விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.45.0-wmf.8 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/191 250 130302 1840041 1839806 2025-07-07T15:22:27Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||189}}</noinclude>யோரத்தில் இருந்த பனைமரங்களில் இருந்து பனங்காய்கள் பழுத்து டொப்டொப்புண்ணு கீழே விழுந்தன. திரவி அதை எடுக்க ஓடினபோது பொணமு ஆச்சி சத்தம் போட்டாள்: லே, சும்மா எடுத் திராதலெ கொல்லா! காறித் துப்பிட்டு எடு. பனை முட்டில் ராத்திரி காலத்தில் பூதத்தான் நிப்பான். அவ்வாறு காறித் துப்பிவிட்டு பனங்காய்களை எடுத்துக்கிட்டு ஓடிவந்தான் திரவி. சும்மாவா? பனங்காய்க்கு இருக்கும் ஒரு பிரத்தேக மணத்தையும் ருசியையும் அதைத் திண்ணுப் பாத்திருக்கும் அவனுக்குத் தானே தெரியும்!” “தெரு நடையை பெருக்குவதற்கிடையில் ‘யோக்கியரு வாறாரு, செம்பெடுத்து உள்ளே வை’யிண்ணு பொணமு ஆச்சி மரியாதை ராமியாக ‘சவச்களிஞ்ச பேச்சு’ பேசத் தொடங்கி விட்டதைக் கேட்டு, ஆச்சி திரவியத்தைப் பார்த்து ஒரு கள்ளச் சிரிப்பு சிரித்தாள்.” “மனசு மொலு மொலூண்ணு தவிச்சுக்கிட்டே இருந்தது. வீட்டிலே இருக்கும்போது ஆனாலும் சரி, பள்ளிக்கூடத்துலே இருக்கப்பட்ட சமயம் ஆனாலும் சரி, மனசுலே என்னமோ பாரம் எடுத்து வச்சாப்பலே ஒரு வேவலாதி! புஸ்தகத்தை எடுத்துப் படிக்கக் கூட வீட்டிலே தன்னை அஞ்சாறு நாளா ஆரும் நிர்ப்பந்திப்பது கிடையாது. கூட்டாளிகளுக் கெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சு எல்லாவனும் ஒரு மாதிரியா பாக்க அரம்பிச்சப்பம் கொறச்சலாட்டு இருந்தது. தெருவிலும் ரோட்டிலும் நடக்கப்பட்ட சமயம் ஆளுகளின் உபத்திரவம் கேக்காண்டாம்!”{{nop}}<noinclude></noinclude> ef4h150f5atb4ahlvec09gpm712bqhj பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/192 250 130305 1840043 1839811 2025-07-07T15:24:21Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|190||பாரதிக்குப் பின்}}</noinclude>இப்படி எவ்வளவோ எடுத்துக் காட்டலாம். கேரளத் தமிழரின் பேச்சில் சகஜமாகக் கலந்து ஒலிக்கிற மலையாளச் சொற்களும் நீல. பத்மநாபன் உரைநடையில் விரவிக் கிடக்கின்றன. ‘ஏளு ஊரிலே மட்டும்தான் தாமசிச்சா’ ‘நீ சொல்லுது ஒண்ணும் மனசிலாகல்லே’ ‘நூலும் எல்லாப் பவளத்திலையும் கணக்காட்டு கொருக்கப்பட்டிருந்தது.’ ‘தயாராட்டு மேலே நிண்ண தனக்க ஆளுகளிடம் சொல்லிவிட்டு அவரும் சாடிட்டாராம்.’ ‘பெரிய பெரிய பூங்கொத்துக அலங்கார மாட்டு இருந்தன.’ ‘அப்பாக்கும் சிரி பொத்துக்கொண்டு வந்தது.’ இவ்வாறான பிரயோகங்களை பத்மநாபன் எழுத்தில் நெடுகிலும் காணலாம். நீல. பத்மநாபன், தான் கையாள்கிற நடை குறித்து எழுதியிருக்கும் ஒரு விளக்கம் வாசகர்கள் கருத்தில் கொள்ளத்தக்கதாகும். “கதை நடக்கும் சமூகத்தின் இயற்கையான—தன்னிச்சையான ஒரு யதார்த்த நடைதான் இந்நாவலுக்கு நிதானம். கதை நிகழும் சமூகத்தின் நடைமுறையிலிருக்கும் வாக்கிய அமைப்புகளையும், வார்த்தை விசேஷங்களையும் தொனிமுறைகளையும், பழமொழிகளையும் எல்லாம் தேனீயைப் போல் கவனமாய் சேகரித்துக் கலாபூர்வமாக உலவ விடுவதை விட வாழும் சமூகத்தை அறியாமல் கூட பார்த்து விடாமலிருக்க, வாசல்களையும் சாளரங்களையும்<noinclude></noinclude> s5mqy8sc88todyfxduf4mef26vmrafv பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/193 250 130306 1840044 1839818 2025-07-07T15:26:38Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||191}}</noinclude>எல்லாம் செப்புப்போல் அடைத்து பந்தோபஸ்து செய்து கொண்டு லட்டாந்தரை நாற்சுவர்கள், மேற்கூரை—இப்படியொரு காற்று பதமாக்கப்பட்ட பெட்டகத்திற்குள் வசதியாக உட்கார்ந்து கொண்டு முழுக்க முழுக்கத் தூய்மை சொட்டச் சொட்டும் கனகம்பீரமான ஒரு படாடோப நடையில் ஒரு காப்பியம் நெய்தெடுத்து விடுவது என்பது எப்படிப் பார்த்தாலும் அப்படியொன்றும் சிரமமான காரியமில்லை என்பதுதான் இவ்விஷயத்தில் என்னுடைய அபிப்பிராயம்? நான் கையாள எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மனித சமூகத்தின் பேச்சிலும் சிந்தனைகளிலும் இருக்கும் தனித் தன்மையைச் சௌகரியமாக உதாசீனம் பண்ணிவிட்டு—பலிகொடுத்து விட்டு, நான் ஒரு மனிதாபிமானி, மொழி அபிமானி என்றெல்லாம் வீம்பாய் சுயப்பிரதாபம் அடித்துக் கொண்டால் அது வெறும் கேலிக் கூத்தாகிவிடாதா? இந்நாவலில் வரும் மக்கள் சமூகத்தினர்களிடம் இருக்கும் பிராந்தியவாடையிலிருந்து இவர்கள் மலையாளிகள் என்று பேதம் காட்டி தீண்டாமை கற்பித்துப் பிரித்து வைத்து விடுபவர்களுக்கு, தனித்தன்மை கொண்ட வெவ்வேறு வார்த்தை அமைப்புகளும், உச்சரிப்பு முறைகளும் கொண்ட செட்டிநாடு, நெல்லை, தஞ்சை, கொங்குநாடு, இலங்கை, மலேசியா இங்கெல்லாம் வாழும் தமிழர்களைப் போலத்தான், குமரி மாவட்டத்திலும் கேரள மாகாணத்தில் பல இடங்களிலும் வாழும் இவர்களும் அசல் தமிழர்கள் தான் என்று அறிவிக்கக் கூடத்தான் இந்த நடை. இவர்களின் தமிழில் மலையாளத்தின் பாதிப்பு அறவே இல்லை என்று நான் வாதிட வரவில்லை. ஆனால் முதலில் மலையாளமோ என்று தோன்றினாலும் உண்மையில் மலையாளத்திலோ, தூய தமிழிலோ இன்று பழக்கத்தில்<noinclude></noinclude> 9i3837041228r74b7xj13yd8bp3rmrt பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/194 250 130309 1840046 1839823 2025-07-07T15:27:49Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|192||பாரதிக்குப் பின்}}</noinclude>இல்லாத எத்தனை எத்தனையோ வழக்கொழிந்த சொற்கள் இவர்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் அனாயாசமாகக் கையாளப்படுகின்றன. வார்த்தைகள் புதிதாய்ச் செய்தெடுக்க முயற்சிகள் நடக்கும் இக்காலத்தில், நம் பழந்தமிழ் மக்கள் சமூகத்தில் கொஞ்சம் பேர்களுக்கிடையிலாவது வாழையடி வாழையாய் இப்போதும் வழக்கில் இருந்துவரும் சில சொற்களை சுவீகரித்துக் கொள்வதால் நம் மொழியின் தூய்மையோ, புனிதமோ ஒன்றும் கற்பழிந்து போய்விடாது என்பதுதான் என் தாத்புரியம்.” இம் மேற்கோள் நீல, பத்மநாபனின் கருத்துக்களை தெளிவுபடுத்த உதவுவதோடு அவருடைய உரைநடையின் மற்றொரு வகையை—கட்டுரைகளில் அவர் கையாள்கிற நடையின் தன்மையை—காட்டுகிற சான்று ஆகவும் அமைகிறது. நீல. பத்மநாபனின் உரைநடையில் மலையாளக் சொற்களோடு சமஸ்கிருத பதங்களும் தாராளமாய் கலந்து வருகின்றன. “சிங்க வினாயக தேவஸ்தானத்து பிள்ளையார் கோயில் நிர்மால்ய பூஜையின் தீபாராதனையில் எழும்பிய மணியோசைச் சிதறல்கள் மார்கழி மாத வைகறைக் குளிரின் ஊடே கன்னங்கரு இருளில் பிரவகித்துக் கிழக்கு நோக்கி நின்ற கோவிலை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, கிழக்கு மேற்கில் கிடந்த நெடுந்தெரு முனையில் சென்று சேருகையில், ஆன்மீகத்தின் அடக்கத் தொனி மட்டுமே மிஞ்சியிருந்தது.” ‘நாதஸ்வரமும் கொட்டு மேளமும் கர்ணாத்தமாக லேசாக கேட்டுக்கொண்டிருந்தது.’{{nop}}<noinclude></noinclude> 3pps1zx1pbtr1lprip4jy58d07j9hho பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/195 250 130312 1840048 1839830 2025-07-07T15:29:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||193}}</noinclude>‘கண்முன்னால் பிரத்யட்சப்பட்டு விடும்’ ‘ஆச்சி வியாக்கியானித்தாள்.’ ‘அனைத்தையும் வேதாந்தீகரித்துக்காட்ட’ ‘தன்னுடைய வாழ்வில் ஒரு துர்பல நிமிஷத்தில் ஒரு சபல எண்ணம் சாட்சாத்கரிக்கப்படுவதை வெளிச்சத்தில் தரிசிக்க அவன் கண்கள் கூசத்தான் செய்தன.’ ‘மினுக் மினுக்கென்று தூங்கி வழிந்து கொண்டிருந்த சிம்ணி விளக்கும் அரூபியாகி விட்டதால் குடிசையும் அப்பிரத்யக்ஷமாகி இருந்தது.’ உதாரணங்கள் போதும், இவற்றை கவனித்தாலே, இவர் தேவையில்லாமல் சமஸ்கிருத பதங்களை அளவுக்கு அதிகமாகக் கையாள்கிறார் என்பது புரிந்து விடும். வாசகர்களில் பலர் இதைப் பெரும் குறையாகக் கருதுகிறார்கள். இதையும் ஒரு தனிச் சிறப்பாக நீல. பத்மநாபன் மதிக்கிறாரோ என்னவோ! சில இடங்களில் இவர் தமிழில் வழக்கமாக எழுதப்படாத விதத்தில் சொற்களைக் கையாள்கிறார். ‘பிரத்யேகமாக’ என்பதை ‘பிரத்தேகமாக’ என்றே எழுதுகிறார். ‘அவனிடம் அறிவித்தான்’ என்ற அர்த்தத்தில் ‘அவனை அறிவித்தான்’ என்று தான் எழுதுகிறார். ‘அவன் ஒளியை பயந்தான்’ என்று குறிப்பிடுகிறார். ஆங்கில வார்த்தை அமைப்புகளின் நேரடி மொழிபெயர்ப்பு போல் தொனிக்கும் இத்தகைய பிரயோகங்கள் கேரளத் தமிழில் வழக்கில் இருக்கின்றனவோ என்னவோ—எனக்குத் தெரியாது. கேரளத் தமிழின் சில வழக்குச் சொற்கள் தமிழக வாசகர்களுக்குப் புரியாது போகலாம் என்ற நினைப்பில்<noinclude></noinclude> i4nbv5vrykmnndgn2cbz3vn29e8niv4 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/196 250 130315 1840051 1839834 2025-07-07T15:30:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|194||}}</noinclude>இவர் பல இடங்களில் உரிய பொருளை அடைப்புக்குறிகளினுள் தந்திருப்பதையும் குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக— ‘குற்றித் தொறப்பையால் (சின்னத் துடைப்பத்தால்) சுத்தமாய் பெருக்குவாள்.’ ‘ஊசி அடிக்கவும் (கேலி பண்ணவும்) துணிந்தான்.’ ‘சாலம் அதன் கூட்டுக்காரிகளையும் (தோழிகளையும்) கூட்டிகிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போனாள்.’ ‘கிட்டே யிருந்த பச்சக்காரங்கள் (கூட்டாளிகள்) யாருகிட்டையும் பேசவே தோணல்லை.’ மொத்தத்தில் பார்க்கிற போது, ஒரு கதம்பத்தின் வசீகரத்தைப் பெற்றுள்ள தனி ரகமான நடையை நீல. பத்மநாபன் கையாள்கிறார் என்று கூறத் தோன்றுகிறது.{{nop}}<noinclude></noinclude> sl46wmgovq439lbb5gxl6sass19h3tz பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/197 250 130317 1840052 1839850 2025-07-07T15:33:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>23. ஆ. மாதவன்</b>}}}} {{larger|<b>கே</b>}}ரளத் தமிழ் தனிரகமான வசீகரம் உடையது என்பதை ஆ. மாதவன் எழுத்துக்களின் வாயிலாக நன்கு உணரமுடியும். நீல. பத்மநாபன் ஏழூர் செட்டிமார் சமூகத்தில் வழங்கி வரும் பேச்சுவழக்குகள், பழமொழிகள், மலையாளச் சொற்கள் எல்லாம் கலந்த ஒரு உரைநடையை உருவாக்கியிருக்கிறார். ஆ. மாதவன் திருவனந்தபுரம் சாலைக் கடைத் தெருவில் பல தரப்பட்ட மக்களிடையே ஜீவனோடு இயங்கும் மலையாளத் தமிழைக் கொண்டு ஒரு உரைநடையை ஆக்கியிருக்கிறார். சிறிது கொச்சைத் தன்மை வாய்ந்த எளிய, தெளிவான நடையில் அவர் கடைத் தெருவில் காணப்படுகிற குணச்சித்திரங்களைக் கொண்டு இனிமையான கதைகளைப் படைத்திருக்கிறார். திருவனந்தபுரம் ‘சாலைக் கம்போளம்’ வட்டாரமும், அங்குள்ள வேடிக்கை மனிதர்களும் மாதவன் எழுத்தில் உயிர்த் துடிப்புடன் இயங்குகிறார்கள். அதற்கு அவர் கையாள்கிற உரைநடை தான் காரணம். ‘எட்டாவது நாள்’ கதையில் ‘ஓடைக்காரன்—கட்டை கோவிந்தன்’ என்ற பாத்திரம் பற்றிய வர்ணனை இது: “என்ன உறச்ச தேகம். கறுகறு வென்று குண்டலப் புழு போல இருக்கான், செவத்த கண்ணும், உருண்டை முகமும்<noinclude></noinclude> mtjkyn35u0y6p6tav4y4v28owlplp9o பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/198 250 130320 1840057 1839860 2025-07-07T15:36:20Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|196||பாரதிக்குப் பின்}}</noinclude>புஷ்டிச்ச தேசமும், கைகளும் நெஞ்சும், அவன் காக்கி நிக்கரும் உடுப்பும், கோவிந்தன் கல்லுளி மங்கன் தான்; அனாலும் நல்ல மனசொள்ளவன். நண்ணி உள்ளவள். அவன் வேலையெல்லாம் தீந்து வந்திருந்தான். அவன்பாடு ராஜகாரியம்.” கோவிந்தனும் சாலைப் பட்டாணியும் பேசுகிற சம்பாஷணையில் கேரளத் தமிழின் தன்மையைக் காணலாம்— “நீரும் அந்த செம்மாடிகளுக்கு ஒற்றைக்கு ஒற்றை சொல்லுதினாலே தானே—அவனுகளும் கூத்து காண உம்மைப் போட்டு கொமைக்கான். அவனுக ஒண்ணெ சொன்னா செவி கேக்கலேண்ணு போயிர வேண்டியது தானே.” “இத்தரையும் நாளு அப்படி பளகலியே கோவிந்தா. எப்படிப்பட்டவன் நான் எப்பிடி இருந்தவன் நான். காலை கடையிலே என்னைக் காட்டியும் வலிய ஊச்சாளி ஆரு இருந்தா? எனக்கு ஆனகாலத்திலே இந்த மாதிரி ஒரு சுண்டைக்காய் மோன் நேரிலே வந்து நிப்பானா? இப்போ வாய் அறைக்காமெ சாளப் பட்டாணிண்ணு நடுரோட்டிலே நிண்ணு கூப்பிடுதான். பொறுக்கல்லே எனக்கு.” “நீருகெடந்து வெட்ராளப் படாமெ கெடயும். எட்டு நாளத்தெ பாடும் போவட்டும். ஒரு பச்சே இந்த எட்டு நாளத்தெ மருந்து குத்தி வைப்பினாலே, கை நீரும், வலியும் பழுப்பும் கொறையும், கொஞ்சம் சமாதானமாக இரியும்.” இவ்வாறு ‘சாலை பஜார்’ தமிழ் ஒலிக்கும் கதைகள் பலவற்றை மாதவன் எழுதியிருக்கிறார். அவருடைய ‘புனலும் மணலும்’ நாவலிலும் உழைப்பாளிகளின் பேச்சில் அடிபடுகிற மலையாளத் தமிழை அவர் திறமையாக எடுத்தாண்டிருக்கிறார்.{{nop}}<noinclude></noinclude> esewlq1p47u5jgotzvj6oq9l5qo9qqd பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/199 250 130322 1840061 1839876 2025-07-07T15:39:25Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||197}}</noinclude>“ஒரு வண்டி மணலுக்கு பத்து குட்டை அளவு தான் வரும். நல்லா வெள்ளம் வடிஞ்சு ஒணங்கிய மணலுதரலாம். வெலை அது தான். கொறையாது. கேக்காண்டாம்” (கேட்க வேண்டாம்) என்பான். ‘ஒரு சாற்ற மழை வந்தாகூடெ எல்லா மண்ணும் ஒலிச்ச (ஒழுகி) ஆற்றிலேயே எறங்கீரும்.’ ‘வெயில் மேலே ஏறிவந்தாச்சு கோரி (வாரி) இடப்பா சீக்கிரம், பாதி வள்ளம் மண்ணு கூட ஆவல்லியே. இல்லாட்டா தூம்பாவை இங்கே கொண்டாருங்கோ. நான் காணிச்சு தாரேன்.’ ‘இதுக்கொரு அறும்பாதம் வருத்தாமே (முடிவு தேடாமல்) ஒண்ணும் காணலியே கேக்கலியேண்னு இருந்தா அது ஓட்டும் நல்லதல்ல. முப்பன் இந்த ஒரு விஷயத்திலேயும் இவ்வளவு மோசமாயிட்டு நடந்திர வேண்டாமாயிருந்தது. இப்போ இந்த கடவிலுள்ள (துறையில் உள்ள), இக்கண்ட ஜனங்கள் எல்லாம் கூடிட்டும் முப்பனுக்கு ஒரு அனக்கவுமில்லே (அசைவுமில்லை).’ இப்படி நாவல் முழுவதும் வட்டாரத் தமிழ் கலந்து வந்துள்ளது. மாதவன் இந்த ரக உரைநடை எழுதுவதில்தான் தேர்ந்தவர் என்று எண்ண வேண்டியதில்லை. அழகிய, இனிய நடையில் இடவர்ணனை, பாத்திர வர்ணனை முதலியவற்றை எழுதக் கூடியவர் என்பதற்கு அவருடைய ‘புனலும் மணலும்’ நாவலே சான்று கூறும். அதில் ஒரு இடம், தாமோதரன் என்பவனைப் பற்றியது நல்ல உதாரணமாகும். “காலம் தான் எப்படியெல்லாம் வளர்ந்து உருமாறி வந்து விட்டது. ஆனாலும், தாமோதரன் மட்டும் அதே விசுவாச மனம் கொண்டவனாக அப்படியே இருக்கிறான். இந்தக் காலத்தில் இப்படியொருவனா என்று வியப்பாகத் தான் இருக்கிறது.{{nop}}<noinclude></noinclude> 17h19dfprkt3c6vey95otk1dd266jgf பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/200 250 130325 1840066 1839883 2025-07-07T15:41:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|193||பாரதிக்குப் பின்}}</noinclude>சிரித்தமுகம். கறுகறுவென்று, திடமான, நடுத்தர உயரமுடைய உருவம். யாரிடமும் அதட்டலாகக் கூட பேசமாட்டான். யாருமே கண்டதும் வெறுக்கும் பங்கியிடம், இவன் எத்தனை இதமாக பழகுகிறான். தாமோதரன் நல்லவன். அன்பு மனம் கொண்டவன். பரோபகாரி. சோம்பலில்லாத வேலைக்காரன். ஆறு அவனது விளையாட்டரங்கம். வள்ளம் அவனது வாகனம். ஆற்றில் மூழ்கி, முக்குளித்து மண் எடுப்பதும், நீரில் அழுத்தமான எதிர் ஒழுக்கில் கூட மூங்கில் கழியை ஊன்றி செலுத்தி நுழைந்து வரும் அவன் ஆற்றின் செல்லப் பிள்ளை. ஆற்றின் வளர்ப்பு மகன். ஆறே அவனுக்கு வாழ்க்கை. அதனால் அவன் ஆறு போல குளிர் நிறைந்தவன், நிறைவானவன்.” கலைநயமும் கற்பனைச் செறிவும், அனுபவ ஒளியும், சொல் அலங்காரமும் நிறைந்த வேறு ரகமான கதைகளையும் ஆ. மாதவன் எழுதியிருக்கிறார். அவற்றில் உரை நடை தனித்தன்மையுடன் விளங்குகிறது. மோகக் கிறக்கத்தோடு ஒருவன் ஒரு பெண்ணை வியக்கிறான். அந்த வர்ணிப்பு கவிதை மெருகோடு அமைந்துள்ளது. “உதவி நடிகைப் பிழைப்பென்றால் இரவில் தான் வேலை இருக்குமோ? மாலையில் போய் விட்டு விடிய விடிய தான் கார்த்தி திரும்பி வருவாள். வரும்போது ஒரு உற்சாக மினு மினுப்பு, வேஷக் குலைவு, தூக்கச் சடைவு, உடன் எவனாவது. தொத்திக் கொண்டு ஒரு துணை. இதுதான் கார்த்தி! இவள் தான் கார்த்தி. பட்டுச் சேலையின் தளர்ச்சி, அலங்காரத்தின் அலட்சியம், அழகாக இருக்கிறோம் என்ற நிமிர்வு. வஞ்சக-<noinclude></noinclude> tpr3efd5phn6sj6851e66vku3vqcqo8 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/201 250 130328 1840194 1839888 2025-07-08T04:13:49Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||199}}</noinclude>மில்லாத வளர்ச்சி. பரந்த முகம். தேவையே ஆன சிரிப்பு...எண்ணும் தோறும் உள்ளே ஊறிக் கொண்டு வருகிறது, விவரிக்க முடியாத மனச் சபலம்.” “கார்த்தி படியிறங்கி வந்து கொண்டிருந்தாள். இவளா கார்த்தி? பாதத்தைத் தொடுகிறது பின்னல். கேவலம் இந்த உபநடிகைக்கு நெற்றியில் அந்த குங்குமப் பொட்டு எவ்வளவு அழகாக ஜ்வலிக்கிறது. எத்தனை பேர் அழிய அழிய இட்ட பொட்டோ? கண்ணும் பேசுகிறது. உதடும் பேசுகிறது. இதற்கெல்லாம் தானே அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். மணக்க மணக்க அத்தர் பூசிக் கொண்டு வரும் செருக்குக்கும், வழிய வழிய வெற்றிலை குழப்பிக் கொண்டு வரும் அழுமூஞ்சிக்கும், சிரிக்கச் சிரிக்க புகை ஊதிக் கொண்டு வரும் அலட்சியத்திற்கும் இந்த அழகு அர்ச்சித்து எறியப்படுகிறதே...தூ!” (மோக பல்லவி) சொற்கள் உயிர் பெறும்படியான உணர்ச்சிக் சித்திரிப்பு என்பார்களே, அந்த ரகமான ஜீவசித்திரங்களை மாதவன் தனது கதைகளில் உருவாக்கியிருக்கிறார். அதற்கு அவருடைய எளிய, இனிய உரை நடை துணைபுரிகிறது. ஒரு பெண்ணின் மனநிலையை அவர் வர்ணிக்கிற விதம் இது. “முப்பத்து ஐந்து வயது வரையில் அம்மா துணையுடன் மட்டும் வாழும் ஒரு பெண். நான் எட்டிப் படர்ந்துகொள்ள எனக்கு எதுவும் தேவையில்லை. ஆனால் நான் என் தேவைகளையும் வளர்ச்சிகளையும் உணர்கிறேன். இரவில் தனிமை எனக்கு குளிராக இருக்கிறது. உறக்கத்தில் கனவு எனக்குத் தீயாக இருக்கிறது. விழிப்பின் அர்த்தம் எனக்கு புதிராக இருக்கிறது. நடையின் அழுத்தம் எனக்கு மலையாக<noinclude></noinclude> rsunq4hp3gvhf1033ccyp7mahml5ks7 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/202 250 130331 1840195 1839891 2025-07-08T04:14:52Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|200||}}</noinclude>தெரிகிறது. பார்வையின் காட்சி எனக்கு பசியாக கனிகிறது. ஆனால் எல்லாம் எனது அறிவின் முன் புல்லாக, முளைத்த இதழ் முளைத்தபடி விரித்த கைகள் விரித்தபடி, மணந்த மணம் மணத்தபடி, அழிக்க முடியாத நிழல் போல சாரமற்றதாகி விடுகின்றன.” (‘தியானம்’ கதையில்) இப்படி அவர் பின்னும் சொற்கோலங்கள் ரசனைக்கு நல் விருந்து ஆகும். சாதாரண விஷயங்களைக் கூட தனித் தன்மையோடு மாதவன் சொல்கிறபோது, அவருடைய உரை நடை பாராட்டப்பட வேண்டிய அழகைப் பெறுகிறது. உதாரணம்: ‘அடக்கம் அங்கே அமைதியாக வீற்றிருந்தது; அல்லது, அழகு அங்கே அடக்கமாகக் கொலுவிருந்தது.’ “மங்கல் ஒளிக்கு குடை பிடித்த மாவின் கிளைகள் இருட்டிற்கு கறுப்புச் சட்டை இட்டிருந்தது.” ‘நான் மிருகத்தின் தீனி வேளை போல இருட்டானவன்’ ‘என் மவுனம் அணைத்து விட்ட இருட்டாக வீடெங்கும் பரவியிருந்தது.’ ‘இருளான பிராகாரத்திற்கு அந்த ஒளி விளக்குகளின் ஒளி சத்தியத்தின் பலவீனம் போல எட்டமாட்டேன் என்கிறது.’ இவ்வாறு பல்வேறு தன்மைகளிலும் உரைநடையை கையாள்கிற மாதவனின் எழுத்தில் அவருடைய கலைத்தேர்ச்சியும், அனுபவ ஆழமும், கூரிய நோக்கும் நன்கு பிரதிபலிக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> nl5tv8ek7etyu3hftos3dp5gyikc3fs பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/203 250 130334 1840018 816720 2025-07-07T14:19:45Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>24. சுஜாதா</b>}}}} {{larger|<b>“பா</b>}}ஸஞ்சர், திருநிலத்தில் போனால் போகிறது என்று நின்றது. ஒரு பெண் ஓடி வெள்ளரிப் பிஞ்சு விற்றாள். முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஒரே ஓர் இளைஞன் நீல நிற சூட்கேஸ், ஒரு கித்தாருடன் இறங்கினான். அவன் கழுத்தில் காமிரா மாலை, அந்தப் பிரதேசத்தில் மிகவும் விநோதனாக, அந்நியனாக நின்றான். வெயில் கண்ணாடி அணித்து சுற்றிலும் பார்த்தான். சின்ன ஸ்டேஷன். கச்சிதமான ஓர் அறை. அதனுள் சுவரில் பதித்த, வாய் திறந்த, புராதன டெலிபோனில் ஸ்டேஷன் மாஸ்டர் பேசிக்கொண்டிருந்தார். பிளாட்பாரத்திலேயே கைகாட்டி இறக்கும் லீவர்கள் இருந்தன. தண்டவாளத்துண்டு, மணியாக சரக்கொன்றை மரத்தில் தொங்கியது. அதை இரு தடவை, மஞ்சள் மலர்கள் உதிரத் தட்டிவிட்டு அந்த நீலச் சட்டைக்காரன், அன்னியனை ஒரு வஸ்துவைப்போல் பார்த்துக் கொண்டே சாவியுடன் என்ஜின் திசையில் நடந்தான். கருங்கல் கட்டடம். சற்றே தூரத்தில் மூன்றே மூன்று வீடுகள். ஸ்டேஷனிலிருந்து ஒரு மண் பாதை புறப்பட்டு எங்கேயோ மாயமாய்ச் சென்றது. ஓர் ஆலமரம் ஏறக்குறைய ‘ஸ்டேஷனே என்னுடையது’ என்று அணைத்துக் கொண்டிருந்தது.{{nop}}<noinclude>{{rh|பா—13||}}</noinclude> 0hs2jmmxlny8wzltn8uqw9o67ac3dtb 1840196 1840018 2025-07-08T04:16:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>24. சுஜாதா</b>}}}} {{larger|<b>“பா</b>}}ஸஞ்சர், திருநிலத்தில் போனால் போகிறது என்று நின்றது. ஒரு பெண் ஓடி வெள்ளரிப் பிஞ்சு விற்றாள். முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஒரே ஓர் இளைஞன் நீல நிற சூட்கேஸ், ஒரு கித்தாருடன் இறங்கினான். அவன் கழுத்தில் காமிரா மாலை, அந்தப் பிரதேசத்தில் மிகவும் விநோதனாக, அந்நியனாக நின்றான். வெயில் கண்ணாடி அணிந்து சுற்றிலும் பார்த்தான். சின்ன ஸ்டேஷன். கச்சிதமான ஓர் அறை. அதனுள் சுவரில் பதித்த, வாய் திறந்த, புராதன டெலிபோனில் ஸ்டேஷன் மாஸ்டர் பேசிக்கொண்டிருந்தார். பிளாட்பாரத்திலேயே கைகாட்டி இறக்கும் லீவர்கள் இருந்தன. தண்டவாளத்துண்டு, மணியாக சரக்கொன்றை மரத்தில் தொங்கியது. அதை இரு தடவை, மஞ்சள் மலர்கள் உதிரத் தட்டிவிட்டு அந்த நீலச் சட்டைக்காரன், அன்னியனை ஒரு வஸ்துவைப்போல் பார்த்துக் கொண்டே சாவியுடன் என்ஜின் திசையில் நடந்தான். கருங்கல் கட்டடம். சற்றே தூரத்தில் மூன்றே மூன்று வீடுகள். ஸ்டேஷனிலிருந்து ஒரு மண் பாதை புறப்பட்டு எங்கேயோ மாயமாய்ச் சென்றது. ஓர் ஆலமரம் ஏறக்குறைய ‘ஸ்டேஷனே என்னுடையது’ என்று அணைத்துக் கொண்டிருந்தது.{{nop}}<noinclude>{{rh|பா—13||}}</noinclude> 6fwmqihveb5ja92mgtqvughcnlyzds1 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/204 250 130336 1840021 816721 2025-07-07T14:29:35Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|202||பாரதிக்குப் பின்}}</noinclude>ரயில் ‘ழே’ என்று கூவிவிட்டு உபரி நீராவியைக் கக்கிவிட்டுக் கிளம்பியது. அந்தப் பெண் ரயிலுடன் ஓடினாள். காசு கொடுக்காத அந்தப் பிரயாணி அவள் மார்பு குலுங்க ஓடி வருவதை ரசித்துக் கொண்டே சில்லறையை விட்டெறிந்தான். அவள் காசைப் பொறுக்கிக் கொண்டு, வீசி எறிந்தவனை நோக்கி ‘தத்’ என்று துப்பினாள்.” இது சுஜாதா எழுதிய ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ நாவலின் ஆரம்பம். இந்த நாவல், வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வந்து கொண்டிருந்த போதும் சரி; புத்தகமாகப் பிரசுரமாகி விற்பனைக்கு வந்த போதும் சரி—மிக அதிகமான வாசகர்களின் ரசிப்பையும் பாராட்டுதலையும் பெற்றது. படித்தவர்கள் பலரும் சுஜாதாவின் கதை சொல்லும் திறனையும், கதையில் எடுத்தாண்ட விஷயத்தையும், இதர பல நயங்களையும் ரசித்து வியந்து எடுத்துச் சொல்லி மகிழ்ந்தார்கள். சுஜாதாவின் கதைகளால் வசீகரிக்கப்பெற்ற ரசிகர்கள் அனைவரும் அவருடை வசன நடையைப் பாராட்டிச் சொல்லவும் தவறவில்லை. சுஜாதா (எஸ். ரங்கராஜன்) ஜனரஞ்சகமான கதைகளையே எழுதுகிறார். கொலை, கொள்ளை, கடத்தல் வேலை, மர்மம், துப்பறிதல், பெண் தொடர்பு, பெண் சாகசம் போன்ற விஷயங்களையே அதிகமாகக் கதைகளில் எடுத்தாள்கிறார். விஞ்ஞான விஷயங்களையும் ஓரளவுக்குக் கலந்து கொடுக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ஒன்று கதையின் நாயகனிடம் ‘எப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சுக்கிட்டிருக்கீங்க!’ என்று ஒரு இடத்தில் குறிப்பிடுவதாக சுஜாதா எழுதியிருக்-<noinclude></noinclude> r118ixljuh8i0woj9wkaqsbnarruzpo 1840197 1840021 2025-07-08T04:17:06Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|202||பாரதிக்குப் பின்}}</noinclude>ரயில் ‘ழே’ என்று கூவிவிட்டு உபரி நீராவியைக் கக்கிவிட்டுக் கிளம்பியது. அந்தப் பெண் ரயிலுடன் ஓடினாள். காசு கொடுக்காத அந்தப் பிரயாணி அவள் மார்பு குலுங்க ஓடி வருவதை ரசித்துக் கொண்டே சில்லறையை விட்டெறிந்தான். அவள் காசைப் பொறுக்கிக் கொண்டு, வீசி எறிந்தவனை நோக்கி ‘தத்’ என்று துப்பினாள்.” இது சுஜாதா எழுதிய ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ நாவலின் ஆரம்பம். இந்த நாவல், வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வந்து கொண்டிருந்த போதும் சரி; புத்தகமாகப் பிரசுரமாகி விற்பனைக்கு வந்த போதும் சரி—மிக அதிகமான வாசகர்களின் ரசிப்பையும் பாராட்டுதலையும் பெற்றது. படித்தவர்கள் பலரும் சுஜாதாவின் கதை சொல்லும் திறனையும், கதையில் எடுத்தாண்ட விஷயத்தையும், இதர பல நயங்களையும் ரசித்து வியந்து எடுத்துச் சொல்லி மகிழ்ந்தார்கள். சுஜாதாவின் கதைகளால் வசீகரிக்கப்பெற்ற ரசிகர்கள் அனைவரும் அவருடை வசன நடையைப் பாராட்டிச் சொல்லவும் தவறவில்லை. சுஜாதா (எஸ். ரங்கராஜன்) ஜனரஞ்சகமான கதைகளையே எழுதுகிறார். கொலை, கொள்ளை, கடத்தல் வேலை, மர்மம், துப்பறிதல், பெண் தொடர்பு, பெண் சாகசம் போன்ற விஷயங்களையே அதிகமாகக் கதைகளில் எடுத்தாள்கிறார். விஞ்ஞான விஷயங்களையும் ஓரளவுக்குக் கலந்து கொடுக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ஒன்று கதையின் நாயகனிடம் ‘எப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சுக்கிட்டிருக்கீங்க!’ என்று ஒரு இடத்தில் குறிப்பிடுவதாக சுஜாதா எழுதியிருக்-<noinclude></noinclude> dlgbhpqxbf28wz3x3vehkv4n3jgaimy பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/205 250 130338 1840024 816722 2025-07-07T14:39:27Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||203}}</noinclude>கிறார். அவருடைய எழுத்துகளைப் படிக்கிறவர்களும், ‘மிஸ்டர் சுஜாதா, நீங்கள் எப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சுக்கிட்டிருக்கீங்க!’ என்று வியப்புடன் கூற நேரலாம். எலெக்ட்ராணிக்ஸ், இசை; சித்த வைத்தியம், நாட்டுப்பாடல்கள்—இப்படிப் பலபல விஷயங்கள் பற்றியும் அவர் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்—மேலும் மேலும் நிறையத் தேடி அறிந்து கொண்டும் இருக்கிறார். வாசகர்களை ‘இம்ப்ரஸ்’ பண்ணவேண்டும் என்பதற்காக அவற்றை அங்கங்கே கலந்து தருகிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது. சுஜாதாவின் உரைநடையில் எளிமையும் இனிமையும் சுவையும் நிறைய இருப்பது போலே புதுமையும் அதிகம் கலந்திருக்கிறது. நவீன விஷயங்கள் மிகுதியாகவே இடம் பெறுகின்றன. ‘எந்தக் கதையையும் ஆரம்பிக்கிற போதே வாசகரிடம் ஒரு விறுவிறுப்பை, விழிப்பு உணர்வை, எதிர்பார்த்தலை ஏற்படுத்துகிறது அவர் எழுதும் உரைநடை. ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ கிராமப்புறத்தை—கிராமியவிஷயங்களை—அடிப்படையாகக் கொண்ட நாவல். மற்றொருமிக நாகரிகச் சூழ்நிலையைக் கொண்ட நவீன முறை நாவலின் ஆரம்பத்தைக் கவனிக்கலாம்— ‘டில்லி விமான நிலையம்—பாலம். இரவு ? மணிக்கு ஒரு கோலாவை உறிஞ்சிக் கொண்டு காத்திருந்த நான் ஒரு மத்திய சர்க்கார் ஆசாமி. மத்திய சர்க்காரில் என் வேலை என்ன என்று உங்களுக்குச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். எதிர்மறையில் சதிராடிக் கொஞ்சம் விளங்க வைக்கிறேன்.{{nop}}<noinclude></noinclude> 03ooxaxiezax9gqejc2a4x8y595e7or 1840198 1840024 2025-07-08T04:18:10Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||203}}</noinclude>கிறார். அவருடைய எழுத்துகளைப் படிக்கிறவர்களும், ‘மிஸ்டர் சுஜாதா, நீங்கள் எப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சுக்கிட்டிருக்கீங்க!’ என்று வியப்புடன் கூற நேரலாம். எலெக்ட்ராணிக்ஸ், இசை; சித்த வைத்தியம், நாட்டுப்பாடல்கள்—இப்படிப் பலபல விஷயங்கள் பற்றியும் அவர் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்—மேலும் மேலும் நிறையத் தேடி அறிந்து கொண்டும் இருக்கிறார். வாசகர்களை ‘இம்ப்ரஸ்’ பண்ணவேண்டும் என்பதற்காக அவற்றை அங்கங்கே கலந்து தருகிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது. சுஜாதாவின் உரைநடையில் எளிமையும் இனிமையும் சுவையும் நிறைய இருப்பது போலே புதுமையும் அதிகம் கலந்திருக்கிறது. நவீன விஷயங்கள் மிகுதியாகவே இடம் பெறுகின்றன. ‘எந்தக் கதையையும் ஆரம்பிக்கிற போதே வாசகரிடம் ஒரு விறுவிறுப்பை, விழிப்பு உணர்வை, எதிர்பார்த்தலை ஏற்படுத்துகிறது அவர் எழுதும் உரைநடை. ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ கிராமப்புறத்தை—கிராமியவிஷயங்களை—அடிப்படையாகக் கொண்ட நாவல். மற்றொரு மிக நாகரிகச் சூழ்நிலையைக் கொண்ட நவீன முறை நாவலின் ஆரம்பத்தைக் கவனிக்கலாம்— ‘டில்லி விமான நிலையம்—பாலம். இரவு ? மணிக்கு ஒரு கோலாவை உறிஞ்சிக் கொண்டு காத்திருந்த நான் ஒரு மத்திய சர்க்கார் ஆசாமி. மத்திய சர்க்காரில் என் வேலை என்ன என்று உங்களுக்குச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். எதிர்மறையில் சதிராடிக் கொஞ்சம் விளங்க வைக்கிறேன்.{{nop}}<noinclude></noinclude> i599yq49a2o4zvefsr1srywhksgnvel பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/206 250 130341 1840025 816723 2025-07-07T14:49:17Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|204||பாரதிக்குப் பின்}}</noinclude>போலீஸா? இல்லை. ஆனால் ஸ்மித் அண்ட் வெஸ்ஸன் பாயிண்ட் 38 டபிள் ஆக்க்ஷன் ரிவால்வரைப் பற்றி என்னிடம் கேளுங்கள். பார்ட் பார்ட்டாத் தெரியும். சோதிக்கிறீர்களா? போல்ட் ப்ளஞ்சர், ஹாமர்ஸ்டட், ஸ்டிர்ரப், ரிபௌண்ட் ஸ்ளைட் ஸ்டட், ட்ரிக்கர் ஸ்பிரிங், மெய்ன் ஸ்பிரிங், ஹாண்ட் ஸ்பிரிங் ஸ்டாப் ப்ளஞ்சர் ஸிலிண்டர் ஸ்டாப், ட்ரிக்கர் ஸ்டட் பாரல் பின். போதுமா? துப்பாக்கி தயாரிப்பளனா? இல்லை. உபயோகிப்பவன். 75 அடிக்குள் ஒரு பத்து பைசா நாணயத்தைத் தூக்கிப் போட்டு விட்டு ஒதுங்குங்கள். கீழே விழுவதற்குள் நாணயத்தைச் சிதற அடித்து விடுவேன். இதுவரை கொன்றதில்லை, எவரையும் கொல்லும் சந்தர்ப்பம் இது வரைவராததால், வந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் வெறும்கைகலப்பு. அதனால் சில பல் டாக்டர்கள் பணக்காரர்கள் ஆனார்கள். சில எலும்பு வைத்தியர்கள் உயர்ந்தனர். என் மூன்று டெரிலின் சட்டைகள் கிழிந்திருக்கின்றன. நான் யார்?’ (நில், கவனி, தாக்கு!) பெண்கள் இல்லாமல் சுவாரஸ்யமான கதைகள் இல்லை. பெண் தலைகாட்டுகிற போது, வர்ணனைகள் வராமல் தீருமா? பெண் பாத்திரங்களை அறிமுகப்படுத்து வதையும், அவர்களை வர்ணிப்பதையும் புதுமையாகவும் சுவையாகவும் செய்கிறார் சுஜாதா. ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்று என் முதுகுப் பக்கம் பெண் குரல். அந்த ‘எக்ஸ்க்யூஸ் மீ’ எனக்கு ‘ஆரஞ்ச் ஜூஸ் மீ’ போல இனிமையாக ஒலித்ததால் திரும்புகிறேன். அழகான பெண். அவள் அழகாக இருந்தாள் என்று மட்டும் சொன்னால் அது இந்த வருஷத்தின் மகத்தான அண்டர்<noinclude></noinclude> n02121rgg8al2o3sigq7ib2fuwlg1k6 1840199 1840025 2025-07-08T04:19:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|204||பாரதிக்குப் பின்}}</noinclude>போலீஸா? இல்லை. ஆனால் ஸ்மித் அண்ட் வெஸ்ஸன் பாயிண்ட் 38 டபிள் ஆக்க்ஷன் ரிவால்வரைப் பற்றி என்னிடம் கேளுங்கள். பார்ட் பார்ட்டாத் தெரியும். சோதிக்கிறீர்களா? போல்ட் ப்ளஞ்சர், ஹாமர்ஸ்டட், ஸ்டிர்ரப், ரிபௌண்ட் ஸ்ளைட் ஸ்டட், ட்ரிக்கர் ஸ்பிரிங், மெய்ன் ஸ்பிரிங், ஹாண்ட் ஸ்பிரிங் ஸ்டாப் ப்ளஞ்சர் ஸிலிண்டர் ஸ்டாப், ட்ரிக்கர் ஸ்டட் பாரல் பின். போதுமா? துப்பாக்கி தயாரிப்பளனா? இல்லை. உபயோகிப்பவன். 75 அடிக்குள் ஒரு பத்து பைசா நாணயத்தைத் தூக்கிப் போட்டு விட்டு ஒதுங்குங்கள். கீழே விழுவதற்குள் நாணயத்தைச் சிதற அடித்து விடுவேன். இதுவரை கொன்றதில்லை, எவரையும் கொல்லும் சந்தர்ப்பம் இதுவரை வராததால், வந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் வெறும்கைகலப்பு. அதனால் சில பல் டாக்டர்கள் பணக்காரர்கள் ஆனார்கள். சில எலும்பு வைத்தியர்கள் உயர்ந்தனர். என் மூன்று டெரிலின் சட்டைகள் கிழிந்திருக்கின்றன. நான் யார்?’ (நில், கவனி, தாக்கு!) பெண்கள் இல்லாமல் சுவாரஸ்யமான கதைகள் இல்லை. பெண் தலைகாட்டுகிற போது, வர்ணனைகள் வராமல் தீருமா? பெண் பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதையும், அவர்களை வர்ணிப்பதையும் புதுமையாகவும் சுவையாகவும் செய்கிறார் சுஜாதா. ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்று என் முதுகுப் பக்கம் பெண் குரல். அந்த ‘எக்ஸ்க்யூஸ் மீ’ எனக்கு ‘ஆரஞ்ச் ஜூஸ் மீ’ போல இனிமையாக ஒலித்ததால் திரும்புகிறேன். அழகான பெண். அவள் அழகாக இருந்தாள் என்று மட்டும் சொன்னால் அது இந்த வருஷத்தின் மகத்தான அண்டர்<noinclude></noinclude> 0nt31mjnym5myiyifczx1wjd3vqguik பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/207 250 130344 1840026 816724 2025-07-07T14:57:10Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||205}}</noinclude>ஸ்டேட்மெண்ட். அடேயப்பா என்ன கண்கள்! அடுத்து சில வரிகளை விரயம் செய்து அவள் கண்களை வாணிக்கலாம். கறுப்பும் இல்லை; ப்ரௌனும் இல்லை. பிரம்மா அல்லது அவள் பெற்றோர்கள் தடுக்கி விழுந்த மகத்தான கலவை. மை விளம்பரக்காரர்களின் ஆதர்சம். அவன் உடலின் மற்றப் பகுதிகள் மிகவும் ஈர்ப்புத் தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அந்தக் கண்கள் அதை எல்லாம் வென்று என் கவனத்தைத் தம்மிடமே சுயநலமாக நிறுத்திக்கொள்ளும் இயல்பு பெற்றிருந்தன. சென்ற வாக்கியம் எவ்வளவு தடுமாறுகிறது பாருங்கள். அவள் கண்கள் தான் காரணம்!” (நில், கவனி, தாக்கு!) இது ஒரு ரகம். இன்னொரு விதம்— “அழகாக இருந்தாள். அழகு என்பதற்கு உங்கள் அகராதியில் என்ன அர்த்தம் என்று தெரியாது. என் அர்த்தத்தைச் சொல்கிறேன். அழகு என்றால் கண் கருப்பு, சடை நீளம், காற்றில் ஆடும் கூந்தல், சின்ன உதடுகள், வரிசையான பற்கள், சிவப்பு உடம்பு, உயரம், வாளிப்பு என்று வார்த்தைகளை வீணடிக்கலாம். வெறும் வார்த்தைகள்! அவை அவள் அழகில் இருக்கும் சலனத்தை, உயிரை வயிற்றுக்குள் திடீரென்று ஏற்படுத்தும் அழுத்தமான பிடிப்புணர்ச்சியை வெளிப்படுத்தாது. சோகம் கலக்காத அழகு அழகே இல்லை—சற்று நிதானமாக வாசிக்கவும். சோகம் என்றால் தனிமை, இரவு, ஒற்றை ராகம், இனம் தெரியாது நம் மூக்கருகே திடீரென்று தோன்றும் வாசனை என்று எவ்வளவோ சொல்லலாம். புரியவில்லையா? கவனிக்கவும். ஜ்யோவின் உடல் 5–4, 5–4 என்பது வெறும் எண். என்னெதிரே நின்றது 5–4 பெண். அவள் உடுத்தியிருந்தது என்னைப்படுத்தியது. உடுத்தாமலிருந்தது என்னை அவளருகில்<noinclude></noinclude> 5p2hx96a9ewbe6z2jdj9d602mdwgta7 1840200 1840026 2025-07-08T04:22:10Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||205}}</noinclude>ஸ்டேட்மெண்ட். அடேயப்பா என்ன கண்கள்! அடுத்து சில வரிகளை விரயம் செய்து அவள் கண்களை வர்ணிக்கலாம். கறுப்பும் இல்லை; ப்ரௌனும் இல்லை. பிரம்மா அல்லது அவள் பெற்றோர்கள் தடுக்கி விழுந்த மகத்தான கலவை. மை விளம்பரக்காரர்களின் ஆதர்சம். அவள் உடலின் மற்றப் பகுதிகள் மிகவும் ஈர்ப்புத் தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அந்தக் கண்கள் அதை எல்லாம் வென்று என் கவனத்தைத் தம்மிடமே சுயநலமாக நிறுத்திக்கொள்ளும் இயல்பு பெற்றிருந்தன. சென்ற வாக்கியம் எவ்வளவு தடுமாறுகிறது பாருங்கள். அவள் கண்கள் தான் காரணம்!” (நில், கவனி, தாக்கு!) இது ஒரு ரகம். இன்னொரு விதம்— “அழகாக இருந்தாள். அழகு என்பதற்கு உங்கள் அகராதியில் என்ன அர்த்தம் என்று தெரியாது. என் அர்த்தத்தைச் சொல்கிறேன். அழகு என்றால் கண் கருப்பு, சடை நீளம், காற்றில் ஆடும் கூந்தல், சின்ன உதடுகள், வரிசையான பற்கள், சிவப்பு உடம்பு, உயரம், வாளிப்பு என்று வார்த்தைகளை வீணடிக்கலாம். வெறும் வார்த்தைகள்! அவை அவள் அழகில் இருக்கும் சலனத்தை, உயிரை வயிற்றுக்குள் திடீரென்று ஏற்படுத்தும் அழுத்தமான பிடிப்புணர்ச்சியை வெளிப்படுத்தாது. சோகம் கலக்காத அழகு அழகே இல்லை—சற்று நிதானமாக வாசிக்கவும். சோகம் என்றால் தனிமை, இரவு, ஒற்றை ராகம், இனம் தெரியாது நம் மூக்கருகே திடீரென்று தோன்றும் வாசனை என்று எவ்வளவோ சொல்லலாம். புரியவில்லையா? கவனிக்கவும். ஜ்யோவின் உடல் 5–4. 5–4 என்பது வெறும் எண். என்னெதிரே நின்றது 5–4 பெண். அவள் உடுத்தியிருந்தது என்னைப்படுத்தியது. உடுத்தாமலிருந்தது என்னை அவளருகில்<noinclude></noinclude> 5w74djho2v7ja3p965rzbxqqnj1arbm பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/208 250 130347 1840037 816725 2025-07-07T15:18:34Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|206||பாரதிக்குப் பின்}}</noinclude>போய்த் தொட்டுப் பார்த்து நிஜமானவள் என்று தெரிந்தும் மறுபடி மறுபடி தெரிந்து கொள்ளத் தூண்டியது. அவள் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். இடையில் பெல்ட் அணிந்திருந்தாள். அந்த பெல்ட்டின் கொக்கி—ஆள் காட்டிவிரல்களைக் கோத்துக் கொள்ளவும்—அது போல் இருந்தது. மார்பில் அவள் அணிந்திருந்த சட்டை—அது பம்பாயில் தைக்கப்படும் போதே தபஸ் பண்ணி இருக்க வேண்டும். அந்தச் சட்டையின் பித்தான்கள் எனக்காகக் காத்திருந்தன. அவள் இளமை எவ்வளவோ சாதனங்களைத் தேவையில்லாததாகச் செய்திருந்தது. அவள் செய்து கொண்டிருந்த அலங்காரத்தின் அரைகுறை அவள் தன்னம்பிக்கையையும் ஆணவத்தையும் காட்டியது. இந்த நிலைக்கு வர இங்கிலீஷ் படிப்பு, சினிமா, குடும்பத்தில் வளர்ந்த சூழ்நிலை தரப்பட்ட சுதந்திரங்கள், சோதித்துப் பார்த்த ஆசைகள்...எல்லாம் காரணமாக இருக்க வேண்டும். ஜ்யோ! காஷ்மீரக் கம்பளத்தை மிதித்துப் பாருங்கள்—ஜ்யோ! கித்தாரின் ஜி கம்பியைத் தட்டிப் பாருங்கள்—ஜ்யோ! திராட்சைத் தோட்டத்தில் கொத்துக் கொத்தாகத் தொங்கும் திராட்சைகளில் ஒரு திராட்சையின் நுனியில் தூங்கும் பனித்துளியை நாக்கில் தொட்டுப் பாருங்கள்—ஜ்யோ! இளங் காலையில் 80 மைல் வேகத்தில் ‘புல்லெட்’ மோட்டார் சைக்கிளில் சீறிச் செல்லுகையில் முகத்தில் காற்றை உணர்ந்து பாருங்கள்—ஜ்யோ?” (ஜேகே) பெண்ணை வர்ணிப்பதில் இவ்விதம் புதுமை பண்ணுகிற சுஜாதா இயற்கை வர்ணனையில் பல வியப்புகளைச் சேர்த்திருக்கிறார்.{{nop}}<noinclude></noinclude> ci2ccn092c2zefewqpv138evp09500k 1840201 1840037 2025-07-08T04:23:23Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|206||பாரதிக்குப் பின்}}</noinclude>போய்த் தொட்டுப் பார்த்து நிஜமானவள் என்று தெரிந்தும் மறுபடி மறுபடி தெரிந்து கொள்ளத் தூண்டியது. அவள் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். இடையில் பெல்ட் அணிந்திருந்தாள். அந்த பெல்ட்டின் கொக்கி—ஆள் காட்டிவிரல்களைக் கோத்துக் கொள்ளவும்—அது போல் இருந்தது. மார்பில் அவள் அணிந்திருந்த சட்டை—அது பம்பாயில் தைக்கப்படும் போதே தபஸ் பண்ணி இருக்க வேண்டும். அந்தச் சட்டையின் பித்தான்கள் எனக்காகக் காத்திருந்தன. அவள் இளமை எவ்வளவோ சாதனங்களைத் தேவையில்லாததாகச் செய்திருந்தது. அவள் செய்து கொண்டிருந்த அலங்காரத்தின் அரைகுறை அவள் தன்னம்பிக்கையையும் ஆணவத்தையும் காட்டியது. இந்த நிலைக்கு வர இங்கிலீஷ் படிப்பு, சினிமா, குடும்பத்தில் வளர்ந்த சூழ்நிலை தரப்பட்ட சுதந்திரங்கள், சோதித்துப் பார்த்த ஆசைகள்...எல்லாம் காரணமாக இருக்க வேண்டும். ஜ்யோ! காஷ்மீரக் கம்பளத்தை மிதித்துப் பாருங்கள்—ஜ்யோ! கித்தாரின் ஜி கம்பியைத் தட்டிப் பாருங்கள்—ஜ்யோ! திராட்சைத் தோட்டத்தில் கொத்துக் கொத்தாகத் தொங்கும் திராட்சைகளில் ஒரு திராட்சையின் நுனியில் தூங்கும் பனித்துளியை நாக்கில் தொட்டுப் பாருங்கள்—ஜ்யோ! இளங் காலையில் 80 மைல் வேகத்தில் ‘புல்லெட்’ மோட்டார் சைக்கிளில் சீறிச் செல்லுகையில் முகத்தில் காற்றை உணர்ந்து பாருங்கள்—ஜ்யோ?” (ஜேகே) பெண்ணை வர்ணிப்பதில் இவ்விதம் புதுமை பண்ணுகிற சுஜாதா இயற்கை வர்ணனையில் பல வியப்புகளைச் சேர்த்திருக்கிறார்.{{nop}}<noinclude></noinclude> 3ufryuqpif74dfdw36v8v0xlxahyh9s பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/209 250 130349 1840050 816726 2025-07-07T15:30:21Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||207}}</noinclude>சில உதாரணங்கள்— “அவள் முன்னே நடக்க, அவன் பின் தயங்கி நடந்தான். வயலில் பாய்ந்தாள். காலில் கொலுசு தெரிந்தது, வரப்பில் நடந்தாள். நீர் நிறைந்த வயலில் அவள் பிம்பம் அவளுடன் தலைகீழாக நடந்தது. எதிரே மாமரச் சோலையில் ஒரு பச்சை ரகசியம். அருகே பச்ப்செட் பாரி போல் நீரிறைத்துக் கொண்டிருந்தது. பனை மரங்கள் வரப்புக் காவல் நின்றனவான நீல நிறத்தில் அங்கங்கே பஞ்ச ஒத்தடங்கள் டிர்ரிக் டிர்ர்ரிக் என்றும் ச்பூச்யூ என்றும் பறவைக் குரல்கள் கறுப்ப வெல்வெட் குருவி ஒன்று வாலைத் தூக்கித் தூக்கி எழுப்பிய தொனித் துளிகள் எஃப் ஷார்ப்பில் இருந்ததாகப்பட்டது கல்யாணராமனுக்கு. அவன் மனத்தில் வயலின்கள் ஒலித்தன.” (கரையெல்லாம் செண்பகப்பூ) “நசரத்தில் சேட்டே அறியாத பட்சிகள் எல்லாம். கல்யாணராமன்!’ என்று அவனை எழுப்பின. எழுந்தான் வேறு விதமாக இருந்தன காலை ரசசியங்கள் எல்லாம் பாங்கள் எல்லாம் இளஞ் சூரியனிடம் அடிப்பட்டுப் போய்விட்டன. ஜன்னல் வழியாக அந்தத் தங்கத் திகிரி உஷ்ணமில்லாமல் அவன் மேல் மஞ்சளடித்தது.” “கீழே அழுக்குப் பச்சைச் சதுரங்கள் மெதுவாக உருண்டு கொண்டிருந்தன. மேற்கே மாடர்ன் ஆர்ட்டிஸ்ட் தீட்டிய ஆரஞ்சுப் படுதா போல வானம்” (ஜேகே) “க்வாரிக்குச் சென்றிருந்த தாஸின் லாரி திரும்பி வரும் போது மழை இங்கே பெய்வதில்லை என்று தீர்மானித்துத் தன் மின்னல் நெக்லஸ் அணிந்த கறுப்புத் தேவதைகளை அழைத்துக் கொண்டு கிழக்கே போய் விட்டது.” (வைரங்கள்){{nop}}<noinclude></noinclude> 5mzgyem3itc4r1k8zwt2klar4wmm50t 1840203 1840050 2025-07-08T04:27:57Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||207}}</noinclude>சில உதாரணங்கள்— “அவள் முன்னே நடக்க, அவன் பின் தயங்கி நடந்தான். வயலில் பாய்ந்தாள். காலில் கொலுசு தெரிந்தது, வரப்பில் நடந்தாள். நீர் நிறைந்த வயலில் அவள் பிம்பம் அவளுடன் தலைகீழாக நடந்தது. எதிரே மாமரச் சோலையில் ஒரு பச்சை ரகசியம். அருகே பம்ப்செட் பாரி போல் நீரிறைத்துக் கொண்டிருந்தது. பனை மரங்கள் வரப்புக் காவல் நின்றன. வான நீல நிறத்தில் அங்கங்கே பஞ்ச ஒத்தடங்கள் டிர்ரிக் டிர்ர்ரிக் என்றும் ச்பூச்யூ என்றும் பறவைக் குரல்கள். கறுப்பு வெல்வெட் குருவி ஒன்று வாலைத் தூக்கித் தூக்கி எழுப்பிய தொனித் துளிகள் எஃப் ஷார்ப்பில் இருந்ததாகப்பட்டது கல்யாணராமனுக்கு. அவன் மனத்தில் வயலின்கள் ஒலித்தன.” (கரையெல்லாம் செண்பகப்பூ) “நகரத்தில் கேட்டே அறியாத பட்சிகள் எல்லாம் ‘கல்யாணராமன்!’ என்று அவனை எழுப்பின. எழுந்தான் வேறு விதமாக இருந்தன காலை ரசசியங்கள் எல்லாம். மரங்கள் எல்லாம் இளஞ் சூரியனிடம் அடிப்பட்டுப் போய்விட்டன. ஜன்னல் வழியாக அந்தத் தங்கத் திகிரி உஷ்ணமில்லாமல் அவன் மேல் மஞ்சளடித்தது.” “கீழே அழுக்குப் பச்சைச் சதுரங்கள் மெதுவாக உருண்டு கொண்டிருந்தன. மேற்கே மாடர்ன் ஆர்ட்டிஸ்ட் தீட்டிய ஆரஞ்சுப் படுதா போல வானம்” (ஜேகே) “க்வாரிக்குச் சென்றிருந்த தாஸின் லாரி திரும்பி வரும் போது மழை இங்கே பெய்வதில்லை என்று தீர்மானித்துத் தன் மின்னல் நெக்லஸ் அணிந்த கறுப்புத் தேவதைகளை அழைத்துக் கொண்டு கிழக்கே போய் விட்டது.” (வைரங்கள்){{nop}}<noinclude></noinclude> 66okqoo0utxsnju66bqkx6mel9zya5z பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/210 250 130351 1840062 816728 2025-07-07T15:40:00Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|208||பாரதிக்குப் பின்}}</noinclude>‘ஜன்னல் வழியாக நீலவானம் தெரிந்தது. அதில் காலிஃப்ளவர் மேகங்கள் சில மிதந்தன.’ சின்னச் சின்ன சப்தங்களுடன் அவ்வப்போது மெலிய காற்றில் சலித்துக் கொண்டது மரம். அந்த விளக்குகள் நீல நட்சத்திரங்களாகத் தெரிந்தன, சூழ்நிலை வர்ணிப்புகளிலும் சுஜாதாவின் உரை நடை குதித்துக் களித்துத் தாவி விளையாடுவது போல் லாவகமாகச் செல்கிறது. கிராமப்புறச் சூழல் பற்றிய வர்ணனை இது: “அம்மன் கோயில் வாசலில் இடது பக்கம் பந்தல் கட்டியிருந்தது. மைதானத்தில் தகர ராட்டினம் சுற்றியது. நாசகன்னிகை பெண் தலையும் பாம்பு வாலுமாகச் சிரித்தாள். இரண்டு தலை ஆடு அருவருப்புத் தந்தது. சின்னக் குழந்தைகள் ஜவ்வு மிட்டாய் கடிகாரங்கள் அணிந்தார்கள். பயாஸ் கோப்பு பழனிச்சாமி எப்போதும் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தான். மூங்கில் மேல் ஒலிபெருக்கி நேத்து வச்ச மீன் குழம்பின் பிரதாபம் பேசியது. சாக்கு நிழலில் பெரிய வாணலிகளில் மணல் கலந்து பட்டாணிக் கடலைகள் உற்சாகமாகக் குதித்தன. சைக்கிள் டயர் வைத்த வண்டியில் நீளநீளமாக பஜ்ஜியும் மீன் வறுவலும் எண்ணெயில் பொரிந்தன. பிளாஸ்டிக் மோதிரங்கள்; இருபத்தி சொச்ச ரூபாயில் புடவைகள்; கழகப் பாடல்கள்; கட்சி கீதங்கள்; முருகன் பாடல்கள்; தொடுகுறி சாஸ்திரம்; மதனகாமராஜன்; அறுபத்து நான்கு வித ஆப்டோன் படங்களுடன் கொக்கோக சாஸ்திரம்; பம்பு செட்டுகள். மாலை மேம்பட்டி ஜனங்கள் கோயிலைப் பார்த்து வாயிலில் உட்கார்ந்திருந்தார்கள். ‘தொம்தம்த, தொம்தம்த என்று உடுக்கு சப்தம் கேட்டது, பூசாரி மீசையில்<noinclude></noinclude> pg9n0dwlyqaw6rltbh9vtfhy56yyipq 1840064 1840062 2025-07-07T15:40:18Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>où3 பாதிக்குப் பின் 'ஜன்னல் வழியாக நீலவானம் தெரித்தது. அதில் காலி ஃப்ளவர் மேகங்கள் சில மிதந்தன. - சின்னச் சின்ன சப்தங்களுடன் அவ்வப்போது மெலிய காற்றில் சவித்துக் கொண்டது மரம். அந்த விளக்குகள் நீல நட்சத்திரங்களாகத் தெரிந்தன, சூழ்நிலை வர்ணிப்புகளிலும் சுஜாதாவின் உரை நடை குதித்துக் களித்துத் தாவி விளையாடுவது போல் லாவக மாகச் செல்கிறது. - கிராமப்புறச் சூழல் பற்றிய வர்ணனை இது: "அம்மன் கோயில் வாசலில் இடது பக்கம் பத்தல் கட்டியிருந்தது. மைதானத்தில் தகர ராட்டினம் சுற்றியது. நாககன்னிகை பெண் தலையும் பாம்பு வாலுமாகச் சிரித் தாள். இரண்டு தலே ஆடு அருவருப்புத் தந்தது. சின்னக் குழந்தைகள் ஜவ்வு மிட்டாய் கடிகாரங்கள் அணிந்தார்கள், பயாஸ் கோப்பு பழனிச்சாமி எப்போதும் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தான். மூங்கில் மேல் ஒலிபெருக்கி நேத்து வச்ச மீன் குழம்பின் பிரதாபம் பேசியது. சாக்கு நிழலில் பெரிய வானவிகளில் மணல் கலந்து பட்டாணிக் கடலைகள் உற்சாகமாகக் குதித்தன. சைக்கிள் டயர் வைத்த வண்டி யில் நீள நீளமாக பஜ்ஜியும் மீன் வறுவலும் எண்ணெயில் பொரித்தன. பிளாஸ்டிக் மோதிரங்கள்; இருபத்தி சொச்ச ரூபாயில் புடவைகள்; கழகப் பாடல்கள்; கட்சி தேங்கள்; முருகன் பாடல்கள்; தொடுகுறி சாஸ்திரம்; மதன காமராஜன், அறுபத்து நான்கு வித ஆப்டோன் படங்களுடன் கொக்கோக சாஸ்திரம்; பம்பு செட்டுகள். மாலை, மேம்பட்டி ஜனங்கள் கோயிலைப் பார்த்து வாயிலில் உட்கார்ந்திருந்தார்கள். 'தொம்தம்த, தொம் தம், என்று உடுக்கு சப்தம் கேட்டது. பூசாரி மீசையில்<noinclude></noinclude> li7e4fzlnsigibaoa6o48yh9xcvbsjw 1840065 1840064 2025-07-07T15:40:32Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|208||பாரதிக்குப் பின்}}</noinclude>‘ஜன்னல் வழியாக நீலவானம் தெரிந்தது. அதில் காலிஃப்ளவர் மேகங்கள் சில மிதந்தன.’ சின்னச் சின்ன சப்தங்களுடன் அவ்வப்போது மெலிய காற்றில் சலித்துக் கொண்டது மரம். அந்த விளக்குகள் நீல நட்சத்திரங்களாகத் தெரிந்தன, சூழ்நிலை வர்ணிப்புகளிலும் சுஜாதாவின் உரை நடை குதித்துக் களித்துத் தாவி விளையாடுவது போல் லாவகமாகச் செல்கிறது. கிராமப்புறச் சூழல் பற்றிய வர்ணனை இது: “அம்மன் கோயில் வாசலில் இடது பக்கம் பந்தல் கட்டியிருந்தது. மைதானத்தில் தகர ராட்டினம் சுற்றியது. நாசகன்னிகை பெண் தலையும் பாம்பு வாலுமாகச் சிரித்தாள். இரண்டு தலை ஆடு அருவருப்புத் தந்தது. சின்னக் குழந்தைகள் ஜவ்வு மிட்டாய் கடிகாரங்கள் அணிந்தார்கள். பயாஸ் கோப்பு பழனிச்சாமி எப்போதும் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தான். மூங்கில் மேல் ஒலிபெருக்கி நேத்து வச்ச மீன் குழம்பின் பிரதாபம் பேசியது. சாக்கு நிழலில் பெரிய வாணலிகளில் மணல் கலந்து பட்டாணிக் கடலைகள் உற்சாகமாகக் குதித்தன. சைக்கிள் டயர் வைத்த வண்டியில் நீளநீளமாக பஜ்ஜியும் மீன் வறுவலும் எண்ணெயில் பொரிந்தன. பிளாஸ்டிக் மோதிரங்கள்; இருபத்தி சொச்ச ரூபாயில் புடவைகள்; கழகப் பாடல்கள்; கட்சி கீதங்கள்; முருகன் பாடல்கள்; தொடுகுறி சாஸ்திரம்; மதனகாமராஜன்; அறுபத்து நான்கு வித ஆப்டோன் படங்களுடன் கொக்கோக சாஸ்திரம்; பம்பு செட்டுகள். மாலை மேம்பட்டி ஜனங்கள் கோயிலைப் பார்த்து வாயிலில் உட்கார்ந்திருந்தார்கள். ‘தொம்தம்த, தொம்தம்த என்று உடுக்கு சப்தம் கேட்டது, பூசாரி மீசையில்<noinclude></noinclude> pg9n0dwlyqaw6rltbh9vtfhy56yyipq 1840205 1840065 2025-07-08T04:29:36Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|208||பாரதிக்குப் பின்}}</noinclude>‘ஜன்னல் வழியாக நீலவானம் தெரிந்தது. அதில் காலிஃப்ளவர் மேகங்கள் சில மிதந்தன.’ சின்னச் சின்ன சப்தங்களுடன் அவ்வப்போது மெலிய காற்றில் சலித்துக் கொண்டது மரம். அந்த விளக்குகள் நீல நட்சத்திரங்களாகத் தெரிந்தன, சூழ்நிலை வர்ணிப்புகளிலும் சுஜாதாவின் உரை நடை குதித்துக் களித்துத் தாவி விளையாடுவது போல் லாவகமாகச் செல்கிறது. கிராமப்புறச் சூழல் பற்றிய வர்ணனை இது: “அம்மன் கோயில் வாசலில் இடது பக்கம் பந்தல் கட்டியிருந்தது. மைதானத்தில் தகர ராட்டினம் சுற்றியது. நாககன்னிகை பெண் தலையும் பாம்பு வாலுமாகச் சிரித்தாள். இரண்டு தலை ஆடு அருவருப்புத் தந்தது. சின்னக் குழந்தைகள் ஜவ்வு மிட்டாய் கடிகாரங்கள் அணிந்தார்கள். பயாஸ் கோப்பு பழனிச்சாமி எப்போதும் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தான். மூங்கில் மேல் ஒலிபெருக்கி நேத்து வச்ச மீன் குழம்பின் பிரதாபம் பேசியது. சாக்கு நிழலில் பெரிய வாணலிகளில் மணல் கலந்து பட்டாணிக் கடலைகள் உற்சாகமாகக் குதித்தன. சைக்கிள் டயர் வைத்த வண்டியில் நீளநீளமாக பஜ்ஜியும் மீன் வறுவலும் எண்ணெயில் பொரிந்தன. பிளாஸ்டிக் மோதிரங்கள்; இருபத்தி சொச்ச ரூபாயில் புடவைகள்; கழகப் பாடல்கள்; கட்சி கீதங்கள்; முருகன் பாடல்கள்; தொடுகுறி சாஸ்திரம்; மதனகாமராஜன்; அறுபத்து நான்கு வித ஆப்டோன் படங்களுடன் கொக்கோக சாஸ்திரம்; பம்பு செட்டுகள். மாலை மேம்பட்டி ஜனங்கள் கோயிலைப் பார்த்து வாயிலில் உட்கார்ந்திருந்தார்கள். ‘தொம்தம்த, தொம்தம்த என்று உடுக்கு சப்தம் கேட்டது, பூசாரி மீசையில்<noinclude></noinclude> 6fj7l4mxom12fhww90j36cfdzyskdde பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/211 250 130352 1840076 816729 2025-07-07T15:50:52Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||209}}</noinclude>எண்ணெய் தடவியிருந்தான். அம்மன் நகைகள் அணித்து புதுசணிந்து பூவணிந்து உற்சாகமாக நின்றாள்.’ ஒரு பெரிய நகரின் மிக நாகரிகமான சூழ்நிலையை சுஜாதா சித்திரிக்கும் விதம் வித்தியாசமானது: “அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சாப்பிட்டார்கள். சல்லாபித்தார்கள். எனக்கு எதிரே நான்கு இளைஞர்கள் சோம்பேறித்தனமாக சாக்ஸபோன் பிரதானமாக, ஒரு மெட்டை வழிய வைத்துக் கொண்டிருந்தார்கள். நடுவே இடம் காலியாக இருந்தது. அந்த இளைஞர்கள், சற்று நேரத்தில் உருட்டப் போகும் ‘ர்ராக நடனப் பாட்டுக்கு அவர்கள் குலுங்கி அதிர்ந்து மேக்கப் கலையாத ஆச்சரியத்தில் ஆடப் போகிறார்கள். அதற்கான இடம். கண்ணாடிக் கதவுகள் திறந்து மேலும் அழகான பெண்களும் அவர்கள் அடிமைகளும் நுழைந்து சிரித்து நடந்து அடைந்து உட்கார்ந்தார்கள். அவர்கன் எல்லோரும் வெரோணிக்கா எப்பொழுது வரோனிக்கா என்று காத்திருந்தார்கள். அந்த இளைஞர்கள் கித்தார்களை முறுக்கினார்கள். டிரம்களை ஆசைதீர உடைத்தார்கள். சலங்கை சத்தங்களும் பஞ்சு வைத்து வில்லடிக்கும் சப்தங்களும் 3/3 துடிப்பில் ஒன், டூ, த்ரி சற்று விலகி ஒன் டூ என்ற பாஸ்ஸ நோவாவில் லத்தீன் அமெரிக்காவின் சூடு தரும் லயத்துடன் கவர்ச்சிகரமாக வாசித்துக் கொண்டிருந்தார்கள். தைரியமுள்ளவர்கள் சிலர் தங்கள் லஜ்ஜைகளை நாற்காலிகளில் விட்டுவிட்டு நடுவில் வந்து ஆடினார்கள். இளைஞர்களின் வாத்திய சங்கீதத்தில் துடிப்பு அதிகரித்தது. ‘டர்ர்ர்ர் ரய்ஞ்!’ என்று அக்கார்டியனைக் கீறினான்: அந்தத்<noinclude></noinclude> i5afqulrdxc29aqlj46yznzv87z51od 1840206 1840076 2025-07-08T04:32:07Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||209}}</noinclude>எண்ணெய் தடவியிருந்தான். அம்மன் நகைகள் அணிந்து புதுசணிந்து பூவணிந்து உற்சாகமாக நின்றாள்.’ ஒரு பெரிய நகரின் மிக நாகரிகமான சூழ்நிலையை சுஜாதா சித்திரிக்கும் விதம் வித்தியாசமானது: “அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சாப்பிட்டார்கள். சல்லாபித்தார்கள். எனக்கு எதிரே நான்கு இளைஞர்கள் சோம்பேறித்தனமாக சாக்ஸபோன் பிரதானமாக, ஒரு மெட்டை வழிய வைத்துக் கொண்டிருந்தார்கள். நடுவே இடம் காலியாக இருந்தது. அந்த இளைஞர்கள், சற்று நேரத்தில் உருட்டப் போகும் ‘ர்ராக நடனப் பாட்டுக்கு அவர்கள் குலுங்கி அதிர்ந்து மேக்கப் கலையாத ஆச்சரியத்தில் ஆடப் போகிறார்கள். அதற்கான இடம். கண்ணாடிக் கதவுகள் திறந்து மேலும் அழகான பெண்களும் அவர்கள் அடிமைகளும் நுழைந்து சிரித்து நடந்து அடைந்து உட்கார்ந்தார்கள். அவர்கன் எல்லோரும் வெரோணிக்கா எப்பொழுது வரோனிக்கா என்று காத்திருந்தார்கள். அந்த இளைஞர்கள் கித்தார்களை முறுக்கினார்கள். டிரம்களை ஆசைதீர உடைத்தார்கள். சலங்கை சத்தங்களும் பஞ்சு வைத்து வில்லடிக்கும் சப்தங்களும் 3/3 துடிப்பில் ஒன், டூ, த்ரி சற்று விலகி ஒன் டூ என்ற பாஸ்ஸ நோவாவில் லத்தீன் அமெரிக்காவின் சூடு தரும் லயத்துடன் கவர்ச்சிகரமாக வாசித்துக் கொண்டிருந்தார்கள். தைரியமுள்ளவர்கள் சிலர் தங்கள் லஜ்ஜைகளை நாற்காலிகளில் விட்டுவிட்டு நடுவில் வந்து ஆடினார்கள். இளைஞர்களின் வாத்திய சங்கீதத்தில் துடிப்பு அதிகரித்தது. ‘டர்ர்ர்ர் ரய்ஞ்!’ என்று அக்கார்டியனைக் கீறினான்; அந்தத்<noinclude></noinclude> 7n4ozydshj6gnadhwed5f6qhvfdomqg பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/212 250 130354 1840079 816730 2025-07-07T16:00:37Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|210||பாரதிக்குப் பின்}}</noinclude>தாமஸோ எவனோ ஜாஸ் டிரம் வாசித்தவனின் அருகில் இருந்த ஒரு பெரிய ஜால்ரா நாலு அடிக்கப்புறம் ஜல், நாலு அடிக்கப்புறம் ஜல் என்று தானாக இயங்கும் மெஷின் போல் ஜல்ல அவர்கள் ஆடினார்கள். தொண்டை கட்டின டெனர்ஸாக்ஸ் அது. அதை அதற்கே உரித்தான பிசிறுடன் வாகித்தான். அப்படி வாசித்தால் அது சில நரம்புகளை என்னவோ செய்யும். ‘பாப்’ என்னும் இன்றைய தினத் துடிப்பில் அந்த இளைஞர்கள் தங்கள் எதிர்காலக் கவலைகளை மறந்து ஆடிக்கொண்டிருக்க, என் மனதில் என் கடமை உணர்ச்சியை என் மூச்செதிரே தெரிந்த இளம் பெண்களின் இடுப்புப் பிரதேசங்களும், அவைகள் சுற்றின சுற்றுக்களும் தற்செயலாக சில ஸ்கர்ட்கள் காட்டிய அதிக வெண்மைகளும் மிகவும் கலைக்க முற்பட்டன.” கிராமப்புறச் சூழ்நிலைகளையும் நகரத்தின் அதிநாகரிகச் சுற்றுப்புறங்களையும் சுஜாதா எவ்வளவு திறமையாக வர்ணிக்கிறார் என்பதைக் காட்டுவதற்காக விரிவாகவே உதாரணங்கள் கொடுத்துள்ளேன். சாதாரண விஷயத்தைக் கூடப் புதுமையான பார்வையில் விவரிக்கிற திறமை சுஜாதாவின் எழுத்துக்களில் பளிச்சிடுகிறது. ஒரு பெண் வந்து உட்கார்ந்தாள் என்பதை அவர் பின்வருமாறு கூறியிருக்கிறார்— ‘நான் கல்யாணத்துக்குப் பெண் பார்க்கப் போகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெண் என் முன் எப்படி வந்து உட்காருவாள்? அப்படி வந்து உட்கார்ந்தாள் மாயா. தரை நோக்கி வந்தாள். ஒரு தடவை நிமிர்ந்து கரம் குவித்து, போர்த்திக்கொண்டு உட்கார்ந்தாள். தன் கை நகங்களைப் பார்த்துக் கொண்டாள். எளிய ஸாரி<noinclude></noinclude> aikf2fba03arzu4mzallsmfsf62hqv0 1840207 1840079 2025-07-08T04:33:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|210||பாரதிக்குப் பின்}}</noinclude>தாமஸோ எவனோ. ஜாஸ் டிரம் வாசித்தவனின் அருகில் இருந்த ஒரு பெரிய ஜால்ரா நாலு அடிக்கப்புறம் ஜல், நாலு அடிக்கப்புறம் ஜல் என்று தானாக இயங்கும் மெஷின் போல் ஜல்ல அவர்கள் ஆடினார்கள். தொண்டை கட்டின டெனர்ஸாக்ஸ் அது. அதை அதற்கே உரித்தான பிசிறுடன் வாகித்தான். அப்படி வாசித்தால் அது சில நரம்புகளை என்னவோ செய்யும். ‘பாப்’ என்னும் இன்றைய தினத் துடிப்பில் அந்த இளைஞர்கள் தங்கள் எதிர்காலக் கவலைகளை மறந்து ஆடிக்கொண்டிருக்க, என் மனதில் என் கடமை உணர்ச்சியை என் மூச்செதிரே தெரிந்த இளம் பெண்களின் இடுப்புப் பிரதேசங்களும், அவைகள் சுற்றின சுற்றுக்களும் தற்செயலாக சில ஸ்கர்ட்கள் காட்டிய அதிக வெண்மைகளும் மிகவும் கலைக்க முற்பட்டன.” கிராமப்புறச் சூழ்நிலைகளையும் நகரத்தின் அதிநாகரிகச் சுற்றுப்புறங்களையும் சுஜாதா எவ்வளவு திறமையாக வர்ணிக்கிறார் என்பதைக் காட்டுவதற்காக விரிவாகவே உதாரணங்கள் கொடுத்துள்ளேன். சாதாரண விஷயத்தைக் கூடப் புதுமையான பார்வையில் விவரிக்கிற திறமை சுஜாதாவின் எழுத்துக்களில் பளிச்சிடுகிறது. ஒரு பெண் வந்து உட்கார்ந்தாள் என்பதை அவர் பின்வருமாறு கூறியிருக்கிறார்— ‘நான் கல்யாணத்துக்குப் பெண் பார்க்கப் போகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெண் என் முன் எப்படி வந்து உட்காருவாள்? அப்படி வந்து உட்கார்ந்தாள் மாயா. தரை நோக்கி வந்தாள். ஒரு தடவை நிமிர்ந்து கரம் குவித்து, போர்த்திக்கொண்டு உட்கார்ந்தாள். தன் கை நகங்களைப் பார்த்துக் கொண்டாள். எளிய ஸாரி<noinclude></noinclude> qy89f3gmg59lafqznf577zz1w1ia06c பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/213 250 130356 1840085 816731 2025-07-07T16:08:42Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||211}}</noinclude>அணிந்திருந்தாள். கழுத்தில் காதில் நகைகள் இல்லை, திருவள்ளுவரின் மனைமாட்சி என்கிற அத்தியாயத்திலிருந்து நேரே நடந்து வந்தவள்போல் இருந்தாள்.’ வேலி நன்றாக இழுத்துக் கட்டப்பட்டிருந்தது எனும் விவரம் சுஜாதாவின் நடையில் இந்த விதமாகச் சித்தரிக்கப்படுகிறது: ‘கட்டிடங்களைச் சுற்றி அமைத்திருந்த வேலி மிகவும் சிரத்தையுடன் இழுத்து விண் என்று கட்டப்பட்டுச் சராசரி மனிதன் எவனும் கடக்க முடியாத உயரம் வரை எந்த இடத்திலும் இடைவெளியோ வெட்டோ இல்லாமல் நல்ல கற்புடன் ஆக்ரோஷமாக இருந்தது.’ சாதாரண சமாச்சாரத்தையும் புதுமையான முறையில் எழுதுகிற சுஜாதாவின் போக்கிற்கு மற்றுமொரு உதாரணம்— ‘தப்பித்துப் போன பெண்ணை டில்லி ஜனங்களின் மத்தியில் கண்டு பிடிப்பது, பத்து மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து எச்சில் துப்பி அது கீழே ஸ்கூட்டரில் விரைவாகச் செல்லும் என் நண்பர் வரதாச்சாரியின் வழுக்கையான மண்டையில் படுவது எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுதான்.’ பெண்ணின் சிரிப்பு சுஜாதாவின் நடையில் விதம் விதமான அழகு பெற்றிருப்பதை அவரது நாவல்களில் காணலாம். ‘பெண் கீச் என்று நெருப்புக்குச்சி கிழிப்பது போல் சிரித்தது.’ ‘கலர் கலராக, பச்சை சிவப்பாக, நீலமாக, ஊதாவாக, மத்தாப்புப் பொறியாகச் சிரித்தாள், வெண்கலச் சிரிப்பு இல்லை, கிப்ளிங்கின் பெல்ஸ் கவிதை போலச் சிரிப்பு.’{{nop}}<noinclude></noinclude> idwkud6fqa6arrhxhoph1d179ltmj0c 1840208 1840085 2025-07-08T04:35:04Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||211}}</noinclude>அணிந்திருந்தாள். கழுத்தில் காதில் நகைகள் இல்லை, திருவள்ளுவரின் மனைமாட்சி என்கிற அத்தியாயத்திலிருந்து நேரே நடந்து வந்தவள்போல் இருந்தாள்.’ வேலி நன்றாக இழுத்துக் கட்டப்பட்டிருந்தது எனும் விவரம் சுஜாதாவின் நடையில் இந்த விதமாகச் சித்தரிக்கப்படுகிறது: ‘கட்டிடங்களைச் சுற்றி அமைத்திருந்த வேலி மிகவும் சிரத்தையுடன் இழுத்து விண் என்று கட்டப்பட்டுச் சராசரி மனிதன் எவனும் கடக்க முடியாத உயரம் வரை எந்த இடத்திலும் இடைவெளியோ வெட்டோ இல்லாமல் நல்ல கற்புடன் ஆக்ரோஷமாக இருந்தது.’ சாதாரண சமாச்சாரத்தையும் புதுமையான முறையில் எழுதுகிற சுஜாதாவின் போக்கிற்கு மற்றுமொரு உதாரணம்— ‘தப்பித்துப் போன பெண்ணை டில்லி ஜனங்களின் மத்தியில் கண்டு பிடிப்பது, பத்து மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து எச்சில் துப்பி அது கீழே ஸ்கூட்டரில் விரைவாகச் செல்லும் என் நண்பர் வரதாச்சாரியின் வழுக்கையான மண்டையில் படுவது எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுதான்.’ பெண்ணின் சிரிப்பு சுஜாதாவின் நடையில் விதம் விதமான அழகு பெற்றிருப்பதை அவரது நாவல்களில் காணலாம். ‘பெண் கீச் என்று நெருப்புக்குச்சி கிழிப்பது போல் சிரித்தது.’ ‘கலர் கலராக, பச்சை சிவப்பாக, நீலமாக, ஊதாவாக, மத்தாப்புப் பொறியாகச் சிரித்தாள், வெண்கலச் சிரிப்பு இல்லை, கிப்ளிங்கின் பெல்ஸ் கவிதை போலச் சிரிப்பு.’{{nop}}<noinclude></noinclude> 3dvu769jtkic7q00e26sj3tavlsti01 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/214 250 130358 1840106 816732 2025-07-07T16:50:12Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|212||பாரதிக்குப் பின்}}</noinclude>அவர் அதிகம் அறிந்து வைத்திருப்பதை, வாசகர்களை ‘இம்ப்ரஸ் பண்ணுவதற்காக’ திடீர் திடீரென்று உதிர்த்துச் செல்வதற்கு இதுவும் உதாரணம் ஆகும். மேலும் இரண்டு குறிப்பிடலாம்; ‘இளமையுடன் சேர்ந்து ஓர் உத்சாக ராகம்போல இருந்தாள். கல்யாணராமனுக்கு பீத்தோவனின் ஸிம்ஃபனி ஞாபகம் வந்தது. டி மேஜர் ஓப்பஸ் 61.’ ‘சட்டை அணியாமல் மார்பில் மொச மொச என்று வெளுப்பு மயிராக ரஷ்யக் கரடிக் குட்டிபோல் இருந்தார். நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டு. காப்ஸிகம் போல மூக்கு.’ (மிளகாய் பழம் போல மூக்கு என்று அவரே வேறொரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.) உணர்ச்சிப் பரபரப்பை எடுத்துச் கொல்ல சுஜாதா நயமான பல உத்திகளைக் கையாள்கிறார்— ‘அவள் இருதயம் பயம் பயம் பயம் என்று பம்ப் அடித்துக் கொண்டிருந்தது.’ ‘வியர்வை உடல் பூராக் கொப்பளிக்க, சுவாசப் பைகள் ஓவர் டைப் செய்ய, கிராமத்து அத்தனைக் காற்றையும் வாங்கி, சுவாசித்து, இரைத்து, வியர்த்து பயந்து ஓடி, வீதி மத்தியில் நின்று கத்தினான்.’ ‘அவள் சட்டை மார்பைச் சரியாக மூடாதது வசந்தின் ரத்த அழுத்தத்தை மிகவும் சோதிக்கப் போகிறது.’ ‘கொடியிலிருந்து மாற்று உடைகளைக் கவர்ந்து அணிவதற்குள் அவள் உடலின் வடிவங்களின் சலனத்தின் நிஜம் அவனைத் தாக்கியது.’ ‘மிக’ என்ற சொல்லை சுஜாதா அதிகம் உபயோகிக்கிருர்—{{nop}}<noinclude></noinclude> 3ujrcwbj664l6hfengxqb428ad9ctu7 1840210 1840106 2025-07-08T04:36:46Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|212||பாரதிக்குப் பின்}}</noinclude>அவர் அதிகம் அறிந்து வைத்திருப்பதை, வாசகர்களை ‘இம்ப்ரஸ் பண்ணுவதற்காக’ திடீர் திடீரென்று உதிர்த்துச் செல்வதற்கு இதுவும் உதாரணம் ஆகும். மேலும் இரண்டு குறிப்பிடலாம்; ‘இளமையுடன் சேர்ந்து ஓர் உத்சாக ராகம்போல இருந்தாள். கல்யாணராமனுக்கு பீத்தோவனின் ஸிம்ஃபனி ஞாபகம் வந்தது. டி மேஜர் ஓப்பஸ் 61.’ ‘சட்டை அணியாமல் மார்பில் மொச மொச என்று வெளுப்பு மயிராக ரஷ்யக் கரடிக் குட்டிபோல் இருந்தார். நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டு. காப்ஸிகம் போல மூக்கு.’ (மிளகாய் பழம் போல மூக்கு என்று அவரே வேறொரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.) உணர்ச்சிப் பரபரப்பை எடுத்துச் சொல்ல சுஜாதா நயமான பல உத்திகளைக் கையாள்கிறார்— ‘அவள் இருதயம் பயம் பயம் பயம் என்று பம்ப் அடித்துக் கொண்டிருந்தது.’ ‘வியர்வை உடல் பூராக் கொப்பளிக்க, சுவாசப் பைகள் ஓவர் டைப் செய்ய, கிராமத்து அத்தனைக் காற்றையும் வாங்கி, சுவாசித்து, இரைத்து, வியர்த்து பயந்து ஓடி, வீதி மத்தியில் நின்று கத்தினான்.’ ‘அவள் சட்டை மார்பைச் சரியாக மூடாதது வசந்தின் ரத்த அழுத்தத்தை மிகவும் சோதிக்கப் போகிறது.’ ‘கொடியிலிருந்து மாற்று உடைகளைக் கவர்ந்து அணிவதற்குள் அவள் உடலின் வடிவங்களின் சலனத்தின் நிஜம் அவனைத் தாக்கியது.’ ‘மிக’ என்ற சொல்லை சுஜாதா அதிகம் உபயோகிக்கிறார்—{{nop}}<noinclude></noinclude> gwvp4oex1wnf30ub670jer38bm7g8yy பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/215 250 130360 1840109 816733 2025-07-07T16:59:09Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||213}}</noinclude>‘கல்யாணராமன் மிகவும் மனத்தில் வாழ்பவன்’. ‘இளைஞர்களுக்குத் தான்—மிக இளைஞர்களுக்கு’, ‘மிகவும் மிக சுவார்ஸ்யமான விஷயம்’, ‘மிக ஒழுங்கான பற்கள்.’ ‘மரபுகளை மீறி, இஷ்டம்போல் சொல், சேர்க்கைகள் பண்ணி எழுதுவதன் மூலமும் சுஜாதா நடையில் புதுமை கூட்டுகிறார்: ‘விஜயா மெடிக்கல்ஸ் காலண்டர் ஒன்றில் ஹேமா நாட்காட்டினாள்.’ ‘அந்த டம்ளரை பிரமித்தேன்.’ ‘மாலை போடுகிறார்கள்—ஃப்ளாஷ்ச்சிடுகிறார்கள்.’ ‘பட்சிகள் டிர்ரர்ரிக்க’ ‘அங் கங் கங் கங்கே அலட்சியமாக’ ‘அவர்கள் 4 வரும் என்னை அணுக’ ‘எஸ் சார் என்றேன் பெரிய எழுத்தில்’ ‘பிரதமரின் கீச்சுக்குரல் ஒலிபெருக்கிக் கொண்டிருந்தது. யார் யாரோ ஹுஸேனை ஹலோ செய்தார்கள்.’ (டெலிபோனில்) ‘மற்றொரு நம்பர் தந்தார்கள். அந்து மற்றொருவைச் சுற்றினேன்.’ இப்படி எத்தனையோ காணலாம். வார்த்தையையும் பொருளையும் வைத்து விளையாடுகிற சொல் சாதுரியத்தை ‘பன்’ (Pun) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். சிலேடை நயம் என்று தமிழில் சொல்லலாம். இந்தச் சொல் அம்மானையை சுஜாதா திறமையாகச் செய்து வருவதை அவருடைய படைப்புகளில் இடைக்கிடை காண முடியும்.{{nop}}<noinclude></noinclude> 9g0tf2v1ig1mykhvtmg04a520bmojwy 1840211 1840109 2025-07-08T04:38:20Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||213}}</noinclude>‘கல்யாணராமன் மிகவும் மனத்தில் வாழ்பவன்’. ‘இளைஞர்களுக்குத் தான்—மிக இளைஞர்களுக்கு’, ‘மிகவும் மிக சுவார்ஸ்யமான விஷயம்’, ‘மிக ஒழுங்கான பற்கள்.’ ‘மரபுகளை மீறி, இஷ்டம்போல் சொல், சேர்க்கைகள் பண்ணி எழுதுவதன் மூலமும் சுஜாதா நடையில் புதுமை கூட்டுகிறார்: ‘விஜயா மெடிக்கல்ஸ் காலண்டர் ஒன்றில் ஹேமா நாட்காட்டினாள்.’ ‘அந்த டம்ளரை பிரமித்தேன்.’ ‘மாலை போடுகிறார்கள்—ஃப்ளாஷ்ச்சிடுகிறார்கள்.’ ‘பட்சிகள் டிர்ரர்ரிக்க’ ‘அங் கங் கங் கங்கே அலட்சியமாக’ ‘அவர்கள் 4 வரும் என்னை அணுக’ ‘எஸ் சார் என்றேன் பெரிய எழுத்தில்’ ‘பிரதமரின் கீச்சுக்குரல் ஒலிபெருக்கிக் கொண்டிருந்தது. யார் யாரோ ஹுஸேனை ஹலோ செய்தார்கள்.’ (டெலிபோனில்) ‘மற்றொரு நம்பர் தந்தார்கள். அந்து மற்றொருவைச் சுற்றினேன்.’ இப்படி எத்தனையோ காணலாம். வார்த்தையையும் பொருளையும் வைத்து விளையாடுகிற சொல் சாதுரியத்தை ‘பன்’ (Pun) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். சிலேடை நயம் என்று தமிழில் சொல்லலாம். இந்தச் சொல் அம்மானையை சுஜாதா திறமையாகச் செய்து வருவதை அவருடைய படைப்புகளில் இடைக்கிடை காண முடியும்.{{nop}}<noinclude></noinclude> tmxvm82nmtku7hndkdbg2m3aqmi8tvy பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216 250 130362 1840119 816734 2025-07-07T17:24:05Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|214||பாரதிக்குப் பின்}}</noinclude>உதாரணம்: “நான் பின்தொடர்ந்தேன். தொடர்ந்த அவள் ‘பின்’ அழகாக ஒரு இத்தாலிய நடிகையின் ‘பின்’னை ஞாபகப்படுத்தியது.” “வ்வாட் என்றார். அந்த ‘வாட்’டில் டெலிபோஸ் எக்ஸ்சேஞ்சில் நிச்சயம் பாட்டரி வீக்காகி இருக்கும். கம்பி வழியாகக் காதில் சுட்ட சரியான கிலோவாட்.” சுஜாதாவின் மற்றொரு ‘ஸ்பெஷாலிட்டி’ எழுதிச் செல்லும்போதே குதர்க்கம் அல்லது குறும்புத்தனம் அல்லது ‘சர்க்கஸ் வேலை’ பண்ணுவது. {{center|எழுந்து}} {{center|நி<br>ல்<br>லு<br>ங்<br>க<br>ள்.}} <poem> {{em|22}}றி {{em|21}}ஏ {{em|22}}இ {{em|23}}ற {{em|24}}ங் {{em|25}}கி {{em|26}}னா {{em|27}}ன். </poem> ‘விமானம் நிலையத்திலிருந்து கிளம்பி 1500 அடியில் பறந்து, விவசாயிகளை நோக்கி <poem> {{em|7}}வி {{em|8}}ர் {{em|9}}ர் {{em|10}}ர் {{em|11}}ர் {{em|12}}ர் {{em|13}}ர் {{em|14}}டு {{em|15}}ம் </poem> என்று இறங்கி’—{{nop}}<noinclude></noinclude> b38uryptp67820s5xo4lxkj8ab2fojx 1840122 1840119 2025-07-07T17:25:56Z Sridevi Jayakumar 15329 1840122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|214||பாரதிக்குப் பின்}}</noinclude>உதாரணம்: “நான் பின்தொடர்ந்தேன். தொடர்ந்த அவள் ‘பின்’ அழகாக ஒரு இத்தாலிய நடிகையின் ‘பின்’னை ஞாபகப்படுத்தியது.” “வ்வாட் என்றார். அந்த ‘வாட்’டில் டெலிபோஸ் எக்ஸ்சேஞ்சில் நிச்சயம் பாட்டரி வீக்காகி இருக்கும். கம்பி வழியாகக் காதில் சுட்ட சரியான கிலோவாட்.” சுஜாதாவின் மற்றொரு ‘ஸ்பெஷாலிட்டி’ எழுதிச் செல்லும்போதே குதர்க்கம் அல்லது குறும்புத்தனம் அல்லது ‘சர்க்கஸ் வேலை’ பண்ணுவது. {{center|எழுந்து<br>நி<br>ல்<br>லு<br>ங்<br>க<br>ள்.}} <poem> {{em|8}}றி {{em|7}}ஏ {{em|8}}இ {{em|9}}ற {{em|10}}ங் {{em|11}}கி {{em|12}}னா {{em|13}}ன். </poem> ‘விமானம் நிலையத்திலிருந்து கிளம்பி 1500 அடியில் பறந்து, விவசாயிகளை நோக்கி <poem> {{em|7}}வி {{em|8}}ர் {{em|9}}ர் {{em|10}}ர் {{em|11}}ர் {{em|12}}ர் {{em|13}}ர் {{em|14}}டு {{em|15}}ம் </poem> என்று இறங்கி’—{{nop}}<noinclude></noinclude> 0nxerv8gy6i515xzh380zrehxuuluae 1840192 1840122 2025-07-08T04:09:56Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|214||பாரதிக்குப் பின்}}</noinclude>உதாரணம்: “நான் பின்தொடர்ந்தேன். தொடர்ந்த அவள் ‘பின்’ அழகாக ஒரு இத்தாலிய நடிகையின் ‘பின்’னை ஞாபகப்படுத்தியது.” “வ்வாட் என்றார். அந்த ‘வாட்’டில் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் நிச்சயம் பாட்டரி வீக்காகி இருக்கும். கம்பி வழியாகக் காதில் சுட்ட சரியான கிலோவாட்.” சுஜாதாவின் மற்றொரு ‘ஸ்பெஷாலிட்டி’ எழுதிச் செல்லும்போதே குதர்க்கம் அல்லது குறும்புத்தனம் அல்லது ‘சர்க்கஸ் வேலை’ பண்ணுவது. {{center|எழுந்து<br>நி<br>ல்<br>லு<br>ங்<br>க<br>ள்.}} <poem> {{em|8}}றி {{em|7}}ஏ {{em|8}}இ {{em|9}}ற {{em|10}}ங் {{em|11}}கி {{em|12}}னா {{em|13}}ன். </poem> ‘விமானம் நிலையத்திலிருந்து கிளம்பி 1500 அடியில் பறந்து, விவசாயிகளை நோக்கி <poem> {{em|7}}வி {{em|8}}ர் {{em|9}}ர் {{em|10}}ர் {{em|11}}ர் {{em|12}}ர் {{em|13}}ர் {{em|14}}டு {{em|15}}ம் </poem> என்று இறங்கி’—{{nop}}<noinclude></noinclude> htj5ohrj1y9abapr0dz93ccxzxdqorr பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/217 250 130363 1840129 816735 2025-07-07T17:35:35Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||215}}</noinclude>இவ்வாறெல்லாம் எழுதியிருக்கிறார். மேலும்— ‘காசு எனக்கு எவ்வளவோ வசதிகள் தருகிறது. ரம்மி ஆடலாம். புத்தகங்கள் வாங்கலாம். சில பார்ட்டிகளைத் தேடிப் போகலாம். சில பார்ட்டிகள், {{center|A}} முத்திரையைக் கவனித்தீர்களா? உங்களுக்கு என்ன வயசு? மேலே படிக்கலாமா? சின்னப் பையன்கள் எல்லாம் ஒரு தடவை ஜோராகக் கைதட்டிவிட்டு விலகிக் கொள்ளவும்.” (ஜேகே) ‘நான் அந்தப் பெண்ணைக் காதலிக்கலாமா என்று யோசித்தேன். அவள் ஆர்வத்துடன் அந்தப் பிரிவுப சாரத்தைக் கவனித்தாள். அவளை நான் கவனிக்கச் சந்தர்ப்பம் தந்தாள்; எனக்குக் கொஞ்சம் அவகாசமும் மூடும் இருக்கும்போது, என் தமிழ் கொஞ்சம் தீட்டப்பட்டபின், அவளை அழகாக வர்ணிக்க கீழ்க்கண்ட இடத்தை ரிசர்வ் செய்திருக்கிறேன். அவளுடன் மேலே பேச விஷயம் தேடுவதற்குள் அவள் இயல்பாக நழுவி, காத்திருந்த மற்றவர்களுடன் கலந்தாள்.’ (நில், கவனி, தாக்கு!) சுஜாதாவின் கதைகளிலும் நாவல்களிலும் புதுமையும் விறுவிறுப்பும், இனிமையும் எதிர்பார்க்க வைக்கும் வசீகரமும், கற்பனை வளமும் நிறைந்திருப்பது போலவே அவருடைய எழுத்து நடையிலும் இளமை, புதுமை, அழகு, ஆழம், வேகம், விறுவிறுப்பு, சில சமயங்களில் கவிதைத் தன்மை எல்லாம் கலந்திருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> 1jj9uup349oq92l67gqyy51rxnxpy2y 1840213 1840129 2025-07-08T04:41:41Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|தமிழ் உரைநடை||215}}</noinclude>இவ்வாறெல்லாம் எழுதியிருக்கிறார். மேலும்— ‘காசு எனக்கு எவ்வளவோ வசதிகள் தருகிறது. ரம்மி ஆடலாம். புத்தகங்கள் வாங்கலாம். சில பார்ட்டிகளைத் தேடிப் போகலாம். சில பார்ட்டிகள். {{center|A}} “முத்திரையைக் கவனித்தீர்களா? உங்களுக்கு என்ன வயசு? மேலே படிக்கலாமா? சின்னப் பையன்கள் எல்லாம் ஒரு தடவை ஜோராகக் கைதட்டிவிட்டு விலகிக் கொள்ளவும்.” (ஜேகே) ‘நான் அந்தப் பெண்ணைக் காதலிக்கலாமா என்று யோசித்தேன். அவள் ஆர்வத்துடன் அந்தப் பிரிவுபசாரத்தைக் கவனித்தாள். அவளை நான் கவனிக்கச் சந்தர்ப்பம் தந்தாள்; எனக்குக் கொஞ்சம் அவகாசமும் மூடும் இருக்கும்போது, என் தமிழ் கொஞ்சம் தீட்டப்பட்டபின், அவளை அழகாக வர்ணிக்க கீழ்க்கண்ட இடத்தை ரிசர்வ் செய்திருக்கிறேன். அவளுடன் மேலே பேச விஷயம் தேடுவதற்குள் அவள் இயல்பாக நழுவி, காத்திருந்த மற்றவர்களுடன் கலந்தாள்.’ (நில், கவனி, தாக்கு!) சுஜாதாவின் கதைகளிலும் நாவல்களிலும் புதுமையும் விறுவிறுப்பும், இனிமையும் எதிர்பார்க்க வைக்கும் வசீகரமும், கற்பனை வளமும் நிறைந்திருப்பது போலவே அவருடைய எழுத்து நடையிலும் இளமை, புதுமை, அழகு, ஆழம், வேகம், விறுவிறுப்பு, சில சமயங்களில் கவிதைத் தன்மை எல்லாம் கலந்திருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> 5ubi6k25157fsrvzgpeo4lfbecddltq பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/218 250 130365 1840204 816736 2025-07-08T04:29:30Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>25. ஈழத்தின் எழுத்தாளர்கள்</b>}}}} {{larger|<b>த</b>}}மிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் மிகச் சிறப்பாகப் பணி புரிந்திருக்கிறார்கள்; இப்போதும் நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் முதலிய பிரிவுகளில் அவர்கள் போற்றத் தகுந்த பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள். ஈழத்து எழுத்தாளர்களின் உரைநடை குறித்துத் தனியாகவும் விரிவாகவும் ஆய்வு செய்து எழுத வேண்டியது அவசியம். இந்த வேலையை ஈழத்தின் எழுத்தாளர்களில் எவரேனும் செய்ய முன்வர வேண்டும். தமிழகத்தில் இருப்பவர்களால் இதை பூரணமாக, உரிய முறையில், செய்ய இயலாது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களை தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அறிந்து கொள்வதற்குப் போதுமான வாய்ப்பும் வசதிகளும் இல்லை. ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் படைத்துள்ள நாவல்கள், குறுநாவல்கள் முதலியனவும், சிறுகதைத் தொகுப்புகளும் இதர புத்தகங்களும் தமிழ் நாட்டில் கிடைப்பதில்லை. தமிழ் உரைநடை வளர்ச்சி பற்றி நான் எழுதி வருகிற இத்தொடரில் ஒரு வரையறை வகுத்துக் கொண்டிருப்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். தமிழ் உரைநடை வளர்ச்சியில் புதுமை சேர்த்தவர்கள், பிறர்மீது பாதிப்பு<noinclude></noinclude> bjscwrywu8l7jarrar4qaxq8b3np19m பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/219 250 130367 1840209 816737 2025-07-08T04:36:26Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||217}}</noinclude>ஏற்படுத்தும் விதத்தில் உரைநடையைக் கையாண்டிருப்பவர்கள் சோதனை ரீதியாக எழுத்து நடையைப் பயின்றவர்கள் ஆகியோரது வசன நடையை மட்டுமே நான் கவனிப்புக்கு உரியதாக்கி இப்பகுதியில் எடுத்துக்காட்டியுள்ளேன். இவ்வகையிலான உரைநடைப் படைப்புகளை இலங்கைத் தமிழ் எழுத்துக்களில் கண்டு பிடிப்பதற்குப் பலரது பலவிதமான படைப்புக்களும் எனக்குத் தேவைப்படும். இலங்கையில் இதுவரை வெளிவந்துள்ள எழுத்து முயற்சிகளில் குறைந்தபட்ச அளவு நூல்களைக்கூட வாசித்தறியும் வாய்ப்பைப் பெற்றிராத நான், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் உரைநடையை மதிப்பிட்டு எழுதுவது எப்படி? ‘புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ புத்தகத்தில் நான் ஈழத்தின் புதுக் கவிதைகளை சரிவர ஆய்வு செய்து எழுதவில்லை என்ற குறை அங்குள்ளவர்களிடம் நிலைபெற்றிருக்கிறது என்று, என் நண்பரும் ‘மல்லிகை’ ஆசிரியருமான டொமினிக் ஜீவா சென்னையில் என்னை சந்தித்தபோது தெரிவித்தார். ஈழத்தின் பத்திரிகைகளும், கவிதைத் தொகுதிகளும் எனது பார்வைக்குக் கிடைக்காமல் போனதுதான் அதற்குக் காரணம் என்று நான் அறிவித்தேன். இந்த உரைநடை ஆய்வு சம்பந்தமாகவும் அதே குறை எழக்கூடும். அது தவிர்க்க இயலாதது. நான் அறிய நேர்ந்த இரண்டு ஈழ எழுத்தாளர்களின் உரைநடையை மட்டும் இங்கு அறிமுகப்படுத்துகிறேன். ஒன்று, எஸ். பொன்னுத்துரையின் உரைநடை. நாவலிலும் சிறுகதையிலும் இவர் சோதனைகள் செய்தது<noinclude>{{rh|பா—14||}}</noinclude> gm0cya7lmmku1pfhf2m2jv9mv19iixf பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/220 250 130369 1840215 816739 2025-07-08T04:44:16Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|218||பாரதிக்குப் பின்}}</noinclude>போலவே எழுத்து நடையிலும் புதுமைகள் பண்ண முயன்றார். அவற்றை விரிவாக எடுத்துச் சொல்வதற்கு உதவக்கூடிய புத்தகங்கள் கிடைக்கவில்லை. பொன்னுத்துரையின் உரைநடையில் லா. ச. ராமாமிர்தத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதை, அவருடைய படைப்புகளை வாசிக்கும் ரசிகர்கள் எளிதில் உணர முடியும். “காலம் காலமாகக் கவிஞனுக்கும் கன்னியருக்கும் தொடர்பு ஏற்படுத்தும் மலர்கள், அரும்பாகி, சற்று உப்பி மொக்காகி, விம்மிப் போதாகி வெடித்து மலராகி...அப்புறம்? இதழ் இதழாக உதிர்ந்து கருகிச் சொரிந்து...வெறுந்தண்டு! காலத்தின் இரும்புக் கரங்களின் பிடிக்குச் சிக்காது, மெல்லியரின் கரங்களில் தவழ்ந்து, நாருடன் சேர்ந்து மாலையானால்...நாரை மையப் பொருளாக வைத்து இதனை மறைத்து மலர்களைத் தொடுத்து மாலையாக்கி...மாலையாகி விட்டால், மலர்கள் நித்திய வாழ்வு எய்தி...சே! எப்படியும் புதையுண்ட சடலத்தின் தசைப் பிரதேசத்தை மண் அரித்து மென்று தின்ற பின்னர், எஞ்சி வெளிவரும் எலும்புக் கூட்டினைப் போன்று கண்களில் அருவருப்புக் கொண்டு கோரமாக ஒட்டிக்கொள்ள...மீதம்? வெறும் நார்! நாரேதான்! {{rh|||மீதமாக இருக்கும் நார் நான்,<br>நான் நாரென்றால்?<br>மலர்கள்?}} மலர்கள் இங்கே பூத்துக் குலுங்கிப் பொலிவு காட்டுகின்றன. மனதைச் சிறையெடுக்கும் வண்ண வண்ண மலர்கள். மலர்கள் காந்தத் துளிகளா? மனம் இரும்புத் துணுக்கா? விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு ‘டோக்கா’ கொடுத்து விட்ட உண்மை, என் கற்பனையில்<noinclude></noinclude> 3cjt28b5tayeovy48kf1mc4vlpo2zbr பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/221 250 130371 1840223 816740 2025-07-08T04:55:50Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||219}}</noinclude>மட்டுமே குதிரும் உண்மை, என்னை வளைத்து...வெறி கொண்டு குதித்தோடும் குதிரையைக் கடிவாளத்திற்குள் பக்குவப்படுத்துகிறேன். மலர்ந்து செடி கொடிகளிலும், உதிர்ந்து பூமாதேவியின் அம்மண மடியிலும் கிடக்கும் மலர்களில் குறிரை மேய்கிறது. நிலத்தில் பற்றையாகச் சடைத்திருக்கும் செடியில் மலர்ந்து குங்கும இதழ் விரித்துச் சிரிக்கும். மலர்கள்—அந்த மலர்களின் குறுநகைகளில் வெட்கத்தின் சாயலைத் துல்லியமாகக் கவனிக்க முடிகிறது—ஆனால் அதன் பெயரோ வெட்கம் கெட்ட ரோஜா! நிறையாக நின்று கமுக மரங்களின் வாமனாவதாரங்களாகத் தோன்றும் செடிகள். தலையில் மலர்களைத் தூக்கிக்கொண்டு செம்பு நடனம் பயிலுகின்றன, மங்கல் மஞ்சள் நிறம் சில, சுண்ணாம்பில் ஊறிய அரைத்த மஞ்சள் நிறம் பல. செவ்வந்தி மலர்களில் திருநடனக் கோலம்! காப்பிச் செடியைப் போன்று கெம்பீரமாகக் கிளைவிட்டிருக்கும் பந்தலில், பழுப்பேறிய புண்ணிலிருந்து வழிந்தோடும் சீழின் நிறத்தில், விண்மீன்களின் வடிவந்தாங்கி அசைந்தாடும் மலர்கள். அவை, நாம் கற்பிக்கும் வாசனையை நமது மூக்கின் துவாரங்களில் நுட்பமாகத் துளைக்கின்றன. மணங்களை வைத்து ஜாலவித்தை புரியும் மனோ ரஞ்சிதம்...இன்னொரு பந்தரில் வள்ளல் பாரியை நினைவுபடுத்தும் முல்லை; இன்னொன்றில் மல்லிகை...சிவப்பு—குங்குமம்—மஞ்சள்—வெள்ளை...வெள்ளை யென்றால் எல்லாம் வெள்ளையா? பால் நிறம்; நிலவு நிறம்; தந்த நிறம்; பச்சையரிசிக் கழுநீர் நிறம்...எல்லாவற்றின் தண்டும் இலைகளும் பச்சை! பச்சை நிறமான தண்டும் இலைகளும்;—அவற்றில் பூக்கும் மலர்கள் வண்ணத்திற்கு ஒன்று, வகைக்கு ஒண்று. {{block_center|<poem>இந்த நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் பூக்கள், என் மனதில் பூக்கும் மலர்கள்—?</poem>}}{{nop}}<noinclude></noinclude> tfc7cosp9cfl545i5xzz6836wggsegr 1840224 1840223 2025-07-08T04:56:06Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||219}}</noinclude>மட்டுமே குதிரும் உண்மை, என்னை வளைத்து...வெறி கொண்டு குதித்தோடும் குதிரையைக் கடிவாளத்திற்குள் பக்குவப்படுத்துகிறேன். மலர்ந்து செடி கொடிகளிலும், உதிர்ந்து பூமாதேவியின் அம்மண மடியிலும் கிடக்கும் மலர்களில் குறிரை மேய்கிறது. நிலத்தில் பற்றையாகச் சடைத்திருக்கும் செடியில் மலர்ந்து குங்கும இதழ் விரித்துச் சிரிக்கும். மலர்கள்—அந்த மலர்களின் குறுநகைகளில் வெட்கத்தின் சாயலைத் துல்லியமாகக் கவனிக்க முடிகிறது—ஆனால் அதன் பெயரோ வெட்கம் கெட்ட ரோஜா! நிறையாக நின்று கமுக மரங்களின் வாமனாவதாரங்களாகத் தோன்றும் செடிகள். தலையில் மலர்களைத் தூக்கிக்கொண்டு செம்பு நடனம் பயிலுகின்றன, மங்கல் மஞ்சள் நிறம் சில, சுண்ணாம்பில் ஊறிய அரைத்த மஞ்சள் நிறம் பல. செவ்வந்தி மலர்களில் திருநடனக் கோலம்! காப்பிச் செடியைப் போன்று கெம்பீரமாகக் கிளைவிட்டிருக்கும் பந்தலில், பழுப்பேறிய புண்ணிலிருந்து வழிந்தோடும் சீழின் நிறத்தில், விண்மீன்களின் வடிவந்தாங்கி அசைந்தாடும் மலர்கள். அவை, நாம் கற்பிக்கும் வாசனையை நமது மூக்கின் துவாரங்களில் நுட்பமாகத் துளைக்கின்றன. மணங்களை வைத்து ஜாலவித்தை புரியும் மனோ ரஞ்சிதம்...இன்னொரு பந்தரில் வள்ளல் பாரியை நினைவுபடுத்தும் முல்லை; இன்னொன்றில் மல்லிகை...சிவப்பு—குங்குமம்—மஞ்சள்—வெள்ளை...வெள்ளை யென்றால் எல்லாம் வெள்ளையா? பால் நிறம்; நிலவு நிறம்; தந்த நிறம்; பச்சையரிசிக் கழுநீர் நிறம்...எல்லாவற்றின் தண்டும் இலைகளும் பச்சை! பச்சை நிறமான தண்டும் இலைகளும்;—அவற்றில் பூக்கும் மலர்கள் வண்ணத்திற்கு ஒன்று, வகைக்கு ஒண்று. {{block_center|<poem>இந்த நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் பூக்கள், என் மனதில் பூக்கும் மலர்கள்—?</poem>}}{{nop}}<noinclude></noinclude> gahixfz8krewshqnyri1ewg7ymw3gbs 1840226 1840224 2025-07-08T04:56:47Z Sridevi Jayakumar 15329 1840226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||219}}</noinclude>மட்டுமே குதிரும் உண்மை, என்னை வளைத்து...வெறி கொண்டு குதித்தோடும் குதிரையைக் கடிவாளத்திற்குள் பக்குவப்படுத்துகிறேன். மலர்ந்து செடி கொடிகளிலும், உதிர்ந்து பூமாதேவியின் அம்மண மடியிலும் கிடக்கும் மலர்களில் குறிரை மேய்கிறது. நிலத்தில் பற்றையாகச் சடைத்திருக்கும் செடியில் மலர்ந்து குங்கும இதழ் விரித்துச் சிரிக்கும். மலர்கள்—அந்த மலர்களின் குறுநகைகளில் வெட்கத்தின் சாயலைத் துல்லியமாகக் கவனிக்க முடிகிறது—ஆனால் அதன் பெயரோ வெட்கம் கெட்ட ரோஜா! நிறையாக நின்று கமுக மரங்களின் வாமனாவதாரங்களாகத் தோன்றும் செடிகள். தலையில் மலர்களைத் தூக்கிக்கொண்டு செம்பு நடனம் பயிலுகின்றன, மங்கல் மஞ்சள் நிறம் சில, சுண்ணாம்பில் ஊறிய அரைத்த மஞ்சள் நிறம் பல. செவ்வந்தி மலர்களில் திருநடனக் கோலம்! காப்பிச் செடியைப் போன்று கெம்பீரமாகக் கிளைவிட்டிருக்கும் பந்தலில், பழுப்பேறிய புண்ணிலிருந்து வழிந்தோடும் சீழின் நிறத்தில், விண்மீன்களின் வடிவந்தாங்கி அசைந்தாடும் மலர்கள். அவை, நாம் கற்பிக்கும் வாசனையை நமது மூக்கின் துவாரங்களில் நுட்பமாகத் துளைக்கின்றன. மணங்களை வைத்து ஜாலவித்தை புரியும் மனோ ரஞ்சிதம்...இன்னொரு பந்தரில் வள்ளல் பாரியை நினைவுபடுத்தும் முல்லை; இன்னொன்றில் மல்லிகை...சிவப்பு—குங்குமம்—மஞ்சள்—வெள்ளை...வெள்ளை யென்றால் எல்லாம் வெள்ளையா? பால் நிறம்; நிலவு நிறம்; தந்த நிறம்; பச்சையரிசிக் கழுநீர் நிறம்...எல்லாவற்றின் தண்டும் இலைகளும் பச்சை! பச்சை நிறமான தண்டும் இலைகளும்;—அவற்றில் பூக்கும் மலர்கள் வண்ணத்திற்கு ஒன்று, வகைக்கு ஒண்று. {{block_center|<poem>“இந்த நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் பூக்கள், என் மனதில் பூக்கும் மலர்கள்—?</poem>}}{{nop}}<noinclude></noinclude> eqnby1o8ejrkzog216l86kpquv120v8 1840229 1840226 2025-07-08T04:58:36Z Sridevi Jayakumar 15329 1840229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||219}}</noinclude>மட்டுமே குதிரும் உண்மை, என்னை வளைத்து...வெறி கொண்டு குதித்தோடும் குதிரையைக் கடிவாளத்திற்குள் பக்குவப்படுத்துகிறேன். மலர்ந்து செடி கொடிகளிலும், உதிர்ந்து பூமாதேவியின் அம்மண மடியிலும் கிடக்கும் மலர்களில் குறிரை மேய்கிறது. நிலத்தில் பற்றையாகச் சடைத்திருக்கும் செடியில் மலர்ந்து குங்கும இதழ் விரித்துச் சிரிக்கும். மலர்கள்—அந்த மலர்களின் குறுநகைகளில் வெட்கத்தின் சாயலைத் துல்லியமாகக் கவனிக்க முடிகிறது—ஆனால் அதன் பெயரோ வெட்கம் கெட்ட ரோஜா! நிறையாக நின்று கமுக மரங்களின் வாமனாவதாரங்களாகத் தோன்றும் செடிகள். தலையில் மலர்களைத் தூக்கிக்கொண்டு செம்பு நடனம் பயிலுகின்றன, மங்கல் மஞ்சள் நிறம் சில, சுண்ணாம்பில் ஊறிய அரைத்த மஞ்சள் நிறம் பல. செவ்வந்தி மலர்களில் திருநடனக் கோலம்! காப்பிச் செடியைப் போன்று கெம்பீரமாகக் கிளைவிட்டிருக்கும் பந்தலில், பழுப்பேறிய புண்ணிலிருந்து வழிந்தோடும் சீழின் நிறத்தில், விண்மீன்களின் வடிவந்தாங்கி அசைந்தாடும் மலர்கள். அவை, நாம் கற்பிக்கும் வாசனையை நமது மூக்கின் துவாரங்களில் நுட்பமாகத் துளைக்கின்றன. மணங்களை வைத்து ஜாலவித்தை புரியும் மனோ ரஞ்சிதம்...இன்னொரு பந்தரில் வள்ளல் பாரியை நினைவுபடுத்தும் முல்லை; இன்னொன்றில் மல்லிகை...சிவப்பு—குங்குமம்—மஞ்சள்—வெள்ளை...வெள்ளை யென்றால் எல்லாம் வெள்ளையா? பால் நிறம்; நிலவு நிறம்; தந்த நிறம்; பச்சையரிசிக் கழுநீர் நிறம்...எல்லாவற்றின் தண்டும் இலைகளும் பச்சை! பச்சை நிறமான தண்டும் இலைகளும்;—அவற்றில் பூக்கும் மலர்கள் வண்ணத்திற்கு ஒன்று, வகைக்கு ஒண்று. {{block_center|<poem>“இந்த நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் பூக்கள், என் மனதில் பூக்கும் மலர்கள்—?</poem>}}<noinclude></noinclude> 38jjqwchp2a1j3t2q4dscde9bvhpqfo பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/222 250 130373 1840231 816741 2025-07-08T05:04:50Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|220||பாரதிக்குப் பின்}}</noinclude>{{block_center|<poem>அவை வெகுவாக ரமித்து... கற்பனையில் பூக்கும் மலர்களா?”</poem>}} ‘எஸ். பொ.’வின் பார்வை, கற்பனைத் திறம், உன்மை நயத்தோடு வர்ணிக்கும் திறமை ஆகியவற்றை இந்தப் பகுதி எடுத்துக் காட்டுகிறது. உணர்ச்சியை விவரிக்கும் போக்கிற்கு ஒரு உதாரணம்— “தாஸியின் உள்ளத்தில் சதிராடும் கோணல் விவகாரங்களையும் தோற்கடிக்கும் அசுரப் பசியொன்று அவருடைய உள்ளக் குழியிலிருந்து புற்றிலிருந்து சர்ப்ப மூச்சுடன் வெளிப்படுவதை உணர முடிகிறது. ஏதோ கஷ்ட காலத்தில், விரக்தியின் சிசுவாக, ஒரு கணப்பொழுதின் அணுவளவு பின்னத்தில் தோன்றிய கொள்கை வெறியில் பிரமச்சரியம் பூண்டுவிட்டால், உடல் உணர்ச்சிகள் உலர்ந்த விறகுக் கட்டையாகி விடுகிறது என்று அர்த்தமா? குமைந்தெழும் கோணல் மன விவகாரங்கள் திரையைக் கிழித்துக் குஷ்ட முகத்தைக் காட்டுகிறது. நேர்மையற்ற, குறுக்கு வழியில், நிரம்பி வழியும் வெள்ளத்தை விரயமாக்கும், காம விவகாரம் என்னைத் தீண்டுகிறது.” சிந்தனை வீச்சிலும், எண்ணங்களை அடுக்கிச் சொல்வதிலும் புதுமை பண்ண விரும்பிய பொன்னுத்துரையின் வசனத்துக்கும் பின் உருவதை உதாரணமாகக் கூறலாம். “யாமளை மணாளனால் பிடிசாம்பரான பஞ்ச பாணனின்வில், கரும்பினால் செய்யப்பட்டதாம்! நேரில் பார்த்த பிரஹஸ்பதி யார்? ரதியினால் சொல்ல முடியுமா? அவள் இப்பொழுது எந்த ஊரில், எந்தத் தெருவில், எந்த விட்டில் பிஸினஸ் நடத்துகிறாள்? அசல் ரதி செத்துப் போனாளா?<noinclude></noinclude> t0wvz6rlgz8w3rgck26nusru0zagxf9 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/223 250 130375 1840233 816742 2025-07-08T05:14:23Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||221}}</noinclude>டூப்ளிக்கேட்டுக்குப் பஞ்சமா? (இது கலியுகமு மல்ல; டூப்ளிகேட் யுகம்!) மன்மதனைக் கற்பனை செய்தவனின் கற்பனையை விட்டுத் தள்ளுங்கள், ஏன் பஞ்சபாணனின் வில் தென்னம்பாளையினாலானதாக இருக்கக் கூடாது? அந்த வில்லிலிருந்து தொடுக்கப்படும் கணை ஊனக் கண்களுக்கும், விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் பிரேமுக்குள் சிருஷ்டித்துத் தந்துள்ள துணைக்கண்களுக்கும் புலப்படாமல், மனித உள்ளங்களில் ஊமைக் காயத்தைப் பாய்ச்சும் கணை—ஏன் தென்னம்பூக்கம் பாளையின் தந்த நிறத் தண்டினாலானதாக இருக்கக் கூடாது?” சாதாரண விஷயத்தையும் சுற்றி வளைத்துச் சொல்லி சிக்கலாக்கி வாசகரை பிரமிக்க வைக்க வேண்டும் என்ற நோக்குடனும் எஸ். பொ. உரைநடையை ஆண்டிருக்கிறார். உதாரணமாக— “சிந்தனைக் கொக்கு என் உள்ளத்தில் தவம் செய்கிறது; அவளுக்கு என்ன வயதிருக்கும்? கணிக்கிறேன். பரீட்சையின் வினாத்தாள்களில், பிஞ்சு மூளைகளை வறுத்தெடுப்பதற்கென்றே போடப்படும் கணக்குகளை, காட்டுப் பாதையாக நீண்டு நீண்டு பின்னிச் செல்லும் தானங்கள் வடிவு காட்டி நம்மைத் தவறான பாதையில் இட்டுச் செல்லும் மாயமான்களான கணக்குகளை, மிகவும் சமர்த்துடன் முடிச்சவிழ்த்து, மக்கு என்ற வார்த்தையைத் தவிர வேறு எதையுமே உச்சரித்தரியாத ‘மகா உபாத்தியாயர்களிடம் கூட’ சபாஷ் பெற்றிருக்கிறேன். எந்த இனத்திலும் சேராத புதுக் கணக்கு இது” பெண்ணை வர்ணிப்பதிலும் பொன்னுத்துரையின் உரைநடை புதுநயம் சேர்த்திருக்கிறது. ‘ஸ்பிரிங் கம்பிகளாலான அடர்த்தியான சுருள் கேசம்; நெற்றிப் பிரதேசத்திலும், கன்னங்களிலும் குஞ்சமிட்டுத்<noinclude></noinclude> 12aniavzgyq9wowl1ni8142nd6irqew பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/224 250 130376 1840235 816743 2025-07-08T05:21:17Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|222||பாரதிக்குப் பின்}}</noinclude>தவழ்கின்றன. துருவ நட்சத்திரத்தின் வாக்கில், குகையான விழிக் குழியில் ஜொலிக்கும் கண்கள். அவற்றிற்கு வரம்பாக இராவணன் மீசையை ஒட்டினாற் போல, மூக்கு நெற்றியில் வேர்விடும் இடத்திலே கூட நீக்கமின்றி அடர்த்தியாக இருக்கும் புருவங்கள். வெற்றிலைக் காவியில் தக்காளி நிறம் காட்டும் மேலுதடு. முகத்தின் பேர் பாதியை அடைத்திருக்கும் பெரிய கீழுதடுகள். கீழுதட்டின் பரிமாணத்திற்கு எடுபடாது சற்று அமுங்கிய மூக்கு. நித்திய யெளவனக் கோலத்தில் சற்றே சோரம், முதுமை இன்னும் உடலில் புரையோடவில்லை. இருப்பினும் மனித உற்பத்திக் கலை வேளா வேளைக்கு வெற்றியீட்டியிருந்தால், தலைச்சன் ஈரேழு மாரிகளில் குளித்து மகிழ்ந்து, அவளை ‘அம்மா’ உறவு கொண்டாடாதா?” “அவள் அவ்வளவு கிழவியல்ல; செங்காய். இளமை என்ற புளிப்பு இழைந்து கிடக்கிறது. காலியான சீனி டப்பாவில் ஒட்டிக் கிடக்கும் சீனிக் குறுணியைப் போல, என்றோ பெருங்காயம் வாழ்ந்த டப்பாவிலிருந்து வீசும் நெடியைப்போல, அவளிடம் இளமையுண்டு. இவற்றிற்கு மேல் ஒரு தனியழகை என் கலைக் கண்கள் அவதானிக்கின்றன. படமெடுத்தாடும் பாம்பின் வனப்பா? பாய்ந்து வரும் வரிப்புலியின் எழிலா? சிற்றாடை கட்டும் சிறுமியைப் போல தன்னை அபிநயித்துக் கொள்ளும் நடிப்புச் சேர்க்கும் தளுக்கா?” பொன்னுத்துரையும், தனி இலக்கியம்—நோக்குடைய படைப்பாளிகளும் மண்ணின் மணம் கலக்காத மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஜீவனும் பேச்சும் சேராத முறையிலேயே—தனி இலக்கிய நடையிலேயே கதைகள் நாவல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டினார்கள். 1960 களில் ஈழத்து இலக்கியத்தில் தீவிரமான மாறுதல் புகுந்தது.{{nop}}<noinclude></noinclude> leyk0fc5vyfb3n5djbfs94ahyoabv8a பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/225 250 130378 1840238 816744 2025-07-08T05:27:48Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||223}}</noinclude>இலக்கியம் சமூக நோக்குடன் மண்ணின் மணத்துடன், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலும் பிரதிபலிப்பதாய் அமையவேண்டும்; பொருளாதார; அரசியல் பின்னணிகளையும் போராட்ட உணர்வுகளையும் சித்திரிக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்ச்சியைப் பெற்று பலப் பலர் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டார்கள். இவர்களுடைய எழுத்தில் யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கும் யாழ்ப்பாணம்—இலங்கைச் சூழ்நிலை வர்ணிப்புகளும், மக்களின் பழக்க வழக்க விவரிப்புகளும் தாராளமாக இடம் பெற்றன. இந்த வகை எழுத்தாளர்களுள் ஒரு உதாரணமாக செ. யோகநாதன் உரைநடையை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். பேச்சுத் தமிழ் உரைநடை: “கதைத்துக் கொண்டிருந்த பாக்கியம் இடையில் சிறிது நிறுத்தி யோசித்துவிட்டு அவனைப் பார்த்தாள். ‘ஒண்டு சொல்லுவன் கோவிப்பியளே?’ ‘என்ன? என்னெண்டு சொல்லுமன்?’ ‘நீர் கோவிக்க மாட்டீர்தானே?’ ‘ஓம் கோவிக்கன் சொல்லும்.’ ‘உம்முடை அடுக்குப் பெட்டிக்குள்ளை தாளாக ஐஞ்சு ரூபா வைச்சிருந்தனீரல்லோ...’ ‘ஓ வைச்சிருந்தனான். சொல்லும்.’ அவளின் தயக்கம் சிறிது சிறிதாய்க் குறைய, தெளிந்த கடலின் மெதுவான அலை புரளல் போல அவள் ஆறுதலாகின்றான்.{{nop}}<noinclude></noinclude> hi6vb941qlpobiw544jxvt6803ds1yy பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/226 250 130380 1840245 816745 2025-07-08T05:36:11Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|224||பாரதிக்குப் பின்}}</noinclude>‘அந்தக் காசை எடுத்து பொன்னம்மாக் காட்டைக் குடுத்திட்டன். அவ பிள்ளைக்குச் சன்னியெண்டு ஓடித்திரிஞ்சா. சந்தையரும் அவ காசுக்குப் போக நாயைச் சூக்காட்டி விட்டிட்டாராம். அவைப் பார்க்க மனவருத்தம் வந்திட்டுது. எடுத்துக் குடுத்திட்டன். நீங்கள் கோவிக்கிறியளே? என்ன செய்யிறது பாவம். ஏழைகளுக்கு ஏழையன் உதவாமை...என்ன நான் சொல்லுறன் நீங்க பேசாமலிருக்கிறீங்க?’ “அவள் நாகலிங்கத்தைப் பார்த்தாள்.” உவமைகளைக்கூட, பாத்திரங்கள் வாழ்க்கையோடு ஒட்டிப் பழகுகிறவற்றிலிருந்தே படைத்திருக்கிறார் யோகநாதன், கதைமாந்தர் மீனவ மக்கள். ஆகவே, அவர் கூறுகிறார்: “பாரை மீன் போல அவனது உணர்வுகள் துள்ளிக் குதித்தன். ஓட்டி மீனைப்போல வழுவழுப்பான அவளின் உடலோடு அவனுக்கு என்ன மூர்க்கம்!” “எத்தனை ஆத்திரம்...எதிரே வருபவனைக் கொலை செய்து விடுவான் என்று நினைக்கத் தூண்டிய அவனின் கோபம் பொங்கிய தோற்றம் வெளியே நின்றவரைப் பார்த்ததும் கணவாய் முட்டைகள் கடல் நீருள் உடைந்தழிவது போல உருவற்று அவனுள்ளேயே அழிந்து அமுங்கிலிட்டன.” “சடலின் உள்ளே வாய் விரித்துக் கிடந்தபடியே பிராணியையோ ஆட்களின் காலையோ தன்னில் பட்டதாக உணர்ந்து கொண்டதும் கவ்விக் கொள்ளும் ஆர்க்கைப் போல அவனது நெஞ்சைக் கந்தையரின் ஒலி கடித்து இழுத்து வெளியே போட்டுக் குதறிக்கொண்டுடிருந்தது.”{{nop}}<noinclude></noinclude> crdkj62dc69vkedhb8szdl7f4b2ez91 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/227 250 130382 1840255 816746 2025-07-08T05:45:21Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||225}}</noinclude>யோகநாதன் தெளிந்த, எளிய, அழுத்தமான நடையில் விஷயங்களை விவரிப்பதில் தேர்ந்தவர். ஒரு உதாரணம்: “நாங்களிருவரும் எங்கள் வாழ்க்கையில் கழிந்துபோன நாட்களின் பயனற்ற பொழுதுகளையும் கோணற் சிந்தனைகளையும் அசை போட்டு எதிர்காலம் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தோம். தர்மபாலா எல்லா விதங்களிலும் பதப்பட்ட உருக்காயிருந்தான். விவசாயியின் மகனான அவள் வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும், குரூர வசீகரங்களையும் நேருக்கு நேராகவே உணர்ந்து தரிசித்தவன், பசியின் கொடிய பாதங்களின் நசிப்பினிடையே துணிவையும் வாழ்வில் கூர்மையான நம்பிக்கையயும் அவன் கொண்டிருந்தான். அவனுடைய பேச்சிலே உல்லாசத்தை எதிர்பார்க்கும் கற்பனையார்ந்த வேட்கை சற்றேனும் தொனிக்கவில்லை.” கதாபாத்திரத்தை வர்ணிக்கும் இடங்களிலும் இடவர்ணனை, சூழ்நிலை விவரிப்புகளிலும் யோகநாதனின் மொழி வளமும் நடை நயமும் சிறந்து விளங்குகின்றன. ஒரு பாத்திரம் பற்றிய வர்ணிப்பு இது— “காட்டுப் பாதையில் எரிந்து சரிந்திருக்கும் படைத்த தேக்க மரம் போல அவனது வைரம் பாய்ந்த உடம்பு; வாரப்படாமையினால் எந்நேரமும் அலைந்து பறந்து கொண்டிருக்கும் நீண்ட ரெட்டைத் தலைமயிர்; விழித்திருக்கின்ற நேரமெல்லாம் கண்கள் நித்திரை கொள்வதுபோல அரைகுறையாகச் சோர்ந்து களைத்திருக்கும். நெஞ்சின் வலதுபுற மார்பில், கத்தி தாளவெட்டி ஆறிப்போன பெரியதோர் தளும்பு. அவனது இடது கையில் சீறிக் காலைத் தூக்கி நிற்கும் சிங்கத்தின் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்தது. கால்களை நிலத்தில் அழுந்தி அவன் நடக்கும் போதும், புருவம் அடர்ந்த கூசும் கண்களால் உற்றுப்பார்க்கின்ற வேளையிலும், அவனுக்குப் பக்கத்திலுள்ளவர்களுக்கு ஒதுங்கிப் போகும் அச்சம் தோன்றுவதோடுமட்டுமல்லாது பயங்கலந்த மரியாதையும், ஒதுக்க மனோபாவமும் நெஞ்சினுள்ளே குடிகொள்ளும்.”{{nop}}<noinclude></noinclude> f9pq05v02dmef0knfxyu0hg2q4jqn21 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/228 250 130384 1840259 816747 2025-07-08T05:50:47Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>26. இளைய தலைமுறை</b>}}}} {{larger|<b>அ</b>}}ழகான நடை—தனித்துவம் உள்ள வசன நடை—என்பது, மரபு ரீதியாக, இலக்கண அமைதிக்கு ஏற்ப மட்டுமே அமைக்கப்படுவது அன்று. உரைநடைக்கு சொற்கள் தான் அடிப்படை என்றாலும் வெறும் சொற்களால் மட்டும் ஜீவனுள்ள, கலைநயமான, நடை அமைந்து விடுவதில்லை. கருத்தோட்டம், சொல்சேர்க்கை, ஒலிநயம், வேகம், அழுத்தம் முதலிய அம்சங்களும் அதில் அடங்கியிருக்கும், இலக்கியப் பயிற்சி, சிந்தனைத் திறம், கற்பனை வளம், அனுபவம், பார்வை வீச்சு மனப் பண்பு இவற்றுக்கு ஏற்பவுமே நடை நயமும் அமைகிறது. இவ்வாறு இக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளேன். இந் நோக்கில் பல எழுத்தாளர்களின் நடைகள் இப் பகுதியில் கவனிக்கப்பட்டன். ‘ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம், ஆற்றல், உணர்ச்சி, கற்பனை, சிந்தனை இவற்றுக்குத் தகுந்தபடி, அவரவர் தனது காலத்தில்தான் தான் எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு ஏற்ப, எப்படி எல்லாமோ மாற்றி மாற்றி உரைநடைப் போக்கில் பல சாயல்களை ஏற்றி இருக்கிறார்கள். இதுவும் ஆரம்பத்திலேயே சொல்லப் பெற்றுள்ளது.{{nop}}<noinclude></noinclude> hmuggdc5eej0k6a5dv7j2jaul9pyz0r பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/229 250 130386 1840264 816748 2025-07-08T05:55:40Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|||227}}</noinclude>காலம் வளர வளர, புதிய புதிய எழுத்தாளர்கள் தோன்றத் தோன்ற, உரைநடை வளர்ச்சியிலும் பல புதிய சாயல்கள் சேர்வது இயல்பேயாகும். அப்படிப் புதுச் சாயல் கொண்ட சில உரைநடைகளை இங்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். தனித்தன்மை கொண்ட சிறுகதைக் கலைஞருள் பா. செயப்பிரகாசமும் ஒருவர். இவர் படைத்துக் காட்டுகிற எதார்த்தச் சித்திரங்கள் கூட உணர்ச்சி நிறைந்த கவிதை நடையிலேயே அமைகின்றன. அவர் வளர்த்த கரிசல் மண்ணின் மணமும் அங்கு சோக மூச்சு உயிர்க்கிற மனித வாழ்க்கையின் நிறமும் அவருடைய எழுத்தில் கலந்து காணப்படுகின்றன. சாதாரணக் காட்சியில் கொலுவிருக்கிற அழகை செயப்பிரகாசம் சுட்டிக் காட்டுகிறபோது அது தனி மெருகுடன் ஒளிர்வதைக் காண முடிகிறது. கொத்தமல்லி பூத்துக் காய்ப்பதையும், அதை நம்பி வாழ்கிறவர்கள் உழைப்பையும் அவர் வர்ணிப்பதை ஒரு உதாரணமாகக் கூறலாம்: “நட்சத்திர தூசுகள் மண்ணில் உதிர்ந்துவிட்டது போல், காடெல்லாம் கொத்தமல்லி பூத்திருக்கிறது. வானத்திற்கும் பூமிக்கும் நடக்கிற போட்டியில், கொத்தமல்லி பூக்கிறபோதெல்லாம் கரிசல் மண் ஜெயித்தது. காசைச் சுண்டி எறிந்தால், கீழே விழாமல் பூமெத்தை விரிப்பில் தங்கியது. நிலத்திற்கு மேலே ஒரு முழ உயரத்தில், அவர்களின் வெள்ளி நாணயங்கள் மிதந்தன. காயாகி விளைகிறபோது, அவையெல்லாம் வெள்ளி நாணயங்களாய் பரிமாற்றம் கொண்டன.{{nop}}<noinclude></noinclude> 9wmz8v1b65jlfiqsqxgeco3yxxk85nq பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/230 250 130388 1840269 816750 2025-07-08T06:02:09Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|228||பாரதிக்குப் பின்}}</noinclude>களத்துமேட்டில் வட்டமாய் மல்லிச் செடி அடுக்கி, நிரை பிடித்து அடிக்கிறார்கள், சிலம்புலாவகம்போல் கம்பு வீச்சு விழுகிறது. விஸ், விஸ் என்ற கம்பு வீச்சுச் சத்தம் பாட்டுக்குப் பின்னணியாக வர பாடிக் கொண்டே அடிக்கிறார்கள். அவர்களின் வியர்வைத் துளிகளைப் போலவே அவர்களின் உழைப்பைப் போலவே, அந்தப் பாடல்களும் நீரடில்லாமல் வந்தன,” இன்னொரு வர்ணிப்பு— “காலை மாலை என்ற பொழுதுகள் இல்லாமல் மலைக் காடுகளில் சண்முகமயில் ஏறி இறங்கியிருக்கிறாள். தனிக் கட்டையாய் மலைக்காட்டில் ஏறி இறங்க அவளுக்குத் தெரிந்திருந்தது. அந்த மலை அவர்களுக்குத் தாயாக இருந்தது. அடர்ந்த காடுகளே அதன் மடியாக இருந்தது. அமிர்தம் கொஞ்சும் அதன் காம்புகளை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். அந்தக் காடுகள் இருள் நேரத்திலும், இருளடர்ந்த வழியிலும் அவள் தனியாகப் போய்வருகிற போதெல்லாம் இதுபோல் பயமுறுத்தியதில்லை... “வீட்டில் எல்லோரும் உழைத்தபோதுதான் சோற்று மணம் காண முடிந்தது. வீட்டிற்குள் இருந்தால் வாழ்க்கை இல்லாமல் போனது. வாழ்க்கையைத் தேடி நிலைப்படிக்கு வெளியே வந்தபோது மலை தெரிந்தது. ஊரில் இருக்கிற எல்லோருக்கும் எதிரே மலைதான் தெரிந்தது. தாயின் கர்ப்பத்தில் இருக்கிறபோதே, அவர்களுக்கு மலை ஏறுவது சொல்லித் தரப்பட்டது.” பா. செயப்பிரகாசம் கதைகளில் அங்கங்கே கையாள்கிற உவமைகளிலும் புதுமையும் கற்பனையும் செறிந்து விளங்குகின்றன. ‘அவள் ரவிக்கையில்லாமல், வெள்ளைச் சேலையில், தாள்கள் மூடிய ஒரு மக்காச் சோளக்கதிரைப்போல் இருந்தாள்,{{nop}}<noinclude></noinclude> 2g9l9adq7rbjnt63rwnziqrtdf761xt பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/231 250 130389 1840272 816751 2025-07-08T06:08:07Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||229}}</noinclude>வறண்டு உலர்ந்த மண் தண்ணீரை வாரி விழுங்குவது போல, சிறுவன் ஆவலுடன் கஞ்சியை விழுங்குவான். “மடத்துச் சாமியார்களின் காதில் ஆடுகிற தங்கக் குண்டலங்களைப் போல் மஞ்சள் கருவம் பூக்கள் ஆடின. “திடீரென்று சிரிக்கும் பைத்தியக்காரியைப் போல், பெருமழைக் காலத்தில் மட்டும் பெருக்கெடுத்து ஓடும் ஓடை.” அடுத்து, பூமணி என்ற எழுத்தாளரின் உரைநடை. பூமணியும் கரிசல் பூமியில் பிறந்து வளர்ந்தவர். கி. ராஜநாராயணன் மாதிரியே இவரும் அந்த மண்ணின் மீது மிகுந்த பற்றுதலும் பாசமும் கொண்டிருக்கிறார். கரிசல் மண்ணை நம்பி, உழைத்து, நிறைவாக வாழமுடியாமல் அவதிப்படுகிற மக்களின் சிரம ஜீவனமே இவரது கதைகளின் உயிர் மூச்சு. “முன்னத்தி ஏர் பிடித்துச் சாலடித்துக் கொடுத்த கி. ராஜநாராயணன்’ அடிச்சுவட்டிலே சென்றபோதிலும், பூமணியின் உரைநடை தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது. கரிசல் காட்டையும், அங்குள்ள விந்தை மனிதர்களையும், அவர்களுடைய வாழ்க்கையையும் கி. ராஜநாராயணன் எழுதினர் தான். ஆனால், அவற்றை எல்லாம் இனிய, எளிய, அழகான மரபு நடையிலேயே அவர் எழுதியிருக்கிறார். பேசுகிற மாதிரி எழுத வேண்டும் என்று சொல்லி ‘மாதரி’ ‘சொகம்’ ‘ரெம்ப்ப’ ‘நிரய்ய’ என்று சில பதங்களை அவர் அங்கங்கே சேர்த்து வைப்பார். ஆனால், பூமணி பேசுகிற வழக்கு முறையை அப்படியே உரைநடையாக்கப் பயின்றுள்ளார்.{{nop}}<noinclude></noinclude> fb00t5mn3yeo7ku0xhr4ggx5ejgiapz பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/232 250 130391 1840275 816752 2025-07-08T06:15:43Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|230||பாரதிக்குப் பின்}}</noinclude>‘வடக்கே பூவரச மரத்துப் புஞ்சையில் கமலை இறவையின் கீச்சட்டமும் உள்வாங்கும் இரைச்சலும் சன்னல் வழியே தெலிவாகக் கேட்டது.’ ‘தெற்கு வரிசையில் வாய்களுக்குள் எழுத்துக்கள் பொரிந்து குதித்தன. பைக் கட்டுகளில் லொட்டு லொடுக்குகளாய்க் கிடந்த விளையாட்டுச் சாமான்களுக்கிடையில் சொருகியிருந்த பூஸ்தகங்களை ரொம்பக் காசலையாய் எடுத்தனர் சிலர். ஒரு பக்கம் உள்ளங்கையில் வழித்தெடுத்த எச்சு சிலேட்டில் பழைய எழுத்துக்களை அழித்துக் கொண்டிருந்தது. சொற்பமான நேரத்தில் சரித்திரத் தலைவர்கள் அனேகம் பேர் நாக்குகளைத் தாண்டிச் சென்றனர். இதையெல்லாம் அமுக்கிக் கொண்டு, பள்ளிக்கூடத்தின் நாலா பக்கமும் சிறுகுரல்களின் ஏற்ற அதிர்வு.’ ‘அவர் ஊருக்குக் கொஞ்சம் ‘பெரிய இவர்.’ காடு கண்ணிக்குக் குறைச்சலில்லை. மந்தையைச் சுற்றித் தோட்டம். அதனால் தோட்டத்தில் ஒரு இத்தினிக்காணும் அழிம்பு தட்டுப்பட்டாலும் அவர் பெண்டாட்டி விசுக்கென்று தெருவுக்கு வந்து கண்டகமாக்கி வையத்தோதாக இருந்தது.’ ‘எங்கையில் வேல செஞ்ச ஆணும் பொண்ணும் அப்பிடியே சொட்டவால் குட்டிக மாதிரில்ல. கொத்தும்—குறுணிக்குக் கொறையுமா. இதுக சும்மா கழுதைக மாதிரி நொணுக்கு நொணக்குனு அலையுதுக; சிறுக்குணு கொத்துச் சொமந்துகிட்டு.’ பூமணி எழுதுகிற உரைநடையின் தன்மையைக் காட்டுவதற்கு இந்த உதாரணங்கள் போதுமானவை. அவர் சொல்கிற உவமைகளும் மண்ணோடு ஒட்டியவை தான். ‘சகதிக் காட்டில் வண்டித் தடங்களாய் நெற்றி ரேகைகள் துணிப்பாய்த் தெரிந்தன.’{{nop}}<noinclude></noinclude> 45p9yp9zjbmy9yuo9siwsehnp3m27iv பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/233 250 130392 1840278 816753 2025-07-08T06:23:10Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||231}}</noinclude>‘உதிர்ந்த ஓடநெற்றாய் வீட்டின் தாழ்வாரத்துக் கடியில் தோலைப் போர்த்திக் கொண்டு முடக்கிக் கிடந்தது. அந்த நாய்.’ ‘குட்டியைத் தேடும் செம்மறியாட்டுச் சத்தம் மாதிரி அவர் குரலில் ஒரு காரல் தன்மை’ இவை சில உதாரணங்கள். அடுத்து, வண்ணநிலவன் உரைநடையைக் குறிப்பிட வேண்டும். மென்மையான உணர்வுகளை அழகாக எடுத்துக் கூறும் லவிதமான நடை வண்ணநிலவனுக்கு சித்தித்திருக்கிறது. ஆழ்ந்த விஷயங்களை மெதுமெதுவாக மேலோட்டமாகச் சொல்லி பையப்பைய உணர்வைத் தொடும் விதத்தில் இவர் சொற்களை வைத்துக் கதை பின்னுகிறார். “ஈசாக் காட்டிலிருந்து திரும்புகிற நேரம் ஆகிவிட்டது. ஈசாக்குக்கு இப்போது காட்டில் எந்த வேலையும் இல்லை. அவனுடைய உலகம் காடு என்பதை எஸ்தர் சித்தி மட்டும் எப்படியோ தெரிந்து வைத்திருந்து, வெயிலும் வறட்சியும் நிரம்பிய காட்டுக்குள் அனுப்பிவந்தாள். காட்டைப் பார்க்காமல் இருந்தால் ஈசாக் செத்தே போவான் போல. அவன் காட்டைப் பற்றிப் பேசாத நேரமே இல்லை. காடு மறைந்து கொண்டிருந்தது. விளைச்சலும், இறவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சதங்கைச் சத்தமும் கண் முன்னாலேயே கொஞ்ச காலமாய் மறைந்துவிட்டன. ஊரில் எல்லோருக்கும் தேவையாக இருந்தகாட்டுக்குள் இப்போது ஒன்றுமே இல்லை. ஒரு வெள்ளை வெயில் விளைகளுக்குள் அடிக்கிறதென்று ஈசாக்கு சொல்லுகிறான். வெயிலின் நிறங்களை ஈசாக்கு நன்றாக அறிவாள். மஞ்சள் வெயில் அடித்தால் நாளைக்கு மழை வரும் என்று அவன் சொன்னால் மழை<noinclude></noinclude> q8h65n7zcd9cbntps8orcfajwiey61y பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/234 250 130394 1840281 816754 2025-07-08T06:33:08Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|232||பாரதிக்குப் பின்}}</noinclude>வரும். கோடை காலத்து வெயிலின் நிறமும், மழை காலத்து வெயிலினுடைய நிறமும் பற்றி ஈசாக்குக்குத் தெரியாத விஷயமில்லை. ஈசாக்கு விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும் ஆடு மாடுகளுக்காகவுமே உலகத்தில் வாழ்ந்தான். ஆனாலும் ஈசாக்குக்குப் பிரியமான விளைகள் எல்லாம் மறைந்து கொண்டிருந்தன. கடைசியாகத் திட்டி விளையில் மாட்டைவிட்டு அழிக்கப் போனபோது ஈசாக்கு கஞ்சியே சாப்பிடாமல் தானே போனான். எவ்வளவு அழுதான் அன்றைக்கு? இத்தனைக்கும் அவன்பேரில் தப்புஒன்றுமில்லை. தண்ணீரே இல்லாமல் தானே வெயிலில் காய்ந்துபோன பயிர்களை அழிக்கத்தான் அவனைப் போகச் சொன்னாள் எஸ்தர் சித்தி. காய்ந்துபோன பயிர்களை அழிக்கிறதில் அவனுக்கென்ன நஷ்டம்? ஆனாலும்கூட ஈசாக்கு எவ்வளவாய் அழுதான். அவன் நிலம்கூட இல்லைதான் அது” அடுத்தாற் போல், வண்ணதாசன். இவருடைய உரைநடை இவரது கதைகளின் பலமாக அமைகிறது. வண்ணதாசனின் பார்வை தீட்சண்யம் மிக்கது. நுட்பமாகப் பார்த்து கிரகித்து மனசில் பதிவுசெய்து வைக்கப் பெற்றுள்ள நுண்ணிய விஷயங்கள் எல்லாம் அவரது உரைநடையில் சின்னச் சின்ன அழகுகளாக இதழ் விரிக்கின்றன. சிறிது சிறிதாகப் புள்ளிகளிட்டு, நெளிநெளிக் கோடுகளினாலும் நேர் கோடுகளாலும் அவற்றை எப்படி எப்படியோ இணைத்து அழகான கோலங்கள் தீட்டி விடுகிற கலைத் திறமையை இவர் எழுத்துக்களில் காட்டுகிறார். “இந்த நீளமான 58, 25 பிரயாணிகள் தாங்கிச் செல்கிற பஸ்ஸில் முதல் வரிசையில் நின்ற கண்டக்டரை பார்த்த பொழுது, ஏறினவாக்கில் கடைசி சீட்டில் உட்கார்ந்துவிட்ட இவளுக்கு பஸ் முழுவதையுமே பார்க்க வேண்டிய தாயிற்று. ஸ்டாண்டிங் சீட் யாருமே இல்லாத பஸ்.<noinclude></noinclude> og526fb1ysgbv8flvtaurgwophv0ebl பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/235 250 130396 1840284 816755 2025-07-08T06:42:36Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||233}}</noinclude>தியேட்டரில் படம் பாரிக்க உட்கார்ந்த மாதிரி, கல்யாண ரிசப்ஷனில் கலந்து கொள்ள வந்து ஸ்டீல் சேரின் உட்கார்த்த மாதிரி, அவளுக்குத் திடீரென்று இந்த நசுங்கல் அற்ற பயணம் சுகமாக இருந்தது. ரொம்பவும் நெருங்கின ஒரு ஐம்பது அறுபது பேர்களுடன் ஒரு நிச்சயமான பிரயாணத்துக்கும் புறப்பட்டதுபோல் இருந்தது. மங்கலான வெளிர் மஞ்சளில் எரிந்து கொண்டிருந்த உள் விளக்கின் வெளிச்சத்தின் மழுங்கல் கூட உறுத்தவில்லை. ஒவ்வொரு சீட்டின் பின்பலகையிலும் இடைவெளி விடாது எழுதப்பட்டிருந்த பெயர்களையும் இனிஷியல்களையும் வாசித்துப் பார்த்தாள், தான் கல்லூரிக்குப் போன காலத்தில் தன் பெயரை இப்படிப் பஸ்ஸின் சீட் முதுகில், இளம் பச்சைப் பெயிண்டைச் சுரண்டி யாராவது எழுதியிருப்பார்களா என்று நினைத்துச் சிரித்தாள். இப்போது இதில் இருக்கிற பெயர்களும் இதை எழுதிய இனிஷியல்களும் ஒரு காலேஜ் பெண்ணிற்கும் பையனுக்கும் தான் மட்டுமானது என்று என்ன நிச்சயம்? ஏதாவது முதிர்ந்த, ரிஸ்ட்வாட்ச் வட்டத்தில் ரோமப் புல்லாய்ச் சரிந்து, வேலை பார்க்கிற கை எழுதினதாகக் கூட இருக்கும். ஒரு ஹேர்பின்னை உருவினால் இப்போதுதான் கூட ஏதாவது எழுதிவிட முடியும்.” தொடர்பில்லாத துண்டு துணுக்குச் சித்திரங்களை ஒன்றாக இணைத்து. ஒரு ஜாலவித்தை செய்வதுபோன்ற வண்ணதாசனின் வர்ண்னை நடைக்கு இன்னொரு உதாரணம் தரலாம்— “எல்லாம் ஏசுவே, எனக்கெல்லாம் ஏசுவே. பாடலின் முதலிரு வரிகளின் தடத்தையே மீண்டும் மீண்டும் வாசித்தான், பையன்கள் அடுத்தவரிகளைப் பாடினபோது அவனுக்குச் சிலிர்த்தது. அந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம் பூக்களும் பாடுவதுபோல்—வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்ச்சுக்குப் போய் வருபவர்களின் புழுதிக் கால்களின் பின்னணிபோல—{{nop}}<noinclude>{{rh|பா—15||}}</noinclude> qgxk56owrvp76d1899mj9co1so1wva2 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/236 250 130397 1840287 816756 2025-07-08T06:49:34Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|234||பாரதிக்குப் பின்}}</noinclude>பால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்ட வேலை செய்கிறவர்கள் பாடுவதுபோல்— வாரத்துக்கு ஒருநாள் வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுது கொண்டிருக்கிற பையனின் சோகம் போல— எந்தச் சத்துக் குறைவாலோ ஒட்டுவாரொட்டியாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுனிச் கிரங்கிற்கான பிரார்த்தனை போல— கிணற்றடியில் உப்பு நீரை இறைத்து, இறைத்து ட்ரவுசரைக் கழற்றிவைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களில் எழுதப்பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல்போல— இரண்டு பைசா ஒன்று பள்ளிக்கூடத்துக் கிணற்றில் விழுந்துவிட அசுரத்தனமாகத் தண்ணீரை இறைத்து இதைந்து ஏமாந்து கொண்டிருக்கிற சிறுவர்களின் பம்பரக் கனவுகள் போல— ஞானப்பன் மேலே வாசிக்க ஓடாமல் நிமிர்ந்தபோது டெய்ஸி வாத்திச்சி வாசலில் நின்று கொண்டிருந்தாள்.” மற்றொரு குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் பொன்னீலன், இவர் ‘கரிசல்’' என்ற நாவலில் கரிசல் நிலத் சுற்றுப்புற வர்ணனைகளை அழகாக எழுதியிருக்கிறார். பல குறுநாவல்களில் நாஞ்சில் நாட்டுத் தமிழை வெற்றிகரமாகக்கையாண்டிருக்கிறார், ‘கொள்ளைக்காரர்கள்’ என்ற நாவலில் வசன நடையை வளமும் கனமும் அழுத்தமும் கொண்டதாகப் பின்னியிருக்கிறார்.{{nop}}<noinclude></noinclude> 3sl0ecoc9kpurbavdfole6mhhwzhz13 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/237 250 130399 1840291 816757 2025-07-08T06:56:53Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||235}}</noinclude>ஐரோப்பிய, ரஷ்ய இலக்கியங்களில் செய்யப்படுவதைப் போல், பாத்திரங்களையும் சூழ்நிலைகளையும் இவர் இந்நாவலில் விசேஷித்த தனி நடையில் வர்ணித்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது. பாத்திர வர்ணனை; “புஷ்ப்பாய்க்கு வயது இருபத்தொன்பது அல்லது முப்பதுக்குமேல் இருக்காது; வறுமையும் துன்பமும் பட்டுப்பட்டு அவள் மெலிந்து சுருங்கி, பார்க்க முப்பத்தைந்து வயதுக்காரி போல் தோன்றினாள். ஆனாலும் அவள் நிறம்—மேற்குக் குமரி மாவட்டத்துக்குரிய பிரத்தியேகமான மஞ்சளும் சிவப்பும் கலந்த அருமையான நிறம்—இன்னும் மங்கிவிடவில்லை. ஏற்கெனவே நீண்ட மூக்கும் நீண்ட கழுத்தும் நீண்ட கைகளும் உடைய அவள் இந்த மெலிவினால் இன்னும் சற்று அதிகம் நிண்டு போய்த் தோன்றினாள். இதை மிகைப்படுத்துவது போல அவளுடைய முகம் ஒடுங்கி நீளவட்டமாய் அமைந்திருந்தது. பார்ப்பதற்குக் கொஞ்சம் சிடுசிடுப்பானவள் போல எல்லாவற்றின் மீதும் எரிந்து விழுபவள் போல இருக்கும். ஆனால் வியர்வைப் பிசுக்கு படர்ந்த அந்த நீளவட்ட முகத்தில் மூக்குத்தண்டின் மேலே சிறிது இடம்விட்டுத் தொடங்கி இரண்டு பக்கங்களிலும் வில்போல வளைந்து நின்ற மெலிந்த புருவங்களின் கீழே அவளுடைய நீண்ட கனவு காணும் விழிகளிலோ சோகம் ததும்பும் ஒரு சாந்தமான ஒளி நிறைந்திருந்தது. பிறவியிலேயே அந்த மாதிரி அமைந்துவிட்டது போல, அப்படி அமைத்திருப்பது தான் அந்தக் கண்களுக்குச் சிறப்பு என்பது போல அந்த ஒளி அவளுடைய முகம் முழுவதிலும்—அவளுடைய முழுமையிலுமே—வியாபித்து நிற்பதுபோல் தோன்றிற்று. மெல்லிய இமைகளை விரித்து அவள் விழிகளைத் திருப்புகையில் ஆயிரம் ஆவிடு துன்பத்தீயிலே எரிந்து அதையே தன் வயமாக்கிக் கொண்ட ஒரு ஏழை ஆன்மாவின் வசீகரமான ஒளி அவளைச் சுற்றிப் படர்ந்தது.” {{nop}}<noinclude></noinclude> 0ik201x2wl4u8d1584c5p9bh94tvma2 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/238 250 130401 1840298 816758 2025-07-08T07:06:27Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|236||பாரதிக்குப் பின்}}</noinclude>சூழ்நிலை வர்ணிப்புக்கு ஒரு உதாரணம்: “அது ஒரு மலையடிவார மூன்று ரோடு சந்திப்பு. வடக்கே கருநீல நிறத்தில் குறுக்கும் நெடுக்குமாக மடித்தும், கோபுர மொட்டைகளாக ஆங்காங்கே நரை தட்டிக் குவிந்தும் கிடந்த மலைத் தொடர்களின் அடிவார எல்லையாகவும், மலைச்சரிவின் ரப்பர் தோட்டங்களையும் பள்ளத்தாக்குகளின் நெல் வயல்களையும் பிளந்து போடும் கரும்புத் தடமாகவும் கிழக்கிலிருந்து மேற்காக நீண்டு போகும் தார்ச்சாலையில் வடக்கு மலையிலிருந்து செங்குத்தாக இறங்கி வரும் தார் ரோடு சங்கமிக்கும் முச்சந்தி. சுதந்திரத்துக்கு முன்னே இந்தப் பகுதி யானைமேயும் வனமாக இருந்தது. இப்போதோ, இருண்ட வனங்களில் சொட்டையாக ஆங்காங்கே புதிதாய்ப் பிளந்து விரியும் அரசாங்க ரப்பர்த் தோட்டங்களிலும் தேக்குத் தோட்டங்களிலும், மற்றும் தனியார் தோட்டங்களிலும் வேளை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் குடிசைகளால் விளிம்பு கட்டப்பெற்ற இந்த ரோட்டோரங்களை ஒட்டி ஆங்காங்கே சிறிய பெரிய குடியிருப்புகள் முளைத்தெழ நிலைமை மாறி வருகின்றது. என்றாலும் வனத்துக்குரிய பிரத்தியேகத் தன்மைகள் இன்னும் மாறிவிடவில்லை.” எளிமையான நடையில் ஒரு அழகு இருக்கிறதென்றால் இவ்வாறு பின்னல்கள் இணைப்புகள் கலந்த நடையில் ஒரு, மிடுக்கும் எடுப்பும் உள்ளது என்பத ரசிகர்கள் உணர முடியும். ஐந்தாறு வருட காலத்திற்குள், தனது எழுத்தாற்றல்—கற்பனைத் திறன்—சமுதாயப் பார்வை—உண்மை நிலமைகளை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லும் துணிவு—தீர்க்கமான சிந்தனை ஆகியவற்றின் பலத்தின்மீது கதைகளும் நாவல்களும் எழுதி, கவனிப்புப் பெற்றிருப்பவர்<noinclude></noinclude> epixbn1je1xw8k1l7lpetzipsahbu59 பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/239 250 130403 1840301 816759 2025-07-08T07:13:19Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|தமிழ் உரைநடை||237}}</noinclude>சு. சமுத்திரம். அவர் தனக்கெனத் தனி உரைநடை கொண்டிருக்கிறார். அதில் லேசான கிண்டல், எள்ளல், சிலேடை போன்றவை ஆங்காங்கே கலந்து எழுத்துக்கு உயிரூட்டுகின்றன. உதாரணமாக— “குப்பமும், கூடவே மாளிகைகளும் பரவிக் கிடந்த சென்னை நகரின் ஒரு கடலோரப் பகுதி. கடல் மண்ணின் மினுக்கத்தைப் போல் பெண்களும் அந்தக் கடல் மண்ணின் நெருக்கத்தைப் போல ஆண்களுமாக. புதிதாகப் பிரதிஷ்டை செய்திருந்த காவல் கன்னியம்மனின் கோவிலுக்கு முன்னாலும், பின்னாலும் பக்கவாட்டிலுமாய்ப் பரவியிருந்தனர். கண்கொள்ளாக் கடலின் அலையோசை, கண் நிறைந்த பொய்க்கால் குதிரையாட்டத்தாலும், விசைப் படகு முதலாளிகள் அமர்த்திய கல்யாணிராகமேளத்தாலும். கட்டுமரக்காரர்கள் அமர்த்திய, இழு வோசை மேளத்தாலும், கோவில் குலுங்கிக் கொண்டிருந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்னர், ஒருவரை ஒருவர் அடித்துக் தாக்கிக் கொண்ட இவர்களா இப்படி என்னும்படி அத்தனை மீனவரும் கடந்ததை மறந்து நடப்பதை நினைத்துச் களித்துக் கொண்டிருந்தார். இருப்பினும் விசைப்படகு முதலாளிகள் கெழுத்தி மீன் போலவும், கட்டுமரக்காரர்கள் காஞ்சான் மீன் போலவும் கெழுத்தி கெழுத்தியோடும் காஞ்சான் காஞ்சானோடும் சேர்ந்திருப்பது போல் அந்தக் கூட்டத்தோடு சேர்த்தும் அதே சமயம் கும்பலாகப் பிரிந்தும் தோன்றினார்கள்.{{nop}}<noinclude></noinclude> e9qr5fds06rkhznchhn6twydeqevovs பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/240 250 130405 1840304 816761 2025-07-08T07:17:29Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" />{{rh|238||பாரதிக்குப் பின்}}</noinclude>விசைப்படகுபோல், வேகவேகமாகக்கண்கள்சுழல, கட்டுமரம்போல் கால்கள் மரத்துப் போய் நடக்க நாலடி நீளமுள்ள மாவலரசி என்னும் மீனை அமுக்க முடியாமல் அமுக்கி வைத்திருக்கும் நயிலான் வலைபோல், கொண்டையை அடக்க முடியாமல் அடக்கிய வலை ஜொலிக்கும்படி மல்லிகைப்பூ பந்தலிட விறால் மீனின் வாளிப்போடு, கெண்டை மீன் கண்களோடு ஒரு வாலிபனுடன் ஜதையாக வந்தாள் முனுசாமியின் மகள் மச்சகாந்தி” இப்படி, தமிழ் உரைநடை காலத்தோடு போட்டியிட்டு, புதிய வலிமையும் புது வனப்புகளும் ஏற்று, புத்துயிர்ப் போடும் புத்துணர்ச்சியோடும் வளமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இளந்தலைமுறையினர் புதிய பார்வைகளோடு புதிய கருத்துக்களோடும் வாழ்க்கையை கவனித்து, ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் எழுத்துத் துறையில் ஈடுபட ஈடுபட தமிழ் மொழி புத்தூட்டம் பெற்று, குன்றா இளமையுடன் மிளிரும். {{center|—முற்றும்—}}{{nop}}<noinclude></noinclude> 79fpjmxd7ewx51tz72e3ub3mrmao2es பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/241 250 130407 1840307 816762 2025-07-08T07:28:23Z Sridevi Jayakumar 15329 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{box|{{center|{{Xx-larger|<b>மணிவாசகர் நூலகத்தின்<br>புதிய வெளியீடுகள்</b>}}}} {{larger|<b>டாக்டர் வ. சுப. மாணிக்கம்</b>}}<br> கம்பர்<br> இலக்கிய விளக்கம்<br> ஒப்பியல் நோக்கு<br> சிந்தனைக் களங்கள்<br> தொல்காப்பியப் புதுமை<br> {{larger|<b>டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்</b>}}<br> தமிழ் பயிற்றும் முறை<br> {{larger|<b>டாக்டர் இரா. மோகன்</b>}}<br> டாக்டர் மு. வ. வின் நாவல்கள்<br> {{larger|<b>டாக்டர் சு. சக்திவேல்</b>}}<br> பழங்குடி மக்கள்<br> {{larger|<b>டாக்டர் சு. சண்முகசுந்தரம்</b>}}<br> தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள்<br> நாட்டுப்புற இலக்கிய வரலாறு<br> நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு<br> {{larger|<b>மு. இராகவையங்கார்</b>}}<br> ஆழ்வார்கள் காலநிலை<br> {{larger|<b>வெ. சாமிநாத சர்மா</b>}}<br> சமுதாய சிற்பிகள்<br> {{larger|<b>பி. எஸ். ராமையா</b>}}<br> மணிக்கொடி காலம்<br> {{larger|<b>வல்லிக்கண்ணன்</b>}}<br> பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை<br> {{larger|<b>ச. மெய்யப்பன், எம். ஏ.</b>}}<br> தாகூர்}}{{nop}}<noinclude></noinclude> 0pfml1v9hrk1l8b4i8ly8gi7g0wu3ad 1840308 1840307 2025-07-08T07:29:08Z Sridevi Jayakumar 15329 1840308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{box|{{center|{{Xx-larger|<b>மணிவாசகர் நூலகத்தின்<br>புதிய வெளியீடுகள்</b>}}}} {{larger|<b>டாக்டர் வ. சுப. மாணிக்கம்</b>}}<br> கம்பர்<br> இலக்கிய விளக்கம்<br> ஒப்பியல் நோக்கு<br> சிந்தனைக் களங்கள்<br> தொல்காப்பியப் புதுமை<br> {{larger|<b>டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்</b>}}<br> தமிழ் பயிற்றும் முறை<br> {{larger|<b>டாக்டர் இரா. மோகன்</b>}}<br> டாக்டர் மு. வ. வின் நாவல்கள்<br> {{larger|<b>டாக்டர் சு. சக்திவேல்</b>}}<br> பழங்குடி மக்கள்<br> {{larger|<b>டாக்டர் சு. சண்முகசுந்தரம்</b>}}<br> தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள்<br> நாட்டுப்புற இலக்கிய வரலாறு<br> நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு<br> {{larger|<b>மு. இராகவையங்கார்</b>}}<br> ஆழ்வார்கள் காலநிலை<br> {{larger|<b>வெ. சாமிநாத சர்மா</b>}}<br> சமுதாய சிற்பிகள்<br> {{larger|<b>பி. எஸ். ராமையா</b>}}<br> மணிக்கொடி காலம்<br> {{larger|<b>வல்லிக்கண்ணன்</b>}}<br> பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை<br> {{larger|<b>ச. மெய்யப்பன், எம். ஏ.</b>}}<br> தாகூர் }}{{nop}}<noinclude></noinclude> hendouttcj8yhgdeggmwndefw6lu1hv 1840309 1840308 2025-07-08T07:29:35Z Sridevi Jayakumar 15329 1840309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sridevi Jayakumar" /></noinclude>{{box|{{center|{{Xx-larger|<b>மணிவாசகர் நூலகத்தின்<br>புதிய வெளியீடுகள்</b>}}}} {{larger|<b>டாக்டர் வ. சுப. மாணிக்கம்</b>}}<br> கம்பர்<br> இலக்கிய விளக்கம்<br> ஒப்பியல் நோக்கு<br> சிந்தனைக் களங்கள்<br> தொல்காப்பியப் புதுமை<br> {{larger|<b>டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்</b>}}<br> தமிழ் பயிற்றும் முறை<br> {{larger|<b>டாக்டர் இரா. மோகன்</b>}}<br> டாக்டர் மு. வ. வின் நாவல்கள்<br> {{larger|<b>டாக்டர் சு. சக்திவேல்</b>}}<br> பழங்குடி மக்கள்<br> {{larger|<b>டாக்டர் சு. சண்முகசுந்தரம்</b>}}<br> தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள்<br> நாட்டுப்புற இலக்கிய வரலாறு<br> நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு<br> {{larger|<b>மு. இராகவையங்கார்</b>}}<br> ஆழ்வார்கள் காலநிலை<br> {{larger|<b>வெ. சாமிநாத சர்மா</b>}}<br> சமுதாய சிற்பிகள்<br> {{larger|<b>பி. எஸ். ராமையா</b>}}<br> மணிக்கொடி காலம்<br> {{larger|<b>வல்லிக்கண்ணன்</b>}}<br> பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை<br> {{larger|<b>ச. மெய்யப்பன், எம். ஏ.</b>}}<br>தாகூர் }}{{nop}}<noinclude></noinclude> 1qfgxcoa2ekiozs8f60j0g82y97of2q பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/11 250 213819 1840027 1839904 2025-07-07T15:01:01Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|2||ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>சக்கிலியர் முதலிய பதினெட்டு சாதிகள் அவர்னர்கள் என்றும் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்தது. இந்த இரண்டாவது வகை மக்களான அவர்னர்கள், இடுப்புக்குக் கீழே துணி உடுத்தவோ, காலணி அணியவோ, ஓடு வேய்ந்த வீடுகளைக் கட்டவோ, குடை பிடிக்கவோ கூடாது. பள்ளிகளிலும், நீதி மன்றங்களிலும், ஆலயங்களிலும் இவர்களுக்கு முழு அடைப்பு. இவர்கள் பசுமாடு வளர்க்கலாகாது. சுவர்னர்களும், அரசாங்கமும் ஏவும் எந்த வேலையையும் கூலி இல்லாமலே செய்து முடிக்க வேண்டும். மேட்டுக் குடியினரிடம் ‘தூங்கப் போகிறேன்’ என்று சொல்லக் கூடாது. ‘தரையில் விழப்போகிறேன்’ என்றே சொல்ல வேண்டும். இந்தக் கொடுமைகளுக்கும் கொடுமையாக இவர்களது பெண்கள் இடுப்புக்கு மேலே எந்த ஆடையும் அணியலாகாது. இடுப்பிலோ செப்புக்குடம் ஏந்தலாகாது. எந்த நகையும் அணியக் கூடாது. இவை போதாது என்று இவர்கள் தாலிக்கு வரி, கையிலுள்ள தடிக்கு வரி, அரிவாளுக்கு வரி, தலைவரி, தாவர வரி, பெண்கள் மார்பகம் துளிர்த்தால் அதற்கும் வரி என்று வரிவரியாக வதைக்கப்பட்டார்கள். இந்த விதிகளை மீறுகிற ஒரு அவர்னரை, எந்த சுவர்னரும் வெட்டிக் கொல்லலாம். இத்தகையக் காலக் கட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, பனையேறித் தொழிலாளியாய் வாழ்க்கையைத் துவக்கிய ஒரு ஆன்மீகப் போராளி அவர்னர்களான இந்தப் பதினெட்டு சாதி மக்களின் ஆண்களுக்கு தலைப்பாகை கட்டி விடுகிறார். பெண்களை தோள் சீலை அணியச் சொல்கிறார். இவர்களிடம் சாதி என்பது கொடிப்பாம்பு என்றும், <b>‘எல்லோர்க்கும் கொடிப்பாம்பு இருக்குதப்பா சத்ருவாய்... முச்சந்திக்குள் இருந்த பாம்பு உச்சம் பெற்று வருகுதய்யா...’</b> என்று அப்போதே எச்சரிக்கிறார். அனைத்து சாதி மக்களையும் தம் மக்கள் என்கிறார். கூனிக் குறுகிக் கிடந்த இந்த மக்களை <b>‘குகையாளப் பிறந்த என் குழந்தாய்! எழுந்திரிடா!’</b> என்கிறார். ‘அவனவன் செய்த முதலை அவனவன் வைக்க வேண்டும் - அதாவது சமஸ்தானத்துக்கு வரி கொடுக்கலாகாது’ என்று சூளுரைக்கிறார். கும்பினி ஆட்சிக்கார வெள்ளையர்களை ‘வெண்நீசன்’ என்றும், திருவாங்கூர் மன்னனை ‘கலிநீசன் அனந்த நீசன்’ என்றும் பிரகடணப்படுத்துகிறார். தாழக் கிடப்போரை தற்காப்பதே தர்மம் என்றும் முழங்குகிறார். தன்னைச் சுற்றி அத்தனை அவர்ன சாதிகளையும் ஈர்க்கிறார். இவர்தான், வைகுண்டசாமி என்று பின்னரும், முத்துக்குட்டி சாமி என்று முன்னரும் அழைக்கப்பட்ட மெய்யான வீரத் துறவி. இப்படிப்பட்ட போராளியைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும்? இதனால் இழப்பு அவருக்கா, இந்த சமுதாயத்திற்கா?{{nop}}<noinclude></noinclude> fzwr6vznn3pbxgs8eq2rrq4ojjkjaop பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/12 250 213821 1840028 1839906 2025-07-07T15:03:12Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||3}}</noinclude>வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது என்றான் மக்கள் எதிரியாக விளங்கிய இட்லர். வரலாற்றில் உண்மையை மறைப்பதும் ஒருவிதப் பொய்யே என்றார் மனிதநேயப் படைப்பாளியான லியோ டால்ஸ்டாய். இந்த இரண்டு எதிர்முனைகளுக்கும் இடையே மெய்யும், மெய்கலந்த பொய்யும், மெய்தவிர்த்த பொய்யுமாய் எழுதப்பட்டதே வரலாறு. இதனால்தான், ஜான் கந்தர், அண்ணல் காந்தியை ‘நழுவும் ஆசாமி’ என்றான். 1857ல் கல்கத்தாவில் ஏற்பட்ட சிப்பாய்க் கலகம், முதல் சுதந்திரப் போராக வரலாற்றுச் சிறப்பு பெற்று, அதற்கு முன்பே வேலூரில் ஏற்பட்ட சிப்பாய்க் கலகம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. விடுதலைப் போர், வங்காள சந்நியாசிகளால் துவக்கப்பட்டது என்பது பொய் கலந்த மெய்யென்றால், இவர்களுக்கு முன்பே வாழ்ந்த வைகுண்டசாமியைப் பற்றிய மௌனம் மெய்தவிர்த்த பொய்யாகும். இத்தகைய வரலாற்றுப் புதை மண்ணிலிருந்து வைகுண்டசாமி போன்ற ஆன்மீகப் போராளிகளை மீட்டெடுத்து, சாதிக்குப் பலியாகும் இன்றைய சராசரித் தமிழனிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது இப்போதையக் கட்டாயக் கடமையாகும். ஒரு லட்சியப் போராட்டத்திற்கான வரலாற்றில் இறுதிக் கட்டத்தில் வெல்கிறவர்களே அறியப்படுகிறார்கள். இதே லட்சியத்திற்காக, ஆரம்பத்தில் போராடியவர்கள் வரலாற்று வெள்ளத்தில் மூழ்கிப் போகிறார்கள். அப்படிப்பட்ட வெள்ளமும் இதற்கு ஏதுவாக, அதன் போக்கில் விடப்படாமல் விருப்பு, வெறுப்பு என்ற அணைகளால் கட்டப்பட்டு தேக்கப்படுகிறது. இதனால்தான் ஒரு அம்பேத்காரை தெரியும் நமக்கு, ஒரு அயோத்தி தாசரையோ, இரட்டை மலை சீனிவாசனையோ அதிகம் தெரியாது. அண்ணல் காந்தியைத் தெரிந்த அளவிற்கு, ஒரு திலகரையோ, ஒரு வ.உ.சி.யையோ தெரியாது. பகத்சிங்கைத் தெரிந்த அளவிற்கு ஒரு வாஞ்சி நாதனைத் தெரியாது. திருத்தணிப் போராட்டத்தை நடத்திய மா.பொ.சிவஞானம் அவர்களைத் தெரியும். ஆனால் அவருக்கு முன்பே திருத்தணி தமிழகத்தோடு சேர வேண்டும் என்று வீடு வீடாக இயக்கம் நடத்திய மங்கலம் கிழாரைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும்? இது வரலாற்றுக் குற்றத்தோடு வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளாத குற்றமும் ஆகும். இந்தக் குற்றங்களால் மக்களுக்கு பரந்த அளவில் எடுத்துச் சொல்ல முடியாதபடி முடக்கப்பட்ட போராளிகளில் வைகுண்டரும் ஒருவர். <b>சாமித்தோப்பு சாமி</b> கன்னியாகுமரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள பூவண்டன் தோப்பில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்<noinclude></noinclude> 111syo82luewk82x21210jq8td19o6o பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/13 250 213823 1840029 1839910 2025-07-07T15:05:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|4||ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>இப்போது வைகுண்ட சாமி என்று பயபக்தியோடு கூறப்படும், அழைக்கப்படும் முத்துக்குட்டி சாமி. ஆரம்பத்தில் பெற்றோர்கள் இவருக்கு ‘முடி சூடிய பெருமாள்’ என்றுதான் பெயரிட்டார்கள். ஆனால் சுவர்னர்களும், அரசுப் பிரதிநிதிகளும் எளிய சாதியினர் இந்தப் பெயரை வைக்கலாகாது என்று இவரது பெற்றோரை அச்சுறுத்தவே, முடி சூடிய பெருமாள், <b>‘முத்துக்குட்டி’</b> ஆனார். 1809ஆம் ஆண்டில் பிறந்த இவர், இருபத்தி நான்கு வயது வரை ஒரு பனையேறித் தொழிலாளியாகவோ அல்லது சிறு விவசாயியாகவோ வாழ்ந்திருக்கிறார். இதற்குப் பிறகு சரும நோயால் அவதிப்பட்டு பெற்றோரால் திருச்செந்தூர் கொண்டு போகப்பட்டு, கடலுக்குள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு கடலில் இருந்து ‘விஞ்சை’ (ஞானம்) பெற்று மீண்டு, பூவண்டன் தோப்பிற்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. அங்கே, கலிநீசன் ஆட்சி முடிய இரண்டாண்டுகள், பெண்ணடிமை ஒழிய இரண்டாண்டுகள், செங்கோலாட்சி மலர இரண்டாண்டுகள் என்று ஆறாண்டு காலம் தவமிருந்திருக்கிறார். <b>சிறையும்—எதிர்வினையும்</b> அந்தத் தவக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் இவரை தரிசித்து, தலையில் தலைப்பாகையோடும், தோளில் சேலையோடும் புது மனிதர்களாய் மாறியிருக்கிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த மேட்டுக்குடியினரின் தூண்டுதலால் சுவாதித் திருநாள் மன்னன் 1836ஆம் ஆண்டு இவரைப் பிடித்து, திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள சிங்காரத் தோப்பில் சிறை வைத்து, சித்தரவதை செய்வித்திருக்கிறான். இறுதியில் ஒரு கூண்டில் பசியோடு இருந்த புலியோடு இவரைத் தள்ளியதாகவும், ஆனால் முத்துக்குட்டி சாமியிடம் அந்தப் புலி மண்டியிட்டதாகவும் கூறப்படுகிறது. மன்னன் பயந்துபோய், இவரை நூற்றுப்பத்துநாள் சிறைவாசத்திற்குப் பிறகு சொந்த சாதி அல்லாத எந்தச் சாதியோடும் சேரலாகாது என்ற நிபந்தனையோடு விடுதலை செய்ததாகவும் அறியப்படுகிறது. இதுமுதல் முத்துக்குட்டி, <b>“வைகுண்ட சாமியானார்”.</b> சொந்த ஊருக்கு மீண்ட வைகுண்டர் மேலும் வேகமாகத்தான் செயல்பட்டிருக்கிறார். மன்னனின் அறிவுரைக்கு எதிர் வினையாகவே இயங்கி இருக்கிறார். மதத்தை அறிவுப் பூர்வமாகவும், ஞான ஒளியாகவும் எடுத்துக்கொண்ட மேட்டுக்குடி மக்கள், அதே மதத்தை இந்த தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உணர்வு மயமாக ஆக்கி இருப்பதை புரிந்துகொண்ட வைகுண்டர், ஆடுகோழி பலியிடுவது ஆயனுக்குத்<noinclude></noinclude> nobhmyjo0vip03im6srreb5ivilj9t7 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/14 250 213825 1840030 1839920 2025-07-07T15:07:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||5}}</noinclude>தேவையில்லை என்றும் பரம்பொருளுக்கு காணிக்கையோ, காவடியோ அவசியமில்லை என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். கடவுளை வேட்டையாடும் மாடன்களாகவும், பயமுறுத்தும் பேச்சியம்மாக்களாகவும் பார்த்துக் கொண்டிருந்த தாழக்கிடந்த மக்களை அதே மதத்தை மேட்டுக்குடியினர் போல் அறிவுப் பூர்வமாக அணுகச் செய்திருக்கிறார். பெரும்பாலான கிராமங்களில் நிழல் தாங்கல்கள் என்ற சிறு சிறு கோவில்களை நிறுவி, அங்கே தீபமேற்றி அந்தத் தீபத்தின் அருவ வழிபாட்டில் இந்த மக்களை ஈடுபடுத்தியிருக்கிறார். மேட்டுக்குடியினரே அரைகுறை ஆடையோடு ஆலயம் சென்று வழிபட்டபோது, இந்த ஏழை எளிய மக்கள் தலைப்பாகை கட்டி கோவிலுக்குள் சென்றது வைகுண்டரின் மிகப்பெரிய ஆன்மீகப் புரட்சியாகும். அதோடு இவர்களை ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவதற்காக காவி நிறத்தில் தீபம் பொறித்த அன்புக் கொடி ஒன்றையும் ஆக்கியிருக்கிறார். இவரது முறையில் வழிபடும் மக்கள், <b>“அன்புக் கொடி மக்கள்”</b> என்று இப்போதும் அழைக்கப்படுகிறார்கள். சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவி சாதிபேதமற்ற சமயக் கொடியை ஏற்றுவித்த வள்ளலாருக்கு முன்பே, வைகுண்டர், இப்படி ஒரு கொடியை உருவாக்கியது இன்றைய ஆன்மீகவாதிகளுக்கே தெரியாது. <b>துவையல் பந்தி—முத்திரிக் கிணறு...</b> மேட்டுக்குடியினர், கீழ்க் குடியினரை அழுக்காக்கியும், அந்த அழுக்கிலேயே ஆழ்த்தியும் கைகொட்டி நகைத்த காலத்தில் தூய்மையின் அவசியத்தை உணர்ந்த வைகுண்டர், துவையல் பந்தி என்ற ஒரு செயல் முறைமையை கொண்டு வந்திருக்கிறார். இதன்படி அத்தனை சாதியினரும், கடலில் நீராடி, மதியம் பச்சரிசி, பயிறு சாதத்துடன் ஒன்றாய் உண்டு-ஒன்றாய் உறவாடி இருக்கிறார்கள். இந்தப் பந்தி, வையம்பதி என்ற இடத்தில் வைகுண்டரின் தலைமையில் ஆறு மாத காலம் நடந்திருக்கிறது. இதனால் வெகுண்ட மேட்டுக் குடியினர் இந்தப் பந்தியில் கலந்து கொண்ட மக்களைச் சிதறடித்ததாகவும், இதையும் மீறி இந்தத் துவையல் பந்தி பல இடங்களில் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. இன்று சமபந்தி போஜனம் தொலைக்காட்சி, பத்திரிகைகள் சாட்சியாக நடத்தப்படுகிறது. இதற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே, இதைவிடச் சிறப்பான முத்திரிக் கிணறு என்ற இன்னொரு செயல்பாட்டு முறைமையை வைகுண்டர் கொண்டு வந்திருக்கிறார். இதன்படி இவர் தவமிருந்த தாமரைப்பதிக்கு அருகே, ஒரு கிணறு வெட்டப்பட்டுள்ளது. ஊர்க் கிணறுகளில் எட்டிப் பார்க்கக்கூட உரிமை<noinclude></noinclude> mfce76anv6yh74f1ugzdft2jug4n4gb பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/15 250 213828 1840031 1839923 2025-07-07T15:09:08Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|6||ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>இல்லாத அத்தனை எளிய மக்களும் இந்தக் கோவில் குளத்தில் குளித்து விட்டு, வைகுண்டரின் வேண்டுகோளின்படி கொண்டுவந்த அரிசி, பருப்பு வகையறாக்களை சமைத்து இவரது முன்னிலையில் ஒன்றாக உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். இப்போது, தமிழக அரசு சாதியச் சண்டைகளை தீர்ப்பதற்கு சமத்துவபுரங்களை அமைத்து வருகிறது. கலைஞர் இதற்கு பெருமுயற்சி எடுக்கிறார். ஆனால், எங்கேயோ ஒரு மூலையில் ஒரு சாமானியனாய்ப் பிறந்த வைகுண்டரோ அனைத்து அவர்னர் சாதிகளும் ஒன்றாக ஒரே இடத்தில் வீடுகட்டி வாழ்வதற்கு வழி செய்திருக்கிறார். ஓடு வேய்ந்த வீடுகளை எளிய சாதியினர் கட்டக்கூடாது என்று மேட்டுக்குடியினரும், அவர்களுக்காகவே ஆட்சி செய்த அரசும் கொடிய சட்டத்தைப் போட்டிருந்தபோது, வைகுண்டர் இதற்கு சவால் இடுவதுபோல் முட்டம்பதி என்ற இடத்தில் அனைத்துச் சாதிகளையும் கொண்ட ஒரு குல குடியிருப்பை நிறுவியிருக்கிறார். ஆனாலும் யாது காரணத்தாலோ இந்த குடியிருப்புக்கள் பரவலாகவில்லை. <b>தோள் சீலைப் போராட்டம்</b> எல்லாவற்றிற்கும் மேலாக எளிய சாதிப் பெண்கள் ஆடு மாடுகளைப்போல் இடுப்புக்கு மேல் எதுவுமின்றி அலைந்து கொண்டிருந்த காலத்தில் - அதுவும் அண்மையில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் மேலாடை போட்டு வாழ்ந்த பெண்கள்கூட கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்யாணமாகி விட்டால் மேலாடையை எடுத்துவிட வேண்டும் என்ற விதிவிலக்கில்லாத கொடூரச் சட்டம் இருந்தபோது, இத்தகையப் பெண்களுக்கு சுய மரியாதையைக் கொடுத்தவர் வைகுண்டர். இவருக்கு முன்பே <b>மீட்பாதிரியார்</b> போன்ற கிறிஸ்தவ மத போதகர்கள் அந்த மதத்தில் சேர்ந்த பெண்களை குப்பாயம் போட வைத்து, அதனால் எழுந்த தோள் சீலை போராட்டத்திற்கு தலைமை தாங்கியிருக்கிறார்கள். மூன்று கட்டங்களில் முப்பத்தேழு ஆண்டுகள் நடந்த கன்னியாகுமரி பகுதி பெண்களின் தோள் சீலை போராட்டத்தின் இறுதிக் கட்டம் அழுத்தம் பெறவும், எளிய சாதி இந்துப் பெண்கள் அதில் ஈடுபடுவதற்கும் வைகுண்டரின் தாக்கம் முக்கிய காரணம். நமது பெண்ணியவாதிகளுக்கும், பெண்ணிய இயக்கங்களுக்கும் தெரியாத இந்த தோள் சீலை போராட்டம் சிவகங்கை வரை வந்துள்ளது. எளிய சாதியைச் சேர்ந்த ஏராளமான ஆடவர்களும் பெண்களும் இதற்காக உயிர்ப் பலியானார்கள். நீதிமன்றங்கள்கூட இந்த தோள் சீலை<noinclude></noinclude> 39at8pvmn88grqxbnsgaib4b58p2zr5 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/16 250 213830 1840032 1839929 2025-07-07T15:10:59Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||7}}</noinclude>போராட்டத்திற்கு எதிராக தீர்ப்பளித்தபோது, கிறிஸ்தவ பாதிரிமார்களும், வைகுண்டரும் இந்தப் பெண்களுக்கு உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் ஒரு மரியாதை கொடுத்திருக்கிறார்கள். வைகுண்டர் குறித்த புராணப் பொய்களையும் செவிவழிக் கதைகளையும் புறந்தள்ளி விட்டுப் பார்க்கும்போதுகூட, அவர் இப்போதைய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அப்போதைய அவர்னர்களுக்கு ஒரு சின்னமாக விளங்கி இருக்கிறார். இவரை, திருவாங்கூர் அரசு சிறைபிடித்தபோது வைகுண்டரைப் பகைக்க வேண்டாம் என்று சுவாதித் திருநாள் மன்னரிடம், வாதாடிப் போராடி, அதனாலேயே அந்த மன்னனால் சிறையில் வைக்கப்பட்டவர் பூவண்டன் என்ற இடையர் சாதியைச் சேர்ந்த பெருமான். இவர் அரசில் உயர்ந்த பதவி வகித்தவர். இதேபோல் தாமரைப் பதியில் 96 வளைவுகளைக் கொண்ட தத்துவக் கொட்டகையை அமைத்துக் கொடுத்தவர் முத்துக்குட்டி ஆசாரி என்பவர். ‘சாரையோடு’ வண்ணார்குல பிச்சையம்மாள், ‘வடீவீஸ்வரம்’ வெங்கடாச்சல அய்யர், ‘தென் தாமரைக்குளம்’ கிறிஸ்தவரான ‘அருமைநாயகம்’, ‘தொண்டைமான்’ ராமலிங்கம், ‘மணவாளன் குறிச்சி’ கடவுள் செட்டியார், ‘தச்சநல்லூர்’ வெள்ளாளர் அழகப்பப் பிள்ளை, ‘அரியநந்தல்’ வீரய்யாத் தேவர், ‘குறும்பர்’ இனத்தின் குபேரன் போன்ற அத்தனை சாதி மாந்தர்களும் வைகுண்டரின் ஒரே சாதியில் இரண்டறக் கலந்த சமகாலத்து தொண்டர்கள். அருளாளர்களில் இரண்டு வகை உண்டு. முதலாவது சாதியை மறுத்தவர்கள், இரண்டாவது தன்னளவில் சாதியைத் தாண்டியவர்கள். பொதுவாக நமது அருளாளர்களான சங்காராச்சாரியார்களும், சாமி தயானந்த சரஸ்வதியும், இராமகிருஷ்ண பரமஹம்சரும், ரமண ரிஷியும் தங்கள் அளவில் சாதிகளைத் தாண்டியவர்கள். ஆனால் வைகுண்டரும், வள்ளலாரும் சாதியை மறுத்தவர்கள். அதற்காக பாடுபட்டவர்கள். இதனால் வைகுண்டர் சிறை வைக்கப்பட்டார். அப்போதைய மதவாதிகளால் கல்லடியும், சொல்லடியும் பட்டார். <b>‘சாதி சமயம் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி’</b> என்று செம்மாந்து சொன்ன வள்ளலாரை, தீவிர சைவர்கள் இன்று கூட ஏற்பதில்லை. இவரது திருவருட்பாவை மருட்பா என்று அறிவிக்கக் கோரி கடலூர் நீதிமன்றம் சென்றவர் யாழ்பாணத்துத் தமிழறிஞர் ஆறுமுக நாவலர். இந்த இரண்டு பெரிய ஆன்மீகப் போராளிகளும் இன்றைய சாதித் தமிழனுக்கு தேவைப்படுகிறது. இவர்களோடு, மேட்டுக்குடியான பாளைய அரசை பாஞ்சாலங்குறிச்சியில்<noinclude></noinclude> 9u3ckx3ultmw26oy8bizg03sz3kn982 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/17 250 213832 1839998 1839930 2025-07-07T12:52:11Z மொஹமது கராம் 14681 1839998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|8||ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>தாற்காலிகமாக மீட்டெடுத்த ஊமைத் துரைக்காக படையோடு சென்று கோட்டையில் ஏறி, அந்தக் கோட்டையைச் சுற்றி வெள்ளையர்கள் வைத்த வெடி மருந்தில் தனது உடம்பு முழுவதும் வெண்ணெயைத் தடவி வெடி மருந்துகளின் விபரீதங்களை தவிர்த்து உயிர்த் தியாகம் செய்த ஆதி திராவிட <b>வீரன் சுந்தரலிங்கத்தையும்,</b> சித்தர் மரபு வழியில் வந்த சாதிய மறுப்பாளர் <b>குணங்குடி மஸ்தான்,</b> சாஸ்திரக் கும்மி எழுதிய <b>வேதநாயகம் சாஸ்திரி,</b> தோள் சீலைப் போராட்டத்தை துவக்கிய <b>மீட்பாதிரியார்</b> சாதிப் பேரால் கையெழுத்துப் போட மாட்டேன் என்று பிரகடனப்படுத்திய தேவர் இனத்தைச் சேர்ந்த, அந்தக்காலத்து மதுரை ஜில்லா போர்டு தலைவரான <b>ராமச்சந்திரனாரையும், தந்தை பெரியாரை</b> எடுத்துச் செல்வதுபோல் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எத்தனையோ சிலைகளுக்கும், நினைவு மண்டபங்களுக்கும் கோடி கோடியாய் பணம் கொட்டும் அரசு, இந்தப் போராளிகளை குறும்படங்கள், கூத்துக்கள், வில்லுப்பாட்டு, வீதி நாடகம், நாட்டுப்புற இசை போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் சாதாரண மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும். ஆமாம் அறிமுகம் தான். ஆழப்படுத்தல் அல்ல. காரணம், இன்று சாதியின் பேரால் சண்டையிடும் தலைவாங்கித் தமிழனுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. இது, இவனுடைய குற்றமும் அல்ல. இவர்களைத் தெரியப்படுத்தாத வரலாற்றின் குற்றம். நமது குற்றம். அரசின் குற்றம். இந்த முப்பெருங் குற்றங்களை நீக்குவதோடு, இதற்கு எதிர்வினையாய் ஆக்க ரீதியான செயல்களை அனைவரும் மேற்கொண்டால் சாதிச் சண்டைகள் போகிறதோ இல்லையோ குறைந்தது குறையும். இதன் முதல் கட்டமாக தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட <b>வள்ளலார் மனிதநேயப் பேரவை</b> என்ற ஒரு அமைப்பு அண்மையில் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் வள்ளலாரை மட்டுமல்லாது, அவருக்கு முன்னால் வாழ்ந்த வைகுண்டர் முதல் பின்னால் வாழ்ந்த தந்தை பெரியார் வரை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம். என்றாலும், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் எல்லாம் வல்ல அரசிற்கே பெரும் பொறுப்பு உள்ளது. {{rh|||<b>தினமணி நாளிதழ்-1999</b><br>(தலையங்க பக்கக் கட்டுரை)}} <section end="1"/>{{nop}}<noinclude></noinclude> meugdeypbzhz0zmkmqdlwg1fhualyv9 1840033 1839998 2025-07-07T15:12:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|8||ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி}}</noinclude>தாற்காலிகமாக மீட்டெடுத்த ஊமைத் துரைக்காக படையோடு சென்று கோட்டையில் ஏறி, அந்தக் கோட்டையைச் சுற்றி வெள்ளையர்கள் வைத்த வெடி மருந்தில் தனது உடம்பு முழுவதும் வெண்ணெயைத் தடவி வெடி மருந்துகளின் விபரீதங்களை தவிர்த்து உயிர்த் தியாகம் செய்த ஆதி திராவிட <b>வீரன் சுந்தரலிங்கத்தையும்,</b> சித்தர் மரபு வழியில் வந்த சாதிய மறுப்பாளர் <b>குணங்குடி மஸ்தான்,</b> சாஸ்திரக் கும்மி எழுதிய <b>வேதநாயகம் சாஸ்திரி,</b> தோள் சீலைப் போராட்டத்தை துவக்கிய <b>மீட்பாதிரியார்</b> சாதிப் பேரால் கையெழுத்துப் போட மாட்டேன் என்று பிரகடனப்படுத்திய தேவர் இனத்தைச் சேர்ந்த, அந்தக்காலத்து மதுரை ஜில்லா போர்டு தலைவரான <b>ராமச்சந்திரனாரையும், தந்தை பெரியாரை</b> எடுத்துச் செல்வதுபோல் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எத்தனையோ சிலைகளுக்கும், நினைவு மண்டபங்களுக்கும் கோடி கோடியாய் பணம் கொட்டும் அரசு, இந்தப் போராளிகளை குறும்படங்கள், கூத்துக்கள், வில்லுப்பாட்டு, வீதி நாடகம், நாட்டுப்புற இசை போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் சாதாரண மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும். ஆமாம் அறிமுகம் தான். ஆழப்படுத்தல் அல்ல. காரணம், இன்று சாதியின் பேரால் சண்டையிடும் தலைவாங்கித் தமிழனுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. இது, இவனுடைய குற்றமும் அல்ல. இவர்களைத் தெரியப்படுத்தாத வரலாற்றின் குற்றம். நமது குற்றம். அரசின் குற்றம். இந்த முப்பெருங் குற்றங்களை நீக்குவதோடு, இதற்கு எதிர்வினையாய் ஆக்க ரீதியான செயல்களை அனைவரும் மேற்கொண்டால் சாதிச் சண்டைகள் போகிறதோ இல்லையோ குறைந்தது குறையும். இதன் முதல் கட்டமாக தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட <b>வள்ளலார் மனிதநேயப் பேரவை</b> என்ற ஒரு அமைப்பு அண்மையில் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் வள்ளலாரை மட்டுமல்லாது, அவருக்கு முன்னால் வாழ்ந்த வைகுண்டர் முதல் பின்னால் வாழ்ந்த தந்தை பெரியார் வரை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம். என்றாலும், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் எல்லாம் வல்ல அரசிற்கே பெரும் பொறுப்பு உள்ளது. {{rh|||<b>தினமணி நாளிதழ்-1999</b><br>(தலையங்க பக்கக் கட்டுரை)}} <section end="1"/>{{nop}}<noinclude></noinclude> px9zsq8za5lhki5i6t7pbctv2g5fu3v பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/18 250 213834 1840014 1839972 2025-07-07T14:05:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="2"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|31em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>இந்தக் கட்டுரையை சுருக்கி<br>தினமணிகதிரில் முதல் பிரசவம்<br>என்ற தலைப்பு வரிசையில் எழுதி<br>இருந்தேன். முதல்வர்<br>கலைஞருக்கு ஒரு அழைப்பு<br>இதழை கொடுக்கச் சென்ற<br>போது- {{dhr|1em}} ‘வாருங்கள் அங்கே<br>கல்யாணம், இங்கே கலாட்டா’<br>என்று என்னை அழைத்தார். நான்<br>பொருள் புரியாது திகைத்தபோது<br>‘உங்கள் கட்டுரையைத்தான்<br>சொல்கிறேன்’ என்றார். இந்த<br>மேதையின் சொல்லாடலுக்கு<br>முன்னால் எனக்கு எந்த இலக்கிய<br>கௌரவம் பெரிதாக இருக்க<br>முடியும்?</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''எனது முதல்<br>படைப்பு.''</b>}} {{dhr|4em}} என் முதல் படைப்பு எது<br>என்று கண்டுபிடிப்பது எனக்கே,<br>சற்று சிரமமாக இருந்தது. பத்து<br>வயதில், நானே எழுதி, நானே<br>பாடி, நானே கேட்ட வில்லுப்<br>பாட்டைச் சொல்வதா? அல்லது<br>எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்<br>கொண்டிருந்தபோது, நான் எழுதி,<br>ஆணே பெண்வேடம் போட்டு,<br>அரங்கம் ஏறிய நாடகத்தைச்<br>சொல்வதா? அல்லது உயர்நிலைப்<br>பள்ளி மலர்களிலும், கல்லூரி<br>மலர்களிலும் எழுதிய கவிதை<br>களைச் சொல்வதா? எது முதல்<br>படைப்பு? இந்த சிந்தனை, படைப்பு<br>என்றால் என்ன? என்று<br>இன்னொரு எண்ணத்திற்கு<br>என்னை இட்டுச் சென்றது.<br>பாடுபவை எல்லாம் எப்படிப்<br>பாட்டாகாதோ, அப்படி எழுது<br>பவை எல்லாம் எழுத்தாகாது.<br>படைப்பு என்று வரும்போது,<br>குறைந்தபட்சம் அது படைப்பாளி<br>யிடம் ஒரு தாக்கத்தை<br>ஏற்படுத்தவேண்டும். அந்த<br>தாக்கம் வாசகர்களிடமும் தாவ<br>வேண்டும். எழுத்தாளன் எந்த<br>உணர்வோடு எழுதுகின்றானோ<br>அந்த உணர்வு படிப்பவனிடமும் {{Multicol-end}}<noinclude></noinclude> 9law713arla4mquntt0c01lcs9l5jgq பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/19 250 213836 1840034 1839940 2025-07-07T15:14:29Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|10||எனது முதல் படைப்பு}}</noinclude>எற்பட வேண்டும். <b>“நல்லுணர்வு ஏற்பட்டால் நல்லிலக்கியம், நச்சுணர்வு ஏற்பட்டால் நச்சிலக்கியம்”</b> என்றார் லியோ டால்ஸ்டாய். இதுதான் படைப்பிலக்கியத்திற்குச் சரியான அளவுகோல் என்று கருதுகிறேன். இந்த அளவின்படி மட்டுமல்ல, மனதில் சட்டென்று நினைவுக்கு வரும்படியும் தோன்றுவது எனது முதல் சிறுகதையான “அங்கே கல்யாணம் - இங்கே கலாட்டா” என்ற படைப்புதான். 1974-ம் ஆண்டு இறுதிவாக்கில் இது ஆனந்தவிகடனில் வெளியானது. இந்த சிறுகதைதான் என்னை ‘உடனடி’ எழுத்தாளனாக்க உதவியது. இந்த சிறுகதையை எழுதும்போது நான் எழுத்தாளனாக மாறப் போகிறேன் என்று நினைத்ததில்லை. பத்துப்பேரோடு பதினோராவது நபராக ஒரு கதையை எழுதித்தான் பார்ப்போமே என்ற தோரணையில்தான் எழுதினேன். கதையைத் திருப்பி வாங்குவதற்கு தபால் தலைகளைக்கூட இணைக்கவில்லை. அந்தச் சிறுகதையை எந்த சூழலில் எழுதினேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, இதோ இந்தத் தருணத்திலும் இனிமையாக இருக்கிறது. <b>எழுத்தாளச் சவால்</b> அப்போது நான், டில்லியில் வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். உள்ளூரில் நான் ஏறெடுத்தும் பாராத வாரப் பத்திரிகைகள் அங்கே மிகவும் பிடித்துப் போயின. என்ன எழுதினாலும் தமிழை சுமந்து வருகின்றவை என்ற பாசம். ஆனாலும் இந்த பத்திரிகையில் வெளியான சிறுகதைகள் பெரும்பாலும் பிடிக்கவில்லை. பிடிபடவும் இல்லை. அப்போது டில்லியில் என்னுடன் பணியாற்றியவரும், எனது குடும்பத்தோழருமான செல்வராஜிடம், “ஒரு கதைகூட உருப்படியாக இல்லை” என்று அடிக்கடி அலுத்துக் கொள்வது வழக்கம். அவரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, பிறகு பொறுமைக்கு எல்லை கட்ட விரும்பாதவர் போல், “சும்மா குறை சொல்வதில் அர்த்தமில்லை சமுத்திரம்! குறை சொல்வது எளிது. எழுதுவதுதான் கடினம். நீங்கள் உண்மையிலேயே இலக்கிய ஆர்வம் உள்ளவராய் இருந்தால், ஒரு கதை எழுதி பத்திரிகையில் வரவழைத்துக் காட்டுங்கள். அதற்குப் பிறகு பிறத்தியார் கதைகளைப் பற்றி விமர்சியுங்கள்” என்றார். நண்பரின் பேச்சு என்னுள் ஒரு வேகத்தை ஏற்படுத்தியது. அவர் என் திறமைக்கே சவால் இடுவதுபோல் இருந்தது. ஆரம்பப் பள்ளிக்கூட காலத்தில் வில்லுப்பாட்டாளியாகவும்.<noinclude></noinclude> htuignaujz5u1vjb8faj7q26r8zt1j3 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/20 250 213838 1840035 1839962 2025-07-07T15:15:54Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||11}}</noinclude>கல்லூரிக் காலத்தில் கவிதை எழுதுபவனாகவும் இருந்தது, அப்போது என்னுள்ளே கும்பகர்ணனாய் முடங்கிக் கிடந்த கலைத்தன்மை துகில் களைந்து எழுதுவதுபோல் இருந்தது. சிறுகதை ஆசிரியனாக மாறவேண்டும் என்பதைவிட நண்பரின் சவாலுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அன்று இரவே காகிதத்தை எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் எனது சொந்த கிராமத்தில் நடந்த, நடக்கும் நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தேன். பெரும்பாலான ஏழை-எளியயவர்கள். எங்கேயோ இருக்கின்ற தலைவர்களுக்கு உயிரைக் கொடுக்கவும் தயார் என்பதைக் காட்ட, தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் அவல நிலையை எண்ணிப் பார்த்தேன். கோவில் திருவிழாக்களிலும், கல்யாண காரியங்களிலும் கட்சி-அரசியல் புகுந்து, கிராம மக்கள் அடித்துக் கொள்வதை கண்ணால் கண்டவன் நான். மக்களை ஒன்று திரட்டி ஒருமைப்படுத்துவதற்காக எழுந்த திருவிழாக்களும், கல்யாணச் சடங்குகளும் கட்சி அரசியலின் பீடங்களாகிப் போனதை நினைத்து, கதை எழுதப் போவதை மறந்து, அந்தக் காட்சிகளிலேயே நினைத்தபடி இருந்தேன். அரைமணி நேர சிந்தனைக்குப்பின் நண்பரின் சவாலும் கதை எழுதுவதற்கே காகிதத்தை வைத்திருக்கிறேன் என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது. உடனடியாக எழுதினேன். மடைதிறந்த வெள்ளம்போல் வார்த்தைகள் வரிகளாயின. கதை இதுதான். குட்டாம்பட்டி என்ற சிறு கிராமம். அங்கே சண்முகம் என்ற வாலிபன் கல்லூரி வரைக்கும் கால் வைத்தவன். உள்ளூரில் ஆசிரியையாக வேலைபார்க்கும் அமுதா என்ற பெண்ணை நேசிக்கிறான். ஓரிருதடவை சந்திப்புக்கள் கூட நடக்கின்றன. இருவருமே சொந்தக்காரர்கள். இந்த இரு இளம் உள்ளங்களையும் இணைத்துவைக்க பெற்றோர்கள் தீர்மானித்து விடுகிறார்கள். பெண் வீட்டில் நிச்சய தாம்பூல விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாழைக்குலை, வெத்திலை பாக்கு எல்லாம் வாங்கியாகி விட்டது. ரொக்கம், நகைநட்டு வகையறாக்கள் எல்லாம் முடிவாகி விட்டன. இதில் எந்த தகராறும் எழவில்லை. கல்யாணத் தேதியை நிச்சயிக்க வேண்டியதுதான் பாக்கி. எல்லோரும் நல்ல காரியம் ஒன்றிற்கு உடன்பட்ட திருப்தியோடு புன்னகைக்கின்றனர். திடீரென்று மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ஒரு பி.யு.ஸி. பெயிலன் கல்யாண விழாவிற்கு நல்லார் கட்சித் தலைவர்<noinclude></noinclude> 87wielms83hz7ikz3gi1v7rwxv1e167 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/21 250 213840 1840036 1839968 2025-07-07T15:17:27Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|12||எனது முதல் படைப்பு}}</noinclude>நல்லசிவம் தலைமைத் தாங்கவேண்டும் என்றான். உடனே பெண் வீட்டுப் பிள்ளையாண்டான் ஒருவன் இன்னொரு கட்சித் தலைவர் வெண்சாமரம் தலைமை தாங்க வேண்டும் என்றான். மாப்பிள்ளை பங்காளிகள், வெண்சாமரம் திருடன், அவன் கருமாந்திரத்திற்குத்தான் லாயக்கு என்றார்கள். பிள்ளை வீட்டார் சொன்னது நல்லார் கட்சி நல்லசிவத்திற்கே பொருந்தும் என்றனர் பெண் வீட்டுப் பங்காளிகள். வார்த்தைகள் தடிக்கின்றன. பிரச்சனை கௌரவப் பிரச்னையாகியது. தலைவர்களைத் திட்டிய பங்காளித் தொண்டர்கள் பிறகு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கிறார்கள். இரண்டு தலைவர்களும் வராமலே கல்யாணத்தை நடத்தலாம் என்று அய்யாசாமி தாத்தா சொன்னது மற்றவர்களின் காதில் விழுந்ததே தவிர, கருத்தில் விழவில்லை. நிலைமை அந்த அளவிற்குப் போனது. மாப்பிள்ளை வீட்டார் போய்விடுகிறார்கள். அமுதா வீட்டுக்குள்ளேயே அழுகிறாள். காதலை மறக்க முடியாமலும் கல்யாணத்தை நினைக்க முடியாமலும் போன சண்முகம், ராணுவத்தில் சேர்ந்து தொலை தூரத்திற்குப் போய் விடுகிறான். ஒரு மாதம் கழித்து எல்லாப் பத்திரிக்கைகளிலும் ஒரு பெரிய செய்தி வருகிறது. கிராமத்து மக்கள் அதைப் படித்துவிட்டு விக்கித்துப் போகிறார்கள். செய்தி இதுதான். “தலைவர் வெண்சாமரத்தின் மகளுக்கும், தலைவர் நல்லசிவத்தின் மகனுக்கும் திருமணம். சர்வகட்சித் தலைவர்கள் வாழ்த்து.” இந்தச் சிறுகதை விரைவில் பிரகரமாகும் என்று ஆனந்தவிகடன் பத்திரிகை கடிதம் எழுதிய நாளிலிருந்து பிரசுரமாகும் நாளை எதிர்பார்த்திருந்தேன். மாதக்கணக்காக கதை பிரசுரமாகவில்லை. பிறகு நானே சலித்துப் போயிருந்த ஒருநாளில், டில்லியின் வி.ஜி.பி.யான <b>பாக்யராஜ்,</b> “நீங்கதானே சமுத்திரம்” என்றார். எனக்கு ஆச்சர்யம். ஓரளவு பரிச்சயமான நண்பர். பெயர் தெரியாமல் போகுமோ? நான் அவரை நெருங்கியபோது இது உங்க கதையா? என்று பத்திரிக்கையைப் பிரித்துக் காட்டினார். நான் ஒரு கதை எழுதியிருக்க முடியாது என்று எப்படி அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டு, அதுவே என் பெயரையே சந்தேகிக்க வைத்ததோ, அதுபோல் எனக்கும் ஒரு சந்தேகம். நம் கதைதானோ? நம் பெயர் தானா? என்று, சந்தேகமில்லை. என் கதைதான். என் பெயர்தான்.{{nop}}<noinclude></noinclude> 47mejylyhrugpodqe8iexih93holhe2 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/22 250 213842 1840039 1839971 2025-07-07T15:19:17Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||13}}</noinclude>இந்தக் கதையை நகைச்சுவையாக பலரும் ரசித்தபோது அப்போது டில்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மூத்த செய்தியாளரான திரு. சீனிவாசன் அவர்கள் இந்தக் கதையில் ஒரு ‘பொடி’ வைத்திருக்கிறீர்கள் என்று வாஞ்சையோடு சொன்னார். அன்றைய பொடிதான் எனது பல படைப்புகளில் வேட்டுகளாக வெடிக்கின்றன. இந்தச் சிறுகதை வெளியானதும் Lல சிறுகதைகளை எழுதி பல பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். அத்தனையும் பிரசுரமாயின. இப்போதும் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், “அங்கே கல்யாணம் - இங்கே கலாட்டா” என்ற சிறுகதையை என்னால் மறக்க இயலாது. காரணம், அது முதல் கதை என்பதால் அல்ல. அதில் நான் வைத்திருந்த சில நிலைகலன்களைத்தான் இப்போது என் படைப்புகளில் பயன்படுத்துகிறேன். அந்த சிறுகதையில் வந்த கிராமத்தின் பெயர் குட்டாம்பட்டி. இந்த குட்டாம்பட்டியையே, பழைமைப் பிடிப்பும், புதுமை நுழைவும் கொண்ட இன்றைய சராசரி கிராமமாக எடுத்துக் கொண்டு நாவல்களிலும் இதே ஊரையே குறிப்பிட்டு வருகிறேன். இதுபோல் நல்லது நினைத்து அதைச் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ள அய்யாசாமி தாத்தாவையும், பல சிறுகதைகளிலும் நாவல்களிலும் கொண்டு வந்திருக்கிறேன். மொத்தத்தில் இந்தக் கதையில் வந்த கிராமமும், கதா பாத்திரங்களும் சமூகப் பொருளாதார தாக்கத்தில் எப்படி மாறிவருகின்றனர் என்று காட்டுவது என் படைப்பிலக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். அடுத்து இந்த சிறுகதையில், ஓரளவு ‘நஹற்ண்ழ்ங்’ கொண்டு வந்தேன். “சொந்தபந்தம் இல்லாத தலைவர்கள் கல்யாண வீட்ல சந்தித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுறாங்க; நீங்க என்னடான்னா சொந்தக்காரர்களா இருந்தும் கட்சிபிரிந்து கருமாந்திரத்திலகூட கலந்துக்க மாட்டேங்கறீங்களடா” என்று அய்யாசாமி தாத்தா வேதனையோடு சொல்வது என் படைப்புக்களில் ஆதார சுருதியாக பத்தாண்டுகள் வரை இருந்தது. மொத்தத்தில் குட்டாம்பட்டியையும், அய்யாசாமி தாத்தாவையும், கிராமிய நடையையும், ஓரளவு அங்கதச் சுவையையும் ஆக்கித்தந்த அந்த சிறுகதை, வாசகர்களுக்கு ஒரு சிறுகதை! எனக்கோ பெருங்கதை! {{rh|||<b>சென்னை வானொலி நிலையம் — 15—1—1983</b>}} <section end="2"/>{{nop}}<noinclude></noinclude> n6ozvxuvh3q01jkxydjac470v4d667s பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/23 250 213844 1840216 1839978 2025-07-08T04:47:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="3"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|24em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>மலையாள மொழியின் பிதா<br>மகனாக கருதப்படும் எழுத்<br>தச்சனின், நினைவில் அனைத்து<br>மலையாளப் படைப்பாளிகளையும்<br>ஒருசேர திரட்டுகிறார் சிறந்த<br>படைப்பாளியான எம்டி வாசுதேவ<br>நாயர் அவர்கள். {{dhr|1em}} மகத்தான படைப்பாளியான<br>கலைஞரும், திருவள்ளுவரையோ,<br>தமிழ்த்தாயையோ, தொல்<br>காப்பியரையோ அல்லது இவர்கள்<br>மூவரையுமோ முன்னிலைப்<br>படுத்தி மிகப்பெரிய தமிழ்<br>வளாகத்தை உருவாக்கிட<br>வேண்டும். வள்ளுவர் கோட்டம்<br>இதற்கு மாற்றாகாது.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''எழுத்தாணி<br>ஊர்வலம்''</b>}} {{dhr|4em}} சென்ற மாதம், கேரளத்தில்<br>மலபார் பகுதியில் உள்ள<br>திருவூரில், துஞ்சன்- எழுத்தச்சன்<br>நினைவுவிழா நடைபெற்றது.<br>மலையாள இலக்கியத்தில் தடம்<br>பதித்த மக்கள் எழுத்தாளரான<br>எம்.டி. வாசுதேவ நாயரைத்<br>தலைவராகக் கொண்ட குழு<br>ஒன்று கடந்த நீண்டகாலமாக<br>எழுத்தச்சன் நினைவை இலக்கிய<br>விழாவாகக் கொண்டாடி<br>வருகிறது. அகில இந்திய<br>அளவில் பிறமொழி எழுத்தாளர்<br>களையும் வரவழைத்து,<br>இலக்கியம் பற்றிய தேசிய கருத்<br>தரங்கையும் நடத்துகிறது. இந்த<br>ஆண்டு தமிழகத்திலிருந்து<br>சிந்தனையாளர் வலம்புரிஜானும்,<br>நானும் கலந்து கொண்டோம்.<br><b>‘இலக்கியம் எதிரொலிக்கும்<br>சுற்றுப்புற நயங்கள்’</b>என்பது<br>கருத்தரங்கின் தலைப்பு,<br>எழுத்தாளர் <b>சிவசங்கரி</b> அவர்கள்<br>தான் எங்கள் பயணத்திற்கு<br>பரிந்துரைத்தவர். {{Multicol-end}}{{nop}}<noinclude></noinclude> 5waujogbmc0g4x0nrtdtmwjgwbt166m பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/24 250 213846 1839989 670864 2025-07-07T12:39:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||15}}</noinclude><b>கம்பரைப் பின்பற்றி...</b> துஞ்சன்-எழுத்தச்சன் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மலையாள இலக்கியத்தின் பிதாமகன். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் மலையாளத்தில் இலக்கியமாக்கியவர். இன்றும் இவரது இந்த இரண்டு படைப்புகளும் பயபக்தியோடு படிக்கப்படுகின்றன. அந்தக் காலத்தில் இவர் மலையாள மொழி இலக்கணத்திற்கு உட்படாத விதத்தில் இவற்கைக் கவிபாடியவர். இது மலையாளப் பண்டிதர்களுக்கு பிடிபடாமல் இருந்தது. தமிழ் இலக்கியத்தில் பல்வேறு புலவர்களின், மன்னர்களின் காலக் கட்டங்களை விஞ்ஞானப் பூர்வமாக அணுகி நிச்சயித்ததால், இன்றும் தமிழறிஞர்களிடையே வேண்டாதவராய் முணுமுணுப்பை ஏற்படுத்தும் பேராசிரியர் வையாபுரி பிள்ளைதான், எழுத்தச்சனின் மகாபாரதமும், ராமாயணமும், கம்பனின் கம்பராமாயண விருத்தப்பா இலக்கணத்தைப் பின்பற்றுபவை என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்தை, நான் கருத்தரங்கில் தெரிவிப்பதாக இருந்தேன். ஆனாலும் குறிப்பிடவில்லை. தமிழன் உலகை ஆண்டவன், கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தவன் என்று நம்முடைய பண்டிதர்கள் பேசிப்பேசி, நம்மை பிறமொழியினர், ஒரு ‘மாதிரியாகப்’ பார்க்காமல், ‘ஒரு மாதிரிப்’ பார்க்கும் நிலை ஏற்பட்டிருப்பதால் என் பங்குக்கும், இலக்கியக் குளத்தில் ஒரு கல்லை எடுத்துப் போட நான் விரும்பவில்லை... தமிழ் இலக்கியத்தைப் பற்றி, இந்திய மொழி அறிஞர்கள் குறிப்பாக அண்டை மொழி அறிஞர்கள் மூலத்தமிழை சுட்டிக்காட்ட ஒரு சூழலை உருவாக்காமல், நம்மை நாமே பிறமொழிகளைப் படிப்பது போல் கூச்சலிடுவதே இதற்குக் காரணம். இதனால்தான், இந்த உண்மையைக் கூட சொல்ல இயலவில்லை. அதேசமயம் சங்க இலக்கியத்தில், அன்றைய தமிழர்களான இன்றைய மலையாளிகள், பாதிக்குப் பாதி உரிமை கொண்டாடலாம் என்று குறிப்பிட்டேன். இது மலையாள இலக்கியவாதிகளுக்கும் எனக்கும் ஒரு நட்புப் பாலத்தை அமைத்தது. பின்னர் பேசிய வலம்புரிஜானும் தனது அருமையான ஆங்கிலச் சொற்பொழிவில் இதைத்தான் குறிப்பிட்டார். இதனால் மலையாளப் படைப்பாளிகளே தமிழ்தான், தங்களுக்கும் மூல மொழி என்பதை எங்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்கள்.{{nop}}<noinclude></noinclude> 110lik74rghbh24bagc4a9fqmhr18nl 1840218 1839989 2025-07-08T04:49:58Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||15}}</noinclude><b>கம்பரைப் பின்பற்றி...</b> துஞ்சன்-எழுத்தச்சன் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மலையாள இலக்கியத்தின் பிதாமகன். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் மலையாளத்தில் இலக்கியமாக்கியவர். இன்றும் இவரது இந்த இரண்டு படைப்புகளும் பயபக்தியோடு படிக்கப்படுகின்றன. அந்தக் காலத்தில் இவர் மலையாள மொழி இலக்கணத்திற்கு உட்படாத விதத்தில் இயற்கைக் கவிபாடியவர். இது மலையாளப் பண்டிதர்களுக்கு பிடிபடாமல் இருந்தது. தமிழ் இலக்கியத்தில் பல்வேறு புலவர்களின், மன்னர்களின் காலக் கட்டங்களை விஞ்ஞானப் பூர்வமாக அணுகி நிச்சயித்ததால், இன்றும் தமிழறிஞர்களிடையே வேண்டாதவராய் முணுமுணுப்பை ஏற்படுத்தும் பேராசிரியர் வையாபுரி பிள்ளைதான், எழுத்தச்சனின் மகாபாரதமும், ராமாயணமும், கம்பனின் கம்பராமாயண விருத்தப்பா இலக்கணத்தைப் பின்பற்றுபவை என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்தை, நான் கருத்தரங்கில் தெரிவிப்பதாக இருந்தேன். ஆனாலும் குறிப்பிடவில்லை. தமிழன் உலகை ஆண்டவன், கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தவன் என்று நம்முடைய பண்டிதர்கள் பேசிப்பேசி, நம்மை பிறமொழியினர், ஒரு ‘மாதிரியாகப்’ பார்க்காமல், ‘ஒரு மாதிரிப்’ பார்க்கும் நிலை ஏற்பட்டிருப்பதால் என் பங்குக்கும், இலக்கியக் குளத்தில் ஒரு கல்லை எடுத்துப் போட நான் விரும்பவில்லை... தமிழ் இலக்கியத்தைப் பற்றி, இந்திய மொழி அறிஞர்கள் குறிப்பாக அண்டை மொழி அறிஞர்கள் மூலத்தமிழை சுட்டிக்காட்ட ஒரு சூழலை உருவாக்காமல், நம்மை நாமே பிறமொழிகளைப் படிப்பது போல் கூச்சலிடுவதே இதற்குக் காரணம். இதனால்தான், இந்த உண்மையைக் கூட சொல்ல இயலவில்லை. அதேசமயம் சங்க இலக்கியத்தில், அன்றைய தமிழர்களான இன்றைய மலையாளிகள், பாதிக்குப் பாதி உரிமை கொண்டாடலாம் என்று குறிப்பிட்டேன். இது மலையாள இலக்கியவாதிகளுக்கும் எனக்கும் ஒரு நட்புப் பாலத்தை அமைத்தது. பின்னர் பேசிய வலம்புரிஜானும் தனது அருமையான ஆங்கிலச் சொற்பொழிவில் இதைத்தான் குறிப்பிட்டார். இதனால் மலையாளப் படைப்பாளிகளே தமிழ்தான், தங்களுக்கும் மூல மொழி என்பதை எங்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்கள்.{{nop}}<noinclude></noinclude> 25gbook20kyo7jksco7if8nqhymdgve பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/25 250 213848 1839993 670865 2025-07-07T12:44:05Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|16||எழுத்தாணி ஊர்வலம்}}</noinclude><b>எல்லாப் படைப்பும் மக்களுக்கே...</b> எழுத்தச்சன் நினைவகம், ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில், மலைகள் மண்டிய திருவூரில் வியாபித்திருக்கிறது. இந்த நிலத்தை, கேரள அரசே தனியாரிடமிருந்து கையகப்படுத்தி கொடுத்துள்ளது. இந்த வளாகத்தில், உள்ளரங்கம், வெளியரங்கம், பன்மொழி நூலகம், இலக்கிய அருங்காட்சியகம் உள்ளன. இதில் எழுத்தச்சனின் எழுத்தாணி, அவர் எழுதிய ஏடுகளோடு பூமணக்க, புகழ் மணக்க ஒரு சிற்பக்கல் தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விழாவின் இறுதி நாளில், இந்த எழுத்தாணி, கொட்டு முழக்கத்தோடு ஊர்வலமாகக் கொண்டு போகப்படுகிறது. ஊர்வல இறுதியில் ஒரு சின்னப்பிரசங்கம்.... நானும், வலம்புரிஜானும் ஒரிரு நிமிடங்கள் தமிழில் பேசினோம். இதேபோல் பிறமொழிப் படைப்பாளிகளும் தத்தம் மொழிகளில் பேசினார்கள். இந்த ஊர்வலத்தில் இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய எழுத்தாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள். இது எழுத்தச்சனை கடவுளாக்கும் முயற்சியல்ல. மாறாக அவரை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு ஊடகமென்று எம்.டி. வாசுதேவநாயர் எங்களிடம் தெளிவாக்கினார். எல்லாப் படைப்புகளும் மக்களுக்கே என்று சொன்ன கார்க்கீயின் மறுபதிப்பு முழக்கமாக இது எனக்கு தோன்றியது. எழுத்தச்சனுக்கு ஏன் சிலை வைக்கவில்லை என்று நான் கேட்டபோது இப்படித்தானிருப்பார் என்று அனுமானிக்க முடியாதவருக்கு எப்படி சிலை வைப்பது என்று எம்.டி.வி, என்னை வினாவினார். உடனே, எனக்கு சிலை மயமான சென்னைக் கடற்கரைச் சாலைதான் நினைவிற்கு வந்தது கூடவே திருவள்ளுவர் சிலையில் பூணூல் உள்ளே இருப்பது போல் ஒரு அனுமானம் ஏற்படுவதாய் கவிஞர் கண்ணதாசன் அப்போது உருவான திருவள்ளுவர் சிலைப்பற்றி கருத்து தெரிவித்ததும் நினைவிற்கு வந்தது. மலையாள இலக்கிய வாதிகளைப் போல் அல்லாது, நாம் உருவங்களைப் பிடித்துக்கொண்டு, உயிர்ப்புகளை விட்டு விட்டோமோ என்றும் எண்ணத் தோன்றியது.{{nop}}<noinclude></noinclude> lfteubr1x7ngkwy6c4e0658vwqwq8s8 1840219 1839993 2025-07-08T04:51:31Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|16||எழுத்தாணி ஊர்வலம்}}</noinclude><b>எல்லாப் படைப்பும் மக்களுக்கே...</b> எழுத்தச்சன் நினைவகம், ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில், மலைகள் மண்டிய திருவூரில் வியாபித்திருக்கிறது. இந்த நிலத்தை, கேரள அரசே தனியாரிடமிருந்து கையகப்படுத்தி கொடுத்துள்ளது. இந்த வளாகத்தில், உள்ளரங்கம், வெளியரங்கம், பன்மொழி நூலகம், இலக்கிய அருங்காட்சியகம் உள்ளன. இதில் எழுத்தச்சனின் எழுத்தாணி, அவர் எழுதிய ஏடுகளோடு பூமணக்க, புகழ் மணக்க ஒரு சிற்பக்கல் தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விழாவின் இறுதி நாளில், இந்த எழுத்தாணி, கொட்டு முழக்கத்தோடு ஊர்வலமாகக் கொண்டு போகப்படுகிறது. ஊர்வல இறுதியில் ஒரு சின்னப்பிரசங்கம்.... நானும், வலம்புரிஜானும் ஒரிரு நிமிடங்கள் தமிழில் பேசினோம். இதேபோல் பிறமொழிப் படைப்பாளிகளும் தத்தம் மொழிகளில் பேசினார்கள். இந்த ஊர்வலத்தில் இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய எழுத்தாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள். இது எழுத்தச்சனை கடவுளாக்கும் முயற்சியல்ல. மாறாக அவரை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு ஊடகமென்று எம்.டி. வாசுதேவநாயர் எங்களிடம் தெளிவாக்கினார். எல்லாப் படைப்புகளும் மக்களுக்கே என்று சொன்ன கார்க்கீயின் மறுபதிப்பு முழக்கமாக இது எனக்கு தோன்றியது. எழுத்தச்சனுக்கு ஏன் சிலை வைக்கவில்லை என்று நான் கேட்டபோது இப்படித்தானிருப்பார் என்று அனுமானிக்க முடியாதவருக்கு எப்படி சிலை வைப்பது என்று எம்.டி.வி, என்னை வினாவினார். உடனே, எனக்கு சிலை மயமான சென்னைக் கடற்கரைச் சாலைதான் நினைவிற்கு வந்தது கூடவே திருவள்ளுவர் சிலையில் பூணூல் உள்ளே இருப்பது போல் ஒரு அனுமானம் ஏற்படுவதாய் கவிஞர் கண்ணதாசன் அப்போது உருவான திருவள்ளுவர் சிலைப்பற்றி கருத்து தெரிவித்ததும் நினைவிற்கு வந்தது. மலையாள இலக்கியவாதிகளைப் போல் அல்லாது, நாம் உருவங்களைப் பிடித்துக்கொண்டு, உயிர்ப்புகளை விட்டு விட்டோமோ என்றும் எண்ணத் தோன்றியது.{{nop}}<noinclude></noinclude> 9iv8yfa39fhjrzfkrqnayng6r2omc3l பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/26 250 213850 1839995 670866 2025-07-07T12:48:19Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||3}}</noinclude>விழாவின் இறுதிநாளில், விழாக்குழுவின் அலுவலகத்தில் தனது வசதியான நாற்காலியில் எம்.டி.வி. உட்கார்ந்திருக்கிறார் பக்கவாட்டிலுள்ள ஒரு சின்ன நாற்காலியில் அமர்ந்தபடி கதராடை அணிந்த ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருக்கிறார். சிறிது தொலைவில் இலக்கியக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் துவங்குவதற்கு முன்பே வந்துவிட்ட அந்தப் பெரியவரை, ‘இவர்தான் கேரள மாநில கலாச்சார மற்றும் மீன்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன்’ என்று வாசுதேவநாயர் எங்களுக்கு அறிமுகம் செய்கிறார். நாங்கள் வியந்து போகிறோம். <b>கலைஞருக்கு ஒரு பரிந்துரை....</b> தமிழக முதல்வர் <b>கருணாநிதி</b> அவர்கள், மாற்றாராலும் கலைஞர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவரது பெயருக்குப் பதிலாக அவரது பட்டமே எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்... நிற்க வேண்டும். தமிழ் இலக்கியத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர், எழுத்தச்சனுக்கு இருப்பது போன்ற, ஒரு தமிழ் வளாகத்தை நகர்ப்புறப்பகுதியில் பத்து ஏக்கர் பரப்பளவில் அமைக்க வேண்டும். இதில் திருவள்ளுவரையோ தமிழ்த்தாயையோ அல்லது தொல்காப்பியரையோ அல்லது மூவரையுமோ முன்னிலைப் படுத்த வேண்டும். எழுத்தச்சனின் எழுத்தாணியை, மக்களிடம் கொண்டு செல்வதுபோல் இவர்களை உருவகப்படுத்தி ஏடுகளோடு ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும். ஆண்டுதோறும் இலக்கிய விழா நடத்தி, அனைத்து தரப்பு தமிழர்களையும் திரட்ட வேண்டும். சாதி சமயங்களால் பிரிந்தும், இப்போது குட்டையைக் குழப்பும் மதவாத சக்திகளால் மிரண்டும் போயிருக்கும் தமிழர்களை, நம் முன்னோரின் பெயரால் ஒருமுனைப்படுத்த வேண்டும். தமிழக அரசு, இதற்காக படைப்பாளிகள், தமிழறிஞர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை அனுப்பலாம். எழுத்தச்சன் இலக்கிய வளாகத்திலுள்ள நவீனமான கட்டிடங்கள் கண்ணை மயக்குபவை. கருத்திற்கு நங்கூரம் பாய்ச்சுபவை. என்னைக் கேட்டால் எளிமையும், இனிமையும் கூடவே கம்பீரமும் கலந்த அந்தக் கட்டிடங்களை தமிழகத்தில் நகலெடுக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> nsqye6kwshlly8qteq67e7tng4mrox1 1839996 1839995 2025-07-07T12:49:18Z மொஹமது கராம் 14681 1839996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||17}}</noinclude>விழாவின் இறுதிநாளில், விழாக்குழுவின் அலுவலகத்தில் தனது வசதியான நாற்காலியில் எம்.டி.வி. உட்கார்ந்திருக்கிறார் பக்கவாட்டிலுள்ள ஒரு சின்ன நாற்காலியில் அமர்ந்தபடி கதராடை அணிந்த ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருக்கிறார். சிறிது தொலைவில் இலக்கியக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் துவங்குவதற்கு முன்பே வந்துவிட்ட அந்தப் பெரியவரை, ‘இவர்தான் கேரள மாநில கலாச்சார மற்றும் மீன்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன்’ என்று வாசுதேவநாயர் எங்களுக்கு அறிமுகம் செய்கிறார். நாங்கள் வியந்து போகிறோம். <b>கலைஞருக்கு ஒரு பரிந்துரை....</b> தமிழக முதல்வர் <b>கருணாநிதி</b> அவர்கள், மாற்றாராலும் கலைஞர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவரது பெயருக்குப் பதிலாக அவரது பட்டமே எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்... நிற்க வேண்டும். தமிழ் இலக்கியத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர், எழுத்தச்சனுக்கு இருப்பது போன்ற, ஒரு தமிழ் வளாகத்தை நகர்ப்புறப்பகுதியில் பத்து ஏக்கர் பரப்பளவில் அமைக்க வேண்டும். இதில் திருவள்ளுவரையோ தமிழ்த்தாயையோ அல்லது தொல்காப்பியரையோ அல்லது மூவரையுமோ முன்னிலைப் படுத்த வேண்டும். எழுத்தச்சனின் எழுத்தாணியை, மக்களிடம் கொண்டு செல்வதுபோல் இவர்களை உருவகப்படுத்தி ஏடுகளோடு ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும். ஆண்டுதோறும் இலக்கிய விழா நடத்தி, அனைத்து தரப்பு தமிழர்களையும் திரட்ட வேண்டும். சாதி சமயங்களால் பிரிந்தும், இப்போது குட்டையைக் குழப்பும் மதவாத சக்திகளால் மிரண்டும் போயிருக்கும் தமிழர்களை, நம் முன்னோரின் பெயரால் ஒருமுனைப்படுத்த வேண்டும். தமிழக அரசு, இதற்காக படைப்பாளிகள், தமிழறிஞர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை அனுப்பலாம். எழுத்தச்சன் இலக்கிய வளாகத்திலுள்ள நவீனமான கட்டிடங்கள் கண்ணை மயக்குபவை. கருத்திற்கு நங்கூரம் பாய்ச்சுபவை. என்னைக் கேட்டால் எளிமையும், இனிமையும் கூடவே கம்பீரமும் கலந்த அந்தக் கட்டிடங்களை தமிழகத்தில் நகலெடுக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> 7utppsfv2ucddab1snnkwmtbv1hyvaf 1840220 1839996 2025-07-08T04:52:43Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||17}}</noinclude>விழாவின் இறுதிநாளில், விழாக்குழுவின் அலுவலகத்தில் தனது வசதியான நாற்காலியில் எம்.டி.வி. உட்கார்ந்திருக்கிறார் பக்கவாட்டிலுள்ள ஒரு சின்ன நாற்காலியில் அமர்ந்தபடி கதராடை அணிந்த ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருக்கிறார். சிறிது தொலைவில் இலக்கியக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் துவங்குவதற்கு முன்பே வந்துவிட்ட அந்தப் பெரியவரை, ‘இவர்தான் கேரள மாநில கலாச்சார மற்றும் மீன்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன்’ என்று வாசுதேவநாயர் எங்களுக்கு அறிமுகம் செய்கிறார். நாங்கள் வியந்து போகிறோம். <b>கலைஞருக்கு ஒரு பரிந்துரை....</b> தமிழக முதல்வர் <b>கருணாநிதி</b> அவர்கள், மாற்றாராலும் கலைஞர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவரது பெயருக்குப் பதிலாக அவரது பட்டமே எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்... நிற்க வேண்டும். தமிழ் இலக்கியத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர், எழுத்தச்சனுக்கு இருப்பது போன்ற, ஒரு தமிழ் வளாகத்தை நகர்ப்புறப்பகுதியில் பத்து ஏக்கர் பரப்பளவில் அமைக்க வேண்டும். இதில் திருவள்ளுவரையோ தமிழ்த்தாயையோ அல்லது தொல்காப்பியரையோ அல்லது மூவரையுமோ முன்னிலைப் படுத்த வேண்டும். எழுத்தச்சனின் எழுத்தாணியை, மக்களிடம் கொண்டு செல்வதுபோல் இவர்களை உருவகப்படுத்தி ஏடுகளோடு ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும். ஆண்டுதோறும் இலக்கிய விழா நடத்தி, அனைத்து தரப்பு தமிழர்களையும் திரட்ட வேண்டும். சாதி சமயங்களால் பிரிந்தும், இப்போது குட்டையைக் குழப்பும் மதவாத சக்திகளால் மிரண்டும் போயிருக்கும் தமிழர்களை, நம் முன்னோரின் பெயரால் ஒருமுனைப்படுத்த வேண்டும். தமிழக அரசு, இதற்காக படைப்பாளிகள், தமிழறிஞர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை அனுப்பலாம். எழுத்தச்சன் இலக்கிய வளாகத்திலுள்ள நவீனமான கட்டிடங்கள் கண்ணை மயக்குபவை. கருத்திற்கு நங்கூரம் பாய்ச்சுபவை. என்னைக் கேட்டால் எளிமையும், இனிமையும் கூடவே கம்பீரமும் கலந்த அந்தக் கட்டிடங்களை தமிழகத்தில் நகலெடுக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> grchzoafbighq3ncbrhit821bub3gn2 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/27 250 213852 1839997 670867 2025-07-07T12:51:34Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1839997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|18||எழுத்தாணி ஊர்வலம்}}</noinclude>கலைஞர் கண்ட பூம்புகாரோ அல்லது வள்ளுவர் கோட்டமோ, நான் குறிப்பிடுகிற புதிய வளாகத்திற்கு மாற்றாகாது. தமிழக அரசு இந்த பரிந்துரையை ஏற்று ஆவண செய்தால் அது தமிழுக்குப் பெருமை. தமிழனுக்கும் பெருமை. இந்த இரண்டு பெருமைகளும் கலைஞருக்கே போய்ச் சேர வேண்டுமென்பதே என் விருப்பம். கலைஞர் தமிழர்களுக்கு விட்டுச் செல்லும் மிகப் பெரிய இலக்கிய பாரம்பரியமாக இதுவே அமையவேண்டும். இதுவரை, இந்த மலையாள பரிணாமத்தில், தமிழகத்தில் எதுவும் அமையவில்லை. கலைஞர் இதை ஈடேற்ற வேண்டும். {{rh|||<b>நவசக்தி வார இதழ்—1999.</b>}} <section end="3"/>{{nop}}<noinclude></noinclude> t5p7o4e0q7yi0ick4gvrjb4yb2zg9pw 1839999 1839997 2025-07-07T12:52:25Z மொஹமது கராம் 14681 1839999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|18||எழுத்தாணி ஊர்வலம்}}</noinclude>கலைஞர் கண்ட பூம்புகாரோ அல்லது வள்ளுவர் கோட்டமோ, நான் குறிப்பிடுகிற புதிய வளாகத்திற்கு மாற்றாகாது. தமிழக அரசு இந்த பரிந்துரையை ஏற்று ஆவண செய்தால் அது தமிழுக்குப் பெருமை. தமிழனுக்கும் பெருமை. இந்த இரண்டு பெருமைகளும் கலைஞருக்கே போய்ச் சேர வேண்டுமென்பதே என் விருப்பம். கலைஞர் தமிழர்களுக்கு விட்டுச் செல்லும் மிகப் பெரிய இலக்கிய பாரம்பரியமாக இதுவே அமையவேண்டும். இதுவரை, இந்த மலையாள பரிணாமத்தில், தமிழகத்தில் எதுவும் அமையவில்லை. கலைஞர் இதை ஈடேற்ற வேண்டும். {{rh|||<b>நவசக்தி வார இதழ்—1999.</b>}} <section end="3"/>{{nop}}<noinclude></noinclude> m6quy80skhkvri6ba2olbxxka05hsfn 1840221 1839999 2025-07-08T04:53:34Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|18||எழுத்தாணி ஊர்வலம்}}</noinclude>கலைஞர் கண்ட பூம்புகாரோ அல்லது வள்ளுவர் கோட்டமோ, நான் குறிப்பிடுகிற புதிய வளாகத்திற்கு மாற்றாகாது. தமிழக அரசு இந்த பரிந்துரையை ஏற்று ஆவண செய்தால் அது தமிழுக்குப் பெருமை. தமிழனுக்கும் பெருமை. இந்த இரண்டு பெருமைகளும் கலைஞருக்கே போய்ச் சேர வேண்டுமென்பதே என் விருப்பம். கலைஞர் தமிழர்களுக்கு விட்டுச் செல்லும் மிகப் பெரிய இலக்கிய பாரம்பரியமாக இதுவே அமையவேண்டும். இதுவரை, இந்த மலையாள பரிணாமத்தில், தமிழகத்தில் எதுவும் அமையவில்லை. கலைஞர் இதை ஈடேற்ற வேண்டும். {{rh|||<b>நவசக்தி வார இதழ்—1999.</b>}} <section end="3"/>{{nop}} {{dhr|10em}}<noinclude></noinclude> rbipp9xma0kngmq4xruj9gmrw3wi1w6 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/28 250 213855 1840054 670868 2025-07-07T15:35:12Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="4"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|24em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பல விளம்பரங்கள் மக்களின்<br>உயிருக்கே உலை வைக்கின்றன.<br>இந்த விளம்பரத் தீயில் மக்கள்<br>விட்டில் பூச்சிகளாகிறார்கள்.<br>மருந்துகளில் மூன்று மாத<br>தற்காலிக சுகத்தை அளிக்கும்<br>பொருட்களை கலப்படம் செய்து<br>விற்பது அரசுக்கு தெரியுமா? {{dhr|1em}} எய்ட்ஸ் நோயை குணப்<br>படுத்த முடியும் என்று சூளுரைக்<br>கிறார்கள். இதுவரை அப்படி ஒரு<br>மருந்து கண்டு பிடிக்கப்பட<br>வில்லை. இதன் தாக்கத்தை<br>கட்டுப்படுத்துவதை குணப்<br>படுத்தி விட்டதாக தம்பட்டம்<br>அடிக்கிறார்கள்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''உயிர்க்கொல்லி<br>விளம்பரங்கள்''</b>}} {{dhr|4em}} மகாபாரத் தர்மரையே<br>விரட்டியடித்த கலியுகம் முடிந்து,<br>அதைவிடக் கொடுடூரமான<br>விளம்பரயுகம் தொடங்கி சுமார்<br>அரைநூற்றாண்டு காலம் ஆகி<br>விட்டதாக எனக்குத் தோன்று<br>கிறது. 21-ஆம் நூற்றாண்டில்<br>இந்த விளம்பரத் தாக்கம் ஒரு<br>தாக்குதலாகவே ஆகப்போகிறது.<br>வயிற்றிலுள்ள குழந்தைகூட<br>‘வருக! குழந்தாய் வருக!’ என்ற<br>வரவேற்புவளைவைப்<br>பார்க்காமல் வெளியே வராதோ<br>என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.<br>அகப்பையில் இருந்து ஆகாய<br>விமானம் வரை, ஜட்டியில்<br>இருந்து சல்வார் கமீஸ் வரை<br>விளம்பரங்களே தீர்மானிக்கின்றன.<br>இதனால் நினைத்தது ஒன்று,<br>நடந்தது ஒன்று என்ற விவ<br>காரங்களுக்கும் பஞ்சமில்லை. {{dhr|1em}} <b>சேலையே செய்தியான கதை</b> {{dhr|1em}} எடுத்துக்காட்டாக, நான்<br>சென்னைத் தொலைக்காட்சியில்<br>செய்தி ஆசிரியராக இருந்தபோது,<br>பல செய்தி வாசிப்பாளர்கள்,<br>குறிப்பாக பெண்கள் அளவுக்கு<br>மீறிய ஆடை அலங்காரங்களோடு {{Multicol-end}}<noinclude></noinclude> ov2xbrhf2kdc18z02027icbs4uxp59g 1840055 1840054 2025-07-07T15:35:38Z மொஹமது கராம் 14681 1840055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="4"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பல விளம்பரங்கள் மக்களின்<br>உயிருக்கே உலை வைக்கின்றன.<br>இந்த விளம்பரத் தீயில் மக்கள்<br>விட்டில் பூச்சிகளாகிறார்கள்.<br>மருந்துகளில் மூன்று மாத<br>தற்காலிக சுகத்தை அளிக்கும்<br>பொருட்களை கலப்படம் செய்து<br>விற்பது அரசுக்கு தெரியுமா? {{dhr|1em}} எய்ட்ஸ் நோயை குணப்<br>படுத்த முடியும் என்று சூளுரைக்<br>கிறார்கள். இதுவரை அப்படி ஒரு<br>மருந்து கண்டு பிடிக்கப்பட<br>வில்லை. இதன் தாக்கத்தை<br>கட்டுப்படுத்துவதை குணப்<br>படுத்தி விட்டதாக தம்பட்டம்<br>அடிக்கிறார்கள்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''உயிர்க்கொல்லி<br>விளம்பரங்கள்''</b>}} {{dhr|4em}} மகாபாரத் தர்மரையே<br>விரட்டியடித்த கலியுகம் முடிந்து,<br>அதைவிடக் கொடுடூரமான<br>விளம்பரயுகம் தொடங்கி சுமார்<br>அரைநூற்றாண்டு காலம் ஆகி<br>விட்டதாக எனக்குத் தோன்று<br>கிறது. 21-ஆம் நூற்றாண்டில்<br>இந்த விளம்பரத் தாக்கம் ஒரு<br>தாக்குதலாகவே ஆகப்போகிறது.<br>வயிற்றிலுள்ள குழந்தைகூட<br>‘வருக! குழந்தாய் வருக!’ என்ற<br>வரவேற்புவளைவைப்<br>பார்க்காமல் வெளியே வராதோ<br>என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.<br>அகப்பையில் இருந்து ஆகாய<br>விமானம் வரை, ஜட்டியில்<br>இருந்து சல்வார் கமீஸ் வரை<br>விளம்பரங்களே தீர்மானிக்கின்றன.<br>இதனால் நினைத்தது ஒன்று,<br>நடந்தது ஒன்று என்ற விவ<br>காரங்களுக்கும் பஞ்சமில்லை. {{dhr|1em}} <b>சேலையே செய்தியான கதை</b> {{dhr|1em}} எடுத்துக்காட்டாக, நான்<br>சென்னைத் தொலைக்காட்சியில்<br>செய்தி ஆசிரியராக இருந்தபோது,<br>பல செய்தி வாசிப்பாளர்கள்,<br>குறிப்பாக பெண்கள் அளவுக்கு<br>மீறிய ஆடை அலங்காரங்களோடு {{Multicol-end}}<noinclude></noinclude> cpd22r2mdkd5cdtiw0n6prdxqyqox7p 1840056 1840055 2025-07-07T15:35:52Z மொஹமது கராம் 14681 1840056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="4"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|33em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பல விளம்பரங்கள் மக்களின்<br>உயிருக்கே உலை வைக்கின்றன.<br>இந்த விளம்பரத் தீயில் மக்கள்<br>விட்டில் பூச்சிகளாகிறார்கள்.<br>மருந்துகளில் மூன்று மாத<br>தற்காலிக சுகத்தை அளிக்கும்<br>பொருட்களை கலப்படம் செய்து<br>விற்பது அரசுக்கு தெரியுமா? {{dhr|1em}} எய்ட்ஸ் நோயை குணப்<br>படுத்த முடியும் என்று சூளுரைக்<br>கிறார்கள். இதுவரை அப்படி ஒரு<br>மருந்து கண்டு பிடிக்கப்பட<br>வில்லை. இதன் தாக்கத்தை<br>கட்டுப்படுத்துவதை குணப்<br>படுத்தி விட்டதாக தம்பட்டம்<br>அடிக்கிறார்கள்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''உயிர்க்கொல்லி<br>விளம்பரங்கள்''</b>}} {{dhr|4em}} மகாபாரத் தர்மரையே<br>விரட்டியடித்த கலியுகம் முடிந்து,<br>அதைவிடக் கொடுடூரமான<br>விளம்பரயுகம் தொடங்கி சுமார்<br>அரைநூற்றாண்டு காலம் ஆகி<br>விட்டதாக எனக்குத் தோன்று<br>கிறது. 21-ஆம் நூற்றாண்டில்<br>இந்த விளம்பரத் தாக்கம் ஒரு<br>தாக்குதலாகவே ஆகப்போகிறது.<br>வயிற்றிலுள்ள குழந்தைகூட<br>‘வருக! குழந்தாய் வருக!’ என்ற<br>வரவேற்புவளைவைப்<br>பார்க்காமல் வெளியே வராதோ<br>என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.<br>அகப்பையில் இருந்து ஆகாய<br>விமானம் வரை, ஜட்டியில்<br>இருந்து சல்வார் கமீஸ் வரை<br>விளம்பரங்களே தீர்மானிக்கின்றன.<br>இதனால் நினைத்தது ஒன்று,<br>நடந்தது ஒன்று என்ற விவ<br>காரங்களுக்கும் பஞ்சமில்லை. {{dhr|1em}} <b>சேலையே செய்தியான கதை</b> {{dhr|1em}} எடுத்துக்காட்டாக, நான்<br>சென்னைத் தொலைக்காட்சியில்<br>செய்தி ஆசிரியராக இருந்தபோது,<br>பல செய்தி வாசிப்பாளர்கள்,<br>குறிப்பாக பெண்கள் அளவுக்கு<br>மீறிய ஆடை அலங்காரங்களோடு {{Multicol-end}}<noinclude></noinclude> 9uniuonvocmga3asaihp5thnh0pjcpi 1840225 1840056 2025-07-08T04:56:19Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude><section begin="4"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|33em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பல விளம்பரங்கள் மக்களின்<br>உயிருக்கே உலை வைக்கின்றன.<br>இந்த விளம்பரத் தீயில் மக்கள்<br>விட்டில் பூச்சிகளாகிறார்கள்.<br>மருந்துகளில் மூன்று மாத<br>தற்காலிக சுகத்தை அளிக்கும்<br>பொருட்களை கலப்படம் செய்து<br>விற்பது அரசுக்கு தெரியுமா? {{dhr|1em}} எய்ட்ஸ் நோயை குணப்<br>படுத்த முடியும் என்று சூளுரைக்<br>கிறார்கள். இதுவரை அப்படி ஒரு<br>மருந்து கண்டு பிடிக்கப்பட<br>வில்லை. இதன் தாக்கத்தை<br>கட்டுப்படுத்துவதை குணப்<br>படுத்தி விட்டதாக தம்பட்டம்<br>அடிக்கிறார்கள்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''உயிர்க்கொல்லி<br>விளம்பரங்கள்''</b>}} {{dhr|4em}} மகாபாரத் தர்மரையே<br>விரட்டியடித்த கலியுகம் முடிந்து,<br>அதைவிடக் கொடுடூரமான<br>விளம்பரயுகம் தொடங்கி சுமார்<br>அரைநூற்றாண்டு காலம் ஆகி<br>விட்டதாக எனக்குத் தோன்று<br>கிறது. 21-ஆம் நூற்றாண்டில்<br>இந்த விளம்பரத் தாக்கம் ஒரு<br>தாக்குதலாகவே ஆகப்போகிறது.<br>வயிற்றிலுள்ள குழந்தைகூட<br>‘வருக! குழந்தாய் வருக!’ என்ற<br>வரவேற்புவளைவைப்<br>பார்க்காமல் வெளியே வராதோ<br>என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.<br>அகப்பையில் இருந்து ஆகாய<br>விமானம் வரை, ஜட்டியில்<br>இருந்து சல்வார் கமீஸ் வரை<br>விளம்பரங்களே தீர்மானிக்கின்றன.<br>இதனால் நினைத்தது ஒன்று,<br>நடந்தது ஒன்று என்ற விவ<br>காரங்களுக்கும் பஞ்சமில்லை. {{dhr|1em}} <b>சேலையே செய்தியான கதை</b> {{dhr|1em}} எடுத்துக்காட்டாக, நான்<br>சென்னைத் தொலைக்காட்சியில்<br>செய்தி ஆசிரியராக இருந்தபோது,<br>பல செய்தி வாசிப்பாளர்கள்,<br>குறிப்பாக பெண்கள் அளவுக்கு<br>மீறிய ஆடை அலங்காரங்களோடு {{Multicol-end}}<noinclude></noinclude> nv6az21izn6bjdj3erafm87leuumfyn பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/29 250 213857 1840067 670869 2025-07-07T15:41:16Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|20||உயிர்க்கொல்லி விளம்பரங்கள்}}</noinclude>தோன்றி வாசித்தார்கள். இந்த வாசிப்பில் நானும் பெருமிதப்பட்டேன். ஆனாலும் இந்தப் பெருமிதம் அதிக நாள் நீடிக்கவில்லை. கிராமங்களில், பெண் வாசிப்பாளர்கள் வாசித்த செய்திகளைவிட, அவர்களது ஆடை அலங்காரங்களைக் கவனிப்பதிலேயே மக்கள் குறிப்பாய் பெண்கள் கண்ணுங் கருத்தாக இருந்தார்கள். இவர்களுக்கு, இந்திய பாகிஸ்தான் பிரச்சினையை விட, நியாயவிலைக் கடைகளின் அநியாயங்களைவிட, செய்தி வாசிப்பாளர்கள் அணிந்த புடவை டிசைன் மாதிரியும், காதணிகள் மாதிரியும், எப்படி, எங்கே வாங்கலாம் என்பதே பிரச்சினை. இதை நேரடியாகவும், ஒரு சர்வே மூலமும் கண்டுபிடித்தோம். ஏற்கனவே தொலைக்காட்சி சட்ட விதிகளில், நிகழ்ச்சியாளர்கள், நேயர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஆடை அலங்காரங்களை கொள்ளலாகாது என்று இருக்கிறது. ஏட்டுச்சுரைக்காயாக இருந்த இந்த விதியை நான் புதுப்பித்து, கற்றறிக்கையாக விட்டேன். இன்றைய விளம்பரங்களும் இந்த லட்சணத்தில்தான் உள்ளன. எடுத்துக்காட்டாக, புதுடில்லியில், பல்கலைக்கழக அந்தஸ்தில் உள்ள இந்திய பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்தில், நான் பயிற்சி பெற சென்றிருந்தேன். (வேண்டாத அலுவலர்களை இப்படி பயிற்சிக்கு அனுப்புவது வழக்கம்) அப்போது விளம்பரத்துறைப் பேராசிரியர், நடந்த நிகழ்ச்சி ஒன்றை எடுத்துரைத்தார். ஒரு சோப்பு வியாபாரி, கிராமம் கிராமமாகச் சென்று, தனது சோப்பின் நியாயமான குணநலன்களை மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறார். அவருக்கு பேசிப் பேசி வாய் வலித்ததும், எழுதி எழுதி கைவலித்ததும் தான் மிச்சம். திடீரென்று அவருக்குள் ஒரு அற்புதமான வியாபாரி உயிர்த்தெழுந்தார். மறுநாள் அவர் தயாரித்த சோப்பைப் பயன்படுத்தினால், பாலியல் உறவு பிரமாதமாக இருக்கும் என்று ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார். அவ்வளவுதான். விற்பனை பிய்த்து வாங்கிவிட்டதாம். இதேபோல், இப்போது வயாகரா மாத்திரைக்கு வந்திருக்கும் பவுசை சொல்ல வேண்டியதில்லை. <b>உயிரைக் குடிப்பவை</b> உடைமைகள், ஆடைஅலங்காரங்கள் குறித்த விளம்பரங்கள் பெரும்பாலும் கையைமட்டுமே கடிக்கும். ஆனால் மருந்து மாத்திரைகள் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள், உயிரையே குடித்து விடுகின்றன. நமது சித்தவைத்தியர்களும் தங்களது தொழில்<noinclude></noinclude> gqqfa68g20ipkrtubjkaxptamt92147 1840227 1840067 2025-07-08T04:57:45Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|20||உயிர்க்கொல்லி விளம்பரங்கள்}}</noinclude>தோன்றி வாசித்தார்கள். இந்த வாசிப்பில் நானும் பெருமிதப்பட்டேன். ஆனாலும் இந்தப் பெருமிதம் அதிக நாள் நீடிக்கவில்லை. கிராமங்களில், பெண் வாசிப்பாளர்கள் வாசித்த செய்திகளைவிட, அவர்களது ஆடை அலங்காரங்களைக் கவனிப்பதிலேயே மக்கள் குறிப்பாய் பெண்கள் கண்ணுங் கருத்தாக இருந்தார்கள். இவர்களுக்கு, இந்திய பாகிஸ்தான் பிரச்சினையை விட, நியாயவிலைக் கடைகளின் அநியாயங்களைவிட, செய்தி வாசிப்பாளர்கள் அணிந்த புடவை டிசைன் மாதிரியும், காதணிகள் மாதிரியும், எப்படி, எங்கே வாங்கலாம் என்பதே பிரச்சினை. இதை நேரடியாகவும், ஒரு சர்வே மூலமும் கண்டுபிடித்தோம். ஏற்கனவே தொலைக்காட்சி சட்ட விதிகளில், நிகழ்ச்சியாளர்கள், நேயர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஆடை அலங்காரங்களை கொள்ளலாகாது என்று இருக்கிறது. ஏட்டுச்சுரைக்காயாக இருந்த இந்த விதியை நான் புதுப்பித்து, கற்றறிக்கையாக விட்டேன். இன்றைய விளம்பரங்களும் இந்த லட்சணத்தில்தான் உள்ளன. எடுத்துக்காட்டாக, புதுடில்லியில், பல்கலைக்கழக அந்தஸ்தில் உள்ள இந்திய பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்தில், நான் பயிற்சி பெற சென்றிருந்தேன். (வேண்டாத அலுவலர்களை இப்படி பயிற்சிக்கு அனுப்புவது வழக்கம்) அப்போது விளம்பரத்துறைப் பேராசிரியர், நடந்த நிகழ்ச்சி ஒன்றை எடுத்துரைத்தார். ஒரு சோப்பு வியாபாரி, கிராமம் கிராமமாகச் சென்று, தனது சோப்பின் நியாயமான குணநலன்களை மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறார். அவருக்கு பேசிப் பேசி வாய் வலித்ததும், எழுதி எழுதி கைவலித்ததும் தான் மிச்சம். திடீரென்று அவருக்குள் ஒரு அற்புதமான வியாபாரி உயிர்த்தெழுந்தார். மறுநாள் அவர் தயாரித்த சோப்பைப் பயன்படுத்தினால், பாலியல் உறவு பிரமாதமாக இருக்கும் என்று ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார். அவ்வளவுதான். விற்பனை பிய்த்து வாங்கிவிட்டதாம். இதேபோல், இப்போது வயாகரா மாத்திரைக்கு வந்திருக்கும் பவுசை சொல்ல வேண்டியதில்லை. <b>உயிரைக் குடிப்பவை</b> உடைமைகள், ஆடைஅலங்காரங்கள் குறித்த விளம்பரங்கள் பெரும்பாலும் கையைமட்டுமே கடிக்கும். ஆனால் மருந்து மாத்திரைகள் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள், உயிரையே குடித்து விடுகின்றன. நமது சித்தவைத்தியர்களும் தங்களது தொழில்<noinclude></noinclude> laz1eagjscry3gt18y9srem2nuqrk7c பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/30 250 213859 1840074 670871 2025-07-07T15:47:36Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||21}}</noinclude>நுட்பம் தாங்கள் கட்டியிருக்கும் டைகளில் மட்டுமே இருப்பதுபோல், கலர்கலரான டைகட்டி இடையிடையே ஆங்கில வார்த்தைகளை வலுக்கட்டாயமாகத் திணித்து பல்வேறு மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இது அல்லாது, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இடையே தீராத வியாதிகளை எல்லாம் தீர்த்து வைக்கும் மருந்து மாத்திரைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. உண்மைதான், இந்த விளம்பர மாத்திரைகளை நம்பி விழுங்குகிறவர்களை இந்த மாத்திரைகள் விழுங்கிவிடுகின்றன. இதனால்தான், மத்திய சுகாதார அமைச்சகம், ஒரு மாதத்திற்கு முன்புகூட, இத்தகைய விளம்பரதாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. ஆனாலும் மத்திய அரசுக்கு இது முக்கியமான பிரச்சினையல்ல என்பதால், இதுகுறித்து மக்களே ஒரு போராட்டத்திற்கு ஆயத்தமாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டாயங்கள் குறித்து இனி பார்ப்போம். <b>மாரடைப்பு விளம்பரம்</b> தொலைக்காட்சிகளில், குறிப்பிட்ட ஒருவகை மாத்திரையை சாப்பிட்டால் நீரழிவு நோயில் இருந்து நோயாளி முற்றிலும் விடுபடலாம் என்ற விளம்பரம் நாள்தோறும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கு நெருங்கிய ஆன்மீகத் தோழர் ஒருவர், இதை நம்பி அந்த மாத்திரைகளை வாங்கி உட்கொண்டாார். இதனால் அவரது கல்லீரல் பலமடங்கு வீங்கி, இதயத்தைத் தாக்கி மாரடைப்பே வந்துவிட்டது. எப்படியோ தப்பித்துவிட்டார். இவரைப்போலவே இதே மாத்திரைகளை வாங்கி உட்கொண்ட ஒரு நெய்வேலி நண்பருக்கும் இவரைப்போன்ற நிலைமை ஏற்பட்டதாம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் செத்தாரா பிழைத்தாரா என்பது தெரியவில்லை. அண்மையில், தோழர் வலம்புரிஜான் அவர்கள் நடத்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் இந்தத் தகவலை அந்த விளம்பரத்தின் பெயரைச் சொல்லியே அறிவித்தேன். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர் அனுராதா ரமணன், தானும் இந்த மாத்திரையை சாப்பிடத் துவங்கி இருப்பதாகவும், நான் சொன்னது நல்லதாய் போயிற்று என்றும் நன்றியுடன் குறிப்பிட்டார். அனுராதா ரமணனுக்கு ஆயுள் கெட்டியாக ஆனதில் எனக்கு மகிழ்ச்சி. <b>வேலியே பயிரை மேயும் விளம்பரம்</b> இதைப்போல் இன்னொரு உடல்நல விளம்பரம். எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்திவிடலாம் என்று விளம்பரங்கள்<noinclude></noinclude> ih32kefbqzfncgdt5hy0d8qd1pxt6y7 1840230 1840074 2025-07-08T04:59:00Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|சு. சமுத்திரம்||21}}</noinclude>நுட்பம் தாங்கள் கட்டியிருக்கும் டைகளில் மட்டுமே இருப்பதுபோல், கலர்கலரான டைகட்டி இடையிடையே ஆங்கில வார்த்தைகளை வலுக்கட்டாயமாகத் திணித்து பல்வேறு மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இது அல்லாது, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இடையே தீராத வியாதிகளை எல்லாம் தீர்த்து வைக்கும் மருந்து மாத்திரைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. உண்மைதான், இந்த விளம்பர மாத்திரைகளை நம்பி விழுங்குகிறவர்களை இந்த மாத்திரைகள் விழுங்கிவிடுகின்றன. இதனால்தான், மத்திய சுகாதார அமைச்சகம், ஒரு மாதத்திற்கு முன்புகூட, இத்தகைய விளம்பரதாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. ஆனாலும் மத்திய அரசுக்கு இது முக்கியமான பிரச்சினையல்ல என்பதால், இதுகுறித்து மக்களே ஒரு போராட்டத்திற்கு ஆயத்தமாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டாயங்கள் குறித்து இனி பார்ப்போம். <b>மாரடைப்பு விளம்பரம்</b> தொலைக்காட்சிகளில், குறிப்பிட்ட ஒருவகை மாத்திரையை சாப்பிட்டால் நீரழிவு நோயில் இருந்து நோயாளி முற்றிலும் விடுபடலாம் என்ற விளம்பரம் நாள்தோறும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கு நெருங்கிய ஆன்மீகத் தோழர் ஒருவர், இதை நம்பி அந்த மாத்திரைகளை வாங்கி உட்கொண்டாார். இதனால் அவரது கல்லீரல் பலமடங்கு வீங்கி, இதயத்தைத் தாக்கி மாரடைப்பே வந்துவிட்டது. எப்படியோ தப்பித்துவிட்டார். இவரைப்போலவே இதே மாத்திரைகளை வாங்கி உட்கொண்ட ஒரு நெய்வேலி நண்பருக்கும் இவரைப்போன்ற நிலைமை ஏற்பட்டதாம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் செத்தாரா பிழைத்தாரா என்பது தெரியவில்லை. அண்மையில், தோழர் வலம்புரிஜான் அவர்கள் நடத்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் இந்தத் தகவலை அந்த விளம்பரத்தின் பெயரைச் சொல்லியே அறிவித்தேன். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர் அனுராதா ரமணன், தானும் இந்த மாத்திரையை சாப்பிடத் துவங்கி இருப்பதாகவும், நான் சொன்னது நல்லதாய் போயிற்று என்றும் நன்றியுடன் குறிப்பிட்டார். அனுராதா ரமணனுக்கு ஆயுள் கெட்டியாக ஆனதில் எனக்கு மகிழ்ச்சி. <b>வேலியே பயிரை மேயும் விளம்பரம்</b> இதைப்போல் இன்னொரு உடல்நல விளம்பரம். எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்திவிடலாம் என்று விளம்பரங்கள்<noinclude></noinclude> 7mq5c7zjoqz240djj1uy6b7loodrsu6 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/31 250 213861 1840294 670872 2025-07-08T07:00:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|22||உயிர்க்கொல்லி விளம்பரங்கள்}}</noinclude>மூலம் பல மருத்துவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை கத்துக்குட்டிகள் என்றும், வசூல் மன்னர்கள் என்றும் மக்கள் ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், அரசு மருத்துவ அமைப்புகளே எய்ட்ஸ் நோயாளி ஒரு சிலரை குணப்படுத்தி விட்டதாக பகிரங்கமாக அறிவிக்கின்றன. என்னால் திட்டவட்டமாக கூறமுடியும். எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடித்த பாடில்லை. நமக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்தும், உடம்புக்குள் உட்புகும் பகையாளிக் கிருமிகளை கொன்று குவித்தும், உடல் நலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் நமது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், தங்களைப் போல் வேடம் போட்டு உள்ளே நுழையும் எய்ட்ஸ் கிருமிகளிடம் ஏமாந்து, அவற்றை ‘நம்ம ஆளு’ என்று நினைத்து உடம்புக்குள் விட்டு விடுகின்றன. இந்த சகுனிகளான எய்ட்ஸ் கிருமிகள், இறுதியில் வெள்ளை அணுக்களை வஞ்சகமாகக் கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அழித்து, ஒருவர் உடம்பை பல்வேறு நோய்களின் கூடாரமாக மாற்றிவிடுகின்றன. மருத்துவ வரலாற்றிலேயே புதுமையாகவும், எந்த மருந்துப் பகைவனும் இல்லாததுமான இந்த நோயை முறியடிக்கும் மருந்துகளைக் கண்டு பிடிக்க ஆய்வுகள் நடக்கின்றனவே தவிர, ஆன்றபயன் ஏதும் இல்லை. இந்தப் பின்னனியில், தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மருத்துவர்கள், எய்ட்ஸ் நோயாளிகளின் அவஸ்தையைக் குறைத்திருக்கலாம். ஆனால் அந்தநோயை அகற்றியிருக்க முடியாது. அதாவது எய்ட்ஸ் நோயின் அறிகுறிகளோடுதான் இந்த மருத்துவர்கள் போராடுகிறார்களே தவிர, அடிப்படையான நோய்க்கு எதிராக அல்ல. ஒரு நோயைக் குணப்படுத்துவது என்பது வேறு, கட்டுப்படுத்துவது என்பது வேறு. இப்படிச் சொல்வதால் நான் சித்த மருத்துவத்தையோ அல்லது அலோபதி மருத்துவத்தையோ குறை கூறுவதாகாது. இருதரப்பு மருத்துவத்தின் மீதும் எனக்கு பெருத்த மரியாதை உண்டு. ஆனால் இப்படி மரியாதைக்குறைவான காரியங்களை பொறுப்பானவர்களே செய்யும் போது அனத, நாம் கண்டித்தாகவேண்டும். வலம்புரிஜான் அவர்கள் நடத்திய விழிப்புணர்வு கூட்டத்தில் கேள்விபதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, தகுதிவாய்ந்த ஒரு சித்தமருத்துவ வல்லுநரிடம், இதே கேள்விகளைத்தான் நான் கேட்டேன் அவரும், சித்த மருத்துவத்திலும் இதுவரை எய்ட்ஸ் நோயின் தாக்குதலை குறைக்க முடிகிறதே தவிர, கரைக்க முடியவில்லை என்றார்.{{nop}}<noinclude></noinclude> m11fgrsya8ksfjklu64wbzmy3tiwoex பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/32 250 213863 1840300 670873 2025-07-08T07:09:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||23}}</noinclude><b>சட்ட மெளனம்</b> உடமைகளோடு விளையாடும் விளம்பரங்களையும் சுயதம்பட்டங்களையும் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் இப்படி உயிரோடு விளையாடும் விளம்பரங்களை, தம்பட்டங்களை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? கேரளத்தில் ஒரு வைத்தியரின் மூலம் பல எய்ட்ஸ் நோயாளிகள் “குணமானார்கள்”. இந்த நோய் தீர்ப்பு குணமான எய்ட்ஸ் நோயாளிகள் மூலமே விளம்பரப்படுத்தப்பட்டது. நோயிலிருந்து விடுதலை பெற்றதாக நம்பிய இந்த நோயாளிகள் மூன்று மாதத்திற்குப் பிறகு மீண்டும் பாயில் விழுந்தார்கள். விசாரித்துப் பார்த்ததில் ஸ்டெரிராய்ட் என்ற செயற்கை ஹார்மோனும், இதுமாதிரியான இதர சேர்க்கைகளும் மருந்துடன் கலந்து கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருத்துவர் எய்ட்ஸ் நோயாளிகள் மீது வியாபாரம் செய்வதும் வீதிக்கு வந்தது. இந்தவகை மருந்தை உட்கொண்டால் எந்த நோயாளியும் மூன்று மாதம் ஒருவித குணமாயையில் இருக்கலாம். பிறகு பழைய கதைதான். அதோடு இந்த ஸ்டெரிராய்ட் வேறு விளைவுகளையும் ஏற்படுத்தும். இவ்வளவு நடந்தபிறகும் இந்த புதிய எமன் மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக சட்டம் என்ன சொல்கிறது என்று, எனது இனிய தோழரும், சமூகப்பிரக்ஞை உள்ள பிரபல வழக்கறிஞருமான செந்தில்நாதனிடம் கேட்டேன். சமூகவிரோதமாகக் கருதப்படும் நடவடிக்கைகள் குறித்தோ அல்லது தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு குறித்தோ விளம்பரங்கள் செய்தால் அரசே நடவடிக்கை எடுக்கலாமாம். அதேசமயம், நோய் நொடி சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர், காவல் துறையிடம் புகார் செய்யலாம் அல்லது நுகர்வோர் நீதிமன்றத்திற்கு போகலாம் என்றும், இந்த இரண்டையும் தவிர வேறுவழி சட்டத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டார். விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு மாத்திரை, நான் குறிப்பிடுவதுபோல் பரவலாக சுகக்கேட்டை ஏற்படுத்தினால், அது வெளியே தெரிந்துவிடும் என்றும் வாதிட்டார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை காரணம் எல்லோருக்கும் காவல் துறையைப் பற்றியும் கன்ஸ்யூமர் கோர்ட்டைப் பற்றியும் தெரியும்.<noinclude></noinclude> tcrdsmjel16w410kof3x7njf4bsmm3h பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/33 250 213866 1840302 670874 2025-07-08T07:14:14Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|24||உயிர்க்கொல்லி விளம்பரங்கள்}}</noinclude>பாதிக்கப்பட்டவர்களின் ‘ஆனது ஆச்சு போனது போச்சு’ என்ற மனப்பான்மையும் புரியும். இப்போது, இந்தப்பிரச்சினையை வழக்கறிஞர்களாலும் தீர்க்க முடியாது என்பதையும் புதிதாகத் தெரிந்து கொண்டேன். ஆகமொத்தத்தில், நாடுமுழுவதும் உள்ள ஏழை பாழைகள், விளம்பர மருந்துகளை வாங்கி கடுமையாகப் பாதிக்கப்படுவது அல்லது இறந்துபோவது தொடரும் என்பதும் புரிந்து விட்டது. சிந்தனையாளரான செந்தில்நாதன் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம். என்றாலும், இதை சரிபார்க்கும் பொறுப்பு இந்த கட்டுரையின் வாசகர்களைப் பொறுத்தது. ஏனென்றால், இது வாழ்வுரிமைப் பிரச்சினை. தீயில் விழும் விட்டில் பூச்சிகள் மாதிரியான பிரச்சினை. வளைக்குள் நயவஞ்சகமாக நீளும் நரியின் வாலை உணவுப் பூச்சி என்று நம்பி, கவ்விப்பிடித்து அந்த நரிக்கே இரையாகும் நண்டுகள் பிரச்சினை மாதிரி.... என்றாலும், எனக்குத் தெரிந்து இது ஒரு பெரிய அரசியல்சாசனப் பிரச்சினையல்ல. ஒரு மருந்து மாத்திரை குறித்த விளம்பரம், வாய்மொழியாகவோ, பிரசுரமாகவோ, ஒலி-ஒளி பரப்புகளாகவோ வெளிப்படுவதற்கு முன்பு, இந்திய மருத்துவவல்லுநர்களையும் அலோபதிமருத்துவ வல்லுநர்களையும் கொண்ட ஒரு குழுவை அரசாங்கம் அமைக்கலாம். இந்தக் குழுவின் சான்றிதழ்கள் இல்லாமல், இத்தகைய விளம்பரங்கள் வெளிவரலாகாது என்று எச்சரிக்கலாம். இப்படி செய்தால், இது ஒரு ஆரோக்கியமான நடைமுறை ஆகும். மக்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வழிமுறையாகும். உயிர்களோடு விளையாடுபவர்களை தடுத்து, அப்பாவிகளை, இவர்களிடம் இருந்து மீட்டுவிடலாம். எல்லோரும் கண்ணால் பார்த்து, காதால் கேட்டு ரசிக்கும் இந்தப் பட்டப்பகல் கொலைகார விளம்பரங்களை பார்த்துக்கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது இருக்கலாகாது. விளம்பரங்களை ஒழுங்குபடுத்த அனைத்துத் துறை வள்ளுநர்களையும் கொண்ட குழுக்களை தேசிய, மாநில அளவிலும் அமைப்பதோடு, இந்த முறைகேடுகளை முடிவுக்கு கொண்டுவர தக்க சட்டங்களை இயற்றவேண்டும். {{rh|||<b>நவசக்தி வார இதழ் — 1999.</b>}}{{nop}}<noinclude></noinclude> in60givxjnkxd5uva38n667ntahyyqq 1840303 1840302 2025-07-08T07:15:05Z மொஹமது கராம் 14681 1840303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|24||உயிர்க்கொல்லி விளம்பரங்கள்}}</noinclude>பாதிக்கப்பட்டவர்களின் ‘ஆனது ஆச்சு போனது போச்சு’ என்ற மனப்பான்மையும் புரியும். இப்போது, இந்தப்பிரச்சினையை வழக்கறிஞர்களாலும் தீர்க்க முடியாது என்பதையும் புதிதாகத் தெரிந்து கொண்டேன். ஆகமொத்தத்தில், நாடுமுழுவதும் உள்ள ஏழை பாழைகள், விளம்பர மருந்துகளை வாங்கி கடுமையாகப் பாதிக்கப்படுவது அல்லது இறந்துபோவது தொடரும் என்பதும் புரிந்து விட்டது. சிந்தனையாளரான செந்தில்நாதன் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம். என்றாலும், இதை சரிபார்க்கும் பொறுப்பு இந்த கட்டுரையின் வாசகர்களைப் பொறுத்தது. ஏனென்றால், இது வாழ்வுரிமைப் பிரச்சினை. தீயில் விழும் விட்டில் பூச்சிகள் மாதிரியான பிரச்சினை. வளைக்குள் நயவஞ்சகமாக நீளும் நரியின் வாலை உணவுப் பூச்சி என்று நம்பி, கவ்விப்பிடித்து அந்த நரிக்கே இரையாகும் நண்டுகள் பிரச்சினை மாதிரி.... என்றாலும், எனக்குத் தெரிந்து இது ஒரு பெரிய அரசியல்சாசனப் பிரச்சினையல்ல. ஒரு மருந்து மாத்திரை குறித்த விளம்பரம், வாய்மொழியாகவோ, பிரசுரமாகவோ, ஒலி-ஒளி பரப்புகளாகவோ வெளிப்படுவதற்கு முன்பு, இந்திய மருத்துவவல்லுநர்களையும் அலோபதிமருத்துவ வல்லுநர்களையும் கொண்ட ஒரு குழுவை அரசாங்கம் அமைக்கலாம். இந்தக் குழுவின் சான்றிதழ்கள் இல்லாமல், இத்தகைய விளம்பரங்கள் வெளிவரலாகாது என்று எச்சரிக்கலாம். இப்படி செய்தால், இது ஒரு ஆரோக்கியமான நடைமுறை ஆகும். மக்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வழிமுறையாகும். உயிர்களோடு விளையாடுபவர்களை தடுத்து, அப்பாவிகளை, இவர்களிடம் இருந்து மீட்டுவிடலாம். எல்லோரும் கண்ணால் பார்த்து, காதால் கேட்டு ரசிக்கும் இந்தப் பட்டப்பகல் கொலைகார விளம்பரங்களை பார்த்துக்கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது இருக்கலாகாது. விளம்பரங்களை ஒழுங்குபடுத்த அனைத்துத் துறை வள்ளுநர்களையும் கொண்ட குழுக்களை தேசிய, மாநில அளவிலும் அமைப்பதோடு, இந்த முறைகேடுகளை முடிவுக்கு கொண்டுவர தக்க சட்டங்களை இயற்றவேண்டும். {{rh|||<b>நவசக்தி வார இதழ் — 1999.</b>}} <section end="4"/>{{nop}}<noinclude></noinclude> gl9mv0bsjadm1xa5xtm8v3fwzvxz878 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/34 250 213868 1840305 670875 2025-07-08T07:23:56Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="5"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|33em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பேராசிரியரின் பிள்ளைப்<br>பருவத்தில் தமிழின் இருண்ட<br>காலம் விடியலை நோக்கி<br>நகர்ந்தாலும் விடிவு ஏற்படாத<br>காலம். ஆங்கில மருத்துவக்<br>கல்வியில் பயில வேண்டும்<br>என்றால் வடமொழி தெரிந்து<br>இருக்க வேண்டும் என்ற<br>கட்டாயத்தை ஏற்படுத்திய காலம்.<br>வடமொழி தேவ மொழியாகவும்,<br>தமிழ் நீச மொழியாகவும்<br>கருதப்பட்ட கொடுங்காலம். {{dhr|1em}} இவற்றிகு எதிரான போராட்<br>டத்தை கல்வி நிறுவனங்களுக்கு<br>கொண்டு சென்றவர் பேராசிரியர்<br>அன்பழகன்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''வரலாற்றுப்<br>பின்னணியில்<br>பேராசிரியர்''</b>}} {{dhr|4em}} பேராசிரியர் அன்பழகன்<br>அவர்கள் பிறந்த காலக்<br>கட்டத்தையும், இப்போதைய<br>காலக் கட்டத்தையும் பின்னணி<br>யாகவும், முன்னணியாகவும்<br>வைத்து, தமிழ் - தமிழனின்<br>அன்றைய இன்றைய நிலைகளை<br>நினைத்துப் பார்க்கிறேன். பவள<br>விழாவிற்குக் கால் வைக்கும் பிற<br>பெரியவர்களைப் பற்றி எழுதும்<br>போது இந்த இருவேறு கால<br>கட்டங்களை நினைத்துப் பார்க்க<br>வேண்டிய அவசியம் எனக்கே<br>ஏற்படாமல் போகலாம். ஆனால்<br>பேராசிரியர் அன்பழகனாரின்<br>வாழ்க்கை பழைய கால கட்ட<br>த்தை மாற்றிய வரலாற்று ரீதியான<br>சமூகப் போராட்டத்தில் பின்னிப்<br>பிணைந்திருப்பதால் இவரது பவள<br>விழாவில் ஒரு வரலாற்றுப் பதிவு<br>அவசியமாகிறது. {{dhr|1em}} <b>விடியலை நோக்கி...</b> {{dhr|1em}} பேராசிரியரின் பிள்ளைப்<br>பருவத்தில் தமிழின் இருண்ட<br>காலம், விடியலை நோக்கி<br>நகர்ந்தாலும், விடிவு ஏற்படாத<br>காலம். ஆங்கில மருத்துவக் கல்வி<br>பயில வேண்டுமென்றால் வட<br>மொழி அவசியம் தெரிந்திருக்க<br>வேண்டுமென்ற பிறமொழி<br>ஆதிக்கக் கொடுங்கோன்மை {{Multicol-end}}<noinclude></noinclude> pfxb94tkzflk8w4sef1led6hxedu2b9 1840306 1840305 2025-07-08T07:24:22Z மொஹமது கராம் 14681 1840306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="5"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|40em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பேராசிரியரின் பிள்ளைப்<br>பருவத்தில் தமிழின் இருண்ட<br>காலம் விடியலை நோக்கி<br>நகர்ந்தாலும் விடிவு ஏற்படாத<br>காலம். ஆங்கில மருத்துவக்<br>கல்வியில் பயில வேண்டும்<br>என்றால் வடமொழி தெரிந்து<br>இருக்க வேண்டும் என்ற<br>கட்டாயத்தை ஏற்படுத்திய காலம்.<br>வடமொழி தேவ மொழியாகவும்,<br>தமிழ் நீச மொழியாகவும்<br>கருதப்பட்ட கொடுங்காலம். {{dhr|1em}} இவற்றிகு எதிரான போராட்<br>டத்தை கல்வி நிறுவனங்களுக்கு<br>கொண்டு சென்றவர் பேராசிரியர்<br>அன்பழகன்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''வரலாற்றுப்<br>பின்னணியில்<br>பேராசிரியர்''</b>}} {{dhr|4em}} பேராசிரியர் அன்பழகன்<br>அவர்கள் பிறந்த காலக்<br>கட்டத்தையும், இப்போதைய<br>காலக் கட்டத்தையும் பின்னணி<br>யாகவும், முன்னணியாகவும்<br>வைத்து, தமிழ் - தமிழனின்<br>அன்றைய இன்றைய நிலைகளை<br>நினைத்துப் பார்க்கிறேன். பவள<br>விழாவிற்குக் கால் வைக்கும் பிற<br>பெரியவர்களைப் பற்றி எழுதும்<br>போது இந்த இருவேறு கால<br>கட்டங்களை நினைத்துப் பார்க்க<br>வேண்டிய அவசியம் எனக்கே<br>ஏற்படாமல் போகலாம். ஆனால்<br>பேராசிரியர் அன்பழகனாரின்<br>வாழ்க்கை பழைய கால கட்ட<br>த்தை மாற்றிய வரலாற்று ரீதியான<br>சமூகப் போராட்டத்தில் பின்னிப்<br>பிணைந்திருப்பதால் இவரது பவள<br>விழாவில் ஒரு வரலாற்றுப் பதிவு<br>அவசியமாகிறது. {{dhr|1em}} <b>விடியலை நோக்கி...</b> {{dhr|1em}} பேராசிரியரின் பிள்ளைப்<br>பருவத்தில் தமிழின் இருண்ட<br>காலம், விடியலை நோக்கி<br>நகர்ந்தாலும், விடிவு ஏற்படாத<br>காலம். ஆங்கில மருத்துவக் கல்வி<br>பயில வேண்டுமென்றால் வட<br>மொழி அவசியம் தெரிந்திருக்க<br>வேண்டுமென்ற பிறமொழி<br>ஆதிக்கக் கொடுங்கோன்மை {{Multicol-end}}<noinclude></noinclude> 4gsm1vfhnws8jbmyulzl8rhr88r734u பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/35 250 213870 1840314 670876 2025-07-08T07:33:29Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|26||வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர்}}</noinclude>நிலவிய காலம். வடமொழி தேவ மொழியாகவும், தமிழ் மொழி நீச மொழியாகவும் கருதப்பட்ட காலம். இந்தக் கால கட்டத்தில் மறைமலை அடிகள், திரு.வி.க. போன்ற தமிழ் அறிஞர்கள் ஒரு அறிவுப் போராட்டத்தை நடத்தியபோது, அதே போராட்டத்தை மக்களுக்கு அறிவிப்பாகச் செய்தவர்களில் குறிப்பிடத்ததக்கவர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி.... இந்தப் போராட்டத்தை உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் எடுத்துச் சென்றவர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். தமிழாசிரியர்கள், கல்வி நிறுவனங்களில் கேலிப் பொருட்களாக, இளக்காரமாக நினைக்கப்பட்ட காலம் அந்தக்காலம். ஆங்கில, கணித ஆசிரியர்களிடம் பயபக்தியுடன் பழகும் மாணவர்கள், அதை ஈடு செய்யும் வகையில் அவர்களின் நையாண்டிக்குச் சுமைதாங்கியானவர்கள் தமிழாசிரியர்கள். புதுமைப்பித்தன் கூட, விவகாரத்தின் கனபரிமாணம் புரியாமல், தமிழாசிரியர் என்ற பாத்திரத்தை ஆண் சரஸ்வதி என்று கிண்டலாக வர்ணித்ததுண்டு. இத்தகைய காலக்கட்டம் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருந்தாலும், அது அரைகுறை உயிரோடு 1950ஆம் ஆண்டுவரை இருந்ததாக அனுமானிக்கிறேன். <b>பேராசிரியரும் — மாற்றப்பட்ட வரலாறும்</b> இத்தகைய வரலாற்றுப் போக்கை மாற்றி அமைத்ததில் பேராசிரியர் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அவரின் கண்ணியமான தோற்றம்-கறாரான உரையாடல் இவற்றுடன் ஒரு மாபெரும் இயக்கத்தில் தன்னைத் துணிச்சலாக இணைத்துக் கொண்டது. தமிழகத்திலுள்ள தமிழாசிரியர்களின் கூன்களை நிமிர வைத்தது. ஒரு தமிழ்ப் பேராசிரியர் போராளியாகவும், இருக்க முடியும். என்பதை பயந்த சுபாவம் உள்ள நமது தமிழாசிரியர்களை நினைக்க வைத்தவர். மொழி பண்பாட்டு மக்கள் போராட்டத்தில் முதல் தலைமுறையான பேராசிரியர் <b>அன்பழகனே.</b> இரண்டாவது தலைமுறையில் டாக்டர் <b>தமிழ்க்குடிமகன்,</b> முனைவர்கள் டாக்டர் <b>பொற்கோ, ச. மெய்யப்பன், இளவரசு, தி.சு. நடராசன்,</b> ஈரோடு <b>தமிழன்பன், இன்குலாப், இரபீசிங், இராம குருநாதன்</b> போன்ற தமிழாசான்கள் உருவாவதற்குக் காரணம். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர்கனை மற்ற மாணவர்களைப்போல் நையாண்டி செய்த மாணவர்கள்கூட, கல்லூரிகளில் தமிழாசிரியர்களைச் சுற்றி வலம்வர வேண்டிய காலக் கட்டாயத்தை மாணவர்களிடையே உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பேராசிரியர்கள் டாக்டர். <b>மு. வரதராசனார்,</b> டாக்டர் <b>வ. சுபமாணிக்கம், ஆ.மு. பரமசிவானந்தம், அ.ச. ஞானசம்பந்தம், அன்பழகன், அரசு மணிமேகலை</b> போன்றவர்கள்.{{nop}}<noinclude></noinclude> e1sknpkcypxpxmwdwyhuu94nnqzc58x பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/36 250 213872 1840317 670877 2025-07-08T07:41:46Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||27}}</noinclude><b>வெளியே போகாத வெளிநடப்பு</b> நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது நானே நடத்திய ஒரு வெளிநடப்பை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் தீவிரமான மாணவர் காங்கிரஸ்காரன்... வடசென்னையில் உள்ள சர் தியாகராயர் கல்லூரியின் தமிழ் மன்றத்தில் பேராசிரியர் பேசுகிறார். அவர் வடவர், இந்தி என்று பேசத் துவங்கினால் உடனே வெளிநடப்புச் செய்ய வேண்டுமென்ற திட்டத்துடன் நான் முதல்வரிசையில் உட்கார்ந்து இருந்தேன். அவரும் பேசினார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் பேசினார். நான் வெளிநடப்பு செய்தேன். ஒற்றைக் காங்கிரஸ்காரனான என்னுடைய போக்கை, கழக மாணவர் கண்டிக்கவில்லை என்றால், அதற்குள்ள ஒரேயொரு காரணம், அவர்கள் பேராசிரியரின் பேச்சில் அப்படியே மயங்கிப் போனதுதான். நான்கூட அவரது தர்க்கரீதியான, இயல்பான பேச்சில் கட்டுண்டு பின்வரிசையில் உட்கார்ந்து, அவர் பேச்சை ரசித்ததையும், பின்னர் சிந்தித்ததையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பேராசிரியரின் சொற்பொழிவு ஆற்று நீரோட்டம் போன்றது. பாய்ச்சலும் இருக்கும், பசுமையும் இருக்கும். ஒரு தோழர், தனது குடும்பத்தினருக்குத் தான் கண்டதையும், கேட்டதையும் எப்படி மனம் ஒன்றிச் சொல்வாரோ அப்படி இருக்கும் அவர் பேச்சு... கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் போங்கள் என்ற பாவனையில் அவர் பேச்சுத் துவங்குவதுபோல் எனக்குத் தோன்றும். ஆனால் பேசப் பேச அவர் தனது பேச்சை நிறுத்தி விடக் கூடாதே என்ற ஒரு விருப்பத்தை ஏற்படுத்திவிடும். கொண்ட கருத்தும் கோணாமல் மேடைப் பண்பாட்டையும் மீறாமல் இயல்பாக இருக்கும். அவரது பேச்சில் நான் சொக்கிப் போனேன். <b>நோக்கும் போக்கும்</b> போராசிரியரின் நோக்கும், போக்கும் ஒரு துறவியின் தோரணையைப் போலத் தோன்றும். இப்படிப்பட்ட தோரணை பொது வாழ்வில் ஒருவரை வெற்றிகரமாக ஈடுபடுத்த முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பும். என்னுள்ளேயும் எழுப்பி இருக்கிறது. ஆனால் இந்தக் கேள்விக்கான திட்டவட்டமான பதில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூல் வெளியீட்டு விழாவில் எனக்குக் கிடைத்தது. அந்த விழாவில் பேராசிரியரின் உரை ஒரு தன்னிலை விளக்கமாக எனக்குத் தோன்றியது. அரசியலில் அவர் மேற்கொண்டிருக்கும் பரபரப்பற்ற நிதானமான போக்கு தற்செயலான ஒரு நிகழ்வல்ல என்பதும், அவர் தனக்குத்தானே அமைத்துக் கொண்ட ஒரு<noinclude></noinclude> 7fg9isww1zwdykyv46ukaadv7hu7t6m பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/37 250 213874 1840318 670878 2025-07-08T07:47:55Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|28||வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர்}}</noinclude>வரைமுறை என்பதும் எனக்குத் தெளிவானது. கலைஞரின் வேகத்தையும், தனது நிதானத்தையும், சில நிகழ்ச்சிகள் மூலம் குறிப்பிட்டார். கலைஞரின் செயல்பாட்டுத் திறனையும், தனது தீர்க்க தரிசனமான சிந்தனைப் போக்கையும் ஒப்பிட்ட பேராசிரியர், இருவருக்குமிடையே நிலவும் அணுகுமுறை “வேற்றுமைகளில்” ஒரு ஒற்றுமை நிலவுவதை சொல்லாமலே உணர்த்திவிட்டார். ஒரு நாணயத்தின் அசோக சக்கரம் கலைஞர் என்றால், அந்த நாணயத்தின் மறுபக்கத்தின் குறியீடு பேராசிரியர். ராம், லட்சுமணர்களிடம் ஒற்றுமை இருந்தாலும், அது ஆண்டான் அடிமை உறவு. புதிய இராம லட்சுமணர்களான கலைஞருக்கும் பேராசிரியருக்கும் உள்ள உறவு ஒரு தோழமை உறவு. பேராசிரியரும், கலைஞரும் பொது நிகழ்ச்சிகளிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் ஒருவருக்கொருவர் பழகும் விதத்தை நான் பத்திரிகையாளன் என்ற முறையில் ரசிப்பதுண்டு. பேராசிரியரின் மௌன சம்மதத்தை அவரது முகபாவம் மூலம் வாங்கிக் கொண்டே சில திடீர்ப் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பவர் கலைஞர். எனக்குத் தெரிந்த அரசியலில் இப்படிப்பட்ட இணையான தோழமையை நான் கண்டதில்லை. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், இந்த இணைக்கு முன்னோடிகளாக கார்ல் மார்க்சும், ஏஞ்செல்சும்தான் நினைவுக்கு வருகிறார்கள். இன்றைய தமிழர்கள் சாதிச் சண்டைகளில் உடல் சிதைந்து, அந்நியக் கலாச்சாரப் படையெடுப்பால் மனம் சிதைந்து கிடக்கிறார்கள். கலைஞர், பேராசிரியர் காலத்துக்குப் பிறகு, இவர்கள் என்ன ஆவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த “அறியாத் தமிழர்களின் அந்நிய மோகம்” இவர்களை என்ன பாடுபடுத்தப் போகிறதோ என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. எனவே, பேராசிரியர் அவர்கள் மேன்மேலும் விழா காண வேண்டுமென்பதும், அந்த விழாவில் கலைஞரும் கலந்துகொள்ள வேண்டுமென்பதும் எனது நெஞ்சார்ந்த விருப்பம். எல்லைக் காந்திகான் அப்துல் கபார்கான் நாட்டுப் பிரிவினையின்போது சொன்னதைச் சிறிது மாற்றிச் சொல்ல வேண்டும்போல் தோன்றுகிறது. “ஏய், இயற்கையே! தயவு செய்து மூப்பைச் சாக்காகக் கட்டி எங்கள் தலைவர்களை எங்களிடமிருந்து பிரித்தெடுத்து எங்களை ஓநாய்களிடம் ஒப்படைத்து விடாதே.... அவர்களை பல்லாண்டு, பல்லாண்டு வாழ வைப்பாயாக....” {{rh|||பேராசிரியர் பவளவிழா மலர் — 1998.}}{{nop}}<noinclude></noinclude> sxj9vti6405gsdawy6cvcldallbq53n 1840319 1840318 2025-07-08T07:48:11Z மொஹமது கராம் 14681 1840319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|28||வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர்}}</noinclude>வரைமுறை என்பதும் எனக்குத் தெளிவானது. கலைஞரின் வேகத்தையும், தனது நிதானத்தையும், சில நிகழ்ச்சிகள் மூலம் குறிப்பிட்டார். கலைஞரின் செயல்பாட்டுத் திறனையும், தனது தீர்க்க தரிசனமான சிந்தனைப் போக்கையும் ஒப்பிட்ட பேராசிரியர், இருவருக்குமிடையே நிலவும் அணுகுமுறை “வேற்றுமைகளில்” ஒரு ஒற்றுமை நிலவுவதை சொல்லாமலே உணர்த்திவிட்டார். ஒரு நாணயத்தின் அசோக சக்கரம் கலைஞர் என்றால், அந்த நாணயத்தின் மறுபக்கத்தின் குறியீடு பேராசிரியர். ராம், லட்சுமணர்களிடம் ஒற்றுமை இருந்தாலும், அது ஆண்டான் அடிமை உறவு. புதிய இராம லட்சுமணர்களான கலைஞருக்கும் பேராசிரியருக்கும் உள்ள உறவு ஒரு தோழமை உறவு. பேராசிரியரும், கலைஞரும் பொது நிகழ்ச்சிகளிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் ஒருவருக்கொருவர் பழகும் விதத்தை நான் பத்திரிகையாளன் என்ற முறையில் ரசிப்பதுண்டு. பேராசிரியரின் மௌன சம்மதத்தை அவரது முகபாவம் மூலம் வாங்கிக் கொண்டே சில திடீர்ப் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பவர் கலைஞர். எனக்குத் தெரிந்த அரசியலில் இப்படிப்பட்ட இணையான தோழமையை நான் கண்டதில்லை. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், இந்த இணைக்கு முன்னோடிகளாக கார்ல் மார்க்சும், ஏஞ்செல்சும்தான் நினைவுக்கு வருகிறார்கள். இன்றைய தமிழர்கள் சாதிச் சண்டைகளில் உடல் சிதைந்து, அந்நியக் கலாச்சாரப் படையெடுப்பால் மனம் சிதைந்து கிடக்கிறார்கள். கலைஞர், பேராசிரியர் காலத்துக்குப் பிறகு, இவர்கள் என்ன ஆவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த “அறியாத் தமிழர்களின் அந்நிய மோகம்” இவர்களை என்ன பாடுபடுத்தப் போகிறதோ என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. எனவே, பேராசிரியர் அவர்கள் மேன்மேலும் விழா காண வேண்டுமென்பதும், அந்த விழாவில் கலைஞரும் கலந்துகொள்ள வேண்டுமென்பதும் எனது நெஞ்சார்ந்த விருப்பம். எல்லைக் காந்திகான் அப்துல் கபார்கான் நாட்டுப் பிரிவினையின்போது சொன்னதைச் சிறிது மாற்றிச் சொல்ல வேண்டும்போல் தோன்றுகிறது. “ஏய், இயற்கையே! தயவு செய்து மூப்பைச் சாக்காகக் கட்டி எங்கள் தலைவர்களை எங்களிடமிருந்து பிரித்தெடுத்து எங்களை ஓநாய்களிடம் ஒப்படைத்து விடாதே.... அவர்களை பல்லாண்டு, பல்லாண்டு வாழ வைப்பாயாக....” {{rh|||<b>பேராசிரியர் பவளவிழா மலர் — 1998.</b>}}{{nop}}<noinclude></noinclude> c16h9vji0d4nh511a70737omhyuyzgk 1840320 1840319 2025-07-08T07:49:21Z மொஹமது கராம் 14681 1840320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|28||வரலாற்றுப் பின்னணியில் பேராசிரியர்}}</noinclude>வரைமுறை என்பதும் எனக்குத் தெளிவானது. கலைஞரின் வேகத்தையும், தனது நிதானத்தையும், சில நிகழ்ச்சிகள் மூலம் குறிப்பிட்டார். கலைஞரின் செயல்பாட்டுத் திறனையும், தனது தீர்க்க தரிசனமான சிந்தனைப் போக்கையும் ஒப்பிட்ட பேராசிரியர், இருவருக்குமிடையே நிலவும் அணுகுமுறை “வேற்றுமைகளில்” ஒரு ஒற்றுமை நிலவுவதை சொல்லாமலே உணர்த்திவிட்டார். ஒரு நாணயத்தின் அசோக சக்கரம் கலைஞர் என்றால், அந்த நாணயத்தின் மறுபக்கத்தின் குறியீடு பேராசிரியர். ராம், லட்சுமணர்களிடம் ஒற்றுமை இருந்தாலும், அது ஆண்டான் அடிமை உறவு. புதிய இராம லட்சுமணர்களான கலைஞருக்கும் பேராசிரியருக்கும் உள்ள உறவு ஒரு தோழமை உறவு. பேராசிரியரும், கலைஞரும் பொது நிகழ்ச்சிகளிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் ஒருவருக்கொருவர் பழகும் விதத்தை நான் பத்திரிகையாளன் என்ற முறையில் ரசிப்பதுண்டு. பேராசிரியரின் மௌன சம்மதத்தை அவரது முகபாவம் மூலம் வாங்கிக் கொண்டே சில திடீர்ப் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பவர் கலைஞர். எனக்குத் தெரிந்த அரசியலில் இப்படிப்பட்ட இணையான தோழமையை நான் கண்டதில்லை. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், இந்த இணைக்கு முன்னோடிகளாக கார்ல் மார்க்சும், ஏஞ்செல்சும்தான் நினைவுக்கு வருகிறார்கள். இன்றைய தமிழர்கள் சாதிச் சண்டைகளில் உடல் சிதைந்து, அந்நியக் கலாச்சாரப் படையெடுப்பால் மனம் சிதைந்து கிடக்கிறார்கள். கலைஞர், பேராசிரியர் காலத்துக்குப் பிறகு, இவர்கள் என்ன ஆவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த “அறியாத் தமிழர்களின் அந்நிய மோகம்” இவர்களை என்ன பாடுபடுத்தப் போகிறதோ என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. எனவே, பேராசிரியர் அவர்கள் மேன்மேலும் விழா காண வேண்டுமென்பதும், அந்த விழாவில் கலைஞரும் கலந்துகொள்ள வேண்டுமென்பதும் எனது நெஞ்சார்ந்த விருப்பம். எல்லைக் காந்திகான் அப்துல் கபார்கான் நாட்டுப் பிரிவினையின்போது சொன்னதைச் சிறிது மாற்றிச் சொல்ல வேண்டும்போல் தோன்றுகிறது. “ஏய், இயற்கையே! தயவு செய்து மூப்பைச் சாக்காகக் கட்டி எங்கள் தலைவர்களை எங்களிடமிருந்து பிரித்தெடுத்து எங்களை ஓநாய்களிடம் ஒப்படைத்து விடாதே.... அவர்களை பல்லாண்டு, பல்லாண்டு வாழ வைப்பாயாக....” {{rh|||<b>பேராசிரியர் பவளவிழா மலர் — 1998.</b>}} <section end="5"/>{{nop}}<noinclude></noinclude> fpzq927e4fcmue1n0jj3rqxfq7z9k8k பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/38 250 213876 1840328 670879 2025-07-08T07:57:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="6"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|40em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பெண்களுக்கான<br>சொத்துரிமை மறுப்பு இன்றைய<br>பெண்ணியப் போராளிகளின்<br>நிகழ்ச்சி நிரலில் இடம் பெற<br>வில்லை. பெரும்பாலான<br>பெண்ணிய போராளிகளுக்கு<br>கன்னியாகுமரி மாவட்டத்தில்,<br>மாராப்பு போடும் உரிமை கேட்டு<br>35 ஆண்டுகாலம் எளிய பெண்கள்<br>நடத்திய போராட்ட வரலாறு<br>தெரியாது. {{dhr|1em}} பெண்ணியம் என்பது நடுத்தர<br>வர்க்கத்திலிருந்து விடுபட<br>வேண்டும். தோள் சீலைப்<br>போராட்டமே பெண்ணியப்<br>போராட்டத்தின் வரலாற்றில்<br>பிள்ளையார் சுழியாக இருக்க<br>வேண்டும்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''சீர்வரிசை<br>முகமூடிகள்''</b>}} {{dhr|4em}} பெண்ணியம் பெரிதாகப்<br>பேசப்படுகிற காலம். இன்னும்<br>அதிகமாகப் பேசப்பட வேண்டிய<br>காலக்கட்டம். எல்லாச் சமயங்களும்<br>முடக்கிவைத்த பெண்ணினத்தின்<br>இன்றைய தலைமுறை, பெண்ணியக்<br>கத்தை விடுதலை வேள்வியாக<br>நடத்தி வருகிறது. உடன்கட்டை<br>என்ற பெயரில் பெண்களை,<br>இறந்த கணவனின் சிதையில்<br>சேர்த்து எரித்ததுபோன்ற<br>கடந்தகால சுமையோடு, ‘சாண்<br>பிள்ளையானாலும் ஆண்பிள்ளை<br>ஆண் பிள்ளையே’ என்ற<br>பழமொழி ஊர் முழுக்க நிலவும்<br>நிகழ்கால விலங்கோடு, தவிப்பது<br>தெரியாமலே தவிக்கிறது<br>பெண்ணினம். இதன் போராளிகள்,<br>தங்களுக்காகவும், தங்களது<br>சகப்பெண்களுக்காகவும் போராடி<br>வருகிறார்கள். இது வரவேற்கத்<br>தக்கது. பொதுவாக, அடிமைப்பட்ட<br>நாடோ அல்லது இனமோ<br>தங்களை அடக்கி வைத்த அந்<br>நியர்களுக்கு எதிராகவே போராட<br>வேண்டிய கட்டாயம் உண்டு.<br>ஆனால், பெண்களுக்கோ தங்களது<br>உரிமைப் போராட்டத்தை<br>குடும்பத்தினருக்கு எதிராகவே<br>நடத்த வேண்டிய, விருப்பத்திற்கு<br>விரோதமான சூழல் நிலவுகிறது. {{Multicol-end}}<noinclude></noinclude> tkcrqsthf69r698rz59cicwftz1u38u 1840329 1840328 2025-07-08T07:58:09Z மொஹமது கராம் 14681 1840329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="6"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|35em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பெண்களுக்கான<br>சொத்துரிமை மறுப்பு இன்றைய<br>பெண்ணியப் போராளிகளின்<br>நிகழ்ச்சி நிரலில் இடம் பெற<br>வில்லை. பெரும்பாலான<br>பெண்ணிய போராளிகளுக்கு<br>கன்னியாகுமரி மாவட்டத்தில்,<br>மாராப்பு போடும் உரிமை கேட்டு<br>35 ஆண்டுகாலம் எளிய பெண்கள்<br>நடத்திய போராட்ட வரலாறு<br>தெரியாது. {{dhr|1em}} பெண்ணியம் என்பது நடுத்தர<br>வர்க்கத்திலிருந்து விடுபட<br>வேண்டும். தோள் சீலைப்<br>போராட்டமே பெண்ணியப்<br>போராட்டத்தின் வரலாற்றில்<br>பிள்ளையார் சுழியாக இருக்க<br>வேண்டும்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''சீர்வரிசை<br>முகமூடிகள்''</b>}} {{dhr|4em}} பெண்ணியம் பெரிதாகப்<br>பேசப்படுகிற காலம். இன்னும்<br>அதிகமாகப் பேசப்பட வேண்டிய<br>காலக்கட்டம். எல்லாச் சமயங்களும்<br>முடக்கிவைத்த பெண்ணினத்தின்<br>இன்றைய தலைமுறை, பெண்ணியக்<br>கத்தை விடுதலை வேள்வியாக<br>நடத்தி வருகிறது. உடன்கட்டை<br>என்ற பெயரில் பெண்களை,<br>இறந்த கணவனின் சிதையில்<br>சேர்த்து எரித்ததுபோன்ற<br>கடந்தகால சுமையோடு, ‘சாண்<br>பிள்ளையானாலும் ஆண்பிள்ளை<br>ஆண் பிள்ளையே’ என்ற<br>பழமொழி ஊர் முழுக்க நிலவும்<br>நிகழ்கால விலங்கோடு, தவிப்பது<br>தெரியாமலே தவிக்கிறது<br>பெண்ணினம். இதன் போராளிகள்,<br>தங்களுக்காகவும், தங்களது<br>சகப்பெண்களுக்காகவும் போராடி<br>வருகிறார்கள். இது வரவேற்கத்<br>தக்கது. பொதுவாக, அடிமைப்பட்ட<br>நாடோ அல்லது இனமோ<br>தங்களை அடக்கி வைத்த அந்<br>நியர்களுக்கு எதிராகவே போராட<br>வேண்டிய கட்டாயம் உண்டு.<br>ஆனால், பெண்களுக்கோ தங்களது<br>உரிமைப் போராட்டத்தை<br>குடும்பத்தினருக்கு எதிராகவே<br>நடத்த வேண்டிய, விருப்பத்திற்கு<br>விரோதமான சூழல் நிலவுகிறது. {{Multicol-end}}<noinclude></noinclude> mjs5lpmbp5cbz45h1dceqc8i74uewed 1840330 1840329 2025-07-08T07:58:22Z மொஹமது கராம் 14681 1840330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="6"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|33em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பெண்களுக்கான<br>சொத்துரிமை மறுப்பு இன்றைய<br>பெண்ணியப் போராளிகளின்<br>நிகழ்ச்சி நிரலில் இடம் பெற<br>வில்லை. பெரும்பாலான<br>பெண்ணிய போராளிகளுக்கு<br>கன்னியாகுமரி மாவட்டத்தில்,<br>மாராப்பு போடும் உரிமை கேட்டு<br>35 ஆண்டுகாலம் எளிய பெண்கள்<br>நடத்திய போராட்ட வரலாறு<br>தெரியாது. {{dhr|1em}} பெண்ணியம் என்பது நடுத்தர<br>வர்க்கத்திலிருந்து விடுபட<br>வேண்டும். தோள் சீலைப்<br>போராட்டமே பெண்ணியப்<br>போராட்டத்தின் வரலாற்றில்<br>பிள்ளையார் சுழியாக இருக்க<br>வேண்டும்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''சீர்வரிசை<br>முகமூடிகள்''</b>}} {{dhr|4em}} பெண்ணியம் பெரிதாகப்<br>பேசப்படுகிற காலம். இன்னும்<br>அதிகமாகப் பேசப்பட வேண்டிய<br>காலக்கட்டம். எல்லாச் சமயங்களும்<br>முடக்கிவைத்த பெண்ணினத்தின்<br>இன்றைய தலைமுறை, பெண்ணியக்<br>கத்தை விடுதலை வேள்வியாக<br>நடத்தி வருகிறது. உடன்கட்டை<br>என்ற பெயரில் பெண்களை,<br>இறந்த கணவனின் சிதையில்<br>சேர்த்து எரித்ததுபோன்ற<br>கடந்தகால சுமையோடு, ‘சாண்<br>பிள்ளையானாலும் ஆண்பிள்ளை<br>ஆண் பிள்ளையே’ என்ற<br>பழமொழி ஊர் முழுக்க நிலவும்<br>நிகழ்கால விலங்கோடு, தவிப்பது<br>தெரியாமலே தவிக்கிறது<br>பெண்ணினம். இதன் போராளிகள்,<br>தங்களுக்காகவும், தங்களது<br>சகப்பெண்களுக்காகவும் போராடி<br>வருகிறார்கள். இது வரவேற்கத்<br>தக்கது. பொதுவாக, அடிமைப்பட்ட<br>நாடோ அல்லது இனமோ<br>தங்களை அடக்கி வைத்த அந்<br>நியர்களுக்கு எதிராகவே போராட<br>வேண்டிய கட்டாயம் உண்டு.<br>ஆனால், பெண்களுக்கோ தங்களது<br>உரிமைப் போராட்டத்தை<br>குடும்பத்தினருக்கு எதிராகவே<br>நடத்த வேண்டிய, விருப்பத்திற்கு<br>விரோதமான சூழல் நிலவுகிறது. {{Multicol-end}}<noinclude></noinclude> irqbw672pdi9x4fx1t1hqn0y2mr82dq 1840331 1840330 2025-07-08T07:58:35Z மொஹமது கராம் 14681 1840331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="6"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|31em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பெண்களுக்கான<br>சொத்துரிமை மறுப்பு இன்றைய<br>பெண்ணியப் போராளிகளின்<br>நிகழ்ச்சி நிரலில் இடம் பெற<br>வில்லை. பெரும்பாலான<br>பெண்ணிய போராளிகளுக்கு<br>கன்னியாகுமரி மாவட்டத்தில்,<br>மாராப்பு போடும் உரிமை கேட்டு<br>35 ஆண்டுகாலம் எளிய பெண்கள்<br>நடத்திய போராட்ட வரலாறு<br>தெரியாது. {{dhr|1em}} பெண்ணியம் என்பது நடுத்தர<br>வர்க்கத்திலிருந்து விடுபட<br>வேண்டும். தோள் சீலைப்<br>போராட்டமே பெண்ணியப்<br>போராட்டத்தின் வரலாற்றில்<br>பிள்ளையார் சுழியாக இருக்க<br>வேண்டும்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''சீர்வரிசை<br>முகமூடிகள்''</b>}} {{dhr|4em}} பெண்ணியம் பெரிதாகப்<br>பேசப்படுகிற காலம். இன்னும்<br>அதிகமாகப் பேசப்பட வேண்டிய<br>காலக்கட்டம். எல்லாச் சமயங்களும்<br>முடக்கிவைத்த பெண்ணினத்தின்<br>இன்றைய தலைமுறை, பெண்ணியக்<br>கத்தை விடுதலை வேள்வியாக<br>நடத்தி வருகிறது. உடன்கட்டை<br>என்ற பெயரில் பெண்களை,<br>இறந்த கணவனின் சிதையில்<br>சேர்த்து எரித்ததுபோன்ற<br>கடந்தகால சுமையோடு, ‘சாண்<br>பிள்ளையானாலும் ஆண்பிள்ளை<br>ஆண் பிள்ளையே’ என்ற<br>பழமொழி ஊர் முழுக்க நிலவும்<br>நிகழ்கால விலங்கோடு, தவிப்பது<br>தெரியாமலே தவிக்கிறது<br>பெண்ணினம். இதன் போராளிகள்,<br>தங்களுக்காகவும், தங்களது<br>சகப்பெண்களுக்காகவும் போராடி<br>வருகிறார்கள். இது வரவேற்கத்<br>தக்கது. பொதுவாக, அடிமைப்பட்ட<br>நாடோ அல்லது இனமோ<br>தங்களை அடக்கி வைத்த அந்<br>நியர்களுக்கு எதிராகவே போராட<br>வேண்டிய கட்டாயம் உண்டு.<br>ஆனால், பெண்களுக்கோ தங்களது<br>உரிமைப் போராட்டத்தை<br>குடும்பத்தினருக்கு எதிராகவே<br>நடத்த வேண்டிய, விருப்பத்திற்கு<br>விரோதமான சூழல் நிலவுகிறது. {{Multicol-end}}<noinclude></noinclude> tnpehzx5m23ccegpc1byz2len4wd4py 1840332 1840331 2025-07-08T07:58:50Z மொஹமது கராம் 14681 1840332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="6"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>பெண்களுக்கான<br>சொத்துரிமை மறுப்பு இன்றைய<br>பெண்ணியப் போராளிகளின்<br>நிகழ்ச்சி நிரலில் இடம் பெற<br>வில்லை. பெரும்பாலான<br>பெண்ணிய போராளிகளுக்கு<br>கன்னியாகுமரி மாவட்டத்தில்,<br>மாராப்பு போடும் உரிமை கேட்டு<br>35 ஆண்டுகாலம் எளிய பெண்கள்<br>நடத்திய போராட்ட வரலாறு<br>தெரியாது. {{dhr|1em}} பெண்ணியம் என்பது நடுத்தர<br>வர்க்கத்திலிருந்து விடுபட<br>வேண்டும். தோள் சீலைப்<br>போராட்டமே பெண்ணியப்<br>போராட்டத்தின் வரலாற்றில்<br>பிள்ளையார் சுழியாக இருக்க<br>வேண்டும்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''சீர்வரிசை<br>முகமூடிகள்''</b>}} {{dhr|4em}} பெண்ணியம் பெரிதாகப்<br>பேசப்படுகிற காலம். இன்னும்<br>அதிகமாகப் பேசப்பட வேண்டிய<br>காலக்கட்டம். எல்லாச் சமயங்களும்<br>முடக்கிவைத்த பெண்ணினத்தின்<br>இன்றைய தலைமுறை, பெண்ணியக்<br>கத்தை விடுதலை வேள்வியாக<br>நடத்தி வருகிறது. உடன்கட்டை<br>என்ற பெயரில் பெண்களை,<br>இறந்த கணவனின் சிதையில்<br>சேர்த்து எரித்ததுபோன்ற<br>கடந்தகால சுமையோடு, ‘சாண்<br>பிள்ளையானாலும் ஆண்பிள்ளை<br>ஆண் பிள்ளையே’ என்ற<br>பழமொழி ஊர் முழுக்க நிலவும்<br>நிகழ்கால விலங்கோடு, தவிப்பது<br>தெரியாமலே தவிக்கிறது<br>பெண்ணினம். இதன் போராளிகள்,<br>தங்களுக்காகவும், தங்களது<br>சகப்பெண்களுக்காகவும் போராடி<br>வருகிறார்கள். இது வரவேற்கத்<br>தக்கது. பொதுவாக, அடிமைப்பட்ட<br>நாடோ அல்லது இனமோ<br>தங்களை அடக்கி வைத்த அந்<br>நியர்களுக்கு எதிராகவே போராட<br>வேண்டிய கட்டாயம் உண்டு.<br>ஆனால், பெண்களுக்கோ தங்களது<br>உரிமைப் போராட்டத்தை<br>குடும்பத்தினருக்கு எதிராகவே<br>நடத்த வேண்டிய, விருப்பத்திற்கு<br>விரோதமான சூழல் நிலவுகிறது. {{Multicol-end}}<noinclude></noinclude> jwwvahykqs2xfjbc02lpk6mbe94m4pi பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/39 250 213879 1840340 670880 2025-07-08T08:07:55Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|30||சீர்வரிசை முகமூடிகள்}}</noinclude>இதனால் ஏற்படுகிற தாட்சண்யம், பெண்விடுதலையை தாமதப்படுத்துகிறது. தம்பியின் படிப்பிற்காக அக்காளும், அல்லது அண்ணனின் படிப்பிற்காக தங்கையும் தத்தம் படிப்புரிமையை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தக் கட்டாயத்தால் இந்தப் பெண்களின் வாழ்வுரிமைகூட பாதிக்கப்படுகிறது. <b>சொந்தமண்ணைப் புதைத்தவர்கள்</b> என்றாலும், இன்றைய பெண்ணிய இயக்கம் சரியான பாதையில் போகிறதா என்பதே கேள்வி. எல்லா உரிமைமீட்புப் போராட்டங்களையும் மேட்டுக் குடியினரே கைவசப்படுத்தி இருப்பதுபோல், இன்றைய பெண்ணிய இயக்கத்தையும், பெரும்பாலும் இந்த குடியினரே கையகப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு பெரும்பாலும் விதிவிலக்காக இருப்பது பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், உ. வாசுகி ஆகியோரைக் கொண்ட அகில இந்திய ஜனநாயக மாதர் மன்றம் மட்டுமே. பெண்ணியத்தின் பெயரால், இவர்கள்போடும் கலை நிகழ்ச்சிகள் மேட்டுக்குடிப் பெண்கள் வட்டத்தையே சுற்றிச் சுற்றி வருகின்றன. இவர்களுக்கு, அடித்தளப் பெண்களின் பிரச்சினைகள் அதிகமாத் தெரியாது. இந்த அடித்தளத்தின் முந்தைய வரலாறும் இவர்கள் அறவே அறியாதது. இவர்களுக்கு, பெண்ணினத்திற்காய் குரல் கொடுத்த அன்னி பெசன்ட், சரோஜினி தேவி, டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி, பியாட்ரிஸ் வெப் போன்ற போராளிப் பெண்களை அதிகமாகத் தெரியும். கன்னியாகுமாரி மாவட்டத்தில் 19-ஆம் நூற்றாண்டில் மாராப்புச் சேலை போட உரிமைவேண்டும் என்று 35 ஆண்டுகாலம் போராடிய தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட பெண்போராளிகளின் போர் முகம் தெரியாது. <b>“தோள் சீலைப் போராட்டம்”</b> என்று அரைகுறையாக அறியப்பட்ட இந்த மகத்தான உரிமைப் போராட்டம், சிவகாசி வரைக்கும் வந்ததோ, இந்தப்பெண்கள் மாராப்பு போட்ட ஒரே காரணத்திற்காக, நிர்வாணமாக்கப்பட்டு, மானபங்கப் படுத்தப்பட்டதோ, இவர்களின் உரிமையை டில்லி உயர்நீதிமன்றமும், லண்டன் உயர்நீதிமன்றமும் நிராகரித்ததோ, இன்றைய பெண்ணியக்க வாதிகளுக்கு துளிகூடத் தெரியாது. பிரிட்டிஷ் பிரபுக்கள் சபை மன்றம் இவர்கள் மாராப்பை முற்றிலுமாக போடக்கூடாது என்றும், அதேசமயம் மார்பகத்தை மறைக்கும் அளவிற்கு போட்டுக்கொள்ளலாம் என்றும், மதவாத பத்தாம் பசலித்தனத்திற்கு பாதுகாவலாகவும், பெண்ணுரிமைக்கு தோழமையாகவும், ஒரு தீர்ப்பை வழங்கியதும் தெரியாது. சொந்த மண்ணை, இன்னொரு மண்ணில் புதைப்பது தெரியாமலே புதைத்தவர்கள் இவர்கள். <b>சமூகக்காரணிகள்</b> ஆனாலும், இப்போதைய பெண்ணியவாதிகளும், தங்களுக்குத்<noinclude></noinclude> oz8ujr0pkrchoe6520il9473xk5nlwh பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/40 250 213882 1840347 670882 2025-07-08T08:18:43Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||31}}</noinclude>தெரிந்த தளத்தில் இருந்து போராட்டங்களை விசுவாசமாக நடத்தி வருகிறார்கள். அதேசமயம், ஒரு வரலாற்றுப் பார்வையோடு தங்களது பெண்ணியத் தளத்தை விரிவாக்க வேண்டுமென்ற சிந்தனை, இவர்களிடம் அதிகமாகக் காணப்படவில்லை. ஆகையால், எந்த முப்பாட்டிகள் மாராப்பு உரிமைக்காகப் போராடினார்களோ, அவர்களின் பேத்திகளால் நடத்தப்படாதவரை, பெண்ணுரிமைப் போராட்டம் முழுமையாகாது. இதுவரை மேட்டுக்குடி அல்லது நடுத்தட்டு பெண்களின் பிரச்சினையே பெண்ணிய பிரச்சினையாகத் திணிக்கப்படுகிறது. பத்திரிகைகளின் வாய்களிலும், பேச்சாளர்களின் வாய்களிலும் அடிக்கடி அடிபடும் வரதட்சணை பிரச்சினை இதற்கு எடுத்துக்காட்டு. இந்தப் பிரச்சினைதான் பெண்ணினத்தின் மிகப்பெரிய பிரச்சினைப் போல் பேசப்படுகிறது. ஒரு கத்துக்குட்டி கவிஞன்கூட, இந்த கொடுமையை எதிர்த்துத்தான் முதலில் கவிதை எழுதுகிறான். கிராமத்து பெண்களுக்கும், அடித்தளப் பெண்களுக்கோ இந்த விவகாரம் பெரிய பிரச்சனையே இல்லை. இதற்கு சமூகரீதியான காரணிகள் உண்டு. <b>சொத்துரிமை மறுப்பு</b> இந்தக் கிராமத்துப் பெண்களுக்கு, உரித்தான பெற்றோர் வழிச் சொத்துக்கள் மறுக்கப்படுகின்றன. புகுந்த வீட்டிலும் கணவன் சின்னவயதிலேயே இறந்துவிட்டால், இந்தப் பெண்கள் குழந்தைகளோடு அடித்துத் துரத்தப்படுகிறார்கள். இந்தச் சொத்துரிமை-மறுப்பு, இன்றைய பெண்ணிய போராளிகளின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாதவை. காரணம் இவர்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் பெண்கள் பெரும்பாலும் சமூகத்தின் மத்திய தட்டில் உள்ள மாதச்சம்பளத்தினர். இவர்களுக்கு படிப்பும், வேலையும் மட்டுமே மூலதனம். வாடகை வீடும், வட்டி பெருகிய கடனுந்தான் பெற்றோர் கொடுக்கும் சீதனம். இதனால், இவர்களை, கணவன்மாரும், மாமியார்களும் கூட்டணிவைத்துக் கொடுமை படுத்துகிறார்கள். இது வன்முறையாகும்போது “ஸ்டவ்” வெடிக்கிறது. பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்களுக்கு கைகொடுக்க வேண்டியது, ஒரு போராளிப் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆணுக்கும் கடமையாகும். ஆனால், இதுமட்டுமே, ஒரே நிகழ்வாக இருக்க முடியாது. இவர்களுக்கு சொத்துரிமையை வற்புறுத்த முடியாது என்பதாலேயே, பெண்களின் சொத்துரிமைப் பிரச்சினையை ஒப்புக்குப் பேசுவதும், நியாயமாகப் படவில்லை. <b>இழப்புத் தொகை</b> இத்தகைய நடுத்தட்டுப் பெண்கள் பிரச்சினையை ஒதுக்கி<noinclude></noinclude> t7xcg5l9069k5ifrde6ggg59zmvtlsd பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/41 250 213885 1840352 670883 2025-07-08T08:24:44Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|32||சீர்வரிசை முகமூடிகள்}}</noinclude>விட்டு, பொதுவாக கிராமப் பெண்களின் நிலைமையை எடுத்தால், இவர்களின் திருமணங்களில் வழங்கப்படும், வரதட்சணை என்பதும், நகைநட்டுகளும், குடும்ப சொத்தில் உரியபங்கு இவர்களுக்கு போய்ச்சேராமல் தடுப்பதற்காக கொடுக்கப்படும் இழப்புத்தொகையே. தென் மாவட்டங்களில் இதை ‘சுருள்’ என்று சொல்கிறார்கள் இப்போது வரதட்சணை தடுப்பு சட்டத்திற்குப் பயந்து அன்பளிப்பு என்கிறார்கள். பொதுவாகவே, ஒரு கிராமியக் குடும்பத்தில் ஆண்பிள்ளைதான் பரம்பரை சொத்துக்கு உரியவன் என்ற முறைமையே நிலவுகிறது. (இப்படிச் சொல்வதால் நகரங்களில் இது நிலவவில்லை என்றும் பொருளாகாது.) இந்த மனப்போக்கில்தான், ஆணும் பெண்ணும் வளர்க்கப்படுகிறார்கள். நமது அரசாங்க குடும்பநல விளம்பரத்தில்கூட, ஒரு காலத்தில் ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு ஆண் என்ற வாசகமே மேலோங்கி நின்றது. <b>அம்மான் என்ற முறை வார்த்தை</b> அண்மைக்காலம்வரை, பெண்களுக்கு, சொத்துக்குப் பதிலாக, அதற்குக் குறைவான சலுகைகள் வழங்கப்பட்டன. ஒரு சிறுமி பூப்பெய்தால், தாய்மாமன், சீர் செய்யவேண்டும். இந்தச்சீர், இந்த மாமன், இந்தப் பெண்ணின் அம்மாவான தனது சகோதரிக்கு சேரவேண்டிய சொத்துக்காக, இவனை அறியாமலேயே, இவன் கொடுக்கும் இழப்புத் தொகையாகும். இதேபோல் ஒரு பெண், திருமணமாகி புகுந்தவீடு சென்றாலும், ஆடிமாத அம்மன் கொடைகளிலும், தீபாவளி, பொங்கல் போன்ற திருநாட்களிலும், இவளுக்கும், இவள் கணவனுக்கும் பிறந்தவீடு, சீர் செய்வது மரபு. இந்தப் பெண்ணின் முதல் பிரசவம், தாய்வீட்டிலேயே நடைபெறும். பிறக்கிற பிள்ளைக்கு கையில் மோதிரமோ அல்லது வெள்ளி அரைஞாண்கயிறோ போடுவது ஒரு வழக்கம். தாய் இறந்த பிறகு, அவளது நகைகளும் மகள்களுக்கே போய்ச்சேரும். இவள்களின் பிள்ளைகளுக்கு, தாய்மாமன் வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒன்றை செய்துகொண்டிருக்க வேண்டிய கட்டாய சமூகக் கடமை இருந்தது. இதனை முறைப்படுத்துவது மாதிரி, சகோதரி மகனின் ஜாதகம், தாய் மாமனுக்குத்தான் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற மரபும் நிலை நாட்டப்பட்டது. தந்தையைவிட, தாய்மாமனே ஒரு பிள்ளைக்கு ஜாதக ரீதியில் பெரிதாகக் கருதப்பட்டான். இதனால்தான், அம்மா என்ற பெண்பாலுக்கு, அம்மான் (தாய்மாமன்) என்ற வார்த்தை ஏற்பட்டது. பழைய தலைமுறையினர் தாய்மாமன்களை அம்மான் என்றே அழைத்தார்கள். பிள்ளைகளின் தந்தைவழி பாட்டன், தாத்தா என்றும்; பாட்டி, அய்யாமை என்றும் அழைக்கப்பட்டார்கள். ஆனால், தாய்வழி பாட்டன்<noinclude></noinclude> 30tsafo8wina8sbo6m15u744381r3xy பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/42 250 213887 1840363 670884 2025-07-08T08:31:36Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||33}}</noinclude>வளத்தய்யா என்றும், பாட்டி வளத்தம்மா என்றும் அழைப்பட்டார்கள். பொதுவாக, இந்தப் பாட்டிகள், மகள் வழிப்பேரன் பேத்திகளை, தமது அருமை மகளும், அற்புதமான மருமகனும் சேர்ந்து பெற்ற பிள்ளைகள் என்று கருதுகிறார்கள். மகன் வழிப் பேரப்பிள்ளைகளையோ, தமது பைத்தியக்கார மகனும், தனது ஜென்ம எதிரியும் சேர்ந்து பெற்ற பிள்ளைகளாகவே கருதுவதுண்டு. இப்படி ஒரு பெண் புகுந்தவீட்டிற்குப் போனபிறகும், பிறந்த வீட்டில் தொடர்ந்து சீருசெனத்திகளை வாங்கிக் கொண்டிருந்தாள். இவளும், இந்த சீர் மயக்கத்தில் தனக்குக் கொடுக்கப்படுவது. தனக்குச் சேரவேண்டிய சொத்திற்கான சொற்பமான இழப்பீட்டு தவணைத்தொகை என்பதை மறந்து விட்டாள். இதனால் தேவைப்படாத சூழல்களில்கூட, பிறந்த வீட்டு பெருமையைப் பேசினாள். இவளது தாலாட்டுப் பாடல்களில்கூட, கணவனை மென்மையாய் மட்டம்தட்டியும், உடன்பிறப்பை உச்சாணிக்குத் தூக்கியும் ஒலித்தாள். இப்படியாகவே, இந்தக் கிராமத்துப்பெண் சொத்துரிமை பற்றி நினைக்க முடியாத அளவிற்கு வளர்க்கப்பட்டாள். நடத்தப்பட்டாள். <b>அக்கா, மாமியாரான கதை</b> இப்போதோ காலம் மாறிவிட்டது. அம்மான் என்ற தாய்மாமன் இப்போது முறைமாமன் ஆகிவிட்டான். இவனும் மாப்பிள்ளை முறுக்கில் அக்காவை மாமியாராகவே பார்க்கிறான். கிராமத்து சீருசென நேர்த்திகளும் குறைந்துகொண்டே வருகின்றன. வாழ்க்கைப் போராட்டமோ பெருகிக் கொண்டே போகிறது. கூடவே ஆடியோ வீடியோ கலாச்சாரம், செயற்கைத் தனமான திரைப்படங்கள், கிராமிய கட்டுமானத்தை, குடும்ப நிலையில் இருந்தே சிதைத்துக்கொண்டு இருக்கின்றன. <b>‘மாப்பிள்ளை முறுக்கு மாமியாரோடு போச்சு’</b> என்பது பழமொழி. அதாவது மாமியார் இருப்பது வரைக்குந்தான் மருமகப்பிள்ளை, மனைவியை அடித்தோ, அடிக்காமலோ, பிறந்த வீட்டிற்கு அனுப்பி, வாங்கவேண்டியதையும், வாங்கக்கூடாததையும் பெறமுடியும். மாமியார் போய்விட்டால் ‘உன் பெண்டாட்டியை இங்கே ஏன் அனுப்புறே’ என்று மைத்துனர்கள் அந்தக் காலத்திலேயே கேட்டதாக பழமொழி ஆவணம் கூறும்போது, இந்தக் காலத்தைப்பற்றி கூற வேண்டியதில்லை. இப்படி ஒரு பெண், தனது சொத்துரிமையை விட்டுக்கொடுத்த போதும், சொந்தக் காலில் நிற்கமுடியாமல் நொண்டியடிக்கிறாள். பிச்சைக்காரியைவிட கேவலமாக நடத்தப்படுகிறாள். வேறுவழியில்லாமல் உதைக்கிற காலுக்கே முத்தம் கொடுக்கிறாள்.{{nop}}<noinclude></noinclude> 59o44z7h6y6y1fik7jux5bfqdnuvgfg பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/43 250 213891 1840364 670885 2025-07-08T08:37:42Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|34||சீர்வரிசை முகமூடிகள்}}</noinclude>எனவே, ஒரு பெண் எந்தத்தட்டில் இருந்தாலும் தனக்குச்சேர வேண்டிய சொத்தோடோ அல்லது கடனோடோ, ஒரு ஆணோடு தன்னுடைய வாழ்க்கையைத் துவக்க வேண்டும். அந்த ஆணுக்கு, எப்படி தன் பெற்றோரை கவனிக்க வேண்டியது ஒரு கடமையோ, அதுபோல் இவளுக்கும், தன் பெற்றோரை கவனிக்க வேண்டியது கடமையாக்கப்பட வேண்டும். இந்தக் கடமையை நிறைவேற்றும் உரிமை இவளுக்கு இருக்க வேண்டும். பெண்கள் பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்கமுடியாது போவதாலேயே, அவர்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். சொத்துரிமை என்ற பொருள் உரிமையோடு, அவர்கள் திருமண வாழ்க்கையை துவக்கினால், மாமியாரின் ஏச்சுக்கோ, மாமனாரின் நையாண்டிக்கோ இடமில்லாமல் போய்விடும். ஒரு லட்ச ரூபாய் சொத்தில், ஒரு பெண்ணிற்கு அறுபதாயிரம் ரூபாய் அளவிற்கு சீர்வகை செய்தாலும், இத்தகைய மாமியார்த்தனமான முணுமுணுப்புக்கள் நிலவும். அதே பெண்ணிற்கு, அவளுக்குரிய ஐம்பதாயிரம் ரூபாய் சொத்தை பிரித்துக் கொடுத்தாலோ, அதற்குரிய சந்தை விலையை வெளிப்படையாகப் பேசிக்கொடுத்தாலோ, பெண்ணுரிமை முழுதும் முன்னேறாது போனாலும் பெருமளவு முன்னேறும். இப்படி பட்டவர்த்தனமாக சொத்தை பங்கீடுசெய்தால், பந்தபாசத்திற்கு இடமில்லாமல் போய்விடும் என்று நினைக்கலாம். பந்தபாசத்தை மகன்கள் சொத்தாக பார்க்கும்போது, பெண்களும் அப்படிப் பார்ப்பதில் தவறில்லை. இன்றைய சீர்முறைகள் பிறந்த வீட்டிற்கு வரும் பெண்ணை தாழ்வு மனப்பான்மையில்தான் ஆழ்த்துகின்றன. நாத்தனார்களின் முகச்சுழிப்பால் இவர்கள் அனிச்சை மலராகிறார்கள். ஏழுபிள்ளை நல்லத்தங்காள் கதை இதைத்தான் எடுத்துக் கூறுகிறது. மாண்புகளை மேலோங்கச் செய்ய மரபுகளை மாற்றிக்கொள்ளலாம். இத்தகைய சொத்துரிமை பலத்தால், ஒரு பெண், தன்னை கணவனுக்கு இணையாக நினைக்க முடியும். இத்தகைய சொத்துரிமைதான், இவர்களுக்கு சுயமரியாதையைக் கொடுக்க முடியும். இந்த உரிமையை மூடிமறைப்பதற்காக போடப்படும் நகைநட்டுக்கள், இவர்களை நகைப்பிற்கு இடமாகவே ஆக்கிவருகின்றன. எனவே, இன்றைய பெண்ணியப் போராளிகள், இந்த சொத்துரிமைப் போராட்டத்தையும் தங்கள் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்வதோடு, அடித்தளப் பெண்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ள இரங்கி வரவேண்டும், இறங்கியும் வரவேண்டும். {{rh|||<b>நவசக்தி வார இதழ் — 1999.</b>}} <section end="6"/>{{nop}}<noinclude></noinclude> ayyqwre70c74jbm9espkul6b8jr25dl பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/44 250 213894 1840388 1839856 2025-07-08T10:53:17Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="7"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>நமது தேசியக்கொடி வெறும்<br>துணியினால் ஆனதுதான். ஆனால்<br>அது புனிதமாக போற்றப்படுகிறது.<br>இந்தக் கொடி அவமரியாதை<br>செய்யப்பட்டால் விளைவுகள்<br>விபரீதங்களாகும். {{dhr|1em}} மொழி என்பதும் எழுத்துக்<br>களால் ஆனதாய் இருக்கலாம்.<br>ஆனாலும் தேசிய கொடியைப்<br>போல் இதுவும் புனிதமானது.<br>இன்னும் ஒரு படி அதிகமானது. {{dhr|1em}} இப்படிப்பட்ட தாய்மொழியை<br>சிதைப்பதற்கோ, படிக்கமுடியாது<br>என்று மார்தட்டுவதற்கோ எந்த<br>எந்த எழுத்தாளனுக்கும் உரிமை<br>இல்லை.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''படைப்பாளியும்<br>தாய்மொழியும்''</b>}} {{dhr|4em}} ஒரு படைப்பாளிக்கு தாய்<br>மொழி ஞானமும், பற்றும்<br>தேவையா? {{dhr|1em}} பல்வேறு பத்திரிகைகளில்,<br>தொலைக் காட்சிகளில் இந்தக்<br>கேள்விக்கு எதிர்மறையாக<br>இலைமறைவு காய்மறைவாய்<br>பேசப்பட்ட கருத்து,<br>அண்மையில் சென்னையில்<br>உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்<br>சார்பில் நடந்த, இந்திய<br>பல்கலைக் கழக தமிழ் ஆசிரியர்<br>மன்றத்தின் 30-வது கருத்தரங்கில்<br>ஒரு விவகாரமாக மாறியிருப்பது<br>வரவேற்கத்தக்கது.<br>‘தொல்காப்பியம் படித்துவிட்டு,<br>நான் எழுத வரவில்லை.’ என்று<br>‘வாழும்போதே வரலாறான’ ஒரு<br>எழுத்தாளர் தெரிவித்த கருத்து<br>தாய்மொழியை மதிக்காமல், அவர்<br>புறக்கணிப்பதாக அனுமானித்து<br>காரசாரமாக விவாதிக்கப்<br>பட்டுள்ளது. இதில் உரை<br>யாற்றிய மன்றத் தலைவர்<br>முனைவர் தமிழண்ணல், இந்தப்<br>போக்கை முறியடிப்பதற்காக,<br>அடுத்த ஆண்டில் இருந்து<br>தமிழாசிரியர்கள் படைக்கும்<br>ஆய்வுக்கோவைகளில் ஒன்று {{Multicol-end}}<noinclude></noinclude> 8mawuv1gr5cmjp0igfh47bsfvli0y1n பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/8 250 213896 1840069 1839009 2025-07-07T15:43:14Z Mohanraj20 15516 1840069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|VI||}}</noinclude>இந்த ஒற்றைவரி அணுகுண்டு அந்தத் தம்பதியரை நிரிவாணமாக்கி விடுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்மையப் பண்பாடு போர்த்தியுள்ள அடுக்கடுக்கான (அழகழகான) தாம்பத்தியத் துகில்கள் ஒற்றை வரியில் இற்றுவிழுகின்றன - விரசமில்லாத விரசம். சமுத்திரத்தால் மட்டுமே இது சாத்தியம். ⬤ நீருபூத்த நெருப்பின் மற்றொரு பரிமாணம் முதிர்கன்னி, கொஞ்சம் பிரச்சாரத் தொனி தூக்கலாக இருந்தாலும் அறிவியல்பூர்வான அணுகுறை. பொதுவாகவே, தன் படைப்புகளின் கருவோடு தொடர்புடைய அனைத்து அறிவியல் – உளவில் நுணுக்கங்களையும் அறிந்து கொண்டு படைக்கும் வழக்கம் உள்ளவர் சமுத்திர்ம் - அது எய்ட்ஸ் - ஆக இருக்கட்டும் அல்லது ஒரினக் கவர்ச்சியாகட்டும். இதனால்தான் ‘முதிர்கன்னி’ என அழைக்கப்படும் கீதா என்ற விஞ்ஞானியின் கதையை சமூகவியல் நோக்கிலும் (மகள்-தாய்க்காரி உறவு) ஃபிராய்டிய உளவாய்வியல் நோக்கிலும் (மகள்-அப்பாக்காரர் உறவு) அணுகத்தக்கதாகக் கட்டமைத்துள்ளார். ⬤ முரண்பாடுகளையும் பலவீனங்களையும் கடந்த மனிதர்கள் இல்லை என்பதை மூலம் முன்வைக்கிறது. சாதாரண மனிதர்களின் இருண்ட பக்கங்களைவிட, வெளிச்சத்திலுள்ள உயர்ந்த மனிதர்களின் இருண்ட பக்கங்கள் மிக மோசமானவையாக உள்ளன. சிலர் இந்த இருண்ட பக்கங்களைக் கடந்து வருகிறார்கள். சிலர் தனக்குள்ளே புதைத்து மறைத்துக் கொள்கிறார்கள். இப்படிப் புதைந்த அழுக்குகள் அப்படியே மக்கிப் போகலாம், அல்லது ஆளுமையில் புரையோடியும் போகலாம். “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார், அன்னை தெரசா ஆகியோரின் முப்பெரும் உருவமாகத் திகழும்” அம்மையாருக்கும், “அவரைப் பேசவிட்டு ரசிக்கும் பெண்ணியச் சிந்தனையாளரான” கணவருக்கும் பின்னால் ‘ஒடிப்போன’ கதை. சமூகசேவகர்கள் என்ற பிம்பம் கட்டுடைக்கப்படுகிறது. வாசகராகிய நமது கைகள் ‘திரும்பிப் பாராமல் நடக்கும்’ அந்தப் ‘பழைய முகக்காரி’யையும் ‘கோராதிகோரச்’ சிறுவனையும் தடுத்து நிறுத்த நீளுகின்றன. {{nop}}<noinclude></noinclude> 7hfupazj1aojoyp292cvlrgk97gtzhb 1840126 1840069 2025-07-07T17:32:27Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|VI||}}</noinclude>இந்த ஒற்றைவரி அணுகுண்டு அந்தத் தம்பதியரை நிரிவாணமாக்கி விடுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்மையப் பண்பாடு போர்த்தியுள்ள அடுக்கடுக்கான (அழகழகான) தாம்பத்தியத் துகில்கள் ஒற்றை வரியில் இற்றுவிழுகின்றன - விரசமில்லாத விரசம். சமுத்திரத்தால் மட்டுமே இது சாத்தியம். ⬤ நீருபூத்த நெருப்பின் மற்றொரு பரிமாணம் முதிர்கன்னி, கொஞ்சம் பிரச்சாரத் தொனி தூக்கலாக இருந்தாலும் அறிவியல்பூர்வான அணுகுறை. பொதுவாகவே, தன் படைப்புகளின் கருவோடு தொடர்புடைய அனைத்து அறிவியல் - உளவில் நுணுக்கங்களையும் அறிந்து கொண்டு படைக்கும் வழக்கம் உள்ளவர் சமுத்திரம் - அது எய்ட்ஸ் - ஆக இருக்கட்டும் அல்லது ஒரினக் கவர்ச்சியாகட்டும். இதனால்தான் ‘முதிர்கன்னி’ என அழைக்கப்படும் கீதா என்ற விஞ்ஞானியின் கதையை சமூகவியல் நோக்கிலும் (மகள்-தாய்க்காரி உறவு) ஃபிராய்டிய உளவாய்வியல் நோக்கிலும் (மகள்-அப்பாக்காரர் உறவு) அணுகத்தக்கதாகக் கட்டமைத்துள்ளார். ⬤ முரண்பாடுகளையும் பலவீனங்களையும் கடந்த மனிதர்கள் இல்லை என்பதை மூலம் முன்வைக்கிறது. சாதாரண மனிதர்களின் இருண்ட பக்கங்களைவிட, வெளிச்சத்திலுள்ள உயர்ந்த மனிதர்களின் இருண்ட பக்கங்கள் மிக மோசமானவையாக உள்ளன. சிலர் இந்த இருண்ட பக்கங்களைக் கடந்து வருகிறார்கள். சிலர் தனக்குள்ளே புதைத்து மறைத்துக் கொள்கிறார்கள். இப்படிப் புதைந்த அழுக்குகள் அப்படியே மக்கிப் போகலாம், அல்லது ஆளுமையில் புரையோடியும் போகலாம். “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார், அன்னை தெரசா ஆகியோரின் முப்பெரும் உருவமாகத் திகழும்” அம்மையாருக்கும், “அவரைப் பேசவிட்டு ரசிக்கும் பெண்ணியச் சிந்தனையாளரான” கணவருக்கும் பின்னால் ‘ஒடிப்போன’ கதை. சமூகசேவகர்கள் என்ற பிம்பம் கட்டுடைக்கப்படுகிறது. வாசகராகிய நமது கைகள் ‘திரும்பிப் பாராமல் நடக்கும்’ அந்தப் ‘பழைய முகக்காரி’யையும் ‘கோராதிகோரச்’ சிறுவனையும் தடுத்து நிறுத்த நீளுகின்றன. {{nop}}<noinclude></noinclude> n9t4if818ezbtv5enaeijh02h5jgmn4 1840127 1840126 2025-07-07T17:33:10Z Desappan sathiyamoorthy 14764 1840127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|VI||}}</noinclude>இந்த ஒற்றைவரி அணுகுண்டு அந்தத் தம்பதியரை நிரிவாணமாக்கி விடுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்மையப் பண்பாடு போர்த்தியுள்ள அடுக்கடுக்கான (அழகழகான) தாம்பத்தியத் துகில்கள் ஒற்றை வரியில் இற்றுவிழுகின்றன - விரசமில்லாத விரசம். சமுத்திரத்தால் மட்டுமே இது சாத்தியம். ⬤ நீருபூத்த நெருப்பின் மற்றொரு பரிமாணம் முதிர்கன்னி, கொஞ்சம் பிரச்சாரத் தொனி தூக்கலாக இருந்தாலும் அறிவியல்பூர்வான அணுகுறை. பொதுவாகவே, தன் படைப்புகளின் கருவோடு தொடர்புடைய அனைத்து அறிவியல் - உளவில் நுணுக்கங்களையும் அறிந்து கொண்டு படைக்கும் வழக்கம் உள்ளவர் சமுத்திரம் - அது எய்ட்ஸ் - ஆக இருக்கட்டும் அல்லது ஒரினக் கவர்ச்சியாகட்டும். இதனால்தான் ‘முதிர்கன்னி’ என அழைக்கப்படும் கீதா என்ற விஞ்ஞானியின் கதையை சமூகவியல் நோக்கிலும் (மகள்-தாய்க்காரி உறவு) ஃபிராய்டிய உளவாய்வியல் நோக்கிலும் (மகள்-அப்பாக்காரர் உறவு) அணுகத்தக்கதாகக் கட்டமைத்துள்ளார். ⬤ முரண்பாடுகளையும் பலவீனங்களையும் கடந்த மனிதர்கள் இல்லை என்பதை மூலம் முன்வைக்கிறது. சாதாரண மனிதர்களின் இருண்ட பக்கங்களைவிட, வெளிச்சத்திலுள்ள உயர்ந்த மனிதர்களின் இருண்ட பக்கங்கள் மிக மோசமானவையாக உள்ளன. சிலர் இந்த இருண்ட பக்கங்களைக் கடந்து வருகிறார்கள். சிலர் தனக்குள்ளே புதைத்து மறைத்துக் கொள்கிறார்கள். இப்படிப் புதைந்த அழுக்குகள் அப்படியே மக்கிப் போகலாம், அல்லது ஆளுமையில் புரையோடியும் போகலாம். “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார், அன்னை தெரசா ஆகியோரின் முப்பெரும் உருவமாகத் திகழும்” அம்மையாருக்கும், “அவரைப் பேசவிட்டு ரசிக்கும் பெண்ணியச் சிந்தனையாளரான” கணவருக்கும் பின்னால் ‘ஒடிப்போன’ கதை. சமூகசேவகர்கள் என்ற பிம்பம் கட்டுடைக்கப்படுகிறது. வாசகராகிய நமது கைகள் ‘திரும்பிப் பாராமல் நடக்கும்’ அந்தப் ‘பழைய முகக்காரி’யையும் ‘கோராதிகோரச்’ சிறுவனையும் தடுத்து நிறுத்த நீளுகின்றன.<noinclude></noinclude> cxhbepeibq4kb6rs8os4p0avcxmc79f பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/45 250 213897 1840393 670887 2025-07-08T11:00:41Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|36||படைப்பாளியும் தாய்மொழியும்}}</noinclude>படைப்பு இலக்கியமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்தக் கருத்தரங்கில் தலைமைவகித்துப் பேசிய அமைச்சரும் முனைவருமான தமிழ்க் குடிமகன், இதே தொல்காப்பிய விவகாரத்தைச் சுட்டிக் காட்டி, ஆணவ எழுத்தாளர்களை புறக்கணிக்க வேண்டும் என்றும், படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதே தமிழாசிரியர்கள்தான் என்றும், சக ஆசிரியர்களுக்கு ‘அடி’ எடுத்துக் கொடுத்திருக்கிறார்.. தமிழ் வாக்கியங்களில் ஆங்காங்கே அடைப்புக்குறி இல்லாமல் ஒரு தமிழ் வார்த்தை போலவே ஆங்கிலத்தை ஆங்கில எழுத்துக்களிலேயே எழுதுவதும், தலைப்புகளுக்கே ஆங்கில பெயரிடுவதும், ப்,க் போன்ற ஒற்றெழுத்துக்களை முதலெழுத்துக்களாக வைத்துப் பெயர்சூட்டிக் கொள்வதும் இதே மாதிரி வாக்கியங்களைத் துவக்குவதும் பல எழுத்தாளர்களுக்கு ஒரு பாணியாகி விட்ட சூழலில், தமிழாசிரியர்களின் சினம் நியாயமானதே. <b>படைப்பிலக்கியமும், தொல்காப்பியமும்</b> சம்பந்தப்பட்ட எழுத்தாளர், தமிழ்ப்புலமையால் படைப்பிலக்கியம் ஆக்க முடியாது என்ற தொனியில் கருத்து தெரிவித்து இருக்கலாம். தொல்காப்பியம் படித்துவிட்டுத்தான் ஒருவர் படைப்பிலக்கியம் செய்ய வேண்டியதுமில்லை. இது வற்புறுத்தப்பட்டால், பெரும்பாலான படைப்பாளிகள் மிஞ்சமாட்டார்கள். அதேசமயம் ஒரு எழுத்தாளர், படைப்பாளியாய் பரிமாணப்பட்டு, நாடறிந்த படைப்பாளியாகி, அவரது கருத்துக்களை சமுதாயம் உன்னிப்பாக செவிமடுக்கும் நிலைமை ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட படைப்பாளி, தொல்காபியம் போன்ற நமது முன்னோர்களின் மூலநூல்களை படிக்கவேண்டும். - இயலாதுபோனால் குறைந்தது அவை பற்றிய கட்டுரைகளையாவது படிக்க வேண்டும். தொல்+காப்பு+இயம் என்று பிரித்துப் பார்த்தால், பழமைமையைக் காத்து இயம்பும் நூல் தொல்காப்பியம் எனப்படும். இப்படிப்பட்ட நூல்களைப் படித்தால்தான், இன்றைய படைப்புக்களையும் கட்டிக் காக்க வேண்டுமென்று எதிர்கால சந்ததியினர் நினைப்பார்கள். எனவே இது எழுத்தாளனின் படிப்பாளித்தனத்தைப் பற்றியது அல்ல. அவன் தன் தாய்மொழி மூலம் தனது தொன்மங்களை எப்படி நேசிக்கிறான் அல்லது பார்க்கிறான் என்பது சம்பந்தப்பட்ட இன்றைய தேவை. தொல்காப்பியம் போன்ற நமது முன்னோர் நூல்கள் படைப்பாளிகளால் அலட்சியப் படுத்தக் கூடியவை அல்ல.<noinclude></noinclude> 9cx6r68a8q7mjxnzujyhxdxywkhw69r பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/46 250 213900 1840407 670888 2025-07-08T11:10:35Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||37}}</noinclude><b>எதுகை, மோனை, முரண்தொடை, இயைபு, அளபெடை, பொழிப்பு, செந்தொடை உள்ளிட்ட 13,669 தொடைகளை எடுத்தாண்டு, தொல்காப்பியம், தனக்கு முன்னிருந்த இலக்கியங்களை வகைப்படுத்திய நூலாகும்.</b> இந்த வகைப்படுத்தல் கணிப்பொறி இல்லாத காலத்திலேயே சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது. இன்று பேசப்படும் இலக்கிய அமைப்பியலுக்கு வழிவகுப்பதும் தொல்காப்பியமே. நமது தமிழ் முன்னோர்களின் ஐந்திணை ஒழுக்கம், எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாதது. இத்தகைய தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும், ஐம்பெரும் காவியங்களையும், பக்தி இலக்கியங்களையும் படிக்கவேண்டியது மெய்யான தமிழ் எழுத்தாளர்களின் கடமையாகும் இவற்றைப் படித்தால், நாம் இன்னும் சங்க இலக்கிய நாடகபாணி காதல் நிகழ்ச்சிகளை கவின்படத் தாண்டவில்லை என்பது புரியும். ‘பெரியவர் என்று வியத்தலும் இலமே’ என்று பாடிய நம் முன்னோன் கணியன் பூங்குன்றனின் அன்றைய முழக்கம் இன்றைய தனிநபர் வழிபாட்டையும், சினிமாத்தனங்களையும் எழுத்தால் வீழ்த்துவதற்கு உதவும். அதோடு, சங்கக் காலத்திலேயே மென்மையான காதலுக்கும் திணை ஒழுக்கத்திற்கும் தகுதியற்றவர்களாக கருதப்பட்ட கடைசியர்களை புரிந்து கொள்ளவும், ‘நான் ஆழ்கடலில் பெரிய சுறாமீன்களை கூறுபோடும் பரதனின் மகள். உன்னைவிட சிறப்பான இளைஞர்கள் எம்குலத்திலும் உளரே’ என்று நற்றிணையில் காதலனை அதட்டிப் பேசிய ஒரு புரட்சிப் பெண்னை அடையாளம் காணவும் முடியும். தமிழை, ஆரவார முழக்கமாக்கி, பழமை மீட்பு வாதத்தில் ஈடுபடும் பத்தாம் பசலிகள் மீது இந்த ஞானத்தின் மூலம் உருவாகும் படைப்பிலக்கியத் தேரில் இருந்து அம்பிடமுடியும். எனவே, நமது பண்டைய இலக்கியங்களை படிக்க வேண்டியது ஒரு தமிழ் எழுத்தாளனின் கட்டாயக் கடமை. <b>கொடியும்—மொழியும்</b> பொதுவாக, ஒரு சிலரைத்தவிர, நமது தமிழ் கவிஞர்கள் தாய்மொழியான தமிழில் ஆழ்ந்த அறிவும் தீராத பக்தியும் கொண்டவர்கள். இதற்கு மாறாக இருப்பவர்கள் பிரபல எழுத்தாளர்களில் பெரும்பாலோர். இவர்களுக்கு மொழி என்பது ஒரு கருவியே. ஒரு இலக்கியக் கூட்டத்தில் ஒரு உலகளாவிய இதழாசிரியர் ஒருவர் மொழி நமது அடிமை, வேலைக்காரன் என்று கூட குறிப்பிட்டார். இது அடாவடித் தனமானது<noinclude></noinclude> 17xnn8yosv7jretrrqnwaql9kx39poj பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/47 250 213903 1840411 670889 2025-07-08T11:16:11Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|38||படைப்பாளியும் தாய்மொழியும்}}</noinclude>நமது தேசியக் கொடி, வெறும் துணியினால் ஆனதுதான். ஆனாலும் அது புனிதமாகப் போற்றப்படுகிறது. அது கிழித்துப் போடப்பட்டாலோ அல்லது அவமரியாதை செய்யப்பட்டாலோ விளைவுகள் விபரீதங்களாகும். மொழி என்பதும் அந்தத் துணியைப் போல் எழுத்துக்களால் ஆனதாக இருக்கலாம். ஆனாலும் தேசியக்கொடியைப் போல் இதுவும் புனிதமானது. இன்னும் ஒருபடி அதிகமானது. <b>மூதாதையர் வழியான பதிவுகள்</b> அதோடு, தாய்மொழி என்பது, உடல்- உயிர் தொடர்புடையது. நமது உடம்பில் உள்ள கோடிக் கணக்கான செல்கள் ஒவ்வொன்றிலும், ஜீன் என்ற ஒரு சின்னஞ்சிறு திரள் உள்ளது. இது, இன்றைய கணிப்பொறியில் உள்ள சிலிக்கான் மாதிரியானது. நமது முப்பாட்டன் உள்ளிட்ட முன்னோர்களின் துயரங்கள், துக்கங்கள், வெற்றிப் பெருமிதங்கள் முதலிய அத்தனை உணர்வுகளும் நமது ஜீன்களில் பதிவாகி உள்ளன. இந்தப் பதிவுகளின் அடிப்படையில் இப்போதையப் பதிவுகளையும் உள்வாங்கி நாம் செயல்படுகிறோம் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை. நமது முன்னோர்கள், மனதளவில் எந்த மொழியில் குதூகலித்தார்களோ அல்லது குமுறினார்களோ - அத்தனை உணர்வுகளும், அதே மொழியில் நமது ஜீன்களில் பதிவாகி உள்ளன. இத்தகைய பல்லாயிரத்தாண்டு தலைமுறைவழி தாய்மொழியை -அது எந்த மொழியாக இருந்தாலும், இதைப் புறக்கணிக்கும் அந்த மொழி எழுத்தாளன் சமூகத்திற்கு பயன்படமாட்டான், தாயை, அவளது சகலவித பலத்தோடும் பலவீனத்தோடும் நேசிக்காதவன் தான், தன் மொழியை நேசிக்க மாட்டான். இப்படிப்பட்ட எழுத்தாளனின் படைப்புக்களும் சமூகத்தால் ஒதுக்கப்படும். காரணம் இவர்களது எழுத்தில் தார்மீகக் கோபமோ, உரிமைத்தனமான சாடலோ மனிதநேயமோ இல்லாமல், போலித்தனமும், வியாபாரத்தனமான புதுமைகளுமே மிஞ்சி நிற்கும். <b>தமிழ்ப்பற்றாள கவிஞர்கள்</b> தமிழின் அனைத்து வகை இலக்கியத்திலும் தடம் பதித்தவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியைப் போற்றியிருப்பதைப் பார்க்கலாம். புறநானுற்றில் <b>‘தமிழ்கெழு கூடல்’</b> என்று மொழிவளம் சுட்டிக் காட்டப்படுகிறது. சைவத்தின் அடிநாதமான திருமந்திரத்தில் - ஈசனோடாயினும் ஆசையறுக்க வேண்டும் என்று இயம்பிய பற்றற்ற ஞானியான<noinclude></noinclude> rlbv57js6pj0phstm061mln6scpbxij பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/48 250 213906 1840424 670890 2025-07-08T11:26:54Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|சு. சமுத்திரம்||39}}</noinclude>திருமூலர் <b>‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’</b> என்று பாடினார். கம்பன் <b>‘முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமோ’</b> என்றான். திருவாசகத் தேன் பருகத்தந்த மாணிக்கவாசகர் <b>‘கூடலில் ஆய்ந்த ஒன்தீந் தமிழ்’</b> என்றார். தமிழ் நீசபாஷையாகவும், வடமொழி, தேவபாஷையாகவும், மொழிப்பண்டிதர்களால் கருதப்பெற்ற காலக் கட்டத்தில் தோன்றிய வள்ளலார் பெரு மறைப்பையும், போதுபோக்கையும், உண்டுபண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது, <b>‘பயிலுதற்கும், அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக்கல்லியை இலேசில் அறிவிப்பதாய், திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழியால் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்’</b> என்று ஆண்டவனுக்கு நன்றி கூறுகிறார். வேதநாயகம் பிள்ளை, தனது பிரதாப முதலியார் சரித்திரம் நாவலில், <b>“தாய் மொழிப் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஒரு அறிகுறி”</b> என்று தெளிவாக்கினார். பாரதியார் <b>‘வானம் அளந்த தமிழ்’</b> என்றார். பாரதிதாசன் <b>‘தமிழ் எங்கள் உயிருக்கு மேல்’</b> என்று கூறியதோடு, <b>“சலுகை போனால் போகட்டும்; அலுவல் போனால் போகட்டும்; தலைமுறை கோடிகண்ட என் தமிழ் விடுதலை ஆகட்டும்”</b> என்று இப்போதைய எழுத்தாளர்களை மனதில் வைத்து பாடியிருக்கிறார். ஆனால், நமது தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் தாய் மொழியைப் பற்றி நினைப்பதே இல்லை. இதனை ஒற்றுப்பிழை இலக்கணப் பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்றும் தோன்றுவதில்லை. மண்வாசனைத் தமிழில்கூட பேசுவதற்கே வெட்கப்பட வேண்டிய ஆபாச வார்த்தைகளை சரமாரியாகக் கலக்கிறார்கள். நம்மைப் போல் நமது எழுத்துக்கும் ஆடைகட்ட வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள். படைப்புகளுக்கும் ஆங்கிலத்திலேயே தலைப்பு வைக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்களில் ஒருவர் இறந்தால் அந்த இறப்பு சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அங்கலாய்க்கிறார்கள். சமூகம் தங்களை நேசிப்பவர்களையே நிரந்தரமாக நேசிக்கும் என்பதை மறந்துவிடுகிறார்கள். <b>புறக்கணிப்பு தீர்வாகுமா?</b> என்றாலும், தமிழ்குடிமகன் அவர்கள் விடுத்துள்ள<noinclude></noinclude> d1csh4cmlqlr75ft7jflr0vp346jrq6 பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/49 250 213909 1840428 670891 2025-07-08T11:33:22Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|40||படைப்பாளியும் தாய்மொழியும்}}</noinclude>புறக்கணிப்பு ஆணை ஒரு தீர்வல்ல. தமிழாசிரியர்கள்தான் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறார்கள் என்பதும் சரியல்ல. இவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு எம்.பில்., முனைவர் பட்டங்களுக்குத்தானே தவிர, எழுத்தாளர்களுக்கான சலுகைகள் அல்ல. எனக்குத் தெரிந்த வரை, என் படைப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட ஐம்பதுக்கும் அதிகமான ஆய்வுகளில், ஒரு சிலவற்றைத் தவிர, எஞ்சியவை உருக்குலைந்தவை. ஒரு சில தமிழாசிரியர்களைத்தவிர பெரும்பாலோருக்கு நவீன இலக்கியம் துளிகூடத் தெரியாது முனைவர் தமிழண்ணல் அவர்கள் நினைப்பதுபோல் தமிழ்ப் புலமையால் மட்டுமே தமிழ் படைப்பை உருவாக்க முடியாது. தமிழில் பிறமொழி கலவை செய்து கொச்சைப்படுத்துகிற எழுத்தாளர்கள், தமிழ்க்குடிமகன் அவர்கள் நினைப்பதுபோல் தமிழாசிரியர்களின் அங்கீகாரத்திற்காக ஏங்கவில்லை. சாகித்திய அகாடமி, தேசிய புத்தக அறக்கட்டளை போன்ற அரசு நிறுவனங்களிலும் பிறமொழி இலக்கிய அமைப்புக்களிலும் இவர்கள் தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள். எனவே, தமிழ்ப்பேராசிரியர்கள், அந்தத் தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, படைப்பிலக்கியத்துக்கு வரலாம் என்று நினைப்பது, பகல் கனவு. அதேசமயம் படைப்பாற்றலை சமூகச் சிந்தனையால் வலுப்படுத்தி - அவர்கள் படைப்பிலக்கியத்திற்கு வருவது இலக்கிய வளத்திற்கும், மொழிவளர்ச்சிக்கும் உதவும். தமிழறிஞர் <b>மு.வ.</b> அவர்கள் இதற்கு வழிகாட்டி. என்றாலும் அவரையும் பலமடங்கு தாண்டியாகவேண்டும். இந்தப் பின்னணியில், தன் மகனை, சான்றோன் எனக்கேட்ட தாயைப் போல், தமிழாசிரியர்கள், தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் மண்ணில் காலூன்றியபடியே எழுதும் படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும். தமிழாசிரியர்களுக்கும் இத்தகைய, படைப்பாளிகளுக்கும், இடையே அடிக்கடி கலந்துரையாடல் இருக்க வேண்டும். இதுதான், தாய் மொழியைப் பற்றியும் அதுதந்த முன்னோர்களைப் பற்றியும் கவலைப்படாத எழுத்தாளர்களுக்கு. நல்ல பதிலடியாக அல்லது நல்ல பாடமாக அமையும். {{rh|||<b>தினமணி தலையங்கப் பக்கக் கட்டுரை — 1999.</b>}} <section end="7"/>{{nop}}<noinclude></noinclude> 3mncsky1lpd5iy61d00da9v8siel664 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/13 250 213911 1840110 1839100 2025-07-07T17:01:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>என்னுரை</b>}}}} இந்தத் தொகுப்பு தவிர்த்து, இதுவரை வெளியான எனது சிறுகதைத் தொகுப்புகள் அனைத்தும், எனக்கு முழுமையான மனநிறைவைக் கொடுத்ததில்லை. பத்திரிகைகள் ‘எடிட்’ செய்து வெளியிட்ட கதைகளையே தொகுப்புகளாக கொண்டு வந்தேன். இந்த கதைகளுக்கு மூலங்களை கைவசம் வைத்திருக்காததால் ஏற்பட்ட கோளாரே காரணம். ஆனால், இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் கணிப்பொறியில் தக்க வைக்கப்பட்டவை. எனவே, இந்தத் தொகுப்பில் நான் முழுமையான எழுதிய கதைகளை அப்படியே கொண்டு வந்திருக்கிறேன். இதுவே, இந்தத் தொகுப்பின் பலம், பலவீனமும். ஒரு சில கதைகள், பத்திரிகைகளில் கத்தரித்து வந்ததைவிட, சிறப்புக் குறைவாய் உள்ளதாக எனக்குப் படுகிறது. ஆனாலும், முன்னைய தொகுப்புகளைப் போல் அல்லாமல் பெரும்பாலான கதைகள், எலும்பு கூடாக காட்சி காட்டாமல், ரத்தமும், சதையுமான உள்ளடக்கத்தோடு, எலும்பு, தோல் போர்த்த உருவமாகவும் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன். இந்தத் தொகுப்பில், இன்னொரு முக்கிய சிறப்பு அல்லது அந்த சொல்லுக்கு மாறானது, இவை அத்தனையும் கடந்த இரண்டாண்டு காலத்தில் எழுதப்பட்டவை. எழுத்தைப் பொறுத்த அளவில், என் நோக்கும், போக்கும், அன்று முதல் இன்றுவரை அப்படியேதான் உள்ளது. ஆனாலும், கதை சொல்லித்தனமும், மொழி நடையும், காலத்திற்கேற்ப, என்னை அறியாமலே மாறியிருப்பதாகவே கருதுகிறேன். இதற்கு, இந்தத் தொகுப்பு ஒரு எடுத்துக்காட்டு. <b>முகம் தெரிய மனுசியும், பெண் குடியும்,</b> அந்தக் காலத்து திருவாங்கூர் சமஸ்தானத்தின் சாமானியர் வரலாற்றை கண்டுபிடித்து எழுதப்பட்ட மெய்யான கதைகள். இத்தகைய கதைகளை எழுதுவதற்கு தமிழாலய நிறுவனர் பச்சையம்மால் அவர்களே, முழுமுதற் காரணம். இதரக் கதைகளில் பெரும்பாலானவை நான் கண்டதும், கேட்டதுமான நிகழ்வுகள் அல்லது அமங்கலங்கள். இவற்றை நடந்தது நடந்தபடி இயல்பாக எழுதாமல், அதற்கு யதார்த்த முத்திரை மட்டுமே நான் கொடுத்திருக்கிறேன். மற்றபடி, இந்த கதைகளின் உரிமையாளர்கள் இன்றைய நமது மக்களே. இந்தத் தொகுப்பிற்கு விரிவான முன்னுரை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், <b>பேராசிரியர். ராஜநாயகம்</b> அவர்களின்<noinclude></noinclude> jy62qw0f7mn1dzss70q215g9pjhfjxr பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/50 250 213912 1840431 670893 2025-07-08T11:42:49Z மொஹமது கராம் 14681 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" /></noinclude><section begin="8"/> {{dhr|3em}} {{Multicol}} {{dhr|30em}} {{block_right|{{border|2=350px|bthickness=2px|style={{border-radius|.7em}}|<b>ஒரு துரும்பை தூக்கிப்<br>போட்டு, ‘நீதான் மாப்பிள்ளை<br>என்று சொன்னால்’, அதுகூட<br>துள்ளும் என்ற ஒரு சொல்லடை<br>உண்டு. இது அரசில் பணி<br>ஆற்றும் அத்தனை தரப்பு<br>ஊழியர்களுக்கும் பொருந்தும். {{dhr|1em}} எனவே, இவர்களுக்கும்<br>சாதாரண மக்களுக்கும்<br>இடையே தோழமை உணர்வை<br>ஏற்படுத்தி, சமூகப் பொறுப்பில்<br>பயிற்சி அளிக்கவேண்டும்.<br>தங்களை ஊழலிலிருந்து<br>விடுவித்துக் கொண்டே, ஊழல்<br>புள்ளிகளுக்கு எதிராக ஒரு<br>அறப்போரை நடத்துவதற்கு<br>ஆயத்தப்படுத்த வேண்டும்.</b>}}}} {{Multicol-break}} {{X-larger|<b>''செல்லரிக்கும்<br>கரையான்கள்''</b>}} {{dhr|4em}} சென்ற பொதுத்தேர்தலின்<br>போது, அரசுப்பணி சம்பந்தமாக<br>நெல்லை மாவட்டத்திலுள்ள ஒரு<br>கிராமத்திற்குச் சென்றிருந்தேன்.<br>வாக்களிக்கப் போவதில்லை<br>யென்று நாலைந்து கரை<br>வேட்டிகளுக்குள் சிக்கிய ஒரு<br>நடுத்தர வயது மனிதர், அவர்<br>களிடமிருந்து விடுபட முண்டி<br>யடித்தார். இந்தக் காட்சியைப்<br>பார்த்த நான் அவரிடம் சென்று,<br>‘வாக்களிப்பது ஒரு குடிமகனின்<br>கடமை’ என்று ஒரு குட்டிச்<br>சொற்பொழிவு ஆற்றினேன்.<br>அரசாங்க ரீதியான சுற்றுப் பயண<br>டைரியில் ஒரு குறிப்பு எழுதக்<br>கிடைத்த மகிழ்ச்சி எனக்கு.<br>ஆனாலும் அவர் நான் ஒரு<br>வாக்கு கொடுத்தால், தான்<br>வாக்குச் சாவடிக்குச் செல்ல<br>தயாராய் இருப்பதாகத் தெரி<br>வித்தார். நான் அவரைக்<br>கேள்விக் குறியோடு பார்த்த<br>போது, இந்த நாட்டில், நமது<br>கட்சிகளில், எந்தக் கட்சி ஆட்சி<br>க்கு வந்தாலும், ஒரே ஒரு<br>தாலுகா ஆலுவலகத்தில்....; ஒரே<br>ஒரு காவல் நிலையத்தில் அல்லது<br>எந்த ஒரேயொரு அரசாங்க<br>அலுவலகத்திலாவது லஞ்சம் {{Multicol-end}}<noinclude></noinclude> bkyro19xlbzvcg5x6pg4ysgowf2rkzh பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/14 250 213914 1840115 1839101 2025-07-07T17:12:37Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|XII||}}</noinclude>முன்னுரையைப் படித்த பிறகு, என்னுரைகூட தேவையற்றதாகவே எனக்குப் படுகிறது. பேராசிரியர் ராஜநாயகம் நவீனத்துவ எழுத்தாளர். எளிமையும், இனிமையும் - அதே சமயத்தில் ஆழமும் ஒருங்கே பெற்ற படைப்பாளி. இவருடைய சிறுகதைத் தொகுப்புப்பான <b>கடைசிப் பொய்,</b> புதினங்களான <b>சில முடிவுகளும் சில தொடக்கங்களும், சாமிக்கண்ணு எனச் சில மனிதரின் கதைகள்,</b> நவீன தமிழ் இலககியத்திற்கு அணி சேர்ப்பவை. பிற படைப்பாளிகளால், நவீனத்துவம் எதிர்மறையில் செலுத்தப்படும்போது, அதை இழுத்துப்பிடித்து நெறிப்படுத்துபவை. சமூகப்போராளியான பேராசிரியர் எழுதிய இந்த முன்னுரையின் வாசிப்பு, என்னை ஆங்கில இலக்கிய அறிஞர் பாஸ்வெல்லை நினைவுப்படுத்துகிறது. ஆங்கில இலக்கிய மேதை டாக்டர். ஜான்சனை, பாஸ்வெல்லின் தயாரிப்பு என்று கூறுவார்கள். டாக்டர். ஜான்சனின் வரலாற்றை எழுதியவர் பாஸ்வெல். ‘சரக்கு முடுக்கு’ அதிகமாக இல்லாத டாக்டர் ஜான்சனுக்கு ‘செட்டியார்’ முடுக்கை கொடுத்தவர் பாஸ்வெல் என்பார்கள். இது உண்மையோ, பொய்யோ, என்வரைக்கும் இது நிகழ்ந்திருக்கிறது. பேராசிரியர். ராஜநாயகம் இந்தத் தொகுப்பை கட்டிக்காட்டியவிதம், என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கதாயாசிரியரான என்னை, உரையாசிரியரான அவர், நான் என்னை கண்டுபிடித்ததைவிட, அதிகமாக கண்டுபிடித்திருக்கிறார். இது பிற இலக்கிய முன்னுரைகளிலும் நிகழ்ந்துள்ளன. என்றாலும், என்தொகுப்பு இந்த கருப்பொருளுக்கு, உரிப்பொருளாகி இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இப்போது முக்கியமான ஒரு ஆய்வில் ஈடுப்பட்டிருக்கும் பேராசிரியர் ராஜநாயகம் அவர்கள், இந்தத் தொகுப்பிற்கு நாட்களை ஒதுக்கி ஒவ்வொரு கதைக்கும் ஒரு திருக்குறளைபோல் தெளிவுரை எழுதி இருப்பது எனக்குக் கிடைத்த இலக்கியக் கெளரவம். வழக்கம்போல், இந்த நூலை அச்சடித்துக் கொடுக்கும் பொறுப்பை மேற்கொண்ட <b>மணிவாசக நூலகத்திற்கு</b> நன்றியுடையேன். எனது சிறுகதைகளை இன்முகத்தோடு வெளியிட்ட <b>ஆனந்த விகடன்</b> ஆசிரியர், பாலசுப்ரமணியன் அவர்களுக்கும், பொறுப்பாசிரியர் வி.யெஸ்.வீ. அவர்களுக்கும், ஓம் சக்தி பொறுப்பாசிரியர் கவிஞர் பெ. சிதம்பரநாதன் அவர்களுக்கும் மற்றும் பல முகமரியா உதவி ஆசிரியத் தோழர்களுக்கும், இந்தத் தொகுப்பிற்கு ஒலியச்சு தந்த என் உதவியாளர் விஜயகுமார் அவர்களுக்கும் நன்றி மறக்காத நன்றி. இந்தப் பட்டியலில் குமுதம், புதிய பார்வை, தாமரை ஆகிய பத்திரிகைகளையும் இணைத்துக் கொள்கிறேன். {{Right|<b>– சு. சமுத்திரம்</b>}} {{nop}}<noinclude></noinclude> 3t9147u60qiv4yyfewdm6j3r8i1qbov பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/15 250 213917 1840120 1839256 2025-07-07T17:25:28Z Desappan sathiyamoorthy 14764 1840120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{dhr|3em}} {{center|{{Box|<b>{{X-larger|உள்ளடக்கம்}}</b>}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/001|1.{{gap+|1}}முகம் தெரியா மனுசி]] | {{DJVU page link| 1|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/002|2.{{gap+|1}}பொருள் மிக்க பூஜ்யம்]] | {{DJVU page link| 19|15}}}} {{Dtpl|dotline=...|3. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/நீரு பூத்த நெருப்பு|நீரு பூத்த நெருப்பு]]|{{DJVU page link| 29|15}}}} {{Dtpl|dotline=...|4. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/முதிர் கன்னி|முதிர் கன்னி]]|{{DJVU page link|40|15}}}} {{Dtpl|dotline=...|5. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/மூலம்|மூலம்]]|{{DJVU page link|57|15}}}} {{Dtpl|dotline=...|6. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/பாமர மேதை|பாமர மேதை]]|{{DJVU page link|67|15}}}} {{Dtpl|dotline=...|7. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/சிலந்தி வலை|சிலந்தி வலை]]|{{DJVU page link|81|15}}}} {{Dtpl|dotline=...|8. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/அகலிகைக் கல்|அகலிகைக் கல்]]|{{DJVU page link|94|15}}}} {{Dtpl|dotline=...|9. {{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/கடைசியர்கள்|கடைசியர்கள்]]|{{DJVU page link|109|15}}}} {{Dtpl|dotline=...|10.{{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/கலவரப் போதை|கலவரப் போதை]]|{{DJVU page link|126|15}}}} {{Dtpl|dotline=...|11.{{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/பெண் குடி|பெண் குடி]]|{{DJVU page link|139|15}}}} {{Dtpl|dotline=...|12.{{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/மாடசாமியின் ஊர்வலம்|மாடசாமியின் ஊர்வலம்]]|{{DJVU page link|158|15}}}} {{Dtpl|dotline=...|13.{{gap+|1}} |[[சமுத்திரக் கதைகள்/முதுகில் பாயாத அம்புகள்|முதுகில் பாயாத அம்புகள்]]|{{DJVU page link|173|15}}}} {{nop}}<noinclude></noinclude> 8q3sognp4wr0jf7rhl2o262t5pyi7rf 1840321 1840120 2025-07-08T07:50:13Z Mohanraj20 15516 1840321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{dhr|3em}} {{center|{{Box|<b>{{X-larger|உள்ளடக்கம்}}</b>}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/001|1.{{gap+|1}}முகம் தெரியா மனுசி]] | {{DJVU page link| 1|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/002|2.{{gap+|1}}பொருள் மிக்க பூஜ்யம்]] | {{DJVU page link| 19|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/003|3.{{gap+|1}}நீரு பூத்த நெருப்பு]] | {{DJVU page link| 29|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/004|4.{{gap+|1}}முதிர் கன்னி]] | {{DJVU page link| 40|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/005|5.{{gap+|1}}மூலம்]] | {{DJVU page link| 57|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/006|6.{{gap+|1}}பாமர மேதை]] | {{DJVU page link| 67|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/007|7.{{gap+|1}}சிலந்தி வலை]] | {{DJVU page link| 81|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/008|8.{{gap+|1}}அகலிகைக் கல்]] | {{DJVU page link| 94|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/009|9.{{gap+|1}}கடைசியர்கள்]] | {{DJVU page link| 109|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/010|10.{{gap+|1}}கலவரப் போதை]] | {{DJVU page link| 126|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/011|11.{{gap+|1}}பெண் குடி]] | {{DJVU page link| 139|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/012|12.{{gap+|1}}மாடசாமியின் ஊர்வலம்]] | {{DJVU page link| 158|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/013|13.{{gap+|1}}முதுகில் பாயாத அம்புகள்]] | {{DJVU page link| 173|15}}}} {{nop}}<noinclude></noinclude> iyoyt0c6nat9rs0s80opbg9uzq9jup4 1840381 1840321 2025-07-08T10:24:15Z Desappan sathiyamoorthy 14764 1840381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{dhr|3em}} {{center|{{Box|<b>{{X-larger|உள்ளடக்கம்}}</b>}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/001|1.{{gap+|1}}முகம் தெரியா மனுசி]] | {{DJVU page link| 1|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/002|2.{{gap+|1}}பொருள் மிக்க பூஜ்யம்]] | {{DJVU page link| 19|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/003|3.{{gap+|1}}நீரு பூத்த நெருப்பு]] | {{DJVU page link| 29|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/004|4.{{gap+|1}}முதிர் கன்னி]] | {{DJVU page link| 40|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/005|5.{{gap+|1}}மூலம்]] | {{DJVU page link| 57|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/006|6.{{gap+|1}}பாமர மேதை]] | {{DJVU page link| 67|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/007|7.{{gap+|1}}சிலந்தி வலை]] | {{DJVU page link| 81|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/008|8.{{gap+|1}}அகலிகைக் கல்]] | {{DJVU page link| 94|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/009|9.{{gap+|1}}கடைசியர்கள்]] | {{DJVU page link| 109|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/010|10.{{gap+|1}}கலவரப் போதை]] | {{DJVU page link| 126|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/011|11.{{gap+|1}}பெண் குடி]] | {{DJVU page link| 139|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/012|12.{{gap+|1}}மாடசாமியின் ஊர்வலம்]] | {{DJVU page link| 158|15}}}} {{Dtpl|dotline=...| | [[சமுத்திரக் கதைகள்/013|13.{{gap+|1}}முதுகில் பாயாத அம்புகள்]] | {{DJVU page link| 173|15}}}} {{nop}} {{dhr|2em}}<noinclude></noinclude> qyqeybbnqtwe0q6o73lnrj2cgzvfcer பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/16 250 213920 1840071 1839257 2025-07-07T15:45:44Z Mohanraj20 15516 1840071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{X-larger|முகம் தெரிய மனுசி}}</b>}} {{dhr|3em}} தண்டோராக்காரன், தான் செல்வதற்கு, அந்த குக்கிராம குடிசை மண்டிக்கு தகுதியில்லை என்று கருதியதுபோல், ஊருக்கு புறம்பாக உள்ள மயானத்தில் நின்று நெளித்தபடி, டும் டும் ஒலிகளோடு, திருவாங்கூர் சமஸ்தான அரச அறிவிப்பை வெளியிட்டான். “ஸ்ரீ உத்திரம் திருநாள் மகாராஜா திருமனஸ் அவர்கள், ஸ்ரீ பத்மநாபதாச வஞ்சிபால மார்த்தாண்ட வர்மா குலசேகர கிரீடபதி, மன்னை சுல்தான் மகாராஜா, ராஜ்ய பாக்கியோதைய ராமராஜா பகதூர்ஷம் ஷெர்ஜங் மகராஜா, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத் தேர்விழாவை தரிசிக்க நாளை மறுநாள் வந்து, ரெண்டு நாள் தாமசிக்கிறார்”. இதை முன்னிட்டு சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், ஊழியக்கார இளப்ப சாதிகள், விருத்திக்காரர்கள், அத்தனைபேரும் காணிக்கை, கைப்பொருளோடு வந்து சுசிந்திரம் கச்சேரிக்கு 96அடி தள்ளி நிற்கும்படி ஆக்ஞை இடப்படுகிறார்கள். மகாராஜாவின் வருகைக்கு முன்னதாக நிலவரியான புருசங்தாரம், வாரிசு வரியான அடியறா, வீட்டு வரியான குப்பகாழ்ச்சா மற்றும் பனைவரி, பனையேறும் ஏணிக்கான ஏணிக்காணம், பனை நாருக்கான தலைக்காணம், தலைவரி, முலைவரி, மீசைவரி, தாலிவரி, தாவரவரிகள் போன்ற அத்தனை வரிகளையும் செலுத்திவிட வேண்டும். அதோடு சாதிய அனுஷ்டானங்களை கடைபிடிக்காத தாழ்ந்த சாதியினரைப் பற்றி மேல் அதிகாரிகளுக்கு, பார்த்தவர்கள், கேட்டவர்கள், விசாரிப்பு மூலம் தெரிந்தவர்கள் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். இவற்றை மீறும் பட்சத்தில், இந்த தகவல்களை சொல்லாதவர்களுக்கும் சிரச்சேதம் உட்பட எந்தவிதமான தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.” {{nop}}<noinclude></noinclude> laml4sxb78ovpiyz7vxds7t7ye9m71h 1840382 1840071 2025-07-08T10:28:27Z Desappan sathiyamoorthy 14764 1840382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>{{X-larger|முகம் தெரியா மனுசி}}</b>}} தண்டோராக்காரன், தான் செல்வதற்கு, அந்த குக்கிராம குடிசை மண்டிக்கு தகுதியில்லை என்று கருதியதுபோல், ஊருக்கு புறம்பாக உள்ள மயானத்தில் நின்று நெளித்தபடி, டும் டும் ஒலிகளோடு, திருவாங்கூர் சமஸ்தான அரச அறிவிப்பை வெளியிட்டான். “ஸ்ரீ உத்திரம் திருநாள் மகாராஜா திருமனஸ் அவர்கள், ஸ்ரீ பத்மநாபதாச வஞ்சிபால மார்த்தாண்ட வர்மா குலசேகர கிரீடபதி, மன்னை சுல்தான் மகாராஜா, ராஜ்ய பாக்கியோதைய ராமராஜா பகதூர்ஷம் ஷெர்ஜங் மகராஜா, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத் தேர்விழாவை தரிசிக்க நாளை மறுநாள் வந்து, ரெண்டு நாள் தாமசிக்கிறார்”. இதை முன்னிட்டு சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், ஊழியக்கார இளப்ப சாதிகள், விருத்திக்காரர்கள், அத்தனைபேரும் காணிக்கை, கைப்பொருளோடு வந்து சுசீந்திரம் கச்சேரிக்கு 96 அடி தள்ளி நிற்கும்படி ஆக்ஞை இடப்படுகிறார்கள். மகாராஜாவின் வருகைக்கு முன்னதாக நிலவரியான புருசங்தாரம், வாரிசு வரியான அடியறா, வீட்டு வரியான குப்பகாழ்ச்சா மற்றும் பனைவரி, பனையேறும் ஏணிக்கான ஏணிக்காணம், பனை நாருக்கான தலைக்காணம், தலைவரி, முலைவரி, மீசைவரி, தாலிவரி, தாவரவரிகள் போன்ற அத்தனை வரிகளையும் செலுத்திவிட வேண்டும். அதோடு சாதிய அனுஷ்டானங்களை கடைபிடிக்காத தாழ்ந்த சாதியினரைப் பற்றி மேல் அதிகாரிகளுக்கு, பார்த்தவர்கள், கேட்டவர்கள், விசாரிப்பு மூலம் தெரிந்தவர்கள் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். இவற்றை மீறும் பட்சத்தில், இந்த தகவல்களை சொல்லாதவர்களுக்கும் சிரச்சேதம் உட்பட எந்தவிதமான தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.” {{nop}}<noinclude></noinclude> mib7tub96wip6x7fyd2tosst20wpv1i பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/17 250 213923 1840383 1839262 2025-07-08T10:31:43Z Desappan sathiyamoorthy 14764 1840383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|2|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>திருவாங்கூர் சமஸ்தான மன்னரைப் பற்றிய அலங்கார வார்த்தைகளுக்கு உச்ச சத்தமாய் முரசொலித்தும், ஒவ்வொரு அறிவிப்புக்கும் மூன்று தடவை டும் போட்டும், இறுதியில் டமர... டகர... டக்கா என்று பீதியை ஏற்படுத்தும் அதிகார தாளத்தோடு அடிக்கப்பட்ட தமுக்குச் சத்தம் அந்த குக்கிராமத்திற்குள் அசரீரி குரலாய் ஒக்கலித்தது. ஆறடி உயரமுள்ள அய்ம்பது, அறுபது பனையோலை குடிசைகள் எதிர் எதிராய், வரிசை வரிசையாய் இருந்தன. இந்த வரிசைகளுக்குப் பின்னால் மேலும் அடுக்கடுக்கான குடிசை வரிசைகள், ஊராய்க் காட்டின. ஒவ்வொரு குடிசையின் மண் சுவரும், இன்னொரு குடிசையின் சுவராயிற்று. இந்த இருபக்க குடிசை வரிசைக்கும் இடையே சுயம்பாக ஒரு குறுகிய தெரு ஏற்பட்டது. இந்தக் குடிசை வரிசைகளுக்கு மேல்பக்கம் உள்ள திட்டில் முக்கோண வடிவத்தில் சுண்ணாம்பு பூச்சு இற்றுப் போய் செம்மண் சுவராக நின்ற கள்ளிமாடன் பீடத்திற்கு முன்னால் வம்படி, வழக்கடியாய் பேசிக்கொண்டிருந்த அத்தனை ஆண்களும், பீதியோடு குரல் வந்த திக்கை எட்டிப் பார்த்தார்கள். அவர்கள் தத்தம் வரிபாக்கியை நினைத்தும், ஊழியம் செய்ய வேண்டிய கட்டாயம் குறித்தும், கலங்கிப்போய் ஒருவர் முகத்தை ஒருவர் ஆறுதலாக பார்த்துக் கொண்டார்கள். அப்போது தோள்வரை நீண்ட காதுகளில் அவர்கள் போட்டிருந்த ஈயக்குண்டலங்கள், அவர்களது பீதியை வெளிகாட்டுவதுபோல் மேலும், கிழுமாய் ஆடின. காதுகளை ஆட்டுவித்தன. ஊழியம் என்றால் கூலி இல்லாத ஒசி வேலைகள். முகாமிடும் மன்னரின் யானைகளுக்கு தென்னை ஒலைகளை வெட்டி, கட்டுக்கட்டாக சுமந்து செல்ல வேண்டும். குதிரைகளுக்கு, கொள்ளு கொண்டு போக வேண்டும். ஆங்காங்கே உள்ள நதி சுருங்கிய காயல்கள் எனப்படும் குளங்களை துர்வார வேண்டும். மன்னரின் பரிவாரங்களுக்கு தேங்காய்கள், நுங்குகள், பனங்கிழங்குகள், பயிர் வகைகள் முதலியவற்றை காணிக்கையாக்க வேண்டும். உப்பளங்களில் இருந்து உப்பு மூட்டைகளை சுமந்துபோக வேண்டும்.<noinclude></noinclude> lg6yo2uejytwzqgkwlbn4f13xae8n6i 1840384 1840383 2025-07-08T10:40:02Z Desappan sathiyamoorthy 14764 1840384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|2|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>திருவாங்கூர் சமஸ்தான மன்னரைப் பற்றிய அலங்கார வார்த்தைகளுக்கு உச்ச சத்தமாய் முரசொலித்தும், ஒவ்வொரு அறிவிப்புக்கும் மூன்று தடவை டும் போட்டும், இறுதியில் டமர... டகர... டக்கா என்று பீதியை ஏற்படுத்தும் அதிகார தாளத்தோடு அடிக்கப்பட்ட தமுக்குச் சத்தம் அந்த குக்கிராமத்திற்குள் அசரீரி குரலாய் ஒக்கலித்தது. ஆறடி உயரமுள்ள அய்ம்பது, அறுபது பனையோலை குடிசைகள் எதிர் எதிராய், வரிசை வரிசையாய் இருந்தன. இந்த வரிசைகளுக்குப் பின்னால் மேலும் அடுக்கடுக்கான குடிசை வரிசைகள், ஊராய்க் காட்டின. ஒவ்வொரு குடிசையின் மண் சுவரும், இன்னொரு குடிசையின் சுவராயிற்று. இந்த இருபக்க குடிசை வரிசைக்கும் இடையே சுயம்பாக ஒரு குறுகிய தெரு ஏற்பட்டது. இந்தக் குடிசை வரிசைகளுக்கு மேல்பக்கம் உள்ள திட்டில் முக்கோண வடிவத்தில் சுண்ணாம்பு பூச்சு இற்றுப் போய் செம்மண் சுவராக நின்ற கள்ளிமாடன் பீடத்திற்கு முன்னால் வம்படி, வழக்கடியாய் பேசிக்கொண்டிருந்த அத்தனை ஆண்களும், பீதியோடு குரல் வந்த திக்கை எட்டிப் பார்த்தார்கள். அவர்கள் தத்தம் வரிபாக்கியை நினைத்தும், ஊழியம் செய்ய வேண்டிய கட்டாயம் குறித்தும், கலங்கிப்போய் ஒருவர் முகத்தை ஒருவர் ஆறுதலாக பார்த்துக் கொண்டார்கள். அப்போது தோள்வரை நீண்ட காதுகளில் அவர்கள் போட்டிருந்த ஈயக்குண்டலங்கள், அவர்களது பீதியை வெளிகாட்டுவதுபோல் மேலும், கிழுமாய் ஆடின. காதுகளை ஆட்டுவித்தன. ஊழியம் என்றால் கூலி இல்லாத ஒசி வேலைகள். முகாமிடும் மன்னரின் யானைகளுக்கு தென்னை ஒலைகளை வெட்டி, கட்டுக் கட்டாக சுமந்து செல்ல வேண்டும். குதிரைகளுக்கு, கொள்ளு கொண்டு போக வேண்டும். ஆங்காங்கே உள்ள நதி சுருங்கிய காயல்கள் எனப்படும் குளங்களை துர்வார வேண்டும். மன்னரின் பரிவாரங்களுக்கு தேங்காய்கள், நுங்குகள், பனங்கிழங்குகள், பயிர் வகைகள் முதலியவற்றை காணிக்கையாக்க வேண்டும். உப்பளங்களில் இருந்து உப்பு மூட்டைகளை சுமந்துபோக வேண்டும்.<noinclude></noinclude> pjne3ginwl5hhvajgxgkq9o9zvzusdc பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/18 250 213926 1840385 1839263 2025-07-08T10:44:24Z Desappan sathiyamoorthy 14764 1840385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|3}} {{rule}}</noinclude>ஊட்டுப்புரை எனப்படும் சத்திரங்களுக்கு விறகு வெட்டிக் கொடுக்க வேண்டும். குடியான்கள், வண்டி வாகனங்களையும், உழவு மாடுகளையும் அதிகார கச்சேரியில் ஒப்படைக்க வேண்டும். இப்படி இளப்ப சாதிகளுக்காக விதிக்கப்பட்ட 120 ஊழியங்களில் பாதியையாவது மகாராஜாவின் வருகையின்போது செய்தாக வேண்டும். இல்லையென்றால் சிரச்சேதம்தான். ஆனாலும் இவர்களுக்கு கூலி கிடையாது. கூலி கிடக்கட்டும். குடிப்பதற்கு கூழ் கூட கிடைக்காது. ஊட்டுப் புரைகளில் வீசியெறியப்படுகிற எச்சில் சோறு கூட கிட்டாது. காரணம், அந்தப்பக்கம் இவர்கள் போகமுடியாது. ஆனாலும், ஊழியம் செய்ய சுணங்கினால் சவுக்கடி... வரிகட்ட தாமதித்தால் குனித்து வைக்கப்பட்டு முதுகுமேல் கல்லேற்றப்படும். இந்த ஊழியத்திலிருந்து நோயாளிகளும், வயோதிகர்களும் கூட தப்பிக்க முடியாது. எனவே, தோள்வரை தொங்கிய செவ்வக வடிவமான காதுகளில், மாட்டப்பட்ட ஈயக்குண்டலங்களோடும், முட்டிக்கால்களுக்கு கீழே போகாத முண்டுகளோடும், பிடரியை மறைக்கும் குடுமிகளோடும் தோன்றிய ஆடவர்கள், சொல்லாமல் கொள்ளாமல் ஓடினார்கள். “சுடலமாடா காப்பாத்து, கள்ளிமாடா காப்பாத்து” என்று அலறியடித்து ஓடினார்கள். மனைவி, மக்கள் இல்லாதவர்கள் ஒளிந்து கொள்ளவும், குடும்பஸ்தர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்துக் கொள்வதற்காகவும் ஒடிக் கொண்டிருந்தார்கள். இந்த ஓட்டத்தினால் அந்த பனையோலை குடிசைப்பகுதி, காலடி தமுக்காக ஒலமிட்டபோது அந்தத் தெருவில் ஆங்காங்கே பேசிக்கொண்டும், திருவுரலில் கேழ்வரகு அரைத்துக் கொண்டும், உரலில் சோளத்தை உலக்கையால் இடித்துக் கொண்டும், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே வேலையாற்றிய பெண்கள், பணிக்கருவிகளை கைவிட்டு விட்டு, ஒன்று திரண்டார்கள். இந்தப் பெண்களின் இடுப்புக்கு கீழே, முழங்கால்களுக்கு சிறிது இரக்கமாய் ஒற்றைச் சேலை முண்டுகள்... இடுப்புக்கு மேலேயோ முழு நிர்வாணம்.<noinclude> ச. 2.</noinclude> sjrv1qj3lio84ckrwueo3astgwipi82 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/19 250 213929 1840386 1839265 2025-07-08T10:48:52Z Desappan sathiyamoorthy 14764 1840386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|4|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>தொள்ளைக் காதுகளில் மட்டும் ஆண்களைப் போல் ஈயக் குண்டலங்கள். மற்றபடி திறந்தவெளி மார்புக்காரிகள்... மார்பகங்கள், வயதுக்கேற்ப மாங்கனியாய் பெருத்தும், பாவக்காயாய் சிறுத்தும், சுரைக்கூடாய் சுண்டியும் கிடந்தன. நேற்றுவரை, இந்த மார்பகங்களை, கை, கால்களைப் போல் வெறுமனே ஒரு உறுப்பாக பார்த்துப் பழகிய இந்தப் பெண்கள், அந்த தெற்குப்பக்க குடிசை வரிசையில் மேற்கோர எல்லையாய் நிற்கும் பனையோலை வீட்டின் முன்னால், அவ்வப்போது வெளிப்பட்ட ரவிக்கைகாரியைப் பார்த்து லேசாய் சிறுமைப்பட்டார்கள். ஓரளவு, பொறாமைப்பட்டார்கள். அவள் ரவிக்கையை மானசீகமாக கழட்டி இடுப்புக்கு மேல் மாட்டிப் பார்த்தார்கள். மேல்சாதி பெண்கள் கூட, இவளை மாதிரி ரவிக்கை போடாமல் மார்பகங்களில் கச்சை கட்டியிருப்பார்கள். சிலசமயம் தோள்சீலையை (மாராப்பு) முதுகுமுழுக்கக இறுகச் சுற்றி, இடுப்பில் இன்னொரு சுற்றாய் சுற்றி சொருகிக் கொள்வார்கள். ஆனால், இவளோ தோள்களின் இருபக்கமும் டக்கு, டக்கான துணிப் பூக்களோடு மார்பகத்திற்கும் கீழே போன அந்த சட்டைக்கு மேலே, வரிவரியாய் சுற்றிய கண்டாங்கி சேலையோடு நிற்கிறாள். கேட்டால், ரவிக்கை என்கிறாள். ‘எங்கள் ஊர் பழக்கம்’ என்கிறாள். ‘நீங்களும் போட்டுக்கணும்’ என்கிறாள். ஒருத்திக்கு தாலியை விட இதுதான் முக்கியம் என்கிறாள். இவளோடு சேருவது எலியும், தவளையும் கூட்டுச் சேர்ந்த கதைதான்... அந்த தண்டோராவிற்கு முன்பு வரை, அந்த ரவிக்கைகார இளம்பெண்ணை சுபதேவதையாய் அதிசயத்துப் பார்த்த பெண்கள் இப்போது கோபம், கோபமாய் பார்த்தார்கள். பயத்தால் ஏற்பட்ட கோபம். ‘சரியான சிமிட்டாக்காரி, இவள் இப்படி போட்டு இருக்கிறத ஏமான்க கிட்ட சொல்லாட்டா, நம்மபாடு கிறிச்சானுக்கு மறிச்சானாயிடும். அவள்கிட்ட இப்பவே போயி, மேல்சட்டையை கழட்டி, தோள்சிலையை தூக்கி எறியச் செய்யணும். இல்லாட்டா, நம்ம தலைமுடிக்குள்ள உலக்கைய உட்டு அதுல தல முடிய சுத்தோ சுத்துன்னு சுத்தி, குனிய வச்சி முதுகுல பாறாங்கல்ல ஏத்துவாங்க.<noinclude></noinclude> i5ym5dkp2c2xxt5yx5ij7eycuzva93v பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/20 250 213932 1840387 1443525 2025-07-08T10:52:23Z Desappan sathiyamoorthy 14764 1840387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|5}} {{rule}}</noinclude>சாதிப்பழக்கத்துக்கு தகாதபடி உடுப்புப் போட்ட இவளும் ஒரு பொம்பளையா? இந்த ஊருக்கே பெரிய அவமானம். இவள விடப்படாது. அந்த முண்டுச் சேலைப் பெண்கள், ரவிக்கைப் பெண்ணை நெருங்கியபோது, அவள் ஒரு சிறட்டையில் கரிக்கட்டைகளைப் போட்டு, கண்ணாடி சீசாவில் இருந்து சீமை எண்ணெயை லேசாய் ஊற்றி தீப்பற்ற வைத்து, தீமுட்டிக் குழலால் ஊதினாள். துளைகள் இல்லாத புல்லாங்குழல் போன்ற அந்த பித்தளை குழலில், அவளது ஊதோசையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப கரிக்கட்டைகள், நீரு பூத்த நெருப்பாகி, செந்தணலாகி, தியாகி பின்னர் ஜோதியாய் நர்த்தனமிட்டது. அந்தப் பெண்கள் அவள் ஊதி முடிக்கட்டும் என்று காத்திருந்தார்கள். அவள் நிமிர்ந்தபோது, ஏனோ பேசமுடியவில்லை. அவள் கண்களின் அழுத்தமும், தொய்வில்லாத பட்டறைச் சட்டம் போன்ற உடம்பும், அழகுக்கு அழகு சேர்க்கும் ரவிக்கையும், கம்பீரப்படுத்தும் முந்தானையும், சிவப்பழகிற்கு அறைகூவல் விடுக்கும் கருப்பழகும், அவர்கள் நாக்குகளை கட்டிப் போட்டன. இதற்குள் குடிசை வீட்டுக்குள் இருந்து பதநீர் பானையை தூக்கிக் கொண்டு வந்த மாமியார் பூமாரி, வீட்டு முற்றத்தில் முக்கோணமாய் பதிக்கப்பட்ட கல்லடுப்பிற்கு மேல், பானையை வைத்தாள். அந்த அடுப்பின் அடிவாரத்திற்குள் ஏற்கெனவே திணிக்கப்பட்ட கீறிப்போட்ட பனைமட்டைகளையும், சுள்ளி விறகுகளையும், சேர்த்துப் பிடித்து அடுப்புக்குள்ளயே ஒரு தட்டு தட்டினாள், பிறகு ரவிக்கைகார மருமகளிடமிருந்து, பாதிக்கருகிப்போன சிறட்டையோடு நெருப்பு துண்டங்களை வாங்கி அடுப்புக்குள் போட்டு, தீமூட்டிக் குழலால் ஊதினாள். நெருப்புப் பற்றியதும், தொடைகளில் கை, கால்களை ஊன்றி எழுந்து, அந்தப் பெண்களை ஏறிட்டுப் பார்த்தாள். மருமகள் அருகேயுள்ள மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்ட மூன்று மாடுகளுக்கும், ஒரு கன்று குட்டிக்கும் வைக்கோலை சமச்சீராய் வைத்தாள். பிறகு கருஞ்சிவப்பான கன்றுக் குட்டியின் முதுகை தடவிவிட்டாள். அந்த<noinclude></noinclude> jyrctfk7ecas10yq4ju6hebot5u67yo பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/21 250 213935 1840389 1839270 2025-07-08T10:55:21Z Desappan sathiyamoorthy 14764 1840389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|6|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>குட்டி முதுகை பம்மவைத்து, அவள் முகத்தை முகர்ந்தபோது, இடம்தெரியா ஊரில் இடறிவிழுந்த துக்கத்தை மறந்தாள். அந்தப் பெண்களுக்கு, எடுத்த எடுப்பிலேயே ரவிக்கைகாரியை விமர்சிக்க மனமில்லை. “நீ கேளு... நீயே கேளு...” என்பது மாதிரி ஒவ்வொருத்தியும் மற்றவள்களின் முகத்தைப் பார்த்தபோது, ஒரு நடுத்தர வயதுப் பெண், பூமாரிக் கிழவியிடம் பீடிகை போட்டாள். “பனவிள... விடிலில பயனி காய்க்காம, இங்க எதுக்காவ காய்க்க சித்தி?” “ஒன் காது செவிடா? தமுக்குச் சத்தம் கேக்கல? விளயில பயினி காய்ச்சா, சிறட்ட கூட மிஞ்சாது. யான போன கரும்புத் தோட்டமாவது கொஞ்சம் நஞ்சம் ஒப்பேரும், ஆனா, மவராசா பரிவாரப் பயலுக போன இடத்தல புல்லு கூட முளைக்காதே.” கன்றுக்குட்டியின் முதுகை தடவிவிட்டபடியே மாமியார் சொல்வதை அதிசயமாய் கேட்பதுபோல் முகத்தை அண்ணாந்து வைத்த ரவிக்கைக்காரி, அந்தப் பெண்களின் அம்மண மார்பகங்களை, அறுவெறுப்பாகவும், பின்னர் அனுதாபமாகவும் பார்த்து, முகஞ் சுழித்தபோது, ஒரு முன்கோபிப்பெண் முரட்டுத்தனமாக கிழவியைச் சீண்டினாள். “தண்டோராச் சத்தம் வயசான ஒனக்கு கேக்கும்போது, எங்களுக்கு கேக்காதா? சாதி அனுஷ்டானத்த விட்டோமுன்னா மாறு கால் மாறு கை வாங்கிடுவாவ... பேசாம உன் மருமவள எங்கள மாதிரி மேல்துளி இல்லாம நிக்கச் சொல்லு. கச்சேரியில போயி நாங்களே சொல்லும்படியா வச்சிப்புடாத.” ரவிக்கைக்காரி, அவர்களை சுட்டெரித்துப் பார்த்தபொழுது, பூமாரி கிழவி மன்றாடினாள். “காலங்காலமா இந்தமாதிரி சட்ட போட்டிருக்காளாம்... இப்படி போடுறது அவ ஊரு பழக்கமாம். உங்கச் சிலைய களைஞ்சா எப்படி ஒங்களுக்கு இருக்குமோ, அப்படி மேல்சட்டைய கழுட்டுனா, அவளுக்கு இருக்குமாம். அத கழட்டுறதுக்கு கூச்சப்படுறா. இந்த சட்டம்பி பய... அதான் என் மவன்... இவளை எப்படியோ மசக்கி கூட்டி<noinclude></noinclude> 0lp9n9rkbq32xffvu9foruejn75k0jv பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/22 250 213938 1840391 1444179 2025-07-08T10:59:44Z Desappan sathiyamoorthy 14764 1840391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|7}} {{rule}}</noinclude>வந்துட்டான். ரெண்டு நாளிக்கு விட்டுப் புடிச்சா சரியாயிடும். என்ன செய்யுறது... ரோஷக்காரியா இருக்கா” “நம்ம சாதி பொம்பளயளுக்கு ரோஷம் கூடாது. ஆச்சி" “ஏன் கூடாது? அப்படின்னா சீலையையும் அவுத்து போடுங்கழா” ‘இதபாரு ஆச்சி வயசானவன்னு பாவம் பாக்கோம். இல்லாட்டா கச்சேரிக்குப் போக அதிக நேரம் ஆகாது. வேணுமுன்னா ஒண்ணு செய். மவராசா வரும்போது, மேல்சாதி பொண்ணுங்கள சீவி சிங்காரிச்சு கொப்பு, சரடு, தலைசுத்தி, தண்டை, சதங்கை, வளையல், காப்பு, காசுமாலை, கண்டிமாலை போட்டு மாடத்துல நிறுத்தி, மவராசா பார்வையில படவச்சி... அவரு, அவளுவள கூடாரத்துல அனுபவச்சிட்டு இருபது கோட்ட விதபாட்ட அம்மச்சி கோணமா கொடுக்கிறது மாதிரி, மேல்சாதிக்காரி மாதிரியே தெரியுற ஒன் மருமவள அலங்காரம் பண்ணி, மவராசா வர வழிப்பக்கம் நிறுத்து. இவளையும் துக்கிட்டுப் போவாரு... இருபத்தோருக் கோட்ட விதபாட்டையும் தருவாரு பேசுறா பாரு பேச்சு.” பூமாரி, பத்ரகாளியானாள். இப்படி அவள் கோவப்பட்டு அந்தப் பெண்கள் பார்த்தது இல்லை. “நாக்க அறுத்துப்புடுவேன்... என்ன பேச்சுடி பேசுற..? எந்த சாதியையும் ஒன்ன மாதிரி மட்டமா நினையாத. நான் சின்னப்புள்ளையா இருக்கும்போது, இவருக்கு முந்துன மவராசா இந்தப் பக்கம் வந்தாரு. ஒரு பொண்ணோட ஆறடி நீள தலமுடிய பாத்துட்டு மயங்கிப் போனாரு. சேவகர்கள கூப்பிட்டு அந்தப் பொண்ண கண்டுபிடிக்கச் சொன்னாரு. அவங்களும் கண்டுபுடிச்சு அந்தப் பெண்ணுக்கு பல்லக்கு, நகை, நட்டு கொண்டுவந்து மகராசாகிட்ட வரச் சொன்னாங்க. ஆனால் அந்த மவராசி... அவள் செத்தும் தெய்வமா நிக்க... தங்கரளிக் கொட்டைய அரச்சிக் குடிச்சி தன்னையே கொன்னுகிட்டா. இதுமாதிரிதான் என் மருமவளும்... வந்த வழிய பாத்து போங்கடி. இப்பல்லாம் பல இடத்துல நம்மோட பெண்டுக மேல்சட்டைப் போட்டு லாந்துறாளுவ. இவளும் இப்படி<noinclude></noinclude> 7jfh3p7nn53uecqek7l8i9leex2xh69 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/23 250 213941 1840395 1839272 2025-07-08T11:02:38Z Desappan sathiyamoorthy 14764 1840395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|8|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>செய்யறதுல என்ன தப்பு..? நீங்க இவள மாதிரி செய்யாம இருக்கதுதான் தப்பு.” “சரி எங்களயும் ஒரு வழி பண்ண பாக்கே. ஒன்பாடு... ஒன் மருமவ பாடு... சர்க்கார் பாடு...” “அப்படி நாம விடமுடியுமா? காரியக்கார ஆளுக வந்தா நம்ம முதுகுலயும் கல்லேறுமே... கண்ணால கண்டத சொல்லணுமுன்னு தமுக்குக்காரன் சொல்லிட்டுப் போயிருக்கானே” ரவிக்கைக்காரி, அந்தப் பெண்களைச் சிறிப் பார்த்தபோது, ஒருத்தி, இன்னொருத்தியின் இடுப்பில் கிள்ள, அவள் மற்றவளின் தோளைக் கிள்ள அது தொடர்கிள்ளல்களாக, அத்தனை பெண்களும் கிழக்கு பக்கமாய் எக்கிப் பார்த்துவிட்டு, அங்குமிங்குமாய் சிதறி ஓடினார்கள். அங்கிருந்து, பத்து, பதினைந்து ஏவலாட்கள் புடைசூழ வந்த வலிய கணக்கெழுத்து வேலப்பனும், மணியம் கச்சேரி தாணுலிங்கமும் தங்கள் பக்கமாய் ஓடிவந்த பெண்களை சவுக்காலும், பிரம்பாலும் ‘விளையாட்டாக’ விளாசினார்கள். உடம்பை புடைக்கவைக்கும் வினையான விளையாட்டு. அந்தப் பெண்களும் வலியைப் பொறுத்துக் கொண்டு, ஏதோ மகத்தான பட்டம் ஒன்றை பெற்றதுபோல் வலியச் சிரித்துக் கொண்டே ஓடினார்கள். இதற்குள் பூமாரி உஷாரானாள். ரவிக்கைக்கார மருமகளை ஆறடி உயர வீட்டின் மூன்றடி வாசலுக்குள் கூனிக்குறுக்கி திணித்துவிட்டு, பனைமட்டக் கதவைச் சாத்தினாள். பதநீர் பானையைப் பதம் பார்ப்பதுபோல், பாசாங்கு போட்டாள். நிறைபானை பதநீர், கொதித்து கொதித்து, சுண்டிச் சுண்டி கூப்பனியாகி பானையின் கால்பகுதி வரை சுருங்கியது. திடீரென்று ‘ஏய்’ என்ற சொல்லோடு காலில் பிரம்படியும், முதுகில் சவுக்கடியும் பெற்ற பூமாரி ஏறிட்டு பார்த்தாள். உடனடியாய் எழுந்தாள். இடது கைகைய மார்பில் குறுக்காய் மடித்து, வலது கையை கொண்டு வாயில் பாதியை மூடியபடியே ‘ஏமானே ஏமானே’ அடியேன் என்ன செய்யனும்” என்று அரற்றினாள். {{nop}}<noinclude></noinclude> qiwfyxkm3dc39g2jhjfzoek0uvtz4iu பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/24 250 213944 1840398 1839273 2025-07-08T11:06:04Z Desappan sathiyamoorthy 14764 1840398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|9}} {{rule}}</noinclude>வலிய கணக்கெழுத்தும், மணியக்காரரும், பட்டு வேட்டியும், ஜரிகை தலைப்பாகையும், வைரக்கடுக்கனும், பச்சைக்கல் டோலக்கும், மார்பில் வைரப் பதக்கமும், வலது கையில் தங்கத்தாலான வீரகாண்டாமணியும், தோளில் பட்டு நேரியலுமாய், மீசைகளை முறுக்கியபடியே, கிழவியிடம் பேசுவது தங்கள் தகுதிக்கு குறைவு என்பதுபோல் சிறிது விலகி நின்றார்கள். வெப்பமற்ற, இதமான காற்று அடித்த அந்த வேளையிலும், அவர்களுக்கு இரண்டுபேர் குடைபிடித்துக் கொண்டிருந்தார்கள். பூமாரி நெடுஞ்சாண் கிடையாக அவர்கள் கால்களில் விழுந்தாள். ‘எந்தத் தப்பு செய்திருந்தாலும் என்னை காலால இடறி கையால உதறிப்போடுங்க சாமிகளா’ என்று ஒலமிட்டாள். இதற்குள் வலிய கணக்கெழுத்து, பனையோலைச் சுவடிகளில் ஒன்றை எடுத்து, ஏவலாள் ஒருவனிடம் கிசுகிசுத்தார். அந்த ஏவலாளி, பூமாரியிடம் எதிர்ப்பாளியாய் கேட்டான். “ஏய் கிழவி! நீ குப்பாச்சா கட்டல. பனையிரை கட்டல, ஏணிப்பாணம் கொடுக்கல. ஒன் மனசுல என்னழா நினைச்சுகிட்டே?” “ஏமானே! இன்னைக்கு கருப்பெட்டி வித்துட்டா வரிக்காசு முழுசும் சேர்ந்துரும். நாளிக்கு அதிகார கச்சேரியில வந்து கட்டிடுவேன் ஏமானே” “ஒன் புருஷன் இசக்கிமாடன ஊழியம் செய்ய வரச்சொல்லு. கிழட்டுப்பய எங்கழா போயிட்டான்?” “வந்துருவாவு. ஏமானே... திங்கள் சந்தையில ஒரு கன்னிப்பேய ஒட்டுறதுக்கு போயிருக்காவ... வந்தவுடனே ஊழியத்துக்கு அனுப்பி வைக்கேன். சர்க்காருக்கு ஊழியமுன்னா சந்தோஷமா செய்யற மனுஷன்.” வலிய கணக்கெழுத்தும், மணியம் கச்சேரியும் திருப்தியாக தலையாட்டியபடியே புறப்பட்டபோது, ஏவலாளிகளின் வலுவான ஒருவன் அருகேயுள்ள மாட்டுத் தொழுவத்திற்கு சென்று பூவரசு<noinclude></noinclude> gype8xv4f0zuobqia70di7lfaz1uupc பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/32 250 213968 1840214 1446204 2025-07-08T04:43:12Z Mohanraj20 15516 1840214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முகம் தெரியா மனுசி|17}} {{rule}}</noinclude>நடைபெறுகின்றன. அதே சமயம், அழுக்கு வேட்டிகளுக்கு பக்கபலமாக, தலையின் வலது பக்க முன்பகுதியில் குடுமி முடிந்த நம்பூதிரிகளும், இன்னும் சில வெள்ளைச் சொள்ளை மனிதர்களும், கிறிஸ்துவ பாதிரியார்களும் எதிர்த்தரப்பிடம் கோபங்கோபமாய் பேசுகிறார்கள். அவர்களை பின்னால் தள்ளி விடுகிறார்கள். ஆனாலும் சந்தைக்குள் இருந்த கட்டைவண்டிகள் உடைக்கப் படுகின்றன. கட்டிடங்கள் எரிக்கப்படுகின்றன. தானியங்கள் புகைகின்றன. ஆடுகள் அலறுகின்றன. மாடுகள் அலைமோது கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக . கரங்களின் மணிக்கட்டுகள் வரை நீண்டு, கழுத்து வரை உயர்ந்து, இடுப்பு வரை வியாபித்த குப்பாயச் சட்டையையும், தோளில் ஒரு துண்டு சேலையுமாய் உரிமையை நிலைநாட்டும் வகையில் அணிந்துக் கொண்டு திரண்டிருந்த கிழ்சாதி பெண்களில் பலர் மல்லாந்தும், குப்புறவும் தள்ளப்படுகிறார்கள். குப்பாயங்கள் கிழிக்கப்படுகின்றன. தோள்சிலை உறியப்படுகிறது. இடுப்பில் கட்டிய சேலைகள் அவி ழ்க்கப்படுகின்றன. நிர்வாணமாய் ஆக்கப்பட்ட பெண்கள், இடுப்புக்கு கீழே இரண்டு கைகளையும் வைத்து பொத்திக் கொண்டு குய்யோ, முறையோ என்று கூப்பாடு போடுகிறார்கள். “ஏசுவே.. ஏசுவே” என்ற ஏகப்பட்ட அலறல்கள். “முத்தாரம்மா, முத்தாரம்மா” என்ற சின்னச் சின்ன முனங்கல்கள். வண்டுகள் போல் ரீங்களிக்கும் அவர்களின் வழக்கமான சத்தம், குண்டுகளின் கோரச்சத்தமாய் குரலிடுகிறது. இந்தப் பின்னணியில் வெள்ளையும், சொள்ளையுமான ஒரு தடியன், குப்பாயம் போட்ட ஒரு இளம் பெண்ணை இருபக்கமும் கைகளை விரித்துப்போட்டு துரத்துகிறான். அவள் அலறியடித்து அவனை திரும்பித் திரும்பி பார்த்தபடியே ஒடிஓடி, ஒரு திருப்பத்தில் இடறி விழுகிறாள். ராசம்மா நிற்கும் இடத்திலிருந்து பத்தடி தொலைவில் அப்படியே கிடக்கிறாள். துரத்திவந்தவன் அவள் வயிற்றில் உட்கார்ந்து கொண்டு, மார்புக்கும் குப்பாய இடைவெளிக்கும் இடையில் இரண்டு கைகளையும் ஊடுருவ<noinclude></noinclude> 5stmwajxl22f5bgg9y9j8lm9m5j4s3l பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/33 250 213971 1840217 1446209 2025-07-08T04:48:02Z Mohanraj20 15516 1840217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|18|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>விடுகிறான். அந்தப் பெண் ஒலமிட சக்தியற்று முடங்கிக் கிடக்கிறாள். நடக்கப்போவதை எதிர்பார்த்து, கண்களை, கைகளால் மூடிக் கொள்கிறாள். யந்திரமயமாய் நின்ற ராசம்மா மனிதமயமாகிறாள். கிழே குனிகிறாள். அவளுக்கென்றே தரையில் ஒரு கூர்மையான பாறாங்கல் காத்துக்கிடக்கிறது. அதைத் துக்கிக் கொண்டு குப்பாய துச்சாதனனை நோக்கி ‘ஏலேய்.. “என்று கத்தியபடியே, ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து, அவனை அந்தப் பெண்ணின் காலடிக்கு பின்புறமாய், தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட வீழ்த்துகிறாள். தோளில் சாய்ந்த குப்பாயப் பெண்ணை தூக்கி நிறுத்தி அணைத்தபடியே அடிதடிச் சந்தையை நோக்கி அடிமேல் அடிபோட்டு நடக்கிறாள். அந்தப் பெண்ணை நடத்தி நடத்தி - அங்கே நடைபெற்ற எளிய பெண்களின் தோள்சிலை உரிமைப் போரில், முகம்தெரியா மனுசியாய் ராசம்மா சங்கமிக்கிறாள். பி.கு : அந்தக் காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களின் மேலாடை தோள்சிலை என்று அழைக்கப்பட்டது. {{Right|ஆனந்த விகடன்,}} {{Right|◯}}<noinclude></noinclude> j4rgtpu5ubxt3krn5baz4unku7gu1qk பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/34 250 213974 1840222 1446210 2025-07-08T04:54:28Z Mohanraj20 15516 1840222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>பொருள் மிக்க பூஜ்யம்</b>}}}} {{dhr|3em}} அந்த கன்றுக்குட்டி, புலிப்பாய்ச்சலில் காட்டைக் கிழித்தும், காற்றைப் பிடித்தும், பறப்பதுபோல் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரே மலையை, இரு மலையாய்க் காட்டும் மடிப்பு வெளி; மரித்ததுபோல் இறங்குமுகமும், மறுபிறவி எடுத்ததுபோல் ஏறுமுகமும் கொண்ட மலைப்பூமி; இந்த இரு முகங்களுக்கு இடையேயான மலைத்தொட்டில். பூமிப்பெண்ணின் மார்பகமாய் விம்மிப்புடைத்த அந்த மலைப்பகுதியின் ரூபத்தையும், அதற்குத் தாவணி போட்டது போன்ற மேகத்தையும், முக்காடான ஆகாய அரூபத்தையும், எவரும் தத்தம் கற்பனைக்கேற்ப வேறு வேறு வடிவங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். அப்படிக் கற்பித்துக் கொண்டால், மலைகளே துரளியான அந்தத் தொட்டிலில், ஒரு அசுரக் குழந்தை படுத்திருப்பதாகப் பார்க்கலாம். அப்படிப் பாவித்தால், மண்டிக் கிடக்கும் மரங்களே அந்தக் குழந்தையின் தலைமுடி. நெற்றியே, அதன் சமவெளி. புருவங்களே அதன் புல்வெளி. அருவிகளே அதன் கசியும் கண். வாயே அதன் நீர்ச்சுனை. அதன் மூச்சே பெருங்காற்று. கனைக்கின்ற அந்த வனத்திற்குள், அந்தக் காட்டு மாட்டுக் கன்று ‘ம்மா... ம்மா’ என்று கத்தியபடியே, காதுகளை சிலிர்க்கவிட்டு, கால் போட்டுத் தாவியது. அதற்கு ஏற்ப தாளலயமான ஒலிகளும், சுருதிபேத கூக்குரல்களும் கூடவே எழுந்தன. குயில்களின் செல்லச் சத்தம்; வானம்பாடியின் கானச் சத்தம்... பருந்துகளின் பயமுறுத்தும் சத்தம்... ஆந்தைகளின் அலறல்... அத்தனை சத்தங்களும் ‘சுயத்தை’ இழக்காத கலவைச் சத்தங்களாகவும், சுயம்கலந்த கூட்டுச் சத்தங்களாகவும், இறுதியில் அத்வைத அசரீரி குரலாகவும் ஒலித்தன. அந்த சப்தா சத்தம் காதில் ஏறாமலும், சந்தன வாடையும், ஐவ்வாது வாடையும் மூக்கில் நுழையாமலும், அலறி அடித்து ஓடிக் கொண்டிருந்தது. {{nop}}<noinclude>{{rh|ச. 3||}}</noinclude> 04ycrp2ndu6hgrw5hx4z6b3j7uli1np பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/35 250 213979 1840228 1447643 2025-07-08T04:57:57Z Mohanraj20 15516 1840228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|20|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>ஒரு தாவர மண்டியின் அடிவாரத்திலுள்ள மந்தையிலிருந்து, தன்னந் தனியாய் பிரிந்து தாவித்தாவி பாய்ந்து, பதினாறு வயது மனிதக் குட்டிகளாலும் ஒட முடியாத பாய்ச்சல் போட்ட அந்த மாட்டுக்குட்டியை, எங்கே போகிறாய் என்பதுபோல் மூங்கில்கள் வலிந்தும் வளைந்தும் கேட்டன. ‘போகாதே’ என்பதுபோல் கற்றாழை வழிமறித்துக் கேட்டது. ஆனாலும் அந்தக் கன்று, மூங்கில்களிலிருந்து விலகி, கற்றாழைகளைத் தாண்டி, காட்டுக் கொடிகளை அறுத்து கவனாய் நின்ற இரட்டை மர இடைவெளிகளில் புகுந்த முகத்தை விலக்கி, காட்டுப் பூக்களை மிதித்து, மரக் குவியலுக்குள் புகுந்து, தேக்குமரத் தொகுப்பிற்குள் திசைமாறி, செவ்வாழைகளின் அணிவகுப்பில் ஊடுருவி, குழம்படி இல்லாத அந்த அடர்காட்டிற்குள் தன்க்குத்தானே ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டு பேய்த்தனமாய் ஓடியது. இதன் அவலத்தை புரிந்ததுபோல், மரங்களில் சிறுத்தைகள் ஏறுகின்றனவா என்று கண்காணித்த குரங்குகள், இதை எச்சரித்துக் குரலிட்டன. தொலைவில் தெரியும் காட்டெருமைகள் மேலுதடுகளை விலக்கி திப்பிழம்பு வாயில் வெள்ளொளியாய் பற்கள் தெரிய பார்க்கின்றன. ஆனால் இந்தக் கன்றோ... ஒவ்வொரு மரமும் ஒரு முட்டுக்கட்டையாக, ஒவ்வொரு கொடியும் ஒரு மூக்கணாங்கயிராக, அத்தனை தடைகளையும் தாண்டித் தாண்டி ஓடியது. ‘சிலம்பாடிய மரங்களையும், கிளை பின்னி, இலைவேய்ந்து அந்தக் பகுதியையே ஒரு வீடாக காட்டும் காட்டுச் சங்கமத்தில், மஞ்சள் வெயில் சிந்திய ஒளியையே வழியாக்கியபடி, பாசம், பயத்தைத் துரத்த, வேகம் கால்களைத் துரத்த விரைந்தது. அந்தச் சமயத்திலும், அதன் காலடி அதிர்வுகளால் வெளிக்கிளம்பும் பூச்சிப் புழுக்களைப் பிடிப்பதற்காக, இரண்டு காட்டுக் குருவிகள் அதன் முதுகில் அமர்ந்தன. வேறாரு சமயமாக இருந்தால், அந்தப் பறவைகளின் கால் உராய்வை, முதுகுச் சொறியலாக ரசிக்கக்கூடிய அந்தக் கன்று, இப்போது உடனடியாக நின்று, முகத்தைப் பின்திருப்பி, வாலை முன்திருப்பி அந்தக் குருவிகளைத் துரத்திவிட்டு, முன்கால்களும் பின்கால்களும் ஒரே காலானது போல் மீண்டும் தாவியது. {{nop}}<noinclude></noinclude> lwpk74vvsiqa1dql84pmt7w0qh4o80t பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/36 250 213982 1840232 1447651 2025-07-08T05:05:46Z Mohanraj20 15516 1840232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||பொருள் மிக்க பூஜ்யம்|21}} {{rule}}</noinclude>இந்தக் கன்று வழக்கம்போல், ஆல விழுதுகளே திரைச்சிலையான மலைப்பாறைக்கு அருகே ஒவ்வொரு மரமும் ஒரு தோப்பானது போன்ற பெருமரக் கூடாரத்தில், இதர கன்றுகளோடு கன்றாய் துள்ளித்தான் திரிந்தது. அவற்றைப் போலவே அம்மா வரும் திசையையே ‘ம்..மா...ம்மா...’ போட்டு பார்த்தது. கன்று சகாக்களின் கூட்டுக்குரலில் தன் குரலை சங்கமிக்கவிட்டது. ஆனாலும், மாலை வேளையில் அத்தனை மாடுகளும் திரும்பிவிட்டன. இதன்’ அம்மாவைத்தான் காணோம். கூடிநின்ற கன்றுகளும், அவற்றின் அம்மாக்களும், ஒன்றை ஒன்று தேடிப்பிடித்து ஒருமைப்பட்டபோது, இந்தக் கன்றுக்குட்டி அங்குமிங்குமாய் பார்த்தது. அத்தனை பசுக்களும், அகலக் கால் விரித்து தத்தம் கன்றுகளை, பால் பொங்கிய மடிகளை பற்றவிட்டன. ஆயிரங்கால் மண்டபம் போன்ற அவற்றின் காலடி வழியாக இந்தக் கன்று குனிந்து பார்த்தது. ‘என் அம்மா எங்கே’ என்பதுபோல் கத்திக் கேட்டது. அந்த மாட்டுக்கூட்டமோ பாசப்பெருக்கை பால் பெருக்காய் காட்டி, ‘குடும்பப்பாங்காய்’ நின்றனவே தவிர, சமூகப் பாங்காய் நிற்கவில்லை. இப்படி இந்த சின்னம்மாக்களும், பெரியம்மாக்களும், ‘பொதுவான’ அப்பாக்களும் இதைக் கண்டுகொள்ளாதபோது, இந்தக் கன்று துள்ளிப் பாய்ந்தது. உச்சந்தலையில் ஒரு முத்தமிட்டு இளங்கொம்புகளின் இடைவெளியில் முகம் சாய்த்து ‘எச்சரிக்கையாய் இரு’ என்று எச்சரித்து சென்ற தாயைக் காணவில்லை. அம்மாவைப் பார்த்தாக வேண்டும். எங்கே நின்றாலும் சரி... அந்தக் கன்றின் முகத்தில் மூங்கில் செதில்கள் ரத்தக் கசிவை ஏற்படுத்தின. நெறிஞ்சி முட்கள் காலைக் கவ்வின. ஆனாலும், இந்த நரகவேதனையை, பாசவேதனை விழுங்க, ஒவ்வொரு இடையூறிலும் ஒவ்வொரு விதமாய் வேகப்பட்டு, எப்படியோ அந்தக் காரிருள் காட்டில் இருந்து வெட்டவெளிக்கு வந்துவிட்டது. களையான புல்லே பயிரான வெளி... ஜோதிப் பாளங்கள் மாதிரியான காளான்கள். அசுர விசிறியான பனைமரங்கள். அவற்றைத் தழுவிய ஈச்சம்பனைகள். இவற்றின் இடுப்பில் வேரெடுத்து தோளைச்சுற்றிய ஓணான் செடிகள். தாவர மயிலான கல்வாழைகள். மற்றபடி பெருவெளி. {{nop}}<noinclude></noinclude> fwx3keobewd79uxaz0gb7zr4war6s9t பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/37 250 213985 1840234 1447655 2025-07-08T05:16:47Z Mohanraj20 15516 1840234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|22|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>அந்தக் கன்று நின்றது. நிமிர்ந்தது. ஒரு கரிச்சான்குருவி ஒரு காகத்தை நெத்தியடி போல் “இறக்கை அடி” கொடுத்துக் கொண்டிருந்தது. மூங்கில் சிதறல்களும், பன்னாடைகளும் நிறைந்த கூட்டிலிருந்து ஒரு காகத்தை ஒரு ஆண்குயில் வம்புக்கு இழுத்து, ஆகாய வெளியில் போராடப் போவது போலவும், பயந்தது போலவும் பாசாங்காய் பறந்தபோது, அந்த மூடப் பறவை அதை நம்பி அதைத் துரத்தியபோது, பெண்குயில் ஒன்று அதன் கூட்டிற்குள் சென்று முட்டையிட்டது. ஆனாலும் அந்தக் கன்று, இந்த அருகாமைக் காட்சிகளை பார்க்காமல் தொலைநோக்காய் பார்த்தது. பார்க்கப் பார்க்க அதன் பரபரப்பு பரவசமானது. அதோ அம்மா வருகிறாள். ஒடி வருகிறாள். ம்மா... ம்மா... இங்கே நிக்கேம்மா.. அந்தக் காட்டுக் கன்றுக்குட்டி, அம்மாவை நோக்கிப் பாய்ந்தது. இரண்டும், ஒன்றையொன்று அந்த வினாடியே பார்க்கவேண்டும் என்பதுபோல் துடியாய் துடித்து கால்கள் தரையில் பாவாமல் தாவ, எதிர் எதிராய் சந்தித்தன. புதிர் புதிராய் பார்த்தன. இரண்டுக்கும் ஏமாற்றம். தாய்க்கு அது பிள்ளையில்லை. பிள்ளைக்கு அது தாயில்லை. அந்தக் காட்டுப் பசு, துக்கி வைத்த முன்கால்களை தரையில் போட்டபடியே மீண்டும் ஓடியது. இந்த இடைவெளியில் அந்தக் கன்றுக்குட்டியும் யோசித்துப் பார்த்தது. அம்மா வருவாளோ மட்டாளோ... இந்த இரவை இந்த “சித்தியோடு” போக்கலாம். நாளைக் காலையில் அம்மாவை தேடலாம். ஒருவேளை இவளே, அம்மா இருக்கும் இடத்தைக் காட்டலாம். அந்த இளங்கன்று, மூச்சைப் பிடித்து, தத்தலும் தாவளலுமாய் அந்த பசுவின் பின்னால் ஓடியது. வேகவேகமாய் ஓடி, பிறகு அதற்கு இணைாய் ஓடி, அதன் கழுத்தில் முகம் போடப் போனபோது - அந்தப் பசுவோ, உடனடியாக நின்றது. இதை எரிச்சலோடு பார்த்தது. ‘உன்னைக் கூட்டிப் போனால் என் குட்டி என்னாவது’ சரியான மூதேவி... என் நம்பிக்கையை நாசமாக்கிட்டே... {{nop}}<noinclude></noinclude> m5myy07tothd5atshtcma0w1j5gsxnp பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/38 250 213989 1840236 1447664 2025-07-08T05:22:35Z Mohanraj20 15516 1840236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||பொருள் மிக்க பூஜ்யம்|23}} {{rule}}</noinclude>அந்தக் காட்டுப் பசு, தன் கால்களுக்குள் அடைக்கலம் தேடிய அந்த கன்றை முட்டப்போனது. ஆனாலும் மனம் கேட்கவில்லை. தலைகீழாய் கவிழ்த்த முகத்தை நிமிர்த்தி, மீண்டும் ஓடியது. அந்தக் கன்றும் விடவில்லை அதன் பின்னால் ஓடியது. இதுவும், பசுபோன திசையில் பாய்ந்தபோது, அது திசையை மாற்றியது. இது நெடுக்காய் ஒடும்போது அது குறுக்காகவும், குறுக்காய் ஓடும்போது, நெடுக்காகவும், “போக்குக்காட்டி” ஓடியது. நிற்கும்போது ஓடியும் ஓடும்போது நின்றும், அந்தக் கன்றிடம் கண்ணாமூச்சி காட்டியது. பயணிகள் கைகாட்டும்போது நிற்பதுபோல் பாவலா காட்டி அவர்கள் நிதானப்படும்போது 'காலன்' வேகத்தில் பாயுமே பல்லவன் பேருந்துகள். அதைப் போலவே . இந்தக் காட்டுப்பசுவும், இந்த அந்நியக் கன்றை பார்த்த ஏமாற்றமும், ஈன்றெடுத்தக் குட்டியைப் பார்க்கப் போகும் எதிர்பார்ப்பும், இரட்டை வேகமாக எங்கோ ஒடி, எங்கேயோ மறைந்தது, இந்தக் கன்றுக்குட்டிக்கும் புரிந்துவிட்டது. அது புரியப் புரிய அதன் கால்கள் நடுங்கின. கண்கள் நனைந்தன. மூச்சு ஒலி எழுப்பி ஒலமிட்டது. அதன் உடம்பின் ஒவ்வொரு அணுவும் சக்தி விரயத்தால் துடித்தது. கொம்புகள் தலையை அழுத்தும் முட்கம்பிகளாயின. கால்களுக்கு உடம்பே பாரமானது. குதிரையின் முன்பக்கச் சாயலும், கோதுமை நிறமும் செஞ்சிவப்புக் கால்களும் கொண்ட அந்த சின்னஞ்சிறு கன்று, பொன்வண்டு ஒன்று இறக்கைகளை கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாய் பெருவடிவம் பெற்றது போன்ற நேர்த்தி கொண்ட அந்தப் பொன்குட்டி, இப்போது தன்னைத்தானே வீழ்த்திக் கொண்டு தரையில் சாய்ந்தது. பூஜ்யம் போல் பொருள்மிக்க அந்தக் காட்டுச் சூன்யத்தில் கண்களை மூடிக் கொண்டு, திக்கிழந்து, திசையிழந்து செயலிழந்து கிடந்தது. என்ன ஆனாலும் ஆகட்டும் என்ற விரக்தி. ஏகாந்தத்தின் எதிர்உணர்வு. எது வந்தும் அடித்துத் தின்னலாம் என்று விடுத்த மரண அழைப்பு; அறைகூவல்; வாழ்வு கசந்த கசப்பில், மரணம் இனித்தே திரும் என்ற எண்ணமோ<noinclude></noinclude> d0bvsj6qn9l52uued9ofar1atg81sgj பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/40 250 213995 1840237 1447668 2025-07-08T05:27:40Z Mohanraj20 15516 1840237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||பொருள் மிக்க பூஜ்யம்|25}} {{rule}}</noinclude>தளர்ச்சி. அதே சமயம் அம்மாவை சித்ரவதை செய்து கொன்ற அந்தக் கொடியவர்களை கொல்ல வேண்டுமென்ற வேகம். பழிக்குப் பழி வாங்க நினைக்கும் பார்வை. அப்போது அந்தக் காட்டுக்கே மதம் பிடித்தது போன்ற சத்தம் அருகிலேயே போர்ப்பரணி மாதிரியான பெருஞ்சத்தம். யானைகளின் பிளிறல்... அந்த கஜராஜாக்களின் குட்டி ஒன்றை ஏதாவது ஒரு புலியோ அல்லது சிறுத்தையோ திருட்டுத்தனமாக கொன்றிருக்க வேண்டும் அல்லது குற்றுயிரும் கொலையுயிருமாய் ஆக்கியிருக்க வேண்டும். குட்டியை பறிகொடுத்த தாய் யானையுடன், இப்போது அத்தனை யானைக்கூட்டமும் சேர்ந்து போர்ப் பிரகடனம் செய்தன. ‘எங்கே இருக்கிறாய் பகையே? இங்கே வா பேடியே..."; அந்த பிளிறலால் காட்டுநாய்க் கூட்டம் நெல்லிக்காய் குவியலாய் சிதறுகின்றன. உயிர் பிழைத்தால் போதும் என்பதுபோல் ஓடின. அதே சமயம் - இரண்டு நாய்கள் இந்தக் குட்டியின் பக்கம் எதேச்சையாய் வருகின்றன. எதிர்பாராத உணவைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்கின்றன. பிறகு இரண்டும் சேர்ந்து இந்தக் குட்டியை ருசியோடு பார்க்கின்றன. எந்தக் குறைப்பும் இல்லாமல் அழுத்தம் திருத்தமாய் கால்களை நகர்த்துகின்றன. அந்தக் கன்றுக்குட்டி வீறாப்பாய் நிற்கிறது. அதே சமயம், ஒரு சிந்தனை மாற்றம். இந்தக் கொடுங்கோலர்களிடம் சிக்கினால் ஒரேயடியாய் கொல்லாமல், சிறுகச் சிறுகச் கொன்று சித்திரவதை செய்வார்கள். அம்மாவைக் கொன்ற இவற்றின் வாயில் விழக்கூடாது. இவற்றிற்கு இரையாகி அவற்றை மேலும் சந்தோஷமாக்கக் கூடாது. கடவுள... கடவுளே... இந்த உயிர்க் கொல்லிகளுக்கு என்னால் எமனாக முடியலியே... முடியலியே. அந்தக் கன்று, உடல்வாதையும், உயிர்வாதையும் ஒருசேர, அவற்றையே வேகமாக்கி, ஒரே துள்ளாய் துள்ளி, சிறிது தொலைவில் உள்ள பாறைக்குவியல் பக்கம் விழுகிறது. இப்போது<noinclude></noinclude> 7z2b9sy42lz2t002o08pnnhr7oje4lw பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/41 250 213999 1840274 1448075 2025-07-08T06:15:09Z Mohanraj20 15516 1840274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|26|சமுத்திரக் கதைகள்|}}{{rule}}</noinclude>கொலையாய் குறைக்கும் நாய்களை சினந்து பார்க்கிறது. அப்புறம் அந்தப் பாறைக் குவியல்களின் எல்லை விளிம்பில் மெல்ல நடந்து ஒரு புதர்ப் பக்கம் போகிறது. சத்தம் கேட்டு நிமிர்கிறது. மேலே புன்னை மரங்களில் அமர்ந்த மயில்கள் அந்தப் பக்கம் போகாதே என்பதுபோல் குரலிடுகின்றன. ‘ஒடிப்போ ஓடிப்போ’ என்பது போல் சிறகடித்து மாரடிக்கின்றன. பிறகு, சில காட்டுப் பூனைகள் தங்களுக்கே உலை வைக்க மரமேறுவதைப் பார்த்துவிட்டு, ஒரே பாய்ச்சலாய் பறந்து பாறைக் குவியலின் மேல் அமர்ந்து, அந்தக் குட்டியை மீண்டும் எச்சரிக்கின்றன. அந்தக் கன்றுக்குட்டிக்கும் ஏதோ புரிந்துவிட்டது. அதைக் காட்டுவது போல் மோவாயை முன்னும் பின்னும் ஆட்டியது. ஆனாலும், உயிர்ப் பயம் அற்றுப் போய், தட்டுத் தடுமாறி அந்தப் புதர்ப்பக்கம் போய் விட்டது. குகைச் சுவரான மரக்கிளைகள். பின்னப்பட்டது போன்ற மூங்கில் இடுக்குகள். வேலி போன்ற காட்டுச் செடி. அவற்றின் இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் வரிக்கோடுகள்... அங்குமிங்குமாய் அசையும் கோடுகள். முள்போல் காட்டும் நகங்கள். அந்தக் கன்றுக்குட்டி நிர்ப்பயமாய், நிர்க்குணமாய், அந்தப் புலியின் அருகே போய் விழுகிறது. பதுங்காமல், படுத்துக் கிடக்கும் அந்தப் புலியோ அந்தக் குட்டியைப் பார்த்ததும் பார்க்காதது போல் முகத்தை திருப்பிக் கொண்டது. ஐந்தாறு நாட்களுக்கு முன்பு உருமிய புலிதான் இது. தன்னை விட பலமடங்கு பெரிய காட்டெருமை கூட்டங்களில் ஊடுருவி அவற்றில் ஒன்றே ஒன்றை நேருக்கு நேராய் சாய்க்கும் பழக்கம் கொண்ட புலிதான்... ஒரு கஜராஜாவைக் கூட சேதப்படுத்திய காட்டுராஜாதான். ஆனாலும், இப்போது அது பசிப்பிணியாலும் பாசப்பிணியாலும் தவித்தது. ஒரு வாரத்திற்கு முன்பு, இந்தப் புலி தனது குட்டியோடு திரிந்தபோது, காட்டு நாய்க்கூட்டம், இதை வளைத்துக் கொண்டன. வட்ட வியூகத்திற்குள் இதை ஒரு மையப் புள்ளியாக்கி, இரண்டு நாள் பட்டினி போட்டன. பிறகு அந்த நாய் வட்டம், வியூகத்தை நெருக்கி நெருக்கி, தளர்ச்சியான இந்தப் புலியை தாக்கப் போனது.<noinclude></noinclude> lr5oajvcbzfnvrsdgqg8y6cydkthrhf பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/42 250 214002 1840276 1448080 2025-07-08T06:18:00Z Mohanraj20 15516 1840276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||பொருள் மிக்க பூஜ்யம்|27}}{{rule}}</noinclude>ஆனால் இந்தப் புலி நான்கைந்து நாய்களைக் கொன்றுவிட்டு, அந்த வட்டத்தில் இருந்து மீண்டது. குட்டியை அனைத்துக் கொண்டுதான் பாய்ந்தது. என்றாலும் அம்மாவைப்போல் வெளியேறும் அர்ஜுன வியூகம் தெரியாத, அந்த அபிமன்யு புலி அந்த நாய்களின் வாய்களுக்கு மாமிசமானது. அந்தப் புலியால் இப்போது நினைக்கவும் முடியவில்லை. நினைக்காமலும் இருக்க முடியவில்லை. கேவலம், ஒரு உருமலுக்கு பொறுக்காத காட்டுப் பொறுக்கிகளிடம் மானமிழந்ததை அதனால் தாங்கமுடியவில்லை. குட்டியைக் காக்க முடியாமல் பேடியாய் ஓடிவந்த அவமானம். ஆகையால் இரைதேடப் போகாமல், அல்லாடிக் கிடந்தது. தன்னம்பிக்கை அற்று தவித்துக் கிடந்தது. சும்மாவே கிடக்கும் அந்தப் புலியை, அந்தக் கன்றுகுட்டி ஆச்சரியமாய் பார்த்தது. ‘இந்தப் புலியைப் பாருங்கள்’ என்பது மாதிரி கண்ணில் படும் சைவ மிருகங்களிடம் சுட்டிக்காட்டப் போவது போல் அது எதிர் திசையைப் பார்த்த ஒரு நிமிடத்தில் மிரண்டது. பிறகு அந்தத் திசையை கனன்று பார்த்தது. எதிர்த் திசையில் அதே இரண்டு காட்டு நாய்கள் குத்துக்காலிட்டு உட்கார்ந்துள்ளன. நாக்குகள் வாய்களுக்கும் காலிருப்பதுபோல் தொங்குகின்றன. அந்தக் கன்றுகுட்டிக்கு மீண்டும் ஆத்திரம். அந்தப் புலியைக் கேள்வியோடு பார்த்தது. ஆனாலும் அந்த கிழட்டு ராஜா சும்மா இருப்பதைப் பார்த்து விட்டு. யதேச்சையாகவோ அல்லது ஏதோ ஒரு தற்கொலை அல்லது தாக்குதல் உணர்விலோ, அந்தப் புலியின் அருகே நெருக்கியடித்து சென்றது. அதன் வாயில் முகம்படும்படி புரண்டது. இழப்புக் குள்ளான மனிதருக்கு உணவை வாயில் ஊட்டினால், அவர் இறுதியில் எப்படி அதை உண்பாரோ, அப்படி அந்தப் புலியும் மாறியது. அந்தக் கன்றுக்குட்டியின் ரத்தக்கசிவு வாயில் பட்டதால் பசிப்பிணி, பாசப் பிணியை துரத்திவிட்டது. உடனே, அந்தக் கன்றின் கழுத்தை கவ்வி அதற்கு உயிர் விடுதலை கொடுத்தது. பின்னர், அதை அவசர அவசரமாக தின்று கொண்டிருந்தது. {{nop}}<noinclude></noinclude> crpvr6oo5m4fyunq5o6bxe83tj7rn4b பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/44 250 214009 1840277 1448091 2025-07-08T06:22:03Z Mohanraj20 15516 1840277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{Right|<b>{{X-larger|நீரு பூத்த நெருப்பு}}</b>}} ராமநாதன் சாஸ்திரிக்காக, பால்கனியிலும் படியோரத்திலும், மொட்டை மாடியிலும் ஒவ்வொருவராகவும், இருவருமாகவும் காத்துக் காத்து கண்கள் பூத்ததுபோல், ஆண்டவனும், அகிலாவும் சலிப்போடு வீட்டிற்குள் வந்து, கதவைச் சாத்தினார்கள். கால்மணி நேரத்தில் காலிங் பெல்லிற்குப் பதிலாக கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால், ராமநாத சாஸ்திரியே... நடன நிகழ்ச்சிக்குத் தயாரானவர்போல், பின்புறம் வேட்டியைத் தார்பாய்த்து, முன்புறம் விசிறிபோல் சுங்கு விட்டு - அதாவது மடிப்பிட்டு, பூணுாலைப் பாதி மறைத்து, மீதியைக் காட்டும் துண்டும், முன்வழுக்கையும், பின்குடுமியுமாய் காட்சியளித்தார். அவரைப் பார்த்ததும், தம்பதியர் பரவசப்பட்டார்கள். பக்கத்து மெயின்ரோட்டில் உள்ள ஏழைப் பிள்ளையாரின் அர்ச்சகர். ‘சுபிட்சமாய் இருப்பீங்கோ... ஒஹோன்னு வாழ்வீங்கோ...’ என்று பக்தர்களை உற்சாகப்படுத்துகிறவர். அதேசமயம், யாராவது இடக்கு மடக்காகக் கேட்டால், ‘இந்த வேலையெல்லாம் நம்மகிட்ட வச்சுக்காதிங்கோ... எனக்கு குஸ்தியும் தெரியும்...’ என்று சவால் பாணியில் சொல்கிற மனிதர். தட்டில் விழும் ஒரு பைசாவைக்கூட வீட்டிற்குக் கொண்டு போகாதவர். எவர் வீட்டிற்கும் போகாத அப்பேர்பட்டவர், வாக்களித்ததுபோல் வந்ததில், கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு, பிறகு சாஸ்திரியை போட்டி போட்டு உபசரித்தனர். “வாங்க சாமி!, நீங்க எங்கே வரமாட்டிங்களோன்னு பயந்து போயிட்டோம்.” “ஆமாம் சாஸ்திரி ஸார். நீங்க வரமாட்டிங்கன்னு நினைத்து ஆபீஸ் போறதுக்கு ஆயத்தம் ஆனேன். அதுக்குள்ள வந்துட்டிங்க..” {{nop}}<noinclude></noinclude> 4s3shpqbylaf6v0azysdhr3j7gtcy7p பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/45 250 214012 1840279 1449199 2025-07-08T06:23:50Z Mohanraj20 15516 1840279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|30|சமுத்திரக் கதைகள்|}}{{rule}}</noinclude>ராமநாத சாஸ்திரி, ஒரு கணம் துர்வாசரானார். மறு கணம் விசுவாமித்திரர்போல், அவர்களை, வயிறு எக்கிப் பார்த்தார். அடுத்த கணம் வசிட்டரானார். பின்னர், இந்த மும்முனிகளாலும் ஆட்கொண்டவர் போல், ஆண்டவ- அகிலா தம்பதியை ஆட்டிப்படைத்து பேசுவதுபோல் பேசினார். “இதுக்குத்தான் நான் எவர் வீட்டுக்கும் வரமாட்டேங்கிறது. ஒரு சொல்லு சொன்னால், அந்த சொல்லுலயே நிற்கிறவன் நான். இல்லாட்டி சொல்லமாட்டேன். நீங்க சொல்றதைப் பார்த்து, அழுவுறதா, சிரிக்கிறதான்னு நேக்கு புரியல...” ஆண்டவனும் அகிலாவும், மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சாஸ்திரியை யார் சிரிக்க வைப்பது, என்று அந்தக் கண்கள் பேசிக்கொண்டன. அகிலா, முந்திக் கொண்டாள். “உட்காருங்க சாமி... மோரா... ரசனாவா....” “ரெண்டும் வேண்டாம். மொதல்ல வந்த காரியத்தைப் பார்ப்போம்.” “அதுல உட்காருங்க சாஸ்திரி ஸார்.” ராமநாத சாஸ்திரி, ஆண்டவன், சுட்டிக்காட்டிய ஒற்றைச்சோபா இருக்கையில் உட்காராமல், அந்த வீட்டின் பளிங்குத் தரையில், இரண்டுக் கால்களையும் விரித்துப்போட்டு, இரண்டு கரங்களையும் முதுகிற்குப் பின்னால் முட்டுக்கொடுத்து, உட்கார்ந்தார். மேலே எகிறிய மின்விசிறியில், அவரது நடுத்தலை முடி, முன்தலை பொட்டல் மேட்டில், கதிரடிப்பதுபோல், சாய்ந்து சாய்ந்து மோதியது. அந்தம்மா, பதறிப் போனாள். “என்ன சாமி நீங்க... சோபாவுல... உட்காருங்கோ...” “என் வசதிப்படி, என்னை விட்டுடுங்கோ... நேக்கு இதுதான் வசதி. இந்த வேனா வெயிலுல நடந்த களைப்புல, இப்படி காலு கைய விரித்துப்போட்டு, ஒடம்பை நனைத்த வேர்வைய மின்விசிறி, துளித்துளியாய் ஆவியாக்கிறதுல இருக்கிற சுகமே தனி. உங்க<noinclude></noinclude> 930mnjgurlj5aw3fr5r3hvlg61ptebg பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/46 250 214015 1840282 1449200 2025-07-08T06:37:21Z Mohanraj20 15516 1840282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||நீரு பூத்த நெருப்பு|31}}{{rule}}</noinclude>வீடு என்கிறதுனால, இப்படி உரிமையோடு எசகு பிசகாய் உட்காருறேன். பிறத்தியார் வீட்டுல, அது பிராமணாள் வீடா இருந்தாலும், ஆசாரமாத்தான் உட்காருவேன். ஏன் நிக்கிறேள்? நீங்க பாட்டுக்கு சோபாவுல உட்காருங்கோ. மரியாதையும் அன்பும் மனசுலதான் இருக்கணும். இந்த ஏழைப் பிராமணன் மேல, அந்த ரெண்டும் உங்ககிட்ட இருக்குன்னு நேக்குத் தெரியும்” உச்சி குளிர்ந்த ஆண்டவன், சாஸ்திரி சாருக்கு முன்னால் தரையிலேயே உட்கார்ந்தார். இதற்கு மரியாதை மட்டும் காரணமில்லை. அந்த வேணலில், சோபா இருக்கையின் இலவம் பஞ்சு சூட்டைவிட, அந்தப் பளிங்குத்தரை கிளுகிளுப்பாக இருக்கும் என்பது அவருக்கு தெரியும். இந்தச் சமயத்தில், அந்தம்மா ஒரு வெள்ளி டம்ளரில் மோர் கொண்டு வந்தாள். அதை, சாஸ்திரி கைநீட்டி, வாங்கப் போனபோது, அதைக் கொடுக்க மறந்தவளாய், கணவனைப் பார்த்து செல்லக் கத்தினாள். “ஏங்க! உங்களுக்கு ‘சென்ஸ் ஆப் டிசிபிலின்’ இருக்குதா? பாருங்க சாமி... அரைமணி நேரத்துக்கு முன்னால ‘டயனால்’ போட்டுட்டு, இந்நேரம் கேப்பைக்கூழ் குடிச்சிருக்கணும். நீரழிவு நோய் இருக்கிறதே இவருக்கு மறந்து போகுது. சாமீ” “இந்தம்மா மட்டும் என்னவாம்... ‘பிளட் பிரஷருக்கு’ இந்நேரம் மாத்திரை சாப்பிட்டிருக்கணும். என்னை கவனிக்கிறதுலயயே, தன்னை கவனிக்க மாட்டக்காள்... காந்தாரி கண்ணை கட்டிக்கிட்டது மாதிரி, நான் மருந்து சாப்பிட்டால்தான், இந்தம்மா சாப்பிடுவாளாம். ஆபீஸுக்குப் போன்போட்டு, என்னோட உதவியாளர்கிட்ட, நான், சாப்பிட்டேனான்னு கன்பார்ம் செய்த பிறகுதான், இந்தம்மா சாப்பிடுவாங்க.” “இவர் மட்டும் என்னவாம் சாமி... காபி கொண்டு வந்து, முகத்துக்கு ‘ஆவி’ பிடிக்கிறது மாதிரி, எதிரே நீட்டிக்கிட்டே என்னை எழுப்புவார்.” அறுபத்தைந்தைத் தாண்டிய சாஸ்திரி, ஐம்பதைத் தாண்டாத அந்தத் தம்பதியரை நோக்கி, ஆசிர்வாதப் பார்வையில் பேசினார். {{nop}}<noinclude></noinclude> gtf9pg0vhrkqn70wrx0x8quirhj6f63 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/47 250 214018 1840283 1449201 2025-07-08T06:41:52Z Mohanraj20 15516 1840283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|32|சமுத்திரக் கதைகள்|}}{{rule}}</noinclude>‘ஸ்ரீராமனுக்குக் சிதை, நளனுக்குத் தமயந்தி, சிவனுக்கு சக்தி, இந்த மானுட ஆண்டவனுக்கு, இந்த அகிலாம்மா.’ உடல் நேர்த்தியாலும், ‘புது’ நிறத்தாலும், உயரத்தாலும், அகலத்தாலும் ஒன்றுபட்டுத் தோன்றும், அந்த ஜோடியை, ஒரு தந்தைக்குரிய நிலையில், கண்களால் அள்ளிப் பருகிய சாஸ்திரி, அப்படிப் பருகியதை, வாய் வழியாய் அன்புப் பிரவாகமாய் வெளிப்படுத்தினார். “நான் உங்களுக்கு எப்பவும் சொல்றதை, இப்பவும் சொல்றேன். நீங்க தீர்க்காயுசா இருப்பேள். ரத்தக் கொதிப்போ... நீரழிவோ... இஸ்கிமாவோ... அல்சரோ... உங்களை ஒன்றும் செய்யாது. எல்லாம் நம்ம பிள்ளையார் பார்த்துக்குவார். சரி... ஜாதகங்களை எடுத்துட்டு வாரேளா?...” “ஒரு சிறு விண்ணப்பம் சாமி. பிள்ளையார் பார்த்துக்குவார்தான். அப்படி அவர் பார்த்துக்கிறதுக்கு, நாமும் தகுதியாய் இருக்கணுமே. இவருக்கு கேழ்வரகு கஞ்சி காய்ச்சி,, நல்லா ஆறிட்டுது. ஒரு மூணு கிளாஸ் போட்டுட்டு வந்துட்டார்னா... அப்புறம் ஆற அமரப் பார்க்கலாம். தயவுசெய்து, கொஞ்சம் நேரம். நீரழிவு நோய்க்கு நாம ஒத்துழைப்பு கொடுத்தால்தான், அது நமக்கு ஒத்துழைப்பு கொடுக்குமுன்னு, டாக்டர் சொல்றார்.” ராமநாத சாஸ்திரிக்கு, கோபமான கோபம். அந்தம்மா, பிள்ளையாரை விட, டாக்டரை உசத்தியாய் நினைக்கிற கோபம். தன் வீட்டிலும் காத்திருக்கும் கேப்பைக்கூழ், இந்நேரம் கட்டியாகி இருக்குமே என்ற பசிக்கோபம். விசுவாமித்திரர்போல் கட்டாகவும், துர்வாசர்போல் ரைட்டாகவும் பேசப்போனார். அதற்குள், அந்தம்மா ஒடிப்போய், கணவருக்கு கேழ்வரகுக் கஞ்சி கொண்டு வந்த கையோடு, இன்னொரு கையில் ஒரு தட்டு நிறைய நாகப்பழங்களைக் கொண்டுவந்து, சாமியின் வயிற்றுக்கு எதிர்ப்பக்கம் வைத்தபடியே, ‘சாப்பிடுங்க சாமி... பசியும் அடங்கும். நீரழிவுக்கும் நல்லது.’ என்று ஆகார ஆற்றுப்படுத்தல் செய்தாள். {{nop}}<noinclude></noinclude> fyxf1bfncpezn39rwt4ix5mcjj699s7 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/48 250 214022 1840285 1449202 2025-07-08T06:44:24Z Mohanraj20 15516 1840285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||நீரு பூத்த நெருப்பு|33}}{{rule}}</noinclude>சாஸ்திரியின் கடுகடுப்பு, புன்னகையானது. அந்தச் சமயத்தில், வேண்டாவெறுப்பாய் கேழ்வரகுக் கஞ்சியை குடித்தபடியே, அதன் துகள்கள் உடம்பெங்கும் சிந்தும்படி, ஆண்டவன், சாஸ்திரி சாரிடம் முறையிட்டார். “எப்போ பார்த்தாலும், விரதம்... விரதமுன்னு உடம்பை நோகடிக்காள் சாஸ்திரி ஸார். இவள் விரதத்தால, எனக்கு சாப்பிட மனசே போகமாட்டேக்கு. நீங்களாவது புத்தி சொல்லுங்க..” “இந்தா பாருங்கம்மா! ‘உடலார் அழிந்தால்... உயிரார் அழிவர். ஊனுடம்பு ஆலயம்... உள்ளம் திருக்கோயில்.’ இப்படி நான் சொல்லல. திருமூலர் சொல்லியிருக்கார். உங்களுக்கோரத்தக் கொதிப்போடு, அல்சரும் இருக்கு. அதுக்கு விரதம் ஒத்துக்காது. காலையிலும் மாலையிலும் பிள்ளையாரை மானசீகமாய் நினைத்து, தலையில மூணு குட்டு குட்டிக்கங்கோ. அது எல்லா விரதங்களையும்விட மேலானது.” “ஓங்க உத்தரவு சாமி.” கேழ்வரகுக்கூழ், பாத்திரத்தின் அடிவாரத்தைக் காட்டியபோது, நாகப்பழங்களை சாஸ்திரி, கொட்டைகளாக்கிய போது, சமையலறைக்குச் சென்று, ஒரு குலை திராட்சைப் பழங்களைத் தின்றுவிட்டு, உள்ளறையில் போய் ஒரு காகிதக் கத்தைகளை எடுத்துக்கொண்டு, சாஸ்திரி முன்னால் உட்கார்ந்த கணவனுக்கு அருகே உட்கார்ந்தபடியே, அகிலா, ஒருபாடு அழாமல் அழுது தீர்த்தாள். “எங்கப் பையனுக்கு பெண் ‘தேவை’ன்னு, இவரை பத்திரிகையில விளம்பரம் போடச் சொன்னேன். நானே எழுதிக் கொடுத்தேன். ஆனா, இவரு என் எழுத்துல குளறுபடி பண்ணிட்டடார்... சாதிப்பேரை முதல்ல போடாமல், சம்பள வகையறாக்களைப் போட்டார். பொதுவா, பெண்ணோ, பிள்ளையோ வச்சிருக்கவங்க, பத்திரிகை விளம்பரத்துல, முதல்ல சாதிப்பேர் இருக்குதான்னுதான் பார்ப்பாங்களாம். அதுக்குமேல பார்க்க மாட்டாங்களாம். இதனால பத்தே பத்து ஜாதகம் மட்டும்தான் வந்தது சாமி...” {{nop}}<noinclude></noinclude> bgho82520hvrpi152clq8wssoorz1ph பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/50 250 214029 1840286 1449208 2025-07-08T06:49:23Z Mohanraj20 15516 1840286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||நீரு பூத்த நெருப்பு|35}}{{rule}}</noinclude>அகிலா, தயாராய் வைத்திருந்த அந்தக் காகிதக் கத்தைகளை, தர வாரியாகப் பிரித்தாள். பெரிய படிப்பும், பெரிய இடமும் முதலிடம்... இதைப்போல், டி.டி.பி.யில் எடுத்த காகிதங்கள், சுமாராக இருந்தாலும் இரண்டாவது இடம்... பெரிய இடமாக இருந்தாலும், பேனாவால் எழுதப்பட்ட காகிதங்களுக்கு கடைசி இடம். ‘எழுதுகிறதுக்கே கஞ்சத்தனம் பிடிக்கிறவங்க, மாப்பிள்ளைக்கு என்னத்த செய்யப் போறாங்க’. கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியாக இருந்த ஒரு காகிதத்தை எடுத்த சாஸ்திரி, அதற்குக்குரிய பெண்ணின் ஜாதகத்தை உற்றுப் பார்த்தார். ஆண்டவன்.அகிலா மகனின் ஜாதகம், அவருக்கு அத்துபடி என்பதால், அதை ஒப்புக்குப் பார்த்தார். பிறகு, ‘இது ஒத்துவராது’ என்றார். ஆண்டவன், மன்றாடுவதுபோல் விவரம் கூறினார். “பெரிய இடம் சாஸ்திரி ஸார். கார் இருக்குது, பங்களா இருக்குது... நூறு பவுன் நகை போடுறதா சொல்லியிருக்காங்க... வாரிசு இல்லாத குடும்பம் வேற...” “இந்தாப் பாருங்கோ மிஸ்டர் ஆண்டவன்! உங்க விருப்பத்துக்கு நான் பார்க்க முடியாது. ஜாதகம் என்ன சொல்லுதோ, அதைத்தான் சொல்ல முடியும். இல்லாட்டி, வேற ஆளை பார்த்துக்கங்கோ.” “இவரு தப்பா பேசிட்டார். ஆர்வக் கோளாறுதான் காரணம். மன்னிச்சிடுங்க சாமி.” “ஆர்வம் இருக்கணும். ஆனால், கோளாறு இருக்கப்படாது. இந்தப் பொண்ணு பெரிய இடமாய் இருக்கலாம். ஆனாலும், இது திருவாதி நட்சத்திரம். இதற்கான மிருகம் நாய். ஒங்க பையனோட நட்சத்திரம் கேட்டை. இதற்கு உரிய மிருகம் மான். நாயும் மானும் பகை மிருகங்கள். அப்புறம் ஒங்க இஷ்டம்.” அகிலாவின் ஏமாற்றம், முகத்தில் வேர்வைத் துளிகளாக வெளிப்பட்டன. ஆனாலும், இந்தப் பிள்ளையார் குருக்கள் சொல்லைத் தட்டமுடியாது. இவர் சொன்னால், சொன்னபடி நடக்கும். {{nop}}<noinclude>{{rh|ச. 4.||}}</noinclude> ci7wuz4sfaspgn73sy7krn64ei75nud பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/51 250 214032 1840348 1449973 2025-07-08T08:21:16Z Mohanraj20 15516 1840348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|36|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>ராமநாத சாஸ்திரி, அந்தக் காகிதக் கத்தைகளை, ஒவ்வொன்றாகப் பார்த்தார். நான்கைந்து ஜாதங்களை கழித்துக் கட்டிவிட்டு, இன்னொன்றை எடுத்துப் பார்த்தார். அதிக நேரமாய் பார்த்துக்கொண்டே இருந்தார். அகிலா-ஆண்டவன் முகங்களில், ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...’ அதனை நிதானமான வார்த்தைகளாக ஆண்டவன் வெளிப்படுத்தினார். “இந்த ஜாதகம் நல்லா இருக்குதோ சாஸ்திரி ஸார். நல்லாத்தான் இருக்கும்.” “நல்ல ஜாதகந்தான். ஒங்க பையனும், இந்தப் பொண்ணும் நகமும் சதையும் மாதிரி நன்னா இருப்பாள். ஆனாலும், ஒங்க வீட்டுக்கு ஆகாது.” “அவங்க நல்லா இருந்தா போதாதா சாமி? அதுக்குமேல என்ன வேணும்?” “ஏடாகோடமாய் பேசாதம்மா... எழுந்து போய்க்கிட்டே இருப்பேன். இது ஆயில்ய நட்சத்திரம். இந்தப் பொண்ணு ஒங்க வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனேயே, நீங்க ரெண்டு பேரோ, அல்லது ரெண்டுல ஒருத்தரோ மண்டைய போட்டுடுவேள். சம்மதமா?” சம்மதமில்லை என்பதுபோல், தம்பதியர், சிரித்து மழுப்பியபோது, சாஸ்திரி, ஒவ்வொரு காகிதத்தையும் எடுத்து, அதற்கு நேர்முக வர்ணனை கொடுத்தார். ஒன்று நாகதோஷமாம்... இன்னொன்று செவ்வாய் தோஷமாம்... மற்றொன்னு ஏக நட்சத்திரமாம். இப்படி ஒவ்வொன்றையும் நிராகரித்துக்கொண்டே போன சாஸ்திரி, அவர்களது முகத்தில் ஏற்பட்ட கலக்கத்தைப் பார்த்துவிட்டு, ஆறுதலாய்ப் பேசினார். “நான் இப்படி வேண்டாமுன்னு சொல்றத தப்பர் நினைக்காதேள். ஓங்கமேல இருக்கிற விசுவாசந்தான் அப்படி பேசவைக்குது. உங்க பிள்ளாண்டான், என்னோட பிள்ளாண்டான் மாதிரி. மணமக்களுக்கு தினம், கணம், மகேந்திரம், திர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், வேதை, நாடி... இப்படி<noinclude></noinclude> gov41sianki0a6pm9rivao8455xq2hp பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/53 250 214039 1840353 1449982 2025-07-08T08:24:52Z Mohanraj20 15516 1840353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|38|சமுத்திரக் கதைகள்|}} {{rule}}</noinclude>முன்னால போகணும் என்கிறேன். இவள் இல்லாமல், என்னால வாழ முடியுமுன்னு நினைத்துக்கூட பார்க்க முடியல. எங்க ரெண்டு பேர்ல யாரு சாமி முன்னால போவாங்க?” “இதோ பாருங்கோ... நான் கல்யாணப் பொருத்தம்தான் பார்க்க வந்தேன். அபசகுனமா பேசாதேள், எல்லாம் பிள்ளையார் பார்த்துக்குவார். சரி... விஷயத்திற்கு வருவோம். இதோ இந்த ஜாதகம் இருக்கே... இது சுத்த ஜாதகம். இந்தப் பெண்ணால, ஒங்க பையன் எங்கேயோ போகப்போறான். அன்னப்பறவை மாதிரி வாழப்போறாள். இதையே முடிச்சிடுங்கோ. இப்படிப்பட்ட ஒரு நல்ல சுத்த ஜாதகத்தை நான் பார்த்ததே இல்லை. இதுல ஒரு வேடிக்கை என்னன்னா... ஆண்டவன் சாருக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே, அவரோட பையனுக்கு இருக்கு. அகிலாம்மாவுக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே, இந்தப் பொண்ணுக்கு இருக்கு. இப்படி நாலுமே சுத்த ஜாதகமாய் அமையுறது ரொம்ப அபூர்வம். உங்க ரெண்டு பேரையும் போலவே, இவாள் ரெண்டு பேரும், பிரமாதமாய் வாழ்வாள். ஓங்களோட மறுபதிப்புத்தான் இவாள். உடனே முடிச்சுடுங்கோ.” ஆண்டவனும், அகிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின்னர், அந்த ஜாதகத்தை, அகிலாம்மா வாங்கி, தனியாக வைத்துக்கொண்டாள். உள்ளறைக்குப்போய், ஒரு தாம்பளத் தட்டில், வெற்றிலைப் பாக்கையும், ஒரு சிப்பு வாழைப்பழத்தையும், ஒரு நூறு ரூபாய் நோட்டையும் வைத்து, தனக்கு சாமியான சாஸ்திரியிடம், பணிவன்போடு நீட்டினாள். அவரும் எழுந்துநின்று, வாழைப்பழத்தை வேட்டி முந்தியிலும், ரூபாய் நோட்டை” பைக்குள்ளும் போட்டபடியே, வெற்றிலை கொண்ட தாம்பளத் தட்டை திருப்பிக் கொடுத்தார். பாக்கை எடுத்து, வாயில் போட்டுக் கொண்டார். அது கடிபடும் முன்பே, ‘ஒங்களுக்குன்னு அர்ச்சித்த விபூதி குங்குமத்தை கொடுக்க மறந்துட்டேன் பாருங்கோ... இந்தாங்கோ.’ என்றார். ஒரு கை மேல் இன்னொரு கையை வைத்தபடி, இருவரும், சாஸ்திரி நீட்டிய விபூதி குங்குமத்தை வாங்கிக் கொண்டார்கள்.<noinclude></noinclude> dv8b933pi1oth4ef603qiq37k15z8ud பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/54 250 214042 1840356 1449985 2025-07-08T08:26:48Z Mohanraj20 15516 1840356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||நீரு பூத்த நெருப்பு|39}} {{rule}}</noinclude>அகிலா, குங்குமத்தை ஆள்காட்டி விரலால் தொட்டு, நெற்றியில் இட்டுக்கொண்டாள். எஞ்சிய குங்குமத்தை, லிங்கம் பொறித்த ‘ஆட்டியன்’ வில்லையாய் தொங்கும் தாலியின் இரண்டு பக்கமும் வைத்து, தங்கச் செயினோடு அவற்றை மேலே துக்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள். இந்த நிகழ்வை பரவசமாகப் பார்த்த சாஸ்திரி, “நன்னா இருப்பேள்” என்று சொன்னபடியே, படியிறங்கிப் போய்விட்டார். ஆண்டவனும் அகிலாவும் அந்தக் கூடத்திற்குள், அங்கும் இங்குமாய் நடைபோட்டார்கள். குறுக்கும் நெடுக்குமாய், ஒருவரை ஒருவர் மோதாக் குறையாய் நடந்தார்கள். கால்மணி நேரத்திற்குப் பிறகு, ஆண்டவன் இழுத்து இழுத்துப் பேசினார். “நல்ல இடந்தான். கார் இருக்கு... பங்களா இருக்கு... பதவி இருக்கு. ஆனாலும்...” அகிலா, அவரை நேருக்கு நேராய் பார்த்தபடியே, திட்டவட்டமாக திர்ப்பளிப்பதுபோல் பேசினாள். “இது பொருத்தமில்லாத ஜாதகம். விட்டுத் தள்ளுவோம்.” {{Right|- அமுதசுரபி (மே 2000)}} {{Right|Ο}} {{nop}}<noinclude></noinclude> jqfgqh8xu7lb9tdq4prewgyysbklxj1 பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/55 250 214046 1840366 1449986 2025-07-08T08:56:16Z Mohanraj20 15516 1840366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{dhr|3em}} {{Right|{{X-larger|<b>முதிர் கன்னி</b>}}}} {{dhr|3em}} “எழுந்திருங்க அப்பா...” இனிப்பு வகைகளை உள்ளடக்கிய பொன் நிற அட்டைப் பேழையை, அருகேயுள்ள தொலைக்காட்சிப் பெட்டிமேல் வைத்துவிட்டு, கிதா, ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த தந்தை அருணாசலத்தை, அதட்டல் பாவலாவில் கூவி, கையை பிடித்திழுத்தாள். வாசிப்பைக் கலைக்கும் எவரையும் கடுகடுப்பாய் பார்ப்பவர் அப்பாக்காரர். இப்போது, அந்தக் கலைப்பை ஏற்படுத்தியவள், அந்த வாசிப்பைவிடச் சுவையான மகள் என்பதால், முகத்தைச் சுருக்க வைத்து, உதடுகளை துடிக்க விட்ட அந்தக் கடுகடுப்பு, வாய் கொள்ளாச் சிரிப்பாய், மாறியது. அந்தச் சமயம் பார்த்து, கிதாவின் அம்மா பூரணி, யதேச்சையாக உள்ளறையில் இருந்து வெளிப்பட்டாள். கீதா, அம்மாவையும் கையைப் பிடித்திழுத்து, அப்பாவிற்கு இணையாக நிற்க வைத்துவிட்டு - அவர்கள் முன்னால், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, நான்கு பாதங்களையும், இரண்டு கரங்களால் தொட்டபடியே, “என்னை ஆசிர்வதியுங்கள்” என்றாள். அருணாசலம், கிதாவை குழந்தைபோல் தூக்கி, சிறுமிபோல் வளைத்து, இளம்பெண்ணாய் நிறுத்தினார். அலுவலகத்தில் நடக்கும் சின்னச்சின்ன பாராட்டுதல்களை, பெற்றவர்கள் இருவரையும், மாறி மாறிப் பார்த்தபடி, ஒப்பிக்கும் மகள், ஏதோ நல்ல செய்தி சொல்லப் போகிறாள் என்ற பூரிப்பில் பூரித்துப் போனார். மகளின் முகம் வழியாய் கண்களை ஊடுருவவிட்டு, கடந்து வந்த காலத்தை, நிகழ்காலத்தில் நிறுத்தி அசைபோட்டார். இவள் முப்பாட்டி காதுகள் இரண்டும், ஊஞ்சல் சதைக்கோடுகளாகி, அதில பாம்படங்கள் தொங்கி, அவள் நடைக்கேற்ப ஆடிக் குலுங்க, கணவனோடு கழனிகளிலும்,<noinclude></noinclude> d4asjs4iwgth533jbdtunia0coybqmc பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/56 250 214049 1840367 1449988 2025-07-08T08:58:49Z Mohanraj20 15516 1840367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||முதிர் கன்னி|41}} {{rule}}</noinclude>கம்மாக்களிலும் விவசாயக் கூலியாக இருந்தவள். இவள் பாட்டி, இதே சென்னை நகரில், ஒரு மாளிகைக்கார முறைமாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு, ‘தொள்ளக்காது... தொள்ளக்காது...’ என்று வர்ணித்தபடியே, வேடிக்கை பார்த்த கூட்ட மொய்ப்பை தாங்க முடியாமல், கணவனின் சம்மதத்தோடு, தொங்கிய சதைக்கோடுகளை அறுத்து, இருபக்கத்து ஒட்டைகளையும் இணைத்து, கம்மல் போட்டுக் கொண்டவள். ஆனாலும், அந்தக் காதுகள் அறுவைச் சிகிச்சை தடயங்களோடு தோன்றின. இதோ நிற்கிற இவள் அம்மாவோ, காதுகளில் எந்த வில்லங்கமும் இல்லாமல், கம்மல்களை போட்டிருப்பவள். இந்தக் கிதாவோ, வளையங்களை போட்டிருக்கிறாள். மூக்கில் ஒட்டைபோட்டு, அதை தங்கத்தாலோ வைரத்தாலோ அடைக்க வேண்டிய அவசியம் இல்லாதவள். அதுவும், சின்ன வயதிலேயே காது குத்தியதால், இந்த வளையங்கள் உள்ளன. இவள் பள்ளிக்கூடக் காலத்தில் பேசிய பேச்சை வைத்து அனுமானித்தால், அப்போது இணங்கி இருக்கமாட்டாள். இந்தக் காதுகளும் மூக்கைப்போல் இருந்திருக்கும். மாதம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், கைகளில் வளையல்களோ, உதட்டில் செயற்கை செஞ்சிவப்போ இல்லாதவள். அம்மாவின் வற்புறுத்தலால் கழுத்தில் மட்டும், மெல்லிய செயின் அணிந்திருக்கிறாள். இந்த “இழப்புகளுக்கு” ஈடு செய்வதுபோன்ற முக லட்சணம். அருணாசலம், ஏறுமுகமான சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மகளை பெருமிதமாகப் பார்த்தபடியே கேட்டார். “ஏதோ நல்ல செய்தி கொண்டு வந்திருக்கேன்னு நினைக்கேன். சிக்கிரமா சொல்லம்மா! நல்லதை உடனடியாகவும், கெட்டதை மெள்ள மெள்ளவும் சொல்லணும்.” கிதா, எழுந்து அந்தப் பேழையைப் பிரித்து, ஒரு லட்டை அப்பாவின் வாயிலும், இன்னொரு மைசூர் பாக்கை அம்மாவின் வாயிலும் திணித்தபடியே சிரித்தாள். அந்தச் சிரிப்பு, அப்பாவை தொற்றிக் கொண்டபோது, அம்மாவை துடிக்க வைத்தது. மனதிற்குள் பேச வைத்தது. {{nop}}<noinclude></noinclude> bjl2i1rbzo8p5kgcor4mr09e0770xxs பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/60 250 214059 1840368 1450924 2025-07-08T09:03:12Z Mohanraj20 15516 1840368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /> {{rh||முதிர் கன்னி|45}} {{rule}}</noinclude>கொண்டிருக்கிறார். இன்னும் நாலு நாளையில் விசா கிடைச்சுடும். அநேகமாய் அடுத்த வாரம் புறப்படணுமாம்.” அருணாசலம், மகளை அலுங்காமல், குலுங்காமல் அசைவற்றுப் பார்த்தார். அவளை மேல்நோக்காய் பார்த்தபடியே அதிசயித்து நின்றார். ஆனால், அம்மாக்காரிக்கு, உடனடியாய் ஒன்று தட்டுப்பட்டது. மனதிற்குள் பம்பரமாய், வட்ட வட்டமாய் சுற்றிய அந்தச் சுற்று, அவள் நாக்கையும் சுழல வைத்தது. ஒரு அபாய எச்சரிக்கையை கணவருக்கு எடுத்துரைத்தது. “ஏங்க... அவளுக்குத்தான் அறிவில்லன்னா... உங்களுக்குமா இல்ல? இப்பவே இவளுக்கு இருபத்தொன்பது முடியப்போகுது. திரும்பி வரும்போது முப்பத்திரண்டு முடிஞ்சுடும். எவன் கட்டிக்க வருவான்? இப்பவே வயசாயிட்டுதுன்னு பல பயல்களும், அவன் அப்பன்மாரும், அம்மாமாரும் இங்க வந்து நொறுக்குத்தினி தின்னுட்டு, அப்புறம் கிணத்துல விழுந்த கல்லா கிடக்காங்க... இவள் சொன்னது நல்ல செய்தியாக்கும்...” அம்மாவை நெருங்கி, கோபமாக பேசப்போன மகளுக்கும், வாய் துடிக்க நின்ற மனைவிக்கும் இடையே, வலது கையை எல்லைக்கோடாய் நீட்டியபடியே, அருணாசலம், கண்களை மூடினார். மகளின் மகிழ்ச்சியை அதிகப்படியாய் பகிர்ந்து கொண்ட அவருக்கு, இப்போது அது ஒரு துக்கப் பகிர்வாகத் தோன்றியது. மனைவி சொல்வதில், நியாயம் இருப்பதுபோலவும் தோன்றியது. அருணாசலமும், ஒரு முடிவுக்கு வந்தார். அதைக் காட்டும் வகையில், மகளின் இரண்டு கரங்களையும் தனது இரண்டு கரங்களில் ஏந்தியபடியே, அவளை சோபா செட்டில் உட்கார வைத்தார். எதிர்முனை ஒற்றைச் சோபாவில் அமர்ந்து, அதன் சக்கர நாற்காலிகளை நகர்த்தியபடியே, மகளுக்கு நெருக்கமாக வந்தார். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு, எப்படி பாடம் நடத்துவாரோ, அப்படி, ஏற்ற இறக்கமாய், அவ்வப்போது தன் பேச்சு எடுபடுகிறதா என்று மாணவர்களைப் பார்த்ததுபோலவே, மகளையும் பார்த்தபடியே, முன்னுரையும், பொருளுரையும், முடிவுரையுமாய் பேசத் துவங்கினார். {{nop}}<noinclude></noinclude> s5jv8n066a0ah3wk3gedgy18dmo9and பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/37 250 216026 1840012 1838857 2025-07-07T13:54:24Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||27}}</noinclude>பானுமதி, கண்ணீரும் கம்பலையுமாக அவனை குனிந்து உற்றுநோக்கினாள். கண்ணீர், அவள் கண்ணில் சொட்டுச் சொட்டாகி, அவன் மார்பில் திட்டுத் திட்டாய் விழுந்தது. அவன் ஆவேசமாய் எழுந்து, அவளை அழுந்தப் பற்றிக் கொண்டான். “நான் இல்லாமல், ஒன்னால இருக்கமுடியுதா பானு?” என்று அவளுக்குக் கேட்காத குரலில், கேட்டுக்கொண்டான். அவளோ அவனை விடப்போவதில்லை என்பதுபோல், உடலாலும் பிரியப்போவதில்லை என்பதுபோல் அவனை தன் மார்பின் கவசமாக்கிக்கொண்டாள். அப்படியும் இப்படியுமாய், ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து விலகினார்கள். அவள் ஏதோ பேசப்போனாள், அழுகை வந்தது. பிறகு கேவியபடியே கேட்டாள். “நான் இல்லாமல் இருக்கிற அளவுக்கு ஒங்களுக்கு தைரியம் வந்துட்டது என்ன...?” “ஆமாம். அதனாலதான், இப்படி படுத்த படுக்கையாய் தாடியும் மீசையுமாய் கிடக்கிறேன்!” “இது புரிந்தால், நீங்க அப்பாகிட்டே, இப்படி ஏடாகோடமாய் பேசியிருப்பீங்களா...” “இப்பவும் நான் சொன்னதுக்காக வருத்தப்படல. உண்மை பேச விரும்புகிறவன், அதன் விளைவுகளுக்கும் தயாராய்த்தான் இருக்கணும் பானு! எப்படியோ... ஒன்னை பாத்துட்டேன். அது போதும் எனக்கு.” “அப்படின்னா, என்னை திரும்பிப் போகச் சொல்றீங்களா?” “என்ன சொல்றே?” {{nop}}<noinclude></noinclude> 6ae0qkw0yg3qy5t7vz679fpix9l9g0x பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/38 250 216028 1840013 1839026 2025-07-07T14:01:37Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|28{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“அப்பாகிட்டே எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன்; அவர் மௌனம் சாதிக்கிறார். உங்ககிட்டே பேசினார் பாருங்க, அதுதான் அவர் பேசிய கடைசி பேச்சு, அதுக்குப் பிறகு, ஒரே மௌனமாயிட்டார். ஜாதில என்னப்பா இருக்குதுன்னு கேட்டேன். நீங்க கஷ்டப்பட்டப்போ, நம்ம ஜாதில எவர்பா உதவுனான்னு கேட்டேன். கேட்டதுக்கெல்லாம் மௌனம். கோபத்துலயோ இல்ல ஆத்திரத்துலயோ... மாத்திரை சாப்பிட மறுக்கிறார். பிரஷ்ஷர் கூடிட்டு. அவருக்கு வேளாவேளைக்கு மாத்திரைகளை மட்டும் கொடுத்தேன். நம்ம பேச்சை எடுக்கிறது இல்ல. இப்போ அப்பாவுக்கு உடம்பு தேவல. உங்களை என்னால பார்க்காமல் இருக்க முடியல. ஒரு முடிவோடு, கட்டின புடவையோடு, கைவளையல்களையும், சுழற்றி வச்சுட்டுப் புறப்பட்டுட்டேன். இனிமேல் அந்த வீட்டுக்கு போகிறதா இருந்தால் ஒங்களோடுதான் போவேன்.” “இப்போ என்ன செய்யலாம் என்கிறெ.” “இதுகூடவா சொல்லித் தெரியணும்... ரிஜிஸ்டர் ஆபீஸ் எந்தப் பக்கம் இருக்குது? ஏன் யோசிக்கிறீங்க. என்னை மனைவியாய் ஏற்றுக்க மறுக்கிறதுக்கு வேற சாக்கில்லையேன்னு யோசிக்கிறீங்களா?” “இப்படிப்பட்ட ஒரு எண்ணம் ஒனக்கு வந்ததே தப்பு பானு!” “அப்படின்னா என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதமா...” "இது என்ன கேள்வி? ஒன்னை கைவிடனுமுன்னு எப்பவும் நினைக்கல. எப்போவாவது என்னை மறந்துடுன்னு உன்கிட்டே சொல்லியிருக்கேனா?” “வாயால் எப்பவும் சொன்னதே இல்ல.” “செய்கையாலயும் காட்டியதில்லே. ஆனாலும் கடைசியாய் சொல்றேன் பானு... நான் டைப்பிஸ்ட். ஐநூறு ரூபாய் சம்பளக்காரன். இந்த அறைதான் நம்மோட பங்களா. இந்த<noinclude></noinclude> 85hdc4pducvsqdfhpfxfvtablynsypc பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/39 250 216030 1840015 1838859 2025-07-07T14:05:04Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||29}}</noinclude>கொசுக்கள் தான் நம் தோழர்கள். வெளியில் இருக்கிற பம்பு தான் நம்மோட ஷவர். இந்தக் கட்டில்தான் நம்மோட டைனிங் டேபிள்...” “ஏன் அபத்தமாய் பேசுறீங்க. எல்லாவற்றையும் விட்டுட்டு, அப்பாவையும் விட்டுட்டு வந்திருக்கேனே, இதுல இருந்து என்ன நீங்க புரிஞ்சுக்கலியா? இப்போகூட நான் சொல்றேன். நீங்க இல்லாமல் நான் வாழ முடியாது. அதே சமயம் நான் இல்லாமல் உங்களால் வாழ முடியுமுன்னால், சொல்லுங்க, நான் விலகிக்கிறேன்!” செல்வம், அவள் கரங்களை எடுத்துத் தன் தோளில் போட்டுக் கொண்டான். அவளையே உற்று நோக்கினான். அவளோ அவனை தீர்க்கமாகப் பார்த்தபடி “சொல்லுங்க, நான் இல்லாமல் நீங்க வாழ முடியுமுன்னால்... தாராளமாய் விலகிக்கிறேன்” என்றாள். செல்வம், அவளை மார்போடு சேர்த்து, மணிப்புறாவைப் பிடிப்பதுபோல் பிடித்துக்கொண்டான். பானு தேம்பிய படியே பேசினாள். “என்னைப் பொறுத்த அளவில், நான் சாகிறதாய் இருந்தாலும உங்க மடியில் படுத்தபடியே சாகனும் என்கிறதுதான என் ஆசை,” “அபசகுனமாய் பேசாதே!” “அப்போ சுபசகுனமான காரியத்துக்கு ஏற்பாடு செய்யுங்க...” “எழுந்திரு.” {{nop}}<noinclude></noinclude> rhtx0h3ow8iz1gfgd76tyfwldmm05zc பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/40 250 216032 1840016 1838860 2025-07-07T14:10:29Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" /></noinclude>{{dhr|3em}} {{block_right|{{x-larger|<b>4</b>{{gap2}}}}}} {{dhr|2em}} {{larger|<b>த</b>}}ணிகாசலம், படுத்த படுக்கையாகிவிட்டார். ஏற்கனவே உடல்நலம் குன்றிப்போன அவரிடம் பாஸ்கர் வந்து, “பானு நம்ம தலையில் கல்லைப் போட்டுட்டா அப்பா! செல்வத்தை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கிட்டாளாம்! நீங்க வரச்சொன்னால் வருவாளாம்... என்ன சொல்றது” என்று சொன்னபோது அவர் மௌனியானார். கூந்தலை வலது தோள் வழியாகத் தொங்கப் போட்டபடி ஜடை பின்னிக்கொண்டே வந்த மைதிலி, “அவள் பெயருக்கும் சரிசமமாய் சொத்து எழுதிவச்ச திமிர்ல அவள் செய்திட்டாள். நம்ம ஜாதில இல்லாத வழக்கமாய் உயில் எழுதுனதால தான் அவள் இப்படி வேற ஜாதில, நம்ம சொல்லையும் மீறி செய்துகிட்டாள்” என்றாள். தணிகாசலம், பதிலளிக்கவில்லை. பேசிய மருமகளையும், பேசப்போன மகனையும், ஏறெடுத்துப் பார்க்கவில்லை. கூனிக் குறுகியவராய், குப்புறப் படுத்தார். தனக்குள்ளேயே பேசிக்கொண்டார். என்னதான் மனம் பல கோணங்களில், மகளின் செய்கையை நியாயப்படுத்திப் பார்த்தாலும் வாழையடி வாழையாய், ஆயிரமாயிரம் ஆண்டாய் சப்த நாடிகளில் ஊடுறுவிய ஜாதிய உணர்வை, அவரால் உதற முடியவில்லை. வேற ஜாதிக்காரனை, மாப்பிள்ளையாக நினைக்கும்போதெல்லாம், அவருக்கு பிரஷ்ஷர் ஏறியது. ஒரு வாரம் விடாப்பிடியாய் ஓடியது. {{nop}}<noinclude></noinclude> krba2ycmt5fxyiukpa4domo8m5hwby8 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/41 250 216034 1840017 1838902 2025-07-07T14:15:38Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||31}}</noinclude>தணிகாசலம், எலும்பும் தோலுமாகி, இறுதியில் அவை கூட இல்லாதது போலாகிவிட்டார். அதுவரை அபயக்குரல் கொடுத்த டாக்டரும், அபாயக்குரல் கொடுத்துவிட்டார், மாத்திரைகளோடு வந்த மருமகள், மாமனாரிடம் வாஞ்சையோடு பேசினாள். “அந்த பாவிப் பொண்ணால், எப்படி இருந்தவர் எப்படி ஆயிட்டீங்க... ஒங்களை எட்டிக்கூடப் பார்க்காதவள் இனிமேல் இருந்தென்ன போயென்ன! கவலைப்படாதிங்க. ஒங்களுக்குப் பிறகு, நாங்ககூட அவளைக் கிட்டே சேர்க்க மாட்டோம். ஒங்க மகன் உயிலை மாற்றி எழுதலாமுன்னு அப்பாகிட்டே கேளு . ஒரு வேளை, அப்பா கண்ணை மூடின பிறகு அவள் புருஷன், அதுதான் அந்த நடிகன், அவளை உருட்டி மிரட்டி சொத்துக்களைச் சூறையாடி அவளை நடுத்தெருவில விட்டுட்டால் நமக்குத்தானே அவமானமுன்னு சொன்னார். அதனால் உயிலை மாற்றி எழுத வக்கீலைக் கூட்டி வரலாமான்னு கேட்கச் சொன்னார். என்ன சொல்றீங்க...” தணிகாசலத்திற்கும், அவள் சொல்வது நியாயமாகப்பட்டது. புருஷன் பெண்டாட்டியை மோசம் செய்யலாம். ஆனால் அண்ணன் செய்யமாட்டான். ஒரு வேளை அந்தப் பயல் நடிகனாய்கூட இருக்கலாம். அவன் கிடக்கட்டும், என் மருமகள் ஏன் நடிகையாய் இருக்கப்படாது. இவளாவது அடுத்தவன் பெண். நான் பெற்ற பெண்ணே, என்னை வந்து எட்டிப் பார்க்கலேயே! காலையில் எழுந்தவுடனேயே என் காலைத் தொட்டுக் கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கும் என் மகளே என்னைப் புறக்கணிச்சுட்டாளே! ஒருவேளை அப்பா தான் பாதிச் சொத்தை நமக்கு எழுதி வச்சுட்டாரே என்கிற திமிராய் இருக்குமோ? ஒருவேளை அந்தப் பயலே அவளை வரவிடாமல் வைத்திருப்பானோ... அவன் சொன்னாலும், அவளுக்கு எங்கே புத்தி போச்சுது? அவளே என்னை அப்பா<noinclude></noinclude> 58lj1n8xvth7ipw2eg9929z5dg85bot பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/42 250 216036 1840019 1839027 2025-07-07T14:20:11Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|32{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>இல்லன்னு ஒதுக்கும்போது, என் சொத்து ஏன் அவளுக்குப் போகணும்? அவள் உருப்படியாய் வச்சிருப்பாள் என்கிறது என்ன நிச்சயம்? தணிகாசலம், தன்னை ஏங்கிய முகத்தோடோ அல்லது வீங்கிய முகத்தோடோ பார்த்த மருமகளிடம், “வக்கீலை வரச் சொல்” என்று சொல்லப்போனார். ஆனாலும் அதற்கான வார்த்தைகள் வரவில்லை. ஆயிரந்தான் இருந்தாலும், பானு அவர் மகள். ஒருவேளை அவள் நிலைமை எப்படியோ. விட்டுப் பிடிப்போம். அவர் திக்குமுக்காடிச் சொன்னார். “இன்னைக்கு யோசித்து நாளைக்குச் சொல்றேன்.” மைதிலி “இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு?” என்று கேட்டபடியே மாமனாரைப் பார்த்தபோது, அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அப்போது அந்த பக்கமாக வந்த வேலைக்காரி முத்தம்மாவிடம், மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, மைதிலி கால் செருப்புகள் தரையை மத்தளம் போல் தேய்க்க ஆங்காரமாக திரும்பிப்போனாள். முத்தம்மா அந்தப் பெரியவரைத் தூக்கினாள். அவர் தலையை மடியில் போட்டபடியே மாத்திரைகளை நீரில் கரைத்து, குவளையில் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பதுபோல் கொடுத்தாள். அதைக் குடித்து முடித்த தணிகாசலம் இதுவரை தன்னால் ஒரு பொருட்டாக நினைக்கப்படாத அவளிடம், தன் தாயைக் கண்டார். குழந்தைபோலவே முறையிட்டார். “முத்தம்மா!” “என்னங்க அய்யா...” “என் மகளை எப்படி வளர்த்தேன்னு நான் சொல்ல வேண்டியதில்ல. அவளுக்காகவே இரண்டாவது கல்யாணம் செய்துக்காமல் இருந்தேன். அவளுக்கும் சொத்துல சரிக்குச்<noinclude></noinclude> 0ayerf5uyi9u5asqou1yk058dgn5puf பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/43 250 216038 1840020 1838905 2025-07-07T14:25:52Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||33}}</noinclude>சமத்தையாய் உயில் எழுதி வச்சிருக்கேன். சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டாள் பாரு! நான் கண் மூடின பிறகாவது அவனைக் கட்டியிருக்கலாம் சரி எப்படியோ அவனைக் கட்டிக்கிட்டாள். போகட்டும்... தொலையட்டும்... புருஷன் வந்துட்டதனால் பெத்தவனை மறந்துடணுமா முத்தம்மா... நான் உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கேன்னு அவளுக்கு தெரியாமலா இருக்கும்? அப்படியே தெரியாவிட்டாலும் என்னை ஒரு தடவை, ஒரே தடவையாவது வந்து பார்க்கக் கூடாதா... சொல்லு முத்தம்மா... நீயும் பிள்ளைகுட்டிக்காரி! ஒனக்கு இருக்கிற கரிசனத்துல என் மகளுக்கு ஆயிரத்துல ஒன்று இல்லாமல் போயிட்டுது பாரு!” முத்தம்மாவுக்கு அழுகை அழுகையாய் வந்தது. வேலையாட்களையும், பிள்ளைகள் மாதிரி பாவிக்கும் அந்தப் பெரியவரின் கண்களைத் துடைத்துவிட்டாள். பிறகு, அக்கம்பக்கம் பயத்தோடு பார்த்துக்கொண்டே ஜாக்கிரதையாகப் பேசினாள். “அந்த பாவிப் பொண்ணு... தினமும் வீட்டு கேட்டு வரைக்கும் வந்துட்டுத்தான் போகுதுங்க அய்யா! ஒங்க மகன், அதை உள்ளே விடப்படாது; அப்படி விட்டால் நாங்க வேலையில் இருக்கமுடியாதுன்னு கண்டிப்பாய் சொல்லிட்டது. இன்னைக்கு வந்து கண்ணீர் விட்டு கதறிச்சுது... ‘அப்பா உங்களைப் பார்த்தால், அவருக்கு உடம்பு மோசமாயிடும். அதனால பாக்க முடியாது’ன்னு இதோ, இந்தப் பாவியே, சின்ன முதலாளி சொல்லிக் கொடுத்ததை ஒப்பிச்சேன். அப்போ, நான் எடுத்து வளர்த்த பொண்ணு அப்பாவை அவருக்குத் தெரியாமல் தொலைவில் நின்றாவது பார்த்துட்டுப் போறேன்னு கண்ணீரும் கம்பலையுமாய் புலம்பிச்சுது. நான், என்னோட ஒரு சாண் வயித்துக்குப் பயந்து ஒங்க பொண்ணை துரத்திட்டேன். அவளை<noinclude> ச.—3</noinclude> 0j9ttsnqt5ntk9mlob58mti1acrqe3y பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/44 250 216040 1840022 1839028 2025-07-07T14:29:44Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|34{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>உள்ளே விட்டால் ஒன்னை சுட்டுப் பொசுக்கிடுவேன்னு அய்யா வேற மிரட்டியிருக்கார். இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தேங்க அய்யா!” தணிகாசலம் திடுக்கிட்டவர்போல் விழிகளை உருட்டினார். மேலே ஓடிய மின்விசிறிகளையே வெறித்துப் பார்த்தார். முத்தம்மா, அவரைக் கட்டிலில் கிடத்திவிட்டு, ஒடுங்கிப்போய் நின்றாள். அவளுக்கு அவரைப் பார்க்கப் பாவமாகவும் பயங்கரமாகவும் தோன்றியது, தணிகாசலம் தட்டுத் தடுமாறிப் பேசினார். “நாளைக்கும் வருவாளா முத்தம்மா?” “கண்டிப்பா வருங்க அய்யா...” “நீ ஒன்று செய்...அவளைப் பார்த்ததும், பார்க்காதது மாதிரி ஒதுங்கிக்கோ!” “நீங்க உத்தரவு கொடுத்திட்டிங்க, நான் எதுக்கு ஒதுங்கணும். இப்பதான் எனக்கு விஷயமே புரியுது. என்ன ஆனாலும் சரி, துப்பாக்கிக் குண்டு பாய்ஞ்சாலும் சரி, நாளைக்கு அம்மாவைக் கையோட கூட்டி வாரேங்க அய்யா...” தணிகாசலம் திருப்தியோடு தலையாட்டியபோது, முத்தம்மா வெளியேறப்போனாள். அவளை சின்னக்குரலில் கூப்பிட்டார். “என்னங்க அய்யா!” “ஆள் எப்படி இருக்காள் முத்தம்மா?” “கண்ணால் பார்க்க முடியாதுங்க அய்யா...” “அப்படின்னா...” “குடும்ப வாழ்க்கையில குறை இருக்குது மாதிரி தெரியலிங்க அய்யா! ஏன்னா... இன்னைக்கு அந்தப் பிள்ளையாண்டானும் வந்தாரு. நம்ம அப்பாவைப் பார்க்க முடியலியே<noinclude></noinclude> ke98gx9knq27uaw95jn9e21f7fbbwn0 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/45 250 216042 1840023 1838918 2025-07-07T14:34:54Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Illiyas noor mohammed" />{{rh|கட்டுப்பட்டால்||35}}</noinclude>என்கிற ஏக்கந்தான், பாவிப் பொண்ண, கண்கொண்டு பார்க்க முடியாமல் கண்ணு உள்ளுக்குப் போயிட்டுது. கன்னம் பள்ளமாயிட்டுது. அழுது அழுது, கண்ணே கண்ணீர்ல கரைஞ்சது மாதிரி ஆயிட்டுது.” “முத்தம்மா, நான் ஒன்று சொல்றேன், கேட்பியா?” “சொல்லுங்க அய்யா!” “அப்படியே என் மகளை நான் பார்க்க முடியாமல், இன்னைக்கே என் உயிரு போயிட்டுதுன்னா, பானுகிட்டே சொல்லு... அப்பாவுக்கு ஒன்மேல கோபம் இல்லியாம்மா. சாகும்போதுகூட ஒன்னை நெனைச்சுட்டுத்தான் செத்தாராம்ன்னு சொல்லு... சொல்வியா முத்தம்மா?” “அய்யா... அய்யா... இதைவிட நீங்க என்ன கொன்னுடலாம். ஆண்டவன், என்ன என்ன வார்த்தை கேட்கும் படியா வச்சுட்டான்...” {{dhr|2em}} {{block_right|{{x-larger|<b>5</b>{{gap2}}}}}} {{dhr|2em}} {{larger|<b>ம</b>}}களைப் பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தாலோ அல்லது இயல்பாகவோ, டாக்டருடைய நாட்குறிப்பையும் தாண்டி, தணிகாசலம் மறுநாளும் பிழைத்திருந்தார். ஆனாலும் முன்பைவிட அதிகமாய் பலவீனப்பட்டிருந்தார். நீரிழிவும் ரத்த அழுத்தமும், அரசியல் கட்சிகள் போல் கூட்டணி வைத்து, அவர் உயிரை தொகுதி உடன்பாடு செய்து, துண்டாடிக்கொண்டிருந்தன. அவர் கட்டிலில் மல்லாக்கப் படுத்து சுழன்ற தலையை வைத்து சுழலாத மின்விசிறியை சுழல்வதாக நினைத்துக்கொண்டிருந்த சமயம். மகள் வருவாளோ மாட்டாளோ என்று மனம் அல்லாடிக்கொண்டிருந்த நேரம், மகளின் வருகையை<noinclude></noinclude> 2j45h5c9ijan1t8jmy891tugk227q9m பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/55 250 216062 1840310 1838957 2025-07-08T07:30:02Z Booradleyp1 1964 1840310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||45}}</noinclude>“சொல்லு. அதுக்காகப் போகாதே! இருபது வருஷமாய், இந்த வீட்டுக்குத் தொண்டு செய்த ஒன்னை. நிறுத்த யாருக்கும் உரிமை இல்ல. வா. நானே அண்ணன்கிட்டே கேட்கிறேன்!” “எதுக்கும்மா என்னால ஒங்களுக்குள்ள தகராறு! ஏதோ என் தலைவிதி!” “நீ பேசாமல் என் பின்னால் வா முத்தம்மா. நியாயத்துக்கு அண்ணன் தம்பி கிடையாது.” “பானு கணவனோடும். முத்தம்மாவோடும் கீழே இறங்கியபோது. பாஸ்கரன் கழுத்தில் டையைக் கட்டிக்கொண்டிருந்தான். பானு யதார்த்தமாய் கேட்டாள்.” “பாவம்... முத்தம்மா அண்ணா... இந்த வயசுல அவள் எங்கண்ணா போவாள். வேலையை விட்டு நிறுத்திட்டியாமே!” “ஆமாம். அவள் போக்கு சரியில்ல.” “இருபது வருஷமாய் வேலை பார்க்கிற ஜீவன்... எதுல அவள் சரியில்ல?” “எனக்கு பிடிக்கல. நிறுத்துறேன்!” குடும்ப விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த செல்வத்தால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. “காரணத்தைச் சொல்லி நிறுத்தினால், அவங்க திருந்திடுவாங்க. அப்படியும் திருந்தலன்னா நிறுத்தலாம். ஏதோ ஆடு மாடை விரட்டுறது மாதிரி விரட்டுறது மனிதாபிமானமில்ல அததான்!” “மாப்பிள்ளை இதை நீங்க கண்டுக்கப்படாது!” “என்னை நீங்க இந்த வீட்டைவிட்டு நிறுத்தினால் கண்டுக்கமாட்டேன்! பட் ஒரு ஏழையை நிறுத்துறது என்கிறது...” {{nop}}<noinclude></noinclude> i98vjx9070ogfyacq6z98jemc9es92c பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/56 250 216064 1840312 1839034 2025-07-08T07:30:54Z Booradleyp1 1964 1840312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|46{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>“ஒரு வேலைக்காரியை நிறுத்தக்கூட எனக்கு உரிமை இல்லையா?” பானு குறுக்கிட்டாள். “முத்தம்மாவை வேலைக்காரியாய் நினைக்கப்படாதண்ணா ... நம்மை எடுத்து வளர்த்தவள்,” “அதுக்காக...” “அவளை அந்தத் தாயை நிறுத்த, ஒனக்கோ எனக்கோ உரிமை கிடையாது.” “நீ வரம்புமீறி பேசுறே பானு? வரவர ஒனக்கு அண்ணன் என்கிற மரியாதை இல்ல!” “என்னண்ணா நீ... ஒனக்கு மரியாதை கொடுக்காமல், நான் யாருக்குக் கொடுப்பேன், முந்தாநாள்கூட என்னை இவரு முன்னாலேயே அடிக்க வந்தே... ஏதாவது கேட்டனோ?” “ஒன்னை அடிக்க உரிமை இல்லையா?” “நிச்சயம் உண்டு. ஆனால் முத்தம்மாவை நிறுத்துறதுக்கு இல்ல.” “அதாவது... இந்த வீடு ஒன் பேருக்கு இருக்கறதுனால, எனக்கு உரிமை இல்லங்கற” “ஒன்கிட்டே மனுஷி பேசுவாளா... அண்ணி, அண்ணி... கொஞ்சம் இந்தப் பக்கம் வாறீங்களா...” “பாருங்கண்ணி இந்த முரட்டுத் துரையை... முத்தம்மாவை வேலையில் இருந்து நிறுத்துறேன்றாரு. நான் வேண்டான்னால், என்னவெல்லாமோ பேசுறாரு.” மைதிலி தலையில் அடித்துக்கொண்டே ஓடி வந்தாள். “ஆரம்பிச்சுட்டிங்களா... அண்ணன் தங்கை போரை! இதோ பாருங்க, ஒங்களைத்தான். முத்தம்மா நமக்கு தாய் மாதிரி, அவளை ஏன் நிறுத்துறீங்க...” {{nop}}<noinclude></noinclude> o0w24295job6qe37y2cua8ox5f6rkhs பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/59 250 216070 1840313 1838980 2025-07-08T07:33:09Z Booradleyp1 1964 1840313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||49}}</noinclude>“ஒன்னை புரிஞ்சிக்கவே முடியலடி.” “பொறுத்துப் பாருங்க அத்தான். ஒரு காயை நகர்த்தும் போது, ஒங்க தங்கச்சி இன்னொரு காயை நகர்த்தறாள். பார்த்துடலாம். விளையாட்ல ஜெயிக்கப்போறது என் புருஷனா, அவள் புருஷனா, பார்த்துடலாம்...” “நீ என்ன சொல்ற...” “நான் எதையும் சொல்றவள் இல்ல. செய்யுறவள். என் புருஷனுக்கு இணையாய், அந்தப் பரதேசிப்பயல் செல்வத்தை ஆக்குறதுக்கு முயற்சி செய்யுற பானுவோட திட்டம் பலிக்குதா? இல்ல என் புருஷனை எல்லாச் சொத்துக்கும் ஏகபோகியாய் மாற்ற நினைக்கிற என்னோட திட்டம் பலிக்குதான்னு பார்த்துடலாம்!” “கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லேன்பா...” “ஒரு திட்டத்தின் வெற்றிக்கு அதை ரகசியமாய் வச்சுக்கிறதுதான் முக்கியம். பொறுத்துப் பாருங்க. எல்லாம் நல்லாவே முடியும். “பானு போடுற ஆட்டத்தைப் பார்த்தியா?” “எல்லாம் ஒங்கப்பன் கிழவன் பார்த்த வேலை. நல்ல வேளையாய் செத்துட்டான். அதனால என் புருஷன் அனாதையாகல, அவனை அப்படி ஆக்கப்போறவங்களை நான் விடவேமாட்டேன்!” “ஒனக்கு என்மேல இருக்கிற பாசம் புரியுதுடி...அவன் இவன்னு ஏண்டி பேசறே!” “ஸாரி...அதுக்கு அபராதமாய் ஒரு முத்தம் கொடுக்கட்டுமா?” “சொல்லாதே!” கணவனை முத்தமிட்ட மைதிலி, திடீரென்று எழுந்தாள். விளக்கைப் போட்டாள். வெளிச்சத்தில் நெளிந்த மூட்டைப் பூச்சிகள், ஒவ்வொன்றையும் சுவைத்து நசுக்கிக் கொன்றாள். {{nop}}<noinclude> ச.—4</noinclude> r8iettaol1e1wghlzczr2yznikm35ee பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/62 250 216076 1840315 1839036 2025-07-08T07:36:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|52{{gap}}சு. சமுத்திரம்||சத்தியத்துக்குக்}}</noinclude>களை கசக்கிக்கொண்டு நின்றாள். பானு அவளை வாரி யெடுத்துக்கொண்டு, கதவைத் தாழிட்டாள். பிறகு கணவனை உஷ்ணமாகப் பார்த்தபடி நின்றாள். “என்ன பானு இப்படி குதியாட்டம்? ஆமா... ஏன் முகத்தை திருப்புறே? நான் என்னமோ இதுக்கு ஏற்பாடு செய்தது மாதிரி...” “கிட்டத்தட்ட அதேதான்.” “ஏய்...” சிலர் செய்து கெடுப்பாங்க. சிலர் செய்யாமல் கெடுப்பாங்க. தான்தோன்றி போக்கைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி இருக்குறது, தான்தோன்றித்தனத்தைவிட மோசமானது! “என்னோட தத்துவம் ஒனக்கு வந்துட்டுது. அதனால் கோபம் எனக்கு வரும்.” “நீங்க கோபப்பட்டால், நான் எவ்வளவோ சந்தோஷப்படுவேன். கேட்கிறிங்களே கீழே நடக்கிற கூத்தை, லோகல் சப்–இன்ஸ்பெக்டருக்கு பதவி உயர்வாம். அதுக்கு ஒங்க அருமை மைத்துனன் கொடுக்கிற பார்ட்டியாம் இது. முத்தம்மாள்தான் சொல்லிட்டுப் போனாள். முன்னால ஒருநாள் இப்படிச் செய்தான். அப்பா கண்டிச்சார். சொத்தை கோவிலுக்கு எழுதி வச்சிடுறதாய் மிரட்டினார். அப்போ அடங்கிவிட்டான். இப்போ அதையெல்லாம் கணக்குவச்சு பார்ட்டி பார்ட்டியாய் ஆடுறான்!” “ஏதோ இன்னைக்கு பார்ட்டின்னு... போகட்டும் விடு.” “இன்னைக்கு மட்டுமான்னால் நான்கூட கண்டுக்கமாட்டேன். அப்பா செத்தபிறகு இது பத்தாவதோ. பதினைஞ்சாவதோ தெரியல. இவ்வளவு நாளும் பகலுல நடக்கும். இன்றைக்கு நைட்ல. நாளையில் இருந்து பகலுலயும், நைட்லயும் நடந்தாலும் ஆச்சரியமில்லை!” {{nop}}<noinclude></noinclude> 3yrkkd0zan32yy84x0h2hwda8nkfctp பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/65 250 216082 1840316 1839015 2025-07-08T07:38:41Z Booradleyp1 1964 1840316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|கட்டுப்பட்டால்||55}}</noinclude>“இது ஒன் கருத்தா, ஊர்க் கருத்தா?” “எப்படி வேணுமுன்னாலும் எடுத்துக்கலாம்.” “ஆக, நான் அம்பத்தூர் பேக்டரிபை கட்டிட்டு அழணும் என்கிற.” “ஆமாம். நீங்க டைப்பிஸ்ட் வேலையை விடனும் என்கிறதுக்காக கேட்கல. அம்பத்தூர் பேக்டரி ஒங்க பொறுப்புல வந்துட்டால். அண்ணன் இஷ்டத்துக்கு பணம் எடுக்க முடியாது. கண்டபடி செலவழிச்சால், நாம் தட்டிக் கேட்போமுன்னு ஒரு பயம் வரும். இதனால் அவனும் உருப்படுவான். நாமும் உருப்படுவோம். எல்லாத்துக்கும் மேல, இந்தக் குழந்தையும் உருப்படும். இனிமேல் உங்களைக் கேட்கப்போறதில்ல. சொல்லுங்க. உங்களால குடும்பப் பொறுப்புல கொஞ்சத்தை எடுக்க முடியுமா?” “சரி எடுத்துத் தொலைச்சிகிறேன்.” “ஆஹா... எவ்வளவு மங்கலமாய் பேசிட்டிங்க?” “நான்தான் எப்படியோ சம்மதிச்சுட்டேனே. இன்னும் ஏன் முகத்தைத் திருப்புற.” பானு, தோளிலேயே தூங்கிய பாமாவை எடுத்துக் கட்டிலில் ஒரு புறமாய் போட்டுவிட்டு, விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள். செல்வம், உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு “தூக்கம் வர்லியா...” என்றாள். “எப்படி வரும்? புதுப் பொறுப்பை எப்படித்தான்...” “அப்போ ஏதோ சொன்னீங்க. உடம்புல இருபத்தேழு சென்டர் இருக்குது. அதை வசியப்படுத்தினால் எந்த சந்தர்ப்பத்தையும் தாங்கலாமுன்னு.” “வாஸ்த்தவந்தான். ஆனால் புதுசாய் அம்பத்தூர் பேக்டரி, இருபத்தெட்டாவது சென்டராய் வந்து, எல்லா சென்டரையும் அடைச்சுட்டுது.” {{nop}}<noinclude></noinclude> i6l79koy6k96jp3a9k6sp5n93xays6f பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/138 250 216228 1839980 821049 2025-07-07T12:00:44Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}189}}</noinclude>தாற்காலி. அதன் ஜோடியான மேஜை டிராயரில், இன்னும் இவள் வைத்துவிட்டுப்போன காகிதக்கட்டுகள் சங்கரைப் பார்த்து அவள் வரைந்த படங்கள், அவற்றிற்கு அவன் கொடுத்த ‘காமென்ட்கள்’ உள்ளன. ‘சங்கள் ஒரு திங்கர் ஹோட்டலில்’ என்று எழுதி, அவனைச் சாப்பாட்டு ராமனாகச் சித்தரித்து, அவள் வரைந்த ஓவியமும் உள்ளே இருக்கிறது. ‘நீ லீவா... நான் விநோதன், இரண்டு வார்த்தைகள் ஒன்றாயின. இன்னுமா நாம் இரண்டாய் இருப்பது’ என்று அவன் எழுதிய ‘புதுக்கவிதையும்’ அந்த டிராயருக்குள் உள்ளது. லீலா நாசுக்காகக் கேட்டுப்பார்த்தாள். “இந்த நாற்காலி தான் எனக்கு ராசியான நாற்காலி. மூணு வருஷமா இதில் தான் இருந்தேன். அதுல உட்காராட்டா வேல்யே ஓடாது.” என்று மோகினியிடம் சொல்லுவாள். அவள், கண்டுக்கவில்லை என்பது மட்டுமில்லை, அந்த நாற்காலியில் தான் உட்கார வேண்டும் என்பதைவிட, லீவாவை அதில் உட்கார வைக்கக்கூடாது என்பதற்காகவே காலையில் முன்னதாக வந்துவிடுவாள். ஆனால் பஸ்ஸில் இடிபட்டு ஏறும் லீலாவால் பப்ளிஸிட்டி மானேஜரின் காரில் வரும் மோகினியை முந்த முடியவில்லை. கண்ணுக்குப் பிடித்த சங்கரிடம் சொன்னாள். அவனோ இவள் கருத்துக்குப் பிடிக்காதபடி, “கேவலம்... நாற்காலில் என்ன வந்தது. இதப்போய் பெரிசா எடுத்தா. என்னர்த்தம்?” என்றான். இருவரும் அருகருகே உட்கார்ந்து ஒருவர் கையை ஒருவர் கிள்ளிக்கொண்டும், ஒருவர் பிரசினையை இன்னொருவர் மற்ற ஒருவருக்கும் தெரியாமல் கேட்டுக்கொண்டும் இன்பமாகக் கழித்த நாட்களை அவன் மறந்துவிட்டதுபோல் தோன்றியது. அந்த இன்பமயம் தொடர்வதற்குக் காரணமான நாற்காலி பறிபோனதில், அவனையே பறி கொடுத்தது மாதிரி அவள் தனக்குள்ளே<noinclude> ச.—9</noinclude> njsc3ct5rkfn8x9gba4abe087fukh7p பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/139 250 216230 1839981 821051 2025-07-07T12:05:51Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|130{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>புலம்பிக்கொண்டாள். நாற்காலியைப் பிடித்தவள், பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்திருப்பவனையும் பிடித்துவிடுவாளோ என்றுகூட பயந்தாள். அதற்கு ஏற்றாற்போல், மோகினியும் சங்கரிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவதையும். சில சமயம் ‘போங்க ஸார்’ என்று அவனை இடிக்கப் போவதுமாதிரி, கையைத் தூக்கிச் செல்லமாக சிணுக்குவதையும், லீலா சீரியஸாக எடுத்துக்கொண்டாள். அதே சமயம், கடற்கரையில் தன் தோள்களை லேசாகப் பற்றிக்கொண்டு சாய்ந்திருக்கும், அவனிடம், “என்னைக் கைவிட மாட்டீர்களே?” என்று அவள் அழாக்குறையாகக் கேட்கும் போது, அவன், “ஒனக்கு என்ன பைத்தியமா?” என்று சொல்லி, அவள் கையைப் பிடித்து அழுத்துவதையும் நினைத்துக்கொண்டாள். இது போதாதென்று இன்னொன்று. அந்தக் கம்பெனி ஊழியர்களுக்காக ஒரு ‘ஹவுஸ்ஜர்னல்’ (சஞ்சிகை) நடத்தியது. மாத வெளியீடான அதில், கம்பெனி ஊழியர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் பற்றிய போட்டோக்களும், ஊழியர்களின் கவிதை. கட்டுரைகளும். அவர்களுக்குக் கம்பெனி செய்திருக்கும் நன்மைகளும் பிரசுரமாகும். கம்பெனியைப்பற்றி பிரமுகர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், சின்ன எழுத்திலும். சினிமா நடிகர் நடிகைகள் சொல்வது ‘போல்ட் டைப்’பிலும் வெளியாகும். இதற்கு பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம்தான் ‘எடிட்டர்’ என்றாலும், பத்திரிகை முழுக்க முழுக்க லீலாவே கவனித்து வந்தாள். இப்போது, மோகினியிடம் அது ஒப்படைக்கப் பட்டிருந்தது. ஜர்னலிஸத்தில் டிப்ளமா பெற்ற தன்னிடம் மானேஜர் மீண்டும் அதை ஒப்படைப்பார் என்று நினைத்த லீலா, ஏமாந்தாள். அவள் வேலையில் சேர்ந்தபோது துவக்கப்பட்ட பத்திரிகை அது. அவளைப் பொறுத்த அளவில் சங்கருக்கு அடுத்தபடியாக அவள் நேசிக்கும் குழந்தை அது. {{nop}}<noinclude></noinclude> fzanoi4qxmejbyvrw11r62vasgvtdwu பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/140 250 216232 1839982 821054 2025-07-07T12:09:18Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1839982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}131}}</noinclude>அந்தக் குழந்தையை மோகினி கிள்ளிக்கொண்டிருப்பதை லீலாவால் பொறுக்க முடியவில்லை. சங்கரிடம் சொல்லிப் பார்த்தாள். அவனோ, மோகினிக்கும் மேலதிகாரியான அந்த அஸிஸ்டெண்ட் பப்ளிஸிட்டி மானேஜரோ, மோகினியிடம் ‘அன் அபிஷியலாக’ ‘ஸர்ரண்டர்’ ஆகிவிட்டான். சாட்சிக்காரனைவிட சண்டைக்காரி தேவலை என்று நினைத்த லீலா, “மிஸ் மோகினி... எதுக்கும் லே அவுட்டை நான் ஒரு தடவை பாத்துடுறேன். கொஞ்சம் காட்டுறீங்களா?” என்று தன் இருக்கையில் இருந்து எழுந்து அவளுக்கு முன்னால், பிச்சை கேட்பதுபோல் கேட்டாள். மோகினி அவளை ஏற இறங்கப் பார்த்தாள். லீலா உடுத்திருந்த அந்த வெள்ளை வாயில், இந்த நைலக்ஸ் காரியை என்னவோ செய்திருக்க வேண்டும். அச்சமில்லாமலும், அவசரப்படாமலும், பகட்டைக் காட்டாமலும், சிரிப்பதுபோல் தோன்றிய அவள் கண்கள். இவள் கண்களை உறுத்தியிருக்க வேண்டும். பாலீஷ் போடாமல் பளபளப்பாக மின்னிய நகங்கள், இவளைக் கிள்ளுவதுபோல் தோன்றியிருக்க வேண்டும். மெதுவாக இனிமையைப் பிரதிபலிக்கும் அவள் குரல், இவள் மனதில் கூச்சலை எழுப்பியிருக்க வேண்டும். அவள். தொப்புளுக்கு மேலே கட்டியிருந்த புடவை இவளுக்குப் புழுக்கத்தைக் கொடுத்திருக்கவேண்டும். அவள் காலில் போட்டிருந்த செருப்புகள் இவளை அடிப்பதுபோல் வலித்திருக்க வேண்டும். மோகினி அவளை சிறிது நேரம் முறைத்துவிட்டு, குட்டிபோட்ட பூனைமாதிரி முனகிக்கொண்டே பப்ளிஸிட்டி மானேஜரின் ஏர் கண்டிஷன் அறைக்குள் போன வேகத்திலேயே, “ஸார்... நீங்க எனக்குப் பாஸா, இல்ல இந்த லீலா பாஸான்னு இப்ப தெரியணும்” என்று அங்கேயே கூச்சல் போட்டாள். அவள் வைத்திருக்கும் பரீட்சையில் ‘பாஸாக’ வேண்டும் என்று நினைத்த பப்ளிஸிட்டி சுந்தரம், விவகாரத்திற்கு பப்ளிஸிட்டி கொடுக்க வேண்டாம் என்று அவளை<noinclude></noinclude> tnzwn9npl1czp2bavbfwbh3r340jld9 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/141 250 216234 1840240 821057 2025-07-08T05:30:36Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|132{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>உட்காரச் சொல்லி, விஷயத்தைக் கேட்டார். விஷயம் தெரிந்ததும் அவள் கொடுத்த ‘பிரஷ்ஷரில்’ அவருக்கு பிளட் பிரஷ்ஷர் ஏறியது. பெல்லடித்து, பியூனை அனுப்பி லீலாவை வரவழைத்தார். அவளை உட்காரச் சொல்லவில்லை. உட்கார்ந்திருந்த மோகினியைச் சுட்டிக்காட்டி, “நியாயத்தை (பத்திரிகையின் பெயர்) இவளே பாத்துக்கறப்போ நீ ஏன் அனாவசியமா இண்டர்பியர் பண்றே? நீ பாஸா நான் பாஸா? ஐ ஸே யூ கீப் குயட். டோண்ட் போக் யுவர் நோஸ், யூ கேன் கோ நெள....” என்று கத்த, திருப்பிக் கத்தலாமா என்று நினைத்த லீலா, உதடுகளைக் கடித்துக்கொண்டு. நீர் சிந்தாமல் இருக்க இமைகள் நின்ற இடத்திலேயே நிறுத்தி ‘பாலன்ஸாக’ வைத்துக்கொண்டு வெளியே போனபோது, இளைப்பாறுபவர்போல் கத்திக் களைத்த சுந்தரம் உள்ளே இருந்தவளின் தோளில் கைபோட்டார். லீலா கீழே விழாமல் இருப்பதற்காக வெளியே வந்து மேஜையைப் பிடித்துக் கொண்டாள். சிறிது நேரத்திற்குப்பிறகு, தோளில் கிடந்த புடவைத் தலைப்பைச் சரி செய்துகொண்டு, அட்டகாசமாக வந்த மோகினி, அப்பாவிற்கு உற்சாகமாகப் போன் செய்தாள். “அப்பா ! வேவைக்காரியைப் பாயசம் வைக்கச் சொல்லுங்க. ஒரு நல்ல நியூஸ்... சரியான சவுக்கடி! என்கிட்டயா. முடியும்? என்னப்பத்தி இன்னும் தெரியல.ஹா...ஹா... ஹெ...ஹே...அப்புறமா, வீட்ல வந்து சொல்றேன. வச்சிடட்டுமா?” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள். பிறகு இன்னொரு நம்பரைச் சுழற்றினாள். “இன்ஸ்பெக்டர் வில்லியம்ஸ் இருக்காரா? யோவ் நான் யாராய் இருந்தா ஒனக்கென்னய்யா? ஐ ஸே யு ஸிம்ப்ளி கிவ் இட் டு ஹிம்... ஹலோ... மிஸ்டர் வில்லியம்ஸா...எங்க ஆபீஸ் கல்சுரல் அகடாமில் சினிமா நடிகர் சிங்காரத்த கொண்டு வாறோம். கொஞ்சம் பாதுகாப்பு வேணும்.ஒங்க சப்–இன்ஸபெக்டரை என் வீட்டுக்கு அனுப்புறீங்களா? என்ன, நீங்களே வாரீங்-<noinclude></noinclude> ggy3nm24r2lfj1p5jg6ja09h6zvecd6 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/142 250 216236 1840242 821059 2025-07-08T05:32:53Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}133}}</noinclude>களா, நாளைக்கி ஈவினிங்கல வாங்க. ஏழு கான்ஸ்டபிளாவது வேணும்! ஆல் ரைட், காலையில் வந்துடச் சொல்லுங்க.” நிரந்தரமாகாத ஒரு சாதாரண வேலையில் இருக்கும்போதே மோகினி இவ்வளவு திமிராகவும் அகங்காரமாகவும் இருப்பது எல்லோருக்குமே ஆச்சரியம் தந்தது. ஆனால் மோகினிக்குத் தெரியும், தன் அழகையும் சாமர்த்தியத்தையும் போட்டு, எந்தெந்த மேலதிகாரியை எப்படியெப்படி காக்கா பிடிக்கலாம் என்று. லீலாதான் அவளுக்கு முதல் நம்பர் எதிரியாகத் தோன்றினாள். அவளையும் அவள் காதலன் சங்கரையும் பிரித்துவிட வேண்டும். லீலாவை நிரந்தரமாக விரட்டிவிட வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் மோகினி அட்டகாசம் செய்துகொண்டிருந்தாள். ஆனால் ஆபீசில்தான் இவ்வளவும். குடும்பத்தில் நிலைமை ரொம்ப மோசம். அவ்வளவு பெரிய அடையாறு வீடு ஒரு வெள்ளை யானையாகத் தோன்றவே அதை வாடகைக்கு விட்டுவிட்டுச் சின்ன வீட்டுக்குக் குடி போனாள். அப்படியும் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை. உத்தியோகம் நிரந்தரமானால்... இதற்காகவேதான் அவள் கல்சுரல் அகாடமி என்று ஒன்றை ஆரம்பித்திருந்தாள். பல பெரிய மனிதர்கள் வந்து சந்திப்பதற்கு அது ரொம்ப வசதியான இடமாக இருந்தது. அந்தச் சங்கத்தில் அந்த விழா இந்த விழா என்று சாவனீர் வெளியிடுவாள். ஆபீஸ் பெயரை உபயோகப் படுத்திக்கொண்டு விளம்பரங்கள் வசூலிப்பாள். ஓசியில் பல காரியங்கள் நடக்கும். எதற்கும் துணிந்த ஏகாம்பரமேகூடக் கொஞ்சம் திகில் பட்டார். “ஏம்மா, ஏற்கெனவே நமக்குக் கஷ்டம். இதெல்லாம் வேறே ஏன்?” என்றார். {{nop}}<noinclude></noinclude> e5y7t1cmrs9bore5bx1nfr9r3wvjbg0 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/143 250 216238 1840244 821061 2025-07-08T05:35:46Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|134{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>“சும்மா இருங்கப்பா. சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனை எடுக்கணும்” என்றாள் மோகினி. “சாப்பாட்டுக்கே திண்டாட்டமா இருந்துட்டிருக்கே!” என்று ஏகாம்பரம் நெட்டுயிர்த்தார். {{dhr|2em}} {{block_right|{{x-larger|<b>6</b>}}}} {{dhr|2em}} <b>எ</b>ங்கெல்லாமோ சுற்றியலைந்துவிட்டு ஒரு நாள் மோகினியிடமே திரும்பி வந்தான் சீனிவாசன். விடுதலைப் பத்திரம் வாங்கிக்கொண்டு போனவனுக்கு மறுபடி என்ன வேலை என்று மோகினிக்குக் கோபம் வந்தது. தொலைந்து போகிறான் என்று வீட்டில் இருப்பதற்கு இடம் கொடுத்தாள். கிட்டத்தட்ட பிச்சைக்காரன் மாதிரி வந்திருந்த சீனிவாசனிடம் மாமனார் ஏகாம்பரத்துக்கு எவ்விதப் பாசமும் ஏற்பட நியாயமில்லை. “என்னய்யா, அப்பா எவ்வளவு வைச்சிட்டுப் போனார்?” என்று வேண்டுமென்றே கிண்டல் செய்தார். சில சமயங்களில் ‘மனம்விட்டுப்’ பேசிச் சண்டை போட்டுக்கொள்வார்கள். மோகினி அதைப் பார்ப்பாளே தவிர, சீனிவாசனுக்குப் பரிந்து வரமாட்டாள். எப்படியோ இரண்டு மாதங்கள் ஓடின. மோகினியும் சீனிவாசனும் அதிகமாகப் பேசுவதில்லை. ‘அய்யோ...ஓங்க பிள்ள என்னை எப்டில்லாம் உதைக்குது. இதோ பாருங்க’ என்று வயிற்றைக் காட்டிச் சொல்லத் துடிக்கும் உணர்வை வந்த வேகத்திலேயே அடக்கிக்கொள்வாள். ஏகாம்பரம் அவள் கண்முன்னாலேயே மருமகனை ஒருநாள் தனக்கு வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு வரச்சொன்னார். மனைவிக்காரி அதைக் கண்டிக்காததைச்<noinclude></noinclude> qrii2tjylzbuvb788e09zl1cfwbmiqy பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/144 250 216240 1840246 821063 2025-07-08T05:38:30Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}135}}</noinclude>சீனிவாசன் பெரிதாகத்தான் எடுத்துக்கொண்டான். அப்பாவின் சாவுக்கு அவள்தான் எமனாக வந்தவள் என்று அவன் நினைத்ததோடு முணுமுணுக்கத் துவங்கினான். ஒருநாள் மோகினி கணவனிடம் ‘வலிய’ வந்தாள். ஒரு ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி ‘குங்குமப்பூ வாங்கிட்டு வாங்க... நம்ம ரெண்டுபேரையும்விட குழந்தை நிறமா பிறக்க வேண்டாமா’ என்று சிரித்துக்கொண்டே சொன்னதில், சீனிவாசனும் லேசாகப் புன்முறுவல் செய்தான். புறப்பட்டான். குழந்தை அழகாக இருக்க வேண்டும் என்று சதா நினைத்துக்கொண்டிருந்த மோகினி. காலையில் ஏழு மணிக்குப் போன கணவன் ஒன்பது மணிவரை திரும்பாததைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சாயங்காலம் வந்து பாலில் கலந்து குங்குமப்பூவை சாப்யிடலாம் என்று நினைத்து, மனதைத் தேற்றிக்கொண்டு ஆபீஸ் போனாள். அதேசமயம், அந்த இடைவெளியினால் குழந்தையின் கலர் கொஞ்சம் குறையுமோ என்றுகூடச் சங்கடப்பட்டாள். மாலை வந்தது. குங்குமப்பூ நினைவுடன் வீட்டுக்குத் திரும்பிய மோகினியின் கண்கள் குங்குமமாயின. சீனிவாசன் ஒரு நாற்காலியில் முட்டிக்கால்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். ஏகாம்பரம் மருமகன் சார்பில் பேசினார். “ஒனக்கு வாச்சவர் அஞ்சு ரூபாய் நோட்டை எவனோ பிக்பாக்கட் அடிச்சிட்டான்னு சொல்றார். குங்குமப்பூவுக்குப் பதிலா ஒரு ஸ்டார் சிகரெட்டை பிடிச்சிக்கிட்டு வாரார். எல்லாம் ஒன்னோட தலையெழுத்து, கண்ணைத் திறந்துகிட்டே பாழுங் கிணத்துல விழுந்திட்ட...” மோகினி அவனையே முறைத்துப் பார்த்தாள். ‘பிக் பாக்கட் அடிச்சிட்டான்’ என்று அவன் சொல்லியிருந்தால் அவள் கோபம் தணிந்திருக்கலாம். ஆனால் அவனோ,<noinclude></noinclude> 09f0ir8p9bp7qkmmphkmr32i35nsmlj பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/145 250 216242 1840250 821065 2025-07-08T05:41:41Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|136{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>‘அசால்டாக’ உட்கார்ந்து இன்னொரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். மோகினிக்குப் பற்றி எரிந்தது. அழகான குழந்தைக்கு ஆசைப்படக்கூட உரிமை இல்லையா... பிக்பாக்கட் அடிச்சிருந்தா, அந்த முகமே காட்டிக் கொடுத்திருக்குமே? சிகரெட் குடிக்கிற பழக்கம் வந்துட்டால் இப்படித்தான்... மோகினி பயங்கரமாகக் கத்தினாள்: “குங்குமப்பூ இல்லாம இந்த வீட்டுக்குள்ள வரப்படாது. மொதல்ல அத வாங்கிக்கிட்டு வந்து மறுஜோலி பாருங்க. சே... கொஞ்சமாவது சொரணை வேண்டாம்...” இந்தச் சமயத்தில் ஏகாம்பரமும் இடைச்செருகல் செய்தார். “இவரு அப்பன் ஒன்னை ஆமைன்னு சொன்னானாம். இப்ப உயிரோட இருந்தா யாரு வீட்ல எந்த ஆமை புகுந்து துன்னு தெரிஞ்சிருப்பார்.” சீனிவாசனுக்கு சப்த நாடிகளும் துடித்தன. ‘மாமா... இதுக்குமேல ஒமக்கு மரியாத இல்ல. இனிமே பேசினா மரியாதை கெட்டுப் போயிடும்...’ என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். மோகினிக்கு இது அதிகப்படியாகத் தெரிந்தது. கணவனை நெருங்கி, ‘பெண்டாட்டிக்குத்தான் ஒண்ணும் வாங்கிக் கொடுக்கிற வக்கில்ல... அவள் தந்த காசையாவது திருப்பித்தர யோக்கியதை வேண்டாம்? என்னோட புருஷன்னு சொல்லிக்க உங்களுக்கு வெட்கமா இல்லே?’ என்று கையை நீட்டிப் பேசினாள். பேசியவள் திடீரென்று கன்னத்தில் கை வைத்தாள். காரணம் சீனிவாசன் அவள் கன்னத்தில் பளீர் என்று அடித்துவிட்டு, இடுப்புப் பக்கத்தில், காலால் உதைத்துவிட்டு, பின்னர் செய்த தவறுக்குப் பிரயாச்சித்தமும் செய்ய நினைக்காதவன்போல், ‘என்னடி சொன்னே...’ என்று<noinclude></noinclude> 4mx1ex0muaqbqa8p2ykrhu344w7sv9c பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/146 250 216244 1840253 821067 2025-07-08T05:43:37Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}137}}</noinclude>உறுமினான். இந்த வன்முறையைச் சிறிதும் எதிர்பாராத ஏகாம்பரம், முதலில் பிரமை பிடித்தவர்போல் சிறிது நேரம் நின்றுவிட்டு, பின்னர் ‘நான் இடுப்பில எடுத்து வளத்த என் குழந்தையையாடா இடுப்பில உதைக்கிறே... பாவிப்பயலே... அவள் கர்ப்பிணின்னு தெரிஞ்சும் இடுப்புல உதைச்சிட்டியே! அபார்ஷன் ஆயிட்டா ஓங்கப்பனாடா மருந்துக்குப் பணம் தரப்போறான்? பாழாப்போற பாவி...’ என்றார். இதற்குள். உள்ளே படுத்துக் கிடந்த அம்மாக்காரி தட்டுத் தடுமாறி அங்கே வந்தாள். சீனிவாசன் வெளியேறிவிட்டான். மோகினி ஒன்றும் பேசவில்லை. கன்னத்தைத் தடவி விட்டுக்கொண்டாள். இடுப்பை இழுத்துவிட்டுக் கொண்டாள். அப்பா சொன்னது மாதிரி அபார்ஷனாயிடுமோ! அய்யோ... என் குழந்த தாங்காதோ... தங்காதோ... அது போயிட்டா நான் மட்டும் எதுக்காக இருக்கணும்? மாட்டேன்... இருக்கமாட்டேன். மோகினியின் மனம் மாறியதோ இல்லையோ, முகம் கல்லாக மாறியது கணவன் என்ற ஒருவன் இறந்துவிட்டதாக அப்போதே அனுமானித்துக்கொண்டாள். அபார்ஷன் ஆகிவிடலாம் என்கிற சந்தேகம் விசுவரூபமெடுக்க, டாக்டரிடம் போகலாமா என்று யோசித்துக்கொண்டே ஒரு மூலையில் குன்றிப்போய் உட்கார்ந்தாள். இரவு எட்டுமணி சுமாருக்கு சீனிவாசன் வந்தான். இப்போது பையில் ஒரு பாக்கெட் சிகரெட் இருந்தது. ‘போனால் போகுதுன்னு வந்தேன். வாயும் வயிறுமாய் இருக்கிறவளை அந்தரமா விட்டுப்போகக் கூடாதுன்னு வந்தேன். இனிமேல் ஒரு தரம் இப்படிப் பேசினால் ஒனக்கும் எனக்கும் ஒண்ணும்கிடையாது’ என்று சொல்லிக்கொண்டே வந்தான். எரிந்து விழும் ஏகாம்பரம் இப்போது அவனை எதிர்த்துப் பேசவில்லை. காலிப் பயலிடம் என்ன பேச்சு...<noinclude></noinclude> tc119mmb881esz0x6gq39vbxjde3v8c 1840254 1840253 2025-07-08T05:44:46Z AjayAjayy 15166 1840254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}137}}</noinclude>உறுமினான். இந்த வன்முறையைச் சிறிதும் எதிர்பாராத ஏகாம்பரம், முதலில் பிரமை பிடித்தவர்போல் சிறிது நேரம் நின்றுவிட்டு, பின்னர் ‘நான் இடுப்பில எடுத்து வளத்த என் குழந்தையையாடா இடுப்பில உதைக்கிறே... பாவிப்பயலே... அவள் கர்ப்பிணின்னு தெரிஞ்சும் இடுப்புல உதைச்சிட்டியே! அபார்ஷன் ஆயிட்டா ஓங்கப்பனாடா மருந்துக்குப் பணம் தரப்போறான்? பாழாப்போற பாவி...’ என்றார். இதற்குள். உள்ளே படுத்துக் கிடந்த அம்மாக்காரி தட்டுத் தடுமாறி அங்கே வந்தாள். சீனிவாசன் வெளியேறிவிட்டான். மோகினி ஒன்றும் பேசவில்லை. கன்னத்தைத் தடவி விட்டுக்கொண்டாள். இடுப்பை இழுத்துவிட்டுக் கொண்டாள். அப்பா சொன்னது மாதிரி அபார்ஷனாயிடுமோ! அய்யோ... என் குழந்த தாங்காதோ... தங்காதோ... அது போயிட்டா நான் மட்டும் எதுக்காக இருக்கணும்? மாட்டேன்... இருக்கமாட்டேன். மோகினியின் மனம் மாறியதோ இல்லையோ, முகம் கல்லாக மாறியது கணவன் என்ற ஒருவன் இறந்துவிட்டதாக அப்போதே அனுமானித்துக்கொண்டாள். அபார்ஷன் ஆகிவிடலாம் என்கிற சந்தேகம் விசுவரூபமெடுக்க, டாக்டரிடம் போகலாமா என்று யோசித்துக்கொண்டே ஒரு மூலையில் குன்றிப்போய் உட்கார்ந்தாள். இரவு எட்டுமணி சுமாருக்கு சீனிவாசன் வந்தான். இப்போது பையில் ஒரு பாக்கெட் சிகரெட் இருந்தது. ‘போனால் போகுதுன்னு வந்தேன். வாயும் வயிறுமாய் இருக்கிறவளை அந்தரமா விட்டுப்போகக் கூடாதுன்னு வந்தேன். இனிமேல் ஒரு தரம் இப்படிப் பேசினால் ஒனக்கும் எனக்கும் ஒண்ணும்கிடையாது’ என்று சொல்லிக்கொண்டே வந்தான். எரிந்து விழும் ஏகாம்பரம் இப்போது அவனை எதிர்த்துப் பேசவில்லை. காலிப் பயலிடம் என்ன பேச்சு... {{nop}}<noinclude></noinclude> 0wqadb6inmcew4rta4aiuoum73xbsgr பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/147 250 216246 1840256 821069 2025-07-08T05:47:18Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|138{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>மோகினி எழுந்தாள். அவன் அந்த வீட்டில் இருந்தால்தன் குழந்தை நிச்சயம் அபார்ஷனாகிவிடும் என்பதை முழுமையாக நம்பி, பெண் புலியாய்ச் சீறினாள். ‘இனிமேல் இந்த வீட்ல ஒரு நொடிகூட இருக்க முடியாது.ஒங்கள் உதவியில்லாமலே என்னால பிள்ளையை வளர்க்க முடியும்! வளர்த்துக் காட்டுறேனா இல்லியான்னு பாருங்க. எப்ப நீங்க என்னை அடிக்கிற அளவுக்கு வந்துட்டிங்களோ அப்பவே ஒங்கள என் மனசில டைவர்ஸ். பண்ணிட்டேன்... சுயமரியாதை உள்ளவராய் இருந்தால் நீங்க போகலாம். செலவுக்கு வேணுமுன்னாலும் பணந்தாரேன்!’ சீனிவாசன் அவளையே உற்று நோக்கினான். அடிக்கப் போன கைகளை அடக்கிக்கொண்டான். மடமடவென்று அறைக்குள் போய் தன்னுடைய துணிமணிகளை ஒரு ‘லெதர் பேக்கில்’ புகுத்திக்கொண்டு புறப்பட்டான். போய்விட்டான். அன்றிரவு மோகினி தூங்கவில்லை. தலையணை உறையை மாற்ற வேண்டிய அளவுக்கு அவள் அழுது தீர்த்தாள். வழக்கமாக வயிற்றில் புரண்டு ‘உதைக்கும்’ பிள்ளை. இப்போது நெளியாமல் இருப்பதை உணர்ந்து, இவள் தூக்கமில்லாமல் நெளிந்தாள். அந்தப் பாவி கொடுத்த அடியில் அபார்ஷன் ஆனாலும் ஆயிடுமோ... <b>வா</b>ரங்கள் மாதங்களாக மாறிக் கொண்டிருந்தன. நிறைமாதக் கர்ப்பிணியான மோகினியால், வேலைக்குப் போக முடியவில்லை. சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருந்தது. அப்பாக்காரருக்கு ஜாதகம் பார்க்கத் தெரியும். அவருக்கு, சுக்கிரயோகம் இருந்ததோ இல்லையோ! அப்படி ஆயிட்டா யாருக்காக வாழணும்... {{nop}}<noinclude></noinclude> hyvm3gj2i1myflmuoo22fqj95gb3tuu பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/148 250 216248 1840258 821071 2025-07-08T05:50:24Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}139}}</noinclude>சினிமா யோகம், வக்ரத்தோடு வந்தது. சினிமாக்காரர்களுக்கும், கதைகளைத் திருடும் சினிமா எழுத்தாளர்களுக்கும் நேரங்காலம் சொல்லி உற்சாகப் படுத்தினார். அவர்களும் பதில் உற்சாகமாகச் சில நூறு பத்து ரூபாய்களை கொடுத்ததால் மோகினிக்கு அதிக சிரமமில்லை. குழந்தையோட ராசி என்று அது பிறக்கு முன்பே நினைத்துக் கொண்டாள். குழந்தையும் பிறந்தது. கருவண்டு விழிகளுடன், பயத்தம் பருப்பு நிறத்தில் அழகாகப் பெண் குழந்தை பிறந்த்து. எல்லோரையும்போல, அவளுக்கும். ‘அவரை’ப் பார்க்க ஆசை வந்தது. ‘இந்தக் குழந்தைய அபார்ஷனாக்கப் பார்த்தவரோடு என்ன சகவாசம்’ என்று தன் ஆசையைத் தானே அடக்கிக் கொண்டாள். ஆனால் சீனிவாசனால் ஆசையை அடக்க முடியவில்லை. குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் கொஞ்சம் பணத்தோடு எங்கிருந்தோ வந்தான். “மோகினி, ஒருத்தருக்கு நான் கடன் கொடுத்திருந்தேன். இப்ப திருப்பித் தந்தார். இதெல்லாம் நம்ம கலாவுக்குத்தான், இனிமேல் ஒழுங்கா இருப்பேன், என்னை நம்பு” என்றான். மோகினி நம்பியிருப்பாள். அந்தப் பணத்தை நீட்டியபோது, அவன் வாயில் சாராய வாடை வீசியது. அதனால தான் பாசமா பேசறார் போலிருக்கு! மோகினியின் இருதயம் கல்லாகியது. குடிகாரனை வீட்ல வச்சிருந்தா, சுலாவோட குடி கெட்டுப்போகும். அப்பன் புத்தி அதுக்கு வந்துட்டா...! வரக்கூடாது.. வர விடமாட்டேன். மோகினி, ஆண் புலியிடம் இருந்து குட்டியைக் காக்கும் பெண்புலியாகச் சீறினாள். {{nop}}<noinclude></noinclude> 91ip6mgvyy9c3265lvifn0wpun3snci பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/149 250 216250 1840260 821073 2025-07-08T05:53:50Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|140{{gap}}சு. சமுத்திரம்||}}</noinclude>‘இனிமே ஓங்க சாவகாசமே வேண்டாம். ஒங்க காற்று பட்டாலே கலாவுக்குக் கெட்ட புத்தி வந்துடும். என் மகளை என் இஷ்டப்படி வளர்க்கப் போறேன். இதுக்கு யார் குறுக்கே நின்னாலும் அவங்க எனக்குத் தூசி. குடிகாரன் புத்தி விடிஞ்சா போச்சு. நீங்க விடியறது வரைக்கும் இருக்கவேண்டாம்... பிளீஸ்... போயிடுங்க நமக்குள்ள ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. சீனிவாசன் கோபமாகக் கையைத் தூக்கினான். அந்த அடி குழந்தைமீது பட்டாலும் பட்டுவிடலாம் என்கிற பயம் தைரியமாக மாற, மோகினி தன் முகத்தில் விழப்போன அவன் கரத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டே, ‘மிஸ்டர்... என்னை நீங்க போலீஸ் வரைக்கும் துரத்த மாட்டிங்கன்னு நினைக்கிறேன்’ என்றாள். பட்டை தீட்டிய சீனிவாசன், அதிர்ச்சி அடைந்தவனாய் வெளியேறினான். ஏகாம்பரம், “மாப்பிள்ளை! இந்தத் தடவையாவது போயிடு! முன்போலத் திரும்பி வந்துடாதே!” என்று சத்தம் போட்டார். அவர் சொன்னதாலோ என்னவோ சீனிவாசன் திரும்பவேயில்லை. <b>மா</b>தங்கள், ஆண்டுகளாயின. கல. இப்போது மூன்று வயதுக்காரி. மோகினி எங்கே போனாலும் மகளை எடுத்து வைத்துக் கொண்டேபோனாள். நான்காவது வயதில் அவளை எல். கே. ஜி. யில் சேர்ப்பதற்காக, இப்போதே ‘இடம்பிடிக்கும்’ வேலையிலும் எது நல்ல பள்ளிக்கூடம் என்பதைக் சுண்டு பிடிப்பதிலும் ஈடுபட்டாள். பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம், லீலா லீவில் போகும்போதெல்லாம் அவளுக்குத் தற்காலிக வேலைகள் தந்தார். அடையாறு வீட்டில் இருந்து வாடகை வந்ததால்,<noinclude></noinclude> coid4bjlfm5lslamdp3vn99244c14l9 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/150 250 216252 1840265 1839599 2025-07-08T05:56:22Z AjayAjayy 15166 1840265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}141}}</noinclude>மோகினி சுந்தரதையோ அவர் கொடுத்த வேலையையோ சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘அம்மா’ என்று சொல்லும் மகளை செல்லமாக அடக்கி அவளை ‘மம்மி’ என்று சொல்லவைக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. ஆனால் குடும்ப நேரம் சரியாக இல்லை. ஏகாம்பரத்தை விட்டு, சினிமா யோகம், கழற்றிக் கொண்டது. அங்கே பல ஏகாம்பரங்கள் பற்பல ஜாதகக் கட்டுக்களோடு கிளம்பியதே காரணம். அதோடு, நமது ஏகாம்பரம் ஆயிரக்கணக்கில் பொய் சொன்னால், புதிய ஏகாம்பரங்கள் லட்சக்கணக்கில் பொய் சொல்லத் துவங்கினதால் இந்த சின்னப் புளுகர்களின் பொய் எடுபடவில்லை. அதோடு, நூறுநாள் ஓடும் என்று அவர் கணித்த ஒரு படம் நூறு ‘ஷோ’ கூட ஓடாததால், முன்னூறு ரூபாயைத் தட்சணையாகக் கொடுத்த அந்த படத்தயாரிப்பாளர், இப்போது அந்தப் பணத்தைக் கடனாகக் கொடுத்ததாக வாதாடி, ஏகாம்பரத்தை புரட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த லட்சணத்தில், அடையாறு வீட்டில் குடியிருந்தவர்கள் நொடித்துப்போய் வாடகைப் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். காலி பண்ணச் சொன்னால் கோர்ட்டுக்குக் கூப்பிட்டார்கள். மோகினி, தானும் அம்மாவும் அப்பாவும் பட்டினியாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால் கலா... அவள் கண்ணுக்குக் கண்ணாக வளர்க்கும் கலாவிற்கு, கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதை. அவளால் தாங்க முடியவில்லை. அந்த சமயம் பார்த்து, கலாவிற்கு நல்ல ஜூரம். லேசாக பிட்ஸ் வருவதுபோலவும் இருந்தது. 102 டிகிரியைத் தாண்டிவிட்டது.ஏகாம்பரம் ஒப்பாரியே வைக்கத் துவங்கி-<noinclude></noinclude> aqqoi9lddq33wxq48mre7uus6yzs9ac பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/151 250 216254 1840266 1839602 2025-07-08T05:57:54Z AjayAjayy 15166 1840266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|142{{gap}}சு.சமுத்திரம்||}}</noinclude>விட்டார். மோகினியால் அழ முடியவில்லை. கண்ணீரும் வரவில்லை. குழந்தைக்கு அருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். அம்மாக்காரி தட்டுத் தடுமாறி வந்து, ஈரத்துணி களால் பேத்தியின் நெற்றியில் ‘ஒத்தடம்’ கொடுத்தாள். கலா லேசாகப் புலம்பத் துவங்கினாள். மோகினியால் தாள முடியவில்லை. டாக்டரிடம் போகப் பணமில்லை. கணவனைச் சபித்துக் கொண்டாள். ஆமை என்று எந்த நேரத்திலோ வாயைத் திறந்து. வார்த்தை பலிக்கும்படி செய்த அவன் அப்பாவைத் திட்டிக் கொண்டாள். காலி செய்யாமல் சண்டித்தனம் செய்யும் அடையாறு வாடகை வகையறாக்களைத் திட்டிக்கொண்டாள். அவர்களைக் காலி செய்துவைக்க ஆளில்லாமல் போன தன் அவல நிலைக்காகத் தன்னையே திட்டிக்கொண்டு, தலையிலும் அடித்துச் கொண்டாள். அந்தச் சமயத்தில் பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம் அங்கே வந்தார். எதையோ, சொல்ல வந்தவர். நிலைமையைப் புரிந்துகொண்டு, ‘சீக்கிரமா... குழந்தையை ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுப்போகலாம்... நல்லவேளை... என் கார்லயே வந்தேன்’ என்று அவர் சொல்லி முடிக்குமுன்னாலே, மோகினி குழந்தையைத் தூக்கி, தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். இருவரும் குழந்தையுடன் காரில் பறந்தார்கள், டாக்டர் குழந்தைக்கு ஒரு ஊசி போட்டு. மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். வழியில் சுந்தரம் மாத்திரைகளை வாங்கிக் கொண்டார். மோனி தன் இயலாமையை நினைத்து, வெட்கித் தலைகுனிந்தாள். அதேசமயம், கலா லோாகக் கண்ணை உருட்டி அவள் தோளைத் தட்டியதும். அவளுக்குத் தெம்பு பிறந்தது. சுந்தரத்தை நன்றியோடு பார்த்தாள். {{nop}}<noinclude></noinclude> j4kypieml4iyzh9940mtldvb60zbpa5 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/152 250 216256 1840270 1839607 2025-07-08T06:03:30Z AjayAjayy 15166 1840270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}143}}</noinclude>“டோண்ட் ஒர்ரி மோகினி. குழந்தைச்கு சரியாயிடும்! அப்புறம் ஒரு விஷயம்! நாளைக்கு அந்த லீலா சனியன் லீவுல போவுது. உனக்குத் தற்காலிகமாய் உத்தியோக உயர்வு தருகிறேன்.” ‘தேங்க் யு ஸார்! என்னால ஓங்களுக்குச் சிரமம்... ‘என்ன மோகினி நீ, நமக்குள்ள எதுக்கு பார்மாவிட்டி... நீ என்னை மூணாவது மனுஷன் மாதிரி பேசுவதுதான் பிடிக்கல. இன்னொரு விஷயம். அதிர்ச்சி அடையாதே! உன் ஹஸ்பெண்டை பம்பாய்ல பாத்தேன். சாராய பாட்டி லோட... கட்டத்தட்ட பொறுக்கியாயிட்டான். என்னை எப்படியோ பாத்துட்டு டேய்! நீதான என் ஒய்ப வச்சிக் கிட்டு இருக்கேன்’னு கேட்டான். நான் எப்படியோ சமாளிச் சிட்டு தப்பினேன். பிக்பாக்கட் வேற அடிக்கிறானாம். நினைச்சுப் பார்க்கவே கஷ்டமாய் இருக்கு. மோகினியின் முகம்—முன்பு கல்போல் அடிக்கடி மாறும் அந்த அழகான முகம், இப்போது இரும்பு மாதிரி கொல்லன் உலையில் உருக்கப்பட்டு கெட்டியான இரும்பு மாதிரி இறுகியது. வீட்டில் அவளை விட்டுவிட்டு விடைபெறப் போன சுந்தரம், அவள் தோளை லேசாகத் தட்டி. பின்பு பலமாக அழுத்தியபோது, அவள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஏன் எதிர்ப்பு காட்ட வேண்டும்? மகள் வாழ்வதற்காக நாம அழிஞ்சாலும் பரவாயில்ல; இனிமேல் எப்படி வேணுமுன்னாலும் வாழ்வேன். நான் பழைய காதல் மோகினியல்ல. மகளை வாழவைக்கப் போகிற கர்மயோக மோகினி. அதுக்காக எந்த லெவலுக்கும் போகத் தயார். எந்த பாதையிலும் நடக்கத் தயார். அந்த பாதையில குறுக்கிடும் எவரையும் அழிககத் தயார். பிறர் அழிவுலதான் நம் ஆக்கம் இருக்குன்னா அதுக்குத் தயார்... அதுக்காக... எதுக்கும் தயார். {{nop}}<noinclude></noinclude> 5akjap7fxs7necvqqk9yuchbi8v3wv9 பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/153 250 216258 1840273 1839620 2025-07-08T06:13:17Z AjayAjayy 15166 1840273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" /></noinclude>{{dhr|3em}} {{block_right|{{x-larger|<b>7</b>}}}} {{dhr|2em}} <b>மீ</b>ண்டுமொரு முறை ‘நியாயம்’ சஞ்சிகையை வெளிக்கொணரும் பொறுப்பு மோகினியிடம் வந்தது. அதை அவளிடம் சுந்தரம் கொடுத்திருந்தார். அனுபவமில்லாத மோகினி அந்த இதழைக் குட்டிச்சுவராக்கியிருந்தாள். ஜெனரல் மானேஜர் லீலாவைக் கூப்பிட்டனுப்பிக் கோபத்தில் குதித்தார். அட்டையில் வெளியாகியிருந்த அவருடைய படம் ஒரே கறுப்பாக இருந்தது. வாசகர்கள் அதைக் கேலி செய்து கடிதம் போட்டிருந்தார்கள். விரக்தியாக வந்த லீலாவைப் பார்த்ததும், வழக்கம் போல் அவர் புன்னகை செய்யவில்லை. அவள் ‘குட்மார்னிங்’கிற்கு, இவர் ‘நோ... நோ... பேட்... பேட்’ என்றார். “கூப்பிட்டீங்களாமே ஸார்... “யெஸ்... இந்த இதழ் ஏன் இவ்வளவு மட்டமா இருக்கு ஒங்களெல்லாம் ஒரே இடத்துல வைக்கறது தப்பு. இனிமே இதை மோகினிகிட்ட ஒப்படைக்கப் போறேன்!” “ஸார். இது மோகினியோட...” “நோ எக்ஸ்பிளனேஷன். நோ நொண்டிச் சாக்கு. “ஸார்... நான் சொல்றதக் கொஞ்சம்....” “இதுக்கு மேல பேசினா ஐ வில் சஸ்பென்ட் யூ. தப்பை ஒத்துக்காமல் கூடக்கூடப் பேசினா என்ன அர்த்தம்?” “சதப்புதான் ஸார்...” {{nop}}<noinclude></noinclude> ip0mmilw24xxos3mlf11ews2bh8qhyk பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/154 250 216260 1840280 821086 2025-07-08T06:28:32Z AjayAjayy 15166 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="AjayAjayy" />{{rh|||பிற்பகல்{{gap}}146}}</noinclude>“கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா... ஓகே... இனிமே நியாயத்தை மோகினி கவனிச்சுக்குவாள்... ஐ ஸேயூ கெட்டவுட்...” ஊமை கண்ட கனவு போல, மாப்பிள்ளைப் பையனைப் பற்றி அபிப்பிராயம் இருந்தாலும் அதைச் சொல்லமுடியாத ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தின் பெண்ணைப்போல், ஆபீஸர் ஒரு மடையன் என்று ஆதாரங்களோடு நிரூபிக்க முடியுமென்றாலும் அதை வெளியே சொல்ல முடியாத பியூனைப்போல, லீலா வெளியே வந்தாள். ஜி. எம். ‘பெர்ஸிகியூஷன் காம்ப் ளெக்ஸி’ல் தவிக்கும் மனிதர். அவள் என்ன சமாதானம் சொன்னாலும் எடுபடாது. அதோடு தன்னுடைய ‘செக்ஷனில்’ நடந்த தில்லுமுல்லுகளைச் சொல்லி, ‘பாஸைக்’ காட்டிக்கொடுக்க விரும்பாத செக்ஷனில் விசுவாசியாக இருக்க அவள் விரும்பினாள். அவள் போனதும் ஜெனரல் மானேஜர், ஸ்டெனோவைக் கூப்பிட்டு, மோகினிக்கு ‘நியாயம்’ வழங்கி, ஒரு நோட் டிக்டேட் செய்தார். ஆர்டர் வந்ததும், மோகினி டெலி போனில் குதித்தாள். என் இஷ்யூவை ஜி. எம். மே பாராட்டிட்டார்" என்று ‘குடும்ப நண்பர்’களுக்கு டெலிபோன் செய்தாள். பப்ளிஸிட்டி சுந்தரத்திற்கு கூல்டிரிங்க் வாங்கிக் கொடுத்துவிட்டு, “என் இஷ்யூவுக்கு நீங்கதான் சார் காரணம்” என்று கைகொடுத்தாள். சங்கருக்குக் கலர். (அதை அவன் லீலாவுக்குத் தெரியாமல் குடித்தான்.) பியூன்களுக்கு டீ. இவ்வளவும் செய்துவிட்டு லீலாவின் மேஜை முன்னால் ஒரு ‘சாக்லெட்டை’ அதன்மேல் சுற்றிய ஜிகினாதாள் கிழியும்படி வன்முறையைப் பயன்படுத்தி வைத்தாள். இவள் வருவதற்கு முன்னதாகவே, ஜி. எம். பப்ளிஸிட்டி மானேஜரை வரவழைத்து, பழைய விரோதங்களுக்கு இதை சாக்காக வைத்து அவரை வசைபாடியபோது சுந்தரம்.<noinclude> ச.—10</noinclude> ps0cnrjefhd2lgu0spyoh40svnqjibe விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் 4 411887 1840267 1838356 2025-07-08T05:59:00Z Info-farmer 232 புதிது = "தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்", மொத்தம் = 465 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன. 1840267 wikitext text/x-wiki <div style="font-size:90%;"> <!-- புதிய படைப்புகளை, இவ்வரிக்குக் கீழ் இடுங்கள். பின்னர், கடைசியாக உள்ள 'புதியபடைப்பை', இப்பக்கத்தில் நீக்கி, "மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்" என்ற பக்கத்தில் ஒட்டி விடுங்கள். --> {{புதியபடைப்பு |தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|தேவநேயப் பாவாணர்|1962}} {{புதியபடைப்பு |கனிச்சாறு 3|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}} {{புதியபடைப்பு |உயிர்க்காற்று|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |மானுடப் பிரவாகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு | மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் 2|மேலாண்மை பொன்னுச்சாமி|2012}} {{புதியபடைப்பு |மின்சாரப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2014}} {{புதியபடைப்பு |வெண்பூ மனம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |விரல்|மேலாண்மை பொன்னுச்சாமி|2003}} {{புதியபடைப்பு |தாய்மதி|மேலாண்மை பொன்னுச்சாமி|1994}} {{புதியபடைப்பு |சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |பூக்கும் மாலை|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |மனப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2007}} {{புதியபடைப்பு |இளைஞர் இலக்கியம்|பாரதிதாசன்|1991}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{மொத்தபடைப்பெண்ணிக்கை|450}} </div> 768ofo44020ya2r2oh91s0xdj6xarow பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/56 250 422460 1840288 1835053 2025-07-08T06:52:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|48|முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|}} {{rule}}</noinclude>சோவியத் சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளும், விமர்சனங்களும், விளக்கங்களும், கட்சிக்கு விசுவாசமாக இருந்து, கட்சிச் சார்போடு எழுதப்படுபவை மட்டுமே சோஷலிச எதார்த்தவாதமாகும், முற்போக்கு இலக்கியமும் ஆகும் என்ற ஒரு குறுகிய, செக்டேரியன் தன்மை கொண்ட கருத்தையே நாற்பதாம் ஆண்டுகளில் நம்மிடையே உருவாக்கியிருந்தன. <b>ஜாதனோவ்</b> சோவியத் எழுத்தாளர் சங்கம் தோன்றுவதற்கு முன்னால், ‘ராப்’ எனப்பட்ட ரஷ்யப் பாட்டாளி வர்க்க எழுத்தாளர் ஸ்தாபனம், எழுத்தாளர்களுக்கு ஒரு சட்டாம்பிள்ளையாக இருந்து வந்ததென்றால், 1932இல் சோவியத் எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டபின், ஸ்டாலின் காலத்தில் மகாமேதை என மகுடம் சூட்டப்பட்டவரும், ஸ்டாலினின் நெருங்கிய சகாவுமான ஆந்திரி ஜாதனோவ் என்பவர் முப்பதாம் ஆண்டுகளிலும் நாற்பதாம் ஆண்டுகளிலும் கையில் சவுக்கைத் தரித்திருந்த சட்டாம்பிள்ளையாகவே இருந்து, இலக்கிய உலகின் தலைவிதியை நிர்ணயித்து வந்தார். சொல்லப்போனால், இரு தோள்களிலும் சங்கு சக்கர முத்திரைத் தழும்புபளை ஏற்றவன்தான் சரியான வைஷ்ணவன் என்று தீவிர வைணவச் சமயாசாரியார்கள் சிலர் கருதி வந்ததைப் போல், கட்சிக்கும் ஸ்டாலினுக்கும் துதிபாடுபவர்களையும், ஸ்டாலினது ஆட்சியை ஏத்திப் போற்றுகிறவர்களையும்தான் அவர் எழுத்தாளர் என மதித்தார். இவ்வாறு துதிபாடும் எழுத்தாளர்களுக்கு “ஸ்டாலின் இலக்கியப் பரிசுகள்” என்ற பெயரால், முதல்வகைப் பரிசு ஒரு லட்சம், இரண்டாம் வகைப் பரிசு அரை லட்சம், மூன்றாம் வகைப் பரிசு கால் லட்சம் என ஆண்டுதோறும் பதினைந்து லட்சம் ரூபிள்களுக்குக் குறையாமல் பரிசுகளும் வழங்கப்பட்டன இந்தப் பரிசை திரும்பத் திரும்பப் பெற்ற எழுத்தாளர்களும் உண்டு. இந்த இலக்கியங்கள் அனைத்துமே இலக்கியத் தரம் மிக்கவை<noinclude></noinclude> hkng43a7tx0efgvecmweu8vvrdq6nq9 பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/83 250 422465 1840430 1008819 2025-07-08T11:39:42Z Asviya Tabasum 15539 1840430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்|75}} {{rule}}</noinclude>தமிழ்ப்பண்ணை , பாரதிப் பண்ணை, போன்ற பிரசுர அமைப்புகள் தோன்றின. வை. கோவிந்தன், கதிரேசன் செட்டியார் எ.கே. செட்டியார் போன்றோர் இம்முயற்சியில் தீவிரம் காட்டினர். டி.கே.சி, பி.ஸ்ரீ; கவி மணி, நாமக்கல்லார், சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் நூல்கள் அதிகமாக வெளிவரத் தொடங்கின. கம்பரை ஒரு ஆழ்வாராகப் பார்க்கும் பார்வையைவிட்டு, அவரை ஒரு கலைஞராகப் பார்க்கும் போக்கையும், கம்ப இராமாயணத்தை ஒரு பக்திக் காவியமாகப் பார்க்கும் போக்கை விடுத்து அதை ஒரு பேரிலக்கியமாகப் பார்க்கும் பார்வையையும், இவ்வமைப்புகள் பிரபலப்படுத்தின. வள்ளுவர் நெறியைத் தமிழ்ப் பண்பாட்டின் அடித்தளமாக ஆக்கத் திருவள்ளுவர் கழகங்கள் பிரச்சாரம் செய்தன. இலக்கியத்தைப் பதவுரை, பொழிப்புரை, அணி, அழகு பார்க்கும் பார்வையிலிருந்து உள்ளடக்கத்தில் கவனம் செலுத்த இம் மன்றங்கள் உதவின. தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் பெரு முயற்சியால் முதன் முறையாகச் சங்க நூல்கள் மடங்கள், பெருநிலக்கிழார்கள், பெரும்பண்டிதர்கள் ஆகியோரின் வாசல்களைத் தாண்டி தமிழ் மக்களின் அனுபவத்துக்குக் கிடைத்தன. இந்த அளப்பரிய செல்வத்தைச் சுவைத்த தமிழ்ச் சமூகம், தன் பழங்காலத்தில் மிகுந்த பெருமிதம் கொண்டது. குறிப்பாகத் திராவிட இயக்கத்தின் இனவாதக் கண்ணோட்டம் சங்க நூல்களால் மிகவும் செழுமையடைந்தது. திராவிட இயக்க அமைப்பானது அடிப்படையில் ஒரு சமூக அமைப்பு என்றாலும், அது பண்பாட்டுத் துறையில் மிகுந்த கவனம் செலுத்திற்று. திராவிட இனம், அல்லது தமிழ் இனம் என்ற அளவு கோல் அவர்களுடைய கலை இலக்கிய அளவு கோலாயிற்று. அந்த அளவுகோலை வைத்துக் கொண்டு அவர்கள் கம்ப ராமாயணத்தை ஆரியப்<noinclude></noinclude> sw4uvs1rnga5do9xlgf4wccumqlyx78 பக்கம்:கனிச்சாறு 5.pdf/37 250 448172 1840400 1424496 2025-07-08T11:07:05Z Fathima Shaila 6101 1840400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 3}}</b></small></noinclude> <section begin="1"/> {{larger|<b>1 {{gap+|11}} நிறங்கள்!</b>}} {{left_margin|3em|<poem> மல்லிகைப் பூ வெள்ளை நிறம் மாலை கட்ட உதவுமாம்! புல்லும் இலையும் பச்சை வண்ணம்; ஆ விரும்பி உண்ணுமாம்! வானம் எங்கும் நீல வண்ணம்; வட்ட நிலா நீந்துமாம்! கானக் கிளியின் மூக்குச் சிவப்பு; கனியைக் கடித்துத் தின்னுமாம்! எலுமிச் சம்பழம் மஞ்சள் நிறம்; எங்கும் பழுத்துத் தொங்குதாம்! உலவும் காக்கை கறுப்பு வண்ணம்; ஒளிந்து திருடித் தின்னுமாம்!</poem>}} {{Right|<b>-1960</b>}} <section end="1"/><noinclude></noinclude> smnfgup7w3e90wu7203ls3xkm9ph5qd பக்கம்:கனிச்சாறு 5.pdf/38 250 448173 1840401 1424519 2025-07-08T11:07:32Z Fathima Shaila 6101 1840401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|4 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude><section begin="2"/> {{larger|<b>2 {{gap+|11}} எப்படி? </b>}} {{left_margin|3em|<poem>மிகவும் சிறிய கல்லையே மிதக்க வைப்ப தெப்படி? மிகவும் பெரிய கப்பலோ மிதந்து செல்வ தெப்படி? ‘ஈனத்' துரும்பை வானிலே எடுத்து வீசப் பறக்குமோ? வானக் கப்பல் தரையிலே விழாமல் பறப்ப தெப்படி? சிறிது தொலைவில் நின்றவன் சொல்லும் சொற்கள் கேட்குமோ? ஒருவன் பேசும் ஒலியினை உலகம் கேட்ப தெப்படி? சொன்ன பாட்டை முழுவதும் திருப்பிச் சொல்ல முடியுமோ? பண்ணும் இசையும் தட்டிலே பதித்து வைப்ப தெப்படி? இரவும் பகலும் அறிஞர்தாம் எண்ணிக் கண்டு பிடித்தனர்! இரவும் பகலும் படிக்கிறோம்; என்ன கண்டு பிடிக்கிறோம்!</poem>}} {{Right|{{larger|<b>-1960</b>}}}} <section end="2"/><noinclude></noinclude> ki4kwvqufwzvuymx58lhb5igrltt3ie பக்கம்:கனிச்சாறு 5.pdf/40 250 448174 1840404 1424521 2025-07-08T11:08:40Z Fathima Shaila 6101 1840404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> <small><b>{{rh|6 {{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி||}}</b></small></noinclude><section begin="4"/> {{larger|<b>4 {{gap+|11}} கதிரவன்!</b>}} {{left_margin|3em|<poem> கதிரவனே! கதிரவனே! :கடலில்வந்த கதிரவனே! உதிராத நெருப்பாகி :உடல் கொளுத்தும் கதிரவனே! காலையிலே தோன்றுவதேன்? :கருவானம் நீந்துவதேன்? மாலையிலே மறைகுவதேன்? :மக்களினம் வாழ்வதற்கோ? காயாத ஈர மெல்லாம் :கை நீட்டித் துடைக்கின்றாய்! ஓயாமல் ஒளி கொடுத்தே :உயிர் வாழச் செய்கின்றாய்! கடல்நீரைக் காய்ச்சுகின்றாய்! :கருமுகிலை எழுப்புகின்றாய்! உடல்குளிர மழை பொழிந்தே :உயிர் வாழச் செய்கின்றாய்! உலகில் உள்ள இருள் விரட்ட :ஓடோடி வருகின்றாய்! பலவகையாய் உதவுகின்றாய்! :பயன்கருதா துழைக்கின்றாய்! எவ்வுயிர்க்கும் நல்லவனே! :இணையில்லா வல்லவனே! இவ்வுலகம் தழைப்பதற்கே :ஈடில்லா துழைப்பவனே!</poem>}} {{Right|{{larger|<b>-1960</b>}}}} <section end="4"/><noinclude></noinclude> ec3rylrd5750hu9zpzo690itql9uljp பக்கம்:கனிச்சாறு 5.pdf/39 250 448175 1840403 1424520 2025-07-08T11:07:52Z Fathima Shaila 6101 1840403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 5}}</b></small></noinclude><section begin="3"/> {{larger|<b>3 {{gap+|11}} வீடு!</b>}} {{left_margin|3em|<poem>குடி இருக்க வீடு கூரை மேலே ஓடு! படிப்ப தற்கோர் அறை; படுத்துத் தூங்க ஒன்று! சமையல் செய்ய ஒன்று; தட்டு முட்டுக் கொன்று! குளிப்ப தற்கோர் அறை; கூடிப் பேச முற்றம்! தூய்மைக் காற்று வீசும், தோட்டம் ஒன்றும் உண்டு! நோய்கள் வந்த தில்லை; நொடிகள் வந்த தில்லை!</poem>}} {{Right|{{larger|<b>-1960</b>}}}} <section end="3"/><noinclude></noinclude> 2p5cgumc3a06d3mhzanhrda7amhhint பக்கம்:கனிச்சாறு 5.pdf/41 250 448179 1840406 1424522 2025-07-08T11:09:25Z Fathima Shaila 6101 1840406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}} 7}}</b></small></noinclude><section begin="5"/> {{larger|<b>5 {{gap+|11}} குழந்தை!</b>}} {{left_margin|3em|<poem>குழந்தை இங்கே வா! கொஞ்சி முத்தம் தா! பாலுஞ் சோறும் உண்ணு! பத்து வரையில் எண்ணு! அஆ இஈ என்றே அப்பா வந்தால் சொல்லு! பட்டுச் சட்டை தைப்பார்! பதக்கம் வாங்கி வைப்பார்! முத்துப் பல்லைக் காட்டு! முன்னங் கையை நீட்டு! சோற்றை வாயில் போடு! சுவையாய்ப் பாடி ஆடு!</poem>}} {{Right|{{larger|<b>-1960</b>}}}} <section end="5"/> <section begin="6"/> {{larger|<b>6 {{gap+|11}} பாட்டி!</b>}} {{left_margin|3em|<poem>கூன் விழுந்த பாட்டி, குட்டைக் காலை நீட்டிப் பாலுஞ் சோறும் ஊட்டிப் படுக்க வைப்பாள் ஆட்டி! ஈரும் பேனும் பார்ப்பாள்! எங்கும் தூய்மை சேர்ப்பாள்! நோயை நன்கு தீர்ப்பாள்! நாளும் அன்பை வார்ப்பாள்! அண்டை வீடு செல்வாள்! அரட்டை பேசி வெல்வாள்! கொசுவை ஈயைக் கொல்வாள்! கோடிக் கதைகள் சொல்வாள்!</poem>}} {{Right|{{larger|<b>-1960</b>}}}} <section end="6"/><noinclude></noinclude> 7ja5jwkoqu7ko4ggibidtqx45zkuw3d ஆசிரியர்:தேவநேயப் பாவாணர் 102 454821 1840243 1638773 2025-07-08T05:35:32Z Info-farmer 232 ஞா தேவநேயன் 1840243 wikitext text/x-wiki {{author | firstname = தேவநேயப் பாவாணர் | lastname = | last_initial = பா | birthyear = 1902 | deathyear = 1981 | description = தேவநேயப் பாவாணர் என்பவர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40இக்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். 'மொழி ஞாயிறு', 'செம்மொழிச் செல்வர்', ஞா தேவநேயன் |wikipedia = தேவநேயப் பாவாணர் |wikiquote = |image = }} ==படைப்புகள்== * [[/நூற்பட்டியல்]] * *{{export|ஒப்பியன் மொழிநூல்}} [[ஒப்பியன் மொழிநூல்]] * தமிழ் கடன்கொண்டு தழைக்குமா. {{ssl|தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf}} * என் அண்ணாமலை நகர் வாழ்க்கை {{ssl|என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf}} * கிறித்தவக் கீர்த்தனம் 1981 {{ssl|கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf}} * கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933 {{ssl|கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf}} * தமிழர் மதம் {{ssl|தமிழர் மதம்.pdf}} * திரவிடத்தாய் {{ssl|திரவிடத்தாய்.pdf}} * தொல்காப்பியம் எழுத்ததிகாரம் {{ssl|தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf}} * மறுப்புரை மாண்பு {{ssl|மறுப்புரை மாண்பு.pdf}} * வியாச விளக்கம் {{ssl|வியாச விளக்கம்.pdf}} * வேர்ச்சொற் கட்டுரைகள் {{ssl|வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf}} * உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2 {{ssl|உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf}} * சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் {{ssl|சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்.pdf}} * இடைத்தரக் கட்டுரை இலக்கணம் {{ssl|இடைத்தரக் கட்டுரை இலக்கணம்.pdf}} * தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் {{ssl|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf}} * பாவாணர் பாடல்கள் {{ssl|பாவாணர் பாடல்கள்.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf}} {{PD-TamilGov/ta}} {{அதிகாரக் கட்டுப்பாடு}} [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]] 0zdtwncuvlwgstj76dfy9lfja8jqus0 1840257 1840243 2025-07-08T05:49:56Z Info-farmer 232 *{{export|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்}}[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]] 1840257 wikitext text/x-wiki {{author | firstname = தேவநேயப் பாவாணர் | lastname = | last_initial = பா | birthyear = 1902 | deathyear = 1981 | description = தேவநேயப் பாவாணர் என்பவர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40இக்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். 'மொழி ஞாயிறு', 'செம்மொழிச் செல்வர்', ஞா தேவநேயன் |wikipedia = தேவநேயப் பாவாணர் |wikiquote = |image = }} ==படைப்புகள்== * [[/நூற்பட்டியல்]] *{{export|ஒப்பியன் மொழிநூல்}} [[ஒப்பியன் மொழிநூல்]] *{{export|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்}} [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]] * தமிழ் கடன்கொண்டு தழைக்குமா. {{ssl|தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf}} * என் அண்ணாமலை நகர் வாழ்க்கை {{ssl|என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf}} * கிறித்தவக் கீர்த்தனம் 1981 {{ssl|கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf}} * கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933 {{ssl|கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf}} * தமிழர் மதம் {{ssl|தமிழர் மதம்.pdf}} * திரவிடத்தாய் {{ssl|திரவிடத்தாய்.pdf}} * தொல்காப்பியம் எழுத்ததிகாரம் {{ssl|தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf}} * மறுப்புரை மாண்பு {{ssl|மறுப்புரை மாண்பு.pdf}} * வியாச விளக்கம் {{ssl|வியாச விளக்கம்.pdf}} * வேர்ச்சொற் கட்டுரைகள் {{ssl|வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf}} * உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2 {{ssl|உயர்தரக் கட்டுரை இலக்கணம் 2.pdf}} * சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் {{ssl|சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்.pdf}} * இடைத்தரக் கட்டுரை இலக்கணம் {{ssl|இடைத்தரக் கட்டுரை இலக்கணம்.pdf}} * பாவாணர் பாடல்கள் {{ssl|பாவாணர் பாடல்கள்.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf}} * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20 {{ssl|பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf}} {{PD-TamilGov/ta}} {{அதிகாரக் கட்டுப்பாடு}} [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]] sv2tpj0ird9mgfw7u0pf7fx2kj32teg பயனர்:Booradleyp1 2 471764 1840193 1839900 2025-07-08T04:12:09Z Booradleyp1 1964 /* பிற */ 1840193 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Multicol]] *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki>அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும். **[[:en:Template:Rotate]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ==கிளையமைப்பு == *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude> *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் *[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி *[[பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216]]-எழுத்துக்கள் சாய்வாக இறங்குதல் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] **[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] **[[பயனர்:Asviya Tabasum]] பங்களிப்புகள்- [https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Asviya_Tabasum] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[[பயனர்:Illiyas noor mohammed|இலியாஸ்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed] *[[பயனர்:Sarathi shankar|சாரதி சங்கர்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sarathi_shankar] * [[பயனர்:AjayAjayy]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AjayAjayy அஜய்] *[[பயனர்:மொஹமது கராம்|கராம்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D] **[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Preethi_kumar23 பிரீத்தி] *[[பயனர்:Inbavani Anandan|இன்பவாணி]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Inbavani_Anandan] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] == திட்டங்கள்== [[/books]] rzakvo6ky6ubgjz7es82tdmo81cs108 அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf 252 475344 1840261 1839396 2025-07-08T05:54:16Z Info-farmer 232 மெய்ப்புப்பணி, நூல் ஒருங்கிணைவு முடிந்தது.. 1840261 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:தேவநேயப் பாவாணர்|தேவநேயப் பாவாணர்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம் லிமிடெட் |Address= |Year=1962 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 5to10=உள்ளுறை /> |Remarks={{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/6}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/7}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/8}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/9}} {{பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/10}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:விளையாட்டுத்துறை நூல் அட்டவணைகள்]] [[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பாவாணரின் படைப்புகள்]] j56s59ihghos7r13kmjyr6r8tl5j2i0 பயனர்:Booradleyp1/test 2 476049 1840174 1839784 2025-07-08T03:25:35Z Booradleyp1 1964 /* சோதனை */ 1840174 wikitext text/x-wiki ==சோதனை == <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" fromsection="" tosection="" /> ==சோதனை== {|width=100% style="border-collapse:collapse;" |அடைவுச் சோதனைகள்{{gap}}↓ |- | ||வாய்மொழிச் சோதனை எழுத்துச் சோதனை{{gap}}↓ |- |- | || ||கட்டுரை வகை{{gap}}குறுகிய விடைவகை{{gap}} புறவயச் சோதனை{{gap}}↓ |- ||| || ||தரப்படுத்தப்பட்டவை{{gap}}ஆசிரியர் உருவாக்கியவை. |- |} <poem> அடைவுச் சோதனைகள் ┌────────────┴───────────┐ வாய்மொழிச் சோதனை{{gap|3em}}எழுத்துச் சோதனை ┌──────┐─────┴──────────┐ கட்டுரை வகை குறுகிய விடைவகை புறவயச் சோதனை ┌──────┴─────┐ தரப்படுத்தப்பட்டவை ஆசிரியர் உருவாக்கியவை. </poem> {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 3fn7l7j7iit3vhvrkwxjihdrgb31e00 பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/166 250 489147 1840105 1571594 2025-07-07T16:48:21Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 165}} {{rule}}</noinclude>வாழ்வில் அவர்கள் பெற்றிருந்த மிகு சிறப்பு இதன் மூலம் தெரிகிறது. சேனாதிபதி, மன்னர், கட்டியார், செல்லக்குட்டி, நத்துக் கணக்கப் பிள்ளை, குட்டியார், மாப்பிள்ளை, இம்முடி, பெத்தணா என்ற பெயர்களும் ஆய்வுக்குரியவை. இப்பெயர்கள் அன்றைய மன்னர்களிடமும் சிற்றரசர்களிடமும், செல்வாக்குப் பெற்ற பாளையக்காரரிடமும் இஸ்லாமியப் பெருமக்கள் பெற்றிருந்த மிகு செல்வாக்கைக் காட்டுகின்றன. கீழக்கரை காட்டுப்பள்ளிவாசலில் கி.பி. 1466ஆம் ஆண்டு கல்வெட்டும், கடற்கரைப் பள்ளியில் 1458, 1468, 1477, 1498, 1505, ஆம் ஆண்டு கல்வெட்டுக்களும், பழைய குத்பு பள்ளிவாசலில் 1603, 1614, 1659 ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்களும், வேதாளைப் பள்ளிவாசலில் 1687ஆம் ஆண்டுக் கல்வெட்டும் காணப்படுகின்றன. கடற்கரையில் முதலில் மக்கள் குடியேற்றம் தொடங்கி உள்பகுதி நோக்கிக் குடியேற்றம் படர்ந்ததை இக்கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. மரக்காயர் அல்லது மரைக்காயர் பெயர் உள்ளவர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு வெட்டும்பெருமாள், மார்த்தாண்டன், கட்டியார், குட்டியார், சேனாபதி, இராசகண்ட கோபாலர் என்ற பட்டப் பெயர்கள் இருந்ததும் கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வடக்கு தெற்காக அமைக்கப்பட்ட அடக்கத்தலங்களின் முகப்பில் பலகைக் கற்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் இருக்கும். வேதாளைக் கூரைப்பள்ளி அடக்கத் தலத்தில் மட்டும் அடக்கத் தலத்தின் 12 x 10 அடி அமைப்பில் செவ்வக வடிவில் ஒரு கல் மண்டபம் காணப்படுகிறது (கி.பி. 1687). மாதிரிக்கு ஒரு சில காட்டப்பட்டுள்ளன. {{center|{{larger|<b>அ) கீழக்கரை கடற்கரைப் பள்ளிவாசல் (கி.பி. 1499)</b>}}}} <poem>கொல்லம் 674 ஆண்டு மார்களி மா தம் 5 தேதி வெள்</poem><noinclude></noinclude> 1zjfrg64lmcat8u2hlggpa5pbn9qxye பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/167 250 489148 1840123 1571595 2025-07-07T17:27:33Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|166 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude><poem>ளிக்கிழமை சே லசு கட்டிய (ா)ர் மகள் சம (ா)ல் நாச்சியா ர் மரித்தார்</poem> கி.பி. 15, 16ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியப் பெண்கள் ‘நாச்சியார்’ என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகும். {{center|{{larger|<b>ஆ) கீழக்கரை கடற்கரைப் பள்ளிவாசல் (கி.பி. 1514)</b>}}}} <poem>கொல்லம் 689 ஆவது சிறிமுக வருஷம் ஆனி மாதம் 21 தேதி வாவு மார்த்தாண்ட மரக் காயர் மகளார் உ சு நாச்சியார் வெள் ளிக் கிழமை பகல் மரித்தார்</poem> (மண்ணின் வழங்கு சொற்களை அப்படியே முஸ்லிம்கள் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.) {{center|{{larger|<b>இ) வேதாளை கூரைப்பள்ளி (கி.பி.1687)</b>}}}} <poem> 1. கொல்லம் 863 ஆண்டு 2. பிரபவ வருஷம் வைய்காசி 2 தேதி 3. செல்லக்குட்டி மரைக்காயர் 4. தத்துக் கணக்கப் பிள்ளை 5. மழ மரைக்காயர் 6. மாமு நயினா மரைக்காயர் 7. பெரிய தம்பி மரைக்காயர் 8. சேகு இபுராகீம் மரைக்காயர் 9. வெள்ளிக்கிழமை இரவு 10. மரித்தார் 11. இந்த சன்னதியாவது திருவடி 12. சீமை தேசாதிபத்தியத்துக்கு மணிய</poem><noinclude></noinclude> rt7qapmv7s40yg718y9dom8aipc06ww பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/170 250 489151 1840142 1571598 2025-07-07T19:26:30Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 169}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>87. கல்வெட்டில் ஏழு தலைமுறை</b><ref>ARE 102, 103 of 1948</ref>}}}} காயல்பட்டினம் பெரிய பள்ளியில் உள்ள இரு நல்லடக்கக் கல்வெட்டுக்களில் இறந்தவருடைய ஏழு தலைமுறை முன்னோர்களைக் குறித்திருப்பது மிக அரிய நிகழ்ச்சியாகும். வேறு எங்கும் இவ்வளவு தலைமுறைப் பெயர்கள் கூறப்படவில்லை. 21.5.1581 அன்று காலமான இம்முடிச் செண்பகராம முதலியார் என்கிற அப்துல் ஜபார் நயினாவின் முன்னோர் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டள்ளனர். <poem>அசன் நயினா இசுபு நயினா ஓசு நயினா சமால் நயினா சையது அகமது நயினா ஷேக் அப்துல்லா நயினா சையது அகமது நயினா இம்முடிச் செண்பகராம முதலியார் என்கிற அப்துல் ஜபார் நயினா (21.5.1581 மறைவு)</poem> அதே அன்று காலமான மௌலானா அப்து ஜபாரின் முன்னோர்கள் கீழ்க்கண்டவாறு குறிக்கப்பெறுகின்றனர். <poem>ஹஸானுதீன் அசன் நயினா யூசூப் ஜமாலுதீன் சையது அகமது ஷா அப்துல்லா சையது அகமது மெளலானா அப்துல் ஜாபர் (மறைவு 21.5.1581)</poem>{{nop}}<noinclude>{{rule}}{{Reflist}}</noinclude> 90ghzcsenpr5ahrjsr8yjxi1ae19i4s பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/171 250 489152 1840143 1571599 2025-07-07T19:34:05Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|170 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>88. இணையற்ற இரு பதக்கங்கள்</b>}}<br>கோட்டைக்காட்டுப் பதக்கம்}} புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோட்டைக்காடு என்னும் ஊரில் வயலில் எஸ். நாகராசன் என்ற மாணவர் கண்டெடுத்த பஞ்சலோகத்தால் ஆன பதக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 4.6 செ.மீ விட்டமுடைய வட்ட வடிவில் அப்பதக்கம் அமைந்துள்ளது. அதன் எடை 30 கிராம் ஆகும். பதக்கத்தின் முன்பக்கத் தலைப்பில் நடுநாயகமாக அல்லா என்று எழுதப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் ‘முகமது’ என்று எழுதப்பட்டுள்ளது. நடுவில் அழகிய கைப்பிடியுடன் வாள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர்வாளுக்கு மேல் ‘ஸுல்ஃபிகார்’ என எழுதப்பட்டுள்ளது. அந்த வாள் நபிகள் நாயகம் தன் மருமகன் அலி அவர்கட்குக் கொடுத்த வாளாகும். வாளின் அடிப்பகுதியில் ‘யாசின்’ என எழுதப்பட்டுள்ளது: கீழ்ப்பகுதி விளிம்பு ஓரம் முதல் கலிபாக்கள் நால்வர் பெயர் வரிசையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர்கள் அபுபக்கர் (கி.பி 632-634), உமர் (634-644), உதுமான் (644-655), அலி (655-663) என்பனவாகும். பதக்கத்தின் பின் பக்கம் தலைப்பில் இருபுறமும் முகமது என்று எழுதப்பட்டுள்ளது. நடுவில் மொட்டைத் தலையுடனும், கோவணம் அணிந்தும் இரு கைகளிலும் கூர்மையான ஈட்டி ஏந்திய நிலையில் துறவி ஒருவருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் தண்ணீரின் மேல் நிற்பதுபோலக் காட்ப்பட்டுள்ளது. வேலனின் இருபுறமும் யாசின் என்று எழுதப்பட்டுள்ளது. துறவியின் கால்களுக்கும் கீழே 154 என்று அரபு எண் பொறிக்கப்பட்டுள்ளது. ‘அல்லா’ என்ற புனிதச்சொல் ஒரு முறையும் முகமது என்ற சொல் நான்கு முறையும், யாசின் என்ற சொல் மூன்று முறையும் எழுதப்பட்டுள்ளன. கி.பி. 771ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இப்பதக்கம் கருதப்படுகிறது. இசுலாம் மார்க்கத்தின் புனிதச் சொற்கள் பொறிக்கப்பட்ட இப்பதக்கம் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.{{nop}}<noinclude></noinclude> hehvuscnbutyrzdtks0ccg1vuasew37 1840144 1840143 2025-07-07T19:34:35Z ஹர்ஷியா பேகம் 15001 1840144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|170 ❋ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>88. இணையற்ற இரு பதக்கங்கள்}}<br>கோட்டைக்காட்டுப் பதக்கம்}}</b> புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோட்டைக்காடு என்னும் ஊரில் வயலில் எஸ். நாகராசன் என்ற மாணவர் கண்டெடுத்த பஞ்சலோகத்தால் ஆன பதக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 4.6 செ.மீ விட்டமுடைய வட்ட வடிவில் அப்பதக்கம் அமைந்துள்ளது. அதன் எடை 30 கிராம் ஆகும். பதக்கத்தின் முன்பக்கத் தலைப்பில் நடுநாயகமாக அல்லா என்று எழுதப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் ‘முகமது’ என்று எழுதப்பட்டுள்ளது. நடுவில் அழகிய கைப்பிடியுடன் வாள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர்வாளுக்கு மேல் ‘ஸுல்ஃபிகார்’ என எழுதப்பட்டுள்ளது. அந்த வாள் நபிகள் நாயகம் தன் மருமகன் அலி அவர்கட்குக் கொடுத்த வாளாகும். வாளின் அடிப்பகுதியில் ‘யாசின்’ என எழுதப்பட்டுள்ளது: கீழ்ப்பகுதி விளிம்பு ஓரம் முதல் கலிபாக்கள் நால்வர் பெயர் வரிசையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர்கள் அபுபக்கர் (கி.பி 632-634), உமர் (634-644), உதுமான் (644-655), அலி (655-663) என்பனவாகும். பதக்கத்தின் பின் பக்கம் தலைப்பில் இருபுறமும் முகமது என்று எழுதப்பட்டுள்ளது. நடுவில் மொட்டைத் தலையுடனும், கோவணம் அணிந்தும் இரு கைகளிலும் கூர்மையான ஈட்டி ஏந்திய நிலையில் துறவி ஒருவருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் தண்ணீரின் மேல் நிற்பதுபோலக் காட்ப்பட்டுள்ளது. வேலனின் இருபுறமும் யாசின் என்று எழுதப்பட்டுள்ளது. துறவியின் கால்களுக்கும் கீழே 154 என்று அரபு எண் பொறிக்கப்பட்டுள்ளது. ‘அல்லா’ என்ற புனிதச்சொல் ஒரு முறையும் முகமது என்ற சொல் நான்கு முறையும், யாசின் என்ற சொல் மூன்று முறையும் எழுதப்பட்டுள்ளன. கி.பி. 771ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இப்பதக்கம் கருதப்படுகிறது. இசுலாம் மார்க்கத்தின் புனிதச் சொற்கள் பொறிக்கப்பட்ட இப்பதக்கம் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.{{nop}}<noinclude></noinclude> thx0lwcb1lf3wwzavyqeljo5jlbyukt பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/172 250 489153 1840145 1571600 2025-07-07T19:41:48Z ஹர்ஷியா பேகம் 15001 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1840145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஹர்ஷியா பேகம்" />{{rh|||புலவர் செ. இராசு ❋ 171}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>அரேபியர் கடல் பயணப் பதக்கம்</b>}}<br>(பத்திரிகைச் செய்திகள்)}} திருச்செங்கோடு நாணயவியல் ஆர்வலர் எம்.விஜயகுமார், 777 ஆண்டுகட்கு முற்பட்ட மிக அரிய இசுலாமிய வெள்ளிப்பதக்கம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். (அப்பதக்கத்தை ஈரோடு புலவர் செ. இராசு, இசுலாமிய ஆய்வறிஞர் கு.ஜமால் முகமது ஆகியோர் ஆய்வு செய்தனர்) தூய வெள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள அப்பதக்கம் 4.5 செண்டி மீட்டர் விட்டம் உள்ள வட்ட வடிவில் அமைந்துள்ளது. அதன் முதல் பக்க மையத்தில் மெக்கா நகரில் முதலில் இறைவனுக்காக அமைக்கப்பட்ட ஆலயமான ‘கஃபத்துல்லா’ அழகிய முறையில் பொறிக்கப்பட்டுள்ளது. (அப்புனிதத் தலத்தைக் கண்டு வழிபடத்தான் உலகெங்கிலுமிருந்து ஆண்டு தோறும் முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடுகிறார்கள்) ஆலயத்தின் மேல் பகுதியிலும் பதக்கத்தைச் சுற்றிலும் ‘யாசின்’ என்ற புனிதச் சொல் ஒன்பது முறை அரபு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அச்சொல் புனிதக் குரானின் முப்பத்தாறாவது அத்தியாயத்தின் தலைப்பும், முதற்சொல்லுமாகும். அச்சொல் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டவர் எனவும், நபிகள் நாயகத்தையும் குறிக்கும். புனிதக் குரானின் இதயம் என்று அப்பகுதியினைக் கூறுவர். ஒன்பது முறை அச்சொல் எழுதப்பட்டிருப்பது ஒன்பது கோள்களைக் குறிப்பதாக இருக்கலாம். பதக்கத்தின் மறுபக்கத்தில் கடலில் செல்லும் படகில் இரண்டு பக்தர்கள் (சூஃபிகள்) போலத் தோற்றமளிக்கும் இருவர் கையில் நீண்ட கோல் தாங்கி நிற்கின்றனர். தாடியுடனும், நீண்ட சடைமுடியுடனும் அவர்கள் காணப்படுகின்றனர். முழங்கால் வரை உடை காணப்படுகிறது. படகின் கீழ் 651 என்று அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது. அது ஹிஜ்ரி ஆண்டு ஆகும். அதற்கு நேரான கி.பி. ஆண்டு 1230 ஆகும். கி.பி. 13,14 நூற்றாண்டுகளில்தான் ஏராளமான அரபு, பாரசீக நாட்டுப்பயணிகள் தமிழகம் வந்த தாங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் விரிவான வரலாற்றுக் குறிப்புக்களை எழுதியுள்ளனர். இரண்டாம் பக்கம் உள்ள உருவம் அப்பயணிகள் யாரேனும் இருவரைக் குறிப்பதாக இருக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> boii2uftufuodkmj9p22jkoxraj4l1l பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/173 250 489154 1840146 1835174 2025-07-07T19:59:45Z ஹர்ஷியா பேகம் 15001 1840146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|172 ❋ தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>88 - A. தொழுகை நேரம் குறித்த கல்வெட்டு</b>}}}} கீழக்கரையில் உள்ள ஓடக்கரை மசூதியில் தொழுகை நேரம் தமிழ்மாதம், தமிழ் எண்களில் எழுதப்பட்டுள்ளது. மாதந்தோறும் சூரியன் கதிக்கு ஏற்ப தொழுகை நேரங்கள் மாறுபட்டுள்ளதை 300 ஆண்டுகட்கு முற்பட்ட இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. {| class="wikitable" |+ அசறுக்கு அடி |- ! தை || மாசி || பைங்கூனி || சித்திரை || வைகாசி || ஆனி |- | 11 || 10 || 9 || 8 || 7 || 8 |- | 10{{Sfrac|1|2}} || 9{{Sfrac|1|2}} || 8{{Sfrac|1|2}} || 7{{Sfrac|1|2}} || 7{{Sfrac|1|2}} || 8{{Sfrac|1|2}} |- | 10 || 9 || 8 || 7 || 8 || 9 |- | மார்கழி || காத்திகை || அற்பசி || புரட்டாதி || ஆவணி || ஆடி |} குறிப்பு: தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் உத்தராயண காலம் (உத்தரம் - வடக்கு) ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் தட்சிணாயன காலம். (தட்சிணம் - தெற்கு) இதே தொழுகை நேரங்கள் கீழக்கரை ஜுமா மசூதியிலும் கொளச்சல்கல்லுப்பள்ளியிலும் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன. {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 173 |bSize = 407 |cWidth = 239 |cHeight = 177 |oTop = 365 |oLeft = 104 |Location = center |Description = }} {{c|ஓடக்கரை மசூதி, கீழக்கரை}} {{nop}}<noinclude></noinclude> 7qsujm80l05hzzh2jgehlchcnihbhbf 1840147 1840146 2025-07-07T20:00:35Z ஹர்ஷியா பேகம் 15001 1840147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|172 ❋ தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்||}} {{rule}}</noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>88 - A. தொழுகை நேரம் குறித்த கல்வெட்டு</b>}}}} கீழக்கரையில் உள்ள ஓடக்கரை மசூதியில் தொழுகை நேரம் தமிழ்மாதம், தமிழ் எண்களில் எழுதப்பட்டுள்ளது. மாதந்தோறும் சூரியன் கதிக்கு ஏற்ப தொழுகை நேரங்கள் மாறுபட்டுள்ளதை 300 ஆண்டுகட்கு முற்பட்ட இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. {| class="wikitable" |+ அசறுக்கு அடி |- ! தை || மாசி || பைங்கூனி || சித்திரை || வைகாசி || ஆனி |- | 11 || 10 || 9 || 8 || 7 || 8 |- | 10{{Sfrac|1|2}} || 9{{Sfrac|1|2}} || 8{{Sfrac|1|2}} || 7{{Sfrac|1|2}} || 7{{Sfrac|1|2}} || 8{{Sfrac|1|2}} |- | 10 || 9 || 8 || 7 || 8 || 9 |- | மார்கழி || காத்திகை || அற்பசி || புரட்டாதி || ஆவணி || ஆடி |} குறிப்பு: தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் உத்தராயண காலம் (உத்தரம் - வடக்கு) ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் தட்சிணாயன காலம். (தட்சிணம் - தெற்கு) இதே தொழுகை நேரங்கள் கீழக்கரை ஜுமா மசூதியிலும் கொளச்சல்கல்லுப்பள்ளியிலும் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன. {{Css image crop |Image = தமிழக_இசுலாமிய_வரலாற்று_ஆவணங்கள்.pdf |Page = 173 |bSize = 407 |cWidth = 239 |cHeight = 177 |oTop = 365 |oLeft = 104 |Location = center |Description = }} {{c|<b>ஓடக்கரை மசூதி, கீழக்கரை</b>}} {{nop}}<noinclude></noinclude> c1l2jyf63nxosagozhobgwmmlmaqroi பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/71 250 535311 1840116 1830097 2025-07-07T17:21:04Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||71}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} கோவில் தானா காவலர் கடமை? கேவலம்! கேவலம்! முனிவரும்! ஆ! ஆ! குடி:{{gap+|3}} அதிசய மன்றுபூ பதியே! இதுவும். துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர். மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு {{gap+|5}}25{{gap+|1}} மனோகர மாகிய சினகர மொன்றில் உலகுள பொருளெலாம் உய்ப்பினும் பின்னும் நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை. வசிட்டர் முன்னர் வாளாப் புகைத்தனர் முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும். {{gap+|5}}30{{gap+|1}} கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன் பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்? சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால் புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன். முனிவரே யாயினும் மனிதரே மீண்டும் {{gap+|5}}35{{gap+|1}} இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்? ஜீவ:{{gap+|4}} ஒவ்வும்! ஒவ்வும்நீ உரைத்தது முற்றும். நாராயணன்:{{gap+|-1}} (தனதுள்) ஐயோ! பாவி! அருந்தவ முனிவரைப் பொய்யன் ஆக்குவன். புரவல னோவெனில் எடுப்பார் கைப்பிள்ளை. தடுப்பார் யாரே? </b></poem> {{rule|15em|align=left}} காவலர் - அரசர். பூபதி - அரசன். மனோகரம் - அழகு. சினகரம் - கோயில். வசிட்டர் - வசிஷ்ட முனிவர். வாளா – வீணாக. கெளசிகன் - கெளசிக முனிவர். மௌலி - முடி. இது அரிச்சந்திரன் கதையைக் குறிப்பது. (புராணக்கதை விளக்கத்திற் காண்க.) சிட்ட முனிவர் - உத்தமராகிய முனிவர்கள். புரந்தரன் - இந்திரன். உருக்கரந்து - உருவை ஒளித்து. (இக் கதையைப் புராண விளக்கத்திற் காண்க.) இச்சகம் - இந்த உலகம். புரவலன் - அரசன். {{dhr|3em}}<noinclude></noinclude> 595g65ywqh6atuqgwslrp2xus26w50o 1840117 1840116 2025-07-07T17:22:08Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||71}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} கோவில் தானா காவலர் கடமை? கேவலம்! கேவலம்! முனிவரும்! ஆ! ஆ! குடி:{{gap+|5}} அதிசய மன்றுபூ பதியே! இதுவும். துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர். மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு {{gap+|5}}25{{gap+|1}} மனோகர மாகிய சினகர மொன்றில் உலகுள பொருளெலாம் உய்ப்பினும் பின்னும் நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை. வசிட்டர் முன்னர் வாளாப் புகைத்தனர் முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும். {{gap+|5}}30{{gap+|1}} கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன் பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்? சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால் புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன். முனிவரே யாயினும் மனிதரே மீண்டும் {{gap+|5}}35{{gap+|1}} இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்? ஜீவ:{{gap+|4}} ஒவ்வும்! ஒவ்வும்நீ உரைத்தது முற்றும். நாராயணன்:{{gap+|-1}} (தனதுள்) ஐயோ! பாவி! அருந்தவ முனிவரைப் பொய்யன் ஆக்குவன். புரவல னோவெனில் எடுப்பார் கைப்பிள்ளை. தடுப்பார் யாரே? </b></poem> {{rule|15em|align=left}} காவலர் - அரசர். பூபதி - அரசன். மனோகரம் - அழகு. சினகரம் - கோயில். வசிட்டர் - வசிஷ்ட முனிவர். வாளா – வீணாக. கெளசிகன் - கெளசிக முனிவர். மௌலி - முடி. இது அரிச்சந்திரன் கதையைக் குறிப்பது. (புராணக்கதை விளக்கத்திற் காண்க.) சிட்ட முனிவர் - உத்தமராகிய முனிவர்கள். புரந்தரன் - இந்திரன். உருக்கரந்து - உருவை ஒளித்து. (இக் கதையைப் புராண விளக்கத்திற் காண்க.) இச்சகம் - இந்த உலகம். புரவலன் - அரசன். {{dhr|3em}}<noinclude></noinclude> poy8vyppdux1dohtq6kdr8smef9d1iw 1840118 1840117 2025-07-07T17:23:28Z Info-farmer 232 {{dhr|3em}} 1840118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||71}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} கோவில் தானா காவலர் கடமை? கேவலம்! கேவலம்! முனிவரும்! ஆ! ஆ! குடி:{{gap+|5}} அதிசய மன்றுபூ பதியே! இதுவும். துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர். மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு {{gap+|5}}25{{gap+|1}} மனோகர மாகிய சினகர மொன்றில் உலகுள பொருளெலாம் உய்ப்பினும் பின்னும் நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை. வசிட்டர் முன்னர் வாளாப் புகைத்தனர் முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும். {{gap+|5}}30{{gap+|1}} கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன் பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்? சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால் புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன். முனிவரே யாயினும் மனிதரே மீண்டும் {{gap+|5}}35{{gap+|1}} இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்? ஜீவ:{{gap+|4}} ஒவ்வும்! ஒவ்வும்நீ உரைத்தது முற்றும். நாராயணன்:{{gap+|-1}} (தனதுள்) ஐயோ! பாவி! அருந்தவ முனிவரைப் பொய்யன் ஆக்குவன். புரவல னோவெனில் எடுப்பார் கைப்பிள்ளை. தடுப்பார் யாரே? </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} காவலர் - அரசர். பூபதி - அரசன். மனோகரம் - அழகு. சினகரம் - கோயில். வசிட்டர் - வசிஷ்ட முனிவர். வாளா – வீணாக. கெளசிகன் - கெளசிக முனிவர். மௌலி - முடி. இது அரிச்சந்திரன் கதையைக் குறிப்பது. (புராணக்கதை விளக்கத்திற் காண்க.) சிட்ட முனிவர் - உத்தமராகிய முனிவர்கள். புரந்தரன் - இந்திரன். உருக்கரந்து - உருவை ஒளித்து. (இக் கதையைப் புராண விளக்கத்திற் காண்க.) இச்சகம் - இந்த உலகம். புரவலன் - அரசன். {{dhr|3em}}<noinclude></noinclude> 6whknsjlw2suuk4o1a653tzldajmqrr 1840373 1840118 2025-07-08T09:44:41Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||71}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} கோவில் தானா காவலர் கடமை? கேவலம்! கேவலம்! முனிவரும்! ஆ! ஆ! குடி:{{gap+|5}} அதிசய மன்றுபூ பதியே! இதுவும். துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர். மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு {{gap+|5}}25{{gap+|1}} மனோகர மாகிய சினகர மொன்றில் உலகுள பொருளெலாம் உய்ப்பினும் பின்னும் நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை. வசிட்டர் முன்னர் வாளாப் புகைத்தனர் முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும். {{gap+|5}}30{{gap+|1}} கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன் பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்? சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால் புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன். முனிவரே யாயினும் மனிதரே மீண்டும் {{gap+|5}}35{{gap+|1}} இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்? ஜீவ:{{gap+|4}} ஒவ்வும்! ஒவ்வும்நீ உரைத்தது முற்றும். நாராயணன்:</b>{{gap+|-1}} (தனதுள்) <b>ஐயோ! பாவி! அருந்தவ முனிவரைப் பொய்யன் ஆக்குவன். புரவல னோவெனில் எடுப்பார் கைப்பிள்ளை. தடுப்பார் யாரே? </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} காவலர் - அரசர். பூபதி - அரசன். மனோகரம் - அழகு. சினகரம் - கோயில். வசிட்டர் - வசிஷ்ட முனிவர். வாளா – வீணாக. கெளசிகன் - கெளசிக முனிவர். மௌலி - முடி. இது அரிச்சந்திரன் கதையைக் குறிப்பது. (புராணக்கதை விளக்கத்திற் காண்க.) சிட்ட முனிவர் - உத்தமராகிய முனிவர்கள். புரந்தரன் - இந்திரன். உருக்கரந்து - உருவை ஒளித்து. (இக் கதையைப் புராண விளக்கத்திற் காண்க.) இச்சகம் - இந்த உலகம். புரவலன் - அரசன். {{dhr|3em}}<noinclude></noinclude> gfg233sxxgox0jtiaohelymckyvg71g பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/72 250 535312 1840121 1830098 2025-07-07T17:25:49Z Info-farmer 232 {{dhr|3em}} 1840121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|72||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா:{{gap+|3}} (அரசனை நோக்கி) கொல்லா யெனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப் பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே - பொல்லா வெறுமெலும்பை நாய்கௌவும் வேளை நீ செல்ல {{float_right|உறுமுவதென் நீயே யுரை. (சேவகன் வர)}} {{float_right|(நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி)}} சேவ:{{gap+|1}}40{{gap+|1}} மன்னிய கலைதேர் சகடர் வந்தனர். ஜீவா:{{gap+|3}} (நாராயணனை நோக்கி) வரச்சொல் சேவக! உரைத்தநின் உவமையிற் சற்றே குற்ற முள்ளது நாரணா! குடி:{{gap+|3}} (தனதுள்) அரசன் மாறாய்ப் பொருள் கிர கித்தனன். {{float_right|(அரசனை நோக்கி)}} வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற் {{gap+|5}}45{{gap+|1}} குற்றங் காணக் குறுகுதல் முற்றும் மணற்சோற் றிற்கல் தேடுதல் மானும். {{float_right|(சகடர் வர)}} ஜீவ:{{gap+|4}} (சகடரை நோக்கி) சுகமோ யாவரும் முதிய சகடரே! மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள் ஆயின தன்றே? சகடர்:{{gap+|2}} ஆம்! ஆம்! அடியேன். ஜீவ:{{gap+|1}}50{{gap+|1}} மேயின விசேடமென்? விளம்புதிர். என்குறை? சகட:{{gap+|4}} அறத்தா றகலா தகலிடங் காத்துப் பொறுத்ததோட் புரவல! உன்குடை நீழற் பொருந்தும் எங்கட் கரந்தையு முளதோ? சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} மானும் - ஒக்கும். மேயின - வந்த. அறத்தாறு - அறவழி. அரந்தை - துன்பம். {{dhr|3em}}<noinclude></noinclude> 2r6ps4gyzbtnr7az1izlq3wliaw9je9 1840124 1840121 2025-07-07T17:29:27Z Info-farmer 232 {{float_right|(சகடர் வர)}} 1840124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|72||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> {{c|<b>(நேரிசை வெண்பா)</b>}} <poem><b> நாரா:{{gap+|3}} (அரசனை நோக்கி) கொல்லா யெனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப் பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே - பொல்லா வெறுமெலும்பை நாய்கௌவும் வேளை நீ செல்ல உறுமுவதென் நீயே யுரை. {{float_right|(சேவகன் வர)}} (நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி) சேவ:{{gap+|1}}40{{gap+|1}} மன்னிய கலைதேர் சகடர் வந்தனர். ஜீவா:{{gap+|3}} (நாராயணனை நோக்கி) வரச்சொல் சேவக! உரைத்தநின் உவமையிற் சற்றே குற்ற முள்ளது நாரணா! குடி:{{gap+|3}} (தனதுள்) அரசன் மாறாய்ப் பொருள் கிர கித்தனன். {{float_right|(அரசனை நோக்கி)}} வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற் {{gap+|5}}45{{gap+|1}} குற்றங் காணக் குறுகுதல் முற்றும் மணற்சோற் றிற்கல் தேடுதல் மானும். ஜீவ:{{gap+|4}} (சகடரை நோக்கி) {{float_right|(சகடர் வர)}} சுகமோ யாவரும் முதிய சகடரே! மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள் ஆயின தன்றே? சகடர்:{{gap+|2}} ஆம்! ஆம்! அடியேன். ஜீவ:{{gap+|1}}50{{gap+|1}} மேயின விசேடமென்? விளம்புதிர். என்குறை? சகட:{{gap+|4}} அறத்தா றகலா தகலிடங் காத்துப் பொறுத்ததோட் புரவல! உன்குடை நீழற் பொருந்தும் எங்கட் கரந்தையு முளதோ? சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} மானும் - ஒக்கும். மேயின - வந்த. அறத்தாறு - அறவழி. அரந்தை - துன்பம். {{dhr|3em}}<noinclude></noinclude> fssaujo7373nr0tmovic2hb3sgv49ee 1840125 1840124 2025-07-07T17:31:22Z Info-farmer 232 1840125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|72||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> {{c|<b>(நேரிசை வெண்பா)</b>}} <poem><b> நாரா:{{gap+|3}} (அரசனை நோக்கி) கொல்லா யெனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப் பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே - பொல்லா வெறுமெலும்பை நாய்கௌவும் வேளை நீ செல்ல உறுமுவதென் நீயே யுரை. {{float_right|(சேவகன் வர)}} (நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி) சேவ:{{gap+|1}}40{{gap+|1}} மன்னிய கலைதேர் சகடர் வந்தனர். ஜீவா:{{gap+|3}} (நாராயணனை நோக்கி) வரச்சொல் சேவக! உரைத்தநின் உவமையிற் சற்றே குற்ற முள்ளது நாரணா! குடி:{{gap+|3}} (தனதுள்) அரசன் மாறாய்ப் பொருள் கிர கித்தனன். (அரசனை நோக்கி) வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற் {{gap+|5}}45{{gap+|1}} குற்றங் காணக் குறுகுதல் முற்றும் மணற்சோற் றிற்கல் தேடுதல் மானும். ஜீவ:{{gap+|4}} (சகடரை நோக்கி) {{float_right|(சகடர் வர)}} சுகமோ யாவரும் முதிய சகடரே! மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள் ஆயின தன்றே? சகடர்:{{gap+|2}} ஆம்! ஆம்! அடியேன். ஜீவ:{{gap+|1}}50{{gap+|1}} மேயின விசேடமென்? விளம்புதிர். என்குறை? சகட:{{gap+|4}} அறத்தா றகலா தகலிடங் காத்துப் பொறுத்ததோட் புரவல! உன்குடை நீழற் பொருந்தும் எங்கட் கரந்தையு முளதோ? சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} மானும் - ஒக்கும். மேயின - வந்த. அறத்தாறு - அறவழி. அரந்தை - துன்பம். {{dhr|3em}}<noinclude></noinclude> trske10or0oqjxiy51fo0m4zwmf63k5 1840128 1840125 2025-07-07T17:33:54Z Info-farmer 232 {{dhr|3em}} 1840128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|72||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> {{c|<b>(நேரிசை வெண்பா)</b>}} <poem><b> நாரா:{{gap+|3}} (அரசனை நோக்கி) கொல்லா யெனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப் பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே - பொல்லா வெறுமெலும்பை நாய்கௌவும் வேளை நீ செல்ல உறுமுவதென் நீயே யுரை. {{float_right|(சேவகன் வர)}} (நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி) சேவ:{{gap+|1}}40{{gap+|1}} மன்னிய கலைதேர் சகடர் வந்தனர். ஜீவா:{{gap+|3}} (நாராயணனை நோக்கி) வரச்சொல் சேவக! உரைத்தநின் உவமையிற் சற்றே குற்ற முள்ளது நாரணா! குடி:{{gap+|3}} (தனதுள்) அரசன் மாறாய்ப் பொருள் கிர கித்தனன். (அரசனை நோக்கி) வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற் {{gap+|5}}45{{gap+|1}} குற்றங் காணக் குறுகுதல் முற்றும் மணற்சோற் றிற்கல் தேடுதல் மானும். ஜீவ:{{gap+|4}} (சகடரை நோக்கி) {{float_right|(சகடர் வர)}} சுகமோ யாவரும் முதிய சகடரே! மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள் ஆயின தன்றே? சகடர்:{{gap+|12}} ஆம்! ஆம்! அடியேன். ஜீவ:{{gap+|1}}50{{gap+|3}} மேயின விசேடமென்? விளம்புதிர். என்குறை? சகட:{{gap+|5}} அறத்தா றகலா தகலிடங் காத்துப் பொறுத்ததோட் புரவல! உன்குடை நீழற் பொருந்தும் எங்கட் கரந்தையு முளதோ? சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} மானும் - ஒக்கும். மேயின - வந்த. அறத்தாறு - அறவழி. அரந்தை - துன்பம். {{dhr|3em}}<noinclude></noinclude> qv68iiwv5s3986atr1qtqk6zyi061g3 1840374 1840128 2025-07-08T09:48:08Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|72||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> {{c|<b>(நேரிசை வெண்பா)</b>}} <poem><b> நாரா:</b>{{gap+|3}} (அரசனை நோக்கி) <b>கொல்லா யெனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப் பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே - பொல்லா வெறுமெலும்பை நாய்கௌவும் வேளை நீ செல்ல உறுமுவதென் நீயே யுரை. </b>{{float_right|(சேவகன் வர)}} <b>(நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி) சேவ:{{gap+|1}}40{{gap+|1}} மன்னிய கலைதேர் சகடர் வந்தனர். ஜீவா:{{gap+|3}}</b> (நாராயணனை நோக்கி) <b>வரச்சொல் சேவக! உரைத்தநின் உவமையிற் சற்றே குற்ற முள்ளது நாரணா! குடி:</b>{{gap+|3}} (தனதுள்) <b>அரசன் மாறாய்ப் பொருள் கிர கித்தனன்.</b> (அரசனை நோக்கி) <b>வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற் {{gap+|5}}45{{gap+|1}} குற்றங் காணக் குறுகுதல் முற்றும் மணற்சோற் றிற்கல் தேடுதல் மானும்.</b> <b>ஜீவ:</b>{{gap+|4}} (சகடரை நோக்கி) {{float_right|(சகடர் வர)}} <b>சுகமோ யாவரும் முதிய சகடரே! மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள் ஆயின தன்றே? சகடர்:{{gap+|12}} ஆம்! ஆம்! அடியேன். ஜீவ:{{gap+|1}}50{{gap+|3}} மேயின விசேடமென்? விளம்புதிர். என்குறை? சகட:{{gap+|5}} அறத்தா றகலா தகலிடங் காத்துப் பொறுத்ததோட் புரவல! உன்குடை நீழற் பொருந்தும் எங்கட் கரந்தையு முளதோ? சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} மானும் - ஒக்கும். மேயின - வந்த. அறத்தாறு - அறவழி. அரந்தை - துன்பம். {{dhr|3em}}<noinclude></noinclude> prwftf4tstdo18c1l5m259e2l5tqfck பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/73 250 535313 1840130 1830099 2025-07-07T17:38:18Z Info-farmer 232 {{dhr|3em}} 1840130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||73}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}55{{gap+|1}} மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே எந்தன் புதல்வி வாணியை வதுவையிற் கொடுக்கவோ ராசை கொற்றவ! மற்றது முடிக்கநின் கருணையே முற்றும்வேண் டுவனே. ஜீவ:{{gap+|5}} சீலஞ் சிந்தை கோல மனைத்துஞ் {{gap+|5}}60{{gap+|1}} சாலவும் பொருந்தும். சகடரே! அதனால் களித்தோம் மெத்த. ஏ! ஏ! குடில! ஒளித்த தென்நீ உரையா தெமக்கே? குடி:{{gap+|5}} ஆவ தாயின் அறிவியா தொழிவனோ? ஜீவ:{{gap+|5}} இடையூ றென்கொல்? இடியே றன்ன {{gap+|5}}65{{gap+|1}} படையடு பலதே வன்றான் ஏதோ விரும்பினன் போலும் வேறோர் கரும்பே! குடி:{{gap+|5}} இல்லையெம் இறைவ! எங்ஙனம் உரைக்கேன்! சொல்லிற் பழிப்பாம். சகடரே சொல்லுக. ஜீவ:{{gap+|4}} என்னை? சகடரே! இடையூ றென்னை? சக:{{gap+|1}}70{{gap+|3}} பரம்பரை யாயுன் தொழும்புபூண் டொழுகும் அடியனேன் சொல்பழு தாயின தில்லை. முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல் ஒருத்தியே யென்சொல் வியர்த்தம் ஆக்குவள். ஒருதலை யாயிம் மணத்திற் குடன்படாள். {{gap+|5}}75{{gap+|1}} விரிதலைப் பேய்போல், வேண்டிய விளம்பியும், ஓரா ளொன்றும்; உணராள் தன்னயம்; நேரா ளொருவழி; பாராள் நெறிமுறை; என்னயான் செய்கேன்? இதன்மே லெனக்கும் இன்னல் தருவதொன் றில்லை, தாதையர் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} சால - மிக. வேறோர் கரும்பு - வேறொரு பெண். தொழும்பு - அடிமை. மொய்குழல் - இங்கு வாணியைக் குறிக்கிறது. வியர்த்தம் - வீண். ஓராள் - நினையாள். நேராள் - உடன்படாள். {{dhr|3em}}<noinclude></noinclude> rngh3epzwjgwxcc1zok2xg6zgfcbgyj 1840375 1840130 2025-07-08T09:52:01Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||73}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}55{{gap+|1}} மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே எந்தன் புதல்வி வாணியை வதுவையிற் கொடுக்கவோ ராசை கொற்றவ! மற்றது முடிக்கநின் கருணையே முற்றும்வேண் டுவனே. ஜீவ:{{gap+|5}} சீலஞ் சிந்தை கோல மனைத்துஞ் {{gap+|5}}60{{gap+|1}} சாலவும் பொருந்தும். சகடரே! அதனால் களித்தோம் மெத்த. ஏ! ஏ! குடில! ஒளித்த தென்நீ உரையா தெமக்கே? குடி:{{gap+|5}} ஆவ தாயின் அறிவியா தொழிவனோ? ஜீவ:{{gap+|5}} இடையூ றென்கொல்? இடியே றன்ன {{gap+|5}}65{{gap+|1}} படையடு பலதே வன்றான் ஏதோ விரும்பினன் போலும் வேறோர் கரும்பே! குடி:{{gap+|5}} இல்லையெம் இறைவ! எங்ஙனம் உரைக்கேன்! சொல்லிற் பழிப்பாம். சகடரே சொல்லுக. ஜீவ:{{gap+|4}} என்னை? சகடரே! இடையூ றென்னை? சக:{{gap+|1}}70{{gap+|3}} பரம்பரை யாயுன் தொழும்புபூண் டொழுகும் அடியனேன் சொல்பழு தாயின தில்லை. முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல் ஒருத்தியே யென்சொல் வியர்த்தம் ஆக்குவள். ஒருதலை யாயிம் மணத்திற் குடன்படாள். {{gap+|5}}75{{gap+|1}} விரிதலைப் பேய்போல், வேண்டிய விளம்பியும், ஓரா ளொன்றும்; உணராள் தன்னயம்; நேரா ளொருவழி; பாராள் நெறிமுறை; என்னயான் செய்கேன்? இதன்மே லெனக்கும் இன்னல் தருவதொன் றில்லை, தாதையர் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} சால - மிக. வேறோர் கரும்பு - வேறொரு பெண். தொழும்பு - அடிமை. மொய்குழல் - இங்கு வாணியைக் குறிக்கிறது. வியர்த்தம் - வீண். ஓராள் - நினையாள். நேராள் - உடன்படாள். {{dhr|3em}}<noinclude></noinclude> hbjcp4yh8wl8goufs70a5e4w3ut6yjr பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/74 250 535314 1840131 1830100 2025-07-07T17:41:48Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|74||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}80{{gap+|1}} மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர் எனுமொழி யெனக்கே யனுபவம் இறைவ! உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர் தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம். நரைத்த தென்சிரம்; திரைத்த தென்னுடல் {{gap+|5}}85{{gap+|1}} தள்ளருங் காலம்; பிள்ளையும் வேறிலை. என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க மன்னவ! கிருபையேல் வாழ்து மிவ்வயின், இல்லையேல் முதியவென் னில்லா ளுடனினிச் {{float_right|(கண்ணீர் துளிக்க)}} செல்ல விடையளி செல்லுதுங் காசி. ஜீவ:{{gap+|1}}90{{gap+|3}} ஏனிது சகடரே! என்கா ரியமிது! தேன்மொழி வாணி செவ்விய குணத்தாள். காணி லுரைப்பாம். வீணிவ் வழுகை. நாராயணன்:{{gap+|2}} (தனதுள்) பாதகன் கிழவன் பணத்திற் காக ஏதுஞ் செய்வன், இறைவனோ அறியான், {{gap+|5}}95{{gap+|1}} ஓதுவங் குறிப்பாய். உணரி லுணர்க. {{float_right|(அரசனை நோக்கி)}} {{float_right|{{c|<b>(நேரிசை வெண்பா)</b>}}}} மாற்றலர் தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ ஏற்றியநாண் விற்பூட்டு மேந்தலே - சோற்றதற்காய்த் தன்மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில் என்மகிமை யுள்ளா னினி. </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} மாற்றம் - சொல். கூற்றுவர் - இயமன் போன்றவர். இவ்வயின் - இவ்விடம். இறைவன் - அரசன். நாண் - கயிறு. இங்கு வில்லின் நாணைக் குறிக்கிறது. மகவு - மகன்; பிள்ளை. {{dhr|3em}}<noinclude></noinclude> 19w85sfcn92uuxi3iqd12jawrgvzod5 1840132 1840131 2025-07-07T17:43:17Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|74||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}80{{gap+|1}} மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர் எனுமொழி யெனக்கே யனுபவம் இறைவ! உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர் தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம். நரைத்த தென்சிரம்; திரைத்த தென்னுடல் {{gap+|5}}85{{gap+|1}} தள்ளருங் காலம்; பிள்ளையும் வேறிலை. என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க மன்னவ! கிருபையேல் வாழ்து மிவ்வயின், இல்லையேல் முதியவென் னில்லா ளுடனினிச் {{float_right|(கண்ணீர் துளிக்க)}} செல்ல விடையளி செல்லுதுங் காசி. ஜீவ:{{gap+|1}}90{{gap+|3}} ஏனிது சகடரே! என்கா ரியமிது! தேன்மொழி வாணி செவ்விய குணத்தாள். காணி லுரைப்பாம். வீணிவ் வழுகை. நாராயணன்:{{gap+|2}} (தனதுள்) பாதகன் கிழவன் பணத்திற் காக ஏதுஞ் செய்வன், இறைவனோ அறியான், {{gap+|5}}95{{gap+|1}} ஓதுவங் குறிப்பாய். உணரி லுணர்க. {{gap+|8}}(அரசனை நோக்கி) {{float_right|{{c|<b>(நேரிசை வெண்பா)</b>}}}} மாற்றலர் தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ ஏற்றியநாண் விற்பூட்டு மேந்தலே - சோற்றதற்காய்த் தன்மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில் என்மகிமை யுள்ளா னினி. </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} மாற்றம் - சொல். கூற்றுவர் - இயமன் போன்றவர். இவ்வயின் - இவ்விடம். இறைவன் - அரசன். நாண் - கயிறு. இங்கு வில்லின் நாணைக் குறிக்கிறது. மகவு - மகன்; பிள்ளை. {{dhr|3em}}<noinclude></noinclude> n82h16ivooo80pjafljbhxapcwwj14a 1840376 1840132 2025-07-08T09:55:48Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|74||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}80{{gap+|1}} மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர் எனுமொழி யெனக்கே யனுபவம் இறைவ! உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர் தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம். நரைத்த தென்சிரம்; திரைத்த தென்னுடல் {{gap+|5}}85{{gap+|1}} தள்ளருங் காலம்; பிள்ளையும் வேறிலை. என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க மன்னவ! கிருபையேல் வாழ்து மிவ்வயின், இல்லையேல் முதியவென் னில்லா ளுடனினிச்</b> {{float_right|(கண்ணீர் துளிக்க)}} <b>செல்ல விடையளி செல்லுதுங் காசி. ஜீவ:{{gap+|1}}90{{gap+|3}} ஏனிது சகடரே! என்கா ரியமிது! தேன்மொழி வாணி செவ்விய குணத்தாள். காணி லுரைப்பாம். வீணிவ் வழுகை. நாராயணன்:</b>{{gap+|2}} (தனதுள்) <b>பாதகன் கிழவன் பணத்திற் காக ஏதுஞ் செய்வன், இறைவனோ அறியான், {{gap+|5}}95{{gap+|1}} ஓதுவங் குறிப்பாய். உணரி லுணர்க.</b> {{gap+|8}}(அரசனை நோக்கி) {{float_right|{{c|<b>(நேரிசை வெண்பா)</b>}}}} <b>மாற்றலர் தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ ஏற்றியநாண் விற்பூட்டு மேந்தலே - சோற்றதற்காய்த் தன்மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில் என்மகிமை யுள்ளா னினி. </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} மாற்றம் - சொல். கூற்றுவர் - இயமன் போன்றவர். இவ்வயின் - இவ்விடம். இறைவன் - அரசன். நாண் - கயிறு. இங்கு வில்லின் நாணைக் குறிக்கிறது. மகவு - மகன்; பிள்ளை. {{dhr|3em}}<noinclude></noinclude> cevnnyqz4r8o7adoxidecf966apoqet பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/75 250 535315 1840133 1830101 2025-07-07T17:48:00Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||75}}{{rule}}</b></noinclude><poem><b> (நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி) ஜீவ:{{gap+|4}} தனிமொழி யென்னை? நாரா:{{gap+|3}} சற்றும் பிசகிலை. நீட்டல் விகாரமாய் நினையினும் அமையும். ஜீவ:{{gap+|4}} காட்டுவ தெல்லாம் விகாரமே. காணாய் கிழவரின் அழுகை. நாரா:{{gap+|3}} சிலவரு டந்தான். {{gap+|5}}100{{gap+|1}} நெடுநாள் நிற்கும் இளையவ ரழுகை. ஜீவ:{{gap+|4}} விடு விடு. நின்மொழி யெல்லாம் விகடம். (நாராயணன் போக) {{float_right| (சகடரை நோக்கி)}} அறிவிர்கொல் அவளுளம்? சக: {{gap+|3}} சிறிதியா னறிவன்: திருநட ராசனென் றொருவனிங் குள்ளான். பொருவரும் புருடன்மற் றவனே யென்றாள் {{gap+|5}}105{{gap+|1}} சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர். குடி:{{gap+|3}} (அரசனை நோக்கி) நல்லதப் படியே நடக்கிலென்? இவர்க்கும் பொல்லா முரண்டேன்? சக:{{gap+|5}} (குடிலனை நோக்கி) போம்!போம்! உமது குழந்தையேல் இங்ஙனம் கூறீர்! முற்றும், இழந்திட வோவெனக் கித்தனை பாடு? {{gap+|5}}110{{gap+|1}} பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ? (அரசனை நோக்கி) </b></poem> {{rule|15em|align=left}} நீட்டல் விகாரம் - மேலே சொன்ன வெண்பாவில் உள்ள தனிச்சொல், சொற்றதற்காய் என்றிருக்கவேண்டுவது சோற்றதற்காய் என நீண்டதைக் குறிக்கிறது. பொருவரும் - ஒப்பில்லாத. முரண்டு - பிடிவாதம். பூவை - நாகணவாய்ப் புள்; மைனா என்பர். ஈயவோ - கொடுக்கவோ. 'கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா' என்பது பழமொழி. {{dhr|3em}}<noinclude></noinclude> 2aooat1de3ilz8fd2i44a3nbzjei9a2 1840134 1840133 2025-07-07T17:53:47Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||75}}{{rule}}</b></noinclude><poem><b> (நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி) ஜீவ:{{gap+|4}} தனிமொழி யென்னை? நாரா:{{gap+|3}} சற்றும் பிசகிலை. நீட்டல் விகாரமாய் நினையினும் அமையும். ஜீவ:{{gap+|3}} காட்டுவ தெல்லாம் விகாரமே. காணாய் கிழவரின் அழுகை. நாரா:{{gap+|6}} சிலவரு டந்தான். {{gap+|5}}100{{gap+|1}} நெடுநாள் நிற்கும் இளையவ ரழுகை. ஜீவ:{{gap+|6}} விடு விடு. நின்மொழி யெல்லாம் விகடம். (நாராயணன் போக) {{float_right|(சகடரை நோக்கி)}} அறிவிர்கொல் அவளுளம்? சக: {{gap+|6}} சிறிதியா னறிவன்: திருநட ராசனென் றொருவனிங் குள்ளான். பொருவரும் புருடன்மற் றவனே யென்றாள் {{gap+|5}}105{{gap+|1}} சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர். குடி:{{gap+|6}} (அரசனை நோக்கி) நல்லதப் படியே நடக்கிலென்? இவர்க்கும் பொல்லா முரண்டேன்? சக:{{gap+|6}} (குடிலனை நோக்கி) போம்!போம்! உமது குழந்தையேல் இங்ஙனம் கூறீர்! முற்றும், இழந்திட வோவெனக் கித்தனை பாடு? {{gap+|5}}110{{gap+|1}} பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ? (அரசனை நோக்கி) </b></poem> {{rule|15em|align=left}} நீட்டல் விகாரம் - மேலே சொன்ன வெண்பாவில் உள்ள தனிச்சொல், சொற்றதற்காய் என்றிருக்கவேண்டுவது சோற்றதற்காய் என நீண்டதைக் குறிக்கிறது. பொருவரும் - ஒப்பில்லாத. முரண்டு - பிடிவாதம். பூவை - நாகணவாய்ப் புள்; மைனா என்பர். ஈயவோ - கொடுக்கவோ. 'கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா' என்பது பழமொழி. {{dhr|3em}}<noinclude></noinclude> 37r81a3safw55asvnsg113rtul1nsv0 1840377 1840134 2025-07-08T10:02:22Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||75}}{{rule}}</b></noinclude><poem><b> (நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி) ஜீவ:{{gap+|4}} தனிமொழி யென்னை? நாரா:{{gap+|3}} சற்றும் பிசகிலை. நீட்டல் விகாரமாய் நினையினும் அமையும். ஜீவ:{{gap+|3}} காட்டுவ தெல்லாம் விகாரமே. காணாய் கிழவரின் அழுகை. நாரா:{{gap+|6}} சிலவரு டந்தான். {{gap+|5}}100{{gap+|1}} நெடுநாள் நிற்கும் இளையவ ரழுகை. ஜீவ:{{gap+|6}} விடு விடு. நின்மொழி யெல்லாம் விகடம். </b>(நாராயணன் போக) {{float_right|(சகடரை நோக்கி)}} <b>அறிவிர்கொல் அவளுளம்? சக: {{gap+|6}} சிறிதியா னறிவன்: திருநட ராசனென் றொருவனிங் குள்ளான். பொருவரும் புருடன்மற் றவனே யென்றாள் {{gap+|5}}105{{gap+|1}} சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர். குடி:</b>{{gap+|6}} (அரசனை நோக்கி) <b>நல்லதப் படியே நடக்கிலென்? இவர்க்கும் பொல்லா முரண்டேன்? சக:</b>{{gap+|6}} (குடிலனை நோக்கி) <b>போம்!போம்! உமது குழந்தையேல் இங்ஙனம் கூறீர்! முற்றும், இழந்திட வோவெனக் கித்தனை பாடு? {{gap+|5}}110{{gap+|1}} பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ?</b> (அரசனை நோக்கி) </poem> {{rule|15em|align=left}} நீட்டல் விகாரம் - மேலே சொன்ன வெண்பாவில் உள்ள தனிச்சொல், சொற்றதற்காய் என்றிருக்கவேண்டுவது சோற்றதற்காய் என நீண்டதைக் குறிக்கிறது. பொருவரும் - ஒப்பில்லாத. முரண்டு - பிடிவாதம். பூவை - நாகணவாய்ப் புள்; மைனா என்பர். ஈயவோ - கொடுக்கவோ. 'கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா' என்பது பழமொழி. {{dhr|3em}}<noinclude></noinclude> lzjqxbj5qbjnhr3dbfvuu5a7gluzg9y பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/76 250 535316 1840135 1830102 2025-07-07T17:59:29Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|76||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> காவலா! அவனைப் போலயான் கண்டிலன்; சுத்தமே பித்தன்; சொல்லுக் கடங்கான், தனியே யுரைப்பன்; தனியே சிரிப்பன்; எங்கேனு மொருபூ இலைகனி யகப்படில் {{gap+|5}}115{{gap+|1}}அங்கங் கதனையே நோக்கி நோக்கித் தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன். பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம்: ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன். பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை? ஜீவ:{{gap+|1}}120{{gap+|2}} ஆமாம்! யாமும் கண்டுளேஞ் சிலகால் நின்றால் நின்ற படியே; அன்றி இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம். சிரிக்கினும் விழிக்கினும் நலமிலை தீயதே. அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில் ... குடி:{{gap+|1}}125{{gap+|2}} அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன். ஜீவ:{{gap+|5}} அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே. எங்கவன் இப்போது? குடி:{{gap+|5}} இங்குளன் என்றனர். சிதம்பரத் தனுப்பினேன்; சென்றிலன் நின்றான். இதந்தரு நின்கட் டளையெப் படியோ? ஜீவ:{{gap+|1}}130{{gap+|1}} மெத்தவும் நன்மை; அப்படி யேசெய். குடி:{{gap+|5}} சித்தம்; ஆயினுஞ் செல்கிலன். முனிவர் பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும். சரியல; இராச்சிய தந்திரத் தவர்க்கென்? </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} பெயர்ந்திலன் - போகவில்லை. {{dhr|3em}}<noinclude></noinclude> dckqmvp761ndt3no85xu3gqrfwozr6n 1840136 1840135 2025-07-07T18:00:31Z Info-farmer 232 - துப்புரவு 1840136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|76||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> காவலா! அவனைப் போலயான் கண்டிலன்; சுத்தமே பித்தன்; சொல்லுக் கடங்கான், தனியே யுரைப்பன்; தனியே சிரிப்பன்; எங்கேனு மொருபூ இலைகனி யகப்படில் {{gap+|5}}115{{gap+|1}}அங்கங் கதனையே நோக்கி நோக்கித் தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன். பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம்: ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன். பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை? ஜீவ:{{gap+|1}}120{{gap+|2}} ஆமாம்! யாமும் கண்டுளேஞ் சிலகால் நின்றால் நின்ற படியே; அன்றி இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம். சிரிக்கினும் விழிக்கினும் நலமிலை தீயதே. அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில் ... குடி:{{gap+|1}}125{{gap+|2}} அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன். ஜீவ:{{gap+|5}} அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே. எங்கவன் இப்போது? குடி:{{gap+|5}} இங்குளன் என்றனர். சிதம்பரத் தனுப்பினேன்; சென்றிலன் நின்றான். இதந்தரு நின்கட் டளையெப் படியோ? ஜீவ:{{gap+|1}}130{{gap+|1}} மெத்தவும் நன்மை; அப்படி யேசெய். குடி:{{gap+|5}} சித்தம்; ஆயினுஞ் செல்கிலன். முனிவர் பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும். சரியல; இராச்சிய தந்திரத் தவர்க்கென்? </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} பெயர்ந்திலன் - போகவில்லை. {{dhr|3em}}<noinclude></noinclude> ib1dnfai37m8fzfm7j6q6vacjdil2f7 1840378 1840136 2025-07-08T10:03:44Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|76||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> காவலா! அவனைப் போலயான் கண்டிலன்; சுத்தமே பித்தன்; சொல்லுக் கடங்கான், தனியே யுரைப்பன்; தனியே சிரிப்பன்; எங்கேனு மொருபூ இலைகனி யகப்படில் {{gap+|5}}115{{gap+|1}}அங்கங் கதனையே நோக்கி நோக்கித் தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன். பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம்: ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன். பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை? ஜீவ:{{gap+|1}}120{{gap+|2}} ஆமாம்! யாமும் கண்டுளேஞ் சிலகால் நின்றால் நின்ற படியே; அன்றி இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம். சிரிக்கினும் விழிக்கினும் நலமிலை தீயதே. அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில் ... குடி:{{gap+|1}}125{{gap+|2}} அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன். ஜீவ:{{gap+|5}} அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே. எங்கவன் இப்போது? குடி:{{gap+|5}} இங்குளன் என்றனர். சிதம்பரத் தனுப்பினேன்; சென்றிலன் நின்றான். இதந்தரு நின்கட் டளையெப் படியோ? ஜீவ:{{gap+|1}}130{{gap+|1}} மெத்தவும் நன்மை; அப்படி யேசெய். குடி:{{gap+|5}} சித்தம்; ஆயினுஞ் செல்கிலன். முனிவர் பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும். சரியல; இராச்சிய தந்திரத் தவர்க்கென்? </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} பெயர்ந்திலன் - போகவில்லை. {{dhr|3em}}<noinclude></noinclude> b2oybnx06bku23qdod2t5mz1xzfkuw1 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/77 250 535317 1840137 1830103 2025-07-07T18:12:57Z Info-farmer 232 - துப்புரவு 1840137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||77}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ:{{gap+|5}} (சகடரை நோக்கி) நல்லது சகடரே! சொல்லிய படியே {{gap+|5}}135{{gap+|1}}மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப் படியிது நடத்துவம். விடுமினித் துயரம். சக:{{gap+|5}} இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி. திவ்விய திருவடி வாழுக சிறந்தே! (சகடர் போக, செவிலி வர) ஜீவ:{{gap+|4}} (செவிலியின் முக நோக்கி) {{gap+|5}}140{{gap+|1}} என்னை இவள்முகம் இப்படி யிருப்பது? தோன்றம் நன் றன்றே! செவிலி:{{gap+|2}} நேற்றிரா முதலா - ஜீவ:{{gap+|4}} பிணியோ என்கண் மணிக்கு? செவிலி:{{gap+|4}} பிணியா யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம். ஜீவ:{{gap+|6}} சுரம்!சுரம்! ஓ!ஓ! சொல்லுதி யாவும். {{gap+|5}}145{{gap+|1}} அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும். வந்தவா றென்னை? நடந்தவா றென்னை? செவிலி:{{gap+|3}} அறியேம் யாங்கள். ஐய!அம் மாயம் நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப {{gap+|5}}150{{gap+|1}} நம்மனை புகுந்த செல்வி. எம்முடன் மாலையி லீலைச் சோலை யுலாவி அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி மலைய மாருதம் வந்துவந் துந்த {{gap+|5}}155{{gap+|1}} நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப் பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே </b></poem> {{rule|15em|align=left}} நளினம் - தாமரை. குமுத வாய் - ஆம்பல் மலர்போன்ற வாய். மேல் மந்திரம் - மாடிவீடு. {{dhr|3em}}<noinclude></noinclude> 3o48alxbexzr04i3gb59ce7xqmnuj5x 1840138 1840137 2025-07-07T18:13:25Z Info-farmer 232 +6 1840138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||77}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ:{{gap+|5}} (சகடரை நோக்கி) நல்லது சகடரே! சொல்லிய படியே {{gap+|5}}135{{gap+|1}}மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப் படியிது நடத்துவம். விடுமினித் துயரம். சக:{{gap+|6}} இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி. திவ்விய திருவடி வாழுக சிறந்தே! (சகடர் போக, செவிலி வர) ஜீவ:{{gap+|4}} (செவிலியின் முக நோக்கி) {{gap+|5}}140{{gap+|1}} என்னை இவள்முகம் இப்படி யிருப்பது? தோன்றம் நன் றன்றே! செவிலி:{{gap+|2}} நேற்றிரா முதலா - ஜீவ:{{gap+|4}} பிணியோ என்கண் மணிக்கு? செவிலி:{{gap+|4}} பிணியா யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம். ஜீவ:{{gap+|6}} சுரம்!சுரம்! ஓ!ஓ! சொல்லுதி யாவும். {{gap+|5}}145{{gap+|1}} அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும். வந்தவா றென்னை? நடந்தவா றென்னை? செவிலி:{{gap+|3}} அறியேம் யாங்கள். ஐய!அம் மாயம் நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப {{gap+|5}}150{{gap+|1}} நம்மனை புகுந்த செல்வி. எம்முடன் மாலையி லீலைச் சோலை யுலாவி அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி மலைய மாருதம் வந்துவந் துந்த {{gap+|5}}155{{gap+|1}} நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப் பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே </b></poem> {{rule|15em|align=left}} நளினம் - தாமரை. குமுத வாய் - ஆம்பல் மலர்போன்ற வாய். மேல் மந்திரம் - மாடிவீடு. {{dhr|3em}}<noinclude></noinclude> kdzaigfeo05rtaqnfbwvdqxl952y4xg 1840139 1840138 2025-07-07T18:14:11Z Info-farmer 232 - துப்புரவு 1840139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||77}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ:{{gap+|5}} (சகடரை நோக்கி) நல்லது சகடரே! சொல்லிய படியே {{gap+|5}}135{{gap+|1}}மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப் படியிது நடத்துவம். விடுமினித் துயரம். சக:{{gap+|6}} இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி. திவ்விய திருவடி வாழுக சிறந்தே! (சகடர் போக, செவிலி வர) ஜீவ:{{gap+|4}} (செவிலியின் முக நோக்கி) {{gap+|5}}140{{gap+|1}} என்னை இவள்முகம் இப்படி யிருப்பது? தோன்றம் நன் றன்றே! செவிலி:{{gap+|2}} நேற்றிரா முதலா - ஜீவ:{{gap+|4}} பிணியோ என்கண் மணிக்கு? செவிலி:{{gap+|4}} பிணியா யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம். ஜீவ:{{gap+|6}}சுரம்!சுரம்! ஓ!ஓ! சொல்லுதி யாவும். {{gap+|5}}145{{gap+|1}}அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும். வந்தவா றென்னை? நடந்தவா றென்னை? செவிலி:{{gap+|3}} அறியேம் யாங்கள். ஐய!அம் மாயம் நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப {{gap+|5}}150{{gap+|1}} நம்மனை புகுந்த செல்வி. எம்முடன் மாலையி லீலைச் சோலை யுலாவி அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி மலைய மாருதம் வந்துவந் துந்த {{gap+|5}}155{{gap+|1}} நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப் பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே </b></poem> {{rule|15em|align=left}} நளினம் - தாமரை. குமுத வாய் - ஆம்பல் மலர்போன்ற வாய். மேல் மந்திரம் - மாடிவீடு. {{dhr|3em}}<noinclude></noinclude> 9j5jbtvpjyjz49izauv2qqe56v1yp34 1840140 1840139 2025-07-07T18:14:37Z Info-farmer 232 5 1840140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||77}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ:{{gap+|5}} (சகடரை நோக்கி) நல்லது சகடரே! சொல்லிய படியே {{gap+|5}}135{{gap+|1}}மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப் படியிது நடத்துவம். விடுமினித் துயரம். சக:{{gap+|6}} இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி. திவ்விய திருவடி வாழுக சிறந்தே! (சகடர் போக, செவிலி வர) ஜீவ:{{gap+|5}} (செவிலியின் முக நோக்கி) {{gap+|5}}140{{gap+|1}} என்னை இவள்முகம் இப்படி யிருப்பது? தோன்றம் நன் றன்றே! செவிலி:{{gap+|2}} நேற்றிரா முதலா - ஜீவ:{{gap+|4}} பிணியோ என்கண் மணிக்கு? செவிலி:{{gap+|4}} பிணியா யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம். ஜீவ:{{gap+|6}}சுரம்!சுரம்! ஓ!ஓ! சொல்லுதி யாவும். {{gap+|5}}145{{gap+|1}}அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும். வந்தவா றென்னை? நடந்தவா றென்னை? செவிலி:{{gap+|3}} அறியேம் யாங்கள். ஐய!அம் மாயம் நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப {{gap+|5}}150{{gap+|1}} நம்மனை புகுந்த செல்வி. எம்முடன் மாலையி லீலைச் சோலை யுலாவி அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி மலைய மாருதம் வந்துவந் துந்த {{gap+|5}}155{{gap+|1}} நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப் பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே </b></poem> {{rule|15em|align=left}} நளினம் - தாமரை. குமுத வாய் - ஆம்பல் மலர்போன்ற வாய். மேல் மந்திரம் - மாடிவீடு. {{dhr|3em}}<noinclude></noinclude> aahpbiq2o6i3ozk4gj2sdjvgunphaw0 1840379 1840140 2025-07-08T10:08:25Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||77}}{{rule}}</b></noinclude><poem><b> ஜீவ:</b>{{gap+|5}} (சகடரை நோக்கி) <b>நல்லது சகடரே! சொல்லிய படியே {{gap+|5}}135{{gap+|1}}மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப் படியிது நடத்துவம். விடுமினித் துயரம். சக:{{gap+|5}}இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி. திவ்விய திருவடி வாழுக சிறந்தே!</b> (சகடர் போக, செவிலி வர) <b>ஜீவ:</b>{{gap+|5}} (செவிலியின் முக நோக்கி) <b>{{gap+|5}}140{{gap+|1}} என்னை இவள்முகம் இப்படி யிருப்பது? தோன்றம் நன் றன்றே! செவிலி:{{gap+|2}} நேற்றிரா முதலா - ஜீவ:{{gap+|4}} பிணியோ என்கண் மணிக்கு? செவிலி:{{gap+|4}} பிணியா யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம். ஜீவ:{{gap+|6}}சுரம்!சுரம்! ஓ!ஓ! சொல்லுதி யாவும். {{gap+|5}}145{{gap+|1}}அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும். வந்தவா றென்னை? நடந்தவா றென்னை? செவிலி:{{gap+|3}} அறியேம் யாங்கள். ஐய!அம் மாயம் நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப {{gap+|5}}150{{gap+|1}} நம்மனை புகுந்த செல்வி. எம்முடன் மாலையி லீலைச் சோலை யுலாவி அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி மலைய மாருதம் வந்துவந் துந்த {{gap+|5}}155{{gap+|1}} நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப் பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே </b></poem> {{rule|15em|align=left}} நளினம் - தாமரை. குமுத வாய் - ஆம்பல் மலர்போன்ற வாய். மேல் மந்திரம் - மாடிவீடு. {{dhr|3em}}<noinclude></noinclude> reuesosgeka5wfimovta86d6vkkrmlt பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/79 250 535319 1840141 1830105 2025-07-07T18:19:08Z Info-farmer 232 {{dhr|3em}} 1840141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||79}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}185{{gap+|1}} எண்ணம் மற்றவர்க் கியாதோ அறியோம்; பனம்பூச் சூடியும் முனம்போ லவேசுரம். ஏது மறியாப் பேதை! நேற்றுத் தவஞ்செய ஆசை யென்றவள் தனக்குக் காதனோய் காணவோ ரேதுவு மில்லை. {{gap+|5}}190{{gap+|1}} எந்தாய் இருக்கு நிலைமை இனிநீ வந்தே காண்குதி மன்னவ ரேறே! ஜீவ:{{gap+|5}} ஆ!ஆ! நோவிது காறுமொன் றறிகிலள். இதுவென் புதுமை? என்செய் கோயான்? குடி:{{gap+|6}} தவஞ்செய ஆசை யென்றுதாய் நவின்ற {{gap+|5}}195{{gap+|1}} வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச் செய்கையோ என்றோர் ஐயம் ஜனிக்கும்; நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம் அறியலாந் தகைத்தோ? ஜீவ:{{gap+|5}} வறிதவ் ஐயம். மொழியொரு சிறிதும் மொழிந்திலர்; கண்டுழி {{gap+|5}}200{{gap+|1}} அழுதனர்; அழுதாள் உடன்நம் மமுதும்; ஆசி பேசியங் ககலுங் காலை ஏதோ யந்திரம் எழுதிவைத் திடவோர் அறையுட னங்கணந் திறவுகோ லோடு தமக்கென வேண்டினர்; அளித்தன முடனே. {{gap+|5}}205{{gap+|1}} நமக்கதி னாலென்? நாமறி யாததோ? என்னோ அறியேன் இந்நோய் விளைவு? (ஜீவகனும் செவிலியும் போக)}} குடி:{{gap+|3}} (தனதுள்) யந்திரத் தாபன மோவவ ரெண்ணினர்? அவ்வள வறிவி லாரோ முனிவர்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சேர அரசனுக்கு மனோன்மணியை மணம் செய்விக்கும் படி சோதிடர் கூறினார்கள் என்பது கருத்து. ஏது - காரணம். ஐயம் - சந்தேகம். ஜனிக்கும் - உண்டாகும். மாற்றம் - சொல். அங்கணம் - முற்றம். {{dhr|3em}}<noinclude></noinclude> q6v9u96ssraib04i6ntf7ldjh47o216 1840380 1840141 2025-07-08T10:18:38Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||79}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}185{{gap+|1}} எண்ணம் மற்றவர்க் கியாதோ அறியோம்; பனம்பூச் சூடியும் முனம்போ லவேசுரம். ஏது மறியாப் பேதை! நேற்றுத் தவஞ்செய ஆசை யென்றவள் தனக்குக் காதனோய் காணவோ ரேதுவு மில்லை. {{gap+|5}}190{{gap+|1}} எந்தாய் இருக்கு நிலைமை இனிநீ வந்தே காண்குதி மன்னவ ரேறே! ஜீவ:{{gap+|5}} ஆ!ஆ! நோவிது காறுமொன் றறிகிலள். இதுவென் புதுமை? என்செய் கோயான்? குடி:{{gap+|6}} தவஞ்செய ஆசை யென்றுதாய் நவின்ற {{gap+|5}}195{{gap+|1}} வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச் செய்கையோ என்றோர் ஐயம் ஜனிக்கும்; நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம் அறியலாந் தகைத்தோ? ஜீவ:{{gap+|5}} வறிதவ் ஐயம். மொழியொரு சிறிதும் மொழிந்திலர்; கண்டுழி {{gap+|5}}200{{gap+|1}} அழுதனர்; அழுதாள் உடன்நம் மமுதும்; ஆசி பேசியங் ககலுங் காலை ஏதோ யந்திரம் எழுதிவைத் திடவோர் அறையுட னங்கணந் திறவுகோ லோடு தமக்கென வேண்டினர்; அளித்தன முடனே. {{gap+|5}}205{{gap+|1}} நமக்கதி னாலென்? நாமறி யாததோ? என்னோ அறியேன் இந்நோய் விளைவு?</b> {{float_right|(ஜீவகனும் செவிலியும் போக)}} <b>குடி:</b>{{gap+|3}} (தனதுள்) <b>யந்திரத் தாபன மோவவ ரெண்ணினர்? அவ்வள வறிவி லாரோ முனிவர்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} சேர அரசனுக்கு மனோன்மணியை மணம் செய்விக்கும் படி சோதிடர் கூறினார்கள் என்பது கருத்து. ஏது - காரணம். ஐயம் - சந்தேகம். ஜனிக்கும் - உண்டாகும். மாற்றம் - சொல். அங்கணம் - முற்றம். {{dhr|3em}}<noinclude></noinclude> 2fawx1sgl34daeruz7u8iywq8vbclxi பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/81 250 535321 1840148 1830768 2025-07-08T01:29:57Z Info-farmer 232 {{dhr|3em}} 1840148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>நான்காம் களம்</b>}} இடம் : <b>கன்னிமாடம்.</b> காலம்: <b>மாலை</b>. (மனோன்மணி சயனித்திருக்க; ஜீவகன், வாணி, செவிலி சுற்றி நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா)}} <poem><b> ஜீவகன்:{{gap+|4}} உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே! உனக்குறு துயரம் எனக்குரை யாததென்? விரும்பிய தென்னன் றுரைக்கில் விசும்பில் அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன்; {{gap+|5}}5{{gap+|2}} வருத்துவ தென்னென வழங்கின் மாய்ப்பன் உறுத்துங் கூற்றுவ னாயினும் ஒறுத்தே. தாய்க்கு மொளித்த சூலோ? தையால்! வாய்க்கு மொளித்த உணவோ? மங்காய்! ஏதா யினுமெனக் கோதா துளதோ? {{gap+|5}}10{{gap+|1}} பளிங்கும் பழித்த நெஞ்சாய்! உனக்குங் களங்கம் வந்த காரண மெதுவோ? பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி இசையது விரித்தோர் பிசித மரமேல் இருந்து பாடு மெல்லை, ஓர் வானவன் {{gap+|5}}15{{gap+|1}} திருந்திய இன்னிசை யமுதிற் செப்பிப் போயது கண்டு, சேயதோர் போந்தையில் தனியே பறந்துபோய்த் தங்கி, அங்கவன் பாடிய இசையே கூவிட உன்னி நாடி நாடிப் பாடியும் வராது. </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அம்புலி - நிலா. மாய்ப்பன் - அழிப்பன். உறுத்தும் கூற்றுவன் - வருத்தும் யமன். ஒறுத்து - தண்டித்து. வனம் - வர்ணம். (இடைக்குறை) {{dhr|3em}}<noinclude></noinclude> 63yvsbtlhnm7ps2y91sb0v2lcjg4ipa பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/82 250 535322 1840149 1830770 2025-07-08T01:33:50Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|82||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} வாடி வாயது மூடி மௌனமாய் வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும் நேற்றன் றோவெனக் கியம்பினை! நெஞ்சில் தோற்றிய தெல்லாம் இங்ஙனஞ் சொல்லும் பேதாய்! இன்றெனக் கென்னோ {{gap+|5}}25{{gap+|1}}ஓதா யுன்றன் உளமுறு துயரே! {{float_right|1}} செவிலி:{{gap+|4}}உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச் சொல்லா யென்னில் துப்பிதழ் துடித்துச் சொல்ல உன்னியுஞ் சொல்லா தடக்கில் யாம்படுந் துயரம் அறிந்துங், {{gap+|5}}30{{gap+|1}}காம்படு தோளீ! கருதாய் போன்மே. {{float_right|2}} ஜீவ:{{gap+|5}} ஐயோ! இதற்கென் செய்வேன்? ஆ! ஆ! பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்? பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற் சோறே போலப் பேரே யன்றி {{gap+|5}}35{{gap+|1}} வேறே யென்பயன் விளைக்கு மென்றுனி நெடுநாள் நைந்து நொந்து கெடுவேன்! பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி வந்துழி யகலும் பனியெனச் சுந்தர முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக் {{gap+|5}}40{{gap+|1}} கனியென வுனையான் கண்டநாள் தொட்டு, நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும் என்மிகை நீக்கி இன்ப மெய்தி, உன் மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற உயிர்தரித் திருந்தேன்! செயிர்தீ ரறமும் </b></poem> {{dhr|3em}} {{rule|15em|align=left}} பிசிதமரம் - வேப்பமரம். வானவன் – தேவன். சேயது - தூரத்தில் உள்ளது. போந்தை - பனை. உன்னி - எண்ணி. துப்பிதழ் - பவழம் போன்று சிவந்த உதடு. காம்பு அடு - மூங்கிலைப் பழிக்கும். போன்ம் - போலும். பரிதி - சூரியன். பரிதி வந்துழி அகலும் பனி, என்பது 'சூரியனைக் கண்ட பனி போல' என்னும் பழமொழி. மிகை - துன்பம், வருத்தம். {{dhr|3em}}<noinclude></noinclude> 4nf5nhrvhqf4yqyhmg61tkvuzmt34hp பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/83 250 535323 1840150 1830776 2025-07-08T01:37:48Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||83}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}45{{gap+|1}} வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையுந் தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன் எங்கும் கலந்த இயல்பா லன்றோ மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்! உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில், {{gap+|5}}50{{gap+|1}} எதுவோ வுறுதி யியம்பாய்? மதிகுலம் விளங்க வருமனோன் மணியே! {{float_right|3}} மனோன்மணி:{{gap+|-2}} (கண்ணீர் துளும்பி) எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு வந்த தன்று; மேல் வருவது மிலை; இலை. உரைக்கற் பாற்றதொன் றில்லை. {{gap+|5}}55{{gap+|1}}உரைப்பதெப் படியான் உணரா தொழியிலே? {{float_right|4}} ஜீவ:{{gap+|5}} குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ; அழுவையே லாற்றேன்; நீயழல் இதுவரைக் கண்டது மிலை; யான் கேட்டது மிலையே. பெண்களின் பேதைமை யென்னே! தங்களைப் {{gap+|5}}60{{gap+|1}} பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும், விழுமம் விளைத்துத் தாமே யழுவர். என்னே யவர்தம் ஏழைமை! மின்னேய் {{float_right|(வாணியை நோக்கி)}} மருங்குல் வாணி வாராய் இப்புறம் அருங்கலை யாய்ந்தநின் தந்தைசொன் மதியும் {{gap+|5}}65{{gap+|1}} உன்புத் தியுமுகுத் துழல்வதென் வம்பில்? நலமே சிறந்த குலமே பிறந்த பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன் தன்னை நீ விடுத்துப் பின்னையோர் பித்தனை நச்சிய தென்னை? ச்சீ! நகையே யாகும் நீசெயும் வகையே. {{float_right|5}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உஞற்ற - செய்வதற்கு. மதி குலம் - சந்திரகுலம், பாண்டியர் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர். விழுமம் - துன்பம். உகுத்து - உதிர்த்து. வம்பில் - வீணில். {{dhr|3em}}<noinclude></noinclude> 41zt7iypkyd6pbs2gue3v8g4gwzhuhu 1840151 1840150 2025-07-08T01:38:23Z Info-farmer 232 1840151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||83}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}45{{gap+|1}} வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையுந் தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன் எங்கும் கலந்த இயல்பா லன்றோ மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்! உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில், {{gap+|5}}50{{gap+|1}} எதுவோ வுறுதி யியம்பாய்? மதிகுலம் விளங்க வருமனோன் மணியே! {{float_right|3}} மனோன்மணி:{{gap+|-2}} (கண்ணீர் துளும்பி) எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு வந்த தன்று; மேல் வருவது மிலை; இலை. உரைக்கற் பாற்றதொன் றில்லை. {{gap+|5}}55{{gap+|1}}உரைப்பதெப் படியான் உணரா தொழியிலே? {{float_right|4}} ஜீவ:{{gap+|5}} குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ; அழுவையே லாற்றேன்; நீயழல் இதுவரைக் கண்டது மிலை; யான் கேட்டது மிலையே. பெண்களின் பேதைமை யென்னே! தங்களைப் {{gap+|5}}60{{gap+|1}} பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும், விழுமம் விளைத்துத் தாமே யழுவர். என்னே யவர்தம் ஏழைமை! மின்னேய் (வாணியை நோக்கி) மருங்குல் வாணி வாராய் இப்புறம் அருங்கலை யாய்ந்தநின் தந்தைசொன் மதியும் {{gap+|5}}65{{gap+|1}} உன்புத் தியுமுகுத் துழல்வதென் வம்பில்? நலமே சிறந்த குலமே பிறந்த பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன் தன்னை நீ விடுத்துப் பின்னையோர் பித்தனை நச்சிய தென்னை? ச்சீ! நகையே யாகும் நீசெயும் வகையே. {{float_right|5}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உஞற்ற - செய்வதற்கு. மதி குலம் - சந்திரகுலம், பாண்டியர் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர். விழுமம் - துன்பம். உகுத்து - உதிர்த்து. வம்பில் - வீணில். {{dhr|3em}}<noinclude></noinclude> n0k9nsp20q5vdz0fharss4r2tbllfrn 1840152 1840151 2025-07-08T01:40:09Z Info-farmer 232 60{{gap+|1}} 1840152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||83}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}45{{gap+|1}} வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையுந் தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன் எங்கும் கலந்த இயல்பா லன்றோ மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்! உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில், {{gap+|5}}50{{gap+|1}} எதுவோ வுறுதி யியம்பாய்? மதிகுலம் விளங்க வருமனோன் மணியே! {{float_right|3}} மனோன்மணி:{{gap+|-2}} (கண்ணீர் துளும்பி) எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு வந்த தன்று; மேல் வருவது மிலை; இலை. உரைக்கற் பாற்றதொன் றில்லை. {{gap+|5}}55{{gap+|1}}உரைப்பதெப் படியான் உணரா தொழியிலே? {{float_right|4}} ஜீவ:{{gap+|5}} குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ; அழுவையே லாற்றேன்; நீயழல் இதுவரைக் கண்டது மிலை; யான் கேட்டது மிலையே. பெண்களின் பேதைமை யென்னே! தங்களைப் {{gap+|5}}60{{gap+|1}} பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும், விழுமம் விளைத்துத் தாமே யழுவர். என்னே யவர்தம் ஏழைமை! மின்னேய் (வாணியை நோக்கி) மருங்குல் வாணி வாராய் இப்புறம் அருங்கலை யாய்ந்தநின் தந்தைசொன் மதியும் {{gap+|5}}65{{gap+|1}} உன்புத் தியுமுகுத் துழல்வதென் வம்பில்? நலமே சிறந்த குலமே பிறந்த பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன் தன்னை நீ விடுத்துப் பின்னையோர் பித்தனை நச்சிய தென்னை? ச்சீ! 70{{gap+|1}} நகையே யாகும் நீசெயும் வகையே. {{float_right|5}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} உஞற்ற - செய்வதற்கு. மதி குலம் - சந்திரகுலம், பாண்டியர் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர். விழுமம் - துன்பம். உகுத்து - உதிர்த்து. வம்பில் - வீணில். {{dhr|3em}}<noinclude></noinclude> it16w1f5rzgvr5v3vfu4a4zgqs2kqqk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/84 250 535324 1840153 1830779 2025-07-08T01:44:30Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|84||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வாணி:{{gap+|4}} அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே நிகழுமென் சிறிய நினைவெலாம் விரித்து விநயமாய் நின்பால் விளம்ப எனது நாணம் நாவெழா தடக்கு மாயினும் {{gap+|5}}75{{gap+|1}} பேணி யொருமொழி பேசுவன், நேசமில் வதுவை நாசகா ரணமே. {{float_right|6}} ஜீவ:{{gap+|5}} புதுமைநீ புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப் பெற்றா ராற்றுவர்; ஆற்றிய வழியே தையலார் மையலாய் நேயம் பூண்டு {{gap+|5}}80{{gap+|1}} வாழ்வது கடமை. அதனில் தாழ்வது தகுதியோ தருமமோ? சாற்றே. {{float_right|7}} வா:{{gap+|5}} கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்; ஆயினும் ஐயமொன் றுண்டு; நேயமும் ஆக்கப் படும்பொரு ளாமோ? நோக்கில் {{gap+|5}}85{{gap+|1}} துன்பே நிறையும் மன்பே ருலகாம் எரியுங் கானல் வரியும் பாலையில் திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது தங்கி அங்கவர் அங்கங் குளிரத் தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில் {{gap+|5}}90{{gap+|1}} நேருந் தாகம் நீக்குவான் நிமல ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும், ஆறலைக் கள்வர் அறுபகை மீறில் உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும் முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில் {{gap+|5}}95{{gap+|1}} ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும், இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி, இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி, </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வினயம் - பணிவு. நேசம் இல் - அன்பு இல்லாத. ஆற்றுவர் - செய்வர். கற்பனைக்கு - கட்டளைக்கு. கானல் - வெப்பம். பாலை - பாலைநிலம். தாருவாய் - மரமாய். நிமல ஊற்று - நிர்மல ஊற்று; சுத்தமான ஊற்றுநீர். ஆறலை கள்வர் - வழிப்பறி செய்யும் கள்வர். அயர்ச்சி - சோர்வு. இகம் - இம்மை, இவ்வுலக வாழ்க்கை. {{dhr|3em}}<noinclude></noinclude> hu26oi29t490hbqlfczhvw92nkn2c1i பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/85 250 535325 1840154 1830780 2025-07-08T01:47:54Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||85}}{{rule}}</b></noinclude><poem><b> பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய், இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய், {{gap+|5}}100{{gap+|1}} நின்ற காதலின் நிலைமை, நினையில், இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பா யுருகி ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால் ஆக்கப் படும்பொரு ளாமோ? {{gap+|5}}105{{gap+|1}}வீக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே! {{float_right|8}} ஜீவ:{{gap+|5}} ஆமோ அன்றோ யாமஃ தறியேம். பிஞ்சிற் பழுத்த பேச்சொழி, மிஞ்சலை. மங்கைய ரென்றுஞ் சுதந்தர பங்கர். பேதையர். எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர். {{gap+|5}}110{{gap+|1}} முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ பெரிது? மற் றவர் தமில் உன்னயம் பேண உரியவர் யாவர்? ஓதிய படியே பலதே வனுக்கே உடன்படல் கடமை. வா:{{gap+|5}} இலையெனில்? ஜீவ:{{gap+|4}} கன்னியா யிருப்பாய் என்றும், வா:{{gap+|1}}115{{gap+|1}} சம்மதம். ஜீவ:{{gap+|5}} கிணற்றிலோர் மதிகொடு சாடில் எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய்! கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்? அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்? வா:{{gap+|5}} விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்? ஜீவ:{{gap+|1}}120{{gap+|2}} நானே பிடித்த முயற்கு மூன்றுகால் ஆனால் எங்ஙனம்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பரம் - மறுமை, மறுவுலக வாழ்க்கை. வீக்கிய - கட்டிய. கழற்கால் - வீரக்கழலை யணிந்த கால். மிஞ்சலை - மீறாதே. சுதந்தர பங்கம் - சுதந்தரம் இல்லாமல். பங்கம் - குறைவு. சாடில் - விழுந்தால். விரை - மணம்; வாசனை. கறையான் - சிதல். {{dhr|3em}}<noinclude></noinclude> pe3lufzsersihmny0hqc5biar8nef7l 1840155 1840154 2025-07-08T01:49:07Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||85}}{{rule}}</b></noinclude><poem><b> பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய், இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய், {{gap+|5}}100{{gap+|1}}நின்ற காதலின் நிலைமை, நினையில், இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பா யுருகி ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால் ஆக்கப் படும்பொரு ளாமோ? {{gap+|5}}105{{gap+|1}}வீக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே! {{float_right|8}} ஜீவ:{{gap+|5}} ஆமோ அன்றோ யாமஃ தறியேம். பிஞ்சிற் பழுத்த பேச்சொழி, மிஞ்சலை. மங்கைய ரென்றுஞ் சுதந்தர பங்கர். பேதையர். எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர். {{gap+|5}}110{{gap+|1}}முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ பெரிது? மற் றவர் தமில் உன்னயம் பேண உரியவர் யாவர்? ஓதிய படியே பலதே வனுக்கே உடன்படல் கடமை. வா:{{gap+|5}} இலையெனில்? ஜீவ:{{gap+|4}} கன்னியா யிருப்பாய் என்றும், வா:{{gap+|1}}115{{gap+|1}} சம்மதம். ஜீவ:{{gap+|5}} கிணற்றிலோர் மதிகொடு சாடில் எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய்! கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்? அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்? வா:{{gap+|5}} விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்? ஜீவ:{{gap+|1}}120{{gap+|2}} நானே பிடித்த முயற்கு மூன்றுகால் ஆனால் எங்ஙனம்? </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பரம் - மறுமை, மறுவுலக வாழ்க்கை. வீக்கிய - கட்டிய. கழற்கால் - வீரக்கழலை யணிந்த கால். மிஞ்சலை - மீறாதே. சுதந்தர பங்கம் - சுதந்தரம் இல்லாமல். பங்கம் - குறைவு. சாடில் - விழுந்தால். விரை - மணம்; வாசனை. கறையான் - சிதல். {{dhr|3em}}<noinclude></noinclude> j4yolfd9pogwpo1ipwn4bmeljbya5rd பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/86 250 535326 1840156 1831951 2025-07-08T01:53:55Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|86||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> வா:{{gap+|5}} அரிவையர் பிழைப்பர்? (சேடி வர) சேடி:{{gap+|4}} சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில். கால நோக்கினர். ஜீவ:{{gap+|5}} சாலவு மினிதே; ஆசனங் கொணர்தி. (வாணியை நோக்கி) யோசனை வேண்டாம்;) {{gap+|5}}125{{gap+|1}} எப்படி யாயினுங் சகடர் சொற்படி நடத்துவம் மன்றல். நன்குநீ யுணர்தி. ஆயினுந் தந்தனம் ஐந்துநாள். ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே. {{float_right|9}} வா:{{gap+|6}} இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன். {{gap+|5}}130{{gap+|1}} பொறுத்தருள் யானிவண் புகன்ற மறுத்துரை யனைத்தும் மாற்றல ரேறே. {{float_right|10}} (சுந்தரமுனிவர் வர) ஜீவ:{{gap+|4}} (முனிவரைத் தொழுது) வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி. இருந்தரு ளுதியெம் இறைவ! பரிந்துநீ வந்ததெம் பாக்கியப் பயனே. {{float_right|11}} சுந்தர:{{gap+|1}} (மனோன் மணியை நோக்கி) {{gap+|5}}135{{gap+|1}} தீதிலை யாதும்? க்ஷேமமே போலும். ஏதோ மனோன்மணி! ஓதாய் வேறுபா டாய்நீ விளங்குமாறே. {{float_right|12}} மனோன்மணி:{{gap+|-1}} (வணங்கி) கருணையே யுருவாய் வருமுனீ சுரரே எல்லா மறியும் உம்பாற் {{gap+|5}}140{{gap+|1}}சொல்ல வல்லதொன் றில்லை. சுகமே. {{float_right|13}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மாற்றலர் ஏறு - பகைவருக்கு ஏறு போன்றவன். {{dhr|3em}}<noinclude></noinclude> mjuq96d9norp1etjylt605h56ubyjdb பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/87 250 535327 1840157 1831952 2025-07-08T01:55:58Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||87}}{{rule}}</b></noinclude><poem><b> செவிலி:{{gap+|2}} (மனோன்மணியை நோக்கி) கரும்போ, யாங்கள் விரும்புங் கனியே! முனிவர் பாலுநீ யொளிப்பையே லினியிங்கு யார்வயி னுரைப்பாய்! ஐயோ! இதுவென்? (முனிவரை நோக்கி) ஆர்வமும் ஞானமும் அணிகல னாக்கொள் {{gap+|5}}145{{gap+|1}} தேசிக வடிவே! செப்புமா றறிகிலம் மாசறு மனோன்மணி தன்னுரு மாறி நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம். மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்; நண்ணாள் ஊசலும்; எண்ணாள் பந்தும்; {{gap+|5}}150{{gap+|1}} முடியாள் குழலும்; படியாள் இசையும்; தடவாள் யாழும்; நடவாள் பொழிலும்; அணியாள் பணியும்; பணியாள் ஏவலும்; மறந்தாள் கிளியும்; துறந்தாள் அனமும்; தூங்குவள் போன்றே ஏங்குவள்; எளியை! {{gap+|5}}155{{gap+|1}} நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை; கேட்டுங் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்; மீட்டுங் கேட்பள்; மீட்டும் பார்ப்பள்; தனியே யிருப்பள்; தனியே சிரிப்பள்! விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த் தழுவள்; {{gap+|5}}160{{gap+|1}} இங்ஙன மிருக்கில் எங்ஙன மாமோ? வாணியும் யானும் வருந்திக் கேட்டும் பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள். அரசன் கேட்டும் உரைத்திலள். அன்பாய் முனிவ! நீ வினவியும் மொழியா ளாயின் {{gap+|5}}165{{gap+|1}} எவருடன் இனிமேல் இசைப்பள்? தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே! {{float_right|14}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} யார்வயின் - யாரிடத்தில். மண்ணாள் - கழுவாள்; நீராடாள். மேனி - உடம்பு. குழல் - கூந்தல். தடவாள் – வாசிக்கமாட்டாள். பணி - நகை. பணியாள் - கட்டளையிடமாட்டாள். அனம் - அன்னம்; உணவு. (இடைக்குறை). {{dhr|3em}}<noinclude></noinclude> 5z12lc4m71l4eyhsq5r2fc3pgs24vhc பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/88 250 535328 1840158 1830116 2025-07-08T02:02:35Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|88||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சுந்தர:{{gap+|5}}(ஜீவகனை நோக்கி) குழவிப் பருவம் நழுவுங் காலை களிமிகு கன்னிய ருளமும் வாக்கும் புளியம் பழமுந் தோடும் போலாம். 170{{gap}}காதல் வெள்ளங் கதித்துப் பரந்து மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட இருகரை புரண்டு பெருமூச் செறியில், எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை? தாதா அன்பு போதா தாகும் 175{{gap}}காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி சாலவும் மறந்தனை போலும். தழைத்துப் படர்கொடி பருவம் அணையில், நட்ட இடமது துறந்துநல் லின்ப மெய்த அருகுள் தருவை யவாவும் அடையின் {{gap+|4}} 180{{gap+|1}}முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும் அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்; இலையெனில் நலமிழந் தொல்கும். அதனால் நிசிதவே லரசா டவியில் உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. {{float_right|15}} ஜீவ:{{gap+|1}}185{{gap+|2}} எங்குல குருவே! இயம்பிய தொவ்வும். எங்குள திக்கொடிக் கிசைந்த பொங்கெழில் பொலியும் புரையறு தருவே. {{float_right|16}} சுந்தர:{{gap+|4}} உலகுள் மற்றை யரசெலாம் நலமில் கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய, {{gap+|4}}190{{gap}}சகமெலாந்{{gap+|1}} தங்க நிழலது பரப்பித் தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து, புகழ்மணங் கமழுங் குணம்பல பூத்து, துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} நண்ணும் - அடையும். தரு - மரம். முருகு - அழகு; மணம்; தேன். ஒல்கும் - தளரும். நிசிதவேல் - கூர்மையான வேலையுடைய. அரசாடவி - அரசராகிய காட்டில். புரையறு - குற்றம் அற்ற கள்ளி - கள்ளிச் செடிகள். கருவேற்காடு - முள்ளையுடைய கருவேலமரக்காடு. துன்னலர் - பகைவர். துனி - வருத்தம். துடைப்பான் – தீர்க்கும் பொருட்டு. {{dhr|3em}}<noinclude></noinclude> iej9nk9b7rfsztl4e06wh0vxv2dt5fm பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/89 250 535329 1840159 1831953 2025-07-08T02:08:34Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||89}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}195{{gap+|1}} கனியுங் கருணையே கனியாக் காய்த்து, தருமநா டென்னும் ஒருநா மங்கொள் திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப் புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன் நீங்கி லில்லை நினது {{gap+|5}}200{{gap+|1}}பூங்கொடி படரப் பாங்காந் தருவே. {{float_right|17}} ஜீவ:{{gap+|6}}நல்லது! தேவரீர் சொல்லிய படியே, இடுக்கண் களைந்த இறைவ! நடத்துவன் யோசனை பண்ணி நன்றே. {{float_right|18}} சுந்தர:{{gap+|5}} யோசனை வேண்டிய தன்று. நடேசன் {{gap+|5}}205{{gap+|1}} என்றுள னொருவன். ஏவில், சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே. {{float_right|19}} ஜீவ:{{gap+|5}} கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி சுந்தர:{{gap+|4}} (எழுந்து) அரகர! குருபர! கிருபா நிதியே! காவாய் காவலன் ஈன்ற {{gap+|5}}210{{gap+|1}}பாவையை நீயே காவாய் பசுபதே ! {{float_right|20}} (சுந்தரமுனிவர் போக) ஜீவ:{{gap+|5}} தொழுதோம்; தொழுதோம். செவிலி! யவ்வறைக் கெழுதுங் கருவிகள் கொணராய் பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே. (ஜீவகன் முதலியோர் போக) </b></poem> {{c|<b>முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.</b>}} {{dhr|3em}} {{rule|15em|align=left}} திருவாழ்கோடு - திருவாங்கூர் இராச்சியம். இது சேரநாட்டைச் சேர்ந்தது. நீங்கில் - தவிர்ந்தால். இடுக்கண் – துன்பம். களைந்த - நீக்கிய. ஏவில் - ஏவினால். பரிந்து - விரைந்து. {{dhr}}<noinclude></noinclude> 18qt87624p0fhrzsivnv84iacg5xr7m 1840160 1840159 2025-07-08T02:09:37Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||89}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}195{{gap+|1}} கனியுங் கருணையே கனியாக் காய்த்து, தருமநா டென்னும் ஒருநா மங்கொள் திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப் புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன் நீங்கி லில்லை நினது {{gap+|5}}200{{gap+|1}}பூங்கொடி படரப் பாங்காந் தருவே. {{float_right|17}} ஜீவ:{{gap+|6}}நல்லது! தேவரீர் சொல்லிய படியே, இடுக்கண் களைந்த இறைவ! நடத்துவன் யோசனை பண்ணி நன்றே. {{float_right|18}} சுந்தர:{{gap+|5}} யோசனை வேண்டிய தன்று. நடேசன் {{gap+|5}}205{{gap+|1}} என்றுள னொருவன். ஏவில், சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே. {{float_right|19}} ஜீவ:{{gap+|5}} கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி சுந்தர:{{gap+|4}} (எழுந்து) அரகர! குருபர! கிருபா நிதியே! காவாய் காவலன் ஈன்ற {{gap+|5}}210{{gap+|1}}பாவையை நீயே காவாய் பசுபதே ! {{float_right|20}} (சுந்தரமுனிவர் போக) ஜீவ:{{gap+|5}} தொழுதோம்; தொழுதோம். செவிலி! யவ்வறைக் கெழுதுங் கருவிகள் கொணராய் பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே. (ஜீவகன் முதலியோர் போக) </b></poem> {{c|<b>முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.</b>}} {{dhr|3em}} {{rule|15em|align=left}} திருவாழ்கோடு - திருவாங்கூர் இராச்சியம். இது சேரநாட்டைச் சேர்ந்தது. நீங்கில் - தவிர்ந்தால். இடுக்கண் – துன்பம். களைந்த - நீக்கிய. ஏவில் - ஏவினால். பரிந்து - விரைந்து. {{dhr}}<noinclude></noinclude> ha795oiaync5k6jbbpsr9s3nawktyee 1840161 1840160 2025-07-08T02:10:13Z Info-farmer 232 - துப்புரவு 1840161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||89}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}195{{gap+|1}} கனியுங் கருணையே கனியாக் காய்த்து, தருமநா டென்னும் ஒருநா மங்கொள் திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப் புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன் நீங்கி லில்லை நினது {{gap+|5}}200{{gap+|1}}பூங்கொடி படரப் பாங்காந் தருவே. {{float_right|17}} ஜீவ:{{gap+|6}}நல்லது! தேவரீர் சொல்லிய படியே, இடுக்கண் களைந்த இறைவ! நடத்துவன் யோசனை பண்ணி நன்றே. {{float_right|18}} சுந்தர:{{gap+|5}} யோசனை வேண்டிய தன்று. நடேசன் {{gap+|5}}205{{gap+|1}} என்றுள னொருவன். ஏவில், சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே. {{float_right|19}} ஜீவ:{{gap+|5}} கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி சுந்தர:{{gap+|4}} (எழுந்து) அரகர! குருபர! கிருபா நிதியே! காவாய் காவலன் ஈன்ற {{gap+|5}}210{{gap+|1}}பாவையை நீயே காவாய் பசுபதே ! {{float_right|20}} (சுந்தரமுனிவர் போக) ஜீவ:{{gap+|5}} தொழுதோம்; தொழுதோம். செவிலி! யவ்வறைக் கெழுதுங் கருவிகள் கொணராய் பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே. (ஜீவகன் முதலியோர் போக) </b></poem> {{c|<b>முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.</b>}} {{dhr|3em}} {{rule|15em|align=left}} திருவாழ்கோடு - திருவாங்கூர் இராச்சியம். இது சேரநாட்டைச் சேர்ந்தது. நீங்கில் - தவிர்ந்தால். இடுக்கண் – துன்பம். களைந்த - நீக்கிய. ஏவில் - ஏவினால். பரிந்து - விரைந்து. {{dhr}}<noinclude></noinclude> 1tdlr529hgyflabwfd67g6lj3b922sv பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/90 250 535330 1840162 1831954 2025-07-08T02:14:56Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{c| {{x-larger|<b>ஐந்தாம் களம்</b>}} இடம் : <b>குடிலன் மனை.</b> காலம்: <b>மாலை</b>. (குடிலன் உலாவ.) <b>(இணைக்குறள் ஆசிரியப்பா)</b> }} <poem><b> குடிலன்:{{gap+|4}} (தனிமொழி) புத்தியே சகல சக்தியும்! இதுவரை நினைத்தவை யனைத்தும் நிறைவே றினவே. உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த மதுரையாம் முதுநகர் விடுத்து மன்னனைப் {{gap+|5}}5{{gap+|1}} புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங் கட்டுவித் தோம்நம் இட்டமாம் வகையே நாமே யரசும் நாமே யாவும்; மன்னவன் நமது நிழலின் மறைந்தான்; பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்; {{gap+|5}}10{{gap+|1}} மதுரையை நெல்லை இனிமேல் வணங்குமோ? இதுதனக் கிறைவன் இறக்கில் யாரே அரச ராகுவர்? -{{gap2}} (மௌனம்) புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும் வெருளுவர். வெல்லார். ஆயினும் - {{gap+|5}}15{{gap+|1}} முழுதும் நம்மையே தொழும்வகை யிலையோ? கருவியுங் காலமும் அறியில் அரியதென்? ஆ! ஆ! அயர்த்தோம் அயர்த்தோம்! மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்றும் அயர்த்தோம்! ஆ! ஆ! ஆயிழை யொருவனைக் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பெட்பு - விருப்பம். 'பிடித்தால் கற்றை விட்டால் கூளம்' பழமொழி. வெருளுவர் - அஞ்சுவார்கள். அயர்த்தோம் - மறந்தோம். பற்றல் - பற்றுதல். {{dhr|3em}}<noinclude></noinclude> hojsfzsvvieqw8dcwsp6xuy4pq5fo70 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/91 250 535331 1840163 1831955 2025-07-08T02:17:48Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||91}}{{rule}}</b></noinclude> <poem><b> {{gap+|5}}20{{gap+|1}} கண்டு காமங் கொண்டவ ளல்லள்; பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள். அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படர்கொடி படரும்; பலதே வனையவள் இடமே பலமுறை யேவி லுடன்படல் {{gap+|5}}25{{gap+|1}} கூடும். கூடிலென் கூடா? யாவன் அஃதோ வருமொரு சேவகன்? (சேவகன் வர) சேவகன்:{{gap+|1}} ஜய! ஜய! விஜயீ பவகுடி லேந்திரா? (திருமுகம் கொடுக்க) குடி:{{gap+|5}} (வாசித்து நோக்கி) நல்ல தப்புறம் நில்லாய்; ஓ! ஓ! சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம் (சேவகன் ஒருசாரிருந்து தூங்க) {{gap+|5}}30{{gap+|1}} அடுத்தது போலும் இம்மணம், அவசியம் நடக்கும். நடக்கிலென்? நமக்கது நன்றே. அரசர்கட் காயுள் அற்பமென் றறைவர்; பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள் வாழான் வழுதி, வஞ்சி நாட் டார்க்குத் {{gap+|5}}35{{gap+|1}} தாழார் இந்நாட் டுள்ள ஜனங்களும். அதுவும் நன்றே - ஆயினுங் கால தாமதஞ் சாலவு மாகும்; வேறோரு தந்திரம் வேண்டும்; ஆ! ஆ! மாறன் மாண்டான்; மன்றலும் போனது; {{gap+|5}}40{{gap+|1}} சேரன் இறுமாப் புடையதோர் வீரன் ஆமெனப் பலரும் அறைவர். அதனால் நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன் மெள்ள அவன்றன் செருக்கினைக் கிள்ளிற் படைகொடு வருவன்; திண்ணம். பாண்டியன் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விழைந்தனள் - விரும்பினாள். வழுதி - பாண்டியன். மாறன் - பாண்டியன். இறுமாப்பு - செருக்கு. கொடுவருவன் - கொண்டு வருவான். திண்ணம் - உறுதி. {{dhr|3em}}<noinclude></noinclude> p118wg95wlp75qhntidjy1a4trp401i 1840164 1840163 2025-07-08T02:18:12Z Info-farmer 232 - துப்புரவு 1840164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||91}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} கண்டு காமங் கொண்டவ ளல்லள்; பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள். அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படர்கொடி படரும்; பலதே வனையவள் இடமே பலமுறை யேவி லுடன்படல் {{gap+|5}}25{{gap+|1}} கூடும். கூடிலென் கூடா? யாவன் அஃதோ வருமொரு சேவகன்? (சேவகன் வர) சேவகன்:{{gap+|1}} ஜய! ஜய! விஜயீ பவகுடி லேந்திரா? (திருமுகம் கொடுக்க) குடி:{{gap+|5}} (வாசித்து நோக்கி) நல்ல தப்புறம் நில்லாய்; ஓ! ஓ! சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம் (சேவகன் ஒருசாரிருந்து தூங்க) {{gap+|5}}30{{gap+|1}} அடுத்தது போலும் இம்மணம், அவசியம் நடக்கும். நடக்கிலென்? நமக்கது நன்றே. அரசர்கட் காயுள் அற்பமென் றறைவர்; பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள் வாழான் வழுதி, வஞ்சி நாட் டார்க்குத் {{gap+|5}}35{{gap+|1}} தாழார் இந்நாட் டுள்ள ஜனங்களும். அதுவும் நன்றே - ஆயினுங் கால தாமதஞ் சாலவு மாகும்; வேறோரு தந்திரம் வேண்டும்; ஆ! ஆ! மாறன் மாண்டான்; மன்றலும் போனது; {{gap+|5}}40{{gap+|1}} சேரன் இறுமாப் புடையதோர் வீரன் ஆமெனப் பலரும் அறைவர். அதனால் நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன் மெள்ள அவன்றன் செருக்கினைக் கிள்ளிற் படைகொடு வருவன்; திண்ணம். பாண்டியன் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} விழைந்தனள் - விரும்பினாள். வழுதி - பாண்டியன். மாறன் - பாண்டியன். இறுமாப்பு - செருக்கு. கொடுவருவன் - கொண்டு வருவான். திண்ணம் - உறுதி. {{dhr|3em}}<noinclude></noinclude> cn2nt9bdnhqdnou4z03h3ozu217emzr பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/93 250 535333 1840165 1831957 2025-07-08T02:21:00Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||93}}{{rule}}</b></noinclude><poem><b> (நேரிசை ஆசிரியப்பா) சேவ:{{gap+|4}} வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல் ஏழுல கெவற்றிலும் உண்டோ? {{gap+|5}}80{{gap+|1}} வாழ்க! எப்போதும் மங்கலம் வரவே. குடி:{{gap+|4}} (தனிமொழி) நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில் (சேவகன் போக) மதியிலி! என்னே மனிதர் மடமை! இதுவும் உதாரமாய் எண்ணினன்; இங்ஙனம் தருமந் தானம் என்றுல கறியுங் {{gap+|5}}85{{gap+|1}} கருமம் அனைத்துஞ் செய்பவன் கருத்தைக் காணின் நாணமாம்; அவரவர் தமக்கா எண்ணிய எண்ணம் எய்துவான் பலவும் பண்ணுவர் புண்ணியம் போல, எல்லாந் தந்நயங் கருதி யன்றித் தமைப்போற் {{gap+|5}}90{{gap+|1}} பின்னொரு வனையெணிப் பேணுவ ருளரோ? புண்ணியஞ் சீவகா ருண்ணிய மெனப்பல பிதற்றுதல் முற்றும் பித்தே, அலதேல் யாத்திரை போன நூற்றுவர், சோறடு பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக {{gap+|5}}95{{gap+|1}} ஒருவரை யொருவர் ஒளித்துப் பருமணல் இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு எட்டுமோ உலகின் கட்டைச் சிறுமதி? - ஆயினும், அரசனைப் போலிலை பேயர் பெரிய மேதினி யெங்குமே. </b></poem> {{c|<b>முதல் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.</b>}} {{dhr}} {{rule|15em|align=left}} வள்ளால் - வள்ளலே. உதாரம் - தயாளம். பருமணல் இட்ட கதை: இது கோமுட்டி பால் ஊற்றின கதை போன்றது. சில வழிப்போக்கர் சேர்ந்து ஒன்றாகச் சோறு சமைக்க எண்ணினர். உலையில் அவரவர் பங்கு அரிசியைப் போடவேண்டி யிருக்க, ஒவ்வொருவரும் மணலைப் பெய்த கதையைக் குறிக்கிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> qvu7ur7vl1188ft6uvdw1a6hypaaxjr 1840166 1840165 2025-07-08T02:21:34Z Info-farmer 232 5 1840166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||93}}{{rule}}</b></noinclude><poem><b> (நேரிசை ஆசிரியப்பா) சேவ:{{gap+|5}} வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல் ஏழுல கெவற்றிலும் உண்டோ? {{gap+|5}}80{{gap+|1}} வாழ்க! எப்போதும் மங்கலம் வரவே. குடி:{{gap+|5}} (தனிமொழி) நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில் (சேவகன் போக) மதியிலி! என்னே மனிதர் மடமை! இதுவும் உதாரமாய் எண்ணினன்; இங்ஙனம் தருமந் தானம் என்றுல கறியுங் {{gap+|5}}85{{gap+|1}} கருமம் அனைத்துஞ் செய்பவன் கருத்தைக் காணின் நாணமாம்; அவரவர் தமக்கா எண்ணிய எண்ணம் எய்துவான் பலவும் பண்ணுவர் புண்ணியம் போல, எல்லாந் தந்நயங் கருதி யன்றித் தமைப்போற் {{gap+|5}}90{{gap+|1}} பின்னொரு வனையெணிப் பேணுவ ருளரோ? புண்ணியஞ் சீவகா ருண்ணிய மெனப்பல பிதற்றுதல் முற்றும் பித்தே, அலதேல் யாத்திரை போன நூற்றுவர், சோறடு பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக {{gap+|5}}95{{gap+|1}} ஒருவரை யொருவர் ஒளித்துப் பருமணல் இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு எட்டுமோ உலகின் கட்டைச் சிறுமதி? - ஆயினும், அரசனைப் போலிலை பேயர் பெரிய மேதினி யெங்குமே. </b></poem> {{c|<b>முதல் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.</b>}} {{dhr}} {{rule|15em|align=left}} வள்ளால் - வள்ளலே. உதாரம் - தயாளம். பருமணல் இட்ட கதை: இது கோமுட்டி பால் ஊற்றின கதை போன்றது. சில வழிப்போக்கர் சேர்ந்து ஒன்றாகச் சோறு சமைக்க எண்ணினர். உலையில் அவரவர் பங்கு அரிசியைப் போடவேண்டி யிருக்க, ஒவ்வொருவரும் மணலைப் பெய்த கதையைக் குறிக்கிறது. {{dhr|3em}}<noinclude></noinclude> 8xdqrv75rdzyr9dhx7lwq09dayst2it பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/107 250 535347 1840167 1831958 2025-07-08T02:31:10Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{c|<b>{{x-larger|இரண்டாம் அங்கம்</b>}}}} {{c|<b>{{larger|முதற் களம்}}</b>}} {{c|இடம் : <b>அரண்மனை</b>.}} {{c|காலம்: <b>வைகறை</b>.}} {{c|(ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை)}} {{c|<b>(நேரிசை ஆசிரியப்பா</b>)}} <poem><b> ஜீவகன்: சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே! புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு மருமா னாக மதித்ததும் அவரே; என்றுங் குழந்தை யன்றே; மன்றல்</b></poem>}}5 5 விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது வரையும் மறதியா யிருந்தது தவறே யாம் இனித் தாமத மின்றியிம் மணமே கருமமாய்க் கருதி முடிப்பாம்; வருமுன் கருதும் மந்திர வமைச்சே! 1 குடிலன்: 10 இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் அறைவதெப் படியான்? அநேக நாளாப் பலமுறை நினைத்த துண்டிப் பரிசே; நலமுறப் புரிசை நன்கு முடியும் அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச் 15 சற்றும் மறந்தே னன்று; தனியே கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை விட்டுள தோஇனி வேறொரு காரியம்? புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன் காண்டகும் ஆண்டகை யென்றும், ஞானம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பொறையன் - சேர அரசன். ஆற்ற - செய்ய. மருமான் - மருமகன். மந்திரம் - சூழ்ச்சி, ஆலோசனை. அறைவது - சொல்லுவது. இப்பரிசு - இவ்விதம், இப்படி. அற்றம் - காலம். பொருநை - சேர நாட்டில் உள்ள ஒரு ஆறு. பொருநைத் துறைவன் - சேர அரசன். {{dhr|3em}}<noinclude></noinclude> 6edbtzcjqaxi53mbh49tm6v6jo9ktuo 1840168 1840167 2025-07-08T02:31:54Z Info-farmer 232 - துப்புரவு 1840168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sridharrv2000" /></noinclude> {{dhr|3em}} {{c|<b>{{x-larger|இரண்டாம் அங்கம்</b>}}}} {{c|<b>{{larger|முதற் களம்}}</b>}} {{c|இடம் : <b>அரண்மனை</b>.}} {{c|காலம்: <b>வைகறை</b>.}} {{c|(ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை)}} {{c|<b>(நேரிசை ஆசிரியப்பா</b>)}} <poem><b> ஜீவகன்: சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே! புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு மருமா னாக மதித்ததும் அவரே; என்றுங் குழந்தை யன்றே; மன்றல் 5 விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது வரையும் மறதியா யிருந்தது தவறே யாம் இனித் தாமத மின்றியிம் மணமே கருமமாய்க் கருதி முடிப்பாம்; வருமுன் கருதும் மந்திர வமைச்சே! 1 குடிலன்: 10 இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் அறைவதெப் படியான்? அநேக நாளாப் பலமுறை நினைத்த துண்டிப் பரிசே; நலமுறப் புரிசை நன்கு முடியும் அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச் 15 சற்றும் மறந்தே னன்று; தனியே கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை விட்டுள தோஇனி வேறொரு காரியம்? புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன் காண்டகும் ஆண்டகை யென்றும், ஞானம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பொறையன் - சேர அரசன். ஆற்ற - செய்ய. மருமான் - மருமகன். மந்திரம் - சூழ்ச்சி, ஆலோசனை. அறைவது - சொல்லுவது. இப்பரிசு - இவ்விதம், இப்படி. அற்றம் - காலம். பொருநை - சேர நாட்டில் உள்ள ஒரு ஆறு. பொருநைத் துறைவன் - சேர அரசன். {{dhr|3em}}<noinclude></noinclude> 08ktfmuu33nb21055ppe855pzox9b70 1840169 1840168 2025-07-08T02:33:51Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1840169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b>{{x-larger|இரண்டாம் அங்கம்</b>}}}} {{c|<b>{{larger|முதற் களம்}}</b>}} {{c|இடம் : <b>அரண்மனை</b>.}} {{c|காலம்: <b>வைகறை</b>.}} {{c|(ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை)}} {{c|<b>(நேரிசை ஆசிரியப்பா</b>)}} <poem><b> ஜீவகன்:{{gap+|4}} சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே! புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு மருமா னாக மதித்ததும் அவரே; என்றுங் குழந்தை யன்றே; மன்றல் {{gap+|5}}5{{gap+|2}}விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது வரையும் மறதியா யிருந்தது தவறே யாம் இனித் தாமத மின்றியிம் மணமே கருமமாய்க் கருதி முடிப்பாம்; வருமுன் கருதும் மந்திர வமைச்சே! {{float_right|1}} குடிலன்:{{gap+|1}}10{{gap+|1}} இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் அறைவதெப் படியான்? அநேக நாளாப் பலமுறை நினைத்த துண்டிப் பரிசே; நலமுறப் புரிசை நன்கு முடியும் அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச் {{gap+|5}}15{{gap+|1}} சற்றும் மறந்தே னன்று; தனியே கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை விட்டுள தோஇனி வேறொரு காரியம்? புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன் காண்டகும் ஆண்டகை யென்றும், ஞானம் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} பொறையன் - சேர அரசன். ஆற்ற - செய்ய. மருமான் - மருமகன். மந்திரம் - சூழ்ச்சி, ஆலோசனை. அறைவது - சொல்லுவது. இப்பரிசு - இவ்விதம், இப்படி. அற்றம் - காலம். பொருநை - சேர நாட்டில் உள்ள ஒரு ஆறு. பொருநைத் துறைவன் - சேர அரசன். {{dhr|3em}}<noinclude></noinclude> 7twda81qb62hv87738hk03pgscaacs2 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/108 250 535348 1840170 1830366 2025-07-08T02:41:52Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|108||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந் திரியுந் தவசிகள் உரைசெய யானுங் கேட்ட துண்டு; மற்றவன் நாட்டிற்கு இன்றே தூதுவ ரேவின், மங்கையை மன்றல் செய்வான் மனதோ வன்றோ {{gap+|5}}25{{gap+|1}} என்றியாம் அறியலாம் எளிதில். அறியார் பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும் இலை. இன் றேதூ தேவுவம் பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் {{float_right|பதிக்கே.2}} ஜீவ:{{gap+|4}} பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை? {{gap+|5}}30{{gap+|1}} பகருதி வெளிப்படப் பண்பாய் நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே ! {{float_right|3}} குடி:{{gap+|3}} எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்; கண்ணகன் ஞாலங் கழறும் பலவிதம். மணஞ்செய முதன்முதற் பேசி வருதல், {{gap+|5}}35இணங்கிய{{gap+|1}} ஆடவ ரில்லுள் ளாரே; அன்றி யாடவர்த் தேடி மன்றல் சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்; முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும் ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை? ஜீவ:{{gap+|1}}40கூடா{{gap+|1}} தஃதொரு காலும்; குடில! கேடாம் நமது கீர்த்திக் கென்றும்; மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்; என்னே ஆத்திரம்? நமது கன்னியை விழையும் மன்னருங் குறைவோ? {{float_right|4}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஞானம் மாண்ட - அறிவினால் மாட்சிமைப்பட்ட செய்வான் - செய்ய. ஏவுவம் - விடுப்போம். வேய்ந்தோன் - அணிந்தவன். அனந்தைப்பதி - திருவனந்தபுரம். மொழிப்பயன் - மொழியின் கருத்து. ஞாலம் உலகம். இங்கு ஆகுபெயராய் மக்களைக் குறித்தது. கழறும் - சொல்லும். ஆடவர் இல் - மணமகன் வீடு. மாசு - குற்றம், அழுக்கு. {{dhr|3em}}<noinclude></noinclude> e9333szvpgfi6uo5389qifjbxtrdsvv 1840171 1840170 2025-07-08T02:42:42Z Info-farmer 232 {{gap+|1}} 1840171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|108||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந் திரியுந் தவசிகள் உரைசெய யானுங் கேட்ட துண்டு; மற்றவன் நாட்டிற்கு இன்றே தூதுவ ரேவின், மங்கையை மன்றல் செய்வான் மனதோ வன்றோ {{gap+|5}}25{{gap+|1}} என்றியாம் அறியலாம் எளிதில். அறியார் பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும் இலை. இன் றேதூ தேவுவம் பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் {{float_right|பதிக்கே.2}} ஜீவ:{{gap+|4}} பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை? {{gap+|5}}30{{gap+|1}} பகருதி வெளிப்படப் பண்பாய் நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே ! {{float_right|3}} குடி:{{gap+|3}} எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்; கண்ணகன் ஞாலங் கழறும் பலவிதம். மணஞ்செய முதன்முதற் பேசி வருதல், {{gap+|5}}35இணங்கிய{{gap+|1}} ஆடவ ரில்லுள் ளாரே; அன்றி யாடவர்த் தேடி மன்றல் சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்; முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும் ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை? ஜீவ:{{gap+|1}}40{{gap+|1}} கூடா தஃதொரு காலும்; குடில! கேடாம் நமது கீர்த்திக் கென்றும்; மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்; என்னே ஆத்திரம்? நமது கன்னியை விழையும் மன்னருங் குறைவோ? {{float_right|4}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஞானம் மாண்ட - அறிவினால் மாட்சிமைப்பட்ட செய்வான் - செய்ய. ஏவுவம் - விடுப்போம். வேய்ந்தோன் - அணிந்தவன். அனந்தைப்பதி - திருவனந்தபுரம். மொழிப்பயன் - மொழியின் கருத்து. ஞாலம் உலகம். இங்கு ஆகுபெயராய் மக்களைக் குறித்தது. கழறும் - சொல்லும். ஆடவர் இல் - மணமகன் வீடு. மாசு - குற்றம், அழுக்கு. {{dhr|3em}}<noinclude></noinclude> brhp0grjxhvzsdtmm43fnmxvbbvu8n4 1840172 1840171 2025-07-08T02:45:06Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|108||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந் திரியுந் தவசிகள் உரைசெய யானுங் கேட்ட துண்டு; மற்றவன் நாட்டிற்கு இன்றே தூதுவ ரேவின், மங்கையை மன்றல் செய்வான் மனதோ வன்றோ {{gap+|5}}25{{gap+|1}} என்றியாம் அறியலாம் எளிதில். அறியார் பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும் இலை. இன் றேதூ தேவுவம் பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் {{float_right|பதிக்கே.2}} ஜீவ:{{gap+|5}} பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை? {{gap+|5}}30{{gap+|1}} பகருதி வெளிப்படப் பண்பாய் நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே ! {{float_right|3}} குடி:{{gap+|5}} எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்; கண்ணகன் ஞாலங் கழறும் பலவிதம். மணஞ்செய முதன்முதற் பேசி வருதல், {{gap+|5}}35{{gap+|1}} இணங்கிய ஆடவ ரில்லுள் ளாரே; அன்றி யாடவர்த் தேடி மன்றல் சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்; முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும் ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை? ஜீவ:{{gap+|1}}40{{gap+|3}} கூடா தஃதொரு காலும்; குடில! கேடாம் நமது கீர்த்திக் கென்றும்; மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்; என்னே ஆத்திரம்? நமது கன்னியை விழையும் மன்னருங் குறைவோ? {{float_right|4}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஞானம் மாண்ட - அறிவினால் மாட்சிமைப்பட்ட செய்வான் - செய்ய. ஏவுவம் - விடுப்போம். வேய்ந்தோன் - அணிந்தவன். அனந்தைப்பதி - திருவனந்தபுரம். மொழிப்பயன் - மொழியின் கருத்து. ஞாலம் உலகம். இங்கு ஆகுபெயராய் மக்களைக் குறித்தது. கழறும் - சொல்லும். ஆடவர் இல் - மணமகன் வீடு. மாசு - குற்றம், அழுக்கு. {{dhr|3em}}<noinclude></noinclude> e1yt0ju5bwudhyxyiihet0on8akkrh4 1840345 1840172 2025-07-08T08:12:39Z Info-farmer 232 பதிக்கே 1840345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|108||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந் திரியுந் தவசிகள் உரைசெய யானுங் கேட்ட துண்டு; மற்றவன் நாட்டிற்கு இன்றே தூதுவ ரேவின், மங்கையை மன்றல் செய்வான் மனதோ வன்றோ {{gap+|5}}25{{gap+|1}} என்றியாம் அறியலாம் எளிதில். அறியார் பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும் இலை. இன் றேதூ தேவுவம் பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே {{float_right|2}} ஜீவ:{{gap+|5}} பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை? {{gap+|5}}30{{gap+|1}} பகருதி வெளிப்படப் பண்பாய் நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே ! {{float_right|3}} குடி:{{gap+|5}} எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்; கண்ணகன் ஞாலங் கழறும் பலவிதம். மணஞ்செய முதன்முதற் பேசி வருதல், {{gap+|5}}35{{gap+|1}} இணங்கிய ஆடவ ரில்லுள் ளாரே; அன்றி யாடவர்த் தேடி மன்றல் சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்; முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும் ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை? ஜீவ:{{gap+|1}}40{{gap+|3}} கூடா தஃதொரு காலும்; குடில! கேடாம் நமது கீர்த்திக் கென்றும்; மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்; என்னே ஆத்திரம்? நமது கன்னியை விழையும் மன்னருங் குறைவோ? {{float_right|4}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஞானம் மாண்ட - அறிவினால் மாட்சிமைப்பட்ட செய்வான் - செய்ய. ஏவுவம் - விடுப்போம். வேய்ந்தோன் - அணிந்தவன். அனந்தைப்பதி - திருவனந்தபுரம். மொழிப்பயன் - மொழியின் கருத்து. ஞாலம் உலகம். இங்கு ஆகுபெயராய் மக்களைக் குறித்தது. கழறும் - சொல்லும். ஆடவர் இல் - மணமகன் வீடு. மாசு - குற்றம், அழுக்கு. {{dhr|3em}}<noinclude></noinclude> eiludw4uium96cejrkmt1skkp4of4ng 1840390 1840345 2025-07-08T10:58:55Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|108||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}20{{gap+|1}} மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந் திரியுந் தவசிகள் உரைசெய யானுங் கேட்ட துண்டு; மற்றவன் நாட்டிற்கு இன்றே தூதுவ ரேவின், மங்கையை மன்றல் செய்வான் மனதோ வன்றோ {{gap+|5}}25{{gap+|1}} என்றியாம் அறியலாம் எளிதில். அறியார் பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும் இலை. இன் றேதூ தேவுவம் பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே {{float_right|2}} ஜீவ:{{gap+|5}} பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை? {{gap+|5}}30{{gap+|1}} பகருதி வெளிப்படப் பண்பாய் நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே ! {{float_right|3}} குடி:{{gap+|5}} எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்; கண்ணகன் ஞாலங் கழறும் பலவிதம். மணஞ்செய முதன்முதற் பேசி வருதல், {{gap+|5}}35{{gap+|1}} இணங்கிய ஆடவ ரில்லுள் ளாரே; அன்றி யாடவர்த் தேடி மன்றல் சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்; முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும் ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை? ஜீவ:{{gap+|1}}40{{gap+|3}} கூடா தஃதொரு காலும்; குடில! கேடாம் நமது கீர்த்திக் கென்றும்; மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்; என்னே ஆத்திரம்? நமது கன்னியை விழையும் மன்னருங் குறைவோ? {{float_right|4}} </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} ஞானம் மாண்ட - அறிவினால் மாட்சிமைப்பட்ட செய்வான் - செய்ய. ஏவுவம் - விடுப்போம். வேய்ந்தோன் - அணிந்தவன். அனந்தைப்பதி - திருவனந்தபுரம். மொழிப்பயன் - மொழியின் கருத்து. ஞாலம் உலகம். இங்கு ஆகுபெயராய் மக்களைக் குறித்தது. கழறும் - சொல்லும். ஆடவர் இல் - மணமகன் வீடு. மாசு - குற்றம், அழுக்கு. {{dhr|3em}}<noinclude></noinclude> 71yhejcrmcmkvd0euhamlafhz7leuo7 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/109 250 535349 1840289 1830367 2025-07-08T06:53:15Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||109}}{{rule}}</b></noinclude><poem><b> குடி:{{gap+|3}}45{{gap+|1}} குறைவோ அதற்கும் இறைவ! ஓஹோ! மூவருந் தேவரும் யாவரும் விரும்புநங் கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக் கணக்கிட லாமோ? கலிங்கன், சோழன், கன்னடன் வடிவில் ஒவ்வார்; காந்தர் {{gap+|5}}50{{gap+|1}} மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன் குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற் கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்; வணங்கலில் நிடதன்; மராடன் கல்வியில் நேரான்; மகதன் தீராத் தரித்திரன்; {{gap+|5}}55{{gap+|1}} இன்னம் பலரும் இங்ஙனம் நமது கன்னியை விழைந்துங் கல்வி வடிவு குணம்பலங் குலம்பொரு ளென்றிவை பலவும் இணங்கா ரேமாந் திருந்தார். அரசருள் கொங்கன் றனக்கே இங்கிவை யாவும் {{gap+|5}}60{{gap+|1}} பொருத்த மாயினும் இதுவரைப் பாலியன், ஆகையில் இவ்வயின் அணைந்திலன். எங்ஙனந் திருத்தமா யவன்கருத் தறிந்திடு முன்னம் ஏவுதுந் தூதரை? ஏதில னன்றே. ஜீவ:{{gap+|5}} படுமோ அஃதொரு காலும்? குடில! {{gap+|5}}65{{gap+|1}} மற்றவன் கருத்தினை யுணர உற்றதோ ருபாயம் என்னுள் துரையே. {{float_right|5}} குடி:{{gap+|5}} உண்டு பலவும் உபாயம்; பண்டே இதனைக் கருதியே யிருந்தேன்; புதிய கடிபுரி முடியும் முன்னர்க் கழறல் {{gap+|5}}70{{gap+|1}} தகுதி யன்றெனக் கருதிச் சாற்றா தொழிந்தேன் மாற்றல ரேறே ஜீவ:{{gap+|5}} நல்லது! குடில! இல்லை யுனைப்போல் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மூவர்-அயன் அரி அரன் என்னும் மூவர். கொழுந்து-குலக் கொழுந்தாகிய மனோன்மணி. காந்தர் - காந்தார தேசம். மச்சன் - மச்ச தேசத்து அரசன். இணங்கார் - பொருந்தாதவர். கொங்கன் - கொங்கு நாட்டரசன். இவ்வயின் - இவ்விடத்தில், கடிபுரி -காவல் அமைந்த கோட்டை. சாற்றாது - சொல்லாமல். {{dhr|3em}}<noinclude></noinclude> 9ci6zwqf3pqlm3xzya5fidgzonsj3lm 1840392 1840289 2025-07-08T11:00:41Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||109}}{{rule}}</b></noinclude><poem><b> குடி:{{gap+|3}}45{{gap+|1}} குறைவோ அதற்கும் இறைவ! ஓஹோ! மூவருந் தேவரும் யாவரும் விரும்புநங் கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக் கணக்கிட லாமோ? கலிங்கன், சோழன், கன்னடன் வடிவில் ஒவ்வார்; காந்தர் {{gap+|5}}50{{gap+|1}} மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன் குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற் கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்; வணங்கலில் நிடதன்; மராடன் கல்வியில் நேரான்; மகதன் தீராத் தரித்திரன்; {{gap+|5}}55{{gap+|1}} இன்னம் பலரும் இங்ஙனம் நமது கன்னியை விழைந்துங் கல்வி வடிவு குணம்பலங் குலம்பொரு ளென்றிவை பலவும் இணங்கா ரேமாந் திருந்தார். அரசருள் கொங்கன் றனக்கே இங்கிவை யாவும் {{gap+|5}}60{{gap+|1}} பொருத்த மாயினும் இதுவரைப் பாலியன், ஆகையில் இவ்வயின் அணைந்திலன். எங்ஙனந் திருத்தமா யவன்கருத் தறிந்திடு முன்னம் ஏவுதுந் தூதரை? ஏதில னன்றே. ஜீவ:{{gap+|5}} படுமோ அஃதொரு காலும்? குடில! {{gap+|5}}65{{gap+|1}} மற்றவன் கருத்தினை யுணர உற்றதோ ருபாயம் என்னுள் துரையே. {{float_right|5}} குடி:{{gap+|5}} உண்டு பலவும் உபாயம்; பண்டே இதனைக் கருதியே யிருந்தேன்; புதிய கடிபுரி முடியும் முன்னர்க் கழறல் {{gap+|5}}70{{gap+|1}} தகுதி யன்றெனக் கருதிச் சாற்றா தொழிந்தேன் மாற்றல ரேறே ஜீவ:{{gap+|5}} நல்லது! குடில! இல்லை யுனைப்போல் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} மூவர்-அயன் அரி அரன் என்னும் மூவர். கொழுந்து-குலக் கொழுந்தாகிய மனோன்மணி. காந்தர் - காந்தார தேசம். மச்சன் - மச்ச தேசத்து அரசன். இணங்கார் - பொருந்தாதவர். கொங்கன் - கொங்கு நாட்டரசன். இவ்வயின் - இவ்விடத்தில், கடிபுரி -காவல் அமைந்த கோட்டை. சாற்றாது - சொல்லாமல். {{dhr|3em}}<noinclude></noinclude> bnkv1p95145q287mlcy40zx4y90jazg பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/110 250 535350 1840290 1830368 2025-07-08T06:54:51Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|110||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> எங்குஞ் சூழ்ச்சித் துணைவர். பங்கமி லுபாயம் என்கொல்? பகரே. {{float_right|7}} குடி:{{gap+|3}}75{{gap+|1}} வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச் செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுளது. அதன் அந்தமில் பெருவளம் அறியார் யாரே? மருதமும் நெய்தலும் மயங்கியங் கெங்கும் புரையரு செல்வம் நிலைபெற வளரும்; {{gap+|5}}80{{gap+|1}} மழலைவண் டானம் புலர்மீன் கவர, ஓம்புபு நுளைச்சியர் எறிகுழை, தேன்பொழி புன்னைநுண் தாதாற் பொன்னிறம் பெற்ற எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும் அலைகடற் காக்கைக் கலக்கண் விளைக்கும்; {{gap+|5}}85{{gap+|1}} கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித் தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கலர்த் தாதே; </b></poem> {{rule|15em|align=left}} பங்கம்இல் - குற்றம் இல்லாத. வஞ்சிநாடு - வஞ்சி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட சேரநாடு. நன்செய் நாடு - நாஞ்சில் நாடு. செழிப்பான நன்செய் நிலம் உடையது பற்றி நாஞ்சில் நாடு எனப்பெயர் பெற்றுள்ளது. (நாஞ்சில் - ஏர்.) (75 முதல் 144-ஆம் வரி வரையில் நாஞ்சில் நாட்டை நூலாசிரியர் குடிலன் என்னும் நாடக உறுப்பினன் வாயிலாகப் புகழ்ந்து பேசுகிறார்.) அந்தம் இல் - முடிவு இல்லாத மருதம் - வயல் சூழ்ந்த இடம். நெய்தல் - கடல் சார்ந்த இடம். மயங்கி - கலந்து. வண்டானம் - நாரை. புலர்மீன் - நெய்தல் நில மக்கள் மணலில் உலர்த்தும் மீன். ஓம்புபு-காக்க. நுளைச்சியர் - பரதவ சாதிப் பெண்கள். இருஞ்சிறை - நீண்ட சிறகுகளை. புலர்த்தும் உலர்த்துகின்ற. அலக்கண் - துன்பம். கேதகை - தாழை. தாரா - வாத்து. (வரி 85-87) நீரோடையின் கரையில் வளர்ந்த தாழைப் புதரில் பூத்த தாழம்பூவின் நிழல், தண்ணீரில் வாத்தின் உருவம் போலத் தோன்ற, அதுகண்ட தாரா அதனைத் தழுவிற்று. தாராவின் அறியாமையைக் கண்ட ஆம்பல் வாய்திறந்து சிரித்தது. சிரித்தபோது அதன் உள்ளிருந்த பூந்துகள் சிந்தின. {{dhr|3em}}<noinclude></noinclude> mi08nyzzduhnw6mlbgqgj3s8xdtpii1 1840394 1840290 2025-07-08T11:02:15Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|110||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> எங்குஞ் சூழ்ச்சித் துணைவர். பங்கமி லுபாயம் என்கொல்? பகரே. {{float_right|7}} குடி:{{gap+|3}}75{{gap+|1}} வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச் செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுளது. அதன் அந்தமில் பெருவளம் அறியார் யாரே? மருதமும் நெய்தலும் மயங்கியங் கெங்கும் புரையரு செல்வம் நிலைபெற வளரும்; {{gap+|5}}80{{gap+|1}} மழலைவண் டானம் புலர்மீன் கவர, ஓம்புபு நுளைச்சியர் எறிகுழை, தேன்பொழி புன்னைநுண் தாதாற் பொன்னிறம் பெற்ற எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும் அலைகடற் காக்கைக் கலக்கண் விளைக்கும்; {{gap+|5}}85{{gap+|1}} கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித் தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கலர்த் தாதே; </b></poem> {{rule|15em|align=left}} பங்கம்இல் - குற்றம் இல்லாத. வஞ்சிநாடு - வஞ்சி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட சேரநாடு. நன்செய் நாடு - நாஞ்சில் நாடு. செழிப்பான நன்செய் நிலம் உடையது பற்றி நாஞ்சில் நாடு எனப்பெயர் பெற்றுள்ளது. (நாஞ்சில் - ஏர்.) (75 முதல் 144-ஆம் வரி வரையில் நாஞ்சில் நாட்டை நூலாசிரியர் குடிலன் என்னும் நாடக உறுப்பினன் வாயிலாகப் புகழ்ந்து பேசுகிறார்.) அந்தம் இல் - முடிவு இல்லாத மருதம் - வயல் சூழ்ந்த இடம். நெய்தல் - கடல் சார்ந்த இடம். மயங்கி - கலந்து. வண்டானம் - நாரை. புலர்மீன் - நெய்தல் நில மக்கள் மணலில் உலர்த்தும் மீன். ஓம்புபு-காக்க. நுளைச்சியர் - பரதவ சாதிப் பெண்கள். இருஞ்சிறை - நீண்ட சிறகுகளை. புலர்த்தும் உலர்த்துகின்ற. அலக்கண் - துன்பம். கேதகை - தாழை. தாரா - வாத்து. (வரி 85-87) நீரோடையின் கரையில் வளர்ந்த தாழைப் புதரில் பூத்த தாழம்பூவின் நிழல், தண்ணீரில் வாத்தின் உருவம் போலத் தோன்ற, அதுகண்ட தாரா அதனைத் தழுவிற்று. தாராவின் அறியாமையைக் கண்ட ஆம்பல் வாய்திறந்து சிரித்தது. சிரித்தபோது அதன் உள்ளிருந்த பூந்துகள் சிந்தின. {{dhr|3em}}<noinclude></noinclude> dbmgx5z3mx4x33sgm8dfnhmwa7jhsbu பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/111 250 535351 1840292 1830370 2025-07-08T06:58:08Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||111}}{{rule}}</b></noinclude><poem><b> வால்வளை சூலுளைந் தீன்றவெண் முத்தம் ஓதிமக் குடம்பையென் றுன்னுபு காலாற் {{gap+|5}}90{{gap+|1}} பருந்தினங் கவர்ந்துசென் றடம்பிடைப் புதைக்கும் கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக் கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்; அலமுகந் தாக்குழி யலமரும் ஆமை {{gap+|5}}95{{gap+|1}} நுளைச்சியர் கணவரோ டிழைத்திடும் ஊடலில் வழித்தெறி குங்குமச் சேற்றிடை யொளிக்கும்; பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடும் அன்றில் நளிமீன் கோட்பறை விளிகேட் டுறங்கா; வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில், {{gap+|5}}100{{gap+|1}} உப்பார் பஃறி யொருநிரை பிணிப்பர். இப்பெருந் தேயத் தெங்கும் இராப்பகல் தப்பினும் மாரி தன்கடன் தவறா. கொண்மூ வென்னுங் கொள்கலங் கொண்ட அமிழ்தினை யவ்வயிற் கவிழ்த்தபின் செல்புழி {{gap+|5}}105{{gap+|1}} வடியும்நீ ரேநம் மிடிதீர் சாரல். நன்னீர்ப் பெருக்கும் முந்நீர் நீத்தமும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வால்வளை - வெண்மையான சங்கு. உளைந்து - வருந்தி. ஓதிமம் – அன்னம், குடம்பை - முட்டை உன்னுபு - நினைத்து. அடம்பு -அடம்பங் கொடி. இது கடற்கரைப் பக்கத்தில் தரையில் படர்வது. மண்ட - நெருங்க. 92-93 வரி. பூந்தளிரைக் குளிர மேய்ந்து அகலும் காராம்பசு. அலமுகம் - கலப்பையின் முனை. அலமரும் - வருந்துகிற. ஊடல் - கணவனுக்கும் மனைவிக்கும் உண்டாகும் பிணக்கம். மருது -மருதமரம். அன்றில் - அன்றில் பறவை. நளி - பெருமை. மீன்கோட்பறை - மீன் பிடிப்பதற்காக அடிக்கும் பறை. விளி - ஓசை. வேய் - மூங்கில். சாலி - நெல். உப்பார் பஃறி - உப்பு ஏற்றிச் செல்லும் ஓடம். பிணிப்பர் - கட்டுவார்கள். மாரி - மழை. கொண்மூ - மேகம். அவ்வயில் - அவ்விடத்தில். முந்நீர் - கடல். ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மையையுடையது என்றும். ஆற்றுநீர் ஊற்றுநீர் வேற்றுநீர் என்னும் மூன்று நீரை யுடையது என்றும் பொருள் உடையது. {{dhr|3em}}<noinclude></noinclude> jrwwog992hdmak2jz3kxvdzco43km7q 1840396 1840292 2025-07-08T11:03:26Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||111}}{{rule}}</b></noinclude><poem><b> வால்வளை சூலுளைந் தீன்றவெண் முத்தம் ஓதிமக் குடம்பையென் றுன்னுபு காலாற் {{gap+|5}}90{{gap+|1}} பருந்தினங் கவர்ந்துசென் றடம்பிடைப் புதைக்கும் கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக் கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்; அலமுகந் தாக்குழி யலமரும் ஆமை {{gap+|5}}95{{gap+|1}} நுளைச்சியர் கணவரோ டிழைத்திடும் ஊடலில் வழித்தெறி குங்குமச் சேற்றிடை யொளிக்கும்; பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடும் அன்றில் நளிமீன் கோட்பறை விளிகேட் டுறங்கா; வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில், {{gap+|5}}100{{gap+|1}} உப்பார் பஃறி யொருநிரை பிணிப்பர். இப்பெருந் தேயத் தெங்கும் இராப்பகல் தப்பினும் மாரி தன்கடன் தவறா. கொண்மூ வென்னுங் கொள்கலங் கொண்ட அமிழ்தினை யவ்வயிற் கவிழ்த்தபின் செல்புழி {{gap+|5}}105{{gap+|1}} வடியும்நீ ரேநம் மிடிதீர் சாரல். நன்னீர்ப் பெருக்கும் முந்நீர் நீத்தமும் </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வால்வளை - வெண்மையான சங்கு. உளைந்து - வருந்தி. ஓதிமம் – அன்னம், குடம்பை - முட்டை உன்னுபு - நினைத்து. அடம்பு -அடம்பங் கொடி. இது கடற்கரைப் பக்கத்தில் தரையில் படர்வது. மண்ட - நெருங்க. 92-93 வரி. பூந்தளிரைக் குளிர மேய்ந்து அகலும் காராம்பசு. அலமுகம் - கலப்பையின் முனை. அலமரும் - வருந்துகிற. ஊடல் - கணவனுக்கும் மனைவிக்கும் உண்டாகும் பிணக்கம். மருது -மருதமரம். அன்றில் - அன்றில் பறவை. நளி - பெருமை. மீன்கோட்பறை - மீன் பிடிப்பதற்காக அடிக்கும் பறை. விளி - ஓசை. வேய் - மூங்கில். சாலி - நெல். உப்பார் பஃறி - உப்பு ஏற்றிச் செல்லும் ஓடம். பிணிப்பர் - கட்டுவார்கள். மாரி - மழை. கொண்மூ - மேகம். அவ்வயில் - அவ்விடத்தில். முந்நீர் - கடல். ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மையையுடையது என்றும். ஆற்றுநீர் ஊற்றுநீர் வேற்றுநீர் என்னும் மூன்று நீரை யுடையது என்றும் பொருள் உடையது. {{dhr|3em}}<noinclude></noinclude> i7es1bcdgqnfesyb9f3bvw7ljz3x0gk பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/112 250 535352 1840293 1830371 2025-07-08T06:59:24Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|112||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில் நடுக்கடல் நன்னீர் சுவைத்திடு மொருகால்; மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருகால்; {{gap+|5}}110{{gap+|1}} வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம் ஓமென வோஇறந் தொலிக்கப் பிரணவ நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார்; நறுமலர்க் குவளையும் நானிறத் திரணமும் படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித் {{gap+|5}}115{{gap+|1}} தாமரைத் தூமுகை தூமமில் விளக்கா, நிலவொளி முத்துங் கவடியும் பணமா, அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண துகிர்க்கா லன்னமும் புகர்க்கால் கொக்குஞ் செங்கட் போத்துங் கம்புட் கோழியுங் {{gap+|5}}120{{gap+|1}} கனைகுரல் நாரையுஞ் சினமிகு காடையும் பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும் என்றிவை பலவும் எண்ணில குழீஇச் சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும், அந்தியங் காடியின் சந்தங் காட்டித் {{gap+|5}}125{{gap+|1}} தந்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும் பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்; வீறுடை யெருத்தினம் வரிவரி நிறுத்தி </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} எய்யாது - களைப்படையாமல், ஓ இறந்து சை பெருகி. பிரணவ நாதம் - ஓங்கார ஒலி. இரணம் - உப்பு. ஈண்டு உப்பளத்தை உணர்த்திற்று. பழனம் - வயல். தூமுகை - தூய்மையான மொட்டு. தூமம்இல் - புகை இல்லாத. கவடி - பலகறை, சோழி. அலவன் - நண்டு. பல விரல் - (பலகால்களாகிய) விரல்களால். துகிர்க்கால் அன்னம் - பவழம் போன்ற செந்நிறமான கால்களை யுடைய அன்னப் பறவை. புகர் - சாம்பல் நிறம். போத்து - செம்போத்து. இது நாரை இனத்தைச் சேர்ந்தது. கம்புட்கோழி - சம்பங்கோழி. புள் பறவை. உள்ளான் குருகு - உள்ளான் குருவி. இது நீர்நிலைகளில் வாழ்வது. குழீஇ - குழுமி. அந்தியங்காடி மாலைச் சந்தை. வீறு - ஆற்றல். {{dhr|3em}}<noinclude></noinclude> 811337q5l6n5tm81tku90kpmyjknisk 1840397 1840293 2025-07-08T11:04:40Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|112||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில் நடுக்கடல் நன்னீர் சுவைத்திடு மொருகால்; மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருகால்; {{gap+|5}}110{{gap+|1}}வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம் ஓமென வோஇறந் தொலிக்கப் பிரணவ நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார்; நறுமலர்க் குவளையும் நானிறத் திரணமும் படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித் {{gap+|5}}115{{gap+|1}}தாமரைத் தூமுகை தூமமில் விளக்கா, நிலவொளி முத்துங் கவடியும் பணமா, அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண துகிர்க்கா லன்னமும் புகர்க்கால் கொக்குஞ் செங்கட் போத்துங் கம்புட் கோழியுங் {{gap+|5}}120{{gap+|1}}கனைகுரல் நாரையுஞ் சினமிகு காடையும் பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும் என்றிவை பலவும் எண்ணில குழீஇச் சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும், அந்தியங் காடியின் சந்தங் காட்டித் {{gap+|5}}125{{gap+|1}}தந்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும் பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்; வீறுடை யெருத்தினம் வரிவரி நிறுத்தி </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} எய்யாது - களைப்படையாமல், ஓ இறந்து சை பெருகி. பிரணவ நாதம் - ஓங்கார ஒலி. இரணம் - உப்பு. ஈண்டு உப்பளத்தை உணர்த்திற்று. பழனம் - வயல். தூமுகை - தூய்மையான மொட்டு. தூமம்இல் - புகை இல்லாத. கவடி - பலகறை, சோழி. அலவன் - நண்டு. பல விரல் - (பலகால்களாகிய) விரல்களால். துகிர்க்கால் அன்னம் - பவழம் போன்ற செந்நிறமான கால்களை யுடைய அன்னப் பறவை. புகர் - சாம்பல் நிறம். போத்து - செம்போத்து. இது நாரை இனத்தைச் சேர்ந்தது. கம்புட்கோழி - சம்பங்கோழி. புள் பறவை. உள்ளான் குருகு - உள்ளான் குருவி. இது நீர்நிலைகளில் வாழ்வது. குழீஇ - குழுமி. அந்தியங்காடி மாலைச் சந்தை. வீறு - ஆற்றல். {{dhr|3em}}<noinclude></noinclude> ij79l0c46m1ubj4hdx6yr0s4h5j94vu பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/113 250 535353 1840295 1830373 2025-07-08T07:01:53Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||113}}{{rule}}</b></noinclude><poem><b> ஈறிலாச் சகரர் எண்ணில் ராமெனப் பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப் {{gap+|5}}130{{gap+|1}} போற்றிய குரவையே பொலிதரு மொருசார்; சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநர் நாறுகூ றாக்குநர் வேறுபுலம் படுக்குநர் நடுபவர் களைப்பகை யடுபவ ராதியாக் கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும் {{gap+|5}}135{{gap+|1}} தருமொலி பரந்தே தங்குவ தொருசார்; குன்றென அரிந்து குவித்திடுஞ் செந்நெற் போர்மிசைக் காரா காரெனப் பொலியக் கறங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும் மங்கல வொலியே மல்குவ தொருசார்; {{gap+|5}}140{{gap+|1}} தூவியால் தம்முடல் நீவிடில் சிரிக்குஞ் சிறுமிய ரென்ன அச் செழுநில நங்கை உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி உடல்குழைந் தெங்கும் உலப்பறு செல்வப் பயிர் மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவள், {{gap+|5}}145{{gap+|1}} எனிலினி யானிங் கியம்புவ தென்னை? அனையவந் நாடெலாம் அரச! மற் றுனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும். </b></poem> {{rule|15em|align=left}} ஈறிலா - முடிவு இல்லாத. சகரர் - சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள். 128-129 அடிகள், சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள் நிலத்தை உழுதது போல, உழவர் ஏரைப் பூட்டி உழுதனர் என்பது கருத்து. சகர குமரர்கள் நிலத்தை ஆழமாக உழுதபடியால் சாகரம் (கடல்) உண்டாயிற்று என்பது புராணக் கதை. பொன் ஏர் - அழகான ஏர். குரவை - குரவைப் பாட்டு. இது குரவைக் கூத்து ஆடும்போது பாடும் பாட்டு. நாறு - நாற்று. களைப்பகை - களையாகிய பகையை. அடுபவர் - கெடுப்பவர், கொல்பவர். கடைசியர் - வயல்வேலை செய்யும் பெண்கள். பள்ளு - ஒருவகைப் பாட்டு. தமிழ்ப் பிரபந்த நூல்களில் ஒன்று. கிணைப்பறை - மருதநிலத்துப் பறை. தூவி - இறகு. நீவுதல் - தடவுதல். உலப்பறு வற்றாத,குறையாத. பாடை - பாஷை, மொழி. “உனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும்” என்பது, நாஞ்சில் நாடு பாண்டியருக்கே உரியது என்பதை அந்நாட்டில் {{dhr|3em}}<noinclude></noinclude> qpk1kdrjmgj2ucpduol1xaqrb1kkekx 1840399 1840295 2025-07-08T11:06:27Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||113}}{{rule}}</b></noinclude><poem><b> ஈறிலாச் சகரர் எண்ணில் ராமெனப் பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப் {{gap+|5}}130{{gap+|1}}போற்றிய குரவையே பொலிதரு மொருசார்; சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநர் நாறுகூ றாக்குநர் வேறுபுலம் படுக்குநர் நடுபவர் களைப்பகை யடுபவ ராதியாக் கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும் {{gap+|5}}135{{gap+|1}}தருமொலி பரந்தே தங்குவ தொருசார்; குன்றென அரிந்து குவித்திடுஞ் செந்நெற் போர்மிசைக் காரா காரெனப் பொலியக் கறங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும் மங்கல வொலியே மல்குவ தொருசார்; {{gap+|5}}140{{gap+|1}}தூவியால் தம்முடல் நீவிடில் சிரிக்குஞ் சிறுமிய ரென்ன அச் செழுநில நங்கை உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி உடல்குழைந் தெங்கும் உலப்பறு செல்வப் பயிர் மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவள், {{gap+|5}}145{{gap+|1}}எனிலினி யானிங் கியம்புவ தென்னை? அனையவந் நாடெலாம் அரச! மற் றுனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும். </b></poem> {{rule|15em|align=left}} ஈறிலா - முடிவு இல்லாத. சகரர் - சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள். 128-129 அடிகள், சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள் நிலத்தை உழுதது போல, உழவர் ஏரைப் பூட்டி உழுதனர் என்பது கருத்து. சகர குமரர்கள் நிலத்தை ஆழமாக உழுதபடியால் சாகரம் (கடல்) உண்டாயிற்று என்பது புராணக் கதை. பொன் ஏர் - அழகான ஏர். குரவை - குரவைப் பாட்டு. இது குரவைக் கூத்து ஆடும்போது பாடும் பாட்டு. நாறு - நாற்று. களைப்பகை - களையாகிய பகையை. அடுபவர் - கெடுப்பவர், கொல்பவர். கடைசியர் - வயல்வேலை செய்யும் பெண்கள். பள்ளு - ஒருவகைப் பாட்டு. தமிழ்ப் பிரபந்த நூல்களில் ஒன்று. கிணைப்பறை - மருதநிலத்துப் பறை. தூவி - இறகு. நீவுதல் - தடவுதல். உலப்பறு வற்றாத,குறையாத. பாடை - பாஷை, மொழி. “உனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும்” என்பது, நாஞ்சில் நாடு பாண்டியருக்கே உரியது என்பதை அந்நாட்டில் {{dhr|3em}}<noinclude></noinclude> eat5veq38xssgeywv964cd7ufk0ri9t பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/114 250 535354 1840296 1830425 2025-07-08T07:03:27Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|114||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சின்னா ளாகச் சேரனாண் டிடினும் இந்நாள் வரையும் அந்நாட் டுரிமை {{gap+|5}}150{{gap+|1}} கொடுத்தது மில்லை, நாம் விடுத்தது மில்லை. பண்டைநம் உரிமைபா ராட்டிட வென்றே கண்டனன் இப்புரி, ஆயினும் அதுஇம் மணத்திற் குதவியாய் வந்தது நன்றே. ஆதலின் அவன்பால் தூதரை விடுத்துக் {{gap+|5}}155{{gap+|1}} கிழமையும் பழமையும் எடுத்துக் கிளத்தில் நாட்டிய நமது நகர்வலி கருதி மீட்டும் விடுப்பினும் விடுப்பன். அன்றி வாதமே பலவும் ஓதினும் ஒருவிதம் ஒப்புர வாகா தொழியான் பின்னர், {{gap+|5}}160{{gap+|1}} அந்நியோந் நியசமா தானச் சின்னம் ஆகவோர் விவாக மாயின் நன்றெனக் குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின், மறுத்திடா னுடன்மண முடிக்குதும் {{float_right|நன்றே.8}} ஜீவ:{{gap+|5}} மெத்தவுங் களித்தோம்! உத்தமோ பாயம் {{gap+|5}}165{{gap+|1}} இதுவே! குடில! இதனால் வதுவையும் நடந்ததா மதித்தேம் மனத்தே. {{float_right|9}} குடி:{{gap+|5}} அப்படி யன்றே! செப்பிய உபாயம் போது மாயினும் ஏகுந் தூதுவர் திறத்தாற் சித்தி யாகவேண் டியதே. {{gap+|5}}170{{gap+|1}} வினைதெரிந் துரைத்தல் பெரிதல, அஃது தனை நன் காற்றலே யாற்றல். அதனால், </b></poem> {{rule|15em|align=left}} வழங்குகிற தமிழ்மொழியே சான்று பகரும் என்னும் கருத்துடையது. தமிழ்நாடாக இருந்த சேர நாட்டில், பிற்காலத்திலே தமிழ்மொழி மலையாள மொழியாக மாறிய பிறகும் நாஞ்சில்நாட்டில் தமிழ் மொழியே வழங்குகிறது. கண்டனன் - உண்டாக்கினேன். இப் புரி - இந்தக் கோட்டை. கிழமை - உரிமை. கிளத்தில் - சொன்னால். ஓதினும் - சொன்னாலும். ஒப்புரவு - இசைந்து பழகுதல். அந்நியோந்நியம் - நெருங்கிப் பழகுதல். திறத்தால் - திறமையினால். ஆற்றலே - செய்வதே. ஆற்றல் - வல்லமை. {{dhr|3em}}<noinclude></noinclude> ljpk5dvuwmfinxreb8lyb4jhowapky0 1840405 1840296 2025-07-08T11:09:02Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|114||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> சின்னா ளாகச் சேரனாண் டிடினும் இந்நாள் வரையும் அந்நாட் டுரிமை {{gap+|5}}150{{gap+|1}}கொடுத்தது மில்லை, நாம் விடுத்தது மில்லை. பண்டைநம் உரிமைபா ராட்டிட வென்றே கண்டனன் இப்புரி, ஆயினும் அதுஇம் மணத்திற் குதவியாய் வந்தது நன்றே. ஆதலின் அவன்பால் தூதரை விடுத்துக் {{gap+|5}}155{{gap+|1}}கிழமையும் பழமையும் எடுத்துக் கிளத்தில் நாட்டிய நமது நகர்வலி கருதி மீட்டும் விடுப்பினும் விடுப்பன். அன்றி வாதமே பலவும் ஓதினும் ஒருவிதம் ஒப்புர வாகா தொழியான் பின்னர், {{gap+|5}}160{{gap+|1}}அந்நியோந் நியசமா தானச் சின்னம் ஆகவோர் விவாக மாயின் நன்றெனக் குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின், மறுத்திடா னுடன்மண முடிக்குதும் நன்றே.{{float_right|8}} ஜீவ:{{gap+|5}} மெத்தவுங் களித்தோம்! உத்தமோ பாயம் {{gap+|5}}165{{gap+|1}} இதுவே! குடில! இதனால் வதுவையும் நடந்ததா மதித்தேம் மனத்தே. {{float_right|9}} குடி:{{gap+|5}} அப்படி யன்றே! செப்பிய உபாயம் போது மாயினும் ஏகுந் தூதுவர் திறத்தாற் சித்தி யாகவேண் டியதே. {{gap+|5}}170{{gap+|1}}வினைதெரிந் துரைத்தல் பெரிதல, அஃது தனை நன் காற்றலே யாற்றல். அதனால், </b></poem> {{rule|15em|align=left}} வழங்குகிற தமிழ்மொழியே சான்று பகரும் என்னும் கருத்துடையது. தமிழ்நாடாக இருந்த சேர நாட்டில், பிற்காலத்திலே தமிழ்மொழி மலையாள மொழியாக மாறிய பிறகும் நாஞ்சில்நாட்டில் தமிழ் மொழியே வழங்குகிறது. கண்டனன் - உண்டாக்கினேன். இப் புரி - இந்தக் கோட்டை. கிழமை - உரிமை. கிளத்தில் - சொன்னால். ஓதினும் - சொன்னாலும். ஒப்புரவு - இசைந்து பழகுதல். அந்நியோந்நியம் - நெருங்கிப் பழகுதல். திறத்தால் - திறமையினால். ஆற்றலே - செய்வதே. ஆற்றல் - வல்லமை. {{dhr|3em}}<noinclude></noinclude> 6fu6hs2sez6dis2uhptk81ntbbpwfrg பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/115 250 535355 1840297 1830427 2025-07-08T07:05:41Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||115}}{{rule}}</b></noinclude><poem><b> அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம் பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும் தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும் {{gap+|5}}175{{gap+|1}} வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந் துணிவுங் காலமுங் களமுந் துணியுங் குணமும் மந்திரத் தலைவர் துணைமையும் உடையனே வினையாள் தூதனென் றோதினர். அன்ன தூதரை யனுப்பின் மன்னவ! {{gap+|5}}180{{gap+|1}} உன்ன தெண்ண முறுமே யுறுதி; அன்றெனி லன்றே! அதனால் வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே. {{float_right|10}} ஜீவ:{{gap+|5}} அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக் குரிமை பூண்டநின் அருமை மகன்பல {{gap+|5}}185{{gap+|1}} தேவனே யுள்ளான், மேவலர் பலர்பால் முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான், அன்னவன் றன்னை அமைச்ச! ஏவிடத் தயையா யிசைவாய் நீயே. {{float_right|11}} குடி:{{gap+|4}} ஐய மதற்கென்? ஐய! என்னுடல் {{gap+|5}}190{{gap+|1}} ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும் நினதே யன்றோ! உனதே வலுக்கியான் இசையா தொழிவனோ! வசையறு புதல்வன் பாலியன் மிகவும்; காரியம் பெரிது ஜீவ:{{gap+|5}} பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம் {{gap+|5}}195{{gap+|1}} விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில், நலமா யுரைப்பன் நம்பல தேவன். வருத்தம் இவையெலாங் கருத்தி லுணராது உரைத்தனர் முனிவர். உதிய னவைக்கே யோசனை யின்றி நடேசனை யேவில் {{gap+|5}}200{{gap+|1}} நன்றாய் முடிப்பனிம் மன்றல் என்றார். அவர்கருத் திருந்த வாறே! {{float_right|12}} </b></poem> {{rule|15em|align=left}} அரசவாம் - அரசு + அவாம். அவாம் - அவாவும், விரும்பும், மேவலர் - பகைவர். ஏவிட - அனுப்ப. பாலியன் - இளைஞன். உதியன் - சேரன். {{dhr|3em}}<noinclude></noinclude> l73endlqsmr2iyyqtpink1tcdk9mp2y 1840299 1840297 2025-07-08T07:06:29Z Info-farmer 232 + 1840299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||115}}{{rule}}</b></noinclude><poem><b> அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம் பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும் தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும் {{gap+|5}}175{{gap+|1}} வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந் துணிவுங் காலமுங் களமுந் துணியுங் குணமும் மந்திரத் தலைவர் துணைமையும் உடையனே வினையாள் தூதனென் றோதினர். அன்ன தூதரை யனுப்பின் மன்னவ! {{gap+|5}}180{{gap+|1}} உன்ன தெண்ண முறுமே யுறுதி; அன்றெனி லன்றே! அதனால் வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே. {{float_right|10}} ஜீவ:{{gap+|5}} அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக் குரிமை பூண்டநின் அருமை மகன்பல {{gap+|5}}185{{gap+|1}} தேவனே யுள்ளான், மேவலர் பலர்பால் முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான், அன்னவன் றன்னை அமைச்ச! ஏவிடத் தயையா யிசைவாய் நீயே. {{float_right|11}} குடி:{{gap+|5}} ஐய மதற்கென்? ஐய! என்னுடல் {{gap+|5}}190{{gap+|1}}ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும் நினதே யன்றோ! உனதே வலுக்கியான் இசையா தொழிவனோ! வசையறு புதல்வன் பாலியன் மிகவும்; காரியம் பெரிது ஜீவ:{{gap+|5}} பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம் {{gap+|5}}195{{gap+|1}} விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில், நலமா யுரைப்பன் நம்பல தேவன். வருத்தம் இவையெலாங் கருத்தி லுணராது உரைத்தனர் முனிவர். உதிய னவைக்கே யோசனை யின்றி நடேசனை யேவில் {{gap+|5}}200{{gap+|1}} நன்றாய் முடிப்பனிம் மன்றல் என்றார். அவர்கருத் திருந்த வாறே! {{float_right|12}} </b></poem> {{rule|15em|align=left}} அரசவாம் - அரசு + அவாம். அவாம் - அவாவும், விரும்பும், மேவலர் - பகைவர். ஏவிட - அனுப்ப. பாலியன் - இளைஞன். உதியன் - சேரன். {{dhr|3em}}<noinclude></noinclude> k6000hnl9jgmv6u2f8q089ldxppc4p9 1840408 1840299 2025-07-08T11:11:17Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||115}}{{rule}}</b></noinclude><poem><b> அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம் பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும் தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும் {{gap+|5}}175{{gap+|1}} வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந் துணிவுங் காலமுங் களமுந் துணியுங் குணமும் மந்திரத் தலைவர் துணைமையும் உடையனே வினையாள் தூதனென் றோதினர். அன்ன தூதரை யனுப்பின் மன்னவ! {{gap+|5}}180{{gap+|1}} உன்ன தெண்ண முறுமே யுறுதி; அன்றெனி லன்றே! அதனால் வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே. {{float_right|10}} ஜீவ:{{gap+|5}} அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக் குரிமை பூண்டநின் அருமை மகன்பல {{gap+|5}}185{{gap+|1}} தேவனே யுள்ளான், மேவலர் பலர்பால் முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான், அன்னவன் றன்னை அமைச்ச! ஏவிடத் தயையா யிசைவாய் நீயே. {{float_right|11}} குடி:{{gap+|5}} ஐய மதற்கென்? ஐய! என்னுடல் {{gap+|5}}190{{gap+|1}}ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும் நினதே யன்றோ! உனதே வலுக்கியான் இசையா தொழிவனோ! வசையறு புதல்வன் பாலியன் மிகவும்; காரியம் பெரிது ஜீவ:{{gap+|5}} பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம் {{gap+|5}}195{{gap+|1}} விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில், நலமா யுரைப்பன் நம்பல தேவன். வருத்தம் இவையெலாங் கருத்தி லுணராது உரைத்தனர் முனிவர். உதிய னவைக்கே யோசனை யின்றி நடேசனை யேவில் {{gap+|5}}200{{gap+|1}} நன்றாய் முடிப்பனிம் மன்றல் என்றார். அவர்கருத் திருந்த வாறே! {{float_right|12}} </b></poem> {{rule|15em|align=left}} அரசவாம் - அரசு + அவாம். அவாம் - அவாவும், விரும்பும், மேவலர் - பகைவர். ஏவிட - அனுப்ப. பாலியன் - இளைஞன். உதியன் - சேரன். {{dhr|3em}}<noinclude></noinclude> 1wsa0620eqz86x69t9awjlebv0idz1h பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/116 250 535356 1840323 1830428 2025-07-08T07:53:29Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|116||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> குடி:{{gap+|4}} குற்றமோ அதுவுங் கொற்றவ! முனிவர் அறிந்ததவ் வளவே யாகும். ஏழை! துறந்தா ரறிவரோ தூதின் தன்மை? {{gap+|5}}205{{gap+|1}} இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும் எல்லா மில்லை; ஆதலால் எவருங் கட்டுக கோவில் வெட்டுக ஏரி, என்று திரிதரும் இவர்களோ நமது நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்? {{gap+|5}}210{{gap+|1}} இராச்சிய பரண சூத்திரம் யார்க்கும் நீச்சே யன்றி நிலையோ? நடேசன்! யோசனை நன்று! நடேசன்! ஆ! ஆ! ஏதோ இவ்வயிற் சூதாப் பேதையர் உள்ளம் மெள்ள உண்டு மற்றவர் {{gap+|5}}215{{gap+|1}} அம்மை யப்பரை அணுகா தகன்று தம்மையும் மறந்தே தலைதடு மாறச் செய்யுமோர் சேவக முண்டுமற் றவன்பால், ஐயமொன் றில்லை. அதனால் மொய்குழல் மாதர்பால் தூதுசெல் வல்லமை கூடும். {{gap+|5}}220{{gap+|1}} பித்த னெப்படிச் சுந்தரர்க்கு ஒத்த தோழனா யுற்றனன்! வியப்பே! {{float_right|13}} முனிவரும் வரவர மதியிழந் தனரே! ஜீவ:{{gap+|5}} இருக்கும், இருக்கும். இணையறு குடில! பொருக்கெனப் போயுன் புதல்வற் குணர்த்தி {{gap+|5}}225{{gap+|1}}விடுத்திடு தூது விரைந்து; {{float_right|14}} சால விளம்பனஞ் சாலவுந் தீதே. </b></poem> {{rule|15em|align=left}} இராச்சிய பரண சூத்திரம் - இராச்சியத்தை ஆளும் முறை. இவ் வயின் -இவ்விடத்தில். சூதா - சூதாக. பேதையர் - பெண்கள். சேவகம் -வீரம். “பித்தன் எப்படிச் சுந்தரர்க்கு, ஒத்த தோழனாய் உற்றனன்” என்னும் அடிக்கு, ‘பித்தனாகிய நடேசன் சுந்தரமுனிவருக்கு எப்படி ஒத்த நண்பனாக ஆனான்’ என்று ஒரு பொருளும், ‘பித்தனாகிய சிவ பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு எப்படி ஒத்த நண்பனானான்’ என்று வேறொரு பொருளும் தோன்றுவது காண்க. இணையறு - ஒப்பில்லாத. பொருக்கென - விரைந்து.<noinclude></noinclude> 39u3o3craa7yc6omrqcukedaynirp3l 1840324 1840323 2025-07-08T07:54:07Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|116||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> குடி:{{gap+|5}} குற்றமோ அதுவுங் கொற்றவ! முனிவர் அறிந்ததவ் வளவே யாகும். ஏழை! துறந்தா ரறிவரோ தூதின் தன்மை? {{gap+|5}}205{{gap+|1}} இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும் எல்லா மில்லை; ஆதலால் எவருங் கட்டுக கோவில் வெட்டுக ஏரி, என்று திரிதரும் இவர்களோ நமது நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்? {{gap+|5}}210{{gap+|1}} இராச்சிய பரண சூத்திரம் யார்க்கும் நீச்சே யன்றி நிலையோ? நடேசன்! யோசனை நன்று! நடேசன்! ஆ! ஆ! ஏதோ இவ்வயிற் சூதாப் பேதையர் உள்ளம் மெள்ள உண்டு மற்றவர் {{gap+|5}}215{{gap+|1}} அம்மை யப்பரை அணுகா தகன்று தம்மையும் மறந்தே தலைதடு மாறச் செய்யுமோர் சேவக முண்டுமற் றவன்பால், ஐயமொன் றில்லை. அதனால் மொய்குழல் மாதர்பால் தூதுசெல் வல்லமை கூடும். {{gap+|5}}220{{gap+|1}} பித்த னெப்படிச் சுந்தரர்க்கு ஒத்த தோழனா யுற்றனன்! வியப்பே! {{float_right|13}} முனிவரும் வரவர மதியிழந் தனரே! ஜீவ:{{gap+|5}} இருக்கும், இருக்கும். இணையறு குடில! பொருக்கெனப் போயுன் புதல்வற் குணர்த்தி {{gap+|5}}225{{gap+|1}}விடுத்திடு தூது விரைந்து; {{float_right|14}} சால விளம்பனஞ் சாலவுந் தீதே. </b></poem> {{rule|15em|align=left}} இராச்சிய பரண சூத்திரம் - இராச்சியத்தை ஆளும் முறை. இவ் வயின் -இவ்விடத்தில். சூதா - சூதாக. பேதையர் - பெண்கள். சேவகம் -வீரம். “பித்தன் எப்படிச் சுந்தரர்க்கு, ஒத்த தோழனாய் உற்றனன்” என்னும் அடிக்கு, ‘பித்தனாகிய நடேசன் சுந்தரமுனிவருக்கு எப்படி ஒத்த நண்பனாக ஆனான்’ என்று ஒரு பொருளும், ‘பித்தனாகிய சிவ பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு எப்படி ஒத்த நண்பனானான்’ என்று வேறொரு பொருளும் தோன்றுவது காண்க. இணையறு - ஒப்பில்லாத. பொருக்கென - விரைந்து.<noinclude></noinclude> lufb68kaf9k8t6650jj1dfda4ydggrj 1840413 1840324 2025-07-08T11:17:25Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|116||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> குடி:{{gap+|5}} குற்றமோ அதுவுங் கொற்றவ! முனிவர் அறிந்ததவ் வளவே யாகும். ஏழை! துறந்தா ரறிவரோ தூதின் தன்மை? {{gap+|5}}205{{gap+|1}} இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும் எல்லா மில்லை; ஆதலால் எவருங் கட்டுக கோவில் வெட்டுக ஏரி, என்று திரிதரும் இவர்களோ நமது நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்? {{gap+|5}}210{{gap+|1}} இராச்சிய பரண சூத்திரம் யார்க்கும் நீச்சே யன்றி நிலையோ? நடேசன்! யோசனை நன்று! நடேசன்! ஆ! ஆ! ஏதோ இவ்வயிற் சூதாப் பேதையர் உள்ளம் மெள்ள உண்டு மற்றவர் {{gap+|5}}215{{gap+|1}} அம்மை யப்பரை அணுகா தகன்று தம்மையும் மறந்தே தலைதடு மாறச் செய்யுமோர் சேவக முண்டுமற் றவன்பால், ஐயமொன் றில்லை. அதனால் மொய்குழல் மாதர்பால் தூதுசெல் வல்லமை கூடும். {{gap+|5}}220{{gap+|1}} பித்த னெப்படிச் சுந்தரர்க்கு ஒத்த தோழனா யுற்றனன்! வியப்பே! {{float_right|13}} முனிவரும் வரவர மதியிழந் தனரே! ஜீவ:{{gap+|5}} இருக்கும், இருக்கும். இணையறு குடில! பொருக்கெனப் போயுன் புதல்வற் குணர்த்தி {{gap+|5}}225{{gap+|1}}விடுத்திடு தூது விரைந்து; {{float_right|14}} சால விளம்பனஞ் சாலவுந் தீதே. </b></poem> {{rule|15em|align=left}} இராச்சிய பரண சூத்திரம் - இராச்சியத்தை ஆளும் முறை. இவ் வயின் -இவ்விடத்தில். சூதா - சூதாக. பேதையர் - பெண்கள். சேவகம் -வீரம். “பித்தன் எப்படிச் சுந்தரர்க்கு, ஒத்த தோழனாய் உற்றனன்” என்னும் அடிக்கு, ‘பித்தனாகிய நடேசன் சுந்தரமுனிவருக்கு எப்படி ஒத்த நண்பனாக ஆனான்’ என்று ஒரு பொருளும், ‘பித்தனாகிய சிவ பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு எப்படி ஒத்த நண்பனானான்’ என்று வேறொரு பொருளும் தோன்றுவது காண்க. இணையறு - ஒப்பில்லாத. பொருக்கென - விரைந்து.<noinclude></noinclude> d8ggyyx0hsmv87rehi2144m9o7nygrz பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/117 250 535357 1840326 1830429 2025-07-08T07:55:32Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||117}}{{rule}}</b></noinclude><poem><b> குடி:{{gap+|4}} ஈதோ அனுப்பினேன்; இன்றிம் மாலையில் தூது செல்வான் தொழுதுன் அநுமதி பெறவரு வான்நீ காண்டி; {{gap+|5}}230{{gap+|1}}இறைவ! மங்கல மென்றுமுன் னடிக்கே! {{float_right|15}} {{float_right|(குடிலன் போக)}} ஜீவ:{{gap+|5}} (தனதுள்) நல்லது! ஆ! ஆ! நமது பாக்கியம் அல்லவோ இவனை நாம் அமைச்சனாய்ப் பெற்றதும்? என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை? {{float_right|(சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க)}} {{float_right|(பிரபுக்களை நோக்கி)}} வம்மின், வம்மின், வந்து சிறிது {{gap+|5}}235{{gap+|1}} கால மானது போலும், நமது மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு இருந்தோம் இதுவரை, குடிலன் மிகவும் அருந்திறற் குழ்ச்சியன். முதற் பிரபு:{{gap+|-3}} அதற்கெ னையம்? சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி {{gap+|5}}240{{gap+|1}} இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர். எல்லை யுளதோ இவன்மதிக் கிறைவ! வல்லவன் யாதிலும். நாராயணன்:{{gap+|0}} (தனதுள்) நல்லது கருதான வல்லமை யென்பயன்! 2-ம் பிரபு:{{gap+|1}}மன்னவ!{{gap+|1}} அதிலும் உன்தொல் குலத்தில் உன்திரு மேனியில் {{gap+|5}}245{{gap+|1}} வைத்த பரிவும் பத்தியு மெத்தனை! குடிலனுன் குடிக்கே யடிமை பூண்ட </b></poem> {{rule|15em|align=left}} கால வளம்பனம் - காலம் தாழ்த்தல். திறல் - வலி. சுரர் - தேவர். சுரகுரு - தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதி; வியாழன் என்றும் கூறுவர். பிரசுரன் - அசுர குருவாகிய சுக்கிராச்சாரி. திருமேனி - அரசனைக் குறிக்கும் சொல். மலையாள நாட்டினர் அரசனைத் திருமேனி என்று விளிப்பது வழக்கம். இந்நூலாசிரியர் மலையாள நாட்டில் வசித்து.<noinclude></noinclude> jnmmshr6neyucvvugj9agcovk4exf2i 1840333 1840326 2025-07-08T07:59:11Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||117}}{{rule}}</b></noinclude><poem><b> குடி:{{gap+|5}} ஈதோ அனுப்பினேன்; இன்றிம் மாலையில் தூது செல்வான் தொழுதுன் அநுமதி பெறவரு வான்நீ காண்டி; {{gap+|5}}230{{gap+|1}}இறைவ! மங்கல மென்றுமுன் னடிக்கே! {{float_right|15}} (குடிலன் போக) ஜீவ:{{gap+|5}} (தனதுள்) நல்லது! ஆ! ஆ! நமது பாக்கியம் அல்லவோ இவனை நாம் அமைச்சனாய்ப் பெற்றதும்? என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை? (சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க) (பிரபுக்களை நோக்கி) வம்மின், வம்மின், வந்து சிறிது {{gap+|5}}235{{gap+|1}} கால மானது போலும், நமது மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு இருந்தோம் இதுவரை, குடிலன் மிகவும் அருந்திறற் குழ்ச்சியன். முதற் பிரபு:{{gap+|5}} அதற்கெ னையம்? சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி {{gap+|5}}240{{gap+|1}} இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர். எல்லை யுளதோ இவன்மதிக் கிறைவ! வல்லவன் யாதிலும். நாராயணன்:{{gap+|1}} (தனதுள்) நல்லது கருதான வல்லமை யென்பயன்! 2-ம் பிரபு:{{gap+|2}}மன்னவ! அதிலும் உன்தொல் குலத்தில் உன்திரு மேனியில் {{gap+|5}}245{{gap+|1}} வைத்த பரிவும் பத்தியு மெத்தனை! குடிலனுன் குடிக்கே யடிமை பூண்ட </b></poem> {{rule|15em|align=left}} கால வளம்பனம் - காலம் தாழ்த்தல். திறல் - வலி. சுரர் - தேவர். சுரகுரு - தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதி; வியாழன் என்றும் கூறுவர். பிரசுரன் - அசுர குருவாகிய சுக்கிராச்சாரி. திருமேனி - அரசனைக் குறிக்கும் சொல். மலையாள நாட்டினர் அரசனைத் திருமேனி என்று விளிப்பது வழக்கம். இந்நூலாசிரியர் மலையாள நாட்டில் வசித்து.<noinclude></noinclude> 2ikidtzusxtd6ofrxr6el141a4tethp 1840419 1840333 2025-07-08T11:23:31Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||117}}{{rule}}</b></noinclude><poem><b> குடி:{{gap+|5}} ஈதோ அனுப்பினேன்; இன்றிம் மாலையில் தூது செல்வான் தொழுதுன் அநுமதி பெறவரு வான்நீ காண்டி; {{gap+|5}}230{{gap+|1}}இறைவ! மங்கல மென்றுமுன் னடிக்கே!</b> {{float_right|15}} (குடிலன் போக) <b>ஜீவ:{{gap+|5}}</b> (தனதுள்) <b>நல்லது! ஆ! ஆ! நமது பாக்கியம் அல்லவோ இவனை நாம் அமைச்சனாய்ப் பெற்றதும்? என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை?</b> (சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க) (பிரபுக்களை நோக்கி) <b> வம்மின், வம்மின், வந்து சிறிது {{gap+|5}}235{{gap+|1}} கால மானது போலும், நமது மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு இருந்தோம் இதுவரை, குடிலன் மிகவும் அருந்திறற் குழ்ச்சியன். முதற் பிரபு:{{gap+|1}} அதற்கெ னையம்? சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி {{gap+|5}}240{{gap+|1}} இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர். எல்லை யுளதோ இவன்மதிக் கிறைவ! வல்லவன் யாதிலும். நாராயணன்:</b>{{gap+|1}} (தனதுள்) <b> நல்லது கருதான வல்லமை யென்பயன்! 2-ம் பிரபு:{{gap+|2}} மன்னவ! அதிலும் உன்தொல் குலத்தில் உன்திரு மேனியில் {{gap+|5}}245{{gap+|1}} வைத்த பரிவும் பத்தியு மெத்தனை! குடிலனுன் குடிக்கே யடிமை பூண்ட </b></poem> {{rule|15em|align=left}} கால வளம்பனம் - காலம் தாழ்த்தல். திறல் - வலி. சுரர் - தேவர். சுரகுரு - தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதி; வியாழன் என்றும் கூறுவர். பிரசுரன் - அசுர குருவாகிய சுக்கிராச்சாரி. திருமேனி - அரசனைக் குறிக்கும் சொல். மலையாள நாட்டினர் அரசனைத் திருமேனி என்று விளிப்பது வழக்கம். இந்நூலாசிரியர் மலையாள நாட்டில் வசித்து.<noinclude></noinclude> 49zgrisqpa921an4fmbbkjb8tivxqkz பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/118 250 535358 1840327 1830430 2025-07-08T07:55:44Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|118||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஆஞ்ச னேயனோ அறியேம்! நாரா:{{gap+|4}} (தனதுள்) முழுப்பொய் வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன் விடுப்பனோ விடமென? குடிப்பனே! சேவகன்:{{gap+|2}} கொற்றவ! {{gap+|5}}250{{gap+|1}} நேற்று மாலையில் நின்றிரு வாணையிற் சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால் தந்தன னெனக்கித் தரள மாலை. நாரா:{{gap+|4}} (தனதுள்) எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம். ஜீவ:{{gap+|1}}255{{gap+|1}} பார்மின், பார்மின், நம்மிசை வைத்த ஆர்வமும் அன்பும். ஆ! ஆ! நாரா:{{gap+|4}} (தனதுள்) யாதும் பேசா திருக்கி லேசுமே நம்மனம்; குறியாற் கூறுவம்; அறிகி லறிக. {{float_right|(நாராயணன் செல்ல)}} 3-ம் பிரபு:{{gap+|1}}சாட்சியு{{gap+|1}} மோகண் காட்சியாம்! இதற்கும்! {{gap+|5}}260{{gap+|1}} அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ? எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி பத்தி பண்ணுநர். சுமித்திரை பயந்த புத்திரன், வீரவா கிவர்முதற் போற்றிய எத்திறத் தவரும் இறைவ! இவனுக் </b></poem> {{rule|15em|align=left}} மலையாள அரசரிடம் பழகியவராகலின் இச் சொல்லை ஆள்கிறார். இவ்வாறே மலையாள நாட்டில் சிறப்பாக வழங்கும் சொற்கள் பல இந்நூலில் பயிலப்படுகின்றன. ஆஞ்சனேயன் அனுமான். இராமனுக்கு ஆஞ்சனேயன் மெய்அடிமை பூண்டதுபோல, குடிலன் ஜீவக மன்னனுக்கு அடிமை பூண்டானோ என்பது கருத்து. திருமுகம் - கடிதம் தரள மாலை - முத்துமாலை, திண்ணம் - உறுதி. “அங்கைப் புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ” - கைப் புண்ணுக்குக் கண்ணாடியும் வேண்டுமோ என்னும் பழமொழி. ஆடி கண்ணாடி. சுவாமி பத்தி – எஜமானிடம் பக்தி. சுமித்திரை பயந்த புத்திரன் சுமித்திரை பெற்ற பரதன்.<noinclude></noinclude> btrkigba5a997fc9o5n0tbptasqa72i 1840336 1840327 2025-07-08T08:02:05Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|118||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஆஞ்ச னேயனோ அறியேம்! நாரா:{{gap+|5}} (தனதுள்) முழுப்பொய் வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன் விடுப்பனோ விடமென? குடிப்பனே! சேவகன்:{{gap+|3}} கொற்றவ! {{gap+|5}}250{{gap+|1}} நேற்று மாலையில் நின்றிரு வாணையிற் சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால் தந்தன னெனக்கித் தரள மாலை. நாரா:{{gap+|4}} (தனதுள்) எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம். ஜீவ:{{gap+|1}}255{{gap+|2}} பார்மின், பார்மின், நம்மிசை வைத்த ஆர்வமும் அன்பும். ஆ! ஆ! நாரா:{{gap+|4}} (தனதுள்) யாதும் பேசா திருக்கி லேசுமே நம்மனம்; குறியாற் கூறுவம்; அறிகி லறிக. (நாராயணன் செல்ல) 3-ம் பிரபு:{{gap+|3}}சாட்சியு மோகண் காட்சியாம்! இதற்கும்! {{gap+|5}}260{{gap+|1}}அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ? எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி பத்தி பண்ணுநர். சுமித்திரை பயந்த புத்திரன், வீரவா கிவர்முதற் போற்றிய எத்திறத் தவரும் இறைவ! இவனுக் </b></poem> {{rule|15em|align=left}} மலையாள அரசரிடம் பழகியவராகலின் இச் சொல்லை ஆள்கிறார். இவ்வாறே மலையாள நாட்டில் சிறப்பாக வழங்கும் சொற்கள் பல இந்நூலில் பயிலப்படுகின்றன. ஆஞ்சனேயன் அனுமான். இராமனுக்கு ஆஞ்சனேயன் மெய்அடிமை பூண்டதுபோல, குடிலன் ஜீவக மன்னனுக்கு அடிமை பூண்டானோ என்பது கருத்து. திருமுகம் - கடிதம் தரள மாலை - முத்துமாலை, திண்ணம் - உறுதி. “அங்கைப் புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ” - கைப் புண்ணுக்குக் கண்ணாடியும் வேண்டுமோ என்னும் பழமொழி. ஆடி கண்ணாடி. சுவாமி பத்தி – எஜமானிடம் பக்தி. சுமித்திரை பயந்த புத்திரன் சுமித்திரை பெற்ற பரதன்.<noinclude></noinclude> 6sjwkvpyti8xtpy9535bictn8uq3gk8 1840429 1840336 2025-07-08T11:39:01Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|118||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> ஆஞ்ச னேயனோ அறியேம்! நாரா:</b>{{gap+|5}} (தனதுள்) {{gap+|6}}<b>முழுப்பொய் வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன் விடுப்பனோ விடமென? குடிப்பனே! சேவகன்:{{gap+|3}} கொற்றவ! {{gap+|5}}250{{gap+|1}} நேற்று மாலையில் நின்றிரு வாணையிற் சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால் தந்தன னெனக்கித் தரள மாலை. நாரா:{{gap+|4}} (தனதுள்) எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம். ஜீவ:{{gap+|1}}255{{gap+|2}} பார்மின், பார்மின், நம்மிசை வைத்த ஆர்வமும் அன்பும். ஆ! ஆ! நாரா:</b>{{gap+|4}} (தனதுள்) <b>யாதும் பேசா திருக்கி லேசுமே நம்மனம்; குறியாற் கூறுவம்; அறிகி லறிக.</b> {{float_right|(நாராயணன் செல்ல)}} <b>3-ம் பிரபு:{{gap+|3}}சாட்சியு மோகண் காட்சியாம்! இதற்கும்! {{gap+|5}}260{{gap+|1}}அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ? எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி பத்தி பண்ணுநர். சுமித்திரை பயந்த புத்திரன், வீரவா கிவர்முதற் போற்றிய எத்திறத் தவரும் இறைவ! இவனுக் </b></poem> {{rule|15em|align=left}} மலையாள அரசரிடம் பழகியவராகலின் இச் சொல்லை ஆள்கிறார். இவ்வாறே மலையாள நாட்டில் சிறப்பாக வழங்கும் சொற்கள் பல இந்நூலில் பயிலப்படுகின்றன. ஆஞ்சனேயன் அனுமான். இராமனுக்கு ஆஞ்சனேயன் மெய்அடிமை பூண்டதுபோல, குடிலன் ஜீவக மன்னனுக்கு அடிமை பூண்டானோ என்பது கருத்து. திருமுகம் - கடிதம் தரள மாலை - முத்துமாலை, திண்ணம் - உறுதி. “அங்கைப் புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ” - கைப் புண்ணுக்குக் கண்ணாடியும் வேண்டுமோ என்னும் பழமொழி. ஆடி கண்ணாடி. சுவாமி பத்தி – எஜமானிடம் பக்தி. சுமித்திரை பயந்த புத்திரன் சுமித்திரை பெற்ற பரதன்.<noinclude></noinclude> q8u1mx13yssm6pvk2mk1kfej0z4y10e பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/119 250 535359 1840338 1830446 2025-07-08T08:07:17Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||119}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}265{{gap+|1}} கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்? (நாராயணன் மூக்கிற் கரி தேய்த்துவர)}} ஜீவ:{{gap+|5}} (நாராயணனை நோக்கி) ஏ! ஏ! நாரணா கரியா யுன்மூக் கிருந்தவா றென்னை? ஏ! ஏ! இதுவென்! நாரா:{{gap+|4}} மூக்கிற் கரிய ருளரென நாயனார் தூக்கிய குறளின் சொற்படி, எல்லாம் {{gap+|5}}270{{gap+|1}} உள்ளநின் னருகவ ரில்லா ராவரோ? ஜீவ:{{gap+|5}} ஓகோ! ஓகோ! உனக்கென் பைத்தியம்; யாவரும்:{{gap+|1}} ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ! (யாவரும் நகைக்க)}} ஜீவ:{{gap+|5}} நாரணா! நீயும் நடேசன் தோழனே. (பிரபுக்களை நோக்கி)}} நல்லது; விசேடமொன் றில்லை போலும். முதற் பிரபு: {{gap+|5}}275{{gap+|1}} இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுநின் வாகுவே தாங்க! மங்கலம் வரவே! (பிரபுக்கள் போக)}} ஜீவ:{{gap+|5}} நாராயணா! உனக் கேனிப் பித்து? தீரா இடும்பையே தெளிவி லையுறல். </b></poem> {{rule|15em|align=left}} வீரவாகு - முருகக் கடவுளின் சேனாபதி. இராமனிடத்தில் பரதனும், முருகனிடத்தில் வீரவாகு தேவரும் உண்மைப் பக்தி கொண்டிருந்தது போல, குடிலன் ஜீவகனிடம் உண்மைப் பக்தி கொண்டுளான் என்பது கருத்து. தன்னயம் எண்ணா - சுயநலம் நினைக்காத. நாயனார் - திருவள்ளுவ நாயனார். தூக்கிய குறள் - ஆராய்ந்து கூறிய திருக்குறள். 268 அடி. “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியாருடைத்து” என்னும் திருக்குறளைச் சுட்டுகிறது இவ் வாக்கியம். நின் அருகு - உன் பக்கத்தில். அவர் - ‘அகங் குன்றி மூக்கிற் கரியார்’. வாகு தோள் ஐயுறல் - ஐயப்படுவது.<noinclude></noinclude> 47bskpvkz7060t5r0xzorv7aar8zycn 1840341 1840338 2025-07-08T08:08:26Z Info-farmer 232 {{dhr}} 1840341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||119}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}265{{gap+|1}} கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்? (நாராயணன் மூக்கிற் கரி தேய்த்துவர) ஜீவ:{{gap+|5}} (நாராயணனை நோக்கி) ஏ! ஏ! நாரணா கரியா யுன்மூக் கிருந்தவா றென்னை? ஏ! ஏ! இதுவென்! நாரா:{{gap+|4}} மூக்கிற் கரிய ருளரென நாயனார் தூக்கிய குறளின் சொற்படி, எல்லாம் {{gap+|5}}270{{gap+|1}} உள்ளநின் னருகவ ரில்லா ராவரோ? ஜீவ:{{gap+|5}} ஓகோ! ஓகோ! உனக்கென் பைத்தியம்; யாவரும்:{{gap+|1}} ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ! (யாவரும் நகைக்க)}} ஜீவ:{{gap+|5}} நாரணா! நீயும் நடேசன் தோழனே. (பிரபுக்களை நோக்கி) நல்லது; விசேடமொன் றில்லை போலும். முதற் பிரபு: {{gap+|5}}275{{gap+|1}} இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுநின் வாகுவே தாங்க! மங்கலம் வரவே! (பிரபுக்கள் போக) ஜீவ:{{gap+|5}} நாராயணா! உனக் கேனிப் பித்து? தீரா இடும்பையே தெளிவி லையுறல். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வீரவாகு - முருகக் கடவுளின் சேனாபதி. இராமனிடத்தில் பரதனும், முருகனிடத்தில் வீரவாகு தேவரும் உண்மைப் பக்தி கொண்டிருந்தது போல, குடிலன் ஜீவகனிடம் உண்மைப் பக்தி கொண்டுளான் என்பது கருத்து. தன்னயம் எண்ணா - சுயநலம் நினைக்காத. நாயனார் - திருவள்ளுவ நாயனார். தூக்கிய குறள் - ஆராய்ந்து கூறிய திருக்குறள். 268 அடி. “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியாருடைத்து” என்னும் திருக்குறளைச் சுட்டுகிறது இவ் வாக்கியம். நின் அருகு - உன் பக்கத்தில். அவர் - ‘அகங் குன்றி மூக்கிற் கரியார்’. வாகு தோள் ஐயுறல் - ஐயப்படுவது.<noinclude></noinclude> qegrn74iuzbe8w0jx5onki7b0u8fuk2 1840343 1840341 2025-07-08T08:09:06Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||119}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}265{{gap+|1}} கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்? (நாராயணன் மூக்கிற் கரி தேய்த்துவர) ஜீவ:{{gap+|5}} (நாராயணனை நோக்கி) ஏ! ஏ! நாரணா கரியா யுன்மூக் கிருந்தவா றென்னை? ஏ! ஏ! இதுவென்! நாரா:{{gap+|4}} மூக்கிற் கரிய ருளரென நாயனார் தூக்கிய குறளின் சொற்படி, எல்லாம் {{gap+|5}}270{{gap+|1}} உள்ளநின் னருகவ ரில்லா ராவரோ? ஜீவ:{{gap+|5}} ஓகோ! ஓகோ! உனக்கென் பைத்தியம்; யாவரும்:{{gap+|2}} ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ! (யாவரும் நகைக்க)}} ஜீவ:{{gap+|5}} நாரணா! நீயும் நடேசன் தோழனே. (பிரபுக்களை நோக்கி) நல்லது; விசேடமொன் றில்லை போலும். முதற் பிரபு: {{gap+|5}}275{{gap+|1}} இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுநின் வாகுவே தாங்க! மங்கலம் வரவே! (பிரபுக்கள் போக) ஜீவ:{{gap+|5}} நாராயணா! உனக் கேனிப் பித்து? தீரா இடும்பையே தெளிவி லையுறல். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வீரவாகு - முருகக் கடவுளின் சேனாபதி. இராமனிடத்தில் பரதனும், முருகனிடத்தில் வீரவாகு தேவரும் உண்மைப் பக்தி கொண்டிருந்தது போல, குடிலன் ஜீவகனிடம் உண்மைப் பக்தி கொண்டுளான் என்பது கருத்து. தன்னயம் எண்ணா - சுயநலம் நினைக்காத. நாயனார் - திருவள்ளுவ நாயனார். தூக்கிய குறள் - ஆராய்ந்து கூறிய திருக்குறள். 268 அடி. “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியாருடைத்து” என்னும் திருக்குறளைச் சுட்டுகிறது இவ் வாக்கியம். நின் அருகு - உன் பக்கத்தில். அவர் - ‘அகங் குன்றி மூக்கிற் கரியார்’. வாகு தோள் ஐயுறல் - ஐயப்படுவது.<noinclude></noinclude> 1natkofqu652n7j5s9dq83gvonpdgze 1840432 1840343 2025-07-08T11:43:56Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||119}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}265{{gap+|1}} கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்?</b> {{float_right|(நாராயணன் மூக்கிற் கரி தேய்த்துவர)}} <b>ஜீவ:</b>{{gap+|5}} (நாராயணனை நோக்கி) <b>ஏ! ஏ! நாரணா கரியா யுன்மூக் கிருந்தவா றென்னை? ஏ! ஏ! இதுவென்! நாரா:{{gap+|4}} மூக்கிற் கரிய ருளரென நாயனார் தூக்கிய குறளின் சொற்படி, எல்லாம் {{gap+|5}}270{{gap+|1}} உள்ளநின் னருகவ ரில்லா ராவரோ? ஜீவ:{{gap+|5}} ஓகோ! ஓகோ! உனக்கென் பைத்தியம்; யாவரும்:{{gap+|2}} ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ!</b> {{float_right|(யாவரும் நகைக்க)}} <b>ஜீவ:{{gap+|5}} நாரணா! நீயும் நடேசன் தோழனே.</b> (பிரபுக்களை நோக்கி) <b>நல்லது; விசேடமொன் றில்லை போலும். முதற் பிரபு: {{gap+|5}}275{{gap+|1}} இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுநின் வாகுவே தாங்க! மங்கலம் வரவே!</b> {{float_right|(பிரபுக்கள் போக)}} <b>ஜீவ:{{gap+|5}} நாராயணா! உனக் கேனிப் பித்து? தீரா இடும்பையே தெளிவி லையுறல். </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} வீரவாகு - முருகக் கடவுளின் சேனாபதி. இராமனிடத்தில் பரதனும், முருகனிடத்தில் வீரவாகு தேவரும் உண்மைப் பக்தி கொண்டிருந்தது போல, குடிலன் ஜீவகனிடம் உண்மைப் பக்தி கொண்டுளான் என்பது கருத்து. தன்னயம் எண்ணா - சுயநலம் நினைக்காத. நாயனார் - திருவள்ளுவ நாயனார். தூக்கிய குறள் - ஆராய்ந்து கூறிய திருக்குறள். 268 அடி. “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியாருடைத்து” என்னும் திருக்குறளைச் சுட்டுகிறது இவ் வாக்கியம். நின் அருகு - உன் பக்கத்தில். அவர் - ‘அகங் குன்றி மூக்கிற் கரியார்’. வாகு தோள் ஐயுறல் - ஐயப்படுவது.<noinclude></noinclude> frmk7x0qifnodb7xhaft15tmemuumrc பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/120 250 535360 1840339 1830477 2025-07-08T08:07:30Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|120||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா:{{gap+|4}} எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை {{gap+|5}}280{{gap+|1}} கோடிய மாந்தர் கோடியின் மேலாம். ஜீவ:{{gap+|5}} எதற்குந் திருக்குறள் இடத்தரும்! விடுவிடு. விரும்பி யெவருந் தின்னுங் கரும்பு கைப்பதுன் வாய்க்குற் {{float_right|றம்மே.16}} (அரசனும் சேவகர்களும் போக)}} நாரா:{{gap+|4}} (தனிமொழி) ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன், {{gap+|5}}285{{gap+|1}} உறுதியா நம்பினன்; சிறிதும் பிறழான். வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை யுளத்தான்! களங்கம் ஓரான். குடிலனோ சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான் ஓதுவ உன்னுவ செய்குவ யாவுந் {{gap+|5}}290{{gap+|1}} தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்று மெண்ணான். முற்றுஞ் சாலமா நல்லவன் போலவே நடிப்பான், பொல்லா வஞ்சகன். மன்ன னருகுளோர் அதனை நெஞ்சிலும் நினையார்; நினையினும் உரையார். {{gap+|5}}295{{gap+|1}} இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர் வடித்து வடித்த மாற்றொலி போன்றே. தடுத்த மெய்ம்மை சாற்றுவர் யாரே? என்னே யரசர் தன்மை! மன்னுயிர்க் காக்கவும் அழிவும் அவர் தங் கடைக்கண் {{gap+|5}}300{{gap+|1}} நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப் பெற்றார்; பெற்றவப் பெருமையின் பாரம், உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ? கருப்போ தேனோ என்றவர் களிப்பது நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ? </b></poem> {{rule|15em|align=left}} கோடிய - கோணிய, வளைந்த. 279-280 அடி, “எனை வகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான், வேறாகு மாந்தர் பலர்” என்னும் திருக்குறளை உணர்த்துகிறது. 286 அடி, ‘வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் தண்ணீர்’ என்பது பழமொழி. களங்கம் - குற்றம். ஓரான் - உணர மாட்டான். உன்னுவ - நினைப்பவை. அறைவர் - பேசுவர். மாற்றொலி - எதிரொலி. கருப்பு - கரும்பு.<noinclude></noinclude> 5q18dbmsenv9rkyh2wtmorolv9mhutd 1840344 1840339 2025-07-08T08:11:17Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|120||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude><poem><b> நாரா:{{gap+|5}} எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை {{gap+|5}}280{{gap+|1}} கோடிய மாந்தர் கோடியின் மேலாம். ஜீவ:{{gap+|5}} எதற்குந் திருக்குறள் இடத்தரும்! விடுவிடு. விரும்பி யெவருந் தின்னுங் கரும்பு கைப்பதுன் வாய்க்குற் {{float_right|றம்மே.16}} (அரசனும் சேவகர்களும் போக) நாரா:{{gap+|4}} (தனிமொழி) ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன், {{gap+|5}}285{{gap+|1}} உறுதியா நம்பினன்; சிறிதும் பிறழான். வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை யுளத்தான்! களங்கம் ஓரான். குடிலனோ சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான் ஓதுவ உன்னுவ செய்குவ யாவுந் {{gap+|5}}290{{gap+|1}} தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்று மெண்ணான். முற்றுஞ் சாலமா நல்லவன் போலவே நடிப்பான், பொல்லா வஞ்சகன். மன்ன னருகுளோர் அதனை நெஞ்சிலும் நினையார்; நினையினும் உரையார். {{gap+|5}}295{{gap+|1}} இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர் வடித்து வடித்த மாற்றொலி போன்றே. தடுத்த மெய்ம்மை சாற்றுவர் யாரே? என்னே யரசர் தன்மை! மன்னுயிர்க் காக்கவும் அழிவும் அவர் தங் கடைக்கண் {{gap+|5}}300{{gap+|1}} நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப் பெற்றார்; பெற்றவப் பெருமையின் பாரம், உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ? கருப்போ தேனோ என்றவர் களிப்பது நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ? </b></poem> {{rule|15em|align=left}} கோடிய - கோணிய, வளைந்த. 279-280 அடி, “எனை வகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான், வேறாகு மாந்தர் பலர்” என்னும் திருக்குறளை உணர்த்துகிறது. 286 அடி, ‘வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் தண்ணீர்’ என்பது பழமொழி. களங்கம் - குற்றம். ஓரான் - உணர மாட்டான். உன்னுவ - நினைப்பவை. அறைவர் - பேசுவர். மாற்றொலி - எதிரொலி. கருப்பு - கரும்பு.<noinclude></noinclude> 1wleb4n5yy5g4efhqvr9mtsqus6axlf பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/121 250 535361 1840349 1830478 2025-07-08T08:21:26Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||121}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}305{{gap+|1}} விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்; விழியிமை கொட்டிற் கோடி பிறழுமே. கொட்டும் வாலாற் றேளும். வாயாற் பாம்புங் காலும் விடமெனக் கருதி யாவும் அடிமுதன் முடிவரை ஆய்ந்தா ராய்ந்து {{gap+|5}}310{{gap+|1}} பாரா ராளும் பாரென் படாவே? யாரையான் நோவ! அதிலுங் கொடுமை! அரசர்க் கமைச்சர் அவயவம் அலரோ? உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண ஒருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம் {{gap+|5}}315{{gap+|1}} மறந்து மன்னுயிர்ச் சகமே மதித்தங் கிறந்தசிந் தையனோ இவனோ அமைச்சன்? குடிலன் செய்யும் படிறுகள் வெளியாப் பொய்யும் மெய்யும் புலப்பட உரைக்க என்றால், நோக்க நின்றார் நிலையில் {{gap+|5}}320{{gap+|1}} தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ் சான்றொடு காட்டுந் தன்மைய வலவே. சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை காட்டினுங் கீறிய வரையலாற் காணார். என்செய? இனியான் எப்படிச் செப்புவன்? {{gap+|5}}325{{gap+|1}} நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ் சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும் ஓரில் யாதோ பெரிய உறுகண் நேரிடு மென்றென் நெஞ்சம் பதறும். என்னே யொருவன் வல்லமை! {{gap+|5}}330{{gap+|1}}இன்னும் பிழைப்பன் மன்னன் {{float_right|விழிக்கிலே.17}} (நாராயணன் போக) </b></poem> {{rule|15em|align=left}} காலும் விடம் விஷத்தை உமிழும், பாரார் - பாராதவர்கள். படிறு - வஞ்சகம், பொய். சித்திரப் பார்வை அழுந்தார்க்கு - ஓவியத்தைப் பார்க்கும் முறைப்படி பார்க்கத் தெரியாதவர்களுக்கு வரை - கோடு, கீறல். உறுகண் - துன்பம்.<noinclude></noinclude> 7jfz51bjx94lswj2wzckz2gvu6xjt2n 1840361 1840349 2025-07-08T08:30:06Z Info-farmer 232 {{dhr|3em}} 1840361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||121}}{{rule}}</b></noinclude><poem><b> {{gap+|5}}305{{gap+|1}} விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்; விழியிமை கொட்டிற் கோடி பிறழுமே. கொட்டும் வாலாற் றேளும். வாயாற் பாம்புங் காலும் விடமெனக் கருதி யாவும் அடிமுதன் முடிவரை ஆய்ந்தா ராய்ந்து {{gap+|5}}310{{gap+|1}} பாரா ராளும் பாரென் படாவே? யாரையான் நோவ! அதிலுங் கொடுமை! அரசர்க் கமைச்சர் அவயவம் அலரோ? உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண ஒருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம் {{gap+|5}}315{{gap+|1}} மறந்து மன்னுயிர்ச் சகமே மதித்தங் கிறந்தசிந் தையனோ இவனோ அமைச்சன்? குடிலன் செய்யும் படிறுகள் வெளியாப் பொய்யும் மெய்யும் புலப்பட உரைக்க என்றால், நோக்க நின்றார் நிலையில் {{gap+|5}}320{{gap+|1}} தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ் சான்றொடு காட்டுந் தன்மைய வலவே. சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை காட்டினுங் கீறிய வரையலாற் காணார். என்செய? இனியான் எப்படிச் செப்புவன்? {{gap+|5}}325{{gap+|1}} நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ் சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும் ஓரில் யாதோ பெரிய உறுகண் நேரிடு மென்றென் நெஞ்சம் பதறும். என்னே யொருவன் வல்லமை! {{gap+|5}}330{{gap+|1}}இன்னும் பிழைப்பன் மன்னன் {{float_right|விழிக்கிலே.17}} (நாராயணன் போக) </b></poem> {{rule|15em|align=left}} காலும் விடம் விஷத்தை உமிழும், பாரார் - பாராதவர்கள். படிறு - வஞ்சகம், பொய். சித்திரப் பார்வை அழுந்தார்க்கு - ஓவியத்தைப் பார்க்கும் முறைப்படி பார்க்கத் தெரியாதவர்களுக்கு வரை - கோடு, கீறல். உறுகண் - துன்பம். {{dhr|3em}}<noinclude></noinclude> tp1ommxcy2h498u25x3l9ccy0uxaxrc பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/122 250 535362 1840350 1830480 2025-07-08T08:21:37Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /></noinclude><poem><b> நடராஜன்:{{gap+|1}} (தனிமொழி) பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் {{gap+|5}}5தீட்டுவான்{{gap+|1}} புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து {{gap+|5}}10சிறிது{{gap+|1}} சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து {{gap+|5}}15{{gap+|1}} ஒருமுறை கூவி உழையுளார் புகழ் </b></poem> {{rule|15em|align=left}} பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப்படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் - ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து - நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து - சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர்.<noinclude></noinclude> n3v3y50x2nvw9mptbvjrfy36sdc3h45 1840357 1840350 2025-07-08T08:27:32Z Info-farmer 232 {{gap+|1}} 1840357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /></noinclude> {{center|{{x-larger|<b>இரண்டாம் களம்</b>}} இடம் : <b>ஊர்ப்புறத்து ஒரு சார்.</b> காலம்: <b>வைகறை</b> (நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க) (இணைக்குறள் ஆசிரியப்பா) }} <poem><b> நடராஜன்:{{gap+|1}} (தனிமொழி) பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் {{gap+|5}}5 {{gap+|1}} தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து {{gap+|5}}10{{gap+|1}}சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து {{gap+|5}}15{{gap+|1}} ஒருமுறை கூவி உழையுளார் புகழ் </b></poem> {{rule|15em|align=left}} பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப்படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் - ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து - நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து - சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர்.<noinclude></noinclude> kohlhhse4fiox2mm9w2g2sn4xin5ay0 1840358 1840357 2025-07-08T08:28:04Z Info-farmer 232 {{dhr|3em}} 1840358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>இரண்டாம் களம்</b>}} இடம் : <b>ஊர்ப்புறத்து ஒரு சார்.</b> காலம்: <b>வைகறை</b> (நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க) (இணைக்குறள் ஆசிரியப்பா) }} <poem><b> நடராஜன்:{{gap+|1}} (தனிமொழி) பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் {{gap+|5}}5 {{gap+|1}} தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து {{gap+|5}}10{{gap+|1}}சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து {{gap+|5}}15{{gap+|1}} ஒருமுறை கூவி உழையுளார் புகழ் </b></poem> {{rule|15em|align=left}} பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப்படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் - ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து - நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து - சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர்.<noinclude></noinclude> q6kf87h4gs37e2zn9wmn3yvyyqe83e7 1840362 1840358 2025-07-08T08:30:37Z Info-farmer 232 {{dhr|3em}} 1840362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>இரண்டாம் களம்</b>}} இடம் : <b>ஊர்ப்புறத்து ஒரு சார்.</b> காலம்: <b>வைகறை</b> (நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க) (இணைக்குறள் ஆசிரியப்பா) }} <poem><b> நடராஜன்:{{gap+|1}} (தனிமொழி) பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் {{gap+|5}}5 {{gap+|1}} தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து {{gap+|5}}10{{gap+|1}}சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து {{gap+|5}}15{{gap+|1}} ஒருமுறை கூவி உழையுளார் புகழ் </b></poem> {{rule|15em|align=left}} பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப்படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் - ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து - நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து - சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர். {{dhr|3em}}<noinclude></noinclude> 4jvpxfx48wmsrtz3mhwwv9b3fv06mbd பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/123 250 535363 1840351 1830481 2025-07-08T08:21:49Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||123}}{{rule}}</b></noinclude><poem><b> உற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும், இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங் கருதிக் காய்வனோ என்றயிர்த் திருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி {{gap+|5}}20மெய்யாந்{{gap+|1}} தம்பெயர் விளம்பி வாயசம் பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும், பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டாய் அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை {{gap+|5}}25அஞ்சிறை{{gap+|1}} யொத்தறுத் தடியா, எஞ்சலில் இசையறி மாக்களின் ஈட்டம் போல வசையறு பாடல் வழங்கலும் இனிதே! அதுவென்! ஆஹா! அலகா லடிக்கடி ததையுந் தஞ்சிறை தடவி விளக்கிக் {{gap+|5}}30கதுவுங்{{gap+|1}} காத லாணையிட் டறைந்து பின்புசென் றோயா தன்புபா ராட்டும் இவ்விரு குருகுங் காதலர். கண்டும் அவர்நிலை காணார் போல்துகிர்த் துண்டங் கொண்டு பரலைச் சொரிந்த {{gap+|5}}35{{gap+|1}} பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி உழையுழை ஒதுங்கி யோடிப் போலிக் </b></poem> {{rule|15em|align=left}} இரவி - ஞாயிறு, சூரியன். அயிர்த்து ஐயுற்று. காய்வனே - கோபிப்பானோ, எரிப்பானோ. தம் பெயர் விளம்பி - தம்முடைய பெயரைச் சொல்லி, அதாவது காகா எனக் கூவித் தாம் காகங்கள், இருள் அல்ல என்று சொல்லி. சூரியன் கதிர்பரப்பி இருளை ஓட்டியபோது, கருநிறமுடைய காகங்கள், தங்களையும் இருள் என்று கருதிச் சூரியன் ஓட்டுவானோ என்று அஞ்சி காகா என்று கூவித் தங்கள் பெயரைத் தெரிவித்தன என்பது கருத்து. சிறகர்ப் பறவை - சிறகுகளையுடைய பறவைகள். தொழுதி - தொகுதி, கூட்டம். அஞ்சிறை - அழகிய சிறகு. ஒத்தறுத்து - தாளம் பிடித்து. எஞ்சலில் குறைவில்லாத, இசையறி மாக்கள் - இசைப் புலவர்கள். ஈட்டம் கூட்டம். ததையும் நெருங்கிய, அடர்ந்த கதுவும் - பற்றுகிற. குருகு - நாரை. துகிர்த்துண்டம் - பவழம்போன்ற சிவந்த அலகு. உழையுழை - அங்கும் இங்கும். (உழை - பக்கம்).போலிக் கூச்சம் - பொய்யான வேட்கம்.<noinclude></noinclude> pbmzy2684qnpvgbzsxqjso69dyed9uu 1840359 1840351 2025-07-08T08:29:09Z Info-farmer 232 {{gap+|1}} 1840359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||123}}{{rule}}</b></noinclude><poem><b> உற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும், இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங் கருதிக் காய்வனோ என்றயிர்த் திருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி {{gap+|5}}20{{gap+|1}} மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம் பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும், பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டாய் அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை {{gap+|5}}25{{gap+|1}} அஞ்சிறை யொத்தறுத் தடியா, எஞ்சலில் இசையறி மாக்களின் ஈட்டம் போல வசையறு பாடல் வழங்கலும் இனிதே! அதுவென்! ஆஹா! அலகா லடிக்கடி ததையுந் தஞ்சிறை தடவி விளக்கிக் {{gap+|5}}30{{gap+|1}} கதுவுங் காத லாணையிட் டறைந்து பின்புசென் றோயா தன்புபா ராட்டும் இவ்விரு குருகுங் காதலர். கண்டும் அவர்நிலை காணார் போல்துகிர்த் துண்டங் கொண்டு பரலைச் சொரிந்த {{gap+|5}}35{{gap+|1}} பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி உழையுழை ஒதுங்கி யோடிப் போலிக் </b></poem> {{rule|15em|align=left}} இரவி - ஞாயிறு, சூரியன். அயிர்த்து ஐயுற்று. காய்வனே - கோபிப்பானோ, எரிப்பானோ. தம் பெயர் விளம்பி - தம்முடைய பெயரைச் சொல்லி, அதாவது காகா எனக் கூவித் தாம் காகங்கள், இருள் அல்ல என்று சொல்லி. சூரியன் கதிர்பரப்பி இருளை ஓட்டியபோது, கருநிறமுடைய காகங்கள், தங்களையும் இருள் என்று கருதிச் சூரியன் ஓட்டுவானோ என்று அஞ்சி காகா என்று கூவித் தங்கள் பெயரைத் தெரிவித்தன என்பது கருத்து. சிறகர்ப் பறவை - சிறகுகளையுடைய பறவைகள். தொழுதி - தொகுதி, கூட்டம். அஞ்சிறை - அழகிய சிறகு. ஒத்தறுத்து - தாளம் பிடித்து. எஞ்சலில் குறைவில்லாத, இசையறி மாக்கள் - இசைப் புலவர்கள். ஈட்டம் கூட்டம். ததையும் நெருங்கிய, அடர்ந்த கதுவும் - பற்றுகிற. குருகு - நாரை. துகிர்த்துண்டம் - பவழம்போன்ற சிவந்த அலகு. உழையுழை - அங்கும் இங்கும். (உழை - பக்கம்).போலிக் கூச்சம் - பொய்யான வேட்கம்.<noinclude></noinclude> n5ibkwqfccs3pyfslyfxszvn2v76mf0 1840360 1840359 2025-07-08T08:29:42Z Info-farmer 232 {{dhr|3em}} 1840360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||123}}{{rule}}</b></noinclude><poem><b> உற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும், இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங் கருதிக் காய்வனோ என்றயிர்த் திருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி {{gap+|5}}20{{gap+|1}} மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம் பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும், பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டாய் அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை {{gap+|5}}25{{gap+|1}} அஞ்சிறை யொத்தறுத் தடியா, எஞ்சலில் இசையறி மாக்களின் ஈட்டம் போல வசையறு பாடல் வழங்கலும் இனிதே! அதுவென்! ஆஹா! அலகா லடிக்கடி ததையுந் தஞ்சிறை தடவி விளக்கிக் {{gap+|5}}30{{gap+|1}} கதுவுங் காத லாணையிட் டறைந்து பின்புசென் றோயா தன்புபா ராட்டும் இவ்விரு குருகுங் காதலர். கண்டும் அவர்நிலை காணார் போல்துகிர்த் துண்டங் கொண்டு பரலைச் சொரிந்த {{gap+|5}}35{{gap+|1}} பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி உழையுழை ஒதுங்கி யோடிப் போலிக் </b></poem> {{rule|15em|align=left}} இரவி - ஞாயிறு, சூரியன். அயிர்த்து ஐயுற்று. காய்வனே - கோபிப்பானோ, எரிப்பானோ. தம் பெயர் விளம்பி - தம்முடைய பெயரைச் சொல்லி, அதாவது காகா எனக் கூவித் தாம் காகங்கள், இருள் அல்ல என்று சொல்லி. சூரியன் கதிர்பரப்பி இருளை ஓட்டியபோது, கருநிறமுடைய காகங்கள், தங்களையும் இருள் என்று கருதிச் சூரியன் ஓட்டுவானோ என்று அஞ்சி காகா என்று கூவித் தங்கள் பெயரைத் தெரிவித்தன என்பது கருத்து. சிறகர்ப் பறவை - சிறகுகளையுடைய பறவைகள். தொழுதி - தொகுதி, கூட்டம். அஞ்சிறை - அழகிய சிறகு. ஒத்தறுத்து - தாளம் பிடித்து. எஞ்சலில் குறைவில்லாத, இசையறி மாக்கள் - இசைப் புலவர்கள். ஈட்டம் கூட்டம். ததையும் நெருங்கிய, அடர்ந்த கதுவும் - பற்றுகிற. குருகு - நாரை. துகிர்த்துண்டம் - பவழம்போன்ற சிவந்த அலகு. உழையுழை - அங்கும் இங்கும். (உழை - பக்கம்).போலிக் கூச்சம் - பொய்யான வேட்கம். {{dhr|3em}}<noinclude></noinclude> 6lzpj69zh48cbz0rvfmyhciy3bgpkmz பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/179 250 535419 1840423 1832308 2025-07-08T11:26:27Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rajendran Nallathambi" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||179}}{{rule}}</b></noinclude> {{left_margin|3em|<poem><b> சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள் விழிமுகம் நகைமொழி தொழில்நடை இவைவழி 215 ஒழுகிடும். அவைகளை உழையுளார் தமக்குத் தோற்றிய பலவொடும் தொடுத்துக் காற்றில் தூற்றுவர். எனினும் சொன்னவை முற்றும் குடிலன் குணமுடன் கூடலால் அவையும், படையிவண் வரநாம் பார்த்ததும், 220 அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே.</b></poem>}} {{Right|(நடராஜன் போக)}} {{larger|<b>மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.</b>}} {{dhr}} {{rule|15em|align=left}} அந்தரங்கப் பொருள் - இரகசியங்கள் உழையுளார் - அருகில் உள்ளவர். அடையவும் - முழுவதும். அறைகுவம் சொல்லுவோம். {{dhr|3em}}<noinclude></noinclude> 8memr4gn7nutgry5sfx73vewotdatng 1840425 1840423 2025-07-08T11:27:49Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1840425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||179}}{{rule}}</b></noinclude> {{left_margin|3em|<poem><b> சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள் விழிமுகம் நகைமொழி தொழில்நடை இவைவழி 215 ஒழுகிடும். அவைகளை உழையுளார் தமக்குத் தோற்றிய பலவொடும் தொடுத்துக் காற்றில் தூற்றுவர். எனினும் சொன்னவை முற்றும் குடிலன் குணமுடன் கூடலால் அவையும், படையிவண் வரநாம் பார்த்ததும், 220 அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே.</b></poem>}} {{Right|(நடராஜன் போக)|65em}} {{larger|<b>மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.</b>}} {{dhr}} {{rule|15em|align=left}} அந்தரங்கப் பொருள் - இரகசியங்கள் உழையுளார் - அருகில் உள்ளவர். அடையவும் - முழுவதும். அறைகுவம் சொல்லுவோம். {{dhr|3em}}<noinclude></noinclude> ebvp3ftvq8ev9dsfm6vda5t01wx827t 1840426 1840425 2025-07-08T11:28:10Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||179}}{{rule}}</b></noinclude> {{left_margin|3em|<poem><b> சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள் விழிமுகம் நகைமொழி தொழில்நடை இவைவழி 215 ஒழுகிடும். அவைகளை உழையுளார் தமக்குத் தோற்றிய பலவொடும் தொடுத்துக் காற்றில் தூற்றுவர். எனினும் சொன்னவை முற்றும் குடிலன் குணமுடன் கூடலால் அவையும், படையிவண் வரநாம் பார்த்ததும், 220 அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே.</b></poem>}} {{Right|(நடராஜன் போக)|45em}} {{larger|<b>மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.</b>}} {{dhr}} {{rule|15em|align=left}} அந்தரங்கப் பொருள் - இரகசியங்கள் உழையுளார் - அருகில் உள்ளவர். அடையவும் - முழுவதும். அறைகுவம் சொல்லுவோம். {{dhr|3em}}<noinclude></noinclude> l7x3c35xp1bqfpcnu02fcs5o0g5rd5a 1840427 1840426 2025-07-08T11:29:05Z Info-farmer 232 {{dhr|10em}} 1840427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||179}}{{rule}}</b></noinclude> {{left_margin|3em|<poem><b> சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள் விழிமுகம் நகைமொழி தொழில்நடை இவைவழி 215 ஒழுகிடும். அவைகளை உழையுளார் தமக்குத் தோற்றிய பலவொடும் தொடுத்துக் காற்றில் தூற்றுவர். எனினும் சொன்னவை முற்றும் குடிலன் குணமுடன் கூடலால் அவையும், படையிவண் வரநாம் பார்த்ததும், 220 அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே.</b> (நடராஜன் போக) </poem>}} {{larger|<b>மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.</b>}} {{dhr|10em}} {{rule|15em|align=left}} அந்தரங்கப் பொருள் - இரகசியங்கள் உழையுளார் - அருகில் உள்ளவர். அடையவும் - முழுவதும். அறைகுவம் சொல்லுவோம். {{dhr|3em}}<noinclude></noinclude> jca1xy7hx5ewzh4sqyokap3bpvvgqvb பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/180 250 535420 1840409 1832330 2025-07-08T11:11:25Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rajendran Nallathambi" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மூன்றாம் களம்</b>}} இடம் : <b>கன்னிமாடம்; நிலாமுற்றம்.</b> காலம்: <b>யாமம்</b> (மனோன்மணி உலாவ, வாணி நிற்க, செவிலி படுத்துறங்க.) {{larger|<b>(நேரிசை ஆசிரியப்பா)</b>}}}} செவிலி: {{left_margin|3em|<poem>(படுத்தபடியே)</poem>}} <b>{{left_margin|3em|<poem>ஏதம்மா! நள்ளிரா எழுந் துலாவினை?</poem>}}</b> <b>{{left_margin|3em|<poem>தூக்கம் ஒழிவையேல் சுடுமே யுடலம்</poem>}}</b> மனோன்மணி: <b>{{left_margin|3em|<poem>உடலால் என்பயன்? சுடவே தகுமது வேர்க்கிற திவ்விடம்; வெளியே இருப்பல். 5 போர்த்துநீ தூங்கு!</poem>}}</b> {{Right|(செவிலி தூங்க)}} <b>{{left_margin|3em|<poem>வாணீ! உனக்கும் உறக்க மில்லையோ?</poem>}}</b> வாணி: <b>{{left_margin|3em|<poem>எனக்கது பழக்கம்.</poem>}}</b> மனோ: <b>{{left_margin|3em|<poem>வருதி இப்புறம், இருஇரு...</poem>}}</b> {{Right|(இருவரும் நிலாமுற்றத்திருக்க)}} <b>{{left_margin|3em|<poem> இதுவரை எங்கிருந் தனவிவ் அன்றிற் பேய்கள்! நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும் 10 உறக்கங் கொண்டனள் செவிலி! குறட்டைகேள். கையறு நித்திரை! வாணீ! மற்றிது வைகறை யன்றோ?</poem>}}</b> {{dhr}} {{rule|15em|align=left}} நள்ளிரா - நடு இரவு. கையறு நித்திரை - தன்னை மறந்து தூங்குதல். வைகறை - விடியற் காலம். {{dhr|3em}}<noinclude></noinclude> 5dugudjp7m5rt4bml3mww3x566lby69 1840410 1840409 2025-07-08T11:12:50Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rajendran Nallathambi" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மூன்றாம் களம்</b>}} இடம் : <b>கன்னிமாடம்; நிலாமுற்றம்.</b> காலம்: <b>யாமம்</b> (மனோன்மணி உலாவ, வாணி நிற்க, செவிலி படுத்துறங்க.) {{larger|<b>(நேரிசை ஆசிரியப்பா)</b>}}}} செவிலி: {{left_margin|3em|<poem>(படுத்தபடியே)</poem>}} <b>{{left_margin|3em|<poem>ஏதம்மா! நள்ளிரா எழுந் துலாவினை?</poem>}}</b> <b>{{left_margin|3em|<poem>தூக்கம் ஒழிவையேல் சுடுமே யுடலம்</poem>}}</b> மனோன்மணி: <b>{{left_margin|3em|<poem> உடலால் என்பயன்? சுடவே தகுமது வேர்க்கிற திவ்விடம்; வெளியே இருப்பல். 5 போர்த்துநீ தூங்கு!</poem>}}</b> {{Right|(செவிலி தூங்க)}} <b>{{left_margin|3em|<poem> வாணீ! உனக்கும் உறக்க மில்லையோ?</poem>}}</b> வாணி: <b>{{left_margin|3em|<poem>எனக்கது பழக்கம்.</poem>}}</b> மனோ: <b>{{left_margin|3em|<poem>வருதி இப்புறம், இருஇரு...</poem>}}</b> {{Right|(இருவரும் நிலாமுற்றத்திருக்க)}} <b>{{left_margin|3em|<poem> இதுவரை எங்கிருந் தனவிவ் அன்றிற் பேய்கள்! நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும் 10 உறக்கங் கொண்டனள் செவிலி! குறட்டைகேள். கையறு நித்திரை! வாணீ! மற்றிது வைகறை யன்றோ?</poem>}}</b> {{dhr}} {{rule|15em|align=left}} நள்ளிரா - நடு இரவு. கையறு நித்திரை - தன்னை மறந்து தூங்குதல். வைகறை - விடியற் காலம். {{dhr|3em}}<noinclude></noinclude> m7hs9i1uzznhvchha2x0hal1ni1uny9 1840412 1840410 2025-07-08T11:16:36Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1840412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மூன்றாம் களம்</b>}} இடம் : <b>கன்னிமாடம்; நிலாமுற்றம்.</b> காலம்: <b>யாமம்</b> (மனோன்மணி உலாவ, வாணி நிற்க, செவிலி படுத்துறங்க.) {{larger|<b>(நேரிசை ஆசிரியப்பா)</b>}}}} செவிலி: {{left_margin|3em|<poem>(படுத்தபடியே)</poem>}} <b>{{left_margin|3em|<poem>ஏதம்மா! நள்ளிரா எழுந் துலாவினை?</poem>}}</b> <b>{{left_margin|3em|<poem>தூக்கம் ஒழிவையேல் சுடுமே யுடலம்</poem>}}</b> மனோன்மணி: <b>{{left_margin|3em|<poem> உடலால் என்பயன்? சுடவே தகுமது வேர்க்கிற திவ்விடம்; வெளியே இருப்பல். 5 {{gap+|1}} போர்த்துநீ தூங்கு!</b> (செவிலி தூங்க)</poem>}} <b>{{left_margin|3em|<poem> வாணீ! உனக்கும் உறக்க மில்லையோ?</poem>}}</b> வாணி: <b>{{left_margin|3em|<poem>எனக்கது பழக்கம்.</poem>}}</b> மனோ: <b>{{left_margin|3em|<poem>வருதி இப்புறம், இருஇரு...</b> (இருவரும் நிலாமுற்றத்திருக்க)</poem>}} <b>{{left_margin|3em|<poem> இதுவரை எங்கிருந் தனவிவ் அன்றிற் பேய்கள்! நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும் 10{{gap+|1}} உறக்கங் கொண்டனள் செவிலி! குறட்டைகேள். கையறு நித்திரை! வாணீ! மற்றிது வைகறை யன்றோ?</poem>}}</b> {{dhr}} {{rule|15em|align=left}} நள்ளிரா - நடு இரவு. கையறு நித்திரை - தன்னை மறந்து தூங்குதல். வைகறை - விடியற் காலம். {{dhr|3em}}<noinclude></noinclude> rsbbf5qbjadrijjd2cuf0c7zqvdkmve 1840414 1840412 2025-07-08T11:17:28Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மூன்றாம் களம்</b>}} இடம் : <b>கன்னிமாடம்; நிலாமுற்றம்.</b> காலம்: <b>யாமம்</b> (மனோன்மணி உலாவ, வாணி நிற்க, செவிலி படுத்துறங்க.) {{larger|<b>(நேரிசை ஆசிரியப்பா)</b>}}}} செவிலி: {{gap}}{{left_margin|3em|<poem>(படுத்தபடியே)</poem>}} <b>{{left_margin|5em|<poem>ஏதம்மா! நள்ளிரா எழுந் துலாவினை?</poem>}}</b> <b>{{left_margin|5em|<poem>தூக்கம் ஒழிவையேல் சுடுமே யுடலம்</poem>}}</b> மனோன்மணி: <b>{{left_margin|3em|<poem> உடலால் என்பயன்? சுடவே தகுமது வேர்க்கிற திவ்விடம்; வெளியே இருப்பல். 5 {{gap+|1}} போர்த்துநீ தூங்கு!</b> (செவிலி தூங்க)</poem>}} <b>{{left_margin|3em|<poem> வாணீ! உனக்கும் உறக்க மில்லையோ?</poem>}}</b> வாணி: <b>{{left_margin|3em|<poem>எனக்கது பழக்கம்.</poem>}}</b> மனோ: <b>{{left_margin|3em|<poem>வருதி இப்புறம், இருஇரு...</b> (இருவரும் நிலாமுற்றத்திருக்க)</poem>}} <b>{{left_margin|3em|<poem> இதுவரை எங்கிருந் தனவிவ் அன்றிற் பேய்கள்! நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும் 10{{gap+|1}} உறக்கங் கொண்டனள் செவிலி! குறட்டைகேள். கையறு நித்திரை! வாணீ! மற்றிது வைகறை யன்றோ?</poem>}}</b> {{dhr}} {{rule|15em|align=left}} நள்ளிரா - நடு இரவு. கையறு நித்திரை - தன்னை மறந்து தூங்குதல். வைகறை - விடியற் காலம். {{dhr|3em}}<noinclude></noinclude> frnhtbue77ilc0jl7s1s09wwknr36by பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/181 250 535421 1840402 1832953 2025-07-08T11:07:47Z Info-farmer 232 + வடிவ மாற்றம் 1840402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Iswaryalenin" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||181}}{{rule}}</b></noinclude><poem><b> வா:{{gap+|6}} நடுநிசி அம்மா! மனோ:{{gap+|5}} இத்தனை யரவமேன்? முனிவ ரறையில் நித்தமு முண்டிது! நிதியெடுப் பவர்போல் {{gap+|5}}15{{gap+|1}} தோண்டலு மண்ணினைக் கீண்டலும் கேட்டுளேன். ஊரிலேன் இன்றிவ் உற்சவ அரவம்? வா:{{gap+|6}} (தனதுள்) போரெனிற் பொறுப்பளோ? உரைப்பனோ? ஒளிப்பனோ? மனோ:{{gap+|5}} கண்டதோ நகருங் காணாக் கனவு? வா:{{gap+|6}} கண்டது கனவோ தாயே? மனோ:{{gap+|5}} கண்டது... 20 கனவெனிற் கனவு மன்று:{{gap+|1}}மற்று{{gap+|1}} நனவெனில் நனவு மன்று. வா:{{gap+|6}} நன்றே! கண்ணாற் கண்டிலை போலும்! அம்ம! மனோ:{{gap+|5}} கண்ணால் எங்ஙனங் காணுவன்? கண்ணுளார்! வா:{{gap+|6}} எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை! மனோ:{{gap+|1}}25{{gap+|1}} எண்ணவும் படாஅர்! எண்ணுளும் உளாஅர்! வா:{{gap+|6}} புதுமை! ஆயினும் எதுபோ லவ்வுரு? மனோ:{{gap+|5}} இதுவென வொண்ணா உவமையி லொருவரை எத்திற மென்றியான் இயம்ப! நீயுஞ் சித்திர ரேகை யலையே. விடுவிடு! </b></poem> {{rule|15em|align=left}} அரவம் - ஓசை. நிதியெடுப்பவர்போல் - புதையல் தோண்டி எடுப்பவர் போல. 13 - 15 வரிகள், அரண்மனையிலிருந்து ஆசிரமம் வரையில் முனிவர் சுரங்கம் தோண்டுவதால் உண்டாகும் அரவத்தைக் குறிக்கின்றன. 19 வரி. கண்டது கனவோ? - நீ காதல் கொள்ளக் காரணமாயிருந்தது கனவுக் காட்சியோ? கண்ணுளார் - கண்ணிலே தங்கி யிருக்கிறார். சித்திர ரேகை - சித்திரலேகை. இவள், வாணாசுரன் மகளாகிய உஷை என்பவளின் தோழி. மனிதர் உருவத்தைச் சித்திரமாக<noinclude></noinclude> k9qpl6k1kofn1tzgwsatm2ln8rtckf5 1840415 1840402 2025-07-08T11:20:13Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1840415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்||181}}{{rule}}</b></noinclude><poem><b> வா:{{gap+|6}} நடுநிசி அம்மா! மனோ:{{gap+|4}}இத்தனை யரவமேன்? முனிவ ரறையில் நித்தமு முண்டிது! நிதியெடுப் பவர்போல் {{gap+|5}}15{{gap+|1}} தோண்டலு மண்ணினைக் கீண்டலும் கேட்டுளேன். ஊரிலேன் இன்றிவ் உற்சவ அரவம்? வா:{{gap+|6}} (தனதுள்) போரெனிற் பொறுப்பளோ? உரைப்பனோ? ஒளிப்பனோ? மனோ:{{gap+|5}}கண்டதோ நகருங் காணாக் கனவு? வா:{{gap+|6}} கண்டது கனவோ தாயே? மனோ:{{gap+|5}}கண்டது... 20 கனவெனிற் கனவு மன்று:{{gap+|1}}மற்று{{gap+|1}} நனவெனில் நனவு மன்று. வா:{{gap+|6}} நன்றே! கண்ணாற் கண்டிலை போலும்! அம்ம! மனோ:{{gap+|5}} கண்ணால் எங்ஙனங் காணுவன்? கண்ணுளார்! வா:{{gap+|6}} எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை! மனோ:{{gap+|1}}25{{gap+|1}} எண்ணவும் படாஅர்! எண்ணுளும் உளாஅர்! வா:{{gap+|6}} புதுமை! ஆயினும் எதுபோ லவ்வுரு? மனோ:{{gap+|5}} இதுவென வொண்ணா உவமையி லொருவரை எத்திற மென்றியான் இயம்ப! நீயுஞ் சித்திர ரேகை யலையே. விடுவிடு! </b></poem> {{dhr}} {{rule|15em|align=left}} அரவம் - ஓசை. நிதியெடுப்பவர்போல் - புதையல் தோண்டி எடுப்பவர் போல. 13 - 15 வரிகள், அரண்மனையிலிருந்து ஆசிரமம் வரையில் முனிவர் சுரங்கம் தோண்டுவதால் உண்டாகும் அரவத்தைக் குறிக்கின்றன. 19 வரி. கண்டது கனவோ? - நீ காதல் கொள்ளக் காரணமாயிருந்தது கனவுக் காட்சியோ? கண்ணுளார் - கண்ணிலே தங்கி யிருக்கிறார். சித்திர ரேகை - சித்திரலேகை. இவள், வாணாசுரன் மகளாகிய உஷை என்பவளின் தோழி. மனிதர் உருவத்தைச் சித்திரமாக<noinclude></noinclude> 8a1cu1g1mnu8tq12hvoif3lo81wd9l0 பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/182 250 535422 1840416 1832347 2025-07-08T11:21:22Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rajendran Nallathambi" /><b>{{rh|182||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <b>{{left_margin|3em|<poem> 30{{gap+|1}}பண்ணியல் வாணி வாவா! உன்றன் பாட்டது கேட்டுப் பலநா ளாயின! வா: என்பா டிருக்க! யாவரு மறிவார்! உன்பா டதுவே ஒருவரு மறியார். மனோ: பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே! 35{{gap+|1}} நீக்குக இத்தீ நினைவு! யாழுடன் தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம் (வாணி வீணைமீட்ட) அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்! (வாணி பாட)</poem>}}</b> {{X-larger|{{c|<b>சிவகாமி சரிதம்</b>}}}} {{c|<b>(குறள்வெண்செந்துறை)</b>}} <b>{{left_margin|3em|<poem>“வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவ! மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயில் பாழடவி இதிற்சுழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே”.</poem>}}</b> {{Right|1}} {{dhr}} {{rule|15em|align=left}} வரைவதில் வல்லவள். உஷை தான் கனவிற் கண்டு காதல் கொண்ட அநிருத்தனை இன்னான் என்று அறியாமல் வருந்திய போது, சித்திரலேகை அவன் உருவத்தை ஓவியமாக எழுதிக் காட்டினாள். அவ் வுருவந்தான் தான் காதலித்தவன் என்று கூற, சித்திரலேகை தன் மாயா ஜாலத்தினால் அநிருத்தனை அவன் உறங்கிய கட்டிலோடு கொண்டுவந்து உஷையினிடம் விட்டாள் என்பது புராணக் கதை. நீ சித்திரலேகை அல்லை - என்பது, சித்திரலேகைபோல வாணி ஓவியம் எழுத வல்லவள் அல்லாள் என்பது 34 வரி. பழகியும் உளையே வாணி தன் காதலனை நேரில் கண்டு பழகியிருக்கிறாள் என்பதும், மனோன்மணி தன் காதலனை நேரில் காணாமல் கனவில் மட்டும் கண்டிருக்கிறாள் என்பதும் கருத்து. செய்யுள் 1. அடவி காடு. பாதை விடுத்து வழி தவறி. அளித்த - பாதுகாத்த. {{dhr|3em}}<noinclude></noinclude> e42q5dawa0olcbro9hdc1mzeuleji7l 1840417 1840416 2025-07-08T11:21:50Z Info-farmer 232 1840417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rajendran Nallathambi" /><b>{{rh|182||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <b>{{left_margin|3em|<poem> 30{{gap+|1}}பண்ணியல் வாணி வாவா! உன்றன் பாட்டது கேட்டுப் பலநா ளாயின! வா: என்பா டிருக்க! யாவரு மறிவார்! உன்பா டதுவே ஒருவரு மறியார். மனோ: பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே! 35{{gap+|1}} நீக்குக இத்தீ நினைவு! யாழுடன் தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம் (வாணி வீணைமீட்ட) அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்! (வாணி பாட)</poem>}}</b> {{X-larger|{{c|<b>சிவகாமி சரிதம்</b>}}}} {{c|<b>(குறள்வெண்செந்துறை)</b>}} <b>{{left_margin|3em|<poem>“வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவ! மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயில் பாழடவி இதிற்சுழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே”.</poem>}}</b> {{Right|1}} {{dhr}} {{rule|15em|align=left}} வரைவதில் வல்லவள். உஷை தான் கனவிற் கண்டு காதல் கொண்ட அநிருத்தனை இன்னான் என்று அறியாமல் வருந்திய போது, சித்திரலேகை அவன் உருவத்தை ஓவியமாக எழுதிக் காட்டினாள். அவ் வுருவந்தான் தான் காதலித்தவன் என்று கூற, சித்திரலேகை தன் மாயா ஜாலத்தினால் அநிருத்தனை அவன் உறங்கிய கட்டிலோடு கொண்டுவந்து உஷையினிடம் விட்டாள் என்பது புராணக் கதை. நீ சித்திரலேகை அல்லை - என்பது, சித்திரலேகைபோல வாணி ஓவியம் எழுத வல்லவள் அல்லாள் என்பது 34 வரி. பழகியும் உளையே வாணி தன் காதலனை நேரில் கண்டு பழகியிருக்கிறாள் என்பதும், மனோன்மணி தன் காதலனை நேரில் காணாமல் கனவில் மட்டும் கண்டிருக்கிறாள் என்பதும் கருத்து. செய்யுள் 1. அடவி காடு. பாதை விடுத்து வழி தவறி. அளித்த - பாதுகாத்த. {{dhr|3em}}<noinclude></noinclude> mfgsrpi8iu5vn4o0ig7f1dniro9ezby 1840418 1840417 2025-07-08T11:23:02Z Info-farmer 232 +++ 1840418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rajendran Nallathambi" /><b>{{rh|182||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <b>{{left_margin|3em|<poem> 30{{gap+|1}}பண்ணியல் வாணி வாவா! உன்றன் பாட்டது கேட்டுப் பலநா ளாயின! வா: என்பா டிருக்க! யாவரு மறிவார்! உன்பா டதுவே ஒருவரு மறியார். மனோ: பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே! 35{{gap+|1}} நீக்குக இத்தீ நினைவு! யாழுடன் தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம் (வாணி வீணைமீட்ட) அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்! (வாணி பாட)</poem>}}</b> {{X-larger|{{c|<b>சிவகாமி சரிதம்</b>}}}} {{c|<b>(குறள்வெண்செந்துறை)</b>}} <b>{{left_margin|3em|<poem>“வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவ! மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயில் பாழடவி இதிற்சுழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே”.</poem>}}</b> {{Right|1}} {{dhr}} {{rule|15em|align=left}} வரைவதில் வல்லவள். உஷை தான் கனவிற் கண்டு காதல் கொண்ட அநிருத்தனை இன்னான் என்று அறியாமல் வருந்திய போது, சித்திரலேகை அவன் உருவத்தை ஓவியமாக எழுதிக் காட்டினாள். அவ் வுருவந்தான் தான் காதலித்தவன் என்று கூற, சித்திரலேகை தன் மாயா ஜாலத்தினால் அநிருத்தனை அவன் உறங்கிய கட்டிலோடு கொண்டுவந்து உஷையினிடம் விட்டாள் என்பது புராணக் கதை. நீ சித்திரலேகை அல்லை - என்பது, சித்திரலேகைபோல வாணி ஓவியம் எழுத வல்லவள் அல்லாள் என்பது 34 வரி. பழகியும் உளையே வாணி தன் காதலனை நேரில் கண்டு பழகியிருக்கிறாள் என்பதும், மனோன்மணி தன் காதலனை நேரில் காணாமல் கனவில் மட்டும் கண்டிருக்கிறாள் என்பதும் கருத்து. செய்யுள் 1. அடவி காடு. பாதை விடுத்து வழி தவறி. அளித்த - பாதுகாத்த. {{dhr|3em}}<noinclude></noinclude> 8pk0dpijg7ha4f6g66vwnp3q5eolomm 1840420 1840418 2025-07-08T11:23:32Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rajendran Nallathambi" /><b>{{rh|182||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <b>{{left_margin|3em|<poem> 30{{gap+|1}}பண்ணியல் வாணி வாவா! உன்றன் பாட்டது கேட்டுப் பலநா ளாயின! வா: என்பா டிருக்க! யாவரு மறிவார்! உன்பா டதுவே ஒருவரு மறியார். மனோ: பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே! 35{{gap+|1}} நீக்குக இத்தீ நினைவு! யாழுடன் தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம் (வாணி வீணைமீட்ட) அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்! (வாணி பாட)</poem>}}</b> {{X-larger|{{c|<b>சிவகாமி சரிதம்</b>}}}} {{c|<b>(குறள்வெண்செந்துறை)</b>}} <b>{{left_margin|3em|<poem>“வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவ! மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயில் பாழடவி இதிற்சுழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே”.</poem>}}</b> {{Right|1}} {{dhr}} {{rule|15em|align=left}} வரைவதில் வல்லவள். உஷை தான் கனவிற் கண்டு காதல் கொண்ட அநிருத்தனை இன்னான் என்று அறியாமல் வருந்திய போது, சித்திரலேகை அவன் உருவத்தை ஓவியமாக எழுதிக் காட்டினாள். அவ் வுருவந்தான் தான் காதலித்தவன் என்று கூற, சித்திரலேகை தன் மாயா ஜாலத்தினால் அநிருத்தனை அவன் உறங்கிய கட்டிலோடு கொண்டுவந்து உஷையினிடம் விட்டாள் என்பது புராணக் கதை. நீ சித்திரலேகை அல்லை - என்பது, சித்திரலேகைபோல வாணி ஓவியம் எழுத வல்லவள் அல்லாள் என்பது 34 வரி. பழகியும் உளையே வாணி தன் காதலனை நேரில் கண்டு பழகியிருக்கிறாள் என்பதும், மனோன்மணி தன் காதலனை நேரில் காணாமல் கனவில் மட்டும் கண்டிருக்கிறாள் என்பதும் கருத்து. செய்யுள் 1. அடவி காடு. பாதை விடுத்து வழி தவறி. அளித்த - பாதுகாத்த. {{dhr|3em}}<noinclude></noinclude> p8jdzp7w45re3zipdd7b45rkwt7nano 1840421 1840420 2025-07-08T11:24:15Z Info-farmer 232 </b> 1840421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rajendran Nallathambi" /><b>{{rh|182||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <b>{{left_margin|3em|<poem> 30{{gap+|1}}பண்ணியல் வாணி வாவா! உன்றன் பாட்டது கேட்டுப் பலநா ளாயின! வா: என்பா டிருக்க! யாவரு மறிவார்! உன்பா டதுவே ஒருவரு மறியார். மனோ: பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே! 35{{gap+|1}} நீக்குக இத்தீ நினைவு! யாழுடன் தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம்</b> (வாணி வீணைமீட்ட) <b>அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்!</b> (வாணி பாட)</poem>}} {{X-larger|{{c|<b>சிவகாமி சரிதம்</b>}}}} {{c|<b>(குறள்வெண்செந்துறை)</b>}} <b>{{left_margin|3em|<poem>“வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவ! மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயில் பாழடவி இதிற்சுழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே”.</poem>}}</b> {{Right|1}} {{dhr}} {{rule|15em|align=left}} வரைவதில் வல்லவள். உஷை தான் கனவிற் கண்டு காதல் கொண்ட அநிருத்தனை இன்னான் என்று அறியாமல் வருந்திய போது, சித்திரலேகை அவன் உருவத்தை ஓவியமாக எழுதிக் காட்டினாள். அவ் வுருவந்தான் தான் காதலித்தவன் என்று கூற, சித்திரலேகை தன் மாயா ஜாலத்தினால் அநிருத்தனை அவன் உறங்கிய கட்டிலோடு கொண்டுவந்து உஷையினிடம் விட்டாள் என்பது புராணக் கதை. நீ சித்திரலேகை அல்லை - என்பது, சித்திரலேகைபோல வாணி ஓவியம் எழுத வல்லவள் அல்லாள் என்பது 34 வரி. பழகியும் உளையே வாணி தன் காதலனை நேரில் கண்டு பழகியிருக்கிறாள் என்பதும், மனோன்மணி தன் காதலனை நேரில் காணாமல் கனவில் மட்டும் கண்டிருக்கிறாள் என்பதும் கருத்து. செய்யுள் 1. அடவி காடு. பாதை விடுத்து வழி தவறி. அளித்த - பாதுகாத்த. {{dhr|3em}}<noinclude></noinclude> 824s3codnox3zfp34wnf9b19tfnlr0x 1840422 1840421 2025-07-08T11:24:30Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|182||மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-20}}{{rule}}</b></noinclude> <b>{{left_margin|3em|<poem> 30{{gap+|1}}பண்ணியல் வாணி வாவா! உன்றன் பாட்டது கேட்டுப் பலநா ளாயின! வா: என்பா டிருக்க! யாவரு மறிவார்! உன்பா டதுவே ஒருவரு மறியார். மனோ: பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே! 35{{gap+|1}} நீக்குக இத்தீ நினைவு! யாழுடன் தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம்</b> (வாணி வீணைமீட்ட) <b>அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்!</b> (வாணி பாட)</poem>}} {{X-larger|{{c|<b>சிவகாமி சரிதம்</b>}}}} {{c|<b>(குறள்வெண்செந்துறை)</b>}} <b>{{left_margin|3em|<poem>“வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவ! மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயில் பாழடவி இதிற்சுழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே”.</poem>}}</b> {{Right|1}} {{dhr}} {{rule|15em|align=left}} வரைவதில் வல்லவள். உஷை தான் கனவிற் கண்டு காதல் கொண்ட அநிருத்தனை இன்னான் என்று அறியாமல் வருந்திய போது, சித்திரலேகை அவன் உருவத்தை ஓவியமாக எழுதிக் காட்டினாள். அவ் வுருவந்தான் தான் காதலித்தவன் என்று கூற, சித்திரலேகை தன் மாயா ஜாலத்தினால் அநிருத்தனை அவன் உறங்கிய கட்டிலோடு கொண்டுவந்து உஷையினிடம் விட்டாள் என்பது புராணக் கதை. நீ சித்திரலேகை அல்லை - என்பது, சித்திரலேகைபோல வாணி ஓவியம் எழுத வல்லவள் அல்லாள் என்பது 34 வரி. பழகியும் உளையே வாணி தன் காதலனை நேரில் கண்டு பழகியிருக்கிறாள் என்பதும், மனோன்மணி தன் காதலனை நேரில் காணாமல் கனவில் மட்டும் கண்டிருக்கிறாள் என்பதும் கருத்து. செய்யுள் 1. அடவி காடு. பாதை விடுத்து வழி தவறி. அளித்த - பாதுகாத்த. {{dhr|3em}}<noinclude></noinclude> 7ztmxdw98divpepzjypjtq40ozl5fb8 மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் 0 540221 1840268 1838357 2025-07-08T05:59:25Z Info-farmer 232 புதிது = "{{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} ", மொத்தம் = 465 எழுத்தாவண நூல்கள் முடிந்துள்ளன. 1840268 wikitext text/x-wiki {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |இதுதான் பார்ப்பனியம்|தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |நான் இந்துவல்ல நீங்கள்|தொ. பரமசிவன்|}} {{புதியபடைப்பு |கலித்தொகை, இராசமாணிக்கம்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்|2011}} {{புதியபடைப்பு |பாசத்தீ| மேலாண்மை பொன்னுச்சாமி|1999}} {{புதியபடைப்பு |பூச்சுமை| மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |அழகர் கோயில்|தொ. பரமசிவன்|1989}} {{புதியபடைப்பு |கச்சத் தீவு|செ. இராசு|1997}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |ஊர்மண்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}} {{புதியபடைப்பு |அக்னி வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2009}} {{புதியபடைப்பு |சூரிய வேர்வை|மேலாண்மை பொன்னுச்சாமி|2008}} {{புதியபடைப்பு |அன்பூ வாசம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |மானாவாரிப்பூ|மேலாண்மை பொன்னுச்சாமி|2001}} {{புதியபடைப்பு |என் கனா|மேலாண்மை பொன்னுச்சாமி|1999}} {{புதியபடைப்பு |சிபிகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2002}} {{புதியபடைப்பு |காகிதம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}} {{புதியபடைப்பு |உயிர் நிலம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2011}} {{புதியபடைப்பு |பாரதிதாசன் நாடகங்கள்|பாரதிதாசன்|1991}} {{புதியபடைப்பு |ஈஸ்வர...|மேலாண்மை பொன்னுச்சாமி|2010}} {{புதியபடைப்பு |கனிச்சாறு 2|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|2012}} {{புதியபடைப்பு |மானுட வாசிப்பு|தொ. பரமசிவன்|2010}} {{புதியபடைப்பு |ஒரு மாலை பூத்து வரும்|மேலாண்மை பொன்னுச்சாமி|2000}} {{புதியபடைப்பு |அச்சமே நரகம்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11|மயிலை சீனி. வேங்கடசாமி |2014}} {{புதியபடைப்பு |ஆகாயச் சிறகுகள்|மேலாண்மை பொன்னுச்சாமி|2004}} {{புதியபடைப்பு |எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962|அண்ணாதுரை|2010}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1|அண்ணாதுரை|1979}} {{புதியபடைப்பு |இந்து தேசியம்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |தெய்வங்களும் சமூக மரபுகளும்|தொ. பரமசிவன்|1995}} {{புதியபடைப்பு |பண்பாட்டு அசைவுகள்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |மஞ்சள் மகிமை|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |நீராட்டும் ஆறாட்டும்|தொ. பரமசிவன்|2021}} {{புதியபடைப்பு |பாண்டியன் பரிசு|பாரதிதாசன்|1958}} {{புதியபடைப்பு |வழித்தடங்கள்|தொ. பரமசிவன்|2008}} {{புதியபடைப்பு |உரைகல்|தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |விடுபூக்கள்|தொ. பரமசிவன்|2016}} {{புதியபடைப்பு |இதுவே சனநாயகம்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |செவ்வி|தொ. பரமசிவன்|2013}} {{புதியபடைப்பு |சமயம் ஓர் உரையாடல்|தொ. பரமசிவன்|2018}} {{புதியபடைப்பு |தொ. பரமசிவன் நேர்காணல்கள்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |சமயங்களின் அரசியல்|தொ. பரமசிவன்|2012}} {{புதியபடைப்பு |தெய்வம் என்பதோர்|தொ. பரமசிவன்|2016}} {{புதியபடைப்பு |மரபும் புதுமையும்|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |பரண்|தொ. பரமசிவன்|2013}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20|அண்ணாதுரை|1988}} {{புதியபடைப்பு |பாளையங்கோட்டை|தொ. பரமசிவன்|2019}} {{புதியபடைப்பு |அகத்தியர் ஆராய்ச்சி|கா. நமச்சிவாய முதலியார்|1931}} {{புதியபடைப்பு |நாள் மலர்கள், தொ. பரமசிவன் |தொ. பரமசிவன்|2014}} {{புதியபடைப்பு |தராசு|பாரதியார்|1955}} {{புதியபடைப்பு |பாரதியார் கதைகள்|பாரதியார்|1977}} {{புதியபடைப்பு |புதிய ஆத்திசூடி|பாரதியார்|1946}} {{புதியபடைப்பு |பாரதி அறுபத்தாறு|பாரதியார்|1943}} {{புதியபடைப்பு |சந்திரிகையின் கதை|பாரதியார்|1925}} {{புதியபடைப்பு |புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்|புதுமைப்பித்தன்|2000}} {{புதியபடைப்பு |அற்புதத் திருவந்தாதி|காரைக்கால் அம்மையார்|1997}} {{புதியபடைப்பு |திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்|மு. கருணாநிதி|1997}} {{புதியபடைப்பு |பதிற்றுப்பத்து|புலியூர்க் கேசிகன்|2005}} {{புதியபடைப்பு |அபிராமி அந்தாதி|அபிராமி பட்டர்|1977}} {{புதியபடைப்பு |ஔவையார் தனிப்பாடல்கள்|ஔவையார் (தனிப்பாடல்கள்)|2010}} {{புதியபடைப்பு |பாரதிதாசன் கதைப் பாடல்கள்|பாரதிதாசன்|2006}} {{புதியபடைப்பு |தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2|அவ்வை தி. க. சண்முகம்|2001}} {{புதியபடைப்பு |மௌனப் பிள்ளையார்|சா. விஸ்வநாதன் (சாவி)|1964}} {{புதியபடைப்பு |ஓடி வந்த பையன்|பூவை எஸ். ஆறுமுகம்|1967}} {{புதியபடைப்பு |சுயம்வரம்|விந்தன்|2001}} {{புதியபடைப்பு |கேரக்டர்|சா. விஸ்வநாதன் (சாவி)| 1997}} {{புதியபடைப்பு |பாலஸ்தீனம்|வெ. சாமிநாத சர்மா| 1939}} {{புதியபடைப்பு |குழந்தைச் செல்வம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை| 1956}} {{புதியபடைப்பு |அமுதவல்லி|பூவை. எஸ். ஆறுமுகம்|1993}} {{புதியபடைப்பு |முத்தம்|வல்லிக்கண்ணன்|}} {{புதியபடைப்பு |அபிதா|லா. ச. ராமாமிர்தம்|1992}} {{புதியபடைப்பு |மருமக்கள்வழி மான்மியம்|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை|1970}} {{புதியபடைப்பு |செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்|அண்ணாதுரை|}} {{புதியபடைப்பு |கதை சொன்னவர் கதை 2|குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா| 1963}} {{புதியபடைப்பு |இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்|டாக்டர். மா. இராசமாணிக்கனார்| 1956}} {{புதியபடைப்பு |சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்|முல்லை முத்தையா|2006}} {{புதியபடைப்பு |இலங்கையில் ஒரு வாரம்|கல்கி| 1954}} {{புதியபடைப்பு |கற்பனைச்சித்திரம்|அண்ணாதுரை| 1968}} {{புதியபடைப்பு |இசையமுது 1|பாரதிதாசன்|1984 }} {{புதியபடைப்பு |குறட்செல்வம்|குன்றக்குடி அடிகளார்|1996 }} {{புதியபடைப்பு |மதமும் மூடநம்பிக்கையும்|இரா. நெடுஞ்செழியன்|1968 }} {{புதியபடைப்பு |மாவீரர் மருதுபாண்டியர்|எஸ். எம். கமால்| 1989}} {{புதியபடைப்பு |நெருப்புத் தடயங்கள்|சு. சமுத்திரம்| 1983}} {{புதியபடைப்பு |பொன் விலங்கு|அண்ணாதுரை| 1953}} {{புதியபடைப்பு |பெற்றோர் கொடுத்த பெருங்கொடை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1954}} {{புதியபடைப்பு |புது மெருகு|கி. வா. ஜகந்நாதன்| 1954}} {{புதியபடைப்பு |சமதர்மம்|அண்ணாதுரை| 1959}} {{புதியபடைப்பு |மயில்விழி மான்|கல்கி| }} {{புதியபடைப்பு|நீதிக் களஞ்சியம்|எஸ். ராஜம்| 1959 }} {{புதியபடைப்பு |பிரதாப முதலியார் சரித்திரம்|வேதநாயகம் பிள்ளை| 1979}} {{புதியபடைப்பு |கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை|வ. வே. சுப்பிரமணியம்|1971}} {{புதியபடைப்பு |தந்தையும் மகளும்|பொ. திருகூடசுந்தரம்| 1985}} {{புதியபடைப்பு |காட்டு வழிதனிலே|கவிஞர் பெரியசாமித்தூரன்|1961}} {{புதியபடைப்பு |புதியதோர் உலகு செய்வோம்|ராஜம் கிருஷ்ணன்|2004}} {{புதியபடைப்பு |குற்றால வளம்|இராய. சொக்கலிங்கம்|1947}} {{புதியபடைப்பு |உரிமைப் பெண்|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1956}} {{புதியபடைப்பு |காற்றில் வந்த கவிதை|கவிஞர் பெரியசாமித்தூரன்| 1963}} {{புதியபடைப்பு |பாற்கடல் |லா. ச. ராமாமிர்தம்| 2005}} {{புதியபடைப்பு | தாய்மொழி காப்போம்| கவியரசு முடியரசன்| 2001}} {{புதியபடைப்பு | வெங்கலச் சிலை| சி. பி. சிற்றரசு| 1953}} {{புதியபடைப்பு |தமிழ்த் திருமண முறை | மயிலை சிவமுத்து | 1971}} {{புதியபடைப்பு |திருக்குறள், மூலம் | திருவள்ளுவர் | 1997}} {{புதியபடைப்பு | என் சரித்திரம்| உ. வே. சாமிநாதையர் | 1990}} {{புதியபடைப்பு | ஆடரங்கு | க. நா. சுப்ரமண்யம்| 1955}} {{புதியபடைப்பு | தேவிக்குளம் பீர்மேடு | ப. ஜீவானந்தம் | 1956}} {{புதியபடைப்பு | இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் | டி. கே. சிதம்பரநாத முதலியார் | 2005}} {{புதியபடைப்பு | தமிழகம் ஊரும் பேரும்|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|2005}} {{புதியபடைப்பு | மெய்யறம் (1917)|வ. உ. சிதம்பரம் பிள்ளை| 1917}} {{புதியபடைப்பு | திருக்குறள் மணக்குடவருரை|வ. உ. சிதம்பரம் பிள்ளை|1936}} {{புதியபடைப்பு | தந்தை பெரியார், கருணானந்தம்|கருணானந்தம்| 2012}} {{புதியபடைப்பு | அறியப்படாத தமிழகம்|தொ. பரமசிவன்| 2009}} {{புதியபடைப்பு | நான் நாத்திகன் – ஏன்?|ப. ஜீவானந்தம்|1932}} {{புதியபடைப்பு | கால்டுவெல் ஒப்பிலக்கணம்|இராபர்ட்டு கால்டுவெல்|1941}} {{புதியபடைப்பு | தாய்|மாக்ஸிம் கார்க்கி| }} {{புதியபடைப்பு | ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு|பி. வி. ஜகதீச ஐயர்|1926}} {{புதியபடைப்பு | அணியும் மணியும் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|1995}} {{புதியபடைப்பு | அசோகனுடைய சாஸனங்கள்|ஆர். ராமய்யர்|}} {{புதியபடைப்பு | தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1|அவ்வை தி. க. சண்முகம்|1955}} {{புதியபடைப்பு |சிறுபாணன் சென்ற பெருவழி|மயிலை சீனி. வேங்கடசாமி|1961}} {{புதியபடைப்பு | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்|மயிலை சீனி. வேங்கடசாமி|2000}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு |மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9|மயிலை சீனி. வேங்கடசாமி|2014}} {{புதியபடைப்பு|மகாபலிபுரத்து ஜைன சிற்பம்|மயிலை சீனி. வேங்கடசாமி|1950}} # {{export|சங்க இலக்கியத் தாவரங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்|டாக்டர் கு. சீநிவாசன்]]'' எழுதிய '''[[சங்க இலக்கியத் தாவரங்கள்]]'''. 1986 # {{export|தமிழர் வரலாறும் பண்பாடும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[தமிழர் வரலாறும் பண்பாடும்]]''' 2007 # {{export|திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்}} ''[[ஆசிரியர்:எம். எஸ். நடேச அய்யர்|எம். எஸ். நடேச அய்யர்]]'' எழுதிய '''[[திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்]]''', 1924 # {{export|அறவோர் மு. வ}} ''[[ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்|முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[அறவோர் மு. வ]]''', 1986 # {{export|தமிழ்நாடும் மொழியும்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[தமிழ்நாடும் மொழியும்]]''', 1959 # {{export|முதற் குலோத்துங்க சோழன்}} ''[[ஆசிரியர்:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]]'' எழுதிய '''[[முதற் குலோத்துங்க சோழன்]]''' 1957 # {{export|பழைய கணக்கு}} ''[[ஆசிரியர்:சாவி|சாவி]]'' எழுதிய '''[[பழைய கணக்கு]]''', 1984 #{{export|தில்லைப் பெருங்கோயில் வரலாறு}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்|பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்]]'' எழுதிய '''[[தில்லைப் பெருங்கோயில் வரலாறு]]''', 1988 # {{export|பறவைகளைப் பார்}} ''ஜமால் ஆரா'' எழுதிய ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' மொழிபெயர்த்த '''[[பறவைகளைப் பார்]]''', 1970 #{{export|தமிழகத்தில் குறிஞ்சி வளம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[தமிழகத்தில் குறிஞ்சி வளம்]]''', 1968 #{{Export|கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை|டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை]]'' எழுதிய '''[[கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்]]''', 1957 #{{export|வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)}} ''[[ஆசிரியர்:லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாய்]]'' எழுதிய '''[[வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)]]''', 1961 #{{Export|புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழதிய '''[[புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்]]''', 1993 #{{export|நாலடியார் - செய்யுளும் செய்திகளும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[நாலடியார் - செய்யுளும் செய்திகளும்]]''' #{{Export|வரலாற்றுக் காப்பியம்}} ''[[ஆசிரியர்:ஏ. கே. வேலன்|ஏ. கே. வேலன்]]'' எழுதிய '''[[வரலாற்றுக் காப்பியம்]]''' #{{export|ரோஜா இதழ்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[ரோஜா இதழ்கள்]]''', 2001 #{{Export|தஞ்சைச் சிறுகதைகள்}} '''சோலை சுந்தர பெருமாள்''' தொகுத்த '''[[தஞ்சைச் சிறுகதைகள்]]''' #{{Export|பமாய வினோதப் பரதேசி 1}} ''[[ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்|வடுவூர் துரைசாமி அய்யங்கார்]]'' எழுதிய '''[[மாய வினோதப் பரதேசி 1]]''' #{{export|தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|டாக்டர் ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)|தமிழ் இலக்கிய வரலாறு]]''' #{{export|புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்]]''' #{{export|சங்க கால வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[சங்க கால வள்ளல்கள்]]''', 1951 #{{Export|திருக்குறள் செய்திகள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருக்குறள் செய்திகள்]]''', 1995 #{{export|கொல்லிமலைக் குள்ளன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|கவிஞர் பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[கொல்லிமலைக் குள்ளன்]]''' #{{Export|பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்|அ. மு. பரமசிவானந்தம்]]'' எழுதிய '''[[பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி]]''' #{{Export|கல்வி எனும் கண்}} ''[[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்‎|அ. மு. பரமசிவானந்தம்‎]]'' எழுதிய '''[[கல்வி எனும் கண்]]''', 1991 #{{Export|திருவிளையாடற் புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[திருவிளையாடற் புராணம்]]''', 2000 #{{Export|அந்தமான் கைதி}} ''[[ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி|கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]'' எழதிய '''[[அந்தமான் கைதி]]''', 1967 #{{export|சீனத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:சி. பி. சிற்றரசு|சி. பி. சிற்றரசு]]'' எழுதிய '''[[சீனத்தின் குரல்]]''', 1953 #{{Export|இங்கிலாந்தில் சில மாதங்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[இங்கிலாந்தில் சில மாதங்கள்]]''', 1985{{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்கள்|பயண நூல்கள்}} #{{export|தமிழ் நூல்களில் பௌத்தம்}} ''[[ஆசிரியர்:திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க.]]'' எழுதிய '''[[தமிழ் நூல்களில் பௌத்தம்]]''', 1952 #{{Export|மழலை அமுதம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[மழலை அமுதம்]]''', 1981{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் இலக்கியம்}} # {{export|கும்மந்தான் கான்சாகிபு}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[கும்மந்தான் கான்சாகிபு]]''', 1960 #{{export|1806}} ''[[ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி|டாக்டர் ந. சஞ்சீவி]]'' எழுதிய '''[[1806]]''', 1960 #{{Export|மாபாரதம்}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[மாபாரதம்]]''', 1993 #{{export|வினோத விடிகதை}} ''[[ஆசிரியர்:சிறுமணவூர் முனிசாமி முதலியார்|சிறுமணவூர் முனிசாமி முதலியார்]]'' இயற்றிய '''[[வினோத விடிகதை]]''', 1911 #{{export|இன்பம்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' தொகுத்த '''[[இன்பம்]]''', 1998 #{{export|சொன்னால் நம்பமாட்டீர்கள்}} ''[[ஆசிரியர்:சின்ன அண்ணாமலை|சின்ன அண்ணாமலை]]'' எழுதிய '''[[சொன்னால் நம்பமாட்டீர்கள்]]''', 2004 #{{Export|தமிழ்ச் சொல்லாக்கம்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[தமிழ்ச் சொல்லாக்கம்]]''', 2003 # {{Export|காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை}} ''[[ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை|தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை]]'' எழுதிய '''[[காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை]]''' 1928 #{{Export|சோழர் கால அரசியல் தலைவர்கள்}} ''[[ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா|பேரா. கா. ம. வேங்கடராமையா]]'' எழுதிய '''[[சோழர் கால அரசியல் தலைவர்கள்]]''' #{{Export|சங்ககிரிக் கோட்டையின் மர்மம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[சங்ககிரிக் கோட்டையின் மர்மம்]]''', 1978{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|அண்ணா சில நினைவுகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்|கவிஞர் கருணானந்தம்]]'' எழுதிய '''[[அண்ணா சில நினைவுகள்]]''', 1986 #{{Export|இலக்கியத் தூதர்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[இலக்கியத் தூதர்கள்]]''', 1966 #{{export|அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்]]''', 2002 #{{Export|உத்தரகாண்டம்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[உத்தரகாண்டம்]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{export|சான்றோர் தமிழ்}} ''[[ஆசிரியர்: முனைவர் சி. பாலசுப்பிரமணியன்| முனைவர் சி. பாலசுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[சான்றோர் தமிழ்]]''', 1993 #{{export|பாரதி பிறந்தார்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதி பிறந்தார்]]''', 1993 #{{Export|சொன்னார்கள்}} ''[[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா|உவமைக்கவிஞர் சுரதா]]'' தொகுத்த '''[[சொன்னார்கள்]]''', 1977 #{{Export|அடி மனம்}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[அடிமனம்]]''', 1957 #{{export|உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை}} ''[[ஆசிரியர்:ச. சாம்பசிவனார்|ச. சாம்பசிவனார்]]'' எழுதிய '''[[உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை]]''', 2007 #{{Export|இதய உணர்ச்சி}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' மொழிபெயர்த்து எழுதிய '''[[இதய உணர்ச்சி]]''', 1952 # {{export|அறிவுக் கனிகள்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[அறிவுக் கனிகள்]]''', 1959 #{{export|ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்}} ''[[ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்]]'' எழுதிய '''[[ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்]]''', 1966 #{{Export|ஓலைக் கிளி}} ''[[ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்|பெரியசாமித்தூரன்]]'' எழுதிய '''[[ஓலைக் கிளி]]''', 1985 #{{Export|வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி]]''', 1999 #{{Export|தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்]]''', 2002 #{{Export|இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்}} ''[[ஆசிரியர்:நா. வானமாமலை|நா. வானமாமலை]]'' எழுதிய '''[[இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்]]''', 1989 #{{Export|பாரதியின் இலக்கியப் பார்வை}} ''[[ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்‎|கோவை இளஞ்சேரன்]]'' எழுதிய '''[[பாரதியின் இலக்கியப் பார்வை]]''', 1981 {{புதியபடைப்பு | அறிவியல் திருவள்ளுவம் | கோவை இளஞ்சேரன் | 1995}} #{{Export|பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை}} ''[[ஆசிரியர்:கௌதம சன்னா|கௌதம சன்னா]]'' எழுதிய '''[[பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை]]''', 2007 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{Export|இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|சமூக நூல்}} #{{Export|ஆஞ்சநேய புராணம்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி|பேரா. அ. திருமலைமுத்துசாமி]]'' எழுதிய '''[[ஆஞ்சநேய புராணம்]]''', 1978 #{{Export|ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு]]''', 1999 #{{Export|சிலம்பின் கதை}} ''[[ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சிலம்பின் கதை]]''', 1998 #{{Export|நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்}} ''எம்கே.ஈ. மவ்லானா, [[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' இணைந்து எழுதிய '''[[நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்]]''', 2003 #{{Export|கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்}} ''[[ஆசிரியர்:பாலூர் கண்ணப்ப முதலியார்|பாலூர் கண்ணப்ப முதலியார்]]'' எழுதிய '''[[கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்]]''', 1968{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|என் பார்வையில் கலைஞர்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[என் பார்வையில் கலைஞர்]]''', 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}} #{{Export|தமிழ் வளர்த்த நகரங்கள்}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[தமிழ் வளர்த்த நகரங்கள்]]''', 1960 #{{Export|நித்திலவல்லி}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நித்திலவல்லி]]''', 1971 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|எனது நாடக வாழ்க்கை}} ''[[ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்|அவ்வை தி. க. சண்முகம்]]'' எழுதிய '''[[எனது நாடக வாழ்க்கை]]''', 1986{{கண்ணோட்டம்|பகுப்பு:தன்வரலாறு|தன்வரலாறு}} #{{Export|கம்பராமாயணம் (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[கம்பராமாயணம் (உரைநடை)]]''', 2000 #{{Export|பாற்கடல்}} ''[[ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்|லா. ச. ராமாமிர்தம்]]'' எழுதிய '''[[பாற்கடல்]]''', 1994 #{{Export|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்}} ''[[ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்|பண்டிதர் க. அயோத்திதாசர்]]'' எழுதிய '''[[ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்]]''', 2006 #{{Export|பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்|பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]]'' எழுதிய '''[[பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்]]''', 2004 #{{Export|ஔவையார் கதை}} ''[[ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்|அ. க. நவநீதகிருட்டிணன்]]'' எழுதிய '''[[ஔவையார் கதை]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டு}} #{{Export|மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:முல்லை முத்தையா|முல்லை முத்தையா]]'' எழுதிய '''[[மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|இலக்கியங்கண்ட காவலர்}} ''[[ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்|கா. கோவிந்தன்]]'' எழுதிய '''[[இலக்கியங்கண்ட காவலர்]]''', 2001 #{{Export|தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு}} #{{Export|பூவும் கனியும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலு]]'' எழுதிய '''[[பூவும் கனியும்]]''', 1959 #{{Export|அங்கும் இங்கும்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்திரவடிவேலு]]'' எழுதிய '''[[அங்கும் இங்கும்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}} #{{Export|உலகத்தமிழ்}} ''[[ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு‎|நெ. து. சுந்தரவடிவேலு‎]]'' எழுதிய '''[[உலகத்தமிழ்]]''', 1972 {{கண்ணோட்டம்|பகுப்பு:பயண நூல்|பயண நூல்}} #{{Export|சுழலில் மிதக்கும் தீபங்கள்}} ''[[ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்|ராஜம் கிருஷ்ணன்]]'' எழுதிய '''[[சுழலில் மிதக்கும் தீபங்கள்]]''', 1987 {{கண்ணோட்டம்|பகுப்பு:சமூக நூல்கள்|தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்}} #{{Export|சிக்கிமுக்கிக் கற்கள்}} ''[[ஆசிரியர்:சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]]'' எழுதிய '''[[சிக்கிமுக்கிக் கற்கள்]]''', 1999 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|சீவக சிந்தாமணி (உரைநடை)}} ''[[ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்|ரா. சீனிவாசன்]]'' எழுதிய '''[[சீவக சிந்தாமணி (உரைநடை)]]''', 1991 #* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்]]''', 1941{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|பல்லவர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவர் வரலாறு]]''', 1944{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #{{Export|பல்லவப் பேரரசர்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[பல்லவப் பேரரசர்]]''', 1946 #{{Export|சேக்கிழார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சேக்கிழார்]]''', 1947 #{{Export|சோழர் வரலாறு}} ''[[ஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார்|மா. இராசமாணிக்கனார்]]'' எழுதிய '''[[சோழர் வரலாறு]]''', 1947{{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாறு|வரலாறு}} #* {{larger|'''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |ஆலமரத்துப் பைங்கிளி|பூவை. எஸ். ஆறுமுகம்|1964}} #{{export|கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்]]''', 1964 # {{Export|அந்த நாய்க்குட்டி எங்கே}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்த நாய்க்குட்டி எங்கே]]''', 1979 # {{export|அந்தி நிலாச் சதுரங்கம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அந்தி நிலாச் சதுரங்கம்]]''', 1982 #{{Export|ஏலக்காய்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[ஏலக்காய்]]''', {{கண்ணோட்டம்|பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை}}, 1986 # {{export|அவள் ஒரு மோகனம்}} ''[[ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்|பூவை. எஸ். ஆறுமுகம்]]'' எழுதிய '''[[அவள் ஒரு மோகனம்]]''', 1988 #* {{larger|'''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|முஸ்லீம்களும் தமிழகமும்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[முஸ்லீம்களும் தமிழகமும்]]''', 1990 #{{export|சீர்மிகு சிவகங்கைச் சீமை}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சீர்மிகு சிவகங்கைச் சீமை]]''', 1997 #{{export|விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்]]''', 1997 #{{export|சேதுபதி மன்னர் வரலாறு}} ''[[ஆசிரியர்:எஸ். எம். கமால்|எஸ். எம். கமால்]]'' எழுதிய '''[[சேதுபதி மன்னர் வரலாறு]]''', 2003 #* {{larger|'''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|திருக்குறள் புதைபொருள் 2}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 2]]''', 1988 # {{export|திருக்குறள் புதைபொருள் 1}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் புதைபொருள் 1]]''', 1990 # {{export|திருக்குறளில் செயல்திறன்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறளில் செயல்திறன்]]''', 1993 #{{export|எனது நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எனது நண்பர்கள்]]''', 1999 #{{export|திருக்குறள் கட்டுரைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[திருக்குறள் கட்டுரைகள்]]''', 1999 #{{export|ஐந்து செல்வங்கள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[ஐந்து செல்வங்கள்]]''', 1997 #{{Export|அறிவுக் கதைகள்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக் கதைகள்]]''', 1998 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} # {{export|எது வியாபாரம், எவர் வியாபாரி}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[எது வியாபாரம், எவர் வியாபாரி]]''' 1994 #{{export|அறிவுக்கு உணவு}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[அறிவுக்கு உணவு]]''', 2001 #{{Export|நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்}} ''[[ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்|கி. ஆ. பெ. விசுவநாதம்]]'' எழுதிய '''[[நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்|நபிகள் நாயகம்]]''', 1994 #* {{larger|'''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு | கனிச்சாறு 1 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2012}} #{{export|வேண்டும் விடுதலை}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[வேண்டும் விடுதலை]]''', 2005 #{{Export|செயலும் செயல்திறனும்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[செயலும் செயல்திறனும்]]''', 1999 #{{Export|ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]]''', 2005 #{{Export|நூறாசிரியம்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[நூறாசிரியம்]]''', 1996 #{{Export|பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்]]''', 2006 #{{Export|சாதி ஒழிப்பு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[சாதி ஒழிப்பு]]''', 2005 #{{Export|ஓ ஓ தமிழர்களே}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[ஓ ஓ தமிழர்களே]]''', 1991 #{{Export|தன்னுணர்வு}} ''[[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்|பாவலரேறு பெருஞ்சித்திரனார்]]'' எழுதிய '''[[தன்னுணர்வு]]''', 1977 #* {{larger|'''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |புது டயரி |கி. வா. ஜகந்நாதன்| 1979}} #{{புதியபடைப்பு | அமுத இலக்கியக் கதைகள் | கி. வா. ஜகந்நாதன் | 2009}} # {{export|தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்]]'''. 1983 # {{export|இலங்கைக் காட்சிகள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[இலங்கைக் காட்சிகள்]]''', 1956 #{{Export|பாண்டியன் நெடுஞ்செழியன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[பாண்டியன் நெடுஞ்செழியன்]]''', 1960 #{{export|கரிகால் வளவன்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கரிகால் வளவன்]]''' #{{export|கோவூர் கிழார்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கோவூர் கிழார்]]''' #{{Export|கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1]]''', 2003 #{{Export|தமிழ்ப் பழமொழிகள் 1}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 1]]''', #{{Export|தமிழ்ப் பழமொழிகள் 3}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[தமிழ்ப் பழமொழிகள் 3]]''', 2006{{கண்ணோட்டம்|பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்}} #{{Export|அதிகமான் நெடுமான் அஞ்சி}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிகமான் நெடுமான் அஞ்சி]]''', 1964{{கண்ணோட்டம்|பகுப்பு:கதைகள்|கதைகள்}} #{{Export|எழு பெரு வள்ளல்கள்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[எழு பெரு வள்ளல்கள்]]''', 1959 #{{Export|அதிசயப் பெண்}} ''[[ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாதன்]]'' எழுதிய '''[[அதிசயப் பெண்]]''', 1956 #* {{larger|'''[[ஆசிரியர்:என். வி. கலைமணி]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு | அய்யன் திருவள்ளுவர் | என். வி. கலைமணி | 1999}} # {{export|மருத்துவ விஞ்ஞானிகள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மருத்துவ விஞ்ஞானிகள்]]''', 2003 # {{export|மகான் குரு நானக்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[மகான் குரு நானக்]]''', 2002 # {{export|பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2001 #{{Export|உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்]]''', 2002 #{{export|அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' படைத்த ''' [[அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2002 #{{export|கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்]]''', 2002 #{{export|கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{export|பாபு இராஜேந்திர பிரசாத்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[பாபு இராஜேந்திர பிரசாத்]]''' #{{export|லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''' #{{export|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''' #{{export|கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{Export|உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்]]''', 2000 #{{Export|கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' தொகுத்த '''[[கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்]]''', 2001 # {{export|ரமண மகரிஷி}} ''[[ஆசிரியர்:என். வி. கலைமணி|என். வி. கலைமணி]]'' எழுதிய '''[[ரமண மகரிஷி]]'''. 2002 #* {{larger|'''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |தமிழ் இலக்கியக் கதைகள்|நா. பார்த்தசாரதி|2001}} #{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 | நா. பார்த்தசாரதி | 2005}} #{{புதியபடைப்பு | நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 | நா. பார்த்தசாரதி | 2005}} #{{export|அனிச்ச மலர்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[அனிச்ச மலர்]]''' #{{export|இராணி மங்கம்மாள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[இராணி மங்கம்மாள்]]''' # {{export|மணி பல்லவம் 1}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 1]]''' 2000 # {{export|மணி பல்லவம் 2}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மணி பல்லவம் 2]]''' 2000 #{{Export|வஞ்சிமாநகரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வஞ்சிமாநகரம்]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)|கபாடபுரம்]]''', 1967 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|புறநானூற்றுச் சிறுகதைகள்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா. பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[புறநானூற்றுச் சிறுகதைகள்]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|நெஞ்சக்கனல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[நெஞ்சக்கனல்]]''', 1998 #{{Export|மகாபாரதம்-அறத்தின் குரல்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மகாபாரதம்-அறத்தின் குரல்]]''', 2000 #{{Export|வெற்றி முழக்கம்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[வெற்றி முழக்கம்]]''', 2003 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{Export|மூவரை வென்றான்}} ''[[ஆசிரியர்:நா. பார்த்தசாரதி|நா . பார்த்தசாரதி]]'' எழுதிய '''[[மூவரை வென்றான்]]''', 1994 {{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினங்கள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:பாரதிதாசன்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு|பாரதிதாசன்|1950}} #{{புதியபடைப்பு |எதிர்பாராத முத்தம்|பாரதிதாசன்| 1972}} # {{புதியபடைப்பு |காதல் நினைவுகள்|பாரதிதாசன்|}} # {{export|முல்லைக்காடு}} ''[[ஆசிரியர்:பாரதிதாசன்|பாரதிதாசன்]]'' எழுதிய '''[[முல்லைக்காடு]]''', 1955 # {{export|பாரதிதாசன்}} ''[[ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்|கவிஞர் முருகு சுந்தரம்]]'' எழுதிய '''[[பாரதிதாசன்]]''', 2007 #{{புதியபடைப்பு |தமிழியக்கம்|பாரதிதாசன்| 1945}} #{{புதியபடைப்பு |இருண்ட வீடு|பாரதிதாசன்| 1946}} #* {{larger|'''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு | ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் | தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் | 1999}} # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 1}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 1]]''', 2000 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 2}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 2]]''', 2000 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 3}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 3]]''', 2001 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 4}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 4]]''', 2001 # {{export|வேங்கடம் முதல் குமரி வரை 5}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[வேங்கடம் முதல் குமரி வரை 5]]''', 2001 #{{export|இந்தியக் கலைச்செல்வம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[இந்தியக் கலைச்செல்வம்]]''', 1999 #{{export|ஆறுமுகமான பொருள்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[ஆறுமுகமான பொருள்]]''', 1999 # {{export|கம்பன் சுயசரிதம்}} ''[[ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்|தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்]]'' எழுதிய '''[[கம்பன் சுயசரிதம்]]''', 2005 #* {{larger|'''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்]]''', 2005 #{{export|வாழ்க்கை நலம்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[வாழ்க்கை நலம்]]''', 2011 {{புதியபடைப்பு | அருள்நெறி முழக்கம் | குன்றக்குடி அடிகளார் | 2006}} #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2]]''', 2000 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3]]''', 2000 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4]]''', 2001 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11]]''', 2001 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12]]''', 2002 #{{Export|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16]]''', 2000 #{{Export|சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்]]''', 1993 #{{Export|சிந்தனை துளிகள்}} ''[[ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்|குன்றக்குடி அடிகளார்]]'' எழுதிய '''[[சிந்தனை துளிகள்]]''', 1993 #* {{larger|'''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|நல்ல மனைவியை அடைவது எப்படி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[நல்ல மனைவியை அடைவது எப்படி]]''' #{{Export|சிறந்த கதைகள் பதிமூன்று}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' மொழிபெயர்த்த '''[[சிறந்த கதைகள் பதிமூன்று]]''', 1995 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|ஊர்வலம் போன பெரியமனுஷி}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஊர்வலம் போன பெரியமனுஷி]]''', 1994{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' தொகுத்த '''[[தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்]]''' #{{Export|அவள் ஒரு எக்ஸ்ட்ரா}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழதிய '''[[அவள் ஒரு எக்ஸ்ட்ரா]]''', 1949 #{{Export|ஆண் சிங்கம்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[ஆண் சிங்கம்]]''', 1964 # {{export|டால்ஸ்டாய் கதைகள்}} ''[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]'' எழுதிய '''[[டால்ஸ்டாய் கதைகள்]]''', 1956 #* {{larger|'''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|வித்தைப் பாம்பு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[வித்தைப் பாம்பு]]'''{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|சோனாவின் பயணம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' மொழிபெயர்த்த '''[[சோனாவின் பயணம்]]''', 1974 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|நான்கு நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[நான்கு நண்பர்கள்]]''', 1962 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|ரோஜாச் செடி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[ரோஜாச் செடி]]''', 1968 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|வெளிநாட்டு விடுகதைகள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' மொழிபெயர்த்த '''[[வெளிநாட்டு விடுகதைகள்]]''', 1967 #{{Export|நல்ல நண்பர்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[நல்ல நண்பர்கள்]]''', 1985 #{{Export|சின்னஞ்சிறு பாடல்கள்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[சின்னஞ்சிறு பாடல்கள்]]''', 1992 #{{Export|பாட்டுப் பாடுவோம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[பாட்டுப் பாடுவோம்]]''' #{{Export|கேள்வி நேரம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[கேள்வி நேரம்]]''', 1988 #{{Export|குதிரைச் சவாரி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[குதிரைச் சவாரி]]''', 1978 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|வாழ்க்கை விநோதம்}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[வாழ்க்கை விநோதம்]]''', 1965 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|விடுகதை விளையாட்டு}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[விடுகதை விளையாட்டு]]''', 1981 #{{Export|சுதந்திரம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]]'' எழுதிய '''[[சுதந்திரம் பிறந்த கதை]]''', 1968 #{{Export|திரும்பி வந்த மான் குட்டி}} ''[[ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா‎]]'' எழுதிய '''[[திரும்பி வந்த மான் குட்டி]]''', 2002 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|தெளிவு பிறந்தது}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[தெளிவு பிறந்தது]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #{{Export|மருத்துவ களஞ்சியப் பேரகராதி}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' தொகுத்த '''[[மருத்துவ களஞ்சியப் பேரகராதி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:அகராதி|அகராதி}} # {{export|இளையர் அறிவியல் களஞ்சியம்}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[இளையர் அறிவியல் களஞ்சியம்]]''', 1995 #{{Export|திருப்புமுனை}} ''[[ஆசிரியர்:மணவை முஸ்தபா|மணவை முஸ்தபா]]'' எழுதிய '''[[திருப்புமுனை]]''', 1989 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} #* {{larger|'''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]] எழுதிய நூல்கள்'''}} {{புதியபடைப்பு |அன்பு வெள்ளம் | புலவர் த. கோவேந்தன் | 1996}} #{{புதியபடைப்பு |காளிதாசன் உவமைகள் |புலவர் த. கோவேந்தன்| 1971}} #{{புதியபடைப்பு2 | இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் | புலவர் த. கோவேந்தன் | (மொழிபெயர்ப்பு) | 2001}} #{{export|சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்]]'''. 1997 #{{Export|ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்]]''', 1988 #{{Export|பேசும் ஓவியங்கள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பேசும் ஓவியங்கள்]]''' #{{Export|அமிழ்தின் ஊற்று}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[அமிழ்தின் ஊற்று]]''', 1955 #{{export|பாப்பா முதல் பாட்டி வரை}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[பாப்பா முதல் பாட்டி வரை]]''' #{{export|தாவோ - ஆண் பெண் அன்புறவு}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' எழுதிய '''[[தாவோ - ஆண் பெண் அன்புறவு]]''', 1998 #{{export|பாரதிதாசன் தாலாட்டுகள்}} ''[[ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்|புலவர் த. கோவேந்தன்]]'' தொகுத்த '''[[பாரதிதாசன் தாலாட்டுகள்]]''', 2000 {{புதியபடைப்பு2 | வெற்றிக்கு எட்டு வழிகள் | புலவர் த. கோவேந்தன்| (மொழிபெயர்ப்பு) | 1998}} #* {{larger|'''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|பிள்ளையார் சிரித்தார்}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழதிய '''[[பிள்ளையார் சிரித்தார்]]''' #{{export|தென்னைமரத் தீவினிலே}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தென்னைமரத் தீவினிலே]]''', 1992 #{{Export|தந்தை பெரியார், நீலமணி}} ''[[ஆசிரியர்:கே. பி. நீலமணி|கே. பி. நீலமணி]]'' எழுதிய '''[[தந்தை பெரியார், நீலமணி]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}} #* {{larger|'''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |விளையாட்டு உலகம்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|}} #{{புதியபடைப்பு |உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|2009}} #{{Export|கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்]]''', 1999 #{{Export|கடவுள் கைவிடமாட்டார்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[கடவுள் கைவிடமாட்டார்]]''' #{{Export|நீங்களும் இளமையாக வாழலாம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நீங்களும் இளமையாக வாழலாம்]]''' {{புதியபடைப்பு | உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா | 1998}} #{{Export|நமக்கு நாமே உதவி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழதிய '''[[நமக்கு நாமே உதவி]]''' #{{export|பாதுகாப்புக் கல்வி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பாதுகாப்புக் கல்வி]]''', 2000 #{{export|நல்ல கதைகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[நல்ல கதைகள்]]''', 2002 #{{export|அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்]]''', 1994 #{{export|பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்]]''', 2007 #{{export|சடுகுடு ஆட்டம்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[சடுகுடு ஆட்டம்]]''', 2009 #{{export|உடற்கல்வி என்றால் என்ன}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[உடற்கல்வி என்றால் என்ன]]''', 2007 #{{export|பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]]'' எழுதிய '''[[பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்]]''', 1982 #{{Export|சதுரங்கம் விளையாடுவது எப்படி}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[சதுரங்கம் விளையாடுவது எப்படி]]''', 2007 #{{Export|தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்}} ''[[ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா|எஸ். நவராஜ்]]'' எழுதிய '''[[தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்]]''', 1997 #* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி]] எழுதிய நூல்கள்'''}} # {{export|அறிவியல் வினா விடை - விலங்கியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை - விலங்கியல்]]''' #{{Export|அண்டார்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அண்டார்க்டிக் பெருங்கடல்]]''', 1979 #{{Export|இந்தியப் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[இந்தியப் பெருங்கடல்]]''', 1979 #{{Export|ஆர்க்டிக் பெருங்கடல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[ஆர்க்டிக் பெருங்கடல்]]''', 1979 #{{Export|அறிவியல் வினா விடை-இயற்பியல்}} ''[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]]'' எழுதிய '''[[அறிவியல் வினா விடை-இயற்பியல்]]''', 2002 #* {{larger|'''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி]] எழுதிய நூல்கள்'''}} #{{Export|அலிபாபா (2002)}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலிபாபா (2002)]]''', 2002{{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுவர் கதைகள்|சிறுவர் கதைகள்}} # {{export|அலெக்சாந்தரும் அசோகரும்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[அலெக்சாந்தரும் அசோகரும்]]''', 1996 #{{Export|தான்பிரீன் தொடரும் பயணம்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[தான்பிரீன் தொடரும் பயணம்]]''', 1993 # {{export|குடும்பப் பழமொழிகள்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[குடும்பப் பழமொழிகள்]]'''. 1969 #{{Export|ஹெர்க்குலிஸ்}} ''[[ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி|தியாகி ப. ராமசாமி]]'' எழுதிய '''[[ஹெர்க்குலிஸ்]]''' #* {{larger|'''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்]] எழுதிய நூல்கள்'''}} #{{export|தாவிப் பாயும் தங்கக் குதிரை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தாவிப் பாயும் தங்கக் குதிரை]]''', 1985 #{{Export|அப்பம் தின்ற முயல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அப்பம் தின்ற முயல்]]''', 1989 #{{export|பஞ்ச தந்திரக் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[பஞ்ச தந்திரக் கதைகள்]]''', 1996 #{{export|கடல்வீரன் கொலம்பஸ்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கடல்வீரன் கொலம்பஸ்]]''', 1996 #{{export|கள்வர் குகை}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[கள்வர் குகை]]''' #{{export|குருகுலப் போராட்டம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[குருகுலப் போராட்டம்]]''', 1994 #{{Export|ஏழாவது வாசல்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' மொழிபெயர்த்த '''[[ஏழாவது வாசல்]]''', 1993 #{{Export|இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு]]''', 1997 #{{Export|ஈரோட்டுத் தாத்தா}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[ஈரோட்டுத் தாத்தா]]''', 1995 #{{Export|உமார் கயாம்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[உமார் கயாம்]]''', 2006 {{கண்ணோட்டம்|பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள்|சரித்திர புதினம்}} #{{export|சிந்தனையாளன் மாக்கியவெல்லி}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[சிந்தனையாளன் மாக்கியவெல்லி]]''', 2006 #{{export|இறைவர் திருமகன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[இறைவர் திருமகன்]]''', 1980 #{{export|தெய்வ அரசு கண்ட இளவரசன்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|பாவலர் நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[தெய்வ அரசு கண்ட இளவரசன்]]''', 1971 #{{Export|அசோகர் கதைகள்}} ''[[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|நாரா. நாச்சியப்பன்]]'' எழுதிய '''[[அசோகர் கதைகள்]]''', 1975 #* {{larger|'''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |இராக்கெட்டுகள் |பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்| 1964}} # {{export|கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி]]''', 1957 #{{Export|தந்தை பெரியார் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[தந்தை பெரியார் சிந்தனைகள்]]''', 2001 #{{Export|அம்புலிப் பயணம்}} ''[[ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்|பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]]'' எழுதிய '''[[அம்புலிப் பயணம்]]''', 1973{{கண்ணோட்டம்|பகுப்பு:பெரியாரியல்|பெரியாரியல்}} #* {{larger|'''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நன்னெறி நயவுரை|பேரா. சுந்தரசண்முகனார்|1989}} #{{புதியபடைப்பு |சிலம்போ சிலம்பு|பேரா. சுந்தரசண்முகனார்| 1992}} #{{புதியபடைப்பு | போர் முயற்சியில் நமது பங்கு| பேரா. சுந்தரசண்முகனார்| 1965}} # {{export|புத்தர் பொன்மொழி நூறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[புத்தர் பொன்மொழி நூறு]]''' 1987 #{{Export|கடவுள் வழிபாட்டு வரலாறு}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கடவுள் வழிபாட்டு வரலாறு]]''', 1988 #{{Export|இலக்கியத்தில் வேங்கட வேலவன்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இலக்கியத்தில் வேங்கட வேலவன்]]''', 1988 #{{Export|முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்]]''', 1991 #{{Export|மனத்தின் தோற்றம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[மனத்தின் தோற்றம்]]''', 1992 #{{export|இயல் தமிழ் இன்பம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[இயல் தமிழ் இன்பம்]]''', 1992 #{{Export|கெடிலக் கரை நாகரிகம்}} ''[[ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்|பேரா. சுந்தரசண்முகனார்]]'' எழுதிய '''[[கெடிலக் கரை நாகரிகம்]]''', 2001 #* {{larger|'''[[ஆசிரியர்:விந்தன்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|ஒரே உரிமை}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[ஒரே உரிமை]]''' 1983 #{{Export|விந்தன் கதைகள் 2}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[விந்தன் கதைகள் 2]]''' 2000 {{கண்ணோட்டம்|பகுப்பு:சிறுகதைகள்|சிறுகதைகள்}} #{{Export|நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' தொகுத்த '''[[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]]''', 1995 #{{Export|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''', 2000{{கண்ணோட்டம்|பகுப்பு:புதினங்கள்|புதினம்}} #{{Export|பெரியார் அறிவுச் சுவடி}} ''[[ஆசிரியர்:விந்தன்|விந்தன்]]'' எழுதிய '''[[பெரியார் அறிவுச் சுவடி]]''', 2004 #* {{larger|'''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]] எழுதிய நூல்கள்'''}} #{{export|உலகம் பிறந்த கதை}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' எழுதிய '''[[உலகம் பிறந்த கதை]]''', 1985 # {{export|கம்பன் கவித் திரட்டு 1}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 1]]''', 1986 # {{export|கம்பன் கவித் திரட்டு 2, 3}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 2, 3]]''', 1990 # {{export|கம்பன் கவித் திரட்டு 4, 5, 6}} ''[[ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்|சக்திதாசன் சுப்பிரமணியன்]]'' தொகுத்த '''[[கம்பன் கவித் திரட்டு 4, 5, 6]]''', 1991 #* {{larger|'''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நாடகத் தமிழ்|பம்மல் சம்பந்த முதலியார்|1962}} #{{புதியபடைப்பு |ஓர் விருந்து அல்லது சபாபதி|பம்மல் சம்பந்த முதலியார்|1958}} # {{export|Siva Temple Architecture etc.}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[சிவாலய சில்பங்கள் முதலியன]]'''. 1946 #{{export|நான் கண்ட நாடகக் கலைஞர்கள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நான் கண்ட நாடகக் கலைஞர்கள்]]''', 1964 #{{export|நாடக மேடை நினைவுகள்}} ''[[ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்]]'' எழுதிய '''[[நாடக மேடை நினைவுகள்]]''', 1998 #* {{larger|'''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] எழுதிய நூல்கள்'''}} #{{புதியபடைப்பு |நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்|அண்ணாதுரை|1961}} #{{புதியபடைப்பு |ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்|அண்ணாதுரை|}} #{{புதியபடைப்பு |கபோதிபுரக்காதல்|அண்ணாதுரை| 1968}} #{{புதியபடைப்பு |அண்ணா கண்ட தியாகராயர்| அண்ணாதுரை | 1950}} #{{புதியபடைப்பு | சிறு கதைகள் | அண்ணாதுரை | 1951}} #{{புதியபடைப்பு |எண்ணித் துணிக கருமம் | அண்ணாதுரை | 2003}} #{{புதியபடைப்பு |வர்ணாஸ்ரமம்|அண்ணாதுரை| 1947}} # {{export|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] (முதல் பதிப்பு 1949) #{{Export|ஆரிய மாயை}} ''[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]'' எழுதிய '''[[ஆரிய மாயை]]''' # {{export|அண்ணாவின் ஆறு கதைகள்}} '''[[அண்ணாவின் ஆறு கதைகள்]]''', 1968 #* {{larger|'''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]] எழுதிய நூல்கள்'''}} # {{export|கவியகம், வெள்ளியங்காட்டான்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[கவியகம், வெள்ளியங்காட்டான்]]''', 2005 # {{export|நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்}} ''[[ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்|கவிஞர் வெள்ளியங்காட்டான்]]'' எழுதிய '''[[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]]''', 2005 #{{புதியபடைப்பு |கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்|கவிஞர் மீரா|2004}} * <big>[[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட 15 எழுத்தாவண நூல்களைக் காணலாம்.</big> [[பகுப்பு:படைப்புகள்]] lt2035zjo3karw1tr5k05mejyqg403k பக்கம்:என் கனா 1999.pdf/23 250 613768 1840000 1813309 2025-07-07T13:04:28Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840000 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||● மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>{{Multicol}} {{dhr|12em}} {{block_right|{{box|border size=2px|radius=20px| {{smaller|சூழலின் வரம்பை<br> உடைத்து, சூழலைப்<br> புதுப்பிப்பவன்தானே,<br> மனிதன்! சூழலின் வரம்புக்<br> குட்பட்டு வாழும்<br> மிருகங்களிலிருந்து<br> மனிதனை வேறுபடுத்<br> துவதே... இந்த மீறல்<br> தானே! சூழலை மாற்றும்<br> வல்லமைதானே! சூழலை<br> எதிர்த்துப் போரிடுகிற ஆற்றல்<br> தானே... மானுட ஆற்றல்?}}}}}} {{Multicol-break}} {{xx-larger|<b>2. என் கதை</b>}} {{dhr|5em}} முடியுமா? இந்த மனநிலையிலே கதை எழுத முடியுமா? இப்படியொரு சூழலிலா? சாத்தியமா? நடக்குமா? இயலக்கூடிய விஷயமா? கதையே எழுத முடியுமான்னு யோசிக்கிற நெலையில... ரெண்டு கதை கேட்டுக் கடிதம். கையில் அந்த வெள்ளைத்தாள். டைப் அடிக்கப்பட்ட கடிதம். ‘ரெண்டு கதைகளா’ என்று நினைத்த கணத்திலேயே என்னுள்ளிருந்து வெடித்து உதிர்கிற கசந்த சிரிப்பு. என்னை நானே பரிகசித்துக்கொள்கிற மாதிரி. என் நிலைமைக்கு நானே பரிதாபப்பட்டுக் கொள்கிற மாதிரி ஒரு கசந்த சிரிப்பு. “என்னப்பா” என்று என் மகனைக்கேட்க வைக்கிறது, அந்தக் கசந்த சிரிப்பில் கசிந்த வேதனை. ப்ளஸ்டூ பரீட்சை எழுத முடியாமல் போன மூத்த மகள். {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|22}}</noinclude> 5clu5qypsmn39wsiorkkpey52fmv8pe பக்கம்:என் கனா 1999.pdf/48 250 613844 1840001 1813316 2025-07-07T13:08:47Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||● மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>{{Multicol}} {{dhr|15em}} {{block_right|{{box|border size=2px|radius=20px| {{smaller|நான் இல்லாவிட்டால், என்<br> நாயகன் வரமாட்டானே...<br> மழையில்லாவிட்டால் மண்<br> என்னாகும்...? மனிதன்<br> என்னாவான்..? மரங்கள்<br> இல்லாத உலகத்தில்<br> சுத்தமான காற்றே<br> இருக்காதே... காற்று<br> இல்லாமல் மனிதன் எதைச்<br> சுவாசிக்க...? எப்படி உயிர்<br> வாழ...?}}}} }} {{Multicol-break}} {{xx-larger|<b>4. என் கனா</b>}} {{dhr|5em}} சட்டென்று கண்ணை மூடிக்கொண்ட சாயங்கால வெயில். வெள்ளி நிற மேகமெல்லாம் கூடிக் குழைந்து கர்ப்ப வேதனையில் முகம் கறுத்தன. அதன் கோபத்தில் சூரியன் மறைந்துகொண்டது. தரையில் மேக நிழல்களாகக் கனத்த இருட்டு! எனக்கு ஒரே புழுக்கம். நசநசப்பு. மூச்சே போகவில்லை. மயக்கப் படபடப்பில் மனத் திணறல். ஆனாலும், மனசின் ஒரு மூலையில் முகம் தெரியாத மகிழ்ச்சி! ‘எனக்குப் பிரியமான மழைக் காதலன் வரப்போறானோ...?’ ஒரு மாயத் தோழி பிசாசாக வந்து மோதினாள். “அடியே, ஒன்னோட ஆள் ஆசையோட வாராண்டி” என்று கேலியும் கிண்டலுமாக உடம்பெல்லாம் கிச்சலம் காட்டினாள்! வெட்கத்திணறலோடு தவித்த என் திரேகத்துக்குள் அவளது விளையாட்டுச் சேட்டைகள்! {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|47}}</noinclude> s6daf2xta79z29j4m4rkldqhzghjx4q 1840010 1840001 2025-07-07T13:51:10Z Booradleyp1 1964 1840010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||● மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>{{Multicol}} {{dhr|14em}} {{block_right|{{box|border size=2px|radius=20px| {{smaller|நான் இல்லாவிட்டால், என்<br> நாயகன் வரமாட்டானே...<br> மழையில்லாவிட்டால் மண்<br> என்னாகும்...? மனிதன்<br> என்னாவான்..? மரங்கள்<br> இல்லாத உலகத்தில்<br> சுத்தமான காற்றே<br> இருக்காதே... காற்று<br> இல்லாமல் மனிதன் எதைச்<br> சுவாசிக்க...? எப்படி உயிர்<br> வாழ...?}}}} }} {{Multicol-break}} {{xx-larger|<b>4. என் கனா</b>}} {{dhr|5em}} சட்டென்று கண்ணை மூடிக்கொண்ட சாயங்கால வெயில். வெள்ளி நிற மேகமெல்லாம் கூடிக் குழைந்து கர்ப்ப வேதனையில் முகம் கறுத்தன. அதன் கோபத்தில் சூரியன் மறைந்துகொண்டது. தரையில் மேக நிழல்களாகக் கனத்த இருட்டு! எனக்கு ஒரே புழுக்கம். நசநசப்பு. மூச்சே போகவில்லை. மயக்கப் படபடப்பில் மனத் திணறல். ஆனாலும், மனசின் ஒரு மூலையில் முகம் தெரியாத மகிழ்ச்சி! ‘எனக்குப் பிரியமான மழைக் காதலன் வரப்போறானோ...?’ ஒரு மாயத் தோழி பிசாசாக வந்து மோதினாள். “அடியே, ஒன்னோட ஆள் ஆசையோட வாராண்டி” என்று கேலியும் கிண்டலுமாக உடம்பெல்லாம் கிச்சலம் காட்டினாள்! வெட்கத்திணறலோடு தவித்த என் திரேகத்துக்குள் அவளது விளையாட்டுச் சேட்டைகள்! {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|47}}</noinclude> cxmz1y4e8huysdop7qlgtkw06wm97bu பக்கம்:என் கனா 1999.pdf/58 250 613846 1840002 1813318 2025-07-07T13:14:22Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||● மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>{{Multicol}} {{dhr|5em}} {{block_right|{{box|border size=2px|radius=20px| {{smaller|“ஏலேய்... சுப்ரமணியம்<br> மகன் தீர்வை போட்டுட்<br> டானா?”<br> “போட்டுட்டான், சாமி.<br> ஆனா...”<br> “என்னலேய்... ஆனா?”<br> இரசீது போட்டுக் குடுத்துட்<br> டோம் சாமி, ரூவா இன்னும்<br> வரலே.”<br> “எம்புட்டு?”<br> “மூணு ரூவாயும் பதினொன்<br> றரையணாவும் சாமி.”<br> “நாளைக்கு வசூல்<br> பண்ணிரு... தரலேன்னா<br> வீட்டுக் கதவைப் புடுங்கிட்டு<br> வந்து ஊர் மடத்துலே<br> போட்டுரு."}}}} }} {{Multicol-break}} {{xx-larger|<b>5. கண்ணகி</b>}} {{dhr|5em}} அப்ப நான் ரொம்பச் சின்னப் பையன். பையன் என்று சொன்னால்... மூணாப்பு, நாலாப்புப் பையன் மாதிரியில்லை. பதினைந்து பதினாறு வயது இருக்கும். நாலு முழவேட்டியும், கைப் பனியனும் தான் போட்டிருப்பேன். எங்க ஊர் பெரியாட்களுக்கெல்லாம் எவ்வளவு விபரம் தெரியும்? எனக்கு எவ்வளவு தெரியுமோ... அவ்வளவு தான். கிராமத்தாட்கள். எழுதப்படிக்கத் தெரியாத பாமர ஜனம். கையெழுத்தை இங்கிலீஷ்லே போடத் தெரிகிற அளவுக்குப் படிப்பு படித்திருந்தாலும்... இருந்த ஊரே முதலைக்கு வைகுந்தங்கிற மாதிரி... சுத்துப்பட்டி எங்கும் சுற்றிப் பார்க்காமல் அனுபவக்குறைவாக இருப்பார்கள். விபரக்குறைவுதான். அதனாலே பதினாறு வயசுப் பையன் மட்டத்துலேயே மொத்த ஊர்ஜனமும். {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|57}}</noinclude> mno4azuxf4kpty7wdsp3kn1qv8a56h0 பக்கம்:என் கனா 1999.pdf/69 250 613879 1840003 1813322 2025-07-07T13:18:38Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||● மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>{{Multicol}} {{dhr|16em}} {{block_right|{{box|border size=2px|radius=20px| {{smaller|என்னதான் நமக்குப் பாத்தி<br> யப்பட்ட ரூபாயாக<br> இருந்தாலும்... அதையே<br> திருடி, மொள்ளமாறித்தனம்<br> செய்து கைப்பற்றியது<br> அசிங்கமில்லையா?<br> சாக்கடைக்குள்ளே கெடந்த<br> தங்கத்தையே எடுத்திருந்<br> தாலும்... எடுத்த கையிலே<br> சாக்கடை வழியத்தானே<br> செய்யும்?}}}} }} {{Multicol-break}} {{xx-larger|<b>6. கள்வம்</b>}} {{dhr|5em}} ஆடி மாதமில்லை இது. கார்த்திகை மாதம். இடம் மாறி வந்துவிட்ட செம்மறியாட்டுக் குட்டி போல, காலம் மாறி வந்த திகைப்பில் அற்றலைகிறது. காற்று. ஆடி மாதமாகத் தோன்றவைக்கிற காற்றின் வேகம். தென் மேற்குக் காற்று. ஆளையே அள்ளிக் கொண்டு போகிற உக்கிர வெறியில் வந்து மோதுகிற காற்று. பழநிச்சாமிக்கு உயிர்வாதை. முக்கி முக்கிப் பெடலை மிதிக்கிறான். அப்பவும் மலைப்பாறையில் முட்டிக்கொண்ட மாதிரியிருக்கிறது. சைக்கிள், நகர்வேனா என்று மல்லுக்கு நிற்கிறது. இவனும் உயிரைக் கொடுத்து மிதிக்கிறான். ஸீட்டை விட்டு எழுந்து எம்பிஎம்பிக் குதிக்கிறான். மிதிக்கிற தொடர்வேகத்தில் நெஞ்சுக்கூடெல்லாம் காந்தல். உள்ளேபோய் அடைக்கிற சூறைக் காற்றில் உலர்ந்து போய்த் திணறுகிறது. {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|68}}</noinclude> fpnty1j0ux3n1nbfbyf4y35k4msaicf 1840011 1840003 2025-07-07T13:52:48Z Booradleyp1 1964 1840011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||● மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>{{Multicol}} {{dhr|14em}} {{block_right|{{box|border size=2px|radius=20px| {{smaller|என்னதான் நமக்குப் பாத்தி<br> யப்பட்ட ரூபாயாக<br> இருந்தாலும்... அதையே<br> திருடி, மொள்ளமாறித்தனம்<br> செய்து கைப்பற்றியது<br> அசிங்கமில்லையா?<br> சாக்கடைக்குள்ளே கெடந்த<br> தங்கத்தையே எடுத்திருந்<br> தாலும்... எடுத்த கையிலே<br> சாக்கடை வழியத்தானே<br> செய்யும்?}}}} }} {{Multicol-break}} {{xx-larger|<b>6. கள்வம்</b>}} {{dhr|5em}} ஆடி மாதமில்லை இது. கார்த்திகை மாதம். இடம் மாறி வந்துவிட்ட செம்மறியாட்டுக் குட்டி போல, காலம் மாறி வந்த திகைப்பில் அற்றலைகிறது. காற்று. ஆடி மாதமாகத் தோன்றவைக்கிற காற்றின் வேகம். தென் மேற்குக் காற்று. ஆளையே அள்ளிக் கொண்டு போகிற உக்கிர வெறியில் வந்து மோதுகிற காற்று. பழநிச்சாமிக்கு உயிர்வாதை. முக்கி முக்கிப் பெடலை மிதிக்கிறான். அப்பவும் மலைப்பாறையில் முட்டிக்கொண்ட மாதிரியிருக்கிறது. சைக்கிள், நகர்வேனா என்று மல்லுக்கு நிற்கிறது. இவனும் உயிரைக் கொடுத்து மிதிக்கிறான். ஸீட்டை விட்டு எழுந்து எம்பிஎம்பிக் குதிக்கிறான். மிதிக்கிற தொடர்வேகத்தில் நெஞ்சுக்கூடெல்லாம் காந்தல். உள்ளேபோய் அடைக்கிற சூறைக் காற்றில் உலர்ந்து போய்த் திணறுகிறது. {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|68}}</noinclude> 7vl1rfkd05qf1uinevt6fndk9lhzgy6 பக்கம்:என் கனா 1999.pdf/79 250 613915 1840004 1813328 2025-07-07T13:22:51Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|● என் கனா||}}</noinclude>{{Multicol}} {{dhr|10em}} {{block_right|{{box|border size=2px|radius=20px| {{smaller|இவருக்கு இது ஒரு<br> லட்சியம். லட்சியப்போர்.<br> தனது முன்னோர்களும்,<br> தானும் பட்ட இழிவுகளை<br> மண்ணில் இல்லாமல்<br> செய்தாக வேண்டுமே என்கிற<br> வெறி, மண்ணாகிப் போகிற<br> விதியோடு பிறந்துவிட்ட<br> “மக்கு மண்ணாங்கட்டி”<br> களின் தலையெழுத்தை<br> யெல்லாம், ஒளியெழுத்தாக்கி<br> விடவேண்டும் என்கிற<br> தன்மானப்போர். மண்ணாங்<br> கட்டிகளையெல்லாம் பொன்<br> கட்டியாக்கிவிட வேண்டும்<br> என்கிற வைராக்கியம்."}}}} }} {{Multicol-break}} {{xx-larger|<b>7. கைநாட்டு</b>}} {{dhr|5em}} அது நடந்தது, வெள்ளிக் கிழமையில். மகிழ்ச்சியாக இருந்தது. மனசே கிடந்து பெருமிதத்தில் ததும்பி வழிந்தது. பூந்தோட்டவாசம். ரொம்பப்பேர் பாராட்டினர். ஏகப்பட்ட பரிசுப் பொருள்கள். பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. வாழ்ந்த வாழ்வும், செய்த தொழிலும் வீணாகிப்போய் விடவில்லை என்கிற திருப்தி. பெருமை. பூரிப்பு. இந்தச் சந்தோஷமெல்லாம் ஞாபகத்தில் இருக்க முடியாத அளவுக்கு... சனியும், ஞாயிறும் வேலைகள். மனிதரை ஆட்டி அலைக்கழித்த சூறாவளி வேலைகள், ரெக்கைகட்டிக் கொண்டு பறந்தாக வேண்டிய வேலைகள். காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடித்திரிய வேண்டிய பரபரப்பு... ஒன்றைத்தொட்டு ஒன்றாக... வாட்டியெடுத்த பிரச்சனை... {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|78}}</noinclude> g01bd8jxhx8vy5djb4zmje1kc0grv48 பக்கம்:என் கனா 1999.pdf/92 250 614061 1840005 1813350 2025-07-07T13:29:33Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||● மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>{{Multicol}} {{dhr|11em}} {{block_right|{{box|border size=2px|radius=20px| {{smaller| “என்ன, என்ன சொன்னே?<br> அவசரமாகக் கேட்டான்.<br> “ரொம்ப நெருக்கமான<br> சொந்தக்காரங்க கல்யாண<br> மான்னு மூணு தடவை<br> கேட்டேன்.”<br> “நெசமான சொந்தக்காரங்க<br>கல்யாணம்.”}}}}}} {{Multicol-break}} {{xx-larger|<b>8. உறவின் நிஜம்</b>}} {{dhr|5em}} கடை திறந்து கொஞ்ச நேரம் தான் வியாபாரம் நடந்தது. வழக்கத்துக்கு மாறாக, கடையை சாத்திவிட்டு வீட்டுக்கு வந்தான் காமராஜ். வந்தவுடன், “இந்து, வென்னி போடு” என்று மனைவியைத் துரிதப்படுத்தினான். வியாபாரம் நடக்க வேண்டிய நேரத்தில் வீடு வந்து வென்னீர் கேட்கிற கணவனை வியப்போடு பார்த்தாள். அதிசயிப்பில் விழிகள் மலர்ந்து விரிந்தன. “என்ன இது, இந்நேரம்?” “ஒரு கல்யாணத்துக்குப் போகணும்” சட்டையைக் கழற்றி, ஹாங்கரில் மாட்டினான். வேஷ்டியை உருவி எறிந்துவிட்டு, டிராயர் மேல் ஒரு துண்டைச் சுற்றிக் கொண்டான். “கடை?” “சாத்திட்டு வந்துட்டேன்.” “ஏவாரம் என்னாவுறது?” {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|91}}</noinclude> 077tho3nv21i8vlemqttsxq0mouiub7 பக்கம்:என் கனா 1999.pdf/110 250 614120 1840009 1813352 2025-07-07T13:48:16Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{Multicol}} {{dhr|8em}} {{block_right|{{box|align=left|border size=2px|radius=20px|text align=left| {{justify|{{smaller|அப்பேர்ப்பட்ட மிருகங்<br> களைப் பற்றி அந்தோணி<br> அலட்சியமாக கூறுகிறான்...<br> அதெல்லாம் அந்தக்<br> காலம்... என்று<br> ஒருவேளை, அவன்<br> சொல்வதுவும் நிஜம்தானோ?<br> உண்மையிலேயே இந்தக்<br> காலம்... விழிப்பும் ரோஷ<br> முமான காலம்தானோ?<br> இருக்கலாம்.}}}}}} }} {{Multicol-break}} {{xx-larger|<b>10. இந்தக் காலத்துத் தாய்!</b>}} {{dhr|5em}} அன்னம்மா, கனவு கண்டு திடுக்கிட்டவள் போல விசுக்கென விழித்துக் கொண்டாள். கண்கள் வலித்தன. தூக்கமின்மையால் சிரமப்பட்டு எழுந்த அவள் மேனி முழுவதும் சோர்வும், அசதியுமாய் ஒரேயடியாய் மந்தித்துப் போய்க்கிடந்தது. இருட்டுக்குள்ளே சற்று நேரம் அர்த்தமில்லாத சிந்தனையுடனிருந்தவள், எழ மனமில்லாமல் தன்னை மறந்து உட்கார்ந்தேயிருந்தாள். நேற்று மாலையில் கூலிக்கு ஆள் கூப்பிட வந்த பெரிய வீட்டுக்காரம்மா. “அன்னம், ‘கங்கமங்கலா’ வேலைத்தளத்துலே நிக்கணும். இள மதியத்துக்கெல்லாம் கருதறுத்து முடிச்சுடணும்” என்று சொல்லி விட்டுப் போனது நினைவில் திடீரென உறைக்கவே... விசுக்கென எழுந்தாள். கூந்தலை அள்ளிச் செருகிக்கொண்டாள். {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|109}}</noinclude> gnxyzd5ymzedrq5dz8ugnsyloakar6n பக்கம்:என் கனா 1999.pdf/102 250 614122 1840006 1812692 2025-07-07T13:36:53Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|● என் கனா||}}</noinclude>{{Multicol}} {{dhr|8em}} {{block_right|{{box|border size=2px|radius=20px| {{smaller| “கருசக்காடுன்னு பஞ்சக்<br> காடுன்னு நெனைச்சுக்<br> கிட்டிருந்தேன்...<br> இப்படியோர் பெருமை<br> இருக்குன்னு... நீங்க<br> சொல்லித்தானே, இப்பப்<br> புரியுது?”<br> “போடா... மண்ணுக்குப்<br> பெருமை இருந்து என்ன<br> செய்ய? நாக்கு வழிக்கவா?<br> உனக்கும் எனக்கும் இந்த<br> மண்ணு உரிமையாயில்லியே<br> ... என்று சொல்லிவிட்டு<br> துண்டை உதறி தோளில்<br> போட்டுப் புறப்பட்ட<br> பெரியவர், ஒரு பெருமூச்சு<br> விட்டார்...”}}}}}} {{Multicol-break}} {{xx-larger|<b>9. மண்</b>}} {{dhr|5em}} கடாமறிகளுக்கு அகத்திக் கொழையைக் கட்டிவிட்டு, எருமைக்கு ஒரு ‘குடங்கை’ புல்லையள்ளிப்போட்டுவிட்டு... டீக்கடைப் பக்கம் போய்ட்டு வருவோம்னு புறப்பட்டான், குருசாமி. ஒரு கடவுக்குள்ளே நுழைந்து, கடந்து, தெருவுக்கு வந்து பத்து வீடுகள் தாண்டியிருப்பான். குப்பென்று ஒரு மணம், நாசிக்குள் புகுந்து, நெஞ்சுக்குள் உட்கார்ந்து கொண்டது. மனசைக் கட்டி யிழுக்கிற ருசியான மணம். ‘யார் வீட்டிலேயோ கோழிக் கறி கொதிக்குது.’ வாசம் ‘கம்ம்’முன்னு அடிக்குது... நின்னு மோந்துபாக்க மனது சபலப்பட... அரை மனசோடு நடையைத் தொடர்ந்தான். ‘திருவேங்கடம் சந்தையிலே முன்னூறு ரூவாய்க்கு ரெண்டு குட்டிக வாங்குனது. நல்ல அகத்திக் கொலையும் கருவேலங்காய்யும் தின்னு... வீட்லே வளருது. {{nop}}<noinclude>{{c|101}}</noinclude> js6c6n4a7z84ar0qardxcgp0295iw3t 1840008 1840006 2025-07-07T13:44:04Z Booradleyp1 1964 1840008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|● என் கனா||}}</noinclude>{{Multicol}} {{dhr|8em}} {{block_right|{{box|border size=2px|radius=20px| {{smaller| “கருசக்காடுன்னு பஞ்சக்<br> காடுன்னு நெனைச்சுக்<br> கிட்டிருந்தேன்...<br> இப்படியோர் பெருமை<br> இருக்குன்னு... நீங்க<br> சொல்லித்தானே, இப்பப்<br> புரியுது?”<br> “போடா... மண்ணுக்குப்<br> பெருமை இருந்து என்ன<br> செய்ய? நாக்கு வழிக்கவா?<br> உனக்கும் எனக்கும் இந்த<br> மண்ணு உரிமையாயில்லியே<br> ... என்று சொல்லிவிட்டு<br> துண்டை உதறி தோளில்<br> போட்டுப் புறப்பட்ட<br> பெரியவர், ஒரு பெருமூச்சு<br> விட்டார்...”}}}}}} {{Multicol-break}} {{xx-larger|<b>9. மண்</b>}} {{dhr|5em}} கடாமறிகளுக்கு அகத்திக் கொழையைக் கட்டிவிட்டு, எருமைக்கு ஒரு ‘குடங்கை’ புல்லையள்ளிப்போட்டுவிட்டு... டீக்கடைப் பக்கம் போய்ட்டு வருவோம்னு புறப்பட்டான், குருசாமி. ஒரு கடவுக்குள்ளே நுழைந்து, கடந்து, தெருவுக்கு வந்து பத்து வீடுகள் தாண்டியிருப்பான். குப்பென்று ஒரு மணம், நாசிக்குள் புகுந்து, நெஞ்சுக்குள் உட்கார்ந்து கொண்டது. மனசைக் கட்டி யிழுக்கிற ருசியான மணம். ‘யார் வீட்டிலேயோ கோழிக் கறி கொதிக்குது.’ வாசம் ‘கம்ம்’முன்னு அடிக்குது... நின்னு மோந்துபாக்க மனது சபலப்பட... அரை மனசோடு நடையைத் தொடர்ந்தான். ‘திருவேங்கடம் சந்தையிலே முன்னூறு ரூவாய்க்கு ரெண்டு குட்டிக வாங்குனது. நல்ல அகத்திக் கொலையும் கருவேலங்காய்யும் தின்னு... வீட்லே வளருது. {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|101}}</noinclude> pzh2h81zxz31f42mpdp9dbocr5j6lbx பக்கம்:என் கனா 1999.pdf/123 250 614303 1840007 1813305 2025-07-07T13:42:45Z Booradleyp1 1964 /* சரிபார்க்கப்பட்டவை */ 1840007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh|||● மேலாண்மை பொன்னுசாமி}}</noinclude>{{larger|<b>குறுநாவல்</b>}} {{Multicol}} {{dhr|10em}} {{block_right|{{box|align=left|border size=2px|radius=20px|text align=left| {{justify|{{smaller|ஐயோ...என்<br> தெய்வமே... என் ராசாவே...<br> பக்தியோட இருந்தாலும்<br> புத்தியோட இருக்கணும்னு<br> படிச்சுப் படிச்சு<br> சொன்னீகளே... பாவிநான்<br> கேக்கலையே... புத்தியைக்<br> கடன் கொடுத்துட்டேனே...<br> ஐயோ...ஐய்யயோ...என்<br> ராசாவே...”<br> அங்கலாய்ப்பான ஒப்பாரி.<br> அடிமனசின் இறுக்க<br> மெல்லாம் பாசப் பிரவாகத்தில்<br> உடைந்து நொறுங்கி...<br> அழுகையாக வெளிப்படுகிற<br> துயரம், துக்கப் பெரும்<br> பிரவாகம்.}}}}}}}} {{Multicol-break}} {{xx-larger|<b>அதீதம்</b>}} {{dhr|5em}} {{center|{{x-larger|<b>1</b>}}}} அந்திப் பொழுது, சந்தன வெயில், மிளகாய்ச் செடிகளின் பசுமையை நிறம் மாற்றியிருந்தது. எல்லாச் செடிகளின் தலையிலும் சந்தனக் கரைசலின் ஒளிப்பரவல். பார்க்க அழகாயிருந்தது. ஆனால் கூதலடிக்கிறது. வெயிலை விழுங்கி விட்டுக் கைநீட்டுகிற பனிக்கூதல். விஷப்பனி. மார்கழி நேற்றுதான் பிறந்திருக்கிறது. இதற்குள் இம்புட்டுப் பனியா? இந்த வருஷப் பருவமே சரியாயில்லை. ஏட்டிக்குப் போட்டியாக இருக்கிறது. என்ன கூத்து கட்ட இருக்கிறதோ... சோம்பலான யோசனையில் மம்பட்டியோடு அடுத்த பாத்திக்கு நகர்ந்தான் யோகேந்திரன். வாய்க்காலில் தண்ணீர். மண் கரைசலும் நுரைத் துகள்களுமாய் கலங்கலாய் வந்தது. மிளகாய்ச் செடிக்கு முதல் தண்ணீர். ஐப்பசி முதலில் மழைத் தண்ணீரில் மிளகாய் நடுவை. கார்த்திகையில் இரண்டு களைவெட்டு. மூன்று மருந்தடிப்புகள். இப்போது வாய்க்கால் வரப்புகளை எடுத்துக்கட்டி சீர் செய்து, முதல் தண்ணீர். சிரமமில்லை. உடையவில்லை. ஒரு சீராய்ப் பாய்கிறது. {{Multicol-end}} {{nop}}<noinclude>{{c|122}}</noinclude> bxqos3qi5j5b7pa9n2ghk0qtujpjff8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/221 250 618441 1840325 1828964 2025-07-08T07:54:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்லாண்டா|185|அட்லாண்டிக் பட்டயம்}}</noinclude>ரீர் (Cape Rhir) என்னுமிடத்திலிருந்து மத்தியதரைக் கடலிலுள்ள கேப் போன் (Cape Bone) வரையிலும் மொராக்கோ, அல்சிரியா, துனிசியா ஆகிய நாடுகளின் குறுக்கே செல்கிறது. கிரேக்க தைட்டன் ஆட்லெசு (Titan Atlas) என்பவன் நினைவாக இம்மலைகள் இப்பெயர் பெற்றன. இவை கரையோரப் பகுதியில் உயரம் குறைவாகவும் உள்நாட்டில் மிகுதியாகவும் தொடர்ச்சியாகச் செல்கின்றன. உள்நாட்டு மலைகளுள் குறிப்பிடத்தக்கது மொராக்கோ மலைத் தொடராகும். இம்மலைத் தொடரின் நடுவிலுள்ள திசு மலையுச்சி மிக உயரமானது. வட ஆப்பிரிக்கச் சுதேசிகளான பர்பர் இம்மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். வெள்ளி, ஈயம், இரும்பு தாமிரம் போன்றவை இங்குக் கிடைக்கும் கனிப் பொருள்கள். {{larger|<b>அட்லாண்டா</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள சார்சியா மாநிலத்தின் (Georgia) தலைநகர். கி.பி.1837–ஆம் ஆண்டில் தெர்மினசு (Terminus) என்னும் பெயருடன் இந்நகரம் நிறுவப்பட்டது. இந்நகரின் பெயர், மார்தாசு வில்லி (Marthas Ville) என {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 221 |bSize = 480 |cWidth = 196 |cHeight = 191 |oTop = 295 |oLeft = 18 |Location = center |Description = }} {{center|அட்லாண்டா}} கி.பி 1843–ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. கி.பி. 1845–ஆம் ஆண்டு முதல் இது அட்லாண்டா (Atlanta) எனக் குறிக்கப்படுகிறது. கி.பி. 1868–ஆம் ஆண்டு முதல் சார்சியா மாநிலத்தின் தலைநகரமாக இது விளங்கி வருகிறது. இது அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தென்மாநிலங்களின் வாணிக நகரமாகவும் விளங்குகிறது. இதன் வழியாகப் பல்வேறு நகரங்களுக்கு இருப்புப் பாதை வழிகளும் நெடுஞ்சாலைகளும் பிரிந்து செல்கின்றன. இது தொழிற்சாலைகள் மிகுந்த நகரமுமாகும். இந்நகரத்தில் பல்கலைக்கழகமும் அருங்காட்சியகமும் நூல்நிலையங்களும் உள்ளன. மக்கள்தொகை 4,25,022 (1980). {{larger|<b>அட்லாண்டிக் பட்டயம்:</b>}} இரண்டாம் உலகப்போர் (1939–45) நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அட்லாண்டிக் பட்டயம் (Atlantic Charter) உருவாயிற்று. இது எட்டு நெறிமுறைகள் கொண்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் அதிபர் பிராங்க்ளின் டி. ரூசுவெல்ட்டும் (Franklin D. Roosevelt) இங்கிலாந்து நாட்டின் தலைமை அமைச்சர் வின்சுடன் சர்ச்சிலும் (Winston Churchill) அட்லாண்டிக் கடலில், கானடாவிற்கு அருகில் அகசுடா (Augusta) என்ற போர்க்கப்பலில், 1941–ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் 9–ஆம் நாள் முதல் 12–ஆம் நாள் வரை சந்தித்துப் பேசினர். இவ்வுரையாடலின் விளைவாக அவ்விருவரும் 1941–ஆம் ஆண்டு ஆகசுட்டு 14–ஆம் நாள் இப்பட்டயத்தை வெளியிட்டனர். அட்லாண்டிக் கடலில் இருந்த போர்க் கப்பலிலிருந்து வெளியிடப்பட்டதால் இது ‘அட்லாண்டிக் பட்டயம்’ எனக் குறிக்கப்படுகிறது. அட்லாண்டிக் பட்டயத்தின் எட்டுக் கோட்பாடுகள் வருமாறு: :{{overfloat left|align=right|padding=1em|1.}} அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் எல்லைகளையோ பிறவற்றையோ பெருக்கிக் கொள்ளுதல் கூடாது. :{{overfloat left|align=right|padding=1em|2.}} பிறநாட்டு மக்களின் உண்மையான கருத்துகளைக் கேட்காமல் எல்லைகளைப் பெருக்குதற் பொருட்டு அந்நாடுகளைப் பிடித்தல் கூடாது. :{{overfloat left|align=right|padding=1em|3.}} இவ்விரு நாடுகளும் மக்கள் தாம் விரும்பும் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையினை வழங்குகின்றன. மேலும், வலுக்கட்டாயமாக உரிமை பறிக்கப்பெற்ற நாடுகள், தாம் இழந்த உரிமையை மீண்டும் பெறச் செய்தல். :{{overfloat left|align=right|padding=1em|4.}} உலகத்தில் உள்ள அனைத்துப் பெரிய, சிறிய நாடுகளும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வாணிகம் நடத்தவும் மூலப் பொருள்களைத் தடையின்றிக் கொண்டு செல்லவும் இவ்விரு நாடுகளும் இப்பட்டயத்தின் மூலம் முயற்சிகளை மேற்கொள்ளும். :{{overfloat left|align=right|padding=1em|5.}} உலக நாடுகளுக்கிடையே உடலுழைப்பை ஏற்படுத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளித்து அவர்களின் தரத்தை உயர்த்தவும், சமூகப் பாதுகாப்பு ஏற்படுத்தவும் இவ்விரு நாடுகளும் விரும்புகின்றன. {{nop}}<noinclude></noinclude> qkfid4y6d0byvlrbiu6jaqgkrkgvkex பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/222 250 618508 1840334 1829474 2025-07-08T07:59:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்லாண்டிக்குச் ...... பன்னாட்டுக் குழு|186|அட்லாண்டிக்குப் பெருங்கடல்}}</noinclude>:{{overfloat left|align=right|padding=1em|6.}} நாசிகளுடைய (The Nazis) கொடுங்கோன்மை ஆட்சியை அழித்த பின், மக்கள் தங்களது நில எல்லைக்குள் அமைதியாக வாழவும், அவர்களது சொந்த நாட்டிற்குள் உரிமையுடனும் அச்சமின்றியும் தேவைகளை விரும்பியவாறு பெறவும் இவ்விரு நாடுகளும் வழிவகை செய்யும் என்று இப்பட்டயம் உறுதியளிக்கிறது. :{{overfloat left|align=right|padding=1em|7.}} இவ்வமைதியால் மனிதன் தடையேதுமின்றிக் கடல்களையும் பெருங்கடல்களையும் கடந்து செல்ல முடியும் என இப்பட்டயம் கூறுகிறது. :{{overfloat left|align=right|padding=1em|8.}} உலக நாடுகள் அனைத்தும் தங்களுடைய நலனுக்காகப் படை வலிமையைப் பெருக்குவதைத் தவிர்க்கும் என இவ்விரு நாடுகளும் நம்புகின்றன. நிலத்திலோ கடலிலோ வானிலோ போர்ப்படை வலிமையைப் பெருக்கி அமைதியாக வாழ முடியாமல் பிற நாடுகளைத் துன்புறுத்த விரும்பினால், அந்நாடுகளுக்குப் பொதுவான, நிலையான பாதுகாப்பு அளிக்க இப்பட்டயம் வழிவருக்கிறது. மக்கள் இவ்வகைப் படைவலிமைப் பயத்திலிருந்து விடுபட்டு, அமைதியும் அன்பும் கலந்த நல்வாழ்வை. அனுபவிக்க இந்நாடுகள் வழிவகை செய்யும். இப்பட்டயம், இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட அச்சு (Axis Powers) நாடுகளின் வலிமைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நிலை ஆவணம் ஆகும். ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் நேச நாடுகள், 1942 சனவரித் திங்கள் 1–ஆம் நாள் வாசிங்டன் டி.சி.யில் (Washington D.C.) கையெழுத்திட்டன. பின்னர், 26 நாடுகள் ஐக்கியநாட்டு அறிக்கையின் மூலக் கருத்துகள் தாங்கிய இப்பட்டயத்தை ஏற்றுக் கொண்டன. இப்பட்டயத்தினை மீண்டும் உறுதிசெய்யும் வண்ணம் 1954-ஆம் ஆண்டு சூன் மாதம் சர்ச்சிலும் அப்பொழுதைய அமெரிக்க அதிபர் ஐசனோவரும் இதன் கோட்பாடுகளை முறைப்படுத்தினர். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Grant, A.J. and Harold Temperley.,</b> “Europe in the Nineteenth and Twenteeth Centuries”, Lillian, M. Penson, Longman Group Ltd., 1982. <b>Hayes, J.H.,</b> “Contemporary Europe Since 1870”, Delhi, Surject Publications, 1981. {{larger|<b>அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு:</b>}} அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்பிற்கென 17 அட்லாண்டிக்கு மண்டல நாடுகள், 1966–ஆம் ஆண்டு மே திங்களில் பிரேசில் நாட்டின் இரியோடி சனிரோ (Riode Janeiro) என்ற இடத்தில், இக்குழுவிற்கான உடன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தன. பின்னர், இசுபெயின் (Spain) நாட்டின் தலைநகரான மாட்ரிடு (Madrid) என்னுமிடத்தில் தலைமைச் செயலகம் நிறுவப்பட்டுச் செயல்படுகிறது. இத்தலைமைச் செயலகம், பல ஆய்வுத் திட்டங்களைக் கண்காணிப்பதோடு பல திட்டங்களையும் ஒருங்கிணைத்துக் குழுவின் நோக்கங்கள் நிறைவேறச் செயலாற்றுகிறது. புள்ளி விவரங்களைச் சேகரித்துத் தேவையான நாடுகளுக்கு வழங்கிச் சூறைமீன் (Tuna) வளம் பற்றிய நுட்ப அறிவினை வளர்ச்சியடையச் செய்யும் தகவல் மையமாகவும் திகழ்கிறது. {{larger|<b>உறுப்பினர்கள்:</b>}} அங்கோலா, பெனின் (Benin), பிரேசில், கனடா, கேப் வெர்டி (Cape Verde), கியூபா, பிரான்சு, கபான் (Gabon), கானா, அய்வரி கோசுட்டு (Ivory Coast), சப்பான், கொரியாக் குடியரசு, மொராக்கோ, போர்ச்சுகல், செனகல், தென்னாப்பிரிக்கா, இசுபெயின் (Spain), உருசியா, அமெரிக்கா ஆகியவை இப்போதைய உறுப்பு நாடுகள். {{larger|<b>நோக்கங்கள்:</b>}} சூறைமீன் வனத்தைப் பெருக்குவது, மீன்வளம் முற்றிலும் சுரண்டப்பட்டு அழிந்து போவதைத் தடுப்பது, சூறை இனத்தைச் சார்ந்த பிற உயிரின வகைகளின் வளத்தைப் பாதுகாப்பது, இனப்பெருக்கத்தை வளப்படுத்தி மீன்பிடிப்பு முறைகளை வரையறை செய்வது ஆகிய சிறப்புக் குறிக்கோள்களைக்கொண்டு இக்குழு செயல்படுகிறது. குழுவின் ஆண்டுக் கூட்டம் தவறாது நவம்பர்த் திங்களில் நடத்து வருகிறது. அதில் உறுப்பு நாடுகளின் வல்லுநர்கள், சிறப்புப் பேராளர்கள் ஆகியோர் கலந்து உரையாடிக் குழுவின் திட்டங்கள், கொள்கைகள், செயல் முறைகள் முதலியனவற்றை முடிவு செய்கின்றனர். உறுப்பு நாடுகள் எவ்வகை மீன் இனங்களை எந்த அளவில் பிடிக்கலாம் என்பதை இக்குழு வரையறை செய்கிறது. இசுகிப் சேக் துனா (Skip Jack Tuna) எனப்படும் மீன் இனம் அழிந்துபோகும் நிலையிலுள்ளது எனக் குழுவின் ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தியதால், இப்போது அதனைப் பாதுகாப்பதற்கான திட்டங்களுக்கு முதலிடம் கொடுத்துப் பன்னாட்டு “இசுகிப் சேக் ஆண்டுத் திட்டம்” (Skip Jack Year Programme) ஒன்றை (1979-1982) உருவாக்கிச் செயல்படுத்துகிறது. {{larger|<b>அட்லாண்டிக்குப் பெருங்கடல்</b>}} உலகிலுள்ள பெருங்கடல்களுள் ஒன்று. இது இந்தியப் பெருங்கடலைவிடப் பெரியது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களுக்கும் இது கடல்வழியாய் அமைந்துள்ளது. உலகிலுள்ள நீண்ட ஆறுகள் அட்லாண்டிக்குப் பெருங்கடலிலோ (Atlantic Ocean) அதனுடன் தொடர்புள்ள கடல்களிலோ கலக்கின்றன. உலகில் தொழில்வளம் மிக்க<noinclude></noinclude> l0ebdbiaxvlfysahc403oehuf9gfxx2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/223 250 618509 1840335 1829492 2025-07-08T08:00:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்லாண்டிக்குப் பெருங்கடல்|187|அட்லாண்டிக்குப் பெருங்கடல்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 223 |bSize = 480 |cWidth = 285 |cHeight = 376 |oTop = 60 |oLeft = 90 |Location = center |Description = }} {{center|அட்லாண்டிக்குப் பெருங்கடல்}} நாடுகள், இக்கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. உலக வாணிகப் பெருக்கத்திற்கு இக்கடல் பெரிதும் உதவி புரிகிறது. இப்பெருங்கடலில் உவர்ப்புத் தன்மை மற்றைய கடல்களைவிட மிகுந்துள்ளது. அட்லாசு மலைத்தொடரை (Atlas Ranges) அடுத்திருக்கின்றமையால், இதற்கு அட்லாண்டிக்குக் கடல் என்று பண்டைய உரோமானியர் பெயரிட்டனர். அட்லாண்டிக்குப் பெருங்கடலின் பரப்பளவு 8,16,62,000 ச.கி.மீ. வளைகுடாக்கள், விரிகுடாக்கள், இப்பரப்பளவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. உலகில் தென்படும் நீர்ப்பரப்பினுள் மூன்றில் ஒரு பங்கு அட்லாண்டிக்குப் பெருங்கடலாகும். ஐரோப்பாவும் ஆப்பிரிக்காவும் இதன் கிழக்குக் கோடியிலும் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் இதன் மேற்குக் கோடியிலும் அமைந்துள்ளன. இப்பெருங்கடலின் வட தென் எல்லைகளைத் திட்டவட்டமாகக் கூற இயலாது. வடக்கில் ஆர்க்டிக்குப் பெருங்கடலுடனும், தெற்கில் அண்டார்டிக்குப் பெருங்கடலுடனும் இப்பெருங்கடலின் பகுதிகள் இணைகின்றன. வட அமெரிக்காவில் உள்ள பிளாரிடாவிலிருந்து (Florida) ஐரோப்பாவில் இசுபெயின் (Spain) வரை அட்லாண்டிக்குப் பெருங்கடலின் அகலம் 6679 கி.மீ; கிழக்குக் கடற்கரையில் நீளம் 51,300 கி.மீ; மேற்குக் கடற்கரையின் நீளம் 88,500 கி.மீ. ஐரோப்பாவிலும் வட<noinclude></noinclude> d1s6jdayiha5agfq4jd5zuode9jx77w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/224 250 618510 1840337 1829525 2025-07-08T08:05:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்லாண்டிக்கு மாநிலங்கள்|188|அடக்கக் கணக்கு}}</noinclude>அமெரிக்காவிலும் இக்கடலின் கடற்கரை ஒழுங்கற்றும், ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் ஒழுங்காகவும் தென்படுகிறது. நார்வேக்கடல், வடகடல், பால்டிக்குக் கடல், மத்திய தரைக்கடல், கருங்கடல் போன்றவை இப்பெருங்கடலின் கிழக்குப்பகுதி நீர் நிலைகள்; செயின்ட்டு இலாரன்சு வளைகுடா, மெக்சிகோ வளைகுடா, கரீபியக் கடல் போன்றவை மேற்குப் பகுதி நீர் நிலைகள், பிரித்தானியத் தீவுகள் (British Islands), அசோரசு (Azores), கானரித் தீவுகள் (Canary Islands), வெரிடிமுனைத் தீவுகள் (Verde Cape) வட அட்லாண்டிக்குப் பெருங்கடலைச் சார்ந்தவை. இதன் ஆழம் சராசரி 4270 மீ. {{larger|<b>அட்லாண்டிக்கு மாநிலங்கள்</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூ இங்கிலாந்து மாநிலத்தின் தெற்கில் உள்ள மாநிலங்கள். அட்லாண்டிக்குப் பெருங்கடலை எல்லையாகவோ அதனுடன் நெருங்கிய பொருளாதாரத் தொடர்பு கொண்டோ உள்ள மாநிலங்களை அட்லாண்டிக்கு மாநிலங்கள் (Atlantic States) என்பர். நியூயார்க்கு, நியூ செர்சி, பென்சில் வேனியா ஆகிய மாநிலங்கள் மத்திய அட்லாண்டிக்கு மாநிலங்கள், தெலாவர், மேரிலாந்து, வர்சீனியா, வட கரோலினா, தென் கரோலினா, சார்சியா, பிளாரிடா போன்றவை தென் அட்லாண்டிக்கு மாநிலங்கள். மேற்கு வர்சீனியா உள் நாட்டில் அமைந்திருந்தாலும் இதனையும் அட்லாண்டிக்கு மாநிலங்களில் சேர்ப்பர். {{larger|<b>அட்லாண்டிசு</b>}} அட்லாண்டிக்குப் பெருங்கடலில் சிப்ரால்டர் நீர்ப்பிரிவிற்கு மேற்கில் இருந்ததாகக் கிரேக்கர்களும் உரோமானியர்களும் நம்பி வந்த தொன்மையான தீவு, பிளேட்டோ (Plato) என்னும் கிரேக்க அறிஞர் பழங்காலத்தில் இங்கு ஒரு பேரரசு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் நில நடுக்கத்தாலும் பெரு வெள்ளத்தாலும் இத்தீவு அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இப்பொழுதுள்ள கானரித் தீவே (Canary Islands) அக்கால அட்லாண்டிசு (Atlantis) எனச் சிலர் கூறுவர். அட்லாசு மலையை வைத்தே இத்தீவிற்கு அட்லாண்டிசு எனப்பெயர் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. {{larger|<b>அடக்கக் கணக்கு:</b>}} ஒரு பொருள் விற்பனைக்கு வருமுன் பல உற்பத்தி நிலைகளைக் கடந்து வருகிறது. அதன் ஒவ்வொரு நிலையிலும் அதன் நிலைக்கேற்ப ஆகும் பலவிதச் செலவுகளைக் கணக்கில் கொண்டு, அப்பொருளுக்கான அடக்கவிலை வரையறுக்கப்படுகிறது. மேலாண்மையினருக்குப் பொருள்களின் ஒவ்வொரு நிலையும், அதன் அடக்க விலையை நன்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு நிலையிலும் அதற்கு ஆகும் செலவைக் குறைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும். இவை பற்றிய கணக்குகள், பதிவேடுகள், விவரங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தும் அடக்க முறைக் கணக்குகள் எனப்படும். ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்வதற்கோ ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிப்பதற்கோ ஆகக்கூடிய செலவுகளின் கூட்டுத் தொகையை அதற்கான அடக்கச் செலவு என்பர். ஆகவே அடக்கச்செலவை வரையறுக்கும் முறைகளை அடக்க விலை முறைகள் (Costing) என்று கூறுவர். அடக்கக் கணக்கு முறைகளைக் கையாளும் வல்லுநர்களை அடக்கக் கணக்கர் (Cost Accountant) என்பர். அடக்கக் கணக்கர், தம் கடமைகளைச் செய்யும்போது சில ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகளையும், வழிமுறைகளையும் கையாள்வர். அந்நிலையில் அடக்கக் கணக்கு முறை அறிவியல் தொடர்புடையதாகக் கருதப்படும். அடக்கக் கணக்கர் அடக்கவிலை விவரங்களைக் (Cost Data) கையாளும்போது பலவித எடுகோள்களையும் (Assumptions) முடிவுகளையும் மேற்கொள்வர். பொதுவாக இவை ஒரே தன்மையாக இருக்கமாட்டா. இதில் மாறுபாடுகளும் இருக்கும். ஆகவே அடக்கவிலைக் கணக்கு ஓர் இயலாகவும் கருதப்படுகிறது. அடக்கக் கணக்குப் பதிவுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை 1) அடக்கவிலை வரையறை (Cost Ascertainment), 2) அடக்கவிலைத் தெரிவிப்பு (Cost Presentation), 3) அடக்கவிலைக் கட்டுப்பாடு (Cost Control) எனப்படும். {{larger|<b>அடக்கவிலை வரையறை:</b>}} ஒரு குறிப்பிட்ட பொருளுக்கோ வேலைக்கோ ஆகும் செலவு விவரங்களைச் சேகரித்தல்; பொருளின் ஒவ்வொரு உற்பத்தி நிலையிலும் அதன் உற்பத்தியளவை வரையறுத்தல்; அனைத்து உற்பத்திக்கும் தொடர்புள்ள பிற செலவுகளை வரையறுத்தல் ஆகிய மூன்றும் அடக்கவிலை வரையறையின் சிறப்புக் கூறுகளாகும். மேலும், பழைய பதிவுச் செலவுக் கணிப்பு (Historical Costing); மதிப்பீட்டுச் செலவுக் கணிப்பு (Estimated Costing); வேலைச் செலவுக் கணிப்பு (Job Costing); தொழில் முறைச் செலவுக் கணிப்பு (Process Costing); மதிப்பீட்டுக் கட்டுப்பாடு (Budgetary Control); இறுதி நிலைச் செலவுக் கணிப்பு (Marginal Costing); திட்டச் செலவுக் கணிப்பு (Standard Costing) போன்ற முறைகள் அடக்கவிலை வரையறையில் பின்பற்றப்படுகின்றன. பொருள் உற்பத்தியின் பின்னும், பொருள் உற்பத்தியின் போதும், அதன் அடக்கவிலைக் கணிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். அடக்கவிலை விவரங்கள் மேலாண்மையினரின் தேவைக்கேற்ப அளிக்கப்படும். மேலாண்மையினர்<noinclude></noinclude> i9v3l5qjn45mt4u2g5555x5206l5omd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/225 250 618516 1840342 1829547 2025-07-08T08:08:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்கக் கணக்கு|189|அடக்கக் கணக்கு}}</noinclude>அவ்வப்போது முடிவுகளை எடுக்க இது உதவுகிறது. அடக்கவிலை ஏடு (Cost Sheet), மூலப் பொருள் நுகர்வுக் கணக்கேடு (Consumption of Materials Statement), உழைப்புப் பயன்பாட்டுக் கணக்கேடு (Labour Utilisation Statement), உற்பத்தி நிலை அறிக்கை (Production Report), விற்பனை அறிக்கை (Sales Report), சரக்கிருப்பு அறிக்கை (Inventory Report) முதலியன மேலாண்மையினர் முடிவுகளை மேற்கொள்ள உதவுகின்றன. அடக்கவிலைக் கட்டுப்பாடு, அடக்கவிலையைக் கட்டுப்படுத்தக் கையாளப்படுகிறது. மதிப்பீட்டுக் கட்டுப்பாடு திட்டச் செலவுக் கணிப்பு, பொறுப்பேற்புக் கணக்கு முறை (Responsibility Accounting) முதலியவை, அடக்கவிலைக் கட்டுப்பாட்டு முறைகளாகும். அடக்கவிலைக் கட்டுப்பாட்டு முறைகள், நிறுவனத்தின் அனைத்துத் துறை அலுவலராலும் தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டியவை. அடக்கவிலைக் கட்டுப்பாடு என்பது, அடக்க விலையைக் குறைப்பதற்கான முறைகள் மட்டுமன்று. ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான தேவைகள் அனைத்தும் அடக்கவிலைக் கட்டுப்பாட்டில் அடங்கும். இதன் சிறப்புக் குறிக்கோள் பொருள் உற்பத்தியில் திறமையின்மையையும் பொருள் வீணாக்கலையும் பெருமளவில் தடுப்பதுதான். அடக்கவிலைக் குறைப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட பொருளின் உற்பத்தி விலை அதன் மதிப்பு மாறாத நிலையைக் காட்டுகிறது. மேலும், அடக்கவிலைக் குறைப்பு, நிறுவனம் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டியதொரு முயற்சி, அடக்கவிலைக் கட்டுப்பாடு என்பது, தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கச் செயற்படுத்தும் முறையாகும். {{larger|<b>அடக்கவிலைத் தணிக்கை:</b>}} அடக்கவிலைக் கணக்குகளையும் அடக்கக் கணக்குப் பதிவேடுகளையும் வரையறுக்கப்பட்ட ஒழுங்குகளின்படி சரிபார்ப்பது அடக்கவிலைத் தணிக்கை (Cost Auditing) எனப்படும். நிறுவனத்தில் குறிப்பிட்ட அலுவலர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கும். இவ்வமைப்புகள் “பொறுப்பு மையங்கள்” (Responsibility Centres) எனப்படும். அடக்கவிலை மையம் (Cost Centre), ஆதாய மையம் (Profit Centre), முதலீட்டு மையம் (Investment Centre), மதிப்பீட்டு மையம் (Budget Centre) போன்ற பல அமைப்புகள் இருக்கும். {{larger|<b>அடக்கவிலை மையம்:</b>}} இது ஒரு செலவு மையம். ஒரு துறையையோ விற்பனையாகும் இடத்தையோ, விற்பனையாளரையோ ஒரு குறிப்பிட்ட எந்திரத்தையோ குறிக்கும். தகுந்த அடக்கவிலை மையங்களை முடிவு செய்வது அடக்கவிலையை வரையறுப்பதற்கு மிகவும் இன்றியமையாதது. மையத்தின் மேலாளர், அம்மையத்தின் அடக்கக் கட்டுப்பாட்டு முறைகளுக்குப் பொறுப்பேற்கிறார். ஒரு நிறுவனத்தில் மிகுதியான அடக்கவிலை மையங்கள் இருந்தால் கணக்குகளை எல்லா விவரங்களுடனும் கணிக்க இயலும். ஆனால் பல மையங்களை வைத்துக் கொள்வதால் மிகுந்த செலவாகும். {{larger|<b>ஆதாய மையம்:</b>}} நிறுவனத்தின் அமைப்பு, பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பிரிவின் செயல் திறன், அப்பிரிவுக்காகும் செலவுகளாலும் அப்பிரிவினால் வரக்கூடிய வருமானத்தினாலும் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு பிரிவின் மேலாளரும் தம் பிரிவில் மிகுந்த ஆதாயம் ஈட்ட முனைவர். இதற்குப் “பங்களிப்பு மையம்” (Contribution Centre) என்று பெயர். {{larger|<b>முதலீட்டு மையம்:</b>}} ஒவ்வொரு பிரிவின் மேலாளரும் அப்பிரிவினால் வரக்கூடிய ஆதாயத்திற்கு மட்டும் பொறுப்பேற்பதில்லை. அப்பிரிவில் அவர் பயன்படுத்தும் சொத்துகளுக்கும் அவரே பங்கேற்கிறார். அப்பிரிவிற்கான முதலீடும் அதனால் வரக்கூடிய வருமானமும் கணக்கிடப்படுகின்றன. இதைப் பொறுத்தே அங்கு வேலை செய்யும் தொழிலாளரின் செயல் திறனும் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு மேலாளரும் அவர் கையாளும் முதலீட்டிற்கேற்ப ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் குறையாத வருமானம் ஈட்ட ஊக்குவிக்கப்படுவர். திறமைமிகு மேலாளர்கள் மேலாண்மை முடிவுகளைத் தாமே எடுக்க முழு உரிமையும் அளிக்கப்படுகிறது. {{larger|<b>மதிப்பீட்டு மையம்:</b>}} மதிப்பீட்டுக் கட்டுப்பாடுகளுக்காக இம்மையம் இயங்குகிறது. ஒவ்வொரு மதிப்பீட்டு மையத்திற்கும் தனித்தனியே மதிப்பீடுகள் உருவாக்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு செயல்பட ஒரு மேலாளர் பொறுப்பேற்கிறார். அம்மதிப்பீட்டின்படி செயல்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளுக்கும் அவரே பொறுப்பேற்கிறார். பொருள்களுக்கேற்பப் பொருத்தமான வகைகளில் அடக்கவிலை வரையறுக்கப்படுகிறது. {{larger|<b>அடக்கக் கணக்கின் சிறப்புக் கொள்கைகள்:</b>}} 1) ஒவ்வொரு நிறுவனமும் அதன் நடவடிக்கைகளின் சிறப்புத் தன்மைக்குத் தக்கவாறு அடக்கக்கணக்கு முறைகளைக் கையாள வேண்டும். 2) ஒரு செலவினம், செலவு செய்யப்படுவதற்கு முன் அடக்கவிலைக் கணக்கில் சேர்க்கப்படக் கூடாது. 3) அடக்கக் கணக்கு உருவாக்கத்தில் பழைமை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கலாகாது. 4) கடந்த காலச் செலவுகளை எதிர்காலச் செலவிற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. 5) பொதுவாக, நிகழாத, ஆனால் எப்போதாவது<noinclude></noinclude> so8pfcoigdii9s227tu6ojrp3cf78mi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/226 250 618574 1840346 1830012 2025-07-08T08:12:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1840346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்கக் கணக்கு|190|அடக்கக் கணக்கு}}</noinclude>நிகழக் கூடிய, செலவுகளும் அடக்கக் கணக்கில் வாரா. 6) அடக்கக் கணக்குகள் இரட்டைப் பதிவு (Double Entry) முறைக் கணக்கின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். 7) நடவடிக்கைகளின் உண்மைத் தன்மைக்கேற்றவாறு செலவுகள் அந்தந்தக் செலவுகள் அந்தந்தக் கணக்குகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். {{larger|<b>அடக்கக் கணக்கின் வகைகள்:</b>}} பல வகையான முறைகளில் அடக்கவிலை முடிவு செய்யப்படலாம். ஆனால், எல்லா முறைகளிலும் பொதுவான கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. உற்பத்திப் பொருளுக்குத் தகுந்தவாறும் உற்பத்தி முறைகளுக்குத் தகுந்தவாறும் செலவுகள் ஒதுக்கப்படுவதும் அடக்க விலைக் கணக்குகள் உருவாக்கப்படுவதும் மாறுபடும். இதில் இருவகையான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவை 1) வேலைச் செலவுக் கணிப்பு, 2) தொழில் முறைச் செலவுக் கணிப்பு. வாடிக்கையாளரின் குறிப்பிட்ட தேவைக்குத் தக்கவாறு பொருள் உற்பத்தி செய்யும்போது, அதற்கான அடக்கவிலை வரையறை செய்யப்பட்டு, அனைத்துச் செலவுகளும் கணக்கில் கொண்டுவரப்படுகின்றன. இவ்வடிப்படையிலேயே அச்சகங்களிலும் கப்பல் கட்டும் நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் கட்டட வேலைகளிலும் பழுதுபார்க்கும் பணிமனைகளிலும் அடக்கக் கணக்குகள் வரையறை செய்யப்படுகின்றன. பொதுவாக, பொருள் உற்பத்தி வெவ்வேறு முறைகளில் நிகழ்கிறது. ஒரு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள், அடுத்த முறைக்கு மூலப் பொருளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு முறையிலும் சில துணைப்பொருள்கள் (By-products) உருவாவதும் உண்டு. இரசாயனத் தொழிற்சாலைகள், நெசவாலைகள், தோல் பதனிடு தொழிற்சாலைகள் காகிதத் தொழிற்சாலைகள், செங்கற் சூளைகள், சோப்புத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் இம்முறையில் அடக்கவிலை கணக்கிடப்படுகிறது. சில நிறுவனங்கள் ஒரே தன்மையான பொருள்களை உருவாக்கும். அங்கு ஒவ்வொரு பொருளின் தனி அடக்க விலை (Unit Costing) கண்டுபிடிக்கப்படும். போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள், மின்சார நிறுவனங்கள், குடிநீர்ப்பங்கீட்டு நிறுவனங்கள் முதலியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் பொதுவாகக் கையாளப்படுகின்றன. அம்முறைகளுக்குப் பல்வகைச் செலவுக் கணிப்பு (Multiple Costing) என்பது பெயர். {{larger|<b>அடக்கக் கணக்கின் நுட்பம்:</b>}} 1) பழைய விவர அடிப்படைக் கணிப்பு (Historical Costing): ஒரு பொருளின் உற்பத்திக்குப் பின், அதன் செலவு விவரங்களிலிருந்து உற்பத்திச் செலவைக் கணக்கிடுதல், இதில் அடக்க விலைக் கட்டுப்பாட்டு முறையைக் கையாள முடியாது. 2) திட்டச் செலவுக் கணிப்பு: ஒரு பொருள் உற்பத்திக்கு முன்பே செலவினங்களை வரையறுப்பது திட்டச் செலவுக் கணிப்பு எனப்படும். உற்பத்திக்குப் பின், செலவையும் திட்டக்காலச் செலவுக் கணிப்பையும் ஒப்பிட்டு வேறுபாடுகளைத் திட்டச் செலவுக் கணிப்பு கணக்கிடுகிறது. 3) இறுதிநிலைச் செலவுக் கணிப்பு: ஒரு பொருளை உற்பத்தி செய்யும் பொழுது அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சில செலவுகள் ஏற்படலாம். சில, உற்பத்திக்குத் தக்கவாறு மாறும் செலவுகள் (Variable Costs); சில மாறாச் செலவுகள் (Fixed Costs): மாறாச் செலவுகளைக் கணக்கிடாமல், மாறக்கூடிய நேரடிச் செலவுகளை மட்டும் கணக்கிடுவது இறுதிநிலைச் செலவுக் கணிப்பு எனப்படும். இந்த இறுதிநிலைச் செலவை விற்பனை விலையிலிருந்து நீக்கினால், கிடைப்பது ஆதாயப் பங்கு (Contribution). இத்தொகையிலிருந்து மாறாச் செலவுகளைக் கழித்தால் கிடைப்பது ஆதாயமாகும் (Profit). {{larger|<b>சேர்ப்புச் செலவுக் கணிப்பு (Absorption Costing):</b>}} இம்முறையில் ஒரு பொருளுக்காகும் நேரடியானதும் மறைமுகமானதுமான அனைத்துச் செலவுகளும் கணக்கிடப்படுகின்றன. {{larger|<b>ஒரு தன்மைச் செலவுக் கணிப்பு (Uniform Costing):</b>}} ஒரு தன்மைப் பொருள்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்களும் ஒரே வகையான அடக்கக் கணக்குக் கொள்கைகளைக் கையாள்வதைக் குறிக்கும். அவை நிறுவனங்களின் உற்பத்தி அடக்க விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் விற்பனை விலையை வரையறுக்கவும் உதவும். சில செலவுகள், அவை செலவிடப்படும் இனத்தைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் செலவுகள், உற்பத்திச் செலவு என்றும் மேற்பார்வைச் செலவு என்றும் விற்பனைச் செலவு என்றும் இனப்படுத்தப்படுகின்றன. {{larger|<b>அடக்கக் கணக்கின் பயன்கள்:</b>}} அடக்கவிலைக் கணக்குகளின் மூலமாக 1) அடக்கவிலை முடிவு செய்யப்படுகிறது. 2) எந்தெந்த வருமானத்திற்கு எந்தெந்தச் செலவுகள், முறையாகக் காட்டப்பட வேண்டும் என்று முடிவு செய்ய முடியும். 3) ஒரு குறிப்பிட்ட பணியை அதற்காகும் அடக்கச் செலவின் அடிப்படையில் கணக்கிட இயலும். 4) விற்பனை விலையை உறுதிசெய்ய முடியும். 5) நடவடிக்கை ஒவ்வொன்றிலும் ஈட்டக்கூடிய ஆதாயத்தை வரையறை செய்ய முடியும். 6) மேலாண்மையினர் எதிர்காலத் திட்டத்தைத் தீட்டவும் உறுதியான முடிவுகளை மேற்கொள்ளவும் இயலும்.{{float_right|பி.இரா.}} {{nop}}<noinclude></noinclude> 3wipd324m42tw91s7m3uc6gd9x0o306 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/52 250 619351 1840058 1835584 2025-07-07T15:38:15Z Info-farmer 232 x- 1840058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>(2) இரவாட்டு</b>}}}} இங்கு, இரவென்றது கண்தெரியும் நிலாக்காலத்திரவை. நிலவொளியில்லாதவிடத்துத் தெரு விளக்கொளியிலும் சில ஆட்டுக்கள் ஆடப்பெறும். {{center|{{larger|<b>க. குதிரைக்குக் காணங்கட்டல்</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : குதிரைக்குக் காணங்கட்டி அவற்றின்மேல் ஏறுவதாகப் பாவித்துக்கொண்டு, ஒரு கட்சியார் இன்னொரு கட்சியார்மேல் ஏறி விளையாடுவது <b>குதிரைக்குக் காணங்கட்டல்.</b> காணங்கட்டுதலாவது கொள்வைத்தல். {{larger|ஆடுவார் தொகை}} : பொதுவாக, எண்மர்க்கு மேற்பட்ட சிறுவர் இதை ஆடுவர். {{larger|ஆடு கருவி}} : ஓர் ஆடைத்துண்டை முறுக்கிப் பின்னிய திரி இதற்குரிய கருவியாம். ஏறத்தாழ ஐந்து கசம் இடையிட்ட இரு சமதூரக் கோடுகளைக் கீறி, அவற்றை எதிரெதிராக நின்று ஆடும் இரு கட்சியாரும் தத்தம் மனையெல்லை என்பர். {{larger|ஆடிடம்}} : ஊர்ப் பொட்டலும் அகன்ற தெருவும் இதை ஆடுமிடமாம். {{larger|ஆடு முறை}} : ஆடுவார் எல்லாரும் முதலாவது உத்தி கட்டிச் சமத்தொகையான இருகட்சியாகப் பிரிந்துகொள்வர். முந்தி யாடவேண்டுமென்று துணியப்பட்ட கட்சியாருள் ஒருவன், திரியின் ஒரு முனையைத் தன் வலக்காற்பெருவிரற்கும் அடுத்த விரற்கும் இடையில் இடுக்கி, இருகையையும் நிலத்தில் ஊன்றி, கரணம் போடுவதுபோற் காலைத்தூக்கித் திரியை எதிர்க்கட்சியாரின் மனைக்குள் காலால் எறிவான். அதை எதிர்க்கட்சியார் அந்தரத்திற்-<noinclude></noinclude> m3r2mto9n15xnt0pk0ych0oadlj4zd2 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/58 250 619457 1840059 1835593 2025-07-07T15:38:57Z Info-farmer 232 x- 1840059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>௩. சூ விளையாட்டு<br>(க) பாண்டிய நாட்டு முறை</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : பாண்டி நாட்டில் இது இன்று <b>அவுட்டு</b> (out) என்னும் ஆங்கிலப்பெயரால் வழங்குகின்றது. ஓடித் தொடும் ஒருவன் உட்கார்ந்திருக்கும் ஒருவனை ‘அவுட்டு’ என்று சொல்லி எழுப்பும் விளையாட்டு, அச் சொல்லையே பெயராகக் கொண்டது. இது முதலாவது உசு விளையாட்டு என்று வழங்கியிருக்கலாம். {{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட ஐவர் வேண்டும். {{larger|ஆடிடம்}} : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இதை ஆடலாம். {{larger|ஆடு முறை}} : மூவர் இவ்விருசை இடையிட்டு, ஒரே திசை நோக்கி வரிசையாக நிலத்தில் உட்கார்ந்துகொள்வர். ஒருவன் அவரைச் சுற்றியும் அவருக்கிடையிலும் ஓடுவான். இன்னொருவன் அவனைத் தொடவேண்டும். தொடுகிறவன் வரிசையைச் சுற்றியன்றி இடையிற் செல்லக்கூடாது. ஆயின், இடையில் வரிசைக்கோட்டைத் தாண்டாது எட்டித் தொடலாம். ஓடுகிறவனுக்கு மிக வசதியிருத்தலில் அவனைத் தொடுவது அரிது.தொட முயல்கிறவன் நீண்ட நேரம் ஆடியோடிப் பார்த்துவிட்டு, பின்பு ஓடுகிறவனுக்கு அண்மையாகத் தனக்கு முன்னாலிருப்பவனை ‘அவுட்டு’ என்று சொல்லி எழுப்பிவிட்டு அவனிடத்தில் தான் உட்கார்ந்துகொள்வான். உட்கார்ந்திருப்பவர் ஒரே திசை நோக்கி உட்கார்ந்திருப்பதாலும், முன்னோக்கியன்றிப் பின்னோக்கி ஓடித் தொடுதல் கூடாமையாலும், எழுப்புகிறவன் என்றும் எழுப்பப்படுகிறவனுக்குப் பின்னாக நின்றே எழுப்புவன். எழுப்பப்பட்டவன் உடனே ஓடிப்போய் ஓடுகிறவனைத் தொட்டுவிடின், தொட்டவன் ஓடுகிற-<noinclude></noinclude> ivw350syrgidpnh6ryp8kqamxxncgdt 1840060 1840059 2025-07-07T15:39:18Z Info-farmer 232 {{larger|}} 1840060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>௩. சூ விளையாட்டு<br>{{larger|(க) பாண்டிய நாட்டு முறை}}</b>}}}} {{larger|ஆட்டின் பெயர்}} : பாண்டி நாட்டில் இது இன்று <b>அவுட்டு</b> (out) என்னும் ஆங்கிலப்பெயரால் வழங்குகின்றது. ஓடித் தொடும் ஒருவன் உட்கார்ந்திருக்கும் ஒருவனை ‘அவுட்டு’ என்று சொல்லி எழுப்பும் விளையாட்டு, அச் சொல்லையே பெயராகக் கொண்டது. இது முதலாவது உசு விளையாட்டு என்று வழங்கியிருக்கலாம். {{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட ஐவர் வேண்டும். {{larger|ஆடிடம்}} : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இதை ஆடலாம். {{larger|ஆடு முறை}} : மூவர் இவ்விருசை இடையிட்டு, ஒரே திசை நோக்கி வரிசையாக நிலத்தில் உட்கார்ந்துகொள்வர். ஒருவன் அவரைச் சுற்றியும் அவருக்கிடையிலும் ஓடுவான். இன்னொருவன் அவனைத் தொடவேண்டும். தொடுகிறவன் வரிசையைச் சுற்றியன்றி இடையிற் செல்லக்கூடாது. ஆயின், இடையில் வரிசைக்கோட்டைத் தாண்டாது எட்டித் தொடலாம். ஓடுகிறவனுக்கு மிக வசதியிருத்தலில் அவனைத் தொடுவது அரிது.தொட முயல்கிறவன் நீண்ட நேரம் ஆடியோடிப் பார்த்துவிட்டு, பின்பு ஓடுகிறவனுக்கு அண்மையாகத் தனக்கு முன்னாலிருப்பவனை ‘அவுட்டு’ என்று சொல்லி எழுப்பிவிட்டு அவனிடத்தில் தான் உட்கார்ந்துகொள்வான். உட்கார்ந்திருப்பவர் ஒரே திசை நோக்கி உட்கார்ந்திருப்பதாலும், முன்னோக்கியன்றிப் பின்னோக்கி ஓடித் தொடுதல் கூடாமையாலும், எழுப்புகிறவன் என்றும் எழுப்பப்படுகிறவனுக்குப் பின்னாக நின்றே எழுப்புவன். எழுப்பப்பட்டவன் உடனே ஓடிப்போய் ஓடுகிறவனைத் தொட்டுவிடின், தொட்டவன் ஓடுகிற-<noinclude></noinclude> rzyco4gxn5o0grcnfokkcohqmb53438 1840063 1840060 2025-07-07T15:40:04Z Info-farmer 232 }} 1840063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>௩. சூ விளையாட்டு}}<br>{{larger|(க) பாண்டிய நாட்டு முறை}}</b>}} {{larger|ஆட்டின் பெயர்}} : பாண்டி நாட்டில் இது இன்று <b>அவுட்டு</b> (out) என்னும் ஆங்கிலப்பெயரால் வழங்குகின்றது. ஓடித் தொடும் ஒருவன் உட்கார்ந்திருக்கும் ஒருவனை ‘அவுட்டு’ என்று சொல்லி எழுப்பும் விளையாட்டு, அச் சொல்லையே பெயராகக் கொண்டது. இது முதலாவது உசு விளையாட்டு என்று வழங்கியிருக்கலாம். {{larger|ஆடுவார் தொகை}} : இதை ஆட ஐவர் வேண்டும். {{larger|ஆடிடம்}} : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இதை ஆடலாம். {{larger|ஆடு முறை}} : மூவர் இவ்விருசை இடையிட்டு, ஒரே திசை நோக்கி வரிசையாக நிலத்தில் உட்கார்ந்துகொள்வர். ஒருவன் அவரைச் சுற்றியும் அவருக்கிடையிலும் ஓடுவான். இன்னொருவன் அவனைத் தொடவேண்டும். தொடுகிறவன் வரிசையைச் சுற்றியன்றி இடையிற் செல்லக்கூடாது. ஆயின், இடையில் வரிசைக்கோட்டைத் தாண்டாது எட்டித் தொடலாம். ஓடுகிறவனுக்கு மிக வசதியிருத்தலில் அவனைத் தொடுவது அரிது.தொட முயல்கிறவன் நீண்ட நேரம் ஆடியோடிப் பார்த்துவிட்டு, பின்பு ஓடுகிறவனுக்கு அண்மையாகத் தனக்கு முன்னாலிருப்பவனை ‘அவுட்டு’ என்று சொல்லி எழுப்பிவிட்டு அவனிடத்தில் தான் உட்கார்ந்துகொள்வான். உட்கார்ந்திருப்பவர் ஒரே திசை நோக்கி உட்கார்ந்திருப்பதாலும், முன்னோக்கியன்றிப் பின்னோக்கி ஓடித் தொடுதல் கூடாமையாலும், எழுப்புகிறவன் என்றும் எழுப்பப்படுகிறவனுக்குப் பின்னாக நின்றே எழுப்புவன். எழுப்பப்பட்டவன் உடனே ஓடிப்போய் ஓடுகிறவனைத் தொட்டுவிடின், தொட்டவன் ஓடுகிற-<noinclude></noinclude> r0gzqpw0p6qoebea80shw9g1a7ot6ud பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5 250 619541 1840040 1839568 2025-07-07T15:20:06Z Info-farmer 232 {{larger|<b></b>}} 1840040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|12em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} {{larger| 1. ஆண்பாற் பகுதி:}} </b> {{float_right|1}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|<b>(1) பகலாட்டு</b>}}]] | {{DJVU page link|1|14}}}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் (சேலம்வட்டார முறை) {{float_right|17}} }} <b>௨. தெல்</b> {{float_right|19}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|'''௩. சில்லாங் குச்சு''']] | {{DJVU page link|20|12}}}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}}}} {{left_margin|6em| I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|<b>௪. பந்து</b>]]| {{DJVU page link|27|12}}}} {{left_margin|6em| I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] | {{DJVU page link|30|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] | {{DJVU page link|31|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] | {{DJVU page link|32|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] | {{DJVU page link|33|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> mohxgfqnleuic41eky7zqpq6jinkqkn 1840178 1840040 2025-07-08T03:49:47Z Booradleyp1 1964 1840178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{x-larger|உள்ளுறை}} {{larger|I. இளைஞர் பக்கம்}}{{rule|12em|align=}}}} {{block_center|width=600px| {{Right|பக்கம்}} {{larger| 1. ஆண்பாற் பகுதி:}} </b> {{float_right|1}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002|{{larger|<b>(1) பகலாட்டு</b>}}]] | {{DJVU page link|1|14}}}} <b>௧. கோலி</b> {{float_right|❠}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டு முறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டு முறை {{float_right|4}}}} {{left_margin|6em| I. பேந்தா {{float_right|❠}} {{left_margin|1em|(i) சதுரப் பேந்தா {{float_right|❠}} (ii) வட்டப் பேந்தா {{float_right|7}}}} II. அஞ்சல குஞ்சம் {{float_right|10}} III. இருகுழியாட்டம் (இஷ்டம்) {{float_right|14}} IV. முக்குழியாட்டம் (சேலம்வட்டார முறை) {{float_right|17}} }} <b>௨. தெல்</b> {{float_right|19}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/003|'''௩. சில்லாங் குச்சு''']] | {{DJVU page link|20|12}}}} {{left_margin|3em|(௧) பாண்டி நாட்டுமுறை {{float_right|❠}} (௨) சோழ கொங்கு நாட்டுமுறை {{float_right|24}}}} {{left_margin|6em| I. கில்லித் தாண்டு {{float_right|❠}} II. கிட்டிப்புள் {{float_right|26}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004|<b>௪. பந்து</b>]]| {{DJVU page link|27|12}}}} {{left_margin|6em| I. பேய்ப்பந்து {{float_right|❠}} II. பிள்ளையார் பந்து {{float_right|28}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/005|௫. மரக்குரங்கு]] | {{DJVU page link|30|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006|௬. “காயா பழமா”]] | {{DJVU page link|31|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/007|௭. ‘பஞ்சுவெட்டுங் கம்படோ’]] | {{DJVU page link|32|12}}}} {{Dtpl|symbol= |dottext= | |[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/008|௮. குச்சு விளையாட்டு]] | {{DJVU page link|33|12}}}} }}<noinclude></noinclude> ix7ll11lv3u8t3yfxtb69barmfit9s2 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/6 250 619542 1839983 1839890 2025-07-07T12:26:15Z Info-farmer 232 + துணைப்பக்கங்களுக்கு ஒருங்கிணைவு வார்ப்புருக்கள் இடப்பட்டன 1839983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|௯. பம்பரம்]] | {{DJVU page link|35|12}}}} I. ஓயாக்கட்டை {{float_right|❠}} II. உடைத்த கட்டை {{float_right|❠}} III. பம்பரக்குத்து 36 IV. இருவட்டக்குத்து 37 V. தலையாரி 38 க0. பட்டம் 39 {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|(2) இரவாட்டு]] | {{DJVU page link|40|12}}}} ௧. குதிரைக்குக் காணங் கட்டல்]] {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|௨. வண்ணான் தாழி]] | {{DJVU page link|43|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|௩. ‘சூ’ விளையாட்டு]] | {{DJVU page link|46|12}}}} (க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|❠}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|49|12}}}} க. கிளித்தட்டு {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|௨. பாரிக்கோடு]] | {{DJVU page link|54|12}}}} I. காலாளம்பாரி {{float_right|❠}} II. எட்டாளம்பாரி {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௩. அணிற்பிள்ளை]] | {{DJVU page link|55|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௪. சடுகுடு]] | {{DJVU page link|57|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] | {{DJVU page link|61|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௬. பூக்குதிரை]] | {{DJVU page link|62|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௭. பச்சைக்குதிரை]] | {{DJVU page link|63|12}}}} I. ஒருவகை {{float_right|❠}} II. மற்றொருவகை {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௮. குதிரைச் சில்லி]] | {{DJVU page link|64|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> enuo99e8ki4l21mdo783gd7m31t79k0 1839988 1839983 2025-07-07T12:38:14Z Info-farmer 232 ௧. குதிரைக்குக் காணங் கட்டல் {{float_right|❠}} 1839988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|௯. பம்பரம்]] | {{DJVU page link|35|12}}}} I. ஓயாக்கட்டை {{float_right|❠}} II. உடைத்த கட்டை {{float_right|❠}} III. பம்பரக்குத்து 36 IV. இருவட்டக்குத்து 37 V. தலையாரி 38 க0. பட்டம் 39 {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|(2) இரவாட்டு]] | {{DJVU page link|40|12}}}} ௧. குதிரைக்குக் காணங் கட்டல் {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|௨. வண்ணான் தாழி]] | {{DJVU page link|43|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|௩. ‘சூ’ விளையாட்டு]] | {{DJVU page link|46|12}}}} (க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|❠}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|49|12}}}} க. கிளித்தட்டு {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|௨. பாரிக்கோடு]] | {{DJVU page link|54|12}}}} I. காலாளம்பாரி {{float_right|❠}} II. எட்டாளம்பாரி {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௩. அணிற்பிள்ளை]] | {{DJVU page link|55|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௪. சடுகுடு]] | {{DJVU page link|57|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] | {{DJVU page link|61|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௬. பூக்குதிரை]] | {{DJVU page link|62|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௭. பச்சைக்குதிரை]] | {{DJVU page link|63|12}}}} I. ஒருவகை {{float_right|❠}} II. மற்றொருவகை {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௮. குதிரைச் சில்லி]] | {{DJVU page link|64|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> 1ulck4g55tq6wf8pazwmuxxhek1yt8t 1840038 1839988 2025-07-07T15:18:47Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|௯. பம்பரம்]] | {{DJVU page link|35|12}}}} I. ஓயாக்கட்டை {{float_right|❠}} II. உடைத்த கட்டை {{float_right|❠}} III. பம்பரக்குத்து {{float_right|36}} IV. இருவட்டக்குத்து {{float_right|37}} V. தலையாரி {{float_right|38}} க0. பட்டம் {{float_right|39}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|(2) இரவாட்டு]] | {{DJVU page link|40|12}}}} ௧. குதிரைக்குக் காணங் கட்டல் {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|௨. வண்ணான் தாழி]] | {{DJVU page link|43|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|௩. ‘சூ’ விளையாட்டு]] | {{DJVU page link|46|12}}}} (க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|❠}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|49|12}}}} க. கிளித்தட்டு {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|௨. பாரிக்கோடு]] | {{DJVU page link|54|12}}}} I. காலாளம்பாரி {{float_right|❠}} II. எட்டாளம்பாரி {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௩. அணிற்பிள்ளை]] | {{DJVU page link|55|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௪. சடுகுடு]] | {{DJVU page link|57|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] | {{DJVU page link|61|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௬. பூக்குதிரை]] | {{DJVU page link|62|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௭. பச்சைக்குதிரை]] | {{DJVU page link|63|12}}}} I. ஒருவகை {{float_right|❠}} II. மற்றொருவகை {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௮. குதிரைச் சில்லி]] | {{DJVU page link|64|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> s0who45zmf6h3ua45d7wgyib8k1kg7r 1840042 1840038 2025-07-07T15:23:48Z Info-farmer 232 <b></b> 1840042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|<b>௯. பம்பரம்</b>]] | {{DJVU page link|35|12}}}} {{left_margin|6em| I. ஓயாக்கட்டை {{float_right|❠}} II. உடைத்த கட்டை {{float_right|❠}} III. பம்பரக்குத்து {{float_right|36}} IV. இருவட்டக்குத்து {{float_right|37}} V. தலையாரி {{float_right|38}}}} க0. பட்டம் {{float_right|39}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|(2) இரவாட்டு]] | {{DJVU page link|40|12}}}} ௧. குதிரைக்குக் காணங் கட்டல் {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|௨. வண்ணான் தாழி]] | {{DJVU page link|43|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|௩. ‘சூ’ விளையாட்டு]] | {{DJVU page link|46|12}}}} (க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|❠}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|49|12}}}} க. கிளித்தட்டு {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|௨. பாரிக்கோடு]] | {{DJVU page link|54|12}}}} I. காலாளம்பாரி {{float_right|❠}} II. எட்டாளம்பாரி {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௩. அணிற்பிள்ளை]] | {{DJVU page link|55|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௪. சடுகுடு]] | {{DJVU page link|57|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] | {{DJVU page link|61|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௬. பூக்குதிரை]] | {{DJVU page link|62|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௭. பச்சைக்குதிரை]] | {{DJVU page link|63|12}}}} I. ஒருவகை {{float_right|❠}} II. மற்றொருவகை {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௮. குதிரைச் சில்லி]] | {{DJVU page link|64|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> kw9otdwkkdkdxbs27xfb8cdvjdkte54 1840045 1840042 2025-07-07T15:27:37Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1840045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|<b>௯. பம்பரம்</b>]] | {{DJVU page link|35|12}}}} {{left_margin|6em| I. ஓயாக்கட்டை {{float_right|❠}} II. உடைத்த கட்டை {{float_right|❠}} III. பம்பரக்குத்து {{float_right|36}} IV. இருவட்டக்குத்து {{float_right|37}} V. தலையாரி {{float_right|38}}}} க0. பட்டம் {{float_right|39}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|40|12}}}} {{left_margin|3em|௧. குதிரைக்குக் காணங் கட்டல் {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|{{left_margin|3em|௨. வண்ணான் தாழி}}]] | {{DJVU page link|43|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|{{left_margin|3em|௩. ‘சூ’ விளையாட்டு}}]] | {{DJVU page link|46|12}}}} {{left_margin|6em|(க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|❠}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|49|12}}}} {{left_margin|3em|க. கிளித்தட்டு {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|{{left_margin|3em|௨. பாரிக்கோடு}}]] | {{DJVU page link|54|12}}}} {{left_margin|6em|I. காலாளம்பாரி {{float_right|❠}} II. எட்டாளம்பாரி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௩. அணிற்பிள்ளை]] | {{DJVU page link|55|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௪. சடுகுடு]] | {{DJVU page link|57|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] | {{DJVU page link|61|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௬. பூக்குதிரை]] | {{DJVU page link|62|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௭. பச்சைக்குதிரை]] | {{DJVU page link|63|12}}}} I. ஒருவகை {{float_right|❠}} II. மற்றொருவகை {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௮. குதிரைச் சில்லி]] | {{DJVU page link|64|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> 4iuuz6lw6mu5jqtv3dhqz9l2ys4lbji 1840047 1840045 2025-07-07T15:29:00Z Info-farmer 232 + சிறு வடிவ மாற்றம் 1840047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|<b>௯. பம்பரம்</b>]] | {{DJVU page link|35|12}}}} {{left_margin|6em| I. ஓயாக்கட்டை {{float_right|❠}} II. உடைத்த கட்டை {{float_right|❠}} III. பம்பரக்குத்து {{float_right|36}} IV. இருவட்டக்குத்து {{float_right|37}} V. தலையாரி {{float_right|38}}}} க0. பட்டம் {{float_right|39}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|40|12}}}} {{left_margin|3em|௧. குதிரைக்குக் காணங் கட்டல் {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|{{left_margin|3em|௨. வண்ணான் தாழி}}]] | {{DJVU page link|43|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|{{left_margin|3em|௩. ‘சூ’ விளையாட்டு}}]] | {{DJVU page link|46|12}}}} {{left_margin|6em|(க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|❠}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|49|12}}}} {{left_margin|3em|க. கிளித்தட்டு {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|{{gap+|3}}௨. பாரிக்கோடு]] | {{DJVU page link|54|12}}}} {{left_margin|6em|I. காலாளம்பாரி {{float_right|❠}} II. எட்டாளம்பாரி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௩. அணிற்பிள்ளை]] | {{DJVU page link|55|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௪. சடுகுடு]] | {{DJVU page link|57|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] | {{DJVU page link|61|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௬. பூக்குதிரை]] | {{DJVU page link|62|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௭. பச்சைக்குதிரை]] | {{DJVU page link|63|12}}}} I. ஒருவகை {{float_right|❠}} II. மற்றொருவகை {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௮. குதிரைச் சில்லி]] | {{DJVU page link|64|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> s78mlo7wk06qb30vhyv1erzb6mgqipj 1840049 1840047 2025-07-07T15:30:19Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1840049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|<b>௯. பம்பரம்</b>]] | {{DJVU page link|35|12}}}} {{left_margin|6em| I. ஓயாக்கட்டை {{float_right|❠}} II. உடைத்த கட்டை {{float_right|❠}} III. பம்பரக்குத்து {{float_right|36}} IV. இருவட்டக்குத்து {{float_right|37}} V. தலையாரி {{float_right|38}}}} க0. பட்டம் {{float_right|39}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|40|12}}}} {{left_margin|3em|௧. குதிரைக்குக் காணங் கட்டல் {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|{{left_margin|3em|௨. வண்ணான் தாழி}}]] | {{DJVU page link|43|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|{{left_margin|3em|௩. ‘சூ’ விளையாட்டு}}]] | {{DJVU page link|46|12}}}} {{left_margin|6em|(க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|❠}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|49|12}}}} {{left_margin|3em|க. கிளித்தட்டு {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|{{gap+|3}}௨. பாரிக்கோடு]] | {{DJVU page link|54|12}}}} {{left_margin|6em|I. காலாளம்பாரி {{float_right|❠}} II. எட்டாளம்பாரி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|௩. அணிற்பிள்ளை]] | {{DJVU page link|55|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|௪. சடுகுடு]] | {{DJVU page link|57|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] | {{DJVU page link|61|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|௬. பூக்குதிரை]] | {{DJVU page link|62|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|௭. பச்சைக்குதிரை]] | {{DJVU page link|63|12}}}} {{left_margin|6em|I. ஒருவகை {{float_right|❠}} II. மற்றொருவகை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|௮. குதிரைச் சில்லி]] | {{DJVU page link|64|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> t11iafgpm71bv1gp19cbarrhxoxyave 1840053 1840049 2025-07-07T15:35:05Z Info-farmer 232 {{gap+|3}} 1840053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|<b>௯. பம்பரம்</b>]] | {{DJVU page link|35|12}}}} {{left_margin|6em| I. ஓயாக்கட்டை {{float_right|❠}} II. உடைத்த கட்டை {{float_right|❠}} III. பம்பரக்குத்து {{float_right|36}} IV. இருவட்டக்குத்து {{float_right|37}} V. தலையாரி {{float_right|38}}}} க0. பட்டம் {{float_right|39}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|40|12}}}} {{left_margin|3em|௧. குதிரைக்குக் காணங் கட்டல் {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|{{gap+|3}}௨. வண்ணான் தாழி]] | {{DJVU page link|43|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|{{gap+|3}}௩. ‘சூ’ விளையாட்டு]] | {{DJVU page link|46|12}}}} {{left_margin|6em|(க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|❠}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|49|12}}}} {{left_margin|3em|க. கிளித்தட்டு {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|{{gap+|3}}௨. பாரிக்கோடு]] | {{DJVU page link|54|12}}}} {{left_margin|6em|I. காலாளம்பாரி {{float_right|❠}} II. எட்டாளம்பாரி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|{{gap+|3}} ௩. அணிற்பிள்ளை]] | {{DJVU page link|55|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|{{gap+|3}} ௪. சடுகுடு]] | {{DJVU page link|57|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|{{gap+|3}} ௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] | {{DJVU page link|61|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|{{gap+|3}} ௬. பூக்குதிரை]] | {{DJVU page link|62|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|{{gap+|3}} ௭. பச்சைக்குதிரை]] | {{DJVU page link|63|12}}}} {{left_margin|6em|I. ஒருவகை {{float_right|❠}} II. மற்றொருவகை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|{{gap+|3}} ௮. குதிரைச் சில்லி]] | {{DJVU page link|64|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> mhw3qc97anrhlvjfv82rhpm8xhpwiyd 1840068 1840053 2025-07-07T15:41:32Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1840068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|<b>௯. பம்பரம்</b>]] | {{DJVU page link|35|12}}}} {{left_margin|6em| I. ஓயாக்கட்டை {{float_right|❠}} II. உடைத்த கட்டை {{float_right|❠}} III. பம்பரக்குத்து {{float_right|36}} IV. இருவட்டக்குத்து {{float_right|37}} V. தலையாரி {{float_right|38}}}} க0. பட்டம் {{float_right|39}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|40|12}}}} {{left_margin|3em|௧. குதிரைக்குக் காணங் கட்டல் {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|{{gap+|3}}௨. வண்ணான் தாழி]] | {{DJVU page link|43|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|{{gap+|3}}௩. ‘சூ’ விளையாட்டு]] | {{DJVU page link|46|12}}}} {{left_margin|6em|(க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|❠}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|49|12}}}} {{left_margin|3em|க. கிளித்தட்டு {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|{{gap+|3}}௨. பாரிக்கோடு]] | {{DJVU page link|54|12}}}} {{left_margin|6em|I. காலாளம்பாரி {{float_right|❠}} II. எட்டாளம்பாரி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|{{gap+|3}} ௩. அணிற்பிள்ளை]] | {{DJVU page link|55|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|{{gap+|3}} ௪. சடுகுடு]] | {{DJVU page link|57|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|{{gap+|3}} ௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] | {{DJVU page link|61|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|{{gap+|3}} ௬. பூக்குதிரை]] | {{DJVU page link|62|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|{{gap+|3}} ௭. பச்சைக்குதிரை]] | {{DJVU page link|63|12}}}} {{left_margin|6em|I. ஒருவகை {{float_right|❠}} II. மற்றொருவகை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|{{gap+|3}} ௮. குதிரைச் சில்லி]] | {{DJVU page link|64|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> 3gkvx1xwxtped3bci1ag8hfsb4lpxhj 1840179 1840068 2025-07-08T03:50:40Z Booradleyp1 1964 1840179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{block_center|width=600px| {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|<b>௯. பம்பரம்</b>]] | {{DJVU page link|35|12}}}} {{left_margin|6em| I. ஓயாக்கட்டை {{float_right|❠}} II. உடைத்த கட்டை {{float_right|❠}} III. பம்பரக்குத்து {{float_right|36}} IV. இருவட்டக்குத்து {{float_right|37}} V. தலையாரி {{float_right|38}}}} க0. பட்டம் {{float_right|39}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|40|12}}}} {{left_margin|3em|௧. குதிரைக்குக் காணங் கட்டல் {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|{{gap+|3}}௨. வண்ணான் தாழி]] | {{DJVU page link|43|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|{{gap+|3}}௩. ‘சூ’ விளையாட்டு]] | {{DJVU page link|46|12}}}} {{left_margin|6em|(க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|❠}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|49|12}}}} {{left_margin|3em|க. கிளித்தட்டு {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|{{gap+|3}}௨. பாரிக்கோடு]] | {{DJVU page link|54|12}}}} {{left_margin|6em|I. காலாளம்பாரி {{float_right|❠}} II. எட்டாளம்பாரி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|{{gap+|3}} ௩. அணிற்பிள்ளை]] | {{DJVU page link|55|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|{{gap+|3}} ௪. சடுகுடு]] | {{DJVU page link|57|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|{{gap+|3}} ௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] | {{DJVU page link|61|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|{{gap+|3}} ௬. பூக்குதிரை]] | {{DJVU page link|62|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|{{gap+|3}} ௭. பச்சைக்குதிரை]] | {{DJVU page link|63|12}}}} {{left_margin|6em|I. ஒருவகை {{float_right|❠}} II. மற்றொருவகை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|{{gap+|3}} ௮. குதிரைச் சில்லி]] | {{DJVU page link|64|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> 2paqj6axzvhpo5sje01qtx0r6ekirxn 1840181 1840179 2025-07-08T03:51:30Z Booradleyp1 1964 1840181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|௮|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{block_center|width=600px| {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/009|<b>௯. பம்பரம்</b>]] | {{DJVU page link|35|12}}}} {{left_margin|6em| I. ஓயாக்கட்டை {{float_right|❠}} II. உடைத்த கட்டை {{float_right|❠}} III. பம்பரக்குத்து {{float_right|36}} IV. இருவட்டக்குத்து {{float_right|37}} V. தலையாரி {{float_right|38}}}} க0. பட்டம் {{float_right|39}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|40|12}}}} {{left_margin|3em|௧. குதிரைக்குக் காணங் கட்டல் {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011|{{gap+|3}}௨. வண்ணான் தாழி]] | {{DJVU page link|43|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012|{{gap+|3}}௩. ‘சூ’ விளையாட்டு]] | {{DJVU page link|46|12}}}} {{left_margin|6em|(க) பாண்டிய நாட்டுமுறை {{float_right|❠}} (உ) சோழ நாட்டுமுறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/013|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|49|12}}}} {{left_margin|3em|க. கிளித்தட்டு {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014|{{gap+|3}}௨. பாரிக்கோடு]] | {{DJVU page link|54|12}}}} {{left_margin|6em|I. காலாளம்பாரி {{float_right|❠}} II. எட்டாளம்பாரி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015|{{gap+|3}} ௩. அணிற்பிள்ளை]] | {{DJVU page link|55|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016|{{gap+|3}} ௪. சடுகுடு]] | {{DJVU page link|57|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/017|{{gap+|3}} ௫. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை]] | {{DJVU page link|61|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/018|{{gap+|3}} ௬. பூக்குதிரை]] | {{DJVU page link|62|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/019|{{gap+|3}} ௭. பச்சைக்குதிரை]] | {{DJVU page link|63|12}}}} {{left_margin|6em|I. ஒருவகை {{float_right|❠}} II. மற்றொருவகை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/020|{{gap+|3}} ௮. குதிரைச் சில்லி]] | {{DJVU page link|64|12}}}} }} {{nop}}<noinclude></noinclude> h00je59j5lfsq1f3ao0i47w74n9w3i3 பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/7 250 619543 1839984 1839892 2025-07-07T12:31:52Z Info-farmer 232 + துணைப்பக்கங்களுக்கு ஒருங்கிணைவு வார்ப்புருக்கள் இடப்பட்டன 1839984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} <b>2. பெண்பாற் பகுதி:</b> 65 {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021|(1) பகலாட்டு]] | {{DJVU page link|{{float_right|❠}}|12}}}} ௧. தட்டாங்கல் {{float_right|❠}} I. மூன்றாங்கல் {{float_right|❠}} II. ஐந்தாங்கல் (இருவகை) 66 III. ஏழாங்கல் (இருவகை) 69 IV. பலநாலொருகல் 73 V. பன்னிருகல் 74 VI. பலகல் 75 VII. பதினாறாங்கல் {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/022|௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம்]] | {{DJVU page link|76|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/023|௩. குறிஞ்சி (குஞ்சி)]] | {{DJVU page link|79|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024|(2) இரவாட்டு]] | {{DJVU page link|80|12}}}} ௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/025|௨. நிலாக் குப்பல்]] | {{DJVU page link|82|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026|௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்]] | {{DJVU page link|84|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|86|12}}}} ௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/028|௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’]] | {{DJVU page link|89|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/029|௩. ஊதாமணி]] | {{DJVU page link|90|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/030|௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’]] | {{DJVU page link|91|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/031|௫. தண்ணீர் சேந்துகிறது]] | {{DJVU page link|92|12}}}} <b>3. இருபாற் பகுதி :</b> 93 {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/032|(1) பகலாட்டு]] | {{DJVU page link|{{float_right|❠}}|12}}}} ௧. பண்ணாங்குழி {{float_right|❠}} }} {{nop}}<noinclude></noinclude> cmlardurg0r5i7jga11ppduovyk2519 1840102 1839984 2025-07-07T16:37:55Z Info-farmer 232 {{float_right|}} 1840102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} <b>2. பெண்பாற் பகுதி:</b> 65 {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021|(1) பகலாட்டு]] | {{DJVU page link|{{float_right|❠}}|12}}}} {{left_margin|3em|௧. தட்டாங்கல் {{float_right|❠}}}} I. மூன்றாங்கல் {{float_right|❠}} II. ஐந்தாங்கல் (இருவகை) {{float_right|66}} III. ஏழாங்கல் (இருவகை) {{float_right|69}} IV. பலநாலொருகல் {{float_right|73}} V. பன்னிருகல் {{float_right|74}} VI. பலகல் {{float_right|75}} VII. பதினாறாங்கல் {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/022|௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம்]] | {{DJVU page link|76|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/023|௩. குறிஞ்சி (குஞ்சி)]] | {{DJVU page link|79|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024|(2) இரவாட்டு]] | {{DJVU page link|80|12}}}} ௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/025|௨. நிலாக் குப்பல்]] | {{DJVU page link|82|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026|௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்]] | {{DJVU page link|84|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|86|12}}}} ௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/028|௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’]] | {{DJVU page link|89|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/029|௩. ஊதாமணி]] | {{DJVU page link|90|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/030|௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’]] | {{DJVU page link|91|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/031|௫. தண்ணீர் சேந்துகிறது]] | {{DJVU page link|92|12}}}} <b>3. இருபாற் பகுதி :</b> {{float_right|93}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/032|(1) பகலாட்டு]] | {{DJVU page link|{{float_right|❠}}|12}}}} ௧. பண்ணாங்குழி {{float_right|❠}} }} {{nop}}<noinclude></noinclude> 03a4lj701unqb6to96wx48xovmd35at 1840103 1840102 2025-07-07T16:38:42Z Info-farmer 232 {{float_right|}} 1840103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} <b>2. பெண்பாற் பகுதி:</b> {{float_right|65}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021|(1) பகலாட்டு]] | {{DJVU page link|{{float_right|❠}}|12}}}} {{left_margin|3em|௧. தட்டாங்கல் {{float_right|❠}}}} I. மூன்றாங்கல் {{float_right|❠}} II. ஐந்தாங்கல் (இருவகை) {{float_right|66}} III. ஏழாங்கல் (இருவகை) {{float_right|69}} IV. பலநாலொருகல் {{float_right|73}} V. பன்னிருகல் {{float_right|74}} VI. பலகல் {{float_right|75}} VII. பதினாறாங்கல் {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/022|௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம்]] | {{DJVU page link|76|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/023|௩. குறிஞ்சி (குஞ்சி)]] | {{DJVU page link|79|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024|(2) இரவாட்டு]] | {{DJVU page link|80|12}}}} ௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/025|௨. நிலாக் குப்பல்]] | {{DJVU page link|82|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026|௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்]] | {{DJVU page link|84|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|86|12}}}} ௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/028|௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’]] | {{DJVU page link|89|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/029|௩. ஊதாமணி]] | {{DJVU page link|90|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/030|௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’]] | {{DJVU page link|91|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/031|௫. தண்ணீர் சேந்துகிறது]] | {{DJVU page link|92|12}}}} <b>3. இருபாற் பகுதி :</b> {{float_right|93}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/032|(1) பகலாட்டு]] | {{DJVU page link|{{float_right|❠}}|12}}}} ௧. பண்ணாங்குழி {{float_right|❠}} }} {{nop}}<noinclude></noinclude> k2zwc3n75ad0krv98uaqsvwcspzzcbr 1840104 1840103 2025-07-07T16:47:08Z Info-farmer 232 {{gap+|3}} 1840104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} <b>2. பெண்பாற் பகுதி:</b> {{float_right|65}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021|{{larger|<b>(1) பகலாட்டு</b>}}]] | {{DJVU page link|{{float_right|❠}}|12}}}} {{left_margin|3em|௧. தட்டாங்கல் {{float_right|❠}}}} {{left_margin|6em|I. மூன்றாங்கல் {{float_right|❠}} II. ஐந்தாங்கல் (இருவகை) {{float_right|66}} III. ஏழாங்கல் (இருவகை) {{float_right|69}} IV. பலநாலொருகல் {{float_right|73}} V. பன்னிருகல் {{float_right|74}} VI. பலகல் {{float_right|75}} VII. பதினாறாங்கல் {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/022|{{gap+|3}}௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம்]] | {{DJVU page link|76|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/023|{{gap+|3}}௩. குறிஞ்சி (குஞ்சி)]] | {{DJVU page link|79|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|80|12}}}} {{left_margin|3em|௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/025|{{gap+|3}}௨. நிலாக் குப்பல்]] | {{DJVU page link|82|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026|{{gap+|3}}௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்]] | {{DJVU page link|84|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|86|12}}}} {{left_margin|3em|௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/028|{{gap+|3}}௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’]] | {{DJVU page link|89|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/029|{{gap+|3}}௩. ஊதாமணி]] | {{DJVU page link|90|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/030|{{gap+|3}}௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’]] | {{DJVU page link|91|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/031|{{gap+|3}}௫. தண்ணீர் சேந்துகிறது]] | {{DJVU page link|92|12}}}} <b>3. இருபாற் பகுதி :</b> {{float_right|93}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/032|(1) பகலாட்டு]] | {{DJVU page link|{{float_right|❠}}|12}}}} {{left_margin|3em|௧. பண்ணாங்குழி {{float_right|❠}}}} }} {{nop}}<noinclude></noinclude> ewdfxyd4cbyrlzwa75h6m7nt12na7a8 1840107 1840104 2025-07-07T16:54:41Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ {{float_right|❠ 1840107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} <b>2. பெண்பாற் பகுதி:</b> {{float_right|65}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021|{{larger|<b>(1) பகலாட்டு</b>}}]] | {{float_right|❠}}}} {{left_margin|3em|௧. தட்டாங்கல் {{float_right|❠}}}} {{left_margin|6em|I. மூன்றாங்கல் {{float_right|❠}} II. ஐந்தாங்கல் (இருவகை) {{float_right|66}} III. ஏழாங்கல் (இருவகை) {{float_right|69}} IV. பலநாலொருகல் {{float_right|73}} V. பன்னிருகல் {{float_right|74}} VI. பலகல் {{float_right|75}} VII. பதினாறாங்கல் {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/022|{{gap+|3}}௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம்]] | {{DJVU page link|76|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/023|{{gap+|3}}௩. குறிஞ்சி (குஞ்சி)]] | {{DJVU page link|79|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|80|12}}}} {{left_margin|3em|௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/025|{{gap+|3}}௨. நிலாக் குப்பல்]] | {{DJVU page link|82|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026|{{gap+|3}}௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்]] | {{DJVU page link|84|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|86|12}}}} {{left_margin|3em|௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/028|{{gap+|3}}௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’]] | {{DJVU page link|89|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/029|{{gap+|3}}௩. ஊதாமணி]] | {{DJVU page link|90|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/030|{{gap+|3}}௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’]] | {{DJVU page link|91|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/031|{{gap+|3}}௫. தண்ணீர் சேந்துகிறது]] | {{DJVU page link|92|12}}}} <b>3. இருபாற் பகுதி :</b> {{float_right|93}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/032|(1) பகலாட்டு]] | {{float_right|❠}}}} {{left_margin|3em|௧. பண்ணாங்குழி {{float_right|❠}}}} }} {{nop}}<noinclude></noinclude> tomdrv5hkr7tgqk6b6j3geg6a6lfk2r 1840173 1840107 2025-07-08T03:24:29Z Booradleyp1 1964 1840173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} <b>{{larger|2. பெண்பாற் பகுதி:}}</b> {{float_right|65}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021|{{larger|<b>(1) பகலாட்டு</b>}}]] | {{float_right|❠}}}} {{left_margin|3em|௧. தட்டாங்கல் {{float_right|❠}}}} {{left_margin|6em|I. மூன்றாங்கல் {{float_right|❠}} II. ஐந்தாங்கல் (இருவகை) {{float_right|66}} III. ஏழாங்கல் (இருவகை) {{float_right|69}} IV. பலநாலொருகல் {{float_right|73}} V. பன்னிருகல் {{float_right|74}} VI. பலகல் {{float_right|75}} VII. பதினாறாங்கல் {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/022|{{gap+|3}}௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம்]] | {{DJVU page link|76|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/023|{{gap+|3}}௩. குறிஞ்சி (குஞ்சி)]] | {{DJVU page link|79|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|80|12}}}} {{left_margin|3em|௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/025|{{gap+|3}}௨. நிலாக் குப்பல்]] | {{DJVU page link|82|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026|{{gap+|3}}௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்]] | {{DJVU page link|84|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|86|12}}}} {{left_margin|3em|௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/028|{{gap+|3}}௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’]] | {{DJVU page link|89|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/029|{{gap+|3}}௩. ஊதாமணி]] | {{DJVU page link|90|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/030|{{gap+|3}}௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’]] | {{DJVU page link|91|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/031|{{gap+|3}}௫. தண்ணீர் சேந்துகிறது]] | {{DJVU page link|92|12}}}} <b>{{larger|3. இருபாற் பகுதி :}}</b> {{float_right|93}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/032|{{larger|<b>(1) பகலாட்டு</b>}}]] | {{float_right|❠}}}} {{left_margin|3em|௧. பண்ணாங்குழி {{float_right|❠}}}} }} {{nop}}<noinclude></noinclude> 08vpqf0qaet4mmll571wdf0r7t58ulx 1840182 1840173 2025-07-08T03:52:31Z Booradleyp1 1964 1840182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௯}}</noinclude>{{block_center|width=600px| <b>{{larger|2. பெண்பாற் பகுதி:}}</b> {{float_right|65}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/021|{{larger|<b>(1) பகலாட்டு</b>}}]] | {{float_right|❠}}}} {{left_margin|3em|௧. தட்டாங்கல் {{float_right|❠}}}} {{left_margin|6em|I. மூன்றாங்கல் {{float_right|❠}} II. ஐந்தாங்கல் (இருவகை) {{float_right|66}} III. ஏழாங்கல் (இருவகை) {{float_right|69}} IV. பலநாலொருகல் {{float_right|73}} V. பன்னிருகல் {{float_right|74}} VI. பலகல் {{float_right|75}} VII. பதினாறாங்கல் {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/022|{{gap+|3}}௨. சிச்சுக் கிச்சுத் தம்பலம்]] | {{DJVU page link|76|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/023|{{gap+|3}}௩. குறிஞ்சி (குஞ்சி)]] | {{DJVU page link|79|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|80|12}}}} {{left_margin|3em|௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/025|{{gap+|3}}௨. நிலாக் குப்பல்]] | {{DJVU page link|82|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026|{{gap+|3}}௩. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்]] | {{DJVU page link|84|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|86|12}}}} {{left_margin|3em|௧. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/028|{{gap+|3}}௨. ‘என் உலக்கை குத்துக்குத்து’]] | {{DJVU page link|89|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/029|{{gap+|3}}௩. ஊதாமணி]] | {{DJVU page link|90|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/030|{{gap+|3}}௪. ‘பூப்பறிக்க வருகிறோம்’]] | {{DJVU page link|91|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/031|{{gap+|3}}௫. தண்ணீர் சேந்துகிறது]] | {{DJVU page link|92|12}}}} <b>{{larger|3. இருபாற் பகுதி :}}</b> {{float_right|93}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/032|{{larger|<b>(1) பகலாட்டு</b>}}]] | {{float_right|❠}}}} {{left_margin|3em|௧. பண்ணாங்குழி {{float_right|❠}}}} }} {{nop}}<noinclude></noinclude> e6as4sw9hojk3hi071aakoregrgqnjd பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/8 250 619544 1839985 1839893 2025-07-07T12:34:03Z Info-farmer 232 + துணைப்பக்கங்களுக்கு ஒருங்கிணைவு வார்ப்புருக்கள் இடப்பட்டன 1839985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} I. பொதுவகை 93 II. கட்டுக்கட்டல் 96 II. அரசனும் மந்திரியும் சேவகனும் 97 IV. அசோகவனத்தாட்டம் 99 {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] | {{DJVU page link|101|12}}}} (க) பாண்டிநாட்டு முறை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|(௨) சோழ கொங்குநாட்டு முறை]] | {{DJVU page link|104|12}}}} I. ஒற்றைச் சில்லி II. இரட்டைச் சில்லி<br>(மூன்றுவகைகள்) 107 III. வானூர்திச் சில்லி 109 IV. வட்டச் சில்லி 111 V. காலிப்பட்டச் சில்லி 112 VI. கைச் சில்லி 114 {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|௩. கம்ப விளையாட்டு]] | {{DJVU page link|115|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|௪. கச்சக்காய்ச் சில்லி]] | {{DJVU page link|116|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|௫. குஞ்சு]] | {{DJVU page link|117|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|(2) இரவாட்டு]] | {{DJVU page link|118|12}}}} ௧. கண்ணாம்பொத்தி {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] | {{DJVU page link|120|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] | {{DJVU page link|121|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|௪. பூச்சி]] | {{DJVU page link|122|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|௫. அரசனுந் தோட்டமும்]] | {{DJVU page link|123|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] | {{DJVU page link|124|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|125|12}}}} ௧. நொண்டி {{float_right|❠}} ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ 127 }} {{nop}}<noinclude></noinclude> 1d92ssb5kwbaaq48lhochxgv3kh4rhh 1839990 1839985 2025-07-07T12:39:21Z Info-farmer 232 - துப்புரவு 1839990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} I. பொதுவகை 93 II. கட்டுக்கட்டல் 96 II. அரசனும் மந்திரியும் சேவகனும் 97 IV. அசோகவனத்தாட்டம் 99 {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] | {{DJVU page link|101|12}}}} (க) பாண்டிநாட்டு முறை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|(௨) சோழ கொங்குநாட்டு முறை]] | {{DJVU page link|104|12}}}} I. ஒற்றைச் சில்லி II. இரட்டைச் சில்லி<br>(மூன்றுவகைகள்) 107 III. வானூர்திச் சில்லி 109 IV. வட்டச் சில்லி 111 V. காலிப்பட்டச் சில்லி 112 VI. கைச் சில்லி 114 {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|௩. கம்ப விளையாட்டு]] | {{DJVU page link|115|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|௪. கச்சக்காய்ச் சில்லி]] | {{DJVU page link|116|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|௫. குஞ்சு]] | {{DJVU page link|117|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|(2) இரவாட்டு]] | {{DJVU page link|118|12}}}} ௧. கண்ணாம்பொத்தி {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] | {{DJVU page link|120|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] | {{DJVU page link|121|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|௪. பூச்சி]] | {{DJVU page link|122|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|௫. அரசனுந் தோட்டமும்]] | {{DJVU page link|123|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] | {{DJVU page link|124|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|125|12}}}} ௧. நொண்டி {{float_right|❠}} ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ 127 }} {{nop}}<noinclude></noinclude> sq0xdx8fuuvfmc04zx9phvj1ea6hr8l 1839991 1839990 2025-07-07T12:40:15Z Info-farmer 232 II. இரட்டைச் சில்லி (மூன்றுவகைகள்) 107 1839991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} I. பொதுவகை 93 II. கட்டுக்கட்டல் 96 II. அரசனும் மந்திரியும் சேவகனும் 97 IV. அசோகவனத்தாட்டம் 99 {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] | {{DJVU page link|101|12}}}} (க) பாண்டிநாட்டு முறை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|(௨) சோழ கொங்குநாட்டு முறை]] | {{DJVU page link|104|12}}}} I. ஒற்றைச் சில்லி II. இரட்டைச் சில்லி (மூன்றுவகைகள்) 107 III. வானூர்திச் சில்லி 109 IV. வட்டச் சில்லி 111 V. காலிப்பட்டச் சில்லி 112 VI. கைச் சில்லி 114 {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|௩. கம்ப விளையாட்டு]] | {{DJVU page link|115|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|௪. கச்சக்காய்ச் சில்லி]] | {{DJVU page link|116|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|௫. குஞ்சு]] | {{DJVU page link|117|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|(2) இரவாட்டு]] | {{DJVU page link|118|12}}}} ௧. கண்ணாம்பொத்தி {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] | {{DJVU page link|120|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] | {{DJVU page link|121|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|௪. பூச்சி]] | {{DJVU page link|122|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|௫. அரசனுந் தோட்டமும்]] | {{DJVU page link|123|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] | {{DJVU page link|124|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|125|12}}}} ௧. நொண்டி {{float_right|❠}} ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ 127 }} {{nop}}<noinclude></noinclude> 7oye38cqnqjo32u4vkux9d8cn8ae3i7 1840070 1839991 2025-07-07T15:44:02Z Info-farmer 232 {{float_right|}} 1840070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} I. பொதுவகை {{float_right|93}} II. கட்டுக்கட்டல் {{float_right|96}} II. அரசனும் மந்திரியும் சேவகனும் {{float_right|97}} IV. அசோகவனத்தாட்டம் {{float_right|99}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] | {{DJVU page link|101|12}}}} (க) பாண்டிநாட்டு {{float_right|முறை}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|(௨) சோழ கொங்குநாட்டு முறை]] | {{DJVU page link|104|12}}}} I. ஒற்றைச் {{float_right|சில்லி}} II. இரட்டைச் சில்லி (மூன்றுவகைகள்) {{float_right|107}} III. வானூர்திச் சில்லி {{float_right|109}} IV. வட்டச் சில்லி {{float_right|111}} V. காலிப்பட்டச் சில்லி {{float_right|112}} VI. கைச் சில்லி {{float_right|114}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|௩. கம்ப விளையாட்டு]] | {{DJVU page link|115|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|௪. கச்சக்காய்ச் சில்லி]] | {{DJVU page link|116|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|௫. குஞ்சு]] | {{DJVU page link|117|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|(2) இரவாட்டு]] | {{DJVU page link|118|12}}}} ௧. கண்ணாம்பொத்தி {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] | {{DJVU page link|120|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] | {{DJVU page link|121|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|௪. பூச்சி]] | {{DJVU page link|122|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|௫. அரசனுந் தோட்டமும்]] | {{DJVU page link|123|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] | {{DJVU page link|124|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|125|12}}}} ௧. நொண்டி {{float_right|❠}} ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ {{float_right|127}} }} {{nop}}<noinclude></noinclude> 37uy3iugsqenrl6ztxeh20f604i874y 1840072 1840070 2025-07-07T15:47:06Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1840072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|I. பொதுவகை {{float_right|93}} II. கட்டுக்கட்டல் {{float_right|96}} II. அரசனும் மந்திரியும் சேவகனும் {{float_right|97}} IV. அசோகவனத்தாட்டம் {{float_right|99}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] | {{DJVU page link|101|12}}}} {{left_margin|3em| (க) பாண்டிநாட்டு {{float_right|முறை}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|(௨) சோழ கொங்குநாட்டு முறை]] | {{DJVU page link|104|12}}}} {{left_margin|6em|I. ஒற்றைச் {{float_right|சில்லி}} II. இரட்டைச் சில்லி (மூன்றுவகைகள்) {{float_right|107}} III. வானூர்திச் சில்லி {{float_right|109}} IV. வட்டச் சில்லி {{float_right|111}} V. காலிப்பட்டச் சில்லி {{float_right|112}} VI. கைச் சில்லி {{float_right|114}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|௩. கம்ப விளையாட்டு]] | {{DJVU page link|115|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|௪. கச்சக்காய்ச் சில்லி]] | {{DJVU page link|116|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|௫. குஞ்சு]] | {{DJVU page link|117|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|(2) இரவாட்டு]] | {{DJVU page link|118|12}}}} {{left_margin|3em|௧. கண்ணாம்பொத்தி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] | {{DJVU page link|120|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] | {{DJVU page link|121|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|௪. பூச்சி]] | {{DJVU page link|122|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|௫. அரசனுந் தோட்டமும்]] | {{DJVU page link|123|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] | {{DJVU page link|124|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|125|12}}}} {{left_margin|3em|௧. நொண்டி {{float_right|❠}} ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ {{float_right|127}}}} }} {{nop}}<noinclude></noinclude> rigyr1pyqt1vab6vy897ef9p16g1dk1 1840075 1840072 2025-07-07T15:49:48Z Info-farmer 232 சில்லி 1840075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|I. பொதுவகை {{float_right|93}} II. கட்டுக்கட்டல் {{float_right|96}} II. அரசனும் மந்திரியும் சேவகனும் {{float_right|97}} IV. அசோகவனத்தாட்டம் {{float_right|99}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] | {{DJVU page link|101|12}}}} {{left_margin|3em| (க) பாண்டிநாட்டு முறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|(௨) சோழ கொங்குநாட்டு முறை]] | {{DJVU page link|104|12}}}} {{left_margin|6em|I. ஒற்றைச் சில்லி{{float_right|❠}} II. இரட்டைச் சில்லி (மூன்றுவகைகள்) {{float_right|107}} III. வானூர்திச் சில்லி {{float_right|109}} IV. வட்டச் சில்லி {{float_right|111}} V. காலிப்பட்டச் சில்லி {{float_right|112}} VI. கைச் சில்லி {{float_right|114}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|௩. கம்ப விளையாட்டு]] | {{DJVU page link|115|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|௪. கச்சக்காய்ச் சில்லி]] | {{DJVU page link|116|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|௫. குஞ்சு]] | {{DJVU page link|117|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|(2) இரவாட்டு]] | {{DJVU page link|118|12}}}} {{left_margin|3em|௧. கண்ணாம்பொத்தி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] | {{DJVU page link|120|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] | {{DJVU page link|121|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|௪. பூச்சி]] | {{DJVU page link|122|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|௫. அரசனுந் தோட்டமும்]] | {{DJVU page link|123|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] | {{DJVU page link|124|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|125|12}}}} {{left_margin|3em|௧. நொண்டி {{float_right|❠}} ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ {{float_right|127}}}} }} {{nop}}<noinclude></noinclude> fu4k45kg3qnnaufejv1f98ze8su9m82 1840077 1840075 2025-07-07T15:51:13Z Info-farmer 232 {{gap+|3}} 1840077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|I. பொதுவகை {{float_right|93}} II. கட்டுக்கட்டல் {{float_right|96}} II. அரசனும் மந்திரியும் சேவகனும் {{float_right|97}} IV. அசோகவனத்தாட்டம் {{float_right|99}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] | {{DJVU page link|101|12}}}} {{left_margin|3em| (க) பாண்டிநாட்டு முறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|{{gap+|3}}(௨) சோழ கொங்குநாட்டு முறை]] | {{DJVU page link|104|12}}}} {{left_margin|6em|I. ஒற்றைச் சில்லி{{float_right|❠}} II. இரட்டைச் சில்லி (மூன்றுவகைகள்) {{float_right|107}} III. வானூர்திச் சில்லி {{float_right|109}} IV. வட்டச் சில்லி {{float_right|111}} V. காலிப்பட்டச் சில்லி {{float_right|112}} VI. கைச் சில்லி {{float_right|114}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|௩. கம்ப விளையாட்டு]] | {{DJVU page link|115|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|௪. கச்சக்காய்ச் சில்லி]] | {{DJVU page link|116|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|௫. குஞ்சு]] | {{DJVU page link|117|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|(2) இரவாட்டு]] | {{DJVU page link|118|12}}}} {{left_margin|3em|௧. கண்ணாம்பொத்தி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] | {{DJVU page link|120|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] | {{DJVU page link|121|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|௪. பூச்சி]] | {{DJVU page link|122|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|௫. அரசனுந் தோட்டமும்]] | {{DJVU page link|123|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] | {{DJVU page link|124|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|(3) இருபொழுதாட்டு]] | {{DJVU page link|125|12}}}} {{left_margin|3em|௧. நொண்டி {{float_right|❠}} ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ {{float_right|127}}}} }} {{nop}}<noinclude></noinclude> e6vyiczd52xx0yfc2isg280yz0wlseu 1840078 1840077 2025-07-07T15:54:25Z Info-farmer 232 {{larger|<b></b>}} 1840078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|I. பொதுவகை {{float_right|93}} II. கட்டுக்கட்டல் {{float_right|96}} II. அரசனும் மந்திரியும் சேவகனும் {{float_right|97}} IV. அசோகவனத்தாட்டம் {{float_right|99}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] | {{DJVU page link|101|12}}}} {{left_margin|3em| (க) பாண்டிநாட்டு முறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|{{gap+|3}}(௨) சோழ கொங்குநாட்டு முறை]] | {{DJVU page link|104|12}}}} {{left_margin|6em|I. ஒற்றைச் சில்லி{{float_right|❠}} II. இரட்டைச் சில்லி (மூன்றுவகைகள்) {{float_right|107}} III. வானூர்திச் சில்லி {{float_right|109}} IV. வட்டச் சில்லி {{float_right|111}} V. காலிப்பட்டச் சில்லி {{float_right|112}} VI. கைச் சில்லி {{float_right|114}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|{{gap+|3}} ௩. கம்ப விளையாட்டு]] | {{DJVU page link|115|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|{{gap+|3}} ௪. கச்சக்காய்ச் சில்லி]] | {{DJVU page link|116|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|{{gap+|3}} ௫. குஞ்சு]] | {{DJVU page link|117|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|118|12}}}} {{left_margin|3em|௧. கண்ணாம்பொத்தி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] | {{DJVU page link|120|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] | {{DJVU page link|121|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|௪. பூச்சி]] | {{DJVU page link|122|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|௫. அரசனுந் தோட்டமும்]] | {{DJVU page link|123|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] | {{DJVU page link|124|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|125|12}}}} {{left_margin|3em|௧. நொண்டி {{float_right|❠}} ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ {{float_right|127}}}} }} {{nop}}<noinclude></noinclude> epuobb9digssp2zdvet76smujj7ndnk 1840080 1840078 2025-07-07T16:01:07Z Info-farmer 232 {{gap+|3}} 1840080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|I. பொதுவகை {{float_right|93}} II. கட்டுக்கட்டல் {{float_right|96}} II. அரசனும் மந்திரியும் சேவகனும் {{float_right|97}} IV. அசோகவனத்தாட்டம் {{float_right|99}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] | {{DJVU page link|101|12}}}} {{left_margin|3em| (க) பாண்டிநாட்டு முறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|{{gap+|3}}(௨) சோழ கொங்குநாட்டு முறை]] | {{DJVU page link|104|12}}}} {{left_margin|6em|I. ஒற்றைச் சில்லி{{float_right|❠}} II. இரட்டைச் சில்லி (மூன்றுவகைகள்) {{float_right|107}} III. வானூர்திச் சில்லி {{float_right|109}} IV. வட்டச் சில்லி {{float_right|111}} V. காலிப்பட்டச் சில்லி {{float_right|112}} VI. கைச் சில்லி {{float_right|114}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|{{gap+|3}} ௩. கம்ப விளையாட்டு]] | {{DJVU page link|115|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|{{gap+|3}} ௪. கச்சக்காய்ச் சில்லி]] | {{DJVU page link|116|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|{{gap+|3}} ௫. குஞ்சு]] | {{DJVU page link|117|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|118|12}}}} {{left_margin|3em|௧. கண்ணாம்பொத்தி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|{{gap+|3}} ௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] | {{DJVU page link|120|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|{{gap+|3}} ௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] | {{DJVU page link|121|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|{{gap+|3}} ௪. பூச்சி]] | {{DJVU page link|122|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|{{gap+|3}} ௫. அரசனுந் தோட்டமும்]] | {{DJVU page link|123|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|{{gap+|3}} ௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] | {{DJVU page link|124|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|125|12}}}} {{left_margin|3em|௧. நொண்டி {{float_right|❠}} ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ {{float_right|127}}}} }} {{nop}}<noinclude></noinclude> 0ro9hqi6kzxczb7jotcd10632e9594t 1840081 1840080 2025-07-07T16:01:51Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ அனைத்து இணைப்புகளும் சரியாக உள்ளன. 1840081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|I. பொதுவகை {{float_right|93}} II. கட்டுக்கட்டல் {{float_right|96}} II. அரசனும் மந்திரியும் சேவகனும் {{float_right|97}} IV. அசோகவனத்தாட்டம் {{float_right|99}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] | {{DJVU page link|101|12}}}} {{left_margin|3em| (க) பாண்டிநாட்டு முறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|{{gap+|3}}(௨) சோழ கொங்குநாட்டு முறை]] | {{DJVU page link|104|12}}}} {{left_margin|6em|I. ஒற்றைச் சில்லி{{float_right|❠}} II. இரட்டைச் சில்லி (மூன்றுவகைகள்) {{float_right|107}} III. வானூர்திச் சில்லி {{float_right|109}} IV. வட்டச் சில்லி {{float_right|111}} V. காலிப்பட்டச் சில்லி {{float_right|112}} VI. கைச் சில்லி {{float_right|114}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|{{gap+|3}} ௩. கம்ப விளையாட்டு]] | {{DJVU page link|115|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|{{gap+|3}} ௪. கச்சக்காய்ச் சில்லி]] | {{DJVU page link|116|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|{{gap+|3}} ௫. குஞ்சு]] | {{DJVU page link|117|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|118|12}}}} {{left_margin|3em|௧. கண்ணாம்பொத்தி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|{{gap+|3}} ௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] | {{DJVU page link|120|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|{{gap+|3}} ௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] | {{DJVU page link|121|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|{{gap+|3}} ௪. பூச்சி]] | {{DJVU page link|122|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|{{gap+|3}} ௫. அரசனுந் தோட்டமும்]] | {{DJVU page link|123|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|{{gap+|3}} ௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] | {{DJVU page link|124|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|125|12}}}} {{left_margin|3em|௧. நொண்டி {{float_right|❠}} ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ {{float_right|127}}}} }} {{nop}}<noinclude></noinclude> 2t84rvsfczmud5q8ju3g83qem1jeqge 1840183 1840081 2025-07-08T03:53:52Z Booradleyp1 1964 1840183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|௧0|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{block_center|width=600px| {{left_margin|3em|I. பொதுவகை {{float_right|93}} II. கட்டுக்கட்டல் {{float_right|96}} II. அரசனும் மந்திரியும் சேவகனும் {{float_right|97}} IV. அசோகவனத்தாட்டம் {{float_right|99}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033|௨. பாண்டி]] | {{DJVU page link|101|12}}}} {{left_margin|3em| (க) பாண்டிநாட்டு முறை {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034|{{gap+|3}}(௨) சோழ கொங்குநாட்டு முறை]] | {{DJVU page link|104|12}}}} {{left_margin|6em|I. ஒற்றைச் சில்லி{{float_right|❠}} II. இரட்டைச் சில்லி (மூன்றுவகைகள்) {{float_right|107}} III. வானூர்திச் சில்லி {{float_right|109}} IV. வட்டச் சில்லி {{float_right|111}} V. காலிப்பட்டச் சில்லி {{float_right|112}} VI. கைச் சில்லி {{float_right|114}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/035|{{gap+|3}} ௩. கம்ப விளையாட்டு]] | {{DJVU page link|115|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/036|{{gap+|3}} ௪. கச்சக்காய்ச் சில்லி]] | {{DJVU page link|116|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/037|{{gap+|3}} ௫. குஞ்சு]] | {{DJVU page link|117|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/038|{{larger|<b>(2) இரவாட்டு</b>}}]] | {{DJVU page link|118|12}}}} {{left_margin|3em|௧. கண்ணாம்பொத்தி {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039|{{gap+|3}} ௨. புகையிலைக் கட்டையுருட்டல்]] | {{DJVU page link|120|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/040|{{gap+|3}} ௩. புகையிலைக் கட்டையெடுத்தல்]] | {{DJVU page link|121|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/041|{{gap+|3}} ௪. பூச்சி]] | {{DJVU page link|122|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/042|{{gap+|3}} ௫. அரசனுந் தோட்டமும்]] | {{DJVU page link|123|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/043|{{gap+|3}} ௬. ‘குலைகுலையாய் முந்திரிக்காய்’]] | {{DJVU page link|124|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/044|{{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|125|12}}}} {{left_margin|3em|௧. நொண்டி {{float_right|❠}} ௨. ‘நின்றால் பிடித்துக்கொள்’ {{float_right|127}}}} }} {{nop}}<noinclude></noinclude> nxwkirttu37nc5yirs010c13ce95j9k பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/9 250 619545 1839986 1839894 2025-07-07T12:35:27Z Info-farmer 232 + துணைப்பக்கங்களுக்கு ஒருங்கிணைவு வார்ப்புருக்கள் இடப்பட்டன 1839986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|௫. புலியும் ஆடும் 130]] | {{DJVU page link||12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|இருபொழுதாட்டு]] | {{DJVU page link|134|12}}}} ௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|III. பெரியோர் பக்கம்{{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1.ஆண்பாற் பகுதி :]] | {{DJVU page link|</b> 136|12}}}} (1) பகலாட்டு{{float_right|❠}} தாயம் {{float_right|❠}} (2) இரவாட்டு {{float_right|❠}} கழியல் {{float_right|❠}} (3) இருபொழுதாட்டு 137 முக்குழியாட்டம் {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] | {{DJVU page link|138|12}}}} (1) பகலாட்டு {{float_right|❠}} க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}} }} {{nop}}{{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} (2) இருபொழுதாட்டு 138 கும்மி {{float_right|❠}} <b>பின்னிணைப்பு :</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|139|12}}}} 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) பெண்பாற் பகுதி {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|141|12}}}} கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] | {{DJVU page link|143|12}}}} (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> e3by9e60ay0ilvt2p4kqm56wp7dn2aa 1839992 1839986 2025-07-07T12:41:23Z Info-farmer 232 அடிக்கோடு இறுதியில் மட்டும் வுரம் 1839992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|௫. புலியும் ஆடும் 130]] | {{DJVU page link||12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|இருபொழுதாட்டு]] | {{DJVU page link|134|12}}}} ௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|III. பெரியோர் பக்கம்{{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1.ஆண்பாற் பகுதி :]] | {{DJVU page link|</b> 136|12}}}} (1) பகலாட்டு{{float_right|❠}} தாயம் {{float_right|❠}} (2) இரவாட்டு {{float_right|❠}} கழியல் {{float_right|❠}} (3) இருபொழுதாட்டு 137 முக்குழியாட்டம் {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] | {{DJVU page link|138|12}}}} (1) பகலாட்டு {{float_right|❠}} க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}} }} {{nop}}{{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} (2) இருபொழுதாட்டு 138 கும்மி {{float_right|❠}} <b>பின்னிணைப்பு :</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|139|12}}}} 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) பெண்பாற் பகுதி {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|141|12}}}} கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] | {{DJVU page link|143|12}}}} (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> 0q6p0lmx45zxxdmme12528jpmxr7pet 1839994 1839992 2025-07-07T12:45:54Z Info-farmer 232 - துப்புரவு 1839994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|இருபொழுதாட்டு]] | {{DJVU page link|134|12}}}} ௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|III. பெரியோர் பக்கம் {{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1. ஆண்பாற் பகுதி :<b>]] | {{DJVU page link|136|12}}}} (1) பகலாட்டு{{float_right|❠}} தாயம் {{float_right|❠}} (2) இரவாட்டு {{float_right|❠}} கழியல் {{float_right|❠}} (3) இருபொழுதாட்டு 137 முக்குழியாட்டம் {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] | {{DJVU page link|138|12}}}} (1) பகலாட்டு {{float_right|❠}} க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}} (2) இருபொழுதாட்டு 138 கும்மி {{float_right|❠}} <b>பின்னிணைப்பு :</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|139|12}}}} 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) பெண்பாற் பகுதி {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|141|12}}}} கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] | {{DJVU page link|143|12}}}} (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> f6ksuttserqcdez0d6zorivamq4i3tq 1840082 1839994 2025-07-07T16:03:58Z Info-farmer 232 {{gap+|3}} 1840082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} இருபொழுதாட்டு]] | {{DJVU page link|134|12}}}} ௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|III. பெரியோர் பக்கம் {{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1. ஆண்பாற் பகுதி :<b>]] | {{DJVU page link|136|12}}}} (1) பகலாட்டு{{float_right|❠}} தாயம் {{float_right|❠}} (2) இரவாட்டு {{float_right|❠}} கழியல் {{float_right|❠}} (3) இருபொழுதாட்டு 137 முக்குழியாட்டம் {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] | {{DJVU page link|138|12}}}} (1) பகலாட்டு {{float_right|❠}} க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}} (2) இருபொழுதாட்டு 138 கும்மி {{float_right|❠}} <b>பின்னிணைப்பு :</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|139|12}}}} 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) பெண்பாற் பகுதி {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|141|12}}}} கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] | {{DJVU page link|143|12}}}} (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> 70l9xgr7m0kbzb2mc5mde5out5arkek 1840083 1840082 2025-07-07T16:05:36Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1840083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} இருபொழுதாட்டு]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|III. பெரியோர் பக்கம் {{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1. ஆண்பாற் பகுதி :<b>]] | {{DJVU page link|136|12}}}} (1) பகலாட்டு{{float_right|❠}} தாயம் {{float_right|❠}} (2) இரவாட்டு {{float_right|❠}} கழியல் {{float_right|❠}} (3) இருபொழுதாட்டு 137 முக்குழியாட்டம் {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] | {{DJVU page link|138|12}}}} (1) பகலாட்டு {{float_right|❠}} க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}} (2) இருபொழுதாட்டு 138 கும்மி {{float_right|❠}} <b>பின்னிணைப்பு :</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|139|12}}}} 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) பெண்பாற் பகுதி {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|141|12}}}} கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] | {{DJVU page link|143|12}}}} (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> okkr6pe8j8wga7sv8sekod6188uq3jq 1840084 1840083 2025-07-07T16:07:32Z Info-farmer 232 {{left_margin|6em|}} 1840084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} இருபொழுதாட்டு]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|III. பெரியோர் பக்கம் {{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1. ஆண்பாற் பகுதி :<b>]] | {{DJVU page link|136|12}}}} {{left_margin|3em|(1) பகலாட்டு{{float_right|❠}} {{left_margin|6em|தாயம் {{float_right|❠}}}} (2) இரவாட்டு {{float_right|❠}} {{left_margin|6em|கழியல் {{float_right|❠}}}} (3) இருபொழுதாட்டு 137 {{left_margin|6em|முக்குழியாட்டம் {{float_right|❠}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] | {{DJVU page link|138|12}}}} (1) பகலாட்டு {{float_right|❠}} க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}} (2) இருபொழுதாட்டு 138 கும்மி {{float_right|❠}} <b>பின்னிணைப்பு :</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|139|12}}}} 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) பெண்பாற் பகுதி {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|141|12}}}} கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] | {{DJVU page link|143|12}}}} (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> bzd8oiibgkynn25bx53cokhk7yppu60 1840086 1840084 2025-07-07T16:09:33Z Info-farmer 232 137 1840086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} இருபொழுதாட்டு]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|III. பெரியோர் பக்கம் {{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1. ஆண்பாற் பகுதி :<b>]] | {{DJVU page link|136|12}}}} {{left_margin|3em|(1) பகலாட்டு{{float_right|❠}} {{left_margin|6em|தாயம் {{float_right|❠}}}} (2) இரவாட்டு {{float_right|❠}} {{left_margin|6em|கழியல் {{float_right|❠}}}} (3) இருபொழுதாட்டு {{float_right|137}} {{left_margin|6em|முக்குழியாட்டம் {{float_right|❠}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] | {{DJVU page link|138|12}}}} (1) பகலாட்டு {{float_right|❠}} க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}} (2) இருபொழுதாட்டு 138 கும்மி {{float_right|❠}} <b>பின்னிணைப்பு :</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|139|12}}}} 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) பெண்பாற் பகுதி {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|141|12}}}} கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] | {{DJVU page link|143|12}}}} (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> 35barm52e7qrfn7gagrmfp38ml4n16o 1840087 1840086 2025-07-07T16:14:06Z Info-farmer 232 - துப்புரவு 1840087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} இருபொழுதாட்டு]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|III. பெரியோர் பக்கம் {{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1. ஆண்பாற் பகுதி :<b>]] | {{DJVU page link|136|12}}}} {{left_margin|3em|(1) பகலாட்டு{{float_right|❠}} {{left_margin|6em|தாயம் {{float_right|❠}}}} (2) இரவாட்டு {{float_right|❠}} {{left_margin|6em|கழியல் {{float_right|❠}}}} (3) இருபொழுதாட்டு {{float_right|137}} {{left_margin|6em|முக்குழியாட்டம் {{float_right|❠}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] | {{DJVU page link|138|12}}}} {{left_margin|3em|(1) பகலாட்டு {{float_right|❠}}}} {{left_margin|6em|க. பண்ணாங்குழி {{float_right|❠}} {{left_margin|3em|௨. தாயம் {{float_right|❠}}}}}} {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> mzffx9sobz7yuohhglfcyjwf863kl9z 1840088 1840087 2025-07-07T16:15:09Z Info-farmer 232 - துப்புரவு 1840088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} இருபொழுதாட்டு]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|III. பெரியோர் பக்கம் {{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1. ஆண்பாற் பகுதி :<b>]] | {{DJVU page link|136|12}}}} {{left_margin|3em|(1) பகலாட்டு{{float_right|❠}} {{left_margin|6em|தாயம் {{float_right|❠}}}} (2) இரவாட்டு {{float_right|❠}} {{left_margin|6em|கழியல் {{float_right|❠}}}} (3) இருபொழுதாட்டு {{float_right|137}} {{left_margin|6em|முக்குழியாட்டம் {{float_right|❠}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] | {{DJVU page link|138|12}}}} {{left_margin|3em|(1) பகலாட்டு {{float_right|❠}}}} {{left_margin|6em|க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}}}} {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> bf26jbwkadf9bp7a2z82p1cb1ombjch 1840089 1840088 2025-07-07T16:15:46Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1840089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|II. குழந்தைப் பக்கம்{{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} இருபொழுதாட்டு]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|III. பெரியோர் பக்கம் {{rule|10em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|<b>1. ஆண்பாற் பகுதி :<b>]] | {{DJVU page link|136|12}}}} {{left_margin|3em|(1) பகலாட்டு{{float_right|❠}} {{left_margin|6em|தாயம் {{float_right|❠}}}} (2) இரவாட்டு {{float_right|❠}} {{left_margin|6em|கழியல் {{float_right|❠}}}} (3) இருபொழுதாட்டு {{float_right|137}} {{left_margin|6em|முக்குழியாட்டம் {{float_right|❠}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|<b>2. பெண்பாற் பகுதி :</b>]] | {{DJVU page link|138|12}}}} {{left_margin|3em|(1) பகலாட்டு {{float_right|❠}}}} {{left_margin|6em|க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}}}} {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> pb8vr7pkoq4wv0eo5qd64qbqxn94ktz 1840175 1840089 2025-07-08T03:38:26Z Booradleyp1 1964 1840175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|{{larger|<b>II. குழந்தைப் பக்கம்</b>}}{{rule|13em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} {{larger|<b>இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|{{larger|<b>III. பெரியோர் பக்கம் {{rule|11em|align=}}</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|{{larger|<b>1. ஆண்பாற் பகுதி :<b>}}]] | {{DJVU page link|136|12}}}} {{left_margin|3em|{{larger|<b>(1) பகலாட்டு</b>}}{{float_right|❠}} {{left_margin|6em|தாயம் {{float_right|❠}}}} {{larger|<b>(2) இரவாட்டு</b>}} {{float_right|❠}} {{left_margin|6em|கழியல் {{float_right|❠}}}} {{larger|<b>(3) இருபொழுதாட்டு</b>}} {{float_right|137}} {{left_margin|6em|முக்குழியாட்டம் {{float_right|❠}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|{{larger|<b>2. பெண்பாற் பகுதி :</b>}}]] | {{DJVU page link|138|12}}}} {{left_margin|3em|{{larger|<b>(1) பகலாட்டு</b>}} {{float_right|❠}}}} {{left_margin|6em|க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}}}} {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> d7aq3bmqcd0v0vgmhi0g3p0kjoemgd4 1840176 1840175 2025-07-08T03:44:52Z Booradleyp1 1964 1840176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|{{larger|<b>II. குழந்தைப் பக்கம்</b>}}{{rule|13em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} {{larger|<b>இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|{{larger|<b>III. பெரியோர் பக்கம் {{rule|11em|align=}}</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|{{larger|<b>1. ஆண்பாற் பகுதி :<b>}}]] | {{DJVU page link|136|12}}}} {{left_margin|3em|{{larger|(1) பகலாட்டு}}{{float_right|❠}} {{left_margin|6em|தாயம் {{float_right|❠}}}} {{larger|(2) இரவாட்டு}} {{float_right|❠}} {{left_margin|6em|கழியல் {{float_right|❠}}}} {{larger|(3) இருபொழுதாட்டு}} {{float_right|137}} {{left_margin|6em|முக்குழியாட்டம் {{float_right|❠}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|{{larger|<b>2. பெண்பாற் பகுதி :</b>}}]] | {{DJVU page link|138|12}}}} {{left_margin|3em|{{larger|(1) பகலாட்டு}} {{float_right|❠}}}} {{left_margin|6em|க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}}}} {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> ejg71gmy2eslocorw00d6db09zaghy4 1840184 1840176 2025-07-08T03:55:07Z Booradleyp1 1964 1840184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude>{{block_center|width=600px| {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|{{larger|<b>II. குழந்தைப் பக்கம்</b>}}{{rule|13em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} {{larger|<b>இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|{{larger|<b>III. பெரியோர் பக்கம் {{rule|11em|align=}}</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|{{larger|<b>1. ஆண்பாற் பகுதி :<b>}}]] | {{DJVU page link|136|12}}}} {{left_margin|3em|{{larger|(1) பகலாட்டு}}{{float_right|❠}} {{left_margin|6em|தாயம் {{float_right|❠}}}} {{larger|(2) இரவாட்டு}} {{float_right|❠}} {{left_margin|6em|கழியல் {{float_right|❠}}}} {{larger|(3) இருபொழுதாட்டு}} {{float_right|137}} {{left_margin|6em|முக்குழியாட்டம் {{float_right|❠}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|{{larger|<b>2. பெண்பாற் பகுதி :</b>}}]] | {{DJVU page link|138|12}}}} {{left_margin|3em|{{larger|(1) பகலாட்டு}} {{float_right|❠}}}} {{left_margin|6em|க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}}}} {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> 488sbhn4hgly49w23dbkayug63gmtys 1840185 1840184 2025-07-08T03:55:42Z Booradleyp1 1964 1840185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude>{{block_center|width=600px| {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|{{larger|<b>II. குழந்தைப் பக்கம்</b>}}{{rule|13em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} {{larger|<b>இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|{{larger|<b>III. பெரியோர் பக்கம் {{rule|11em|align=}}</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|{{larger|<b>1. ஆண்பாற் பகுதி :<b>}}]] | {{DJVU page link|136|12}}}} {{left_margin|3em|{{larger|(1) பகலாட்டு}}{{float_right|❠}} {{left_margin|6em|தாயம் {{float_right|❠}}}} {{larger|(2) இரவாட்டு}} {{float_right|❠}} {{left_margin|6em|கழியல் {{float_right|❠}}}} {{larger|(3) இருபொழுதாட்டு}} {{float_right|137}} {{left_margin|6em|முக்குழியாட்டம் {{float_right|❠}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|{{larger|<b>2. பெண்பாற் பகுதி :</b>}}]] | {{DJVU page link|138|12}}}} {{left_margin|3em|{{larger|(1) பகலாட்டு}} {{float_right|❠}}}} {{left_margin|6em|க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}}}} {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> hl7cps0fge0ve9nof2xxzyrjyk3d8uu 1840186 1840185 2025-07-08T03:56:58Z Booradleyp1 1964 1840186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude>{{block_center|width=600px| {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|{{larger|<b>II. குழந்தைப் பக்கம்</b>}}{{rule|13em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} {{larger|<b>இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|{{larger|<b>III. பெரியோர் பக்கம் {{rule|11em|align=}}</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|{{larger|<b>1. ஆண்பாற் பகுதி :<b>}}]] | {{DJVU page link|136|12}}}} {{left_margin|3em|{{larger|(1) பகலாட்டு}}{{float_right|❠}} {{left_margin|6em|தாயம் {{float_right|❠}}}} {{larger|(2) இரவாட்டு}} {{float_right|❠}} {{left_margin|6em|கழியல் {{float_right|❠}}}} {{larger|(3) இருபொழுதாட்டு}} {{float_right|137}} {{left_margin|6em|முக்குழியாட்டம் {{float_right|❠}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|{{larger|<b>2. பெண்பாற் பகுதி :</b>}}]] | {{DJVU page link|138|12}}}} {{left_margin|3em|{{larger|(1) பகலாட்டு}} {{float_right|❠}}}} {{left_margin|6em|க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}}}} {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> p8ld6z78o7t2pok4m733ugnw0kbn1bn 1840187 1840186 2025-07-08T03:57:45Z Booradleyp1 1964 1840187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude>{{block_center|width=600px| {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|{{larger|<b>II. குழந்தைப் பக்கம்</b>}}{{rule|13em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} {{larger|<b>இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|{{larger|<b>III. பெரியோர் பக்கம் {{rule|11em|align=}}</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|{{larger|<b>1. ஆண்பாற் பகுதி :<b>}}]] | {{DJVU page link|136|12}}}} {{left_margin|3em|{{larger|(1) பகலாட்டு}}{{float_right|❠}} {{left_margin|6em|தாயம் {{float_right|❠}}}} {{larger|(2) இரவாட்டு}} {{float_right|❠}} {{left_margin|6em|கழியல் {{float_right|❠}}}} {{larger|(3) இருபொழுதாட்டு}} {{float_right|137}} {{left_margin|6em|முக்குழியாட்டம் {{float_right|❠}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|{{larger|<b>2. பெண்பாற் பகுதி :</b>}}]] | {{DJVU page link|138|12}}}} {{left_margin|3em|{{larger|(1) பகலாட்டு}} {{float_right|❠}}}} {{left_margin|6em|க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}}}} {{dhr|3em}} }} {{nop}}<noinclude></noinclude> qvnutkxds7jdcft05g1w2iidjupspxw 1840189 1840187 2025-07-08T03:59:41Z Booradleyp1 1964 1840189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh||உள்ளுறை|௧௧}}</noinclude>{{block_center|width=600px| {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/045|{{gap+|3}} ௩. பருப்புச்சட்டி]] | {{DJVU page link|128|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/046|{{gap+|3}} ௪. மோதிரம் வைத்தல்]] | {{DJVU page link|129|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/047|{{gap+|3}} ௫. புலியும் ஆடும்]] | {{DJVU page link|130|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048|{{gap+|3}} ௬. ‘இதென்ன மூட்டை?’]] | {{DJVU page link|131|12}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/049|{{gap+|3}} ௭. கும்மி]] | {{DJVU page link|133|12}}}} {{c|{{larger|<b>II. குழந்தைப் பக்கம்</b>}}{{rule|13em|align=}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/050|{{gap+|5}} {{larger|<b>இருபொழுதாட்டு</b>}}]] | {{DJVU page link|134|12}}}} {{left_margin|3em|௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’ {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/051|{{gap+|3}} ௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’]] | {{DJVU page link|135|12}}}} {{c|{{larger|<b>III. பெரியோர் பக்கம் {{rule|11em|align=}}</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052|{{larger|<b>1. ஆண்பாற் பகுதி :<b>}}]] | {{DJVU page link|136|12}}}} {{left_margin|3em|{{larger|(1) பகலாட்டு}}{{float_right|❠}} {{left_margin|6em|தாயம் {{float_right|❠}}}} {{larger|(2) இரவாட்டு}} {{float_right|❠}} {{left_margin|6em|கழியல் {{float_right|❠}}}} {{larger|(3) இருபொழுதாட்டு}} {{float_right|137}} {{left_margin|6em|முக்குழியாட்டம் {{float_right|❠}}}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/053|{{larger|<b>2. பெண்பாற் பகுதி :</b>}}]] | {{DJVU page link|138|12}}}} {{left_margin|3em|{{larger|(1) பகலாட்டு}} {{float_right|❠}}}} {{left_margin|6em|க. பண்ணாங்குழி {{float_right|❠}} ௨. தாயம் {{float_right|❠}}}} }} {{nop}}<noinclude></noinclude> bs08kd9f1e6f8slneankug6t7cvek7r பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/10 250 619546 1839987 1839896 2025-07-07T12:37:02Z Info-farmer 232 + துணைப்பக்கங்களுக்கு ஒருங்கிணைவு வார்ப்புருக்கள் இடப்பட்டன 1839987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} (2) இருபொழுதாட்டு 138 கும்மி {{float_right|❠}} <b>பின்னிணைப்பு :</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|139|12}}}} 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) பெண்பாற் பகுதி {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|141|12}}}} கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] | {{DJVU page link|143|12}}}} (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> ctklfgmlm5n3dk6lnxseor8jam9ebbi 1840090 1839987 2025-07-07T16:18:34Z Info-farmer 232 {{gap|1}} 1840090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|(2) இருபொழுதாட்டு {{float_right|138}}}} {{left_margin|6em|கும்மி {{float_right|❠}}}} <b>{{larger|பின்னிணைப்பு :}}</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|{{gap+|3}}I. வழக்கற்ற விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|139|12}}}} 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) பெண்பாற் பகுதி {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்]] | {{DJVU page link|141|12}}}} கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|III. பண்டை விளையாட்டு விழாக்கள்]] | {{DJVU page link|143|12}}}} (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> iwzfr2qhuoeui8irfbmgcefq71z4u19 1840091 1840090 2025-07-07T16:20:08Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1840091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|(2) இருபொழுதாட்டு {{float_right|138}}}} {{left_margin|6em|கும்மி {{float_right|❠}}}} <b>{{larger|பின்னிணைப்பு :}}</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|{{gap+|3}}{{larger|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|139|12}}}} 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) பெண்பாற் பகுதி {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|{{larger|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|141|12}}}} கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|{{larger|III. பண்டை விளையாட்டு விழாக்கள்}}]] | {{DJVU page link|143|12}}}} (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> s7oe6rfygda0cenw9dlqkl8fmgq3kq3 1840093 1840091 2025-07-07T16:22:40Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1840093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|(2) இருபொழுதாட்டு {{float_right|138}}}} {{left_margin|6em|கும்மி {{float_right|❠}}}} <b>{{larger|பின்னிணைப்பு :}}</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|{{gap+|3}}{{larger|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|139|12}}}} {{left_margin|6em|1. அறியப்பட்டவை (1) <b>ஆண்பாற் பகுதி</b> {{float_right|❠}} வட்டு {{float_right|❠}} (2) <b>பெண்பாற் பகுதி</b> {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}}}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|{{larger|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|141|12}}}} கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|{{larger|III. பண்டை விளையாட்டு விழாக்கள்}}]] | {{DJVU page link|143|12}}}} (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> rj1vlqerjhiyxsjtu43q06xnotjnjic 1840095 1840093 2025-07-07T16:25:31Z Info-farmer 232 {{left_margin|9em|}} 1840095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|(2) இருபொழுதாட்டு {{float_right|138}}}} {{left_margin|6em|கும்மி {{float_right|❠}}}} <b>{{larger|பின்னிணைப்பு :}}</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|{{gap+|3}}{{larger|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|139|12}}}} {{left_margin|6em|1. அறியப்பட்டவை (1) <b>ஆண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|9em|வட்டு {{float_right|❠}}}} (2) <b>பெண்பாற் பகுதி</b> {{float_right|❠}} பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}}}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|{{larger|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|141|12}}}} கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|{{larger|III. பண்டை விளையாட்டு விழாக்கள்}}]] | {{DJVU page link|143|12}}}} (1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144 {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> 5e14vpn6vttwovo9p1o1grvhcjf1nfn 1840096 1840095 2025-07-07T16:28:37Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1840096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|(2) இருபொழுதாட்டு {{float_right|138}}}} {{left_margin|6em|கும்மி {{float_right|❠}}}} <b>{{larger|பின்னிணைப்பு :}}</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|{{gap+|3}}{{larger|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|139|12}}}} {{left_margin|6em|1. அறியப்பட்டவை (1) <b>ஆண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|4em|வட்டு {{float_right|❠}}}} (2) <b>பெண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|3em|௧. பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}}}}}} 2. அறியப்படாதவை {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|{{larger|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|141|12}}}} {{left_margin|3em|கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|{{larger|III. பண்டை விளையாட்டு விழாக்கள்}}]] | {{DJVU page link|143|12}}}} {{left_margin|3em|(1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144}} {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> fwe7aqw0bwiiflmx7kl7xwtnzcq1guu 1840097 1840096 2025-07-07T16:31:02Z Info-farmer 232 {{left_margin|3em|}} 1840097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|(2) இருபொழுதாட்டு {{float_right|138}}}} {{left_margin|6em|கும்மி {{float_right|❠}}}} <b>{{larger|பின்னிணைப்பு :}}</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|{{gap+|3}}{{larger|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|139|12}}}} {{left_margin|6em|{{larger|<b>1. அறியப்பட்டவை</b>}} (1) <b>ஆண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|4em|வட்டு {{float_right|❠}}}} (2) <b>பெண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|3em|௧. பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}}}}}} {{left_margin|3em|{{larger|<b>2. அறியப்படாதவை</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|{{larger|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|141|12}}}} {{left_margin|3em|கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|{{larger|III. பண்டை விளையாட்டு விழாக்கள்}}]] | {{DJVU page link|143|12}}}} {{left_margin|3em|(1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144}} {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> a3mr6fuane7txv0rbw5k1vk8jlu6pt8 1840098 1840097 2025-07-07T16:31:50Z Info-farmer 232 6 1840098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|(2) இருபொழுதாட்டு {{float_right|138}}}} {{left_margin|6em|கும்மி {{float_right|❠}}}} <b>{{larger|பின்னிணைப்பு :}}</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|{{gap+|3}}{{larger|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|139|12}}}} {{left_margin|6em|{{larger|<b>1. அறியப்பட்டவை</b>}} (1) <b>ஆண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|4em|வட்டு {{float_right|❠}}}} (2) <b>பெண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|3em|௧. பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|❠}}}}}} {{left_margin|6em|{{larger|<b>2. அறியப்படாதவை</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|{{larger|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|141|12}}}} {{left_margin|3em|கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|{{larger|III. பண்டை விளையாட்டு விழாக்கள்}}]] | {{DJVU page link|143|12}}}} {{left_margin|3em|(1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144}} {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> d4q1eui8x0jp5qh6bspszcl80ro5rvz 1840099 1840098 2025-07-07T16:32:40Z Info-farmer 232 140 1840099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|(2) இருபொழுதாட்டு {{float_right|138}}}} {{left_margin|6em|கும்மி {{float_right|❠}}}} <b>{{larger|பின்னிணைப்பு :}}</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|{{gap+|3}}{{larger|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|139|12}}}} {{left_margin|6em|{{larger|<b>1. அறியப்பட்டவை</b>}} (1) <b>ஆண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|4em|வட்டு {{float_right|❠}}}} (2) <b>பெண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|3em|௧. பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|140}}}}}} {{left_margin|6em|{{larger|<b>2. அறியப்படாதவை</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|{{larger|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|141|12}}}} {{left_margin|3em|கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|{{larger|III. பண்டை விளையாட்டு விழாக்கள்}}]] | {{DJVU page link|143|12}}}} {{left_margin|3em|(1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு 144}} {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> o95857nm9zoygzlituvl1slxgj4cble 1840100 1840099 2025-07-07T16:33:43Z Info-farmer 232 {{float_right|}} 1840100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|(2) இருபொழுதாட்டு {{float_right|138}}}} {{left_margin|6em|கும்மி {{float_right|❠}}}} <b>{{larger|பின்னிணைப்பு :}}</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|{{gap+|3}}{{larger|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|139|12}}}} {{left_margin|6em|{{larger|<b>1. அறியப்பட்டவை</b>}} (1) <b>ஆண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|4em|வட்டு {{float_right|❠}}}} (2) <b>பெண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|3em|௧. பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|140}}}}}} {{left_margin|6em|{{larger|<b>2. அறியப்படாதவை</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|{{larger|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|141|12}}}} {{left_margin|3em|கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|{{larger|III. பண்டை விளையாட்டு விழாக்கள்}}]] | {{DJVU page link|143|12}}}} {{left_margin|3em|(1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு {{float_right|144}}}} {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> ordzlykn8t57aqwgrgc39mb6lm0m9t5 1840101 1840100 2025-07-07T16:34:26Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ + எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு விக்கிவடிவமும் கொடுக்கப்பட்டது 1840101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{Right|<b>பக்கம்</b>}} {{left_margin|3em|(2) இருபொழுதாட்டு {{float_right|138}}}} {{left_margin|6em|கும்மி {{float_right|❠}}}} <b>{{larger|பின்னிணைப்பு :}}</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|{{gap+|3}}{{larger|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|139|12}}}} {{left_margin|6em|{{larger|<b>1. அறியப்பட்டவை</b>}} (1) <b>ஆண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|4em|வட்டு {{float_right|❠}}}} (2) <b>பெண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|3em|௧. பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|140}}}}}} {{left_margin|6em|{{larger|<b>2. அறியப்படாதவை</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|{{larger|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|141|12}}}} {{left_margin|3em|கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|{{larger|III. பண்டை விளையாட்டு விழாக்கள்}}]] | {{DJVU page link|143|12}}}} {{left_margin|3em|(1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு {{float_right|144}}}} {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> 0bmuwrk6hvl0ccu0dchy4tdxj944jkt 1840177 1840101 2025-07-08T03:48:19Z Booradleyp1 1964 1840177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude> {{block_center|width=600px| {{left_margin|3em|{{larger|(2) இருபொழுதாட்டு}} {{float_right|138}}}} {{left_margin|6em|கும்மி {{float_right|❠}}}} <b>{{larger|பின்னிணைப்பு :}}</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|{{gap+|3}}{{larger|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|139|12}}}} {{left_margin|6em|{{larger|<b>1. அறியப்பட்டவை</b>}} (1) <b>ஆண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|4em|வட்டு {{float_right|❠}}}} (2) <b>பெண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|3em|௧. பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|140}}}}}} {{left_margin|6em|{{larger|<b>2. அறியப்படாதவை</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|{{larger|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|141|12}}}} {{left_margin|3em|கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|{{larger|III. பண்டை விளையாட்டு விழாக்கள்}}]] | {{DJVU page link|143|12}}}} {{left_margin|3em|(1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு {{float_right|144}}}} {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> 5gx3rdqljzwob31r3nu8gu733vvunmh 1840188 1840177 2025-07-08T03:58:41Z Booradleyp1 1964 1840188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|௧௨|தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்|}}</noinclude>{{block_center|width=600px| {{left_margin|3em|{{larger|(2) இருபொழுதாட்டு}} {{float_right|138}}}} {{left_margin|6em|கும்மி {{float_right|❠}}}} <b>{{larger|பின்னிணைப்பு :}}</b> {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/054|{{gap+|3}}{{larger|I. வழக்கற்ற விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|139|12}}}} {{left_margin|6em|{{larger|<b>1. அறியப்பட்டவை</b>}} (1) <b>ஆண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|4em|வட்டு {{float_right|❠}}}} (2) <b>பெண்பாற் பகுதி</b> {{float_right|❠}} {{left_margin|3em|௧. பலபந்து {{float_right|❠}} ௨. அம்மானை {{float_right|❠}} ௩. குரவை {{float_right|140}}}}}} {{left_margin|6em|{{larger|<b>2. அறியப்படாதவை</b>}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/055|{{larger|II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்}}]] | {{DJVU page link|141|12}}}} {{left_margin|3em|கோழிக் குஞ்சு—1 {{float_right|❠}} கோழிக் குஞ்சு—2 {{float_right|❠}}}} {{Dtpl|symbol= |dottext= | | [[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/056|{{larger|III. பண்டை விளையாட்டு விழாக்கள்}}]] | {{DJVU page link|143|12}}}} {{left_margin|3em|(1) புனல் விளையாட்டு {{float_right|❠}} (2) பொழில் விளையாட்டு {{float_right|144}}}} {{dhr|3em}} {{rule|5em|align=}} {{dhr|2em}} }} {{nop}}<noinclude></noinclude> o3mzz4i47xfjvn8g4feowjgbjtjvnxj பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/151 250 620027 1840092 1837666 2025-07-07T16:21:04Z Info-farmer 232 x- 1840092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>பின்னிணைப்பு :</b>}} {{center|{{x-larger|<b>I. வழக்கற்ற விளையாட்டுக்கள்<br>1. அறியப்பட்டவை<br>(1) ஆண்பாற் பகுதி<br>வட்டு</b>}}}} இது பகலில் ஆடப்படும் ஒருவகைச் சூதாட்டாகும். {{center|{{larger|<b>(2) பெண்பாற் பகுதி<br>க. பல பந்து</b>}}}} ஒருத்தி 5 பந்து கொண்டாடியது சிந்தாமணியுள்ளும், இருமகளிர் 7 பந்தும் 12 பத்தும் கொண்டாடியது பெருங் கதையுள்ளும், கூறப்பட்டுள்ளன. இவை பகலாட்டு. {{center|{{larger|<b>2. அம்மானை</b>}}}} மூவர் மகளிர் முறையே கூற்றும் வினாவும் விடையுமாக முக்கூறுடையதும் ‘அம்மானை’ என்றிறுவதுமான ஒருவகைக் கொச்சகக் கலிப்பாவைப் பாடிக்கொண்டு, தனித்தனி பலபந்துகளைப் போட்டுப் பிடித்து ஆடும் ஆட்டு அம்மானையாம். இதுவும் பகலாட்டே. <poem>::உழுவையுரி யரைக்கசைத்த உலகமெலா முடையபெரு ::முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தார் அம்மானை ::முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தா ராமாயின் ::எளியவர்போற் களவாண்ட தெம்முறையே அம்மானை ::இதனாலன் றேமறைவாய் இருக்கின்றார் அம்மானை</poem> என்பது ஓர் அம்மானைச் செய்யுளாம். {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> b0ita0phjr61sp00h5q7y8rjmjpfdxo தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் 0 620083 1840113 1839307 2025-07-07T17:07:10Z Info-farmer 232 - [[பகுப்பு:Transclusion completed]] 1840113 wikitext text/x-wiki {{header | title = தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் | author = ஞா தேவநேயன் | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 1962 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 56 ஆகும். }}{{featured download}}<br><br><br> <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="3" to="4" /> {{page break|label=}} {{c|[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/001|<big>முன்னுரை</big>]]}} {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" /> {{page break|label=}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:ஞா தேவநேயன்]] [[பகுப்பு:Transclusion completed]] 4z5gog1itxgqy78ugj05g87tug29k57 1840114 1840113 2025-07-07T17:08:24Z Info-farmer 232 - துப்புரவு 1840114 wikitext text/x-wiki {{header | title = தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் | author = ஞா தேவநேயன் | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 1962 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 56 ஆகும். }}{{featured download}}<br><br><br> <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="3" to="4" /> {{page break|label=}} {{c|[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/001|<big>முன்னுரை</big>]]}} {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" /> [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:ஞா தேவநேயன்]] [[பகுப்பு:Transclusion completed]] 27wmw7e4k6ir63rxu1rps228yv0fj09 1840248 1840114 2025-07-08T05:41:12Z Info-farmer 232 ஞா தேவநேயன் என்பதும் இவரே. 1840248 wikitext text/x-wiki {{header | title = தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் | author = தேவநேயப் பாவாணர் | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 1962 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 56 ஆகும். ஞா தேவநேயன் என்பதும் இவரே. }}{{featured download}}<br><br><br> <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="3" to="4" /> {{page break|label=}} {{c|[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/001|<big>முன்னுரை</big>]]}} {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" /> [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:ஞா தேவநேயன்]] [[பகுப்பு:Transclusion completed]] ghkk9gbtiac4f9fuewmchosa0efs5kj 1840251 1840248 2025-07-08T05:42:21Z Info-farmer 232 removed [[Category:ஞா தேவநேயன்]]; added [[Category:தேவநேயப் பாவாணர்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1840251 wikitext text/x-wiki {{header | title = தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் | author = தேவநேயப் பாவாணர் | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 1962 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 56 ஆகும். ஞா தேவநேயன் என்பதும் இவரே. }}{{featured download}}<br><br><br> <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="3" to="4" /> {{page break|label=}} {{c|[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/001|<big>முன்னுரை</big>]]}} {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" /> [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:தேவநேயப் பாவாணர்]] [[பகுப்பு:Transclusion completed]] imie68mr1nj9j7rw60a6ourwvoijulx 1840252 1840251 2025-07-08T05:42:40Z Info-farmer 232 added [[Category:கலைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1840252 wikitext text/x-wiki {{header | title = தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் | author = தேவநேயப் பாவாணர் | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 1962 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 56 ஆகும். ஞா தேவநேயன் என்பதும் இவரே. }}{{featured download}}<br><br><br> <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="3" to="4" /> {{page break|label=}} {{c|[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/001|<big>முன்னுரை</big>]]}} {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" /> [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:தேவநேயப் பாவாணர்]] [[பகுப்பு:Transclusion completed]] [[பகுப்பு:கலைகள்]] jp2nqfyg42axs0pp3teoe535enmayrk 1840271 1840252 2025-07-08T06:04:45Z Info-farmer 232 அட்டவணை பேச்சு:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf 1840271 wikitext text/x-wiki {{header | title = தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் | author = தேவநேயப் பாவாணர் | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 1962 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள், மொத்தம் 56 ஆகும். ஞா தேவநேயன் என்பதும் இவரே. காண்க: [[அட்டவணை பேச்சு:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf| கலந்துரையாடல்கள்]] }}{{featured download}}<br><br><br> <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="3" to="4" /> {{page break|label=}} {{c|[[தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/001|<big>முன்னுரை</big>]]}} {{page break|label=}} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="5" to="10" /> [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:தேவநேயப் பாவாணர்]] [[பகுப்பு:Transclusion completed]] [[பகுப்பு:கலைகள்]] tfy7xd1x3svyrfdd74c35ycdvig6no6 தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/001 0 620084 1840249 1837936 2025-07-08T05:41:23Z Info-farmer 232 ஞா தேவநேயன் என்பதும் இவரே. 1840249 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தேவநேயப் பாவாணர் | translator = | section = 1 | previous = [[../]] | next = [[../002/|002]] | notes = ஞா தேவநேயன் என்பதும் இவரே. }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="11" to="14"fromsection="" tosection="" /> p6r16kftgjirxqh9smllgorbwh96lb3 தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002 0 620086 1840241 1837940 2025-07-08T05:32:23Z Info-farmer 232 | author = [[தேவநேயப்பாவாணர்|ஞா தேவநேயன்]] 1840241 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = [[தேவநேயப்பாவாணர்|ஞா தேவநேயன்]] | translator = | section = 2 | previous = [[../001/|001]] | next = [[../003/|003]] | notes = }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="15" to="31"fromsection="" tosection="" /> k1g9l82g7u41nac4atc3cx79izb5vso 1840247 1840241 2025-07-08T05:39:10Z Info-farmer 232 ஞா தேவநேயன் என்பதும் இவரே. 1840247 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தேவநேயப் பாவாணர் | translator = | section = 2 | previous = [[../001/|001]] | next = [[../003/|003]] | notes = ஞா தேவநேயன் என்பதும் இவரே. }} <pages index="தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf" from="15" to="31"fromsection="" tosection="" /> b88y23f0trvil8ov1lm30l5inbl42dv அட்டவணை பேச்சு:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf 253 620262 1840111 1839569 2025-07-07T17:02:20Z Info-farmer 232 /* பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் */ பதில் 1840111 wikitext text/x-wiki == பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] இந்த நூலின் பொருளடக்கப் பக்கங்கள் மிக விரிவாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எளிமையாக இருக்கும் பொருட்டு, அவற்றை 56 துணைப்பக்கங்களாக ஒருங்கிணைவு செய்துள்ளேன். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்தில், துணைப்பக்கங்களை இணைத்துள்ளேன். இதுபோலவே, மீதமுள்ள துணைப்பக்கங்களை இணைக்க வேண்டும். வாய்ப்பு இருப்பின், பிற பங்களிப்பாளர்களைக் கொண்டு இணைத்துத் தாருங்கள். இந்த இலக்கு முடிந்த பிறகு உரிய வார்ப்புருக்களை இணைத்து, பொருளடக்கப் பக்கங்களை மஞ்சள் ஆக்குகிறேன். இப்படி செய்தால் மட்டுமே, அனைத்துப் பக்கங்களும் பொருத்தமாக பதிவிறக்கம் செய்ய இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 5 சூலை 2025 (UTC) {{ping|Info-farmer}} pdf/6-10 பக்கங்களில் துணைப் பக்கங்களை இணைத்திருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:23, 5 சூலை 2025 (UTC) :மகிழ்ச்சி. இணைப்புகள் கொடுத்தமையால் அனைத்துப் பக்கங்களும் ஒருங்கிணவு வார்ப்புருக்கள் இல்லாமேலேயே அனைத்துப் பக்கங்களும் வரிசையாக பதிவிறக்கம் ஆகின்றன. இது எனக்கு புதுப்பாடம். இருப்பினும் ஒருங்கிணைவு வார்ப்புருக்களை, [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்திற்க்கு இட்டு, மூலப் பக்கம் போலவே வடிவமாக்கி மஞ்சளாக்கியுள்ளேன். இதுவே போதும் என்று எண்ணுகிறேன். கண்டு கருத்திடவும். பிறகு அனைத்துப் பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றிவிடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:22, 6 சூலை 2025 (UTC) :சரியாக அமைந்துள்ளன. முதல் துணைப்பக்கமான பகலாட்டு என்பதற்கும் ஒருங்கிணைவு வார்ப்புரு இணைத்திருக்கிறேன். தேவையில்லை என்றால் நீக்கி விடுங்கள். மீதமுள்ள பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றி விடுங்கள். நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:39, 6 சூலை 2025 (UTC) :://பகலாட்டு என்பதற்கும் ஒருங்கிணைவு வார்ப்புரு இணைத்திருக்கிறேன்// என்பதில் எண்கள் இருப்பின் தரலாம். இதற்கு அடுத்தப் பக்கத்தில் இதே சொல்லுக்கு தர இயலவில்லை. ஏனெனில் அங்கு குறியீடு என்பது பக்க எண்ணுக்கு மாற்றாக அச்சிடப்பட்டிருந்தது. அனைத்துப் பக்கங்களையும் மஞ்சளாக்கியுள்ளேன். மாற்றங்கள் தேவைப்படும் எனில் செய்யுங்கள். பிறகு பதிவிறக்கம் செய்து அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என பார்த்து, முதற்பக்கதில் இணைத்து விடலாம். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:02, 7 சூலை 2025 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] 297q0kcmtv93qm62s0vpwlh2ywjw5h4 1840112 1840111 2025-07-07T17:04:52Z Info-farmer 232 /* பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் */ இணைப்பு 1840112 wikitext text/x-wiki == பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] இந்த நூலின் பொருளடக்கப் பக்கங்கள் மிக விரிவாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எளிமையாக இருக்கும் பொருட்டு, அவற்றை 56 துணைப்பக்கங்களாக ஒருங்கிணைவு செய்துள்ளேன். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்தில், துணைப்பக்கங்களை இணைத்துள்ளேன். இதுபோலவே, மீதமுள்ள துணைப்பக்கங்களை இணைக்க வேண்டும். வாய்ப்பு இருப்பின், பிற பங்களிப்பாளர்களைக் கொண்டு இணைத்துத் தாருங்கள். இந்த இலக்கு முடிந்த பிறகு உரிய வார்ப்புருக்களை இணைத்து, பொருளடக்கப் பக்கங்களை மஞ்சள் ஆக்குகிறேன். இப்படி செய்தால் மட்டுமே, அனைத்துப் பக்கங்களும் பொருத்தமாக பதிவிறக்கம் செய்ய இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 5 சூலை 2025 (UTC) {{ping|Info-farmer}} pdf/6-10 பக்கங்களில் துணைப் பக்கங்களை இணைத்திருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:23, 5 சூலை 2025 (UTC) :மகிழ்ச்சி. இணைப்புகள் கொடுத்தமையால் அனைத்துப் பக்கங்களும் ஒருங்கிணவு வார்ப்புருக்கள் இல்லாமேலேயே அனைத்துப் பக்கங்களும் வரிசையாக பதிவிறக்கம் ஆகின்றன. இது எனக்கு புதுப்பாடம். இருப்பினும் ஒருங்கிணைவு வார்ப்புருக்களை, [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்திற்க்கு இட்டு, மூலப் பக்கம் போலவே வடிவமாக்கி மஞ்சளாக்கியுள்ளேன். இதுவே போதும் என்று எண்ணுகிறேன். கண்டு கருத்திடவும். பிறகு அனைத்துப் பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றிவிடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:22, 6 சூலை 2025 (UTC) :சரியாக அமைந்துள்ளன. முதல் துணைப்பக்கமான பகலாட்டு என்பதற்கும் ஒருங்கிணைவு வார்ப்புரு இணைத்திருக்கிறேன். தேவையில்லை என்றால் நீக்கி விடுங்கள். மீதமுள்ள பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றி விடுங்கள். நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:39, 6 சூலை 2025 (UTC) :://பகலாட்டு என்பதற்கும் ஒருங்கிணைவு வார்ப்புரு இணைத்திருக்கிறேன்// என்பதில் எண்கள் இருப்பின் தரலாம். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/7]] என்ற பக்கத்தில், இதே சொல்லுக்கு தர இயலவில்லை. ஏனெனில் அங்கு குறியீடு என்பது பக்க எண்ணுக்கு மாற்றாக அச்சிடப்பட்டிருந்தது. அனைத்துப் பக்கங்களையும் மஞ்சளாக்கியுள்ளேன். மாற்றங்கள் தேவைப்படும் எனில் செய்யுங்கள். பிறகு பதிவிறக்கம் செய்து அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என பார்த்து, முதற்பக்கதில் இணைத்து விடலாம். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:02, 7 சூலை 2025 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] 5ng7jgitrxa4xx8zkzfs562s982smsd 1840191 1840112 2025-07-08T04:06:39Z Booradleyp1 1964 /* பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் */ 1840191 wikitext text/x-wiki == பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] இந்த நூலின் பொருளடக்கப் பக்கங்கள் மிக விரிவாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எளிமையாக இருக்கும் பொருட்டு, அவற்றை 56 துணைப்பக்கங்களாக ஒருங்கிணைவு செய்துள்ளேன். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்தில், துணைப்பக்கங்களை இணைத்துள்ளேன். இதுபோலவே, மீதமுள்ள துணைப்பக்கங்களை இணைக்க வேண்டும். வாய்ப்பு இருப்பின், பிற பங்களிப்பாளர்களைக் கொண்டு இணைத்துத் தாருங்கள். இந்த இலக்கு முடிந்த பிறகு உரிய வார்ப்புருக்களை இணைத்து, பொருளடக்கப் பக்கங்களை மஞ்சள் ஆக்குகிறேன். இப்படி செய்தால் மட்டுமே, அனைத்துப் பக்கங்களும் பொருத்தமாக பதிவிறக்கம் செய்ய இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 5 சூலை 2025 (UTC) {{ping|Info-farmer}} pdf/6-10 பக்கங்களில் துணைப் பக்கங்களை இணைத்திருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:23, 5 சூலை 2025 (UTC) :மகிழ்ச்சி. இணைப்புகள் கொடுத்தமையால் அனைத்துப் பக்கங்களும் ஒருங்கிணவு வார்ப்புருக்கள் இல்லாமேலேயே அனைத்துப் பக்கங்களும் வரிசையாக பதிவிறக்கம் ஆகின்றன. இது எனக்கு புதுப்பாடம். இருப்பினும் ஒருங்கிணைவு வார்ப்புருக்களை, [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்திற்க்கு இட்டு, மூலப் பக்கம் போலவே வடிவமாக்கி மஞ்சளாக்கியுள்ளேன். இதுவே போதும் என்று எண்ணுகிறேன். கண்டு கருத்திடவும். பிறகு அனைத்துப் பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றிவிடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:22, 6 சூலை 2025 (UTC) :சரியாக அமைந்துள்ளன. முதல் துணைப்பக்கமான பகலாட்டு என்பதற்கும் ஒருங்கிணைவு வார்ப்புரு இணைத்திருக்கிறேன். தேவையில்லை என்றால் நீக்கி விடுங்கள். மீதமுள்ள பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றி விடுங்கள். நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:39, 6 சூலை 2025 (UTC) :://பகலாட்டு என்பதற்கும் ஒருங்கிணைவு வார்ப்புரு இணைத்திருக்கிறேன்// என்பதில் எண்கள் இருப்பின் தரலாம். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/7]] என்ற பக்கத்தில், இதே சொல்லுக்கு தர இயலவில்லை. ஏனெனில் அங்கு குறியீடு என்பது பக்க எண்ணுக்கு மாற்றாக அச்சிடப்பட்டிருந்தது. அனைத்துப் பக்கங்களையும் மஞ்சளாக்கியுள்ளேன். மாற்றங்கள் தேவைப்படும் எனில் செய்யுங்கள். பிறகு பதிவிறக்கம் செய்து அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என பார்த்து, முதற்பக்கதில் இணைத்து விடலாம். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:02, 7 சூலை 2025 (UTC) :நன்றி தகவலுழவன். நான் சிறு தலைப்புகளின் வடிவில் சீர்மைக்காக சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். "பக்கம்" என்ற தலைப்பை தொடக்கத்தில் மட்டும் இருக்குமாறு மாற்றியிருக்கிறேன். நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு முதற்பக்கத்தில் இணைத்து விடுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:06, 8 சூலை 2025 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] h6oym3115s2e7cw5219uk4kpiv1vczd 1840239 1840191 2025-07-08T05:29:34Z Info-farmer 232 /* பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் */ பதில் 1840239 wikitext text/x-wiki == பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] இந்த நூலின் பொருளடக்கப் பக்கங்கள் மிக விரிவாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எளிமையாக இருக்கும் பொருட்டு, அவற்றை 56 துணைப்பக்கங்களாக ஒருங்கிணைவு செய்துள்ளேன். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்தில், துணைப்பக்கங்களை இணைத்துள்ளேன். இதுபோலவே, மீதமுள்ள துணைப்பக்கங்களை இணைக்க வேண்டும். வாய்ப்பு இருப்பின், பிற பங்களிப்பாளர்களைக் கொண்டு இணைத்துத் தாருங்கள். இந்த இலக்கு முடிந்த பிறகு உரிய வார்ப்புருக்களை இணைத்து, பொருளடக்கப் பக்கங்களை மஞ்சள் ஆக்குகிறேன். இப்படி செய்தால் மட்டுமே, அனைத்துப் பக்கங்களும் பொருத்தமாக பதிவிறக்கம் செய்ய இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 5 சூலை 2025 (UTC) {{ping|Info-farmer}} pdf/6-10 பக்கங்களில் துணைப் பக்கங்களை இணைத்திருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:23, 5 சூலை 2025 (UTC) :மகிழ்ச்சி. இணைப்புகள் கொடுத்தமையால் அனைத்துப் பக்கங்களும் ஒருங்கிணவு வார்ப்புருக்கள் இல்லாமேலேயே அனைத்துப் பக்கங்களும் வரிசையாக பதிவிறக்கம் ஆகின்றன. இது எனக்கு புதுப்பாடம். இருப்பினும் ஒருங்கிணைவு வார்ப்புருக்களை, [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்திற்க்கு இட்டு, மூலப் பக்கம் போலவே வடிவமாக்கி மஞ்சளாக்கியுள்ளேன். இதுவே போதும் என்று எண்ணுகிறேன். கண்டு கருத்திடவும். பிறகு அனைத்துப் பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றிவிடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:22, 6 சூலை 2025 (UTC) :சரியாக அமைந்துள்ளன. முதல் துணைப்பக்கமான பகலாட்டு என்பதற்கும் ஒருங்கிணைவு வார்ப்புரு இணைத்திருக்கிறேன். தேவையில்லை என்றால் நீக்கி விடுங்கள். மீதமுள்ள பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றி விடுங்கள். நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:39, 6 சூலை 2025 (UTC) :://பகலாட்டு என்பதற்கும் ஒருங்கிணைவு வார்ப்புரு இணைத்திருக்கிறேன்// என்பதில் எண்கள் இருப்பின் தரலாம். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/7]] என்ற பக்கத்தில், இதே சொல்லுக்கு தர இயலவில்லை. ஏனெனில் அங்கு குறியீடு என்பது பக்க எண்ணுக்கு மாற்றாக அச்சிடப்பட்டிருந்தது. அனைத்துப் பக்கங்களையும் மஞ்சளாக்கியுள்ளேன். மாற்றங்கள் தேவைப்படும் எனில் செய்யுங்கள். பிறகு பதிவிறக்கம் செய்து அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என பார்த்து, முதற்பக்கதில் இணைத்து விடலாம். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:02, 7 சூலை 2025 (UTC) :நன்றி தகவலுழவன். நான் சிறு தலைப்புகளின் வடிவில் சீர்மைக்காக சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். "பக்கம்" என்ற தலைப்பை தொடக்கத்தில் மட்டும் இருக்குமாறு மாற்றியிருக்கிறேன். நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு முதற்பக்கத்தில் இணைத்து விடுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:06, 8 சூலை 2025 (UTC) ::// "பக்கம்" என்ற தலைப்பை தொடக்கத்தில் மட்டும் இருக்குமாறு மாற்றியிருக்கிறேன்.// மிகப்பொருத்தம். இனி நானும் பின்பற்றுவேன். நன்றி. சரியாக வருகின்றன. முதல்பக்கத்தில் இணைக்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:29, 8 சூலை 2025 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] 0zmmw99lbzer6kakat5q7dqzp0u7y53 1840262 1840239 2025-07-08T05:54:27Z Info-farmer 232 பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு 1840262 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95292 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:54, 8 சூலை 2025 (UTC) == பொருளடக்கப் பக்கங்களில், துணைப்பக்கங்களை இணைத்தல் == @[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] இந்த நூலின் பொருளடக்கப் பக்கங்கள் மிக விரிவாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, எளிமையாக இருக்கும் பொருட்டு, அவற்றை 56 துணைப்பக்கங்களாக ஒருங்கிணைவு செய்துள்ளேன். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்தில், துணைப்பக்கங்களை இணைத்துள்ளேன். இதுபோலவே, மீதமுள்ள துணைப்பக்கங்களை இணைக்க வேண்டும். வாய்ப்பு இருப்பின், பிற பங்களிப்பாளர்களைக் கொண்டு இணைத்துத் தாருங்கள். இந்த இலக்கு முடிந்த பிறகு உரிய வார்ப்புருக்களை இணைத்து, பொருளடக்கப் பக்கங்களை மஞ்சள் ஆக்குகிறேன். இப்படி செய்தால் மட்டுமே, அனைத்துப் பக்கங்களும் பொருத்தமாக பதிவிறக்கம் செய்ய இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 5 சூலை 2025 (UTC) {{ping|Info-farmer}} pdf/6-10 பக்கங்களில் துணைப் பக்கங்களை இணைத்திருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:23, 5 சூலை 2025 (UTC) :மகிழ்ச்சி. இணைப்புகள் கொடுத்தமையால் அனைத்துப் பக்கங்களும் ஒருங்கிணவு வார்ப்புருக்கள் இல்லாமேலேயே அனைத்துப் பக்கங்களும் வரிசையாக பதிவிறக்கம் ஆகின்றன. இது எனக்கு புதுப்பாடம். இருப்பினும் ஒருங்கிணைவு வார்ப்புருக்களை, [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/5]] என்ற பக்கத்திற்க்கு இட்டு, மூலப் பக்கம் போலவே வடிவமாக்கி மஞ்சளாக்கியுள்ளேன். இதுவே போதும் என்று எண்ணுகிறேன். கண்டு கருத்திடவும். பிறகு அனைத்துப் பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றிவிடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:22, 6 சூலை 2025 (UTC) :சரியாக அமைந்துள்ளன. முதல் துணைப்பக்கமான பகலாட்டு என்பதற்கும் ஒருங்கிணைவு வார்ப்புரு இணைத்திருக்கிறேன். தேவையில்லை என்றால் நீக்கி விடுங்கள். மீதமுள்ள பொருளடக்கப் பக்கங்களையும் மாற்றி விடுங்கள். நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:39, 6 சூலை 2025 (UTC) :://பகலாட்டு என்பதற்கும் ஒருங்கிணைவு வார்ப்புரு இணைத்திருக்கிறேன்// என்பதில் எண்கள் இருப்பின் தரலாம். [[பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/7]] என்ற பக்கத்தில், இதே சொல்லுக்கு தர இயலவில்லை. ஏனெனில் அங்கு குறியீடு என்பது பக்க எண்ணுக்கு மாற்றாக அச்சிடப்பட்டிருந்தது. அனைத்துப் பக்கங்களையும் மஞ்சளாக்கியுள்ளேன். மாற்றங்கள் தேவைப்படும் எனில் செய்யுங்கள். பிறகு பதிவிறக்கம் செய்து அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என பார்த்து, முதற்பக்கதில் இணைத்து விடலாம். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:02, 7 சூலை 2025 (UTC) :நன்றி தகவலுழவன். நான் சிறு தலைப்புகளின் வடிவில் சீர்மைக்காக சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். "பக்கம்" என்ற தலைப்பை தொடக்கத்தில் மட்டும் இருக்குமாறு மாற்றியிருக்கிறேன். நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு முதற்பக்கத்தில் இணைத்து விடுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:06, 8 சூலை 2025 (UTC) ::// "பக்கம்" என்ற தலைப்பை தொடக்கத்தில் மட்டும் இருக்குமாறு மாற்றியிருக்கிறேன்.// மிகப்பொருத்தம். இனி நானும் பின்பற்றுவேன். நன்றி. சரியாக வருகின்றன. முதல்பக்கத்தில் இணைக்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:29, 8 சூலை 2025 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] 8fvv68u8o4swi23xocl4gv9f5byzfmw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/378 250 620395 1840073 2025-07-07T15:47:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாண்டங்கள், மண்ணால் செய்து சுடப்பட்ட பொம்மைகள், வளையல்கள் போன்ற அணிகலன்கள் ஆகியவை இன்றும் காணக்கிடக்கின்றன.{{float_right|ம.இரா.}} {{larger|<b>அந்திரோகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்திரோகிலிசு|342|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்}}</noinclude>பாண்டங்கள், மண்ணால் செய்து சுடப்பட்ட பொம்மைகள், வளையல்கள் போன்ற அணிகலன்கள் ஆகியவை இன்றும் காணக்கிடக்கின்றன.{{float_right|ம.இரா.}} {{larger|<b>அந்திரோகிலிசு</b>}} பண்டைய உரோமானியர் காலக் கதையினில் வரும் தலைவன். இவன் ஒரு முதலாளியிடம் அடிமையாய் இருந்தான். அங்கிருந்து தப்பித்துச் சென்று ஒரு குகையினில் ஒளிந்திருந்தான். அக்குகையில் முள்ளடிபட்டு வருந்திக்கொண்டிருந்த சிங்கத்தின் உள்ளங்காலிலிருந்த முள்ளினை எடுத்து அதன் நண்பனானான். பின்னர் முதலாளியிடம் பிடிபட்டு உரோமாபுரியிலிருந்த ஓர் அரங்கத்தில் சிங்கத்துடன் போரிடும் தண்டனையைப் பெற்றான். சிங்கத்திடம் போரிட அந்திரோகிலிசு (Androcles) முயன்ற பொழுது, சிங்கம் அவனைத் தாக்க முன்வரவில்லை. அச்சிங்கமே அவன் குகையில் காப்பாற்றிய சிங்கமாகும். எனவே, அவனை அடையாளம் கண்டு அச்சிங்கம் போரிட மறுத்தது. இக்கதையைப் பெர்னார்டு என்னும் அண்மைக்கால ஆங்கிலக் கவிஞர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். {{larger|<b>அந்துவஞ்செள்ளை</b>}} பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனாகத் திகழும் இளஞ்சேரலிரும் பொறைக்குத் தாயும், குட்டுவன் இரும் பொறைக்கு மனைவியுமாவாள், மக்கள் தாய முறைப்படி இவள் வேளிர் மரபினனான மையூர் கிழானுக்கு மகள் முறையினளாவாள். பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பதிகம், “மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ்செள்ளை” என்று இவளைக் குறிப்பிடுகிறது. {{larger|<b>அந்துவன்{{sup|1}}</b>}} சங்க காலச் சேர மன்னர்களுள் ஒருவன். இவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அழைக்கப்படுவான். சங்ககாலச் சேரமன்னர், உதியஞ்சேரல் மரபினர் என்றும் அந்துவஞ்சேரலிரும்பொறை மரபினர் என்றும் இருவகைப்படுவர், மூத்த மரபினரான உதியஞ் சேரல் மரபினர் வஞ்சியிலிருந்தும் அந்துவஞ்சேரலிரும்பொறை மரபினர் தொண்டியிலிருந்தும் ஆண்டனர். ‘அந்துவஞ்சேரல் இரும்பொறை’ என வழங்கப்பெற்ற அந்துவன், பதிற்றுப்பத்து ஏழாம்பத்தின் தலைவனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதனின் தந்தையாவான். இவன் தளராத நெஞ்சுரம் உடையவன்; பகைவரை வென்று சிறைப்படுத்தியவன்; நுட்பமான அறிவுடையவன். {{larger|<b>அந்துவன்{{sup|2}}</b>}} கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். நல்லந்துவன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் என வழங்கப் பெறும் இவர், மதுரையைச் சார்ந்தவர். கலித்தொகை நூலைத் தொகுத்தவரும் அதன் கண்ணுள்ள 33 நெய்தற் கலிப்பாடல்களை எழுதியவரும் ‘ஆறறி அந்தணர்க்கு’ எனத் தொடங்கும் அதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவரும் இவரேயாவர். அகநானூறு 43–ஆம் பாடலும், நற்றிணை 88–ஆம் பாடலும் இவரால் இயற்றப்பட்டன. 8–ஆம் பரிபாடலில் திருப்பரங்குன்றத்தினை அழகுறப் பாடியுள்ளார். அப்பாடலின் சிறப்புணர்ந்து சங்கப் புலவராகிய மதுரை மருதன் இளநாகன்; தம் அகநானூற்றுப் பாடலொன்றில் (அகம். 59) அக்குன்றினையும், அதனைப் பாடிய அந்துவனையும் ‘சூர்மருங்கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை’ என்று சிறப்பித்துப் பாராட்டியுள்ளார். நல்லந்துவனார் என்னும் இவர் பெயரை நவ்வந்துவனார் என்று கலித்தொகைப் பதிப்பாசிரியர் இ.வை. அனந்தராமையர் வலியுறுத்துவர். காண்க: ஆசிரியர் நல்லந்துவனார். {{larger|<b>அந்துவன் கீரன்</b>}} கொடையிற் சிறந்த ஒரு குறுநில மன்னன். இவன் பெயர் கீரன். இவன் தந்தை அந்துவன். ‘அந்துவனுக்கு மகனாகிய கீரன்’ என்பது இவன் பெயர் விளக்கம். காவட்டனார் என்னும் புலவர் இவனைப் பெருங்காஞ்சித் துறையிலமைந்துள்ள புறநானூற்றுப் பாடலில் பாடியுள்ளார். இதன்கண் ஆசிரியர், உலகப் பற்று மிகுந்தவனாய் விளங்கிய இவனுக்கு, யாக்கை செல்வம் ஆகியவற்றின் நிலையாமையினை வலியுறுத்திக் காட்டிக் கொடையால் நிலைத்த புகழினைத் தேடுமாறு அறிவுறுத்தியுள்ளார். (புறம். 359){{float_right|அர.சி.}} {{larger|<b>அந்துவன் சாத்தன்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த குறுதில மன்னர்களுள் ஒருவன். சாத்தன் என்பது இவன் பெயர். அத்துவன் இவன் தந்தை. இவன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் ஆருயிர் நண்பன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், தான் பாடிய புறநானூற்று வஞ்சினப் பாட்டில், ‘உரைசால் அந்துவன் சாத்தன்’ என்று இவனைப் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளான். பகைவரை வெல்லாவிடில், கண்போன்ற என் நண்பர்களுள் ஒருவனாகிய புகழ் மிக்க அந்துவன் சாத்தனோடும் பிற நண்பர்களோடும் கூடி மகிழும் பேற்றை இழப்பேனாக என்பது இப்பாண்டியனின் வஞ்சினமாகும்.{{float_right|அர.சி.}} {{larger|<b>அந்தோணிக்குட்டி அண்ணாவியார்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவப் புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரை ஈழவ வகுப்பினர் என்றும், பரவ வகுப்பினர் என்றும் சொல்லுவார்கள். இவர் வீரமாமுனிவருடன் சேர்ந்து தமிழ்த் தொண்டும் சமயத்தொண்டும் புரிந்துள்ளார். இவருடைய தீய ஒழுக்கத்தினால் பாதிரிமார்கள் இவரைத் தம் குழுவிலிருந்து நீக்கி விட்டார்கள், பிறகு<noinclude></noinclude> de4a7q5iollg0jjd8xeeq5v0fswwhhl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/379 250 620396 1840094 2025-07-07T16:24:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம்முடைய தவற்றினை உணர்ந்து பாவ மன்னிப்புப் பெற்றுச் சமயப் பணிபுரியத் தொடங்கினார். இவர் ‘கிறித்தவ சங்கீதம்’ என்னும் நூலினை இயற்றியுள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அந்தோணி கோபு|343|அநந்த கவிராயர்{{sup|1}}}}</noinclude>தம்முடைய தவற்றினை உணர்ந்து பாவ மன்னிப்புப் பெற்றுச் சமயப் பணிபுரியத் தொடங்கினார். இவர் ‘கிறித்தவ சங்கீதம்’ என்னும் நூலினை இயற்றியுள்ளார். இதில் பேரின்பக் காதல், பாலத்தியானம், பச்சாத்தாபம், தன்மேல் குற்றம் சுமத்தல், ஆசைப்பத்து, அருள்வாசகம், சேசுநாதர் மரணம், திருப்புகழ், ஆனந்த மஞ்சரி, கீர்த்தனை முதலிய பாடல்கள் உள்ளன. பேரின்பக் காதல் என்னும் பகுதிக்கு முன்சி அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் என்பார் பொழிப்புரை எழுதியுள்ளார். {{larger|<b>அந்தோணி கோபு:</b>}} முதலாம் எலிசபெத்து அரசியாரின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1587–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதத்தில் அந்தோணி கோபு (Antony Cope) என்பார் காமன்சு அவையில் சமயத் தொடர்பான சீர்திருத்தம் கோரி, மிகப் பரந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரும் முன்வரைவு ஒன்றையும், நூல் ஒன்றையும் தாக்கல் செய்தார். இம்முன்வரைவின்படி அரசாங்கத்தைப் பாதிக்கும் எல்லாச் சட்டங்களையும் நீக்குதல் செய்ய வேண்டுமெனத் திருச்சபை கோரியது. புதிதானதொரு பொது வழிபாட்டை நிலைநாட்ட வேண்டிய விவரங்கள். இத்துடன் இணைக்கப்பெற்றிருந்த நூலில் கொடுக்கப்பட்டிருந்தன. அம்முன்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. அந்தோணி கோப்பிற்கும், அவருடைய முன்வரைவை ஆதரித்த ஏனைய உறுப்பினர்களுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர்ச் சிறையிலிருந்த அந்தோணி கோபு விடுதலை ஆனார். {{larger|<b>அந்தோணிப்பிள்ளை தாமசு</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர், கிறித்தவ சமயத்தவர்; பிறமொழிக்கும் தமிழ் மொழிக்குமான இருமொழி அகராதி இயற்றும் முயற்சி மேற்கொண்டவர். ‘இந்துத்தானும் தமிழுமான சொன்மாலை’ என்னும் நூலினைச் செய்துள்ளார். கி.பி. 1878–இல் வெளியான இந்நூல், தமிழிலமைந்துள்ள இருமொழி அகராதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. {{larger|<b>அந்தோனினசு பயசு</b>}} (கி.பி. 86–161) உரோமானியப் பேரரசர்களுன் ஒருவர். இவர் கி.பி.138 முதல் 161 வரை பேரரசராக இருந்தவர்; நேர்மைக்கும் மென்மைக்கும் பெயர் பெற்றவர்; உரோமானிய வரலாற்றில் அந்தோனினசு பயசு (Antoninus Pius) ஆட்சிக் காலத்தை அமைதிக்காலம் என்று கூறுவர். அந்தோனினசின் பதவிப் பெயர் டைடசு ஏலியசு அந்தோனினசு என்பதாம். இவர் செல்வமும் செல்வாக்கும் மிக்கதோர் குடும்பத்தில் பிறந்தார். பேரரசராவதற்கு முன்னர் இவர் இத்தாலியில் மேல் முறையீடுகள் நீதிமன்றத்தை நிருவகித்து வந்தார். மேற்கு ஆசியா மைனரில் ஆசியாவின் ஆளுநராகப் பணியாற்றி வந்தார். சட்டத்துறையில் இவருக்கு இருந்த அனுபவம், செல்வம், புகழ், செனட்டு அவையில் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 379 |bSize = 480 |cWidth = 124 |cHeight = 171 |oTop = 120 |oLeft = 272 |Location = center |Description = }} {{center|அந்தோனினசு பயசு}} இவருக்கிருந்த செல்வாக்கு ஆகியவற்றைக் கருத்திற் கொண்ட பேரரசர் ஆட்ரியன் (Hadrian), அந்தோனினசைத் தமக்கு அடுத்த பேரரசராகத் தேர்ந்தெடுத்தார். அந்தோனினசு பயசு வடபிரிட்டனில் அந்தோனைன் சுவரைக் கட்டினார். {{larger|<b>அந்தோனைன் சுவர்</b>}} உரோமானிய ஆட்சியின்போது இங்கிலாந்தில் கி.பி. 140–ஆம் ஆண்டின் அந்தோனினசு பயசு (Antoninus Pius) என்பவரால் கட்டப் பெற்றது. அந்தோனினசு கட்டியதால் இப்பெயர் பெற்றது. இச்சுவர் மண்கட்டிகளால் கட்டப்பட்டது. இச்சுவரின் அழிவுச்சின்னங்கள் போர்த்துக் கழிமுகத்திலிருந்து கிளைடு (Clyde) ஆற்றுக் கழிமுகம் வரை நீண்டு செல்கின்றதை இன்றும் காணலாம். {{larger|<b>அநந்த கவிராயர்{{sup|1}}</b>}} கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இப்புலவர் சேது நாட்டில் இரகுநாத சேதுபதியின் அவைக்களப் புலவராக விளங்கினார். இவர் அவ்வரசர்மேல் ஒருதுறைக் கோவை பாடிய பொன்னாங்கால் அமிர்த கவிராயருக்கு உறவினராவார். இவ்விருவரும் சேதுபதி முன்னர் விரைந்து வண்ணம் பாடுவதில் போட்டியிட்டனர். அப்போட்டியில் அநந்த கவிராயர் தோல்வியடைந்தார். அதனால் போட்டி ஒப்பந்தப்படி அமிர்தகவிராயர், அநந்த கவிராயரின் காதினை அறுக்கச் சென்றார். அப்போது அநந்த கவிராயர்,<noinclude></noinclude> a3i7pr1q6aniozz80bz1i8raynkq73r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/380 250 620397 1840108 2025-07-07T16:56:14Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அநந்தனுக்குக் காது இருந்தால் தானே அறுக்க முடியும் என்று நயம்பட உரைத்தார். இந்நயமிக்க பேச்சைக் கேட்டு மகிழ்ந்த சேதுபதி மன்னர், அநந்த கவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநந்த கிருட்டிண ஐயங்கார்|344|அநந்த பாரதி ஐயங்கார்}}</noinclude>அநந்தனுக்குக் காது இருந்தால் தானே அறுக்க முடியும் என்று நயம்பட உரைத்தார். இந்நயமிக்க பேச்சைக் கேட்டு மகிழ்ந்த சேதுபதி மன்னர், அநந்த கவிராயருக்குச் சிறப்புச் செய்தார் என்ற செய்தி கூறப்படுகிறது. இரகுநாத சேதுபதி மன்னரை அருந்த கவிராயர் பல பாடல்கள் பாடிப் பாராட்டியுள்ளார். அதற்காகச் சேதுபதி மன்னர் மானூர் என்ற ஊரைப் பரிசாக அளித்தார். அப்போது அநந்த கவிராயர் ‘அரசர் பல கலைகளையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு மானைத் தந்துள்ளார்’ என்று சிலேடையாகக் கூறக்கேட்ட அரசர் மனமகிழ்ந்து, மானோடு கலையினையும் தருகிறேன் என்று கூறிக் சுலையூரையும் பரிசாக வழங்கினார் என்பர். {{larger|<b>அநந்த கவிராயர்{{sup|2}}</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவருடைய வேறு பெயர் அநந்ததேவன். பொன்னாங்கால் அமிர்த கவிராயரின் உறவினராகிய அநந்த கவிராயர் இவரினும் வேறானவர். இருவரும் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்தவராவர். இவர் உத்தர ராமாயண நாடகம், மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூல்களை எழுதியுள்ளார். உத்தர ராமாயண நாடகம், கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் கோயில் சிங்கார மண்டபத்தில் கி.பி. 1810–இல் அரங்கேற்றப் பெற்றது. {{larger|<b>அநந்த கிருட்டிண ஐயங்கார்</b>}} (19–நூ) திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள தென் திருப்பேரையில் வாழ்ந்த ஒரு புலவர்; வைணவ அந்தணர். பெற்றோர் சீனிவாச ஐயங்கார், குழைக்காத நாச்சியார் ஆவர். தந்தையும் ஒரு கவிஞர், விரைந்து கவிபாடும் வல்லமை பெற்றிருந்தமையால் அபிநவ காளமேகம் என்றும் அபிநவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்றும் பாராட்டப் பெற்றார். இவர் வடமொழி தென்மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்தார். வானமாமலை மடத்துப் பரமகம் சேத்தியாதி சின்னக்கவியன் இராமானுச சீயர் சுவாமிகள் இவரைத் தம் அவைப்புலவராக ஆக்கிக் கொண்டார். தனிப்பா மஞ்சரி, மகுடதாரண வைபவ வெண்பாமாலை, திருவரங்கச் சிலேடை மாலை, திருப்பேரைக் கலம்பகம், கண்ணன் கிளிக்கண்ணி, பத்மநாப சுவாமி சந்திரன் பாமாலை, வேள்வி விளக்கமாலை, திவ்வியதேசப் பாமாலை, மணவாள மாமுனி ஊசல் திருநாமம், நீதிவெண்பா நாற்பது, கற்பக விநாயகர் பதிகம், வேண்டும் நீதி ஆகியன இவர் எழுதிய நூல்களாகும். தனிப்பா மஞ்சரி, இவர் இயற்றிய தனிப் பாடல்களின் தொகுப்பாகும். மகுடதாரண வைபவ வெண்பாமாலை, அப்போது இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசர் 5-ஆம் சார்சு மாமன்னர் தில்லியில் முடிசூட்டிக் கொண்ட சிறப்பைக் கூறுவதாகும்.{{float_right|த.கு.மு.}} {{larger|<b>அநந்த நாத நயினார்</b>}} கி.பி. 20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் ‘திருக்குறள் ஆராய்ச்சியும் சைனசமய சித்தாந்த விளக்கமும்’ என்னும் நூலினை எழுதியுள்ளார். இந்நூலுக்குத் திரு.வி. கல்யாணசுந்தரனார் அணிந்துரை நல்கியுள்ளார். அவ்வணிந்துரையில் சமண சமயத்திற்கும் சைவ சமயத்திற்கும் உள்ள ஒற்றுமையினை விளக்கியுள்ளார். பிற சமயக் கொள்கைகளைத் திருக்குறள் கருத்துகளோடு ஒப்பிட்டு ஆராயும் முயற்சியில் உருவாகும் தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்றாகும். {{larger|<b>அநந்த பாரதி ஐயங்கார்</b>}} (கி.பி. 1786–1846) தஞ்சை மாவட்ட உமையாள்புரத்தில் தோன்றிய கவிஞர். தாய் இலட்சமி; தந்தை சீனிவாச ஐயங்கார். இவர் தம் 13–ஆம் வயதில் தம்மூரிலுள்ள யானை மேலழகர்மீது ‘யானைமேலழகர் நொண்டிச் சிந்து’ பாடியுள்ளார்; திருக்கோயிலில் கணக்கர், தலைமைக் கணக்கர் (சம்பிரதி) ஆகிய தொழில் செய்து வந்தார்; திருவள்ளூரில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருவிடை மருதூர் இறைவன் மீது இவர் இயற்றிய நாடகத்தைக் கண்டு வியந்த அக்கோயில் அறங்காவலர் ஐயாறப்பத் தம்பிரான் இவருக்குக் ‘கவிராச சாமி’ என்று பட்டமளித்து. ஒரு வீடும் தோட்டமும் பரிசாக வழங்கினார். இவர் வைணவராயினும் சமயவேறுபாடின்றிச் சைவசமயத் தெய்வங்களைப் பாடியுள்ளார். சீர்காழி அருணாசலக் கவிராயர் பாடாதுவிட்ட உத்தரகாண்டத்தை ‘உத்தர ராமாயணக் கீர்த்தனை’ என்னும் பெயரில் பாடினார். {{larger|<b>இவர் நூல்கள்:</b>}} யானை மேலழகர் நொண்டிச் சிந்து, உத்தரராமாயணக் கீர்த்தனை, பாகவத தசமசுகந்த நாடகம், மருதூர் வெண்பா, முப்பால் திரட்டு, இடபவாகனக் கீர்த்தனை, கல்லணை வைபவக் கீர்த்தனை, திருவிடைமருதூர் நொண்டி நாடகம், வேதாந்த தேசிகர் கீர்த்தனை ஆகியவையாம், திருக்குடந்தைக் கும்பேசுவரசாமி மீது பாடிய இடபவாகன சேவைக்கீர்த்தனையையும், மத்தியார்ச்சுனம் பெருநலமாமுலை அம்மன்மீது பாடிய இடபவாகன சேவைக்கீர்த்தனையையும், மத்தியார்ச்சுனம் மருதீசர் மீது பாடிய இடபவாகன சேவைக்கீர்த்தனையையும் தொகுத்துக் ‘கீர்த்தனைக் கொத்து’ என்னும் பெயரில் வெளியிட்டார். இவர் தேசிகப் பிரபந்தம் என்னும் நூலையும் செய்துள்ளார்.{{float_right|த.கு.மு.}} {{nop}}<noinclude></noinclude> tlcw1tw9vf23d8xfe4xj7kpsf1kjpzk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/258 250 620398 1840180 2025-07-08T03:50:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்து உட்பட. இந்நாடுகளிலெல்லாம் பயன்படுத்தப்படும் மொழி வகைகளை வட்டார வழக்குகள் என்றும், ‘..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கில மொழி|234|ஆங்கிலோ-சாக்சானியர்கள்}}</noinclude>களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்து உட்பட. இந்நாடுகளிலெல்லாம் பயன்படுத்தப்படும் மொழி வகைகளை வட்டார வழக்குகள் என்றும், ‘ஆங்கிலம்’ என்ற சொல் ஓர் இலட்சிய மொழி என்றும் கூறுவோரும் உளர். இது ஒரு ஆய்வுக்குரிய கருந்தென்றாலும், இங்கிலாத்தில் ஆங்கிலேயர்களால் பேசப்படும் ஆங்கில மொழிதான் மற்றெல்லா ஆங்கில மொழி வழக்குகளைவிடச் சிறந்தது என்று கூற முடியாது. இந்திய ஆங்கிலம் (Indo-English) உட்பட, இவ்வகைகளெல்லாம் இங்கிலாத்தில் பேசப்படும், எழுதப்படும் ஆங்கிலத்திலிருந்து மாறுபடும் முறையில் சில சிறப்புக் கூறுகளை உடையவை. குறிப்பாக, அமெரிக்காவில் பயிலும் மொழி எழுதும் முறையிலும் உச்சரிப்பிலும் இலக்கிய வளத்திலும் தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஆங்கிலம் (American English) என்று சொல்லப்படும். அம்மொழியில் எழுதும் முறைக்கும் பேசும் முறைக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாகப் பயன்படுத்தும் முறை இப்பொழுது அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்கும் பரவிவிட்டது. ‘Research’ என்ற சொல்லை இதற்குச் சான்றாகக் கூறலாம். அமெரிக்கர் பொதுவாக எல்லாத் துறைகளிலும் ஆய்வு நோக்கைக் கடைப்பிடிப்பவர்களாயிருப்பதாலும், அந்நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலிய அறிஞர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் ஆகியோருள் பலர் ஐரோப்பாவிலிருந்து இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் பின்பும் குடிபெயர்ந்தவர்களாக இருப்பதாலும், அமெரிக்க ஆங்கிலம் புதிய சொற்களையும் சொற்றொடர்களையும் உண்டாக்குவதன் வாயிலாக மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. பொதுவாக, ஒருவருக்கு ஆங்கில மொழியில் நல்ல பயிற்சியிருந்தால், அறிவியல் உலகத்திலும் இலக்கிய உலகத்திலும் பரந்து காணப்படும் கருத்துகளை எளிதில் புரிந்து கொள்ளலாம். அதனால், இந்திய நாட்டைப் பொறுத்தவரை, ஆங்கிலம் வெளி உலகத்தின் நுழைவாயில் என்று வருணிக்கப்படுகிறது.{{Right|வி.ச.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Otto Jespersen,</b> Growth and Structure of the English Language, Oxford, 1969.<br> <b>Henry Bradley,</b> The Making of English, Macmillan, 1965.<br> <b>Simeon Potter,</b> Our Language, Penguin, 1976. C.L. Wrenn, The English, Language. Vikas, 1976.<br> <b>Albert C. Baugh,</b> A History of the English Language, Allied Publishers, 1977. <b>ஆங்கிலோ சாக்சானியர்கள்</b> நார்மானியர் இங்கிலாத்திற்கு வரும் முன்னர் அந்நாட்டில் குடியேறியவர்கள். இவர்களுக்குச் செருமானியத் தொடர்புண்டு. இவர்களையே ஆங்கிலோ-சாக்சானியர் (Anglo Saxons) என்பர். இவர்கள் இங்கிலாந்தில் கி.பி. 400-க்கும் 500-க்கும் இடைப்பட்ட காலத்தில் குடியேறினவர்கள். அவ்வாறு குடியேறிய இனங்கள் மூன்று. அவை 1. ஆங்கில்கள் (Angles), 2. சாக்சானியர்கள், 3. சூட்டுகள் (Jutes) என்பனவாம். ஒர்ட்டிசர்ன் என்னும் பிரிட்டானிய அரசர் கி.பி. 449 ஆம் ஆண்டில், செருமானிய இனங்களை, இங்கிலாந்துக்குப் படையெடுத்து வந்த பிக்டுகள் (Picts), இசுகாட்டுகள் (Scots) போன்றோரை விரட்டியடிக்கத் தமக்கு உதவும்படி வேண்டினார், உதவ வந்தபோது அவர்களுக்கிடையே சச்சரவுகள் எழுந்தன. எனவே, சொந்தக்காரராயிருந்த பிரிட்டானியர்களைச் (Britons) செருமானிய இனமக்கள் விரட்டியடிக்கத் தொடங்கினர். ஆங்கில்கள் (Angles). சாக்சானியர்கள், சூட்டுகள் (Jutes) ஆகியோர், கி.பி. 500 ஆம் ஆண்டு முடிவில், இங்கிலாந்தின் பெரும் பகுதிகளை வேல்சு. இசுகாட்லாந்து எல்லை கைப்பற்றிக் கொண்டனர். ஆங்கில்கள் தங்கின நிலமானபடியால் அந்நாடு இங்கிலாந்து எனப்பட்டது. இங்கிலாந்தில் ஆங்கிலோ-சாக்சானிய அரசுகளுள் சிறப்பானவை ஏழாகும். அவை 1. நார்த்தம்பிரியா (Northumbria), 2. மெர்சியா (Mercia), 3. கிழக்கு ஆங்கிலியா (East Anglia ), 4. எசக்சு (Essex), 5 சசெக்சு (Sussex), 6. கெண்ட்டு (Kent), 7. வெசெக்சு (Wessex) என்பனவாம். அவற்றை ‘எப்டார்க்கி’ (Heptarchy) என்பர். ‘எப்டார்க்கி’ என்பது ஏழு அரசுகளின் அமைப்பு எனப் பொருள்படும். வெசெக்சின் அரசரான எக்பர்டு என்பார் கி.பி. 829-ஆம் ஆண்டளவில் ஏனைய அரசுகளை வென்று. பிரிட்டானியத் தீவுகளில் அரசியல் ஒற்றுமையை நிலைநாட்டும் முதல் முயற்சியை மேற்கொண்டார். வெசெக்சின் புகழ்பெற்ற அரசரான மகா ஆல்பிரடு. தேனியப் (Danish) படையெடுப்பாளர்களைக் கி.பி. 878-ஆம் ஆண்டில் தோற்கடித்தார். இங்கிலாந்தில் அமைதியை நிலைநாட்டி ஒற்றுமை ஏற்படுத்திய பணி ஆல்பிரட்டின் சீரிய செயலாகும். அவர் வழித்தோன்றல்கள்தாம் முதன் முதலாகத் தங்களைப் பிரிட்டன் முழுமைக்கும் அரசர்கள் என்ற பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டவர்கள். ஆங்கிலோ சாக்சானியர்கள் ஆங்கில மொழிக்கு அதன் இலக்கணத்தையும் ஆயிரக்கணக்கான சொற்களையும் வழங்கிப் பேருதவி செய்தார்கள்.<noinclude></noinclude> 7v8w91gal8b34uvwuz9lvtsjqmbblla பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/259 250 620399 1840190 2025-07-08T04:04:32Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இச்சொற்கள் வட இங்கிலாந்து சொல் வழக்கிலிருந்து பிறந்திருக்க வேண்டும் என்று சிலர் கருதுவர். தென் இங்கிலாந்தின் சொல் வழக்கிலிருந்துதான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|235|ஆங்கோர் தோம்}}</noinclude>இச்சொற்கள் வட இங்கிலாந்து சொல் வழக்கிலிருந்து பிறந்திருக்க வேண்டும் என்று சிலர் கருதுவர். தென் இங்கிலாந்தின் சொல் வழக்கிலிருந்துதான் இங்கிலாந்தில், ஆங்கிலோ-சாக்சானிய இலக்கிய மொழி வளர்ந்திருக்க வேண்டும். கவிதைகளை எழுத அச்சொல் வழக்கு மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது. <b>ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்</b> இங்கிலாந்தின் சட்டத்திற்கு அடிகோலியவை. இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சானியரின் சட்டங்கள், நார்மானியரின் ஆட்சிக்கு முன்னர் இங்கிலாந்தில் நடைமுறையிலிருந்த சட்டங்கள் எனலாம். இச்சட்டங்களின் சிறப்புத் தன்மை என்னவெனில், ஏனைய நாடுகளின் ஆதிக்கம் இங்கிலாந்திற்கு வருவதற்கு முன்னரே வந்தமையால், அவற்றின் செல்வாக்கினைக் காண இயலாமையாகும். மற்றொரு சிறப்புத் தன்மை இவ்வாங்கிலோ-சாக்சானியச் சட்டங்கள் ஆங்கில மொழியில் எழுதப்பெற்றவையாம். ஐரோப்பியச் சட்டங்கள் அனைத்தும் இலத்தீன் மொழியில் எழுதப்பெற்றவை. ஆங்கிலோ-சாக்சானியச் சட்டங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாம் வகை, மரபு முறைகளை விளக்கும் விதிகள். இரண்டாம் வகை அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பெற்ற சட்டங்கள். மூன்றாம் வகை சட்டத் தொகுப்புகள், இச்சட்டங்கள் சமூகத்தின் பொது அமைதியைப் பேணிக்காக்கும் வண்ணம் உருவாக்கப்பெற்றவை. தத்தை, பெருமகன், ஆண்டான் முதலியவர்கள் பயன்படுத்திய உரிமைகள் இச்சட்டத்தில் இருந்தன. எனினும் அவர்களின் உரிமைகளை விட மன்னரின் ஆட்சி சிறப்புடையது என்ற உணர்வால்தான், நாட்டில் அமைதி நிலவும் என்று அவர்கள் நம்பினர். தனிப்பட்ட மனிதனின் பாதுகாப்புரிமை. சொத்துரிமை, திருமணம், வாரிசுரிமை போன்றவையும் ஆங்கிலோ சாக்சானியச் சட்டங்களால் கட்டுப்படுத்தப்பெற்றன. நிலமானியத் திட்டம் பொதுவாக ஐரோப்பாவிலும் பின்னர் இங்கிலாந்திலும் செயற்பட்டபோது, ஆங்கிலோ-சாக்சன் சட்டங்கள், மாற்றியமைக்கப்பெற்று நிலமானிய முறைச் சமூக ஏற்பாட்டையொட்டித் திருத்தப்பெற்றன. இவை கி.பி. 10. 11-ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மாறுதல்கள். <b>ஆங்கோர் தோம்</b> கம்போடியா நாட்டின் சிறப்பு வாய்ந்த தொன்மையான நகரம். ஏழாம் சயவர்மன் (கி.பி. 1181-1219) என்னும் கெமர் மரபு மன்னன் இந்நகரைத் தலைநகரமாக அமைத்தான். இம்மன்னன் எதிரிகளின் தாக்குதலுக்கு அசையாத ஒரு தலைநகரை உருவாக்க விரும்பி இதை அமைத்தான். இத்தலைநகரைத்தன் மேற்பார்வையிலேயே அமைக்க விரும்பினான். அதற்காக இந்நகரின் வா கிழக்கே ‘நகர சயசிரி’ என்ற இடைக்காலத் தலைநகரத்தை அமைத்துக் கொண்டான். கம்போடிய நாகரிகத்தினை எடுத்துக்காட்டும் சின்னமாக ஆங்கோர் தோம் தோற்றமளிக்கிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 259 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 190 |oTop = 70 |oLeft = 180 |Location = center |Description = }} {{center|ஆங்கோர் தோம் கோயில்}} ஆங்கோர் தோம் சதுர வடிவில் அமைந்த நகரம். நகரத்தைச் சுற்றி எட்டுக் கல் சுற்றளவுள்ள ஓர் அகன்ற அகழி வெட்டப்பட்டுள்ளது. அகழியைச் சுற்றி உறுதியான கற்சுவரும். ஒவ்வொரு பக்கமும் அகழியைக் கடக்கும் பாதைகளும் உண்டு. பாதைகளின் இருபுறமும் நல்லபாம்புகளைத் தங்கள் மடியில் தாங்கி நிற்கும் குட்டையான பூதவடிவச் சிலைகள் உள்ளன. தென்கிழக்கு மூலையில் அமைந்த நுழைவாயில் நேரே அரண்மனையில் கொண்டு போய் விடும். ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு கோபுரம் உண்டு. கோபுரங்களின் மூன்று புறங்களிலும் மகாயான போதி சத்வா லோகேசுவராவின் தோற்றத்தோடு கூடிய ஏழாம் சயவர்மனின் முகங்கள் காட்சியளிக்கின்றன. அகழியைக் கடந்து நகரத்திற்குள் செல்லும் நான்கு பாதைகளும் நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த பயான் (Bayon) கோயிலைச் சென்றடையும். கெமர்களால் அமைக்கப்பட்ட சின்னங்களில் மிகவும் புதுமையானது இந்தப் பயான் கோயில். இக்கோயில் கூம்பு வடிவமுள்ளது. கோயிலின் மத்தியில் நான்கு முகங்கள் கொண்ட தங்கக் கோபுரம் அமைந்துள்ளது.<noinclude></noinclude> lyr37ediji98xruya7x8ep4sznjkrc9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/260 250 620400 1840202 2025-07-08T04:25:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அதனைச் சுற்றிலும் நான்கு முகங்கள் கொண்ட ஐம்பது கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோபுரங்களில் காணப்பட்ட முகங்கள் அனைத்துமே லோகேச்வர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆங்கோர் வாட்டு|236|ஆங்-சௌ}}</noinclude>அதனைச் சுற்றிலும் நான்கு முகங்கள் கொண்ட ஐம்பது கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோபுரங்களில் காணப்பட்ட முகங்கள் அனைத்துமே லோகேச்வராவின் தோற்றத்தோடு கூடிய ஏழாம் சயவர்மனின் முகந்தான். கோயிலின் படிக்கட்டுச் சுவர்களிலெல்லாம் தெய்வீக உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயில்தான் கெமர்களின் சிறப்பு மிக்க கட்டிடக் கலைப் பண்பினை வெளிப்படுத்துகிறது. இப்பொழுது இக்கோயில் பாழடைந்த நிலையில் தோற்றமளிக்கிறது. ஆங்கோர் தோமில் அமைந்த மற்றொரு முதன்மையான கட்டிடம் அரண்மனையாகும். இந்த அரண்மனையின் யானைத்தள மட்டங்களும், படிக்கட்டுகளின் அடிப்பாகங்களுத்தாம் இப்பொழுது காணப்படுகின்றன. பெரும்பாலும் மரத்தால் கட்டப்பட்டதால் பெரும்பகுதி அழித்துவிட்டது. அரண்மனை வாசலுக்கெதிரே தூதர்கள் தங்குவதற்கும், மேற்பார்வை செய்ய வரும் அரசு ஊழியர்கள் தங்குவதற்கும் பெருமளவில் வரிசையாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆங்கோர் தோமை அமைத்த ஏழாம் சயவர்மன் மகாயான புத்த மதத்தைப் பேணி வளர்த்தான்.{{Right|கி.பி.}} <b>ஆங்கோர் வாட்டு</b> கம்போடியா என்னும் நாட்டிலுள்ள ஆங்கோர் என்ற இடத்தில் காணப்படும் மிகப்பழைய திருமால் கோயிலாகும். இந்தியக் கலைப் பாணியையும் கம்போடியக் கலைப்பாணியையும் இணைத்து உருவாக்கிய சிறந்த படைப்பு ஆங்கோர் வாட்டு (Angkor. Vat) திருமால் கோயில். இக்கோயிலைக் கட்டியவர் இரண்டாம் சூரியவர்மன் (கி.மு. 1113-1150) என்ற கம்போடிய மன்னர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 260 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 120 |oTop = 280 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|ஆங்கோர் வாட்டுக் கோயில்}} தேவேந்திரனே பூவுலகிற்கு வந்து இக்கோயிலை அமைத்தான் என்பது வழக்காறாகும். ஆனால். இக்கோயிலைத் தனது கல்லறையாகக் கொள்ள எண்ணியே சூரியவர்மன் கட்டினான் என்றும் குறிப்பர். இக்கோயில் நீள் சதுர அமைப்புடையது. இதனைச் சுற்றி 1000X830 மீ. நீள அகலங்களில் ஒரு மதிற்சுவர் உண்டு. இம்மதிலைச் சுற்றி 200 மீ. அகலமுள்ள நீர் நிறைந்த அகழி ஒன்றும் உண்டு. அகழியைக் கடந்து கோயிலுக்குள் செல்வதற்குப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்குப் புறத்தில் மண்ணாலும் கல்லாலும் அகழியின் குறுக்கே கட்டப்பட்ட பாதை, கோயிலின் மத்திய நுழைவாயில் வரை செல்லும், இவ்வாயிலின் இரு புறமும் யானைகள் செல்வதற்காக வழிகள் அமைந்துள்ளன. இந்நுழைவாயில் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூன்று அழகிய கோபுரங்கள் நுழைவாயிலை அணி செய்கின்றன. கோயிலின் உட்புறத்தின் முற்பகுதியில் சற்றே உயர்ந்திருந்த நாகப்பாம்பு வடிவக் கைப்பிடிச்சுவர்களும், நடைபாதைத் தளங்களும் கொண்ட 450 மீ. நீளமுள்ள பாதை ஒன்று உள்ளே செல்கிறது. பாதையின் இரு புறங்களிலும் மதகுருவின் இருப்பிடமும் நூலகமும் அமைந்துள்ளன. இக்கோயில், மூன்று நீண்ட சதுர நுழைமாடங்களையும், நடுவில் 70 மீ. உயரமுள்ள கோபுரத்தையும், அதனைச் சுற்றித் தாமரை மொட்டு வடிவத்தில் அமைக்கப்பட்ட பல சிறுசிறு கோபுரங்களையும் கொண்டுள்ளது. இவை அனைத்தும் தங்கப் பூச்சுடன் மிளிர்கின்றன. பாழடைந்த நிலையிலும் இக்கோயில் எடுப்பான தோற்றமளித்துக் கொண்டிருக்கிறது. நுழைமாடங்களின் சுவர்களின் உட்புறத்தில் திருமாலின் முக்கிய அவதாரங்களாகிய இராமாவதாரம், கிருட்டிணாவதாரம் பற்றிய காட்சிகள் முழு வடிவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர சைவசமயக் கதைகள், கம்போடிய மக்களின் அன்றாட வாழ்க்கை, படைகள் போர்க்களம் செல்லுதல், மன்னனின் ஊர்வலம். கைத்தொழிலாளர்கள் வேலை செய்தல் உழவுத்தொழில் செய்தல், கம்போடியா நாட்டு மரம். செடி கொடி வகைகள். மிருகங்கள் ஆகியவைகளும் செதுக்கப்பட்டிருக்கின்றன. கோயிலின் மையத்தில் பொன்னால் செய்யப்பட்ட திருமால் படிமம் கருட வாகனத்தில் காட்சியளிக்கிறது. விழாக்காலங்ககளில் மட்டும் அச்சிலை கருப்பக்கிரகத்திலிருந்து வெளியே வைக்கப்படும். மன்னரின் கல்லறையாக வகுக்கப்பட்ட இக்கோயிலில் மன்னரே திருமாலின் அவதாரமாகக் கருதப்பட்டார். திருமால் இருந்த இடத்தில் தேவராசா என்னும் வழிபாட்டு முறை புகுத்தப்பட்டது.{{Right|கி.பி.}} <b>ஆங்-செள</b> சீன நாட்டின் சீகியாங்கு மாநிலத் தலைநகரும் சுற்றுலா மையமுமாகும். இது சாங்கை<noinclude></noinclude> 5zmht00ejwozmwl83wfy36srs69bm4o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/261 250 620401 1840212 2025-07-08T04:40:58Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நகருக்குத் தென்மேற்கில் 160 கிலோ மீட்டர் தொலைவில் விரிகுடாவொன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள அழகான இசி ஏரியைக் (Hsi Lake) காணப்பெரும் எண்ணிக்கை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆசம்|237|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்}}</noinclude>நகருக்குத் தென்மேற்கில் 160 கிலோ மீட்டர் தொலைவில் விரிகுடாவொன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள அழகான இசி ஏரியைக் (Hsi Lake) காணப்பெரும் எண்ணிக்கையில் பயணிகள் வருகின்றனர். ஏரிக்கரையொட்டிய இடங்களிலும், ஏரிக்குள் இருக்கும் நான்கு சிறு தீவுகளிலும் பல தோட்டங்களும் சிலைகளும், கோவில்களும் அமைந்துள்ளன, இப்பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில், இரசாயனப் பொருள்கள், எலக்ட்ரானிக் கருவிகள், இரும்பு-உருக்குப் பொருள்கள், பட்டுப் போன்றவை உற்பத்தியாகின்றன. மீன்பிடிக்கும் சிற்றூராக இருந்த ஆங்-சௌ (Hong-Chow) கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாணிக மையமாய் விளங்கியது. பின்னர்க் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சுங்மரபைச் சார்ந்த பேரரசர்களின் தலைநகரமாயிற்று. இது உலகில் சிறந்த நகரங்களுள் ஒன்றாக கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திகழ்ந்தது. தைபிங் கலகத்தில் (கி.பி. 1850-1864) இந்நகர் அழிவுற்றது; பின்னர்த் திரும்பவும் புதுபிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் பெரும் போர் முடிவு வரை (1937-1945) இந்நகரம் சப்பானியர் வசமிருந்தது. சீனப் பொதுவுடைமைக் கட்சி 1949-இல் இந்நாட்டை வென்றபின், ஆங் சௌவின் தொழிற்சாலைகள் சீராகப் பெருகி வளர்ச்சியுற்றன, இந்நகரத்தின் மக்கள் தொகையைத் திட்டவட்டமாகக் கூற இயலவில்வை. மக்கள் தொகை மூன்று இலட்சத்திலிருந்து பத்து இலட்சம் வரை இருக்கக் கூடும் என்று கருதுகிறார்கள். <b>ஆசம்</b> மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் பிள்ளைகளுள் ஒருவர். வாரிசுரிமைப் போரின்போது இவர் அண்ணன் மூவாசம் என்னும் இளவரசரோடு போட்டியிட்டதில் ஆசம் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இவரது பிறந்த நாளைத் திட்டவட்டமாகக் கூற இயலவில்லை. <b>ஆசன் சேக் நிசாமுதீன்</b> பாரசீகக் கவிஞர், இவருக்கு ஆசன்-இ-தெகல்வி என்னும் புனை பெயருமுண்டு. தில்லி சுல்தானிய அரசர் அலாவுதீன் கில்சி (கி.பி. 1296-1326)யின் காலத்தில் வாழ்ந்தவர் இவர். <b>ஆசாத்து, சந்திரசேகர (1906-1931)</b> இந்தியப் புரட்சிவாதத் தியாகி. இவர் கி.பி. 1906-ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 23-ஆம் நாள் மத்திய பிரதேச மாநிலம் சாபுவா (Jhabua) மாவட்டத்தில் போரா (Bhora) என்னும் ஊரில் பிறந்தார். ஆசாத்து என்னும் சொல்லுக்குச் சுதந்திரம் என்பது பொருள். பெயரில் அமைந்த பொருளுக்கேற்ப இவர் சிந்தனையிலும் செயலிலும் சுதந்திரமானவராகவே விளங்கினார். புரட்சிவாதியாக மாணவப் பருவத்திலேயே திகழ்ந்த இவர், 1921-ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குற்றுத் தம் பதினான்காம் வயதிலேயே சிறை செய்யப் பெற்றார். விடுதலையானவுடன், 1922-இல் இந்தியப் புரட்சிவாதக் கட்சியிலும் இந்துக் தானச்சமதருமக் குடியரசுப் படையிலும் சேர்ந்தார். பகத்சிங்கு, இராசகுரு, முதலிய புரட்சிவாதிகளுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அரசியல் கொள்கைகளில் தீவிரப் பங்கு கொண்ட இவர், கக்கோரி மெயில் வண்டியை நிறுத்திக் காவல் துறைத் துணைத் கண்காணிப்பாளரான சே.பி. சாண்டர்க என்பாரைச் சுட்டுக்கொன்றார். மத்திய சட்டமன்றத்தின் மீது 1929-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 8-ஆம் நாள் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு குண்டு வீசியதற்கு இவர் காரணமாயிருந்தார். இவரைப் பிடிக்க உளவு சொல்கிறவர்க்கு உரூ. 30,000 அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் என்ற காவல் துறையினரின் ஆணைக்குப் பின்னரும், இவர் காவல் துறையினரை ஏமாற்றி வெற்றியுடன் பல்லாண்டுகள் தப்பி வந்தார். நண்பன் ஒருவனால் ஆசாத்து 1931-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 27- ஆம் நாள் அலகாபாத்து ஆல்பிரடு பூங்காவில் காட்டிக் கொடுக்கப்பட்டுத் துப்பாக்கிக் சூட்டில் மாண்டார். சந்திர சேகர ஆசாத்து பயன்படுத்திய, அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த துப்பாக்கியை அலகாபாத்து அருங்காட்சியகத்தில் இன்றும் காணலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 261 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 160 |oTop = 25 |oLeft = 200 |Location = center |Description = }} {{center|சந்திரசேகர ஆராத்து}} <b>ஆசாத்து, மௌலானா அபுல்கலாம் (கி.பி. 1888-1958)</b> சிறந்த தேசபந்தர்; அறிஞர்: இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளின்<noinclude></noinclude> 064svqly9x39grg0gyna6r1avg1dixy பேச்சு:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் 1 620402 1840263 2025-07-08T05:54:36Z Info-farmer 232 பங்களித்தோர்புள்ளிவிவரங்கள் இணைப்பு 1840263 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரங்கள் == * இந்நூலின் மெய்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் - https://quarry.wmcloud.org/query/95292 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:54, 8 சூலை 2025 (UTC) 8iiy3w7k09d2sibi9jg3pn86jfib8fm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/381 250 620403 1840311 2025-07-08T07:30:38Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>அநந்தராமையர், இ.வை., (20. நூ.)</b>}} தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இடையாற்று மங்கலத்தில் தோன்றி விளங்கிய ஒரு புலவர். பெற்றோர் தையலம்மாள், வைத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநந்தராமையர், இ.வை.|345|அநிருத்தன்{{sup|1}}}}</noinclude>{{larger|<b>அநந்தராமையர், இ.வை., (20. நூ.)</b>}} தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இடையாற்று மங்கலத்தில் தோன்றி விளங்கிய ஒரு புலவர். பெற்றோர் தையலம்மாள், வைத்தீசுவர ஐயர் ஆவர். இளமையில் இவரைக் கல்வி கற்க அனுப்பாத தந்தையார், மருத்துவர் ஒருவரின் சொற்படி பின்னர் முறையாகக் கல்வி கற்க உதவி செய்தார். இவர், தமிழ் வடமொழிகளில் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளி, மயிலை பி.எசு. உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும் தமிழாசிரியராக விளங்கினார். பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் பணிசெய்தார். தமிழ் பேரகராதி ஆசிரியர் குழுவிலும் இவர் உறுப்பினராக இருந்தார். இவர் கவிஞராகவும் விளங்கிப் பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். வீரவன புராணத்தின் சிறப்புப்பாயிரம் இவர் செய்ததாகும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 381 |bSize = 480 |cWidth = 117 |cHeight = 176 |oTop = 230 |oLeft = 51 |Location = center |Description = }} {{center|அநந்தராமையர், இ.வை.}} இவர் சிறந்த பதிப்பாசிரியர். அக்காலத்தில் உ.வே.சா. பதிப்புப் பணிகளுக்கு இவர் துணையாக இருந்துள்ளார். கலித்தொகையை அதன் நச்சினார்க்கினியர் உரையோடு ஆராய்ந்து தம் அரிய குறிப்புகளுடன் பதிப்பித்துள்ளார். அருஞ்சொற்பொருள், ஒப்புமைப் பகுதி, சொற்குறிப்பு அகராதி போன்றவற்றால் இப்பதிப்பு ஆய்வாளர்க்குப் பயன்படும் சிறந்த பதிப்பாகத் திகழ்கிறது. களவழி நாற்பது, கைந்நிலை, ஐந்திணை எழுபது, ஏம்பல் முத்தையாசாமி பிள்ளைத் தமிழ் என்னும் நூல்களைப் பதிப்பித்துள்ளார். {{larger|<b>அநாகத நாதம் - ஆகத நாதம்:</b>}} கருநாடக இசையில் ஒலி அநாகத நாதம் என்றும் ஆகத நாதம் என்னும் பிரிக்கப்பட்டிருக்கிறது. மனித முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் ஒலி அநாகத நாதமாகும். மனிதனின் முயற்சியினால் எழுப்பப்படும் ஒலி ஆகத நாதமாகும். நாம் கேட்கும் இசை, பாடும் இசைக்கருவிகளில் வாசிக்கப்படும் இசை ஆகிய இவை ஆகத நாதத்தைச் சேர்ந்தவையாகும். அநாகத நாதத்தின் உட்பொருளைப் பண்டைக் காலத்து மெய்யுணர்வாளர்கள் நன்கு அறித்திருந்தார்கள். யோகத்திறனால் உணர்ந்து அனுபவிக்கக் கூடிய இயல்பான அடிப்படை ஒலி என்றும் இதனைக் கொள்ளலாம். விண்வெளியினின்று தனித்துத் தோன்றும் இசையும், நம் உடலில் உற்பத்தியாகும் இசையொலியும் அநாகத நாதம் என்னும் பிரிவைச் சேர்ந்தவையாகும். சிறந்த இயலிசைப் புலவராகத் திகழ்ந்த தியாகையர் ஆகத நாதத்தின் பெருமையை விளக்கிக் காட்டும் நூற்றுக்கணக்கான கீர்த்தனங்களை இயற்றியுள்ளார். இவர் அநாகத நாதத்தை உணர்ந்து தம்முடைய அனுபவங்களைச் “சுரராகசுதார” போன்ற கீர்த்தனங்களில் வெளியிட்டிருக்கிறார். காண்க: இயலிசைப்புலவர்கள், இசை. {{larger|<b>அநார்யண்யன்</b>}} இட்சுவாகு மரபைச் சார்ந்தவர்; அயோத்தியின் அரசர்களுள் ஒருவர். அநார்யண்யன் இராவணனுடன் போரிட்டவர். விதி வலியால் பிராவணன் தோற்பான் என்னும், அயோத்தியின் இராமன் அவனை அழிப்பான் என்றும், தன் வழித் தோன்றுபவனே இராமன் என்றும் வருவதுரைத்தவரும் இவரேயாவர். {{larger|<b>அநிருத்தன்{{sup|1}}</b>}} என்பது திருமாலின் வியூகங்களில் – நிலைகளில் ஒன்றாகும். திருமால் பலதேவனாக விரிந்து, பின் சங்கர்சனன், வாசுதேவன், பிரத்தியும்னன், அநிருத்தன் என்னும் வியூகங்களை எடுத்து, நான்கு திசைகளிலும் பரவியுள்ளார் என்று பதும புராணம் கூறுகிறது. அநிருத்தன், திருமால் தோற்றத்திற்கு மூலம் எனப்படுகிறது. அநிருத்தன் சுவேதத்தீவு என்னும் உலகத்தில் உள்ள பாற்கடலில் ஐராவதிபுரம் என்றும் இடத்தில், அனந்தன் என்னும் பாம்பிருக்கையில் எழுந்தருளியிருப்பதாகவும் பதும புராணம் கூறுகிறது. இவர் நான்கு கைகளையுடையவர்; அவற்றில் சங்கு, சக்கரம், தண்டு, தாமரை ஆகியவற்றை ஏந்தியிருப்பவர்; மனம் என்னும் அந்தக் கரணத்தை ஆளுகிற தெய்வம், மனக் கவலைகளினின்றும் விடுபடுவதற்கு மக்கள் அநிருத்தனை வணங்கவேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. திருமாலை அநிருத்தன் உருவில் தியானம் செய்தால் என்று உலகப்பற்றை விடுத்து அவனை அடையலாம் என்று சைதனிய சரிதாமிருதம் என்னும் நூல் கூறுகிறது. இவருடைய மூச்சிலிருந்து இருக்குவேதம் தோன்றியது. திருமால் தசரதன் மகனாக வந்தபோது அநிருத்தன் சத்துருக்கனனாகத் தோன்றினான். {{nop}}<noinclude></noinclude> gfbedayoq5cep7j933q2x5igeys2o23 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/382 250 620404 1840322 2025-07-08T07:52:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>அநிருத்தன்{{sup|2}}</b>}} அநிருத்தன் கண்ணனின் பெயரன். தண்டவக்கிரன் மகளைத் தூக்கிச் சென்று மணந்ததால் சிறைப்படுத்தப்பட்டான். பலராமன் துவார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநுபூதி நெறிக் கொள்கை|346|அநுபூதி நெறிக் கொள்கை}}</noinclude>{{larger|<b>அநிருத்தன்{{sup|2}}</b>}} அநிருத்தன் கண்ணனின் பெயரன். தண்டவக்கிரன் மகளைத் தூக்கிச் சென்று மணந்ததால் சிறைப்படுத்தப்பட்டான். பலராமன் துவார கையிலிருந்து படையுடன் வந்து போரிட்டு இவனைச் சிறை மீட்டான். பாணாசுரன் மகள் உசை அநிருத்தனைக் கனவில் கண்டு கூடி அவனையே திருமணம் செய்துகொள்ள உறுதி கொண்டாள். ஆனால் அவன் யார் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவளுடைய தோழி சித்திரலேகை, தான் வரைந்து காட்டிய ஓவியங்களால் அவனை அடையாளம் காட்ட வேண்டினாள். சித்திரலேகை தன் மாய, ஆற்றலால் உறங்கிக் கொண்டிருந்த அநிருத்தனைக் கட்டிலோடு தூக்கிவந்து அவளிடம் சேர்த்தாள். அவள்பால் இன்பந் துய்த்து மீளு கையில் அநிருத்தன் பாணாசுரனால் சிறைப்படுத்தப்பட்டுக் கண்ணனால் விடுவிக்கப்பெற்றான். பின்னர்ப் பாணாசுரன் அளிக்க உசையினை மணந்து கொண்டான். {{larger|<b>அநிருத்தன்{{sup|3}}:</b>}} அநிருத்தன் மன்மதனின் மகன்.{{float_right|ந.மா.}} {{larger|<b>அநுபூதி நெறிக் கொள்கை:</b>}} அநுபூதி என்பது நேரடிக் கடவுள் உணர்வு, சாதாரணமாக நம்முடைய பட்டறிவுகள் புலன் மூலம் கிடைப்பவை. அறிவு புலன் வழியாகவும் தருக்க முறைகளாலும் கிடைக்கிறது. ஆனால் அநுபூதி நிலை புலன் கடந்த அனுபவம். அநுபூதிமான்கள் இறைவனை நேரில் கண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். உன்னத நிலையிலின்றும் அறிந்து வெளியிடப்பட்ட உண்மைகள் அநுபூதி நெறிக்கொள்ளக (Mysticism) என்று கூறப்படுகின்றன. எல்லாச் சமயத்தைச் சார்ந்த அநுபூதியாளர்களும் வெளியிடுகின்ற கருத்துகளில் சில அடிப்படை ஒற்றுமைகள் இருக்கின்றன. அவை: (1) உலகில் காணப்படும் பிரிவுகளும் வேறுபாடுகளும் மெய்யல்ல; உலகம் பாகுபாடுகளற்ற ஒருமைப்பாடுடையது. (2) தீமை நிலையானதன்று; அது ஒரு மாயை. (3) காலமும் ஒரு மாயையே, மெய்ப்பொருள், இடம் காலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. (4) அநுபூதி அனுபவம் எல்லோரும் நுகரக்கூடியதே. இடையறாத தியானம், பக்தி, துறவு மூலமாக இந்தப் பேரின்ப நிலையை இவ்வுலகிலேயே எய்தலாம். எல்லா அநுபூதியாளர்களும் பன்மையைக் கடந்து, மெய்ப்பொருளுடன் ஒன்றிய நிலையை அனுபவித்தவர்கள். சிலர் இதை ‘நாயக–நாயகி’ பாவமாகக் கூறுகின்றனர். ஆண்டாள், தெய்வத்திரு காதரீன், தெய்வத்திரு தெரசா ஆகியோரை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ‘எனை மணந்த மணவாளா’ என்கிறார் வள்ளலார். மதுசூதனன் கைத்தலம் பற்றத் தாம் கண்ட அனுபவத்தைக் கூறுகிறாள் ஆண்டாள். காதரீன் கையில் கடவுள் கொடுத்த கணையாழி காட்சியளித்தது. அநுபூதி அனுபவம் இரண்டு வழிகளில் வெளிப்படுகிறது. (1) புறவயமானது; பொருள்களிலுள்ள வேறுபாடுகள் மறைந்து எல்லாப்பொருள்களும் ஒன்றாகவே தெரிவது. புல், மரம், கல் எல்லாம் ஒன்றே என்று மெசுட்டர் ஏக்கார்ட்டு (Meister Eckhart) கூறுகிறார். எல்லாப் பொருள்களிலும் இறைவனைக் காண்கிறார். யாக்கோபு போமே, (Jacob Bohme) ‘இவ்வொளியில் என் ஆன்மா எல்லாப் பொருள்களையும் ஊடுருவிப் பார்த்தது, புல்லிலும் செடியிலும் இறைவனைக் கண்டேன்’ என்கிறார். ‘பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தி’ என்கிறார் தாயுமானார். இவ்வாறு இயற்கையெல்லாம் இறைவனாகக் காண்பது ஒருவகை அருட்காட்சி. (2) இரண்டாவது வகை ‘அகவயமானது’ (Introvertive). இது, மனத்தை உள்முகப்படுத்தி ஆன்ம விசாரணை செய்வதன் பயனாக ஏற்படுவது. புலன்கள், உணர்வுகள், எண்ணங்கள் எல்லாம் அடங்கிய பிறகு ஆன்மாவில் ஒன்றிய நிலை. தன்னையறிந்தின் புற்ற நிலை வாக்கு, செயல், சிந்தையற்ற நிலையில் கிட்டுகின்ற சிதையாத ஆனந்தம் ஆகியவை பற்றி உபநிடதங்கள் மிக விரிவாகக் கூறுகின்றன. அநுபூதி, ‘ஐக்கியம்’ அல்லது ‘சங்கமம்’ என்பது இருவேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே. இரண்டும் வேறுபட்டவையல்ல என்ற முற்றொருமையை வேதாந்தங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் கிறித்தவமும் இசுலாமும் (Christianity and Islam) இதைத் தெய்வ இகழ்ச்சியாகக் கருதும், அவற்றில் மனிதன் கடவுளிலிருந்து வேறுபட்டவன். எனவே கிறித்தவமும் இசுலாமியமும், ‘ஒன்றுபட்ட நிலை’யைத்தான் ஐக்கியம் என்று கூறுமே தவிர, ஆன்மாவும் கடவுளும் ஒன்றென்றோ, இயற்கையும் இறைவனும் ஒன்று என்றோ குறிப்பிடுவதில்லை. கிறித்தவ அநுபூதிச் செல்வர் ஏக்கார்ட்டு இயற்கையும் கடவுளும் ஒன்று என்ற கருத்துத் தொனிக்குமாறு கூறினார் என்பதற்காகத் திருச்சபை அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யூத அநுபூதிமான்களும் கடவுளுடன் கலந்து விடுவதாகக் கூறவில்லை. யூத சமயம் கூறும் ‘செகோவா’ மனிதனிலிருந்து அப்பாற்பட்டவர். அங்கு ‘ஐக்கியம்’ என்பது கடவுளுடன் நேர்முகத் தொடர்பு என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது. ஆனால் அதிலும் ஆபிரகாம்<noinclude></noinclude> 6kq5hwpkikgr58w4zwxocedvui04ata பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/383 250 620405 1840354 2025-07-08T08:25:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பென் சாமுவேல் அபுலாபியா (Abraham ben Samuel) விதிவிலக்காகக் கருதப்படுகிறார். அவர் கடவுளுடன் ஒன்றுபட்டாரென நம்பப்படுகிறது. எனினும் பொதுவாக யூத சமய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநுபூதி நெறிக் கொள்கை|347|}}</noinclude>பென் சாமுவேல் அபுலாபியா (Abraham ben Samuel) விதிவிலக்காகக் கருதப்படுகிறார். அவர் கடவுளுடன் ஒன்றுபட்டாரென நம்பப்படுகிறது. எனினும் பொதுவாக யூத சமயத்தில் கடவுளுடன் ஒன்றிய நிலை என்ற கருத்து ஊக்குவிக்கப்படவில்லை. இசுலாமிய அநுபூதி நெறியினரான ‘சூபி’ (Sufi)யினரும் கடவுளுடன் கலந்துவிடுகின்ற நெறியைக் குறிப்பிடுகின்றனர். அதனால் அங்கும் அநுபூதியாளர்களுக்கும் மதக்குருமார்களுக்கும் பூசல் ஏற்பட்டது. அல்கல்லாசு (அல்–ஹவ்லாஜ்) என்னும் அநுபூதிமான் தாமும் இறைவனும் ஒன்று என்ற கருத்தில் பேசினார் என்பதற்காகப் பாக்தாத்தில் சிலுவையில் அறையப்பட்டார். அல்பிசுதாமி என்ற குபி ‘நான் கடவுளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கடவுள் “நீயே நான்” என்று எனக்குள் கூறினார்’ என்கிறார். இந்து சமயத் தத்துவ சாத்திரங்கள் அநுபூதி நிலையின் மிக உயர்ந்த வெளிப்பாடுகள். ஆன்மாவும் பரம்பொருளும் ஒன்றே; இரண்டல்ல; வேறுபாடுகளெல்லாம் மாயையே என்கிறார் ஆதிசங்கரர். ஆன்மா ஆண்டவனின் வடிவம். குளத்து நீரும் கங்கை நீரும் அடிப்படையில் ஒன்றே என்கின்றன இந்து சமய நூல்கள். ‘சித்தந் தெளிந்து சிவமானோர்’ என்கிறார் தாயுமான சுவாமிகள், புத்தசமயம் கூறும் ‘நிருவாணம்’ இரண்டற்ற நிலையை விளக்கும் அநுபூதிக் கருத்தே, நிருவாண நிலையில் ‘தான்’ என்ற தனித்தன்மை அழித்து உயிர் உலகத்தோடு ஒன்றாகக் கலந்து விடுகிறது. ‘எல்லைக்குட்பட்டது’ தன் தளைகளைத் தகர்த்துவிட்டு ‘எல்லையற்றதில்’ விடுகிறது. அநுபூதி நிலையை விளக்குவதற்கு அநுபூதியாளர்கள் பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களையே பயன்படுத்துகின்றனர். பிரமம் இதுவன்று, இதுவன்று (நேதி, நேதி) என்கின்றன உபநிடதங்கள். கடவுள் எவ்வாறு இருக்கிறார் என்று கூறமுடியாது. எவ்வாறு இல்லை என்றுதான் கூறமுடியும் என்கிறார் மோசசு (Moses). தெய்வத்திரு பால் (St. Paul) சொல்வதற்கரிய காட்சியைத் தாம் கண்டதாகவும் கேட்டதாகவும் கூறுகிறார். பாகுபாடுகள் அற்ற கடவுளை உடன்பாட்டுக் குணங்களால் குறிப்பிட முடியாது; எதிர்மறைச் சொற்களைக் கொண்டே கூறமுடியும் என்கிறார் தையோனிசியசு. இதை ‘நிருவாணம்’ என்பர் புத்த சமயத்தினர். அநுபூதியாளர்கள் கூறும் சில கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகின்றன. அதனால் அது உண்மையானதுதானா என்ற ஐயப்பாடும் எழுகிறது. பரம்பொருள் குணமற்றது, மாசற்றது என்று கூறும் அதே உபநிடதங்கள், நற்குணங்களையுடைய பிரமத்தையும் கூறுகின்றன, ஒரே பரம்பொருள் எப்படிக் குணங்களற்றதாகவும் குணங்களைக் கொண்டதாகவும் இருக்கமுடியும்? ‘கடவுளைப் பார்ப்பது என்பது கடவுள் ஏதோ ஓரிடத்தில் நிற்பது போல மனிதர்கள் கற்பனை செய்கிறார்கள்; ஆனால் அது அப்படிப்பட்டதன்று, கடவுள் ஒரு வெறுமை; ஆழங்காணமுடியாத பாதாளம்; தனக்குள்ளே கலக்கின்ற நீரோடை’ என்று ஏக்கார்ட்டு கூறுகிறார். ‘கடவுள் இயங்குவதுமன்று, இயங்காததுமன்று; உள்ளதுமன்று இல்லாததுமன்று’ என்கிறார் தையோனிசியசு. ‘நிறைவு’ என்றார் ஒருவர். அதையே ‘வெறுமை’ என்று குறிப்பிடுகிறார் மற்றொருவர். பேரொளியாகத் திகழ்வதே சொல்வதற்கரிய இருளாகவும் விளங்குகிறது. ஏன் நிலவு இவ்வாறு முரண்பட்ட கருத்துகள் ஏன் நிலவுகின்றன? எல்லா அநுபூதிமான்களும் தம் அனுபவம், வாக்கு மனம் எட்டாதது என்பதில் ஒருமித்த கருத்துடையவர்கள், நினைவிற்கும் அரிய இந்த வியக்கத்தக்க அனுபவத்தை விளக்குவதற்குச் சொற்களே இல்லை. எனவே மொழியின் இயலாமையே முரண்பட்ட கருத்துகள் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கலாம். பேசாத மோனநிலையைப் பேசுவதால் ஏற்படும் இடர்ப்பாடு இது. இந்த அநுபூதி நிலை எண்ணத்திற்கு அப்பாற்பட்டது ஏனென்றால் எண்ணமும் ஒரு வரம்பிற்குட்பட்டதே. எண்ணும் பொழுது நாம் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்றாலும் சொற்கள் தரும் வடிவங்களைப் பயன்படுத்துகிறோம். சொற்களும் அவைதரும் வடிவங்களும் ஒரு வரம்புவரை மட்டுமே பயன்படுத்த முடிந்தவை. ஆழ்ந்த உணர்ச்சிகளை அவை வெளிப்படுத்த இயலா, நெடுங்காலம் பிரிந்திருந்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் காணும்பொழுது பேசமுடிவதில்லை. அங்கும் பேச்சற்ற நிலையே மொழியாகி விடுகிறது. அதனால்தான் உபநிடதங்களும் பேச்சற்ற நிலையில்தான் பிரமத்தை அறியமுடியும் என்கின்றன. தாமசு அக்குவீனசு (Thomas Aquinas) என்பவர், சம்மா தியோலாசிகா (Summa Theologica) என்னும் நூலில் பார்சு தெர்சியா (Pars Tertia) என்ற பகுதியை எழுதிக்கொண்டிருந்தபொழுது அநுபூதி நிலையைப் பெற்றார். தாம் அதுவரை எழுதியதனைத்தும் வீண் என்றுணர்ந்து எழுதிக்கொண்டிருந்த நூலை முடிக்காமல் ஸிட்டுவிட்டார். இலக்கியம் கூடச் சில காலங்களில் இலக்கணத்தை மீறிவிடுகிறது. இலக்கணம் நம் எண்ணங்களின் வெளியீட்டை ஒரு வரம்புக்குட்படுத்துகிறது. ஆனால் ஆழ்ந்த உணர்ச்சிகள் இலக்கண வரம்பை<noinclude></noinclude> 60ingq55ulin442lb4o8e2pbie721ql 1840355 1840354 2025-07-08T08:26:02Z Desappan sathiyamoorthy 14764 1840355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநுபூதி நெறிக் கொள்கை|347|அநுபூதி நெறிக் கொள்கை}}</noinclude>பென் சாமுவேல் அபுலாபியா (Abraham ben Samuel) விதிவிலக்காகக் கருதப்படுகிறார். அவர் கடவுளுடன் ஒன்றுபட்டாரென நம்பப்படுகிறது. எனினும் பொதுவாக யூத சமயத்தில் கடவுளுடன் ஒன்றிய நிலை என்ற கருத்து ஊக்குவிக்கப்படவில்லை. இசுலாமிய அநுபூதி நெறியினரான ‘சூபி’ (Sufi)யினரும் கடவுளுடன் கலந்துவிடுகின்ற நெறியைக் குறிப்பிடுகின்றனர். அதனால் அங்கும் அநுபூதியாளர்களுக்கும் மதக்குருமார்களுக்கும் பூசல் ஏற்பட்டது. அல்கல்லாசு (அல்–ஹவ்லாஜ்) என்னும் அநுபூதிமான் தாமும் இறைவனும் ஒன்று என்ற கருத்தில் பேசினார் என்பதற்காகப் பாக்தாத்தில் சிலுவையில் அறையப்பட்டார். அல்பிசுதாமி என்ற குபி ‘நான் கடவுளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கடவுள் “நீயே நான்” என்று எனக்குள் கூறினார்’ என்கிறார். இந்து சமயத் தத்துவ சாத்திரங்கள் அநுபூதி நிலையின் மிக உயர்ந்த வெளிப்பாடுகள். ஆன்மாவும் பரம்பொருளும் ஒன்றே; இரண்டல்ல; வேறுபாடுகளெல்லாம் மாயையே என்கிறார் ஆதிசங்கரர். ஆன்மா ஆண்டவனின் வடிவம். குளத்து நீரும் கங்கை நீரும் அடிப்படையில் ஒன்றே என்கின்றன இந்து சமய நூல்கள். ‘சித்தந் தெளிந்து சிவமானோர்’ என்கிறார் தாயுமான சுவாமிகள், புத்தசமயம் கூறும் ‘நிருவாணம்’ இரண்டற்ற நிலையை விளக்கும் அநுபூதிக் கருத்தே, நிருவாண நிலையில் ‘தான்’ என்ற தனித்தன்மை அழித்து உயிர் உலகத்தோடு ஒன்றாகக் கலந்து விடுகிறது. ‘எல்லைக்குட்பட்டது’ தன் தளைகளைத் தகர்த்துவிட்டு ‘எல்லையற்றதில்’ விடுகிறது. அநுபூதி நிலையை விளக்குவதற்கு அநுபூதியாளர்கள் பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களையே பயன்படுத்துகின்றனர். பிரமம் இதுவன்று, இதுவன்று (நேதி, நேதி) என்கின்றன உபநிடதங்கள். கடவுள் எவ்வாறு இருக்கிறார் என்று கூறமுடியாது. எவ்வாறு இல்லை என்றுதான் கூறமுடியும் என்கிறார் மோசசு (Moses). தெய்வத்திரு பால் (St. Paul) சொல்வதற்கரிய காட்சியைத் தாம் கண்டதாகவும் கேட்டதாகவும் கூறுகிறார். பாகுபாடுகள் அற்ற கடவுளை உடன்பாட்டுக் குணங்களால் குறிப்பிட முடியாது; எதிர்மறைச் சொற்களைக் கொண்டே கூறமுடியும் என்கிறார் தையோனிசியசு. இதை ‘நிருவாணம்’ என்பர் புத்த சமயத்தினர். அநுபூதியாளர்கள் கூறும் சில கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகின்றன. அதனால் அது உண்மையானதுதானா என்ற ஐயப்பாடும் எழுகிறது. பரம்பொருள் குணமற்றது, மாசற்றது என்று கூறும் அதே உபநிடதங்கள், நற்குணங்களையுடைய பிரமத்தையும் கூறுகின்றன, ஒரே பரம்பொருள் எப்படிக் குணங்களற்றதாகவும் குணங்களைக் கொண்டதாகவும் இருக்கமுடியும்? ‘கடவுளைப் பார்ப்பது என்பது கடவுள் ஏதோ ஓரிடத்தில் நிற்பது போல மனிதர்கள் கற்பனை செய்கிறார்கள்; ஆனால் அது அப்படிப்பட்டதன்று, கடவுள் ஒரு வெறுமை; ஆழங்காணமுடியாத பாதாளம்; தனக்குள்ளே கலக்கின்ற நீரோடை’ என்று ஏக்கார்ட்டு கூறுகிறார். ‘கடவுள் இயங்குவதுமன்று, இயங்காததுமன்று; உள்ளதுமன்று இல்லாததுமன்று’ என்கிறார் தையோனிசியசு. ‘நிறைவு’ என்றார் ஒருவர். அதையே ‘வெறுமை’ என்று குறிப்பிடுகிறார் மற்றொருவர். பேரொளியாகத் திகழ்வதே சொல்வதற்கரிய இருளாகவும் விளங்குகிறது. ஏன் நிலவு இவ்வாறு முரண்பட்ட கருத்துகள் ஏன் நிலவுகின்றன? எல்லா அநுபூதிமான்களும் தம் அனுபவம், வாக்கு மனம் எட்டாதது என்பதில் ஒருமித்த கருத்துடையவர்கள், நினைவிற்கும் அரிய இந்த வியக்கத்தக்க அனுபவத்தை விளக்குவதற்குச் சொற்களே இல்லை. எனவே மொழியின் இயலாமையே முரண்பட்ட கருத்துகள் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கலாம். பேசாத மோனநிலையைப் பேசுவதால் ஏற்படும் இடர்ப்பாடு இது. இந்த அநுபூதி நிலை எண்ணத்திற்கு அப்பாற்பட்டது ஏனென்றால் எண்ணமும் ஒரு வரம்பிற்குட்பட்டதே. எண்ணும் பொழுது நாம் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்றாலும் சொற்கள் தரும் வடிவங்களைப் பயன்படுத்துகிறோம். சொற்களும் அவைதரும் வடிவங்களும் ஒரு வரம்புவரை மட்டுமே பயன்படுத்த முடிந்தவை. ஆழ்ந்த உணர்ச்சிகளை அவை வெளிப்படுத்த இயலா, நெடுங்காலம் பிரிந்திருந்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் காணும்பொழுது பேசமுடிவதில்லை. அங்கும் பேச்சற்ற நிலையே மொழியாகி விடுகிறது. அதனால்தான் உபநிடதங்களும் பேச்சற்ற நிலையில்தான் பிரமத்தை அறியமுடியும் என்கின்றன. தாமசு அக்குவீனசு (Thomas Aquinas) என்பவர், சம்மா தியோலாசிகா (Summa Theologica) என்னும் நூலில் பார்சு தெர்சியா (Pars Tertia) என்ற பகுதியை எழுதிக்கொண்டிருந்தபொழுது அநுபூதி நிலையைப் பெற்றார். தாம் அதுவரை எழுதியதனைத்தும் வீண் என்றுணர்ந்து எழுதிக்கொண்டிருந்த நூலை முடிக்காமல் ஸிட்டுவிட்டார். இலக்கியம் கூடச் சில காலங்களில் இலக்கணத்தை மீறிவிடுகிறது. இலக்கணம் நம் எண்ணங்களின் வெளியீட்டை ஒரு வரம்புக்குட்படுத்துகிறது. ஆனால் ஆழ்ந்த உணர்ச்சிகள் இலக்கண வரம்பை<noinclude></noinclude> pbkzzdagxiwczt9ul871pm2m610d713 1840365 1840355 2025-07-08T08:54:50Z Desappan sathiyamoorthy 14764 1840365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநுபூதி நெறிக் கொள்கை|347|அநுபூதி நெறிக் கொள்கை}}</noinclude>பென் சாமுவேல் அபுலாபியா (Abraham ben Samuel) விதிவிலக்காகக் கருதப்படுகிறார். அவர் கடவுளுடன் ஒன்றுபட்டாரென நம்பப்படுகிறது. எனினும் பொதுவாக யூத சமயத்தில் கடவுளுடன் ஒன்றிய நிலை என்ற கருத்து ஊக்குவிக்கப்படவில்லை. இசுலாமிய அநுபூதி நெறியினரான ‘சூபி’ (Sufi)யினரும் கடவுளுடன் கலந்துவிடுகின்ற நெறியைக் குறிப்பிடுகின்றனர். அதனால் அங்கும் அநுபூதியாளர்களுக்கும் மதக்குருமார்களுக்கும் பூசல் ஏற்பட்டது. அல்கல்லாசு (அல்–ஹல்லாஜ்) என்னும் அநுபூதிமான் தாமும் இறைவனும் ஒன்று என்ற கருத்தில் பேசினார் என்பதற்காகப் பாக்தாத்தில் சிலுவையில் அறையப்பட்டார். அல்பிசுதாமி என்ற சூபி ‘நான் கடவுளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கடவுள் “நீயே நான்” என்று எனக்குள் கூறினார்’ என்கிறார். இந்து சமயத் தத்துவ சாத்திரங்கள் அநுபூதி நிலையின் மிக உயர்ந்த வெளிப்பாடுகள். ஆன்மாவும் பரம்பொருளும் ஒன்றே; இரண்டல்ல; வேறுபாடுகளெல்லாம் மாயையே என்கிறார் ஆதிசங்கரர். ஆன்மா ஆண்டவனின் வடிவம். குளத்து நீரும் கங்கை நீரும் அடிப்படையில் ஒன்றே என்கின்றன இந்து சமய நூல்கள். ‘சித்தந் தெளிந்து சிவமானோர்’ என்கிறார் தாயுமான சுவாமிகள், புத்தசமயம் கூறும் ‘நிருவாணம்’ இரண்டற்ற நிலையை விளக்கும் அநுபூதிக் கருத்தே, நிருவாண நிலையில் ‘தான்’ என்ற தனித்தன்மை அழித்து உயிர் உலகத்தோடு ஒன்றாகக் கலந்து விடுகிறது. ‘எல்லைக்குட்பட்டது’ தன் தளைகளைத் தகர்த்துவிட்டு ‘எல்லையற்றதில்’ விடுகிறது. அநுபூதி நிலையை விளக்குவதற்கு அநுபூதியாளர்கள் பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களையே பயன்படுத்துகின்றனர். பிரமம் இதுவன்று, இதுவன்று (நேதி, நேதி) என்கின்றன உபநிடதங்கள். கடவுள் எவ்வாறு இருக்கிறார் என்று கூறமுடியாது. எவ்வாறு இல்லை என்றுதான் கூறமுடியும் என்கிறார் மோசசு (Moses). தெய்வத்திரு பால் (St. Paul) சொல்வதற்கரிய காட்சியைத் தாம் கண்டதாகவும் கேட்டதாகவும் கூறுகிறார். பாகுபாடுகள் அற்ற கடவுளை உடன்பாட்டுக் குணங்களால் குறிப்பிட முடியாது; எதிர்மறைச் சொற்களைக் கொண்டே கூறமுடியும் என்கிறார் தையோனிசியசு. இதை ‘நிருவாணம்’ என்பர் புத்த சமயத்தினர். அநுபூதியாளர்கள் கூறும் சில கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகின்றன. அதனால் அது உண்மையானதுதானா என்ற ஐயப்பாடும் எழுகிறது. பரம்பொருள் குணமற்றது, மாசற்றது என்று கூறும் அதே உபநிடதங்கள், நற்குணங்களையுடைய பிரமத்தையும் கூறுகின்றன. ஒரே பரம்பொருள் எப்படிக் குணங்களற்றதாகவும் குணங்களைக் கொண்டதாகவும் இருக்கமுடியும்? ‘கடவுளைப் பார்ப்பது என்பது கடவுள் ஏதோ ஓரிடத்தில் நிற்பது போல மனிதர்கள் கற்பனை செய்கிறார்கள்; ஆனால் அது அப்படிப்பட்டதன்று, கடவுள் ஒரு வெறுமை; ஆழங்காணமுடியாத பாதாளம்; தனக்குள்ளே கலக்கின்ற நீரோடை’ என்று ஏக்கார்ட்டு கூறுகிறார். ‘கடவுள் இயங்குவதுமன்று, இயங்காததுமன்று; உள்ளதுமன்று இல்லாததுமன்று’ என்கிறார் தையோனிசியசு. ‘நிறைவு’ என்றார் ஒருவர். அதையே ‘வெறுமை’ என்று குறிப்பிடுகிறார் மற்றொருவர். பேரொளியாகத் திகழ்வதே சொல்வதற்கரிய இருளாகவும் விளங்குகிறது. இவ்வாறு முரண்பட்ட கருத்துகள் ஏன் நிலவுகின்றன? எல்லா அநுபூதிமான்களும் தம் அனுபவம், வாக்கு மனம் எட்டாதது என்பதில் ஒருமித்த கருத்துடையவர்கள், நினைவிற்கும் அரிய இந்த வியக்கத்தக்க அனுபவத்தை விளக்குவதற்குச் சொற்களே இல்லை. எனவே மொழியின் இயலாமையே முரண்பட்ட கருத்துகள் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கலாம். பேசாத மோனநிலையைப் பேசுவதால் ஏற்படும் இடர்ப்பாடு இது. இந்த அநுபூதி நிலை எண்ணத்திற்கு அப்பாற்பட்டது ஏனென்றால் எண்ணமும் ஒரு வரம்பிற்குட்பட்டதே. எண்ணும் பொழுது நாம் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்றாலும் சொற்கள் தரும் வடிவங்களைப் பயன்படுத்துகிறோம். சொற்களும் அவைதரும் வடிவங்களும் ஒரு வரம்புவரை மட்டுமே பயன்படுத்த முடிந்தவை. ஆழ்ந்த உணர்ச்சிகளை அவை வெளிப்படுத்த இயலா, நெடுங்காலம் பிரிந்திருந்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் காணும்பொழுது பேசமுடிவதில்லை. அங்கும் பேச்சற்ற நிலையே மொழியாகி விடுகிறது. அதனால்தான் உபநிடதங்களும் பேச்சற்ற நிலையில்தான் பிரமத்தை அறியமுடியும் என்கின்றன. தாமசு அக்குவீனசு (Thomas Aquinas) என்பவர், சம்மா தியோலாசிகா (Summa Theologica) என்னும் நூலில் பார்சு தெர்சியா (Pars Tertia) என்ற பகுதியை எழுதிக்கொண்டிருந்தபொழுது அநுபூதி நிலையைப் பெற்றார். தாம் அதுவரை எழுதியதனைத்தும் வீண் என்றுணர்ந்து எழுதிக்கொண்டிருந்த நூலை முடிக்காமல் ஸிட்டுவிட்டார். இலக்கியம் கூடச் சில காலங்களில் இலக்கணத்தை மீறிவிடுகிறது. இலக்கணம் நம் எண்ணங்களின் வெளியீட்டை ஒரு வரம்புக்குட்படுத்துகிறது. ஆனால் ஆழ்ந்த உணர்ச்சிகள் இலக்கண வரம்பை<noinclude></noinclude> 4pya2f06nbm93an9c1cb99g1cusnidp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/384 250 620406 1840369 2025-07-08T09:14:11Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வீதிப் பீறிடுகின்றன. அவ்வாறே கட்டற்ற பேரின்ப அநுபூதி அனுபவத்தையும் வரம்புக்குட்பட்ட சொற்களின் மூலம் வெளிப்படுத்தும்பொழுது இந்த முர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநுராதபுரம்|348|அநுராதபுரம்}}</noinclude>வீதிப் பீறிடுகின்றன. அவ்வாறே கட்டற்ற பேரின்ப அநுபூதி அனுபவத்தையும் வரம்புக்குட்பட்ட சொற்களின் மூலம் வெளிப்படுத்தும்பொழுது இந்த முரண்பாடுகள் தோன்றுவதாகக் கருதலாம். அநுபூதியாளர்களின் அனுபவம் மொழிமூலம் வெளிப்படுவது அன்று என்று கருதினாலும் தவறில்லை. ஏனென்றால் சாதாரண அறிவில், அறிவோனுக்கும் (Subject) அறியப்படுகின்ற பொருளுக்கும் (Object) வேறுபாடு இருக்கிறது. ஆனால் அநுபூதி அனுபவத்தில் இந்த வேறுபாடுகள் அழிந்துவிடுகின்றன. ஒன்று மற்றொன்றில் கரைந்து விடுகிறது. எனவே, அன்றாட வாழ்க்கை, அறிவியல் அறிவு ஆகியவற்றுக்கு அடிப்படையான ‘முரணாமை’ (Law of non- contradiction) என்னும் சிந்தனை விதியே, அறிவுக்கு அறிவான ஆண்டவனைக் காண்கின்ற அனுபவத்திற்கும் அளவு கோல் என்று கூறமுடியாது.{{float_right|ஜெ.மு.}} {{larger|<b>அநுராதபுரம்</b>}} இலங்கையின் வடக்கு மையப் பகுதியில் உள்ள பழம்பெரும் நகரம். இன்று ஆய்வாளர்களையும் சுற்றுலாவினரையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய நிலையில் உள்ள அந்நகரம், இலங்கையின் தலைநகராக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் திகழ்ந்தது. ஈழநாட்டு வரலாற்றுச் செய்திக் கோவையின்படி அந்நாட்டின் முதல் மன்னன் இந்தியாவைச் சேர்ந்த விசயன் ஆவான். அவனுக்குப் பின் அவன் உடன்பிறந்தானின் மகனான பாண்டுவாசு என்பானும் அவனைச் சேர்ந்த சில துறவிகளும் அநுராதபுரத்தை அமைத்ததாக மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது. அந்நகரம் கி.மு. 4–ஆம் நூற்றாண்டில் உண்டாயிற்று என்ற கருத்தும் நிலவுகிறது. {{larger|<b>அரசியல் வரலாறு:</b>}} வரலாற்றின்படி அநுராத புரத்தைத் தலைநகராகக் கொண்ட ஈழநாட்டின் முதல் அரசன் தேவனாம்பிரியதிசாவை, (கி.மு. 247–207) இந்தியாவின் மௌரியப் பேரரசனாகிய அசோகன் அனுப்பிய சமயப் பரப்புக் குழுவினர், புத்தசமயத்திற்கு மாற்றினர். தன் தலைநகரில் “மகா விகாரம்” என்ற மடத்தை அவன் கட்டினான். புத்தகயாவிலிருந்து எடுத்துச் சென்ற போதிமரக் கன்றையும் அவ்வரசன் நட்டு வளர்த்தான்; ஒரு பெரிய தூபியையும் நிறுவினான். அவன் நட்டமரம் “உலகில் இன்றுள்ள மரங்கள் யாவற்றிலும் மிகப் பழைமையனது”. திசாவின் ஆட்சிக் காலத்திலிருந்து, அநுராதபுர (இலங்கை) – இந்தியத் தொடர்பு வரலாற்று முறையிலும் பண்பாட்டு முறையிலும் மிகுதியாகியது. கி.மு. 2–ஆம் நூற்றாண்டில் தமிழினத்தைச் சேர்ந்த எல்லாளன் (எல்லாரன்) என்பான் (கி.மு. 145 – 101) அரசுரிமையைக் கைப்பற்றி, ஆட்சி முறையைச் செம்மைப்படுத்தினான். முதலாவது சிங்கள மன்னன் விசயன் காலத்திலிருந்தே அவர்கள் இந்திய மன்னர்களுடன் மணவினைத் தொடர்பு கொண்டிருந்தனர். முதல் தொடர்பு பாண்டிய நாட்டு மன்னன் மகளுடன் கொண்ட மணவினை உறவாகும். இத்தகைய மணவினைத் தொடர்பு காரணமாகவே சிங்களவர், தமிழ் நாட்டு அரசுரிமைக்கும், தமிழர் அநுராதபுர அரசுரிமைக்கும் போட்டியிட்டுப் போரிட்ட பல நிகழ்ச்சிகளைக் காணலாம். எல்லாளனின் தமிழ் ஆட்சியை முடிவுறச் செய்ததுட்டகைமனு (துத்தகமணி எனவும் கூறுவர்) என்பவன் இலங்கை, தமிழராட்சியினின்று விடுபட்டு உரிமை நாடாகவும் ஒரு பௌத்த நாடாகவும் விளங்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் செயலாற்றினாள். ஆனால், மீண்டும் அநுராதபுரம், தமிழரால் கைப்பற்றப்பெற்று வட்டகமணி என்பானாட்சியின் கீழ் வந்தது. ஆயினும் விரைவில் இது மாறிச் சிங்களவர் ஆட்சி மீண்டும் ஏற்பட்டது. தொடக்க முதல் இலம்பகர்ணர், மோரியர் என்ற இரண்டு வலிமை வாய்ந்த குலங்கள், அநுராதபுர அரியணையைத் தம் வசப்படுத்திக் கொள்வதில் போட்டியிட்டுப் போரிட்டு வந்ததால், தமிழ்ச் சேர சோழ பாண்டிய நாட்டு மன்னர்களும் சில சமயங்களில் தமது ஆட்சியை அங்கே நிறுவினர். இவ்வாறு, முதல் ஆயிரம் ஆண்டுக் காலத்தில் அநுராதபுர அரசியலில் ஒரு நிலையான தன்மை இல்லை. இலங்கைத் தீவு முழுவதையும் இணைத்து ஒன்றுபடுத்தி, நிலையான ஓர் ஆட்சியைப் பல ஆண்டுகள் தொடர்ந்து நிறுவ இயலாமல் போயிற்று. சேனா, குட்டிகா (கி.மு. 177–155) முதலியோர் ஆட்சிக்குப் பிறகு, கி.மு. 43–இல் பாண்டிய அரசகுல ஆட்சி மீண்டும் ஏற்பட்டுச் சிறிது காலம் நீடித்தது. கி.பி. 174 முதல் 196 வரை அங்கு ஆட்சி புரிந்த முதலாம் கயவாகு (சிலப்பதிகாரத்தில் சிறப்பிக்கப்படுபவன்), தமிழ் நாட்டுச் சேரருடன் நட்புறவு பூண்டிருந்தான். கரிகாற் சோழன், ஈழநாட்டுக்கு இடையூறு செய்து கயவாகுவிடமிருந்து இழப்பீடு பெற்றான். கயவாகு கண்ணகி (பத்தினித் தெய்வ) வழிபாட்டு முறையை இலங்கையில் புகுத்தினான். கயவாகுவுக்குப் பின் போந்த அபயநாகா (கி.பி. 285–293) தன் ஆட்சியை உறுதிப்படுத்திக் கொள்ளத் தமிழ் நாட்டுப் படையின் உதவியை நாடியதாக மகாவம்சம் குறிக்கும். சிரிசங்காபோ (கி.பி. 300–302) துறவியாக மாறிக் கரட்டில் வாழ்ந்தான். அவன் உயிரைப் பறித்துக் கொள்ள விழைந்த கொடுங்கோலன் தன் உடன் பிறந்தானின் தலையைக் கொணர்வோர்க்கு இரண்டாயிரம் பொற்காசுகள் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்ததை<noinclude></noinclude> 3rycym69f5qlfvdedxr771xric5amv5 1840370 1840369 2025-07-08T09:14:49Z Desappan sathiyamoorthy 14764 1840370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநுராதபுரம்|348|அநுராதபுரம்}}</noinclude>மீறிப் பீறிடுகின்றன. அவ்வாறே கட்டற்ற பேரின்ப அநுபூதி அனுபவத்தையும் வரம்புக்குட்பட்ட சொற்களின் மூலம் வெளிப்படுத்தும்பொழுது இந்த முரண்பாடுகள் தோன்றுவதாகக் கருதலாம். அநுபூதியாளர்களின் அனுபவம் மொழிமூலம் வெளிப்படுவது அன்று என்று கருதினாலும் தவறில்லை. ஏனென்றால் சாதாரண அறிவில், அறிவோனுக்கும் (Subject) அறியப்படுகின்ற பொருளுக்கும் (Object) வேறுபாடு இருக்கிறது. ஆனால் அநுபூதி அனுபவத்தில் இந்த வேறுபாடுகள் அழிந்துவிடுகின்றன. ஒன்று மற்றொன்றில் கரைந்து விடுகிறது. எனவே, அன்றாட வாழ்க்கை, அறிவியல் அறிவு ஆகியவற்றுக்கு அடிப்படையான ‘முரணாமை’ (Law of non- contradiction) என்னும் சிந்தனை விதியே, அறிவுக்கு அறிவான ஆண்டவனைக் காண்கின்ற அனுபவத்திற்கும் அளவு கோல் என்று கூறமுடியாது.{{float_right|ஜெ.மு.}} {{larger|<b>அநுராதபுரம்</b>}} இலங்கையின் வடக்கு மையப் பகுதியில் உள்ள பழம்பெரும் நகரம். இன்று ஆய்வாளர்களையும் சுற்றுலாவினரையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய நிலையில் உள்ள அந்நகரம், இலங்கையின் தலைநகராக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் திகழ்ந்தது. ஈழநாட்டு வரலாற்றுச் செய்திக் கோவையின்படி அந்நாட்டின் முதல் மன்னன் இந்தியாவைச் சேர்ந்த விசயன் ஆவான். அவனுக்குப் பின் அவன் உடன்பிறந்தானின் மகனான பாண்டுவாசு என்பானும் அவனைச் சேர்ந்த சில துறவிகளும் அநுராதபுரத்தை அமைத்ததாக மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது. அந்நகரம் கி.மு. 4–ஆம் நூற்றாண்டில் உண்டாயிற்று என்ற கருத்தும் நிலவுகிறது. {{larger|<b>அரசியல் வரலாறு:</b>}} வரலாற்றின்படி அநுராத புரத்தைத் தலைநகராகக் கொண்ட ஈழநாட்டின் முதல் அரசன் தேவனாம்பிரியதிசாவை, (கி.மு. 247–207) இந்தியாவின் மௌரியப் பேரரசனாகிய அசோகன் அனுப்பிய சமயப் பரப்புக் குழுவினர், புத்தசமயத்திற்கு மாற்றினர். தன் தலைநகரில் “மகா விகாரம்” என்ற மடத்தை அவன் கட்டினான். புத்தகயாவிலிருந்து எடுத்துச் சென்ற போதிமரக் கன்றையும் அவ்வரசன் நட்டு வளர்த்தான்; ஒரு பெரிய தூபியையும் நிறுவினான். அவன் நட்டமரம் “உலகில் இன்றுள்ள மரங்கள் யாவற்றிலும் மிகப் பழைமையனது”. திசாவின் ஆட்சிக் காலத்திலிருந்து, அநுராதபுர (இலங்கை) – இந்தியத் தொடர்பு வரலாற்று முறையிலும் பண்பாட்டு முறையிலும் மிகுதியாகியது. கி.மு. 2–ஆம் நூற்றாண்டில் தமிழினத்தைச் சேர்ந்த எல்லாளன் (எல்லாரன்) என்பான் (கி.மு. 145 – 101) அரசுரிமையைக் கைப்பற்றி, ஆட்சி முறையைச் செம்மைப்படுத்தினான். முதலாவது சிங்கள மன்னன் விசயன் காலத்திலிருந்தே அவர்கள் இந்திய மன்னர்களுடன் மணவினைத் தொடர்பு கொண்டிருந்தனர். முதல் தொடர்பு பாண்டிய நாட்டு மன்னன் மகளுடன் கொண்ட மணவினை உறவாகும். இத்தகைய மணவினைத் தொடர்பு காரணமாகவே சிங்களவர், தமிழ் நாட்டு அரசுரிமைக்கும், தமிழர் அநுராதபுர அரசுரிமைக்கும் போட்டியிட்டுப் போரிட்ட பல நிகழ்ச்சிகளைக் காணலாம். எல்லாளனின் தமிழ் ஆட்சியை முடிவுறச் செய்ததுட்டகைமனு (துத்தகமணி எனவும் கூறுவர்) என்பவன் இலங்கை, தமிழராட்சியினின்று விடுபட்டு உரிமை நாடாகவும் ஒரு பௌத்த நாடாகவும் விளங்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் செயலாற்றினாள். ஆனால், மீண்டும் அநுராதபுரம், தமிழரால் கைப்பற்றப்பெற்று வட்டகமணி என்பானாட்சியின் கீழ் வந்தது. ஆயினும் விரைவில் இது மாறிச் சிங்களவர் ஆட்சி மீண்டும் ஏற்பட்டது. தொடக்க முதல் இலம்பகர்ணர், மோரியர் என்ற இரண்டு வலிமை வாய்ந்த குலங்கள், அநுராதபுர அரியணையைத் தம் வசப்படுத்திக் கொள்வதில் போட்டியிட்டுப் போரிட்டு வந்ததால், தமிழ்ச் சேர சோழ பாண்டிய நாட்டு மன்னர்களும் சில சமயங்களில் தமது ஆட்சியை அங்கே நிறுவினர். இவ்வாறு, முதல் ஆயிரம் ஆண்டுக் காலத்தில் அநுராதபுர அரசியலில் ஒரு நிலையான தன்மை இல்லை. இலங்கைத் தீவு முழுவதையும் இணைத்து ஒன்றுபடுத்தி, நிலையான ஓர் ஆட்சியைப் பல ஆண்டுகள் தொடர்ந்து நிறுவ இயலாமல் போயிற்று. சேனா, குட்டிகா (கி.மு. 177–155) முதலியோர் ஆட்சிக்குப் பிறகு, கி.மு. 43–இல் பாண்டிய அரசகுல ஆட்சி மீண்டும் ஏற்பட்டுச் சிறிது காலம் நீடித்தது. கி.பி. 174 முதல் 196 வரை அங்கு ஆட்சி புரிந்த முதலாம் கயவாகு (சிலப்பதிகாரத்தில் சிறப்பிக்கப்படுபவன்), தமிழ் நாட்டுச் சேரருடன் நட்புறவு பூண்டிருந்தான். கரிகாற் சோழன், ஈழநாட்டுக்கு இடையூறு செய்து கயவாகுவிடமிருந்து இழப்பீடு பெற்றான். கயவாகு கண்ணகி (பத்தினித் தெய்வ) வழிபாட்டு முறையை இலங்கையில் புகுத்தினான். கயவாகுவுக்குப் பின் போந்த அபயநாகா (கி.பி. 285–293) தன் ஆட்சியை உறுதிப்படுத்திக் கொள்ளத் தமிழ் நாட்டுப் படையின் உதவியை நாடியதாக மகாவம்சம் குறிக்கும். சிரிசங்காபோ (கி.பி. 300–302) துறவியாக மாறிக் கரட்டில் வாழ்ந்தான். அவன் உயிரைப் பறித்துக் கொள்ள விழைந்த கொடுங்கோலன் தன் உடன் பிறந்தானின் தலையைக் கொணர்வோர்க்கு இரண்டாயிரம் பொற்காசுகள் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்ததை<noinclude></noinclude> 75rd4ew0qynhrhh766m651r9hto4ata பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/385 250 620407 1840371 2025-07-08T09:34:32Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறிந்த அத்துறவி மன்னன், ஓர் ஏழை அப்பொருளைப் பெற்றுக் கொள்ளட்டும் என்று தலையையே தந்தான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 385 |bSize = 480 |cWidth = 251..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1840371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநுராதபுரம்|349|அநுராதபுரம்}}</noinclude>அறிந்த அத்துறவி மன்னன், ஓர் ஏழை அப்பொருளைப் பெற்றுக் கொள்ளட்டும் என்று தலையையே தந்தான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 385 |bSize = 480 |cWidth = 251 |cHeight = 173 |oTop = 58 |oLeft = 109 |Location = center |Description = }} {{center|அநுராதபுரம்-தூபாராம தூபி}} அக்குலத்தின் இறுதி மன்னனான மகாசேனன் (334–362) பல தூபிகளையும் மடங்களையும் கட்டியதுடன், நீர்ப்பாசனத்திற்கான ஏற்பாடுகளையும் செய்தான். கி.பி. 4–ஆம் நூற்றாண்டிலிருந்து 6–ஆம் நூற்றாண்டு வரை அந்நாட்டில் பல சிறந்த குளங்கள் வெட்டப்பட்டதால், அக்காலம் “குளங்கள் வெட்டப்பட்ட காலம்” என்றே குறிக்கப்படுகிறது. மேகவர்மன் கி.பி. 379 வரை ஆட்சி புரிந்தான். அவன் இந்தியாவின் சமுத்திரகுப்த மன்னனுடன் நட்புறவு பூண்டிருந்தான். புத்தரின் நினைவுச் சின்னமான பல், கலிங்க நாட்டிலிருந்து இவனால் பெறப்பட்டது. பின்போந்த புத்தசாரன், பத்து ஊர்களுக்கு ஒரு மருத்துவமனை என்ற முறையில் மருத்துவமனைகளைக் கட்டிப் புகழடைந்தான். வடமொழியில் சிறந்ததோர் மருத்துவ நூலும் இவனால் இயற்றப்பட்டது. மொக்கலானா (கி.பி. 491–508) என்பான், அவனுடன் அரசுரிமைக்காகப் போட்டியிட்ட கசியபன் என்பானை விரட்டத் தமிழர்களைப் படையில் அமர்த்தியிருந்தான். பின்னர் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்தவர்களும் தமிழர் படையையே நம்பியிருந்தனர். இதனால் தமிழரசர் படையின் செல்வாக்கு உயர்ந்து அவர்கள் அரசர்களை ஆக்குவோராகவும் அழிப்போராகவும் ஆயினர். அரசவையில் தமிழரின் செல்வாக்குப் பெருகியது. தென்னிந்தியாவில் தமிழ் நாட்டு அரசர்கள் வலிமை பெற்றிருந்த காரணத்தால், இலங்கையில் தமிழரின் செல்வாக்கைக் குறைக்க இயலவில்லை. கி.பி. 5,6,–ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பாண்டியர், பல்லவர், சோழர் ஆகியோரின் எழுச்சியின் காரணமாக, இலங்கைச் சிங்களவர்க்கும் தமிழ் நாட்டுக்குமிடையே பகைமையும் உறவும் நிலவின. இந்து சமயத்தை ஆதரித்த தமிழ் மன்னர்கள், சிங்களவரின் பௌத்த சமயத்தைத் தாக்கினர். இலங்கையில் தங்கியிருந்த தமிழர்களின் உதவியும் அவர்களுக்குக் கிடைத்தது. ஆரிய இனத்தவரான சிங்களவர்க்கும் தமிழருக்கும் பகைமை இருந்த போதிலும், சில காலங்களில் ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர். ஆனால் நெருக்கடி நிலை இருந்துகொண்டே இருந்தது. அநுராதபுர வரலாற்றில் தென்னிந்தியத் தலையீடு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இந்த அச்சுறுத்தல் காரணமாகவே அங்கே நிலைத்த அரசு ஏற்பட முடியவில்லை. முடிவில் அவ்வரசும் அழிந்தது. ஈழம் கி.பி. 6,7,8–ஆம் நூற்றாண்டுகளில், உள்நாட்டுப் போர்களாலும் துயருற்றது. பல்லவன் சிம்ம விட்டுணு (575–600) ஈழத்தை வென்றதாகக் கூறிக் கொள்கிறான். கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் அநுராதபுர அரசுக்கும் பல்லவர்களுக்குமிடையே நட்புறவு நிலவியது. தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவனும் (கி.பி. 630–655) இலங்கை மன்னன் மானவர்மனும் சேர்ந்து, சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வென்றதால், உள்நாட்டுப் போரால் பட்டமிழந்த மானவர்மனை, அநுராதபுர அரியணையில் மீண்டும் அமர்த்திப் புகழ் கொண்டதும் பல்லவப் பேரரசன் நரசிம்மவர்மனேயாவன். பல்லவர் வீழ்ச்சிக்குப் பிறகு தலைமை நிலை எய்திய சோழரும் பாண்டியரும் அநுராதபுர அரசுடன் வேறுவகையான உறவு பூண்டிருந்தனர். போராட்டமும் தொடர்ந்தது. அநுராதபுரத்தில், முதலாம் சேனன் (கி.பி. 833–853) ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் பாண்டிய மன்னன் சிரீமாற சிரீவல்லபன் (கி.பி. 815–860) ஈழத்தில் படையெடுத்து, அங்கிருந்த தமிழர்களின் உதவி பெற்று வெற்றி எய்தினான். பெருந்தொகையை இழப்பீடாகப் பெற்ற பிறகே பாண்டியப் படை வெளியேறியது. வஞ்சத் தீர்க்கக் காத்துக் கொண்டிருந்த ஈழமன்னன் இரண்டாம் சேனன், பாண்டிய நாட்டில் ஏற்பட்ட அரியணைப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டு, அரியணை வேண்டிய ஒரு பாண்டிய இளவரசனுக்கு உதவி செய்ய, மதுரையைத்தாக்கிச் சூறையாடினான். தமிழகத்தில் சோழர் தலைமை நிலையில் இருந்த தருணத்தில், சிங்களவர், தமது பழைய கொள்கையை மாற்றிக் கொண்டு சோழரின் பகைவர்களான பாண்டியருடன் கொண்டனர். இதைக்கண்ட இணைந்து இராசஇராச சோழன் (கி.பி. 983–1014) அநுராதபுரத்தைத் தாக்கி அதைத் தம் நேர் ஆட்சியின் கீழ்க்<noinclude></noinclude> g39l3l3dn88rx22j43lk2sklqqig3mh 1840372 1840371 2025-07-08T09:40:16Z Desappan sathiyamoorthy 14764 1840372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|அநுராதபுரம்|349|அநுராதபுரம்}}</noinclude>அறிந்த அத்துறவி மன்னன், ஓர் ஏழை அப்பொருளைப் பெற்றுக் கொள்ளட்டும் என்று தலையையே தந்தான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 385 |bSize = 480 |cWidth = 184 |cHeight = 143 |oTop = 111 |oLeft = 17 |Location = center |Description = }} {{center|அநுராதபுரம்-தூபாராம தூபி}} அக்குலத்தின் இறுதி மன்னனான மகாசேனன் (334–362) பல தூபிகளையும் மடங்களையும் கட்டியதுடன், நீர்ப்பாசனத்திற்கான ஏற்பாடுகளையும் செய்தான். கி.பி. 4–ஆம் நூற்றாண்டிலிருந்து 6–ஆம் நூற்றாண்டு வரை அந்நாட்டில் பல சிறந்த குளங்கள் வெட்டப்பட்டதால், அக்காலம் “குளங்கள் வெட்டப்பட்ட காலம்” என்றே குறிக்கப்படுகிறது. மேகவர்மன் கி.பி. 379 வரை ஆட்சி புரிந்தான். அவன் இந்தியாவின் சமுத்திரகுப்த மன்னனுடன் நட்புறவு பூண்டிருந்தான். புத்தரின் நினைவுச் சின்னமான பல், கலிங்க நாட்டிலிருந்து இவனால் பெறப்பட்டது. பின்போந்த புத்தசாரன், பத்து ஊர்களுக்கு ஒரு மருத்துவமனை என்ற முறையில் மருத்துவமனைகளைக் கட்டிப் புகழடைந்தான். வடமொழியில் சிறந்ததோர் மருத்துவ நூலும் இவனால் இயற்றப்பட்டது. மொக்கலானா (கி.பி. 491–508) என்பான், அவனுடன் அரசுரிமைக்காகப் போட்டியிட்ட கசியபன் என்பானை விரட்டத் தமிழர்களைப் படையில் அமர்த்தியிருந்தான். பின்னர் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்தவர்களும் தமிழர் படையையே நம்பியிருந்தனர். இதனால் தமிழரசர் படையின் செல்வாக்கு உயர்ந்து அவர்கள் அரசர்களை ஆக்குவோராகவும் அழிப்போராகவும் ஆயினர். அரசவையில் தமிழரின் செல்வாக்குப் பெருகியது. தென்னிந்தியாவில் தமிழ் நாட்டு அரசர்கள் வலிமை பெற்றிருந்த காரணத்தால், இலங்கையில் தமிழரின் செல்வாக்கைக் குறைக்க இயலவில்லை. கி.பி. 5,6,–ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பாண்டியர், பல்லவர், சோழர் ஆகியோரின் எழுச்சியின் காரணமாக, இலங்கைச் சிங்களவர்க்கும் தமிழ் நாட்டுக்குமிடையே பகைமையும் உறவும் நிலவின. இந்து சமயத்தை ஆதரித்த தமிழ் மன்னர்கள், சிங்களவரின் பௌத்த சமயத்தைத் தாக்கினர். இலங்கையில் தங்கியிருந்த தமிழர்களின் உதவியும் அவர்களுக்குக் கிடைத்தது. ஆரிய இனத்தவரான சிங்களவர்க்கும் தமிழருக்கும் பகைமை இருந்த போதிலும், சில காலங்களில் ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர். ஆனால் நெருக்கடி நிலை இருந்துகொண்டே இருந்தது. அநுராதபுர வரலாற்றில் தென்னிந்தியத் தலையீடு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இந்த அச்சுறுத்தல் காரணமாகவே அங்கே நிலைத்த அரசு ஏற்பட முடியவில்லை. முடிவில் அவ்வரசும் அழிந்தது. ஈழம் கி.பி. 6,7,8–ஆம் நூற்றாண்டுகளில், உள்நாட்டுப் போர்களாலும் துயருற்றது. பல்லவன் சிம்ம விட்டுணு (575–600) ஈழத்தை வென்றதாகக் கூறிக் கொள்கிறான். கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் அநுராதபுர அரசுக்கும் பல்லவர்களுக்குமிடையே நட்புறவு நிலவியது. தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவனும் (கி.பி. 630–655) இலங்கை மன்னன் மானவர்மனும் சேர்ந்து, சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வென்றதால், உள்நாட்டுப் போரால் பட்டமிழந்த மானவர்மனை, அநுராதபுர அரியணையில் மீண்டும் அமர்த்திப் புகழ் கொண்டதும் பல்லவப் பேரரசன் நரசிம்மவர்மனேயாவன். பல்லவர் வீழ்ச்சிக்குப் பிறகு தலைமை நிலை எய்திய சோழரும் பாண்டியரும் அநுராதபுர அரசுடன் வேறுவகையான உறவு பூண்டிருந்தனர். போராட்டமும் தொடர்ந்தது. அநுராதபுரத்தில், முதலாம் சேனன் (கி.பி. 833–853) ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் பாண்டிய மன்னன் சிரீமாற சிரீவல்லபன் (கி.பி. 815–860) ஈழத்தில் படையெடுத்து, அங்கிருந்த தமிழர்களின் உதவி பெற்று வெற்றி எய்தினான். பெருந்தொகையை இழப்பீடாகப் பெற்ற பிறகே பாண்டியப் படை வெளியேறியது. வஞ்சத் தீர்க்கக் காத்துக் கொண்டிருந்த ஈழமன்னன் இரண்டாம் சேனன், பாண்டிய நாட்டில் ஏற்பட்ட அரியணைப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டு, அரியணை வேண்டிய ஒரு பாண்டிய இளவரசனுக்கு உதவி செய்ய, மதுரையைத்தாக்கிச் சூறையாடினான். தமிழகத்தில் சோழர் தலைமை நிலையில் இருந்த தருணத்தில், சிங்களவர், தமது பழைய கொள்கையை மாற்றிக் கொண்டு சோழரின் பகைவர்களான பாண்டியருடன் கொண்டனர். இதைக்கண்ட இணைந்து இராசஇராச சோழன் (கி.பி. 983–1014) அநுராதபுரத்தைத் தாக்கி அதைத் தம் நேர் ஆட்சியின் கீழ்க்<noinclude></noinclude> rgcoaglyo68ftj7fblx042cm6fk3uw2