் றெவரையும் நாடுமோ நானுள் வளவுமென் உளமே? {{float_right|10}} மனோ:{{gap+|4}} வலம்புரிப் புறத்தெழு நலந்திகழ் மதியென வதியும் வதன மங்காய்! வாணி </b></poem> {{rule|15em|align=left}} "முதலையின் பிடிபோல்" - இது, மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்னும் பழமொழியைக் குறிக்கிறது. கைரவம் - ஆம்பல். முரண்டு - பிடிவாதம். வள்ளை - வள்ளை இலை, இது காதுக்கு உவமை. மன்னிய - நிலைத்திருக்கிற.ஒருவர் - இங்கு நடராஜனைக் குறிக்கிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> ctc2tfj0rkv78b32ra7o5dai6axv0qo 1839831 1839605 2025-07-07T07:00:55Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||65}}{{rule}}</b></noinclude><poem><b> வா:{{gap+|5}} எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா? தலைவிதி தடுக்கற் பாற்றே? தொலைய அனுபவித் தன்றே அகலும்? மனையில் தந்தையுங் கொடியன்; தாயுங் கொடியள்! {{gap+|5}}35{{gap+|1}} சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை. என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும் இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம் முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர். யாரொடு நோவேன்! யார்க்கெடுத் துரைப்பேன்? {{gap+|5}}40{{gap+|1}} வார்கடல் உலகில் வாழ்கிலன். மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே. {{float_right|8}} மனோ:{{gap+|4}} முல்லையின் முகையும் முருக்கின் இதழுங் காட்டுங் கைரவ வாயாய்! உனக்கும் முரண்டேன்? பலதே வனுக்கே மாலை {{gap+|5}}45{{gap+|1}} சூடிடிற் கேடென்? காதால் வள்ளியி னழகெலாங் கொள்ளை கொ ளணங்கே! வா:{{gap+|5}} அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி. நஞ்சும் அஞ்சிலேன்; நின்சொல் அஞ்சினேன். இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும் {{gap+|5}}50{{gap+|1}} மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை? ஆடவ ராகமற் றெவரையும் நாடுமோ நானுள் வளவுமென் உளமே? {{float_right|10}} மனோ:{{gap+|4}} வலம்புரிப் புறத்தெழு நலந்திகழ் மதியென வதியும் வதன மங்காய்! வாணி </b></poem> {{rule|15em|align=left}} "முதலையின் பிடிபோல்" - இது, மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்னும் பழமொழியைக் குறிக்கிறது. கைரவம் - ஆம்பல். முரண்டு - பிடிவாதம். வள்ளை - வள்ளை இலை, இது காதுக்கு உவமை. மன்னிய - நிலைத்திருக்கிற.ஒருவர் - இங்கு நடராஜனைக் குறிக்கிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> 49yr4oza002aok8rbqnyj96ym5ny9kh பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/66 250 535306 1839606 1830092 2025-07-06T15:26:09Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|66||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}55{{gap+|1}} பேய்கொண் டனையோ? பித்தே றினையோ நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன் தன் மக னாகிச் சாலவும் வலியனாய் மன்னனுக் கினியனாய் மன்பல தேவனும் உன்னுளங் கவர்ந்த ஒருவனும் ஒப்போ? {{gap+|5}}60{{gap+|1}} பேய்கொண் டனையோ? பேதாய்! வேய்கொள் தோளி விளம்பா யெனக்கே. {{float_right|11}} வா:{{gap+|5}} அறியா யொன்றும், அம்ம! அரிவையர் நிறையழி காதல் நேருந் தன்மை ஒன்றுங் கருதி யன்றவ ருள்ளஞ் {{gap+|5}}65{{gap+|1}} சென்று பாய்ந்து சேருதல். திரியுங் காற்றும் பெட்புங் காரணம் இன்மையில் ஆற்றவும் ஒக்குமென் றறைவர். மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே! {{float_right|12}} மனோ:{{gap+|4}} புதுமைநீ புகன்றது. பூவைமார் காதல் {{gap+|5}}70{{gap+|1}} இதுவே யாமெனில் இகழ்தற் பாற்றே! காதல் கொள்ளுதற் கேதுவும் இலையாம்! தானறி யாப்பே யாட்டந் தானாம்! ஆயினும் அமைந்துநீ ஆய்ந்துணர்ந் தோதுதி. உண்டோ இவர்தமில் ஒப்பு? {{gap+|5}}75{{gap+|1}}கண்டோ எனுமொழிக் காரிகை யணங்கே! {{float_right|13}} வா:{{gap+|5}} ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்ம! என்னுளம் போயிறந் ததுவே மன்னிய ஒருவன் வடிவுடன் பண்டே. {{float_right|14}} மனோ:{{gap+|4}} பித்தே பிதற்றினை. எத்திற மாயினுந் {{gap+|5}}80{{gap+|1}} தாந்த முளத்தைத் தடைசெயில் எங்ஙனம், காந்தள் காட்டுங் கையாய்! தவிர்ந்தது சாடி யோடிடும் வகையே? {{float_right|15}} </b></poem> {{rule|15em|align=left}} வேய் - மூங்கில்; கணுவுடைய மூங்கிலை மகளிர் தோளுக்கு உவமை கூறுவது மரபு. பெட்பு - அன்பு; ஆசை. கண்டு-கற்கண்டு. காரிகை அணங்கு - தெய்வமகள் போன்ற அழகுள்ள பெண். காந்தள் காட்டும் கை - காந்தள்பூ கைக்கு உவமை. {{dhr|3em}}<noinclude></noinclude> km9fdbqevkv2x7myk6sn8jfduq8hapm 1839833 1839606 2025-07-07T07:01:23Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|66||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}55{{gap+|1}} பேய்கொண் டனையோ? பித்தே றினையோ நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன் தன் மக னாகிச் சாலவும் வலியனாய் மன்னனுக் கினியனாய் மன்பல தேவனும் உன்னுளங் கவர்ந்த ஒருவனும் ஒப்போ? {{gap+|5}}60{{gap+|1}} பேய்கொண் டனையோ? பேதாய்! வேய்கொள் தோளி விளம்பா யெனக்கே. {{float_right|11}} வா:{{gap+|5}} அறியா யொன்றும், அம்ம! அரிவையர் நிறையழி காதல் நேருந் தன்மை ஒன்றுங் கருதி யன்றவ ருள்ளஞ் {{gap+|5}}65{{gap+|1}} சென்று பாய்ந்து சேருதல். திரியுங் காற்றும் பெட்புங் காரணம் இன்மையில் ஆற்றவும் ஒக்குமென் றறைவர். மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே! {{float_right|12}} மனோ:{{gap+|4}} புதுமைநீ புகன்றது. பூவைமார் காதல் {{gap+|5}}70{{gap+|1}} இதுவே யாமெனில் இகழ்தற் பாற்றே! காதல் கொள்ளுதற் கேதுவும் இலையாம்! தானறி யாப்பே யாட்டந் தானாம்! ஆயினும் அமைந்துநீ ஆய்ந்துணர்ந் தோதுதி. உண்டோ இவர்தமில் ஒப்பு? {{gap+|5}}75{{gap+|1}}கண்டோ எனுமொழிக் காரிகை யணங்கே! {{float_right|13}} வா:{{gap+|5}} ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்ம! என்னுளம் போயிறந் ததுவே மன்னிய ஒருவன் வடிவுடன் பண்டே. {{float_right|14}} மனோ:{{gap+|4}} பித்தே பிதற்றினை. எத்திற மாயினுந் {{gap+|5}}80{{gap+|1}} தாந்த முளத்தைத் தடைசெயில் எங்ஙனம், காந்தள் காட்டுங் கையாய்! தவிர்ந்தது சாடி யோடிடும் வகையே? {{float_right|15}} </b></poem> {{rule|15em|align=left}} வேய் - மூங்கில்; கணுவுடைய மூங்கிலை மகளிர் தோளுக்கு உவமை கூறுவது மரபு. பெட்பு - அன்பு; ஆசை. கண்டு-கற்கண்டு. காரிகை அணங்கு - தெய்வமகள் போன்ற அழகுள்ள பெண். காந்தள் காட்டும் கை - காந்தள்பூ கைக்கு உவமை. {{dhr|3em}}<noinclude></noinclude> cngukdqy4civ9bx56w42ln0tzccvaoh பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/67 250 535307 1839608 1830093 2025-07-06T15:28:22Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||67}}{{rule}}</b></noinclude><poem><b> வா:{{gap+|5}} ஈதெலாம் உனக்குயார் ஓதுதற் கறிவர்! மாதர்க் குரியதிக் காதல், {{gap+|5}}85{{gap+|1}}என்பதொன் றறியும் மன்பதை யுலகே. {{float_right|16}} மனோ:{{gap+|4}} மின்புரை யிடையாய்! என்கருத் துண்மையில் வனத்தி லெய்தி வற்கலை புனைந்து மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே. சுந்தர முனிவன் சிந்துர அடியும், {{gap+|5}}90{{gap+|1}} வாரிசம் போல மலர்ந்த வதனமும், கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும், பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால்போல் நரைதரு தலையும், புரையறும் உரையும், சாந்தமுந் தயையும் தங்கிய உடலும், {{gap+|5}}95{{gap+|1}} மாந்தளிர் வாட்டு மேனி வாணி! எண்ணுந் தோறுங் குதித்து நண்ணும் என்னுளம் மன்னிய தவத்தே. {{float_right|17}} வா:{{gap+|5}} சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல் கட்டுரைத் திண்ணம். மட்டள வின்றிக் {{gap+|5}}100{{gap+|1}} காதல் கதுவுங் காலை ஓதுவை நீயே யுறுமதன் சுவையே. {{float_right|18}} மனோ:{{gap+|4}} வேண்டுமேற் காண்டி. அவையெலாம் வீண், வீண். காதலென் பதுவென்? பூதமோ? பேயோ? வெருட்டினால் நாய்போ லோடிடும்; வெருவில் {{gap+|5}}105{{gap+|1}} துரத்தும் குரைக்கும் தொடரும் வெகுதொலை. அடிக்கடி முனிவரிங் கணுகுவர். அஃதோ அடுத்தஅவ் வறையில் யாதோ சக்கரம் இருத்திடத் திறவுகோல் வாங்கினர். கண்டனை! படர்சுழி யோடு பாய்திரை காட்டும் </b></poem> {{rule|15em|align=left}} மின்புரை இடை - மின்னல் மகளிர் இடைக்கு உவமை. வற்கலை - மரவுரியாடை. சிந்துர அடி - சிவந்த பாதம். வாரிசம் - தாமரை. வதனம் - முகம். கருணை அலை - கருணையாகிய அலை. பரிவு - அன்பு. முகிழ்க்கும் - அரும்பும். புரையறும் - குற்றமற்ற. மாந்தளிர் வாட்டு மேனி - மாந்தளிர் மகளிரின் நிறத்திற்கு உவமை. கதுவு - கௌவு; பற்று. வெருவில் - அஞ்சினால். இருத்திட - வைக்க. {{dhr|3em}}<noinclude></noinclude> e5mtmrqoyulz39rbi223hmwqfm7b2pm 1839610 1839608 2025-07-06T15:29:34Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||67}}{{rule}}</b></noinclude><poem><b> வா:{{gap+|5}} ஈதெலாம் உனக்குயார் ஓதுதற் கறிவர்! மாதர்க் குரியதிக் காதல், {{gap+|5}}85{{gap+|1}}என்பதொன் றறியும் மன்பதை யுலகே. {{float_right|16}} மனோ:{{gap+|4}} மின்புரை யிடையாய்! என்கருத் துண்மையில் வனத்தி லெய்தி வற்கலை புனைந்து மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே. சுந்தர முனிவன் சிந்துர அடியும், {{gap+|5}}90{{gap+|1}} வாரிசம் போல மலர்ந்த வதனமும், கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும், பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால்போல் நரைதரு தலையும், புரையறும் உரையும், சாந்தமுந் தயையும் தங்கிய உடலும், {{gap+|5}}95{{gap+|1}} மாந்தளிர் வாட்டு மேனி வாணி! எண்ணுந் தோறுங் குதித்து நண்ணும் என்னுளம் மன்னிய தவத்தே. {{float_right|17}} வா:{{gap+|5}} சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல் கட்டுரைத் திண்ணம். மட்டள வின்றிக் {{gap+|5}}100{{gap+|1}}காதல் கதுவுங் காலை ஓதுவை நீயே யுறுமதன் சுவையே. {{float_right|18}} மனோ:{{gap+|4}} வேண்டுமேற் காண்டி. அவையெலாம் வீண், வீண். காதலென் பதுவென்? பூதமோ? பேயோ? வெருட்டினால் நாய்போ லோடிடும்; வெருவில் {{gap+|5}}105{{gap+|1}}துரத்தும் குரைக்கும் தொடரும் வெகுதொலை. அடிக்கடி முனிவரிங் கணுகுவர். அஃதோ அடுத்தஅவ் வறையில் யாதோ சக்கரம் இருத்திடத் திறவுகோல் வாங்கினர். கண்டனை! படர்சுழி யோடு பாய்திரை காட்டும் </b></poem> {{rule|15em|align=left}} மின்புரை இடை - மின்னல் மகளிர் இடைக்கு உவமை. வற்கலை - மரவுரியாடை. சிந்துர அடி - சிவந்த பாதம். வாரிசம் - தாமரை. வதனம் - முகம். கருணை அலை - கருணையாகிய அலை. பரிவு - அன்பு. முகிழ்க்கும் - அரும்பும். புரையறும் - குற்றமற்ற. மாந்தளிர் வாட்டு மேனி - மாந்தளிர் மகளிரின் நிறத்திற்கு உவமை. கதுவு - கௌவு; பற்று. வெருவில் - அஞ்சினால். இருத்திட - வைக்க. {{dhr|3em}}<noinclude></noinclude> n9pyaltkws5taidibmd6lrxqi6v7tey 1839835 1839610 2025-07-07T07:01:42Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||67}}{{rule}}</b></noinclude><poem><b> வா:{{gap+|5}} ஈதெலாம் உனக்குயார் ஓதுதற் கறிவர்! மாதர்க் குரியதிக் காதல், {{gap+|5}}85{{gap+|1}}என்பதொன் றறியும் மன்பதை யுலகே. {{float_right|16}} மனோ:{{gap+|4}} மின்புரை யிடையாய்! என்கருத் துண்மையில் வனத்தி லெய்தி வற்கலை புனைந்து மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே. சுந்தர முனிவன் சிந்துர அடியும், {{gap+|5}}90{{gap+|1}} வாரிசம் போல மலர்ந்த வதனமும், கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும், பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால்போல் நரைதரு தலையும், புரையறும் உரையும், சாந்தமுந் தயையும் தங்கிய உடலும், {{gap+|5}}95{{gap+|1}} மாந்தளிர் வாட்டு மேனி வாணி! எண்ணுந் தோறுங் குதித்து நண்ணும் என்னுளம் மன்னிய தவத்தே. {{float_right|17}} வா:{{gap+|5}} சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல் கட்டுரைத் திண்ணம். மட்டள வின்றிக் {{gap+|5}}100{{gap+|1}}காதல் கதுவுங் காலை ஓதுவை நீயே யுறுமதன் சுவையே. {{float_right|18}} மனோ:{{gap+|4}} வேண்டுமேற் காண்டி. அவையெலாம் வீண், வீண். காதலென் பதுவென்? பூதமோ? பேயோ? வெருட்டினால் நாய்போ லோடிடும்; வெருவில் {{gap+|5}}105{{gap+|1}}துரத்தும் குரைக்கும் தொடரும் வெகுதொலை. அடிக்கடி முனிவரிங் கணுகுவர். அஃதோ அடுத்தஅவ் வறையில் யாதோ சக்கரம் இருத்திடத் திறவுகோல் வாங்கினர். கண்டனை! படர்சுழி யோடு பாய்திரை காட்டும் </b></poem> {{rule|15em|align=left}} மின்புரை இடை - மின்னல் மகளிர் இடைக்கு உவமை. வற்கலை - மரவுரியாடை. சிந்துர அடி - சிவந்த பாதம். வாரிசம் - தாமரை. வதனம் - முகம். கருணை அலை - கருணையாகிய அலை. பரிவு - அன்பு. முகிழ்க்கும் - அரும்பும். புரையறும் - குற்றமற்ற. மாந்தளிர் வாட்டு மேனி - மாந்தளிர் மகளிரின் நிறத்திற்கு உவமை. கதுவு - கௌவு; பற்று. வெருவில் - அஞ்சினால். இருத்திட - வைக்க. {{dhr|3em}}<noinclude></noinclude> moafd30x0d0s2l5zn9cj9dmql1ujl10 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/68 250 535308 1839611 1830094 2025-07-06T15:30:53Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|68||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}110{{gap+|1}} வடதள வுதர வாணி மங்காய்! வரும்பொழு தரும்பொருள் கேட்போம் வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே. {{float_right|19}} வா:{{gap+|5}} நூறாக் கேட்கினும் நூலறிவு என் செயும்? நீறா கின்றதென் நெஞ்சம். நாளை {{gap+|5}}115{{gap+|1}} என்னுயிர் தாங்குவ தெவ்விதம்? மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே? {{float_right|20}} மனோ:{{gap+|4}} உன்றன் சிந்தையும் உந்தைதன் கருத்தும், மன் றல் வழுதிக் குரைக்க வருவதும், ஆமையின் புறச்சார் பலவன் ஒதுங்குவது {{gap+|5}}120{{gap+|1}} ஏயு மெழிற்கால் வாணி நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே? {{float_right|21}} வா:{{gap+|5}} அதுவே யம்ம! என் உளநின் றறுப்பது. வதுவையும் வேண்டிலர். வாழ்க்கையும் வேண்டிலர்! ஒருமொழி வேண்டினர்; உரைத்திலேன் பாவி. {{gap+|5}}125{{gap+|1}} நச்சினே னெனுமொழிக் கேயவர்க் கிச்சை. பிச்சியான், ஓகோ! பேசினே னிலையே! இனியென் செய்வேன்? என் நினைப் பாரோ? மனைவரா வண்ணமென் னனையு முரைத்தாள். ஊர்வரா வண்ணங் குடிலனும் ஓட்டினன். {{gap+|5}}130{{gap+|1}} யார்பா லுரைப்பன்? யார்போ யுரைப்பர்? உயிரே யெனக்கிங் கொருதுணை. அயிரா வதத்தனும் அறியா வமுதே! (அழ) {{float_right|21}} </b></poem> {{rule|15em|align=left}} வடதளம் - ஆல இலை. உதரம் – வயிறு. வடதள உதரம் - ஆலிலை போன்ற வயிறு. ஆலிலையை மகளிர் வயிற்றுக்கு உவமை கூறுவது மரபு. வாசிட்டாதி - ஞானவாசிஷ்டம் முதலிய நூல்கள். இது ஒரு வேதாந்தத் தமிழ்நூல். ஆளவந்தார் இதன் ஆசிரியர். வைராக்கிய நூல் - துறவறத்தில் வைராக்கியம் கொள்ளச் செய்கிற சாத்திரங்கள். உந்தை - உன் தந்தை. மன்றல் - திருமணம். வழுதி - பாண்டிய அரசன். அலவன் - நண்டு. ஏயும் - ஒக்கும். பிச்சி - பித்சி; பைத்தியக்காரி. அயிராவதத்தன் - அயிராவதம் என்னும் யானையையுடைய இந்திரன். இந்திரன் முதலிய தேவர்கள் அமுதத்தை உணவாக உடையவர். அமுதே - தேவாமிர்தம் போன்றவளே. {{dhr|3em}}<noinclude></noinclude> 7njmq9h9kygo4k3nkvo5ur9rxjv6h13 1839836 1839611 2025-07-07T07:02:01Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|68||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}110{{gap+|1}} வடதள வுதர வாணி மங்காய்! வரும்பொழு தரும்பொருள் கேட்போம் வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே. {{float_right|19}} வா:{{gap+|5}} நூறாக் கேட்கினும் நூலறிவு என் செயும்? நீறா கின்றதென் நெஞ்சம். நாளை {{gap+|5}}115{{gap+|1}} என்னுயிர் தாங்குவ தெவ்விதம்? மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே? {{float_right|20}} மனோ:{{gap+|4}} உன்றன் சிந்தையும் உந்தைதன் கருத்தும், மன் றல் வழுதிக் குரைக்க வருவதும், ஆமையின் புறச்சார் பலவன் ஒதுங்குவது {{gap+|5}}120{{gap+|1}} ஏயு மெழிற்கால் வாணி நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே? {{float_right|21}} வா:{{gap+|5}} அதுவே யம்ம! என் உளநின் றறுப்பது. வதுவையும் வேண்டிலர். வாழ்க்கையும் வேண்டிலர்! ஒருமொழி வேண்டினர்; உரைத்திலேன் பாவி. {{gap+|5}}125{{gap+|1}} நச்சினே னெனுமொழிக் கேயவர்க் கிச்சை. பிச்சியான், ஓகோ! பேசினே னிலையே! இனியென் செய்வேன்? என் நினைப் பாரோ? மனைவரா வண்ணமென் னனையு முரைத்தாள். ஊர்வரா வண்ணங் குடிலனும் ஓட்டினன். {{gap+|5}}130{{gap+|1}} யார்பா லுரைப்பன்? யார்போ யுரைப்பர்? உயிரே யெனக்கிங் கொருதுணை. அயிரா வதத்தனும் அறியா வமுதே! (அழ) {{float_right|21}} </b></poem> {{rule|15em|align=left}} வடதளம் - ஆல இலை. உதரம் – வயிறு. வடதள உதரம் - ஆலிலை போன்ற வயிறு. ஆலிலையை மகளிர் வயிற்றுக்கு உவமை கூறுவது மரபு. வாசிட்டாதி - ஞானவாசிஷ்டம் முதலிய நூல்கள். இது ஒரு வேதாந்தத் தமிழ்நூல். ஆளவந்தார் இதன் ஆசிரியர். வைராக்கிய நூல் - துறவறத்தில் வைராக்கியம் கொள்ளச் செய்கிற சாத்திரங்கள். உந்தை - உன் தந்தை. மன்றல் - திருமணம். வழுதி - பாண்டிய அரசன். அலவன் - நண்டு. ஏயும் - ஒக்கும். பிச்சி - பித்சி; பைத்தியக்காரி. அயிராவதத்தன் - அயிராவதம் என்னும் யானையையுடைய இந்திரன். இந்திரன் முதலிய தேவர்கள் அமுதத்தை உணவாக உடையவர். அமுதே - தேவாமிர்தம் போன்றவளே. {{dhr|3em}}<noinclude></noinclude> ig5b6yfaseqn4jo0zhbnsi3wm1qhxge பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/69 250 535309 1839613 1830095 2025-07-06T15:34:15Z Info-farmer 232 {{dhr|3em}} 1839613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||69}}{{rule}}</b></noinclude><poem><b> மனோ:{{gap+|4}} அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமும் நெருஞ்சிலா அஞ்சிய அடியாய்! அழுங்கலை! அழுதுகண் {{gap+|5}}135{{gap+|1}} அஞ்சனங் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங் கருத்ததே! ஏனிது! கருணைக் கடவுள்நின் கருத்தே முடிப்பக் காண்டி, அஃதோ மணங்கமழ் கோதையர் வந்தனர். அணங்குறல் பொன்னிகர் சுணங்கா ரணங்கே! {{float_right|23}} {{float_right|(செவிலியும் தோழிப்பெண்களும் வர)}} செவிலி:{{gap+|1}}140{{gap+|1}} தாயே! வந்துபார் நீயே வளர்த்த முல்லையு நறுமுகை முகிழ்த்தது. வல்லை காதலிற் கவிழ்வை போலும்! போதுநீத் தெம்மனை புகுந்தநற் றிருவே! {{float_right|24}} மனோ:{{gap+|4}} போடி! நீ யாது புகன்றனை? தவத்தை {{gap+|5}}145{{gap+|1}} நாடிநா னிருக்க நணுகுமோ என்மனந் துச்சமாம் இச்சையாற் சோர்வு? நெருப்பையுங் கரையான் அரிக்குமோ நேர்ந்தே! {{float_right|25}} முதற்றோழி:{{gap+|-2}} பொய்யன் றம்ம! மையுண் கண்ணால் வந்துநீ நோக்கு, சந்தமார் முல்லை {{gap+|5}}150{{gap+|1}} நிரம்ப அரும்பி நிற்குந் தன்மை. இன்றிரா அலரும் எல்லாம். துன்றிரா நிகர்குழல் தோகாய்! வருகவே. {{float_right|26}} {{float_right|(எல்லோரும் போக)}} </b></poem> {{c|<b>முதல் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.</b>}} {{rule|15em|align=left}} அழுங்கு - வருந்து. அழுங்கலை - வருந்தாதே. அனிச்சம் - அனிச்சப் பூ, இது மிக மென்மையுடையது. நெருஞ்சில் - நெருஞ்சி முள். "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்" என்பது திருக்குறள். கஞ்சனக் கதுப்பு - கண்ணாடி போன்ற கன்னம். பெண்களின் கன்னத்தைக் கண்ணாடிக்கு உபமானம் கூறுவது மரபு. முகை - அரும்பு. முகிழ்த்தது - அரும்பிற்று. வல்லை - விரைவாக, போது நீத்து - தாமரைப்பூவை விட்டு. செந்தாமரையிலிருக்கும் இலக்குமி அம் மலரைவிட்டு என் மனையில் வந்தது போன்றவளே. துச்சம் - அற்பம். இச்சை - காமம்; காதல். கரையான் - சிதல். 'நெருப்பைக் கரையான் அரிக்குமோ', 'நெருப்பில் ஈ மொய்க்குமோ' என்பன பழ மொழிகள். சந்தம்ஆர் முலை - அழகுள்ள முலை. துன்று இரா - நெருங்கிய இரவு. {{dhr|3em}}<noinclude></noinclude> fxsy9sgzaklbsmll6ljcu667rbbd4lg 1839837 1839613 2025-07-07T07:02:23Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||69}}{{rule}}</b></noinclude><poem><b> மனோ:{{gap+|4}} அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமும் நெருஞ்சிலா அஞ்சிய அடியாய்! அழுங்கலை! அழுதுகண் {{gap+|5}}135{{gap+|1}} அஞ்சனங் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங் கருத்ததே! ஏனிது! கருணைக் கடவுள்நின் கருத்தே முடிப்பக் காண்டி, அஃதோ மணங்கமழ் கோதையர் வந்தனர். அணங்குறல் பொன்னிகர் சுணங்கா ரணங்கே! {{float_right|23}} {{float_right|(செவிலியும் தோழிப்பெண்களும் வர)}} செவிலி:{{gap+|1}}140{{gap+|1}} தாயே! வந்துபார் நீயே வளர்த்த முல்லையு நறுமுகை முகிழ்த்தது. வல்லை காதலிற் கவிழ்வை போலும்! போதுநீத் தெம்மனை புகுந்தநற் றிருவே! {{float_right|24}} மனோ:{{gap+|4}} போடி! நீ யாது புகன்றனை? தவத்தை {{gap+|5}}145{{gap+|1}} நாடிநா னிருக்க நணுகுமோ என்மனந் துச்சமாம் இச்சையாற் சோர்வு? நெருப்பையுங் கரையான் அரிக்குமோ நேர்ந்தே! {{float_right|25}} முதற்றோழி:{{gap+|-2}} பொய்யன் றம்ம! மையுண் கண்ணால் வந்துநீ நோக்கு, சந்தமார் முல்லை {{gap+|5}}150{{gap+|1}} நிரம்ப அரும்பி நிற்குந் தன்மை. இன்றிரா அலரும் எல்லாம். துன்றிரா நிகர்குழல் தோகாய்! வருகவே. {{float_right|26}} {{float_right|(எல்லோரும் போக)}} </b></poem> {{c|<b>முதல் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.</b>}} {{rule|15em|align=left}} அழுங்கு - வருந்து. அழுங்கலை - வருந்தாதே. அனிச்சம் - அனிச்சப் பூ, இது மிக மென்மையுடையது. நெருஞ்சில் - நெருஞ்சி முள். "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்" என்பது திருக்குறள். கஞ்சனக் கதுப்பு - கண்ணாடி போன்ற கன்னம். பெண்களின் கன்னத்தைக் கண்ணாடிக்கு உபமானம் கூறுவது மரபு. முகை - அரும்பு. முகிழ்த்தது - அரும்பிற்று. வல்லை - விரைவாக, போது நீத்து - தாமரைப்பூவை விட்டு. செந்தாமரையிலிருக்கும் இலக்குமி அம் மலரைவிட்டு என் மனையில் வந்தது போன்றவளே. துச்சம் - அற்பம். இச்சை - காமம்; காதல். கரையான் - சிதல். 'நெருப்பைக் கரையான் அரிக்குமோ', 'நெருப்பில் ஈ மொய்க்குமோ' என்பன பழ மொழிகள். சந்தம்ஆர் முலை - அழகுள்ள முலை. துன்று இரா - நெருங்கிய இரவு. {{dhr|3em}}<noinclude></noinclude> p3jdmzyme0zdulk665vdjmmzs75an8o பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/70 250 535310 1839615 1830096 2025-07-06T15:38:43Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{c|{{x-larger|<b>மூன்றாம் களம்</b>}} இடம் : <b>கொலுமண்டபம்</b>. காலம் : <b>காலை</b>. (ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாஷித்திருக்க.) (<b>நிலைமண்டில ஆசிரியப்பா</b>)}} <poem><b> ஜீவகன்: நமக்கத னாலென்? நன்றே யாமெனத் தமக்குச் சரியாம் இடத்திற் றங்குக. எங்கே யாகினுந் தங்குக. நமக்கென்? ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிகக் 5 கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்? குறைவென்? குடில! கூறாய் குறித்தே. குடிலன்: குறையான் ஒன்றுங் கண்டிலன் கொற்றவ! நறையார் வேப்பந் தாராய்! நமதிடங் கூடல் அன்றெனுங் குறையொன் றுளது. 10 நாடி லஃதலால் நானொன் றறியேன். மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர் ஆலயம் ஒன்றையே அறிவர். முன்னொரு கோவில் அமைத்ததிற் குறைவிலா உற்சவம் ஓவ லிலாதே உஞற்றுமின் என்றவர் 15 ஏவினர் அஃதொழித் தியற்றின் மிப்புரி. ஆதலா லிங்ஙனம் ஓதினர். அதனை அழுக்கா றென்றுநா மையமற் றறைதல் ஒழுக்க மன்றே. குருவன் றோவவர்? ஜீவ: ஐயரும் அழுக்கா றடைந்தார். மெய்ம்மை </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} புரிசை - கோட்டை. நறை ஆர் - தேன் பொருந்திய. வேப்பந் தாராய் - வேப்பமாலை பாண்டியருக்கு உரியது. ஓவல் இலாதே - ஓய்வு இல்லாமல். உஞற்று - செய். புரி - நகரம். அழுக்காறு - பொறாமை. {{dhr|3em}}<noinclude></noinclude> neh4s9qk4a0czlaqhed0b3yjrb5uotc 1839617 1839615 2025-07-06T15:40:28Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{c|{{x-larger|<b>மூன்றாம் களம்</b>}} இடம் : <b>கொலுமண்டபம்</b>. காலம் : <b>காலை</b>. (ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாஷித்திருக்க.) (<b>நிலைமண்டில ஆசிரியப்பா</b>)}} ஜீவகன்:{{gap+|1}} நமக்கத னாலென்? நன்றே யாமெனத் தமக்குச் சரியாம் இடத்திற் றங்குக. எங்கே யாகினுந் தங்குக. நமக்கென்? ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிகக் {{gap+|5}}5{{gap+|1}} கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்? குறைவென்? குடில! கூறாய் குறித்தே. குடிலன்:{{gap+|0}} குறையான் ஒன்றுங் கண்டிலன் கொற்றவ! நறையார் வேப்பந் தாராய்! நமதிடங் கூடல் அன்றெனுங் குறையொன் றுளது. {{gap+|5}}10{{gap+|1}} நாடி லஃதலால் நானொன் றறியேன். மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர் ஆலயம் ஒன்றையே அறிவர். முன்னொரு கோவில் அமைத்ததிற் குறைவிலா உற்சவம் ஓவ லிலாதே உஞற்றுமின் என்றவர் {{gap+|5}}15{{gap+|1}} ஏவினர் அஃதொழித் தியற்றின் மிப்புரி. ஆதலா லிங்ஙனம் ஓதினர். அதனை அழுக்கா றென்றுநா மையமற் றறைதல் ஒழுக்க மன்றே. குருவன் றோவவர்? ஜீவ:{{gap+|4}} ஐயரும் அழுக்கா றடைந்தார். மெய்ம்மை </b></poem> {{rule|15em|align=left}} {{dhr}} {{rule|15em|align=left}} புரிசை - கோட்டை. நறை ஆர் - தேன் பொருந்திய. வேப்பந் தாராய் - வேப்பமாலை பாண்டியருக்கு உரியது. ஓவல் இலாதே - ஓய்வு இல்லாமல். உஞற்று - செய். புரி - நகரம். அழுக்காறு - பொறாமை. {{dhr|3em}}<noinclude></noinclude> svu3jjeiatrrjhpcg5ef9x3hodi8c2o 1839619 1839617 2025-07-06T15:41:32Z Info-farmer 232 </b></poem> 1839619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{c|{{x-larger|<b>மூன்றாம் களம்</b>}} இடம் : <b>கொலுமண்டபம்</b>. காலம் : <b>காலை</b>. (ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாஷித்திருக்க.) (<b>நிலைமண்டில ஆசிரியப்பா</b>)}} <poem><b> ஜீவகன்:{{gap+|1}} நமக்கத னாலென்? நன்றே யாமெனத் தமக்குச் சரியாம் இடத்திற் றங்குக. எங்கே யாகினுந் தங்குக. நமக்கென்? ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிகக் {{gap+|5}}5{{gap+|1}} கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்? குறைவென்? குடில! கூறாய் குறித்தே. குடிலன்:{{gap+|0}} குறையான் ஒன்றுங் கண்டிலன் கொற்றவ! நறையார் வேப்பந் தாராய்! நமதிடங் கூடல் அன்றெனுங் குறையொன் றுளது. {{gap+|5}}10{{gap+|1}} நாடி லஃதலால் நானொன் றறியேன். மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர் ஆலயம் ஒன்றையே அறிவர். முன்னொரு கோவில் அமைத்ததிற் குறைவிலா உற்சவம் ஓவ லிலாதே உஞற்றுமின் என்றவர் {{gap+|5}}15{{gap+|1}} ஏவினர் அஃதொழித் தியற்றின் மிப்புரி. ஆதலா லிங்ஙனம் ஓதினர். அதனை அழுக்கா றென்றுநா மையமற் றறைதல் ஒழுக்க மன்றே. குருவன் றோவவர்? ஜீவ:{{gap+|4}} ஐயரும் அழுக்கா றடைந்தார். மெய்ம்மை </b></poem> {{rule|15em|align=left}} {{dhr}} {{rule|15em|align=left}} புரிசை - கோட்டை. நறை ஆர் - தேன் பொருந்திய. வேப்பந் தாராய் - வேப்பமாலை பாண்டியருக்கு உரியது. ஓவல் இலாதே - ஓய்வு இல்லாமல். உஞற்று - செய். புரி - நகரம். அழுக்காறு - பொறாமை. {{dhr|3em}}<noinclude></noinclude> r9mw0qz9bhb1pmnbyfr2cvoubmgxmfc 1839621 1839619 2025-07-06T15:43:56Z Info-farmer 232 4 1839621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{c|{{x-larger|<b>மூன்றாம் களம்</b>}} இடம் : <b>கொலுமண்டபம்</b>. காலம் : <b>காலை</b>. (ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாஷித்திருக்க.) (<b>நிலைமண்டில ஆசிரியப்பா</b>)}} <poem><b> ஜீவகன்:{{gap+|4}} நமக்கத னாலென்? நன்றே யாமெனத் தமக்குச் சரியாம் இடத்திற் றங்குக. எங்கே யாகினுந் தங்குக. நமக்கென்? ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிகக் {{gap+|5}}5{{gap+|1}} கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்? குறைவென்? குடில! கூறாய் குறித்தே. குடிலன்:{{gap+|3}} குறையான் ஒன்றுங் கண்டிலன் கொற்றவ! நறையார் வேப்பந் தாராய்! நமதிடங் கூடல் அன்றெனுங் குறையொன் றுளது. {{gap+|5}}10{{gap+|1}} நாடி லஃதலால் நானொன் றறியேன். மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர் ஆலயம் ஒன்றையே அறிவர். முன்னொரு கோவில் அமைத்ததிற் குறைவிலா உற்சவம் ஓவ லிலாதே உஞற்றுமின் என்றவர் {{gap+|5}}15{{gap+|1}} ஏவினர் அஃதொழித் தியற்றின் மிப்புரி. ஆதலா லிங்ஙனம் ஓதினர். அதனை அழுக்கா றென்றுநா மையமற் றறைதல் ஒழுக்க மன்றே. குருவன் றோவவர்? ஜீவ:{{gap+|4}} ஐயரும் அழுக்கா றடைந்தார். மெய்ம்மை </b></poem> {{rule|15em|align=left}} {{dhr}} {{rule|15em|align=left}} புரிசை - கோட்டை. நறை ஆர் - தேன் பொருந்திய. வேப்பந் தாராய் - வேப்பமாலை பாண்டியருக்கு உரியது. ஓவல் இலாதே - ஓய்வு இல்லாமல். உஞற்று - செய். புரி - நகரம். அழுக்காறு - பொறாமை. {{dhr|3em}}<noinclude></noinclude> b8jmwpc5rzw9gcut5u4gzfknkak0apm 1839622 1839621 2025-07-06T15:44:31Z Info-farmer 232 5 1839622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{c|{{x-larger|<b>மூன்றாம் களம்</b>}} இடம் : <b>கொலுமண்டபம்</b>. காலம் : <b>காலை</b>. (ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாஷித்திருக்க.) (<b>நிலைமண்டில ஆசிரியப்பா</b>)}} <poem><b> ஜீவகன்:{{gap+|4}} நமக்கத னாலென்? நன்றே யாமெனத் தமக்குச் சரியாம் இடத்திற் றங்குக. எங்கே யாகினுந் தங்குக. நமக்கென்? ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிகக் {{gap+|5}}5{{gap+|1}} கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்? குறைவென்? குடில! கூறாய் குறித்தே. குடிலன்:{{gap+|3}} குறையான் ஒன்றுங் கண்டிலன் கொற்றவ! நறையார் வேப்பந் தாராய்! நமதிடங் கூடல் அன்றெனுங் குறையொன் றுளது. {{gap+|5}}10{{gap+|1}} நாடி லஃதலால் நானொன் றறியேன். மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர் ஆலயம் ஒன்றையே அறிவர். முன்னொரு கோவில் அமைத்ததிற் குறைவிலா உற்சவம் ஓவ லிலாதே உஞற்றுமின் என்றவர் {{gap+|5}}15{{gap+|1}} ஏவினர் அஃதொழித் தியற்றின் மிப்புரி. ஆதலா லிங்ஙனம் ஓதினர். அதனை அழுக்கா றென்றுநா மையமற் றறைதல் ஒழுக்க மன்றே. குருவன் றோவவர்? ஜீவ:{{gap+|5}} ஐயரும் அழுக்கா றடைந்தார். மெய்ம்மை </b></poem> {{rule|15em|align=left}} {{dhr}} {{rule|15em|align=left}} புரிசை - கோட்டை. நறை ஆர் - தேன் பொருந்திய. வேப்பந் தாராய் - வேப்பமாலை பாண்டியருக்கு உரியது. ஓவல் இலாதே - ஓய்வு இல்லாமல். உஞற்று - செய். புரி - நகரம். அழுக்காறு - பொறாமை. {{dhr|3em}}<noinclude></noinclude> 9n3k73np2eplyryz2nvl1s0meu3kkg7 1839839 1839622 2025-07-07T07:02:39Z Sridharrv2000 12752 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{c|{{x-larger|<b>மூன்றாம் களம்</b>}} இடம் : <b>கொலுமண்டபம்</b>. காலம் : <b>காலை</b>. (ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாஷித்திருக்க.) (<b>நிலைமண்டில ஆசிரியப்பா</b>)}} <poem><b> ஜீவகன்:{{gap+|4}} நமக்கத னாலென்? நன்றே யாமெனத் தமக்குச் சரியாம் இடத்திற் றங்குக. எங்கே யாகினுந் தங்குக. நமக்கென்? ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிகக் {{gap+|5}}5{{gap+|1}} கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்? குறைவென்? குடில! கூறாய் குறித்தே. குடிலன்:{{gap+|3}} குறையான் ஒன்றுங் கண்டிலன் கொற்றவ! நறையார் வேப்பந் தாராய்! நமதிடங் கூடல் அன்றெனுங் குறையொன் றுளது. {{gap+|5}}10{{gap+|1}} நாடி லஃதலால் நானொன் றறியேன். மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர் ஆலயம் ஒன்றையே அறிவர். முன்னொரு கோவில் அமைத்ததிற் குறைவிலா உற்சவம் ஓவ லிலாதே உஞற்றுமின் என்றவர் {{gap+|5}}15{{gap+|1}} ஏவினர் அஃதொழித் தியற்றின் மிப்புரி. ஆதலா லிங்ஙனம் ஓதினர். அதனை அழுக்கா றென்றுநா மையமற் றறைதல் ஒழுக்க மன்றே. குருவன் றோவவர்? ஜீவ:{{gap+|5}} ஐயரும் அழுக்கா றடைந்தார். மெய்ம்மை </b></poem> {{rule|15em|align=left}} {{dhr}} {{rule|15em|align=left}} புரிசை - கோட்டை. நறை ஆர் - தேன் பொருந்திய. வேப்பந் தாராய் - வேப்பமாலை பாண்டியருக்கு உரியது. ஓவல் இலாதே - ஓய்வு இல்லாமல். உஞற்று - செய். புரி - நகரம். அழுக்காறு - பொறாமை. {{dhr|3em}}<noinclude></noinclude> j6pinh5cwqceqr00zmdh8snq5r93j0r பக்கம்:என் கனா 1999.pdf/10 250 613763 1839901 1813306 2025-07-07T08:16:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839901 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|● என் கனா||}}</noinclude> {{Multicol}} {{dhr|15em}} {{block_right|{{box|border size=2px|radius=20px| {{smaller|“அடியே மயிலு, நாம<br> நாலைஞ்சு நாளா<br> பொழுதையே பாக்கலே<br> இல்லே?”<br> “எங்குட்டுப் பாக்க? விடிய<br> றதுக்கு முந்தி இங்க<br> வந்துருதோம். பொழுது<br> அடைஞ்ச பெறகுதானே<br> வீடுபோய்ச் சேருதோம்?”<br> “இபொழுது மொகத்தைப்<br> பாக்கக்கூட நமக்குக்<br> குடுத்து வைக்கலை..,<br> ம்ள்ச்சூ !”}}}}}} {{Multicol-break}} {{xx-larger|<b>1. இழந்த உலகம்</b>}} {{dhr|8em}} “அண்ணாச்சி, அண்ணாச்சி... சீக்கிரமா சிட்டையைப் பதிஞ்சிட்டுக் குடுங்க..." என்று நச்சரிப்பாகக் கெஞ்சுகிற மயில்த் தாய் பிடுங்கப் போகிறவளைப் போல கைநீட்டுகிறாள். நாலெட்டு தள்ளி கும்பலாய்ப் போகிற ஏழெட்டுச் சிறுமிகள். அவர்களைப் பார்த்து ஒரு கத்தல். “ஏய்ய்... கொரங்குகளா, கொஞ்சம் நில்லுங்களேன். கொள்ளையா போகுது” குச்சியடுக்கிய கட்டைகளின் எண்ணிக்கை சரிபார்த்து ஒற்றையெழுத்தில் கையெழுத்துப் போட்ட கணக்குப் பிள்ளை, அவர் தருவதற்குள் பிடுங்கிக்கொண்டு பரபரப்பாய் ஓடுகிற மயில்த்தாய். அடிப்பாவாடை சட சடக்க எறிபட்ட கல்லாக ஒரே ஓட்டம். தீப்பெட்டியாபீஸ் வெளிக்கதவைத் தாண்டுவதற்குள் வந்து சேர்ந்து கொண்ட மயில்த்தாய்க்கு “தஸ்ஸூ, புஸ்ஸ்”ஸென்று இரைத்தது. {{Multicol-end}}<noinclude>{{c|09}}</noinclude> 6jlpzul2vagx25nns5qmiv415r1r6zc பக்கம்:என் கனா 1999.pdf/33 250 613784 1839898 1813312 2025-07-07T08:06:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1839898 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|● என் கனா||}}</noinclude>{{dhr|3em}} {{Multicol}} {{dhr|13em}} {{block_right|{{box|border size=3px|radius=20px| {{smaller|“ஏன்... நாம எதுலே<br> தாழ்ந்துட்டம்? கொழுப்பான<br> வளர்ப்புப் பன்னின்னு<br> ஆசைப்பட்டுத்தானே<br> எல்லோரும் தேடி வந்து,<br> நின்று வாங்கிட்டுப் போறாக?<br> அப்படித்தானே இருவது<br> கிலோ வித்துருக்கு?<br> இவருக்கு மட்டும்<br> என்னத்துக்குக் குடுத்தனுப் பணும்?”}}}}}} {{Multicol-break}} {{xx-larger|<b>3. ரோஷாக்னி</b>}} {{dhr|3em}} புளுகாண்டிக்குள் ஒரே செம்மாளம். ஆதாளி, ஆர்வக் குதூகலத்தில் அலைபாய்ந்து வந்தான். இருப்புக் கொள்ளாமல் துள்ளித் துள்ளிக் குதித்தான். எப்படா விடியும் என்று மனசு கிடந்து துடித்தது. தவியாகத் தவித்தலைந்தான். ‘இன்னும் பொழுது அடையலே. மஞ்ச வெயில் அடிக்கிற சாயங்காலத்துலேயே பொழுது எப்ப விடியும்னு தவிச்சா... எப்படி? சரியான கோட்டிக்காரப் பயதான்!’ தன்னைத்தானே பரிகாசித்துக்கொள்கிற புளுகாண்டி. இளக்காரமான ஒரு புன்னகை மின்னல் உதட்டில் மின்னி மறைந்தது. அப்பவும்... அவன் நெஞ்சு ஆவல் பறப்பில் துடிப்பதை அவனால் நிறுத்தவே முடியவில்லை. அவன் மனசு, நினைப்பு, உயிர் எல்லாமே எப்ப விடியும் என்ற ஏக்கத்திலேயே குவிந்து கிடந்தது. }} {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|32}}</noinclude> 0udoavb511qc3yp5kxlk6htlh5bje3g 1839899 1839898 2025-07-07T08:07:17Z Booradleyp1 1964 1839899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|● என் கனா||}}</noinclude>{{dhr|3em}} {{Multicol}} {{dhr|13em}} {{block_right|{{box|border size=3px|radius=20px| {{smaller|“ஏன்... நாம எதுலே<br> தாழ்ந்துட்டம்? கொழுப்பான<br> வளர்ப்புப் பன்னின்னு<br> ஆசைப்பட்டுத்தானே<br> எல்லோரும் தேடி வந்து,<br> நின்று வாங்கிட்டுப் போறாக?<br> அப்படித்தானே இருவது<br> கிலோ வித்துருக்கு?<br> இவருக்கு மட்டும்<br> என்னத்துக்குக் குடுத்தனுப் பணும்?”}}}}}} {{Multicol-break}} {{xx-larger|<b>3. ரோஷாக்னி</b>}} {{dhr|3em}} புளுகாண்டிக்குள் ஒரே செம்மாளம். ஆதாளி, ஆர்வக் குதூகலத்தில் அலைபாய்ந்து வந்தான். இருப்புக் கொள்ளாமல் துள்ளித் துள்ளிக் குதித்தான். எப்படா விடியும் என்று மனசு கிடந்து துடித்தது. தவியாகத் தவித்தலைந்தான். ‘இன்னும் பொழுது அடையலே. மஞ்ச வெயில் அடிக்கிற சாயங்காலத்துலேயே பொழுது எப்ப விடியும்னு தவிச்சா... எப்படி? சரியான கோட்டிக்காரப் பயதான்!’ தன்னைத்தானே பரிகாசித்துக்கொள்கிற புளுகாண்டி. இளக்காரமான ஒரு புன்னகை மின்னல் உதட்டில் மின்னி மறைந்தது. அப்பவும்... அவன் நெஞ்சு ஆவல் பறப்பில் துடிப்பதை அவனால் நிறுத்தவே முடியவில்லை. அவன் மனசு, நினைப்பு, உயிர் எல்லாமே எப்ப விடியும் என்ற ஏக்கத்திலேயே குவிந்து கிடந்தது. {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|32}}</noinclude> 16x1v8u5xmg9jqe3d1uoqm8qazqdrsa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/86 250 616684 1839598 1822444 2025-07-06T14:53:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிதிறன்|62|அறிதிறன்}}</noinclude>களும் மரத்தாலானவை என்ற புலன் காட்சியை மனத்தில் கொண்டிருந்தனர். இப்பருவத்தில் குழந்தைகள் மற்றவர்கள் எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஊகித்து அறியும் திறனும் அடைகிறார்கள். பதினொன்று முதல் பதினைந்து வயது வரையிலான பருவத்தில் குழந்தைகள் புலன்கடந்த சிந்தனைத் திறன் பெறுகின்றனர். இப்பருவத்துக் குழந்தைகள் சிலரிடம் பல்வேறு விதப் பொருள்களைக் கொடுத்து அவற்றை மிதக்கக்கூடிய பொருள்கள், மிதக்காத பொருள்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்துக் காட்டுமாறு கூறப்பட்டது. பல்வேறு எடைகள் உள்ள கனசதுரங்கள், காகிதங்கள், மூடி, கூழாங்கற்கள் போன்ற பொருள்கள் இருந்தன. பியாசே குழந்தைகளிடம் ஒரு பாத்திரத்தில் நீரைப் பாதியளவு நிரப்பி அதில் இப்பொருள்களைச் சோதனை செய்யுமாறு கூறினார். சில பொருள்கள் ஏன் மிதக்கின்றன மற்றவை ஏன் மூழ்கி விடுகின்றன என்று காரணம் கேட்டார். எட்டு ஒன்பது வயதுக் குழந்தைகள் அவற்றுள் வெவ்வேறு பொருள்களுக்குத் தனிப்பட்ட காரணங்களைக் கூறினார்கள். ஆனால் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஆர்க்கிமிடிசின் மிதக்கும் விதியையும் தாம் சோதித்த பொருள்களையும் இணைத்து விடை கூறினார்கள். பொருள்களைப் பற்றிய புலன் கடந்த சிந்தனைத்திறன் 11 வயதுக்குப் பிறகு குழந்தைகளிடம் காணப்படுகிறது. பியாசேயின் மேற்குறிப்பிட்ட சோதனைகளையொட்டி புரூனர் (Bruner) என்பாரும் பல சோதனைகளை நிகழ்த்தியுள்ளார். பியாசேயின் சோதனைகள் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் திட்டவட்டமான அறிதல்சார் வளர்ச்சி நிலைகள் காணப்படுகின்றன என்னும் உண்மையை உளவியல் ஆய்வாளர்களுக்குத் தெளிவாக்கின. ஆயினும், பியாசேயின் அறிதல்சார் வளர்ச்சி நிலைகள் எல்லாக் குழந்தைகளிடமும் ஒன்று போலக் காணப்படுவதில்லை. மேலும் வளர்ச்சி நிலைகள் பண்பாட்டுப் பொருளாதாரப் பின்னணிகளால் மாற்றம் அடையக்கூடும். பியாசேயின் வளர்ச்சி நிலைக்கருத்துகள் சீர்மைச் சூழ்நிலைக்குப் பொருந்துவனவாகும்.{{Right|கு.இரா.}} <b>அறிதிறன்</b> என்பது ஒருவர் பேசுவதைப் பிறிதொருவர் விளங்கிக் கொள்ளும் பான்மையாகும். இது கேட்பவரை மட்டுமன்றிப் பேசுகிறவரையும் பொறுத்து அமைகிறது. அறிதிறன் அளவு பேசுபவர் கேட்பவர் தொடர்பு, சூழல், செய்தி, அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக ஆங்கிலம் அல்லது இந்தியினை இரண்டாம் மொழியாக நன்கு பயின்ற ஒருவர் வானொலியில் ஒலிபரப்பப்படும் ஆங்கில அல்லது இந்திச் செய்தியினைப் புரிந்து கொள்ளுதல் தொடக்க நிலையில் அரிதாக உள்ளது. ஆனால் பயிற்சி, பழக்கம், ஈடுபாடு ஆகியவற்றால் அவர் அதைக் காலப்போக்கில், எளிதில் விளங்கிக்கொள்ள முடிகிறது. இது போன்று ஆங்கிலத் தாய்மொழியாளர் ஒருவர் நேருக்கு நேர் நின்று பேசினாலும் ஆங்கிலம் பயின்ற ஒருவன் தொடக்க நிலையில் அதனை நன்கு விளங்கிக் கொள்ளுவது அரிதாக உள்ளது. அறிதிறன் பிறமொழிக் கல்வியிலும், பிறமொழி அறிவிலும் அளவிட்டு அறியக்கூடிய ஓர் ஆற்றல் ஆகும். பிறமொழியைப் பயிலும் ஒருவன் கல்வி நிலையத்தில் அல்லது தனியார் ஒருவரிடம் அதனைக் கற்று அறிந்து கொள்ளும் திறனில் பயிற்சி பெறுகிறான். பிறமொழியாளரோடு நாடோறும் உறவாடி உரையாடும் வாய்ப்பும் தேவையும் உடைய ஒருவன், தன் எண்ணங்களை அவர்களுக்கு வெளியிட்டு அவர்களின் எண்ணங்களைப் பெற்றுக்கொள்ளுகிறான். இங்குப் பிறமொழி அறிவு இன்றியமையாததாகிறது. ஏற்புத்திறன் (Receptive Control) வெளியிடுதிறன் (Productive Control) ஆகிய இருநிலைகளிலும் அல்லது ஏற்புத்திறனில் மட்டுமேனும் இருவருக்கும் பயிற்சி ஏற்பட்டால்தான் இது நிகழக்கூடியது. பிறமொழியைப் புதிதாகப் பயிலும் ஒருவனுக்கும். பிற மொழியாளனோடு தொடர்பு கொள்ளும் ஒருவனுக்கும் செய்தித் தொடர்பில் துணை நிற்பது அறிதிறனேயாகும். பிறமொழியைப் புதிதாகப் பயிலும் ஒருவனது அறிவின் அளவுக்கு அறிதிறனும், இருவேறுபட்ட மொழியாளர் தொடர்பு கொள்ளும் அளவுக்குத் தத்தம் அறிதிறனும் (Mutual Intelligibility) அடிப்படைகளாகின்றன. ஒருவன் தன் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப ஏதேனும் பிறிதொரு மொழியைக் கற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அப்பிறமொழியில் அவனுக்குத் தொடர்பும் கேட்டல் பயிற்சியும். ஒலித்தல் - பேசுதல் பயிற்சியும் ஏற்படும் போது, படிப்படியே அவன்பால் அதனை அறியும் திறன் வளருகிறது. இதற்கடுத்த நிலையில் அவனுக்கு அம்மொழியின் ஒலியமைப்பு, ஒலி வேறுபாடு, இலக்கண அமைப்பு, சொற்கள் தொடர்கள், வாக்கியம், அம்மொழி பொருள் உணர்த்தும் நெறி ஆகியவற்றில் ஏற்படும் இடையறா ஈடுபாடும், தக்க பயிற்சியும் அறிதிறன் வளர்ச்சிக்குத் துணை செய்கின்றன. பிறமொழியைப் பயிலுகிறவர்களின் அறிதிறனைக் கண்டறியத்தக்க பல அறிதிறன் தேர்வு ஆய்வுகள் அவ்வப்போது ஆங்காங்கே கல்வி வல்லுநர்களா-<noinclude></noinclude> axpr79jtfwlo4lbqxdwnecf42dsjclw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/87 250 616692 1839601 1822459 2025-07-06T15:00:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிதிறன்|63|அறிதிறன்}}</noinclude>லும் நிறுவனங்களாலும் நிகழ்த்தப் பெற்று வந்துள்ளன. ஒரு புதிய மொழியைக் கற்றுத் திறன் பெறுவதற்கு எத்தகைய சூழல்கள், பயிற்சிகள், பயிற்சியாளர், வாய்ப்புகள், பட்டறிவு ஆகியன தேவை என்பதை இவ்வகையான அறிதிறன் ஆய்வுகள் வாயிலாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் இவ்வாய்வுகள் புதுமொழி பயிலுகிறவர்களின் திறனை அறிந்து கொள்ளுவதற்கும், புதிய பயிற்சிகளை அளந்து அறிந்து தக்க முறையில் அளிப்பதற்கும் துணை நிற்கின்றன. எனினும் இவை இன்னும் சோதனை நிலையில் (Experimental) உள்ளனவே தவிர நடைமுறைக்குத் தக்க தீர்வுகளைத் தருவனவாக இல்லை. எனவே அறிதிறன் ஆய்வுகள் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. சில சொற்பட்டியலைப் படிக்க அளித்து, அவற்றை அறிந்து கொள்ளும் திறனைக் கண்டறிந்து, வெவ்வேறு மொழி பேசுகிறவர் பிறிதொரு மொழியில் எந்த அளவுக்குப் படிப்படியே அறிதிறன் பெறுகின்றனர் என்பதை அறியலாம். மேலும், தன் தாய் மொழியாளரிடம் பிறமொழிப் பயிற்சி, தன் தாய் மொழியல்லாதாரிடம் அப்பயிற்சி பெறுதல் எந்த அளவுக்கு மொழியைக் கற்கிறவர்களின் அறிதிறனில் வேறுபாடு செய்கிறது என்பதைக் காண முயற்சி செய்யலாம். அடிப்படையில் ஒரே தாய்மொழியைப் பேசுகிறவர்கள் பிற மொழியைக் கற்பிக்கும்போது, அதே மொழியைப் பேசுகிற மாணவர்கள் எளிதாக விளங்கிக்கொண்டு விரைவில் வெளியிடு திறனையும் பெறுகிறார்கள். ஆனால், பிறமொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர் புதுமொழியைக் கற்பிக்கும் போது தொடக்க நிலையில் அம்மொழி அறிதிறனில் சிக்கல் ஏற்படுகிறது. பிறமொழியை நன்கு கற்றவர்களும் அம்மொழியினைத் தாய்மொழியாகப் பேசுகிறவர்களோடு திடீரெனத் தொடர்பு கொள்ளும்போது தாங்கள் கற்றுத் தெளிந்தவற்றைக் கூடத் தெள்ளிதின் விளங்கிக் கொள்ளுவதில்லை. இதற்குத் தாய்மொழியாளர் ஒருவர் பேசுகிற ஒலிப்புமுறை, ஒலியசை முறை, அவர் பயன்படுத்தும் சொற்கள் ஆகியவற்றில் தொடர்பும் பயிற்சியும் இல்லாமையே காரணம். ஒருவன் தனக்குப் பழக்கமான ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ளுகிறான். அவன் அறிந்த ஒன்றை அவனிடம் பழகாத ஒருவர் ஒருமுறை சொல்லும் போது அவனுக்கு அதைப் புரிந்துகொள்ளுவதில் சிக்கல் உண்டு. ஆனால், அதை மறுபடியும் சொன்னால் அது அவனது அறிதிறனுக்கு எட்டுகிறது. எனவே பிறமொழிக் கல்வியில் அறிதிறன் என்பது ஈடுபாடு, பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையிலே அமைகிறது. ஒரே மொழிமைப் பேசுகிற இருவர் நாடோறும் வாழ்வின் நிகழ்வில் ஒருவரையொருவர் எளிதில் விளங்கிக் கருத்துத் தொடர்பு கொள்ளுதலைத் தத்தம் அறிதிறன் (Mutual Intelligibility) என்பர். அந்நிலையில் அவர்கள் இருவரும் தத்தம் அறிந்த தனியார் மொழிகளைப் (Idiolects) பேசுகிறவர் ஆவர். இருவர் ஒருவரையொருவர் விளங்கிக் கொள்ள இயலாதாயின் அவர்கள் பேசுகிற தனியார் மொழிகள் தத்தம் அறிதிறனுக்கு உட்பட்டவை அல்ல. குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஒருவரது முழுப் பேச்சுப் பழக்கம் அவரது தனியார் மொழி எனப்படும். இரு தனியார் மொழிகளைப் பேசுகிற இருவர் தடையின்றித் தொடர்புகொள்ள முடியுமானால், அவர்கள் ஒரே மொழியினைப் பேசுகிறவர் ஆவர். அவர்கள் ஒருவரையொருவர் விளங்கிக் கொள்ள இயலாதாயின் அவர்கள் பேசுகிற மொழிகள் வேறானவை ஆகும். பல இயல்புகளில் ஒன்றுபட்ட பல தனியார் மொழிகள் அவற்றிடையே காணப்படும் பங்குபெறு இயல்புகளால் (Shared Features) ஒரு கிளைமொழியாக (Dialect) இணைந்து அமைகின்றன. தம்முள் ஒத்த தனியார் மொழிகள் பலவற்றின் தொகுப்பு தான் கிளைமொழியாகவும் மொழியாகவும் (Language) அமைகிறது. இவை இரண்டும் அவற்றிடையே காணும் ஒப்புடைமை அளவில்தான் வேறுபடுகின்றன. ஒரு கிளைமொழியில் அடங்கும் தனியார் மொழிகளுக்குள் மிக நெருங்கிய ஒற்றுமை உண்டு. ஒரு கிளைமொழி அல்லது மொழியைப் பேசுகிறவர்களுக்குள் தத்தம் அறிதிறன் உண்டு. இரு வேறு மொழிகளையும் கிளைமொழிகளையும் பிரித்தறியக் கூடிய அடிப்படைகளுள் ஒன்று தத்தம் அறிதிறன் ஆகும். இருவேறு மொழிகளுக்குள் தத்தம் அறிதிறன் இராது. ஆனால், ஒருமொழியின் வெவ்வேறு கிளை மொழிகளுக்குள் தத்தம் அறிதிறன் மிகுதியும் உண்டு. கிளைமொழிகளுக்குள் பங்குபெறு மியல்புகள் மிகுதியாகக் காணப்படுதலே இதன் காரணம். அதனைப் பேசுகிறவர்கள் தனியார் மொழிகள் எல்லாம் ஒரே பொது உள்ளிடத்தில் (Common Core) அமைகின்றன. இருவேறு மொழிகளைப் பேசுகிற இரு குழுவினர் ஒழுங்காகக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளுவர். கிளைமொழிகளுக்குள் தத்தம் அறிதிறன் அளவு அவற்றின் ஒற்றுமையைப் பொறுத்ததாகும். இரு வேறுபட்ட மொழியினைப் பேசுகிறவர்கன் ஒருவரையொருவர் புரிந்து கருத்துத் தொடர்பு கொள்ளுதல் இருமொழி வழக்கு (Bilingualism) எனப்படும். இருமொழி வழக்கு நிலை தேவையின் பொருட்டு நிகழும் தொடர்பு, ஈடுபாடு, பட்டறிவு<noinclude></noinclude> 0udgorvnxucc296a95olrzqmojn0lok பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/88 250 616699 1839603 1822471 2025-07-06T15:06:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிதிறன்|64|அறிதுயில்}}</noinclude>ஆகியவற்றால் ஏற்படுவது. இது பெரும்பாலும் அண்மையில் வழங்கக்கூடிய இருமொழியினருக்குள் அமைவதாகும். இங்கு நிகழ்கிற கருத்துப் பரிமாற்றத் தொடர்பும் தத்தம் அறிதிறன் அடிப்படையில் நிகழ்வதாகும். பொதுவாக இருவேறுபட்ட மொழியினருக்குள் தத்தம் அறிதிறன் எளிதாக அமைவதில்னல. சில சூழல்களில் ஒருமொழியைப் பேசுகிறவர்கள் பிறிதொரு மொழியின் ஏற்புத்திறனைப் பெற்றிருப்பர். அவர்கள் அம்மொழியில் முழு அளவில் வெளியிடுதிறன் பெறாதிருப்பினும் பிறமொழியாளர் ஒருவரோடு எளிதாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. அத்தகைய குறைநிலை இருமொழி வழக்கும் (Semi-bilingualism) தத்தம் அறிதிறன் அடிப்படையில் நிகழ்வதாகும். தத்தம் அறிதிறனை அளந்தறியப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. இருவேறுபட்ட கிளைமொழியாளர் அல்லது மொழியாளர் ஒருவரையொருவர் எந்த அளவுக்குப் புரிந்து கொள்ளுகின்றனர் என்பதையும், அவர்கள் அத்திறனில் எந்த நிலையில் வேறுபடுகின்றனர் என்பதையும் அறியத்தக்கதாகச் சொல், வாக்கியம் ஆகியவற்றில் தேர்வு ஆய்வுகள் நிகழ்த்தலாம். ஆய்வாளர் தாம் அளவிட விரும்பும் கிளைமொழியின் அல்லது மொழியின் சிறு பகுதியைப் பதிவு செய்துகொண்டு, அதில் சில குறிப்பிட்ட கருத்துக் குறிப்புகளை (Points of contents) எண்ணிடங்களாகக் (Counts) குறித்துக் கொள்ளுகிறார்; பின்னர் ஒவ்வொரு கிளைமொழி அல்லது மொழி பேசுகிறவர்களைக் கேட்கச் செய்து அதில் அவர்களின் அறிதிறன் அளவினை எண்ணிடங்களின் அடிப்படையில் விழுக்காடு கணக்கிட்டுக் கொள்ளுகிறார். ஒருவர் பிறிதொரு கிளைமொழியின் எல்லாக் கருத்துக் குறிப்புகளையும் தெள்ளிதின் விளங்கிக் கொள்ளுதல் இயலாது என்பதை இவ்வகை ஆய்வு வெளிப்படுத்தும். நெருங்கிய ஒற்றுமை தத்தம் அறிதிறனுக்கு அடிப்படையாக அமைகிறது. எனினும் ஒருசில வேறுபாடு தத்தம் அறிதிறனை அறவே அகற்றி விடுவதில்லை. சில வேறுபாடுகன் இருப்பினும், சில பங்கு பெறுவியல்புகள் அடிப்படையில் ஒருவரையொருவர் விளங்கிக் கொள்ள முடியும். ஒரேமொழி பேசுகிறவர்களிடத்தில் காணப்படும் வேறுபாட்டிற்குக் காரணம், அவர்கள் மொழியைப் பேசும்போது ஏற்படும் வழிநிலை ஓசையும் (Channel Noice), தனிப்பட்ட ஒருவருடைய பேச்சில் ஏற்படும் ஒழுங்குமுறை ஓசையும் (Code Noise) ஆகும். இவ்வகை ஓசைகள் ஓர் எல்லை வரை கருத்துத் தொடர்பை இல்லாமல் செய்து விடுவதில்லை. எனினும் சில வேளைகளில் இவை கருத்துத் தொடர்பிற்கு இடையூறு விளைவிக்கும் தடைகளாக உள்ளன; அறிதிறனைக் குறைத்தும் விடுகின்றன. தெளிவான தொடர்பை வழிநிலை ஓசை ஓரளவு குறைப்பினும் பேச்சில் பெரும்பான்மையான இயல்புகளில் திரிபு ஏற்படாமல் இருக்கும் வரை கருத்துப் பரிமாற்றத்தில் தடை ஏற்படுவது இல்லை. இருவரின் மொழியில் ஏற்படும் வரையறைக்குட்பட்ட புறஓசை (External Noise) ஒழுங்கு முறை எனப்படும். இரண்டு தனியார் மொழிகளில் இந்தப் புறவோசை இல்லாமல் அமைந்து வழிநிலை ஓசை மிகுதியாக இருப்பினும் தொடர்பு தடைப்படுவதில்லை. இரண்டு தனியார் மொழிகளுக்குள் ஒழுங்கு முறை ஓசை மிகுதியாக அமைந்தால் வழிநிலை ஓசை குறைவாக இருந்தால் மட்டுமே அவற்றிடைவே தொடர்பு ஏற்படும். இவற்றிற்கு எடுத்துக்காட்டாக நம் நாட்டுத் தொலைபேசியில் மிகுந்த வழிநிலை ஓசைக்கிடையே தன் தாய்மொழியைப் பேசுகிற ஒருவரை விளங்கிக்கொள்ள முடிவதனைக் கூறலாம். ஆனால், நாம் அறிந்த பிறமொழியைப் பேசுகிற ஒருவர் நம் முன்னிலையில் நின்று நேருக்கு நேராகப் பேசினாலும் அதை விளங்கிக் கொள்ளுவதில் சிக்கல் உள்ளது. இதற்குக் காரணம் அவர் பேச்சில் இடம் பெறும் ஒழுங்கு முறை ஓசையே ஆகும். இத்தகைய பிறமொழி பேசுகிறவர் பேச்சைத் தொலைபேசியில் கேட்டு அறிந்துகொள்ளுதல் அதனினும் அரிது, இவ்வாறாக, அறிதிறன் சில தடை ஓசைகளால் குறைபடுதலும் உண்டு.{{Right|மோ.இ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Davies, Alen, E.D.</b> Language Teaching Symposium, Oxford University Press, Oxford, 1970.<br> <b>Hockett, CF.,</b> A Course in Modern Linguistics, The Macmillan Company, New York. 1958.<br> <b>Malmberg, Bertel, Ed.,</b>Manual of Phonetics, North Holland Publishing Company, Amsterdam, London, 1970. <b>அறிதுயில்</b> : ‘இப்னோ’ என்னும் இரேக்கச் சொல்லுக்குத் ‘துயில்’ என்பது பொருள். அறிதுயில் என்பது, கருத்தேற்றல் முறையில் ஒருவரைத் துயிலச் செய்வதாகும். அறிதுயிலில் செலுத்தப்பட்டோரைத் (செல்வோரைத்) துயில்வோர் என்றும், துயில்நிலைக்குச் செலுத்துவோரைத் துயிற்றுவோர் என்றும் கூறுவர். ஆண்டன் மெசுமர் (Anton Mesmer) கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உரு-<noinclude></noinclude> k0eec4w8nb8t9tnwqpuibik404d5dih பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/211 250 618178 1839772 1828052 2025-07-07T03:15:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டவணையிடுதல்|175|அட்டவணையிடுதல்}}</noinclude>தனியார் துறை வங்கிகள், 14 மாநிலக் கூட்டுறவு வங்கிகள், 121 வட்டார ஊரக வங்கிகள் ஆகும். அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை கடந்த 22 ஆண்டுகளில் பெருவாரியாகப் பெருகியிருக்கிறது. 1960–ஆம் ஆண்டின் இறுதியில் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளின் எண்ணிக்கை 335 ஆக இருந்தது. 1982 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 4 மட்டுமே. இதன் விளைவாக அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளின் மொத்த வைப்புக் கணக்கு உரூபாய் 10 கோடியாகக் குறைந்துள்ளது. இக்கணக்கை அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் மொத்த வைப்புத்தொகையான உரூபாய் 43,432 கோடியுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளின் பங்கு மிகவும் சிறிதே என்பது புலப்படும். அட்டவணைப்படுத்தப்படுதல் என்பது, வங்கிகளின் சிறப்புத் தகுதியாகக் கருதப்பட்டு வந்தது. இவ்வங்கிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொண்ட காலமுமிருந்தது. ஏறத்தாழ எல்லா வங்கிகளும் அட்டவணைப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் இத்தகுதியின் தனிப்பட்ட சிறப்புப் பெரிதும் குறைந்துவிட்டது.{{float_right|கே.கோ.}} {{larger|<b>அட்டவணையிடுதல்:</b>}} எழுதப்பட்ட விவரங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடத் தொடங்கிய காலத்திலிருந்தே அட்டவணை வெளியிடுதலும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. அன்றைய அட்டவணைகள் பொருள் (Subject), கருத்து வடிவம் (Concept) ஆகியவை பற்றி அமைக்கப்படாமல் தனி மனிதரின் பெயர்களைப் பற்றியோ ஒரு நூலின் சொற்களைப் பற்றியோ அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், தலைப்புகளுக்கு அட்டவணையிடுதல் (Indexation) மதத் தொடர்புடைய நூல்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இலக்கியத் தொகுப்புகளில் முக்கிய தலைப்புகளுக்கு மட்டும் அட்டவணைகள் காணப்பட்டன. இவ்வட்டவணைகள் அறிவியல் அடிப்படையில் அமையவில்லை. கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வெளிவந்த பொருளடக்க அட்டவணை (Subject-Index), நூலகத் துறையில் கண்ட புதிய முறைகளினாலும், ஆவணத் தொகுப்பு முறையில் ஏற்பட்ட புதிய செயற்பாடுகளினாலும் அறிவியல் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் அது மிகுந்த அளவில் பயன்படுத்தப்படவில்லை. அட்டவணையிடுதல் சொற்பட்டியல் அமைப்பு (Cataloguing), வகைப்பாடு (Classification) ஆகியவற்றினின்றும் தூவியின் பதின் முறை வகைப்பாடு (Dewey Decimal Classification), விதிக் கோவை (Coding), தலைப்பமைப்பு (Facet) முறைகளும் மேற்கூறியவற்றுக்கு இணையாக வளர்ந்துள்ளன. அகரவரிசைப்படி பொருள் அடைவு (Subject Index), முதன்மைத் தலைப்பு (Main Heading), உட்பிரிவு (Sub-Division), உருத்திரிபு (Modifier) ஆகியவை தரவகைப் படிநிலை (Heirarchy Structure) முறையில் அமைந்திருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட தகவல் பெருக்கத்தினால் (Information Explosion) தகவல்களை உலகமெங்கும் பரப்ப வேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டது. எனவே, குறுகிய காலத்திற்குள் செய்திகளைத் தொகுக்க வேண்டியிருந்தது. அதனால் அட்டவணையின் தேவை பெருகிற்று. பின்னர்த் தொடர்ச்சியாகப் பல புதிய அட்டவணை முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய அடைவு அட்டை (Index Card), கணிப்பொறி (Computer) மூலம் வேண்டிய பொருள் பற்றி எளிதில் அறிந்துகொள்ள வகை செய்கிறது. இவ்வாறு அடைவு அட்டையும் அட்டவணைக்குத் தேவையான நுணுக்க முறைகளும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. {{larger|<b>வரையறை:</b>}} ஒவ்வோர் இயலிலும் பல்வேறு கருந்து வடிவங்கள் உண்டு. அவற்றிற்குரிய விளக்கங்கள் பொருத்தமாகவும் சுருக்கமாகவும் தரமுள்ளவையாகவும் கொடுக்கப்பட வேண்டும். தொகுக்கப்பட்ட நூல்களின் தொகை அல்லது நூல்களிலிருந்து திரட்டப்பட்ட விளக்கங்கள் அல்லது அடிப்படை விளக்கங்கள், கருத்துகள் அல்லது பொருள் ஆகியவை பற்றி எளிதில் அறிய உருவாக்கப்படும் பட்டியல்தான் பொருள் அடைவு எனப்படுகிறது. இதன் குறிப்புப் பதிவு (Index Entry), ஆராய்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, அகரவரிசையில் காலமுறைப்படியோ (Chronological Order) எண் வரிசைப் (Numerical Order) படியோ பதியப்படுகிறது. {{larger|<b>கலைச்சொல்:</b>}} சொல் ஒரு கருவி. இது கருத்தை வெளிப்படுத்துகிறது. இம்முயற்சியின் அடுத்த நிலை சொற்தொடராக, சிறு வாக்கியமாக, பெரு வாக்கியமாக வளர்வது. இம்முறையில் ஒவ்வொரு துறையும் தனக்கெனச் சில சிறப்புச் சொற்களைக் கொண்டுள்ளது. இதுவே கலைச்சொல் (Technical Term) எனப்படும். {{larger|<b>திரட்டு (Collection):</b>}} பொருள்களைப் பற்றிய தொகுப்பு, திரட்டு எனப்படும். தனி இதழ் அல்லது பல்வேறு வகைப்பட்ட பொருள்/நூல்களின் தொகுப்புகளை உள்ளடக்கியது திரட்டு. எடுத்துக்காட்டுகள்: ஆவணங்கள் (Documents), ஆவணத் தொகுப்பு (An-<noinclude></noinclude> p4fk5qr31y6xirbltgj6maly3jev6op பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/212 250 618186 1839774 1828064 2025-07-07T03:20:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டவணையிடுதல்|176|அட்டவணையிடுதல்}}</noinclude>thology), கலைக் களஞ்சியம் (Encyclopaedia), பருவ இதழ் (Periodical) ஆகியவை. {{larger|<b>இனம் (Item):</b>}} தனித் தன்மை மிக்க நூல், கட்டுரை, அறிக்கை, சுருக்குரை (Abstract), மதிப்புரை (Review) ஆகியவையும், தொகுப்பின் ஒரு பகுதி, கோப்பின் ஓர் ஆவணம், நாடாப் பதிவின் ஒரு பகுதி, கால இதழ் (Journal)களில் வரும் கட்டுரை, நூல் வெளியிட்டு வரிசையில் ஒன்று ஆகியவையும் இனங்களாகக் கருதப்படுகின்றன. {{larger|<b>அடைவுப் பகுதி (Index Entry):</b>}} அட்டவணையின் போது பல்வேறு பொருள் பற்றிய குறிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. பதிவு என்பது அட்டவணையின் அடிப்படை அலகு (Unit). இப்பதிவு குறியீடுகளாகவோ குறியீட்டுச் சொற்றொடர்களாகவோ அமைந்திருக்கும். இது அடையாளச்சொல் இனத்தையோ கருத்துப்படிவம் பற்றிய முடிவையோ எளிதில் கண்டுபிடிக்க உதவும். {{larger|<b>அமைத்தலும் பணிகளும்:</b>}} கலைச் சொற்களுக்குப் பதிவுகளை உருவாக்கி அவற்றை அட்டவணையில் முறைப்படி பொருந்துமாறு அமைப்பதே அட்டவணை அமைப்பாளரின் முதற் கடமை. இதில் கவனிக்கப்பட வேண்டிய பல நிலைகள் பின்வருமாறு: :{{overfloat left|align=right|padding=1em|அ)}} திரட்டுகளில் காணப்படும் குறைகளைப் போக்கித் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்ளல் (Scanning the Collection). :{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} அவ்வாறு திரட்டப்பட்ட திரட்டுகளின் கருப்பொருளைப் பாகுபாடு செய்தல். இப்பாகுபாடு, திரட்டு மற்றும் அட்டவணைக்காகப் பயன்படுத்தப் போகும் காரணிகளையும் அவற்றின் பயன்பாட்டினையும் பொறுத்தது. :{{overfloat left|align=right|padding=1em|இ)}} திரட்டுகளிலுள்ள தொடர்ச்சியற்ற (Discrete) இனங்களைப் பொருத்தமான அடையாளக் குறியுடன் (Identifier) அவற்றின் சரியான இருப்பிடத்தைக் (பக்க எண், கோப்பு எண் முதற்கொண்டு) குறிப்பிடல். மேற்குறித்த நான்கு நிலைகளைக் கொண்டு அட்டவணையை உருவாக்கும்பொழுது கவனிக்கப்பட வேண்டிய சில நுட்ப வேலைகளும் (Technical Works) உண்டு. அவற்றைச் சீரான முறையில் பின்பற்றி அட்டவணை அமைத்தல் இன்றியமையாதது. அவை, :{{overfloat left|align=right|padding=1em|அ)}} சேகரிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட அட்டவணைப் பதிவுகளை இணைப்புள்ள (Cohesive), மாறாத் தன்மையுள்ள (Consistent) முழு அட்டவணையாகச் செய்தல். :{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} அடையாளக் குறிகளைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளை உருவாக்குதல். :{{overfloat left|align=right|padding=1em|இ)}} குறுக்கு மேற்கோள் (Cross-reference), இனங்காணுதல் (Tracing) மற்றும் நோக்க இலக்குகளைக் (Scope Notes) கொண்டு அடையாளக் குறிகளுக்குள் தொடர்பு முறையை நிறுவுதல். :{{overfloat left|align=right|padding=1em|ஈ)}} அவ்வாறு அமைக்கப்பட்ட அட்டவணைப் பதிவுகள் எவ்விடத்தில் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டத் தேவையானவற்றைக் (நாள், ஆண்டு, பக்கம் முதலானவை) குறிப்பிடல். :{{overfloat left|align=right|padding=1em|உ)}} முழுமை பெற்ற அட்டவணை, பதிப்பிலோ பயன்படுத்தும் வகையிலோ எவ்வுருவில் இருப்பது என்பது பற்றி முடிவெடுத்தல். :{{overfloat left|align=right|padding=1em|ஊ)}} அட்டவணை அமைத்த பின்னர் அதன் அமைப்பாளர். அவர் தொகுத்த சொற்கள் கருத்துக் கூட்டாக்கமாக (Synthetic), மற்றச் சொற்களை இணைக்கும் முறையில் இணைப்பிடைச் சொல் (Syndetic) சார்ந்ததாக, அமைப்பது இன்றியமையாததாகும். :{{overfloat left|align=right|padding=1em|எ)}} பொருத்தமான அடையாளக் குறிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் உறவைச் சிறப்பாக விளங்கிடச் செய்தல் வேண்டும். மேலே கூறியுள்ளவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தி அட்டவணை அமைத்த பின்னர் அமைப்பாளர் அதன் தகுதியை உறுதி செய்தல் வேண்டும். அவர் பணி செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயலாற்றுவதுடன் தம் சொந்த விருப்பு வெறுப்புக்கு இடந்தருதலும் கூடாது. அட்டவணையின் தரத்தைப் பேணிக்காப்பதுடன் அதைப் பயன்படுத்துவோரின் தேவைகளைக் குறித்த சரியான கண்ணோட்டத்துடன் இருப்பது இன்றியமையாததாகும். {{larger|<b>பயன்கள்:</b>}} அட்டவணை அமைத்தல் ஒரு பணி நடவடிக்கை, ஒருவருக்குத் தேவையான விளக்கங்களை எந்த இடத்திலிருந்து பெறலாம் என்பதைச் சுருக்கமான முறையிலும் எளிதிலும் விளக்கி, செய்தி வேண்டுவோருக்கும் செய்தியுள்ள இடத்திற்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவதே அட்டவணையின் பணியாகும். மூல ஆதாரத்தின் அளவு, கையேடு (Hand Book) அல்லது தொகுப்பு, இவற்றின் தன்மையைப் பொறுத்து, அட்டவணை அதன் முழு மதிப்பைப் பெறுவதோடு பலருக்கும் பயன்படும் தன்மை வாய்ந்ததாகவும் அமையும். நுட்பமுடன் அறிவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட அட்டவணைப்பட்டி (Index Catalogue) பயன்படுத்துவோரின் தேடும் முயற்சியைக் குறைப்பதோடு, சரியான முறையில் எந்தக் கலைச் சொல்லிற்கும் எளிதில் அடையாளக் குறிகளைக் கொண்டு<noinclude></noinclude> 128rvru2ve9n0b3cwh0txctum250ih1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/213 250 618190 1839776 1828077 2025-07-07T03:24:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டவணையிடுதல்|177|அட்டவணையிடுதல்}}</noinclude>பொருளைக் காண வகையும் செய்கிறது. பொருத்தமான தனித்தன்மையுள்ள அடையாளக் குறியும் தகுந்த இடஞ்சுட்டி (Locator)களும், குறுக்கிணைப்பு மற்றும் குறிப்புகளும் முழுமையாக இருப்பின், அட்டவணை, பயன்படுத்துவோரின் தேவையை மிகுந்த அளவில் நிறைவு செய்வதுடன் அவை இருக்கும் இடங்களை மிகவும் துல்லியமாக அறியவும் வகை செய்கிறது. இதைத் தவிர முன்பு கூறியபடி, அட்டவணை ஒரே நேரத்தில் கருத்துக் கூட்டாக்கமாகவும் இணைப்பாக்கமாகவும் இருந்து செயல்படுகிறது. மேலும், இது முடிவுக்கு வகை செய்யும் ஒரு வழிமுறையே தவிர இதுவே முடிவன்று. அட்டவணை அமைப்பதில் பல புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று, ஓரினக் கலைச்சொல் அடைவுப்பட்டி (Coordinate Index) பொதுச்சொல் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆனால், தரவகை/படிநிலைக் கருத்துப் பொருள் அட்டவணை (Hierarchial Subject Index)யினின்றும் மாறுபட்டது. இந்த அட்டவணையில், இனம் அல்லது அடையாளக் குறி மற்றவற்றைச் சார்ந்திராமல் அதனோடு தொடர்புள்ள தொகுப்பின் எல்லா இனங்களையும் கண்டறிய வகை செய்கிறது. எடுத்துக்காட்டு, ஓர் ஆய்வாளர் குடிசைப் பகுதிகளில் குடும்ப நலத் திட்டத்தால் ஏற்படும் பிறப்புவீத மாற்றம் பற்றி ஆராய விரும்புகிறார். இதற்காகத் தரவகை அட்டவணைப் பட்டியலில் ‘குடிசைப்பகுதி’, ‘குடும்ப நலத் திட்டம்’, ‘பிறப்பு விகிதம்’ என்ற மூன்றையும் துணைத் தலைப்புகளுடன் நோக்க வேண்டும். மூன்றுமே முக்கிய தலைப்புகளாகக் கொடுக்கப்பட்டிருப்பின், ஒரு தலைப்பின் கீழ் உள்ள பதிவுகள், மற்ற இரு தலைப்புகளிலும் முழுமையாகக் குறிக்கப்பட்டோ குறுக்கு மேற்கோள் அளிக்கப்பட்டோ இருக்கும். ஆனால், ஓரினமான அட்டவணையில் ‘குடிசைப்பகுதி’, ‘குடும்ப நலத்திட்டம்’ ‘பிறப்பு வீதம்’ இம்மூன்றும் தனித்தனித் தலைப்புகளாக அகர வரிசையில் அமைந்திருக்கும். ஒவ்வொன்றும் அதனைச் சார்ந்து இருக்கக் கூடிய எல்லா இனங்களுடனும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மூன்று தலைப்புகளுக்கும் பொதுவான இடஞ்சுட்டிகளைக் கொண்டு தேவையான இனங்களின் விவரத்தை அறிய இயலும். {{larger|<b>கலைச்சொல் அட்டவணை:</b>}} அட்டவணை அமைக்கும்போது அதன் அமைப்பாளர் மூலக் கோப்புகளை ஆராய்ந்து அவற்றில் பயன்படுத்தப்படும் அரிய கலைச் சொற்களை முதலில் தயாரிப்பர். எடுத்துக்காட்டு: நூல்கள், இதழ்கள் முதலானவை. இம்முறையில் அமைக்கப்படும் அட்டவணை, சொல்லாக்க அட்டவணை (Derivative Index) எனப்படும். {{larger|<b>கருத்துப் படிவ அட்டவணை:</b>}} மூல ஆவணம் அல்லது நூல் என்ன உட்கருத்தைக் கொண்டுள்ளது என்பதை ஆராய்ந்து, அவ்வாவணத்தில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களுக்கு நெருங்கிய பொருள் குறித்தும் அட்டவணை உருவாக்க முடியும். இதிலுள்ள பதிவுகள் மூல ஆவணத்தில் கூறப்பட்ட சொற்களாகவே (Terms) இருக்கத் தேவையில்லை. {{larger|<b>கவனிக்க வேண்டிய குறிப்புகள்:</b>}} சொல் அட்டவணை (Word Indexing), கருத்துப்படிவ அட்டவணை (Concept Indexing) ஆகியவற்றை உருவாக்கும் போது சில சொற்களை ஆள்வதில் கவனம் தேவை. பொருளொப்புமையுடைய (Synonymic) சொற்களையும் உச்சரிப்பில் ஒற்றுமையுள்ள சொற்களையும் கவனமாக ஆய்ந்து அடைவுப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். பொருத்தமான கலைச்சொற்கள், கருத்துப் படிவங்கள் (Concepts) ஆகியவற்றை நன்கு ஆய்ந்து உருவாக்கப்பட்ட அட்டவணையே முழுமை பெற்ற ஒன்றாகக் கருதப்படும். குறிப்பிட்ட கலைச்சொல் அல்லது கருத்துப்படிவங்கள் எம்மொழியிலிருந்து பெறப்பட்டன என்பதைக் குறிப்பிடுவதும் இன்றியமையாதது. முறையான பொருளமைந்த சொற்களை அடைவுப் பதிவு செய்வதும், தேவையற்ற, பொருளற்ற சொற்களை விலக்குவதும் கட்டாயமான ஒன்றே. அதாவது எந்தக் கலைச்சொல்லை கலைச் சொல்லாகத் தேர்ந்தெடுப்பது அல்லது விடுவது என்பதை அறிந்து செயல்பட வேண்டும். முதலில், தொகுப்பின் தன்மை ஒரே தன்மை (Homogenous) படைத்ததா – ஒரு மொழியைச் (Monolingual) சேர்ந்ததா– நிகழ்வுகளைப் (Factual) பற்றியதா என்பனவற்றை உறுதி செய்யவேண்டும். இரண்டாவதாக, பயன்படுத்துவோரின் தகுதி நலன்களைப் பற்றி – படித்தவர்–ஆய்வாளர்– திறன் படைத்தவர் போன்ற செய்திகளை மனத்திற்கொண்டு அட்டவணை தயாரிக்க வேண்டும். மூன்றாவதாக, அட்டவணையை நூலின் கடைசிப் பகுதியில் சேர்ப்பதா தனியாக வெளியிடுவதா அல்லது பதிவுகளைச் சேர்க்க வகை செய்யும் விதத்தில் தொடரேட்டின் (Serial) ஒரு பகுதியாகத் தர வேண்டுமா என்பனவற்றை முதலிலேயே முடிவு செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். அட்டவணையைக் காண்போரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமையும் அட்டவணை, கீழ்க்காணும் தகுதிகளைப் பொதுவாகப் பெற்றிருக்கும். :{{overfloat left|align=right|padding=1em|அ)}} சரிபார்க்கப்பட்ட அல்லது அலகிட்டு வைத்துள்ள அடைவு அட்டை (Index Card) அழகுற அச்சிடப்பெற்றுப் பக்க எண்களைக் குறிக்கும் முறையில் இருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} அடைவுச் சொற்றொடர், துணைத் தலைப்பு, மற்றும் திருத்தப்பட்ட சொற்றொடர் ஆகிய-<noinclude> <b>வா.க. 1 _ 12</b></noinclude> 5lf8y8asid9ijffqo648t4d68xr62ug பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/214 250 618232 1839777 1828256 2025-07-07T03:27:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டவணை ...... கல்வி|178|அட்டவணை ...... கல்வி}}</noinclude>வற்றைத் துல்லியமான முறையில் அமைத்திருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|இ)}} அகரவரிசைப்படி, அமைந்துள்ள சொல்லடைவு மற்றும் சொற்றொடர் அடைவுப் பட்டியானது உட்பிரிவுகள், தலைப்புகளிலிருந்து வேறுபட்டது என்பதைத் தெளிவு செய்திருத்தல். {{larger|<b>தகுதிமிக்க அடைவுகளைத் தயாரித்தல்:</b>}} :{{overfloat left|align=right|padding=1em|அ)}} அட்டவணையில் எவ்விதக் கருத்துகளைத் திரட்டி எழுதியுள்ளோம் என்பதையும் அவை ஒத்த தன்மையுள்ளவையா வெவ்வேறு துறைத் தொடர்புள்ளவையா என்பதையும் எளிதில் விளங்கும் வகையில் அமைத்திருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} அட்டவணையிலுள்ள கலைச்சொற்களின் விவரங்களைத் தெளிவாக விளக்கியிருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|இ)}} ஒரு கலைச்சொல்லின், மூலம் (Origin) என்ன என்பதையும் அக்கலைச்சொல் எம்மொழியினின்று பெறப்பட்டுக் கையாளப்படுகிறதென்பதையும் குறிப்பிட்டிருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|ஈ)}} அட்டவணையைப் பயன்படுத்துவோர் யார்? எவ்வகையைச் சார்ந்தவர்? என்பதைக் கவனத்திற்கொண்டு உருவாக்கப்பட்டிருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|உ)}} உரிய காலத்தில் வெளியிடப்படுதல். :{{overfloat left|align=right|padding=1em|ஊ)}} அதன் விலை வாங்குவோரின் வாங்கும் சக்திக்குத் தக்கவாறு இருத்தல். :{{overfloat left|align=right|padding=1em|எ)}} அட்டவணையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வினாவிற்குச் சரியான விடையையும் விளக்கக் குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டிருத்தல். {{float_right|எல்.பி.வெ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>தில்லை நாயகம், வே.,</b> “இந்திய நூலக இயக்கம்”, பாரி நிலையம், சென்னை, 1981. <b>Maran, Margaret,</b> “Introduction to Cataloguing & the Classification of Books”, (A.L.A. 1943). <b>Tauber, Maurice, F.,</b> “Current Trends in Cataloguing Classification”, Library Trends, Vol 2. 1953. {{larger|<b>அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி:</b>}} கல்வியிலும், பொருளாதார நிலையிலும் தாழ்ந்தும் சமூக நிலையில் தனியாக ஒதுக்கப்பட்டும் இருந்த மக்களைத் தாழ்த்தப்பட்டோர் என்று 1931–ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன்வரை குறித்து வந்தனர். அத்தொடரை மக்கள் வெறுத்ததால் 1935–ஆம் ஆண்டு அரசுச் சட்டப்படி, 1936–ஆம் ஆண்டு முதல் அம்மக்கள் அட்டவணை வகுப்பினர் (Scheduled Castes) என அழைக்கப்பட்டனர். இவ்வகுப்பினர் கல்வி வாய்ப்புகளின்றி, சமூகத்தில் பிறருக்குத் தொண்டு செய்து கொண்டு கீழ் நிலையிலேயே இருந்து வந்தனர். தத்தம் சாதிக்குரிய வேலைகளையே பின்பற்றி வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியோடு இணைத்து இந்திய நாட்டுக்கு வந்த கிறித்துவ சமயத்தினர் சமயப் பணியோடு கல்விப் பணியையும் ஆற்றினர். அட்டவணை வகுப்பினரில் பலர் மதம் மாறியதுடன் கல்வியும் பெற்று உயர்நிலை அடைந்தனர். இதைக் கண்ட இராசாராம் மோகன்ராய், சுவாமி தயானந்தர் போன்ற இந்துமதச் சீர்திருத்தவாதிகள், தாழ்த்தப்பட்டவர்களுக்காக இரவுப் பள்ளிகள் நடத்தத் தொடங்கியதுடன் தங்கள் பள்ளிகளில் அட்டவணை வகுப்பினர் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டனர். கி.பி. 1879–ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட பிரம்மஞான சங்கத்தினரான (Theosophical Society) கர்னல் ஆல்காட்டும் (Col. Alcot) தாழ்த்தப்பட்டோரின் இழிநிலை கண்டு மனம் நெகிழ்ந்து, தமிழ்நாட்டில் பஞ்சமப் பள்ளிகள் (Panchama Schools) பலவற்றைத் தொடங்கினார். பின்னர், சென்னை அரசு அப்பள்ளிகளைத் தாழ்த்தப்பட்டோருக்கான மாதிரிப் பள்ளிகளாக ஏற்றது. 1902–ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் நடைபெற்ற தேசிய சமூக மாநாடு தாழ்த்தப்பட்டோர் கல்விக்கும் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மக்கள் வாழ்க்கை முறையில் காலப்போக்கில் உண்டான முன்னேற்றங்களும் தாழ்த்தப்பட்டோர் கல்விக்கு அடிகோலின. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இந்தியச் சங்கம், 1917–ஆம் ஆண்டுத் தீர்மானம் ஒன்றின் மூலம் தாழ்த்தப்பட்டோருக்குக் கட்டாயக் கல்வியை இலவசமாக அளிக்கவேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கார், எம்.சி. இராசா ஆகியோரும் அரசியல் நிலையிலும் கல்வி நிலையிலும் தாழ்த்தப்பட்டோர் நலத்துக்காகப் பெரும்பாடுபட்டனர், எரவாடா ஒப்பந்தத்தின் (1932) ஒன்பதாம் பிரிவு, ஒவ்வொரு மாநிலத்திலும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதி தாழ்த்தப்பட்டோர் கல்வி நலனுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியது. 1947-ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்றது. மாநிலங்களை நெறிப்படுத்தும் இந்தியக் குடியரசுச் சட்டம் 46-ஆம் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் கல்வி பொருளாதாரம் ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கு வழிகோலியது. விடுதலைக்குப்பின் இந்திய அரசினர் வருத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் கல்விக்காக மிகுந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்-<noinclude></noinclude> 6n2rlvqotndf53t3kr2wa6b4kmbjkpl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/215 250 618285 1839778 1828323 2025-07-07T03:32:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டவணை ...... கல்வி|179|அட்டவணை ...... கல்வி}}</noinclude>திய நாட்டின் ஒவ்வொரு மாநிலமும், அங்குள்ள தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் ஏற்பத் திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கியது. பள்ளிப் படிப்பில் இவ்வகுப்பைச் சார்ந்த பிள்ளைகளுக்குப் பெற்றோர் வருவாயைக் கவனிக்காமல் இலைசமாகப் புத்தகங்களும் குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன. பள்ளிக்குக் கொடுக்கப்படும் சிறப்புக் கட்டணமும் (Special Fees) தேர்வுக் கட்டணமும் (Examination Fees) இவர்களிடம் வாங்குவதில்லை. மேலும், பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு உரூ. 6,000/–க்கு உட்பட்டதாயின் விடுதிச் செலவுக்காக உரூ. 280/– முதல் உரூ. 350/– வரை உதவியளிக்கப்படுகிறது. இவ்வுதவிகளைத் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்தாம் வகுப்பில் உயர் மதிப்பெண் பெறும் அட்டவணை வகுப்பு மாணவருக்குச் சிறப்பான படிப்புதவித் தொகையும் காந்தி நினைவு உதவித் தொகையும் சிறப்புத் தகுதிக்கான உதவித் தொகையும் வழங்கப்படுகின்றன. கல்லூரிப் படிப்பு, முதுகலைப்படிப்புப் பெற விரும்பும் அட்டவணை வகுப்பு மாணவர்க்கு விடுதியில் தங்கிப் படிக்க 1971–72 முதல் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதற்குப் பெற்றோரின் வருவாய் எல்லை குறிக்கப்படவில்லை. இதனால் இவ்வகுப்பினரின் கல்விநிலை சீராக வளர்ந்து வருகிறது. {| | || || || || || || அட்டவணை வகுப்பினர் || || || || || || பிறர் |- | || || 1961 || || 1971 || || விழுக்காடு உயர்வு || || 1961 || || 1971 || || விழுக்காடு உயர்வு |- |தமிழ்நாடு || || 14.66 || || 21.82 || || 7.16 || || 35.09 || || 43.26 || || 8.17 |- |இந்தியா || || 10.27 || || 14.66 || || 4.39 || || 26.41 || || 31.97 || || 5.56 |} {{larger|<b>அட்டவணைப் பழங்குடியினரின் கல்வி:</b>}} முன்னேற்றமின்றி, கல்வியறிவின்றிக் காடுகளிலும் மலைகளிலும் தனிக்கூட்டமாகவும் சில பகுதிகளில் நாடோடிகளாகவும் வாழ்ந்த மக்களை மலை வாசியினர் என்றும் பழங்குடியினர் (Scheduled Tribes) என்றும் 1931–ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு முன்னர்க் குறித்து வந்தனர். ஆனால் 1935–ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட விதிகளின்படி வரன்முறைப்படுத்தி, அட்டவணையில் அவர்கள் பெயர்களைக் குறித்தனர். அது முதல் அம்மக்கள் அட்டவணைப் பழங்குடியினர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற பள்ளிகள் இவர்கள் வாழும் இடத்தில் அமையவில்லை. மலைப் பகுதிகளில் ஆங்காங்கே சிற்றூர்களில் கூட்டமாக வாழ்ந்ததால் ஓரிடத்தில் இருக்கும் பள்ளிக்குக் குழந்தைகள் வந்து சேர்தல் அரிதாக இருந்தது. இக்குடியினரின் பொருளாதார நிலையும் மிகவும் தாழ்வாக இருந்தமையால், தங்கள் குழந்தைகளை இவர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைகளில் ஈடுபடுத்தினர். மேலும், இவர்கள் பல்வேறு மொழிகளைப் பேசியதால் இவர்கள் மொழிகளில் பாடநூல்களும் இல்லை. இவர்கள் அறியாத அயல் மொழி மூலம் கற்றல் மிகவும் கடினமானதால், இவர்களது மொழியைக் கற்ற ஆசிரியர் கற்பிக்க வேண்டியதாயிருந்தது. இத்தகைய திறனும் ஈடுபாடும் உள்ள ஆசிரியர் மிகச் சிலரே உளர். இவை தவிர, கல்வியறிவு பெற்றால், சிறுவர்கள் பெரியோரை மதிக்கமாட்டார்கள் என்றும், இவர்களின் சிற்றூர் வாழ்க்கை சிதையும் என்றும் இக்குடியினர் கருதினர், ஆதலால், கல்வியறிவு பெறுவதில் இவர்கள் ஆர்வம் காட்டலில்லை. இவ்வகையான சிக்கல்கள் இருந்தமையால் இவர்கள் நீண்ட காலமாகக் கல்வியறிவு பெறாமலேயே இருந்தனர். 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிறித்தவச் சங்கத்தினரும் சமூகத் தொண்டாற்றும் நிறுவனத்தாரும் இக்குடியினருக்குக் கல்வியறிவு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அரசும் இவர்களுக்குக் கல்வி வழங்குவது பற்றிக் கருதத் தொடங்கியது. கி.பி. 1882–ஆம் ஆண்டு கல்வித்திட்டக்குழு இந்தியாவின் கல்வி நிலை பற்றி ஆய்ந்து கூறிய அறிக்கையில், அட்டவணைக் குடியினருக்குக் கல்வி வழங்குவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்கத் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. நாடு உரிமை பெற்ற பின்னர் இந்தியக் குடியரசுச் சட்டம் 46-ஆம் பிரிவு, அட்டவணைக் குடியினருக்குக் கல்வி வழங்குதல் மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான பொறுப்பென வலியுறுத்தியது. ஐந்தாண்டுத் திட்டங்களில், இவர்கட்குக் கல்வி வசதிகளும் வாய்ப்புகளும் வழங்க உதவும் வகையில் பெருநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப அட்டவணைக் குடியினரின் கல்விக்கு ஏற்பாடு செய்தது. {{nop}}<noinclude> <b>வா.க. 1 - 12அ</b></noinclude> mv6gb35ck8zoxy70offgy64huc1g5jb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/216 250 618286 1839779 1828324 2025-07-07T03:38:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டவால்பா|180|அட்டன்சேம்சு}}</noinclude>தமிழ்நாடு அரசு, அரிசன நலத்துறை (ஆதிதிராவிடர் நலத்துறை) என்னும் பெயருடன் தனியாக ஒரு துறையமைத்து, அதன்மூலம் அட்டவணை வகுப்பினர், அட்டவணைக் குடியினர் ஆகியோர் நலன்களைக் கவனித்து வருகிறது. பள்ளிகள் நடத்துதல், சம்பள உதவித் தொகையளித்தல், மாணவர் விடுதிகள் கட்டப் பொருள் உதவி செய்தல், புத்தகம், சீருடைகள் வாங்கப் பொருள் உதவி செய்தல், விடுதிகள் நடத்துதல், கல்லூரி மாணவர்கட்குத் தனிப் பயிற்சியளித்தல், கலைக் கல்லூரி, தொழில் நுட்பக் கல்லூரிகளில் பயிலக் குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்குதல் (அட்டவணைக் குடியினருக்கும், பழங்குடியினருக்கும் 18%) ஆகிய செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அட்டவணைக் குடியினரும் பழங்குடியினரும் இவ்வாய்ப்புகளைப் பெற்றுக் கல்வி கற்கத் தொடங்கினர். 1961–இல் இவர்களுள் 5.91% பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். 1971–இல் 9.81 விழுக்காட்டினரும், 1981–இல் 20.45 விழுக்காட்டினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர். அட்டவணைக் குடியினருள் கல்வியறிவு பெற்ற பெண்கள் தொகையும் பெருகி வருகிறது. 1971–இல் தமிழகத்தில் 6,800 பேர் கற்றிருந்தனர். ஆனால், 1981–இல் 35,829 பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். மத்திய அரசும் மாநில அரசும் சில செலவினங்களைச் சமமாகப் பங்கிட்டும் சில செலவினங்களை மாநில அரசு தனியாக மேற்கொண்டும் அட்டவணைக் குடியினரின் கல்வி நிலையை உயர்த்தி வருகின்றன.{{float_right|வி.க.}} {{larger|<b>அட்டவால்பா (கி.பி. 1500–1533)</b>}} என்பவர் இன்கா (Inca) பேரரசின் இறுதி அரசர். இவர் அட்டபாலிபா (Atapalipa) என்றும் கூறப்படுகிறார். இவர் தந்தையார் கி.பி. 1525–ஆம் ஆண்டு இறந்ததும், இவருக்கும் இவரது ஒன்று விட்ட சகோதரர் காசுக்கர் என்பவருக்கும் (Huascar) அரசுரிமைப் போர்கள் மூண்டன. அவரை முறியடித்து அட்டவால்பா பட்டம் ஏற்றார். கி.பி. 1532–ஆம் ஆண்டு இசுபெயின் (Spain) நாட்டிலிருந்து பெரு நாட்டிற்கு (Peru) வந்த பிசாரோ பிரான்சிசுகோ (Pizarro Francisco) என்பவர், அட்டவால்பாவைக் (Atahualpa) கிறித்தவராக்க முயன்றார். அட்டவால்பா அவ்வேண்டுகோளை ஏற்காததால், பிசாரோவும் அவன் ஆட்களும் குறைந்தது 4000 இன்காக் குடிமக்களைக் கொன்று குவித்ததுடன் அட்டவால்பாவையும் கைது செய்தனர். இதனைக் கண்டு அஞ்சிய அட்டவால்பா பிணைய மீட்பாக ஓர் அறையைப் பொற்காசுகளால் நிரப்பிப் பிசாரோவிடம் தந்து, தம்மை விடுவிக்கும்படி வேண்டிக் கொண்டார். பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட பின்னும் பிசாரோ அட்டவால்பாவைக் கசமார்க்கா என்னுமிடத்தில் கி.பி. 1833–ஆம் ஆண்டில் கொன்று விட்டார். {{larger|<b>அட்ட வீரட்டத் தலங்கள்:</b>}} சிவபெருமான் வீரச் செயல்கள் நிகழ்த்திய தலத்தினை வீரட்டானம் (வீரஸ்தானம்) என்பர். அவை எட்டுத் தலங்களில் நிகழ்ந்தமையினால், அவ்வெட்டுத் தலங்களையும் அட்டானம் (அஷ்ட–வீரஸ்தானம்) எனக் கூறுவர். வீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டுத் தலங்களையும் அட்ட வீரட்டானம் (அஷ்ட-வீர-ஸ்தானம்) என்றும் வீரட்டம் (வீர-அஷ்டம்) என்றும் நூல்கள் குறிப்பதுண்டு. சிவபெருமான் எட்டு வீரச் செயல்களைச் செய்ததாகத் திருமூலர் திருமந்திரம் முதலிய சைவசமய நூல்கள் கூறும். ‘பதிவலியில் வீரட்டம் எட்டு’ என்று திருமூலர் திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரத்தில் எட்டுப் பாடல்கள் அமைந்திருக்கக் காணலாம். அவ்வீரச் செயல்கள், முறையே பிரமனின் தலையை அரிந்தது, அந்தகன் என்னும் கொடிய அசுரனை அழித்தது, திரிபுரங்களை எரித்தது, தக்கனைத் தடிந்தது, சலந்தரன் என்னும் அசுரனைக் கொன்றது, கசாசுரன் என்னும் யானை முகம் கொண்ட அசுரனின் தோலை உரித்தது, காமதேவனைக் காய்ந்தது, எமதருமனைக் காலால் எற்றியது என்பனவாகும். இந்த அட்ட வீரட்டத் தலங்களையும் திருநாவுக்கரசர், “காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்” எனத் தொடங்கும் தம் திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார். சிவபெருமான் நிகழ்த்திய எட்டு வீரச் செயல்களும் அவை நிகழ்ந்த தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களும் வருமாறு: {| | || {{larger|<b>வீரச்செயல்கள்</b>}} || || {{larger|<b>தலங்கள்</b>}} |- |1. || பிரமன் தலை அரிந்தது || || திருக்கண்டியூர் |- |2. || அந்தகாசுரனை அழித்தது || || திருக்கோவலூர் |- |3. || திரிபுரம் எரித்தது || || திருவதிகை |- |4. || தக்கனைத் தடிந்தது || || திருப்பறியலூர் |- |5. || சலந்தராசுரனைக் கொன்றது || || திருவிற்குடி |- |6. || யானையைத் தோல் உரித்தது || || திருவழுவூர் |- |7. || காமனைக் காய்ந்தது || || திருக்குறுக்கை |- |8. || இயமனை எற்றியது || || திருக்கடவூர் |} {{right|ந.ரா.மு.}} {{larger|<b>அட்டன்சேம்சு (கி.பி. 1726–1797)</b>}} என்பவர் நில உட்கூற்றியல் நூலாசிரியரும் இயற்பியல் அறிவியலாரும் ஆவார். இவர் இக்கால மண்ணூல் ஆய்வுக் குழுவிற்கு அடிகோலியவர் என்று கருதப்படுகிறார். ஓருருப் படுத்துதவிய கோட்பாடு (Uniformitarianism)<noinclude></noinclude> h3qx90dpahxy0icoa4feaw5tx8j73h2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/217 250 618287 1839780 1828325 2025-07-07T03:46:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டாக்கு|181|அட்டாதச இரகசியங்கள்}}</noinclude>என்பது இவர் அறிவியல் உலகுக்குக் கொடுத்த நன்கொடையாகும். அதன்படி பண்டைக்காலத்தில் பூமியை உருவாக்க உறுதுணையான மண்ணியல்புகளும் இக்காலத்தில் செயல்படும் கூறுகளும் ஒன்றானவையே என்பதாகும். அட்டன் கி.பி. 1726–ஆம் ஆண்டு எடின்பரோவில் பிறந்தார். வழக்குரைஞராக வாழ்வைத் தொடங்கி வெற்றிபெற இயலாத நிலையில், எடின்பரோ, பாரிசு, இலெய்டன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்றார். கி.பி. 1749–இல் இலெய்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை (எம்.டி) பட்டம் பெற்றாலும் இவர் மருத்துவராகப் பணி செய்தாரில்லை. பெர்ளிக்கிலிருந்த தம் பண்ணையில் வேளாண்மை செய்ய முற்பட்டார். இவர் ஆய்வு முறைகள் சீரிய பலனளித்தமையால் பதவியிலிருந்து விலகி, எஞ்சிய நாட்களை நில உட்கூற்றியல் ஆய்வுகளில் பயன்படுத்தினார். கி.பி. 1797–ஆம் ஆண்டு அட்டன் சேம்சு (Hutton James) எடின்பரோவில் காலமானார். பூமியின் அமைப்புக்கு வெப்பத்தின் பங்கு சீரியதாகும் என்பது இவரது கருத்து. எரிமலைப் பாறையும் கருங்கல் பாறையும் உருகிய திரள்களிலிருந்து உருவானதே பூமி என்று இவர் நம்பினார். ஏனைய அறிவியல் வல்லுநர்களுள் பலர் பூமியின் மீது ஒரு காலத்தில் தண்ணீரே நிறைந்திருந்ததென்றும், நீரின் அடியில் கனிமங்கள் நிலையாகத் தங்கியதாலேயே பாறைகள் அனைத்தும் உருவாயினவென்றும் எண்ணியிருந்தனர். பூமியானது இயற்கைக் கூறுபாடுகளினால் படிப்படியாக மாறியதென்றும், அதே கூறுபாடுகளினால் தொடர்ந்து மாறும் என்றும் இவர் தம் கொள்கையை நிலைநாட்டினார். ஏனைய அறிவியல் வல்லுநர்கள், ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே சமயத்தில் முழுமையாக உருவாகியதென்று நம்பியிருந்தனர். {{larger|<b>அட்டாக்கு</b>}} பாகிசுத்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அட்டாக்கு மாவட்டத்தின் தலைநகர், சிந்து நதிக் கரையில் அமைந்துள்ள இந்நகரம் பெசாவரிலிருந்து ஏறத்தாழ 90 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அட்டாக்கிலுள்ள (Attock) மலைகளுக்கிடையே ஓடும் சிந்து ஆறு இந்நகருக்கு அழகிய தோற்றத்தினை அளிக்கிறது. அக்பர் இங்கு ஒரு கோட்டையைக் கட்டியுள்ளார். இந்நகருக்கு அருகே எரிபொருள் (Petroleum) எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. {{larger|<b>அட்டாதச இரகசியங்கள்</b>}} என்பது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களின் பொருளையும் வேதாந்தங்களின் நுண்பொருளையும் கூறும் பதினெட்டு அரிய வைணவ நூல்களின் தொகுப்பாகும். இதன் ஆசிரியர் வைணவராகிய பிள்ளை லோகாசாரியர் (1264–1369). இவர் தந்தை வடக்குத் திருவீதிப் பிள்ளை; தாயார் சீரங்க நாச்சியார், தென்னாட்டில் முடும்பை என்னும் ஊரில் ஐப்பசித் திருவோணத்தில் பிறந்தார். இவர் நூல்கள் அனைத்தும் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் உள்ளன. நூல்கள் வருமாறு:- (1) தனிப்பிரணவம்: இந்நூல் எட்டெழுத்தாலான திருமந்திரத்தின் பொருளை விவரிக்கிறது. (2) தனித்துவயம்: மந்திர இரத்தினமான துவயத்தின் பொருளை இந்நூல் விவரிக்கிறது. துவயம் என்பது “ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே” “ஸ்ரீமதே நாராயணாய நம:” என்னும் இரு மந்திரங்களாகும். (3) தனிச்சரமம்: பகவத்கீதையின் சரமசுலோகத்தின் பொருளை இந்நூல் விவரிக்கிறது. (4) யாத்ருச்சிகப்படி: இந்நூல் முன்னர்க் குறித்த மூன்று நூல்களிலுள்ள மந்திரங்களின் பொருள்களையே மிகவும் விரிவாகக் கூறுகிறது. (5) பரந்தபடி: முதல் மூன்று நூல்களின் விளக்கமாகும். (6) சிரியபதிபடி: மேற்கூறிய மூன்று மந்திரங்களின் பொருள்களையே மிகவும் சுருக்கமுமின்றி மிகவும் விரிவுமின்றி இடைநிலையில் விளக்கம் செய்கிறது. இந்நூலில் வடமொழிச்சொற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. (7) முமுட்சுப்படி: மேற்கூறிய மூன்று மந்திரங்களையே மூன்று பிரிவுகளில் கூறுகிறது. இது மிகச் சுருக்கமும் மிக விரிவுமின்றி வடமொழிச் சொற்கள் அதிகமின்றிச் சூத்திர வடிவில் அமைந்துள்ளது. மோட்சமடையும் இச்சையுடையவன் முமுட்சு. அவன் அறிய வேண்டிய தன்மை, வழி, குறிக்கோள் என்னும் மூன்று இரகசியங்களை இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் பெற்றது. (8) தத்துவத்திரயம்: நூற்பாவாக அமைந்துள்ள இந்நூல் சித்து, அசித்து, ஈசுவரன் என்னும் மூன்று தத்துவங்களை விரித்துக் கூறுகிறது. தத்துவம் என்பது ‘உண்மைப் பொருள்’ எனப் பொருள்படும். (9) அர்த்த பஞ்சகம்: இந்நூல் உயிரின் தன்னிலை (சுயசொரூபம்), இறைவன் நிலை (பரசொரூபம்) ஒருவன் விரும்பும் பேற்றின் நிலை (புருடார்த்த ரூபம்), தான் பெறும் பயனை அடைய ஒட்டாமல் தடுக்கும் தடையின் தன்மை (விரோதி சொரூபம்), தடையைப் போக்கி இறைவனை அடைவதற்குரிய வழியில் தன்மை (உபாய சொரூபம்) ஆகிய ஐந்து பொருள்களின் தன்மையை விவரித்துக் கூறுகிறது. இவ்வைந்து பொருள்களைக் கூறுவதால் இதற்கு இப்பெயர் அமைந்தது. (10) தத்துவசேகரம்: தத்துவம் என்பது திருமாலைக் குறிக்கிறது. சேகரம் என்பது அணி விசேடம், இந்நூல் திருமாலே பரம்பொருள் என்பதனை மறைகள் முதலானவற்றிலிருந்து தகுந்த சான்றுடன் உறுதிப்படுத்துகிறது. உயர்நிலை முதலானவையும் கூறப்பட்டிருப்பினும் இதன் காரண-<noinclude></noinclude> kovw94mdl0jfpgsqsehelx19lu2qybs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/218 250 618403 1839781 1828722 2025-07-07T03:55:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டாதச இரகசியங்கள்|182|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்}}</noinclude>மாகவே இப்பெயர் அமைந்துள்ளது. (11) பிரபந்த பரித்திராணம்; தன்னை அடைந்தவர்களைக் காத்தல் திருமால் ஒருவருக்கே இயல்பானது. மற்றெவரும் அதற்குரியரல்லர் என்பதனை மேற்கோள்களுடன் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. (12) நவவிதசம்பந்தம்; இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தந்தை, மகன் (பிதா, புத்திர), காப்பவன், காக்கப்படுவது (ரட்சக, ரட்சீய), அதிகாரி, சேவகன் (சேடன், சேட்டி), கணவன், மனைவி (பர்த்துரு, பாரியை), அறிபவன், அறியப்படுவது (ஞாத்துரு, ஞேய), உடைமை, உடையவன் (சுவ, சுவாமி) தாங்குபவன், தாங்கப்படுவது (ஆதார, ஆதேய), உடல், உடலில் உறைபவன் (சரீர, சரீரி) நுகர்பவன், நுகரப்படுவது (போத்துரு, போக்கிய) என்னும் ஒன்பது வகை உறவுகளை இந்நூல் விவரித்துக் கூறுகிறது. (13) நவரத்தினமாலை: ஒன்பது வகை இரத்தினங்களாலான மாலையைப் போன்று ஒன்பது வகையான பொருள்களை ஒருவன் நினைத்திருக்க வேண்டிய முறையை இந்நூல் கூறுகிறது. அவையாவன: தான், தனக்குப் பகையாய் நிற்கும் உடல், உடலினைப்பற்றி நிற்கும் உறவினர், ஊழ் வினையால் ஏற்பட்ட பிறப்பில் அல்லலுறும் மக்கள், தெய்வங்கள், சீவைணவர்கள், ஆசாரியன், பிராட்டி, இறைவன். (14) சாரசங்கிரகம்: துவயம் என்பது மறையின் சாரமாம். இந்நூல் அதனை விளக்கிக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. துவயத்தில் அடங்கிய பொருள்களைக் கூறுகிறது. (15) பிரமேய சேகரம்: பிரமேயம் என்பது சான்றுகளினால் அறியப்படுவது, இறைவன் திருவருளைப் பெற்ற ஓருயிர் அவன் திருவடிகளில் ஆற்றும் தொண்டே அஃது அடையும் பயன் என்பதை இந்நூல் விளக்கிக் கூறுகிறது. (16) சம்சார சாம்ராச்சியம்: சம்சாரமென்னும் அரசாட்சி பற்றிக் கூறுகிறது. மன்னனுக்குப் படைவீடு போன்றது ஒருவனுக்கு அவனது உடல். இந்த உடலிலிருந்து ஆளும் ஆன்மாவை இறைவன் தன் திருவருளாலே திருத்திச் சேர்த்துக் கொள்ளுவான் என்று விளக்கிக் கூறுகிறது. (17) அருச்சிராதி கதி: அருச்சித என்பதற்குத் தேவர் என்பது பொருள். தேவர் முதலானவர் எதிர் கொள்ள ஒருவன் போகும் வழியான முக்தி நெறியைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. பிரமேய சேகரம் என்னும் நூலில் சுருங்கக் கூறியதை இந்நூல் விரித்துக் கூறுகிறது. திருவாய் மொழியிலுள்ள ‘சூழ் விசும்பணி முகில்’ என்று தொடங்கும் திருப்பாசுரம் இப்பொருளைப் பற்றியே கூறுகிறது. (18) சீவசன பூடணம்: இரத்தினாபரணம் என்பது இரத்தினங்கள் மிகுந்த அணிகலன், அதுபோலவே ஆசாரிய பரம் வசனங்களை மிகுதியாகக் கொண்டதாகவும் படிப்பவர்க்குப் பேரொளியைத் தருவதாகவும் இருப்பதனால், இந்நூல் இப்பெயர்பெற்றது. இது தென்கலை வைணவ ஆசாரிய பரம்பரையினரின் வழிமுறைகளைத் தெளிவாக விளக்கிக் கூறுகிறது. இந்நூலின் சிறப்பு மணவாள மாமுனிகளின் உபதேசரத்தின மாலையில் நன்கு கூறப்பட்டுள்ளது. இவற்றுள் முமுட்சுப் படி, தத்துவத்திரயம் ஆகியவற்றுக்கு மணவாள மாமுனிகளே உரை எழுதி இருப்பது இந்நூல்களின் சிறப்பைக் காட்டும்.{{float_right|ந.க.}} {{larger|<b>அட்டாவதானம்</b>}} என்பது ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு வகையான அறிவுச் செயல்களில் தம் கவனத்தைச் செலுத்தி அவற்றில் ஈடுபடும் ஆற்றலைக் குறிக்கும். இலாட சங்கிலி இணைத்தல், இரண்டொருவர் வினாவும் வினாக்களுக்கு விடையளித்தல், சொக்கட்டான் விளையாடுதல், முதுகிலிட்ட பரற்கற்களை எண்ணுதல், சதுரங்கமாடுதல், கொடுத்த குறிப்பிற்கேற்பப் புதிய செய்யுளியற்றல், கண்ட பத்திரிகை கணிதம் கூறுதல், குதிரையடி கூறுதல் போன்ற செயல்களில் ஒரே நேரத்தில் ஈடுபடுவது இக்கலையாகும். இவ்வாற்றல் வாய்க்கப் பெற்றோர் அட்டாவதானி எனச் சிறப்பிக்கப் பெற்றனர். இக்கலையில் எண்வகை ஆற்றலுக்கு மேலாகப் பத்து, பதினாறு வகை ஆற்றல்களைப் பெற்று விளங்கினோரும் இருந்துள்ளனர். திருக்குறள் புலமையில் இவ்வாறு எண் வகை நினைவாற்றலைப் பெருக்கி விளங்குபவரும் உள்ளனர். {{larger|<b>அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவராக விளங்கியவர். அட்டாவதானத் திறமை வாய்ந்து விளங்கியமையால் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் என்று அழைக்கப் பெற்றார். அட்டாவதானம் என்பது ஒரே நேரத்தில் எட்டுவகையான செயல்களில் சிந்தை செலுத்தி, அவற்றில் ஈடுபட்டுச் செயற்படும் ஆற்றலாகும். அவ்வாற்றல் பெற்றோர் அட்டாவதானி எனப்படுவர். கிருட்டிண ஐயங்கார் நாலு மந்திரி கதை, பஞ்ச தந்திரம், வீரகுமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். ‘விடநிக்கிரக சிந்தாமணி’ என்னும் நூல் ‘விடநிக்கிரக நிகண்டு’ என்றும் வழங்கப்பெறும். இவரது ‘பஞ்ச தந்திரம்’ என்னும் நூல் செய்யுள் வடிவினது. நாலு மந்திரி கதை கி.பி. 1869–ஆம் ஆண்டு எழுதப்பட்டது. {{larger|<b>அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னையில் வாழ்ந்த தமிழ்ப் புலவராவார். ஒரே நேரத்தில் எட்டு வகையான செயல்களில் ஈடுபட்டுச் செயல்படத்தக்க அட்டாவதானம் எனப்படும் நினைவாற்றல் பெற்றவராக விளங்கியமையால், இவர் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் என்று அழைக்கப் பெற்றார். இவர் சென்னை, சூளைப் பகுதியில்<noinclude></noinclude> p3gut2zhtj99v8ivn2ypxlfjuxenl1l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/219 250 618437 1839782 1828918 2025-07-07T04:02:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்டிகா|183|அட்மிரால்டி தீவுகள்}}</noinclude>வாழ்ந்தார்; சென்னை அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்; நகைச்சுவை மலியப்பேசும் ஆற்றல் மிக்கவர். இராமாயணம், பாரதம் முதலிய நூல்களைப் பற்றிச் சொற்பொழிவாற்றுவதில் இவர் சிறந்து விளங்கினார். வின்சுலோ அகராதியினை உருவாக்கியவர்களுள் இவரும் ஒருவராவார். தமிழில் ‘விநோத ரச மஞ்சரி’ என்னும் உரைநடை நூலினை எழுதியுள்ளார். கம்பர், ஒட்டக்கூத்தர், ஔவையார், புகழேந்திப் புலவர், காளமேகப்புலவர் போன்ற பல புலவர்களின் வரலாறுகளை, அவர்தம் தனிப் பாடல்களோடு இயைத்து வரைந்துள்ளார். இப்புலவர்களைப் பற்றிச் செவிவழிச் செய்தியாக வழங்கப்பட்டவற்றையும் இணைத்துள்ளார். தெய்வக் கொள்கை, கற்பு நிலைமை போன்ற சில தமிழ்க் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. வீரமாமுனிவர் எழுதிய அவிவேக பூரண குரு கதையும் இதன்கண் உள்ளது. இவர் கதைகளுள் கூறப்படும் வரலாறுகள் பற்றிய உண்மை எதுவாயினும், இவை சுவையுடையனவாக உள்ளன. விநோதரச மஞ்சரி என்னும் பெயருக்கேற்பச் சுவைமிக்க செய்திகள் பல இவ்வுரைநடை நூலில் உள்ளன. {{larger|<b>அட்டிகா</b>}} என்பது கிரீசு நாட்டின் மையத்தில் ஆதன்சு நகரைச் சுற்றியுள்ளதொரு பகுதி. இப்பகுதி கிறித்தவ ஆண்டு தொடங்குவதற்கு முன்னரே இருந்ததெனக் கருதுகிறார்கள். அட்டிகா (Attica)வில் வாழ்ந்திருந்த பன்னிரு வகுப்புகளைத் தீசியசு (Theseus) என்பார் இணைத்துப் பண்டைக்கால ஆதன்சு நகரை நிலைநாட்டினார் என்பது மரபு வழியாக வரும் செய்தியாகும். அட்டிகா இன்றைய கிரீசில் நிருவாகப் பகுதிகளுள் ஒன்றாகும். இதன் பரப்பளவு 2380 ச.கி.மீ. இது பண்டைய அட்டிகாவின் பரப்பளவை விடப் பெரியது என்பர். இங்குக் கோதுமை, ஒலிவ எண்ணெய், திராட்சைச் சாற்றிலிருந்து உற்பத்தியாகும் மதுவகை, அத்திப்பழம் போன்றவை கிடைக்கின்றன. இதன் அண்மையிலுள்ள இலாவிரியானில் (Lavrion) ஈயம், துத்தநாகம், இரும்புத் தாதுகள் போன்றவை அகப்படுகின்றன. {{larger|<b>அட்டிலா</b>}} உரோமானியப் பேரரசின்மீது கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் படையெடுத்து, மங்கோலிய இனங்களை இணைத்தவர். இவர் ஊண (Huna) மரபினர். அங்கேரியைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இவர் வென்றார். ஊணர்களின் ஆட்சியைத் தான்யூபு (Danube) ஆற்றங்கரையிலிருந்து காசுபியன் (Caspian) கடல்வரையிலும் பரப்பினார். கிழக்கு, மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த பல காட்டுவாழ் இனமக்களை அட்டிலா (Attila) வெற்றி கண்டார். தம் தாக்குதலைத் தவிர்க்க வேண்டுமாயின், ஆண்டுதோறும் கப்பம் கட்டவேண்டுமெனக் கிழக்கு உரோமானியப் பேரரசை இவர் வற்புறுத்தினார். அப்பேரரசின் தென்கிழக்கு மாநிலங்களை அடக்கிக் கொள்ளையடித்தார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 219 |bSize = 480 |cWidth = 189 |cHeight = 146 |oTop = 136 |oLeft = 242 |Location = center |Description = }} {{center|அட்டிலா}} பின்னர், அட்டிலா தம் கவனத்தை மேற்கு உரோமானியப் பேரரசின்மீது திருப்பினார். கி.பி. 450–ஆம் ஆண்டில் உரோமானியப் பேரரசர் மூன்றாம் வேலண்டினியனின் சகோதரி கோனோரியா என்பாளை மணந்துகொண்டார். அவளுடைய சீதனமாக மேற்கு உரோமானியப் பேரரசில் பாதியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டார். ஆனால் வேலண்டினியன் மறுத்துவிட்டார். வெகுண்ட அட்டிலா, கால் (Gaul) நாட்டின்மீது குறாவளித் தாக்குதல் நடத்தினார். ஆனால் உரோமானியர்களையும் காட்டுமிராண்டிகளையும் கொண்டிருந்த கூட்டுப் படையொன்று, கி.பி. 451–இல் இவரைத் திராய்சு என்னும் இடத்தில் தடுத்து நிறுத்தியது. இவர் கிழக்கில் இரைன் ஆற்றுப் பக்கம் பின்வாங்கினார். கி.பி. 452–இல் இத்தாலியின் மீது படையெடுத்து, போ (Po) ஆற்றுக்கு வடபால் அமைந்துள்ள பல நகரங்களைக் கைப்பற்றியும் அழிந்தும் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டார். ஆனால் பஞ்சமும் பிணியும் இவர் படைவீரர்களைப் பின்வாங்க வைத்தன. கி.பி. 453–ஆம் ஆண்டில் அட்டிலா காலமானார். அடுத்த ஆண்டில் ஊணர்கள் ஆசியாவிற்குத் திரும்பினர். {{larger|<b>அட்மிரால்டி தீவுகள்</b>}} நியூ கினியின் வடக்கிலுள்ள தீவுக் கூட்டம். பசுபிக்குப் பெருங்கடலின் தென்மேற்கில் உள்ள பிசுமார்க்குத் தீவுக்குழுவில்<noinclude></noinclude> qi8mv0n80t8ygmj18bwdyhzfxinx6io பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/220 250 618438 1839783 1828953 2025-07-07T04:08:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்மிரால்டி தீவுகள்|184|அட்லாசு மலைகள்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 220 |bSize = 480 |cWidth = 174 |cHeight = 170 |oTop = 62 |oLeft = 58 |Location = center |Description = }} {{center|அட்மிரால்டி தீவுகள் - மானசு தீவு}} அமைந்துள்ள அட்மிரால்டி தீவுகளை மானசு (Manus) என்றும் கூறுவர். இத்தீவுகளின் மொத்தப் பரப்பு 2070 ச.கி.மீ. உள்ளூர் வாசிகளை மாலனேசியர் (Melanesians) என்பர், கி.பி. 1616–இல் இதனை முதன் முதலாகக் கண்டுபிடித்தவர் வில்லெம் சூட்டன் என்னும் தச்சு (Dutch Sailor) மாலுமியாவார். கி.பி. 1884–இல் இத்தீவுகளைச் செருமனி உரிமை பாராட்டியது. முதல் உலகப் போரின்போது இத்தீவுகளை ஆசுதிரேலியர் கைப்பற்றினர். இரண்டாம் உலகப் போரின் போது சப்பான் இவற்றைக் கைப்பற்றியிருந்தது. அமெரிக்கப் படைத் தளபதி மக்கார்தர் மானசுத் தீவினை 1944–இல் மீண்டும் கைப்பற்றி மேற்கு நாடுகளின் படையெடுப்பு அடித்தளமாக இதனைப் பயன்படுத்திக் கொண்டார். பாப்புவா நியூகினி (Papua New Guinea) என்னும் விடுதலை பெற்ற நாட்டின் பகுதியாக இத்தீவுகள் மாறின. மானசுத் தீவு கரடுமுரடான மலைத் தொடர்களைக் கொண்டது. வெப்ப மண்டலமாதலின் இங்கு நல்ல மழை பொழிகிறது. ஆண்டுக்கு 380 செ.மீ. மழை பெய்கிறது. இங்குள்ள குறுகிய ஆறுகள் வேகமாகச் செல்லக் கூடியவை. தாழ்நிலங்களில் சதுப்பு நிலக் காடுகளும், பெருந்தென்னந்தோப்புகளும் உள்ளன. மலஞ்சுனை, காச்சைக்கிழங்கு, வாழை, அன்னாசி, சவ்வரிசி, முதலானவை இத்தீவுகளில் பயிரிடப்படும் பொருள்களாகும். மானசுத்தீவின் கீழ்க்கோடியிலுள்ள இலோரங்கா (Lorengau) என்னும் நகர் சிறந்த துறைமுகமும் நிருவாக மையமுமாகும். மக்கள் தொகை 26,036. தலைநகர் இலோரங்கா. {{larger|<b>அட்மிரால்டி மலைகள்</b>}} தென் துருவத்திலுள்ள அண்டார்க்டிகா கண்டத்தில் உள்ள மலைகள். அக்கண்டத்தின் தெற்கே இராசு (Ross) கடலுக்கு வடமேற்கே இம்மலைகள் அமைந்துள்ளன. மேலும் இம்மலைத்தொடர் விக்டோரியாலாந்துவின் வட கடற்கரையையொட்டிப் பரந்துள்ளது. இதில் அமைந்துள்ள மிக உயர்ந்த மலையுச்சி சபைன் (Mt. Sabine) என்பதாகும், இதன் உயரம் 3,007 மீ. அட்மிரால்டி மலைகளை (Admiralty Mountains) சர் சேம்சு இராசு (Sir James Ross) என்பார் கி.பி. 1841–ஆம் ஆண்டில் தம் அண்டார்க்டிகா பயணத்தின்போது கண்டறிந்தார். {{larger|<b>அட்லாசு மலைகள்</b>}} வடமேற்கு ஆப்பிரிக்காவின் குறுக்கே செல்லும் மலைகள், 2,410 கி.மீ. நீளமுள்ளவை. அட்லாண்டிக்குப் பெருங்கடலிலுள்ள கேப் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 220 |bSize = 480 |cWidth = 387 |cHeight = 170 |oTop = 391 |oLeft = 68 |Location = center |Description = }} {{center|அட்லாசு மலைகள்}}<noinclude></noinclude> 0pwyhe23vqebv7zy7esusmf95ax0x9m பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/85 250 619219 1839711 1833880 2025-07-07T00:22:46Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|திருக்குறள் தெளிவுரை||அறம்}}</noinclude> {{center|{{larger|<b>மெய்யுணர்தல்</b>}}}} மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.{{float_right|1}} மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும்.{{float_right|2}} ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகைவிட, அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.{{float_right|3}} மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்துபுலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்துவகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.{{float_right|4}} எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.{{float_right|5}} கற்க வேண்டியவற்றைக் கற்று, இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர், மீண்டும் இப் பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்.{{float_right|6}} ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ண வேண்டா.{{float_right|7}} பிறவித் துன்பத்திற்குக் காரணமான் அறியாமை நீங்குமாறு, முத்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.{{float_right|8}} எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.{{float_right|9}} விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால், துன்பங்கள் வாராமற் கெடும்.{{float_right|10}}<noinclude>{{rh|72||}}</noinclude> eqjggzjq6rs3s2gwd250lw8e7vpbjv9 பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/86 250 619220 1839769 1833886 2025-07-07T02:22:30Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|துறவறவியல்||அதிகாரம் 36}}</noinclude>{{center|{{larger|<b>மெய்யுணர்தல்</b>}}}} <poem>பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருவானாம் மாணாப் பிறப்பு{{float_right|351}} இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு{{float_right|352}} ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து{{float_right|353}} ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு{{float_right|354}} எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு{{float_right|355}} கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி{{float_right|356}} ஓர்த்துள்ளம் உள்ளது உணரின ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு{{float_right|357}} பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு{{float_right|358}} சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்{{float_right|359}} காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்{{float_right|360}}</poem><noinclude>{{rh||73|73}}</noinclude> 1pp51qmwdedsr7771quko6zxcei9byn பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5 250 619541 1839568 1839489 2025-07-06T13:35:26Z Booradleyp1 1964 1839568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|12em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} {{larger| 1. ஆண்பாற் பகுதி:}} </b> {{float_right|1}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|'''(1) பகலாட்டு''']] | {{DJVU page link|1|14}}}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் (சேலம்வட்டார முறை) {{float_right|17}} }} <b>௨. தெல்</b> {{float_right|19}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|'''௩. சில்லாங் குச்சு''']] | {{DJVU page link|20|12}}}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}}}} {{left_margin|6em| I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|<b>௪. பந்து</b>]]| {{DJVU page link|27|12}}}} {{left_margin|6em| I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] | {{DJVU page link|30|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] | {{DJVU page link|31|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] | {{DJVU page link|32|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] | {{DJVU page link|33|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> pr9pqlmxo6v0e4ny5tgnez3dptanjca பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/6 250 619542 1839889 1839442 2025-07-07T07:55:32Z Info-farmer 232 {{float_right|1}} 1839889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|௯. பம்பரம்]] 35 I. ஓயாக்கட்டை {{float_right|1}} II. உடைத்த கட்டை {{float_right|1}} III. பம்பரக்குத்து 36 IV. இருவட்டக்குத்து 37 V. தலையாரி 38 க0. பட்டம் 39 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|(2) இரவாட்டு]] 40 ௧. குதிரைக்குக் காணங் கட்டல்]] {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|௨. வண்ணான் தாழி]] 43 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|௩. ‘சூ’ விளையாட்டு]] 46 (க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|1}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|(3) இருபொழுதாட்டு]] 49 க. கிளித்தட்டு {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|௨. பாரிக்கோடு]] 54 I. காலாளம்பாரி {{float_right|1}} II. எட்டாளம்பாரி {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௩. அணிற்பிள்ளை]] 55 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௪. சடுகுடு]] 57 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] 61 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௬. பூக்குதிரை]] 62 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௭. பச்சைக்குதிரை]] 63 I. ஒருவகை {{float_right|1}} II. மற்றொருவகை {{float_right|1}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௮. குதிரைச் சில்லி]] 64 }} {{nop}}<noinclude></noinclude> n4ti6i002zwgddqbgsyasofyc2he8vo 1839890 1839889 2025-07-07T07:56:46Z Info-farmer 232 - துப்புரவு 1839890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|௯. பம்பரம்]] 35 I. ஓயாக்கட்டை {{float_right|❠}} II. உடைத்த கட்டை {{float_right|❠}} III. பம்பரக்குத்து 36 IV. இருவட்டக்குத்து 37 V. தலையாரி 38 க0. பட்டம் 39 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|(2) இரவாட்டு]] 40 ௧. குதிரைக்குக் காணங் கட்டல்]] {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|௨. வண்ணான் தாழி]] 43 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|௩. ‘சூ’ விளையாட்டு]] 46 (க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|❠}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|(3) இருபொழுதாட்டு]] 49 க. கிளித்தட்டு {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|௨. பாரிக்கோடு]] 54 I. காலாளம்பாரி {{float_right|❠}} II. எட்டாளம்பாரி {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௩. அணிற்பிள்ளை]] 55 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௪. சடுகுடு]] 57 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] 61 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௬. பூக்குதிரை]] 62 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௭. பச்சைக்குதிரை]] 63 I. ஒருவகை {{float_right|❠}} II. மற்றொருவகை {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௮. குதிரைச் சில்லி]] 64 }} {{nop}}<noinclude></noinclude> 8izoy1sw7owtork559b570mjwxu47lt பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/7 250 619543 1839892 1839441 2025-07-07T07:58:05Z Info-farmer 232 {{float_right|1}} 1839892 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} <b>2. பெண்பாற் பகுதி:</b> 65 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021|(1) பகலாட்டு]] {{float_right|❠}} ௧. தட்டாங்கல் {{float_right|❠}} I. மூன்றாங்கல் {{float_right|❠}} II. ஐந்தாங்கல் (இருவகை) 66 III. ஏழாங்கல் (இருவகை) 69 IV. பலநாலொருகல் 73 V. பன்னிருகல் 74 VI. பலகல் 75 VII. பதினாறாங்கல் {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/022|௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம்]] 76 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/023|௩. குறிஞ்சி (குஞ்சி)]] 79 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024|(2) இரவாட்டு]] 80 ௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/025|௨. நிலாக் குப்பல்]] 82 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026|௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்]] 84 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027|(3) இருபொழுதாட்டு]] 86 ௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/028|௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’]] 89 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/029|௩. ஊதாமணி]] 90 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/030|௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’]]91 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/031|௫. தண்ணீர் சேந்துகிறது]] 92 <b>3. இருபாற் பகுதி :</b> 93 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/032|(1) பகலாட்டு]] {{float_right|❠}} ௧. பண்ணாங்குழி {{float_right|❠}} }} {{nop}}<noinclude></noinclude> 0u421hfhpz7ombinaxp70ayz0v6zzcg பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/8 250 619544 1839893 1839440 2025-07-07T07:58:57Z Info-farmer 232 {{float_right|1}} 1839893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} I. பொதுவகை 93 II. கட்டுக்கட்டல் 96 II. அரசனும் மந்திரியும் சேவகனும் 97 IV. அசோகவனத்தாட்டம் 99 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] 101 (க) பாண்டிநாட்டு முறை [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|(௨) சோழ கொங்குநாட்டு முறை]] 104 I. ஒற்றைச் சில்லி II. இரட்டைச் சில்லி<br>(மூன்றுவகைகள்) 107 III. வானூர்திச் சில்லி 109 IV. வட்டச் சில்லி 111 V. காலிப்பட்டச் சில்லி 112 VI. கைச் சில்லி 114 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|௩. கம்ப விளையாட்டு]] 115 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|௪. கச்சக்காய்ச் சில்லி]] 116 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|௫. குஞ்சு]] 117 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|(2) இரவாட்டு]] 118 ௧. கண்ணாம்பொத்தி {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] 120 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] 121 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|௪. பூச்சி]] 122 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|௫. அரசனுந் தோட்டமும்]] 123 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] 124 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|(3) இருபொழுதாட்டு]] 125 ௧. நொண்டி {{float_right|❠}} ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ 127 }} {{nop}}<noinclude></noinclude> qi90nqkgwa42icm6cw9hxmjhrdu8nke பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/9 250 619545 1839894 1839438 2025-07-07T07:59:46Z Info-farmer 232 {{float_right|1}} 1839894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude>{{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|௩. பருப்புச்சட்டி]] 128 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|௪. மோதிரம் வைத்தல்]] 129 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|௫. புலியும் ஆடும் 130]] [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|௬. ‘இதென்ன மூட்டை?’]] 131 [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|௭. கும்மி]] 133 {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|இருபொழுதாட்டு]] 134 ௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] 135 {{c|III. பெரியோர் பக்கம்{{rule|10em|align=}}}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1.ஆண்பாற் பகுதி :]]</b> 136 (1) பகலாட்டு{{float_right|❠}} தாயம் {{float_right|❠}} (2) இரவாட்டு {{float_right|❠}} கழியல் {{float_right|❠}} (3) இருபொழுதாட்டு 137 முக்குழியாட்டம் {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] 138 (1) பகலாட்டு {{float_right|❠}} க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}} }} {{nop}}<noinclude></noinclude> sz34gm88udi6fm8i2fufbs13mkgjnzc பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/10 250 619546 1839895 1839439 2025-07-07T08:00:44Z Info-farmer 232 {{float_right|1}} 1839895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} (2) இருபொழுதாட்டு 138 கும்மி {{float_right|❠}} <b>பின்னிணைப்பு :</b> [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] 139 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) பெண்பாற் பகுதி {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}} 2. அறியப்படாதவை [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] 141 கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] 143 (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} {{rule|10em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> c602g5zc74jp7mybeqgmo34796txvbl 1839896 1839895 2025-07-07T08:01:23Z Info-farmer 232 {{rule|5em|align=}} 1839896 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} (2) இருபொழுதாட்டு 138 கும்மி {{float_right|❠}} <b>பின்னிணைப்பு :</b> [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] 139 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) பெண்பாற் பகுதி {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}} 2. அறியப்படாதவை [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] 141 கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] 143 (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> 7eo7l3jlt6cmn6nvjhoh4eyip47cmqe அட்டவணை பேச்சு:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf 253 620262 1839569 1839476 2025-07-06T13:39:59Z Booradleyp1 1964 1839569 wikitext text/x-wiki == பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] இந்த நூலின் பொருளடக்கப் பக்கங்கள் மிக விரிவாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எளிமையாக இருக்கும் பொருட்டு, அவற்றை 56 துணைப்பக்கங்களாக ஒருங்கிணைவு செய்துள்ளேன். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்தில், துணைப்பக்கங்களை இணைத்துள்ளேன். இதுபோலவே, மீதமுள்ள துணைப்பக்கங்களை இணைக்க வேண்டும். வாய்ப்பு இருப்பின், பிற பங்களிப்பாளர்களைக் கொண்டு இணைத்துத் தாருங்கள். இந்த இலக்கு முடிந்த பிறகு உரிய வார்ப்புருக்களை இணைத்து, பொருளடக்கப் பக்கங்களை மஞ்சள் ஆக்குகிறேன். இப்படி செய்தால் மட்டுமே, அனைத்துப் பக்கங்களும் பொருத்தமாக பதிவிறக்கம் செய்ய இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 5 சூலை 2025 (UTC) {{ping|Info-farmer}} pdf/6-10 பக்கங்களில் துணைப் பக்கங்களை இணைத்திருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:23, 5 சூலை 2025 (UTC) :மகிழ்ச்சி. இணைப்புகள் கொடுத்தமையால் அனைத்துப் பக்கங்களும் ஒருங்கிணவு வார்ப்புருக்கள் இல்லாமேலேயே அனைத்துப் பக்கங்களும் வரிசையாக பதிவிறக்கம் ஆகின்றன. இது எனக்கு புதுப்பாடம். இருப்பினும் ஒருங்கிணைவு வார்ப்புருக்களை, [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்திற்க்கு இட்டு, மூலப் பக்கம் போலவே வடிவமாக்கி மஞ்சளாக்கியுள்ளேன். இதுவே போதும் என்று எண்ணுகிறேன். கண்டு கருத்திடவும். பிறகு அனைத்துப் பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றிவிடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:22, 6 சூலை 2025 (UTC) :சரியாக அமைந்துள்ளன. முதல் துணைப்பக்கமான பகலாட்டு என்பதற்கும் ஒருங்கிணைவு வார்ப்புரு இணைத்திருக்கிறேன். தேவையில்லை என்றால் நீக்கி விடுங்கள். மீதமுள்ள பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றி விடுங்கள். நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:39, 6 சூலை 2025 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] ssl3yh5ui381lpj1h4rhk9lglnh03ls கனிச்சாறு 4/097 0 620306 1839543 2025-07-06T11:59:59Z Info-farmer 232 + படிவத் தரவு 1839543 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 97 | previous = [[../096/|096]] | next = [[../098/|098]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="174" to="174"fromsection="93" tosection="93"/> n9danhhpczhvyaktlqmo5j4p0iwh96p 1839544 1839543 2025-07-06T12:00:22Z Info-farmer 232 175 1839544 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 97 | previous = [[../096/|096]] | next = [[../098/|098]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="174" to="175"fromsection="93" tosection="93"/> jqlsm3bzlk67pz4etpptcs7qbqhsm37 கனிச்சாறு 4/098 0 620307 1839545 2025-07-06T12:00:57Z Info-farmer 232 + படிவத் தரவு 1839545 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 98 | previous = [[../097/|097]] | next = [[../099/|099]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="175" to="176"fromsection="94" tosection="94"/> rgr167ni9qwmsw7bgxfezugzteu4b2a கனிச்சாறு 4/099 0 620308 1839546 2025-07-06T12:01:45Z Info-farmer 232 + படிவத் தரவு 1839546 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 99 | previous = [[../098/|098]] | next = [[../100/|100]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="177" to="178"fromsection="95" tosection="95"/> 3k2qnss2vfozx4ol91ydnpd5sq2sucs கனிச்சாறு 4/100 0 620309 1839547 2025-07-06T12:02:31Z Info-farmer 232 + படிவத் தரவு 1839547 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 100 | previous = [[../099/|099]] | next = [[../101/|101]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="179" to="180"fromsection="96" tosection="96"/> tpn9qzhr5kmecvaih75p23g49em1g2v கனிச்சாறு 4/101 0 620310 1839548 2025-07-06T12:03:22Z Info-farmer 232 + படிவத் தரவு 1839548 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 101 | previous = [[../100/|100]] | next = [[../102/|102]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="181" to="182"fromsection="97" tosection="97"/> 7r0kxhnvsc5jgzojxx1nhcm3bsur1d5 கனிச்சாறு 4/102 0 620311 1839549 2025-07-06T12:03:53Z Info-farmer 232 + படிவத் தரவு 1839549 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 102 | previous = [[../101/|101]] | next = [[../103/|103]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="182" to="183"fromsection="98" tosection="98"/> efjmuqqxq5jh7k4vqboke6gqgyb85dx கனிச்சாறு 4/103 0 620312 1839550 2025-07-06T12:04:41Z Info-farmer 232 + படிவத் தரவு 1839550 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 103 | previous = [[../102/|102]] | next = [[../104/|104]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="183" to="184"fromsection="99" tosection="99"/> 6s59n3ik0eqbzx91i7evlsdnv0at8la கனிச்சாறு 4/104 0 620313 1839551 2025-07-06T12:05:15Z Info-farmer 232 + படிவத் தரவு 1839551 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 104 | previous = [[../103/|103]] | next = [[../105/|105]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="185" to="187"fromsection="100" tosection="100"/> c09vbc2wygtmnu62bi77dne1f0ya6ps கனிச்சாறு 4/105 0 620314 1839552 2025-07-06T12:06:25Z Info-farmer 232 + படிவத் தரவு 1839552 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 105 | previous = [[../104/|104]] | next = [[../106/|106]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="187" to="188"fromsection="101" tosection="101"/> 3vfvryg2jb63ayaktjqrsfg8h57t3rd கனிச்சாறு 4/106 0 620315 1839553 2025-07-06T12:06:59Z Info-farmer 232 + படிவத் தரவு 1839553 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 106 | previous = [[../105/|105]] | next = [[../107/|107]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="188" to="189"fromsection="102" tosection="102"/> alxfu1vwg8tpgnf97e3rzztfssayj7u கனிச்சாறு 4/107 0 620316 1839554 2025-07-06T12:07:31Z Info-farmer 232 + படிவத் தரவு 1839554 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 107 | previous = [[../106/|106]] | next = [[../108/|108]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="189" to="190"fromsection="103" tosection="103"/> mkdbwr4v1nabhagxhnklh4q0n6mge6q கனிச்சாறு 4/108 0 620317 1839555 2025-07-06T12:07:53Z Info-farmer 232 + படிவத் தரவு 1839555 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 108 | previous = [[../107/|107]] | next = [[../109/|109]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="191" to="191"fromsection="104" tosection="104"/> n064eucuvavgi5za4tgfkqx4040zill கனிச்சாறு 4/109 0 620318 1839556 2025-07-06T12:08:15Z Info-farmer 232 + படிவத் தரவு 1839556 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 109 | previous = [[../108/|108]] | next = [[../110/|110]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="192" to="192"fromsection="105" tosection="105"/> of3wdhh6whoca1cin4nt047a18fjjcy கனிச்சாறு 4/110 0 620319 1839557 2025-07-06T12:08:34Z Info-farmer 232 + படிவத் தரவு 1839557 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 110 | previous = [[../109/|109]] | next = [[../111/|111]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="193" to="193"fromsection="106" tosection="106"/> 6eeo5i2w63exrc31plx13y3hvi60p8s கனிச்சாறு 4/111 0 620320 1839558 2025-07-06T12:09:07Z Info-farmer 232 + படிவத் தரவு 1839558 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 111 | previous = [[../110/|110]] | next = [[../112/|112]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="194" to="196"fromsection="107" tosection="107"/> jd0gsmmbd8xxrqhuj32evlm3aqnlgdq கனிச்சாறு 4/112 0 620321 1839559 2025-07-06T12:10:17Z Info-farmer 232 + படிவத் தரவு 1839559 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 112 | previous = [[../111/|111]] | next = [[../113/|113]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="196" to="197"fromsection="108" tosection="108"/> e60yx72ce5o4p3iic00m8kx5a122myt கனிச்சாறு 4/113 0 620322 1839560 2025-07-06T12:10:36Z Info-farmer 232 + படிவத் தரவு 1839560 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 113 | previous = [[../112/|112]] | next = [[../114/|114]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="198" to="198"fromsection="109" tosection="109"/> 1odcnibpgac19mmhrdt940lw20wcf63 கனிச்சாறு 4/114 0 620323 1839561 2025-07-06T12:11:03Z Info-farmer 232 + படிவத் தரவு 1839561 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 114 | previous = [[../113/|113]] | next = [[../115/|115]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="199" to="200"fromsection="110" tosection="110"/> 0v9fi4aqxnx549cj8m7ka8bjx2s5gbn கனிச்சாறு 4/115 0 620324 1839562 2025-07-06T12:12:12Z Info-farmer 232 + படிவத் தரவு 1839562 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 115 | previous = [[../114/|114]] | next = [[../116/|116]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="200" to="201"fromsection="111" tosection="111"/> sa7d3beesj6h4adrq3x3yxqovbdrn3q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/369 250 620325 1839563 2025-07-06T12:45:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொடங்கி 1910–இல் கட்டிமுடிக்கப்பட்ட ‘செல்லுலர்’ சிறைச் சாலை என்ற கொடிய சிறைச்சாலையில்தான் விடுதலைப் போராட்ட வீரர்கள் (வாசுதேவ பல்வந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|333|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்}}</noinclude>தொடங்கி 1910–இல் கட்டிமுடிக்கப்பட்ட ‘செல்லுலர்’ சிறைச் சாலை என்ற கொடிய சிறைச்சாலையில்தான் விடுதலைப் போராட்ட வீரர்கள் (வாசுதேவ பல்வந்த பட்கே, வீர சாவர்க்கர் போன்றோர்) 1938 வரை அடைக்கப்பட்டுக் கிடந்தனர். 1941–இல் நிலநடுக்கத்தாலும், சப்பானியரின் குண்டு வீச்சினாலும் இச்சிறைக்கூடம் சேதமுற்றது. இன்றும் இச்சிறைக்கூடம் உள்ளது. சப்பானியர் 1942 மார்ச்சு 23–இல் இத்தீவுகளைக் கைப்பற்றினர். அவர்களின் கொடுமைகள் காரணமாக, அவற்றின் மக்கள் தொகை 34,000 ஆக இருந்தது 18,000 ஆகக் குறைந்தது. சுபாசு சந்திர போசின் இந்தியத்தேசியப் படையின் தளமாகவும் அந்தமான் சிறிது காலம் இருந்தது. 1945 அக்டோபர் 8-இல் அந்தமான் தீவுகளை ஆங்கில ஆட்சிக்குட்பட்ட இந்திய அரசு மீண்டும் பெற்றது. அன்று முதல் குற்றவாளிகள் குடியிருப்புக் கலைக்கப்பட்டுச் சில கைதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். {{larger|<b>அந்தமான் பழங்குடிகள்:</b>}} அந்தமான் தீவின் மக்கள், வளர்ச்சியற்ற மேம்படாத பண்பாட்டைக் கொண்ட முதுபழங்குடியாகவும், தென்கிழக்கு ஆசியாவின் நீக்கிரோ இனப் பேராளர்கனில் தொன்மையானவர்களாகவும் திகழ்கின்றனர். இத்தனிமைத் தீவினை எவ்வாறு இவர்கள் தாயகமாகக் கொண்டனர் என்பதும் எங்கிருந்து வந்தனர் என்பதும் ஏன் உலகப் பண்பாட்டில் மிகவும் குன்றிய நிலையை ஏற்றுள்ளனர் என்பதும் மானிடவியலாளரால் ஆராயப்பட்டு வருகின்றன. அந்தமானின் நான்கு பெரும் முதுபழங்குடிகளாகப் பெரிய அந்தமானியர், சாரவா, ஓஞ்சி, சென்டினல்கள் காணப்பட்டாலும் இவர்களிடையே கிளைக் குழுக்களும் காணப்படுகின்றன. பெரிய அந்தமானியர் தாங்கள் பேசும் மொழி அல்லது கிளை மொழியின் அடிப்படையில் வடபகுதிக் குழுவினர், தென்பகுதிக் குழுவினர் எனப் பாகுபடுகின்றனர். வடபகுதிக் குழுவினர் அகா–காரி, அகா–கோரோ, அகா–டோ, அகா–சேரு என நான்கு குழுக்களாகவும், தென்பகுதிக் குழுவினர் அகா–கேடே, அகா–கோல், அகா–பீ, ஓகோ–சீவாசு, அ–புசீக்வார், அகார்–பாலே என ஆறு குழுக்களாகவும் காணப்படுகின்றனர். தென் அந்தமானின் மேற்குப் பகுதியில் சரவாக்களும், வட சென்டினல் தீவில் சென்டினல்களும், சிறிய அந்தமானில் ஓஞ்சி மக்களும் வாழ்கின்றனர். முற்கால இன ஒப்பாய்வியல் வழக்கில் சிறிய அந்தமானியருக்கு (ஓஞ்சி) மின்கோபி என்ற பெயரும் இருந்தது. நீக்கிரோ இனத்தின் முக்கியமான பேராளராகத் திகழும் அந்தமானியர் கருமை நிறத் தோலும் அடர்ந்து சுருண்ட தலை முடியும் ஏறத்தாழ 145 செ.மீ. உயரமும் உள்ள உடல் அமைப்பைக் கொண்டுள்ளனர். ஓஞ்சி பெண்களின் இடைப்பகுதி மிகுந்த வளர்ச்சி பெற்றிருப்பதால் நெடுந்தூரம் செல்லும்பொழுது குழந்தைகளை இடையின்மேல் நிற்க வைத்தே கொண்டு செல்கின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 369 |bSize = 480 |cWidth = 199 |cHeight = 143 |oTop = 134 |oLeft = 255 |Location = center |Description = }} {{center|அந்தமான் ஓஞ்சி இனப் பெண்கள்}} இத்தீவின் அனைத்துப் பிரிவுகளின் மொத்த மக்கள்தொகை 1981-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 1,88,254 ஆகும். ஆனால் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நான்கு முதுபழங்குடியினரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை அடுத்த பக்கத்திலுள்ள பட்டியலில் காணலாம். பெரிய அந்தமானில் அதிக நிலப்பரப்பும் காட்டுப் பகுதியும் இருப்பதால் பெரும்பாலான சாரவாப் பழங்குடியினர் காட்டுவாசிகளாகவும், கடலோரச் சாரவாக்கள் கரையோரவாசிகளாகவும் வாழ்கின்றனர். சிறிய அந்தமானின் பெரும்பகுதி நிலப்பரப்பு, கடலோரத்தைச் சார்ந்திருப்பதால் ஓஞ்சியினர் கரையோரவாசிகள் என்றழைக்கப்படுகின்றனர். கரையோரவாசிகளின் பொருளாதார அமைப்பு மீன்பிடிக்கும் தொழிலைச் சார்ந்ததாகும். பெண்கள் கடலோரத்தில் வலை கொண்டும் ஆண்கள் சிறுபடகில் சென்றும் கடலில் மீன்பிடிப்பது இவர்களிடையே காணப்படும் பொருளாதாரச் செயல்முறைப் பாகுபாடாகும். காட்டுவாசிகளின் முதன்மைத் தொழில் வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலுமாகும். இவர்கள் வேட்டை முறையை மூன்று கால நிலைகளாக<noinclude></noinclude> 8bx24z4lknfyw0leueg55al9ntiqu8d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/370 250 620326 1839564 2025-07-06T13:23:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1839564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|334|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்}}</noinclude>{{center|அந்தமான் முதுபழங்குடிகளின் மக்கள் தொகை}} ::{| |முதுபழங்குடி || || || || ஆண்டு || || || |- | || || 1901 || 1911 || 1921 || 1931 || 1951 || 1961 || 1971 |- |பெரிய அந்தமானியர் || || 625 || 455 || 209 || 90 || 23 || 19 || 24 |- |ஓஞ்சி || || 672 || 631 || 346 || 250 || 150 || 129 || 112 |- |சாரவா || || 468 || 114 || — || 70 || 56 || 56 || 25 |- |சென்டினல்கள் || || 385 || 117 || 117 || — || — || 50 || 100 |} அமைத்து, ஒரு சில நாள் வேட்டையைத் தங்கள் நிரந்தரக் குடியிருப்புப் பகுதியிலிருந்தும், ஓரிரு வார வேட்டையை வேட்டைத் தளத்திற்கு அருகில் சாங்-தரங்கா என்ற எளிமையான குடிசையை வாழ்விடமாகக் கொண்டும், ஓரிருமாத வேட்டையைச் சாங்-தொர்ங்கா என்ற இடைக்காலக் குடிசையைத் தங்குமிடமாகக் கொண்டும் மேற்கொள்கின்றனர். இவர்களின் அன்பளிப்புப் பரிமாற்றம் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது டென்டாலியம் கிளிஞ்சல் (Dentalium Octogonum) ஆகும். அந்தமான் தீவினர் தங்கள் குடியிருப்புப் பகுதியில் பெரிய சமூகக் குடில்களை அமைத்துப் பொதுச் சமையற் கூடமாகவும், நடனமாடும் இடமாகவும் கைம்பெண்கள், ஆண், பெண், தங்கும் இளையவர் கூடமாகவும் பயன்படுத்துகின்றனர். வீட்டில் பெண்களும் சமூகக் குடில்களில் ஆண்களும் சமைக்கின்றனர். அந்தமானியருக்கு நெருப்பு உண்டுபண்ணத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தீவினரிடையே பூப்புச்சடங்கு முறை கடினமானதாகும். பெண்கள் பூப்பெய்தியவுடன் கடலில் இரண்டு மணி நேரம் நீராடியபின் மூன்று நாள்களுக்குத் தனிக் குடிலில் அமர்த்தப்படுகின்றனர். பின் ஒரு மாத காலத்திற்கு நாள்தோறும் காலையில் நீராடிய பின்னரே அன்றாடச் செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். ஆண்களுக்கு உடலின் பெரும் பகுதியில் வெட்டுக் கோடுகளை வரைகின்றனர். பெண்களுக்குப் பொதுவாக நெற்றியில் மட்டுமே இவ்விதக் கோடுகளை வரைகின்றனர். திருமணத்திற்கு முன் பாகுபாடில்லாக் கலவி காணப்பட்டாலும் குருதி உறவுடையோருடன் கலவியை ஏற்பதில்லை. ஒருதார மணத்தையும் நடுவணுக் குடும்பத்தையும் ஏற்றுள்ளனர். குழந்தை பிறப்பதற்கு முன்னரே பெயர் சூட்டும் முறை காணப்படுவதால் இரு பாலாரும் பொதுவான பெயர்களையே கொண்டுள்ளனர். அந்தமான் தீவினர் தங்கள் திறந்த மேனியைப் பல வண்ணப் பூச்சுகளால் அணிசெய்து கொள்கின்றனர். அன்றாட வாழ்வில் ‘ஒது’ (Odu) என்னும் சாதாரணக் களிமண்ணாலும் ‘தொல் ஒது’ (Tol-Odu) என்ற வெண்மைக் களிமண்ணாலும் அணிசெய்து கொள்கின்றனர். விழாக்காலங்களில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் சிவப்பு ஆக்சைடு ஆகியவற்றை எரித்துக் கிடைக்கும் ‘கெயிப்’ (Keyib) என்னும் சிவந்த வண்ணத்தைக்கொண்டு அணிசெய்து கொள்கின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 370 |bSize = 480 |cWidth = 108 |cHeight = 168 |oTop = 349 |oLeft = 303 |Location = center |Description = }} {{center|அந்தமான் ஓஞ்சி இளைஞன்}} அந்தமானியரிடம் ஒருங்கிணைந்த கட்டுக்கோப்பான ஆட்சியமைப்பு இல்லையாதலால் சமுதாயச்<noinclude></noinclude> 26oxr6ns4imqzml8bmlv57xyffjhhbb 1839565 1839564 2025-07-06T13:23:45Z Desappan sathiyamoorthy 14764 1839565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|334|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்}}</noinclude>{{center|அந்தமான் முதுபழங்குடிகளின் மக்கள் தொகை}} :{| |முதுபழங்குடி || || || || ஆண்டு || || || |- | || || 1901 || 1911 || 1921 || 1931 || 1951 || 1961 || 1971 |- |பெரிய அந்தமானியர் || || 625 || 455 || 209 || 90 || 23 || 19 || 24 |- |ஓஞ்சி || || 672 || 631 || 346 || 250 || 150 || 129 || 112 |- |சாரவா || || 468 || 114 || — || 70 || 56 || 56 || 25 |- |சென்டினல்கள் || || 385 || 117 || 117 || — || — || 50 || 100 |} அமைத்து, ஒரு சில நாள் வேட்டையைத் தங்கள் நிரந்தரக் குடியிருப்புப் பகுதியிலிருந்தும், ஓரிரு வார வேட்டையை வேட்டைத் தளத்திற்கு அருகில் சாங்-தரங்கா என்ற எளிமையான குடிசையை வாழ்விடமாகக் கொண்டும், ஓரிருமாத வேட்டையைச் சாங்-தொர்ங்கா என்ற இடைக்காலக் குடிசையைத் தங்குமிடமாகக் கொண்டும் மேற்கொள்கின்றனர். இவர்களின் அன்பளிப்புப் பரிமாற்றம் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது டென்டாலியம் கிளிஞ்சல் (Dentalium Octogonum) ஆகும். அந்தமான் தீவினர் தங்கள் குடியிருப்புப் பகுதியில் பெரிய சமூகக் குடில்களை அமைத்துப் பொதுச் சமையற் கூடமாகவும், நடனமாடும் இடமாகவும் கைம்பெண்கள், ஆண், பெண், தங்கும் இளையவர் கூடமாகவும் பயன்படுத்துகின்றனர். வீட்டில் பெண்களும் சமூகக் குடில்களில் ஆண்களும் சமைக்கின்றனர். அந்தமானியருக்கு நெருப்பு உண்டுபண்ணத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தீவினரிடையே பூப்புச்சடங்கு முறை கடினமானதாகும். பெண்கள் பூப்பெய்தியவுடன் கடலில் இரண்டு மணி நேரம் நீராடியபின் மூன்று நாள்களுக்குத் தனிக் குடிலில் அமர்த்தப்படுகின்றனர். பின் ஒரு மாத காலத்திற்கு நாள்தோறும் காலையில் நீராடிய பின்னரே அன்றாடச் செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். ஆண்களுக்கு உடலின் பெரும் பகுதியில் வெட்டுக் கோடுகளை வரைகின்றனர். பெண்களுக்குப் பொதுவாக நெற்றியில் மட்டுமே இவ்விதக் கோடுகளை வரைகின்றனர். திருமணத்திற்கு முன் பாகுபாடில்லாக் கலவி காணப்பட்டாலும் குருதி உறவுடையோருடன் கலவியை ஏற்பதில்லை. ஒருதார மணத்தையும் நடுவணுக் குடும்பத்தையும் ஏற்றுள்ளனர். குழந்தை பிறப்பதற்கு முன்னரே பெயர் சூட்டும் முறை காணப்படுவதால் இரு பாலாரும் பொதுவான பெயர்களையே கொண்டுள்ளனர். அந்தமான் தீவினர் தங்கள் திறந்த மேனியைப் பல வண்ணப் பூச்சுகளால் அணிசெய்து கொள்கின்றனர். அன்றாட வாழ்வில் ‘ஒது’ (Odu) என்னும் சாதாரணக் களிமண்ணாலும் ‘தொல் ஒது’ (Tol-Odu) என்ற வெண்மைக் களிமண்ணாலும் அணிசெய்து கொள்கின்றனர். விழாக்காலங்களில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் சிவப்பு ஆக்சைடு ஆகியவற்றை எரித்துக் கிடைக்கும் ‘கெயிப்’ (Keyib) என்னும் சிவந்த வண்ணத்தைக்கொண்டு அணிசெய்து கொள்கின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 370 |bSize = 480 |cWidth = 108 |cHeight = 168 |oTop = 349 |oLeft = 303 |Location = center |Description = }} {{center|அந்தமான் ஓஞ்சி இளைஞன்}} அந்தமானியரிடம் ஒருங்கிணைந்த கட்டுக்கோப்பான ஆட்சியமைப்பு இல்லையாதலால் சமுதாயச்<noinclude></noinclude> 8ak8taa07ghwte2qoh1qulseizmzpw5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/371 250 620327 1839612 2025-07-06T15:33:21Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செயற்பாடுகளை அக்குழுவினரின் முதியவர்கள் கண்காணிக்கின்றனர். இக்குழுவின் மூத்த ஆடவரை ‘மய்யா’ (Maia) அல்லது ‘மய்’ (Mai) என்னும் மதிப்பு விளியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|335|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்}}</noinclude>செயற்பாடுகளை அக்குழுவினரின் முதியவர்கள் கண்காணிக்கின்றனர். இக்குழுவின் மூத்த ஆடவரை ‘மய்யா’ (Maia) அல்லது ‘மய்’ (Mai) என்னும் மதிப்பு விளியாலும் மூத்த பெண்டிரை (Mimi) என்னும் மதிப்பு விளியாலும் அழைக்கின்றனர். வேட்டைத்திறன், போர்த் திறன், கொடை உள்ளம், அன்புள்ளம் கொண்ட இளையவர்களுக்கு முதியவர்களைப் போன்றே மதிப்பளித்துச் சமுதாயச் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பையும் அளிக்கின்றனர். ஆவியுலகக் கோட்பாட்டுச் சமயத்தை இத்தீவினர் கொண்டுள்ளனர். காடு, புயல், கடல் ஆகியவைகளுக்கு ஆவி உண்டென்று நம்புகின்றனர். நில நடுக்கம் ஏற்படுவதற்கு முன்னோர்களின் ஆவியே காரணம் என்று நம்புவதால், முன்னோர் வழிபாடும் இவர்களிடையே காணப்படுகிறது. இயற்கைக்கப்பாற்பட்ட ஆற்றலுடையோர், இச்சமுதாயத்தில் சிறப்பிடம் வகிக்கின்றனர். இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிச் சடங்குகளில் இருவித வழக்குகன் உள்ளன. இறந்தவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய அம்பு, வில் போன்றவற்றை வைத்துப் புதைகுழியில் இடுவர்; அல்லது பைகசு லேசிபரா (Ficus laccifera) மரத்தினால் கட்டப்பட்ட மேடைமீது இறந்தவரின் உடலை வைத்துக் கிளிஞ்சனில் தாய்ப்பாலீட்டுச் சுடுமிடத்திற்குக் கீழே புதைப்பர். இவ்விடத்தைத் துக்ககாலமான மூன்று மாதம் வரை காப்பர். உடல் அழுகியவுடன் எலும்புகளை இறந்தவரின் மனைவி தோண்டி எடுத்துக் கடலில் கழுவி வண்ணக் களிமண்ணால் அணிசெய்து புதைப்பாள், குறிப்பிட்ட எலும்புத்துண்டுகளைப் புதைத்து விடாமல் தாங்கள் நோயுறும் காலத்தில் அணிந்து கொள்வர். மேன், வித்தியார்த்தி, பவுமிக்கு முதலான மானிடவியலாரின் அண்மைக்கால ஆய்வுகளின்படி, 10 முது பழங்குடிகளாக இருந்த பெரிய அந்தமானியர், இப்பொழுது பல்வேறு கலப்பினத்தவராக உள்ளனர். தனித்தனி மொழி அல்லது கிளை மொழியைக் கொண்டிருந்த இவர்கள், இனம், மொழி, பண்பாடு ஆகிய அனைத்துக் கூறுகளிலும் கலந்து நீக்கிரிட்டோ இனத் தனிப் பண்புகளை இழந்து வருகின்றனர் என்றும், ‘செரு’ (Jeru) என்னும் கிளை மொழியையே இவர்கள் பேசுகின்றனர் என்றும் தெரிகிறது. வேட்டையாடுதலும் உணவுப் பொருள் சேகரித்தலும் ஆகிய தொன்மை நிலையினைக் கொண்ட அனைத்து மனிதக் குழுக்களிலும் குறைந்த இனப்பெருக்கத் திறனும், அதிகக் குழந்தைச் சாவும் காணப்படுவதால், அக்குழுக்களின் எண்ணிக்கை குறைய நேரிடும் என்ற பொது நியதிக்கேற்ப, அந்தமான் தீவினரும் மேற்கண்ட குறைந்த மக்கள்தொகையைக் கொண்டுள்ளவர். {{larger|<b>நிக்கோபார் பழங்குடிகள்:</b>}} நிக்கோபார் பகுதியில் பத்தொன்பது தீவுகள் உள்ளன. இவை வங்காளக்குடாக்கடலின் தென் கோடியில் வடக்கு நில நேர்க்கோட்டில் ஆறாவதற்கும் பத்தாவதற்கும் இடையிலும், கிழக்கு நிரைகோட்டில், 92° 40–க்கும் 94°-க்கும் இடையிலும் இருக்கின்றன. இப்பத்தொன்பது தீவுகளுள், பன்னிரண்டு தீவுகளிலேயே மக்கள் வாழுகின்றனர். இத்தீவுகளில் நிக்கோபாரி, சோம்பென் ஆகிய இரு பழங்குடிகளே வாழ்கின்றனர். கார் நிக்கோபார் என்னும் வடகோடித் தீவின் நான்கில் மூன்று பகுதியில் நிக்கோபாரிகள் வாழ்கின்றனர். இங்கே பிக்லபாடி என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரே, தம் மூதாதையர்களின் பிறப்பிடம் என நிக்கோபாரிகள் எண்ணுகின்றனர். தீவின் நாட்டாண்மைக்காரன் இந்த ஊரைச் சேர்ந்தவனாகவே இருப்பான். தீவின் சமூக நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த ஊரிலேயே நிகழும். நிக்கோபாரிகளுடன், ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே, கிறித்தவத் தொண்டர்கள் தொடர்பு கொண்டு அவர்களை நாகரிகப்படுத்தினர். 1895-இல், இங்கே வந்து சேர்ந்த தமிழ் நாட்டுக் கிறித்தவப் பாதிரியார் வேதப்பன் சாலமனும், அவர்தம் மனைவியும் பல தொண்டுகளைச் செய்தனர். பேச்சு மொழியாக மட்டும் இருந்த நிக்கோபாரி மொழிக்கு இரிச்சர்டுசன் என்ற பாதிரியார் உரோமன் எழுத்துகளைக் கொண்டு முதன்முதல் எழுத்துருவம் அமைத்துக் கொடுத்தார். ‘ழகரம்’ என்ற வளைநா ஒலி, இம்மக்களிடம் உள்ளது. அந்தமான் நிக்கோபார் பழங்குடிகளிலேயே, நிக்கோபாரிகளில் பலர், நகர்ப் பண்பாட்டை ஏற்றுக் கொண்டு வருகின்றனர்; கல்விகற்றுப் பொதுவாழ்வில் கலந்து சிறந்து வாழ்கின்றனர். {{larger|<b>சோம்பென்:</b>}} பெரிய நிக்கோபாரில் வாழும் சோம்பென் பழங்குடியினர், நிக்கோபார் மக்களை விடச் சிறிதே உயரமானவர்கள். மூக்கும் தாடையும் அவர்களைவிட எடுப்பாக அமையப்பெற்றவர்கள். சோம்பென் மக்களைப் பற்றி விரிவான செய்திகள் கிடைக்கவில்லை. தேன்திரட்டுவது இவர்களது முதன்மைத் தொழில், பரண் கட்டி அதன்மேல் வீடுகளை அமைத்து வாழ்கின்றனர். சாரவாக்களைப் போலப் பிறமக்களின் வருகையைச் சோம்பென்களும் வெறுக்கின்றனர். நிக்கோபாரிகளும் சோம்பென்களும் பிற அந்தமான் தீவுப் பழங்குடிகளும் பேரளவு நிர்வாண மக்களாகவே வாழ்ந்து வந்தனர். எனவேதான், பிற்-<noinclude></noinclude> 2snd8ti8lvcawoxrzc5gasvl89pq2qy கனிச்சாறு 4/116 0 620328 1839624 2025-07-06T15:50:11Z Info-farmer 232 + படிவத் தரவு 1839624 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 116 | previous = [[../115/|115]] | next = [[../117/|117]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="202" to="203"fromsection="112" tosection="112"/> 1z6vpoh9vqnwlopsjaq0vasusfanbks கனிச்சாறு 4/117 0 620329 1839625 2025-07-06T15:50:52Z Info-farmer 232 + படிவத் தரவு 1839625 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 117 | previous = [[../116/|116]] | next = [[../118/|118]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="204" to="205"fromsection="113" tosection="113"/> kfkpy6tozyqansn0snrwbcgcnf0b1ur கனிச்சாறு 4/118 0 620330 1839626 2025-07-06T15:51:24Z Info-farmer 232 + படிவத் தரவு 1839626 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 118 | previous = [[../117/|117]] | next = [[../119/|119]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="205" to="206"fromsection="114" tosection="114"/> ksur9ighnddwpiulz6h03cmtpey2nam கனிச்சாறு 4/119 0 620331 1839627 2025-07-06T15:51:50Z Info-farmer 232 + படிவத் தரவு 1839627 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 119 | previous = [[../118/|118]] | next = [[../120/|120]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="207" to="207"fromsection="115" tosection="115"/> m9i2wqfuiocupgjp3les9ooh4bvikup கனிச்சாறு 4/120 0 620332 1839628 2025-07-06T15:52:24Z Info-farmer 232 + படிவத் தரவு 1839628 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 120 | previous = [[../119/|119]] | next = [[../121/|121]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="208" to="209"fromsection="116" tosection="116"/> 5w8pau19u1axgipxi8pkeh8ho8tq7cf கனிச்சாறு 4/121 0 620333 1839629 2025-07-06T15:53:11Z Info-farmer 232 + படிவத் தரவு 1839629 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 121 | previous = [[../120/|120]] | next = [[../122/|122]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="210" to="210"fromsection="117" tosection="117"/> ploxehw17snd9b3hnz0avocrf5tcnjz கனிச்சாறு 4/122 0 620334 1839630 2025-07-06T15:53:33Z Info-farmer 232 + படிவத் தரவு 1839630 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 122 | previous = [[../121/|121]] | next = [[../123/|123]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="211" to="211"fromsection="118" tosection="118"/> bw0265prpvxru0d0ztsauo4brexu9f8 கனிச்சாறு 4/123 0 620335 1839631 2025-07-06T15:54:07Z Info-farmer 232 + படிவத் தரவு 1839631 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 123 | previous = [[../122/|122]] | next = [[../124/|124]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="212" to="212"fromsection="119" tosection="119"/> kcn8p6lfaz1yrlm21azdp5j947pz61a கனிச்சாறு 4/124 0 620336 1839632 2025-07-06T15:54:43Z Info-farmer 232 + படிவத் தரவு 1839632 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 124 | previous = [[../123/|123]] | next = [[../125/|125]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="213" to="214"fromsection="120" tosection="120"/> 0srfev6mjxnlic8mpohjs2htettvz4o கனிச்சாறு 4/125 0 620337 1839633 2025-07-06T15:55:07Z Info-farmer 232 + படிவத் தரவு 1839633 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 125 | previous = [[../124/|124]] | next = [[../126/|126]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="215" to="215"fromsection="121" tosection="121"/> e042894hjcdysaa6zy3pvigxdwruy8m கனிச்சாறு 4/126 0 620338 1839634 2025-07-06T15:55:48Z Info-farmer 232 + படிவத் தரவு 1839634 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 126 | previous = [[../125/|125]] | next = [[../127/|127]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="216" to="216"fromsection="122" tosection="122"/> eoou3z4cqckjyt0cg0exv0o2lnd8k1m கனிச்சாறு 4/127 0 620339 1839635 2025-07-06T15:56:31Z Info-farmer 232 + படிவத் தரவு 1839635 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 127 | previous = [[../126/|126]] | next = [[../128/|128]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="217" to="218"fromsection="123" tosection="123"/> ddd0jeezst87g0wa5rdvfvpzuq134l9 கனிச்சாறு 4/128 0 620340 1839637 2025-07-06T15:58:49Z Info-farmer 232 + படிவத் தரவு 1839637 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 128 | previous = [[../127/|127]] | next = [[../129/|129]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="219" to="219"fromsection="124" tosection="124"/> nh0dyv0v9iprwmqxvwt1nld7xnajg5z கனிச்சாறு 4/129 0 620341 1839638 2025-07-06T15:59:23Z Info-farmer 232 + படிவத் தரவு 1839638 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 129 | previous = [[../128/|128]] | next = [[../130/|130]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="219" to="220"fromsection="125" tosection="125"/> e7z21q7ed4h0ruw2a9i3z88w9b0ejjj கனிச்சாறு 4/130 0 620342 1839639 2025-07-06T16:00:45Z Info-farmer 232 + படிவத் தரவு 1839639 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 130 | previous = [[../129/|129]] | next = [[../131/|131]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="220" to="220"fromsection="126" tosection="126"/> 29k3dommpyotu3amaom2idnvxeqnove பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/372 250 620343 1839657 2025-07-06T16:34:07Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காலச் சோழர்களின் வெற்றியைப் பேசும் கல்வெட்டுகள், ‘நக்கவாரம்’ என்று இப்பகுதியைக் குறிப்பிடுகின்றன. “தேனக்க வார்பொழில் மானக்கவாரம்” எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|336|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்}}</noinclude>காலச் சோழர்களின் வெற்றியைப் பேசும் கல்வெட்டுகள், ‘நக்கவாரம்’ என்று இப்பகுதியைக் குறிப்பிடுகின்றன. “தேனக்க வார்பொழில் மானக்கவாரம்” என்பது, முதல் இராசேந்திர சோழனின் (1012–1044) மெய்க்கீர்த்தித் தொடராகும். மணிமேகலை ‘நக்கசாரணர்நாகர் வாழ்மலை’ (ஆதிரை பிச்சையிட்ட காதை–15) என்று குறிப்பிடும் பகுதியும் இதுவே ஆகலாம். நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள், இங்கு வாழும் மக்கள், பெரும்பாலோர் அண்மைக்காலம் வரை அம்மணமாகவே வாழ்ந்தவராவர். ஒருசில மாற்றங்கள் அண்மைக் காலத்தில்தான் இவர்களிடத்து நிகழத் தொடங்கியுள்ளன. {{larger|<b>இன்றைய நிலைமை:</b>}} குற்றவாளிகளை ஆயிரக்கணக்கில் கொண்டுவந்து குடியமர்த்தியதால் இங்கு இந்தியர்களின் எண்ணிக்கை பெருகியது. இவர்களில் பத்தானியர், பஞ்சாபியர், சிந்தியர், வங்காளியர், தமிழர், தெலுங்கர், மலையாளிகள், மராட்டியர் முதலிய பலரும் இருந்தனர். குறிப்பாக, 1952க்குப் பின் இந்தியாவிலிருந்து அங்குச் சென்று குடியமர்த்தப்பட்டோரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியுள்ளது. இன்று வங்காளம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசுவோரே பெருந்தொகையினர் ஆவர். அவர்கள், தமக்குள் தாய்மொழி பேசினும் இந்தியையே பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் கொண்டுள்ளார்கள். எனினும் தாய்மொழிப் பள்ளிகள் அங்கு நிறைய உள்ளன. இந்து, முசுலிம், கிறித்தவர் போன்ற பாகுபாட்டு உணர்வு அவர்களிடையே மிகவும் குறைவு. எனவே, கலப்புத் திருமணங்கள் அங்கு நடக்கின்றன. இங்குள்ள தமிழர், முருகனுக்கும் சிவனுக்கும் கோயில்கள் கட்டியுள்ளனர். பொங்கல் போன்ற திருவிழாக்கள், தீ மிதித்து வழிபடுதல், சூரிய வணக்கம் முதலியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்குத் தென்னை, கமுகு மரங்கள், நெல், பருப்பு வகைகள், கரும்பு, ரப்பர், எண்ணெய்ப்பனை, காய்கறிகள் முதலியன பயிராகின்றன. எனினும், விளைநிலம் குறைவாக இருப்பதால், உணவுப் பொருள்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்தே பெறப்படுகின்றன. மரம் அறுத்தல், ஒட்டுப்பலகை (Ply wood) செய்தல், தீக்குச்சி செய்தல் போன்ற மரத்தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. உயர்தர மரங்கள் பல இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. மீன் ஏற்றுமதியும் மிகுதி. {{larger|<b>ஆட்சி முறை:</b>}} அந்தமான் நிக்கோபார் தீவுகள் விடுதலைக்குப்பின் ‘டி’ வகை மாநிலமாக இருந்தள், 1958 நவம்பரில் இத்தீவுகள் இந்தியக் குடியரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதியாக ஆக்கப்பட்டன. இவற்றின் தலைவர், துணை ஆளுநர் (Lieutenant Governor) எனப்படுவார். இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். இத்தீவுகளுக்கென தனிச் சட்டமன்றம் இல்லை. எனவே அமைச்சரவையும் இல்லை. தில்லியிலுள்ள நாடாளுமன்றத்தில் இப்பகுதிக்கு ஓர் உறுப்பினர் உள்ளார். துணை ஆளுநருக்கு உதவ ஆலோசனைக் குழு ஒன்று உண்டு. இதில் அந்தமான் நிக்கோபார் நாடாளுமன்ற உறுப்பினரும் வேறு நால்வரும் உள்ளனர். 1958–இல் போர்ட்டு பிளேர் நகராட்சி அமைக்கப்பட்டு, அதற்கான தேர்தல் நடைபெற்றது. அந்நகராட்சி மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் அறுவரும் துணை ஆளுநரால் நியமிக்கப்படும் உறுப்பினர் மூவருமாக மொத்தம் ஒன்பது பேர் உள்ளனர். மத்திய அரசின் உள்நாட்டு அமைச்சருக்கு இத்தீவுகளின் செயல்முறை பற்றி ஆலோசனை கூற, 1961–ஆம் ஆண்டு முதல், ஒரு குழு இயங்கி வருகிறது. இதில் துணை ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர், போர்ட்டு பிளேர் நகராட்சியின் துணைத் தலைவர், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஐவர் ஆகியோர் உறுப்பினராக உள்ளனர், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தலைமை ஆணையாளர் ஆட்சி மாறி 1982–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 11–ஆம் நாள் துணை ஆளுநர் ஆட்சி தொடங்கியது. துணை ஆளுநரின் கீழ் ஓரளவு மக்கள் பேராளரும் பங்கு கொள்ளும் ‘கருத்துரை மன்றம்’ உருவாக்கப்பட்டது. போர்ட்டு பிளேரில் ஒரு வானொலி நிலையமும் உண்டு; இந்தி, வங்காளம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒலிபரப்புகள் நிகழ்கின்றன. இத்தீவுகளின் மக்களுக்கென அரசு ஒரு கலைக் கல்லூரியை நடத்துகிறது; பல பள்ளிகளையும் நிறுவியுள்ளது. இந்தியா முழுவதிலும் கற்றோகின் விழுக்காடு 39.17 ஆகும். ஆனால், அந்தமான் நிக்கோபாரிலோ இது 51.27, ஆண்களில் படித்தவர்கள் விழுக்காடு 58.44; பெண்களில் 41.85. இந்திய நாட்டிலேயே மக்கள் நெருக்கம் குறைவான பகுதி இத்தீவுக் கூட்டமே. ஒரு சதுரக்கிலோ மீட்டர் பரப்பில் 23 பேர் வாழ்கின்றனர். கல்கத்தாவிலிருந்து விமானங்களும், சென்னையிலிருந்தும் கல்கத்தாவிலிருந்தும் கப்பல்களும் போர்ட்டு பிளேருக்குச் செல்கின்றன.{{float_right|இர.ஆ.}} <b>Mathur, L.P.,</b> “History of the Andaman and Nicobar Islands”, Sterling Publications, Delhi, 1968. <b>Portman, M.L.,</b> “A History of our Relations with the Andamanese”, Vol. II, Goa Privating Press, Calcutta, 1899.<noinclude></noinclude> ohj32muh2t8h392aiw70pycudx7vsyq கனிச்சாறு 4/131 0 620344 1839712 2025-07-07T01:09:57Z Info-farmer 232 + படிவத் தரவு 1839712 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 131 | previous = [[../130/|130]] | next = [[../132/|132]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="221" to="222"fromsection="127" tosection="127"/> jcc67bizgazz1o7sbnlygbxhrou21oi கனிச்சாறு 4/132 0 620345 1839713 2025-07-07T01:10:25Z Info-farmer 232 + படிவத் தரவு 1839713 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 132 | previous = [[../131/|131]] | next = [[../133/|133]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="222" to="222"fromsection="128" tosection="128"/> gfpwbgezdoxs6w1t9jyg33j7lmg063e கனிச்சாறு 4/133 0 620346 1839714 2025-07-07T01:10:59Z Info-farmer 232 + படிவத் தரவு 1839714 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 133 | previous = [[../132/|132]] | next = [[../134/|134]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="223" to="223"fromsection="129" tosection="129"/> kzrhrofbmn92zxs6ldwoaeee1wi99bv கனிச்சாறு 4/134 0 620347 1839715 2025-07-07T01:11:25Z Info-farmer 232 + படிவத் தரவு 1839715 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 134 | previous = [[../133/|133]] | next = [[../135/|135]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="130" to="130"fromsection="130" tosection="130"/> 6inftpcymtxqvnlk7usw88hx30yeks3 1839716 1839715 2025-07-07T01:12:08Z Info-farmer 232 224 1839716 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 134 | previous = [[../133/|133]] | next = [[../135/|135]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="224" to="224"fromsection="130" tosection="130"/> advanmx743tlbbk8kkz2x8806qf3yhq கனிச்சாறு 4/135 0 620348 1839717 2025-07-07T01:13:00Z Info-farmer 232 + படிவத் தரவு 1839717 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 135 | previous = [[../134/|134]] | next = [[../136/|136]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="224" to="225"fromsection="131" tosection="131"/> ffqt0kpsmpq3litffsvxpkrv522lcq5 கனிச்சாறு 4/136 0 620349 1839718 2025-07-07T01:13:43Z Info-farmer 232 + படிவத் தரவு 1839718 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 136 | previous = [[../135/|135]] | next = [[../137/|137]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="225" to="225"fromsection="132" tosection="132"/> ggjqgwwgf62uqpvqsrbutg7qzklw53t கனிச்சாறு 4/137 0 620350 1839719 2025-07-07T01:14:34Z Info-farmer 232 + படிவத் தரவு 1839719 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 137 | previous = [[../136/|136]] | next = [[../138/|138]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="226" to="226"fromsection="133" tosection="133"/> 1qnc4tf279zqejt39x82codvi78ok50 கனிச்சாறு 4/138 0 620351 1839720 2025-07-07T01:15:17Z Info-farmer 232 + படிவத் தரவு 1839720 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 138 | previous = [[../137/|137]] | next = [[../139/|139]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="227" to="227"fromsection="134" tosection="134"/> mshrtpem7fdyiuhzmij8b4c44j5062e கனிச்சாறு 4/139 0 620352 1839721 2025-07-07T01:16:05Z Info-farmer 232 + படிவத் தரவு 1839721 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 139 | previous = [[../138/|138]] | next = [[../140/|140]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="228" to="228"fromsection="135" tosection="135"/> 9f3qkbj8ql14fb31p2pmv29li22wg57 கனிச்சாறு 4/140 0 620353 1839722 2025-07-07T01:16:54Z Info-farmer 232 + படிவத் தரவு 1839722 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 140 | previous = [[../139/|139]] | next = [[../141/|141]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="229" to="229"fromsection="136" tosection="136"/> t1igr7bb6t3p6mkljw0ydbeeg01to43 கனிச்சாறு 4/141 0 620354 1839723 2025-07-07T01:17:20Z Info-farmer 232 + படிவத் தரவு 1839723 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 141 | previous = [[../140/|140]] | next = [[../142/|142]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="230" to="230"fromsection="137" tosection="137"/> em1v069yds2mevup41tu1w0bllbptit கனிச்சாறு 4/142 0 620355 1839724 2025-07-07T01:17:56Z Info-farmer 232 + படிவத் தரவு 1839724 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 142 | previous = [[../141/|141]] | next = [[../143/|143]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="230" to="231"fromsection="138" tosection="138"/> n8rzh4zyskig6uu6r6vwmkidhya1e5z கனிச்சாறு 4/143 0 620356 1839725 2025-07-07T01:18:15Z Info-farmer 232 + படிவத் தரவு 1839725 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 143 | previous = [[../142/|142]] | next = [[../144/|144]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="231" to="231"fromsection="139" tosection="139"/> gr63pcqkkdf3cualysv9lreav7y20xk கனிச்சாறு 4/144 0 620357 1839726 2025-07-07T01:18:39Z Info-farmer 232 + படிவத் தரவு 1839726 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 144 | previous = [[../143/|143]] | next = [[../145/|145]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="232" to="232"fromsection="140" tosection="140"/> r0e0ymrzkw975e658j591j720xf02wp கனிச்சாறு 4/145 0 620358 1839728 2025-07-07T01:20:46Z Info-farmer 232 + படிவத் தரவு 1839728 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 145 | previous = [[../144/|144]] | next = [[../146/|146]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="233" to="233"fromsection="141" tosection="141"/> 3y8t4qa6doxldeyqzqso06fbfby7z55 கனிச்சாறு 4/146 0 620359 1839729 2025-07-07T01:21:14Z Info-farmer 232 + படிவத் தரவு 1839729 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 146 | previous = [[../145/|145]] | next = [[../147/|147]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="234" to="234"fromsection="142" tosection="142"/> 7uv9rfxym5y6ngr0l007wur1upcrg6b கனிச்சாறு 4/147 0 620360 1839730 2025-07-07T01:21:52Z Info-farmer 232 + படிவத் தரவு 1839730 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 147 | previous = [[../146/|146]] | next = [[../148/|148]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="235" to="235"fromsection="143" tosection="143"/> 5j06l4lnw5miz7wjq2iz86ig56jw435 கனிச்சாறு 4/148 0 620361 1839731 2025-07-07T01:22:13Z Info-farmer 232 + படிவத் தரவு 1839731 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 148 | previous = [[../147/|147]] | next = [[../149/|149]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="236" to="236"fromsection="144" tosection="144"/> 0ldovfk2pxxzdar54s5pi1cmnnf2mz1 கனிச்சாறு 4/149 0 620362 1839732 2025-07-07T01:22:32Z Info-farmer 232 + படிவத் தரவு 1839732 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 149 | previous = [[../148/|148]] | next = [[../150/|150]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="236" to="236"fromsection="145" tosection="145"/> 8jel53a4qe4sknlzinvhb2jw9zeg6bd கனிச்சாறு 4/150 0 620363 1839733 2025-07-07T01:22:57Z Info-farmer 232 + படிவத் தரவு 1839733 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 150 | previous = [[../149/|149]] | next = [[../151/|151]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="237" to="237"fromsection="146" tosection="146"/> q34g5l0mk0pltr6ac121h1lq895za94 கனிச்சாறு 4/151 0 620364 1839734 2025-07-07T01:24:03Z Info-farmer 232 + படிவத் தரவு 1839734 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 151 | previous = [[../150/|150]] | next = [[../152/|152]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="238" to="238"fromsection="147" tosection="147"/> 789dc24ybqyeiyfb5njo8lawchlhywr கனிச்சாறு 4/152 0 620365 1839735 2025-07-07T01:24:22Z Info-farmer 232 + படிவத் தரவு 1839735 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 152 | previous = [[../151/|151]] | next = [[../153/|153]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="239" to="239"fromsection="148" tosection="148"/> 2ypg1py4qnmbwtz6qw0hv7rm0h23jia கனிச்சாறு 4/153 0 620366 1839736 2025-07-07T01:24:48Z Info-farmer 232 + படிவத் தரவு 1839736 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 153 | previous = [[../152/|152]] | next = [[../154/|154]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="240" to="240"fromsection="149" tosection="149"/> 98zfxkxswepd29x4l104r8cyvrbt2p8 கனிச்சாறு 4/154 0 620367 1839737 2025-07-07T01:25:17Z Info-farmer 232 + படிவத் தரவு 1839737 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 154 | previous = [[../153/|153]] | next = [[../155/|155]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="241241" to="241"fromsection="150" tosection="150"/> rl6lelmtp22zkjld5la29zsql9gnbx7 1839740 1839737 2025-07-07T01:27:29Z Info-farmer 232 241 1839740 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 154 | previous = [[../153/|153]] | next = [[../155/|155]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="241" to="241"fromsection="150" tosection="150"/> 4bz5kms7pgr3kdjk3o4z8uevt9macli கனிச்சாறு 4/155 0 620368 1839738 2025-07-07T01:25:36Z Info-farmer 232 + படிவத் தரவு 1839738 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 155 | previous = [[../154/|154]] | next = [[../156/|156]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="242" to="242"fromsection="151" tosection="151"/> 7h253mqo2bx7j3ife2ulss7sa2owpia கனிச்சாறு 4/156 0 620369 1839739 2025-07-07T01:26:14Z Info-farmer 232 + படிவத் தரவு 1839739 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 156 | previous = [[../155/|155]] | next = [[../157/|157]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="244" to="244"fromsection="152" tosection="152"/> b4k9j9jpql13pyi6pejtnseqb3v9pzl 1839743 1839739 2025-07-07T01:30:48Z Info-farmer 232 244 1839743 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 156 | previous = [[../155/|155]] | next = [[../157/|157]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="244" to="244"fromsection="" tosection=""/> busz482fqg8qh9384zoxgruhywhlqi9 கனிச்சாறு 4/157 0 620370 1839744 2025-07-07T01:31:32Z Info-farmer 232 + படிவத் தரவு 1839744 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 157 | previous = [[../156/|156]] | next = [[../158/|158]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="246" to="246"fromsection="" tosection=""/> m555tqd583ked42ery2qrz3n4rfxi67 1839745 1839744 2025-07-07T01:32:06Z Info-farmer 232 152 1839745 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 157 | previous = [[../156/|156]] | next = [[../158/|158]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="246" to="246"fromsection="152" tosection="152"/> l7x0qxxfd96uocevjynvaxa01326sga கனிச்சாறு 4/158 0 620371 1839746 2025-07-07T01:32:59Z Info-farmer 232 + படிவத் தரவு 1839746 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 158 | previous = [[../157/|157]] | next = [[../159/|159]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="247" to="248"fromsection="152" tosection="152"/> 9va87s3n7nyuj752wncivxurqoiu5mz 1839747 1839746 2025-07-07T01:33:26Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1839747 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 158 | previous = [[../157/|157]] | next = [[../159/|159]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="247" to="248"fromsection="153" tosection="153"/> d25shsjrx6cj75u9i1v3obag6rgos1f கனிச்சாறு 4/159 0 620372 1839748 2025-07-07T01:35:40Z Info-farmer 232 + படிவத் தரவு 1839748 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 159 | previous = [[../158/|158]] | next = [[../160/|160]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="248" to="249"fromsection="154" tosection="154"/> 6e5ywo7kujax1qj8391sec6by2c095v கனிச்சாறு 4/160 0 620373 1839749 2025-07-07T01:36:15Z Info-farmer 232 + படிவத் தரவு 1839749 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 160 | previous = [[../159/|159]] | next = [[../161/|161]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="250" to="250"fromsection="155" tosection="155"/> jl8aljk2xqbezu0tuhmi4mtqasuldae கனிச்சாறு 4/161 0 620374 1839750 2025-07-07T01:37:00Z Info-farmer 232 + படிவத் தரவு 1839750 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 161 | previous = [[../160/|160]] | next = [[../162/|162]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="251" to="251"fromsection="156" tosection="156"/> bhyaaqllvtp3k4p21ljtlh6g7a52tgq கனிச்சாறு 4/162 0 620375 1839751 2025-07-07T01:37:29Z Info-farmer 232 + படிவத் தரவு 1839751 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 162 | previous = [[../161/|161]] | next = [[../163/|163]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="252" to="252"fromsection="157" tosection="157"/> 87a94j1dl6fjs7xjlgob21z2jiy1fqi கனிச்சாறு 4/163 0 620376 1839752 2025-07-07T01:37:59Z Info-farmer 232 + படிவத் தரவு 1839752 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 163 | previous = [[../162/|162]] | next = [[../164/|164]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="253" to="253"fromsection="158" tosection="158"/> o8z3xtega40a05s6y0qd77032u0nevy கனிச்சாறு 4/164 0 620377 1839755 2025-07-07T01:40:51Z Info-farmer 232 + படிவத் தரவு 1839755 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 164 | previous = [[../163/|163]] | next = [[../165/|165]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="254" to="254"fromsection="159" tosection="159"/> pqv2uskdy5gim9ghjsfc0gh3idh7pfb 1839757 1839755 2025-07-07T01:41:56Z Info-farmer 232 255 1839757 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 164 | previous = [[../163/|163]] | next = [[../165/|165]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="254" to="255"fromsection="159" tosection="159"/> 6s5nhbbo8z7ftd9qposrknma509dpau கனிச்சாறு 4/165 0 620378 1839758 2025-07-07T01:42:26Z Info-farmer 232 + படிவத் தரவு 1839758 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 165 | previous = [[../164/|164]] | next = [[../166/|166]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="255" to="255"fromsection="160" tosection="160"/> 0cv8rin6p581p0ikewvxmwb4q9qplq8 கனிச்சாறு 4/166 0 620379 1839759 2025-07-07T01:43:07Z Info-farmer 232 + படிவத் தரவு 1839759 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 166 | previous = [[../165/|165]] | next = [[../167/|167]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="256" to="256"fromsection="161" tosection="161"/> rvv4q1qqtffin4obvb7h7qnxtku54m3 கனிச்சாறு 4/167 0 620380 1839760 2025-07-07T01:43:53Z Info-farmer 232 + படிவத் தரவு 1839760 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 167 | previous = [[../166/|166]] | next = [[../168/|168]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="257" to="257"fromsection="162" tosection="162"/> lruwwn9g5ck9lf3k9c8h87oxhxokavx கனிச்சாறு 4/168 0 620381 1839761 2025-07-07T01:44:31Z Info-farmer 232 + படிவத் தரவு 1839761 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 168 | previous = [[../167/|167]] | next = [[../169/|169]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="257" to="258"fromsection="163" tosection="163"/> 66x9zteie2w8077lb6t80mnteclbp24 கனிச்சாறு 4/169 0 620382 1839762 2025-07-07T01:44:53Z Info-farmer 232 + படிவத் தரவு 1839762 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 169 | previous = [[../168/|168]] | next = [[../170/|170]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="259" to="259"fromsection="164" tosection="164"/> k3699r4ninhic89s8lsb7o13vpe93yr கனிச்சாறு 4/170 0 620383 1839763 2025-07-07T01:45:22Z Info-farmer 232 + படிவத் தரவு 1839763 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 170 | previous = [[../169/|169]] | next = [[../171/|171]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="259" to="260"fromsection="165" tosection="165"/> 4f209do69u3kv2aisl55mi1gozs7fi1 கனிச்சாறு 4/171 0 620384 1839764 2025-07-07T01:47:11Z Info-farmer 232 + படிவத் தரவு 1839764 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 171 | previous = [[../170/|170]] | next = [[../172/|172]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="261" to="262"fromsection="166" tosection="166"/> mp2kbuvjf64v21xi66namz6liz250re கனிச்சாறு 4/172 0 620385 1839765 2025-07-07T01:47:38Z Info-farmer 232 + படிவத் தரவு 1839765 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 172 | previous = [[../171/|171]] | next = [[../173/|173]] | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="263" to="263"fromsection="167" tosection="167"/> begy3o9g1fw4zbuikuiqhj6a63z1m7r 1839766 1839765 2025-07-07T01:48:19Z Info-farmer 232 - துப்புரவு 1839766 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = பாவலரேறு பெருஞ்சித்திரனார் | translator = | section = 172 | previous = [[../171/|171]] | next = | notes = }} <pages index="கனிச்சாறு 4.pdf" from="263" to="263"fromsection="" tosection=""/> bnv4xbmrs6y90092tgpfat3ecff5kce பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/373 250 620386 1839807 2025-07-07T06:07:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Probhat Kumar,</b> “Land and People of the Andamans: A Geographical and Social–Economic Study”, Post Graduate Book Mart, Calcutta, 1962. <b>Radcliffe–Brown, A.R.,</b> “The Andaman Islanders”, Free Press, New York, 1964. <b>Colonel Hodson, T.C.,</b> “The Primitive Culture of India”, The Royal Asiatic Society, London, 1922. <b>Edward Horace Man..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்தர காந்தாரம்|337|அந்தாதி இலக்கியம்}}</noinclude><b>Probhat Kumar,</b> “Land and People of the Andamans: A Geographical and Social–Economic Study”, Post Graduate Book Mart, Calcutta, 1962. <b>Radcliffe–Brown, A.R.,</b> “The Andaman Islanders”, Free Press, New York, 1964. <b>Colonel Hodson, T.C.,</b> “The Primitive Culture of India”, The Royal Asiatic Society, London, 1922. <b>Edward Horace Man.,</b> “Aboriginal Inhabitants of the Andaman Islands”, Sanskaran Prakashak, Delhi, 1883. Andaman and Nicobar Islands A Glance Statostoca; Bureau, Andaman and Nicobar Administration, Port Blair, 1981. <b>Mathur G.K.,</b> Nicobar Islands (Tamil), National Book Trust, New Delhi-16, 1974. Lidio Cipriani-The Andaman Islanders, Weidenfeld and Nicolson 20, New Bond Street, London, W.1., 1966. {{larger|<b>அந்தர காந்தாரம்</b>}} என்பது, கருநாடக இசையில் ‘க’ என்ற கரத்தின் ஒரு குறிப்பிட்ட ஒலி வேறுபாட்டைக் குறிக்கும் இசை நுணுக்கத்தினைக் குறிக்கும். காந்தார சுரத்தின் மெலியது வலியது என்ற வேறுபாடுகளில் இது வலியதைக் குறிக்கும். இது ஒரு இயல்பு சுரமாகும். தம்பூராவைச் சீராகச் சுருதி கூட்டி மீட்டினால் அந்தர காந்தாரம் தெளிவாகக் கேட்கும். இது சங்கராபரண இராகத்தின் முழுமையான நியாசச் சுரமாகும். இந்துசுதானி இசையில் இது “பிலாவல் தட்” என்ற இராகத்திலும், மேனாட்டு இசையில் “மேசர் இசுகேல்” (Major Scale) என்ற பிரிவிலும் அமைந்துள்ளது. காந்தாரம் என்பதைப் பஞ்சமரபு நூல் கைக்கிளை என்று குறிப்பிட்டுள்ளது. காண்க: இசை. {{larger|<b>அந்தராத்து</b>}} இலட்சத்தீவுகள், மினிகாய் அமின்திவி ஆகிய தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவு. உப்பங்கழியற்ற இத்தீவின் இடையே நீர்த்தேக்கமுள்ள வட்டவடிவமான பவழப்பாறையொன்று தீவு முழுவதையும் கவர்ந்துள்ளது. வடகிழக்கு ஓரத்தில் உள்ள தட்டையான பவழப்பாறையைத் தவிர்த்து, வட்டவடிவமான இத்தீவு முழுமையும் ஓதத்தின் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. இதன் வடபக்கத்தில் சிறு படகுத்துறையொன்று இருந்தது. அதனை 1909–ஆம் ஆண்டில் உடைத்துத் தகர்த்து விட்டார்கள். படகுத் துறையைச் சுற்றிலும் போக்குவரத்திற்குப் பயன்படும் படகுகளை நிறுத்தப் பெரிய சாவடிகள் கட்டப்பெற்றுள்ளன. இத்தீவுமக்கள் இசுலாம் சமயத்தவர்களாகி விட்டனர். இன்றும் அவர்கள் முசுலிம்களாகவே வாழ்கிறார்கள். இத்தீவு கொப்பரைத் தேங்காய் உற்பத்தியில் சீரிய இடத்தைப் பெற்றுள்ளது. {{larger|<b>அந்தரி{{sup|1}}</b>}} தமிழகத்தே பழங்காலத்தில் வழங்கிய தோற்கருவிகளுள் ஒன்று. அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார அரங்கேற்றுகாதை உரையில் பல்வேறு தோற்கருவிகலின் பெயர்களைத் தொகுத்துக் குறிப்பிடும்போது இதனையும் சுட்டியுள்ளார். {{larger|<b>அந்தரி{{sup|1}}</b>}} என்பது கொற்றவை அல்லது பார்வதியின் பெயர்களுள் ஒன்று, இதனைச் சிலப்பதிகாரம் “சங்கரி அந்தரி நீலி சடாமுடி” என்று குறிப்பிடுகிறது. கொற்றவைக்கு உரியதாகக் கருதப்படும் மந்திரம் ‘அந்தரி மந்திரம்’ எனப்படும். கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளோடு மதுரை செல்லுங்கால், காட்டு வழியின் இடையே ஓரிடத்தில் தங்கினர். நீர் வேட்கை கொண்ட கோவலன் அவர்களை விட்டுத் தனியே சிறிது தூரம் சென்று, ஒரு பொய்கைக் கரையில் நின்றான். அவனைக் கண்டு அவன்மீது மையல் கொண்ட வனசாரிணி என்னும் கானுறை தெய்வம், மாதவியின் தோழியாகிய வயந்த மாலையின் வடிவங்கொண்டு, அவன்பால் சென்று அவனை மயக்கும் வகையில், மாயக் கண்ணீர் வடித்து அடியில் விழுந்து வணங்கி வேண்டியது. அப்பகுதியில் மயக்கும் தெய்வம் உண்டு என முன்னரே அறிந்திருந்த கோவலன், வணங்கிய வயந்த மாலையின் உண்மையை உணர விரும்பித் தானறிந்து வைத்த மந்திரத்தினை நாவில் ஓதி, அத்தெய்வத்தின் வஞ்சகத்தை அறிந்தான் (சிலப். காடுகாண். 189–200). கோவலன் ஓதியது ‘பாய்கலைப் பாவை மந்திரம்’ என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். அதனை “அந்தரி மந்திரம்” என்று அடியார்க்கு நல்லார் விளக்கியுள்ளார். சிலப்பதிகாரக் காலத்தில், கொற்றவைக் கோலமாகிய ‘அந்தரி கோலம்’ பாடுவதற்காகவே சில பாணர்கள் இருந்துள்ளார்கள். கொற்றவை, அசுரர்களோடு போரிட்ட போர்க்கோலத்தை அவர்கள் பாடுவார்கள். அவர்கள் ‘அந்தரி கோலம் பாடும் பாணர்’ எனவும், ‘அம்பணவர்’ எனவும் அழைக்கப் பெற்றார்கள் (சிலப். புறஞ். 104–105–உரை). {{larger|<b>அந்தாதி இலக்கியம்</b>}} என்பது, 95 வகைப் பிரபந்தங்கள் என்று தமிழ் மொழியில் தொகைப்படுத்திக் கூறப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். அந்தாதி என்னும் சொல் அந்தம் - ஆதி என்று பிரியும். அந்தம் – முடிவு என்றும், ஆதி தொடக்கம் என்றும் பொருள்படும். அதனால், ஒன்-<noinclude> <b>வா.க. 1 - 22</b></noinclude> 23riksl0shiqkj6zmss395rjhsnku5c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/374 250 620387 1839817 2025-07-07T06:26:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றின் முடிவு மற்றொன்றின் தொடக்கமாக அமைவது என்பது இப்பெயர்ப் பொருளாகும். அந்தாதி, அந்தாதித் தொடை என்றும் செய்யுள் அந்தாதி என்றும் பாகுப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்தாதி இலக்கியம்|338|அந்தாதி இலக்கியம்}}</noinclude>றின் முடிவு மற்றொன்றின் தொடக்கமாக அமைவது என்பது இப்பெயர்ப் பொருளாகும். அந்தாதி, அந்தாதித் தொடை என்றும் செய்யுள் அந்தாதி என்றும் பாகுபடும். ஒரு செய்யுளின் இரண்டடிக்கு இடையே அமைந்துள்ள அந்தாதி அமைப்பு அந்தாதித் தொடை என்றும், ஒரு செய்யுளின் இறுதி அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமைவது செய்யுளந்தாதி என்றும் சொல்லப்படும். செய்யுளந்தாதியில் ஒரு செய்யுளின் முடிவிலுள்ள எழுத்தோ அசையோ, சீரோ, சொல்லோ, அடியோ அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமையும். இவற்றுள் எது அமைகிறதோ அதன் பெயரால் அந்த அந்தாதி பெயர் பெறும். சான்றாக, ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்த பாடலின் தொடக்கத்தில் அமைகின்ற போது அந்தச் சொல்லமைப்பு, சொல்லந்தாதி எனப்படும். எழுது பொருள், எழுதப்படுபொருள், எழுது கருவிகள் போன்றன பழங்காலத்தில் கிடைப்பது அரிதாக இருந்தது. அதனால் ஏடெழுதி இலக்கியங்களைப் படிப்பதைவிட மனனம் செய்து படிப்பதைப் பெரிதும் விரும்பினர். விரிவாக எழுதப்படும் செய்திகள், திட்பமும் நுட்பமும் பொருந்தச் செய்யுளாக அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்படும் செய்யுளை முழுதுமாக மனத்திற் கொள்வதற்கு அதன் உறுப்புகளாகிய எதுகை, மோனை, முரண் முதலிய தொடைகளும், அவற்றின் வகைகளும் பிறவும் உதவின. இத்தகைய செய்யுட்கள் பலவற்றைத் தொடர்ந்து நினைவிற் கொள்வதற்கு அந்தாதிமுறை பேருதவியாக அமைந்தது. அந்தாதி யாப்பமைப்பில் நூல்கள் பிற்காலத்தில் தான் தோன்றின என்றாலும், சங்க இலக்கியங்களில் அந்தாதி அமைப்பிற்கான கருக்கள் அமைந்து காணப்படுகின்றன. பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தும், ஐங்குறு நூற்றின் தொண்டிப் பத்தும் அந்தாதி யாப்பு முறையில் அமைந்துள்ளன. மேலும், தொகைநூற் செய்யுள்கள் சிலவற்றின் சில அடிகளில், அந்தாதி அமைப்பினைக் காணமுடிகிறது (புறம். 2; நற். 95; சிறு. 14–28). அவ்வாறே சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பாடல்கள் சிலவற்றின் இடையே, அந்தாதி யாப்பு அமைந்து காணப்படுகின்றது (2–4; 11–13; 20–23; 25–27; 34; 36; 43–46–48). பல சிற்றிலக்கிய வகைகளைத் தோற்றுவித்தவர்கள் பக்திக் கவிஞர்கள். அதற்குப் பத்திப் பொருண்மை காரணம். அவ்வகையில் அந்தாதி இலக்கியத்தை முதலில் தோற்றுவித்தவர் காரைக்கால் அம்மையார் ஆவர். அவர் இயற்றியுள்ள அற்புதத் திருவந்தாதி இதுகாறும் தமிழிற் கிடைத்துள்ள அந்தாதி இலக்கியங்களுள் முதலாவதாக அமைந்து விளங்குகிறது. ஆழ்வார்களின் பக்திப் பனுவல்களிலும், நாயன்மார்களின் பதிகங்களிலும் அந்தாதி அமைப்புப் பயின்று வந்துள்ளது. பதினோராம் திருமுறையிலுள்ள பல நூல்கள் அந்தாதி இலக்கிய வகையில் அமைந்துள்ளமையால் அத்திருமுறை ‘அந்தாதி மாலை’ என்றும் சொல்லப்படுகிறது. திருவாசகத்தில் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், கோயில் மூத்த திருப்பதிகம், கோவில் திருப்பதிகம், பிரார்த்தனைப் பத்து, குழைத்தபத்து, யாத்திரைப்பத்து ஆகியன அந்தாதி முறையில் அமைந்துள்ளன. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துள் முதலாழ்வார்களின் அருளிச்செயல்கள், திருவாய்மொழி முதலிய பல பிரபந்தங்கள் அந்தாதி யாப்பில் அமைந்துள்ளன. திருமந்திரத்தில் பல பகுதிகளை அந்தாதி அமைப்பில் திருமூலர் படைத்துள்ளார். திருஞானசம்பந்தர், ‘பிரமபுரத்துறை’ என்று தொடங்கும் பதிகத்தை இயமக அந்தாதி என்னும் வகையில் பாடியுள்ளார். அந்தாதித் தொடையின் நடைநலமும் ஓசை நயமும் மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. எளிதில் உள்ளத்தில் தங்குவனவாகவும் அமைந்தன. எனவே, அந்தாதித்தொடை அமைந்த நூல்களைப் புலவர்கள் படைக்கத் தொடங்கினர். கி.பி. ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் இவ்வகை இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றிப் பரவலாயின, அந்தாதி நூல்கள் தொடக்கத்தில் எளிமையும் இனிமையும் மிக்கனவாய்ப் படைக்கப்பட்டன. அவற்றில் நடை நலமும் தொடை நலமும் சிறந்திருந்தன. இலக்கிய வகைகளுக்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்கள், ஒலியந்தாதி, பதிற்றந்தாதி நூற்றந்தாதி, கலியந்தாதி என்று அந்தாதியை நான்காகப் பகுத்துக் கொண்டு இலக்கணம் தந்துள்ளன. மேலும், இயமக அந்தாதி, திரிபு அந்தாதி, நிரோட்டக யமக அந்தாதி, சிலேடையந்தாதி போன்றனவும் அந்தாதி இலக்கியங்களின் வகைகளாக அமைந்துள்ளன. ஒலியின் அடிப்படையில் பெயர்பெற்றது ஒலியந்தாதி. இதனை ஒலியலந்தாதி எனவும் கூறுவர். இதன் ஒவ்வொரு அடியிலும் பதினாறு கலை வைப்புகள் அமையவேண்டும். நான்கு அடிகளிலும் (16×4=64) அறுபத்து நான்கு கலை வைப்புகள் அமைய அந்தாதி யாப்பில் பாடப்படும். வெண்பா, கலித்துறை, அகவல் போன்றன இவ்வகை அந்தாதிகளில் யாப்பாக அமைகின்றன. இது முப்பது பாடல்களைக் கொண்டு அமைகிறது. பதிற்றந்தாதி என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது என்று பொருள்படும். வெண்பா அல்லது கலித்துறை இதன் யாப்பாக அமைகிறது. {{nop}}<noinclude></noinclude> 26nkzhc6fopna2ced9uqtsf5jd11nyx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/375 250 620388 1839827 2025-07-07T06:45:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நூறு பாடல்களைக் கொண்ட அந்தாதி நூற்றந்தாதி எனப்படும். நூறு வெண்பாக்கள் அல்லது நூறு கலித்துறைப் பாக்கள் இவ்வகை அந்தாதிகளில் இடம்பெறும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்தாதி இலக்கியம்|339|அந்தாதி இலக்கியம்}}</noinclude>நூறு பாடல்களைக் கொண்ட அந்தாதி நூற்றந்தாதி எனப்படும். நூறு வெண்பாக்கள் அல்லது நூறு கலித்துறைப் பாக்கள் இவ்வகை அந்தாதிகளில் இடம்பெறும். வெண்பா நூறு கொண்டது வெண்பா அந்தாதி என்றும், கலித்துறைப் பாக்கள் நூறு கொண்டது கலித்துறை அந்தாதி என்றும் பெயர் பெறும். ஒவ்வொரு பத்துப் பாடலும் தனித்தனிச் சந்தங்களில் அமைக்கவும் படும். இவ்வாறு அமையும் அந்தாதி பதிற்றுப்பத்து அந்தாதி எனப்பெயர் பெறும், குட்டித் திருவாசகம் என்னும் திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி இவ்வாறமைந்ததாகும். திருவாசகத்திலுள்ள திருச்சதகம் இவ்வாறு அமைந்துள்ள போதிலும் இப்பெயர் பெறாது திருச்சதகம் எனவே பெயர் பெற்றுள்ளது. நமக்குக் கிடைக்கின்ற அந்தாதிகளுள், இவ்வகை அந்தாதிகள் மிகுதியான எண்ணிக்கையில் உள்ளன. இவ்விரண்டிலும் முதலில் தோன்றிய வெண்பா அந்தாதிகள் எண்ணிக்கையில் மிகுந்தும், கலித்துறை அந்தாதிகள் அதனை அடுத்தும் காணப்படுகின்றன. ஒலியந்தாதி போன்று கலியந்தாதியிலும் கலை வைப்பு இடம் பெறுகிறது. ஒலியந்தாதியில் அறுபத்து நான்கு கலை வைப்பு அமைய, கலியந்தாதியில் அக்கலை வைப்பு முப்பத்திரண்டாகக் குறைகிறது. இயமக அந்தாதி என்பது சொல்லணியால் பெயர் பெற்றது. பாட்டின் நான்கு அடிகளிலும் முதற் சீரில் வந்த எழுத்துகளே திரும்ப வரும். ஆனால் அவற்றைப் பிரித்துப் பொருள் காணும் போது நான்கு முதற்சீர்களும் நான்கு வேறு பொருள்களைத் தரும். இத்தகைய மடக்கை வடமொழியாளர் இயமகம் என்றுரைப்பர். இவ்வகைப் பாடல்களில் அமைந்த அந்தாதி இயமக அந்தாதி எனப்பட்டது. இந்த இயமகம், ஐந்தெழுத்திற்கு மேற்பட அமைவது சிறப்பானதாகவும், அதற்குக் குறைவது சிறப்பற்றதாகவும் கருதப்படுகிறது. திரிபந்தாதி என்பது சொல்லணி வகையில் பெயர் பெற்றதாகும். ஒரு செய்யுளின் நான்கடிகளிலுமுள்ள முதல் எழுத்துகள் மட்டும் மாறுபட்டுத் திரிந்து அமையும். ஏனைய எழுத்துக்கள் பலவும் ஒத்து வரப் பொருள் வேறுபட்டு அமையும். இத்திரிபு அந்தாதியும் ஐந்து எழுத்திற்குக் குறைவாகவரின் சிறப்பற்றதாகக் கருதப்படும். இவ்வகை அந்தாதிகளைப் படைப்பது எளிதன்று. இதற்குச் சொற்பயிற்சி, பொருள் கொள்ளும் முறை போன்றவற்றில் மிக்க புலமையும் பழக்கமும் தேவைப்படுகின்றன. இதழ்கள் ஒன்றோடொன்று ஒட்டாத எழுத்துகளை அமைத்து அந்தாதிமுறையில் பாடப்படுவது நிரோட்டக யமக அந்தாதியாகும். ப, ம இரண்டும் இதழொலிகள். எனவே இவ்வகை அந்தாதியில் இவ்விரு எழுத்துகளும் இடம்பெறாத சொற்கள் பயின்றுவரும். இதழ்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் அகல்வதால் இதனை இதழகல் அந்தாதி என்றும் கூறுவர். இதற்கு வரையறை நூறு பாடல்கள். சிலேடை வெண்பா (திருக்குற்றாலச் சிலேடை வெண்பா), சிலேடை மாலை (திருவரங்கச் சிலேடை மாலை), சிலேடை உலா (சிலேடை உலா, தத்துவராயர்), சிலேடைப் பதிகம் (சிலேடைப் பதிகம்) போன்ற சிற்றிலக்கிய வகைகள் பலவும் சிலேடை முறையில் அமைக்கப்பட்டுள்ளமை போன்று, சிலேடை வகையில் அமைந்த செய்யுட்களாலாகிய அந்தாதி சிலேடை அந்தாதி எனப்படும். ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்தருமாறு அமைந்த பாடல்களைக் கொண்ட அமைப்பில் இயற்றப்படுவது இது. இவ்வகை அந்தாதிகள் எண்ணிக்கையில் குறைந்தே காணப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட அந்தாதி வகைகளேயன்றி, வேறு சில அந்தாதி வகைகளையும் காணலாம். இவை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் வாழ்ந்த தமிழ்ப் புலவர் பெருமக்களால் உருவாக்கப்பட்டவை. இவற்றுள் குறிப்பிடத்தக்க சிலவற்றின் பெயர்கள் வருமாறு:– உயிரெழுத்து அந்தாதி, ஓரெழுத்து அந்தாதி, ஓரெழுத்து இயமக அந்தாதி, பஞ்சாட்சர அந்தாதி, ஆறெழுத்து அந்தாதி, கொம்பிலா வெண்பா அந்தாதி, ஒலியல் அந்தாதி, முதலொலியல் அந்தாதி, நடுவொலியல் அந்தாதி, சந்தக்கலித்துறை அந்தாதி, கலிவிருத்த அந்தாதி, இயமகக் கலித்துறை அந்தாதி, ஒரு தொடைச்செய்யுள் நிரோட்டக அந்தாதி, நிரோட்டகத் தலைச் செய்யுள் அந்தாதி, தலையணிச் சீரிதழகல் அந்தாதி, இரு சொல் இயமக அந்தாதி, நூற்றெட்டு வெண்பா அந்தாதி, சதகத்து அந்தாதி, பல் சந்த அந்தாதி, திரிபு வெண்பா அந்தாதி. அந்தாதித் துறையில் நூல்கள் பெருகப்பெருக அருஞ்சொற்களும், கடினச் சொற் புணர்ச்சிகளும் பாடல்களில் இடம் பெறலாயின, அந்தாதி நூல் இரட்டுற மொழிதல், மூன்றுற மொழிதல், நான்குற மொழிதல், ஐந்துற மொழிதல், ஆறுற மொழிதல் எனப் பலவகையில் சென்றது. அதற்குப் பலவகையாகச் சொற்களைப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டியிருந்தது. அதனால் சுவைப்போர்க்குப் பல இன்னல்களைத் தந்தது. திரிபு, மடக்கு (இயமகம்) போன்றன இப்பாடல்களில் மிகுதியாக அமைந்து இவற்றைப் படைக்கின்ற புலவரைச் சோதனை செய்யும் புலமைக் கருவிகளாய் அமைத்துவிட்டன. இதனால் இயல்பாக நுகரும் கவியின்பம் தடைபட்டது; உணர்வு குன்றியது. ஆற்றொழுக்கு நடையின்றிக்<noinclude> <b>வா.க. 1 - 22அ</b></noinclude> 0yqlq750v15plsprnuod8w4u26l9p3a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/376 250 620389 1839843 2025-07-07T07:06:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கரடு முரடான சந்திகள் வந்து, படிப்பாரை மேலும் படிக்கத் தூண்டாது தடுக்கும் தடைகளாக இவ்வகை யாப்பு அமையலாயிற்று. அந்தாதி இலக்கியம் தொடக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்தாம் பிரயோன்சா|340|அந்தி இளங்கீரனார்}}</noinclude>கரடு முரடான சந்திகள் வந்து, படிப்பாரை மேலும் படிக்கத் தூண்டாது தடுக்கும் தடைகளாக இவ்வகை யாப்பு அமையலாயிற்று. அந்தாதி இலக்கியம் தொடக்கக் காலத்தில் வெண்பாவை யாப்பாகக் கொண்டமைந்தது. முதல் அந்தாதியான காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. அடுத்து, அந்தாதி அமைப்பில் பாடல்களை அமைத்த முதல் ஆழ்வார்கள் மூவரும் வெண்பாவையே பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அந்தாதி இலக்கியங்கள் பெருகியபோது, பாலினங்களாகிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்றனவும் அந்தாதிப் படைப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.{{float_right|தா.அ.}} அந்தாதி இலக்கியங்களேயல்லாமல், இரட்டை மணிமாலை, மும்மணிமாலை, நான்மணிமாலை, நவமணிமாலை, அட்டமங்கலம், ஒருபா ஒருபஃது முதலான வேறு பல சிற்றிலக்கிய வகைகளும் அந்தாதி யாப்பில் அமைந்துள்ளன. அவற்றினை அந்தாதி என்ற பெயராற் குறிப்பிடுவதில்லை. இறைவன் பெயர், திருத்தலப் பெயர், அடியார் பெயர், பாவகை, செய்யுள் எண், இயல்பு போன்றவற்றின் அடிப்படையில் அழகரந்தாதி, அருணை அந்தாதி, திருத்தொண்டர் திருவந்தாதி, வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, சிவபூசை அந்தாதி என்பனவாக அந்தாதி இலக்கியங்கள் பெயர் பெறுகின்றன. அந்தாதி இலக்கியவகை பிற்காலத்தில் தோன்றி வளர்ந்ததாயினும், இன்று கிடைத்துள்ள 850க்கும் மேற்பட்ட அந்தாதிப் பெயர்களால் இவ்விலக்கிய வகை மக்களிடையே பெற்றுள்ள செல்வாக்கினை உணரமுடிகிறது. {{larger|<b>அந்தாம் பிரயோன்சா</b>}} மேனாட்டிலிருந்து தமிழகம் போந்து, கிறித்தவ சமயத்திற்கும் தமிழுக்கும் தொண்டு புரிந்த பாதிரியார்களுள் ஒருவர்; போர்ச்சுகல் நாட்டுக் குவார்டா நகரில் கி.பி. 1626–இல் தோன்றினார். பிரபுக்கன் குடும்பத்தில் பிறந்த இவர் கல்லூரிக் கல்விக்குப் பின்னர்க் கிறித்தவ சபையில் சேர்ந்து சமய குருவானார். சமய ஊழியத்திற்காகக் கி.பி. 1647–இல் கொச்சி வந்து சேர்ந்தார். பின்னர் இவர் கி.பி. 1653–இல் மதுரை வந்து, தமிழகத்தில் தம் சமய ஊழியத்தைத் தொடங்கினார். இவர் தமிழில் பரமானந்தசாமி என அழைக்கப்பட்டார். தமிழில் புலமை சான்ற இவர் ‘தமிழ் – போர்ச்சுகீசிய அகராறி’ ஒன்றினை உருவாக்கினார். இவ்வகராதி இவர் காலமாகி மூன்றாண்டுகட்குப் பின்னர் அச்சிடப்பட்டது. இதன் ஒருபடி இப்போது வத்திகன் நூலகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘போர்ச்சுகீசிய – தமிழ் அகராதி’ ஒன்றையும் இவர் இயற்றியதாகத் தெரிகிறது. தம் 40–ஆம் அகவையில் இறந்த இவரது உடலம் திருச்சி மாவட்டத்தில் முசிரிக்கு அருகிலுள்ள தொட்டியம் என்னும் ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. {{larger|<b>அந்தாளிக் குறிஞ்சி</b>}} தேவாரப் பண்களுள் ஒன்று. இசைத் தமிழ்ப் பதிகங்களாகிய தேவாரத்தைத் திருமுறைகளாகப் பகுத்துத் தொகுத்தபோது, திருவருள் துணைகொண்டு திருநீலகண்டயாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பாடினியாரால் அப்பதிகங்களுக்கு இசை அமைக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகங்கள் முதன் மூன்று திருமுறைகளாய்ச் செவ்வழி முதலிய 22 பண்களில் அடங்கின. தமிழ் மக்கள் பண்டைக் காலத்தில் நூற்று மூன்று பண்களை வகுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் 38–ஆவது பண் அந்தாளிக் குறிஞ்சி என்பதாகும். இது குறிஞ்சிப் பெரும்பண்ணின் நைவளம் என்னும் திறத்தின் புறநிலையாய் அமையும். ஞானசம்பந்தரின் மூன்றாவது திருமுறையின் இறுதியிலமைந்துன்ன 124, 125 ஆகிய இரு பதிகங்கள் மட்டுமே, தேவாரத்தில் அந்தாளிக் குறிஞ்சியில் அமைந்துள்ளன. அவர் திருநல்லூர்ப் பெருமணத்தில் தம் திருமணம் காண வந்தவர் அனைவரையும் உடன்கொண்டு, அவ்வூர்த் திருக்கோயிலில் தோன்றிய சோதியில் புக்கபோது பாடிய திருப்பதிகம், ‘கல்லூர்ப் பெருமணம்’ என்னும் இறுதிப் பதிகமாகும். அதனால் ஞானசம்பந்தர் இறுதியாகப் பாடிய பண் அந்தாளிக் குறிஞ்சியாகும். திருமுறை கண்ட புராணம் ‘அந்தாளிக்கு ஒன்றாக்கி’ என்பதனால் ஞானசம்பந்தரின் இரு அந்தாளிக் குறிஞ்சிப் பண்களும் ஒரே கட்டளையமைப்புடையனவாயின என்பது புலனாகிறது. 124–ஆம் பதிகமாகிய திருக்கருகாவூர் வெள்ளடைப் பதிகம், தானனா தானன தானா தானனா — “சுண்ணவெண்ணீறணி மார்பிற்றோல்புனைத்து” என்னும் அமைப்புடையது. {{larger|<b>அந்தி இளங்கீரனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர்தம் ஒரே பாடல் அகநானூறு 71–ஆம் பாடலாக அமைந்துள்ளது. பாலைத் திணையிலமைந்த இப்பாடல், தலைவன் பொருள் வயின் பிரித்த விடத்து ஆற்றாளாகிய தலைமகளுக்குத் தோழி கூறியதாக அமைந்துள்ளது. இவர் பெயரிலுள்ள அந்தி என்னும் அடை, இவர் பாடிய பாடலிலுள்ள சொல்லாட்சிச் சிறப்பால் அமைந்ததாகலாம். இளங்கீரனார் என்னும் மற்றொரு புலவரொடு இவரை வேறுபடுத்தி அறிதற்கு இவ்வடை பயன்படுகிறது. மாலைக் காலத் தோற்றத்தினைத் தம் பாடலில் அழகுறச் சித்திரித்துள்ளார். ‘மையில் மானினம் மருளப் பையென, வெந்து ஆறுபொன்னின் அந்தி பூப்ப’ என்னும் தொடரிலுள்ள ‘வெந்தாறு பொன்’ என்னும் உவமை மாலைக் காலத்தின் செக்கர் வான எழில் காட்சியினை விளக்குவதாக அமைந்து விளங்குகிறது. இவருடைய<noinclude></noinclude> 86yf14itp4ehp2fyd3fkbism0p9zckp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/377 250 620390 1839855 2025-07-07T07:24:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெயர் அந்தில் இளங்கீரனார் என்று சில ஏடுகளில் காணப்படுகிறது. அப்பாடத்திலுள்ள ‘அந்தில்’ என்பதனை அம்+தில் எனக் கொண்டு ‘அழகு விழையுமிடம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்திமான்|341|அந்தியூர்}}</noinclude>பெயர் அந்தில் இளங்கீரனார் என்று சில ஏடுகளில் காணப்படுகிறது. அப்பாடத்திலுள்ள ‘அந்தில்’ என்பதனை அம்+தில் எனக் கொண்டு ‘அழகு விழையுமிடம்’ எனப் பொருள் காண்பாருமுளர். {{larger|<b>அந்திமான்</b>}} இடையெழு வள்ளல்களுள் ஒருவன். வரையாது வழங்கி வரலாற்றிலும் புராணங்களிலும் இடம் பெற்றுத் திகழும் வள்ளல்கள் சிலரைத் தொகைப்படுத்தித் தலைஎழுவள்ளல், இடையெழுவள்ளல், கடையெழுவள்ளல் என்று கூறுவது மரபு. எழினி முதலாகக் கூறப்படும் கடை எழு வள்ளல்கள் எழுவரும், சங்க காலத்தில் சிறந்த வள்ளல்களாய் வாழ்ந்த வரலாற்று மக்களாவர். முதல் இடை ஆகிய இருவகையில் அடங்குபவர்கள் புராண இதிகாச மாந்தர்கள். இடையெழு வள்ளல்களின் பெயர்கள் வருமாறு:– அக்குரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன், சந்திமான், சிசுபாலன், தந்த வக்கிரன். {{larger|<b>அந்தியூர்:</b>}} கொங்கு நாட்டில் பாயும் பவானி ஆற்றின் வடகரையிலுள்ள நிலப்பகுதி, பண்டு வடகரைநாடு எனப்பட்டது. இவ்வடகரை நாட்டின் மையமாக விளங்குவது அந்தியூர். இவ்வூர் பெரியார் மாவட்டப் பவானியிலிருந்து வடமேற்கே 16 கி.மீ. தொலைவிலுள்ளது. சங்ககால முதற்கொண்டே இது வரலாற்று முதன்மை பெற்று வந்துள்ளது. கொங்கு நாட்டை ஆண்ட சேரர், வடகரை நாட்டையும் ஆண்டு வந்தனர். இவர்களுள் அந்துவன் பொறையன் (கி.பி. 92 – 112) என்பான் குறிப்பிடத்தக்கவன் ஆவான். இவனது பெயராலேயே இது அந்தியூர் (அந்துவன் ஊர்) எனப்பெயர் பெற்றது. அந்தியூரைக் கி.பி. 1750–இல் இயற்றப்பட்ட ‘நண்ணாவூர்ச் சங்கமேசுவர சுவாமி வேதநாயகியம்மன் விறலிவிடுதூது’ குறிப்பிடுகின்றது. திப்பு இதனைக் கி.பி. 1797–98–இல் ‘அகமதாபாத்’ என்று குறிப்பிட்டுள்ளான். அந்தியூருக்கு 18-10-1800–இல் வருகைபுரிந்த டாக்டர் புக்காணன் இவ்வூரின் நிலைமை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். செல்வக்கடுங்கோ வாழியாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கணைக்கால் இரும்பொறை முதலான கொங்குச்சேரரும் வடகரை நாட்டை ஆண்டுள்ளனர். வேடர் தலைவனான கண்டீரக்கோப்பெருநற்கிள்ளி என்ற வள்ளலும் இப்பகுதியை ஆண்டுள்ளான். இவனால் ஆளப்பட்டு வந்த தோட்டிமலை, இன்றைய பருகூர் மலையில் அமைந்திருந்தது. சங்க காலத்தை அடுத்து இப்பகுதி, இரெட்டிகுல மன்னர், கங்கர், இராட்டிரகூடர், சேர சொழ பாண்டியர், போசளர், விசய நகரத்தார், மதுரை நாயக்கர் முதலான வேந்தராலும், ஐதர்அலி, திப்பு சுல்தான் ஆகிய சுல்தான்களாலும் ஆளப்பட்டு வந்தது. இறுதியாக ஆங்கிலேயரால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டது. அந்தியூரில் பெரிய கோட்டை ஒன்றும் பேரேறி ஒன்றும் இருந்தன. இப்பெருங்கோட்டை 1½ கி.மீ. நீளமும் அகலமுங் கொண்டது; மூன்று சுற்று மதில்களைக் கொண்டிருந்தது. கோட்டையின் உட்புறத்திருந்த அரண்மனை, ஆசுதான மண்டபம், அந்தப்புரம், அலுவலகங்கள் ஆகியன அழித்துவிட்டன. செல்வக்கடுங்கோ வாழியாதனுடன் தொடர்புடைய செல்லீசுவரர் கோயில், அழகரசப் பெருமாள் கோயில், வீரபத்திரர் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் என்பவை மட்டும் இன்றுமுள்ளன. இக்கோயில்களில் கவின்மிகு சிற்பங்களும் கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோட்டையில் கி.பி. 1798–இல் திப்பு சுல்தானின் சமாபந்தி நடைபெற்றது. திப்பு சுல்தானது வீழ்ச்சியின் விளைவாக அந்தியூர்க் கோட்டையும் வீழ்ந்தது. கணைக்காலிரும்பொறை சிறையிலிருக்கும் தோற்றம், பத்திரகாளியம்மன் கோயிலின் வெளிப்புறத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. பத்திரகாளியம்மன் கோயில், புதுப்பாளையம் குருநாதசுவாமி கோயில், அழகரசப் பெருமாள் கோயில் முதலானவற்றில் பாண்டியரது மீன் சின்னம் காணப்படுகின்றது. கன்னட மொழிக் கல்வெட்டுகள் சில இங்குப் பொறிக்கப்பட்டுள்ளன. செல்லீசுவரர் திருக்கோயிலில், திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் வீரபாண்டிய தேவரின் (கி.பி. 1265–1285) பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், சிரீமன் மகாமண்டலேசுவரன் வீரநஞ்சராய உடையாரின் (கி.பி. 1489–1500) கல்வெட்டும் காணப்படுகின்றன. உடையாரின் கல்வெட்டில் ஊர்ப் பேராளர்கள் ஐவர் குறிக்கப் பெறுகின்றனர். இவர்களுள் பாசறை வேட்டுவன் குறும்பன், பொன்னாங் கட்டியார் வேங்கடநாதன் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அந்தியூர்க் குளத்திற்கு மேல்பால் உள்ள நிலப்பகுதி, கி.பி. 1178–ஆம் ஆண்டில் காவேரி வல்லபன் கோரவி கோதை என்னும் சேரமன்னரால், ஈரோடு திருத்தொண்டீசுவரருக்குத் தேவதானமாக அளிக்கப்பட்ட செய்தி ஈரோட்டுக் கல்வெட்டால் அறியப்படுகின்றது. கோட்டைப் பகுதியில், ஆயிரக்கணக்கான உருண்டை வடிவிலான பீரங்கி எறிகற்கள், உரோமாபுரி நாணயங்கள், யானைத் தந்தங்கள், உடைவாள், பழைமை மிக்க எலும்புத் துண்டுகள், பலவகையான நாணயங்கள், அகல் விளக்குகள், மட்-<noinclude></noinclude> llmitult2fo4lxh2hm8nt994wtxap99 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/254 250 620391 1839867 2025-07-07T07:34:16Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கவே மொழிப் புழக்கத்தினால் தவறுகளைத் திருத்திக் கொள்வர். இம்முறையில் ஆசிரியர்களில் மொழித் தூண்டலும் மாணவர்களின் செயல் ஈடுபாடும் மிக இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கிலம் கற்பித்தல்|230|ஆங்கில மொழி}}</noinclude>கவே மொழிப் புழக்கத்தினால் தவறுகளைத் திருத்திக் கொள்வர். இம்முறையில் ஆசிரியர்களில் மொழித் தூண்டலும் மாணவர்களின் செயல் ஈடுபாடும் மிக இன்றியமையாதனவாகும். இம்மொழிவழிக் கற்பித்தலில் புதிர்களை மையமாகக் கொண்ட பாடத்திட்டங்களும், செயல்களை மையமாகக் கொண்ட பாடத் திட்டங்களும் சிறப்பான இடம் பெறுகின்றன. இவை மாணவர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்கின்றன. மேலும் மாணவரின் சிந்தனையைத் தூண்டி ஆங்கிலத்திலேயே எண்ணங்களை வெளிப்படுத்த இம்முறை உதவுகிறது. நமது நாட்டிலுள்ள மண்டல ஆங்கில நிறுவனங்கள் (Regional Institute of English) இம்முறையைப் பற்றிய ஆராய்ச்சியில் இப்போது ஈடுபட்டுள்ளன. மேலும் ஆங்கிலம், பலவகைப்பாடத் திட்டங்களின் அடிப்படையில் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதையொட்டிச் சொற்றொடர் அமைப்புப் பாடத் திட்டம் (Structural Syllabus) வழக்காடுதற்கேற்ற தலைப்புகளைக் கொண்ட பாடத் திட்டம் ( Topical Syllabus), மொழித் திறமைகளைக் கொண்ட பாடத் திட்டம் (Skill Based Syllabus). எண்ணங்களை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டம் (Notional Syllabus) எனப் பலவகைப் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் எல்லாப் பள்ளிகளிலும் சொற்றொடர் அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டம் (Structural Syllabus) இப்போது நடைமுறையில் உள்ளது. இதன்படி ஆங்கில மொழிப் பாடம் கற்பிக்கப்படுவதற்கு முன்பு அந்தப் பாடத்தில் வரும் சொற்றொடர் அமைப்பையும், புதிய சொற்களையும் முதலில் அறிமுகப்படுத்தி, தொடர்ந்த மொழிப்பயிற்சி மூலம் (Language Drill) அவைகளைக் மனத்தில் நிலை நிறுத்துகிறார்கள். இந்தியக் கல்வி ஆய்வுக்குழு அறிக்கையின்படி ஆங்கிலம் ஒரு நூலக மொழியாகக் கருதப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு ஆங்கில மொழி நூல்களைப் படித்துப் புரிந்துகொள்ளவும் குறிப்புகள் எடுக்கவும் பயிற்சி கொடுத்தலில் மிக்க கவனம் செலுத்தப்படுகிறது.{{Right|ஐ.இரா}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>French. F. G.,</b> The Teaching of English Abroad, Parts I, II & III Oxford University Press, 1955.<br> <b>Widdouson,</b> Teaching English as Communication. Oxford University Press, 1978. <b>ஆங்கில மொழி</b> வரலாறு, அரசியல், பொருளியல் ஆகியவற்றின் தொடர்புடைய காரணங்களால், இன்று உலகில் பெரும்பான்மையோரால் பேசப்படும் மொழியாக உள்ளது. எளிதில் மற்ற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கித் தனதாக்கிக் கொள்ளும் திறமை, சிக்கலில்லாத முறையில் சொற்கள் முடியும் அல்லது உருவமாறும் தன்மை, நிலையான வாக்கிய அமைப்பு, எக்கருத்தையும் சுற்றி வளைத்துச் கூறும் அழகு ஆகியவை உலக மொழியான ஆங்கிலத்தின் சிறப்புக் கூறுகள் எனலாம். இதனைப் பிழையுடன் பேசுவது எளிது: பிழையில்லாமல் பயன்படுத்துவது கடினம். ஆங்கில மொழி பழைய ஆங்கிலம் (Old English). இடைக்கால ஆங்கிலம் (Middle English). இற்றைய ஆங்கிலம் (Modern English) என்று படிப்படியாக வளர்ந்து செழிப்படைந்திருக்கிறது. பழைய ஆங்கிலம் கி.பி. 1150 வரையிலும். இடைக்கால ஆங்கிலம் கி.பி. 1150-இலிருந்து 1500 வரையிலும் வழக்கிலிருந்தன. இன்று வழக்கிலிருக்கும் ஆங்கிலம் கி.பி. 1500-க்கு பின்னர் வளர்ந்ததுதான், இம்மூன்று நிலைகளிலும் இது இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. இக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் ஐரோப்பாவிலும் இந்திய நாட்டில் விந்தியமலைக்கு வடக்கேயும் பேசப்படும் ஆரிய மொழிகளாகும். இக்குடும்பத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றான செருமானிய (Germanic) த்திலிருந்துதான் பழைய ஆங்கிலம் தோன்றியது. பழைய ஆங்கிலத்தை ஆங்கிலோ சாக் சான் (Anglo-Saxon) என்று கூறுவாருமுளர். பிரிட்டன் (Britain) என்ற பழைய பெயருடைய ஆங்கில நாட்டில் தொன்றுதொட்டுப் பேசப்பட்டு வந்த மொழி ஆங்கிலமன்று. இம்மொழி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்தான் வழக்கத்திற்கு வந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் அந்நாட்டில் வாழ்ந்திருந்தாலும், அங்கு முதன் முதலில் பேசப்பட்ட மொழி இந்தோ. ஐரோப்பியக் குடும்பத்தைச் சார்ந்த கெல்ட்டு (Celt) மொழியாகும். அதைப் பேசியவர்கள் கெல்ட்டுகள் (Celts) எனப்பட்டனர். இங்கிலாந்தின் மேற்குப் பகுதியான வேல்சு மாவட்டத்தில் வாழும் கெல்ட்டுகளின் மரபினரால் கெல்ட்டு மொழி இன்றும் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பாவின் வடபகுதியில் கி.பி. 449-ஆம் ஆண்டிலிருந்து வாழ்ந்த டியூடானிய இனத்தைச் சார்ந்த சூட்டுகள் (Jutes), சாக்சானியர்கள் (Saxons). ஆங்கிலேயர்கள் (Angles) ஆகிய மூன்று பிரிவினர் இங்கிலாந்தில் ஒருவர் பின் ஒருவராகப் படையெடுப்பின் மூலம் குடியேறினார்கள். அவர்களுடைய மொழிதான் நான்கு வட்டாரப் பிரிவுகளில் சில் வேற்றுமை-<noinclude></noinclude> 3cfs97ptvcmemdrz3j1cu0amy447gof பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/255 250 620392 1839885 2025-07-07T07:46:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களுடன் பேசப்பட்ட பழைய ஆங்கிலம், நமக்குத் தெரிந்த ஆங்கில எழுத்துகளையும் தெரியாத பல எழுத்துகளையும் உடைய அம்மொழியை இன்று எளிதாகப் புரிந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில மொழி|231|ஆங்கில மொழி}}</noinclude>களுடன் பேசப்பட்ட பழைய ஆங்கிலம், நமக்குத் தெரிந்த ஆங்கில எழுத்துகளையும் தெரியாத பல எழுத்துகளையும் உடைய அம்மொழியை இன்று எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது. எழுத்து முறையிலும் உச்சரிப்பிலும் சொல் தொகுதியிலும் இலக்கண விதிகளிலும் அம்மொழி இன்று வழங்கும் ஆங்கில மொழியிலிருந்து வேறுபட்டது. பழைய ஆங்கிலத்திலுள்ள சொற்களில் 85 விழுக்காடு இன்று வழக்கொழிந்த சொற்களாகும். அவை தியூடானிய மொழி வகையைச் சேர்ந்தவை. எஞ்சியிருக்கும் man (மனிதன்), hus (வீடு), god (நன்மை), feohtan (போரிடு) போன்ற சொற்கள் இன்று வழக்கிலுள்ள ஆங்கிலச் சொற்களை நமக்கு நினைவூட்டும். பழைய ஆங்கிலத்திற்கும் இன்றைய ஆங்கிலத்திற்கும் திரிவு (Inflection) முறையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு, ஆங்கிலம் அளவற்ற முன்னுருபுகளையும் (Prepositions) துணை வினைகளையும் (Auxiliary Verbs) பயன்படுத்துவது மட்டுமன்றி, பொருள் விளக்கத்திற்குச் சொல்லமைப்பை (Word order) நம்பியுமிருக்கிறது. ஆனால், வடமொழி, தமிழ், இலத்தீன், செருமானியம் போன்று, பழைய ஆங்கிலம் திரிவுகளின் மூலம் பொருள் விளக்கம் செய்கிறது. பெயர்ச் சொல்லிலும் அடைச்சொல்லிலும் ஒருமையில் நான்கு வேற்றுமைகளையும், பன்மையில் நான்கு வேற்றுமைகளையும் உடையது. இது அம்மொழிக்கும் செருமானிய மொழிக் குழுவுக்குமுள்ள காரண காரியத் தொடர்பின் விளைவு. மேலும், அம்மொழியில் பெயர்ச் சொற்களுக்கு இயற்கைப் பால் பகுப்பு (Natural gender) இல்லை. செருமானிய மொழியை ஒத்து stun (கல்), mona (சந்திரன்) ஆகிய சொற்கள் ஆண்பாலைக் குறிக்கும். ஆனால், ‘sunne’ (சூரியன்) பெண்பாலைக் குறிக்கும். பெயர்ச்சொல், அடைச்சொல்லைப் போன்று சிறப்புச் சுட்டும் (Definite article) திரிவுகனை உடையது. இங்கிலாந்தின் அரசியல், பண்பாட்டு வரலாற்றிலு மட்டுமன்றி, ஆங்கில மொழியின் வளர்ச்சியிலும் கி.பி. 1066 ஆம் ஆண்டு. குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவ்வாண்டில் இறந்த ஆங்கில மன்னனின் நெருங்கிய உறவினனும், பிரெஞ்சு நாட்டினனுமான நார்மண்டிக் கோமகன் இங்கிலாந்து அரசைக் கைப்பற்றினான். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரெஞ்சுப் பண்பாட்டுத் தாக்கத்தினால் ஆங்கில மொழியில் பெருத்த மாற்றங்கள் பல நிலைகளிலும் தோன்ற, அது இன்று பழக்கத்திலிருக்கும் ஆங்கிலத்தை ஒத்து வளர்ந்தது. இத்தகைய பெரும் மாற்றங்கள் ஆங்கில மொழி வளர்ச்சியின் இடைக்காலத்திற்கு (கி.பி. 1150-1500) முன்பும் பின்பும் நிகழவில்லை. நார்மானிய கைப்பற்றுதலுக்குப் பிறகு, ஆங்கில இலக்கணை அமைப்பும் சொற்றொகுதியும் மிகுதியான மாறுதலுக்குள்ளாயின. இலக்கண நோக்கில். ஆங்கிலம் திரிவு சார்ந்த மொழியிலிருந்து பாகுபாட்டு (Analytic) மொழியாக மாறியது. திரிவுகளை இழந்து, முன்னுருபுகளையும் துணை வினைகளையும் அம்மொழி பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியதுமன்றி, வாக்கியச் சொல்லமைப்பில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்னும் நிலையான அமைப்பைப் பின்பற்றவும் செய்தது. இடைக்கால ஆங்கிலம் திரிவுகளைப் படிப்படியாக இழந்ததின் விளைவாக. இலக்கணப் பால் பகுப்பு முறை மறைந்து, இயற்கைப் பால் பகுப்பு முறை வழக்கத்திற்கு வந்தது. இதை ஒரு திடீர் மாற்றமென்று சொல்வதிற்கில்லை. பழைய ஆங்கிலத்தில் இவற்கைப் பால் பகுப்பு முறையிலேயே சிறப்புச் சுட்டுப் பெயர்கள் (Personal Pronouns) பயன்படுத்தப்பட்டன. இப்பால் பகுப்பு முறை நாளடைவில் வழக்கொழிந்தபொழுது, பெயர்ச் சொற்களின் பால் பகுப்பு, ஆண் - பெண் வேற்றுமை அடிப்படையில் செய்யப்பட்டது. ஆங்கில மொழியின் வளர்ச்சியை, இலக்கணம், புதிய சொற்கள், மொழிக்கடன் ஆகிய மூன்று கோணங்களில் ஆராயலாம். பழைய ஆங்கில இலக்கணத்திற்கும் இன்றைய ஆங்கில இலக்கணத்திற்கும் திட்டவட்டமான வேறுபாடுகள் இருந்தாலும், பின்னது முன்னதிலிருந்து உண்டானது. திரிவுகள் போன்ற பல உறுப்புகளைக் கழித்தும், எஞ்சியுள்ள பல உறுப்புகளுக்கு இடையே உள்ள தொடர்புகளை விளக்கப் புதிய இலக்கண வரையறைகளை உண்டாக்கியும் மொழி வளர்ந்தது. காலப்போக்கில் திரிவுகளை இழப்பது ஆங்கிலத்திற்கு மட்டுமன்றி, வழக்கொழியாத மற்ற மொழிகளுக்கும் உள்ள பொதுவான மரபேயாகும். சான்றாக. இன்று வழக்கிலிருக்கும் செருமானிய மொழி பல திரிவுகளையுடையதென்றாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட அதே மொழியை விடத்திரிவுகளைக் குறைவாக உடையதாகும். மக்களிடம் குடி கொண்டுள்ள மறதியும், அவர்கள் மொழியைப் பயன்படுத்தும்போது அதில் இசைவை (Consistency) நாடுவதும் காலம் மாற மாற இணைச் சொற்களையும் திரிவுகளையும் விட்டுவிடத் தூண்டுகின்றன. இக்கூற்று ஆங்கிலத்திற்கும் பொருந்தும், ஆங்கில இலக்கண அமைப்பு, காலப்போக்கில் எளிதாயிற்று. சொற்களை ஒலிப்பதில் ஏற்பட்ட மாறுதலாலும் பலதரப்பட்ட மக்கள் மொழியைப் பேசியதாலும் பேச்சு வழக்கில் மக்கள் தெளிவை நாடியதாலும். இலக்கண உறுப்புகளாகப் பதிலிடு பெயர்கள் (Pronouns), ஆறாம் வேற்றுமைத் திரிவு-<noinclude></noinclude> lt0bsg2vb0ej06y0rb225usu657yu2m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/256 250 620393 1839897 2025-07-07T08:03:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "போன்றவற்றில் இயற்கையாக மாறுதல்கள் ஏற்பட்டன. இன்னொரு இன்றியமையா மாற்றம், பெயர்ச்சொல் தொடர்களில் பெயர்ச்சொல்லையே அடைமொழியாகப் பயன்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839897 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில மொழி|232|ஆங்கில மொழி}}</noinclude>போன்றவற்றில் இயற்கையாக மாறுதல்கள் ஏற்பட்டன. இன்னொரு இன்றியமையா மாற்றம், பெயர்ச்சொல் தொடர்களில் பெயர்ச்சொல்லையே அடைமொழியாகப் பயன்படுத்துதல் ஆகும். புதுப் புதுச் சொற்களின் தோற்றத்தாலும் ஆங்கில மொழி விரைவாக வளர்ந்தது. இத்தகைய சொற்பெருக்கத்திற்கு மூன்று வழிகள் கையாளப்பட்டன. அவை ஏற்கனவே பழக்கத்திலுள்ள இரண்டு சொற்களைச் சேர்த்துக் கூட்டுச் சொற்களை (Compounds) உண்டாக்குதல்; ஒரு பழைய சொல்லை முன் ஒட்டு (Prefix) அல்லது பின் ஒட்டு (Suffix) வழியாகப் புதிய சொல்லாக மாற்றுதல்; மொழியிலேயே இல்லாத ஒரு சொல்லை உணர்ச்சி உந்துதலினாலேயோ அல்லது ஒரு ஒலியைப் பின்பற்றுதலினாலேயோ உண்டாக்குதல் ஆகும். பெயர்ச்சொல்லைப் பெயர்ச் சொல்லுடன் சேர்த்து tree-frog, house-boat போன்ற சொற்களை மொழி பேசுபவர்கள் உண்டாக்கியதன்றி, பெயாடையையும் பெயர்ச் சொல்லையும் சேர்த்து black - bird, hot - bed போன்ற கூட்டுச் சொற்களையும் உண்டாக்கினர். பெயர்ச் சொற்களைக் கொண்டோ அல்லது பெயரடைகளைக் கொண்டோ breakfast, spend- thrift போன்ற கூட்டுச் சொற்கள் கி.பி. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து உருவாக்கப்பட்டன. இத்தகைய சொற்கள் ஒவ்வொன்றிலும் முதற்கூறு ஒரு வினைச்சொல் தண்டாகவும், இரண்டாம் கூறு ஒரு செயலைக் குறிக்கும் பெயர்ச் சொல்லாகவும் இருப்பதைக் காணலாம். பல வினைச்சொற்கள் பழைய ஆங்கிலச் சொற்களைத் தக்கவைத்துக் கொண்டமையால் உருவாக்கப்பட்டன. (எ-டு ) talu > tale: salu > sale. இலத்தீன் அல்லது பிரெஞ்சு மொழியிலுள்ள பழைய சொற்களோடு அம்மொழிகளின் பின்னிணைப்புச் சொற்களைச் சேர்த்துப் புதிய ஆங்கிலச் சொற்கள் படைக்கப்பட்டன. (எ-டு ) derivation, condemnation. இலத்தீன் முன்னொட்டுச் சொல்லான re - ஐக் கொண்டு உருவாக்கப்பட்ட செயல் சுட்டுவினைச் சொற்களும் பெயர்ச் சொற்களும். un- முன்னொட்டுச் சொல்லின் வழியாகத் தோற்றுவிக்கப்பட்ட பெயரடைகளும் அளவற்றவை. சொற்பொருளோசை இசைவணி (Onomatopoeia) வாயிலாக உண்டாக்கப்பட்ட எதிரொலிச் சொற்கள், அதாவது. சொல்லின் பொருளை அதன் ஒலியால் கட்டிக்காட்டும் சொற்கள், ஆங்கிலத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இதற்கு bang, hum, mumble போன்ற சொற்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆங்கிலத்தில் வேறு சில மாற்றங்களும் ஏற்பட்டன. எடுத்துக்காட்டாகச் சொற்களின் பொருள் மாற்றம் வாயிலாகவும் ஒரு மொழி வளர்ச்சியடைகிறது என்பதனைக் குறிப்பிடலாம். இன்று வழக்கிலுள்ள ‘வெள்ளம்’ என்னும் சொல் பண்டைக்காலத் தமிழிலும் இன்றைய மலையாளத்திலும் ‘தண்ணீர்’ என்று பொருள்படும். இதைப்போன்று பல சொற்கள் ஆங்கிலத்திலுள்ளன. காலப்போக்கில் பொருள் மாற்றத்தின் விளைவு, ஒரே சொல் முரண்பட்ட இரண்டு அல்லது மூன்று பொருள்களைக் கொடுப்பது ஆகும். Fast என்ற சொல்லிற்கு ‘அசையாத’, ‘விரைவான’ என்ற இரு வேறுபொருள்கள் உண்டு. Fine என்னும் சொல் குறைந்தது நான்கு பொருள்களையாவது தன்னுள்ளடக்கியது, முதிர்ச்சியடைந்த மொழிகளுக்கெல்லாம் பொருள் மயக்கம் ஒரு சீரிய பண்பாகக் கருதப்படும். உலகத்திலுள்ள மொழிகளெல்லாவற்றையும் விட ஆங்கிலந்தான் மிகுதியான சொற்களை உடையது. ஆயிரத்து முந்நூறாண்டுக் கால வளர்ச்சியில் அது பல மொழிகளிலிருந்தும் பலவகையான சொற்களை மிகுதியாகக் கடன் வாங்கியிருக்கிறது. அதே காலத்தில் தக்கவைத்துக் கொண்ட ஆங்கிலச் சொற்கள் இன்னும் பழக்கத்திலிருக்கின்றன. அம்மொழியின் வளைந்து கொடுக்கும் தன்மையினாலும், நெகிழ்வுத் திறனாலும், கடன் வாங்கப்பட்ட சொற்கள் மொழியின் சொற்றொகுதியில் இயற்கையான முறையில் எளிதில் இடம்பெற்று விட்டன. இலத்தீன் பிரெஞ்சு மொழிகளிலிருந்து தமிழ் வரை பல மொழிகளும் ஆங்கிலத்திற்குச் சொற்களை வழங்கியிருக்கின்றன. Catamaran (கட்டமரம்), Mulligatawny (மிளகுத் தண்ணீர்) போன்ற சொற்கள் தமிழ் மொழியிலிருந்து உருமாறிச் சென்றனவாகும், குறிப்பாக, அறிவியல், பண்பாடு, பொருளியவ் துறைகளில் ஆங்கிலம் இன்னும் சொற்களைக் கடன் வாங்கிக் கொண்டிருப்பதால். அதன் சொல்வளம் பெருகிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. இவ்வளர்ச்சியின் முதல் நிலை ஏசுநாதர் பிறப்பதற்கு முன்பும், கி.பி. ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகள் வரையிலும் உரோமானியர் கிறித்தவ சமயத்தை இங்கிலாந்தில் நுழைத்த காலமுமாகும். அப்பொழுது அச்சமயமும், சமயச் சடங்குகள் தொடர்பான Bishop, Candle, Priest போன்ற சொற்களும் இலத்தீன் மொழியைத் தழுவிப் பயன்படுத்தப் பட்டன. உரோமானியர்களுக்குக் கடமைப்பட்டிருப்பது போன்றே, இங்கிலாந்தை ஒரு காலத்தில் ஆண்ட இசுகாண்டி நேவியக் குடும்பத்தைச் சேர்ந்த தேனியர்களுக்கும் (Danes). வடக்கிலுள்ளவர்களுக்கும் (North men) ஆங்கில மொழி கடமைப் பட்டிருக்கிறது.{{nop}}<noinclude></noinclude> bm6tkizi3mpnrkcy4vu5pth4g5a4pvp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/257 250 620394 1839903 2025-07-07T08:19:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "Law, Outlaw, Riding போன்றவை தேனிகச் (Danish) சொற்கள், Cross (சிலுவை) இலத்தீன் மொழியிலிருந்து பழைய நார்சு (Old Norse) மொழிக்குச் சென்று, பழைய ஐரிசு (Old Irish) மொழி வழியாகப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1839903 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில மொழி|233|ஆங்கில மொழி}}</noinclude>Law, Outlaw, Riding போன்றவை தேனிகச் (Danish) சொற்கள், Cross (சிலுவை) இலத்தீன் மொழியிலிருந்து பழைய நார்சு (Old Norse) மொழிக்குச் சென்று, பழைய ஐரிசு (Old Irish) மொழி வழியாகப் பழைய ஆங்கிலத்தில் புகுந்து, இன்று எல்லோராலும் பரவலாகப் பயன் படுத்தப்படும் சொற்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கிலாந்து கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் நார்மானியர் வயப்பட்டபொழுது, பிரெஞ்சு மொழியிலிருந்து மிகப்பல சொற்கள், குறிப்பாக அன்றாடப் பேச்சு வழக்கிலுள்ள சொற்கள், ஆங்கிலத்தில் கலந்து விட்டன. இங்கிலாந்தை ஆண்ட பிரெஞ்சு அரச குடும்பத்தைப் பொறுத்து, இத்தகைய சொற்கள் அந்நாட்டின் வடக்கு வட்டாரத்திலிருந்தோ நடு வட்டாரத்திலிருந்தோ வந்தன. இதன் விளைவு சுவையானது. ஒரே சொல் இரண்டு உருவங்களில் கடன் வாங்கப்பட்டது. carch-chase; warden-guardian. சட்டம், அரசு, சொத்து, போர், பெருமக்கள், குடி, உணவு, குடும்பம் ஆகியவற்றோடு தொடர்புடைய சொற்கள் கி.பி. 13-ஆம் நூற்றாண்டிற்குள் ஆங்கில மொழியிற் கலந்து அதனை வளம் மிக்கதாகச் செய்தன. அத்தகைய சொற்களுள் சில; Court, Parliament, Rent, Battle, Duke, Mutton, Uncle. ஆங்கிலத்தில் கலந்துவிட்ட பிரெஞ்சு மொழிச் சொற்கள் பல இலத்தீனிலிருந்து உருப்பெற்றவையாகையால், ஆங்கிலம் இலத்தீனிற்கு நேர் முகமாகவும் மறைமுகமாகவும் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. இலத்தீனிலிருந்து இன்னும் சொற்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு காரணம் இலக்கிய வல்லுநர்களில் பலர் நேற்றுவரை அம்மொழியை நன்கு கற்றறிந்திருந்ததுதான். ஆங்கிலத்தில் ஒரு புதுச் சொல்லைப் படைப்பதைவிட ஒரு இலத்தீன் மொழிச் சொல்லிற்கு ஆங்கில உருக்கொடுப்பதோ இலத்தீன் மொழிக் கூறுகளிலிருந்து ஒரு ஆங்கிலக் கூட்டுச் சொல்லை அமைப்பதோ எளிது. இலத்தீன் சொல்லை ஆங்கில மயமாக்குவதனை ஒட்டுச் சேர்க்கையின் வழியாகச் செய்யலாம். அதற்கு Continuum, Continuous போன்ற சொற்கள் எடுத்துக்காட்டுகளாகும். மறைந்து கிடந்த பழைய கிரேக்க நூல்கள் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, ஆங்கில மொழி வளம் மேலும் பெருகுவதற்கு மற்றொரு வாயில் கிடைத்தது. அறிவியல், தத்துவம் தொடர்புடைய கலைச்சொற்கள் பல கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரை கிரேக்க மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டன. அதற்குப் பின்பு இன்று வரை அறிவியல் வளர்ந்து கொண்டு வர, பல புதுச்சொற்கள் ஆங்கிலத்தில் கலந்து கொண்டே இருக்கின்றன; Stereotype, Telephone, Cinematograph போன்றவை எடுத்துக்காட்டுகளாகும். சொல் வளத்தையும் மொழி வளத்தையும் பெருக்கியதில் சில எழுத்தாளர்களுக்கு பெரும் பங்குண்டு. அவர்கள் புதிய சொற்களையும் புதிய சொற்றொடர்களையும் கற்பனை நயத்துடன் படைத்தார்கள். அவர்களுள் முதன்மையானவர் தலை சிறந்த இலக்கியப் படைப்பாளரான சேக்சுபியர் ஆவார். அவர் பேச்சு நடை வழக்கங்களையும் எழுத்து நடை வழக்கங்களையும் தமக்கே உரிய நடையில் கேலி செய்வதன் வாயிலாகவும், குழு வழக்குகளைத் தழுவுதல் வாயிலாகவும் புதுமை முறைகளைக் கையாண்டும், வழக்கொழிந்த சொற்களைப் புதுப்பித்தும் தம் தாய்மொழியின் சொற்றொகுதியைப் பெருக்கினார், தம் நாடகங்களில் அவர் 30,000-ற்கும் மேற்பட்ட ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது உண்மை. பழைய மொழிகளில் புலமைமிக்கவரான மில்ட்டன் தாய்மொழிப் பற்றுடையவர்; கிரேக்க இலத்தீல் மொழிக் காப்பியங்களுக்கு ஈடாக வீறார்ந்த நடையில் கவிதை எழுதியவர். இவர் இலத்தீன் மொழியமைப்பைப் பின்பற்றி, ஆங்கிலச் சொல்லமைப்பையும் கட்டமைப்பையும் படைத்தவர், ‘A tower of strength’, ‘Full of sound and fury’, ‘One's pound of flesh’ போன்ற சொற்றொடர்களை இன்றும் நாம் பயன்படுத்துவதன் வாயிலாகச் சேக்சு-ஆங்கிலமொழியை வளப்படுத்த உதவினாரெனில், மில்ட்டனும் மறக்கமுடியாத சொற்றொடர்களான ‘Darkness visible’, ‘The human face divine’ ‘That bad eminence’ போன்றவற்றினால் அம்மொழியின் கருத்து வெளிப்படுத்தும் திறனை வலிமையடையச் செய்துள்ளார். ஆங்கில மொழியின் வளர்ச்சி விலிலிய நூலின் தாக்கத்திற்கும் உள்ளாகியது. விக்ளிப்பு, பிண்டேல் போன்ற தனி மனிதர்கள் காலச் சூழ் நிலைக்கேற்ப விவிலியத்தை மொழி பெயர்த்து மக்களின் மனத்தைக் கவர்ந்தாலும். முதலாம் சேம்சு அரசரின் ஆணையினால் கி.பி. 1611-இல் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட விவிலிய நூலின் தாக்கம் அம்மொழியில் மிகுதியாக அமைந்தது. விவிலியச் சொற்றொடர்கள் பல, ‘A labour of love’, ‘The shadow of death,’ ‘The eleventh hour’ என ஈப்ரூ, கிரேக்க மொழியின் வேர்ச்சொற்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன. ஆங்கில மொழி அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆசுத்திரேலியா, இந்தியா போன்ற நாடு-<noinclude> <b>வா.க. 2-30</b></noinclude> ep9zb55de64dn68b68pd9naqdbubiit