விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.46.0-wmf.24 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/31 250 22613 1925493 1921349 2026-04-19T15:42:28Z Booradleyp1 1964 1925493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஹோவன்னஸ் டூமேனியன்</b> <br>(1869–1923)}} {{center|{{x-larger|<b>என் நண்பன் நெஸோ</b>}}}} நாங்கள் ஊர்ப்பிள்ளைகள் எல்லோரும் எப்போதும் சந்தோஷமாக இருந்தோம். எங்களுக்கென்று பள்ளிக்கூடம் எதுவும் கிடையாது: படிப்பதற்குப் பாடங்களும் இல்லை. நாங்கள் பறவைகள் மாதிரித் துள்ளித் திரிந்தோம். நாள் முழுவதும் விளையாடினுேம். ஆ. நாங்கள் எப்படி ஆடிக் களித்தோம்! எவ்வளவு நல்ல நண்பர்கள் நாங்கள்! நாங்கள் ஒருவரை ஒருவர் எப்படி நேசித்தோம்! எங்களுக்குப் பசி வந்தபோது நாங்கள் வீட்டுக்கு ஓடி ஒரு துண்டு ரொட்டியும், மண்பானையிலிருந்து கொஞ்சம் வெண்ணெயும் எடுத்துத் தின்போம். திரும்பவும் விளையாட ஓடுவோம். அவ்வப்போது மாலை நேரங்களில் நாங்கள் வம்பு பேசவும் கதைகள் சொல்லவும் கூடுவோம். பையன்களில் ஒருவன் பெயர் நெஸோ. அவனுக்கு ஏகப் பட்ட கதைகளும் மோகினிக் கதைகளும் தெரியும். அவற்றுக்கு ஒரு முடிவே கிடையாது. கோடையில் நிலா நிறைந்த இரவுகளில், எங்கள் முற்றத்தில் குவிந்து கிடந்த கட்டைகள் மீது வட்டமாக அமர்ந்து, நாங்கள் நெஸோவின் முகத்தையே கிறக்கத்தோடு கவனித்துக்கொண்டிருப்போம். அவன் கூரி-பாரிபற்றியும், சொர்க்கத்தின் இனிய பறவை பற்றியும், ஒளியும் இருளும் நிறைந்த அரசுகள்பற்றியும் கதைகள் பல சொல்வான். “சொல்லு, நெஸோ. இன்னும் ஒரு கதை சொல்லு. குருட்டு ராஜாபற்றிய கதை, கிளிக் கதை, வழுக்கைத் தலையனையும் தாடியில்லாத ஆசாமியையும் பற்றிய கதை சொல்லு.” {{center|{{larger|<b>2</b>}}}} ஒருநாள் எங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் திறந்தார்கள். என் பெற்றோரும், சுமார் இருபது முப்பது பெற்றோர்கள்<noinclude></noinclude> gf2mpovr408z8vt4z1peim4i3xl5w4o பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/37 250 22619 1925489 1921362 2026-04-19T15:40:20Z Booradleyp1 1964 1925489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>அவெதிக் இஸாகியன்</b> <br>(1875-1957)}} {{center|{{x-larger|<b>சாஅதீயின் கடைசி வசந்தம்</b>}}}} வசந்தம் வந்துவிட்டது. மண்ணுலகை அற்புதமாக மாற்றுகிற மாய வசந்தங்களில் அதுவும் ஒன்று. சந்தோஷத்தின், மற்றும் சோகத்தின் கவிஞனான சாஅதி அதைப்போல் நூறு வசந்தங்கள் கண்டிருக்கிறான். அன்று அதிகாலையிலேயே சாஅதி விழித்தெழுந்தான். கானப்பறவை மீண்டும் கீதமிசைப்பதைக் கேட்கவும், வசந்த கால அற்புதங்களை மறுபடியும் பார்ப்பதற்காகவும், ரோணாபாத் நதிக்கரையின் மீதிருந்த பூந்தோட்டத்துக்கு அவன் போனான். இயற்கையின் லெகுமதியான ரோஜா மலர்களைச் சூடி காலைத் துயிலில் ஆழ்ந்திருந்த ஷிராஜின் வயலை நோக்கினான். நறுமணம் கலந்த வெண்பனியினால் திரையிடப் பட்டிருந்தது அது. பூத்துக் குலுங்கிய மல்லிகைச் செடி ஒன்றின் கீழே, அழகான விரிப்பின்மீது சாஅதி உட்கார்ந்தான். அவன் நடுங்கும் கைகளில் பசுமையும் செம்மையும் கலந்து ரோஜா மொக்கு ஒன்றைப் பற்றியிருந்தான். “தன்னை அணைக்கும் காதலனைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கும் ஒரு இளம் பெண்ணைப்போல, காலை மென் காற்றுக்காகத் தன் இதழ்களை விரிக்கிறது இந்த ரோஜா” என்று மெதுவாக முணுமுணுத்தாள். சாஅதி இப்போது மிகுந்த வயோதிகனாகிவிட்டபோதிலும், அவனுடைய ஆத்மா அரைவாசி மூடிய இமைகளினூடாகவும் காதுகளின் வழியாகவும் இந்த உலகத்தின் அற்புதமான நிகழ்ச்சிகளையும் உருவங்களையும், அறிமுகமாகாத நெடுந்தொலைவுகளின் இசைகளையும் நிசப்தங்களையும் இன்னும் கண்டும் கேட்டும் மகிழ்ந்தது. கவிதை எனும் மந்திரசக்தி—விண்மீன்களின் ராஜ்யத்தில் உள்ள காஃப் மலையின் உச்சியில் தனது கூட்டை அமைத்துள்ள அந்த ஜாருக்த் பறவை—அவனோடு இன்னும் பேசிவந்தது தான் காரணமாகும். ஒளி நிறைத்த கண்களும் சாம்பல்நிறச் சிறகுகளும் பெற்ற கானப்பறவைகள், காதல் கனலும் வசீகரமான இன்னிசைப்<noinclude></noinclude> tlewtqwfuwegpec5hibrmkgcucpnbuz பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/43 250 22625 1925490 1921427 2026-04-19T15:40:56Z Booradleyp1 1964 1925490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>டி. தெமிர்ச்யன் </b><br>(1877-1958)}} {{center|{{x-larger|<b>வயிறு</b>}}}} வீட்டிலிருந்து சதுக்கத்துக்கு; சதுக்கத்திலிருந்து வீட்டுக்கு. காலை முதல் மாலை வரை அவன் கண்காணிக்கிற எல்லை அது தான். முன்னர், அவன் தச்சுவேலைக்காரனாக இருந்தபோது கூட, நகரத்தில் அவன் போவதற்கு விசேஷமான இடங்கள் எதுவும் இருந்ததில்லை. ஆயினும், சனிக்கிழமை மாலை வேளைகளில் வீட்டுக்கு வந்ததும், அவன் நேரே மதுச்சாவடியை நோக்கி நடைபோடுவான். ஆனால் இப்போது யுத்தமும், பஞ்சமும், இன்னும் இதர பல விஷயங்களும் சேர்ந்து அவனையும் அடியோடு அமுக்கிவிட்ட காலத்தில், அவனுக்குப் போக்கிடமே இல்லை என்றாகிவிட்டது. அவன் வேலை செய்யவில்லை. ஏற்கெனவே கிழடாகிவிட்டான. முற்றிலும் ஓய்ந்துபோனான். தரித்திரம் பிடித்த கிராமம் ஒன்றில் தீனிக்கு வழியின்றிக் கிடக்கும் ஒரு நாய்க்கு — எவரையும் பயப்படுத்தாமலும், தான் இருப்பதை எவருக்கும் உணர்த்த முடியாமலும் வெறுமனே கம்மிய குரலில் குரைத்துக்கொண்டிருக்கிற அப்பாவி ஐந்துவுக்கு — இருக்கிற முக்கியத்துவம்தான் அவனுக்கும் இருந்தது. வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு தச்சன் அவன். அவ்வளவுதான். கடைசியாக அவனை வேலைக்கு வைத்திருந்த ஆசாமி அவனைச் சக்கையாக முற்றிலும் பிழிந்தெடுத்த பிறகு வீட்டுக்கு அனுப்பினான். அவனது சவப்பெட்டிக்கும் புதைகுழிக்கும் அவனை அனுப்பிவிட்டான் என்றே சொல்லவேண்டும். நாற்பது வருஷங்கள் உழைத்தும் அவன் எதுவும் மீத்திருக்கவில்லை. உடல் பலமோ, பணமோ, நண்பர்கள் என்று எவருமோ அவனுக்கில்லை. அனல் பறக்கப் பாய்ந்து ஓடும் குதிரைகள் பூட்டிய வண்டி மாதிரி அனைத்தும் அவனை விட்டுப் பறந்தோடின. தணிக்க முடியாத பசி ஒன்றுதான், நன்றியுள்ள நாய் மாதிரி, கடந்த காலத்தின் எச்சமாக அவனோடு ஒட்டிக் கொண்டிருந்தது. முன்னாள் கைவினைஞனின் ஆரோக்கியமான வயிறு பிடிவாதமாக இயங்கியது.<noinclude></noinclude> hq9dqoybv9pw4xkyliug2l5hpbp9p4q பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/53 250 22635 1925491 1923606 2026-04-19T15:41:32Z Booradleyp1 1964 1925491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஸ்டீபன் லோரியன்</b><br> (1889–1967)}} {{center|{{x-larger|<b>சர்க்கரைக் கிண்ணம்</b>}}}} திபிலிஸில் இளைஞன் ஒருவன், கையில் ஒரு சிறு மூட்டையுடன், ஸால்தாத்ஸ்கி பஜார் வழியாக நடந்தான். அங்கே ஜனங்கள் ஊறவைத்த வெள்ளரி, மட்டரக வெண்ணெய், திருட்டுத் துணிமணிகள், மற்றும் பழைய தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுவந்தார்கள். அவன் ஒரு விலாசத்தைத் தேடி அலையும் அந்நியன்போல, நிலையாக அங்குமிங்கும் பார்த்தபடி, அழுத்தமாகவும் ஒழுங்கற்றும் அடி எடுத்துவைத்து நடந்தான். அத்துடன், அவன் முகம், விமர்சகர்களால் அவமானப்படுத்தப்பட்ட கவிஞர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடியது போன்று, பாதி இடருற்றும் பாதி அவமதிப்புக்கு உள்ளாகியும் காணப்பட்டது. அவன் தனது பழைய இங்கிலீஷ் குல்லாய்க்குப் பதிலாக அகல விளிம்பு கொண்ட பிரஞ்சுத் தொப்பி அணிந்திருந்தால், ஒரு தொப்பி வாங்குவதற்காக அல்லது நாடகம் பார்ப்பதற்காக நகரத்துக்கு வந்திருக்கும் நாட்டுப்புற உபாத்தியாயர் என்றே எவரும் அவனே மதிப்பிடுவர். அல்லது, அவனுடைய நீண்ட, ரொம்பவும் சுருங்கிப்போன, கசங்கி வர்ணம் மங்கிய நீள மேலங்கிக்குப் பதிலாக, ரசாயன சாதனங்களால் சலவை செய்யப் பட்ட இறுகலான சட்டை ஒன்றை அவன் அணிந்திருந்தால், நாகரிகமற்ற ஒரு நகரத்திலிருந்து வந்திருக்கும் சிறிய கடைக்காரன் என்றே பிறர் அவனைப்பற்றி நினைப்பார்கள். ஆனால், உண்மையில் அவன் அப்படி யாரும் இல்லை. நிஜத்தைச் சொல்லவேண்டுமானல், அவன் அப்போதுதான் விடுதலையாகி வந்த ஒரு கைதியாவான். ஓ, சிறையின் இரும்புக் கதவுகள் அவனுக்கு முன்னே திறக்கப்பட்டு, விண்ணிலிருந்து லேசான மழை தூறிக் கொண்டிருந்த தெருவுக்கு அவன் வந்தபோது, அவன் இதயம் எத்தகைய உவகையினல் துடித்தது. அந்த நேரத்தில், நிச்சயமாக அவன், ஜெயிலிலிருந்து வெளியே வருகிற ஒவ்வொரு நபரும் உணர்வது போலவே, எல்லாவற்றைப்பற்றியும் மிக<noinclude></noinclude> k3y7lhcilxpcny9suk5cgwg6i2lxhpb 1925492 1925491 2026-04-19T15:42:01Z Booradleyp1 1964 1925492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஸ்டீபன் லோரியன்</b><br> (1889–1967)}} {{center|{{x-larger|<b>சர்க்கரைக் கிண்ணம்</b>}}}} திபிலிஸில் இளைஞன் ஒருவன், கையில் ஒரு சிறு மூட்டையுடன், ஸால்தாத்ஸ்கி பஜார் வழியாக நடந்தான். அங்கே ஜனங்கள் ஊறவைத்த வெள்ளரி, மட்டரக வெண்ணெய், திருட்டுத் துணிமணிகள், மற்றும் பழைய தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுவந்தார்கள். அவன் ஒரு விலாசத்தைத் தேடி அலையும் அந்நியன்போல, நிலையாக அங்குமிங்கும் பார்த்தபடி, அழுத்தமாகவும் ஒழுங்கற்றும் அடி எடுத்துவைத்து நடந்தான். அத்துடன், அவன் முகம், விமர்சகர்களால் அவமானப்படுத்தப்பட்ட கவிஞர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடியது போன்று, பாதி இடருற்றும் பாதி அவமதிப்புக்கு உள்ளாகியும் காணப்பட்டது. அவன் தனது பழைய இங்கிலீஷ் குல்லாய்க்குப் பதிலாக அகல விளிம்பு கொண்ட பிரஞ்சுத் தொப்பி அணிந்திருந்தால், ஒரு தொப்பி வாங்குவதற்காக அல்லது நாடகம் பார்ப்பதற்காக நகரத்துக்கு வந்திருக்கும் நாட்டுப்புற உபாத்தியாயர் என்றே எவரும் அவனே மதிப்பிடுவர். அல்லது, அவனுடைய நீண்ட, ரொம்பவும் சுருங்கிப்போன, கசங்கி வர்ணம் மங்கிய நீள மேலங்கிக்குப் பதிலாக, ரசாயன சாதனங்களால் சலவை செய்யப் பட்ட இறுகலான சட்டை ஒன்றை அவன் அணிந்திருந்தால், நாகரிகமற்ற ஒரு நகரத்திலிருந்து வந்திருக்கும் சிறிய கடைக்காரன் என்றே பிறர் அவனைப்பற்றி நினைப்பார்கள். ஆனால், உண்மையில் அவன் அப்படி யாரும் இல்லை. நிஜத்தைச் சொல்லவேண்டுமானல், அவன் அப்போதுதான் விடுதலையாகி வந்த ஒரு கைதியாவான். ஓ, சிறையின் இரும்புக் கதவுகள் அவனுக்கு முன்னே திறக்கப்பட்டு, விண்ணிலிருந்து லேசான மழை தூறிக் கொண்டிருந்த தெருவுக்கு அவன் வந்தபோது, அவன் இதயம் எத்தகைய உவகையினல் துடித்தது. அந்த நேரத்தில், நிச்சயமாக அவன், ஜெயிலிலிருந்து வெளியே வருகிற ஒவ்வொரு நபரும் உணர்வது போலவே, எல்லாவற்றைப்பற்றியும் மிக<noinclude></noinclude> e9s44q3om3udtphc7zclso97gubwzh5 பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/60 250 22642 1925494 1923615 2026-04-19T15:44:14Z Booradleyp1 1964 1925494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>வாகன் டோடோவென்ட்ஸ்</b><br> (1834—1938)}} {{center|{{x-larger|<b>ஒரு ஆர்மேனியன்<br> குழந்தைப் பருவத்திலிருந்து சில காட்சிகள்}}<br> (நாவலிலிருந்து ஒரு பகுதி) </b>}} மெசபடோமியாவிலிருந்து வருகிற ஒட்டகப் பயணிகளின் கூட்டங்கள் எங்கள் வீட்டு வாசலின் முன்பாகத்தான் போகும். ஆசியா மைனரில் உள்ள பல்வேறு முக்கிய வர்த்தசுக் கேந்திரங்களுக்கு, தூர தொலைவில் உள்ள செபஸ்டியாவுக்கும், அவர்கள் போவது வழக்கம். பனிக்காலத்தில் எங்கள் பழத்தோட்டங்கள் காய்த்து ஓய்கிற கட்டத்தை அடையும் சமயம், ஒட்டகக் கூட்டங்கள் எல்லையிலாப் பாலைப் பெருவெளியை நோக்கித் திரும்பும். செல்வம் கொழிக்கும் பாபிலோனிய மற்றும் அராபிய நகரங்களுக்கு, நட்சத்திரங்களைப்போல் பிரகாசிக்கும் வைரங்களும் இதர மணிக்கற்களும் மிகுதியாகக் கிடைக்கும் இடங்களை நோக்கி, அவை போகும். தென் பிராந்தியத்தின் இனிமையான பேரிச்சம்பழங்களை ஒட்டகக் கூட்டங்கள் எங்களுக்குக் கொண்டு தரும். ஒட்டகக் கூட்டங்கள் வந்ததும் எங்கள் சந்தை மைதானம் உயிர்பெற்று விளங்கும். அவற்றின் சின்னஞ்சிறு மணிகளின் கிண்கிணி ஓசையினாலும்—அறிவார்ந்த, அமைதி படிந்த ஒட்டகங்களின் கண்ணோட்டங்களாலும்—துயருற்றுப் புலம்பும் அவற்றின் நெடிய களைத்துப்போன குரல்களினாலும் நகரம் நிறைந்திருக்கும். பாலைவன வானத்தைப்போலவே அமைதியானது ஒரு ஒட்டகத்தின் பார்வை. ஒட்டகக் கூட்டங்கள் பிரிந்துபோன பின்னரும் அந்தப் பார்வையின் நினைவு எங்கள் உள்ளத்தில் வெகு நாட்கள் நிலைத்து நிற்கும். மாரிக்காலத்தில் அவர்கள், காலுறைகள் தயாரிப்பதற்காக ஒட்டக ரோமங்களைச் சேகரிக்கும்பொருட்டுத் தங்களைத் தொடர்ந்து வரும் பிள்ளைகள் கூட்டத்தைச் சட்டைபண்ணாது நடந்து போகையில், ஒட்டகங்கள் எங்கள் தெருக்களின் ஓரத்தில் வரிசையாகத் தென்படும் சுவர்கள்மீது தங்கள் கண்களைப் பதித்-<noinclude></noinclude> ly7vma4lvhk2xejh4ebi5ayujm6wqos பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/67 250 22649 1925495 1924028 2026-04-19T15:44:41Z Booradleyp1 1964 1925495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>அக்செல் பாகுன்ட்</b><br>(1899—1937)}} {{center|{{x-larger|<b>ஆல்ப் மலை வயலட் பூ</b>}}}} காகவபெர்தா மலைச் சிகரம் வருஷம் முழுவதும் மேகங்களால் மூடுண்டிருக்கிறது. கோட்டையின் கரடுமுரடான சுவர்களை வெண்மேகங்கள் மறைக்கின்றன. அதன் உயரமான கோபுரங்கள் அங்குமிங்கும் தலைதூக்கி நிற்கின்றன. தூரத்திலிருந்து பார்க்கையில், மதில்புறங்களைக் காவல்காரர்கள் காத்து நிற்பது போலவும், கோட்டையின் பெரிய இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதாகவும். மலைமீது ஏறிவரும் ஒரு அந்நியனை எந்த நேரத்திலும் ஒரு காவலன் தடுத்து அறைகூவக்கூடும். என்றும் தோன்றுகிறது. ஆனால், காற்று மேகங்களைச் சிதறடித்ததும், வெண்சிதறல்கள் கரைந்துவிட்டதும், முதலாவதாகக் கோபுரத்தின் சரிந்த உச்சி தென்படுகிறது. பின்னர் சுவர்கள் மண்ணில் அரைவாசி புதைந்து காணப்படுகின்றன. அங்கே இரும்புக் கதவுகளும் இல்லை, காவலாட்களும் இல்லை. காகவபெர்தாவின் இடிபாடுகளில் நிசப்தம் ஆட்சிபுரிகிறது. கொந்தளிக்கும் பாஸட் ஆறு கீழே உள்ள பள்ளத்தாக்கினூடே, குறுகலான பாறைகளின் நீலப் படிகங்களைப் பளபளப்பாக்கியவாறு பாய்ந்து ஓடும் ஓசைதான் அங்குக் கேட்கிற ஒரே சப்தம். சுழலும் தண்ணீருக்கடியில் ஆயிரம் ஓநாய்கள் தங்களைப் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலிகளைக் கடித்தவாறு ஊளையிடுவது போல் தோன்றுகிறது. ஒரு ராஜாளியும் ஒரு கழுகும் சுவர்களில் கூடுகள் கட்டியிருந்தன. காலடியின் சரசரப்புக் கேட்டதுமே அவை கடூரமாகக் கூச்சலிட்டாடி மேலே பறந்து, இடிபாடுகளுக்கு உயரே வட்டமிடத் தொடங்குகின்றன. மலைப்பருந்து ஒன்றும் அவற்றோடு சேர்கிறது. அதன் மூக்கு வளைந்த குறுவாளாகவும், அதன் கால் விரல்கள் கூரிய ஈட்டிகளாகவும், அதன் சிறகுகள் இரும்புக் கவசமாகவும் தோன்றுகின்றன. காகவபெர்தாவின் அத்தனை உயரத்தில் பூக்கிற ஒரே பூ வயலட்தான். அது ரத்தச் சிவப்பு நிறத்தில், மலைப்புறாவின்<noinclude></noinclude> 1qx0v2lgrp39iver2xeue8pg5v824tk பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/80 250 22662 1925496 1924137 2026-04-19T15:45:15Z Booradleyp1 1964 1925496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>வாக்தாங் அனான்யன்</b><br>(1905)}} {{center|{{x-larger|<b>துரோகி</b>}}}} மாரிக்காலத்தின் ஒரு குளிர்ந்த நாளில் நாங்கள் ஓய்வு பெறுவதற்காக, பெர்சிய எல்லை அருகிலிருந்த மலையடிவாரக் குக்கிராமம் ஒன்றில் தங்கினோம். அங்கே இரவைக் கழித்துவிட்டு மறுநாள் காலையில் மலை ஆடுகளை வேட்டையாடப் போகலாம். என்று எண்ணினோம். நெட்டையாக உயர்ந்திருந்த ஒருவன் வீட்டில் நாங்கள் தங்கினோம். அவன் முகம் கோணலாய், வெளிறியும் வருத்தமாகவும் காணப்பட்டது. அதன் ஒரு பகுதி துண்டில் மூடுண்டிருந்தது. சுடர்விட்டு எரியும் கணப்பின் முன்னே நான் கிழக்கத்திய முறையில் உட்கார்ந்து, எனக்குப் பிடித்தமான பாணியில் வேட்டையையும் வேட்டைக்காரர்களையும்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். “நான்கூட முன்னொரு காலத்தில் வேட்டைக்காரனாக இருந்தேன். ஆனால் அதை விட்டுவிட்டேன். அது ஒரு அயோக்கியத் தொழில்” என்று வீட்டுக்காரன் பெருமூச்சுடன் சொன்னான். “ஒருவர் வேட்டையாடுவதை நிஜமாகவே விட்டுவிட முடியுமா?” என்று என் கூட்டாளி கேட்டான். அந்த மனிதன் மறுபடியும் நெடுமூச்சு உயிர்த்தான். “மிகப் பெரிய பாம்பு ஒன்று என் வேட்டைக்கு முடிவு கட்டிவிட்டது.” “இது சுவாரஸ்யமாக இருக்கிறதே” என்று நான் நினைத்தேன். பேசாமல் இருந்த வீட்டுக்காரன், எங்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி, இறுதியாக மனமிளகி, பின்கண்ட கதையைச் சொன்னான்: கணப்பருகே அமர்ந்து, தனது ஹுக்காவைப் புகைத்தபடி அவன் சாவதானமாகக் கூறினான். “ஒரு காலம் இருந்தது” என்று அவன் ஆரம்பித்தான். “அப்போது என் முகம் கோணியிருக்கவில்லை. ஜனங்கள்<noinclude></noinclude> gp6e6llyvhb2objdad6eb1k6aunq4p7 பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/94 250 22676 1925497 1924547 2026-04-19T15:45:43Z Booradleyp1 1964 1925497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ஸெரோ கான்ஸாடியன்</b> <br>(1915)}} {{center|{{x-larger|<b>வெள்ளை ஆட்டுக்குட்டி</b>}}}} கிழத் தோட்டக்காரன் நவசார்த் குளித்து ஓய்வெடுப்பதற்காக முந்திரி மரத்தடியில் பொங்கிப் பெருகிய நீரூற்றுக்குப் போனான். வெயிலில் கருகிய தன் முகத்தின்மீது குளிர்ந்த நீர் படட்டும் என்று அவன் குனிந்தானோ இல்லையோ, அவனது குழுத் தலைவன், “ஏ நவசார்த்! சீக்கிரம் வா! உன் மகன் அர்ஷாக் வந்திருக்கிறான்!” என்று அவனை அழைக்கும் குரலைக் கேட்டான். “என்ன?”' என்று கிழவன் பரபரப்புடன் கத்தினான். பிறகு சிரமத்தோடு நிமிர்ந்தான். தனது வயதுக்கு மீறிய வேகத்துடன் அவன் அந்த ஆள் நின்ற இடத்துக்கு விரைவாகத் திரும்பினான். “நீ என்ன சொன்னாய்? அவன் எப்போது வந்தான்? எங்கே இருக்கிறான்?” “அவன் கிராமத்தில் இருக்கிறான். நானே அவனைப் பார்த்தேன். நீல ஸெடான் காரை அவன் ஊர் வழியாக ஓட்டிச் சென்றான். நீ அதிர்ஷ்டசாலிதான் நலசார்த்; ஆண்டவன் உனக்கு ஒரு அருமையான மகனை அருள்புரிந்திருக்கிறார்!” சூரியன் முன்னைவிடப் பன்மடங்குப் பிரகாசமாக ஒளிரத் தொடங்கியது. நவசார்த் காற்றில் மிதப்பதுபோல் உணர்ந்தான். பரவசத்தினால் அவன் இதயம் துடித்தது. நவசார்த் ஊரின் பக்கமாகப் பார்த்தபோது எதையோ சிந்தித்ததாகத் தோன்றியது. ஆனால் உடனே அவன் வேகமாகத் திரும்பி மதுவடிக்கும் இடம் நோக்கி ஓடினான். அவன் பத்து வருஷங்களாக அர்ஷாக்கைப் பார்க்கவில்லை. ஒவ்வொரு வருஷமும் அவன் நம்பிக்கையோடு ரஸ்தாவை நோக்குவான்; காத்திருப்பான். அவன் பொறுமையோடு காத்திருந்தான். இப்போது, நெடுங்காலத்துக்குப் பிறகு, அவன் மகனைப் பார்ப்பான். அர்ஷாக் நல்ல சமயத்தில் வந்திருக்கிறான்; பழத்தோட்டங்களில் கனிவகைகள் நன்கு பழுத்துள்ளன. அவன் இன்னும் திடமாகவும் உற்சாகமாகவும் இருந்தான்.{{nop}}<noinclude></noinclude> 2l3sipcw17e2hkkc6f43quchvs3419n பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/102 250 22684 1925498 1924633 2026-04-19T15:46:13Z Booradleyp1 1964 1925498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>காஷாக் ஜியுல்நஸாரியன்</b> <br>(1918)}} {{left_margin|3em|<poem>ஆறாவது கட்டளை</poem>}} அவன் ஒரு பெரிய கவி என்று எல்லோரும் சொன்னார்கள். மரியா மகதலேனாளின் பாபத்தை மன்னித்த ஆண்டவனிடம் அவன் நம்பிக்கை வைத்திருந்தால்! ஆனால் அவன் மத நம்பிக்கை கொண்டவன் அல்ல. மேலும், தன்னலத் தியாகம் மடத்தனமானது என்று அவன் கருதினான். அவன் ஆண்மை நிறைந்தவன். அவனோடு பழகிய பெண்கள் அப்படித்தான் நம்பினார்கள். தடித்த உதடுகளும், உணர்ச்சி நிறைந்த பெரிய வாயும், நெளிநெளியான கரிய தலைமுடியும் பெற்றிருந்த அந்த இளைஞனோடு அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். ஒரே பார்வையில் வெற்றி கொண்ட, ஏக்கம் நிறைந்த தரும் கண்கள்தான் அவனின் மிகச் சிறந்த அம்சமாக விளங்கின. அவன் கழுத்தில் ‘டை’ கட்டிக் கொள்வதில்லை. மிகச் சமீபகால நாகரிக முறைகளை அவன் பின்பற்றமாட்டான். நேர்த்தியாக அலங்கரித்துக்கொண்ட யுனிவர்சிட்டி மாணவர்களை “இஸ்திரிபோட்ட உடுப்புகள்” என்று பெண்கள் பரிகசித்தார்கள். ஆனால், எப்போதும் அசிங்கமான தமாஷ்களைப் பேசிக்கொண்டு—தன் அம்மாவின் முன்னிலையில்கூட அவற்றைக் கூற அவன் தயங்கமாட்டான்—புகையும் கறுப்புக் குழாயை உறிஞ்சியவாறு காணப்பட்ட பார்கெவ் ஆராமஸை ஒரு ‘காட்டுமிராண்டி’ என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். அவன் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தினான். ஆனல், இளம் பெண்கள் ஆச்சர்யம் அடையவில்லை. அவனைக் கண்டதுமே காதல் கொண்டார்கள். “ஆறாவது கட்டளையாவது: விபசாரம் செய்!” ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தங்கள் புனிதமான எழுத்துகளை உருவாக்கிய ஒரு மீனவனும் ஒரு தச்சனும் வாழ்க்கையைப்பற்றி என்ன கண்டார்கள்? அப்போது கூட மரியா மகதலேனா அருகிலேயே வாழ்ந்துகொண்டிருந்தாளே!{{nop}}<noinclude></noinclude> 0y0eposnbi0i6iwxrh69sv87c3x3mfo பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/110 250 22692 1925499 1925075 2026-04-19T15:46:42Z Booradleyp1 1964 1925499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>அபிக் அவாகியன்</b> <br>(1919)}} {{center|{{x-larger|<b>தென்பிராந்திய ஜுரம்</b>}}}} ஆயிரம் வருஷங்கள் ஆனாலும்கூடத் தென்பிரதேச மக்கள் கிழவேட்டைக்காரன் பாபெஹை நினைவு வைத்திருப்பார்கள். ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகும், பாப்பி வயல்கனிலிருந்து திரும்பி வருகிற, வெயிலில் காய்ந்து களைத்துப்போன விவசாயிகள் அந்தக் குன்றின் சரிவுமீது நின்று, பாபெஹைப்பற்றித் தங்கள் மூதாதையர் பின்னியிருக்கும் கதைகளை நினைவுகூர்வர். கிழவன் சொன்னதை நான் நினைத்துக்கொள்கிறேன்! “நான் மூன்று முறை கீழே இறங்கி, நாணல் காட்டினுள் போனேன். ஆனால், புலிகளைத் தேடி அல்ல. அங்கே வெகு தூரத்தில் ஒரு இடத்தில் நீரூற்று ஒன்று இருக்கிறது; அதன் நீர் ஆகாய நீல நிறத்தில் இருக்கும் என்று என் தந்தை என்னிடம் சொல்வது வழக்கம். அந்த நீரூற்றைக் கண்டுபிடிக்க நான் ஆசைப்பட்டேன்.” நாங்கள் மெதுவாகச் சிரிப்போம். ஏனெனில் பாபெஹ் ரொம்ப முதியவன். பாபெஹ் அவனது வாழ்நாளில் அந்த நீரூற்றைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், நொறுங்கிப்போன அவனது மிச்ச சொச்சங்களை நாங்கள் கண்டோம். அவற்றை எடுத்து வந்து இங்கே குன்றின் சரிவில் புதைத்தோம். பாபெஸுக்குப் பிறகு, கிராமத்தில் சாய்ஃபி எனப் பெயர் கொண்ட மூன்று சகோதரர்கள் தோன்றினார்கள். அவர்களில் மூத்தவன் பெயர் வாலி—வாலி சாய்ஃபி. அவன், வரிசையாகச் சென்ற அமெரிக்க லாரிகளைக் கொள்ளையடித்து வருவதற்காகத் தன் சகோதரர்கள் இருவரையும் அனுப்பினான். ஆனால், நாங்கள் கிராமத்திலேயே இருந்தோம். அவன் ஒரு அமெரிக்கனுக்கு நாற்பது புட்டி பேரீச்சை மதுவும், நாற்பது கிலோகிராம் கஞ்சாவும் கொடுத்து, பதிலுக்கு ஒரு சாதாத் துப்பாக்கியும் ஒரு பெட்டி நிறையத் தோட்டாக்களும் பெற்றுக்கொண்டான் என்று ஜனங்கள் சொன்னார்கள். அவன் நாணல் காட்டுக்கு வழக்கமாகப் போவான். பாபெஹ் போல அவன் கீழே இறங்கி நாணல்<noinclude></noinclude> 5l11eevs6eiz2n9yuoalzo2wvkxbe3h பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/119 250 22701 1925500 1925392 2026-04-19T15:47:08Z Booradleyp1 1964 1925500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>ராபேல் ஆராம்யன்</b><br>(1921)}} {{center|{{x-larger|<b>ஒரு சிறுவனும் பெரிய லாரி டிரைவரும்</b>}}}} ஒரு தொழிலாளர் குடியிருப்புக்கு இட்டுச் செல்கிற செங்குத்தான இறக்கம் ஒன்றின் ஓரத்தில் ஒரு விடுதி இருக்கிறது. ஜனங்கள் அபூர்வமாகத்தான் அங்கே தங்குவர். அதனால், அங்கு ஒரே ஒரு இரவுப்பொழுதைக் கழிக்கிற யாரையும் வெகுகாலம் வரை நினைவு வைத்திருப்பார்கள். குறைந்தபட்சம் இன்னொரு நபர் வந்து தங்கும் வரையிலாவது நினைவுகூர்வர். தன் சிறு மகனுடன் தனித்து வாழும் ஒரு பெண்தான் அவ் விடுதியின் சொந்தக்காரி. ஒரு இரவை அங்கே கழிக்கவேண்டிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. பிரயாணம் போவது குறித்தும், அயல்நாடுகளையும் கண்டறியாத நகரங்களையும் பார்ப்பதுபற்றியும் நான் என் வாழ்நாள் முழுவதும் கனவு கண்டிருக்கிறேன். ஆனால், நடைமுறையில், எனது சிறிய ஆர்மேனியாவின் எல்லைகளுக்கு அப்பால் நான் போனதே இல்லை. நான் வேறு வேலை பார்க்கத் தகுதியற்றவனாக இருந்ததனாலேயே ஒரு லாரி டிரைவர் ஆனேன் என்று மக்கள் நினைக்கிறார்கள். சில பேர் எவ்வளவு விந்தை மனிதராக இருக்கிறார்கள்! அவர்கள் பிறர்மீது எந்தப் பழியையும் சுமத்திவிடுகிறார்கள். ஒருவன் தன்னையே அறிந்துகொள்ளவில்லை என்றுகூடக் குறை கூறுகிறார்கள். உண்மையில், நான் என்னை ரொம்ப நன்றாக அறிவேன். முகம் பார்க்கும் கண்ணாடிமுன் நிற்கிறபோதெல்லாம். நீதான் உலகத்திலேயே மிகுந்த குரூபியாக இருக்கவேண்டும்; இல்லையேல் நீ ஏன் எவருடைய அன்பையும் ஒருபோதும் அடைமுடியாதவனாக இருக்கிறாய் என்று எனக்கு நானே கூறிக்கொள்ளும் அளவுக்கு நான் என்னை வெகு நன்றாக அறிவேன். ஆனாலும் நீ நல்ல இதயம் பெற்றிருக்கிறாய் என்றும் நான் கூறுவது உண்டு. நான் அதிகம் அளக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? அப்படி இல்லை. அதுதான் சரியான உண்மையாகும். இல்லையெனில், விடுதியின் சொந்தக்காரியையும் அவளுடைய வாயாடிச் சிறுமகனையும் நான் ஒருபோதும் கவனித்திருக்கமாட்டேன்.{{nop}}<noinclude></noinclude> qxusr86pb4gr52a3e1bxacp6sacv3hm பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/126 250 22708 1925501 1925402 2026-04-19T15:47:39Z Booradleyp1 1964 1925501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>எம்கிர்திச் சார்கிஸ்யன்</b><br>(1924)}} {{center|{{x-larger|<b>பெண்களே,<br> நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்! </b>}}}} நீங்கள் எப்படி மாறிப்போனீர்கள்! உண்மையாகவே நீங்கள் மாறிவிட்டீர்கள். நான் இளைஞனாக இருந்தபோது, பெண்கள் உங்களைப்போல் இருந்ததில்லை. காலம் முன்னேறுகிறது. நாங்கள் காலத்தோடு நகரவேண்டும் என்று நீங்கள் சொல்வீர்கள். இதை நான் அறிவேன். இயல்பாக, அது சரியானதே. ஆனால், அது மட்டுமல்ல விஷயம். என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். உங்கள் குதி உயர்ந்த காலணிகளும், நாகரிக உடைகளும் மட்டுமே உங்களை மாற்றிவிடவில்லை. இல்லவே இல்லை! ஆண்களின் உடைகளில் நாகரிகமானவற்றைத்தான் நானும் அணிகிறேன். ஆனால் அது என்னை ஒரு அணுகூட அதிக நவீனமானவனாக ஆக்கிவிடவில்லை. இவ்விஷயத்தில் நான் தேர்ந்தெடுப்பதற்கு வேறு வகையில்லை என்பதுதான் காரணம் ஆகும். ஆனால், நாம் விஷயத்தைவிட்டு விலகிவிட்டோம் என்று எண்ணுகிறேன். நான் சொல்லிக்கொண்டிருந்த விஷயத்துக்குத் திரும்புவதானால், பெண்களே, நீங்கள் ரொம்பவும் மாறிப் போனீர்கள். அதுவும் நல்லதுக்குத்தான். எனினும், நடந்த காரியங்கள் தங்களுக்காகப் பேசட்டும். அநேக வருஷங்களுக்கு முன்பு நான் எப்படிக் காதல் வயப்பட்டேன் என்பதையும், என் அண்டை வீட்டுக்காரனின் மகன் கேரன் சமீபத்தில் எவ்வாறு காதலில் ஈடுபட்டான் என்றும் உங்களுக்குச் சொல்கிறேன். {{c|{{larger|<b>என் காதல்</b>}}}} எங்கள் நகரம் மிகப் பெரியது அல்ல. எங்கள் ஊரைப்போல் பதினைந்து நகரங்கள் சேர்ந்தால்தான் எரவான் போன்ற மாநகருக்கு ஈடாகக்கூடும். எங்களுக்கும் ஒரு கூட்டுப்பண்ணை இருந்தது. அதன் தலைவர் பெயர் கார்சோ, சரியாகச் சொல்வதானால், துருவேறிய கிழட்டுக் கார்சோ. கார்சோவின் காரோட்டிதான் அவருக்கு இந்தப் பட்டப் பெயரை வைத்ததாகச் சொல்கிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> i5tdtkrtlk6jx42hba7lgag4jkkn21u பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/128 250 22710 1925463 743936 2026-04-19T12:49:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|98||பெண்களே, நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்!}}</noinclude>போகிறார்” என்று கிழவன் மேட்டோ சொல்வான். அவன் எப்போதும் தலைவரின் கோபப் பார்வையில் ஒரு புயலை எதிர்பார்த்திருந்தான். “அவர் ஏன் தனது மூக்கிற்கு அப்பால் பார்க்க முடியவில்லை என்று அவரை யாராவது கேட்க வேண்டும்” என்பான். “அவருக்குக் கிட்டப் பார்வை. துரு அவர் கண்களைக் கவ்விக் கொண்டது. காலுக்கு அடியில் உள்ள தரையை அவரால் பார்க்க முடியாது. அவர் தன் கண்களை ஒருபோதும் வானத்துக்கு உயர்த்துவதில்லை. அவர் வெறுமனே துரு ஏறிய கிழட்டுக் கார்சோ, அவ்வளவுதான் விஷயம்!” காதலுக்கும் கார்சோவுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். ஒரே தாவலில் எந்த முடிவுக்கும் வராதீர்கள். துரு சில சமயம் தங்கத்தைக் கொண்டுவர முடியும். ஒருபுறம் கடுகு நிறத்தில் தூசி இருக்கிறது; அதே சமயம் சில இலைகளின் மீது படிந்திருப்பதுபோல் வெள்ளிய நட்சத்திர தூசியும் இருக்கிறது என்று வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. துரு ஏறிய கிழ கார்சோவுக்கு ஒரு மகள் இருந்தாள். ஏரெல் அல்லது ஏரெவிக் என்று பெயர். அப்படியென்றால் சூரியஒளி எனப் பொருள். அவளுடைய மாற்றாந்தாய் திருமதி ரோசா என்று அழைக்கப்பட்டாள். ஏரெவிக் சூரியன்போல் இருந்தாள்; ஆனால் ரோசா ஒரு ரோசாப்பூ போல் இல்லவே இல்லை. நான் அவளை, திருமதி முள்ளி என்று குறிப்பிடுவேன். பாவம் ஏரெவிக். துருவுக்கும் முள்ளுக்குமிடையே சிக்கி அவதிப் பட்டாள். அவள் உதயத்துக்கும் முன்னரே எழுந்துவிடுவாள். நடுராத்திரிக்கு முன் படுக்கப் போகமாட்டாள். செய்திகள் சொல்லப்போவதிலும், சமையல் தவிர இதர வீட்டு வேலைகள் எல்லாம் செய்வதிலும் அவள் நாட்கள் கழிந்தன. “சீக்கிரம்! நீ எங்கே போய்த் தொலைத்தாய்? வெங்காயத்தை எடுத்துத் தா!” “ஓ, நீ செத்த பூனையைவிட ரொம்ப மோசம்! உன்னால் வேகமாக நடக்க முடியாதா என்ன?” “படுக்கையை உலரப் போடு! சீக்கிரம் செய்!” அதுதான் திருமதி முள்ளி. கிழட்டுத் துரு ஏறி தன் பங்குக்கு ஏவுவார்: “ஏரெவ், என் பூட்சுக்குப் பாலிஷ் போடு!”{{nop}}<noinclude></noinclude> rhon3bos1249xt86wk8qgck4r4s8ue9 பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/129 250 22711 1925464 743937 2026-04-19T12:56:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|எம்கிர்திச் சார்கிஸ்யன்||99}}</noinclude>“ஏரெவ், என் மேல்சட்டை தூசியாக இருக்கிறது!” “ஏரெவ், எங்குப் பார்த்தாலும் தூசி நிறைந்திருக்கிறதே!” அவர்கள் ஏரெவ்வை விட்டுவைக்கவில்லை. ஓ ஏரேவிக்... அவள் எனக்குச் சூரியனைவிட முக்கியமானவள். நான் இதை உணர்ந்துகொண்டபோது, அவள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்தாள்; நான் பத்தாவது வகுப்பில் இருந்தேன். எங்கள் வகுப்பு அறைகள் ஹாலுக்குக் குறுக்கே எதிர் எதிராக இருந்தன. எங்கள் வீடுகள் ரஸ்தாவின் குறுக்கே எதிர் எதிராக இருந்தன. சுருங்கச்சொன்னால், நாங்கள் சூரியனையும் பூமியையும்போல் இருந்தோம்; எப்போதும் எதிர் எதிராக; எப்போதும் தூரம் தூரமாக. ஏரெவிக் ஒல்லியாய் அழகாய் இருந்தாள். பெரிய, கரிய, மிரண்ட கண்கள் அவளுடையவை. அவள் அதிக அழகுடன் வளர்ந்தாள். அதுவே அவள் கண்கள் சிவந்து கலங்கக் காரணமாயிற்று. திருமதி முள்ளிக்கு அவளைக் காணவே சகிக்காது. அவளைத் தாக்குவதற்குக் கிட்டும் எந்த வாய்ப்பையும் முள்ளி நழுவ விடுவதில்லை. கார்சோவும் அவளைப் பின்பற்றினார். ஆகவே, ஏரெவிக்கின் கரிய பெரிய கண்கள் எப்போதும் கண்ணீரால் நிறைந்திருந்தன. அவர்கள் வீட்டுவாசலுக்கு வெளியே நான் அவளுக்காகக் காத்திருந்தேன். “நீ எப்படி வளர்ந்துவிட்டாய், ஏரெவிக்! நீ எவ்வளவு அழகாக வளர்ந்திருக்கிறாய்!” என்றேன். அவள் ஆச்சர்யமாக என்னைப் பார்த்தாள். என்னை அவள் நம்பவில்லை என நான் கண்டேன். “அவர்கள் என்னைப் போதுமான அளவுக்குப் பழிக்கிறார்களே, ஆர்மன். நீயும் சேர்ந்து பழிக்கவேண்டுமா?” என்றாள். “ஆனால், நான் உண்மையைத்தான் சொல்கிறேன். நீ நிஜமாகவே ரொம்ப அழகு.” அவள் கோபம் கொண்டவள்போல் தோன்றினாள். அவள் முகம் ரத்தமேறிச் சிவந்தது. ஆயினும், அவள் கண்கள் சிரித்தன. “இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?” என்றாள். அங்கிருந்து போக முயன்றாள். “இன்று மாலை பழத்தோட்டத்துக்கு வா. நான் உனக்காகக் காத்திருப்பேன்.” அவள் ஒருகணம் தயங்கினாள். பிறகு வேகமாக வீட்டினுள் சென்றாள்.{{nop}}<noinclude></noinclude> 5fm07ih9crvzk3giqdb8kchfv6g9l06 பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/130 250 22712 1925465 743939 2026-04-19T13:02:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|100||பெண்களே, நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்!}}</noinclude>அன்று மாலை அவள் பழத்தோட்டத்துக்கு வந்தாள். அந்த மாலை சூரியஒளி நிரம்பியதாக விளங்கியது. “ஹல்லோ” என்று அவள் நாணத்துடன் சொன்னாள். நாங்கள் வெகுநேரம் மவுனமாகவே இருந்தோம். என் உதடுகள் அதற்கு முன் பேசியிராத பிரியமான வார்த்தைகளை முணுமுணுத்தன. ஆனால், அவை அவற்றை மவுனமாய் என் மனசில் மட்டுமே முனகின. அவள் என்னைக் கூர்மையாகக் கவனித்தாள். தலை தாழ்த்தி, பேசாமலே இருந்தாள். “நீ வந்ததில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நீ ரொம்ப இனிமையாக இருக்கிறாய்; மிக இனிமையாக...” “அதனால்தான் நான் வந்தேன். இதற்கு முன் எவரும் என்னிடம் இதைச் சொல்லவில்லை.” இதைக் கூறியதும், தான் சொன்னதற்காக வருத்தப்படுகிறவள்போல் அவள் திரும்பவும் மவுனமானாள். பிறகு, சில நொடிகள் கழித்து. “நீ விளையாட்டுக்குச் சொல்லவில்லையே? அப்படிச் சொன்னாயா, ஆர்மன்?” என்று கேட்டாள். “சத்தியமாய்ச் சொல்கிறேன், நீ சூரியன்போல் இருக்கிறாய், ஏரெவிக்!” நாங்கள் நகருக்குத் திரும்பி நடந்தோம். மனமில்லாமலே பிரிந்தோம். அது பேச்சுகள் இல்லாத, முத்தங்கள் இல்லாத, காதலாக இருந்தது. ஈடுகள், நம்பிக்கைகள் அல்லது வாக்குறுதிகள் இல்லாத, பொங்கிப் பிரவாகிக்கும் பெரிய காதல் அது. நாங்கள் மனசால் முத்தமிட்டுக்கொண்டும், ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டும், மவுனமாக நடந்தோம். பிறகு அதே பாதையில் வீட்டுக்குத் திரும்பினோம். நெடுநேரம் இல்லாமல் போனதற்காகத் திருமதி முள்ளி ஏரெவிக்கை இரண்டுமுறை அடித்தாள். இதற்கிடையில், வயல்களில் வசந்தம் வந்து சேர்ந்தது. அது எங்களைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தது. ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்ததும், ஏரெவிக்கும் நானும் வயலட் பூக்கள் பறிப்பதற்காகப் போனோம். ஆண்டவனே, எப்படிப்பட்ட வசந்தம் அது! மலைகளும், சமவெளிகளும், பள்ளத்தாக்குகளும் பசுமையில் மூழ்கி, வெயிலில் காய்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றின. எண்ணற்ற மலர்கள் எங்கும் சிதறிக்கிடந்தன. அப்போது தான் முதல் தடவையாக ஏவெரிக் சந்தோஷமாகச் சிரித்ததை நான் கேட்டேன். அவள் வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்திக்கொண்டு அங்குமிங்கும்<noinclude></noinclude> nq8s06givgzw5wgq5grybxtehmzzaox பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/131 250 22713 1925467 743940 2026-04-19T13:09:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|எம்கிர்திச் சார்கிஸ்யன்||101}}</noinclude>ஓடினாள். அப்புறம் ஓடையில் குதித்தாள். என்மீது தண்ணீரை வாரி இறைத்தாள். “நான் பைத்தியமாகிவிட்டேன், இல்லையா?” என்றாள். இப்போது அவள் உண்மையாகவே சூரியன்போல் இருந்தாள். அவள் சேகரித்த மலர்க் கொத்துகளை ஒழுங்காக அடுக்குவதற்காகப் புல்லின்மீது உட்கார்ந்ததும், நான் குனிந்து அவளுடைய மெலிந்த கழுத்தில் முத்தமிட்டேன். அவள் சருமம் கதகதப்பாகவும் வெல்வட்போல் மென்மையாகவும் இருந்தது. என் உதடுகள் பூக்களையும் சூரிய ஒளியையும் சுவைத்தன. அவள் தடுக்கவில்லை. ஆனால், நான் அவள் முகத்தைப் பார்த்த போது, அவள் கண்கள் நீர் நிறைந்து பயந்துபோயிருந்ததைக் கண்டேன், அவள் அழத் தொடங்கினாள். “நீ ஏன் அப்படிச் செய்தாய்?” என்று கூறி, அவள் தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டாள். நான் செய்ததில் ஏதேனும் தவறு இருந்ததா என்ன? அவளை முத்தமிட்டதில் என்ன தப்பு? அவள் மீண்டும் ஏச்சு வாங்கியதுபோல், அவள் கண்கள் கலங்கிச் சிவந்தன. ஆனால், நான் அவளை முத்தம்தானே இட்டேன்! நாங்கள் வீடு திரும்பலானோம். திடீரென்று எங்களைச் சுற்றி புழுதிப்படலம் எழுந்தது. ஏரெவிக் நிலைகுலைந்து நின்றாள். “ஓ, அப்பா!” என்றாள். இதற்குள் அவள் அப்பா கார் கதவைத் திறந்தார். தூசி படிந்த பூதம் ஒன்று எங்களை நோக்கி வந்தது. அப்போதுதான் கார்சோவுக்கு நான்கு சக்கரங்கள் இல்லை; இரண்டு கால்களே இருந்தன என்று கண்டேன். அவர் அவ்வளவு பெரியவராய், அகன்ற தோள்களை உடையவராய் இருப்பார் என்று நான் கனவிலும் கருதியதில்லை. “நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய், ஏரெவிக்?” முதலில் அவள் தன் பூங்கொத்தின் பின் மறைய முயன்றாள். பிறகு மவுனமாக அதைத் தன் தந்தைக்கு அளித்தாள். ஆனால் அவர் பூக்களை மண்ணில் விட்டெறிந்தார். “இங்கே இந்தப் பிச்சைக்காரப் பயலுடன் என்ன செய்து கொண்டிருக்கிறாய்; துப்புக் கெட்டவளே?” என்று அவர் கத்தினார். புழுதி பூக்களை விழுங்கியது. எங்களையும் அது விரைவில் விழுங்கிவிடும். கார்சோ என் பக்கம் திரும்பினார். '“எச்சரிக்கையாக நடத்துகொள், பையா! நீ உன் தகுதிக்கு மீறிய செயலில்<noinclude></noinclude> fwvkyeaa8a3pdna76dpq8t5gsz87e9c பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/132 250 22714 1925469 743941 2026-04-19T13:16:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|102||பெண்களே, நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்!}}</noinclude>இறங்குகிறாய்!” என்றார். ஏரெவிக்கின் கூந்தலைப் பற்றி இழுத்து அவளைக் காருக்குள் தள்ளினார். அது, புழுதியைக் கிளப்பியவாறே உறுமிச் சென்றது. அந்தப் புழுதி கடுகு நிறத்தில் காணப்பட்டது. ஓ, அந்தக் காரை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும்! அன்று மாலை வயோதிகர்கள் பண்ணை அலுவலகத்துக்கு வெளியே கூடி நின்று பேசினார்கள்: “அவர் திரும்பவும் கோபமாக இருக்கிறார். அவர் ஒரு புயலில் சிக்கியிருக்கிறார்; அல்லது அவரே ஒரு புயல் மாதிரி சீறப்போகிறார்” என்று கிழவர் மேட்டோ சொன்னார். “அவர் ஏன் தன் மூக்கிற்கு அப்பால் பார்க்க முடியவில்லை என்று அவரிடம் யாராவது கேட்க வேண்டும்.” “அவருக்குக் கிட்டப்பார்வை. துரு அவர் கண்களைத் தின்று விட்டது. தன் காலடியில் இருப்பதை அவரால் காண இயலாது. அவர் தன் கண்களை வானத்தின் பக்கம் திருப்பியதேயில்லை. ஆ, பேசி என்ன பிரயோசனம்? அவர் துரு ஏறிய கிழ கார்சோ. அவ்வளவு தான் விஷயம்.” புயல் எங்கள் தலைமீது வெடித்தது. நாங்கள் சந்திப்பது சாத்தியமே இல்லை என்றாயிற்று. பள்ளிக்கூடத்தில் என்னிடம் வருவதற்குக்கூட ஏரெவிக் பயப்பட்டாள். படித்துத் தேறியதும் நான் மேல் படிப்புக்காக ஏரெவான் நகருக்குப் போனேன். சிறிது காலத்துக்குப் பிறகு, ஏரெவிக்கிற்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்று அறிந்தேன். அதன் பிறகு, துரு ஏறிய கார்சோ தன் பதவியிலிருந்து நீங்கியது பற்றிக் கேள்வியுற்றேன், இப்போது அவர் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் பெற்றிருக்கிறார் என்றும், அவர் நடப்பதற்குத் தன் கால்களை உபயோகிக்கிறார் என்றும் ஜனங்கள் சொல்கிறார்கள். நகருக்குச் செல்லும் வழி நன்கு செப்பனிடப்பட்டிருக்கிறது. இப்போதெல்லாம், கார்களின்மீதும், ஆட்களின் கண் இமைகள் மேலும், அவர்களது ஆத்மாவினுள்ளும் ஒட்டிக்கொள்ளும்படி, ரஸ்தாவில் புழுதி கிளம்புவதில்லை. என் இதயத்தின் அடியில் ஒரு இடத்தில் ஏரெவிக்கின் நினைவு நிலைத்திருக்கிறது. அவள் கழுத்து, பூக்களின் சூரிய ஒளியின் சுவையைப் பெற்றிருந்ததும் நினைவிருக்கிறது. விசித்திரம்தான்; இல்லையா, பெண்களே? ஆனால், இது புராதன வரலாறு இல்லை, தெரியுமா? இதெல்லாம் இருபது வருஷங்களுக்கு முந்தி நடந்ததுதான்.{{nop}}<noinclude></noinclude> 3eq2adm6itboyr2wi8btoz1y3iw9rc6 பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/133 250 22715 1925473 743942 2026-04-19T14:13:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|எம்கிர்திச் சார்கிஸ்யன்||103}}</noinclude> {{c|{{larger|<b>கேரனின் காதல்</b>}}}} “ஹாய் கேரன்!” ஏரெவிக்தான் கூப்பிட்டாள். அவள் எங்கள் சன்னல்களுக்கு வெளியே தலைகாட்ட வேண்டியதுதான்; எங்களுக்கு உணர்ச்சி பொங்கும். திடீரென்று எங்கள் உள்ளங்களில் ஆனந்தம் நிரம்பியது போலிருக்கும். ஏரெவிக் நீலவர்ண உடையில், வானத்தின் ஒரு துணுக்குக் கீழிறங்கி எங்களிடம் வந்ததுபோல் விளங்குவாள். கேரன், “மெரினா” கீதத்தைச் சீட்டி அடித்தபடி, படிக்கட்டில் இறங்கி ஓடுவான். பிறகு, ஏரெவிக்கின் கையோடு தன் கையை இணைத்துக்கொண்டு, காதல் பாதையில் வேகமாக ஓடுவான். தனது மதிப்புமிக்க வானத் துணுக்கையும் தன்னோடு இழுத்துக்கொண்டு போவான். முற்றம் எங்கள் கண் முன்னே இருண்டுவிடும். அரைச்செவிடாகி, முதிர்ந்து தளர்ந்துவிட்ட, எண்பது வயதுக் கிழவரான வானோகூட, அவர்களைப் பார்த்துப் பெருமூச்செறித்தார். அவருக்கே கேட்காத, ஆனால் எங்களுக்குத் தெளிவாகக் கேட்கும் ஒரு குரலில், “ஆ, என்ன அற்புதமான பெண்! இவளைப் போன்ற ஒருத்தியை நான் முத்தமிட விரும்புகிறேன்” என்பார். எங்கள் பக்கத்து வீட்டு எராநூய் அத்தை அவரை ஆங்காரத்தோடு பார்த்து, “இந்த வயசிலுமா! அவர் தன்னைப்பற்றி வெட்கப்படவேண்டும்!” என்று கூறுவாள், ஏரெவிக் வெறுத்து ஒதுக்கிய கேரோ, எங்கள் அண்டை வீட்டுக்காரன், ஏரெவிக்கும் கேரனும் போன பின்னர் மாடிக்குப் போவான்; காஸியோவின் “சிரி, கோமாளி, சிரி” என்ற பாடலை—பாக்லியாக்கியின் கீதத்தை—தொண்டை வறளும் வரையில் பாடுவான். ஆனாலும், அவன் ஒருபோதும் சிரித்ததில்லை. அப்புறம், வேறு எங்காகிலும் ஆறுதல் தேடுவதற்காக அவன் வெளியே போவான். இக்காட்சி தினசரி நடைபெற்றது. அந்தப் பெண் வராவிட்டால், முற்றத்தில் வசித்த அனைவரும் கவலைகொள்வார்கள். "இன்று சீதோஷ்ண நிலைமை ரொம்ப மோசமாகிவிடும். மழை பெய்யப்போகிறது” என்று கிழவர் வானோ, அன்று நாள் வெகு இனியதாக இருந்தபோதிலும், அறிவிப்பார். எராநூய் அத்தை அவரை அனுதாபத்தோடு நோக்குவாள். "அப்பாவி மனிதர். இந்த வெயிலிலும்கூட அவருக்குக் குளிர்கிறது! வயதாகிவிட்டது, அதுதான் காரணம்” என்பாள்.{{nop}}<noinclude></noinclude> kesdj76coxl1uhasftjouoa0baboz6x பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/134 250 22716 1925475 743943 2026-04-19T14:20:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|104||பெண்களே, நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்!}}</noinclude>கேரோ தென்படமாட்டான். வழக்கமான பாடலைப் பாடவும் மாட்டான். அவன் தனது குரலைப் பாதுகாத்தான் போலும். அவள் வரத் தாமதமானால், கேரன் மெதுவாகப் படிகளில் இறங்கிப்போவான். அவன் கால்கள் எப்படிச் சோர்ந்து நடந்தன என்று நாங்கள் உணர முடியும். அவன் சீட்டி அடிக்காமல் இருந்தால், ஏரெவிக் வரவில்லை என்று அர்த்தம். அவன் திடீரென்று சீட்டி அடிக்கத் தொடங்கினால் நாங்கள் அனைவரும் நிம்மதியாக மூச்சுவிடுவோம். அவர்கள் சேர்ந்து போவதைப் பார்ப்பதற்காக பால்கனிக்கு விரைவோம். எங்கள் கட்டடம், மண்டி நின்ற புதர்கள் மற்றும் மரங்களின் பசுமையில் மறைந்திருந்தது. வருஷம்தோறும் மேன்மேலும் உயரமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்து வந்த அவை எங்கள் அழகான கட்டடத்தை ஒரே அடியாக மறைத்து, அந்நியர் கண்களில் பட்டுவிடாதபடி பேராசையோடு பாதுகாத்தன. இந்த அடர்ந்த பசுமையில் மிகவும் ஆறுதலான ஒரு விஷயமும் இருந்தது.போக்குவரத்து இரைச்சல்களை அது கிரகித்துக் கொள்கிறது; கோடைகால வெப்பத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுகிறது. குளிர் காலத்தில், மரங்கள் கடும் பனியால் மூடுண்டு சைபீரியாவின் தைகாப் பெருநில மரங்களைப்போல் காட்சி தரும். இலையுதிர்காலத்தில், எல்லாம் மொட்டையாக நிற்கையில், எங்கள் தோட்டம் கிழவன் வானோவை ஒத்திருக்கும். அப்போது, தோட்டம் குளிர்ந்திருக்கிறது. கிழட்டு வானோவும் குளிருடன் இருக்கிறார். குளிர்காலத்தில் சூரியன்கூட அவற்றைப் பார்ப்பதனால் குளிரடைந்துவிடுவதாகத் தோன்றும். எல்லோரும் எங்கள் தோட்டத்தைக் காதலர் தோட்டம் என்று அழைக்கிறார்கள். காதல் ஜோடிகள் வருஷம் முழுவதும், பகலிலும் இரவிலும், எல்லா நேரங்களிலும் இங்கே முத்தமிடுகிறார்கள். ஒரு நாளைக்கு இருபத்துநான்குமணி நேரத்துக்கும் அதிகமாக இருக்குமானால், அவர்கள் அப்போதும் முத்தமிடுவார்கள். வாழ்க்கையில் நல்லதாக இருக்கிற அனைத்தும் நன்றாகப் பற்றிப் பரவுகின்றன. முக்கியமாக, முத்தமிடுவது. ஆகவே, கீழே முத்தமிட்டுக்கொண்டிருக்கும் காதலர்களைப் பார்க்கையில், இரண்டு பிள்ளைகளின் தகப்பனான நான்கூட அவர்கள் வழியைப் பின்பற்றவேண்டும் என்ற உணர்ச்சியை அடைகிறேன். பத்து வருஷங்களுக்கு முன்பு என் மனைவியின் முத்தத்திற்காக எவ்வளவு ஆசைப்பட்டேனோ அதே ஆர்வத்துடன் உள்ளே போகிறேன்.<noinclude></noinclude> ra4ni97niy0g24x6aa24nrjrclyqytb பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/135 250 22717 1925476 743944 2026-04-19T14:26:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|எம்கிர்திச் சார்கிஸ்யன்||105}}</noinclude>சுருங்கச்சொன்னால், கேரனும் ஏரெவிக்கும் காதலித்தார்கள். அவர்கள் காதல் எங்கள் அனைவருக்கும், என்னில் தொடங்கி கிழ வானோ ஈறாசு, எல்லோருக்கும், நல்ல உதாரணமாக விளங்கியது. குளிர்காலத்தில் கேரனும் ஏரெவிக்கும் எங்கள் கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் தாழ்வாரத்தில் சந்திப்பார்கள், இரவில் வெகுநேரம் ஆனபின் பிரிந்து போவார்கள். “நல்லது. நான் போகவேண்டிதுதான். எனக்கு முத்தமிட்டு விடைகொடு” என்று ஏரெவிக் கூறுவாள். “நான் உன்னை வீடுவரை கொண்டுவிடுவேன்” என்று சொல்லி, கேரன் அவளை முத்தமிடுவான். “உனக்கு ஜலதோஷம் ஏற்படும், அன்பே. கூட வராதே” என்று ஏரெவிக் மிக மென்மையான குரலில் சொல்லுவாள். “உனக்கு ஜலதோஷம் பிடிக்காதோ?” அவர்கள் விவாதிக்கத் தொடங்குவர். பிறகு கேரன் அவளை வீட்டுக்கு இட்டுச் செல்வான். திரும்பி வருகையில், உற்சாகம் இழந்தவனாய், குளிரால் பாதிக்கப்பட்டுக் காணப்படுவான். அவர்களைப்பற்றி எவரும் மோசமான வார்த்தை எதுவும் சொல்லமாட்டார்கள். “அவர்கள் இரண்டு பேரையும் ஒன்றாகப் பார்ப்பதே ஒரு சந்தோஷம்தான்” என்று எராநூய் அத்தை சொன்னாள். அவன் தேர்ந்தெடுத்திருக்கிற காதலியைப்பற்றி, கேரனின் அம்மா வெகுவாகச் சந்தோஷப்பட்டாள். தனது எதிர்கால மருமகளைப் பார்த்துக்கொண்டே, “இவளைப்போல் இன்னொரு பெண்ணை இந்த நகரிலேயே காண முடியாது” என்று அவள் சொன்னாள். அவள் சொன்னது சரிதான். அந்த இளம் காதலர்களின் சந்தோஷம் இரண்டு தடவைகள் ஏறக்குறைய தகர்ந்து நொறுங்கும் நிலையை அடைந்தது. இருமுறையும் காதல் அனைத்தையும் வென்றது. வசந்தம் வந்ததும். ஏரெவிக் தனது மேலங்கியை உதறி எறிந்தாள். மறுபடியும் நீலவானத்தின் ஒரு துணுக்கு பூமியில் துள்ளித் திரிவதாகத் தோன்றியது. வசந்தம் ஓவிய நிபுணனின் வர்ணப்பலகையை எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அதனாலேயே பூமி நெடுகிலும் ஒரே வர்ணவிஸ்தாரம் கொட்டிக் கிடப்பதாகவும் தோன்றியது.<noinclude></noinclude> mln3hhji787pd9j65dzsv92za41gj5w பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/136 250 22718 1925479 743945 2026-04-19T15:03:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|108||பெண்களே. நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்!}}</noinclude>கேரன் வசந்த காலத்தில் பிறந்தவன். ஏரெவிக்கும் வசந்தத்தின்போது பிறந்தவள் என்று நான் அறிவேன். அது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால், அப்படித்தான் இருக்கும் என்று நான் யூகிக்கிறேன். ஏனெனில், வசந்தம், வசந்த காலத்தில்தான் பிறக்க முடியும். இதில் எனக்கு திட நம்பிக்கை உண்டு. கேரனின் பிறந்த நாளை, கட்டடம் முழுவதுமே கொண்டாடுவது வழக்கம். ஒவ்வொரு பகுதியினரும், அவ் விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் தங்கள் பிரதிநிதியை அனுப்பினார்கள். இயல்பாக, ஏரெவிக்தான் அனைவரிலும் மிகுந்த சந்தோஷம் கொண்டிருப்பாள். புறக்கணிக்கப்பட்ட கேரோ தனக்குப் பிடித்த “சிரி, கோமாளி, சிரி” பாடலைப் பாடியதும், ஏரெவிக்தான் மற்றவர்களைக் காட்டிலும் பலமாகக் கைதட்டினாள். பிறகு கேரோ மீண்டும் பாடினான். அவர்கள் “ஸ்வாலோப் பறவைகளின் நடனம்” என்ற இசையை மீட்டியதும், ஏரெவிக்கைத் தன்னுடன் நடனம் ஆடும்படி கேரோ கேட்டான். மாலை நேரம் முழுவதும் அவர்கள் ஆடினார்கள். அன்று இரவு கேரோதான் ஏரெவிக்கை வீட்டுக்கு இட்டுச் சென்றான் என்றும், அவளிடம் தனது காதலை அவன் தெரிவித்தான் என்றும் மறுநாள் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அதை யார் கண்டறிந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிந்தது: அந்தப் பெண் அவன் பேச்சை அன்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள்; பிரிந்தபோது, புன்முறுவல் பூத்து, “போய் வா, கேரோ—கேனியோ” என்றாள். இந்தப் பரபரப்பான செய்தி எங்கள் முற்றத்தில் பல சூடான சர்ச்சைகளையும், அதிகமான விமர்சனங்களையும் உண்டாக்கியது. “த்சு, த்சு. அவளும் மற்ற எல்லா அழகான பெண்களையும் போன்றவள்தான் என்றா சொல்கிறீர்கள்?” என்று எராநூய் அத்தை அங்கலாய்த்தாள். உரக்கக் கத்தியும் சைகைகள் காட்டியும் இந்த விஷயம் கிழட்டு வானோவுக்கும் புரியவைக்கப்பட்டது. விநோதமாகத் தோன்றலாம். அவர் சிறிதளவுகூட ஆச்சர்யப்படவில்லை. “அந்தப் பெண் பார்வைக்கு அழகானவள். அவ்வளவு அழகான பெண் ஒருவனுக்கு மட்டும் என்பது அளவுக்கு மீறியதாகவே இருக்கும்” என்று அவர் மெதுவாகச் சொன்னார். {{nop}}<noinclude></noinclude> 4ot513i64q56iw186cyfq6g9skukjp1 பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/137 250 22719 1925481 743946 2026-04-19T15:11:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|எம்கிர்திச் சார்கிஸ்யன்||107}}</noinclude>இளையவர்கள் சிரித்தார்கள். கிழவர் வானோ சுதந்திரக் காதலில் நம்பிக்கை உடையவர் என்பதை இவ்விதம் அவர்கள் கண்டுகொண்டார்கள். ஏரெவிக் அவனைத் தேடி வராதபோதிலும், கேரன் இன்னும் “மெரினா” கீதத்தைச் சீட்டியடித்துக்கொண்டிருந்தான். அவள் வராமல் இருந்ததால் இப்போது எவரும் கவலைப்படவில்லை. அவள் கேரனுக்குத் துரோகம் இழைத்துவிட்டாள்: அப்படி யிருக்கையில் அவளைப்பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?ஆயினும், ஒரு சோக மேகம் எங்கள் முற்றத்தில் கவிந்துதான் இருந்தது. கேரோ பாட்டுப் பாடுவதை நிறுத்திவிட்டான். அவன் தனது பால்கனி பக்கம் வந்தால், எராநூய் அத்தை தனது வெறுப்பான பார்வையை அவன் மீது பாய்ச்சிவிட்டுச் சொல்லுவாள்: “இன்னொருவனின் காதலியை இவன் திருடிக் கொள்வான் என்று எனக்கு எப்பவும் தெரியும். ஒரு கொள்ளைக்காரனின் மூஞ்சி இவனுக்கு இருக்கிறது.” “அவன் நேர்த்தியானவன். பெண்கள் அவனை விரும்புகிறார்கள். நான் அவனைப் பார்த்துப் பொறாமைப்படுகிறேன்” என்று கிழட்டு வானோ பதிலுக்குச் சொன்னார். அவளிடம் அப்படி நேர்த்தியானது என்ன இருக்கிறது? அவன் தன் நண்பனுக்குத் துரோகம் செய்துவிட்டான்.” “ஆனாலும்கூட” என்று கிழட்டு வானோ அர்த்தபுஷ்டியோடு கூறினார். “கேரன்!” ஏரெவிக்தான் கூப்பிட்டாள். நாங்கள் எல்லோரும் அவரவர் பால்கனிக்கு ஓடினோம். மறுபடியும் எங்கள் கண்கள் மகிழ்ச்சியினால் ஒளிர்ந்தன. பிறகு, கேரன் 'மெரினா'வைச் சீட்டி அடித்தவாறு கீழே ஓடினான். ஏரெவிக்கின் கரத்தோடு கரம் கோத்து, காதல் பாதையில் வெகு வேகமாக ஓடினான். தனது மதிப்பு மிக்க வானத் துணுக்கையும் தன்னோடு இழுத்துக் கொண்டு போனான். “இது எனக்குப் புரியவில்லை” என்றார் கிழவர் வானோ. “ஏன் புரியவில்லை? அவள் கேரோவைப் புறக்கணித்து விட்டாள்” என்று எராநூய் அத்தை அவரிடம் உரக்கச் சொன்னாள். வானோ உடனே தன் கருத்தை மாற்றிக்கொண்டார். “ஆமாம். அவள் நல்ல பெண். அவள் பெற்றோர்கள் வாழ்க!” என்றார்.{{nop}}<noinclude></noinclude> qx48bah52dnck6uc9793ohi54xtrlpk பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/138 250 22720 1925482 1387689 2026-04-19T15:14:01Z Booradleyp1 1964 1925482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Guruleninn" />{{rh|108||பெண்களே, நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்}}</noinclude>கேரோ தன் அறைக்குள் அடைந்துகிடந்து பாட்டுப் பாடினான். கேனியோவின் துயரத்தைத் தனது துயரமாக்கிக் கொண்டான். கேரோ அந்தப் பெண்ணை அபகரித்துக் கொள்ள விரும்பியது உண்மைதானா என்று அண்டைவீட்டுக்காரர்கள் கேரனைக் கேட்டார்கள். உண்மைதான் என்று கேரன் சொன்னன். அவன் அமைதியாக இருந்தான். கேரோபற்றிப் பேசுகையில் அவன் குரலில் கோபம் தொனிக்கவில்லை. ஆனால் அவ்விஷயமாக வேறு எந்தத் தகவலும் அவன் தரவில்லை. ஆயினும், அவன் தனது ஏரெவிக்பற்றி மிகவும் பெருமைப்பட்டான். “நான் ஒருவன் மட்டும்தான் ஏரெவிக்கைக் காதலிக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? தம்மை மணந்துகொள்ளும்படி ஏகப்பட்ட பேர் அவளைக் கெஞ்சிக் கேட்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மறுப்புக் கூறுவதற்கே அவளுக்கு நேரமில்லை.” கேரன் சந்தோஷமாக இருந்தான். நாங்கள் எல்லோரும் ஆனந்தம் கொண்டோம். திடீரென்று கோபம் மறுபடியும் அச்சுறுத்தியது. ஏரெவிக்கின் பெற்றோர் அவர்கள் கல்யாணத்துக்குச் சம்மதிக்கவில்லை. பேராசிரியரான அவள் தந்தை அதைப்பற்றிப் பேசக்கூட விரும்பவில்லை. தன் மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கும் எண்ணமே தனக்கு இல்லை என்றும், அப்படி என்றைக்காவது செய்தாலும் ஒரு செம்மானின் மகனுக்கு அவளைக் கொடுக்கப்போவதில்லை என்றும் கேரனின் பெற்றோரிடம் அவர் சொன்னார். “நீர் அளவுக்கு அதிகமாக எடுக்கிறீர். உம்மால் விழுங்க முடிகிற அளவுக்கும் அதிகமாகக் கடிக்க வேண்டாம்” என்று அவர் கேரனின் தந்தையிடம் கூறினார். எங்கள் கட்டடத்தில் வசித்த அனைவரும் கோபமும் ஆத்திரமும் அடைந்தார்கள். “அவள் தந்தை ஏன் தனது மூக்கிற்கு அப்பால் பார்க்க முடியவில்லை என்று அறிய விரும்புகிறேன்” என எராநூய் அத்தை சொன்னாள். “அவருக்குக் கிட்டப் பார்வை. அவர் தனது ‘பெட்டி-பூர்ஷ்வா’ நோக்கைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்” என்று கிழவர் வானோ முடிவு கட்டினர். “கேரன்!”{{nop}}<noinclude></noinclude> 7ynozg8s4jguuen9mq6w19bmxjr7x1i பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/139 250 22721 1925486 743948 2026-04-19T15:34:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|எம்கிர்திச் சார்கிஸ்யன்||109}}</noinclude>அப்போதுதான் விடிந்திருந்தது. கட்டடத்தில் குடியிருந்தவர்கள் அரைகுறை ஆடைகளோடு அவரவர் பால்கனிக்கு ஓடிவந்தார்கள். ஏரெவிக்தான் கூப்பிட்டாள். அவள் கீழே நின்று சிரித்துக்கொண்டிருந்தாள். எத்தகைய பிரகாசமான, வெயில் நிறைந்த இனிய நாள் அது! ஏரெவிக் கைகளில் ஒரு சிறு பெட்டியும் ஒரு மூட்டையும் வைத்திருந்தாள். அவன் கண்களில் வைராக்கியம் நிறைந்திருந்தது. எல்லாத் தாக்குதல்களையும் எதிர்த்து நின்ற காதலினால் அவை மின்னின. கேரன், “மெரினா” கீதத்தைச் சீட்டி அடித்தவாறே கீழே ஓடினான். உடனேயே இருவரும் சந்தோஷமாகப் படி ஏறி மேலே வந்தார்கள். கேரனின் அம்மா வாசலிலேயே அவர்களை வரவேற்றாள்.“ஏரெவிக், என் சூரிய ஒளியே!” என்றாள். ஏரெவிக் இப்போது எங்களைச் சேர்த்தவள். அண்டை அயலார் பலரைக்கொண்ட எங்கள் பெரிய குடும்பத்தில் அவளும் ஒரு நபர் ஆகிவிட்டாள். எங்கள் சேர்மானத்தை, எங்கள் செல்வக் களஞ்சியத்தை, எண்ணி நாங்கள் மகிழ்கிறோம். ஏரெவிக்கின் அலைபாயும் சிரிப்பு, கானியோவின் உரத்த துயரப் புலம்பலை மூழ்கடித்துவிட்டது. நீலவானத்தின் இந்தத் துணுக்கு இப்போது உயரே ஐந்தாவது மாடியில், வானத்துக்கு நேராகக் குடியிருக்கிறது. “அவள் தன் வீட்டைக் கண்டுகொண்டாள்” என்று எராநூய் அத்தை சொன்னாள். “காதல் அமரத்துவமானது. மரணத்தைவிட வலியது காதல். மாக்சிம் கார்க்கி இப்படித்தான் சொல்கிறார்” என்று கிழவர் வானோ கூறினார். ஆமாம். காதல் வலிமையானதுதான். ஆனால் வலிமை மிகுந்திருக்கிறவர்களுக்கு மட்டுமே. நீங்கள் எவ்வளவு மாறிப்போனீர்கள், பெண்களே. உண்மையாகவே மாறிவிட்டீர்கள். உலகமும் உங்களோடு மாறுதல் பெறுகிறது. இதை நீங்கள் அறிவீர்கள். அரைச் செவிடும் முற்றிலும் தளர்ந்துவிட்டவருமான எண்பது வயது வானோகூட மாறிப்போனார். நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்...{{nop}}<noinclude></noinclude> fphjw4h0mnt3fg8trz3j5hn73mpz5un பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/140 250 22722 1925488 743950 2026-04-19T15:39:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>அகாசி ஐவாசியன்</b><br>(1925)}} {{center|{{x-larger|<b>ரகசியப் பேச்சு</b>}}}} எகோர் பூமன்ட்ஸ் திடீரென்று தன் சொந்தக் குரலைக் கேட்டுச் சட்டென நின்றான். நடுத்தெருவில் அவன் உரக்கப் பேசியிருக்கிறான். குழப்பமுற்று அவன் சுற்றிலும் நோக்கினான். சிறிது தொலைவில் சதுக்கத்தில் உள்ள ஒரு கறுப்புக் கட்டடத்தின் ஐந்தாவது மாடி சன்னல் ஒன்றிலிருந்து ஒரு பெண் கீழே பார்த்துக்கொண்டிருந்தாள். டாக்சி நிற்கும் இடத்தில் இரண்டு டிரைவர்கள் தங்கள் வண்டிகள்மீது சாய்ந்து நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அவை "ஏரோஃப்ளோட்”டின் நகர ஏஜன்சிக் கட்டடத்தின் முன்னால் நின்றன. அந்தக் கட்டடம் உருக்குலைந்த அட்டைப்பெட்டி மாதிரித் தோன்றியது. ஒரு ஸ்திரீ ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். அவர்களில் யாருக்கும் அவன் பயனற்றவன். அவன் அமைதி அடைந்தாள். ஆகவே யாரும் அவனைக் கவனிக்கவில்லை. அவனது மெலிந்த, பரிகசிப்புக்குரிய, உடலின் சேஷ்டைகளை எவரும் பார்க்கவில்லை. அவனது கூர்மையான, எரிச்சலுற்ற குரலை ஒருவரும் கேட்க வில்லை. எகோர் சவரம் செய்யப்படாத தனது மோவாயைத் தடவினான். குற்ற உணர்வால் குறுகினான். கட்டடத்தின் சுவரைத் தொட்டான். தன் வழியில் தொடர்ந்து நடந்தான். இதுபோல் தானாகவே உரக்கப் பேசிக்கொண்டிருப்பதை அவன் பலமுறை உணர்ந்தது உண்டு. அநேக முறை மற்றவர்கள் கண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சியை எகோர் தன் மனத்திரையில் மீண்டும் கண்டபோது, வெட்கத்தால் குழம்பித் தவித்தான். எகோர் தன் கறுப்புச் சட்டையை இழுத்துவிட்டான்; பொத்தானைச் சரியாக மாட்டினான். தொப்பியைத் தலையில் அதற்குரிய இடத்தில் சீராக வைத்தான். இனிமேல் தெருவில் தானாகவே பேசுவதில்லை என்று தீர்மானித்தான். “முடிவாக நீ அப்படிச் செய்ய முடியும், எகோர் பூமன்ட்ஸ். மக்களை மாற்ற முடியாது: இது உனக்கே தெரியும்... எத்தனை தடவைகள் நீ முயற்சி பண்ணுவாய்?... உன் சொந்தத் தம்பியிடம் கூட நீ ஒன்றும் செய்யமுடியாது... அதிகாலையிலிருந்தே நீ விளக்குகிறாய். வீணுக்கு விளக்கிச் சொல்கிறாய். அனைத்தையும் அப்படியே<noinclude></noinclude> 2bi1b5efw5gaqlvmtnceu2chaet5qq3 பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/43 250 377053 1925578 1439671 2026-04-20T05:39:46Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /></noinclude>தமிழ் நாட்டு வரலாறு 33 சைவ இலக்கியங்களைத் தனித் தனியே காண்பது இனி நாம் மேற்கொள்ள வேண்டிய செயன்முறையாகும். இந்த இலக்கியங்களை ஆக்கித் தந்த ஆசிரியர்களைக் கீழ்க்காணும் காலமுறையில் மேற்கொள்வது முறை. <b>.கி.பி.7-ஆம்நூற்றாண்டு</b> 1. திருஞானசம்பந்தர் 2. திருநாவுக்கரசர் 3. ஐயடிகள் காடவர்கோன் <b>கி.பி.8-ஆம் நூற்றாண்டு</b> 1 சுந்தரர் 2.சேரமான் பெருமாள். 3. ஏனாதிசாத்தஞ் சாத்தனார் <b>கி.பி.9-ஆம்நூற்றாண்டு</b> 1 மாணிக்கவாசகர் 2 சேந்தனார் 3.பட்டினத்தடிகள் 4. பெருமானடிகள் <b>கி.பி. 10-ஆம்நூற்றாண்டு</b> 1 நம்பியாண்டார் நம்பி 2 ஔவையார் 3. வேம்பையர்கோன் நாராயணன் 4. கண்டராதித்தர் <b>கி.பி.11-ஆம் நூற்றாண்டு</b> 1 நம்பிகாடநம்பி 2கருவூர்த்தேவர் 3.பூங்கோயில் நம்பி 4.திருச்சிற்றம்பலமுடையான் <b>கி.பி.12-ஆம்நூற்றாண்டு</b> 1. சேக்கிழார் 2. வேணாட்டடிகள் 3. புருடோத்தமநம்பி 4. வாகீச முனிவர் 5. உய்யவந்ததேவநாயனார் 6. சயங்கொண்டார் 7. ஒட்டக்கூத்தர் 8 தமிழ்த்தண்டியாசிரியர் 9. கவிகுமுத சந்திர பண்டிதன் 10. பரசமய கோளரி மாமுனி 11. நெற்குன்றங்கிழார் களப்பாளராசர்<noinclude>Siv-3</noinclude> naoi4l1z9vsxchzo3sntv0bg6fc4j9f பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/44 250 377054 1925579 1390607 2026-04-20T05:40:41Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /></noinclude>34 சைவ இலக்கிய வரலாறு <bகி.பி13-ஆம் நூற்றாண்டுb/> 1. சேதிராயர் 2.கல்லாடதேவர் 3. நக்கீரதேவர் 4 பரணதேவர் 5. மெய்கண்டதேவர் 6. அருண்நந்திசிவனார் 7.இளம்பூரணர் 8. பேராசிரியர் 9. அடியார்க்குநல்லார் 10. சேனாவரையர் 11. தக்கயாகப்பரணி-உரைகாரர் 12. பதிற்றுப்பத்து-உரைகாரர் 13. பாரதம் தமிழ் செய்த அருணிலைவிசாகன் 14.பெரும்பற்றப்புலியூர் நம்பி 15.மறச்சக்கரவர்த்தி பிள்ளை 16.பெரியான் ஆதிச்சதேவன் 17. காரணை விழுப்பரையன் . <bகி.பி.14-ஆம்நூற்றாண்டுb/> 1.மறைஞானசம்பந்தர் 2.உமாபதிசிவனார் 3.நச்சினார்க்கினியர் 4.கச்சியப்ப சிவாசாரியார் 5.பொய்யாமொழிப்புலவர் 6.அருணகிரியார் 7.இரட்டையர் 8:தாயில் நல்ல பெருமாள் முனையதரையன்<noinclude></noinclude> lpnl5uffxvhxj1127fdj5ps6f7gjpzu 1925580 1925579 2026-04-20T05:41:40Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /></noinclude>34 சைவ இலக்கிய வரலாறு கி.பி.13-ஆம் நூற்றாண்டு 2. கல்லாடதேவர் 4.பரணதேவர் 6.அருணந்திசிவனார் 8. பேராசிரியர் 10. சேனாவரையர் 12. பதிற்றுப்பத்து- 1.சேதிராயர் 3. நக்கீரதேவர் 5.மெய்கண்டதேவர் 7. இளம்பூரணர் 9.அடியார்க்குநல்லார் 11. தக்கயாகப்பரணி- உரைகாரர் 13. பாரதம் தமிழ் செய்த - 14. பெரும்பற்றப் புலியூர்- அருணிலை விசாகன் நம்பி 15. மறச்சக்கரவர்த்தி பிள்ளை 17. காரணை விழுப்பரையன் உரைகாரர் 16. பெரியான் ஆதிச்ச- தேவன் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு 1. மறைஞானசம்பந்தர் 6. அருண்கிரியார் 2.உமாபதி சிவனார் 7. இரட்டையர் 8 தாயில் நல்ல பெருமாள்- முனையதரையன் 3. நச்சினார்க்கினியர் 4. கச்சியப்ப சிவாசாரியார் 5. பொய்யாமொழிப் புலவர்<noinclude></noinclude> czx8qqped4k7gdyom70w49x3dimeq9t பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/91 250 377101 1925612 1390602 2026-04-20T06:19:30Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /> {{Rh81|சைவ இலக்கியவரலாறு|}}</noinclude>திருஞானச சம்பந்தர் 81 பந்தர் வரலாறு. மதுரையில் சமணர்களைக் காண்பதற்கு முன் அவர் வேறு எவ்விடத்தும் அவர்களைக் கண்டதாகக் கூறுகின்றிலது. ஆயினும், அவருடைய திருப்பதிகங்கள் ஒவ்வொன்றிலும் சமண புத்தர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுவதால், மதுரை நிகழ்ச்சிக்கு முன்பே அவர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. மதுரைக்கு வருமாறு அழைப்பு வந்ததும், அவர் தடை யின்றிச் செல்ல உடன்பட்டதற்குக் காரணம்,அவ்வேற்றுச் சமயத்தவர்களை வேரோடு தொலைப்பதற்குக் காலமும் இடமும் கருதி யிருந்தமையேயாகும்'1 என்று கூறு கின்றனர். இனி, ஞானசம்பந்தர் வேற்றுச் சமயத்தவருடைய உடை, நடை, உரை, ஒழுகலாறு முதலியன குறித்துப் பாடியவற்றை நோக்குமிடத்து, அவர் வேற்றுச் சமயத்த வர்பால் தீராத வெம்மையுற்றுப் பாடுகின்றாரென்பது தெளிவாகிறது. சமணர் புத்தர் முதலிய வேற்றுச் சமயத் தவர் நூல்கள் அருளையே பெரும் பொருளாகக் கொண்டு நிற்கின்றன. அங்ஙனம், அந்த அருளையும் சிறந்த பொரு ளாகக் கொண்ட நெறியினரான ஞானசம்பந்தர் அவர் களைப் பெரிதும் வெகுண்டு பேசுவானேன் என்பது உட னடியாக நம் உள்ளத்தில் எழும் கேள்வியாகும். இதற்கு விடை காணலுற்ற பேராசிரியர் திரு. P. சுந்தரம் பிள்ளை அவர்கள்: "ஞானசம்பந்தர் முதலிய அருளாளர் உள்ளத்தில் சமண புத்தர்களாகிய பிற சமயத்தவர்பால் மாற்றருஞ் சீற்ற முண்டானதற்குக் காரணம் ஒன்று இருத்தல் வேண்டும். எனினும், இத்துணை நெடுங்காலம் கழிந்த பின்பு நாம் அதனைக் காண்பதென்பது அரியதொரு செய் லாகும். புத்த சமயம், அசோக மன்னனது ஆதரவால் வட நாட்டிலும், அவர்க்குப் பின்வந்த வல்லாளர் சிலருடைய முயற்சியால், தென்னாட்டலும் பரவி நிலைபேறு பெற்றுப் பின்னர் நாளடைவில் சர்குலைந்து போயிருக்கலாம். அர சியற் கட்சிகள் போலச் சமயங்களும் அரசியல் வலி 1. Tam. Ant. V. III p. 7. SIV-6.<noinclude></noinclude> 2cqv2ie3m7o5b9teukzr47jm1q4wo87 1925615 1925612 2026-04-20T06:21:26Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /> {{Rh81|சைவ இலக்கியவரலாறு|}}</noinclude> 81 திருஞானசசம்பந்தர் பந்தர் வரலாறு. மதுரையில் சமணர்களைக் காண்பதற்கு முன் அவர் வேறு எவ்விடத்தும் அவர்களைக் கண்டதாகக் கூறுகின்றிலது. ஆயினும், அவருடைய திருப்பதிகங்கள் ஒவ்வொன்றிலும் சமண புத்தர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுவதால், மதுரை நிகழ்ச்சிக்கு முன்பே அவர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. மதுரைக்கு வருமாறு அழைப்பு வந்ததும், அவர் தடை யின்றிச் செல்ல உடன்பட்டதற்குக் காரணம்,அவ்வேற்றுச் சமயத்தவர்களை வேரோடு தொலைப்பதற்குக் காலமும் இடமும் கருதி யிருந்தமையேயாகும்'1 என்று கூறு கின்றனர். இனி, ஞானசம்பந்தர் வேற்றுச் சமயத்தவருடைய உடை, நடை, உரை, ஒழுகலாறு முதலியன குறித்துப் பாடியவற்றை நோக்குமிடத்து, அவர் வேற்றுச் சமயத்த வர்பால் தீராத வெம்மையுற்றுப் பாடுகின்றாரென்பது தெளிவாகிறது. சமணர் புத்தர் முதலிய வேற்றுச் சமயத் தவர் நூல்கள் அருளையே பெரும் பொருளாகக் கொண்டு நிற்கின்றன. அங்ஙனம், அந்த அருளையும் சிறந்த பொரு ளாகக் கொண்ட நெறியினரான ஞானசம்பந்தர் அவர் களைப் பெரிதும் வெகுண்டு பேசுவானேன் என்பது உட னடியாக நம் உள்ளத்தில் எழும் கேள்வியாகும். இதற்கு விடை காணலுற்ற பேராசிரியர் திரு. P. சுந்தரம் பிள்ளை அவர்கள்: "ஞானசம்பந்தர் முதலிய அருளாளர் உள்ளத்தில் சமண புத்தர்களாகிய பிற சமயத்தவர்பால் மாற்றருஞ் சீற்ற முண்டானதற்குக் காரணம் ஒன்று இருத்தல் வேண்டும். எனினும், இத்துணை நெடுங்காலம் கழிந்த பின்பு நாம் அதனைக் காண்பதென்பது அரியதொரு செய் லாகும். புத்த சமயம், அசோக மன்னனது ஆதரவால் வட நாட்டிலும், அவர்க்குப் பின்வந்த வல்லாளர் சிலருடைய முயற்சியால், தென்னாட்டலும் பரவி நிலைபேறு பெற்றுப் பின்னர் நாளடைவில் சர்குலைந்து போயிருக்கலாம். அர சியற் கட்சிகள் போலச் சமயங்களும் அரசியல் வலி 1. Tam. Ant. V. III p. 7. SIV-6.<noinclude></noinclude> q25wkntl8txbcds7k5yemv5532816v6 1925617 1925615 2026-04-20T06:22:07Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Balajijagadesh" /> {{Rh81|சைவ இலக்கியவரலாறு|}}</noinclude>திருஞானச சம்பந்தர் 81 பந்தர் வரலாறு. மதுரையில் சமணர்களைக் காண்பதற்கு முன் அவர் வேறு எவ்விடத்தும் அவர்களைக் கண்டதாகக் கூறுகின்றிலது. ஆயினும், அவருடைய திருப்பதிகங்கள் ஒவ்வொன்றிலும் சமண புத்தர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுவதால், மதுரை நிகழ்ச்சிக்கு முன்பே அவர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. மதுரைக்கு வருமாறு அழைப்பு வந்ததும், அவர் தடை யின்றிச் செல்ல உடன்பட்டதற்குக் காரணம்,அவ்வேற்றுச் சமயத்தவர்களை வேரோடு தொலைப்பதற்குக் காலமும் இடமும் கருதி யிருந்தமையேயாகும்'1 என்று கூறு கின்றனர். இனி, ஞானசம்பந்தர் வேற்றுச் சமயத்தவருடைய உடை, நடை, உரை, ஒழுகலாறு முதலியன குறித்துப் பாடியவற்றை நோக்குமிடத்து, அவர் வேற்றுச் சமயத்த வர்பால் தீராத வெம்மையுற்றுப் பாடுகின்றாரென்பது தெளிவாகிறது. சமணர் புத்தர் முதலிய வேற்றுச் சமயத் தவர் நூல்கள் அருளையே பெரும் பொருளாகக் கொண்டு நிற்கின்றன. அங்ஙனம், அந்த அருளையும் சிறந்த பொரு ளாகக் கொண்ட நெறியினரான ஞானசம்பந்தர் அவர் களைப் பெரிதும் வெகுண்டு பேசுவானேன் என்பது உட னடியாக நம் உள்ளத்தில் எழும் கேள்வியாகும். இதற்கு விடை காணலுற்ற பேராசிரியர் திரு. P. சுந்தரம் பிள்ளை அவர்கள்: "ஞானசம்பந்தர் முதலிய அருளாளர் உள்ளத்தில் சமண புத்தர்களாகிய பிற சமயத்தவர்பால் மாற்றருஞ் சீற்ற முண்டானதற்குக் காரணம் ஒன்று இருத்தல் வேண்டும். எனினும், இத்துணை நெடுங்காலம் கழிந்த பின்பு நாம் அதனைக் காண்பதென்பது அரியதொரு செய் லாகும். புத்த சமயம், அசோக மன்னனது ஆதரவால் வட நாட்டிலும், அவர்க்குப் பின்வந்த வல்லாளர் சிலருடைய முயற்சியால், தென்னாட்டலும் பரவி நிலைபேறு பெற்றுப் பின்னர் நாளடைவில் சர்குலைந்து போயிருக்கலாம். அர சியற் கட்சிகள் போலச் சமயங்களும் அரசியல் வலி 1. Tam. Ant. V. III p. 7. SIV-6.<noinclude></noinclude> 2cqv2ie3m7o5b9teukzr47jm1q4wo87 1925679 1925617 2026-04-20T08:35:59Z Velumani Veluchamy 16585 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Velumani Veluchamy" /> {{Rh81|சைவ இலக்கியவரலாறு|}}</noinclude>திருஞானச சம்பந்தர் 81 பந்தர் வரலாறு. மதுரையில் சமணர்களைக் காண்பதற்கு முன் அவர் வேறு எவ்விடத்தும் அவர்களைக் கண்டதாகக் கூறுகின்றிலது. ஆயினும், அவருடைய திருப்பதிகங்கள் ஒவ்வொன்றிலும் சமண புத்தர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுவதால், மதுரை நிகழ்ச்சிக்கு முன்பே அவர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. மதுரைக்கு வருமாறு அழைப்பு வந்ததும், அவர் தடை யின்றிச் செல்ல உடன்பட்டதற்குக் காரணம்,அவ்வேற்றுச் சமயத்தவர்களை வேரோடு தொலைப்பதற்குக் காலமும் இடமும் கருதி யிருந்தமையேயாகும்'1 என்று கூறு கின்றனர். இனி, ஞானசம்பந்தர் வேற்றுச் சமயத்தவருடைய உடை, நடை, உரை, ஒழுகலாறு முதலியன குறித்துப் பாடியவற்றை நோக்குமிடத்து, அவர் வேற்றுச் சமயத்த வர்பால் தீராத வெம்மையுற்றுப் பாடுகின்றாரென்பது தெளிவாகிறது. சமணர் புத்தர் முதலிய வேற்றுச் சமயத் தவர் நூல்கள் அருளையே பெரும் பொருளாகக் கொண்டு நிற்கின்றன. அங்ஙனம், அந்த அருளையும் சிறந்த பொரு ளாகக் கொண்ட நெறியினரான ஞானசம்பந்தர் அவர் களைப் பெரிதும் வெகுண்டு பேசுவானேன் என்பது உட னடியாக நம் உள்ளத்தில் எழும் கேள்வியாகும். இதற்கு விடை காணலுற்ற பேராசிரியர் திரு. P. சுந்தரம் பிள்ளை அவர்கள்: "ஞானசம்பந்தர் முதலிய அருளாளர் உள்ளத்தில் சமண புத்தர்களாகிய பிற சமயத்தவர்பால் மாற்றருஞ் சீற்ற முண்டானதற்குக் காரணம் ஒன்று இருத்தல் வேண்டும். எனினும், இத்துணை நெடுங்காலம் கழிந்த பின்பு நாம் அதனைக் காண்பதென்பது அரியதொரு செய் லாகும். புத்த சமயம், அசோக மன்னனது ஆதரவால் வட நாட்டிலும், அவர்க்குப் பின்வந்த வல்லாளர் சிலருடைய முயற்சியால், தென்னாட்டலும் பரவி நிலைபேறு பெற்றுப் பின்னர் நாளடைவில் சர்குலைந்து போயிருக்கலாம். அர சியற் கட்சிகள் போலச் சமயங்களும் அரசியல் வலி 1. Tam. Ant. V. III p. 7. SIV-6.<noinclude></noinclude> p1jm3drh9csyuy1j7ct2e0afmbqw4ws பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/92 250 377102 1925683 1439672 2026-04-20T08:50:28Z Velumani Veluchamy 16585 /* மேம்படுத்த வேண்டியவை */ சரிபார்க்கபட்ட்டது 1925683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Velumani Veluchamy" />{{rh|82|சைவ இலக்கிய வரலாறு|}}</noinclude>82 சைவ இலக்கிய வரலாறு பெறும் வரையில் மக்கட்கு நல்லனவாகத் தோன்றும்; அவ்வலி பெற்றதும், அவை தம்முடைய நலம் குன்றிச் சீரழிவது உலகியலில் இயல்பு. கௌதமருடைய சமயமும் இவ்வாற்றால் சீரழிந்து போயிற்று எனலாம். ஆயினும், அவரது புத்த சமயமும் பிறவுமாகிய வேற்றுச் சமயங் களிடத்து ஞானசம்பந்தருக்குத் தீராத செற்றமுண்டான தற்கு அஃது ஒன்றுமட்டில் காரணமாக முடியாது. அக் கால நிலையினை நாம் தெளிய அறிந்து கோடற்கு வேண்டிய சான்றுகள் நிரம்பக் கிடைக்காத இக்காலத்தில், அதுபற்றி நாம் பலவேறு காரணங்களைக் கற்பித்துக் கொள்வது நேரிதன்று. தெளிவும் மெய்ம்மையும் நிறைந்த சான்று களால், அக்கால நிலை விளங்கப் புலப்படுமாயின், அது கொண்டு உண்மை தெளிந்து நாம் பெருமகிழ்ச்சி கொள் ளலாம் " 1 என்று கூறுகின்றார். 21 ஞானசம்பந்தர் வேற்றுச் சமயத்தவரைக் குறித்து உரைக்குமிடத்து, அவர்களுடைய தலைவர் பெயர்களைக் குறிக்கின்றார். "சந்து சேனனும் இந்து சேனனும் தரும் சேனனும் கருமை சேர், கந்து சேனனும் கனக சேனனும் முதலதாகிய பெயர் கொளா எனவும். கனக நந்தியும் புட்ப நந்தியும் பவண நந்தியும் குமணமா, சுனக நந்தியும் குனக நந்தியும் திவண நந்தியும் மொழிகொளா, அனக் நந்தியர் ''3 எனவும் கூறுகின்றார். அவர்கள் மதுரைக்கு அண்மையிலுள்ள ஆனைமலை முதலிய இடங்களில் வாழ்ந் தனர் எனவும், நீறணிந்த சைவர் முதலியோர் வரின், அவர் மேனிபட்ட காற்றுத் தீண்டினாலும் அவர்கள் அது பொறாது சினந்து கொண்டு ஓடுவர்5 எனவும், வேத வேள்விகளை நிந்திப்பர் எனவும், செந்தமிழ் ஆரியம் என்ற இவை அவர்கட்குத் தெரியாது? எனவும், பாகதமே அவர் மொழி யெனவும், கடுநோன்புடையர் எனவும், 1. Tam. Ant. III. p. 9. 3. ஞானசம். 2. ஞானசம். 297. 297: 4, 6. 4. Soy 297: 1. 5. 366: 8. 6. ழை 366: 1. ஷை 7. 60% 297: 4. 8. 297: 2. 9. ஷை 361:10.<noinclude>{{rule}}</noinclude> 8lzcn155pnyzd0ldpfnvx24fxacycah அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf 252 452394 1925656 1922654 2026-04-20T07:01:19Z TI Buhari 4634 1925656 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=அறிவியல் களஞ்சியம் 14 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 15.pdf|15]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 16.pdf|16]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 17.pdf|17]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 18.pdf|18]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf|19]] |School=அறிவியல் |Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம் |Address=தஞ்சாவூர் |Year= |Source=pdf |Image=1 |Number of pages=969 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5 = "1" 5to22="roman" 23="1" 949 = பொருளடைவு 959 = தமிழ்–ஆங்கிலம் 964 = ஆங்கிலம்–தமிழ் /> |Remarks={{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/பதிப்புக்_குழு|பதிப்புக்குழு]]|{{DJVU page link 2|8|iv}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியறிவிப்பு|நன்றியறிவிப்பு]]|{{DJVU page link 2|9|v}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/வல்லுநர்_குழு|வல்லுநர் குழு]]|{{DJVU page link 2|10|vi}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியுரை|நன்றியுரை]]|{{DJVU page link 2|12|viii}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]]|{{DJVU page link 2|13|ix}}}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN : 81-7090-336-X |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] 8mrkz61p9k55t1gj60rtvbcw737sxae பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/230 250 540365 1925470 1863341 2026-04-19T13:35:13Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|194 அட்டர்பர்க்‌ வரம்புகள்‌||}}</noinclude>இதில்‌ Wட — நீர்ம வரம்பு; Y — ஊடுருவும்‌ ஆழம்‌; WY ஈரப்பதம்‌; இச்சோதனையில்‌ ஊடுருவும்‌ ஆழம்‌ 20 முதல்‌ 30 மி.மீ.க்குள்‌ இருக்கவேண்டும்‌. {{Css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_1.pdf |Page = 230 |bSize = 453 |cWidth = 183 |cHeight = 245 |oTop = 98 |oLeft = 36 |Location = center |Description = }} <center>படம்‌ 4. நிலைக்கூம்பு உட்புகு சோதனை</center> <b>குழைம வரம்பு காணல்‌:</b> 425 எண்‌ சல்லடையில்‌ சலித்த மண்ணோடு, அவ்வப்போது போதிய நீர்‌ சேர்த்து நன்கு பிசைந்து கண்ணாடித்‌ தட்டின்‌ மேல்‌ புரியாக உருட்ட வேண்டும்‌. புரியின்‌ விட்டம்‌ 3 மி.மீ, ஆகத்‌ திரளும்போது, புரியில்‌ வெடிப்பு தோன்றுதல்‌ அல்லது புரி நொறுங்குதல்‌ அடையாளம்‌ தெரிந்தால்‌, அதுவே குழைம வரம்பு ஆகும்‌. அப்போது மண்ணின்‌ ஈரப்பதத்தை அறிந்து கொள்ள வேண்டும்‌. புரியின்‌ விட்டத்திற்கு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்‌ போது வெடிப்பு அல்லது நொறுக்கம்‌ தோன்றின்‌, சரியாக 3 மி.மீ. விட்டப்‌ புரியில்‌ இத்நிலையை எய்தும்‌ வரை ஈரப்பதத்தில்‌ தக்க மாறுபாடுகள்‌ செய்து, சோதனைகள்‌ செய்ய வேண்டும்‌. <b>சுருக்கவரம்பு காணல்‌:</b> 425 மைக்ரான்‌ சல்லடையில்‌ சலித்த மண்ணையே இச்சோதனைக்கும்‌ எடுத்துக்‌ கொள்ளவேண்டும்‌. முதலில்‌ சுருக்க வரம்புத்‌ தட்டின்‌ எடையையும்‌, பருமத்தையும்‌ (V₁) பாதரசம்‌ மூலம்‌ நிர்ணயித்துக்‌ கொள்ளவேண்டும்‌. இக்களிமண்ணுடன்‌ வேண்டிய அளவு நீர்‌ சேர்த்து நன்றாகப்‌ பிசைந்து, நீர்மத்‌ திண்மை நிலை (Liquid Consistency)யில் வைத்துக்கொள்ளவேண்டும்‌. சுருக்க வரம்புத்‌ தகட்டின்‌ உள்பகுதிகளை எண்ணெய்‌ அல்லது கிரீஸ்‌ கொண்டு வழவழப்பு செய்து கொள்ள வேண்டும்‌. பினசந்து நீர்மத்‌ திண்மை நிலையில்‌ உள்ள களிமண்ணைச்‌ சுருக்க வரம்புத்‌ தகட்டில்‌ ¼ அல்லது ½ பகுதிக்கு நிரப்பவேண்டும்‌. தகட்டை மெதுவாகத்‌ தட்டி, நிரப்பின்‌ மண்‌ சமமடையவும்‌, உள்‌ காற்று வெளிவரவும்‌ ஆவன செய்தபிறகு, தகட்டின்‌ மீதிப்பகுதிக்குப்‌ பிசைந்த மண்ணை இட்டு நிரப்பவேண்டும்‌. தகட்டை மெதுவாகத்‌ தட்டி மேல்‌ மட்டம்‌ சமமாக இருப்பதற்குக்கண்ணாடித்‌ தகட்டினால்‌ வழித்துவிடுவதுடன்‌, தகட்டின்‌ வெளிப்பகுதிகளில்‌ ஒட்டிக்‌ கொண்டிருக்கும்‌ களிமண்ணையும்‌ சுத்தப்படுத்‌த வேண்டும்‌. சுருக்க வரம்புத்‌ தகட்டில்‌ இட்ட களிமண்ணின்‌ எடையைக்‌ குறித்துக்‌ கொள்ளவேண்டும்‌ (W₁). தகட்டில்‌ உள்ள களிமண்ணை 24 மணித்துளிகள்‌ காற்றில்‌ உலர வைத்தால்‌ தகட்டில்‌ உள்ள களிமண்ணின்‌ நிறம்‌ இலேசாக மாறும்‌, பின்‌ அதை 24 மணித்துளிகளுக்குச்‌ சிற்றுலையில்‌ வைத்து உலர்த்தி, பின்‌ காய்ந்த மண்ணின்‌ எடையைக்‌ கணித்துக்கொள்ள வேண்டும்‌ (W). காய்ந்த மண்ணைப்‌ பாதரசம்‌ நினறந்த கிண்ணத்தில்‌ வைத்து அதில்‌ மூழ்கச்‌ செய்‌தால்‌ அதனால்‌ வழியும்‌ பாதரசத்தின்‌ எடையைக்‌ கணித்து, அதன்‌ மூலம்‌ காய்ந்த மண்ணின்‌ பருமனளவைக்‌ கணக்கிடலாம்‌ (V₂). சுருக்க வரம்பு W = W₁ — W — (V₁ — V₂) γw γ — அடர்த்தி எண்‌. W - நீரின்‌ அடர்த்தி. <b>அட்டர்பர்க்‌ வரம்புகளைக்‌ கட்டுப்படுத்தும்‌ காரணிகள்‌</b> <b>1. களிமண்‌ நொய்மத்தின்‌ அளவு</b> (Clay Colloid Content) கடைகால்‌ மண்ணில்‌ களிமண்‌ நொய்மத்தின்‌ (0.002 மி.மீ.-ம்‌ அதற்குக்‌ கீழும்‌ அளவுள்ள களிமண்‌ துகள்கள்‌) அளவு அதிகமாக இருந்தால்‌ நீர்ம வரம்பும்‌, குழைமக்‌ குறியீடும்‌ அதிகமாக இருக்கும்‌ என அட்டர்‌பர்க்‌ கண்டறிந்ததை, மண்‌ பொறியியலின்‌ அறிஞர்‌ கார்ல்‌ டெர்சாசி உறுதிப்படுத்தினார்‌. மண்ணில்‌ களிமண்‌ நூற்றுக்கு 16-க்கும்‌ குறைவாக இருந்தால்‌ அம்மண்‌ வகைகள்‌ குழைவுப்‌ பண்பற்றவை (Nonplastic soils) எனக்‌ கூறப்படும்‌. களிமண்‌ தாது வகைகள்‌ (Type of Clay Minerals). தகடுகளாக உள்ள களிமண்‌ துணுக்குகள்‌ அதிகம்‌ கொண்ட களிமண்‌ தாதுவான மாண்ட்மோரில்லோநைட் (Montmorillonite) மண்ணில் அதிகம் இருந்தால் நீர்ம வரம்பு அதிகமாகும்‌. எரிமலைக்‌ குழம்பிலிருந்து வரும்‌ சாம்பல்‌ மூலம்‌ உண்டாகும்‌ மண்‌ வகைகளில்‌ மாண்ட்மோரில்லோநைட்‌ தாதுக்கள்‌ அதிகம்‌ உள்ளபடியால்‌, இவ்வகை மண்ணின்‌ நீர்ம வரம்பு நூற்றுக்கும்‌ அதற்கு அதிகமாகவும்‌ இருக்கும்‌ சான்றாகப்‌ பென்டனைட் (Bentonite) களிமண்ணில்‌ கயலினைட்‌ தாது<noinclude></noinclude> fa67ekuog9sjjj8bo469okgaie9s046 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/237 250 540372 1925477 1861211 2026-04-19T14:46:41Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||அட்டை 201}}</noinclude><b>நூலோதி</b>\ 1. ''International Encyclopaedia of Statistics,'' 1978, Vol-2. <b>அட்டை</b> அட்டைகள்‌ (Leeches) பொதுவாக நன்னீரில்‌ வாழ்‌பவை. சில நிலத்திலும்‌ வாழ்கின்றன. ரிங்கோப்‌ டெல்லிடா (Rhynchobdellida) வரிசையைச்‌ சேர்ந்தவை நன்னீரிலும்‌ கடல்‌ நீரிலும்‌ காணப்படுகின்றன. அட்டைகளில்‌ ஏறக்குறைய 300 சிறப்பினங்கள்‌ கண்‌டறியப்பட்டுள்ளன. பெரும்பாலான அட்டைகள்‌ ஒட்டுண்ணிகளாக (Parasites) வாழ்கின்றன. நீரில்‌ வாழும்‌ சிலவகை அட்டைகள்‌, நத்தைகள்‌, பூச்சிகளின்‌ இளவுயிரிகள்‌, புழுக்கள்‌ போன்றவற்றை உண்ணுகின்றன. சில கரிமப்‌ பொருள்களை உண்பவை. சிவப்பு, கரும்பச்சை, கருநிறம்‌, பழுப்பு என அட்டைகளின்‌ நிறம்‌ வேறுபடுகிறது. இவை மென்மையான, தட்டையான உடலுடையவை. சில அட்டைகள்‌ 45 செ.மீ, வரை நீளமுடையவை. உடல்‌ நன்றாகச்‌ சுருங்கி விரியும்‌ தன்மையுடையது. அக்காந்தோப்டெல்லிடா (Acanthobdellida) சிறப்‌பினத்தைத்‌ தவிர ஏனைய சிறப்பினங்களில்‌ உடல்‌ 34 கண்டங்களால்‌ (segments) ஆனது. உடலின்‌ முற்பகுதியிலுள்ள 5 அல்லது 6 உடற்கண்டங்கள்‌ சேர்ந்து ஒரு சிறிய முன்முனை உறிஞ்சியையும்‌ (anterior sucker), இறுதியிலுள்ள 7 கண்டங்கள்‌ ஓர்‌ உறுதியான பின்‌முனை உறிஞ்சியையும்‌ (posterior sucker) உருவாக்குகின்றன. கவிழ்ந்த கிண்ணம்‌ போன்ற முன்முனை உறிஞ்சியின்‌ நடுவில்‌ வாய் (mouth) அமைந்துள்ளது. உடலின்‌ ஒவ்வொரு கண்டத்திலும்‌ 5 முதல்‌ 7 வளையங்கள்‌ (annuli) உள்ளன. ஈரப்பசையுடன்‌ கூடிய வழவழப்பான இதன்‌ தோல்‌ மூச்சுயிர்ப்புக்கு (respiration) உதவுகிறது. செரிமான மண்டலத்தின்‌ (Digestive system) நீண்ட தீனிப்பையில்‌ (crop) உணவு மாதக்கணக்கில்‌ சேமித்து வைக்கப்படுகிறது. ஒன்று முதல்‌ 4 இணைக்‌ சுண்கள்‌ (eyes) உடலின்‌ முற்பகுதியில்‌ உள்ளன. அட்டைகள்‌ இருபாலிகள் (hermaphrodites). ஆண்‌ இன உறுப்புகளும்‌ பெண்‌ இன உறுப்புகளும்‌ ஒரே அட்டையில்‌ நன்கு வளரப்‌ பெற்றிருப்பினும்‌ தற்கருவுறுதல்‌ (self fertilization) நடைபெறுவதில்லை. இரு அட்டைகள்‌ ஒன்றின்‌ ஆண்‌ இனப்பெருக்கத்துளை மற்றொன்றின்‌ பெண்‌ துளையின்‌ எதிரில் வருமாறு அடிப்புறங்களால்‌ ஒன்றிப்‌ புணர்ச்சி செய்கின்றன. 9, 10, 11ஆம்‌ கண்டங்கள்‌ சேர்ந்து 'கிளைடெல்லம்‌' (clitellum) எனப்படும்‌ புணர்‌ வளைத்தடிப்பாக மாறுகின்றன. இதனால்‌ சுரக்கப்படும்‌ புழுக்கூட்டில்‌ (cocoon) கருமுட்டைகளும்‌ (zygotes) அல்புமின்‌ உணவுப்‌ பொருளும்‌ சேர்க்கப்படுகின்றன. அட்டை இக்கூட்டைக்‌ கழற்றி நீர்மட்டத்துக்கு மேலுள்ள சேற்றுப்பகுதியில்‌ சேர்த்துவிடுகிறது. இவற்றிலிருந்து சில நாட்களில்‌ சிறு அட்டைகள்‌ வெளிவருகின்றன. நீரில்‌ வாழும்‌ அட்டைகள்‌, மீன்கள்‌, இருவாழ்விகள்‌, பறவைகள்‌, பாலூட்டிகள்‌ ஆகியவற்றின்‌ இரத்தத்தை உறிஞ்சுகின்றன. நிலத்தில்‌ மட்டுமே வாழும்‌ அடடைகள்‌ பாலூட்டிகளின்‌ இரத்தத்தை மட்டுமே உணவாகக்‌ கொள்கின்றன. கூர்மையான பற்களுடன்‌ கூடிய 3 தாடைகள்‌ (jaws) 'Y' — வடிவக்‌ காயத்தை உண்‌டாக்குகின்றன. பற்களும்‌ தாடைகளும்‌ கைட்டினால்‌ (chitin) ஆனவை. அட்டையின்‌ உமிழ்நீரில்‌ உள்ள சில பொருள்கள்‌ கடிக்கப்பட்ட இடத்தில்‌ வலி ஏற்படாதவாறு செயல்படுகின்றன. மேலும்‌ அவை இரத்தக்‌ குழாய்களை விரிவாக்கி அதிகமாக இரத்தம்‌ பாயச்‌ செய்வதுடன்‌ இரத்தம்‌ உறைவதையும்‌ தடுக்கின்‌றன. உமிழ்நீரிலுள்ள ஹிருடின்‌ (hirudin) இரத்த உறை வெதிர்ப்பியாகச்‌ (anti-coagulant) செயல்படுகிறது. நிலத்தில்‌ காணப்படும்‌ அட்டைகள்‌ அவற்றின்‌ ஓம்புயிர்களுக்காகக்‌ (hosts) காத்திருக்கின்றன. காயத்‌திலிருத்து இரத்தம்‌ வடிவதைக்‌ கண்டபிறகுதான்‌ ஓம்புயிர்‌ அட்டையால்‌ கடிபட்டிருப்பதை அறிகிறது. நேதோப்டெல்லிடே (Gnathobdellidae) குடும்பத்தைச்‌ சேர்ந்த அட்டைகள்‌ மனிதர்களைத்‌ தாக்குகின்‌றன. சில அட்டை வகைகள்‌ சில நூற்றாண்டுகளாகவே மருத்துவத்துக்குப்‌ பயன்படுத்தப்பட்டுவருகின்றன. 19ஆம்‌ நூற்றாண்டில்‌ மனதோய்‌ (mental illness), கட்டிகள்‌ (tumours), தோல்நோய் (skin disease), கீழ்வாதம்‌ (gout), கக்குவான்‌ (whooping cough) ஆகிய நோய்களின்‌ சிகிச்சைக்குப்‌ பயன்படுத்தினர்‌. தலைவலியைப்‌ போக்கச்‌ சில அட்டைகளை நெற்றிப்‌ பொட்டுப்‌ பகுதியிலிருந்து இரத்தத்தை உறிஞ்சியெடுக்கச்‌ செய்‌தனர். ஹிருடோ மெடிசினாலிஸ் (Hirudo medicinalis) ஐரோப்பாவிலும்‌, நேதோப்டெல்லா ஃபெராக்ஸ்‌ (Gnathobdella ferox) ஆசியாவிலும்‌ இவ்வாறு பயன்‌படுத்தப்பட்டன. ஹீமாடிப்சா (Haemadipsa) பொது வினத்தைச்‌ சேர்ந்த அட்டைகள்‌ ஆசியா, ஃபிலிப்‌பைன்ஸ்‌, கிழக்கிந்தியத்‌ தீவுகள்‌, மடகாஸ்கர்‌ ஆகிய பகுதிகளிலும்‌, ஃபிலமான்‌ (Philaemon) பொதுவினத்‌தைச்‌ சேர்ந்தவை ஆஸ்திரேலியாவிலும்‌ காணப்படுகின்றன. இவை மனிதர்களைத்‌ தாக்கும்‌ ஒட்‌டுண்ணிகள்‌. அட்டைகள்‌ உள்ள நீர்ப்பகுதியில்‌ குளிப்பவா்களின்‌ கழிவு நீக்கத்துளைகளின்‌ வழியாகச்‌ சிறு அட்டைகள்‌ உடலில்‌ புகுந்து விடுகின்றன. குடிநீருடன்‌ உட்‌செல்லும்‌. அட்டைகள்‌ முதலில்‌ தொண்டை, மூக்குப்‌ பகுதிகளில்‌ ஒட்டிக்கொண்டு பின்பு உள்ளிழுக்கப்படும்‌ காற்றுடன்‌ நுரையீரல்களில்‌ (lungs) நுழைந்துவிடுகின்றன. இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள்‌ இரத்தத்தை இழப்பதால்‌ இரத்த சோகை நோய்க்கு (anaemia) ஆளாகின்றனர்‌. மூச்சுப்பாதை அடைபடுவதால்‌ மூச்‌சடைப்புக்கு (suffocation) ஆளாகி இறந்து விடுவதும்‌<noinclude>{{rh|அ. ௧. 1 - 26||}}</noinclude> rj5xox167gc4quauntnm762n7tq9igd 1925478 1925477 2026-04-19T14:47:18Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|||அட்டை 201}}</noinclude><b>நூலோதி</b> 1. ''International Encyclopaedia of Statistics,'' 1978, Vol-2. <b>அட்டை</b> அட்டைகள்‌ (Leeches) பொதுவாக நன்னீரில்‌ வாழ்‌பவை. சில நிலத்திலும்‌ வாழ்கின்றன. ரிங்கோப்‌ டெல்லிடா (Rhynchobdellida) வரிசையைச்‌ சேர்ந்தவை நன்னீரிலும்‌ கடல்‌ நீரிலும்‌ காணப்படுகின்றன. அட்டைகளில்‌ ஏறக்குறைய 300 சிறப்பினங்கள்‌ கண்‌டறியப்பட்டுள்ளன. பெரும்பாலான அட்டைகள்‌ ஒட்டுண்ணிகளாக (Parasites) வாழ்கின்றன. நீரில்‌ வாழும்‌ சிலவகை அட்டைகள்‌, நத்தைகள்‌, பூச்சிகளின்‌ இளவுயிரிகள்‌, புழுக்கள்‌ போன்றவற்றை உண்ணுகின்றன. சில கரிமப்‌ பொருள்களை உண்பவை. சிவப்பு, கரும்பச்சை, கருநிறம்‌, பழுப்பு என அட்டைகளின்‌ நிறம்‌ வேறுபடுகிறது. இவை மென்மையான, தட்டையான உடலுடையவை. சில அட்டைகள்‌ 45 செ.மீ, வரை நீளமுடையவை. உடல்‌ நன்றாகச்‌ சுருங்கி விரியும்‌ தன்மையுடையது. அக்காந்தோப்டெல்லிடா (Acanthobdellida) சிறப்‌பினத்தைத்‌ தவிர ஏனைய சிறப்பினங்களில்‌ உடல்‌ 34 கண்டங்களால்‌ (segments) ஆனது. உடலின்‌ முற்பகுதியிலுள்ள 5 அல்லது 6 உடற்கண்டங்கள்‌ சேர்ந்து ஒரு சிறிய முன்முனை உறிஞ்சியையும்‌ (anterior sucker), இறுதியிலுள்ள 7 கண்டங்கள்‌ ஓர்‌ உறுதியான பின்‌முனை உறிஞ்சியையும்‌ (posterior sucker) உருவாக்குகின்றன. கவிழ்ந்த கிண்ணம்‌ போன்ற முன்முனை உறிஞ்சியின்‌ நடுவில்‌ வாய் (mouth) அமைந்துள்ளது. உடலின்‌ ஒவ்வொரு கண்டத்திலும்‌ 5 முதல்‌ 7 வளையங்கள்‌ (annuli) உள்ளன. ஈரப்பசையுடன்‌ கூடிய வழவழப்பான இதன்‌ தோல்‌ மூச்சுயிர்ப்புக்கு (respiration) உதவுகிறது. செரிமான மண்டலத்தின்‌ (Digestive system) நீண்ட தீனிப்பையில்‌ (crop) உணவு மாதக்கணக்கில்‌ சேமித்து வைக்கப்படுகிறது. ஒன்று முதல்‌ 4 இணைக்‌ சுண்கள்‌ (eyes) உடலின்‌ முற்பகுதியில்‌ உள்ளன. அட்டைகள்‌ இருபாலிகள் (hermaphrodites). ஆண்‌ இன உறுப்புகளும்‌ பெண்‌ இன உறுப்புகளும்‌ ஒரே அட்டையில்‌ நன்கு வளரப்‌ பெற்றிருப்பினும்‌ தற்கருவுறுதல்‌ (self fertilization) நடைபெறுவதில்லை. இரு அட்டைகள்‌ ஒன்றின்‌ ஆண்‌ இனப்பெருக்கத்துளை மற்றொன்றின்‌ பெண்‌ துளையின்‌ எதிரில் வருமாறு அடிப்புறங்களால்‌ ஒன்றிப்‌ புணர்ச்சி செய்கின்றன. 9, 10, 11ஆம்‌ கண்டங்கள்‌ சேர்ந்து 'கிளைடெல்லம்‌' (clitellum) எனப்படும்‌ புணர்‌ வளைத்தடிப்பாக மாறுகின்றன. இதனால்‌ சுரக்கப்படும்‌ புழுக்கூட்டில்‌ (cocoon) கருமுட்டைகளும்‌ (zygotes) அல்புமின்‌ உணவுப்‌ பொருளும்‌ சேர்க்கப்படுகின்றன. அட்டை இக்கூட்டைக்‌ கழற்றி நீர்மட்டத்துக்கு மேலுள்ள சேற்றுப்பகுதியில்‌ சேர்த்துவிடுகிறது. இவற்றிலிருந்து சில நாட்களில்‌ சிறு அட்டைகள்‌ வெளிவருகின்றன. நீரில்‌ வாழும்‌ அட்டைகள்‌, மீன்கள்‌, இருவாழ்விகள்‌, பறவைகள்‌, பாலூட்டிகள்‌ ஆகியவற்றின்‌ இரத்தத்தை உறிஞ்சுகின்றன. நிலத்தில்‌ மட்டுமே வாழும்‌ அடடைகள்‌ பாலூட்டிகளின்‌ இரத்தத்தை மட்டுமே உணவாகக்‌ கொள்கின்றன. கூர்மையான பற்களுடன்‌ கூடிய 3 தாடைகள்‌ (jaws) 'Y' — வடிவக்‌ காயத்தை உண்‌டாக்குகின்றன. பற்களும்‌ தாடைகளும்‌ கைட்டினால்‌ (chitin) ஆனவை. அட்டையின்‌ உமிழ்நீரில்‌ உள்ள சில பொருள்கள்‌ கடிக்கப்பட்ட இடத்தில்‌ வலி ஏற்படாதவாறு செயல்படுகின்றன. மேலும்‌ அவை இரத்தக்‌ குழாய்களை விரிவாக்கி அதிகமாக இரத்தம்‌ பாயச்‌ செய்வதுடன்‌ இரத்தம்‌ உறைவதையும்‌ தடுக்கின்‌றன. உமிழ்நீரிலுள்ள ஹிருடின்‌ (hirudin) இரத்த உறை வெதிர்ப்பியாகச்‌ (anti-coagulant) செயல்படுகிறது. நிலத்தில்‌ காணப்படும்‌ அட்டைகள்‌ அவற்றின்‌ ஓம்புயிர்களுக்காகக்‌ (hosts) காத்திருக்கின்றன. காயத்‌திலிருத்து இரத்தம்‌ வடிவதைக்‌ கண்டபிறகுதான்‌ ஓம்புயிர்‌ அட்டையால்‌ கடிபட்டிருப்பதை அறிகிறது. நேதோப்டெல்லிடே (Gnathobdellidae) குடும்பத்தைச்‌ சேர்ந்த அட்டைகள்‌ மனிதர்களைத்‌ தாக்குகின்‌றன. சில அட்டை வகைகள்‌ சில நூற்றாண்டுகளாகவே மருத்துவத்துக்குப்‌ பயன்படுத்தப்பட்டுவருகின்றன. 19ஆம்‌ நூற்றாண்டில்‌ மனதோய்‌ (mental illness), கட்டிகள்‌ (tumours), தோல்நோய் (skin disease), கீழ்வாதம்‌ (gout), கக்குவான்‌ (whooping cough) ஆகிய நோய்களின்‌ சிகிச்சைக்குப்‌ பயன்படுத்தினர்‌. தலைவலியைப்‌ போக்கச்‌ சில அட்டைகளை நெற்றிப்‌ பொட்டுப்‌ பகுதியிலிருந்து இரத்தத்தை உறிஞ்சியெடுக்கச்‌ செய்‌தனர். ஹிருடோ மெடிசினாலிஸ் (Hirudo medicinalis) ஐரோப்பாவிலும்‌, நேதோப்டெல்லா ஃபெராக்ஸ்‌ (Gnathobdella ferox) ஆசியாவிலும்‌ இவ்வாறு பயன்‌படுத்தப்பட்டன. ஹீமாடிப்சா (Haemadipsa) பொது வினத்தைச்‌ சேர்ந்த அட்டைகள்‌ ஆசியா, ஃபிலிப்‌பைன்ஸ்‌, கிழக்கிந்தியத்‌ தீவுகள்‌, மடகாஸ்கர்‌ ஆகிய பகுதிகளிலும்‌, ஃபிலமான்‌ (Philaemon) பொதுவினத்‌தைச்‌ சேர்ந்தவை ஆஸ்திரேலியாவிலும்‌ காணப்படுகின்றன. இவை மனிதர்களைத்‌ தாக்கும்‌ ஒட்‌டுண்ணிகள்‌. அட்டைகள்‌ உள்ள நீர்ப்பகுதியில்‌ குளிப்பவா்களின்‌ கழிவு நீக்கத்துளைகளின்‌ வழியாகச்‌ சிறு அட்டைகள்‌ உடலில்‌ புகுந்து விடுகின்றன. குடிநீருடன்‌ உட்‌செல்லும்‌. அட்டைகள்‌ முதலில்‌ தொண்டை, மூக்குப்‌ பகுதிகளில்‌ ஒட்டிக்கொண்டு பின்பு உள்ளிழுக்கப்படும்‌ காற்றுடன்‌ நுரையீரல்களில்‌ (lungs) நுழைந்துவிடுகின்றன. இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள்‌ இரத்தத்தை இழப்பதால்‌ இரத்த சோகை நோய்க்கு (anaemia) ஆளாகின்றனர்‌. மூச்சுப்பாதை அடைபடுவதால்‌ மூச்‌சடைப்புக்கு (suffocation) ஆளாகி இறந்து விடுவதும்‌<noinclude>{{rh|அ. ௧. 1 - 26||}}</noinclude> 2pex5gbma3pw4ygh41ckp1v0cersv1z பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/238 250 540373 1925483 1863343 2026-04-19T15:18:23Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|202 அட்மிரால்டி தீவுகள்‌||}}</noinclude>உண்டு. வெளிக்காயங்களில்‌ நோய்க்கிருமிகள்‌ தொற்றுகின்றன. ஆசியாவில்‌ கால்நடைகள்‌ இவ்வாறு பெருமளவில்‌ இறந்துவிடுகன்றன. இந்தியாலில்‌ ஹிருடினியா விரிடிஸ்‌ (Hirudinea viridis), ஹிருடினியா {{Css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_1.pdf |Page = 238 |bSize = 453 |cWidth = 144 |cHeight = 276 |oTop = 92 |oLeft = 63 |Location = center |Description = }} ஜவானிகா (Hirudinea javanica), ஹிருடினியா மனிலன்ஸிஸ்‌ (Hirudinea manillensis), ஹிருடினியா கிரானுலோஸா (Hirudinea granulosa) ஆகிய 4 வகை அட்டைகள்‌ காணப்படுகின்‌றன. அட்டைகள்‌ வளைதசைப்‌ புழுக்கள்‌ (Annelids) தொகுதியில்‌ ஹிருடினியா (Hirudinea) வகுப்பில்‌ வகைப்படுத்தப்பட்டுள்ளன. {{rh|||<b>சா.ர</b>}} <b>நூலோதி</b> 1.''Encyclopaedia Britannica, Micropaedia,'' 7:238 2. ''The International Wildlife Encyclopaedia,'' 10:1298 3. ''Encyclopaedia Americana,'' 17:160 4. ''World Book,'' 12:158 5. Ekambaranatha Ayyar ''“Manual of Zoology"''. Vol. I <b>அட்மிரால்டி தீவுகள்‌</b> பாப்புவா நியுகினியாவிற்குச்‌ சொந்தமான 40 தீவுகளைக்‌ கொண்ட இத்தீவுக்கூட்டம்‌ தென்‌ மேற்குப்‌ பசிபிக் பெருங்கடலில்‌ பிஸ்மார்க்‌ ஆர்ச்சிபெலாகோ தீவுக்‌ கூட்டத்தின்‌ ஒரு தொடர்ச்சியாக உள்ளது. இத்‌தீவுக்‌ கூட்டம்‌ நியுபிரிட்டனிலுள்ள ரபால்‌ என்னுமிடத்‌திலிருந்து வடமேற்கில்‌ 610 கி.மீ. தூரத்தில்‌ உள்ளது. இத்தீவுகளில்‌ மிகப்பெரியது எரிமலைகளைக்‌ கொண்ட மானஸ்‌ தீவு ஆகும்‌. 1528 ஆம்‌ ஆண்டு அவ்வாரோ சாவேட்ரா எனும்‌ ஸ்பெயின்‌ நாட்டினர்‌ இத்தீவில்‌ இறங்கியிருக்கலாமென்றும்‌, 1616ஆம்‌ ஆண்டு வில்லியம்‌ சோல்டன்‌ இத்தீவைக்‌ கண்டுபிடித்‌ தாரென்றும்‌, 1767ஆம்‌ ஆண்டு பிரிட்டிஷ்‌ கப்பல்‌ தலைவன்‌ பிலிப்‌ கார்டிரட்‌ என்பவரால்‌ இத்தீவு பெயரிடப்பட்டதென்றும்‌ கூறப்படுகிறது. 1884 இல்‌ ஜெர்மன்‌ நாட்டுப்‌ பாதுகாப்பில்‌ விளங்கிய இத்தீவுக்‌ கூட்டம்‌, 1914 ஆம்‌ ஆண்டு ஆஸ்திரேலியர்களால்‌ கைப்பற்றப்பட்டு, 1921ஆம்‌ ஆண்டு முதல்‌ ஆஸ்திரேலியா நாட்டின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ வந்தது. பின்னா்‌, 1942 முதல்‌ 1944 வரை ஜப்பானியர்களால்‌ இத்தீவுகள்‌ ஆக்கிரமிக்கப்பட்டன. 1946ஆம்‌ ஆண்டு நியுகினியாவின்‌ ஐக்கிய நாட்டுப்‌ பொறுப்பில்‌ இத்தீவுகள்‌ கொண்டு வரப்பட்டன. பாப்புலா நியுகினியா 1975ஆம்‌ ஆண்டு சுதந்திரம்‌ அடைந்ததும்‌ இத்தீவுகள்‌ அந்நாட்டின்‌ ஒரு பகுதியாகிவிட்டன. இத்தீவுகளின்‌ பொருளாதாரத்தில்‌ கொப்பரைத்‌ தேங்காய்‌ உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. மலேசியர்‌ வம்சத்தைச்சார்ந்‌த இத்‌தீவு மக்கள்‌ மீன்பிடித்‌தல்‌, உள்நாட்டு அங்காடிகளை நடத்தல்‌ சரக்குகளை ஏற்றி இறக்குதல்‌ போன்றவைகளைத்‌ தொழிலாகக்‌ கொண்டுவாழ்கின்றனர்‌, 1975ஆம்‌ ஆண்டுக்‌ கணக்கின் படி இத்தீவுகளில்‌ உள்ள மக்கள்‌ தொகை 30,160 ஆகும்‌. இவர்களில்‌ பெரும்பாலோர்‌ மானஸ்‌ தீவில்‌ வாழ்கின்றனர்‌. <b>அட்ரியாட்டிக்‌ கடல்‌</b> இக்கடல்‌ பால்கன்‌, இத்தாலி தீபகற்பங்களுக்கு இடையிலுள்ள மத்திய தரைக்கடலின்‌ ஒரு பகுதியாகும்‌. இக்கடலின்‌ இத்தாலிய கரையோரப்‌ பகுதி, வளைவுகளும்‌ தீவுகளுமற்றுக்‌ காணப்படுகிறது. ஆனால்‌ பால்கன்‌ தீபகற்பத்தின்‌ யுகோஸ்லோவியா, அல்பானியா கரையோரப்‌ பகுதிகளில்‌ சீரற்ற வளைவுகளும்‌, முட்டை வடிவமானவும்‌, சிறியவும்‌, பெரியவுமான பல தீவுகளுமுள்ளன. இதன்‌ காரணமாக, யுகோஸ்லோவியா கடற்கரைப்‌ பகுதியிலுள்ள பாதுகாப்பான தீவுகளும்‌, விரிகுடாக்களும்‌ உல்லாச இடங்களாக உள்ளன. அட்ரியாடிக்‌ கடல்‌ வெனீஸ்‌ வளைகுடாவி<noinclude></noinclude> 3vjy1kgql8w0jjxpp23zyqidqzgxied 1925484 1925483 2026-04-19T15:18:59Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|202 அட்மிரால்டி தீவுகள்‌||}}</noinclude>உண்டு. வெளிக்காயங்களில்‌ நோய்க்கிருமிகள்‌ தொற்றுகின்றன. ஆசியாவில்‌ கால்நடைகள்‌ இவ்வாறு பெருமளவில்‌ இறந்துவிடுகன்றன. இந்தியாலில்‌ ஹிருடினியா விரிடிஸ்‌ (Hirudinea viridis), ஹிருடினியா {{Css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_1.pdf |Page = 238 |bSize = 453 |cWidth = 144 |cHeight = 276 |oTop = 92 |oLeft = 63 |Location = center |Description = }} ஜவானிகா (Hirudinea javanica), ஹிருடினியா மனிலன்ஸிஸ்‌ (Hirudinea manillensis), ஹிருடினியா கிரானுலோஸா (Hirudinea granulosa) ஆகிய 4 வகை அட்டைகள்‌ காணப்படுகின்‌றன. அட்டைகள்‌ வளைதசைப்‌ புழுக்கள்‌ (Annelids) தொகுதியில்‌ ஹிருடினியா (Hirudinea) வகுப்பில்‌ வகைப்படுத்தப்பட்டுள்ளன. {{rh|||<b>சா.ர</b>}} <b>நூலோதி</b> 1. ''Encyclopaedia Britannica, Micropaedia,'' 7:238 2. ''The International Wildlife Encyclopaedia,'' 10:1298 3. ''Encyclopaedia Americana,'' 17:160 4. ''World Book,'' 12:158 5. Ekambaranatha Ayyar ''“Manual of Zoology"''. Vol. I <b>அட்மிரால்டி தீவுகள்‌</b> பாப்புவா நியுகினியாவிற்குச்‌ சொந்தமான 40 தீவுகளைக்‌ கொண்ட இத்தீவுக்கூட்டம்‌ தென்‌ மேற்குப்‌ பசிபிக் பெருங்கடலில்‌ பிஸ்மார்க்‌ ஆர்ச்சிபெலாகோ தீவுக்‌ கூட்டத்தின்‌ ஒரு தொடர்ச்சியாக உள்ளது. இத்‌தீவுக்‌ கூட்டம்‌ நியுபிரிட்டனிலுள்ள ரபால்‌ என்னுமிடத்‌திலிருந்து வடமேற்கில்‌ 610 கி.மீ. தூரத்தில்‌ உள்ளது. இத்தீவுகளில்‌ மிகப்பெரியது எரிமலைகளைக்‌ கொண்ட மானஸ்‌ தீவு ஆகும்‌. 1528 ஆம்‌ ஆண்டு அவ்வாரோ சாவேட்ரா எனும்‌ ஸ்பெயின்‌ நாட்டினர்‌ இத்தீவில்‌ இறங்கியிருக்கலாமென்றும்‌, 1616ஆம்‌ ஆண்டு வில்லியம்‌ சோல்டன்‌ இத்தீவைக்‌ கண்டுபிடித்‌ தாரென்றும்‌, 1767ஆம்‌ ஆண்டு பிரிட்டிஷ்‌ கப்பல்‌ தலைவன்‌ பிலிப்‌ கார்டிரட்‌ என்பவரால்‌ இத்தீவு பெயரிடப்பட்டதென்றும்‌ கூறப்படுகிறது. 1884 இல்‌ ஜெர்மன்‌ நாட்டுப்‌ பாதுகாப்பில்‌ விளங்கிய இத்தீவுக்‌ கூட்டம்‌, 1914 ஆம்‌ ஆண்டு ஆஸ்திரேலியர்களால்‌ கைப்பற்றப்பட்டு, 1921ஆம்‌ ஆண்டு முதல்‌ ஆஸ்திரேலியா நாட்டின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ வந்தது. பின்னா்‌, 1942 முதல்‌ 1944 வரை ஜப்பானியர்களால்‌ இத்தீவுகள்‌ ஆக்கிரமிக்கப்பட்டன. 1946ஆம்‌ ஆண்டு நியுகினியாவின்‌ ஐக்கிய நாட்டுப்‌ பொறுப்பில்‌ இத்தீவுகள்‌ கொண்டு வரப்பட்டன. பாப்புலா நியுகினியா 1975ஆம்‌ ஆண்டு சுதந்திரம்‌ அடைந்ததும்‌ இத்தீவுகள்‌ அந்நாட்டின்‌ ஒரு பகுதியாகிவிட்டன. இத்தீவுகளின்‌ பொருளாதாரத்தில்‌ கொப்பரைத்‌ தேங்காய்‌ உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. மலேசியர்‌ வம்சத்தைச்சார்ந்‌த இத்‌தீவு மக்கள்‌ மீன்பிடித்‌தல்‌, உள்நாட்டு அங்காடிகளை நடத்தல்‌ சரக்குகளை ஏற்றி இறக்குதல்‌ போன்றவைகளைத்‌ தொழிலாகக்‌ கொண்டுவாழ்கின்றனர்‌, 1975ஆம்‌ ஆண்டுக்‌ கணக்கின் படி இத்தீவுகளில்‌ உள்ள மக்கள்‌ தொகை 30,160 ஆகும்‌. இவர்களில்‌ பெரும்பாலோர்‌ மானஸ்‌ தீவில்‌ வாழ்கின்றனர்‌. <b>அட்ரியாட்டிக்‌ கடல்‌</b> இக்கடல்‌ பால்கன்‌, இத்தாலி தீபகற்பங்களுக்கு இடையிலுள்ள மத்திய தரைக்கடலின்‌ ஒரு பகுதியாகும்‌. இக்கடலின்‌ இத்தாலிய கரையோரப்‌ பகுதி, வளைவுகளும்‌ தீவுகளுமற்றுக்‌ காணப்படுகிறது. ஆனால்‌ பால்கன்‌ தீபகற்பத்தின்‌ யுகோஸ்லோவியா, அல்பானியா கரையோரப்‌ பகுதிகளில்‌ சீரற்ற வளைவுகளும்‌, முட்டை வடிவமானவும்‌, சிறியவும்‌, பெரியவுமான பல தீவுகளுமுள்ளன. இதன்‌ காரணமாக, யுகோஸ்லோவியா கடற்கரைப்‌ பகுதியிலுள்ள பாதுகாப்பான தீவுகளும்‌, விரிகுடாக்களும்‌ உல்லாச இடங்களாக உள்ளன. அட்ரியாடிக்‌ கடல்‌ வெனீஸ்‌ வளைகுடாவி<noinclude></noinclude> r4e7d53yj8yfwelajyxd673sr9x25mp பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/520 250 573970 1925457 1925442 2026-04-19T12:20:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|498 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பெருமை சேர்த்ததோடு, பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்தினையும் திறந்து வைத்தார். அதே மே திங்கள் 19, 20 ஆகிய நாட்களில் உதக மண்டலத்தில் நீலகிரிமாவட்ட கழக மாநாடு நடைபெற்றது. ஈ. ஆர். கிருஷ்ணன் எம். பி. மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். து. ப. அழகமுத்து மாநாட்டினைத் திறந்து வைத்தார். சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அண்ணா அவர்களின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்தார். அடுத்து தர்மபுரி மாவட்ட மாநாடு, அதே 22-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 17, 18 ஆகிய நாட்களில் எம். எஸ். சிவசாமி தலைமையில், தமிழரசி திறந்து வைக்க நடைபெற்றது. ஏ. கே. ஏ. அப்துஸ் சமத் அவர்கள் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்தினைத் திறந்து வைத்தார். அடுத்து அதே ஆகஸ்ட் மாதம் 5, 6 ஆகிய நாட்களில் மதுரை மாவட்ட ஐந்தாவது மாநாடு மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு முரசொலி மாறன் தலைமை தாங்கிட, எல். கணேசன் திறப்பாளராக இருந்தார். பி. கே. மூக்கையாத் தேவர் அவர்கள் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்தினைத் திறந்து வைத்தார். பின்னர் 1973-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தென்னாற்காடு மாவட்ட ஐந்தாவது மாநாடு 14, 15 ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் டி. கே. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கோவை எஸ். ஏ. ராஜமாணிக்கம் அவர்கள் மாநாட்டினைத் திறந்து வைத்தார். அண்ணா அவர்களின் படத்தை எஸ். எஸ். ராமசாமி படையாட்சி அவர்கள் திறந்து வைத்தார். இந்தியாவில் “எமர்ஜென்சி” பிரகடனத்திற்குப் பிறகு 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்ட ஐந்தாவது மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. செ. கந்தப்பன் அவர்கள் தலைமை தாங்கிட, ஜார்ஜ் கோமகன் மாநாட்டினைத் திறந்து வைத்தார். மாநாட்டில் அண்ணா அவர்களின் படத்தினை சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்களும், தந்தை பெரியார் அவர்களின் படத்தினை மணலி கந்தசாமி அவர்களும், புரட்சிக்கவிஞர் படத்தினை தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும் திறந்து வைத்தார்கள். அடுத்து, அதே ஆகஸ்ட் 16, 17 ஆகிய நாட்களில் சேலம் மாவட்ட ஐந்தாவது மாநாடு சேலம் மாநகரில் நடைபெற்றது.<noinclude></noinclude> f6gcafn2jocx5dlef62l6v9gfeuvb9v பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/521 250 573971 1925458 1925447 2026-04-19T12:22:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 499}}</noinclude>கவிஞர் கா. வேழவேந்தன் தலைமை தாங்கிட, நன்னிலம் நடராஜன் மாநாட்டினைத் திறந்து வைத்தார். அண்ணா அவர்களின் படத்தினை அன்னை மணியம்மையார் அவர்களும், தந்தை பெரியார் அவர்களின் படத்தினை விருதுநகர் வி. வி. இராமசாமி அவர்களும், புரட்சிக்கவிஞர் படத்தினை முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும் அந்த மாநாட்டில் திறந்து வைத்தார்கள். தொடர்ந்து அக்டோபர் மாதம் 11, 12 ஆகிய நாட்களில் புதுக்கோட்டை மாவட்ட முதல் மாநாடு அறந்தாங்கியில் நடைபெற்றது. திண்டுக்கல் காதர்சா மாநாட்டுத் தலைவர்; எஸ். எஸ். ராஜேந்திரன் மாநாட்டின் திறப்பாளர். தந்தை பெரியார் அவர்களின் படத்தினை தளபதி வீரமணி அவர்களும், அண்ணா அவர்களின் படத்தினை ஏ. ஆர். பெருமாள் அவர்களும், புரட்சிக் கவிஞர் படத்தினை புலவர் பொன்னிவளவன் அவர்களும் திறந்து வைத்தார்கள். அடுத்து மதுரையில் நவம்பர் 15, 16 ஆகிய நாட்களில் தி. மு. கழக மகளிர் மாநாடு அண்ணா அவர்களின் துணைவியார் திருமதி ராணி அண்ணியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொற்செல்வி இளமுருகு அவர்கள் மாநாட்டினைத் திறந்து வைத்தார். மாநாட்டில் மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுடைய படத்தினை அன்னை மணியம்மையார் அவர்களும், டாக்டர் தர்மாம்பாள் அவர்களின் படத்தினை திருமதி பூங்கோதை அவர்களும் திறந்து வைத்தார்கள். அதே திங்கள் அடுத்தவாரம் குமரி மாவட்ட மூன்றாவது மாநாடு நாகர்கோவிலில் நண்பர் இரா. செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கோவை மு. இராமநாதன் அந்த மாநாட்டினைத் திறந்து வைத்தார். தந்தை பெரியார் அவர்களின் படத்தினை எஸ்.எஸ். மாரிசாமி அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்கள் படத்தினை டாக்டர் எம். சந்தோஷம் அவர்களும், புரட்சிக் கவிஞர் படத்தினை வலம்புரிஜான் அவர்களும் திறந்து வைத்தனர். இதை அடுத்துத்தான் கோவையில் கழகத்தின் ஐந்தாவது பொதுமாநாடு நடைபெற்றது. கழகத்தின் தலைவர் என்ற முறையில் நான்தான் அந்த மாநாட்டிற்கு தலைமை வகித்தேன். பொதுச்செயலாளர் நாவலர் மாநாட்டின் திறப்பாளர். அந்த மாநாட்டில் 19 தியாகிகளின் படங்களை தமிழகத்தின் 19 முக்கிய தலைவர்கள் திறந்து வைத்தார்கள். டிசம்பர் 25-ஆம் தேதியன்று பிற்பகல் இருபது லட்சம் மக்கள் கலந்துகொண்ட, தமிழ்நாடே கோவையில் புகுந்ததுவோ<noinclude></noinclude> p0zygmitmx9sdi1c4ae1cmqxx06k15c பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/522 250 573972 1925459 1925453 2026-04-19T12:24:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|500 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>என்று எண்ணிடத்தக்க அளவிற்கு ஏழுமைல் நீளம் கொண்ட ஊர்வலம் கோவையை அதிர வைத்தது. ஊர்வலம் ஒரு இடத்தைக் கடக்க மூன்று மணி நேரம் ஆகியது. நான்கு மணிக்குப் புறப்பட்ட ஊர்வலம் 8.10 மணிக்கு பந்தலை அடைந்தது. அங்கே கழகக் கொடியினை மாநாட்டுத் தலைவர் என்ற முறையில் நான் ஏற்றி வைத்தேன். அடுத்த நாள் டிசம்பர் 26-ஆம் தேதியன்று காலை கலை நிகழ்ச்சிகளோடு அன்றைய நிகழ்ச்சி தொடங்கி, படத்திறப்பு விழாக்கள் நடைபெற்று, மாநாட்டிற்கு என்னை தலைமை தாங்கும் படி- கோவை ராஜமணிக்கம் முன்மொழிய, மாவட்டச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் மாநாட்டு வரவேற்புக் குழுத்தலைவர் சாமிநாதன், மாநாட்டுத் தொண்டர் படைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, நிதிக்குழு தலைவர் தேவசகாயம், மாநாட்டுச் செயலாளர்கள் ஏ.எம்.ராஜா, கோவை மு. ராமனாதன், சி.டி. தண்டபாணி, மற்றும் அலமேலு அப்பாதுரை, து.ப. அழக முத்து, அன்பில், மன்னை, தென்னரசு, மு. கண்ணப்பன், ராணி அண்ணியார், கழகப்பொருளாளர் பேராசிரியர் ஆகியோர் வழிமொழிந்து உரையாற்றினர். பேராசிரியர் வழிமொழியும் போது கவிதை நடையில்: {{left_margin|3em|<b><poem> “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்று சொன்ன “அன்பு இதயத்தை” தம் இதயமாகப் பெற்ற கலைஞரை வழிமொழிகிறேன். அண்ணாவின் தூங்காத இதயமே தலைமை ஏற்க வா! அல்ல, அல்ல தூங்காத இதயம் மட்டுமல்ல, அறிஞர் அண்ணாவின் ஆற்றல்மிக்க இதயமே தலைமை ஏற்க வா! உனக்குரிய இடத்தில் அமர வா, வா! அல்ல, அல்ல; உனக்குரிய பணியை ஆற்ற வா! அல்ல, அல்ல; என்றும் பணியாற்றும் நீ அதைத் தொடர வா! என்று கலைஞரை அழைத்து, நானும் அவரை வழிமொழிந்தேன் என்ற பெருமையைத் தேடிக் கொள்கிறேன்”</poem></b>}} எனக் குறிப்பிட்டார். {{nop}}<noinclude></noinclude> 2oe2ryztf1ai04qx4lv4g7ck41g5hmr பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/523 250 573973 1925460 1925451 2026-04-19T12:26:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 501}}</noinclude>எனது தலைமையுரையின் முன்னுரையிலே; “கழக அமைச்சரவை 28-ஆம் தேதியோடு காலியாகும் என்று சிலர் எழுதியிருப்பது பற்றி இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். 28-ஆம் தேதி என்ன? பேசி முடித்துவிட்டு பந்தலை விட்டு வெளியில் போகும் நேரத்தில் அந்தச் செய்தி வந்தாலும் அதைவிட பரவசம் அடைகிறவர்கள் எங்களைப் போல வேறுயாரும் இருக்க முடியாது. நான் கிரீடம் பற்றி கவலைப்படுகிறவன் அல்ல. அந்தக் கிரீடத்தைத் தாங்கும் தலைபற்றித்தான் கவலைப்படுகிறவன். கிரீடம் போய் விடலாம். ஆனால் தலை இருக்கவேண்டும். கிரீடம்தான் அமைச்சரவை. தலைதான் திராவிட முன்னேற்றக் கழகம்” என்று குறிப்பிட்டேன். மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலே நெருக்கடி நிலையை ஒட்டி நிறைவேற்றப்பட்ட முதல் இரண்டு தீர்மானங்கள் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவைகளாகும். <b>தீர்மானம் 1</b> ஒழுங்கு கட்டுப்பாட்டில் காட்டப்படுகிற ஆர்வத்தை இந்த மாநாடு வரவேற்கிறது. எனினும் அவைகளை நடைமுறைப்படுத்தும்போது ஜனநாயக முறைகள் பாதிக்கப்படாமல் நிலைத்து நீடிக்கவும் மீண்டும் இயல்பான சூழ்நிலை அமையவும் பேசித் தீர்த்து நாம் எதிர்பார்த்த நல்விளைவுகளைக் காண அனைத்துக்கட்சித் தலைவர்களையும் கொண்ட ஒரு வட்ட மேஜை மாநாட்டை உடனடியாகப் பிரதமர் கூட்ட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. (முன்மொழிந்தவர்: இரா. செழியன்; வழிமொழிந்தவர்: நெல்லிக்குப்பம் கிருஷ்ண மூர்த்தி, டி. வி. நாராயணசாமி, என். கணபதி, மாயவன் எம்.பி.) <b>தீர்மானம் 2</b> பொதுத்தேர்தல் முறைப்படி குறித்த காலத்தில் நடைபெறுவதும், அரசியல் கட்சிகளின் நடைமுறைப்பணிகள், திட்டங்கள், கொள்கைகள் ஆகியவைகள் பற்றி மதிப்பீடு செய்து, தீர்ப்பளிக்கும் வாய்ப்பை மக்கள் பெறுவதும் ஜன நாயக நெறியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1971-ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பெற்று, நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் தி. மு. க. பொதுக்குழு கூடி நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டப் பேரவைத் தேர்தலையும் இணைத்து நடத்துவதை நலம் என்றும், அதன் காரணமாக ஒரே ஆண்டின் தொடக்கத்திலும் இறுதியிலும் இரண்டு தேர்தல்களைச்<noinclude></noinclude> iqy4w4v2202crjojh3pawuv67hp2flz பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/524 250 573974 1925461 1925455 2026-04-19T12:38:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|502 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சந்திக்க வேண்டிய சூழ்நிலையைத் தவிர்க்க முடியும் என்றும், இரட்டிப்புச் செலவாகாமல் குறைக்கலாமென்றும் அரசு அதிகாரிகள் இரண்டு முறை தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட இயலாத நிலைமையைத் தவிர்க்கலாம் என்றும் கருத்தறிவித்து 71-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடனேயே சட்டப் பேரவைத் தேர்தலையும் நடத்துவதென்று முடிவெடுத்தது. இன்றுள்ள நிலையில் ஜனநாயக ரீதியாக பொதுத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்றும், அந்தத் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுவதற்கேற்ப சூழ்நிலைகளை உருவாக்கித் தரவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துவதோடு, போதிய முன்னறிவிப்பு தந்து; வரும் மார்ச் திங்களில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களை ஒருங்கிணைத்து நடத்தவேண்டும் என்றும் கருத்தறிவிக்கிறது. (முன்மொழிந்தவர்: சாதிக், வழிமொழிந்தவர்: ஓ. பி. ராமன், ரெங்கனாதன் எம்.எல்.ஏ.) மாநாட்டிலே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து நான் என்னுடைய முடிவுரையிலே நாடாளுமன்றத்திற்கும் சட்டப் பேரவைக்கும் சேர்த்து தேர்தலை நடத்த வேண்டுமென்று கேட்டு பிரதமருக்கு கழகத் தோழர்கள் அனைவரும் தந்தி கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். கழக மாநாடு கோவையில் நடைபெற்ற அதே தேதியில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் மாநாடு சண்டிகார் நகரிலே நடைபெற்று, அந்த மாநாட்டிலே நாடாளுமன்றத் தேர்தலை ஓராண்டு காலத்திற்கு ஒத்திப்போட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “எமர்ஜென்சி”யின் காரணமாக இந்திரா காங்கிரஸ், எதேச்சாதிகாரமாகப் பெற்றுக்கொண்ட பயன்களில் இதுவும் ஒன்று! {{nop}}<noinclude></noinclude> cis2o8b34x394bgavss9qvovb9b9v0t விக்கிமூலம்:ஒரு நிமிடப் பங்களிப்பு 4 621615 1925511 1902114 2026-04-20T04:54:07Z Velumani Veluchamy 16585 /* பங்களிப்பாளர்கள் */ sign 1925511 wikitext text/x-wiki {{c|'''தரவு அறிவியல் ஆராய்ச்சியில் தமிழ் சொற்கள் மிகக் குறைவாக இருக்கின்றன. பல புதிய சொற்களை, நூல்கள் வழி விரிவாக்குவோம்.''' }} விக்கிமூலத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. உங்களுக்குப் பிடித்த மேம்பாட்டுப் பணிகளை இங்கு கூறுங்கள். அதில் நீங்கள் ஒரு நிமிடத்தில் என்ன செய்யலாம் என்று படப்பதிவு செய்து காட்டுகிறோம். அப்படப்பதிவினைக் கண்டு தொடர்ந்து பங்களிப்பு செய்யுங்கள். == இலக்குகள் == * இலக்கு -1 # '''<section''' குறியீடுகளை இடுவது எப்படி? * காண்க: [[:File:ws-ta-one_minute_edit_1-2025-August-04.webm|ws-ta-one_minute_edit_1-2025-August-04.webm]] (2 நிமிடங்கள்) * இடுக : [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] - குறியீடுகள் இடுக * குறிப்பு: ஒரே பக்கத்தில் இரு குறியீடுகளும் (<section begin=""/.><section end=""/.>) அமைந்தால், <br>அவை <nowiki>'''##எண்##'''</nowiki> என மாறிவிடும். == பங்களிப்பாளர்கள் == # --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:19, 4 ஆகத்து 2025 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 15:54, 4 ஆகத்து 2025 (UTC) #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 06:31, 5 ஆகத்து 2025 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 11:15, 5 ஆகத்து 2025 (UTC) #--[[பயனர்:Rabiyathul Jesniya|Rabiyathul Jesniya]] ([[பயனர் பேச்சு:Rabiyathul Jesniya|பேச்சு]]) 12:11, 5 ஆகத்து 2025 (UTC) #--[[பயனர்:Joshua-timothy-J|Joshua-timothy-J]] ([[பயனர் பேச்சு:Joshua-timothy-J|பேச்சு]]) 15:21, 5 ஆகத்து 2025 (UTC) #--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 10:52, 6 ஆகத்து 2025 (UTC) #[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) #--[[பயனர்:செண்பகம்|செண்பகம்]] ([[பயனர் பேச்சு:செண்பகம்|பேச்சு]]) 12:45, 9 ஆகத்து 2025 (UTC) #--[[பயனர்:S sumathiselvam|S sumathiselvam]] ([[பயனர் பேச்சு:S sumathiselvam|பேச்சு]]) 12:16, 10 ஆகத்து 2025 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:26, 14 ஆகத்து 2025 (UTC) #----[[பயனர்:Chathirathan|Chathirathan]] ([[பயனர் பேச்சு:Chathirathan|பேச்சு]]) 03:32, 15 ஆகத்து 2025 (UTC) #-- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 14:21, 15 ஆகத்து 2025 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 14:53, 19 ஆகத்து 2025 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:19, 7 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 04:53, 20 ஏப்ரல் 2026 (UTC) pukujphakisuxfc6gjzb80dl62gelys விக்கிமூலம்:விக்கிப்பீடியா25 பிறந்தநாள் விழா நாள் 1 4 631695 1925680 1925354 2026-04-20T08:41:51Z Velumani Veluchamy 16585 /* பயில்வோர் */ 1925680 wikitext text/x-wiki [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]] “'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது. இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன. =='''பயிற்சிகள்'''== =='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''== ==='''தொடக்கவிழா: 9.30-10.00'''=== *தமிழ்த்தாய் வாழ்த்து *வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர் *வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர், *சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு *நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா *தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா ==='''அமர்வு - 1 (10.00-11.15''')=== *10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம் *11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 2 (11.15-2.00)'''=== *11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா *11.30 - 11.45 - செயல்முறை *11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர் *12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR) *12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்) *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 3 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1 ** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]] ** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf] ** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2 ** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] ** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *3.00 - 3.20 - செயல்முறை *3.20 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 4 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''== * தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா * தொடக்கவிழா: 9.30-10.00 ==='''அமர்வு - 5 (10.00-11.15)'''=== * 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும் # முனைவர் பா.கவிதா, # முனைவர் ம. மைதிலி # முனைவர் ந. இராஜேந்திரன், # முனைவர் இரா. குணசீலன் # முனைவர் வா. காருண்யா, # முனைவர் க. பாலாஜி # முனைவர் இரா.நித்யா, # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி #பேரா. இரா. அரிகரசுதன் * 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல் * 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு * 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 6 (11.20-2.00)'''=== *11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும் *11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை. *12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல் *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 7 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு) *3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல் #பேரா. இரா. அரிகரசுதன் #திரு இரெ. லோகநாதன் # முனைவர் மணிமேகலை *3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல் *4.00 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 8 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் பா.கவிதா # முனைவர் ம. மைதிலி, # முனைவர் ந. இராஜேந்திரன் # முனைவர் இரா. குணசீலன், # முனைவர் வா. காருண்யா, # முனைவர் இரா.நித்யா =='''திட்ட மேலாளர்'''== # சிறீதர் =='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி # பேரா. இரா. அரிகரசுதன் =='''பயில்வோர்'''== இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும். #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC) # --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC) # --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC) --[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC) ==புதிய பயனர்== [https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்] =='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''== * [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]] * [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] * [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] == Edit Summary (Wikipedia 25 Celebration) == இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம். {| class="wikitable" ! Sl.No ! Wikimedia Project ! Total edits ! Pages created ! Pages improved |- | 1 | Wikipedia | 1125 | 164 | 961 |- | 2 | Wikisource | 7493 | 1647 | 5846 |- | 3 | Wiktionary | 1073 | 11 | 1062 |- | 4 | Wikidata | 157 | 10 | 147 |- | 5 | Wikimedia Commons | 75 | 37 | 38 |- ! colspan="2" | Total ! 9923 ! 1869 ! 8054 |} == Detailed Contribution – Wikipedia (12 Users) == *[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved) |- | Dharshika2026 || 3 || 1 || 2 |- | Gunathamizh || 1 || 1 || 0 |- | Info-farmer || 961 || 133 || 828 |- | KarunyaRanjith || 1 || 1 || 0 |- | Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45 |- | Magizh Sundram || 1 || 1 || 0 |- | Mythily Balakrishnan || 1 || 1 || 0 |- | Neyakkoo || 71 || 11 || 60 |- | NithyaSathiyaraj || 5 || 1 || 4 |- | Saranya V R || 11 || 3 || 8 |- | Sridharrv2000 || 15 || 6 || 9 |- | Subisena || 7 || 2 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961 |} == Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) == {| class="wikitable sortable" ! Sl.No ! User ! Date ! Article Title |- | 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்] |- | 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்] |- | 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்] |- | 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்] |- | 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்] |- | 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு] |- | 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்] |- | 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்] |- | 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு] |- | 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்] |- | 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்] |- | 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி] |- | 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு] |- | 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்] |- | 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்] |- | 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்] |- | 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)] |- | 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்] |- | 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்] |- | 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்] |- | 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்] |- | 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை] |- | 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா] |- | 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி] |- | 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா] |- | 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா] |- | 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை] |- | 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்] |- | 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்] |- | 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்] |- | 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா] |- | 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு] |- | 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்] |- | 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்] |- | 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி] |- | 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்] |- | 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்] |- | 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)] |- | 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா] |- | 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்] |} == Detailed Contribution – Wikisource (26 Users) == *[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query] {| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026 |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Boopalan28012003 || 10 || 1 || 9 |- | Dharshika2026 || 1234 || 28 || 1 |- | Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2 |- | Gunathamizh || 6 || 0 || 6 |- | Info-farmer || 868 || 221 || 647 |- | KarunyaRanjith || 35 || 0 || 35 |- | Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1 |- | LALITHAA K || 57 || 56 || 1 |- | M.Deepika Muthukumar || 3 || 0 || 3 |- | Magizh Sundram || 120 || 117 || 3 |- | Mallika Vijayakumar || 63 || 62 || 1 |- | Manimekalaiamuthan || 514 || 92 || 0 |- | Mythily Balakrishnan || 114 || 92 || 22 |- | Neyakkoo || 754 || 37 || 717 |- | NithyaSathiyaraj || 2707 || 22 || 655 |- | Pavanar Sathiyaraj || 29 || 26 || 3 |- | R. Ariharasuthan || 349 || 2 || 5 |- | Rajendran Nallathambi || 219 || 84 || 135 |- | Rarunachinna || 43 || 38 || 5 |- | Saranya V R || 92 || 1536 || 385 |- | SavithaDuraisamy || 42 || 26 || 16 |- | Sridharrv2000 || 93 || 70 || 937 |- | Srijayanthi Devi || 11 || 10 || 1 |- | Subisena || 178 || 30 || 148 |- | Sujivenba04 || 41 || 40 || 1 |- | Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846 |} == Detailed Contribution – Wiktionary (5 Users) == * [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 18 || 2 || 16 |- | Neyakkoo || 1011 || 5 || 1006 |- | Pavanar Sathiyaraj || 5 || 1 || 4 |- | Rajendran Nallathambi || 4 || 1 || 3 |- | Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062 |} == Detailed Contribution – Wikidata (10 Users) == *[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Dharshika2026 || 1 || 0 || 1 |- | Info-farmer || 143 || 10 || 133 |- | KarunyaRanjith || 1 || 0 || 1 |- | Magizh Sundram || 1 || 0 || 1 |- | Mythily Balakrishnan || 1 || 0 || 1 |- | Neyakkoo || 5 || 0 || 5 |- | NithyaSathiyaraj || 1 || 0 || 1 |- | Saranya V R || 1 || 0 || 1 |- | Sridharrv2000 || 2 || 0 || 2 |- | Subisena || 1 || 0 || 1 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147 |} == Detailed Contribution – Wikimedia Commons (2 Users) == *[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 1 || 0 || 1 |- | Neyakkoo || 74 || 37 || 37 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38 |} =='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''== * '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. * திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. *இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது. * இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர். * இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. * மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன. * முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது. ==Project and impact== * The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions. * The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence. * The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage. * One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement. * Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language. * The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource. * Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion. * Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community. * During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book. * Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge. * As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations. * Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report] =='''விளைவுகள்'''== * செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. * [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது. * Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions: ** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835 ** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836 ** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837 ** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838 ** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832 * These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity. == '''நிழற்படங்கள்''' == ==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''=== <gallery> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small> </gallery> ==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''=== <gallery> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small> </gallery> =='''நிகழ்படங்கள்'''== =='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''== * இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது. * அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை]. === 27 பிப்ரவரி 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC) # # # # # # # # === 13 மார்ச் 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]] #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) # # # # # # === 17 ஏப்பிரல் 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC) # # # # # # # [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] kvehx95kbsiyrfe5m9lult2rghqkcb6 விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு 4 638787 1925456 1924674 2026-04-19T12:00:03Z Info-farmer 232 + எங்கள் இருவருக்கும் வங்கி பரிமாற்றத்தில் சிக்கல் எழுந்துள்ளது. 1925456 wikitext text/x-wiki # 02 பெப்பிரவரி 2026 விண்ணப்பம் மேல்விக்கியில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=prev&oldid=30011165 வெளியிடப்பட்டுள்ளது.] # 10 பெப்பிரவரி 2026 மேல்விக்கியில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=next&oldid=30046834 விண்ணப்பத் தர ஆய்வுத் தொடங்கப்பட்டது.] # 23 பெப்பிரவரி 2026 மின்னஞ்சல் வழிகாட்டல்படி, விண்ணப்பத்தில் [https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=next&oldid=30099716 செலவுத்திட்டம் இணைக்கப்பட்டது.] # 23 பெப்பிரவரி 2026 [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&action=historyமேல்விக்கியில் விண்ணப்பப் பேச்சுப்பக்கத்தில் வினாக்கள் எழுப்பப்பட்டன.] # 01 மார்ச்சு 2026 [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=30149176&oldid=30134062 மேல்விக்கியின் வினாக்களுக்கு, பதில் அளித்தேன்.] # 18 மார்ச்சு 2026 [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Completion_of_C._N._Annadurai_letter%27s_volumes_in_Tamil_Wikisource.&diff=next&oldid=30149176 விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.] # எனது மின்னஞ்சலுக்கு ஆதார் அட்டை, நிலையான வருமானவரி கணக்கு எண், வங்கி விவங்கள், எனக்கும் பிறருக்கும் கேட்கப்பட்டன. அதற்குரிய விண்ணப்பத்தில் ஐந்து நாட்களில் பதில் அனுப்ப குறிப்பு இருந்தது. ஆனால் இரண்டு நாட்களில் பலார்க் புவுன்டேசன் கேட்ட ஆவணங்களை அனுப்ப மாலை 4 மணிக்குக் கூறினர். மணிக்கணக்கில் பார்த்தால் ஒரு நாள் முடிவு என்பது, தேதி அடிப்படையில் இருநாட்கள் ஆகின்றது. முதல் அனுபவம் என்பதால் ஐந்து நபர்களிடம் விவரம் அனுப்ப சற்று தடுமாறிப் போனேன்.ஏனெனில், பெண்கள் என்பதால் உடன் அழைத்து்ப் பேச இயலவில்லை. வழக்கம் போல டெலிகிராம் வழியே செய்தி அனுப்பியிருந்தேன். நல்லவேளையாக அனவைரும் உடன் பார்த்து ஆவணங்களை அனுப்பினர். ஆவணங்களை படமாக அனுப்பினர். பிறகு கோப்பாக ஆவணங்களை அனுப்ப படப்பதிவு செய்து அறிமுகப்படுத்தியதால், முழுமையான படச்செறிவோடு ஆவணங்களை அனுப்பினர். அவற்றை வைத்து ஒவ்வொருக்கும் பிடிஎப் உருவாக்கி விண்ணப்பத்தினை நானே முழுமையாக மின்னஞ்சல் வழி அனுப்பினேன். இதற்கு ஒரு கூகுள் கோப்புறை உருவாக்கி, அதனை விண்ணப்பத்திற்கு தொடர்புடையவர் காணும்படி அனைத்து ஆஙணங்களையும் இணைத்து மின்னஞ்சல் வழி பகிர்ந்தேன். # நிதி கிடைக்க நாள் ஆகும் என்பதால், வேறுவேலையாகச் சென்னை சென்ற போது, எந்த நூலக்கித்தில் நூல் விவரங்கள் கிடைக்கும் என்பதை ஆய்ந்து 30% பணியைக் கட்டமைத்தேன். # 01 ஏப்ரல் 2026 மெய்ப்புப் பணிக்கான முதல் நூல் அட்டவணை உருவாக்கப்பட்டது. #* இந்நூலில் பங்களிப்புச் செய்தவர்களை [[அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf#பங்களிப்பு_விவரங்கள்]] என்பதில் அறியலாம். #* ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகள் செய்யப்பட்டமையால், தேவைப்படும் வடிவங்களை தொகுதி [[அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf#வடிவ_மாதிரிகள்|மேற்கூறிய அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் இணைத்துள்ளேன்.]] அதனைக் கண்டு பயனர்கள் செய்தனர். அவ்வப்போது தனித்தனியாக தேவைப்படும் போது அவர்களின் டெலிகிராமில் குரல்வழி செய்தி அனுப்பி ஒருங்கிணைப்பு செய்தேன். # 14 ஏப்ரல் 2026 - [https://balarcfoundation.org/ பலார்க் அறக்கட்டளை] எனது பெயருக்கு எட்டு பக்கங்கள் கொண்ட ஒப்பந்த ஆவணம் அனுப்பினர். அதில் விண்ணப்ப இலக்குகள், விண்ணப்ப்பபடி செலவு செய்ய வேண்டிய குறிப்புகள், தணிக்கையாளரிடம் பெற வேண்டிய சான்றிதழகள், திட்ட அறிக்கைதருவதற்கான காலக்கோடு முதலியவை இருந்தன. நான் இணையத்தின் வழியே, எனது ஒப்பத்தினை சுட்டியை வைத்து வரைந்து அனுப்பினேன். அனுப்பியதற்கான சான்றும் எனக்கு மின்னஞ்சல் வழி வந்தது. மூன்று நாட்களில் உரிய தொகையை விண்ணப்பத்தில் உள்ளவர்களுக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளனர். # 19 ஏப்ரல் 2026 - எனக்கும், யாசுமின் பைசல் தவிர, மற்ற நான்கு பெண்களுக்கும்(ஐசுவர்யா, சசி, இராபியா, சரண்யா) நேரடியாக அவர்களுக்குரிய மதிப்பூதியம் இந்திய உரூபாய் 3000.00, அவர்களின் வங்கிக் கணக்கிற்க்கு வந்துள்ளது. எங்கள் இருவருக்கும் வங்கி பரிமாற்றத்தில் சிக்கல் எழுந்துள்ளது. pvpjd5vm8pri0wvsk36oiqn40j89az5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/206 250 638865 1925462 1922015 2026-04-19T12:39:36Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|182||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> இதனைப் பல நூற்றாண்டுகள் பார்த்தான பிறகுதான் சிந்தனையாளர்கள், தானம்—தருமம்—என்பவைகள் ஏழை பணக்காரன் என்ற பேதத்தை அடியோடு போக்கிடா என்பதை அறிந்தனர்; அவனிக்கு எடுத்துரைத்தனர்! {{left_margin|3em|<poem>ஏழை என்று ஒரு பிரிவும் பணக்காரர் என்றோர் பிரிவும் ஏன் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்த நிலை ஒழிந்திட வழி செய்தாக வேண்டும் என்று தெரிவித்தனர்.</poem>}} {{left_margin|3em|<poem>அதன் விளைவாக மனித குலத்துக்குக் கிடைத்த கருத்துக் கருவூலமே சோஷியலிசம் என்ற தத்துவம். தருமகர்த்தா முறை பரீட்சிக்கப்பட்டு அது போதுமானதாக இல்லை என்பது மெய்ப்பிக்கப்பட்ட காரணமாகவே, புதிய முறை வகுக்கப்பட்டது. அந்தப் புதிய முறையே சமதர்மம்—சோஷியலிசம்.</poem>}} இந்தப் புதியமுறையை எப்படி நடத்திச் செல்வது என்பதைச் சிந்தித்துச் செயவாற்ற வேண்டிய காலம் இது. ஆனால், இந்தக் காலத்தில், மக்களைப் பின்னோக்கித் துரத்தும் விதமாக, தர்மகர்த்தா’ முறை பற்றிப் பேச முற்படுகிறார், காமராஜர். இன்று பிரபுக்கள் பலரிடம் சேர்ந்துள்ள சொத்திலே பெரும் பகுதி, ஒரு காலத்தில் தரும காரியத்துக்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மெள்ள மெள்ள அந்தச் சொத்தினை அவர்கள் தங்கள் சுகபோகக் கருவியாக்கிக் கொண்டனர் என்பதனைப் பொதுமக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். கோயிலுக்காக, வேத பாடசாலைக்காக, அன்னதானத்துக்காக, அனாதைகளின் பராமரிப்புக்காக என்று குறிப்பிடப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பெரு நிதி, பிறகு சீமான்களின் சொந்தச் சொத்து ஆகிவிட்ட கதை பலப்பல. {{left_margin|3em|<poem>இன்றைய சீமான்களிலே பலர், நேற்றைய தருமகர்த்தாக்கள்!</poem>}} இப்படித் தோற்றுப் போய்விட்ட ஒரு தத்துவத்தை, புதை குழியிலிருந்து வெளியே எடுத்து வைத்துக் கொண்டு, தமது புதிய கண்டுபிடிப்பு இது என்று பேசிப் பார்க்கிறார் காங்கிரஸ் தலைவர். சிலர் செல்வத்தைக் குவித்துக் கொள்வதற்கான ஏற்பாட்டினை வைத்துக் கொண்டு, பலர் பஞ்சைகளாகித் தவித்திடும் நிலையையும் வைத்துக் கொண்டு, இல்லாதாரின் இன்னலை உடையவர் துடைத்திடுவார் என்று உபதேசம் பேசி வருவது, கண்ணைப் பறித்துவிட்டு, கைக்கோல் தருவதற்கு ஒப்பானதாகும்; பாம்புப் புற்றுக்குப் பக்கத்தில் பச்சிலைச்<noinclude></noinclude> 356cahn1mtj4gxfjwrkt7lpbqnc78z5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/207 250 639159 1925466 1922016 2026-04-19T13:03:45Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||183}}{{rule}}</noinclude> செடி நட்டு வைத்துக் காட்டுவது போன்றதாகும்; கூரையைக் கொளுத்திவிட்டு, குடம் குடமாகத் தண்ணீர் தர முனைவது போன்றதாகும். {{left_margin|3em|இது பிரச்சினையைத் தீர்த்திடும் முறை அல்ல; மூடி மறைக்கும் முயற்சி.}} ஆகவேதான் தம்பி! நாம் இந்தத் தர்மகர்த்தா முறை பற்றிய பேச்சினை ஏற்க மறுக்கிறோம். மேலும், தம்பி! இந்தப் போதனையை இவருக்கு முன்னாலே எப்படிப்பட்டவர்களெல்லாம் செய்து பார்த்துப் பலன் காணாது வாடிப் போயினர் என்பதை எண்ணிப் பார்த்திடும்போது, கவலை அதிகமாகித்தான் தீரும். {{left_margin|3em|மகாத்மா காந்தியார் தமது ஆயுட்காலம் முழுவதும் இந்த போதனையைத்தான் செய்து வந்தார்! ரஷிய நாட்டு தத்துவ மேதை டால்ஸ்டாய் வேதாந்த வித்தகர் இந்தப் போதனை நடத்தியவர்— அறிவோமே.}} அவர்களின் உபதேசங்கள் ‘பூஜ மாட’ ஏடுகளாக்கப்பட்டு விட்டனவேயன்றி, புதிய முறையையா, சமூகத்திலே புகுத்தின? இல்லையே! {{left_margin|3em|மகாத்மாவின் உபதேசம் சாதித்துக் கொடுக்காத தர்மகர்த்தா முறையையா, புதிய பெரியவரின் பேச்சு தந்திடப் போகிறது? அப்படிச் சொல்லிட ஒன்று நெஞ்சழுத்தம் நிரம்ப வேண்டும் அல்லது ஏய்க்கும் திறமை மிகுந்திருக்க வேண்டும்.}} தருமகர்த்தா முறை செயல்பட்ட காலத்திலே கட்டப்பட்ட சத்திரங்களும் சாவடிகளும் ஏராளம். ஆனால் வளர்ந்து விட்ட ஏழையின் தொகையோ அதனினும் ஏராளம். {{left_margin|3em|தருமகர்த்தாக்களாகச் சிலர் விளங்கிட வேண்டுமென்றால், அவர்களிடம் பெருநிதி சேர்ந்திட வேண்டுமென்றால், நாட்டிலே உற்பத்தியாகிற செல்வத்திலே பெரும்பகுதி அவர்களிடம் போய்ச் சேர்ந்தாக வேண்டும்; பெரும்பகுதிச் செல்வம் செல்வர் சிலரிடம் சேர்ந்திடுமானால், சமூகத்தில் பெரும்பகுதி வறண்டுதானே கிடந்தாக வேண்டும்.}} இதனால்தான், தம்பி! ஏழை பணக்காரன் பேதம் நீடித்து கொண்டு வருகிறது. இதனால்தான் தம்பி! வறுமையால் தாக்குண்டோர் தொகை வளர்ந்தபடி இருக்கிறது. இதனால்தான் தம்பி! வறுமையின் தாக்குதல், குடும்பங்களிலே குமுறலை, காரணமற்ற கோபம் கொண்டிடும் நிலையினை மூட்டி வைக்கிறது. இதனை உணர்ந்தோர், உயர் பதவியினர்<noinclude> <references/></noinclude> s5hqp72rpq7j9qdz0xhhy97pyc7ydsb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/208 250 639160 1925468 1922017 2026-04-19T13:11:29Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|184||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> தர்மகர்த்தா தத்துவம் பற்றிப் பேசுவதைக் கேட்கும்போதே, எள்ளி நகையாடத்தான் செய்வர். தருமகர்த்தா தத்துவத்தைப் பற்றிக் காமராஜர் பேசி அதுகேட்டு செல்வவான்கள் மனம் உருகி, ஐயகோ! நாம் சுகபோகத்தில் இருக்கிறோம், நமது உடன் பிறந்தோர் வறுமையிலே உழல்கிறார்களே! நாம் கனிச்சாறு பருகுகிறோம், அவர்கள் கால்வயிற்றுக் கூழும் கிடைக்காமல் தவிக்கிறார்களே! நமக்குப் பஞ்சணை, அவர்களுக்குக் கட்டாந்தரை! நாம் மாளிகையில், அவர்கள் மரத்தடியில்! நாம் புதுப்புது இன்பம் தேடிப் பெறுகிறோம், அவர்கள் புழுப் போலத் துடிக்கிறார்களே! இது சரியா, முறையா? மக்களிலே பெரும் பகுதியினர் வேதனையில் உழலும்போது, நாம் வாழ்க்கையையே விழாவாக்கி மகிழ்ச்சியில் மூழ்கிக் கிடப்பதா! மனிதாபிமானமாகுமா இது! சேச்சே! என்ன கொடுமை! என்ன கொடுமை! இரும்புப் பெட்டியிலே பணம்; ஏழை, குடிசையில் பிணமாகிறான், பசி நோயினால்! எதற்கு இந்தப் பணம்? என்னிடம் உள்ள பணம்? என்னிடம் உள்ள பணம் என் பணமா? ஏழையின் வியர்வை அல்லவா பணமாக மாறி என்னிடம் வந்தது? அந்த ஏழைகளைக் காத்திட இந்தப் பணம் பயன்படட்டும் என்றல்லவா இத்தனை பணம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது? குளத்திலே நீரைத் தேக்கி வைப்பது எதற்கு? ஊரார் பருகிட உதவவேண்டும் என்பதற்கல்லவா? முதலைகள் புரண்டிடவா தடாகம்!! நான் தனவான்! கனவான்! சீமான்! பொருள் என்ன? தனவான் என்பது தருமவான் என்பதன் மறுபெயரல்லவா? கனவான் என்றால் மக்களைக் கவனிப்பான் என்றல்லவா பொருள்? சீமான் என்றால் சீர்செய்வோன் என்றல்லவா பொருள்! இதுதானே தருமகர்த்தா முறை! இதனை இதுநாள்வரை மறந்து கிடந்தேனே! மக்கள் துரோகியாகிக் கிடந்தேனே! இப்போதல்லவா உண்மையை உணர்ந்தேன்! கண்திறந்தது! இதயம் மலர்ந்தது! எல்லாம் பெரியவர் காமராஜர் தந்த தருமகர்த்தா உபதேசம் கேட்டதனால். இதோ, இனி என் செல்வம், ஏழைக்கு இதம் அளிக்க! என் கடன் பணி செய்து கிடப்பதே! யான் பெற்ற செல்வம் யாவர்க்கும் சொந்தம்! தந்தேன்! தந்தேன்! நான் தர்மகர்த்தா! தர்மகர்த்தா— என்றெல்லாம் நெஞ்சு நெக்குருகக் கூறி, தம்மிடம் உள்ள செல்வத்தை அள்ளித் தந்து ஏழையின் அல்லலைப் போக்கிடவா கிளம்புகின்றனர்? இல்லையே! ஒரு புன்னகையை உதிர்க்கின்றனர்; புதுத் தெம்பு கொள்கின்றனர்! மதியற்றோரே! கேட்டீரா காமராஜர் பேச்சை! பணக்காரர்கள் என்றாலே பாதகர்கள் என்று பேசிவந்தீரே! சீமான் என்றால் ஏழைக்கு வைரி என்று ஏசி வந்தீரே! முதலாளி என்றால் பாட்டாளிக்குப் பகையாளி என்று பழி சுமத்தி வந்தீர்களே! காமராஜர் பேச்சைக் கேட்டீர்களா?<noinclude> <references/></noinclude> 79ee4qd19pyht5wezbh1qq3ojtycsgt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/209 250 639161 1925582 1922038 2026-04-20T05:44:29Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||185}}{{rule}}</noinclude> நாங்கள் தர்மகர்த்தாக்கள்! ஆமாம்! தர்மகர்த்தாக்கள்! எம்மிடம், எமது தகுதி, திறமை, பண்பு பார்த்துச்செல்வம் வந்து குவிந்திருக்கிறது. இந்தப் பணம் எமக்கேவா சொந்தம்? இந்தப் பணத்தைக் கொண்டு நாங்களா சுகபோகத்தில் மூழ்கிடப் போகிறோம். நீரைத் தன்னிடத்தில் நிரப்பி வைத்துக் கொண்டிருக்கும் குளம் எப்படி ஊராருக்குப் பயன் தருகிறதோ அப்படி ஏழைகளுக்கு இதம் செய்திட இந்தச் செல்வம். எம்மிடம் பணம் இருக்கிறதே என்பதற்காக, பகைத்துக் கொள்ளலாமா? உங்கள் நலனுக்காக அல்லவா இந்தப் பணம் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது! நாங்கள் தந்திட! நீங்கள் பெற்றிட! நாங்கள் தந்திட வேண்டுமானால், எம்மிடம் பணம் சேர்ந்திட வேண்டுமல்லவா? அப்படிச் சேர்ந்திடும்போது, அடிக்கிறான் கொள்ளை, குவிக்கிறான் கோடி என்று கொக்கரிக்கிறீர்களே, நியாயமா? நாங்கள் குவித்திடாவிட்டால், உங்களுக்கு உதவி யார் செய்திடுவர்? எப்படிச் செய்திட முடியும்!! தருமகர்த்தா இல்லாவிட்டால் தருமம் எப்படி நடக்கும்? தருமம் நடக்காவிட்டால், தரித்திரத்தால் தவித்திடும் உங்கள் வேதனை எப்படிப் போகும்? ஆகவே இனியாகிலும், அருவருப்பு, பொறாமை, பகை கொள்ளாதீர்கள்! மாளிகையில் மந்தகாசமாக வாழ்கிறான் என்று கோபம் கொள்ளாதீர்! மாளிகை வாசியினால் தானே மண் குடிசைக்காரரின் இன்னலைத் துடைக்க முடியும். உங்கள் இன்னலைத் துடைக்கத்தானே எம்மிடம் இலட்சங்கள் உள்ளன! நாங்கள் தர்மகர்த்தாக்கள்! எங்களை வாழவிடுங்கள், வளர விடுங்கள்!! வாழ்த்துங்கள்! வணங்குங்கள்! உமக்கு வாழ்வளிக்கும் வல்லமையாளர் நாங்கள்!! என்று ஏழையைப் பார்த்துக் கூறிடும் துணிவு பெறுகின்றனர். {{left_margin|3em|<poem>சுயநலக்காரன் சுரண்டல்காரன் சுகபோகி பணம் பெருத்தான் இரும்புப் பெட்டிக்காரன்</poem>}} என்றெல்லாம் பணக்காரர்கள் கண்டிக்கப்பட்டால், ஒரு கொதிப்பு எழும்; குமுறிக் கிடந்தவர்கள் சீறி எழுவர்; கூப்பிய கரங்கள் தாக்கிட எழும்; புனல் சொரிந்த கண்கள் கக்கும், புரட்சி மூளும், நமது நிலை அழியும். ஆனால் நாம் தர்மகர்த்தாக்கள் என்று காமராஜரே கூறிவிட்டார். ஆகவே ஏழை எளியோர் நம்மை வாழ்த்துவர், வணங்குவர்! நமக்கு எதிர்ப்பு எழாது, பகை மூண்டிடாது, நமது ஆதிபத்தியம் அழிந்துபடாது!!—என்று எண்ணுகின்றனர். அந்த எண்ணம் ஒரு துணிவைத் தருகின்றது. {{left_margin|3em|<poem>காமராஜரின் தர்மகர்த்தாப் பேச்சு எதிர்காலத்தைப் பற்றி எண்ணி எண்ணி அஞ்சிக் கிடந்த பணக்காரர்களுக்குப் புதுத் தெம்பும், துணிவும் தந்து விட்டது. </poem>}}<noinclude></noinclude> hy5u20t65st8d13i1s3pb82lv07n614 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/210 250 639162 1925587 1922035 2026-04-20T05:53:56Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|186||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> முதலாளித்துவ முறைக்கு இருந்து வரும் எதிர்ப்பு முறிந்திட வழி செய்கிறது. ஏழையைச் சீமானிடம் பணிந்திடச் செய்கிறது. தம்பி, இவைகளை அறிந்து திட்டமிட்டுக் காமராஜர் இந்தத் தர்மகர்த்தா முறைபற்றிப் பேசுகிறார் என்று நான் கூறவில்லை. தமது பேச்சு எதற்குப் பயன்படுத்தப் பட்டுவிடும் என்பதை உணர்ந்தறியாமல்,—தித்திப்புப் பேச்சுப் பேசிவைப்போம், ஏழையின் உள்ளக்குமுறல் குறையட்டும் என்ற எண்ணத்தில் பேசுகிறார். தம்மீது வீசப்பட்டு வந்த பகைச் சொற்களும், எறியப்பட்ட எதிர்ப்புகளும் மாறி, மதிப்புமிக்க ஒரு பட்டப் பெயர் — தர்மகர்த்தா — என்ற பெயரல்லவா கிடைக்கிறது, இந்தப் பெருமையை நமக்கு அளித்தவர் காமராஜர் அல்லவா? அவரல்லவா நமக்கு உண்மை நண்பர்! அவர் வாழ்க! அவர் கூறிடும் தர்மகர்த்தா தத்துவம் வாழ்க!—என்று வாழ்த்துகின்றனர்.‘சோடசோபசாரம் செய்யவும் சொர்ணாபிஷேகம் செய்யவும் முனைகின்றனர்! திருடர்களுக்கு நடுநிசி உழைப்பாளர் என்று சிறப்புப் பெயர் கொடுத்திடுவார் உண்டா? இல்லையல்லவா? அப்படி யாரேனும் துணிந்து கூறிடின், கூறுபவர் பெருந்தலைவர் வரிசையினராகவுமிருப்பின், <b>‘நடுநிசி உழைப்பாளிகள்’</b> திருவிழா அல்லவா கொண்டாடுவர்! {{left_margin|3em|காமராஜர் நடத்தும் ஜனநாயக சோஷியலிச விழாவில், சீமான்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்வதன் காரணம், தமக்கு மதிப்புமிக்க ஒரு பட்டத்தை– தருமகர்த்தா என்ற பட்டத்தைச் சூட்டினாரே, நம்மை எதிர்த்திடுவோரை அழைத்து, ஏமாளிகளே! இவர்களை யாரென்று எண்ணிக்கொண்டு எரிச்சல் கொள்ளுகிறீர்கள்? இவர்கள் தர்மகர்த்தாக்கள்! என்று கூறுவதன் மூலம், நமக்கு ஒரு எதிர்காலத்தை உறுதிப்படுத்தியிருக்கிறாரே! இவருக்கல்லவா விழா எடுக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.}} ஆனால், அவர்களும் உண்மையைக் கண்டறிய முனையவில்லை. இந்த ‘தர்மகர்த்தா’ தத்துவம் சாஸ்திரமாக, காப்பியமாக, கதையாக, கவிதையாக, எப்படிப்பட்ட மாமேதைகளால் முன்பு தரப்பட்டது! எவ்வளவு சடுதியில், எளிதாக ஏழை மக்கள் அதனை மறந்துவிட்டார்கள்! முன்பு தத்துவம் பேசியவர்கள், இன்றைய காமராஜரைக் காட்டிலும், பெரியவர்களல்லவா? அவர்களில் அருளாளர்கள் இருந்தனர்; கவிவாணர்கள் இருந்தனர்; புலமைமிக்கோர் இருந்தனர்; புவி எங்கும் உள்ள நிலைமைகளைத் தெரிந்த அறிவாளர்கள் இருந்தனரே! அவர்கள் அன்று பேசினர் தருமகர்த்தா முறை பற்றி பேசி? கேட்டனர், தலை அசைத்தனர்! ஆனால், மீண்டும் மீண்டுமல்லவா அறம் அழிந்துபட்டது, செல்வச் செருக்கு கொக்கரித்துக் கூத்தாடிற்று.<noinclude> <references/></noinclude> ommztsz564ermp3yvuam43vgg0js7v1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/211 250 639163 1925611 1922020 2026-04-20T06:18:36Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||187}}{{rule}}</noinclude> அகவலாகவும் வெண்பாவாகவும் அறுசீராகவும் பிறவகையினதாகவும், உரைநடையாகவும் உரையாடலாகவும், பேரறிவாளர்கள் எடுத்துக் கூறிவந்த தர்மகர்த்தா முறையினை — மிக எளிதான முறையில், {{left_margin|3em|அறம் செய விரும்பு}} என்று நம் ஆன்றோர் சொல்லிவைக்கவில்லையா! அதனைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பதால் விளையப் போகும் பலன் என்ன? செல்வவான்கள் தர்மகர்த்தாக்கள் என்ற பேச்சு, சமூகப் புரட்சி ஏற்படுத்தத் துணிவற்றவர்கள் நடத்திக் காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு! செல்வவான்களை தர்மகர்த்தாக்கள் என்று நாடாளும் பெரியவர்கள் கூறுவதைப் பயன்படுத்திக் கொண்டு முதலாளிகள் தங்கள் ஆதிக்கத்தைக் கெட்டிப்படுத்திக் கொள்வர். {{left_margin|3em|இன்று காங்கிரசின் துணைகொண்டு முதலாளிகள் அந்தக் காரியத்தைத்தான் நடத்திக் கொண்டுள்ளனர்.}} பணம் சிலரிடம் குவிந்திருக்கும்போது அதனை தர்மகர்த்தா முறை என்று பேசி, பூசி மெழுகுகிறார்கள். ஏராளமான நிலபுலன்களைத் தமதாக்கிக் கொண்டிருந்த ஜெமீன்தாரர்களை ஒழித்தபோது இந்தத் தர்மகர்த்தர் தத்துவம் எங்கே போய்விட்டிருந்தது? ஐநூற்றுச் சொச்சம் சமஸ்தானாதிபதிகளின் பட்டத்தைத் தட்டிவிட்டபோது, இந்தத் தர்மகர்த்தா தத்துவம் ஏன் பதுங்கிக் கொண்டது? {{left_margin|3em|செல்வவான்கள், தர்மவான்கள் என்றால் ராஜாக்களும் ஜெமீன்தாரர்களும், கடவுளின் பிரதிபிம்பங்கள் அல்லவா!! ஒப்புக் கொள்வார்களா?}} பணக்காரர்கள் ஏழைகளுக்காகவே சொத்தைப் பயன்படுத்தும் தர்மகர்த்தாக்களாக உள்ளனர் என்ற தத்துவம், அரசன் ஆண்டவனின் பிரதிநிதி, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்ற தத்துவத்தோடு சேர்ந்து பிறந்ததாயிற்றே; அரசன் ஆண்டவனின் பிரதிநிதி என்ற தத்துவம் தகர்க்கப்பட்டுப் போனது போலவே, சீமான்கள் தர்மகர்த்தாக்கள் என்ற தத்துவமும் தூளாகிப் போகாமல் தப்பித்துக் கொள்ள முடியுமா? {{left_margin|3em|ஆனால் பலிக்கிறவரையில் பார்க்கலாம் என்ற முறையில் காமராஜர் இந்தத் தருமகர்த்தா முறை பற்றிப் பேசிவரலாம் என்று இருக்கிறார். இந்தத் தத்துவத்தில் முன்பு மக்களுக்கு இருந்துவந்த மயக்கம் இன்று பெருமளவு போய்விட்டிருக்கிறது. ஆகவே அவர்கள், காமராஜர், தருமகர்த்தா தத்துவம் பற்றிப் பேசிடக் கேட்டுக் கேலிப் புன்னகை செய்கின்றனர்.}}<noinclude> <references/></noinclude> mpxpsgkzkzf6z9px5nnqhvbghez187t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/214 250 639166 1925505 1923245 2026-04-19T17:40:56Z KarunyaRanjith 10815 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது 1925505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /></noinclude> காஞ்சிக் கடிதம் : 276 ஒளி படைத்த கண்ணினாய்! * உயர இருப்பதெல்லாம் உயர்ந்ததாகி விடுமா! * ஆற்றல் உணர்ந்தோ போற்றுகின்றனர்? * புகழ்பவர் புரிந்தவர்! புகழாதவர் புத்தி கெட்டவராம்! * ஆதாயச் சுவை புகழ் பாடச் செய்கிறது! * கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை! ஏதாகிலும் பெறுவார்! * பெறுபவன் இழக்கிறான்! * செயல்-முதல்! உழைப்பு-முறை! புகழ்-விளைவு! * அன்பு காட்டுதல் வேறு! துதி பாடுதல் வேறு! * சேற்றிலே செந்தாமரை இருந்திடினும் சேறு சந்தனமாகி விடுமா? * பேச்சிலும் எழுத்திலும் ஒளி மிகத் தேவை! தம் ஐயாவோட குழந்தை! எஜமானரோட மகன்! சின்ன எஜமானரு. சின்ன ஐயா! எஜமானரு! புரிகிறதல்லவா, ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற பேச்சு என்பது- சீமான் இருக்கும்போது அவருடைய மகனை, “ஐயாவோட குழந்தை" என்று அன்புடன் கூறுவார். அந்தக் கட்டத்தில் அன்பு காட்டினால் போதும் என்று தோன்றுகிறது. சீமானுடைய பிள்ளை, வாலிபப் பருவமடைந்ததும் அடங்கிக் கிடப்போருக்கும், முன்புபோல அன்புடன் குழந்தை என்று கூறிடக் கூச்சமாக இருக்கிறது; எஜமானரோட மகன்! என்று கூறுகின்றனர். அன்பு போதுமானது அல்ல என்று ஓர் உணர்வு: மதிப்புக் காட்ட வேண்டும் என்ற ஒரு நினைப்பு. குழந்தை அல்ல, வாலிபன்; அதாவது சீமானுடைய பணப்பெட்டிக்கு அருகே சென்று கொண்டிருக்கும் நிலை! ஆகவே மதிப்பளிக்க வேண்டி இருக்கிறது. ஆண்டுகள் சில செல்கின்றன! சீமான் பழைய முடுக்கை இப்போது கஷ்டப்பட்டுத்தான் மேற்கொள்ள முடிகிறது. கர்ஜனையில் கடுமை<noinclude></noinclude> rkcnl92mg61ty1pk0datsejrks8deq4 1925507 1925505 2026-04-19T18:01:39Z KarunyaRanjith 10815 மெய்ப்புப்பார்க்கப்பட்டது. 1925507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /></noinclude> காஞ்சிக் கடிதம் : 276 ஒளி படைத்த கண்ணினாய்! * உயர இருப்பதெல்லாம் உயர்ந்ததாகி விடுமா! * ஆற்றல் உணர்ந்தோ போற்றுகின்றனர்? * புகழ்பவர் புரிந்தவர்! புகழாதவர் புத்தி கெட்டவராம்! * ஆதாயச் சுவை புகழ் பாடச் செய்கிறது! * கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை! ஏதாகிலும் பெறுவார்! * பெறுபவன் இழக்கிறான்! * செயல்-முதல்! உழைப்பு-முறை! புகழ்-விளைவு! * அன்பு காட்டுதல் வேறு! துதி பாடுதல் வேறு! * சேற்றிலே செந்தாமரை இருந்திடினும் சேறு சந்தனமாகி விடுமா? * பேச்சிலும் எழுத்திலும் ஒளி மிகத் தேவை! தம்பி, ஐயாவோட குழந்தை! எஜமானரோட மகன்! சின்ன எஜமானரு. சின்ன ஐயா! எஜமானரு! புரிகிறதல்லவா, ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற பேச்சு என்பது- சீமான் இருக்கும்போது அவருடைய மகனை, “ஐயாவோட குழந்தை" என்று அன்புடன் கூறுவார். அந்தக் கட்டத்தில் அன்பு காட்டினால் போதும் என்று தோன்றுகிறது. சீமானுடைய பிள்ளை, வாலிபப் பருவமடைந்ததும் அடங்கிக் கிடப்போருக்கும், முன்புபோல அன்புடன் குழந்தை என்று கூறிடக் கூச்சமாக இருக்கிறது; எஜமானரோட மகன்! என்று கூறுகின்றனர். அன்பு போதுமானது அல்ல என்று ஓர் உணர்வு: மதிப்புக் காட்ட வேண்டும் என்ற ஒரு நினைப்பு. குழந்தை அல்ல, வாலிபன்; அதாவது சீமானுடைய பணப்பெட்டிக்கு அருகே சென்று கொண்டிருக்கும் நிலை! ஆகவே மதிப்பளிக்க வேண்டி இருக்கிறது. ஆண்டுகள் சில செல்கின்றன! சீமான் பழைய முடுக்கை இப்போது கஷ்டப்பட்டுத்தான் மேற்கொள்ள முடிகிறது. கர்ஜனையில் கடுமை<noinclude></noinclude> 119hfrfncugkv6d8rvozzb5oq42hdwz 1925673 1925507 2026-04-20T08:12:23Z Neyakkoo 7836 திருத்தம்தி 1925673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /></noinclude> காஞ்சிக் கடிதம் : 276 ஒளி படைத்த கண்ணினாய்! * உயர இருப்பதெல்லாம் உயர்ந்ததாகி விடுமா! * ஆற்றல் உணர்ந்தோ போற்றுகின்றனர்? * புகழ்பவர் புரிந்தவர்! புகழாதவர் புத்தி கெட்டவராம்! * ஆதாயச் சுவை புகழ் பாடச் செய்கிறது! * கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை! ஏதாகிலும் பெறுவார்! * பெறுபவன் இழக்கிறான்! * செயல்-முதல்! உழைப்பு-முறை! புகழ்-விளைவு! * அன்பு காட்டுதல் வேறு! துதி பாடுதல் வேறு! * சேற்றிலே செந்தாமரை இருந்திடினும் சேறு சந்தனமாகி விடுமா? * பேச்சிலும் எழுத்திலும் ஒளி மிகத் தேவை! தம்பி, ஐயாவோட குழந்தை! எஜமானரோட மகன்! சின்ன எஜமானரு. சின்ன ஐயா! எஜமானரு! புரிகிறதல்லவா, ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற பேச்சு என்பது- சீமான் இருக்கும்போது அவருடைய மகனை, “ஐயாவோட குழந்தை" என்று அன்புடன் கூறுவார். அந்தக் கட்டத்தில் அன்பு காட்டினால் போதும் என்று தோன்றுகிறது. சீமானுடைய பிள்ளை, வாலிபப் பருவமடைந்ததும் அடங்கிக் கிடப்போருக்கும், முன்புபோல அன்புடன் குழந்தை என்று கூறிடக் கூச்சமாக இருக்கிறது; எஜமானரோட மகன்! என்று கூறுகின்றனர். அன்பு போதுமானது அல்ல என்று ஓர் உணர்வு: மதிப்புக் காட்ட வேண்டும் என்ற ஒரு நினைப்பு. குழந்தை அல்ல, வாலிபன்; அதாவது சீமானுடைய பணப்பெட்டிக்கு அருகே சென்று கொண்டிருக்கும் நிலை! ஆகவே மதிப்பளிக்க வேண்டி இருக்கிறது. ஆண்டுகள் சில செல்கின்றன! சீமான் பழைய முடுக்கை இப்போது கஷ்டப்பட்டுத்தான் மேற்கொள்ள முடிகிறது. கர்ஜனையில் கடுமை<noinclude></noinclude> 8lhcnv3g9ose53pho4vryncuj0klge8 1925674 1925673 2026-04-20T08:13:48Z Neyakkoo 7836 1925674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /></noinclude> காஞ்சிக் கடிதம் : 276 ஒளி படைத்த கண்ணினாய்! * உயர இருப்பதெல்லாம் உயர்ந்ததாகி விடுமா! * ஆற்றல் உணர்ந்தோ போற்றுகின்றனர்? * புகழ்பவர் புரிந்தவர்! புகழாதவர் புத்தி கெட்டவராம்! * ஆதாயச் சுவை புகழ் பாடச் செய்கிறது! * கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை! ஏதாகிலும் பெறுவார்! * பெறுபவன் இழக்கிறான்! * செயல்-முதல்! உழைப்பு-முறை! புகழ்-விளைவு! * அன்பு காட்டுதல் வேறு! துதி பாடுதல் வேறு! * சேற்றிலே செந்தாமரை இருந்திடினும் சேறு சந்தனமாகி விடுமா? * பேச்சிலும் எழுத்திலும் ஒளி மிகத் தேவை! தம்பி, {{left_margin|3em|<poem><b>ஐயாவோட குழந்தை! எஜமானரோட மகன்! சின்ன எஜமானரு. சின்ன ஐயா! எஜமானரு!</b></poem>}} புரிகிறதல்லவா, ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற பேச்சு என்பது- சீமான் இருக்கும்போது அவருடைய மகனை, “ஐயாவோட குழந்தை" என்று அன்புடன் கூறுவார். அந்தக் கட்டத்தில் அன்பு காட்டினால் போதும் என்று தோன்றுகிறது. சீமானுடைய பிள்ளை, வாலிபப் பருவமடைந்ததும் அடங்கிக் கிடப்போருக்கும், முன்புபோல அன்புடன் குழந்தை என்று கூறிடக் கூச்சமாக இருக்கிறது; எஜமானரோட மகன்! என்று கூறுகின்றனர். அன்பு போதுமானது அல்ல என்று ஓர் உணர்வு: மதிப்புக் காட்ட வேண்டும் என்ற ஒரு நினைப்பு. குழந்தை அல்ல, வாலிபன்; அதாவது சீமானுடைய பணப்பெட்டிக்கு அருகே சென்று கொண்டிருக்கும் நிலை! ஆகவே மதிப்பளிக்க வேண்டி இருக்கிறது. ஆண்டுகள் சில செல்கின்றன! சீமான் பழைய முடுக்கை இப்போது கஷ்டப்பட்டுத்தான் மேற்கொள்ள முடிகிறது. கர்ஜனையில் கடுமை<noinclude></noinclude> kozhfyepmymbhk2x2wlmwnjqq09ux4r 1925675 1925674 2026-04-20T08:15:13Z Neyakkoo 7836 1925675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /></noinclude> காஞ்சிக் கடிதம் : 276 ஒளி படைத்த கண்ணினாய்! * உயர இருப்பதெல்லாம் உயர்ந்ததாகி விடுமா! * ஆற்றல் உணர்ந்தோ போற்றுகின்றனர்? * புகழ்பவர் புரிந்தவர்! புகழாதவர் புத்தி கெட்டவராம்! * ஆதாயச் சுவை புகழ் பாடச் செய்கிறது! * கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை! ஏதாகிலும் பெறுவார்! * பெறுபவன் இழக்கிறான்! * செயல்-முதல்! உழைப்பு-முறை! புகழ்-விளைவு! * அன்பு காட்டுதல் வேறு! துதி பாடுதல் வேறு! * சேற்றிலே செந்தாமரை இருந்திடினும் சேறு சந்தனமாகி விடுமா? * பேச்சிலும் எழுத்திலும் ஒளி மிகத் தேவை! தம்பி, {{left_margin|3em|<poem>ஐயாவோட குழந்தை! எஜமானரோட மகன்! சின்ன எஜமானரு. சின்ன ஐயா! எஜமானரு!</poem>}} புரிகிறதல்லவா, ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற பேச்சு என்பது- சீமான் இருக்கும்போது அவருடைய மகனை, “ஐயாவோட குழந்தை" என்று அன்புடன் கூறுவார். அந்தக் கட்டத்தில் அன்பு காட்டினால் போதும் என்று தோன்றுகிறது. சீமானுடைய பிள்ளை, வாலிபப் பருவமடைந்ததும் அடங்கிக் கிடப்போருக்கும், முன்புபோல அன்புடன் குழந்தை என்று கூறிடக் கூச்சமாக இருக்கிறது; எஜமானரோட மகன்! என்று கூறுகின்றனர். அன்பு போதுமானது அல்ல என்று ஓர் உணர்வு: மதிப்புக் காட்ட வேண்டும் என்ற ஒரு நினைப்பு. குழந்தை அல்ல, வாலிபன்; அதாவது சீமானுடைய பணப்பெட்டிக்கு அருகே சென்று கொண்டிருக்கும் நிலை! ஆகவே மதிப்பளிக்க வேண்டி இருக்கிறது. ஆண்டுகள் சில செல்கின்றன! சீமான் பழைய முடுக்கை இப்போது கஷ்டப்பட்டுத்தான் மேற்கொள்ள முடிகிறது. கர்ஜனையில் கடுமை<noinclude></noinclude> okh6paylgjm8h731onui8hav0c5w8zo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/215 250 639171 1925506 1922027 2026-04-19T17:58:19Z KarunyaRanjith 10815 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது 1925506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude> கலந்திட முடியவில்லை. மகனோ? விழியை உருட்டிக் காட்டுகிறான். விரைவில் ‘பட்டம்’ சூட்டிக்கொள்ள இருக்கிறான் என்றே தோன்றுகிறது. அப்போது, அன்பு – மதிப்பு – என்னும் உணர்ச்சி போதுமானது அல்ல என்று தோன்றுகிறது. அடக்க ஒடுக்கமாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது; சின்ன எஜமானர் என்று பயம் கலந்த குரலில் பேசத் தலைப்படுகின்றனர். பத்து நாளாக அவர் வெளியே உலாவச் செல்லவில்லை. பழரசத்தில் மருந்து கலந்து தருகிறார்களாம் களைப்பும் இளைப்பும் போக என்ற முறையில் சீமானைப் பற்றி ஊரார் பேசிக்கொள்ளும் நிலையின்போது, அவர் மகனைச் ‘சின்ன ஐயா’ என்று அழைக்கின்றனர் – ஐயா என்பதை அழுத்தி! ‘சின்ன’ என்ற அடைமொழி அதிக நாட்களுக்குத் தேவைப்படாது என்ற நினைப்புடன். சீமான் ‘சிவலோகப் பிராப்தி’ அடைந்துவிடுகிறார்; ஐயா! என்று மரியாதையும் அச்சமும் கலந்த முறையில் அழைக்கிறார்கள். ‘ஐயாவோட குழந்தை’ என்ற நிலையிலிருந்து ‘ஐயா’ ஆகிவிட்ட நிலை, சீமானுடைய மகன் வளர்ந்துவிட்டான் என்பதைத் தெளிவாகக் காட்டும் அளவுக்கு அவன் ஐயா வேலை பார்ப்பதற்குத் தேவையான தகுதியையும் திறமையையும் பெற்றுவிட்டான் என்பதைக் காட்டுவதில்லை. தகுதியும் திறமையும் பெற்றிருக்கக்கூடும், அல்லது மாளிகையும் மாநிதியும் போதும். வேறு தகுதியும் திறமையும் தேடிப் பெற்றிட வேண்டுமோ என்று இருந்துவிட்டிருக்கக் கூடும். மாளிகையும் மாநிதியும் பெற்றிருப்பதே ஒருவிதமான தகுதிதானே – உலகம் அப்படித்தானே எண்ணுகிறது. எஜமானர்! ஐயா! பெரியவர்! — என்ற இத்தகைய பட்டம் பல சூட்டப்பட்டவர் – சீமான் மகன் – இருபது வயது நிரம்பியவனாகவும், ‘எஜமானர்’ என்று பணிவுடன் அழைப்பவர் அறுபது வயதான முதியவராகவும் இருக்கக் கூடும்! வயது இருபது என்றால் என்ன! இரும்புப்பெட்டி இருக்கிறதல்லவா? முதியவர் அந்த வாலிபனையா எஜமானரே! என்று அழைக்கிறார்; இரும்புப் பெட்டியையும் அதில் உள்ள எண்பது இலட்சத்தையும், கரும்புத் தோட்டத்தையும் அது காட்டும் கணக்கினையும்!! தம்பி! இது ஏழ்மையின் விளைவு. ஆனால், அரசியல் உலகிலே, ஒருவர் திடீரென ‘எஜமானர்’ ஆகிவிடும்போதும், இதுபோல ‘வளையும் நெறியும்’ கூட்டமொன்று கிளம்பிவிடக் காண்கின்றோம்.<noinclude> <references/></noinclude> aptniey2b0itqhvy3r5owhw2zpja3zg 1925715 1925506 2026-04-20T10:36:08Z KarunyaRanjith 10815 1925715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude> கலந்திட முடியவில்லை. மகனோ? விழியை உருட்டிக் காட்டுகிறான். விரைவில் ‘பட்டம்’ சூட்டிக்கொள்ள இருக்கிறான் என்றே தோன்றுகிறது. அப்போது, அன்பு – மதிப்பு – என்னும் உணர்ச்சி போதுமானது அல்ல என்று தோன்றுகிறது. அடக்க ஒடுக்கமாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது; சின்ன எஜமானர் என்று பயம் கலந்த குரலில் பேசத் தலைப்படுகின்றனர். பத்து நாளாக அவர் வெளியே உலாவச் செல்லவில்லை. பழரசத்தில் மருந்து கலந்து தருகிறார்களாம் களைப்பும் இளைப்பும் போக என்ற முறையில் சீமானைப் பற்றி ஊரார் பேசிக்கொள்ளும் நிலையின்போது, அவர் மகனைச் ‘சின்ன ஐயா’ என்று அழைக்கின்றனர் – ஐயா என்பதை அழுத்தி! ‘சின்ன’ என்ற அடைமொழி அதிக நாட்களுக்குத் தேவைப்படாது என்ற நினைப்புடன். சீமான் ‘சிவலோகப் பிராப்தி’ அடைந்துவிடுகிறார்; ஐயா! என்று மரியாதையும் அச்சமும் கலந்த முறையில் அழைக்கிறார்கள். ‘ஐயாவோட குழந்தை’ என்ற நிலையிலிருந்து ‘ஐயா’ ஆகிவிட்ட நிலை, சீமானுடைய மகன் வளர்ந்துவிட்டான் என்பதைத் தெளிவாகக் காட்டும் அளவுக்கு அவன் ஐயா வேலை பார்ப்பதற்குத் தேவையான தகுதியையும் திறமையையும் பெற்றுவிட்டான் என்பதைக் காட்டுவதில்லை. தகுதியும் திறமையும் பெற்றிருக்கக்கூடும், அல்லது மாளிகையும் மாநிதியும் போதும். வேறு தகுதியும் திறமையும் தேடிப் பெற்றிட வேண்டுமோ என்று இருந்துவிட்டிருக்கக் கூடும். மாளிகையும் மாநிதியும் பெற்றிருப்பதே ஒருவிதமான தகுதிதானே – உலகம் அப்படித்தானே எண்ணுகிறது. எஜமானர்! ஐயா! பெரியவர்! — என்ற இத்தகைய பட்டம் பல சூட்டப்பட்டவர் – சீமான் மகன் – இருபது வயது நிரம்பியவனாகவும், ‘எஜமானர்’ என்று பணிவுடன் அழைப்பவர் அறுபது வயதான முதியவராகவும் இருக்கக் கூடும்! வயது இருபது என்றால் என்ன! இரும்புப்பெட்டி இருக்கிறதல்லவா? முதியவர் அந்த வாலிபனையா எஜமானரே! என்று அழைக்கிறார்; இரும்புப் பெட்டியையும் அதில் உள்ள எண்பது இலட்சத்தையும், கரும்புத் தோட்டத்தையும் அது காட்டும் கணக்கினையும்!! தம்பி! இது ஏழ்மையின் விளைவு. ஆனால், அரசியல் உலகிலே, ஒருவர் திடீரென ‘எஜமானர்’ ஆகிவிடும்போதும், இதுபோல ‘வளையும் நெறியும்’ கூட்டமொன்று கிளம்பிவிடக் காண்கின்றோம்.<noinclude> <references/></noinclude> loidbtefgff49omow3jz1lawvuq2ax1 1925716 1925715 2026-04-20T10:36:32Z KarunyaRanjith 10815 1925716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude> கலந்திட முடியவில்லை. மகனோ? விழியை உருட்டிக் காட்டுகிறான். விரைவில் ‘பட்டம்’ சூட்டிக்கொள்ள இருக்கிறான் என்றே தோன்றுகிறது. அப்போது, அன்பு – மதிப்பு – என்னும் உணர்ச்சி போதுமானது அல்ல என்று தோன்றுகிறது. அடக்க ஒடுக்கமாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது; சின்ன எஜமானர் என்று பயம் கலந்த குரலில் பேசத் தலைப்படுகின்றனர். பத்து நாளாக அவர் வெளியே உலாவச் செல்லவில்லை. பழரசத்தில் மருந்து கலந்து தருகிறார்களாம் களைப்பும் இளைப்பும் போக என்ற முறையில் சீமானைப் பற்றி ஊரார் பேசிக்கொள்ளும் நிலையின்போது, அவர் மகனைச் ‘சின்ன ஐயா’ என்று அழைக்கின்றனர் – ஐயா என்பதை அழுத்தி! ‘சின்ன’ என்ற அடைமொழி அதிக நாட்களுக்குத் தேவைப்படாது என்ற நினைப்புடன். சீமான் ‘சிவலோகப் பிராப்தி’ அடைந்துவிடுகிறார்; ஐயா! என்று மரியாதையும் அச்சமும் கலந்த முறையில் அழைக்கிறார்கள். ‘ஐயாவோட குழந்தை’ என்ற நிலையிலிருந்து ‘ஐயா’ ஆகிவிட்ட நிலை, சீமானுடைய மகன் வளர்ந்துவிட்டான் என்பதைத் தெளிவாகக் காட்டும் அளவுக்கு அவன் ஐயா வேலை பார்ப்பதற்குத் தேவையான தகுதியையும் திறமையையும் பெற்றுவிட்டான் என்பதைக் காட்டுவதில்லை. தகுதியும் திறமையும் பெற்றிருக்கக்கூடும், அல்லது மாளிகையும் மாநிதியும் போதும். வேறு தகுதியும் திறமையும் தேடிப் பெற்றிட வேண்டுமோ என்று இருந்துவிட்டிருக்கக் கூடும். மாளிகையும் மாநிதியும் பெற்றிருப்பதே ஒருவிதமான தகுதிதானே – உலகம் அப்படித்தானே எண்ணுகிறது. எஜமானர்! ஐயா! பெரியவர்! — என்ற இத்தகைய பட்டம் பல சூட்டப்பட்டவர் – சீமான் மகன் – இருபது வயது நிரம்பியவனாகவும், ‘எஜமானர்’ என்று பணிவுடன் அழைப்பவர் அறுபது வயதான முதியவராகவும் இருக்கக் கூடும்! வயது இருபது என்றால் என்ன! இரும்புப்பெட்டி இருக்கிறதல்லவா? முதியவர் அந்த வாலிபனையா எஜமானரே! என்று அழைக்கிறார்; இரும்புப் பெட்டியையும் அதில் உள்ள எண்பது இலட்சத்தையும், கரும்புத் தோட்டத்தையும் அது காட்டும் கணக்கினையும்!! தம்பி! இது ஏழ்மையின் விளைவு. ஆனால், அரசியல் உலகிலே, ஒருவர் திடீரென ‘எஜமானர்’ ஆகிவிடும்போதும், இதுபோல ‘வளையும் நெறியும்’ கூட்டமொன்று கிளம்பிவிடக் காண்கின்றோம்.<noinclude> <references/></noinclude> tn1t8k5ejddlaq9cz09w2j0a5iq6x8r 1925717 1925716 2026-04-20T10:37:09Z KarunyaRanjith 10815 1925717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude> கலந்திட முடியவில்லை. மகனோ? விழியை உருட்டிக் காட்டுகிறான். விரைவில் ‘பட்டம்’ சூட்டிக்கொள்ள இருக்கிறான் என்றே தோன்றுகிறது. அப்போது, அன்பு – மதிப்பு – என்னும் உணர்ச்சி போதுமானது அல்ல என்று தோன்றுகிறது. அடக்க ஒடுக்கமாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது; சின்ன எஜமானர் என்று பயம் கலந்த குரலில் பேசத் தலைப்படுகின்றனர். பத்து நாளாக அவர் வெளியே உலாவச் செல்லவில்லை. பழரசத்தில் மருந்து கலந்து தருகிறார்களாம் களைப்பும் இளைப்பும் போக என்ற முறையில் சீமானைப் பற்றி ஊரார் பேசிக்கொள்ளும் நிலையின்போது, அவர் மகனைச் ‘சின்ன ஐயா’ என்று அழைக்கின்றனர் – ஐயா என்பதை அழுத்தி! ‘சின்ன’ என்ற அடைமொழி அதிக நாட்களுக்குத் தேவைப்படாது என்ற நினைப்புடன். சீமான் ‘சிவலோகப் பிராப்தி’ அடைந்துவிடுகிறார்; ஐயா! என்று மரியாதையும் அச்சமும் கலந்த முறையில் அழைக்கிறார்கள். ‘ஐயாவோட குழந்தை’ என்ற நிலையிலிருந்து ‘ஐயா’ ஆகிவிட்ட நிலை, சீமானுடைய மகன் வளர்ந்துவிட்டான் என்பதைத் தெளிவாகக் காட்டும் அளவுக்கு அவன் ஐயா வேலை பார்ப்பதற்குத் தேவையான தகுதியையும் திறமையையும் பெற்றுவிட்டான் என்பதைக் காட்டுவதில்லை. தகுதியும் திறமையும் பெற்றிருக்கக்கூடும், அல்லது மாளிகையும் மாநிதியும் போதும். வேறு தகுதியும் திறமையும் தேடிப் பெற்றிட வேண்டுமோ என்று இருந்துவிட்டிருக்கக் கூடும். மாளிகையும் மாநிதியும் பெற்றிருப்பதே ஒருவிதமான தகுதிதானே – உலகம் அப்படித்தானே எண்ணுகிறது. எஜமானர்! ஐயா! பெரியவர்! — என்ற இத்தகைய பட்டம் பல சூட்டப்பட்டவர் – சீமான் மகன் – இருபது வயது நிரம்பியவனாகவும், ‘எஜமானர்’ என்று பணிவுடன் அழைப்பவர் அறுபது வயதான முதியவராகவும் இருக்கக் கூடும்! வயது இருபது என்றால் என்ன! இரும்புப்பெட்டி இருக்கிறதல்லவா? முதியவர் அந்த வாலிபனையா எஜமானரே! என்று அழைக்கிறார்; இரும்புப் பெட்டியையும் அதில் உள்ள எண்பது இலட்சத்தையும், கரும்புத் தோட்டத்தையும் அது காட்டும் கணக்கினையும்!! தம்பி! இது ஏழ்மையின் விளைவு. ஆனால், அரசியல் உலகிலே, ஒருவர் திடீரென ‘எஜமானர்’ ஆகிவிடும்போதும், இதுபோல ‘வளையும் நெறியும்’ கூட்டமொன்று கிளம்பிவிடக் காண்கின்றோம்.<noinclude> <references/></noinclude> 8vonumi6rk8r9u1edhpxuwaajb945t0 1925718 1925717 2026-04-20T10:37:43Z KarunyaRanjith 10815 1925718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude> கலந்திட முடியவில்லை. மகனோ? விழியை உருட்டிக் காட்டுகிறான். விரைவில் ‘பட்டம்’ சூட்டிக்கொள்ள இருக்கிறான் என்றே தோன்றுகிறது. அப்போது, அன்பு – மதிப்பு – என்னும் உணர்ச்சி போதுமானது அல்ல என்று தோன்றுகிறது. அடக்க ஒடுக்கமாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது; சின்ன எஜமானர் என்று பயம் கலந்த குரலில் பேசத் தலைப்படுகின்றனர். பத்து நாளாக அவர் வெளியே உலாவச் செல்லவில்லை. பழரசத்தில் மருந்து கலந்து தருகிறார்களாம் களைப்பும் இளைப்பும் போக என்ற முறையில் சீமானைப் பற்றி ஊரார் பேசிக்கொள்ளும் நிலையின்போது, அவர் மகனைச் ‘சின்ன ஐயா’ என்று அழைக்கின்றனர் – ஐயா என்பதை அழுத்தி! ‘சின்ன’ என்ற அடைமொழி அதிக நாட்களுக்குத் தேவைப்படாது என்ற நினைப்புடன். சீமான் ‘சிவலோகப் பிராப்தி’ அடைந்துவிடுகிறார்; ஐயா! என்று மரியாதையும் அச்சமும் கலந்த முறையில் அழைக்கிறார்கள். ‘ஐயாவோட குழந்தை’ என்ற நிலையிலிருந்து ‘ஐயா’ ஆகிவிட்ட நிலை, சீமானுடைய மகன் வளர்ந்துவிட்டான் என்பதைத் தெளிவாகக் காட்டும் அளவுக்கு அவன் ஐயா வேலை பார்ப்பதற்குத் தேவையான தகுதியையும் திறமையையும் பெற்றுவிட்டான் என்பதைக் காட்டுவதில்லை. தகுதியும் திறமையும் பெற்றிருக்கக்கூடும், அல்லது மாளிகையும் மாநிதியும் போதும். வேறு தகுதியும் திறமையும் தேடிப் பெற்றிட வேண்டுமோ என்று இருந்துவிட்டிருக்கக் கூடும். மாளிகையும் மாநிதியும் பெற்றிருப்பதே ஒருவிதமான தகுதிதானே – உலகம் அப்படித்தானே எண்ணுகிறது. எஜமானர்! ஐயா! பெரியவர்! — என்ற இத்தகைய பட்டம் பல சூட்டப்பட்டவர் – சீமான் மகன் – இருபது வயது நிரம்பியவனாகவும், ‘எஜமானர்’ என்று பணிவுடன் அழைப்பவர் அறுபது வயதான முதியவராகவும் இருக்கக் கூடும்! வயது இருபது என்றால் என்ன! இரும்புப்பெட்டி இருக்கிறதல்லவா? முதியவர் அந்த வாலிபனையா எஜமானரே! என்று அழைக்கிறார்; இரும்புப் பெட்டியையும் அதில் உள்ள எண்பது இலட்சத்தையும், கரும்புத் தோட்டத்தையும் அது காட்டும் கணக்கினையும்!! தம்பி! இது ஏழ்மையின் விளைவு. ஆனால், அரசியல் உலகிலே, ஒருவர் திடீரென ‘எஜமானர்’ ஆகிவிடும்போதும், இதுபோல ‘வளையும் நெறியும்’ கூட்டமொன்று கிளம்பிவிடக் காண்கின்றோம்.<noinclude> <references/></noinclude> 7fffi32kzlbu5lnkaxb7o4ipwrm1bvz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/216 250 639172 1925594 1922029 2026-04-20T06:00:09Z KarunyaRanjith 10815 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது. 1925594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|192||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> உண்மையான அன்பு காரணமாக, எதையும் இழந்திட, எத்தகைய இன்னலையும் ஏற்றிடத் தயாராக உள்ள தூயவர்களைத் தொண்டர்களாகப் பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றிடும் தலைவர்கள் உளர். {{left_margin|3em|அந்தத் தலைவர்களை விடத் தூய்மை மிக்க அந்தத் தொண்டர்களே, பொதுவாழ்க்கைத் துறைக்கு உயிரூட்டம் தருபவர்.}} நான், தம்பி! அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற நற்குணம் கொண்ட தூயவர்களைப்பற்றி அல்ல கூறுவது. சீமானான உடன் அவனை ‘எஜமானர்’ என்று கொண்டாடிடுவோர் போல, ஒருவர் அரசியலில் பெரிய பதவியில் இடம்பெற்றவுடன் அவர் முன்நின்று அவர் நாமாவளி பாடுகிறார்களே, அவர்களைக் குறிப்பிடுகிறேன்; துதி பாடகர்களை, {{left_margin|3em|துதி பாடகர்கள் வரம்வேண்டிப் புதிய தேவதை முன் வேண்டி நிற்பது மட்டுமின்றி மற்றவர்களிடம் மல்லுக்கு நிற்பதும் மற்ற எவரையும் மட்டமாகக் கருதி ஏசுவதும், தமது புதிய எஜமானருக்குத் திருப்தி தரும் என்ற நினைப்பில் இருப்பர். தன்னைப் பாராட்டிப் பேசுவதுடன், தனக்கு ‘ஆகாதவர்களை’க் கடுமையாக ஏசுசிறான் என்பதறிந்து அகமகிழ்ந்து, தட்டிக் கொடுக்கும் போக்கினர் உளர்.}} ‘தலைவர்’ மகிழ்ச்சி அடைகிறார், தட்டிக் கொடுக்கிறார் என்று தெரிந்தால், தூற்றும் பேர்வழிகளுக்குத் தெம்பும் துணிவும் பன்மடங்கு அதிகமாகிடத்தானே செய்யும். வகை பாடுவதிலே மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றனர்! அதிலேயே ஈடுபட்டு ஈடுபட்டு, பிறகு வேறு எதற்குமே தகுதியற்றவர்களாகி விடுகின்றனர். தம்முடன் உள்ளவர்கள் பிரச்சினைகளை விளக்க வேண்டும், வாதங்களைக் காட்டவேண்டும், புள்ளி விவரத்தைத் தரவேண்டும், பேச்சிலே பொருளும் பொறுப்பும் இருக்கவேண்டும், கண்ணியம் இருக்கவேண்டும் என்று விரும்பிடுவது, ஒரு தலைவரின் தரத்தை மட்டுமல்ல, பொதுத் தொண்டின் தரத்தையே உயர்த்தும். அதற்கு மாறாகத் தரம்கெட்ட பேச்சுக்குத் தலையாட்டுவதும் தட்டிக் கொடுப்பதும், தூபமிடுவதுமாக அந்தத் தலைவர் இருந்திடின், என்ன நேரிடும்? சாக்கடைச் சரக்கினை நாக்கிடைகொண்டு, உமிழ்வோரின் தொகை பெருகும், துணிவு வளரும். இன்று அதனைத்தான் காண்கிறோம். தேர்தல் நெருங்க நெருங்க, இழிமொழிகள் உமிழ்வோர் கும்பல் கும்பலாகக் கிளம்புவர். ஆந்தை அலுத்துவிட்டது கோட்டான் தோற்று<noinclude> <references/></noinclude> ij3rww1xe5eftbys6tdoqrkgjbyyugq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/217 250 639173 1925625 1922031 2026-04-20T06:26:52Z KarunyaRanjith 10815 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது. 1925625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||193}}{{rule}}</noinclude> விட்டது என்று கூறத்தக்க விதமான ஒலி கிளம்பிடும்; காது குடைச்சல் எடுத்திடும் விதமாக. கவலையோ, கோபமோ துளியும் ஏற்படவிடக் கூடாது. தரமற்றவர்கள், கீழ் நிலையில் உள்ளவர்கள் எதையோ பேசட்டும், எப்படியோ ஏசட்டும் அண்ணா! மேல் நிலையில் உள்ளவர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், தலைவர்கள் பீடத்தில் அமர்பவர்கள் இவர்களெல்லாமோ, இழித்தும் பழித்தும் பேசுவது, இட்டுக் கட்டிப் பேசுவது என்று கேட்கிறாய். கேள்வி, நியாயமானதுதான் தம்பி! ஆனால் சற்று அவசரப்பட்டுக் கேட்டுவிட்டாய். {{left_margin|3em|<poem>உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என்று யார் உனக்குச் சொன்னார்கள். தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று ஏன் கருதிக்கொள்கிறாய். பூமியின் கீழே, மிக மிகக் கீழே கிடைத்திடுகிறது வைரம்! உயரத்தில் அல்ல!! எனினும் வைரம் உயர்ந்த பொருள்!! கட்டுவீரியன் குட்டி! மரத்தின் உச்சாணிக் கிளையிலே போய் இருந்து கொண்டால், மிக உயர்ந்ததாகிவிடுமோ ஆகாதன்றோ!</poem>}} உயரம்—தாழ்ந்த இடம்—மலை—மடு—சரிவு, —பள்ளத்தாக்கு—சம நிலம்—இவை, இடங்களின் அமைப்பைக் குறிக்கின்றன; தரத்தை அல்ல. ஆகவே உயர்ந்த இடம்— மேலான பதவி—இங்கு உள்ளவர்களெல்லாமோ, இழிமொழி பேசுவது என்று கேட்டுக் கவலைப்பட்டுக் கொள்ளாதே. இடமும் இயல்பும் பொருந்தி இருந்துவிடுவது, இலட்சத்தில் ஒன்று இருக்கலாம். இடத்திற்குத் தக்க இயல்பு பெற்றிட முனைபவர், பதினாயிரத்தில் ஒருவராக இருக்கலாம். ஆனால், உயர இருப்பதனைத்தும் உயர்ந்தது என்று பொது இலக்கணமாக்கிடக் கூடாது. உயர்ந்த இடத்திலுமா இப்படிப்பட்ட இயல்பினர் உள்ளனர் என்று கூறினால், பொருளுண்டு. உயர்ந்த இடம் அடைந்தபிறகாவது, தமது இயல்பினைப் சிறந்ததாக்கிக் கொள்ளக்கூடாது, உயர்ந்த இயல்பினைப் பயின்று கொள்ளக்கூடாதா என்று கேட்கத் தோன்றும். அது நல்ல கேள்வி. ஆனால் நடைமுறை வேறுவிதமாக இருக்கிறதே, என்ன செய்ய!<noinclude> <references/></noinclude> jb5vuk86kvs18v3kkza2n3r5tv7c45m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/218 250 639174 1925640 1922041 2026-04-20T06:38:15Z KarunyaRanjith 10815 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது. 1925640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|194||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> வேறோர் விந்தை இதிலே என்ன என்றால், தம்பி! உயர்ந்த இடம் சென்ற காரணத்தாலேயே, ஒரு ‘துணிவு’ பிறந்துவிடுகிறது, எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம் என்று. நாமிருக்கும் இடமோ, மிக உயர்ந்த இடம், நம்மை யார் என்ன செய்யமுடியும், இந்த உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு எவரை என்ன கூறினாலும் அவர்கள் இடத்தின் உயர்வு கண்டு, அச்சம்கொண்டு, அடங்கிக் கிடப்பர்!— என்று எண்ணிக் கொள்ளும் போக்கு தடித்து விடுகிறது. பெரும்பாலான மக்கள், உயர் இடம் சென்றுள்ளவர்களைக் கண்டதும், அச்சம் கொள்வதும், அவர்களைப் போற்றிடத் துடிப்பதும், அவர்களின் பேச்சிலே புதுப்புதுப் பொருளும் பொலிவும் அருமையும் பெருமையும் இருப்பதாக எண்ணி மயக்கம் கொள்வதுமான நிலையில் உள்ளனர். உயர்ந்த இடம் செல்வதற்கு முன்பு அவரிடம் காண முடியாதிருந்த ‘அறிவாற்றலை’ உயர்ந்த இடம் சென்றதும், காண முற்படுகின்றனர்! இருப்பதாகவே கூறுகின்றனர்! நம்புகின்றனர்! காமராஜர், தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தபோது அவரைப் போற்றிப் புகழ்ந்திட, தமிழ் நாட்டிலேயே கற்றோரும் மற்றோரும், கனதனவான்களும் புலவர் பெருமக்களும், அதிகாரிகளும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வணிகப் பிரமுகர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும், துடிதுடித்துக் கொண்டா திரண்டு வந்தனர். {{left_margin|3em|<poem>ஒரு பரிதாபம் கலந்த பரிவுகாட்டினர். போற்றிப் புகழ்ந்திட முன்வந்தார் இல்லை.</poem>}} ஆனால், அந்த நிலையா இன்று? கற்றோரும் மற்றோரும் இன்று என்னென்னவோ அறிவாற்றலைக் காண்கின்றனர், காமராஜரிடம்! போற்றிடத் துடிக்கின்றனர்! படிக்காத மேதை என்றும் பாமரரின் பிரதிநிதி என்றும், மக்களை அறிந்தவர் என்றும், மனப்பாங்கு உணர்ந்தவர் என்றும். பிரச்சினைகளை விளக்குபவர் என்றும், சிக்கல்களைத் தீர்ப்பவர் என்றும், எழுச்சி ஊட்டுபவர் என்றும் செயலில் தீரர் என்றும், பாராட்டுகின்றனர். {{left_margin|3em|<poem>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அவர் இருந்த போது அவர்மீது பொழியப்படாத இந்தப் புகழ்மாரி, அவர் முதலமைச்சராகி அகில இந்தியத் தலைவராகி, அமைச்சர்களை உண்டாக்கித் தரும் ‘சிற்பி’ என்ற நிலைபெற்றவரானதும், வேகமாகப் பொழியப்படுகிறது காண்கிறோம். போற்றுவாரற்று அவர் இருந்த நாட்களுக்கும், போற்றாதார் இல்லை என்று கூறத்தக்க இந்த நாட்களுக்கும் இடையில், அவர்<noinclude> <references/></noinclude> 4ydkpsylm00n78y3f1dm4vb4hrzbu7x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/219 250 639175 1925651 1922042 2026-04-20T06:50:31Z KarunyaRanjith 10815 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது. 1925651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||195}}{{rule}}</noinclude> தமது அறிவாற்றலை மிகப் பெரும் அளவு வளர்த்துக் கொள்ள நேரமோ, வாய்ப்போ, முறையோ இருந்ததாக அவருடைய துதி பாடகர்கள் கூடக் கூறமாட்டார்கள்! ஆனால் அவர் உயர் இடம் சென்றார், போற்றிடுவோரின் குரல் உயர்ந்தது!</poem>}} இடத்தின் உயர்வுகண்டு அதிலே உள்ளவர்களைப் போற்றிப் புகழ்ந்திட முற்படும்போக்கு, இன்று நேற்றல்ல, நெடுங்காலத்துப் பழக்கம். புகழுரை கேட்டுக்கேட்டு, உயர் இடம் சென்றடைந்தவர்கள் முதலில் மகிழ்கின்றனர், பிறகு மயங்குகின்றனர், பிறகு மமதை அடைகின்றனர், இறுதியில், புகழுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அருங்குணங்கள் அனைத்தும் தமக்கு உண்மையிலேயே இருப்பதாக நம்பிக்கை கொண்டு விடுதின்றனர். அந்த நம்பிக்கை தடித்துவிட்டால், எவரேனும் தன்னிடம் ஒரு சிறு குறை இருப்பதனை மிகப் பணிவுடன் சுட்டிக் காட்டிடினும் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை; பொங்கி எழுவர்! யார்! அவன்! அவனுக்கு என்ன தெரியும்? என்ன தகுதி அவனுக்கு இருக்கிறது!— என்று முழக்கமெழுப்புவர். அந்த நிலைக்குச் சென்றுவிட்டவர்கள், பிறகு எதையும் யோசித்துப் பார்க்கவேண்டும் என்று கூட ஒப்புக்கொள்வதில்லை. எல்லாம் எளிதாக அவர்களுக்குத் தென்படும். எதையும் முடித்துவிட முடியும் என்ற துணிவு பிறந்திடும். அது இறுதியில் அவர்களை எங்குத் துரத்திடும் என்பதனை வரலாற்று ஏடுகளில் பல நிகழ்ச்சிகள் விளக்குகின்றன. {{left_margin|3em|<poem>அழாதே! ஏதோ ஆத்திரத்திலே அடித்து விட்டேன். பொறுத்துக்கொள்; புத்திகெட்டு அடித்துவிட்டேன். அடிக்காமல் விட்டுவிட முடியுமா? நீ செய்த வேலைக்கு இந்த அடி போதாது, நானாக இருக்கவே இந்த அளவோடு விட்டுவிட்டேன். வேறு ஒருவனாக இருப்பின் முதுகுத்தோலை உரித்து உப்புத் தடவி வெயிலிலே உருட்டிவிடுவார்கள் உன்னை, பயல்! தப்பித்துக்கொண்டாய், போ! போ!! காரணம் தெரிவிக்க வேண்டுமோ, பயலுக்கு! அடித்தேன்! ஏன் என்றா கேட்கிறாய்? ஏன் என்று கேட்டதற்கே மற்றோர் தடவை உன்னைக் கட்டி வைத்து அடிக்கவேண்டும்......</poem>}} தம்பி! செல்வச் செருக்கின் வளர்ச்சியிலே, ஒவ்வொரு கட்டத்தில் இவ்விதம் ஒவ்வொரு விதமாகச் ‘சீமான்’, பேசுகிறார் அல்லவா! உயர்ந்த பதவி பெறப் பெற, சிலருக்கு இந்தச் ‘சீமான்’ போக்கு தடித்துப் போய்விடுகிறது.<noinclude></noinclude> 5un1xhbnt0keuknu8qk066yfz0fl999 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/230 250 639193 1925513 1923244 2026-04-20T04:59:17Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /></noinclude> {{dhr|10em}} {{Right|<b>காஞ்சிக் கடிதம்: 277</b>}} {{center|{{X-larger|<b>நரி பரியான கதை!</b>}}}} {{rule}} {{left_margin|3em|<poem><b>★ அமெரிக்க ஆதிக்கத்தை ஆதி நாளிலேயே கண்டித்தவன் நான்! ★ ஆலும் வேலும் பிளக்கப் பயன்படும் கோடரி வாழைக்குப் பயன்படுவதில்லை! ★ கிளிப் பொந்துக்குள் கருநாகம் குடிபுகுந்துவிட்டது! ★ ‘கேட்டால் கேள்! விட்டால் விடு!’ என்பதல்ல நமது முறை! ★ ‘துக்க தினம்’ என்ற பெரியார் காங்கிரசுக்கு வேண்டியவர்! ★ ‘விழா நாள்’ என்ற நான் காங்கிரசால் கண்டிக்கப்படுபவன்! ★ வேடத்தைக் கண்டு ஏமாறலாகாது! ★ மரக்கட்டைகளாக இருத்தலல்ல மாந்தர்க்கழகு! ★ ஜனநாயக சோஷியலிசம் பாறை மீது தூவிய விதை ★ காமராஜர் முதலாளி நரிகளைச் சோஷியலிசப் பரிகளாக்கிக் காட்ட முனைகிறார்!</b></poem>}} தம்பி, காங்கிரஸ் நண்பரொருவர் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். ‘ஆமாம் அண்ணாத்துரை! என்ன நீங்கள் கூட அமெரிக்காவைத் தாக்க ஆரம்பித்து விட்டீர்களே?’ என்று கேட்டார். நான் சிறிதளவு விவரம் புரியாமலிருக்கக்கண்டு அவரே விளக்கமும் தந்தார்; “அதாவது அமெரிக்காவிடமிருந்து இந்தியா உதவி பெறுவதைக் கண்டிக்கிறீர்களே—கடன் சுமை ஏறுகிறது என்றும் இந்தியாவின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் வளர்ந்து விட்டது என்றும் பேசுகிறீர்களே? இது என்ன புதிய போக்காக இருக்கிறதே” என்று கேட்டார். நீண்ட நேரம் பேசவேண்டுமே என்பதனால், அவருடைய கேள்வி பற்றிக் கவலை காட்ட வேண்டாம் என்று எண்ணிக் கொண்டு, நான் சுருக்கமாக, “ஆமாம்! அமெரிக்காவின் ஆதிக்கம் வளர்ந்து விட்டிருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்; அது தீதானது என்றும் எண்ணுகிறேன்; அதனால்தான் கண்டிக்கிறேன். ஆனால், இது புதிய போக்கு அல்லவே!” என்று கூறினேன், விவாதம் வளராது என்ற நினைப்புடன். நண்பர் விடவில்லை; “இல்லை! இல்லை! இப்போதுதான் இந்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது; அதற்குக் காரணமும் எனக்குத் தெரியும்; எல்லாம் “சகவாசதோஷம்” என்றார்.<noinclude> <references/></noinclude> qsy91afwf1agctzymhj34ewq4w4ok3f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/231 250 639194 1925514 1922074 2026-04-20T05:07:52Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||207}}{{rule}}</noinclude> “அதென்னய்யா சகவாசதோஷம்! பெண்களுக்கு என்னவோ செவ்வாய்தோஷம் என்று ஜோதிடர்கள் கூறுவார்களே, அதுபோல இருக்கிறதே உமது பேச்சு!” என்று நான் கூற, நண்பர், “பெண்களிலே சிலருக்கு இருக்கும் செவ்வாய் தோஷத்தைக்கூடப் போக்கிவிடலாம், ஆனால் இந்த சகவாசதோஷம் இருக்கிறதே அது இலேசிலே போகாது” என்று சற்று சூடாகவே கூறிவிட்டு, சுற்றி வளைத்துப் பேசுவானேன், உங்கள் கழகம் கம்யூனிஸ்டு கட்சியுடன் ‘சரசமாட’ ஆரம்பித்ததால் ஏற்பட்டதுதான் இந்த ‘அமெரிக்க எதிர்ப்பு’—சகவாசதோஷம் தான் காரணம்” என்று கூறிவிட்டுக் கடுமையான பார்வையை என்மீது செலுத்தினார். “ஓஹோ! இப்படி ஒரு கருத்து உலவுகிறதா! நண்பரே! இதை எடுத்துக்காட்டியதற்கு நன்றி. நாங்கள் அமெரிக்காவிடம் இந்தியா அதிக அளவிலே கடனும் – உதவியும்—பெற்றுக் கொள்வது எதிர்கால ஆபத்தாகி விடக்கூடும் என்ற எண்ணத்தை, இன்று நேற்றல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமைத் தொடர்பு ஏற்பட்ட பிறகு அல்ல, துவக்க முதலே கூறி வந்திருக்கிறோம். அமெரிக்காவின் தொடர்பை, கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கிறது, நாங்கள் கம்யூனிஸ்டு கட்சியுடன் தோழமை கொண்டிருக்கிறோம், ஆகவேதான் அமெரிக்கத் தொடர்பைக் கண்டிக்கிறோம் என்று வாதாடுவது தவறு “என்று நான் விளக்கமளித்துவிட்டு அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் துவக்க நாளிலேயே நான் கண்டித்து இதழிலே எழுதிய ஒரு கட்டுரையை –கதை வடிவம் – தந்து படிக்கச் சொன்னேன். தம்பி! அதனை உன்னிடமும் தருகிறேன்—நமது போக்கு புதிது அல்ல என்பதனை எடுத்துக்காட்ட. {{c|<b>காட்சி-1</b>}} <poem><b>இடம்</b> : கொஞ்சம் கலனான ஓர் மாளிகை வெளிப்புறம் <b>காலம்</b> : காலை <b>உறுப்பினர்</b> : வாயில் காப்போன், ஒரு சீமான்</poem> மாளிகை கலனாகி இருக்கிறது! சுற்றுச் சுவர், இரு புறமும் பிளக்கப்பட்டுக் கிடக்கிறது. நெடு நாட்களாக, கண்ணாம்பு அடிக்காததாலும், பழுது பார்க்காததாலும், மாளிகையின் வெளித்தோற்றம், கவர்ச்சி அளிப்பதாக இல்லை; வாயிற்படி, தெருத்திண்ணை இவைகளின் மீதெல்லாம், புழுதியும் கற்களும் நிரம்பியுள்ளன. ஆனால் மாளிகை, பெரிய அளவுடையது. பழுதுபார்த்து, வர்ண வேலைகள் செய்து முடித்தால், அழகாக விளங்கக்கூடியது என்று தெரியும் நிலை இருக்கிறது. மாளிகையின் முன் வாயிற்படியில், ஒரு காவலாளி களிப்புடன் நிற்கிறான், கையில் சந்தனக் கிண்ணமும் பன்னீர் செம்பும் வைத்துக்கொண்டு. மாவிலைத் தோரணங்கள், வாழைமரம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. ஒருபுறம் முட்செடிகள் உள்ளன.<noinclude> <references/></noinclude> nskoqdrut6det8enbhz6dsgbtbbcv1d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/232 250 639195 1925566 1922075 2026-04-20T05:30:29Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து. {{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம் ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}} என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான். காவ : நமஸ்தே! சீமான்: நமஸ்த்தே... காவ : வாருங்கள்! (வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக) சீ : சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ? கா : நிறையக் கிடைக்கும். சீ : இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்! கா : அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்... சீ : (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா! கா : ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல. சீ : அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது? கா : செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள். சீ : பேசுகிறார்களா? யார்? கா : மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்! (<b>சீமான் வேகமாக உள்ளே போகிறார்</b>) {{c|<b>காட்சி-2</b>}} <b>இடம்</b> : மாளிகை உட்புற மண்டபம். <b>உறுப்பினர்</b> : மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.<noinclude> <references/></noinclude> o1uudgz8an2fq2uneowdpgw9xtd7nz0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/233 250 639196 1925576 1922076 2026-04-20T05:39:37Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||209}}{{rule}}</noinclude> ஒருவர் பேசுகிறார் : எவ்வளவோ கஷ்டப்பட்டு, மாளிகையை நம் வசப்படுத்திவிட்டோம். நமது மாளிகையோ, மிகப் பெரியது..... (ஒரு குரல், முழுவதும் கிடைக்காது போய்விட்டதே என்று கூவுகிறது). பேசுபவர் : பரவாயில்லை ஒரு சிறு கொல்லை! போகட்டும். இந்த மாளிகையை நாம் பெற்ற பெருமையும் சந்தோஷமும்—எவ்வளவு தெரியுமா! இந்தச் சுபதினத்தைப் பாராட்டாதவர்கள் இல்லை. {{left_margin|5em|(<b>உள்ளே நுழைந்த சீமான்</b>)}} சீ : உலகமே பாராட்டுகிறது. பேசு : நமஸ்தே! உட்காருங்கள்! இவர் போன்ற உத்தமர்களெல்லாம் நமக்கு உற்ற துணையாக இருப்பார்கள். {{left_margin|5em|(ஒரு குரல்: யார் இவர்? ஓடிப்போனவனின் ஒன்றுவிட்ட சகோதரன் போல இருக்கிறான்)}} பேசு : இனி இம்மாதிரி பேசக்கூடாது. நமது மாளிகையை இனிச் சண்டை சச்சரவுக்குள்ளாக்கக்கூடாது. இவர்,... சீ : மனிதன்; சர்வ தேசத்தான்–மாளிகையின் மகிழ்ச்சியைக் கண்டு மனமாரப் பாராட்ட வந்தவன். மாசற்ற மனமுடையவன்; காசூர் என்பது எமது தேசத்தின் பெயர். பேசு : காசூர்க் கண்ணியருக்கு எமது வணக்கம். சீ : மாளிகையில் மகிழ்ந்துள்ள உமக்கு எனது மகிழ்ச்சியுரை. எம்மாலான உதவியைச் செய்வேன். காசூரின் நோக்கம், மாசு துடைத்து, எங்கும் மகிழ்ச்சி வளரச் செய்வதுதான். உங்கள் மாளிகை, பிரம்மாண்டமானது–ஆனால் கவர்ச்சியில்லை – கவர்ச்சிகரமானதாக்க முடியும் – பழுது பார்க்க வேண்டும் – பலவர்ணம் தீட்டவேண்டும் – சுற்றுச் சுவரைக் கட்டவேண்டும்... பே : ஆமாம், பூந்தோட்டம் அமைக்க வேண்டும்— சீ : பழத்தோட்டம் நல்லது. பே : பூவிலிருந்துதானே பழம்?...? சீ : பழம் தராத பூ உண்டு. பே : ஆமாம், ஆமாம் – நல்லவிதமாகத் தோட்டம் அமைக்க... சீ : தக்க திட்டம் வேண்டும். (ஒருகுரல்: பணம் வேண்டுமே, இவ்வளவு பெரிய மாளிகையைத் திருத்த ஏராளமாக வேண்டும்)<noinclude> <references/></noinclude> rvsnawez76zrzvb95m3xu7yuxw520cl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/234 250 639198 1925602 1922077 2026-04-20T06:05:35Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|210||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> பே : (ஆர்வத்துடன்) பயம் வேண்டாம்! நமது மாளிகையிலே, ஏராளமான பணம் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இடத்தைக் கண்டுபிடித்து, செல்வத்தை எடுத்து, மாளிகையைச் சீரும் சிறப்புமுள்ளதாக்குவோம்! (பலர், சபாஷ், பலே! என்று களிப்புடன் கூவுகின்றனர்.) சீ : (கனைத்துக் கொண்டு) முடியும். செய்யலாம். ஆனால்... பே : செய்ய முடியாது என்ற பயமே எம்மிடம் கிடையாது. இந்த மாளிகையைக் கைப்பற்ற முனைந்தபோது காட்டிய மாவீரம் மங்கிவிடவில்லை... சீ : அந்த ஆர்வத்தையும் நம்பிக்கையையும் நான் பாராட்டுகிறேன். ஆனால், புதைந்துள்ள பொருளைக் கண்டுபிடித்து, பிறகு மாளிகையைத் திருத்துவது என்றால் காலம் அதிகமாகும். அதற்குள் கலனான பகுதி மேலும் கலனாகக்கூடும். காசூர் உதவியைப் பெற்றால், இப்போதே மாளிகையைப் பழுது பார்க்கலாம். {{left_margin|5em|(ஒருகுரல்: காசூர் உதவி, வெள்ளையூர் வேலையாக முடிந்தால் என்ன செய்வது?)}} சீ : பழைய பயத்தை மறந்து, இந்தக் காரியத்தைத் துவக்கவேண்டும். {{left_margin|5em|(ஒருகுரல்: அது எங்களுக்குத் தெரியும்)}} சீ : தெரியாமலென்ன! நீங்கள் மாவீரர்கள்! உங்கள் மூதாதையர் ஞானிகள்! இதோ பேசுகிறாரே உங்கள் தலைவர், அவர் அஞ்சா நெஞ்சு படைத்தவர். உங்கள் மாளிகையோ, பிரம்மாண்டமானது. ஆஹா, இதை மட்டும், திட்டமிட்டுக் கட்டி முடித்தால் காண்போர் களிப்புக் கடலில் மூழ்குவர். காசூர், இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்வதை, ஓர் கைங்கர்யமாகக் கருதுகிறது. காசூருக்கு, வெள்ளையூரார்போல, பிறர் மாளிகையில் புகுந்துகொண்டு, ஆதிக்கம் செலுத்தும் எண்ணமே கிடையாது... பே : அதுதான் சிலாக்கியமான கொள்கை. எந்த ஆட்சியும் சொந்த ஆட்சிக்கு ஈடாகாது... சீ : இதையே எங்கள் தலைவர் எழுபத்தெட்டு தடவை சொல்லியிருக்கிறார். உங்களுடைய மாளிகையை உங்கள் மாளிகையிலேயே எங்கெங்கோ புதைத்து வைக்கப்பட்டுள்ள பொருளைக்கொண்டு, புதிதாக்குவது சிரமம், காலக்கேடு; நீங்கள்<noinclude> <references/></noinclude> f5ofc15hqvc6do825rv7t2fxy0ozqbs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/235 250 639199 1925618 1922081 2026-04-20T06:22:42Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||211}}{{rule}}</noinclude> விரும்பினால், காசூர் பணம் தரும். பழுதுபார்த்து, அழகிய வேலைப்பாடுகள் செய்து முடித்து, அதிலே நீங்கள் குதூகலமாக இருப்பதைக் கண்குளிரக் கண்டுகளிக்கும் நோக்கந்தான் காசூருக்கு... பே : நேர்மையான நோக்கம். நெஞ்சிலே வஞ்சமின்றி. சீ : வஞ்சகமா! அது பஞ்சையர்களின் குணம். காசூர், நேசர்களின் கொஞ்சுதலைப்பெற, தன்னையே அர்ப்பணிக்குமளவு நல்ல நோக்கம் கொண்டது. பே : ஆஹா! மகிழ்ந்தேன்! பூரித்தேன்! இப்படிப்பட்ட உதவி கிடைத்ததற்கா இறைவனை வணங்குகிறேன். சீ : நன்று! நான் சென்று வருகிறேன். காசூர் சென்று, மாசுமறுவற்ற உமது மனத்தை எடுத்துக் கூறி, இந்த மாளிகை பழுதுபார்க்கும் மகத்தான கைங்கரியத்தை, தெய்வகாரியமாக மேற்கொள்ளும்படி வற்புறுத்திக் கூறுவேன். பே : மெத்த சந்தோஷம். ஜெயவிஜயீபவ! சீ : சந்தேகம் வேண்டாம். எதற்கும், காசூருக்கு உதவி கோரி, இங்கிருந்து யாரையாவது அனுப்பிவைத்தால்... பே : ஆகா ! செய்வோம்! பாபாஜீ! பாபா : இதோ, கிளம்புகிறேன். {{left_margin|3em|(சீமான் விடைபெற்றுக் கொள்கிறார்)}} {{c|<b>காட்சி 3</b>}} <b>இடம்</b> : காசூர் <b>உறுப்பினர்</b> : கோடீஸ்வரர் ஒரு கோடீஸ்வரர், கடிதமொன்றைப் பிரித்துப் படித்துவிட்டுப் புன்சிரிப்புடன், அதை மற்றவரிடம் தருகிறார். சுமார் அறுபதுபேர் கூடியிருக்கிறார்கள் அங்கு, ஒவ்வொருவராகக் கடிதத்தைப் படித்து மகிழ்கிறார்கள். ஒரு கோடி : தூதர்... இன். கோ. : சாமர்த்தியசாலி! வேறு. கோ : அனுபவசாலி! ஒரு கோ : பக்குவமாகக் காரியத்தை முடித்திருக்கிறார். வேறு கோ : பழைய மாளிகையைப் புதிதாக்கும் உதவி செய்வதென்றால், அவர்களுக்கு உச்சி குளிர்ந்துதானே போகும்.<noinclude> <references/></noinclude> tml2pdn1bbolok0krzakets6xefmhkn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/236 250 639200 1925648 1922082 2026-04-20T06:49:18Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|212||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ஒரு கோ : நன்றாகக் குளிரட்டும்! பழைய மாளிகையைப் புதிதாக்கப் பண உதவி செய்யும்போது மாளிகையை அடமானமாக வைத்தாக வேண்டுமே! பிறகு கடனைப் பைசல் செய்து, மீட்டுக்கொள்வதைப் பார்த்துக் கொள்வோம். வேறு கோ : தவறு, உமது திட்டம். பண உதவி செய்யும்போதே அடமானப் பத்திரம் எழுதச் சொல்லக் கூடாது, விழிப்பும், பயமும் பிறந்துவிடும். பணம், ஏறின பிறகு, பத்திரம் தயாரிக்க வேண்டும். மற்.கோ : அதுதான் சரியான யோசனை, வரட்டுமே போன ஆசாமி. {{dhr|3em}} {{c|<b>காட்சி 4</b>}} <b>இடம்</b> : மாளிகை வாசல் <b>உறுப்பினர்</b> : பேசினோர், பிணியாள். பிணியாள் : ஆமாம், என்னவோ, மாளிகையின் ரிப்பேருக்குக் கடன் வாங்கப் போவதாக— பே : எவன் கலகமூட்டினான்? பி : கலகமா ! சேதி சொன்னான். பே : சேதி முழு உண்மையல்ல. பணம் வாங்கப்போகிறோம், ரிப்பேர் செலவுக்கு. ஆனால் அது கடன் அல்ல, உதவித் தொகை. பி : உதவித் தொகையா? பே : உனக்குச் சூட்சுமம் புரியாது, போ! பி : புரியத்தான் இல்லை. அன்னியர்கள் ஏதேனும் சாக்குக் கூறிக்கொண்டு உள்ளே நுழைவார்கள்—பிறகு தங்கள் ஆதிக்கத்தைப் புகுத்துவார்கள் என்றெல்லாம், முன்பு... பே : சொன்னேன். ஆமாம், அது பழைய கதை. மறந்துவிடு. பி : மறக்க முடியவில்லையே! உதவித் தொகை தருவதாகக் காசூரான் சொல்கிறான், இப்போது; பிறகு, மாளிகை அவன் வசம் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறதே. பே : சுத்த பயந்தாங்கொள்ளி! போமய்யா, எனக்கு நேரமில்லை, உன்னிடம் வம்பளக்க. <poem>மாளிகை—இந்தியா,{{gap}}{{gap}}பேசுபவர்—காங்கிரஸ் கட்சி, சீமான்—கிரேடி,{{gap}}{{gap}}காசூர்—அமெரிக்கா பிணியாள் — ஏழை</poem> நாடகத்தின் பொருள் இப்போது விளக்கமாகும் என்று நம்புகிறோம்.<noinclude> <references/></noinclude> 7oxbwuew1d2k9kgdhzgyf1kty64r2hb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/237 250 639201 1925681 1922085 2026-04-20T08:48:01Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||213}}{{rule}}</noinclude> இப்படி மனம் போன போக்கிலே, ஒரு நாடகம் தீட்டுவதா, என்று கோபிக்கத் தோன்றும், அன்பர்களுக்கு. இந்திய விடுதலை விழாவிலிருந்து, அமெரிக்க நாட்டுத் தூதுவர், ஹென்றி கிரேடி இந்தியாவிடம் காட்டிவரும் ‘அக்கறை’ அனைவரும் அறிந்த விஷயம்; அதை ஆதாரமாக வைத்து இந்நாடகம் தீட்டப்பட்டது. போதாது என்கிறீர்களா? சரி! இதோ, மேலும் இரண்டு ஆதாரங்கள். கிரேடி பேசியிருக்கிறார், சின்னாட்களுக்கு முன்பு, “வெளிநாடுகளிலிருந்து, மூலதனம் உதவி பெறாமலே கூட நீங்கள் நாட்டை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும்—ஆனால் மூலதனம் ஏராளமாக ஏற்கனவே உள்ள நாடுகளின் உதவியைப் பெறாவிட்டால், உங்கள் நாட்டு அபிவிருத்தி, தாமதப்படும். தக்க நிபந்தனைகளுடனும், சரியான நிலைமையிலும், பலர் பணம் கடன் கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பதை, என் நாட்டு முதலாளிமார்கள் சார்பாக நான் கூறமுடியும். ஆனால், இந்த நாட்டிலேயோ வேறு நாட்டிலேயோ சென்று, எங்களிடம் கடன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கெஞ்சமாட்டோம். அதற்கு ஒத்து ஊதும் முறையில் சாகல் சந்ஷா எனும் வடநாட்டு வணிகத் தலைவர்— “வெளிநாட்டுத் தொழிலரசர்கள், இங்கு பெரிய தொழிற்சாலைகளை எல்லாம் சில வருஷங்களுக்குள் சர்க்கார் ஏற்றுக்கொள்ளும் என்று பயப்படுகிறார்கள், சந்தேகிக்கிறார்கள்— இந்திய சர்க்கார், உடனடியாக இந்த பயத்தையும் சந்தேகத்தையும் போக்கவேண்டும்” என்று பேசினார். நாடகம், தவறா! {{c|⚫}} படித்து முடித்த நண்பர், “அதுசரி! சுவையைக் கூட்டித் தந்திருக்கிறாய்; புரிகிறது; எதிர்பார்க்காததுமல்ல” என்றார். “கோபம் குறையாமலே இருக்கிறது, அதனால்தான் விளக்கம் தரும் கட்டுரையைப் படித்த பிறகும் சுமத்திய குற்றச்சாட்டை விடாமல் வைத்துக்கொண்டிருக்கிறீர். போகட்டும், கட்டுரையின் சுவை, கிடக்கட்டும், அந்தச் சுவை இருக்கும் என்று எதிர்பார்த்த தன்மை இருக்கட்டும்; கட்டுரை எப்போது எழுதப்பட்டது என்பதைக் கவனியும்” என்றேன். நண்பர் கவனித்துப் பார்த்துவிட்டு, “அப்போதே எழுதியதா இது?” என்று கேட்டார். “ஆமாம் கட்டுரை, இப்போது கம்யூனிஸ்டு கட்சியின் தொடர்பு காரணமாக எழுதப்பட்டது அல்ல; தேர்தலுக்காக எழுதப்பட்டதும் அல்ல; மனதிலே பட்டது; அதனால் எழுதப்பட்டது. அமெரிக்காவின் பிடி இந்த அளவு அழுத்திக்கொண்டிருப்பதனால் ஏற்பட்ட வேதனையால்<noinclude> <references/></noinclude> qln2fg8hr1gso8tbh54ndse1ddpckb7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/238 250 639202 1925682 1922086 2026-04-20T08:50:07Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|214||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> எழுதப்பட்டது அல்ல; அமெரிக்காவின் ‘பிடி’ விழ ஆரம்பித்தபோதே எதிர்காலம் இடர்மிக்கதாகிவிடுமே என்று தோன்றிற்று, அதனால் அவ்விதம் எழுதினேன். கட்டுரை வெளிவந்தது 21—12—47ல்! இப்போதாவது புரிகிறதா, இது புதிய போக்குமல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமையால் ஏற்பட்டதும் அல்ல என்பது?” என்று கேட்டேன். நண்பரின் கோபம் குறைந்தது; இலேசாகக் கவலை அவரைக் கப்பிக்கொண்டது. தம்பி! அந்த நண்பரை நான் குறிப்பிட்டபோது <b>‘காங்கிரஸ் நண்பர்’</b> என்று கூறியிருக்கிறேன்; கவனித்தனையா? காரணத்தோடுதான் கூறினேன்; அவர் காங்கிரஸ் கட்சிக்காரர் அல்ல; காங்கிரசிலே இடம்பிடித்துக் கொண்டவருமல்ல; விடுதலைப் போர் நடத்திய காங்கிரசிடம் அவருக்கு ஒரு பக்தி—பற்று—பாசம்; அதனால் அவர் காங்கிரஸ்காரராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியினர் என்பதற்கும் காங்கிரஸ்காரர் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது; ஆறாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கிறேன் என்பதற்கும், என்னுடைய வீட்டு நம்பர் ஆறு என்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அதுபோல! இவர் காங்கிரஸ் என்ற அமைப்புக்குத்தான் பற்றுக் காட்டுபவர்; காங்கிரஸ் கட்சி என்ற தேர்தல் சூதாட்ட இயந்திரத்துக்கு அல்ல. அதனால்தான் நான் விளக்கம் அளித்ததைக் கேட்டுக் கொள்ள அவருக்கு முடிந்தது. காங்கிரசில் இடம் பிடித்துக்கொண்டவராக இருந்தால், இப்படி என்னிடம் பேசவே சம்மதிக்க மாட்டாரே! என்ன தெரியும் அந்தப் பயலுக்கு என்றல்லவா கொக்கரிக்கத் துடித்திடுவார். இவர், காங்கிரசிலே இடம் பிடித்தவர் அல்ல; இவருடைய மனத்திலே காங்கிரஸ் ஒரு இடம் பிடித்துக் கொண்டிருந்தது! காங்கிரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரசிடம் பற்றுக் கொள்வதற்கும் காங்கிரஸ் கட்சிக்காக ஒட்டு வேட்டை ஆடுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணராததன் விளைவாகவே, இந்த என் நண்பர் போன்றார், இன்றும் காங்கிரசிடம் ‘பக்தி’ காட்டி வருகின்றனர். இந்த ‘பக்தியை’ காங்கிரசில் இடம் பிடித்துக் கொண்டவர்கள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். {{c|⚫}} ஆளைப் பார்க்காதே! அகிம்சா மூர்த்தியின் படத்தைப் பார்! “ஓட்டு” அவருக்கு! அதைத் தெரிந்து கொள் என்ன செய்வார்? என்ன சாதிப்பதற்காக இவர் போகிறார்? இவருடைய திட்டம் என்ன? திறமை எப்படிப் பட்டது? என்றெல்லாம் கேட்காதே! இவர், காங்கிரஸ் கட்சி—அவ்வளவு தான் நீ தெரிந்து கொள்ள வேண்டியது—மற்றவை பற்றி எண்ணி மனதைக் குழப்பிக் கொள்ளாதே!<noinclude> <references/></noinclude> 4uyx8nxgirrulz1mt5ykcyt93ucbpnf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/239 250 639203 1925705 1922088 2026-04-20T09:15:54Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude> இவருக்குப் போடும் “ஓட்டு” இவருக்காக அல்ல காங்கிரசுக்காக!—இவர், முன்பு “ஒருமாதிரி” ஆளாக இருந்தாரே—வட்டித்தொழிலால் கொழுத்தவராச்சே—அதிகாரிகளிடம் குயிலாகி, ஏழைகளிடம் குக்கலாகிவிடும் குணவானாயிற்றே!— என்றெல்லாம் யோசிக்காதே! இவர் இப்போது காங்கிரஸ் கட்சி—சாக்கடைத் தண்ணீரானாலும், கங்கையில் கலந்துவிட்டால், ‘பரிசுத்தமான புண்ணிய தீர்த்தம்’—மறவாதே! நெடுங்காலமாகக் காங்கிரசில் ஈடுபட்டு, நாட்டுக்கு உழைத்த பலருடைய கோரிக்கைகளைக் குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டு, இவருடைய பணபலத்தின் மீது ஏற்பட்ட பாசத்துக்குக் கட்டுப்பட்டு, காங்கிரஸ் கமிட்டி இவரைத் தேர்தலில் அபேட்சகராக நிறுத்தி வைக்கிறதே, இது அனியாயமல்லவா என்று பேசாதே! காங்கிரஸ் முத்திரையை இவர் ‘தேச சேவை டைரியைக் காட்டி அல்ல, தமது ‘செக்புத்தகத்தை’க் காட்டிப் பெற்றாராமே’ என்று பேசாதே! எப்படிப்பட்டவரானால் உனக்கென்ன! என்னென்ன செய்து காங்கிரஸ் முத்திரையைப் பெற்றிருந்தால்தான் உனக்கென்ன! ஏன் அவைகளைப் பற்றி யோசிக்கிறாய்! அவருக்கு எப்போது காங்கிரஸ் முத்திரை விழுந்துவிட்டதோ, அப்போதே அவர், ‘உங்கள் ஓட்டுக்களை’ப் பெறும் யோக்யதையைப் பெற்றுவிட்டார், என்பது பொருள்! இதிலே வாதத்துக்கு இடமில்லை! தேர்தல் காலத்திலே, இதுபோலப் பேசித்தான், ‘வெற்றி’ பெற்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், அந்தத் திருவாளர் என்ன நன்மையைச் செய்யப் போகிறார், அவருக்குள்ள ஆசாபாசங்கள் யாவை, திறமை அனுபவம் என்ன, என்பது பற்றிய நினைப்பே மக்கள் மனத்திலே இருக்க முடியாதபடியான, பிரசாரம் நடைபெற்றது; இது ஒரு கட்சியின் மகத்தான வெற்றிக்கு உதவிற்று—ஆனால் அதே வெற்றி, பொதுமக்களின் நலனைக்கோரி அமைக்கப்பட்ட மக்களாட்சி முறைக்கு ஊறுசெய்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி மாலை அணிந்து—மக்களாட்சி முறைக்கு அதுவே மரண ஓலையாகவுமாகிவிட்டது! {{c|<b>★</b>}} சில ‘தொகுதிகளில்’, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட அபேட்சகர்களின் அறிவுச் சூன்யத்தைப் பற்றி, மக்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டே, “ஓட்டு” அளித்தனர்—காரணம், அவர்கள், தாங்கள் தரும் ‘ஓட்டு’ அந்த ஆசாமிக்கு அல்ல, காங்கிரஸ் கட்சிக்கு—என்று நம்பினர்—நம்பும்படி செய்யப்பட்டனர். “இது வெறும் ‘கைகாட்டி’ தானேப்பா!”<noinclude> <references/></noinclude> ae7510xcq9iftppj57mtfvmqb3guxrh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/240 250 639204 1925707 1922089 2026-04-20T09:21:30Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|216||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> “கல்லுப்பிள்ளையார் போல இருக்கும்—வாயைத்திறக்காது” “திறவாமலிருந்தால் தானய்யா நல்லது! திறந்தால் தெரிந்துவிடும், இது வெறும் பாண்டம் என்பது” “ஆமாம், ஆமாம்! புகையிலை விரித்தால் போச்சு! புண்ணியவான் பேசினால் போச்சு!” “உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது இந்த ஆசாமி காங்கிரசைக் கண்டபடி திட்டிக்கொண்டு இருந்தாரே...” “இப்போது எப்படிக் காங்கிரசில் சேர்ந்தார் என்று கேட்கிறாயா? இது தெரியவில்லையா உனக்கு! காங்கிரசில் சேர்ந்தால்தான், சட்ட சபைக்குப் போக முடியும் என்பதனால்தான்.” “அதுசரி இப்படிப்பட்ட ஆளை, ஏன் காங்கிரஸ் கட்சி சேர்த்துக் கொண்டது?” “ஊரிலே பெரிய ஆள்—பணக்காரன் என்பதனாலேதான்” “பாவம்! பண்டரி, படாதபாடு பட்டுவந்தான் காங்கிரசுக்கு—அவனை நிற்க வைத்திருக்கலாம்” “ஆமாம்! அவன்கூடக் கேட்டானாம் கெஞ்சினானாம்!” “கடைசியில், ‘எதற்கும் உதவாததை’ப் பிடித்து நிற்கவைத்து விட்டார்கள்.” “இது போய் அங்கே என்ன செய்யும்?” “செய்வதாவது, மண்ணாவது! தூக்கு கையை என்றால் தூக்கும்! மற்ற நேரத்தில் தூங்கி விழும்!” பல தொகுதிகளில், பொதுமக்கள் இதுபோலப் பேசிக்கொண்டனர் அபேட்சகர்களின் ‘யோக்யதாம்சங்களை’ப் பற்றி; ‘ஓட்’ மட்டும் போட்டனர்—ஆளுக்காக அல்ல, கட்சிக்காக. இது கட்சிக்குள்ள சக்தியை, பிரசாரத்துக்குள்ள பலத்தை விளக்கிற்று—ஆனால் அதேபோது மக்களாட்சி முறையின் மாண்பையும் மாய்த்துவிட்டது. குன்றின்மீது மூலிகையும் உண்டு, முள்ளும் உண்டு! ஆனால் குறைமதியாளர் தவிர மற்றையோர், குன்றின்மீது உள்ளதெல்லாம் மூலிகை என்று கொள்ளார்—மூலிகை இது, முள் அது என்று பிரித்து எடுத்துப் பயன்படுத்துவர்! ஆனால் ‘குன்றுக்கு’ ஒரு ‘மகிமை’ கற்பித்து, அதன்மீது இருக்கும் ‘எதை’ எடுத்து உபயோகித்தாலும் ‘புண்யம்’ என்று கூறிவிட்டால், பெரும்பாலான மக்கள், மூலிகையா<noinclude> <references/></noinclude> ka4bm9ift03kb4uwt69i34755g0xu94 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/241 250 639205 1925708 1922090 2026-04-20T09:25:16Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||217}}{{rule}}</noinclude> முள்ளா என்று ஆராயமாட்டார்கள், கிடைத்ததைக்கொண்டு களிப்படைவர். அதுபோல ஆயிற்று, தேர்தல்! யாரும் ‘வர முடிந்தது’ முலாம் பூசிக்கொண்டதும்! மக்கள் அளித்த ‘ஓட்டு’ தமக்கு அல்ல, தம்மைத் தழுவி உள்ள கட்சிக்கு—என்பது, அபேட்சகர்களுக்கும், ஒரு அசட்டுத் தைரியத்தைக் கொடுத்தது—யாரும் தம்மை ஏதும் கேட்க முடியாது, என்ற தைரியத்தை! அவர்களில் பலர், வெளிப்படையாகவே “எனக்கா ‘ஓட்டு’ தந்தனர்— என்ன செய்தாய், ஏது செய்தாய், என்று என்னைக் கேட்க! காங்கிரஸ் கட்சிக்குத் தந்தனர்!!” என்று பேசிக்கொண்டனர். தேர்தல் முடியும் வரையில் இந்தக் கருத்தை அடக்கத்துக்குப் பயன்படுத்தினர். பிறகு, ஆர்ப்பரிப்புக்குப் பயன்படுத்தினர். “நான் சாமான்யன்— எனக்காக ஓட்டுக் கேட்கவில்லை – மகத்தான காங்கிரஸ் கட்சிக்காக கேட்கிறேன்” என்று அடக்கமாகப் பேசி ‘ஓட்டு’ பெற்றனர் – பிறகு, “என்னய்யா இது, ஓயாமல் வந்து, என் பிராணனை வாங்குகிறாய், ஓட்டு போட்டேன் ஓட்டு போட்டேன் என்று சொல்லிச் சொல்லி, பாத்யதை கொண்டாடுகிறாய்! இதோ பார்! நீ, ஒன்றும் எனக்குப் போடவில்லை ஒட்டு! தெரிகிறதா? காங்கிரஸ் கட்சிக்குப் போட்டாய். ஆமாம். போய், உன் குறைகளைக் கட்சியிலே சொல்லிக்கொள் – போக்கும்படி சொல்லு—இங்கே வந்து என் உயிரை வாங்காதே, போ” என்று கடுகடுப்புடனும் பேசலாயினர். மக்களாட்சி கேலிக்கூத்தாக்கப்பட்டது. பெரும்பாலான தொகுதிகளில், பொதுமக்களுக்கு, ‘ஓட்டு’ பெற்றுக் கொண்டு போய், வெல்வெட்டு மெத்தைமீது உட்கார்ந்து கொண்டிருக்கும் ‘உயர்ந்தவர்களின்’ உருவம் கூடச் சரியாகத் தெரியாது! இப்படிப் பெட்டிக்குள் புகுந்து கொண்டு சட்டசபை சென்ற ‘பெருமான்களின்’ ஆட்சியிலேதான் நாடு இருக்கிறது. கழைக்கூத்தாடி, நாம் நமது கழுத்து வலியெடுக்கும் விதமாகப் பார்க்கவேண்டிய அளவு உயரமுள்ள கம்பின்மீது ஏறிக்கொண்டு, ஆடிக்காட்டுகிறான் – கத்தி கொண்டு வயிற்றில் குத்திக்காட்டுகிறான். அதைக் காணும் நாம், கைகொட்டுகிறோம் சபாஷ் கூறுகிறோம் ஆச்சரியமடைகிறோம் அவன் திறமையை மெச்சுகிறோம்! அதுகேட்டு அவன், “என் திறமையைக் கண்டீர்களல்லவா! இப்படிப்பட்ட என்னை ஏன் நீங்கள் உங்கள் ஊர்த்தலைவனாகக் கொள்ளக்கூடாது!” என்று கேட்கமாட்டான்—கேட்கத் துணிந்தால் கம்பின்மீது ஏறி வித்தைபல செய்தவன், தரையின்மீது நிற்கவும் முடியாதபடி, புத்தி கற்பிக்கும் வித்தையில் மக்கள் ஈடுபடுவர்! வைத்தியத்தில் நிபுணர் ஒருவர் – ஆனால் அதற்காக அவரிடம் நோயாளியைக் கொண்டு போய்க் காட்டுவார்களேயொழிய, இடிந்த பாலத்தைக்காட்டி, இதை எப்படிப் புதுப்பிப்பது என்று கேட்கமாட்டார்கள்! நூலிலுள்ள சிக்குகளைச்<noinclude> <references/></noinclude> 4uxmcc5lreu2dz8ap57rmgqg4a826a5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/242 250 639206 1925711 1922091 2026-04-20T09:35:01Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|218||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> சுலபத்திலே நீக்கும் நிபுணர் இவர், இப்படிப்பட்டவருக்கு, எதுதான் சாத்யமாகாது, எல்லாம் செய்ய வல்லவர், என்று எண்ணமாட்டார்கள். போருக்குப் பயன்படும் ‘வீரன்’ சோறு செய்யப் பயன்பட்டே தீருவான், ஏனெனில் அவன் அவ்வளவு தீரமாகப் போராடியவன் என்று கருதமாட்டார்கள் – ஏமாளிகள் தவிர. ஒரு துறைக்குத் தேவையான பண்பும் பயிற்சியும் பெற்று நிபுணராகி விடுபவரைக் கொண்டு, எல்லாத் துறைகளிலும் பணிபுரியவைத்துப் பயன் காணலாம் என்று எண்ணுவது பேதைமை, ஆலும் வேலும் பிளக்க உபயோகமாகும் கோடரி வாழைக்குப் பயன்படுவதில்லை! பாறையைப் பிளக்கும் உளிகொண்டு, பச்சைக் காய்கறியை நறுக்கமாட்டார்கள்! ஒவ்வோர் துறைக்கும், ஒவ்வோர் செயலுக்கும் ஏற்ற, தேவையான கருவியும் வேறுவேறு! ஒன்று, மற்றெல்லாவற்றுக்கும் பயன்படும் என்று எண்ணுவது ஏமாளித்தனம். ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர்புரியும் பயிற்சியும் பக்குவமும் பெற்ற ஒருகட்சி, நாட்டை ஆளவும் பயன்பட்டே தீரும்—போரில் பெற்ற வெற்றிபோலவே, ஊராள்வதிலும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணுவது, ‘தேசியமாக’ கருதப்பட்டது! அதனாலேதான், யாரும் வரமுடிந்தது – ஏதும் செய்யாதிருக்கும் போக்கு வளர்ந்தது – மக்களாட்சி முறை கேலிக் கூத்தாயிற்று. {{c|<b>★</b>}} பெரும்போர் முடிந்ததும் படை கலைக்கப்படுகிறது. —சமையல் காரியம் முடிந்ததும். நம் வீட்டு அடுப்பு நெருப்பைக் கூடத்தானே அணைத்து விடுகிறோம்! அது போலவே ஏகாதிபத்ய எதிர்ப்புக்காகவெனத் திரட்டப்பட்ட ‘படை’யை அந்தக் காரியத்துக்கு மட்டும் பயன் படுத்திக்கொண்டு, பிறகு கலைத்து விட்டிருக்கவேண்டும் —ஆனால், நடந்தது வேறு – விபரீதமானது – அந்தப் படை கலைக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, மக்களின் வாழ்வு அந்தப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, அந்தப் படைக்கு என ஏற்பட்ட சின்னத்தைப் பொறித்துக் கொண்டு கிளம்பிய கழுகுகளை எல்லாம் கிளிகளெனக் கருதிக் கொண்டனர் மக்கள் – நயவஞ்சகர்கள் பலர், அந்தச் சின்னத்தைப் பொறித்துக்கொண்டு, நாடாளும் வாய்ப்பைப் பெற்றனர்! கிளிக்கென இருந்த பொந்துக்குள் கருநாகம் குடிபுகுந்த கதை போலாயிற்று! நல்லாட்சி முறை பற்றிய அக்கறை அடியோடு அழியலாயிற்று. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள், கதர் உள்ள போதே தேடிக்கொள் என்று இலாப வேட்டை ஆடக்கிளம்பிவிட்டனர். வாய்ப்பைப் பெற்ற இதிலே, யானையிடம் மாலையைக்கொடுத்து, அது யார் கழுத்தில் மாலையைப் போடுகிறதோ அவரை அரசனாகக்கொண்டு அந்த அரசனை ஆண்டவனுக்கு அடுத்தபடி என்று நம்பி<noinclude> <references/></noinclude> rs3cfzs2qltk92e4zwfi5bt5v3dd7qg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/243 250 639207 1925710 1922093 2026-04-20T09:30:51Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||219}}{{rule}}</noinclude> அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற விதமான அரசியல் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் உள்ளனர், அமெரிக்க நாட்டு அரசியல் முறையைத் திருத்தி ஆஸ்திரேலிய நாட்டு ஆட்சி முறையில் ஒரு பகுதியைப் புகுத்தி, சோவியத் முறையைச் சிறிதளவு கலந்து, பிரிட்டிஷ் பிடிவாதத்தையும் பிரன்ச்சுப் பசப்பையும் சம எடையாகக் கலந்து புகுத்தி, அதே போது “இந்தியப் பண்பாட்டை” இழந்துவிடாதபடியும் பார்த்துக் கொள்ளும் விதமான அரசியல் தத்துவத்தை நாடுபவர்களும் இருக்கிறார்கள். ஊராட்சி அமைப்புகள் ஒழிய வேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஒழியக் கூடாது மேலும் அதிகமான அதிகாரம் அளித்து அமைக்க வேண்டும் என்பவர்களும் இருக்கிறார்கள். அரிசியைத் தீட்டிச் சாப்பிட வேண்டும் என்பார் உண்டு! தீட்டுவது தீது என்பாரும் உண்டு, ஆலைகள் வேண்டாம் என்பார் உளர்! விவாகவிடுதலை என்ற பேச்சே நாசகாலத்தால் ஏற்படும் விபரீதபுத்தியின் விளைவு என்றுபேசுபவர் உண்டு! தசரதனைக் காட்டி, ‘ஏகதாரம்’ என்ற கட்டுப்பாடு கூடாது என்று வாதிடும் பேர்வழிகள் உண்டு, அவர் மகன் ராமன் மீது ஆணையிட்டு ‘ஏகதாரம்’ எனும் முறைதான் சட்டமாக வேண்டும் என்று கூறுவோர் உண்டு! ஜான்சி ராணியை சாட்சிக்கு அழைக்கும் வீரர்களும், சாவித்திரியைச் சாட்சிக்கு அழைக்கும் பக்தர்களும் புதுமை விரும்பிகளும் பழமைக்கொள்கையினரும், சகல வகையினரும் கொண்டதாகிவிட்டது, காங்கிரசுக் கட்சி. ஆகவே, அதன் ஆட்சிக்கு உட்பட்ட நாடு, என்ன உருவம் பெறும், என்று எவ்வளவு பெரிய நிபுணராலும் கணிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் எல்லோருமே, கதருடையினர், காங்கிரஸ் கட்சியினர். எனவே ஒவ்வொருவரும் தமது நினைப்பே சரி என்று கருதுகிறார் – அந்த நினைப்பின்படி நாடு ஆளப்பட்டால்தான் நன்மை கிடைக்கும் என்று எண்ணுகிறார். அந்தமுறைதான் காங்கிரசின் உண்மையான திட்டம் என்று கருதுகிறார். இது, மக்களை மருளச்செய்யும் முறை—வாழவைக்கும் முறையல்ல! என்பதுபோல், எல்லோரும் ஒரே கட்சியின் பெயரைக் கூறிக்கொண்டு சென்றவர்களே தவிர, அவர்களில், பலவகையினர் உண்டு —அவரவர்களின் திறமைக்கு ஏற்றபடி பலனையும் தேடிக்கொள்கிறார்கள். கலெக்டரையும் கன்ட்ரோல் ஆபீசரையும் மிரட்ட, கதர் பயன்படுகிறது, போதாதா இது என்று எண்ணிப் பூரிக்கும் ‘புண்ணியவான்கள்’ மிகுந்துவிட்டனர், மந்திரிகளை மடியில் வைத்திருக்கிறேன்— கவர்னரைக் கைக்குள் வைத்திருக்கிறேன்— பக்தவத்சலம், என்னைப் பார்க்காவிட்டால் தூங்கமாட்டார் அவ்வளவு பிரியம் என்னிடம் என்று அதுபோன்ற பலவகைப் பேச்சுப் பேசி, மிரட்ட, மயக்க, பயிற்சி பெறும் அளவுக்கு, பிரச்சினைகளை விவாதிக்க, திட்டங்களைத் தீட்ட, மசோதாக்கள் தயாரிக்க, பயிற்சி பெற்றனரா என்று யோசித்தால் நேர்மையுள்ள எந்தக்<noinclude> <references/></noinclude> 1kmzkf1d645yl9rvt1vxuqe7hpifymd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/244 250 639208 1925709 1922094 2026-04-20T09:27:34Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|220||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> காங்கிரஸ்காரரும் வெட்கமும் துக்கமுமடைய வேண்டியதுதான்; பண்பற்றவர், பயிற்சியற்றவர், பொறுப்பை மறந்தோர், பொதுமக்களைக் காணாதார், அக்கறையற்றவர், ஆள் விழுங்கிகள், இச்சகம் பேசுவோர், உருமாறிகள் என்று இவ்விதமாக ஒரு பட்டியலே தயாரிக்கலாம், ஆளவந்தோம் என்று கூறிக்கொண்டவர்களை. இது மக்களாட்சி முறையல்ல—கட்சிப்பற்று காரணமாக இந்த நிலையை வளரவிடுகிறார்கள். {{c|⚫}} காங்கிரஸ் கட்சி எவ்விதமான முறையிலே மாறிவிட்டது என்பதையும், எத்தகைய போக்கினர்களெல்லாம் அதிலே இருந்து வருகின்றனர் என்பதையும், எப்படிப்பட்ட சுயநலக்காரரெல்லாம் இடம் பிடித்துக்கொண்டு, இலாப வேட்டை ஆடுகின்றனர் என்பதையும் உணர்ந்து, மனம் வெதும்பி, காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டவர் பலர்! என் நண்பரும் அதுபோல ஆகவேண்டியவர்; அவர் மட்டுமா! வேறு பலரும் உளர். ஆகவேதான் தம்பி! அவர்கள் நம்மிடம் கோபம் கொண்டாலும் வெறுப்பைக் காட்டினாலும், நாம் பொறுமையை இழந்திடாமல், நமது பொறுப்பு பெரிது என்பதனை உணர்ந்து அவர்களின் மனத்திலேயும் நமது கருத்துக்கள் பதிந்திட வேண்டும் என்ற நோக்கத்துடனும் அதற்குத் தேவைப்படும் பக்குவத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதனை நான் வலியுறுத்தியபடி இருக்கிறேன் கேட்டால் கேள்; விட்டால் விடு! என்ற போக்கிலே நம்முடைய பேச்சு இருந்திடவே கூடாது. நாம் கூறுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமலிருப்பதை காணும்போது, நமது பிரசாரமுறை மேலும் நேர்த்தியானதாக வேண்டும், என்ற எண்ணம் தோன்ற வேண்டுமே தவிர, எரிச்சல் எழக்கூடாது. எடுபிடி ஆகியாகிலும் இனிப்புப் பெற்றிடவேண்டும் என்ற நோக்குடன் ஒட்டிக்கொண்டவைகளை அல்ல நான் குறிப்பிடுவது; ஒரு காலத்தில் காங்கிரஸ் நாட்டுவிடுதலைக்காகப் போராடிய அமைப்பாயிற்றே என்பதனை எண்ணி எண்ணி நெஞ்சு நெகிழ்ந்திடும் நல்லோர் பற்றிக் குறிப்பிடுகிறேன். :வேடிக்கை என்பதா வேதனை தருவது என்பதா பாரேன், தம்பி! 1947ல் சுயராஜ்யம் கிடைத்ததே அதனை <b>‘துக்க தினம்’</b> என்று அறிவித்த பெரியார் இன்று காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வேண்டியவர்! ஆகஸ்ட்டு 15, துக்க தினம் அல்ல; விடுதலை நாள்! விழாநாள்! என்று, (எதிலும் பெரியாரிடமிருந்து மாறுபடாமலிருந்து வந்த) தெரிவித்து அவருடைய கோபத்துக்கு ஆளான<noinclude> <references/></noinclude> m7sxuetig6be8mfgqfoco0v823c80g7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/245 250 639209 1925706 1922125 2026-04-20T09:18:26Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||221}}{{rule}}</noinclude> நான் காங்கிரசாரால் கடுமையாகக் கண்டிக்கப்படும் நிலையிலே இருந்து வருகிறேன். விடுதலைப்போர் நடாத்திய காங்கிரசிடம் எனக்கும் உனக்கும் தம்பி! மதிப்பு இருக்கிறது; இருப்பதுதான் முறை! ஆனால் விடுதலைப்போர் நடாத்திய காங்கிரசிலே—போர் முடிந்து அறுவடை ஆரம்பமான பிறகு இடம் பிடித்துக் கொண்டுள்ளவர்கள் செய்திடும் செயலை எப்படி நாம் போற்றமுடியும், பாராட்ட முடியும்? :காங்கிரஸ் விடுதலைப்போர் நடாத்தி நாட்டுக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்ததற்காக மதித்திட போற்றிட மனமற்றவர்கள், காங்கிரஸ் ஆட்சியை நடத்த ஆரம்பித்த பிறகு மதித்திட, போற்றிட முன் வந்திடின், என்ன பொருள்? உள்ளன்பு என்றா அதனைக் கூறமுடியும், ஆசையோ அச்சமோ அதற்கு காரணமாக இருக்கமுடியுமே தவிர பாசம்—பற்று—என்றா கூற முடியும்? பேதையும் கூறிடானே!</poem>}} காங்கிரசில் இடம் பிடித்து கொண்டவர்களின் இயல்புக்குத் தக்கபடி, அந்தக் கட்சியும் அதனால் நடத்தப்படும் ஆட்சியும் இன்று இயல்புகளைப் பெற்றுக் கொண்டுவிட்டது. :அந்த இயல்புகளைத்தான் நாம் வெறுக்கிறோம், கண்டிக்கிறோம். தம்பி! சர்க்கரைப் பொங்கலிலே முந்திரிப்பருப்பு போடுவது முறை, தேவை; ஆனால் சர்க்கரைப் பொங்கலிலே இலுப்பைக் கொட்டைகளைப் போட்டிடின், எவர் விரும்புவர்? என்ன ஆகும் அந்த இனிப்புப் பண்டம்! முக்கனிச் சாற்றினிலே ஒருபிடி தெருப் புழுதியைக் கலந்திடின், பருகிட எவர் இசைவர்? இன்றையக் காங்கிரசின் இந்த நிலையினை உணர்ந்ததால்தான், பலர், அந்தக் கட்சியைவிட்டு வெளியே சென்றுவிட்டனர்; பலர் இருக்கின்றனர் ஒப்புக்கு; கட்சியில் இடம் பிடித்துக்கொண்டவர்கள் செய்திடும் பாதகங்களுக்கு உடந்தையாக இருந்து தீரவேண்டி நேரிட்டுவிட்டதே என்ற வேதனையைச் சுமந்து கொண்டு. இன்றையக் காங்கிரஸ், எவருக்குப் பயன்பட்டு வருகிறது என்பதைக் கண்டதாலேதான், பொதுமக்கள் இன்று கழகத்தை ஆதரிக்கின்றனர். இன்றையக் காங்கிரசிடம் சுவைமிக்க பலன் எதிர்பார்த்து இளித்துக் கிடப்போரே அதிகம் உளர், பற்றுவைத்துள்ளவர் அதிகம் இல்லை என்பதை உணர்ந்ததால்தான், மக்களுக்கு மனமயக்கம் தரத்தக்கது எதையாகிலும் சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்குக் காங்கிரஸ் <b>‘சூத்திர தாரிகள்’</b> வந்துள்ளனர். அத்தகைய மனமயக்கத்தை ஊட்டவே,<b>‘சோஷியலிசம்’</b> பேசுகின்றனர். {{c|*}}<noinclude> <references/></noinclude> 2e583bpovhdipego36zy4hywiwpaip7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/246 250 639210 1925685 1922127 2026-04-20T08:55:34Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|222||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நெற்றியிலே திருநீறு! கழுத்திலே உருத்திராட்சமாலை! கட்கத்தில், எதையோ பட்டுத் துணியால் போர்த்து வைத்திருக்கிறார்! சிவக்கோலத்துடன் விளங்கும் அவரை மன்னர் அன்புடனும், பக்தியுடனும் வரவேற்கிறார்; கட்கத்தில், ஏதோ சிவாகம ஏடு இருக்கிறது; அடியார், நமக்கு அதனைக் காட்டி, நாதனின் நற்பாதத்துக்கு வழிகாட்டப் போகிறார். நமக்கு இது ஓர் நன்னாள்! நல்லாசான், நம்மைத் தேடி வந்துள்ளார் என்று எண்ணிய மன்னன், வருக! வருக! சிவக்கோல பெரியீரே வருக! என்னை வாழ்விக்க வந்துள்ள பெம்மானே வருக என்று கூறி வரவேற்கிறார் — வந்தவர் குறுநகை புரிகிறார்– வணங்கியவர், அது அவருடைய அருள் நெறியின் விளக்கம் என்று எண்ணுகிறார்; வந்தவர், கட்கத்திலிருந்த மூட்டையை அவிழ்க்கிறார் கூரிய வாள், மின்னுகிறது–மன்னனின் மார்பில் பாய்கிறது – அவர் சாய்கிறார்– சதிகாரன் களிக்கிறான்– வேடம் பலித்தது–வெற்றி கிடைத்தது! வீரவேந்தனைக் களத்திலே வீழ்த்துவது முடியாத காரியமாக இருந்தது – இதோ முடித்துவிட்டேன் காரியத்தை, மன்னனின் கருத்தை மயக்க ஒரு சிறு கபட நாடகமாடிக் காரியத்தைச் சாதித்துவிட்டேன் என்று களிக்கிறான். <b>இ</b>ரு மன்னர்கள் போரிட்டனர். அதிலொருவன் போரில் புலி – மற்றவன் குணத்தால் நரி. புலி எனப் போரிடும் மன்னன், சிவனடியார்களைக் கண்டால் போதும், அவர்கள் பாதத்தைச் சிரமீது கொள்ளவும் தயங்காக்குணமுடையவன். இது தெரிந்த முத்தநாதன் என்ற நரிக்குணத்தான், நன்றாகக் குழைத்து நீறுபூசிக்கொண்டான். உருத்திராட்சத் தாவடங்கள் அணிந்து கொண்டான், கூரிய கட்கத்தைப் பட்டுத் துண்டுகொண்டு மறைத்தெடுத்துக் கொண்டான், வீரவேந்தனைத் தனியாகக் கண்டு சிலபேச அனுமதி கோரினான்; வேடத்தைக் கண்ட வேந்தன் ஏமாந்தான். மெய்ப்பொருள் உணர்த்த வந்தேன் என்றான் வேடதாரி – தன்யனானேன் என்றான் சூதறியா மன்னன், உயிரை இழந்தான். மெய்ப்பொருள் நாயனார் கதை என்று கூறுவர். இதனைப் பெரிய புராணத்தில் – வேடத்தைக் கண்டு ஏமாறலாகாது என்ற அறிவுரைக்குப் பயன்படுத்துவதுமில்லை. இதனைச் சிவபக்தியின் மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே, பயன்படுத்துகின்றனர்; கதைகளைப் பக்தர்கள்,எங்ஙனம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கூற அல்ல, இதனை நாம் இங்குத் தீட்டுவது, சைவத்தின் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவரை ‘சிவவேடம்’ பூண்டு ஏய்த்து மாய்த்த, அந்தப் பெரிய புராணத்தின் மறு பதிப்பென, இப்போது நமது நாட்களிலே, அரசியல் துறையிலே நடைபெறும், உரிமைப் படுகொலைகளைப் பற்றிக் குறிப்பிடவே இதனைக் கூறினோம். நெற்றியிலே நீறு, எனவே நேர்மையிலே நாட்டமிருக்க வேண்டும். கழுத்திலே சிவச்சின்னம், ஆகவே அதை அணிந்திருப்பவரின் உள்ளம்<noinclude> <references/></noinclude> 1ssjt7soeq4j3e1k7s9ubct4lct4zqy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/247 250 639211 1925677 1922129 2026-04-20T08:32:26Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||223}}{{rule}}</noinclude> தூய்மையானதாக இருந்தே தீர வேண்டும். கட்கத்திலே ஏதோ இருக்கிறது, சிவகோலத்தவரிடம், சிவாகம ஏடுதான் இருக்கும்–என்ற முடிவுக்கு, பக்தியின் காரணமாக வந்து உயிரை இழந்த மன்னன்போல, வேடத்தைக்கண்டு ஏமாந்து, உரிமையை இழந்துவிடும் பரிதாபத்துக்குரிய மக்கள் அரசியல் துறையிலே அநேகர் உள்ளனர். மெய்ப்பொருள் உரைக்க வந்துள்ளார் என்று எண்ணி வேந்தன் உயிரிழந்ததுபோலவே அரசியலில், வேடத்தைக் கண்டு மயங்கி, அந்த வேடதாரிகள், நற்பொருள்தர வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கைக் கொண்டு, பிறகு தமது உரிமையை நாசம் செய்து கொள்ளும் மக்கள், இதுபோது உள்ளனர். யாருக்கும், ஏதேனும் ஓர் பொருளின் மீது பற்று மிகுதியாக இருப்பின், அவர்களை, எத்தர்கள் ஏய்க்க எண்ணும் போது, எதன் மீது அவர்களுக்குப் பிரியம் அதிகமோ, அதே போல் கோலம் பூண்டு வந்தே, ஏய்ப்பர்–ஏய்த்திருக்கின்றனர்– ஏமாளிகள் உள்ளவரையில் இத்தகைய எத்தர்கள் இருக்கத்தான் செய்வர். பற்று இருக்கத்தான் வேண்டும் ஏதேனும் ஓர் கொள்கையினிடம்–மரக்கட்டைகளாக இருத்தலல்ல மாந்தர்க்கழகு–ஆயினும் பற்று, நமக்குப் பகுத்தறிவையும் பாழாக்கும் மூடுபனியாகும்படியாக மாறிவிட, அனுமதிக்கலாகாது. இந்த மூடுபனியை ஒட்டித்தான் தம்பி! நாம் அறிவொளியைத் தந்திட வேண்டும். நெற்றியிலே உள்ள நீறு சரி; கழுத்திலே உருத்திராட்ச மாலை, சரி; மகிழ்ச்சி, மதித்திடுவோம்; ஆனால் கட்கத்தில் மூட்டையில் உள்ளது என்ன? என்று மட்டும் மன்னன் கேட்டிருந்திருப்பின், படுகொலை நேரிட்டிருக்காதே! அது போலவேதான் தம்பி! ஜனநாயகமா? மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! சோஷியலிசமா? மிக்க மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! ஆனால், இவர் யார்? அதோ அவர் யார்? இவருடைய நிலை என்ன, விலை என்ன, வேலை என்ன? அதோ அவருடைய இயல்பு என்ன, இருப்பு எவ்வளவு? இவர் போன்றார் உள்ள இடத்திலா சோஷியலிசம் வளரும், மலரும்? என்று கேட்டிடத் தெளிவும் துணிவும் வேண்டும்! இல்லையேல், உரிமை படுகொலை செய்யப்பட்டுவிடும்! விதை தூவினால் மட்டுமே, பயிர்! ஆனால் எங்கே தூவினால்? பாறைமீது தூவிய விதை, பறவைகளுக்கு; பயிர் ஆகிடாது! நெல்லும் பதரும், ஒரே வடிவம்! நெல்லென்று எண்ணிக்கொண்டு பதரினை விதையாகத் தூவிடின், நிலம் தரமாக இருந்திடினும் முளை கிளம்பிடுமோ!!<noinclude> <references/></noinclude> i7po93b7n1yu1ubv3vinywp05gg99ub பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/248 250 639212 1925598 1922130 2026-04-20T06:02:21Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|224||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> பாறை மீது தூவிய விதைபோலவே இன்று காமராஜர் பேசிடும் ஜனநாயக சோஷியலிசம் உளது. இதனை உணருவதற்கு அதிகமான முயற்சியும் தேவையில்லை. அவருடைய உலாவின்போது உடன் இருப்போரைக் கண்டாலே போதும். உடன் இருப்போர் ஊர்க் குடிகெடுப்போர் என்று மக்கள் அறிவர்! உடனிருப்போர், பிறர் உழைப்பின் பலனை உண்டு கொழுப்போர்; இதனை ஊரறியும். ஆனால் அந்த உத்தமர்களை வைத்துக்கொண்டு சோஷியலிசம் பேசுகிறார், பெரியவர்! அவர்களும், ஆமாம்! சோஷியலிசத்தைத்தான் நாங்கள் ஆதரிக்கிறோம்!!–என்கிறார்கள். இந்தியாவுடன் நட்பு வேண்டும் என்று தான் சீனா கேட்கிறது!! எல்லையைக் கொத்திக் கொண்டே!! இங்குள்ள முதலாளிமார்களும், ஏழையின் வாழ்வை வதைத்துக் கொண்டே, சோஷியலிசக் கீதம் பாடுகிறார்கள். மெய்ப் பொருள் நாயனார் கதை போலவே இருக்கிறது அவர்கள் ஏழை எளியோரிடம் காட்டிடும் சோஷியலிசக் கோலம்!! காமராஜர், வேண்டுமென்றே கபட நாடகமாடி ஏழை எளியோர்களை ஏய்க்கிறார் என்று நான் கூறவில்லை, தம்பி! எத்தனை அரசியல் கருத்து வேற்றுமை இருந்திடினும், அவர்மீது பழி சுமத்திடும் அவுைக்குத் தாழ்ந்து போகவும், தரக்குறைவு கொள்ளவும் நான் தயாராக இல்லை. அவர் நரியைப் பரியாக்கிக் காட்ட முயலுகிறார்; முதலாளிகளை சோஷியலிஸ்டுகள் ஆக்கிக் காட்டுகிறார். தென்பாண்டி மண்டலத்துக் காமராஜருக்கு நரி பரியான கதை தெரிந்திருக்க வேண்டும்! திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைக் கோயிலுக்காகச் செலவிட்டு மன்னனின் சீற்றத்துக்கு ஆளாகி மருண்டு கிடந்த ‘பக்தனை’க் காத்திட, நரி பரியாகும் திருவிளையாடலை நடாத்திக் காட்டினார் என்பர் புராணம் படிப்போர். குதிரை வாணிபனாக வடிவம் கொண்டு, காட்டினில் கிடந்த நரிகளைப் பரிகளாக்கி, மன்னனிடம் தந்து, அவன் மகிழ்ச்சிகொண்டு, அந்தக் குதிரைகளைக் கொட்டிலில் கட்டி வைத்திட, இரவு பரியாக மாறிக்கிடந்த நரிகள் பழையபடி நரிகளாகி, ஊளையிட்டுப் பாய்ந்து, ஏற்கனவே ஆங்கு இருந்த பரிகளைக் கடித்துக் குதறிவிட்டுக் காடுநோக்கி ஓடிவிட்டன என்பர்.<noinclude> <references/></noinclude> bv2ps1axfb9zqkmllf76jths5iyhvgs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/249 250 639213 1925526 1922133 2026-04-20T05:13:01Z Mythily Balakrishnan 11301 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||225}}{{rule}}</noinclude> கண்ணுதற் பெருங்கடவுளாலேயே, நரியைப் பரிபோல் வடிவம் கொண்டிட மட்டுமே செய்திட முடிந்தது. நரிகள் பரிகளாகிவிடவில்லை, நாதன் நடத்திய திருவிளையாடலின் போதேகூட! ஆனால் காமராஜர், கனதனவான்களை, கள்ளச் சந்தையினரை, கொள்ளை இலாபமடித்திடுவோரை, சோஷியலிஸ்டுகள் ஆக்கிடமுடியும் என்கிறார்; நம்பச் சொல்கிறார்!! ஆண்டவனே முயன்றாலும் நரி, பரியாகிவிடாது என்பதனைத் திருவிளையாடல் பற்றிய திருக்காதையே காட்டுகிறது–காமராஜரின் திருவிளையாடலிலா நம்பிக்கை கொள்ள முடியும்? மக்களுக்கு நம்பிக்கை எழாது; நிச்சயமாக! ஆனால் ஒரு மயக்கம் ஏற்படும் அல்லவா? அதுபோதும் ஓட்டுக்களைத் தட்டிப் பறித்திட என்று அவர் திட்டமிடுகிறார். அந்த மயக்கத்தைப் போக்கிடும் தொண்டினில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். தன் திட்டத்தைத் தாக்குகிறார்களே என்பதாலே அவருக்கு நம்மீது ஆத்திரம்! விநாடிக்கு விநாடி அந்த ஆத்திரம் வளருகிறது;பொங்குகிறது. காமராஜர் தயவால் ஒரு புதிய வேட்டை கிடைக்க இருக்கிறதே, அதனை இந்தப் ‘பாவிகள்’ கெடுத்துத் தொலைக்கிறார்களே என்பதை எண்ணிடும்போது முதலாளிமார்களுக்கு நம்மீது கோபம்–கொதிப்பு! இந்த இரண்டு எதிர்ப்புகளையும் தாங்கிக் கொண்டு தான் நாம் பணியாற்ற வேண்டி இருக்கிறது, நமது பணி பெரிது! பொறுப்பு அதனைவிடப் பெரிது! எதிர்ப்பு, பலவகையின, மிகப் பெரிய அளவினதுமாகும்! “அப்படியா அண்ணா!” என்று ஆயாசக் குரலிலே கூறிடமாட்டாய், அதனால் என்ன அண்ணா நான் தான் அந்தப் பணிக்கு என்னை ஒப்படைத்துவிட்டேனே! அஞ்சாதே அண்ணா! அறம் வெல்லும்!! என்று உறுதியுடன் பேசிடுவாய் என்பதை உணர்ந்தே தம்பி! உன்னை அழைக்கிறேன். வேறு யாரை நான் அழைப்பேன்! {{rh|<br><b>23-10-1966||அண்ணன்,<br>அண்ணாதுரை</b>}} {{dhr|10em}}<noinclude> <references/></noinclude> ime1klxt57hpgnm0dgeuje252jcyqj0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/326 250 639725 1925485 1922437 2026-04-19T15:25:55Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1925485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|302||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>ஒரே தொகுதிக்காக இரண்டு மூன்று வேட்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்; இது சிக்கலுள்ள பிரச்சினையாகக் கூடும் என்பதை நான் மறைக்க விரும்பவில்லை. இந்த சிக்கலிலே, இறுதியான முடிவினை நானே தெரிவிக்க வேண்டுமெனக் கூறிடும்போது, மகிழ்ச்சியாகவும் பெருமை யாகவுங்கூட இருக்கிறது. என்றாலும், பணிவன்புடன் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன், நிலைமையையும் காங்கிரஸ் கட்சியின் நினைப்பையும் நன்கு எண்ணிப் பார்த்து, என்னுடைய 'முடிவு' வரட்டும் என்று, என் மீதே முழுப் பளுவையும் போட்டு விடாமல், வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பினை உணர்ந்து, தாமாகவே ஒரு சமரசம் கண்டு, ஒருமித்த முடிவு காணவேண்டும் என்று பணிவன்புடன் அவர்களை விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மிக அருமையாக அமைத்துள்ள ஒரு அணியினை, நமக்கென்று ஏற்பட்டு விட்டுள்ள விருப்பத்தை மட்டுமே பெரிதாகக் கருதி, உடைபடும்படி விட்டுவிடக் கூடாது என்பதனை நினைவுபடுத்துகிறேன். அவ்விதம் நமது அணி உடைபட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் என்பதையும் நாம் உணர வேண்டும். ஆகவே நமது நோக்கம், நமது விருப்பம் நிறைவேறுகிறதா இல்லையா என்பதைக் காட்டிலும், நமக்காக உருவாகியுள்ள அணி, எந்தக் காரணத்தாலும் உடைபடாமல் இருக்கிறதா என்பதிலே தான் இருந்திட வேண்டும். இந்த நேர்த்தியான நிலையை காண்பதற்காக நம்மிலே ஒவ்வொருவரும் தனது நலம், தனது வலிவு, தனது நோக்கம் என்பவைகளைப் பின்னணிக்குத் தள்ளிவைத்து, கழகத்தின் பொதுநலனை முன்னணியில் கொலுவிருக்கச் செய்திட வேண்டும். நமது கழகத் தோழர்களிலே மிகப் பெரும்பாலானவர்கள், அதிலும் வேட்பாளர்களாகத் தம்மை அறிவித்திருப்பவர்கள், இளமைப் பருவத்தினர், எளிதிலே கோபதாபத்துக்குத் தம்மை ஒப்படைத்து விடக்கூடிய நிலையினர். ஆகவே அவர்கள் தமது பருவத்திற்கு ஏற்பட்டுள்ள இயல்பினையும் மீறிய, பொறுமை உணர்ச்சியையும், பொறுப்பு உணர்ச்சியையும் காட்டித் தீரவேண்டும். மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆங்காங்கே தோன்றிடும் சிக்கல்களை அந்த அந்த இடத்திலேயே நீக்கிக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். எல்லாவற்றையும் மொத்தமாக்கி, உருட்டித் திரட்டி ஓர் பேருருவாக்கி, என் முன் கொண்டுவந்து நிறுத்தி விடாதீர்கள்.<noinclude></noinclude> 2zdq4cabs4ku0so0i5cjl14lgccn5b7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/392 250 639763 1925661 1922475 2026-04-20T07:17:12Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */சரி 1925661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|368||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> எந்தப் பணி மூலம், எப்போதும் உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அது குறித்து நான் அளவற்ற அகமகிழ்ச்சி பெற முடிந்ததோ, அந்தப் பணியினை முன்புபோலச் செய்ய முடியாதவனாக்கப்பட்டு, முடியவில்லையே என்ற ஏக்கத்தால் தாக்கப்பட்டு, சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டுக் கிடக்கிறேன் என்பதனை அறிவாய். 'சூழ்நிலையின் கைதி'-என்ற சொற்றொடருக்குத்தான், முதலமைச்சர் என்று முத்திரையிட்டிருக்கிறார்கள். தம்பி! தம்பி! தம்பி!-என்று கிழமை தவறாமல், பலப்பல ஆண்டுகள் உன்னை அழைத்து உரையாடி அளவளாவி வந்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளாக அந்த விருந்தினை இழந்து தவிக்கின்றேன். முதலமைச்சர் என்ற முறையில் பல பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை அறிக்கைகள், சொற்பொழிவுகள், சட்டமன்ற உரைகள் மூலம் நாட்டுக்குத் தந்துவிட முடிகிறது-தனிமையாக உன்னிடம் உரையாடி மகிழ்ந்திட என்று நான் வகுத்துக்கொண்ட 'கிழமைக் கடிதம்' எழுதிட இயலவில்லை. பிரச்சினைகளை விளக்கிட, ஐயப்பாடுகளைப் போக்கிட, அச்சம் துடைத்திட, மறுப்புக்கு மறுப்புரைக்க, 'வாழ்க வசவாளர்' என்று அவர்களையும் வாழ்த்திட, "தம்பிக்குக் கடிதம்" மிக நேர்த்தியான முறையில் பயன்பட்டு வந்தது. எனக்குத் தோன்றும் எண்ணங்களை உன்னிடம் கூறிடுவதிலே. தனியானதோர் மகிழ்ச்சி. எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியினை உன்னோடு பங்கிட்டுக் கொள்வதிலே ஓர் இன்பம். கவலை குடையும்போது, மன உளைச்சல் ஏற்படும்போது, உன்னோடு உரையாடி, தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற எழுச்சி பெற்று வந்தேன். இப்போது? அந்த இன்ப நாட்களை எண்ணி எண்ணி ஏக்கம் கொள்கிறேன். சுமக்கும் பளுவினாலே கூனிக் குறுகி வாடுகிறேன். எத்தனை எத்தனையோ பிரச்சினைகளைப் பற்றிய கருத்துக்களைக் கூற நேரமோ வாய்ப்போ இன்றித் தவித்திடுகிறேன். ஆயினும், முன்பு செலவிட்டதைக் காட்டிலும் அதிக நேரம் வேலைக்காக ஒதுக்குகிறேன். இலக்கியச் சுவை நுகர்ந்திட நேரமில்லை.<noinclude></noinclude> hf7k4gqdugqrm1ooc9ge3w8p1dvzzql பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/393 250 639764 1925662 1922476 2026-04-20T07:19:42Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1925662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||369}}{{rule}}</noinclude>கலை அழகினை எண்ணிட நேரமில்லை. வேலை! வேலை! வேலை! ஓயாத வேலை! உடலும் உள்ளமும் அலுத்துப் போகும் அளவு. கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கவே காலம் போதவில்லை-களிப்புப் பெற்றிட உன்னிடம் உரையாடிட நேரத்தைக் கண்டறிவதே மிகச் சங்கடமாகி விட்டது. இந்தக் கிழமை எப்படியும் தம்பிக்குக் கடிதம் எழுதிட வேண்டும் என்று தீர்மானித்து எழுதத் தொடங்குவேன். தொலைபேசி மணி ஒலிக்கும்... {{left_margin|3em|சீப்பா... ஆமாம், நான்தான்.... எங்க ஊர் வாய்க்கால் விஷயமாக மனு அனுப்பினது பற்றி.... பரிசீலனையில் இருக்கிறது. அண்ணா! நீங்க பார்த்து முடிவு செய்ய வேண்டியதுதானே, இதற்கு என்ன பரிசீலனை தேவை? அப்படி அல்லவே. இலாக்கா பரிசீலனை செய்தாக வேண்டுமே... அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எப்படியும் முடித்துக் கொடுத்தாக வேண்டும். சரி, சென்னைக்கு வரும்போது விளக்கமாகக் கூறுகிறேன். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா! ஆகட்டும். ஆகட்டும்! வேலைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இளைப்பும் களைப்பும் அதிகமாகத் தெரிந்தது போன மாதம் பார்த்தபோது. }} தம்பி! என் மனத்துக்கு இனிமை தந்திடும் பணியிலே என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லையே என்ற கவலை ஒருபுறம்; அத்துடன் பின்னிப் பிணைந்துகொண்டு என் உடல் நிலையைப் பற்றிய கவலை ஒருபுறம். என் பேரப் பெண். இளங்கோவனின் மகள் கண்மணி தன் மழலை மொழியில் பாடுகிறாள். <b>நலந்தானா? நலந்தானா?<br> உடலும் உள்ளமும்<br> நலந்தானா?</b> என்று. எனக்கென்னவோ அந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம். என் தம்பிகள் தங்கைகள் நாட்டின் நல்லோர் அனைவருமே என்னை<noinclude></noinclude> hz2gfec98z6016c1zs505rcbzosco54 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/394 250 639765 1925663 1922477 2026-04-20T07:20:29Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1925663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|370||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>நலந்தானா? என்று கேட்பது போலவே தோன்றுகிறது. நடந்த ஓராண்டாகவே, இந்தக் கேள்வி கிளம்பியபடி இருந்தது; அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளவேண்டிய அளவுக்கு உடல் நலம் பாழ்பட்டது. ஆனால், அதனால் ஏற்பட்ட கவலையை நான் உதறித் தள்ளும் விதமான அன்பும் கனிவும் நாடு முழுவதிலுமிருந்து கிடைத்தது. அரசியலில் நம்மோடு மாறுபட்டிருப்பவர்களிலே பலரும் கனிவு காட்டிடக் கண்டேன்-மனிதத் தன்மை அடியோடு மடிந்துவிடவில்லை என்பதனை உணர்ந்தேன். தம்பி! அந்த மனிதத் தன்மையிலேதான் முழுக்க முழுக்க நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். மனிதத் தன்மை திகழ்ந்திடச் செய்வதைக் காட்டிலும் மகத்தான வேறோர் வெற்றி இல்லை என்றே கருதுகிறேன். அரசுகள் அமைவதே. இந்த மனிதத் தன்மையின் மேம்பாட்டினை வளர்த்திடத்தான் என்று கருதுகிறேன். என்னால் எந்தப் பிரச்சினையையும் மனிதத்தன்மை கலந்ததாக மட்டுமே கொள்ள முடிகிறது. அதனால் கொடுமை நேரிட்டு விடும்போது குமுறிப் போகிறேன். அக்ரமம் நடைபெற்றிடும் போது நெஞ்சில் வேல் பாய்கிறது. இந்நிலை உடலைப் பாதிக்கிறது; மருத்துவர்கள் பலர் என் உடல்நிலைதேறிடத் துணை நிற்கின்றனர். ஆனால், உன் புன்னகை தவழும் முகத்தை மனக் கண்ணால் காணும் போதுதான் உண்மையான 'மாமருந்து' கிடைக்கிறது. கிடைத்தற்கரிய அந்தச் செல்வத்தைக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கிலே திளைத்திருக்க எண்ணும் என்னை, தம்பி! நான் மேற்கொண்டுவிட்ட 'கடமை' வேலையைக் கவனி! வேலையைக் கவனி! என்று முடுக்குகிறது. இன்று எப்படியும் எழுதுவது-ஆண்டுக்கோர் நாள்-அருமைமிகு திருநாள் - பொங்கற் புதுநாள்-அதற்காக வெளிவரும் மலரில் எப்படியும் எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டு ஏடெடுத்தேன், எழுத! எடுத்து? நிதிக் குழுவினருடன் பேசவேண்டிய பிரச்சினைகளைப் பற்றிய தகவல்களுடன் நிதித்துறைச் செயலாளர், அமைச்சர் மாதவனுடன் வந்தார்! ஒரு மணிக்குமேல் உருண்டோடி விட்டது-சிக்கலான பிரச்சினைகள்-பேசித் தீர்த்தாக வேண்டிய பிரச்சினைகள்-நமது மாநிலத்து வருவாய்த்துறையை எந்தெந்த முறையிலே செப்பனிட முடியும் என்பது பற்றி ஆய்ந்தறிய வேண்டிய கட்டம். உன்னை மறந்தேன் என்ற பொருள் கொள்வாயோ! விவரமறிந்த தம்பியாயிற்றே!! உனக்காகவும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிற வேலை என்பதனை அறிவாயே. பிரச்சினைகளைப் பேசினோம்: புள்ளி விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டோம்; தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றிய முறைகளை வகுத்துக் கொண்டோம். அதற்குப் பிறகுதான் எழுத ஆரம்பித்தாயா அண்ணா! என்றுதானே கேட்கிறாய்.<noinclude></noinclude> sjj8sccccf7y8tonrqpsd9jpw6n425f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/395 250 639766 1925664 1922478 2026-04-20T07:22:00Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1925664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||371}}{{rule}}</noinclude> அதற்குப் பிறகு அல்ல, தம்பி! அதைப் போல மூன்று நான்கு தவிர்க்க முடியாத வேலைகளைக் கவனித்தான பிறகு; எழுத வேண்டும் என்ற முடிவு எடுத்ததற்கும் எழுதத் தொடங்கியதற்கும் இடையில் ஆறு ஏழு மணி நேரம் சென்றுவிட்டது. இந்நிலையில் நான் இருந்திடினும் பொங்கற் புதுநாள் வாழ்த்தினைத் தெரிவித்துப் பெற்றிடும் மகிழ்ச்சியினை மட்டும் நான் இழந்துவிட மாட்டேன். நமக்கென்று உள்ள ஒப்பற்ற விழா அல்லவா அது. எத்தனையோ இன்னல்கள் தாக்கிடினும், அவைகளை மறந்து, ஒருநாள் மனைதொறும் மனைதொறும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிட என்று அமைந்த நாளல்லவா பொங்கற் புதுநாள். பேச்சிலே ஓர் இசை கலந்திடும் நாள். இத்திருநாள்! இந்நாளில், உனக்கு வாழ்த்துக் கூறுவதிலே பெற்றிடும் இன்பம் ஈடற்றதல்லவா. எனவேதான், எப்படியும் எழுதுவது என்று உட்கார்ந்தேன். உலக நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை ஒரு முறைக்கு மும்முறை கண்டு வந்தேன். அங்கு எங்கும்-விழாக்கள் பலப்பல நடாத்தப்படினும்-தமிழகத்தின் பொங்கற் புதுநாள் போன்றதோர் பொன்விழா இல்லை; நிச்சயமாக இல்லை கோலாகல விழாக்கள் உள்ளன; பரபரப்பூட்டும் விழாக்கள் நடத்தப்படுகின்றன; கேளிக்கைகள், மதுபான விருந்துகள் மிகுதியாக; எனினும் ஆர்ப்பரிப்பின்றி ஆனால் அக மகிழ்ச்சியுடன், போலிப் பூச்சுகளின்றி ஆனால் புதியதோர் பொலிவுடன், வீட்டில் உள்ள அனைவரும் கலந்துரையாடி மகிழ்ந்திருக்கும் நமது பொங்கற் புது நாளுக்கு ஒப்பான விழா அங்கு எங்கும் இல்லை. நாட்டியக் கூடங்களிலே அமளி! பாதைகளிலே புதுவேகம். மோதல், உயிர்ச்சேதம்! அங்காடிகளிலே ஆரவாரம்! இவைகள் ஏராளமான அளவு! ஆனால் இங்கு வீடுதோறும் எழுகிறதே, முதியவரும் மூதாட்டியும் இளைஞரும் இளநங்கையும், சிறுமியரும் கலந்து எழுப்பும் பொங்கலோ! பொங்கல்! என்ற இசை, அது அங்கு எங்கும் இல்லை. இருந்திடத் தக்க விதமான சமூக அமைப்பே இல்லை. தம்பி! வறுமை வாட்டுகிறது, இல்லை என்று கூறவில்லை. எண்ணிடும் திட்டங்களை நிறைவேற்றிட வசதிகள் கிட்டவில்லை. அதனை மறைத்துப் பயனில்லை; வளம் கொழித்திட வழிதேடியபடிதான் இருந்து வருகிறோம். இன்னும் பொழுது புலரவில்லை; இவ்வளவும் உண்மை; ஆனால் தமிழகத்தில் பன்னெடுங்காலத்துக்கு முன் பிறந்து நாடு பல, தனது எல்லையை வகுத்துக்கொண்டு அரசு அமைத்துக் கொண்டு நிலவத் தொடங்குவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே, நாம் பெற்றிருந்த கருத்துச் செல்வத்தை எண்ணிப் பார்த்திடும்போது. நமக்கு இன்றுள்ள எல்லாத் துயரங்களையும் ஒருகணம் மறந்து, வேறு எவரும் பெற முடியாத ஓர் பெருமித உணர்வினை நாம் பெற முடிகிறது.<noinclude></noinclude> ma9mxvri76cbjml14lwz0dktifszb32 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/396 250 639767 1925665 1922479 2026-04-20T07:22:49Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சிர 1925665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|372||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> அத்தகைய கருவூலத்தை நமக்குத் தந்த தமிழ் நாட்டுக்கு, நாம் இது நாள் வரையில் அரசியல் சட்ட திட்டத்தில், தமிழ் நாடு என்ற பெயரைக்கூடப் புகுத்தத் தவறினோமே, மறுத்து வந்தோமே, எதிர்த்து வந்தோமே என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணி வருத்தப்படுகிறார்களோ இல்லையோ, நானறியேன்-நாம்-இவர்களால் என்ன ஆகும்? என்ற ஏளனக் கணைகளால் தாக்கப்பட்ட நாம்-நாம் ஆட்சிப் பொறுப்பினை பெற்றதன் விளைவாக இந்தப் பொங்கற் புதுநாளிலிருந்து, நாம் உலகுக்கு அறிவிக்க முடிகிறது. இது தமிழ்நாடு என்பதாக. பெயரில் என்ன இருக்கிறது என்று பேசிடும் பெரியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்-ஆனால் பாடினாரே பாரதியார், <b>{{left_margin|3em|<poem>செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே!</poem>}}</b> என்று. அந்த 'கவிதா வாக்கியம்' பெரிய இடத்தில் அமர்ந்து கொண்டு ‘சின்னத்தனம்’ பேசிடும் பலருடைய ஏளனத்தைப் பொருட்படுத்த வேண்டாம். உயர்ந்த எண்ணம் கொள்! என்றன்றோ கட்டளையிடுகிறது. 'நாம்' தமிழ்நாடு என்ற பெயர் பெற்றிடக் காரணமாக இருந்தோம் என்ற தித்திப்புக் கலந்திடும் பொங்கற் புதுநாள், இந்த ஆண்டு. போதும் என்று நான் கூறவில்லை: அத்துணைப் பேதைமை என்னைப் பிடித்தாட்டவில்லை. தமிழகத்துக்கு வளமளிக்க வேண்டிய பருவ மழை தவறி விட்டது. ஏரி குளம் குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. வயல்கள் வெடித்துக் கிடக்கின்றன. பல மாவட்டங்களில் எண்ணிடும் போதே கவலையும் கலக்கமும் மிகத்தான் செய்கிறது. எனினும் இந்த நிலையை மனத்திலே எண்ணி, இதம் தரும் பல செயல்களை அந்த இடங்களிலே மேற்கொள்ளும்படி திட்டமளிக்கப்பட்டிருக்கிறது. 'தமிழ் நாடு' - என்ற பெயர் கிடைப்பதால் கிடைத்திடும் பெருமிதம் காலமெல்லாம் நிலைத்து நிற்கும்; நமது வழிவழி வருவோருக்கெல்லாம் நம்மைப் பற்றி அறிவிக்கும்; வரலாற்றில் இடம் பெறும்; பருவமழை தவறுவதும் வறட்சி மிகுவதும் பஞ்ச நிலை தலை தூக்குவதும் என்றென்றும் இருப்பதல்ல; திங்கள் சில. எனவேதான், தம்பி! எப்போதுமே எழுச்சியுடன் நடாத்திடும் பொங்கற் புதுநாளை இவ்வாண்டு புதியதோர் எழுச்சியுடன் கொண்டாடிடக் காரணம் இருக்கிறது என்பதனை நினைவுபடுத்துகின்றேன். உடையார்க்கே, - விழாவெல்லாம்; ஏழையர்க்கு ஏது? என்ற கேள்வியிலே தொக்கியுள்ள நியாயத்தை நான் மறுப்பவனல்ல. தமிழக<noinclude></noinclude> 2784tmoktdb0ic9ctrlao4oahn1upxj பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/12 250 639900 1925564 1922655 2026-04-20T05:28:43Z TI Buhari 4634 1925564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||viii}}</noinclude><section begin="4"/>{{dhr|3em}} {{fs|120%|<b><center>நன்றியுரை</center></b>}} {{dhr|3em}} அறிவியல்‌ களஞ்சியம்‌ பதினான்காம்‌ தொகுதி வெளியிடுவதற்கு, எல்லா வகையிலும்‌ ஆக்கமும்,‌ ஊக்கமும்‌ நல்கித்‌ துணை புரிந்த மாண்பமை துணை வேந்தர்‌ முனைவர்‌ <b>இ. சுந்தரமூர்த்தி</b> அவர்கட்கு என்‌ நன்றியை மகிழ்வுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி வெளியிடுவதற்கு உரிய உதவி புரிந்து, ஊக்கமளித்த பல்கலைக் கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) திரு. <b>இரா. ஜெயக்குமார்</b>‌ அவர்கட்கு என்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி ஆக்கத்தின் போது, பங்களிப்புச்‌ செய்த முன்னை முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ பேராசிரியர்‌ <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b> அவர்கட்கும்‌, கட்டுரைகளை வழங்கித்‌ துணை செய்த கட்டுரையாளர்களுக்கும்‌, அவற்றைச்‌ சீரமைத்த வல்லுநர்கட்கும்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ மெய்ப்புத்‌ திருத்தும்‌ பணியில்‌ பல வழிகளில்‌ உதவிய திரு. <b>ப. தியாகராஜன்</b>‌ மற்றும்‌ திரு. <b>நா. காமராஜ்</b> ஆகியோருக்கும்‌ என்‌ நன்றி. இத்தொகுதி நன்முறையில்‌ வெளி வர ஈடுபாட்டுடன்‌ துணை நின்ற பல்கலைக்‌ கழகப்‌ பதிப்புத் துறையினருக்கு என்‌ நன்றியினை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌. {|style="width:100%;" |- |style="width: 40em;"|இடம்‌ : தஞ்சாவூர்‌.<br>நாள்‌ : 10.03.2004 |width=350px {{ts|ar}} |முனைவர்‌ <b>‌நே. ஜோசப்‌</b>‌{{gap|5em}}<br>முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு)<br>களஞ்சிய மையம்‌.{{gap|6em}} <section end="4"/> |}{{nop}}<noinclude></noinclude> rbluxfhpia0l51vt1r3ok2r6fzrytwo 1925565 1925564 2026-04-20T05:29:29Z TI Buhari 4634 1925565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||viii}}</noinclude><section begin="4"/>{{dhr|3em}} {{fs|120%|<b><center>நன்றியுரை</center></b>}} {{dhr|3em}} அறிவியல்‌ களஞ்சியம்‌ பதினான்காம்‌ தொகுதி வெளியிடுவதற்கு, எல்லா வகையிலும்‌ ஆக்கமும்,‌ ஊக்கமும்‌ நல்கித்‌ துணை புரிந்த மாண்பமை துணை வேந்தர்‌ முனைவர்‌ <b>இ. சுந்தரமூர்த்தி</b> அவர்கட்கு என்‌ நன்றியை மகிழ்வுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி வெளியிடுவதற்கு உரிய உதவி புரிந்து, ஊக்கமளித்த பல்கலைக் கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) திரு. <b>இரா. ஜெயக்குமார்</b>‌ அவர்கட்கு என்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி ஆக்கத்தின் போது, பங்களிப்புச்‌ செய்த முன்னை முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ பேராசிரியர்‌ <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b> அவர்கட்கும்‌, கட்டுரைகளை வழங்கித்‌ துணை செய்த கட்டுரையாளர்களுக்கும்‌, அவற்றைச்‌ சீரமைத்த வல்லுநர்கட்கும்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ மெய்ப்புத்‌ திருத்தும்‌ பணியில்‌ பல வழிகளில்‌ உதவிய திரு. <b>ப. தியாகராஜன்</b>‌ மற்றும்‌ திரு. <b>நா. காமராஜ்</b> ஆகியோருக்கும்‌ என்‌ நன்றி. இத்தொகுதி நன்முறையில்‌ வெளி வர ஈடுபாட்டுடன்‌ துணை நின்ற பல்கலைக்‌ கழகப்‌ பதிப்புத் துறையினருக்கு என்‌ நன்றியினை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌. {|style="width:100%;" |- |style="width: 40em;"|இடம்‌ : தஞ்சாவூர்‌.<br>நாள்‌ : 10.03.2004 |width=500px {{ts|ar}} |முனைவர்‌ <b>‌நே. ஜோசப்‌</b>‌{{gap|5em}}<br>முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு)<br>களஞ்சிய மையம்‌.{{gap|6em}} <section end="4"/> |}{{nop}}<noinclude></noinclude> lq11diprlh8klj0iryjeni6dietqtrb 1925567 1925565 2026-04-20T05:32:53Z TI Buhari 4634 1925567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||viii}}</noinclude><section begin="4"/>{{dhr|3em}} {{fs|120%|<b><center>நன்றியுரை</center></b>}} {{dhr|3em}} அறிவியல்‌ களஞ்சியம்‌ பதினான்காம்‌ தொகுதி வெளியிடுவதற்கு, எல்லா வகையிலும்‌ ஆக்கமும்,‌ ஊக்கமும்‌ நல்கித்‌ துணை புரிந்த மாண்பமை துணை வேந்தர்‌ முனைவர்‌ <b>இ. சுந்தரமூர்த்தி</b> அவர்கட்கு என்‌ நன்றியை மகிழ்வுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி வெளியிடுவதற்கு உரிய உதவி புரிந்து, ஊக்கமளித்த பல்கலைக் கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) திரு. <b>இரா. ஜெயக்குமார்</b>‌ அவர்கட்கு என்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி ஆக்கத்தின் போது, பங்களிப்புச்‌ செய்த முன்னை முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ பேராசிரியர்‌ <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b> அவர்கட்கும்‌, கட்டுரைகளை வழங்கித்‌ துணை செய்த கட்டுரையாளர்களுக்கும்‌, அவற்றைச்‌ சீரமைத்த வல்லுநர்கட்கும்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ மெய்ப்புத்‌ திருத்தும்‌ பணியில்‌ பல வழிகளில்‌ உதவிய திரு. <b>ப. தியாகராஜன்</b>‌ மற்றும்‌ திரு. <b>நா. காமராஜ்</b> ஆகியோருக்கும்‌ என்‌ நன்றி. இத்தொகுதி நன்முறையில்‌ வெளி வர ஈடுபாட்டுடன்‌ துணை நின்ற பல்கலைக்‌ கழகப்‌ பதிப்புத் துறையினருக்கு என்‌ நன்றியினை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌. {|style="width:100%;" |- |style="width: 150px;"|இடம்‌ : தஞ்சாவூர்‌.<br>நாள்‌ : 10.03.2004 |width=500px {{ts|ar|fs080}} |முனைவர்‌ <b>‌நே. ஜோசப்‌</b>‌{{gap|5em}}<br>முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு)<br>களஞ்சிய மையம்‌.{{gap|6em}} <section end="4"/> |}{{nop}}<noinclude></noinclude> 1lhdjw478lwoqbet0ydij5icnrvwiny 1925568 1925567 2026-04-20T05:34:57Z TI Buhari 4634 1925568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||viii}}</noinclude><section begin="4"/>{{dhr|3em}} {{fs|120%|<b><center>நன்றியுரை</center></b>}} {{dhr|3em}} அறிவியல்‌ களஞ்சியம்‌ பதினான்காம்‌ தொகுதி வெளியிடுவதற்கு, எல்லா வகையிலும்‌ ஆக்கமும்,‌ ஊக்கமும்‌ நல்கித்‌ துணை புரிந்த மாண்பமை துணை வேந்தர்‌ முனைவர்‌ <b>இ. சுந்தரமூர்த்தி</b> அவர்கட்கு என்‌ நன்றியை மகிழ்வுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி வெளியிடுவதற்கு உரிய உதவி புரிந்து, ஊக்கமளித்த பல்கலைக் கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) திரு. <b>இரா. ஜெயக்குமார்</b>‌ அவர்கட்கு என்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி ஆக்கத்தின் போது, பங்களிப்புச்‌ செய்த முன்னை முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ பேராசிரியர்‌ <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b> அவர்கட்கும்‌, கட்டுரைகளை வழங்கித்‌ துணை செய்த கட்டுரையாளர்களுக்கும்‌, அவற்றைச்‌ சீரமைத்த வல்லுநர்கட்கும்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ மெய்ப்புத்‌ திருத்தும்‌ பணியில்‌ பல வழிகளில்‌ உதவிய திரு. <b>ப. தியாகராஜன்</b>‌ மற்றும்‌ திரு. <b>நா. காமராஜ்</b> ஆகியோருக்கும்‌ என்‌ நன்றி. இத்தொகுதி நன்முறையில்‌ வெளி வர ஈடுபாட்டுடன்‌ துணை நின்ற பல்கலைக்‌ கழகப்‌ பதிப்புத் துறையினருக்கு என்‌ நன்றியினை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌. {|style="width:100%;" |- |width=105px {{ts|al|fs080}}|இடம்‌ : தஞ்சாவூர்‌.<br>நாள்‌ : 10.03.2004 |width=500px {{ts|ar|fs080}} |முனைவர்‌ <b>‌நே. ஜோசப்‌</b>‌{{gap|5em}}<br>முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு)<br>களஞ்சிய மையம்‌.{{gap|6em}} <section end="4"/> |}{{nop}}<noinclude></noinclude> btfxkj59tnbewfgc4kiyuyd055b00ba 1925569 1925568 2026-04-20T05:35:17Z TI Buhari 4634 1925569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||viii}}</noinclude><section begin="4"/>{{dhr|3em}} {{fs|120%|<b><center>நன்றியுரை</center></b>}} {{dhr|3em}} அறிவியல்‌ களஞ்சியம்‌ பதினான்காம்‌ தொகுதி வெளியிடுவதற்கு, எல்லா வகையிலும்‌ ஆக்கமும்,‌ ஊக்கமும்‌ நல்கித்‌ துணை புரிந்த மாண்பமை துணை வேந்தர்‌ முனைவர்‌ <b>இ. சுந்தரமூர்த்தி</b> அவர்கட்கு என்‌ நன்றியை மகிழ்வுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி வெளியிடுவதற்கு உரிய உதவி புரிந்து, ஊக்கமளித்த பல்கலைக் கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) திரு. <b>இரா. ஜெயக்குமார்</b>‌ அவர்கட்கு என்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி ஆக்கத்தின் போது, பங்களிப்புச்‌ செய்த முன்னை முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ பேராசிரியர்‌ <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b> அவர்கட்கும்‌, கட்டுரைகளை வழங்கித்‌ துணை செய்த கட்டுரையாளர்களுக்கும்‌, அவற்றைச்‌ சீரமைத்த வல்லுநர்கட்கும்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ மெய்ப்புத்‌ திருத்தும்‌ பணியில்‌ பல வழிகளில்‌ உதவிய திரு. <b>ப. தியாகராஜன்</b>‌ மற்றும்‌ திரு. <b>நா. காமராஜ்</b> ஆகியோருக்கும்‌ என்‌ நன்றி. இத்தொகுதி நன்முறையில்‌ வெளி வர ஈடுபாட்டுடன்‌ துணை நின்ற பல்கலைக்‌ கழகப்‌ பதிப்புத் துறையினருக்கு என்‌ நன்றியினை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌. {|style="width:100%;" |- |width=115px {{ts|al|fs080}}|இடம்‌ : தஞ்சாவூர்‌.<br>நாள்‌ : 10.03.2004 |width=500px {{ts|ar|fs080}} |முனைவர்‌ <b>‌நே. ஜோசப்‌</b>‌{{gap|5em}}<br>முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு)<br>களஞ்சிய மையம்‌.{{gap|6em}} <section end="4"/> |}{{nop}}<noinclude></noinclude> pxtoxo4gmp9fyi2lclte8jqt7fdze64 1925570 1925569 2026-04-20T05:35:36Z TI Buhari 4634 1925570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||viii}}</noinclude><section begin="4"/>{{dhr|3em}} {{fs|120%|<b><center>நன்றியுரை</center></b>}} {{dhr|3em}} அறிவியல்‌ களஞ்சியம்‌ பதினான்காம்‌ தொகுதி வெளியிடுவதற்கு, எல்லா வகையிலும்‌ ஆக்கமும்,‌ ஊக்கமும்‌ நல்கித்‌ துணை புரிந்த மாண்பமை துணை வேந்தர்‌ முனைவர்‌ <b>இ. சுந்தரமூர்த்தி</b> அவர்கட்கு என்‌ நன்றியை மகிழ்வுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி வெளியிடுவதற்கு உரிய உதவி புரிந்து, ஊக்கமளித்த பல்கலைக் கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) திரு. <b>இரா. ஜெயக்குமார்</b>‌ அவர்கட்கு என்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி ஆக்கத்தின் போது, பங்களிப்புச்‌ செய்த முன்னை முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ பேராசிரியர்‌ <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b> அவர்கட்கும்‌, கட்டுரைகளை வழங்கித்‌ துணை செய்த கட்டுரையாளர்களுக்கும்‌, அவற்றைச்‌ சீரமைத்த வல்லுநர்கட்கும்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ மெய்ப்புத்‌ திருத்தும்‌ பணியில்‌ பல வழிகளில்‌ உதவிய திரு. <b>ப. தியாகராஜன்</b>‌ மற்றும்‌ திரு. <b>நா. காமராஜ்</b> ஆகியோருக்கும்‌ என்‌ நன்றி. இத்தொகுதி நன்முறையில்‌ வெளி வர ஈடுபாட்டுடன்‌ துணை நின்ற பல்கலைக்‌ கழகப்‌ பதிப்புத் துறையினருக்கு என்‌ நன்றியினை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌. {|style="width:100%;" |- |width=125px {{ts|al|fs080}}|இடம்‌ : தஞ்சாவூர்‌.<br>நாள்‌ : 10.03.2004 |width=500px {{ts|ar|fs080}} |முனைவர்‌ <b>‌நே. ஜோசப்‌</b>‌{{gap|5em}}<br>முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு)<br>களஞ்சிய மையம்‌.{{gap|6em}} <section end="4"/> |}{{nop}}<noinclude></noinclude> e0yynrxjz81z7fntm6u4pmnaxoyz38g 1925571 1925570 2026-04-20T05:35:57Z TI Buhari 4634 1925571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||viii}}</noinclude><section begin="4"/>{{dhr|3em}} {{fs|120%|<b><center>நன்றியுரை</center></b>}} {{dhr|3em}} அறிவியல்‌ களஞ்சியம்‌ பதினான்காம்‌ தொகுதி வெளியிடுவதற்கு, எல்லா வகையிலும்‌ ஆக்கமும்,‌ ஊக்கமும்‌ நல்கித்‌ துணை புரிந்த மாண்பமை துணை வேந்தர்‌ முனைவர்‌ <b>இ. சுந்தரமூர்த்தி</b> அவர்கட்கு என்‌ நன்றியை மகிழ்வுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி வெளியிடுவதற்கு உரிய உதவி புரிந்து, ஊக்கமளித்த பல்கலைக் கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) திரு. <b>இரா. ஜெயக்குமார்</b>‌ அவர்கட்கு என்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி ஆக்கத்தின் போது, பங்களிப்புச்‌ செய்த முன்னை முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ பேராசிரியர்‌ <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b> அவர்கட்கும்‌, கட்டுரைகளை வழங்கித்‌ துணை செய்த கட்டுரையாளர்களுக்கும்‌, அவற்றைச்‌ சீரமைத்த வல்லுநர்கட்கும்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ மெய்ப்புத்‌ திருத்தும்‌ பணியில்‌ பல வழிகளில்‌ உதவிய திரு. <b>ப. தியாகராஜன்</b>‌ மற்றும்‌ திரு. <b>நா. காமராஜ்</b> ஆகியோருக்கும்‌ என்‌ நன்றி. இத்தொகுதி நன்முறையில்‌ வெளி வர ஈடுபாட்டுடன்‌ துணை நின்ற பல்கலைக்‌ கழகப்‌ பதிப்புத் துறையினருக்கு என்‌ நன்றியினை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌. {|style="width:100%;" |- |width=135px {{ts|al|fs080}}|இடம்‌ : தஞ்சாவூர்‌.<br>நாள்‌ : 10.03.2004 |width=500px {{ts|ar|fs080}} |முனைவர்‌ <b>‌நே. ஜோசப்‌</b>‌{{gap|5em}}<br>முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு)<br>களஞ்சிய மையம்‌.{{gap|6em}} <section end="4"/> |}{{nop}}<noinclude></noinclude> 7qirjro7wkx84vt9o8rl1wk8q9c41au 1925572 1925571 2026-04-20T05:36:19Z TI Buhari 4634 1925572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||viii}}</noinclude><section begin="4"/>{{dhr|3em}} {{fs|120%|<b><center>நன்றியுரை</center></b>}} {{dhr|3em}} அறிவியல்‌ களஞ்சியம்‌ பதினான்காம்‌ தொகுதி வெளியிடுவதற்கு, எல்லா வகையிலும்‌ ஆக்கமும்,‌ ஊக்கமும்‌ நல்கித்‌ துணை புரிந்த மாண்பமை துணை வேந்தர்‌ முனைவர்‌ <b>இ. சுந்தரமூர்த்தி</b> அவர்கட்கு என்‌ நன்றியை மகிழ்வுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி வெளியிடுவதற்கு உரிய உதவி புரிந்து, ஊக்கமளித்த பல்கலைக் கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) திரு. <b>இரா. ஜெயக்குமார்</b>‌ அவர்கட்கு என்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி ஆக்கத்தின் போது, பங்களிப்புச்‌ செய்த முன்னை முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ பேராசிரியர்‌ <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b> அவர்கட்கும்‌, கட்டுரைகளை வழங்கித்‌ துணை செய்த கட்டுரையாளர்களுக்கும்‌, அவற்றைச்‌ சீரமைத்த வல்லுநர்கட்கும்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ மெய்ப்புத்‌ திருத்தும்‌ பணியில்‌ பல வழிகளில்‌ உதவிய திரு. <b>ப. தியாகராஜன்</b>‌ மற்றும்‌ திரு. <b>நா. காமராஜ்</b> ஆகியோருக்கும்‌ என்‌ நன்றி. இத்தொகுதி நன்முறையில்‌ வெளி வர ஈடுபாட்டுடன்‌ துணை நின்ற பல்கலைக்‌ கழகப்‌ பதிப்புத் துறையினருக்கு என்‌ நன்றியினை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌. {|style="width:100%;" |- |width=140px {{ts|al|fs080}}|இடம்‌ : தஞ்சாவூர்‌.<br>நாள்‌ : 10.03.2004 |width=500px {{ts|ar|fs080}} |முனைவர்‌ <b>‌நே. ஜோசப்‌</b>‌{{gap|5em}}<br>முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு)<br>களஞ்சிய மையம்‌.{{gap|6em}} <section end="4"/> |}{{nop}}<noinclude></noinclude> kujwa0mzql8k4d5lpvjrh2emo49xgl4 1925573 1925572 2026-04-20T05:36:38Z TI Buhari 4634 1925573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||viii}}</noinclude><section begin="4"/>{{dhr|3em}} {{fs|120%|<b><center>நன்றியுரை</center></b>}} {{dhr|3em}} அறிவியல்‌ களஞ்சியம்‌ பதினான்காம்‌ தொகுதி வெளியிடுவதற்கு, எல்லா வகையிலும்‌ ஆக்கமும்,‌ ஊக்கமும்‌ நல்கித்‌ துணை புரிந்த மாண்பமை துணை வேந்தர்‌ முனைவர்‌ <b>இ. சுந்தரமூர்த்தி</b> அவர்கட்கு என்‌ நன்றியை மகிழ்வுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி வெளியிடுவதற்கு உரிய உதவி புரிந்து, ஊக்கமளித்த பல்கலைக் கழகப் பதிவாளர்‌ (பொறுப்பு) திரு. <b>இரா. ஜெயக்குமார்</b>‌ அவர்கட்கு என்‌ நன்றியைப்‌ புலப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. இத்தொகுதி ஆக்கத்தின் போது, பங்களிப்புச்‌ செய்த முன்னை முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ பேராசிரியர்‌ <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b> அவர்கட்கும்‌, கட்டுரைகளை வழங்கித்‌ துணை செய்த கட்டுரையாளர்களுக்கும்‌, அவற்றைச்‌ சீரமைத்த வல்லுநர்கட்கும்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ மெய்ப்புத்‌ திருத்தும்‌ பணியில்‌ பல வழிகளில்‌ உதவிய திரு. <b>ப. தியாகராஜன்</b>‌ மற்றும்‌ திரு. <b>நா. காமராஜ்</b> ஆகியோருக்கும்‌ என்‌ நன்றி. இத்தொகுதி நன்முறையில்‌ வெளி வர ஈடுபாட்டுடன்‌ துணை நின்ற பல்கலைக்‌ கழகப்‌ பதிப்புத் துறையினருக்கு என்‌ நன்றியினை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌. {|style="width:100%;" |- |width=150px {{ts|al|fs080}}|இடம்‌ : தஞ்சாவூர்‌.<br>நாள்‌ : 10.03.2004 |width=500px {{ts|ar|fs080}} |முனைவர்‌ <b>‌நே. ஜோசப்‌</b>‌{{gap|5em}}<br>முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌ (பொறுப்பு)<br>களஞ்சிய மையம்‌.{{gap|6em}} <section end="4"/> |}{{nop}}<noinclude></noinclude> qj7xta0cuhis1qc7gbtlijo76a0k2o7 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/13 250 639901 1925655 1922656 2026-04-20T06:59:28Z TI Buhari 4634 1925655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh||ix}}</noinclude><section begin="5"/> <div style="width:500px; font-size:85%"> {{center|{{x-larger|<b>கட்டுரையாளர்கள்</b>}}}} {{columns |col1width = 50% |col1=<b>இயற்பியல்</b><br> திரு <b>ரெ. ஆறுமுகம்</b>‌<br> இயற்பியல்‌ உதவிப்‌ பேராசிரியர்‌<br> அரசுக்‌ கல்லூரி<br> உடுமலைப்பேட்டை–642 126.<br> திரு <b>கே.என்.இராமச்சந்திரன்</b><br> 2024, ஐயன் குளம் கிழக்குக் கரை<br> சகாநாயகன் தெரு, தஞ்சாவூர்–613 001.<br> செல்வி <b>பி. ஏ. ஏஞ்சல்‌ மேரி</b><br> இயற்பியல்‌ துணைப்‌ பேராசிரியர்‌<br> அரசினர்‌ மகளிர்‌ கலைக்‌ கல்லூரி<br> புதுக்கோட்டை–622 001.<br> திரு <b>எம்‌.எஸ்‌. கோவிந்தசாமி</b><br> (முன்னாள்‌) முதன்மைப்‌ பதிப்பாசிரியர்‌<br> களஞ்சிய மையம்‌ (அறிவியல்‌)<br> தமிழ்ப்‌ பல்கலைக் கழகம்‌<br> தஞ்சாவூர்–613 005.<br> திரு <b>மு. சேக் முஸ்தபா‌</b><br> இயற்பியல்‌ உதவிப்‌ பேராசிரியர்‌‌<br> அரசுக்‌ கலைக் கல்லூரி‌<br> உடுமலைப்பேட்டை–642 126.‌<br> திரு <b>சிவ. சேதுராமன்‌‌</b><br> இயற்பியல்‌ பேராசிரியர்‌‌<br> அரசினர்‌ கலைக்‌ கல்லூரி‌<br> உடுமலைப்பேட்டை–642 126.‌<br> திரு <b>ப. தருமலிங்கம்‌‌</b><br> இயற்பியல்‌ பேராசிரியர்‌‌<br> அரசினர்‌ ஆடவர்‌ கலைக்‌ கல்லூரி‌<br> உடுமலைப்பேட்டை–642 126.<br> |col2width = 50% |col2=முனைவர் <b>பெ. துரைசாமி</b><br> அறிவியல்‌ தமிழ்‌ மற்றும்‌ தமிழ் வளர்ச்சித்‌ துறை<br> தமிழ்ப் பல்கலைக் கழகம்<br> தஞ்சாவூர்–613 005.<br> திரு <b>கோ. மணிவண்ணன்‌</b><br> இயற்பியல்‌ துணைப்‌ பேராசிரியர்‌<br> மாமன்னர்‌ கல்லூரி<br> புதுக்கோட்டை–622 001.<br> திரு <b>கி. விஸ்வநாதன்‌</b><br> பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌<br> இயற்பியல்‌ துறை<br> அரசினர்‌ திருமகள்‌ கலைக்‌ கல்லூரி<br> குடியாத்தம்–632 604.<br> வ.ஆ.மாவட்டம்‌<br> <b>கடலியல்</b>‌<br> திரு ச. கோவிந்தராஜன்‌<br> என்‌.ஜி.ஓ. குடியிருப்பு<br> ஆதம்பாக்கம்‌<br> சென்னை–600 088.<br> முணைவர்‌ <b>இரா. சந்தானம்</b>‌<br> இணைப்‌ பேராசிரியர்‌<br> மீன் வளக்‌ கல்லூரி<br> தூத்துக்குடி–628 008.<br> திரு <b>பா. சீதாராமன்‌</b><br> பேராசிரியர்‌ மற்றும்‌ துறைத்‌ தலைவர்‌<br> விலங்கியல்‌ துறை<br> திரு கொளஞ்சியப்பர்‌ கல்லூரி<br> விருத்தாசலம்‌–606 001.}}</div> {{nop}}<noinclude></noinclude> 5gikebfpkbnkywq3jd0labd0eoztrk8 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/10 250 640058 1925652 1923381 2026-04-20T06:52:01Z Ramya sugumar 15106 1925652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{Right|பக்கம்}} {{Dtpl|symbol= |dotend= | 195. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/001| நாட்டுக்கும் நல்லோர்க்கும் <br>அறிவிக்கிறேன்! (8-4-76)]] | {{DJVU page link| 5 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 196. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/002| வடிவேலருக்கு வந்த வாழ்வு! (9-4-76)]] | {{DJVU page link| 12 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 197. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/003| மின்னல் கீற்று! மின்மினிப் பூச்சி!! <br>(10-4-76)]] | {{DJVU page link| 19 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 198. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/004| காரிருளால் சூரியன் தான் <br>மறைவதுண்டோ? (11-4-76)]] | {{DJVU page link| 25 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 199. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/005| சமுதாய மறுமலர்ச்சிக் காண.. <br>(12-4-76)]] | {{DJVU page link| 30 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 200. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/006| கோட்டம் திறக்கப்படுகிறது <br>குறளோவியம் தீட்டப்படுகிறது (15-4-76)]] | {{DJVU page link| 35 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 201. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/007| அமைதி காத்துப் பணிபுரிவோம்! <br>அமைப்பு ரீதியாக இயங்குவோம்! <br>(17-4-76)]] | {{DJVU page link| 50 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 202. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/008| வினாக்கள் குடைகின்றன, <br>விடைதான் கிடைக்கவில்லை! (18-4-76)]] | {{DJVU page link| 56 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 203. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/009| வாய்ப்பந்தல் நிலைக்காது! (21-4-76)]] | {{DJVU page link| 64 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 204. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/010| உண்மை உறங்கிவிடுவதில்லை! (22-4-76)]] | {{DJVU page link| 71 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 205. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 5/011| கோட்டமும் கூடமும் எதற்காக? <br>(24-4-76)]] | {{DJVU page link| 76 | 9}}}} }}<noinclude></noinclude> hmhchywzhl0jkmrdrqc6c6nmk10v9w2 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/23 250 640220 1925659 1924705 2026-04-20T07:13:18Z TI Buhari 4634 1925659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude><section begin="6"/> <section begin="நு"/> {{center|{{x-larger|<b>அறிவியல் களஞ்சியம்</b>}}}} {{center|{{larger|<b>தொகுதி பதினான்கு</b>}}}} {{fs|110%|<b>நுண் கணிதம்</b>}} 17 ஆம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப் பட்ட நுண் கணிதம் (calculus), கணித உலகில் முதன்மை கொண்டுள்ளது. வகை நுண் கணிதம் (differential calculus), தொகை நுண் கணிதம் (integral calculus) ஆகியவற்றைக் கொண்டே, அறிவியல் ஆய்வுகள் வியத்தகு வகையில் வளர்ந்தன. மாறிலிகளும், மாறிகளும் வரையறுக்கப் பட்டுச் சார்புகள் (functions) ஆராயப் படுகின்றன. சார்பு தொடர்புகள், ஒரு மதிப்பு, பன் மதிப்புச் சார்புகள், எல்லைகள், அவற்றைக் காணும் முறைகள் ஆகிய அனைத்து விளைவுகளும் கணக்கிடப் பட்டமையால், தொடர்ச்சியான சார்புகளும் (continous functions), தொடர்ச்சியற்ற சார்புகளும் (discontinous functions), நுண் கணிதத்தில் இடம் பெற்றன. வகைக் கெழுவின் (differential coefficient) அடிப்படையாக இவை அமைந்தன எனலாம். வகைக் கெழுக்களும், தொடர் வகைக் கெழுக்களும் நுண் கணிதத்தில் பெரும் பங்கு கொள்கின்றன. ரோலின் தேற்றம், இடை மதிப்புத் தேற்றம் (mean value theorem), நியூட்டன் விதி, ஹாக்னர் விதி, மீப் பெரு, மீச் சிறு மதிப்பு, சார்புகளின் விரிவு, பகுதி வகைக்கெழு, தொடு வரை செங்கோடு காணுதல், வளைவு (curvature) வளைவு வரை வரைதல் (tracing of curve) போன்றவை வகை நுண் கணிதத்தைச் சார்ந்தே செயல் படுகின்றன. நுண் கணிதத்தில் அடுத்த பகுதியாயுள்ளது தொகை நுண் கணிதமாகும். பல்வேறு சார்புகளின் தொகை காணப் படுவதோடு, வரையறுத்த தொகை (definite integral) கணக்கிடப் படுகிறது. இதன் மூலம், வளை வரையின் நீளம், உருளையின் பருமன், புறப் பரப்பு ஆகியவற்றைக் காணவும், கொடுக்கப்பட்ட வளை வரை பரப்பைக் காணவும், பொருள்களின் புவி ஈர்ப்பு மையத்தை அறுதியிடவும், நிலைமத் திருப்புத் திறனை (moment of inertia) அளவிடவும், எண்ணற்ற வகைக்கெழுச் சமன்பாடுகளைத் தீர்க்கவும் முடியும். {{right|—<b>எம். அரவாண்டி</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="6"/><section begin="7"/> {{fs|110|<b>நுண் கதிர் வரைவியல்</b>}} எக்ஸ் கதிர்கள் அல்லது காமாக் கதிர்களைப் பயன் படுத்தி, நுண்ணோக்கிகளின் மூலம் நுண்ணிய பொருள்களின் உருப் பெருக்கப் பட்ட பிம்பங்களைப் பதிவு செய்வது நுண் கதிர் வரைவியல் (micro radiography) எனப் படும். ஒன்றை விடச் சற்றே குறைவான ஒளி விலகல் எண்ணுள்ள படிகங்களைப் பயன் படுத்தி, எக்ஸ் கதிர்களுக்குச் சாதாரண ஒளியைப் போலவே, முனைவாக்கம் (polarisation), விளிம்பு விலகல், எதிரொளிப்பு, திசை மாற்றம் போன்ற அனைத்துப் பண்புகளும் உண்டு என்பது கண்டு பிடிக்கப் பட்டது. சில விலைகளுக்கு மேற்படாத தடவு கோணங்களில் (grazing angle) எக்ஸ் கதிர்களைக் கீற்றணிகளில் (grating) பட வைத்து<noinclude></noinclude> 5s9tz15o55cidov3bkwy6x6tkttrsv2 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/53 250 640391 1925603 1924684 2026-04-20T06:09:17Z TI Buhari 4634 1925603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நுண்ணுயிர்ச்‌ சூழலியல்‌ 31}}</noinclude><section begin="24"/>{{fs|110|<b>நுண்ணுயிர்க்‌ கொல்லி‌</b>}} நுண்ணுயிரிகளைக் கொல்லும் திறன் படைத்த வேதிப் பொருள் நுண்ணுயிர்க் கொல்லி (bactericide) எனப் படும். ஆனால், இவ்வகைக் கொல்லிகளை மனிதனுக்கு அளிக்கும் போது, அவை நுண்ணுயிரிகளை மட்டுமே பாதித்து, விளைவை ஏற்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும். நுண்ணுயிர்க் கொல்லிகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பொறுத்து, அவற்றை மூவகையாகப் பிரிக்கலாம். <b>செல்சுவர் உற்பத்தித் தடுப்பிகள்</b>. பெனிசிலின், செஃபலோஸ்போரின், சைக்ளோ சீரைன். வேன்கோமைசின், சிஸ்ட்டோ செட்டின், பெசிட்ராசின் ஆகியன இவ்வகையில் அடங்கும். <b>பெனிசிலின்</b>. இவ்வகை நுண்ணுயிரிக் கொல்லி, பெனிசிலியம் நேடேட்டம் என்னும் பூசணக் காளானிலிருந்து எடுக்கப் படுகிறது. பெனிசிலின், செல் சுவர் உற்பத்தியில் மூன்றாம் நிலையைப் பாதிக்கிறது. இந்நிலையில், டிரான்ஸ்பெப்ட்டிடேஸ் எனும் நொதி அடிப்படையாக விளங்குகிறது. பெனிசிலின், இவ்வினையூக்கியைச் செயலற்றுப் போகுமாறு செய்கிறது. இந்நிகழ்ச்சி மறைமுகமானது. செஃபலோஸ் போரினும் பெனிசிலின் போலவே செயல்படுகிறது. <b>சைக்கோசீரைன்</b>. இது செல் சுவர் உற்பத்தியில் முதல் நிலையைப் பாதிக்கிறது. இந்நிலையில் செயல் படும் அலனின் ரெசிமேஸ் மற்றும் D அலனின் சிந்தட்டேஸ் எனும் இரு வினையூக்கிகளையும் அழிப்பதன் மூலம் நுண்ணுயிரிகளைக் கொல்கின்றது. சான்கோமைசீன், ரிஸ்ட்டோசெட்டின், பெசிட்ராசின் ஆகியவை செல் சுவர் உற்பத்தியில் இரண்டாம் நிலையினைப் பாதிப்பதன் மூலம் நுண்ணுயிரிகளைக் கொல்கின்றன. <b>செல் சவ்வு உற்பத்தித் தடுப்புகள்</b>. செல் சவ்வு உற்பத்தித் தடுப்பிகள் எர் கோஸ்டிரால் எனும் ஒரு வகை ஸ்டீராலிலும், ஏனைய சில ஸ்டீரால்களிலும் சேர்க்கை அடைந்து, செல் சவ்வு உற்பத்தியைத் தடுக்கின்றன. மேலும், சில செல் சவ்வு உற்பத்தித் தடுப்பிகள், கொழுப்பு–புரத சேர்க்கையைத் தடுப்பதன் மூலம் அழிவை ஏற்படுத்துகின்றன. <b>கரு அமிலத் தொகுப்புத் தடுப்பிகள்</b>. இவ்வகைக் கொல்லிகள் DNA சைரேஸ், கொல்லிகள் DNA சிந்தட்டேஸ் போன்ற வினையூக்கிகளை அழிப்பதன் மூலம் செல் கருக்கள் உருவாவதைத் தடுக்கின்றன (எ–டு: ரிஃபாம்சின்). {{right|—<b>ச. ஆதித்தன்</b>}} <b>துணை நூல்</b>. Alfred Goodman Gilman et.al., <i>Goodman and Gilman's The Pharmacological Basis of Therapeutics</i>, Sixth Edition, Macmillan Publishing co., Newyork, 1980. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="24"/><section begin="25"/> {{fs|110|<b>நுண்ணுயிர்ச்‌ சூழலியல்‌</b>}} நுண்ணுயிர்களுக்கும், அவை வளரும் சூழ்நிலைக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் அறிவியல் நுண்ணுயிர்ச் சூழலியல் (Microbial ecology) ஆகும். நிலம், நீர், காற்று மண்டலம் ஆகியவற்றில் நுண்ணுயிர்கள் கணக்கின்றி வாழ்கின்றன. இவை தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றின் உட்புறமும், உயிரற்ற பொருள்களின் மேலும் வாழ்கின்றன. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இவற்றின் எண்ணிக்கையும், தன்மையும் மாறு படுகின்றன. கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய உயிரினங்களை நுண்ணுயிர்கள் என்பர். இவை புரோட்டோசோவா (Protozoa), பாசி (algae), பூசணம் (fungus),பாக்டீரியா (bacteria). நச்சுயிரி (virus), நூற்புழு (nemalode) என்பன. ஒரு கிராம் மண்ணில் ஏறத் தாழப் பத்து லட்சம் பாக்டீரியாக்களும், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஆக்டினோமைசிட்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூசணங்களும், நூற்றுக் கணக்கான பாசிகளும், நூற் புழுக்களும், ஏனைய இனங்களைச் சேர்ந்த நுண்ணணுயிர்களும் வாழ்கின்றன. நிலத்தில் வாழும் நுண்ணுயிரிகள் தம் உயிரணுக்களிலிருந்து பல இயற்பியல் பொருள்களை வெளியேற்றுகின்றன. அவ்வாறு வெளியேற்றப்படும் பல பொருள்கள், மண்ணின் தன்மைகளை மாற்றுகின்றன. மண்ணின் அமைப்பும் (structure) நயமும், (texture) மேம்பாடடைகின்றன. இதன் வாயிலாகத் தாவரங்களின் வளர்ச்சி மிகுதியாகிறது. நிலத்தில் விதை விதைக்கப் பட்டவுடன், நிலத்திலுள்ள நீரை உறிஞ்சிக் கொண்டு, பல வித வேதி மாற்றங்கள் பெற்று முளை விடுகிறது. விதையின் மேலும், உள்ளும் உள்ள நுண்ணுயிரிகள் அவற்றிற்குத் தேவையான உணவும்<noinclude></noinclude> 9he8isiz49bv144t33ml1zw06p3ur4x பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/60 250 640435 1925609 1924868 2026-04-20T06:15:33Z TI Buhari 4634 1925609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|38 நுண்ணுயிர்‌ வடிப்பி}}</noinclude>இக்கழிவினை நிலை நிறுத்தப் பட்ட குளங்களில் வைத்திருந்து, வெளியேற்றிய நீரில் சால்மோனால்லாக்கள் இல்லை எனவும் கண்டறிந்துள்ளனர். இம்முறையில், ஈ.கோலி குடல் வழி ஸ்ட்ரெப்டோ கோக்கை மற்றும் மொத்த குடல் வழி நுண்ணுயிரிகளை 99.9% வரை பிரித்தெடுக்கலாமென அறுதியிட்டுக் கூறுகின்றனர். இதே போல், வைரஸ் நுண்ணுயிரியை 10 நாள்களுக்குள் பெரும் பகுதி வெளியேற்றி உள்ளனர். வேதிப் பொருள்கள் மூலம் உறைதல் (Chemical coagulation) செய்யலாம். இம்முறையில், வேதிப் பொருள்கள், எ.டு: ஃபெர்ரிக் குளோரைடு, கால்சியம் கார்பனேட், கால்சியம் குளோரைடு ஆகியவை, இரண்டாந் தர நிலைக்கு உட்படுத்தப் பட்டு வெளியேற்றிய கழிவு நீரில் சேர்த்து, நுண்ணுயிரிகளைப் பெருவாரியாக வெளியேற்றலாம். இம்முறையால் 99.1% வைரஸ் நுண்ணுயிரிகளை அகற்றலாம் என அறிந்துள்ளனர். இவ்வகை வேதிப் பொருள்கள் கழிவு நீரில் சேர்வதால், இந்நீரின் காரம் (alkalinity) மிகுதிப் படுத்தப் பட்டு, நுண்ணுயிரிகளைச் செயலிழக்கச் செய்யும். பெரும் அளவு முன்மாதிரி ஆய்வில் 99.98.5% குடல் வழி நுண்ணுயிரிகளை உறைதல் வண்டல் கசடுகளாக்குதல், வடிகட்டுதல் (Chemical coagulation–sedimentation–filtration) முறையினால்‌ பிரித்தெடுத்து உலர்த்தியுள்ளனர். <b>நுண்ணுயிரிக் கொல்லி</b>. மேற்கூறிய முறைகளில் கழிவு நீரில் உள்ள நுண்ணுயிரிகளை முற்றிலுமாக அகற்றி விட முடியாது. எனவே, நுண்ணுயிரிகளற்ற நீரைப் பெற நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன் படுத்த வேண்டும். குளோரின் பல ஆண்டுகளாக நுண்ணுயிரிக் கொல்லியாக விளங்கி வருகிறது. நாக்குப் பூச்சியின் முட்டை இவ்வகை நுண்ணுயிரிக் கொல்லியால் (0.2–0.6 மி.கி/லி) 30 நிமிடங்களில் முழுவதுமாக அகற்றப் படுகிறது. காட் என்பார் 1975இல் நடத்திய ஆய்வுப் படி நிலை நிறுத்தப் பட்ட குளங்கள் மூலம் தூய்மை செய்யப் பட்டு, வெளியேற்றிய நீரில் 8 மி.கி./லி. குளோரின் (சோடியம் ஹைப்போ குளோரைட்) நுண்ணுயிரிக் கொல்லியைப் பயன் படுத்தி 4.6 X 105 ஆக இருந்த ஈ. கோலியை 2க்கு குறைவாகக் குறைத்தனர். இதே அளவு நுண்ணுயிரிக் கொல்லி வி.காலரேயை அழித்தது. வைரஸ், இவ்வகைக் குளோரின் அல்லது அம்மோனியாக் கொல்லியால் முற்றிலும் வெளியேற்றப்படாமலும், நீர் நிலைகளில் வாழும் மீன்களுக்கும், மீன்களுக்கு உணவாகப் பயன்படும் ஏனைய விலங்குகளுக்கும் அழிவைத் தரும். எனவே ஓசோனேசன் (Oxonation) எனும் முறையினைக் கையாண்டு, இதனைத் தவிர்க்கலாம். மஜும்தார் குழுவினரின் ஆய்வுப் படி, 1 மி.கி./ லிட்டருக்கும் குறைவான ஓசோன், 5 நிமிடங்களில் மேற்கூறிய பணியினை இட்டு நிரப்ப வல்லது எனவும், இதனால், நீர் நிலைகளில் வாழும் மீன்களுக்கும், அவற்றை உண்டு வாழும் மனிதருக்கும், தீங்கு வருவதில்லை எனவும் அறியப் படுகிறது. <b>மீன், இறால் வகைகளில் நுண்ணுயிரிகள் மாசு</b>. நோய் நுண்ணுயிரியும், வைரசும்–கடல், கழி முகங்களில் நுழைவதால், மீன், இறால் வகைகளுக்கு நோய்கள் உண்டாகி, இவற்றை உட்கொள்ளும், மனிதரையும், விலங்குகளையும் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகளால் ஒட்டுண்ணிகள், பண்படாத அல்லது நன்கு வேக வைக்காத மற்றும் உரிய முறையில் பதனிடப்படாத மீன், இறால் வகைகளை உட்கொள்வதால், தொற்றும் என அறியப் பட்டது. பல முன்னேறிய மேலை நாடுகளில் மீன், இறால் மூலமாகக் காலரா, டைபாய்டு, பொட்டுலிசம் (botulism) மற்றும் உணவு நச்சு (food poisioning) நோய்கள் பரவுகின்றன. {{right|—<b>க. வெங்கடேஸ்வரன்</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="28"/><section begin="29"/> {{fs|110|<b>நுண்ணுயிர்‌ வடிப்பி</b>}} நுண்ணுயிரியல் துறையில், நுண்ணுயிரிகளைப் பிரித்தெடுக்க நுண்ணுயிர் வடிப்பி (bacterial filter) பெரிதும் பயன் படுகிறது. <b>வகையீடு</b>. நுண்ணுயிர் வடிப்பினை நால் வகையாகப் பிரிக்கலாம். அவை, உருளை வடிவ வடிப்பி, கல் நார் மற்றும் கல் நார்–காகித வட்டம், கண்ணாடி வடிப்பி, செல்லுலோஸ் சவ்வு வடிப்பி என்பன. <b>உருளை வடிவ வடிப்பி</b>. ஜெர்மனியில் கிடைக்கும் ஒரு வகைப் பழங் காலப் படிவுகளிலிருந்து இவ்வடிப்பி செய்யப் படுகிறது. இந்நிலைப் படிவு கெய்செல்கர் எனப்படுகிறது. (எ-டு. பெர்க்ஃபெல்ட் வடிப்பி). <b>கல் நார் வடிப்பி</b>. குடுவையில் உள்ள சிறு திறப்பான் மின்னோடியுடன் (motor) இணைக்க ப்பட்டுக் குடுவையில் உள்ள காற்று வெளியே உறிஞ்சப் படும் போது, ஏற்படும் வெற்றிடத்ததை நிரப்ப நீர்மம் இறங்குகிறது. சீட்ஸ் வடிப்பி என்பது நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடங்களில் பெருமளவில் பயன் படுகிறது.{{nop}}<noinclude></noinclude> 3n60gf7dhjr9f0t8ir96j19orevyuux பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/61 250 640438 1925613 1924893 2026-04-20T06:20:25Z TI Buhari 4634 1925613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நுண்ணுயிரி 39}}</noinclude><b>கண்ணாடி வடிப்பி</b>. கண்ணாடித் துகள்களை நன்றாகச் சூடு படுத்திச் சேர்ப்பதன் மூலம், பல வகைப் பட்ட துளை அளவு உள்ள வடிப்பிகளைச் செய்கின்றனர். ஏனைய வடிப்பிகளை விட, இவ்வித வடிப்பிகள் விலை குறைவாக இருப்பினும், நுண்ணுயிரியல் துறையில் பெருமளவில் இடம் பெறுவதில்லை. <b>செல்லுலோஸ் சவ்வு வடிப்பி</b>. வடிப்பிகளுள் விலை உயர்ந்ததும், தரமானதும் இவ்வகையினதேயாகும். மேலும், இவ்வகைச் சவ்வு வடிப்பி ஒரு முறைக்கு மேல் பயன் படுத்தப் படுவதில்லை. இதைக் கொண்டு, நுண்ணுயிர்களையும் (virus) பிரித்தெடுக்க முடியும். {{right|—<b>ச. ஆதித்தன்</b>}} <b>துணை நூல்</b>. J.P. Dugulid, B.P. Marmian and R.H.A. Swain, <i>Medical Microbiology</i>, Churchill Livingstone Ltd, Edinburgh, 1980. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="29"/><section begin="31"/> {{fs|110|<b>நுண்ணுயிரி</b>}} நுண்ணுயிரிகள் பல வகைப்படும். இவற்றுள் நன்மை பயப்பவையும், தீமை பயப்பவையும் உள்ளன. இவை காற்று, நீர், சளி, தோல் ஆகியவற்றின் மூலம் உட்சென்று நோயை உண்டாக்குகின்றன. நில நுண்ணுயிரிகள் குருதி, நிண நீர் மூலமாகப் பரவுகின்றன. நுண்ணுயிரிகள் சில குழந்தைகளை மட்டும் பாதிக்கின்றன. வேறு சில அனைவரையும் பாதிக்கலாம். புணர்ச்சி மூலம் பரவும் நுண்ணுயிர்களும் உண்டு. இவற்றைக் கடத்தும் விலங்குகள், நோய்ப் பரப்பிகள் (vectors) எனப்படும். இவற்றுள் கொசு, தெள்ளுப் பூச்சி, மணல் ஈ, எலி, நாய், ஈ முதலியன அடங்கும். நோய்த் தாக்கத்திற்குரிய நுண்ணுயிரை அறுதியிட்டாலே, உரிய மருத்துவம் அளிக்க முடியும். முதலில், நுண்ணுயிர்களைத் தனிமைப் படுத்த வேண்டும். அதற்குச் சிறுநீர், குருதி. மலம், சளி ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். காச நோய் நுண்ணுயிரை (மைகோபேக்டிரிய வகையைச் சார்ந்தது) ஷல்–நீல்சன் என்னும் வண்ணமேற்றும் முறையால் கண்டு பிடிக்கலாம். லீஷ்மென் சாயமேற்றல், கிராம் முறை, மெத்தலீன் புளு முறை, கியெம்சா முறை ஆகியவற்றால், பெரும்பாலான நுண்ணுயிரிகளைக் கண்டு பிடிக்கலாம். சில நோய்களில் சிறுநீர், குருதி, சளி, மூளைத் தண்டு வட நீர் ஆகியவற்றை ஊட்ட ஊடகங்களிலிட்டு (culture media) அவற்றை வளரச் செய்து, இனங் காணலாம். சீமைப் பெருச்சாளி போன்ற ஆய்வக விலங்குகளினுள் ஊசி மூலம் செலுத்தி, நுண்ணுயிரி வளர்ச்சியை உறுதி செய்து ஆவன செய்யலாம். சிவப்புக் காய்ச்சலில், தொண்டையிலிருந்து பூச்சை (throat swab) ஆய்வு செய்தால், குருதியில் ஸ்ட்ரெப்டோலைசின் எதிர்‌ ‘O’ (anti streptolysin ‘O’ titre-ASO) மிகுந்துள்மையைக் கொண்டு நோய் அறுதியிடலாம். ஊட்ட ஊடகங்களில் வளர்ச்சியடைந்த நுண்ணுயிரிகளைப் பல்வேறு நுண்ணுயிர் எதிர் மருந்துகளின் வினைக்கு உள்ளாக்கிச் சிறப்பாக வினை புரியும் மருந்தை அறிந்து கொள்ளலாம். சில நுண்ணுயிரிகள் புற நச்சுகனையும், சில அக நச்சுகளையும் வெளியிடுகின்றன. இதைப் பொறுத்து நோயின் போக்கு அமையும். {{right|—<b>மு.கி. பழனியப்பன்}} துணை நூல்</b>. A.B. Christie, <i>Infectious Diseases, Epidermology & Clinical Practise</i>, Third Edition, Churchill Livingstone, Edinburgh, 1980. <b>வைரஸ்</b>. வைரஸ் பாக்டீரியாவை விட உருவத்தில் சிறியது. எளிய அமைப்பு உடையது. இது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணப் படுகின்றது. இதில் புரோட்டோப் பிளாசம் இராமையால், இது பிற உயிரிகளைச் சார்ந்தே வாழ்கிறது. வைரஸ் தம் வளர்ச்சிக்கும், இனப் பெருக்கத்திற்கும் குறிப்பிட்ட ஓம்புயிரிகளையே நாடுகிறது. வைரஸ் பலவித அளவிலும், அமைப்புகளிலும் காணப்ப டுகின்றது. தாவரங்களைச் சார்ந்துள்ள வைரஸ் குச்சி போன்ற அமைப்பிலும், ஏனைய உயிரிகளைச் சார்ந்து வாழும் வைரஸ் வட்ட உருவத்திலும் காணப் படும். வைரஸ் புரதம் நியுக்ளிய அமிலம் ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளது. இதன் மேல் தோல், புரதத்தால் ஆனது. டீஆக்சி ரைபோஸ் நியுக்ளிய அமிலம் (DNA), ரைபோஸ் நியுக்ளி அமிலம் (RNA) என நியுக்ளிய அமிலம் இரு வகைப் படும். சில வைரஸ்களில் நியூக்ளிய அமிலம்<noinclude></noinclude> ctugxm92k8jmro7n44ek3g21a6wuw76 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/46 250 640478 1925713 1925062 2026-04-20T09:44:09Z Mohanraj20 15516 1925713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" />{{rh|கடிதம்||33}}</noinclude>வேதனை தாங்கிட. முடியாது என்கிறபோது நிச்சயமாகக் காலையில் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது உச்சந்தலையில் நச்சரவு தீண்டியதுபோல முடிவு அறிவிக்கப்பட்டால் உரியவர்களுக்கு உள்ளம் உடைந்து நொறுங்காதா என்ன? இந்த விபத்தில் பொன்னப்ப நாடார் மறைவு, மிகப்பெரும் இழப்பாகும். அவர் குமரி மாவட்டத்தில் வளர்ந்து வந்த அரசியல் தலைவர். பழைய காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமாவார். சட்டப் பேரவையில் அவரோடு நெருங்கிப் பழகிடும் வாய்ப்பு பெற்றவன் நான். எதிர்க்கட்சி வரிசையில் அவர் அமர்ந்து பாராளுமன்ற ஜனநாயக நெறியின் பாதுகாவலனாக விளங்கியதை என்னால் மறக்கவே முடியாது. அடக்கத்தின் உருவம். பொறுமையின் வடிவம், எப்போதாவது ஒரு சமயம் சினம் கொப்பளிக்கும். சீற்றத்துடன் பேசுவார். அடுத்த கணமே அதனையுணர்ந்து திருத்திக் கொள்வார். பழகுவதற்கு இனிய தோழர். வஞ்சகமின்றிப் பழகுவார். பாராட்ட வேண்டியதை மனமாரப் பாராட்டி, கண்டிக்க வேண்டியதை கண்ணியமாகக் கண்டிப்பார். குமரி மாவட்டமெனும் மகுடத்தில் திகழ்ந்த கோமேதகம் அவர்! கொடிய விபத்து அவரை ருசி பார்த்துவிட்டது! நல்லவர் — நாடு வாழப் பாடுபடக் கூடியவர் — தியாகச்சுடர் காமராஜரின் அன்புக்குரியவர் — அவரது இழப்பால் அவர் கட்சியினர் கலங்குவதைப் போலவே, நானும் நமது கழகத்தினரும் அந்த நேர்மையான நண்பரின் பிரிவால் கலங்குகிறோம். அவரது குடும்பத்தாருக்கு இரங்கலைத் தெரிவிக்கிறோம். இதுபோலவே பேரிழப்புக்கு ஆளாகியிருக்கும் எல்லாக் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் உரியதாகுக. {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 13—10—76</b>}}}} {{nop}}<noinclude>க—9—3</noinclude> tgq4ml7dnm63mukz2d6zd35acalh0y0 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/47 250 640479 1925714 1925063 2026-04-20T09:45:29Z Mohanraj20 15516 1925714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Mohanraj20" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>“கிலுகிலுப்பையில் மயங்கி”......</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> நண்பர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள்; அவரது கட்சி என்று கூறப்படுகிற ரசிகர் மன்றத்திலிருந்து மூன்று நான்கு பேர்களை விலக்கி வைத்து இரண்டு விதமான அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். அவரது ரசிகர் மன்றத்தில் இடம் பெற்றிருந்த ஒருசில அரசியல் வாதிகளில் விலக்கப்பட்ட இந்த மூன்று நான்கு நண்பர்களும், எம்.ஜி. ராமச்சந்திரனின் பச்சை குத்தும் திட்டத்தையும், பொதுக்குழு, செயற்குழுக்களை கூட்டாமலே பத்திரிகையில் திடீரென ஒருநாள் பெட்டிச் செய்தி வாயிலாக “அனைத்து இந்தியா” என்று அறிவித்த ஒட்டு வேலையையும் எதிர்த்துத் தங்கள் கருத்துக்களை வெளியிட்டார்களாம். அதனால் அவர்களைப் பிரிவினைவாதிகள் என்றும், இருபது அம்சத் திட்டத்துக்கு எதிரிகள் என்றும் குற்றம் சுமத்தி விலக்கிவிட்ட தாக அறிக்கை விடுத்துள்ளார். இது அவர்களது கட்சி அல்லது ரசிகர் மன்ற விவகாரம். இதில் நாம் ஏன் தலையிட வேண்டும்? தலையிடத் தேவையில்லைதான். ஆனால் எம்.ஜி. ராமச்சந்திரன், விலக்கப்பட்ட தோழர்களுக்கு எழுதியதாக சில ஏடுகளில் வெளியிடப்பட்டுள்ள திறந்த மடலில் பின்வருமாறு ஒரு பகுதியை இணைத்துள்ளார். “நாம் கழகத்தை ஆரம்பிப்பதற்கான முழுமையான காரணங்களை நீங்கள் அப்போது<noinclude></noinclude> 5hh9n2j8low1xasz88ezi0uyu3pp5yj பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/52 250 640531 1925502 1925093 2026-04-19T16:27:56Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1925502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1925503 1925502 2026-04-19T16:31:35Z Mohanraj20 15516 1925503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>“தானாடாவிடினும்..." உடன்பிறப்பே, எந்தக் கட்சியின் உட்பூசலையும் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்குள் ஏற்படுகிற சர்ச்சைகள் - விவா தங்கள் - மோதுதல்கள் - ஆகியவைகளின் காரணமாக விளைகிற பலவீனத்தை நமது கழகத்தை வளர்க்கும் எருவாக ஆக்கிக்கொள்ள நாம் என்றைக்குமே எண்ணிய தில்லை நமது கால்களில் நாம் நிற்க நிற்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்களே தவிர, எதிர் முகாமில் வாரி ஒருவர் ஒருவர் காலை விடுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து "பரவாயில்லை! அந்தப் போட்டியின் பயன் முழுவதும் நமக்குத்தான் கிடைக்கும்” என்று எதிர் பார்த்திருப்பதும் நமக்குப் பழக்கமான பண்பல்ல. தால் -நமது உள்ளம் இலட்சியத்தோடு - நமது கொள்கைகள் தூய்மையானவைகளாக இருந் இரண்டறக் கலந்ததாக இருந்தால் - துணிவும், தெளிவும், கனிவும் கண்ணியமும், நமது குணங்களாகவும் - கடமையும் கட்டுப்பாடும் நமது இலக்கணங்களாகவும் இருந்தால் மக்கள் மன்றத்தில் நமக்கோர் இடம் உறுதியாகவும் நிலையாகவும் அமைந்தே நீரும். 6 6 அதைவிடுத்து; அடுத்த வீட்டில் இடிவிழாதா?'' என்று ஏங்குகிற அசூயைக்காரனைப் போலவும் - “ஆடுகள் முட்டிக் கொள்ளாதா? இடையில் புகுந்து இரத்தம்<noinclude></noinclude> eka4zq0jf1uy1595kvq3c3c9un132rr பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/75 250 640724 1925628 1925320 2026-04-20T06:29:17Z TI Buhari 4634 1925628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நுண்ணோக்கி, எதிரொளிப்பு 63}}</noinclude>செய்யப் படுகின்றன. இதன் உதவியால் 10<sup>-10</sup>–10<sup>-12</sup> கிராமுக்கு அதிகமான எடையில்லாத ஆய் பொருள்களை அடிப்படைப் பகுப்பாய்வு செய்ய முடியும். இது ஒப்பிட்ட அளவில் உயர்ந்த துல்லியமடையதாக இருக்கும். எக்ஸ் கதிர்ப் பிம்பத்தைப் பதிவு செய்ய ஒளிப் படத் தகட்டைப் பயன் படுத்துவதற்கு மாறாகப் பல்வேறு வகைத் தடம் பற்றிகள் (கெய்கர் முல்லர் குழாய்கள்) பயன் படுகின்றன. ஆய் பொருளில் எக்ஸ் கதிர் ஊடுருவிச் செல்வதில் உண்டாகும் வேறுபாடுகளை அளப்பதற்கு, அவை பயன் படுகின்றன. வருங்காலத்தில், இத்தகைய தொழில் நுணுக்கங்கள்–குறிப்பாக வரிக் கண்ணோட்டமிடும் வடிவில் பெரும் பயனுள்ளதாக அமையலாம். பொருத்தமான எக்ஸ் கதிர் அலை நீளத்தைத் தெரிவு செய்வதன் மூலம், செல் வடிவமைப்பில் உள்ள மற்றச் சில சேர்மங்களின் உலர் எடை, நீர் அளவு போன்றவற்றை அறியலாம். ஏறத் தாழ, ஒரு மைக்ரோ மீட்டர் அளவுள்ள பொருளைக் கூட ஆய்வு செய்ய முடியும். இவ்வாறாக 10<sup>-14</sup> கிராம் வரையுள்ள சிறிய எடைகளையும், சில விழுக்காடு பிழையுடன் பகுப்பாய்வு செய்ய முடியும். <b>பயன்கள்</b>. உயிரியல், மருத்துவ ஆய்வு, கனிம இயல், உலோகவியல் போன்ற பல்வேறு துறைகளிலும், எக்ஸ் கதிர் நுண்ணோக்கியியல் பயன் படுகிறது. உயிரியலில், எக்ஸ் கதிர் நுண்ணோக்கியியல் நரம்புச் செல்கள், பல்வேறு வகைச் சுரப்பிச் செல்கள், தசை நார்களின் தனித் தனிக் கட்டுகள், நிறமிகள், அவற்றின் பகுதிகள், திசுக்களின் உலர் எடை, நீர் அளவு, அடிப்படைச் சேர்மங்கள் ஆகியவற்றின் அளவுகளைக் கண்டறியப் பயன் படுகிறது. குறிப்பாகக் கனிமப் பொருள்களைச் சேர்ந்த திசுக்களில், எக்ஸ் கதிர் நுண்ணோக்கியினைப் பயன் படுத்திப் பல்வேறு புதிய தகவல்களை அறிய முடிகிறது. உயிர் வாழ் விலங்குகளின் நுண் புழைச் சுற்றோட்டத்தை, (capillary circulation) இவ்வகையில் ஆராயலாம். சில வகை வேதிப் பொருள்களைக் குருதி ஓட்டத்தில் செலுத்தி, அடுத்தடுத்து, நுண் கதிர் வீச்சுப் படங்களைப் பதிவு செய்யலாம். இந்த முறை நுண் ஆங்கியோ கிராஃபி எனப் படுகிறது. மிகவும் சன்னமான குருதிக் குழல்களை ஆய்ந்தறிய இம்முறை பயன் படுகிறது. மென் மற்றும் மிகு மின் எக்ஸ் கதிர்களை நுண்ணோக்கியியலில் பயன் படுத்தி, உயிரியல் திசுக்களின் மெல்லிய படலங்களை ஆராய வேண்டும். அதிக அலை நீளமுள்ள எக்ஸ் கதிர்களை இதற்கெனத் தனியாக வடிவமைக்கப் பட்ட எக்ஸ் கதிர்க் குழல்களால் உண்டாக்க வேண்டும். ஆய் பொருள் மாதிரியும், ஒளிப் படத் தகடும், உயர்ந்தளவு வெற்றிடமாக்கப் பட்ட எக்ஸ் கதிர்க் குழலில் வைக்கப் பட்டிருக்கும். இவ்வாறு, பெறப் பட்ட படங்கள், செல்களிலும், திசுக்களிலுமுள்ள உலர் எடை பரத்த தீடு. ஆய் பொருளின் கட்டமைப்புகள் பற்றிய தகவல்களை அளக்கும். எக்ஸ் கதிர்களின் சாய் கோணப் படுகையைப் (oblique incidence) பயன் படுத்தி, ஆய் பொருளின் தடிப்பை அறியலாம். இந்தத் தொழில் நுணுக்கத்தால், நரம்புகளின் தடிப்பையும், எலும்புத் திசுக்களின் சேர்மானப் பொருள்கள் போன்றவற்றையும் அறிய முடிகிறது. படலத்தையும் (fiim) ஆய் பொருளையும், ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பொருத்துவதன் மூலம், முப்பரிமாண நுண் கதிர் வீச்சுப் பதிவுகளைப் பெற முடிகிறது. தடித்த திசுப் பகுதிகளைப் பயன் படுத்தினால், எலும்புச் செல்களின் முப்பரிமாண அமைப்பைக் காண முடியும். சுற்றோட்ட ஏற்பாட்டின் நுண் புழை வலையமைப்பின் முப்பரிமாணப் படத்தையும் பெறலாம். {{right|—<b>ரெ. ஆறுமுகம்</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="39"/><section begin="40"/> {{fs|110|<b>நுண்ணோக்கி, எதிரொளிப்பு</b>}} கண்ணுக்குப் புலப்படாத கதிர் வீச்சுக்களைச் சோதனை செய்யப் பயன் படும் நுண்ணோக்கி, எதிரொளிப்பு நுண்ணோக்கி (reflecting microscope) எனப் படும். சில நிலைகளில், இந்நுண்ணோக்கி சாதாரண ஒளி மூலம் ஒளியூட்டப் பட்ட பின்னர், புற ஊதாக் கதிர்களை ஆராயவும் பயனாகும். ஓர் எதிரொளிப்பு நுண்ணோக்கியின் அமைப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதன் பொருளருகு கருவியில் இரண்டு ஆடிகள் உள்ளன. ஒன்று குவி ஆடியாகவும், மற்றது குழி ஆடியாகவும் அமைந்துள்ளன. ஆய்வுப் பொருளிலிருந்து பெறப் படும் ஒளி, குழி ஆடியின் மூலம் சேகரிக்கப் படுகிறது. இக்கதிர்கள் குவிக்கப் படும் புள்ளிக்குச் சற்று மேற்பகுதியில், குவி ஆடியால் தடுக்கப் பட்டு, நுண்ணோக்கியினுள் முதன்மைப் பிம்பம் அமைந்துள்ள தளத்திற்கு மீண்டும் அனுப்பப் படுகின்றன. ஆடிகளின் வளைவுகளும், தொலைவுகளும் ஒளியியல் தொகுதியில் ஏற்படும்<noinclude></noinclude> kmuui5dvaugxqt6u5plv97tbse4c86w பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/82 250 640756 1925633 1925407 2026-04-20T06:33:39Z TI Buhari 4634 1925633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|60 நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை}}</noinclude><section begin="44"/>{{fs|110|<b>நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை</b>}} ஒளி புகும் பொருள்களிலோ, ஒளியை எதிரொளிக்கும் பொருள்களிலோ, கட்ட வேறுபாடு அல்லது ஒளிப் பாதை வேறுபாட்டைக் காணவும், அளக்கவும் பயன் படும் நுண்ணோக்கியே குறுக்கீட்டு முறை நுண்ணோக்கி (interference microscope) ஆகும்‌. <b>கொள்கை</b>. கட்ட ஒப்பீட்டு நுண்ணோக்கியில் படு அலையும், பொருளால் விளிம்பு விளைவுக்குள்ளான அலையும் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டு, அவற்றிற்கிடையே ஒரு கட்ட வேறுபாட்டைக் கொடுத்து, பின்னர், வேறுபாடுற்ற அவ்விரு அலைகளை மீண்டும் இணைத்து, முடிவான படிவத்தைப் (image) பெறலாம். இறுதித் தொகு பயன் அலையின் வீச்சு, படு அலையின் வீச்சை விடக் குறைவு. ஆதலால், ஒளி புகும் பொருள் கண்ணுக்குத் தெரிகிறது. இவ்விளைவே, வேறு முறையில் குறுக்கீட்டு முறை நுண்ணோக்கியில் பயன் படுகின்றது. இதில் படு அலையும், விளிம்பு விளைவுற்ற அலையும் பிரிக்கப் படுவதில்லை. மாறாகப் பொருள் வழியாகச் சென்ற அலையும், அதே ஒளி மூலத்திலிருந்து புறப்படும் மற்றோர் அலையும் குறுக்கீட்டு விளைவுக்குள்ளாகின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 82 |bSize = 820 |cWidth = 353 |cHeight = 210 |oTop = 475 |oLeft = 48 |Location = center}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> படம் 1இல் A என்பது படு அலை; B என்பது ஒளி புகும் பொருளின் வழியே புகுந்து வந்த ஒளி அலை; பொருளில் ஒளி ஆற்றல் வீணாணக்கப் படாமையால், B இன் வீச்சு Aஇன் வீச்சுக்குச் சமமாகிறது. ஆனால், B அலை, A அலையை விடப் பின் தங்கிக் காணப் படுகிறது. அதாவது, கட்ட வேறுபாடு அடைந்துள்ளது. குறுக்கிடும் மற்றோர் அலை, படத்தில் துண்டுக் கோடுகளால் காட்டப் பட்டுள்ளது. அப்பே கொள்கைப் படி, பொருளின் இறுதிப் படிவம், ஒளியமைப்பின் வழியாகச் செல்லும் அனைத்து அலைகளின் தொகு பயனே ஆகும் . குறுக்கிடும் அலையையும் பொருள் வழியே புகுந்த அலை Bயையும் கூட்டினால், கிடைக்கும் தொகு பயன், அலையின் வீச்சு படு அலை Aஇன் வீச்சை விடக் குறைவாக அமைவதை, படம் (1) காட்டுகிறது. அதாவது, ஒளி புகும் பொருள், ஓரளவு ஒளியை உட்கவர்ந்து, கொண்டதாகத் தோன்றுகிறது. அதனால் ஒளி புகும் பொருள் கண்ணுக்குத் தெரிகிறது. குறுக்கிடும் அலையின் வீச்சையும், கட்டத்தையும் மாற்றினால், விளையும் தொகு பயன் படிவமும், வேறுபட்ட தெளிவுடன் காணப் படும். {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 82 |bSize = 820 |cWidth = 353 |cHeight = 490 |oTop = 192 |oLeft = 440 |Location = center}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ‌‌<b>நுண்ணோக்கி‌‌</b>. ஒளியை எதிரொளிக்கும் பொருளின் மேற்பரப்புகளை, நன்கு ஆராய்வதற்கு லின்னிக் குறுக்கீட்டு நுண்ணோக்கி பயன் படுகிறது (படம் 2). ஒளி மூலத்திலிருந்து செல்லும் ஒளி, அரை எதிரொளிப்பு ஆடி Pஆல் இரண்டு ஒளிக் கற்றைகளாகப் பிரிக்கப் படுகிறது. ஒரு கற்றை, பொருளருகு வில்லை அமைப்பு O₁ஆல் குவிக்கப்பட்டு M₁ என்னும் பொருள் பரப்பு மீது விழுகிறது. மற்றொரு கற்றை, O₂ஆல் குவிக்கப்பட்டு, ஒப்பீட்டு பரப்பு M₂ மீது விழுகிறது. இரண்டு எதிரொளிப்புக் கற்றைகளும், குறுக்கீட்டு விளைவுக்குள்ளாகின்றன. அவை ஆடி Pஇல் விழுந்து, ஒன்றாகின்றன. தொகு பயன் படிவத்தைக் கண்ணருகு வில்லை வழியாகக் காண முடியும். M, ஐச் சிறிது சரித்தால்,<noinclude></noinclude> mszde3usk5zw6fo2832et72aukaivzp பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/89 250 640767 1925641 1925434 2026-04-20T06:39:47Z TI Buhari 4634 1925641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நுண்‌ திவலையாக்கி 67}}</noinclude><section begin="50"/>{{fs|110|<b>நுண்‌ திவலையாக்கி</b>}} சிறு பரும அளவிலுள்ள ஒரு நீர்மத்தைப் பல நுண் திவலைகளாகப் பகுப்பதே, நுண் திவலையாக்கம் எனப் படும். நடைமுறையில், நீர்மத் திவலையாக்கம், வேறு பல சொற்களால் குறிப்பிடப் பெற்றாலும், இதற்கான வழி முறையைக் குறிக்கும் செந்தரப் படுத்தப் பட்ட துறைச் சொல் ஏதும் இல்லை. ஒரு நீர்மத்தைச் சிதறல், பீற்றல் முறையில் திவலைகளாக்குதல், தெளித்தல் முறையில் திவலைகளாக்குதல், கருவிகள் கொண்டு, நுண் திவலைகள் கொண்ட மறைப்புப் படலமாக்குதல் (misting) முறைகளில் பல திவலையாக்க முறைகள் உள்ளன. வெவ்வேறு முறைகளில், 10-1000μm விட்டமுள்ள நீர்மத் திவலைகளை உருவாக்க இயலுமாயின், 10μm விட்ட அளவிற்குக் குறைந்த நீர்மத் திவலைகளே நுண் திவலைகள் எனக் கொள்ளலாம். பொதுவாக நீர்ம இயக்க ஆற்றல் முறை (hydraulic), வளிம இயக்க ஆற்றல் முறை (pneumatic), சுழற்சிமுறை (rotary) ஆகிய முறைகளில் செயற்படும் கருவிகள் கொண்டு, நீர்ம நுண் திவலையாக்கம் இயற்றப் படுகிறது. இவை தவிர, அதிர்வு முறை (vibration), நிலை மின் இயல் முறை (electrostatic technique) ஆகிய முறைகளின் வழி இயங்கும் திவலையாக்கிகளும், அண்மையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. கேளா ஒலி அதிர்வி முறையில் நீர்மத்தை நுண் திவலைகள் கொண்ட முகிற்படலமாக மாற்றலும், மீ வெப்ப நிலையில் உள்ள ஒரு நீர்மத்தை நீர்மப் படல வெடிப்பு முறையில் திவலையாக்கம் செய்தலும், புவியீர்ப்பு ஆற்றல் கொண்டு திவலையாக்கம் செய்தலும், நடைமுறையில் இருப்பினும், இம்முறைகளின் நீர்மத் திவலையாக்க மாற்ற விகிதம் குறைவானதே. ‌<b>கொள்கை‌</b>. நீர்மப் பரப்பு இழு விசையின் (surface tension) காரணமாக, எந்த ஒரு நீர்மமும், சிறு பரும அளவில் உள்ள போது, அதன் பரப்பு ஆற்றல் மிகக் குறைந்த அளவில் இருக்கக் கூடிய கோள உருவத்தையே கொள்வதாக அமையும். திவலையாக்க முறையில், நீர்மத்தின் உள்ளீடாக அல்லது வெளியிலிருந்து செயல் படும் ஒரு விசையின் மூலம் நீர்மப் பரப்பு விசையின் ஒருமித்த இந்த விளை பயனைத் தகர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். நீர்மத்தில் இயல்பாக உள்ள பாகியல் தன்மையால் உண்டாகும் சறுக்குப் பெயர்ச்சி இறுக்க விசை (Shearing stress), எத்தகைய படிவ மாற்றத்தையும் எதிர்ப்பதாய் இருப்பதால், சமன் செய்து நிலைமத் தன்மைக்கு மீட்கும் வகையில் அமையும் அல்லது நீர்மத்தைச் சிறு பகுதிகளாகப் பிரிக்கும் அந்த விசையினைக் குறைப்பதாய் அமையும். இந்நிலையில் நீர்மத்தைச் சூழ்ந்துள்ள புற ஊடகத்தால் செயற்படும் சறுக்குப் பெயர்ச்சி அழுத்த விசை நீர்மத் திவலையாக்கத்தை எளிதாக்கும் வகையில் துணை நிற்கும். மிக எளிமையான திவலையாக்கம் தொங்கு முறையில் (pendant drops) பெறப் படுவதாகும். மிகக் குறைந்த அளவில் கசியும் வகையில், ஒரு பரப்பின் மேல் பாயும் நீர்மம் (எ-டு) வழியே மிகக் குறைந்த வேகத்தில், ஒரு நுண் குழாய் வழியே கசியும் நீர்மம், அதன் விளிம்பை அடையும் போது, புவியீர்ப்பால் இழுக்கப் பட்டுச் சிறு துகளிகளாக நுனியிலிருந்து வடிகிறது. ஒரு தட்டையான பரப்பின் மேல் படலமாகப் பரந்து நிற்கும் நீர்மமும், புவியீர்ப்பால் ஒரு நுனி வழியே துளியாக வடியும் (எ-டு) இலை மேலுள்ள நீர் இலை நுனி வழி வடிதல்) இவ்வகையில் 500μm விட்டத்திற்குக் குறைவான நீர்த் துளிகளைப் பெற இயலாது. நடை முறையில் நீர்மத் திவலையாக்கம் பயனுள்ள வகையில் அமைய வேண்டுமாயின், திவலைகள் நுண் அளவினவாகவும், நீர்மத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் தொடர்ந்து பெறும் வகையிலும் இருக்க வேண்டும். இதற்கான பொதுவான வழிமுறைகள் கீழ் வருமாறு: 1. பரும நிலையிலுள்ள நீர்மத்தை முடுக்கத்துடன் பாயச் செய்து, ஒரு படலமாகவோ, ஒரு நுண் நீர்ம ஓட்டமாகவோ, நீர்த் தாரை வடிவிலோ மாற்றுதல். 2. அவ்வாறு செல்லும் நீர்மத்தின் பரப்பில், சிறு அதிர்வுகள், சிறு அலைவுகள் (ripples) அல்லது புடைப்புகள் இடையே செயற்படும் வகை செய்தல். 3. நீர்மப் பரப்பில், நீர்ம அழுத்தம், அல்லது ஏனைய விசைகளின் இயக்கத்தால், நீர்மத்தை நுண நீர் பீற்றுக்களாகப் (ligamants) பிரித்தல் அல்லது பகுத்தல். 4. இச்சிறு நீர்மப் பீற்றுக்கள் நீர்மப் பரப்பு விசைச் செயற்பாட்டால் சிறு திவலைகளாக மாற்றமடைதல். 5. நீர்மத் திவலைகள் மேலும் ஒரு வளிமத்தின் ஊடே செலுத்தப் பட்டு, அதன் அழுத்தம், இறுக்க விசை விளைவாகச் சிதறி, நுண் திவலைகளாக மாற்றமடைதல். குறைந்த வேகத்தில் இயங்கும் நுண் திவலையாக்கிகளின் எந்திர ஆற்றலை, நீர்மப் பரப்பு விசை ஆற்றலாக மாற்றும் நிலை மாற்ற இயக்கு திறன் (conversion efficiency) மிகுந்து,<noinclude><br>{{rh|அ. க. 14–5அ}}</noinclude> 2atd32drd95sj000dv1yd7y3poqo0yp பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/91 250 640769 1925471 2026-04-19T13:36:05Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நுண்‌ பயிர்ப்‌ பெருக்க முறை 69}}</noinclude>பாரம்பரியப் பண்புகள் (genetic characters) சிறிதளவும் மாறாது கண்காணித்து வருவதும் குறிப்பிடத் தக்கது. <b>மறு பெருக்க முறைகள்</b>. இதில் புறத் தண்டு முனை நீட்சி, இலைக் கோணத் தண்டு வளர்ச்சி, சல்லித் தண்டு, உறுப்புப் பெருக்கம், கருப் பெருக்கம் (embryogenesis) முதலியவை அடங்கும். புறத் தண்டு முனை, செடிகளின் வளரும் இடத்தில் உள்ள பல கணுக்களும் (nodes) கணு இடைவெளிகளும் மிக நெருக்கமாக இணைந்துள்ளன. ஒவ்வொரு கணுவிலும் மிக நுண்ணிய இலைகளும், பக்க வாட்டுப் புறத் தண்டுகளும் உள்ளன. வளரியல் அறுத்தெடுக்கப்பட்ட தண்டு முனையின் மீதுள்ள புறத் தண்டின் நுனி, வளரத் தொடங்கி, நுண் செடி (plantlet) தோன்றுகிறது. புறத் தண்டின் நுனியில் 0.5 மி.மீ. அளவு அறுத்த பகுதியில் சில இலைகள் உள்ளன. வைரஸ் தாக்காத, தூய நிலையில் உள்ள இதனை, வளரியில் (culture) கருத்தூன்றி வளர்த்தால், ஒரு புதிய செடி தோன்றும். <b>இலைக் கோணத் தண்டு வளர்ச்சி</b>. கொய்த செடியிலுள்ள புறத் தண்டின் பக்க வாட்டத்தில் வளரும் முனைகள் தூண்டப் பட்டுப் புறத் தண்டு முனை வளர்ச்சி ஒடுக்கப் படுகின்றது. இவ்வளர்ச்சி முனை தீவிரமாகப் பன்மடங்கு பெருகி, மீண்டும், மீண்டும் வளர்ச்சியுற்றுப் பெருகுந் தன்மை கொண்டுள்ளது. <b>சல்லித் தண்டு வளர்ச்சி</b>. பொதுவாக வேர், இலை, குமிழ்ச் சிதல் (bud scale) போன்றவற்றின் மீது சல்லித் தண்டுகளைப் பதித்துச் செடிகளைப் பெருக்குவதுண்டு. இரு விதையிலைச் செடிகளின் தண்டிலிருந்து, சல்லித் தண்டு மீள் வளர்ச்சியுறுதல் மிகவும் அரிது. சில சமயங்களில், இயற்கையாகத் தண்டுகள் வளர்வதுண்டு, கொய்த செடியின் பகுதிகளை வளரியில் இட்டு வளர்த்தால், சல்லித் தண்டுகள் தோன்றுகின்றன. கொய்த பகுதியிலிருந்தும், வேறு பகுதியிலிருந்தும், பொதுத் திசுவிருந்தும் (Callus tissue) தண்டு தோன்றலாம். <b>புறத் தோல் வளரிகளில் உறுப்புப் பிறப்பு</b>. புறத் தோல் திசுச் செல்களிலிருந்து வேர்களும் தோன்றுவதை, உறுப்புப் பிறப்பு (organogenesis) எனலாம். பாரன்கைமா செல்கள் நிரம்பிய செல் திண்மம் ஆக்கு திசுக்களாகிக் குறிப்பிட்ட வளரிகளுக்கேற்ப உறுப்புகள் தோன்றத் தொடங்கும். இது தொய் பகுதியிலிருந்து சல்லித் தண்டுகள் தோன்றுவதனை ஒக்கும்; ஆனால், இதில் தனிப் பட்ட புறத் தோல் தோன்றும் கட்டமும் அடங்கியுள்ளது. <b>கருப் பெருக்கம்</b>. இயல்பான நாற்றுச் சுழற்சியில் (seedling cycle) ஒற்றைச் செல் கொண்ட நுண் வித்திலிருந்து கரு உற்பத்தியாவது முதல் கருப் பெருக்கம் தொடர்கிறது. இயங்கும் தன்மையிலுள்ள இளநீர் மற்றும் ஆக்சின் கரைசலில் வளர்த்த காரட் செல்களைச் சுரப்பி சாராத வளரியில் வளர்த்தால், பல ஆயிரக் கணக்கான தனிப் பட்ட கருக்கள் உண்டானது குறிப்பிடத் தக்க கண்டு பிடிப்பாகும். இவை கருவினிகள் (embroyoids) அல்லது பிறப்புச் சாராக் (somatic) கருக்கள் எனப் படும். செடியின் மிகச் சிறிய பகுதியினைப் பிரித்தெடுத்து, அதனை நுண்ணுயிரிகள் அணுகாது, வளரியில் இடுவதிலிருந்து நுண் பெருக்கம் தொடங்குகிறது. இதனைத் தொடங்கும் செடி, கொய்த செடி (explant) எனப் படும். இதிலிருந்து, புதிய தண்டு உண்டாக்குவதனைப் பெருக்கு (propagule) எனலாம். இவற்றை மேலும் பெருக்கி, நுண் செடிகள் உண்டாக்கப் படுகின்றன. <b>கொய்த இலைப் பகுதி</b> (Vegetative explant). வளரும் தண்டின் மிகச் சிறிய பகுதி கொய்து எடுக்கப் படுகிறது. இதில், குவிந்த தண்டும், அதன் கீழ் வளரும் நுண் இலைகளும் அடங்கியிருக்கும். மிகவும் விரைவாக வளரும் தண்டின் நுண்ணிய பகுதியில் பூசணம், பாக்டீரியா, வைரஸ் போன்றவை தாக்காத 0.25–1.0 மி.மீ. நீளமுள்ள பகுதி வளர்க்கப் படுகிறது. இவ்வாறு, கொய்யும் பகுதி சிறியதாயின், நோய்கள் தாக்குவது குறைவு. ஆயினும், இதை வளர்ப்பது எளிதன்று. குறைந்த செறிவுள்ள சைடோகினினும், மிதமான ஆக்சினும் இக்கொடியின் வளர்ச்சிக்கு உதவும். பின்னரே, இதனை ஆக்சின் இல்லாத வளரிக்கு மாற்றி, வேர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கலாம். சிறிதளவு ஜிப்பெரேல்லிக் அமிலம், லிட்டருக்கு 0.1 மி.கி. சேர்ப்பது உதவியாக இருக்கும். ஆனால், இதனை மிகுதியாகச் சேர்த்தால், வேர் தோன்றுவது குறையும். இம்முறை உருளைக் கிழங்கு, ஈரிதல் மலர்ச் செடி வகைகள் (carnations) சூரிய காந்தி வகைகள், வண்ண மலர்ச் செடி வகைகள் (Orchid) முதலியவற்றைப் பெருக்குவதற்கு மிகவும் ஏற்றது. <b>தண்டு நுனி ஒட்டு</b>. ஆப்பிள், எலுமிச்சை போன்ற செடிகளின் மூன்று சிற்றிலைகளும், புறத் தண்டும் கொண்டு 0.14–0.18 மி.மீ. அளவுள்ள பகுதியினை ஒட்டுதல் மூலம் பெருக்கலாம். தண்டு அல்லது வேர்களின் மூலம் மறு தோற்றமுறாத கட்டைச் செடிகளின் (woody Plant) வைரஸ் தாக்காத சிறு பகுதியினை வளரியில் பெருக்கலாம். எலுமிச்சைச் செடியின் இளம் பருவத்தினைச் தவிர்த்து. முதிர்ந்த செடிகளை உற்பத்தி செய்ய இம்முறை ஏற்றது.{{nop}}<noinclude></noinclude> to3db1q8nslmyx3xt2cqd0w9atyzhgb பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/92 250 640770 1925472 2026-04-19T14:02:11Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|70 நுண்‌ பயிர்ப்‌ பெருக்க முறை}}</noinclude><b>நுனித் தண்டு வளர்ச்சி</b>. கொம்புகளை நட்டு வளர்ப்பதனைப் போன்று, நுனித் தண்டுகளின் மூலம், செடிகளைப் பெருக்கலாம். இதனை வளர்க்கப் பயன்படுத்தும் ஹார்மோனைப் பொறுத்து, வெற்றி அமையும். இது கொய்த நுனி அல்லது பக்க வளர்ச்சி முனை அல்லது பல கணுக்களின் வெட்டுப் பகுதியாக இருக்கலாம். இது 0.1–0.5 மி.மீ. வரை வேறுபட்ட பருமன் உள்ள பகுதியாக இருக்கலாம் அல்லது 0.5–2 மி.மி. விரியாத தண்டு முனையாக இருக்கலாம். பருமனுள்ள பகுதியினைக் கொய்வது எளிதாயினும், வைரஸ் போன்றவை இராமை அரிது. முதிராத தண்டின் 1–2 செ.மீ. நீளமுள்ள துண்டும் பயன் படும். இது பெருக்கத்தின் செயல்பாட்டிற்கு ஏற்றதாயினும், நோய்களின் தாக்கம் மிகுதி. ஒரு மொட்டுள்ள பக்க கணுவின் பகுதிகளையும் பயன் படுத்தலாம். தண்டு முனைப் பகுதிகள் நீண்டு வளர்ந்து, இலைக் கோணப் புறத் தண்டுகளும் தோன்றும். பெருக்கியைப் பல முறை மாற்றுவதால், செடிகளின் பெருக்கம் பரவலாகிறது. ஆனால், பெருக்கம் இலைக் கோண மொட்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்துள்ளது. வளரிகளின் அடிப் பகுதியிலுள்ள புறத் தோலிலிருந்து சல்லி மொட்டுகளும் பெருகும். வளரிகளின் தேவைகளையும், செயல்பாடுகளையும் வரிசைப் படுத்திப் பல்வேறு வகைச் செடிகளையும் நன்கு பெருக்கிடலாம். இது வளமையான முறையில் போத்துகளின் மூலம், செடிகளைப் பெருக்குவதனை ஒத்திருப்பதால், இம்முறை பரவலாகப் பயன் படுகிறது. <b>சல்லித் தண்டு வளர்ச்சி</b>. நேரடியாகக் கொய்த பகுதியிலிருந்தும், கொய்த பகுதியின் புறத் தோலிலிருந்தும், புதிய தண்டுகள் தோன்றலாம். இவ்வாறு தோன்றுவது கொய்த செடிப் பகுதியின் தேர்வையும், ஹார்மோனையும் பொறுத்துள்ளது. இலைத் துண்டு, தண்டு முனை, வித்திலைக் கீழ்த் தண்டு (hypocotye), இளம் ஊசியிலைத் தொகுப்பு, முதிராத பூமஞ்சரி (inflorescence), குமிழ் தண்டுச் சிதல், உருளை கிழங்குத் திசு ஆகியவற்றின் கொய் பகுதிகளின் மூலம் பெருக்கலாம். <b>நுண் பயிர்ப் பெருக்க முறைக்குரிய காரணிகள்</b>. நுண் பெருக்க முறையில் அமைவு (establishment), பெருக்கம் (multiplication), நாற்று நடு முன் நிலை (pretransplant), நடவு (transplant) என்னும் நான்கு கட்டங்கள் உள. சில இனச் செடிகளைப் பெருக்க இம்முறைகளைத் தவறாது, கடைப் பிடிக்க வேண்டும். இதில் பயன்படுத்தும் ஊடகம் இரு வகையில் பயனுள்ளது. செடியிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட பகுதி தொடர்ந்து வளர்வதற்கு ஏற்ற ஊட்டச் சத்துக்களை அளிப்பதோடு, பெருக்கச் செடி வளர்ச்சிக்கும் ஊடகம் உதவுகிறது. இச்சிறு பகுதியின் வளர்ச்சியையும், மேம்பாட்டினையும் சுரப்பிகள் இயக்குகின்றன. சுரப்பிகளின் கட்டுப்பாடு சுரப்பியின் வகை அல்லது வளர்ச்சியினை முறைப் படுத்தி அடர்த்தி அது பயன் படுத்தும் வரிசைப்பாடு ஆகியவற்றினால் அமையும். சைட்டோகிளைன், ஆக்கின்களில் அடங்கிய சுரப்பிகளைப் பொறுத்துப் பல வகைப்பட்ட செடிகளின் வளர்ச்சி வேறுபடும். <b>அமைவு</b>. முதிர்ந்த பகுதிகளை விடப் பொதுவாக, இலைக் கோணத் தண்டு நுனி வேற்றிடத் தண்டு (adventitious root) ஆகிய இளம் திசுக்கள் மிக நன்றாகச் செழித்து வளர்கின்றன. முதிராத பூ மொட்டுகளும், பூ மஞ்சரிகளும் மிக எளிதில் வளரக் கூடியவை. சேமிக்கும் பகுதிகளையும், மொட்டுகளையும் வளர்க்க உறங்கு நிலைகளின் பாங்குகளைக் கவனிக்க வேண்டும். ஒரு செடியின் பல உறுப்புகள் அவற்றின் உட்பாரம்பரியத் தன்மைகளுக்கேற்ப மாறு படுவதால், கொய்த பகுதியின் வெற்றிகரமான வளர்ச்சி, கொய் பகுதியின் தேர்வினைப் பொறுத்து அமைகிறது. இச்செடிகளின் பகுதிகளைக் கையாளும் முறையினை ஒத்து, இவை நோயுராதிருக்கும். கட்டுப்படுத்திய ஒளி மற்றும் வெப்ப நிலைகளில் செடிகளின் பகுதிகளைச் சேமித்து, அவற்றின் வாழ்வியல் கட்டத்திற்கேற்ற வளர்ச்சியினைத் தோற்றுவிக்கலாம். கட்டை மர வகைகளில், ஆதார மரத்தின் (Source free) பகுதியில், இளம் தளிர் வளர்ச்சியினைத் தூண்டலாம். கொய்து எடுத்த பகுதி. பிரித்த பகுதி ஆகியவற்றினைப் பூச்சி, பூசணம் தாக்காது காத்தல் மிகவும் இன்றியமையாதது. இலைக் கோணத் தண்டு தோன்றுவதற்குச் செறிவு குறைந்த வளர் ஊக்கியும், சைடோகினைனும் தேவை. சல்லித் தண்டு தோன்றுவதற்குச் செறிவு மிக்க சைடோசினைனும் அதனை ஒத்த ஆக்சினும் தேவை. புறத் தோல் உண்டாவதற்குச் செறிவு மிக்க ஆச்சினும், செறிவு குறைந்த சைமோசினைனும் கலந்திட வேண்டும். சில சிற்றினங்களின் வெட்டுப் பகுதியிலிருந்து தோன்றிய பொருள்கள், வளரியினுள் கலந்து வளர்ச்சி குறைவதுண்டு. வளரி நீர்மத்தின் நீரை அடிக்கடி மாற்றி, இப்பொருள்களைக் கழுவிடலாம். உயிர் வளி மயத் தடுப்பான்களான (antioxidants) ஆஸ்கார்பிக் அல்லது சிட்ரிக் அமிலத்தினைத் தொடக்க நிலையில் பயன் படுத்தி அல்லது வளரும் நீர்மத்துடன் கலந்து, இதனைத் தடுக்கலாம். ஊக்கமூட்டிய (activated) கரியினை, வளரியில் இடலாம். கட்டைச் செடியின் பகுதிகளைத் தொடக்கத்தில் சுரப்பிகள் கலவாத வளரியில் இரு வாரங்கள் வளர்த்து மாசுபடும் பகுதிகள் உள்ளனவா என்று கண்டறியலாம். இவற்றில் மிகவும் விரைவாக வளரும் பகுதிகளைப் பிரித்து மேலும் பெருக்கிடலாம்.{{nop}}<noinclude></noinclude> t0hq13onyoi1rb8bovsuuydx5vtiify பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/93 250 640771 1925474 2026-04-19T14:16:48Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நுண்‌ பயிர்ப்‌ பெருக்க முறை 71}}</noinclude><b>பெருக்கம்</b>. முதல் கட்டத்தில், வளர்ந்த கொய் பகுதிகள் சிறு துண்டுகளாக்கப் பட்டு, மேலும் வளருவதற்குப் புதிய வளரி ஊடகத்தில் இடப் படும். இலைப் பகுதித் தண்டுகளின் வளர்ச்சி, சல்லித் தண்டுகள் தோன்றுவதனைப் பொறுத்துள்ளது. இப்பெருக்கம் ஒவ்வொரு கட்டத்திலும், தொடர்ந்து செய்யப் படுகிறது. மிகவும் ஏற்ற வளரியில் இப்பெருக்கம் மிக உயர்ந்திருக்கும். கொய் பகுதியின் அளவினைத் தீர்மானித்து, அதனை வளரியில் இட வேண்டும். ஒரு கட்டப் பெருக்கத்திலிருந்து மறு கட்டத்திற்குக் கொய் பகுதிகளைத் தாமதமின்றி மாற்றிட வேண்டும். கொய் பகுதிகளை வளர்க்கும் பாத்திரம், செடி வளரத் தேவையான பரப்பைப் பொறுத்தது. அடர்த்தி 0.3–0.4% உள்ள அகர் கரைசலில் கொய் பகுதி படிப் படியாக முழ்குமாறு வைக்க வேண்டும். கரைசல் உள்ள பாத்திரத்தில் இந்நீர்மத்தின் மட்டம் குறைவாக இருக்க வேண்டும். நீர்ம வளரிகள் கொண்ட பாத்திரம், நிமிடத்திற்கு ஒரு சுற்று வீதம் சுற்றுமாறு அமைக்கலாம். வண்ண மலர்ச் செடி வகைகளுக்கு இம்முறை பயன் படும். <b>நாற்று நடு முன் நிலை</b>. கட்டுப் படுத்தப் பட்ட நிலைகளில், பெருக்கப் பட்ட நுண் செடிகளை இயற்கைச் சூழலில் நடுவதற்கு வேண்டிய ஆயத்தம் செய்தல் அடிப்படையானது. பெருக்க கட்டத்தில், உயர் அளவு சைடோசினைன் வளரியில், கொய் பகுதியின் தண்டு பெருக்கப் படும். இந்நிலையில் வேர் விடும் செயல் குறையும். நாற்று நடு முன் கட்டத்தில், தண்டு வளர்ச்சியும், வேர் தோன்றுவதும் குறிப்பிடத் தக்கவை. இதற்குச் சைடோகிளைன் செறிவு குறைக்கப் படுகிறது அல்லது நீக்கப் பட்டு, ஆக்சின் மிகுதியாகச் சேர்க்கப் படுகிறது. ஆக்சின் நீர்மத்தில் 2–4 வாரங்களில் வேர்கள் உற்பத்தியாகின்றன. வளரும் கொய் செடி, நுண் செடி வளர்வதற்குத் தேவையான ஆற்றலை சுக்ரோசிலிருந்து பெறுகிறது. இந்நுண் செடி பச்சையாக இருப்பினும், ஒளிச் சேர்க்கையின் (Photosynthesis) மூலம் ஆற்றலைப் பெற இயலாது. இதனைப் பர ஊட்ட நிலை (heterotrophic) எனலாம். நான்காம் கட்டத்தில், நாற்று நட்ட நிலையினை அடைந்து, நுண்ணூட்ட உயிரி (autotrophic) ஆகிறது. வளரியிலிருந்து புதிய சூழலில், இந்நுண் செடியில் தோன்றிய புதிய இலைகள் ஒளிச் சேர்க்கையின் மூலம் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் பெறுகின்றன. இவ்வினச் செடியின் நிலையினைத் தாங்கும் ஆற்றல் குறைவு; மேலும், நோய்கள் எளிதில் தாக்குறும் நிலையும் உள்ளது. <b>நடவு</b>. செயற்கைச் சூழலில் நோய்த் தாக்காத நீர்ம வளரியிலிருந்து, நுண் செடி தடையிலாத இயற்கைச் சூழலில் சென்று, பசுங்குடிலில் (green house) சென்று, இறுதியாக வயலில் நடப் படுகிறது. இதன் தொடக்கத்தில், நுண் செடியில் வேர் தோன்றியுமிருக்கும் அல்லது தோன்றாமலும் இருக்கும். இதனால், இந்நுண் செடி புதிய சூழலினை ஏற்று, வளரும் திறனைப் பெற வேண்டும். இதன் வேர்கள் மண்ணில் செல்ல வேண்டும். தண்டு வளர வேண்டும். இலைகள் ஒளிச் சேர்க்கையில் ஈடுபட வேண்டும். நுண் செடி நட்டதும், 3 வாரங்களுக்கு ஈரப் பதம் கூடுதலாக இருக்குமாறு கவனிக்க வேண்டும். மேலும், இளம் கன்றின் வேர்கள் எளிதில் இறங்குவதற்கு வசதியாக, மண் பொலபொலப்பாக இருப்பது இன்றியமையாதது. <b>நோய்க் காப்பு</b>. நுண் செடிகள் வளரும் வளரியில், நோய்கள் அணுகாது பேணுதல் வேண்டும். பூசணம், பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவை எங்கும் பரவியுள்ளன. இவற்றின் விதைகள் காற்று, தூசி ஆகியவற்றில் கலந்து, பல இடங்களுக்குப் பரவுகின்றன. ஆய்வுக் கூடம், கருவிகள் போன்றவற்றை மருந்து தெளித்துத் தூய்மைப் படுத்த வேண்டும். செடிகளின் மேற்பரப்பிலுள்ள நோய்க் காரணிகளை அகற்றுதல் எளிது. ஆனால், உட்பகுதியில் உள்ளவற்றை அகற்றுதல் எளிதன்று. மிகவும் குளிர்ந்த சூழ்நிலையில் வளரும் செடிகளின் உட்பகுதியில் உள்ள காளான் கிளைகளை அகற்றுதல் சிக்கலானது. இக்காரணிகளை அகற்றப் பயன் படும் மருந்துகள் கொய் செடிகளுக்கு நச்சாகாது கவனிக்க வேண்டும். கால்சியம் ஹைபோகுளோரைட், சோடியம் ஹைபோகுளோரைட் போன்றவை இதற்கு மிகவும் பயனுள்ளவை. பயிர்களையும், செடிகளையும் விதை மூலம் பெருக்குதல் பழங்காலம் முதல் நடை பெற்று வருகிறது. சில வகைச் செடிகளின் கொம்பு மற்றும் இளம் கன்றுகளை நட்டுச் செடிகள் பெருக்கப் படுகின்றன. பயிர்கள் நோய், பூச்சிகளினால் பெருமளவு சேதமுறுகின்றன. நோய், பூச்சித் தாக்குதலைத் தாங்கும் தன்மையுள்ள பயிர்களைத் தோற்றுவிக்க அயல் கருவுறும் முறை பயன் படுகிறது. இதுவன்றி இயற் தேர்வும் (natural selection) நடை பெறுகிறது. சிறந்த பண்புகளைக் கொண்ட பயிரினை உருவாக்க மிகுந்த காலம் தேவையாகிறது. எனவே, குறுகிய காலத்தில் பயிர்ப் பெருக்கம் செய்வது இன்றியமையாதது. இச்சூழலில், நுண் பயிர்ப் பெருக்க முறை மிகவும் பயனளிக்கும். இதில் புறத் தண்டு முனை நீட்சி, இலைக் கோணத் தண்டு, சல்லித் தண்டு, உறுப்புப் பெருக்கம், கருப் பெருக்கம், கொய் இலைப் பகுதி வளர்ச்சி, தண்டு நுனி ஒட்டு, இனப் பெருக்கக் கொய் பகுதி முதலியவற்றால், செடியின் மிகச் சிறு பகுதிகளைத் தேர்ந்து, வளர் ஊடகத்தில்<noinclude></noinclude> a5o3a9kitclx25asqxro9cn48g4z04s பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/94 250 640772 1925480 2026-04-19T15:10:36Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude>கட்டுப்பாடான நிலையில் ஆய்வுக் கூடங்களில் பெருக்கலாம். {{right|—<b>கே.ஆர். திருவேங்கடசாமி</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="51"/><section begin="52"/> {{fs|110|<b>நுண் புழைப்‌ பாய்வு</b>}} குறைந்த குறுக்கு வெட்டுப் பரப்புடைய ஒரு குழாயின் வழியாகப் பாயும் ஒரு பாய்மத்தின் ஒவ்வொரு துகளும், அதன் முந்தைய துகளின் பாதையிலேயே செல்வதுடன், பாய்மத்தின் அனைத்துப் புள்ளிகளிலும் திசை வேகம் நிலையான மதிப்பினையும் கொண்டிருக்கும். இந்நிகழ்வு வரிச் சீர் இயக்கம் (streamlined motion) எனப் படும். இப்பாய்மப் பாதை நேராகவோ, வளைந்தோ அமைந்திருக்கும். இவை படத்தில் காட்டப்பட்டுள்ளன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 94 |bSize = 820 |cWidth = 353 |cHeight = 275 |oTop = 440 |oLeft = 28 |Location = center}} ABC என்னும் வரியினைச் சீரியக்கத் திசை எனலாம். இத்திசையில் குறிப்பிட்டதொரு புள்ளியின் தொடு கோடு அதன் திசை வேகத்தினைக் குறிக்கும். பாய்மத்தின் திசை வேகம் ஒரு குறிப்பிட்ட உச்ச மதிப்பினை விட அதிகரிக்கும் போது, இச்சீரியக்கம் சிதைந்து சுழல் இயக்கமாக (vortex motion) மாறுகிறது. திசை வேகத்தின் இந்த உச்ச மதிப்பினை மாறு நிலைத் திசை வேகம் என்பர். இம்மதிப்பினை <math> Vc = \frac {k\eta}{pr}</math> என்னும் சமன்பாட்டால் பெறலாம். η, p என்பன முறையே பாய்மத்தின் பாகியல் எண்ணையும், அடர்த்தியினையும் குறிக்கின்றன. r என்பது குழாயின் ஆரமாகும். K என்னும் மாறிலி பரிமாணமற்ற ஓர் எண்ணாகும். இது ரேனால்டு எண் எனப் படும். மேற்காணும் சமன்பாட்டின் மூலம் குறைந்த அடர்த்தி மற்றும் உயர்ந்த பாகியல் எண் தவிர, சீர் பாய்முறைக்கு நுண் குழாயும் தேவை என்பது தெளிவாகும். எனவே, ஒரு நுண் குழாய் வழி நீர்மம் அல்லது வளிமம் பாய்ந்து செல்லும் போது அமையும் சீரான பாய்மப் பாய்தலையே நுண் புழைப் பாய்வு (capillary flow) எனலாம். இவ்வகை நிலையான நீர்மப் பாய்முறையினைப் பாய்சியூல் என்னும் அறிவியலார் விரிவாக ஆராய்ந்தறிந்து, நுண் குழாய்களின் வழியே, ஒரு நொடியில் பாய்ந்து செல்லும் நீர்மத்தின் பருமனைக் கணக்கிட <math>V = - \frac {\pi p r^4}{8\eta l}</math> என்னும் சமன்பாட்டை நிறுவினார். இதனைப் பாய்சியூலின் சமன்பாடு என்பர். இதன் மூலம் நிலையான அழுத்தத்தில் இப்பருமன், குழாயின் நீளம் மற்றும் நீர்மத்தின் பாகியல் எண், குழாயின் ஆரம் ஆகிய அளவுகளைப் பொறுத்தது எனலாம். இப்பாய்வு முறையினடிப்படையில் நிலையான அழுத்தத்தில் அமைந்த நீர்ம மட்டத் தொட்டியுடன் ஒரு நுண் புழைக் குழாயினை இணைத்து, அதன் வழியாகக் குறிப்பிட்ட நொடியில் பாய்ந்து செல்லும் நீர்மப் பருமனைக் கணக்கிட்டு, நீர்மத்தில் பாகியல் எண்களை ஒப்பிடவும் இயலும் நீர்மங்களின் பாகியல் எண்களை ஒப்பிடப் பயன் படுத்தப் படும் ஆஸ்வால்டின் பாகியல் அளவும் இப்பாய்முறையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கருவியேயாகும். வளிமங்களைப் பொறுத்த வரையில், அவை மிக அதிகமாக அமுக்கமடையும் தன்மையுள்ளவையாதலால், குழாயின் வழி ஒரு நொடியில் பாய்ந்து செல்லும் வளிமத்தின் பருமனை <math>V = - \frac {\pi a^4}{8\eta} \big( \frac {dp}{dx} \big)</math> என்னும் சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம். <math> \frac {dp}{dx}</math> என்பது வளிமத்தின் அழுத்த வாட்டத்தினைக் குறிக்கிறது. சீரான நிலைகளில் குழாயின் எந்தப் பகுதியிலும் வளிமம் திரண்டு காணப் படும், தன்மையற்றதால், பருமனுக்குப் பதிலாக நிறையினைக் கருத்தில் கொண்டால், pV ன் மதிப்பு ஒரு மாறிலி எனலாம். இதனைப் பயன்படுத்தி, ஒரு நுண்புழைக் குழாயின் வழியாகப் பாயும் வளிமத்தின் பாய்வு விதத்தினைக் கணக்கிட மேயர் என்னும் அறிவியலார், <math display=block>p_1 v_1 = \frac {\pi a^4}{16\eta l} \big( p_1^2 - p_2^2) = p_2 v_2 = P_2 V_2</math><noinclude></noinclude> qwd6nw4olfhtpv9yrh10xiw1t7uo81n 1925644 1925480 2026-04-20T06:43:08Z TI Buhari 4634 1925644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|72 நுண் புழைப்‌பாய்வு}}</noinclude>கட்டுப்பாடான நிலையில் ஆய்வுக் கூடங்களில் பெருக்கலாம். {{right|—<b>கே.ஆர். திருவேங்கடசாமி</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="51"/><section begin="52"/> {{fs|110|<b>நுண் புழைப்‌பாய்வு</b>}} குறைந்த குறுக்கு வெட்டுப் பரப்புடைய ஒரு குழாயின் வழியாகப் பாயும் ஒரு பாய்மத்தின் ஒவ்வொரு துகளும், அதன் முந்தைய துகளின் பாதையிலேயே செல்வதுடன், பாய்மத்தின் அனைத்துப் புள்ளிகளிலும் திசை வேகம் நிலையான மதிப்பினையும் கொண்டிருக்கும். இந்நிகழ்வு வரிச் சீர் இயக்கம் (streamlined motion) எனப் படும். இப்பாய்மப் பாதை நேராகவோ, வளைந்தோ அமைந்திருக்கும். இவை படத்தில் காட்டப்பட்டுள்ளன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 94 |bSize = 820 |cWidth = 353 |cHeight = 275 |oTop = 440 |oLeft = 28 |Location = center}} ABC என்னும் வரியினைச் சீரியக்கத் திசை எனலாம். இத்திசையில் குறிப்பிட்டதொரு புள்ளியின் தொடு கோடு அதன் திசை வேகத்தினைக் குறிக்கும். பாய்மத்தின் திசை வேகம் ஒரு குறிப்பிட்ட உச்ச மதிப்பினை விட அதிகரிக்கும் போது, இச்சீரியக்கம் சிதைந்து சுழல் இயக்கமாக (vortex motion) மாறுகிறது. திசை வேகத்தின் இந்த உச்ச மதிப்பினை மாறு நிலைத் திசை வேகம் என்பர். இம்மதிப்பினை <math> Vc = \frac {k\eta}{pr}</math> என்னும் சமன்பாட்டால் பெறலாம். η, p என்பன முறையே பாய்மத்தின் பாகியல் எண்ணையும், அடர்த்தியினையும் குறிக்கின்றன. r என்பது குழாயின் ஆரமாகும். K என்னும் மாறிலி பரிமாணமற்ற ஓர் எண்ணாகும். இது ரேனால்டு எண் எனப் படும். மேற்காணும் சமன்பாட்டின் மூலம் குறைந்த அடர்த்தி மற்றும் உயர்ந்த பாகியல் எண் தவிர, சீர் பாய்முறைக்கு நுண் குழாயும் தேவை என்பது தெளிவாகும். எனவே, ஒரு நுண் குழாய் வழி நீர்மம் அல்லது வளிமம் பாய்ந்து செல்லும் போது அமையும் சீரான பாய்மப் பாய்தலையே நுண் புழைப் பாய்வு (capillary flow) எனலாம். இவ்வகை நிலையான நீர்மப் பாய்முறையினைப் பாய்சியூல் என்னும் அறிவியலார் விரிவாக ஆராய்ந்தறிந்து, நுண் குழாய்களின் வழியே, ஒரு நொடியில் பாய்ந்து செல்லும் நீர்மத்தின் பருமனைக் கணக்கிட <math>V = - \frac {\pi p r^4}{8\eta l}</math> என்னும் சமன்பாட்டை நிறுவினார். இதனைப் பாய்சியூலின் சமன்பாடு என்பர். இதன் மூலம் நிலையான அழுத்தத்தில் இப்பருமன், குழாயின் நீளம் மற்றும் நீர்மத்தின் பாகியல் எண், குழாயின் ஆரம் ஆகிய அளவுகளைப் பொறுத்தது எனலாம். இப்பாய்வு முறையினடிப்படையில் நிலையான அழுத்தத்தில் அமைந்த நீர்ம மட்டத் தொட்டியுடன் ஒரு நுண் புழைக் குழாயினை இணைத்து, அதன் வழியாகக் குறிப்பிட்ட நொடியில் பாய்ந்து செல்லும் நீர்மப் பருமனைக் கணக்கிட்டு, நீர்மத்தில் பாகியல் எண்களை ஒப்பிடவும் இயலும் நீர்மங்களின் பாகியல் எண்களை ஒப்பிடப் பயன் படுத்தப் படும் ஆஸ்வால்டின் பாகியல் அளவும் இப்பாய்முறையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கருவியேயாகும். வளிமங்களைப் பொறுத்த வரையில், அவை மிக அதிகமாக அமுக்கமடையும் தன்மையுள்ளவையாதலால், குழாயின் வழி ஒரு நொடியில் பாய்ந்து செல்லும் வளிமத்தின் பருமனை <math>V = - \frac {\pi a^4}{8\eta} \big( \frac {dp}{dx} \big)</math> என்னும் சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம். <math> \frac {dp}{dx}</math> என்பது வளிமத்தின் அழுத்த வாட்டத்தினைக் குறிக்கிறது. சீரான நிலைகளில் குழாயின் எந்தப் பகுதியிலும் வளிமம் திரண்டு காணப் படும், தன்மையற்றதால், பருமனுக்குப் பதிலாக நிறையினைக் கருத்தில் கொண்டால், pV ன் மதிப்பு ஒரு மாறிலி எனலாம். இதனைப் பயன்படுத்தி, ஒரு நுண்புழைக் குழாயின் வழியாகப் பாயும் வளிமத்தின் பாய்வு விதத்தினைக் கணக்கிட மேயர் என்னும் அறிவியலார், <math display=block>p_1 v_1 = \frac {\pi a^4}{16\eta l} \big( p_1^2 - p_2^2) = p_2 v_2 = P_2 V_2</math><noinclude></noinclude> cf98hz0mt7tce1ldeu8k7dof4upsc8e பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/95 250 640773 1925487 2026-04-19T15:35:13Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌ 73}}</noinclude>என்னும் சமன்பாட்டினை நிறுவினார். P₁, P₂ என்பன முறையே குழாயின் உள் மற்றும் வெளி வழிகளிலுள்ள வளிம அழுத்த மதிப்புகளையும் P₁V₁, P₂V₂ என்பன உட்புகுந்து செல்லும் வளிம நிறை மற்றும் வெளிப் படும் வளிம நிறை ஆகிய மதிப்புகளையும் குறிக்கின்றன. இச்சமன்பாட்டினைப் பயன் படுத்தி ஒரு நுண் புழைக் குழாய் வழியே பாயும் வளிமத்தின் பாகியல் எண்ணைக் 'கணக்கிடும் சோதனை அமைப்பினை ரேங்கின் என்னும் அறிவியலார் தந்தார். இம்முறையின் மூலம் அழுத்தம் மற்றும் தட்ப வெப்ப நிலைகளைப் பொறுத்து, ஒரு வளிமத்தின் பாகியல் எண்ணில் ஏற்படும் மாற்றத்தினையும் ஆராயலாம். வெவ்வேறு அழுத்த நிலைகளில், வளிமங்களின் பாகியல் எண் மதிப்புகளைக் கணக்கிட்டு, வளிமங்களின் பாகியல் எண் சாதாரண அழுத்த நிலைகளில் அழுத்ததினைப் பொறுத்து மாறுவதில்லை என இவர் விளக்கினார். ஆனால், வளிமத்தின் பாகியல் எண் வெப்ப நிலை அதிகரிக்கும் போது, அதிகரிக்கிறது எனக் கண்டறிந்தார். சுதர்லாண்டு என்னும் அறிவியலார் வெப்ப நிலைகளைப் பொறுத்து, பாகியல் எண் மாற்றத்திற்கான சமன்பாட்டை <math>\eta_1 = \eta_0 \frac {KT^{\frac{1}{2} }} {1+\frac {S}{T}}</math> என நிறுவினார். η₁ மற்றும் η₀ என்பன முறையே TK: 0°C வெப்ப நிலைகளிலுள்ள பாகியல் எண் மதிப்புகளைக் குறிக்கின்றன. K மற்றும் S என்பன மாறிலிகள். சோதனை மூலம் கண்டறியப் பட்ட மதிப்புகள் இச்சமன்பாட்டுடன் ஒத்தமைகின்றன. {{right|—சிவ. சேதுராமன்</b>}} <b>துணை நூல்</b>. D.S. Mathur, <i>Elements of properities of matter</i>, Tenth edition, New Delhi, 1983. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="52"/><section begin="53"/> {{fs|110|<b>நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்</b>}} ஹைட்ரஜனின் நிற மாலை வரிகளை உயர் பிரி திறனுள்ள கருவிகளின் மூலம் ஆராயும் போது, பல பன்மை வரிகள் தென்படுகின்றன. I = 0 என்னும் ஆற்றல் மட்டத்தைத் தவிர, ஏனைய அனைத்து ஆற்றல் மட்டங்களும், இரட்டைகளாகப் பிளவு படுவதால் இது தோன்றுகிறது. சார்பியல் தன்மையிலான சிற்றுலைவுகளினால் உண்டாகும் இந்தப் பன்மை வரிகளும், நுண் கட்டமைப்பு என்று பெயர். ஹைட்ரஜனைப் பற்றிப் போர் என்பார் அளித்த எளிய விளக்கத்தில் இந்தச் சிற்றுலைவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. கூலூம் இடை வினைகளை விட, உயர் வரிசையிலுள்ள எலெக்ட்ரான் அணுக் கரு இடை வினைகளின் காரணமாக, ஆற்றல் மட்டங்களில் மேலும் சிறிய பிளவுகள் தோன்றுகின்றன. அவற்றால் உண்டாகும் நிற மாலை வரிகள் மிகு நுண் கட்டமைப்பு (hyper fine Structure) எனப் படும். ஹைட்ரஜனைத் தவிர, மற்ற அணுக்களில் நுண் கட்டமைப்பு, தற்சுழற்சிச் சுற்றுப் பாதை இடை வினைகளின் அடிப்படையிலும் விவரிக்கப் படுவதுண்டு. நிறை மிகுந்த அணுக்களில் தற்சுழற்சிச் சுற்றுப் பாதை இடை வினை, சிற்றுலைவு என்று குறிப்பிட முடியாத அளவுக்குப் பெரியதாக உள்ளமையால், நுண் கட்டமைப்பு என்னும் சொல் ஓரளவே பொருந்தும். ஆனால், அணு எவ்வளவு சிக்கலாக இருந்த போதிலும், மிகு நுண் கட்டமைப்புக்கான இடை வினை சிற்றுலைவாக மதிப்பிட கூடிய அளவுக்குச் சிறியதாகவே இருக்கிறது. முதன் முதலாக பி.ஏ.எம். டிராக்கின் எலெக்ட்ரானைப் பற்றிய சார்பியல் கொள்கை ஹைட்ரஜனின் நுண் கட்டமைப்பின் பல கூறுகளை விவரமாக விளக்கியது. எலெக்ட்ரான் <math>\bar v</math> என்னும் திசை வேகத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிற போது, <math> \bar B = - (\bar {v} / c) x \bar {E}</math> என்னும் இயங்கு தன்மையுள்ள காந்தப் புலத்தைச் சந்திக்கிறது. இதில் <math>\bar E</math> என்பது கூலூம் புலம். இயங்கு தன்மையுள்ள புலம் <math>\bar \mu \bar B</math> என்னும் இடை வினையை உண்டாக்குகிறது. இங்கு <math>\bar \mu</math> என்பது எலெக்ட்ரானின் காந்தத் திருப்புத் திறன். ஒரு நேரடியான கணக்கிடு முறையின் மூலம், <math>H_1 = \xi (r) \bar L \cdot \bar S \cdot </math> என்னும் வடிவத்திலுள்ள ஓர் இடை வினைப் பதம் (interaction term) கிடைக்கிறது. இதில், <math>\xi (r) = \big( \frac{1}{2}m^2c^2 r \big) \frac {dv}{dr}</math>. V என்பது நிலைமின் ஆற்றல், இந்தக் கோவையில் 1/2 என்னும் காரணி உள்ளது. இது தாமஸ் காரணி (Thomas factor) எனப் படும்.{{nop}}<noinclude></noinclude> 01ygvwdi1lc5sqcyjrqbf64kypv2wxa பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/96 250 640774 1925504 2026-04-19T16:59:28Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|74 நுண்‌, மீநுண்‌ நிறமா லையும்‌ இடை வினையும்‌}}</noinclude>எலெக்ட்ரான் முடுக்கமுள்ள சட்டத்திலிருந்து ஒரு நிலைமச் சட்டத்திற்குச் சார்பியல் மாற்றம் ஏற்படுவதால், இந்தக் காரணி தோன்றுவது, தற்சுழற்சி சுற்றுப் பாதை இணைப்பு எனப் படுகிறது. <math> \bar L \cdot \bar S</math> இடை வினை நுண் கட்டமைப்பை உண்டாக்குவதில் பெரும் பங்களிப்புச் செய்கிறது. திசை வேகத்துடன் எலெக்ட்ரானின் நிறை மாறுவதும், நுண் கட்டமைப்புக்குக் கூடுதலான பங்களிப்புச் செய்வதாகும். எலெக்ட்ரானின் மொத்த ஆற்றல் <math> W = V + \big( P_c^2 C^2 + m^2C^4 \big) ^ {\frac{1}{2}} </math> இயக்க ஆற்றல் <math> T = W - V - mc^2 = \frac {p^2}{2m} - \frac {P^4}{8mc^2} ; H_2 = \frac {P^4}{8m^2}</math> என்பது பழங்கொள்கை இயக்கவியலுக்குச் சிறும வரிசை சார்பியல் திருத்தம் ஆகும். H₁, H₂ ஆகியவற்றை ஹைட்ரஜன் வகைப் பத ஆற்றலுக்கான சிற்றுலைவுகளாகக் கொண்டால், நுண் கட்டமைப்பு ஆற்றலுக்குப் பின் வரும் கோவையைப் பெறலாம். <math> E = (H_1 + H_2) = \frac {-hcRZ^2}{n^2} \big[ \frac {\alpha^2 Z^2}{n} \big( \frac{1}{f + I/2} - \frac {3}{4n} \big) \big] </math> இதில் R என்பது ரிட்பர்க் மாறிலி. n என்பது முதன்மைக் குவாண்டம் எண். hj/2π என்பது மொத்த எலெக்ட்ரான் கோண உந்தம். Z என்பது அணுக் கரு மின். α என்பது நுண் கட்டமைப்பு மாறிலி <math>= e^2 / hc \approx 1 / 137 </math>. இதில் முதலில் உள்ள காரணி ஒரு ஹைட்ரஜன் வகை அணுவின் பத ஆற்றல் (term energy). ஹைட்ரஜனின் நுண் கட்டமைப்பு ஏறத்தாழ <math>{\alpha^2 z^2 / n }\approx {3 \times 10^{-5} / n }</math> அளவு குறைவாயிருப்பது வெளிப் படுகிறது. எனவே, அதை ஒரு சிற்றுலைவாகக் கருதுவது பொருத்தம். சிறும வரிசையில் டிராக் கொள்கையைப் பயன் படுத்தும் போதும், இதே முடிவு கிடைக்கிறது. <math> j = 1 + 1 / 2 </math> அல்லது 1½ என்னும் மதிப்பைப் பொறுத்து நுண் கட்டமைப்பு, ஒவ்வொரு கோண உந்த நிலையையும் இரட்டைகளாகப் பிரிக்கிறது. I = 0 என்னும் போது மட்டும் இந்தப் பிரிவினை நிகழ்வதில்லை. எனவே, ஹைட்ரஜனுக்கு <math> ^2S_{1/2} , ^2P_{1/2} , ^2P_{3/2} , ^2D_{3/2} , ^2D_{5/2} </math> போன்ற நிற மாலைப் பதங்கள் அமைகின்றன. <!---- Words repeated ----> ஹைட்ரஜன் வகை நுண் கட்டமைப்பில், ஒரு பதத்தின் சமமான j மதிப்புள்ள அனைத்து நிலைகளும், பொது ஆற்றல் நிலைகளை உடையவையாக (degenerate) உள்ளமை குறிப்பிடத் தக்கது. இதற்கு எடுத்துக் காட்டாக, <math> (^2S_{1/2} , ^2P_{1/2}) , (^2P_{3/2} , ^2D_{1/2}) </math> ஆகிய இரட்டைகளைக் குறிப்பிடலாம். சார்பியல் குவாண்டம் கொள்கை, குவாண்டம் மின்னியக்கவியல் ஆகியவை சரியானவையா என்று சோதிக்கிற சோதனைக் களமாக, ஹைட்ரஜனின் நுண் கட்டமைப்பு செயல் பட்டிருக்கிறது. தொடக்கக் கால ஆய்வுகளில், ஹைட்ரஜன், டியூட்டிரியம் ஆகியவற்றின் பாமர் ஒளியியல் நிற மாலை <math> n > 2 \rightarrow n = 2</math> பகுப்பாய்வு செய்யப் பட்டது. n = 2 நிலையில், மிகச் சிறிய அளவிலேயே நுண் கட்டமைப்புப் பிரிகைகள் ஏற்படுவதாலும், ஹைட்ரஜனின் நிற மாலை வரியில் டாப்ளர் அகலம் மிகுதியாக இருந்ததாலும், அந்த ஆய்வுகள் உறுதியான முடிவுகளை அளிக்கவில்லை. n = 2 பதத்தின் நுண் கட்டமைப்பு 0.37/சென்டிமீட்டர் = 11 கிகா ஹெர்ட்ஸ் அளவேயுள்ளது. அறை வெப்ப நிலையில், முதன்மைப் பாமர் வரியின் டாப்ளர் அகலம் 0.2 / சென்டிமீட்டர் ஆகும். 1940இன் இறுதியிலிருந்து வில்லிஸ் லாம்பும், அவர் துணைவர்களும் செய்த பல ஆய்வுகளில், ஹைட்ரஜனின் நுண் கட்டமைப்பு. <math> ^2S_{1/2} \rightarrow ^2P_{1/2} , ^2P_{3/2} </math> என்னும் மாற்றத்தின் ரேடியோ α அதிர்வெண் நிற மாலையில் பகுப்பாய்வு செய்யப் பட்டது. டிராக் கொள்கை 2P நிலையின் கட்டமைப்பைத் துல்லியமாக விவரிப்பதை உறுதிப் படுத்தினால், மேலும் தம் அளவீடுகளிலிருந்து<noinclude></noinclude> rdxu0za2kl3aqb4fi7xvh64ifc8gjpl பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/97 250 640775 1925508 2026-04-20T02:49:03Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நுண்‌ மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌ 75}}</noinclude>நுண்கட்டமைப்பு மாறிலி α–க்கு ஓர் உயர்ந்த துல்லியமான மதிப்பையும் கணக்கிட்டுக் கண்டு பிடித்தால், n=2 என்னும் முதன்மைக் குவாண்டம் எண்ணுக்கான <math> ^2S_{1/2} , ^2P_{1/2}</math> மட்டங்கள் பொது ஆற்றல் நிலையுள்ளவையல்ல என்னும் ஒரு வியப்பூட்டும் உண்மைகளையும் அவர் கண்டு பிடித்தார். இதற்காக, அவருக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது. ²S<sub>½</sub> நிலை 1060 மெகா ஹெர்ட்ஸ் அளவில் மேல் நோக்கி இடப் பெயர்ச்சி அடைந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப் பட்டது. இதற்கு லாம்ப் இடப்பெயர்ச்சி என்று பெயர். எலெக்ட்ரான் வெற்றிடப் புலத்துடன் கதிர் வீசு முறையில் இணைவது இந்த இடப் பெயர்ச்சிக்கான ஒரு பெரும் காரணம் ஆகும். குவாண்டம் மின்னியக்கவியல் வளர்ச்சியடைந்ததில், லாம்ப் இடப் பெயர்ச்சி கண்டு பிடிக்கப் பட்டது, ஒரு மையமான பங்கு பெற்றது. நுண் கட்டமைப்பு, லாம்ப் இடப் பெயர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளும், கணக்கீடுகளும் தொடர்ந்து செம்மைப் படுத்தப் பட்டு வருகின்றன. 20 கிலோ ஹெர்ட்ஸ் அல்லது பதினாயிரத்தில் இரண்டு பங்கு என்னும் அளவுக்கு உயர்ந்த துல்லியம், ஆய்வுகளிலும் தத்துவக் கணக்கு முறைகளிலும் எட்டப் பட்டுள்ளது. ஆய்வுகளின் மூலமும், கணக்கு முறைகளிலும் கிடைத்த முடிவுகளில் பெருத்த ஒற்றுமையும் காணப் படுகிறது. மிகு நுண் இடை வினை மிகப் பொதுவாக அணுக் கருக் காந்தத் திருப்புத் திறன் <math> \bar \mu</math> எலெக்ட்ரானால் உண்டாக்கப்படும் காந்தப்புலம் <math> \bar B</math>–யுடன் இணைவதால் ஏற்படுகிறது. சமச் சீர்மை வாதக் கருத்துகளின் அடிப்படையில் <math> \bar \mu \alpha \bar I</math> எனவும், <math> \bar B \alpha \bar J</math> எனவும் காட்டலாம். இங்கு | என்பது அணுக் கருக் கோண உந்தம், J என்பது எலெக்ட்ரான் கோண உந்தம். மிகு நுண் இடை வினை <math>H = a \bar I \cdot \bar J</math> என்னும் பொதுவான வடிவத்தைப் பெற்றுள்ளது. a என்னும் மிகு நுண் கட்டமைப்பு மாறிலி ஹைட்ரஜனுக்கு <math>hcR \frac {Z^3} {n^3} \frac {m}{M} g \frac {I} {(I + \frac {1}{2}) j (j+1)}</math> மதிப்புள்ளதாக இருக்கிறது. இக்கோவையில் அணுக் கருக் கட்டமைப்பு. கதிர் வீசு விளைவு, சார்பியல் விளைவு ஆகியவற்றுக்கான திருத்தங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. m/M என்பது எலெக்ட்ரான்–அணுக் கரு நிறை தகவு. g என்பது அணுக் கரு காரணி. ஹைட்ரஜனின் சிறும ஆற்றல் நிலையில் I=J= 1/2; I, J -வுக்கு 1/4, -3/4 ஆகிய மதிப்புகள் உள்ளன. இவ்வாறு மிகு நுண் வரிகளுக்கு இடையிலான தொலைவு AE = a. ஹைட்ரஜன் மேசரைப் பயன் படுத்தி, மிகு நுண் கட்டமைப்பு மாறிலி, அதிர்வெண் அலகுகளில் அளக்கப் பட்டிருக்கும். 10<sup>3</sup> ஹெர்ட்ஸ் துல்லியத்துடன், அதன் மதிப்பு a/h ≈ 1.42 கிகா ஹெர்ட்ஸ் என வருகிறது. ஹைட்ரஜனின் மிகு நுண் வரி இடைவெளி ரேடியோ வானியல் ஆய்வுகளில் பெரும் பங்கு கொள்கிறது. விண்வெளியிலுள்ள ஹைட்ரஜன் ரேடியோ அதிர்வெண் மூலங்களைப் பதிவு செய்வதில் பெருமளவில் பயன் படும் 21 செ.மீ அலை நீளமுள்ள வரி மிகு நுண் கட்டமைப்பில் காணப் படுகிறது. அணுக் கருக் கோண உந்தமும், எலெக்ட்ரான் கோண உந்தமும், 1/2 என்னும் மதிப்புக்கு மேற்பட்டு உள்ள நிலைகளில், அணுக் கருவுக்கும், எலெக்ட்ரானுக்கும் இடையிலான நிலை மின் நான்முனை இடை வினை காரணமாக, மிகு நுண் கட்டமைப்பு உண்டாக முடியும். ஆனால், அவை பொதுவாக மிக நுண்ணியவை. ஹைட்ரஜன் போலவே, ஒற்றையான இணை திறன் எலெக்ட்ரானை உடைய காரத் தனிமங்களும், I = O என்னும் நிலையைத் தவிர, மற்ற அனைத்திலும் இரட்டை மட்டக் கட்டமைப்பு உள்ளவை. நிறைவு பெற்ற உள் சுற்றுப் பாதைகளினால், இரட்டைப் பிரிகையில் ஒரு பெரும் பாதிப்பு ஏற்படவே செய்கிறது. நிறைவு பெற்ற மையப் பகுதியிலுள்ள மின்னழுத்தம் கூலூம் வடிவத்திலிருந்து பெருமளவு வேறுபட்டதாயிருக்கும். dv/dr ஐப் பொறுத்துப் பெருமளவில் மாறுகிற தற்சுழற்சிச் சுற்றுப் பாதை இணைப்பு உள்ளக அமைப்பினால் பெரிதும் பாதிக்கப் படுகிறது.<noinclude></noinclude> gtqa5orzit2sn3ugsh1nktk5upvpvwy பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/98 250 640776 1925509 2026-04-20T03:56:37Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|76 நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌}}</noinclude>உந்தத்தில் கணிசமாக ஊடுருவியிருக்கிற நிலைகளின் நுண் கட்டமைப்பு வரி இடைவெளிகள் ஹைட்ரஜனில் காணப் படுவதை விட, மிகுந்துள்ளன. δ நிலைகளுக்கு மிகு நுண் கட்டமைப்பு இடை வினைகள் அணுக் கருவிலுள்ள எலெக்ட்ரான் அடர்த்தியையும், அணுக் கருத் திருப்புத் திறனையும் பொறுத்திருக்கின்றன. காரத் தனிமங்களுக்கான மிகு நுண் வரி இடைவெளிகள் ஹைட்ரஜனுக்கு இருப்பதிலிருந்து, வேறுபட்டிருகிற போதிலும் அவை ஒரே எண் மதிப்பு வரிசையில் உள்ளன. பின்வரும் அட்டவணை இவற்றை விளக்கும். {{block_center/s}}<div style="width:420px; font-size:90%"> {| |- |colspan=5 {{ts|ac|bb.}}|<b>அட்டவணை</b> |- |width=50px |<b>தனிமம்</b> |colspan=2 width=150px {{ts|ac}}|<b>நுண் வரி</b> |colspan=2 width=220px {{ts|ac}}|<b>மிகு நுண் வரி</b> |- |{{ts|bb.}}| |width=75px {{ts|ar|bb.}}|நிலை |width=75px {{ts|ar|bb.}}|இடைவெளி |width=50px {{ts|ar|bb.}}|நிலை |width=170px {{ts|ar|bb.}}|இடைவெளி<br>கிகா ஹெர்ட்ஸ் |-{{ts|ar}} |{{ts|al}}|ஹைட்ரஜன் |2P |0.37 |1 |1.42 |-{{ts|ar}} |{{ts|al}}|லிதியம் |2P |0.44 |2 |0.83 |-{{ts|ar}} |{{ts|al}}|சோடியம் |4P |17.20 |3 |1.77 |-{{ts|ar}} |{{ts|al}}|பொட்டாசியம் |5P |57.20 |4 |0.46 |-{{ts|ar}} |{{ts|al}}|ரூபீடியம் |5P |237.60 |5 |3.03 |-{{ts|ar|bb.}} |{{ts|al|bb.}}|சீசியம் |{{ts|bb.}}|6P |{{ts|bb.}}|554.10 |{{ts|bb.}}|6 |{{ts|bb.}}|9.19 |}</div>{{block_center/e}} காரத் தனிமங்களின் சில குறிப்பிட்ட கிளவுற்ற நிலைகளில், நுண் கட்டமைப்பு இணைப்பு மாறிலி, மிகு நுண் இணைப்பு மாறிலி ஆகிய இரண்டுமே ஹைட்ரஜனைப் பொறுத்துத் தலை கீழாகி விடுகின்றன. இந்தச் செயல் முறையில் இணை திறன் எலெக்ட்ரானுக்கும், உள்ளக எலெக்ட்ரான்களுக்கும் இடையில் ஏற்படும் ஒரு தற்சுழற்சிச் சார்ந்த பரிமாற்ற இடை வினை பங்கு கொண்டிருக்கிறது. கோண உந்தம் உயர்வாக இருக்கும் போது, இடை வினைகள் தன் இயல்பான குறியை உடையவையாகி, ஹைட்ரஜன் அடிப்படையிலான கொள்கையின் மூலம் அமைப்புகளைச் சரியாக விவரிக்க முடிகிறது. பல இணை திறன் எலெக்ட்ரான்களைக் கொண்ட அணுக்களுக்கு நுண் கட்டமைப்பும், மிகு நுண் கட்டமைப்பும் மிகவும் சிக்கலானவையாக இருக்கலாம். ஆனாலும், L–S இணைப்பினால் விவரிக்கப் படுகிற அமைப்புகள் லான்டேயின் இடைவெளி விதி (Lande interval rule) என்னும் எளிய விதியைப் பின் பற்றுகின்றன. இந்த விதி நிற மாலைகளை அடையாளம் காண்பதில், பேருதவி புரிகிறது. இத்தகைய அமைப்புகளுக்குத் தற்சுழற்சிச் சுற்றுப் பாதை இடைவினையை <math> \xi \bar L \cdot \bar S</math> என எழுதலாம். இங்கு ξ ஒவ்வோர் எலெக்ட்ரானின் பங்களிப்பையும் குறிப்பிடுகிறது. மொத்தக் கோண உந்தத்தை <math> \bar J = \bar L + \bar S</math> என்னும் வடிவத்தில் எழுத முடியுமானால், <math>(\bar L \cdot \bar S) = \big[ j (j+1) - I(I+1) - s(s+1) / 2 \big]</math>. j, j-1 என்னும் கோண உந்தங்கள் உள்ள மட்டங்களுக்கு இடையிலான இடைவெளி ξjஆகும். ஒரு நுண் கட்டமைப்பில் (j, j-1),(j-1, j-2) என்னும் அடுத்தடுத்த ஆக்கக்‌ கூறுகளுக்கு இடையிலான இடைவெளிகளின் தகவு j/(j-1) ஆகும். காந்த மிகு நுண் கட்டமைப்புகளும் இந்த விதி பொருந்தும், அதில் j க்குப் பதிலாக F என்னும் மொத்த எலெக்ட்ரானும், அணுக் கருக் கோண உந்தமும் இடம் பெறும். இடை நிலை அணு எடையுள்ள தனிமத்தின் லான்டேயின் விதிக்குப் பெரிதும் பொருந்துகின்றன. ஆனால், மிகு லேசான தனிமங்களும் நிறை மிகு தனிமங்களும், கணிசமான அளவில் முரண் படுகின்றன. லேசான தனிமங்களுக்கான நுண் கட்டமைப்பை ஓர் எளிய <math>\bar L, \bar S</math> பதத்தால் சிறந்த முறையில் விவரிக்க முடியாது. ஒவ்வொரு எலக்ட்ரானின் தற்சுழற்சியும் மற்ற எலெக்ட்ரானின் தற்சுழற்சி உந்தத்துடனும், சுற்றுப் பாதை உந்தத்துடனும் இணைகிறது. ஹீலியத்தில் இவ்விளைவுகள் பெருமளவில் உள்ளமையால், அதன் நுண் கட்டமைப்பு தலை கீழாகி விடுகிறது. நிறை மிக்க அணுக்கள், லான்டேயின் விதியிலிருந்து முரண்படுவது கூலூம் இடை வினை வடிவமைப்பில் கலந்து விடுவதால், L–S இணைப்பு முறிந்து போவதைக் காட்டுகிறது. மிகு நுண் கட்டமைப்பில், இடைவெளி விதி மீறப்படுகிறது. நான்முனை அல்லது மேற்பட்ட வரிசை இடை வினைகள் உள்ளமையைக் காட்டுகிறது.{{nop}}<noinclude></noinclude> 74tldgnwpo4huq8tqol6t958m6fj9qy பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/99 250 640777 1925510 2026-04-20T04:45:42Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நுண்‌ வேதியியல்‌ 77}}</noinclude>மூலக் கூறு நிற மாலையில், நுண் கட்டமைப்பு என்னும் சொல் சற்றே வேறுபட்ட பொருளில் பயன்படுத்தப் படுகிறது. அங்கு அது ஓர் எெலக்ட்ரானிய அல்லது அதிர்வு மூலக் கூற்றுப் பட்டையின் சுழற்சிக் கட்டமைப்பைக் குறிப்பிடுகிறது. நிற மாலையை, நடுத்தரமான பிரிகைத் திறன் உள்ள கருவிகள் மூலம் பார்வையிடும் போது மட்டுமே இக்கட்டமைப்பு கட்புலனாகிறது. அணுக் கரு–எலெக்ட்ரான் இடை வினைகளின் காரணமாகத் தோன்றும் மிகு நுண் கட்டமைப்பை மூலக் கூறு நிற மாலைகளிலும் காண முடியும். தன்னிச்சையான அணுக்களுக்குக் காந்த இரு முனை இடை வினைகள் மிக முக்கியமானவையாக இருக்கிற போதிலும், மூலக் கூற்று மிகு நுண் கட்டமைப்பில் அடிக்கடி மின் நான் முனை இடை வினைத் தாக்கமேற்படுவதுண்டு. பொதுவாக, நுண் கட்டமைபை வழக்கமான நிற மாலை யியல் முறைகளில் ஆய்வு செய்ய முடிகிற அளவுக்கு, அது பெரிதாகவே இருக்கிறது. ஹைட்ரஜன் இதற்கு ஒரு முக்கியமான விதி விலக்கு. ரேடியோ அதிர்வெண் நிற மாலையையும் அணுக் கற்றைகளையும் பயன் படுத்தியே, ஹைட்ரனின் நுண் கட்டமைப்பைத் துல்லியமாக ஆய்வு செய்ய முடிகிறது. இதற்கு எதிரிடையாக, மிகு நுண் கட்டமைப்பு மிகவும் நுண்ணியதாக உள்ளமையால், உயர் பிரிகைத் திறனுள்ள ஒளிக் குறுக்கீட்டு முறைகளின் மூலமே அதை ஆய்வு செய்ய முடிகிறது. சிறும ஆற்றல் நிலை மிகு நுண் கட்டமைப்பு அடிக்கடி மூலக் கூறுக் கற்றை மின் ஒத்ததிர்வு மற்றும் காந்த ஒத்ததிர்வு முறைகளால் ஆய்வு செய்யப் படுகிறது. இது, பத்து லட்சத்தில் ஒரு பங்கிலிருந்து, ஆயிரம் கோடியில் ஒரு பங்கு வரையிலான துல்லியத்துடன் அளவீடுகளைத் தரும். மிகு நுண் கட்டமைப்பு ஆய்வுகளின் மூலம் அணுக் கருவின் தற்சுழற்சி, காந்த இரு முனைத் திருப்புத் திறன், மின் நான் முனைத் திருப்புத் திறன் ஆகியவற்றைப் பற்றியும் அறிய முடிகிறது. சீசியம்–133 ஐசோடோப்பின் மிகு நுண் கட்டமைப்பு வரிகளின் இடைவெளிக்குச் சமமாக அணுக் கடிகாரங்களின் ஒரு நொடி வரையறுக்கப் படுகிறது. அது 9,192,631.770 ஹெர்ட்சுக்குச் சமமாகும். லேசர் நிற மாலையியல் கண்டு பிடிக்கப் பட்ட பிறகு, நுண் கட்டமைப்பிலும், மிகு நுண் கட்டமைப்பிலும் பேரார்வம் செலுத்தப் படுகிறது. லேசர் நிற மாலை மூலம் முன்பு ஆய்வு செய்ய முடியாத கிளர்வுற்ற நிலைகளை ஆய்வு செய்ய வழி பிறந்திருக்கிறது. லேசர் முறைகள் டாப்ளர் விளைவுகளினால் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்த்து, விடுகின்றன. இதனால் முன்பு எப்போதும் இருந்திராத அளவுக்குத் துல்லியம் கிடைக்கிறது. {{right|—<b>கே. என். ராமச்சந்திரன்}} துணை நூல்</b>. H.G.Kuhn, <i>Atomic Spectra</i>, Longman, London, 1972. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="53"/><section begin="54"/> {{fs|110|<b>நுண்‌ வேதியியல்‌</b>}} வேதியியல் பல சிறப்பான பகுதிகளை உள்ளடக்கியது. ஆய்வுக் கூடத்தில் ஆராயப் படும் பொருளின் அளவிற்கு ஏற்ப வழி முறைகளும், பயன்படுத்தப்படும் கருவிகளும் வேறுபடுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டும், வேதியியலை வகைப் படுத்த முடியும். ஆய்வுக்கு உட்படும் பொருள்களின் எடை சில கிராம்களும், அதற்கு மேலும் இருக்குமானால், அம்முறை பெரு வேதியியல் என்றும், மில்லி கிராம் (1/1000 கிராம்), அல்லது நுண் கிராம் (μg)(1/1,000,000) நிலையிலானால், நுண் வேதியியல் (microchemistry) என்றும் பெயர் பெறும். நுண் வேதியியலின் தனிச் சிறப்புடைய கருவிகளும், முற்றிலும் மாறுபாடுடைய செய்முறைகளும், வியக்கத் தகு விளைவுகளும் எதிர் நோக்கப் படுகின்றன. சிறிய எடையைத் துல்லியமாக எடையிடும் தராசுகளும், தனிச் சிறப்புடைய நுண்ணோக்கிகளும், பொருள்களை எளிதில் பிரித்திட உதவும் மைய நோக்கு விசைக் கருவிகளும் (centrifuges), மேலும் பல நுண்ணிய கருவிகளும் கையாளப் படுகின்றன. செய்முறை வேதியியலின் பண்பறிவு, அளவறிவு பகுப்பாய்வுகளின் சில மைக்ரோ கிராம் பொருள்களையும், ஆயக் கூடிய வண்ணச் சொட்டு வினைகள் (spot tests, drop reactions) மேலும், நுண்ணோக்கி கொண்டு ஒரு சில படிகங்களைக் கொண்டே ஆய்தல் ஆகியவை நுண் வேதியலின் சிறப்புகளாகும். <b>சொட்டு வினைகள்</b>. தனித்து அல்லது மிகையளவு பிற பொருள்களுடன் கலந்துள்ள நுண்ணளவிலான ஒரு பொருளைக் காண உதவும் வழி முறை முன்னேற்றமே. செய்முறை வேதியியலுக்கு, நுண் வேதியியல் ஆற்றிய பெரும் பங்கு எனலாம். இந்தச் செய்முறை முன்னேற்றம் இரு பிரிவுகளால் ஆனது. அவை சிறிதளவு வீழ் படிவுகளை நுண் பெருக்கி கொண்டு ஆய்ந்து முடிவுறல், வரையறுக்கப்<noinclude></noinclude> 5y87n3o8e5uztdw5ma6qz67c3go2gn3 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/4 250 640778 1925512 2026-04-20T04:57:24Z Magizh Sundram 16422 OCR 1925512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Abrasion Abrasion Test Absolute சிறப்புச் சொல் துணையக்ராதி Absolute minimum Absorbed soil water Absorption Abutment Accelerate Acceleration Access Additional Security Adhesion Adhesion agent நெடுஞ்சாலை ஊரகப் பணித் துறை .. .. .. .. .. .. .. .. Admixture Advance direction sign .. Advance Sign Afflux Aggregate Agitator Alignment Alignment horizontal Alongatial Analysis .. .. .. .. .. .. A .. தேய்வு தேய்வாய்வு முழுமையான குறும் அளவு உறிஞ்சப்பட்ட மண் ஈரம் உறிஞ்சுதல் தாங்கு சுவர் துரிதப்படுத்து முடுக்கம் அணுகு வழி ; நுழைவு: நுழைவுரிமை : வாய்ப்பு கூடுதல் பிணையம் ஒட்டுந் தன்மை ஓட்டுப் பொருள் சேர்வுப் பொருள்கள் முன்னோடி வழிகாட்டி. அடையாளக் குறி முன்னோடி அடையாளக் தேக்க உயர்வு; மீவரவு கலவைப் பொருள் அதிர்வூட்டி நேர்பாடு சமநிலை நேர்பாடு நீளமான பகுப்பாய்வு .. .. நங்கூரம் .. நங்கூரகம் .. கோணம் .. கோணச் சீர்வெட்டி Anchor Anchorages Angle Angle dozer Angle of repose ... Angular Annealing 73-3-1 இயல் சரிவு கோணம் கோணமான காய்ச்சிப் பதப்படுத்துதல்<noinclude></noinclude> lrx6bxc0nsld7ghd3n59mrtvlvo5u48 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/100 250 640779 1925515 2026-04-20T05:07:56Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1925515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|78 நுண்‌ வேதியியல்‌}}</noinclude>பட்ட நிலைகளில் சொட்டு வினைகளில் ஏற்படும் சீரிய வண்ண விளை பொருள்களால், இனம் காணல் ஆகியவாகும். நுண் பெருக்கி கொண்டு அறியும் முறை பெஹ்ரன்ஸ் (Behrens) என்பாரால் கண்டறியப் பட்டதால், பெஹ்ரன்ஸ் வினைகள் எனப் படும். இவ்வினை வேதியியல் அறிஞர்களை விடப் படிக இயல் மற்றும் கனிம இயல் அறிஞர்களுக்கே மிகுதியும் பயன் படும். சொட்டு வினைகள் அல்லது பொட்டு வினைகள் (spot tests) எளிமையானவை. இவை இன்றைய செய்முறை பகுப்பாய்வு வேதியியலில் சிறப்பான பகுதியாக விளங்குகின்றன. பெரும்பான்மையான கரிம விளைப் பொருள்களாலும், (organic reagents) ஒரு சில கனிம விளைப் பொருள்களாலும், தனித்த நிறங்களை உடைய வினைப் பொருள்களைத் தோற்றுவித்தலே சொட்டு வினைகளின் சிறப்பியல்பாகும். இதனைச் சில சான்றுகளால் விளக்கலாம். <b>தாமிரம் கண்டறிதல்</b>. 1% ஆல்கஹால் டை தயோ ஆக்சமைடு கரைசலால் நனைக்கப் பட்டு, உலர்விக்கப் பட்ட வடி தாள் துண்டு ஒன்று தாமிரம் கலந்த அம்மோனியா கரைசல் உள்ள ஒரு தந்துகிக் குழாயின் மூலம் தொடப் படுகிறது. தாமிர அடர்வுச் சேர்மத்தினுடைய கறுப்பு அல்லது பச்சை கலந்த கறுப்புப் பொட்டோ, வளையமோ தோன்ற, தாமிரம் கண்டறியப் படுகிறது. <b>துத்தநாகம் கண்டறிதல்</b>. துத்தநாகம் இருக்கிறதா என்று கண்டறியப் பட வேண்டிய நடு நிலைக் கரைசலின் 3 அல்லது 4 சொட்டுகளுடன் 1% தாமிரம் (Cu<sup>2+</sup>) உள்ள கரைசல் சொட்டு ஒன்றும், 80 கி. பாதரசக் குளோரைடும் (Hgcl₂) 90 கி. அம்மோனியம் தயோசயனேட்டும் (NH₄CNS) 1 லிட்டரில் கரைந்துள்ள கரைசலின் 10 சொட்டுக்களும் சேர்க்கப் படும், பின் 1 நிமிட நேரம் நுண் சுடரில் கொதிக்க வைக்கப் பட்டுக் குளிர வைக்கப் படும். இத்துடன் 1 மி.லி. அமைல் அசெட்டேட் சேர்த்துக் குலுக்க, இரு நீர்மங்களும் சந்திக்கும் இடத்தில் உண்டாகும் ஊதா நிற வீழ் படிவு, துத்தநாகம் இருப்பதைக் காட்டும். <b>கோபால்ட் கண்டறிதல்</b>. கோபால்ட் உள்ளதாகக் கருதப் படும் அமிலக் கரைசலின் மூசையிலுள்ள (crucible) 2 சொட்டுகளுடன், அம்மோனியம் தயோ சயனேட் படிகம் அல்லது இப்பொருளின் நிறைவுறு கரைசலின் 5 சொட்டுகள் சேர்க்கப் பட, உண்டாகும் அம்மோனியம் கோபால்ட் தயோ சயனேட் என்னும் அணைவுச் சேர்மத்தின் பச்சை கலந்த நீலம் அல்லது நீல நிறம் கோபால்ட் இருப்பதைக் காட்டும். <b>சொட்டு வினையின் கூருணர்வுத் திறம்</b>. ஆய்வில் எவ்வளவு மிகக் குறைவான பொருளைக் கண்டறிய இயலுமோ, அதையே கண்டறிதலின் எல்லை (limit of identification) என்பர். ஆய்வின் கூருணர்வுத் திறம் (sensitivity) விளைவை ஏற்படுத்தத் தேவையான கன அளவையும் பொறுத்தது. எனவே, ஆய்வின் கூருணர்வை அறிய அடர்வு எல்லை (limiting concentration) தேவையாகிறது. <b>அடர்வு எல்லை</b>. 1 மி.லி. கரைப்பானில் உள்ள பொருளின் எடை கிராமில் {{block_center/s}}1:{{sfrac|மி.லி.இல்‌ கரைசலின்‌ கன அளவு X 10<sup>6</sup>|கண்டறிதல்‌ எல்லை (நுண்கிராமில்‌ (μg))}}{{block_center/e}} ஓர் ஆய்வின் கூருணர்வுத் திறம் பல காரணிகளைச் சார்ந்திருப்பதால், மதிப்புகளை முற்றிலும் சரியான முடிவைக் காட்டுவனவாகக் கொள்ளப் படாமல், எதை எதிர் பார்க்கலாம் என்று காட்டுவதாகக் கொள்ளுவதே நலம். வினை, விளை பொருளின் பண்பு, கரை திறன், புலப்படும் தன்மை (visibility), வினை பொருளின் அளவு, நிறம், நோக்கப் படும் (observation) முறை, கால அளவு, மின் பகுளியின் முன்னிலை, ஹைட்ரஜன் அயனிச் செறிவு, செயல் முறை, செய்பவரின் ஈடுபாடு, கூழ்ம நிலை ஆகிய காரணிகள் ஆய்வின் கூருணர்வுத் திறத்தைக் கட்டுப்படுத்தும் காரணிகளாகும். <b>திட்டவட்டமான தெரிந்தெடுப்பிற்குரிய வினைகள்</b>. ஒரே ஒரு பொருளைக் காண உதவும் வினையைத் திட்ட வட்டமான (specific) வினையென்றும், சில பொருள்களைக் காண உதவும் வினையைத் தெரிந்தெடுக்கப்பட்ட (selective) வினை என்றும் கூறலாம். வினையைத் தெரிவு செய்தலைப் பல வழிகளில் மேன்மைப் படுத்தலாம். வினை நிகழும் இடம் பொருந்தும் வினையின் தரம் வேறுபடும். ஆய்வுக் குழாய். பீங்கான் தட்டிலுள்ள அரை வட்டச் சூழ் ஆகியவற்றின் நடை பெறும் வினைகளை விட வடி தாளில் செய்யப்படும் வினைகள் சிறந்து விளங்குகின்றன. தெரிவு செய்தவை அதிகரிக்க, கரிமக் கரைப்பானைப் பயன்படுத்துவதும் ஒரு வழி. வினையின் இடையூறு செய்யும் பொருள்களை, ஃபுளுரைடு, பாஸ்ஃபேட், சிட்ரேட், டார்டாரெட், சயனைடு ஆகியவற்றால் அனைவுறு அயனிகளாக மாற்றி, இடையூற்றைக் களைவதும் தெரிவு செய்தலை அதிகரிக்கும். எ-டு: கோபால்ட் காண்பதற்கான தயோ சயனேட் வினையில் இரும்பு இடையூறு செய்வதால், அதில் ஃபுளுரைடு சேர்க்கப்பட்டு [FeF₆]<sup>++</sup> என்னும்<noinclude></noinclude> hk6xdj43sm4ag255suycyswidjo6vz4 பக்கம்:கலைஞர் ஆட்சியில் கல்வி மேம்பாடு.pdf/2 250 640780 1925516 2026-04-20T05:10:19Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>குலைனூர்‌ ஆட்சியில்‌ கல்வி மேம்பாடு (1996 முதல்‌ இன்று வரை)<noinclude></noinclude> bznpv6mtuzas1jlqhptwkv1vzzymsg5 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/5 250 640781 1925517 2026-04-20T05:10:56Z Magizh Sundram 16422 OCR 1925517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Apex Apex of a curve Application \pproaches Approach roads Apron Aqueduct Arch Arch bridge Arch rise Artificial stone Asphalt Asphalt clinker Asphaltic coment Asphaltic concrete Attrition Attrition test Auger Automotive Avenue Axle Ayacut Azimuth Azimuthal bearing .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. 2 உச்சி வளைவு உச்சி செயற்படுத்தல் அணுகு சாலை : சேரிடம் சேர்வழி இணைப்புச் சாலைகள் வெளிபாவுதளம் நீர்போக்கி வளைவு வளைவுப் பாலம் வளைவு உயரம் செயற்கைக் கல் நிலக்கீல் நிலக்கீல் பிழம்புக் கல் நிலக்கீல் சாந்து நிலக்கீல் பரல் கலவை உராய்வு உராய்வுச் சோதனை: : துளை ஊசி : தமர் ஊசி தானியங்கி அகன்ற சாலை : நிழல் மரச் சாலை அச்சு பாசனப் பரப்பு முகட்டு வட்டை முகட்டுவட்டைக் கோணம் Backfill/Backfilling Backwater Balance Balanced cantilever bridge Ballasi Band .. B பிள் நிரப்பல் உப்பங்கழி; காயல் துலாக்கோல் ; சமநிலை : மீதி சமநிலை ஒற்றைத் தாங்கிப் பாலம் கப்பி ; அடிச்சுமை இசை : பீடிமானம் ; பட்டை<noinclude></noinclude> 6ndhhzbsr8w3qo62uh5zj3k3wh36xqc பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/6 250 640782 1925518 2026-04-20T05:11:11Z Magizh Sundram 16422 OCR 1925518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Bank Banking Barbed Barbed wire fence Barometer Barrier Bars aasalt Bascule bridge dase Base line 3 .. மோடு : கரை .. கரை கட்டல் .. .. .. .. .. ... . .. முள்ளமைந்த முட்கம்பி வேலி காற்று அழுத்தமானி தடை கம்பிகள் கந்தகப் பாறை இழு பாலம் அடிப்படை ; அடிப்பகுதி அடிப்படைக் கோடு அடித்தளம் கீழ்/ அடிப்படைத்தளம் தொகுதி கூறுச் சேர்க்கைக் கருவி, தொகுதிப்படுத்தும் தொட்டி மரச்சட்டம் பாத்தி Basement Base, sub Batch Batching plant .. Bath Batten Bay Beam Bearing Bearing capacity Bearing course Bearing load Bearing pressure Bed Bed Block Bedding Bed rock. Beeding Behaviou Benching Bench mark Bench reference Mat:k Bending moment Berm .. .. .. விட்டம் ; உத்தரம் .. சுமை ஏந்தி .. .. .... தாங்கு திறன் சுமையேந்தி விரிதளம் சுமக்கும் பளு தாங்கக்கூடிய அழுத்தம் அடிப்பரப்பு தாங்கும் படிமம் அடித்தள விரிப்பு அடிப்பாறை விளிம்பு வைத்தல் இயங்கும் விதம் படிக்கட்டல் .. .. மட்டக் குறி .. ஆதார மட்டக்குறி வளைக்கும் சுழல்திறன் சாலையின் புறங்கள்<noinclude></noinclude> lm9hsbjsoukdd4s55c5laomcuzwgs3a பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/7 250 640783 1925519 2026-04-20T05:11:26Z Magizh Sundram 16422 OCR 1925519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Bidder Binder Binder distributor Bisect Bitumen Bitumen cut back Bitumen emulsion Bitumen filler Bitumen fluxer Bitumen heater Bitumen Macadam Bitumen straight run Bituminous Bituminous carpet Bituminous concrete Black cotton soil Blacking up Black top surface Blanket course Blast furnace : * Blasting .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. போட்டியிடுவோர்; ஏலம் கேட் போர் பிணைப்பி பிணைப்பித் தெளிப்பான் இருசம வெட்டு நிலக்கீல் இளகிய நிலக்கீல் நிலக்கீல் குழம்பு நிலக்கீல் நிரப்பி நீர்த்த நிலக்கீல் நிலக்கீல் கொதிப்பான் நிலக்கீல் கலந்த பெருங்கல் தளம் நேர்படு நிலக்கீல் நிலக்கீல் தொடர்புள்ள நிலக்கீல் தளவிரிப்பு நிலக்கீல் கற்காரை கரிசல் மண் கருமையாக்குதல் நிலக்கீல் மேற்பரப்பு உறிஞ்சு வரிசை உருக்கு உலை தகர்த்தல் Bleeding (of bituminous roads)... நிலக்கீல் கசிவு (நிலக்கீல் சாலை Bleeding (of concrete) Blind alley Blind drain Blinding Block paving stone களில்) சற்காரைக் கசிவு .. .. முடிவு முற்றம் .. கற்கள் நிரப்பிய வடிகால்' மண் தூவல் Blooks Blon Blown bitumel. Blunt .. Boiler Bollard Bolts .. .. .. .. .. செதுக்கிய பாவுக்கல் கட்டை; பாளம் அடி: ஊதிப் பெருக்கு வெம்பிய நிலக்கீல் மழுங்கலான கொதிகலன் அடையாளச் சும்பு மறை ஆணி; தாழ்ப்பாள்<noinclude></noinclude> 1bfxleklnmtmzasc6jdr7p91jep6ojr பக்கம்:கலைஞர் ஆட்சியில் கல்வி மேம்பாடு.pdf/3 250 640784 1925520 2026-04-20T05:11:33Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>பல்துறை நுட்பப் பொறியியல் படிப்பில் பலகங்கள் 'ஒற்றைச் சாளர முறை' (பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் முதலாம் ஆண்டே மதிப் பெண் தகுதி வரிசையில், இட ஒதுக்கீடு முறைப் ஒற்றைச் சாளர முறையி னால் நாம் தேர்வானோம்; படி, பயிலும் கல்லூரி யினையும் பாடப்பிரிவை யும், எவ்விதக் குறுக்கீடும் இன்றி தேர்ந் தெடுக்கும் வகையில், “ஒற்றைச்சாளரமுறை (Single Window System) 1997-98 ஆம் ஆண்டு முதல் (இந்தியாவிலேயே முன்னோடியாக நடை முறைப் படுத்தப்படுகிறது. இம்முறை 1998-99 முதல் பல்துறை நுட்பப் பயிலகங் களுக்கும் (Polytechnic) விரிவுபடுத்தப் பட்டுள்ளது. தொழிற் கல்வியில் கிராமப்புற மாணவர் களுக்கு 15%. 1 இட துேக்கீடு கிராமப் மாங்க புற மாண வர்கள் முன்னோ அரசு தரும் பரிசு<noinclude></noinclude> m63wjk3zmobp6weysswzkga6p9tm763 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/8 250 640785 1925521 2026-04-20T05:11:41Z Magizh Sundram 16422 OCR 1925521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Bond Bonded Bonding rods, ... Bone hole Border Boring Boring rod Bottom coat Bottom dump wagon Boulder Bound Boundary stone Bow string girder bridge Box culvert Box drain Box girder Box gutter Braced frame Bracing Bracket Brake Brake lag Braking distance Braking efficiency Braking force coefficient Braking of an emulsion Braking reaction time Breaching section Break of Jcint Brick paving Brick road Bridge foot 5 10 .. .. .. .. .. .. .. ... .. முறி ணைத்த குந்து மட்டக் கோல் குடைவுத் துளை வரம்பு: கரை துளையிடுதல் துளை கடப்பாறை: துளையிடு கம்பி அடிப் பூச்சு அடிப்பக்கத் திறப்பு பார உந்து குண்டுக் கல்; பெருங்கல் சுற்றுக்கட்டு எல்லைக் கல் வில் நாண் பாலம் பெட்டிப் பாலம் பெட்டி வடிகால் பெட்டி உத்திரம் பெட்டிச் சாக்கடை பிணைந்த சட்டம் இணைப்புப் பட்டை வளைந்த தாங்கி .. .. தடை .. .. தடை இடைவெளி தடை கொள் தூரம் .. தடைத் திறன் .. .. .. .. .. .. தடை ஆற்றல் குறியீடு குழம்பு முறித்தல் தடையுணர்வு காலம் உடைப்பெடுக்கும் பகுதி இணைப்பு முறிை செங்கற் தளம் செங்கற் சாலை Bridge lift Bridge loading .. நடைப் பாலம் தூக்குப் பாலம் .. பாலம் பளுத்திறன் Bridge movable .. தள்ளு பாலம்<noinclude></noinclude> lb1nbbjxpv1fbg1fhiw88n4dgf2nzrh பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/9 250 640786 1925522 2026-04-20T05:11:57Z Magizh Sundram 16422 OCR 1925522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>6 Bridge navigatory Bridge rigid frame Bridge slab Bridge (Structura} members) Bridge structure Bridge swing Bridle p:th Bridle way Brook Brcoming... Brocher Bucket Londer Building line Bulk density Bulking Bulldozer Bump Bund Buoyance Burette Burner rod Burrow pit Bush hammer Buttresses Byelene Bycpr.ss road Cable Culcination Calcium Camber Camber Board Canopy .. .. .. .. .. .. .. . .. .. .. .. மரக்கலப் போக்குப் பாலம் கட்டுறுதியான சட்டப் பாலம் பலகை தளப்பாலம் பாலம் (கட்டுமான அங்கங்கள்) பாலக் கட்டடம் சுழற பாலம் குதிரை வழித்தடம் விலங்குகள் நடைபாதை ஓடை பெருக்குதல் சிற்றேடு சுமை ஏற்றும் வாளி கட்டுமானக் கோடு ஒட்டுமொத்த அடர்த்தி விம்முதல் மட்ட வெட்டி; சமப்படுத்தி மேடு: புடைப்பு கரை மிதப்பு ஆற்தல் வடி. அளவைக் குழாய் எரிகுழல் மண் எடுக்கும் குழி அடர் சுந்தியல் .. முட்டுச் சுவர் .. C .. .. கிளைச் சந்து புறச்சாலை கம்பி வடம் நீற்றுதல் சுணணாம்பு குறுக்கு வாட்டா; வாட்டம்: சரிவு வாட்டப் பலசை மேற்கவிகை<noinclude></noinclude> n91up2o9z0eehzrqaiynsmhm5ua2dou பக்கம்:கலைஞர் ஆட்சியில் கல்வி மேம்பாடு.pdf/4 250 640787 1925523 2026-04-20T05:12:01Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>. பட்டதார்சய இல்லாத SHB HOO USES டாக்டருக்கும்‌ பழந்து € பட்டதாரியற்ற குடும்‌ பத்தில்‌ 10 முதல்நிலை ம ாஈண வர்களின்‌ அனைத்துத்‌ | பைபையபஷக்கு இடம்‌ கடைச்‌ தொழிற்‌ கல்விச்‌ செலவுகளை யும்‌ அரசே ஏற்கும்‌ திட்டம்‌. f அம்‌ பையன்நுஈண்‌ 1௦-அட ரங்க அரவ கருக்காகன, இப்ப சிரை ‘ ஒரு2௪ ஏக்துக்கறு ம்னு ) சூர்‌ உிற்வம்சிருக்தா ரே! உ 10,12 ஆம்‌ வகுப்பு களில்‌ தமிழை ஒரு பாட மாக வேணும்‌ படித்து, மாவட்ட அளவிலும்‌ மாநில அளவிலும்‌ முதல்‌ 3 நிலை களைப்‌ பெறும்‌ மாணவா்‌ களின்‌ உயர்‌ கல்விச்‌ செலவு முழுவதை யும்‌ அரசே ஏற்கும்‌ புதிய திட்டம்‌. 6 சேலத்தில்‌, பெரியார்‌ தந்‌ைத பல்கலைக்‌ கழகம்‌ சென்னையில்‌, டாக்டர்‌ சட்டப்‌ கழகம்‌ அம்பேத்கர்‌ பல்கலைக்‌ மூலா) தீழண்ருகசாவ்‌ மகத்தான சாதன ௬)<noinclude></noinclude> qs8v5wwfz4tsmgwr5reg2j11yc1vb57 1925525 1925523 2026-04-20T05:12:48Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>________________ பட்டதாரியற்ற குடும் பத்தில் 10 முதல்நிலை மாணவர்களின் அனைத்துத் தொழிற் கல்விச் செலவுகளை யும் அரசே ஏற்கும் திட்டம். DAS FOT உநவி சேலத்தில், பட்டறார்யே இல்லார "லங்க குடும்பத்திலே டாக்பருக்குப் படிந்த பையலுங்கு இடம் கிடைச் சிருக்கு, செலவுரெனச் சு.நான் கவலை. ஓம் பையன்றாள் 10.பது: ரோய்ந் தாகி இருக்கானே,அப்ப செலவை இரகச· ஏந்துக்கனும்னு கனாபளூர் ஒரிவச்சிருக்நாகிர! 10, 12 ஆம் வகுப்பு களில் தமிழை ஒரு பாட மாக வேணும் படித்து, மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முதல் 3 நிலை களைப் பெறும் மாணவர் களின் உயர் கல்விச் செலவு முழுவதை யும் அரசே ஏற்கும் புதிய திட்டம். தந்தை இந்ழை வெர்வார் பெரியார் பல்கலைக் பான்டர் அம்பேத்கான் ரங்கம் கழகம் சென்னையில், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் முன்ே ஆண்டுமளில் மநற்சான 2<noinclude></noinclude> dx5vnjel5eounlq1b4wtsgq5kfqzrw4 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/10 250 640788 1925524 2026-04-20T05:12:46Z Magizh Sundram 16422 OCR 1925524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Cart Canvas Capillarity Carbon Car park Carpet Carriage marking Carriagewi.y marking Cart Track Cast iren C.fchmer.t area Catchment basin Catch pit Catch weter dre.in Cattle crcep Cattle grid .. .. .. .. .. .. .. .. .. .. சாய்வு கித்தான் நுண்புழையியல் கரி சீருந்து நிறுத்துமிடம் தேய்வு தளம்; விரிப்பு தடம் குறீயிடல் ஊர்திப்பாதை குறியிடல் வண்டிப் பாதை வார்ப்பு இரும்பு நீர்ப்பிடி பரப்பு நீர்வடிப் பரப்பு/ நீர்பிடிப் பரப்பு நீர் வடித்தொட்டி நீர்ப்பிடி வடிகால் கால்நடை கீழ்ப்பாலம் கால்நடைக் கடவு நிலக்கீல் கொதிக்கும் பாத்திரம் ஓடுபாலம் எச்சரிக்கை அறிகுறி முகடு ; மேலறுதி நிலவறை கண்ணறை கொண்ட: தக்கையான சிமிட்டிக் கற்காரை ஓட்டுந் திறன் சிமிட்டிச் சாந்து லபய ஒதுக்சம் சாரம்/அடிச்சாரமிடல்; தாங்கு பலகை அமைத்தல் அடிச்சாரம் - போலிக் கட்டுவேலை மையக் கோடு வளைவின் மையம் மையக் குச்சிகள்; நடுக் குச்சி Cauldron Causew2y C..utionary sign .. .. Ceiling Cellar Cellular : Cement concrete Cementing value Coment Mortar Central Reserve Centering Centering falsework Centreline = Centre of curvature Centre pegs<noinclude></noinclude> 3s59ru78zgcqlkmdpnjioqmvq4dxlla பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/11 250 640789 1925527 2026-04-20T05:13:27Z Magizh Sundram 16422 OCR 1925527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Centrifugal Centrifuge Centrifuge moisture equivalent Change point Channel Charr elising island Charge Check level Chip Chipping Circumference Circumferentiel highways Circumferential rcad Classification of seil Classifiud road Clay triction Clearance Cleur span Coal tar Cal tar heavy oil Coal tar light oil Coarse Coarse sand Cat Coated grit Cobble Co-efficient Co-efficient of contraction Cc-efficient of discharge Co-efficient of roughness Coffer dam Cohesion Cohesive soil coil .. .. .. .. .. . .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. மைய விலக்கு ஆற்றல் மைய வெளித்தெறித்தல் மையவெளித் தெறித்தல் நீர்க்கோவை சமணம் திருப்பு முனை வாய்க்கால் நெறிப்படுத்தும் திட்டு விலை குறிப்பிடு; தாக்கு; ஏற்று சரிபார்க்கும் மட்டம் சிறு துண்டு; பொடிக் கல் சில்லுகள் சுற்றளவு; பரிதி சுற்று நெடுஞ்சாலை சுற்றுச் சாலை மண் இயல் பாகுபாடு பாகுபடுத்தப்பட்ட சாலை களிமண் பிடிப்பு இடைவெளி நீர் பாயும் உட்கூடு நிலக்கரித் தார் அடர்ந்த நிலக்கரித் தார் எண்ணெய் இலேசான நிலக்கரித் தார் எண்ணெய் வழி: பெரும் பரல் பரு மணல் பூச்சு பூசப்பட்ட தூள் கற்கள் உருளைக் கல் கெழு சுருங்கல் கெழு வெளியேற்றக் கெழு சொரசொரப்புக் கெழு சுற்றணை பிடிப்பு பிடிமானமுள்ள மண் ... சுருள்<noinclude></noinclude> g8nk12zcbrbd03f8rxanf42d8qzmxly பக்கம்:கலைஞர் ஆட்சியில் கல்வி மேம்பாடு.pdf/6 250 640790 1925528 2026-04-20T05:13:37Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>@ 953 புதிய தொடக்கப்‌ பள்ளிகள்‌. € (62 தொடக்கப்‌ பள்ளி கள்‌ நடுநிலைப்‌ பள்ளி களாகவும்‌, 374 நடு நிலைப்‌ பள்ளிகள்‌ உயர்நிலைப்‌ பள்ளி களாகவும்‌, 246 உயர்‌ நிலைப்‌ பள்ளிகள்‌ மேல்நிலைப்‌ பள்ளி களாகவும்‌ நிலை உயர்த்தப்பட்டுள்ளன. € வேலை வாய்ப்புப்‌ பதிவு முன்னுரிமை யின்‌ அடிப்‌ படையில்‌ மட்டுமே நேர்மை யாக, 39,82.4 இடை நிலை ஆசிரியர்கள்‌ ® @ 3,162 முதுகலைப்‌ பட்டதாரி அசிரியர்‌ கள்‌ நியமனம்‌. € தனியார்‌ பள்ளிகளில்‌ 2001 ஆசிரியர்கள்‌ பணி நியமனம்‌. © 828 கல்லூரி உதவிப்‌ பேராசிரியர்கள்‌ 3,672 பட்டதாரி அசிரியர்கள்‌<noinclude></noinclude> e1lcvu0n6qfyam7nwe0cmd552yw7gwm 1925530 1925528 2026-04-20T05:14:20Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>953 புதிய தொடக்கப் பள்ளிகள். 462 தொடக்கப் பள்ளி கள் நடுநிலைப் பள்ளி களாகவும், 314 நடு பள்ளிகள் நிலைப் உயர்நிலைப் பள்ளி களாகவும், 246 உயர் குழந்தைங்க' சிரமமில்லம் கள்ளிக்குப் டோக சுரர்ன் அக்கறையே நனிதான்? நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளி ஆமாம். ஆமாம். அரசு கலைக் கல்லூரி களாகவும் நிலை உயர்த்தப்பட்டுள்ளன. வேலை வாய்ப்புப் WA 3,162 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கள் நியமனம். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் 2001 பணி நியமனம். • 828 கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பதிவு முன்னுரிமை யின் அடிப் படையில் மட்டுமே நேர்மை யாக, 39,824 இடை நிலை ஆசிரியர்கள் 3,672 பட்டதாரி ஆசிரியர்கள் அப்பா!படிச்சுட்டு (அதுங்கு காழலம் ஜம்மாஇருந்தோம்.) இல்லாத அரā இந்தனை நாள் எந்தக்குறுக்கிடும் இப்ப வேலைகிடைச் அமைஞ்சதால்... கார்ன் Brigar Xபட்டசாரி ஆசிரியர் உயர் நிலைப் பள்ளி 4<noinclude></noinclude> 9yqkefcddjkv2i9cqzbe123q9tz716w பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/12 250 640791 1925529 2026-04-20T05:13:50Z Magizh Sundram 16422 OCR 1925529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Cold asphalt pavement Collar Collide Column Combined Combustion Communication Compacting factor test Compaction Compass Compressed rock Compound curve Compression Compressed rock asphalt Compression test Concentration traffic Concrete Concrete finishing machine Concrete mixer Concrete mixer non-tilting Concrete paver .. .. ... .. .. ... .. ... .. .. .. .. சூடேற்றா நிலக்கீல் தளம் சுற்றுப்பட்டை; வளையம் மோதுதல் தூண் ஒருங்கிணைந்த எரிதல் தொடர்பு வசதி அமுக்கப்படும் அளவுச் சோதனை நெருக்கம்; செறிவு; அமுக்கம் திசைகாட்டி; கோணம்காட்டி அழுத்தப்பட்ட பாறை கூட்டு வளைவு அமுக்கம்; அழுத்தம் அழுத்தப்பட்ட பாறை நிலக்கீல் அழுத்தச் சோதனை ஊர்திச் செறிவு; ஊர்தி அடர்த்தி கற்காரை கற்கலவையைச் செம்மைப் படுத்தும் இயந்திரம் கற்கலவை இயந்திரம் கவிழாக் கற்கலவை இயந்திரம் கற்காரை தள இயந்திரம் கற்கலவைச் சாலை கால்வாய்க் குழாய் கீழ்படிதலுக்கான அறிகுறி Concrete road Conduit Conformation sign .. Cone .. கூம்பு Conflict points Conglomerate Conical Conserve Consistency Consistency index Consolidate Construction Content Contractor 73-3--2 .. .. .. முரண்படு புள்ளிகள் பல்பொருள் திரள் கூம்பு வடிவ பாதுகாத்து வை; சேமித்து வை நிலைமாறாத நிலைமாறாக் குறியீடு .. கெட்டியாக்கு: வலுப்படுத்து; .. : .. ஒருங்கிணை கட்டுமானம் உட்பொருள்; கொள்ளளவு ஒப்பந்தக்காரர்<noinclude></noinclude> 9z0er63qk7qxpem64hqqoq5rd13jqkh பக்கம்:கலைஞர் ஆட்சியில் கல்வி மேம்பாடு.pdf/7 250 640792 1925531 2026-04-20T05:14:51Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>(அரசின் PRகளாலே பாடப் புத்தகங்கள் இலசைமர் கிடைக்குது! அ மட்டுமா... இலவச இபருந்தச் சலுகையும், 182L! ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர் களுக்கும் பாடப்புத்த கங்கள் இலவசம். 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு இலவசப் பேருந்துப் சலுகை 6,466 பள்ளிகளுக்கு nig பயணச் உயர் சப் ஆய்ன் C வகுப்பறைக் கட்டடங் கள். • 18,750 பள்ளிகளுக்கு மின்வசதி. .1,000 பள்ளிகளுக்கு ஆய்வகக் கலன்கள். நம்ம பள்ளிக்கு ஆய்வநம் வரும்னு நாம கனவு zட நினைச் சிருப்பமா? 5 7,847 பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருட்கள். 541 பள்ளிகளுக்குக் கழிவறை வசதிகள்<noinclude></noinclude> tkdc6916wk6o9qyy4vvr9ui8nb8gxe9 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/13 250 640793 1925532 2026-04-20T05:15:03Z Magizh Sundram 16422 OCR 1925532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>10 Controller Control line Conveyor Co-ordinated conirol system Core Core-cutter Core driil Core water pressure .. .. .. .. .. .. .. .. .. Cornice Corrugation Counter fort Counter part .. Course Course, basr Course, regulating Cover (for reinforcement) Crack Crane Crenk Crawler track Creep Crossing Creteways Critical velocity Cross fall Cross gircier Cross road Cross section Cross section typical Crown Crude tar Crusher run stone Crushing Crushing test aggregate .. .. .. .. .. .. .. .. .. .. .. .. கட்டுப்படுத்துபவர் கட்டுப்பாட்டுக் கோடு பொருள் நகர்த்தும் கருவி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டுத் திட்டம் அடிப்படை உள்ளீடு லெட்டி உள்ளிருப்புத் துளைப்பான் உள்ளடங்கிய நீர் அழுத்தம் நீட்டிய முகப்பு நெளிவு எதிர் முட்டு ஒத்த நிலை வழி: கட்டு வரிசை அடித்தளம் முறைப்படுத்தும் தளம் (வலிவூட்டு) உறை வெடிப்பு பளுதூக்கி வளைவச்சு; சுழற்சி முறை ஊர்ந்து செல்லும் பாதை ஊர்வு கற்காரை இளக்கி இணைச் சாலை உய்ய விரைவு குறுக்குச் சரிவு குறுக்கு உத்திரம் கடக்குமிடம் குறுக்குச் சாலை குறுக்கு வெட்டு குறுக்கு வெட்டு மாதிரி முகடு தூய்மைப்படுத்தாத தார் நொறுக்குப் பொறியில் உடைத்த சிறு கல் நொறுங்குதல் கற்களை நொறுக்கும் சோதனை<noinclude></noinclude> 167e5iunbbrqm7h3y3kqwso2b9vf5dx பக்கம்:கலைஞர் ஆட்சியில் கல்வி மேம்பாடு.pdf/8 250 640794 1925533 2026-04-20T05:15:17Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>இந்தியாவிலேயே முதலாவதாக ரூ.112 கோடி செலவில் 30 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு மேல்நிலைப்பள் 666 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணிப் பொறிக் கல்வி. உங்கள் எதிர் நாம் சிறப்பா இருக்கும் நிறுவனம் தமிழ்நாடு தொழில்நுட்ப வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்பவியல் துறையில், மனித வளத்தை உருவாக்க 'தமிழ்நாடு தொழில் நம்ம எதிர்காலம் சிறந்த ஓரசு செய்யும் முயற்சிக்கு நன்றி சொல்லனும்! தகவல் தொழில் நுட்பப் பயன்கள், உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் சென்றடைய இணையப் பல்கலைக் கழகம்' உருவாக்கப் படுகிறது. 'தமிழ் நுட்ப நிறுவனம்'. தமிழ் இணையப் புல்கலைக் கழம் உலகத் தமிழ் மக்கள் அனசனு ரையும் இணைக்கப் போகிறது. 6<noinclude></noinclude> 59x3hahtrpoi0r4do6lzaqbc541z4ev 1925555 1925533 2026-04-20T05:21:51Z Velumani Veluchamy 16585 படம் செதுக்கல் 1925555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>{{Css image crop |Image = கலைஞர்_ஆட்சியில்_கல்வி_மேம்பாடு.pdf |Page = 8 |bSize = 390 |cWidth = 180 |cHeight = 164 |oTop = 62 |oLeft = 191 |Location = center |Description = }} இந்தியாவிலேயே முதலாவதாக ரூ.112 கோடி செலவில் 30 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு மேல்நிலைப்பள் 666 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணிப் பொறிக் கல்வி. உங்கள் எதிர் நாம் சிறப்பா இருக்கும் நிறுவனம் தமிழ்நாடு தொழில்நுட்ப வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்பவியல் துறையில், மனித வளத்தை உருவாக்க 'தமிழ்நாடு தொழில் நம்ம எதிர்காலம் சிறந்த ஓரசு செய்யும் முயற்சிக்கு நன்றி சொல்லனும்! தகவல் தொழில் நுட்பப் பயன்கள், உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் சென்றடைய இணையப் பல்கலைக் கழகம்' உருவாக்கப் படுகிறது. 'தமிழ் நுட்ப நிறுவனம்'. தமிழ் இணையப் புல்கலைக் கழம் உலகத் தமிழ் மக்கள் அனசனு ரையும் இணைக்கப் போகிறது. 6<noinclude></noinclude> imaknpexrr3jrbrh9jqjrc1kw6xcysj பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/14 250 640795 1925534 2026-04-20T05:15:27Z Magizh Sundram 16422 OCR 1925534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Crushing value Crystal Cube test mortar Cubical material Cul-de-sac Culvert Curing period .. .. .. .. 11 நொறுங்கும் அளவு படிகம் சாந்துச் சரிசமத் திண்மைச் சோதனை சரிசமப் பருமானப் பொருள் முட்டு நிலை வீதி சிறு பாலம் பதன காலம் மறைப்பு; திரை Current .. ஓட்டம் Curtain -.. Curtain wall Curve .. Curve-compound Curve-degree of Curve-horizontal Curve-reverse Cushion Cut and fill Cut off wall Cut Section Cut-side Cut water Cycle Cycle track Cyclopran .. .. .. .. .. .. மறைப்புச் சுவர் வளைவு கூட்டு வளைவு வளைவுக் கோணம் கிடை நிலை வளைவு தலைகீழ் வளைவு மெத்தை ; அழுத்தம் தாங்கும் நிரப்புப் பொருள் வெட்டலும் நிரப்பலும் தடுப்புச் சுவர் வெட்டு முகம் பக்க வாட்டில் வெட்டுதல் நீர்ப்பிரி முனை வட்டம்; சுற்று மிதிவண்டிப் பாதை .. கற்கள் தெளித்த Dagbel Dale .. .. D நூல் பிடி பள்ளத்தாக்கு .. அணை .. .. .. .. இருட்டான : கருமையான ஆதார மட்டம்: ஆதாரக் கோடு நிலைப் பளு முட்டுக்கட்டை : நிலை முடக்கம் அழிவு : அழுகுதல் : பதனழிவு Dam Dark Datum Dead load ... Dead lock Decay<noinclude></noinclude> jrsokucyivy1pofqtgiky82d0eejxnp பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/15 250 640796 1925535 2026-04-20T05:15:45Z Magizh Sundram 16422 OCR 1925535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Deck-bridge Deck level Decrease Define Deformation Degree of density Dehydrate Dell Delta Demand Demolish Demonstrate Dense Tar surfacing Depth of manhole Design Design speed Detector pad, vehicle Detour Deviation Deviation angle Deviation-limit of Dewatering Diagnol Diagram Dial Diaphragm Difference: Dike Diluteu Direction-advance Directional island Direction post Direction sign .. .. .. : : ; : .. .. .. .. .. .. .. .. 12 பால மேல்தளம் மேல் தள மட்டம் குறைத்தல் வரையறு; தீர்மானி உருச்சிதைவு: உருவழிதல் அடர்த்தி அளவு உலர்த்தி; உணக்கல் ஆழ்ந்த பள்ளம் கழிமுகம் (ஆற்றின் கழிமுக நடுவரங்கம்) வேண்டுகோள் அழி, சிதை, பாழாக்கு செய்துகாட்டு அடத்தியான தார் பாவுதளம். ஆள் இறங்கும் வழியின் ஆழம் வடிவமைப்பு: வரைவடிவம். அமைப்பு முறை வருத்த வேகம் ஊர்தி செல்வதை உணர்த்தும் கரூவி சுற்று வழி மாற்றம் விலகு கோணம்: மாறுபடும் கோணம் மாற்ற உச்ச அளவு .. .. நீர் வெளியேற்றம் .. மூலை விட்டம் .. விளக்கப் படம் .. அளவை முகப்பு .. .. விதானம்; மெல்லிய தகடு வேற்றுமை தடுப்புச் சுவர் .. .. நீர் கலந்த .. .. முன்னோடி வழிகாட்டி தெறிப்படுத்தும் தீவு வழிகாட்டிக் கம்பம் வழிகாட்டி<noinclude></noinclude> g94jsc2wn9cidgwjb79o0ntby1lkdfc பக்கம்:கலைஞர் ஆட்சியில் கல்வி மேம்பாடு.pdf/9 250 640797 1925536 2026-04-20T05:15:57Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>தமிழரசு அச்சகம், சென்னை-600002.<noinclude></noinclude> 5wkdlzzibaph7biln5nl10ytkf005j3 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/16 250 640798 1925537 2026-04-20T05:16:08Z Magizh Sundram 16422 OCR 1925537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Direction supplementary Disc Harrow Dismantling Disottarrow Dispensation Dissimilar Distance-breaking Distence-following Distence-site Distance-skick.ir g Distance-stopping Distemper Distributicn District read, Major District road, Other Ditch Diverging Diversion Divide Divicing strip D: ck Dozer Drain Drainage Drainage basin Drain agricultural pipe Drain herring bone Drgin main Drawing Dressing surface Drift way Drilling Driveway Dry Dry maximum Dry/Moisture content relationship .. .. .. .. .. .. . .. . .. .. .. .. 13 கூடுதல் வழிகாட்டி வரம்படித் தட்டு பிரித்தல்; இடித்தல் கலந்து பரம்படி கருவி அமைப்பு : ஏற்பாடு மாறுபட்ட; ஒத்திராத தடைத் தூரம் ஊர்திகளின் இடைத் தூரம் பார்வைத் தூரம் சறுக்கும் தூரம் நிறுத்தும் தடைதூரம் வண்ணப் பூச்சு பகிர்வு: பங்கீடு மாவட்டப் பெருஞ்சாலை மற்ற மாவட்டச் சாலை குழி; பள்ளம் விலகிச் செல்லும் அமைப்ப விலக்கப் பாதை பிரி: பங்கிடு பிரிக்கும் பட்டைகள் கப்பல் துறை சீர்வெட்டி வடிகாள் வடிகால் வசதி நீர்வடி நிலப்பரப்பு எடிகால் வேளாண்மைக் குழாய் மீன்முள் வடிகால் மூல வடிகால் வரைபடம் சிறுகல் பாவு தரை கால்நடையாளர் பாதை துளையிடுதல் சாலை சேர்வழி உவர்ந்த பெரும உலர்ச்சி ஈரம்/உலர் அளவைத் தொடர்பு<noinclude></noinclude> o38g0kb76xure68ylkk5358gdkgh8tk பக்கம்:கலைஞர் ஆட்சியில் கல்வி மேம்பாடு.pdf/10 250 640799 1925538 2026-04-20T05:16:25Z Velumani Veluchamy 16585 எழுத்துணரி 1925538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>அஞர் அன்னா அரசினர் மேனிலைப் பள்ள பூவிருந்தவல்லி, சென்னை. 600056. 666அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணீப்பொறி மையங்கள் தொடக்க வில 5-10-1999<noinclude></noinclude> o14yrx83gfay5owdm7fyxfkq6iwn33q 1925544 1925538 2026-04-20T05:18:12Z Velumani Veluchamy 16585 படம் செதுக்கல் 1925544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>{{Css image crop |Image = கலைஞர்_ஆட்சியில்_கல்வி_மேம்பாடு.pdf |Page = 10 |bSize = 390 |cWidth = 374 |cHeight = 573 |oTop = 15 |oLeft = 12 |Location = center |Description = }} அஞர் அன்னா அரசினர் மேனிலைப் பள்ள பூவிருந்தவல்லி, சென்னை. 600056. 666அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணீப்பொறி மையங்கள் தொடக்க வில 5-10-1999<noinclude></noinclude> f8t9u5iu9hrtbyrhd45cvicuedp8spb பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/17 250 640800 1925539 2026-04-20T05:16:26Z Magizh Sundram 16422 OCR 1925539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude><noinclude></noinclude> mh2xofwrp8gmcso636vph7uc99iugt0 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/18 250 640801 1925540 2026-04-20T05:17:02Z Magizh Sundram 16422 OCR 1925540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Elutrlation test Embankment Emulsion End anchorage Engrave Entrance Entry Equation .. Equidistant ... Equipment Equivalent Equiviscous Equiviscous temperature Erection Erosion Error Fruption Escape Estimate Etch Excavation Exeevator Exchange Exodus Expansion Joint Expansion limit Explosive External Extradoe . . . . .. .. .. .. .. " : : 18 பரிமானக் கலவைத் துகளில் (மாவில்) சோதனை கரை சேர்க்கக் குழம்ப கரை நங்கூரம் செதுக்கி வரை புகுவழி; நுழைவு வாயில் சமன்பாடு சமதூரமுள்ள தளவாடம் சமமான சமமான பாகு நினை சமப்பாகு வெப்ப நிலை எழுப்புதல் அரித்தல் தவறு பிழை குமுறி வெடித்தல் தப்பிப் போதல்/கசிந்தொழுகு மதிப்பீடு கரைத்து வரை ; திராவக வரைவு (உலோகத்தில்) தோண்டுதல் .. அகழ்பொறி பரிமாற்றம் வெளியேற்றம் விரிவு இணைப்பு விரிவடை எல்லை வெடிபொருள் .. .. .. புறம் .. வளைவின் வெளிப்புறம் Fabrication Facing Factor compacting test F .. கட்டுதல்: புனைதல்; உற்பத்தி செய்தல் முகப்பு இறுகுந் திறன் சோதனை<noinclude></noinclude> 3j94hevjulcezy2kzev7l7e8v0vtj6p பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/19 250 640802 1925541 2026-04-20T05:17:19Z Magizh Sundram 16422 OCR 1925541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Falling up False work Fast surface Feeder Fence Fence line Fender Ferry Ferry boat Fertile Field mix Field moisture equivalent Fill Filler Filler Joint Filling depth Filter Filter flaky Filter material Filtration Final setting time Fine aggregate Fineness Fineness modulus Fineness test Fine said Finger post Finish Fire paint Fissure Fines Fitting Fix Fixed bearing Fixed blocks Fixed carbon .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ... : : ; .. 16 உதிரல் போலிக் கட்டுவேலை விரைவு தளம் ஊட்டி வேலி வேலிக் கோடு தீத்தடுப்பு தோணித் துறை தோணி செழிப்பான களக் கலவை கன நீரளவின் சம நிரப்பு நிரப்பி இணைப்பு நிரப்பி நிரப்பு ஆழம் வடிகட்டி தகடான வடிகட்டும் கருவி வடிகட்டல் மதிப்பு இறுதிப் பதன நேரம் நுண்ணிய கூட்டுப் பொருள் நுண்மை நுண்மை வீதம் நுண்மைச் சோதலை நுண்ணிய தூள் பொடி மணல் கைகாட்டி வேலை முடிப்பு நெருப்பு வண்ணம் பிளவு பொருத்தம்; இணைப்பு பொருத்து: அமை நிலையான தாங்கி பொருந்தும் கட்டைகள் லையான சுரியம்<noinclude></noinclude> 5ahzt98tmqvxmcna55biqovi81dch41 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/20 250 640803 1925542 2026-04-20T05:17:37Z Magizh Sundram 16422 OCR 1925542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Fixed time signals Fixture Flagstone Flakiness in!ex Flaky material Flesh pcint Flexiblc pevement/ Flexible prcgressive Flexural Test Flexure Flint Float Floating bridge Flocculation limit Flocculation ratio Flow side Fl: w-traffic Flood gate Flood way Floor surface Fle Flu.sh causeway Flushing Fluxing agent Fly ash Fut Bridge Footing Foot path Foot Pavement Footway Force Ford Fork nunction Formation Formation level .. .. .. .. .. 17 குறித்த நேர அறிகுறி பொருத்தப்பட்ட பொருள் நிலையான தன்மை கொடிக் கல் தகட்டுத் தன்மைக் குறியீடு தகட்டுப் பொருள் தீப்பற்றும் தருணம் நெளியும் தளம் நெகிழ்வு முன்னேற்றம் நெளிவுச் சோதன நெகிழ்வு தீக்கல் மட்டப் பலகை மிதக்கும் பாலம் தூறு வீழ் கபடம் (கட்டம்) தூறு வீழ் விகிதம். ஓடும் பக்கம் போக்குவரத்து நிறை வெள்ளமடை வெள்ளவாயில் தளப்பரப்பு புகைப்போக்கி ஆற்று மட்டத் தாம்போல் 'அடித்துச் செல்லுநம் இளகச் செய்யும் பொருள் எரி சாம்பல் நடைபாலம் கட்டட அடிவரிசை நடைபாதை நடைதளம் நடைவழி ஆற்றல் கடக்கும் முறை இரட்டை முனைச் சந்திப்பு அமைப்பு அமைப்பு மட்டம்<noinclude></noinclude> a3all69t73v42oc46dt16fme08oji1j பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/21 250 640804 1925543 2026-04-20T05:17:54Z Magizh Sundram 16422 OCR 1925543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Formation width Form work Foundation Fraction Frame Frame work .... Freo board Free carbon .. Free haul Free speed Free water .. .. .. .. .. .. " ... .. .. .. 18 அமைப்பகலம் வடிவமைக்கும் சட்டம் அடித்தளம்; கடைக்கால் பின்னம்; பகுதி சட்டம் கட்டமைப்பு வெள்ளமட்ட மேல் வெளி கலப்பற்ற கரிமம் தடையற்ற இழுவை தடையற்ற வேகம் தடையற்ற நீரோட்டம் (பிரெஞ்ச்) தேய்மான கிலக்கம் அதிர்வு எண் சித்திர வேலை செய்தல் உ உராய்வுக் கோணம் முழுச் சந்தடைப்பு பெய் குழல் வடிவாக்குதல் (French) co-efficient of wear .. Frequency Fretting Friction-angle ot Full grout Funnelling G Q2 மஉங் Gantry Gap graded material .. Gap Grador .. Gauge box .. Geometry .. வடிவ இயல் Ghat Road .. ஊன்று சாரம் இடைவெளி பொருள் ஒருங்கிணைந்த இடைவெளி நிரம்பிய அளவைப் பெட்டி மலைச் சாலை Girder .. உத்திரம் Girder bridge .. இரும்பு உத்திரப் பாலம் Girder (Cross) .. Gloss Gnesis Grab Grade - Graded matorial. குறுக்கு உத்திரம் பளபளப்பு பளிங்கு அடுக்குப்பாறை பற்று; கைக்கொள் சரிவு; தரம் ஒருங்கிணைந்த பொருள்<noinclude></noinclude> sjc1j8ac0l5yq1tu1kpidypz5wtm8jg பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/22 250 640805 1925545 2026-04-20T05:18:21Z Magizh Sundram 16422 OCR 1925545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>19 Grade level crossing Grader Grader Blade Gradient Gradient average Gradient limiting Gradient maximum Gradient ruling Grading Grading Curve Grain diameter. Grain size Granite Granulate Granule Grapin Grating Gratory junction Gravel .. .. .. .. .. .. தரைமட்டக் கடவு சமசெதுக்கி பட்டை செதுக்கி சரிவின் அளவு சரிவின் சராசரியளவு சரிவின் வரையறையளவு சரிவின் பெருப. அளவு தேவைப்பட்ட சரிவு சம செதுக்கல்; பகுப்பு பருமானப் பருமானப் பகுப்பு ஒப்புமை மணிவிட்டம் மணியளவு கருங்கல் சிறு மணிகளாகச் செய் சிறு மணி கட்டத்தாள் வரைவு இரும்புத் தட்டம் சந்துள்ள தட்ட இணைப்பு சரளை; சரளை மண் வெட்டி எடுத்த சரளை சரளை மண் சாலை Gravel, pit ran Gravel road .. Gravitational soil water .. ஈர்ப்பு மண் ஈரம் Gravitational water .. Gravity specific .. Grip .. Grit Gritting joint Ground level Ground water Grouping .. .. .. நிலத்தடி நீர் .. தொகுதி Grout கலவைப் பால் .. Grouted Macadam .. Grouted surface .. கலவைப் பால் தளம் சந்து மூடிய தளம்' புலி ஈர்ப்பு நீர் ஒப்படர்த்தி பிடிப்பு '.. பொடி தன்மை மணல்; உறுதியான ணைப்பை உறுதியாக்குதல் தரைமட்டம்<noinclude></noinclude> 7lacw3kx0g5gpn19rbnzsoq1fujk8s2 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/23 250 640806 1925546 2026-04-20T05:19:00Z Magizh Sundram 16422 OCR 1925546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Grouting Groyne Grubbling Guard fence Guard rail Gaard rail pedestrian' Guard stone Guide bank Guide peg Guide post Guide stone Guide walls Gulley Guniting Gusset Gutter Gutter box Gypsum - Gyratory Gyratory tra Hair Crack Hairpin ben1 Hammer for piles Hand drum mixer Hand rails Hand rammer Hangers Hard core Hardening period Hardness Hardware Haulage .. .. .. .. .. .. .. 20 H .. .. கலவைப் பால் செலுத்துதல் கடலரிப்புத் தடுப்பு அரண் களைத்தெரிதல் .. ". .. காப்பு வேலி காப்புக் கிராதி 1+ நடைபாதைக் கிராதி காப்புக் கல் நெறிப்படுத்தும் கரை வழியமை குச்சி; வழிகாட்டிக் குச்சி அறிவுறுத்துக் குறி; வழிகாட்டிக் கம்பம் வழியமைத் தூண் வழியமைச் சுவர் அறுத்தோடி சந்து மூடுதல் பிணைப்புத் தட்டு சாக்கடை சாக்கடைத் தொட்டி களிச் கல் சுழி: சுழலும் சுற்றிச்செல்லும் வண்டியியக்கம் நூலிழை வெடிப்பு; மயிரிழை வெடிப்பு சொன்டை ஊசி வளைவு முளைக் கம்பச் சம்பட்டி கைக்கலவைப் பொறி கைப்பிடிக் சீராதி: கைப்பிடிக் கட்டை. கைத் திமிசு இணைத் தூண்கள் கடினமான ககுப் பகுதி உறுதியாக்கும் பருவம் உறுதித் தன்மை இரும்புச் சரக்கு 'ஏற்றிச் செல்லல்<noinclude></noinclude> cy5iltkhj6v9mpmu1ofpnkm2vtossx0 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/24 250 640807 1925547 2026-04-20T05:19:38Z Magizh Sundram 16422 OCR 1925547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Haunch Head room Head witll Hcat master Heptagon Heterogenous High alumina cement High early strength cement Highest filood level High level bridge High level causeway Highway grade separation. Highways Hill roads Hinge Hinges abutment Hinges of Bridge Hoarding Hoggin Hollow girder Hook Horizontal Horizontal alignment Horizontal curve Hose Hump Humus Hydraulic cement Hydraulic gradient Hydraulio mean depth Hydraulic mean radius Hydraulias .. .. ... .. .. .. .. .. .. 21 இடை: இடுப்பு தலைமேல் இடைவெளி, தலைச் சுவர்; முகப்புச் சுவர் நிலக்கீல் உருக்கி எழுகோகக் கட்டம் பலவகையான களிப்பாங்கான சிமிட்டி உடன் இறுகும் சிமிட்டி உச்ச வெள்ளமட்டம் உயர்மட்டப் பாலம் உயர்மட்டத் தாம்போகி வாகன எகைக்கேற்ற நெடுஞ்சாலைப் பகுப்பு நெடுஞ்சாலை மலைச் சாலைகள் இல் கீல் அமைப்புடனுள்ள தாங்கதம் பாலத்திஇன்; இணைப்புக் கீல் விளம்பரப் பவற்க பிதுங்கி வரும் சரல் உட்குழை உத்திரம்' கொக்கி கிடை நிலை ஆற்றல் சமதள நேர்பாடு சம்தள வளைவு தெனிகுவாய் மேடு இலைதறை மக்கிய மண் 'நீர் உரை சிமிட்டி நீர் நிலைச் சரிவு நீர் நிலைச் சாரசரி ஆழம் நீர் நிலைச் சராசரி நீரியல் ஆரம்<noinclude></noinclude> effuh5l471kwaj421z34q8uzp0gqyyu பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/25 250 640808 1925548 2026-04-20T05:19:54Z Magizh Sundram 16422 OCR 1925548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Identifioation sigu route Impact Impassable Inclination Incline Index Hydride Hydro carbon Hydro electric Hydrogen Hydrography Hydrometer Hydrosphere Hydrostatio pressure Hygroscope Hyperbola Hypotenuse .. .. .. .. .. .. .. .. .. I. .. .. .. .. 22 நீரகை; நீரகை வகை நீரகக் கரிமம் தீர் மின் ஆற்றல் நீரகம் நீர் பரப்பியல் நீர் அடர்த்திமா. ஈரமா நீர் மண்டலம் நிலை நீரழுத்தம் ஈரங்காட்டி அதிபர வளைவு செம்பக்கம்; கர்ணம் அக-டயான வழிக் குறி மோதல் கடக்க முடியாத சாய்வு; சரிவு சாய் அட்டவணை .. .. Indicator .. காட்டி Infiltration .. சுசீதல் Initial set .. Initial setting time .. ஆரம்ப இறுக்கம் ஆரம்ப இறுக்க நேரம் Inlet .. Insolubles .. Inspection abamber Instrument .. .. கருவி Intake Intensity of rainfall Interaction Intercepting drain Inter change Intermediate course Intersection Intersection angle .. .. புகுவழி கரையாத போருள்கள் ஆய்வறை கொள்ளளவு மழையளவு : மழைச் செறிஞ ஒன்றையொன்று பாதீத்தல் குறுக்கீடும் வடிகால் .. .. மாற்றம் .. .. சந்தி இடைப்பட்ட தளம் சத்திக் கோணம்<noinclude></noinclude> 9wp4a295oy8402ob8xmj03uf1v89x0t பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/26 250 640809 1925549 2026-04-20T05:20:10Z Magizh Sundram 16422 OCR 1925549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>tntrados luvert laverted sypkon Isoceles lavestigation site Isotherm Isotope Jelly Jet Joint Joint oontrastion .. .. : : : : : : ! .. .. .. .. .. .. 23 வளைவின் உட்புறம். தலைகீழாக்கு தலைகீழான கீழ் வனை சூழான் ஆய்வு செய்யப்பா மிடம் இரு சமபக்க சமவெப்பக் கோடு சமவேதித் தனிமங்கள் J சல்வீக் கள் தாரை இணைப்பு இணைப்புச் சுருக்கம் இணைப்பு திரப்பால் இணைப்பு முடுபோருன் பாவுகட்டை Joint filler Joint sealing materials .. Joist .. Jolly work .. Juustion .. சந்திப்பு Jungio clearance .. புதர்க்காடு அழிப்பு ஒப்பளை வேளல .. .. .. .. .. : : : : : : : : ; | : : .. .. I சுக்காஸ் கள் சுக்கான் சாவை லெண் களிமண் ஓரத் இண்டு ; ஓரல் கல் ஓரவடித்துனை ஓரத் தடை இற்றனவான நிலப்படம் மையக் கல் இயக்கம் சார்ந்த முடக்கு; வளைவு; தெளிவு குழைத்தல் 71 முடிச்சு Kaukar Kankar read Kaolin Kerb Kerb inlet Kerbs Key map Key stene Kinematis Kink Kneading Knot -<noinclude></noinclude> 35vrrdz945x0pv2xa512m6f4gkz5j3m பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/27 250 640810 1925550 2026-04-20T05:20:24Z Magizh Sundram 16422 OCR 1925550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Lag distance Lake asphalt Landscape L 2. .. 24 பிள் தங்கு தூரம் ஏரிப்படிவ நிலக்கீல் நிலத் தோற்றம் நிலச் சரிவு உள்ளார்ந்த செம்பாராங் கல் Landslide' Latent Laterite Lawn .. .. புல்வெளி Laybye Layer Layout Leaching Leader droin Lead of drain .. .. .. - ஒதுங்கு சாலை அடுக்கு அமைப்புத் திட்டம் நீர்மம் கசிவுறுதல் மூல வடிகால் வழிப்பிரிக்கும் வடிகால் துழுகல் பிதுங்கிய விழிம்பு Leak Ledge .. Level .. மட்டம் Levelling course .. Lever Lift Light post Light traffic Lime concrete Lime stone road Limited access Limit of deviation Linear' : '' Linear waterway. Lining Linked Linked system Liquid limit Live load Load-dead Loader Location .. சமதள வரிசை நெம்புகோல் தூக்கி விளக்குக் கம்பம் .. .. குறைந்த போக்குவரத்து கண்ணாம்புக் கற்கலவை சுண்ணம்புக்கல் சாலை கட்டுப்படுத்திய அணுகுவழி மாற்ற எல்லை நீளவாக்கிலுள்ள நீர் போக்கு நீளம் அக உறை இணைக்கப்பட்ட சங்கிலியமைப்பு திரவ இளகல் வரம்பு இயங்கு எடை தன் பகு சுமை ஏற்றி இடம் காணல்; இட அமைப்பு, அமைவிடம்<noinclude></noinclude> 2hxiwgm7da4014qbdaq424r1gaicxng பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/28 250 640811 1925551 2026-04-20T05:20:45Z Magizh Sundram 16422 OCR 1925551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Longltudinal Longitudinal profile Loop road Lorry Low land Low level Lye Made up ground Mahogany Magnetic Bearing Maintenance Maintenance period Major road Mandatory sign .. .. .. .. .. .. .. .. .. .. .. .. 25 நீள்வச ஆற்றல் செங்குத்துப் வடிவு பக்கத் தோற்ற வெளிச்சாலை: வளைச்சாலை சுமையுந்து தாழ் நிலம் தாழ் மட்டம் கடுங்காரைக் கரைசல் M மெத்தின தளம் தேவதாரு மரம் காந்த முட்கோணம் பேணுதல் பேணுகாலம் பெரிய சாலை தவிர்க்க இயலாத குறி ஆள் இறங்கும் வழி பக்க ஆய்வு வழி Man hole .. Man hole side entrance .. Manual control .. ஆள் வழிக் கட்டுப்பாடு Marble .. Margin .. ஓரம் Marl .. Mass Mastic asphalt Maximum dry density Mean sea level சலவைக் கல் சதுப்புக் களிமண் பொருள் திணிவு சுருங்காரைப் பச்சை Median strip Melting point .. .. .. பெரும உலர் அடர்த்தி .. சராசரி கடல் மட்டம் .. சாலை மைய கட்டைச் சுவர் .. இளகு நிலை Metal Metal mesh .. சரளைக்கல்; உலோகம் இரும்பு வலை Micro analysis .. நுண் பகுப்பாய்வு Micron .. நுண்ம அளவைக்கூறு Miaroscope .. Mine Minor road நுண் பெருக்கி சுரங்கம் சிறு சாலை<noinclude></noinclude> 3jbgm8pfi1zizcnekm6q7wwvz47od6l பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/29 250 640812 1925552 2026-04-20T05:21:01Z Magizh Sundram 16422 OCR 1925552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>- 26 Modulus fines Modulus of elasticity Modulus of incompressibility Modulus of rupture Modulus of subgrade reaction Moisture content Moisture content equilibrium Molsture content (Optimum) Moisture index Molecule Mortar .. .. நுண் குணகம் மீட்சிக் குணகம் .. அழுத்த இயலாக் குணகம் .. .. .. .. Mortar cube test Motor way Movement .. Muok Murrum road I National Highways Natural asphalt Natural rock Non-cohesive soil Non-skid surface Normal setting time Notch Oblong Observation Offset Oneway traffic Opaque .. .. .. .. .. .. .. முறிவுக் குணகம் ; முறிவெண் அடித்தள குணகம் ஈர அளவு எதிர்ச் செய்கைக் ஈரப்புலச நிலைத் தன்மை ஈரக் கொள்ளளவு (பெரிதும் உகந்தது) ஈரக் குறியீடு மூலக்கூறு சாந்து காரைக்கலவை சாந்துக் கனசதுரச் சோதனை ஊர்தி செல்லும் பாதை இயக்கம் ; அசைதல்; அசைவு பண்ணை உரம் கிணற்று மண் சாலை N தேசீய நெடுஞ்சாலை இயற்கைக் கருங்காரை இயற்கை நிலக்கீல் இயற்கைப் பாறை பிடிப்பில்லாத மண் சறுக்காத தளம் இயல்பாக இருகும் தேரம் முக்கோண நீர்வாய் 0 செவ்வகமான காட்சியாராய்வு குத்தளவு ஒருவழிப் பாதை ஒளி பாயாத<noinclude></noinclude> 4jlnlvn8xktpk0q069zfzwa35gxggru பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/30 250 640813 1925553 2026-04-20T05:21:19Z Magizh Sundram 16422 OCR 1925553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>27 Optimum Optimum .. content .. பெரிதும் உகந்தது உகந்த கொள்ளளவு Ordinance datum Organic impurity .. .. Over bridge .. Over burden .. ஆதாரப் படம் உயிரின மாசுகள் மேம்பாலம் மேல் மண் Over estimate .. மிகை மதிப்பீடு Over flow .. Oxide .. Para bola Parallax Parapet Park car Parking place .. .. .. .. .. .. .. .. நிரம்பி வழி உயிரகை P பர வளைவு இடமாறு தோற்றம் கைப்பிடிச் சுவர் சீருந்து நிறுத்துமிடம் ஊர்தி நிறுத்துமிடம் பகுதியளவு தனிப்பட்ட முந்துதல் முந்துமிடம் நொடி மூடுதல்; குண்டு குழி நிரப்பல் நொடி நிரப்புதல் மிதிவண்டி வழித்தடம் வயல் வழி நடை பாதை இழுத்துச் செல்லும் பாதை பாதை கண்காணிப்பு .. ... .. .. தளமிடல் : ஆரப் பரப்பு பெருமப் போக்குவரத்து Partially separate .. Passing .. Passing place Patching .. .. Patch work .. Path cycle Path field Path foot Path tow .. Pathway Patrol Paving "Peak traffic Peat Pebble Pedestrian crossing .. .. .. Pedestrian guard rail .. Penetration .. Perception time Percolation முற்றாத நிலக்கரி உருண்டைக் கல் நடப்பவர்கள் கடக்குமிடம் நடைபாதைக் கிராதி ஊடுருவுதல் காணும் நேரம் .. .. ஊறிப் பரவுதல்<noinclude></noinclude> lb2lhsxah19bklgtvdigas0nqz7fytq பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/31 250 640814 1925554 2026-04-20T05:21:36Z Magizh Sundram 16422 OCR 1925554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Perforated Periphery Por aeability P::aeability co-efficient Per:endicular Pick axe Picking Pier Pilasters Pile Pize drain Pit Pitoh Pitching stone Pit ran gravel Placing .. .. .. .. .. 28 துளைத்த சுற்றுக் கோடு; சுற்று எல்லை உட்புகு திறன் உட்புகுதிறன் கெழு செங்குத்தான குந்தாலி; கொத்தளம்; கொத்துக்கருவி களைந்தெடுத்தல் பாலத்தூண்: பாலம் தாங்கி : : கடற்பாலம் கட்டைத் தூண் நெடுமுனை வடிகால் குழாய் .. .. குழி .. கீல் .. .. .. .. .. பாவுக் கல் குழியிலிருந்து சரளை மண் எடுக்கப்பட்ட அமைத்தல்; வைத்தல் வரை படம்; திட்டம் இயந்திர நிலையம்: இயந்திரம் காரைச் சாந்து குழை வரம்பு பட்டை உத்திரம் முலாம் பூசுதல் தூக்கு நூற்குண்டு காற்றழுத்த வரிப்பூச்சு; கீறிப் பூசுதல் நுழைப்பு அதிர்ப்பான் படகுப் பாலம் குளம்; குட்டை நுண் துளைகளை உடைய வாயில் முகப்பு நொடி! குண்டு குழி நொடி மூடுதல் விசைக்கலவைப் பொறி முன்வார்த்த கற்காரை Plan Plant .. Piaster .. Plasticity limit .. Plate girder ... Plating .. Plumb .. Pneumatio .. Pointing .. Poker vibrator .. Pontoon bridge Pond .. Porasity .. Portico Pot hole Pot hole closing Power mixer Precast concrete<noinclude></noinclude> mwz15wk8iaah4eo0c8ag9dxvhg0g6ba பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/32 250 640815 1925556 2026-04-20T05:22:09Z Magizh Sundram 16422 OCR 1925556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Precoated Precoated chipping Pre-mixed Prestressed concrete Prime coat Primer Profile - .. .. .. .. .. 29 முன் பூசிய / முள் பூசப்பட்ட பொடிக்கல் முன் பூசப்பட்ட பொடிக்கல் துகள்கள் முன் கலந்த முன்கூட்டி அழுத்தமேற்றிய கற்காரை அடிப்பூச்சு: மூலப்பூச்சு அடிப்பூச்சுப் பொருள் பக்கத் தோற்றம் முறையான வளர்ச்சி தடுப்புக் குறி வீதப்படியான பாதுகாப்பு வேலை பொது நெடுஞ்சாலை Progressive .. Prohibitory sign .. Project .. திட்டம் Proportionate .. Protection work .. Public Highways .. Puddle .. Puddle clay Pylons .. Q .. .. .. .. களி பிசைந்த களிமண் முகப்புத் தூண் நாற்கோண உருவம்: சதுக்கம் கால்வட்டம் கல்துகள் கால் பங்காக்குதல் Quadrangle Quadrant Quarry fines .. Quartering Quarter peg .. Quartz .. படிகக் கல் Quick sand .. புதை மணல் Quick setting cement .. Quotation .. Quotient Racking .. .. R கால் பகுதியில் உள்ள குச்சி விரைந்து இறுகும் சிமிட்டி விலைப் புள்ளி * G Radial Highway Radial road Radial set parking Radial setting கலவையைச் சமன்படுத்தல் ஆர நெடுஞ்சாலை ஆரச்சாலை ஆரக்கல் அடுக்கு ஆரப் பரப்பு<noinclude></noinclude> c0fgajxbysumbkfea66a5unr2gwz86f பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/33 250 640816 1925557 2026-04-20T05:22:42Z Magizh Sundram 16422 OCR 1925557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Radiate Radius Radius of curve Radius of curve absolute minimum Rafter Raft foundation Rail gi ard Railings Rainfall Rain water Raised causeway Rako Raking course ... Ramming Ramp Range Rapid curing bitumen .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. 30 ஒளிபரப்பு :ஒளிபரவு ஆரம் வளைவு ஆரம் மிகக் குறும வளைவு ஆரம் உத்திரம் பாய் அடித்தளம் கிராதிப் பாதுகாப்பு; இருப் பூர்திப் பாதுகாப்பு கிராதிக் கம்பி மழையளவு மழை நீர் உயர்மட்ட தாம்போகி முள் கம்பி சமப்படுத்தும் கம்பி திமிசு போடுதல் சாய்தளம் வரிசை : வீச்சு விரைந்திறுகும் நிலக்கீல் விரைந்திறுகும் சிமிட்டி நுண்துளை விகிதம் - வடிநீர் அளவு; ஓடுநீர் அளவு பரவுமளவு கல் பெயர்த்தல் சாலையின் பகுதி, குறிப்பிட்ட நீளம் க எதிரியக்க நேரம் மறுநேர்பாடு சீர்படுத்துதல் முன்னோட்ட ஆய்வு; முன்னாய்வு திரும்பக் கட்டுதல் கணக்கிட்ட மட்டம் .. சட்டம் .. .. .. .. அடையாளக் குறி குறிப்புப் பொருள் தூய்மையாக்கிய நிலக்கீல் எளிதில் உருகாத .. Rapid hardening cement .. Rate of Poracity Rate of, nn off Rate of spread Ravelling Rcach Reaction time Realigument Reconditioning Reconnaissance Reconstruct Reduced level Reeper Reference mark Reference object Refined asphalt Refractory<noinclude></noinclude> ac79d687alqxqo67hf22ew66jwxpox6 அறிவியல் களஞ்சியம் 14/பதிப்புக் குழு 0 640817 1925558 2026-04-20T05:22:57Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பதிப்புக் குழு | previous = [[..//]] | next = [[../நன்றியறிவிப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925558 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பதிப்புக் குழு | previous = [[..//]] | next = [[../நன்றியறிவிப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="8" to="8" fromsection="1" tosection="1" /> lvflcwgiw0ftsuzatlmuxfvc8nyuikb 1925560 1925558 2026-04-20T05:23:17Z TI Buhari 4634 1925560 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பதிப்புக் குழு | previous = | next = [[../நன்றியறிவிப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="8" to="8" fromsection="1" tosection="1" /> 5hh9jv7niw3qipc9mrt0cevm945d3fp பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/34 250 640818 1925559 2026-04-20T05:23:13Z Magizh Sundram 16422 OCR 1925559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Refuge Region Regulating Reinforced concrete Rconforcement Rrjects Relative compaction Rclat1ve speed Relay Remodel Remculding Renewal Repair .. .. .. .. .. .. .. Repairing Repaving Resilience Resurfacing Retaining Retaining wall Retarder in concrete .. Retardering Return wall Reverse Curve Revetment Revolution Ridge Right of way .. .. .. .. Rigid frame bridge .. Ring Ring bound Ring Road Rinse Ripper River crossing .. .. 81 அடைக்கல இடம் நிலப் பகுதி ஒழுங்குபடுத்துதல் உறுதியேற்றிய கற்காரை தம்பியிடுதல்; உறுதிப்படுத்தல் கழிக்கப்பட்ட தொடர்புச் செறிவு; ஒப்பீட்டமுக்கம் ஒப்புமை லேகம் ; தொடர்பு வேகம் மறுபரத்தல் திருத்தியமை மறு வார்ப்பு புதுப்பித்தல் சீர் செய், செப்பனிடு செப்பனிடல்; மறு தளமிடல் பழுதுபார்த்தல் எதிர் விரைப்பு: மீட்டெழுச்சி மறு தளமிடல் நிலைத்து வைத்தல் தாங்கு சுவர் வேகத் தடைப் பொருள் வேகங் குறைப்பான் இறக்கைச் சுவர் பின்புற வளைவு சரிவுக் கல் தளம் சுற்று முகடு செல்லும் உரிமை விறைப் பாலம் வளையம் சுற்றணை சுற்றுச் சாலை அலசுதல் உடைக்கும் கருவி ஆறு கடத்தல்<noinclude></noinclude> to6ekvf47d7gm35dxc5s7gkax67x5fk பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/35 250 640819 1925561 2026-04-20T05:23:29Z Magizh Sundram 16422 OCR 1925561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Rivetment Road and rail bridge Road bay Road bed Road bridge Road land Road margin Road metal Road rail level crossir g Road side Road sign Road stone .. .. .. .. .. .. .. 32^ கற் பதிப்பு இருப்பூர்தி இணைந்த சாசுைல் பாலம் சாலைப் பத்தி சாலைத் தளம் சாலைப் பாலம் சாலை நிலம் சாலை ஓரம் சாலை சரளைக் கல் இருப்பூர்திச் சாலைக் கடவு சாலைப் புறம் சாலைக் குறி சாலைக் கல் .. Road surface .. சாலைப் பரப்ப Roadway .. பாட்டை Rock asphalt .. Rock classification ... Rocker bearing Rolle1 .. ... Roller baring .. Root .. Rope way Rotary Intersection .. Rough stone pack.ng Roundabout way Route confirmation sign Routet identification sign Route marker Routine Rubble Rubble masonry Ruling, Radius Runlet ... .. .. .. .. .. .. Running sand .. Running time .. பாறை நிலக்கீல் பாறைப் பாகுபாடு ஆடும் தாங்கி உருளை உருளை தாங்கி வேர்; மூலம் கயிற்றுப் பாலம் சுற்றிவரும் சந்திப்பு திருத்தாத கல்லடுக்கல் சுற்று வழி வழி உறுதிக் குறி வழி காட்டும் குறி வழிகாட்டும் குறி வாலாயம் ஒழுங்கில்லாக் கல் ஒழுங்கில்லாக் கல்கட்டு கடைப்பிடிக்க வேண்டிய ஆரம். சிறிய நீரோடை நிலையில்லாத மணல் பகுதி செல்லும் நேரம்; கடக்கும் நேரம்<noinclude></noinclude> dhtlvm38wxj5p7qo5wgl92qt6jdm4u5 அறிவியல் களஞ்சியம் 14/நன்றியறிவிப்பு 0 640820 1925562 2026-04-20T05:24:15Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நன்றியறிவிப்பு | previous = [[../பதிப்புக் குழு/]] | next = [[../வல்லுநர் குழு/]] | notes = }} <pages index="அறிவிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925562 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நன்றியறிவிப்பு | previous = [[../பதிப்புக் குழு/]] | next = [[../வல்லுநர் குழு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="9" to="9" fromsection="2" tosection="2" /> 8jiw5lju61jcaxsluk846na0joheat0 அறிவியல் களஞ்சியம் 14/வல்லுநர் குழு 0 640821 1925563 2026-04-20T05:25:53Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = வல்லுநர் குழு | previous = [[../நன்றியறிவிப்பு/]] | next = [[../நன்றியுரை/]] | notes = }} <pages index="அறிவியல்_கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925563 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = வல்லுநர் குழு | previous = [[../நன்றியறிவிப்பு/]] | next = [[../நன்றியுரை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="10" to="11" fromsection="3" tosection="3" /> 9kinpopwawi1r7kr89xxg9tjwpuj81l அறிவியல் களஞ்சியம் 14/நன்றியுரை 0 640822 1925574 2026-04-20T05:37:26Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நன்றியுரை | previous = [[../வல்லுநர் குழு/]] | next = [[../கட்டுரையாளர்கள்/]] | notes = }} <pages index="அறிவியல்_க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925574 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நன்றியுரை | previous = [[../வல்லுநர் குழு/]] | next = [[../கட்டுரையாளர்கள்/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="12" to="12" fromsection="4" tosection="4" /> mtjpw65biv5q25fw6zmd9kedvoueiuf அறிவியல் களஞ்சியம் 14/கட்டுரையாளர்கள் 0 640823 1925575 2026-04-20T05:38:23Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = கட்டுரையாளர்கள் | previous = [[../நன்றியுரை/]] | next = [[../நுண் கணிதம்/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925575 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = கட்டுரையாளர்கள் | previous = [[../நன்றியுரை/]] | next = [[../நுண் கணிதம்/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="13" to="22" fromsection="5" tosection="5" /> hqrvdsmsb6pbktdecp1q8yk5f04hkfq அறிவியல் களஞ்சியம் 14/நுண் கணிதம் 0 640824 1925577 2026-04-20T05:39:37Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் கணிதம் | previous = [[../கட்டுரையாளர்கள்/]] | next = [[../நுண் கதிர் வரைவியல்/]] | notes = }} <pages index="அற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925577 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் கணிதம் | previous = [[../கட்டுரையாளர்கள்/]] | next = [[../நுண் கதிர் வரைவியல்/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="23" to="23" fromsection="6" tosection="6" /> 7q261zboch76vhlhj6yv0kcpvmr0g2s அறிவியல் களஞ்சியம் 14/நுண் கதிர் வரைவியல் 0 640825 1925581 2026-04-20T05:43:26Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் கதிர் வரைவியல் | previous = [[../நுண் கணிதம்/]] | next = [[../நுண் காலக்‌ கணிப்பளவுக்‌ கருவி/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925581 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் கதிர் வரைவியல் | previous = [[../நுண் கணிதம்/]] | next = [[../நுண் காலக்‌ கணிப்பளவுக்‌ கருவி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="23" to="24" fromsection="7" tosection="7" /> ki8qj0sksjagd2s3ba1zhogpx97ylcy அறிவியல் களஞ்சியம் 14/நுண் காலக்‌ கணிப்பளவுக்‌ கருவி 0 640826 1925583 2026-04-20T05:47:06Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் காலக்‌ கணிப்பளவுக்‌ கருவி | previous = [[../நுண் கதிர் வரைவியல்/]] | next = ../நுண் குமிழ்க்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925583 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் காலக்‌ கணிப்பளவுக்‌ கருவி | previous = [[../நுண் கதிர் வரைவியல்/]] | next = [[../நுண் குமிழ்க் கண்‌ சவ்வழற்சி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="25" to="25" fromsection="8" tosection="8" /> r6x8q5r0cqsyzjnupetwgv2y88hgn40 அறிவியல் களஞ்சியம் 14/நுண் குமிழ்க் கண்‌ சவ்வழற்சி 0 640827 1925584 2026-04-20T05:49:00Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் குமிழ்க் கண்‌ சவ்வழற்சி | previous = [[../நுண் காலக்‌ கணிப்பளவுக்‌ கருவி/]] | next = ../நுண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925584 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் குமிழ்க் கண்‌ சவ்வழற்சி | previous = [[../நுண் காலக்‌ கணிப்பளவுக்‌ கருவி/]] | next = [[../நுண் கூறாக்கம்/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="25" to="25" fromsection="9" tosection="9" /> 65cjamo31737jcaot32zhgj34ozj830 அறிவியல் களஞ்சியம் 14/நுண் கூறாக்கம் 0 640828 1925585 2026-04-20T05:52:59Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் கூறாக்கம் | previous = [[../நுண் குமிழ்க் கண்‌ சவ்வழற்சி/]] | next = [[../நுண் சிறு தமனி/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925585 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் கூறாக்கம் | previous = [[../நுண் குமிழ்க் கண்‌ சவ்வழற்சி/]] | next = [[../நுண் சிறு தமனி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="25" to="25" fromsection="10" tosection="10" /> asf0ylbw2iuyyhtjk06zgwntxpxs5c8 அறிவியல் களஞ்சியம் 14/நுண் சிறு தமனி 0 640829 1925586 2026-04-20T05:53:47Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் சிறு தமனி | previous = [[../நுண் கூறாக்கம்/]] | next = [[../நுண்ணலை எதிர்ப்பு அளவி/]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925586 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் சிறு தமனி | previous = [[../நுண் கூறாக்கம்/]] | next = [[../நுண்ணலை எதிர்ப்பு அளவி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="25" to="26" fromsection="11" tosection="11" /> 8gcn505l47qrsuw0wjfjv2d0egq01vh அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலை எதிர்ப்பு அளவி 0 640830 1925588 2026-04-20T05:54:42Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணலை எதிர்ப்பு அளவி | previous = [[../நுண் சிறு தமனி/]] | next = [[../நுண்ணலைக் குழாய்/]] | notes = }} <page..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925588 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணலை எதிர்ப்பு அளவி | previous = [[../நுண் சிறு தமனி/]] | next = [[../நுண்ணலைக் குழாய்/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="26" to="26" fromsection="12" tosection="12" /> bg0r7xgm2yrjelwvxdl6rvlyoj487ya அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைக் குழாய் 0 640831 1925589 2026-04-20T05:55:19Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணலைக் குழாய் | previous = [[../நுண்ணலை எதிர்ப்பு அளவி/]] | next = ../நுண்ணலைகளும்‌ நுண்ணலைச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925589 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணலைக் குழாய் | previous = [[../நுண்ணலை எதிர்ப்பு அளவி/]] | next = [[../நுண்ணலைகளும்‌ நுண்ணலைச்‌ சுற்றுகளும்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="26" to="27" fromsection="13" tosection="13" /> 3hbut8mt655yrbdrucmowke89093rno அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைகளும்‌ நுண்ணலைச்‌ சுற்றுகளும்‌ 0 640832 1925590 2026-04-20T05:56:05Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணலைகளும்‌ நுண்ணலைச்‌ சுற்றுகளும்‌ | previous = [[../நுண்ணலைக் குழாய்/]] | next = ../நுண்ணலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925590 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணலைகளும்‌ நுண்ணலைச்‌ சுற்றுகளும்‌ | previous = [[../நுண்ணலைக் குழாய்/]] | next = [[../நுண்ணலைச்‌ செலுத்தத்‌ தொடர்‌ வழிகள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="27" to="30" fromsection="14" tosection="14" /> eehh3ax9ncoxero2k7mrpq77rpuhwb6 அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைச்‌ செலுத்தத்‌ தொடர்‌ வழிகள்‌ 0 640833 1925591 2026-04-20T05:57:02Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணலைச்‌ செலுத்தத்‌ தொடர்‌ வழிகள்‌ | previous = ../நுண்ணலைகளும்‌ நுண்ணலைச்‌ சுற்றுகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925591 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணலைச்‌ செலுத்தத்‌ தொடர்‌ வழிகள்‌ | previous = [[../நுண்ணலைகளும்‌ நுண்ணலைச்‌ சுற்றுகளும்‌/]] | next = [[../நுண்ணலைத்‌ திண்ம நிலைக்‌ கருவிகள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="30" to="34" fromsection="15" tosection="15" /> nnz0y29yqo69jrpf07p4r7zx2akxhyo அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைத்‌ திண்ம நிலைக்‌ கருவிகள்‌ 0 640834 1925592 2026-04-20T05:58:24Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணலைத்‌ திண்ம நிலைக்‌ கருவிகள்‌ | previous = ../நுண்ணலைச்‌ செலுத்தத்‌ தொடர்‌ வழிகள்‌/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925592 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணலைத்‌ திண்ம நிலைக்‌ கருவிகள்‌ | previous = [[../நுண்ணலைச்‌ செலுத்தத்‌ தொடர்‌ வழிகள்‌/]] | next = [[../நுண்ணலை நிற மாலையியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="34" to="39" fromsection="16" tosection="16" /> 2gzw9misuvrl70diugqfudtw9l8h1bh அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலை நிற மாலையியல்‌ 0 640835 1925593 2026-04-20T05:59:22Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணலை நிற மாலையியல்‌ | previous = [[../நுண்ணலைத்‌ திண்ம நிலைக்‌ கருவிகள்‌/]] | next = ../நுண்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925593 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணலை நிற மாலையியல்‌ | previous = [[../நுண்ணலைத்‌ திண்ம நிலைக்‌ கருவிகள்‌/]] | next = [[../நுண்ணளவி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="39" to="43" fromsection="17" tosection="17" /> h2dss32n6u5flpenrg7qgb3qa8zx42w அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணளவி 0 640836 1925595 2026-04-20T06:00:26Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணளவி | previous = [[../நுண்ணலை நிற மாலையியல்‌/]] | next = [[../நுண்ணளவுப்‌ பகுப்பாய்வு/]] | notes = }..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925595 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணளவி | previous = [[../நுண்ணலை நிற மாலையியல்‌/]] | next = [[../நுண்ணளவுப்‌ பகுப்பாய்வு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="43" to="46" fromsection="18" tosection="18" /> d8jnyopq5awpavfcvky5jz2okph2zqt அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணளவுப்‌ பகுப்பாய்வு 0 640837 1925596 2026-04-20T06:01:24Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணளவுப்‌ பகுப்பாய்வு | previous = [[../நுண்ணளவி/]] | next = ../நுண்ணுயிர்‌ இதய உள்ளுறை அழற்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925596 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணளவுப்‌ பகுப்பாய்வு | previous = [[../நுண்ணளவி/]] | next = [[../நுண்ணுயிர்‌ இதய உள்ளுறை அழற்சி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="46" to="48" fromsection="19" tosection="19" /> 8wdm3nu3ns6xgktd9j5tqrhjsj0l78i அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்‌ இதய உள்ளுறை அழற்சி 0 640838 1925597 2026-04-20T06:02:05Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்‌ இதய உள்ளுறை அழற்சி | previous = [[../நுண்ணளவுப்‌ பகுப்பாய்வு/]] | next = ../நுண்ணுய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925597 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்‌ இதய உள்ளுறை அழற்சி | previous = [[../நுண்ணளவுப்‌ பகுப்பாய்வு/]] | next = [[../நுண்ணுயிர்‌ ஊட்டங்கள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="48" to="49" fromsection="20" tosection="20" /> f74fedizn0uw85vvjey0iksthoy9gt2 அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்‌ ஊட்டங்கள்‌ 0 640839 1925599 2026-04-20T06:03:14Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்‌ ஊட்டங்கள்‌ | previous = [[../நுண்ணுயிர்‌ இதய உள்ளுறை அழற்சி/]] | next = ../நுண்ணுயி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925599 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்‌ ஊட்டங்கள்‌ | previous = [[../நுண்ணுயிர்‌ இதய உள்ளுறை அழற்சி/]] | next = [[../நுண்ணுயிர்க்‌ கரை கொல்லி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="49" to="50" fromsection="21" tosection="21" /> sqs6otre3guh3mxfkjnrtre68xeq20o அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்க்‌ கரை கொல்லி 0 640840 1925600 2026-04-20T06:04:05Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்க்‌ கரை கொல்லி | previous = [[../நுண்ணுயிர்‌ ஊட்டங்கள்‌/]] | next = ../நுண்ணுயிர்க்‌..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925600 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்க்‌ கரை கொல்லி | previous = [[../நுண்ணுயிர்‌ ஊட்டங்கள்‌/]] | next = [[../நுண்ணுயிர்க்‌ கூட்டு வாழ்க்கை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="50" to="51" fromsection="22" tosection="22" /> 9f4ipw2z8kfpmyvll9iqqnupa248byl அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்க்‌ கூட்டு வாழ்க்கை 0 640841 1925601 2026-04-20T06:05:35Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்க்‌ கூட்டு வாழ்க்கை | previous = [[../நுண்ணுயிர்க்‌ கரை கொல்லி/]] | next = ../நுண்ணுய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925601 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்க்‌ கூட்டு வாழ்க்கை | previous = [[../நுண்ணுயிர்க்‌ கரை கொல்லி/]] | next = [[../நுண்ணுயிர்க்‌ கொல்லி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="51" to="52" fromsection="23" tosection="23" /> ryly1ohyq2icb9kdqvbbec9prh6hjwn அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்க்‌ கொல்லி 0 640842 1925604 2026-04-20T06:09:56Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்க்‌ கொல்லி | previous = [[../நுண்ணுயிர்க்‌ கூட்டு வாழ்க்கை/]] | next = ../நுண்ணுயிர்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925604 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்க்‌ கொல்லி | previous = [[../நுண்ணுயிர்க்‌ கூட்டு வாழ்க்கை/]] | next = [[../நுண்ணுயிர்ச்‌ சூழலியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="53" to="53" fromsection="24" tosection="24" /> jw8ogqpoir11qev6xtx8lig4d8d9qma அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்ச்‌ சூழலியல்‌ 0 640843 1925605 2026-04-20T06:10:50Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்ச்‌ சூழலியல்‌ | previous = [[../நுண்ணுயிர்க்‌ கொல்லி/]] | next = ../நுண்ணுயிர்த்‌ தரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925605 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்ச்‌ சூழலியல்‌ | previous = [[../நுண்ணுயிர்க்‌ கொல்லி/]] | next = [[../நுண்ணுயிர்த்‌ தரம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="53" to="54" fromsection="25" tosection="25" /> 99uvrgmw5vpbxfhdu1ti2ffmujl9xda அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்த்‌ தரம்‌ 0 640844 1925606 2026-04-20T06:11:38Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்த்‌ தரம்‌ | previous = [[../நுண்ணுயிர்ச்‌ சூழலியல்‌/]] | next = ../நுண்ணுயிர்ப்‌ பூச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925606 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்த்‌ தரம்‌ | previous = [[../நுண்ணுயிர்ச்‌ சூழலியல்‌/]] | next = [[../நுண்ணுயிர்ப்‌ பூச்சி கொல்லிகள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="54" to="55" fromsection="26" tosection="26" /> 5bdk3o940wj63c6bpyws9x96qjoggzo அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்ப்‌ பூச்சி கொல்லிகள்‌ 0 640845 1925607 2026-04-20T06:12:05Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்ப்‌ பூச்சி கொல்லிகள்‌ | previous = [[../நுண்ணுயிர்த்‌ தரம்‌/]] | next = ../நுண்ணுயிர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925607 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்ப்‌ பூச்சி கொல்லிகள்‌ | previous = [[../நுண்ணுயிர்த்‌ தரம்‌/]] | next = [[../நுண்ணுயிர்ப்‌ பெருக்கத்‌ தடை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="55" to="56" fromsection="27" tosection="27" /> atm7dzugxfqp73ixjyqgjmypfw07bht அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்ப்‌ பெருக்கத்‌ தடை 0 640846 1925608 2026-04-20T06:13:14Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்ப்‌ பெருக்கத்‌ தடை | previous = [[../நுண்ணுயிர்ப்‌ பூச்சி கொல்லிகள்‌/]] | next = ../ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925608 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்ப்‌ பெருக்கத்‌ தடை | previous = [[../நுண்ணுயிர்ப்‌ பூச்சி கொல்லிகள்‌/]] | next = [[../நுண்ணுயிர்‌ வடிப்பி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="56" to="60" fromsection="28" tosection="28" /> e6xr0zl1qi8y3ncwa1qcpyapl103jho அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்‌ வடிப்பி 0 640847 1925610 2026-04-20T06:15:49Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்‌ வடிப்பி | previous = [[../நுண்ணுயிர்ப்‌ பெருக்கத்‌ தடை/]] | next = [[../நுண்ணுயிரி/]] | no..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925610 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிர்‌ வடிப்பி | previous = [[../நுண்ணுயிர்ப்‌ பெருக்கத்‌ தடை/]] | next = [[../நுண்ணுயிரி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="60" to="61" fromsection="29" tosection="29" /> 41kcy5zqh8b1i7ondvuq70cf5zbv46z அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரி 0 640848 1925614 2026-04-20T06:21:07Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிரி | previous = [[../நுண்ணுயிர்‌ வடிப்பி/]] | next = [[../நுண்ணுயிர்ப்‌ பெருக்கத்‌ தடை/]] | no..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925614 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிரி | previous = [[../நுண்ணுயிர்‌ வடிப்பி/]] | next = [[../நுண்ணுயிர்ப்‌ பெருக்கத்‌ தடை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="61" to="63" fromsection="31" tosection="31" /> d89jxx95w4l6im3v8nah6w7l2y5elwk 1925616 1925614 2026-04-20T06:21:54Z TI Buhari 4634 1925616 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிரி | previous = [[../நுண்ணுயிர்‌ வடிப்பி/]] | next = [[../நுண்ணுயிரிக்‌ குருதி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="61" to="63" fromsection="31" tosection="31" /> 631ag26b56w8r90uij92ihf360ncv6r அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரிக்‌ குருதி 0 640849 1925619 2026-04-20T06:22:55Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிரிக்‌ குருதி | previous = [[../நுண்ணுயிரி/]] | next = [[../நுண்ணுயிரி மரபியல்‌/]] | notes = }} <pages i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925619 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிரிக்‌ குருதி | previous = [[../நுண்ணுயிரி/]] | next = [[../நுண்ணுயிரி மரபியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="63" to="64" fromsection="32" tosection="32" /> dmnme5e0pdig4jucazkvb6qq8kv2lts அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரி மரபியல்‌ 0 640850 1925620 2026-04-20T06:23:32Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிரி மரபியல்‌ | previous = [[../நுண்ணுயிரிக்‌ குருதி/]] | next = [[../நுண்ணுயிரியல்‌/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925620 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிரி மரபியல்‌ | previous = [[../நுண்ணுயிரிக்‌ குருதி/]] | next = [[../நுண்ணுயிரியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="64" to="65" fromsection="33" tosection="33" /> nj1egxqv0rkwmw8dhh2gw17smlefx4c அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரியல்‌ 0 640851 1925621 2026-04-20T06:24:18Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிரியல்‌ | previous = [[../நுண்ணுயிரி மரபியல்‌/]] | next = [[../நுண்ணுயிருண்‌ணி/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925621 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிரியல்‌ | previous = [[../நுண்ணுயிரி மரபியல்‌/]] | next = [[../நுண்ணுயிருண்‌ணி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="65" to="69" fromsection="34" tosection="34" /> cglxhxyprcb4ytdiy6fz61i1iccxo6x அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிருண்‌ணி 0 640852 1925622 2026-04-20T06:25:12Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிருண்‌ணி | previous = [[../நுண்ணுயிரியல்‌/]] | next = [[../நுண்ணோக்கி/]] | notes = }} <pages index="அறிவிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925622 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணுயிருண்‌ணி | previous = [[../நுண்ணுயிரியல்‌/]] | next = [[../நுண்ணோக்கி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="69" to="69" fromsection="35" tosection="35" /> m5i2wgtzl78lmtvugdrlnetyvrvcilf அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி 0 640853 1925623 2026-04-20T06:25:55Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி | previous = [[../நுண்ணுயிருண்‌ணி/]] | next = [[../நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்‌/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925623 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி | previous = [[../நுண்ணுயிருண்‌ணி/]] | next = [[../நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="69" to="70" fromsection="36" tosection="36" /> i184axfpjj5zv347627imap0uu9544t அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்‌ 0 640854 1925624 2026-04-20T06:26:30Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்‌ | previous = [[../நுண்ணோக்கி/]] | next = ../நுண்ணோக்கி உடனொளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925624 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்‌ | previous = [[../நுண்ணோக்கி/]] | next = [[../நுண்ணோக்கி உடனொளிர்வு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="70" to="72" fromsection="37" tosection="37" /> 46jpvex6xftf02e6oz8ddd84eh1bgfo அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி உடனொளிர்வு 0 640855 1925626 2026-04-20T06:27:10Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி உடனொளிர்வு | previous = [[../நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்‌/]] | next = ../நுண்ணோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925626 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி உடனொளிர்வு | previous = [[../நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்‌/]] | next = [[../நுண்ணோக்கி, எக்ஸ்‌ கதிர்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="72" to="73" fromsection="38" tosection="38" /> at6uhr1zitplpuecchswp3sjvf7hibb அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, எக்ஸ்‌ கதிர்‌ 0 640856 1925627 2026-04-20T06:27:49Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, எக்ஸ்‌ கதிர்‌ | previous = [[../நுண்ணோக்கி உடனொளிர்வு/]] | next = ../நுண்ணோக்கி, எதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925627 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, எக்ஸ்‌ கதிர்‌ | previous = [[../நுண்ணோக்கி உடனொளிர்வு/]] | next = [[../நுண்ணோக்கி, எதிரொளிப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="73" to="75" fromsection="39" tosection="39" /> s42bi9bln0ivq5l37xt8mup83esz3r6 அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, எதிரொளிப்பு 0 640857 1925629 2026-04-20T06:29:35Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, எதிரொளிப்பு | previous = [[../நுண்ணோக்கி, எக்ஸ்‌ கதிர்‌/]] | next = ../நுண்ணோக்கி, ஒல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925629 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, எதிரொளிப்பு | previous = [[../நுண்ணோக்கி, எக்ஸ்‌ கதிர்‌/]] | next = [[../நுண்ணோக்கி, ஒலியியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="75" to="76" fromsection="40" tosection="40" /> 7a4xg9yk5dx8yyz9pu28ierp5qnw6ll அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, ஒலியியல்‌ 0 640858 1925630 2026-04-20T06:30:25Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, ஒலியியல்‌ | previous = [[../நுண்ணோக்கி, எதிரொளிப்பு/]] | next = ../நுண்ணோக்கி, ஒளியிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925630 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, ஒலியியல்‌ | previous = [[../நுண்ணோக்கி, எதிரொளிப்பு/]] | next = [[../நுண்ணோக்கி, ஒளியியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="76" to="78" fromsection="41" tosection="41" /> 7llqvfs7zyy3kt2vdb5h0l7njtiqb7s அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, ஒளியியல்‌ 0 640859 1925631 2026-04-20T06:31:09Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, ஒளியியல்‌ | previous = [[../நுண்ணோக்கி, ஒலியியல்‌/]] | next = ../நுண்ணோக்கி, கட்ட வேற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925631 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, ஒளியியல்‌ | previous = [[../நுண்ணோக்கி, ஒலியியல்‌/]] | next = [[../நுண்ணோக்கி, கட்ட வேறுபாடு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="78" to="80" fromsection="42" tosection="42" /> jigf19un7529sv3ttwblcpaih8fl76b அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, கட்ட வேறுபாடு 0 640860 1925632 2026-04-20T06:32:02Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, கட்ட வேறுபாடு | previous = [[../நுண்ணோக்கி, ஒளியியல்‌/]] | next = ../நுண்ணோக்கி, குறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925632 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, கட்ட வேறுபாடு | previous = [[../நுண்ணோக்கி, ஒளியியல்‌/]] | next = [[../நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="80" to="81" fromsection="43" tosection="43" /> 6sw981dbz20q56rd1rrc2gbdxm272jp அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை 0 640861 1925634 2026-04-20T06:34:12Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை | previous = [[../நுண்ணோக்கி, கட்ட வேறுபாடு/]] | next = ../நுண்ணோக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925634 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை | previous = [[../நுண்ணோக்கி, கட்ட வேறுபாடு/]] | next = [[../நுண்ணோக்கி, புல அயனி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="82" to="83" fromsection="44" tosection="44" /> bezre1mz1l5xyrr6hrfj84edrtagm0n அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, புல அயனி 0 640862 1925635 2026-04-20T06:34:59Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, புல அயனி | previous = [[../நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை/]] | next = ../நுண்ணோக்கி, பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925635 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, புல அயனி | previous = [[../நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை/]] | next = [[../நுண்ணோக்கி, புல உமிழ்வு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="83" to="85" fromsection="45" tosection="45" /> eiiw3oai9hw1ywka9flo3z7un21dkm4 அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, புல உமிழ்வு 0 640863 1925636 2026-04-20T06:35:44Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, புல உமிழ்வு | previous = [[../நுண்ணோக்கி, புல அயனி/]] | next = ../நுண்ணோக்கி, மைய விலக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925636 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, புல உமிழ்வு | previous = [[../நுண்ணோக்கி, புல அயனி/]] | next = [[../நுண்ணோக்கி, மைய விலக்கு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="85" to="85" fromsection="46" tosection="46" /> jnyogvrzzqbb6ouiotyj0c76sbh1wf0 அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, மைய விலக்கு 0 640864 1925637 2026-04-20T06:36:23Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, மைய விலக்கு | previous = [[../நுண்ணோக்கி, புல உமிழ்வு/]] | next = ../நுண்ணோக்கு நுண் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925637 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கி, மைய விலக்கு | previous = [[../நுண்ணோக்கி, புல உமிழ்வு/]] | next = [[../நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="85" to="86" fromsection="47" tosection="47" /> 1ywhdk4132c90drtghygolojxq0wy4h அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு 0 640865 1925638 2026-04-20T06:37:22Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு | previous = [[../நுண்ணோக்கி, மைய விலக்கு/]] | next = ../நுண்‌ தட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925638 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு | previous = [[../நுண்ணோக்கி, மைய விலக்கு/]] | next = [[../நுண்‌ தட்ப வெப்பம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="86" to="87" fromsection="48" tosection="48" /> 8461d6djh8kh8fa1vfnesj5gnpjwpe4 அறிவியல் களஞ்சியம் 14/நுண்‌ தட்ப வெப்பம்‌ 0 640866 1925639 2026-04-20T06:38:15Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்‌ தட்ப வெப்பம்‌ | previous = [[../நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு/]] | next = ../நுண்‌ திவலைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925639 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்‌ தட்ப வெப்பம்‌ | previous = [[../நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு/]] | next = [[../நுண்‌ திவலையாக்கி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="87" to="88" fromsection="49" tosection="49" /> s5y6qvi5iqskcmd5f9qxi578fc4lf3r அறிவியல் களஞ்சியம் 14/நுண்‌ திவலையாக்கி 0 640867 1925642 2026-04-20T06:40:08Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்‌ திவலையாக்கி | previous = [[../நுண்‌ தட்ப வெப்பம்‌/]] | next = ../நுண் பயிர்ப்‌ பெருக்க முறை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925642 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்‌ திவலையாக்கி | previous = [[../நுண்‌ தட்ப வெப்பம்‌/]] | next = [[../நுண் பயிர்ப்‌ பெருக்க முறை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="89" to="90" fromsection="50" tosection="50" /> dqoqlyteqgje3p85snvomquf0po0cia அறிவியல் களஞ்சியம் 14/நுண் பயிர்ப்‌ பெருக்க முறை 0 640868 1925643 2026-04-20T06:40:55Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் பயிர்ப்‌ பெருக்க முறை | previous = [[../நுண்‌ திவலையாக்கி/]] | next = ../நுண் புழைப்‌ பாய்வு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925643 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் பயிர்ப்‌ பெருக்க முறை | previous = [[../நுண்‌ திவலையாக்கி/]] | next = [[../நுண் புழைப்‌ பாய்வு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="90" to="94" fromsection="51" tosection="51" /> 3wyj84c1e0o765rmznm0c1q7ml26h4k 1925646 1925643 2026-04-20T06:43:47Z TI Buhari 4634 1925646 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் பயிர்ப்‌ பெருக்க முறை | previous = [[../நுண்‌ திவலையாக்கி/]] | next = [[../நுண் புழைப்‌பாய்வு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="90" to="94" fromsection="51" tosection="51" /> p3zddsmfon3olw2uhgvt8gja60c8s5y அறிவியல் களஞ்சியம் 14/நுண் புழைப்‌பாய்வு 0 640869 1925645 2026-04-20T06:43:31Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் புழைப்‌பாய்வு | previous = [[../நுண் பயிர்ப்‌ பெருக்க முறை/]] | next = ../நுண்‌, மீநுண்‌ நிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925645 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண் புழைப்‌பாய்வு | previous = [[../நுண் பயிர்ப்‌ பெருக்க முறை/]] | next = [[../நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="94" to="95" fromsection="52" tosection="52" /> 9ydnbe11ns8v3wlqbc6yxjcm747sjof அறிவியல் களஞ்சியம் 14/நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌ 0 640870 1925647 2026-04-20T06:45:46Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌ | previous = [[../நுண் புழைப்பாய்வு/]] | next = ../நுண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925647 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌ | previous = [[../நுண் புழைப்பாய்வு/]] | next = [[../நுண்‌ வேதியியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="95" to="99" fromsection="53" tosection="53" /> 0l1wkdgzrpz75eh76gwmknxey4c40d8 1925649 1925647 2026-04-20T06:49:32Z TI Buhari 4634 1925649 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌ | previous = [[../நுண் புழைப்‌பாய்வு/]] | next = [[../நுண்‌ வேதியியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="95" to="99" fromsection="53" tosection="53" /> a9s6mmi1ycbqkdxonh5ghvz03sbb7sf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/820 250 640871 1925650 2026-04-20T06:49:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திறந்தபோது ஆல்வெல்லும் 23 பேர்களும் மட்டுமே உயிரோடிருந்ததாகவும் தம் தாய் நாட்டுப் பயணத்தின்போது (1757) ஆல்வெல் எழுதியுள்ளார். இதைப் பற்றி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்கத்தாப்‌ பல்கலைக்கழகக்‌ குழு|792|கல்கத்தாப்‌ பல்கலைக்கழகக்‌ குழு}}</noinclude>திறந்தபோது ஆல்வெல்லும் 23 பேர்களும் மட்டுமே உயிரோடிருந்ததாகவும் தம் தாய் நாட்டுப் பயணத்தின்போது (1757) ஆல்வெல் எழுதியுள்ளார். இதைப் பற்றி ஆங்கில ஆசிரியர்கள் ‘கல்கத்தா இருட்டறைக் கொலை’ என்று தலைப்பு இட்டு எழுதினார்கள். ஆல்வெல்லின் கூற்றுகளைக் கொண்டு இந்நிகழ்ச்சியை உறுதி செய்யச் சான்றுகள் இல்லை. இதற்குக் காரணம் ஆல்வெல் நம்பத்தகுந்தவர் அல்லர் என்பதே. மேலும் இந்நிகழ்ச்சி பற்றி இராபர்ட்டு கிளைவு சிராசு உத்தௌலாவை அடக்கிய முறையை வணிகக் குழு அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடவில்லை. ஆனால், அவர்களின் மற்றக் கடிதங்களில் குறிப்புகள் உள்ளன. இருட்டறையும் வில்லியம் கோட்டையும் ஒன்றா என்று உறுதி செய்ய இயலவில்லை. ஆங்கிலேயர்கள் இறந்தவர்களுக்காக நவாபிடமிருந்து ஈட்டுத்தொகை பெற முயலவில்லை. இறந்தவர்களுள் (123) 56 பெயர்களின் விவரங்களே கிடைத்துள்ளன. அச்சிறு அறையில் 146 கைதிகளை அடைப்பது இயலாக் காரியமாகும். மேலும், இருட்டறையில் சில கைதிகளைச் சிறை வைத்திருக்கலாம். அவர்களுள் சிலர் காயம் அடைந்தவர்களாகவும் இருக்கலாம். சிறை வைக்கப்பட்டவர்களுள் சிலர் இறந்திருக்கலாம் என்பதில் ஓர் அளவு உண்மையுள்ளது. அதனை உறுதி செய்யத் தச்சுக்காரர்களின் சான்றுகள் உள்ளன. அவர்கள் ஆல்வெல்லின் நண்பர்களோ நவாபின் பகைவர்களோ அல்லர். ஆனால், சமகாலத்திய ஆங்கில அல்லது முகம்மதியச் சான்றுகளில் இந்நிகழ்ச்சியைப் பற்றிய குறிப்புகள் எவையுமில்லை. எனவே, வரலாற்று ஆசிரியர்கள் ‘கல்கத்தா இருட்டறை’ என்னும் நிகழ்ச்சி மிகைப்படுத்திக் கூறப்பட்ட ஒரு வரலாறு என்று கருதுகிறார்கள். இந்தியத் தேசிய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சுபாசு சந்திரபோசு (நேதாசி) கல்கத்தாவில் ஒரு சிறு போராட்டத்தை (1940-இல்) நடத்தி ஆங்கிலேயர்கள் நிறுவிய இருட்டறை நினைவுச் சின்னத்தை அகற்றினார். {{Right|<b>பு.எ.மோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Majumdar, R.C., (Ed.)</b> History and Culture of the Indian People Struggle for Freedom Vol-XI, Bharathiya Vidhya Bhavan, Bombay, 1969. <b>Sathinathier R.,</b> Political and Cultural History of of India Vol. III, Modern India, Madras, 1972. {{larger|<b>கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு:</b>}} கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் சில தனிப்பட்ட சிக்கல்களை ஆராய்ந்து, அவற்றுக்கான பரிந்துரைகளை வழங்கும் நோக்கத்துடன் 1917-ஆம் ஆண்டில் செம்சுபோர்டு (Chelmsford) பிரபு என்பவரால், இலீட்சுப் பல்கலைக்கழகத் துணைவேந்தராயிருந்த சர் மைக்கேல் சேட்லர் (Sir Michael Sadler) என்பவரது தலைமையில் அமைக்கப்பட்ட கல்விக் குழு கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு எனப்பட்டது. இக்குழுவின் தலைவராகச் சேட்லர் இருந்ததால் இக்குழு சேட்லர் குழு (Sadler Commission) எனவும்பட்டது. கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியையும் நிலைமையையும் சிக்கல்களையும் ஆராய்ந்ததோடல்லாமல், பல்வேறு இந்தியப் பல்கலைக்கழகங்களின் அமைப்பினையும் செயல்களையும் ஆராய்ந்தது. இக்குழு தொடக்க நிலைக் கல்வி பற்றி ஏதும் கருத்துக் கூறாமல், பல்கலைக்கழகக் கல்விக்கு அடிப்படையாக விளங்கும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பற்றியும் தன் அறிக்கையில் கருத்துக் கூறியுள்ளது. கல்கத்தாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளின் எண்ணிக்கையும் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாகக் காணப்படுவதால், தாக்கா (Dacca) நகரில் மாணவர் தங்கிப் பயிலும் ஒரு பல் கலைக்கழகம் (Residential University) ஏற்படுத்தப்பட வேண்டும்; தேர்வு நடத்தும் உறுப்பாக மட்டும் கல்கத்தாப் பல்கலைக்கழகம் செயற்படாமல் கற்பித்தலைச் செய்யும் பல்கலைக்கழகமாகவும் விளங்க வேண்டும் என இக்குழு பரிந்துரைத்தது. மேலும், பல்கலைக்கழக மையங்களைத் தொலைவான இடங்களில் ஏற்படுத்துதல், பெண் கல்வி வளர்ச்சி, தொழிற் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆகியவற்றின் தேவையையும் வலியுறுத்தியது. இந்தியப் பல்கலைக்கழகங்களின் அமைப்புப் பற்றிய பரிந்துரைகளுள், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அதிக அதிகாரங்கள் தருதல், திறமை மிக்க மாணர்வகளுக்கு ‘ஆனர்சு’ (Honours) என்னும் உயர் பட்டப்படிப்பு ஏற்படுத்துதல், பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் இணைப் பேராசிரியர்களையும் வல்லுநர் அடங்கிய தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுத்தல், பாடத்திட்டம், தேர்வு, ஆராய்ச்சி போன்றவற்றுடன் தொடர்புடைய சிக்கல்களை ஆராய்ந்து முடிவெடுக்கக் கல்விக் குழுவும் (Academic Council), பாடத்திட்டக் குழுவும் (Board of Studies) ஏற்படுத்துதல், ஊதியம் பெற்று முழு நேர அலுவலராகப் பணியாற்றும் துணைவேந்தரை நியமித்தல், மாணவர்களின் உடல்நலத்தை வளர்க்கும் நோக்கத்துடன்<noinclude></noinclude> 163lyabtullfhh7aqecgx9visxe48ey பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/556 250 640872 1925653 2026-04-20T06:52:31Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தட்சு வெளிப்படையாகக் கூறினார். இதற்கு அவர் பயன்படுத்திய அடிப்படை ஆய்வுக் காரணிகள் தனி ஆன் வருமானமும் (Per Capita Income) மொத்த வருமானமுமாகும். கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குசுநட்சின் சுழற்சி|528|குசுரு. அமீர}}</noinclude>தட்சு வெளிப்படையாகக் கூறினார். இதற்கு அவர் பயன்படுத்திய அடிப்படை ஆய்வுக் காரணிகள் தனி ஆன் வருமானமும் (Per Capita Income) மொத்த வருமானமுமாகும். குசுநட்சின் சுழற்சிகள் நிகழ்வதற்கான காரணங்களைக் குசுரட்சாலும் பிற அறிஞர்களாலும் தெளிவாக வரையறுத்துக் கூற இயலவில்லை. நிலையான வளர்ச்சி வீதத்தில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணங்கள் தெளிவற்ற இருளார்ந்ததாயிருக்கிறது. ஆயினும், அச்சுழற்சிகள் மீண்டும் மீண்டும் நிகழ்வது திட்டவட்டமாகச் செயல்முறையில் தெளிவாகப் புலப்படுகிறது எனக் குசுதட்சு கூறியிருக்கிறார். மாறும் நிலையான வளர்ச்சி ஆய்வுக்கு அறிஞர் பிரின்லி தாமசு (Brinly Thomas) 1973-இல் குசுநட்சின் கட்டடத்துறை ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, அத்துறையின் சுழற்சி பிரிட்டனிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் தலைகீழ்த் (Inverse) தொடர்புடைய எதிர்மாறான தொடர்புகளையுடையது எனக் குறிப்பிட்டார். அவர் முதலாம் உலகப்போருக்கு முந்தைய 70 ஆண்டுகளில் மக்கள் தொகையியல் காரணிகளால் இவ்விரு நாடுகளிலும் உண்டான விளைவுகளே குசநட்சின் சுழற்சிக்குக் காரணம் என விளக்கினார். இக்காலத்தில் பிரிட்டனிலிருந்து பெருமளவில் மக்கள் வெளியேறிய இடப்பெயர்வும் (Emigration), அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிகழ்ந்த குடியமர்வு (Immigration) இயக்கமும் பிரிட்டனில் கட்டடப் பணித்துறை நடவடிக்கையில் வீழ்ச்சியையும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் செழிப்பையும் உண்டாக்கின. தாமசு, மேலும் தம் ஆய்வை விரிவாக்கி மாறும் நிலையான வளர்ச்சி வீதத்திற்கு மக்கள் வள முதலாக்கமும் (Man Power Capital Formation) காரணம் என்பதைச் சுட்டிக்காட்டினார். மக்கள் தொகையியல் காரணிகன், மாறும் நிலையான வளர்ச்சி வீதத்திற்குக் காரணமா விருக்குமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இக்காரணியைக் கருதுகோளாகக் (Hypothesis) கொண்டு ஆய்வுகளை நடத்திய ஒலியரி, ஆர்தர் லூயிசு ஆகியோரின் அமெரிக்கா, பிரிட்டன், செருமனி, பிரான்சு ஆகிய நாடுகளின் முதலாம். உலகப்போருக்கு முந்தைய கால ஆய்வு முடிவுக்கும் அதே காலத்திய மேற் குறித்த நாடுகளடங்கிய தாமசின் ஆய்வு முடிவுகளும் முரன்பாடுடையவைகளாயுள்ளன. குசுநட்சின் சுழற்சி, இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலங்களில் நிகழ்ந்துள்ளது என்பதற்குத் தகுந்த சான்றுகள் உள்ளன. ஆயினும், அவை மீண்டும் நிகழும் என அறுதியிட்டுக் கூறுவதற்கான வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. அங்காடி அமைப்பையுடைய பொருளாதாரங்களில் (Market Oriented Economics) இறுகிய காலச் சுழற்சிகள், வளர்ச்சிப் போக்கோடு ஓட்டிக் காணப்படுகின்றன. அவை குசுநட்சின் சுழற்சிகள் போல் செழிப்பையும், மந்தத்தின் உச்சக் கட்டத்தையும் அடையும் எனக் கூற இயலாது. ஏனெனில், உலகப்போருக்குப் பின்னர் வரலாற்றுக் காரணிகளும் நிறுவன மாற்றங்களும் (Institutional Charges) தனித் தன்மையுடன் இயங்குவதாலும் பணவீக்கம், நிதி நெருக்கடி போன்ற சிக்கல்களிலிருந்து தீர்வு காணப் பல முன்னோடித் திட்டங்கள் முன் அறிவிப்பு (Forcasting), தொழில்நுட்ப அறிவு போன்றவை பெருமளவில் வளர்ச்சி பெற்றுள்ளமையாலும், அரசுகள் பாதகமான சுழற்சி நிகழ்வுகளை முன் மறிந்து அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளன. குசுதட்சின் சுழற்சியில் வலிமைபெறும் சில காரணிகள் பிற்காலத்தில் முற்றிலுமாக மாறிவிட்டன. அவற்றுள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சென்று குடியமகும் இயக்கத்தின் கட்டுப்பாடற்த தன்மை பின்னர் முற்றிலுமாக மாறியிருப்பது ஓர் எடுத்துக்காட்டாகும். குசுநட்சின் சுழற்சி நீண்டகால மாற்றங்களைக் குறிப்பிட்டாலும் அவை 15 முதல் 20 ஆண்டுக் காலத்தையே உள்ளடக்குகிறது, அதற்கும் மேலான 40 முதல் 60 ஆண்டுக்கால நீண்டகாலச் சுழற்சி அறிஞர் கோன்டிராட்டி (Kondratiofr) விளக்குகிறார். அவரது கோட்பாடுகளுடன் ஒப்பீட்டு நோக்கும்போது குசுநட்சின் சுழற்சியினை இடைக்காலச் சுழற்சி (Intermediate Cycle) எனக் கருத இடமுண்டு. வளர்ச்சிப் பொருளாதாரத்தில் வருங்கால ஆய்வுக்குப் பேரளவில் வாய்ப்புகள் உள்ளன என்பதை இவ் ஆய்வுகளின் தெளிவற்ற முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.{{Right|<b>அ.ரு.சா</b>}} <b>குசுரு அமீர் (கி.பி. 1253-1325)</b> இடைக்கால இந்திய வரலாற்றறிஞர்களுள் தலைசிறந்தவர்; சிறந்த கவிஞர். அபுல் அசன் யமிறுதீன் குசுரு (Abai Hasan Yaminuddin khusrau) எனவும் அழைக்கப்படும் இவர், கி.பி. 1253-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் எதா (Etah) மாவட்டம், படியாலி என்னுமிடத்தில், அமீர் சைபுதீன் முகமது என் பாரின் மகனாகப் பிறந்தார். குசுருவின் தந்தையார் நடு ஆசியாவிலிருந்து இந்தியாவில் குடியேறி, இமத் உல்முல்க்கு என்னும் இந்தியப் பெருஞ்செல்வரின்<noinclude></noinclude> 5cregixrfh4y4e8z5tr9pt9zwyt2qri பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/34 250 640873 1925654 2026-04-20T06:53:07Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude><noinclude></noinclude> m0uxjjgfwypaooy0dd45jbuzaa832ga பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/821 250 640874 1925657 2026-04-20T07:02:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உடற்பயிற்சி இயக்குநர் பல்கலைக்கழக அளவில் பணியமர்த்தம் செய்யப்படுதல், பல்கலைக்கழகங்களில் கல்விக்கென ஒரு கல்வியியற் புலம் (Faculty of Education) இர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்கத்தாப்‌ பல்கலைக்‌ கழகம்‌|792|கல்கத்தாப்‌ பல்கலைக்‌ கழகம்‌}}</noinclude>உடற்பயிற்சி இயக்குநர் பல்கலைக்கழக அளவில் பணியமர்த்தம் செய்யப்படுதல், பல்கலைக்கழகங்களில் கல்விக்கென ஒரு கல்வியியற் புலம் (Faculty of Education) இருத்தல், பல்கலைக்கழக நுழைவு வகுப்பு (Intermediate Course), இளங்கலை வகுப்பு ஆகியவற்றில் கல்வியினை ஒரு பாடமாக வைத்தல் போன்ற பரிந்துரைகள் குறிப்பிடத்தக்கவை. உயர்நிலைப் பள்ளிக் கல்வி குறித்துக் கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு அளித்த பரிந்துரைகளுள் பல்கலைக்கழக நுழைவு வகுப்பு பல்கலைக்கழகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அதற்கெனத் தனிக் கல்லூரிகள் (Intermediate College) தொடங்குதல், அக்கல்லூரிகளில் தாய்மொழியே பயிற்று மொழியாக இருத்தல், பட்டப்படிப்பின் கால அளவை 3 ஆண்டுகளாக நீட்டித்தல், உயர்நிலைப் பள்ளிக் கல்வி, பல்கலைக்கழக நுழைவுக் கல்வி ஆகியவற்றை நிருவகிக்கத் தனி வாரியம் அமைத்தவ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழுவின் அறிக்கைக்குப் பின்னர்ப்பாட்னா, வாரணாசி, அலிகார், தாக்கா, மைசூர், அண்ணாமலைநகர் போன்றவிடங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்திய மொழிகள் பல்கலைக்கழகக் கல்வி நிலையில் ஓரளவு மதிப்புப் பெறவும் உயர்கல்வி ஆராய்ச்சி வளரவும் இவ்வறிக்கை ஊக்குவிப்பதாக அமைந்தது. {{Right|<b>எஸ்.த.</b>}} {{larger|<b>கல்கத்தாப் பல்கலைக் கழகம்:</b>}} கிழக்கிந்தியக் குழுவின் இயக்குநர் மன்றம் கி.பி. 1854-ஆம் கல்கத்தா, சென்னை, ஆண்டு சூலைத் திங்களில் பம்பாய் ஆகிய இடங்களில் பல்கலைக் கழகங்களைப் புதிதாக ஏற்படுத்துமாறு அறிவுறுத்தி, இந்தியாவிலிருந்த தலைமை ஆளுநருக்குக் (Governor General of India) கடிதம் எழுதியது. இதனடிப்படையில் கி.பி. 1857–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 24–ஆம் நாள் கல்கத்தாப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது. இந்தியப் பல்கலைக் கழகங்களின் சட்டம் (The Indian Universities Act of 1904) பல்கலைக் கழகத் துறைகளில் பாடம் கற்பித்தலுக்கு வழிகோலியது. பின்பு 1917–இல் பட்ட மேற்படிப்புக்கும் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் கற்பித்தல் நடைபெற்றது. பின்னர் 1951-ஆம் ஆண்டுச் சட்டம் கல்கத்தாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தியங்கும் கல்லூரிகள் (Affiliated College), பல்கலைக் கழகக் கல்லூரிகள் (University Colleges) ஆகியவற்றில் உயர்கல்வி கற்பித்தலுக்கு வகை செய்தது. கல்கத்தாப் பகலைக்கழகச் சட்டம் (The Calcutta University Act, 1966) பல்கலைக் கழக அமைப்பில் பல மாற்றங்களைச் செய்தது. அவை 1968-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தன. மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவில் கல்கத்தாப் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக் கழகம் தொடங்கியபோது, இதன் ஆளுகை எல்லை இந்தியாவின் வட மாநிலங்கள் முழுவதும் பரவியிருந்தது. இப்பொழுது இப்பல்கலைக்கழகத்தின் மேற்கு வங்காளம், ஆளுகை திரிபுரா ஆகியவற்றில் மட்டுமே உள்ளது. விசுவ பாரதி (Visva Bharathi), சாதவ்பூர் (Jadaupur), பர்த்துவான் (Burdwan), வடக்கு வங்காளம் (North Bengal), இரவீந்திர பாரதி (Rabindra Bharathi), கல்யாணி ஆகிய இடங்களிலுள்ள பல்கலைக் கழகங்களின் ஆளுகை எல்லைகள் கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் ஆளுகை எல்லைக்கு அப்பாற்பட்டவை. கல்கத்தாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தியங்கும் கல்லூரிகள் 200க்கும்மேல் உள்ளன. அவற்றுள் பெரும்பாலான கல்லூரிகள் கழகத்தா நகரிலேயே அமைந்துள்ளன. இப்பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் (Constituent Colleges) மொத்தம் 8 உள்ளன. இவை பல்கலைக் கழகத்தின் ஆட்சி பேரவை (Senate), கல்விக் குழு (Academic Council) ஆகியற்றுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்குபெற முடியும், கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் பொருளியல், கல்வியியல், ஒப்பியல், தத்துவம், தொல்லியல், வரலாறு, நூலகவியல், அரசியலறிவியல், சமூகவியல் போன்ற கலைத் துறைகளும், அரபு, பாரசீகம், காளம், ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, பாலி, சமசுகிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் பட்ட மேற்படிப்புத் துறைகளும் வேதியியல், வேளாண்மை, தாவரவியல், கணக்கு, இயற்பியல், விலங்கியல், உடற்கூற்றியல் (Physiology), கணிப்பொறி அறிவியல் (Computer Science) போன்ற அறிவியல் துறைகளும் உள்ளன. இப்பல்கலைக் கழகத்தில், பண்டைய இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, செயல்முறைக் கணக்கு (Applied Mathematics), கதிர்வீச்சு இயற்பியல் (Radio–Physics) ஆகிய துறைகள் உயர்கல்வியாய்வு மையங்களாக விளங்குகின்றன. இப்பல்கலைக் கழகத்தில் சகா அணுவாற்றல் இயற்பியல் நிறுவனம் (Saha Institute of Nuclear Physics) என்னும் தேசிய உயர் கல்வி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு மாணவர்கள் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். {{nop}}<noinclude></noinclude> qjmu4mjh3fscfklag7q8djiwry2k18j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/557 250 640875 1925658 2026-04-20T07:09:40Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மகளை மணந்தார். எனவே, குசுரு ஓர் துருக்கிய இந்தியர் (Turke Hindustani) ஆவார். பிறவிக்கவிஞரான இவர், ஒன்பது வயதிலேயே கவிபாடும் வல்லமை பெற்றார். இவர் மத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குசுரு, அமீர்|529|குசேலர்}}</noinclude>மகளை மணந்தார். எனவே, குசுரு ஓர் துருக்கிய இந்தியர் (Turke Hindustani) ஆவார். பிறவிக்கவிஞரான இவர், ஒன்பது வயதிலேயே கவிபாடும் வல்லமை பெற்றார். இவர் மத்திய ஆசிய இசையிலும் இந்திய இசையிலும் வல்லவர். இவரது கீர்த்தனங்கள் குருநானக்கு, கபீர், சந்து, நாம தேவர் வாரிசு சா (Waris shah), அப்துல் லத்தீபு - முதலான மாபெரும் ஆன்மிக வாதிகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வந்துள்ளன. மாபெரும் எழுத்தாளரான இவர் ஒரு பன்மொழிப் புலவர், இவர் துருக்கி, அராபி, பாரசீகம், உருது, இந்தி, சமசுகிருதம் (Sanskrit), வடஇந்திய மொழிகள் சில ஆகியவற்றை அறிந்திருந்தார். இவர் ஆப்கானிசுத்தான், ஈரான், நடு ஆசியா, பாகிசுத்தான், இந்தியா முதலான நாடுகளைச் சேர்ந்த மக்களின் இணைப்புச் சின்னமாக விளங்கினார். சூபிக் கொள்கையினரான இவர் இந்தியாவுைப் பெரிதும் நேசித்தார். தம் நூல்களின் பல இடங்களில் இந்திய நகரங்களையும், இயற்கைக் காட்சிகளையும், பழவகைகளையும் பறவைகளையும் பெரிதும் போற்றிப் புகழ்ந்துள்ளார். தாம் பிறந்த இந்தியாவை இவர் இம்மண்ணுலயில் உள்ள சொர்க்கம் என்று போற்றியுள்ளார். இந்தியரின் அறிவுத் திறனையும், கூர்த்த மதியையும், கி.பி. 1293-இல் இயற்றிய குற்றதூல்-கமால் என்னும் பாடல்தொகுதியில் பாராட்டிப் புகழ்ந்துள்ளார். தருக்கம், சோதிடம், கணிதம், இயற்பியல் (Physical science) ஆகிய கலைகளில் இந்திய அறிஞர்கள் மேம்பட்டு விளங்குவதையும் இவர்தம் நூல்களில் சுட்டிக்காட்டுகிறார், நெடுங்காலம் வாழ்ந்த இக்கவிஞர், கியாசுதீன் பால்பன் தொடங்கி சியாசுதீன் துக்ளக்கு ஈறாக உள்ள பதினொரு சுல்தான்களின் ஆட்சிக் காலத்தைக் கண்டவர் இச்சுல்தான்கள் இவரது திறமையைப் பாராட்டிப் பரீசில்கள் வழங்கியுள்ளனர். இவர் கியாசுதீன் பால்பனின் மகனான பத்ராகான், முகம்மது காலி ஆகியோர் அவையிலும், சலாலுதீன் கில்சி அலாவுதீன் கில்சி ஆகியோரது ஆட்சியிலும் அவைப் புலவராகத் திகழ்ந்தார். பாரசீகமொழியிலும், இந்திய மொழியிலும் இவர் சிறந்த கவிதை நூல்களை இயற்றிப் புகழ் பெற்றுள்ளார். இசைத்துறையிலும் இவர் தம் முத்திரையைப் பொறித்துச் சென்றுள்ளார். இவர் ஏறத்தாழ 99 நூல்களை இயற்றியதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று கீழ்க்காணும் நூல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 1) கிரான் - உச - சடைன் (Qiran-us-Sadain, கி.பி.1289) 2) தபட் - உசு - (Tuhfat-us-sighar கி.பி. 1271), 3) வசட் - உல் - சுயத்து (Wasat - ul Hayat - கி.பி. 1283), 4) மிப்தா உல் புதூ (Mifthul-Fatuh கி.பி. 1291), 5) குற்றாத் உல் - கமால் (Ghurratu'l Kamal - 1294), 6) மட்லா-உல் அன்வர், (Matla-ul-Anwar) சிரின் - வா - குசுரு, மகனுவாலைலா (Shirin wa khusrau, Majnawa Laila -கி.பி. 1299, (7) ஐதா இ சிகந்தர் (Aina - e sikandari கி.பி. 1301), 8) ககட் பிகிசுடு (Hasht - Bihisht கி.பி,1302), 9) கசைன் உங் புதூ (Khazoic-ul-Futuh கி.பி.1311) 11), தேவல் ராணி கிர்கான் (Deval Rani Khizr khan -கி.பி. 1315), 12) புரிய்யா நகிய்யா (Baqiyya Naqiyya கி.பி. 1316) 12) நூ-சிபிர் (Nuhsipihr - கி.பி. 1318), 13) இசசு-இ-குசுரவி (ljnz e Khusravi- கி.பி.1319), 14) அப்சல் உல் பலீது (Afral ul-Fawaed - கி.பி.1319), 15) துக்ளக் நாமா (Tughlaq mama- கி.பி. 1325) நூ-சிபிர் என்றும் நூலில் இவர், சுல்தான் முபாரக்சாலின் வெற்றிகளை விளக்குவதுடன், இந்தியாவின் பண்பட்டு பெருமையையும் நயம்பட விவரித்துள்ளார். இந்நூலின் முன்றாம் அத்தியாயத்தில், அமீர் குசுரு இந்தியாவிற்கே உரிய சிறப்பான பத்து அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பெருமையை அயல் நாடுகளுக்கு உணர்த்திய பெருமை குசுருலைச்சாகும். இவரது நூல்கள் அனைத்தும் அக்காலத்திய சமூக நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதாகவும், வரலாற்றுண்மைகளை விளக்குவதாகவும் அமைத்துள்ளன என்று பேராசிரியர் உலூனியா குறிப்பிடுகிறார். இவர் தம் நூல்களில் காலவரிசையை முறை பிறழாது கையாண்டுள்ளமை பாராட்டத்தக்கது. சில இடங்களில் இவர் வருணனைகள், உயர்வு தவிற்சியாகக் காணப்படினும், வரலாற்று முக்கியத்துவம் உடையது என்பதில் மாறுபட்ட கருத்தில்லை, இவர் ஓர் வரலாற்றறிஞர் என்றாலும்கூட, இவரது பெருமை ஓர் மாபெரும் கவிஞர் என்பதில்தான் அடங்கியுள்ளது. இடைக்காலத்திய வரலாற்று வரைவியலுக்கு அமீர் குசுருவின் பணி பாராட்டத்தக்க அளவில் உள்ளது. இவர் கி.பி. 1325-இல் தில்லியில் காலமானார்.{{Right|<b>ம.இ.</b>}} <b>குசேலர்,</b> வட இந்தியாவிலுள்ள அவந்தி நகரின் அருகிலமைந்த காட்டினையடுத்த முனிவர் சேரியில் பிறந்தார். இவர் இயற்பெயர் சுதாமா என்பது. இளமையில் சாந்தீபினி என்னும் முனிவரிடம் குரு குலவாசமுறையில் பல கலைகளையும் கற்று வல்லவரானார். துவாரகையை ஆண்ட கண்ணபிரான்-<noinclude> <b>வா.க 7 - 34</b></noinclude> fd3pba6v4f6bovqgcceptjepg4z40z6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/822 250 640876 1925660 2026-04-20T07:16:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கல்கத்தாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் புகுமுக வகுப்பு இல்லை; இளங்கலை முதுகலைப் பட்டப் படிப்புகள் மட்டுமே உள்ளன. பயிற்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்கணர்‌|794|கல்கணர்‌}}</noinclude>கல்கத்தாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் புகுமுக வகுப்பு இல்லை; இளங்கலை முதுகலைப் பட்டப் படிப்புகள் மட்டுமே உள்ளன. பயிற்று மொழியாக ஆங்கிலமே பொதுவாக இருந்த போதிலும், இளங்கலைப்பட்டப் படிப்பு மாணவர்கள் வங்காள மொழியில் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது. {{Right|<b>எஸ்.த.</b>}} {{larger|<b>கல்கணர்:</b>}} இந்தியாவின் தொன்மையான வரலாற்று இலக்கியங்கள் சிலவற்றுள் முதன்மையாக இருப்பது. ‘இராசதரங்கணி’ என்னும் காசுமீர அரசர்களின் குலவரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூலின் ஆசிரியர் கல்கணர், இவர் கி.பி. 1150-ஆம் ஆண்டில் வடமொழியில் அதை இயற்றினார். கல்கணரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளன. இவரது நூலின் மூலம், இவர் கண்பகா (Canpaka) என்பவரின் புதல்வர் எனத் தெரிகிறது. காசுமீர அரசர் அர்சர் என்பவரின் அவையில் (கி.பி. 1089–1101) சண்பகா அமைச்சராக இருந்தார் என்றும், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் அறிய முடிகிறது. கல்கணரே கி.பி. 1121–ஆம் ஆண்டு தம் இளவயதில் நேரில் கண்டு எழுதிய அரசியல் மாற்றங்கள் மூலம் இவரது பிறப்பின் ஆண்டைப் பொதுவாகக் குறிக்க முடிகிறது. இலோகரா (Lohara) வமிச வழியைச் சேர்ந்த செயசிம்மர் (Jayashmha) என்பவரின் காலத்தவர் (கி.பி. 1155) கல்கணர் என்றும் அறிய முடிகிறது. இராசதரங்கணி காசுமீரத்தின் வரலாற்றை எட்டுத் தொகுதிகளில் கூறுகிறது. காசுமீரத்தின் வரலாற்றை அறியக் கல்வெட்டுகள் மிகவும் அரிதாக உள்ளமையை இந்நூல் ஈடு செய்கிறது. இந்நூலினை எழுதக் கல்கணர் பல சான்றுகளையும் நூல்களையும் பயன்படுத்தினார். பில்கணர் எழுதிய விக்கிரமாங்க சரித்திரத்தையும் பாணரின் அர்ச சரித்திரத்தையும் காசுமீரத்தைப் பற்றிய பதினொரு வரலாற்றுச் செய்தித் திரட்டுகளையும் பயின்று, அவற்றில் நிலவிய குறைகளை உணர்ந்து, அவற்றை நீக்கித் தம் நூலுக்கு மூலமாகப் பயன்படுத்தினார். இவர் காசுமீரத்தின் நில அமைப்பையும் தன்மைகளையும் நன்கு அறிந்திருந்தார். நாட்டின் பல பாகங்கட்குச் சென்று சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் கிடைத்த நாணயங்களையும் ஆராய்ந்து எழுதினார். இந்நூலில், காசுமீரத்தின் அரசர் இரணத்தியன் என்பவர் முந்நூறு ஆண்டுகள் ஆண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது இவர் செவி வழிக் கதைகளையும் கேட்ட செய்திகளையும் வரலாற்றுக்குப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பிழையாகும். ஆயினும், அவந்திவர்மன், உத்பல மன்னன் ஆகியோர் ஆட்சிக் காலம் தொடங்கி (கி.பி. 855) வரலாறு தக்க சான்றுகளுடன் எழுதப்பட்டுள்ளது. தம் கருத்துகளையும் கொள்கைகளையும் சேர்த்து வரலாற்று நிகழ்ச்சிகளை மாறுபடவோ மிகைப்படவோ கூறாமல் எழுதியுள்ளார். இந்நூலில் ஆண்டுகளின் கணக்கீழ் இலாக்கிக முறையைப் (Laukika era) பின்பற்றி உள்ளது. ஆனாலும் சக ஆண்டு (Saka era) முறையையும் பல இடங்களில் கையாண்டுள்ளதால் கணக்கீடு பிழையின்றி உள்ளது. காசுமீரத்தை ஆட்சிபுரிந்த கார்க்கோடா (Karkota) உத்பலா (Utpala) இலோகரா (Lohara) வமிச அரசர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. இராசதரங்கணி, அரசர்களின் உதவி கொண்டு எழுதப்பட்ட நூலன்று. கல்கணர் இந்நூலை எழுதிய காரணம் என்ன என்று ஆராயும்போது இவருடைய குடும்பத்தின் அரசியல் தொடர்பு, இவர் தந்தைக்குப் பின் நிலவவில்லை. நிலவி இருப்பின் இவர் ஓர் அமைச்சராக இருந்திருப்பார். இவர் முறையாகப் பெற்ற கல்வியைப் பயன்படுத்த இராசதரங்கணியை இயற்றியதாகக் கருத்து நிலவுகிறது. இக்காரணங்களால் இந்நூலில் ஒரு தலைச் சார்பற்ற கருத்துகள் உள்ளன. காசுமீரத்தின் அரசியல் வரலாறு, அரசவை, இராணுவ முறை, வெளிநாட்டு உறவுகள், அரசியல் ஊழல்கள், மாற்றங்கள், குழப்பங்கள், காசுமீரத்தில் நிலவிய புத்தமதம் அதன் கொள்கை ஆகியவற்றைப் பற்றியும். சமுதாய இயல்பற்றி அறியச் சமுதாயப் பிரிவுகளைப் பற்றியும், அக்காலக் கவிஞர்கள், புலவர்கள், அறிஞர்கள் பற்றியும் இந்நூலால் அறிய முடிகிறது. நாட்டில் நிலவிய வறுமை, பஞ்சம், நெகுப்பு ஆகியவற்றால் மக்களுக்கு விளைந்த துன்பங்கள் பலவற்றையும் இவர் தரங்கணியில் குறித்துள்ளார். ஆதலால் இந்நூல் வரலாற்றுக் கருவி நூலாகத் திகழ்கிறது. கல்கணர் அக்கால வரலாறு எழுதும் முறையில் தலைசிறந்து விளங்கினார். தம் திறனாய்வு மூலம் தரங்கணியைப் பிற நூல்களிலிருந்து வேறுபடுத்தி அதற்குத் தனி மதிப்பும் சிறப்பும் சேர்த்தார். இவர் அக்கால வரலாற்று ஆசிரியர்களுள் சிறந்தவராகத் திகழ்கிறார். காசுமீர மொழியில் எழுதப்பட்ட இராசதரங்கணியை இசுடின் (Stein M.A.) என்பவர். கி.பி. 1900–இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். {{Right|<b>பு.எ.மோ.</b>}} {{nop}}<noinclude></noinclude> o4jmaa9lpg1i50lijv4fqw628sy3owf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/558 250 640877 1925666 2026-04-20T07:25:45Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இளமைப் பருவத்தில் இவருடன் பயின்றவர். குசேலவர் படித்ததோடமையாது பல விரதங்களையும் நியமம் தவறாது மேற்கொண்டதால் வாழ்க்கையில் மிகவும் தூய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குசேலர்|530|குசேலோபாக்கியானம்}}</noinclude>இளமைப் பருவத்தில் இவருடன் பயின்றவர். குசேலவர் படித்ததோடமையாது பல விரதங்களையும் நியமம் தவறாது மேற்கொண்டதால் வாழ்க்கையில் மிகவும் தூயவராய் விளங்கினார். இன்பத்தையோ துன்பத்தையோ நினைத்து மகிழ்வதோ வருந்துவதோ இவர்பாவில்லை. இவர் மேனி இளைத்தவராய்க் காணப்பட்டார். இவர் எண்ணம், சொல், செயல்களில் தூய்மையுடையவர் எப்பொழுதும் கண்ணன் கழலிணைகளை நண்ணும் மனமுடையவராயிருந்தார். தக்க பருவத்தில் சுசீலை என்னும் மாதைத் திருமணம் செய்துகொண்டார், அப்பெண் கணவனுக்கேற்ற பதிவிரதையாவான்: இல்லறப் பண்புகள் யாவும் ஒருங்கே அமையப் பெற்ற உத்தமி. இவ்விருவருக்கும் இருபத்தேழு பிள்ளைகள் பிறந்தனர். குடும்பப் பெருக்கால் வறுமை நிறைந்தது. ஒரு சமயம் கசீலை தங்கள் வறுமைத் துன்பத்தைப் போக்கக் குசேலரிடம், அவர் பள்ளி நண்பராய கண்ணபிரானிடம் சென்று செல்வம் பெற்று வருமாறு வேண்டினான், குசேலர், ‘பெருமானிடம் கேட்கத்தக்கது அழிவுறும் செல்வத்தையா?, அழியாத முத்திப் பேறன்றோ கேட்க வேண்டும்’ எனக் கூறி, கண்ண பிரானிடம் செல்ல விரும்பவில்லை, கசீலை சிறிது அவலைப் பக்குவப்படுத்திக் கொடுத்துக் கண்ணபிரானைக் கண்டுவருமாறு கூறவே, ஒருவாறு துணிவு கொண்டு துவாரனைக்குச் சென்றார். வாயிற் காவலர் இவர் தோற்றம் கண்டு கண்ணபிரானைக் காண உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை, பின் இரக்கங் கொண்ட ஒருவன் கண்ணனிடம் அனுமதி பெற்றுக் குசேலரை உள்ளே அனுப்பினான். அதற்குள் கண்ண பிராவே எதிர்கொண்டு அழைத்துச் சென்று குசேலருக்குச் செய்த உபசாரங்கள் அளப்பில. யாவரும் இதுகண்டு வியப்புற்றனர். பின் தமக்கெனக் கொண்டு வந்திருக்கும் அவலை எடுத்து ஒரு பிடி கண்ணன் தம் வாயில் இட்டார். அவ்வனலில் குசேலர் வீட்டில் செல்வம் நிறைத்துவிட்டது. அது குசேலருக்குத் தெரியாது. இரண்டாம் பிடி அவலைக் கண்ணபிரான் உண்ணமுனையும்போது உருக்குமணி தேனியார் தடுத்துவிட்டார். குசேலருக்குப் போதுமான செல்வம் நிறைத்துவிட்டது என்பதற்காகவே தடுத்தார், பின் பலநாள் இருவரும் பேசி மகிழ்ந்தனர். ஒருநாள் விடைபெற்றுக் குசேலர் தம் ஊர் சென்றார். கண்ணபிரான் அவர் கையில் ஒன்றும் கொடுத்து அனுப்பவில்லை. குசேலரும் அதுபற்றி எண்ணவுமில்லை. வீட்டிற்கு வந்து பார்த்ததும் கண்ணன் திருவிளையாடல் புரிந்தது. செல்வம் குசேலர் வீட்டில் செழித்திருந்தது. செல்வத்தால் கண்ணவிடம் அன்பு குறைந்துவிடுமே என்று வருத்திய அவர் ஒரு சமயம் கண்ணனிடம் சென்று செல்வம் வேண்டாம் மீண்டும் வறுமையே வேண்டும் என்று கேட்டார். ஆனால், கண்ணபிரான் குசேலர் போன்ற உண்மை அன்பர்கள் செல்வத்தால் மதிமயங்கார் என்று எடுத்துக்கூறி அச்செல்வத்தைக் கொடுத்ததுடன், தக்க காலத்தில் அவருக்கு முத்திப் பேற்றையும் நல்கினார். இவ்வரலாறு பாகவதத்தில் ஒரு கிளைக் கதையாக உள்ளது. வல்லூர் தேவராச பிள்ளை, குசேவர் வரலாற்றைக் குசேலோபாக்கியானம் என்னும் பெயரில் தமிழில் ஒரு நூலாகப் பாடியுள்ளார்.{{Right|<b>இரா.ச.</b>}} <b>குசேலோபாக்கியானம்</b>: இந்த நூல் குசேலரைப் பற்றிய கிளைக்கதை பற்றியதாதலின் குசேலோபாக்கியானம எனப் பெயர் பெற்றது. குசேலன் + உபாக்கியானம் குசேலோபரக்கியானம், உபாக்கியானம் என்னும் வடசொல்லுக்குக் கிளைக்கதை என்பது பொருள். குசேலருடைய வாழ்க்கை பாகவதத்தில் காணப்படுகின்றது. இராமாயணம், பாரதம், பாகவதம் போன்ற நூல்களில் இடப்பெற்றுள்ள கிளைக்கதைகள் பிற்காலத்தே தனிநூல்களாகத் தோற்றம் பெற்றன. தளவெண்பா, குசேலோபாக்கியானம் இவ்வகையின. இந்நூலாசிரியர் வல்லூர் வீராசாமிப் பிள்ளை மகனார் தேவராசபிள்ளை ஆவார். சிறப்புப்பாயிரம் நூல் தோன்றிய வரலாற்றை நன்கு அறிவிக்கின்றது. திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் மாணாக்கருள் ஒருவர் தேவராசபிள்ளை, நூலாசிரியர் தம் ஆசிரியப் பெருந்தகையினை மதிக்கும் மாண்பு, அவர்தம் பாக்களால் அறியத்தகும். சக ஆண்டு 1772, சௌமிய ஆண்டு, மார்கழி மாதம், இருபத்து நான்காம் தான், ஞாயிற்றுக்கிழமை நூலரங்கேற்றம் நிகழ்ந்தது. குசேலோபாக்கியானம் தோன்றக் காரணமாய் இருந்தோர் திருவூர் நாராயண வள்ளல் மக்கோவிந்தன், சீனிவாசன் ஆகிய இருவருமாவர். ‘தேமேவு மலர் மாலைக் கோவித்த முகில் சீனிவாசச் செம்மல்’ என்று சிறப்புப் பாயிரம் உரைக்கும். இந்நூல் பாயிரம், சிறப்புப் பாயிரம், குசேலர் மேற்கடலடைந்தது, குசேலர் துவாரகையைக் கண்டு தம் நகர்ப் புறம் அடைந்தது, குசேலர் வைகுந்தம் கொண்டுள்ளது. அடைந்தது ஆகிய பகுதிகளைக் பாயிரம் 16 பாடல்கள், சிறப்புப் பாயிரம் 10 பாடல்கள், நூல் 746 பாடல்கள் ஆகப் பாடல் தொகை 772. காஞ்சிபுரம் வித்துவான் இராமசாமி நாயுடு அவர்கள் எழுதிய அரும்பதவுரையுடன் 1916-இல் இரண்டாம் பதிப்பாக நூல் வெளியாகி உள்ளது. சைவசித்தாதத நூற்பதிப்புக் கழகம், சங்குப்-<noinclude></noinclude> g9kqqpdpdgxpmy4gi85qvhkp4fz5z9q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/559 250 640878 1925667 2026-04-20T07:40:22Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புலவர் அவர்களின் விளக்கவுரையுடன் இதனைச் செம்மையான பதிப்பாக 1965-இல் வெளியிட்டுள்ளது. குசேலருடைய வரலாறு இந்நுலில் உரைக்கப்படும், குசேலர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குஞ்சன் நம்பியார்|531|குட்ட நாடு}}</noinclude>புலவர் அவர்களின் விளக்கவுரையுடன் இதனைச் செம்மையான பதிப்பாக 1965-இல் வெளியிட்டுள்ளது. குசேலருடைய வரலாறு இந்நுலில் உரைக்கப்படும், குசேலர் அவந்தி ஊரினர். மனைவி சுசீலை. குசேலரோடு உடன் பயின்றவன் கண்ணன், குசேலர் குழந்தைகள் இருபத்தெழுவர், வறுமையில் வாடிய குசேவர் கண்ணனைக் கண்டு பொருள் பெற விரும்பினார் கண்ணனைக் கண்டார்; கண்ணன் அவர் எடுத்துச் சென்ற அவலை விரும்பி உண்டான். யாதும் கண்ணனிடம் கேட்காமலேயே குசேலர் ஊர் திரும்பினார். கண்ணன் அருளால் தம் வீடும் ஊரும் செல்வத்தால் தினைத்திருத்தல் கண்டு கண்ணன் அருளைப் பெரிதும் போற்றினார்; இறுதியில் வைகுந்தம் அடைந்தார். சிறுகாப்பியத்திற்குரிய கூறுகளைக் இனிய எளிய நடையில் நூலமைத்துள்ளது. கலிலிருந்தம், கலிநிலைத்துறை, கொச்சகக் கலிப்பா, கலித்தாழிசை, ஆசிரிய விருத்தம், வெண்பா, வெண்டுறை, வஞ்சித்தாழிசை என்நினைய யாப்பு வகைகன் இடம்பெற்றுள்ளன. செல்வம் பெருகினும் இறைவனை இடையறாது நினைத்தலே தரும் என்ற இயல்பினர் குசேலர், அதனாற்றான் இறைவனிடம் வரம் கேட்கும்போது ‘செல்வம் வேண்டாம், வறுமையே போதும், செல்வம் தின் நினைவைத் தடுக்கும்’ என்று கூறினார். கடவுனை நினைத்தோர் கைவிடப்படார் என்பதற்குச் சான்றாகத் திகழ்பவர் குசேலர்.{{Right|<b>அ.வி.</b>}} <b>குஞ்சன் நம்பியார் (கி.பி. 1705-1770)</b>: சிறந்த மலையாள மொழிக் கவிஞர்களுள் ஒருவர். இவர் கேரள மாநிலத்திலுள்ள கிள்ளிக் குறிச்சி மங்கலம் என்னும் ஊரில் கி.பி. 1705-ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சிறுவயதில் தம் தந்தையாரின் பிறந்த ஊராகிய ஏற்றுமானூர் சென்று கல்வி கற்றார். சாக்கையார் கூத்தினுக்கு மத்தளம் வாசிப்பது இவர் குலமரபாக இருந்தது. அதனை இவர் நன்கு பயின்று அத்தொழிலை மேற்கொண்டார், மலையாள மொழியில் கவிதை இயற்றும் திறனையும் பெற்றிருந்தமையால் குடமானூர் என்னுமிடத்திற்குச் சென்று, செம்பகச் சேமி மன்னரின் அமைச்சரது நட்பால் அவ்வரசரவையில் அவைப் புலவராக இடம்பெற்றார். பின்னர்ச் செம்பகச்சேரி திருவாங்கூரோடு இணைத்த பிறகு திருவாங்கூர் மன்னரின் அவைப் புலவரானார். இவர் துள்ளல் என்னும் இசை வகைப் பாடல்கள் 76 இயற்றியுள்ளார். இவர் தம் துள்ளற் பாடல்களின் வாயிலாக, மலையாளக் கவிதையில் ஒரு புதிய மாறுதலைச் செய்தார் என்று கூறுகின்றனர். இவர் காலத்திலும், அதற்கு முன்னரும் மலையாளக் கவிதை வடமொழிக்குப் பெரிதும் கடன்பட்டிருந்தது. வடமொழிச் சொற்கள் குறைவாகக் கொண்டு இனிமை பயக்குமாறு, மிகுதியாக மலையானச் சொற்களை அமைத்து இவர் படைத்த துள்ளற் பாடல்கள் அக்காலத்தில் நல்ல மதிப்பினைப் பெற்றுத் திகழ்த்தன. ஆயினும் பண்டிதர்கன் அவற்றை விழுமிய இலக்கியமெனக் கருதவில்லை. வடமொழிப் புலமையை மட்டும் மதித்துவந்த அந்தக் கால நிலையில் துள்ளல்களின் ஆற்றொழுக்குப் போன்ற சரளமான நடைக்கு அவ்வளவாக மதிப்புத் தோன்றவில்லை என்று இலக்கிய வரலாற்றாசிரியர் பி.கே. பரமேசுவரன் நாயர் குறிப்பிட்டுள்ளார். நம்பியாரின் துள்ளற் பாடல்கள் மிக்க நகைச்சுவை வாய்ந்தன: சமுதாயக் குறைபாடுகளை நகைச்சுலையோடு கண்டிக்ரும் பாங்கின; புராண மாந்தர்களின் வாயிலாகத் தம் காலச் சமுதாயத்தின் உண்மைநிலைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர் சமகாலச் சமுதாயத்தின் குறைபாடுகளை மிகவும் தைரியமாக வெளிப்படுத்தினார் என்று திறனாய்வாளர் இவரைப் பாராட்டுவர். இவர், துள்ளற் பாடல்களோடு சிரீ கிருட்டிண சரிதம், நளசரிதம், பதினாலுவிருத்தம், சாகுந்தலம். கதகளி ஆகிய பாடல்களையும் இயற்றியுள்ளார். பஞ்ச தந்திரத்திற்குக் கிளிப்பாட்டுப் பாவினத்தில் குஞ்சன் நம்பியாரின் மொழிபெயர்ப்பு ஒன்றும் உண்டு. நாராயண பிள்ளை இவர் வரலாறு பற்றி ஆராய்ந்து விரிவாக எழுதியுள்ளார். இவர் கி.பி. 1770-ஆம் ஆண்டு தம் 65-ஆம் வயதில் காலமானார்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>கோபிநாதன், இராம, பரமேசுவரன்காயர், பி.கே.,</b> (தமிழாக்கம்) மலையாள இலக்கிய வரலாறு, சாகித்திய அக்காதெமி, புதுகில்லி, 1968. <b>குட்டநாடு</b>: பழைய திருவாங்கூர்ச் சமசுதானத்தைச் சேர்ந்ததும், இந்நாள் கேமுண மாழிலத்திலுள்ளதுமான கோட்டையம், கொல்லம் ஆகிய நகரங்கள் அடங்கிய பகுதி குட்டநாடு என்று வழங்கப்படுகிறது. குட்டம் என்பது குழி அல்லது பள்ளம் எனப்பொருள்படும். பொருளடிப்படையில் ஏரி, உப்பங்கழி முதலிய நீர்நிலைகளை மிகுதியாகக் கொண்டிருத்தலால் அப்பகுதி குட்ட நாடு என வழங்கப்படுவதாகக் கூறுகின்றனர். குறிஞ்சி வளம் மிக்க மேலைக் கடற்கரைப் பகுதிகளில் அமைத்துள்ள ஏரிகள் மிக்க<noinclude> <b>வா. க. 7 - 34அ</b></noinclude> 21qmbeasz5vczt2wnxqb0e2wmmhgynj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/823 250 640879 1925668 2026-04-20T07:46:09Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்கள்:</b> <b>Ghoshal, U.N.,</b> Studies in Indian History and Culture, Orient Longmans, Calcutta, 1965. <b>Stein. M.A.,</b> (Trans.) Kalhana's Rajataranjgani, A Chronicle of the Kings of Kashmir, Vols, I & II, Delhi, 1961. {{larger|<b>கல்கி (கி.பி. 1899-1954):</b>}} இருபதாம்‌ நூற்‌..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்கி|795|கல்கி}}</noinclude><b>துணை நூல்கள்:</b> <b>Ghoshal, U.N.,</b> Studies in Indian History and Culture, Orient Longmans, Calcutta, 1965. <b>Stein. M.A.,</b> (Trans.) Kalhana's Rajataranjgani, A Chronicle of the Kings of Kashmir, Vols, I & II, Delhi, 1961. {{larger|<b>கல்கி (கி.பி. 1899-1954):</b>}} இருபதாம்‌ நூற்‌றாண்டில்‌ தமிழையும்‌ தேசியத்தையும்‌ வளர்த்த தமிழ்‌ எழுத்தாளர்களுள்‌ கல்‌கியும்‌ ஒருவர்‌. தேசிய விடுதலைப்போர்‌, சமுதாய மறுமலர்ச்சி, தமிழ்ப்‌ பத்திரிகை, தமிழ்ப்‌ புதினம்‌ ஆகிய பல்வேறு நிலைகளிலும்‌ இவரது பணி பரவி நிற்கக்‌ காணலாம்‌. கல்கி கலப்புமணம்‌, கைம்பெண்‌ மணம்‌, மதுவிலக்குப்‌ போன்ற சமூகச்‌ சீர்‌திருத்தக்‌ கருத்துகளில்‌ மிக்க நாட்டம்‌ உடையவர்‌. இவர்‌ தமிழ்‌ உரைநடையை மக்களின்‌ அன்றாடப்‌ பேச்சு நடையோடு ஒட்டிய பழகுதமிழ்‌ நடையாக வளப்படுத்திக்‌ தமிழ்‌ மொழியின்‌ உரைநடைச்‌ செல்வாக்கை உயர்த்தினார்‌. தமிழில்‌ வரலாற்றுப்‌ புதினம்‌ என்னும்‌ ஒரு வற்றாத இலக்கிய வகையை வளப்படுத்‌தித்‌ தமிழ்ப்‌ புதினத்‌தின்‌ பரப்பைப்‌ பெருக்கிப்‌ பெருந்தொண்டு புரிந்தார்‌. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 823 |bSize = 480 |cWidth = 164 |cHeight = 205 |oTop = 290 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|கல்கி}} இவரது தேயப்பணியும்‌ சமுதாய மறுமலர்ச்சிப்‌ பணியும்‌ காலவேகத்தால்‌ மறக்கப்பட்டாலும்‌, ஓர்‌ எழுத்தாளன்‌ என்ற முறையில்‌ தமிழ்ப்‌ பத்திரிகை உலகுக்கும்‌, தமிழ்‌ இலக்கிய உலகுக்கும்‌ இவர்‌ ஆற்றியுள்ள பெருந்தொண்டு மறக்கப்படாது எப்போதும்‌ நிலைத்து நிற்கும்‌ தன்மையதாகும்‌. ‘கல்கி’ என்று புகழ்பெற்ற இவரது இயற்பெயர்‌ ரா. கிருட்டிணமூர்த்தி என்பதாகும்‌. இவர்‌ தஞ்சை மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம்‌ என்னும்‌ இடத்தில்‌ கி.பி. 1899–ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ 9–ஆம்‌ நாள்‌ பிறந்தார்‌. இவர்‌ தந்தையார்‌ பெயர்‌ இராமசாமி ஐயர்‌. இவர்‌ புத்தமங்கலம்‌ தொடக்கப்‌ பள்ளியில்‌ தொடக்கக்‌ கல்வி பெற்றார்‌; அரிகதை கூறுவதிலும்‌ பசனைப்‌ பாடல்கள்‌ பாடுவதிலும்‌ தம்‌ 12 வயது முதல்‌ 17-ஆம்‌ வயது வரை கழித்தார்‌. பின்னர்த்‌ திருச்சி தேசிய உயர்நிலைப்‌ பள்ளியில்‌ மூன்றாம்‌ படிவத்தில்‌ சேர்ந்தார்‌. காந்தியின்‌ ஒத்துழையாமை இயக்கத்தில்‌ ஈடுபட்டுத்‌ தம்‌ கல்வியைப்‌ பாதியில்‌ நிறுத்தினார்‌. இவரது பணி தேசியம்‌, பத்திரிகை, இலக்கியம்‌ என்னும்‌ மூன்று நிலைகளில்‌ அமைந்துள்ளது. இவர்‌ காந்தியடிகளின்‌ விடுதலைப்‌ போராட்டத்‌தில் கலந்து கொண்டு மூன்றுமுறை (1921, 1931, 1940) சிறைவாழ்வை மேற்‌ கொண்டார்‌. தமிழ்‌ வளர்ச்சிக்‌ கழகத்தின்‌ செயலாளர்களுள்‌ ஒருவராகவும்‌ தமிழ்‌ எழுத்தாளர்‌ சங்கத்‌ தலைவராகவும்‌ இவர்‌ பணியாற்றினார்‌. இவர்‌ வ.ரா., நாமக்கல்‌ கவிஞர்‌ பரலி. நெல்லையப்பர்‌ போன்ற தமிழ்‌ அறிஞர்களுக்கு நிதி திரட்டித்‌ தந்து உதவினார்‌. இவரது முயற்சியால்‌ எட்டையபுரத்தில்‌ பாரதிமண்டபம்‌ அமைக்கப்‌ பெற்றது. தூத்துக்குடி, வ.உ.சி. கல்லூரி அமைக்கவும்‌ இவர்‌ பெருமுயற்சி மேற்கொண்டார்‌. திரு. வி.க. மண்டபம்‌, காந்தி நினைவு மண்டபம்‌ முதலியவற்றைக்‌ கட்டுவதற்கும்‌ மக்களிடம்‌ நிதி திரட்டி உதவினார்‌. இவர்‌ முப்பது ஆண்டுகளுக்கும்‌ மேலாகப்‌ பத்திரிகைத்‌ துறையில்‌ ஈடுபட்டு உழைத்தார்‌. திரு.வி.க. நடத்திய ‘நவசக்தி’ இராசாசி நடத்திய ‘விமோசனம்’ ஆகிய பத்திரிகையிலும்‌ ‘ஆனந்த விகடன்‌’ பத்திரிகையிலும்‌ (1930-41) சேர்ந்து பணியாற்றினார்‌. ‘கல்கி’ என்ற பத்திரிகையை 1941-இல்‌ இவர்‌ தொடங்கி நடத்தினார்‌. இவர்‌ பத்‌திரிகையில்‌ பெரும்பாலும்‌ ‘கல்‌கி’ என்ற புனைபெயரிலேயே எழுதினார்‌. இவரது நடை தெளிவும்‌ இனிமையும்‌ உடையது. இவர்‌ மிகையான வடசொற்களை நீக்‌கி மக்கஞுடைய அன்றாடப்‌ பேச்சு வழக்கிலிருந்து பெரிதும்‌ வேறுபடாத ஒரு எளிய நடையை உருவாக்கப்‌ பயன்படுத்தினார்‌. இத்தகைய எளிய நடையில்‌ நகைச்சுவை நயம்‌ மிக்கிருக்கும்‌. சிறுகதை, புதினம்‌ ஆகிய புத்திலக்கய வகைகளிலும்‌ கல்கியின்‌ எழுத்துப்பணி வெளிப்பட்டது. பல்ல-<noinclude></noinclude> h5ost3lryk3tcnzxrpjci8sgjz6onj5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/695 250 640880 1925669 2026-04-20T07:51:59Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மீது அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். இவர் நான்கு கைகளை உடையவர்; வலக் கைகளில் ஈட்டியும் வச்சிரமும், இடக்கைகளில் அம்பும் வில்லும் வைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரா, முதலாம்|663|இந்திரா, முதலாம்}}</noinclude>மீது அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். இவர் நான்கு கைகளை உடையவர்; வலக் கைகளில் ஈட்டியும் வச்சிரமும், இடக்கைகளில் அம்பும் வில்லும் வைத்திருப்பார். சில சிற்பங்களில் தூண்டில்முள், வளை போன்றவற்றையும் வைத்திருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளார். <b>இந்திரா (மன்னன்), முதலாம் (தோரா, கி.பி. 670 690)</b> கருநாடக மாநிலத்திலுள்ள மால்கெடுப் (Malkhed) (மானிய கடகம்) பகுதியை ஆண்டு வந்த இராட்டிரகூட வேந்தர்களும் இந்திராவும் ஒருவன். இப்பெயரில் வேறு மூவரும் ஆண்டனர். அதனால் இவன் முதலாம் இந்திரன் எனப்படுவான். கல்வெட்டுகளின் அடிப்படையில் இவ்வேந்தன் இராட்டிரகூட மரபில் இரண்டாம் மன்னனாகக் கருதப்படுகிறான். இம்மரபின் முதல் மன்னனாகக் கருதப்படுபவன் தந்திவருமன் (தோரா. கி.பி. 650-670) ஆவான். எனவே, இவனை அடுத்து ஆட்சி புரிந்த முதலாம் இந்திரா கி.பி. 670 முதல் கி.பி. 690 முடிய ஆண்டதாகக் கொள்ளப்படுகிறது. இவன் எலிச்சுப்பூரைத் (Ellichpur) தனது தலை நகரமாகக் கொண்டு ஆண்டு வந்தான். எலிச்சுப்பூர் நகரம் இலட்டூர் (Latur) லிருந்து 150 கல் தொலைவில் உள்ளது. இவளைப் பற்றி வேறு விவரங்கள் கிடைக்கவில்லை. இவனுக்குப் பின் முதலாம் கிருட்டிணன் இராட்டிரகூட வேந்தன் ஆனான். <b>இந்திரா, இரண்டாம் (தோரா. கி.பி. 730-752)</b> முதலாம் ஈர்க்கனின் (Karkka) (தோரா. கி.பி. 710-730) மகனும் முதலாம் கோவிந்தராசனின் (தோரா. கி.பி. 690-710) பேரனுமான இரண்டாம் இந்திரா கர்க்கனுக்குப் பின் இராட்டிரகூட வேந்தனாக மணிமுடி சூடினான். விட்டுணு பக்தனான முதலாம் கிருட்டிணன், நன்னகுணவலோகன் ஆகிய இருவரும் இந்திராவின் தம்பியர் ஆவர். இவ்வேந்தன் சாளுக்கிய இளவரசியான பவநாகா (Bhavanaga) என்னும் பேரழகியை மணந்ததாகச் சாமன்கட் பட்டயம் (Samangad Plates) குறிப்பிடுகிறது. சஞ்சன் பட்டயங்களோ (Sanjan Plates) கைரா (Kaira) என்னுமிடத்தில் மணப்பந்தலில் அமர்ந்திருந்த இப்பேரழகியை இந்திரா வன்முறையில் கவர்ந்து சென்றான் என்று செப்புகின்றன. இவ்வேந்தனுக்குப் பிறந்தவனே தந்தி துர்க்கன் (Danti durga) ஆவான் இரண்டாம் இந்திரா காலமான பின்னர் தந்திதுர்க்கன் (தோரா. கி.பி. 752–756) இராட்டிரகூட மன்னன் ஆனான். <b>இந்திரா, முன்றாம் (கி.பி. 914-928)</b> மால்கெடு (Malkhed) இராட்டிரகூட மரபின் புகழ்பூத்த, வலிமை சான்ற வேந்தர்களுள் மூன்றாம் இந்திராவும் ஒருவன் ஆவான். இவன் தன் பாட்டனான இரண்டாம் கிருட்டிணனை (கி.பி. 880-914) அடுத்து இராட்டிர கூட அரசின் மன்னன ஆனான். இவன் கி.பி. 914-இல் தனது முப்பதாம் வயதில் அரியணையேறி, கி.பி. 928 முடிய ஆட்சி புரிந்து, இராட்டிரகூட அரசின் எல்லைகளை விரிவுபடுத்திப் பெரும் புகழ் பெற்றான். துருவனைப் (கி.பி. 780-792) போன்று போரார்வம் மிக்கவனாகத் திகழ்ந்த இவன் இராட்டிரகூடர்களின் பேராதிக்கத்தை நிலை நாட்டுவதில் முனைந்து செயற்பட்டான். <b>வெற்றிகள்:</b> பிரதிகார (Pratihara) வேந்தனான முதலாம் மகேந்திர பாலன் (Mahendrapala I) கால மானபின், இவன் மக்களான இரண்டாம் போசனுக்கும் (Bhoja II), முதலாம் மகிபாலனுக்கும் இடையே வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது. முதலாம் மகிபாலன் (Mahipala I - கி.பி. 913-943) சந்தேல (Chandella) மன்னனான அர்சனின் (Harsha) உதவியைப் பெற்றுப் போசனைத் தோற்கடித்து விரட்டி விட்டு, பிரதிகார ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இதுபோன்ற அரசியல் குழப்ப நிலை இந்திராவின் வடஇந்தியப் படையெழுச்சிக்கு வழி வகுத்தது. அடுத்து, பிரதிகாரச் சிற்றரசனான பரமார உபேந்திர ராசா (Paramara Upendraraja) என்பான் நாசிக்கு மாவட்டத்தின் மீது படையெடுத்துக் கோவர்த்தனாவை முற்றுகையிட்டான். இந்திராவோ ஆக்கிரமிப்பாளனான உபேந்திர ராசாவை வென்று அடிமைப் படுத்தியதுடன், உச்சயினியையும் கைப்பற்தில் கொண்டான். தான் வடஇந்திய ப்படையெழுச்சியை மேற்கொள்ள உச்சயினியைத் தனது இராணுவமையமாகவும் பயன்படுத்தினான். <b>வடஇந்தியப் படையெழுச்சி:</b> மூன்றாம் இந்திரா கி.பி. 916-இல் வடஇந்தியப் படையெழுச்சியைத் தொடங்கினான். வடஇந்திராய் படையெழுச்சியின் முதல் கட்டமாகக் கன்னோசி (Kanauj) இவனால் கைப்பற்றப்பட்டது. பின்னர் மகிபாலனை ஒழித்துக் கட்டத் திட்டம் தீட்டினான். இத்திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டுச் சாளுக்கியச் சிற்றரசனான நரசிம்மனைப் பெரும் படையுடன் மகிபாலன் மீது ஏவினான்; மகிபாலன் தோற்கடிக்கப்பட்டுப் பேரர்க்களத்தினின்றும் விரட்டப்பட்டான். மூன்றாம் இந்திராவின் வட இந்தியப் படையெழுச்சி வெறும் தாக்கு தலைப் போன்றது. கன்னோசியை நீண்ட காலம் இவன் வைத்துக்கொள்ளவில்லை. மகிபாலனே பின்னர் அந்நகரைக் கைப்பற்றிக் கொண்டான். <b>வேங்கியைக் கைப்பற்றல்:</b> வெற்றி வீரனான இந்திரா அடுத்து வேங்கியின் (கீழைச் சாளுக்கியர்)<noinclude></noinclude> 2bozcwxifv5r6mo1cny6vkurm6fvdv7 1925670 1925669 2026-04-20T07:52:32Z Illiyas noor mohammed 14490 1925670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரா, முதலாம்|663|இந்திரா, மூன்றாம்}}</noinclude>மீது அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். இவர் நான்கு கைகளை உடையவர்; வலக் கைகளில் ஈட்டியும் வச்சிரமும், இடக்கைகளில் அம்பும் வில்லும் வைத்திருப்பார். சில சிற்பங்களில் தூண்டில்முள், வளை போன்றவற்றையும் வைத்திருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளார். <b>இந்திரா (மன்னன்), முதலாம் (தோரா, கி.பி. 670 690)</b> கருநாடக மாநிலத்திலுள்ள மால்கெடுப் (Malkhed) (மானிய கடகம்) பகுதியை ஆண்டு வந்த இராட்டிரகூட வேந்தர்களும் இந்திராவும் ஒருவன். இப்பெயரில் வேறு மூவரும் ஆண்டனர். அதனால் இவன் முதலாம் இந்திரன் எனப்படுவான். கல்வெட்டுகளின் அடிப்படையில் இவ்வேந்தன் இராட்டிரகூட மரபில் இரண்டாம் மன்னனாகக் கருதப்படுகிறான். இம்மரபின் முதல் மன்னனாகக் கருதப்படுபவன் தந்திவருமன் (தோரா. கி.பி. 650-670) ஆவான். எனவே, இவனை அடுத்து ஆட்சி புரிந்த முதலாம் இந்திரா கி.பி. 670 முதல் கி.பி. 690 முடிய ஆண்டதாகக் கொள்ளப்படுகிறது. இவன் எலிச்சுப்பூரைத் (Ellichpur) தனது தலை நகரமாகக் கொண்டு ஆண்டு வந்தான். எலிச்சுப்பூர் நகரம் இலட்டூர் (Latur) லிருந்து 150 கல் தொலைவில் உள்ளது. இவளைப் பற்றி வேறு விவரங்கள் கிடைக்கவில்லை. இவனுக்குப் பின் முதலாம் கிருட்டிணன் இராட்டிரகூட வேந்தன் ஆனான். <b>இந்திரா, இரண்டாம் (தோரா. கி.பி. 730-752)</b> முதலாம் ஈர்க்கனின் (Karkka) (தோரா. கி.பி. 710-730) மகனும் முதலாம் கோவிந்தராசனின் (தோரா. கி.பி. 690-710) பேரனுமான இரண்டாம் இந்திரா கர்க்கனுக்குப் பின் இராட்டிரகூட வேந்தனாக மணிமுடி சூடினான். விட்டுணு பக்தனான முதலாம் கிருட்டிணன், நன்னகுணவலோகன் ஆகிய இருவரும் இந்திராவின் தம்பியர் ஆவர். இவ்வேந்தன் சாளுக்கிய இளவரசியான பவநாகா (Bhavanaga) என்னும் பேரழகியை மணந்ததாகச் சாமன்கட் பட்டயம் (Samangad Plates) குறிப்பிடுகிறது. சஞ்சன் பட்டயங்களோ (Sanjan Plates) கைரா (Kaira) என்னுமிடத்தில் மணப்பந்தலில் அமர்ந்திருந்த இப்பேரழகியை இந்திரா வன்முறையில் கவர்ந்து சென்றான் என்று செப்புகின்றன. இவ்வேந்தனுக்குப் பிறந்தவனே தந்தி துர்க்கன் (Danti durga) ஆவான் இரண்டாம் இந்திரா காலமான பின்னர் தந்திதுர்க்கன் (தோரா. கி.பி. 752–756) இராட்டிரகூட மன்னன் ஆனான். <b>இந்திரா, முன்றாம் (கி.பி. 914-928)</b> மால்கெடு (Malkhed) இராட்டிரகூட மரபின் புகழ்பூத்த, வலிமை சான்ற வேந்தர்களுள் மூன்றாம் இந்திராவும் ஒருவன் ஆவான். இவன் தன் பாட்டனான இரண்டாம் கிருட்டிணனை (கி.பி. 880-914) அடுத்து இராட்டிர கூட அரசின் மன்னன ஆனான். இவன் கி.பி. 914-இல் தனது முப்பதாம் வயதில் அரியணையேறி, கி.பி. 928 முடிய ஆட்சி புரிந்து, இராட்டிரகூட அரசின் எல்லைகளை விரிவுபடுத்திப் பெரும் புகழ் பெற்றான். துருவனைப் (கி.பி. 780-792) போன்று போரார்வம் மிக்கவனாகத் திகழ்ந்த இவன் இராட்டிரகூடர்களின் பேராதிக்கத்தை நிலை நாட்டுவதில் முனைந்து செயற்பட்டான். <b>வெற்றிகள்:</b> பிரதிகார (Pratihara) வேந்தனான முதலாம் மகேந்திர பாலன் (Mahendrapala I) கால மானபின், இவன் மக்களான இரண்டாம் போசனுக்கும் (Bhoja II), முதலாம் மகிபாலனுக்கும் இடையே வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது. முதலாம் மகிபாலன் (Mahipala I - கி.பி. 913-943) சந்தேல (Chandella) மன்னனான அர்சனின் (Harsha) உதவியைப் பெற்றுப் போசனைத் தோற்கடித்து விரட்டி விட்டு, பிரதிகார ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இதுபோன்ற அரசியல் குழப்ப நிலை இந்திராவின் வடஇந்தியப் படையெழுச்சிக்கு வழி வகுத்தது. அடுத்து, பிரதிகாரச் சிற்றரசனான பரமார உபேந்திர ராசா (Paramara Upendraraja) என்பான் நாசிக்கு மாவட்டத்தின் மீது படையெடுத்துக் கோவர்த்தனாவை முற்றுகையிட்டான். இந்திராவோ ஆக்கிரமிப்பாளனான உபேந்திர ராசாவை வென்று அடிமைப் படுத்தியதுடன், உச்சயினியையும் கைப்பற்தில் கொண்டான். தான் வடஇந்திய ப்படையெழுச்சியை மேற்கொள்ள உச்சயினியைத் தனது இராணுவமையமாகவும் பயன்படுத்தினான். <b>வடஇந்தியப் படையெழுச்சி:</b> மூன்றாம் இந்திரா கி.பி. 916-இல் வடஇந்தியப் படையெழுச்சியைத் தொடங்கினான். வடஇந்திராய் படையெழுச்சியின் முதல் கட்டமாகக் கன்னோசி (Kanauj) இவனால் கைப்பற்றப்பட்டது. பின்னர் மகிபாலனை ஒழித்துக் கட்டத் திட்டம் தீட்டினான். இத்திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டுச் சாளுக்கியச் சிற்றரசனான நரசிம்மனைப் பெரும் படையுடன் மகிபாலன் மீது ஏவினான்; மகிபாலன் தோற்கடிக்கப்பட்டுப் பேரர்க்களத்தினின்றும் விரட்டப்பட்டான். மூன்றாம் இந்திராவின் வட இந்தியப் படையெழுச்சி வெறும் தாக்கு தலைப் போன்றது. கன்னோசியை நீண்ட காலம் இவன் வைத்துக்கொள்ளவில்லை. மகிபாலனே பின்னர் அந்நகரைக் கைப்பற்றிக் கொண்டான். <b>வேங்கியைக் கைப்பற்றல்:</b> வெற்றி வீரனான இந்திரா அடுத்து வேங்கியின் (கீழைச் சாளுக்கியர்)<noinclude></noinclude> jo296x46oobqeh88aoe3wx8e5uulit7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/560 250 640881 1925671 2026-04-20T07:55:00Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தும், நஞ்செய் வளஞ் சார்ந்ததுமான நிலமாதலின் அச்சிறப்பால் குட்டநாடு என்ற பெயர் அமைந்திருத்தல் கூடும். தமிழில் கொடுத்தமிழ் என்னும் வழக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குட்டுவன்|532|குட்டுவன் இரும்பொறை}}</noinclude>தும், நஞ்செய் வளஞ் சார்ந்ததுமான நிலமாதலின் அச்சிறப்பால் குட்டநாடு என்ற பெயர் அமைந்திருத்தல் கூடும். தமிழில் கொடுத்தமிழ் என்னும் வழக்கு நிலை பெற்றபோது, செத்தமிழ் நாட்டைச் சார்ந்து பன்னிரண்டு கொடுத்தமிழ் நாடுகள் இருந்தன என்பதனை இலக்கண உரையாளர்கள் காட்டியுள்ளனர். அப்பன்னிரு நாடுகளையும், ‘தென்பாண்டி’ எனத் தொடங்கும் ஒரு பழைய வெண்பா குறிப்பிடுகிறது. அதில் இந்நாடு ‘குட்டம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பழந்தமிழகத்துச் சேரநாடு, குட்டதாடு, குடநாடு, பொறைநாடு என்ற மூன்று பகுதியாகக் கருதப்பட்டது என்றும், அவற்றுள் குட்டநாட்டை ஆண்டவர் என்ற கருத்தில் சேரமன்னரின் ஒரு பகுதியினர் குட்டுவர்கோ, குட்டுவன் என்று அழைக்கப்பட்டடனர் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் மகன் குட்டுவன் சேரல் எனப்பட்டான் (பதி. 5-ஆம் பதிகம்). குட்ட நாட்டு வளத்தினையும், அங்குள்ள திருப்புலியூர் என்னும் தலத்தினையும், ‘செழுநீர் வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர்’ (திருவாய். 8-9-1) என்று திருவாய் மொழி குறிப்பிடுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}} <b>குட்டுவன்</b>: சேரவேந்தனைச் சுட்டும் பொதுப் பெயர்களுள் ஒன்றாகக் குட்டுவன் என்னும் பெயரினை நிகண்டுகள் குறிப்பிட்டுள்ளன. பண்டைய சேரநாட்டை அதன் இயல்பு தோக்கிக் குடநாடு குட்டநாடு, பொறை நாடு என்று பகுத்து வழங்கும் மரபுண்டு. குடநாட்டை ஆண்டவன் குடவன், குடக்கோ என்றும், பொறைநாட்டு பகுதியை ஆண்டவன் பொறை, பொறையன் என்றும் வழங்கப்பட்டமை போலக் குட்ட நாட்டுப் பகுதியை ஆண்டவள் குட்டுவள் எனப்பட்டான் குட்டநாட்டு மன்னர்கள் குட்டுவர் என்றழைக்கப்பட்டனர். அந்நாட்டு மக்களையும் குட்டுவர் என்று கூறும் மரபுள்ளது. குட்டுவன் என்னும் பெயர் அப்பகுதியை ஆண்ட ஒரு மன்னனைக் குறிக்கும் இயற்பெயராகவும் வந்துள்ளது. மாத்தை அல்லது மரத்தை என்னும் நகருக்குரியவன் குட்டுவன் எனப்பட்டான். அவனைக் கொல்லிக்கண்ணனார் தம் குறுத்தொகைப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். (குறும், 34). கழுமலம் என்னும் நகரம் குட்டுவனுக்குரியது என்று சாகலாசனார் குறிப்பிட்டுள்ளார் (அகம். 270-9). குட்டுவன் என்பதற்குக் குட்டநாட்டை உடையோன் என்று நச்சினார்க்கினியர் விளக்கம் தந்துள்ளார் (சிறு. 49. நச்சர் உரை). பதிற்றுப்பத்தின் 5-ஆம் பத்தில் தம்மால் சிறப்பிக்கப் பெற்றுள்ள கடல் பிறக்கோட்டிய செங்குட்டு வனைப்பரணர் குட்டுவன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். பிறதொகையில் இடம்பெற்றுள்ள தம் பாடலுள் அவர் குட்டுவன் என்ற பெயராலேயே அம்மன்னனைக் குறிப்பிட்டுள்ளார். பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தின் தலைவனாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவனை, அதன் ஆசிரியர் பாலைக் கௌதமனார் குட்டுவன் என்றே சுட்டியுள்ளார் (பதிற் 29-15). இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தையும், பதிற்றுப்பத்து எட்டாம் பத்தின் தலைவனுமாகிய பெருஞ்சேரல் இரும்பொறையின் ஒன்பதாம் பதிகம் குட்டுவன் இரும்பொறை என்றே குறிக்கிறது. சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டத் தலைவனான சேரன் செங்குட்டுவனைக் குட்டுவன் என்று குறிக்கிறது. இவற்றால் குட்டுவன் என்னும் பெயர் தனி ஒரு சேர அரசனைச் சுட்டுவதாகவும் அம்மரபில் வந்த பிற அரசர்களைச் சுட்டும் பொதுப் பெயராகவும் அமைந்துள்ளமையினை உணர்தல் கூடும்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <b>குட்டுவன் இரும்பொறை,</b> சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு சேரமன்னன், எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்தில் இம்மன்னன் குறிக்கப்பெறுகிறான் பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்து இம்மன்னனின் புகழ்பாடுகின்றது. பெருங்குன்றூர் கிழார் என்னும் பெரும்புலவர் இம்மன்னனின் போர் வேட்கை, இரவலர்க்கு இல்லையென்னாது கொடுக்கும் கொடைத்தன்மை, பொறையனின் உள்ளப் பண்பு, அகத்துறையில் அவனுக்குள்ள ஈடுபாடு முதலிய குணங்களை எடுத்துரைக்கின்றார். ஒன்பதாம் பத்தின் பதிகம் இவ்வேந்தனை இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறை எனப் பாராட்டுகிறது. ‘இளஞ்சேரல்’ என்னும் அடைமொழி இம்மன்னல் பெயருடன் ஒட்டி நிற்கிறது. சேர மன்னர்களின் பெயராகிய ‘குட்டுவன்’ என்பதை ‘நினைவூட்டும் குடக்கோ’ என்னும் பொதுப் பெயரும் இம்மன்னன் பெயரோடு சேர்த்துச் சொல்லப்பெறுகிறது. எனவே, ‘இரும்பொறை’ என்பான் ‘குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை’ எனக் குறிக்கப்பட்டமை புலனாகிறது. ‘குட்டுவன் இரும்பொறைக்கு’ என்றே ஒன்பதாம் பத்தின் பதிகம் தொடங்குகின்றது. இம்மன்னன் பதினாறாண்டுகள் அரசு விற்றிருந்தான், இவன் தந்தை தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, தாய்<noinclude></noinclude> 6qe8mc1dvamepgcim8umdpm9mxyofxv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/824 250 640882 1925672 2026-04-20T08:08:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வர் வரலாறு, பிற்காலச் சோழர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து கற்றார். அதன் விளைவாக வரலாற்றுப் பாத்திரங்களுடன் கற்பனைப் பாத்திரங்களையும் பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்கி|796|கல்கி}}</noinclude>வர் வரலாறு, பிற்காலச் சோழர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து கற்றார். அதன் விளைவாக வரலாற்றுப் பாத்திரங்களுடன் கற்பனைப் பாத்திரங்களையும் படைத்துத் தம் புதினங்களில் உலவவிட்டார். அக்கால மக்களின் நாகரிகம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கற்பனையுடன் கலந்து தம் புதினங்களின் மூலமாக வெளிப்படுத்தினார். இவர்தம் கற்பனை ஆற்றலாலும் கதைகூறும் திறத்தாலும் கற்பனை மாந்தர்களும் படித்தவர் மனத்தில் அழியா இடம் பெற்றுவிட்டனர். பார்த்திபன் கனவு (1941–43), சிவகாமியின் சபதம் (1944-46), பொன்னியின் செல்வன் (1950-54) ஆகியன தொடர்கதையாக வந்த இவருடைய வரலாற்றுப் புதினங்களுள் மிகச் சிறந்தவை, பல்லவர் கால வாழ்க்கை முறைகள், அரசியல் நிலைகள் போன்றவற்றைப் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகிய இரு புதினங்களும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. சிவகாமி என்ற கல்கியின் கற்பனைப் பாத்திரம் தமிழ் வாசகர்களின் உள்ளத்தே நிலைபெற்றுவிட்டதை அனைவரும் அறிவர். பிற்காலச் சோழர்களின் ஆட்சிமுறை, சமுதாய நிலை, மக்களின் தொழில்கள், பொழுது போக்குகள், அக்காலத்தே வழக்கிலிருந்த சோழ நாட்டுப் பெருவழிகள், போர்க்கருவிகள் போன்ற பல்வேறு வரலாற்றுச் செய்திகளின் சுரங்கமாகக் கல்கியின் பொன்னியின் செல்வன் அமைந்திருக்கக் காணலாம். இத்தகைய சிறப்புமிக்க வரலாற்றுப் புதினங்களை முதன் முதலாகத் தமிழில் படைத்து, வரலாற்றுப் புதினங்கள் என்னும் இலக்கிய வகைக்கு ஒரு கலங்கரை விளக்கமாகக் கல்கி விளங்கினார். இவர் பல சமுதாயப் புதினங்களையும் படைத்துள்ளார். இவரது ‘அலையோசை’ (1948–49) என்னும் சமுதாயப்புதினம் சாகித்தியக் கழகத்தின் பரிசைப் பெற்றது. காந்தியடிகளின் அரசியல், சமுதாயக் கொள்கைகளின் செல்வாக்கு, அக்கால விடுதலைப் போராட்டத்தில் தமிழ்ச் சமுதாயம் பங்கு கொண்டு தொண்டாற்றியது ஆகியவற்றை அலையோசை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது. ‘கள்வனின் காதலி’ (1937–38), ‘தியாகபூமி’ (1938–39), ‘மகுடபதி’ (1942), ‘சோலைமலை இளவரசி’ (1947), ‘பொய்ம்மான் கரடு’ (1950), ‘தேவகியின் கணவன்’ (1950), ‘அபலையின் கண்ணீர்’ (1947), ‘புன்னை வனத்துப்புலி’ (1952) முதலியவை இவருடைய பிற சமுதாயப் புதினங்கள். சமீன்தார் மகன், நாடகக் காரி, வீணை பவானி, கணையாழியின் கனவு முதலிய பல சிறுகதைகளையும் இவர் படைத்துள்ளார். இவர் நகைச்சுவை ததும்பப் பேசும் சிறந்த பேச்சாளருமாவார். இசை, நாடகம், நாட்டியம், ஓவியம், சிற்பம் ஆகிய பிற நுண்கலைகளிலும் ஈடுபாடுடையவராக இவர் விளங்கினார் என்பதை இவருடைய பல்வேறு கட்டுரை, நூல்கள் வழியாக அறியலாம். இவ்வாறு தேசியத் தொண்டு, பத்திரிகைத் தொண்டு, தமிழ்த் தொண்டு எனப் பலவாறு உழைத்துப் பெரும்புகழ் ஈட்டிய கல்கி 5.12.1954 அன்று காலமானார். {{Right|<b>அ.அ.ம.</b>}} {{larger|<b>கல்கி அவதாரம்:</b>}} காண்க: அவதாரங்கள். {{larger|<b>கல்கி:</b>}} இது உத்தரப்பிரதேச மாநிலத் தேராடூன் (Dehra Dun) மாவட்டத்தில் யமுனை ஆற்றங் கரையில் அமைந்துள்ள தொன்மையானரின் பாறைக் கல்வெட்டுகளுள் பழமையான கல்வெட்டு இங்குள்ளது. அது பிராமி எழுத்து வடிவில் எழுதப்பட்டது. அசோகரின் பாறைக் கல்வெட்டு இங்குக் கிடைத்திருப்பதன் மூலம் அசோகப் பேரரசின் ஆட்சிப் பரப்பை நாம் அறிய முடிகிறது. இப்பாறைக் கல்வெட்டு அசோகரின் கிர்னார்க் கல்வெட்டைப் போன்று ஒரு சிறிய பாறையின் மேல் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு எழுத்து அசோகனின் உரூப்நாத்து, சகசுரம் போன்ற கல்வெட்டுகளின் பிராமி எழுத்தமைப்பை ஒத்திருக்கிறது. மௌரியர்களின் காலத்தைச் சார்ந்த யானையின் உருவம் இங்குள்ள பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வுகளின் மூலம் மலை நாட்டு அரசன் சீலவர்மனின் அசுவமேத யாகசாலை கண்டுபிடிக்கப்பட்டது. எழுத்துகள் பொறிக்கப்பட்ட செங்கற்களுடன் இரண்டு யாக மேடைகள் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வகழாய்வுகள் கல்சிக்கு எதிர்கரையில் தம்சா ஆற்றின் கரையில் உள்ள சகத்திராம் என்ற இடத்தில் நடத்தப்பட்டன. இதன் மூலம் கல்சி என்னும் ஊர் முற்காலத்தில் யுக சைலம் எனக் கூறப்பட்டது என்பது தெரிய வந்தது. அகழாய்வுகளில் இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட அசுவமேத வேள்வி மேடைகளைப் போன்ற அமைப்புடைய மேடைகள் இந்தியாவில் வேறெங்கும் காணப்படவில்லை. இம்மேடைகள் மிகப் பழமையானவை. இவற்றில் உள்ள செங்கற்களில் இரண்டு வகை மெய்க்கீர்த்திகள் காணப்படுகின்றன. சீலவர்மன் என்னும் அரசன் மலைநாட்டின் குறுநில மன்னன்<noinclude></noinclude> tiyp5pjwg1a4ms8tw3axczpxcf1b76k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/696 250 640883 1925676 2026-04-20T08:17:46Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியல் விவகாரங்களில் தலையிட்டுத் தனது செல்வாக்கை விரிவுபடுத்த விழைந்தான். வேங்கி வேந்தனான முதலாம் அம்மா (Amma I) கி.பி. 926-இல் இறந்தபோது, அங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரா,நான்காம்|664|இந்திரா காந்தி}}</noinclude>அரசியல் விவகாரங்களில் தலையிட்டுத் தனது செல்வாக்கை விரிவுபடுத்த விழைந்தான். வேங்கி வேந்தனான முதலாம் அம்மா (Amma I) கி.பி. 926-இல் இறந்தபோது, அங்குக் குழப்பம் ஏற்பட்டது. தாடபனின் (Tadapa) மக்களான உயுத்தமல்லன் (Yudha-malla), இராச மார்த்தாண்டன், கந்திக விசயாதித்தியன் ஆகியோர் அரியணைப்போரில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்திரா இரண்டாம் உயுத்தமல்லனுக்கு ஆதரவளித்து அவனைக் கி.பி. 928-இல் வேங்கி அரியணையில் அமர்த்தி, வேங்கி நாடு முழுவதையும் தனது மேலதிகாரத்திற்கு உட்படுத்தினான். <b>மேலாண்மைமிகு மன்னன்:</b> வல்லடிப் போர்களின் மூலம் அண்டை அரசுகளை வென்று, இராட்டிரகூடரின் பெருமையையும் மேலாண்மையையும் உயர்த்தியதுடன் அரசின் எல்லைகளை விரிவுபடுத்தியவன் மூன்றாம் இந்திரா. இவ்வகையில், இவன் துருவன், மூன்றாம் கோவிந்தன் என்னும் இரு இராட்டிரகூட மாமன்னர்களுடன் ஒப்புமை கூறத்தக்கவன் ஆவான். <b>இலக்கிய வளர்ச்சி:</b> இவ்வேந்தனது ஆட்சிச் காலத்தில் இலக்கியம் வளர்ந்தது. இவனது காலத்துப் புலவரான திருவிக்கிரமபட்டர் என்பார் நளசம்பூ அல்லது தமயந்திகதா என்றும் காவியத்தை வடமொழியில் இயற்றினார். வடமொழியில் உள்ள சம்பூகதைகளுள் இதுவே காலத்தால் முந்தியது. ‘மடாலசா சம்பூ’ என்னும் காவியத்தையும் இப்புலவரே இயற்றியதாகக் கூறப்படுகிறது. <b>மதிப்பீடு:</b> படை வலிமை கொண்டு, இராட்டிரகூடரின் பேராதிக்கத்தைப் பரப்பிய பேராதிக்கவாதிகளுள் ஒருவனாகத் திகழ்ந்த மூன்றாம் இந்திரா, இராட்டிரகூடர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறான். <b>இந்திரா, நான்காம்:</b> மால்கெடு இராட்டிரகூட மரபின் கடைசி மன்னன் நான்காம் இந்திரா. இராட்டிரகூட அரசு மிக வேகமாக அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த சூழ்நிலையில், நான்காம் இந்திரா வேந்தன் ஆனான். மூன்றாம் கிருட்டிணன் (கி.பி. 939.966), கொட்டிகா (Khottiga) (கி.பி. 967-973), கர்க்கா (கி.பி. 972-973) ஆகியோரது ஆட்சிக்காலத்திலேயே இராட்டிரகூட அரசின் புகழ் மங்கிவிட்டது. இரண்டாம் கர்க்கா கி.பி. 973-இல் இரண்டாம் தைலப்பாவால் தோற்கடிக்கப்பட்டு. அரச பதவியையும் நாட்டையும் இழந்தான். தைலப்பாவோ இராட்டிரகூட அரசின் பெரும் பகுதிகளைச் கைப்பற்றிக் கொண்டான். இந்நிலையில் இந்திரா கங்க நாட்டில் அடைக்கலம் புகுந்தான். சங்க வேந்தனும் இராட்டிரக்கூடச் சிற்றரசனுமான நொளம்பாந்தக மாறசிம்மன் என்பான் தன் தங்கையின் மகனான நான்காம் இந்திராவை அரியணையில் அமர்த்தப் பெரும் முயற்சிகளை மேற் கொண்டான். இருப்பினும் இவனது எண்ணம் ஈடேறவில்லை. மாறசிம்மன் கி.பி. 975-இல் பங்கபுரா என்னுமிடத்தில் சல்லேகனை (வடக்கிருத்தல்) மேற்கொண்டு இறந்தான். தனது நாட்டை இழந்த துயரால் மனம் நொந்த நான்காம் இந்திரா உயிர்வாழ விரும்பவில்லை. எனவே, கி.பி. 982-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இருபதாம் நாள் சரவணபெலகோலாவிற்கு அருகில் சல்லேகளை மேற்கொண்டு உயிர்துறந்தான். மூன்றாம் கிருட்டிணனின் பேரனான நான்காம் இந்திரா காலமானவுடன் இராட்டிரகூட அரசும் அழிந்தது. தென்னிந்திய அரசியல் வரைபடத்திலிருந்து (Map) இராட்டிரகூட அரசு மறைந்தது. கல்யாணிச் சாளுக்கிய அரசு மறுமலர்ச்சி பெற்றது. <b>பொழுதுபோக்கு:</b> பெரும்பாலும் போலோ விளையாட்டினைப் போன்று, குதிரை மீதமர்ந்து விளையாடும் பந்தாட்டத்தில் நான்காம் இந்திரா பேரார்வம் கொண்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றறிஞர் சிலர் இரண்டாம் கர்க்காவையே இம்மரபின் இறுதி அரசனாகக் கருதுவர். {{float_right|ம.இரா}} <b>துணை நூல்கள்: Nilakanta Sastri, K.A.</b>, A History of South India, Oxford University Press, Madras, 1983. <b>Yazdani, G.</b>, The Early History of the Decan, Oriental Books Reprint Corporation, Delhi, 1982. <b>Majumdar, R.C.</b> & Others, An Advanced History of India, Macmillan, Madras, 1982. <b>இந்திரா காந்தி</b> சுதந்திர இந்தியாவின் மூன்றாம் தலைமை அமைச்சராயிருந்தவர். இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற அரசியல் பேரறிஞர். இவர் 1917-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் நாள் சவகர்லால் நேருவுக்கும் கமலாநேருவுக்கும் பிறந்தார். பள்ளிக் கல்வியைப் புனேயிலும் (Pune) பம்பாயிலும் பயின்ற இந்திரா காந்தி 1934-ஆம் ஆண்டு இரவீந்திரநாத தாகூரின் விசுவபாரதி பல்கலைக் கழக மாணவியானார். அங்கு ஆசிரியர் அனைவராலும் பாராட்டப்பெற்று மாணவர்களிடையே செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். பின்-<noinclude></noinclude> 2qv0sceqwptswqpezcq8p3aivswwnl3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/697 250 640884 1925678 2026-04-20T08:33:17Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னர் இங்கிலாந்து சென்று ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 697 |bSize = 450 |cWidth = 152 |cHeight = 119 |oTop = 44 |oLeft = 33 |Location = center |D..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரா காந்தி|665|இந்திரா காந்தி}}</noinclude>னர் இங்கிலாந்து சென்று ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 697 |bSize = 450 |cWidth = 152 |cHeight = 119 |oTop = 44 |oLeft = 33 |Location = center |Description = }} {{c|திருமதி இந்திரா காந்தி}} இந்திரா காந்தி 1938-ஆம் ஆண்டில் இந்திய தேசியக் காங்கிரசின் உறுப்பினரானார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவரான பெரோசு காந்தியை 1942-இல் மணந்தார். இவர்களுக்கு இராசீவ் காந்தி, சஞ்சய் காந்தி என்ற இரண்டு மக்கள் பிறந்தனர். இவர் 1942-இல் காந்தியடிகளால் கொண்டுவரப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானம் பற்றிய அகில இந்திய காங்கிரசுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டதால் கைது செய்யப்பட்டார். சுதந்திரமடைந்த பின்னர் இந்திரா பிரதமரின் வீட்டு நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்; சமுதாயப் பணியிலும் ஆர்வம் கொண்டிருந்தார்; இவர் 1955-ஆம் ஆண்டு காங்கிரசுச் செயற் குழுவின் உறுப்பினர் ஆனார். பீன்னர் 1958-இல் மத்திய பாராளுமன்றக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்; இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக 1959-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்; தேசியப் பணியில் பங்கு கொள்ள இளைஞர்களை ஊக்குவித்தார். நேரு 1964-இல் மறையவே இலால்பகதூர் சாத்திரி தலைமை அமைச்சரானார். அவரது அமைச்சரவையில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இந்திரா பணியாற்றினார். இக்காலத்தில் தான் இவர் முதல் முறையாகப் பன்னாட்டுத் திரைப்பட விழாவைத் தில்லியில் அமைத்து, நல்ல திரைப்படங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத் திரையிட்டுச் சிறந்த படங்களுக்குப் பரிசு அளிக்கும் முறையையும் புகுத்தினார். இந்தியாவில் தொலைக்காட்சியை முதன் முறையாக அறிமுகப்படுத்தியவர், இந்திரா காந்திதான். தமிழ்நாட்டில் 1965-இல் நடந்த இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் போது இந்திரா தமிழகத்திற்கு அனுப்பப்பட்டார். திறமையான பரிவு மிக்க இவர்தம் நடவடிக்கை மக்களில் கொதிப்பைத் தணித்தது; நிலைமையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்தியா மீது பாகிசுத்தான் 1965-இல் போர் தொடுத்தது. செய்தி ஒலிபரப்பு அமைச்சரான இந்திராகாந்தி இந்திய வீரர்களை ஊக்குவித்தார். இலால்பகதூர் சாத்திரி 1966 சனவரி 19-ஆம் நாள் மறைந்தார். இந்திரா காந்தி காங்கிரசுப் பாராளுமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1966 சனவரி 26-ஆம் நாள் இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கிரசு 1967 பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது. அப்பொழுது புரட்சிகரமான சமூகப் பொருளாதாரக் கொள்கைகளைச் செயற்படுத்தப் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். காங்கிரசுக் கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 1969-இல் காங்கிரசுக் கட்சி பிளவுற்றது. பெரும்பான்மைக் காங்கிரசு உறுப்பினர்களும் தலைவர்களும் இந்திரா காந்திக்குத் துணை நின்றனர். இவர் 1971-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுத் தமது கொள்கைக்கு மக்கள் அளித்த பேராதரவுடன் ஆட்சி அமைத்தார். அரசியல் சட்டத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிப்பதற்காக 1975 சூன் மாதத்தில் உள்நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். பின்னர் நடந்த பொதுத்தேர்தலில் (1977) காங்கிரசுக் கட்சி தோற்றது. சனதாக் கட்சி பதவியில் அமர்ந்தது. மொரார்சி தேசாய் இந்தியாவின் தலைமை அமைச்சரானார். சனதாக் கட்சியின் வீழ்ச்சிக்குப்பின் 1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவுடன் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். சமதிலைச் சமுதாயச் சிந்தனை அடிப்படையில்<noinclude> வா. க. 3-84</noinclude> k7s2ov0kn4amxpeepz15dwjwzbz0zp0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/698 250 640885 1925684 2026-04-20T08:54:01Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருளாதாரத் திட்டம் ஒன்றை இந்திராகாந்தி அறிவித்தார். வங்கிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்பது இதில் தலைசிறந்த கூறாகும். வரலாற்றுப் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரா காந்தி|666|இந்திரா காந்தி}}</noinclude>பொருளாதாரத் திட்டம் ஒன்றை இந்திராகாந்தி அறிவித்தார். வங்கிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்பது இதில் தலைசிறந்த கூறாகும். வரலாற்றுப் புகழ்பெற்ற மன்னர் மானிய ஒழிப்பு, சமநிலைச் சமுதாயக்கோட்பாட்டில் இந்திரா காந்திக்கிருந்த பிடிப்பை வெளிப்படுத்தியது. ஏழை மக்கள் வாழ்வு மலர இருபது அமிசத்திட்டம் ஒன்றை நடைமுறைக்குக் கொணர்ந்தார். இந்திரா காந்தி நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் ஒருபொழுதும் விட்டுக் கொடுத்ததில்லை. அரசியல் சட்டத்தில் மதச் சார்பற்ற குறிக்கோள்களை மிகவும் ஆதரித்தார். சாதிச் சண்டையை ஒழிக்க விடா முயற்சியுடன் அவர் போராடினார். ‘சீக்கியர்கள் உங்கள் மெய்க் காப்பாளராக இருக்கவேண்டா’ என்ற எச்சரிக்கைச் குறிப்புடன் வந்த கோப்பில், ‘நாம் சாதி சமய மொழி வேறுபாடுகளைக் கடந்து நிற்போம்’ என்று குறிப்பு எழுதித் திருப்பி அனுப்பினார். பன்னாட்டுப் பொருளாதாரச் சூழ்நிலையில் பாரத நாட்டின் வளத்தினை அடிப்படையாகக் கொண்டு, பாரதப் பொருளாதாரம் உறுதித் தன்மையையும் வலுவையும் பெற இந்திரா காந்தி உழைத்தார். மிகக் கடுமையான உலகு தழுவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து பாரதம் மீண்டுவர, இவரது தலைமை இந்தியருக்கு உதவியது. இந்திய மக்களின் தன்னிறைவு முயற்சிக்கு அடிப்படை ஏற்படுத்தியவரும் இவரே. சிறந்த முன்னேற்றத்திற்கான திட்டங்களை ஏற்படுத்தியவரும் இவரே. பாரதத்தின் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு இந்திரா காந்தி பெரிதும் காரணமாவார். பன்னாட்டுத் தலைவர்களுள் சுற்றுப்புறச் சூழ்நிலையின் இன்றியமையாமையை உணர்ந்தவர் இந்திரா காந்தி. இந்திய நாட்டின் பண்பாட்டிலும் தொன்மையிலும் பெருமிதம் கொண்டவர் இவர். இவர் சங்கீத நாடகக் கழகத்தின் தலைவராக 1965 முதல் 1974 வரை இருந்தார். தட்சிண பாரத இந்தி பிரசார சபையின் தலைவர் என்ற முறையில் அதன் வேலைகளை ஊக்குவித்தார். தமது ஆழ்ந்த நுண்ணறிவு காரணமாகப் பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்கலைக் கழகங்களும் அறிவியல் கழகங்கம் இவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்தின. பிரெஞ்சு நிறுவனம் ஒன்று 1967, 1968-ஆம் ஆண்டுகளில் நடத்திய வாக்கெடுப்பினால் உலக ம்க்களால் மிகவும் விரும்பத்தக்க பெண்மணி இந்திராகாந்தியே என்ற முடிவிற்கு வந்தது. அமெரிக்கா 1971-இல் எடுத்த சிறப்புக் கணக்கெடுப்பிலும் இந்திராவே உலகின் விரும்பத்தக்க பெண்மணியாக அறிவிக்கப்பட்டார். இந்திரா 1953-இல் அமெரிக்க மாதர் பரிசும், 1960-இல் ஏல் பல்கலைக் கழகத்தின் ஆலந்து நினைவுப் பரிசும், அரசியற் செயல்களில் சிறந்திருத்தமைக்காக 1965-இல் இத்தாலியின் ‘இசபெல்லா டி எசுடேயின்’ பரிசும் பெற்றார்; குடும்பக் கட்டுப்பாட்டுத் துறையில் சிறந்த தொண்டு புரித்ததற்காக, 1983-இல் ஐ.நா.வின் மக்கள்தொகைப் பரிசு வழங்கப்பட்டது. எல்லா வளங்களிலும் மனிதவளம் மதிப்பு மிகுந்தது என்பதை உணர்ந்த இந்திரா காந்தி ஊனமுற்றோர்க்கு உறுதுணையாக இருத்தார்; அவர்களின் நலனுக்காகப் பல திட்டங்களைத் தொடங்கினார்; தொழு தோய் மருத்துவத்திற்காக நாடு தழுவிய இயக்கத்தை மேற்கொண்டார்; ஊனமுற்றோருக்கு நம்பிக்கை ஒளியைக் காட்டியவர் இந்திரா காந்தி. பழங்குடியினர், பின் தங்கியோர் நலனிற்காகப்பல திட்டங்களை இவர் தொடங்கினார். இவை பொருளாதார, சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகத் கொண்டவை. பெண்களின் உரிமை பற்றி வலியுறுத்திப் ‘பெண்கல்வி’யின் இன்றியமையாத் தன்மையை உணர்த்தினார். இவ்வாறு இந்திய மக்களின் உணர்வுகளை இவர் எழுப்பினார். இமயமலையை நேசித்துத் தன்னை மலைமகள் எனக் கூறிக் கொண்ட இந்திரா, மலைவாழ் மக்களின் சேம்பாட்டுக்கெனச் சிறப்புத் திட்டங்களையும் உருவாக்கினார். விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களுக்கு உறுதியான உதவிகளை அளித்தார். இளைஞர்கள் இந்நாட்டின் முதுகெலும்புகள் நாட்டின் வளமை அவர்களின் வலிமையில் தான் இருக்கிறது. நாடு புதிய மறுமலர்ச்சியின் கட்டத்தில் இருக்கிறது, என்ற இவர், புதிய இந்தியாவை உருவாக்கும் இளைஞர்கள் பால் அசைக்க இயலாத நம்பிக்கை கொண்டிருந்தார். பாரத இளைஞர்கள் விளையாட்டுகளில் சிறந்து விளங்கவேண்டும் என்று விரும்பினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளைப் பாரதத்தில் நடத்திய இவர், தில்லிக்குப் புதிய விளையாட்டரங்கங்களையும் ஏனைய வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தார். விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்குப் பாடுபட்டதற்காக 1983-இல் உலக ஒலிம்பிக்குழு தங்கப் பரிசு ஒன்றினை இவருக்கு வழங்கியது. நாட்டுப் பாதுகாப்பின் இன்றியமையாமையை அறிந்தவர் இவர். இந்திய இராணுவம் புதுமைப் படுத்தப்பட்டது; பாதுகாப்புத் துறை தன்னிறைவு பெற உற்பத்தி முயற்சிகளை இவர் ஊக்குவித்தார். இதன்பயனால் நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்-<noinclude></noinclude> gop1hj220mjl8yz5x6qcs91en19lyrz பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/36 250 640886 1925686 2026-04-20T09:01:48Z Magizh Sundram 16422 OCR 1925686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>33 Run off .. வடி நீர் Rural .. ஊரகம் Rust .. துரு Rut Safe bearing capacity Safe bearing load Safety fence: Safety zone Sag Sampler soil Sampling Sand fraction Sand paper surface Sand stone Saturated soi] Saturation, degree of Saturation gradient Scorifier Schist Seour Scoop Seraper Sereed Sereenings Serew Seulpture Sea breach Sea coast Seal coat Sealing Sealing coat Scaling compound Sealing material-joint ... சா ... டாதுகாப்புத் திறன் ; தாங்குகித பாதுகாப்பான தாக்கும் பளு காப்பு வேலி காப்புப் பகுதி தோய்வு மாதிரி மண் மாதிரி எடுத்தல் மணல் பங்கு உப்புத்தான் தளம் மணற் கல் நிறை ஈர மண் நிறை தீர் அளவு நிறை நீர் வற்றம் இறு கருவி படிவம். மண் அரிப்பு நடைத்தெடு; தோண்டு சுரண்டு கருவி சமம் செய் பாத்தி சளிக்கப்பட்ட துகள்கள் திருகு; திருகாணி சிற்பம் ... கடல் அரிப்பு கடற்கரை ... மூடுப்பூச்சு ... அடைத்தல் மேல் பூச்சு; மூடுப் பூச்சு மூடுபொருள் ; மூடும் பூச்சுப் பொருள் இணைப்பு மூடு டொருள்<noinclude></noinclude> hl40wsj556blqfiraqx70gfnstmupz0 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/37 250 640887 1925687 2026-04-20T09:02:16Z Magizh Sundram 16422 OCR 1925687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Sea mark Section section, cross Section longitudinal Sections *** Sector Sedimentation- test" ... Seepage Segmental areh Segregate Seismic Semi-circular arch Semi grout Separate Service Road Set Settlement >ewer Sewerage Sextant Shallow Shape .. ... ... ... 34 கலங்கரை விளக்கம் வெட்டுமுகம் பகுதி, பிரிவு குறுக்கு வெட்டு நீன வெட்டு வெட்டுமாஸங்கள் ; வெட்டுப் பகுச் வட்டப் பகுதி, பருதி படியுலைக்கும் சோதனை கயவு கூறாக்கமுடைய வனைவு தனிப்படுத்து; பிரித்து வை (நில) அதிர்லீன் ஆற்றல் அரை வட்ட வளைவு பனகிச் சந்தடைப்பு தனி உட் பணிச்சாலை இறுகுதல்; பொருத்துதல் படிதல் சாக்ககூட கழிவு வாயக்காங் குறுங்கோண அளவி ஆழமற்ற ... வரவம் Shaping Shear குவத்தல் சறுக்குப் பெயர்ச்சி பலமுனை உருளை இடம் பெயர்; அப்புறப்படுத்து Sheep foot roller .... Sheet piles ... புகை நாடு Shift Shingle Shoring Shoulder (Road): Shrinkage Joint Shrinkage limit ... ... கூழாங்கல் பக்கப் பலகை அமைத்தல் சாஸை ஓரம் சுருங்கிணைப்பு சுருக்கு வாப்பு<noinclude></noinclude> stqx5ok454a4atoztk5r0ydv75ja0rk பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/38 250 640888 1925688 2026-04-20T09:03:25Z Magizh Sundram 16422 OCR 1925688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Shrinkage linit lineal Shrinkage ratin Shi.ttering Shuttle traffic Side cut Side drain .. .. 35 நீளவாட்ட சுருங்கு வரம்! சுருங்கு வீதம் அடைத்தல் குறுந்தூரப் போக்குவரத்த பக்க வெட்டு பக்க வடிசால் பகசு அடைப்பு .. பக்கச் சரிவு பக்கவாட்டு அழுத்த ஆற்றல் எண் சல்லடை Side forms Side slope Sideway force co-efficient .. Sieve Sieve analysis Sight .. Sight distance .. .. பார்வை அளவுச்சட்டம் Sight rail Signal .. .. .. Sign post Sill .. Sill stone Silt Silt fraction Single coat Single size material Sink Site Skew .. .. .. .. .. .. .. Site investigation Skew_back Skew bridge Skidding Skidding distance Sky light .. .. Slab Slab bridge 73-3-6 .. .. சலித்து ஆராய்தல் பார்வை பார்வைத் தூரம் அடையாளக் குறி வழிகாட்டி அடிமட்டம் தளமட்டக் கல் வண்டல் வண்டல் அளவு ஒற்றைப் பூச்சு ஓரளவு கப்பி மூழ்குதல் இடம்: களம்; வேலை செய்யுமிடம் L ஆய்வு சாய் வளைவு சாய்வு தாங்கி சாய்வுப் பாலம்; சாய்வு குறுக்குப் பாலம் சறுக்குதல் சறுக்கும் தூரம் மேல்தளச் சாளரம் பலகை ; தளப் பலகை; பலகைக் கல் பலகைத் தளப்பாலம்<noinclude></noinclude> s8yx8b0az24eo1iyqlx3c1wpfxhr5y9 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/39 250 640889 1925689 2026-04-20T09:03:46Z Magizh Sundram 16422 OCR 1925689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Slant Slikle Sliding beoring Slip Slit Slope Slow crring bitumen Slice Slemp Slump test Soaking pit Soffit level Softening point Soil analysis Scil chart Sciling stone Scil Mechanic Scil moisture content Scil mortar Scil stabilisation .. .. . .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. Soil water capacity .. Soil water copillar Scil water hygroscopic Solution Solvent Soundness Source Space: Spacing Spall Spall drain Span Spandral .. " .. .. .. .. .. .. 36 சரிவான, சாய்வு வழுக்கு நகரும் தாங்கி நழுவுதல் சிறு பிளவு சாய்வு மெல்ல இருகும் நிலக்கீல். மதகு இறுக்கம்: தாழ்வு இறுக்கச் சோதனை ஊறவைக்கும் குழி வளைவடி செதுக்கு மட்டம் இளகு பதம் மண் பகுப்பாய்வு மண்வகை விளக்கப்படம் குண்டுக்கல்; அடித்தளம் மண்ணியல் மண்ணின் ஈர அளவு மண் குழைக்கும் சாதனம் மண்ணை வலுப்படுத்துதல் மண் ஈரக் கொள்ளளவு ஊடுருவி மண் ஈரம் தண்ணீரை ஏற்கும் மண் ஈரம் கரைசல் கரைநீர் நிறைநலத்தன்மை மூலம்; ஆதாரம் இடம்; இடைவெளி இடைவெளி சக்கைக் கல், உடைந்த கல் உடைகல் வடிகால் கண் அகலம்; உட்கூடு கண் வளைவின் உட்புறம் இடைவெளி வளைவு குறிப்பிட்ட பகுதி (தனிப் பரப்பு) Specific area Specific gravity .. .. அடர்த்தி எண்<noinclude></noinclude> 0k8cyfahv5wivxjlivx4rx3b9j1m40n பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/40 250 640890 1925690 2026-04-20T09:04:30Z Magizh Sundram 16422 OCR 1925690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Spectrum Speedometer Spillway Splash wate Splay Splicing Splitting Spoil Spoil bank Spot level Spray bar Sprayer .. .. .. .. ... .. .. .. .. .. ... .. 37 ஒளிக்கதிர் வண்ணப்பட்டை வேக அளவுமானி வெள்ளக்கால் நீர் சிதறல் பிரிவு புரி இணைவு பிளத்தல்; பிரித்தல் வெட்டுமண் வெட்டுமண் திட்டு தலமட்டம் தெளிப்புக் குழாய் தெளிப்பான்; தெளிக்கும் கருவி பரப்பு பரப்பும் கருவி பரப்பிய சுற்கலஈவ விரிப்பு பரவு வேகம் Spread Spreader .. Spreader concrete Spreading Spread rate of ... .. Springing .. எழுமிடம் Springing line Sprinkle .. தெளி Spur .. Staggered junction .. Staircase .. Stancheon .. State Highway .. Stepping .. Stiffener ... Stone .. Stone block .. Stone block paving .. Stone drain Stone set, paving Stopping distance Stop watch Storage .. .. .. .. .. விளிம்பு முனை; கூர்முனை; குத்தூசி ஒழுங்கற்ற சந்திப்பு. மாடிப்படி ஆதாரச் சட்டம்; உளதகால் மாநில நெடுஞ்சாலை படி அமைத்தல் இறுக்கி சல் கல்கட்டி கல் பதி தளம் கல் பாளிய வடிகால் சுற்பாவு தளம் நிறுத்தும் தூரம். நிறுத்தமைவு சுடிகார சேமிக்குமிடம்<noinclude></noinclude> b0c1jbflw62fllr27vuko46cp4585ll பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/41 250 640891 1925691 2026-04-20T09:04:49Z Magizh Sundram 16422 OCR 1925691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Storm water Storm water drain Stream Street S:re one-way Strect, Private Street trace Sub-divisicn Subgrade Subgrade drain Submersible bridge Submersion .. .. .. .. .. .. .. 38 மழை நீர் மழை நீர் வடிகால் நீர் ஓடை விதி ஒரு வழி வீதி தனியார் வீதி வீதி அடையாளம் உட்கோட்டம்; உட்பிரிவு அடி நிலம்: அடி மண் தளம் அடித்தள வடிகால் மூழ்கு பாலம் மூழ்குதல் தணிதல், வடிதல் Subsidence .. Subsidiery 1ond Subsoil .. துணைச் சாலை .. Subsoil drain .. Subsoil water .. Substructure Subway Summit Summit curve design Sump Sunshade Superelevation Superstructure Supplemental agreement Supplemental item Surcharge Surcharge, angle of Surface Surface non-skid Surface tension Surfacing .. .. .. .. .. .. .. .. .. .. அடிமண் நிலத்தடி நீர்வடிகால் நிலத்தடி நீர் அடிக் கட்டுமானம்; அடிக் கட்ட டம் சுரங்கப் பாதை உச்சம்; வளைவு கோட்டின் உச்சி வளைவுகளின் வடி முகட்டு வமைப்பு தேக்கத் தொட்டி. சாரக் கூரை மிகை வாட்டம் மேற் கட்டுமானம்; மேல் சுட்ட டம் துணை ஒப்பந்தம் துணை இனம் மேற்சுமை மேற்சுமைக் கோணம் பரப்பு சறுக்காத மேற்பரப்பு மேற்பரப்பு இழுவிசை Cமற்பரப்பு அமைத்தல்<noinclude></noinclude> cssypmkelq2fkxe9yypr6vqar5rni2j பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/42 250 640892 1925692 2026-04-20T09:05:10Z Magizh Sundram 16422 OCR 1925692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Surface, sand papor Surround Survey soil Suspension bridge Sweating Symmetry Syphon System .. .. .. .. Tableau Teble, water Tabular .. "T" Beam Bridge .. Tack the .. .. Tamper Tack coat Tandam roller Tangent Tangent angle Tangent distance Tangent point .. .. .. .. 39 சொரசொரப்பான மேற்பரப்பு சுற்றிலும் மண்ணாய்வு தொங்கு பாலம் நீர் துளித்தல்; வியர்த்தல் சம அமைப்பு; செவ்வொழுங்கு தூம்பு குழாய் அமைப்பு T ஒப்பனைக்காட்சி ஊர்தி நிலத்தடி நீர் மட்டம் அட்டவணை செய்த "T" வடிவ உத்திரப் பாலம் இடைப்பூச்சு அடிப் பூச்சு: ஓட்டுப் பூச்சு குத்துக்கட்டை இரட்டைச் சம உருளை தொடுகோடு தொடுகோணம் தொடு தூரம் தொடு புள்ளி தொட்டி அழுத்தம் கூம்பு கீல் நிலக்கீல் கப்பித்தளம் Tank pressure Taper Tar .. Tar concrete surfacing .. Target .. இலக்கு Tarpaulin Technology Tee beam Telescope Template .. .. .. .. .. .. Temporary diversion .. Tender Tensile strength Terrace 73-3-7 .. தார்ப்பாய் தொழில் நுட்பலியல் "டி" உருவ விட்டம் தொலை நோக்கி உருவ அச்சு தற்காலிக மாற்று வழி ஒப்பந்தப் புள்ளி இழுவிசை வலிமை மேல் தளம்<noinclude></noinclude> 93sqjiiwgel6uy6ini6825wzrnt1aun பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/43 250 640893 1925693 2026-04-20T09:05:29Z Magizh Sundram 16422 OCR 1925693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Terracota Terrain Texture Thatch Theodolite Thermometer Thin surfacing Through b;idge Thrust Borer Tile Tilting Timber Tinker Toe Toe wall Top coat Topography Top soil Toval active earth pressure Total Grade Toial passive eanth pressure Toughness index of road stone .. .. .. .. .. .. .. .. .. .. .. ... .40 சுட்ட மண் நிலப் பகுதி ழை நயம் ஓலைக் கூரை கோண அளவுமானி வெப்பமானி மெல்லிய தளம் ஊடு பாலம் அழுந்து துளைக்கருவி ஓடு கவிழ் கற்கலவை இயந்திரம் மரம் தகர வேலை முனை; கீழ் முனை அடிமுனைச் சுவர் .. .. மேல்படிவு .. .. .. .. .. .. நிலப்பாகுபாடு மேல்மண் மொத்த மேல்மண் செயற்பாடு அழுத்தம் மொத்தச் சரிவு மொத்த எதிர்க்கும் அழுத்தம் சாலைக் கல்லின் உறுதிக் குணகம் இழுவைப் பாதை தடயம்; சுவடு வரைபட நகல் எடுத்தல் இழுவை Tow path Trace] .. Tracing! .. Track y .. தடம் Tractor .. Traffic capacity Traffic circle :: Traffic concentration .. Traffic! Traffic congestion Traffic lane .. : : போக்குவரவு போக்குவரத்துக் கொள்ளளவு போக்குவரவு வட்டம்; ஊர்தி சுற்று வட்டம் [ஊர்திச்செறிவு; ஊர்தி அடர்த்தி போக்குவரவு நெருக்கம் ஊர்தித் தடம்<noinclude></noinclude> 9rhvvn9yny99pxe3tb3tgguo6ug406y பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/44 250 640894 1925694 2026-04-20T09:05:49Z Magizh Sundram 16422 OCR 1925694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Traffic siga Traffic signal Traffic volume Trial pit 41 போக்குவரவு இயக்கக் :: Transitional curve .. Transition curve Transition distribution .. Transition length Translucent Transparent Transport Transverse Transverse slope Traverse .. Treatment surface .. Trestle Trial hole .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. : : : .. .. .. .. .. .. போக்குவரவு இயக்கக் குறி போக்குவரவு அளவு பரிசோதனைக் குழி இயல்பு மாறும் வளைகோடு மாறும் இயல்பு வளைவு மாறும் இயல்புப் பகிர்வு மாறும் இயல்புத் தூரம் குறையொளி பாயும் ஒளியூடுருவும் போக்குவரத்து குறுக்கான குறுக்குச் சாய்வு; குறுக்கு வெட்டுச் சாய்வு குறுக்கு ஊடுவழி தளக் காப்பு சாரக் கால் சோதனைத் துளை திரிகோணக் கணிதம் விளிம்பு ஒழுங்கு செய்தல் சிறு பயணம் தொட்டி பார ஊர்தி ஊதுகொம்பு வடிவுத் தாவு பாலம் பெரு வழி உத்தரத் தொகுதி பாலத்தின் உத்தரத் தொகுதி குகைப்பாதை; குகை விசைப்பொறி உருளை புற்கரண் பரப்புதல் திருப்பு முனை திரும்பு ஆரம் குறுமத் திரும்பு ஆரம் பணியளவு Trigonometry Trimming Trip Troughs Truck .. Trumpet typo flyover .. Trunk Road Truss Truss of bridge Tunnel Turbine Turfing Turning point Turning radius Turning radius, minimum Turnover<noinclude></noinclude> 4zc4rreykd50yb4ozxmu005wl4www5f பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/45 250 640895 1925695 2026-04-20T09:06:13Z Magizh Sundram 16422 OCR 1925695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Two coat Type design Typical cross section Ultimate 'U' abutment Under bridgc Underground structure Underground water Underpasses Under valuation .. .. .. .. .. .. .. Undisturbed sample .. Unearth .. Unicellular .. Unified soil classification .. system .. Uniform .. Uniformity coefficient .. Uniformly graded Unilateral Uni-directional Unit Unit gradation Unit weight Unlimited Unprotected corners Upland Uplitt Upstream Urban Use of sound signals prohi- bited .. .. .. .. .. .. .. ... .. .. .. இரட்டைப் பூச்சு மாதிரியமைப்பு மாதிரி குறுக்கு வெட்டுத் தூரம் U 'U' வடிவத் தாங்கும் சுவர் இறுதியான கீழ்ப்பாலம்; அடிப்பாலம் நிலவறைக் கட்டடங்கள் நிலத்தடி நீர் அடிநில வழிகள்; நிலவறை வழிகள் குறைவான மதிப்பீடு கலைக்கப்படாத மாதிரி; அலுங்காத மாதிரி வெட்டி எடு; தோண்டி எடு ஒரு கண்ணறை ஒருங்கிணைக்கப்பட்ட மண் வகைப்படுத்தும் முறை ஒரே சீரான சீர்மைக்கெழு சீரான தரநிலை செய்யப்பட்ட ஒரு சார்பான ஒரு திசையினதாக அலகு மூலப்படியான அளவு எடை அலகு அளவற்ற பாதுகாக்கப்படாத மூலைகள் மேட்டு நிலம் மேல்நோக்கு எழுச்சி எதிரோட்டம் நகரக ஒலி எழுப்புவதைத் தடுக்கும்<noinclude></noinclude> lath193aq3dgmgkb6aq3sbyxed3cdt8 பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/46 250 640896 1925696 2026-04-20T09:06:35Z Magizh Sundram 16422 OCR 1925696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Vacuum Valency Valley Valley curve design Valley (sag) curve Value Vapour Vapour pressure Variation Varaish .. .. 43 V வெற்றிடம் இணைத்திறன் பள்ளத்தாக்கு .. .. முகட்டு வளைவுகளின் வடி .. .. .. .. .. .. வமைப்பு வளைகோட்டின் தாழ்ந்த பாகம் தடுக்கிதழ் ஆவி ஆவியின் அழுத்தம் வேறுபாடு மெருகு எண்ணெய் மாறுபடும் நிலைமைத் திருப்புத் திறன் செடிவகை; செடி இனம் ஊர்தி விரைவு அளவு Varying moment of Inertia .. Vegotation .. Vehicle .. Velocity Vent .. செல்வழி; போக்குவழி Ventway .. கண்வாய் Venue Verendah .. .. Verge Vertex .. .. Vertical, .. Vertical aligumart Vertical component Vertic:1 carve Vertical sand drain .. .. Viaduct Vibratou .. Vibrator roller .. Vicinity .. Village Road ... visibility Visual examination .. நிகழ்விடம் தாழ்வாரம் அருகு; விளிம்பு; எல்லை கோண உச்சி செங்குத்து செங்குத்து நேர்பாடு செங்குத்துக் கூறு செங்குத்து வளைவு செங்குத்து மணல் வடிகால் கடவுப் பாலம் குலுக்கி அதிர்வு உருளை சமீபம்; சுற்றுப்புறம் ஊர்ச்சாலை காட்சி நிலை காட்சிப் பரிசோதனை<noinclude></noinclude> 0h1mqhat3pyhgjkaoggii1klnmz6lhx பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/47 250 640897 1925697 2026-04-20T09:06:52Z Magizh Sundram 16422 OCR 1925697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Vitrified brick pavement works. Void Volatile Volumenometer Volumetric change Voussoir Vulcanise Wagon (Railway) Waiting Bay Warning sign Waste weir Waterbound Maoadam .. .. .. .. : : : ; : : : .. 44 பளிங்காக்கப்பட்ட செங்கல் தளமிடுதல் காலியிடம்;சந்து; வெற்றிடம் எளிதில் ஆவியாகின்ற பருமனறிமானி கன அளவு மாறுபாடு வளைவுச் செருகு கல்; கூறு க ரப்பர் பற்றவைப்ப W இருப்பூர்திச் காத்திருக்கும் சரக்குப் பெட்டி பாத்தி எச்சரிக்கைக் குறி கழிவுக் கலிங்கு நீர்விட்டு உறுதியாக்கிய மெக்காடம் சாலை நீர் சிமிட்டி விகிதம்; காரை; நீர் விகிதம் நீர் அடக்க அளவு Water cement ratio .. Water content .. Water cushion .. நீர் அழுத்தத் தாங்கி Water film .. நீர்த் திரை Water gas tar .. நீர் வாயுக்கீல் Water gradient .. நீர்ச் சரிவு வீதம் Water mark .. நீர் மட்டக் குறி Water proof .. நீர் புகாமை Water proofing agent Water retaining agent Water supply .. நீர் புகாக் காப்புப் பொருள் .. .. Water table Water way Wear Wearing coat Wearing surface Wearing Course Weathering Weaving area .. .. .. ... நீர் வெளியிடாப் பொருள் நீர் வழங்கல் ஊற்று மட்டம் நீர் வழி தேய்மானம் தேய்தளம் கட்டுமான முகட்டுச் சாய்தளம் தேய்தளம் வானிலைப் பதம் .. .. வளைவு வீச்சுப் பகுதி<noinclude></noinclude> kblo7a5gdypts5xmf67ww85va9iwuks பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/48 250 640898 1925698 2026-04-20T09:07:26Z Magizh Sundram 16422 OCR 1925698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Weaving distance Weaving length Weep hole Weigh batcher Weight limit sign Weir Well graded Well sinking Wetted perimeter Wetting and dry test Wheel barrow .. .. .. .. .. .. .. .. Wheel guard .. Winch - Wind rowed soil Wood Block .. Wood block paving .. Wood paving? .. Wood tar! .. Workability Wrought iron Xvstus Yard stick Year_book Yield! Yield on concrete இ Yield Point .. இ .. .. - 45 வளைவு வீச்சு தூரம் வளைவு வீச்சு நீளம் நீர்கசிவுத் துளை எடைக்கலவை இயந்திரம் கலவைத் தொகுதி எடை யளவு எடை வரம்புக் குறி கலிங்கல் சிற்றணை சிறந்த தர நிலை கிணறு இறக்குதல் ஈரப்பரிதி ஈரப்படுத்தி உலர்த்தும் சோதனை சிறு கைவண்டி சக்கரத் தடுப்பு ஏற்றப் பொறி காற்றாட விடப்பட்ட மண் மரத்தளம்; மரத்துண்டு கட்டை பாவுத் தளம் மரத்தளம் மரக் கீல் பணி செய்வதற்கேற்ற பதம் தேனிரும்பு தோட்ட உலாப்பாதை Y அளவு கோல் ஆண்டுத் தகவல் வெளியீடு நெக்குவிடு1 வளை; இளகு இசைந்து கொடு கற்கலவையின் இளகுதன்மை நெக்குவிடு நிலை<noinclude></noinclude> shc32sy4w1t9oifk01fdlwxw5nzapkf பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/49 250 640899 1925699 2026-04-20T09:07:59Z Magizh Sundram 16422 OCR 1925699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Zenith Zig zag Zine Zone 46 - உச்சம்; முகடு வளைந்து; வளைந்து செல்லும் துத்தநாகம் மண்டலம்<noinclude></noinclude> qcyp2lpctlhzmq5pz2vpueet8r6t9qk பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி நெடுஞ்சாலைத்துறை.pdf/50 250 640900 1925700 2026-04-20T09:11:06Z Magizh Sundram 16422 OCR 1925700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அரசினர் அச்சகம், சென்னை -600 078.<noinclude></noinclude> lmmohn5cnz3a3cgwqvhy8uyfrybycv1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/699 250 640901 1925701 2026-04-20T09:12:19Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாற்றும் முழுத் திறமையையும் இந்திய இராணுவம் இப்போது பெற்றுள்ளது. போர் வீரர்களின் நலன் போற்றப்பட்டது. படை வீரர்களின் தேவைகளை நுணுகி ஆர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரா காந்தி|667|இந்திராகாந்தி .... பல்கலைக் கழகம்}}</noinclude>பாற்றும் முழுத் திறமையையும் இந்திய இராணுவம் இப்போது பெற்றுள்ளது. போர் வீரர்களின் நலன் போற்றப்பட்டது. படை வீரர்களின் தேவைகளை நுணுகி ஆராய்ந்து அவர்களின் வேலைவாய்ப்புகளை அரசு மேம்படுத்தியது. இந்திராவின் தலைமையின் கீழ்ப் பாரத இராணுவம் 1971-இல் அரிய செயலைச் செய்து முடித்தது. ஆயிரம் ஆண்டு போர்தொடுப்போம் என்று வீரம் பேசிய பாகிசுத்தான் பாயிரம் எழுதுமுன்னே இந்திய வெற்றிக்காவியத்தை இவர் இராணுவத்தின் துணை கொண்டு எழுதி முடித்தார். வங்கதேச விடுதலைக்காக இவர் காட்டிய அரசியல் சாணக்கியமும் வீரமும் உலகினர் மறக்க முடியாதவை. அமைதியை வலியுறுத்திய உலகத் தலைவர்களுள் ஒருவர் இவர். இவர் இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கவேண்டும் என்று விரும்பினார். ஐ.நா.வின் கொள்கைகளுக்கும் இலட்சியங்களுக்கும் தம்மை உரிமைப்படுத்தினார். சார்பு நாடுகளின் விடுதலைக்கு ஆதரவு கொடுத்த இவர் சுரண்டலை எதிர்த்தார். அணிசேரா இயக்க நாடுகளின் தலைவராக இவர் 1983 மார்ச்சில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நெஞ்சில் உறுதியையும் நேர்மைத் திறத்தையும் கொண்டு எதிர் வரும் அச்சங்களையும் அறை கூவலையும் எதிர்த்த இவர் வன்முறைகளை ஒழித்தார். கோழைத்தனத்தை வெறுத்த வீராங்கனையாக விளங்கிய இவருக்கு 1972-இல் ‘பாரதரத்தினா’ விருது அளிக்கப்பட்டது. இந்தியாவை நேசித்த இந்திரா பிரியதர்சினி நாட்டின் குறிக்கோள்களுக்காவும் உலக சமுதாய அமைதிக்காகவும் தன்னை உரிமைப்படுத்திக் கொண்டார்; இந்தியாவின் இயற்கை எழில்களை நேசித்துப் பாரதப் பண்பாட்டுக் கலைகளைப் போற்றி, இந்நாட்டு மெய்யுணர்வாளர்களை மதித்தார். பஞ்சாபு மாநிலத்தைச் சார்ந்த தீவிரவாதிகள் தனி நாடு கேட்டுக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்திய ஒருமைப்பாட்டில் அசையாத தம்பிக்கை கொண்டிருந்த இந்திரா காந்தி அதை ஏற்க மறுத்தார். தீவிரவாதிகள் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் புகுந்துகொண்டு சொல்லொணா இன்னலை விளைவித்தனர். அதனைத் தவிர்க்க இந்திரா காந்தி 1983-ஆம் ஆண்டு சூன் மாதம் 6-ஆம் நாள் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார். இராணுவம் பொற்கோயிலினுள் நுழைந்தது. தீவிரவாதிகளின் தலைவரான பிந்தரன்வாலே உட்படர் பலர் கொல்லப்பட்டனர். இதனைப்பொறுக்காத இவர்தம் சீக்கியப் பாதுகாவலர்கள் இருவரால் 1984 அக்டோபர் 31-ஆம் நாள் சுடப்பட்டு மறைந்தார். {{float_right|இரா.இரா.}} <b>இந்திராகாந்தி தேசிய கலை மையம்:</b> மறைந்த இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவாக அவரது 68-ஆம் பிறந்த நாளில் (நவம்பர் 19, 1985), புதுதில்லியில் டாக்டர் இரா சேந்திரப்பிரசாத்துச் சாலையருகே ஏறத்தாழ 21.9 ஏக்கர் பரப்பளவில் இந்திராகாந்தி தேசிய கலை மையம் (Indira Gandhi National Centre for Arts) அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளுக்குள் இது முழுமையாக உருவாகி விடும். இம்மையத்திற்கான அடிக்கல்லைப் பிரதமர் இராசீவ் காந்தி நாட்டினார். தொலைதூர ஊர்ப்புறங்களிலும் மலைப்புறங்களிலுமுள்ள திறமைமிக்க கலைஞர்களையும் அவர் தம் கலைகளையும் ஊக்குவிக்கும் வகையில் இம்மையம் செயற்படும். உலகில் இதுவரை எங்குமே இல்லாத தனித் தன்மையுடைய சட்டடம் ஒன்று இம்மையத்திற்காகக் கட்டப்படவுள்ளது. இம்மையத்தில் இந்திராகாந்தியின் பெயரிலேயே கலாநிதி (Kalanidhi), கலா கோசம் (Kala Kosa), ஞானபத சம்பதம் (Jnatpada Sampada), கலா தரிசனம் (Kala Darshan) ஆகிய பிரிவுகள் அமையும். <b>இந்திரா காந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகம்</b> தெற்குத் தில்லியில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள கார்கித் திடலில் (Maidan Garhi) அமைந்துள்ளது; மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக அவரது 68-ஆம் பிறந்த நாளில் (நவம்பர் 19,1985) தொடங்கப் பெற்றது. இப்பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல்லைப் பிரதமர் இராசீவ் காந்தி நாட்டினார். இப்பல்கலைக்கழகத்திற்கான கட்டட வேலைகள் விரைவில் நிறைவுறும். இன்னும் ஓராண்டுக் காலத்தில் இப்பல்கலைக்கழகம் முழுமையாகச் செயற்படத் தொடங்கும். இந்திராகாந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகத்தின் (Indira Gandhi National Open University) முதல் துணை வேந்தர் பேராசிரியர் இராம ரெட்டி (G. Rama Reddy) ஆவார். இப்பல்கலைக் கழகம் வாழ்வியல், அறிவியல், சமூகவியல், கல்வியியல், சட்டவியல், உடல் நலவியல் (Health Sciences), பொறியியல், தொழில்நுட்பம், நுண்கலை (Fine Arts) மேலாண்மையியல், வணிகவியல், வேளாண்மையியம் ஆகிய துறைகளில் குறுகிய கால, நீண்டகாலப் பாடங்களைக் கற்பிக்கும். நாட்டில் உள்ள பிற பல்கலைக்கழகங்களின் வழக்கமான கல்விப் பணிகளைச் செய்யாமல், உயர் கல்வியியலின் தரமான கல்வியினை ஊர்ப்புறங்களிலுள்ள ஏழை மக்களுக்கும், மாணவர்களுக்கும்<noinclude></noinclude> cxba6c14ejtubvbwbhejhn634i7q2su பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/151 250 640902 1925702 2026-04-20T09:14:03Z Magizh Sundram 16422 OCR 1925702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>146 புலமை வேங்கடாசலம் Divisional Engineer, Hindu Religious and Charitable Endowment (Administration) Department Assistant Engineer, Hindu Religious and Charitable Endowment (Administration) Department Junior Engineer, Hindu Religious and Charitable Endowment (Administration) Departmant Draftsman, Hindu Religious and Charitable Endowment (Administration) Department Internal Audit Superintendent Special Inspector, Hindu Religious and Charitable Endowment (Administration) Department Sthapathi, Hindu Religious and Charitable Endowment (Administration) Departr.ient Chief sthapathi, Hindu Religious and Charitable Endowment (Administration) Department Executive Officer கோட்டப் பொறியாளர். இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை உதவிப் பொறியாளர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை இளநிலைப் பொறியாளர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை வரையவாளர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை உள் தணிக்கைக் கண்காணிப்பாளர் தனி ஆய்வாளர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை சிற்பி, இந்து சமய அறக்கட்டளை சமய துறை தலைமைச் சிற்பி, இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை செயல் அலுவலர் Junior Accounts Officer இளநிலைக் கணக்கு அலுவலர் தொழில் வணிகத் துறை (INDUSTRIES AND COMMERCE DEPARTMENT) Director of Industries and Commerce தொழில் வணிகத் துறை இயக்குநர் Deputy Director of Industries தொழில் வணிகத் துறைத் துணை and Commerce Joint Director இயக்குநர் இணை இயக்குநர்<noinclude></noinclude> onalzml2gurefcqv9z4t92e8t5pudm4 பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/152 250 640903 1925703 2026-04-20T09:15:08Z Magizh Sundram 16422 OCR 1925703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>Deputy Director Assistant Director Administrative Officer Ceramic Expert Cottage Industries Officer Die Sinking Expert Exhibition Officer Foot-Wear Expert General Manager Glass Technologist Industrial Engineer Information Officer Pubilc Relation Officer Propaganda Officer Special Officer (Guts) Wood Working Expert Deputy Collector (loans) Cottage Industries Officer Chief Ceramic Technologist Administration Officer. Religious Deputy Director Cottage Industries Inspector Survey and Statistical Inspector State Geologist Deputy State Geologist Assistant-Geologist ஆட்சிச் சொற்கள் அகராதி 147 துணை இயக்குநர் உதவி இயக்குநர் ஆட்சி அலுவலர் மட்பாண்ட வல்லுநர் குடிசைத் தொழில் அலுவலர் வார்ப்பச்சு வல்லுநர் பொருட்காட்சி அலுவலர் மிதியடி வல்லுநர் பொது மேலாளர் கண்ணாடித் தொழில் நுட்பர் தொழில் பொறியாளர் செய்தி அலுவலர் பொதுமக்கள் தொடர்பு அலுவலர் கொள்கை பரப்பு அலுவலர் தனி அலுவலர் (நாண்) மரத் தொழில் வல்லுநர் துணை மாவட்ட ஆட்சியர் (கடன்கள்) குடிசைத் தொழில் அலுவலர் மட்பாண்டத் தலைமைத் தொழில் நுட்பர் ஆட்சி அலுவலர் வட்டாரத் துணை இயக்குநர் குடிசைத் தொழில் ஆய்வாளர் மதிப்பீடு-புள்ளி விவர ஆய்வாளர் மாநிலப் புவி அமைப்பியலறிஞர் மாநிலத் துணைப் புவி அமைப்பியலறிஞர் உதவிப் புவி அமைப்பியலறிஞர்<noinclude></noinclude> 8arsym4ctovwpw586oi88fqcmrjiaif பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/153 250 640904 1925704 2026-04-20T09:15:42Z Magizh Sundram 16422 OCR 1925704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>148 புலமை வேங்கடாசலம் சிறைத் துறை (JAIL DEPARTMENT) Inspector-General of Prisons சிறைத் துறைத் தலைவர் Deputy Inspector-Genaral of சிறைத் துறைத் துணைத் தலைவர் Prisons Additional Dyeing Master" சாய வேலைக் கூடுதல் ஆசிரியர் Additional Loom Jobber Aluminium Forrthan Assistant Chief Officer Assistant Superintendent Assistant Tent Maistry Baling Attendent Bandyman Binding Maistry Blacksmithy Foreman Blacksmithy Instructor Blow Room Jobber . Boiler Attendent ' Boiler Foreman Boot and Sandal Overseer (Boot Mech) Carpentry Foreman Carpentry Instructor தறி வேலைக் கூடுதல் முதலாள் தறி வேலைக் கூட்டு பணியாள். அலுமினியப் பட்டறை முதலாள் உதவி முதல் அலுவலர் உதவிக் கண்காணிப்பாளர் கூடார உதவி மேலாள் கட்டு கட்டும் பணியாள் வண்டிக்காரன் புத்தகம் கட்டும் மேலாள் கருமார் பட்டறை முதலாள் கருமார் பட்டறை ஆசிரியர் பருத்தி கலந்து சுத்தம் செய்யும் அறைப் பணியாள் கொதிகலன் சிற்றாள் கொதிநிலை முதலாள் மிதியடிப் பணிப் பார்வையாளர் தச்சுப் பட்டறை முதலாள் தச்சு ஆசிரியர் Carpentry Mechanic தச்சுக் கம்மியர் Packer Clerk சிப்ப எழுத்தர் Pepermaking Instructor காகிதத் தொழில் ஆசிரியர் Petty Shop Clerk Petty Officer 'பெட்டிக் கடை எழுத்தர் சிற்றலுவலர் Pharmacits Special Grade Petty Officer தனிச் தரச் சிற்றலுவலர் Probation Officer Rattan Instructor Regilonal Probation Officer மருந்தாக்குநர் நன்னடத்தை அலுவலர் பிரம்புத் தொழில் ஆசிரியர் வட்டார நன்னடத்தை அலுவலர்<noinclude></noinclude> crm1b4etir4pkrrlz40ic7oeaxlu05l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/700 250 640905 1925712 2026-04-20T09:42:42Z Illiyas noor mohammed 14490 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொழிலாளர்களுக்கும் பணியிலிருப்போருக்கும் வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும் பல்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1925712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திராசி, பவன்லால்‌|668|இந்திராணி}}</noinclude>தொழிலாளர்களுக்கும் பணியிலிருப்போருக்கும் வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து பயிலும் வாய்ப்பை இழந்தவர்களுக்குப் புதிய கல்வி அளிக்கும் வகையிலும், இப்போது பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வளமூட்டும் கல்வி (Enrichment) அளிக்கும் வகையிலும் இப்பல்கலைக்கழகக் கல்விப் பணி அமையும். இங்கிலாந்து, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் செயற்படும் வெளிப்பல்கலைக்கழகங்களைப் போல், இந்திராகாந்தி தேசிய வெளிப் பல்கலைக் கழகத்திலும் வானொலி, தொலைக்காட்சிப் பெட்டி, காட்சி-கேள்விக் கருவிகள் (Audio-Visual Aids), அச்சிடப்பட்ட நூல்கள் ஆகியவற்றின் உதவியுடன் கற்பித்தல் நடைபெறும். இப்பல்கலைக்கழகத்தில் தொலைக்காட்சி வழிக்கற்பித்தல், அகமதாபாத்து நகரிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Space Research Organisation) உதவியுடன் நடைபெறும். இந்திராகாந்தி தேசிய வெளிப்பல்கலைக்கழகம் குறிப்பாக, அறிவியல், தொழில் நுட்பவியல், தொடர் கல்வி ஆகியவற்றில் மிக்க கவனம் செலுத்தும் இப்பல்கலைக்கழகத்தில் கல்விச் செயல் தொடர்பான செய்திகளைப் படம் பிடித்துக் கற்பிக்க, கல்விப் படப்பிடிப்பு மையம் (Educational Studio) ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இந்திரா காந்தி தேசிய வெளிப்பல்கலைக் கழகத்தின் தலைமையகம் குதுப்மினார் (Qutib Minar) அருகில் அமையும், இந்தியாவின் பலபகுதிகளிலும் இப்பல்கலைக்கழகத்தின் மாநில மையங்கள் (Regional Centres) செயற்படும். உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம், மேற்கு வங்காளம், இராசசுத்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் இப்பல்கலைக்கழகம் மாநிலமையங்களைத் தொடங்கும். இந்திரா காந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலமும் இந்தியும் பயிற்று மொழியாக இருக்கும். கற்போர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துப் பிற மாநில மொழிகளையும் பயிற்று மொழியாக்கும் திட்டமும் உள்ளது. <b>இந்திராசி, பவன்லால் (கி.பி. 1839-1888)</b> என்பவர் குசராத்தி மொழி எழுத்தாளர்; பேரரசு ஆசியக் கழகத்தின் (Royal Asiatic Society) உறுப்பினர். இலெய்டன் பல்கலைக் கழகம் (Leyden University) இந்திராசி பவன்லாலுக்கு (Inraji Bhavanlal) முனைவர் பட்டம் (Doctor of Philosophy) கொடுத்துச் சிறப்பித்தது. இவர் குசராத்தி மொழியில் எழுதப் பெற்ற நூல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். <b>இந்திரா சைலேந்திரர்</b> சைலேந்திரப் பேரரசின் அரசர்களுள் ஒருவர். சைலேந்திர மன்னர்கள் மகாயான புத்த சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களைக் குறித்து மூன்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. முதல் கல்வெட்டு மலாயாவிலும் மற்ற இரு கல்வெட்டுகள் சாவாவிலும் (Java) சிடைத்துள்ளன. இவை முறையே கி.பி. 775, 778, 782-ஆம் ஆண்டுகளில் சைலேந்திர மரபினர் மலாயா, சாவா, சுமத்திரா போன்ற பகுதிகளில் ஆட்சியை நிலை நாட்டி இருந்ததைச் சுட்டுகின்றன. இறுதிக் கல்வெட்டு இந்திரா சைவேந்திரர் என்பாரையும் இன்னும் பலதிறப்பட்ட அரசர்களையும் குறிப்பிட்டுள்ளது. சைலேந்திர மன்னர்கள் சீனாவுடனும் இந்தியாவுடனும் அரசு முறைத் தொடர்பு கொண்டிருந்தார்கள். <b>இந்திராணி</b> திருப்பாற்கடலில் அமுதத்துடன் தோன்றியவள். இவளைத் திருமால் இந்திரனுக்கு மனைவியாக அளித்தார். இவன் இந்திரனைப் போல் வச்சிரம், சூலம், கதை ஆகியவற்றைத் தரித்து, யானையை ஊர்தியாகக் கொண்டாள். இவள் சத்த (7) மாதர்களுள் ஒருத்தி. இவளைத் துவட்டாவின் மகள் என்றும் கூறுவர். இந்திரபதம் பெறுவோர் இவளைக் காதலியாய்ப் பெறுவர். நகுடன் இந்திரபதம் பெற்று இவளைப் பெற்ற போது, அகத்தியர் முதலிய ஏழு இருடிகள் சுமக்கும் பல்லக்கில் வந்தால் உடன்படுவேன் என்று கூறி இவள் மறுத்தாள். இந்திரன் பாண்டவர்களாகப் பிறந்தபோது, இவள் துருபதன் செய்த யாகத்தில் திரௌபதியாகப் பிறந்தாள். சூரனாதியர் செய்யும் துன்பத்தைச் சிவனிடம் முறையிட இந்திரன் சைலைக்குச் சென்றபோது, மகாசாத்தாவை இவளுக்குக் காவலிருக்க வேண்டிச் சென்றான். கணவன் விரைவில் திரும்பிவர இவள் தவமியற்றிக் கொண்டிருந்தாள். அப்போது இவளைக் கண்ட அசமுகி என்னும் அரக்கி இவளைத்தன் தமையனுக்கு உகந்தவள் என்று கைப்பற்றி இழுத்தாள். அதனால் வருந்திய இவன் குரல் கேட்டு மகாகாளர் அசமுகியின் கையை வெட்டி, இவளை விடுவித்தார். திருமால் மடியில் தான் இருக்க அருள்செய்யுமாறு அவரிடம் வேண்டிக்கொண்டாள். அதற்கேற்பத் திருமால் துவாரகையில் கண்ணனாக அவதரித்த<noinclude></noinclude> nk9q39gaxlupfwuivcxqzjz7jkgtq4m