விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.46.0-wmf.26
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/221
250
22803
1928348
744038
2026-04-29T15:02:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928348
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பி. செய்துன்சியன்||191}}</noinclude>ஒருவரும் பயப்படவில்லை. ஒவ்வொரு பத்திலும் தான்
ஒருவனாக இருப்பான் என்று எவரும் எண்ணவில்லை.
திடீரென்று நரம்புத் தளர்ச்சி உற்ற ஒருவனின் குரல்
அமைதியைக் கிழித்து எழுந்தது.
“நான் சாக விரும்பவிலலை... அவர்கள் என்னைக் கட்டாயப்
படுத்தி...”
இப்போதுதான் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டனர்.
ஒவ்வொரு பத்துப்பேரிலும் ஒருவன் சாவதற்கு இருந்தான்.
பத்தாவது, இருபதாவது, முப்பதாவது... மொத்தத்தில்
அவர்கள் எழுபதுபேர். ஆகவே ஏழுபேர் சாகவேண்டும்.
வரிசையின் முதலாவது வீரன் தன்னிச்சையாகச் சிரித்தான்.
அவன் திருப்தியுடன் அதிகாரிகளை நோக்கினான். ஏனெனில்,
அவன்தான் முதல் நபர்; அதனால் அவர்களுக்கு நன்றி உடையவனாகத்
தோன்றினான். அதிகாரிகளில் ஒருவர் ஒரு சினிமா
நடிகர்போல் காணப்பட்டார். எனவே, அவன் தன் கைகளைப்
பைகளுக்குள் நுழைத்துக்கொண்டு சந்தோஷமாக நிமிர்ந்து
நின்றான்.
இராணுவக் கட்டளையைச் செயல்படுத்தமாட்டோம் எனத்
துணிவதற்கு அவர்கள் யார்? அவர்கள் ஒன்றுமற்றவர்கள்,
சாதாரணப் போர்வீரர்கள். அவர்கள் தண்டிக்கப்படத்தான்
வேண்டும். ஆனால், அந்தச் செயலுக்குத் திட்டமிட்டவர்களில்
தானும் ஒருவன் என்பதை அவன் நினைத்துக்கொண்டான்.
கலக்கமுற்று அவன் வெட்கத்துடன் தன் கைகளைப் பைகளிலிருந்து
வெளியே இழுத்தான். தரையையே பார்க்கலானான். அந்த
அதிகாரி உண்மையாகவே ஒரு சினிமா நடிகர்போல் தோன்றினாரா
என்று சிந்தித்தான்.
இரண்டாவது, மூன்றாவது வீரர்களால் தாங்கள்
வேண்டாம் என்று நம்ப முடியவில்லை. நிறுத்தாமல் அவர்கள்
எண்ணினார்கள். ஒன்று, இரண்டு... அவன் இரண்டாவது நபர்...
ஒன்று... இரண்டு மூன்று. அவன் மூன்றாவது ஆள் இருந்த
போதிலும், அவர்கள் காரணம் இல்லாமலே முதலாவது நபர்
மீது பொறாமை கொண்டார்கள். அதே நிலைமைதான்
என்றாலும் கூட, முதலாவது-இரண்டாவது-மூன்றாவது நபர்கள்
சுடப்படமாட்டார்கள் என்றாலும், அவர்கள் அவனைப் பார்த்துப்
பொறாமைப்பட்டார்கள். அவன் முதலாவதாக, அவர்கள்
அனைவரிலும் முதலாவதாக இருந்த காரணத்துக்காகவே
வெறுமனே பொறாமைப்பட்டார்கள்.{{nop}}<noinclude></noinclude>
5w83w2xebgng8334pc6gmvjgvgbwtoi
1928351
1928348
2026-04-29T15:07:03Z
Booradleyp1
1964
1928351
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பி. செய்துன்சியன்||191}}</noinclude>ஒருவரும் பயப்படவில்லை. ஒவ்வொரு பத்திலும் தான்
ஒருவனாக இருப்பான் என்று எவரும் எண்ணவில்லை.
திடீரென்று நரம்புத் தளர்ச்சி உற்ற ஒருவனின் குரல்
அமைதியைக் கிழித்து எழுந்தது.
“நான் சாக விரும்பவிலலை... அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி...”
இப்போதுதான் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டனர்.
ஒவ்வொரு பத்துப்பேரிலும் ஒருவன் சாவதற்கு இருந்தான்.
பத்தாவது, இருபதாவது, முப்பதாவது... மொத்தத்தில்
அவர்கள் எழுபதுபேர். ஆகவே ஏழுபேர் சாகவேண்டும்.
வரிசையின் முதலாவது வீரன் தன்னிச்சையாகச் சிரித்தான்.
அவன் திருப்தியுடன் அதிகாரிகளை நோக்கினான். ஏனெனில்,
அவன்தான் முதல் நபர்; அதனால் அவர்களுக்கு நன்றி உடையவனாகத்
தோன்றினான். அதிகாரிகளில் ஒருவர் ஒரு சினிமா
நடிகர்போல் காணப்பட்டார். எனவே, அவன் தன் கைகளைப்
பைகளுக்குள் நுழைத்துக்கொண்டு சந்தோஷமாக நிமிர்ந்து
நின்றான்.
இராணுவக் கட்டளையைச் செயல்படுத்தமாட்டோம் எனத்
துணிவதற்கு அவர்கள் யார்? அவர்கள் ஒன்றுமற்றவர்கள்,
சாதாரணப் போர்வீரர்கள். அவர்கள் தண்டிக்கப்படத்தான்
வேண்டும். ஆனால், அந்தச் செயலுக்குத் திட்டமிட்டவர்களில்
தானும் ஒருவன் என்பதை அவன் நினைத்துக்கொண்டான்.
கலக்கமுற்று அவன் வெட்கத்துடன் தன் கைகளைப் பைகளிலிருந்து
வெளியே இழுத்தான். தரையையே பார்க்கலானான். அந்த
அதிகாரி உண்மையாகவே ஒரு சினிமா நடிகர்போல் தோன்றினாரா
என்று சிந்தித்தான்.
இரண்டாவது, மூன்றாவது வீரர்களால் தாங்கள் வேண்டாம் என்று நம்ப முடியவில்லை. நிறுத்தாமல் அவர்கள் எண்ணினார்கள். ஒன்று, இரண்டு... அவன் இரண்டாவது நபர்...ஒன்று... இரண்டு...மூன்று. அவன் மூன்றாவது ஆள் இருந்தபோதிலும், அவர்கள் காரணம் இல்லாமலே முதலாவது நபர்மீது பொறாமை கொண்டார்கள். அதே நிலைமைதான் என்றாலும் கூட, முதலாவது-இரண்டாவது-மூன்றாவது நபர்கள் சுடப்படமாட்டார்கள் என்றாலும், அவர்கள் அவனைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள். அவன் முதலாவதாக, அவர்கள் அனைவரிலும் முதலாவதாக இருந்த காரணத்துக்காகவே வெறுமனே பொறாமைப்பட்டார்கள்.{{nop}}<noinclude></noinclude>
hauy2nplla9t0vxf5oq6wl8b84d0gd2
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/222
250
22804
1928355
744039
2026-04-29T15:18:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928355
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|192||ஒவ்வொரு பத்திலும் ஒருவர்}}</noinclude>ஆனால், இதர வீரர்கள் காத்திருந்தார்கள். ஏனென்றால்
அவர்களுடைய எண்களை அவர்கள் அறியவில்லை. அவர்கள்
உரத்து எண்ண ஆரம்பித்தனர். அவர்கள் மிக மெதுவாகப்
பேசினார்கள். முதலாவது வீரன்கூடத் தனது சொந்தக் குரலைக்
கேட்டபோது பயந்துவிட்டான்.
“ஒன்று...”
ஒன்பதாவது வீரன் வெளிறினான்; ஏனெனில் அவன் பத்தாவதுக்கு
மிக அருகாக நின்றுகொண்டிருந்தான். ஒன்பது, பத்து
என்ற எண்களுக்கிடையில் மிக அற்ப வித்தியாசமே இருந்தது.
அந்தக் காரணத்தினாலேயே எதுவோ பத்திலிருந்து ஒன்பதின்
பங்கில் விழுந்தது. அவன் ஒன்பதிலிருந்து பத்து வரை
எண்ணும்படி தன்னையே வற்புறுத்தினான்... ஒன்று, இரண்டு,
மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து...
நல்லது. எவ்வாறாயினும், ஒரு எண் வித்தியாசம் சின்ன
விஷயமல்ல. வித்தியாசம் எதுவும் இல்லை என்றால் ஒன்பதாவது
எண் இருக்கவே இருக்காது. அவள் தனது கண்டு பிடிப்பைக்
கருதிப் புன்னகைத்தான்.
வீரர்களின் மெதுவான குரல்களை நன்கு கேட்க முடிந்தது.
“பதினாறு...”
“பதினேழு”
“பதினெட்டு...”
“பத்தொன்பது...”
பத்தொன்பதாவது நபர் வெட்கமடைந்தான். ஏனெனில் அவன் இருபதாவதுமீது இரக்கம் கொண்டான். அவன் அவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிக் கடிதம் எழுதவேண்டியிருக்கும்...
அப்புறம், யுத்தத்திற்குப் பின் அவன் போய் தன்னால் இயன்ற உதவி புரிவதற்காக அவர்களைப் பார்க்க வேண்டியது அவசியமாகும்... எல்லாம் சந்தோஷம் காரணமாகத்தான்... தான் இருபதாவது இல்லை, தான் சாகவேண்டியதில்லை என்பதால் அவன் சந்தோஷப்பட்டான்... மனிதர்கள் எவ்வளவு அற்பர்களாக, எவ்வளவு கோழைகளாக இருந்தார்கள் என்று அவன் புரிந்துகொண்டான். தான் எப்போதும் ஒரு யோக்கியமான மனிதனாக இருந்ததாக அவன் எண்ணினான். இப்போது வாழ்விலேயே முதல் தடவையாக அவன் தன்னையே கண்டுகொண்டான். ஆனால் அவன் ஏன் தன்னைப்பற்றித்தானே அவ்வளவு மோசமாக எண்ண அனுமதித்தான்? மறுபடியும் சந்தோஷத்தினால் தான்...{{nop}}<noinclude></noinclude>
n80qdiiz9sz647z5co11ltygxkznpa9
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/223
250
22805
1928360
744040
2026-04-29T15:26:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928360
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பி. செய்துன்சியன்||193}}</noinclude>“நான் சாக விரும்பவில்லை...” பயந்த குரல் மறுபடியும்
கேட்டது. மனிதர்கள் மெதுவாக எண்ணிக்கொண்டிருந்தார்கள்.
“இருபத்தாறு...”
“இருபத்தேழு...”
“இருபத்தெட்டு...”
“இருபத்தொன்பது...”'
இருபத்தொன்பது சிரித்தான்.
அவன் வாழ்நாள் முழுவதும் கடவுள் நம்பிக்கை உடையவனாக
இருந்தான். அவன் எப்போதும் தனது ஜபங்களைச்
சொன்னான். ஞாயிறுதோறும் பிள்ளைகளைத் தேவாலயத்துக்கு
அழைத்துச் சென்றான். அவர்கள் ஜபங்களை மனனம் பண்ணும்படி
செய்தான். குழந்தைகளைத் திருப்திப்படுத்த அவன் அவர்களுக்கு
இனிப்புப் பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கம். அவனும்
அவன் மனைவியும் முதல் முறை ஆலயத்தில்தான் சந்தித்தார்கள்;
கிறிஸ்துவின் படத்துக்குக் கீழேதான் ஒருவரை ஒருவர் கண்டு
புன்முறுவல் பூத்தார்கள். பிறகு ஒருநாள் அவர்கள் கைகளைப்
பற்றிக்கொண்டார்கள்; முத்தமிட்டார்கள். கிறிஸ்துநாதர்
பார்த்ததாகவும் புன்னகை புரிந்ததாகவும் அவர்களுக்குத்
தோன்றியது. அதனால்தான் அவன் பங்கிற்கு இருபத்தொன்பது
வந்திருக்கிறது.ஆரம்பம் முதலே அவன் நிச்சயமாக அறிந்திருந்தான்.
அதை அவன் மனப்பூர்வமாக நம்பினான். அதனால்
ஆனந்தத்தோடு கூச்சலிட விரும்பினான்.
“சகோதரர்களே, அவரை நம்புங்கள், அவர் உங்களைக்
காப்பாற்றுவார்!”
ஆனால், கடவுளால் செய்யப்படுகிற நன்மை அதிகம்
தோன்றவில்லை. ஏனெனில், இப்போது மிகச் சிலரே கடவுளிடம்
நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆகையால் அதிகமாகக்
கேட்க அவனுக்கு உரிமை உண்டு... நான் யுத்தத்திலிருந்து
சுகமாகவும் ஆரோக்கியமாகவும் வீடு திரும்ப வேண்டும்...
திரும்பிப் போனதும் நல்ல வேலை ஒன்றை நான் தேடிக்கொள்வேன்...
பணக்காரன் ஆவேன்... வயது முதிர்ந்த பின் சாவேன்...
மிகப் பல வெள்ளைத் தாள்கள் அடைவேன்.... அவை அனைத்துக்கும்
பிரதியாக நான் உன்னை நம்புவேன்.... உன்னைப் பிரார்த்திப்பேன்...
இதோ எனக்கு நானே சிலுவைக்குறி இடுகிறேன்...
தந்தை, திருக்குமாரன், பரிசுத்த ஆவி பெயரால்... நினைவு வை,
நினைவு வை. இப்போது மிகச் சொற்பமானவர்களே உன்னை
நம்புகிறார்கள்... ஆமென்...{{nop}}<noinclude>
ஆ—13</noinclude>
s4bdijxf71h9aqaseosxhw8z4a9oiw8
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/224
250
22806
1928362
744041
2026-04-29T15:32:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928362
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|194||ஒவ்வொரு பத்திலும் ஒருவர்}}</noinclude>“முப்பத்தாறு...”
“முப்பத்தேழு...”
“முப்பத்தெட்டு...”
“முப்பத்தொன்பது...”
தான் நாற்பதைவிட ஒன்று குறைவாக இருந்ததால் முப்பத்தொன்பது
அமைதி இழந்து தவித்தான். நாற்பதாவது
அவனுடைய நெருங்கிய நண்பன். அவர்கள் சேர்ந்தே பள்ளிக்
கூடம் போனார்கள்! சேர்ந்து போரிட்டார்கள், சேர்ந்து கஷ்டப்பட்டார்கள்.
இப்போதுகூட அவர்கள் அணிவகுப்பில் சேர்ந்து
அருகருகே நின்றார்கள். அவர்கள் நண்பர்களாக இல்லாதிருந்தால்
வரிசையில் சேர்த்து நின்றிருக்கமாட்டார்கள்; ஒருவேளை
அவன் நண்பன் நாற்பதாவது நபராக வராதிருந்திருக்கலாம்.
அவன் அவர்கள் நட்பை எண்ணிக் குழப்பம் அடைந்தான்.
அவன் செய்த உதவிகள் எல்லாம் உள்நோக்கம் கொண்டு செய்ததாகவே இப்போது அவனுக்குத் தோன்றியது. அவன் தன் நண்பன்மீது பொழிந்த கருணைச் செயல்கள், முன்யோசனை
அனைத்துக்காகவும் வெட்கப்பட்டான்.
திடீரென்று அவன் சந்தோஷத்தால் சிரித்தான். அதனால்
அமைதியாக மூச்சுவிட்டான். அவன் தனது நியாயத்தைக்
கண்டுகொண்டான். ஒருவரும் அவனைக் குறைகூற முடியாது.
ஒருமுறை தான் மோசமாக நடந்ததை அவன் நினைத்தான்...
அவன் தன் நண்பனுக்கு உண்மையானவனாகவே இருந்தான்.
ஒருமுறை, வேலை இல்லாதிருந்தபோது, ஒரு இடத்தில் வேலை
காலி என்று அவன் கேள்வியுற்றான். அதை நண்பனிடம்
சொல்லவில்லை. அவன் மட்டும் போனான். ஆனால் பிற்பாடு
அவள் அதற்காக வருந்தினான்; தனது செயலுக்காக வெட்கப்பட்டான்.
அதை நினைத்ததும் ஒருகணம் அவன் கலவரம்
அடைந்தான். அவன் திரும்பவும் நல்ல நண்பன் ஆகிவிட்டான்.
அவன் சும்மா தன் வாழ்வில் ஒரே ஒரு தவறு செய்த மனிதன்.
மிகுந்த பிரயாசையோடு அவன் அந்த எண்ணத்தை மறுத்து
ஒதுக்கினான். அதெல்லாம் முக்கியமற்றவை எனக் கருதினான்.
முக்கியம் என்னவென்றால், அவன் அதைச் செய்திருந்தான்.
இங்கே கூடி நிற்கும் மனிதர்கள் அதை அறிய நேர்ந்தால், அவன்
ஒரு அயோக்கியன் என்றே சொல்லுவார்கள். அவன் மீண்டும்
அமைதி அடைந்தான். அவன் ஒரு கெட்ட நண்பனாக,
மோசமான மனிதனாக இருந்திருக்கிறான்.
பயங்கரமான குழப்பத்திடையே அதுதான் மாபெரும் நியாயமாயிற்று.{{nop}}<noinclude></noinclude>
aflftbxfffzwexccoiq35jntxidviep
பயனர்:Info-farmer/common.js
2
405613
1928388
1925742
2026-04-30T00:33:20Z
Info-farmer
232
//
1928388
javascript
text/javascript
/* சோதனை */
//alert("வெற்றி! உங்கள் Common.js கோப்பு சரியாக இயங்குகிறது.");
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript' );
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/float360button.js&action=raw&ctype=text/javascript' );
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/fastPasteSaveRefresh.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/wikiCodeViewer.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/transclsionSubpageCreator.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionEditTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionPasteTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidData2anotherIndex.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/subpageCopier.js&action=raw&ctype=text/javascript'); (offline xml filter tool)
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/FloatingProofreader.js&action=raw&ctype=text/javascript');
nqivo8xpk090q0gnyjrbbrriqy30tvq
1928389
1928388
2026-04-30T00:42:41Z
Info-farmer
232
+ Boopalan28012003
1928389
javascript
text/javascript
/* சோதனை */
//alert("வெற்றி! உங்கள் Common.js கோப்பு சரியாக இயங்குகிறது.");
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript' );
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/float360button.js&action=raw&ctype=text/javascript' );
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/fastPasteSaveRefresh.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/wikiCodeViewer.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/transclsionSubpageCreator.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionEditTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionPasteTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidData2anotherIndex.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/subpageCopier.js&action=raw&ctype=text/javascript'); (offline xml filter tool)
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/FloatingProofreader.js&action=raw&ctype=text/javascript');
importScript('User:Neechalkaran/Floatingbutton.js');
importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css');
importScript('User:Boopalan28012003/textareaEditor.js');
importScript('User:Boopalan28012003/effort.js');
importScript('User:Boopalan28012003/dash.js');
4zkqhcbfpjiajnakkhzs31paedq2i09
பயனர்:James500
2
460917
1928771
1477143
2026-04-30T07:55:34Z
James500
12131
/* */ Remove template
1928771
wikitext
text/x-wiki
{{#babel:en}}
[[en:User:James500]]
eu13so1xoub6xvcjld6yea9o5qsrodx
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf
252
555166
1928345
1928122
2026-04-29T14:46:46Z
Booradleyp1
1964
1928345
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
554=பகுதி-73
561=பகுதி-74
568=பகுதி-75
574=பகுதி-76
580=பகுதி-77
585=பகுதி-78
590=பகுதி-79
595=பகுதி-80
602=பகுதி-81
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
49dyxu5dx3nm2x7ikf94qbza6fo2w7p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/131
250
639054
1928390
1927235
2026-04-30T00:43:28Z
Info-farmer
232
top space added
1928390
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||107}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|உணவுப் பிரச்சினை—அதற்குப் பரிகாரம்.
நாலாவது ஐந்தாண்டுத் திட்டம்—அதன் வடிவம், பொருள்—பலன்.}}
இப்படிப் பிரச்சினைகள் பலப் பல உள்ளன. இவை பற்றி இவ்வளவு வளர்ந்துள்ளவர் என்ன கூறுகிறார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆவல் கொண்டுதானே இருப்பார்கள். இந்தப் பிரச்சினைகள் பற்றி மூண்டுவிட்டுள்ள குழப்பத்தைப் போக்குவார், தெளிவளிப்பார் என்று எண்ணாமலிருக்க முடியுமா; அகில இந்தியக் காங்கிரசின் தலைவராயிற்றே! ஆனால், பாரேன் தம்பி பொருளாதாரப் பிரச்சினை பற்றி டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் பேசட்டும்—உணவுப் பிரச்சினை பற்றிச் சுப்பிரமணியம் பேசட்டும்—உலகப் பிரச்சினை பற்றி இந்திர காந்தி பேசட்டும்—நான் அந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசப்போவதில்லை, என் முன் உள்ள பிரச்சினை ஒன்றே ஒன்று! இந்தத் தேர்தலில் கழகம் காங்கிரசை வீழ்த்தாமல் இருக்கும் வழியைக் கண்டு பிடிப்பது—அந்தப் பிரச்சினை பற்றித்தான் நான் பேசுவேன் என்று கூறுபவர்போல. வந்ததும் நம்மைப் பற்றிய தெந்தினமே பாடி இருக்கிறார்!
தம்பி! களம் செல்லும் வீரன் வாளின் கூர்மை சரியாக உளதா என்று பார்த்துக் கொள்வான்.
வீர அர்ஜுனன் வேடமணிந்து நாடகமேடை செல்வோன், வாளின் கூர்மை சரியாக உளதா என்றா பார்த்திடுவான், மீசை சரியாக ஒட்டப் பட்டிருக்கிறதா என்று தானே பார்த்துக் கொள்வான்.
காமராஜர் உலகப் பிரச்சினைகளைப் பற்றி ஆய்ந்தறிந்திடவே நாடு பல சென்றுள்ளார் என்று அவர் நாமாவளி பாடிடுவோர் கூறிடினும், அவர் கொண்டுள்ள அக்கறை உலகப் பிரச்சினைகள்மீது அல்ல; காங்கிரஸ் நடாத்தும் எதேச்சாதிகாரத்தை உருக்குலைக்க எழுந்துள்ள கழகத்தை எப்படி மடக்குவது என்பதிலேதான்.
அவர் ஏதோ நாலு வார்த்தை பேசிவிட்டார் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார்களே, நமது தோழர்கள், அவர்கள் ஒரு விஷயத்தை உணருகிறார்களா?
{{left_margin|3em|காமராஜர் கொண்டுள்ள வருத்தத்தை உணருகிறார்களா?}}
வருத்தம் கொஞ்சமாகவா இருக்கும் அவருக்கு?
சிற்றரசர்கள்
சீமான்கள்
வணிகக் கோமான்கள்<noinclude>
<references/></noinclude>
fq8sonee3giimkcsbih9qerlsi2d1v1
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/387
250
639623
1928333
1928266
2026-04-29T14:28:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928333
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 365}}</noinclude>அவர் பெயரில் விரைவில் முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”
நான் அந்த அறிக்கையின் வாசகத்தைக் கேட்டவுடன் சொன்னேன்; “இப்போதைக்குச் செயற்குழு உறுப்பினர்களின் முறையீட்டை பெற்றுக் கொண்டதாகவும், அது குறித்து எம்.ஜி.ஆர். அவர்களிடம் தலைவரும், பொதுச் செயலாளரும் பேசுவதாகவும் முடிவு செய்யப்பட்டதாகப் பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்தால் போதுமானது” என்று.
முதலில் மிக ஆத்திரத்துடன் பேசிக் கொண்டிருந்த மதுரை முத்து, ஈ. ஆர். கிருஷ்ணன் போன்றவர்கள், என்னுடைய கருத்தை நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஏற்றுக் கொண்டு, சலிப்புடன்; “ஏதாவது செய்யுங்கள்” என்று கூறி அமர்ந்தார்கள்.
நான் உடனே என். வி. என். அவர்களைப் பார்த்து, நிருபர்களை வரச் சொல்லி, சொல்லி அனுப்புங்கள் என்றேன்.
“நிருபர்களிடம் அறிக்கையை கொடுத்து விட்டேன். அவர்கள் போய்விட்டார்கள்” என்றார் என். வி. என்.
“ஏன் கொடுத்தீர்கள்? அறிக்கையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போதே யார் கொடுக்கச் சொன்னது?”
—என்று வழக்கமாக என். வி. என். அவர்களிடம் காட்டும் உரிமை உணர்வோடு கோபித்துக் கொண்டேன்.
“நாவலர்தான் கொடுக்கச் சொன்னார்!” என்றார் என். வி. என்.
“என்ன நாவலர்?” என்று நான் நாவலரைப் பார்த்தேன்.
“ஆமாம்—நான்தான் கொடுக்கச் சொன்னேன். நீங்கள் திடீரென்று மாறி இப்படி “சாப்ட்” (Soft) ஆகிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்துத் தான் உடனே கொடுக்கச் சொல்லி விட்டேன்!” என்றார் பொதுச்செயலாளர் நாவலர்.
அதைக் கேட்டதும், பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் கரவொலி செய்தனர்.
“கழகக் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அவர்களை மன்னிக்க முடியாது!” என்று உரத்த குரலில் நாவலர் அவர்கள் முழங்கினார். அவர் முகம் கோபத்தால் சிவந்திருந்தது.
{{nop}}<noinclude></noinclude>
s85mceq3wc8due0plfqpjyd6nf2rwc0
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/388
250
639624
1928334
1928268
2026-04-29T14:30:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928334
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|366 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்களும், பொதுச் செயலாளர் நாவலரும் ஒரு முடிவுக்கு வந்த பிறகு அதற்குக் கட்டுப்பட வேண்டியதுதானே எனது கடமை!
அடுத்து, சிறிது நேரத்திற்கெல்லாம் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் எம். ஜி. ஆர். அவர்களுக்கு, விளக்கம் கேட்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதம் வருமாறு:-
கழகத்தின் முன்னணித் தோழர்களில் ஒருவராகவும் கழகப் பொருளாளர் என்ற பொறுப்பிலும் உள்ள தாங்கள், அண்மைக்காலமாகக் கழகக் கட்டுப்பாடு—ஒழுங்கு முறைகளை மீறியும், கழகத் தோழர்களிடையே பிளவு உருவாக்கும் முறையிலும், கழகத்தின் கண்ணியத்துக்குப் பொதுமக்களிடையே இழுக்கு ஏற்படும் வகையிலும், கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையிலும் தாங்கள் செயல்படுவதும் பேசி வருவதும் கழகத்தின் பல்வேறு பொறுப்பிலுள்ள தோழர்களால் தலைமைக்கழகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
கழகத் தலைமைச் செயற்குழு-பொதுக்குழுக் கூட்டங்களில் முறைப்படி பேசி விவாதிக்க வேண்டிய கருத்துக்களைத் தாங்கள் வெளிப்படையாகப் பேசுவதுடன், அவை, கழகத்திற்கு எதிரானதும் ஊறு செய்யக் கூடியதுமான வகையில் இதழ்களில் வெளிவரும் நிலைமைகளையும் உருவாக்கி வருகிறீர்கள். எல்லா இதழ்களிலும் பரவலாக நாள்தோறும் வெளியிடப்படும் தங்கள் முறைகேடான பேச்சுக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருப்பது தலைமைக்கழகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது.
மதுவிலக்குக் கொள்கை பற்றிக் கோவையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. இதனைத் தாங்களும் உடனிருந்து நிறைவேற்றியிருப்பதுடன், அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாகத் தாங்கள் விளக்கமாகப் பொதுக்குழுவில் பேசியுமிருக்கிறீர்கள். இந்தத் தீர்மானத்தின் பேரில் கழகமும் கழக அரசும் மேற்கொண்ட செயல்முறைகளைத் தாங்கள் இத்தனை நாள் கழித்து பகிரங்கமாகக் கண்டித்துப் பேசியிருக்கிறீர்கள். இது, கழகக் கட்டுப்பாட்டையும், பொதுக்குழுவின் முடிவின் பேரிலும் கழகமும் கழக அரசும் மேற்கொண்ட செயல்முறைகளை அவதூறாகப் பேசுவதாகவும் அமைவதாகத் தலைமைக்கழகம் கருதுகிறது.
{{nop}}<noinclude></noinclude>
l6zbtihgrtihuuj94343lalzajap752
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/340
250
639739
1928381
1925834
2026-04-30T00:00:16Z
Info-farmer
232
அட்டவணை
1928381
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" />
{{Rh|316||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{c|{{larger|<b>நிதி ஆண்டு 1965-66</b>}}}}
{|
|-
|திட்டமிட்டது || கிடைத்தது
|-
|விவசாயப் பொருள்<br>100 மிலியன் டன் || 74 மிலியன்
|-
|எண்ணெய் வித்து<br>9.8 மிலியன் டன் || 7 மிலியன்
|-
|சணல் <br>62 இலட்சம் பேல்கள் || 33.6 இலட்சம் பேல்கள்
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|}
பருத்தி
70.55 இலட்சம் பேல்கள்
பொறுக்கு விதைத் திட்டம்
204 மிலியன் ஏக்கர்
பாசன வசதி
29.5 மிலியன் ஏக்கர்
மின்சார சக்தி
29.5 மிலியன்
கிலோவாட்
எஃகுப் பொருள்
9.2 மிலியன் டன்
பயிர்ப் பாதுகாப்பு
50 மிலியன் ஏக்கர்
பத்திரிகைத் தாள்
1.20 இலட்சம் டன்
சிமிட்டி
13 மிலியன் டன்
நிலக்கரி
98.6 மிலியன் டன்
இரும்புக்கனி
30 மிலியன் டன்
சர்க்கரை ஆலை யந்திரம்
140 கோடி ரூபாய் மதிப்பு
காகித ஆலை யந்திரம்
65 கோடி ரூபாய் மதிப்பு
52.65 இலட்சம்
பேல்கள்
164 மிலியன்
ஏக்கர்
18 மிலியன்
10.5 மிலியன்
கிலோவாட்
6.6 மிலியன்
40 மிலியன் ஏக்கர்
30,000 டன்
10.4 மிலியன்
66 மிலியன்
16 மலியன் டன்
77 கோடி
ரூபாய்
18 கோடி
ரூபாய்<noinclude></noinclude>
bpr59sicpd76tvjtmnon20baawzrxk3
1928382
1928381
2026-04-30T00:07:45Z
Info-farmer
232
{{gap+|10}}
1928382
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" />
{{Rh|316||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{c|{{larger|<b>நிதி ஆண்டு 1965-66</b>}}}}
{|
|-
|திட்டமிட்டது {{gap+|10}} || கிடைத்தது {{gap+|10}}
|-
|விவசாயப் பொருள்<br>100 மிலியன் டன் || 74 மிலியன்
|-
|எண்ணெய் வித்து<br>9.8 மிலியன் டன் || 7 மிலியன்
|-
|சணல் <br>62 இலட்சம் பேல்கள் || 33.6 இலட்சம் பேல்கள்
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|
|-
|}
பருத்தி
70.55 இலட்சம் பேல்கள்
பொறுக்கு விதைத் திட்டம்
204 மிலியன் ஏக்கர்
பாசன வசதி
29.5 மிலியன் ஏக்கர்
மின்சார சக்தி
29.5 மிலியன்
கிலோவாட்
எஃகுப் பொருள்
9.2 மிலியன் டன்
பயிர்ப் பாதுகாப்பு
50 மிலியன் ஏக்கர்
பத்திரிகைத் தாள்
1.20 இலட்சம் டன்
சிமிட்டி
13 மிலியன் டன்
நிலக்கரி
98.6 மிலியன் டன்
இரும்புக்கனி
30 மிலியன் டன்
சர்க்கரை ஆலை யந்திரம்
140 கோடி ரூபாய் மதிப்பு
காகித ஆலை யந்திரம்
65 கோடி ரூபாய் மதிப்பு
52.65 இலட்சம்
பேல்கள்
164 மிலியன்
ஏக்கர்
18 மிலியன்
10.5 மிலியன்
கிலோவாட்
6.6 மிலியன்
40 மிலியன் ஏக்கர்
30,000 டன்
10.4 மிலியன்
66 மிலியன்
16 மலியன் டன்
77 கோடி
ரூபாய்
18 கோடி
ரூபாய்<noinclude></noinclude>
hsngt9i0s6kdhd0alawr464a772d612
1928383
1928382
2026-04-30T00:15:33Z
Info-farmer
232
+ முதல் பத்தி
1928383
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" />
{{Rh|316||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{c|{{larger|<b>நிதி ஆண்டு 1965-66</b>}}}}
{|
|-
|<b>திட்டமிட்டது</b> {{gap+|10}} || <b>கிடைத்தது</b> {{gap+|10}}
|-
|விவசாயப் பொருள்<br>100 மிலியன் டன் || 74 மிலியன்
|-
|எண்ணெய் வித்து<br>9.8 மிலியன் டன் || 7 மிலியன்
|-
|சணல் <br>62 இலட்சம் பேல்கள் || 33.6 இலட்சம் பேல்கள்
|-
|பருத்தி<br>70.55 இலட்சம் பேல்கள்
|-
|பொறுக்கு விதைத் திட்டம்<br>204 மிலியன் ஏக்கர்
|-
| பாசன வசதி<br>29.5 மிலியன் ஏக்கர்
|-
|மின்சார சக்தி<br>29.5 மிலியன் கிலோவாட்
|-
|எஃகுப் பொருள் <br>9.2 மிலியன் டன்
|-
|பயிர்ப் பாதுகாப்பு<br>50 மிலியன் ஏக்கர்
|-
|பத்திரிகைத் தாள்<br>1.20 இலட்சம் டன்
|-
|சிமிட்டி<br>13 மிலியன் டன்
|-
|நிலக்கரி<br>98.6 மிலியன் டன்
|-
|இரும்புக்கனி<br>30 மிலியன் டன்
|-
|சர்க்கரை ஆலை யந்திரம்<br>140 கோடி ரூபாய் மதிப்பு
|-
|காகித ஆலை யந்திரம் <br> 65 கோடி ரூபாய் மதிப்பு
|-
|}
52.65 இலட்சம்
பேல்கள்
164 மிலியன்
ஏக்கர்
18 மிலியன்
10.5 மிலியன்
கிலோவாட்
6.6 மிலியன்
40 மிலியன் ஏக்கர்
30,000 டன்
10.4 மிலியன்
66 மிலியன்
16 மலியன் டன்
77 கோடி
ரூபாய்
18 கோடி
ரூபாய்<noinclude></noinclude>
1cttsi0v4879zed36g27d4z64mg3jkb
1928384
1928383
2026-04-30T00:21:12Z
Info-farmer
232
+30,000 டன்
1928384
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" />
{{Rh|316||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{c|{{larger|<b>நிதி ஆண்டு 1965-66</b>}}}}
{|
|-
|<b>திட்டமிட்டது</b> {{gap+|10}} || <b>கிடைத்தது</b> {{gap+|10}}
|-
|விவசாயப் பொருள்<br>100 மிலியன் டன் || 74 மிலியன்
|-
|எண்ணெய் வித்து<br>9.8 மிலியன் டன் || 7 மிலியன்
|-
|சணல் <br>62 இலட்சம் பேல்கள் || 33.6 இலட்சம் பேல்கள்
|-
|பருத்தி<br>70.55 இலட்சம் பேல்கள் || 52.65 இலட்சம் பேல்கள்
|-
|பொறுக்கு விதைத் திட்டம்<br>204 மிலியன் ஏக்கர் || 164 மிலியன் ஏக்கர்
|-
| பாசன வசதி<br>29.5 மிலியன் ஏக்கர் || 18 மிலியன்
|-
|மின்சார சக்தி<br>29.5 மிலியன் கிலோவாட் || 10.5 மிலியன் கிலோவாட்
|-
|எஃகுப் பொருள் <br>9.2 மிலியன் டன் || 6.6 மிலியன்
|-
|பயிர்ப் பாதுகாப்பு<br>50 மிலியன் ஏக்கர் || 40 மிலியன் ஏக்கர்
|-
|பத்திரிகைத் தாள்<br>1.20 இலட்சம் டன் || 30,000 டன்
|-
|சிமிட்டி<br>13 மிலியன் டன் ||
|-
|நிலக்கரி<br>98.6 மிலியன் டன் ||
|-
|இரும்புக்கனி<br>30 மிலியன் டன் ||
|-
|சர்க்கரை ஆலை யந்திரம்<br>140 கோடி ரூபாய் மதிப்பு ||
|-
|காகித ஆலை யந்திரம் <br> 65 கோடி ரூபாய் மதிப்பு ||
|-
|}
10.4 மிலியன்
66 மிலியன்
16 மலியன் டன்
77 கோடி ரூபாய்
18 கோடி ரூபாய்<noinclude></noinclude>
fqo0lckcgjtl8cqof14i4z6smaa29z5
1928385
1928384
2026-04-30T00:23:12Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ முடிந்தது
1928385
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|316||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{c|{{larger|<b>நிதி ஆண்டு 1965-66</b>}}}}
{|
|-
|<b>திட்டமிட்டது</b> {{gap+|10}} || <b>கிடைத்தது</b> {{gap+|10}}
|-
|விவசாயப் பொருள்<br>100 மிலியன் டன் || 74 மிலியன்
|-
|எண்ணெய் வித்து<br>9.8 மிலியன் டன் || 7 மிலியன்
|-
|சணல் <br>62 இலட்சம் பேல்கள் || 33.6 இலட்சம் பேல்கள்
|-
|பருத்தி<br>70.55 இலட்சம் பேல்கள் || 52.65 இலட்சம் பேல்கள்
|-
|பொறுக்கு விதைத் திட்டம்<br>204 மிலியன் ஏக்கர் || 164 மிலியன் ஏக்கர்
|-
| பாசன வசதி<br>29.5 மிலியன் ஏக்கர் || 18 மிலியன்
|-
|மின்சார சக்தி<br>29.5 மிலியன் கிலோவாட் || 10.5 மிலியன் கிலோவாட்
|-
|எஃகுப் பொருள் <br>9.2 மிலியன் டன் || 6.6 மிலியன்
|-
|பயிர்ப் பாதுகாப்பு<br>50 மிலியன் ஏக்கர் || 40 மிலியன் ஏக்கர்
|-
|பத்திரிகைத் தாள்<br>1.20 இலட்சம் டன் || 30,000 டன்
|-
|சிமிட்டி<br>13 மிலியன் டன் || 10.4 மிலியன்
|-
|நிலக்கரி<br>98.6 மிலியன் டன் || 66 மிலியன்
|-
|இரும்புக்கனி<br>30 மிலியன் டன் || 16 மலியன் டன்
|-
|சர்க்கரை ஆலை யந்திரம்<br>140 கோடி ரூபாய் மதிப்பு || 77 கோடி ரூபாய்
|-
|காகித ஆலை யந்திரம் <br> 65 கோடி ரூபாய் மதிப்பு || 18 கோடி ரூபாய்
|-
|}<noinclude></noinclude>
oxn1qig317ljysb02bo6kgov4m6otlm
1928386
1928385
2026-04-30T00:26:01Z
Info-farmer
232
வார்ப்புரு
1928386
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|316||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{c|{{larger|<b>நிதி ஆண்டு 1965-66</b>}}}}
{|
|-
|<b>திட்டமிட்டது</b> {{gap+|10}} || <b>கிடைத்தது</b> {{gap+|10}}
|-
|விவசாயப் பொருள்<br>100 மிலியன் டன் || 74 மிலியன்
|-
|எண்ணெய் வித்து<br>9.8 மிலியன் டன் || 7 மிலியன்
|-
|சணல் <br>62 இலட்சம் பேல்கள் || 33.6 இலட்சம் பேல்கள்
|-
|பருத்தி<br>70.55 இலட்சம் பேல்கள் || 52.65 இலட்சம் பேல்கள்
|-
|பொறுக்கு விதைத் திட்டம்<br>204 மிலியன் ஏக்கர் || 164 மிலியன் ஏக்கர்
|-
| பாசன வசதி<br>29.5 மிலியன் ஏக்கர் || 18 மிலியன்
|-
|மின்சார சக்தி<br>29.5 மிலியன் கிலோவாட் || 10.5 மிலியன் கிலோவாட்
|-
|எஃகுப் பொருள் <br>9.2 மிலியன் டன் || 6.6 மிலியன்
|-
|பயிர்ப் பாதுகாப்பு<br>50 மிலியன் ஏக்கர் || 40 மிலியன் ஏக்கர்
|-
|பத்திரிகைத் தாள்<br>1.20 இலட்சம் டன் || 30,000 டன்
|-
|சிமிட்டி<br>13 மிலியன் டன் || 10.4 மிலியன்
|-
|நிலக்கரி<br>98.6 மிலியன் டன் || 66 மிலியன்
|-
|இரும்புக்கனி<br>30 மிலியன் டன் || 16 {{SIC|மலியன் டன்|மிலியன் டன்}}
|-
|சர்க்கரை ஆலை யந்திரம்<br>140 கோடி ரூபாய் மதிப்பு || 77 கோடி ரூபாய்
|-
|காகித ஆலை யந்திரம் <br> 65 கோடி ரூபாய் மதிப்பு || 18 கோடி ரூபாய்
|-
|}<noinclude></noinclude>
ot9727xgooblva21qbe3i8q90awkvik
1928387
1928386
2026-04-30T00:28:21Z
Info-farmer
232
{{an
1928387
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|316||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{c|{{larger|<b>நிதி ஆண்டு 1965-66</b>}}}}
{|
|-
|<b>திட்டமிட்டது</b> {{gap+|13}} || <b>கிடைத்தது</b> {{gap+|10}}
|-
|விவசாயப் பொருள்<br>100 மிலியன் டன் || 74 மிலியன்
|-
|எண்ணெய் வித்து<br>9.8 மிலியன் டன் || 7 மிலியன்
|-
|சணல் <br>62 இலட்சம் பேல்கள் || 33.6 இலட்சம் பேல்கள்
|-
|பருத்தி<br>70.55 இலட்சம் பேல்கள் || 52.65 இலட்சம் பேல்கள்
|-
|பொறுக்கு விதைத் திட்டம்<br>204 மிலியன் ஏக்கர் || 164 மிலியன் ஏக்கர்
|-
| பாசன வசதி<br>29.5 மிலியன் ஏக்கர் || 18 மிலியன்
|-
|மின்சார சக்தி<br>29.5 மிலியன் கிலோவாட் || 10.5 மிலியன் கிலோவாட்
|-
|எஃகுப் பொருள் <br>9.2 மிலியன் டன் || 6.6 மிலியன்
|-
|பயிர்ப் பாதுகாப்பு<br>50 மிலியன் ஏக்கர் || 40 மிலியன் ஏக்கர்
|-
|பத்திரிகைத் தாள்<br>1.20 இலட்சம் டன் || 30,000 டன்
|-
|சிமிட்டி<br>13 மிலியன் டன் || 10.4 மிலியன்
|-
|நிலக்கரி<br>98.6 மிலியன் டன் || 66 மிலியன்
|-
|இரும்புக்கனி<br>30 மிலியன் டன் || 16 {{SIC|மலியன் டன்|மிலியன் டன்}}
|-
|சர்க்கரை ஆலை யந்திரம்<br>140 கோடி ரூபாய் மதிப்பு || 77 கோடி ரூபாய்
|-
|காகித ஆலை யந்திரம் <br> 65 கோடி ரூபாய் மதிப்பு || 18 கோடி ரூபாய்
|-
|}<noinclude></noinclude>
fgncvd6g8jh4r5du6udf5irn06b8m0r
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/389
250
639837
1928302
1922174
2026-04-29T13:37:58Z
ஹர்ஷியா பேகம்
15001
1928302
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 367}}</noinclude>மேலும் 8-10-72 அன்று சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தாங்கள் ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப் போவதாகவும், அந்தத் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேறாமற் போகுமானால், அந்தத் தீர்மானத்தைப் பொது மக்கள் முன்னிலையில் வைத்து, மூலைக்கு மூலை பிரச்சாரம் செய்து வெளியில் ஆதரவு திரட்டப் போவதாகவும் பேசியிருக்கிறீர்கள். பொதுக்குழுவில் எந்த ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கும் அதன் உறுப்பினரான யாருக்கும் முழு உரிமை உண்டு. ஆனால், அப்படிக் கொண்டு வரும் தீர்மானம் நிறைவேறாமற் போகுமானால், பொதுக்குழுவின் முடிவுக்குக் கட்டுப்படவோ அடங்கவோ மறுத்து அதே தீர்மானத்தை பொதுமக்களிடையில்-அதாவது கழகத்துக்கு வெளியே-வலியுறுத்துவேன்-ஆதரவு தேடுவேன் என்று பகிரங்கமாகத் தங்களைப் போன்ற முக்கியப் பொறுப்பில் உள்ள தோழர் அறிவிப்பது கழகக் கட்டுப்பாடு-ஒழுங்கு முறை-கழகம் வளர்க்க விரும்பும் ஜனநாயக அடிப்படை ஆகியவைகளைப் புறக்கணிக்கத் துணிந்துவிட்ட செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.
மேலும் இவை போன்று அடிக்கடி தங்களால் கழக நன்மைகளுக்கு எதிராகப் பகிரங்கமாகப் பேசப்பட்டு வரும் கருத்துக்கள், கழகத் தோழர்களிடையில் கட்டுப்பாடு இன்மையும் பொதுமக்களிடையில் கழகத்தைப் பற்றித் தவறான இழிவான எண்ணமும் உருவாக ஏதுவாகிறது என்று தலைமைக் கழகம் கருதுகிறது.
எனவே, இவை போன்ற காரணங்களாலும், கழகத் தோழர்களிடையே குழப்பமும், பொதுமக்களிடையே கழகத்திற்கு இழுக்கும் நேர்வதைத் தடுக்கும் வகையில் தங்களை இன்று முதல் கழகப் பொருளாளர் பொறுப்பு மற்றும் சாதாரண உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக விலக்கி (சஸ்பெண்ட்) வைப்பதுடன் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே தங்களை ஏன் அறவே கழக்கத்திலிருந்து நீக்கக்கூடாது என்பதற்கும் இந்தக் கடிதம் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்குத் தாங்கள் தெரிவிக்க விரும்பும் விளக்க-சமாதானங்களை தெரிவிக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
{{rh|||(ஒ—ம்) இரா. நெடுஞ்செழியன்,<br>பொதுச்செயலாளர். தி.மு.க,}}
{{nop}}<noinclude></noinclude>
6pvabn6sx2byj94o21ctz3wu3eibsbo
1928335
1928302
2026-04-29T14:33:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928335
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 367}}</noinclude>மேலும் 8—10—72 அன்று சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தாங்கள் ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப் போவதாகவும், அந்தத் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேறாமற் போகுமானால், அந்தத் தீர்மானத்தைப் பொது மக்கள் முன்னிலையில் வைத்து, மூலைக்கு மூலை பிரச்சாரம் செய்து வெளியில் ஆதரவு திரட்டப் போவதாகவும் பேசியிருக்கிறீர்கள். பொதுக்குழுவில் எந்த ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கும் அதன் உறுப்பினரான யாருக்கும் முழு உரிமை உண்டு. ஆனால், அப்படிக் கொண்டு வரும் தீர்மானம் நிறைவேறாமற் போகுமானால், பொதுக்குழுவின் முடிவுக்குக் கட்டுப்படவோ அடங்கவோ மறுத்து அதே தீர்மானத்தை பொதுமக்களிடையில்-அதாவது கழகத்துக்கு வெளியே-வலியுறுத்துவேன்-ஆதரவு தேடுவேன் என்று பகிரங்கமாகத் தங்களைப் போன்ற முக்கியப் பொறுப்பில் உள்ள தோழர் அறிவிப்பது கழகக் கட்டுப்பாடு-ஒழுங்கு முறை-கழகம் வளர்க்க விரும்பும் ஜனநாயக அடிப்படை ஆகியவைகளைப் புறக்கணிக்கத் துணிந்துவிட்ட செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.
மேலும் இவை போன்று அடிக்கடி தங்களால் கழக நன்மைகளுக்கு எதிராகப் பகிரங்கமாகப் பேசப்பட்டு வரும் கருத்துக்கள், கழகத் தோழர்களிடையில் கட்டுப்பாடு இன்மையும் பொதுமக்களிடையில் கழகத்தைப் பற்றித் தவறான இழிவான எண்ணமும் உருவாக ஏதுவாகிறது என்று தலைமைக் கழகம் கருதுகிறது.
எனவே, இவை போன்ற காரணங்களாலும், கழகத் தோழர்களிடையே குழப்பமும், பொதுமக்களிடையே கழகத்திற்கு இழுக்கும் நேர்வதைத் தடுக்கும் வகையில் தங்களை இன்று முதல் கழகப் பொருளாளர் பொறுப்பு மற்றும் சாதாரண உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக விலக்கி (சஸ்பெண்ட்) வைப்பதுடன் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே தங்களை ஏன் அறவே கழகத்திலிருந்து நீக்கக்கூடாது என்பதற்கும் இந்தக் கடிதம் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்குத் தாங்கள் தெரிவிக்க விரும்பும் விளக்க-சமாதானங்களை தெரிவிக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
{{rh|||(ஒ—ம்) இரா. நெடுஞ்செழியன்,<br>பொதுச்செயலாளர். தி.மு.க.}}
{{nop}}<noinclude></noinclude>
j3um292de4900y7nzuvpp54mwv2x39l
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/390
250
639959
1928309
1923011
2026-04-29T13:43:06Z
ஹர்ஷியா பேகம்
15001
1928309
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|368 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>முன்கூட்டி அறிவித்திருந்தபடி கழகத்தின் இதயம் போன்று விளங்குகிற செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அக்டோபர் 12-ஆம் நாள் சென்னையில் தொடங்கின. இதற்கிடையே நாஞ்சில் மனோகரன் (நாஞ்சிலார்), முரசொலி மாறன் ஆகிய இருவரும் எம். ஜி. ஆர். அவர்களைச் சந்தித்துக் கழகத்தில் பிளவு ஏற்படுத்தாமல் ஒன்றுபட்டுப் பணியாற்றிட வழி காணுமாறு வலியுறுத்தினார்கள்.
அந்த அடிப்படையில் அக்டோபர் 12 செயற்குழுவில் பேசிய நாஞ்சிலார் அவர்கள், “எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்து தவறுதான் என்றாலும் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றி செயற்குழு யோசிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொண்டு அவ்வாறு எம்.ஜி.ஆர். அவர்கள், செயற்குழுவினரிடமும் பொதுக்குழுவினரிடமும் வருத்தம் தெரிவிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் தரலாம் என்றும் குறிப்பிட்டேன். இறுதியாக செயற்குழு உறுப்பினர்களும் அந்தக் கருத்துக்கு ஒப்புதல் தந்தனர்.
ஆனால்...நடந்தது என்ன?
{{nop}}<noinclude></noinclude>
r7659c1xqh36xfqxyvcy9x08hq5qinu
1928337
1928309
2026-04-29T14:36:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928337
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|368 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>முன்கூட்டி அறிவித்திருந்தபடி கழகத்தின் இதயம் போன்று விளங்குகிற செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அக்டோபர் 12-ஆம் நாள் சென்னையில் தொடங்கின. இதற்கிடையே நாஞ்சில் மனோகரன் (நாஞ்சிலார்), முரசொலி மாறன் ஆகிய இருவரும் எம். ஜி. ஆர். அவர்களைச் சந்தித்துக் கழகத்தில் பிளவு ஏற்படுத்தாமல் ஒன்றுபட்டுப் பணியாற்றிட வழி காணுமாறு வலியுறுத்தினார்கள்.
அந்த அடிப்படையில் அக்டோபர் 12 செயற்குழுவில் பேசிய நாஞ்சிலார் அவர்கள், “எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்து தவறுதான் என்றாலும் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றி செயற்குழு யோசிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொண்டு அவ்வாறு எம்.ஜி.ஆர். அவர்கள், செயற்குழுவினரிடமும் பொதுக்குழுவினரிடமும் வருத்தம் தெரிவிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் தரலாம் என்றும் குறிப்பிட்டேன். இறுதியாக செயற்குழு உறுப்பினர்களும் அந்தக் கருத்துக்கு ஒப்புதல் தந்தனர்.
ஆனால்...நடந்தது என்ன?
{{nop}}<noinclude></noinclude>
4dads7cnl3u4okxa6v2wy6mmltqcb71
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/391
250
639961
1928313
1923013
2026-04-29T13:55:05Z
ஹர்ஷியா பேகம்
15001
1928313
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>51</b>}}
{{larger|<b>வேறு வழியில்லை; விலக்கப்பட்டார்!</b>}}
{{X-larger|<b>அ</b>}}க்டோபர் 13-ஆம் நாள் காலையில் நாஞ்சிலார் என்னை வந்து சந்தித்தார். அப்போது என்னுடனிருந்த கோ. சி. மணி, நாஞ்சிலாரின் சமாதான முயற்சி தேவையில்லையென்று கோபாவேசமாகப் பேசினார். நான் கோ. சி. மணியை அமைதிப் படுத்தினேன். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகி அவரது பட நிறுவனத்தில் முக்கிய பணியாற்றிவந்த ஆர். எம். வீரப்பனும் என்னை வந்து சந்தித்தார். எம்.ஜி.ஆர். போக்கு தவறானது தான் என்பதை ஒப்புக்கொண்ட வீரப்பன், எப்படியும் சமரசத்திற்கு வழி இருக்கிறது என்றார். அப்போது மதுரைமுத்து வந்து விட்டார். அவர் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். நான் மிகச் சிரமப்பட்டு அமைதியை ஏற்படுத்தி, நாஞ்சிலாரிடத்திலும் வீரப்பனிடத்திலும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பேசி சமரச முயற்சியில் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சிதான்; வரவேற்கிறேன் என்று கூறினேன்.
அன்று பிற்பகல் நாஞ்சிலார், முரசொலி மாறனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் சென்று எம். ஜி. ஆர். அவர்களைச் சந்தித்தால் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார். மாறன், என்னிடம் கருத்து கேட்கவே-நானும் அதற்கு ஒப்புதல் அளித்தேன். இருவரும் சென்று எம்.ஜி.ஆரிடம் பேசினார்கள். வலிமை பெற்றுத் திகழ்கிற ஒரு பெரும் இயக்கத்தைப் பிளந்து சீர்குலைத்துவிடக் கூடாதென்று இருவரும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இறுதியாகத் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொதுச்செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுவதாக எம். ஜி. ஆர். ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்படியொரு கடிதம் எழுதத் தொடங்குவதற்குள் தொலைபேசி மணி அடித்திருக்கிறது. எம். ஜி. ஆர். எடுத்துப் பேசியிருக்கிறார். யார் பேசினார்கள்; என்ன பேசினார்கள் என்று தெரியாது! அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்! மறுமுனையில் இருந்தவர்கள் சமரச முயற்சியை முறித்துவிட்டார்கள் என்பதும் எம்.ஜி.ஆரைத் தங்கள் வலையிலிருந்து மீளவொட்டாமல்<noinclude>நெ.—24</noinclude>
938yk1hiub44fb2kj2e7sd37dpgdrnr
1928314
1928313
2026-04-29T13:55:29Z
ஹர்ஷியா பேகம்
15001
1928314
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>51</b>}}
{{larger|<b>வேறு வழியில்லை; விலக்கப்பட்டார்!</b>}}
{{X-larger|<b>அ</b>}}க்டோபர் 13-ஆம் நாள் காலையில் நாஞ்சிலார் என்னை வந்து சந்தித்தார். அப்போது என்னுடனிருந்த கோ. சி. மணி, நாஞ்சிலாரின் சமாதான முயற்சி தேவையில்லையென்று கோபாவேசமாகப் பேசினார். நான் கோ. சி. மணியை அமைதிப் படுத்தினேன். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகி அவரது பட நிறுவனத்தில் முக்கிய பணியாற்றிவந்த ஆர். எம். வீரப்பனும் என்னை வந்து சந்தித்தார். எம்.ஜி.ஆர். போக்கு தவறானது தான் என்பதை ஒப்புக்கொண்ட வீரப்பன், எப்படியும் சமரசத்திற்கு வழி இருக்கிறது என்றார். அப்போது மதுரைமுத்து வந்து விட்டார். அவர் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். நான் மிகச் சிரமப்பட்டு அமைதியை ஏற்படுத்தி, நாஞ்சிலாரிடத்திலும் வீரப்பனிடத்திலும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பேசி சமரச முயற்சியில் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சிதான்; வரவேற்கிறேன் என்று கூறினேன்.
அன்று பிற்பகல் நாஞ்சிலார், முரசொலி மாறனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் சென்று எம். ஜி. ஆர். அவர்களைச் சந்தித்தால் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார். மாறன், என்னிடம் கருத்து கேட்கவே-நானும் அதற்கு ஒப்புதல் அளித்தேன். இருவரும் சென்று எம்.ஜி.ஆரிடம் பேசினார்கள். வலிமை பெற்றுத் திகழ்கிற ஒரு பெரும் இயக்கத்தைப் பிளந்து சீர்குலைத்துவிடக் கூடாதென்று இருவரும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இறுதியாகத் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொதுச்செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுவதாக எம். ஜி. ஆர். ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்படியொரு கடிதம் எழுதத் தொடங்குவதற்குள் தொலைபேசி மணி அடித்திருக்கிறது. எம். ஜி. ஆர். எடுத்துப் பேசியிருக்கிறார். யார் பேசினார்கள்; என்ன பேசினார்கள் என்று தெரியாது! அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்! மறுமுனையில் இருந்தவர்கள் சமரச முயற்சியை முறித்துவிட்டார்கள் என்பதும் எம்.ஜி.ஆரைத் தங்கள் வலையிலிருந்து மீளவொட்டாமல்<noinclude>
நெ.—24</noinclude>
i55zrp4pdce15ceah8gg5qy5tbf38bg
1928315
1928314
2026-04-29T13:56:49Z
ஹர்ஷியா பேகம்
15001
1928315
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>51</b>}}
{{larger|<b>{{c|வேறு வழியில்லை; விலக்கப்பட்டார்!}}</b>}}
{{X-larger|<b>அ</b>}}க்டோபர் 13-ஆம் நாள் காலையில் நாஞ்சிலார் என்னை வந்து சந்தித்தார். அப்போது என்னுடனிருந்த கோ. சி. மணி, நாஞ்சிலாரின் சமாதான முயற்சி தேவையில்லையென்று கோபாவேசமாகப் பேசினார். நான் கோ. சி. மணியை அமைதிப் படுத்தினேன். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகி அவரது பட நிறுவனத்தில் முக்கிய பணியாற்றிவந்த ஆர். எம். வீரப்பனும் என்னை வந்து சந்தித்தார். எம்.ஜி.ஆர். போக்கு தவறானது தான் என்பதை ஒப்புக்கொண்ட வீரப்பன், எப்படியும் சமரசத்திற்கு வழி இருக்கிறது என்றார். அப்போது மதுரைமுத்து வந்து விட்டார். அவர் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். நான் மிகச் சிரமப்பட்டு அமைதியை ஏற்படுத்தி, நாஞ்சிலாரிடத்திலும் வீரப்பனிடத்திலும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பேசி சமரச முயற்சியில் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சிதான்; வரவேற்கிறேன் என்று கூறினேன்.
அன்று பிற்பகல் நாஞ்சிலார், முரசொலி மாறனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் சென்று எம். ஜி. ஆர். அவர்களைச் சந்தித்தால் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார். மாறன், என்னிடம் கருத்து கேட்கவே-நானும் அதற்கு ஒப்புதல் அளித்தேன். இருவரும் சென்று எம்.ஜி.ஆரிடம் பேசினார்கள். வலிமை பெற்றுத் திகழ்கிற ஒரு பெரும் இயக்கத்தைப் பிளந்து சீர்குலைத்துவிடக் கூடாதென்று இருவரும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இறுதியாகத் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொதுச்செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுவதாக எம். ஜி. ஆர். ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்படியொரு கடிதம் எழுதத் தொடங்குவதற்குள் தொலைபேசி மணி அடித்திருக்கிறது. எம். ஜி. ஆர். எடுத்துப் பேசியிருக்கிறார். யார் பேசினார்கள்; என்ன பேசினார்கள் என்று தெரியாது! அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்! மறுமுனையில் இருந்தவர்கள் சமரச முயற்சியை முறித்துவிட்டார்கள் என்பதும் எம்.ஜி.ஆரைத் தங்கள் வலையிலிருந்து மீளவொட்டாமல்<noinclude>
நெ.—24</noinclude>
g3a0xxsjo7d76dex6bshc268cl64206
1928316
1928315
2026-04-29T13:57:05Z
ஹர்ஷியா பேகம்
15001
1928316
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>51</b>}}
{{larger|<b>{{c|வேறு வழியில்லை; விலக்கப்பட்டார்!}}</b>}}
{{X-larger|<b>அ</b>}}க்டோபர் 13-ஆம் நாள் காலையில் நாஞ்சிலார் என்னை வந்து சந்தித்தார். அப்போது என்னுடனிருந்த கோ. சி. மணி, நாஞ்சிலாரின் சமாதான முயற்சி தேவையில்லையென்று கோபாவேசமாகப் பேசினார். நான் கோ. சி. மணியை அமைதிப் படுத்தினேன். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகி அவரது பட நிறுவனத்தில் முக்கிய பணியாற்றிவந்த ஆர். எம். வீரப்பனும் என்னை வந்து சந்தித்தார். எம்.ஜி.ஆர். போக்கு தவறானது தான் என்பதை ஒப்புக்கொண்ட வீரப்பன், எப்படியும் சமரசத்திற்கு வழி இருக்கிறது என்றார். அப்போது மதுரைமுத்து வந்து விட்டார். அவர் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். நான் மிகச் சிரமப்பட்டு அமைதியை ஏற்படுத்தி, நாஞ்சிலாரிடத்திலும் வீரப்பனிடத்திலும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பேசி சமரச முயற்சியில் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சிதான்; வரவேற்கிறேன் என்று கூறினேன்.
அன்று பிற்பகல் நாஞ்சிலார், முரசொலி மாறனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் சென்று எம். ஜி. ஆர். அவர்களைச் சந்தித்தால் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார். மாறன், என்னிடம் கருத்து கேட்கவே-நானும் அதற்கு ஒப்புதல் அளித்தேன். இருவரும் சென்று எம்.ஜி.ஆரிடம் பேசினார்கள். வலிமை பெற்றுத் திகழ்கிற ஒரு பெரும் இயக்கத்தைப் பிளந்து சீர்குலைத்துவிடக் கூடாதென்று இருவரும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இறுதியாகத் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொதுச்செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுவதாக எம். ஜி. ஆர். ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்படியொரு கடிதம் எழுதத் தொடங்குவதற்குள் தொலைபேசி மணி அடித்திருக்கிறது. எம். ஜி. ஆர். எடுத்துப் பேசியிருக்கிறார். யார் பேசினார்கள்; என்ன பேசினார்கள் என்று தெரியாது! அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்! மறுமுனையில் இருந்தவர்கள் சமரச முயற்சியை முறித்துவிட்டார்கள் என்பதும் எம்.ஜி.ஆரைத் தங்கள் வலையிலிருந்து மீளவொட்டாமல்<noinclude>
நெ.—24</noinclude>
2shtao0s8oa5xbgfed9oyym4tm9vyxw
1928317
1928316
2026-04-29T13:57:28Z
ஹர்ஷியா பேகம்
15001
1928317
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>51</b>}}
{{larger|<b>{{c|வேறு வழியில்லை; விலக்கப்பட்டார்!}}</b>}}
{{X-larger|<b>அ</b>}}க்டோபர் 13-ஆம் நாள் காலையில் நாஞ்சிலார் என்னை வந்து சந்தித்தார். அப்போது என்னுடனிருந்த கோ. சி. மணி, நாஞ்சிலாரின் சமாதான முயற்சி தேவையில்லையென்று கோபாவேசமாகப் பேசினார். நான் கோ. சி. மணியை அமைதிப் படுத்தினேன். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகி அவரது பட நிறுவனத்தில் முக்கிய பணியாற்றிவந்த ஆர். எம். வீரப்பனும் என்னை வந்து சந்தித்தார். எம்.ஜி.ஆர். போக்கு தவறானது தான் என்பதை ஒப்புக்கொண்ட வீரப்பன், எப்படியும் சமரசத்திற்கு வழி இருக்கிறது என்றார். அப்போது மதுரைமுத்து வந்து விட்டார். அவர் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். நான் மிகச் சிரமப்பட்டு அமைதியை ஏற்படுத்தி, நாஞ்சிலாரிடத்திலும் வீரப்பனிடத்திலும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பேசி சமரச முயற்சியில் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சிதான்; வரவேற்கிறேன் என்று கூறினேன்.
அன்று பிற்பகல் நாஞ்சிலார், முரசொலி மாறனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் சென்று எம். ஜி. ஆர். அவர்களைச் சந்தித்தால் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார். மாறன், என்னிடம் கருத்து கேட்கவே-நானும் அதற்கு ஒப்புதல் அளித்தேன். இருவரும் சென்று எம்.ஜி.ஆரிடம் பேசினார்கள். வலிமை பெற்றுத் திகழ்கிற ஒரு பெரும் இயக்கத்தைப் பிளந்து சீர்குலைத்துவிடக் கூடாதென்று இருவரும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இறுதியாகத் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொதுச்செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுவதாக எம். ஜி. ஆர். ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்படியொரு கடிதம் எழுதத் தொடங்குவதற்குள் தொலைபேசி மணி அடித்திருக்கிறது. எம். ஜி. ஆர். எடுத்துப் பேசியிருக்கிறார். யார் பேசினார்கள்; என்ன பேசினார்கள் என்று தெரியாது! அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்! மறுமுனையில் இருந்தவர்கள் சமரச முயற்சியை முறித்துவிட்டார்கள் என்பதும் எம்.ஜி.ஆரைத் தங்கள் வலையிலிருந்து மீளவொட்டாமல்<noinclude>
நெ.—24</noinclude>
g3a0xxsjo7d76dex6bshc268cl64206
1928339
1928317
2026-04-29T14:40:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928339
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>51</b>}}
{{larger|<b>{{c|வேறு வழியில்லை; விலக்கப்பட்டார்!}}</b>}}
{{X-larger|<b>அ</b>}}க்டோபர் 13-ஆம் நாள் காலையில் நாஞ்சிலார் என்னை வந்து சந்தித்தார். அப்போது என்னுடனிருந்த கோ. சி. மணி, நாஞ்சிலாரின் சமாதான முயற்சி தேவையில்லையென்று கோபாவேசமாகப் பேசினார். நான் கோ. சி. மணியை அமைதிப்படுத்தினேன். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகி அவரது பட நிறுவனத்தில் முக்கிய பணியாற்றிவந்த ஆர். எம். வீரப்பனும் என்னை வந்து சந்தித்தார். எம்.ஜி.ஆர். போக்கு தவறானது தான் என்பதை ஒப்புக்கொண்ட வீரப்பன், எப்படியும் சமரசத்திற்கு வழி இருக்கிறது என்றார். அப்போது மதுரைமுத்து வந்து விட்டார். அவர் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். நான் மிகச் சிரமப்பட்டு அமைதியை ஏற்படுத்தி, நாஞ்சிலாரிடத்திலும் வீரப்பனிடத்திலும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பேசி சமரச முயற்சியில் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சிதான்; வரவேற்கிறேன் என்று கூறினேன்.
அன்று பிற்பகல் நாஞ்சிலார், முரசொலி மாறனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் சென்று எம். ஜி. ஆர். அவர்களைச் சந்தித்தால் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார். மாறன், என்னிடம் கருத்து கேட்கவே-நானும் அதற்கு ஒப்புதல் அளித்தேன். இருவரும் சென்று எம்.ஜி.ஆரிடம் பேசினார்கள். வலிமை பெற்றுத் திகழ்கிற ஒரு பெரும் இயக்கத்தைப் பிளந்து சீர்குலைத்துவிடக் கூடாதென்று இருவரும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இறுதியாகத் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொதுச்செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுவதாக எம். ஜி. ஆர். ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்படியொரு கடிதம் எழுதத் தொடங்குவதற்குள் தொலைபேசி மணி அடித்திருக்கிறது. எம். ஜி. ஆர். எடுத்துப் பேசியிருக்கிறார். யார் பேசினார்கள்; என்ன பேசினார்கள் என்று தெரியாது! அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்! மறுமுனையில் இருந்தவர்கள் சமரச முயற்சியை முறித்துவிட்டார்கள் என்பதும் எம்.ஜி.ஆரைத் தங்கள் வலையிலிருந்து மீளவொட்டாமல்<noinclude>
நெ.—24</noinclude>
q9x1pxx0wjwrdz9334rqt4jryw5u7ja
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/392
250
639962
1928328
1923014
2026-04-29T14:15:10Z
ஹர்ஷியா பேகம்
15001
1928328
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|370 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>ஆக்கிவிட்டார்கள் என்பதும் அடுத்த விநாடியே நாஞ்சிலாருக்கும், முரசொலி மாறனுக்கும் புரிந்துவிட்டது.
தொலைபேசி ரிசீவரைக் கீழே வைத்தவுடன் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் நாவலருக்கோ அல்லது செயற்குழு பொதுக்குழுவுக்கோ வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தைத் தர இயலாது என்றும் நடந்தது நடந்ததுதான் என்றும் மறு பரிசீலனைக்கே இடமில்லையென்றும் இருவரிடமும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஒரு நொடியில் எண்ணத்தை மாற்றிக் கொண்ட எம். ஜி. ஆரின் செயலைக் கண்டு வியப்பும் வேதனையு முற்ற நாஞ்சிலாரும் மாறனும் நேரே செயற்குழுவுக்கு வந்து நடந்ததை விளக்கினார்கள்.
வேறு வழியில்லாமல் கழகக் கட்டுப்பாடு காக்கும் நோக்கத்துடன் செயற்குழு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது:
“கழக நலனுக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் வருத்தம் தெரிவித்து கழகம் பணியில் ஈடுபட வாய்ப்பு அளித்தும்கூட, அவர் அதனைப் பயன்படுத்திக்கொள்ளாதது வருந்தத்தக்கதாகும். எனவே அவர், கழகத்தின் ஒழுங்குமுறைகள் குலையும் அளவுக்கு நடந்து கொண்டதற்காக பொதுச்செயலாளர் அவர் மீது கழகசட்ட திட்டவிதி 31-ன்படி எடுத்துள்ள நடவடிக்கையை இந்தச் செயற்குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டு இந்தத் தீர்மானத்தைப் பொதுக்குழுவுக்குப் பரிந்துரை செய்கிறது.”
மறுநாள், பொதுக்குழு கூடியது. அன்று காலை பெரியார் அவர்கள் அளித்திருந்த செய்தியாளர் பேட்டியொன்று தினமணி முதலிய ஏடுகளில் வெளிவந்திருந்தது. அந்தச் செய்தியில் பெரியார் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது:
“நேற்று (12-10-72) என்னைச் சந்தித்த சில பிரமுகர்கள் நான் தலையிட்டு சமரச முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். அதன்பேரில் நான் எம். ஜி. ஆரைக்கூப்பிட்டு அனுப்பினேன். அவர் இன்று காலை (13-10-72) ஒன்பது மணிக்கு என்னை வந்து சந்தித்தார். “பிறர் பரிகாசம் செய்வார்களே; இது ஏன் இப்படி நடந்தது? நடக்கலாமா?” என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். “என்மீது தவறு இல்லை. தி. மு. க. தலைமைதான் சரியாக நடந்து கொள்ளவில்லை” என்று அவர் பதில் சொன்னார். “பொது மேடையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி நீங்கள் பேசியது சரியல்ல என்றுதான் நானும் கருது-<noinclude></noinclude>
jg9n94bwvt3pgfntp7bwuvbvrflfm9y
1928341
1928328
2026-04-29T14:43:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928341
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|370 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>ஆக்கிவிட்டார்கள் என்பதும் அடுத்த விநாடியே நாஞ்சிலாருக்கும், முரசொலி மாறனுக்கும் புரிந்துவிட்டது.
தொலைபேசி ரிசீவரைக் கீழே வைத்தவுடன் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் நாவலருக்கோ அல்லது செயற்குழு பொதுக்குழுவுக்கோ வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தைத் தர இயலாது என்றும் நடந்தது நடந்ததுதான் என்றும் மறுபரிசீலனைக்கே இடமில்லையென்றும் இருவரிடமும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஒரு நொடியில் எண்ணத்தை மாற்றிக் கொண்ட எம். ஜி. ஆரின் செயலைக் கண்டு வியப்பும் வேதனையுமுற்ற நாஞ்சிலாரும் மாறனும் நேரே செயற்குழுவுக்கு வந்து நடந்ததை விளக்கினார்கள்.
வேறு வழியில்லாமல் கழகக் கட்டுப்பாடு காக்கும் நோக்கத்துடன் செயற்குழு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது:
“கழக நலனுக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் வருத்தம் தெரிவித்து கழகம் பணியில் ஈடுபட வாய்ப்பு அளித்தும்கூட, அவர் அதனைப் பயன்படுத்திக்கொள்ளாதது வருந்தத்தக்கதாகும். எனவே அவர், கழகத்தின் ஒழுங்குமுறைகள் குலையும் அளவுக்கு நடந்து கொண்டதற்காக பொதுச்செயலாளர் அவர் மீது கழகசட்ட திட்டவிதி 31-ன்படி எடுத்துள்ள நடவடிக்கையை இந்தச் செயற்குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டு இந்தத் தீர்மானத்தைப் பொதுக்குழுவுக்குப் பரிந்துரை செய்கிறது.”
மறுநாள், பொதுக்குழு கூடியது. அன்று காலை பெரியார் அவர்கள் அளித்திருந்த செய்தியாளர் பேட்டியொன்று தினமணி முதலிய ஏடுகளில் வெளிவந்திருந்தது. அந்தச் செய்தியில் பெரியார் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது:
“நேற்று (12-10-72) என்னைச் சந்தித்த சில பிரமுகர்கள் நான் தலையிட்டு சமரச முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். அதன்பேரில் நான் எம். ஜி. ஆரைக்கூப்பிட்டு அனுப்பினேன். அவர் இன்று காலை (13-10-72) ஒன்பது மணிக்கு என்னை வந்து சந்தித்தார். “பிறர் பரிகாசம் செய்வார்களே; இது ஏன் இப்படி நடந்தது? நடக்கலாமா?” என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். “என்மீது தவறு இல்லை. தி. மு. க. தலைமைதான் சரியாக நடந்து கொள்ளவில்லை” என்று அவர் பதில் சொன்னார். “பொது மேடையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி நீங்கள் பேசியது சரியல்ல என்றுதான் நானும் கருது-<noinclude></noinclude>
h7t6i677a4jdkfjvyh3y4paagildh17
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/393
250
639963
1928340
1923015
2026-04-29T14:40:30Z
ஹர்ஷியா பேகம்
15001
1928340
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 371}}</noinclude>கிறேன். கட்சிக் கட்டுப்பாடு, ஆட்சி நலன் கருதியாவது நீங்கள் சொன்னதை வாபஸ் பெற்று வருத்தம் தெரிவிப்பது நல்லது என்பதே என் அனுபவம். அப்படிச் செய்யுங்கள்!” என்று எம். ஜி. ஆருக்கு நான் அறிவுரை கூறினேன். அவர், தன்னுடைய நிலையை விளக்கி, என்னுடைய யோசனையை நண்பர்களுடன் கலந்து பேசி ஆலோசித்து முடிவு செய்வதாக பதில் சொல்லிவிட்டுச் சென்றார். எம். ஜி. ஆரிடம் என் யோசனையைக் கண்டிப்பாகவே நான் சொன்னேன். ஏன் தகராறு செய்து கொள்கிறீர்கள் என்று கேட்டேன். தாமிரப்பத்திர விருதை என்னிடம் நேரில் வழங்குவதற்காக முதலமைச்சர், இன்று காலை 11 மணிக்கு என்னைச் சந்தித்தார். கட்சி ஒற்றுமை, ஆட்சி நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்சி பிளவு படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். என் யோசனையை அவர் ஏற்றுக்கொண்டார்.”
பெரியார் அவர்களின் இந்த அறிவிப்பு அக்டோபர் 14 -ந் தேதி ஏடுகளில் வருவதற்கு முன்பு 13-ந் தேதி அவர் என்னிடம் நேரில் கூறியவாறுதான் நாஞ்சிலாரையும் மாறனையும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் சமரச முயற்சியில் ஈடுபடுவதற்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் எடுத்த முயற்சி இறுதிக் கட்டத்தில் எப்படித் திசை மாறிக் கவிழ்ந்தது என்பது குறித்து செயற்குழுவில் இருவரும் அறிவித்தார்கள்.
செயற்குழுவைத் தொடர்ந்து மறுநாள் பொதுக்குழு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எம்.ஜி.ஆர் கூறியதாக ஒரு செய்தி “சுதேசமித்திரன்” தினசரி இதழில் வெளியாகியிருந்தது. “கழகத்திலிருந்து நிரந்தரமாகத் தன்னை நீக்கினால் தி.மு.க. தலைவர்களின் ஊழல்கள் அம்பலமாகும்” என்று எம். ஜி. ஆர். அறிவித்ததாக அந்தச் செய்திக்கு தலைப்பு தரப்பட்டிருந்தது.
அந்தச் செய்திக்குத் தன்னுடைய மறுப்பைத் தந்தி மூலம் அந்தப் பத்திரிகைக்கு எம். ஜி. ஆர். தெரிவித்துவிட்டு, அந்தத் தந்தியின் பிரதிகளை எனக்கும் நாவலருக்கும் அனுப்பியிருந்தார்.
அந்தத் தந்தியாவது, “தங்கள் பத்திரிகையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் பக்கத் தலைப்பையும் அதற்குரிய செய்தியையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கழகத் தலைவர்களைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ, கழக உறுப்பினர்-<noinclude></noinclude>
ggroitdj6kxr9fs8k0cnz0fpmyh6afm
1928344
1928340
2026-04-29T14:46:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928344
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 371}}</noinclude>கிறேன். கட்சிக் கட்டுப்பாடு, ஆட்சி நலன் கருதியாவது நீங்கள் சொன்னதை வாபஸ் பெற்று வருத்தம் தெரிவிப்பது நல்லது என்பதே என் அனுபவம். அப்படிச் செய்யுங்கள்!” என்று எம். ஜி. ஆருக்கு நான் அறிவுரை கூறினேன். அவர், தன்னுடைய நிலையை விளக்கி, என்னுடைய யோசனையை நண்பர்களுடன் கலந்து பேசி ஆலோசித்து முடிவு செய்வதாக பதில் சொல்லிவிட்டுச் சென்றார். எம். ஜி. ஆரிடம் என் யோசனையைக் கண்டிப்பாகவே நான் சொன்னேன். ஏன் தகராறு செய்து கொள்கிறீர்கள் என்று கேட்டேன். தாமிரப்பத்திர விருதை என்னிடம் நேரில் வழங்குவதற்காக முதலமைச்சர், இன்று காலை 11 மணிக்கு என்னைச் சந்தித்தார். கட்சி ஒற்றுமை, ஆட்சி நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்சி பிளவுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். என் யோசனையை அவர் ஏற்றுக்கொண்டார்.”
பெரியார் அவர்களின் இந்த அறிவிப்பு அக்டோபர் 14 -ந் தேதி ஏடுகளில் வருவதற்கு முன்பு 13-ந் தேதி அவர் என்னிடம் நேரில் கூறியவாறுதான் நாஞ்சிலாரையும் மாறனையும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் சமரச முயற்சியில் ஈடுபடுவதற்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் எடுத்த முயற்சி இறுதிக் கட்டத்தில் எப்படித் திசை மாறிக் கவிழ்ந்தது என்பது குறித்து செயற்குழுவில் இருவரும் அறிவித்தார்கள்.
செயற்குழுவைத் தொடர்ந்து மறுநாள் பொதுக்குழு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எம்.ஜி.ஆர் கூறியதாக ஒரு செய்தி “சுதேசமித்திரன்” தினசரி இதழில் வெளியாகியிருந்தது. “கழகத்திலிருந்து நிரந்தரமாகத் தன்னை நீக்கினால் தி.மு.க. தலைவர்களின் ஊழல்கள் அம்பலமாகும்” என்று எம். ஜி. ஆர். அறிவித்ததாக அந்தச் செய்திக்கு தலைப்பு தரப்பட்டிருந்தது.
அந்தச் செய்திக்குத் தன்னுடைய மறுப்பைத் தந்தி மூலம் அந்தப் பத்திரிகைக்கு எம். ஜி. ஆர். தெரிவித்துவிட்டு, அந்தத் தந்தியின் பிரதிகளை எனக்கும் நாவலருக்கும் அனுப்பியிருந்தார்.
அந்தத் தந்தியாவது, “தங்கள் பத்திரிகையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் பக்கத் தலைப்பையும் அதற்குரிய செய்தியையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கழகத் தலைவர்களைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ, கழக உறுப்பினர்-<noinclude></noinclude>
fakrgif00085klg83300blqm1zehhzk
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/394
250
639964
1928370
1923016
2026-04-29T19:46:03Z
ஹர்ஷியா பேகம்
15001
1928370
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|372 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>களைப் பற்றியோ நான் அவ்வாறு கூறவில்லை. உடனடியாக இதர ஏடுகள் வெளியிட்டதுபோல் நான் சொன்னதைப்பற்றி சரியான செய்தியை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
இதிலிருந்து என்ன புரிகிறது? மதுரை மாநாட்டில் அவர் பேசிய போதும், கடைசியாக “சுதேசமித்திரன்” செய்திக்கு மறுப்பு தெரிவித்தபோதும் தி. மு. க. வில் ஊழல் என்பதற்காக அவர் இப்படியெல்லாம் கட்டுப்பாடு கடந்து நடக்கவில்லை யென்பதும், அவரது சொந்த விவகாரங்கள் காரணமாக ஆட்டு விக்கப்பட்டார் என்பதும், அதனால் ஏற்பட்ட விளைவுகள்தான் அவரது முரண்பட்ட நடவடிக்கைகள் என்பதும் தெளிவாகிவிட்டன!
எம். ஜி. ஆர். மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு செயற்குழு நிறைவேற்றிய பரிந்துரைத் தீர்மானம் பொதுக்குழுவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மொத்தம் 310 பொதுக்குழு உறுப்பினர்களில் கூட்டத்தில் கலந்து கொண்டோர் 277 உறுப்பினர்கள்! அந்த 277 உறுப்பினர்களும் செயற்குழுவின் முடிவை ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றினர்.
அந்த நிகழ்ச்சி குறித்து யு.என்.ஐ. என்ற செய்தி நிறுவனம் பின்வருமாறு செய்தி வெளியிட்டது:
“எம்.ஜி.ஆர். மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்திற்கு 310 பேர்களைக் கொண்ட பொதுக்குழுவில் இன்று வந்திருந்த 277 பேர்களில் எதிர்ப்புக் குரல் ஒன்றுகூட எழவில்லையென்பது பார்வையாளர்களுக்கு வியப்பாக இருந்தது.”
இப்படி ஜனநாயக முறைப்படி ஒரு கட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, எம்.ஜி.ஆர் பெயரால் உள்ள மன்றத்தினர் ஆங்காங்கு அராஜகம் நடத்திடத் தூண்டிவிடப்பட்டனர். பஸ்கள், லாரிகள் வழிமறிக்கப்பட்டன. கொளுத்தப்பட்டன. பயணிகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்தச் செய்திகளையெல்லாம் கேள்வியுற்று அக்டோபர் 14-ஆம் நாள் விழுப்புரத்தில் பேசிய பெரியார் அவர்கள்;
“சினிமாக்காரர்கள், ரசிகர்கள் என்ற பெயரால் இப்படி ரகளை செய்கிறார்கள். இதுமாதிரி நடக்குமென்று நான் முன்பே கூறியிருக்கிறேன். தி.மு.க.வில் வெளி ஆட்களால் ரகளை வராது உள்ளேயிருப்பவர்களால்தான் வருமென்று கூறியிருக்கிறேன். சமரசமாகப் போங்கள் என்று எவ்வளவோ கூறினேன்.<noinclude></noinclude>
ihxvrrara1cv7cnwz6ztowhg6jjyp4k
1928391
1928370
2026-04-30T03:20:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928391
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|372 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>களைப் பற்றியோ நான் அவ்வாறு கூறவில்லை. உடனடியாக இதர ஏடுகள் வெளியிட்டதுபோல் நான் சொன்னதைப்பற்றி சரியான செய்தியை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
இதிலிருந்து என்ன புரிகிறது? மதுரை மாநாட்டில் அவர் பேசிய போதும், கடைசியாக “சுதேசமித்திரன்” செய்திக்கு மறுப்பு தெரிவித்தபோதும் தி. மு. க. வில் ஊழல் என்பதற்காக அவர் இப்படியெல்லாம் கட்டுப்பாடு கடந்து நடக்கவில்லை யென்பதும், அவரது சொந்த விவகாரங்கள் காரணமாக ஆட்டுவிக்கப்பட்டார் என்பதும், அதனால் ஏற்பட்ட விளைவுகள்தான் அவரது முரண்பட்ட நடவடிக்கைகள் என்பதும் தெளிவாகிவிட்டன!
எம். ஜி. ஆர். மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு செயற்குழு நிறைவேற்றிய பரிந்துரைத் தீர்மானம் பொதுக்குழுவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மொத்தம் 310 பொதுக்குழு உறுப்பினர்களில் கூட்டத்தில் கலந்து கொண்டோர் 277 உறுப்பினர்கள்! அந்த 277 உறுப்பினர்களும் செயற்குழுவின் முடிவை ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றினர்.
அந்த நிகழ்ச்சி குறித்து யு.என்.ஐ. என்ற செய்தி நிறுவனம் பின்வருமாறு செய்தி வெளியிட்டது:
“எம்.ஜி.ஆர். மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்திற்கு 310 பேர்களைக் கொண்ட பொதுக்குழுவில் இன்று வந்திருந்த 277 பேர்களில் எதிர்ப்புக் குரல் ஒன்றுகூட எழவில்லையென்பது பார்வையாளர்களுக்கு வியப்பாக இருந்தது.”
இப்படி ஜனநாயக முறைப்படி ஒரு கட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, எம்.ஜி.ஆர் பெயரால் உள்ள மன்றத்தினர் ஆங்காங்கு அராஜகம் நடத்திடத் தூண்டிவிடப்பட்டனர். பஸ்கள், லாரிகள் வழிமறிக்கப்பட்டன. கொளுத்தப்பட்டன. பயணிகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்தச் செய்திகளையெல்லாம் கேள்வியுற்று அக்டோபர் 14-ஆம் நாள் விழுப்புரத்தில் பேசிய பெரியார் அவர்கள்;
“சினிமாக்காரர்கள், ரசிகர்கள் என்ற பெயரால் இப்படி ரகளை செய்கிறார்கள். இதுமாதிரி நடக்குமென்று நான் முன்பே கூறியிருக்கிறேன். தி.மு.க.வில் வெளி ஆட்களால் ரகளை வராது உள்ளேயிருப்பவர்களால்தான் வருமென்று கூறியிருக்கிறேன். சமரசமாகப் போங்கள் என்று எவ்வளவோ கூறினேன்.<noinclude></noinclude>
ksk43b5obwm67cb84gr7nyzli8mrd0v
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/395
250
639965
1928371
1923017
2026-04-29T20:17:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1928371
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 373}}</noinclude>முடியாது என்று எம்.ஜி.ஆர். கூறிவிட்டார். கண்ணீரும் செந்நீரும் கொட்டி வளர்த்த கழகக் கொடிகளையெல்லாம் ரசிகர்கள் அசிங்சப்படுத்துவது கேவலமான செயலாகும். இந்த நேரத்தில் அனைவரும் தி.மு.கழகத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் தி.மு.கழகத்தை ஏன் ஆதரிக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்! சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை முடிந்த வரையில் செயல்படுத்தி வருகிறார்கள். அதற்காகத்தான் அவர்களை ஆதரிக்கிறேன். கழக அரசு, பலவிதங்களில் ஏழைகளுக்கு நன்மை செய்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு இந்த அரசு தேவையான அளவு செய்து வருகிறது”
என்று உணர்ச்சிகரமாக உரையாற்றினார். அக்டோபர் 15-ஆம் நாள் சென்னைக் கடற்கரையில் பொதுக்குழு முடிவுகளை விளக்கி, பொதுச் செயலாளர் நாவலர் தலைமையில் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆற்றிய தலைமை உரையின் சுருக்கம் இதோ:
“எம். ஜி. ஆர். அவர்கள் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தாலேதான் மிக வருத்தத்தோடு அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.
சாதாரணமானவர்கள் கட்டுப்பாட்டை மீறினால் கூப்பிட்டுப் பேசியே சரிசெய்து விடலாம். கழகத்தின் முக்கியப் பொறுப்பிலே இருக்கிற எம். ஜி. ஆர். கட்டுப்பாட்டை மீறினால் கழகத்தின் நாணயத்தை - லட்சோப லட்சம் தொண்டர்களின் நல்லுழைப்பை மற்றவர்கள் எப்படி நினைப்பார்கள் என்பதால் தான் நடவடிக்கை எடுத்தோம்.
ஒரு குவளை தண்ணீர் வெதும்பினால் அண்டா தண்ணீரை ஊற்றலாம். அண்டா தண்ணீர் வெதும்பினால் குளத்து நீரை ஊற்றலாம்; குளமே வெதும்பினால் கடல் தண்ணீரை ஊற்றலாம். கடல் தண்ணீரே வெதும்பினால்?
கட்டுப்பாட்டை மீறுவோர் யாரானாலும் கழகம் நடவடிக்கை எடுக்கும். இவர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்றவர்களுக்கு ஒரு நீதி? எங்களுக்கு ஒரு நீதியா என்று கேட்கமாட்டார்களா?
ஒரு கணவனும் மனைவியும் நடுரோட்டிலே இதைத்தான் பேசலாம்—வீட்டுக்குள்ளே பேசத்தக்கவை இவை இவைதான்<noinclude></noinclude>
d8nu3xqhf1vicaehqdmmsn0l0apxndg
1928392
1928371
2026-04-30T03:21:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928392
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 373}}</noinclude>முடியாது என்று எம்.ஜி.ஆர். கூறிவிட்டார். கண்ணீரும் செந்நீரும் கொட்டி வளர்த்த கழகக் கொடிகளையெல்லாம் ரசிகர்கள் அசிங்கப்படுத்துவது கேவலமான செயலாகும். இந்த நேரத்தில் அனைவரும் தி.மு.கழகத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் தி.மு.கழகத்தை ஏன் ஆதரிக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்! சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை முடிந்த வரையில் செயல்படுத்தி வருகிறார்கள். அதற்காகத்தான் அவர்களை ஆதரிக்கிறேன். கழக அரசு, பலவிதங்களில் ஏழைகளுக்கு நன்மை செய்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு இந்த அரசு தேவையான அளவு செய்து வருகிறது”
என்று உணர்ச்சிகரமாக உரையாற்றினார். அக்டோபர் 15-ஆம் நாள் சென்னைக் கடற்கரையில் பொதுக்குழு முடிவுகளை விளக்கி, பொதுச் செயலாளர் நாவலர் தலைமையில் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆற்றிய தலைமை உரையின் சுருக்கம் இதோ:
“எம். ஜி. ஆர். அவர்கள் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தாலேதான் மிக வருத்தத்தோடு அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.
சாதாரணமானவர்கள் கட்டுப்பாட்டை மீறினால் கூப்பிட்டுப் பேசியே சரிசெய்து விடலாம். கழகத்தின் முக்கியப் பொறுப்பிலே இருக்கிற எம். ஜி. ஆர். கட்டுப்பாட்டை மீறினால் கழகத்தின் நாணயத்தை - லட்சோப லட்சம் தொண்டர்களின் நல்லுழைப்பை மற்றவர்கள் எப்படி நினைப்பார்கள் என்பதால் தான் நடவடிக்கை எடுத்தோம்.
ஒரு குவளை தண்ணீர் வெதும்பினால் அண்டா தண்ணீரை ஊற்றலாம். அண்டா தண்ணீர் வெதும்பினால் குளத்து நீரை ஊற்றலாம்; குளமே வெதும்பினால் கடல் தண்ணீரை ஊற்றலாம். கடல் தண்ணீரே வெதும்பினால்?
கட்டுப்பாட்டை மீறுவோர் யாரானாலும் கழகம் நடவடிக்கை எடுக்கும். இவர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்றவர்களுக்கு ஒரு நீதி? எங்களுக்கு ஒரு நீதியா என்று கேட்கமாட்டார்களா?
ஒரு கணவனும் மனைவியும் நடுரோட்டிலே இதைத்தான் பேசலாம்—வீட்டுக்குள்ளே பேசத்தக்கவை இவை இவைதான்<noinclude></noinclude>
qr51mzkxgi4qammr8owpq2mvriqt17b
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/396
250
639966
1928372
1923018
2026-04-29T20:32:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1928372
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|374 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>என்பதற்கு வரைமுறை இருக்கிறது. வீட்டு விஷயங்களை எவளும் வீதிக்குக் கொண்டு வரமாட்டாள். அப்படிக் கொண்டு வருபவளை எவனும் மனைவியாக ஏற்றுக்கொள்ள மாட்டான்.
எம். ஜி. ஆருக்கு நம்முடைய கணக்கின்மேல் இதுவரை இல்லாத சந்தேகம் இப்போது வந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள், அவரது மனைவி, பிள்ளைகள் ஆகியோரின் கணக்கை மன்றத்தில் வைக்க வேண்டுமென்று 69-ஆம் ஆண்டில் சட்டம் நிறைவேற்றியவர் கலைஞர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத, இந்திரா காந்தியே நிராகரித்த அந்தச் சட்டத்தை நிறைவேற்றி அதன்படி கணக்கும் தரப்பட்டு வருகிறது. ஆனால் எம்.ஜி.ஆர்.தான் முதலாண்டு மட்டுமே கணக்குத் தந்தாரே தவிர, கடந்த இரண்டாண்டாகக் கணக்குத் தரவில்லை. 13 தடவை நோட்டீஸ் அனுப்பியுங்கூட தரவில்லை.”
தலைமை உரையை அடுத்துப் பேசிய அம்மையார் அமைச்சர் சத்தியவாணிமுத்து பின்வருமாறு குறிப்பிட்டார்:
“கழகத்தை அழிக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். நினைக்கிறார். ஆனால் தன்னை அறியாமல் கழகத்தை அழிப்பதாக எண்ணிக்கொண்டு அவர் தன்னையே அழித்துக்
கொள்கிறார்.
சம்பத் அவர்கள் கட்சியிலிருந்து கட்சியிலிருந்து வெளியேறியபோது கட்சியைக் காப்பாற்ற வேண்டுமென்று நானும் மற்றவர்களும் சம்பத்திடம் சமாதானத்திற்குச் சென்றோம். அதைப் போல இப்போதும் கழகத்திலிருந்து எம். ஜி. ஆர். இப்படி தவறாகப் பேசி செயற்குழுவினாலும், பொதுக்குழுவினாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது தாம் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தால் என்ன என்று கேட்க நானும் மற்றவர்களும் சென்றிருந்தோம்.
அமைச்சர்களைப் பற்றி மட்டுமல்ல; கழகத்தின் செயலாளர்களைப் பற்றி எல்லாம் குற்றஞ்சாட்டினீர்களே! யாரை நீங்கள் குறை கூறாமல் விட்டீர்கள்? மறுபடியும் கட்சிக்கு வருபவர்களாயிருந்தால் இப்படியெல்லாம் பேசுவீர்களா என்று நான் எம். ஜி. ஆரைக் கேட்கிறேன்.
கழகத் தலைவரும், பொதுச் செயலாளரும் கதவு திறந்தே இருக்கிறது என்றார்கள். ஏன் வருத்தம் தெரிவித்திருந்தால் என்ன? பெரியாரே வருத்தம் தெரிவிக்கச் சொன்னாரே, ஏன் வருத்தம் தெரிவித்திருக்கக்கூடாதா? எங்களைப் பொறுத்தவரை<noinclude></noinclude>
3310mr3z7u2ha4o2ix3axs35nkjnz11
1928393
1928372
2026-04-30T03:23:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928393
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|374 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>என்பதற்கு வரைமுறை இருக்கிறது. வீட்டு விஷயங்களை எவளும் வீதிக்குக் கொண்டு வரமாட்டாள். அப்படிக் கொண்டு வருபவளை எவனும் மனைவியாக ஏற்றுக்கொள்ள மாட்டான்.
எம். ஜி. ஆருக்கு நம்முடைய கணக்கின்மேல் இதுவரை இல்லாத சந்தேகம் இப்போது வந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள், அவரது மனைவி, பிள்ளைகள் ஆகியோரின் கணக்கை மன்றத்தில் வைக்க வேண்டுமென்று 69-ஆம் ஆண்டில் சட்டம் நிறைவேற்றியவர் கலைஞர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத, இந்திரா காந்தியே நிராகரித்த அந்தச் சட்டத்தை நிறைவேற்றி அதன்படி கணக்கும் தரப்பட்டு வருகிறது. ஆனால் எம்.ஜி.ஆர்.தான் முதலாண்டு மட்டுமே கணக்குத் தந்தாரே தவிர, கடந்த இரண்டாண்டாகக் கணக்குத் தரவில்லை. 13 தடவை நோட்டீஸ் அனுப்பியுங்கூட தரவில்லை.”
தலைமை உரையை அடுத்துப் பேசிய அம்மையார் அமைச்சர் சத்தியவாணிமுத்து பின்வருமாறு குறிப்பிட்டார்:
“கழகத்தை அழிக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். நினைக்கிறார். ஆனால் தன்னை அறியாமல் கழகத்தை அழிப்பதாக எண்ணிக்கொண்டு அவர் தன்னையே அழித்துக்
கொள்கிறார்.
சம்பத் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறியபோது கட்சியைக் காப்பாற்ற வேண்டுமென்று நானும் மற்றவர்களும் சம்பத்திடம் சமாதானத்திற்குச் சென்றோம். அதைப் போல இப்போதும் கழகத்திலிருந்து எம். ஜி. ஆர். இப்படி தவறாகப் பேசி செயற்குழுவினாலும், பொதுக்குழுவினாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது தாம் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தால் என்ன என்று கேட்க நானும் மற்றவர்களும் சென்றிருந்தோம்.
அமைச்சர்களைப் பற்றி மட்டுமல்ல; கழகத்தின் செயலாளர்களைப் பற்றி எல்லாம் குற்றஞ்சாட்டினீர்களே! யாரை நீங்கள் குறை கூறாமல் விட்டீர்கள்? மறுபடியும் கட்சிக்கு வருபவர்களாயிருந்தால் இப்படியெல்லாம் பேசுவீர்களா என்று நான் எம். ஜி. ஆரைக் கேட்கிறேன்.
கழகத் தலைவரும், பொதுச் செயலாளரும் கதவு திறந்தே இருக்கிறது என்றார்கள். ஏன் வருத்தம் தெரிவித்திருந்தால் என்ன? பெரியாரே வருத்தம் தெரிவிக்கச் சொன்னாரே, ஏன் வருத்தம் தெரிவித்திருக்கக்கூடாதா? எங்களைப் பொறுத்தவரை<noinclude></noinclude>
o0ltzlafsrq7rkp3l4u324j51b7jc19
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/397
250
639967
1928373
1923019
2026-04-29T20:38:07Z
ஹர்ஷியா பேகம்
15001
1928373
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 375}}</noinclude>கழகம் பெரிதா, எம்.ஜி.ஆர். பெரிதா என்றால் கழகம்தான் பெரிது. கழகத்தின் கிளைகளை எல்லாம் மாற்றுங்கள் என்கிறார். அதை மாற்ற நீங்கள் யார்? யாரால் கழகத்தை ரசிகர் சங்கமாக மாற்றி விட முடியும்?
கழகத்தைக் கலைக்க முயற்சி எடுப்பதன் மூலம் அவர் தன்னையே அழித்துக் கொள்ள நினைக்கிறார்.
நாங்கள் எல்லாம் செத்து மடிவோமே தவிர கழகத்தை அழிக்க விடமாட்டோம்.
யார் நினைத்தாலும் கழகத்தை அழிக்க முடியாது.”
இவ்வாறு திருமதி சத்தியவாணிமுத்து ஆவேச உரை நிகழ்த்தினார்.
{{nop}}<noinclude></noinclude>
sgj5r8872aycp47xfxkcf7ntv5g0rz6
1928394
1928373
2026-04-30T03:23:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928394
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 375}}</noinclude>கழகம் பெரிதா, எம்.ஜி.ஆர். பெரிதா என்றால் கழகம்தான் பெரிது. கழகத்தின் கிளைகளை எல்லாம் மாற்றுங்கள் என்கிறார். அதை மாற்ற நீங்கள் யார்? யாரால் கழகத்தை ரசிகர் சங்கமாக மாற்றி விட முடியும்?
கழகத்தைக் கலைக்க முயற்சி எடுப்பதன் மூலம் அவர் தன்னையே அழித்துக் கொள்ள நினைக்கிறார்.
நாங்கள் எல்லாம் செத்து மடிவோமே தவிர கழகத்தை அழிக்க விடமாட்டோம்.
யார் நினைத்தாலும் கழகத்தை அழிக்க முடியாது.”
இவ்வாறு திருமதி சத்தியவாணிமுத்து ஆவேச உரை நிகழ்த்தினார்.
{{nop}}<noinclude></noinclude>
o18vgw093n1jpnpihrh6vn4fdg84h2a
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/398
250
639968
1928374
1923020
2026-04-29T20:54:08Z
ஹர்ஷியா பேகம்
15001
1928374
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>52</b>}}
{{larger|<b>“இதுசத்தியம்” என்றால்!</b>}}
{{X-larger|<b>செ</b>}}ன்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் மிகவேகமாக எம்.ஜி.ஆர். அவர்களைத் தாக்கிய நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் நான்கு ஆண்டுகள் கழித்துக் கழக கழக ஆட்சி கலைக்கப்பட்டபிறகு கழகத்திலிருந்து விலகி “மக்கள் தி.மு.க.” என ஒரு கட்சி கண்டு, அந்தக் கட்சியுடன் எம்.ஜி.ஆர். கட்சியில் போய் இணைந்து அங்கே அமைச்சர் பதவி பெற்றுக் கொண்டார்.
அம்மையார் சத்தியவாணிமுத்து அவர்கள், கழக அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்ட காரணத்தால் அவர்களும் சில ஆண்டுகளுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். கட்சிக்குச் சென்று ராஜ்யசபா பதவி பெற்றுக்கொண்டார்.
எனது அமைச்சரவையில் இருந்த ராஜாராம், மாதவன் ஆகியோரும் கழக ஆட்சி கலைக்கப்படும் வரையில் பதவியிலே இருந்து எம்.ஜி.ஆர். அவர்களைக் கடுமையாக விமரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். கழக ஆட்சி, மத்திய அரசினால் கலைக்கப்பட்ட பிறகு கழகம் பல சோதனைகளுக்கு ஆளாகிய நேரத்தில் கழகத்தை விட்டு விலகி நாவலருடன் இணைந்து அவர்களும் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து கொண்டனர்.
அவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். அவர்களை விலக்கியதை நியாயப்படுத்திப் பேசியதை இப்போது நினைவுபடுத்துவது அவசியம்.
இதோ: இன்றைய எம்.ஜி.ஆர். கட்சியின் சபாநாயகர்—அன்றைய கழக அமைச்சர்; நண்பர் ராசாராம் அவர்கள் பேசியது;-
“கழகத்தை விட்டு சம்பக் விலகியபோது மாற்றுக் கட்சிகளும் பல பத்திரிகைகளும் பெரிதுபடுத்தின. ஆனால் அவரது கதை உங்களுக்குத் தெரியும், அரசியல் வியாபாரத்திற்காக வந்த அவர் அது நடக்காமல் இப்போது கோழி வியாபாரத்தில் இறங்கியிருக்கிறார்.
1971-ல் நடந்த பொதுத் தேர்தலில் நம்மை ஒரு சாதாரண நகைச்சுவை நடிகர் “சோ” எதிர்த்தார். அவரை ஜனசங்கத்தினர்<noinclude></noinclude>
pwfr23xmb4btv8ju5zicvvcbkuu83db
1928395
1928374
2026-04-30T03:26:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928395
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>52</b>}}
{{larger|<b>“இதுசத்தியம்” என்றால்!</b>}}
{{X-larger|<b>செ</b>}}ன்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் மிகவேகமாக எம்.ஜி.ஆர். அவர்களைத் தாக்கிய நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் நான்கு ஆண்டுகள் கழித்துக் கழக கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு கழகத்திலிருந்து விலகி “மக்கள் தி.மு.க.” என ஒரு கட்சி கண்டு, அந்தக் கட்சியுடன் எம்.ஜி.ஆர். கட்சியில் போய் இணைந்து அங்கே அமைச்சர் பதவி பெற்றுக் கொண்டார்.
அம்மையார் சத்தியவாணிமுத்து அவர்கள், கழக அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்ட காரணத்தால் அவர்களும் சில ஆண்டுகளுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். கட்சிக்குச் சென்று ராஜ்யசபா பதவி பெற்றுக்கொண்டார்.
எனது அமைச்சரவையில் இருந்த ராஜாராம், மாதவன் ஆகியோரும் கழக ஆட்சி கலைக்கப்படும் வரையில் பதவியிலே இருந்து எம்.ஜி.ஆர். அவர்களைக் கடுமையாக விமரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். கழக ஆட்சி, மத்திய அரசினால் கலைக்கப்பட்ட பிறகு கழகம் பல சோதனைகளுக்கு ஆளாகிய நேரத்தில் கழகத்தை விட்டு விலகி நாவலருடன் இணைந்து அவர்களும் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து கொண்டனர்.
அவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். அவர்களை விலக்கியதை நியாயப்படுத்திப் பேசியதை இப்போது நினைவுபடுத்துவது அவசியம்.
இதோ: இன்றைய எம்.ஜி.ஆர். கட்சியின் சபாநாயகர்—அன்றைய கழக அமைச்சர்; நண்பர் ராசாராம் அவர்கள் பேசியது:-
“கழகத்தை விட்டு சம்பத் விலகியபோது மாற்றுக் கட்சிகளும் பல பத்திரிகைகளும் பெரிதுபடுத்தின. ஆனால் அவரது கதை உங்களுக்குத் தெரியும், அரசியல் வியாபாரத்திற்காக வந்த அவர் அது நடக்காமல் இப்போது கோழி வியாபாரத்தில் இறங்கியிருக்கிறார்.
1971-ல் நடந்த பொதுத் தேர்தலில் நம்மை ஒரு சாதாரண நகைச்சுவை நடிகர் “சோ” எதிர்த்தார். அவரை ஜனசங்கத்தினர்<noinclude></noinclude>
rttlmtnl0pwr687nnwsy4g72xnvs5ik
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/399
250
639969
1928375
1923021
2026-04-29T21:12:29Z
ஹர்ஷியா பேகம்
15001
1928375
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 377}}</noinclude>புதுடில்லிக்கே அழைத்துப் பேசச் சொன்னார்கள். என்ன நடந்தது? அவரால் ஜெயிக்கவா முடிந்தது? என்ன ஆனார் அவர்?
எம்.ஜி.ஆர். இதை எல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு காமராசரின் அரவணைப்பையும் பக்தவத் சலத்தின் பாசத்தையும் சுப்பிரமணியத்தின் அன்பையும் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு சற்று சுறுசுறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்தக் கிறுகிறுப்பு நீடிக்குமானால் நிச்சயம் ஆபத்தாகிவிடும்.
எம்.ஜி.ஆர். மீது எந்தவிதமான வெறுப்பும் எங்களுக்கு இல்லை. ஆனால் அவரைவிட கழகத்தை நாங்கள் மேலாக மதிக்கிறோம். ரோமாபுரி வரலாற்றில் ஒரு சம்பவம். நான் சீசரை நேசிக்கிறேன்; ஆனால் அதைவிட மேலாக ரோமாபுரியை நேசிக்கிறேன் என்று புரூட்டஸ் சொல்கிறான். அதேபோல்தான் நாங்கள் எம்.ஜி.ஆரை. நேசிக்கிறோம். ஆனால் அவரினும் மேலாக கழகத்தை நேசிக்கிறோம்.
எம்.ஜி.ஆர். ஒரு தனி மனிதர். கழகமோ லட்சோப லட்சம் மக்களால் உருவாக்கப்பட்டது. கழகம் அழிந்தால் தமிழகத்திற்கு வேறு வழி கிடையாது. இதை எல்லாம் மனதிற் கொண்டுதான்—கழகத்தின் நலனைக் கருதித்தான் எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயக ரீதியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவை நாடு ஏற்கும்—நல்லவர்கள் ஏற்பார்கள்.
இது ராசாராம் பேசியது! அது மட்டுமல்ல; அண்ணாவின் மருத்துவ சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். பண உதவி ராசாராம் மூலமாக அனுப்பியதாக எம்.ஜி.ஆர். பேசியதை மறுத்துப் பின்வரும் ஒரு அறிக்கையும் விடுத்தார். அந்த அறிக்கை இதுதான்:—
“காஞ்சிபுரத்தில் பேசிய எம்.ஜி,ஆர். அவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது தான் செலவுகளைச் செய்ததாத வெளியிட்டு அதில் என் பெயரையும் ஏனோ இழுத்துள்ளார். அந்தச் செய்தியைச் சொன்ன அவர் ஓர் பயங்கரமான செய்தியைச் சொல்வது போல கூறியுள்ளார். அவரது வார்த்தைகள் என்னைத் திடுக்கிட வைத்தன.<noinclude></noinclude>
i8z4sqamrzz596lbl225kezy0z7g19i
1928396
1928375
2026-04-30T03:28:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928396
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 377}}</noinclude>புதுடில்லிக்கே அழைத்துப் பேசச் சொன்னார்கள். என்ன நடந்தது? அவரால் ஜெயிக்கவா முடிந்தது? என்ன ஆனார் அவர்?
எம்.ஜி.ஆர். இதை எல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு காமராசரின் அரவணைப்பையும் பக்தவத்சலத்தின் பாசத்தையும் சுப்பிரமணியத்தின் அன்பையும் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு சற்று சுறுசுறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்தக் கிறுகிறுப்பு நீடிக்குமானால் நிச்சயம் ஆபத்தாகிவிடும்.
எம்.ஜி.ஆர். மீது எந்தவிதமான வெறுப்பும் எங்களுக்கு இல்லை. ஆனால் அவரைவிட கழகத்தை நாங்கள் மேலாக மதிக்கிறோம். ரோமாபுரி வரலாற்றில் ஒரு சம்பவம். நான் சீசரை நேசிக்கிறேன்; ஆனால் அதைவிட மேலாக ரோமாபுரியை நேசிக்கிறேன் என்று புரூட்டஸ் சொல்கிறான். அதேபோல்தான் நாங்கள் எம்.ஜி.ஆரை, நேசிக்கிறோம். ஆனால் அவரினும் மேலாக கழகத்தை நேசிக்கிறோம்.
எம்.ஜி.ஆர். ஒரு தனி மனிதர். கழகமோ லட்சோப லட்சம் மக்களால் உருவாக்கப்பட்டது. கழகம் அழிந்தால் தமிழகத்திற்கு வேறு வழி கிடையாது. இதை எல்லாம் மனதிற் கொண்டுதான்—கழகத்தின் நலனைக் கருதித்தான் எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயக ரீதியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவை நாடு ஏற்கும்—நல்லவர்கள் ஏற்பார்கள்.
இது ராசாராம் பேசியது! அது மட்டுமல்ல; அண்ணாவின் மருத்துவ சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். பண உதவி ராசாராம் மூலமாக அனுப்பியதாக எம்.ஜி.ஆர். பேசியதை மறுத்துப் பின்வரும் ஒரு அறிக்கையும் விடுத்தார். அந்த அறிக்கை இதுதான்:—
“காஞ்சிபுரத்தில் பேசிய எம்.ஜி,ஆர். அவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது தான் செலவுகளைச் செய்ததாத வெளியிட்டு அதில் என் பெயரையும் ஏனோ இழுத்துள்ளார். அந்தச் செய்தியைச் சொன்ன அவர் ஓர் பயங்கரமான செய்தியைச் சொல்வது போல கூறியுள்ளார். அவரது வார்த்தைகள் என்னைத் திடுக்கிட வைத்தன.<noinclude></noinclude>
f2ypw43wngfjai0y8qtujtxd5qpk2kh
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/400
250
639970
1928376
1923022
2026-04-29T21:26:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1928376
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|378 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கோபத்திலும் ஆத்திரத்திலும் செய்யப்படும் நடவடிக்கைகள், பேசும் பேச்சுகள் அத்தனையும் நிதானம் தவறித்தான் இருக்கும் என்பதை நான் நன்கறிவேன்.
அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லிய செய்தியை அண்ணாவின் மகனே வந்து தன்னிடம் சொல்லியதாகவும் அவரைத் தான் நம்பாமல் என்னிடம் பணம் கொடுத்ததாகவும் கூறிள்ளார் எம்.ஜி.ஆர். இப்போதுதான் அவரது எண்ணம் வெளியிடப்படுகிறது. எடுத்த எடிப்பிலேயே அண்ணாவின் மகனை நம்பவில்லையாம். காலம் கனிந்தால் ஒருவேளை தான் அண்ணாவையே நம்பவில்லை என்று கூறுவார் போல் தெரிகிறது.
அவர் புதுக்கட்சியின் தலைவர் ஆனதிலிருந்து தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள் முதல் கிளைக்கழகச் செயலாளர்கள் வரை கணக்கு கேட்கிறார். அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தது 1969-ஆம் ஆண்டு பெப்ரவரி 3-ஆம் தேதி. எல்லோரையும் கணக்கு கேட்கும் இவர்தான் சொல்கிறாரே, அந்தச் செலவு பற்றி 1969-ஆம் ஆண்டு வாக்கில் அண்ணாவே அப்படிச் சொன்னதில்லை. கலைஞரால் கூட அப்படிச் சொல்ல முடியாது. கழகம் மக்களுடையதாகி விட்டது.
நம்மிடம் அவர் கணக்கு கேட்கிறார். எந்தக் கட்சியிலிருந்து யார் விலகினாலும் இந்தக் இந்தக் கேள்வியைக் கேட்பது வழக்கம்.
காங்கிரசைவிட்டு வெளியேறியபோது பெரியாரிடம் கணக்கு கேட்கப்பட்டது. சம்பத் நம்மைவிட்டு விலகியபோதும் நாவலரைப் பார்த்து கணக்கு கேட்டார். காங்கிரசை விட்டு சுப்பிரமணியம் விலகியபோது காமராசரிடம் கணக்கு கேட்டார். இப்போது நம்மைப் பார்த்து எம்.ஜி.ஆர். கணக்கு கேட்கிறார்.
24 மணி நேரமும் கழகத்திற்காகவே பணியாற்றுகிறார் கலைஞர்.—அதனால்தான் நாங்கள் எல்லாம் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அவரது படத்தை உடைக்கிறார்கள் அவரது சீடர்கள் — கழகக் கொடியை வெட்டுகிறார்கள். அவர்கள் எல்லாம் கழகத் தோழர்கள் தானாம் அவர் சொல்கிறார். யாராவது நம்புவார்களா?”
அடுத்து நண்பர் மதுரை முத்து அவர்கள் பேசியபிறகு, நான் உரையாற்றினேன். எனது உரையை அடுத்த அத்தியாயத்தில் வெளியிடுகிறேன். அதற்கு முன்பு, தமிழரசுக்-<noinclude></noinclude>
8qwj2m2c8k343l6mtxybbcnx947zbmd
1928397
1928376
2026-04-30T03:31:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928397
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|378 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கோபத்திலும் ஆத்திரத்திலும் செய்யப்படும் நடவடிக்கைகள், பேசும் பேச்சுகள் அத்தனையும் நிதானம் தவறித்தான் இருக்கும் என்பதை நான் நன்கறிவேன்.
அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லிய செய்தியை அண்ணாவின் மகனே வந்து தன்னிடம் சொல்லியதாகவும் அவரைத் தான் நம்பாமல் என்னிடம் பணம் கொடுத்ததாகவும் கூறிள்ளார் எம்.ஜி.ஆர். இப்போதுதான் அவரது எண்ணம் வெளியிடப்படுகிறது. எடுத்த எடுப்பிலேயே அண்ணாவின் மகனை நம்பவில்லையாம். காலம் கனிந்தால் ஒருவேளை தான் அண்ணாவையே நம்பவில்லை என்று கூறுவார் போல் தெரிகிறது.
அவர் புதுக்கட்சியின் தலைவர் ஆனதிலிருந்து தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள் முதல் கிளைக்கழகச் செயலாளர்கள் வரை கணக்கு கேட்கிறார். அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தது 1969-ஆம் ஆண்டு பெப்ரவரி 3-ஆம் தேதி. எல்லோரையும் கணக்கு கேட்கும் இவர்தான் சொல்கிறாரே, அந்தச் செலவு பற்றி 1969-ஆம் ஆண்டு வாக்கில் அண்ணாவே அப்படிச் சொன்னதில்லை. கலைஞரால் கூட அப்படிச் சொல்ல முடியாது. கழகம் மக்களுடையதாகி விட்டது.
நம்மிடம் அவர் கணக்கு கேட்கிறார். எந்தக் கட்சியிலிருந்து யார் விலகினாலும் இந்தக் இந்தக் கேள்வியைக் கேட்பது வழக்கம்.
காங்கிரசைவிட்டு வெளியேறியபோது பெரியாரிடம் கணக்கு கேட்கப்பட்டது. சம்பத் நம்மைவிட்டு விலகியபோதும் நாவலரைப் பார்த்து கணக்கு கேட்டார். காங்கிரசை விட்டு சுப்பிரமணியம் விலகியபோது காமராசரிடம் கணக்கு கேட்டார். இப்போது நம்மைப் பார்த்து எம்.ஜி.ஆர். கணக்கு கேட்கிறார்.
24 மணி நேரமும் கழகத்திற்காகவே பணியாற்றுகிறார் கலைஞர்.—அதனால்தான் நாங்கள் எல்லாம் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அவரது படத்தை உடைக்கிறார்கள் அவரது சீடர்கள் — கழகக் கொடியை வெட்டுகிறார்கள். அவர்கள் எல்லாம் கழகத் தோழர்கள் தானாம் அவர் சொல்கிறார். யாராவது நம்புவார்களா?”
அடுத்து நண்பர் மதுரை முத்து அவர்கள் பேசியபிறகு, நான் உரையாற்றினேன். எனது உரையை அடுத்த அத்தியாயத்தில் வெளியிடுகிறேன். அதற்கு முன்பு, தமிழரசுக்<noinclude></noinclude>
6yo3mqy5nw67rab78pcf9ijoxla2xfq
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/402
250
639971
1928378
1923023
2026-04-29T21:48:43Z
ஹர்ஷியா பேகம்
15001
1928378
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|380 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>தான் எந்தக் கழகத்தின் பொருளாளராக இருக்கிறாரோ அந்தக் கழகத்தாரிடம் தான் கேட்கிறார். கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு கட்சியின் பொதுக்குழுவிலே அதைக் கேட்க வேண்டும். மேல்மட்டத் தலைவர்களில் ஒருவரான அவரே இந்தக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தவறியது சாதாரண விஷயமல்ல.
பொதுக்குழு கூடும் தேதி தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலே அன்பர் எம்.ஜி.ஆர். தெருவில் நின்ற கணக்கு கேட்பது? “எனது தீர்மானம் பொதுக்குழுவில் ஏற்கப்படாவிட்டால் நான் மக்களை அணுகுவேன்” என்று எம்.ஜி.ஆர். பேசியது தி.மு.க. மட்டுமல்லாமல் கட்சிக் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் விரும்பும் எந்தக் கட்சியும் பாராட்ட முடியாததாகும்.
தி.மு.க. கழகம் மிகுந்த துணிவோடு தனிப்பட்ட விருப்பு வெறுப்பை மறுத்து கட்சியின், நாட்டின் நலன் கருதி அன்பர் எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதனை தனி நபர்களைவிடவும் கட்சிதான் பெரிது என்ற சிந்தாத்தத்தில் நம்பிக்கை உடைய கட்சிகள் அனைத்துமே ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன.
தி.மு.க. அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழினத்தின் தனி நலன்களுக்கும் பாடுபட்டு வருகின்றது. தமிழின்—தமிழினத்தின் பகைவர்கள் இந்த அரசை ஒழித்துக்கட்ட முயன்று வருகின்றனர். அவர்கள் வெற்றிக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவுவோர் தமிழின் — தமிழினத்தின் வருங்காலத்திற்கு கேடு செய்வோராவார். இந்தக் கோணத்தில் நின்று பார்த்தும் நாம் தி.மு.க. பொதுக்குழுவின் முடிவு தவிர்க்க முடியாதென்று கருதுகின்றோம்.
எம்.ஜி.ஆர். எதிர்காலத்தில் எப்படி நடந்துகொண்டாலும் சரி; தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. அரசுக்குப் தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்து வரவேண்டும். வேறுவிதமான நடப்பவர்களை வருங்காலத் தலைமுறை வாழ்த்தாது. இது சத்தியம்.”
இப்படி எழுதினார் சிவம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்தான் இன்றைய எம்.ஜி.ஆர். ஆட்சியில் சட்டமன்ற மேலவைத் தலைவராகப் பணியாற்றுகிறார்!
{{nop}}<noinclude></noinclude>
27j8x079eiimvvnelrlmjuksiki057z
1928399
1928378
2026-04-30T03:35:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928399
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|380 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>தான் எந்தக் கழகத்தின் பொருளாளராக இருக்கிறாரோ அந்தக் கழகத்தாரிடம் தான் கேட்கிறார். கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு கட்சியின் பொதுக்குழுவிலே அதைக் கேட்க வேண்டும். மேல்மட்டத் தலைவர்களில் ஒருவரான அவரே இந்தக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தவறியது சாதாரண விஷயமல்ல.
பொதுக்குழு கூடும் தேதி தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலே அன்பர் எம்.ஜி.ஆர். தெருவில் நின்றா கணக்கு கேட்பது? “எனது தீர்மானம் பொதுக்குழுவில் ஏற்கப்படாவிட்டால் நான் மக்களை அணுகுவேன்” என்று எம்.ஜி.ஆர். பேசியது தி.மு.க. மட்டுமல்லாமல் கட்சிக் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் விரும்பும் எந்தக் கட்சியும் பாராட்ட முடியாததாகும்.
தி.மு.க. கழகம் மிகுந்த துணிவோடு தனிப்பட்ட விருப்பு வெறுப்பை மறுத்து கட்சியின், நாட்டின் நலன் கருதி அன்பர் எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதனை தனி நபர்களைவிடவும் கட்சிதான் பெரிது என்ற சிந்தாத்தத்தில் நம்பிக்கை உடைய கட்சிகள் அனைத்துமே ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன.
தி.மு.க. அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழினத்தின் தனி நலன்களுக்கும் பாடுபட்டு வருகின்றது. தமிழின்—தமிழினத்தின் பகைவர்கள் இந்த அரசை ஒழித்துக்கட்ட முயன்று வருகின்றனர். அவர்கள் வெற்றிக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவுவோர் தமிழின் — தமிழினத்தின் வருங்காலத்திற்கு கேடு செய்வோராவார். இந்தக் கோணத்தில் நின்று பார்த்தும் நாம் தி.மு.க. பொதுக்குழுவின் முடிவு தவிர்க்க முடியாதென்று கருதுகின்றோம்.
எம்.ஜி.ஆர். எதிர்காலத்தில் எப்படி நடந்துகொண்டாலும் சரி; தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. அரசுக்குப் தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்து வரவேண்டும். வேறுவிதமான நடப்பவர்களை வருங்காலத் தலைமுறை வாழ்த்தாது. இது சத்தியம்.”
இப்படி எழுதினார் சிவம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்தான் இன்றைய எம்.ஜி.ஆர். ஆட்சியில் சட்டமன்ற மேலவைத் தலைவராகப் பணியாற்றுகிறார்!
{{nop}}<noinclude></noinclude>
ne410zgjwhvx4zs8jkkxl86p8jxw431
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/401
250
639972
1928377
1923024
2026-04-29T21:38:57Z
ஹர்ஷியா பேகம்
15001
1928377
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 379}}</noinclude>கழகத் தலைவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் அவரது “செங்கோல்” பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
கொள்கை சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் தி.மு.க.வுடன் பூசல் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் எம்.ஜி.ஆர். இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கின்றது.
எம்.ஜி.ஆர். தமது தொகுதியில் நடந்த கூட்டமொன்றில் எம்.ஜி.ஆர்.மன்றங்கள் மு. க. முத்து ரசிகர் மன்றங்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்று மிகுந்த வேதனையோடு கூறினார். அவருடைய வேதனையைப் புரிந்துகொண்ட முதல்வர். மு.க.முத்து மன்றங்கள் கலைக்கப்பட வேண்டும்.’ என்று அறிக்கை விட்டார். அத்துடன் பூசல் முடிந்துவிடுமென நம்பினோம்.
ஆனால் முடியவில்லை. மற்றொரு கூட்டத்தில், வட்டச் செயலாளரிலிருந்து எல்லோரும் கணக்கு காட்ட வேண்டுமென்றார். உண்மையில் முதல்வர் கூறியது போன்று, எம்.ஜி.ஆர். கோருவது இதுவரை உலகில் எந்தக் கட்சியும் கடைப்பிடிக்காததாகும்.
சட்டமன்றத்தில் ஆண்டுதோறும் கணக்கு கொடுக்கும் கடமையை எம்.ஜி.ஆர். நிறைவேற்றவில்லை என்றும், 13 முறை நினைவூட்டுக் கடிதம் அனுப்பியும் பயனில்லை என்றும் சொல்லப்படுகிறது.
நிலைமை இதுவாக, திடீரென்று வட்டச் செயலாளர்களிடமும் அவர்கள் உறவினர்களிடமும் சொத்துக் கணக்கு கேட்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர். கோரியதில் நியாயம் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. எம்.ஜி.ஆரின் இந்தக் கோரிக்கை கட்சி முழுவதையுமே புண்புடுத்தியதாகுமென்று கூறுவதில் நியாயம் இருக்கிறது.
மதுவிலக்கை தி.மு.க. அரசு கைவிட்டது பற்றியும் இப்போது எம்.ஜி.ஆர். குற்றம் சொல்லுகிறார். இதிலும் அவரது வாதத்தில் வலிமை இல்லை. மதுவிலக்கு எடுபடுவதை முதலில் ஆதரித்துவிட்டு, இப்போது எதிர்ப்பது என்பது பொதுவாழ்வில். நேர்மையைக் கடைப்பிடிப்பது ஆகாது.
ஆனால் எம்.ஜி.ஆர். சொத்துக் கணக்கு கேட்பது தன் கழகத்திற்கு எதிர்க் கட்சியாக உள்ள இந்திரா காங்கிரசிடமல்ல;<noinclude></noinclude>
0r9futxwgea8bf2avnytgwimclv323z
1928398
1928377
2026-04-30T03:34:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928398
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 379}}</noinclude>கழகத் தலைவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் அவரது “செங்கோல்” பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
கொள்கை சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் தி.மு.க.வுடன் பூசல் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் எம்.ஜி.ஆர். இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கின்றது.
எம்.ஜி.ஆர். தமது தொகுதியில் நடந்த கூட்டமொன்றில் எம்.ஜி.ஆர்.மன்றங்கள் மு. க. முத்து ரசிகர் மன்றங்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்று மிகுந்த வேதனையோடு கூறினார். அவருடைய வேதனையைப் புரிந்துகொண்ட முதல்வர். மு.க.முத்து மன்றங்கள் கலைக்கப்பட வேண்டும்.’ என்று அறிக்கை விட்டார். அத்துடன் பூசல் முடிந்துவிடுமென நம்பினோம்.
ஆனால் முடியவில்லை. மற்றொரு கூட்டத்தில், வட்டச் செயலாளரிலிருந்து எல்லோரும் கணக்கு காட்ட வேண்டுமென்றார். உண்மையில் முதல்வர் கூறியது போன்று, எம்.ஜி.ஆர். கோருவது இதுவரை உலகில் எந்தக் கட்சியும் கடைப்பிடிக்காததாகும்.
சட்டமன்றத்தில் ஆண்டுதோறும் கணக்கு கொடுக்கும் கடமையை எம்.ஜி.ஆர். நிறைவேற்றவில்லை என்றும், 13 முறை நினைவூட்டுக் கடிதம் அனுப்பியும் பயனில்லை என்றும் சொல்லப்படுகிறது.
நிலைமை இதுவாக, திடீரென்று வட்டச் செயலாளர்களிடமும் அவர்கள் உறவினர்களிடமும் சொத்துக் கணக்கு கேட்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர். கோரியதில் நியாயம் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. எம்.ஜி.ஆரின் இந்தக் கோரிக்கை கட்சி முழுவதையுமே புண்புடுத்தியதாகுமென்று கூறுவதில் நியாயம் இருக்கிறது.
மதுவிலக்கை தி.மு.க. அரசு கைவிட்டது பற்றியும் இப்போது எம்.ஜி.ஆர். குற்றம் சொல்லுகிறார். இதிலும் அவரது வாதத்தில் வலிமை இல்லை. மதுவிலக்கு எடுபடுவதை முதலில் ஆதரித்துவிட்டு, இப்போது எதிர்ப்பது என்பது பொதுவாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிப்பது ஆகாது.
ஆனால் எம்.ஜி.ஆர். சொத்துக் கணக்கு கேட்பது தன் கழகத்திற்கு எதிர்க் கட்சியாக உள்ள இந்திரா காங்கிரசிடமல்ல;<noinclude></noinclude>
6f5mn5jp7j6asw0cul7zjurmh0udbkj
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/120
250
640043
1928573
1923304
2026-04-30T06:02:20Z
Ramya sugumar
15106
1928573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|கடிதம்||111}}</noinclude>இந்தக் கடிதத்தில் இணைத்திருக்கிறேனே; படங்கள் —
அவைகளைப் பார். திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில்! எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் எழுப்பப்பெற்ற ஆலயம்! எழுநூறு ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அந்த ஆலயத்தின் பல கோபுரங்கள் பழுது பார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு திருப்பணி நிறைவேறி குட முழுக்கும் நடத்தப்பட்டிருக்கிறது! எப்போது? நமது கழகஆடசியில்!
படத்தில் இடிந்து பாழான பழைய கோபுரத்தையும் காணலாம். திருப்பணி நடந்து முடிந்த புதிய கோபுரத்தையும் காணலாம். இதற்கான செலவு ஏழு லட்சரூபாய்! இன்னும் தருகிறேன் பட்டியல்!
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் திருப்பணி நடந்து 1975 மார்ச் திங்களில் குட முழுக்கு நடைபெற்றது!
பேரூர் பட்டிப்பெருமாள் கோயில் 1976 பிப்ரவரியில் குடமுழுக்கு!
சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் குடமுழுக்கு சென்ற ஆண்டு நடந்தது.
பழனி, தண்டாயுதபாணி கோயில் விமானத்துக்குத் தங்கத் தகடுகள் போட்டு (நாற்பது லட்ச ரூபாய் செலவில்) அதன் குடமுழுக்கு சென்ற ஆண்டு நடந்தது.
:தஞ்சை மாவட்டம் சுவாமி மலை கோயில் குடமுழுக்கு! :கொடுமுடி, மகுடேசுவரசாமி கோயில் குடமுழுக்கு! :திருவண்ணாமலை அருணாசலசாமி கோயில் குடமுழுக்கு! :இராமேஸ்வரம் ராமனாதஸ்வாமி கோயில் குட முழுக்கு!
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் திருப்பணி
நடந்து கொண்டிருக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
36kyw97zi3g9qhqkahzlkaen9n45vkz
1928575
1928573
2026-04-30T06:03:06Z
Ramya sugumar
15106
1928575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|கடிதம்||111}}</noinclude>இந்தக் கடிதத்தில் இணைத்திருக்கிறேனே; படங்கள் —
அவைகளைப் பார். திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில்! எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் எழுப்பப்பெற்ற ஆலயம்! எழுநூறு ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அந்த ஆலயத்தின் பல கோபுரங்கள் பழுது பார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு திருப்பணி நிறைவேறி குட முழுக்கும் நடத்தப்பட்டிருக்கிறது! எப்போது? நமது கழகஆடசியில்!
படத்தில் இடிந்து பாழான பழைய கோபுரத்தையும் காணலாம். திருப்பணி நடந்து முடிந்த புதிய கோபுரத்தையும் காணலாம். இதற்கான செலவு ஏழு லட்சரூபாய்! இன்னும் தருகிறேன் பட்டியல்!
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் திருப்பணி நடந்து 1975 மார்ச் திங்களில் குட முழுக்கு நடைபெற்றது!
பேரூர் பட்டிப்பெருமாள் கோயில் 1976 பிப்ரவரியில் குடமுழுக்கு!
சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் குடமுழுக்கு சென்ற ஆண்டு நடந்தது.
பழனி, தண்டாயுதபாணி கோயில் விமானத்துக்குத் தங்கத் தகடுகள் போட்டு (நாற்பது லட்ச ரூபாய் செலவில்) அதன் குடமுழுக்கு சென்ற ஆண்டு நடந்தது.
:தஞ்சை மாவட்டம் சுவாமி மலை கோயில் குடமுழுக்கு!
:கொடுமுடி, மகுடேசுவரசாமி கோயில் குடமுழுக்கு!
:திருவண்ணாமலை அருணாசலசாமி கோயில் குடமுழுக்கு!
:இராமேஸ்வரம் ராமனாதஸ்வாமி கோயில் குட முழுக்கு!
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் திருப்பணி
நடந்து கொண்டிருக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
kmoqfwddvberrli414879r6p9ysc3hy
1928788
1928575
2026-04-30T08:02:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||111}}</noinclude>இந்தக் கடிதத்தில் இணைத்திருக்கிறேனே; படங்கள் —
அவைகளைப் பார். திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில்! எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் எழுப்பப்பெற்ற ஆலயம்! எழுநூறு ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அந்த ஆலயத்தின் பல கோபுரங்கள் பழுது பார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு திருப்பணி நிறைவேறி குட முழுக்கும் நடத்தப்பட்டிருக்கிறது! எப்போது? நமது கழகஆடசியில்!
படத்தில் இடிந்து பாழான பழைய கோபுரத்தையும் காணலாம். திருப்பணி நடந்து முடிந்த புதிய கோபுரத்தையும் காணலாம். இதற்கான செலவு ஏழு லட்சரூபாய்! இன்னும் தருகிறேன் பட்டியல்!
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் திருப்பணி நடந்து 1975 மார்ச் திங்களில் குடமுழுக்கு நடைபெற்றது!
பேரூர் பட்டிப்பெருமாள் கோயில் 1976 பிப்ரவரியில் குடமுழுக்கு!
சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் குடமுழுக்கு சென்ற ஆண்டு நடந்தது.
பழனி, தண்டாயுதபாணி கோயில் விமானத்துக்குத் தங்கத் தகடுகள் போட்டு (நாற்பது லட்ச ரூபாய் செலவில்) அதன் குடமுழுக்கு சென்ற ஆண்டு நடந்தது.
தஞ்சை மாவட்டம் சுவாமி மலை கோயில் குடமுழுக்கு!
கொடுமுடி, மகுடேசுவரசாமி கோயில் குடமுழுக்கு!
திருவண்ணாமலை அருணாசலசாமி கோயில் குடமுழுக்கு!
இராமேஸ்வரம் ராமனாதஸ்வாமி கோயில் குட முழுக்கு!
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
ar3bv8ft56t9vtbqxjkdyh6ysrfqs14
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/109
250
640046
1928402
1923373
2026-04-30T03:51:40Z
Ramya sugumar
15106
1928402
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>கலைஞர் கடிதம்</b>}}
உடன்பிறப்பே,
விசாரணைக் கமிஷனை வரவேற்கிறேன் என்று அன்றைக்கு அறிவித்ததில் எந்தவிதமான மாற்றமும் இப்போது இல்லை. ஒரு சிலரால் கூறப்பட்ட குற்றச் சாட்டுக்களை விசாரித்து உண்மையை அறியுமாறு “கமிஷன்” போடப்பட்டிருக்கிறது என்றுதான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இடையிலே உள்ளவர்கள், அச்சுறுத்தல், மிரட்டல், ஆசை காட்டல், துன்புறுத்தல் இவைகளின் மூலம் காட்சிகளை உருவாக்கு. வதும் — குற்றங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்வதற்கு வாய்ப்பு வழற்குவதற்குப் பதிலாக, எப்படியும் குற்றவாளியாக ஆக்கியே தீரவேண்டும் என்று முயற்சிகளைத் தீவிரமாக எடுப்பதும்; அரசியலில் பழிவாங்கி அழிக்கும் செயலாக ஆகிவிடக்கூடும் என்று சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
“புகார்” கொடுத்தவர்கள் தான் இது போன்ற கமிஷன் விசாரணைகளில் அதற்கான ஆதாரங்களைச் சேகரித்துத்தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
கமிஷன் விசாரணைக்கு, இயல்பான சூழ்நிலையும், தடைபடாத வாய்ப்புக்களும், தலையீடு, குறுக்கீடுகளற்ற தன்மைகளும் அமைந்திட வேண்டுமென்பதற்காகத்தான்<noinclude></noinclude>
1hlfr1nkr1dcl46cdqxci6hkh2nrrex
1928751
1928402
2026-04-30T07:41:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>கலைஞர் கடிதம்</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
விசாரணைக் கமிஷனை வரவேற்கிறேன் என்று அன்றைக்கு அறிவித்ததில் எந்தவிதமான மாற்றமும் இப்போது இல்லை. ஒரு சிலரால் கூறப்பட்ட குற்றச் சாட்டுக்களை விசாரித்து உண்மையை அறியுமாறு “கமிஷன்” போடப்பட்டிருக்கிறது என்றுதான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இடையிலே உள்ளவர்கள், அச்சுறுத்தல், மிரட்டல், ஆசைகாட்டல், துன்புறுத்தல் இவைகளின் மூலம் காட்சிகளை உருவாக்குவதும் — குற்றங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்வதற்கு வாய்ப்பு வழங்குவதற்குப் பதிலாக, எப்படியும் குற்றவாளியாக ஆக்கியே தீரவேண்டும் என்று முயற்சிகளைத் தீவிரமாக எடுப்பதும்; அரசியலில் பழிவாங்கி அழிக்கும் செயலாக ஆகிவிடக்கூடும் என்று சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
“புகார்” கொடுத்தவர்கள் தான் இது போன்ற கமிஷன் விசாரணைகளில் அதற்கான ஆதாரங்களைச் சேகரித்துத் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
கமிஷன் விசாரணைக்கு, இயல்பான சூழ்நிலையும், தடைபடாத வாய்ப்புக்களும், தலையீடு, குறுக்கீடுகளற்ற தன்மைகளும் அமைந்திட வேண்டுமென்பதற்காகத்தான்<noinclude></noinclude>
al7jr6xr4gl8kf34463v6nl8wz1szod
1928754
1928751
2026-04-30T07:42:29Z
Booradleyp1
1964
1928754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>கலைஞர் கடிதம்</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
விசாரணைக் கமிஷனை வரவேற்கிறேன் என்று அன்றைக்கு அறிவித்ததில் எந்தவிதமான மாற்றமும் இப்போது இல்லை. ஒரு சிலரால் கூறப்பட்ட குற்றச் சாட்டுக்களை விசாரித்து உண்மையை அறியுமாறு “கமிஷன்” போடப்பட்டிருக்கிறது என்றுதான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இடையிலே உள்ளவர்கள், அச்சுறுத்தல், மிரட்டல், ஆசைகாட்டல், துன்புறுத்தல் இவைகளின் மூலம் காட்சிகளை உருவாக்குவதும் — குற்றங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்வதற்கு வாய்ப்பு வழங்குவதற்குப் பதிலாக, எப்படியும் குற்றவாளியாக ஆக்கியே தீரவேண்டும் என்று முயற்சிகளைத் தீவிரமாக எடுப்பதும்; அரசியலில் பழிவாங்கி அழிக்கும் செயலாக ஆகிவிடக்கூடும் என்று சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
“புகார்” கொடுத்தவர்கள் தான் இது போன்ற கமிஷன் விசாரணைகளில் அதற்கான ஆதாரங்களைச் சேகரித்துத் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
கமிஷன் விசாரணைக்கு, இயல்பான சூழ்நிலையும், தடைபடாத வாய்ப்புக்களும், தலையீடு, குறுக்கீடுகளற்ற தன்மைகளும் அமைந்திட வேண்டுமென்பதற்காகத்தான்<noinclude></noinclude>
ese6zbpv03h2vpe8cg8evkxj53wpbpv
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/14
250
640049
1928802
1926343
2026-04-30T08:08:21Z
Booradleyp1
1964
1928802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>நாட்டுக்கும் நல்லோர்க்கும் <br>
அறிவிக்கிறேன்!</b>}}
'''உடன்பிறப்பே!'''
“இரண்டு மாதங்களுக்கு முன்பு தி. மு. க. மந்திரி சபை ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட பிறகு தி. மு. கழகம் நிலைகுலைந்து போய்விட்டது என்றாலும் ரகசிய நடவடிக்கைகளில், தி.மு.க. ஈடுபட்டுவருவதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகப் பக்தவத்சலம் கூறினார்”
பெரியவர் பக்தவத்சலனார் அவர்களின் டெல்லிப் பயணம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஏடுகளில் அவர் அளித்துள்ள இந்தப் பேட்டியும் இடம் பெற்றுள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டது! அமைதியாக இருக்குமாறு மக்களுக்குத் தலைமைக் கழகம் வேண்டுகோள் விடுத்தது. தொடர்ந்து அமைதி நிலவிட வேண்டுமென்பதை நாள்தோறும் வலியுறுத்தி வருகிறோம்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் அண்ணாவின் அறிவுரையை நினைவுபடுத்தாத நேரமே இல்லை.
ஜனவரி 31-ஆம் நாள் மாலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்படுகிறது.
அடுத்த மூன்றாம் நாள்—ஆம்! பிப்ரவரி மூன்றாம் நாள் நமது ஒப்பற்ற தலைவர்—உயிர், மூச்சு, சிந்தை, அணு ஒவ்வொன்றிலும் குடியிருக்கும் குடும்பத்து மூத்தவர். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள்!
{{nop}}<noinclude>
க—7—1</noinclude>
ltf5igcj6hv1zcrgb7riulxn4gtefaf
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/119
250
640060
1928438
1923391
2026-04-30T04:55:03Z
Mohanraj20
15516
1928438
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|106||கலைஞர்}}</noinclude>அழகிலே ஈடுபட்டு நிமிர்ந்து பார்க்கத்தான் வேண்டும். இலட்சியத்தில் முழு வெற்றி
அடையாவிட்டாலும், இலட்சியங்கள் எட்ட முடியாத அளவுக்கு உள்ளன என்பதற்காக,
அவற்றின் தரத்தைக் குறைத்துக் கொள்வது சரியாகாது.”
இலட்சியத்தில் எவ்வளவு பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார் என்பதையும் அதனை விரைவில் அடைய முடியாத காரணத்தாலேயே அதன் தகுதியைக் குறைத்து
மதிப்பிட அவர் தயாராக இல்லை என்பதையும் எத்துணை திடமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார், பார்த்தாயா?
“உடலுழைப்புச் செய்வது, மதிப்புக் குறைவானது என்றும் — இந்த மாதிரியான வேலைகள், தாழ்ந்த சாதியாருக்கே உரியன என்றும் ஒரு விந்தையான கருத்து
நமது நாட்டிலே உலவி வருகிறது. “எல்லா மக்களும் சமம்” என்று நாம் கருதுகிறோம். எல்லோருக்கும் சமவாய்ப்பு கிடைக்க உறுதி செய்ய வேண்டுமென்று விரும்புகிறோம். பயனுடைய எந்த வேலையையும் தாழ்வானது என்று நாம் கருதுவதில்லை. ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் உடலுழைப்
பின் மதிப்பு, மிகவும் போற்றப்படுகிறது. எவனொருவன் உடலுழைப்பை மதிப்புடையதாகப் போற்றவில்லையோ அவனை வெறும் சோம்பேறி என்றே நான் கருதுகிறேன். சமுதாய நீதி வேண்டும் என்று மக்கள் இன்று எண்ணிடத் தொடங்கிவிட்டார்கள். ‘விதி’, ‘தலை எழுத்து’—என் றெல்லாம் பேசுகிற பேச்சை, இன்றைய மக்கள் குறைவாகவே மதிக்கிறார்கள்”” எனக் குறிப்பிடும் அவர்;
எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் பொறியியல் நிபுணராக இருந்தாலும் மேசைக்கு முன் உட்கார்ந்து கொண்டு உத்திரவுகள் பிறப்பிப்பதை மட்டும் கடமை
யெனக் கொள்ளாமல் கடினமாக உழைக்கவும் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார்.
{{nop}}<noinclude></noinclude>
jntfa741xhx5u8oderm1y0o5r7jcnrv
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/20
250
640082
1928806
1926965
2026-04-30T08:09:25Z
Booradleyp1
1964
1928806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||11}}</noinclude>பட்டால் எங்கள் குருதியை — வேண்டுமளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் — இப்படியெல்லாம் புழுதியை வாரித்தூற்றாதீர்கள்!
::கழகம், காந்திய வழியில் கனிவும்—
::பெரியார் வழியில் துணிவும்—
::அண்ணா வழியில் தெளிவும்—
கொண்டு கடந்த காலத்தில் செயலாற்றியதற்கும், நிகழ்காலத்தில் செயலாற்றுவதற்கும் சான்றுகள் உண்டு.
எதிர்காலத்திலும் அவ்வாறே அவர்களின் அறவழியில் அன்பு வழியில், அமைதி வழியில் கழகம் தளரா நடைபோடும் என்ற உறுதியினை உன் வாயிலாகப் பெற்று நாட்டுக்கு அறிவிக்கிறேன். நல்லோர்க்கு அறிவிக்கிறேன்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
8 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
8zcsu7m0bmcrjrq7t15pp2mgdlbx499
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/21
250
640100
1928804
1926966
2026-04-30T08:09:02Z
Booradleyp1
1964
1928804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>வடிவேலருக்கு வந்த வாழ்வு!</b>}}
'''உடன்பிறப்பே,'''
நீண்ட நாட்கள் ஆகின்றன நாடகம் எழுதி! இன்று ஒரு சிறிய நாடகம்! பெயர், “வடிவேலருக்கு வந்த வாழ்வு!”
முதல் மணி அடிக்கிறது! இரண்டாவது மணியும் ஒலிக்கிறது! மூன்றாவது மணியைத் தொடர்ந்து “கோரஸ்” பாடப்படுகிறது.
{{left_margin|3em|<poem>“வாழ்த்துவோம்! வாழ்த்துவோம்!
பதவி கொடுத்தவரை வாழ்த்துவோம்!
தாழ்த்துவோம்! தாழ்த்துவோம்!
பதவி போன பின்னர் அவரைத் தாழ்த்துவோம்!
பாடுவோம்! பாடுவோம்! பதவி நீடிப்பு தந்தவரைப்
பாடுவோம்! பாடுவோம்! அவரைச்
சாடுவோம்! சாடுவோம்! சாகும்வரைப்
பதவி கொடுக்காததால் சாடுவோம்!
கூடுவோம்! கூடுவோம்! கூட்டம் கண்ட இடம்
கூடுவோம்!
ஆடுவோம்! ஆடுவோம்! சமயம்போல ஆடுவோம்!
சந்தர்ப்பவாதம் வெல்க என்று ஆடுவோம்!
ஓடுவோம்! ஓடுவோம்! கண்டஇடம் ஓடுவோம்;
பதவி எனும்
கரும்புத்துண்டு கண்ட இடம் ஓடுவோம்.”
(கோரஸ் முடிகிறது. திரை விலகுகிறது.)</poem>}}{{nop}}<noinclude></noinclude>
az2xrzocaz1y7lg6wvokcrjiabwhft1
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/28
250
640375
1928808
1926248
2026-04-30T08:10:15Z
Booradleyp1
1964
1928808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மின்னல் கீற்று! மின்மினிப் பூச்சி !!</b>}}}}
'''உடன்பிறப்பே,'''
இந்திய கம்யூனிஸ்டுகளும் அவர்களின் சார்புடைய
ஏடுகளும், "தி. மு. கழகத்தை அமெரிக்காவின்
ஏஜண்டு" என்று வர்ணிப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு
உள்ளதை நீயும் நானும் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். பிளவுபடுத்தி வீழ்த்திவிடலாம் கழகத்தை என்று
நினைத்தார்கள். துரோக சக்திகளைத் தூண்டிவிட்டுத்
தூளாக்கிவிடலாம் என்று முயன்றார்கள். பொய்ப்பிரச்
சாரத்தால் புதைகுழிக்கு அனுப்பிவிடலாம் என்று திட்ட
மிட்டார்கள். களங்கங்களைச் சுமத்தி மக்களைக் குழப்பி,
முன்னணியினரை இழிவுபடுத்தி, கழகத்தை மூலையில்
கிடத்திவிடலாம் என்று வியூகங்களை வகுத்துக்கொண்டு
பணியாற்றுகிறார்கள் என்னதான் வலுவான ஆயுளாக
இருந்தாலும் இப்போதுள்ள கழகத் தலைவர்கள், நூறாண்டு
வாழ்ந்து விடப் போவதில்லை. விபத்துக்கள், நோய் நொடிகள், இயற்கை மரணம், அகால மரணம்—இப்படி
ஏதாவது ஒன்று எந்த நேரத்திலும் நிகழலாம்.
இன்னும் நாற்பது ஆண்டுகள் வாழவேண்டும்,
வாழுவார்!” என்று ஆசையுடன் எதிர்பார்த்த நமது
கழகம் கண்ட பேரறிவாளர் அண்ணாவே மணி விழாக்கூடக்
காணாமல் மறைந்துதான் போய்விட்டார்.
அவ்வளவு பெரிய ஈடு செய்ய முடியாத இழப்புக்குப்
பிறகு, கழகம் அழிந்துவிடவில்லை. மகத்தான வெற்றிகளை
ஈட்டியது. அதைப்போல, நானோ, அல்லது இன்றுள்ள<noinclude></noinclude>
ttsfikhdrx9hdyrrpt0rf9uaahqu6gg
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/34
250
640873
1928812
1926973
2026-04-30T08:11:23Z
Booradleyp1
1964
1928812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>காரிருளால் சூரியன்தான்<br>
மறைவதுண்டோ?</b>}}
'''உடன்பிறப்பே,'''
::“காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
::கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
::பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?”
இது புரட்சிக் கவிஞரின் பொருள் பொதிந்த கேள்வி! இந்தக் கேள்விக்குச் சரியான விடையாக நம் முன்னால் நிற்கின்ற கடந்த கால நிகழ்ச்சி பற்றிய சில குறிப்புக்களை உனக்குச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.
கலைமாமணிகள் அவர்கள்! தமிழ்நாட்டு மக்களின் பேரன்புக்குப் பாத்திரமானவர்கள். திரையுலகிலும், நாடக அரங்கிலும் வைரமணிகளென ஒளிவிட்டவர்கள். அவர்களைக் காண்பதற்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் நாள் முழுதும் காத்துக் கிடப்பார்கள். அவர் தம் நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் இதயத்தைப் பறிகொடுப்பார்கள். அவர்கள் பங்கு பெருகிற படமானாலும், கலந்துகொள்கிற இசை அல்லது நாடக நிகழ்ச்சியானாலும் வெற்றி! வெற்றி! என்றே முழங்கிக் கொண்டிருந்தன.
ஒருவர் தியாகராஜ பாகவதர்! ஏழிசை மன்னர் எழிலிசைத் திலகம், என்றெல்லாம் இசையரங்குகள், அவரைச் சிறப்பித்துப் பாராட்டின. குழலோ, யாழோ?<noinclude></noinclude>
ivv6siwuvo8kwyb4dn0q2u4uoxwt5sy
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/74
250
641194
1928297
1927132
2026-04-29T13:16:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928297
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||133}}</noinclude>யாருக்குத் தந்தி வருகிறதோ, அவர்கள் அந்த முறை கூடும் பொதுக்குழுவுக்குச் செல்லும் பொதுக்குழு உறுப்பினர்கள்.”
“அடடா! நம்ப கட்சி ஜனநாயக அமைப்பே அமைப்பு! நியமனம்! அதுவும் நிரந்தரமல்ல! தந்தி வந்தால் பொதுக்குழு! வராவிட்டால் வாசலுக்கு வெளியே! அதிருக்கட்டும், இனிமேல் நம்முடைய புரட்சித் தலைவர் இந்தியா முழுமைக்கும் புரட்சித் தலைவராக ஆகிவிடுவார்; இல்லையா?”
“ஆகிறாரோ இல்லையோ—இப்போது அவரே ஆக்கிக் கொண்டார்! யாரால் முடியும் இந்த அற்புத சாதனையைச் செய்ய? ஒரே நாள் பத்திரிகைப் பெட்டிச் செய்தி, திடீர் அறிவிப்பு! அ. தி. மு. க. பொதுச் செயலாளர் அனைத்திந்திய பொதுச்செயலாளராகி விடுகிறார்!”
“ஏன்ப்பா! அவர் அகில இந்திய பொதுச் செயலாள ராகத்தானே ஆகியிருப்பதாக அவர் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது — அகில இந்திய அ. தி. மு.க. பொதுச் செயலாளர் என்று வரவில்லையே!”
“ஹி ஹி ஹி! “பிறகென்ன அகில இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குப் பொதுச் செயலாளராகிவிட்டார் என்று கருதிக்கொண்டாயா? நான் சொல்வதைத் தெளிவாகக்கேள்!”
“நீயும் தெளிவாகச் சொல்!”
“தெளிவாவது தெருப்புழுதியாவது! அங்கிருந்து இங்கு வந்த பிறகுதான் எல்லாம் தொலைந்துவிட்டதே!”
“இப்பக் கொஞ்சம் தெளிவு வந்திருக்கு; சொல்லு! சொல்லு!”<noinclude></noinclude>
bw2shiyk9xozs2eyqc6c7ige0rntyzt
1928298
1928297
2026-04-29T13:17:12Z
Booradleyp1
1964
1928298
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||133}}</noinclude>யாருக்குத் தந்தி வருகிறதோ, அவர்கள் அந்த முறை கூடும் பொதுக்குழுவுக்குச் செல்லும் பொதுக்குழு உறுப்பினர்கள்.”
“அடடா! நம்ப கட்சி ஜனநாயக அமைப்பே அமைப்பு! நியமனம்! அதுவும் நிரந்தரமல்ல! தந்தி வந்தால் பொதுக்குழு! வராவிட்டால் வாசலுக்கு வெளியே! அதிருக்கட்டும், இனிமேல் நம்முடைய புரட்சித் தலைவர் இந்தியா முழுமைக்கும் புரட்சித் தலைவராக ஆகிவிடுவார்; இல்லையா?”
“ஆகிறாரோ இல்லையோ—இப்போது அவரே ஆக்கிக் கொண்டார்! யாரால் முடியும் இந்த அற்புத சாதனையைச் செய்ய? ஒரே நாள் பத்திரிகைப் பெட்டிச் செய்தி, திடீர் அறிவிப்பு! அ. தி. மு. க. பொதுச் செயலாளர் அனைத்திந்திய பொதுச்செயலாளராகி விடுகிறார்!”
“ஏன்ப்பா! அவர் அகில இந்திய பொதுச் செயலாள ராகத்தானே ஆகியிருப்பதாக அவர் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது — அகில இந்திய அ. தி. மு.க. பொதுச் செயலாளர் என்று வரவில்லையே!”
“ஹி ஹி ஹி! “பிறகென்ன அகில இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குப் பொதுச் செயலாளராகிவிட்டார் என்று கருதிக்கொண்டாயா? நான் சொல்வதைத் தெளிவாகக்கேள்!”
“நீயும் தெளிவாகச் சொல்!”
“தெளிவாவது தெருப்புழுதியாவது! அங்கிருந்து இங்கு வந்த பிறகுதான் எல்லாம் தொலைந்துவிட்டதே!”
“இப்பக் கொஞ்சம் தெளிவு வந்திருக்கு; சொல்லு! சொல்லு!”
{{nop}}<noinclude></noinclude>
3q7v7hu43y7phuczhenq1g1gtirsg18
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/27
250
641230
1928810
1926658
2026-04-30T08:10:49Z
Booradleyp1
1964
1928810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|18||கலைஞர்}}</noinclude>வடிவேலர்:- அது யார் கை? யார் கை?
சுவாமிகள்:- சத்தியமா சொல்றேன்; அது கறைபடாத கை! நம்ப “வாணிமுத்து”வின் கை! அவுங்களை அழைக்கலாம் நம்ப நிகழ்ச்சிக்கு!
வடிவேலர்:- அருமையான யோசனை!... பிரமாதம்! அய்யங்கார் சுவாமிகளுக்கு ஜே! ஜே!!
சுவாமிகள்:- பயப்படாதீர்! இனிமேல் வடிவேலர் வாழ்வில் புதிய திருப்பம்! வடிவேலரே! உமக்கு மட்டுமல்ல; நன்றி. விசுவாசம், நாணயம், கொள்கை இந்த முட்டாள்தனமான தத்துவங்களுக்கெல்லாம் இனி உலகத்தில் வேலை இல்லை! சந்தர்ப்பவாதம்! அதுவும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்! அதற்குத்தான் இனிமேல் வாழ்வு! அதுவே இப்போது இந்த வடிவேலருக்கு வந்த வாழ்வு!
:[சுவாமிகள், உணர்ச்சிமயமாகப் பேசிக் கொண்டேயிருக்கிறார். வடிவேலர் மகிழ்ச்சி பொங்க நிற்கிறார்.]
{{c|(திரை விழுகிறது.)}}
:[மீண்டும் பழைய “கோரஸ்” பாட்டுடன் நாடகம் முடிகிறது.]
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
9 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
kx96dxgaro2l3n1pa4akhredvazcqzx
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/111
250
641242
1928301
1928166
2026-04-29T13:37:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928301
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>மல் அப்படியே இருந்துவிடுவதில்லை. எந்த மனிதர்களாக இருந்தாலும் நோய்களுக்கு விதிவிலக்கல்ல.
குட்டிக்கதை எழுத எண்ணியவர், யாரையோ இழிவு படுத்த முயன்று — அவரை அறியாமலே அந்தப் பாத்திரத்தைச் சிங்கமாக உருவகப்படுத்தி விட்டார்.
யார் யாரையோ எச்சரிக்கை செய்து சிங்கத்தின் வாயிலே விழுந்து விடாதீர்கள் என்று எழுத வந்தவர், காக்கையையும் — கழுதையையும் — ஆட்டையும் — நரியையும் — வாத்தையும் மற்ற வனவிலங்குகளையும் “உடன்பிறப்புக்கள்” என்று சித்தரித்து விட்டார்.
உடன்பிறப்புக்களைப் பார்த்தால் அவருக்குக் காக்கை, கழுதை, நாய், நரியாகத்தான் தெரிகிறது; அவ்வளவு பெரியவர் அவர்!
சிங்கம், தன்னுடைய இனத்திலுள்ள சிங்கங்களைப் பார்த்துத்தான் உடன்பிறப்பே என்று அழைக்குமே தவிர, கழுதையையும் நரியையும் பார்த்தா “உடன்பிறப்பே!” என்று அழைக்கும்? அழைக்காது!
“நாம், அடுக்கு மொழி பேசுகிறோம் என்று கூறிச் சிலபேர் தடுக்குமொழி பேசுகிறார்கள்” என்று அண்ணா ஒருமுறை குறிப்பிட்டது, இந்தக் குட்டிக் கதைகளைப் பார்க்கும்போது உண்மையெனப் புரிகிறதல்லவா?
சிங்கத்தின் உடன்பிறப்பாம் உன்னைப்பார்த்து கழுதையென்றும் வாத்து என்றும் விமர்சிப்பதாலேயே நீ அந்தப் பிராணிகளாகவோ பறவைகளாகவோ ஆகிவிடமாட்டாய்!
ரோஜா மலரை; என்ன பெயர் இட்டு அழைத்தாலும் அது ரோஜாதான்! ரோஜாப் பூவை எருக்கம் பூ என்று சொன்னால், உடனே ரோஜாவுக்கு எருக்கம் பூவின்<noinclude></noinclude>
60rcw9i0fqb0ixgz5wwlmbo6yssi1ga
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/112
250
641243
1928304
1928168
2026-04-29T13:38:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928304
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||99}}</noinclude>இயல்பு வந்துவிடுவதில்லை. பரங்கிப்பூ என்று பெயர் சூட்டினால் ரோஜாவின் மணம் மாறிப்போய்விடப் போவதில்லை, என்ன பெயரில் அழைத்தாலும் ரோஜாதான்!
சிங்கத்தின் உடன்பிறப்புக்கள் சிங்கங்களாகத்தான் இருக்க முடியும். அவைகளைக் கழுதைகள் என்று யாராவது சொன்னால், அதற்காக அவைகள் மூட்டை சுமக்கத்
தயாராகி விடுவதில்லை. உடன்பிறப்புக்களை — இழிவு படுத்தும் நோக்குடன் என்ன சொல்லிக் கதை எழுதினாலும், சிங்கத்தின் உடன்பிறப்புக்கள், சிங்கங்களே தான்!
சிறு நரிகளல்ல!
“உடன்பிறப்புக்களே!” என்று சிங்கம் அழைக்கும் போது சிங்கக் கூட்டம்தான் அருகே ஓடிவரும்; தங்களின் உடன்பிறப்பு அழைத்ததாலே!
அனுபவமற்றவர் எழுதிய குட்டிக்கதையிலே ஒன்றைத் தெளிவாக்கியிருக்கிறார். சிங்கத்தின் அருகே சென்று நரி வாலாட்ட முடியாது — தொலைவிலேயிருந்து கூச்சல் போட்டுவிட்டு ஓடிவிடும் என்பதை மட்டும் மிகத் தெளிவாக்கியிருக்கிறார்.
வாதம் வந்த சிங்கமோ, வலியால் அவதிப்படும் சிங்கமோ, காயம் பட்ட சிங்கமோ — எந்தச் சிங்கமானாலும்; அதற்கென ஒரு குகையிருப்பதை “குட்டிக்கதைக்காரர்” தன்னையறியாமலேயே ஒத்துக்கொண்டிருக்கிறார்.
கதையைத்தான் அவர் சரியாகச் சொல்லவில்லை.
என் செய்வது; வான்கோழிகள், வண்ணக்கலாபம் விரித்திடத் துடிக்கின்றன!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
10—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
pwanlvriwem76ayrj8k240sj7dw04if
1928310
1928304
2026-04-29T13:43:23Z
Booradleyp1
1964
1928310
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||99}}</noinclude>இயல்பு வந்துவிடுவதில்லை. பரங்கிப்பூ என்று பெயர் சூட்டினால் ரோஜாவின் மணம் மாறிப்போய்விடப் போவதில்லை, என்ன பெயரில் அழைத்தாலும் ரோஜாதான்!
சிங்கத்தின் உடன்பிறப்புக்கள் சிங்கங்களாகத்தான் இருக்க முடியும். அவைகளைக் கழுதைகள் என்று யாராவது சொன்னால், அதற்காக அவைகள் மூட்டை சுமக்கத்
தயாராகி விடுவதில்லை. உடன்பிறப்புக்களை — இழிவு படுத்தும் நோக்குடன் என்ன சொல்லிக் கதை எழுதினாலும், சிங்கத்தின் உடன்பிறப்புக்கள், சிங்கங்களே தான்!
சிறு நரிகளல்ல!
“உடன்பிறப்புக்களே!” என்று சிங்கம் அழைக்கும் போது சிங்கக் கூட்டம்தான் அருகே ஓடிவரும்; தங்களின் உடன்பிறப்பு அழைத்ததாலே!
அனுபவமற்றவர் எழுதிய குட்டிக்கதையிலே ஒன்றைத் தெளிவாக்கியிருக்கிறார். சிங்கத்தின் அருகே சென்று நரி வாலாட்ட முடியாது — தொலைவிலேயிருந்து கூச்சல் போட்டுவிட்டு ஓடிவிடும் என்பதை மட்டும் மிகத் தெளிவாக்கியிருக்கிறார்.
வாதம் வந்த சிங்கமோ, வலியால் அவதிப்படும் சிங்கமோ, காயம் பட்ட சிங்கமோ — எந்தச் சிங்கமானாலும்; அதற்கென ஒரு குகையிருப்பதை “குட்டிக்கதைக்காரர்” தன்னையறியாமலேயே ஒத்துக்கொண்டிருக்கிறார்.
கதையைத்தான் அவர் சரியாகச் சொல்லவில்லை.
என் செய்வது; வான்கோழிகள், வண்ணக்கலாபம் விரித்திடத் துடிக்கின்றன!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
10—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
7lpw655778urdy8h23j25wxb7v68fhz
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/113
250
641244
1928306
1928183
2026-04-29T13:40:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928306
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>இருக்குமிடம் தேடி...</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்துப் பழந்தமிழ் மக்கள் அவற்றிற்கேற்பத் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை என்பனவாகும் அவை.
அந்த ஐந்து நிலச் சிறப்புக்களைப் பின்னணியாகக் கொண்டு அக்காலத்துப் புலவர் பெருமக்கள் எழுதிக் குவித்த வளமிகு பாடல்களின் தொகுப்புக்களில் ஒன்று தான் குறுந்தொகையாகும்.
ஐந்து நிலங்களில் மலையும் மலை சார்ந்த பகுதிகளும் ‘குறிஞ்சி’ என அழைக்கப்பட்டது.
கிளியும் மயிலும் குறிஞ்சி நாட்டுப் பறவைகளாகப் போற்றப்பட்டன.
சிங்கம், புலி, கரடி, யானைகள் அந்த நிலத்துக்குரிய விலங்குகள்.
அகிலும் தேக்கும் மணம் அழியாச் சந்தனமும் மூங்கிலும் அங்கு காணப்படும் மரங்கள்.
குறிஞ்சி, காந்தள், வேங்கையெனும் மலர்கள் எழில் சேர்க்கும் ஏற்றமிகு நிலமே குறிஞ்சி நிலம்.
தினையும், தேனும், மலை நெல்லும் அந்த மக்களின் உணவுப் பொருட்கள்.
{{nop}}<noinclude></noinclude>
gmg9bl7l5u95yr0w6y56t75zwk9g4w0
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/114
250
641245
1928307
1928177
2026-04-29T13:41:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928307
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||101}}</noinclude>ஆண்களைப் பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறவன், கானவன் என்றும் பெண்களைக் கொடிச்சியர், குறத்தியர் என்றும் அழைப்பர்.
அவர்கள் வழிபடு தெய்வமாக முருகனைக் கொண்டிருந்தனர்.
இந்தக் குறிஞ்சி நிலத்து நிகழ்ச்சியொன்றைத்தான் குறுந்தொகைப் புலவர்களிலே ஒருவரான ஐயூர் முடவனார் அழகுறச் சித்தரிக்கிறார்.
{{left_margin|3em|<poem>“அமர்க்கண் ஆமாம் அம் செவிக்குழவி
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து,
கானம் நண்ணிய சிறுகுடிப் பட்டென
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு,
மருவின் இனியவும் உளவோ?
செல்வாம்—தோழி! ஒல் வாங்கு நடந்தே”</poem>}}
காதல் பிரிவுதான்! அதனால் ஏற்பட்ட கவலைதான்! கண்களிலிருந்து மழை கொட்டுகிறது. வளைகள் கழன்று வீழ்கின்ற அளவுக்கு வடிவழகி மெலிந்து விட்டாள். காதலனை மறக்கமுடியாமல் உறக்கம் துறந்துவிட்டக் கண்களை ஏசுகிறாள்.இப்படிப் பல பாடல்கள் உண்டு.
“காலம் தாழ்த்தாமல் ஓடிவருவேன், வஞ்சியே! உன்னைக் கொஞ்சிட!” என்று கூறி விட்டுச் சென்றவன், இன்னும் வரவில்லை. பார்த்தாயா? அவன் உன் இயல்புக்குச்
சிறிதும் பொருத்தமில்லாதவன்
என்று சினங் கொப்பளிக்கக் கூறுகிறாள் தோழி!
பாயசக் காதல் பருகிடத் துடிக்கும் பருவ மயிலாள் அவள் எனினும் தன் தோழிக்குத் தண்மதி ஒளியென அமைதியாக, ஒரு பதிலைத் தருகிறாள்.
{{nop}}<noinclude></noinclude>
ohwsezs2l1osuvcmx3a182pvsrl2cg6
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/115
250
641246
1928308
1928178
2026-04-29T13:43:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928308
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|102||கலைஞர்}}</noinclude>“அவர், என் இயல்புக்குப் பொருந்தாவிட்டாலும் நான் அவர் இயல்புக்குத் தக்கபடி நடப்பதாக இருக்கிறேன். அவர் இங்கு வராவிட்டால் என்ன? நாம் அங்கே அவர் இருப்பிடம் செல்வோம் தோழி!”
இந்த பதிலைக் கேட்ட தோழி திகைத்துப் போய்;
“என்னடி இது? அவர் இயல்புக்கு நீ உன்னை மாற்றிக் கொள்வதா? அது எப்படி முடியும்?”
எனக் கேட்கிறாள்.
தோழியின் ஐயப்பாட்டை நீக்குவதற்காக அந்தக் காதல் பறவை வழங்கிய விளக்கம்தான், இந்தக் குறுந்தொகைப் பாடலாகும்.
“பசுக்கூட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கன்றுகள் இடப்பெயர்ச்சியை புரிந்துகொண்டு அந்த வீட்டின் இயல்புக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். அதுபோல காதலன் இயல்பை அறிந்து அதற்கேற்ப என் இயல்பை மாற்றிக் கொண்டு காதலன் இருக்குமிடம் தேடிச் செல்வதாக உள்ளேன்”
உடன்பிறப்பே, இலக்கியத்தின் இனிமையும்— எடுத்தியம்பும் கருத்தும்—உவமையும்—எவ்வளவு சுவைமிக்க விருந்தாக இருக்கின்றது கவனித்தாயா?
இனி, கிழமைக்கு ஒரு முறை அல்லது இரு முறை—தவறாது தருகின்றேன் இந்தத் தமிழ் இலக்கியப் படையலை!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
13—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
eyht8sloap5au9k5wqvocfb9bj9td6x
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/116
250
641247
1928318
1928181
2026-04-29T13:58:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928318
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஜனநாயகச் சோலை ஜவகர் !</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உணர்ந்தவரும், உணர்த்தியவரும், அதற்கென உழைத்தவருமான பண்டித நேரு பெருமகனாரின் பிறந்த நாள் விழா, குழந்தைகள் தினமாக நாடெங்கும் கொண்டாடப் பெறுகிறது.
குழந்தையுள்ளம் படைத்தவர்—கொடுமைகள் பல ஏற்று நாட்டு விடுதலைக் கொடியை வான் நோக்கித் தூக்கிப் பிடித்தவர்—ஆண்டுக் கணக்கில் சிறை வாழ்வை
ஏற்று அந்த நேரத்தை வீணாக்காமல் சிந்தனைச் செல்வங்களை எழுத்தாக்கி உலகிற்கு வழங்கியவர்—இந்தியத் திருநாட்டின் இரண்டாவது எவரெஸ்ட் சிகரமென
உயர்ந்து நின்றவர்—அவரது பிறந்த நாளைக் கொண்டாடும்பொழுது அவரின் கனவுகளை நடைமுறைப் படுத்திட; நாட்டு மக்கள் அனைவரும் சூளுரை மேற்கொள்ள வேண்டும்.
வலிவு மிகுந்த அந்த நெஞ்சிலேயிருந்து பொலிவு குறையாமல் புறப்பட்ட கருத்துக்களின் புதையலாகத்தான் அவர் எழுதிய உலக சரித்திரமானாலும்—அவர் ஆற்றிய உரைகளானாலும் விளங்கிக் கொண்டிருக்கின்றன.
அவர் ஒரு அழுத்தமான பகுத்தறிவுவாதி என்பதை அவரது எழுத்துக்களே சாட்சியங்களாக நின்று எடுத்துக் காட்டுகின்றன.
{{nop}}<noinclude></noinclude>
o9plccjh9yu15gcagygq039bg18b91b
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/120
250
641248
1928451
1928185
2026-04-30T05:00:55Z
Mohanraj20
15516
1928451
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||107}}</noinclude>“நாம் மேற்கொண்டுள்ள பணி மகத்தானது. பலகோடி மக்களின் முன்னேற்றத்தை நோக்குவது. அவர்களிலே பெருந்திரளானவர்கள் உங்களுக்கு உதவினாலொழிய இதைச் சாதிக்க முடியாது. ஜனநாயக வழியை நீங்கள் நாடுவதாக இருந்தால் மக்களை அணுகும் முறையிலும் ஜனநாயகம் இருக்கவேண்டும். நீங்கள் அவர்களிடம் போகவேண்டும். அவர்களுக்கு ஆணைகள் அனுப்பக்கூடாது.”
அரசு அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் எப்படிப்பட்ட தொடர்பு இருந்திட வேண்டும் என்பதற்கு அவர் வழங்கும் அறிவுரைதான் இது!
இவற்றையெல்லாம் அவர் என்றைக்கோ சொன்னார்; இப்போது என்ன வந்தது—என்று புறக்கணித்து விடாமல்; சமுதாயம் புதுமை பூண்டு உலவிடவும்,
மூட நம்பிக்கைத் தடைகளை அகற்றி முன்னேற்ற வழியில் நாடு நடைபோடவும், சமவாய்ப்பும் சமூக நீதியும் பெற்றவர்களாக மக்கள் இலட்சியப் பயணத்தில்
வெற்றி கண்டிடவும்—அவர் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொண்டு உழைத்திட வேண்டும். மக்களின் உழைப்பைக் கோருகிற அதே நேரத்தில் அந்த மக்களோடு இணைந்து நின்று அதிகார அணியினர், திட்டங்களின் வெற்றிக்குப் பாடுபடவேண்டும்.
சிறையிலிருந்தபோதும் — செங்கோல் நடாத்திய போதும் அவரது இதயம் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான சங்கீதத்தைத்தான் பாடிக்கொண்டிருந்தது.
உடன்பிறப்பே, நேருவைப்பற்றி இன்றைக்கு ஏதோ நமது கழகம் புகழ்ச்சரம் தொடுப்பதாகச் சிலர் எண்ணிடக்கூடும்.
{{nop}}<noinclude></noinclude>
hhwlvewrhgcqco443p4d8j6u86u9b4x
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/117
250
641249
1928320
1928187
2026-04-29T14:00:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928320
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|104||கலைஞர்}}</noinclude>“எனக்கென்னவோ, மறு உலகத்தைப்பற்றி அக்கறை ஏற்படவில்லை. இந்த உலகில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றியே என் உள்ளம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகில் எனக்குள்ள வழி, தெளிவானால் போதும்; அதோடு மன நிறைவு கொள்வேன். இங்கே என் கடமை என்ன? அதை விடுத்து மறு உலகைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தேவருலகம் அல்லது சொர்க்கம் என்று எப்படிக் குறிப்பிட்டாலும், அதெல்லாம் ஏதோ குழந்தையொன்று தனக்கு “ஜிலேபி” கிடைக்கப் போகிறது என்கிற ஆசையில் அடங்கி ஒடுங்கி நடந்துகொள்வது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. வயதானவர்களே இவ்வாறு நடந்துகொண்டால், அதைச் சிறுபிள்ளைத்தனம் என்றுதானே கூறவேண்டும்?”
இத்தகைய பகுத்தறிவுக் கருத்துக்கள் குழந்தைகள் நாளாம் நேரு பிறந்த நாளின்போது—குழந்தைகளின் நெஞ்சத்தில் பதிந்திடும் முயற்சிகளை மேற்கொள்வது நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும், மூடநம்பிக்கையற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கும் மெத்தவும் பயன்படுமன்றோ?
நேரு பெருமான், தனது மறைவுக்குப் பிறகு — தன் உடலை என்ன செய்யவேண்டும் என்பதுபற்றிக் குறிப்பிட்டு எழுதிய புகழ்மிக்க உயிலில் “எனது மரணத்துக்குப் பிறகு மதச் சடங்குகள் தேவையில்லை. அத்தகைய நம்பிக்கையெதுவும் எனக்கில்லை. அவை, நமக்கும் பிறருக்குமிடையே வேறுபாட்டையும், நம்மில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் தன்மையினையும் உருவாக்கிவிடுமென்று நான் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டதோடு, தனது உடல் எரியூட்டப்பெற்று அந்தச் சாம்பலை விமானத்தின் மூலம் வயல் வெளிகளில் தெளித்துவிட வேண்டுமென்றும் இறுதி வேண்டுகோளாக விடுத்திருந்தார்.
{{nop}}<noinclude></noinclude>
8vb9vap3lnfo7j2bix8xgtdpo5lw2sp
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/118
250
641250
1928430
1928184
2026-04-30T04:49:49Z
Mohanraj20
15516
1928430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||105}}</noinclude>புதுமைக் கருத்துக்கள் மலரும் பூஞ்சோலையாகத் திகழ்ந்த அந்தப் பேரறிவாளர் தனது மரண சாசனத்தில் தீட்டியுள்ள உருக்கமிகு வாசகத்தில், நண்பர்களை எவ்வாறு நேசித்தார் என்பதைப் படிக்கும்போது நம்மையறியாமலே உணர்ச்சி வசப்படுகிறோம்.
“எனது பல்வேறு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் ஆழமான அன்பைத் தருவதற்கு நான்
கடமைப்பட்டவன். நாங்கள் அனைவ்ரும் எல்லா நிலைமைகளிலும் தோழர்களைப் போலவே சுக துக்கங்களைச் சமமாகப் பகிர்ந்துகொண்டவர்கள்”
நேருவின் வாழ்க்கை “நிறைந்த வாழ்க்கை”யாக இருந்தது என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை அல்லவா?
உடன்பிறப்பே, 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட“ஜவகர்லால் நேருவின் கருத்துரைகள்” என்ற நூலில் — இந்திய நாட்டுக் கிராம வளர்ச்சி பற்றிய வளமான எண்ணக் கருவூலங்களையும், தாய்த்திருநாடு தரணியெலாம் போற்றிடும் வண்ணம் எவ்வாறு தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற அவரது ஆவலையும் விரிவாகக் காணமுடியும்.
“இந்தியாவைப்போல் உன்னதமான குறிக்கோள்களைக் கொண்டுள்ள நாடு, வேறு எதுவுமே இல்லை என்று கருதுகிறேன். இதே சமயத்தில் மற்றொன்றையும் நான் சேர்த்துச் சொல்ல வேண்டும். குறிக்கோளுக்கும், செயலுக்கு மிடையே நிலவும் இடைவெளி, இந்தியாவில் இருப்பது போல் வேறு எந்த நாட்டிலும் பெரிதாக இருப்பதில்லை. ஆனாலும் ஒன்று சொல்கிறேன், நட்சத்திரங்களை எட்டி அடைந்துவிட முடியாதென்றாலும் அவ்வப்போது அவற்றின்<noinclude></noinclude>
jk4fr7tlpgagvga5u5v5q5ykq02ar3t
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/121
250
641251
1928457
1926220
2026-04-30T05:03:01Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1928457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1928460
1928457
2026-04-30T05:04:23Z
Mohanraj20
15516
1928460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>108
சிற்சில
கலைஞங்
கருத்து வேறுபாடுகளுக்கிடையிலேயும்
இந்தியாவின் அந்த இணையற்ற மனிதரை நமது கழகம்
மதிப்பு வாய்ந்த மாணிக்கம் என்றே கருதி வந்திருக்
கிறது.
6
"நேரு. கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்,
நான் கொட்டிக் கிடக்கும் செங்கல்"
என்று அறிஞர் அண்ணா அவர்கள் பண்டித நேரு
வாழ்ந்த காலத்திலேயே பாராட்டுப் பாமாலை அணி
வித்திருக்கிறார்.
1964 ஆம் ஆண்டு பண்டிதர் மறைந்தபோது
வானொலியில் உரையாற்றிட நான் அழைக்கப்பட்டேன்.
அப்போது அண்ணா சென்னை சிறைச்சாலையில் இருந்
தார். சிறையிலிருந்தவாறே நேருவின் மறைவு குறித்து
அண்ணா அவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்
கள். வானொலியில் அன்று நான் நிகழ்த்திய உரையின்
ஒரு பகுதியை நினைவுபடுத்தி இந்தக் கடிதத்தை முடிக்
கிறேன்.
6 6
விட்டதே.
.
முடியவில்லை
-
'ஜனநாயகப் பாதுகாவலர் ஜவகர் காலமாகிவிட்.
டார். நம்பத்தான்
ஆனாலும் நடந்து
நம்பிக்கை நட்சித்திரம், மறைந்துவிட்ட
ஏமாற்றத்தில் பெருமூச்சு விடுகிறோம். உலகம். வல்லூறு
களின் வேட்டைக் காடாக நாய் நரிகள் விருந்துண்
ணும் ரண களமாக
மாறிவிடக் கூடாது எனப்
பாடுபட்டு அவர் பறக்கவிட்ட வெண்புறா. சிறகடித்துத்
துடிக்கிறது, அவர் மறைந்த செய்தி கேட்டு!
இமயம் முதல் குமரி வரையில் உள்ளோர் இதயங்களில்
எல்லாம் இடம் பெற்றிருக்கும் உரிமையை உத்தமர்
காந்தியடிகளுக்குப் பிறகு பெற்றிருந்த ஒரே மனிதர்
ஒரே தலைவர் பண்டித நேரு. அவர் இன்றில்லை.
அவர் பேணி வளர்த்த ஜனநாயகக் கொள்கை இருக்கி
-
.<noinclude></noinclude>
pq47ibfhtgp58dhl7aijrh6x3h0oqr6
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/127
250
641256
1928488
1926225
2026-04-30T05:17:15Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1928488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/131
250
641259
1928507
1926228
2026-04-30T05:31:55Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1928507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/43
250
641391
1928820
1927216
2026-04-30T08:13:45Z
Booradleyp1
1964
1928820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|34||கலைஞர்}}</noinclude>பேச, பார்க்க, சுவாசிக்க, சிந்திக்க, நடக்க, இப்படி எல்லா சக்திகளும் பொருந்திய ‘ஆவிமனிதன்’ ஒருவன் இருப்பதைப் போலவும், அவன், தனக்கிடப்பட்ட ஆணையின்படி — குறிப்பிட்ட உயிரினங்களாக உருவமெடுக்கிறான் என்பதைப் போலவும் — இந்த விஞ்ஞான யுகத்திலும் விளம்பரம் செய்து கொண்டிருப்பது மனித சமுதாயத்துக்கு நல்லதல்ல!
ஆவியோடு பேசலாம் என்று ஏமாற்றுவது — முற்பிறவியைச் சொல்லுகிறாள் என்று கதைகட்டுவது — அற்புத ஜாலங்கள் — சித்து வேலைகள் — அவதார மகிமைகள் — மந்திர மாயங்கள் — இப்படி எத்திப் பிழைப்பது, இவைகளுக்கெல்லாம் முடிவுகட்ட கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்படாவிட்டால், மேலும் பல மெய்வழிச் சாலைகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த இயலாது.
:“கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர்புகா
:துடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
:விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
:இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!”
என்று அந்தக் காலத்திலேயே சிவவாக்கியர் அழுத்தம் திருத்தமாகப் பாடியுள்ளதை, உடன்பிறப்பே நீ மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் போதாது மற்றவர்களுக்கும் நினைவுபடுத்திட வேண்டும்.
சமுதாயக் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும், நேர்மையையும், நெறியையும் மூட நம்பிக்கைகளால் நிலை நிறுத்த முடியாது. அறிவுத் தெளிவின் வாயிலாகவும், அரசின் முறையான சட்டங்களின் மூலமாகவும் தான் சமுதாய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க முடியும்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
12 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
jx2zhnpzmdkq5y1d4pmaur4hqo1tpbw
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/33
250
641436
1928814
1926972
2026-04-30T08:11:48Z
Booradleyp1
1964
1928814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|24||கலைஞர்}}</noinclude>எந்த ஒரு நாடும், அது அமெரிக்காவானாலும், அல்லது சோவியத் ரஷியாவானாலும், இந்தியாவுடன் நல்லெண்ண அடிப்படையில் உறவும் நட்பும் கொண்டிருந்தால்தான் அந்த நாடு பற்றி நமக்கு அன்பு ஏற்படுமே யல்லாமல், இந்தியாவுடன் உறவை முறித்துக் கொள்ள விரும்புகிற எந்த நாட்டுடனும். அல்லது இந்தியாவின் நட்பைத் தனக்கு மட்டும் சாதகமாக்கிக் கொள்ளத் திட்டமிடுகிற எந்த நாட்டுடனும் கடுகளவு அனுதாபங்காட்டவும், நமது கழகத்தினர் என்றைக்குமே எண்ணியதில்லை.
வீண்பழி சுமத்துவதின் மூலம், கழகத்தை வேரோடு சாய்த்துவிடலாம் என்று இந்திய கம்யூனிஸ்டுகள் வகுத்துள்ள திட்டம், கருவிலேயே சிதைந்துவிடும்! வஞ்சகம் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.
அது ஏதோ பேரொளி போலத் தெரியும்! கண்ணைக்கூடப் பறிக்கும் வண்ணம் ஜொலிக்கும்! அது மின்னல் கீற்று! மின்மினிப் பூச்சி!
கழகக் கதிர் முன்னே இந்தக் கம்யூனிஸ்டுகளின் தந்திரம் பொசுங்கிவிடும்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
9 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
jzw2tcfxz67zftw0x9rbk9iyuwzfiw1
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/38
250
641511
1928817
1926978
2026-04-30T08:12:46Z
Booradleyp1
1964
1928817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||29}}</noinclude>இடையில் பாய்ந்த எதிர்பாரத சோதனை கண்டு பாகவதர் பதைத்துப் போனார் என்றும்—கலைவாணர் அப்போதும் கலங்காமல்தான் இருந்தார் என்றும்—அருகில் இருந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பதைத்தாலும், பதைப்படையாமல் இருந்தாலும் பலன் ஒன்றுதான் என்கிறபோது, பதைப்படையாமலேயே இருந்துவிடுவோமே என்பது நெஞ்சுறுதி கொண்ட கலைவாணரின் கொள்கை!
உருவத்தால் அவர்கள் இருவரும் நம்மிடம் இல்லை. ஆனால் இன்றைக்கும் அவர்களது இசையை, இனிய கருத்துரையை, இசைத்தட்டுக்களில், வானொலியில் கேட்டு இன்புறுகிறோம். அவர்களது புகழைப் பெருமையைப் பேசுகிறோம்.
:“காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
:கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
:பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ?”
என்ற பாரதிதாசனின் பாடல், பாகவதர்—கலைவாணர் வாழ்வுக்கும், அவர்கள் வாழ்வில் வந்த சோதனை நீங்கியதற்கும் எத்துணைப் பொருத்தமுடையதாக அமைந்துள்ளது பார்த்தாயா?
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
11 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
tla4y1zvtvcxauwrd7a3a30srg74tsg
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/39
250
641516
1928816
1926979
2026-04-30T08:12:24Z
Booradleyp1
1964
1928816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>சமுதாய மறுமலர்ச்சி காண...!</b>}}
'''உடன்பிறப்பே,'''
அதிசயச் செய்திகள், அற்புதங்களைப் பற்றிய கட்டுரைகள், மீண்டும் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது இப்படிப்பட்ட
மூட நம்பிக்கைக் கதைகளை ஏடுகளின் வாயிலாகப் பரப்பிடாவிட்டால் இங்குள்ள சனாதனிகளுக்குத் தூக்கமே வருவதில்லை.
அவரவர்களுக்குரிய கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இவைகளைப் பற்றி அவர்தம் மனம் புண்படும் படியாக விமர்சிக்கக்கூடாது என்பதுதான் நமது கருத்து எனினும், அந்தக் கடவுளின் பெயரால் ஆயிரக் கணக்கான கதைகளையும், மதத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுகிற செய்திகளையும் பரப்புவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல!
அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள கடவுள் தன்மை—மதத்தின் மாண்பு இவைகளுக்கே கூட இழிவு கற்பிக்கும் வகையில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள நம்பமுடியாத கதைகள் ஏராளம் இருக்கும்போது இன்னும் ஏன், அந்த முயற்சியில் ஈடுபட்டு, புதிய புதிய அவதார புருடர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.
சமுதாயத்தில் ஒழுங்கும், கட்டுப்பாடும் நிலைத்திட கடவுளைக் கூறி, அவருக்குப் பயந்து நடக்கவேண்டும் என்று அச்சுறுத்தி, அதனையொட்டிய விதிமுறைகளை வரையறுத்-<noinclude></noinclude>
2l53yphr8iqn2atmkyfi6vh27uvzjji
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf
252
641567
1928999
1928154
2026-04-30T10:35:59Z
Rabiyathul
5890
=கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12
1928999
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
=கடிதம்106
=கடிதம்107
95=கடிதம்108
=கடிதம்109
=கடிதம்110
=கடிதம்111
=கடிதம்112
=கடிதம்113
=கடிதம்114
=கடிதம்115
=கடிதம்116
=கடிதம்117
=கடிதம்118
=கடிதம்119
=கடிதம்120
=கடிதம்121
=கடிதம்122
=கடிதம்123
=கடிதம்124
=கடிதம்125
=கடிதம்126
=கடிதம்127
=கடிதம்128
=கடிதம்129
=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
lfk3hgez9c5ndurhjzezk7ztis8jaqa
1929000
1928999
2026-04-30T10:38:37Z
Rabiyathul
5890
=கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12
1929000
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
=கடிதம்107
95=கடிதம்108
=கடிதம்109
=கடிதம்110
=கடிதம்111
=கடிதம்112
=கடிதம்113
=கடிதம்114
=கடிதம்115
=கடிதம்116
=கடிதம்117
=கடிதம்118
=கடிதம்119
=கடிதம்120
=கடிதம்121
=கடிதம்122
=கடிதம்123
=கடிதம்124
=கடிதம்125
=கடிதம்126
=கடிதம்127
=கடிதம்128
=கடிதம்129
=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
majzp0aq60o0ilc9nq541d4d0aeme95
1929001
1929000
2026-04-30T10:39:40Z
Rabiyathul
5890
=கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12
1929001
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
=கடிதம்109
=கடிதம்110
=கடிதம்111
=கடிதம்112
=கடிதம்113
=கடிதம்114
=கடிதம்115
=கடிதம்116
=கடிதம்117
=கடிதம்118
=கடிதம்119
=கடிதம்120
=கடிதம்121
=கடிதம்122
=கடிதம்123
=கடிதம்124
=கடிதம்125
=கடிதம்126
=கடிதம்127
=கடிதம்128
=கடிதம்129
=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
lpkoqs7qbak2xg2sp1yxn7bjxsz2ltc
1929002
1929001
2026-04-30T10:48:34Z
Rabiyathul
5890
1110
1929002
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
=கடிதம்111
=கடிதம்112
=கடிதம்113
=கடிதம்114
=கடிதம்115
=கடிதம்116
=கடிதம்117
=கடிதம்118
=கடிதம்119
=கடிதம்120
=கடிதம்121
=கடிதம்122
=கடிதம்123
=கடிதம்124
=கடிதம்125
=கடிதம்126
=கடிதம்127
=கடிதம்128
=கடிதம்129
=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
r7qr637t1msvgljjjgmy86to43xopcz
1929003
1929002
2026-04-30T10:51:13Z
Rabiyathul
5890
1929003
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
146=கடிதம்111
161=கடிதம்112
=கடிதம்113
=கடிதம்114
=கடிதம்115
=கடிதம்116
=கடிதம்117
=கடிதம்118
=கடிதம்119
=கடிதம்120
=கடிதம்121
=கடிதம்122
=கடிதம்123
=கடிதம்124
=கடிதம்125
=கடிதம்126
=கடிதம்127
=கடிதம்128
=கடிதம்129
=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
46mpuvhjq9f6ubr3wx3c2rziajx1u85
1929005
1929003
2026-04-30T10:57:22Z
Rabiyathul
5890
1929005
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
146=கடிதம்111
161=கடிதம்112
179=கடிதம்113
200=கடிதம்114
213=கடிதம்115
=கடிதம்116
=கடிதம்117
=கடிதம்118
=கடிதம்119
=கடிதம்120
=கடிதம்121
=கடிதம்122
=கடிதம்123
=கடிதம்124
=கடிதம்125
=கடிதம்126
=கடிதம்127
=கடிதம்128
=கடிதம்129
=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
h7wqp3z4g8kvajwuv5u6dxu8ok877zl
1929009
1929005
2026-04-30T11:03:50Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929009
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
146=கடிதம்111
161=கடிதம்112
179=கடிதம்113
200=கடிதம்114
213=கடிதம்115
230=கடிதம்116
235=கடிதம்117
248=கடிதம்118
259=கடிதம்119
272=கடிதம்120
=கடிதம்121
=கடிதம்122
=கடிதம்123
=கடிதம்124
=கடிதம்125
=கடிதம்126
=கடிதம்127
=கடிதம்128
=கடிதம்129
=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
2p4uye8yq5ker8c7z7orpi3ifok4ukw
1929016
1929009
2026-04-30T11:17:40Z
Rabiyathul
5890
121
1929016
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
146=கடிதம்111
161=கடிதம்112
179=கடிதம்113
200=கடிதம்114
213=கடிதம்115
230=கடிதம்116
235=கடிதம்117
248=கடிதம்118
259=கடிதம்119
272=கடிதம்120
287=கடிதம்121
=கடிதம்122
=கடிதம்123
=கடிதம்124
=கடிதம்125
=கடிதம்126
=கடிதம்127
=கடிதம்128
=கடிதம்129
=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
ohj5jf7xgefx0vdikrz1387xpdrirqd
1929020
1929016
2026-04-30T11:28:36Z
Rabiyathul
5890
1929020
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
146=கடிதம்111
161=கடிதம்112
179=கடிதம்113
200=கடிதம்114
213=கடிதம்115
230=கடிதம்116
235=கடிதம்117
248=கடிதம்118
259=கடிதம்119
272=கடிதம்120
287=கடிதம்121
305=கடிதம்122
314=கடிதம்123
330=கடிதம்124
=கடிதம்125
=கடிதம்126
=கடிதம்127
=கடிதம்128
=கடிதம்129
=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
ek3akmh0epsqu8y2cifsrftvs5fy59p
1929021
1929020
2026-04-30T11:32:59Z
Rabiyathul
5890
352
1929021
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
146=கடிதம்111
161=கடிதம்112
179=கடிதம்113
200=கடிதம்114
213=கடிதம்115
230=கடிதம்116
235=கடிதம்117
248=கடிதம்118
259=கடிதம்119
272=கடிதம்120
287=கடிதம்121
305=கடிதம்122
314=கடிதம்123
330=கடிதம்124
345=கடிதம்125
351=கடிதம்126
=கடிதம்127
=கடிதம்128
=கடிதம்129
=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
ipjey87s2cpmaoeqrxs1olqv3bg086z
1929025
1929021
2026-04-30T11:45:13Z
Rabiyathul
5890
1929025
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
146=கடிதம்111
161=கடிதம்112
179=கடிதம்113
200=கடிதம்114
213=கடிதம்115
230=கடிதம்116
235=கடிதம்117
248=கடிதம்118
259=கடிதம்119
272=கடிதம்120
287=கடிதம்121
305=கடிதம்122
314=கடிதம்123
330=கடிதம்124
345=கடிதம்125
351=கடிதம்126
363=கடிதம்127
378=கடிதம்128
=கடிதம்129
=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
006i1ig9jiak7092458q4fhf5brfrrj
1929028
1929025
2026-04-30T11:49:18Z
Rabiyathul
5890
1929028
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
146=கடிதம்111
161=கடிதம்112
179=கடிதம்113
200=கடிதம்114
213=கடிதம்115
230=கடிதம்116
235=கடிதம்117
248=கடிதம்118
259=கடிதம்119
272=கடிதம்120
287=கடிதம்121
305=கடிதம்122
314=கடிதம்123
330=கடிதம்124
345=கடிதம்125
351=கடிதம்126
363=கடிதம்127
378=கடிதம்128
387=கடிதம்129
=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
6l66r6ylqj0sdelpmuh6trjbegn845p
1929029
1929028
2026-04-30T11:50:47Z
Rabiyathul
5890
1929029
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
146=கடிதம்111
161=கடிதம்112
179=கடிதம்113
200=கடிதம்114
213=கடிதம்115
230=கடிதம்116
235=கடிதம்117
248=கடிதம்118
259=கடிதம்119
272=கடிதம்120
287=கடிதம்121
305=கடிதம்122
314=கடிதம்123
330=கடிதம்124
345=கடிதம்125
351=கடிதம்126
363=கடிதம்127
378=கடிதம்128
387=கடிதம்129
397=கடிதம்130
=கடிதம்131
=கடிதம்132
=கடிதம்133
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
fg7b6m365nb3x1icatz3urx860czshm
1929032
1929029
2026-04-30T11:53:02Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929032
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=2003
|Source=pdf
|Image=1
|Number of pages=432
|File size=66.91
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
21to22 = பொருளடக்கம்
23to24 = வெற்றுப்பக்கம்
25=கடிதம்104
40=கடிதம்105
58=கடிதம்106
79=கடிதம்107
95=கடிதம்108
113=கடிதம்109
127=கடிதம்110
146=கடிதம்111
161=கடிதம்112
179=கடிதம்113
200=கடிதம்114
213=கடிதம்115
230=கடிதம்116
235=கடிதம்117
248=கடிதம்118
259=கடிதம்119
272=கடிதம்120
287=கடிதம்121
305=கடிதம்122
314=கடிதம்123
330=கடிதம்124
345=கடிதம்125
351=கடிதம்126
363=கடிதம்127
378=கடிதம்128
387=கடிதம்129
397=கடிதம்130
419=கடிதம்131
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}}
{{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
45mizs75pi95h9sn4717yqb87ofakp2
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/44
250
641571
1928819
1927219
2026-04-30T08:13:15Z
Booradleyp1
1964
1928819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>கோட்டம் திறக்கப்படுகிறது<br>
குறளோவியம் தீட்டப்படுகிறது</b>}}
'''உடன்பிறப்பே,'''
இன்று எழுதுவது பெரிய கடிதம்! இடையிடையே தலைநீட்டும் சில குறிப்புக்கள். “சுயபுராணம்” அல்லது “சுய விளம்பரம்” போல் தோன்றக்கூடும். இப்போது அந்தக் குறிப்புக்கள் தேவையோ இல்லையோ, எதிர்காலத்துக்கு நிச்சயம் தேவைப்படும். எனவே இந்த மடலில் என்னைப் பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டிருந்தால்— நான் நாட்குறிப்பு எழுதும் வழக்கமில்லை — அப்படி நான் ஒரு “நாட்குறிப்பில்” தொகுத்திருந்ததை உனக்கு நினைவூட்டியதாகக் கருதிக்கொண்டு போறுத்தருளவேண்டுகிறேன்.
:இன்று, சென்னையில் ஒரு விழா!
:திருவிழா!
:திருமிகுவிழா
:திருவள்ளுவருக்கு எடுக்கும் விழா!
<poem>கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங்களிப்பாய்—
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய்—
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய்—
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியாய்—
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய்—</poem>
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு<noinclude></noinclude>
lyznkyyq5zme5fwtk9m120v7acz4bhy
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/58
250
641607
1928825
1928097
2026-04-30T08:14:43Z
Booradleyp1
1964
1928825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||49}}</noinclude>உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக் கால வேதனையையும் இனிய வேதனையாகக் கொண்டு; பாலூட்டிச் சீராட்டிப் பழமுத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கனுப்பி, பின்னழகும் முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணையொன்றை தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும் போது, தாலி கட்டும் காட்சியினைக் காணமுடியாமல் மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒருவிதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்!
என் தங்க உடன்பிறப்பே! அந்தத் தாயின் மகிழ்ச்சியைத் தான், நான் பெறுகிறேன் இன்று!
ஆம்—என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப் பள்ளு பாடுகிறேன்.
::“நெடுநாள் ஆசை நிறைவேற்றம்
::நெஞ்சில் இன்பக் கொடியேற்றம்”
நீயும் சேர்ந்து பாடுக! இந்த மகிழ்ச்சிப் பாடலை! வாழ்க வள்ளுவர்! வெல்க குறள்நெறி!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
15 – 4 – 76}}
::(குறிப்பு:— ‘எமர்ஜன்சி’ தணிக்கைக்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடைபெற்று சில நாட்கள் முரசொலியில் கலைஞர் எழுதிய கடிதங்களில் ஒன்று இது.){{nop}}<noinclude></noinclude>
ewcijw22rmxqpxy7viwhyalduan6nft
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/59
250
641608
1928823
1928098
2026-04-30T08:14:19Z
Booradleyp1
1964
1928823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>அமைதி காத்துப் பணிபுரிவோம்!<br>
அமைப்பு ரீதியாக இயங்குவோம்!</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
கழகத்திற்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களின் உறுப்பினர் உரிமையைப் புதுப்பித்திடவுமான பணிகளைக் கழக அமைப்புக்கள் ஆங்காங்கு தொடங்கிட வேண்டுமென நமது பொதுச் செயலாளர் டாக்டர் நாவலர் அவர்கள் தலைமைக் கழகச் சார்பில் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையினை, நீ மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றிருப்பாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் பொதுச் செயலாளர் நாவலரும், பொருளாளர் பேராசிரியரும், மற்றும் கழக பொறுப்பாளர்களும், காப்பாளர்களுமான செயற்குழு உறுப்பினர்கள் இயன்ற அளவு கூடி, அன்பகத்தில் கலந்து பேசி, அதன் தொடர்பாக இந்த வேண்டுகோள் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் மே திங்கள் முதல் நாளில் இருந்து அந்தப் பணியினைத் தொடங்க, நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. அஷ்டமியா, நவமியா, ஆகும் நாளா, ஆகா நாளா என்று பஞ்சாங்கம் பார்த்து அறிவிக்கப்பட்ட நாள் அல்ல அந்த நாள்!
உலகப் பாட்டாளி மக்கள் கொண்டாடும் உழைப்பின் மேன்மைக்கோர் திருநாளாம் மே திருநாளில் பாட்டாளிகளின் பாசறையாம் திராவிட முன்னேற்றக் கழகம், வழக்கம்போல் தனது ஆக்கப் பணியைத் தொடங்குகிறது.{{nop}}<noinclude></noinclude>
40jsr0eqpmtuxrnsmxj5tgb639xgxh6
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/64
250
641613
1928828
1928103
2026-04-30T08:15:40Z
Booradleyp1
1964
1928828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||55}}</noinclude>ஏற்பட்ட பிரச்சினைகள் குறுக்கே நின்றதை யாரும் மறந்திருக்க முடியாது.
இப்போது நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிற ஜனநாயக முறைப்படி கழக உறுப்பினர் சேர்த்தல் — புதுப்பித்தல் — அமைப்புக்கள் தேர்தல் — தலைமைக்கழகத் — தேர்தல் — என்பதற்கு ஓராண்டுக் கால நேரம் தந்து நமது பொதுச் செயலாளர் டாக்டர் நாவலர் அவர்கள் அறிக்கை தந்துள்ளார்கள்.
எத்தனை இடர்பாடுகள் வரினும், நமது அமைப்புக்கள் கட்டுப்பாட்டுடன் திகழ்வதும் — ஜனநாயக முறையில் செயல்படுவதும் — அண்ணா வழியில் அமைதி காத்து ஆக்கப்பணிகளை ஆற்றுவதும் நமது கழகம் கொண்டுள்ள அரசியல் தெளிவு மிக்கப்பண்பாடாகும்.
கோவையில் நடைபெற்ற ஐந்தாவது மாநிலப் பொது மாநாட்டுக்குப் பிறகு, நமது கழகம் எத்தனையோ சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது—சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றாலும், கடமைகளை மறவாமல் கழகப் பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கும் — ஆற்றிட வேண்டும் — என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான் பொதுச்செயலாளரின் வேண்டுகோள் அறிக்கையாகும்.
:;“மனிதர்கள் வருவார்கள்
:;மனிதர்கள் போவார்கள்
:;நான் நிலையாக இருப்பேன்”
என்று “சிற்றருவி” கூறுவதாக பெருங் கவிஞர் டென்னிசன் எழுதியது போல்,
::கழகம் நிலையாக இருக்கும்-
::அமைப்பு ரீதியாக இயங்கும்-
::அமைதிகாத்துப் பணிபுரியும்-
என்ற உறுதி வாய்ந்த உள்ளத்தோடு, உடன்பிறப்பே, நீ செயல்பட வேண்டுகிறேன்,
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
17 – 4 – 76}}{{nop}}<noinclude></noinclude>
a304ydq2124mt391q4aoo9mx5u8kj2m
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/65
250
641614
1928827
1928104
2026-04-30T08:15:14Z
Booradleyp1
1964
1928827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>வினாக்கள் குடைகின்றன,<br>
விடைதான் கிடைக்கவில்லை!</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
::{{overfloat left|align=right|padding=1em|☐}} தி.மு.கழகத்தினரை இருபது அடி நீளக் குச்சியால் கூடத் தொடுவதற்கு மக்கள் கூச்சப்படுவார்கள்.
::{{overfloat left|align=right|padding=1em|☐}} தி.மு.க. வினர் ஜனநாயக முறைகளை அசிங்கப்படுத்தி விட்டனர்.
::{{overfloat left|align=right|padding=1em|☐}} தி.மு.க. ஒரு அரசியல் எதிரி மட்டுமல்ல. அது ஒரு ஊழல் புழு.
::{{overfloat left|align=right|padding=1em|☐}} தி.மு.க. புரையோடிக் கிடக்கும் புற்று நோயைப் போன்றது.
::{{overfloat left|align=right|padding=1em|☐}} தி.மு.க. அரசியலில் இருந்தே அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.
தரம் வாய்ந்த தஞ்சைமண்ணில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூடியபோது தரம் வாய்ந்த கருப்பையா மூப்பனார் அவர்களின் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. டி. கே. பரூவா அவர்கள் பேசிய பேச்சில் சிந்திய மணிவாசகங்கள் தான் மேலே காணப்படுபவை.
திரு. பரூவா அவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று எனக்குப் புரியவில்லை.
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசை மாற்றிக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறத் தொடங்கி இரண்டரை<noinclude></noinclude>
bq8vey58auapmv4oubq18ctucdf524r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/26
250
641654
1928408
1927677
2026-04-30T04:27:04Z
Rabiyathul
5890
+ மேலடி
1928408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|2||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>2
'திராவிட நாடு' இதழில்
வணங்கினான், வாழ்த்தினான். கட்டிப் பிடித்துக்கொண்டு. 'கர்த்தரே”தான் உன்னை இங்கு அனுப்பி வைத்தார். என் 'ஜெபம்' பலித்தது. ஏக்கம் தீர்ந்தது, மீண்டும் மனிதனானேன்! உன்னை என்றென்றும் மறவேன்! என்னை வாழவைக்க வந்துள்ள தெய்வம், நீயே!" என்றெல்லாம் கூவினான், குளறினான், குதூகலத்துடன்.
வந்தவனோ, ஒரு காகிதக் கட்டினைத் தந்து, உலகின் நிலை அறிவிக்கும் பத்திரிகைகள் இவை. படித்துப்பாரும். இதற்குள், நாங்கள், மற்றோர் பக்கம், ஒரு வேலையாகப் போய்விட்டுத் திரும்பி வருகிறோம். அதற்குள் இவைகளைப் படித்து முடித்து விடலாம். உலகம் இன்றுள்ள நிலை தெரியும், புரியும்! புரிந்த பிறகும், உனக்கு இங்கிருந்து வந்துவிட விருப்பம் இருக்குமானால், உடன் அழைத்துச் செல்கிறோம் என்று உன்னிடம் கூறும்படி, எமது கலத்தின் காவலன், என்னை அனுப்பி யுள்ளான் என்று கூறிவிட்டுப் படகேறிச் சென்றான்.
பத்திரிகைகளை, ஆவலுடன் பிரித்தான், படித்தான்.
புதிய படக்காட்சிகள் பற்றிய விவரம் கண்டான்; தனக்கு மிகவும் பிடித்தமான நடிகையரின் படங்களைப் பார்த்தான். பரவசமடைந்தான்.
நாடகம், இசை, நாட்டியம், நாகரிக நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு களைப் படித்தான், பேரானந்தம் பிறந்தது.
பிறகு, நாட்டு நிலை, அரசியல் நிலை, பொருளாதார நிலை, இவை பற்றிப் படிக்கலானான்; மகிழ்ச்சி உலரலாயிற்று; மருட்சி பிறந்தது.
உலகிலே, பல்வேறு இடங்களிலே, இல்லாமையால் தாக்கப்பட்ட மக்கள் படும் அவதி, அவர்களை அடக்கி ஒடுக்கிவைக்க ஆட்சியாளர் அவிழ்த்துவிடும் அடக்குமுறைகள், அந்த அடக்கு முறைகளை எடுத்துக் காட்டி, ஆவேசமூட்டி, அந்த ஆட்சியினைக் கவிழ்த்திட எதிர்க்கட்சிகள் செய்திடும் முயற்சிகள், படுகொலைகள், சதிச்செயல்கள், அடுத்துக்கெடுத்திடும் அக்ரமம், அணைத்து அழித்திடும் பயங்கரம்-ஆகியவற்றினைப் பற்றிய விளக்கங்களைப் படித்தான்-நாடா, காடா இந்த இடங்கள்? என்று எண்ணத் தோன்றிற்று; அருவருப்பும் அச்சமும், அவன் உள்ளத்தை உலுக்கிடலாயின!
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நாசம் பற்றிய குறிப்பு, பெரு வெள்ளம், தீ ஆகியவற்றால் ஏற்பட்ட அழிவு, பஞ்சமும் நோயும் ஏற்படுத்திவிட்ட பாழ்நிலை, ஆகியவை பற்றிய விவரம் படித்தான்- பயந்தே போனான்.
பாராளுமன்றங்களிலே நடைபெறும் பேருரைகள், நாட்டிலே செல்வம் பெருகி வருவதைக் காட்டுவனவாக இருந்தன. பத்திரிகை யிலே மற்றோர் பகுதியில், பிழைப்புக்கு வழிதேடிக் கண்காணா நாடு<noinclude></noinclude>
dng10333eymu3abhkeyw6s5h1whm0ud
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/27
250
641655
1928409
1927678
2026-04-30T04:27:42Z
Rabiyathul
5890
+ மேலடி
1928409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||3}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
சென்று கடுமையாக உழைத்தும் கதியற்றுக் கலங்கிடும் மக்கள் பற்றி, உருக்கமாக வரையப்பட்ட கட்டுரைகள் இருந்தன!
கர்த்தரின் கருணை பற்றிய பாசுரமும், அதற்கான பொருள் விளக்கமும் ஒரு பக்கம் இருந்திடக் கண்டான்; பிறிதோரிடத்தில், பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்துச் சாக்கடையில் வீசிடும் 'கன்னித்தாய்' பற்றிய குறிப்பு இருந்தது!
சீமாட்டி வாங்கிய வைரமாலையின் மதிப்புப்பற்றி, நிபுணர்கள் கருத்து வேற்றுமையை எழுதி இருந்தனர்; பசிக் கொடுமைக்காகத் திருடிய சிறுவனுக்கு இருபது சவுக்கடி கொடுத்திடச் சொல்லி, வழக்கு மன்றம் தீர்ப்பளித்ததைப் பற்றிய கருத்துக் கோவையும் காணப் பட்டது.
பிடிப்பட்ட வேங்கை பற்றிய செய்தியும், பிடிபடாத கொலை காரனைப் பற்றிய தகவலும், ஒரே இதழில் இருந்திடக் கண்டான்.
கள்ளச்சந்தை நடத்துபவனுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துப்பேசிய அமைச்சரின் அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு மகிழ்ந்தான்; அடுத்த பக்கத்திலேயே, அறுபத்து நாலுவகை பதார்த்தத்துடன், அமைச்சருக்கு. ஒரு கொள்ளை இலாபக்காரன் நடத்திய விருந்து பற்றிய விவரம் வெளிவந்திருக்கக் கண்டான்.
புதிதாகக் கட்டப்பட்ட அரசமாளிகைக்குச் செலவான பணத்தின் கணக்கு ஒருபக்கம் தரப்பட்டிருந்தது; மற்றோர் பக்கமோ புற்று நோய்க்குப் பலியானவர்களின் தொகை பெருகி வருவதைக் காட்டிடும், புள்ளிவிவரம் இருந்திடக் கண்டான்.
உளவுவேலை பார்த்துக்கொண்டே உறவாடும் போக்கினர் உயர் இடங்களிலே இருப்பதைக் கண்டான். இருக்கும் இடமிருந்த வண்ணமே இலக்குகளை அழித்திடும் போர்க்கருவி பற்றிப் பேசிப் பீதிகிளப்பிடும் பெருந்தலைவர்களின் சீற்றத்தைப் பார்த்தான். அவரவர் அவர்வழி என்ற கருத்தினைப் பேசிடும் அறிவாளரையும் கண்டான்; அடுத்த பலி எது என்று மோப்பம் பிடித்தலையும் வெறியரையும், பத்திரிகை படம்பிடித்துக் காட்டிற்று, மனிதகுலம் ஒன்றுதான் என்று பேசி, மதிப்புப் பெற்றிடும் மகான்களையும், இதழ்கள் பாராட்டின; கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிகப்பு என்று நிறபேதம் காட்டிடும் கொடியோருக்குக். கொடியும் படையும், கொற்றமும் ஏற்றமும் இன்னும் இருந்திடும் கொடுமையையும் காட்டின, இதழ்கள்!
பிரித்துப் பிரித்துப் படிக்கிறான். தொல்லை நிரம்பிய உலகம், கொடுமை கக்கிடும் உலகம், அநீதி நெளியும் இடங்கள். ஆபத்துச் சூழ்ந்த நாடுகள்-இவைகளைத்தான் காணமுடிந்தது.
3<noinclude></noinclude>
jvs8fvagud1y1zk4f071vx5l9djt28x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/28
250
641656
1928410
1927679
2026-04-30T04:28:16Z
Rabiyathul
5890
+ மேலடி
1928410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|4||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>'திராவிட நாடு' இதழில்
அங்கல்லவா. போகவேண்டும்? என்று எண்ணினான்-உடல் பதறிற்று. உள்ளம் கொதித்திடலாயிற்று.
மரமும் செடியும், கொடியும் தழையும், இங்கு: எத்தனை காலத்துக்கு இவைகளைப் பார்த்தபடி இருப்பது, என்று ஏக்கம் பிறக்கிறது; உண்மை; ஆனால், அங்கு? மாடமாளிகையும் மண்குடிசையும், பக்கத்துக்குப் பக்கம் உள்ளன; அன்புமொழி பேசுவோரும் அழித்தொழிக்கும் போக்கினரும், அடுத்தடுத்து உள்ளனர், அங்கல்லவா செல்லவேண்டும்? நிலநடுக்கத்தால் சாவோ. தீராத நோய் தாக்கி மரணமோ, மெள்ள மெள்ளக் கொன்றிடும் பஞ்சம்தான் பீடித்துச் சாகடிக்குமோ-என்ன கதியோ, யாதுமுடிவோ! எனக்காக எது காத்துக்கொண்டிருக்கிறதோ-தடியோ, துப்பாக்கிமுனையோ, கயவரின் கத்தியோ, காவலரின் கடும் சிறையோ-யாதோ!-என்று எண்ணும்போது, அப்படிப்பட்ட ஆபத்துச் சூழ்ந்த இடத்திற்குச் செல்லத் தான் வேண்டுமா. என்ற ஐயப்பாடு தோன்றுகிறதே! அச்சம் கூட ஏற்பட்டு விடுகிறதே!! என்ன செய்யலாம்? போகலாமா? வேண்டாமா? இங்கேயே இருந்துவிடுவதா? அங்கு செல்வதா-என்று எண்ணினான். நெடுநேரம். பிறகோர் முடிவுக்கு வந்தான்! தீவிலேயே இருந்துவிடுவது என்று!!
தம்பி! யார் இவன், என்று கேட்கமாட்டாய். கருத்து விளக்கத்துக் கான, கதைவடிவம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன?
உலகம், இன்றுள்ள நிலைபற்றிய செய்திகள் பலவற்றைப் பார்த்திடுவோருக்கு, தீவே போதும், நாகரிக அரசுகள் உள்ளன என்ற விருது காட்டப்படும் நாடுகள் பலவும், இன்று எந்தச் சமயத்திலே, நாசத்தைக் கக்கலாம், எவரை அழித்திடலாம் என்று துடித்துக்கொண்டு. தொடை தட்டிக் கொண்டு நிற்கும் நிலை தெரிகிறது: தெரிவதால், அருவருப்பும் அச்சமும் மனதிலே புகுந்து குடையவும் செய்கின்றன. என் காலத்திலேயே, மற்றோர் போர் வந்து மூண்டுவிடும் போலிருக் கிறது, என்று ஆச்சாரியார் பேசியிருக்கிறார். அல்லவா! அவ்விதம் எண்ணி, மருளத்தக்க விதமாகத்தான், உலகின் நிலையும், நடவடிக்கை களும், உள்ளன.
சென்ற கிழமை கூடிய, பெருந்தலைவர்கள் மாநாடு என்ன அலங்கோலநிலை காட்டிற்று! கோடிக்கணக்கான மக்களின், நல்வாழ்வுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கும், அந்தப் பெருந்தலைவர்கள், அதிலும் குறிப்பாக இருவர்-இருபெரும் நாட்டுத் தலைவர்கள்- கோபதாபத்துக்கு ஆட்பட்டுக், கூடிப் பேசவும் மறுத்துவிட்டனர். கண்டாயல்லவா?<noinclude></noinclude>
cm16p44sbjknor181w6p28i1ois5tyk
1928935
1928410
2026-04-30T09:21:34Z
Rabiyathul
5890
துப்புரவு
1928935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|4||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அங்கல்லவா. போகவேண்டும்? என்று எண்ணினான்-உடல் பதறிற்று. உள்ளம் கொதித்திடலாயிற்று.
மரமும் செடியும், கொடியும் தழையும், இங்கு: எத்தனை காலத்துக்கு இவைகளைப் பார்த்தபடி இருப்பது, என்று ஏக்கம் பிறக்கிறது; உண்மை; ஆனால், அங்கு? மாடமாளிகையும் மண்குடிசையும், பக்கத்துக்குப் பக்கம் உள்ளன; அன்புமொழி பேசுவோரும் அழித்தொழிக்கும் போக்கினரும், அடுத்தடுத்து உள்ளனர், அங்கல்லவா செல்லவேண்டும்? நிலநடுக்கத்தால் சாவோ. தீராத நோய் தாக்கி மரணமோ, மெள்ள மெள்ளக் கொன்றிடும் பஞ்சம்தான் பீடித்துச் சாகடிக்குமோ-என்ன கதியோ, யாதுமுடிவோ! எனக்காக எது காத்துக்கொண்டிருக்கிறதோ-தடியோ, துப்பாக்கிமுனையோ, கயவரின் கத்தியோ, காவலரின் கடும் சிறையோ-யாதோ!-என்று எண்ணும்போது, அப்படிப்பட்ட ஆபத்துச் சூழ்ந்த இடத்திற்குச் செல்லத் தான் வேண்டுமா. என்ற ஐயப்பாடு தோன்றுகிறதே! அச்சம் கூட ஏற்பட்டு விடுகிறதே!! என்ன செய்யலாம்? போகலாமா? வேண்டாமா? இங்கேயே இருந்துவிடுவதா? அங்கு செல்வதா-என்று எண்ணினான். நெடுநேரம். பிறகோர் முடிவுக்கு வந்தான்! தீவிலேயே இருந்துவிடுவது என்று!!
தம்பி! யார் இவன், என்று கேட்கமாட்டாய். கருத்து விளக்கத்துக் கான, கதைவடிவம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன?
உலகம், இன்றுள்ள நிலைபற்றிய செய்திகள் பலவற்றைப் பார்த்திடுவோருக்கு, தீவே போதும், நாகரிக அரசுகள் உள்ளன என்ற விருது காட்டப்படும் நாடுகள் பலவும், இன்று எந்தச் சமயத்திலே, நாசத்தைக் கக்கலாம், எவரை அழித்திடலாம் என்று துடித்துக்கொண்டு. தொடை தட்டிக் கொண்டு நிற்கும் நிலை தெரிகிறது: தெரிவதால், அருவருப்பும் அச்சமும் மனதிலே புகுந்து குடையவும் செய்கின்றன. என் காலத்திலேயே, மற்றோர் போர் வந்து மூண்டுவிடும் போலிருக் கிறது, என்று ஆச்சாரியார் பேசியிருக்கிறார். அல்லவா! அவ்விதம் எண்ணி, மருளத்தக்க விதமாகத்தான், உலகின் நிலையும், நடவடிக்கை களும், உள்ளன.
சென்ற கிழமை கூடிய, பெருந்தலைவர்கள் மாநாடு என்ன அலங்கோலநிலை காட்டிற்று! கோடிக்கணக்கான மக்களின், நல்வாழ்வுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கும், அந்தப் பெருந்தலைவர்கள், அதிலும் குறிப்பாக இருவர்-இருபெரும் நாட்டுத் தலைவர்கள்- கோபதாபத்துக்கு ஆட்பட்டுக், கூடிப் பேசவும் மறுத்துவிட்டனர். கண்டாயல்லவா?<noinclude></noinclude>
m0rs0yx202dfikxhdahk1w4xhvk4mfe
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/29
250
641657
1928411
1927680
2026-04-30T04:28:45Z
Rabiyathul
5890
+ மேலடி
1928411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||5}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அந்தத் தலைவர்களின் பேரப்பிள்ளைகள், பள்ளியிலே, என் புத்தகத்தைக் கிழித்தவனல்லவா நீ? உன்னோடு எனக்கென்ன பேச்சு! என்று சண்டைபோட்டுக் கொள்கிறார்களோ இல்லையோ, இவர்கள். அதே முறையிலல்லவா, நடந்து கொண்டுள்ளனர்.
கோடி கோடி மக்கள், இவர்கள் கூடிப்பேசி, பகை ஒழியவும், பண்பு வளரவும், நேசம் மலரவும், நீதி தழைக்கவும் வழி காண்பர்! அச்சத்தாலும் அருவருப்பாலும் ஆதிக்க வெறிஉணர்ச்சியாலும் உந்தப் பட்டுப், பணத்தைப் பயங்கரப் போர்க் கருவிகளுக்குப் பாழாக்கும் முறை ஒழிந்து, மக்கள் அனைவரும் பசியின்றி, நோயின்றி, பயமின்றிப் பண்புடன் கூடி வாழ்ந்திட வழி காண்பர் பெரும் பொருளை அதற்கே செலவிடுவர். என்று எத்துணை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். இடையே உள்ளவர்களின் இறுமாப்பினாலேயே இடர்ப்பாடுகளிலே பெரும்பகுதி ஏற்பட்டுவிடுகின்றன. 'மூலவர்கள் ஒன்று கூடிப் பேசினால். மூடுபனி கலைவது போலப் பகை நோக்கு ஒழியும், ஒருவரைஒருவர் நன்கு புரிந்துகொள்ள இயலும், அதற்காகப் பெருந்தலைவர்கள், கூடிப் பேசவேண்டும் என்று, பல காலமாகக் கூறப்பட்டது; ஆனால் கூடினர், பேச அல்ல; பேச முடியாது என்று கூறிவிட்டுக் கலைந்திட!
நேசக்கரத்தை நீட்ட வேண்டிய நேரத்தில்தானா, அமெரிக்கா, சோவியத் நாட்டின்மீது, வேவுபார்க்க விமானத்தை ஏவவேண்டும்!! கூடிப் பேச, ஏற்றதோர். சூழ்நிலை அமைக்கும் செயலாகுமா, இது? ஏன் இந்த, நம்பிக்கையற்ற போக்கு, அவசர நடவடிக்கை?
விஞ்ஞானத்தின் துணையை, மற்ற எந்த நாட்டினையும்விட மிக அதிகமாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் பெற்று, உலகின் எந்தக் கோடியினையும் கண்டறிய, படமெடுக்க, வசதியினைப் பெற்று, செயற்கைக் கிரகங்களை அடுக்கடுக்காக அனுப்பிக் கொண்டிருக்கும் சோவியத் முறை, விஞ்ஞான வளர்ச்சியை மட்டுமா, காட்டி வருகிறது! புதியதோர் வேவு பார்க்கும் முறை அல்லவா, அது!
அமெரிக்கா அனுப்பிய வேவு விமானம்பற்றி, வெகுண்டு பேசி விட்டாகிலும், எதிர்காலம் பற்றிக் கலந்துபேச, மாநாடு நடத்தக் கூடாதா, சோவியத்!
"முடியாது! முழங்காற்படியிட்டபடி, மன்னிப்புக் கேட்டாக வேண்டும். அமெரிக்கத் தலைவர்; அப்போதுதான்; பேச இசைவேன்" என்று சோவியத் தலைவர் அறிவித்துவிட்டார்.
அதற்கு அமெரிக்கத் தலைவர் இணங்குவாா என்று எவரும், எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால், மாநாட்டுக்குப் பெருந்தலைவர்கள் மாநாடு என்ற பெயரே பொருந்தாது!!
5<noinclude></noinclude>
b9mg7t5mkmgfalu2phevu98v2ihtav5
1928936
1928411
2026-04-30T09:23:43Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||5}}{{rule}}</noinclude>
அந்தத் தலைவர்களின் பேரப்பிள்ளைகள், பள்ளியிலே, என் புத்தகத்தைக் கிழித்தவனல்லவா நீ? உன்னோடு எனக்கென்ன பேச்சு! என்று சண்டைபோட்டுக் கொள்கிறார்களோ இல்லையோ, இவர்கள். அதே முறையிலல்லவா, நடந்து கொண்டுள்ளனர்.
கோடி கோடி மக்கள், இவர்கள் கூடிப்பேசி, பகை ஒழியவும், பண்பு வளரவும், நேசம் மலரவும், நீதி தழைக்கவும் வழி காண்பர்! அச்சத்தாலும் அருவருப்பாலும் ஆதிக்க வெறிஉணர்ச்சியாலும் உந்தப் பட்டுப், பணத்தைப் பயங்கரப் போர்க் கருவிகளுக்குப் பாழாக்கும் முறை ஒழிந்து, மக்கள் அனைவரும் பசியின்றி, நோயின்றி, பயமின்றிப் பண்புடன் கூடி வாழ்ந்திட வழி காண்பர் பெரும் பொருளை அதற்கே செலவிடுவர். என்று எத்துணை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். இடையே உள்ளவர்களின் இறுமாப்பினாலேயே இடர்ப்பாடுகளிலே பெரும்பகுதி ஏற்பட்டுவிடுகின்றன. 'மூலவர்கள் ஒன்று கூடிப் பேசினால். மூடுபனி கலைவது போலப் பகை நோக்கு ஒழியும், ஒருவரைஒருவர் நன்கு புரிந்துகொள்ள இயலும், அதற்காகப் பெருந்தலைவர்கள், கூடிப் பேசவேண்டும் என்று, பல காலமாகக் கூறப்பட்டது; ஆனால் கூடினர், பேச அல்ல; பேச முடியாது என்று கூறிவிட்டுக் கலைந்திட!
நேசக்கரத்தை நீட்ட வேண்டிய நேரத்தில்தானா, அமெரிக்கா, சோவியத் நாட்டின்மீது, வேவுபார்க்க விமானத்தை ஏவவேண்டும்!! கூடிப் பேச, ஏற்றதோர். சூழ்நிலை அமைக்கும் செயலாகுமா, இது? ஏன் இந்த, நம்பிக்கையற்ற போக்கு, அவசர நடவடிக்கை?
விஞ்ஞானத்தின் துணையை, மற்ற எந்த நாட்டினையும்விட மிக அதிகமாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் பெற்று, உலகின் எந்தக் கோடியினையும் கண்டறிய, படமெடுக்க, வசதியினைப் பெற்று, செயற்கைக் கிரகங்களை அடுக்கடுக்காக அனுப்பிக் கொண்டிருக்கும் சோவியத் முறை, விஞ்ஞான வளர்ச்சியை மட்டுமா, காட்டி வருகிறது! புதியதோர் வேவு பார்க்கும் முறை அல்லவா, அது!
அமெரிக்கா அனுப்பிய வேவு விமானம்பற்றி, வெகுண்டு பேசி விட்டாகிலும், எதிர்காலம் பற்றிக் கலந்துபேச, மாநாடு நடத்தக் கூடாதா, சோவியத்!
"முடியாது! முழங்காற்படியிட்டபடி, மன்னிப்புக் கேட்டாக வேண்டும். அமெரிக்கத் தலைவர்; அப்போதுதான்; பேச இசைவேன்" என்று சோவியத் தலைவர் அறிவித்துவிட்டார்.
அதற்கு அமெரிக்கத் தலைவர் இணங்குவாா என்று எவரும், எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால், மாநாட்டுக்குப் பெருந்தலைவர்கள் மாநாடு என்ற பெயரே பொருந்தாது!!
5<noinclude></noinclude>
irrsui4b6dvwwbmh3m12aeocj130zz1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/30
250
641658
1928412
1927681
2026-04-30T04:29:15Z
Rabiyathul
5890
+ மேலடி
1928412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|6||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>6
'திராவிட நாடு' இதழில்
ஆனால், ஏன், இருபெருந் தலைவர்கள் இந்த முறையில் நடந்து கொண்டனர்
'கூடி வாழ்வது' என்ற கொள்கைபற்றி இருவரும் பேசாத நாளில்லை. போர் அறவே கூடாது! மூண்டிடின், இது உலகை அழித்தொழிக்கும் போராகிவிடும் - என்று இருவரும் உரைக்கின்றனர்; உணருகின்றனர்.
எனினும், இருவரும், தத்தமது போக்கினைத் துளியும் மாற்றிக் கொள்ள ஒருப்பட்டாரில்லை; மாற்றிக் கொள்வது தம் தரத்தைக் குறைத்து விடும், என்ற தவறான ஓர் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டுக் கிடப்பதால்.
பாலேடு திருடிய பூனைக்குட்டியை, என் தாய் கண்டுபிடித்து. அதைத் தூக்கி, அதே பாலேட்டிலே, பூனையின் மூக்கைத் தேய்த்துப் புத்தி புகட்டினார்கள்-நான் சிறுவனாக இருந்தபோது; அதுபோலத்தான், வேவுபார்த்த அமெரிக்காவுக்குப் புத்திபுகட்டவேண்டும் என்று விரும்புகிறேன்- என்று குருஷேவ், ஒரு கதையும் கூறியிருக்கிறார்.
தாயாருக்கு இருந்த கோபம், இப்போது இவருக்கும் இருக்கிறது. என்பது தெரிகிறது. ஆனால், அன்று, அவருடைய அன்னை, கோபத்தின் காரணமாக அர்த்தமற்ற காரியத்தைச் செய்ததுபோலவா, அகிலத்தில் அமைதி நிலவவேண்டும் என்ற அறிவுஅறிந்த பருவத்திலுள்ள மகனும், செய்ய முற்படவேண்டும்!!
பூனையின் மூக்கைப் பாலேட்டிலே வைத்துத் தேய்த்ததால். கோபம் குறைந்திருக்குமே தவிர, பாலேடு கூடியா இருக்கும்!! பூனை தின்றது போக, மிச்சமிருந்ததுமல்லவா, கெட்டுப் போயிருக்கும். தாயார். அதைச் செய்தபோது குருஷேவ், சிறுவர்! இப்போது
"எமது மாபெருந் தலைவனின், வீரத்தைக் காணீர்! தன்மானம். உயிரினும் பெரிது! என்பதைத் தரணிக்கே எடுத்துக்காட்டிய, எமது இணையிலாத் தலைவரின் தரத்தை மிஞ்ச முடியுமா, கூறீர்!! ஆணவம் பிடித்த அமெரிக்கா அரசுக்கு. கொடுத்தார் ஓர் அறை! இறுமாப்புக் கொண்ட ஏகாதிபத்தியத்துக்குக் கிடைத்தது பலமான தாக்குதல்!!-" என்று சோவியத் மக்கள், குருஷேவை எழுச்சியுடன், பாராட்டத்தான் செய்வார்கள்.
'பதறுவது, பண்பாளரின் முறை அல்ல! துடுக்குத்தனமாகப் பேசியதைக் கேட்டும், துளியும் பதறாமல், பதிலுரைக்காமல், பண்புடன் நடந்துகொண்டார். எமது தலைவர்! பாரோரே! பாரீர்! அவர் வழி வந்து சேரீர்!!" என்று, அயிசனோவரை, அமெரிக்க மக்கள் பாராட்டி வரவேற்பர்.<noinclude></noinclude>
8nnjd5gy2jrtyuyx68uyn87cnrl11m5
1928937
1928412
2026-04-30T09:24:20Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|6||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஆனால், ஏன், இருபெருந் தலைவர்கள் இந்த முறையில் நடந்து கொண்டனர்
'கூடி வாழ்வது' என்ற கொள்கைபற்றி இருவரும் பேசாத நாளில்லை. போர் அறவே கூடாது! மூண்டிடின், இது உலகை அழித்தொழிக்கும் போராகிவிடும் - என்று இருவரும் உரைக்கின்றனர்; உணருகின்றனர்.
எனினும், இருவரும், தத்தமது போக்கினைத் துளியும் மாற்றிக் கொள்ள ஒருப்பட்டாரில்லை; மாற்றிக் கொள்வது தம் தரத்தைக் குறைத்து விடும், என்ற தவறான ஓர் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டுக் கிடப்பதால்.
பாலேடு திருடிய பூனைக்குட்டியை, என் தாய் கண்டுபிடித்து. அதைத் தூக்கி, அதே பாலேட்டிலே, பூனையின் மூக்கைத் தேய்த்துப் புத்தி புகட்டினார்கள்-நான் சிறுவனாக இருந்தபோது; அதுபோலத்தான், வேவுபார்த்த அமெரிக்காவுக்குப் புத்திபுகட்டவேண்டும் என்று விரும்புகிறேன்- என்று குருஷேவ், ஒரு கதையும் கூறியிருக்கிறார்.
தாயாருக்கு இருந்த கோபம், இப்போது இவருக்கும் இருக்கிறது. என்பது தெரிகிறது. ஆனால், அன்று, அவருடைய அன்னை, கோபத்தின் காரணமாக அர்த்தமற்ற காரியத்தைச் செய்ததுபோலவா, அகிலத்தில் அமைதி நிலவவேண்டும் என்ற அறிவுஅறிந்த பருவத்திலுள்ள மகனும், செய்ய முற்படவேண்டும்!!
பூனையின் மூக்கைப் பாலேட்டிலே வைத்துத் தேய்த்ததால். கோபம் குறைந்திருக்குமே தவிர, பாலேடு கூடியா இருக்கும்!! பூனை தின்றது போக, மிச்சமிருந்ததுமல்லவா, கெட்டுப் போயிருக்கும். தாயார். அதைச் செய்தபோது குருஷேவ், சிறுவர்! இப்போது
"எமது மாபெருந் தலைவனின், வீரத்தைக் காணீர்! தன்மானம். உயிரினும் பெரிது! என்பதைத் தரணிக்கே எடுத்துக்காட்டிய, எமது இணையிலாத் தலைவரின் தரத்தை மிஞ்ச முடியுமா, கூறீர்!! ஆணவம் பிடித்த அமெரிக்கா அரசுக்கு. கொடுத்தார் ஓர் அறை! இறுமாப்புக் கொண்ட ஏகாதிபத்தியத்துக்குக் கிடைத்தது பலமான தாக்குதல்!!-" என்று சோவியத் மக்கள், குருஷேவை எழுச்சியுடன், பாராட்டத்தான் செய்வார்கள்.
'பதறுவது, பண்பாளரின் முறை அல்ல! துடுக்குத்தனமாகப் பேசியதைக் கேட்டும், துளியும் பதறாமல், பதிலுரைக்காமல், பண்புடன் நடந்துகொண்டார். எமது தலைவர்! பாரோரே! பாரீர்! அவர் வழி வந்து சேரீர்!!" என்று, அயிசனோவரை, அமெரிக்க மக்கள் பாராட்டி வரவேற்பர்.<noinclude></noinclude>
f6mp7j3p6t5b52sa82pjk2y71kpybzc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/31
250
641659
1928413
1927682
2026-04-30T04:29:44Z
Rabiyathul
5890
+ மேலடி
1928413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||7}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
7
ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெறுதற்கரிய இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள் தம்மைச்சூழ நிற்கும் சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெறத்தக்க போக்கினை மேற் கொண்டிருக்க வேண்டும்?
உலகம், இவரிருவரிடமும், எவ்வளவு எதிர்பார்க்கிறது! இவர்களோ, எவ்வளவு எளிதில், எவரையும் வீழ்த்திவிடத்தக்க கோபதாபத்துக்கு இடமளித்துவிட்டனர்!! இவ்வளவு உயரிடம் பெற்றதும், இதற்கோ!
மாநாடு நடைபெற்று, குருஷேவ், உலகிலே போர்ப்பயம் ஏற்படா திருக்க வழிகூறிக், கலந்துரையாடித், திட்டம் வகுத்து, ஒப்பம்பெற்றுக், கடைசியில், 'இத்துணையும், உலகு அமைதிபெற நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும். ஆனால் உலகீரே! இதோ, இங்கு நான் புறப்படும் நேரமாகப் பார்த்து, அமைதி விழையும் அயிசனோவர், அகிலம் தழைக்க வழி தேடும் அமெரிக்கத் தலைவர், எனது நாட்டின்மீது வேவு விமானம் அனுப்பினார்; வீழ்த்தினர் எமது படையினர்; வெகுண்டனர், எமது மக்கள்; எனினும், அவர்களுக்கு நான் சமாதானம் கூறிவிட்டுச், சாந்தப்படுத்திவிட்டு, இங்கு வந்தேன்! வலிவுகுறைவு, என்பதால் அல்ல!! வலிவு மிகுதி, எம்மிடம், என்பதனால்! வேவு விமானம் அனுப்புகிறது அமெரிக்கா! பாவம்! அதுவும் வெந்து கருகிக் கிடக்கிறது எமது மண்ணில் வானவெளியில் சுற்றி வருகிறது, எமது விஞ்ஞானக் கருவி!! பூமி, அல்ல, எமது இலக்கு! பூலோகத்தார், எண்ணி எண்ணி விளக்கம் காணாது, இருந்து வருகிறார்களே, வானவெளி பற்றி, அங்கு காணப்படும் 'உலகுகள்' பற்றி-அவைகளைக் கண்டறிகிறோம்-அறிவுத் துறையில் வென்றுவருகிறோம்! அறிவீர்! அறிவிப்பீர்!'' என்று பேருரை நிகழ்த்தி இருப்பின்-அயிசனோவர், வெட்கத்தால், குன்றிப் போயிருப்பார்; குருஷேவின் தரம், பன்மடங்கு, உயர்ந்திருக்கும். ஆனால், அவருக்கு அப்போதைக்கப்போது கிடைத்திடும் ஆனந்தம்'தான். பெரிதாகத் தோன்றியிருக்கிறது; அடித்துப் பேசினேன், அயிசனோவர் அடங்கிக் கிடந்தது கண்டேன்! என்று பேசி மகிழத்தான், அவருக்கு எண்ணம் பிறந்தது.
குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பதா! கோழையாகிக் கிடப்பதா! தனிப்பட்ட முறையில் இழிவு, என்றால் கூடப் பரவாயில்லை, நாட்டுக்கு இழிவு ஏற்படும் நடவடிக்கையில் ஒரு அந்நிய நாடு ஈடுபடுவது, அதைப் பார்த்தும், கைகட்டி வாய் பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா?-என்று, கேட்ககூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும் கூறுவதற்கில்லை. எனினும், தாங்கிக்கொள்ளவே முடியாது-சகித்துக் கொள்ளவே முடியாது-என்று தோன்றும்போது, சகித்துக்கொள்வதும் தாங்கிக்கொள்வதும், தலை இறக்கத்தை அல்ல, மனிதத் தன்மையின்<noinclude></noinclude>
tbbjpcdx14trm2rvyvbhsp9e0ei1hxm
1928418
1928413
2026-04-30T04:37:48Z
Rabiyathul
5890
+ மேலடி
1928418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|12||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
7
ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெறுதற்கரிய இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள் தம்மைச்சூழ நிற்கும் சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெறத்தக்க போக்கினை மேற் கொண்டிருக்க வேண்டும்?
உலகம், இவரிருவரிடமும், எவ்வளவு எதிர்பார்க்கிறது! இவர்களோ, எவ்வளவு எளிதில், எவரையும் வீழ்த்திவிடத்தக்க கோபதாபத்துக்கு இடமளித்துவிட்டனர்!! இவ்வளவு உயரிடம் பெற்றதும், இதற்கோ!
மாநாடு நடைபெற்று, குருஷேவ், உலகிலே போர்ப்பயம் ஏற்படா திருக்க வழிகூறிக், கலந்துரையாடித், திட்டம் வகுத்து, ஒப்பம்பெற்றுக், கடைசியில், 'இத்துணையும், உலகு அமைதிபெற நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும். ஆனால் உலகீரே! இதோ, இங்கு நான் புறப்படும் நேரமாகப் பார்த்து, அமைதி விழையும் அயிசனோவர், அகிலம் தழைக்க வழி தேடும் அமெரிக்கத் தலைவர், எனது நாட்டின்மீது வேவு விமானம் அனுப்பினார்; வீழ்த்தினர் எமது படையினர்; வெகுண்டனர், எமது மக்கள்; எனினும், அவர்களுக்கு நான் சமாதானம் கூறிவிட்டுச், சாந்தப்படுத்திவிட்டு, இங்கு வந்தேன்! வலிவுகுறைவு, என்பதால் அல்ல!! வலிவு மிகுதி, எம்மிடம், என்பதனால்! வேவு விமானம் அனுப்புகிறது அமெரிக்கா! பாவம்! அதுவும் வெந்து கருகிக் கிடக்கிறது எமது மண்ணில் வானவெளியில் சுற்றி வருகிறது, எமது விஞ்ஞானக் கருவி!! பூமி, அல்ல, எமது இலக்கு! பூலோகத்தார், எண்ணி எண்ணி விளக்கம் காணாது, இருந்து வருகிறார்களே, வானவெளி பற்றி, அங்கு காணப்படும் 'உலகுகள்' பற்றி-அவைகளைக் கண்டறிகிறோம்-அறிவுத் துறையில் வென்றுவருகிறோம்! அறிவீர்! அறிவிப்பீர்!'' என்று பேருரை நிகழ்த்தி இருப்பின்-அயிசனோவர், வெட்கத்தால், குன்றிப் போயிருப்பார்; குருஷேவின் தரம், பன்மடங்கு, உயர்ந்திருக்கும். ஆனால், அவருக்கு அப்போதைக்கப்போது கிடைத்திடும் ஆனந்தம்'தான். பெரிதாகத் தோன்றியிருக்கிறது; அடித்துப் பேசினேன், அயிசனோவர் அடங்கிக் கிடந்தது கண்டேன்! என்று பேசி மகிழத்தான், அவருக்கு எண்ணம் பிறந்தது.
குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பதா! கோழையாகிக் கிடப்பதா! தனிப்பட்ட முறையில் இழிவு, என்றால் கூடப் பரவாயில்லை, நாட்டுக்கு இழிவு ஏற்படும் நடவடிக்கையில் ஒரு அந்நிய நாடு ஈடுபடுவது, அதைப் பார்த்தும், கைகட்டி வாய் பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா?-என்று, கேட்ககூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும் கூறுவதற்கில்லை. எனினும், தாங்கிக்கொள்ளவே முடியாது-சகித்துக் கொள்ளவே முடியாது-என்று தோன்றும்போது, சகித்துக்கொள்வதும் தாங்கிக்கொள்வதும், தலை இறக்கத்தை அல்ல, மனிதத் தன்மையின்<noinclude></noinclude>
kmybw00juu6yu6hyal7nbehc5ctjl34
1928420
1928418
2026-04-30T04:41:00Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||7}}{{rule}}</noinclude>
ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெறுதற்கரிய இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள் தம்மைச்சூழ நிற்கும் சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெறத்தக்க போக்கினை மேற் கொண்டிருக்க வேண்டும்?
உலகம், இவரிருவரிடமும், எவ்வளவு எதிர்பார்க்கிறது! இவர்களோ, எவ்வளவு எளிதில், எவரையும் வீழ்த்திவிடத்தக்க கோபதாபத்துக்கு இடமளித்துவிட்டனர்!! இவ்வளவு உயரிடம் பெற்றதும், இதற்கோ!
மாநாடு நடைபெற்று, குருஷேவ், உலகிலே போர்ப்பயம் ஏற்படா திருக்க வழிகூறிக், கலந்துரையாடித், திட்டம் வகுத்து, ஒப்பம்பெற்றுக், கடைசியில், 'இத்துணையும், உலகு அமைதிபெற நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும். ஆனால் உலகீரே! இதோ, இங்கு நான் புறப்படும் நேரமாகப் பார்த்து, அமைதி விழையும் அயிசனோவர், அகிலம் தழைக்க வழி தேடும் அமெரிக்கத் தலைவர், எனது நாட்டின்மீது வேவு விமானம் அனுப்பினார்; வீழ்த்தினர் எமது படையினர்; வெகுண்டனர், எமது மக்கள்; எனினும், அவர்களுக்கு நான் சமாதானம் கூறிவிட்டுச், சாந்தப்படுத்திவிட்டு, இங்கு வந்தேன்! வலிவுகுறைவு, என்பதால் அல்ல!! வலிவு மிகுதி, எம்மிடம், என்பதனால்! வேவு விமானம் அனுப்புகிறது அமெரிக்கா! பாவம்! அதுவும் வெந்து கருகிக் கிடக்கிறது எமது மண்ணில் வானவெளியில் சுற்றி வருகிறது, எமது விஞ்ஞானக் கருவி!! பூமி, அல்ல, எமது இலக்கு! பூலோகத்தார், எண்ணி எண்ணி விளக்கம் காணாது, இருந்து வருகிறார்களே, வானவெளி பற்றி, அங்கு காணப்படும் 'உலகுகள்' பற்றி-அவைகளைக் கண்டறிகிறோம்-அறிவுத் துறையில் வென்றுவருகிறோம்! அறிவீர்! அறிவிப்பீர்!'' என்று பேருரை நிகழ்த்தி இருப்பின்-அயிசனோவர், வெட்கத்தால், குன்றிப் போயிருப்பார்; குருஷேவின் தரம், பன்மடங்கு, உயர்ந்திருக்கும். ஆனால், அவருக்கு அப்போதைக்கப்போது கிடைத்திடும் ஆனந்தம்'தான். பெரிதாகத் தோன்றியிருக்கிறது; அடித்துப் பேசினேன், அயிசனோவர் அடங்கிக் கிடந்தது கண்டேன்! என்று பேசி மகிழத்தான், அவருக்கு எண்ணம் பிறந்தது.
குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பதா! கோழையாகிக் கிடப்பதா! தனிப்பட்ட முறையில் இழிவு, என்றால் கூடப் பரவாயில்லை, நாட்டுக்கு இழிவு ஏற்படும் நடவடிக்கையில் ஒரு அந்நிய நாடு ஈடுபடுவது, அதைப் பார்த்தும், கைகட்டி வாய் பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா?-என்று, கேட்ககூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும் கூறுவதற்கில்லை. எனினும், தாங்கிக்கொள்ளவே முடியாது-சகித்துக் கொள்ளவே முடியாது-என்று தோன்றும்போது, சகித்துக்கொள்வதும் தாங்கிக்கொள்வதும், தலை இறக்கத்தை அல்ல, மனிதத் தன்மையின்<noinclude></noinclude>
e7ul5pdfz9uvkhjo5yc7xqi94xjgmli
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/32
250
641660
1928414
1927683
2026-04-30T04:30:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|8||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>8
'திராவிட நாடு' இதழில்
மாண்பினை மலை அளவு ஆக்கிடவல்லது. மிகச் சிலராலேயே, இது முடியும்! அந்த மிகச் சிலரே உலகுக்குப் பாடம் தர வல்லவராகின்றனர்.
பணிந்து போய்விட்டான்-போர்க் குணத்தை இழந்து விட்டான்- என்று எங்கே பிறர் தாழ்வாகக் கருதிவிடுவார்களோ, என்ற அச்சமே, குருஷேவ் கொண்டது போன்ற போக்கினுக்குக் காரணம்.
ஓரளவுக்கு, இதிலே கவனிக்கத்தக்க, புறக்கணிக்க முடியாத. உண்மையும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.
பாரிஸ் மாநாட்டிலே, குருஷேவ், கோபதாபத்தை அடக்கிக் கொண்டு, கூடிப் பேசியிருந்திருந்தால், சோவியத்திலே, சிலராகிலும், 'சேச்சே' குருஷேவ் என்ன இப்படிக் குனிந்து கொடுத்துவிட்டாரே! தலைஇறக்கமாக அல்லவா இருக்கிறது! ஸ்டாலின், இப்படி இருந்திருக்க மாட்டார்! பொறிபறக்கப் பேசி இருப்பார்! போக்கிரிகள் கூடிப் போதனை நடத்துவதா? காலிகள் கூடி ஒழுக்கம் காண்பதா? என்று கேட்டுவிட்டு, தன் கோபப்பார்வையால். மாற்றாரின் ஆணவத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டு, வெற்றி வீரராக மாஸ்கோ வந்திருப்பார்! இந்தக் குருஷேவுக்கு முதுகெலும்பு இல்லை!! என்று கேலி பேசிடக்கூடும். ஆனால், அவர்கள், ஏற்படக்கூடிய 'விளைவுகளுக்கு'ப் பொறுப்பேற்போர் அல்ல! அந்தப் பொறுப்பு அவர்களுக்கு இல்லாததாலேயே, அவர்கள். வீரத்துக்கு இலக்கணம் கூறிடும் விற்பன்னர் வேலைக்கு, வருகிறார்கள். தம்பி/ மிகப் பெரிய விஷயத்திலிருந்து, மிகச் சாமான்யனான நான் சம்பந்தப்பட்ட, மிகச் சாதாரண விஷயத்துக்கு வருகிறேன் - பொறுத்திடுக!- திராவிடர் கழகத்திலிருந்து, விலகிய நேரம் - புதிய அமைப்புக் காணாத முன்பு - காண்பதற்காக, பலர் கலந்து பேசக் கூடினோம்-சென்னை, முத்தியாலுப்பேட்டைப் பகுதியில்-தெருவின் பெயர் நினைவில் இல்லை. அப்போது ஒருவர்-அப்போது அன்பர் வரிசையில் இருந்தவர்தான்- ஆவேசம் எழப் பேசினார்.
திராவிடர் கழகம், நம்முடையது- ஆமாம்-நம்முடையது! நாம். அறிவிக்க வேண்டும், சர்க்காருக்கு: மக்களுக்கு, பெரியாருக்கு. அனைவருக்கும், "விடுதலை" பத்திரிகை, நம்முடையது! நாம்தான் நடத்தவேண்டும்! நேரே, போகவேண்டும்; அங்கே உள்ளவர்களைப் பார்த்து, இது எமது இடம், உமக்கு இடமில்லை, போங்கள் வெளியே" என்று கூறிவிடவேண்டும்! நாம். ஏன் நம்முடைய உடைமையை, உரிமையை, பிறருக்குக் கொடுத்துவிட்டு, வேறு பெயருடன் வேலை துவக்குவது? என்றெல்லாம் பேசினார். வீரம் கொப்பளித்தது, பேச்சில், கேட்டோர், என்னைப் பார்த்த பார்வையில், கேலி நிரம்ப! என் முகத்திலே ஒரு கணம், அசடு வழிந்தது என்று கூடச் சொல்லலாம்!!<noinclude></noinclude>
ogf0s8gb0bdh6te52umespj7bw9yziq
1928938
1928414
2026-04-30T09:26:54Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|8||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>மலை அளவு ஆக்கிடவல்லது. மிகச் சிலராலேயே, இது முடியும்! அந்த மிகச் சிலரே உலகுக்குப் பாடம் தர வல்லவராகின்றனர்.
பணிந்து போய்விட்டான்-போர்க் குணத்தை இழந்து விட்டான்- என்று எங்கே பிறர் தாழ்வாகக் கருதிவிடுவார்களோ, என்ற அச்சமே, குருஷேவ் கொண்டது போன்ற போக்கினுக்குக் காரணம்.
ஓரளவுக்கு, இதிலே கவனிக்கத்தக்க, புறக்கணிக்க முடியாத. உண்மையும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.
பாரிஸ் மாநாட்டிலே, குருஷேவ், கோபதாபத்தை அடக்கிக் கொண்டு, கூடிப் பேசியிருந்திருந்தால், சோவியத்திலே, சிலராகிலும், 'சேச்சே' குருஷேவ் என்ன இப்படிக் குனிந்து கொடுத்துவிட்டாரே! தலைஇறக்கமாக அல்லவா இருக்கிறது! ஸ்டாலின், இப்படி இருந்திருக்க மாட்டார்! பொறிபறக்கப் பேசி இருப்பார்! போக்கிரிகள் கூடிப் போதனை நடத்துவதா? காலிகள் கூடி ஒழுக்கம் காண்பதா? என்று கேட்டுவிட்டு, தன் கோபப்பார்வையால். மாற்றாரின் ஆணவத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டு, வெற்றி வீரராக மாஸ்கோ வந்திருப்பார்! இந்தக் குருஷேவுக்கு முதுகெலும்பு இல்லை!! என்று கேலி பேசிடக்கூடும். ஆனால், அவர்கள், ஏற்படக்கூடிய 'விளைவுகளுக்கு'ப் பொறுப்பேற்போர் அல்ல! அந்தப் பொறுப்பு அவர்களுக்கு இல்லாததாலேயே, அவர்கள். வீரத்துக்கு இலக்கணம் கூறிடும் விற்பன்னர் வேலைக்கு, வருகிறார்கள். தம்பி/ மிகப் பெரிய விஷயத்திலிருந்து, மிகச் சாமான்யனான நான் சம்பந்தப்பட்ட, மிகச் சாதாரண விஷயத்துக்கு வருகிறேன் - பொறுத்திடுக!- திராவிடர் கழகத்திலிருந்து, விலகிய நேரம் - புதிய அமைப்புக் காணாத முன்பு - காண்பதற்காக, பலர் கலந்து பேசக் கூடினோம்-சென்னை, முத்தியாலுப்பேட்டைப் பகுதியில்-தெருவின் பெயர் நினைவில் இல்லை. அப்போது ஒருவர்-அப்போது அன்பர் வரிசையில் இருந்தவர்தான்- ஆவேசம் எழப் பேசினார்.
திராவிடர் கழகம், நம்முடையது- ஆமாம்-நம்முடையது! நாம். அறிவிக்க வேண்டும், சர்க்காருக்கு: மக்களுக்கு, பெரியாருக்கு. அனைவருக்கும், "விடுதலை" பத்திரிகை, நம்முடையது! நாம்தான் நடத்தவேண்டும்! நேரே, போகவேண்டும்; அங்கே உள்ளவர்களைப் பார்த்து, இது எமது இடம், உமக்கு இடமில்லை, போங்கள் வெளியே" என்று கூறிவிடவேண்டும்! நாம். ஏன் நம்முடைய உடைமையை, உரிமையை, பிறருக்குக் கொடுத்துவிட்டு, வேறு பெயருடன் வேலை துவக்குவது? என்றெல்லாம் பேசினார். வீரம் கொப்பளித்தது, பேச்சில், கேட்டோர், என்னைப் பார்த்த பார்வையில், கேலி நிரம்ப! என் முகத்திலே ஒரு கணம், அசடு வழிந்தது என்று கூடச் சொல்லலாம்!!<noinclude></noinclude>
nmhh16oue5ajhp91zdfxg2kcd9bb6st
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/33
250
641661
1928415
1927684
2026-04-30T04:36:25Z
Rabiyathul
5890
+ மேலடி
1928415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||9}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
"அம்முறைதான் உகந்தது என்று கருதினால், கூறிடும் 'அன்பர்' முன்னின்று நடத்தட்டும்-நான் அதற்கு ஏற்றவன் அல்ல! என் முறையும் அது அல்ல! ஒருபோதும் அம்முறை கொள்ளும், போக்கினனாக மாட்டேன்" என்று கூறினேன்-தம்பி! அவ்வளவு வீரம் பேசியவர். இப்போது. திராவிடக் கழகத்தில் இருக்கிறார்; நமது கழகம், நான் அன்று கொண்ட பொறுமை'யால் கெட்டுப் போய்விடவில்லை. ஆனால், நானா குருஷேவ்! அவரால், எப்படிப் 'பொறுமை'யாக இருக்க முடியும்!!
வீரமான காரியம் என்று, விரல்விட்டு எண்ணக் கூடிய சிலருடைய பாராட்டுதலைப் பெறத்தக்க விதத்தில், நாம் துவக்க நாட்களில், நடந்து கொண்டிருந்திருந்தால், கழகம் அல்ல, தம்பி! கலகம், வளர்ந்திருக்கும்.
குருஷேவின் கோபமோ, அயிசனோவரின் போக்கோ, அவ்விருவரின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கக் கூடியதாக இருந்தால், பொருட்படுத்தத் தேவையில்லை. அவர்கள், காரணமற்றுக் கோபித்துக் கொண்டாலும், பொறுமையைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், பலகோடி மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுவிடும்-எனவேதான், அவர்களின் போக்குப்பற்றி, மன்றங்களில் மட்டுமல்ல, மனைகளிலும் பேசுகிறார்கள்.
தனிப்பெருந் தலைவர்களாகிவிட்டவர்களின், சொந்த விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காரணமாகவே, போர்கள் மூண்டதுண்டு! போரிலே, அவர்கள் அல்ல, அவர்களுக்கு வாழ்த்தொலி கூறிய மக்கள் தான் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
காரணமற்றுக்கூடக் கோபம் ஏற்பட்டுவிடுமா என்று கேட்கிறாயா, தம்பி/ தனிப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்களே, காரணமற்றுக் கோபத்திலே சிக்கியதால் பெரும் போர் மூண்டதுண்டு.
ஜென்கின்ஸ் காதுக்காகச் சண்டை! என்று கேள்விப்பட்ட
துண்டா?
இங்கிலாந்துநாட்டுக்
கப்பற்படை,
ஈடற்ற
வலிவுடன்
விளங்குவது கண்டு, அதனை அடக்கி ஒடுக்க, பிரான்சும், ஸ்பெயினும், பலமுறை முயன்றன. அப்படிப்பட்ட, போர்ச் சூழ்நிலையும், போரை மூட்டிவிடத் தக்க பகை உணர்ச்சியும் பரவி இருந்த நேரம்.
ஜென்கின்ஸ் என்பவன் பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த தளபதி.
எதிரி நாட்டவர், அந்தத் தளபதியைப் பிடித்திழுத்துச் சென்று, அவன் காதை வெட்டிவிட்டார்கள். என்றோர் வதந்தி பிரிட்டனில் உலவிற்று. வதந்தி, என்று இப்போது நான் எழுதுகிறேன், தம்பி! அப்போது, 'அது 'செய்தி' என்றே நம்பப்பட்டது.
9<noinclude></noinclude>
r7zkdy515tbjomr7sje184ubn3gmf3s
1928939
1928415
2026-04-30T09:28:02Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||9}}{{rule}}</noinclude>
"அம்முறைதான் உகந்தது என்று கருதினால், கூறிடும் 'அன்பர்' முன்னின்று நடத்தட்டும்-நான் அதற்கு ஏற்றவன் அல்ல! என் முறையும் அது அல்ல! ஒருபோதும் அம்முறை கொள்ளும், போக்கினனாக மாட்டேன்" என்று கூறினேன்-தம்பி! அவ்வளவு வீரம் பேசியவர். இப்போது. திராவிடக் கழகத்தில் இருக்கிறார்; நமது கழகம், நான் அன்று கொண்ட பொறுமை'யால் கெட்டுப் போய்விடவில்லை. ஆனால், நானா குருஷேவ்! அவரால், எப்படிப் 'பொறுமை'யாக இருக்க முடியும்!!
வீரமான காரியம் என்று, விரல்விட்டு எண்ணக் கூடிய சிலருடைய பாராட்டுதலைப் பெறத்தக்க விதத்தில், நாம் துவக்க நாட்களில், நடந்து கொண்டிருந்திருந்தால், கழகம் அல்ல, தம்பி! கலகம், வளர்ந்திருக்கும்.
குருஷேவின் கோபமோ, அயிசனோவரின் போக்கோ, அவ்விருவரின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கக் கூடியதாக இருந்தால், பொருட்படுத்தத் தேவையில்லை. அவர்கள், காரணமற்றுக் கோபித்துக் கொண்டாலும், பொறுமையைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், பலகோடி மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுவிடும்-எனவேதான், அவர்களின் போக்குப்பற்றி, மன்றங்களில் மட்டுமல்ல, மனைகளிலும் பேசுகிறார்கள்.
தனிப்பெருந் தலைவர்களாகிவிட்டவர்களின், சொந்த விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காரணமாகவே, போர்கள் மூண்டதுண்டு! போரிலே, அவர்கள் அல்ல, அவர்களுக்கு வாழ்த்தொலி கூறிய மக்கள் தான் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
காரணமற்றுக்கூடக் கோபம் ஏற்பட்டுவிடுமா என்று கேட்கிறாயா, தம்பி/ தனிப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்களே, காரணமற்றுக் கோபத்திலே சிக்கியதால் பெரும் போர் மூண்டதுண்டு.
ஜென்கின்ஸ் காதுக்காகச் சண்டை! என்று கேள்விப்பட்ட
துண்டா?
இங்கிலாந்துநாட்டுக்
கப்பற்படை,
ஈடற்ற
வலிவுடன்
விளங்குவது கண்டு, அதனை அடக்கி ஒடுக்க, பிரான்சும், ஸ்பெயினும், பலமுறை முயன்றன. அப்படிப்பட்ட, போர்ச் சூழ்நிலையும், போரை மூட்டிவிடத் தக்க பகை உணர்ச்சியும் பரவி இருந்த நேரம்.
ஜென்கின்ஸ் என்பவன் பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த தளபதி.
எதிரி நாட்டவர், அந்தத் தளபதியைப் பிடித்திழுத்துச் சென்று, அவன் காதை வெட்டிவிட்டார்கள். என்றோர் வதந்தி பிரிட்டனில் உலவிற்று. வதந்தி, என்று இப்போது நான் எழுதுகிறேன், தம்பி! அப்போது, 'அது 'செய்தி' என்றே நம்பப்பட்டது.
9<noinclude></noinclude>
57k3eibsawrb1bavv4hqhzue6n6tcm4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/34
250
641662
1928416
1927685
2026-04-30T04:37:07Z
Rabiyathul
5890
+ மேலடி
1928416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|10||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>10
'திராவிட நாடு' இதழில்
"கேட்டீர்களா, அக்ரமத்தை நமது ஜென்கின்சுடைய காதைப் படுபாவிகள், வெட்டிப் போட்டு விட்டார்களாம்".
"தளபதி ஜென்கின்சுக்கா இந்த அவமானம் நேரிட்டது".
"கொடுமை செய்தவன் கொட்டமடிக்கிறான்; இங்கோ நாம் கூடிக் கதை பேசுகிறோம்''.
"இரத்தம் கொதிக்கிறது, செய்தியைக் கேட்டது முதல்''.
"நாம் என்ன மரக்கட்டைகளா, சும்மா இருக்க'.
"பழிக்குப் பழி| காதுக்குக் காது! கண்ணுக்குக் கண்!' "ஆமாம்! உடனே! இப்போதே"
"போர்! போர்! போர்!",
அங்காடியில் அலுவலகத்தில், பாடி வீட்டில் மாடிகளில், தோட்டத்தில் கடலோரத்தில், சீமாட்டியின் சிங்கார மாளிகையில் கொல்லன் உலைக்கூடத்தில் - எங்கும் கிளம்பிற்று. இந்தவிதப் பேச்சு! தம்பி! போரே. மூண்டுவிட்டது. எவ்வளவோ அழிவு! கடைசியில் தான், உண்மை தெரிந்தது, ஜென்கின்ஸ் என்ற தளபதியை எவனும் பிடித்திழுத்துச் செல்லவுமில்லை, காதை வெட்டிப் போட்டுவிடவு மில்லை! காது, இருந்தது ஜென்கின்சுக்கு: ஆனால், காது அறுத்தார்கள் என்று வதந்தி பரவினதால், போர்மூண்டிட பலருக்குக் கண் போயிற்று கால் போயிற்று. கரம் போயிற்று சிரமேகூடப் போயிற்று! ஒரு நாட்டு மக்கள் அவ்வளவு பேரும், காரணமற்றுக் கோபப்பட்டதால், கடும்போர் மூண்டிருக்கிறது.
இன்று, உலகு இருக்கும் நிலைமை, ஒரு சிறு வதந்தி, செய்தி வடிவமெடுத்தால்கூடப் போதும், மக்களை ஆத்திரம் கொண்டிடச் செய்திடும்-அமளி மூண்டுவிடும். பெருந்தலைவர்களே, மிக எளிதாக ஆத்திரப்பட்டு விடுகிறார்களே-விவரம் விளக்கம் கிடைக்கப் பெறாமல் இருக்கும் மக்களைப் பற்றிக் கூறவா வேண்டும்.
எனவேதான், பலருக்கும் இன்றுள்ள நிலையில், போர் எந்த நேரத்திலும், மூண்டுவிடக் கூடும், என்ற பயம் இருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்தது. இந்தப் பீதியை வளர வைத்து விட்டிருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்ததற்குக் காரணம் என்ன என்பது பற்றி. பெருந்தலைவர்கள், அறிக்கைகள் வெளியிட்டனர்-விளக்கம் கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களின் அலுவலகத்தார்,<noinclude></noinclude>
7llswenhfwyijppcu2zrz4hgxw0ea2x
1928940
1928416
2026-04-30T09:28:59Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|10||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
"கேட்டீர்களா, அக்ரமத்தை நமது ஜென்கின்சுடைய காதைப் படுபாவிகள், வெட்டிப் போட்டு விட்டார்களாம்".
"தளபதி ஜென்கின்சுக்கா இந்த அவமானம் நேரிட்டது".
"கொடுமை செய்தவன் கொட்டமடிக்கிறான்; இங்கோ நாம் கூடிக் கதை பேசுகிறோம்''.
"இரத்தம் கொதிக்கிறது, செய்தியைக் கேட்டது முதல்''.
"நாம் என்ன மரக்கட்டைகளா, சும்மா இருக்க'.
"பழிக்குப் பழி| காதுக்குக் காது! கண்ணுக்குக் கண்!' "ஆமாம்! உடனே! இப்போதே"
"போர்! போர்! போர்!",
அங்காடியில் அலுவலகத்தில், பாடி வீட்டில் மாடிகளில், தோட்டத்தில் கடலோரத்தில், சீமாட்டியின் சிங்கார மாளிகையில் கொல்லன் உலைக்கூடத்தில் - எங்கும் கிளம்பிற்று. இந்தவிதப் பேச்சு! தம்பி! போரே. மூண்டுவிட்டது. எவ்வளவோ அழிவு! கடைசியில் தான், உண்மை தெரிந்தது, ஜென்கின்ஸ் என்ற தளபதியை எவனும் பிடித்திழுத்துச் செல்லவுமில்லை, காதை வெட்டிப் போட்டுவிடவு மில்லை! காது, இருந்தது ஜென்கின்சுக்கு: ஆனால், காது அறுத்தார்கள் என்று வதந்தி பரவினதால், போர்மூண்டிட பலருக்குக் கண் போயிற்று கால் போயிற்று. கரம் போயிற்று சிரமேகூடப் போயிற்று! ஒரு நாட்டு மக்கள் அவ்வளவு பேரும், காரணமற்றுக் கோபப்பட்டதால், கடும்போர் மூண்டிருக்கிறது.
இன்று, உலகு இருக்கும் நிலைமை, ஒரு சிறு வதந்தி, செய்தி வடிவமெடுத்தால்கூடப் போதும், மக்களை ஆத்திரம் கொண்டிடச் செய்திடும்-அமளி மூண்டுவிடும். பெருந்தலைவர்களே, மிக எளிதாக ஆத்திரப்பட்டு விடுகிறார்களே-விவரம் விளக்கம் கிடைக்கப் பெறாமல் இருக்கும் மக்களைப் பற்றிக் கூறவா வேண்டும்.
எனவேதான், பலருக்கும் இன்றுள்ள நிலையில், போர் எந்த நேரத்திலும், மூண்டுவிடக் கூடும், என்ற பயம் இருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்தது. இந்தப் பீதியை வளர வைத்து விட்டிருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்ததற்குக் காரணம் என்ன என்பது பற்றி. பெருந்தலைவர்கள், அறிக்கைகள் வெளியிட்டனர்-விளக்கம் கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களின் அலுவலகத்தார்,<noinclude></noinclude>
ahukr48bwram3l56sl27ycpcfpxltwy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/35
250
641663
1928417
1927686
2026-04-30T04:37:38Z
Rabiyathul
5890
+ மேலடி
1928417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||11}}{{rule}}</noinclude>.
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
11
நிபுணர்கள், செய்தி அறிவிப்போர் செய்திகளுக்கு விளக்கம் கூறுவோர், என்ற பல்வேறு பெயருடன் உள்ளவர்கள், பாரிஸ் மாநாடு குறித்துப் பேசுவதும் எழுதுவதும், விளக்கத்தை அல்ல, விவேகத்தையும் அல்ல, விரோதத்தை மூட்டவே பயன்பட்டு வருகின்றன.
உலகப் பெரும்போர் மூளாதிருக்கத்தக்க விதத்திலே எண்ண வேண்டும். எழுதவேண்டும் என்ற அடிப்படையை மறந்து, அயிசனோவர் கட்சி, குருஷேவ் கட்சி, என்று தாமாகவே, வேலை தேடிக் கொள் கிறார்கள் சிலர், அவர்கள், அந்த இருவரும் எண்ணிக்கூடப் பார்க்காததை எல்லாம் காரணங்களாகக் கற்பித்துக் கொண்டு பேசுவதும் எழுதுவதும், நல்லதற்கு அல்ல என்று துணிந்துகூறலாம்.
தம்பி! மெத்தக் கற்றவர் ஒருவர், இரயிலில் சென்று கொண்டிருந்தார். இட நெருக்கடி, வழியிலே அவருடைய அருமை பெருமை களைப் போற்றிடத் தெரிந்த ஒரு நண்பர், இரயிலில் ஏறினார். தன் பெருமைக் குரியவர். இட நெருக்கடியில் சிக்கிக் கிடப்பதைக் கண்டார்; சங்கடமாக இருந்தது; பதைத்து, அருகே சென்றார்.
"தாங்களா, இந்த இட நெருக்கடியிலா? ஏன் இந்த மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறினீர்கள்? இடம் இருந்தால் கூடத் தரமாட்டார் களே! முதல் வகுப்பில் போயிருக்கலாமே. இவ்வளவு கஷ்டப்படுகிறீர் களே! அதோ ஒரு ஆசாமி, காலை நீட்டிப் படுத்துக்கொண்டிருக்கிறான். இங்கே நீங்கள் இப்படி ஒடுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்" என்றான் பரிவுடன்.
"பரவாயில்லை. இடம் கிடைத்ததே. அது போதும்" என்றார். அவர்.
இதற்குள் நண்பன், அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு. தூங்கித் தூங்கி அவர் மேலே சாய்ந்து சாய்ந்து விழுந்துகொண்டிருந்த ஒருவரைக் கவனித்துவிட்டு, மெல்லத் தட்டி எழுப்பி, 'ஐயா! அவர் மேலே, விழுகிறீர்களே! கொஞ்சம், தள்ளி உட்காருங்கள். பாருங்கள், அவர் எவ்வளவு இடுக்கிலே கிடக்கிறார். கொஞ்சம் தள்ளி, இடம் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். அவர், ஒரு தடவை விழித்துப் பார்த்து, கனைத்துக் காட்டிவிட்டு, மீண்டும் பழையபடியே தூங்கலானார். நண்பனுக்குக் கோபம், கொஞ்சம், அதட்டும் குரலில், அந்த ஆசாமியை எழுப்பி, "இரயில் என்னய்யா, உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா! அவரை இப்படிப்போட்டு இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறாயே. அவர், யார் தெரியுமா? அவருடைய யோக்யதை என்னவென்று தெரியுமா? திருவாசகத்திலே புலி ஐயா, புலி! தேன் சொட்டும். அவர் தேவாரம் பாடினால்! தெரியுமா?" என்றான்.<noinclude></noinclude>
haayeqr1ocn1680jo3auxtcn6a9jdv3
1928419
1928417
2026-04-30T04:38:19Z
Rabiyathul
5890
+ மேலடி
1928419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||13}}{{rule}}</noinclude>.
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
11
நிபுணர்கள், செய்தி அறிவிப்போர் செய்திகளுக்கு விளக்கம் கூறுவோர், என்ற பல்வேறு பெயருடன் உள்ளவர்கள், பாரிஸ் மாநாடு குறித்துப் பேசுவதும் எழுதுவதும், விளக்கத்தை அல்ல, விவேகத்தையும் அல்ல, விரோதத்தை மூட்டவே பயன்பட்டு வருகின்றன.
உலகப் பெரும்போர் மூளாதிருக்கத்தக்க விதத்திலே எண்ண வேண்டும். எழுதவேண்டும் என்ற அடிப்படையை மறந்து, அயிசனோவர் கட்சி, குருஷேவ் கட்சி, என்று தாமாகவே, வேலை தேடிக் கொள் கிறார்கள் சிலர், அவர்கள், அந்த இருவரும் எண்ணிக்கூடப் பார்க்காததை எல்லாம் காரணங்களாகக் கற்பித்துக் கொண்டு பேசுவதும் எழுதுவதும், நல்லதற்கு அல்ல என்று துணிந்துகூறலாம்.
தம்பி! மெத்தக் கற்றவர் ஒருவர், இரயிலில் சென்று கொண்டிருந்தார். இட நெருக்கடி, வழியிலே அவருடைய அருமை பெருமை களைப் போற்றிடத் தெரிந்த ஒரு நண்பர், இரயிலில் ஏறினார். தன் பெருமைக் குரியவர். இட நெருக்கடியில் சிக்கிக் கிடப்பதைக் கண்டார்; சங்கடமாக இருந்தது; பதைத்து, அருகே சென்றார்.
"தாங்களா, இந்த இட நெருக்கடியிலா? ஏன் இந்த மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறினீர்கள்? இடம் இருந்தால் கூடத் தரமாட்டார் களே! முதல் வகுப்பில் போயிருக்கலாமே. இவ்வளவு கஷ்டப்படுகிறீர் களே! அதோ ஒரு ஆசாமி, காலை நீட்டிப் படுத்துக்கொண்டிருக்கிறான். இங்கே நீங்கள் இப்படி ஒடுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்" என்றான் பரிவுடன்.
"பரவாயில்லை. இடம் கிடைத்ததே. அது போதும்" என்றார். அவர்.
இதற்குள் நண்பன், அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு. தூங்கித் தூங்கி அவர் மேலே சாய்ந்து சாய்ந்து விழுந்துகொண்டிருந்த ஒருவரைக் கவனித்துவிட்டு, மெல்லத் தட்டி எழுப்பி, 'ஐயா! அவர் மேலே, விழுகிறீர்களே! கொஞ்சம், தள்ளி உட்காருங்கள். பாருங்கள், அவர் எவ்வளவு இடுக்கிலே கிடக்கிறார். கொஞ்சம் தள்ளி, இடம் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். அவர், ஒரு தடவை விழித்துப் பார்த்து, கனைத்துக் காட்டிவிட்டு, மீண்டும் பழையபடியே தூங்கலானார். நண்பனுக்குக் கோபம், கொஞ்சம், அதட்டும் குரலில், அந்த ஆசாமியை எழுப்பி, "இரயில் என்னய்யா, உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா! அவரை இப்படிப்போட்டு இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறாயே. அவர், யார் தெரியுமா? அவருடைய யோக்யதை என்னவென்று தெரியுமா? திருவாசகத்திலே புலி ஐயா, புலி! தேன் சொட்டும். அவர் தேவாரம் பாடினால்! தெரியுமா?" என்றான்.<noinclude></noinclude>
ad1ive2wglso4ryvqaj2p34jdne0u9v
1928423
1928419
2026-04-30T04:42:43Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928423
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||11}}{{rule}}</noinclude>நிபுணர்கள், செய்தி அறிவிப்போர் செய்திகளுக்கு விளக்கம் கூறுவோர், என்ற பல்வேறு பெயருடன் உள்ளவர்கள், பாரிஸ் மாநாடு குறித்துப் பேசுவதும் எழுதுவதும், விளக்கத்தை அல்ல, விவேகத்தையும் அல்ல, விரோதத்தை மூட்டவே பயன்பட்டு வருகின்றன.
உலகப் பெரும்போர் மூளாதிருக்கத்தக்க விதத்திலே எண்ண வேண்டும். எழுதவேண்டும் என்ற அடிப்படையை மறந்து, அயிசனோவர் கட்சி, குருஷேவ் கட்சி, என்று தாமாகவே, வேலை தேடிக் கொள் கிறார்கள் சிலர், அவர்கள், அந்த இருவரும் எண்ணிக்கூடப் பார்க்காததை எல்லாம் காரணங்களாகக் கற்பித்துக் கொண்டு பேசுவதும் எழுதுவதும், நல்லதற்கு அல்ல என்று துணிந்துகூறலாம்.
தம்பி! மெத்தக் கற்றவர் ஒருவர், இரயிலில் சென்று கொண்டிருந்தார். இட நெருக்கடி, வழியிலே அவருடைய அருமை பெருமை களைப் போற்றிடத் தெரிந்த ஒரு நண்பர், இரயிலில் ஏறினார். தன் பெருமைக் குரியவர். இட நெருக்கடியில் சிக்கிக் கிடப்பதைக் கண்டார்; சங்கடமாக இருந்தது; பதைத்து, அருகே சென்றார்.
"தாங்களா, இந்த இட நெருக்கடியிலா? ஏன் இந்த மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறினீர்கள்? இடம் இருந்தால் கூடத் தரமாட்டார் களே! முதல் வகுப்பில் போயிருக்கலாமே. இவ்வளவு கஷ்டப்படுகிறீர் களே! அதோ ஒரு ஆசாமி, காலை நீட்டிப் படுத்துக்கொண்டிருக்கிறான். இங்கே நீங்கள் இப்படி ஒடுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்" என்றான் பரிவுடன்.
"பரவாயில்லை. இடம் கிடைத்ததே. அது போதும்" என்றார். அவர்.
இதற்குள் நண்பன், அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு. தூங்கித் தூங்கி அவர் மேலே சாய்ந்து சாய்ந்து விழுந்துகொண்டிருந்த ஒருவரைக் கவனித்துவிட்டு, மெல்லத் தட்டி எழுப்பி, 'ஐயா! அவர் மேலே, விழுகிறீர்களே! கொஞ்சம், தள்ளி உட்காருங்கள். பாருங்கள், அவர் எவ்வளவு இடுக்கிலே கிடக்கிறார். கொஞ்சம் தள்ளி, இடம் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். அவர், ஒரு தடவை விழித்துப் பார்த்து, கனைத்துக் காட்டிவிட்டு, மீண்டும் பழையபடியே தூங்கலானார். நண்பனுக்குக் கோபம், கொஞ்சம், அதட்டும் குரலில், அந்த ஆசாமியை எழுப்பி, "இரயில் என்னய்யா, உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா! அவரை இப்படிப்போட்டு இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறாயே. அவர், யார் தெரியுமா? அவருடைய யோக்யதை என்னவென்று தெரியுமா? திருவாசகத்திலே புலி ஐயா, புலி! தேன் சொட்டும். அவர் தேவாரம் பாடினால்! தெரியுமா?" என்றான்.<noinclude></noinclude>
kra5czhdunp0di1fdbfu93a0bjvk7xc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/36
250
641664
1928424
1927687
2026-04-30T04:43:32Z
Rabiyathul
5890
+ மேலடி
1928424
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||13}}{{rule}}</noinclude>12
'திராவிட நாடு' இதழில்
விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன், "அப்படியானால். பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு" என்றான்.
அட. விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி! பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப் பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோக்யதை தெரியாமல் உளறுகிறீர்களே?" என்று, சிறிது கோபத்துடன் கூறினான்.
"வேதாந்தியா....யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்! அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!" என்று வலுச் சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன்.
"கண்ணைப்பாரு கோட்டான் மாதிரி!"
"சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு!''
"ஆள் ஏமாந்தா, மூட்டையை அடிக்கிற பயலெல்லாம் கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்துறானுங்க..." பலர் பலவிதம் பேசினர், கேவலமாக.
நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப் புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு, ஏசினர்.
இடம் பெற்றுத்தர முடியாது போனாலும், இழிமொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால்.
அதுபோன்ற தம்பி! பெருந்தலைவர்களில் தமக்குப் பிடித்தமான வரைப்பற்றி 'விமர்சனம் செய்வோர்' புகழ்ந்து எழுத, அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத் தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார் -ஆண்டவனே! என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்று அந்தத் தலைவர்கள், கூறிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய முறையினரின் போக்கினால்தான்.
ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி, ஒவ்வொருவர் தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக் கொண்டு, எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச்செய்ய அல்ல-கெடுக்கத்தான் பயன்படுகின்றன.
மிகச்சிலர் தவிர, பலரும் தமக்குள் வேலைத் தொல்லை யினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க இயலுவ தில்லை.<noinclude></noinclude>
4cul121qw5agit15sknhaen86x2wl93
1928425
1928424
2026-04-30T04:44:30Z
Rabiyathul
5890
+ மேலடி
1928425
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|16||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>12
'திராவிட நாடு' இதழில்
விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன், "அப்படியானால். பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு" என்றான்.
அட. விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி! பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப் பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோக்யதை தெரியாமல் உளறுகிறீர்களே?" என்று, சிறிது கோபத்துடன் கூறினான்.
"வேதாந்தியா....யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்! அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!" என்று வலுச் சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன்.
"கண்ணைப்பாரு கோட்டான் மாதிரி!"
"சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு!''
"ஆள் ஏமாந்தா, மூட்டையை அடிக்கிற பயலெல்லாம் கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்துறானுங்க..." பலர் பலவிதம் பேசினர், கேவலமாக.
நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப் புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு, ஏசினர்.
இடம் பெற்றுத்தர முடியாது போனாலும், இழிமொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால்.
அதுபோன்ற தம்பி! பெருந்தலைவர்களில் தமக்குப் பிடித்தமான வரைப்பற்றி 'விமர்சனம் செய்வோர்' புகழ்ந்து எழுத, அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத் தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார் -ஆண்டவனே! என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்று அந்தத் தலைவர்கள், கூறிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய முறையினரின் போக்கினால்தான்.
ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி, ஒவ்வொருவர் தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக் கொண்டு, எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச்செய்ய அல்ல-கெடுக்கத்தான் பயன்படுகின்றன.
மிகச்சிலர் தவிர, பலரும் தமக்குள் வேலைத் தொல்லை யினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க இயலுவ தில்லை.<noinclude></noinclude>
ae2e4ah2map84jn275da148u5pfes28
1928426
1928425
2026-04-30T04:45:37Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928426
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|16||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன், "அப்படியானால். பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு" என்றான்.
அட. விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி! பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப் பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோக்யதை தெரியாமல் உளறுகிறீர்களே?" என்று, சிறிது கோபத்துடன் கூறினான்.
"வேதாந்தியா....யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்! அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!" என்று வலுச் சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன்.
"கண்ணைப்பாரு கோட்டான் மாதிரி!"
"சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு!''
"ஆள் ஏமாந்தா, மூட்டையை அடிக்கிற பயலெல்லாம் கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்துறானுங்க..." பலர் பலவிதம் பேசினர், கேவலமாக.
நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப் புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு, ஏசினர்.
இடம் பெற்றுத்தர முடியாது போனாலும், இழிமொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால்.
அதுபோன்ற தம்பி! பெருந்தலைவர்களில் தமக்குப் பிடித்தமான வரைப்பற்றி 'விமர்சனம் செய்வோர்' புகழ்ந்து எழுத, அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத் தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார் -ஆண்டவனே! என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்று அந்தத் தலைவர்கள், கூறிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய முறையினரின் போக்கினால்தான்.
ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி, ஒவ்வொருவர் தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக் கொண்டு, எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச்செய்ய அல்ல-கெடுக்கத்தான் பயன்படுகின்றன.
மிகச்சிலர் தவிர, பலரும் தமக்குள் வேலைத் தொல்லை யினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க இயலுவ தில்லை.<noinclude></noinclude>
69y3qu0ivcnragohdpnpkecsfl0ysro
1928427
1928426
2026-04-30T04:46:09Z
Rabiyathul
5890
1928427
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|12||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன், "அப்படியானால். பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு" என்றான்.
அட. விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி! பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப் பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோக்யதை தெரியாமல் உளறுகிறீர்களே?" என்று, சிறிது கோபத்துடன் கூறினான்.
"வேதாந்தியா....யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்! அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!" என்று வலுச் சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன்.
"கண்ணைப்பாரு கோட்டான் மாதிரி!"
"சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு!''
"ஆள் ஏமாந்தா, மூட்டையை அடிக்கிற பயலெல்லாம் கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்துறானுங்க..." பலர் பலவிதம் பேசினர், கேவலமாக.
நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப் புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு, ஏசினர்.
இடம் பெற்றுத்தர முடியாது போனாலும், இழிமொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால்.
அதுபோன்ற தம்பி! பெருந்தலைவர்களில் தமக்குப் பிடித்தமான வரைப்பற்றி 'விமர்சனம் செய்வோர்' புகழ்ந்து எழுத, அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத் தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார் -ஆண்டவனே! என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்று அந்தத் தலைவர்கள், கூறிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய முறையினரின் போக்கினால்தான்.
ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி, ஒவ்வொருவர் தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக் கொண்டு, எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச்செய்ய அல்ல-கெடுக்கத்தான் பயன்படுகின்றன.
மிகச்சிலர் தவிர, பலரும் தமக்குள் வேலைத் தொல்லை யினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க இயலுவ தில்லை.<noinclude></noinclude>
30h1pl3kw2a66i60c0gjbpxcbwl1pmd
1928941
1928427
2026-04-30T09:30:35Z
Rabiyathul
5890
1928941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|12||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன், "அப்படியானால். பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு" என்றான்.
அட. விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி! பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப் பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோக்யதை தெரியாமல் உளறுகிறீர்களே?" என்று, சிறிது கோபத்துடன் கூறினான்.
"வேதாந்தியா....யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்! அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!" என்று வலுச் சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன்.
"கண்ணைப்பாரு கோட்டான் மாதிரி!"
"சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு!''
"ஆள் ஏமாந்தா, மூட்டையை அடிக்கிற பயலெல்லாம் கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்துறானுங்க..." பலர் பலவிதம் பேசினர், கேவலமாக.
நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப் புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு, ஏசினர்.
இடம் பெற்றுத்தர முடியாது போனாலும், இழிமொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால்.
அதுபோன்ற தம்பி! பெருந்தலைவர்களில் தமக்குப் பிடித்தமான வரைப்பற்றி 'விமர்சனம் செய்வோர்' புகழ்ந்து எழுத, அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத் தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார் -ஆண்டவனே! என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்று அந்தத் தலைவர்கள், கூறிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய முறையினரின் போக்கினால்தான்.
ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி, ஒவ்வொருவர் தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக் கொண்டு, எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச்செய்ய அல்ல-கெடுக்கத்தான் பயன்படுகின்றன.
மிகச்சிலர் தவிர, பலரும் தமக்குள் வேலைத் தொல்லை யினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க இயலுவ தில்லை.<noinclude></noinclude>
jpp6e4h3dp4l5mdbug9c278y1z1vy11
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/37
250
641665
1928428
1927688
2026-04-30T04:47:46Z
Rabiyathul
5890
+ மேலடி
1928428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||13}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
13
'விமர்சனம்' செய்வோர், செய்தளிக்கும் 'சிந்தனை'யை அவர்கள் விலைக்கொடுத்து வாங்கித் தவறான கருத்தைக் கொண்டு விடுகிறார்கள்.
தம்பி! பிரச்சினைகளை நாமாகவே, அலசிப்பார்த்துக் கருத்தினைக் கொள்ள வேண்டும்; நமக்காக வேறொருவர். தயாரித்துத்தரும் 'கருத்து' கவைக்கு உதவாது.
பாரிஸ் மாநாட்டிலே குருஷேவ் கொதித்த உள்ளத்தோடு இருந்தாலும், கூர்ந்து பார்த்து, நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தாயானால், கொதிப்புக் குறைந்ததும் தெரியும் - மீண்டும் கூடிட வழி தேடத்தான் போகிறார்கள் என்பதும் புரியும்.
இந்த நேரத்தில், பிரிட்டிஷ் மாக்மிலனும், பிரஞ்ச்சு நாட்டு தெ'கோலும் மிகப் பொறுப்புடன், நடந்து கொண்டதால், பகைப்புகை பரவாதிருக் கிறது, என்று கூறலாம்.
மாநாடு நடைபெறவேண்டும் என்பதற்காக அவர்கள் தக்க முயற்சியை எடுத்துக்கொண்டனர், என்பது மட்டுமல்ல, கருத்து வேற்றுமை களைக் குறைக்கவும், அரும்பாடு பட்டிருக்கின்றனர்.
மிகுந்த பொறுப்புடன் அவர்கள் நடந்துகொண்டது ஏற்பட இருந்த ஆபத்தை, நெடுந்தொலைவிலேயே, தடுத்து நிறுத்த உதவிற்று, என்றுகூட எனக்குத் தோன்றுகிறது.
குருஷேவ் இப்படிப் பேசியது, தவறு! என்று அயிசனோவரிடம் பேசித் தூபமிடவில்லை, கவனித்தாயா, தம்பி! இத்தனைக்கும், போர் என்று ஏற்பட்டுவிட்டால், அவர்கள் இருவரும், அயிசனோவரின் அணியில் இருக்கக் கடமைப்பட்டவர்கள். எனினும் அவர்கள், பகை குறைத்திடப் பாடுபட்டனர்- பண்பு அதுவன்றோ!
பாரிசில் இருந்துவந்த சூழ்நிலையில், மாக்மிலனோ தெகோலோ, பொறுப்பை மறந்து நடந்துகொண்டிருந்தால், தம்பி! இன்னேரம் போர் மூண்டுவிட்டிருக்கக் கூடும்.
"விடாதே! விடாதே! பார், பார், அவன் கர்வத்தை" என்று தூண்டி விடுவதும்,தூபம்போடுவதும், எளிதுமட்டுமல்ல, சுவைகூடத் தரும்.
பிரான்சு, பிரிட்டன் ஆகிய இருநாடுகளுமே, அமெரிக்கா, இரஷியா ஆகியவைகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, எந்த முனையில் இருந்து கவனித்தாலும், இரண்டாம் வரிசையில்தான் இருக்கமுடியும்.
எனினும், அந்நாட்டுத் தலைவர்கள் மிகப்பெரிய நாடுகள், செல்வம் கொழிக்கும் இடங்கள், வல்லமை வளர்ந்துள்ள நாடுகள் என்று கூறத்தக்க,<noinclude></noinclude>
1wbpm03okfs6i9srprw5y5l3kxvbpif
1928429
1928428
2026-04-30T04:49:00Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||13}}{{rule}}</noinclude>'விமர்சனம்' செய்வோர், செய்தளிக்கும் 'சிந்தனை'யை அவர்கள் விலைக்கொடுத்து வாங்கித் தவறான கருத்தைக் கொண்டு விடுகிறார்கள்.
தம்பி! பிரச்சினைகளை நாமாகவே, அலசிப்பார்த்துக் கருத்தினைக் கொள்ள வேண்டும்; நமக்காக வேறொருவர். தயாரித்துத்தரும் 'கருத்து' கவைக்கு உதவாது.
பாரிஸ் மாநாட்டிலே குருஷேவ் கொதித்த உள்ளத்தோடு இருந்தாலும், கூர்ந்து பார்த்து, நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தாயானால், கொதிப்புக் குறைந்ததும் தெரியும் - மீண்டும் கூடிட வழி தேடத்தான் போகிறார்கள் என்பதும் புரியும்.
இந்த நேரத்தில், பிரிட்டிஷ் மாக்மிலனும், பிரஞ்ச்சு நாட்டு தெ'கோலும் மிகப் பொறுப்புடன், நடந்து கொண்டதால், பகைப்புகை பரவாதிருக் கிறது, என்று கூறலாம்.
மாநாடு நடைபெறவேண்டும் என்பதற்காக அவர்கள் தக்க முயற்சியை எடுத்துக்கொண்டனர், என்பது மட்டுமல்ல, கருத்து வேற்றுமை களைக் குறைக்கவும், அரும்பாடு பட்டிருக்கின்றனர்.
மிகுந்த பொறுப்புடன் அவர்கள் நடந்துகொண்டது ஏற்பட இருந்த ஆபத்தை, நெடுந்தொலைவிலேயே, தடுத்து நிறுத்த உதவிற்று, என்றுகூட எனக்குத் தோன்றுகிறது.
குருஷேவ் இப்படிப் பேசியது, தவறு! என்று அயிசனோவரிடம் பேசித் தூபமிடவில்லை, கவனித்தாயா, தம்பி! இத்தனைக்கும், போர் என்று ஏற்பட்டுவிட்டால், அவர்கள் இருவரும், அயிசனோவரின் அணியில் இருக்கக் கடமைப்பட்டவர்கள். எனினும் அவர்கள், பகை குறைத்திடப் பாடுபட்டனர்- பண்பு அதுவன்றோ!
பாரிசில் இருந்துவந்த சூழ்நிலையில், மாக்மிலனோ தெகோலோ, பொறுப்பை மறந்து நடந்துகொண்டிருந்தால், தம்பி! இன்னேரம் போர் மூண்டுவிட்டிருக்கக் கூடும்.
"விடாதே! விடாதே! பார், பார், அவன் கர்வத்தை" என்று தூண்டி விடுவதும்,தூபம்போடுவதும், எளிதுமட்டுமல்ல, சுவைகூடத் தரும்.
பிரான்சு, பிரிட்டன் ஆகிய இருநாடுகளுமே, அமெரிக்கா, இரஷியா ஆகியவைகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, எந்த முனையில் இருந்து கவனித்தாலும், இரண்டாம் வரிசையில்தான் இருக்கமுடியும்.
எனினும், அந்நாட்டுத் தலைவர்கள் மிகப்பெரிய நாடுகள், செல்வம் கொழிக்கும் இடங்கள், வல்லமை வளர்ந்துள்ள நாடுகள் என்று கூறத்தக்க,<noinclude></noinclude>
s7bgemexg3hv4cnw75vashuif86d7jd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/38
250
641666
1928431
1927689
2026-04-30T04:49:52Z
Rabiyathul
5890
+ மேலடி
1928431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||15}}{{rule}}</noinclude>14
'திராவிட நாடு' இதழில்
இரஷியா, அமெரிக்கா எனும் இருபெரும் நாட்டுத் தலைவர்களைவிட, தமது போக்கினால், தரத்திலே உயர்ந்தோராயினர்.
இருபெரும் நாட்டுத் தலைவர்களும், இவர்களிடம் தத்தமது நிலைமையினைக் கூறவும். இவர்கள் அந்தப் பெருந்தலைவர்களுக்குப் பொறுமையின் அருமை, பொறுப்புப் பற்றிய பெருமை, ஆகியவற்றை எடுத்துக் கூறவுமான நிலை அல்லவா கண்டோம்! பாரிஸ் மாநாடு- நடைபெறாத மாநாடு-இந்தப் பேருண்மையை எடுத்துக்காட்ட உதவிற்று.
இவர்களல்லாமல், ஒரு அணு ஆயுதக் கிடங்குக்காரர், பீரங்கி தயாரிக்கும் தொழிலதிபர், விமானம் கட்டும் தொழில் முதல்வர், விஷப் புகை தயாரித்து விற்போர், கலந்து பேசுவதிலே இடம் பெற்றிருப்பார் களானால், பகை கூடாது போர் ஆகாது, என்றா பேசியிருப்பர்.
உங்களுக்கு ஏற்படலாமா, இந்த அவமதிப்பு!
எப்படி இந்த அக்ரமத்தைத் தாங்கிக்கொள்ள முடிகிறது! உங்களால்!- என்று தூண்டிவிட்டிருப்பர்-பிறகு? போர்தான். இரத்தம் கொட்ட, மக்கள்! இலாபம் திரட்ட, அந்த முதலாளிகள்.
இரண்டு உலகப் பெரும்போர்களின் போதும் ஜெர்மன் நாட்டை முறையே நடத்திச்சென்ற, கெய்சர், ஹிட்லர், ஆகியோருக்கு, பக்கம் நின்று, யோசனை கூறியவர்கள் அந்த நாட்டிலே, போர்க்கருவிகள் தயாரித்துக் குவித்திருந்த, கொள்ளைக்காரர்கள், குரூப்ஸ் போன்ற முதலாளிகள்தான்! போர் மூண்டிட அவர்களின், 'தூபம்' வெகு வாகப் பயன்பட்டது! நாடு, சுடுகாடாயிற்று, அந்த முதலாளிகளின் பெட்டி நிரம்பிற்று.
அத்தகைய சூழ்நிலை இன்று ஏற்படாமலிருந்தது ஆபத்தைத் தடுக்க, மிகமிக, உதவிற்று.
இத்தகைய சூழ்நிலையைத் தொடர்ந்து பெற்று மாக்மிலன். தெ'கோல் போன்றார். இடை விடாத முயற்சி எடுத்துக்கொண்டு, பகை நீங்கிடச் செய்தல் வேண்டும். ஏனெனில், இனியொரு போர் என்றால். வெற்றி பெற்றவர்கூட வெற்றியின் பலனைச் சுவைத்திட முடியாது, ஏனெனில், சுற்றிலும் பாழ்வெளிதான். மிஞ்சும்.
இந்தப் பேருண்மை பெருந்தலைவர்களுக்கும் மிக நன்றாகத் தெரிந்திருக்கிற காரணத்தால்தான். ஆத்திரம் அடங்கி விடுகிறது; போர் வெறி ஒடுங்கிவிடுகிறது.
போர் ஏற்படாதிருக்கும் பொன்னான ஏற்பாட்டை நானா? நீயா? என்று ஒருவரை ஒருவர் மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்து விட்டுள்ள<noinclude></noinclude>
66vtgyfja1solxbzxx2ek6kb2wdv827
1928432
1928431
2026-04-30T04:50:56Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928432
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>
இரஷியா, அமெரிக்கா எனும் இருபெரும் நாட்டுத் தலைவர்களைவிட, தமது போக்கினால், தரத்திலே உயர்ந்தோராயினர்.
இருபெரும் நாட்டுத் தலைவர்களும், இவர்களிடம் தத்தமது நிலைமையினைக் கூறவும். இவர்கள் அந்தப் பெருந்தலைவர்களுக்குப் பொறுமையின் அருமை, பொறுப்புப் பற்றிய பெருமை, ஆகியவற்றை எடுத்துக் கூறவுமான நிலை அல்லவா கண்டோம்! பாரிஸ் மாநாடு- நடைபெறாத மாநாடு-இந்தப் பேருண்மையை எடுத்துக்காட்ட உதவிற்று.
இவர்களல்லாமல், ஒரு அணு ஆயுதக் கிடங்குக்காரர், பீரங்கி தயாரிக்கும் தொழிலதிபர், விமானம் கட்டும் தொழில் முதல்வர், விஷப் புகை தயாரித்து விற்போர், கலந்து பேசுவதிலே இடம் பெற்றிருப்பார் களானால், பகை கூடாது போர் ஆகாது, என்றா பேசியிருப்பர்.
உங்களுக்கு ஏற்படலாமா, இந்த அவமதிப்பு!
எப்படி இந்த அக்ரமத்தைத் தாங்கிக்கொள்ள முடிகிறது! உங்களால்!- என்று தூண்டிவிட்டிருப்பர்-பிறகு? போர்தான். இரத்தம் கொட்ட, மக்கள்! இலாபம் திரட்ட, அந்த முதலாளிகள்.
இரண்டு உலகப் பெரும்போர்களின் போதும் ஜெர்மன் நாட்டை முறையே நடத்திச்சென்ற, கெய்சர், ஹிட்லர், ஆகியோருக்கு, பக்கம் நின்று, யோசனை கூறியவர்கள் அந்த நாட்டிலே, போர்க்கருவிகள் தயாரித்துக் குவித்திருந்த, கொள்ளைக்காரர்கள், குரூப்ஸ் போன்ற முதலாளிகள்தான்! போர் மூண்டிட அவர்களின், 'தூபம்' வெகு வாகப் பயன்பட்டது! நாடு, சுடுகாடாயிற்று, அந்த முதலாளிகளின் பெட்டி நிரம்பிற்று.
அத்தகைய சூழ்நிலை இன்று ஏற்படாமலிருந்தது ஆபத்தைத் தடுக்க, மிகமிக, உதவிற்று.
இத்தகைய சூழ்நிலையைத் தொடர்ந்து பெற்று மாக்மிலன். தெ'கோல் போன்றார். இடை விடாத முயற்சி எடுத்துக்கொண்டு, பகை நீங்கிடச் செய்தல் வேண்டும். ஏனெனில், இனியொரு போர் என்றால். வெற்றி பெற்றவர்கூட வெற்றியின் பலனைச் சுவைத்திட முடியாது, ஏனெனில், சுற்றிலும் பாழ்வெளிதான். மிஞ்சும்.
இந்தப் பேருண்மை பெருந்தலைவர்களுக்கும் மிக நன்றாகத் தெரிந்திருக்கிற காரணத்தால்தான். ஆத்திரம் அடங்கி விடுகிறது; போர் வெறி ஒடுங்கிவிடுகிறது.
போர் ஏற்படாதிருக்கும் பொன்னான ஏற்பாட்டை நானா? நீயா? என்று ஒருவரை ஒருவர் மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்து விட்டுள்ள<noinclude></noinclude>
66doayt4jg94f4n0w5i9xvlsjbv3go4
1928433
1928432
2026-04-30T04:51:36Z
Rabiyathul
5890
+ மேலடி
1928433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|14||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இரஷியா, அமெரிக்கா எனும் இருபெரும் நாட்டுத் தலைவர்களைவிட, தமது போக்கினால், தரத்திலே உயர்ந்தோராயினர்.
இருபெரும் நாட்டுத் தலைவர்களும், இவர்களிடம் தத்தமது நிலைமையினைக் கூறவும். இவர்கள் அந்தப் பெருந்தலைவர்களுக்குப் பொறுமையின் அருமை, பொறுப்புப் பற்றிய பெருமை, ஆகியவற்றை எடுத்துக் கூறவுமான நிலை அல்லவா கண்டோம்! பாரிஸ் மாநாடு- நடைபெறாத மாநாடு-இந்தப் பேருண்மையை எடுத்துக்காட்ட உதவிற்று.
இவர்களல்லாமல், ஒரு அணு ஆயுதக் கிடங்குக்காரர், பீரங்கி தயாரிக்கும் தொழிலதிபர், விமானம் கட்டும் தொழில் முதல்வர், விஷப் புகை தயாரித்து விற்போர், கலந்து பேசுவதிலே இடம் பெற்றிருப்பார் களானால், பகை கூடாது போர் ஆகாது, என்றா பேசியிருப்பர்.
உங்களுக்கு ஏற்படலாமா, இந்த அவமதிப்பு!
எப்படி இந்த அக்ரமத்தைத் தாங்கிக்கொள்ள முடிகிறது! உங்களால்!- என்று தூண்டிவிட்டிருப்பர்-பிறகு? போர்தான். இரத்தம் கொட்ட, மக்கள்! இலாபம் திரட்ட, அந்த முதலாளிகள்.
இரண்டு உலகப் பெரும்போர்களின் போதும் ஜெர்மன் நாட்டை முறையே நடத்திச்சென்ற, கெய்சர், ஹிட்லர், ஆகியோருக்கு, பக்கம் நின்று, யோசனை கூறியவர்கள் அந்த நாட்டிலே, போர்க்கருவிகள் தயாரித்துக் குவித்திருந்த, கொள்ளைக்காரர்கள், குரூப்ஸ் போன்ற முதலாளிகள்தான்! போர் மூண்டிட அவர்களின், 'தூபம்' வெகு வாகப் பயன்பட்டது! நாடு, சுடுகாடாயிற்று, அந்த முதலாளிகளின் பெட்டி நிரம்பிற்று.
அத்தகைய சூழ்நிலை இன்று ஏற்படாமலிருந்தது ஆபத்தைத் தடுக்க, மிகமிக, உதவிற்று.
இத்தகைய சூழ்நிலையைத் தொடர்ந்து பெற்று மாக்மிலன். தெ'கோல் போன்றார். இடை விடாத முயற்சி எடுத்துக்கொண்டு, பகை நீங்கிடச் செய்தல் வேண்டும். ஏனெனில், இனியொரு போர் என்றால். வெற்றி பெற்றவர்கூட வெற்றியின் பலனைச் சுவைத்திட முடியாது, ஏனெனில், சுற்றிலும் பாழ்வெளிதான். மிஞ்சும்.
இந்தப் பேருண்மை பெருந்தலைவர்களுக்கும் மிக நன்றாகத் தெரிந்திருக்கிற காரணத்தால்தான். ஆத்திரம் அடங்கி விடுகிறது; போர் வெறி ஒடுங்கிவிடுகிறது.
போர் ஏற்படாதிருக்கும் பொன்னான ஏற்பாட்டை நானா? நீயா? என்று ஒருவரை ஒருவர் மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்து விட்டுள்ள<noinclude></noinclude>
mls47acle5jh445m647uvv327mga7kq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/39
250
641667
1928434
1927690
2026-04-30T04:52:59Z
Rabiyathul
5890
+ மேலடி
1928434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||15}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
15
அமெரிக்கா, இரஷியா எனும் இரு நாடுகளைவிட, அளவிலே குறைந் திருப்பினும், தரத்தை இழந்து விடாமலிருக்கும், பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், முன்னின்று சமைத்தளிக்க முடியும். ஆனால், அவை, தமக்கு எது ஏற்ற கட்சி என்று கணக்குப் பார்க்காமலும், இலாபம் தேடாமலும் இருந்திட வேண்டும். பல நாடுகள் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன; மகிழ்ச்சி.
தம்பி! தீவிலேயே விட்டுவிட்டோமே, பாவம்! வா! அவனைக் காண்போம்.
அவன் கலக்கமடைந்த பிறகு, தீவே போதும் என்று எண்ணுகின்றான். ஆனால், மீண்டும் கூடிவாழ வேண்டும் என்ற எண்ணம் அவனை விடுவதாக இல்லை. மறுபடியும் பார்க்கிறான், இதழ்களை. உலகிலே, போர்ப்பயம் இருப்பினும், அதை நீக்கிடும் முயற்சியும் விடாமல் நடக்கிறது; அக்ரமங்கள் இருப்பினும் அதை எதிர்த்து நிற்கும் துணிவு மக்களுக்கு வளர்ந்து வருகிறது; அலங்கோலங்கள் இருப்பினும் அவைகளை நீக்கிடத்தக்க நல்லாட்சி அமைக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; இல்லாமையை, கல்லாமையை விரட்ட முயற்சிகள், நோய் போக்கும் நன் மருந்துகள் தயாரிக்கும் ஏற்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் வளருகிறது-இவை பற்றிய குறிப்புகள் காண்கிறான்; நம்பிக்கை கொள்கிறான்.
கலம் தெரிகிறது; களிப்புடன், வரவேற்கிறான்!!
"எம்மோடு வரச் சம்மதமா?" என்று கேட்கிறான், படகில் வந்தோன்.
"ஆம்! அவரவர் தத்தமது பாதுகாப்பையும் சுகத்தையும் மட்டுமே கருதித். தீவிலே தங்கிவிட்டால் உலகைத் திருத்த எவர் உளர்? வருகிறேன், உம்மோடு நின்று பணிபுரிய," என்றான்.
கலம் புறப்பட்டுவிட்டது! வருகிறான், தீவை விட்டு, வாழப் பிறந்தவன்!
ஆம், தம்பி! வாழப் பிறந்தோம், அதற்கேற்ப இந்த வையகத்தை மாற்றி அமைப்போம் என்ற நோக்கம் வேண்டும். அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொதுநோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது. மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது.
29.5.60
அண்ணன்,
Hmmanz<noinclude></noinclude>
rh7cjs8nae0dwukxttp0r8iec4t4rq7
1928942
1928434
2026-04-30T09:31:36Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||15}}{{rule}}</noinclude>
அமெரிக்கா, இரஷியா எனும் இரு நாடுகளைவிட, அளவிலே குறைந் திருப்பினும், தரத்தை இழந்து விடாமலிருக்கும், பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், முன்னின்று சமைத்தளிக்க முடியும். ஆனால், அவை, தமக்கு எது ஏற்ற கட்சி என்று கணக்குப் பார்க்காமலும், இலாபம் தேடாமலும் இருந்திட வேண்டும். பல நாடுகள் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன; மகிழ்ச்சி.
தம்பி! தீவிலேயே விட்டுவிட்டோமே, பாவம்! வா! அவனைக் காண்போம்.
அவன் கலக்கமடைந்த பிறகு, தீவே போதும் என்று எண்ணுகின்றான். ஆனால், மீண்டும் கூடிவாழ வேண்டும் என்ற எண்ணம் அவனை விடுவதாக இல்லை. மறுபடியும் பார்க்கிறான், இதழ்களை. உலகிலே, போர்ப்பயம் இருப்பினும், அதை நீக்கிடும் முயற்சியும் விடாமல் நடக்கிறது; அக்ரமங்கள் இருப்பினும் அதை எதிர்த்து நிற்கும் துணிவு மக்களுக்கு வளர்ந்து வருகிறது; அலங்கோலங்கள் இருப்பினும் அவைகளை நீக்கிடத்தக்க நல்லாட்சி அமைக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; இல்லாமையை, கல்லாமையை விரட்ட முயற்சிகள், நோய் போக்கும் நன் மருந்துகள் தயாரிக்கும் ஏற்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் வளருகிறது-இவை பற்றிய குறிப்புகள் காண்கிறான்; நம்பிக்கை கொள்கிறான்.
கலம் தெரிகிறது; களிப்புடன், வரவேற்கிறான்!!
"எம்மோடு வரச் சம்மதமா?" என்று கேட்கிறான், படகில் வந்தோன்.
"ஆம்! அவரவர் தத்தமது பாதுகாப்பையும் சுகத்தையும் மட்டுமே கருதித். தீவிலே தங்கிவிட்டால் உலகைத் திருத்த எவர் உளர்? வருகிறேன், உம்மோடு நின்று பணிபுரிய," என்றான்.
கலம் புறப்பட்டுவிட்டது! வருகிறான், தீவை விட்டு, வாழப் பிறந்தவன்!
ஆம், தம்பி! வாழப் பிறந்தோம், அதற்கேற்ப இந்த வையகத்தை மாற்றி அமைப்போம் என்ற நோக்கம் வேண்டும். அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொதுநோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது. மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது.
29.5.60
அண்ணன்,
Hmmanz<noinclude></noinclude>
0n63h6a624vapykmw5k72wuhr8c5v50
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/40
250
641668
1928435
1927691
2026-04-30T04:53:31Z
Rabiyathul
5890
+ மேலடி
1928435
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|16||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தம்பி!
குறைமதிச் செல்வன் கருத்துக் கதை- நேரு, மெண்டாரிஸ் உரையாடல்- சிங்மன்ரீ-கழகமும் காமராஜரும்
கடிதம் : 105
பெரிய புள்ளிகள்
எனக்கு எதற்குப் பெருஞ்செல்வம்? கட்டிக்கொள்ள நாலு முழ வேட்டியும், போட்டுக்கொள்ள ஒரு துண்டும், படுக்கப் பாயும், பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும். பணம் ஏன்? பங்களா ஏன்? பட்டாடை ஏன்? பளபளப்பு ஏன்? என்று காண்போரிடமெல்லாம் கூறிக்கொண்டிருந்தான்-கபடத்தை மறைத்தபடி- ஒரு ஆசாமி.
வேண்டாம்! வேண்டாம்! என்று கூறிக்கொண்டிருந்த போதே. வேறொருவர் பெரும்பொருளைப் பெற்றாளும் பேறு கிடைக்கப் பெற்று பெரும்புகழும் ஈட்டி வாழ்ந்து வருவது கண்டு, உள்ளூர அழுக்காறு கொண்டு, 'நமக்குக் கிடைத்திடலாகாதா இந்தப் பேறு கிடைத்தால், சுவைமிக்க வாழ்க்கையன்றோ!' என்று எண்ணி எண்ணி ஏக்கமுற்றான். செல்வம் பெற்றவர் முன் நின்று பலர் கட்டியங் கூறினர். இவர்க்கோ, எட்டி எனக் கசந்தது அவர் பேச்சு.
மாலை மரியாதை, விருந்து வைபவம், அவருக்கு!
மனக்குறை, நெஞ்சுத் துடிப்பு, இவருக்கு!
எங்கும் வரவேற்பு அவருக்கு! வேண்டா வெறுப்புடன் இவரிடம் உறவாடினர், அவரெலாம்.
இவ்வளவு 'பவிசும்' பெரும் பணம் பெற்றதனால் அல்லவா? என்று எண்ணியபோது, ஏக்கம் துக்கமாகி, துக்கம் கோபமாக மாறிற்று: அழுக்காறு ஆத்திரமாக வடிவெடுத்தது; அண்டிப் பிழைப்போர், அடுத்துக் கெடுப்போர். ஆகாவழி அழைத்தேக அறிந்தோர், எனும் வகையினருடன் கலந்து பேசி, செல்வம் பெற்றவரைச் சாய்த்தொழித்து, அந்த வீழ்ச்சியைச் சாதகமாக்கிக்கொண்டு, பெரு நிதிக்கு உரிமை கொண்டாடிப் பெற்று. 'பெரிய புள்ளி' ஆகிவிட்டார். பெருஞ்செல்வம் பேய்க்குணத்தை, நாய்க்குணத்தையன்றோ ஏற்படுத்தும் என்று பேசித் திரிந்தவர்!<noinclude></noinclude>
sk9wlx2obbl0zl3ca6o0etb8gzvji5z
1928943
1928435
2026-04-30T09:32:22Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>தம்பி!
குறைமதிச் செல்வன் கருத்துக் கதை- நேரு, மெண்டாரிஸ் உரையாடல்- சிங்மன்ரீ-கழகமும் காமராஜரும்
கடிதம் : 105
பெரிய புள்ளிகள்
எனக்கு எதற்குப் பெருஞ்செல்வம்? கட்டிக்கொள்ள நாலு முழ வேட்டியும், போட்டுக்கொள்ள ஒரு துண்டும், படுக்கப் பாயும், பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும். பணம் ஏன்? பங்களா ஏன்? பட்டாடை ஏன்? பளபளப்பு ஏன்? என்று காண்போரிடமெல்லாம் கூறிக்கொண்டிருந்தான்-கபடத்தை மறைத்தபடி- ஒரு ஆசாமி.
வேண்டாம்! வேண்டாம்! என்று கூறிக்கொண்டிருந்த போதே. வேறொருவர் பெரும்பொருளைப் பெற்றாளும் பேறு கிடைக்கப் பெற்று பெரும்புகழும் ஈட்டி வாழ்ந்து வருவது கண்டு, உள்ளூர அழுக்காறு கொண்டு, 'நமக்குக் கிடைத்திடலாகாதா இந்தப் பேறு கிடைத்தால், சுவைமிக்க வாழ்க்கையன்றோ!' என்று எண்ணி எண்ணி ஏக்கமுற்றான். செல்வம் பெற்றவர் முன் நின்று பலர் கட்டியங் கூறினர். இவர்க்கோ, எட்டி எனக் கசந்தது அவர் பேச்சு.
மாலை மரியாதை, விருந்து வைபவம், அவருக்கு!
மனக்குறை, நெஞ்சுத் துடிப்பு, இவருக்கு!
எங்கும் வரவேற்பு அவருக்கு! வேண்டா வெறுப்புடன் இவரிடம் உறவாடினர், அவரெலாம்.
இவ்வளவு 'பவிசும்' பெரும் பணம் பெற்றதனால் அல்லவா? என்று எண்ணியபோது, ஏக்கம் துக்கமாகி, துக்கம் கோபமாக மாறிற்று: அழுக்காறு ஆத்திரமாக வடிவெடுத்தது; அண்டிப் பிழைப்போர், அடுத்துக் கெடுப்போர். ஆகாவழி அழைத்தேக அறிந்தோர், எனும் வகையினருடன் கலந்து பேசி, செல்வம் பெற்றவரைச் சாய்த்தொழித்து, அந்த வீழ்ச்சியைச் சாதகமாக்கிக்கொண்டு, பெரு நிதிக்கு உரிமை கொண்டாடிப் பெற்று. 'பெரிய புள்ளி' ஆகிவிட்டார். பெருஞ்செல்வம் பேய்க்குணத்தை, நாய்க்குணத்தையன்றோ ஏற்படுத்தும் என்று பேசித் திரிந்தவர்!<noinclude></noinclude>
h1tt2u3wng0fhbxkkjv74i0ny68rgqh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/41
250
641669
1928436
1927692
2026-04-30T04:54:02Z
Rabiyathul
5890
+ மேலடி
1928436
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||17}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
17
பெருஞ்செல்வம் கிடைத்ததும், மெள்ள மெள்ளப் பேச்சு, போக்கு, நோக்கு. நடை - யாவும் மாறிடலாயின.
ஐயோ பாவம்!-என்று முன்பு கூறி வருந்தினோர். ஐயா! வருகிறார்! என்று அடக்க ஒடுக்கமாகப் பேசிடலாயினர்.
அவர் ஒரு அப்பாவி! தனக்கென்று எதையும் விரும்பமாட்டார்!- என்று பரிதாபத்தோடு பேசிவந்தவர்கள், 'அவர் மனது வைத்தால் போதும்!' அவர் தயவு கிடைத்தால் போதும்! என்று நயமாகப் பேசவும், நாடி வரவும், பாதம் தொடவுமாயினர்.
நிலைமை மாறிடவே, நினைப்பு மாறிடலாயிற்று! நிமிர்ந்த நடை, முறுக்குப் பேச்சு, இவை உடன் வந்துவிட்டன.
பெருஞ்செல்வம் சேரா முன்பு, 'ஒரு இழவும் பேசவராது, என்று கேலியாகக் கூறினவர்களே, "அந்தஸ்த்துக்கு ஏற்ற சுபாவம், அவருக்கு. மற்றவர்போல் வாயாடிக் கொண்டிருக்க மாட்டார்! சுருக்கமாக, இரண்டொரு வார்த்தைதான் பேசுவார்-ஆனால், அவ்வளவும், அர்த்தம் உள்ள பேச்சு!'' என்று பாராட்டலாயினர்.
'செச்சே! ஏன் இந்த ஆசாமி, இப்படி, திருதிருவென்று விழிக்க வேண்டும்' என்று ஏளனம் செய்தவர்கள், அதே பார்வையை, 'கெம்பீரம்' என்று சுட்டிக் காட்டினர்.
பரிதாபம் காட்டியவர்கள், பக்கம் நின்று பணிவிடை செய்யலாயினர்! குறும்பாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள், குற்றேவேல் புரியலாயினர்! ஆசாமிக்கு, தாங்கமுடியவில்லை! "ஓஹோ ஹோ! நாம் பெரிய புள்ளிதான் - இதுவரை அதைநாம் தெரிந்துகொள்ளாமலே இருந்து விட்டோம்" என்று தனக்குள் கூறிக்கொண்டு, அதட்டிக் கேட்க, பதட்டம் பேச ஆணை பிறப்பிக்க, ஆரம்பித்துவிட்டார்.
எனக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும் என்று பேசத் தொடங்கி, படிப்படியாகக் கூட அல்ல, தாவிடலானார் மேலே, மேலே; எனக்கு எல்லாம் தெரியும் என்று பேசிடலானார்; எனக்குத் தெரியும் எல்லாம்! என்று கூறினார்: எனக்குத் தான் தெரியும் என்றார்; கடைசியில், உனக்கு என்ன தெரியும்: பேசாமலிரு; எல்லாம் எனக்குத் தெரியும்!! என்று, உருட்டி மிரட்டும் குரலில் பேசி வரலானார்.
அவருக்கு புதிய 'அறிவு' கிடைத்துவிட்டது என்பதனால் அல்ல; புதிய அந்தஸ்து, பணபலத்தால் கிடைத்துவிட்டதே என்பதால், மற்றவர்கள், அந்த ஆணவத்தைச் சகித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.
.<noinclude></noinclude>
6amazlfo4f5yucgxkhigyq3u9i2lnij
1928944
1928436
2026-04-30T09:33:05Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||17}}{{rule}}</noinclude>
பெருஞ்செல்வம் கிடைத்ததும், மெள்ள மெள்ளப் பேச்சு, போக்கு, நோக்கு. நடை - யாவும் மாறிடலாயின.
ஐயோ பாவம்!-என்று முன்பு கூறி வருந்தினோர். ஐயா! வருகிறார்! என்று அடக்க ஒடுக்கமாகப் பேசிடலாயினர்.
அவர் ஒரு அப்பாவி! தனக்கென்று எதையும் விரும்பமாட்டார்!- என்று பரிதாபத்தோடு பேசிவந்தவர்கள், 'அவர் மனது வைத்தால் போதும்!' அவர் தயவு கிடைத்தால் போதும்! என்று நயமாகப் பேசவும், நாடி வரவும், பாதம் தொடவுமாயினர்.
நிலைமை மாறிடவே, நினைப்பு மாறிடலாயிற்று! நிமிர்ந்த நடை, முறுக்குப் பேச்சு, இவை உடன் வந்துவிட்டன.
பெருஞ்செல்வம் சேரா முன்பு, 'ஒரு இழவும் பேசவராது, என்று கேலியாகக் கூறினவர்களே, "அந்தஸ்த்துக்கு ஏற்ற சுபாவம், அவருக்கு. மற்றவர்போல் வாயாடிக் கொண்டிருக்க மாட்டார்! சுருக்கமாக, இரண்டொரு வார்த்தைதான் பேசுவார்-ஆனால், அவ்வளவும், அர்த்தம் உள்ள பேச்சு!'' என்று பாராட்டலாயினர்.
'செச்சே! ஏன் இந்த ஆசாமி, இப்படி, திருதிருவென்று விழிக்க வேண்டும்' என்று ஏளனம் செய்தவர்கள், அதே பார்வையை, 'கெம்பீரம்' என்று சுட்டிக் காட்டினர்.
பரிதாபம் காட்டியவர்கள், பக்கம் நின்று பணிவிடை செய்யலாயினர்! குறும்பாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள், குற்றேவேல் புரியலாயினர்! ஆசாமிக்கு, தாங்கமுடியவில்லை! "ஓஹோ ஹோ! நாம் பெரிய புள்ளிதான் - இதுவரை அதைநாம் தெரிந்துகொள்ளாமலே இருந்து விட்டோம்" என்று தனக்குள் கூறிக்கொண்டு, அதட்டிக் கேட்க, பதட்டம் பேச ஆணை பிறப்பிக்க, ஆரம்பித்துவிட்டார்.
எனக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும் என்று பேசத் தொடங்கி, படிப்படியாகக் கூட அல்ல, தாவிடலானார் மேலே, மேலே; எனக்கு எல்லாம் தெரியும் என்று பேசிடலானார்; எனக்குத் தெரியும் எல்லாம்! என்று கூறினார்: எனக்குத் தான் தெரியும் என்றார்; கடைசியில், உனக்கு என்ன தெரியும்: பேசாமலிரு; எல்லாம் எனக்குத் தெரியும்!! என்று, உருட்டி மிரட்டும் குரலில் பேசி வரலானார்.
அவருக்கு புதிய 'அறிவு' கிடைத்துவிட்டது என்பதனால் அல்ல; புதிய அந்தஸ்து, பணபலத்தால் கிடைத்துவிட்டதே என்பதால், மற்றவர்கள், அந்த ஆணவத்தைச் சகித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.
.<noinclude></noinclude>
99wc933tp0i8up97a41tu3mhei6n774
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/42
250
641670
1928437
1927693
2026-04-30T04:54:33Z
Rabiyathul
5890
+ மேலடி
1928437
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|18||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>18
'திராவிட நாடு' இதழில்
ஆணவத்தைப் பலரும் சகித்துக்கொண்டதால். 'நாமே உலகிலே தலைசிறந்த அறிவாளி! நமது வீரதீரத்துக்கு ஈடு எங்கும் இல்லை! எனவேதான் இத்தனைபேர் நம்மிடம் அடங்கி' ஒடுங்கிக் கிடக்கிறார்கள்' என்று அந்த ஆசாமி எண்ணிக் கொண்டு, மனம்போன போக்கிலே நடந்திடலானார்.
ஓவியத் திறனுடையார் அவரைக்கண்டு தம் கைத்திறனைக் காட்டுவர், பாராட்டுவார், பரிசளிப்பார் என்ற எண்ணத்தில். இவரோ, அலட்சியமாகப் பார்த்துவிட்டு, 'ஓவியக்கலை என்பதே. காலத்தை வீணாக்கும் காரியம்!' என்று கூறி இகழுவார்.
களத்திலே, இவர் வீரர் என்று ஒருவரை அறிமுகப்படுத்துவார்கள், "புலி இவரைவிட அதிக ஆட்களைச் சாகடித்திருக்குமே!" என்று கேலி பேசுவார்.
"இவர் புலவர்!" என்பார்கள், "ஐயோ, பாவம்!" என்று ஏளனம் செய்வார்.
பெருநிதியும் குறைமதியும் கொண்ட அந்தச் சீமானைக் காணச் சென்றான். அறிவுச்செல்வம் நிரம்பப் பெற்றிருந்த வறுமை நிலையினன். செருக்கு மிக்கவனாகத் தன் நண்பன் இருப்பதைக் கண்டான். எனினும், தன்னிடம் மட்டும் ஓரளவு 'மதிப்பு' காட்டுவ தறிந்தான்? ஆயின், இதுபோதும் என்றெண்ணி இருந்துவிடவில்லை. நண்பனுக்கு ஆறிவூட்ட விரும்பினான். கண்ணாடி பொருத்தப்பட்ட பலகணி அருகே நண்பனை அழைத்துச் சென்று, 'என்ன தெரிகிறது?" என்று கேட்டான். “ஏன்! எல்லாம்தான்! வெளியே உள்ள தோட்டம்; மலர்கள்; வீடுகள்; வண்டி வாகனங்கள்; நடமாடுவோர்; எல்லாம் தெரிகிறது. கண்ணாடி ஜன்னல் தானே, தெரிவதற்கு என்ன?" என்றான் செல்வவான். புன்னகை புரிந்தான் அறிவாளன். வேறோர் புறமிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி, “அதைப் பார்! என்ன தெரிகிறது அதிலே?" என்று கேட்டான். "பொல்லாத கேள்வி கேட்டுவிட்டாய், போ! அதில், நான் தெரிகிறேன்!" என்றான், சீமான்! "நண்பா! இரண்டும், கண்ணாடிகள்! வெளியே உள்ளது எல்லாம் காண முடிகிறது, ஒன்றின் மூலம்! மற்றொன்றிலோ, உன்னைத் தவிர வேறொன்றும் தெரிவதில்லை. ஏன்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றிலே 'ரசம்' பூசப்பட்டிருக்கிறது! 'ரசம்' வெள்ளி யிலிருந்து தயாரிக்கப்படுகிறது! பார்த்தாயா, ஒரு கண்ணாடியில் சிறிது வெள்ளி தடவியதும், வேறெதுவும் தெரியவில்லை; உன்னைத் தவிர! அதுபோலத்தான், உன்னிடம் பணம் குவிந்துவிட்டதால், உன்னைத் தவிர, வேற எதுவும், உனக்குத் தெரியாது போய்விடுகிறது; பணம், கண்களை மறைத்து விடுகிறது" என்றான். வெட்கம், சீமானை. வேலாகக் குத்திற்று.<noinclude></noinclude>
9hjvkyy8m2xbqxpiodegqhty4xwk5wx
1928945
1928437
2026-04-30T09:33:52Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|18||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஆணவத்தைப் பலரும் சகித்துக்கொண்டதால். 'நாமே உலகிலே தலைசிறந்த அறிவாளி! நமது வீரதீரத்துக்கு ஈடு எங்கும் இல்லை! எனவேதான் இத்தனைபேர் நம்மிடம் அடங்கி' ஒடுங்கிக் கிடக்கிறார்கள்' என்று அந்த ஆசாமி எண்ணிக் கொண்டு, மனம்போன போக்கிலே நடந்திடலானார்.
ஓவியத் திறனுடையார் அவரைக்கண்டு தம் கைத்திறனைக் காட்டுவர், பாராட்டுவார், பரிசளிப்பார் என்ற எண்ணத்தில். இவரோ, அலட்சியமாகப் பார்த்துவிட்டு, 'ஓவியக்கலை என்பதே. காலத்தை வீணாக்கும் காரியம்!' என்று கூறி இகழுவார்.
களத்திலே, இவர் வீரர் என்று ஒருவரை அறிமுகப்படுத்துவார்கள், "புலி இவரைவிட அதிக ஆட்களைச் சாகடித்திருக்குமே!" என்று கேலி பேசுவார்.
"இவர் புலவர்!" என்பார்கள், "ஐயோ, பாவம்!" என்று ஏளனம் செய்வார்.
பெருநிதியும் குறைமதியும் கொண்ட அந்தச் சீமானைக் காணச் சென்றான். அறிவுச்செல்வம் நிரம்பப் பெற்றிருந்த வறுமை நிலையினன். செருக்கு மிக்கவனாகத் தன் நண்பன் இருப்பதைக் கண்டான். எனினும், தன்னிடம் மட்டும் ஓரளவு 'மதிப்பு' காட்டுவ தறிந்தான்? ஆயின், இதுபோதும் என்றெண்ணி இருந்துவிடவில்லை. நண்பனுக்கு ஆறிவூட்ட விரும்பினான். கண்ணாடி பொருத்தப்பட்ட பலகணி அருகே நண்பனை அழைத்துச் சென்று, 'என்ன தெரிகிறது?" என்று கேட்டான். “ஏன்! எல்லாம்தான்! வெளியே உள்ள தோட்டம்; மலர்கள்; வீடுகள்; வண்டி வாகனங்கள்; நடமாடுவோர்; எல்லாம் தெரிகிறது. கண்ணாடி ஜன்னல் தானே, தெரிவதற்கு என்ன?" என்றான் செல்வவான். புன்னகை புரிந்தான் அறிவாளன். வேறோர் புறமிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி, “அதைப் பார்! என்ன தெரிகிறது அதிலே?" என்று கேட்டான். "பொல்லாத கேள்வி கேட்டுவிட்டாய், போ! அதில், நான் தெரிகிறேன்!" என்றான், சீமான்! "நண்பா! இரண்டும், கண்ணாடிகள்! வெளியே உள்ளது எல்லாம் காண முடிகிறது, ஒன்றின் மூலம்! மற்றொன்றிலோ, உன்னைத் தவிர வேறொன்றும் தெரிவதில்லை. ஏன்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றிலே 'ரசம்' பூசப்பட்டிருக்கிறது! 'ரசம்' வெள்ளி யிலிருந்து தயாரிக்கப்படுகிறது! பார்த்தாயா, ஒரு கண்ணாடியில் சிறிது வெள்ளி தடவியதும், வேறெதுவும் தெரியவில்லை; உன்னைத் தவிர! அதுபோலத்தான், உன்னிடம் பணம் குவிந்துவிட்டதால், உன்னைத் தவிர, வேற எதுவும், உனக்குத் தெரியாது போய்விடுகிறது; பணம், கண்களை மறைத்து விடுகிறது" என்றான். வெட்கம், சீமானை. வேலாகக் குத்திற்று.<noinclude></noinclude>
4qw637y99pzjr0a4948iwg1mpbu5y9b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/43
250
641671
1928439
1927694
2026-04-30T04:55:04Z
Rabiyathul
5890
+ மேலடி
1928439
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||19}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
19
'ரசம்' பூசப்பட்ட கண்ணாடி, போலாகிவிடுகிறார்கள், பணம் பெற்று. பண்பு கெட்டுவிட்ட நிலை அடைந்தோர்! பணம் மட்டுமல்ல; புகழ். பட்டம், பதவி, எதுவும்தான் பழைமையை மறந்துவிடச் செய்கிறது, புதிய நினைப்பு,முறுக்கு, ஏற்பட்டுவிடுகிறது! இயல்பே, மாறிவிடுகிறது.
பணம் மட்டும் குவிந்திருக்கும்போது, செருக்கு, பிறரைத் துச்சமாக எண்ணும் துடுக்கு. ஏற்பட்டுவிடும். எனினும், இருப்பது போய்விட்டால் என்னாகும், என்ற பயம் கூடவே பிறக்கும் எவன், கொள்ளையடித்துச் சென்றுவிடுவானோ, எவன் கொன்றுபோட்டுவிட்டுச் சொத்துக்களைப் பறித்துக்கொள்வானோ, என்ற பயம் பீடிக்கும். ஆணவம் ஒரு புறம், அச்சம் மற்றோர் புறம் இரண்டுக்கும் இடையே சிக்கித் தவியாய்த் தவிப்பான். ஆனால் பதவி கிடைத்துவிட்டாலோ, எவரையும் எதுவும் செய்துவிட முடியும் என்ற இறுமாப்பு, எவன் என்ன செய்து விட முடியும் என்ற மண்டைக்கனம், எவனால் என்ன என்ற போக்கு. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சு, யாருக்கு நான் அஞ்சவேண்டும்! என்ற நோக்குடன் நடவடிக்கைகள், இப்படிப் பலப்பல 'நோய்கள்' ஒரு சேரக் குடி ஏறிவிடும். பதவியும், அதனால் கிடைத்திடும் அதிகாரமும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்ற நினைப்பு தடித்துவிடும்; பிறகு நெரித்த புருவம், கனல் உமிழும் பார்வை, கடும் சொற்கள்!!
பொதுத்தேர்தலில் நானூறுக்கு மேற்பட்ட இடங்களைப் பிடித்த. மண்டாரிஸ் பதவி பெற்றதும், இனி எதுவும் செய்யலாம், எவரும் பணிவர் என்றெண்ணிச் செயல்படத் தொடங்கியது, இந்த 'வகையைச்' சார்ந்ததே.
எதிர்க்கட்சிகள், இளைத்தும் களைத்தும் காணப்பட்டன. நினைத்ததைச் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது மெண்டாரிசுக்கு! ஆனால், செய்தது என்ன? எந்த மக்கள், பேராதரவு தந்து, பெரியதோர் வெற்றி கிட்டிடச் செய்தனரோ, அவர்களின் நல்லெண்ணத்தை. நேசத்தை மேலும் மேலும் பெறுகிற வகையான காரியமா? அல்ல! அல்ல! கிடைத்த பதவி, என்றென்றும் தன் காலடி கிடந்திட வேண்டும்! கைகட்டி வாய்பொத்திக் கிடக்க வேண்டும், எதிர்க்கட்சிகள்! எவரும், தன்னை நத்திப் பிழைக்க வேண்டும்! என்றென்றும், எதிர்க் கட்சிகள் தலைதூக்க முடியாதபடி, தாக்கித் தகர்த்திட வேண்டும் ! - என்ற இவ்விதமான நோக்குடன் காரியங்களைத் துணிந்து செய்து வந்தார். தம்பி! அவர் இப்போது ஒரு கைதி! நான் இதை எழுதும்போது, அவர், பட்டம் இழந்து, பதவி இழந்து, மாளிகைவாசம் இழந்து, மாநிதியில் புரளும் நிலை இழந்து,<noinclude></noinclude>
g6e8e1txcmy4ex3x6kxbey2zt3l0pd3
1928946
1928439
2026-04-30T09:37:18Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||19}}{{rule}}</noinclude>
'ரசம்' பூசப்பட்ட கண்ணாடி, போலாகிவிடுகிறார்கள், பணம் பெற்று. பண்பு கெட்டுவிட்ட நிலை அடைந்தோர்! பணம் மட்டுமல்ல; புகழ். பட்டம், பதவி, எதுவும்தான் பழைமையை மறந்துவிடச் செய்கிறது, புதிய நினைப்பு,முறுக்கு, ஏற்பட்டுவிடுகிறது! இயல்பே, மாறிவிடுகிறது.
பணம் மட்டும் குவிந்திருக்கும்போது, செருக்கு, பிறரைத் துச்சமாக எண்ணும் துடுக்கு. ஏற்பட்டுவிடும். எனினும், இருப்பது போய்விட்டால் என்னாகும், என்ற பயம் கூடவே பிறக்கும் எவன், கொள்ளையடித்துச் சென்றுவிடுவானோ, எவன் கொன்றுபோட்டுவிட்டுச் சொத்துக்களைப் பறித்துக்கொள்வானோ, என்ற பயம் பீடிக்கும். ஆணவம் ஒரு புறம், அச்சம் மற்றோர் புறம் இரண்டுக்கும் இடையே சிக்கித் தவியாய்த் தவிப்பான். ஆனால் பதவி கிடைத்துவிட்டாலோ, எவரையும் எதுவும் செய்துவிட முடியும் என்ற இறுமாப்பு, எவன் என்ன செய்து விட முடியும் என்ற மண்டைக்கனம், எவனால் என்ன என்ற போக்கு. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சு, யாருக்கு நான் அஞ்சவேண்டும்! என்ற நோக்குடன் நடவடிக்கைகள், இப்படிப் பலப்பல 'நோய்கள்' ஒரு சேரக் குடி ஏறிவிடும். பதவியும், அதனால் கிடைத்திடும் அதிகாரமும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்ற நினைப்பு தடித்துவிடும்; பிறகு நெரித்த புருவம், கனல் உமிழும் பார்வை, கடும் சொற்கள்!!
பொதுத்தேர்தலில் நானூறுக்கு மேற்பட்ட இடங்களைப் பிடித்த. மண்டாரிஸ் பதவி பெற்றதும், இனி எதுவும் செய்யலாம், எவரும் பணிவர் என்றெண்ணிச் செயல்படத் தொடங்கியது, இந்த 'வகையைச்' சார்ந்ததே.
எதிர்க்கட்சிகள், இளைத்தும் களைத்தும் காணப்பட்டன. நினைத்ததைச் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது மெண்டாரிசுக்கு! ஆனால், செய்தது என்ன? எந்த மக்கள், பேராதரவு தந்து, பெரியதோர் வெற்றி கிட்டிடச் செய்தனரோ, அவர்களின் நல்லெண்ணத்தை. நேசத்தை மேலும் மேலும் பெறுகிற வகையான காரியமா? அல்ல! அல்ல! கிடைத்த பதவி, என்றென்றும் தன் காலடி கிடந்திட வேண்டும்! கைகட்டி வாய்பொத்திக் கிடக்க வேண்டும், எதிர்க்கட்சிகள்! எவரும், தன்னை நத்திப் பிழைக்க வேண்டும்! என்றென்றும், எதிர்க் கட்சிகள் தலைதூக்க முடியாதபடி, தாக்கித் தகர்த்திட வேண்டும் ! - என்ற இவ்விதமான நோக்குடன் காரியங்களைத் துணிந்து செய்து வந்தார். தம்பி! அவர் இப்போது ஒரு கைதி! நான் இதை எழுதும்போது, அவர், பட்டம் இழந்து, பதவி இழந்து, மாளிகைவாசம் இழந்து, மாநிதியில் புரளும் நிலை இழந்து,<noinclude></noinclude>
hcikyjdx2v2u9jbw2bsl3549hakecdi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/44
250
641672
1928440
1927695
2026-04-30T04:55:35Z
Rabiyathul
5890
+ மேலடி
1928440
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|20||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>20
'திராவிட நாடு' இதழில்
என்ன வழக்குத் தொடரப் படுமோ, தண்டனை எதுவாக இருக்குமோ- சுட்டுத்தள்ளுவார்களோ, சிறையில் போட்டு அடைப்பார்களோ, என்ன நேரிடுமோ? என்ற எண்ணம் குடையும் மனத்தினராகி, மருண்டு கிடக்கிறார். சுருண்டு கிடக்கிறார்! துருக்கியின் துரைத்தனத் தலைவர் என்ற முறையில், ஈடற்ற செல்வாக்குடன் இருந்து வந்தார். இன்று, "ஏன்" என்ற அதட்டும் குரலில், பாட்டாளத்துக்காரன் கேட்டால், "ஒன்றுமில்லை! மணி என்ன!" என்று பணிவுடன் பேசிடும் நிலைமை!!
ஆற்றலற்றவரோ, எனின், அல்ல! மக்களின் பேராதரவைத் தேர்தலின்போது தன் பக்கம் திரட்டிடத்தக்க ஆற்றல் இருந்தது; அது மட்டுமல்ல, குவலயம் புகழப் பணியாற்றிய முஸ்தபா கமால், சமைத்தளித்த புதிய துருக்கியில் எழுச்சி, மறுமலர்ச்சி, விடுதலை உணர்ச்சி பூத்திடச் செய்திடும் ஆற்றலையும் பெற்றிருந்தவர்தான், மெண்டாரிஸ்.
ய
இரு கிழமைகளுக்கு முன்பு, பாரதப் பிரதமர் நேரு பண்டிதர். அங்காரா சென்றார், அவரை வரவேற்று விழா நடாத்தியவர், மெண்டாரிஸ்! பவனி நடந்தது. விருந்து உண்டு! கூட்டறிக்கை, வழக்கப்படி! மெண்டாரிஸ், . துருக்கியின் முதல்வர்; நேரு. பாரதப் பிரதமர்! இருவரும் கூடி, உலகிலே சமாதானம் நிலவ, என்னென்ன செய்யவேண்டும் என்றுகூடக் கலந்துரை யாடினர்! அந்த மெண்டாரிஸ், இன்று படையினர் நடத்திய புரட்சியின் காரணமாக, பிடிப்பட்டு, சிறைப்பட்டு இருக்கிறார்.
நேரு-மெண்டாரிஸ், உரையாடிடக் கூடினரே, அப்போதே. துருக்கியில், குமுறல், பலமாக!! மெண்டாரிஸ் ஆட்சிக்கு எதிராக, இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள். பெரியதோர் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர். நேருவை வரவேற்க மரியாதைக் குண்டுகள். வெடித்திடவில்லை. துரத்தித் துரத்தித் தொல்லை தந்த மாணவர்களைச் சுட்டுத்தள்ள, மெண்டாரிஸ் ஏவிய போலீஸ் நடத்திய தாக்குதலால், வேட்டுச்சத்தம் கேட்டவண்ணமிருந்தது. நேரு-மெண்டாரிஸ் சந்திப்பு, இந்தச் 'சுவையான' சூழ்நிலையில்தான், நடைபெற்றிருக்கிறது. பஞ்சசீலம் பற்றிய பேச்சும், பாரிலே போர் இலாது ஒழிய வழி யாது என்பது பற்றிய உரையாடலும், அதே நேரத்தில்தான் நடைபெற்றிருக்கிறது.
"என்ன கிளர்ச்சி? எதிர்ப்பாளர் யார்".
"விவரம் தெரியாத பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் செல்வாக்கிழந்த எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டபடி, ஆடிடும் சிறுவர்கள்".<noinclude></noinclude>
ni1vs15bbm88vgkkv9nzyxgc0jenmav
1928947
1928440
2026-04-30T09:38:00Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|20||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
என்ன வழக்குத் தொடரப் படுமோ, தண்டனை எதுவாக இருக்குமோ- சுட்டுத்தள்ளுவார்களோ, சிறையில் போட்டு அடைப்பார்களோ, என்ன நேரிடுமோ? என்ற எண்ணம் குடையும் மனத்தினராகி, மருண்டு கிடக்கிறார். சுருண்டு கிடக்கிறார்! துருக்கியின் துரைத்தனத் தலைவர் என்ற முறையில், ஈடற்ற செல்வாக்குடன் இருந்து வந்தார். இன்று, "ஏன்" என்ற அதட்டும் குரலில், பாட்டாளத்துக்காரன் கேட்டால், "ஒன்றுமில்லை! மணி என்ன!" என்று பணிவுடன் பேசிடும் நிலைமை!!
ஆற்றலற்றவரோ, எனின், அல்ல! மக்களின் பேராதரவைத் தேர்தலின்போது தன் பக்கம் திரட்டிடத்தக்க ஆற்றல் இருந்தது; அது மட்டுமல்ல, குவலயம் புகழப் பணியாற்றிய முஸ்தபா கமால், சமைத்தளித்த புதிய துருக்கியில் எழுச்சி, மறுமலர்ச்சி, விடுதலை உணர்ச்சி பூத்திடச் செய்திடும் ஆற்றலையும் பெற்றிருந்தவர்தான், மெண்டாரிஸ்.
ய
இரு கிழமைகளுக்கு முன்பு, பாரதப் பிரதமர் நேரு பண்டிதர். அங்காரா சென்றார், அவரை வரவேற்று விழா நடாத்தியவர், மெண்டாரிஸ்! பவனி நடந்தது. விருந்து உண்டு! கூட்டறிக்கை, வழக்கப்படி! மெண்டாரிஸ், . துருக்கியின் முதல்வர்; நேரு. பாரதப் பிரதமர்! இருவரும் கூடி, உலகிலே சமாதானம் நிலவ, என்னென்ன செய்யவேண்டும் என்றுகூடக் கலந்துரை யாடினர்! அந்த மெண்டாரிஸ், இன்று படையினர் நடத்திய புரட்சியின் காரணமாக, பிடிப்பட்டு, சிறைப்பட்டு இருக்கிறார்.
நேரு-மெண்டாரிஸ், உரையாடிடக் கூடினரே, அப்போதே. துருக்கியில், குமுறல், பலமாக!! மெண்டாரிஸ் ஆட்சிக்கு எதிராக, இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள். பெரியதோர் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர். நேருவை வரவேற்க மரியாதைக் குண்டுகள். வெடித்திடவில்லை. துரத்தித் துரத்தித் தொல்லை தந்த மாணவர்களைச் சுட்டுத்தள்ள, மெண்டாரிஸ் ஏவிய போலீஸ் நடத்திய தாக்குதலால், வேட்டுச்சத்தம் கேட்டவண்ணமிருந்தது. நேரு-மெண்டாரிஸ் சந்திப்பு, இந்தச் 'சுவையான' சூழ்நிலையில்தான், நடைபெற்றிருக்கிறது. பஞ்சசீலம் பற்றிய பேச்சும், பாரிலே போர் இலாது ஒழிய வழி யாது என்பது பற்றிய உரையாடலும், அதே நேரத்தில்தான் நடைபெற்றிருக்கிறது.
"என்ன கிளர்ச்சி? எதிர்ப்பாளர் யார்".
"விவரம் தெரியாத பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் செல்வாக்கிழந்த எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டபடி, ஆடிடும் சிறுவர்கள்".<noinclude></noinclude>
izq5izinjx6bcv4u106vc7lw924emnc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/45
250
641673
1928441
1927696
2026-04-30T04:56:07Z
Rabiyathul
5890
+ மேலடி
1928441
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||21}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
'என்ன வேண்டுமாம். அவர்களுக்கு?"
"நான், பதவியை விட்டுவிட வேண்டுமாம்!''
21
"பார்லிமெண்டில், நம்பிக்கையில்லாத் தீர்மானம், நிறைவேற்றி விடுவதுதானே. அதுதானே முறை!'
"ஆமாம்! ஆனால் அங்கே வாலாட்ட முடியாதே! என் கட்சிக்கல்லவா, மிகப் பெரிய பலம்-உங்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பது போல!" "எதிர்க்கட்சிகள், தேர்தலில் போட்டியிடவில்லையோ?"
"காங்கிரசை எதிர்க்கவில்லையா பல கட்சிகள்! அதுபோலத்தான் இங்கும்! மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை, எதிர்க்கட்சிகளுக்கு". "அப்படி இருந்தும்...?"
"இப்போது தேர்தல் நடத்த வேண்டுமாம்..." "நடத்தினால்...?"
“என் அரசு கவிழ்ந்து விடுமாம்! மக்கள், ஆதரிக்க மாட்டார்களாம்!!"
தம்பி! நேரு-மெண்டாரிஸ் பேச்சு, இதுபோலத்தானே இருந் திருக்கும். தேர்தலில், ஒருமுறை மக்களின் 'வாக்குகளை' த் திரட்டிக் குவித்துக் கொள்ள முடிந்ததால், அந்த மக்கள் ஆதரவு தன்பக்கம் நிலைத்து நிற்கும் என்றுதான், மெண்டாரிஸ், கருதினார். ஆனால் “ஆட்சி கவிழ்ந்தது! மெண்டாரிஸ் 'கைதி' ஆனார்! இராணுவம், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது! என்று அங்காரா வானொலி அறிவித்ததும், மக்கள் திரள்திரளாகக்கூடி, தெருவெல்லாம், களிநடமாடினராம். வீழ்ந்தது சர்வாதிகாரம்! வென்றது ஜனநாயகம்! என்று முழக்கமிட்டபடி, மக்கள், மெண்டாரிசைத் தேர்தலிலே ஆதரித்தனர்; உண்மை; ஆனால் எதற்கு? உரிமைகளைப் பாதுகாத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நல்லாட்சி நடத்துவார் என்பதற்காக. 'ஓட்டு' போட்டாகிவிட்டது, இனி, 'இதுகளை' அடுத்த முறை அழைத்து ஓட்டு கேட்கிறவரையில், நாம் வைத்ததுதான் சட்டம்!- என்ற போக்கிலே, நடந்து கொண்டார். மெண்டாரிஸ்.
மக்களாட்சி முறையிலே, மறைந்திருந்து கேடு விளைவிக்கும் மனப்போக்கு இது. ஒருமுறை 'ஒட்' அளித்துவிட்டால், அந்த மக்கள், மறுதேர்தல் வருகிறவரையில், ஆட்சிப் பொறுப்பை ஏற்றோர். எது செய்திடினும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; எதிர்த்திடலாகாது; ஏமாற்றம்<noinclude></noinclude>
eao729phfv6kfrqhvv4oimgzmz91zt1
1928948
1928441
2026-04-30T09:38:48Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||21}}{{rule}}</noinclude>
"பார்லிமெண்டில், நம்பிக்கையில்லாத் தீர்மானம், நிறைவேற்றி விடுவதுதானே. அதுதானே முறை!'
"ஆமாம்! ஆனால் அங்கே வாலாட்ட முடியாதே! என் கட்சிக்கல்லவா, மிகப் பெரிய பலம்-உங்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பது போல!" "எதிர்க்கட்சிகள், தேர்தலில் போட்டியிடவில்லையோ?"
"காங்கிரசை எதிர்க்கவில்லையா பல கட்சிகள்! அதுபோலத்தான் இங்கும்! மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை, எதிர்க்கட்சிகளுக்கு". "அப்படி இருந்தும்...?"
"இப்போது தேர்தல் நடத்த வேண்டுமாம்..." "நடத்தினால்...?"
“என் அரசு கவிழ்ந்து விடுமாம்! மக்கள், ஆதரிக்க மாட்டார்களாம்!!"
தம்பி! நேரு-மெண்டாரிஸ் பேச்சு, இதுபோலத்தானே இருந் திருக்கும். தேர்தலில், ஒருமுறை மக்களின் 'வாக்குகளை' த் திரட்டிக் குவித்துக் கொள்ள முடிந்ததால், அந்த மக்கள் ஆதரவு தன்பக்கம் நிலைத்து நிற்கும் என்றுதான், மெண்டாரிஸ், கருதினார். ஆனால் “ஆட்சி கவிழ்ந்தது! மெண்டாரிஸ் 'கைதி' ஆனார்! இராணுவம், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது! என்று அங்காரா வானொலி அறிவித்ததும், மக்கள் திரள்திரளாகக்கூடி, தெருவெல்லாம், களிநடமாடினராம். வீழ்ந்தது சர்வாதிகாரம்! வென்றது ஜனநாயகம்! என்று முழக்கமிட்டபடி, மக்கள், மெண்டாரிசைத் தேர்தலிலே ஆதரித்தனர்; உண்மை; ஆனால் எதற்கு? உரிமைகளைப் பாதுகாத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நல்லாட்சி நடத்துவார் என்பதற்காக. 'ஓட்டு' போட்டாகிவிட்டது, இனி, 'இதுகளை' அடுத்த முறை அழைத்து ஓட்டு கேட்கிறவரையில், நாம் வைத்ததுதான் சட்டம்!- என்ற போக்கிலே, நடந்து கொண்டார். மெண்டாரிஸ்.
மக்களாட்சி முறையிலே, மறைந்திருந்து கேடு விளைவிக்கும் மனப்போக்கு இது. ஒருமுறை 'ஒட்' அளித்துவிட்டால், அந்த மக்கள், மறுதேர்தல் வருகிறவரையில், ஆட்சிப் பொறுப்பை ஏற்றோர். எது செய்திடினும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; எதிர்த்திடலாகாது; ஏமாற்றம்<noinclude></noinclude>
3cmcoog3mnaaeubl6ox0gsjp0m3d7vm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/46
250
641674
1928442
1927697
2026-04-30T04:56:37Z
Rabiyathul
5890
+ மேலடி
1928442
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|22||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>22
'திராவிட நாடு' இதழில்
ஏற்பட்டாலோ, எரிச்சல் மூட்டப்பட்டாலோ அடுத்த தேர்தலின்போது தான், தமது எண்ணத்தை மக்கள் காட்டலாமெயொழிய, இடையில் 'ஏன்' என்று கேட்பதும், எதிர்த்துக் கிளர்ச்சி நடத்துவதும், ஜனநாயகப் பண்பு ஆகாது-என்ற கருத்தை, தத்துவமாக்கி, அதைக் கொண்டே மக்களைத் தாக்கி, அடிப்படை உரிமைகளுக்கு உலை வைக்க, ஆட்சியாளர் முனைகின்றனர். மெண்டாரிஸ் அம்முறை தான் கைக் கொண்டார்; இன்று கைதியாகிக் கிடக்கிறார். வேறுபல இடங்களிலே, அதே முறையை, 'ஜனநாயகவாதிகள்' கையாண்டு வருகிறார்கள்; உணர்ச்சியற்று, அச்சம் மேலிட்டு, மக்கள், அந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்கின்றனர் தம்பி! மெண்டாரிஸ் பாலங்கள் கட்டாதிருந்திருப்பாரா, பள்ளிகள் திறந்திடாதிருந்திருப்பாரா, தொழிற்சாலைகள், பாதைகள், விஞ்ஞானக் கூடங்கள், விளையாட்டிடங்கள், எல்லாம்தான் அமைத்திருந் திருப்பார்! எனினும், உரிமையை அழிக்கிறார், அடக்குமுறையை ஏவுகிறார்; ஒரே கட்சி ஆட்சிக்கு வழிகோலுகிறார் என்று தெரிந்ததும், மக்கள் சீறி எழுந்தனர்; சரிந்தது மெண்டாரிசின் ஆட்சி! உரிமை உணர்ச்சி அந்த வகையில் அங்கு கொழுந்துவிட்டு எரிகிறது. இங்கு? இந்தி படித்தால் தானே, பிழைப்பு!! துணிந்து உத்திரவிடுகிறது, துரைத்தனம்! பணிந்து 'பாஷ்யம்' கூறுகிறார்கள், இங்குள்ள மந்திரிகள்! பரிவுடன் ஆதரிக்கின்றன, ஏடுகள்! பல்லிளித்தபடி, படித்தால் என்ன? என்று கேட்கின்றனர். பராக்குக் கூறுவோர். பார்த்தாயா, தம்பி! துருக்கியை!! 'கற்கோட்டை என்றனர், மெண்டாரிசின் கட்சி ஆட்சியை-கலகலத்துப் போய்விட்டது- ஆறே மணிநேரம் நடைபெற்ற இராணுவப் புரட்சியால். எதிர்க்கட்சி களை ஒழித்திட, போலீசை ஏவினார் மெண்டாரிஸ்: இராணுவம், தன் பலத்தை ஏவி, மெண்டாரிசை வீழ்த்தி விட்டது. இராணுவம் என்றால், வேற்று நாட்டானுடன் போரிட்டு மடிய, ஊட்டி வளர்க்கப் படும் பலிக்கிடாக்கள் உள்ள கொட்டடி என்ற நிலைமாறி, அதிகாரத்தைக் கைப்பற்றினோர், அக்ரமமாக நடக்க ஆரம்பித்தால், மக்களை மதியாது மனம்போன போக்கில் நடவடிக்கைகளை வகுத்துக்கொண்டால், ஜனநாயக முறைக்கு அடிப்படையாக உள்ள 'எதிர்க்கட்சி'யை அழித் தொழிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தினால், குறுக்கிட, தடுத்திட, களைந்திட முன்வந்து, நாட்டைக் குழப்பக்காடு ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்ளும் பொறுப்புள்ளோர் நிரம்பிய பாசறை என்பது விளக்கப்பட்டிருக்கிறது.
*
நினைத்தபடி 'சட்டம்' செய்திடும் வாய்ப்புப் பெற்றிருந்தார். மெண்டாரிஸ், மிகப் பெரும்பான்மையினராக அவருடைய கட்சி, பார்லிமெண்டிலே இருந்ததால்! இங்கு நாம், காணுகிறோமல்லவா. 'மெஜாரடி' கட்சி நடந்து கொள்ளும் போக்கினை! மக்களாட்சியிலே.<noinclude></noinclude>
ei7dued20cverilzklphd09gvbzuubz
1928949
1928442
2026-04-30T09:39:24Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|22||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஏற்பட்டாலோ, எரிச்சல் மூட்டப்பட்டாலோ அடுத்த தேர்தலின்போது தான், தமது எண்ணத்தை மக்கள் காட்டலாமெயொழிய, இடையில் 'ஏன்' என்று கேட்பதும், எதிர்த்துக் கிளர்ச்சி நடத்துவதும், ஜனநாயகப் பண்பு ஆகாது-என்ற கருத்தை, தத்துவமாக்கி, அதைக் கொண்டே மக்களைத் தாக்கி, அடிப்படை உரிமைகளுக்கு உலை வைக்க, ஆட்சியாளர் முனைகின்றனர். மெண்டாரிஸ் அம்முறை தான் கைக் கொண்டார்; இன்று கைதியாகிக் கிடக்கிறார். வேறுபல இடங்களிலே, அதே முறையை, 'ஜனநாயகவாதிகள்' கையாண்டு வருகிறார்கள்; உணர்ச்சியற்று, அச்சம் மேலிட்டு, மக்கள், அந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்கின்றனர் தம்பி! மெண்டாரிஸ் பாலங்கள் கட்டாதிருந்திருப்பாரா, பள்ளிகள் திறந்திடாதிருந்திருப்பாரா, தொழிற்சாலைகள், பாதைகள், விஞ்ஞானக் கூடங்கள், விளையாட்டிடங்கள், எல்லாம்தான் அமைத்திருந் திருப்பார்! எனினும், உரிமையை அழிக்கிறார், அடக்குமுறையை ஏவுகிறார்; ஒரே கட்சி ஆட்சிக்கு வழிகோலுகிறார் என்று தெரிந்ததும், மக்கள் சீறி எழுந்தனர்; சரிந்தது மெண்டாரிசின் ஆட்சி! உரிமை உணர்ச்சி அந்த வகையில் அங்கு கொழுந்துவிட்டு எரிகிறது. இங்கு? இந்தி படித்தால் தானே, பிழைப்பு!! துணிந்து உத்திரவிடுகிறது, துரைத்தனம்! பணிந்து 'பாஷ்யம்' கூறுகிறார்கள், இங்குள்ள மந்திரிகள்! பரிவுடன் ஆதரிக்கின்றன, ஏடுகள்! பல்லிளித்தபடி, படித்தால் என்ன? என்று கேட்கின்றனர். பராக்குக் கூறுவோர். பார்த்தாயா, தம்பி! துருக்கியை!! 'கற்கோட்டை என்றனர், மெண்டாரிசின் கட்சி ஆட்சியை-கலகலத்துப் போய்விட்டது- ஆறே மணிநேரம் நடைபெற்ற இராணுவப் புரட்சியால். எதிர்க்கட்சி களை ஒழித்திட, போலீசை ஏவினார் மெண்டாரிஸ்: இராணுவம், தன் பலத்தை ஏவி, மெண்டாரிசை வீழ்த்தி விட்டது. இராணுவம் என்றால், வேற்று நாட்டானுடன் போரிட்டு மடிய, ஊட்டி வளர்க்கப் படும் பலிக்கிடாக்கள் உள்ள கொட்டடி என்ற நிலைமாறி, அதிகாரத்தைக் கைப்பற்றினோர், அக்ரமமாக நடக்க ஆரம்பித்தால், மக்களை மதியாது மனம்போன போக்கில் நடவடிக்கைகளை வகுத்துக்கொண்டால், ஜனநாயக முறைக்கு அடிப்படையாக உள்ள 'எதிர்க்கட்சி'யை அழித் தொழிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தினால், குறுக்கிட, தடுத்திட, களைந்திட முன்வந்து, நாட்டைக் குழப்பக்காடு ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்ளும் பொறுப்புள்ளோர் நிரம்பிய பாசறை என்பது விளக்கப்பட்டிருக்கிறது.
*
நினைத்தபடி 'சட்டம்' செய்திடும் வாய்ப்புப் பெற்றிருந்தார். மெண்டாரிஸ், மிகப் பெரும்பான்மையினராக அவருடைய கட்சி, பார்லிமெண்டிலே இருந்ததால்! இங்கு நாம், காணுகிறோமல்லவா. 'மெஜாரடி' கட்சி நடந்து கொள்ளும் போக்கினை! மக்களாட்சியிலே.<noinclude></noinclude>
a135k0bee40bvxo0tx521rfjteiek6t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/47
250
641675
1928443
1927698
2026-04-30T04:57:08Z
Rabiyathul
5890
+ மேலடி
1928443
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||23}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
23
எதைக் காட்டியோ, நீட்டியோ, கூறியோ, 'ஓட்டுகளை'க் குவித்துக்கொண்டு, ஆளவந்தார், ஆகிவிட்டால், அடே அப்பா! அவர்களுக்குத்தான், எத்துணை ஆணவம் பிடித்துக்கொள்கிறது!
அகிலஉலகத்து அறிவும், திரட்டி உருட்டித் தம்மிடம் தரப்பட்டிருப்பது போலல்லவா, ஆளவந்தார்கள் மட்டுமல்ல, அங்கு எலும்புத் துண்டு களுக்காக, நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் சில்லறைத் தேவதைகள் கூடப் பேசுகின்றன. மற்றவர்களுக்கும், பொறுப்பு உண்டு, புத்தி உண்டு. கடமை உண்டு, என்றா எண்ணு கிறார்கள். நாங்கள் 150! நீங்கள் 15!! போதாதா விளக்கம்! இதைக் காட்டிலும் வேறு என்ன காரணம் நாங்கள் கூறவேண்டும், எங்கள் போக்குக்கு என்றல்லவா பேசுகிறார்கள்.
கவைக்குதவாத பேச்செல்லாம், கற்றறிவாளர் முன் பேசத் துணிகிறார்கள்; கை ஒலியும் எதிர்பார்க்கின்றனர்.
முரண்பாடாகப் பேசுகிறார்கள், சுட்டிக் காட்டினால், அதட்டி உட்கார வைக்கின்றனர். 'ஊழல் நிரம்பிக் கிடக்கிறதே, ஆட்சியில்' என்று வருத்தம் தோய்ந்த குரலிற் கூறிடும் போதும், 'முட்டாள்களுக்கு அப்படித்தான் தோன்றும்'- என்று பேசுகிறார்கள்.
எங்கிருந்து பிறக்கிறது, ஆணவம்? எண்ணிக்கை பலம்!! அசைக்க முடியாது; சட்டசபையில் நாம் தான் 'ஜொரிட்டி' என்ற செருக்கு. தம்பி! துருக்கியில் நிலைத்ததா, அந்தச் செருக்கு! துக்கம் துளைத்திடும் நிலையில், துரைத்தனம் இழந்து, மெண்டாரிஸ் கிடக்கிறார்; இதுமட்டும் தானா! இன்னும் ஏதேனும், காத்திருக்கிறதா, என்ற அச்சம் இப்போது அவருக்கு!! துருக்கியில் மக்களின் உரிமையை அழித்திடக் கிளம்பும் சக்தி எதுவாக இருப்பினும், அதனைச் சாய்த்திடத்தக்க, ஆற்றல் எழுந்தது; வென்றது. இங்கு? இப்படித்தான் செய்வோம்! தடுத்திட யார்? மக்கள் எங்களிடமல்லவா ஓட் கொடுத்து ஆளச் சொல்லியிருக்கிறார்கள்! தெரியாதா? கூறட்டுமா! நாங்கள் 150!! நீங்கள் 15!!- என்றல்லவா பேசுகிறார்கள். 150 என்ற எண்ணிக்கை அல்லவா, காமராஜரை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிலும், வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்திலும், பேச வைக்கிறது!! எங்கும் பேசலாம்! எதையும் பேசலாம்! எப்படியும் பேசலாம்!! -என்பது, எவ்விதம் கிடைத்தது? 150! வேறென்ன!!
இதைவிட, மிக அதிகமான அளவிலேதான், மெண்டாரிஸ் கட்சிக்கு, எண்ணிக்கை பலம். ஆயினும், என்ன நடந்தது? எந்த நேரத்திலும், மக்களின் உரிமைக்கு மேலான சக்தி வேறில்லை என்பது நிலைநாட்டப் பட்டுவிட்டது!!<noinclude></noinclude>
qsc5jz78h1sjrh89u88ufizq71n09wy
1928950
1928443
2026-04-30T09:40:06Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||23}}{{rule}}</noinclude>
எதைக் காட்டியோ, நீட்டியோ, கூறியோ, 'ஓட்டுகளை'க் குவித்துக்கொண்டு, ஆளவந்தார், ஆகிவிட்டால், அடே அப்பா! அவர்களுக்குத்தான், எத்துணை ஆணவம் பிடித்துக்கொள்கிறது!
அகிலஉலகத்து அறிவும், திரட்டி உருட்டித் தம்மிடம் தரப்பட்டிருப்பது போலல்லவா, ஆளவந்தார்கள் மட்டுமல்ல, அங்கு எலும்புத் துண்டு களுக்காக, நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் சில்லறைத் தேவதைகள் கூடப் பேசுகின்றன. மற்றவர்களுக்கும், பொறுப்பு உண்டு, புத்தி உண்டு. கடமை உண்டு, என்றா எண்ணு கிறார்கள். நாங்கள் 150! நீங்கள் 15!! போதாதா விளக்கம்! இதைக் காட்டிலும் வேறு என்ன காரணம் நாங்கள் கூறவேண்டும், எங்கள் போக்குக்கு என்றல்லவா பேசுகிறார்கள்.
கவைக்குதவாத பேச்செல்லாம், கற்றறிவாளர் முன் பேசத் துணிகிறார்கள்; கை ஒலியும் எதிர்பார்க்கின்றனர்.
முரண்பாடாகப் பேசுகிறார்கள், சுட்டிக் காட்டினால், அதட்டி உட்கார வைக்கின்றனர். 'ஊழல் நிரம்பிக் கிடக்கிறதே, ஆட்சியில்' என்று வருத்தம் தோய்ந்த குரலிற் கூறிடும் போதும், 'முட்டாள்களுக்கு அப்படித்தான் தோன்றும்'- என்று பேசுகிறார்கள்.
எங்கிருந்து பிறக்கிறது, ஆணவம்? எண்ணிக்கை பலம்!! அசைக்க முடியாது; சட்டசபையில் நாம் தான் 'ஜொரிட்டி' என்ற செருக்கு. தம்பி! துருக்கியில் நிலைத்ததா, அந்தச் செருக்கு! துக்கம் துளைத்திடும் நிலையில், துரைத்தனம் இழந்து, மெண்டாரிஸ் கிடக்கிறார்; இதுமட்டும் தானா! இன்னும் ஏதேனும், காத்திருக்கிறதா, என்ற அச்சம் இப்போது அவருக்கு!! துருக்கியில் மக்களின் உரிமையை அழித்திடக் கிளம்பும் சக்தி எதுவாக இருப்பினும், அதனைச் சாய்த்திடத்தக்க, ஆற்றல் எழுந்தது; வென்றது. இங்கு? இப்படித்தான் செய்வோம்! தடுத்திட யார்? மக்கள் எங்களிடமல்லவா ஓட் கொடுத்து ஆளச் சொல்லியிருக்கிறார்கள்! தெரியாதா? கூறட்டுமா! நாங்கள் 150!! நீங்கள் 15!!- என்றல்லவா பேசுகிறார்கள். 150 என்ற எண்ணிக்கை அல்லவா, காமராஜரை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிலும், வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்திலும், பேச வைக்கிறது!! எங்கும் பேசலாம்! எதையும் பேசலாம்! எப்படியும் பேசலாம்!! -என்பது, எவ்விதம் கிடைத்தது? 150! வேறென்ன!!
இதைவிட, மிக அதிகமான அளவிலேதான், மெண்டாரிஸ் கட்சிக்கு, எண்ணிக்கை பலம். ஆயினும், என்ன நடந்தது? எந்த நேரத்திலும், மக்களின் உரிமைக்கு மேலான சக்தி வேறில்லை என்பது நிலைநாட்டப் பட்டுவிட்டது!!<noinclude></noinclude>
ov68a2lqfzpsd9ztdg499nmv5h6qo5g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/48
250
641676
1928444
1927699
2026-04-30T04:57:40Z
Rabiyathul
5890
+ மேலடி
1928444
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|24||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>24
'திராவிட நாடு' இதழில்
''துருக்கியில் விடுதலைப்போர் மூண்டகாலை. நானாற்றிய வீரத் தொண்டுகளை உலகு அறியுமே! மக்கள் அறியமாட்டார்களா!! கமால் காட்டிய வழியில் துருக்கியை அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்ட வனன்றோ, நான்! என்னை, எந்த எதிர்க்கட்சி தூண்டிவிட்டாலும், எதிர்க்கத் துணிவார்களா! எதிர்ப்பு முளைத்தாலும், முளையிலேயே கிள்ளி எறிந்திடத் தெரியாதா! சட்டத்தை நிலை நாட்ட, பலாத்காரத்தை ஒடுக்க, பயங்கர இயக்கத்தை அழிக்கத்தானே போலீஸ் இருக்கிறது. அந்தப் போலீஸ், என் சுட்டு விரல் காட்டும் வழி நடக்க இருக்கும்போது, கூச்சல்கள், குழப்பங்கள், ஆர்ப்பாட்டங்கள், எத்தனை நாளைக்கு நடக்கும்? வாய்வலிக்குமட்டும் கத்துவார்கள்! கால் கடுக்குமட்டும் சுற்றுவார்கள்! உதை கிடைக்கு மட்டும் உலாவுவார்கள்?-என்றெல்லாமல்லவா. மெண்டாரிஸ், எண்ணி இறுமாந்து கிடந்திருப்பார்.
ஆட்சியைக் கைப்பற்றியதும், அடக்கம் அழிந்துபட்டு விடுகிறது. தம்மைப் பற்றிய நினைப்புத் தலைக்கேறி விடும் போக்கினருக்கு!
காரணம் கேட்டால், கோபம் கொப்பளிக்கிறது: வாதாடினால், கண்கள் சிவந்துவிடுகின்றன.
உரிமை முழக்கத்தைக், காட்டுக்கூச்சல் என்றும், கிளர்ச்சியைக் குழப்பமென்றும், வீரர்களைக் காலிகளென்றும், அறிவாலயப் பயிற்சி பெற்றோரைச் சிறுபிள்ளைகள் என்றும், கூறத் தோன்றுகிறது.
சிறுபிள்ளைத்தனம் - காட்டுமிராண்டித்தனம் - அறிவற்றதனம் என்று. நேரு பண்டிதர், என்னென்ன அர்ச்சனை நடத்தினார், உரிமையை அழிக்கலாமா. என்று தமிழர் தலைவர் கேட்டபோது!! மெண்டாரிஸ் அதுபோல, என்னென்ன பேசியிருப்பார்; இழிமொழிகளை வீசியிருப்பார்! கைமேல் பலன் கிடைத்துவிட்டது. மெண்டாரிசுக்கு-கைதியாகிக் கிடக்கிறார்.
பத்து நாட்களுக்கு முன்பு வரை, அவரைப் பார்த்தால் வணக்கம் கூறி நின்றவர்கள்தான், இராணுவத்தார்! மரியாதை அணிவகுப்புக் களைக் கண்டு பெருமிதமடைந்தவர் தான், மெண்டாரிஸ். இந்த 'யோகம்' என்றென்றும் இருக்கும் என்று எண்ணினார். ஏமாந்தார்!!
தம்பி! இந்த மெண்டாரிசைவிட, வீரதீரமிக்கவர். வெஞ்சமர் நடத்தி வெற்றிபல கண்டவர், தென்கொரிய நாட்டுத் தலைவர் சிங்மன் ரீ! ஹவாய் தீவுசென்று, அடைக்கலம் தேடுகிறார் இன்று!! ஜப்பானை எதிர்ப்பேன்! சோவியத்தை ஒழிப்பேன்! என்று அவர் பேசிய வீரப்பேச்சு கொஞ்சமல்ல. தென்கொரியா மீது, யார் கைவைத்தாலும் ஒழித்துக்கட்டி விடுவேன் என்று உருட்டி மிரட்டிப் பேசிவந்தார், இந்த முதியவர்; வயது 90-க்குக் கிட்ட<noinclude></noinclude>
cntn78jeddbu8m20edi3nplukaahqpa
1928951
1928444
2026-04-30T09:40:51Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|24||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
''துருக்கியில் விடுதலைப்போர் மூண்டகாலை. நானாற்றிய வீரத் தொண்டுகளை உலகு அறியுமே! மக்கள் அறியமாட்டார்களா!! கமால் காட்டிய வழியில் துருக்கியை அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்ட வனன்றோ, நான்! என்னை, எந்த எதிர்க்கட்சி தூண்டிவிட்டாலும், எதிர்க்கத் துணிவார்களா! எதிர்ப்பு முளைத்தாலும், முளையிலேயே கிள்ளி எறிந்திடத் தெரியாதா! சட்டத்தை நிலை நாட்ட, பலாத்காரத்தை ஒடுக்க, பயங்கர இயக்கத்தை அழிக்கத்தானே போலீஸ் இருக்கிறது. அந்தப் போலீஸ், என் சுட்டு விரல் காட்டும் வழி நடக்க இருக்கும்போது, கூச்சல்கள், குழப்பங்கள், ஆர்ப்பாட்டங்கள், எத்தனை நாளைக்கு நடக்கும்? வாய்வலிக்குமட்டும் கத்துவார்கள்! கால் கடுக்குமட்டும் சுற்றுவார்கள்! உதை கிடைக்கு மட்டும் உலாவுவார்கள்?-என்றெல்லாமல்லவா. மெண்டாரிஸ், எண்ணி இறுமாந்து கிடந்திருப்பார்.
ஆட்சியைக் கைப்பற்றியதும், அடக்கம் அழிந்துபட்டு விடுகிறது. தம்மைப் பற்றிய நினைப்புத் தலைக்கேறி விடும் போக்கினருக்கு!
காரணம் கேட்டால், கோபம் கொப்பளிக்கிறது: வாதாடினால், கண்கள் சிவந்துவிடுகின்றன.
உரிமை முழக்கத்தைக், காட்டுக்கூச்சல் என்றும், கிளர்ச்சியைக் குழப்பமென்றும், வீரர்களைக் காலிகளென்றும், அறிவாலயப் பயிற்சி பெற்றோரைச் சிறுபிள்ளைகள் என்றும், கூறத் தோன்றுகிறது.
சிறுபிள்ளைத்தனம் - காட்டுமிராண்டித்தனம் - அறிவற்றதனம் என்று. நேரு பண்டிதர், என்னென்ன அர்ச்சனை நடத்தினார், உரிமையை அழிக்கலாமா. என்று தமிழர் தலைவர் கேட்டபோது!! மெண்டாரிஸ் அதுபோல, என்னென்ன பேசியிருப்பார்; இழிமொழிகளை வீசியிருப்பார்! கைமேல் பலன் கிடைத்துவிட்டது. மெண்டாரிசுக்கு-கைதியாகிக் கிடக்கிறார்.
பத்து நாட்களுக்கு முன்பு வரை, அவரைப் பார்த்தால் வணக்கம் கூறி நின்றவர்கள்தான், இராணுவத்தார்! மரியாதை அணிவகுப்புக் களைக் கண்டு பெருமிதமடைந்தவர் தான், மெண்டாரிஸ். இந்த 'யோகம்' என்றென்றும் இருக்கும் என்று எண்ணினார். ஏமாந்தார்!!
தம்பி! இந்த மெண்டாரிசைவிட, வீரதீரமிக்கவர். வெஞ்சமர் நடத்தி வெற்றிபல கண்டவர், தென்கொரிய நாட்டுத் தலைவர் சிங்மன் ரீ! ஹவாய் தீவுசென்று, அடைக்கலம் தேடுகிறார் இன்று!! ஜப்பானை எதிர்ப்பேன்! சோவியத்தை ஒழிப்பேன்! என்று அவர் பேசிய வீரப்பேச்சு கொஞ்சமல்ல. தென்கொரியா மீது, யார் கைவைத்தாலும் ஒழித்துக்கட்டி விடுவேன் என்று உருட்டி மிரட்டிப் பேசிவந்தார், இந்த முதியவர்; வயது 90-க்குக் கிட்ட<noinclude></noinclude>
6mtrtxi46qrclfab8z56d18lpt5xw6y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/49
250
641677
1928445
1927700
2026-04-30T04:58:10Z
Rabiyathul
5890
+ மேலடி
1928445
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||25}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
25
தென்கொரியா மட்டுமல்ல, உலகெங்கும், சிங்மன் ரீயின் ஆற்றலை, அஞ்சா நெஞ்சினைப் பாராட்டினர்.
எத்துணை ஆபத்துகளை எதிர்த்து நிற்கிறார்! கஷ்டங்கள் அடுக்கடுக்காக வருகின்றன, கலங்கவில்லை! எங்கும் எதிரிகள் சூழ்ந்து கொண்ட போதிலும் புறமுதுகு காட்டாது போரிடுகிறார். தள்ளாத வயது, எனினும், களம் அமைக்கிறார். படை கூட்டுகிறார். பாசறை ஏற்படுத்துகிறார். இரத்த வெள்ளத்தில் நீந்துகிறார், இவரன்றோ வீரர்!-என்று வியந்து கூறினர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக, ரீ சொல்வதுதான் சட்டம்-தென் கொரியாவில் நாட்டுமக்கள் அத்துணை பேரும், ரீதான் கண்கண்ட கடவுள், மானத்தைக் காத்த மாவீரன் என்று புகழ்பாடினர். கட்டிளங் காளைகள் ரீயைச் சுற்றிநின்று, கட்டளைக்குக் காத்துக் கிடந்தனர். அயிசனோவர் 'என் அருமருந் தன்ன நண்பர்' என்று பாராட்டினார் ரீயை! கேட்ட பணத்தைத் தட்டாமல் தயங்காமல் கொட்டிக் கொடுத்தார்! இடிபாடுகள் நிரம்பிய இடத்தை எழிலிடம் ஆக்குவேன்! பயந்துகிடந்த மக்களை நிமிர்ந்து நடந்திடச் செய்வேன்! என்று சூளுரைத்துப் பணி யாற்றினார்; தென்கொரிய ஆட்சியை எதிர்ப்பின்றி நடத்தி வந்தார். அவர்தான், தம்பி! ஊரறியாமல், ஓடினார், புகலிடம் தேடி!! சிக்கிக் கொண்டால், சித்திரவதை செய்துவிடுவார்கள் என்ற கிலி! பிடிபட்டால், பிய்த்தெடுத்து விடுவார்கள் என்ற பீதி! கோபம் காட்டுத் தீ கோலத்தில், தென்கொரிய நாட்டில்! இதிலே வீழ்ந்தால், கருகிப் போய்விட வேண்டும் என்ற கிலி! சென்றிருக்கிறார். அதற்குள், படாத பாடுபட்டு விட்டார்: பணிந்துகிடந்தோர் பதைத்து எழுந்தால் என்ன நேரிடும் என்பதைப் பார்த்து விட்டார்!
ய
மக்கள் கடலென ஒலி கிளப்பி, அவரை வாழ்த்திய காலம் உண்டு! இப்போது? 'பிடித்திழுத்து வாருங்கள் அந்தப் பேயனை என்று கூவுகிறார்கள்! அந்தத் தேசீயத் தலைவனோடு, களம் சென்று நிற்பது பெரும்பேறு என்று பேசினர், முன்பு; இப்போது அந்தக் கொலைகாரன் எங்கே! கொள்ளையடித்தோன் எங்கே! கொடியோன் எங்கே! என்று தேடுகின்றனர்; ஓடோடிச் சென்று பதுங்குகிறார். ரீ.
அன்பால் அபிஷேகித்தோம், அக்ரமக்காரன் என்பதை அறியாமல்! பக்கம் நின்று பணிவிடைசெய்து வந்தோம் படுகொலைகளைக் கூசாது நடத்திய கொடியோன் என்பதைத் தெரிந்து கொள்ளாமல்! நாட்டை மீட்டவன் என்று பாராட்டினோம், நாசகாலனை!!- என்றெல்லாம் இன்று மக்கள் ஆத்திரத்துடன் குரலெழுப்புகின்றனர்; குலை நடுக்கம் கண்டு விட்டது, சிங்மன் ரீக்கு: குண்டுக்குப் பயந்து கொண்டு ஓடியே விட்டான்.
சிங்மன் ரீ கூட மக்களிடம், மலைக்கத்தக்க அளவு செல்வாக்குப் பெற்றிருந்த தலைவன்தான்! மழைக் காலத்துக் காளான் அல்ல! இரத்தத் தடாகத்திலே பூத்ததோர் புரட்சி மலர் என்ற புகழுரையைப் பெற்றவன்.<noinclude></noinclude>
qnxnr4z21pxf7x1svkjxnf3cj5wocyt
1928952
1928445
2026-04-30T09:41:30Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||25}}{{rule}}</noinclude>
தென்கொரியா மட்டுமல்ல, உலகெங்கும், சிங்மன் ரீயின் ஆற்றலை, அஞ்சா நெஞ்சினைப் பாராட்டினர்.
எத்துணை ஆபத்துகளை எதிர்த்து நிற்கிறார்! கஷ்டங்கள் அடுக்கடுக்காக வருகின்றன, கலங்கவில்லை! எங்கும் எதிரிகள் சூழ்ந்து கொண்ட போதிலும் புறமுதுகு காட்டாது போரிடுகிறார். தள்ளாத வயது, எனினும், களம் அமைக்கிறார். படை கூட்டுகிறார். பாசறை ஏற்படுத்துகிறார். இரத்த வெள்ளத்தில் நீந்துகிறார், இவரன்றோ வீரர்!-என்று வியந்து கூறினர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக, ரீ சொல்வதுதான் சட்டம்-தென் கொரியாவில் நாட்டுமக்கள் அத்துணை பேரும், ரீதான் கண்கண்ட கடவுள், மானத்தைக் காத்த மாவீரன் என்று புகழ்பாடினர். கட்டிளங் காளைகள் ரீயைச் சுற்றிநின்று, கட்டளைக்குக் காத்துக் கிடந்தனர். அயிசனோவர் 'என் அருமருந் தன்ன நண்பர்' என்று பாராட்டினார் ரீயை! கேட்ட பணத்தைத் தட்டாமல் தயங்காமல் கொட்டிக் கொடுத்தார்! இடிபாடுகள் நிரம்பிய இடத்தை எழிலிடம் ஆக்குவேன்! பயந்துகிடந்த மக்களை நிமிர்ந்து நடந்திடச் செய்வேன்! என்று சூளுரைத்துப் பணி யாற்றினார்; தென்கொரிய ஆட்சியை எதிர்ப்பின்றி நடத்தி வந்தார். அவர்தான், தம்பி! ஊரறியாமல், ஓடினார், புகலிடம் தேடி!! சிக்கிக் கொண்டால், சித்திரவதை செய்துவிடுவார்கள் என்ற கிலி! பிடிபட்டால், பிய்த்தெடுத்து விடுவார்கள் என்ற பீதி! கோபம் காட்டுத் தீ கோலத்தில், தென்கொரிய நாட்டில்! இதிலே வீழ்ந்தால், கருகிப் போய்விட வேண்டும் என்ற கிலி! சென்றிருக்கிறார். அதற்குள், படாத பாடுபட்டு விட்டார்: பணிந்துகிடந்தோர் பதைத்து எழுந்தால் என்ன நேரிடும் என்பதைப் பார்த்து விட்டார்!
ய
மக்கள் கடலென ஒலி கிளப்பி, அவரை வாழ்த்திய காலம் உண்டு! இப்போது? 'பிடித்திழுத்து வாருங்கள் அந்தப் பேயனை என்று கூவுகிறார்கள்! அந்தத் தேசீயத் தலைவனோடு, களம் சென்று நிற்பது பெரும்பேறு என்று பேசினர், முன்பு; இப்போது அந்தக் கொலைகாரன் எங்கே! கொள்ளையடித்தோன் எங்கே! கொடியோன் எங்கே! என்று தேடுகின்றனர்; ஓடோடிச் சென்று பதுங்குகிறார். ரீ.
அன்பால் அபிஷேகித்தோம், அக்ரமக்காரன் என்பதை அறியாமல்! பக்கம் நின்று பணிவிடைசெய்து வந்தோம் படுகொலைகளைக் கூசாது நடத்திய கொடியோன் என்பதைத் தெரிந்து கொள்ளாமல்! நாட்டை மீட்டவன் என்று பாராட்டினோம், நாசகாலனை!!- என்றெல்லாம் இன்று மக்கள் ஆத்திரத்துடன் குரலெழுப்புகின்றனர்; குலை நடுக்கம் கண்டு விட்டது, சிங்மன் ரீக்கு: குண்டுக்குப் பயந்து கொண்டு ஓடியே விட்டான்.
சிங்மன் ரீ கூட மக்களிடம், மலைக்கத்தக்க அளவு செல்வாக்குப் பெற்றிருந்த தலைவன்தான்! மழைக் காலத்துக் காளான் அல்ல! இரத்தத் தடாகத்திலே பூத்ததோர் புரட்சி மலர் என்ற புகழுரையைப் பெற்றவன்.<noinclude></noinclude>
5kzlw4c3uhgmfvqlaeu726v7kydqfgm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/50
250
641678
1928446
1927701
2026-04-30T04:58:42Z
Rabiyathul
5890
+ மேலடி
1928446
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|26||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>26
'திராவிட நாடு' இதழில்
தேர்தலில் சிங்மன் ரீயின் கட்சிக்குத்தான், மிகப் பெரிய வெற்றி! மற்ற கட்சிகளில் பலர், மண் கவ்வினர்!! ஆட்சிமன்றத்திலே, ரீ கட்சித் தான் மிகப் பெரிய எண்ணிக்கை பலத்துடன். அந்த எண்ணிக்கை பலத்தைக் காட்டி சிங்மன் ரீ, காட்டாட்சி நடாத்திடலானான். என்றென்றும் அதிகாரம் தன்னிடம் இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு மாற்றுக் கட்சியினரை, அழித்திடலானான். மக்கள் நீண்ட நாட்கள், ரீயின் போக்குக்கு, இடமளித்து வந்தனர்.
கோபவெறி பிடித்து அவன் அலைந்தபோதும், 'என்னமோ சுபாவம் இப்படிக் கெட்டுவிட்டது; என்றாலும், தென்கொரிய நாட்டுக்காக, ரீ ஆற்றிய மகத்தான பணியினை மறந்திடலாமா!'-என்று பேசினர்-பணிவுடன் நடந்து கொண்டனர்.
ஆணவச் செயல்களைத் துவக்கத்திலே, எதிர்த்திடவில்லை; சிங்மன் ரீ தானாகத் திருந்திவிடுவான் என்று எதிர்பார்த்தனர்.
சிங்மன் ரீயோ, தென்கொரிய நாடு இன்றுள்ள நிலையில், நாம்தான் 'இரட்சகன்' ஆகவேண்டும், என்று எண்ணினான்.
தேர்தல் வரட்டும். நமது தீர்ப்பைத் தருவோம் என்று மக்கள் துடித்துக் கிடந்தனர். "தேர்தல் தானே! அதை எப்படி நடத்துவது என்பதுதானா. எனக்குத் தெரியாது! தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும்; அவ்வளவு தானே! இதோ, காட்டுகிறேன் வெற்றி!! என்றான், தில்லுமுல்லுகள் பலசெய்து, தேர்தலில் மீண்டும் தன் கட்சிக்கே, மிகப் பெரிய அளவில் வெற்றி என்று அறிவித்தான். மக்கள் திகைத்தனர்.
ஊரெல்லாம் எதிர்த்து, உணர்ச்சி உள்ளோரெல்லாம், ரீ ஆட்சிக்கு எதிர்ப்பு காட்டினர்! எனினும் ரீ கட்சி அல்லவா, மீண்டும் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். எப்படிக் கிடைத்தது இந்த வெற்றி? எவரைக் கண்டபோதும், உழவராயினும், தொழிலாளராயினும், பாமரராயினும் படித்தோராயினும், இம்முறை எமது ஆதரவு ரீ கட்சிக்கு இல்லை என்றல்லவா, கூறி வந்தனர். எனினும் வெற்றிப் பட்டியலைக் காட்டுகிறாரே, சிங்மன் ரீ எப்படி முடிகிறது. வெற்றி பெற!! - என்று திகைத்த மக்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.
என்பது விளங்கிற்று.
வெற்றி காட்டுகிறார்! பெறவில்லை!! வெகுண்டெழுந்தனர் அந்தச் சூது அம்பலமானதும்,
ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்ததால், அதிகாரிகளை ஏவி மக்களை மயக்கவும் மிரட்டவும் முடிந்தது. பணப்பெட்டிகளைப் பெற்றிருந்ததால், ஓட்டுகளை, 'விலை' கொடுத்து வாங்கிட முடிந்தது. மக்கள் மனமுவந்து<noinclude></noinclude>
6ca9ck45vsu0x4qh8d0keo7fozgerx8
1928953
1928446
2026-04-30T09:42:12Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|26||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
தேர்தலில் சிங்மன் ரீயின் கட்சிக்குத்தான், மிகப் பெரிய வெற்றி! மற்ற கட்சிகளில் பலர், மண் கவ்வினர்!! ஆட்சிமன்றத்திலே, ரீ கட்சித் தான் மிகப் பெரிய எண்ணிக்கை பலத்துடன். அந்த எண்ணிக்கை பலத்தைக் காட்டி சிங்மன் ரீ, காட்டாட்சி நடாத்திடலானான். என்றென்றும் அதிகாரம் தன்னிடம் இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு மாற்றுக் கட்சியினரை, அழித்திடலானான். மக்கள் நீண்ட நாட்கள், ரீயின் போக்குக்கு, இடமளித்து வந்தனர்.
கோபவெறி பிடித்து அவன் அலைந்தபோதும், 'என்னமோ சுபாவம் இப்படிக் கெட்டுவிட்டது; என்றாலும், தென்கொரிய நாட்டுக்காக, ரீ ஆற்றிய மகத்தான பணியினை மறந்திடலாமா!'-என்று பேசினர்-பணிவுடன் நடந்து கொண்டனர்.
ஆணவச் செயல்களைத் துவக்கத்திலே, எதிர்த்திடவில்லை; சிங்மன் ரீ தானாகத் திருந்திவிடுவான் என்று எதிர்பார்த்தனர்.
சிங்மன் ரீயோ, தென்கொரிய நாடு இன்றுள்ள நிலையில், நாம்தான் 'இரட்சகன்' ஆகவேண்டும், என்று எண்ணினான்.
தேர்தல் வரட்டும். நமது தீர்ப்பைத் தருவோம் என்று மக்கள் துடித்துக் கிடந்தனர். "தேர்தல் தானே! அதை எப்படி நடத்துவது என்பதுதானா. எனக்குத் தெரியாது! தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும்; அவ்வளவு தானே! இதோ, காட்டுகிறேன் வெற்றி!! என்றான், தில்லுமுல்லுகள் பலசெய்து, தேர்தலில் மீண்டும் தன் கட்சிக்கே, மிகப் பெரிய அளவில் வெற்றி என்று அறிவித்தான். மக்கள் திகைத்தனர்.
ஊரெல்லாம் எதிர்த்து, உணர்ச்சி உள்ளோரெல்லாம், ரீ ஆட்சிக்கு எதிர்ப்பு காட்டினர்! எனினும் ரீ கட்சி அல்லவா, மீண்டும் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். எப்படிக் கிடைத்தது இந்த வெற்றி? எவரைக் கண்டபோதும், உழவராயினும், தொழிலாளராயினும், பாமரராயினும் படித்தோராயினும், இம்முறை எமது ஆதரவு ரீ கட்சிக்கு இல்லை என்றல்லவா, கூறி வந்தனர். எனினும் வெற்றிப் பட்டியலைக் காட்டுகிறாரே, சிங்மன் ரீ எப்படி முடிகிறது. வெற்றி பெற!! - என்று திகைத்த மக்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.
என்பது விளங்கிற்று.
வெற்றி காட்டுகிறார்! பெறவில்லை!! வெகுண்டெழுந்தனர் அந்தச் சூது அம்பலமானதும்,
ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்ததால், அதிகாரிகளை ஏவி மக்களை மயக்கவும் மிரட்டவும் முடிந்தது. பணப்பெட்டிகளைப் பெற்றிருந்ததால், ஓட்டுகளை, 'விலை' கொடுத்து வாங்கிட முடிந்தது. மக்கள் மனமுவந்து<noinclude></noinclude>
3x6wiiegbai6pebku1hdlz268m36m45
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/51
250
641679
1928447
1927702
2026-04-30T04:59:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928447
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||27}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
27
தராவிட்டாலும், 'ஓட்டுகளை'த் தம் பெட்டியில் போட்டுக்கொள்ளும் வழி, ஆட்சிப் பீடத்தில் இருந்ததால் கிடைத்தது. பெட்டிகளையே கூடக், குறைக்க, மறைக்க, உடைக்க, முடிந்தது! எல்லாவிதமான சூது சூழ்ச்சி களையும் செய்து தேர்தல் வெற்றியைத் தயாரித்துக்கொள்ள முடிந்தது. அந்த வெற்றிப் பட்டியலை நீட்டி, முணுமுணுத்துக் கிடந்தோரே! இப்போது என்ன சொல்லுகிறீர்கள்? எதிர்த்துப் பேசினோரே! மக்கள் எவர் பக்கம் என்பதை எடுத்துக் காட்டி விட்டதே தேர்தல் வெற்றி. இனி என்ன இருக்கிறது பேச?- என்று சிங்மன் ரீ கட்சியினர் கொக்கரித்தனர்.
ஏமாற்றப்பட்டுவிட்டோம்! சூது நடந்துவிட்டது! வெற்றி வெற்றி என்று வெறிக் கூச்சலிடுகிறார்கள்- பெற்றது வெற்றி அல்ல, வெறும் புரட்டு! வன்கணாளரை வீழ்த்தி வாகை சூடிடலாம் என்று நம்பிக் கொண்டி ருந்தோம். எப்படியோ வஞ்சிக்கப்பட்டுப் போய் விட்டோம்!-என்று மக்கள் கொதித்தெழுந்து கூறினர். காட்டிடேன். வெற்றி போதாதா? என்று பேசிச் சிரித்தான், சிங்மன் ரீ!
கழகம் வளருகிறது வளருகிறது என்று பேசுகிறார்களே, கூட்டம் கூடுகிறது கூடுகிறது என்று கூறுகிறார்களே, ஓட்டெல்லாம் எமக்கன்றோ கிடைக்கிறது. பார்க்கிறீர்களல்லவா, என்று இங்கு பேசவில்லையா காமராஜர்! பண பலம், பத்திரிகை பலம், அதிகாரம் தரும் பல்வேறு விதமான வாய்ப்புகள் இவை யாவும் சேர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்றுத் தருகிறது; இதை மக்கள் ஆதரவு என்றல்லவா கூறுகிறார் காமராஜர்! அவருக்குக் கிடைத்திருப்பதைவிட, மிக அதிகமான வாய்ப்புகள் வசதிகள் ரீக்கு! எனவே எல்லா வகையான புரட்டுகளையும் செய்து, பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முடிந்தது. புரட்டு வென்றது, புரட்சி அழிந்தது என்று எண்ணினார், ரீ; ஆனால் புரட்சி அழிந்துபடவில்லை, புதுவேகம் பெற்றது. சிங்மன் ரீ ஆட்சியிலே நடக்கும் அக்ரமங்களிலே, அநீதிகளிலே, ஒன்று இந்தத் தேர்தல் வெற்றி!-என்று மக்கள், பேசலாயினர். தோற்றத்தால் குளறித் திரிகிறார்கள் என்றனர். ரீயினர் பெற்றது வெற்றி அல்ல, என்பதை உலகறியச் செய்வோம் என்று ஆர்த்தெழுந்தனர் மக்கள்-மாணவர் முன்னணி நின்றனர் - ரீ. போலீசை ஏவினார்- மக்கள் தாக்கப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர், உடனிருந்தோர் பிணமானது கண்டதும், மற்றையோரின் குருதி கொதித்தது. இரத்த வெள்ளத்திலே, தமது நண்பர்கள் வீழ்ந்திருக்கக் கண்டதும், மற்றவர் சீறும் புலியாயினர். இது தானே முடியும் உன்னால் சாகடிக்க! சரி! மானமழிந்து, மண்டியிட்டுக் கிடப்பதைவிட, இதோ இறந்துபட்டனரே, எமது ஆருயிர்த் தோழர்கள். அதுபோல மடிந்து போவதே மேல்; ஆனால் இறந்துபடுமுன்பு, இந்தக் கொடியோரின் கோல் முறிந்திட வேண்டும். குத்தட்டும், வெட்டட்டும். குண்டடி தரட்டும். அஞ்சப் போவதில்லை, இந்த ஆட்சியின் சூது<noinclude></noinclude>
icfclm512e3t5xo603j91aa3xxm9qq4
1928954
1928447
2026-04-30T09:42:56Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||27}}{{rule}}</noinclude>
தராவிட்டாலும், 'ஓட்டுகளை'த் தம் பெட்டியில் போட்டுக்கொள்ளும் வழி, ஆட்சிப் பீடத்தில் இருந்ததால் கிடைத்தது. பெட்டிகளையே கூடக், குறைக்க, மறைக்க, உடைக்க, முடிந்தது! எல்லாவிதமான சூது சூழ்ச்சி களையும் செய்து தேர்தல் வெற்றியைத் தயாரித்துக்கொள்ள முடிந்தது. அந்த வெற்றிப் பட்டியலை நீட்டி, முணுமுணுத்துக் கிடந்தோரே! இப்போது என்ன சொல்லுகிறீர்கள்? எதிர்த்துப் பேசினோரே! மக்கள் எவர் பக்கம் என்பதை எடுத்துக் காட்டி விட்டதே தேர்தல் வெற்றி. இனி என்ன இருக்கிறது பேச?- என்று சிங்மன் ரீ கட்சியினர் கொக்கரித்தனர்.
ஏமாற்றப்பட்டுவிட்டோம்! சூது நடந்துவிட்டது! வெற்றி வெற்றி என்று வெறிக் கூச்சலிடுகிறார்கள்- பெற்றது வெற்றி அல்ல, வெறும் புரட்டு! வன்கணாளரை வீழ்த்தி வாகை சூடிடலாம் என்று நம்பிக் கொண்டி ருந்தோம். எப்படியோ வஞ்சிக்கப்பட்டுப் போய் விட்டோம்!-என்று மக்கள் கொதித்தெழுந்து கூறினர். காட்டிடேன். வெற்றி போதாதா? என்று பேசிச் சிரித்தான், சிங்மன் ரீ!
கழகம் வளருகிறது வளருகிறது என்று பேசுகிறார்களே, கூட்டம் கூடுகிறது கூடுகிறது என்று கூறுகிறார்களே, ஓட்டெல்லாம் எமக்கன்றோ கிடைக்கிறது. பார்க்கிறீர்களல்லவா, என்று இங்கு பேசவில்லையா காமராஜர்! பண பலம், பத்திரிகை பலம், அதிகாரம் தரும் பல்வேறு விதமான வாய்ப்புகள் இவை யாவும் சேர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்றுத் தருகிறது; இதை மக்கள் ஆதரவு என்றல்லவா கூறுகிறார் காமராஜர்! அவருக்குக் கிடைத்திருப்பதைவிட, மிக அதிகமான வாய்ப்புகள் வசதிகள் ரீக்கு! எனவே எல்லா வகையான புரட்டுகளையும் செய்து, பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முடிந்தது. புரட்டு வென்றது, புரட்சி அழிந்தது என்று எண்ணினார், ரீ; ஆனால் புரட்சி அழிந்துபடவில்லை, புதுவேகம் பெற்றது. சிங்மன் ரீ ஆட்சியிலே நடக்கும் அக்ரமங்களிலே, அநீதிகளிலே, ஒன்று இந்தத் தேர்தல் வெற்றி!-என்று மக்கள், பேசலாயினர். தோற்றத்தால் குளறித் திரிகிறார்கள் என்றனர். ரீயினர் பெற்றது வெற்றி அல்ல, என்பதை உலகறியச் செய்வோம் என்று ஆர்த்தெழுந்தனர் மக்கள்-மாணவர் முன்னணி நின்றனர் - ரீ. போலீசை ஏவினார்- மக்கள் தாக்கப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர், உடனிருந்தோர் பிணமானது கண்டதும், மற்றையோரின் குருதி கொதித்தது. இரத்த வெள்ளத்திலே, தமது நண்பர்கள் வீழ்ந்திருக்கக் கண்டதும், மற்றவர் சீறும் புலியாயினர். இது தானே முடியும் உன்னால் சாகடிக்க! சரி! மானமழிந்து, மண்டியிட்டுக் கிடப்பதைவிட, இதோ இறந்துபட்டனரே, எமது ஆருயிர்த் தோழர்கள். அதுபோல மடிந்து போவதே மேல்; ஆனால் இறந்துபடுமுன்பு, இந்தக் கொடியோரின் கோல் முறிந்திட வேண்டும். குத்தட்டும், வெட்டட்டும். குண்டடி தரட்டும். அஞ்சப் போவதில்லை, இந்த ஆட்சியின் சூது<noinclude></noinclude>
mkln5844lya562flb86at70muhh2dkq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/52
250
641680
1928448
1927703
2026-04-30T04:59:45Z
Rabiyathul
5890
+ மேலடி
1928448
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|28||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>28
'திராவிட நாடு' இதழில்
சூழ்ச்சியினை அம்பலப் படுத்தியே தீருவோம் என்று, முழக்கமிட்டனர்.
மக்கள்.
பல்கலைக்கழகம் சென்று படித்து, டாக்டர்களாய், வழக்கறிஞர் களாய், பொறியியல் வல்லுநராய், ஆசான்களாய், விஞ்ஞானிகளாய், தளபதிகளாய், நிர்வாகிகளாய், திகழ வேண்டிய மாணவமணிகள், குண்டடிப்பட்டனர். இரத்தம் 'குபுகுபு'வென வெளிவரக்கண்டும் கலங்காது, புன்னகை புரிந்து, உயிர்போகப் போகிறது கவலையில்லை! கடமையைச் செய்தேன்! விட்ட இடத்திலிருந்து தொடங்கி, மற்றதைச் செய்து வெற்றிபெற நீவீர் இருக்க. நான் கவலைப்படு வானேன்! என் பங்கு நான் செலுத்திவிட்டேன்! என்று கூறிச் சாய்ந்தனர்! இறந்துபட்ட இளைஞர் களின் இரத்தத்திலே, சாக அஞ்சாத மற்றவரின் கண்ணீர் கலந்தது. அணு பிளக்கப்பட்டது போன்றதோர், நிலை! புதியதோர் சக்தி பிறந்தது! புயல் வீசிற்று! போரிலே பழக்கம், ரீக்கு பயிற்சியும்கூட, ஆனால் இந்தப் புயல் வேறுவிதமானது! அடக்கப் பார்த்தார், அலுத்துப் போனார்! ஆட்சி கவிழ்ந்தது! ஆணவம் அழிந்தது! வெளியே தலைகாட்ட அஞ்சினார்! விரண்டோடிவிட்டார். ஹவாய் தீவுக்கு!!
தேர்தலிலே, எப்படியோ வெற்றிபெற்றுக் காட்டி விட்டால் போதும், நாடு காலடி கிடக்கும், மக்கள் மண்டியிட்டுக் கிடப்பர், எதிர்ப்பு இருக்குமிடம் தெரியாமல் அழிந்தொழியும் என்று எண்ணுவது எத்துணை பேதைமை என்பதைத் தென்கொரிய நாட்டு நிகழ்ச்சி காட்டிவிட்டது! ஆனால் அது தென்கொரியா! உரிமை உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், உயிர் கொடுத்தேனும் உரிமையை காத்திட வேண்டும் என்று கிளர்ந்தெழுந் தனர். இது? தெளிவுபேசித் தேம்பிக் கிடந்திடப் பழகிப்போன தமிழ்நாடு! எனவேதான் இங்கு தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்டினால் போதும் ' என்ற போக்கிலே காங்கிரஸ் தலைவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்களை எதிர்ப்பானேன், அல்லற்படுவானேன்!-என்று எண்ணிடும் போக்கினர் மிகுந்து விட்டனர். தம்பி! உன் போன்றோர் மட்டும் போர்க்கொடி உயர்த்திய படி உள்ளனர். மற்றவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும்போது, இதுகளுக்கு, எவ்வளவு மண்டைக் கனம், நம்மை எதிர்க்கிறார்களே என்று எண்ணி, காமராஜர் கடுங்கோபம் கொள்கிறார். காலை மாலை, என்று பாராமல், காடுமேடு என்றும் யோசிக்காமல் சுற்றிச்சுற்றி வருகிறார். திட்டித் திட்டுத் திரிகிறார். பட்டிதொட்டி எல்லாம் அவர் பரணி! பத்திரிகை களிலே. அவர் பேச்சு!!
மெண்டாரிஸ் 'கைதி' ஆகியுள்ள நேரம், சிங்மன் ரீ விரண்டோடிய காலம், காமராஜர், பவனி வருகிறார் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவேன், என்னை எவன் என்ன செய்ய முடியும்?- என்று, கொக்கரித்தபடி!<noinclude></noinclude>
hwztagpede4dllopgc04qds97l527mj
1928955
1928448
2026-04-30T09:43:51Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|28||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
சூழ்ச்சியினை அம்பலப் படுத்தியே தீருவோம் என்று, முழக்கமிட்டனர்.
மக்கள்.
பல்கலைக்கழகம் சென்று படித்து, டாக்டர்களாய், வழக்கறிஞர் களாய், பொறியியல் வல்லுநராய், ஆசான்களாய், விஞ்ஞானிகளாய், தளபதிகளாய், நிர்வாகிகளாய், திகழ வேண்டிய மாணவமணிகள், குண்டடிப்பட்டனர். இரத்தம் 'குபுகுபு'வென வெளிவரக்கண்டும் கலங்காது, புன்னகை புரிந்து, உயிர்போகப் போகிறது கவலையில்லை! கடமையைச் செய்தேன்! விட்ட இடத்திலிருந்து தொடங்கி, மற்றதைச் செய்து வெற்றிபெற நீவீர் இருக்க. நான் கவலைப்படு வானேன்! என் பங்கு நான் செலுத்திவிட்டேன்! என்று கூறிச் சாய்ந்தனர்! இறந்துபட்ட இளைஞர் களின் இரத்தத்திலே, சாக அஞ்சாத மற்றவரின் கண்ணீர் கலந்தது. அணு பிளக்கப்பட்டது போன்றதோர், நிலை! புதியதோர் சக்தி பிறந்தது! புயல் வீசிற்று! போரிலே பழக்கம், ரீக்கு பயிற்சியும்கூட, ஆனால் இந்தப் புயல் வேறுவிதமானது! அடக்கப் பார்த்தார், அலுத்துப் போனார்! ஆட்சி கவிழ்ந்தது! ஆணவம் அழிந்தது! வெளியே தலைகாட்ட அஞ்சினார்! விரண்டோடிவிட்டார். ஹவாய் தீவுக்கு!!
தேர்தலிலே, எப்படியோ வெற்றிபெற்றுக் காட்டி விட்டால் போதும், நாடு காலடி கிடக்கும், மக்கள் மண்டியிட்டுக் கிடப்பர், எதிர்ப்பு இருக்குமிடம் தெரியாமல் அழிந்தொழியும் என்று எண்ணுவது எத்துணை பேதைமை என்பதைத் தென்கொரிய நாட்டு நிகழ்ச்சி காட்டிவிட்டது! ஆனால் அது தென்கொரியா! உரிமை உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், உயிர் கொடுத்தேனும் உரிமையை காத்திட வேண்டும் என்று கிளர்ந்தெழுந் தனர். இது? தெளிவுபேசித் தேம்பிக் கிடந்திடப் பழகிப்போன தமிழ்நாடு! எனவேதான் இங்கு தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்டினால் போதும் ' என்ற போக்கிலே காங்கிரஸ் தலைவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்களை எதிர்ப்பானேன், அல்லற்படுவானேன்!-என்று எண்ணிடும் போக்கினர் மிகுந்து விட்டனர். தம்பி! உன் போன்றோர் மட்டும் போர்க்கொடி உயர்த்திய படி உள்ளனர். மற்றவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும்போது, இதுகளுக்கு, எவ்வளவு மண்டைக் கனம், நம்மை எதிர்க்கிறார்களே என்று எண்ணி, காமராஜர் கடுங்கோபம் கொள்கிறார். காலை மாலை, என்று பாராமல், காடுமேடு என்றும் யோசிக்காமல் சுற்றிச்சுற்றி வருகிறார். திட்டித் திட்டுத் திரிகிறார். பட்டிதொட்டி எல்லாம் அவர் பரணி! பத்திரிகை களிலே. அவர் பேச்சு!!
மெண்டாரிஸ் 'கைதி' ஆகியுள்ள நேரம், சிங்மன் ரீ விரண்டோடிய காலம், காமராஜர், பவனி வருகிறார் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவேன், என்னை எவன் என்ன செய்ய முடியும்?- என்று, கொக்கரித்தபடி!<noinclude></noinclude>
jkg53wejqcie832700as0s1cynoe1ls
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/53
250
641681
1928449
1927704
2026-04-30T05:00:16Z
Rabiyathul
5890
+ மேலடி
1928449
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||29}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
29
தம்பி! மெண்டாரிஸ் முழக்கமிடத் தெரியாதவரல்ல! அவர் 'கைது' செய்யப்பட்ட நேரம்கூட, அவர் முழக்கமிட ஒரு மாவட்டத்திலே சுற்றுப்பயணம் நடத்திக் கொண்டிருந்த நேரம்தான்!! இராணுவம் தலையிட்டு, அவரைச் சிறைப்படுத்தாதிருந்தால், மெண்டாரிசும், காமராஜரைவிடக் காரசாரமாக, ஊரூர் சென்று பேசித்தான் இருப்பார், "எவனும் எதுவும் செய்ய முடியாது! எவனுக்கும் எதுவும் தெரியாது! எந்தக் கட்சியும், எம்மை அசைக்க முடியாது! எங்களால்தான். ஆட்சி நடத்த முடியும்!" என்றெல்லாம். அவ்விதமான பேச்சைக் கேட்டுக் கேட்டுப் புளித்துபோய் விட்டது. ஆளவந்தாராக இருக்கிற ஒரே காரணத்துக்காக, பேசுவதைக் கேட்டுக் கொள்கிறார்களே யன்றி, பேச்சிலே அறிவு ததும்புகிறது என்பதனால் அல்ல! மக்கள் மனம் கொதித்துக் கிடக்கிறது. எந்தச் சமயத்திலே வந்தது வரட்டும் என்று கிளம்புவார்களோ, என்னென்ன அழிவுகள் நேரிட்டுவிடுமோ!- என்று எண்ணினர், இராணுவத்தினர். இனியும் இந்த போலித்தனத்தை, கேலிக்கூத்தை விட்டுவைக்கக் கூடாது என்று முடிவு செய்தனர். மெண்டாரிசைக் கண்டு அழைத்தனர்; எங்கு? என்று கேட்டார், மெத்த உழைத்துவிட்டீர்கள், எனவே சிறிது காலம், ஓய்வு எடுத்துக் கொள்ள வாருங்கள்! -என்றனர். சிறையா? என்று குழம்பிக் கேட்கிறார், மெண்டாரிஸ்! செச்சே! அங்கு அனுப்புவோமா தங்களை! அனுப்பினால் உயிரோடு திரும்பி வெளிவரத்தான் முடியுமா! உண்மையை உரைத்ததால், உரிமைக்குப் பரிந்து பேசியதால், நீதி கேட்டதால். நேர்மையைக் காட்டியதால், உமது கோபத்துக்கு ஆளாகி, உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்களே பலர், அவர்களின் கோபப்பார்வை போதுமே. உம்மைச் சாகடிக்க! சிறை சென்றால் சித்திரவதை நேரிடும்! உம்மை அங்கல்ல, அழைத்துச் செல்வது! எமது முகாமுக்கு!! என்று கூறி இழுத்துச் சென்றனர்.
கபிஸ்தலம் மூப்பனார், பூண்டி வாண்டையார், நெடும்பலத்தார், வடபாதிமங்கலத்தார் எனும் 'ஏழைகள்' புடைசூழ. 'வீடு நமக்குத் திருவலங்காடு. உண்டு கையில் திருவோடு' என்ற பாசுரம் பாடிடும் பற்றற்ற காமராஜர், மக்களை நேரடியாகக் கண்டு பேச, குறைகளை அறிய, தீர்க்க, தஞ்சைத் தரணியிலே சுற்றுப்பயணம் நடத்தினார் - அதுமட்டுமல்ல அவர் நோக்கம்; மிட்டா மிராசுகளின் கையாட்களாக உள்ள தீனாமூனாக்காரர்களையும் அழித்திட வேண்டும் என்பதாம். கபிஸ்தலம் மூப்பனார், வடபாதிமங்கலத்தார், நெடும்பலத்தார் என்போ ரெல்லாம், தெரியுமா தம்பி! காலையிலே கலப்பை தூக்கிக் கொண்டு கழனி சென்றால், மாடு அலுத்துப் படுத்தாலும் தாம் படுத்திடாமல், பாடுபடும் ஏழை உழவர்கள்! கடித்துக் கொள்ள ஒரு துண்டு மிளகாய்<noinclude></noinclude>
hca600bpkwgppgbkc1g3vktosfygasa
1928956
1928449
2026-04-30T09:44:45Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||29}}{{rule}}</noinclude>
தம்பி! மெண்டாரிஸ் முழக்கமிடத் தெரியாதவரல்ல! அவர் 'கைது' செய்யப்பட்ட நேரம்கூட, அவர் முழக்கமிட ஒரு மாவட்டத்திலே சுற்றுப்பயணம் நடத்திக் கொண்டிருந்த நேரம்தான்!! இராணுவம் தலையிட்டு, அவரைச் சிறைப்படுத்தாதிருந்தால், மெண்டாரிசும், காமராஜரைவிடக் காரசாரமாக, ஊரூர் சென்று பேசித்தான் இருப்பார், "எவனும் எதுவும் செய்ய முடியாது! எவனுக்கும் எதுவும் தெரியாது! எந்தக் கட்சியும், எம்மை அசைக்க முடியாது! எங்களால்தான். ஆட்சி நடத்த முடியும்!" என்றெல்லாம். அவ்விதமான பேச்சைக் கேட்டுக் கேட்டுப் புளித்துபோய் விட்டது. ஆளவந்தாராக இருக்கிற ஒரே காரணத்துக்காக, பேசுவதைக் கேட்டுக் கொள்கிறார்களே யன்றி, பேச்சிலே அறிவு ததும்புகிறது என்பதனால் அல்ல! மக்கள் மனம் கொதித்துக் கிடக்கிறது. எந்தச் சமயத்திலே வந்தது வரட்டும் என்று கிளம்புவார்களோ, என்னென்ன அழிவுகள் நேரிட்டுவிடுமோ!- என்று எண்ணினர், இராணுவத்தினர். இனியும் இந்த போலித்தனத்தை, கேலிக்கூத்தை விட்டுவைக்கக் கூடாது என்று முடிவு செய்தனர். மெண்டாரிசைக் கண்டு அழைத்தனர்; எங்கு? என்று கேட்டார், மெத்த உழைத்துவிட்டீர்கள், எனவே சிறிது காலம், ஓய்வு எடுத்துக் கொள்ள வாருங்கள்! -என்றனர். சிறையா? என்று குழம்பிக் கேட்கிறார், மெண்டாரிஸ்! செச்சே! அங்கு அனுப்புவோமா தங்களை! அனுப்பினால் உயிரோடு திரும்பி வெளிவரத்தான் முடியுமா! உண்மையை உரைத்ததால், உரிமைக்குப் பரிந்து பேசியதால், நீதி கேட்டதால். நேர்மையைக் காட்டியதால், உமது கோபத்துக்கு ஆளாகி, உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்களே பலர், அவர்களின் கோபப்பார்வை போதுமே. உம்மைச் சாகடிக்க! சிறை சென்றால் சித்திரவதை நேரிடும்! உம்மை அங்கல்ல, அழைத்துச் செல்வது! எமது முகாமுக்கு!! என்று கூறி இழுத்துச் சென்றனர்.
கபிஸ்தலம் மூப்பனார், பூண்டி வாண்டையார், நெடும்பலத்தார், வடபாதிமங்கலத்தார் எனும் 'ஏழைகள்' புடைசூழ. 'வீடு நமக்குத் திருவலங்காடு. உண்டு கையில் திருவோடு' என்ற பாசுரம் பாடிடும் பற்றற்ற காமராஜர், மக்களை நேரடியாகக் கண்டு பேச, குறைகளை அறிய, தீர்க்க, தஞ்சைத் தரணியிலே சுற்றுப்பயணம் நடத்தினார் - அதுமட்டுமல்ல அவர் நோக்கம்; மிட்டா மிராசுகளின் கையாட்களாக உள்ள தீனாமூனாக்காரர்களையும் அழித்திட வேண்டும் என்பதாம். கபிஸ்தலம் மூப்பனார், வடபாதிமங்கலத்தார், நெடும்பலத்தார் என்போ ரெல்லாம், தெரியுமா தம்பி! காலையிலே கலப்பை தூக்கிக் கொண்டு கழனி சென்றால், மாடு அலுத்துப் படுத்தாலும் தாம் படுத்திடாமல், பாடுபடும் ஏழை உழவர்கள்! கடித்துக் கொள்ள ஒரு துண்டு மிளகாய்<noinclude></noinclude>
04nu7irtrc7dr6arm700oxdc3o8wk93
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/54
250
641682
1928450
1927705
2026-04-30T05:00:47Z
Rabiyathul
5890
+ மேலடி
1928450
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|30||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>30
'திராவிட நாடு' இதழில்
வத்தல்கூடத் தேடாமல், புளித்த கஞ்சியைக் குடித்துவிட்டுப், பாடுபடும் விவசாயிகள்! ஓலைக்கொத்துக் குடிசை! கந்தல் பாய் கைதான் தலையணை, இவர்களுக்கு உழைத்துப் பிழைத்திடும் உத்தமர்கள் ஊரார் வாழ உழைத்திடும் உத்தமர்கள்! காடு திருத்திக் கழனியாக்கி, நாடு வாழ நற்பணியாற்றிடும் நல்லவர்கள்! அவர்கள் பட்டுப் பட்டாடையைத் தொட்டும் பார்த்ததில்லை, தங்க நகையைத் தீண்டினதில்லை. வைரம் தெரியுமா? என்று கேட்டால், எந்த மரம் வைரம் பாய்ந்திருக்கிறது? என்று தான் கேட்பார்கள்-விலையுயர்ந்த அணி வைரம் என்பதும் அறியாதவர்கள். அப்படிப்பட்ட ஏழைகளை அழைத்துக் கொண்டு, மூன்று மிட்டாக்களுக்குச் சொந்தக்காரரான குடந்தை நீலமேகமும், இரும்புப் பெட்டியிலே எட்டு இலட்சம் வைத்திருக்கும் சின்னத் தம்பியும், கரும்புத் தோட்டத்திலே வருஷம் கால் கோடி பெற்றிடும் இளங்கோவும், பஸ் முதலாளி பட்டுவும், ஆலை முதலாளி பெத்தண்ணனும், கோலாகல வாழ்வு நடாத்திடும் கொடவாசல் கிருஷ்ணமூர்த்தியும், வட்டி வியாபாரத்தில் பெரும் பொருள் ஈட்டிடும் மாயவரம் கிட்டப்பாவும், மாளிகைகளை ஊரூர் அமைத்துக்கொண்டு மனோஹர வாழ்வுநடாத்தும் மன்னார்குடி நாராயணசாமியும்-என்று இவ்விதம் இருக்கிறார்களல்லவா, நமது கழகத்தவர். இவர் களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி, நான் முன்பு காட்டினேனே, பாட்டாளித் தோழர்கள், உழைப்பின் உருவங்கள். ஊர்வாழ உழைப்போர், சொத்து சுகம் இல்லாதவர். கடினமான உழைப்பாளிகள், கபிஸ்தலம், நெடும்பலம், வடபாதிமங்கலம் போன்றாரிடம். நாட்டை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் நாடு சீர்படும். நல்லாட்சி ஏற்படும் என்ற திருத்தொண்டிலே ஈடுபட்டு, அந்தத் திருவாசகத்தை ஊரெலாம் முழக்கிக்கொண்டு. 'புனிதயாத்திரை' நடாத்திக் கொண்டு வருகிறார், பெண்டா பிள்ளையா எனக்கு. எனக்கென்ன மாதச்சம்பளம் ஆயிரத்துக்குமேல், எனக்கு வேண்டியதெல்லாம் கட்டிக்கொள்ள நாலுமுழ வேட்டியும், போட்டுக்கொள்ள ஒரு துண்டும். படுக்கப் பாயும், பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும் என்று அறிவித்துவிட்டு, மாதம் சுளைகளையாக ஆயிரத்துக்கு அதிகமாகச் சம்பளம் வாங்காத, 'சத்புருஷர்' 'சன்யாசி' காமராஜர்!
தம்பி! எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால், தஞ்சையிலேயே பெரிய புள்ளிகள் என்று எவரும் கூறிடக்கூடிய, மிட்டா மிராசுகளை, கபிஸ்தலம் நெடும்பலங்களைக் கூட வைத்துக்கொண்டு. நான் ஏழை பங்காளன், எங்கள் கட்சி ஏழைகள் வாழ வழிவகுத்திடும் கட்சி! மிட்டா மிராசுகளுக்கு, கையாட்கள். தி.மு. கழகத்தார்- என்று கூறிடத் தோன்றும், எத்துணை மனம் மரத்துப் போயிருந்தால். அல்லது அச்சம்<noinclude></noinclude>
3t8535sjhksqpe9ldq6qqy12icagteh
1928957
1928450
2026-04-30T09:45:53Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|30||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வத்தல்கூடத் தேடாமல், புளித்த கஞ்சியைக் குடித்துவிட்டுப், பாடுபடும் விவசாயிகள்! ஓலைக்கொத்துக் குடிசை! கந்தல் பாய் கைதான் தலையணை, இவர்களுக்கு உழைத்துப் பிழைத்திடும் உத்தமர்கள் ஊரார் வாழ உழைத்திடும் உத்தமர்கள்! காடு திருத்திக் கழனியாக்கி, நாடு வாழ நற்பணியாற்றிடும் நல்லவர்கள்! அவர்கள் பட்டுப் பட்டாடையைத் தொட்டும் பார்த்ததில்லை, தங்க நகையைத் தீண்டினதில்லை. வைரம் தெரியுமா? என்று கேட்டால், எந்த மரம் வைரம் பாய்ந்திருக்கிறது? என்று தான் கேட்பார்கள்-விலையுயர்ந்த அணி வைரம் என்பதும் அறியாதவர்கள். அப்படிப்பட்ட ஏழைகளை அழைத்துக் கொண்டு, மூன்று மிட்டாக்களுக்குச் சொந்தக்காரரான குடந்தை நீலமேகமும், இரும்புப் பெட்டியிலே எட்டு இலட்சம் வைத்திருக்கும் சின்னத் தம்பியும், கரும்புத் தோட்டத்திலே வருஷம் கால் கோடி பெற்றிடும் இளங்கோவும், பஸ் முதலாளி பட்டுவும், ஆலை முதலாளி பெத்தண்ணனும், கோலாகல வாழ்வு நடாத்திடும் கொடவாசல் கிருஷ்ணமூர்த்தியும், வட்டி வியாபாரத்தில் பெரும் பொருள் ஈட்டிடும் மாயவரம் கிட்டப்பாவும், மாளிகைகளை ஊரூர் அமைத்துக்கொண்டு மனோஹர வாழ்வுநடாத்தும் மன்னார்குடி நாராயணசாமியும்-என்று இவ்விதம் இருக்கிறார்களல்லவா, நமது கழகத்தவர். இவர் களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி, நான் முன்பு காட்டினேனே, பாட்டாளித் தோழர்கள், உழைப்பின் உருவங்கள். ஊர்வாழ உழைப்போர், சொத்து சுகம் இல்லாதவர். கடினமான உழைப்பாளிகள், கபிஸ்தலம், நெடும்பலம், வடபாதிமங்கலம் போன்றாரிடம். நாட்டை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் நாடு சீர்படும். நல்லாட்சி ஏற்படும் என்ற திருத்தொண்டிலே ஈடுபட்டு, அந்தத் திருவாசகத்தை ஊரெலாம் முழக்கிக்கொண்டு. 'புனிதயாத்திரை' நடாத்திக் கொண்டு வருகிறார், பெண்டா பிள்ளையா எனக்கு. எனக்கென்ன மாதச்சம்பளம் ஆயிரத்துக்குமேல், எனக்கு வேண்டியதெல்லாம் கட்டிக்கொள்ள நாலுமுழ வேட்டியும், போட்டுக்கொள்ள ஒரு துண்டும். படுக்கப் பாயும், பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும் என்று அறிவித்துவிட்டு, மாதம் சுளைகளையாக ஆயிரத்துக்கு அதிகமாகச் சம்பளம் வாங்காத, 'சத்புருஷர்' 'சன்யாசி' காமராஜர்!
தம்பி! எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால், தஞ்சையிலேயே பெரிய புள்ளிகள் என்று எவரும் கூறிடக்கூடிய, மிட்டா மிராசுகளை, கபிஸ்தலம் நெடும்பலங்களைக் கூட வைத்துக்கொண்டு. நான் ஏழை பங்காளன், எங்கள் கட்சி ஏழைகள் வாழ வழிவகுத்திடும் கட்சி! மிட்டா மிராசுகளுக்கு, கையாட்கள். தி.மு. கழகத்தார்- என்று கூறிடத் தோன்றும், எத்துணை மனம் மரத்துப் போயிருந்தால். அல்லது அச்சம்<noinclude></noinclude>
ju1kxwg0beytn3z6vme3zpyh29608kt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/55
250
641683
1928453
1927706
2026-04-30T05:01:19Z
Rabiyathul
5890
+ மேலடி
1928453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||31}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
31
குடிகொண்ட மனதினராகிப் போயிருந்தால், அந்தப் பொருளற்ற பேச்சைக் கேட்டும். வாளா இருந்திருப்பர்! நாம், மிட்டா மிராசுக் கட்சி, காமராஜரின் காங்கிரஸ் கட்சி பஞ்சை பராரி, பகல் பட்டினி இராப்பட்டினி என்போரின் கட்சி! எதிரே உள்ளோர்களை எவ்வளவு இளித்தவாயர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தால், இந்தப் பேச்சுப் பேசத் துணிவு பிறந்திருக்கும். பேசினார், நமது கழகத்தை ஏசினார். அந்தத் துணிவுக்குக் காரணம் என்ன? எவர் எதிர்த்துக் கேட்க முடியும் என்ற போக்குத்தான், மெண்டாரிசும், சிங்மன் ரீயும், இது போன்ற போக்கினராகத்தான் இருந்தனர். அவர்களின் ஆட்சி, இறந்தகாலமாகிவிட்டது. ஏனெனில், அவர்கள் நடத்தி வந்த ஆணவ ஆட்சியால் ஏற்பட்ட கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு, மக்களிலே குறிப்பிடத்தக்க பகுதியினர் 'தாமாக' எண்ணிப் பார்த்திடலாயினர்; உண்மை விளங்கிற்று; உரைத்தனர்; அடக்கு முறை அவிழ்த்துவிடப்பட்டது; அவதி பல கண்டனர்; எனினும் அடங்கிக் கிடந்துவிடவில்லை; அஞ்சப் போவதில்லை, சாகவும்! என்று ஆர்த்தெழுந் தனர்; அசைக்கவே முடியாது என்று அனைவரும் ஒரு காலத்தில், உள்ளபடி நம்பிக்கிடந்த ஆணவ அரசுகள், அழிந்தொழிந்து போயின!
என்ன செய்தாலும் தாங்கிக் கொண்டு, எதைப் பேசினாலும் கேட்டுக்கொண்டு, எவ்வளவு ஏசினாலும் இளித்துக் கொண்டு கிடந்தனரே, தலையாட்டிகள் போல, வாயில்லாப் பூச்சிகளாக, இந்த மக்கள்! இவர்களுக்கு எங்கிருந்து வந்தது திடீரென்று இந்தத் துணிச்சல்! அச்சம் கப்பிய முகத்தினராக இருந்து வந்தனர், இன்று பொறி பறக்கிறதே பேச்சில்! எங்கே ஒளித்து வைத்திருந்தனர். இந்தப் புரட்சிக் கனலை எல்லாம், என்று வீழ்ந்த எதேச்சாதிகாரிகள், எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீரிலிருந்து நெருப்புப் பிறக்கும் என்பதை, கூறினால் நம்புவார்களா? நடுக்கும் குரலில் பேசிக் கொண்டுள்ள இந்த மக்களுடைய உள்ளத்திலே, ஆணவ அரசுகளை அழித்திடத்தக்க ஆற்றல், குமுறல் வடிவிலே இருக்கிறது என்று கூறினால், நம்ப முடியுமா, கொடிகட்டி ஆண்டிடும் கொடியவர்களால்!
தம்பி! தண்ணீரைத் தேக்கிவைத்து, வேகமாகக் கீழே விழச்செய்து, விழும்போது ஏற்படும் சக்தியைக் கொண்டு, 'மின்சாரம்' தயாரிக் கிறார்கள்! பார்க்கிறாயல்லவா?
கொடுமைக்கு ஆளாக்கப்படும் மக்கள் வடிக்கும் கண்ணீர் வெள்ளம், ஓர் நாள் மாபெரும் 'அழிவுச்சக்தி'யைப் பெற்றெடுக்கிறது. ஆனால், அந்த நிலை ஏற்பட வேண்டுமானால், 'சுயசிந்தனை'-கட்டுக்காவலுக்கு அஞ்சாமல், இட்டுக் கட்டியதற்குப் பணிந்து விடாமல், தாமாக ஒவ்வொரு பிரச்சினைப் பற்றியும், நிகழ்ச்சி குறித்தும், எண்ணிப்<noinclude></noinclude>
623wyr8ocp02fxoduh2632e5ltyr3p6
1928958
1928453
2026-04-30T09:46:32Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||31}}{{rule}}</noinclude>
குடிகொண்ட மனதினராகிப் போயிருந்தால், அந்தப் பொருளற்ற பேச்சைக் கேட்டும். வாளா இருந்திருப்பர்! நாம், மிட்டா மிராசுக் கட்சி, காமராஜரின் காங்கிரஸ் கட்சி பஞ்சை பராரி, பகல் பட்டினி இராப்பட்டினி என்போரின் கட்சி! எதிரே உள்ளோர்களை எவ்வளவு இளித்தவாயர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தால், இந்தப் பேச்சுப் பேசத் துணிவு பிறந்திருக்கும். பேசினார், நமது கழகத்தை ஏசினார். அந்தத் துணிவுக்குக் காரணம் என்ன? எவர் எதிர்த்துக் கேட்க முடியும் என்ற போக்குத்தான், மெண்டாரிசும், சிங்மன் ரீயும், இது போன்ற போக்கினராகத்தான் இருந்தனர். அவர்களின் ஆட்சி, இறந்தகாலமாகிவிட்டது. ஏனெனில், அவர்கள் நடத்தி வந்த ஆணவ ஆட்சியால் ஏற்பட்ட கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு, மக்களிலே குறிப்பிடத்தக்க பகுதியினர் 'தாமாக' எண்ணிப் பார்த்திடலாயினர்; உண்மை விளங்கிற்று; உரைத்தனர்; அடக்கு முறை அவிழ்த்துவிடப்பட்டது; அவதி பல கண்டனர்; எனினும் அடங்கிக் கிடந்துவிடவில்லை; அஞ்சப் போவதில்லை, சாகவும்! என்று ஆர்த்தெழுந் தனர்; அசைக்கவே முடியாது என்று அனைவரும் ஒரு காலத்தில், உள்ளபடி நம்பிக்கிடந்த ஆணவ அரசுகள், அழிந்தொழிந்து போயின!
என்ன செய்தாலும் தாங்கிக் கொண்டு, எதைப் பேசினாலும் கேட்டுக்கொண்டு, எவ்வளவு ஏசினாலும் இளித்துக் கொண்டு கிடந்தனரே, தலையாட்டிகள் போல, வாயில்லாப் பூச்சிகளாக, இந்த மக்கள்! இவர்களுக்கு எங்கிருந்து வந்தது திடீரென்று இந்தத் துணிச்சல்! அச்சம் கப்பிய முகத்தினராக இருந்து வந்தனர், இன்று பொறி பறக்கிறதே பேச்சில்! எங்கே ஒளித்து வைத்திருந்தனர். இந்தப் புரட்சிக் கனலை எல்லாம், என்று வீழ்ந்த எதேச்சாதிகாரிகள், எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீரிலிருந்து நெருப்புப் பிறக்கும் என்பதை, கூறினால் நம்புவார்களா? நடுக்கும் குரலில் பேசிக் கொண்டுள்ள இந்த மக்களுடைய உள்ளத்திலே, ஆணவ அரசுகளை அழித்திடத்தக்க ஆற்றல், குமுறல் வடிவிலே இருக்கிறது என்று கூறினால், நம்ப முடியுமா, கொடிகட்டி ஆண்டிடும் கொடியவர்களால்!
தம்பி! தண்ணீரைத் தேக்கிவைத்து, வேகமாகக் கீழே விழச்செய்து, விழும்போது ஏற்படும் சக்தியைக் கொண்டு, 'மின்சாரம்' தயாரிக் கிறார்கள்! பார்க்கிறாயல்லவா?
கொடுமைக்கு ஆளாக்கப்படும் மக்கள் வடிக்கும் கண்ணீர் வெள்ளம், ஓர் நாள் மாபெரும் 'அழிவுச்சக்தி'யைப் பெற்றெடுக்கிறது. ஆனால், அந்த நிலை ஏற்பட வேண்டுமானால், 'சுயசிந்தனை'-கட்டுக்காவலுக்கு அஞ்சாமல், இட்டுக் கட்டியதற்குப் பணிந்து விடாமல், தாமாக ஒவ்வொரு பிரச்சினைப் பற்றியும், நிகழ்ச்சி குறித்தும், எண்ணிப்<noinclude></noinclude>
1agac8qcpuz05nmpacwyl1gny05vtq7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/56
250
641684
1928454
1927707
2026-04-30T05:01:50Z
Rabiyathul
5890
+ மேலடி
1928454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|32||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>32
'திராவிட நாடு' இதழில்
பார்த்திடும் திறம், ஏற்பட வேண்டும் அந்தத் திறன் மக்களிடம் அற்றுப் போனால், தொடை நடுங்கிகளெல்லாம்கூட, செங்கிஸ்கான்களாகிவிட முடியும்: சர்வாதிகாரவெறி வெற்றி பெற்றுவிடும். ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பே கிரேக்கத் தத்துவாசிரியர்கள், இதைக் கருத்திலே கொண்டுதான். 'மனிதன் சிந்திக்கும் திறன் உடைய மிருகம்' என்று கூறினர். மனிதனிட மிருந்து சிந்திக்கும் இயல்பைப் பறித்துவிட்டாலோ, அடக்கி ஒடுக்கி விட்டாலோ, மிருகத்தை வேட்டையாடுவதுபோல மனிதனை, மாபாவிகள் வேட்டையாடிப் பிடிக்கலாம், விரட்டலாம், கொன்று குவிக்கலாம்!
எடுத்துக்காட்டுக்கு இது; தலைவாழை இலையில், சீரகப் சம்பாசாதத்தை வெள்ளி 'அன்னகுத்தி'யால் எடுத்துப் போட்டு, அதிலே வெண்ணெய் காய்ச்சிய நெய்யை உருக்கி வார்த்து, நேர்த்தியான பருப்பும் சுவைமிகு காய்கறியும் துணைக்கு இட்டு, பக்கம் நின்று பணிவிடை செய்து, எந்தக் கறியிடம் அவர் பரிவு காட்டுகிறார் என்பதைக் கவனித்து, எடுபிடியை அழைத்து, அந்தக் கறியை மேலும் இலையில் இடச்சொல்லி, பக்குவமான உபசாரத்தை நடத்தி வரும் மிட்டா மிராசுகளுடன் கூடிக் கொட்டமடித்துக் கொண்டே, கூசாமல், 'நாங்கள் ஏழை பங்காளர்!' என்று பேசி வருகிறாரே, பெரிய பதவியில் அமர்ந்து விட்டதால்' பச்சைத்தமிழர்' ஆகிவிட்ட காமராஜர், அவரிடம் "ஐயனே! அடுக்காது இந்தப் பேச்சு! அண்டப் புளுகன்றோ, நீர் பேசுவது: ஊரை அடித்து உலையில் போடுவார். உழைப்பாளியின் இரத்தம் உறுஞ்சுவோர், தலைமுறை தலைமுறையாகச் சுரண்டிச் சுகபோகம் கண்டோர், உம்மைச் சூழ நிற்கிறார்கள், அவர்களை, ஏழைக்குழைப்போர் என்று கூற, எப்படி மனம் இடந் தந்தது? உழைத்து உருக்குலைந்து போனோர், உழைத்திடவும் வாய்ப்புக் கிடைக்காததால் மனம் உடைந்து போனோர், தி.மு. கழகத்தில், பெரும்பாலோர்! அவர்களை மிட்டா மிராசுகளின் கையாட்கள் என்று கூறிடலாமா! அது நியாயமாகுமா? மிட்டாமிராசுகள் தமது கையாட்களுக்கு, சுவைமிகு உணவளிப்பர்! இப்போது உமக்களித்தனர்!! ஏனென்று எண்ணிப் பார்த்தீரா? உம்மிடம் பரிவு சுரந்ததாலா? உமது பதவிக்கு உள்ள பெருமையை அறிந்ததாலா? அதோ, ஆயிரம் ரூபாய், ஏழைப்பிள்ளைகளின் மதிய உணவுக்காக அளிக்கிறேன் என்று கூறி உம்மைக் களிப்படையச் செய்கிறாரே. 'சமயமறிந்தார்; அவர் ஏவிவிட்டதால், கொளுத்தப்பட்ட குடிசைகளும், அறுக்கப்பட்ட தாலிகளும் எவ்வளவு என்று உமக்குத் தெரியுமா? அடி ஆட்கள் உடன்வர, சேரி புகுந்து அவர் நடத்திய கொடுமைகள் உமக்குத் தெரியுமா?- என்றெல்லாம் ஆத்திரத்தை அடக்க முடியாது ஒருவன் பேசி விடுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! என்ன நேரிடும்<noinclude></noinclude>
r26ae4gnvlh6f34z8ptqkbxv3tlv8du
1928959
1928454
2026-04-30T09:47:10Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|32||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பார்த்திடும் திறம், ஏற்பட வேண்டும் அந்தத் திறன் மக்களிடம் அற்றுப் போனால், தொடை நடுங்கிகளெல்லாம்கூட, செங்கிஸ்கான்களாகிவிட முடியும்: சர்வாதிகாரவெறி வெற்றி பெற்றுவிடும். ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பே கிரேக்கத் தத்துவாசிரியர்கள், இதைக் கருத்திலே கொண்டுதான். 'மனிதன் சிந்திக்கும் திறன் உடைய மிருகம்' என்று கூறினர். மனிதனிட மிருந்து சிந்திக்கும் இயல்பைப் பறித்துவிட்டாலோ, அடக்கி ஒடுக்கி விட்டாலோ, மிருகத்தை வேட்டையாடுவதுபோல மனிதனை, மாபாவிகள் வேட்டையாடிப் பிடிக்கலாம், விரட்டலாம், கொன்று குவிக்கலாம்!
எடுத்துக்காட்டுக்கு இது; தலைவாழை இலையில், சீரகப் சம்பாசாதத்தை வெள்ளி 'அன்னகுத்தி'யால் எடுத்துப் போட்டு, அதிலே வெண்ணெய் காய்ச்சிய நெய்யை உருக்கி வார்த்து, நேர்த்தியான பருப்பும் சுவைமிகு காய்கறியும் துணைக்கு இட்டு, பக்கம் நின்று பணிவிடை செய்து, எந்தக் கறியிடம் அவர் பரிவு காட்டுகிறார் என்பதைக் கவனித்து, எடுபிடியை அழைத்து, அந்தக் கறியை மேலும் இலையில் இடச்சொல்லி, பக்குவமான உபசாரத்தை நடத்தி வரும் மிட்டா மிராசுகளுடன் கூடிக் கொட்டமடித்துக் கொண்டே, கூசாமல், 'நாங்கள் ஏழை பங்காளர்!' என்று பேசி வருகிறாரே, பெரிய பதவியில் அமர்ந்து விட்டதால்' பச்சைத்தமிழர்' ஆகிவிட்ட காமராஜர், அவரிடம் "ஐயனே! அடுக்காது இந்தப் பேச்சு! அண்டப் புளுகன்றோ, நீர் பேசுவது: ஊரை அடித்து உலையில் போடுவார். உழைப்பாளியின் இரத்தம் உறுஞ்சுவோர், தலைமுறை தலைமுறையாகச் சுரண்டிச் சுகபோகம் கண்டோர், உம்மைச் சூழ நிற்கிறார்கள், அவர்களை, ஏழைக்குழைப்போர் என்று கூற, எப்படி மனம் இடந் தந்தது? உழைத்து உருக்குலைந்து போனோர், உழைத்திடவும் வாய்ப்புக் கிடைக்காததால் மனம் உடைந்து போனோர், தி.மு. கழகத்தில், பெரும்பாலோர்! அவர்களை மிட்டா மிராசுகளின் கையாட்கள் என்று கூறிடலாமா! அது நியாயமாகுமா? மிட்டாமிராசுகள் தமது கையாட்களுக்கு, சுவைமிகு உணவளிப்பர்! இப்போது உமக்களித்தனர்!! ஏனென்று எண்ணிப் பார்த்தீரா? உம்மிடம் பரிவு சுரந்ததாலா? உமது பதவிக்கு உள்ள பெருமையை அறிந்ததாலா? அதோ, ஆயிரம் ரூபாய், ஏழைப்பிள்ளைகளின் மதிய உணவுக்காக அளிக்கிறேன் என்று கூறி உம்மைக் களிப்படையச் செய்கிறாரே. 'சமயமறிந்தார்; அவர் ஏவிவிட்டதால், கொளுத்தப்பட்ட குடிசைகளும், அறுக்கப்பட்ட தாலிகளும் எவ்வளவு என்று உமக்குத் தெரியுமா? அடி ஆட்கள் உடன்வர, சேரி புகுந்து அவர் நடத்திய கொடுமைகள் உமக்குத் தெரியுமா?- என்றெல்லாம் ஆத்திரத்தை அடக்க முடியாது ஒருவன் பேசி விடுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! என்ன நேரிடும்<noinclude></noinclude>
djxyvsr6rtd9q8ntpdtiedzvdhw8yw5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/57
250
641685
1928455
1927708
2026-04-30T05:02:22Z
Rabiyathul
5890
+ மேலடி
1928455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||33}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
33
அவனுக்கு? அமைச்சர் முன் காலித்தனம் செய்தான் என்று பிடித்திழுத்துச் செல்வர்-சட்டம் அவனைக் கொட்டும்.
தம்பி! சர்வாதிகாரிகளிடம் சிக்கிய நாட்டிலே 'குற்றவாளி'க் கூண்டிலே எவரெவர் நிறுத்தப்படுவர், வழக்கு விசாரணை எப்படி இருக்கும் என்பதை விளக்கிடும் ஓரங்க நாடகமொன்று சின்னாட்களுக்கு முன்பு படித்தேன்.
'அடுத்த கிழமை அந்தக் 'குற்றவாளி'யைக் காணலாம், இந்தக் கிழமை கபிஸ்தலம், வடபாதிமங்கலம் போன்றாருடன் கூடி, ஏழை களைக் காப்பாற்றக் கிளம்பிய காமராஜரைக் கண்டது போதும். பெரிய புள்ளிகள் என்ன கதியானார்கள் என்பதை எண்ணிப் பார்த்துப் பாடம் தேடச் சொல்லுவோம் அவர்களை.
அண்ணன்,
5.6.60<noinclude></noinclude>
larawi6v6m0690jba3czh33f2whlg5k
1928960
1928455
2026-04-30T09:47:58Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||33}}{{rule}}</noinclude>
அவனுக்கு? அமைச்சர் முன் காலித்தனம் செய்தான் என்று பிடித்திழுத்துச் செல்வர்-சட்டம் அவனைக் கொட்டும்.
தம்பி! சர்வாதிகாரிகளிடம் சிக்கிய நாட்டிலே 'குற்றவாளி'க் கூண்டிலே எவரெவர் நிறுத்தப்படுவர், வழக்கு விசாரணை எப்படி இருக்கும் என்பதை விளக்கிடும் ஓரங்க நாடகமொன்று சின்னாட்களுக்கு முன்பு படித்தேன்.
'அடுத்த கிழமை அந்தக் 'குற்றவாளி'யைக் காணலாம், இந்தக் கிழமை கபிஸ்தலம், வடபாதிமங்கலம் போன்றாருடன் கூடி, ஏழை களைக் காப்பாற்றக் கிளம்பிய காமராஜரைக் கண்டது போதும். பெரிய புள்ளிகள் என்ன கதியானார்கள் என்பதை எண்ணிப் பார்த்துப் பாடம் தேடச் சொல்லுவோம் அவர்களை.
அண்ணன்,
5.6.60<noinclude></noinclude>
hvdpruvdy0awus4z4whb5dtb0wkey06
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/58
250
641686
1928456
1927709
2026-04-30T05:02:53Z
Rabiyathul
5890
+ மேலடி
1928456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|34||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தம்பி!
கடிதம் : 106
ஜனநாயகச் சர்வாதிகாரி
மேனாட்டுச் சர்வாதிகாரிகள்-
ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு-
திராவிட நாடு.
'சர்வாதிகார ஆட்சி' என்று கூறினாலே எல்லோருக்கும் ஒரு வெறுப்பு, பயம் உடனடியாகத் தோன்றிவிடுகிறது. ஏன் வெறுப்பும் பயமும் இருக்கவேண்டும் என்று விளக்கிக்கூற, வாதாட, காரணம் காட்டக்கூடத் தெரியாமலிருக்கும். ஆனால் சர்வாதிகார ஆட்சி கூடாது என்று மட்டும் அனைவரும் கூறுவர். எதை எப்படி எப்போது செய்வது என்பதுபற்றி, மற்றவர்களிடம் கலந்து பேசவேண்டிய கட்டாய மின்றி, மாற்று யோசனைகளை அலசவேண்டிய அவசியமின்றி, ஒரு புதியவரி போடுவதாயினும், சட்டம் இயற்றுவதாயினும், ஊர் அமைப்ப தாயினும், படை திரட்டுவதானாலும், போர் தொடுப்பதானாலும், தொழிற்கூடம் அமைப்பது என்றாலும், எந்தக் காரியம் செய்வதானாலும் தன் இச்சையாகச் செய்திடும் நிலையைப் பெற்று, அந்த நிலை யினின்றும் தன்னை நீக்கத்தக்க சக்தி ஏதுமின்றி அழித்தொழித்து, கேட்பாரற்ற நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் செய்திடுபவராகிவிடும் நிலைதான் சர்வாதிகாரம், எல்லா அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும் நிலை!
இது ஏன் ஒருவிதமான வெறுப்புணர்ச்சியையும் அச்சத்தையும் மூட்டிவிடுகிறது
ஒவ்வொருவருக்கும். குறிப்பிட்ட அளவில் அறிவாற்றலும் செயல் திறனும் உண்டு. என்ற நம்பிக்கை இருக்கிறது.
எதையும் செய்திடாமல் கூட இருக்கக்கூடும்-வாய்ப்புத் தேடிக் கொள்ளாமலும் இருந்துவிடக்கூடும் - ஆனால் முடிவு. அதற்கேற்ற அறிவாற்றல் உண்டு என்ற நம்பிக்கை மட்டும், எவருக்கும் இருக்கத் தான் செய்கிறது.
எனவே, ஒருவன் கிளம்பி, உச்சியில் உட்கார்ந்து கொண்டு, நீவிர் ஏதும் செய்யத் தெரியாதவர்! என்ன செய்ய வேண்டும் என்பதும் அறியாதவர்! உமக்கானதனைத்தையும் நானே செய்வேன்; எனக்கே.<noinclude></noinclude>
1fr8njt4grx7jjzbonfhwxt0nyfnuyu
1928961
1928456
2026-04-30T09:52:26Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>தம்பி!
கடிதம் : 106
ஜனநாயகச் சர்வாதிகாரி
மேனாட்டுச் சர்வாதிகாரிகள்-
ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு-
திராவிட நாடு.
'சர்வாதிகார ஆட்சி' என்று கூறினாலே எல்லோருக்கும் ஒரு வெறுப்பு, பயம் உடனடியாகத் தோன்றிவிடுகிறது. ஏன் வெறுப்பும் பயமும் இருக்கவேண்டும் என்று விளக்கிக்கூற, வாதாட, காரணம் காட்டக்கூடத் தெரியாமலிருக்கும். ஆனால் சர்வாதிகார ஆட்சி கூடாது என்று மட்டும் அனைவரும் கூறுவர். எதை எப்படி எப்போது செய்வது என்பதுபற்றி, மற்றவர்களிடம் கலந்து பேசவேண்டிய கட்டாய மின்றி, மாற்று யோசனைகளை அலசவேண்டிய அவசியமின்றி, ஒரு புதியவரி போடுவதாயினும், சட்டம் இயற்றுவதாயினும், ஊர் அமைப்ப தாயினும், படை திரட்டுவதானாலும், போர் தொடுப்பதானாலும், தொழிற்கூடம் அமைப்பது என்றாலும், எந்தக் காரியம் செய்வதானாலும் தன் இச்சையாகச் செய்திடும் நிலையைப் பெற்று, அந்த நிலை யினின்றும் தன்னை நீக்கத்தக்க சக்தி ஏதுமின்றி அழித்தொழித்து, கேட்பாரற்ற நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் செய்திடுபவராகிவிடும் நிலைதான் சர்வாதிகாரம், எல்லா அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும் நிலை!
இது ஏன் ஒருவிதமான வெறுப்புணர்ச்சியையும் அச்சத்தையும் மூட்டிவிடுகிறது
ஒவ்வொருவருக்கும். குறிப்பிட்ட அளவில் அறிவாற்றலும் செயல் திறனும் உண்டு. என்ற நம்பிக்கை இருக்கிறது.
எதையும் செய்திடாமல் கூட இருக்கக்கூடும்-வாய்ப்புத் தேடிக் கொள்ளாமலும் இருந்துவிடக்கூடும் - ஆனால் முடிவு. அதற்கேற்ற அறிவாற்றல் உண்டு என்ற நம்பிக்கை மட்டும், எவருக்கும் இருக்கத் தான் செய்கிறது.
எனவே, ஒருவன் கிளம்பி, உச்சியில் உட்கார்ந்து கொண்டு, நீவிர் ஏதும் செய்யத் தெரியாதவர்! என்ன செய்ய வேண்டும் என்பதும் அறியாதவர்! உமக்கானதனைத்தையும் நானே செய்வேன்; எனக்கே.<noinclude></noinclude>
btcb0uarmxssj0gwmnxuzvly8vqf34w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/59
250
641687
1928458
1927710
2026-04-30T05:03:25Z
Rabiyathul
5890
+ மேலடி
1928458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||35}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
35
தெரியும் உமக்காக என்னென்ன செய்யவேண்டும் என்பது...! என் அறிவாற்றல், உம்மில் எவருக்கும் இல்லை! எனவே, என்னிடம் விட்டு விடுங்கள் எல்லா அலுவல்களையும்; நான் பார்த்துக் கொள்கிறேன், என்று கூறும்போது. தமது உரிமை பறிக்கப்படுகிறது என்ற எண்ணமும், தமது தன்மானம் அழிக்கப்படுகிறது என்ற எரிச்சலும், ஏற்பட்டு விடுகிறது-என்ன தலைக்கனம் இவனுக்கு எல்லாம் தெரியுமாம் இவனுக்கு -ஏதும் அறியோமாம் நாம்! நாமென்ன, இவன் போன்றே ஆறறிவுடையோரல்லவா! ஆற்றல் என்பது இவனொடு நின்றுவிடுவதோ! நாம், வெறும் மரக்கட்டைகளோ!! நாம் வெறும் பிறவிகள்! இவன் ஆளப்பிறந்தவனோ!!-என்றெல்லாம் பேசிடத் தோன்றுகிறது.
அவன் வீரன்!-என்று கூறினால், நான் என்ன கோழையா? என்று கோபித்துக் கேட்டிடச் சொல்கிறது உணர்ச்சி.
அவன் அறிவாளி!-என்று கூறினால், நான் முட்டாள் அல்ல! என்று கொதித்தெழுந்து கூறத் தோன்றுகிறது.
அவ்விதமின்றி, உனக்காக அவன்! உனக்கு வேறு அலுவலிருப் பதால், அவன்! உன் அனுமதி பெற்று, அவன் உன் காரியத்தை, உன் விருப்பமறிந்து, உன் யோசனைப்படி செய்து கொடுக்க, அவன்!-என்று கூறினால், கேட்பதற்குக் களிப்பும் பெருமையும் ஏற்படுகிறது.
'எல்லாம் செய்திடுபவன்' எதைச் செய்திடுவானோ! அவன் செய்திடு வதிலே, எதெது கேடு தருமோ, எண்ணும்போது, அச்சம் ஏற்படுகிறது. எதையும் செய்திடுவோனாகிவிட்ட பிறகு. கேடு பல செய்து, 'இது ஆகுமோ' என்று கேட்டிடின், "யார் நீ இதைக் கேட்க? நானன்றோ காரியமாற்ற வேண்டியவன்! காரணம் காட்டவா, இருக்கிறேன்!'' என்று கொக்கரித்துக் கொடுமை செய்திடின், எதையும் செய்திடும் இடமேறி விட்டவனிடமிருந்து, எப்படித் தப்பித்துக் கொள்வது?-என்று எண்ணும்போது, அச்சம் எழத்தானே செய்யும்.
அடுப்புக்குள் இடும் நெருப்புக்கும், அடுப்புக்குத் தேவை என்பதற்காக கூரையில் செருகிவைக்கும் கொள்ளிக் கட்டைக்கும், வித்தியாசம் இல்லையா?
சர்வாதிகாரம்-என்றவுடன் கொதித்தெழும் போக்கு எத்துணைப் பரவலாகச் சமுதாயத்திலே இருப்பினுங்கூட, இன்று உலகிலே, பல்வேறு நாடுகளிலே, சர்வாதிகாரிகளின் அமுல் இருந்து வருகிறது.
சில சர்வாதிகாரிகள் பத்தாண்டு, இருபதாண்டுகளாகக் கூடப் பீடத்தில் உள்ளனர்.
நாட்டுக்கு வெளியிடத்திலிருந்தோ, உள்ளேயிருந்தோ பேராபத்து ஏற்பட்டுவிடக்கூடும் என்று கிலி கொள்ளும்படி மக்களை ஆக்கி வைத்து<noinclude></noinclude>
c3ux73fe1aqwd2k3hp30d2b5x3vs7sy
1928962
1928458
2026-04-30T09:53:17Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||35}}{{rule}}</noinclude>
தெரியும் உமக்காக என்னென்ன செய்யவேண்டும் என்பது...! என் அறிவாற்றல், உம்மில் எவருக்கும் இல்லை! எனவே, என்னிடம் விட்டு விடுங்கள் எல்லா அலுவல்களையும்; நான் பார்த்துக் கொள்கிறேன், என்று கூறும்போது. தமது உரிமை பறிக்கப்படுகிறது என்ற எண்ணமும், தமது தன்மானம் அழிக்கப்படுகிறது என்ற எரிச்சலும், ஏற்பட்டு விடுகிறது-என்ன தலைக்கனம் இவனுக்கு எல்லாம் தெரியுமாம் இவனுக்கு -ஏதும் அறியோமாம் நாம்! நாமென்ன, இவன் போன்றே ஆறறிவுடையோரல்லவா! ஆற்றல் என்பது இவனொடு நின்றுவிடுவதோ! நாம், வெறும் மரக்கட்டைகளோ!! நாம் வெறும் பிறவிகள்! இவன் ஆளப்பிறந்தவனோ!!-என்றெல்லாம் பேசிடத் தோன்றுகிறது.
அவன் வீரன்!-என்று கூறினால், நான் என்ன கோழையா? என்று கோபித்துக் கேட்டிடச் சொல்கிறது உணர்ச்சி.
அவன் அறிவாளி!-என்று கூறினால், நான் முட்டாள் அல்ல! என்று கொதித்தெழுந்து கூறத் தோன்றுகிறது.
அவ்விதமின்றி, உனக்காக அவன்! உனக்கு வேறு அலுவலிருப் பதால், அவன்! உன் அனுமதி பெற்று, அவன் உன் காரியத்தை, உன் விருப்பமறிந்து, உன் யோசனைப்படி செய்து கொடுக்க, அவன்!-என்று கூறினால், கேட்பதற்குக் களிப்பும் பெருமையும் ஏற்படுகிறது.
'எல்லாம் செய்திடுபவன்' எதைச் செய்திடுவானோ! அவன் செய்திடு வதிலே, எதெது கேடு தருமோ, எண்ணும்போது, அச்சம் ஏற்படுகிறது. எதையும் செய்திடுவோனாகிவிட்ட பிறகு. கேடு பல செய்து, 'இது ஆகுமோ' என்று கேட்டிடின், "யார் நீ இதைக் கேட்க? நானன்றோ காரியமாற்ற வேண்டியவன்! காரணம் காட்டவா, இருக்கிறேன்!'' என்று கொக்கரித்துக் கொடுமை செய்திடின், எதையும் செய்திடும் இடமேறி விட்டவனிடமிருந்து, எப்படித் தப்பித்துக் கொள்வது?-என்று எண்ணும்போது, அச்சம் எழத்தானே செய்யும்.
அடுப்புக்குள் இடும் நெருப்புக்கும், அடுப்புக்குத் தேவை என்பதற்காக கூரையில் செருகிவைக்கும் கொள்ளிக் கட்டைக்கும், வித்தியாசம் இல்லையா?
சர்வாதிகாரம்-என்றவுடன் கொதித்தெழும் போக்கு எத்துணைப் பரவலாகச் சமுதாயத்திலே இருப்பினுங்கூட, இன்று உலகிலே, பல்வேறு நாடுகளிலே, சர்வாதிகாரிகளின் அமுல் இருந்து வருகிறது.
சில சர்வாதிகாரிகள் பத்தாண்டு, இருபதாண்டுகளாகக் கூடப் பீடத்தில் உள்ளனர்.
நாட்டுக்கு வெளியிடத்திலிருந்தோ, உள்ளேயிருந்தோ பேராபத்து ஏற்பட்டுவிடக்கூடும் என்று கிலி கொள்ளும்படி மக்களை ஆக்கி வைத்து<noinclude></noinclude>
hyb3q7n0x9qoauew7713xxeqg7z7y0s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/60
250
641688
1928459
1927711
2026-04-30T05:03:56Z
Rabiyathul
5890
+ மேலடி
1928459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|36||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>36
'திராவிட நாடு' இதழில்
விட்டு, 'எல்லா அதிகாரமும் என்னிடம் இருக்கட்டும். ஆபத்தைப் போக்க' என்று பேசிச் சர்வாதிகாரிகளானோர், 'இனி ஆபத்து இல்லை! சர்வாதிகாரம் வேண்டாம்!' ஜனநாயகம் மலரட்டும்! என்று அறிவிப்பது, மிகமிகக் கடினம்.
ஸ்பெயின் நாட்டிலேயும், போர்ச்சுகல் நாட்டிலேயும், சர்வாதிகாரி களாகிவிட்ட பிரான்கோவும், சலாசடும் என்றென்றும் சர்வாதிகார முறை தான் இருந்திட வேண்டும் என்று, அந்த நாட்டு மக்கள், எண்ணிக் கிடந்திட வேண்டிய முறையில், சூழ்நிலையை உண்டாக்கி வைத்து விட்டனர்.
சர்வாதிகாரம்-ஜனநாயகம் சாதிக்காதவைகளைச் சில வேளைகளில் சாதித்தளிக்கக்கூடும்.
வெளிநாட்டானை விரட்டியும், உள்நாட்டிலே கொடுமையாளரை அடக்கியும் பெறும்வெற்றி, புதிய சமுதாய அமைப்பு. தொழில் வளர்ச்சி, செல்வ வளர்ச்சி என்பன போன்ற வெற்றிகள், ஒளிவிடத்தக்க விதமான ஆட்சி நடத்திடக்கூடும்.
ஆனால், அங்கு ஒன்று அழிக்கப்பட்டுவிடுகிறது-மனிதனின் சுய சிந்தனை. சிந்திக்கும் திறனை இழந்துவிட்ட பிறகு, எது வெற்றி எது வேதனை? எது முற்போக்கு. எது பிற்போக்கு? என்பதைக் கண்டறியும் ஆற்றலும் அற்றுப்போய், அதை எடுத்துக் காட்டக்கூட, ஆட்சியினரை எதிர்பார்த்துக் கிடந்திட வேண்டியவராகின்றனர்.
இட்லரின் ஜெர்மனியில் இந்த நிலைதான் கப்பிக் கொண்டிருந்தது.
இட்லர் பார்த்து, இதுதான் இனிக்கும் என்றால், 'ஆம்' என்று நாட்டினர் அனைவரும், கூறினர்; ஒரு சிலருக்கு, 'கசப்பு' தெரிந்தாலும், அது தமது குற்றம், பொருளின் குற்றமல்ல என்று கருதினர்.
அந்த அளவுக்கு மக்களின் எண்ணத்தைக் கட்டிப்போட்டு வைத்துவிட இட்லரின் முறைகள் மெத்தப் பயன்பட்டன.
இருபத்துநான்கு மணிநேரமும், இட்லரின் பிரச்சார இயந்திரம் பேச்சாளர்- ரேடியோ-பத்திரிகை-கலைத்துறை மக்களுக்கு எண்ணங்களை உருவாக்கித் தந்துகொண்டிருந்தன.
தொடர்ந்து திறமையுடன் இந்தமுறை கையாளப்பட்டு வந்ததால். மக்கள், எதைப்பற்றியும் தாமாக எண்ணிப் பார்த்திட முடியாத நிலையைக் கூடப் பெற்றுவிட்டனர்.
தம்பி! எண்ணிப் பார்ப்பது இயல்பு. அந்தத் திறம் வளரவும் தெளிவும் பயனும் ஏற்படவும், எண்ணத்திலே வளர்ச்சி காணவும், எண்ணிக் கொண்டு மட்டும் இருந்தால் போதாது!<noinclude></noinclude>
qaztet58fmcr5yhbtee9kv688rc34t0
1928963
1928459
2026-04-30T09:54:06Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|36||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
விட்டு, 'எல்லா அதிகாரமும் என்னிடம் இருக்கட்டும். ஆபத்தைப் போக்க' என்று பேசிச் சர்வாதிகாரிகளானோர், 'இனி ஆபத்து இல்லை! சர்வாதிகாரம் வேண்டாம்!' ஜனநாயகம் மலரட்டும்! என்று அறிவிப்பது, மிகமிகக் கடினம்.
ஸ்பெயின் நாட்டிலேயும், போர்ச்சுகல் நாட்டிலேயும், சர்வாதிகாரி களாகிவிட்ட பிரான்கோவும், சலாசடும் என்றென்றும் சர்வாதிகார முறை தான் இருந்திட வேண்டும் என்று, அந்த நாட்டு மக்கள், எண்ணிக் கிடந்திட வேண்டிய முறையில், சூழ்நிலையை உண்டாக்கி வைத்து விட்டனர்.
சர்வாதிகாரம்-ஜனநாயகம் சாதிக்காதவைகளைச் சில வேளைகளில் சாதித்தளிக்கக்கூடும்.
வெளிநாட்டானை விரட்டியும், உள்நாட்டிலே கொடுமையாளரை அடக்கியும் பெறும்வெற்றி, புதிய சமுதாய அமைப்பு. தொழில் வளர்ச்சி, செல்வ வளர்ச்சி என்பன போன்ற வெற்றிகள், ஒளிவிடத்தக்க விதமான ஆட்சி நடத்திடக்கூடும்.
ஆனால், அங்கு ஒன்று அழிக்கப்பட்டுவிடுகிறது-மனிதனின் சுய சிந்தனை. சிந்திக்கும் திறனை இழந்துவிட்ட பிறகு, எது வெற்றி எது வேதனை? எது முற்போக்கு. எது பிற்போக்கு? என்பதைக் கண்டறியும் ஆற்றலும் அற்றுப்போய், அதை எடுத்துக் காட்டக்கூட, ஆட்சியினரை எதிர்பார்த்துக் கிடந்திட வேண்டியவராகின்றனர்.
இட்லரின் ஜெர்மனியில் இந்த நிலைதான் கப்பிக் கொண்டிருந்தது.
இட்லர் பார்த்து, இதுதான் இனிக்கும் என்றால், 'ஆம்' என்று நாட்டினர் அனைவரும், கூறினர்; ஒரு சிலருக்கு, 'கசப்பு' தெரிந்தாலும், அது தமது குற்றம், பொருளின் குற்றமல்ல என்று கருதினர்.
அந்த அளவுக்கு மக்களின் எண்ணத்தைக் கட்டிப்போட்டு வைத்துவிட இட்லரின் முறைகள் மெத்தப் பயன்பட்டன.
இருபத்துநான்கு மணிநேரமும், இட்லரின் பிரச்சார இயந்திரம் பேச்சாளர்- ரேடியோ-பத்திரிகை-கலைத்துறை மக்களுக்கு எண்ணங்களை உருவாக்கித் தந்துகொண்டிருந்தன.
தொடர்ந்து திறமையுடன் இந்தமுறை கையாளப்பட்டு வந்ததால். மக்கள், எதைப்பற்றியும் தாமாக எண்ணிப் பார்த்திட முடியாத நிலையைக் கூடப் பெற்றுவிட்டனர்.
தம்பி! எண்ணிப் பார்ப்பது இயல்பு. அந்தத் திறம் வளரவும் தெளிவும் பயனும் ஏற்படவும், எண்ணத்திலே வளர்ச்சி காணவும், எண்ணிக் கொண்டு மட்டும் இருந்தால் போதாது!<noinclude></noinclude>
ok4h6xqwgqgfliv8q4rkqlns4ogdmga
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/61
250
641689
1928461
1927712
2026-04-30T05:04:27Z
Rabiyathul
5890
+ மேலடி
1928461
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||37}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
37
தாயின் மடியிலே தவழும் குழந்தைக்குக்கூட, ஒரு பொருளைக் காணும்போது, எண்ணம் எழத்தான் செய்யும். பசிக்கிறது என்ற உணர்வு, புசிக்கவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்காமலிராது! குழந்தையின் அழுகைதான் அதற்கான அறிவிப்பு.
ஏற்படும் எண்ணத்தை எடுத்துக்கூற வழிஏற்பட வேண்டும், கூறுவதைக் கேட்டிடத் தன்போன்றோர் இருக்கவேண்டும், அவர்கள் அதைக் கேட்டுத், தமது கருத்தினைக் கூறவேண்டும். இரு கருத்துக் களும் ஒன்றோடொன்று தழுவியோ, மோதியோ, புதுப்புது பொலிவு பெறவேண்டும்-எண்ண வளர்ச்சி அப்போதுதான் ஏற்படும்.
கருத்து வளர்ச்சிக்கு, பேச்சு உரிமை இன்றியமையாதாகிறது. சர்வாதிகார முறை, இந்த உரிமைகளை மறுத்து விடுகிறது. சமுதாயத்துக்கு இதன் பயனாக ஏற்படும் நஷ்டம், சர்வாதிகாரி பெற்றளிக்கும் எத்தகைய வெற்றியும் ஈடுசெய்ய முடியாததாகும்.
உள்ளத்தில் தோன்றுவதை எடுத்துரைப்பதும், உண்மையைக் கண்டறிய ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்வதும், சர்வாதிகாரத்தை ஒழித்துக்கட்டும் அறிவாற்றலைக் கெடுத்துவிடும் என்ற அச்சம். சர்வாதிகாரிகளுக்கு.
எனவே, அவர்கள், தாக்கப்படுமுன் தாக்கிவிடவேண்டும் - முதல் தாக்குதல் நம்முடையதாக இருக்கவேண்டும் - கொடுக்கும் தாக்குதல், அவனைப் பிறகு எழுந்து நின்று, திருப்பித் தாக்கிடும் சக்தியில்லாத வனாக்கிடத் தக்கதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு விடுகின்றனர். கொடுமைபுரியத் துளியும் கூசாத தன்மை சர்வாதிகாரிக்கு ஏற்பட்டுவிடுகிறது.
தம்பி! சட்டம் வேண்டாம், என் சொல் போதும்! வழக்கு மன்றம் வேண்டாம், என்முன் கொண்டுவந்து நிறுத்துங்கள் போதும்! என்று கூறிக் கொடுமை அப்பட்டமாகத் தெரியும்படி நடந்துகொள்ளும் சர்வாதிகாரிகள் உண்டு.
சட்டம், வழக்குமன்றம், வழக்கறிஞர், நீதிபதி, விசாரணை-எனும் முறைகளை அப்படியே வைத்துக்கொண்டு. எல்லாவற்றையும் தன் இச்சைப்படி ஆட்டிவைக்கும் 'முறை'யைப் புகுத்தி, சர்வாதிகாரம் செய்வோரும் உண்டு.
முன்னவரைவிட இரண்டாமவர், மிக்க ஆபத்தை மூட்டுபவராவார்.
"என்ன அண்ணா! ஏதோ வழக்குக் குறித்துக் கூறப்போவதாகச் சென்ற கிழமை கூறினாய்; இப்போது ஏதோ, சாய்வு நாற்காலிக்காரர்<noinclude></noinclude>
547cjgkx1jzj38upvft29o5hnop5i38
1928964
1928461
2026-04-30T09:55:00Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||37}}{{rule}}</noinclude>
தாயின் மடியிலே தவழும் குழந்தைக்குக்கூட, ஒரு பொருளைக் காணும்போது, எண்ணம் எழத்தான் செய்யும். பசிக்கிறது என்ற உணர்வு, புசிக்கவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்காமலிராது! குழந்தையின் அழுகைதான் அதற்கான அறிவிப்பு.
ஏற்படும் எண்ணத்தை எடுத்துக்கூற வழிஏற்பட வேண்டும், கூறுவதைக் கேட்டிடத் தன்போன்றோர் இருக்கவேண்டும், அவர்கள் அதைக் கேட்டுத், தமது கருத்தினைக் கூறவேண்டும். இரு கருத்துக் களும் ஒன்றோடொன்று தழுவியோ, மோதியோ, புதுப்புது பொலிவு பெறவேண்டும்-எண்ண வளர்ச்சி அப்போதுதான் ஏற்படும்.
கருத்து வளர்ச்சிக்கு, பேச்சு உரிமை இன்றியமையாதாகிறது. சர்வாதிகார முறை, இந்த உரிமைகளை மறுத்து விடுகிறது. சமுதாயத்துக்கு இதன் பயனாக ஏற்படும் நஷ்டம், சர்வாதிகாரி பெற்றளிக்கும் எத்தகைய வெற்றியும் ஈடுசெய்ய முடியாததாகும்.
உள்ளத்தில் தோன்றுவதை எடுத்துரைப்பதும், உண்மையைக் கண்டறிய ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்வதும், சர்வாதிகாரத்தை ஒழித்துக்கட்டும் அறிவாற்றலைக் கெடுத்துவிடும் என்ற அச்சம். சர்வாதிகாரிகளுக்கு.
எனவே, அவர்கள், தாக்கப்படுமுன் தாக்கிவிடவேண்டும் - முதல் தாக்குதல் நம்முடையதாக இருக்கவேண்டும் - கொடுக்கும் தாக்குதல், அவனைப் பிறகு எழுந்து நின்று, திருப்பித் தாக்கிடும் சக்தியில்லாத வனாக்கிடத் தக்கதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு விடுகின்றனர். கொடுமைபுரியத் துளியும் கூசாத தன்மை சர்வாதிகாரிக்கு ஏற்பட்டுவிடுகிறது.
தம்பி! சட்டம் வேண்டாம், என் சொல் போதும்! வழக்கு மன்றம் வேண்டாம், என்முன் கொண்டுவந்து நிறுத்துங்கள் போதும்! என்று கூறிக் கொடுமை அப்பட்டமாகத் தெரியும்படி நடந்துகொள்ளும் சர்வாதிகாரிகள் உண்டு.
சட்டம், வழக்குமன்றம், வழக்கறிஞர், நீதிபதி, விசாரணை-எனும் முறைகளை அப்படியே வைத்துக்கொண்டு. எல்லாவற்றையும் தன் இச்சைப்படி ஆட்டிவைக்கும் 'முறை'யைப் புகுத்தி, சர்வாதிகாரம் செய்வோரும் உண்டு.
முன்னவரைவிட இரண்டாமவர், மிக்க ஆபத்தை மூட்டுபவராவார்.
"என்ன அண்ணா! ஏதோ வழக்குக் குறித்துக் கூறப்போவதாகச் சென்ற கிழமை கூறினாய்; இப்போது ஏதோ, சாய்வு நாற்காலிக்காரர்<noinclude></noinclude>
g2mbbmlxitmn8wwrnssz3676lskcjcu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/62
250
641690
1928462
1927713
2026-04-30T05:04:58Z
Rabiyathul
5890
+ மேலடி
1928462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|38||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>38
'திராவிட நாடு ' இதழில்
போல அரசியல் முறைபற்றிய ஆய்வுரை பேசுகிறாயே," என்று கேட்கிறாயா, தம்பி! வழக்கு மன்றம் நோக்கித்தான் நடக்கிறோம். வழியில் இதைக் கூறினால், போகிற இடம் புரியும் என்பதற்காகச் சொன்னேன்.
'இரண்டாமவர்' என்றேனே, அப்படிப்பட்ட 'சர்வாதிகாரி'யின் பிடியில் உள்ள நாடு! அந்த நாட்டு வழக்குமன்றத்திலே, ஒரு வழக்கு நடைபெறுகிறது. காண்போம், வா.
வழக்கு மன்றம், இருக்கவேண்டிய முறைப்படிதான் இருக்கிறது.
பெருநெருப்பு நீதிபதியாகவும், கொடுவாள் போலீஸ் அதிகாரி யாகவும், அரிவாள் வழக்கறிஞராகவும் இல்லை!
சட்ட நுணுக்கம் தெரிந்து, நீண்டகாலம் வழக்காடித் திறம் பெற்ற பழுத்த அனுபவசாலிதான், நீதிபதி இருக்கையில், அமர்ந்திருக்கிறார்.
அவருடைய சட்ட அறிவு நாடு அறிந்ததாகும். பல சிக்கலான வழக்குகளிலே, நல்ல தீர்ப்புத் தந்து, நற்பெயர் எடுத்தவர்.
மற்ற மற்றவரும் அதுபோன்றே-கற்றறிவாளர்.
நீதிபதி அமருகிறார். மற்றவர் வந்தமருகின்றனர். போலீஸ் அதிகாரி நின்றுகொண்டிருக்கிறார்.
நீதி : கைதியைக் கொண்டுவா..
(போலீஸ் அதிகாரி வணக்கம் செலுத்தியபடி)
போலீ : அங்ஙனமே, பெருந்தகையே!
(போலீஸ் அதிகாரி வெளியே செல்கிறார்)
(நீதிபதியின் மேஜைமீதுள்ள டெலிபோன் மணி ஒலிக்கிறது. நீதிபதி டெலிபோனை எடுத்துப்பேசுகிறார்; பேசுபவர் யார் என்று தெரிந்ததும், முகமே மாறிவிடுகிறது; பரபரப்பு அடைகிறார்; எழுந்து நிற்கிறார், மரியாதையுடன். அவர் எழுந்து நிற்பதைக் கண்டு மற்றவர்கள் எழுந்து நிற்கிறார்கள்.)
(தம்பி! நிலைமை புரிகிறதா! அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், சட்டத்தின் துணையையும் தன்அறிவையும் கொண்டு. வழக்கினை விசாரித்து நீதிகண்டு. தீர்ப்பளிக்க வேண்டிய நிலை பெற்றவர் நீதிபதி.
ஆண்டியாயினும் ஆறடுக்கு மாடியில் வாழ் சீமானாயினும், அவர் அலட்சியம் காட்டவோ, அச்சம் கொள்ளவோ கூடாது.<noinclude></noinclude>
s1poonvebc2tztqei2hmr6ula5y914u
1928965
1928462
2026-04-30T09:55:36Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|38||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
போல அரசியல் முறைபற்றிய ஆய்வுரை பேசுகிறாயே," என்று கேட்கிறாயா, தம்பி! வழக்கு மன்றம் நோக்கித்தான் நடக்கிறோம். வழியில் இதைக் கூறினால், போகிற இடம் புரியும் என்பதற்காகச் சொன்னேன்.
'இரண்டாமவர்' என்றேனே, அப்படிப்பட்ட 'சர்வாதிகாரி'யின் பிடியில் உள்ள நாடு! அந்த நாட்டு வழக்குமன்றத்திலே, ஒரு வழக்கு நடைபெறுகிறது. காண்போம், வா.
வழக்கு மன்றம், இருக்கவேண்டிய முறைப்படிதான் இருக்கிறது.
பெருநெருப்பு நீதிபதியாகவும், கொடுவாள் போலீஸ் அதிகாரி யாகவும், அரிவாள் வழக்கறிஞராகவும் இல்லை!
சட்ட நுணுக்கம் தெரிந்து, நீண்டகாலம் வழக்காடித் திறம் பெற்ற பழுத்த அனுபவசாலிதான், நீதிபதி இருக்கையில், அமர்ந்திருக்கிறார்.
அவருடைய சட்ட அறிவு நாடு அறிந்ததாகும். பல சிக்கலான வழக்குகளிலே, நல்ல தீர்ப்புத் தந்து, நற்பெயர் எடுத்தவர்.
மற்ற மற்றவரும் அதுபோன்றே-கற்றறிவாளர்.
நீதிபதி அமருகிறார். மற்றவர் வந்தமருகின்றனர். போலீஸ் அதிகாரி நின்றுகொண்டிருக்கிறார்.
நீதி : கைதியைக் கொண்டுவா..
(போலீஸ் அதிகாரி வணக்கம் செலுத்தியபடி)
போலீ : அங்ஙனமே, பெருந்தகையே!
(போலீஸ் அதிகாரி வெளியே செல்கிறார்)
(நீதிபதியின் மேஜைமீதுள்ள டெலிபோன் மணி ஒலிக்கிறது. நீதிபதி டெலிபோனை எடுத்துப்பேசுகிறார்; பேசுபவர் யார் என்று தெரிந்ததும், முகமே மாறிவிடுகிறது; பரபரப்பு அடைகிறார்; எழுந்து நிற்கிறார், மரியாதையுடன். அவர் எழுந்து நிற்பதைக் கண்டு மற்றவர்கள் எழுந்து நிற்கிறார்கள்.)
(தம்பி! நிலைமை புரிகிறதா! அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், சட்டத்தின் துணையையும் தன்அறிவையும் கொண்டு. வழக்கினை விசாரித்து நீதிகண்டு. தீர்ப்பளிக்க வேண்டிய நிலை பெற்றவர் நீதிபதி.
ஆண்டியாயினும் ஆறடுக்கு மாடியில் வாழ் சீமானாயினும், அவர் அலட்சியம் காட்டவோ, அச்சம் கொள்ளவோ கூடாது.<noinclude></noinclude>
iaxg1xzucg8a3m32sbc35zcolls81ky
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/63
250
641691
1928463
1927714
2026-04-30T05:05:29Z
Rabiyathul
5890
+ மேலடி
1928463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||39}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
39
அவர் அமர்ந்திருக்கும் இடம், அனைவருக்கும் நியாயம் கிடைக்கச் செய்யும் திருக்கோயில்.
அங்கு அமர்ந்திருக்கும் நீதிபதி, டெலிபோன் ஒலி கேட்டதும், பேசுபவர் யார் என்று பார்க்கிறார்; பேசுபவர் எவர் என்று தெரிந்ததும், பீதிஏற்படுகிறது. தேவையற்ற முறையில், பணிந்துவிடுகிறார். வழக்கு மன்றங்கள், என்ன போக்கிலே உள்ளன என்பதை நீதிபதியின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதல்லவா?
பயம் பிடித்தாட்டுகிறது நீதிபதியை. அவரைப் பயங்காட்ட எதிரில் வந்துகூட அல்ல-எங்கோ இருந்துகொண்டு- பணிய வைக்கும் அதிகாரம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார்.
குற்றம் என்ன செய்தான்? யார் கண்டறிந்து கூறினவர்கள்? சான்றுகள் யாவை? இதுகுறித்துச் சட்டம் கூறுவது யாது? குற்றவாளி என்பவனுக்காக வாதாட வந்தவர் என்ன கூறுகிறார்? என்ற இவைபற்றி, நீதிபதி அக்கரை காட்ட வேண்டும். அவருக்கு வழிகாட்ட, சட்டம்! ஆனால், சட்டத்தைப் பார்க்கா முன்பே, வேறோர் 'சக்தி' டெலிபோன்மூலம் பேசுகிறது; நீதிபதி நடுங்கி நிற்கிறார்!)
நீதிபதி
(பணிவாக ) ஆமாம், மேன்மைதங்கிய பிரபுவே, வழக்கு ஆரம்பமாகப் போகிறது. நான் அவன் குற்றவாளி என்று கண்டறிந்து கூறி, அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்- நிச்சயமாக, விரைவில்.
(டெலிபோனைக் கீழே வைக்கிறார். அமருகிறார். மற்றவர்களும் அமருகின்றனர்.)
(கவனித்தாயா. தம்பி! 'வழக்கை விசாரிக்கிறேன்'. குற்றம் செய்தவன் என்பது எடுத்துக்காட்டப்பட்டு விட்டால், தண்டனை தரப்படும் என்று கூறவில்லை.)
குற்றவாளி என்று கூறுகிறேன்! மரண தண்டனை தருகிறேன்!! என்று அறிவிக்கிறார்.
குற்றவாளி,கூண்டுக்குக் கொண்டுவரப்படப் போகிறான். இதற்குள், அவனுக்கு மரண தண்டனை தந்துவிடுவதாக நீதிபதி. வாக்களிக்கிறார்-பணிவுடன்.
ஏன்? டெலிபோனில் பேசியவரின் குறிப்பறிந்து நடந்திட வேண்டும் என்று நீதிபதி உணருகிறார்.
தன்னை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் பெற்ற ஒருவர் இருப்பதை அறிகிறார், அச்சப்படுகிறார்.<noinclude></noinclude>
qfcapsnxqtah5z154m5x1nf0czrgoii
1928966
1928463
2026-04-30T09:56:23Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||39}}{{rule}}</noinclude>
அவர் அமர்ந்திருக்கும் இடம், அனைவருக்கும் நியாயம் கிடைக்கச் செய்யும் திருக்கோயில்.
அங்கு அமர்ந்திருக்கும் நீதிபதி, டெலிபோன் ஒலி கேட்டதும், பேசுபவர் யார் என்று பார்க்கிறார்; பேசுபவர் எவர் என்று தெரிந்ததும், பீதிஏற்படுகிறது. தேவையற்ற முறையில், பணிந்துவிடுகிறார். வழக்கு மன்றங்கள், என்ன போக்கிலே உள்ளன என்பதை நீதிபதியின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதல்லவா?
பயம் பிடித்தாட்டுகிறது நீதிபதியை. அவரைப் பயங்காட்ட எதிரில் வந்துகூட அல்ல-எங்கோ இருந்துகொண்டு- பணிய வைக்கும் அதிகாரம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார்.
குற்றம் என்ன செய்தான்? யார் கண்டறிந்து கூறினவர்கள்? சான்றுகள் யாவை? இதுகுறித்துச் சட்டம் கூறுவது யாது? குற்றவாளி என்பவனுக்காக வாதாட வந்தவர் என்ன கூறுகிறார்? என்ற இவைபற்றி, நீதிபதி அக்கரை காட்ட வேண்டும். அவருக்கு வழிகாட்ட, சட்டம்! ஆனால், சட்டத்தைப் பார்க்கா முன்பே, வேறோர் 'சக்தி' டெலிபோன்மூலம் பேசுகிறது; நீதிபதி நடுங்கி நிற்கிறார்!)
நீதிபதி
(பணிவாக ) ஆமாம், மேன்மைதங்கிய பிரபுவே, வழக்கு ஆரம்பமாகப் போகிறது. நான் அவன் குற்றவாளி என்று கண்டறிந்து கூறி, அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்- நிச்சயமாக, விரைவில்.
(டெலிபோனைக் கீழே வைக்கிறார். அமருகிறார். மற்றவர்களும் அமருகின்றனர்.)
(கவனித்தாயா. தம்பி! 'வழக்கை விசாரிக்கிறேன்'. குற்றம் செய்தவன் என்பது எடுத்துக்காட்டப்பட்டு விட்டால், தண்டனை தரப்படும் என்று கூறவில்லை.)
குற்றவாளி என்று கூறுகிறேன்! மரண தண்டனை தருகிறேன்!! என்று அறிவிக்கிறார்.
குற்றவாளி,கூண்டுக்குக் கொண்டுவரப்படப் போகிறான். இதற்குள், அவனுக்கு மரண தண்டனை தந்துவிடுவதாக நீதிபதி. வாக்களிக்கிறார்-பணிவுடன்.
ஏன்? டெலிபோனில் பேசியவரின் குறிப்பறிந்து நடந்திட வேண்டும் என்று நீதிபதி உணருகிறார்.
தன்னை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் பெற்ற ஒருவர் இருப்பதை அறிகிறார், அச்சப்படுகிறார்.<noinclude></noinclude>
6cipbso2qha8swkvzq5i8ws5xwh5pqy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/64
250
641692
1928464
1927715
2026-04-30T05:06:01Z
Rabiyathul
5890
+ மேலடி
1928464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|40||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>40
'திராவிட நாடு' இதழில்
குறிப்
நீதி
குறி
ஊருக்காக, உலகத்துக்காக, ஒப்புக்கு ஒரு விசாரணை ஏற்பாடாகி இருக்கிறதேயொழிய, குற்றவாளி என்று கொண்டு வேண்டியவன்- என்பதை.
வரப்படுபவன்
கொல்லப்பட
டெலிபோனில் பேசும் 'மேலவர்' தெரிவிக்கிறார்.
(அவர் மனமறிந்து நடப்பதற்கே, இவர் நீதிபதியாக இருக்கிறார். நிலைமை புரிகிறதா!)
(பத்திரிகைக்குக் குறிப்பெடுத்தனுப்புபவர் ஒருவர், அங்கு இருக்கிறார். அவருடைய மேஜைமீது உள்ள டெலிபோன் ஒலி கிளப்புகிறது.) : பெருந்தகையே! டெலிபோனில் பேச அனுமதி தர வேண்டுகிறேன்.
: சரி. பேசலாம்.
: வணக்கம்! வணக்கம்! நான்தான்! குறிப்பெடுப்போன். செய்தியா? நாடு கூர்ந்து கவனித்துவரும் பரபரப்பூட்டும் வழக்குத் தொடங்க இருக்கிறது. மிக்க அநுபவம் பெற்றவர்,ஆற்றல் மிக்கவர், அரசுக்கு ஆருயிர்த் தோழராக இருக்கும் அறிவாளர், வழக்கை நடத்திக், குற்றவாளிக்கு மரண தண்டனை தரத் தீர்மானித்துவிட்டார். விசாரணையா இப்போது ஆரம்பமாகப் போகிறது. குற்றவாளியா? இன்னும் வரவில்லை. போலீஸ் அதிகாரி போயிருக்கிறார். கொண்டு வர. மரண தண்டனை-நிச்சயமாக, நீதி நிலைக்கும்-கட்டாயம். (பத்திரிகைக்கு, வழக்கின் முடிவுபற்றி, வழக்குத் தொடங்கு முன்பே, குறிப்பெடுப்போர், செய்தி அனுப்பிவிடும். வேடிக்கையைக் கவனித்தாயா, தம்பி!)
(போலீஸ் அதிகாரி, குற்றவாளியை இழுத்துக் கொண்டு வருகிறார். குற்றவாளி வருகிறான் என்று தெரிந்ததும், நீதிபதி, சுற்றுமுற்றும் பார்க்கிறார்; பரபரப்படைகிறார்; பயம் கொள்கிறார்.)
போலீ : பெருந்தகையே! இதோ, கைதி.
நீதி
போலீ
நீதி
போலீ
நீதி
: இரு! இரு! பாதுகாப்புப் பலமாக இருக்கிறதல்லவா?
: ஆமாம்,பெருந்தகையே! போலீஸ் படை அதிகப்படுத்தப் பட்டிருக்கிறது. கூரைமீதும் சுவரோரங்களிலும் சுழல் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.
: கைதியின் கரங்களுக்கு விலங்கிட்டீர்களா...?
: ஆமாம்...ஆனால்...
: ஆனால்.... என்ன இழுத்துப் பேசுகிறாய், சொல்! சொல்!<noinclude></noinclude>
oza10chu2hx8eext13r4n1dl3jn7hzb
1928967
1928464
2026-04-30T09:57:16Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|40||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
குறிப்
நீதி
குறி
ஊருக்காக, உலகத்துக்காக, ஒப்புக்கு ஒரு விசாரணை ஏற்பாடாகி இருக்கிறதேயொழிய, குற்றவாளி என்று கொண்டு வேண்டியவன்- என்பதை.
வரப்படுபவன்
கொல்லப்பட
டெலிபோனில் பேசும் 'மேலவர்' தெரிவிக்கிறார்.
(அவர் மனமறிந்து நடப்பதற்கே, இவர் நீதிபதியாக இருக்கிறார். நிலைமை புரிகிறதா!)
(பத்திரிகைக்குக் குறிப்பெடுத்தனுப்புபவர் ஒருவர், அங்கு இருக்கிறார். அவருடைய மேஜைமீது உள்ள டெலிபோன் ஒலி கிளப்புகிறது.) : பெருந்தகையே! டெலிபோனில் பேச அனுமதி தர வேண்டுகிறேன்.
: சரி. பேசலாம்.
: வணக்கம்! வணக்கம்! நான்தான்! குறிப்பெடுப்போன். செய்தியா? நாடு கூர்ந்து கவனித்துவரும் பரபரப்பூட்டும் வழக்குத் தொடங்க இருக்கிறது. மிக்க அநுபவம் பெற்றவர்,ஆற்றல் மிக்கவர், அரசுக்கு ஆருயிர்த் தோழராக இருக்கும் அறிவாளர், வழக்கை நடத்திக், குற்றவாளிக்கு மரண தண்டனை தரத் தீர்மானித்துவிட்டார். விசாரணையா இப்போது ஆரம்பமாகப் போகிறது. குற்றவாளியா? இன்னும் வரவில்லை. போலீஸ் அதிகாரி போயிருக்கிறார். கொண்டு வர. மரண தண்டனை-நிச்சயமாக, நீதி நிலைக்கும்-கட்டாயம். (பத்திரிகைக்கு, வழக்கின் முடிவுபற்றி, வழக்குத் தொடங்கு முன்பே, குறிப்பெடுப்போர், செய்தி அனுப்பிவிடும். வேடிக்கையைக் கவனித்தாயா, தம்பி!)
(போலீஸ் அதிகாரி, குற்றவாளியை இழுத்துக் கொண்டு வருகிறார். குற்றவாளி வருகிறான் என்று தெரிந்ததும், நீதிபதி, சுற்றுமுற்றும் பார்க்கிறார்; பரபரப்படைகிறார்; பயம் கொள்கிறார்.)
போலீ : பெருந்தகையே! இதோ, கைதி.
நீதி
போலீ
நீதி
போலீ
நீதி
: இரு! இரு! பாதுகாப்புப் பலமாக இருக்கிறதல்லவா?
: ஆமாம்,பெருந்தகையே! போலீஸ் படை அதிகப்படுத்தப் பட்டிருக்கிறது. கூரைமீதும் சுவரோரங்களிலும் சுழல் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.
: கைதியின் கரங்களுக்கு விலங்கிட்டீர்களா...?
: ஆமாம்...ஆனால்...
: ஆனால்.... என்ன இழுத்துப் பேசுகிறாய், சொல்! சொல்!<noinclude></noinclude>
t4cgc2mn09ojrlqvscbtq5ckml6txif
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/65
250
641693
1928465
1927716
2026-04-30T05:06:34Z
Rabiyathul
5890
+ மேலடி
1928465
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||41}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
போலீ
நீதி
41
: கரங்களில் விலங்கு மாட்டப்பட்டிருக்கிறது-பலமான விலங்குகள். ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை, விலங்குகள் எப்படியோ, கழன்று நழுவிவந்து விடுகின்றன.
: கண்காணிப்பாக இருக்க வேண்டும்; தெரிகிறதா; அவன் கரத்திலிருந்து விலங்கு கழன்றால், உன் உடலிலிருந்து சிரம் கழன்று கீழே விழும்!
(நீதிபதியின் நடுக்கம்: அவர் பேசக் கேட்டதும் போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுவிடும் ஒடுக்கம் தெரிகிறதல்லவா? போலீஸ் அதிகாரியை நீதிபதி மிரட்டுவதிலே, நகைச்சுவை காண்கின்றனர், வழக்கு மன்றத்திலுள்ளோர் சிரிக்கின்றனர். அவர் காதுபடப் புகழ்கின்றனர். சிக்கலான வழக்கை விசாரிக்கும் போதுகூட, நகைச்சுவையைக் காட்டிடும் திறனை, நமது நீதிபதி இழந்து விடுவதில்லை, என்கிறார், ஒருவர்.
பேரறிவாளரின் இயல்பே, அதுதானே என்று பாராட்டுகிறார். மற்றொருவர்.
ஏதேது. இதை எல்லாம்கூடப் பத்திரிகையிலே வெளியிட்டு விடுவீர்கள் போலிருக்கிறதே என்று தூண்டுகிறார், நீதிபதி- ஆசையைக் கேள்வியாக்கிப் பேசிக் காட்டுகிறார்.
ஆமாம்! பத்திரிகையில் வெளிவரும் என்று வாக்களிக்கிறான் குறிப்பெடுப்போன்.
குற்றவாளி,கூண்டிலே நிறுத்தப்படுகிறான்.
செய்திட
இயலாதவன்
என்பதைத் தோற்றமே காட்டுகிறது. புன்னகை செய்கிறான்.)
நடுத்தர வயதினன் - எந்தக்கேடும்
நீதி
போலீ
நீதி
போலீ
நீதி
போலீ
: குற்றவாளியைச் சோதனை செய்தாகிவிட்டதா? :ஆமாம்....
: எப்போது நடத்தினீர்கள், சோதனை?
: தொடர்ந்து! விடாமல்! மணிக்கு ஒருதடவை வீதம்!
: ஆயுதம் ஏதும் வைத்துக்கொண்டில்லையே... இருந்ததா?
தேடினோம்-கிடைக்கவில்லை.
ஆனால்,
அவனே
கூறுகிறான், ஆயுதம், அவன் தலையில் இருக்கிறதாம்- மண்டைக்குள்!!
(போலீஸ் பக்கத்திலே நின்று காவல்புரிகிறது. கூண்டிலே, குற்றவாளி நிற்கிறான். என்ன நடந்தாலும் கவலையில்லை என்ற போக்கில்.)<noinclude></noinclude>
14t2t0nndmgwop0w2mx7sff2knlmv88
1928968
1928465
2026-04-30T09:58:08Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||41}}{{rule}}</noinclude>
போலீ
நீதி
41
: கரங்களில் விலங்கு மாட்டப்பட்டிருக்கிறது-பலமான விலங்குகள். ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை, விலங்குகள் எப்படியோ, கழன்று நழுவிவந்து விடுகின்றன.
: கண்காணிப்பாக இருக்க வேண்டும்; தெரிகிறதா; அவன் கரத்திலிருந்து விலங்கு கழன்றால், உன் உடலிலிருந்து சிரம் கழன்று கீழே விழும்!
(நீதிபதியின் நடுக்கம்: அவர் பேசக் கேட்டதும் போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுவிடும் ஒடுக்கம் தெரிகிறதல்லவா? போலீஸ் அதிகாரியை நீதிபதி மிரட்டுவதிலே, நகைச்சுவை காண்கின்றனர், வழக்கு மன்றத்திலுள்ளோர் சிரிக்கின்றனர். அவர் காதுபடப் புகழ்கின்றனர். சிக்கலான வழக்கை விசாரிக்கும் போதுகூட, நகைச்சுவையைக் காட்டிடும் திறனை, நமது நீதிபதி இழந்து விடுவதில்லை, என்கிறார், ஒருவர்.
பேரறிவாளரின் இயல்பே, அதுதானே என்று பாராட்டுகிறார். மற்றொருவர்.
ஏதேது. இதை எல்லாம்கூடப் பத்திரிகையிலே வெளியிட்டு விடுவீர்கள் போலிருக்கிறதே என்று தூண்டுகிறார், நீதிபதி- ஆசையைக் கேள்வியாக்கிப் பேசிக் காட்டுகிறார்.
ஆமாம்! பத்திரிகையில் வெளிவரும் என்று வாக்களிக்கிறான் குறிப்பெடுப்போன்.
குற்றவாளி,கூண்டிலே நிறுத்தப்படுகிறான்.
செய்திட
இயலாதவன்
என்பதைத் தோற்றமே காட்டுகிறது. புன்னகை செய்கிறான்.)
நடுத்தர வயதினன் - எந்தக்கேடும்
நீதி
போலீ
நீதி
போலீ
நீதி
போலீ
: குற்றவாளியைச் சோதனை செய்தாகிவிட்டதா? :ஆமாம்....
: எப்போது நடத்தினீர்கள், சோதனை?
: தொடர்ந்து! விடாமல்! மணிக்கு ஒருதடவை வீதம்!
: ஆயுதம் ஏதும் வைத்துக்கொண்டில்லையே... இருந்ததா?
தேடினோம்-கிடைக்கவில்லை.
ஆனால்,
அவனே
கூறுகிறான், ஆயுதம், அவன் தலையில் இருக்கிறதாம்- மண்டைக்குள்!!
(போலீஸ் பக்கத்திலே நின்று காவல்புரிகிறது. கூண்டிலே, குற்றவாளி நிற்கிறான். என்ன நடந்தாலும் கவலையில்லை என்ற போக்கில்.)<noinclude></noinclude>
ggnmk7imls773nwtk0e42qt8qy8hoqq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/66
250
641694
1928466
1927717
2026-04-30T05:07:04Z
Rabiyathul
5890
+ மேலடி
1928466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|42||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>42
குறி
நீதிபதி
'திராவிட நாடு' இதழில்
(குறிப்பெடுப்போன், தன் இதழுக்கு அறிவிக்கிறான்.) : (டெலிபோன் மூலம்) மயிர்க்கூச்செறியும் காட்சி. பேயன், பிடித்திழுத்து வரப்பட்டிருக்கிறான். கூண்டிலே நிற்கிறான் கொடியவன்!! பயங்கரமான தோற்றம், ஆனால் கடமையைக் கலங்காது செய்திடும் நீதிபதி, கைதிக் கூண்டில், தனக்கு மிக அருகாமையில், அந்தக் கொடியோன் இருப்பினும், துளியும் கலங்காது, அமர்ந்திருக்கிறார். அவருடைய அஞ்சா நெஞ்சம் கண்டு அவனி புகழ்கிறது.
வழக்கினைத் தொடுத்திடும் வழக்கறிஞரைப் பார்த்து) இனித் தொடங்கலாம்....
தொடுப் : பெருந்தகையே! இவன்மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், எவ்வளவு கொடியது, ஈனத்தனமானது. ஆபத்தானது, அழிவு தருவது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
நீதி
குற்றம் கொடியதே! அறியாதார் யார்?
தொடுப் : சட்ட நிபுணர் தாங்கள்! நீதியின் காவலர் தாங்கள்,
நீதி
அறியாததும் உண்டோ?
: இவன் செய்த குற்றம்?
தொடுப்: சுயசிந்தனை! தானாகச் சிந்திக்கிறான்!
நீதி
பார்க்கிறான்!
எண்ணிப்
(நீதிபதி கடுங்கோபங்கொள்கிறார். வழக்கு மன்றத்திலிருப்போர். பதறுகிறார்கள். பெண்கள் பீதிஅடைகிறார்கள்; ஆடவர் ஆத்திர மடைகிறார்கள். குற்றவாளியைச் சுட்டுத்தள்ளுவது போலப் பார்க்கிறார். நீதிபதி.)
: சுயசிந்தனையா! உம்! எப்போது, அப்படிச் சிந்திக்கிறான் இந்தச் சண்டாளன்.
தொடுப் : எப்போதும் அதே வேலைதான், இந்த அக்ரமக்காரனுக்கு. வீட்டில்! தொழிற்கூடத்தில்! பத்திரிகை படிக்கும்போது! அதிலே எழுதப்பட்டிருப்பதை நம்பவில்லை-யோசிக்கிறான்- எண்ணிப் பார்க்கிறான்!
நீதி
தொடுப்: அதுமட்டுமல்ல! நமது புனிதத் தலைவர்கள் சொற் பொழிவு மூலம் உபதேசம் செய்கிறார்களே, ஊர் வாழ, உலகு வாழ அப்போதுகூட, இந்த அயோக்கியன் அவர்கள் கூறுவது சரியா, தவறா? என்று யோசிக்கிறான்.
நீதி
: கேட்டீர்களா, கற்றறிந்தோரே! வழக்கினைத் தொடுத்து, விளக்கம் எடுத்துரைக்கும் நண்பர், வம்பு தும்பு பேசுபவர்<noinclude></noinclude>
bvz5za0x75y1b5fec6c0zvdk35mgt85
1928969
1928466
2026-04-30T09:59:11Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|42||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
குறி
நீதிபதி
'
(குறிப்பெடுப்போன், தன் இதழுக்கு அறிவிக்கிறான்.) : (டெலிபோன் மூலம்) மயிர்க்கூச்செறியும் காட்சி. பேயன், பிடித்திழுத்து வரப்பட்டிருக்கிறான். கூண்டிலே நிற்கிறான் கொடியவன்!! பயங்கரமான தோற்றம், ஆனால் கடமையைக் கலங்காது செய்திடும் நீதிபதி, கைதிக் கூண்டில், தனக்கு மிக அருகாமையில், அந்தக் கொடியோன் இருப்பினும், துளியும் கலங்காது, அமர்ந்திருக்கிறார். அவருடைய அஞ்சா நெஞ்சம் கண்டு அவனி புகழ்கிறது.
வழக்கினைத் தொடுத்திடும் வழக்கறிஞரைப் பார்த்து) இனித் தொடங்கலாம்....
தொடுப் : பெருந்தகையே! இவன்மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், எவ்வளவு கொடியது, ஈனத்தனமானது. ஆபத்தானது, அழிவு தருவது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
நீதி
குற்றம் கொடியதே! அறியாதார் யார்?
தொடுப் : சட்ட நிபுணர் தாங்கள்! நீதியின் காவலர் தாங்கள்,
நீதி
அறியாததும் உண்டோ?
: இவன் செய்த குற்றம்?
தொடுப்: சுயசிந்தனை! தானாகச் சிந்திக்கிறான்!
நீதி
பார்க்கிறான்!
எண்ணிப்
(நீதிபதி கடுங்கோபங்கொள்கிறார். வழக்கு மன்றத்திலிருப்போர். பதறுகிறார்கள். பெண்கள் பீதிஅடைகிறார்கள்; ஆடவர் ஆத்திர மடைகிறார்கள். குற்றவாளியைச் சுட்டுத்தள்ளுவது போலப் பார்க்கிறார். நீதிபதி.)
: சுயசிந்தனையா! உம்! எப்போது, அப்படிச் சிந்திக்கிறான் இந்தச் சண்டாளன்.
தொடுப் : எப்போதும் அதே வேலைதான், இந்த அக்ரமக்காரனுக்கு. வீட்டில்! தொழிற்கூடத்தில்! பத்திரிகை படிக்கும்போது! அதிலே எழுதப்பட்டிருப்பதை நம்பவில்லை-யோசிக்கிறான்- எண்ணிப் பார்க்கிறான்!
நீதி
தொடுப்: அதுமட்டுமல்ல! நமது புனிதத் தலைவர்கள் சொற் பொழிவு மூலம் உபதேசம் செய்கிறார்களே, ஊர் வாழ, உலகு வாழ அப்போதுகூட, இந்த அயோக்கியன் அவர்கள் கூறுவது சரியா, தவறா? என்று யோசிக்கிறான்.
நீதி
: கேட்டீர்களா, கற்றறிந்தோரே! வழக்கினைத் தொடுத்து, விளக்கம் எடுத்துரைக்கும் நண்பர், வம்பு தும்பு பேசுபவர்<noinclude></noinclude>
lwxtgsdjrmj97fm1owivqrubj0p54x3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/67
250
641695
1928467
1927718
2026-04-30T05:07:36Z
Rabiyathul
5890
+ மேலடி
1928467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||43}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கைதி
நீதி
கைதி
43
அல்ல-வழக்கறிஞர்-திறமை மிக்கவர். சான்றுகளின்றிப் பேசமாட்டார்! பேச்சினை எவரும் மறுத்திட முடியாது! ஆணித்திறமான பேச்சு. அவர் கூறிவிட்டார். இந்த அற்பன் செய்த குற்றத்தினை. கண் கண்ட கடவுளராம் நமது நாட்டுத்தலைவர்கள். பேசுகிறார்கள்; கேட்டு இன்புற்று நல்வழி நடவாமல், இவன், ஐயம் கொள்கிறான்- அலசிப் பார்க்கிறான்தானாகச் சிந்தித்துப் பார்க்கிறான்- பெரியோர்களே! எத்துணைப் பேய்க்குணம் இவனுக்கு! காலம் இப்படியுமா கெட்டுப் போகவேண்டும். நமக்கு அமைந்துள்ள நல்லாட்சியில், எதைப் பற்றியும் நாமாகவே எண்ணிப் பார்த்து உண்மையை உணர்ந்திடும் தொல்லையைத் துளியும் நமக்குத் தராமல், நமது அரும்பெரும் தலைவர்கள் அயராது உழைத்து, எண்ணங்களைச் சமைத்தெடுத்துச் சுவைபடத் தருகின்றனர்! தொட்டிலிலிருந்து சுடுகாடு வரையில் நமக்குத் துணையாக, நமது தலைவர்கள் தயாரித்துத் தருகிற, 'உபதேசம்' இருக்கிறது. வீட்டிலே இருந்தாலும் அலுவலகம் சென்றாலும், எங்கே இருந்தாலும், துளியும் கஷ்டமின்றி, எல்லாவற்றைப் பற்றியும், நாம் என்ன எண்ண வேண்டுமோ அதனை, ஆட்சியில் அமைந்துள்ள புண்ய புருஷர்கள், தயாரித்துக் கொடுக்கிறார்கள்- ஆனால் இவன், இந்தக் கொடியவன், நம் தலைவர்களின் பேச்சைக் கூடத் துச்சமென்று கருதுகிறான் - சுயமாகச் சிந்திக்கிறான். நாடு செய்த தவத்தின் நற்பயனாகக் கிடைத்துள்ள நமது தலைவர்கள் ஏதேனும் கூறினால், ஆர அமர யோசித்துப் பார்த்தறிந்த உண்மையாகத்தானே இருக்கும்; நமது நல்வாழ்வுக்கானதாகத்தானே இருக்கும்! இருக்கும்! நன்றியுடன் அதனை ஏற்றுக்கொள்ளாமல், இவன், அவர்கள் சொல்வது சரியா, தவறா என்று சிந்திக்கிறான் இவன்!! நமது தலைவர்களைவிட இவனுக்குச் சிந்தனாசக்தி அதிகமோ? எவ்வளவு கடைந்தெடுத்த கயவனாக இருந்தால், இவன், தலைவர்கள் பேச்சைப்பற்றி, ஆராயத் துணிவான்! உம்! இருக்கட்டும்!! ஏ! கெடுமதியாளனே! குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா? மறுக்கிறாயா?
எவ்வளவு
: குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.
: நாட்டுக்கு நாசம் விளைவிக்கும் இந்தத் துரோகத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாய்?
: சுயமாகச் சிந்தித்தேன்-ஒப்புக்கொள்கிறேன். குற்றத்தை.<noinclude></noinclude>
49v72kqi1d5l8rp70e68sez10s9gi3g
1928970
1928467
2026-04-30T09:59:59Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||43}}{{rule}}</noinclude>
கைதி
நீதி
கைதி
43
அல்ல-வழக்கறிஞர்-திறமை மிக்கவர். சான்றுகளின்றிப் பேசமாட்டார்! பேச்சினை எவரும் மறுத்திட முடியாது! ஆணித்திறமான பேச்சு. அவர் கூறிவிட்டார். இந்த அற்பன் செய்த குற்றத்தினை. கண் கண்ட கடவுளராம் நமது நாட்டுத்தலைவர்கள். பேசுகிறார்கள்; கேட்டு இன்புற்று நல்வழி நடவாமல், இவன், ஐயம் கொள்கிறான்- அலசிப் பார்க்கிறான்தானாகச் சிந்தித்துப் பார்க்கிறான்- பெரியோர்களே! எத்துணைப் பேய்க்குணம் இவனுக்கு! காலம் இப்படியுமா கெட்டுப் போகவேண்டும். நமக்கு அமைந்துள்ள நல்லாட்சியில், எதைப் பற்றியும் நாமாகவே எண்ணிப் பார்த்து உண்மையை உணர்ந்திடும் தொல்லையைத் துளியும் நமக்குத் தராமல், நமது அரும்பெரும் தலைவர்கள் அயராது உழைத்து, எண்ணங்களைச் சமைத்தெடுத்துச் சுவைபடத் தருகின்றனர்! தொட்டிலிலிருந்து சுடுகாடு வரையில் நமக்குத் துணையாக, நமது தலைவர்கள் தயாரித்துத் தருகிற, 'உபதேசம்' இருக்கிறது. வீட்டிலே இருந்தாலும் அலுவலகம் சென்றாலும், எங்கே இருந்தாலும், துளியும் கஷ்டமின்றி, எல்லாவற்றைப் பற்றியும், நாம் என்ன எண்ண வேண்டுமோ அதனை, ஆட்சியில் அமைந்துள்ள புண்ய புருஷர்கள், தயாரித்துக் கொடுக்கிறார்கள்- ஆனால் இவன், இந்தக் கொடியவன், நம் தலைவர்களின் பேச்சைக் கூடத் துச்சமென்று கருதுகிறான் - சுயமாகச் சிந்திக்கிறான். நாடு செய்த தவத்தின் நற்பயனாகக் கிடைத்துள்ள நமது தலைவர்கள் ஏதேனும் கூறினால், ஆர அமர யோசித்துப் பார்த்தறிந்த உண்மையாகத்தானே இருக்கும்; நமது நல்வாழ்வுக்கானதாகத்தானே இருக்கும்! இருக்கும்! நன்றியுடன் அதனை ஏற்றுக்கொள்ளாமல், இவன், அவர்கள் சொல்வது சரியா, தவறா என்று சிந்திக்கிறான் இவன்!! நமது தலைவர்களைவிட இவனுக்குச் சிந்தனாசக்தி அதிகமோ? எவ்வளவு கடைந்தெடுத்த கயவனாக இருந்தால், இவன், தலைவர்கள் பேச்சைப்பற்றி, ஆராயத் துணிவான்! உம்! இருக்கட்டும்!! ஏ! கெடுமதியாளனே! குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா? மறுக்கிறாயா?
எவ்வளவு
: குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.
: நாட்டுக்கு நாசம் விளைவிக்கும் இந்தத் துரோகத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாய்?
: சுயமாகச் சிந்தித்தேன்-ஒப்புக்கொள்கிறேன். குற்றத்தை.<noinclude></noinclude>
nqu6zyy00p6avo7u498r8oecnd13ijo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/68
250
641696
1928468
1927719
2026-04-30T05:08:06Z
Rabiyathul
5890
+ மேலடி
1928468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|44||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>44
'திராவிட நாடு' இதழில்
தொடுப்: நமது அரசு நமக்காகச் செய்துள்ளவைகளை மறந்து,
கைதி
துரோகம் செய்கிறாய்?
மறந்ததால் அல்ல! நமக்காக நமது அரசு செய்வதை எல்லாம் கண்டதால், நானாக
உண்மையைக் கண்டறிய விரும்பினேன்.
தொடுப்: சட்டத்தை மீறுகிறாய்-தெரிகிறதா உனக்கு.
எண்ணிப்பார்த்து
கைதி : கூறுகிறீர்களே! தெரிகிறது! ஆனால், எந்தச் சட்டத்தை நான் உடைக்கிறேன்?
தொடுப் : எந்தச் சட்டமா? நாட்டை வாழவைக்க நமது தலைவர்கள் இயற்றிய சட்டம்.
கைதி
நீதி
கைதி
நீதி
கைதி
நீதி
கைதி
நீதி
கைதி
நீதி
: நாட்டை வாழவைக்கவா? வாழ்கிறதா, நாடு! வாழ்க்கையா நாம் நடத்துவது...?
குழப்பமோ இவனுக்கு மனதில்...
: ஆமாம்...குழப்பம்...
: ஏன் ஏற்படுகிறது?
: தானாக ஏற்படவில்லை. ஒருவன் புகுத்துகிறான், என் உள்ளத்தில்...
யார் அவன்? தேவதையோ?
: தேவதை என்றுதான் முதலில் எண்ணிக்கொண்டேன். பிறகு தெரிந்தது, தேவதை அல்ல-பிசாசுக்குட்டி! என்று. : குட்டிப் பிசாசா...?
ஆமாம்! ஓயாமல் என்னைப் பிடித்தாட்டுகிறது அந்தக் குட்டிப் பிசாசு! நான் மேலங்கி அணிந்தோரை மேதாவிகள் என்று எண்ணும்போது, காவி தரித்தோரைக் கடவுளின் அடியவர் என்று நினைக்கும்போது, பத்திரிகைகளை அறிவை அளித்திடும் அற்புதப் பணிபுரியும் திருத்தூதர்கள் என்று கருதும்போது, இந்த குட்டிப்பிசாசு, உள்ளே புகுந்து குடைகிறது! குத்திக் கிளறுகிறது. என் சிந்தனையை! எல்லாம் ஏமாற்று வித்தை, தெரியவில்லையா? என்று கேட்கிறது. புரட்டு விளங்கவில்லையா? எண்ணிப்பார்! என்று கூவித் தூண்டுகிறது.
:உன் கண்ணால் கண்டாயா அந்தக் குட்டிப் பிசாசை..... எங்காவது?<noinclude></noinclude>
n8f43762o924rntl8ksl3eaflczgrl6
1928971
1928468
2026-04-30T10:01:17Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|44||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
தொடுப்: நமது அரசு நமக்காகச் செய்துள்ளவைகளை மறந்து,
கைதி
துரோகம் செய்கிறாய்?
மறந்ததால் அல்ல! நமக்காக நமது அரசு செய்வதை எல்லாம் கண்டதால், நானாக
உண்மையைக் கண்டறிய விரும்பினேன்.
தொடுப்: சட்டத்தை மீறுகிறாய்-தெரிகிறதா உனக்கு.
எண்ணிப்பார்த்து
கைதி : கூறுகிறீர்களே! தெரிகிறது! ஆனால், எந்தச் சட்டத்தை நான் உடைக்கிறேன்?
தொடுப் : எந்தச் சட்டமா? நாட்டை வாழவைக்க நமது தலைவர்கள் இயற்றிய சட்டம்.
கைதி
நீதி
கைதி
நீதி
கைதி
நீதி
கைதி
நீதி
கைதி
நீதி
: நாட்டை வாழவைக்கவா? வாழ்கிறதா, நாடு! வாழ்க்கையா நாம் நடத்துவது...?
குழப்பமோ இவனுக்கு மனதில்...
: ஆமாம்...குழப்பம்...
: ஏன் ஏற்படுகிறது?
: தானாக ஏற்படவில்லை. ஒருவன் புகுத்துகிறான், என் உள்ளத்தில்...
யார் அவன்? தேவதையோ?
: தேவதை என்றுதான் முதலில் எண்ணிக்கொண்டேன். பிறகு தெரிந்தது, தேவதை அல்ல-பிசாசுக்குட்டி! என்று. : குட்டிப் பிசாசா...?
ஆமாம்! ஓயாமல் என்னைப் பிடித்தாட்டுகிறது அந்தக் குட்டிப் பிசாசு! நான் மேலங்கி அணிந்தோரை மேதாவிகள் என்று எண்ணும்போது, காவி தரித்தோரைக் கடவுளின் அடியவர் என்று நினைக்கும்போது, பத்திரிகைகளை அறிவை அளித்திடும் அற்புதப் பணிபுரியும் திருத்தூதர்கள் என்று கருதும்போது, இந்த குட்டிப்பிசாசு, உள்ளே புகுந்து குடைகிறது! குத்திக் கிளறுகிறது. என் சிந்தனையை! எல்லாம் ஏமாற்று வித்தை, தெரியவில்லையா? என்று கேட்கிறது. புரட்டு விளங்கவில்லையா? எண்ணிப்பார்! என்று கூவித் தூண்டுகிறது.
:உன் கண்ணால் கண்டாயா அந்தக் குட்டிப் பிசாசை..... எங்காவது?<noinclude></noinclude>
sv43e3ihsq19umnvmp8x7j4ikakkau6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/69
250
641697
1928469
1927720
2026-04-30T05:08:38Z
Rabiyathul
5890
+ மேலடி
1928469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||45}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
45
கைதி : எல்லா இடத்திலும் காண்கிறேன்! இங்கும் இல்லை என்று எப்படிக் கூறமுடியும்?
(சிரிப்பொலி கேட்கிறது. சிறியதோர் உருவம் வருவது தெரிகிறது. கைதியிடம் சென்று குலவுகிறது.)
(தம்பி! குட்டிப் பிசாசு என் உள்ளத்தில் புகுந்து, என்னைச் சிந்திக்க வைக்கிறது, என்று கைதி கூறியதாக, நூலெழுதியவர் எடுத்துக் காட்டுவதிலே, தனியானதோர், சுவை இருக்கிறது. சிந்தனை என்பதை நம்பிக்கைக்கு நாசம் விளைவிப்பது என்று எதேச்சாதிகாரிகள்-மத ஆதிக்கக்காரர்கள் கூறிவருவர்.
நம்பிக்கை என்பது கடவுள் ஊட்டுவது என்றும், சந்தேகம் சிந்தனை, இவைகள் 'சாத்தான்' ஏவி விடுவன என்றும் தேவாலயத்துக் கோமான்கள் கூறுவர்.
நம்பிக்கை, அடக்க ஒடுக்கத்தைத் தரும்; சிந்தனை துணிவை, தன்னிச்சையாக நடந்திடும் போக்கினை மூட்டிவிடும்-கடவுளின் ஆற்றலை அலைக்கழிக்க சாத்தான் செய்திடும் சூழ்ச்சியாகும். அதைச் சிந்தனை; என்று கூறிவந்தனர். ஜெபமாலையின் துணையைச் செங்கோலுக்கு அளித்து அரசோச்சி வந்தவர்கள். அந்த நிலையைச் சுவைபட எடுத்துக் காட்டத்தான் 'சிந்தித்தான்' என்று குற்றம் சாட்டப்பட்டவன் தன் சிந்தனைக்குப் பொறுப்பு, தானல்ல, ஒரு குட்டிப் பிசாசு என்று குத்திக்காட்டிப் பேசுகிறதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.)
நீதிபதி : வழக்குத் தொடுப்போரே! குற்றவாளியின், மனம் குழம்பிக் கிடப்பதற்கு, மருத்துவர் சான்றளிக்க வருவாரா?
தொடுப்: மருத்துவத் துறைத் தலைவர் வந்திருக்கிறார்; குற்றவாளி மிகப் பயங்கரமான, பைத்தியக்காரன் என்பதை எடுத்துகூற, அனுப்பப்பட்டிருக்கிறார்!
நீதி
நீதி
: சரி! மருத்துவ நிபுணரை அழைத்து வாரும்... (நீதிபதியை டெலிபோன் அழைக்கிறது. பேசி முடித்ததும்.)
: குற்றவாளியே! உன் ஆணவம், அறிவீனம், அரசுக்கு நீ இழைத்த துரோகம், அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு பேசிய மண்டைக் கர்வம், ஆகியவைபற்றிப் பல பக்கங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி, உன் மனைவி மக்களுக்குத் தரப்படும் - படித்திட-பாடம் பெற்றிட இப்போது, எழுத நேரமில்லை. துரிதமாக நடவடிக்கை எடுத்தாகவேண்டும். போலீஸ் காவலர்காள்!<noinclude></noinclude>
2w9rkzd0w8rahuf31ein6eza8zrva1d
1928972
1928469
2026-04-30T10:05:40Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||45}}{{rule}}</noinclude>
கைதி : எல்லா இடத்திலும் காண்கிறேன்! இங்கும் இல்லை என்று எப்படிக் கூறமுடியும்?
(சிரிப்பொலி கேட்கிறது. சிறியதோர் உருவம் வருவது தெரிகிறது. கைதியிடம் சென்று குலவுகிறது.)
(தம்பி! குட்டிப் பிசாசு என் உள்ளத்தில் புகுந்து, என்னைச் சிந்திக்க வைக்கிறது, என்று கைதி கூறியதாக, நூலெழுதியவர் எடுத்துக் காட்டுவதிலே, தனியானதோர், சுவை இருக்கிறது. சிந்தனை என்பதை நம்பிக்கைக்கு நாசம் விளைவிப்பது என்று எதேச்சாதிகாரிகள்-மத ஆதிக்கக்காரர்கள் கூறிவருவர்.
நம்பிக்கை என்பது கடவுள் ஊட்டுவது என்றும், சந்தேகம் சிந்தனை, இவைகள் 'சாத்தான்' ஏவி விடுவன என்றும் தேவாலயத்துக் கோமான்கள் கூறுவர்.
நம்பிக்கை, அடக்க ஒடுக்கத்தைத் தரும்; சிந்தனை துணிவை, தன்னிச்சையாக நடந்திடும் போக்கினை மூட்டிவிடும்-கடவுளின் ஆற்றலை அலைக்கழிக்க சாத்தான் செய்திடும் சூழ்ச்சியாகும். அதைச் சிந்தனை; என்று கூறிவந்தனர். ஜெபமாலையின் துணையைச் செங்கோலுக்கு அளித்து அரசோச்சி வந்தவர்கள். அந்த நிலையைச் சுவைபட எடுத்துக் காட்டத்தான் 'சிந்தித்தான்' என்று குற்றம் சாட்டப்பட்டவன் தன் சிந்தனைக்குப் பொறுப்பு, தானல்ல, ஒரு குட்டிப் பிசாசு என்று குத்திக்காட்டிப் பேசுகிறதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.)
நீதிபதி : வழக்குத் தொடுப்போரே! குற்றவாளியின், மனம் குழம்பிக் கிடப்பதற்கு, மருத்துவர் சான்றளிக்க வருவாரா?
தொடுப்: மருத்துவத் துறைத் தலைவர் வந்திருக்கிறார்; குற்றவாளி மிகப் பயங்கரமான, பைத்தியக்காரன் என்பதை எடுத்துகூற, அனுப்பப்பட்டிருக்கிறார்!
நீதி
நீதி
: சரி! மருத்துவ நிபுணரை அழைத்து வாரும்... (நீதிபதியை டெலிபோன் அழைக்கிறது. பேசி முடித்ததும்.)
: குற்றவாளியே! உன் ஆணவம், அறிவீனம், அரசுக்கு நீ இழைத்த துரோகம், அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு பேசிய மண்டைக் கர்வம், ஆகியவைபற்றிப் பல பக்கங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி, உன் மனைவி மக்களுக்குத் தரப்படும் - படித்திட-பாடம் பெற்றிட இப்போது, எழுத நேரமில்லை. துரிதமாக நடவடிக்கை எடுத்தாகவேண்டும். போலீஸ் காவலர்காள்!<noinclude></noinclude>
6f7tpyikupz4sop013cjbydptd8w9rz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/70
250
641698
1928470
1927721
2026-04-30T05:09:09Z
Rabiyathul
5890
+ மேலடி
1928470
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|46||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>46
'திராவிட நாடு' இதழில்
குற்றவாளியைப் பிடித்திழுத்துச் சென்று தூக்கிலிட்டுக் கொன்றுபோடுங்கள்.
(கைதியைப் போலீஸ் அதிகாரிகள், இழுத்துச் செல்கிறார்கள். வழக்கு முடிந்தது! நீதி வென்றது! குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை! என்ற செய்தியைக் குறிப்பெடுப்போன், இதழுக்கு அறிவித்துவிடுகிறான்.)
தொடுப் : பெருந்தகையே! ஒரு விஷயம்-சிறிய விஷயம்தான்- எனினும், செய்வன திருந்தச் செய் என்பார்களல்லவா? அதற்காக...
நீதி
: செய்யவேண்டியதைச் செய்தாயிற்றே!
தொடுப் : முடிவு சரியானதே! முறையிலே, ஒரு சிறுகுறை! குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கு முன்பு, மருத்துவ நிபுணரின், சான்று பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர் வருவதற்குள்... அவர் வந்திருந்தாலும், முடிவு இதேதான்! சரி! அதனால் என்ன? குற்றவாளி இறந்துபடுகிறான் என்பதால், நாம் முறையிலே குறை வைப்பானேன்! மருத்துவ நிபுணரின் கருத்தினைக் கேட்டறிவோம்-இப்போது.
நீதி
(மருத்துவ நிபுணரின் கருத்தறிந்து, குற்றவாளி, பித்தனா அல்லவா என்பதைக் கண்டறியத்தான், 'முறை வகுத்தார்' நீதிபதி. ஆனால், டெலிபோன் மூலம், அவருக்கு ஆணை பிறந்து விட்டது-ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்க இவ்வளவு நேரம் பிடிக்க வேண்டுமா? என்று கேட்டுவிட்டார், மேலோர். ஆகவேதான், தீர்ப்பைத் தந்துவிட்டு, முறையைக் குறையுள்ள தாக்க வேண்டாம் என்பதற்காக மருத்துவ நிபுணரை அழைத்துப் பேசவைக்கிறார் நீதிபதி.)
தொடுப்: செத்தொழிந்தானே குற்றவாளி, அவன் உயிரோடு இருந்தபோது புத்தி தடுமாறாது இருந்தானா, பித்துப் பிடித்துக் கிடந்தானா?
மருத்
நீதி
மருத்
நீதி
மருத்
நீதி
: பொல்லாத பைத்யக்காரனாகத்தான் இருந்தான்.
மூளை கெட்டுவிட்டிருந்ததோ?
: ஆமாம்..
மூளை, நோயினால் கெட்டுவிட்டதோ?
: ஒரு கிருமி -நச்சுப் பூச்சியினால், மூளை கெட்டுக்கிடந்தது. : அதை, எடுத்துக்காட்ட முடியுமா. ஆதாரத்துடன்<noinclude></noinclude>
aklji7xsxc7plzdqr8yrnqnqxjilmio
1928973
1928470
2026-04-30T10:06:13Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|46||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
குற்றவாளியைப் பிடித்திழுத்துச் சென்று தூக்கிலிட்டுக் கொன்றுபோடுங்கள்.
(கைதியைப் போலீஸ் அதிகாரிகள், இழுத்துச் செல்கிறார்கள். வழக்கு முடிந்தது! நீதி வென்றது! குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை! என்ற செய்தியைக் குறிப்பெடுப்போன், இதழுக்கு அறிவித்துவிடுகிறான்.)
தொடுப் : பெருந்தகையே! ஒரு விஷயம்-சிறிய விஷயம்தான்- எனினும், செய்வன திருந்தச் செய் என்பார்களல்லவா? அதற்காக...
நீதி
: செய்யவேண்டியதைச் செய்தாயிற்றே!
தொடுப் : முடிவு சரியானதே! முறையிலே, ஒரு சிறுகுறை! குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கு முன்பு, மருத்துவ நிபுணரின், சான்று பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர் வருவதற்குள்... அவர் வந்திருந்தாலும், முடிவு இதேதான்! சரி! அதனால் என்ன? குற்றவாளி இறந்துபடுகிறான் என்பதால், நாம் முறையிலே குறை வைப்பானேன்! மருத்துவ நிபுணரின் கருத்தினைக் கேட்டறிவோம்-இப்போது.
நீதி
(மருத்துவ நிபுணரின் கருத்தறிந்து, குற்றவாளி, பித்தனா அல்லவா என்பதைக் கண்டறியத்தான், 'முறை வகுத்தார்' நீதிபதி. ஆனால், டெலிபோன் மூலம், அவருக்கு ஆணை பிறந்து விட்டது-ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்க இவ்வளவு நேரம் பிடிக்க வேண்டுமா? என்று கேட்டுவிட்டார், மேலோர். ஆகவேதான், தீர்ப்பைத் தந்துவிட்டு, முறையைக் குறையுள்ள தாக்க வேண்டாம் என்பதற்காக மருத்துவ நிபுணரை அழைத்துப் பேசவைக்கிறார் நீதிபதி.)
தொடுப்: செத்தொழிந்தானே குற்றவாளி, அவன் உயிரோடு இருந்தபோது புத்தி தடுமாறாது இருந்தானா, பித்துப் பிடித்துக் கிடந்தானா?
மருத்
நீதி
மருத்
நீதி
மருத்
நீதி
: பொல்லாத பைத்யக்காரனாகத்தான் இருந்தான்.
மூளை கெட்டுவிட்டிருந்ததோ?
: ஆமாம்..
மூளை, நோயினால் கெட்டுவிட்டதோ?
: ஒரு கிருமி -நச்சுப் பூச்சியினால், மூளை கெட்டுக்கிடந்தது. : அதை, எடுத்துக்காட்ட முடியுமா. ஆதாரத்துடன்<noinclude></noinclude>
1cwf7emh8p5e0h6j0k85c8b1po68qac
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/71
250
641699
1928471
1927722
2026-04-30T05:09:39Z
Rabiyathul
5890
+ மேலடி
1928471
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||47}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
மருத்
47
: ஆதாரம் அப்பழுக்கின்றி இருக்கிறது. செத்தொழிந்தானே, அவனுடைய மூளையைக் கெடுத்த, அந்த நஞ்சுப் பூச்சி, புத்தம் புதியதல்ல. அது, இக்காலத்தைவிட, ஆன்றோர்கள் காலத்தில், மிக அதிக அளவிலே இருந்ததுண்டு. பழம் பெரும் நகரான ஏதன்சில், இந்தப் பூச்சிகள் ஏராளமாகக் கிடந்தன! பாலஸ்தீன் நகரிலே கூட! ஐரோப்பிய பூபாகத்தில், இந்தப் பூச்சியைக் கசக்கியும் நசுக்கியும் வைத்தனர். முன்பு இந்த அளவுக்கு, அவைகளின் தொல்லை இப்போது கிடையாது. கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
தொடுப்: அந்த நஞ்சுப் பூச்சி தீண்டி நோய்கண்டு விட்டால். நோய் என்றென்றும் போகாதோ?
மருத் : ஒருக்காலும், நோய் போகாது.
தொடுப்: நோயின் குறிகள் யாவை?
மருத் : கண்களிலே புத்தொளி, சுறுசுறுப்பான நடவடிக்கை, எளிய வாழ்க்கை, அச்சமற்ற போக்கு, சுகபோகத்தில் பற்று அற்ற நிலை.
தொடுத்: கொல்லப்பட்டானே, அவனிடம் இந்தக் குறிகள் கண்டீரா? : அதை ஏன் கேட்கிறீர்கள்! நோய், முற்றிப் போன நிலை அல்லவா, அவனுக்கு.
மருத்
நீதி
மருத்
நீதி
மரு
அப்படியானால், அந்த
நோயாளி கொல்லப்பட்டது. சமூகத்துக்கு மிகப்பெரிய நலன் தரும் செயல்-அல்லவா? : ஐயமென்ன!! ஐயமென்ன!!
(குற்றவாளியைக் கொல்லப் பார்க்கிறார்கள்! அவனைச் சாகடிக்க முடியவில்லை. ஓடோடி வந்து, நீதிபதியிடம் கூறுகிறார்கள். அவர் பதறுகிறார். ஆணையிடுகிறார்! ஆர்ப்பரிக் கிறார். வெட்டு! குத்து! கொளுத்து! பிய்த்தெறி! எதையோ, செய்! ஆனால் அவன் சாகவேண்டும்! என் தீர்ப்பு நிறை வேற்றப்பட வேண்டும்! என்று கூச்சலிடுகிறார். காவலர், வெளியே செல்கின்றனர்.)
: (கிலிகொண்ட நிலையில்) மருத்துவ நிபுணரே! இந்த நோய். தொத்திக்கொள்ளக் கூடியதோ?
: பொல்லாத தொத்து நோய்! ஏதன்ஸ் நகரிலிருந்து. இந்தநோய், பரவிப் பரவிப் பரவி, ஐரோப்பிய பூபாகத்தையே கப்பிக்கொண்டது. நமது நாகரிக நகர்களில், மாற்று மருந்து களை, ஆட்சியாளர் தயாரித்து அளிப்பதால், நோய் பரவுவது தடுக்கப்பட்டு வருகிறது.<noinclude></noinclude>
ri0pkb948w01haaw8ufwhzmx3h2sgb0
1928974
1928471
2026-04-30T10:06:45Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||47}}{{rule}}</noinclude>
மருத்
47
: ஆதாரம் அப்பழுக்கின்றி இருக்கிறது. செத்தொழிந்தானே, அவனுடைய மூளையைக் கெடுத்த, அந்த நஞ்சுப் பூச்சி, புத்தம் புதியதல்ல. அது, இக்காலத்தைவிட, ஆன்றோர்கள் காலத்தில், மிக அதிக அளவிலே இருந்ததுண்டு. பழம் பெரும் நகரான ஏதன்சில், இந்தப் பூச்சிகள் ஏராளமாகக் கிடந்தன! பாலஸ்தீன் நகரிலே கூட! ஐரோப்பிய பூபாகத்தில், இந்தப் பூச்சியைக் கசக்கியும் நசுக்கியும் வைத்தனர். முன்பு இந்த அளவுக்கு, அவைகளின் தொல்லை இப்போது கிடையாது. கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
தொடுப்: அந்த நஞ்சுப் பூச்சி தீண்டி நோய்கண்டு விட்டால். நோய் என்றென்றும் போகாதோ?
மருத் : ஒருக்காலும், நோய் போகாது.
தொடுப்: நோயின் குறிகள் யாவை?
மருத் : கண்களிலே புத்தொளி, சுறுசுறுப்பான நடவடிக்கை, எளிய வாழ்க்கை, அச்சமற்ற போக்கு, சுகபோகத்தில் பற்று அற்ற நிலை.
தொடுத்: கொல்லப்பட்டானே, அவனிடம் இந்தக் குறிகள் கண்டீரா? : அதை ஏன் கேட்கிறீர்கள்! நோய், முற்றிப் போன நிலை அல்லவா, அவனுக்கு.
மருத்
நீதி
மருத்
நீதி
மரு
அப்படியானால், அந்த
நோயாளி கொல்லப்பட்டது. சமூகத்துக்கு மிகப்பெரிய நலன் தரும் செயல்-அல்லவா? : ஐயமென்ன!! ஐயமென்ன!!
(குற்றவாளியைக் கொல்லப் பார்க்கிறார்கள்! அவனைச் சாகடிக்க முடியவில்லை. ஓடோடி வந்து, நீதிபதியிடம் கூறுகிறார்கள். அவர் பதறுகிறார். ஆணையிடுகிறார்! ஆர்ப்பரிக் கிறார். வெட்டு! குத்து! கொளுத்து! பிய்த்தெறி! எதையோ, செய்! ஆனால் அவன் சாகவேண்டும்! என் தீர்ப்பு நிறை வேற்றப்பட வேண்டும்! என்று கூச்சலிடுகிறார். காவலர், வெளியே செல்கின்றனர்.)
: (கிலிகொண்ட நிலையில்) மருத்துவ நிபுணரே! இந்த நோய். தொத்திக்கொள்ளக் கூடியதோ?
: பொல்லாத தொத்து நோய்! ஏதன்ஸ் நகரிலிருந்து. இந்தநோய், பரவிப் பரவிப் பரவி, ஐரோப்பிய பூபாகத்தையே கப்பிக்கொண்டது. நமது நாகரிக நகர்களில், மாற்று மருந்து களை, ஆட்சியாளர் தயாரித்து அளிப்பதால், நோய் பரவுவது தடுக்கப்பட்டு வருகிறது.<noinclude></noinclude>
q1ycbk2qc3g3rqs93g5axsuicvkfgxi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/72
250
641700
1928472
1927723
2026-04-30T05:10:10Z
Rabiyathul
5890
+ மேலடி
1928472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|48||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>48
நீதி
மரு
நீதி
மரு
நீதி
மரு
நீதி
மரு
'திராவிட நாடு' இதழில்
: கிடக்கட்டும். குற்றவாளி இங்கு வந்திருந்தானே-தொத்து நோய் என்கிறீரே-நம்மைப் பிடித்துக் கொண்டிருக்குமோ? : இருக்கும்.
: அவன் உயிருடன் இருந்தால்தானே. நோய் தொத்திக் கொள்ளும். அவன்தான் செத்தானே!
: ஐயோ! ஆபத்து அப்போதுதான் அதிகம். அப்படிப் பட்டவர்களின் சக்தி உயிரோடு இருந்தபோது இருப்பதைக் காட்டிலும், செத்தபிறகு, அந்தச் சக்தி பலமடங்கு அதிகமாகிவிடும்.
: நோயை நீக்க, வழியே இல்லையா ?
: இருக்கிறதே! தாங்கள் கண்டவழி! சாகடிப்பது!
: என்ன, மருத்துவ நிபுணரே! ஒரு தினுசாகப் பேசுகிறீர். உண்மையை உரைக்கிறேன்! பெருந்தகையே! என்னை அந்த நோய் தொத்திக்கொண்டது!
தம்பி மருத்துவ நிபுணருக்கு. தன்னை வரவழைத்துக் கேட்டு, உண்மை என்ன என்று கண்டறியாமலே, குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை தந்ததால் மனம், கொதித்திருக்கிறது.
ப
சட்டத்தையும் ஒரு பக்கம் ஏடுகளாக்கி வைத்துக் கொண்டு, படுகொலையை நீதிபதி செய்கிறாரே! ஆட்சி இதனை அல்லவா, முறையாக்கி வைத்திருக்கிறது, என்று எண்ணுகிறார்-அவர் உள்ளத்தில் உறங்கிக் கிடந்த, நேர்மை எழுந்து நின்று, அவரை ஆண்மையாளராக்கி விடுகிறது. அஞ்சாது உண்மை பேசுகிறார். இறந்தவன் மூளையைக் கெடுத்தது, ஒரு நச்சுப் பூச்சி-அது கிரேக்க நாட்டில் ஏதன்ஸ் நகரிலே நிரம்பி இருந்தது என்று மருத்துவர் கூறுவதன், உட்பொருள், கொடுங் கோலர் செய்யக்கூடிய கொடுமைகளுக்கு அஞ்சாமல், நெஞ்சுரத்துடன் சிந்தனையாளர், ஏதன்ஸ் நகரில் நிரம்ப இருந்தனர்-அவனி எங்கும் அறிவு பரப்பினர்-சர்வாதிகாரிகளின் காலத்திலேதான், சிந்தனையைச் சாகடிக்க முயற்சிக்கிறார்கள் - அதுவும் நடவாது என்பதாகும்.
சிந்தனையாளர், கொடுங்கோலரின் சீற்றத்தால் தாக்கப்படுவது காணும்போது, எவருக்கும் அவர்பால் பற்று ஏற்பட்டு விடும்- சிந்தனையாளர் ஆகிவிடுவர், என்ற கருத்தை விளக்கத்தான். குற்றவாளிக்கு இருந்தது தொத்துநோய், என்று கூறினார்.
அநியாயமாக ஒருவனை அழிக்கிறீர்கள், அவன் ஆன்றோர் காலமுதல் அழிந்துபடாமல் இருந்துவரும் 'சிந்தனை'ச் செல்வத்தைப்<noinclude></noinclude>
doyh51sq8fb3tjwvp7y6wjz4621dqyj
1928975
1928472
2026-04-30T10:07:31Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|48||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நீதி
மரு
நீதி
மரு
நீதி
மரு
நீதி
மரு
: கிடக்கட்டும். குற்றவாளி இங்கு வந்திருந்தானே-தொத்து நோய் என்கிறீரே-நம்மைப் பிடித்துக் கொண்டிருக்குமோ? : இருக்கும்.
: அவன் உயிருடன் இருந்தால்தானே. நோய் தொத்திக் கொள்ளும். அவன்தான் செத்தானே!
: ஐயோ! ஆபத்து அப்போதுதான் அதிகம். அப்படிப் பட்டவர்களின் சக்தி உயிரோடு இருந்தபோது இருப்பதைக் காட்டிலும், செத்தபிறகு, அந்தச் சக்தி பலமடங்கு அதிகமாகிவிடும்.
: நோயை நீக்க, வழியே இல்லையா ?
: இருக்கிறதே! தாங்கள் கண்டவழி! சாகடிப்பது!
: என்ன, மருத்துவ நிபுணரே! ஒரு தினுசாகப் பேசுகிறீர். உண்மையை உரைக்கிறேன்! பெருந்தகையே! என்னை அந்த நோய் தொத்திக்கொண்டது!
தம்பி மருத்துவ நிபுணருக்கு. தன்னை வரவழைத்துக் கேட்டு, உண்மை என்ன என்று கண்டறியாமலே, குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை தந்ததால் மனம், கொதித்திருக்கிறது.
ப
சட்டத்தையும் ஒரு பக்கம் ஏடுகளாக்கி வைத்துக் கொண்டு, படுகொலையை நீதிபதி செய்கிறாரே! ஆட்சி இதனை அல்லவா, முறையாக்கி வைத்திருக்கிறது, என்று எண்ணுகிறார்-அவர் உள்ளத்தில் உறங்கிக் கிடந்த, நேர்மை எழுந்து நின்று, அவரை ஆண்மையாளராக்கி விடுகிறது. அஞ்சாது உண்மை பேசுகிறார். இறந்தவன் மூளையைக் கெடுத்தது, ஒரு நச்சுப் பூச்சி-அது கிரேக்க நாட்டில் ஏதன்ஸ் நகரிலே நிரம்பி இருந்தது என்று மருத்துவர் கூறுவதன், உட்பொருள், கொடுங் கோலர் செய்யக்கூடிய கொடுமைகளுக்கு அஞ்சாமல், நெஞ்சுரத்துடன் சிந்தனையாளர், ஏதன்ஸ் நகரில் நிரம்ப இருந்தனர்-அவனி எங்கும் அறிவு பரப்பினர்-சர்வாதிகாரிகளின் காலத்திலேதான், சிந்தனையைச் சாகடிக்க முயற்சிக்கிறார்கள் - அதுவும் நடவாது என்பதாகும்.
சிந்தனையாளர், கொடுங்கோலரின் சீற்றத்தால் தாக்கப்படுவது காணும்போது, எவருக்கும் அவர்பால் பற்று ஏற்பட்டு விடும்- சிந்தனையாளர் ஆகிவிடுவர், என்ற கருத்தை விளக்கத்தான். குற்றவாளிக்கு இருந்தது தொத்துநோய், என்று கூறினார்.
அநியாயமாக ஒருவனை அழிக்கிறீர்கள், அவன் ஆன்றோர் காலமுதல் அழிந்துபடாமல் இருந்துவரும் 'சிந்தனை'ச் செல்வத்தைப்<noinclude></noinclude>
ps9oh1v511usrbxczi579omdcgxxhbz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/73
250
641701
1928473
1927724
2026-04-30T05:10:41Z
Rabiyathul
5890
+ மேலடி
1928473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||49}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
49
பறிகொடுக்க மறுத்த காரணத்தால்-அவன் சாகத் துணிகிறான், சிந்தனையை இழக்க மறுக்கிறான்-அவனன்றோ ஆண் மகன்-அவன்போல் அனைவரும் இருந்திட வேண்டும்-இதோ இனி நான், அவன் போலத்தான்! என்ற கருத்தை விளக்கத்தான், அந்த மருத்துவ நிபுணர். என்னையும் அந்த நோய் தொட்டுவிட்டது என்று கூறினார்.
பதறிய நீதிபதி, மருத்துவ நிபுணரைக் கைது செய்யும்படி, போலீஸ் அதிகாரிக்குக் கட்டளையிடுகிறார். அவனும் மறுத்து விடுகிறான்! தொத்துநோய்!!
வழக்குத் தொடுப்போனைக் கூவி அழைக்கிறார் நீதிபதி. அவன் மட்டும், என்ன!! நாம் நடத்தியது வழக்கு விசாரணை அல்ல! கேலிக் கூத்து! நான் ஓர் சுயநலக்காரன்-போலீஸ் காவலர், விசை கொடுத்தால் ஆடும் பதுமை - செய்தி தருவோன் பொய்யன் புரட்டன்-தாங்களோ, ஓர் கோமாளி!
பிடியுங்கள்! அடையுங்கள் சிறையில்! கொல்லுங்கள் துரோகியை!- என்று ஆத்திரத்துடன், நீதிபதி அலறுகிறார்.
சட்டம் படித்தேன், பகலும் இரவும்! எதற்கு, பாதகம் புரிந்திட! படுகொலைக்கு உடந்தையாக இருக்க!! உண்மையை உணருகிறேன். உயிர் பெரிதல்ல! வாழ்க்கை பெரிதல்ல! நாம் இப்போது வாழ்ந்து கொண்டும் இல்லை!-என்று உருகிப் பேசுகிறான், வழக்குத் தொடுத்தோன்.
பொய்! பொய்! நான் இதுவரை, வெளியிடச் சொல்லி அனுப்பிய அவ்வளவு செய்தியும் அண்டப்புளுகு. நாங்கள் மனிதர்களே அல்ல! மானமற்றவர்கள்! மதியற்றவர்கள்! கதியற்றவர்கள்! இங்கு ஒரே ஒரு மனிதன் இருந்தான்-குற்றவாளிக் கூண்டில்! ஒரே ஒரு விடுதலை வீரன் இருந்தான்-கரங்களில் விலங்குகள் பூட்டப்பட்டு! மற்றவர் அனைவரும் மாமிசப் பிண்டங்கள்! மனிதக் கழுகுகள்!
இவ்விதமெல்லாம் செய்தி தருகிறான், இதழுக்கு - நோய் முற்றி விட்ட நிலை அவனுக்கு!
நீதிபதிக்கும், இலேசாக நோய் பிடித்துவிடும் போலாகிறது.
ஆனால், டெலிபோன் ஒலி கிளம்புகிறது! 'மேலவர்' பேசுகிறார்- நீதிபதி பதறுகிறார்.
“நச்சுப்பூச்சி தீண்டியதால், இங்கு அனைவருக்கும் திடீர் என்று நோய் கண்டுவிட்டது. இப்போது பரவாயில்லை. இதோ தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்!" என்று கூறிவிட்டு, மற்றவர்களை அழைக்கிறார்.<noinclude></noinclude>
nmzk36axmihmrel72hnfj5wa2l3u9ml
1928976
1928473
2026-04-30T10:08:19Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||49}}{{rule}}</noinclude>பறிகொடுக்க மறுத்த காரணத்தால்-அவன் சாகத் துணிகிறான், சிந்தனையை இழக்க மறுக்கிறான்-அவனன்றோ ஆண் மகன்-அவன்போல் அனைவரும் இருந்திட வேண்டும்-இதோ இனி நான், அவன் போலத்தான்! என்ற கருத்தை விளக்கத்தான், அந்த மருத்துவ நிபுணர். என்னையும் அந்த நோய் தொட்டுவிட்டது என்று கூறினார்.
பதறிய நீதிபதி, மருத்துவ நிபுணரைக் கைது செய்யும்படி, போலீஸ் அதிகாரிக்குக் கட்டளையிடுகிறார். அவனும் மறுத்து விடுகிறான்! தொத்துநோய்!!
வழக்குத் தொடுப்போனைக் கூவி அழைக்கிறார் நீதிபதி. அவன் மட்டும், என்ன!! நாம் நடத்தியது வழக்கு விசாரணை அல்ல! கேலிக் கூத்து! நான் ஓர் சுயநலக்காரன்-போலீஸ் காவலர், விசை கொடுத்தால் ஆடும் பதுமை - செய்தி தருவோன் பொய்யன் புரட்டன்-தாங்களோ, ஓர் கோமாளி!
பிடியுங்கள்! அடையுங்கள் சிறையில்! கொல்லுங்கள் துரோகியை!- என்று ஆத்திரத்துடன், நீதிபதி அலறுகிறார்.
சட்டம் படித்தேன், பகலும் இரவும்! எதற்கு, பாதகம் புரிந்திட! படுகொலைக்கு உடந்தையாக இருக்க!! உண்மையை உணருகிறேன். உயிர் பெரிதல்ல! வாழ்க்கை பெரிதல்ல! நாம் இப்போது வாழ்ந்து கொண்டும் இல்லை!-என்று உருகிப் பேசுகிறான், வழக்குத் தொடுத்தோன்.
பொய்! பொய்! நான் இதுவரை, வெளியிடச் சொல்லி அனுப்பிய அவ்வளவு செய்தியும் அண்டப்புளுகு. நாங்கள் மனிதர்களே அல்ல! மானமற்றவர்கள்! மதியற்றவர்கள்! கதியற்றவர்கள்! இங்கு ஒரே ஒரு மனிதன் இருந்தான்-குற்றவாளிக் கூண்டில்! ஒரே ஒரு விடுதலை வீரன் இருந்தான்-கரங்களில் விலங்குகள் பூட்டப்பட்டு! மற்றவர் அனைவரும் மாமிசப் பிண்டங்கள்! மனிதக் கழுகுகள்!
இவ்விதமெல்லாம் செய்தி தருகிறான், இதழுக்கு - நோய் முற்றி விட்ட நிலை அவனுக்கு!
நீதிபதிக்கும், இலேசாக நோய் பிடித்துவிடும் போலாகிறது.
ஆனால், டெலிபோன் ஒலி கிளம்புகிறது! 'மேலவர்' பேசுகிறார்- நீதிபதி பதறுகிறார்.
“நச்சுப்பூச்சி தீண்டியதால், இங்கு அனைவருக்கும் திடீர் என்று நோய் கண்டுவிட்டது. இப்போது பரவாயில்லை. இதோ தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்!" என்று கூறிவிட்டு, மற்றவர்களை அழைக்கிறார்.<noinclude></noinclude>
s9ap4ftnshu9diwrm457afussqh7lh5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/74
250
641702
1928474
1927725
2026-04-30T05:11:12Z
Rabiyathul
5890
+ மேலடி
1928474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|50||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>50
'திராவிட நாடு' இதழில்
"பிள்ளை குட்டிகளைக் கவனியுங்கள்! பிழைப்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்! மேலவர் மெத்தக் கோபத்துடன் இருக்கிறார். இடிமுழக்கம் போலிருந்தது அவர் பேச்சு. எந்த நேரத்திலே ஆபத்து வருமோ, தெரியவில்லை"
பிசாசு!
நீதிபதி பீதிகொண்டது போலவே, மற்றவர்களும் பீதி அடைகிறார்கள். குட்டிப் பிசாசும் கொல்லப்பட முடியாதவனும் கூடுகின்றனர். வழக்கு மன்றத்திலிருந்தோர், வதைபடுவதைக் காட்டுகிறது குட்டிப்
நடைப்பிணங்களைப் பார்! நடுங்கிக்கிடக்கும் பேர்வழிகளைப் பார்! நத்திப் பிழைத்திடும் சிற்றினத்தைப் பார்!-என்றெல்லாம் கூறிக் கேலி செய்கிறது. குட்டிப் பிசாசு!
"இவர் போன்றார்தானே, ஆட்சி மன்றங்களிலே மிகப் பெரும் பாலோராக உள்ளனர்" என்று கேட்கிறான், மரண தண்டனை பெற்றும், உயிர் இழக்காதவன்.
"இவர்கள் இப்படியேதான் இருப்பார்களா? என்று கேட்கிறான்" சிந்தித்தவன்.
ஆமாம்! என்று பதிலளிக்கிறான், சிந்திக்கச் செய்தவன்.
எப்போதும் இப்படியேதானா? என்று கேட்கிறான் சிந்தனையாளன்.
நெடுங்காலத்துக்கு இப்படித்தான்! நடைப்பிணங்கள் மனிதத் தன்மை பெறுவது மிகக் கடினமல்லவா? என்று கூறிச் சிரிக்கிறான், சிந்திக்க வைத்தவன்.
நீதிபதியின் இருக்கையில் அமருகிறான், முன்பு குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டவன்!!
தம்பி! சர்வாதிகாரிகள், நீதிமன்றத்தை எப்படிக் கேலிக் கூத்தாக்கு வார்கள் என்பது மட்டுமல்ல, நாடகக் கருத்து-எப்படிப்பட்ட மோசமான சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் ஒருவர் இருவராகிலும் துணிந்து 'சுயசிந்தனை' செய்து, அதன் காரணமாகக் கொடுமைப்படுத்தப் பட்டாலும் தாங்கிக்கொள்வர் என்று பேருண்மையையும், நாடகம் விளக்கிக் காட்டுகிறது.
கொடுமைக்கு அஞ்சாமல் ஒருவன், விடுதலை வீரனாகத் திகழ்ந்தால், முன்பு மரக்கட்டைகள் போலிருந்தோரும் உணர்ச்சி பெற்று, உரிமைக்காகப் போரிடும் வீரராவர் என்பதும், நாம் பெற வேண்டிய பாடம்.<noinclude></noinclude>
kd1a48rviby082yeno24ay7zzq6w4dz
1928977
1928474
2026-04-30T10:08:53Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|50||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
"பிள்ளை குட்டிகளைக் கவனியுங்கள்! பிழைப்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்! மேலவர் மெத்தக் கோபத்துடன் இருக்கிறார். இடிமுழக்கம் போலிருந்தது அவர் பேச்சு. எந்த நேரத்திலே ஆபத்து வருமோ, தெரியவில்லை"
பிசாசு!
நீதிபதி பீதிகொண்டது போலவே, மற்றவர்களும் பீதி அடைகிறார்கள். குட்டிப் பிசாசும் கொல்லப்பட முடியாதவனும் கூடுகின்றனர். வழக்கு மன்றத்திலிருந்தோர், வதைபடுவதைக் காட்டுகிறது குட்டிப்
நடைப்பிணங்களைப் பார்! நடுங்கிக்கிடக்கும் பேர்வழிகளைப் பார்! நத்திப் பிழைத்திடும் சிற்றினத்தைப் பார்!-என்றெல்லாம் கூறிக் கேலி செய்கிறது. குட்டிப் பிசாசு!
"இவர் போன்றார்தானே, ஆட்சி மன்றங்களிலே மிகப் பெரும் பாலோராக உள்ளனர்" என்று கேட்கிறான், மரண தண்டனை பெற்றும், உயிர் இழக்காதவன்.
"இவர்கள் இப்படியேதான் இருப்பார்களா? என்று கேட்கிறான்" சிந்தித்தவன்.
ஆமாம்! என்று பதிலளிக்கிறான், சிந்திக்கச் செய்தவன்.
எப்போதும் இப்படியேதானா? என்று கேட்கிறான் சிந்தனையாளன்.
நெடுங்காலத்துக்கு இப்படித்தான்! நடைப்பிணங்கள் மனிதத் தன்மை பெறுவது மிகக் கடினமல்லவா? என்று கூறிச் சிரிக்கிறான், சிந்திக்க வைத்தவன்.
நீதிபதியின் இருக்கையில் அமருகிறான், முன்பு குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டவன்!!
தம்பி! சர்வாதிகாரிகள், நீதிமன்றத்தை எப்படிக் கேலிக் கூத்தாக்கு வார்கள் என்பது மட்டுமல்ல, நாடகக் கருத்து-எப்படிப்பட்ட மோசமான சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் ஒருவர் இருவராகிலும் துணிந்து 'சுயசிந்தனை' செய்து, அதன் காரணமாகக் கொடுமைப்படுத்தப் பட்டாலும் தாங்கிக்கொள்வர் என்று பேருண்மையையும், நாடகம் விளக்கிக் காட்டுகிறது.
கொடுமைக்கு அஞ்சாமல் ஒருவன், விடுதலை வீரனாகத் திகழ்ந்தால், முன்பு மரக்கட்டைகள் போலிருந்தோரும் உணர்ச்சி பெற்று, உரிமைக்காகப் போரிடும் வீரராவர் என்பதும், நாம் பெற வேண்டிய பாடம்.<noinclude></noinclude>
3v0ew4nc61bfxpaddt0b1ntgccubvwn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/75
250
641703
1928475
1927726
2026-04-30T05:11:43Z
Rabiyathul
5890
+ மேலடி
1928475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||51}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
51
ஆனால், சர்வாதிகாரிகள் போலவா நமது அரசு, எண்ண, எழுத, பேச, கேட்க, உரிமை தாராது இருக்கிறது என்று காங்கிரசார் கேட்பர். குறும்புச் சிரிப்புடன். பெரிய தலைவர்களே கூடச் சில வேளைகளில், மார்தட்டிக்கொண்டு பேசுகிறார்கள். "நாங்கள் அல்லவா பேச்சுரிமை கொடுத்தோம்!" என்று. இன்னும் சிலர், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் போக்கினர். "நாங்கள் மட்டும் நினைத் திருந்தால், உங்களை ஒழித்துக் கட்டிவிட்டிருப்போம். போனால் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறோம்" என்று கொக்கரிக்கிறார்கள்.
இவர்கள் அளித்துள்ள பேச்சுரிமை. எத்தனை எத்தனை வளையங்கள் போடப்பட்டதாக இருக்கிறது என்பதுகூடக் கிடக்கட்டும்-பேச்சுரிமையை இவர்கள், கொடியவன் என்று கண்டிக்கப்பட்ட வெள்ளையன் காலத்திலே பெற்றுச் சுவையைக் காணவில்லையா? 570111
சிங்கத்தின் குகையிலே நுழைந்து, அதன் பிடரியைப் பிடித்தாட்டுவேன்! என்று பேசிடச், சத்தியமூர்த்திக்கு வெள்ளைக்காரன் உரிமை தந்தான்-நேருவுக்குக் கருப்புக்கொடி இன்னின்ன கட்டுத் திட்டத்தோடுதான் காட்டவேண்டும் என்று கழகத் தோழர்களுக்குக் கூறிட, கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசிடும் உரிமையையும் தர மறுத்து, வழியிலேயே மடக்கிப் பிடித்துக்கொண்டுபோய், போலீஸ் கொட்டடியில் நம்மை அடைத்தவர்கள், இவர்கள். இவர்கள் பேசு கிறார்கள், பேச்சுரிமையை நமக்குத் தாராளமாகத் தந்திருப்பதாக! ANNIA
894.8116
சர்வாதிகாரி, பேச்சுரிமை பேச்சுரிமை தரமாட்டேன் என்று அறிவித்து விடுகிறான்-காங்கிரஸ் ஜனநாயகவாதிகளோ. பேச்சுரிமை தந்திருக் கிறோம் என்று கூறிக்கொண்டே, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை களை நசுக்க, நானாவிதமான முறைகளைத் தொடர்ந்து நடத்தியபடி உள்ளனர். எதிர்க்கட்சிகள் எடுத்துக் காட்டும் குற்றம் குறைகளுக்கு, தக்கவிதத்தில் மறுப்புரை கூறாமல், நாட்டு மக்களிடம் சென்று, எல்லா எதிர்க்கட்சி யினரும் நாசகாரர்கள், நாட்டுத் துரோகிகள், அறிவற்றவர்கள் என்றெல்லாம் ஏசித் திரிகின்றனர், தம்பி! கனம். காமராஜரே, பேசுகிறார், தி.மு. கழகத்தவர், 'அரசியல் அப்பாவிகள்' என்று. இவர் ஈராறு ஆண்டுகள், அகில உலகப் பல்கலைக் கழகத்திலே அரசியல் பெரும்பேராசிரியராகப் பணியாற்றிப் பக்குவம் பெற்றவர் போலவும், சீனத்து மாசேதுங்கும் சோவியத் நாட்டு குருஷேவும், அமெரிக்க அயிசனோவரும் பிரிட்டிஷ் மாக்மிலனும், இவரிடம் பாடம் கேட்டுப் பயிற்சிபெற்ற மாணவர்கள் போலவும், எண்ணிக் கொண்டாரோ என்னவோ, நம்மை, அரசியல் அப்பாவிகள் என்கிறார்.
கிராமத்துப் பெரியதனக்காரர், வெட்டிய கிடாவின் இறைச்சித் துண்டுகளை, இன்னின்னாருக்கு இவ்வளவு என்று எடுத்து வைக்கச் இல் (ம) மைய<noinclude></noinclude>
0he9n85ua92jqb5l1rlx8opgytnlb0t
1928978
1928475
2026-04-30T10:09:50Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||51}}{{rule}}</noinclude>
ஆனால், சர்வாதிகாரிகள் போலவா நமது அரசு, எண்ண, எழுத, பேச, கேட்க, உரிமை தாராது இருக்கிறது என்று காங்கிரசார் கேட்பர். குறும்புச் சிரிப்புடன். பெரிய தலைவர்களே கூடச் சில வேளைகளில், மார்தட்டிக்கொண்டு பேசுகிறார்கள். "நாங்கள் அல்லவா பேச்சுரிமை கொடுத்தோம்!" என்று. இன்னும் சிலர், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் போக்கினர். "நாங்கள் மட்டும் நினைத் திருந்தால், உங்களை ஒழித்துக் கட்டிவிட்டிருப்போம். போனால் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறோம்" என்று கொக்கரிக்கிறார்கள்.
இவர்கள் அளித்துள்ள பேச்சுரிமை. எத்தனை எத்தனை வளையங்கள் போடப்பட்டதாக இருக்கிறது என்பதுகூடக் கிடக்கட்டும்-பேச்சுரிமையை இவர்கள், கொடியவன் என்று கண்டிக்கப்பட்ட வெள்ளையன் காலத்திலே பெற்றுச் சுவையைக் காணவில்லையா? 570111
சிங்கத்தின் குகையிலே நுழைந்து, அதன் பிடரியைப் பிடித்தாட்டுவேன்! என்று பேசிடச், சத்தியமூர்த்திக்கு வெள்ளைக்காரன் உரிமை தந்தான்-நேருவுக்குக் கருப்புக்கொடி இன்னின்ன கட்டுத் திட்டத்தோடுதான் காட்டவேண்டும் என்று கழகத் தோழர்களுக்குக் கூறிட, கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசிடும் உரிமையையும் தர மறுத்து, வழியிலேயே மடக்கிப் பிடித்துக்கொண்டுபோய், போலீஸ் கொட்டடியில் நம்மை அடைத்தவர்கள், இவர்கள். இவர்கள் பேசு கிறார்கள், பேச்சுரிமையை நமக்குத் தாராளமாகத் தந்திருப்பதாக!
சர்வாதிகாரி, பேச்சுரிமை பேச்சுரிமை தரமாட்டேன் என்று அறிவித்து விடுகிறான்-காங்கிரஸ் ஜனநாயகவாதிகளோ. பேச்சுரிமை தந்திருக் கிறோம் என்று கூறிக்கொண்டே, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை களை நசுக்க, நானாவிதமான முறைகளைத் தொடர்ந்து நடத்தியபடி உள்ளனர். எதிர்க்கட்சிகள் எடுத்துக் காட்டும் குற்றம் குறைகளுக்கு, தக்கவிதத்தில் மறுப்புரை கூறாமல், நாட்டு மக்களிடம் சென்று, எல்லா எதிர்க்கட்சி யினரும் நாசகாரர்கள், நாட்டுத் துரோகிகள், அறிவற்றவர்கள் என்றெல்லாம் ஏசித் திரிகின்றனர், தம்பி! கனம். காமராஜரே, பேசுகிறார், தி.மு. கழகத்தவர், 'அரசியல் அப்பாவிகள்' என்று. இவர் ஈராறு ஆண்டுகள், அகில உலகப் பல்கலைக் கழகத்திலே அரசியல் பெரும்பேராசிரியராகப் பணியாற்றிப் பக்குவம் பெற்றவர் போலவும், சீனத்து மாசேதுங்கும் சோவியத் நாட்டு குருஷேவும், அமெரிக்க அயிசனோவரும் பிரிட்டிஷ் மாக்மிலனும், இவரிடம் பாடம் கேட்டுப் பயிற்சிபெற்ற மாணவர்கள் போலவும், எண்ணிக் கொண்டாரோ என்னவோ, நம்மை, அரசியல் அப்பாவிகள் என்கிறார்.
கிராமத்துப் பெரியதனக்காரர், வெட்டிய கிடாவின் இறைச்சித் துண்டுகளை, இன்னின்னாருக்கு இவ்வளவு என்று எடுத்து வைக்கச் இல் (ம) மைய<noinclude></noinclude>
ba2xzg64eo43a9u40i886894qgr50ef
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/76
250
641704
1928476
1927727
2026-04-30T05:12:14Z
Rabiyathul
5890
+ மேலடி
1928476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|52||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>52
'திராவிட நாடு' இதழில்
சொல்லிக் கொடுத்தனுப்புவது போன்ற அலுவல், இவருக்கு. காங்கிரஸ் அரசியலில்! இவருடைய 'அபாரமான' ஆற்றலுக்காக, இவரைத் தேடிக் கண்டுபிடித்து, நேரு பண்டிதர் முதலமைச்சர் ஆக்கி வைத்ததுபோன்ற ஒரு மன மயக்கம்போலும், இவருக்கு!
திராவிட இன உணர்ச்சி மலர்ந்துள்ள இடத்தில், ஆச்சாரியார் போன்றார் ஆட்சியில் அமர்ந்திருப்பது அமளிக்கு வழிகோலும் என்ற அச்சத்தால், திராவிட இனத்தவராகவும், அதேபோது அந்த உணர்ச்சியை அறிந்துகொள்ளத்தக்க அறிவாற்றல் அற்றவராகவும் ஒருவர் கிடைத்தால், அவரைப் பிடித்திழுத்து தலையில் மகுடத்தைக் கவிழ்த்து உட்கார வைத்தால், நாட்டிலே அமளி மூளாதிருக்கும் என்பதன்றி, பிறிதோர் நோக்கத்தை நேரு பெருமகனாரும் கொண்டிருக்க வழி இல்லை!
இவர் நம்மை ஏசுகிறார், அரசியல் அப்பாவிகள் என்று!!
நடுநிலையாளர், இங்ஙனம் எதிர்க்கட்சியினரை முறை தவறி ஏசுவதும், முரட்டுத்தனமாகத் தாக்குவதும், சரியல்லவே! என்று கூறும்போது, கோபம் கொப்பளிக்கிறது. காங்கிரஸ் ஜனநாயக வாதிகளுக்கு.
"ஓ! ஓ! யார் தெரியுமா நாங்கள்! வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தை விரட்டிய வீராதி வீரர்களாக்கும்! சுயராஜ்யம் பெற்ற சூரர்கள், அறிவீர்! சுயராஜ்யம் என்ன, விளையாட்டுக்காகப் பெற்றதாக எண்ணுகிறார் களோ!!"- என்று எக்காளமிடுகின்றனர்.
தம்பி! கைதியாக்கப்பட்டிருக்கும், மெண்டாரிஸ் 'ஏனோ தானோ’ அல்ல!
பிறந்தது செல்வக்குடியில். விளைவு தெரியாமல் காரிய மாற்றிடத் துடிக்கும் காளைப் பருவத்தினர் அல்ல. பிறந்தது 1899!! நான் பள்ளிக் கூடம் போனதே இல்லை, என்று கூறிக்கொண்டு. பல்கலைக்கழகப் பாதுகாவலர்களுக்கு 'அறிவுரை' கூறப் புறப்படும், அலங்கோலம் காண்கிறோமே. அதுபோல் அல்ல; மெண்டாரிஸ், பார்புகழும் ஓர் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
1917-ல், உதுமானிய சாம்ராஜ்யப் படையில் சேர்ந்து பணியாற்றியவர்.
உதுமானிய அரசு ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக அலங்கோல ஆட்சி நடத்தியதால் துருக்கி, 'ஐரோப்பாவின் நோயாளி' என்று பலராலும் நையாண்டி செய்யப்படும் நிலையில் கிடந்தது: அதுகண்டு வெகுண்டெழுந்து விடுதலைப்போர் நடாத்த முனைந்தார். கமால்பாஷா - மெண்டாரிஸ், அந்த வீரப்படையில் சேர்ந்து துருக்கிக்குப் புதுவாழ்வு பெற நடத்தப்பட்ட, புனிதப் போரில் பெரும்புகழ் ஈட்டியவன்.<noinclude></noinclude>
8l1yzukz8u4szecugkkf5yrkfnrzwpw
1928979
1928476
2026-04-30T10:11:00Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|52||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சொல்லிக் கொடுத்தனுப்புவது போன்ற அலுவல், இவருக்கு. காங்கிரஸ் அரசியலில்! இவருடைய 'அபாரமான' ஆற்றலுக்காக, இவரைத் தேடிக் கண்டுபிடித்து, நேரு பண்டிதர் முதலமைச்சர் ஆக்கி வைத்ததுபோன்ற ஒரு மன மயக்கம்போலும், இவருக்கு!
திராவிட இன உணர்ச்சி மலர்ந்துள்ள இடத்தில், ஆச்சாரியார் போன்றார் ஆட்சியில் அமர்ந்திருப்பது அமளிக்கு வழிகோலும் என்ற அச்சத்தால், திராவிட இனத்தவராகவும், அதேபோது அந்த உணர்ச்சியை அறிந்துகொள்ளத்தக்க அறிவாற்றல் அற்றவராகவும் ஒருவர் கிடைத்தால், அவரைப் பிடித்திழுத்து தலையில் மகுடத்தைக் கவிழ்த்து உட்கார வைத்தால், நாட்டிலே அமளி மூளாதிருக்கும் என்பதன்றி, பிறிதோர் நோக்கத்தை நேரு பெருமகனாரும் கொண்டிருக்க வழி இல்லை!
இவர் நம்மை ஏசுகிறார், அரசியல் அப்பாவிகள் என்று!!
நடுநிலையாளர், இங்ஙனம் எதிர்க்கட்சியினரை முறை தவறி ஏசுவதும், முரட்டுத்தனமாகத் தாக்குவதும், சரியல்லவே! என்று கூறும்போது, கோபம் கொப்பளிக்கிறது. காங்கிரஸ் ஜனநாயக வாதிகளுக்கு.
"ஓ! ஓ! யார் தெரியுமா நாங்கள்! வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தை விரட்டிய வீராதி வீரர்களாக்கும்! சுயராஜ்யம் பெற்ற சூரர்கள், அறிவீர்! சுயராஜ்யம் என்ன, விளையாட்டுக்காகப் பெற்றதாக எண்ணுகிறார் களோ!!"- என்று எக்காளமிடுகின்றனர்.
தம்பி! கைதியாக்கப்பட்டிருக்கும், மெண்டாரிஸ் 'ஏனோ தானோ’ அல்ல!
பிறந்தது செல்வக்குடியில். விளைவு தெரியாமல் காரிய மாற்றிடத் துடிக்கும் காளைப் பருவத்தினர் அல்ல. பிறந்தது 1899!! நான் பள்ளிக் கூடம் போனதே இல்லை, என்று கூறிக்கொண்டு. பல்கலைக்கழகப் பாதுகாவலர்களுக்கு 'அறிவுரை' கூறப் புறப்படும், அலங்கோலம் காண்கிறோமே. அதுபோல் அல்ல; மெண்டாரிஸ், பார்புகழும் ஓர் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
1917-ல், உதுமானிய சாம்ராஜ்யப் படையில் சேர்ந்து பணியாற்றியவர்.
உதுமானிய அரசு ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக அலங்கோல ஆட்சி நடத்தியதால் துருக்கி, 'ஐரோப்பாவின் நோயாளி' என்று பலராலும் நையாண்டி செய்யப்படும் நிலையில் கிடந்தது: அதுகண்டு வெகுண்டெழுந்து விடுதலைப்போர் நடாத்த முனைந்தார். கமால்பாஷா - மெண்டாரிஸ், அந்த வீரப்படையில் சேர்ந்து துருக்கிக்குப் புதுவாழ்வு பெற நடத்தப்பட்ட, புனிதப் போரில் பெரும்புகழ் ஈட்டியவன்.<noinclude></noinclude>
2fnhq3smvijvzis52njudbbi948cweo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/77
250
641705
1928477
1927728
2026-04-30T05:12:45Z
Rabiyathul
5890
+ மேலடி
1928477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||53}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
53
அழகிய ஆரணங்கை மணம் புரிந்துகொண்டு, மூன்று பிள்ளை களுக்குத் தகப்பனாகி, செல்வ நிலையில் இருந்து வந்தான்-1931-ல், கமால் பாஷா அவர்களே அழைத்து, மெண்டாரிசை அரசியல் அலுவலில் ஈடுபடச் சொன்னார்.
பாராளுமன்றத்திலே இடம் பெற்ற பிறகுங்கூட, முன் வரிசை நாடாமல், வாளா இருந்துவந்தார்.
1950-லே, அவர் தலைமையில் கட்சி இயங்கி, தேர்தலில் ஈடுபட்டு, மகத்தான வெற்றி பெற்றது.
மிகப் பெரிய தேக்கங்கள். அணைகள், எஃகுத் தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில் எனும் பலவற்றைத் துவக்கினார், துருக்கியின் செல்வம் வளரவேண்டும், பொருளாதாரம் பலப்படவேண்டும் என்பதற்காக.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், பாராளு மன்றத்திலே 610 இடங்களில் 421 இடங்களை மெண்டாரிஸ் கட்சி பெற்றது!
அவ்வளவுதான்! ஆணவம் பிடித்துக்கொண்டது.
எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகக் கூடினாலும், நம்மை என்ன செய்ய முடியும், என்ற எண்ணம் தடித்தது. தடித்துப் போகவே, திட்டம் தீட்டும்போது, எவரையும் கலந்துபேச வேண்டும் என்ற அக்கரை எழுவதில்லை - நிறைவேற்றுவதிலே நேரிடும் ஊழல்களை எவரேனும் சுட்டிக்காட்டினால், திருத்த வேண்டும் என்று எண்ணுவ தில்லை; மாறாக, எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்தார்.
ஜெர்மன் நாட்டுப் பொருளாதார நிபுணர் எர்கார்டு என்பார்கூட, நிறைய கடன் வாங்கி வாங்கித் தொழிலை நடத்துகிறார்கள்- வருவாய் குறைவு: மிதமிஞ்சிய செலவு... இது ஆபத்து. நிர்வாகமும் ஒழுங்காக இல்லை!-என்று எடுத்துக் காட்டினார். தனக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தினால், இறுமாந்துகிடந்த மெண்டாரிஸ், அந்த நிபுணர் பேச்சையும் துச்சமென்று கருதினார்.
அவனுக்கென்ன தெரியும்? இவனுக்கென்ன தெரியும்? இவன் வாலை ஒட்ட வெட்டிவிடுவேன்-அவனை அடியோடு அழித்து விடுவேன்- என்றெல்லாம் பேசுவது, ஜனநாயகச் சர்வாதிகாரிக்கு ஏற்படும். நோயின் குறி!
அந்த நோய் பிடித்துக் கொண்டால், வேண்டுகோளைப் புறக்கணிக்கச் சொல்லும், நல்லுரையைக் கேட்க மனம் இடம் தராது, நாமே எல்லாம் என்ற நினைப்புப் புகுந்து குடையும்!<noinclude></noinclude>
5pu96zk3zrb8pq6sqh9vu1iqv169kfm
1928980
1928477
2026-04-30T10:11:32Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||53}}{{rule}}</noinclude>
அழகிய ஆரணங்கை மணம் புரிந்துகொண்டு, மூன்று பிள்ளை களுக்குத் தகப்பனாகி, செல்வ நிலையில் இருந்து வந்தான்-1931-ல், கமால் பாஷா அவர்களே அழைத்து, மெண்டாரிசை அரசியல் அலுவலில் ஈடுபடச் சொன்னார்.
பாராளுமன்றத்திலே இடம் பெற்ற பிறகுங்கூட, முன் வரிசை நாடாமல், வாளா இருந்துவந்தார்.
1950-லே, அவர் தலைமையில் கட்சி இயங்கி, தேர்தலில் ஈடுபட்டு, மகத்தான வெற்றி பெற்றது.
மிகப் பெரிய தேக்கங்கள். அணைகள், எஃகுத் தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில் எனும் பலவற்றைத் துவக்கினார், துருக்கியின் செல்வம் வளரவேண்டும், பொருளாதாரம் பலப்படவேண்டும் என்பதற்காக.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், பாராளு மன்றத்திலே 610 இடங்களில் 421 இடங்களை மெண்டாரிஸ் கட்சி பெற்றது!
அவ்வளவுதான்! ஆணவம் பிடித்துக்கொண்டது.
எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகக் கூடினாலும், நம்மை என்ன செய்ய முடியும், என்ற எண்ணம் தடித்தது. தடித்துப் போகவே, திட்டம் தீட்டும்போது, எவரையும் கலந்துபேச வேண்டும் என்ற அக்கரை எழுவதில்லை - நிறைவேற்றுவதிலே நேரிடும் ஊழல்களை எவரேனும் சுட்டிக்காட்டினால், திருத்த வேண்டும் என்று எண்ணுவ தில்லை; மாறாக, எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்தார்.
ஜெர்மன் நாட்டுப் பொருளாதார நிபுணர் எர்கார்டு என்பார்கூட, நிறைய கடன் வாங்கி வாங்கித் தொழிலை நடத்துகிறார்கள்- வருவாய் குறைவு: மிதமிஞ்சிய செலவு... இது ஆபத்து. நிர்வாகமும் ஒழுங்காக இல்லை!-என்று எடுத்துக் காட்டினார். தனக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தினால், இறுமாந்துகிடந்த மெண்டாரிஸ், அந்த நிபுணர் பேச்சையும் துச்சமென்று கருதினார்.
அவனுக்கென்ன தெரியும்? இவனுக்கென்ன தெரியும்? இவன் வாலை ஒட்ட வெட்டிவிடுவேன்-அவனை அடியோடு அழித்து விடுவேன்- என்றெல்லாம் பேசுவது, ஜனநாயகச் சர்வாதிகாரிக்கு ஏற்படும். நோயின் குறி!
அந்த நோய் பிடித்துக் கொண்டால், வேண்டுகோளைப் புறக்கணிக்கச் சொல்லும், நல்லுரையைக் கேட்க மனம் இடம் தராது, நாமே எல்லாம் என்ற நினைப்புப் புகுந்து குடையும்!<noinclude></noinclude>
1fx2cwbfg1yf9ce1kg1xw85v8u6ktyl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/78
250
641706
1928478
1927729
2026-04-30T05:13:17Z
Rabiyathul
5890
+ மேலடி
1928478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|54||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>54
'திராவிட நாடு' இதழில்
தம்பி! நாம் கேட்கும் 'திராவிட நாடு' அமைத்துக் கொடுப்பது, அவ்வளவு எளிதானதல்ல, காமராஜருக்கு என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம்; தமிழ்நாடு என்ற பெயர் வைப்பது கூடவா கடினமான காரியம்! அது என்ன, எவரெஸ்டுமீது ஏறிடுவது போன்றதா? இருக்கு மிடமிருந்தே எங்கோ இருக்கும் இலக்கினைத் தாக்க ஏவிடும் வாணவெடி தயாரிப்பது போன்ற விற்பன்னர் வேலையா?
தேவையான அளவு தன்மான உணர்ச்சியும், மக்களின் வேண்டுகோளை மதிப்பது நமது கடன் என்ற பொறுப்புணர்ச்சியும் தானே தேவை-தமிழ்நாடு என்று பெயரிட! செய்தாரா?
'தமிழ்நாடு' என்று பெயரிடும்படி, தி.மு.கழகம் மட்டுமா கேட்கிறது? எல்லா அரசியல் கட்சிகளுமல்லவா!
அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, கற்றறிவாளர் கழகங்கள், வணிகர் நடத்தும் மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள், புலவர் கழகம், தமிழாசிரியர் கழகம் இவையாவுமன்றோ, தமிழ்நாடு என்ற பெயரிடும்படி வலியுறுத்தி வருகின்றன.
பம்மல் சம்பந்தனாரும், டாக்டர் மு. வரதராசனாரும், சேதுப்பிள்ளை அவர்களும், எடுத்துக் கூறும்போது கூடவா, கனிவு எழாதிருப்பது?
எவர் சொன்னாலும் சரி, என்போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று இருப்பவரை, என்னவென்று கூறுவது? பித்தர் என்பதா? சர்வாதிகார வெறிபிடித்தலைபவர் என்றுரைப்பதா? என்ன கூறினாலும் விளக்கம்பெற முடியாத மந்த மதியினர் என்பதா?
ஒரு பெரியவர், உண்ணாவிரதமிருந்து, சாகக் கண்டும், முதலமைச்சரின் மனம் இளகவில்லை! கண்டோமே!!
ஒருவர் சாகக்கண்டும் மனதை இரும்பாக்கிக் கொண்டாகிலும், கடமையைச் செய்யவேண்டும்-செய்தேன்-என்று கூறவாவது. காமராஜர் ஏதேனும் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்துகாட்டினாரா?
வேறு எதைச்செய்ய இயலாமற் போயினும், நடைபெறும் ஆட்சி, ஆளுங் கட்சியினருக்கேனும், திருப்தி அளிக்கிறதா?
தம்பி! அடுத்த கிழமை காட்டுகிறேன் அந்தக் கூத்தினை.
அண்ணன்,<noinclude></noinclude>
omfu4h1qb9fhsnoqps71efapbbto5x3
1928981
1928478
2026-04-30T10:13:05Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|54||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
தம்பி! நாம் கேட்கும் 'திராவிட நாடு' அமைத்துக் கொடுப்பது, அவ்வளவு எளிதானதல்ல, காமராஜருக்கு என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம்; தமிழ்நாடு என்ற பெயர் வைப்பது கூடவா கடினமான காரியம்! அது என்ன, எவரெஸ்டுமீது ஏறிடுவது போன்றதா? இருக்கு மிடமிருந்தே எங்கோ இருக்கும் இலக்கினைத் தாக்க ஏவிடும் வாணவெடி தயாரிப்பது போன்ற விற்பன்னர் வேலையா?
தேவையான அளவு தன்மான உணர்ச்சியும், மக்களின் வேண்டுகோளை மதிப்பது நமது கடன் என்ற பொறுப்புணர்ச்சியும் தானே தேவை-தமிழ்நாடு என்று பெயரிட! செய்தாரா?
'தமிழ்நாடு' என்று பெயரிடும்படி, தி.மு.கழகம் மட்டுமா கேட்கிறது? எல்லா அரசியல் கட்சிகளுமல்லவா!
அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, கற்றறிவாளர் கழகங்கள், வணிகர் நடத்தும் மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள், புலவர் கழகம், தமிழாசிரியர் கழகம் இவையாவுமன்றோ, தமிழ்நாடு என்ற பெயரிடும்படி வலியுறுத்தி வருகின்றன.
பம்மல் சம்பந்தனாரும், டாக்டர் மு. வரதராசனாரும், சேதுப்பிள்ளை அவர்களும், எடுத்துக் கூறும்போது கூடவா, கனிவு எழாதிருப்பது?
எவர் சொன்னாலும் சரி, என்போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று இருப்பவரை, என்னவென்று கூறுவது? பித்தர் என்பதா? சர்வாதிகார வெறிபிடித்தலைபவர் என்றுரைப்பதா? என்ன கூறினாலும் விளக்கம்பெற முடியாத மந்த மதியினர் என்பதா?
ஒரு பெரியவர், உண்ணாவிரதமிருந்து, சாகக் கண்டும், முதலமைச்சரின் மனம் இளகவில்லை! கண்டோமே!!
ஒருவர் சாகக்கண்டும் மனதை இரும்பாக்கிக் கொண்டாகிலும், கடமையைச் செய்யவேண்டும்-செய்தேன்-என்று கூறவாவது. காமராஜர் ஏதேனும் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்துகாட்டினாரா?
வேறு எதைச்செய்ய இயலாமற் போயினும், நடைபெறும் ஆட்சி, ஆளுங் கட்சியினருக்கேனும், திருப்தி அளிக்கிறதா?
தம்பி! அடுத்த கிழமை காட்டுகிறேன் அந்தக் கூத்தினை.
அண்ணன்,<noinclude></noinclude>
pyz50c51fl5a886f3wqigo7xav88kmi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/79
250
641707
1928479
1927730
2026-04-30T05:13:48Z
Rabiyathul
5890
+ மேலடி
1928479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||55}}{{rule}}</noinclude>தம்பி!
ஜனநாயக ஆட்சியில் ஊழல்கள்- சட்டசபையில் உறுப்பினர் தண்டம்-
ஓட்டும் வேட்டும்
கடிதம்: 107
ஒலியும் ஒளியும்
"கடும்பனி! உடல் வெடவெடுக்கிறது! காரிருள்! எந்தப் பொருளும் சரியாகத் தெரியவில்லை! காலிடறிக் கீழே வீழ்ந்தேன், கருங்கல்லில் தலை மோதிக்கொண்டது! கலங்கினோ? இல்லை! நடந்தேன், நடந்தேன், தோட்டம் நோக்கி; ஆனால் அங்கோ கதவு தாளிடப்பட்டுக் கிடந்தது. தவித்துப் போனேன். பக்கத்துச் சுவரோரம் பதுங்கிப் பதுங்கிச் சென்றேன். பழுதையென்று எண்ணித் தொடப் போனேன். அசைந்திடக்கண்டு பாம்பென்றறிந்து பயந்து, விலகினேன்! நா உலர்ந்து விட்டது! இப்படியா இருக்கவேண்டும் நம் கதி என்று எண்ணினேன். துக்கம் துளைத்தது. எவரேனும் கண்டுவிட்டால்? என்று எண்ணும்போதே, பயம் கப்பிக் கொண்டது. திடீரென்று, ஏதோ ஒன்று என்மீது விழுந்தது, பதறினேன், மறுகணம், வீழ்ந்த பொருளைக் கண்டேன். என்னவென்கிறாய், என் காதலியின் கூந்தலில் இடம் பெற்றதால் மணம் பெற்ற மலர்! எடுத்தேன், கண்களில் ஒத்திக் கொண்டேன்- அதரத்தில் - கொண்டு சென்று அகமகிழ்ந்தேன்! பட்ட கஷ்டமனைத்தையும் மறந்தேன்! இதோ வெற்றி! சுவைமிகு வெற்றி! மணமிகு வெற்றி! என் காதலி தந்திடும் அன்புக் காணிக்கை! உன்னை மறந்திடவில்லை, இதோ என் மலர், உனக்காக! என்று கூறுகிறாள் என் குயில்மொழியாள், இந்த மகிழ்ச்சியைப் பெற கடும்பனி, காரிருள், கரடுமுரடான வழி, இடறி விழுந்திடும் இன்னல், என்னும் எதுவாக இருந்தால் என்ன! இதைவிட ஆபத்து நிரம்பியதாக இருப்பினும், செல்வேன், வெல்வேன்".
இடர்ப்பாடுகளை மறந்திடச் செய்யும் வகையான வெற்றி பெற்ற காதலன், இதுபோலக் களித்துக் கூறுவான். இத்துணை கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு சென்றவன்மீது, காதலியின் கூந்தலுக்கு அணிசெய்திருந்த மலர் வீழாமல், அவளுடைய பாட்டனார் எறிந்த கைத்தடி வீழ்ந்திருந்தால்- எப்படி இருந்திருக்கும் அவன் மனநிலை! அதுகூடச் சகித்துக் கொள்வான். வீழ்ந்தது. காதலி வீசிய மலராக இராமல், அவன்தன் அன்பின் அடையாளமாக முன்னமோர் நாள் அவளுக்கு அளித்த 'கணையாழி'யாக<noinclude></noinclude>
trutlgs4gt3xntyklaeuethc6l05dpj
1928982
1928479
2026-04-30T10:14:00Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>தம்பி!
ஜனநாயக ஆட்சியில் ஊழல்கள்- சட்டசபையில் உறுப்பினர் தண்டம்-
ஓட்டும் வேட்டும்
கடிதம்: 107
ஒலியும் ஒளியும்
"கடும்பனி! உடல் வெடவெடுக்கிறது! காரிருள்! எந்தப் பொருளும் சரியாகத் தெரியவில்லை! காலிடறிக் கீழே வீழ்ந்தேன், கருங்கல்லில் தலை மோதிக்கொண்டது! கலங்கினோ? இல்லை! நடந்தேன், நடந்தேன், தோட்டம் நோக்கி; ஆனால் அங்கோ கதவு தாளிடப்பட்டுக் கிடந்தது. தவித்துப் போனேன். பக்கத்துச் சுவரோரம் பதுங்கிப் பதுங்கிச் சென்றேன். பழுதையென்று எண்ணித் தொடப் போனேன். அசைந்திடக்கண்டு பாம்பென்றறிந்து பயந்து, விலகினேன்! நா உலர்ந்து விட்டது! இப்படியா இருக்கவேண்டும் நம் கதி என்று எண்ணினேன். துக்கம் துளைத்தது. எவரேனும் கண்டுவிட்டால்? என்று எண்ணும்போதே, பயம் கப்பிக் கொண்டது. திடீரென்று, ஏதோ ஒன்று என்மீது விழுந்தது, பதறினேன், மறுகணம், வீழ்ந்த பொருளைக் கண்டேன். என்னவென்கிறாய், என் காதலியின் கூந்தலில் இடம் பெற்றதால் மணம் பெற்ற மலர்! எடுத்தேன், கண்களில் ஒத்திக் கொண்டேன்- அதரத்தில் - கொண்டு சென்று அகமகிழ்ந்தேன்! பட்ட கஷ்டமனைத்தையும் மறந்தேன்! இதோ வெற்றி! சுவைமிகு வெற்றி! மணமிகு வெற்றி! என் காதலி தந்திடும் அன்புக் காணிக்கை! உன்னை மறந்திடவில்லை, இதோ என் மலர், உனக்காக! என்று கூறுகிறாள் என் குயில்மொழியாள், இந்த மகிழ்ச்சியைப் பெற கடும்பனி, காரிருள், கரடுமுரடான வழி, இடறி விழுந்திடும் இன்னல், என்னும் எதுவாக இருந்தால் என்ன! இதைவிட ஆபத்து நிரம்பியதாக இருப்பினும், செல்வேன், வெல்வேன்".
இடர்ப்பாடுகளை மறந்திடச் செய்யும் வகையான வெற்றி பெற்ற காதலன், இதுபோலக் களித்துக் கூறுவான். இத்துணை கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு சென்றவன்மீது, காதலியின் கூந்தலுக்கு அணிசெய்திருந்த மலர் வீழாமல், அவளுடைய பாட்டனார் எறிந்த கைத்தடி வீழ்ந்திருந்தால்- எப்படி இருந்திருக்கும் அவன் மனநிலை! அதுகூடச் சகித்துக் கொள்வான். வீழ்ந்தது. காதலி வீசிய மலராக இராமல், அவன்தன் அன்பின் அடையாளமாக முன்னமோர் நாள் அவளுக்கு அளித்த 'கணையாழி'யாக<noinclude></noinclude>
417i76ukqepe4wkbb7tvx1525jewohq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/80
250
641708
1928481
1927731
2026-04-30T05:14:19Z
Rabiyathul
5890
+ மேலடி
1928481
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|56||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>56
'திராவிட நாடு' இதழில்
இருந்தால், எவ்வளவு கலங்குவான்! அதுகூடப் பரவாயில்லை! மேலே வீழ்ந்தது. ஒரு காலணியாக இருப்பின் கோபம் பிறக்கும்!! எப்படி வீழ்ந்தது என்று பார்த்தறியும்போது, சுவரின் மறுபுறமிருந்து, இப்புறம் இறங்கிடும் ஒரு ஆடவன் காலிலிருந்து கழன்று வீழ்ந்தது என்பது தெரிந்தால், கடுங்கோபம் ஏற்படுமல்லவா! தன்னைச் சொக்கவைத்து விட்டு வேறோர் வாலிபனுக்கு விருந்தாகி விட்டாள், காதலியாக நடித்த காதகி; அவளைக் கண்டு இதழமுதுண்டு திரும்புகிறான் இந்தக் கள்ளன்; அவசரத்திலே காலினின்றும் கழன்று வீழ்ந்தது காலணி என்று தெரிந்தால், கோபம், வெட்கம், துக்கம் எல்லாம் சேர்ந்தல்லவா அவனைத் துளைக்கும். கொலைகாரனாக வேண்டும் அல்லது குத்திச்சாக வேண்டும்- வேறென்ன செய்யத் தோன்றும், அந்த வேளையில்!
இவ்வளவு இடர்ப்பட்டு வந்தது, இந்த இழிநிலையைக் காணவா? என்று எண்ணும்போதே மனம் உடைவது போலாகிவிடாதா!
சர்வாதிகார ஆட்சி, உரிமையை அழிக்கும், நடுநடுங்கச் செய்யும், சிறையை, தூக்குக்கயிறைக் காட்டி மிரட்டும், எனினும் சில சர்வாதிகார ஆட்சிகள், மற்ற ஆட்சி முறையிலே இருந்து வந்த ஊழல், மந்தம், திறமைக் குறைவு. தெளிவின்மை போன்ற குறைகளை நீக்கி, மக்கள் நிம்மதியான வாழ்க்கையைப் பெறவாகிலும் வழி செய்தளிக்கும். காதலியின் மலராக இலாது போயினும், மரத்திலிருந்து உதிர்ந்த கனியாவது மேலே வீழ்வது போன்ற நிலை என்று வைத்துக்கொள்ளேன்.
கடுமையான முறைகளைப் புகுத்துகிறான், சர்வாதிகாரி. ஆனால், எதற்கு? நாட்டிலே விரைவாக, நல்ல காரியம் நடந்திட வேண்டும் என்பதற்காக! முறைகள் கடுமையானவை என்பதனால், பலனில் கிடைக்கும் சுவையை மறந்திட முடியுமா? கடும்பனியின் கொடுமையைத் தாங்கிக் கொண்ட பிறகு, காதலியின் மலர் கிடைத்தால், பட்டபாடுதனை மறந்து, மகிழ்ச்சி கொள்வானன்றோ! ஆட்சியின் பலன், இழிதன்மை, வறுமை, அவல நிலைமை என்றிருக்குமானால், அது காதலியைக் காணச்சென்று. காலணி கண்டது போலன்றோ இருந்திடும்.
***
சர்வாதிகாரத்திலே, பேச்சுரிமை கிடையாது-இம்மென்றால் சிறைவாசம்- எதிர்த்தால் சாகடிக்கப்படுவர்-என்று பேசி, ஜனநாயகத்தை வாயாரப் புகழ்கின்றனர். ஆனால், அந்த ஆட்சியிலே, சர்வாதிகாரியின் 'கட்டுக்காவல்" முறையை மட்டும் புகுத்திக் சர்வாதிகாரி சமைத்தளிக்கும் சுவையும் பயனும் மிக்க வெற்றிகளைத் தராவிட்டால், அந்த ஜனநாயகத்தை, மதிக்கத்தான் முடியுமா-மகிழ்ச்சிதான் பிறக்குமா?<noinclude></noinclude>
luft36dj0dklbkc05e100q4lqpwohra
1928983
1928481
2026-04-30T10:15:03Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|56||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இருந்தால், எவ்வளவு கலங்குவான்! அதுகூடப் பரவாயில்லை! மேலே வீழ்ந்தது. ஒரு காலணியாக இருப்பின் கோபம் பிறக்கும்!! எப்படி வீழ்ந்தது என்று பார்த்தறியும்போது, சுவரின் மறுபுறமிருந்து, இப்புறம் இறங்கிடும் ஒரு ஆடவன் காலிலிருந்து கழன்று வீழ்ந்தது என்பது தெரிந்தால், கடுங்கோபம் ஏற்படுமல்லவா! தன்னைச் சொக்கவைத்து விட்டு வேறோர் வாலிபனுக்கு விருந்தாகி விட்டாள், காதலியாக நடித்த காதகி; அவளைக் கண்டு இதழமுதுண்டு திரும்புகிறான் இந்தக் கள்ளன்; அவசரத்திலே காலினின்றும் கழன்று வீழ்ந்தது காலணி என்று தெரிந்தால், கோபம், வெட்கம், துக்கம் எல்லாம் சேர்ந்தல்லவா அவனைத் துளைக்கும். கொலைகாரனாக வேண்டும் அல்லது குத்திச்சாக வேண்டும்- வேறென்ன செய்யத் தோன்றும், அந்த வேளையில்!
இவ்வளவு இடர்ப்பட்டு வந்தது, இந்த இழிநிலையைக் காணவா? என்று எண்ணும்போதே மனம் உடைவது போலாகிவிடாதா!
சர்வாதிகார ஆட்சி, உரிமையை அழிக்கும், நடுநடுங்கச் செய்யும், சிறையை, தூக்குக்கயிறைக் காட்டி மிரட்டும், எனினும் சில சர்வாதிகார ஆட்சிகள், மற்ற ஆட்சி முறையிலே இருந்து வந்த ஊழல், மந்தம், திறமைக் குறைவு. தெளிவின்மை போன்ற குறைகளை நீக்கி, மக்கள் நிம்மதியான வாழ்க்கையைப் பெறவாகிலும் வழி செய்தளிக்கும். காதலியின் மலராக இலாது போயினும், மரத்திலிருந்து உதிர்ந்த கனியாவது மேலே வீழ்வது போன்ற நிலை என்று வைத்துக்கொள்ளேன்.
கடுமையான முறைகளைப் புகுத்துகிறான், சர்வாதிகாரி. ஆனால், எதற்கு? நாட்டிலே விரைவாக, நல்ல காரியம் நடந்திட வேண்டும் என்பதற்காக! முறைகள் கடுமையானவை என்பதனால், பலனில் கிடைக்கும் சுவையை மறந்திட முடியுமா? கடும்பனியின் கொடுமையைத் தாங்கிக் கொண்ட பிறகு, காதலியின் மலர் கிடைத்தால், பட்டபாடுதனை மறந்து, மகிழ்ச்சி கொள்வானன்றோ! ஆட்சியின் பலன், இழிதன்மை, வறுமை, அவல நிலைமை என்றிருக்குமானால், அது காதலியைக் காணச்சென்று. காலணி கண்டது போலன்றோ இருந்திடும்.
***
சர்வாதிகாரத்திலே, பேச்சுரிமை கிடையாது-இம்மென்றால் சிறைவாசம்- எதிர்த்தால் சாகடிக்கப்படுவர்-என்று பேசி, ஜனநாயகத்தை வாயாரப் புகழ்கின்றனர். ஆனால், அந்த ஆட்சியிலே, சர்வாதிகாரியின் 'கட்டுக்காவல்" முறையை மட்டும் புகுத்திக் சர்வாதிகாரி சமைத்தளிக்கும் சுவையும் பயனும் மிக்க வெற்றிகளைத் தராவிட்டால், அந்த ஜனநாயகத்தை, மதிக்கத்தான் முடியுமா-மகிழ்ச்சிதான் பிறக்குமா?<noinclude></noinclude>
058ukdj9bycrouyb9mr8lw82febdvzr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/81
250
641709
1928482
1927732
2026-04-30T05:14:50Z
Rabiyathul
5890
+ மேலடி
1928482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||57}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்
57
இத்தனை கடும்பனியில் காரிருளில், எங்கே செல்கிறாய்? என்று கேட்டிடும்போது, "என் இதயம் வாழ்பவளைக் காண!" என்று கூறிடும் வாய்ப்பு இருந்தாலாவது மகிழ்வர்-மதிப்பர்!
"எங்கு?" என்று கேட்டதும், "எட்டிக்கொட்டை வேண்டும் சாப்பிட அதைக் கொண்டுவரச் செல்கிறேன்" என்று கூறிட வேண்டியதாக இருந்தால்- மதித்திடவா செய்வோம்?
ஆட்சி, சர்வாதிகார முறையினதா? ஜனநாயக முறையினதா? என்பதுகூட இருக்கட்டும், கிடைத்திடும் பலன் என்ன? முறை நமக்குப் பிடிக்காதது என்றாலும்கூட, நாம் விரும்பத்தக்கதாக இருந்தால், பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக் கொள்வார்களல்லவா!
காமராஜர், செல்லுமிடமெல்லாம். இந்த ஆட்சிக்கு ஈடுவேறு கிடையாது! மக்களுக்கு வயிறாரச் சோறுபோட வேண்டும் என்பதுதான், என் திட்டம். என் ஆட்சியிலேதான், அந்தத் திட்டம் வெற்றி பெறும். எத்துணையோ நன்மைகளைச் செய்கிறோம். இதைக் காட்டிலும் அதிகமாக எவரும் செய்ய முடியாது. இந்த ஆட்சிபோல், நேர்த்தியான ஆட்சியை யாராலும் நடத்த முடியாது-என்று பேசி வருகிறார். உடனிருந்து உவகைகொள்ளும் ஊர்ப் பெரியவர்கள், "எவ்வளவு தெளிவு! என்ன எளிமை! புட்டுப்புட்டுக் காட்டுகிறாரே!' என்று பாராட்டுகின்றனர்- அவர் எதிரில், ஆனால், உள்ளபடி ஆட்சி, பாராட்டுதலுக்குரியதாகத்தான் இருக்கிறதா? மக்களின் அடிப்படைத் தேவைகளையேனும் கவனித்துக் கிடைக்கச் செய்துள்ளனரா, ஆட்சியினர்? நாம், ஆட்சியாலே, நன்மை விளையாதது மட்டுமல்ல, கேடுகள் பல ஏற்பட்டுள்ளன என்று கூறும் போது, காங்கிரசாருக்குக் கடும்கோபம் வருகிறது. குறை கூறுவதேதான் வேலையா? என்று கேட்கிறார்கள். தம்பி! மக்கள் நல்வாழ்வுபெறத்தக்க, ஊழலற்ற, நேர்த்தியான ஆட்சி அல்ல இவர்கள் நடத்துவது. ஏட்டில் இனிக்க இனிக்க எழுதிக் காட்டுகிறார்கள்; நாட்டு மக்களுக்கோ, ஒரு சுவையும் கிடைப்பதில்லை. தொண்டுபுரிவதே எமது நோக்கம் என்கிறார்கள், தொல்லையைக்கூறி உதவி கேட்டால், துரத்தி துரத்தித் தாக்குகிறார்கள். புடம்போட்ட தங்கம், பாரத பூமியை மீட்ட சிங்கம் என்றெல்லாம் பெருமை பேசிக்கொள்கிறார்கள்- வெள்ளையரின் பொருளாதாரப் பிடியை நீக்கிக்கொள்ளத் துணிவின்றிக் கிடக்கிறார்கள். திறமையாக நடக்கிறது எமது ஆட்சி என்கிறார்கள். ஒவ்வோர் துறையிலும் ஒழுங்கீனமும் ஊழலும் நாற்றமடித்தபடி இருக்கிறது.
துரைத்தனம் மேற்கொள்ளும் எந்த அலுவலுக்கும், திட்டமிட வேண்டும். இவ்வளவு செலவாகும் என்பது அதிலே குறிப்பிடப்<noinclude></noinclude>
qlqpqh1aakkqspmcsvrozw90clnzmok
1928984
1928482
2026-04-30T10:16:08Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||57}}{{rule}}</noinclude>
இத்தனை கடும்பனியில் காரிருளில், எங்கே செல்கிறாய்? என்று கேட்டிடும்போது, "என் இதயம் வாழ்பவளைக் காண!" என்று கூறிடும் வாய்ப்பு இருந்தாலாவது மகிழ்வர்-மதிப்பர்!
"எங்கு?" என்று கேட்டதும், "எட்டிக்கொட்டை வேண்டும் சாப்பிட அதைக் கொண்டுவரச் செல்கிறேன்" என்று கூறிட வேண்டியதாக இருந்தால்- மதித்திடவா செய்வோம்?
ஆட்சி, சர்வாதிகார முறையினதா? ஜனநாயக முறையினதா? என்பதுகூட இருக்கட்டும், கிடைத்திடும் பலன் என்ன? முறை நமக்குப் பிடிக்காதது என்றாலும்கூட, நாம் விரும்பத்தக்கதாக இருந்தால், பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக் கொள்வார்களல்லவா!
காமராஜர், செல்லுமிடமெல்லாம். இந்த ஆட்சிக்கு ஈடுவேறு கிடையாது! மக்களுக்கு வயிறாரச் சோறுபோட வேண்டும் என்பதுதான், என் திட்டம். என் ஆட்சியிலேதான், அந்தத் திட்டம் வெற்றி பெறும். எத்துணையோ நன்மைகளைச் செய்கிறோம். இதைக் காட்டிலும் அதிகமாக எவரும் செய்ய முடியாது. இந்த ஆட்சிபோல், நேர்த்தியான ஆட்சியை யாராலும் நடத்த முடியாது-என்று பேசி வருகிறார். உடனிருந்து உவகைகொள்ளும் ஊர்ப் பெரியவர்கள், "எவ்வளவு தெளிவு! என்ன எளிமை! புட்டுப்புட்டுக் காட்டுகிறாரே!' என்று பாராட்டுகின்றனர்- அவர் எதிரில், ஆனால், உள்ளபடி ஆட்சி, பாராட்டுதலுக்குரியதாகத்தான் இருக்கிறதா? மக்களின் அடிப்படைத் தேவைகளையேனும் கவனித்துக் கிடைக்கச் செய்துள்ளனரா, ஆட்சியினர்? நாம், ஆட்சியாலே, நன்மை விளையாதது மட்டுமல்ல, கேடுகள் பல ஏற்பட்டுள்ளன என்று கூறும் போது, காங்கிரசாருக்குக் கடும்கோபம் வருகிறது. குறை கூறுவதேதான் வேலையா? என்று கேட்கிறார்கள். தம்பி! மக்கள் நல்வாழ்வுபெறத்தக்க, ஊழலற்ற, நேர்த்தியான ஆட்சி அல்ல இவர்கள் நடத்துவது. ஏட்டில் இனிக்க இனிக்க எழுதிக் காட்டுகிறார்கள்; நாட்டு மக்களுக்கோ, ஒரு சுவையும் கிடைப்பதில்லை. தொண்டுபுரிவதே எமது நோக்கம் என்கிறார்கள், தொல்லையைக்கூறி உதவி கேட்டால், துரத்தி துரத்தித் தாக்குகிறார்கள். புடம்போட்ட தங்கம், பாரத பூமியை மீட்ட சிங்கம் என்றெல்லாம் பெருமை பேசிக்கொள்கிறார்கள்- வெள்ளையரின் பொருளாதாரப் பிடியை நீக்கிக்கொள்ளத் துணிவின்றிக் கிடக்கிறார்கள். திறமையாக நடக்கிறது எமது ஆட்சி என்கிறார்கள். ஒவ்வோர் துறையிலும் ஒழுங்கீனமும் ஊழலும் நாற்றமடித்தபடி இருக்கிறது.
துரைத்தனம் மேற்கொள்ளும் எந்த அலுவலுக்கும், திட்டமிட வேண்டும். இவ்வளவு செலவாகும் என்பது அதிலே குறிப்பிடப்<noinclude></noinclude>
imc9n2n4g1imqyly12o1zlegeozenx0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/82
250
641710
1928483
1927733
2026-04-30T05:15:21Z
Rabiyathul
5890
+ மேலடி
1928483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|58||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>58
'திராவிட நாடு' இதழில்
பட்டிருக்க வேண்டும். கூடுமானவரை திட்டமிடப்பட்ட தொகை அளவுக்கே வேலை முடியவேண்டும், வேலை தரமுள்ளதாக இருக்க வேண்டும். நிர்வாகத்தில் ஒழுங்கு இருக்கவேண்டும். நடுக்கொள்ளை, வீண்செலவு, ஆகாவழி சென்றதால் அதிகச் செலவாதல் போன்றவைகள் இருத்தல் கூடாது; திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அதன் மூலம் எதிர்பார்க்கிற பலன், அளவும் வகையும் குறையாமல் கிடைக்க வேண்டும்.
புரட்சிகரமான ஆட்சிகூட இதற்கு வேண்டாம்; பொறுப்புணர்ச்சி உள்ள ஆட்சி போதும்.
மக்களுக்காக அரசாளுகிறோம், நம் மகாபெரிய அறிவாளிகள் என்பதைக் காட்டிக்கொள்ள அல்ல, என்ற அடக்க உணர்ச்சி இருந்தால் போதும்.
நிர்வாகத்திலே, பலதிறப்பட்ட குறைபாடுகள் இருப்பதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு பதில் கூற வேண்டியவர்கள், அமைச்சர்கள். குற்றம் குறை இருந்தால், கண்டறிந்து கூறவேண்டிய பொறுப்பு, கணக்கு ஆய்வுக்குழுவுடையது.
காமராஜர் கூறுகிறார், நாங்கள் எல்லாவற்றையும் ஒழுங்காகத்தான் செய்கிறோம் என்று. எதிர்க்கட்சியினர் எடுத்துரைக்கின்றனர், ஆட்சி ஒழுங்காக இல்லை என்பதை. இருதரப்பினர் கூறுவதிலே, எது சரி, எது தவறு என்பதைப் பொதுமக்கள் கண்டறிய வழி இருக்கிறது; கணக்காய் வாளர்களின் அறிக்கையைப் பார்த்தால் போதும், தம்பி! அந்த அறிக்கை யிலே, நிர்வாகத்திலே காணப்படும் ஒழுங்கீனம், விரயம், ஊழல், முறை கேடான செயல் போன்றவைகள் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வாளர்கள், கட்சிக் கண்ணோட்டம் கொண்டவர்களல்ல; துரைத்தனத்தாரேதான் அந்தக் குழுவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அமைச்சர்கள் கொள்ளையடித்துவிட்டார்கள், இலஞ்சம் வாங்கினார்கள் என்றால் மட்டும்தான் நிர்வாகத்திலே ஊழல் ஏற்பட்டு விட்டது என்று பொருள் கொள்ளக்கூடாது. அமைச்சர்கள் ஒரு துரும்பு கூடத் தமக்காக எடுத்துக் கொள்ளாத 'தர்மவான்களாக' இருக்கலாம்; ஆனால் அவர்கள் நடத்தும் துரைத்தனத்தில், ஆறு இலட்சத்திலே கட்டி முடிக்கப்பட வேண்டிய ஒரு பாலம் எட்டு இலட்சம் விழுங்குகிறது என்றால். அதிலே ஒரு காசுகூட அமைச்சருக்கு செல்லா விட்டாலும், நஷ்டம் நஷ்டம்தான், நிர்வாகம் ஒழுங்கில்லை என்றுதான் பொருள்.
நாங்கள் என்ன, பொருளை எங்கள் வீட்டுக்கா எடுத்துக் கொண்டு போய்விட்டோம்! என்று பட்டம் பறக்கவிடும் பள்ளிச்சிறார்போல், அமைச்சர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அப்படி யாரும் சொல்லவுமில்லை; செய்தால் மக்கள் சும்மாவும் விடமாட்டார்கள்.<noinclude></noinclude>
1m8wugkfaec43txlnrxw1zg6rfdcf7m
1928985
1928483
2026-04-30T10:17:11Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|58||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பட்டிருக்க வேண்டும். கூடுமானவரை திட்டமிடப்பட்ட தொகை அளவுக்கே வேலை முடியவேண்டும், வேலை தரமுள்ளதாக இருக்க வேண்டும். நிர்வாகத்தில் ஒழுங்கு இருக்கவேண்டும். நடுக்கொள்ளை, வீண்செலவு, ஆகாவழி சென்றதால் அதிகச் செலவாதல் போன்றவைகள் இருத்தல் கூடாது; திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அதன் மூலம் எதிர்பார்க்கிற பலன், அளவும் வகையும் குறையாமல் கிடைக்க வேண்டும்.
புரட்சிகரமான ஆட்சிகூட இதற்கு வேண்டாம்; பொறுப்புணர்ச்சி உள்ள ஆட்சி போதும்.
மக்களுக்காக அரசாளுகிறோம், நம் மகாபெரிய அறிவாளிகள் என்பதைக் காட்டிக்கொள்ள அல்ல, என்ற அடக்க உணர்ச்சி இருந்தால் போதும்.
நிர்வாகத்திலே, பலதிறப்பட்ட குறைபாடுகள் இருப்பதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு பதில் கூற வேண்டியவர்கள், அமைச்சர்கள். குற்றம் குறை இருந்தால், கண்டறிந்து கூறவேண்டிய பொறுப்பு, கணக்கு ஆய்வுக்குழுவுடையது.
காமராஜர் கூறுகிறார், நாங்கள் எல்லாவற்றையும் ஒழுங்காகத்தான் செய்கிறோம் என்று. எதிர்க்கட்சியினர் எடுத்துரைக்கின்றனர், ஆட்சி ஒழுங்காக இல்லை என்பதை. இருதரப்பினர் கூறுவதிலே, எது சரி, எது தவறு என்பதைப் பொதுமக்கள் கண்டறிய வழி இருக்கிறது; கணக்காய் வாளர்களின் அறிக்கையைப் பார்த்தால் போதும், தம்பி! அந்த அறிக்கை யிலே, நிர்வாகத்திலே காணப்படும் ஒழுங்கீனம், விரயம், ஊழல், முறை கேடான செயல் போன்றவைகள் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வாளர்கள், கட்சிக் கண்ணோட்டம் கொண்டவர்களல்ல; துரைத்தனத்தாரேதான் அந்தக் குழுவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அமைச்சர்கள் கொள்ளையடித்துவிட்டார்கள், இலஞ்சம் வாங்கினார்கள் என்றால் மட்டும்தான் நிர்வாகத்திலே ஊழல் ஏற்பட்டு விட்டது என்று பொருள் கொள்ளக்கூடாது. அமைச்சர்கள் ஒரு துரும்பு கூடத் தமக்காக எடுத்துக் கொள்ளாத 'தர்மவான்களாக' இருக்கலாம்; ஆனால் அவர்கள் நடத்தும் துரைத்தனத்தில், ஆறு இலட்சத்திலே கட்டி முடிக்கப்பட வேண்டிய ஒரு பாலம் எட்டு இலட்சம் விழுங்குகிறது என்றால். அதிலே ஒரு காசுகூட அமைச்சருக்கு செல்லா விட்டாலும், நஷ்டம் நஷ்டம்தான், நிர்வாகம் ஒழுங்கில்லை என்றுதான் பொருள்.
நாங்கள் என்ன, பொருளை எங்கள் வீட்டுக்கா எடுத்துக் கொண்டு போய்விட்டோம்! என்று பட்டம் பறக்கவிடும் பள்ளிச்சிறார்போல், அமைச்சர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அப்படி யாரும் சொல்லவுமில்லை; செய்தால் மக்கள் சும்மாவும் விடமாட்டார்கள்.<noinclude></noinclude>
plnkymvr4jpxfvrb7f3h8capl43moc8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/83
250
641711
1928484
1927734
2026-04-30T05:15:52Z
Rabiyathul
5890
+ மேலடி
1928484
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||59}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
59
'வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்' என்று யாரும் கூறவில்லை. ஆனால், இவர்கள் வீட்டுக்குப் போய்விட்டால், இந்த ஒழுங்கீனம், ஊழல் இருக்காது என்று கூறுகின்றனர்.
சுவைமிகு உண்டி தயாரித்திருக்கலாம். ஆனால் அதைக் காலங் கடந்து தந்தால், பலன் குறைவாகத்தானே இருக்கும்!
அதுபோல், பாசன வசதியை நேர்த்தியாகச் செய்தளித்திருக்கலாம். ஆனால் அது விவசாயம் செய்ய வேண்டிய காலம் தவறிக் கிடைத்தால், பலன் என்ன? செலவு ஆகி இருக்கிறது, அது விரயம்தானே, வீண்தானே! இதற்கு யார் பொறுப்பு?
கணக்காய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளவைகளைப் பார்க்கும் போது, எப்படிப்பட்ட கண்மூடித் தர்பார் நடக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது. சில குறிப்புக்களைக் காட்டுகிறேன், தம்பி! படித்துப் பார்! பராக்குக் கூறிக்கொண்டு திரிகிறார்களே, காங்கிரஸ் அமைச்சர்களுடன், அவர்களிடம் எடுத்துக் கூறு.
1954-55 அரிசி கொள்முதல் செய்து கிடங்கில் வைத்திருந்து, பிறகு விற்பனை செய்ததில், இரண்டு மாவட்டங்களில் மட்டும், முறையே, 44,215 ரூபாய்களும் 1,25,256 ரூபாய்களும் நஷ்டம் ஏற்பட்டதாக. அறிக்கை கூறுகிறது.
குழாய்கள், அதற்கான கருவிகளை வாங்கி, விற்றதிலே மொத்தத்தில் ஏற்பட்ட நஷ்டம் ஏழு இலட்சமாம்!
அரிசியை, பற்றாக்குறை மாவட்டத்துக்காக உபரியாக உள்ள மாவட்டத்திலிருந்து வாங்கும் அதிகாரம் பெற்ற 14 வியாபாரிகள், சர்க்காருக்கு 2,40,616 ரூபாய் தரவேண்டி ஏற்பட்டது. ஐந்தாறு ஆண்டுகளாக அந்தப் பணத்தைச் சர்க்கார் கேட்டு வாங்கவில்லை. 1954-ல், வழக்குத் தொடுத்தார்கள். அதற்குள் இரண்டு வியாபாரிகள் இறந்துவிட்டனர். சொத்து ஏதும் இல்லை என்று ஏற்பட்டது. இதனால் 35,525 ரூபாய் நட்டம்! மற்றும் இரண்டு இலட்சத்துச் சொச்சத்துக்காக வழக்காட வேண்டிய நிலை!
நிர்வாகம் செம்மையாக இருப்பதற்கான சான்றா இது!!
கரம்புகளைத் திருத்திக் கழனிகளாக்க, 'டிராக்டர், புல்டோசர் போன்றவைகள் கிட்டத்தட்ட அறுபது இலட்ச ரூபாய் மூலதனம் போட்டு வாங்கிப் பயன்படுத்தப்பட்டன. இலாபமும் வேண்டாம். நஷ்டமும் ஏற்படக் கூடாது; அந்தமுறையில் இந்தத் துறை பணியாற்றவேண்டும் என்பது, கொள்கை. ஆனால் அதிலே ஏற்பட்ட நஷ்டம் 52,32,876<noinclude></noinclude>
h411aeyx08d5lbswu569yzivpvjoz2r
1928986
1928484
2026-04-30T10:17:42Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||59}}{{rule}}</noinclude>
'வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்' என்று யாரும் கூறவில்லை. ஆனால், இவர்கள் வீட்டுக்குப் போய்விட்டால், இந்த ஒழுங்கீனம், ஊழல் இருக்காது என்று கூறுகின்றனர்.
சுவைமிகு உண்டி தயாரித்திருக்கலாம். ஆனால் அதைக் காலங் கடந்து தந்தால், பலன் குறைவாகத்தானே இருக்கும்!
அதுபோல், பாசன வசதியை நேர்த்தியாகச் செய்தளித்திருக்கலாம். ஆனால் அது விவசாயம் செய்ய வேண்டிய காலம் தவறிக் கிடைத்தால், பலன் என்ன? செலவு ஆகி இருக்கிறது, அது விரயம்தானே, வீண்தானே! இதற்கு யார் பொறுப்பு?
கணக்காய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளவைகளைப் பார்க்கும் போது, எப்படிப்பட்ட கண்மூடித் தர்பார் நடக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது. சில குறிப்புக்களைக் காட்டுகிறேன், தம்பி! படித்துப் பார்! பராக்குக் கூறிக்கொண்டு திரிகிறார்களே, காங்கிரஸ் அமைச்சர்களுடன், அவர்களிடம் எடுத்துக் கூறு.
1954-55 அரிசி கொள்முதல் செய்து கிடங்கில் வைத்திருந்து, பிறகு விற்பனை செய்ததில், இரண்டு மாவட்டங்களில் மட்டும், முறையே, 44,215 ரூபாய்களும் 1,25,256 ரூபாய்களும் நஷ்டம் ஏற்பட்டதாக. அறிக்கை கூறுகிறது.
குழாய்கள், அதற்கான கருவிகளை வாங்கி, விற்றதிலே மொத்தத்தில் ஏற்பட்ட நஷ்டம் ஏழு இலட்சமாம்!
அரிசியை, பற்றாக்குறை மாவட்டத்துக்காக உபரியாக உள்ள மாவட்டத்திலிருந்து வாங்கும் அதிகாரம் பெற்ற 14 வியாபாரிகள், சர்க்காருக்கு 2,40,616 ரூபாய் தரவேண்டி ஏற்பட்டது. ஐந்தாறு ஆண்டுகளாக அந்தப் பணத்தைச் சர்க்கார் கேட்டு வாங்கவில்லை. 1954-ல், வழக்குத் தொடுத்தார்கள். அதற்குள் இரண்டு வியாபாரிகள் இறந்துவிட்டனர். சொத்து ஏதும் இல்லை என்று ஏற்பட்டது. இதனால் 35,525 ரூபாய் நட்டம்! மற்றும் இரண்டு இலட்சத்துச் சொச்சத்துக்காக வழக்காட வேண்டிய நிலை!
நிர்வாகம் செம்மையாக இருப்பதற்கான சான்றா இது!!
கரம்புகளைத் திருத்திக் கழனிகளாக்க, 'டிராக்டர், புல்டோசர் போன்றவைகள் கிட்டத்தட்ட அறுபது இலட்ச ரூபாய் மூலதனம் போட்டு வாங்கிப் பயன்படுத்தப்பட்டன. இலாபமும் வேண்டாம். நஷ்டமும் ஏற்படக் கூடாது; அந்தமுறையில் இந்தத் துறை பணியாற்றவேண்டும் என்பது, கொள்கை. ஆனால் அதிலே ஏற்பட்ட நஷ்டம் 52,32,876<noinclude></noinclude>
hy4en8n1d5hhl8aqjamq25vivf82vik
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/84
250
641712
1928486
1927735
2026-04-30T05:16:24Z
Rabiyathul
5890
+ மேலடி
1928486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|60||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>60
'திராவிட நாடு' இதழில்
என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது! பலே! பலே! நம்முடைய துரைத்தனம் எவ்வளவு திறமையாக வேலைசெய்கிறது, என்றா மக்கள் பாராட்டு வார்கள். இந்தத் தகவலைப் படித்துவிட்டு.
இராணுவத்திடமிருந்த ஒரு விமான தளத்தை, பாகிஸ்தானிலிருந்து வரும் அகதிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணத்துடன் 86,000 ரூபாய் கொடுத்துத் துரைத்தனத்தார் வாங்கினர். வாங்குவதற்கு முன்பு, இடம் தக்கதுதானா. என்று யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா? நம்மைத் தான் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே, எதை எப்படிச் செய்தால் என்ன என்ற போக்கிலே, தளம் வாங்கி, பிறகு அது பயனில்லை என்று கண்டு, விற்றுவிட்டனர்.
அந்த வகையிலே ஏற்பட்ட நஷ்டம் 73,643 ரூபாய்.
குடிதண்ணீர் திட்டத்துக்காக, 87,838 ரூபாய் செலவில், ஒரு அமைப்பு ஏற்பாடாயிற்று. அந்தத் திட்டம் ஒரு காண்ட்ராக்டரிடம் விடப்பட்டது. வேலை தொடங்கி ஓரளவு முடியும் தருவாயில், 'சானிடரி என்ஜினியர்' வேறோர் இடமே, குடி தண்ணீர்த் திட்டத்துக்கு ஏற்றது. இந்த இடமல்ல, என்று கூறிவிட்டார். பழைய இடம், அங்கு அதுவரையில் நடைபெற்ற வேலை, கைவிடப் பட்டுவிட்டது. காண்ட்ராக்டருக்கு 37,550 ரூபாய் தரப்பட்டது.
திட்டத்தைத் துவக்கு முன்பு, ஆர அமர யோசித்து, அந்தத் துறை நிபுணர்களைக் கலந்து பேசி, அவர்களின் ஒப்புதலைப் பெற்றிருந்தால், இந்த நஷ்டம் ஏற்பட்டிராதல்லவா?
விற்பனைவரி அலுவலகத்தார், குறைத்து மதிப்பிட்டதாலும், காரணமின்றி வரியைத் திருப்பித்தந்த வகையிலும் 36,510 ரூபாயும், நீதித்துறையிலே, கையாடல், பணத்தைத் திருப்பிப் பெறுவதிலே ஏற்பட்ட நஷ்டம் போன்ற வகைகளுக்காக 2,63,123 ரூபாயும், உருளைக்கிழங்கு காண்ட்ராக்டில் ஏற்பட்ட நஷ்டம் 59,452 ரூபாயும், விவசாயத்துறை அலுவலகத்தில் சரக்கு இருப்பில் குறைவு ஏற்பட்டது, களவு, சரக்கு வாங்குவதிலே ஏற்பட்ட நஷ்டம் போன்ற வகைகளால் 2,31,041 ரூபாயும், கடனைத் திருப்பி வாங்காதது போன்றவைகள் மூலம் 34.707 ரூபாயும், இரும்புக் கம்பிகள் களவுபோன வகையில் 64,274 ரூபாயும், அரிசி, கோதுமை மற்ற வகைத் தானியங்கள் இருப்பிலே, குறைவு ஏற்பட்ட வகையில் மொத்த வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடு தரப்பட்ட வகையில் 36,50,114 ரூபாயும், ஆக மொத்தத்தில் 50,55,008 ரூபாய்கள், வீணாகி விட்டதாக 1954-55-ம் ஆண்டு. கணக்கு ஆய்வாளர் அறிக்கை தெரிவிக்கிறது. எனினும், எங்கள் ஆட்சியின் நேர்த்தியே நேர்த்தி, எமது அமைச்சர்களின் கீர்த்தியே கீர்த்தி என்று துந்துபி முழக்கித் திரிகின்றனர், தேர்தல் தரகர்கள்.<noinclude></noinclude>
gkb4uv3k8yksakncnb1ono1a5y0f380
1928987
1928486
2026-04-30T10:18:32Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|60||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது! பலே! பலே! நம்முடைய துரைத்தனம் எவ்வளவு திறமையாக வேலைசெய்கிறது, என்றா மக்கள் பாராட்டு வார்கள். இந்தத் தகவலைப் படித்துவிட்டு.
இராணுவத்திடமிருந்த ஒரு விமான தளத்தை, பாகிஸ்தானிலிருந்து வரும் அகதிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணத்துடன் 86,000 ரூபாய் கொடுத்துத் துரைத்தனத்தார் வாங்கினர். வாங்குவதற்கு முன்பு, இடம் தக்கதுதானா. என்று யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா? நம்மைத் தான் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே, எதை எப்படிச் செய்தால் என்ன என்ற போக்கிலே, தளம் வாங்கி, பிறகு அது பயனில்லை என்று கண்டு, விற்றுவிட்டனர்.
அந்த வகையிலே ஏற்பட்ட நஷ்டம் 73,643 ரூபாய்.
குடிதண்ணீர் திட்டத்துக்காக, 87,838 ரூபாய் செலவில், ஒரு அமைப்பு ஏற்பாடாயிற்று. அந்தத் திட்டம் ஒரு காண்ட்ராக்டரிடம் விடப்பட்டது. வேலை தொடங்கி ஓரளவு முடியும் தருவாயில், 'சானிடரி என்ஜினியர்' வேறோர் இடமே, குடி தண்ணீர்த் திட்டத்துக்கு ஏற்றது. இந்த இடமல்ல, என்று கூறிவிட்டார். பழைய இடம், அங்கு அதுவரையில் நடைபெற்ற வேலை, கைவிடப் பட்டுவிட்டது. காண்ட்ராக்டருக்கு 37,550 ரூபாய் தரப்பட்டது.
திட்டத்தைத் துவக்கு முன்பு, ஆர அமர யோசித்து, அந்தத் துறை நிபுணர்களைக் கலந்து பேசி, அவர்களின் ஒப்புதலைப் பெற்றிருந்தால், இந்த நஷ்டம் ஏற்பட்டிராதல்லவா?
விற்பனைவரி அலுவலகத்தார், குறைத்து மதிப்பிட்டதாலும், காரணமின்றி வரியைத் திருப்பித்தந்த வகையிலும் 36,510 ரூபாயும், நீதித்துறையிலே, கையாடல், பணத்தைத் திருப்பிப் பெறுவதிலே ஏற்பட்ட நஷ்டம் போன்ற வகைகளுக்காக 2,63,123 ரூபாயும், உருளைக்கிழங்கு காண்ட்ராக்டில் ஏற்பட்ட நஷ்டம் 59,452 ரூபாயும், விவசாயத்துறை அலுவலகத்தில் சரக்கு இருப்பில் குறைவு ஏற்பட்டது, களவு, சரக்கு வாங்குவதிலே ஏற்பட்ட நஷ்டம் போன்ற வகைகளால் 2,31,041 ரூபாயும், கடனைத் திருப்பி வாங்காதது போன்றவைகள் மூலம் 34.707 ரூபாயும், இரும்புக் கம்பிகள் களவுபோன வகையில் 64,274 ரூபாயும், அரிசி, கோதுமை மற்ற வகைத் தானியங்கள் இருப்பிலே, குறைவு ஏற்பட்ட வகையில் மொத்த வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடு தரப்பட்ட வகையில் 36,50,114 ரூபாயும், ஆக மொத்தத்தில் 50,55,008 ரூபாய்கள், வீணாகி விட்டதாக 1954-55-ம் ஆண்டு. கணக்கு ஆய்வாளர் அறிக்கை தெரிவிக்கிறது. எனினும், எங்கள் ஆட்சியின் நேர்த்தியே நேர்த்தி, எமது அமைச்சர்களின் கீர்த்தியே கீர்த்தி என்று துந்துபி முழக்கித் திரிகின்றனர், தேர்தல் தரகர்கள்.<noinclude></noinclude>
towedsol70v7w7lms68xktqgyon8swf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/85
250
641713
1928487
1927736
2026-04-30T05:16:55Z
Rabiyathul
5890
+ மேலடி
1928487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||61}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
61
1955-56-லும் இதே சோகக் காதைதான் தொடருகிறது. விவசாயத் துறை அலுவலகம், பொறியியல் துறை அலுவலகம் ஆகியவற்றிலே சரக்கு இருப்பிலே ஏற்பட்ட குறைவு வகையில் 66,386: கப்பலில் வந்த அரிசியில், அளவு குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டம் 1,92,151; தகவல் சரியாக விசாரிக்காமலே ஒரு கலெக்டர் அரிசி மூட்டைகளை விற்ற வகையில் ஏற்பட்ட நஷ்டம் 29,120; அலுவலகத்தார் கையாடல் வகை 25,000; மாவட்ட அலுவலகங்களில் கையாடல் 30.247; இருப்புக் குறைவானது, கையாடல் போன்றவைகள் நீதித் துறையில் ஏற்பட்ட வகையில், 1,41,034: போலீஸ் துறையிலே, நிபுணர் யோசனையின்படி அல்லாமல் வேறுவிதமாகச் சைகிள்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட நஷ்டம் 50,000, ஆசிரியர்களுக்கு மானியம், முறையற்ற வகையில் தரப்பட்டது, தரவேண்டியதைவிட அதிகத்தொகை உபகாரச் சம்பளமாகக் கொடுத்தது போன்ற வகைகளில், கல்வித் துறையில், 2,98,651; சரக்குக் கெட்டுப் போனது, இருப்பு குறைந்தது, உரம் குறைந்து விட்டது, போன்ற வகைகளால் விவசாயத் துறையில் 2,31,714; கருவிகள் கெட்டுவிட்டது, பட்டுச் சரக்கு இருப்பு பாழாகி விட்டது, நஷ்டத்துக்கு விற்றது, காண்ட்ராக்டர் தரவேண்டிய தொகையைத் திருப்பி வாங்காதது போன்ற வகைகளில் தொழிற்கூடத் துறையில், 1,45,894; இலவசச் சம்பளம் அளித்ததில் தவறுதலாக அதிகத் தொகை தந்துவிட்ட வகையில் அரிஜன நலத்துறையில் 60,597; தவறுதலாகத் தேவையற்ற ஒரு குறிப்புப் புத்தகத்தை அச்சிட்ட வகையில் 33,733; கொடுத்த முன்பணம் திரும்ப வராதது போன்ற வகையில், 1,15,807; குழாய்கள், கருவிகள், அரிசி, நெல் போன்ற தான்யங்கள் இருப்பிலே குறைவு ஏற்பட்ட வகையில், 24,82,191; மற்றும் பல்வேறு வகையான நஷ்டங்கள் 54,92,373; ஆக மொத்தம், 99,14,228 ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது என்று 1955-56-ம் ஆண்டு, கணக்கு ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர். அமைச்சர்களோ, அடித்துப் பேசுகின்றனர். எம்முடைய ஆட்சியே அப்பழுக்கற்றது என்று.
1956-57-ல், இந்த ஓட்டைகள் அடைபட்டுப் போய்விட வில்லை; விரயம் தொடருகிறது!!
உணவுத்துறையினர் விற்பனைவரி வசூலிக்காததால் ஏற்பட்ட நஷ்டம் 5 இலட்சம். குழாய்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட அதிகச் செலவு, 5,57,000.
ஒரு நீர்ப்பாசன திட்டத்துக்காகக் குன்றின் பக்கமாக, மண்ணால் ஒரு அணைகட்டத் திட்டமிட்டனர்.
1.12.929 ரூபாய் இதற்காகச் செலவிடப்பட்டது.<noinclude></noinclude>
a5ukh4vc2j79tgawz52f8o3eeiclunl
1928988
1928487
2026-04-30T10:19:17Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||61}}{{rule}}</noinclude>
1955-56-லும் இதே சோகக் காதைதான் தொடருகிறது. விவசாயத் துறை அலுவலகம், பொறியியல் துறை அலுவலகம் ஆகியவற்றிலே சரக்கு இருப்பிலே ஏற்பட்ட குறைவு வகையில் 66,386: கப்பலில் வந்த அரிசியில், அளவு குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டம் 1,92,151; தகவல் சரியாக விசாரிக்காமலே ஒரு கலெக்டர் அரிசி மூட்டைகளை விற்ற வகையில் ஏற்பட்ட நஷ்டம் 29,120; அலுவலகத்தார் கையாடல் வகை 25,000; மாவட்ட அலுவலகங்களில் கையாடல் 30.247; இருப்புக் குறைவானது, கையாடல் போன்றவைகள் நீதித் துறையில் ஏற்பட்ட வகையில், 1,41,034: போலீஸ் துறையிலே, நிபுணர் யோசனையின்படி அல்லாமல் வேறுவிதமாகச் சைகிள்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட நஷ்டம் 50,000, ஆசிரியர்களுக்கு மானியம், முறையற்ற வகையில் தரப்பட்டது, தரவேண்டியதைவிட அதிகத்தொகை உபகாரச் சம்பளமாகக் கொடுத்தது போன்ற வகைகளில், கல்வித் துறையில், 2,98,651; சரக்குக் கெட்டுப் போனது, இருப்பு குறைந்தது, உரம் குறைந்து விட்டது, போன்ற வகைகளால் விவசாயத் துறையில் 2,31,714; கருவிகள் கெட்டுவிட்டது, பட்டுச் சரக்கு இருப்பு பாழாகி விட்டது, நஷ்டத்துக்கு விற்றது, காண்ட்ராக்டர் தரவேண்டிய தொகையைத் திருப்பி வாங்காதது போன்ற வகைகளில் தொழிற்கூடத் துறையில், 1,45,894; இலவசச் சம்பளம் அளித்ததில் தவறுதலாக அதிகத் தொகை தந்துவிட்ட வகையில் அரிஜன நலத்துறையில் 60,597; தவறுதலாகத் தேவையற்ற ஒரு குறிப்புப் புத்தகத்தை அச்சிட்ட வகையில் 33,733; கொடுத்த முன்பணம் திரும்ப வராதது போன்ற வகையில், 1,15,807; குழாய்கள், கருவிகள், அரிசி, நெல் போன்ற தான்யங்கள் இருப்பிலே குறைவு ஏற்பட்ட வகையில், 24,82,191; மற்றும் பல்வேறு வகையான நஷ்டங்கள் 54,92,373; ஆக மொத்தம், 99,14,228 ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது என்று 1955-56-ம் ஆண்டு, கணக்கு ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர். அமைச்சர்களோ, அடித்துப் பேசுகின்றனர். எம்முடைய ஆட்சியே அப்பழுக்கற்றது என்று.
1956-57-ல், இந்த ஓட்டைகள் அடைபட்டுப் போய்விட வில்லை; விரயம் தொடருகிறது!!
உணவுத்துறையினர் விற்பனைவரி வசூலிக்காததால் ஏற்பட்ட நஷ்டம் 5 இலட்சம். குழாய்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட அதிகச் செலவு, 5,57,000.
ஒரு நீர்ப்பாசன திட்டத்துக்காகக் குன்றின் பக்கமாக, மண்ணால் ஒரு அணைகட்டத் திட்டமிட்டனர்.
1.12.929 ரூபாய் இதற்காகச் செலவிடப்பட்டது.<noinclude></noinclude>
j46ix61633g05d74pday7z3nk1pkbr4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/86
250
641714
1928489
1927737
2026-04-30T05:17:26Z
Rabiyathul
5890
+ மேலடி
1928489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|62||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>62
'திராவிட நாடு' இதழில்
பிறகு நிபுணர்கள், அந்தக் குன்று, பாறைகள் கொண்டது; எனவே அதைப் பலப்படுத்த மண் அணை தேவையே இல்லை என்று தெரிவித்தனர். அணை கட்டுவது கைவிடப்பட்டது. ஆன செலவு நஷ்டம், 1,12,929 ரூபாய்!!
குப்பைக் காகிதங்களை மொத்தம் 91- ரூபாய்க்கு விற்றனர் அலுவலகத்தார். ஆய்வாளர்கள் கணக்குப் பார்த்தனர். இதேபோன்ற குப்பைக் காகிதத்தை முன்பு விற்றபோது, கிடைத்த தொகை அதிகம் என்று தெரிகிறது. அந்த வகையில் நஷ்டம் 15,500 அதாவது, 15-ஆயிரம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள காகிதத்தை 100-ரூபாய்க்கு விற்றனர். ஏன்? காரணம் கேட்டுப் பாரேன், 'கனம்'களைப் புகழ்ந்து உலாவும் பேர்வழிகளை.
புத்தகமொன்று 15-ரூபாய் வீதம் 2284-புத்தகங்களை 1952-ல், துரைத்தனத்தார் விலைகொடுத்து வாங்கினார்கள்.
மூன்று ஆண்டுகளாகப் புத்தகம் விலைபோகவில்லை. 2102-புத்தகங்கள் விற்பனையாகாமலிருந்தன.
விலையைக் குறைத்து விற்கலாமென்று எண்ணி 3 ரூபாய் என்றனர். 2 ரூபாய்க்கும் தயாராயினர்; அந்த விலை கொடுத்து வாங்கவும் அதிகம் பேர் முன் வரவில்லை.
எனவே, 1775 புத்தகங்களை, குப்பைக் காகிதமென்று 778 ரூபாய்க்கு விற்றனர்.
இந்த வகையிலே ஏற்பட்ட மொத்த நஷ்டம் 29.616 ரூபாய். ஏன் ஏற்படவேண்டும் இந்த நஷ்டம்?
வரி வசூலிக்கும் அதிகாரிகள் கையாடல் தொகை 50.672 என்று அறிக்கை அறிவிக்கிறது.
பதினெட்டு டன் சந்தனக் கட்டையை அனுப்பி வைத்தனர். துரைத்தனத்தார்.
பிறகு பார்த்தால் பத்து டன்தான் இருந்தது.
எட்டு டன், வழியில் காணாமற் போய்விட்டது.
நஷ்டம் 31,054 என்று அறிக்கை தெரிவிக்கிறது.
நீதித்துறையிலே கையாடல், அதிகத் தொகை கொடுத்ததால் கெட்டது போன்ற வகையில், 3,08,122 ரூபாய்கள். விவசாயத் துறையிலே, என்ஜின்கள் விற்றதிலே நஷ்டம் போன்றவைகளில் 1,70,246. காங்கிரஸ் பொருட்காட்சியிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகையைத்<noinclude></noinclude>
cu8i7w9v4sohnumt5cqdo7rh26q1us9
1928989
1928489
2026-04-30T10:20:15Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|62||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பிறகு நிபுணர்கள், அந்தக் குன்று, பாறைகள் கொண்டது; எனவே அதைப் பலப்படுத்த மண் அணை தேவையே இல்லை என்று தெரிவித்தனர். அணை கட்டுவது கைவிடப்பட்டது. ஆன செலவு நஷ்டம், 1,12,929 ரூபாய்!!
குப்பைக் காகிதங்களை மொத்தம் 91- ரூபாய்க்கு விற்றனர் அலுவலகத்தார். ஆய்வாளர்கள் கணக்குப் பார்த்தனர். இதேபோன்ற குப்பைக் காகிதத்தை முன்பு விற்றபோது, கிடைத்த தொகை அதிகம் என்று தெரிகிறது. அந்த வகையில் நஷ்டம் 15,500 அதாவது, 15-ஆயிரம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள காகிதத்தை 100-ரூபாய்க்கு விற்றனர். ஏன்? காரணம் கேட்டுப் பாரேன், 'கனம்'களைப் புகழ்ந்து உலாவும் பேர்வழிகளை.
புத்தகமொன்று 15-ரூபாய் வீதம் 2284-புத்தகங்களை 1952-ல், துரைத்தனத்தார் விலைகொடுத்து வாங்கினார்கள்.
மூன்று ஆண்டுகளாகப் புத்தகம் விலைபோகவில்லை. 2102-புத்தகங்கள் விற்பனையாகாமலிருந்தன.
விலையைக் குறைத்து விற்கலாமென்று எண்ணி 3 ரூபாய் என்றனர். 2 ரூபாய்க்கும் தயாராயினர்; அந்த விலை கொடுத்து வாங்கவும் அதிகம் பேர் முன் வரவில்லை.
எனவே, 1775 புத்தகங்களை, குப்பைக் காகிதமென்று 778 ரூபாய்க்கு விற்றனர்.
இந்த வகையிலே ஏற்பட்ட மொத்த நஷ்டம் 29.616 ரூபாய். ஏன் ஏற்படவேண்டும் இந்த நஷ்டம்?
வரி வசூலிக்கும் அதிகாரிகள் கையாடல் தொகை 50.672 என்று அறிக்கை அறிவிக்கிறது.
பதினெட்டு டன் சந்தனக் கட்டையை அனுப்பி வைத்தனர். துரைத்தனத்தார்.
பிறகு பார்த்தால் பத்து டன்தான் இருந்தது.
எட்டு டன், வழியில் காணாமற் போய்விட்டது.
நஷ்டம் 31,054 என்று அறிக்கை தெரிவிக்கிறது.
நீதித்துறையிலே கையாடல், அதிகத் தொகை கொடுத்ததால் கெட்டது போன்ற வகையில், 3,08,122 ரூபாய்கள். விவசாயத் துறையிலே, என்ஜின்கள் விற்றதிலே நஷ்டம் போன்றவைகளில் 1,70,246. காங்கிரஸ் பொருட்காட்சியிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகையைத்<noinclude></noinclude>
qf3qsw0b05b507hoc62lgxwlez0xsbi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/87
250
641715
1928490
1927738
2026-04-30T05:17:58Z
Rabiyathul
5890
+ மேலடி
1928490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||63}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
63
தள்ளுபடி செய்தது 32,936; மற்றும் திட்டங்களிலே பணியாற்றியவர் களுக்கு அதிகப்படியாகப் பணம் கொடுத்த வகையிலும், நீர்ப்பாசனத் துறை திட்டங்களில் ஏற்பட்ட நஷ்டங்களும் சேர்ந்து 1,62,558
ரூபாயும்; மின்சாரத் துறையில் செடிய தொகையை வாங்க
இயலாது போய்விட்ட வகையில் 1,33,848 ரூபாயும்; அரிசி, கோதுமை, உரம் ஆகியவற்றின் இருப்பிலே குறைவு ஏற்பட்ட வகையில் 19,95,876 ரூபாயும்; விவசாயத் துறையில், கடனுக்கான வட்டி பெறமுடியாமல் தள்ளுபடி செய்யப்பட்ட வகையில் 80,798 ரூபாயும்; தனித்தனியாகக் குறிப்பிடப்படாமல் விடப்பட்டிருக்கிற, பல்வேறு இனங்களிலே ஏற்பட்ட நஷ்டம், 16,78,784 ரூபாயும்; ஆக மொத்தத்திலே 51,64,905 ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கணக்கு ஆய்வாளர் காட்டுகிறார். காமராஜரோ எங்கள் ஆட்சியைப்போல ஒழுங்கான ஆட்சி வேறு ஏது என்று மார் தட்டுகிறார். கணக்கு ஆய்வாளர் எடுத்துக் காட்டியுள்ள அவலட்சணத்துக்கு என்ன பதில் அளிக்கிறார் அமைச்சர்! சிலசில குறைகள் இருக்கத்தான் செய்யும் என்று. சமாதானம் கூறுவதனால், ஊழலை ஒழித்துக்கட்ட இயலாத துரைத்தனத் தலைவர்களுக்கு, நாவடக்கமாவது இருக்க வேண்டாமா, என்று கேட்க வேண்டாமா, தம்பி!
நாவடக்கமின்றி, ஏதோ நாடாளும் தகுதி, தங்களுக்கு மட்டுமே. நாலாறு தலைமுறையாக, நாதன் அருளால் தரப்பட்டிருப்பதுபோலப் பேசும் அமைச்சர்கள், ஊழல், நிர்வாகத்தை விட்டு ஒழிய முயற்சி எடுத்துக்கொண்டு. வெற்றி பெற்றிருக்கிறார்களா? இல்லை என்பதை 1957-58-ம் ஆண்டுக் கணக்கு ஆய்வாளர் காட்டுகிறார்.
மருத்துவ மனைகளுக்கு இறைச்சி தருவதற்கான காண்ட்ராக்ட்டைச் சரியாகக் கவனித்துச் செய்யத் தவறியதால் 24.634 ரூபாய் அதிகம் செலவழிக்க வேண்டி நேரிட்டதாம். பெரிய சிக்கலான பிரச்சினை அல்ல; இந்தச் சாதாரணப் பிரச்சினையில் கூட இந்த அளவு மதமதப்பு ஏற்படுவானேன்-பொருள் பாழ்படுவானேன்?
கைக்குத்தலரிசி வாங்குவதற்காக, காண்ட்ராக்ட் ஏற்பாடு செய்ததிலும், இதேபோலக் குறைபாடு ஏற்பட்டு, 1,05,412 ரூபாய் அதிகச் செலவாகி இருக்கிறது.
கண்ணுங் கருத்துமாகப் பொறுப்புணர்ச்சியோடு, புத்திக் கூர்மை யுடன் காரியமாற்றியிருந்தால், இந்த வீண் செலவு ஏற்படுமா?
சப்-மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளில்-குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கிற இடங்களில்!-கையாடல் நடந்திருக்கிறது 10,044 ரூபாய்க்கு!!<noinclude></noinclude>
3func5m1xrwowhfrm5r67npg0c19zk4
1928990
1928490
2026-04-30T10:21:27Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||63}}{{rule}}</noinclude>தள்ளுபடி செய்தது 32,936; மற்றும் திட்டங்களிலே பணியாற்றியவர் களுக்கு அதிகப்படியாகப் பணம் கொடுத்த வகையிலும், நீர்ப்பாசனத் துறை திட்டங்களில் ஏற்பட்ட நஷ்டங்களும் சேர்ந்து 1,62,558
ரூபாயும்; மின்சாரத் துறையில் செடிய தொகையை வாங்க
இயலாது போய்விட்ட வகையில் 1,33,848 ரூபாயும்; அரிசி, கோதுமை, உரம் ஆகியவற்றின் இருப்பிலே குறைவு ஏற்பட்ட வகையில் 19,95,876 ரூபாயும்; விவசாயத் துறையில், கடனுக்கான வட்டி பெறமுடியாமல் தள்ளுபடி செய்யப்பட்ட வகையில் 80,798 ரூபாயும்; தனித்தனியாகக் குறிப்பிடப்படாமல் விடப்பட்டிருக்கிற, பல்வேறு இனங்களிலே ஏற்பட்ட நஷ்டம், 16,78,784 ரூபாயும்; ஆக மொத்தத்திலே 51,64,905 ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கணக்கு ஆய்வாளர் காட்டுகிறார். காமராஜரோ எங்கள் ஆட்சியைப்போல ஒழுங்கான ஆட்சி வேறு ஏது என்று மார் தட்டுகிறார். கணக்கு ஆய்வாளர் எடுத்துக் காட்டியுள்ள அவலட்சணத்துக்கு என்ன பதில் அளிக்கிறார் அமைச்சர்! சிலசில குறைகள் இருக்கத்தான் செய்யும் என்று. சமாதானம் கூறுவதனால், ஊழலை ஒழித்துக்கட்ட இயலாத துரைத்தனத் தலைவர்களுக்கு, நாவடக்கமாவது இருக்க வேண்டாமா, என்று கேட்க வேண்டாமா, தம்பி!
நாவடக்கமின்றி, ஏதோ நாடாளும் தகுதி, தங்களுக்கு மட்டுமே. நாலாறு தலைமுறையாக, நாதன் அருளால் தரப்பட்டிருப்பதுபோலப் பேசும் அமைச்சர்கள், ஊழல், நிர்வாகத்தை விட்டு ஒழிய முயற்சி எடுத்துக்கொண்டு. வெற்றி பெற்றிருக்கிறார்களா? இல்லை என்பதை 1957-58-ம் ஆண்டுக் கணக்கு ஆய்வாளர் காட்டுகிறார்.
மருத்துவ மனைகளுக்கு இறைச்சி தருவதற்கான காண்ட்ராக்ட்டைச் சரியாகக் கவனித்துச் செய்யத் தவறியதால் 24.634 ரூபாய் அதிகம் செலவழிக்க வேண்டி நேரிட்டதாம். பெரிய சிக்கலான பிரச்சினை அல்ல; இந்தச் சாதாரணப் பிரச்சினையில் கூட இந்த அளவு மதமதப்பு ஏற்படுவானேன்-பொருள் பாழ்படுவானேன்?
கைக்குத்தலரிசி வாங்குவதற்காக, காண்ட்ராக்ட் ஏற்பாடு செய்ததிலும், இதேபோலக் குறைபாடு ஏற்பட்டு, 1,05,412 ரூபாய் அதிகச் செலவாகி இருக்கிறது.
கண்ணுங் கருத்துமாகப் பொறுப்புணர்ச்சியோடு, புத்திக் கூர்மை யுடன் காரியமாற்றியிருந்தால், இந்த வீண் செலவு ஏற்படுமா?
சப்-மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளில்-குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கிற இடங்களில்!-கையாடல் நடந்திருக்கிறது 10,044 ரூபாய்க்கு!!<noinclude></noinclude>
bc3nqhtlycdefspiqrh7jeozhd3s17m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/88
250
641716
1928491
1927739
2026-04-30T05:18:29Z
Rabiyathul
5890
+ மேலடி
1928491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|64||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>64
'திராவிட நாடு' இதழில்
பஸ் டிக்கட்டுகள் தேவையைக் கவனிக்காது "போர் போராக" அச்சடித்துவிட்டு, அவை நாசமாகிப் போனதால் ஏற்பட்ட நஷ்டம் 37,179 ரூபாய்.
கூட்டுறவு வீடுகட்டும் சங்கமொன்று செலுத்த வேண்டிய 'அசலும் வட்டியும்' திருப்பி வாங்க வக்கற்று 1 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய், தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
நெடுஞ்சாலைத் துறையினர், இராணுவத் தளவாடத் துறையினரிட மிருந்து வாங்கிய சாமான்கள், பழுதுபட்டுப் போய்விட்டதால் மட்டும், 71,454-ரூபாய் நஷ்டம்.
சர்க்கார் நடத்தும் தொழிற் கூடங்களிலே கிடைக்கக்கூடிய சாமான் களை, அங்கு வாங்காமல், தனிப்பட்டவர்களின் தொழிலகங்களிலிருந்து வாங்கிய வகையில் 97,000-ரூபாய் அதிகச் செலவு ஏற்பட்டிருக்கிறது.
விற்பனைவரி தள்ளுபடி, வழக்குக்கான செலவுத் தொகை கட்டிக்கொடுத்தது போன்ற வகையில், 5,94,410 ரூபாய்.
மாஜிட்ரேட் கோர்ட்டுகள் விதித்த அபராதத் தொகையை வசூலிக்க முடியாமற்போன வகையில் 2,93,683-ரூபாய்.
தனிப்பட்டவர் நடத்தும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு. அதிக அளவு மானியத்தொகையைத் தவறுதலாகக் கொடுத்த வகையிலும், சர்க்கார் பணம் கையாடல் நடத்தப்பட்ட வகையிலும் ஏற்பட்ட விரயம் 60.789.
தவறாக அதிகப் பணம் கொடுத்துவிட்டது, வரவேண்டிய பாக்கியை வசூலிக்காதது ஆகிய வகையில் 4,49,237 ரூபாய் விரயமாகி இருக்கிறது. வீண்செலவு செய்தது, காண்ட்ராக்டருக்கு அதிகப் பணம் காரணமின்றிக் கொடுத்தது ஆகிய வகையில் 72.440-ரூபாய் பாழாயிற்று.
நெல், அரிசி, உரம் ஆகியவற்றின் இருப்பில் குறைவு ஏற்பட்ட வகையில் 3,27,051-ரூபாய் பாழ்
தனித்தனியாக விளக்கப்படாத. பல்வேறு வகையான நஷ்டங்கள் 11.81,966-ரூபாய் அளவுக்கு; ஆக மொத்தம் 32,04,065-ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது.
தம்பி! இவ்வளவு குறைபாடுகளை மூடி மறைத்துவிட இவர்களுக்கு இருக்கிற ஒரே ஒரு வழி, இவைகளை எடுத்துக் காட்டுபவர் மீது எரிந்து விழுவது, இகழ்ந்து பேசுவது, என்பதுதான்.<noinclude></noinclude>
cc1dwdubvvhybzmb9tk8hd85x49v834
1928991
1928491
2026-04-30T10:22:13Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|64||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பஸ் டிக்கட்டுகள் தேவையைக் கவனிக்காது "போர் போராக" அச்சடித்துவிட்டு, அவை நாசமாகிப் போனதால் ஏற்பட்ட நஷ்டம் 37,179 ரூபாய்.
கூட்டுறவு வீடுகட்டும் சங்கமொன்று செலுத்த வேண்டிய 'அசலும் வட்டியும்' திருப்பி வாங்க வக்கற்று 1 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய், தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
நெடுஞ்சாலைத் துறையினர், இராணுவத் தளவாடத் துறையினரிட மிருந்து வாங்கிய சாமான்கள், பழுதுபட்டுப் போய்விட்டதால் மட்டும், 71,454-ரூபாய் நஷ்டம்.
சர்க்கார் நடத்தும் தொழிற் கூடங்களிலே கிடைக்கக்கூடிய சாமான் களை, அங்கு வாங்காமல், தனிப்பட்டவர்களின் தொழிலகங்களிலிருந்து வாங்கிய வகையில் 97,000-ரூபாய் அதிகச் செலவு ஏற்பட்டிருக்கிறது.
விற்பனைவரி தள்ளுபடி, வழக்குக்கான செலவுத் தொகை கட்டிக்கொடுத்தது போன்ற வகையில், 5,94,410 ரூபாய்.
மாஜிட்ரேட் கோர்ட்டுகள் விதித்த அபராதத் தொகையை வசூலிக்க முடியாமற்போன வகையில் 2,93,683-ரூபாய்.
தனிப்பட்டவர் நடத்தும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு. அதிக அளவு மானியத்தொகையைத் தவறுதலாகக் கொடுத்த வகையிலும், சர்க்கார் பணம் கையாடல் நடத்தப்பட்ட வகையிலும் ஏற்பட்ட விரயம் 60.789.
தவறாக அதிகப் பணம் கொடுத்துவிட்டது, வரவேண்டிய பாக்கியை வசூலிக்காதது ஆகிய வகையில் 4,49,237 ரூபாய் விரயமாகி இருக்கிறது. வீண்செலவு செய்தது, காண்ட்ராக்டருக்கு அதிகப் பணம் காரணமின்றிக் கொடுத்தது ஆகிய வகையில் 72.440-ரூபாய் பாழாயிற்று.
நெல், அரிசி, உரம் ஆகியவற்றின் இருப்பில் குறைவு ஏற்பட்ட வகையில் 3,27,051-ரூபாய் பாழ்
தனித்தனியாக விளக்கப்படாத. பல்வேறு வகையான நஷ்டங்கள் 11.81,966-ரூபாய் அளவுக்கு; ஆக மொத்தம் 32,04,065-ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது.
தம்பி! இவ்வளவு குறைபாடுகளை மூடி மறைத்துவிட இவர்களுக்கு இருக்கிற ஒரே ஒரு வழி, இவைகளை எடுத்துக் காட்டுபவர் மீது எரிந்து விழுவது, இகழ்ந்து பேசுவது, என்பதுதான்.<noinclude></noinclude>
aouk96x0hi3ydzkuoz6r71yp8q17241
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/89
250
641717
1928492
1927740
2026-04-30T05:19:00Z
Rabiyathul
5890
+ மேலடி
1928492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||65}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
65
"கல்வியறிவு அதிகம் பரவாதிருக்கும் நாடாக இன்று இருப்பதால், யார். இந்தக் கணக்குகளை எல்லாம் கவனித்துப் பார்க்கப் போகிறார்கள்," என்ற துணிவு இருக்கிறது. ஆட்சி நடத்துபவர்களுக்கு.
பொதுமக்களில் பெரும்பாலோர், கணக்காய்வாளர்களின் அறிக்கை களைப் படித்துப் பார்க்கவில்லை; உண்மை. ஆனால் அவர்களுக்குப் பொதுஅறிவும் புத்திக் கூர்மையுமா இல்லாமற் போய்விடும்! விவரங்கள் தெரியாதே தவிர, நிர்வாகத்திலே ஒழுங்கு இல்லை, பணம் விரயம் ஆகிறது. காரணமற்ற செலவு செய்யப் படுகிறது என்பதை, அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள். வெளியே எடுத்துப் பேசினால், ஆளுங்கட்சியின் பகையைத் தாங்கவேண்டி வருமே என்று உள்ளபடி பயப்படுகிறார்கள்.
தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ஒழுங்கீனங்கள், ஆட்சியை நடத்தும் கட்சியின் திறமைக்குச் சான்றாகுமா? வெட்கமிருக்க வேண்டாமா. தங்கள் ஆட்சியிலே இத்தனை ஊழல்கள் நேரிட்டு விடுகின்றனவே என்று.
எதிர்க்கட்சியினர் இது பற்றிப் பேசினால், கேட்கும் பொறுமை. பதிலளிக்கும் பொறுப்பு இருக்கிறதா அமைச்சர்களுக்கு. நாங்கள் நாடு மீட்ட பரம்பரை தெரியுமா!-என்று பழைய பல்லவி பாடி ஆவேசமாடுகிறார்கள்.
இவர்கள் ஆட்சியின் அவலட்சணத்தை, இவர்களின் கட்சிக் காரர்களே கூட, எடுத்துப்பேசாமல் இருக்க முடிவதில்லையே! தெரியுமா அந்த வேடிக்கை. ஒவ்வொரு முறை சட்டசபை கூடும்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியிலே உள்ள குறைபாடுகள் பற்றி மனம் வெதும்பிப் பேசவேண்டி நேரிட்டு விடுகிறது. காங்கிரஸ் அமைச்சர்கள், முகத்தில் அசடுவழிய உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களிலே, சில சாமர்த்தியசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள், அமைச்சர்களின் காதுபட, உள்ள ஊழல்களை, குறைபாடுகளை விளக்கமாகப் பேசுகிறார்கள்; கோபமாகக் கூடக் கண்டிக்கிறார்கள். ஆனால் இடையிடையே நமது கழகத்தைக் குறிப்பாகவும், எதிர்க்கட்சிகளைப் பொதுவாகவும் இகழ்ந்தும் இடித்தும் பேசி, ஆளுங் கட்சியிலுள்ள தலைவர்களின் நாவிலே தேன் தடவி விடுகிறார்கள். அந்தச் சுவையே போதுமென்று அவர்களும் இருந்து விடுகிறார்கள்.
எங்கள் கட்சியிலே உள்ள ஜனநாயக உரிமை அவ்வளவு சிலாக்கிய மானது- குற்றங்குறைகளை எடுத்துக்காட்ட எங்கள் கட்சி உறுப்பினர்<noinclude></noinclude>
dw663hw9m7ni0i1y2qu3tpq724iu6p5
1928992
1928492
2026-04-30T10:22:46Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||65}}{{rule}}</noinclude>
"கல்வியறிவு அதிகம் பரவாதிருக்கும் நாடாக இன்று இருப்பதால், யார். இந்தக் கணக்குகளை எல்லாம் கவனித்துப் பார்க்கப் போகிறார்கள்," என்ற துணிவு இருக்கிறது. ஆட்சி நடத்துபவர்களுக்கு.
பொதுமக்களில் பெரும்பாலோர், கணக்காய்வாளர்களின் அறிக்கை களைப் படித்துப் பார்க்கவில்லை; உண்மை. ஆனால் அவர்களுக்குப் பொதுஅறிவும் புத்திக் கூர்மையுமா இல்லாமற் போய்விடும்! விவரங்கள் தெரியாதே தவிர, நிர்வாகத்திலே ஒழுங்கு இல்லை, பணம் விரயம் ஆகிறது. காரணமற்ற செலவு செய்யப் படுகிறது என்பதை, அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள். வெளியே எடுத்துப் பேசினால், ஆளுங்கட்சியின் பகையைத் தாங்கவேண்டி வருமே என்று உள்ளபடி பயப்படுகிறார்கள்.
தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ஒழுங்கீனங்கள், ஆட்சியை நடத்தும் கட்சியின் திறமைக்குச் சான்றாகுமா? வெட்கமிருக்க வேண்டாமா. தங்கள் ஆட்சியிலே இத்தனை ஊழல்கள் நேரிட்டு விடுகின்றனவே என்று.
எதிர்க்கட்சியினர் இது பற்றிப் பேசினால், கேட்கும் பொறுமை. பதிலளிக்கும் பொறுப்பு இருக்கிறதா அமைச்சர்களுக்கு. நாங்கள் நாடு மீட்ட பரம்பரை தெரியுமா!-என்று பழைய பல்லவி பாடி ஆவேசமாடுகிறார்கள்.
இவர்கள் ஆட்சியின் அவலட்சணத்தை, இவர்களின் கட்சிக் காரர்களே கூட, எடுத்துப்பேசாமல் இருக்க முடிவதில்லையே! தெரியுமா அந்த வேடிக்கை. ஒவ்வொரு முறை சட்டசபை கூடும்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியிலே உள்ள குறைபாடுகள் பற்றி மனம் வெதும்பிப் பேசவேண்டி நேரிட்டு விடுகிறது. காங்கிரஸ் அமைச்சர்கள், முகத்தில் அசடுவழிய உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களிலே, சில சாமர்த்தியசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள், அமைச்சர்களின் காதுபட, உள்ள ஊழல்களை, குறைபாடுகளை விளக்கமாகப் பேசுகிறார்கள்; கோபமாகக் கூடக் கண்டிக்கிறார்கள். ஆனால் இடையிடையே நமது கழகத்தைக் குறிப்பாகவும், எதிர்க்கட்சிகளைப் பொதுவாகவும் இகழ்ந்தும் இடித்தும் பேசி, ஆளுங் கட்சியிலுள்ள தலைவர்களின் நாவிலே தேன் தடவி விடுகிறார்கள். அந்தச் சுவையே போதுமென்று அவர்களும் இருந்து விடுகிறார்கள்.
எங்கள் கட்சியிலே உள்ள ஜனநாயக உரிமை அவ்வளவு சிலாக்கிய மானது- குற்றங்குறைகளை எடுத்துக்காட்ட எங்கள் கட்சி உறுப்பினர்<noinclude></noinclude>
7p4bpvsm0ndo3qsjceiqgt0kdioeaxu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/90
250
641718
1928493
1927741
2026-04-30T05:19:31Z
Rabiyathul
5890
+ மேலடி
1928493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|66||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>66
'திராவிட நாடு' இதழில்
களுக்கு உரிமை அளித்திருக்கிறோம் என்று அமைச்சர்கள், இதையும் பெருமைக்குரியதாகப் பேசிக்கொள்கிறார்கள்.
"என்ன வலிவு தெரியுமா என் புருஷனுக்கு! கோபத்திலே ஒரு தட்டுத் தட்டினார், கன்னம் எப்படி ஆகிவிட்டது பார்த்தாயா?" என்று குழாயடியில் பேசும் குப்பி போலாகிறார்கள், கனம்கள்.
சொந்தக் கட்சிக்கே நமது ஆட்சி இவ்வளவு அவலட்சணமுள்ள தாகத் தெரிகிறதே, மற்றவர்கள், உள்ள குறையை எடுத்துக்காட்டாமலா இருப்பார்கள்? என்ற எண்ணம் எழக் காணோம்.
இத்தனை குறைகளையும் எடுத்துக்காட்டிச் சொந்தக் கட்சிக் காரர்களே, நமது மானத்தை வாங்குகிறார்களே என்று, 'ரோஷம்' பிறந்திடக் காணோம்.
இவைகளை எல்லாம் கட்சிக் கூட்டத்திலே பேசித் தொலைக்கக் கூடாதா, சட்டசபைக்கேதான் கொண்டு வரவேண்டுமா, என்று கேட்கும் துணிவுகூட, ஏற்படக் காணோம்.
பேசிவிட்டுப் போகட்டும், நஷ்டம் என்ன நமக்கு? கடைசியில் "ஓட்' நம் பக்கம் தானே போடப்போகிறார்கள் என்று எண்ணி, அதிலே மகிழ்ந்து நடக்கிறார்கள்.
ஏன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், குற்றங்குறைகளை எடுத்துக் காட்டிப் பேசுகிறார்கள்? எதிர்க்கட்சியினர், பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது தெரியாதா? தெரியும். ஆனால், அவர்களுக்கு 'ஓட்' அளித்த மக்கள். ஊர் சீர்படாததைக் கண்டு, உள்ளம் நொந்து போயிருக் கிறார்கள்; இவர்களைக் காணும்போதே அவர்களுக்குக் கடுங்கோபம் வருகிறது; கேவலமாகப் பேசுகிறார்கள்.
எங்கள் கட்சி, ஆளுங்கட்சி! எல்லாவற்றையும் சாதிக்கும் கட்சி! என்றெல்லாம் பேசி ஓட்டு வாங்கிக்கொண்டு போனீர்களே, ஆயிரத்தெட்டுக் குறைகள் எம்மைக் கொட்டுகின்றனவே, ஏன் என்று கேட்கக் கூடாதா? ஆட்சியைத் திருத்தக்கூடாதா? தேவைகளை எடுத்துக்காட்டக் கூடாதா? இதற்காகத்தானே, சட்டசபைக்கு அனுப்பி வைத்தோம்!-என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்விக் கணைகள் துளைக்கின்றன.
எனவே, சட்டசபையிலே பேசுகிறார்கள்-தொகுதி வாக்காளர்களின் கோபத்தைத் தணியச் செய்திட.
தம்பி! இது நானாக இட்டுக் கட்டியது என்று எண்ணிக் கொண்டு விடாதே! ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.யின் பேச்சிலேயே, இந்தக் கருத்துத் தொக்கி நிற்கிறது; அதைப் பார்த்ததால் கூறினேன்.<noinclude></noinclude>
bsz3ac0x7bjaw5ha9baluzvbfgkobsv
1928993
1928493
2026-04-30T10:23:19Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|66||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>களுக்கு உரிமை அளித்திருக்கிறோம் என்று அமைச்சர்கள், இதையும் பெருமைக்குரியதாகப் பேசிக்கொள்கிறார்கள்.
"என்ன வலிவு தெரியுமா என் புருஷனுக்கு! கோபத்திலே ஒரு தட்டுத் தட்டினார், கன்னம் எப்படி ஆகிவிட்டது பார்த்தாயா?" என்று குழாயடியில் பேசும் குப்பி போலாகிறார்கள், கனம்கள்.
சொந்தக் கட்சிக்கே நமது ஆட்சி இவ்வளவு அவலட்சணமுள்ள தாகத் தெரிகிறதே, மற்றவர்கள், உள்ள குறையை எடுத்துக்காட்டாமலா இருப்பார்கள்? என்ற எண்ணம் எழக் காணோம்.
இத்தனை குறைகளையும் எடுத்துக்காட்டிச் சொந்தக் கட்சிக் காரர்களே, நமது மானத்தை வாங்குகிறார்களே என்று, 'ரோஷம்' பிறந்திடக் காணோம்.
இவைகளை எல்லாம் கட்சிக் கூட்டத்திலே பேசித் தொலைக்கக் கூடாதா, சட்டசபைக்கேதான் கொண்டு வரவேண்டுமா, என்று கேட்கும் துணிவுகூட, ஏற்படக் காணோம்.
பேசிவிட்டுப் போகட்டும், நஷ்டம் என்ன நமக்கு? கடைசியில் "ஓட்' நம் பக்கம் தானே போடப்போகிறார்கள் என்று எண்ணி, அதிலே மகிழ்ந்து நடக்கிறார்கள்.
ஏன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், குற்றங்குறைகளை எடுத்துக் காட்டிப் பேசுகிறார்கள்? எதிர்க்கட்சியினர், பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது தெரியாதா? தெரியும். ஆனால், அவர்களுக்கு 'ஓட்' அளித்த மக்கள். ஊர் சீர்படாததைக் கண்டு, உள்ளம் நொந்து போயிருக் கிறார்கள்; இவர்களைக் காணும்போதே அவர்களுக்குக் கடுங்கோபம் வருகிறது; கேவலமாகப் பேசுகிறார்கள்.
எங்கள் கட்சி, ஆளுங்கட்சி! எல்லாவற்றையும் சாதிக்கும் கட்சி! என்றெல்லாம் பேசி ஓட்டு வாங்கிக்கொண்டு போனீர்களே, ஆயிரத்தெட்டுக் குறைகள் எம்மைக் கொட்டுகின்றனவே, ஏன் என்று கேட்கக் கூடாதா? ஆட்சியைத் திருத்தக்கூடாதா? தேவைகளை எடுத்துக்காட்டக் கூடாதா? இதற்காகத்தானே, சட்டசபைக்கு அனுப்பி வைத்தோம்!-என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்விக் கணைகள் துளைக்கின்றன.
எனவே, சட்டசபையிலே பேசுகிறார்கள்-தொகுதி வாக்காளர்களின் கோபத்தைத் தணியச் செய்திட.
தம்பி! இது நானாக இட்டுக் கட்டியது என்று எண்ணிக் கொண்டு விடாதே! ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.யின் பேச்சிலேயே, இந்தக் கருத்துத் தொக்கி நிற்கிறது; அதைப் பார்த்ததால் கூறினேன்.<noinclude></noinclude>
ee2tl1509dkkcvswbio6o4py3fj0ngr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/91
250
641719
1928495
1927742
2026-04-30T05:20:03Z
Rabiyathul
5890
+ மேலடி
1928495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||67}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
67
"நில சீர்திருத்தச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டு மென்று கவர்னரது உரையின்மீது நிகழ்த்திய பிரசங்கங் களில் ஒருசிலர் சொன்னார்கள். அதைப் பார்த்துவிட்டு எனது தொகுதியிலிருந்து ஒரு பையன் சொன்னான், இந்தப் பொன்னம்மாளுக்கு வோட்டுப் போட்டுவிட்டு, அவள் அங்கு போய்த் தண்டத்திற்கு உட்கார்ந்து விட்டு வருகிறாள். மற்றக் கட்சிக்காரர்கள் இதை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமென்று பேசியிருக்கிறார்களே, நீ, ஏன் தண்டத் திற்குப்போய் உட்கார்ந்திருக்கிறாய் என்று கேட்டதும் உண்டு"
தம்பி! அம்மையாரைப் பற்றி மரியாதைக் குறைவாக நான் எழுதி விட்டேனோ என்று எண்ணிக்கொள்ளாதே. இது, அவர்களே பேசியது; சட்டசபைக் குறிப்பேட்டிலே உள்ளது. நிலக்கோட்டைத் தொகுதி உறுப்பினர் திருமதி.எ. பொன்னம்மாள் அவர்கள் 1.7.57-இல், சட்டசபையில் பேசியது இது.
ஏன் பேசுகிறார்கள் என்பது விளங்குகிறதல்லவா?
ஒரு பையன் சொன்னானாம்! கவனித்தாயா தம்பி! பையனுக்கே, தெரிந்துவிட்டது; கேட்கத் தோன்றுகிறது! கேட்டே விட்டிருக்கிறான்.
ஒரு பையனே இப்படி எண்ணுகிறான் என்றால், பெரியவர்கள், என்னென்ன எண்ணுவார்கள்! பரிதாபமாக இல்லையா, அம்மையாரின் நிலை கண்டால்!
ஆயினும், ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்களோ, தம்மை எவரும் ஏதும் செய்திட முடியாது என்று இறுமாந்து கிடக்கிறார்கள்.
பட்டிதொட்டிகளெல்லாம் செல்வோம், மக்களைக் கண்டு பேசுவோம். அச்சம் தயை தாட்சணியம் எனும் ஏதேனும் ஒன்றுக்கு மக்கள் கட்டுப் பட்டுப் போவார்கள்; அதைச் சாதகமாக்கிக் கொண்டு, மீண்டும் ஆட்சியில் அமர்ந்துகொள்ள வழி காண்போம் என்ற திட்டமிட்டுத்தான், திருஉலா வந்த வண்ணமிருக்கிறார், காமராஜர்.
வெளிப்படையாகத் தெரிவதும், அறிவிக்கப்பட்டிருப்பதும், மக்களாட்சி முறை அல்லவா? மக்களாகத்தானே, தக்கதோர் ஆட்சியை அமைத்துக் கொள்கிறார்கள். ஆட்சியிலே ஊழல், ஒழுங்கீனம் திறமைக்குறைவு, இலஞ்சம் என்பவைகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் எடுத்துப் பேசுகின்றனவே, மக்கள் அந்தப் பேச்சை மதித்தால், நம்பினால், மீண்டும் மீண்டும், தேர்தலில் எமக்கு 'ஓட்' அளித்து வெற்றி தேடிக் கொடுப்பார்களா! எதிர்க்கட்சிகள் இல்லாததையும், பொல்லாததையும் கூறுகின்றன, என்பதை அறிந்துதான், மக்கள் திரும்பத் திரும்ப எங்களையே ஆதரிக்கின்றனர், என்று காமராஜர் கட்சி கூறுகிறது, களிப்புடன்,<noinclude></noinclude>
crptoxltp1r8yn0jymvao1jr15rs6iy
1928994
1928495
2026-04-30T10:23:46Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||67}}{{rule}}</noinclude>
"நில சீர்திருத்தச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டு மென்று கவர்னரது உரையின்மீது நிகழ்த்திய பிரசங்கங் களில் ஒருசிலர் சொன்னார்கள். அதைப் பார்த்துவிட்டு எனது தொகுதியிலிருந்து ஒரு பையன் சொன்னான், இந்தப் பொன்னம்மாளுக்கு வோட்டுப் போட்டுவிட்டு, அவள் அங்கு போய்த் தண்டத்திற்கு உட்கார்ந்து விட்டு வருகிறாள். மற்றக் கட்சிக்காரர்கள் இதை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமென்று பேசியிருக்கிறார்களே, நீ, ஏன் தண்டத் திற்குப்போய் உட்கார்ந்திருக்கிறாய் என்று கேட்டதும் உண்டு"
தம்பி! அம்மையாரைப் பற்றி மரியாதைக் குறைவாக நான் எழுதி விட்டேனோ என்று எண்ணிக்கொள்ளாதே. இது, அவர்களே பேசியது; சட்டசபைக் குறிப்பேட்டிலே உள்ளது. நிலக்கோட்டைத் தொகுதி உறுப்பினர் திருமதி.எ. பொன்னம்மாள் அவர்கள் 1.7.57-இல், சட்டசபையில் பேசியது இது.
ஏன் பேசுகிறார்கள் என்பது விளங்குகிறதல்லவா?
ஒரு பையன் சொன்னானாம்! கவனித்தாயா தம்பி! பையனுக்கே, தெரிந்துவிட்டது; கேட்கத் தோன்றுகிறது! கேட்டே விட்டிருக்கிறான்.
ஒரு பையனே இப்படி எண்ணுகிறான் என்றால், பெரியவர்கள், என்னென்ன எண்ணுவார்கள்! பரிதாபமாக இல்லையா, அம்மையாரின் நிலை கண்டால்!
ஆயினும், ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்களோ, தம்மை எவரும் ஏதும் செய்திட முடியாது என்று இறுமாந்து கிடக்கிறார்கள்.
பட்டிதொட்டிகளெல்லாம் செல்வோம், மக்களைக் கண்டு பேசுவோம். அச்சம் தயை தாட்சணியம் எனும் ஏதேனும் ஒன்றுக்கு மக்கள் கட்டுப் பட்டுப் போவார்கள்; அதைச் சாதகமாக்கிக் கொண்டு, மீண்டும் ஆட்சியில் அமர்ந்துகொள்ள வழி காண்போம் என்ற திட்டமிட்டுத்தான், திருஉலா வந்த வண்ணமிருக்கிறார், காமராஜர்.
வெளிப்படையாகத் தெரிவதும், அறிவிக்கப்பட்டிருப்பதும், மக்களாட்சி முறை அல்லவா? மக்களாகத்தானே, தக்கதோர் ஆட்சியை அமைத்துக் கொள்கிறார்கள். ஆட்சியிலே ஊழல், ஒழுங்கீனம் திறமைக்குறைவு, இலஞ்சம் என்பவைகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் எடுத்துப் பேசுகின்றனவே, மக்கள் அந்தப் பேச்சை மதித்தால், நம்பினால், மீண்டும் மீண்டும், தேர்தலில் எமக்கு 'ஓட்' அளித்து வெற்றி தேடிக் கொடுப்பார்களா! எதிர்க்கட்சிகள் இல்லாததையும், பொல்லாததையும் கூறுகின்றன, என்பதை அறிந்துதான், மக்கள் திரும்பத் திரும்ப எங்களையே ஆதரிக்கின்றனர், என்று காமராஜர் கட்சி கூறுகிறது, களிப்புடன்,<noinclude></noinclude>
mmp50u7zblrvdaulmkul0k022jqcpm4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/92
250
641720
1928496
1927743
2026-04-30T05:20:34Z
Rabiyathul
5890
+ மேலடி
1928496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|68||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>68
'திராவிட நாடு' இதழில்
தில்லுமுல்லுகள் நடத்தியும், ஜாதிகுலம் ஆகியவற்றினைப் பயன் படுத்தியும், ஓட்டுப் பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முடிகிறது என்பதை. மக்கள்கூடக் கூறுகிறார்கள்- தெரிந்து கொண்டுமிருக்கிறார்கள். எனினும், மீண்டும் மீண்டும், ஒரு கட்சி, எப்படியோ பதவிக்கு வந்தபடி இருக்கிறது என்றால், அந்தக் கட்சியிடமும், ஆட்சியிடமும், அதே மக்களுக்கு, ஒரு வகையான பீதி, ஏற்பட்டுப் போய் விடுகிறது.
இந்தப் 'பீதி' மக்களாட்சி முறையினையே மாய்த்திட வல்லது.
ஆளும் கட்சியிடம் உள்ள இரும்புப் பெட்டியின் பலம் தெரிந் திருந்தும், தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகள் செய்திடும் வழி பெற்றிருக் கிறது என்பதை அறிந்திருந்தும், வெற்றி தோல்வியைப் பற்றிய கவலையற்று, எதிர்க்கட்சிகள் தேர்தலில் ஈடுபட்டு, ஆளும் கட்சியை
எதிர்த்து நிற்பது, முன்னே குறிப்பிட்ட 'பீசி, ஆளும் கட்சியை
ஆளுங்கட்சி தன்னை எதிர்த்து வீழ்த்துவார் இல்லை, என்று இறுமாந்து, எவரையும் அழிக்கலாம், கேட்பார் இல்லை; எந்த அக்ரமமும் செய்யலாம், தடுப்பார் இல்லை; எவ்விதக் கிளர்ச்சியையும் அடக்கலாம் ஒடுக்கலாம், அடக்குமுறை கொண்டு, என்று துணிந்து, துடுக்குத்தனத்தை அவிழ்த்துவிடும்போது, கொடுமைகளைக் கண்டு அஞ்சாது. கிளர்ச்சிக் களத்தில் நின்று, சித்திரவதைக்கும் சித்தமாக இருக்கிறோம், என்று கூறிடத்தக்க வீரம், பட்டுப்போய் விடவில்லை என்று எடுத்துக்காட்டி, மண்டைகள் உடைபடட்டும், கைகால் அறுபடட்டும். கண் போகட்டும், உயிரே போகட்டும், கலங்கப் போவதில்லை, என்ற துணிவுடன், நிமிர்ந்து நின்றிடும் ஆற்றல் கொண்டோர் நடாத்தும் கிளர்ச்சியாலும், ஆணவ அரசுகளை வீழ்த்த முடியும்; மக்கள் மனதிலே மூண்டு கிடக்கும் பீதியைப் போக்க முடியும்.
நீதிக்காக, மக்களுக்காக, இதோ இவர்கள் இன்னுயிர் ஈந்தனர்!
ஆகாதய்யா அக்ரமம் என்றான் இந்த இளைஞன், அடித்து நொறுக்கினர், அவன் மண்டையை!
ஏன் இந்த இறுமாப்பு? என்று கேட்டான் இந்தத் தோழன், இரும்புக் காலின்கீழ் போட்டு மிதித்தனர்-அவன் கூழாகும் வரையில்!
அதோ, மலரிழந்து நிற்கிறாளே ஓர் மாதரசி. அவள் மணாளன், கொடுமையாளரின் குதிரைப்படையால், தாக்கப்பட்டு, மடிந்தான்!
வெஞ்சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனர். ஆயிரமாயிரம் வீரர்கள்-என்ற 'செய்திகள்' உலகுக்குக் கிடைத்திடத்தக்க, அடக்குமுறைத் தீயிலே குளித்தெழும் வீரர்படை திரண்டால், தேர்தலில் வெற்றி எமக்கே என்று கூறி, உலகை ஏய்த்திடும் அரசுகூட, ஆட்டம் கொடுத்துவிடும்.
1<noinclude></noinclude>
3sbhx7wqwpm4qkjdaykbz14t1uuf710
1928995
1928496
2026-04-30T10:24:48Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|68||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
தில்லுமுல்லுகள் நடத்தியும், ஜாதிகுலம் ஆகியவற்றினைப் பயன் படுத்தியும், ஓட்டுப் பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முடிகிறது என்பதை. மக்கள்கூடக் கூறுகிறார்கள்- தெரிந்து கொண்டுமிருக்கிறார்கள். எனினும், மீண்டும் மீண்டும், ஒரு கட்சி, எப்படியோ பதவிக்கு வந்தபடி இருக்கிறது என்றால், அந்தக் கட்சியிடமும், ஆட்சியிடமும், அதே மக்களுக்கு, ஒரு வகையான பீதி, ஏற்பட்டுப் போய் விடுகிறது.
இந்தப் 'பீதி' மக்களாட்சி முறையினையே மாய்த்திட வல்லது.
ஆளும் கட்சியிடம் உள்ள இரும்புப் பெட்டியின் பலம் தெரிந் திருந்தும், தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகள் செய்திடும் வழி பெற்றிருக் கிறது என்பதை அறிந்திருந்தும், வெற்றி தோல்வியைப் பற்றிய கவலையற்று, எதிர்க்கட்சிகள் தேர்தலில் ஈடுபட்டு, ஆளும் கட்சியை
எதிர்த்து நிற்பது, முன்னே குறிப்பிட்ட 'பீசி, ஆளும் கட்சியை
ஆளுங்கட்சி தன்னை எதிர்த்து வீழ்த்துவார் இல்லை, என்று இறுமாந்து, எவரையும் அழிக்கலாம், கேட்பார் இல்லை; எந்த அக்ரமமும் செய்யலாம், தடுப்பார் இல்லை; எவ்விதக் கிளர்ச்சியையும் அடக்கலாம் ஒடுக்கலாம், அடக்குமுறை கொண்டு, என்று துணிந்து, துடுக்குத்தனத்தை அவிழ்த்துவிடும்போது, கொடுமைகளைக் கண்டு அஞ்சாது. கிளர்ச்சிக் களத்தில் நின்று, சித்திரவதைக்கும் சித்தமாக இருக்கிறோம், என்று கூறிடத்தக்க வீரம், பட்டுப்போய் விடவில்லை என்று எடுத்துக்காட்டி, மண்டைகள் உடைபடட்டும், கைகால் அறுபடட்டும். கண் போகட்டும், உயிரே போகட்டும், கலங்கப் போவதில்லை, என்ற துணிவுடன், நிமிர்ந்து நின்றிடும் ஆற்றல் கொண்டோர் நடாத்தும் கிளர்ச்சியாலும், ஆணவ அரசுகளை வீழ்த்த முடியும்; மக்கள் மனதிலே மூண்டு கிடக்கும் பீதியைப் போக்க முடியும்.
நீதிக்காக, மக்களுக்காக, இதோ இவர்கள் இன்னுயிர் ஈந்தனர்!
ஆகாதய்யா அக்ரமம் என்றான் இந்த இளைஞன், அடித்து நொறுக்கினர், அவன் மண்டையை!
ஏன் இந்த இறுமாப்பு? என்று கேட்டான் இந்தத் தோழன், இரும்புக் காலின்கீழ் போட்டு மிதித்தனர்-அவன் கூழாகும் வரையில்!
அதோ, மலரிழந்து நிற்கிறாளே ஓர் மாதரசி. அவள் மணாளன், கொடுமையாளரின் குதிரைப்படையால், தாக்கப்பட்டு, மடிந்தான்!
வெஞ்சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனர். ஆயிரமாயிரம் வீரர்கள்-என்ற 'செய்திகள்' உலகுக்குக் கிடைத்திடத்தக்க, அடக்குமுறைத் தீயிலே குளித்தெழும் வீரர்படை திரண்டால், தேர்தலில் வெற்றி எமக்கே என்று கூறி, உலகை ஏய்த்திடும் அரசுகூட, ஆட்டம் கொடுத்துவிடும்.
1<noinclude></noinclude>
i3d6bakzqxwybbrni8menw9a9m1nvpj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/93
250
641721
1928498
1927744
2026-04-30T05:27:53Z
Rabiyathul
5890
+ மேலடி
1928498
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||69}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
69
இதுவா? அதுவா? என்பதல்ல பிரச்சினை. விடுதலை உணர்ச்சி ஒரு வடிவினதுமல்ல. விடுதலை பெறுவதற்கு உள்ள வழி ஒன்றே ஒன்றுதான், என்றும் கூறுவதற்கில்லை,
மக்களாட்சி முறை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும், இந்த நாளில், உறுதி படைத்த, உணர்ச்சிமிக்க விடுதலை வீரர்கள், அவ்வப்போது, பதம் பார்த்துப் பார்த்து, முறைகளைப் புதிது புதிதாகக்கூடச் சமைத்துக் கொள்கின்றனர்.
விடுதலைபெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக் கொள்வதும், உணர்ச்சி பெற்றவர்களின் தொகை வளரும் நிலையை உண்டாக்குவதுமாகும்.
எமது கொள்கைக்கு விடுதலை வேட்கைக்குச் சான்று, இதோ, நாங்கள் ஆட்சி மன்றங்களிலே பெற்றுள்ள இடங்கள் என்று காட்டும் போது, உலகம் மதிக்கத்தான் செய்கிறது.
ஆனால், ஆள்பவர்கள் தடிதூக்குகிறார்கள் என்று கண்டதும், தலைதெறிக்க ஓடினால், உலகம், காரித் துப்பத்தான் செய்யும்.
மக்களை அணுகி ஓட்டு வாங்கவும் தெரியவேண்டும். மார்புக்கு நேரே துப்பாக்கிக்குண்டு பாயவருகிறது என்றால், அதையும் தாங்கிக் டு கொள்ளவும் துணிவு இருக்க வேண்டும்.
தம்பி! நமது மரபு இந்த வீரத்தை அறியாததல்ல.
மையல் மிக்க மடந்தையின் தொய்யில் தன் மார்பகத்தே படிந்திடக்கண்டு, தமிழன் மகிழ்வான்; மாற்றான் வீசிய வேலால் மார்பிலிருந்து ஒழுகிய இரத்தத்தைக் கண்டு களிப்புறுவான்!
அவன் வழிவந்தவனே! ஆற்றலுக்குப் பஞ்சமா, உனக்கு! ஆணைக்காக அன்றோ காத்திருக்கிறாய்!
உன்னை ஆண்டிடுவோரின் ஆணவத்தை, நீ அறிந்தது போல், மற்றவர்களும் அறிந்திட, அரசியல் விளக்கம் அளித்து வருகிறாய்.
இந்த அரசு, வடவரசுக்குக் கட்டியங்கூறிக் காலந்தள்ளி வருகிறது என்ற உண்மையை, நீ உணர்ந்து விட்டாய். உன் உள்ளம் பொங்குமாங் கடலாயிற்று, இதனை உணராதாருக்கு உணர்ச்சி ஊட்ட, ஊரெங்கும் சென்று உரைத்து வருகிறாய்.
வடவரசு, நமது மரபு, இனம், அழிந்துபட்டாலன்றித் தனக்கு வாழ்வில்லை என்றறிந்து, மமதையால் மதிகெட்டு, நமது மாத்தமிழை அழித்திடச் சூழ்ச்சிபல செய்கிறது என்பதை அறிந்து, போரிடத் துணிவு<noinclude></noinclude>
jijlo94zfljd8bfh2lmrmjajl2vcx7t
1928996
1928498
2026-04-30T10:25:28Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||69}}{{rule}}</noinclude>
இதுவா? அதுவா? என்பதல்ல பிரச்சினை. விடுதலை உணர்ச்சி ஒரு வடிவினதுமல்ல. விடுதலை பெறுவதற்கு உள்ள வழி ஒன்றே ஒன்றுதான், என்றும் கூறுவதற்கில்லை,
மக்களாட்சி முறை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும், இந்த நாளில், உறுதி படைத்த, உணர்ச்சிமிக்க விடுதலை வீரர்கள், அவ்வப்போது, பதம் பார்த்துப் பார்த்து, முறைகளைப் புதிது புதிதாகக்கூடச் சமைத்துக் கொள்கின்றனர்.
விடுதலைபெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக் கொள்வதும், உணர்ச்சி பெற்றவர்களின் தொகை வளரும் நிலையை உண்டாக்குவதுமாகும்.
எமது கொள்கைக்கு விடுதலை வேட்கைக்குச் சான்று, இதோ, நாங்கள் ஆட்சி மன்றங்களிலே பெற்றுள்ள இடங்கள் என்று காட்டும் போது, உலகம் மதிக்கத்தான் செய்கிறது.
ஆனால், ஆள்பவர்கள் தடிதூக்குகிறார்கள் என்று கண்டதும், தலைதெறிக்க ஓடினால், உலகம், காரித் துப்பத்தான் செய்யும்.
மக்களை அணுகி ஓட்டு வாங்கவும் தெரியவேண்டும். மார்புக்கு நேரே துப்பாக்கிக்குண்டு பாயவருகிறது என்றால், அதையும் தாங்கிக் டு கொள்ளவும் துணிவு இருக்க வேண்டும்.
தம்பி! நமது மரபு இந்த வீரத்தை அறியாததல்ல.
மையல் மிக்க மடந்தையின் தொய்யில் தன் மார்பகத்தே படிந்திடக்கண்டு, தமிழன் மகிழ்வான்; மாற்றான் வீசிய வேலால் மார்பிலிருந்து ஒழுகிய இரத்தத்தைக் கண்டு களிப்புறுவான்!
அவன் வழிவந்தவனே! ஆற்றலுக்குப் பஞ்சமா, உனக்கு! ஆணைக்காக அன்றோ காத்திருக்கிறாய்!
உன்னை ஆண்டிடுவோரின் ஆணவத்தை, நீ அறிந்தது போல், மற்றவர்களும் அறிந்திட, அரசியல் விளக்கம் அளித்து வருகிறாய்.
இந்த அரசு, வடவரசுக்குக் கட்டியங்கூறிக் காலந்தள்ளி வருகிறது என்ற உண்மையை, நீ உணர்ந்து விட்டாய். உன் உள்ளம் பொங்குமாங் கடலாயிற்று, இதனை உணராதாருக்கு உணர்ச்சி ஊட்ட, ஊரெங்கும் சென்று உரைத்து வருகிறாய்.
வடவரசு, நமது மரபு, இனம், அழிந்துபட்டாலன்றித் தனக்கு வாழ்வில்லை என்றறிந்து, மமதையால் மதிகெட்டு, நமது மாத்தமிழை அழித்திடச் சூழ்ச்சிபல செய்கிறது என்பதை அறிந்து, போரிடத் துணிவு<noinclude></noinclude>
q7i48vyihvmnz2v8j5rcguatcxj8x1v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/94
250
641722
1928499
1927745
2026-04-30T05:28:23Z
Rabiyathul
5890
+ மேலடி
1928499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|70||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>70
'திராவிட நாடு' இதழில்
பெற்றாய்; மற்றவர்க்கும் அந்தத் துணிவு ஏற்பட, மன்றமேறி முழக்கமிட்டு வருகிறாய்.
ஆட்சியை எதிர்க்கிறார்கள் என்றால், எத்தகைய ஆட்சியை, அந்த ஆட்சியின் அவலட்சணங்கள் எவையெவை என்பதை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக, அலசிக்காட்டுகிறாய், அறிவு கொளுத்துகிறாய்.
அந்த உன் பணிக்குத் துணையாகத்தான், இன்றுள்ள துரைத்தனத்தின் 'இலட்சணத்தை' எடுத்துரைத்தேன்.
அந்தத் துரைத்தனம், 'ஓட்டு' பெறவும் எம்மால்தான் முடியும். 'வேட்டு கிளப்பி விடுதலை கேட்போரை வீழ்த்திடவும் முடியும்' என்று கொக்கரிக்கிறது.
அதைக் கேட்டதும், தோள் துடிக்கிறது, தெரிகிறது. ஆற்றல் மிக்கோனே! அஞ்சா நெஞ்சினர், இந்தத் தமிழர்கள்; மாற்றான் தாள் வீழ்ந்தறியா மரபினர்; பகைதேடி அலைந்தோரல்ல, பகை கக்கியோரை வீழ்த்தாது விட்டவருமல்லர்; அவர்கள் பொன்னை இழப்பர், பொருளை இழப்பர்; வண்ணத் தமிழைமட்டும் இழந்திடச் சம்மதியார்! என்று. நமது முன்னோர், பெயரெடுத்தனர்.
அது, 'அந்த நாள்' என்கிறார், அமைச்சரானதால், எதையும் பேசிடும் துணிவுகொண்டோர்.
இது நம்மை அறைகூவி அழைப்பதாகும். வீரத்தைப் பழிப்பதாகும். மரபினை இகழ்வதாகும். என்று ஆற்றல் மிக்கோனே! ஆர்த்தெழுந்து அறைகிறாய்!! ஒலியும் ஒளியும், கிளம்பிடக் காண்கிறேன்; உவகை யுடன் உனை வாழ்த்துகிறேன். வீழ்த்துவோம், அரசின் ஆணவந்தனையே, என்று வீறுகொண்டு எழுந்த ஓர் விடுதலைப் படை, பரணி பாடிக் கிளம்பிடும் வேளை, பார்த்திடும் மக்கள் அறிந்திடத்தானே, ஆட்சியால் வந்துள ஆயிரம் கேட்டினை, அலசிக் காட்டிடும் அரும்பணியாற்றினோம். ஆற்றிய அரும்பணி அளித்திடும் பலன்தனை, அறிந்திட, கணக்கிட, ஆணவ அரசு அளித்திடும் வாய்ப்பினை இழந்திட, நாம் என்ன இளித்தவாயரோ!!
19.6.60
அண்ணன்,
Jimmynz<noinclude></noinclude>
kawfty9kr1y393qhplxljuea8uv6f9o
1928997
1928499
2026-04-30T10:26:03Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|70||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பெற்றாய்; மற்றவர்க்கும் அந்தத் துணிவு ஏற்பட, மன்றமேறி முழக்கமிட்டு வருகிறாய்.
ஆட்சியை எதிர்க்கிறார்கள் என்றால், எத்தகைய ஆட்சியை, அந்த ஆட்சியின் அவலட்சணங்கள் எவையெவை என்பதை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக, அலசிக்காட்டுகிறாய், அறிவு கொளுத்துகிறாய்.
அந்த உன் பணிக்குத் துணையாகத்தான், இன்றுள்ள துரைத்தனத்தின் 'இலட்சணத்தை' எடுத்துரைத்தேன்.
அந்தத் துரைத்தனம், 'ஓட்டு' பெறவும் எம்மால்தான் முடியும். 'வேட்டு கிளப்பி விடுதலை கேட்போரை வீழ்த்திடவும் முடியும்' என்று கொக்கரிக்கிறது.
அதைக் கேட்டதும், தோள் துடிக்கிறது, தெரிகிறது. ஆற்றல் மிக்கோனே! அஞ்சா நெஞ்சினர், இந்தத் தமிழர்கள்; மாற்றான் தாள் வீழ்ந்தறியா மரபினர்; பகைதேடி அலைந்தோரல்ல, பகை கக்கியோரை வீழ்த்தாது விட்டவருமல்லர்; அவர்கள் பொன்னை இழப்பர், பொருளை இழப்பர்; வண்ணத் தமிழைமட்டும் இழந்திடச் சம்மதியார்! என்று. நமது முன்னோர், பெயரெடுத்தனர்.
அது, 'அந்த நாள்' என்கிறார், அமைச்சரானதால், எதையும் பேசிடும் துணிவுகொண்டோர்.
இது நம்மை அறைகூவி அழைப்பதாகும். வீரத்தைப் பழிப்பதாகும். மரபினை இகழ்வதாகும். என்று ஆற்றல் மிக்கோனே! ஆர்த்தெழுந்து அறைகிறாய்!! ஒலியும் ஒளியும், கிளம்பிடக் காண்கிறேன்; உவகை யுடன் உனை வாழ்த்துகிறேன். வீழ்த்துவோம், அரசின் ஆணவந்தனையே, என்று வீறுகொண்டு எழுந்த ஓர் விடுதலைப் படை, பரணி பாடிக் கிளம்பிடும் வேளை, பார்த்திடும் மக்கள் அறிந்திடத்தானே, ஆட்சியால் வந்துள ஆயிரம் கேட்டினை, அலசிக் காட்டிடும் அரும்பணியாற்றினோம். ஆற்றிய அரும்பணி அளித்திடும் பலன்தனை, அறிந்திட, கணக்கிட, ஆணவ அரசு அளித்திடும் வாய்ப்பினை இழந்திட, நாம் என்ன இளித்தவாயரோ!!
19.6.60
அண்ணன்,
Jimmynz<noinclude></noinclude>
6kmxzq68605suir20rlf13t9r1201iz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/95
250
641723
1928500
1927746
2026-04-30T05:28:53Z
Rabiyathul
5890
+ மேலடி
1928500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||71}}{{rule}}</noinclude>கடிதம்: 108
ஆணை பிறந்தது...!
மொழியும் இனமும், அயர்லாந்தில்-
மொழிப் பற்றும் வெறியும்-
தம்பி!
இந்தி வெறி-நேரு கருத்து.
"தாயகத்தை விட்டுப் பிரியப் போகிறேன், நாளையதினம் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த நேரத்தில், நாட்டு மக்களுக்கு என்ன தந்துவிட்டுச் செல்கிறீர்-நாட்டவருக்குத் தாங்கள் அளித்திட விரும்பும் கடைசிச்செய்தி யாது? என்று என்னை வினவிடின், அயரிஷ் இனத்தவராகத் தொடர்ந்து வாழவிரும்பினால், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்-என்றுதான் கூறிச் செல்வேன்".
பிரிட்டிஷ் பிடியிலிருந்து தாயகத்தை - அயர்லாந்து நாட்டை- மீட்டிட, அரும்பாடுபட்ட வீரன், அகில உலகு பாராட்டத்தக்க ஆற்றல் மிக்கோன், திவேலரா இதுபோலக் கூறினான்.
வல்லமை மிக்கவர்கள் இந்தப் பிரிட்டிஷார்! அவர்களின் படைபலம், பயமூட்டுவதாக இருக்கிறது; எதிர்ப்போரைக் கொன்று குவிக்கின்றனர்; நாடே நாசப் படுகுழியில் தள்ளப்படுவதாயினும் சரி, எங்கள் ஆதிக்கத்தை மட்டும் விடமாட்டோம் என்று கொக்கரிக்கின்றனர்; கொக்கரிப்பது மட்டுமல்ல, கூசாது கொடுமை பல செய்கின்றனர்; இவர்களை எப்படி விரட்டுவது, வீழ்த்துவது? தாயகத்தை எங்ஙனம் விடுவிப்பது என்று, மக்கள் மருண்டு கிடந்தபோது, 'சாகத் துணிந்திடின், நாட்டினரே! நாடு வாழும்! வாழ வேண்டுமே என்று அலைந்திடின், நாடு சாகும்!" என்றுரைத்து, வீர உணர்ச்சியை ஊட்டி, மக்களைத் திரட்டி, விடுதலைப் போர் நடாத்தி, வெற்றி பெற்ற மாவீரன், திவேலரா. அந்த விடுதலை வீரன், கூறுகிறான், மொழி காப்பாற்றப்பட வேண்டும் இனம் அழிந்து படாமலிருக்க வேண்டுமானால்,என்று.
ஆமாம்! உண்மைதானே அது. ஒவ்வோர் இனத்துக்கென ஒவ்வொர் மொழி இயற்கையாக அமைந்திருக்கிறது. அந்த மொழி. 'வாழ்க்கை வழி'யை அந்த இன மக்களுக்கு, அமைத்துத் தருகிறது. ஓராண்டு ஈராண்டல் பல தலைமுறைகளாகச், சிறுகச் சிறுகச் சமைக்கப்பட்டுக், கூட்டாகி, ஒரு பேருரு ஏற்பட்டுவிடுகிறது. அந்த மக்கள், உலவும் நாடு,<noinclude></noinclude>
h0wtig2wrqsmz0jkgcj2hmldwezcwcd
1928998
1928500
2026-04-30T10:26:43Z
Rabiyathul
5890
-சுத்தம்
1928998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம்: 108
ஆணை பிறந்தது...!
மொழியும் இனமும், அயர்லாந்தில்-
மொழிப் பற்றும் வெறியும்-
தம்பி!
இந்தி வெறி-நேரு கருத்து.
"தாயகத்தை விட்டுப் பிரியப் போகிறேன், நாளையதினம் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த நேரத்தில், நாட்டு மக்களுக்கு என்ன தந்துவிட்டுச் செல்கிறீர்-நாட்டவருக்குத் தாங்கள் அளித்திட விரும்பும் கடைசிச்செய்தி யாது? என்று என்னை வினவிடின், அயரிஷ் இனத்தவராகத் தொடர்ந்து வாழவிரும்பினால், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்-என்றுதான் கூறிச் செல்வேன்".
பிரிட்டிஷ் பிடியிலிருந்து தாயகத்தை - அயர்லாந்து நாட்டை- மீட்டிட, அரும்பாடுபட்ட வீரன், அகில உலகு பாராட்டத்தக்க ஆற்றல் மிக்கோன், திவேலரா இதுபோலக் கூறினான்.
வல்லமை மிக்கவர்கள் இந்தப் பிரிட்டிஷார்! அவர்களின் படைபலம், பயமூட்டுவதாக இருக்கிறது; எதிர்ப்போரைக் கொன்று குவிக்கின்றனர்; நாடே நாசப் படுகுழியில் தள்ளப்படுவதாயினும் சரி, எங்கள் ஆதிக்கத்தை மட்டும் விடமாட்டோம் என்று கொக்கரிக்கின்றனர்; கொக்கரிப்பது மட்டுமல்ல, கூசாது கொடுமை பல செய்கின்றனர்; இவர்களை எப்படி விரட்டுவது, வீழ்த்துவது? தாயகத்தை எங்ஙனம் விடுவிப்பது என்று, மக்கள் மருண்டு கிடந்தபோது, 'சாகத் துணிந்திடின், நாட்டினரே! நாடு வாழும்! வாழ வேண்டுமே என்று அலைந்திடின், நாடு சாகும்!" என்றுரைத்து, வீர உணர்ச்சியை ஊட்டி, மக்களைத் திரட்டி, விடுதலைப் போர் நடாத்தி, வெற்றி பெற்ற மாவீரன், திவேலரா. அந்த விடுதலை வீரன், கூறுகிறான், மொழி காப்பாற்றப்பட வேண்டும் இனம் அழிந்து படாமலிருக்க வேண்டுமானால்,என்று.
ஆமாம்! உண்மைதானே அது. ஒவ்வோர் இனத்துக்கென ஒவ்வொர் மொழி இயற்கையாக அமைந்திருக்கிறது. அந்த மொழி. 'வாழ்க்கை வழி'யை அந்த இன மக்களுக்கு, அமைத்துத் தருகிறது. ஓராண்டு ஈராண்டல் பல தலைமுறைகளாகச், சிறுகச் சிறுகச் சமைக்கப்பட்டுக், கூட்டாகி, ஒரு பேருரு ஏற்பட்டுவிடுகிறது. அந்த மக்கள், உலவும் நாடு,<noinclude></noinclude>
e1mg27a1xpbmkv98jpmz7epsqsl183g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/96
250
641724
1928501
1927747
2026-04-30T05:29:23Z
Rabiyathul
5890
+ மேலடி
1928501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|72||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>72
'திராவிட நாடு ' இதழில்
வேட்டையாடி மகிழ்ந்திடும் காடு, நீந்தி விளையாடும் ஆறுகள், உழுது பயன்காணும் வயல்கள், உழைப்புடன் மதிநுட்பத்தை இழைத்திடும் தொழிலிடங்கள், குலவி இன்புறும் மனைகள்-இங்கெல்லாம், எண்ணங்களை, எடுத்துக் கூறிக் கூறியும், பிறர் கூறிடக் கேட்டும், கலந்துரையாடியும், கருத்துகளை உருவாக்கி, பிறகு அதனைக் காப்பாற்றிடவும்; வளர்த்திடவும், வழிவகை கண்டறிகின்றனர். இந்தச் சீரிய செல்வத்தை, மக்கள் பெற உறுதுணையாக நிற்பது, அவர்க்கென அமைந்த மொழி. எனவேதான், மொழி என்பது. வாழ்க்கை வழியினை அமைத்தளிக்கிறது என்று, அறிவாளர் கூறுகின்றனர்.
தட்பவெட்ப நிலைக்கேற்ப, மொழி உருவாக்கப்படுகிறது.
பலப்பல நூற்றாண்டுகளாக, ஒரு குறிப்பிட்ட மக்கட்தொகை, அந்த மொழி மூலம், தங்கள் எண்ணங்களை எடுத்தியம்புவதாலும், கேட்டுப் பயன்பெறுவதாலும், கருத்துகள் உருவாகின்றன. அந்தக் கருவூலம், அந்த இனம், தேடிப்பெற்றது, பிறகு உலகுக்கு அளிப்பதுமாகும்.
இதனை அறிந்ததால்தான், மொழி, இனம், பண்பாடு என்பவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்கின்றனர்.
மொழி உணர்ச்சி ஒரு இன மக்களுக்கு உயிரூட்டம் தருகிறது.
அந்த இனத்துக்கென அமையும், தனி இயல்புகள், சிறப்புகள், அந்த மொழிவழி நின்று பெற்றது. எனவே, அந்த மொழியை இழந்து விட்டால், அந்தத் தனி இயல்புகள், சிறப்புகள், மங்கி மடிந்து போகும்; அல்லது வேறு பிறவற்றுடன் கலந்து, உருவம் கெட்டுப் பலன் பாழ்பட்டுப் போய்விடும். இதனை நன்கு ஆய்ந்தறிந்தவர்களே, எந்த ஒரு இனமும், தன் தாய் மொழியினை அழிந்துபட விடக்கூடாது, என்று கூறினர்.
அயர்லாந்து, பிரிட்டிஷ் பிடியில் இருந்தது. கேடுபல சூழ்ந்தன; வறுமை கொட்டிற்று; பஞ்சம் தலைவிரித்தாடிற்று; உழவு அழிந்தது; தொழில் நசித்தது; வாணிபம் பாழ்பட்டது.
எனின், எமக்குச் சோறுவேண்டும்! வேலை வேண்டும்!! என்று அயர்லாந்து நாட்டுமக்கள், கேட்டனரோ எனின். இல்லை. எமக்கு எமது நாடு வேண்டும்! நாட்டு ஆட்சி எம்மிடம் இருக்க வேண்டும்! என்றுதான் கேட்டனர். ஏனெனில், வேறோர் நாட்டின் பிடியிலிருக்கும் போது, பசியும் பஞ்சமும் பல்வேறு விதமான கொடுமைகளும் தாக்குவது மட்டுமல்ல, இனஇயல்பு அழிக்கப் பட்டுப் போகிறது! அந்த இன இயல்பு அழிந்துவிட்டால், பிறகு என்றென்றும் நிமிர்ந்து நின்று, உரிமையைக் கேட்டிடும் துணிவே அற்றுப்போய்விடும். வயிற்றுக்குச் சோறுமட்டும் கிடைத்தால் போதும், என்ற விதமான நிலை ஏற்பட்டுவிடும்.<noinclude></noinclude>
8lcgnbwbmw9hll8gevfh1geox1qwolf
1929033
1928501
2026-04-30T11:56:49Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|72||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வேட்டையாடி மகிழ்ந்திடும் காடு, நீந்தி விளையாடும் ஆறுகள், உழுது பயன்காணும் வயல்கள், உழைப்புடன் மதிநுட்பத்தை இழைத்திடும் தொழிலிடங்கள், குலவி இன்புறும் மனைகள்-இங்கெல்லாம், எண்ணங்களை, எடுத்துக் கூறிக் கூறியும், பிறர் கூறிடக் கேட்டும், கலந்துரையாடியும், கருத்துகளை உருவாக்கி, பிறகு அதனைக் காப்பாற்றிடவும்; வளர்த்திடவும், வழிவகை கண்டறிகின்றனர். இந்தச் சீரிய செல்வத்தை, மக்கள் பெற உறுதுணையாக நிற்பது, அவர்க்கென அமைந்த மொழி. எனவேதான், மொழி என்பது. வாழ்க்கை வழியினை அமைத்தளிக்கிறது என்று, அறிவாளர் கூறுகின்றனர்.
தட்பவெட்ப நிலைக்கேற்ப, மொழி உருவாக்கப்படுகிறது.
பலப்பல நூற்றாண்டுகளாக, ஒரு குறிப்பிட்ட மக்கட்தொகை, அந்த மொழி மூலம், தங்கள் எண்ணங்களை எடுத்தியம்புவதாலும், கேட்டுப் பயன்பெறுவதாலும், கருத்துகள் உருவாகின்றன. அந்தக் கருவூலம், அந்த இனம், தேடிப்பெற்றது, பிறகு உலகுக்கு அளிப்பதுமாகும்.
இதனை அறிந்ததால்தான், மொழி, இனம், பண்பாடு என்பவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்கின்றனர்.
மொழி உணர்ச்சி ஒரு இன மக்களுக்கு உயிரூட்டம் தருகிறது.
அந்த இனத்துக்கென அமையும், தனி இயல்புகள், சிறப்புகள், அந்த மொழிவழி நின்று பெற்றது. எனவே, அந்த மொழியை இழந்து விட்டால், அந்தத் தனி இயல்புகள், சிறப்புகள், மங்கி மடிந்து போகும்; அல்லது வேறு பிறவற்றுடன் கலந்து, உருவம் கெட்டுப் பலன் பாழ்பட்டுப் போய்விடும். இதனை நன்கு ஆய்ந்தறிந்தவர்களே, எந்த ஒரு இனமும், தன் தாய் மொழியினை அழிந்துபட விடக்கூடாது, என்று கூறினர்.
அயர்லாந்து, பிரிட்டிஷ் பிடியில் இருந்தது. கேடுபல சூழ்ந்தன; வறுமை கொட்டிற்று; பஞ்சம் தலைவிரித்தாடிற்று; உழவு அழிந்தது; தொழில் நசித்தது; வாணிபம் பாழ்பட்டது.
எனின், எமக்குச் சோறுவேண்டும்! வேலை வேண்டும்!! என்று அயர்லாந்து நாட்டுமக்கள், கேட்டனரோ எனின். இல்லை. எமக்கு எமது நாடு வேண்டும்! நாட்டு ஆட்சி எம்மிடம் இருக்க வேண்டும்! என்றுதான் கேட்டனர். ஏனெனில், வேறோர் நாட்டின் பிடியிலிருக்கும் போது, பசியும் பஞ்சமும் பல்வேறு விதமான கொடுமைகளும் தாக்குவது மட்டுமல்ல, இனஇயல்பு அழிக்கப் பட்டுப் போகிறது! அந்த இன இயல்பு அழிந்துவிட்டால், பிறகு என்றென்றும் நிமிர்ந்து நின்று, உரிமையைக் கேட்டிடும் துணிவே அற்றுப்போய்விடும். வயிற்றுக்குச் சோறுமட்டும் கிடைத்தால் போதும், என்ற விதமான நிலை ஏற்பட்டுவிடும்.<noinclude></noinclude>
jxl75h6j5adm7aksg1q7meyq73vueog
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/97
250
641725
1928502
1927748
2026-04-30T05:29:53Z
Rabiyathul
5890
+ மேலடி
1928502
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||73}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
73
தம்பி! கொள்ளும் புல்லும் நிரம்பத் தந்திட்டாலும், காளை. கட்டு அவிழ்த்துக்கொண்டு. தன்னிச்சையாக ஓடத்தான் துடிக்கும்; பார்த்திருக் கிறாய் அல்லவா! வயிறு நிரம்பிவிட்டது, இனி நமக்கு என்ன கவலை என்று இருந்துவிடாது; எவனோ கட்டிப்போட்டு வைத்திருக்கிறான்; இந்தக் கயிறு அளவுக்குத்தான், நாம் உலவ முடிகிறது; ஏன், கட்டுண்டு கிடைக்கவேண்டும்; நம்மைக் கட்டிப் போட்டுவிட்டு, இவனென்ன நமக்குப் புல்லும் கொள்ளும் தருவது; நமக்கென்ன, நமதுதேவைக்குப் போதுமான தீனியைத் தேடிப் பெற்றுக்கொள்ள ஆற்றல் இல்லையா; எவ்வளவு பசுமை நிரம்பிய இடங்கள் உள்ளன; அங்கெலாம் ஓடித் திரிந்து, தீனி தின்று மகிழத் தெரியாதா? கட்டிப் போட்டுவிட்டானே!- என்று கூறுவது போலக் காளை, துள்ளுகிறது, நெம்புகிறது; அடித்துக் காட்டுகிறது; காலால் தரையைக் கிளறுகிறது, கிட்டே சென்றால் முட்டித் தள்ளவே வருகிறது அல்லவா?
வாலால்
அந்தக் காளையே, கிழடு தட்டியதாகிவிட்டால், என்ன செய்யக் காண்கிறாய்? போட்டதைத் தின்றுவிட்டு, அசைபோட்டுக்கொண்டு கிடக்கிறது; தட்டித் தட்டித்தான், எழுந்தே நிற்கச் செய்ய முடிகிறது. காளைப் பருவத்து முடுக்கு மடிந்துபோய் விடுகிறது. நமக்கு இனி இதுதான் கதி, என்ற தீர்மானத்துக்கு வந்து விடுகிறது.
ஆதிக்கத்தைப் புகுத்துவோர், விடுதலை உணர்ச்சி வீறுகொண்டு எழுந்திடும் வேளையில், கட்டிப்போட்டோ, வெட்டிச் சிதைத்தோ தடுத்து விட்டால், பிறகு கிழடு தட்டிய மாடு பெற்றிடும் இயல்பு போல், அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் ஆகிவிடுவர்! போட்டதைத் தின்றுவிட்டு, சொல்வதைச் செய்துகொண்டு கிடப்பர்!-என்று எண்ணுகின்றனர்.
ஆனால், 'மொழி' இருப்பதால்தான் எத்தனை எத்தனை காலம், ஆதிக்கக்காரன், தன்னிடம் உள்ள எல்லாவிதமான படைக்கலன் களையும் கொண்டு அடக்கி ஒடுக்கி வைத்தாலும், அடக்கி வைக்கப்பட்ட மக்கள், விடுதலை உணர்ச்சியை அடியோடு இழந்து விடுவதில்லை. விடுதலைப்போர் தொடுத்திடும் துணிவு பிறவாமலிருக்கக் கூடும்-ஆனால் அந்த உணர்ச்சி அழிந்துபடுவதில்லை. மொழிதான் அதற்குக் காரணம்.
எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்ள, மனதிற்பட்டதை எடுத்தியம்ப, நமது கதி இதுதானா என்றென்றும் என்று கேட்டிட, இவ்விதமா நமது முன்னோர்கள் இருந்தனர் என்று பேச, இடுக்கண் வந்த காலை அவர்கள் யாதுசெய்து இன்னலைப் போக்கிக் கொண்டனர் என்பது குறித்துக் கலந்துரையாட, மொழி பயன்படுகிறது.
அவ்வப்போது தோன்றும். எண்ணங்களை மட்டும் பெறுவது போதும் என்றால், எந்த மொழியைக் கற்றுக்கொண்டாலும், அம்<noinclude></noinclude>
g6jdtonra7lmoc34ryqudzw6ycoah3i
1929034
1928502
2026-04-30T11:57:21Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||73}}{{rule}}</noinclude>
தம்பி! கொள்ளும் புல்லும் நிரம்பத் தந்திட்டாலும், காளை. கட்டு அவிழ்த்துக்கொண்டு. தன்னிச்சையாக ஓடத்தான் துடிக்கும்; பார்த்திருக் கிறாய் அல்லவா! வயிறு நிரம்பிவிட்டது, இனி நமக்கு என்ன கவலை என்று இருந்துவிடாது; எவனோ கட்டிப்போட்டு வைத்திருக்கிறான்; இந்தக் கயிறு அளவுக்குத்தான், நாம் உலவ முடிகிறது; ஏன், கட்டுண்டு கிடைக்கவேண்டும்; நம்மைக் கட்டிப் போட்டுவிட்டு, இவனென்ன நமக்குப் புல்லும் கொள்ளும் தருவது; நமக்கென்ன, நமதுதேவைக்குப் போதுமான தீனியைத் தேடிப் பெற்றுக்கொள்ள ஆற்றல் இல்லையா; எவ்வளவு பசுமை நிரம்பிய இடங்கள் உள்ளன; அங்கெலாம் ஓடித் திரிந்து, தீனி தின்று மகிழத் தெரியாதா? கட்டிப் போட்டுவிட்டானே!- என்று கூறுவது போலக் காளை, துள்ளுகிறது, நெம்புகிறது; அடித்துக் காட்டுகிறது; காலால் தரையைக் கிளறுகிறது, கிட்டே சென்றால் முட்டித் தள்ளவே வருகிறது அல்லவா?
வாலால்
அந்தக் காளையே, கிழடு தட்டியதாகிவிட்டால், என்ன செய்யக் காண்கிறாய்? போட்டதைத் தின்றுவிட்டு, அசைபோட்டுக்கொண்டு கிடக்கிறது; தட்டித் தட்டித்தான், எழுந்தே நிற்கச் செய்ய முடிகிறது. காளைப் பருவத்து முடுக்கு மடிந்துபோய் விடுகிறது. நமக்கு இனி இதுதான் கதி, என்ற தீர்மானத்துக்கு வந்து விடுகிறது.
ஆதிக்கத்தைப் புகுத்துவோர், விடுதலை உணர்ச்சி வீறுகொண்டு எழுந்திடும் வேளையில், கட்டிப்போட்டோ, வெட்டிச் சிதைத்தோ தடுத்து விட்டால், பிறகு கிழடு தட்டிய மாடு பெற்றிடும் இயல்பு போல், அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் ஆகிவிடுவர்! போட்டதைத் தின்றுவிட்டு, சொல்வதைச் செய்துகொண்டு கிடப்பர்!-என்று எண்ணுகின்றனர்.
ஆனால், 'மொழி' இருப்பதால்தான் எத்தனை எத்தனை காலம், ஆதிக்கக்காரன், தன்னிடம் உள்ள எல்லாவிதமான படைக்கலன் களையும் கொண்டு அடக்கி ஒடுக்கி வைத்தாலும், அடக்கி வைக்கப்பட்ட மக்கள், விடுதலை உணர்ச்சியை அடியோடு இழந்து விடுவதில்லை. விடுதலைப்போர் தொடுத்திடும் துணிவு பிறவாமலிருக்கக் கூடும்-ஆனால் அந்த உணர்ச்சி அழிந்துபடுவதில்லை. மொழிதான் அதற்குக் காரணம்.
எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்ள, மனதிற்பட்டதை எடுத்தியம்ப, நமது கதி இதுதானா என்றென்றும் என்று கேட்டிட, இவ்விதமா நமது முன்னோர்கள் இருந்தனர் என்று பேச, இடுக்கண் வந்த காலை அவர்கள் யாதுசெய்து இன்னலைப் போக்கிக் கொண்டனர் என்பது குறித்துக் கலந்துரையாட, மொழி பயன்படுகிறது.
அவ்வப்போது தோன்றும். எண்ணங்களை மட்டும் பெறுவது போதும் என்றால், எந்த மொழியைக் கற்றுக்கொண்டாலும், அம்<noinclude></noinclude>
qkll48h2g62i01htpuok377epnajd8t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/98
250
641726
1928503
1927749
2026-04-30T05:30:24Z
Rabiyathul
5890
+ மேலடி
1928503
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|74||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>74
'திராவிட நாடு' இதழில்
மொழியில் பேசலாம்; போதும். ஆனால், விடுதலை உணர்ச்சிபெற. அவ்வப்போது தோன்றும் உணர்ச்சிமட்டும் போதாது; அடிமைப்படு வதற்கு முன்பு, உரிமை பெற்றவர்களாக இருந்தபோது, உலகம் மெச்ச வாழ்ந்தபோது, அந்த மக்களின் முன்னோர்கள், எங்ஙனம் இருந்தனர் என்பது தெரியவேண்டும்; அது குறித்துப் பேசவேண்டும்; பாரதியார் கூறியபடி, அப்போதுதான் 'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!' என்ற நிலை கிடைக்கும். அந்த நிலையை அவரவர் தத்தமது தாய்மொழி மூலமாகவே பெற முடியும்; எனவே, தாய்மொழி காப்பாற்றப்பட வேண்டும்.
என்ன அண்ணா! இது குறித்து இத்துணை விளக்கம் தேவையா? எவர் அறியார் இதனை! மந்த மதியினனும் மறுத்திடமாட்டானே! மொழி யன்றோ, ஒரு இனத்தின் விழி! அதனை இழந்திட, எந்த இழி மகனும் எண்ணங்கொள்ள மாட்டானே!-என்று கேட்பாய்.
கடைசிச் செய்தி தருவதானால், அயர்லாந்து வாழ அயரிஷ் மொழியைக் காத்து நில்லுங்கள், என்று திவேலரா கூறியதை நீ உவகை பொங்கிடும் நிலையில் ஏற்றுக்கொள்ளுவாய், என்பதை நான் நன்கு அறிவேன். தம்பி! அந்த ஆற்றல்மிக்கோன் கூறிய அறிவுரையை, மறுத்திடக்கூடப் போமோ என்று நீ, கேட்பாய் என்பதையும் அறிவேன். ஆனால் மொழியைக் காப்பாற்று, அப்போதுதான், உன்நாடு உன்னுடைய தாகவும், உன்னிடமும் இருக்கும், என்று திவேலரா கூறினாரே. அது போன்ற உணர்ச்சிமிகு அறிவுரையை எள்ளி நகையாட, எதிர்த்துப் பேசிட, ஒரு மகானுபாவர் இருக்கிறார், நமது மண்ணில். இங்கா? என்கிறாயா? ஆமாம் தம்பி! இங்குதான்! ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பே இணையற்ற இலக்கியம் சமைத்தனரே, இதே இடத்தில்தான். இதே தமிழகத்தில்தான். இப்போதா? என்கிறாயா? ஆமாம். தம்பி! வேதனை நிரம்பிய உண்மையை நான், உரைக்கிறேன். மொழி, இனம், நாடு, விடுதலை,-எனும் உணர்ச்சிகள், உன் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும், இப்போதுதான், இருக்கிறார் அந்தப் புண்யவான்!! உன்னையும் என்னையும், நமக்கு உடன் இருந்து பணியாற்றும் பல இலட்சம் பண்பு நிறை வீரர் குழாத்தையும், இளித்த வாயர் என்றும், ஏதும் செய்ய இயலாதார் என்றும், பேசிக்கொண்டும் ஏசிக்கொண்டும் உலா வருகிறார், அந்த உத்தமர்!
1 உண்மையை நான், மொழி,
திவேலரா சொன்னார். "மொழியை இழந்திடாதீர். பிறகு விடுதலைக்கான வழியே அழிந்துபடும்" என்று.
இவர் கூறுகிறார், "இதென்ன, பித்தம்! என் மொழி! நன்மொழி! என்ற பேச்சு! தாய்மொழி! தந்தை மொழி! என்ற வாதம்! இதுதான்<noinclude></noinclude>
q9p0f7mp7pnw0xnxtlyyqjy4iapkty9
1929035
1928503
2026-04-30T11:57:51Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|74||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
மொழியில் பேசலாம்; போதும். ஆனால், விடுதலை உணர்ச்சிபெற. அவ்வப்போது தோன்றும் உணர்ச்சிமட்டும் போதாது; அடிமைப்படு வதற்கு முன்பு, உரிமை பெற்றவர்களாக இருந்தபோது, உலகம் மெச்ச வாழ்ந்தபோது, அந்த மக்களின் முன்னோர்கள், எங்ஙனம் இருந்தனர் என்பது தெரியவேண்டும்; அது குறித்துப் பேசவேண்டும்; பாரதியார் கூறியபடி, அப்போதுதான் 'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!' என்ற நிலை கிடைக்கும். அந்த நிலையை அவரவர் தத்தமது தாய்மொழி மூலமாகவே பெற முடியும்; எனவே, தாய்மொழி காப்பாற்றப்பட வேண்டும்.
என்ன அண்ணா! இது குறித்து இத்துணை விளக்கம் தேவையா? எவர் அறியார் இதனை! மந்த மதியினனும் மறுத்திடமாட்டானே! மொழி யன்றோ, ஒரு இனத்தின் விழி! அதனை இழந்திட, எந்த இழி மகனும் எண்ணங்கொள்ள மாட்டானே!-என்று கேட்பாய்.
கடைசிச் செய்தி தருவதானால், அயர்லாந்து வாழ அயரிஷ் மொழியைக் காத்து நில்லுங்கள், என்று திவேலரா கூறியதை நீ உவகை பொங்கிடும் நிலையில் ஏற்றுக்கொள்ளுவாய், என்பதை நான் நன்கு அறிவேன். தம்பி! அந்த ஆற்றல்மிக்கோன் கூறிய அறிவுரையை, மறுத்திடக்கூடப் போமோ என்று நீ, கேட்பாய் என்பதையும் அறிவேன். ஆனால் மொழியைக் காப்பாற்று, அப்போதுதான், உன்நாடு உன்னுடைய தாகவும், உன்னிடமும் இருக்கும், என்று திவேலரா கூறினாரே. அது போன்ற உணர்ச்சிமிகு அறிவுரையை எள்ளி நகையாட, எதிர்த்துப் பேசிட, ஒரு மகானுபாவர் இருக்கிறார், நமது மண்ணில். இங்கா? என்கிறாயா? ஆமாம் தம்பி! இங்குதான்! ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பே இணையற்ற இலக்கியம் சமைத்தனரே, இதே இடத்தில்தான். இதே தமிழகத்தில்தான். இப்போதா? என்கிறாயா? ஆமாம். தம்பி! வேதனை நிரம்பிய உண்மையை நான், உரைக்கிறேன். மொழி, இனம், நாடு, விடுதலை,-எனும் உணர்ச்சிகள், உன் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும், இப்போதுதான், இருக்கிறார் அந்தப் புண்யவான்!! உன்னையும் என்னையும், நமக்கு உடன் இருந்து பணியாற்றும் பல இலட்சம் பண்பு நிறை வீரர் குழாத்தையும், இளித்த வாயர் என்றும், ஏதும் செய்ய இயலாதார் என்றும், பேசிக்கொண்டும் ஏசிக்கொண்டும் உலா வருகிறார், அந்த உத்தமர்!
1 உண்மையை நான், மொழி,
திவேலரா சொன்னார். "மொழியை இழந்திடாதீர். பிறகு விடுதலைக்கான வழியே அழிந்துபடும்" என்று.
இவர் கூறுகிறார், "இதென்ன, பித்தம்! என் மொழி! நன்மொழி! என்ற பேச்சு! தாய்மொழி! தந்தை மொழி! என்ற வாதம்! இதுதான்<noinclude></noinclude>
ppinke4735zd9t5jn739fgeihosts21
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/99
250
641727
1928504
1927750
2026-04-30T05:30:55Z
Rabiyathul
5890
+ மேலடி
1928504
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||75}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
75
படிப்பேன், இதைப் படிக்கமாட்டேன், என்ற பிடிவாதம்! இந்த மொழிவெறி ஆகாது" என்கிறார்.
உலகம் மெச்சுகிறது. திவேலராவை!
உடனிருப்போர் மெச்சுகின்றனர், தாய் மொழியையும் இழித்துப் பேசிடும், இந்த மா மேதையை!!
எந்தப் பித்தர்விடுதியில் கண்டாய் அப்படிப்பட்ட சத்தற்ற ஜென்மத்தை என்று கேட்கிறாய், தம்பி! கோபத்துடன்! ஆனால், நான், வருத்தத்துடன் அல்லவோ, பதிலளிக்க வேண்டி இருக்கிறது; இத்தகைய இழிமொழி பேசித் திரிப்வர். மேலிடத்தில் அல்லவா இருக்கிறார்! காமராஜர்! தம்பி! முதலமைச்சர்! அவரல்லவா பேசுகிறார். நமக்கு மொழி வெறியாம்! தமிழ்! தமிழ்! என்று கூவித் திரிகிறோமாம்! எந்த மொழியாக இருந்தால் என்ன, என்கிறார்!!
'மொழியைக் காத்திடின் உரிமைவாழ்வு நிலைத்திடும்.' என்று பேசிடும் திவேலரா, அயர்லாந்து நாட்டில்!
மொழி காத்திடப் படை திரண்டு நிற்கும் தமிழ் நாட்டிலே, அரசோச்சுகிறார், மொழிவழி கூடாது என்று பேசிடும் காமராசர்.
எத்தனை எத்தனையோ இன்னல்களைத் தாங்கிக்கொண்டோம்; கொற்றம் இழந்தோம், கோட்டை இழந்தோம்; வாணிபம் இழந்தோம், விருது பலவற்றை இழந்து நிற்கிறோம்; தொழில் வளம் இழந்தோம், தோழர்களை இழந்தோம்; கலம் இழந்தோம்; காவியம் இயற்றும் திறம் இழந்தோம்; இத்தனை இன்னல்களும் தாங்கிக் கொண்டோம்; ஆனால், தமிழ் மொழியிடம் தமிழன் காட்டவேண்டிய பற்றினை, தாய்மொழிக்குப் பேராபத்து எனின், துடித்தெழுந்து போரிடும் வீரத்தினை, தாய்மொழியைத் தாழ்த்திப், பேய்மொழி ஒன்றினைப் புகுத்திடும் கொடுமையை எதிர்த்திடும் வீரத்தினை, ஒரு தமிழன் அரசாளும் தமிழன், தமிழ் நாட்டில், நாம் உயிருடன் உலவிக்கொண்டிருக்கும் நாட்களில், மொழிவெறி என்று கேலி பேசி இகழ்வது, அதனை நாம் கேட்டுக் கொண்டு நிற்பது. எனும், இந்தக் கொடுமையையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்!
"ஏ! ஏ! தாங்கிக்கொள்ளாமல், என்ன, தாவிக் குதிப்பீர்களா?"- என்று பேசுகிறார், காமராஜர். காவியத் தமிழ் உலவிய தமிழகத்தில். இன்று இந்த 'காடி'த் தமிழ் வாடை கிளப்புகிறது. 'காடி' என்றுரைத்த காரணம், தம்பி! காமராஜர் கூறிடும் அதி அற்புதமான வாதம் இருக்கிறதே. மொழிவெறி கூடாது என்பது, அது நாம் முன்பே பலமுறை வேறு சிலர், பேசிப்பேசி, கேட்டுக்கேட்டுப் புளித்துப் போனது! பழைய சரக்கு! வெறும் காடி!!<noinclude></noinclude>
ma3a6mn2ylr0jk8s2250zoejq63q4hq
1929036
1928504
2026-04-30T11:58:25Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929036
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||75}}{{rule}}</noinclude>படிப்பேன், இதைப் படிக்கமாட்டேன், என்ற பிடிவாதம்! இந்த மொழிவெறி ஆகாது" என்கிறார்.
உலகம் மெச்சுகிறது. திவேலராவை!
உடனிருப்போர் மெச்சுகின்றனர், தாய் மொழியையும் இழித்துப் பேசிடும், இந்த மா மேதையை!!
எந்தப் பித்தர்விடுதியில் கண்டாய் அப்படிப்பட்ட சத்தற்ற ஜென்மத்தை என்று கேட்கிறாய், தம்பி! கோபத்துடன்! ஆனால், நான், வருத்தத்துடன் அல்லவோ, பதிலளிக்க வேண்டி இருக்கிறது; இத்தகைய இழிமொழி பேசித் திரிப்வர். மேலிடத்தில் அல்லவா இருக்கிறார்! காமராஜர்! தம்பி! முதலமைச்சர்! அவரல்லவா பேசுகிறார். நமக்கு மொழி வெறியாம்! தமிழ்! தமிழ்! என்று கூவித் திரிகிறோமாம்! எந்த மொழியாக இருந்தால் என்ன, என்கிறார்!!
'மொழியைக் காத்திடின் உரிமைவாழ்வு நிலைத்திடும்.' என்று பேசிடும் திவேலரா, அயர்லாந்து நாட்டில்!
மொழி காத்திடப் படை திரண்டு நிற்கும் தமிழ் நாட்டிலே, அரசோச்சுகிறார், மொழிவழி கூடாது என்று பேசிடும் காமராசர்.
எத்தனை எத்தனையோ இன்னல்களைத் தாங்கிக்கொண்டோம்; கொற்றம் இழந்தோம், கோட்டை இழந்தோம்; வாணிபம் இழந்தோம், விருது பலவற்றை இழந்து நிற்கிறோம்; தொழில் வளம் இழந்தோம், தோழர்களை இழந்தோம்; கலம் இழந்தோம்; காவியம் இயற்றும் திறம் இழந்தோம்; இத்தனை இன்னல்களும் தாங்கிக் கொண்டோம்; ஆனால், தமிழ் மொழியிடம் தமிழன் காட்டவேண்டிய பற்றினை, தாய்மொழிக்குப் பேராபத்து எனின், துடித்தெழுந்து போரிடும் வீரத்தினை, தாய்மொழியைத் தாழ்த்திப், பேய்மொழி ஒன்றினைப் புகுத்திடும் கொடுமையை எதிர்த்திடும் வீரத்தினை, ஒரு தமிழன் அரசாளும் தமிழன், தமிழ் நாட்டில், நாம் உயிருடன் உலவிக்கொண்டிருக்கும் நாட்களில், மொழிவெறி என்று கேலி பேசி இகழ்வது, அதனை நாம் கேட்டுக் கொண்டு நிற்பது. எனும், இந்தக் கொடுமையையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்!
"ஏ! ஏ! தாங்கிக்கொள்ளாமல், என்ன, தாவிக் குதிப்பீர்களா?"- என்று பேசுகிறார், காமராஜர். காவியத் தமிழ் உலவிய தமிழகத்தில். இன்று இந்த 'காடி'த் தமிழ் வாடை கிளப்புகிறது. 'காடி' என்றுரைத்த காரணம், தம்பி! காமராஜர் கூறிடும் அதி அற்புதமான வாதம் இருக்கிறதே. மொழிவெறி கூடாது என்பது, அது நாம் முன்பே பலமுறை வேறு சிலர், பேசிப்பேசி, கேட்டுக்கேட்டுப் புளித்துப் போனது! பழைய சரக்கு! வெறும் காடி!!<noinclude></noinclude>
1toe3o4w8q82799vuagqiaz0wts2w2n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/100
250
641728
1928505
1927751
2026-04-30T05:31:25Z
Rabiyathul
5890
+ மேலடி
1928505
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|76||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>76
'திராவிட நாடு' இதழில்
எது பற்று, எது வெறி-என்பதைக் கண்டறிய, யார் இந்தக் காமராஜருக்கு, அதிகாரம் அளித்தனர்? ஓட் அளித்தனர். மேலிடம் அமர! மொழி பற்றிய 'முடிவுரை' கூறவா!! கன்னித் தமிழ்பற்றி, இன்னும் நடத்தப்பட வேண்டிய ஆராய்ச்சி ஏராளம் என்கின்றனர். கற்றறிந்தோர், வித்தகர், புலவர் பெருமக்கள். கானூர் படையாச்சியையும், வானூர் ரெட்டியாரையும், மேனூர் முதலியாரையும், பள்ளப்பட்டி மரக்காயரையும், பாப்பாரப்பட்டி கவுண்டரையும், வாடிப்பட்டியாரையும், வத்தலகுண்டாரையும் தேடித் தேடிப் பிடித்து வைத்துக்கொண்டு, தேர்தல் வேலையைக் கவனிக்கக் கற்றுக் கொண்ட இவர், தமிழ் மொழியின் தொன்மை மென்மை பற்றியும், அதற்கு இன்று உள்ள நிலை பற்றியும், அறிந்திட வாய்ப்பு ஏது? நாலைந்து புலவர்கள், நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறார்கள் என்பாரேல், நாடாள்கிறார் என்பதால் நாடி வருபவர்களே யன்றி, ஏடாளும் தகுதி பெற்றவர் என்பதால் அல்ல, என்றன்றி, வேறென்ன பதில் அளிப்பது.
பற்று-வெறி-இந்த இரு நிலைகளுக்கும் இலக்கணம் காணல் எளிதல்ல-அளவு காட்டலும் ஆகும் காரியமல்ல.
இவருக்கு, நாம் மொழிக்காக வரிந்துகட்டி நிற்பது, பிடிக்க வில்லை-எனவே அதனை வெறி என்கிறார். அவ்வளவே தவிர, இவரென்ன, உணர்ச்சிகளை வகைப்படுத்தி, உரைத்துப் பார்க்கவோ, நிறுத்துப் பார்க்கவோ, தனியானதோர் முறை கண்டறிந்த வித்தகரோ? எவரும் கூறார். இவரே கூறிடக் கூசுவார். எனினும், முதலமைச்சர் என்ற நிலைபெற்றதால், எதையும் கூறிடும் வாய்ப்புக் கிடைக்கிற தல்லவா! அதனால் அடித்துப் பேசுகிறார். கடன்பெற ஒரு கனவான் வீட்டுக்குச் சென்றகாலை, பித்துப்பிடித்த அவன் மகன் தாவிவந்து காலையோ, கன்னத்தையோ கடித்தால், ஏழை என்ன செய்ய முடிகிறது! முதலிலேயே வட்டி செலுத்துகிறோம், என்று எண்ணிக்கொண்டு விடுகிறான்.
நாடாள்பவர் எது பேசினாலும், தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. பூங்காவில் அமர்ந்திருக்கும்போது, புள்ளினம் எச்சமிட, அது சட்டையில் வீழ்ந்து கெடுக்கிறது-என்ன செய்ய முடிகிறது! எழுந்து செல்கிறோம் வேறிடம் தேடி எச்சமிட்டு நம்மை வேறிடம் செல்லச் செய்ததால், அந்தப் புள்ளினம், நம்மை விரட்டிய வீராதி வீரன், என்ற விருது பெறவா. தகுதி அடைகிறது!
நாடாளத்தான் நான் வந்தேனேயன்று, நாவாள அல்ல: அது தன்னிச்சையாக, ஏதேதோ செய்யும் என்றுரைப்பது போல, அவர், ஏதேதோ பேசுகிறார்.<noinclude></noinclude>
4au175do83b92qx8fau9amqchrhfwks
1929037
1928505
2026-04-30T11:58:59Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929037
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|76||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
எது பற்று, எது வெறி-என்பதைக் கண்டறிய, யார் இந்தக் காமராஜருக்கு, அதிகாரம் அளித்தனர்? ஓட் அளித்தனர். மேலிடம் அமர! மொழி பற்றிய 'முடிவுரை' கூறவா!! கன்னித் தமிழ்பற்றி, இன்னும் நடத்தப்பட வேண்டிய ஆராய்ச்சி ஏராளம் என்கின்றனர். கற்றறிந்தோர், வித்தகர், புலவர் பெருமக்கள். கானூர் படையாச்சியையும், வானூர் ரெட்டியாரையும், மேனூர் முதலியாரையும், பள்ளப்பட்டி மரக்காயரையும், பாப்பாரப்பட்டி கவுண்டரையும், வாடிப்பட்டியாரையும், வத்தலகுண்டாரையும் தேடித் தேடிப் பிடித்து வைத்துக்கொண்டு, தேர்தல் வேலையைக் கவனிக்கக் கற்றுக் கொண்ட இவர், தமிழ் மொழியின் தொன்மை மென்மை பற்றியும், அதற்கு இன்று உள்ள நிலை பற்றியும், அறிந்திட வாய்ப்பு ஏது? நாலைந்து புலவர்கள், நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறார்கள் என்பாரேல், நாடாள்கிறார் என்பதால் நாடி வருபவர்களே யன்றி, ஏடாளும் தகுதி பெற்றவர் என்பதால் அல்ல, என்றன்றி, வேறென்ன பதில் அளிப்பது.
பற்று-வெறி-இந்த இரு நிலைகளுக்கும் இலக்கணம் காணல் எளிதல்ல-அளவு காட்டலும் ஆகும் காரியமல்ல.
இவருக்கு, நாம் மொழிக்காக வரிந்துகட்டி நிற்பது, பிடிக்க வில்லை-எனவே அதனை வெறி என்கிறார். அவ்வளவே தவிர, இவரென்ன, உணர்ச்சிகளை வகைப்படுத்தி, உரைத்துப் பார்க்கவோ, நிறுத்துப் பார்க்கவோ, தனியானதோர் முறை கண்டறிந்த வித்தகரோ? எவரும் கூறார். இவரே கூறிடக் கூசுவார். எனினும், முதலமைச்சர் என்ற நிலைபெற்றதால், எதையும் கூறிடும் வாய்ப்புக் கிடைக்கிற தல்லவா! அதனால் அடித்துப் பேசுகிறார். கடன்பெற ஒரு கனவான் வீட்டுக்குச் சென்றகாலை, பித்துப்பிடித்த அவன் மகன் தாவிவந்து காலையோ, கன்னத்தையோ கடித்தால், ஏழை என்ன செய்ய முடிகிறது! முதலிலேயே வட்டி செலுத்துகிறோம், என்று எண்ணிக்கொண்டு விடுகிறான்.
நாடாள்பவர் எது பேசினாலும், தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. பூங்காவில் அமர்ந்திருக்கும்போது, புள்ளினம் எச்சமிட, அது சட்டையில் வீழ்ந்து கெடுக்கிறது-என்ன செய்ய முடிகிறது! எழுந்து செல்கிறோம் வேறிடம் தேடி எச்சமிட்டு நம்மை வேறிடம் செல்லச் செய்ததால், அந்தப் புள்ளினம், நம்மை விரட்டிய வீராதி வீரன், என்ற விருது பெறவா. தகுதி அடைகிறது!
நாடாளத்தான் நான் வந்தேனேயன்று, நாவாள அல்ல: அது தன்னிச்சையாக, ஏதேதோ செய்யும் என்றுரைப்பது போல, அவர், ஏதேதோ பேசுகிறார்.<noinclude></noinclude>
hy18cr2z28hvsbaki3bolpd8dd6222r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/101
250
641729
1928506
1927752
2026-04-30T05:31:54Z
Rabiyathul
5890
+ மேலடி
1928506
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||77}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
77
பள்ளிக்கூடங்கள் கட்டினேன் என்கிறார் - காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் ஒரு முறைகூடச் சொன்னதில்லை, நான் ஒரு பல்கலைக்கழகம் அமைத்தேன் என்று-80 கோடி ரூபாய் பெறுகிறது துரைத்தனம் -ஆனால், ஏதோ, எட்டுத் தலைமுறைக்கு முன்னாலே இவர் குடும்பத்தார். ஈட்டிய பெரும்பொருளை எடுத்துச் செலவிடும் வள்ளல்போல, பள்ளிக் கூடங்கள் கட்டினேன் என்கிறார்! சரி! என்னமோ, ஒருவிதமான சபலம், பேசி அற்ப சந்தோஷத்தை அனுபவித்துவிட்டுப் போகட்டும் என்று, கேட்போர் எண்ணிக் கொள்கின்றனர். அந்த அளவோடு நில்லாமல், மொழி குறித்துமா, 'கருத்துரை' வழங்க முன்வரவேண்டும்!!
தமிழகத்தில் இன்று காணப்படுவது, மொழிவெறி அல்ல! வெறியரிட மிருந்து மொழியைக் காப்பாற்றும் பணியில், தமிழரில் தகுதி படைத்தோர் ஈடுபட்டுள்ளனர்.
"கடைசிச் செய்தி யாது தருகிறீர்?" என்று, கேட்டால், அயர்லாந்து மக்களே! ஒற்றுமையாக இருங்கள்! வல்லமையோடு இருங்கள்! உழைத்துச் செல்வத்தைத் தேடுங்கள்! தேடியதை மற்றையோருக்கும் தாருங்கள்! கல்விச் செல்வத்தை மறவாதீர்கள்! ஒழுக்கத்தை மறவாதீர்கள்! கர்த்தரை வழிபடுங்கள்!-என்று எத்தனை எத்தனையோ கூறியிருக்கலாம், திவேலரா. ஆனால் அவர், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான், அயரிஷ் நாடு நிலைக்கும் என்று கூறினார். நல்லவேளை. அவர் நாட்டிலே ஒரு காமராஜர் கிளம்பவில்லை - மொழிவெறி கூடாது, என்று பேச!! ஆனால், அயர்லாந்து நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் கொண்ட, பிரிட்டிஷ் எதேச்சாதிகாரி, திவேலரா பேச்சினைக் கேட்டு, என்ன சொல்லுவான். செச்சே!! இந்தத் திவேலராவுக்கு என்ன புத்தி இப்படிக் கெட்டுவிட்டதே! மொழிவெறியைக் கிளறுகிறாரே!!- என்றுதானே கூறுவான்.
அங்ஙனமெனின், காமராஜர், தமிழரைத் தாசராக்கிடும். எதேச்சாதிகாரியோ. எனில் அல்ல! அல்ல! அவ்வளவு கடினமான வேலையில் அவர் ஈடுபட்டில்லை; தமிழரைத் தாசராக்கத் திட்ட மிட்டு, இந்தியைப் புகுத்திடும் வடநாட்டு இந்தி எதேச்சாதிகாரி களுக்கு, இவர் 'எடுபிடி' வேலை பார்த்தால் போதும் என்றிருக் கிறார். இவர் பேசுகிறார். வெறி கூடாது என்று.
ஆனால், உண்மையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆதிக்க வெறிபிடித்தவர்கள், இந்தி மொழியை அகில-இந்தியாவுக்கும் ஆட்சிமொழியாக்கிவிட்டதாக அறிவித்துவிட்டார்கள்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுபட்டோம் என்ற களிப்பும், விடுதலை பெற்றதும், செயல்முறைகளை ஒழுங்கு படுத்திக்<noinclude></noinclude>
9s265jolfj9zrdeqb5gjp6guf1aongq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/102
250
641730
1928508
1927753
2026-04-30T05:32:25Z
Rabiyathul
5890
+ மேலடி
1928508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|78||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>78
'திராவிட நாடு' இதழில்
கொள்ள வேண்டும், அரசியல் சட்ட திட்டத்தை விரைவாகச் சமைத்திடும் திறம் இருப்பதை உலகுக்குக் காட்டவேண்டும் என்ற ஆர்வமும், ததும்பிக் கொண்டிருந்த நேரத்திலே, மொழிபற்றி முடிவு எடுத்தனர். இந்தியே, ஆட்சி மொழியாக இருத்தல் வேண்டு மென்று தீர்மானித்தனர்.
அப்போதேகூட, குமுறலும், கருத்து வேற்றுமையும் எழுந்தன. ஆனால், விழாக்கோலம், விவாதத்தைக் குறைத்து விட்டது. ஆபத்தின் அளவும் வகையும் பற்றி அன்று அவ்வளவு தெளிவாக அறிந்து கொள்ளப் பலரால் முடியவில்லை. வெள்ளைக்காரன் வெளியேறி விட்டான்; இனி நாமே வைசிராய், நாமே கவர்னர், நமக்கே மந்திரி வேலைகள் என்ற இந்த எண்ணமே மேலோங்கி நின்றது. அந்த மகிழ்ச்சி, மற்ற எது பற்றியும் சிந்திக்க இடமளிக்கவில்லை. இந்தி ஆதிக்கக்காரர்கள். தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொண்டனர்.
ஆனால், அப்போதும்கூட, தமிழகத்திலே, திராவிட இயக்கம் மட்டும் விழிப்புணர்ச்சியுடன் இருந்தது; வர இருக்கும் ஆபத்தை எடுத்துக்காட்டி எச்சரித்தவண்ணமிருந்தது.
'சுதந்திரத்தை'ப் பெறுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியினர், பதவியைச் சுவைத்தனர்; அந்த நாளில் ஆச்சாரியார் இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்கியதும், கடும்எதிர்ப்பு மூண்டதும், ஆயிரவர் சிறை சென்றதும், இரு காளையர் சிறையில் மாண்டதும், தமிழகத்தின் வீர வரலாற்றுச் சுவடியிலே இடம் பெற்றுள்ளன.
அன்றெல்லாம் இந்தி எதிர்ப்பு என்பது, ஏமாற்றமடைந்த அரசியல்வாதிகளின் 'கைவரிசை' என்று பேசப்பட்டது; ஆச்சாரியார் அப்படிச் சொல்லித்தான், நிலைமையை விளக்கப் பார்த்தார்; இன்றோ, அவரே இந்தி எதிர்ப்பாளராகிவிட்டிருக்கிறார்.
தம்பி! இருபது, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நீ, கேட்டதுண்டோ இல்லையோ, நானறியேன்-இந்தியை இன்று ஆட்சிமொழி என்றல்லவா சொல்கிறார்கள்; அப்போதெல்லாம். இந்தியை தேசீய மொழி என்றுதான் சொல்வார்கள்; தட்டித் தட்டிப் பேசுவார்கள்.
தமிழனுக்கு, இந்தியோ, வேறெந்த மொழியோ, தேசீய மொழி யாகாது!-என்பதற்கான காரணங்களைக் காட்டி, தீவிரமான பிரச்சாரம் செய்து, கிளர்ச்சிகளை நடத்தி, சிறை சென்று. பல்வேறு தொல்லைகளை நாம் தாங்கிக்கொண்ட பிறகு, இந்தி ஆதரவாளர்களின் தலைக்கனம் குறைந்தது-இப்போது மெத்த நாவடக்கத்துடன், இந்தியாவில் 14 தேசீய மொழிகள் உண்டு, இந்தி, அதிலே ஒன்று; ஆனால், மிக அதிகம்பேர் பேசும்மொழி; எனவே, அது பொது மொழி, ஆட்சிமொழி-என்று இப்போது பேசுகிறார்கள்.<noinclude></noinclude>
0zes66yvn17rh32zch5hr585uhcq68u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/103
250
641731
1928509
1927754
2026-04-30T05:32:54Z
Rabiyathul
5890
+ மேலடி
1928509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||79}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
79
இந்தி ஆதிக்க நோக்கத்தை அவர்கள் விட்டுவிடவில்லை; ஆனால் முறையை, பேச்சை மாற்றிக்கொண்டனர்.
தமிழர் தவிர மற்றவர் மொழி-இனம்-பண்பாடு-என்னும் தொடர்பு பற்றி அதிகக் கவலையும் பொறுப்பும் காட்டவில்லை. இங்கோ, ஆர்வத்தீ என்றுமே அணைந்ததில்லை. ஆச்சாரியார் முயன்று பார்த்துத் தோற்றார்! ஆள்வது யார் என்று பார்த்துவிடலாம் என்று ஆர்ப்பரித்தார்! நாமல்லவா, வெள்ளைக்காரரை எதிர்த்தவர்கள்-மொழிக்காக வாதிடும் இவர்கள் போரிட வல்லவர்களல்ல; அடக்குமுறையைத் தாங்க மாட்டார்கள், என்று தப்புக் கணக்குப் போட்டார்; தடியடி தந்தார்: மண்டைகள் உடைந்தன, மனம் உடையவில்லை; மருண்டார்; ஓடிவந்த இந்திப் பெண்ணே! கேள்! நீ, தேடிவந்த நாடு இதல்லவே!-என்று பாடினர், களிநடமாடினர், தமிழர், கட்டாய இந்தி ஒழிந்தபோது.
அந்தச் சம்பவத்தை அறியாததால், காமராஜர், இன்று ஆர்ப்பரிக் கிறார்; இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியா? செய்யட்டும், பார்க்கலாம்!- என்கிறார், துப்பாக்கி இருக்கிறது, தோட்டாக்கள் உள்ளன என்று மிரட்டுகிறார்.
இரத்தக் கறைபடிந்த கரம்! ஈரமற்ற நெஞ்சு! விளக்கம்பெற மறுக்கும் இயல்பு! அதிகார போதை!- இவ்வளவும் காமராஜர் கட்சியிடம் நிரம்பி இருப்பது தெரியும் தெரிந்தும், கொமாரபாளையத்தில், நமது பொதுக் குழுவில், இந்தியை எதிர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்.
ஆணைக்காகக் காத்திருந்த அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது ஆகஸ்ட்டு இறுதியில், உன் ஆற்றலுக்கு விருந்து, வாய்ப்பு!
துப்பாக்கி இருக்கிறது என்கிறாரே, இருக்கட்டும்; சுட்டுத் தள்ளட்டும்.
ஒவ்வொரு நாட்டுத்தலைவனும், மக்கள் வாழ, தரணி தழைக்க. ஒவ்வொரு விதத்தில் ஒப்பற்ற செயல் செய்து, பெயரெடுத்து. உலக வரலாற்றிலே இடம் பெறுகிறான். இவர், பாவம், என்ன செய்து பெயரெடுக்க முடியும்!
உலகுக்கொரு அறநூல் தீட்டுவாரா? போர் ஒழிந்து புது உலகு காணத் திட்டம் காட்டுவாரா? பஞ்சம் போக்கிட வழி காண்பாரா? கடலையும் காற்றையும், ககனத்துப் பொருள்களையும் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அறிவாற்றல் மிக்கோர். செயற்கைக் கோளங்களைச் சமைத்துக் காட்டுகின்றனர், விஞ்ஞான வித்தர்கள். அவர்களெல்லாம், மக்களுக்கு இதம் செய்து, நிலையான புகழ் தேடிக்கொள்கின்றனர். இவர், எதுசெய்ய இயலும்? எதற்குத் தம்மைத் தகுதி உள்ளவர் ஆக்கிக்கொண்டார்? எனவே, அவரால் முடிந்ததைச் செய்யத்தானே<noinclude></noinclude>
51qhypg92h1sgihpckrc8sc06jlduj4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/104
250
641732
1928510
1927755
2026-04-30T05:33:24Z
Rabiyathul
5890
+ மேலடி
1928510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|80||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>80
'திராவிட நாடு' இதழில்
விருப்பம் பிறக்கும். மற்றவர்கள், மக்களை வாழவைத்துப் பெயரெடுக் கின்றனர். இவர், சாகவைத்துப் பெயரெடுக் கட்டுமே! சுட்டுத் தள்ளட்டும் - சூரர் என்று பெயரெடுக்கட்டும். சாகப் பயப்படும் சமுதாயத்திலா, நாம் பிறந்தோம். தமிழ் இனம் இறவாப் பெரும்புகழ் பெறவேண்டும்; அதற்காக நம்மில் சிலர், செத்தால் என்ன நஷ்டம்!
ஈளைகட்டி இருமி இழுத்திழுத்துச் சாகின்றனர், எத்துணையோ பேர்!
காமராஜர் மிரட்டுகின்றபடி, துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினால், நாம், உடல் தேயாமல், உருக்குலையாமல், நோய்க் கிருமிகளால் கொத்தப் படாமல், பலர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே. இரத்தத்தின் சூடு குறையாமல், நரம்புகளின் முறுக்குக் குலையாமல், கண் பஞ்சடையாமல், காது செவிடுபடாமல், வாய் அடைத்துப் போகாமல், வீர மரணம் அடைவோம்! களத்திலே, அப்படி ஒரு நூறு வீரர்களின் உடலம் கிடந்தால், தம்பி! கடாரம் பலகண்ட இனம், தொடர்ந்து தன் புகழ் மங்காது பார்த்துக்கொண்டது. என்றன்றோ பொருள்.
சென்ற திங்கள், பத்திரிகையில் படித்திருப்பாயே தம்பி! வெப்பத்தின் கொடுமையால், நூறுபேர் இருக்குமே, இறந்து பட்டவர்கள்.
ஒரு முதலமைச்சர், அதிலும் தமிழர், அவ்வளவு ஆசையாக அழைக்கும்போது, என் துப்பாக்கிகளுக்கு வேலைவேண்டும் என்று கேட்கும்போது, நம்மிலே சிலர், பலியானால், என்ன தவறு!! நிலையான புகழ், நினைத்து நினைத்து பெருமைபடத்தக்க புகழ் கிடைக்கும், அவருக்கு!
மேலும், தம்பி! அவர், தன்னுடைய வீர தீரத்தை வேறு, எந்தக் களம் சென்றுதான் காட்டப் போகிறார்! காட்டிட இயலும்!!
"இதோ திரட்டிவிட்டேன், பெரும்படை! மாற்றாரை மாய்த் தொழிக்காது, ஓயமாட்டேன், உறங்கமாட்டேன், முரசு கொட்டுங்கள்! சங்கம் ஊதுங்கள்! கிளம்புகிறேன் என் படையுடன் வட எல்லை காக்க! சீனர்களை விரட்ட!!-என்று கூறிக் களம்செல்லவா முடியும்!!
அதனால்தான்: அவர், இப்படிப் பேசித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார்-துப்பாக்கி இருக்கிறது என்று.
தம்பி! படை இருந்தால், நிச்சயம் அரிப்பு இருக்கும்!! உடலிலே ஏற்படும், சிறுபடையே, எவ்வளவோ வேலைக்கிடையில், யார் எதிரில் இருக்கிறார்கள் என்பதைக்கூடக் கவனிக்க இயலாத நிலையில், அரிப்பைப் போக்கிக்கொள்ள, படையுடையானை, வளையவைக் கிறது. நெளியச் செய்கிறது. உராயச் செய்கிறது, தேய்த்துக்கொள்ளச் செய்கிறது!<noinclude></noinclude>
0hooi530bwcjm5iao6kn2rvno6f642n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/105
250
641733
1928511
1927756
2026-04-30T05:33:54Z
Rabiyathul
5890
+ மேலடி
1928511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||81}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
காமராஜரிடமோ போலீஸ்படை|
துப்பாக்கியுடன் தோட்டாவுடன்!!
81
அரிப்பு. சாமான்யமாகவா இருக்கும்! அதனால்தான், பாவம் ஏதேதோ பேசுகிறார்.
த
பத்துப் பேர்வழிகளைப் பிடித்துச் சிறையில் தள்ளினால் இயக்கம் படுத்துவிடும் என்று எண்ணித்தான், ஆச்சாரியார், அடக்குமுறைக்குத் தூபமிட்டார்; ஆனால், இந்தி எதிர்ப்பு வளர்வது கண்டு, மிரண்டு. சட்டசபையில், அவரே அலறிக் கூறினார்!
புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதுபோலக் கிளம்புகிறார்களே! இந்தச் சனியன் இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால், இந்தியைக் கட்டாய மாக்கிப் புகுத்தி இருக்கவே மாட்டேன்! என்று.
காமராஜருக்குக் கூறவேண்டும், தம்பி! அப்போது, உன் அண்ணன் 'சர்வாதிகாரி'யாகப் பெரியாரால் நியமிக்கப்பட்டு, இந்தி எதிர்ப்புப் போர் நடத்தியபோது, காவிகட்டிய மூவர், உடன் இருந்தனர் - அருணகிரி அடிகள் - ஈழத்துச் சிவானந்த அடிகள் - சண்முகனாந்த அடிகள்!! இன்று! 3300-கிளைக் கழகங்கள்! 3-இலட்சத்துக்கு மேல் உடனிருப்போர்!
கொமாரபாளையத்தில் இதற்கென, அமைக்கப்பட்டுள்ள போராட்டக் குழு. தம்பி சம்பத்தின் தலைமையில் இயங்கத் தொடங்கிவிட்டது. அதில் பங்கேற்றுள்ளவர்கள், தியாகத் தழும்பு பெற்றவர்கள்!! காமராஜர், ஆசைதீரத், தமது துப்பாக்கிக்கு வேலை கொடுத்து மகிழட்டும், பெரும்புகழ் ஈட்டட்டும், தமிழ் மரபு அழிக்கட்டும்; கவலை இல்லை!!
அவருடைய 'தாக்கும் சக்தி' ஒருபுறம் இருக்கட்டும். உலகிலே மிகப் பயங்கரமான பேயாட்டமாடிய எதேச்சாதிகாரங்கள். பொடிப் பொடியானதைப் பள்ளிச் சிறார்கள் படிக்கிறார்கள்! லூயி மன்னன், ஜார் மன்னன், என்ற பெயர்களும், அவைதரும் பாடங்களும், குழலூதி மாடோட்டும் சிறுவனும் அறிந்திருக்கிறான். யாரைக் கொண்டு, சுடு என்று கூறத் துடிக்கிறாரோ, அந்தப் போலீசும் படையுங்கூட, இவை களையும், இன்னும் இவைபோன்ற எழுச்சி களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு வேடிக்கை, கவனித்தாயா, தம்பி! இப்போது, போலீஸ், படை, ஆகியவற்றினைக் கொண்டு எதேச்சாதிகாரி, மக்களைக் கொல்லக் கிளம்புகிறான்; தூய உள்ளத்தோடு புனிதமான நோக்கத்துக்காகப், போரிடும் மக்களைச் சுட்டுத் தள்ளியதும், குபுகுபுவென வெளிவரும் இரத்தத்தைக் கண்டதும், சுட்டவர்களின் மனமே சுடுகிறது! தன்னலக்காரர்,<noinclude></noinclude>
9nelf1t2ds3w13aq89umjfnwfw1qx28
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/106
250
641734
1928512
1927757
2026-04-30T05:34:24Z
Rabiyathul
5890
+ மேலடி
1928512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|82||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>82
'திராவிட நாடு' இதழில்
ஏவுகிறார்கள். நாம் தியாகச் சுடர்களை அழிக்கிறோம்; கொலைத் தொழிலை நம்மைச் செய்யச் சொல்லிவிட்டு, இந்தக் கொடியவர்கள் கொள்ளை இன்பத்தை அனுபவிக்க அரசு நடத்துகிறார்கள்-செ! நமக்கேன், இந்த ஈனப் பிழைப்பு! நாம் சுட்டுத் தள்ளியபோதும், அந்த இளைஞன் கண்களிலே ஆர்வம் ஒளி விட்டதே! நாடு வாழ அவன் நின்றான்! நாமோ. நாசகாலர் வாழ, அந்த நல்லவர்களைக் கொன்று குவித்தோமே! இதற்கா நாம்! இதற்கா இந்தத் துப்பாக்கி!-என்று எண்ணுகிறார்கள்- அந்த எண்ணம் அவர்களை, வீரர்களாக மட்டுமல்ல, விவேகிகளுமாக்கு கிறது. கொடுமை செய்யும் ஆட்சியை-அவர்கள் எதிர்த்து ஒழிக்க, மக்கள் வரிசைக்கு வந்து சேருகிறார்கள்-இங்கு அல்ல, வெளியே பல நாடுகளில்
பொதுமக்களின் எதிர்ப்பு வலுவடையும்போது பசப்புவதும், மக்களின் கவனம் வேறு திக்கில் திரும்பி இருக்கும்போது திணிப்பதும், இந்தி ஆதிக்கக்காரரின் போக்காகிவிட்டது.
இந்தி சம்பந்தமாகப் காட்டப்படும் பிடிவாதம் ஆணவ அரசுக்கு அறிகுறியாகும் என்பதை, அறிவாளர் எடுத்துரைத்தனர்.
தொழில்துறை வல்லுநர்கள், இந்தி வளமற்றது என்பதை எடுத்துக்
காட்டினர்.
இந்தி மொழியை ஆட்சிமொழியாக்குவது, இந்தியைத் தாய்மொழி யாகக் கொண்ட மக்களுக்கு. அலுவலகத் துறையிலே ஆதிக்கத்தை ஏற்படுத்தும் அநீதியாகும் என்பதை, அறவழி அரசியல் இருத்தல் வேண்டும் என்போர் சுட்டிக் காட்டினர்.
நாம், தம்பி! இவைமட்டுமல்ல, இந்தி திணிப்பின்மூலம், தமிழ் மொழிக்கு உள்ள இடம் கெடுவதுடன், தமிழரின் இயல்பு கெட்டு, இன உணர்வு கெட்டு, தனி அரசு அமைத்தாக வேண்டும் என்ற விடுதலை வேட்கையை அறவே அழித்துவிடும், என்பதை உணருகிறோம்.
எனவேதான், மற்றவர்களுக்கு, இது ஒரு மொழிப் பிரச்சினையாக மட்டும் தெரிகிறது. நமக்கோ, இது இனவழி அரசு நடாத்தும் உரிமையை அழித்திடும், அரசியல் சூழ்ச்சியாகத் தோன்றுகிறது.
இந்தி விஷயத்திலே, அரசியல் சட்டம் மேற்கொண்டுள்ள திட்டம், ஆர அமர யோசிக்காமலும், மக்களின் கருத்தினை அறியாமலும், விளைவு களைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலும், ஏற்படுத்தப்பட்ட தாகும்.
எனவே, இது, திருத்தப்பட்டாகவேண்டும்.<noinclude></noinclude>
1vze3wpqm2d0wb92ccuwfk3ny2gwzrg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/107
250
641735
1928513
1927758
2026-04-30T05:34:54Z
Rabiyathul
5890
+ மேலடி
1928513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||83}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
83
1965-ம் ஆண்டு, இந்தி, ஆட்சிமொழியாகிவிடும். ஆங்கிலம் அறவே நீக்கப்பட்டுவிடும், என்று அரசியல் சட்டம் காட்டுகிறது.
பு
அந்த நாள் நெருங்க நெருங்க, இந்திமொழி ஆதிக்கக்காரரின் வெறி உணர்ச்சியும் வளரலாயிற்று; ஒளிவு மறைவு இன்றி, அவர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டிக்கொள்ளத் தலைப்பட்டனர்.
எமது மொழியே ஆட்சிமொழி! எனவே, நாங்களே ஆட்சி செய்ய வல்லவர்கள்-என்று அவர்கள் எக்காளமிடத் துணிந்தனர்.
பிறகே, தமிழர்களின் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு, வங்காளிகள் கொதித்தெழுந்து, இந்தித் திணிப்பை எதிர்த்தனர்.
.
இந்தி ஆட்சிமொழியாகிவிட்டால், இந்தி பேசாத பகுதிகளில், குறிப்பாகத் தென்னகத்தில் வாழும் மக்களுக்கு, அலுவலகங்களிலே, சரியான அளவிலும் முறையிலும், இடம் கிடைக்காது, உரிமை இருக்காது, என்ற உணர்ச்சி மேலோங்கிற்று. கட்டாய இந்தியைப் புகுத்தி, தாளமுத்து, நடராசன் மாண்டிடக் காரணமாயிருந்த ஆச்சாரியாரே, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, இந்தியை எதிர்க்கலானார்.
இந்நிலையில், ஆட்சிமொழி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, அறிக்கை வெளியிட்டது. டாக்டர் சுப்பராயன் அவர்கள், இந்தியைப் புகுத்தும் முறையினையும், ஆங்கிலம் அகற்றப்படும் விதத்தையும் கண்டித்து, தமது கருத்தை அறிக்கையில் இணைத்து அளித்தார்.
இந்தி பேசாத மக்களின் கருத்தினை மதிக்கவில்லை.
மதிக்காதது மட்டுமல்ல, அவர்களின் கருத்தினை அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.
இந்தி மொழியை ஆட்சிமொழியாக்குவது குறித்து, இந்தி பேசும் மக்கள், எவ்வளவு அவசரப்படுகிறார்கள். எத்துணை துணிவுடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து கூறி, ஒப்பம் அளிப்பதாக மட்டுமே, குழுவின் அறிக்கை இருந்தது.
இதனை, டாக்டர் சுப்பராயன் அவர்களின் குறிப்பு, மிக நன்றாக எடுத்துக்காட்டவே, அதுவரை இந்தி விஷயம், சாதாரண மொழிப் பிரச்சினை என்று எண்ணிக்கொண்டிருந்தோருக்கெல்லாம்கூட, சூடு பிறந்தது. இந்திக்கு எதிர்ப்பு வலுத்தது.
இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைவதற்குள், தமது நோக்கத்தை ஈடேற்றிக்கொள்ள வேண்டுமென்று. இந்தி ஆதிக்கக்காரர்கள், காங்கிரஸ் மேலிடத்தைக் கைப்பற்றிக் கொண்டு, கட்டளைகள் பிறப்பிக்கலாயினர்.<noinclude></noinclude>
owhw6tl0p48debsp576llpwdbclne3b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/108
250
641736
1928514
1927759
2026-04-30T05:35:25Z
Rabiyathul
5890
+ மேலடி
1928514
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|84||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>84
'திராவிட நாடு' இதழில்
அந்த நேரத்தில்தான், நேரு பண்டிதர், நேர்மைக்கும் நீதிக்கும் துணை நிற்கும் கோலம் பூண்டவராகக், காட்சி தந்தார்.
இந்தி மொழியைத் திணிப்பது அடாத செயல் என்று காட்டினார்.
இந்தி மொழி விஷயத்தில், இந்தி பேசும் மக்கள் காட்டும் வெறி உணர்ச்சி கண்டிக்கப்பட வேண்டும் என்று உரைத்தார்.
சட்டத்தில் 1965-ல் ஆங்கிலம் அகற்றப்படும், அந்த இடத்தில் இந்தி அமர்ந்து அரசோச்சும் என்று இருந்தபோதிலும், அதன்படி, நிலைமை ஏற்பட்டுவிடாது என்று உறுதி கூறினார்.
இந்தி பேசாத மக்கள் ஆங்கிலம் எவ்வளவு காலம் ஆட்சி மொழியாக-இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அதுவரை ஆங்கிலம் நீடித்திருக்கும் என்று தெரிவித்தார்.
இது விஷயமாக எந்த ஏற்பாடு செய்வதானாலும், இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறிந்தே செய்யப்படும். என்று வாக்களித்தார்.
இது விஷயமாக இந்தி பேசும் மக்களின் கருத்துக் கவனிக்கப் படவேண்டிய அவசியம்கூட இல்லை என்று அடித்துப் பேசினார். இவ்வளவும், தம்பி! பாராளுமன்றத்தில் பேசினார்.
இந்த நல்லுரையை, அவர் ஒருமுறை அல்ல, இருமுறை பேசினார். அவர் பேசப் பேச. பாராளுமன்றத்தில், மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது; பலரும் பாராட்டினர், பத்திரிகைகள் புகழ்ந்தன.
பயம் போக்கினார், பாரதப் பிரதமர்.
இந்தி வெறியருக்குச் சரியான சவுக்கடி-என்றெல்லாம் தலைப்புகள் கொடுத்து பத்திரிகைகள் எழுதின.
சென்ற ஆண்டு ஆகஸ்ட்டு திங்கள் 7-ம் நாள் பண்டித நேரு பேசினார்; இனி இந்தி ஆதிக்கக்காரர்களின் எண்ணம் ஈடேறாது என்று எல்லோரும் எண்ணிக் கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று, ஆட்சி மொழிப் பிரச்சினைப் பற்றி அமைந்தது.
பண்டித நேருவின் பட்டவர்த்தனமான வாக்குறுதியின்படியே இனிக் காரியம் இருக்கும் என்ற உறுதி பலப்பட்டது.
ஆனால், தம்பி! இப்போது, ஆட்சிமொழிப்பற்றி, குடிஅரசுத் தலைவர் வெளியிட்டுள்ள ஆணை, நேரு பண்டிதர் தந்த வாக்குறுதி யின்படி இல்லை.<noinclude></noinclude>
1bva709dsm4o7acyies04zoss78wfq2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/109
250
641737
1928515
1927760
2026-04-30T05:35:55Z
Rabiyathul
5890
+ மேலடி
1928515
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||85}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்
85
அந்த வாக்குறுதி பற்றிக் குடிஅரசுத் தலைவரின் ஆணையில், முன்னுரையில் ஏனோதானோ என்று குறிப்பிட்டிருக்கிறதே தவிர, ஆணையில், அந்த வாக்குறுதி இணைக்கப்பட்டு இல்லை.
எனவே, இந்தி ஆதிக்கக்காரர்கள் துள்ளுகின்றனர்.
இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தப் பல குழுக்கள் விரைவாக வேலை செய்கின்றன.
குடிஅரசுத் தலைவரின் ஆணையை நிறைவேற்ற என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து. டில்லி அரசு, மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.
நேரு பண்டிதர் கொடுத்த வாக்குறுதி எங்கே?
இந்தியை ஆட்சிமொழியாக்கத் தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் போது, ஆட்சிமொழி பற்றி இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்களின் கருத்தினை அறிந்துகொள்ள, ஏன் முயற்சி எடுக்கப்படவில்லை?
இவை நம்மை வாட்டும் பிரச்சினைகள்.
எனவேதான், குடிஅரசுத் தலைவர், ஆகஸ்ட் திங்கள் இறுதிக்குள், இந்தி ஆதிக்கத்துக்கு ஒப்பம் அளித்திடும் முறையில் பிறப்பித்து விட்ட ஆணையைத் திரும்பப் பெறவேண்டும்-நேரு பண்டிதரின் வாக்குறுதிக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும் என்பதற்கான உறுதி அளிக்கப்பட வேண்டும். இல்லையேல், இந்தி எதிர்ப்புக்கான போர் தொடுத்திட வேண்டும், என்று பொதுக்குழு தீர்மானித்து, குழுவும் அமைத்திருக்கிறது.
குடிஅரசுத் தலைவரின் கவனத்துக்கு, தமிழகத்தின் நிலையைக் கொண்டு செல்வதும், தமிழ் இனத்தின் உள்ளக் கொதிப்பை எடுத்துக் காட்டுவதும் காமராஜரின் கடமையாயிருக்க, அவர். நம்மை ஒழித்துக் கட்டப் போவதாகக் கொக்கரிக்கிறார்.
பாராளுமன்றத்திலே பாரதப் பிரதமர், ஒரு வாக்குறுதி தருகிறார். அது மதிப்பற்று, பொருளற்று, கவைக்குதவாது போகிறது; அதைப் பார்த்துக்கொண்டு அவரும் கைகட்டி வாய்பொத்திக் கிடக்கிறார்.
பாண்டுங் மகாநாட்டிலே பேசப்பட்ட பஞ்சசீலக் கொள்கையைக் காற்றில் பறக்கவிடலாமா என்று சீனாவைக் கேட்கிறோம்.
இதோ இங்கு, பாராளுமன்றத்தில் பண்டித நேரு தந்த வாக்குறுதி, மீறப்படும் முறையில், காரியம் நடக்கிறது! சரியாகுமா<noinclude></noinclude>
fp5xbb33jdnzx5d1xrbq1dugofbalay
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/110
250
641738
1928516
1927761
2026-04-30T05:36:25Z
Rabiyathul
5890
+ மேலடி
1928516
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|86||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>86
'திராவிட நாடு' இதழில்
இது. நேருவின் பேச்சுக்கு மதிப்பு அளிக்கமாட்டோம், என்பதற்கு எடுத்துக்காட்டா? அல்லது, அவர் அந்த இராகம் பாடுவார், நீங்கள் மயங்கிட: நாங்களோ, எமது விருப்பத்தின்படி காரியத்தை நிறை வேற்றிக் கொள்வோம், என்ற முறையில் அமைந்துள்ள சூழ்ச்சியா!!
நேரு பண்டிதரின் வாக்குறுதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியானால், உடனடியாகக் குடி அரசுத் தலைவர் புதியதோர் ஆணை பிறப்பிக்க வேண்டும்-இந்தி 1965-ல் எப்படியும் ஆட்சி மொழி ஆகிவிடும் என்று உள்ள சட்டத்தைத் திருத்தவும், ஆட்சி மொழி விஷயமாக, இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறியவும், வழிவகை மேற் கொள்ளப் படவேண்டும். இதனைச் செய்யும்படி வலியுறுத்துவது, அனைவரின் கடமையுமாகும்.
இதனைச் செய்தாகவேண்டும் என்பதை வலியுறுத்த, வெற்றி கிட்டும்வரை போரிட, உறுதி கொண்டிருக்கிறது நமது கழகம்.
தம்பி! ஆகஸ்டு திங்கள் இறுதி நாள், குடி அரசுத் தலைவர், புதிய நிலைமையை உருவாக்காதிருப்பாரானால். நாடெங்கும், கண்டன் ஊர்வலங்களும், கண்டனக் கூட்டங்களும் நடத்துவது என்று முடிவாகி இருப்பதை, நீ அறிவாய்.
அதற்குக் காமராஜர் சர்க்கார், தடைவிதித்தால், மீறி நடத்துவது என்பதையும், பொதுக்குழு தீர்மானித்திருப்பது உனக்குத் தெரியும்.
துப்பாக்கி இருக்கிறது. அதிலே தோட்டாவும் இருக்கிறது என்று பேசுகிறாராமே, துரைத்தனத்தின் முதல்வர், காமராஜர். அவர், அன்று வேண்டுமானால், அவருடைய ஆசையைத் தீர்த்துக்கொள்ளட்டும்; சுட்டுத் தள்ளட்டும்.
தமிழர், அன்று கொள்ளும் போர்க்கோலம், எத்தனை பிணங்கள் கீழே வீழ்ந்தாலும், கலையப்போவதில்லை என்பதை, களம் பல கண்டவனே! கொள்கைக்காக இன்னுயிரையும் ஈந்திடத் துணிபவனே! உன் சார்பில், ஊராள்வோருக்கு உரைத்திடலாமன்றோ!
போலீஸ் இருக்கிறது, போர் என்ன செய்யும்!
படை இருக்கிறது, போராட்டம் எப்படி வெற்றி பெறும்!
சிறை இருக்கிறது, கிளர்ச்சி எங்ஙனம் வெற்றி பெறும்-என்று சீறிப்பேசுவது, ஆணவ அரசுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்; அறிவோம்.
தம்பி! உலகம் கண்டு வியந்திடும் செல்வம், நினைத்தாலே நடுக்க மெடுக்கும் விதமான பயங்கரப் போர்க் கருவிகள். பாரெங்கும் சென்று<noinclude></noinclude>
8rgspl4kll8l1hm0iwqy2189m1cla3g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/111
250
641739
1928517
1927762
2026-04-30T05:36:55Z
Rabiyathul
5890
+ மேலடி
1928517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||87}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
87
போரிடத்தக்க வல்லமைமிகு வீரர்கள். வானிலே பெரியதோர் பந்தல் என்று கூறத்தக்க அளவு விமானங்கள், எந்தக் கடலிலும் எமது வெற்றி காட்டுவோம் என்றுரைக்கத்தக்க விதமான கலங்கள். எல்லாம் இருக்கின்றன அமெரிக்காவுக்கு.
அவை யாவும், சுட்டுவிரல் காட்டினால் வந்து, குற்றவேல் புரியக் காத்துக் கிடக்கின்றன.
அணுகுண்டும் நீர்வளிக் குண்டும் அடுக்கடுக்காக உள்ளன. இருந்தும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், சிறப்பாக மாணவர்கள், ஆர்த்தெழுந்து, தடுத்தனர், அயிசனோவர் டோக்கியோ வரக்கூடாது. என்று; வரவில்லையே, தம்பி! கவனித்தாயா!
அயிசனோவர், ஏவிவிடக்கூடிய அழிவினைவிடவா, காமராஜர் கணை தொடுப்பார்! கைகொட்டிச் சிரிப்பார்கள், அவ்விதம் கேட்டாலே!
போர் பல கண்டவர், வெற்றிபல பெற்றவர், படைபல நடத்திச் சென்றவர். கடந்த உலகப்பெரும் போரில் முதல்வர் போன்றிருந்து வீரதீரம் காட்டியவர், விருது பல பெற்றவர், செல்வத்திலே, தொழில் வளத்திலே, விஞ்ஞான வளர்ச்சியிலே தலைசிறந்தது என்றுள்ள குடிஅரசுத் தலைவர், அயிசனோவர், அவர் ஜப்பானுக்கு வருகிறார்; அரசு ஆளும் கட்சி, விழா நடத்துவோம், வரவேற்பு வைபவமாக இருக்கும், யார் தடுத்தாலும் நின்றுவிடாது, எவர் எதிர்த்தாலும் வரவேற்றே தீருவோம், என்று முழக்கமிட்டனர். சில இலட்சம் இளைஞர்கள், சாகப் பயப்படமாட்டோம். அயிசனோவர் வருவதைத் தடுத்தே தீருவோம் என்றனர். தம்பி! ஆளுங்கட்சியினரிடம் துப்பாக்கியும் தோட்டாவும் நிரம்பத்தான்! சுட்டும் தள்ளினர்! ஆனால், அந்தக் குண்டுகள், மக்கள் வெள்ளத்தை என்ன செய்யமுடியும்? சிலர் இறந்துபடுவர், மற்றவர்! சும்மாவா இருப்பர். என்று சிம்மக் குரலெழுப்பினர், ஆர்ப்பாட்டக்காரர்; ஆள்வது நான் என்றார் கிஷி! அதன் விளைவுதான் இது என்றனர் கிளர்ச்சிக்காரர்கள்! எனக்கே அரச அவையில் வலிவு என்றார் கிஷி! உள்ளே போகவும் வெளியே வரவும் கூட, உமக்கு எமது அனுமதி வேண்டும். அறிவாய்! என்றனர். அந்த மக்கள்! சுடு என்று உத்தர விட்டார் கிஷி! பிணம் வீழ்ந்தது. மற்றவரின் வீரம் கொழுந்துவிட்டெரிந்தது! தம்பி! கடைசியில், அயிசனோவர் டோக்கியோ வருவது. நின்றே போய் விட்டது.
.
ஜப்பான் நாட்டுக் கிஷியைவிட, நம்ம காமராஜர் மிரட்டிப் பேசுவதிலே வல்லவரா?<noinclude></noinclude>
akuobe72qn3dnlquw6vk7d2l9p6k6nr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/112
250
641740
1928518
1927763
2026-04-30T05:37:26Z
Rabiyathul
5890
+ மேலடி
1928518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|88||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>88
'திராவிட நாடு' இதழில்
பேசுகிறார், வீராப்பாக; அப்படிப் பேசினால்தான், தேர்தலுக்காகத் திரட்டும் படையினர், ஓடிவிடாமல், உடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தில்
அயிசனோவரின் டோக்கியோ வருகை தடுக்கப்பட்டுப் போய் விட்டதைக் கண்டோம்.
நாம், நமது குருதியைக் கொட்டியேனும், கொடுமை புரியவரும் இந்தியை விரட்டத் தீர்மானித்து விட்டோம்.
ஆணைக்காகக் காத்திருந்த, அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது; அழைப்புக் கிடைத்துவிட்டது; அணிவகுப்பிலே வந்து சேர்!!
தாயகம் அழைக்கிறது. தன்மான வீரனே! தளைகள் நொறுக்கிட விரைந்து வா, வருகிற வேகத்தில், மற்றவர்களை அழைத்துவா. மறந்து விடாதே, பாசறைகள் உள்ளன, பட்டி தொட்டிகளிலெல்லாம்; உடன்வர விழைவோர் உள்ளனர் இலட்சக்கணக்கில்; அவர்களைக் கண்டு உரையாடி அழைத்து வா, தம்பி! அதற்கான காலம் இதுதான்.
மீண்டும் மீண்டும் உனக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை; ஆட்சியாளர், உன் அண்ணனை, அதிக நாட்கள், அந்தக் காரியம் செய்யவிட்டு வைத்துக் கொண்டும் இருக்க மாட்டார்கள். ஆணை யிட்டு அழைக்கிறது. தாயகம். அஞ்சா நெஞ்சினருக்கு. அரியதோர் வாய்ப்பு. அறிவித்துவிட்டேன்.
அண்ணன்,
அன்றுதுஸ்<noinclude></noinclude>
9zknxv3f5ljnp6ng70a0lhfd7xiztpg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/113
250
641741
1928519
1927764
2026-04-30T05:37:55Z
Rabiyathul
5890
+ மேலடி
1928519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||89}}{{rule}}</noinclude>கடிதம் : 109
தம்பி!
இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ
தமிழ்நாட்டின் அமைப்பும் மொழியும்-
கேர் குழு அறிக்கை-
தமிழ் இலக்கிய வளம்
ஆணை பிறந்துவிட்டது, அணிவகுப்புகள் தயாராகட்டும் என்று சென்றகிழமை எழுதியதை, நீ படித்து, உன் 'பங்கு' குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது. நான், நெய்தல் நிலக் காட்சி களைக் கண்டு களித்துக் கொண்டிருந்தேன். என்ன துணிவு அண்ணா! உனக்கு, இதைச் சொல்ல. போர்க்கொடி உயர்த்தியாகிவிட்டது என்று நாவலர் அறிவித்துவிட்டார். போராட்டக்குழு அமைக்கப்பட்டாகி விட்டது. பரணிபாடி வருகின்றனர் கழகத்தவர், எங்கணும்; இந்த நேரத்தில், நெய்தல் நிலம் காணவா செல்கிறாய்? சென்றதுடன், அதை என்னிடமும் செப்பு கிறாயே, சரியா? பாசறை காணவும் பாடி வீடமைக்கவும் செலவிட வேண்டும் நேரத்தை, நினைப்பை, நெய்தல் காணும் நேரமா இது!!- என்று கோபித்துக் கொள்கிறாயா, தம்பி! நெய்தல் நிலம் சென்றேன். கண்டேன், களிப்பு மிகக்கொண்டேன்; ஆனால் அந்த நேரத்திலும், அந்த இடத்திலும் கூட, உன்னை யொத்தவர்கள், எத்துணை உற்சாகத்துடன் எழுச்சியுடன், மொழி காத்திடும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதைக் காண முடிந்தது; காட்சிகளைக் கண்டு களித்தேன் என்று கூறினேன் தம்பி! இயற்கைக் காட்சிகளை மட்டுமல்ல, இயற்கையோடு உறவாடி மகிழ்ந்திடும் இன்முகத் தோழர்கள், நம்மை எதிர்நோக்கி இருக்கும் இந்தி எதிர்ப்புப் பற்றிக் கொண்டுள்ள ஆர்வத்தின் அழகையும்தான், என்று கூறவும் வேண்டுமா?
தில்லையில், பல்லாயிரவர் கூடினர்-பொதுக்குழுவின் முடிவு பற்றிப் பேசினோம். கேட்டனர்-முழக்கமிட்டனர்-சழக்கர் மனதிலே அதிர்ச்சி ஏற்படும் வகையில். மறுநாள்தான், தில்லைக்குச் சில கல் தொலைவிலுள்ள கிள்ளை எனும் கடலோரச் சிற்றூரைத் தொட்டுத் தோழமை கொண்டாடிடும் உப்பங்கழி சென்றோம். தோணியில்
பிச்சாவரம் காடு என்று அந்த இடத்துக்குப் பெயர் கூறுகின்றனர்.
தம்பி! கடல் நீரின்மீது ஒரு காடு! அடர்ந்து இருந்தது முன்பு என்பது. இப்போது ஓரளவு அழிக்கப்பட்டுக் கிடக்கும் நிலையிலும்<noinclude></noinclude>
6pii41zj5h8yezrb8nczrqpumepw59m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/114
250
641742
1928520
1927765
2026-04-30T05:38:26Z
Rabiyathul
5890
+ மேலடி
1928520
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|90||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>90
'திராவிட நாடு' இதழில்
தெரிகிறது. வேறெங்கும் அதிகம் காணப்படாததும், உப்பங்கழிகளில் மட்டுமே வளரக்கூடியதுமான, பலவகை மரங்கள், கொடிகள், செடிகள், நிரம்பி உள்ளன. ஆலுக்குள்ள விழுதுகள்போல, அந்த மரங்களிலிருந்து கிளம்பித் தண்ணீரைத் தொடுகின்றன. உள்ளேயும் செல்லுகின்றன. இடையிடையே 'திட்டுகள்' உள்ளன; அவை மேய்ச்சலிடங்களாகப் பயன்படுகின்றன. சில இடங்கள் விரிந்து பரந்து உள்ளன; சில இடங் களிலோ, தோணி நுழையும் அளவு மட்டுமே. நீர்ப்பரப்பு உள்ளது; விழுதுகளும், கொடிகளும் வழி மறித்து நிற்கின்றன; வளைத்தும் பிரித்தும், ஒடித்தும் நீக்கியும், வழிகாணவேண்டி இருக்கிறது.
செம்போத்தும், குருகும், வக்காவும். வண்ணப் பறவைகளும், ஆங்கு தங்கியுள்ளன. இசை எழுப்பும் பறவைகளும் உள்ளன. ஆள் அரவம்கேட்டு மரத்திலிருந்து கிளம்பிச் சிறகடித்துக் கொண்டு, வேறிடம் நாடிப் புள்ளினம் பறந்திடும் காட்சி, உள்ளபடி அழகாக இருக்கிறது. வெளிர் நீலவண்ணம் நீர், சூழப் பச்சை, மேலே நீலமும் வெண்மையும் கொண்ட மேகக் கூட்டம், இடையில், வெண்ணிறக் கொக்குகள், விமானப் படை, அணிவகுத்துச் செல்வது போல! இதை நீங்கள் மட்டுந்தானா கண்டு களித்திடக் கற்றீர்கள், எமக்கும் தெரியும் என்று கூறுவதுபோல், துள்ளித் துள்ளி மேலே வருகின்றன, மீனினம். எதையும் அழித்திடும் மாந்தர் உளரே என்ற வெறுப்பில், மீண்டும், தண்ணீருக்குள் சென்று விடுகின்றன! தரையில் நடக்கமட்டுமே கற்றுக்கொண்ட மனித இனமே! இதற்கே உனக்கு இத்துணை தலைக்கனம் ஏற்பட்டுவிட்டதே!! என்போல் நீர்மேல் நடக்கவல்லாயோ என்று கேட்டுக் கேலி செய்வதுபோல, சின்னஞ்சிறு மீன்கள், துள்ளித்துள்ளி, நீரின் மீது நெடுந்தூரம் செல்கின்றன.
செடி கொடிகளின் மருங்கே, தோணியை நிறுத்திவிட்டு. வலையை விரித்துவைத்து, 'வரவு' தேடிக் காத்திருக்கின்றனர். மீனவர்கள். அவர்கள் கொண்டுவரும் 'அறுவடை'யை அங்காடிக்கு எடுத்துச்செல்ல, கரையிலே அமைக்கப்பட்டுள்ள ஓலைக்கொத்துக் குடிசைகளில், காத்துக்கிடக் கின்றனர். பெண்டிர்! வலைக்கான நூலுக்கு. வகையாக முறுக்கேற்றிய படி, சிறார்கள் உள்ளனர். தோணிகள் காற்றில் சிக்குவது காண்கின்றனர். கலக்கத்தோடு அல்ல! ஆழ்கடல் சென்று கொண்டு வந்து கொட்டப் படும் மீனினத்தைப் பார்க்கின்றனர், நமது வேட்டை' எப்போது ஆரம்பமாகும் என்ற நினைப்புடன்.
நண்பர் இராமசாமியும் 'வேட்டை' நினைப்புடனேதான் இருந்தார்! பிச்சாவரம் சென்றதே, பெரிதும் அவருக்காகத் தான்! நான், முன்பே, சென்றிருக்கிறேன்-வில்லாளனுடன்! இம்முறை நமது நடிப்பிசைப் புலவருக்கு இந்தக் காட்சியைக் காட்ட எண்ணி, நண்பர்கள் வில்லாளன், வேணு, பட்டாபி, சுந்தரம் ஆகிய தோழர்கள், தோணிப் பயணம் ஏற்பாடு<noinclude></noinclude>
i58jxy6cbgvzdaod1eagqvtvcqtiobz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/115
250
641743
1928521
1927766
2026-04-30T05:38:56Z
Rabiyathul
5890
+ மேலடி
1928521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||91}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
91
செய்தனர். கையிலே துப்பாக்கியைப் பிடித்தபடி, கண்களைக் கூர்மை யாக்கிக்கொண்டு, குருகு வருமா, வக்கா கிடைக்குமா, மணிப்புறா கிடைக்குமா, செம்போத்து அகப்படுமா, என்று ஆவலாகத் தேடினார்! புள்ளினம் என்ன மனித இனத்துக்கு மட்டமா!! கிழக்கே இருப்பதைக் கண்டறிந்து இவர் குறி பார்த்தால், அவை, சரேலெனக் கிளம்பி, மேற்குப் பக்கம் சென்று, அடர்ந்த இடம் தேடி அடங்கிவிடுகின்றன!! தோணி அங்குச் செல்வதற்குள், அவை, வேறோர் இடம் பறந்து விடுகின்றன. மெத்தக் கஷ்டப்பட்டு, இரண்டு 'கல்பொத்தி'ப் பறவைகளைச் சுட்டு வீழ்த்தினார், நடிப்பிசைப் புலவர்.
பறவை வேட்டை மட்டுமே ஆடினார், என்றுதான் நான் எண்ணிக் கொண்டேன்; தம்பி! நீயும் அவ்விதம்தான் எண்ணிக் கொண்டிருந் திருப்பாய். ஆனால், அப்போதும் அவர் மனதிலே என்ன எண்ணம் எழும்பிற்று என்பதை, அடுத்த நாள் விழுப்புரம்-செஞ்சி நெடுஞ்சாலை யிலுள்ள முட்டத்தூர் எனும் சிற்றூரில் பேசும்போதுதான், என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.
"இந்தி எதிர்ப்புப்போர் வருகிறது! இதயத்தில் இரக்கமற்ற எதேச்சாதிகாரிகள், அடக்குமுறையை அவிழ்த்துவிடுவார்கள், துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவார்கள் என்று அண்ணா தில்லைக் கூட்டத்திலே பேசினார். துப்பாக்கிச் சத்தம் எப்படி இருக்கும்-என்று தெரிந்துகொள்ள நேற்று எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. நானே இருமுறை வேட்டுக்கிளப்பிப் பார்த்தேன் பிச்சாவரம் காட்டில்!"- என்று இராமசாமி சொன்னார்.
கவனித்தாயா, தம்பி! கடலோரம் சென்றாலும், காட்சிகளைக் கண்டாலும், தோணிநடத்திச் சென்றாலும் புள்ளினத்தைத் தேடி அலைந் தாலும், எங்கு இருந்தாலும், எதைச் செய்தாலும், நம்மவர் களின் நோக்கம் எதிலே பதிந்து இருக்கிறது, என்பதைக் கவனித்தாயா!!
தோழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பார்வை யிலேயே, இப்போதெல்லாம் ஒரு தனிச் சுவை இருந்திடுகிறது- உனக்குத் தென்பட்டிருக்க வேண்டுமே! "வருகிறது கிளர்ச்சி! பார்ப்போம். உன் பங்கு என் பங்கினைவிடத் தரத்திலும் அளவிலும் மிஞ்சுகிறதா. பார்ப்போம்!!"-என்று கண்கள் பேசுகின்றன.
"மகனே! மகனே! வேளா வேளைக்குச் சாப்பிடக் கூடாதா! உடம்பு இளைத்தே போய்விட்டதே!" என்று கேட்கும். தாயின் பரிவினிலே, இப்போதெல்லாம், ஓர் தனி வகை குழைந்து காணப்படுகிறது.
"தடுத்தால் நிற்கவா போகிறான்! தடுப்பதுதான் அறமாகுமா? தாய் எனினும் தமிழச்சி அல்லவா! மொழிகாத்திட, என் மகனும்<noinclude></noinclude>
ey7h88fsktdlmsvbzm2f2exwehoyi7y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/116
250
641744
1928522
1927767
2026-04-30T05:39:26Z
Rabiyathul
5890
+ மேலடி
1928522
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|92||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>92
'திராவிட நாடு' இதழில்
உ
சென்றான் என்று கூறுவதன்றோ மறக்குடியினர் மரபு! கிளர்ச்சியில் ஈடுபடும்போது, என்னென்ன ஆபத்து வந்து தாக்குமோ, இடுக்கண் யாதோ? யாரறிவார்! என் மகன், இப்போதேனும், உண்டு உரம் பெறுவதைக் கண்டு மகிழவேண்டுமே! நாளை எப்படியோ!!" என்ற எண்ணம், தாயின் குரலிலே தோய்ந்து இருக்கிறது.
'உனக்கென்னடா, சிங்கக்குட்டி! மனதிற் பட்டதைச் சொல்லு கிறாய்-முடிகிறது! அறப்போருக்குத் தயாராக நிற்கிறாய்-விடுதலை வீரன்! என்னைச்சொல்? சேற்றிலே சிக்கிக் கொண்டேன்! மீள முடிய வில்லை! செய்யுந் தொழிலும், இருக்கும் இடமும், என்னைச் செயலாற்ற இயலாதவனாக்குகிறது. நீ அறிந்ததனைத்தையும் நான் அறிந்து உணரு கிறேன்! உள்ளம் அலைகடலாகிறது! ஆனால்...." என்று ஆயிரத்தெட்டுத் தொல்லைகளில் தன்னைச் சிக்கவைத்துக் கொண்ட தோழன், விடுதலைக் கிளர்ச்சிக்காக, எதையும் மறந்து, எந்தச் சூழ்நிலையாலும் சிறைப்படாமல், ஆர்த்தெழும் நண்பனைப் பார்த்துக் கூறுகிறான்-கண்களில் நீர் துளிர்த்திடும் நிலையில்
பொதுமக்களேகூட நம்மை இப்போது பார்க்கும்போது. ஏதேதோ கேட்பதுபோலவே, எனக்குத் தோன்றுகிறது; உனக்கு எப்படியோ!
"பாவம்! நல்ல பிள்ளைகள்; நாட்டுக்குழைத்திடும் நற்பண்பு கொண்டவர்கள். வீட்டை மறந்து, கேடு களைந்திடும் தொண்டாற்றி வருகிறார்கள். பாட்டு மொழியாம் பைந்தமிழ் காத்திட இவரெல்லாம் செல்லுங்காலை, சுட்டுத் தள்ளுவரோ, எலும்பொடித்து வீழ்த்துவரோ, இழுத்துச்சென்று சிறையிலிட்டுப் பூட்டுவரோ! யாதோ இவருக்கு நேரிடப்போகும் இன்னல்! எனினும், மணப்பந்தல் நோக்கி முக மலர்ச்சியுடன் சென்று கட்டழகியைக் காணத்துடிக்கும் காளையர் போலன்றோ காணப்படுகின்றனர் என்றெண்ணி - ஆயாசமல்ல-அன்பு நிறை பார்வையை வழங்குகின்றனர்; வாழ்த்துகின்றனர்.
நெய்தல் நில மக்கள் என்னைப் பார்த்தபோது, நான், இதை உணர்ந்தேன்-உவகையும் கொண்டேன்.
அந்த மக்களுடன் உரையாடியபோதும், அன்று மாலை கிள்ளை யிலே பேசியபோதும், இங்கு, அறப்போருக்கு ஓர் அணிவகுப்பு அமைத்திடலாம், என்ற எண்ணம் சுவையூட்டிற்று.
தம்பி! கடலும் கடல் சூழ்ந்த இடமும், நெய்தல் என்றனர் தமிழர். நிலத்தின் இயல்பு கண்டு, பெயரிட்டனர்; தனிச்சிறப்புக் கண்டு பயன் பெற்றனர். குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை, எனும் ஐந்து வகையாக. நிலத்தைப் பிரித்தனர். எப்போது என்கிறாய். தம்பி?<noinclude></noinclude>
6rlnd4sa07j6v21l6h1z3qo4vg4f591
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/117
250
641745
1928523
1927768
2026-04-30T05:39:57Z
Rabiyathul
5890
+ மேலடி
1928523
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||93}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
93
ஈராயிரம் ஆண்டுகளுக்கும், முன்பாக!! இன்றுள்ள பல நாடுகள், பெயரற்ற இடங்களாக இருந்த நாட்களில்!! இன்றுள்ள பல நாட்டு மக்கள், காட்டில் திரிந்த காலத்தில்!! எத்துணை ஆராய்ச்சித் திறன் இருந்திருக்க வேண்டும், அந்த நாட்களில், இயல்பு கண்டு இடங்களைப் பிரித்து, பெயரிட்டுக் காட்ட!
தம்பி! இத்துணைச் சிறப்புகளும், இன்று எடுத்துக் கூறப்பட வேண்டியவைகளாகிவிட்டன. வெளிநாட்டவருக்கோ, இராமாயண மகாபாரதம் தெரிவிக்கப்பட்டிருக்கும் அளவு, தமிழரின் தனிச்சிறப்பான 'திணை இலக்கணம்' அறிவிக்கப் பட்டதில்லை. எங்ஙனம் அறிவிக்க இயலும்! தமிழ்மொழியில் உள்ள தனிச்சிறப்புகளை நாம் கூறினால், இன்று வெளிநாட்டவர் கைகொட்டி அல்லவோ சிரிப்பர்! தமிழாம்! தமிழ்! ஐவகை நிலமாம்! அதற்கோர் இலக்கணமாம்! ஆங்கு வாழ்க்கை முறைகள், தனித்தனிச் சிறப்புடனாம்! எல்லாம் இயற்கையோடு தழுவியவையாம்! ஏதேதோ கூறுகின்றனர். எனினும், இந்தத் தமிழர், இந்தி மொழி கற்றுத் தேறினால் மட்டுமே, பிழைக்க முடியும்-ஆட்சி மொழியாக இருப்பது இந்தி-அழகு பார், அணி பார், அகவலைப்படி, அறநூற்களைக் கவனி! என்று பேசி, ஆகப்போவது என்ன! அரசோச்சுவது இந்திமொழி! அதற்கு அடிபணிந்து கிடக்கும் இவர்கள், அகமும் புறமும் பேசி நிற்பது, தோற்றோடி வந்தவன், தன்வாளின் பிடியிலே இழைக்கப்பட்ட ஒளிவிடு கற்களைக் காட்டுவதுபோலன்றோ!-என்று கேட்டுக் கெக்கலி செய்வர்.
கிள்ளைக் கூட்டத்திலே, தம்பி! நான் நெய்தல் நிலம் பற்றிச் சிறிதளவு பேசினேன் - பேசிவிட்டு, கேட்போரிடை எத்தகைய உணர்ச்சி ஏற்பட்டது என்று, கூர்ந்து கவனித்தேன்-திகைத்துக் கிடந்தனர்!!
புலவர்கள் படித்தும் பொருளுரைத்தும், மகிழ்வளிக்கும் பொருளாகி விட்டது. தமிழரின் அறிவுத் திறத்தின் விளைவுகள் பலவும்.
எனினும், மெள்ளமெள்ள எடுத்தியம்பி, நாம் எப்படிப்பட்டவர். எத்துணை ஏற்றத்துடன் இருந்து வந்தோம், நமது கொற்றமும் குடியும் எத்துணை தரமாக இருந்தன, என்பன பற்றித், தெளிவும், அதன் பயனாக எழுச்சியையும் ஊட்டிட முடியும்-தமிழ் தாழ்நிலைக்குத் துரத்தப்படாது இருப்பின்! ஆனால், வருகிறதே இந்தி நமது மரபு அழிக்கும் செந்தீ! அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், ஏடு பல இருந்து பயன் என்ன!!
மரபு அழிக்கும் சதித்திட்டமாகவே. நாம் இந்த இந்தியைக் கருதுகிறோம் - வெறும் மொழிப்பிரச்சினையாக அல்ல.
எண்ணங்களை வெளியிடும் கருவி, மொழி, என்று வாதாடுவது எளிது! ஆனால், எண்ணங்கள், உருப்பெற, அவரவர்க்கு, அவரவர்<noinclude></noinclude>
d2qh2sr9lnflrz79231c3fgr9lzythl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/118
250
641746
1928525
1927769
2026-04-30T05:40:26Z
Rabiyathul
5890
+ மேலடி
1928525
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|94||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>94
'திராவிட நாடு' இதழில்
இயல்புக்கு ஏற்ப, வாழும் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப, அமையும் மொழியே துணை நிற்கிறது.
அந்தத் தமிழ்மொழி அழிந்துபடாது! அது, மாநிலத்திலே, மாண்புடன் விளங்கும்-தழைக்கும்-மணம் பரப்பும்-என்றுரைப்பார் உளர். அவர்கள் உயரிடமும் சென்று அமர்ந்துள்ளனர். இடம் உயரமே தவிர, அவர்களின் கூற்று மிகமிக மட்டம், என்பதை எடுத்துக்காட்டவா, வேண்டும்.
ஆட்சிமொழியாக இந்தி என்று ஆகிவிட்ட பிறகு, எவரும் அம்மொழியிடம் 'பயபக்தி விசுவாசம்' காட்ட முற்படுவரேயன்றி, தமிழா கற்பர்! கற்றதனால் ஆய பயன் என்கொல், பெற்றிட இயலாது எந்த இடமும் என்ற நிலை ஏற்பட்டுவிடும் போது.
ஆட்சிமொழியாக இந்தி புகுந்தால், உலகு. நம்மை அம்மொழி கொண்டு அளந்திட முற்படுமேயன்றி, அழகு தமிழ் கொண்டா, அறிந்திட முயலும்.
தமிழ் மன்னர்கள் காலத்து 'நாணயங்கள்' இன்று எந்த அங்காடியில் ஏற்றுக்கொள்வர். முன்பு, அந்த நாணயமன்றோ, நாடாண்டது! இன்று ஆராய்ச்சிக் கூடத்திலே, பாடம் புகட்டுகிறது; பழம் பொருட்காட்சிச் சாலையிலே படுத்து உறங்குகின்றது! அந்நிலைதானே. தமிழ் மொழிக்கும். அரசோச்ச, ஆணையிட, அகிலமெலாம் உலாவர இந்தி எனும் வேற்று மொழி இடம் பெறும்போது.
உடல் பெரிது, உள்ளே நுழையும் கிருமி, மிகமிகச் சிறிது! அளவில்! ஆயின் என்ன? உடலை அரித்து அரித்து. கிருமிகள் உயிரையே குடித்து விடுகின்றன!!
''செம்மொழி, எம் தமிழ் மொழி!'- என்று செப்பிக் கொண்டி ருக்கலாம் சின்னாட்கள். பிறகு, "எம்மொழி, ஆட்சி மொழி?" என்று உலகு கேட்குமே? என்ன பதிலளிப்போம்? இந்தி ஆட்சிமொழி என்று கூறிடின், பிறகு, செம்மொழிக்கு எவர் மதிப்பளிப்பர்?
நாவலர் நெடுஞ்செழியன், இந்திமொழியின் இயலாத தன்மை யினையையும், தமிழின் தொன்மையினையும், அழகுற எடுத்துச் சொல்கிறார். கேட்போர், ஏறுநடை என்கின்றனர்-அவர் பேசிடும்போது காண்போர். அரிமா நோக்கு என்கின்றனர். அவர் அள்ளித்தரும் சான்றுக் களை கவனிப்போர். அவரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றுகின்றனர். மன்றங்களிலே, மாநாடுகளிலே, அவர் போன்றோர் பேசுங்காலை, தமிழணங்கு கோலமெலாம் காட்டி நம் உள்ளத்தைக் கொள்ளைகொளும் காட்சியே தெரிகிறது.<noinclude></noinclude>
8ebxeqigidx8430svjmdgbow6da9m5r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/119
250
641747
1928526
1927770
2026-04-30T05:40:57Z
Rabiyathul
5890
+ மேலடி
1928526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||95}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
95
இந்தி தமிழகத்திலே நுழைக்கப்பட்டால், ஏற்படக்கூடிய ஆபத்தை எடுத்துக் காட்டியும், இந்த இழிசெயலுக்கு உடந்தையாக இருப்போரின் போக்கினை இடித்துக் காட்டியும், மற்றையோர் பேசும்போது. உடல் புல்லரிக்கிறது, உள்ளம் பொங்குமாங் கடலாகிறது.
தமிழ் மொழியின் சிறப்பினை, மறுப்பார் இல்லை.
இந்தி மொழிக்கு உள்ள சிறப்புக்கள் பற்றிப் பேசும் துணிவு, இந்தி ஏகாதிபத்தியவாதிகளுக்கேகூட ஏற்படாது.
ஆனால், இந்தப் பெருமை பேசிடின், பிரச்சினை தீர்ந்துவிடுமா? பதற்கனவு! முயற்கொம்பு!!
"தமிழ் எவ்வளவு சிறப்பான மொழி என்பதைத் தமிழனிடத்திலே, தமிழன் எடுத்துச் சொல்லவேண்டி நேரிட்டிருப்பது, அவமானத்தின் அறிகுறி என்றே நான் கருதுகிறேன்".
மூன்றாண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலையில், நாம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, நான், இப்படித்தான் பேசினேன்.
ஆட்சிமொழி குறித்து கேர் குழு அமைக்கப்பட்டு அலுவலாற்றிக் கொண்டிருந்த நேரம்.
"இந்தியா ஒரு நாடு அல்ல!" என்ற உண்மையைக் கூறி, டில்லிப் பாராளுமன்றத்திலே, ஓர் அதிர்ச்சி ஏற்படும்படியான முதல் முழக்கத்தைத் தம்பி சம்பத்து எழுப்பிய சமயம்!
1937-38-ல், இந்தி எதிர்ப்பிலே, முன்னணி நின்று கடும் போரிட்ட கடமை மறவாத, காவி தரித்த மறத் தமிழர், அருணகிரி அடிகள் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.
ஏழைக் குடிமகன், இவனுக்குத்தான் எத்துணை அச்சமற்றபோக்கு. என்று எவரும் வியந்துரைக்கும் வண்ணம், மொழி காத்திடும் கிளர்ச்சியில் பணியாற்றி நின்ற, காஞ்சித் தோழர் சி.வி.எம். அண்ணாமலை திறப்பு விழாஉரையாற்றிய மாநாடு.
முதன்முறையாக என்று நினைக்கிறேன், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க் களுமாகி, நமது கழகத்தவர், வந்தமர்ந்த மாநாடு.
வடநாட்டு வன்கணாளர்கள், இந்தியைப் புகுத்தத் துடிப்பதறிந்து. நாம், முரசு கொட்டக் கூடினோம். அதுபோது நான் பேசியது, இப்போதைக்கும் பொருந்தி இருந்திடக் காண்கிறேன்-எனவே, அதனை எடுத்துக்காட்டி உன் நினைவிற்குக் கொண்டு வருகிறேன்.<noinclude></noinclude>
bhcur8sdst6bi4lgj4i6hw7bq20xynj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/120
250
641748
1928527
1927771
2026-04-30T05:41:27Z
Rabiyathul
5890
+ மேலடி
1928527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|96||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>96
'திராவிட நாடு' இதழில்
இந்தி எதிர்ப்பு மாநாடு இன்றையதினம் நாம் நடத்தினோம். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இந்தி மொழியின் இயலாத தன்மையினையும், தமிழின் தொன்மையினையும், அழகுற எடுத்துச் சொன்னார்கள். வேறு பல நண்பர்கள் இந்தி தமிழகத்திலே நுழைக்கப் பட்டால் நேருகிற பேராபத்தை எடுத்துச் சொன்னார்கள். இவைகளை மட்டும் அலசி ஆராய்ந்துவிட்டு இந்த மாநாடு முடிவடைந்து விடப் போவதில்லை. இந்த மாநாடு மொழிப்பிரச்சினையை ஆராய்வதற்கு மட்டும் கூட்டப்பட்டதுமல்ல; இந்த மாநாடு தமிழ்மொழி சிலாக்கியமானது என்று எடுத்துச் சொல்லுவதுமல்ல. தமிழ் எவ்வளவு சிலாக்கியமானது என்பதைத் தமிழனிடத்திலே தமிழன் எடுத்துச் சொல்லுவது அவமானத்தின் அறிகுறி என்று நான் கருதுகிறேன்.
தமிழ் மொழி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயிருந்து எத்தனையோ பெரிய படையெடுப்புக்களையும், எத்தனையோ பெரிய தாக்குதல்களையும், எத்தனையோ பெரிய தூற்றுதல்களையும் தாங்கிக் கொண்டு. இன்றைய தினமும் தன்னிகரற்ற நிலையிலே இருக்கிறதென்றால், அந்த மொழி நமக்கு உகந்த மொழிதான்-நமக்கு ஏற்றமொழிதான்- தலைசிறந்த மொழிதான். பாரிலே உள்ள பல மொழிகளிலே தமிழ்மொழி தலைசிறந்த மொழி என்று, தமிழன் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது உண்மையிலேயே சில நேரங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். காதல் பேசும் நேரத்திலே, கணவன் தன் மனைவியை அருகிலே வைத்துக் கொண்டு 'உன்னை விட அழகியை உலகத்திலே நான் கண்டதே இல்லை' எனக் கொஞ்சுவான். இப்படிக் கொஞ்சத் தேவையில்லையென்றாலும், கொஞ்சுவதாலே இலாபம் கிடைக்கும் என்பதாலே கொஞ்சுகின்றான். அதே முறையிலே தமிழ்மொழியை இன்றையதினம் கொஞ்சுகிறோமே யொழிய, அதற்கு வாதங்கள் தேவை யில்லை. 'என்னுடைய மொழியைவிடச் சிறந்தமொழி உலகத்திலே வேறொன்றில்லை' என்று எடுத்துச் சொல்லுகின்ற கடமை, எஸ்க்கிமோ நாட்டுக்காரனுக்கு, இருக்கின்றது. பின்லாந்து நாட்டுக்காரனுக்கு இருக்கின்றது. வளமற்ற மொழி படைத்தவனானாலும் அவனுக்குச் செம்மொழி தாய்மொழிதான்.
"நமக்குக் கிடைத்திருக்கின்ற தாய்மொழி பிற மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற நேரத்தில், பிற மொழியாளர்களெல்லாம் பார்த்து, இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது? இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது? இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? ஈராயிரம் ஆண்டுக் காலமாகவா இந்தமொழி சிதையாமல் சீர்குலையாமல் இருந்து வருகின்றது? என்று ஆவலுடன் சிலரும், ஆயாசத்துடன் பலரும், பொறாமையோடு<noinclude></noinclude>
ey03mp1d72az2bcrmnep0j60uncxcj3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/121
250
641749
1928528
1927772
2026-04-30T05:41:57Z
Rabiyathul
5890
+ மேலடி
1928528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||97}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
97
சிலரும், பொச்சரிப்பாலே பலரும் கேட்கத் தக்க நல்ல நிலையிலேதான் தமிழ்மொழி இருக்கின்றது. ஆகையினாலே, தமிழ் மொழிக்காக-வாதாடு வதற்காக தமிழர் மன்றத்திலே தமிழன் பேசவில்லை. ஆனால் தமிழ் மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை நுழைக்கின்ற பேதைமை, தமிழ்மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை ஆதிக்க மொழி யாக்குகின்ற அக்கிரமம்- இவைகளைக் கண்டித்து அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கின்றது. தமிழ்மொழியிலே அகத்திலே என்ன இருக்கின்றது? புறத்திலே என்ன இருக்கின்றது? என்பதை நாவலர் நெடுஞ்செழியன் அருமையாக நமக்குச் சொல்லிவிடுவார். தமிழ் மொழியிலே பெயர்கள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டன? என்பதைக் கூற 'ஊரும்பேரும் எழுதிய பேராசிரியர் சேதுப்பிள்ளை போதும் தமிழ்மொழியிலேயுள்ள இலக்கணச் செறிவுகள் என்னென்ன?-இதற்கு பாரதியார் ஒருவர் போதும்; ஆனால், அவைகளுக்காக மட்டுமல்ல; இங்கே இந்த மாநாட்டிலே நாம் கூடியிருப்பது.
"இந்த மாநாட்டிலே எடுக்கின்ற முடிவினை, இந்த மாநாட்டிலே இந்தியை எதிர்த்தாகவேண்டும் என்று நாம் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானத்திற்கு உயிரூட்டம் தரவேண்டுமானால், நீங்களெல்லோரும் 1937-க்கு வருவதற்குச் சித்தமாக இருக்கின்றீர்களா? என்று கேட்பதற்கு மாநாடே தவிர, சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கல்ல; கம்பராமாயணத்தினுடைய சுவைகளை எடுத்துச் சொல்வதற்கல்ல; அகத்திலேயும் புறத்திலேயும் உள்ள அணிகளையும் அழகுகளையும் எடுத்து விளக்குவதற்கு அல்ல; அவைகளுக்குத் தமிழ்ப் பெரும் புலவர்கள் போதும்; வகுப்பறைகள் போதும்.
"வெட்டவெளியிலே கொட்டகை போட்டு, வீதி தவறாமல் தோரணங்கள் கட்டிச், சிற்றூர்களிலிருந்தெல்லாம் சிங்க நிகர்த்த காளைகள் சாரைசாரையாக வந்து, இந்த மாமன்றத்தில் கூடியிருப்பதற்குக் காரணம். இந்தி மொழியைவிடத் தமிழ் மொழி சிறந்தது என்று வாதாடுவதற் கல்ல. தமிழகத்திலே இந்தி மொழி திணிக்கப் பட்டால், அதை எந்த வழியிலே ஒழித்துக்கட்டுவது? அதற்கு நம்முடைய காணிக்கை என்ன? என்று சிந்தித்து, அவரவர்கள் தங்கள் காணிக்கைகளைச் சேர்ப்பிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறார்களே தவிர, வெறும் தீர்மானத்தை நிறைவேற்று வதற்காக அல்ல.
தமிழர் வளர்ந்திருப்பது தெரிந்தும், வடநாட்டார் இன்றைய தினம் வம்புக்கு வருகிறார்கள் என்றால், உங்களையும் என்னையும், நம்மைப் படைத்த தமிழ் நாட்டையும், தமிழ் நாட்டுக்கு உயிர் நாடியாக இருக்கின்ற தமிழ் மொழியையும் துச்சமென்று அவர்கள் கருதுகின்றார்கள்.<noinclude></noinclude>
8s7nhrex2f4nc87qwi4vt9k22aavnzx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/122
250
641750
1928529
1927773
2026-04-30T05:42:27Z
Rabiyathul
5890
+ மேலடி
1928529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|98||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>98
'திராவிட நாடு' இதழில்
நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலென்ன? கவலை யில்லை; 2.000 கிளைக் கழகங்களா?-வைத்துக் கொள்ளுங்கள்: 2 இலட்சம் உறுப்பினர்களா?- இருக்கட்டுமே; நாள் தவறாமல் பொதுக்கூட்டங்களா?- கேள்விப்படுகிறோம்! ஊர் தவறாமல் மாநாடா?-பார்த்துக் கொண்டிருக்கிறோம்; உங்களுடைய இயக்கத்திலே பத்திரிகைகள் பல இருக்கின்றனவா? -இருக்கட்டும்- இருக்கட்டும், உங்கள் இயக்கத்திலே அழகாகப் பலர் பேசுகின்றார்களா? பேசட்டும் - பேசட்டும்; ஆனால் எங்கள் ஆதிக்கம் நிறைவேறும் என்று அங்கே உள்ளவர் சொல்லுகிறார்கள்.
"இங்கே நாம் ஆயிரமாயிரமாகக் கூடியிருக்கிறோம். நாம் வளர்ச்சி யடைந்திருக்கிற இந்த நேரத்திலும் நம்மை உண்மை யிலேயே அடக்கி ஆளவேண்டுமென்று கருதுகின்றவர்கள், ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் இருக்கின்ற திக்கு நோக்கி நீங்கள் தமிழ்ப் பார்வையைக் காட்ட வேண்டும். தமிழ்ப் பார்வையில் குளிர்ச்சியும் உண்டு; கோபக் கனலும் உண்டு. தமிழன் தன்னுடைய நாட்டையே அர்ப்பணிப்பான் தோழன் என்று வருபவனுக்கு; தமிழன், தன்னுடைய தாளை மிதித்தவனை அவனுடைய தலை தாளிலே படுகின்றவரை போரிட ஓயமாட்டான் என்பதை, நம்முடைய இலக்கியங்களெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றன.
இன்றைய தினம் வடக்கேயுள்ளவர்கள் இறுமாந்து இருக்கின்றார் களே, அவர்களெல்லாம் காடுகளிலே சுற்றிக் கொண்டும், குகைகளிலே வாழ்ந்து கொண்டும் மொழியறியாத காரணத்தாலே வாழ்க்கை வழி தெரியாமல் வழுக்கி வீழ்ந்து கொண்டும் இருந்த நேரத்தில், இங்கே அகத்தையும் புறத்தையும் நம்முடைய பெரும் புலவர்கள் இயற்றினார்கள். முடியுடை மூவேந்தர்கள் இருந்த காலமும், அவர்கள் காலத்திலே இயற்றப்பட்டப் பெரும் இலக்கியங்களும், அந்த நாளிலே வடநாட்டிலே வங்காளமானாலும் சரி, பாஞ்சாலமானாலும் சரி, பண்டித ஜவகர்லால் நேருவினுடைய தாயகமாகப் போற்றப்படுகின்ற காஷ்மீரம் ஆனாலும் சரி, நான் வடக்கே இருக்கின்ற வரலாற்று ஆசிரியர்களைக் கேட்கின்றேன்- அந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே உங்களுக்கு ஏது மொழி? உங்களுக்கு ஏது இலக்கணம்? உங்களுக்கு ஏது இலக்கியம்? உங்களுடைய மொழி எந்த நாட்டிலே பேசப்பட்டது? ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே -தமிழ் வணிகன் ரோம் நாட்டுக் கடை வீதியிலே பேசினானே! ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே யவனத்திலல்லவா சென்று வியாபாரம் செய்தான்! ஈராயிரம் ஆண்டுக் காலத்திற்கு முன்னாலே உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு எங்கள் தமிழ்மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்ததே.
ய<noinclude></noinclude>
bh2ku3ijeibevqmvfscmhmm1d0v17ky
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123
250
641751
1928530
1927774
2026-04-30T05:42:57Z
Rabiyathul
5890
+ மேலடி
1928530
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||99}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
99
"ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே அறவழியிலே எங்கள் இனமக்களை அழைத்துச் செல்வதற்கு எங்கள் தமிழ் மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. பாடி வீடானாலும் சரி, பள்ளி யறையானாலும் சரி, சாலையானாலும் சரி, சோலையானாலும் சரி, களமானாலும் சரி, எங்கேயும் பயன்பட்டுவந்த இந்தத் தமிழ்மொழி பயன்படாது என்று சொல்லுகின்றவர்கள், எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? அவர்கள் தமிழ் மொழியறியாத காரணத்தால் அப்படிப் பேசுகிறார்கள் என்றால், மன்னித்து விடலாம். என்றாலும், அவர்களே சிற்சில வேளைகளிலே நம்முடைய முகவாய்க் கட்டையைத் தடவிச் சொல்லுகின்றார்கள், "தம்பி, தம்பி! தமிழ் மொழியை இகழ்வதாகக் கருதிக்கொள்ளாதே, அது மிக நல்ல மொழி, அழகான மொழி, எனக்குப் பேசத்தெரியாதே தவிர, பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மிக அழகாக இருக்கின்றது" என்று நம்மிடத்திலே சொல்லிவிட்டு, "எங்களுடைய மொழி சிலாக்கியமானது என்று சொல்லவில்லை. எங்களுடைய மொழி இலக்கிய வளமில்லாத மொழிதான். நீங்கள் விரும்பினால் அதை 6 மாதக் காலத்திலே கற்றுக் கொள்ளலாம். ஓராண்டுக் காலத்திலே கற்றுக்கொள்ளலாம். என்றாலும், தமிழ் ஒரு புறத்திலே இருக்கட்டும்; இந்தியையும் ஏற்றுக் கொள்ளுங்கள், இந்திக்கு ஆதிக்கம் தாருங்கள்"- என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.
"சிலப்பதிகாரக் காலத்திலாவது, கண்ணகி அளிக்கமுடியாத சுகத்தை மாதவி அளித்தாள் என்பதற்காக, வழிதவறிய ஒரு வணிகன் மாதவி இல்லத்துக்குச் சென்றான். இங்கு வழிதவறிய கோவலர்கள் இல்லை; வழிதவற வேண்டுமென்று நினைக்கின்றவர்களும், நீ கட்டிய மனைவி அழகாகத்தானிருக்கின்றாள்; நான் கொண்டு வருபவள் குணத்திலேயும் குடிகேடி: பார்ப்பதற்கு அருவருப்பாகத்தானிருப்பாள், இருந்தாலும் எத்தனை நாளைக்குத்தான் அந்தக் கட்டழகியோடு நீ இருப்பது, அவளைப் பின் அறையிலே தள்ளிவிடு. இவளை நீ முன்கட்டிலே வைத்துக்கொள் என்று கேட்கிறார்கள் என்றால், நாம்கூடச் சும்மாயிருக்கலாம், இங்கே கூடியிருக்கின்ற ஆயிரக்கணக்கான தாய்மார்கள் ஆர்த்தெழவேண்டும்.
தமிழை, தம்பி! தாய்மொழி என்றுதானே அழைக்கிறோம்.
மொழிகாத்திடத் தாய்மார்களை, நான் அழைப்பது முறைதானே!
களத்துக்கு வாருங்கள்! என்று கனிவுடன் அழைத்துவா, தம்பி! சீறிவரும் புலியதனை முறத்தினாலே அடித்துச் சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே! என்றன்றோ பாடினார், உடுமலை நாராயணக்கவி, தாய்மார்கள் ஆர்த்தெழுந்தால், தரணியே விழித்தெழந்து நிற்கும். காணட்டும், அந்தக் காணற்கரிய காட்சிதனை!<noinclude></noinclude>
1hd0ygqs6tlabtloyokzmv4tjc7xejn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/124
250
641752
1928531
1927775
2026-04-30T05:43:27Z
Rabiyathul
5890
+ மேலடி
1928531
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|100||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>100
'திராவிட நாடு' இதழில் தம்பி! மகனைப் பறிகொடுத்தாலும், மனங்கலங்காத மாதாக்கள் இருந்ததால்தான், தமிழகத்தின் மாண்பு தழைத்தது.
அத்தகைய, மாதர்குல மாணிக்கங்கள், எந்தெந்த நாட்டிலே இருந்தனரோ-இருக்கின்றனரோ-அந்த இடம் யாவும், புனிதம் பெறுகின்றன.
அத்தகைய வீரம், ஏதோ, பழங்கதை, பாடல் சுவடியில் உள்ளவை, என்று ஏமாளிகளும், ஏதேச்சாதிகாரிகளும் எண்ணிக்கொள்ளட்டும், நீ அறிவாய், உலகிலே பல்வேறு இடங்களிலே கொதித்தெழுந்தபடி உள்ள உரிமைக் கிளர்ச்சிகளை அறிந்தவர் அறிவர், அத்தகையை வீரம் பட்டுப்போய்விடவில்லை; தேவைப்படும்போது, கொழுந்துவிட்டு எரியத்தான் செய்கிறது என்பதை.
*
"தாயே! தங்களை-அழைத்துப்போகத்தான் வந்திருக்கிறோம்" "என்னையா? எங்கு அப்பா, அழைக்கிறீர்கள்?"
“சுதந்திர விழாவிலே கலந்துகொள்ள, அம்மையே! அந்த விழா மாண்புபெற, மாதரசி! தாங்கள் வந்து அதிலே கலந்து கொள்ள வேண்டும்".
'விழாவா! விழாக்காணவா அழைக்கிறீர்கள்? என்னையா, அழைக்கிறீர்கள்? அழுதழுது விழிகள் வீங்கிக்கிடக்கும், எனக்கு அழைப்பார் விம்மி விம்மிச் சாகும் எனக்கு. விழாவிலே பங்கா...?"
ல
"தாயே! தாங்களன்றி வேறு எவர், தகுதி பெற்றவர், சுதந்திர விழாவிலே பங்குபெற. பதவிக்கும், பட்ட கடனைத் தீர்த்துக் கொள்ளவும், பல்லிளித்துக் கிடப்போரும், கொள்ளை இலாபமடித்தோரும், கள்ளச்சந்தைக் கழுகுகளும், சமூகச் சனியன்களும், சுதந்திர விழாவிலே கலந்து கொண்டு. அதன் மாண்பினையே மாய்த்துவிடு கின்றனர். மகனை நாட்டுக்காக அர்ப்பணித்து, ஒப்பிலாத் தியாகம் புரிந்த மாதர்குல திலகமே! உன் கால்பட்டு, விழா நடக்கும் இடத்தின் மண் மணம் பெறட்டும் விழா, வீரர்க்கு ஏற்ற திருநாள் ஆகட்டும்! மகனைக் கொன்றனர். மாபாவிகள்! மனமுடைந்து, அணு அணுவாக வேதனை பிய்த்துத் தின்னும் நிலைபெற்று, அந்த மாது கிடக்கிறாள். உரிமை என்றும், விடுதலை என்றும் பேசித்திரிவோர், அவளைக் கண்டால், 'ஐயய்யோ! இவளுக்கு வந்துற்ற கதியன்றோ, நமக்கும்' என்று எண்ணிக் கலங்குவர், கதறுவர். விடுதலைப் படையில் சேராதீர் என்று பெற்றெடுத்த மகனுக்கும் உற்றார்கட்கும் கூறுவர்; உடைபட்டுப் போய்விடும் அணிவகுப்பு: சிதைந்துபோகும் கிளர்ச்சி;-என்றன்றோ, பேசுவர். அம்மா! உன் மகன்<noinclude></noinclude>
eknot1ue0ehgt2behca769rz18es38y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/125
250
641753
1928532
1927776
2026-04-30T05:43:58Z
Rabiyathul
5890
+ மேலடி
1928532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||101}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
101
ஆவியைக் குடித்தது அடக்கு முறை! ஆயினும் அந்த அடக்குமுறை சாகவில்லை. அது செத்தொழிய வேண்டுமானால், தாயே! 'மகனை இழந்தேன், மனம் கலங்கினேனில்லை. அவன், எதன்பொருட்டுத் தன் இன்னுயிர் ஈந்தானோ, அந்த நோக்கம் ஈடேற, இதோ நானும் புறப்பட்டு விட்டேன், பாடுபட, போரிட, தேவையானால் மடிந்துபட! வீரனைப் பெற்றவள் நான். கோழையாகமாட்டேன். தியாகியை ஈன்றவள் நான், தியாகம் செய்யத் தயங்க மாட்டேன்!'-என்று கூறிடின், தாயே! கொடுமைக்காரர், குலைநடுக்கம் கொள்வர். கொட்டம் அடக்கப்படும்; வெற்றி நமக்குக்கிட்டும். வேதனையாகத்தான் இருக்கும், மகனைப் பறிகொடுத்ததால். ஆனால், அவன் இறந்தது. நாட்டுக்காக! அதை மீட்டுத்தர வழிகாட்டுங்கள்! சுதந்திர விழாவிலே கொடி ஏற்றுங்கள்! தங்கள் திருக்கரம் பட்டாகிலும், தீயோர் தொட்டுத் தொட்டுத் கறை படிந்துகிடக்கும் அந்தத் துணித்துண்டு, மணிக்கொடியாகட்டும். மாண்பு மீண்டும் கிடைக்கட்டும். வருக! அம்மையே வருக!"
சென்றாள். மாது! கொடி ஏற்றி நின்றாள். கூடி இருந்தோரைக் கண்டாள்-உரையாற்றிய பழக்கமில்லை. அதற்காகப் படித்ததில்லை. உணர்ச்சி மேலிட்டது. ஓரிரு கருத்தே உரைத்தாள்-ஓராயிரம் அறிவாளார் தீட்டிய நூற்களும், அந்தக் கருத்துக்கு மேற்பட்டதைத் தாரா!
என் மகன், எந்த நோக்கத்துக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தானோ, அந்த நோக்கம் வெற்றி பெறப் பாடுபடுங்கள். அவன் செய்த தியாகம் வீணாகிவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
தம்பி! குஜராத் தனி மாநிலமாக இருக்கவேண்டும்; அதனை மராட்டியத்துடன் பிணைத்து, ஒரு அவியல் அரசு ஆக்கிவிடக்கூடாது என்பதற்காக, டில்லி எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெருங் கிளர்ச்சியிலே ஈடுபட்டு, அடக்கு முறைக்கு ஆளாகித், துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி இறந்து பட்டான், 18 வயது இளைஞன், கல்லூரி மாணவன், இறவாப் புகழ்பெற்ற அந்த இளைஞனை ஈன்றெடுத்த தாயை, குஜராத் அரசு வேண்டி, கிளர்ச்சி நடாத்தியோர், சுதந்திர விழாவில் கொடி ஏற்ற அழைத்துச் சென்ற சம்பவம், மேலே குறிப்பிடப் பட்டிருப்பது.
அந்த வீரமாதேவி, வரலாற்றுச் சுவடிக்குள் புகுந்து கிடப்பவரல்ல! இப்போது, குஜராத்தில் வாழ்கிறார்கள்-வரலாற்றிலே இடம் பெற்றுக் கொண்டார்கள்.
மகன் கொல்லப்பட்டான்-குஜராத் கிடைத்து விட்டது.<noinclude></noinclude>
o768vgsdm4m80u94t5f3zv4qpgysbyk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/126
250
641754
1928533
1927777
2026-04-30T05:44:27Z
Rabiyathul
5890
+ மேலடி
1928533
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|102||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>102
'திராவிட நாடு' இதழில்
என் மகன் செய்த தியாகம் வீண்போகக்கூடாது என்றாள் மாதரசி, வீண்போகவில்லை! அவள் கண்ணெதிரே, குஜராத் பூத்துக் குலுங்குகிறது!
என்
மகன் இன்னுயிர் ஈந்தான்-குஜராத் கிடைத்தது- என்று எண்ணும்போதெல்லாம் அந்தத் தாயின் கண்களிலே நீர் துளிர்த்திடும்- ஆனால், அவர்கள் தாளிலே குஜராத் கிடைத்திட உழைத்த உத்தமர் களின், கண்ணீர் படும்!!
தம்பி! இத்தனைக்கும், தனி அரசு அல்ல-இந்தியப் பேரரசிலே ஒரு அங்கமாக இருக்கத்தான்-ஆனால் மராட்டியத்துடன் பிணைக்கப் படாமல் இருப்பதற்காக மட்டுமே, நடத்தப்பட்ட கிளர்ச்சி அது. அதிலே மகனைப் பறிகொடுத்தாள் மாதா!!
நாம் கேட்பது? தனிநாடு என்று மார்தட்டிக் கூறுகிறோம்-மமதையால் அல்ல-மரபு தெரிவதால் அந்த மரபு அழிக்க வருகிறது, இந்தி எனும்
செந்தீ
3.7.60
அண்ணன்,
அஸ்ஐதுறு<noinclude></noinclude>
he7bg3k0u3kdwhe0kaxgfr3fzmt1g8w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/127
250
641755
1928534
1927778
2026-04-30T05:44:58Z
Rabiyathul
5890
+ மேலடி
1928534
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||103}}{{rule}}</noinclude>தம்பி!
கடிதம்: 110
குருதி கலந்த மண்
நாகர் கிளர்ச்சி-மொழிக் கிளர்ச்சிகள்-
அசாம் வங்க மொழிகள்-
இந்தி பேசாத பகுதி மக்கள் நிலை
பிசோ! உயிரோடு! அல்லது பிணமாக!!-கொண்டு வருபவருக்குப் பத்தாயிரம் ரூபாய் பரிசு தரப்படும்.
'இந்திய' துரைத்தனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆண்டு மூன்றாகப் போகிறது!
இப்போது பிசோ சார்பாக வேறோர் விளம்பரம் வெளியிடலாம் போல இருக்கிறது, வேடிக்கைக்காக!
பிசோ, எப்படி இங்கிருந்து, உளவாளிகள், வேவு பார்ப்போர், உயர்தர இராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு, இலண்டன் போக முடிந்தது என்பதைக் கண்டறிந்து கூறுவோருக்கு, 20,000 ரூபாய் பரிசளிக்கப் படும்.
மலைநாட்டு மாவீரன் என்று, நாகர்கள், அவனை வாழ்த்து
கிறார்கள்.
மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கூத்தாடும், காட்டு மிராண்டித் தலைவன், என்று டில்லி கூறுகிறது.
அந்தப் பிசோ இலண்டன் நகரில் இருக்கிறான்-அரசியல் தலைவர் களைக் காண்கிறான். பத்திரிகைக்காரரிடம் உரையாடுகிறான். தாயகம் அடிமைப்பட்டிருப்பது பற்றிய விளக்கத்தை உலகுக்கு அறிவித்து நீதிகேட்கப் போகிறேன், என்று அறிக்கை விடுகிறான்.
இறந்துவிட்டிருக்கக்கூடும் என்று முன்பு கூறினோர், இன்று இளித்தவாயர் என்ற பட்டம்பெற்றுச் சுமக்கின்றனர்-அவனோ, விடுதலை வீரர்கள் விரும்பிச்சென்று அடைக்கலம் தேடிடும் திருத்தலம் போயுள்ளான்.
நாகர் தனி இனம்! நாகர்களுக்குத் தனி மொழி! நாகர்களுக்குத் தனி கலாச்சாரம்! ஆகவே நாகநாடு தனி அரசு ஆகவேண்டும்!- என்பது பிசோவின் விடுதலைக் கீதம்.<noinclude></noinclude>
0bmxi5ftifco8bbja2hbaxgnuyxrbuh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/128
250
641756
1928535
1928264
2026-04-30T05:45:28Z
Rabiyathul
5890
+ மேலடி
1928535
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sridharrv2000" />
{{Rh|104||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>104
'திராவிட நாடு' இதழில்
நீங்களும் இந்தியர்தான், ஆனால் மலை ஜாதியினர்; உங்கள் நடை உடை மாறுபட்டிருக்கலாம், ஆனால் உள்ளம் இந்திய உள்ளம்; காட்டுக் கூத்தும், வேட்டைப் பாட்டும் கலையாக இருக்கலாம். ஆனால் அதுவும் பாரதப் பண்பாட்டிலே ஒருவகை தான்! எனவே, தனி அரசு கூடாது. பேரரசிலே இணைந்து இருக்கவேண்டும் - மறுத்தால் படை இருக்கிறது பலமாக; குண்டுகள் உள்ளன மாரிபோல் பொழிய; தலைவர் இருக்கிறார், திம்மைய்யா!-என்று டில்லி கூறிற்று; கூவிற்று; மிரட்டிப் பார்த்தது.
மலை அரண்களைத் தூளாக்கினர், புதிய அரண்கள் அமைத்தனர்.
நாகர்கள்.
படைகளை ஏவினர் தாக்க; பதுங்கினர் நாகர்கள், சமயம் பார்த்துத் திருப்பித் தாக்க!
விமானம் வட்டமிட்டது; அடர்ந்த காடுகளிலே ஒளிந்து கொண்டு. நாகர்கள் கெக்கலி செய்தனர்.
மாமன் பிடிப்பட்டான், மைத்துனன் கொல்லப்பட்டான், வலதுகரமாக இருந்தவனை வளைத்துப் பிடித்துக் கொண்டோம். இடதுகரமாக இருந்தவனைப் பிடித்திழுத்து வந்தோம்; அணி வகுப்புச் சின்னாபின்னமாகி விட்டது, தங்க இடமின்றித், தக்க துணையின்றித், தலை தப்பாது என்று தெரிந்து திகில் கொண்டு, அலைந்து திரிகிறான் பிசோ, என்றனர்.
சென்ற கிழமை, அவனை, ஜெயப்பிரகாஷ் நாராயணன். இலண்டன் நகரில் கண்டு பேசினார் என்று இதழ்கள் தெரிவிக்கின்றன.
தம்பி! நாகநாடு தனிநாடு ஆகவேண்டும். என்று கேட்பதற்குக் காட்டப்படும் காரணங்களைவிட, ஆதாரங்களைவிட, ஆயிரமாயிரம் மடங்கு அதிகமான, துப்புரவான ஆதாரம், குவிந்து கிடக்கிறது, நமக்கு- திராவிடருக்கு.
நாகர், மலைஜாதியினர்-ஆடுவதும் பாடுவதும் அடவியில்! தேடுவதும் பெறுவதும், உயிர்வாழ உணவு வகைகளை!
திராவிடரோ, வீரமரபினர், வாகை சூடியோர், வளம்பல பெற்றவர். வரலாற்றுப் புகழ்கொண்டவர்கள்!
திராவிடரின் தனிமரபு-தரணிக்குக் கிடைத்துள்ள, பல அணிகலன்
களிலே சிறப்பானதொன்றாகும்.
{{left_margin|3em|
அதனை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சு நெக்குருகி நிற்கிறோம். இதனை அறியாததால், வடவர், நம்மை நையாண்டி செய்து கொடுமைப்படுத்துகின்றனர்.}}<noinclude></noinclude>
kg4sm1mzd18m6gpvwd0f3vs7u772tye
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/129
250
641757
1928537
1927780
2026-04-30T05:45:58Z
Rabiyathul
5890
+ மேலடி
1928537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||105}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
105
நாம் யார் என்பதை நமக்குக்காட்ட, நமது தாய்மொழியாம் தமிழ், கொடி இழந்து, கொற்றம் இழந்து, ஈட்டியது இழந்து, இனிமை பலவும் இழந்து கிடந்துழலும், இந்த நாட்களிலும் துணைநிற்கிறது. மனப்பிணி போக்கிவருகிறது.
அந்த அழகு தமிழ் மொழியினை அணைத்து, அழித்திட ஏவுகின்றனர், இந்தியினை.
மொழி விஷயத்தை இவ்வளவு பெரிதாக்கலாமா' என்று பேசு கிறார்கள் சிலர்-அவர்கள் வேறு ஏதோ, மிகப்பெரிய, மனித குலத்தின் மேம்பாட்டுக்கான, விஷயத்தைக் கவனித்துக் கொண்டு இசைபட வாழ்ந்து கொண்டிருப்போரோ எனில், இல்லை, தம்பி! இல்லை! வெந்ததைத் தின்றுவிட்டு, வாயில் வந்ததைப் பேசிடுவோர்; அல்லது கிடைத்தது பறிபோகாதிருக்க, கைகட்டி வாய்பொத்திக் கிடக்கும் போக்கினர். வாயும் வயிறும் தவிர, வேறெது பற்றியும் கவலைகொள்ளா மனிதர்கள்! மனிதர்களா!! மனித உருவங்கள்!! இவர்கள் பேசுகிறார்கள், மொழிபற்றித் தகராறு கூடாது, என்று!!
தம்பி! நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அசாம் மாநிலத்தில், பல இடங்களில் பட்டாளம் காவல் புரிந்து கொண்டிருக்கிறது, போலீசுக்குத் துணைநின்று; கிளர்ச்சியை அடக்க!
அசாமியா, வங்காளிகளைத் தாக்குகிறார்கள்.
வகையாக அசாமியர் சிக்கிக்கொண்டால், வங்காளிகள் பதிலுக்குத் தாக்குகிறார்கள்.
வங்காளிகளின் கடைகள் சூறையாடப்படுகின்றன! கொலை, கொள்ளை, தீவைத்தல் போன்ற, வெறுக்கத்தக்க, கண்டிக்கத்தக்க செயல்கள் நடக்கின்றன.
வங்காளப் பத்திரிகைகளை அசாமியர் கொளுத்துகின்றனர்
வங்காள மொழி ஒழிக! வங்காள ஆதிக்கம் ஒழிக! வங்காளிகள் ஒழிக!!-என்று அசாமிய இளைஞர்கள் முழக்கம் எழுப்புகின்றனர்.
அசாமிய மொழி ஆதிக்கம் ஒழிக! அசாமிய வெறி ஒழிக! என்று வங்காளிகள் முழக்கமிடுகிறார்கள். வங்காளிகள் இனி அசாமில் இருக்க முடியாது என்று அஞ்சி, சாரை சாரையாக, வங்கம் திரும்புகின்றனர்.
வங்காளிகளுக்கும் அசாமியருக்கும். என்ன தகராறு? மொழிப் பிரச்சினையேதான்! வேறு ஒன்றும் இல்லை.<noinclude></noinclude>
jxb6kxpz7l3xvca0ome4mbvxfregkkh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/130
250
641758
1928538
1927781
2026-04-30T05:46:28Z
Rabiyathul
5890
+ மேலடி
1928538
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|106||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>106
'திராவிட நாடு' இதழில்
அசாம் மாநிலத்தில், மிகப்பெரும் அளவுக்கு வங்காளிகள் குடி ஏறிப் பொருளாதார வசதியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அசாமில் உள்ள அசாமியரைவிட வங்காளிகள் வசதியுடன் வாழக்காணும் அசாமியருக்கு, என்ன தோன்றும்!! மனக் குமுறல்! நமது நாட்டுக்குள்ளே நுழைந்து. வியாபாரத்தை, தொழிலை, அலுவல்களைக் கைப்பற்றிக் கொண்டு. கொட்டமடிக்கிறார்கள், வங்கத்தார்: நாம் கிடக்கின்றோம், வகையற்று: செ! என்ன பிச்சைப் பிழைப்பு இது!!- என்ற எண்ணம் குடைகிறது
ஆண்டுக்கு இரண்டுமுறை, ஆகஸ்ட்டுத் திங்கள் 15-ம் நாளும், ஜனவரி 26-ம் நாளும், தலைவர்கள் உபதேசமளிக்கிறார்கள், 'அசாமிய ராயினும் வங்கத்தாராயினும், பீகாரியானாலும், ஒரியாவாயினும், எல்லோரும் பாரத புத்ரர்கள் இந்தியர்கள்!!' என்று. ஜெய்ஹிந்த்! போடுகின்றனர்! பிறகோ?
'அந்தச் சிமெண்டுக் கம்பெனி, யாருடையது?'
"வங்காளியுடையதுதான்!'
'நேற்றுக் கலாமண்டபத்திலே பாடிய..."
"வித்வானைக் கேட்கிறாயா? முகர்ஜி! கல்கத்தா!'" "வங்காளியா?"
''ஆமாம்!"
இப்படி உரையாடல்! இது உள்ளத்திலே என்னென்ன எண்ணங் களை எழச்செய்யும்?
தம்பி! இந்தச் சமயத்தில், அசாம் துரைத்தனத்தார், சட்டத்துக்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட்ட நிலையில், அசாம் மொழியை அசாம் மாநிலத்தில் ஆட்சிமொழி ஆக்குவதற்கான சட்டம் செய்ய இருப்பதாக அறிவித்தனர்.
அமளி! அசாமிய மொழி ஆட்சிமொழி ஆகிவிட்டால், வங்காளி களான, எங்கள் கதி என்ன ஆவது? அசாமிய மொழி கற்றவரன்றோ. அலுவலகத்தில் இடம்பெற முடியும்? அசாமிய மொழிக்கல்லவோ ஏற்றம் ஏற்பட்டுவிடும்? பிறகு, வங்காள மொழிக்காரனுக்கு இங்கு என்ன வேலை? என்றல்லவா. அசாமியர் கேட்கத் துணிவர்-என்று எண்ணினர் வங்காளிகள்; கொதித்தனர்.
"இங்கு என்ன வேலை? என்று எப்போதோ கேட்பதா! இதோ. இப்போதே. கேட்கிறோம். வங்கம் இருக்கும்போது. வங்காளிக்கு<noinclude></noinclude>
s16iuy7inbkvney01furyjdmuhatpjk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/131
250
641759
1928539
1927782
2026-04-30T05:46:58Z
Rabiyathul
5890
+ மேலடி
1928539
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||107}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
107
இங்கு என்ன வேலை?" என்று அசாமியர் அறைகின்றனர், ஆத்திரத்துடன், அமளி!! துப்பாக்கி அமுல் நடத்துகிறது! துடுக்குத்தனம் தலைவிரித்தாடுகிறது!
தம்பி! இந்தப் பிரச்சினையிலே இருக்கிற நியாய அநியாயம் இருக்கட்டும் ஒரு புறம்-மொழி, வாழ வழிகாட்டுகிறது: ஆதிக்கம் நடத்தக் கருவியாகிறது-என்பது விளங்குகிறதல்லவா? கவனிக்கச் சொல்லு. கருத்திலே கடுவிஷம் கலவாத நிலையிலுள்ள காங்கிரசாரிடம்,
இந்தியா ஒரே நாடு! நாம், எம்மொழி எனினும், எம்மதம் எனினும், இந்தியர்-என்ற பேச்சுக்கும், அசாமிலே காணப்படும் உணர்ச்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாகத் தெரிகிறதா!!
''நாம் இந்தியர்' என்ற உணர்ச்சி, பொய்யுரையின்மீது நிற்கிறது. எனவேதான், துளி அளவு பிரச்சினையானாலும், உண்மை உணர்ச்சி, பீறிட்டுக்கொண்டு வந்துவிடுகிறது.
தம்பி! திருவண்ணாமலையில், மூன்றாண்டுகளுக்கு முன்பே இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, இந்தி ஆதிக்கம் எனும் ஆபத்து வரக் கூடும் என்பது பற்றிப் பேசப்பட்டது. இந்தி எதிர்ப்பு நாள் நடத்தப்பட்டது; நாடெங்கும், கிளர்ச்சிக்கான முன்னேற்பாடுகள், செய்யலாயினர். ஆட்சி மொழி பற்றிக் கேர் குழு தந்த அறிக்கையில் டாக்டர் சுப்பராயனும், வங்கப் பேராசிரியர் ஒருவரும் ஒப்பம் எழுத மறுத்து, எதிர்ப்புக் கருத்து களைத் தெரிவித்திருந்தனர்-தமிழக மக்களுக்கு இது, பெரியதோர் விழிப்புணர்ச்சியை ஊட்டிற்று.
டாக்டர் சுப்பராயன், தமிழர் - அறிமுகப்படுத்தத் தேவையில்லை அமைச்சராகி இருக்கிறார் இப்போது-முன்பு ஆச்சாரியாரின் வலக்கரம் என்ற சிறப்புக்கு உரியவராக இருந்தவர். அவர், கேர் குழுவின் முடிவைப் பலமாகத் தாக்கினார்-தக்க காரணங்களைக் காட்டி.
எங்கு சென்றாலும், எப்படி வாழ்ந்தாலும், எவருடன் குலவினாலும், தமிழன் என்ற இன உணர்ச்சி அவரை விட்டுவிடாது; எனவே அவர், மறுப்புரை எழுதியதிலே விந்தை இல்லை.
அதேவிதமான கருத்தினை, ஏறக்குறைய அதே சொற்களில், சுனிதிகுமார் சட்டர்ஜி எனும் வங்காளப் பேரறிவாளர் தெரிவித்திருந்தாரே. அது உள்ளபடி வியப்புக்குரியது, ஐயமில்லை.
சுனிதிகுமார் சட்டர்ஜி, மொழித்துறை வல்லுநர்; நாற்பது ஆண்டு களாக அந்தத் துறையில் பணியாற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர்
மேற்கு வங்க மேல்சபைத் தலைவராகத் திகழ்ந்தவர்.<noinclude></noinclude>
9brytrb7mc9d8j9erdri4lmxtes0dii
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/132
250
641760
1928540
1927783
2026-04-30T05:47:28Z
Rabiyathul
5890
+ மேலடி
1928540
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|108||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>108
'திராவிட நாடு' இதழில்
வர்தாவில் துவக்கப்பட்ட 'ராஷ்டிர-பாஷா பிரசார் சமிதி'யின் மேற்கு வங்கக் கிளைக்குத் தலைவர்; எனவே, இந்திக்கு விரோதி அல்ல.
இந்தி மொழியில் நான்கு நூற்களை இயற்றியவர்- பரிசு கூடக் கிடைத்தது-எனவே, இங்கு இந்திக்காக வாதாடும் பேர்வழிகள் போல, இந்தி தெரியாதவரல்ல-விற்பன்னர்.
அப்படிப்பட்ட அறிவாளி 'இந்தி வெறி'-'இந்தி ஏகாதிபத்தியம்' என்றெல்லாம் கண்டித்து, எழுதினார்.
I cannot help feeling that the Report is simply trying to suggest certain programmes and lines of procedure from the centre without a close consideration, either of the general situation in India in the sphere of language or of future reactions and repurcussions among large sections of our people.
The entire out-look is that of the Hindi-speakers in the Indian union, who alone are to profit immediately and for a long time to come; if not forever.
I fear that in the entire report there is very little evidence of an attempt to understand the feelings and the intelectual approach of the Non-Hindi speaking peoples for their own languages....
The attitude is far from democratic-it is just a case of imposition of one kind of mentality over the rest...
The recommendations will in my opinion bring about the immediate creation without intending to do so of two classes of citizens in India-class I citizens with Hindi as their language obtaining an immense amount of special priveleges by virtue of their language only.
I honestly feel that I am seeing an incidient 'Hindi Imperialisim'.
After consulting the non-Hindi states the constitution of India is to be amended in its section on the official language of the Indian Union.
கேர் குழு. ஆட்சிமொழி குறித்து ஆய்ந்தறியத் தக்க முறைகளை மேற்கொள்ளவில்லை, என்பதற்கு, சட்டர்ஜி காட்டுவதைவிட வேறென்ன காரணம் தேவை?<noinclude></noinclude>
ir3pnh2x9hbo5qkvdinogvkr622jzr0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/133
250
641761
1928541
1927784
2026-04-30T05:47:58Z
Rabiyathul
5890
+ மேலடி
1928541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||109}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
109
மொழி விஷயமாக இந்தியா முழுவதிலும் என்ன கருத்துப் பொதுவாக நிலவுகிறது என்பதைக் கண்டறியாமலும், பெரும்பாலான மக்களிடையே, என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்காமலும், மத்திய அரசு என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று மட்டுமே. குழு அறிக்கை தயாரித்திருக்கிறது.
*
அறிக்கையின் நோக்கம். இந்தி பேசும் மக்களுக்கு, உடனடி யாகவும், நெடுங்காலத்துக்கும், ஒரு சமயம் என்றென்றும், இலாபம் கிடைத்திடக்கூடிய விதமாகவே அமைந்திருக்கிறது.
இந்தி பேசாத மக்கள், தங்கள் மொழிபற்றிக் கருதுவது என்ன என்பதைக் கண்டறிய ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளப்பட வில்லை என்பதும், இந்தி பேசாத மக்களுடைய உள் உணர்ச்சி மதிக்கப்படவில்லை என்பதும், அறிக்கையில் தெரிகிறது.
ஜனநாயகமுறை கையாளப்படவில்லை. ஒரு கருத்தினர் தமது கருத்தை மற்றவர்மீது திணிப்பதுதான், இந்த முறை என்று தெரிகிறது.
இந்த அறிக்கையின்படி காரியமாற்றினால், இந்தியைத் தாய் மொழி யாகக் கொண்ட மக்கள் மேலோர் ஆகவும், மற்றவர்கள் இரண்டாந்தர மக்கள் ஆகவும் ஆகிவிடுவர்.
இந்தி ஏகாதிபத்யம், நெளிவதைக் காண்கிறேன்.
இந்திய அரசியல் சட்டத்தில் மொழிபற்றி இருக்கும், விதியை, இந்தி பேசாத மாநிலங்களுடன் கலந்து பேசி. திருத்தி அமைக்க வேண்டும்.
தம்பி! டாக்டர் சுப்பராயன், இந்தக் கருத்துக்களை ஆதரித்ததுடன், இந்திபற்றி, பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தினை அறிந்திருக்க வேண்டும் என்றும், சுட்டிக் காட்டினார்.
இந்தக் கருத்துகளும், நாட்டிலே, இதற்குப் பரவலாகக் கிடைத்த ஆதரவும், நமக்கெல்லாம் மிகுந்த திருப்தியை உண்டாக்கின<noinclude></noinclude>
e4yn3lhbvbgbpdkm5cuzhczs2ztlt2m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/134
250
641762
1928542
1927785
2026-04-30T05:48:28Z
Rabiyathul
5890
+ மேலடி
1928542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|110||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>110
‘திராவிட நாடு' இதழில்
இந்திக்கு எதிர்ப்பு. எதிர்பாராத இடமிருந்தெல்லாம் வருகிறது. எனவே, வெறி குறையும், ஆதிக்க முயற்சி குலையும் என்று எண்ணம் பிறந்தது; செந்தேனாய் இனித்தது.
இம்மட்டோ! இந்தியைக் கட்டாய பாடமாக்கி, தமிழரை வம்புக்கு இழுத்து, தாளமுத்து-நடராசன் எனும் இரு இளைஞர்களைப் பலி கொண்ட அடக்குமுறையை அவிழ்த்துவிட்ட ஆச்சாரியாரே, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, இந்தியைப் பலமாகத் தாக்கலானார்.
இந்தியை எதிர்த்து நானும் ஆச்சாரியாரும் ஒரே மேடையில் பேசிய அற்புதமே கண்டாயல்லவா!
வங்கம் சென்றுகூடப் பேசினார் ஆச்சாரியார்.
சம்பத்தும், வி.பி.இராமனும் வங்கம்சென்று மொழி மாநாட்டிலே
பேசினர்.
இங்குள்ள இதழ்கள்கூட, இந்தி வெறியைக் கண்டித்தன.
எங்களுக்கு மட்டும் என்ன, தமிழ் உணர்ச்சி இல்லையா? நாங்கள் இந்தத் தமிழ் மண்ணிலே பிறக்கவில்லையா!! என்று காங்கிரஸ் மந்திரிகளே கூடப் பேசலாயினர். மகிழ்ச்சி நமக்கு. மயக்கம் வரும் அளவுக்குப் போரிடாமலே வெற்றி கிடைத்துவிடும், என்ற நினைப்புத் தடித்தது.
இவைகளை எல்லாம்விட இந்தி குறித்துப் பண்டித நேரு பாராளுமன்றத்தில் இருமுறை பேசியது. நம்மைக் களிப்புக் கடவிற் கொண்டு சேர்த்தது என்னலாம்; இனிப்புக் கூட்டிப் பெருந்தன்மையைக் காட்டிப் பெருந்தலைவர் என்ற கோலம் பூண்டார் நேரு பண்டிதர் நம்மை மகிழ்வித்தார். என்ன தெளிவு எத்துணை கனிவு! தலைவரென்றால் இப்படி அல்லவா இருக்கவேண்டும் மக்கள் குரலுக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறார். மரமண்டைகளும் புரிந்துகொள்ளத்தக்க விளக்கம் தருகிறார்! அச்சம் அகன்றது! ஐயம் நீங்கிற்று! ஆணித்தரமாய் பேசிவிட்டா இனி இந்தி வெறியர், பெட்டிப் பாம்பாவர்!-என்றெல்லாம். நாடே புகழ்பாடிற்று. பண்டிதரின் பேருரை கேட்டு சந்தைச் சதுக்கத்திலோ சாவடித் திண்ணையிலோ, அல்ல! தம்பி! பாராளுமன்றத்தில் பேசினார் எந்த இடத்தில் பேசினால், இந்தத் துணைக் கண்டம் மட்டுமல்ல. உலக நாடுகள் அனைத்திலும் கூர்ந்து கவனிக்கப்படுமோ, அங்குப் பேசிவசர்க
Hindi would not be imposed against their wishes on non-Hindi speaking people,
English would continue as an associate or additional language in the country for an indefinite period or as long as the Non-Hindi speaking people wanted it.<noinclude></noinclude>
id8c22ydfw6tu2473t1dnu2xtia7mbt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/135
250
641763
1928543
1927786
2026-04-30T05:48:58Z
Rabiyathul
5890
+ மேலடி
1928543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||111}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
111
The decision as to how long it would continue as an associate language should be left to the Non-Hindi speaking people and not to the Hindi-speaking people.
Many people in the South objected to learning Hindi. They did so because of a feeling that it was being imposed on them.
Therefore all talk of imposition must go. (Hear! Hear) I shall go further and say that if they don't want to learn Hindi, let them not learn Hindi.
I believe in two things. There must be no imposition of Hindi. Secondly for an indefinite period-I do not know how long-English should continue as an associate or additional language, not because of certain facilities and all that but because I do not wish people in the Non-Hindi areas to feel that certain doors of advances are closed to them.
So I would take (English) it as an alternative language so long as people require. It and the decision on that I would not leave to the Hindi-knowing people, but to the non-Hindi knowing people. (Cheers)
படித்துப் படித்து இன்புறலாம் என்று தோன்றும், பண்டிதரின் பேருரை! இந்தி பேசாத மக்கள்மீது அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தி திணிக்கப்படமாட்டாது.
துணைமொழியாக, ஆங்கிலம், நீண்ட நெடுங்காலம்-அல்லது இந்தி பேசாத மக்கள், எவ்வளவு காலத்துக்கு இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் துணைமொழியாக இருக்கும்.
*
ஆங்கிலம் துணைமொழியாக எவ்வளவு காலம் இருக்க வேண்டும். என்பதை முடிவுகட்டும் உரிமை, இந்தி பேசும் மக்களிடம் அல்ல, இந்தி பேசாத மக்களிடமே விடப்படும்.
தெற்கே பலர், இந்தி கற்பதை மறுக்கிறார்கள்; இந்தி திணிக்கப் படுகிறது. என்ற எண்ணத்தினாலே.
எனவே, திணிப்புப் பற்றிய பேச்சு ஒழியவேண்டும்.<noinclude></noinclude>
gfjtatfo4ou3j3ctksy266kgp2x8kbd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/136
250
641764
1928544
1927787
2026-04-30T05:49:28Z
Rabiyathul
5890
+ மேலடி
1928544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|112||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>112
'திராவிட நாடு' இதழில்
நான் இன்னும் சொல்லுவேன்; அவர்கள் இந்தி படிக்க விரும்பாவிட்டால், படிக்கத் தேவையில்லை.
இரு விஷயங்களில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒன்று இந்தித் திணிப்பு கூடவே கூடாது. இரண்டாவதாக - காலம் குறிப்பிட முடியாது-எவ்வளவு காலம் என்று எனக்கே கூறத் தெரியாது. ஆங்கிலம் துணைமொழியாகத் தொடர்ந்து இருந்தாக வேண்டும்; அதனால் சிலவசதிகள் உள்ளன என்பன போன்ற காரணங்களுக் காகக்கூட அல்ல; தங்கள் முன்னேற்றம் தடுக்கப்பட்டுவிட்டதாக இந்தி பேசாத மக்களுக்கு ஒரு உள் உணர்ச்சி ஏற்படக் கூடாது என்பது என் எண்ணம்.
எனவே, ஆங்கிலம், இந்திக்குப் பதிலாக, மாற்று ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் - எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்பு கிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் இருக்கவேண்டும். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்திபேசும் மக்களிடம் நான் விடமாட்டேன்; இந்தி பேசாத மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்.
தம்பி! இவ்வளவு தெளிவாக இந்தத் துணைக்கண்டத்தின் முதலமைச்சர், காங்கிரஸ் கட்சியின் ஈடு எதிர்ப்பில்லாத் தலைவர், உலகப் பெருந்தலைவர்களின் வரிசையிலே இடம் பெறத்தக்கவர் என்ற புகழ் ஈட்டிக் கொண்டவர், பஞ்ச சீல கர்த்தாவென்றும் பாண்டுங் மாநாட்டு வீரர் என்றும் கொண்டாடப்படுபவர், போர் வெறிகொண்ட இந்தக் கெட்ட உலகிலே, சமாதானம் நிலவப் பாடுபடும் சாந்த மூர்த்தி, என்று போற்றப்படுபவர்- பண்டிதர் - பேசினால் யாருக்குத்தான், நம்பிக்கை மேலிடாது.
இந்தி குறித்து இனிக் கவலையில்லை.
அச்சம் இல்லை; நீதி நிலைத்தது.
இந்தி வெறியரின் கொட்டம் அழிந்தது; ஆதிக்கம் ஏற்படாது.
இந்தி பேசாத மக்களின் உரிமை பாதுகாக்கப்பட்டு விட்டது. பண்டித நேருவே இதற்கு உறுதிமொழி அளித்து விட்டார்.
அவருடைய உறுதிமொழியை, மாஸ்கோவும் வாஷிங்டனும் பெர்லினும் இலண்டனும், பாரிசும் டோக்கியோவும், மதிக்கும்போது, நாம் மதிப்பளிக்காதிருப்பது. அறிவுடைமையாகுமா!-என்றெல்லாம் தம்பி! நம் நெஞ்சம் எண்ணியதிலே, தவறு இல்லையே! நம்பினோம்!<noinclude></noinclude>
1b35ze4sy5jz3aq2mnbbupx3j9464d3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/137
250
641765
1928545
1927788
2026-04-30T05:49:58Z
Rabiyathul
5890
+ மேலடி
1928545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||113}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
113
அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான், திருவண்ணாமலையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்திய நாம், 1959 செப்டம்பர் திங்கள் நடத்திய பூவிருந்தவல்லி மாநாட்டில்,- ஒரு வாழ்த்துத் தீர்மானமே, நிறைவேற்றினோம்.
"இந்தி ஏகாதிபத்தியத்தைப் புகுத்தி நிலைபெறச்செய்ய வடநாட்டுச் சர்க்கார் எடுத்துக்கொள்ளும் வஞ்சக முயற்சியை, திராவிடப் பெருங்குடி மக்கள் தீவிரமாகவும் தொடர்ந்தும் அறவழி நின்று நடத்திவரும் கிளர்ச்சியின் விளைவாக, வடநாட்டு இந்தி வெறியர்களின் போக்கைப் பண்டித நேருவே கண்டிக்கவும்: தடுத்து நிறுத்தவும்; முன்வரவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது திராவிடரின் கிளர்ச்சி வெற்றிப்பாதை நோக்கிச் செல்கிறது என்பதையே எடுத்துக் காட்டுவதாக இந்த மாநாடு கருது வதுடன், பண்டித நேருவின் போக்கிலேயே ஒரு மாற்றத்தையும், இந்தி வெறியர்களின் கொட்டத்துக்கு ஒரு பலமான அடி கிடைத்தது போன்ற நிலைமையையும் ஏற்படச் செய்ய வீரமும் தியாகமும் நிறைந்த கிளர்ச்சியில் ஈடுபட்ட திராவிடப் பெருங்குடி மக்களுக்கு இம்மாநாடு வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது".
நமக்கு மட்டுமல்ல, இந்தி ஏகாதிபத்தியத்தை வெறுக்கும் பலருக்கும் பண்டிதரின் பேச்சு, பாகாக இருந்தது. இனி இந்தித் திணிப்புப் பற்றிய பயம் இல்லை என்று பலரும் கூறினர் - களித்தனர்.
வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றியபோது கூடத் தம்பி! நமக்கு ஐயப்பாடு அறவே நீங்கிவிடவில்லை.
பண்டிதரின் போக்கு மாறிவிடுமோ? பேச்சை ஒருநாள் மறுத்து விடுவாரோ? பேசிமட்டும் என்ன பலன்? சட்டம் மிரட்டியபடி இருக்கிறது! எந்த நேரத்தில் இந்தி வந்திடுமோ, கொட்டிட!- என்ற அச்சம் கலந்த ஐயப்பாடு எழுந்தது. எனவேதான், வாழ்த்துரைத்ததுடன், வேறொன்றினையும் தீர்மானம் அளித்தது.
"1965-க்குப் பிறகு, இந்தி மொழியே அகில இந்திய ஆட்சி மொழியாகி, ஆங்கிலம் அறவே அகற்றப்படும் என்ற நெருக்கடியைப் பண்டித நேருவின் வாக்குறுதி தளர்த்தியிருப்பது கண்டு இம்மாநாடு மகிழ்கின்றது. என்றாலும். பேச்சளவோடு நின்று விடாமல், பண்டித நேரு தமது வாக்குறுதியைச் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுத்துக் கொள்வதன் மூலம் நிறைவேற்றி வைக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கூறுகிறது".<noinclude></noinclude>
8tsftz269z3noiyhfbobla279cgj06a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/138
250
641766
1928546
1927789
2026-04-30T05:50:28Z
Rabiyathul
5890
+ மேலடி
1928546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|114||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>114
'திராவிட நாடு' இதழில்
எந்த இந்திப் பிரச்சினை எரிச்சலையும் அருவருப்பையும் மூட்டி வந்ததோ. எந்தப் பிரச்சினை ஏதேச்சாதிகாரத்துக்கு வழிகோலுவதாகும் என்ற நியாயமான அச்சம், திராவிடப் பெருங்குடி மக்களின் உள்ளத்தைக் குடைந்து வந்ததோ, அந்தப் பிரச்சினைக்கு மிகச் சாதாரண அரசியல்வாதி போல அல்ல, மக்களின் மனதினை அறிந்தும் மதித்தும் நடந்திடும் மாபெருந் தலைவர் என்ற முறையிலே, தக்கதோர் தீர்வுகாண முன்வந்த, பண்டித நேரு. தமது வாக்குறுதிக்குச் சுவையும் பயனும் ஏற்படத்தக்க செயலை மேற்கொண்டாரா? இல்லை!
இந்தி பேசாத மக்களின் கருத்தறிய, ஏதேனும் முயற்சி எடுத்துக் கொண்டாரா? இல்லை.
இந்தி பேசாத மக்களின் கருத்தறிய என்ன வழி, என்றாவது கலந்துபேசினாரா? இல்லை.
இந்தி பேசாத மக்கள், இப்போது இந்தியை ஏற்றுக் கொண்டு விட்டனரா? இல்லை.
இந்தி குறித்து முடிவுகட்டாமல், சும்மாவிடப்பட்டதா? இல்லை.
நேரு பேசினார், நேசம் சொட்டச் சொட்ட; குடிஅரசுத் தலைவர், தமது ஆணையின் மூலம் தமிழரின் வாழ்வை, பதைக்கப் பதைக்க வெட்டுகிறார். 1965-க்குப் பிறகு, இந்திதான் ஆட்சிமொழி, அறிவீர், என்று அறைகிறார்.
இந்தி பேசாத மக்களைக் கேட்பேன்- இந்தி பேசாத மக்களைத் தான் கேட்பேன்; இந்தி பேசும் மக்களைக் கேட்கத் தேவையில்லை- கேட்கப் போவதில்லை-என்று பண்டிதர் கூறினார்-அவருடைய சொல்லுக்குக் கிடைத்த மதிப்பு, வாக்குறுதிக்குக் கிடைத்த மரியாதை என்ன? பாபு இராஜேந்திரபிரசாத், பிடி சாபம்! என்று கூறிவிட்டார்! நேருவின் முகத்தில் கரி பூசிவிட்டார்! துடைத்துக் கொண்டு விடுவோம் என்று, பண்டிதர் எண்ணிக்கொள்ளக் கூடும். ஏனெனில், அது அவருக்கு மிகச் சாதாரணமான, 'அதிகார வரம்பு' பற்றிய பிரச்சினையாக இருக்கலாம். நமக்கோ? உயிர்ப் பிரச்சினை யாயிற்றே!
அவ்வப்பொழுது இருக்கும் ஆற்றலை மட்டுமல்ல, அவனி யிலுள்ள அறவோர் இன்று மட்டுமல்ல, பிறகோர் நாளும், என்ன கூறுவர் என்பதற்கு அஞ்சி, ஆட்சி நடத்துவதே அறவழி.
வலிவு கரத்திலே 'சிக்கிவிட்டதாலேயே, வழிப்பறி நடத்தி விடலாம் சிலகாலம், சிலரிடம், ஆனால், அவனை வீரனென்று, எவரும் கூறார். வெற்றியும், இறுதிவரை இருந்துவிடாது.<noinclude></noinclude>
cg5x0kxx2g9cvhlsz5weurfxpya9c46
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/139
250
641767
1928547
1927790
2026-04-30T05:50:59Z
Rabiyathul
5890
+ மேலடி
1928547
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||115}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
115
பண்டித நேரு இந்த அறிவினைப் பெற்றவர். எனவேதான், பண்புடன் பேசுகிறார்; அறநெறி நிற்கிறார், என்றெண்ணி அகமிக மகிழ்ந்தோம்.
ஆனால், பாராளுமன்றத்தில், பலருடைய கைதட்டுதலைப் பெற்ற நிலையில், தாம் பேசிய பேச்சினைத் துச்சமென்று கருதும் தன்மையில், கொடுத்த வாக்குறுதியைக் குப்பைக் கூடைக்குத் தூக்கி எறியும் விதத்தில், குடிஅரசுத் தலைவர், இந்தி பேசாத மக்களின் கருத்துப்பற்றி ஏதும் கூறாமல், ஆணை பிறப்பிக்கிறார். இந்திதான் ஆட்சிமொழி 1965-ல் என்று நேரு பண்டிதர், வாயடைத்துக் கிடக்கிறார். வேதனையும் வெட்கமும் விலாவைக் குத்தவில்லையா?
பூ! இது என்ன பிரமாதம்! பாண்டுங் மாநாட்டில் ‘பாய்-பாய்'! என்று இருந்தார் சூ-இன்-லாய்; இப்போது பற்களை நறநறவென்று கடித்துக் காட்டுகிறார்-மாலை மாலையாகப் போட்டார் என் கழுத்தில்; இப்போது பல ஆயிரக்கணக்கான மைல்களை கைப்பற்றிக் கொண்டார்! வெட்கம்தான்! வேதனைதான்! ஏதோ டில்லிவரை வராமலிருக்கிறாரே, என்று எண்ணிக் கொள்ளவில்லையா! அதுபோல், குடிஅரசுத் தலைவர் என் தலையில் குட்டுவது போலத்தான் காரியம் செய்துவிட்டார்- என்ன செய்யலாம்! இத்துடன் விட்டால் போதும்! இறங்கு கீழே!! என்று கூறினால் என்ன செய்வது!!- என்ற முறையிலே எண்ணிக்கூட, நேரு, சமாதானம் தேடிக் கொள்ளலாம், சாந்தி பெறலாம். ஆனால் நாம்? நமது கதி என்ன ஆவது?
பண்டித நேரு, கொதிக்கும் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்தி தேடித் தருகிற முறையில், தேன்மொழி பேசிவிட்டு, இந்தித் திணிப்பு நடைபெறும் போது, நம்மை மயக்கத்திலிருந்திடச் செய்து விட்டால், நிலைமை மோசமாகிவிடுமே என்ற கவலை, நமக்கு, அந்த நேரத்திலும் இருந்தது. வாழ்த்தினோம்! வலியுறுத்தினோம்! என்ற அளவோடு நின்றோமில்லை.
"எந்த நேரத்திலும் தீவிரமான அறப்போர் நடத்தவேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என்று இம்மாநாடு கருதுவதால், ஒவ்வொரு கிளைக் கழகமும், ஒவ்வொரு சிற்றூரிலும் இந்தி ஆதிக்க ஒழிப்பு அறப்போரில் ஈடுபட உறுதிக் கொண்ட வர்களின் பட்டியலைத் தயாரித்து, தலைமைக் கழகத்திற்கு அனுப்பித் தரவேண்டும்".
என்ற தீர்மானத்தையும், பூவிருந்தவல்லி மாநாட்டிலே நிறைவேற்றி யிருக்கிறோம்.
1957-ல், திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே. அறப்போர் வீரர்களின் பட்டியல் தயாராக வேண்டும் என்று, கழகம் கட்டளையிட்டது.<noinclude></noinclude>
46n2b86t0nlrau6h011k8n53ahrwtw6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/140
250
641768
1928548
1927791
2026-04-30T05:51:28Z
Rabiyathul
5890
+ மேலடி
1928548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|116||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>116
'திராவிட நாடு' இதழில்
1959 செப்டம்பரில், பூவிருந்தவல்லி மாநாட்டிலேயும் 'பட்டியல் தயாராகட்டும் என்று, கழகம் நினைவுபடுத்திற்று
இரண்டு மாநாடுகளுக்கும் இடையே இருந்த ஆண்டுகளிலே. எத்தனை எத்தனையோ மாற்றங்கள்-எனினும், நமது கழகம், மயங்கி விடவில்லை, மருண்டுவிடவில்லை, அயர்ந்து போய்விடவில்லை.
எந்தச் சமயத்திலும், அறப்போர் அணிவகுப்புகளுக்கான அழைப்பு அனுப்பவேண்டிய நிலைபிறக்கும் என்று, விழிப்புடனேயே, கழகம் இருந்து வந்திருக்கிறது.
இப்போது நேரு, தன் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டியது. தமது கடமை என்பதை மறந்துவிட்டார். நேருவின் பேச்சுக்கு உரிய மதிப்பளிப்பதுதான் முறை என்பதைக் குடிஅரசுத் தலைவர் மறந்து விட்டார்; இந்தி அரசோச்சும் என்று அறிவிக்கும் ஆணை பிறப்பித்து விட்டார்; இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறிந்திடத் துளியும் முயற்சி எடுக்கப்படவில்லை; சட்டம் திருத்தப்படவில்லை; என்ன செய்வது? ஏக்கம், பலன் அளிக்காது! துக்கம் துளைத்திட இடமளித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. துணிவுடன், மனத்தூய்மையுடன், கடமை உணர்ச்சி யுடன், இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்தொழிப்பதன்றி வேறு வேலை தேவை இல்லை என்று கூறும் கட்டம் காண்கிறோம்!
அதென்ன அண்ணா! கட்டம் காண்கிறோம் என்று கூறுகிறாய்! கட்டம் வந்து சேர்ந்துள்ளோம், என்று கூறு, மேலால் என்ன செய்வது என்பதையும் சொல்லு; என்ன வகையான தியாகமும் செய்யத் தயாராக உள்ள இலட்சக்கணக்கான தம்பிமார்கள் உள்ளனர் என்பதை மறவாதே!- என்று, உன் விழி பேசும் வீரத்தை நான் மறந்தேனில்லை! மகிழ்கிறேன்! பெருமை கொள்கிறேன்!
இந்தி பேசாத மக்களுடைய கருத்தை அறிந்துகொள்ளாமல். இந்தியை ஆட்சிமொழி ஆக்குவது அடாத செயல், அதைத் தடுக்கத்தான், நமக்கு ஆவி; தாசராகித் தவித்திட அல்ல!!
திரௌபதை துகில் கட்டுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவன் துச்சாதனன் என்றால், திரௌபதைக்கு என்றையத் தினம் துணி கிடைக்கும்?
திரௌபதைக்கு எந்தத் துணி தேவை என்பதைத் தருமன் கூற உரிமைபெற்றால், ஏதோ ஒரு நாட்டுச் சேலையாவது கிடைக்கக் கூடும்
அருச்சுனனுக்கு அந்த உரிமை இருப்பின் ஒரு அலங்காரச் சேலை வாங்கித் தருவான். துரியோதனனுக்கோ துச்சாதனனுக்கோ அந்த<noinclude></noinclude>
lbla02w8fpcui1i1h5pqwpfv6zztcre
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/141
250
641769
1928550
1927792
2026-04-30T05:52:00Z
Rabiyathul
5890
+ மேலடி
1928550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||117}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
117
உரிமை அளிக்கப்பட்டால், எந்தச் சேலை கிடைக்கும்? இருக்கிற சேலையையே உருவியவர்கள் அல்லவா, அவர்கள்!
அதுபோன்று இருக்கிறது. அரசியல் ஆதிக்கத்தைப் பறித்துக் கொண்டுள்ள வடவர், இந்தி பேசும் மக்கள், பார்த்து. நமக்கு எந்த மொழி ஆட்சிமொழி என்று முடிவுகட்டுவது.
வைதிகக் கலியாணம் போலல்லவா, அவர்களின் நடவடிக்கை இருக்கிறது. பெண்ணிடத்திலே ஒரு வார்த்தை கூடக் கேட்காமல். விடியற்காலை கணவனைக் கொண்டுவந்து உட்காரவைக்கும் நேரத்தில், அவனுக்கு ஒரு கால் நொண்டியாக இருந்து. சாய்த்தபடி வந்தால், பார்த்து, மணப்பெண் கண் கலங்கி, “என்ன? ஒரு கால் நொண்டிபோல் இருக்கிறதே?" என்று தோழியிடம் கேட்டால், "இல்லை; வாழைப்பழத் தோலை மிதித்தார்-வழுக்கிக் கீழே விழுந்தார்-வேறொன்றுமில்லை" என்று பொய்பேசி, கழுத்திலே தாலி கட்டிய கதை போலல்லவா இருக்கிறது.
வடநாட்டு இந்தி வெறியர்கள், எந்த அளவுக்கும் துணிவார்கள் என்பதை விளக்கிட, இந்தப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளில், அடுக்கடுக்காகப் பல நிகழ்ச்சிகளைக் காட்டலாம்; காட்டிக் கொண்டு தானே வருகிறோம்; கட்டுண்டு கிடக்காதவர்கள், கண்ணியத்தை இழந்திடா திருப்பவர்கள், உணருகிறார்கள், உள்ளம் வெதும்பிக் கிடக்கிறார்கள். சென்ற கிழமை வடவர், காங்கிரசுத் தலைவர் சஞ்சீவி ரெட்டியாரிடமே இந்த வெறியைக் காட்டினரே!!
பண்டித நேரு. பாரதத் தலைவரானார்-எதற்கு? நமது இந்தி ஆதிபத்தியத்தை நிலைநாட்ட! அதற்கு அவர் கருவியாக இருக்க வேண்டுமேயன்றி, மற்றவரின் உரிமை-மற்றவர் கருத்தறிதல்-போன்றவை களிலே ஈடுபட அல்ல!!-என்று, இந்தி வெறியர்கள் கருதுகிறார்கள்.
பண்டித நேருவுக்குப் பலமளித்திருப்பதே. இதற்காகத்தான்!-என்று எண்ணுகிறார்கள்.
இந்தக் காரியத்தை நிறைவேற்ற, நேரு. தனக்கு அளிக்கப் பட்டுள்ள இடம், வலிவு ஆகியவற்றைப் பயன்படுத்தத் தவறினால். அவரை வீழ்த்தவும், அவர்கள் தயங்கமாட்டார்கள்.
இந்துமத ஆதிக்கத்துக்கு முழுக்க முழுக்கப் பயன்படுவார் மகாத்மா என்று நம்பி. அவரிடம் 'பயபக்தி விசுவாசம்' காட்டி வந்த இந்துமத வெறியர்கள், காந்தியார் 'ராமும்-ரஹீமும்' ஒன்றேதான் என்று கூறுமளவு பெருங்குணம் காட்டியதும், இனி இவர் நமக்காக இருக்கமாட்டார்!<noinclude></noinclude>
1qdu245bm09y5rzc9p94iygbgfm8ie4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/142
250
641770
1928552
1927793
2026-04-30T05:52:30Z
Rabiyathul
5890
+ மேலடி
1928552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|118||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>118
'திராவிட நாடு' இதழில்
இவரால் நமது ஆதிக்கத்துக்கே ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்!- என்று கூறி, வெறிகொண்டு. அவரை இழித்தும் பழித்தும். பேசினார்களே!
தம்பி! அப்படிப்பட்ட வெறி பிடித்தலைந்த கோட்சே எனும் பார்ப்பனன், உலக உத்தமர் காந்தியாரைச் சுட்டே கொன்று விட்டானே! அதைவிட இழிதன்மைக்கும் கொடுமைக்கும் வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்.
சோவியத் தலைவரும், அமெரிக்க அதிபரும், எகிப்துத் தலைவரும், இன்னபிறரும், காந்தியாரின் 'சமாதி'யில் மலர்தூவி, அஞ்சலி செய்கிறார் களே, தம்பி, அப்போது, அவர்கள், பாரதத்தின் விடுதலைக்காகக் காந்தியார் நடத்திய ஒத்துழையாமை, உப்புச் சத்தியாக்கிரகம், தண்டி யாத்திரை, போன்றவைகள் பற்றியா. எண்ணிக்கொண்டு நிற்கிறார்கள்! நிச்சயமாக. அந்த எண்ணம் எழாது!!
எவ்வளவு இழிதன்மை நிறைந்த கொடியவர்கள் இந்த நாட்டிலே! நாடு மீள வழி காட்டினார்- அவரை அல்லவா. மதவெறி காரணமாகச் சுட்டுக்கொன்றனர்! மதம், வெறி அளவாகி, யாரைக் கண்கண்ட தெய்வம் என்று கோடிக்கணக்கானவர்கள் கொண்டாடினரோ, அவரையே அல்லவா, மத ஆதிக்கத்துக்கு ஆபத்து ஏற்படுத்துகிறார் என்பதறக்காக, கொலை செய்தனர்; என்று எண்ணுகிறார்கள், தம்பி! எண்ணியதும், ஆயிரத்தெட்டு அணைக்கட்டுகளைக் காட்டினாலும் நூற்றுக்கணக்கான புத்தம்புதுத் தொழிலிடங்களைக் காட்டினாலும், இவைகள் நல்ல வளர்ச்சிக்கான அறிகுறிகள், உண்மை; நல்ல நாடு என்பதைக் காட்டும் சான்றுகள்; ஆனால்...!!-என்று எண்ணிப் பெருமூச்செறிகிறார்கள்-கண் கசிகிறது-ராஜ கட்டத்தை நினைக்கிறார்கள்- காடு அல்லவோ இது என்று எண்ணிக் கடுங்கோபம் கொள்கிறார்கள்.
காந்தியாருக்குக் கிடைத்து, மூன்று குண்டுகள்-மார்பில்! ஆதிக்கம்பெற அலைவோர், அபலை எனினும், அருளாளன் எனினும், வழிகாட்டி எனினும், வாழ்வளித்தவன் எனினும், யாராக இருப்பினும், தமது ஆதிக்கத்தை எதிர்த்து ஒழிப்பான் என்று, துளி சந்தேகம் தோன்றினாலும், ஈவு இரக்கம் காட்டாமல் தொலைத்து விடுவார்கள்.
நேரு பண்டிதர், இந்த உண்மையை உணராமலிருக்க முடியாது! இந்தி ஆதிக்கக்காரர்களைத் தீவிரமாக எதிர்த்து நின்றிட, அறம் அவரை அழைக்கிறது; எனினும், அச்சம் அவரைத் தடுத்திடவும் செய்கிறது.
எனவே தான், வீரதீரமாக இந்தித் திணிப்பு அறவே கூடாது என்று பேசிய, ஆற்றல் நிறைதலைவன். பேச்சைத் தொடர்ந்து செயலாற்ற முன்வரவில்லை. எந்தச் சமயம் பாய்வார்களோ, பழிக்கஞ்சாப் பாதகர்கள். என்று பயப்படுகிறார் என்றே தோன்றுகிறது.<noinclude></noinclude>
8t355y9h8yyt8eythepxl68nc9bzo5g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/143
250
641771
1928553
1927794
2026-04-30T05:53:01Z
Rabiyathul
5890
+ மேலடி
1928553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||119}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
119
சம்பத்தைக் கேட்டேன், "ஆமாம்! பண்டித நேரு இவ்வளவு வெளிப்படையாக. இந்தி வெறியைக் கண்டித்துப் பேசினாரே. இந்தி ஆதிக்கக்காரர்கள், என்ன கூறினார்கள், அதுபற்றி?" என்று ''அதை ஏனண்ணா! கேட்கிறீர்கள்! பாராளுமன்ற ஓய்விடத்தில் அமர்ந்து, அவர்கள், நேருவை, நாக்கில் நரம்பின்றி ஏசிக்கொண்டி ருந்ததையே கேட்டேன்" என்று கூறினான்.
வீரர்!''
"வீராவேசப் பேச்சு"
"பேச்சுத்தானே! பேசட்டும்!"
"வீராவேசப் பேச்சுக்கூடப் பேசாமல், வேறு என்ன செய்வார்.
"யாரிட்ட போதனையோ, இப்படிப் பேசினார்"
"எதிலாவது அவருக்கு விருப்பம் ஏற்பட்டால். அது போதை அளவுக்குப் போவதுதானே, வாடிக்கை".
"பேசட்டும்-ஆனால் சட்டத்தைத் தெரிந்தல்லவா பேச வேண்டும்" ''சட்டம்தானே! நான் இட்டது சட்டம், என்கிறார்'.
''சொல்வார்! சொல்வார்! நாம் சொரணையற்றுக் கிடந்தால்".
தம்பி! இப்படியும். இதனைவிடக் கடுமையாகவும், அன்றே இந்தி வெறியர்கள். நேருவின் பேச்சைக் கேட்டு, குமுறிக் குளறிக் கொட்டினார்களாம்!!
இந்த விதமாக ஆய்ந்தறிய நமது மாநில அமைச்சர்களுக்கு நேரமும் இல்லை-பழக்கமும் ஏற்படவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், ஒன்றே ஒன்று-நாங்கள் 150! நீங்கள் 15!! எங்கள் பக்கம் பஸ் முதலாளிகள்: உங்கள் கட்சியில், டிரைவர் கண்ட்ரக்டர்! எங்கள் பக்கம் மிட்டா மிராசு! உங்கள் பக்கம் ஏர் கலப்பை! இதுதான்!!
இந்தியா? - படியேன்!
என்ன கஷ்டம்? - என்று
ஒவ்வொரு அமைச்சரும், ஒன்பது மொழி படித்துத் தேறிய வித்தகர் போலப், பேசிவிட்டு வருகிறார்கள்.
இப்படி இப்படி நேரு பேசினார்- குடிஅரசுத் தலைவரின் ஆணை இதற்கு மாறாக, முரணாக இருக்கிறது- அதனை எதிர்த்துத்தான், தி.மு. கழகம் அறப்போர் நடாத்தப்போகிறது என்று எவரேனும் கூறினால், எல்லாமறிந்தவர் இருக்கிறாரே. இந்த நாட்டு முதலமைச்சர், அவர் இளிக்கிறாராம். செய்யட்டுமே! - என்று கூறி என்ன துணிவினால்?<noinclude></noinclude>
jdzslfhu1mw7faeocaab75j6i3vg4dn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/144
250
641772
1928554
1927795
2026-04-30T05:53:31Z
Rabiyathul
5890
+ மேலடி
1928554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|120||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>திராவிட நாடு
போலீஸ் இருக்கிறது, ஏவிச், செம்மையாக அடிக்கச் சொல்லலாம் என்ற துணிவு! அந்தப் போலீஸ் துறையினருக்கு மட்டுமென்ன? இந்திமொழி
வந்து, ஆலாத்தி எடுக்கப் போகிறதோ!!
''பெயர்?"
"பாரதிதாசன் என்கிற பாண்டுரங்கம்"
"எதற்காக,வந்தீர்?"
"தங்களைப் பேட்டி கண்டு மனு கொடுக்க".
''மனுவா?"
"ஆமாம்! நான், சப்-இன்ஸ்பெக்டராக நீண்டகாலமாக இருந்து வருகிறேன். இப்போது மேல் உத்தியோகம் பார்க்க விரும்புகிறேன்"
உ
''உம்! மேல் உத்தியோகமா? சரி! தகுதி; கூறும்'
"எட்டு மாவட்டங்களிலே கொட்டமடித்துக் கொண்டிருந்த, கொலைக்காரக் கோபாலசாமியைப் பிடித்தது. நான்தான்)
"அப்படியா? பிறகு...?
"சூதாட்ட மடம் நடத்திய சுப்பண்ணா கோஷ்டியை, சிவராத்திரி அன்று,சுடுகாட்டு மண்டபத்திலே, சுற்றி வளைத்துப் பிடித்தது. நான்தான்! காதைப் பாருங்கள்! அந்தக் காலிகடித்துத் துண்டாக்கி விட்டான்".
''சரி! சரி! வேறே?"
'கடமை தவறாதவன். ஒரு கருப்புப் புள்ளியும் கிடையாது".
"இது கிடக்கட்டும். மேல் உத்யோகம் வேண்டும் என்கிறாயே! தகுதி வேண்டுமே, அதற்கு!! இந்தி தெரியுமா?"
"இந்தி மொழியா..."
"என்னய்யா இழுத்துப் பேசுகிறீர்! இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி! அதுவே தெரியாதா உனக்கு. தூத்தூதூ! இந்திமொழி தெரியாத ஆளுக்கு. மேல் உத்யோகமா? இந்த உத்யோகமே, இருக்கப் படாதே! திருடனைப் பிடித்தேன். சூதாடியைப் பிடித்தேன் என்று மளமளவென்று வீரப்பிரதாபத்தை எல்லாம் கொட்டிக் காட்டினாயே! இந்தி தெரியாத ஆள், இதெல்லாம் தெரிந்து என்ன பலன்? போ! போ! போய், இந்தியில் பரீட்சை எழுது! மார்க்கு வாங்கு அந்தத் தகுதிபெற்ற பிறகு, வா! போ! போ!!"
***<noinclude></noinclude>
exe5kn78ccl1raim2xfxlc0q95md6m3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/145
250
641773
1928555
1927796
2026-04-30T05:54:02Z
Rabiyathul
5890
+ மேலடி
1928555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||121}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
121
தம்பி ! நாம், தடுத்து நிறுத்தாவிட்டால், இந்தி ஆதிக்கம் ஏற்பட்டு விடும்; ஏற்பட்டுவிட்டால் போலீசுக்கும் இதே கதிதான்! அவர்கள் தானே அடிக்கப் போகிறார்கள்! பரவாயில்லை! தாங்கிக் கொள்வோம் தம்பி ! நம் இனத்தின் மீது (போலீசில் உள்ளவர்களையும் சேர்த்துத் தான்) இந்தி ஆதிக்கம் செலுத்த வருகிறது; அந்தத் தாக்குதலைவிட, போலீஸ் தடி கொண்டு தாக்குவது கொடுமையானதல்ல! தடி உடலைப் புண்ணாக்கும், உயிரைக் குடிக்கும்: இந்தியோ, மனதைப் புண்ணாக்கும். மரபினை அழித்திடும்!
இதைக் கண்டதால் ஏற்பட்ட மனக் குமுறல்தான், தம்பி! ஏதாவது வம்பு வல்லடி வேண்டும் வேண்டும் என்று அலையும் பழக்கமற்ற, தி.மு.கழகத்தை. போராட்டம் நடத்தியே தீரவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது.
அறப்போரில் ஈடுபட்டு, அடக்குமுறையால் நம் குருதி கொட்டப் பட்டால், அந்தக் குருதி கலந்த மண் இருக்கிறதே, தம்பி! அதைவிடப் புனிதப் பொருள் வேறு இல்லை.
அண்ணன்,
10.7.60<noinclude></noinclude>
jabk4ceyhue0okwsr13lk899f0589nd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/146
250
641774
1928556
1927797
2026-04-30T05:54:33Z
Rabiyathul
5890
+ மேலடி
1928556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|122||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கடிதம்: 111
தம்பி!
சட்டம் வழக்கு மன்றத்தில்
தொழிலாளர் வேலை நிறுத்த வழக்கு-
ஆப்பிரிக்காவில் சட்டம்.
வழக்குமன்றம் சென்றாக வேண்டும். அழைப்பு அனுப்பிவிட்டார்கள். பெற்றுக்கொண்டேன். செல்லுகிறேன், ஆனால், துணையின்றியும் அல்ல! உள்ளத் தூய்மையற்ற நிலையிலும் அல்ல!!
தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யும்படி, தூண்டி விடும் முறையில் பேசினோம் என்று எடுத்துக்காட்டி, எனக்கும் தம்பி சம்பத்துக்கும், தொழிலாளர் தலைவர் அந்தோணிப்பிள்ளை. கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் கலியாணசுந்தரம், சுந்தரம், சிந்தன் ஆகியோர்மீதும் தொடரப்படும் முறையில், வழக்குத் தொடரப்படுகிறது.
அவசரச் சட்டம் அல்லவா அமுலில் இருக்கிறது. அதன் ஐந்தாம் பிரிவின்படி, நாங்கள் பேசியது குற்றம் என்று கூறி, என்ன பதில் அளிக்கப்போகிறீர்கள்? வந்து நில்லுங்கள் வழக்குமன்றத்தில் பதில் சொல்லுங்கள்!- என்று கேட்டிருக்கிறார்கள்.
ஓராண்டு சிறைவாசமாம்-ஆயிரம்ரூபாய் அபராதமும் விதிக்கலாமாம். வழக்கறிஞர்களாக உள்ள நண்பர்கள், சுட்டிக் காட்டுகிறார்கள்.
வழக்கு, பொதுவாகக் கூறுகிறேன், இந்த வழக்குப்பற்றி அல்ல; இன்னவிதமாக நடந்தால். இன்னின்ன காரியத்தைச் செய்தால், அதனால் இன்னின்ன வகையான கேடுபாடுகள் விளையும்: ஆகவே, கேடுபாடுகள் விளைவதற்குக் காரணமாகவும், உடந்தையாகவும் இருந்த குற்றத்துக்காக, அவ்விதமான குற்றம் செய்தால் என்ன தண்டனை தரப்படவேண்டும் என்று சட்டம் சாற்றுகிறதோ, அந்த முறைப்படி தண்டனை தருவதற்கு முன்பு, குற்றம் செய்ததாகக் கருதப்பட்டவர்களை மன்றத்தில் நிறுத்தி வைத்து, விசாரிப்பது பிறகு தீர்ப்பளிப்பது-என்ற முறையில் இருந்து வருகிறது.
பசி ஐயா! நாலு நாட்களாகப் பட்டினி! பாதை ஓரத்திலே இருந்தது பொட்டலம்! கமகமவென மணம் வீசிற்று! எடுத்தேன், பிரித்தேன். தின்றுவிட்டேன்!! - என்று சோற்று மூட்டையைக் களவாடித் தின்றவன்,<noinclude></noinclude>
q8leru79zwst1l3l4lts5g0kfa8atgv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/147
250
641775
1928557
1927798
2026-04-30T05:55:04Z
Rabiyathul
5890
+ மேலடி
1928557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||123}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
123
கூறக்கூடும். உருக்கமுடன்; கேட்போர் மனம் உருகும் விதமாகக்கூட. ஆனால் வழக்கு மன்றம்,
உண்மையாக அவனுக்குப் பசியா? நாலு நாட்கள் பட்டினியா?
என்று கேட்காது-அறிந்துகொள்ள முயற்சி எடுத்துக் கொள்ளாது.
"அவன், அந்தச் சோற்று மூட்டையை எடுத்தானா? பிரித்தானா? தின்றானா? அந்த மூட்டை வேறொருவனுடையதா?" இவைபற்றித் தான் கேட்கும், அறிந்துகொள்ளும், அறிவிக்கும், அந்தக் கட்டம் முடிந்ததும், அந்தச் செயல் குற்றம் என்று கூறும் கட்டம். பிறகு அந்தக் குற்றத்துக்கு என்னவிதமான தண்டனை தரப்படலாம் என்ற சட்டம் காட்டப்படும் கட்டம்; பிறகு தண்டனை அளிக்கப்படும் கட்டம்! வழக்கு மன்றத்தின் வேலை அவ்வளவோடு முடிவடைகிறது தீர்ப்பைக் கூறிவிட்டுக், கசியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, குமுறிஎழு பெருமூச்சை அடக்கிக்கொள்ள, வழக்கு மன்றத் தலைவர், தமது தனி அறைக்கோ, மாளிகைக்கோ செல்லலாம்-மன்றத்திலே, சட்டம் காட்டும் வழிதான் நிற்கவேண்டும்.
மாளிகையில் சென்று, மலர்விழியாளைக் கண்டும் மகிழ்ச்சி பெறாது. குழலையும் யாழையும் மீட்டி நிற்கும் குழவிகளிடமும் கொஞ்சாமல், தீர்ப்பளித்தவர். கவலை குடையும் உள்ளத்தினராகி உழலக் கூடும். ஆனால், மன்றத்தில், அவரைக் கட்டுப்படுத்துவது, சட்டம்.
"நேரம் போவதே தெரியவில்லையா? எந்தக் கோட்டையைப் பிடிக்க, இவ்வளவு பலமான யோசனை! எழுந்திருங்கள், சாப்பிட".
என்று அன்புக்கரசி அழைக்கக்கூடும். பசியில்லை என்று சுருக்கமாக, அவர் பதில் அளிக்கக்கூடும்; அளித்துவிட்டு, வேதனை கலந்த ஒரு சிரிப்பொலி எழுப்பக்கூடும். உள்ளம் கூறும்,
"உனக்குப் பசி இல்லை! அவனுக்குப் பசி!!
நீ, தீர்ப்பளித்தாய்!
அவன் திருடினான்!
உனக்கு உணவு காத்துக் கிடக்கிறது!
அவனைப் பசி விரட்டிற்று!
நீ,நீதிபதி!
அவன் குற்றவாளி!!<noinclude></noinclude>
o07eb2u8o520cjvk3u1ed5eov9hgnr5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/148
250
641776
1928558
1927799
2026-04-30T05:55:34Z
Rabiyathul
5890
+ மேலடி
1928558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|124||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>124
நீ மாளிகையில்!
அவன், சிறையில்!!
'திராவிட நாடு' இதழில்
தீர்ப்பளித்தவர். திகைக்கக் கூடும். உள்ளம் கூறுவனவற்றைக் கேட்டு. மாளிகையில்! ஆனால், மன்றத்திலோ, அவருக்குச் சட்டத்தின் பிடி! பிரிப்பார், பிடிப்பார், தண்டிப்பார்
வேறென்ன செய்யமுடியும்? உணர்ச்சிகளுக்கு இடமளித்துச், சட்டத்தை மறந்தால், சமுதாயம், என்ன ஆகும்? என்று கேட்போர். பலர் இருக்கிறார்கள். தம்பி அவர்கள் என்னைப்பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளப் போகிறார்கள்-நான், வழக்குமன்றங்கள், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கத்தான் உள்ளன. நடக்கத்தான் வேண்டும். என்ற பொது நீதியை மறுப்பவனல்ல. வெறுப்பவனல்ல. நான் எண்ணிக்கொள்வதும், எண்ணிப் பார்க்கும்படி மற்றவர்களைக் கேட்டுக்கொள்வதும், வேறு ஒன்றினைப் பற்றி- அடிப்படையான ஒரு பொருள் பற்றி!
சட்டம் இயற்றப்படும் விதம்என்ன? என்பது பற்றித்தான் நான் எண்ணிப் பார்க்கச் சொல்கிறேன் - வழக்குமன்ற முறை சரியா அல்லவா? என்பதுபற்றி அல்ல.
-
தொல்காப்பியம் கூறுகிறது, வேறோர் பொருள் பற்றிய விளக்கமளிக்க, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப"
அஃதேபோல, இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், ஏதோ ஒரு நிலைமையைச் சீர்படுத்த, குற்றம் எழாதிருக்கச் செய்ய முறைப்படுத்தத் தான். இயற்றப்படுகின்றன. ஆனால், இயற்றும் சட்டம், இயற்றும் நிலை பெற்றோரின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள என்றால், சட்டம் என்பது பெயரளவுக்குத்தான் பொருந்தும்-ஆனால், நீதிக்கும், அந்தச் சட்டத்துக்கும் தொடர்பு அற்றுப்போய்விடும்.
கதை படிக்கக் கேட்டிருப்பாயே, தம்பி வேளைக்கு ஒரு ஆள் தரவேண்டும். என் பசி போக்கிக்கொள்ள, தவறினால் ஒரே நாளில் ஊரையே அழித்துவிடுவேன் என்று கட்டளையிட்ட பூதம்பற்றி - சிறியவனாக இருந்தபோது.
பூதம்கூட சட்டம்தான் இயற்றிற்று! ஆனால், யாருக்காக? தனக்காக! சட்டம் நீதியை உள்ளடக்கியதாகவா இருக்கிறது? பித்தனும் அவ்விதம் பேசத் துணிந்திட மாட்டான்.
தம்பி! மழை காலத்தில், சீமானின் தூக்கத்தையும் சீமாட்டிகளின் களியாட்டத்தையும் கெடுக்கும் விதமாகக் கத்திக்கிடக்கும் தவளை<noinclude></noinclude>
85erj8z9n365cts23naldnce2s9720g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/149
250
641777
1928559
1927800
2026-04-30T05:56:05Z
Rabiyathul
5890
+ மேலடி
1928559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||125}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
125
களை, உழுது பிழைக்கும் ஊழியர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து கல்லால் அடித்துக் கொன்றாக வேண்டும் என்று சட்டம் இருந்தது, புரட்சிக்கு முன்பு, பிரான்சில்!
மீறினோர், சட்டப்படி விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். ஆனால், இதிலே கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா தம்பி! தண்டனை பெற்றோரின் தொகை வளர வளர, அந்தச் சட்டம் தகர்ந்தது சட்டம் மட்டுமல்ல, அத்தகைய சட்டத்தைக் காட்டிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த பிரபுக்களின் பிடி! மன்னனின் மணிமுடியே பறிக்கப்பட்டது!! ஆனால், அது, பிறகு, நடந்த கதை! நெடுங்காலம், சட்டம்தான் மேலிடத்தில்! தண்டனை தந்தபடி!!
-
ஐரோப்பாக் கண்டத்தில், ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு. சில நாடுகளில் சட்டம் ஒன்று இருந்தது; அதை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட ஒரு கதையைப் படித்திருக்கிறேன்- இப்போதல்ல; நேரம் ஏது! நீ, விட்டால்தானே!!-சில ஆண்டுகளுக்கு முன்பு.
பண்ணையாள், திருமணம் செய்துகொண்டால், 'முதல் இரவு அவனுக்கு அல்ல! பண்ணையாருக்கு!!
சட்டம்!
ஆமாடா, தம்பி! ஆமாம்! அப்படிப்பட்ட 'சண்டாளத்தனம்-
“குட்டி யார்? மான்விழி! சிற்பி செதுக்கிய சிலைபோன்ற உடல்! பருவக் கருவமிகுந்த, வயது! யார் இந்தக் காட்டு ரோஜா?''
"என் வீட்டுக்கு வந்தவள்-என்..."
"மனைவியா! பலே! பலே! வேறெந்த வேலையிலும் திறமை இல்லாவிட்டாலும், பயலே! உனக்கு, 'உருப்படி'யைத் தேடிப் பிடிக்கும் திறமை மட்டும் நிரம்ப இருக்கிறது. எங்கு கிடைத்தாள், இந்த எழிலரசி?"
''இவளை நான் திருமணம் செய்து கொண்டேன்".
"அது தெரிகிறதடா; முட்டாளே! தேடிக் கிடைக்காத பொருள்... உனக்கு எப்படிடா கிடைத்தது?"
"திருமணம்..."
"செய்து கொண்டாய்; ஆமாம்! நன்றி! மிக்க நன்றி! போய்வா!"
தம்பி! அவன் போய்விடவேண்டும் வெளியே! அவள் தங்க வேண்டும். மாளிகையில்! முதல் இரவு அங்குதான்! பிறகு. சீமான் வேறு 'சிட்டு' தேடிக் கொண்டால், இந்தக் கசங்கிய மொட்டு, வீசி<noinclude></noinclude>
5zrurwc1cniumchrf7ilw9bj7otxv5i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/150
250
641778
1928560
1927801
2026-04-30T05:56:35Z
Rabiyathul
5890
+ மேலடி
1928560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|126||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>126
'திராவிட நாடு' இதழில்
எறியப்படும்! கட்டியவன் அழைத்துச்செல்வான். தம்பி! இது சட்டமாக இருந்தது!!
சீமான். 'முதல் இரவு' வேண்டாமென்று கூறி, அதற்கு ஈடாக, ஊழியக்காரனிடம், பணம் பெறுவதுமுண்டு.
''செச்சே! இழுத்துச் செல்லடா. சப்பை மூக்கை/ 'முதல் இரவுக்கு' ஈடாக, பணம் கட்டு" - என்று கேட்பதுண்டு, சீமான்!
"ஆண்டவனே! அவள் அழகற்றவளாக இருந்ததால், நான் மானமற்றவனாகாது இருந்திட முடிந்தது" என்று கூறித் தொழுது, பணம் அழுதுவிட்டுப், பணியாள் செல்வான்.
கற்பைச் சூறையாடுவதல்லவா இது? என்று. இன்று எவரும் கேட்பார் கொதிப்புடன், அன்று, அது சட்டம்!! எதிர்ப்பது,பாலம் எதிர்த்தால். அதற்கு வேறோர் சட்டம்!1 கடும் தண்டனை!!
ஆனால். தம்பி! மனிதகுலத்தின் மாண்பினையே அழித்திடத்தக்க அந்தச் சட்டம், காலம் கிளப்பிய சூறாவளியால், சுக்கு நூறாயிற்று.
காலம், சூறாவளியைக் கிளப்பிவிடுமுன்பு, குறிகளைக் காட்டத் தவறவில்லை ஆதிக்கக்காரர்கள் குறிகளைக் காணவில்லை; கண்ட பிறகும் கருத்திலே, தெளிவு ஏற்படவில்லை; இறுமாப்பு அவர்களைப் பிடித்தாட்டிற்று; அவர்கள் வாழ்ந்த கோட்டைகளின் இடிபாடுகள் கூட இன்று இல்லை!
'இப்படி ஒரு சட்டமா?' என்று, துக்கம், வெட்கம், துளைத்திடும் நிலையில், கேட்டிருப்பான் ஒரு காளை! அவனைக் கண்டதுண்டமாக்கிக். காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்கிவிட்டு, அவன் மணமுடித்த கட்டழகியை அந்த மனிதக் கழுகு கொத்தி மகிழ்ந்திருக்கும்.
இதுதான், சட்டமா? என்று எதிர்த்திருப்பான் ஒருவன். அவன் தலை உருண்டிருக்கும்
நீ இட்டது, சட்டமா? என்று, எதற்கும் துணிந்து வேறொருவன் கேட்டு, வெட்டுண்டு மாண்டிருப்பான்.
யாருக்காக ஐயா! இந்தச் சட்டம்?
யாரைக் கேட்டுக்கொண்டு இந்தச் சட்டம்?
என்று, விளக்கம் கேட்டிருப்பான், வேறொருவன்; அவன் 'இராஜத் துரோகி'யாக்கப்பட்டுத், தூக்குமரத்தில் தொங்கவிடப்பட்டிருப்பான்.
இவை யாவும், முறைப்படி விசாரணை நடத்தி, வழக்குமன்றம். அளித்த தீர்ப்புகள்!!<noinclude></noinclude>
5k7jkb1tolyy40jtwy59gv3hfjatitd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/151
250
641779
1928561
1927802
2026-04-30T05:57:06Z
Rabiyathul
5890
+ மேலடி
1928561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||127}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
127
வழக்குமன்றங்களை அல்ல; தீர்ப்பு அளித்தவர்களை அல்ல; விசாரணை முறையை அல்ல; சட்டத்தின் இலட்சணத்தைப் பற்றியே. கேட்கலாயினர்! சூறாவளி கிளம்பிற்று சுக்குநூறாயிற்று, அக்ரமக்காரர் ஆதிக்கம்
இன்று கேட்டால், கைகொட்டிச் சிரிப்பார்கள் அல்லது கோபத்தால் கண்கள் கொவ்வை போலாகிவிடும்; அப்படிப்பட்டவிதமான சட்டங்கள் பல இருந்திருக்கின்றன; மனித குலம் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறது! மாவீரர், பலர் மடிந்தனர்; பச்சை இரத்தம் பரிமாறிய பிறகு. சட்டம் காட்டிக் கொட்டமடித்து வந்த சழக்கர்களின் ஆதிக்கம், அழிந்துபட்டது.
மூன்று 'இராஜத் துரோகிகள்' வழக்குமன்றம் இழுத்து வரப்பட்டனர்; அழைத்து வந்திருக்கிறேன் மூன்று குற்றவாளிகளை என்று. அறிவித்தான், அமுல் நடத்தும் அதிகாரி. கனல் உமிழும் விழி வழக்குமன்றத் தலைவருக்கு விவரம் அறியாததால், திகைப்பு மூவருக்கும்.
"எங்கிருந்து இவர்களைப் பிடித்துவந்தாய்?'
"இதோ நிற்கிறானே, முதலில், இவன் நடத்தும் உணவு விடுதியில்" "உணவு விடுதியிலா? என்ன செய்தான், இவன்?" "இராஜத்துரோகம்"
"விளக்கம்".
"இராஜத் துரோகிகள் பதுங்கிக் கிடக்கும் இடங்கள் பற்றிய உளவு அறிந்துசென்று, கையும் பிடியுமாக அவர்களை இழுத்து வந்து. தங்கள் முன் நிறுத்துவது, என் கடமை..."
''ஆம்! கடமை தவறாத அதிகாரி என்று, புகழ்பெற்று விளங்கு கிறாய். என் பாராட்டுதல்"
"நன்றி! மிக்க நன்றி! தங்கள் பாராட்டுதலைப் பெற நான் பாக்கியம் செய்தவன். தங்களின், சட்டம் காக்கும் திறம் இந்த நாட்டுக்கே தனிச்சிறப்பு அளிக்கிறது".
"இவன் செய்ததைக் கூறும். நாம் இருவரும் நமது கடமையைச் செய்கிறோம்',
''உணவு விடுதியில், நமது மன்னரின் படம்.."
''காலஞ்சென்ற மன்னரின்..."<noinclude></noinclude>
an08rcg9m7cqrjlv60634k8ua7b9vef
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/152
250
641780
1928562
1927803
2026-04-30T05:57:36Z
Rabiyathul
5890
+ மேலடி
1928562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|128||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>128
'திராவிட நாடு' இதழில்
''ஆமாம்.. மறந்து போனேன் கூறிட! காலஞ்சென்ற மன்னரின் படம், தொங்கவிடப்பட்டிருந்தது..."
''இராஜத் துரோகம் செய்தவன் என்றீர்..."
"ஆம்! படம். செல்லரித்த நிலையில் இருந்தது".
"செல்லரித்துக் கிடந்ததா? மன்னரின் படமா?"
''முகம், விகாரமாகிக் கிடந்தது; அழுக்கேறிய படம்!''
"அதைப் பலர் வருகிற இடத்தில் தொங்கவிட்டிருந்தான் ...உம்/" "பார்ப்பவர், சிரிக்க! கேலி பேச! இழிவுபடுத்தினான், மன்னரை!" ''மறுக்கிறானா?'
"மண்டைக் கர்வம் பிடித்தவன், மறுக்கவில்லை, விளக்கம் தருகிறான்". "விளக்கம் தருகிறானா, விவேகி. அவனிடம், விளக்கம் ஏன் கேட்டாய்? வீண் வேலை!"
"கேட்டது நானல்ல. இதோ நிற்கிறானே, பக்கத்தில், இவன் கேட்டான்". "என்ன கேட்டான். இந்தத் துரோகி".
"சிறிதளவு விவரமாகப்பேச அனுமதி தாருங்கள். உணவு விடுதி சென்று, இவர்களுக்கு அருகே உட்கார்ந்தபடி. யாரார் என்னென்ன போக்கிலே இருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனித்தபடி இருந்தேன். என்னைக் கண்டதும், ஏதும் பேசாமல் இருந்தனர்- கொஞ்ச நேரம். நானாக, பேச வைத்தேன். வருத்தமாக இல்லையா உனக்கு? என்று கேட்டேன், இவனை. எனக்கென்ன வருத்தம், என்றான்..."
"நாடு துக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறது, மன்னர் படுகொலை செய்யப்பட்டது கேட்டு. இவன்..."
"துளியும் வருத்தப்படவில்லை. துணிந்து எனக்கென்ன வருத்தம்? என்று, என்னையே கேட்டான். நமது மன்னர் படுகொலை செய்யப் பட்டது, தெரியுமல்லவா? என்று கேட்டேன். நான் அவரைப் பார்த்ததுக் கூட இல்லை, என்றான்".
"மன்னரைப் பார்த்ததில்லை என்று கூறினானா! அட! படுபாவி! மன்னன்தானே கண்கண்ட கடவுள்".
"அவ்வளவு இராஜத்துரோகம் இவனுக்கு. இவன், நான் மன்னனைப் பார்த்ததுகூட இல்லை என்று சொன்னதும், இதோ இவன், உணவு விடுதிக்காரன், படத்தைக் காட்டி, இதோ, மன்னர்! என்றான்".<noinclude></noinclude>
jzt520g8iioh768tl5hcwmfwrxs85id
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/153
250
641781
1928564
1927804
2026-04-30T05:58:07Z
Rabiyathul
5890
+ மேலடி
1928564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||129}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
"செல்லரித்த படத்தைக் காட்டி!"
129
"மன்னன் அவ்வளவு குரூபி என்று மற்றவர்கள் எண்ணிக் கொள்ள.."
"இழிவு படுத்தினான்".
"படத்தைப் பார்த்ததும், இந்தப் பயல், நீ, மன்னனை முன்பே அழித்துவிட்டாய்! என்று கூறிச் சிரித்தான். அவன், நானா? செச்சே! செல் அரித்துவிட்டது!! என்றான். அதாவது மன்னனை, மனிதன்கூட அல்ல, கேவலம் பூச்சி புழுக்களே அழித்துவிடும், என்று சபித்தான். இருவரையும், அதே இடத்தில் இராஜத்துரோகி என்று குற்றம் சாட்டி, விலங்கிட்டேன்.."
"இந்த மூன்றாவது ஆசாமி?"
"இவன், இந்த இருவரையும்விட, மோசமானவன் இராஜத் துரோகி களை நான் கண்டுபிடித்துக் கைகளுக்கு விலங்கிட்டு, இழுத்துவருகிறேன். இவன் ஒரு துளிகூடப் பதறாமல், மன்னரையா இந்த மாபாவிகள் இழிவுபடுத்தினார்கள் என்று கொதித்தெழுந்து கூறாமல், இத்தகைய இழிமக்களைக் கண்டுபிடித்த என்னைப் பாராட்டாமல்..."
"என்ன செய்துகொண்டிருந்தான்?''
"காப்பி குடித்துக் கொண்டிருந்தான்!''
"பதறாமல்".
'"அமைதியாக!'
"அழுத்தக்காரன்! மூவருக்கும் மரண தண்டனை!''
தம்பி! ஐரோப்பாக் கண்டத்திலே ஒரு நாட்டின் நிலையை விளக்க, இப்படி ஒரு விசாரணைபற்றி எழுதப்பட்டிருந்தது; படித்திருக்கிறேன்.
மன்னனை இழிவுபடுத்துவது குற்றம்! அதை மறுக்க வேண்டியதில்லை. ஆனால், இந்த மூவர் மன்னரை இழிவுபடுத்தியதாக எடுத்துக் காட்டிட, என்ன கிடைத்தது. கவனித்தாயா?
அது போதுமானதாக இருந்தது, மரணதண்டனை தர.
இப்படிக்கூட இருக்குமா நடக்குமா? சட்டம் என்றா இவைகளைக் கூறுவது? விசாரணை என்றா இதற்குப் பெயர்? காட்டு மிராண்டிக் காலத்து அமுல் அல்லவா இது? அரசியல் தெளிவும், உரிமை உணர்வும், மிகுந்திருக்கும், இந்த நாட்களிலே எவர் ஏற்றுக் கொள்வர், இத்தகு<noinclude></noinclude>
imqo59j872hmucqx0zdz1zslhmy5f8c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/154
250
641782
1928565
1927805
2026-04-30T05:58:37Z
Rabiyathul
5890
+ மேலடி
1928565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|130||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>130
'திராவிட நாடு' இதழில்
அக்ரமத்தை? என்றெல்லாம் கேட்கப் போகிறாய்-தெரியுமே, எனக்கு மக்களாட்சியின் மாண்புபற்றியும் உரிமை ஊர்ச்சி வெற்றி பல பெற்றது பற்றியும், நிரம்ப அறிந்திருக்கிறாய். ஆனால் தம்பி! காட்டுமிராண்டிக் காலம் என்று ஒன்றும், தெளிவுள்ள காலம் என்று மற்றொன்றும் தனித் தனியாக இருக்கும் என்று எண்ணாதே! முழு நிலவு தவழ்ந்திடும் வான வீதியிலேயே தான், கும்மிருட்டு-அமாவாசை-இருந்திடக் காண்கிறோம்.
இப்போதுகூடக் காட்டுமிராண்டிக் காலத்தவை என்று எள்ளி நகையாடத்தக்க சட்டங்கள், ஜனநாயக நாடுகள் என்ற பட்டியலில் இடம் பொறித்துக் கொண்டுள்ள சில நாடுகளில், அமுலில் உள்ளன.
தம்பி! மறந்துவிடாதே. முறைப்படி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்!! எவனோ எதேச்சாதிகாரியின் இறுமாப்பின் விளைவு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களாட்சி நடத்திவரும், மக்களின் தலைவர்கள், மக்களுக்காக, மக்களின் ஆதரவுபெற்று, மக்கள்மன்றத்திலே பேசி, முடிவு எடுத்து, நிறைவேற்றப்பட்டு, அமுலில் இருந்துவரும் சட்டங்கள்!!
டாக்டர் வெர்வுட் தென்ஆப்பிரிக்க அரசுக்கு. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கும் முதல்வர்.
கண்ணை மூடிக்கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றும் கூறிவிட முடியாது. உருட்டி மிரட்டிப் பதவியைத் தட்டிப் பறித்துக் கொண்டார் என்றும் குற்றம் சுமத்த முடியாது. நல்லாட்சிக்கு வழி என்று எந்தத் தேர்தல் முறையைப் பல நாடுகள் மேற் கொண்டுள்ளனவோ. அதே போன்ற முறையிலே அமைக்கப்பட்ட, அமைச்சர் அவையின் தலைவர், டாக்டர் வெர்வுட்.
அல்ல.
அவர் உலகம் அறியாதவரும் அல்ல. அறநூற்களைத் தெரியாதவரும்
அவர் நாட்டிலே கருப்பர் என்பவர்கள், படும்பாடு. உலகிலே உள்ள நல்லறிவாளர்களின் உள்ளத்தை வேக வைப்பதாக இருக்கிறது.
நாட்டிலே, கருப்பர், வெள்ளையர் கண்படாத இடத்தில், தனியாகத்தான் இருக்கவேண்டும்.
மருத்துவராக இருக்கலாம். மதகுருவாகப் பணியாற்றலாம். வழக்கறிஞராக, பேராசிரியராக, வணிகராக, எப்படிப்பட்ட அறிவாற்றல் மிக்கவராக இருப்பினும் சரி. கருப்பர் என்றால், ஊரிலே, ஒரு ஒதுக்கிடம்-பொது இடத்தில் அல்ல-வெள்ளையர் வாழுமிடத்தில் அல்ல.
கலந்து இருந்து வருகிறோமே என்கிறார்கள், கருப்பர்-இனி அது கூடாது-என்று சட்டம் கூறுகிறது-விரட்டுகிறது.<noinclude></noinclude>
igahq4807tx35sa9e675n55r2e65cbf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/155
250
641783
1928566
1927806
2026-04-30T05:59:07Z
Rabiyathul
5890
+ மேலடி
1928566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||131}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
131
வாழுமிடங்களில் மட்டுமல்ல, இந்த வேதனை தரும் வேற்றுமை- தொழிலிடம். கல்விக்கூடம், தொழுகை இடம்-கேளிக்கைக் கூடம் எங்கும் - வேறு வேறுதான்!
பல அலுவலகங்களில், வேறு வேறு இடங்களில்தான் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல - நுழைவு இடங்களே தனித்தனி.
-
வெள்ளையருக்கு மட்டும் என்று இருக்கும் நுழைவு இடத்தில், கருப்பர் சென்றால், கடும் தண்டனை - கசையடி கூட!!
இரயிலில், பஸ்ஸில், மருத்துவமனையில், எங்கும். தாழ்நிலை, இழிநிலை, கருப்பர் என்போருக்கு!
தம்பி! கொடிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரத்தம் சுண்டிப் போனால், புதிய இரத்தத்தை உள்ளுக்குப் புகுத்துகிறார்களல்லவா - அதிலே கூடக் கருப்பருக்கு, கருப்பரின் இரத்தம்; வெள்ளையருக்கு வெள்ளையரின் இரத்தம்! இதுவும் சட்டப்படி; மீறினால் கடும் தண்டனை!!
உலகிலுள்ள நல்லறிவாளர்களெல்லாம் கண்டிக்கிறார்கள். டாக்டர் வெர்வுட், சட்டப்படி நடக்கிறேன், தவறா? என்று கேட்கிறார். இது சட்டமல்ல, என்று எவரேனும் வாதாடினால், ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட, மக்கள் மன்றத்தில், பெருவாரியான உறுப்பினர்களின் ஒப்புதல்பெற்றுச் சட்டம் இயற்றப்பட்டது, என்று எடுத்துக் காட்டுகிறார்.
இருப்பினும், இது சட்டம் அல்ல! சட்டம் என்று ஏற்றுக் கொள்ளமாட்டோம்! சட்டம் என்று நீங்கள் கூறலாம், ஆனால் நாங்கள் அதை மதிக்கமாட்டோம்! என்று பலரும் கூறுகின்றனர்.
-
இருப்பினும் இது சட்டமல்ல! என்று கூறப்படுகிறதே.தம்பி! இதை வழக்குமன்றம் ஏற்றுக்கொள்ளாது: வழக்குமன்றத்தில் கூறவும் மாட்டார்கள். வழக்குமன்றம், தரப்பட்டுள்ள சட்டப்படி, குறிப்பிடப் பட்டுள்ள தண்டனையைத் தருகிற இடம்! சட்டத்தின் பிறப்பு வளர்ப்பு பெற்றோர் உற்றார் இவை பற்றிய விசாரணை நடத்தும் இடம் அல்ல!!
சட்டத்தின்படி நடந்துகொள்கிறோம் என்று வழக்குமன்றத்தினர் பேசுவர்; ஆனால் சமூகத்தில் உள்ள நல்லறிவாளர்கள், சட்டத்தை நிறுத்தி வைத்து, விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க வேண்டும்.
குற்றவாளியின் பெயர், வயது, தொழில், ஊர் இவைகளை, வழக்குமன்றம் விசாரிக்கும்.
சமூகம், சட்டத்தின் பிறப்பு-இலட்சணம்-அதன் விளைவுகள்- வைகளை விசாரித்துப் பார்த்து தீர்ப்பளிக்க வேண்டும்.
வழக்கு விசாரணை நாட்கணக்கில், மாதக்கணக்கில், மிகச் சிக்கலானதாக இருப்பின், வருடக்கணக்கில்கூட நடந்தேறி முடிவடையும்.<noinclude></noinclude>
16z27y6qmukq89tv38kzgmb6890l2cw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/156
250
641784
1928567
1927807
2026-04-30T05:59:37Z
Rabiyathul
5890
+ மேலடி
1928567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|132||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>132
'திராவிட நாடு' இதழில்
சமூகம், சட்டத்தைப் பற்றிய விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க, ஆண்டுகள் அல்ல, நூற்றாண்டுகள் பிடிக்கும்.
அதற்கு இடையில் பலர் பலியாக வேண்டும்-சட்டம் தன் வேலையைச் செய்துகொண்டேதான் இருக்கும்.
பெற்ற தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பது. தாங்கிக் கொள்ளக்கூடிய கொடுமையா? எவ்வளவு இரக்கமற்ற மனம் இருந்தால், அதுபோல் செய்வார்கள்? மனித மிருகங்கள் என்பாய். அப்படிப் பட்டவர்களை! சட்டப்படி அந்தக் காரியம் நடந்திருக்கிறது என்று காட்டுகிறேன். என்ன சொல்கிறாய்? என்றோ ஒரு நாள் - மனித குலம் முன்னேறாத நாட்களில் நடந்திருக்கும் என்று கூறித். தப்பித்துக் கொள்ள முடியாது தம்பி! இது இப்போது நடைபெற்றது.
ஜொஹானா செலிமா முனேனி-ஒரு குழந்தையின் பெயர்.
இதில், முனேனி என்பதற்கு. என்ன பொருள் தெரியுமா? 'எம்மைப் பிரியாள்' என்பது பொருள். அவ்வளவு அன்புடன், செல்லமாகப் பெயரிட்டனர் குழந்தைக்கு ஆனால் அந்தக் குழந்தை, பெற்றோருடன் இருக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது-டாக்டர் வெர்வுட்டின் சட்டம்!
பாட்ரிக் மாடிம்பா என்பவர். தந்தை; வழக்கறிஞர், வயது முப்பதுக்குள், ஆப்பிரிக்கர்: டாக்டர் வெர்வுட்டின் மொழிப்படி கருப்பர்! அவர் டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு மங்கையை மணம் செய்து கொண்டார். இங்கிலாந்தில் படிக்கும்போது அவள், வெள்ளையர் இனம்!
முனேனி பிறந்தாள். மூவருமாக ஆப்பிரிக்கா வந்தனர்.
அங்கு சட்டம் கட்டளையிடுகிறது. தாய் டச்சு நாட்டு வெள்ளைக்காரி. எனவே, அவள் வெள்ளையர் வாழும் பகுதியில்தான் இருக்கவேண்டும்; தந்தை கருப்பர். எனவே வேறு இடத்தில் கருப்பருக்கென்று ஒதுக்கப் பட்டுள்ள இடத்திற்குப் போயாக வேண்டும், குழந்தை கலப்பு இனம் எனவே, இரு இடத்திலும் இருப்பதற் கில்லை, கலப்பு இனம் வாழ வேண்டிய இடம் கொண்டுபோகப்பட வேண்டும். என்று சட்டம் ஆணையிடுகிறது.
"எம்மைப் பிரியாள்" என்று தாயும் தந்தையும் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டிருப்பர்; குழந்தையும் தாயிடம் தாவித் தாவிச் சென்று விளையாடி இருக்கும், தந்தையின் கன்னத்தில் முத்த மிட்டிருக்கும்; ஆனால் சட்டம், தாயையும் சேயையும் பிரிக்கிறது! இப்படி ஒரு சட்டமா? என்று கேட்பதே சட்ட விரோதம்<noinclude></noinclude>
fusqn6wrp0l4jan8scpjng35z19yjeu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/157
250
641785
1928568
1927808
2026-04-30T06:00:08Z
Rabiyathul
5890
+ மேலடி
1928568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||133}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
133
இது நாடு அல்ல. காடு! சட்டமல்ல, சண்டாளத்தனம்! என்று. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு அல்ல. வெளிஏறி வேறு நாடு சென்றுதான். அவர்கள் பேச முடிகிறது. சட்டம் பார்த்தாயா, தம்பி! 1960-ல்!! மக்களாட்சியில்!!
அந்தச் சட்டத்தை, வழக்குமன்றம், மதித்தாக வேண்டும்! ஆட்சியாளர் அதை அமுல்நடத்தித் தீருவார்கள். அறிவுலகம் கண்டிக்கும்! ஆனால், அந்தச் சட்டம் அமுலில் இருக்குமிடத்தில், அதை மதிக்க மறுப்போரும், மீறி நடப்போரும், தண்டிக்கப் படுகிறார்கள் - சட்டப்படி!!
மக்களால் அமைக்கப்பட்ட அரசு, மக்கள் மன்றத்தில் பேசி முடிவு எடுத்து, சட்டம் இயற்றுகிறது. சட்டம்பற்றிப் பேசப்படும்போது, பலரும் தத்தமது கருத்துரைகளை வழங்குகிறார்கள். திருத்தங்களைத் தருகிறார்கள், வாக்கெடுப்பு நடக்கிறது. பிறகே சட்டமாகிறது. ஆகவே, சமூகம், அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்கிறது என்று கூறுவது கேட்டிருப்பாய். அப்பழுக்கற்ற வாதம்! திறமை மிகுந்ததுங்கூட
ஆனால், அடிப்படையில் உள்ள நிலைமையைக் கவனித்தாயா?
மக்களாட்சி முறைப்படி, பெருவாரியான இடங்களை, மக்கள் மன்றத்திலே பெற்ற கட்சியினர், என்ன தேவை என்று நினைக்கிறார் களோ, அவ்விதம் சட்டம் இயற்றிக்கொள்ள முடிகிறது.
எதிர்ப்பு இருக்கலாம், அந்த எதிர்ப்புரையில் நியாயம் இருக்கலாம்; நிபுணர்கள் சிக்கல்களை எடுத்துக்காட்டலாம், அவை உண்மையாக இருக்கலாம்; ஆனால், கடைசியில், 'ஒட்' தானே - சட்டமாகி விடுகிறது. ஆளும் கட்சியின் விருப்பம். எதைச் சொன்னால் என்ன? நிதிமந்திரி போல் வாதத்திறமையைக் காட்ட வாய்ப்பு என்று எண்ணி, எதிர்ப்புரை களின் உள்ளே நுழையாமல், பேசுவோர்மீது கேலி வீசி, மேதை என்று அரசியல் பந்துக்களிடம் பெயரெடுக்கலாம்; சட்டம் நிறைவேறிவிடும். அல்லது அந்த வீண் வேலைதான் நமக்கேன் என்ற போக்கில், அமைச்சர் பக்தவச்சலத்தைப் போல, எதிர்த் தரப்பினர் ஆவலுடனும், நம்பிக்கை யுடனும் எடுத்துச் சொல்வதை எல்லாம், துளி அளவு உணர்ச்சியும் காட்டாது கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, எழுந்து நின்று, கனம் இன்னார் சொன்னதை ஏற்றுக் கொள்வதற்கில்லை, என்று பேசிவிட்டு, உயர்த்தப்படும் கரங்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.
இந்த விதத்தில், சட்டங்கள் இயற்றிக்கொள்ள வாய்ப்புப் பெற்ற ஆளுங்கட்சியை, ஆட்சிப் பொறுப்பில் மக்கள் அமர்த்தியது. இந்த விதமான சட்டங்கள் இயற்றுவார்கள். இயற்ற வேண்டும். என்பதற்காக அல்ல. வேறு பொதுவான நல்லியல்புகளோ, சுவையுள்ள வரலாறோ திறமையோ இருப்பதாகக் கண்டறிந்த காரணத்தால் பந்தல்போட<noinclude></noinclude>
so0vece4kno7ofi4fulcjaqknsbe85y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/158
250
641786
1928569
1927809
2026-04-30T06:00:38Z
Rabiyathul
5890
+ மேலடி
1928569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|134||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>134
'திராவிட நாடு' இதழில்
வந்தவன். சொந்தம் கொண்டாடத் தொடங்கினால், வந்த வேலையைப் பார்த்து விட்டுப்போ! என்போம்; ஆளுங்கட்சியை அவ்விதம் சொல்ல முடியாதே, ஐந்தாண்டுகள் வரையில்!!
சட்டம், பிறப்பது இவ்விதத்தில்.
அதிலும், இப்போது எங்கள் மீது தொடரப்படும் வழக்கு. மக்கள் மன்றத்தில் பேசி, விவாதித்து, முடிவுகண்டு இயற்றப்பட்ட சட்டம் அல்ல. இது அவசரச் சட்டம்.
.
சட்டத்தில், அவசரம் இருக்கக்கூடாது-எனினும் இது அவசரச் சட்டம் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனோ!
இந்த அவசரச் சட்டம். மிக நிதானமாக யோசித்து உரையாடி விளக்கம் பெற்று. விவாதித்து, பல நாடுகளிலே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, வேலைநிறுத்த உரிமை சட்டபூர்வமானது என்பதையே, மறுக்கும் சட்டம்!
தம்பி தசரதன் ஒரு நாள் கூறக்கேட்டேன்-அங்காடியில் கிடைத்தது. திடீர்ப் பாயாசம் என்று. என்னவென்று கேட்டதில், திடீரெனப் பாயாசம் தேவைப்பட்டால், ஒரு பிடி அந்தத் தூளை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கலக்கினால் பாயாசமாகுமாம் - பருகலாமாம் பருகினதாகச் சொன்னார்.
பாயாசம் செய்யப்படும் முறையோ, மிகப் பக்குவமானது. நன்றாகக் கலந்து, குழம்பி, கொதித்து, பதமான பிறகு பாயாசமாகும். நேரம் பிடிக்கும்: நொடியில் ஆகாது. ஆனால், அங்காடியில் கிடைக்கிற தாமே திடீர்ப் பாயசம். அதுபோல அரசியல் அங்காடி. அவசரச் சட்டம் தருகிறது. இது தனி! தனியான மகத்துவம் வாய்ந்தது. இதைத் திறம்படப் பயன்படுத்திப் பலன் காணும் இதே காங்கிரசார். வெள்ளையர்கள் அவசரச் சட்டம் போட்டபோது பேசிய பேச்சினை நான் கேட்டிருக்கிறேன்; நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று தோன்றும் வெள்ளைக்காரருக்கு, அந்தப் பேச்சுகளைக் கேட்டிருந்தால். பேசினார்கள் அப்போது. இப்போது வெள்ளையராகி வெறியாட்டம் ஆடுகிறார்கள்.
அந்த வெறியாட்டத்தையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, நம்மிலே சிலர் வழக்குகள், விளைவுகள் ஆகியவற்றையா, தாங்கிக் கொள்ளக் கூடாது!
வழக்கு என்றதும். எனக்கு என்னவோ உன்னிடம்
பொதுவாகவே. சட்டம் என்பதுபற்றிய பேச்சுப் பேசலாமா என்று தோன்றிற்று; அதனால்தான் இது.<noinclude></noinclude>
f5kg270ctvppqgnzndnlj9koa3zw1ks
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/159
250
641787
1928570
1927810
2026-04-30T06:01:09Z
Rabiyathul
5890
+ மேலடி
1928570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||135}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்
135
சட்டம், தூய்மையான உள்ளத்துடன், நெறி தவறா முறையில் இயற்றப்பட்டாலும், இயற்றியவர்கள் சமூகத்தில் எவ்விதமான அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனைத் தமது குறிக்கோள் ஆக்கிக் கொள்கிறார்களோ, அதனை நிலை நிறுத்தவும், மற்றவர்களும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளவும் செய்வதற்காக வடித்தெடுக்கப்படும், கருவி -வேறென்ன!
சமூக அமைப்பிலே, ஒரு அடிப்படை மாறுதல் தேவை என்று நெஞ்சார உணர்ந்து, அதற்கான குறிக்கோளைச் சமைத்தளிக்கும் ஒரு இயக்கம், அல்லது சிலர் அந்தக் குறிக்கோளுக்காகப் பாடுபடும் போது, ஏற்கனவே உள்ள சட்டங்களின் காரணமாக, வழக்குமன்றம் இழுக்கப் பட்டால், வருத்தமடையாது செல்வதும், கடும் தண்டனை தரப்பட்டால், கலங்காது ஏற்றுக்கொள்வதும், அவர்கள் செலுத்த வேண்டிய காணிக்கை! அதனைத் தருவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமானால், அதைவிடப் பேறு வேறென்ன இருக்க முடியும்!
குறிக்கோளைப் பெரிதெனக் கொண்டவர்கள், அந்தக் குறிக்கோளை நாடு ஏற்றுச் செயல்படுவது எப்போது என்பதில் நாட்டம் கொண்ட வர்கள் மீது, சட்டமாகட்டும், அவசரச் சட்டமாகட்டும் வீசப்பட்டால், விசாரப்படவா செய்வர்? வழக்குமன்றம் தன் கடமையைச் செய்கிறது, நாம் நமது கடமையைச் செய்வோம், என்றே இருப்பர்.
விடுதலை விரும்பிகள் அந்த மனநிலையைப் பெறுவதற்கு வழக்குமன்றங்கள் மெத்தப் பயன்பட்டிருக்கின்றன.
இடையிலே வந்தது இருக்கட்டும். இந்தி விஷயத்தை எடுத்துக் கொள். அது கூடச் சட்டம்தான்! இந்திய அரசியல் சட்டம்! அதிலே 1965-ல் இந்தி ஆட்சிமொழி ஆகியே தீரவேண்டும் என்று இருக்கிறது. அடடா! சட்டம் அப்படி இருக்கிறதே. நாமென்ன செய்வது என்றா இருக்கிறோம்? முடியுமா! இருக்கலாமா! இருந்திடுவோர், தமிழரா!!
அது ஆகாது, தீது, ஏற்கமாட்டோம். என்று தமிழகம் கூறுகிறது. சட்டமய்யா, சட்டம்!-என்று ஆர்ப்பரிக்கின்றனர், ஆளவந்தார்கள். பதில் என்ன தருகிறோம், யார் போட்ட சட்டம்? யாருக்காகப் போடப்பட்ட சட்டம்? எப்படிப் போடப்பட்ட சட்டம்? ஏன் அப்படி ஒரு சட்டம்? என்றெல்லாம் கேட்கிறோம்.
கவனித்தாயா, தம்பி! சட்டத்தைச் சமுகம் விசாரிக்கிறது! உன் பிறப்பு என்ன, வளர்ப்பு என்ன, இலட்சணம் என்ன என்று!!
என்னையும் நண்பர்களையும் வழக்குமன்றத்தில் நிற்க வைத்து,
விசாரணை நடத்துவார்கள்.<noinclude></noinclude>
1j1fgtfmonv00nlygmj1d639cc6lsc8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/160
250
641788
1928571
1927811
2026-04-30T06:01:38Z
Rabiyathul
5890
+ மேலடி
1928571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|136||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>136
'திராவிட நாடு' இதழில்
ஆனால் சுவையுள்ள, பயனுள்ள, சிறப்புமிக்க, வரலாற்றில் இடம் பெறத்தக்க விசாரணை, சமுகம் நடத்திக் கொண்டிருக்கிறது - சட்டத்தைக் கூண்டில் நிறுத்தி!!
காணவேண்டிய காட்சி, கேட்டு இன்புறவேண்டிய செய்தி, அதுதான். தொழிலாளர்களைத் தூண்டிவிடப் பேசியதாக வழக்குத் தொடரப்
படுகிறது.
நானும் நீயும், தம்பி! மிகப் பெரிய குற்றம் ஒன்றினைச் செய்து கொண்டே இருக்கிறோம். சட்டத்தைக் கூண்டிலேற்றி விசாரணை நடத்தச் சொல்லிச் சமூகத்தை-தூண்டுவது அல்ல-தட்டி எழுப்பியபடி இருக்கிறோம்.
அந்த விசாரணை நாளைத்தான், நாம் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம்.
இந்திய அரசியல் சட்டமே! எல்லா அதிகாரத்தையும் மத்திய சர்க்காரில் குவித்துக்கொண்டு, மாநிலங்களை மட்டமாக்கி வைத்திருக் கிறாயே! ஏன்? என்று சொல்! நியாயமா? என்று கூறு!
வளமெல்லாம் ஓரிடத்திலும், வறுமை பிறிதிடத்திலும் இருக்கும் விதமான, ஆட்சி அமைப்புக்கு வழி வகுத்து விட்டாயே, ஆகுமா இந்த அநீதி?
வரலாற்றுச் சிறப்புப் படைத்த மொழியைப் பெற்றுப் பெருமை கொண்டவர்கள் மீது இந்தியைத் திணிக்கலாமா?
குறிப்பிட்ட சில மாநில மக்களின் தாய்மொழியான இந்தியைப் பொது ஆட்சிமொழி ஆக்கத் துடிக்கிறாயே. அதன் விளைவாக அந்த மக்களை மேலோர் ஆக்கி எம்மைத் தாசர்கள் ஆக்கிடும் சூழ்ச்சியைச் செய்யலாமா? என்றெல்லாம், சமுகம். கேட்கப் போகிறது- கேட்கும் தெளிவு பரவிவிட்டது. துணிவும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது.
அந்த விசாரணை நாள், விரைந்து பெறப்பட வேண்டும். அந்தப் பணியில் ஈடுபட்டிருப்போர். எத்தனை முறை, வழக்குமன்றம் செல்ல வேண்டி வந்தாலும், அவை, வாய்ப்புகள் என்றே கொள்ள வேண்டும்.
17.7.60
அத்தகைய வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது! உனக்கு? எப்போது? அண்ணன்,
Jimmyn<noinclude></noinclude>
4x5k0mutxvpf38a71uenxakg035ke42
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/161
250
641789
1928572
1927812
2026-04-30T06:02:08Z
Rabiyathul
5890
+ மேலடி
1928572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||137}}{{rule}}</noinclude>கடிதம் : 112
ஒளி படைத்த கண்ணினாய்!
வா! வா! வா!
தேர்தலும் அரசியல் கட்சியும்
பிராங்கோவும் சட்டமும்-
க்யூபாவின் காஸ்டரோ -
தம்பி!
இந்திக்கு வங்காளிகள் எதிர்ப்பு.
வருகிறாயா, ஒரு திருமணக்காட்சி காண அடே அப்பா! அண்ணனுக்கு எப்படித்தான் இந்த 'மனம்' வந்தது, எப்போது பார்த்தாலும், பாடிவீடு வருகிறாயா, களம் வருகிறாயா, சிறைச்சாலைக்கு வருகிறாயா, வழக்கு மன்றம் வருகிறாயா, என்று அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பவ ராயிற்றே, அப்படிப்பட்ட கல்மனக்கார அண்ணன், இவ்வளவு கனிவுடன் திருமண வீட்டுக்கு அழைக்கிறாரே வியப்பான நிகழ்ச்சிதான் என்று தானே எண்ணிக்கொள்கிறாய். திடுக்கிட்டுப் போய்விடாதே, தம்பி! திருமண வீட்டுக்கு உன்னை அழைப்பது, களித்திட, சுவைத்திட அல்ல; கருத்துக் கண்டு பெறத்தான்.
திருமணத்தன்று, மணமக்கள் இருவரும் வேண்டுமானால், எழில் தரும் ஆடை அணி அதிகமின்றிக்கூட இருக்கலாம்-அன்றுதான் அவர்களை எழிலுருவாக்கிடும் இன்பநினைவு பெருக்கெடுத்து, புதுமெருகு கொடுத் திருக்குமே -செயற்கை அழகு தேடிக் கொள்வானேன். பெற்றோர்- உற்றார்-உறவினர்-உடனிருக்க வந்தோர் இவர்கள். மகிழ்ச்சி தரும் நாளன்று, புதிய கோலம் புனைந்துகொள்ளத் தவற மாட்டார்கள்! நானே, கண்டு கேட்டுவிட்டும் வந்தேன்; தன் அருமைத் திருக்குமாரிக்குத் திருமணம் நடத்தினார். திருவண்ணாமலை சண்முகம். அடே! அப்பா! பட்டுப்பட்டாடை! சரிகை வேட்டி! புத்தம் புதிய சட்டை! மாப்பிள்ளைக் கோலம்! யார் ? மாமனார்!! நம்ம சண்முகம்!! சரி! இதோ. பார் திருமணக் காட்சியை.
'வாங்க! வாங்க! இதோ. இப்படி! இங்கு வந்து, குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யுங்க'-என்று குழையக் குழைய அழைக்கிறாரே. அவர்தான் மாமனார்!
இருக்கட்டும்! இருக்கட்டும்! என்று கூறியபடி, புகைக்குப் பயந்து கொண்டு, சற்று தொலைவிலேயே உட்காருகிறாரே. அவர், வருமானவரி<noinclude></noinclude>
kzbdodwrjcpop2qa5thpjlrzpnfv9o3
1929004
1928572
2026-04-30T10:52:15Z
Rabiyathul
5890
=கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12 =கடிதம்12
1929004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம் : 112
ஒளி படைத்த கண்ணினாய்!
வா! வா! வா!
தேர்தலும் அரசியல் கட்சியும்
பிராங்கோவும் சட்டமும்-
க்யூபாவின் காஸ்டரோ -
தம்பி!
இந்திக்கு வங்காளிகள் எதிர்ப்பு.
வருகிறாயா, ஒரு திருமணக்காட்சி காண அடே அப்பா! அண்ணனுக்கு எப்படித்தான் இந்த 'மனம்' வந்தது, எப்போது பார்த்தாலும், பாடிவீடு வருகிறாயா, களம் வருகிறாயா, சிறைச்சாலைக்கு வருகிறாயா, வழக்கு மன்றம் வருகிறாயா, என்று அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பவ ராயிற்றே, அப்படிப்பட்ட கல்மனக்கார அண்ணன், இவ்வளவு கனிவுடன் திருமண வீட்டுக்கு அழைக்கிறாரே வியப்பான நிகழ்ச்சிதான் என்று தானே எண்ணிக்கொள்கிறாய். திடுக்கிட்டுப் போய்விடாதே, தம்பி! திருமண வீட்டுக்கு உன்னை அழைப்பது, களித்திட, சுவைத்திட அல்ல; கருத்துக் கண்டு பெறத்தான்.
திருமணத்தன்று, மணமக்கள் இருவரும் வேண்டுமானால், எழில் தரும் ஆடை அணி அதிகமின்றிக்கூட இருக்கலாம்-அன்றுதான் அவர்களை எழிலுருவாக்கிடும் இன்பநினைவு பெருக்கெடுத்து, புதுமெருகு கொடுத் திருக்குமே -செயற்கை அழகு தேடிக் கொள்வானேன். பெற்றோர்- உற்றார்-உறவினர்-உடனிருக்க வந்தோர் இவர்கள். மகிழ்ச்சி தரும் நாளன்று, புதிய கோலம் புனைந்துகொள்ளத் தவற மாட்டார்கள்! நானே, கண்டு கேட்டுவிட்டும் வந்தேன்; தன் அருமைத் திருக்குமாரிக்குத் திருமணம் நடத்தினார். திருவண்ணாமலை சண்முகம். அடே! அப்பா! பட்டுப்பட்டாடை! சரிகை வேட்டி! புத்தம் புதிய சட்டை! மாப்பிள்ளைக் கோலம்! யார் ? மாமனார்!! நம்ம சண்முகம்!! சரி! இதோ. பார் திருமணக் காட்சியை.
'வாங்க! வாங்க! இதோ. இப்படி! இங்கு வந்து, குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யுங்க'-என்று குழையக் குழைய அழைக்கிறாரே. அவர்தான் மாமனார்!
இருக்கட்டும்! இருக்கட்டும்! என்று கூறியபடி, புகைக்குப் பயந்து கொண்டு, சற்று தொலைவிலேயே உட்காருகிறாரே. அவர், வருமானவரி<noinclude></noinclude>
ac2fysfte3wd4fxot1y03ptngavx3vj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/162
250
641790
1928574
1927813
2026-04-30T06:02:37Z
Rabiyathul
5890
+ மேலடி
1928574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|138||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>138
'திராவிட நாடு' இதழில்
அலுவலகத்திலே மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். திருமண நாளிலும், 'வியாபார தோரணை' இல்லாமலா, போகும்! அதுதான், உபசாரமாக வடிவெடுத்திருக்கிறது.
பலர். வரவேற்கப்படுகிறார்கள், மன்றத்திலே முன்னிடம் பெறு கிறார்கள் அதோ பார், ஒரு முதியவர், தள்ளாடியபடி தவிக்கிறார்-வழி கிடைக்காமல், இடம் தேடிக்கொண்டு. திருமண வீட்டுக்குப் போகிறோம். நாலுபேர் வருகிற இடம், பளிச்சென்று வருகிறவர்களெல்லாம் வருவார்கள். அந்த இடத்துக்கு நான் மட்டும் பக்கிரிபோலப் போகலாமா-'திருஷ்டி பரிகாரம்' போல!-என்ற நினைப்பு அந்த முதியவருக்கு.
வேட்டி வெண்ணிறமாக இருக்கிறது-ஆனால் தம்பி! அதற்காக அவர், அதை ஒரு நாள் முன்னதாகவே தோள் வலி எடுக்குமளவு துவைத்து, அழுக்குப் போக்கி, உலர்த்தி, 'பெட்டி' போட்டு, பாதுகாத்து, உடுத்திக் கொண்டார். நாட்டு வேட்டி- சரிகையுமில்லை, கரையின் சாயம்கூடக் கலைந்துபோயிருக்கிறது. என்றாலும், உள்ளதை நல்லதாக்கி உடுத்திக்கொண்டு வந்திருக்கிறார்.
அதோ, 'தங்கப்பல்' தனவானைப் பார்! சந்தனம் கீழே சிந்தி விட்டதைக் கவனிக்காமல் உட்கார்ந்து விட்டார்-இருபது ரூபாய்க்கு மேல் விலை உள்ள வேட்டி-கறைபட்டு விட்டது. திருமண வீட்டுப் பெரியவர், பரிதாபம் காட்டுகிறார்-அவர் அலட்சியமாகப் 'பரவாயில்லை"- என்று கூறுகிறார். ஆமாம். அவருக்கு அது பரவாயில்லை! ஆனால், தம்பி! முதியவர் முகத்தைப் பார்த்தாயா, அச்சம்! எங்கே, தன் வெண்ணிற வேட்டி கெட்டுவிடுகிறதோ என்ற பயம். உள்ளதில், நல்லது அது. அதுவும் கெட்டுவிட்டால். என்ன செய்வது என்ற கவலை அவருக்கு.
மேலே கவனித்தாயா, சரிகை வேட்டி மடிப்புக் கலையாமல்! அழகாக இருக்கிறதல்லவா!
பார்த்து விட்டார், திருமணவீட்டுப் பெரியவர், முதியவரை. ஒரு மகிழ்ச்சியற்ற சிரிப்பு!
"வாய்யா, வாய்யா, வரதப்பமொதலி! வா! வா! எங்கே, நீவராமலிருந்து விடுகிறாயோன்னு பார்த்தேன்''-என்கிறார்.
பெருமைப்படுத்திப் பேசுகிறாரா, கேலி செய்கிறாரா, அல்லது வெற்றுமையா, என்று புரிந்துகொள்ள முடியவில்லை,
அருகே செல்கிறார், பார்! கழுத்திலே போட்டிருக்கும். சரிகை வேட்டியைத் தொட்டிழுக்கிறார். கவனித்தாயா! "சரிகை வேட்டியா! பலே! பலே! கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா! வரதப்பமொதலி.<noinclude></noinclude>
8afvqvu5sfc3ijnksw6zju8i6ul75sx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/163
250
641791
1928576
1927814
2026-04-30T06:03:08Z
Rabiyathul
5890
+ மேலடி
1928576
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||139}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
139
வாங்கின கடனைக் கொடுக்க முடியாமல், திண்டாடினாலும் திண்டாடுவாரே தவிர, இந்தச் சரிகை வேட்டி போடுவதை மட்டும் மறக்கவே மாட்டார்!"- என்று கூறியபடி, முதுகிலே ஒரு தட்டுத்தட்டி, ஒரு மூலையைக் காட்டு கிறார் போய், உட்காரச் சொல்லி. இதைக் கண்டுதான் தம்பி! அதோ அந்த வைரக் கடுக்கன், பச்சைக்கல் மோதிரம், இவர்களெல்லாம் இடி இடி என்று சிரிக்கிறார்கள். தெரிகிற தல்லவா. தம்பி! வந்தவர், கேலிப் பொருளாகிறார்! அவர் செய்து கொண்டிருக்கும் அலங்காரமே. கனவான்கள் 'கிண்டல்' செய்து மகிழ வழிசெய்கிறது. துல்லியமாக உடுத்திக்கொண்டு போவதுதான் முறை - இடம் அப்படிப்பட்டது-நேரமும் அதுபோல்-என்று எண்ணிக் கொண்டு. அதற்காகவே முயற்சி எடுத்துக் கொண்டு. நாலுபேர் வருகிற இடத்துக்கு. நல்லபடி உடுத்திக்கொண்டு. போகவேண்டுமே என்றுதான். வரதப்பர். இவ்விதம் வந்தார்! ஆனால், பார்த்தாயல்லவா, அவரைக் கேலி செய்கிறார்கள். ஏன்? வரதப்பர் வாழ்ந்து கெட்டவர்!!
வாழ்ந்து கெட்டவர்கள், தமது நிலைமை வெளியே தெரியாதபடி. மூடிமறைத்தாலும், பூசிமெழுகினாலும் மற்றவர் கண்களுக்கு, உண்மை நிலைமை பளிச்செனத் தெரிந்துவிடும். உடையை, நிலைமையை மாற்றிக் காட்டும் வகையிலே அணிந்துகொள்ளலாம்- ஆனால் உடை உண்மை நிலைமையையா, மூடிடும், உடலை மட்டுந்தானே!
எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை, அண்ணா! இளைத்தவர் களை இறுமாப்பாளர்கள் ஏளனம் பேசி. இழிவாக நடத்தும் போது. என்னால் கண்டு தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நினைப்பு எப்படி எப்படியோ மாறுகிறது. இந்த முதியவர். வறுமையால் வாடிடலாம்- அதற்காக மனிதத் தன்மையற்றா, இந்த மமதைக்காரர் நடந்து கொள்வது? வாழ்ந்துகெட்டவர், சரி! அதனால்? கேலி செய்வதா? கேவலமாக நடத்துவதா இதுதான் முறையா? இதைக்காண, என்னை வேறு அழைத்து வந்தாயே!-என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. உனக்கு தம்பியின் உள்ளம் அறியாதவனா, நான். கோபமாகத்தான் இருக்கும். சரி! காணவேண்டியதைக் கண்டாகி விட்டது. இனி நமக்கு இங்கென்ன. வேலை? வா,தம்பி, போகலாம்.
வருத்தமாக இருக்கிறதல்லவா! கோபம் குறையவில்லை அல்லவா! நினைக்க நினைக்க ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறதல்லவா! ஆமாம். அப்படித்தான் இருக்கும் நான் பட்டிருக்கிறேன். அந்த வேதனையை பலமுறை!
ஆனால், தம்பி! வாழ்ந்துகெட்டவருக்குக் கிடைப்பது இதுதான்; திருமண வீட்டிலமட்டும் என்று எண்ணாதே. எங்கும் எப்போதும்<noinclude></noinclude>
isqx3b78bj90k6gjfm39ud7s29jz8g7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/164
250
641792
1928577
1927815
2026-04-30T06:03:38Z
Rabiyathul
5890
+ மேலடி
1928577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|140||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>140
'திராவிட நாடு' இதழில்
வாழ்ந்துகெட்ட வரதப்பர், கால்வீக்கத்தால் நடக்க முடியாமல் வண்டியிலே போகிறார் என்றால், கேலியாகத்தான் பார்க்கிறார்கள்! 'குதிரை வண்டியிலே போகிறாரே. வரதப்பமொதலி!'-என்பார், ஒருவர்.
குதிரை வண்டியிலா? வரதப்பனா-என்று திரும்பத் திரும்பக் கேட்பார், இன்னொருவர்.
வண்டிக்காரன் தெரிந்தவனாக இருப்பான்-காசு கேட்டிருக்க மாட்டான்-என்று கேலிசெய்வார் வேறொருவர். மூவரும் சிரிப்பார்கள்!
வாழ்ந்துகெட்டவர்கள், இருப்பது போனதால் ஏற்பட்ட வருத்தத்தை மட்டுமல்ல, இப்படிப்பட்ட கேலி கிண்டலையும் சுமந்து தீரவேண்டி இருக்கிறது.
வாழ்ந்துகெட்டவர்களுக்கு மட்டுமல்ல, அப்படிப்பட்ட இடங்கள். இனங்கள், நாடுகள், எல்லாவற்றுக்குமே. இந்தக் கதிதான், என்ன செய்வது?
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான், செஞ்சிக் கோட்டை சென்றேன்-தேசிங்குராஜனின் வீரத்தை எண்ணி வியப்புற்ற வண்ணம், கோட்டை உட்புறம் நடந்தேன்-நிழலுக்காகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நாய், ஒலிகேட்டு விரண்டு ஓடிற்று. நாய், தம்பி! சொறி பிடித்த, நாய்! எனக்கு. உள்ளபடி துக்கம் துளைத்தது. செஞ்சிக்கோட்டை யிலே, தேசிங்கு மன்னன் கோலோச்சிக் கொண்டிருந்த நாட்களில், 'பாராசாரியும்' 'நீலவேணியும்' அல்லவா. அங்கு உலவி இருக்கும்- கவிதைப் புகழ்பெற்ற அந்தப் புரவிகள் கெம்பீரநடை போட்ட இடத்தில், சொறிநாயல்லவா, ஓடிற்று
மனிதர்களைத் தள்ளு. தம்பி! அந்தக் கோட்டைக்கு வந்த 'கதி'யை பார்த்தாயா? வாழ்ந்துகெட்டால், இதுதான் நிலைமை, வாழ்ந்து கெட்டவர்கள் மீண்டும் வாழ வழிகாணவேண்டும், இல்லை மாண்டொழிய வேண்டும்; இல்லையெனில், உலகிலே சிறுகச்சிறுக மானம் அழிந்து, உள்ளம் நொந்து. உருக்குலைந்து போக நேரிடும்!
க
தனி மனிதரானால், வாழ்ந்து கெட்ட நிலையால் ஏற்படும் இழிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தனக்கு நிரம்பத் தெரிந்தவர்கள் இருக்கும் இடத்தைவிட்டு, அவர்கள் 'கண்காணா' இடம் சென்று, காலத்தை ஒட்டுவர்.
ஒருநாள், தம்பி! திருக்கழுக்குன்றம் சென்றேன்; குளத்திலே குளித்துவிட்டுத், தங்குமிடம் திரும்பினேன், நண்பர்களோடு. கடைவீதிப் பக்கம் வருவோர் போவோரிடம் பிச்சை கேட்டுக் கொண்டு, அலங்கோலமான நிலையில் ஒரு மாது இருந்திடக் கண்டேன். பத்தாண்டுச் 'சுயராஜ்யம்' இந்த இலட்சணத்தில் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்<noinclude></noinclude>
i6y9kt5zmaai6lls8jdkirt9lveolgz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/165
250
641793
1928579
1927816
2026-04-30T06:04:08Z
Rabiyathul
5890
+ மேலடி
1928579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||141}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
141
அந்த மாது என்னை மிரள மிரளப் பார்த்துவிட்டு, சரேலென நழுவி, வேறு பக்கமாக ஓட்டம் பெருநடையாகச் சென்றிடக் கண்டேன் திகைத்துப் போனேன் நம்மைக் கண்டதும் அந்த மாது முகத்திலே மிரட்சி! நான் காணக்கூடாது என்பது போல, ஓடி மறைகிறார்களே, என்ன காரணம்? என்று ஒரே குழப்பம் எனக்கு-ஒரு கணம்-பிறகோ, தம்பி! என் கண்களில் நீர் துளிர்த்தது. என்னைக் காணக் கூடாது என்று ஓடி மறைந்த மாது. எனக்குத் தெரிந்தவர், வாழ்ந்து கெட்டவர்-பிச்சை எடுத்திடவேண்டிய நிலைபெற்றதை நான் காணக்கூடாது என்று, பீதிகொண்டு ஓடி மறைந்திருக்கிறார்கள், பாபம், ஆணாக இருந்தாலாவது, காவிகட்டிக்கொண்டு 'அண்ணாமலைக்கு அரோகரா' கூறிக்கொண்டு, பிச்சை அல்ல எடுப்பது, சம்சார பந்தத்தை அறுத்துக் கொண்டேன் என்று பேசி இருக்க முடியும்-மாது-என்ன பேசமுடியும் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்தவர்கள்- அதைக் கண்டவன் நான். வாழ்ந்து கெட்ட அந்த மாது, பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை நான் காண்பது என்றால், அதைவிடக் கொடுமையான காட்சி வேறென்ன இருக்கமுடியும்! எனக்கு அந்தக் கஷ்டம் வரக்கூடாது என்றுதான், அந்த மாது, ஓடி மறைந்திருக்க வேண்டும் மறைந்த மாது, மற்றவருக்குப் பிச்சை போட்டதைக் கண்ட கண்களால், அவர்கள் பிச்சை எடுப்பதைக் காண்பதென்றால், எத்துணை வேதனை ஏற்படும். தம்பி! விளக்கவா முடியும்?
வாழ்ந்துகெட்ட வரதப்பன், மறைந்து அலையும் மாது, இடிபாடான கோட்டை-இவை நாம் காண்பனவாக மட்டுமின்றி, நம்மோடு தொடர்பு கொண்டனவாக இருந்திடின், வேதனை எத்துணை கொடுமையுள்ளதாகிடும்.
சுவர் இருந்த இடத்திலே, ஓலை வைத்து மறைத்திருக்கும் இடிந்த வீடுகளைப் பார்த்திருக்கிறோம்.
ஓட்டையான பாண்டத்தில், எதையோ ஒட்டிவைத்து, உபயோகப் படுத்துவதைப் பார்த்திருக்கிறோம்.
இவ்வளவுக்குப் போலானேன், தருமமிகு சென்னையில், நித்தம் காணலாமே, கன்றாகத் துள்ளிக் கொண்டிருந்ததை, கைக்கு அடக்கமான தோல்பொம்மையாக்கி, பசுவிடம்காட்டிப் பாலைக் கறந்தளிக்கும்
காட்சியினை.
இவைகள், ஒன்றுகூட இப்போது. நம் கண்முன்- மனக்கண்முன்- நின்று நைந்துருக வைத்திடும் காட்சிக்கு, ஈடாகாது. வெட்கம், துக்கம் தருவதிலே.
வாழ்ந்துகெட்ட வரதப்பன், திருமண வீட்டுக்கு வந்தானல்லவா, சரிகை வேட்டியுடன்-கேலிமொழி கேட்டிட -தம்பி! தமிழ்த்தாய் காலில்<noinclude></noinclude>
adinq5bch1h2aqz42pilhjfoobg94i2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/166
250
641794
1928580
1927817
2026-04-30T06:04:38Z
Rabiyathul
5890
+ மேலடி
1928580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|142||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>142
'திராவிட நாடு' இதழில்
சிலம்பு ஒலிக்க, மேகலை மின்னிட, மணி ஆரத்துடன், உலகம் காண நிற்கிறாள்-ஆனால் நெற்றியில் பொட்டு இல்லை, கூந்தலில் நெய் இல்லை, கண்களிலே நீர் கசிகிறது; காலிலே தளைகள்!! ஆமடா, தம்பி. ஆம்! வாழ்ந்துகெட்ட நிலையில்தான், தமிழ்த்தாய் இருந்திடக் காண்கிறோம்.
வாழ்ந்துகெட்ட வரதப்பனை மண்டைக் கனம் கொண்டவன் கேலி பேசியபோது, வரதப்பனின் மகன், அங்கு இருந்திருந்தால்? மணவீடாகவா இருக்கும்! பெருத்த அமளி மூண்டுவிடாதோ?
மறைந்தோடிய மாதை, அவன் பேரப்பிள்ளை தற்செயலாகக் காண நேரிட்டால், கசிந்து, கண்ணீர் மல்கி, நான் இருக்கும்போது உனக்கேன் இந்தக் கதி? என்றுகேட்டுக் காலடி வீழ்ந்து, கல் உடைப்பேன், குப்பை கூட்டுவேன், மாடுபோல் உழைப்பேன். எப்பாடுபட்டேனும், உன்னைக் காப்பாற்றுவேன், பாட்டி! உன்னை இந்தக் கோலத்திலா, நான் காண வேண்டும். வா. என்னுடன், என்று அழைத்துக்கொண்டு போவானல்லவா?
செஞ்சி, தேசிங்கு மன்னன் வழிவழி வந்தவர்களுக்கு என்று ஆகி, அந்தக் குடும்பத்தினன் ஒருவன். சொறி நாய் கோட்டையில் உலவக் கண்டால், வாளா இருப்பானா?
ஆனால், தம்பி! நாம், நீயும் நானும், நம்மைப்போல உள்ள மூன்றுகோடி தமிழர்களும், தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகி, தளைகள் பூட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம் தளைகளும் உடைபடவில்லை. நமது உடலிலும் உயிர் இருந்துகொண்டிருக்கிறது. வாழ்கிறோம் தமிழர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டு!!
வாங்கின கடனைக் கொடுக்க வக்கு இல்லாவிட்டாலும், சரிகை வேட்டிக்குக் குறைவில்லை! என்று வரதப்பனைக் கேலிபேசி, மூலையைக் காட்டி உட்காரச் சொன்னானே, திருமண வீட்டில் அதுபோலத்தான். உலக அரங்கிலே, உரிமையுடன் அதனால் உவகையுடன் அரசோச்சி வாழ்கிறார்களே. அவர்களெல்லாம், தமிழ் அன்னை பூண்டிருக்கும் அணிபணி கண்டு. கேவி பேசுகிறார்கள்-திருக்குறள் என்றோர் அறநுல் உலகிலே வேறு எங்கும் இல்லை அதற்கு ஈடு சிலப்பதிகாரம், கவைமிகு காவியம்! அதிலே முத்தமிழ் ஒளி விடுகிறது! என்று, வரதப்பன் போட்டிருக்கும் சரிகை வேட்டி பற்றிப் பேசியது போலப் பேசிவிட்டு. அவனை மூலையில் உட்காரச் சொன்னதுபோல, தமிழ்த்தாயை அடிமைச் சாவடியில் தள்ளி வைத்திருக்கிறார்கள், அவனியோர்-அவள் ஈன்றெடுத்த அருமருந்தன்ன மக்கள், மூன்று கோடி! குன்றெடுக்கும் நெடுந்தோளும் கொடை கொடுக்கும் கரமும் கொண்டோராக இருக்கலாம்-இருக்கிறார்கள் செந்தமிழ் பயின்ற வாயினர்-ஆம்! அதிலே குறைவு இல்லை ஆனால், தாயின் தாளிலே பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கிடத் துணிகின்றனரோ? அதுதான் இல்லை<noinclude></noinclude>
p6uga7xv55t85cmqiwjzucwm8s6k8fz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/167
250
641795
1928581
1927818
2026-04-30T06:05:09Z
Rabiyathul
5890
+ மேலடி
1928581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||143}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
143
காஞ்சிபுரம் குண்டஞ்சி! வெள்ளிச் சரிகை, கருக்காது! நூறாம் நம்பர், மிக நேர்த்தியானது-என்று வரதப்பன், தன் சரிகை வேட்டி பற்றிப் பெருமை பேசுகிறான் என்று வைத்துக் கொள். தம்பி! அதைக் கேட்பவர்கள். ஆமாம்! என்று கூறி, அந்தச் சரிகை வேட்டியைப் போட்டுக் கொண்டிருப்பதற்காகப் பாராட்டவா செய்வார்கள்?
சரிகை வேட்டியின் பெருமை போதுமய்யா, மறைக்காமல் சொல். நேற்றிரவு, பட்டினிதானே? உண்மையைச் சொல்! வட்டித் தொகை கட்டாததற்காகக், கடன்காரன், வீடு புகுந்து பெட்டியையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு போனானாமே, உண்மைதானே! வேறு வேலை கிடைக்காததால், விறகுக் கடையிலே எடுபிடியாக இருக்கிறாய்-மறுக்கமுடியுமா? என்றெல்லாமல்லவா, கேட்பார்கள். அதுபோலத்தான் தம்பி! தாழ்நிலை பெற்று. தருக்கரின் பிடியில் சிக்கி, கட்டுண்டு கிடக்கும் தமிழகத்தின் தனிச் சிறப்புகள் எனப்படும், அகம். புறம், குறள் போன்றவைபற்றி, பெருமிதத்துடன் கூறிடும்போது, உலக அரங்கிலே, கேட்கிறார்கள்.
அத்தகைய தமிழகம் இந்தியப் பேரரசில் பெற்றிருப்பது அடிமைநிலைதானே?
அவ்வளவு இலக்கிய வளம் இருந்தும், தமிழ் தாழ்நிலைதானே பெற்றிருக்கிறது
முன்னாள் கொடிகட்டி வாழ்ந்த தமிழர், இன்று கூலிகளாகித் தானே உழல்கிறார்கள்?
எல்லா வளமும் கொண்டது தமிழ் என்கிறீர்கள்; உங்களுக்கும் ஆட்சிமொழி இந்திதானே?
என்றெல்லாம் கேட்கிறார்கள். வாழ்ந்து கெட்ட வரதப்பனைக் கண்டே, துக்கம் துளைத்ததே, இந்தக் காட்சியைக் காணும்போது, வேதனை எத்துணை வேகமாகத் தாக்கும். நாம். அதனால் தத்தளிக் கிறோம் -ஆனால் வேறு சிலர் இருக்கிறார்களே, இதுபற்றிய நினைப்பு மற்று -அந்தக் கொடிய குற்றம் இழைப்போர்களை, தாய்த் திருநாட்டுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பரிந்து போராட முன்வராதவர்களை, போரிடுவோரை முதுகில் குத்தவும் துணிந்திடும் ஈனர்களை-இழி தன்மைமிக்க குற்றம் செய்து. கொழுத்து வாழ்ந்திடும் போக்கினரை, யார், கூண்டிலேற்றி, விசாரணை நடத்தித் தண்டனை தரப்போகிறார்கள்! என்னைப் பிடித்திழுத்து நிறுத்துகிறார்கள். வழக்கு மன்றத்தில்11 ஓராண்டுச் சிறையாம்! ஆயிரம் ரூபாய் அபராதமும் உண்டாம்!! துரைத்தனத்தார் நடமாடவிட்ட அவசரச் சட்டம், வேலை செய்கிறது!! போகட்டும், இவ்வளவு பெரிய வேலை<noinclude></noinclude>
qgft87u74yzqb7xffkko7jdjr1su1vm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/168
250
641796
1928582
1927819
2026-04-30T06:05:39Z
Rabiyathul
5890
+ மேலடி
1928582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|144||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>144
'திராவிட நாடு' இதழில்
நிறுத்தம் நடைபெற்றதே. அதனால் நேரு சர்க்காருக்கு ஏற்பட்ட மானக்குறைவும், அது மூட்டிவிட்ட மன எரிச்சலும், என்னை ஓராண்டு உள்ளே தள்ளி வைப்பதனால், ஓரளவுக்குக் குறையும் என்றால், நான், மகிழத்தானே வேண்டும். அவ்வளவு பெரிய மனிதருக்கு, என்னால் இந்த அளவுக்காகிலும் 'உபகாரம்' செய்யமுடிகிறதல்லவா! அதுவும் நல்லதே-மகிழத்தக்கதே. நானும் அந்த மகிழ்ச்சியுடனேதான், வழக்குமன்றம் சென்றேன் - மீண்டும் செல்வேன்.
தம்பி! அண்ணன் உள்ளேபோய் உட்கார்ந்துவிட்டால், கிழமை தோறும் வரும் கடிதம் வாராதோ. என்று எண்ணி இப்போதே மனம் குழம்பாதே உன் நிலை என்ன ஆகிறதோ, விரைவில், யார் கண்டார்கள்? உன்னை மட்டும், வெளியே உலவவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா!! அப்படி வெளியே இருப்பதானாலும் இருக்கும் வரையிலும்-என் கருத்துரைகள் கிழமை தோறும் கிடைக்க, ஏற்பாடு செய்துகொண்டி ருக்கிறேன் - வெளியே இருக்கும் வாய்ப்பிலே பெருமளவு, உனக்காக எழுதி அடிகளிடம் சேர்ப்பித்துவிட்டுச் செல்லவே;-ஆகவே அந்தக் கவலை வேண்டாம்.
உனக்கும் எனக்கும் இருக்கவேண்டிய கவலை எல்லாம், என்ன வழக்குத் தொடுக்கிறார்கள், தண்டனை எவ்வளவு கடுமையாகத் தருகிறார்கள் என்பதுபற்றி ஏன் இருக்கப்போகிறது-நாம் கவலைப்பட வேண்டிய தெல்லாம், நாம் ஈடுபட்டிருக்கும் காரியம் நியாயமானதுதானா, கொண்டுள்ள கொள்கை ஏற்புடையதா என்பதுபற்றித்தான். பெற நினைக்கும் பொருளுக்குத் தக்க விலை கொடுக்க எவர் தயங்குவர்; தயங்கிடின் தரணி இந்த அளவு செழித்திருக்கத்தான் முடியுமா?
ஆதிக்கக்காரனெல்லாம் கோலாகல வாழ்வு நடத்துகிறான்- சுவைமிகு வாழ்க்கை-ஆளப்பிறந்தவன், கட்டுண்டு கிடக்கிறான். உல்லாச புரியிலே உலவி, மாளிகையிலே மகிழ்ந்திருக்கிறான், ஆதிக்கம் செலுத்துவோன். அவனை நத்திப்பிழைத்திடும் நாட்டுப்பற்று அற்றுதுகளும், அவன் வீசியதை விலாப் புடைக்கத்தின்று, அதுவும் வாழ்க்கை என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றன. ஆனால் நாட்டு மக்களின் வாட்டம் போக்கிடப் பணியாற்றியவன். அடிமை களாகிக் கிடந்த மக்களை ஆண்மை யாளராக்கியவன், உரிமைக் குரலெழுப்பி ஊமைகளையும், என் நாடு. என் அரசு, என்று பேசவைத்தவன், நாட்டுக்கு உழைப்பதன்றி நமக்கு வேறு வேலை இல்லை என்று கூறி, தன்னைத்தானே அந்தத் திருப்பணிக்கு ஈடுபடுத்திக் கொண்டவன், கொடுமை பலவற்றைத் தாங்கிக் கொண்டவன், மனம் குலையா மாவீரன், இன்று பாலைவனப் பகுதியில், பட்டியொன்றிலே, சிறைப்பட்டுக் கிடக்கிறான்; ஆண்டுபல ஆகின்றன; அவன் மூட்டிய விடுதலைக் கனல் பெருந்தீ ஆகிவிட்டது;<noinclude></noinclude>
j6rwkkmfth2xxf4a8y28csrfqgfjp51
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/169
250
641797
1928583
1927820
2026-04-30T06:06:10Z
Rabiyathul
5890
+ மேலடி
1928583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||145}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்
145
நாட்டுமக்கள் ஆர்த்தெழுந்து அவன் ஆணைக்கு எதிர் நோக்கி நிற்கிறார்கள். அவனோ, நாட்டைவிட்டுக் கடத்தப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டு, 'கைதி' என்ற நிலையில் உழல்கிறான். உண்ணலாம், உலவலாம், உறங்கலாம், இதழ் படிக்கலாம், கடிதம் எழுதலாம். ஆனால் தாயகம் வரக்கூடாது! தம்பி! கெனியா நாட்டு மக்கள், கண்கண்ட கடவுள் என்று போற்றிக்கொண்டாடும், விடுதலை வீரன், ஜோமோ கெனியாடாவைப் பற்றிக் கூறினேன், அத்தகைய கஷ்ட நஷ்டங்களைத் தாயகத்துக்காக ஏற்றுக்கொள்ளும் துணிவு, நமது கொள்கையிலே நமக்கு ஏற்பட்டுள்ள தூய்மைமிகு பற்றுதல் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
உலகிலுள்ள பல்வேறு நாடுகளும், எந்த அமெரிக்கப் பேரரசிடம் கெஞ்சி நிற்கின்றனவோ, அந்தக் குபேரபுரி'யைக், கொள்கை வீரம் கொழுந்துவிட்டெரியும் நெஞ்சினன் ஒருவன் துச்சமாக மதித்துப் பேசி வருகிறான்! ஏழை நாடு! இன்னும் சரியாக எழுந்து நிற்கக்கூடிய வலிவு கிடைக்காத நிலையில் உள்ள நாடு! எனினும், அந்நாட்டுத் தலைவன், "என் நாட்டை அடிமைப்படுத்த எண்ணும் நாடு, எத்துணை பெரிதாக இருப்பினும் எனக்கென்ன? அங்கு தங்க ஓடுகள் வேயப் பட்ட மாடமாளிகைகள் இருக்கலாம். சீமான்கள் பவழம் பதிக்கப்பட்ட கோப்பையிலே பழரசம் ஊற்றி, வைரம் ஜொலிக்கும் உடலினள் மின்னிடும் கண்ணினாள். இடை துவள நடையழகு காட்டிவந்து கொடுக்கலாம். மலைமலையாகப் பண்டங்கள் இருக்கலாம் பாளம் பாளமாகத் தங்கம் இருக்கலாம் என்ன இருந்தால் என்ன? என் நாட்டின் உரிமைக்கு ஈடோ, அவை? என்ற நினைப்பால் உந்தப்பட்டு, எதிர்த்து நிற்கிறான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுகூடப் பேசுகிறான்.
என் நாட்டுச் சர்க்கரை வாங்குவதைக் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா குறைத்துக்கொண்டு வம்புக்கு நின்றால், என் நாட்டிலுள்ள அவர்களுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைகளை ஒவ்வொன்றாக! கைப்பற்றிக்கொண்டு விடுவேன்!
அவர்கள் இங்கு தொழிலில் போட்டிருக்கும் மூலதனத்தைப் பறிமுதல் செய்து செய்து, கடைசியில் அவர்களுக்கு ஒரு காகட் மிச்சமில்லாதபடி செய்துவிடுவேன்.
வணிகத் துறையில் வஞ்சகத் திட்டத்தைப் புகுத்தி, என் நாட்டு பொருளை வாங்காமல் முடக்கிப், பணத்தட்டு ஏற்படச் செய்து எங்களை பட்டினிபோட்டுப் பணிய வைக்கலாம் என்று, சூது நிரம்பிய அமெரிக்கநாடு கருதினால், அமெரிக்க நாட்டுப் போர்வீரர்களின் கால் செருப்பிலே அடித்திருக்கும் ஆணிகூட அவர்களுக்குக் கிடைக்க முடியாதபடி செய்துவிடுவேன்!<noinclude></noinclude>
rpxk4m2oy8pl6q9p4nto5sdmjazs8o6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/170
250
641798
1928584
1927821
2026-04-30T06:06:40Z
Rabiyathul
5890
+ மேலடி
1928584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|146||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>146
'திராவிட நாடு' இதழில்
உலகையே அழித்திடக்கூடிய அணுகுண்டுகளைக் குவித்து வைத்திருக் கிறது அமெரிக்கா-கால் செருப்பாணிகூட மிஞ்சாதபடி செய்துவிடுவேன் என்று பேசுகிறான், அளவில், அரசியல் செல்வாக்கில், பொருளாதாரத் துறையில், குறைந்த நிலையில் உள்ள, க்யூபா நாட்டுத் தலைவன், காஸ்ட்ரோ.
வீரம் நிரம்ப இருக்கிறது-அளவுக்கு அதிகமாகவேகூட-ஆனால் விவேகம் அல்லவே. இப்படிப் பொறிபறக்கப் பேசுவது, என்று தொல்லை களால் தாக்கப்படாமல் தொலைவிலே உள்ள பார்வை யாளர்கள், அறிவுரை கூறலாம். ஆனால், அல்லலை அனுபவித்துக் கொண்டிருப்பவன், அந்தநாட்டுத் தலைவன்-அவன் மனக் கொதிப்புக்கான காரணத்தை, அவனன்றி வேறு யார், உணர முடியும்!
இன்று, காஸ்ட்ரோ கனல் கக்குகிறானே! என்று கடிந்துரைக்கப் பலர் உளர், ஆனால், அவன் க்யூபா நாட்டைக் கெடுத்தழித்துக் கொண்டிருந்த ஆட்சியை ஒழிக்கக் கடும்போர் நடத்திய காலை, அவனைச் சூழ்ந்து கொண்டிருந்த ஆபத்தை, யார் அப்போது அறிந்து ஆறுதல் கூற முன்வந்தனர்? வாலிபப் பருவம்! வழக்கறிஞர் தொழில்! காஸ்ட்ரோ 'கனவானாகி' விட வழிபல இருந்தன. ஆனால் அவன், காட்டுப் பாதை யிலே சென்றான், நாட்டைக் காக்க! தன் இளவலுடன், துணைவர்கள் சிலருடன் காஸ்ட்ரோ புரட்சிக் கொடியை உயர்த்தியபோது, வேட்டை நாய்களால் விரட்டப்படும் மானினம் போன்றதல்லவா நிலைமை! சிக்கினால், சித்திரவதை! பிடிபட்டான், சிறைப்பட்டான்-15 ஆண்டுகள் சிறை!! ஆமாம், தம்பி, பதினைந்து ஆண்டுகள்! ஆணவ அரசு அவ்வளவு காலம், தன் ஆதிக்கம் இருக்குமென்று எண்ணி மனப்பால் குடித்தது. ஆனால், இடையிலேயே ஆட்சி கலகலத்துப் போயிற்று. அடித்தளத்தில் ஏற்பட்டுவிட்ட அழிவு கண்ணுக்குத் தெரியாததால், ஆட்சியாளர், போனால் போகட்டும், போட்டடைத்து வைப்பானேன் இந்தப் போக்கத்ததுகளை; திறந்து வெளியே துரத்துங்கள். எதையோ தேடித்தின்று பிழைத்துப் போகட்டும், என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டு, காஸ்ட்ரோவை விடுதலை செய்தனர். வெளியே வந்த வீரன், பட்டது போதும், இனிப் படமுடியாது துயரம் என்றல்ல, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகல்லவா தாயகத்துக்குப் பணிபுரிய முடியும் என்று எண்ணி, மனம் நொந்துகிடந்தேன்-இதோ வாய்ப்புக் கிடைத்து விட்டது. விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்க, என்றான். படை திரட்டினான், பாய்ந்து தாக்கினான், பகை அழிந்தது, க்யூபாவின் தலைவனானான்.
தம்பி! காஸ்ட்ரோ என்னென்ன முறைகளைக் கையாண்டான் என்பது அல்ல, நாம் கவனிக்கவேண்டியதும், கையாள வேண்டியதும்.<noinclude></noinclude>
hw33hfmeefl0lpk9xlgqmthc1pydbmw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/171
250
641799
1928586
1927822
2026-04-30T06:07:10Z
Rabiyathul
5890
+ மேலடி
1928586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||147}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
147
நாம் கூர்ந்து பார்த்திடவேண்டியது, அவன் எத்துணை கடுமையான விளைவுகளுக்குத் தயாரானான், ஈடுகொடுத்தான், என்பதுதான்.
விடுதலை! விடுதலை! விடுதலை! என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு, பண்ணிசைத்து வருகிறது. பார்க்கிறோமல்லவா!!
கனா, டோகோலாண்டு. மாலி. சோமாலிலாந்து, மடகாஸ்கர்-என்று. பட்டியல் வளர்ந்தபடி இருந்திடக் காண்கிறோம்.
அந்த நாடுகளிலெல்லாம், விடுதலை ஆர்வம், உரிமை உணர்ச்சி. எழுந்த விதம், வளர்ந்தவகை, எம்முறையிலிருந்தன என்பதுகூட இனித்தான், உலகு தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்டு விடுதலை வீரர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் அமைத்த அணிவகுப்புகள், பற்றிய விவரம் இனி வெளியிடப்பட வேண்டிய வீரக் காதைகள்! அந்த நாட்டுக்காக உழைத்தவர்கள், உழைப்பின் பலன் காணா முன்பே கொல்லப் பட்டவர்கள், உழைத்து உருக்குலைந்த வர்கள், அவர்களைத் தீண்டிய ஆபத்துகள், சூழ்ந்துகொண்ட தீச்சுழல்கள் போன்றவை பற்றிய விவரங்கள், இனி வெளியிடப்பட வேண்டிய காப்பியங்கள். விடுதலை கிடைக்கும் வரையில், அந்த நாடுகளைப் பற்றி, இதழ்கள், இருட்டடிப்பு நடத்தி வந்தன! இன்று தேடித்தேடிச் சென்று பேட்டி காண்பதும், பெரிது பெரிதாகப் படங்களை எடுப்பதும், பக்கம் பக்கமாகச் செய்திகளைத் தருவதுமாக உள்ளன, ஏடுகள்! நாடு மீட்டிட, நடத்தப்பட்ட போரின் போது, கேட்பாரற்று, கவனிப்பாரற்றுக் கிடந்தனர்-இன்று அந்த விடுதலை வீரர்கள் வெற்றிபெற்றனர், எனவே அவர்களைச் செய்தி தேடுவோர், மொய்த்துக்கொள்கின்றனர்.
விடுதலை முழக்கம் எழுப்புபவனை, வெறியன் என்று ஏசுவதும். அவன் கையாளும் முறைகளைக் காட்டுமிராண்டித் தனம் என்று கூறுவதும், கூர்த்தமதியற்ற காரணத்தால், மிகப் பலருக்கு வாடிக்கையாகி விட்டது. வெற்றி கிட்டியதும், வியர்க்க ஓடோடிச் சென்று, வீரனே! தீரனே! என்று புகழ்பாடி, புன்னகைக்குக் காத்துக் கிடப்பதும், அத்தகையோரின் வாடிக்கை.
ஆனால், விடுதலை இயக்கம் இருட்டடிப்பினால் மாய்ந்து போகாது: புகழ்பாடுவோர் கிடைக்காததால், புகைந்து போய்விடாது.
விடுதலை இயக்கம், பலிகேட்கும் -தன்னிடம் பற்றுக் கொண்டவர் களை. பலி, பயங்கரமானதாகக் கூட இருக்கும். பலர், பலியானபிறகு. கடைசி அணிவகுப்புக்கு வெற்றி கிடைக்கக் கூடும்.
அந்த அணிவகுப்புத்தான் உலகிலே. பளிச்செனத் தெரியும்.<noinclude></noinclude>
fim2on2ugx9hmfpjkqwdlny801zi6gs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/172
250
641800
1928587
1927823
2026-04-30T06:07:41Z
Rabiyathul
5890
+ மேலடி
1928587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|148||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>148
‘திராவிட நாடு' இதழில்
முன்னால் அழிக்கப்பட்ட அணிவகுப்புகளைப் பற்றி, உலகம் கவனம் செலுத்தி இருக்காது, வாடிக்கை இல்லை.
முதல் தாக்குதலில் கொல்லப்பட்ட கொள்கை வீரர்களின் புதைகுழிகளை, வெற்றிக்குப் பிறகு, நாட்டவரும், மற்றவரும் தேடிக் கண்டறிவார்கள். பிறகு, அவை வழிபடும் இடங்களாகும். திருத்தலங்களாகும்!
தம்பி! எப்படிப்பட்ட இடம் பெறத்தக்க வாய்ப்பு, நமக்கு இருக்கிறது என்பதை எண்ணும்போதே. இணையற்ற ஓர் எழுச்சி பெறுகிறோமல்லவா! அதை உணர முடியாதவர்கள் தான், இடுக்கணும் இன்னலும் தாக்கினால், நாம் தகர்ந்து போவோம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.
ஒரு அரசியல் கட்சி நடத்தி, அதிலே தேர்தல் பலன் கிட்டவில்லை என்றால், அந்தக் கட்சி கலகலத்துப்போகும். விடுதலை இயக்கம் அப்படி அல்ல. ஒரு அணிவகுப்பு அழிக்கப்பட்டால், புதியதொன்று எழும்! அழிப்பவனின் கரம் துவண்டுவிழும் வரையில் அணிவகுப்புகள் எழுந்தவண்ணம் இருக்கும்-வெற்றிகிட்டும் வரை!
காங்கிரஸ் கட்சியில் உள்ளோர் ஒரு பெரும் தவறு செய்கிறார்கள்; நாம் ஒரு வெறும் அரசியல் கட்சி நடத்துகிறோம், ஆகவே, இருட்டடிப்பால், ஏளனத்தால். சதிச்செயலால். கலாம் மூட்டிவிடுவதால், வழக்குகள் தொடுப்பதால், தேர்தலில் தோற்கடிப்பதால், நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.
சின்னாட்களுக்கு முன்பு, நான் எப்போதும் அளந்துதான் பேசுவேன் என்று கூறிக்கொள்ளும் அமைச்சர் பக்தவத்சலனார் பேசினாராமே. தி.மு.க.வினருக்கு, அரசியல் ஞானமே இல்லை என்று!
ஏன், அவ்விதம் சொன்னார்? அவ்விதம் ஏளனம் பேசினால். எரிச்சல் ஏற்படும்; அந்த எரிச்சலைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்- துளைக்கப்பட்டுப் போய்விடுவார்கள் என்று நினைக்கிறார்.
அவர்கள். நாம் ஒரு விடுதலை இயக்கத்தை நடத்துகிறோம் என்பதை உணரவில்லை.
விடுதலை இயக்கம் நடத்துவதற்கான காரணம், ஆயிரம் உள்ளன என்பதையும் அறியவில்லை.
அவர்கள்தான், தம்பி! தமிழ்மொழியினைச் சூழ்ச்சித் திட்டத்தால் அழித்தொழிக்க முற்படும்போதுகூடத் தமிழர்கள், வாய் திறவாதிருப்பர். கைகட்டிக் கிடப்பர் என்று, எண்ணுகிறார்களே! அவர்களின் அரசியல் 'ஞானம்' அவ்வளவு 'அபாரம்!!' நம்மால் முடியுமா, அவர்களுடன் போட்டியிட! கடினம்! மிகக் கடினம்!<noinclude></noinclude>
jfj4x3b6znwvrhdosch27seb9dw3r8w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/173
250
641801
1928588
1927824
2026-04-30T06:08:11Z
Rabiyathul
5890
+ மேலடி
1928588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||149}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்
149
அவர்கள் கிடக்கட்டும், தம்பி! தமிழ்மொழி கற்றறிந்தோர்! உரிமைவேட்கை குறித்து, நாடு பல சுற்றியும் ஏடு பல படித்தும் வித்தகரானோர்! இவர்களாகிலும் மொழிக்கு வரஇருக்கும் ஆபத்தை அறிந்து துடித்தெழக், காண்கிறோமா? இந்தி ஆதிக்கம், வெறி அளவு வளர்ந்திருக்கிறது. இது ஆகாது, கூடாது, தீது, என்று எடுத்துரைத்தால், என்ன கெட்டுவிடும்.
பிராங்கோவின் ஆட்சியிலே, சர்வாதிகார நோய் பிடித்துக் கொண்டி ருக்கிறதைக் கண்டித்துப் பேச்சுரிமை இல்லை என்பதைக் சுட்டிக்காட்டி. 329 மதகுருமார்கள் கையொப்பமிட்டுக் கடிதம் அனுப்பினார்கள் என்று மாட்ரிட் செய்தி அறிவிக்கிறது.
பிராங்கோவின் ஆட்சிமுறையைக் குறைசொன்னால், என்ன நடக்கும்? தெரியாதா, அவர்களுக்கு? துணிந்துதான், கண்டிக்கிறார்கள். சிலராகிலும், துணிந்து எதற்கும் தயாராகி, உண்மைக்காகப் பரிந்து பேசாவிட்டால், உலகில், அறம்தான் தழைக்குமா? நீதிதான் நிலைக்குமா? எனவேதான், அந்த மதகுருமார்கள், ஆபத்தைத் துச்சமென்று கருதி, பிராங்கோ ஆட்சிமுறையைக் கண்டித்துள்ளனர்.
இங்கு? சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வானவூர்திக்கும், இப்போது விஞ்ஞானம் சமைத்தளித்துள்ள வானவூர்திக்கும் ஒப்புவமை காட்டிப் பேசச் சொல்கிறீர்களா? உம்! மணி மூன்றுக்குக் குறையாமல் மூச்சைப்பிடித்துக் கொண்டு பேச, மேதைகள் இருக்கிறார்கள். முகவரி வேண்டுமா?
நாட்டுப்பற்று, எப்படி ஏற்படுகிறது என்பதுபற்றி விரிவுரை வேண்டுமா. உலகப்பெரும் பேராசிரியர்களின் மேற்கோள்களுடன் ஒன்றரை மணி நேரம் பேசிவிட்டுப், பிறகு ஒன்பது நாள், நண்பர்களிடம் அந்தப் பேச்சின் அருமைபெருமை பற்றிப் பேசிட ஆசாமிகள் இருக்கிறார்கள்!
ஆனால், ஆட்சிமொழியாக இந்தி வந்தே தீரும் என்று குடி அரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துவிட்டார், குமுறுகிறார்கள் நாட்டு மக்கள், ஒரு குரல் கேட்கிறதா, அதைக் கண்டித்து, அந்த மேதைகளிடமிருந்து!
பிராங்கோவை எதிர்த்தால் மரண தண்டனை கிடைக்கக்கூடும்.
இந்தி ஆட்சிமொழி ஆகக் கூடாது என்று கூறினால், ஆக்கக் கூடாது என்று உறுதி பேசினால், ஆக்கினால் ஆபத்து விளையும் என்று எச்சரிக்கை விடுத்தால், இந்த மேதைகளுக்கு என்ன ஆபத்து வந்துவிடும்!
கைகுலுக்குவதும், கனவானே! நலமா? என்று கேட்பதும், குறையக் கூடும்-அடியோடு நின்றுவிடாது! இதைக்கூடவா, தாங்கிக் கொள்ளக் கூடாது.
பாகிஸ்தானில், நடப்பது, இராணுவ ஆட்சி, அயூப்கான் மிக்க கண்டிப்பானவர். அரசியல் தலைவர்களை எல்லாம் அடைத்து விட்டார் சிறையில்!<noinclude></noinclude>
b2x5mhj6wj8c0ob7we81guspg1jd8m0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/174
250
641802
1928589
1927825
2026-04-30T06:08:42Z
Rabiyathul
5890
+ மேலடி
1928589
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|150||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>150
'திராவிட நாடு' இதழில்
எனினும், பாகிஸ்தானில் மக்களாட்சிமுறை ஏற்பட்டாக வேண்டும். கட்சி அரசியல் முறை தோற்றுப்போய்விட்டதாக அயூப்கான் சொல்வது
சரியல்ல.
புதிய அரசியல் சட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்தான், தீட்ட வேண்டுமே தவிர, அயூப்கானால் நியமிக்கப்படும் குழு தீட்டுவது சரியல்ல, என்று அறிக்கை வெளியிட்டு. ஆயிரக்கணக்காக அந்த ஏடுகளை, நாடெங்கும் பரப்பி இருக்கிறார்கள், பாகிஸ்தானில் உள்ள 19 உலமாக்கள்-மதத்தின் வித்தகர்கள்.
பயம் அவர்களைப் பிய்த்துத் தின்றதா? இங்கு பேசச் சொல்லுங்கள், துணிவுடன்! ஏ! அப்பா! என்ன பயம் எவ்வளவு நடுக்கம்! நமக்கேன் வம்பு, என்ற போக்கு.
பாகிஸ்தானில், உலமாக்கள் போலவே, உயர்நீதி மன்ற நீதிபதியும், இப்போதைய ஆட்சிமுறையைக் கண்டித்திருக்கிறார்.
சர்வாதிகார நாடுகளில் ஏற்பட்டிருக்கும், இந்த நெஞ்சுரம், பேச்சுரிமை, எழுத்துரிமை தரப்பட்டுள்ள 'ஜனநாயக' நாட்டிலே உள்ள மேதைகளுக்கு ஏற்படவில்லையே! வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா? சொல்லு. தம்பி!
இந்த கழகத்துக்காரர்கள், வீணாகப் பயம் காட்டுகிறார்கள். இந்தி ஆட்சிமொழியாகி, ஆங்கிலம் அறவே ஒழிந்துபோய்விடாது; தமிழ்தான் வளரும்; வழக்குமன்றங்களேகூடத் தமிழில்தான், நடவடிக்கைகளை நடத்தும் என்று சுவை சொட்டச் சொட்டப் பேசுகிறார் சுப்பிரமணியனார்
அமைச்சர்!
சரியான போடுபோட்டார். பயல்கள் திணறுவார்கள் என்று, தெந்தினம் பாடிடுவோர் பேசினர் ஆனால், அமைச்சர் சுப்பிரமணியம் சுருண்டு கீழே விழத்தக்க, அறைகொடுத்தார், டில்லியில் அரசோச்சும் சட்டத்துறை அமைச்சர், சென்.
சுப்ரமணியனார் செப்பினார், தமிழிலேயே, வழக்குமன்ற நடவடிக்கைகள் இருக்கும் என்ற, டில்லி அமைச்சர், இது யார் பைத்யக்காரத்தனமாகப் பேசுபவர்! என்று எண்ணிக்கொண்டவர் போல உண்மையைக் கக்கி காட்டினார்,
சுப்ரீம் கோர்ட்டிலே இந்திமொழியில்தான் 1965-க்குப் பிறகு நடவடிக்கைகள் இருக்கவேண்டும்
அப்போது, இராஜ்யங்களில் அந்தந்த இராஜ்ய மொழியில் வழக்குமன்ற நடவடிக்கைகள் இருந்தால், குழப்பமாகிவிடும்.
எனவே, இராஜ்யங்களில் உள்ள வழக்குமன்றங்களிலும், இந்திமொழி யிலேயே நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.<noinclude></noinclude>
t5vdkqsiq6vxd6h5j9en6jso83p3goh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/175
250
641803
1928590
1927826
2026-04-30T06:09:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||151}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
151
எனவே, சட்டங்களையும், வழக்காடலில் தேவைப்படும் நுணுக்கச் சொற்களையும், ஆங்கிலத்தில் உள்ளதை, இந்திமொழியில் பெயர்த்திடக் குழு விரைந்து வேலை செய்யவேண்டும்.
கனைத்தாவது காட்டவேண்டுமே, கனம் சுப்ரமணியம்; உஹும்! கப்சிப்! வாய்திறக்கவில்லை! நம்மைப்பற்றிப் பேசச் சொல்லுங்கள். நாராசம், தாராளமாக, ஏராளமாக' 'எஜமானர்' இடிக்கிறார். இவர் 'படிதாண்டாப் பத்தினி யாகக் கோலம் பூண்டாகவேண்டுமே! எனவே, வாய்திறந்து அழக்கூட மறுக்கிறார்.
தமிழ்மொழி. இராஜ்ய வழக்குமன்றத்தில் அரசோச்சும் என்று பேசிவிட்டோமே, நமது பேச்சினைத் துச்சமென்றாக்கிடும் முறையில், தமிழாவது தெலுங்காவது, இந்திதான் இராஜ்ய வழக்குமன்றங்களில் என்று டில்லிஅமைச்சர் சென் அறைகிறாரே. மக்கள் நம்மை மதிப்பார்களா? என்று எண்ணினாரா?
ஐயோ! ஆபத்தான எண்ணமல்லவா அது! அது வேகமாக வளர்ந்தும் விடுமே! வளர்ந்துவிட்டால், என்ன கதி ஆவது? அரும்பாடு பட்டுப் பெற்ற பதவி அல்லவா பறிபோய்விடும்-I என்று நினைக்கிறார், நடுக்க மெடுக்கிறது. பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கிறார்-பிறகு இருக்கவே இருக்கிறது.வாய்க்கு வேலை, கழகத்தைத் தாக்குவது!
ஸ்பெயினில், பாகிஸ்தானில் உயிர்போவது பற்றிக்கூடக் கவலைப் படாமல் உண்மைக்குப் பரிந்து பேசுகிறார்கள்.
இங்கு, இருக்கும் பதவி பறிபோய்விடுமே என்ற பயத்தால், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் திரிகிறார்கள்.
பதவிதானே! பறிபோனால்தான் என்ன? என்று, தம்பி! நீ, வெகு எளிதாகச் சொல்லிவிடுவாய். அவர்களுக்கல்லவா, அதனுடைய அருமை தெரியும்! அது போய்விட்டால், பிறகு இவர்கள் இருக்குமிடம் நோக்கி. யார் திரும்பிப் பார்ப்பார்கள்? இவர்கள் சென்று சென்று பார்த்தாலும், யார் முகம் கொடுத்துப் பேசுவார்கள்? நீ. கூறிவிடலாம், பதவியா பெரிது என்று! பதவிதானே, அவர்களின் நிலையைப் பெரிது ஆக்கிற்று! அதைப்போய் இழப்பது என்றால்!!
தம்பி/ இங்கு இருப்பதுபோலத்தான் எங்கும் என்று எண்ணி விடாதே. நரேஷ்சென் குப்தா
நரேந்திர தேவ்
அமய
நூல்
திரிகுண சென்
சுபீந்திரநாத் தத்தா
ராதாராணி தேவி
10 பிப் 2004
பெறப்பட்டது<noinclude></noinclude>
db0wbf3kaapv2ismc7gfxep7ry8y1ko
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/176
250
641804
1928591
1927827
2026-04-30T06:09:43Z
Rabiyathul
5890
+ மேலடி
1928591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|152||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>152
'திராவிட நாடு' இதழில்
பேராசிரியர் குகா
புத்ததேவ போஸ் பிரமாதநாத் பிசி
நிர்மல்சௌத்ரி பட்டாச்சாரியா காஜிஅப்துல் வாதுத்
கஜேந்திரநாத் சென் அபு சையத் அயூப்
டாக்டர் அதீந்திரநாத் போஸ் விவேகானந்த முகர்ஜி
மைத்ரேயி தேவி
புரோதீவா போஸ்
சாகராமாய் கோஷ் அமலன் தத்தா
கே. கே. சின்கா
ஹிரேன் குமார் சன்யால்
இவர்கள் தம்பி! வங்காளத்திலே உள்ள மேதைகள். ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் வித்தகர்கள்; புலவர்கள், பெரும்பேராசிரியர்கள்; கல்வித்துறை நிபுணர்கள்.
இவர்கள் கையொப்பமிட்டு ஒரு அறிக்கையை இந்தத் திங்கள் துவக்கத்திலே வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்திய தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கான மன்றம் ஒன்று. பணியாற்றி வருகிறது. அந்த மன்றத்தின் சார்பில், இந்த அறிக்கை. அதிலே இந்தி ஆட்சிமொழி ஆவதுபற்றிக் குடிஅரகத் தலைவர் விடுத்துள்ள ஆணை கண்டிக்கப்பட்டிருக்கிறது.
ஆணை கண்டோம், ஏமாற்றமடைந்தோம்.
ஆணையில் தெளிவு, விளக்கம், சரியாக இல்லை
இந்திமொழியின் சார்பில் ஒருதலைப்பட்சமான அக்கரை காட்டப்
பட்டிருக்கிறது
இந்தி பேசுவோருக்குத் தனிச்சலுகை மேலிடம், அளிக்கப்படுகிறது. இந்தி அல்லாத மற்றமொழி பேசுவோருக்கு அநீதி இழைப்பதாகும்
பெருத்த
இந்தி பேசாத மக்களுடைய ஒப்பம் பெறாமல், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி ஆட்சி மொழியாகப் புகுத்தமாட்டோம் என்று. 1959-ம் ஆண்டு செப்டம்பர் நாலாம் நாள், பாராளுமன்றத்தில் பண்டித<noinclude></noinclude>
rgsb6mie696j24ph5nbx9ssrflrr2qz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/177
250
641805
1928592
1927828
2026-04-30T06:10:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||153}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நேரு
வெளியிட்ட
153
கொள்கை. திட்டவட்டமாகக், குடிஅரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் என்று இந்த மன்றம் எதிர்பார்த்தது: ஏமாற்றமடைந்தது.
குறுகிய கால அளவுக்குப் பிறகு, அகில-இந்தியத்துறை அலுவலகப் பணிகளுக்கான தேர்வுகள். இந்தியில் நடைபெறும் என்று, ஆணையில் குறிப்பிட்டிருப்பதை இந்த மன்றம், பலமாகக் கண்டிக்கிறது.
இந்தத் தேர்வுகளில், இந்தியாவின் மற்றத் தேசிய மொழிகள் குறித்து யோசிக்கக்கூட இல்லை என்பது கண்டிக்கத்தக்கது.
இந்த ஏற்பாட்டினால் இந்தி பேசும் மக்களுக்குத்தான் மற்றவர் களை மிஞ்சக்கூடிய, சலுகை கிடைக்கும்.
இந்த நிலைமையினால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து விளையக்கூடும்.
முதலமைச்சர் நேரு கொடுத்த வாக்குறுதியின்படி, காலக்கெடுவின்றி. ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கும் விதத்தில், குடிஅரசுத்தலைவர் தமது ஆணையைத் தெளிவாக்கும்படி இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.
தம்பி! குமாரபாளையத்திலே. நாம் கூடி குடிஅரசுத் தலைவரின் ஆணை குறித்து, என்ன கருத்தினை வலியுறுத்தினோமோ, அது ஏதோ பக்தவத்சலனாரின் பாஷைப்படி' 'அரசியல் ஞானம்' அற்றவர்களின் போக்காக இருக்கட்டும்; மந்திரி சுப்ரமணியத்தின் வாதப்படி விவரம் தெரியாதவர்களின் பேச்சாக இருக்கட்டும். எல்லாமறிந்த காமராஜரின் பேச்சுப்படி, விளையாட்டுத்தனமாக இருக்கட்டும். இதோ லங்கி நாட்டு வித்தகர்கள் அதேக் கருத்தினைத் தெளிவுடன், துணிவுடன் எடுத்துக்காட்டி அறிக்கை வெளியிட்டனரே, இதற்கு என்ன பதில் அளிக்கிறார்கள். பதவி பெற்றவர்கள் இத்தனை வித்தகர்களும் அரசியல் ஞானமற்ற விவரம் தெரியாத, விளையாட்டுக்காரர்களா? நிந்தித்து தித்தித்துப் பழகிப்போன மந்திரிகளின் நாக்குக் கூடக் கூகமே அப்படிச் சொல்ல? இவர்கள் ஒவ்வொருவரும், தத்தமது துறை, தொழில் கொள்கை ஆகியவைகளைப்பற்றிக் கவலைப்படாமல் பதவியில் உட்கார வேண்டு மென்றால், காமராஜர்கள் ஆகிவிடலாமே அதாவது மந்திரிகளலாமோ இவர்களல்லவா குடிஅரசுத் தவைவரின் ஆணையைக் கடிக்கிறார்கள். குலைநடுக்கமல்லவா எடுக்கிறது இங்கு உள்ள கற்றறிவாளர்களுக்கும்
தம்பி! இந்த மன்றத்தார் நம்மைவிட ஒருபடி மேலே சென்று விட்டார்கள்
மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக அளிப்பதைவிட மிக அதிகம தொகையை இந்திமொழி வளர்ச்சிக்காக. இந்திய சர்க்கார் தரக் கூடாது. என்பதை அறிக்கை வலியுறுத்துகிறது<noinclude></noinclude>
tdpq1o93soo3hwfkssvf79gpr1m1rxm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/178
250
641806
1928593
1927829
2026-04-30T06:10:43Z
Rabiyathul
5890
+ மேலடி
1928593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|154||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>154
'திராவிட நாடு' இதழில்
இந்த நாட்டு வித்தகர்கள், தங்களை மெத்தச் சொத்தை உள்ளத்தினர் என்று காட்டிக்கொள்வது கண்டு, வருந்திக் கிடக்கும் வேளையில், வங்கத்திலிருந்து இந்தக் தேன்மொழி கிடைக்கிறது. தம்பி! நாம் கொண்ட கருத்துக்கு மேற்கொண்டுள்ள போக்குக்கு. எத்தகைய நேர்த்தியான இடமிருந்தெல்லாம் இசைவு இருக்கிறது என்பதைக் காணும்போது, புதியதோர் எழுச்சி பிறக்கிறதல்லவா!
அந்த எழுச்சி நிரம்பிய உள்ளத்தினராக நாமிருக்கும்போது அடக்குமுறை காட்டியா, நமது உறுதியை அழித்துவிட முடியும்.
நான்தான், காணப்போகிறேனே உறுதிபடைத்த நெஞ்சினரை! ஒளிபடைத்த கண்ணினரை! பலப்பல ஆயிரக்கணக்கில்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில்!
இந்தத் திங்கள் 30-ல், என்னை வழக்குமன்றம் காணப்போகிறது. மறுநாள், 31-ந் தேதி நான், என் எண்ணற்ற உடன்பிறந்தார் களைக் காண இருக்கிறேன்.
வழக்குமன்றத்திலே இருக்கும்போதும், உன்னைத்தானே காண்கிறேன். நான் கண்டு களித்திட, பெருமைப்பட, உணர்ச்சி பெற, உறுதிபெற, எழுச்சிபெற, வேறு என்ன வேண்டும்!
நீ செல்லும் பாதை சரியானதுதான் என்று உலகிலே நடைபெற்ற இன்றும் நடைபெறும் உரிமைக் கிளர்ச்சிகள், விடுதலை இயக்கச் செய்திகள், எடுத்துக்காட்டுகின்றன.
வழக்குமன்றமோ, நீ கவனிக்கப்படுகிறாய் என்று கூறுகிறது.
தம்பி! நீயோ? தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று நீதானே அண்ணா! கூறினாய், என்று கேட்கிறாய்.
எனக்கோ, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற கவிதை
மனப்பாடம்.
ஆயினும், கவிதைகள் கட்டுரைகள், வீரக்காதைகள், வெற்றிக் காப்பியங்கள், ஆகியவைகளால் கூட அளித்திட முடியாத எழுச்சியை, உன் கண்ணொளி எனக்கு அளிக்கிறது. அந்த ஒளியைக் காட்டிட, 31-ந் தேதி, சென்னை வருகிறாயல்லவா?
அண்ணன்.
24.7.60<noinclude></noinclude>
jit00427byif3dw8zx1gjk934el2600
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/179
250
641807
1928594
1927830
2026-04-30T06:11:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||155}}{{rule}}</noinclude>தம்பி!
இராஜேந்திரப் பிரசாத்தின் உலா-
இந்தி எதிர்ப்பு-
நிதி அமைச்சர் கருத்து
கடிதம்: 113
பாபுவின் பவனி
கிருஹப்பிரவேச மஹோர்சவ விஞ்ஞாபனம்
நிகழும் விகாரி வருஷம் தைமாசம் சுக்ரவாரம் உதயாதி சுபமுகூர்த்தத்தில் ஸ்ரீ மீனாட்சி சமேத சொக்கர் கடாட்சத்தால், அடியேன் ஏகாம்பரதாசன், ஏகாம்பரதாசன், திருமஞ்சன வீதியில்
அமைத்திருக்கும் வீட்டிற்கு
கிருஹப்பிரவேசம்
புதிதாக
செய்யப் பெரியோர்களால் நிச்சயித்து இருப்பதால் தாங்கள் தங்கள் இஷ்டஜன மித்ராளுடன் எழுந்தருளி எம்மை ஆசீர்வதித்தருள வேண்டிக்கொள்கிறேன்.
அன்றிரவு பிரம்மஸ்ரீ காவியானந்த ஸ்வாமிகளின் 'ருக்மணி பரிணயம்'
எனும் காலட்சேபம் நடைபெறும் அனைவரும் வந்திருந்து பகவத் பிரசாதம் பெற்று ஆனந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம், தங்கள் விதேயன் ஏகம்பரதாசன் "அனுக்கிரஹம்'
இப்படி ஒரு அழைப்பிதழ் உனக்குக் கிடைத்தால், என்ன எண்ணிக் கொள்ளுவாய்? என்னண்ணா! இது! எங்கே கிடைத்தது இந்தப் பத்தாம் பசலி, எந்தக் குப்பையிலே கிடந்தது? தமிழா. இது ? ஒரே மணிப் பிரவாளம்! யார் இந்தத் தாசன்? தேடித் தேடிப் பார்த்தால். தூய தமிழ்ச் சொற்கள் இந்த அழைப்பிதழிலே, ஒரு பத்துக்கூடக் கிடைக்காது போலிருக் கிறதே! தமிழ் வரிவடிவம் ஒரு கேடா, இந்த கலக்கலுக்கு! விஞ்ஞாபனமாம்<noinclude></noinclude>
4i9937t7e7a4ll3yqxx9itqawacdobj
1929006
1928594
2026-04-30T10:58:39Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>தம்பி!
இராஜேந்திரப் பிரசாத்தின் உலா-
இந்தி எதிர்ப்பு-
நிதி அமைச்சர் கருத்து
கடிதம்: 113
பாபுவின் பவனி
கிருஹப்பிரவேச மஹோர்சவ விஞ்ஞாபனம்
நிகழும் விகாரி வருஷம் தைமாசம் சுக்ரவாரம் உதயாதி சுபமுகூர்த்தத்தில் ஸ்ரீ மீனாட்சி சமேத சொக்கர் கடாட்சத்தால், அடியேன் ஏகாம்பரதாசன், ஏகாம்பரதாசன், திருமஞ்சன வீதியில்
அமைத்திருக்கும் வீட்டிற்கு
கிருஹப்பிரவேசம்
புதிதாக
செய்யப் பெரியோர்களால் நிச்சயித்து இருப்பதால் தாங்கள் தங்கள் இஷ்டஜன மித்ராளுடன் எழுந்தருளி எம்மை ஆசீர்வதித்தருள வேண்டிக்கொள்கிறேன்.
அன்றிரவு பிரம்மஸ்ரீ காவியானந்த ஸ்வாமிகளின் 'ருக்மணி பரிணயம்'
எனும் காலட்சேபம் நடைபெறும் அனைவரும் வந்திருந்து பகவத் பிரசாதம் பெற்று ஆனந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம், தங்கள் விதேயன் ஏகம்பரதாசன் "அனுக்கிரஹம்'
இப்படி ஒரு அழைப்பிதழ் உனக்குக் கிடைத்தால், என்ன எண்ணிக் கொள்ளுவாய்? என்னண்ணா! இது! எங்கே கிடைத்தது இந்தப் பத்தாம் பசலி, எந்தக் குப்பையிலே கிடந்தது? தமிழா. இது ? ஒரே மணிப் பிரவாளம்! யார் இந்தத் தாசன்? தேடித் தேடிப் பார்த்தால். தூய தமிழ்ச் சொற்கள் இந்த அழைப்பிதழிலே, ஒரு பத்துக்கூடக் கிடைக்காது போலிருக் கிறதே! தமிழ் வரிவடிவம் ஒரு கேடா, இந்த கலக்கலுக்கு! விஞ்ஞாபனமாம்<noinclude></noinclude>
ra3m6iqwwedmc9rqyrdu4he2ybscdco
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/180
250
641808
1928595
1927831
2026-04-30T06:11:43Z
Rabiyathul
5890
+ மேலடி
1928595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|156||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>156
'திராவிட நாடு' இதழில்
விஞ்ஞாபனம்! க்ருஹம்! ஏன்? அழைப்பு) இல்லம்! என்று சொன்னால் என்னவாம்? வாயா வெந்துவிடும்?- என்றெல்லாம் கேட்பாய்-கோபம் பொங்கும் உனக்கு. தமிழ்மொழியின் தூய்மையைக் கெடுக்கும் செயலைத்தான், நீ வன்மையாகக் கண்டிப்பவனாயிற்றே!
ஆனால், தம்பி! நான், இந்த அழைப்பிதழை உன்னிடம் காட்டியது, தமிழ்மொழியை எப்படிப் பாழ்படுத்தி இருக்கிறார்கள் பார்த்தாயா. என்பதை எடுத்துக்காட்ட அல்ல!
இதை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தது யார், தெரியுமா? என் நண்பர் முத்தழகர் தெரியுமல்லவா, உனக்கு அவருடைய மகன், பொன்னப்பன் ஆமாம், அவன் அஞ்சல் துறையிலே பணியாற்றுகிறான்-இந்தப் பணிதான்..
அப்படியா அண்ணா முத்தழகர் ஒரு காலத்திலே பெரிய புள்ளியாக இருந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் குடும்பம் இப்போது. வளம் கெட்டுவிட்ட நிலையில் இருக்கிறது போலும் என்று கூறிடுவாய்- ஆறுதலளிக்க, ஆனால், தம்பி! புதுமனை புகுவிழா அழைப்பிதழைப் பலருக்கும் கொண்டுபோய்த் தருகிறானே, பொன்னப்பன்-அவன் துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தைக் கழித்தது. இப்போது 'அனுக்ரஹம்' ஆகியிருக்கிறதே, அதே இடத்தில்தான்,
வீடு. பலகாலம் கவனிப்பாரற்றுக் கிடந்ததால் கலளாகிவிட்டது. பார்ப்பவர்கள் பழுது பார்க்கக் கூடாதா? இது. பாட்டன் முப்பாட்டன் காலத்துச் சொத்தாச்சே? என்று கூறினர். பணமுடை முத்தழகளுக்கு ஏகாம்பரம் 'தாசன்' ஆகவில்லை அப்போது; வெறும் ஏகாம்பரம், பணம் அதிகம் சேராதிருந்த காலம்; ஆனால் தன்னிலும் சற்றுத் தமிழ்த்திருப்பவர் களின் நிலைமையை மோப்பம் பிடித்தறிந்து, சிறுசிறு தொகை கடன் கொடுத்து, 'வட்டி பெறுவது வாடிக்கை, முத்தழகர் சிக்கினார், கடன் கொடுத்தான், வட்டிமேல் வட்டி ஏறிக் கடைசியில் வீடே அவனுக்கு என்றாகிவிட்டது. தம்பி! அந்த வீடுதான் இப்போது 'அனுகரஹம்' ஆகிவிட்டது; ஏகாம்பரம், 'தாசன்' ஆகி கிருஹப் பிரவேசம் நடத்துகிறான். அந்த அழைப்பிதழைப் பலருக்கும் கொடுக்கும் பணியில், முத்தழக மகன் ஈடுபட்டிருக்கிறான்!
குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் உலா ஏற்பாடாகி இருக்கிறது; அந்த உலாவைக் காமராஜர் ஏற்பாடு செய்கிறார்; நாட்டவருக்கும் அறிவித்திருக்கிறார்; அன்பழைப்புகளை அனுப்பப் போகிறார்!!<noinclude></noinclude>
7zn7l40n922zj9qyrk0g1cst5x4hhz6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/181
250
641809
1928596
1927832
2026-04-30T06:12:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||157}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
157
குத்திக் குடலெடுத்துக் கொன்றுவிட்டான் காதகன்; குங்குமம் இழந்தாள் குமாரி. குமுறிக் கிடக்கிறாள் கைம்பெண்ணாகி! ஓர் நாள், விவரமறியாச் சிறுமிகள் ஓடோடி வந்து, 'எப்போது பார்த்தாலும் கண்ணீர் வடித்தபடி இருக்கிறாயே அக்கா வந்துதான், பாரேன் வெளியே! வாணவேடிக்கை! பொய்க்கால் குதிரை ஆட்டம் ஊர்வலம் வருகிறது. வந்துதான் பாரேன்!' என்று அழைக்கிறார்கள். "நான் இருக்கும் இருப்புக்கு, வேடிக்கை வேறு பார்க்க வேண்டுமா? உள்ளவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்-நான்தான், மஞ்சள் இழந்த மாபாவியானேனே-எனக்கு என்ன வேலை, களிப்பு நடமாடும் இடத்தில்?" என்று கூறுகிறாள் மாது. சிறுமியர், விடாப்பிடியாகப் பிடித்திழுத்து வருகிறார்கள் வெளியே, ஊர்வலம் வருகிறது! என்ன காண்கிறாள் ஊர்வலத்தில்! குத்திக் குடலெடுத்துக் கொன்றானே, கணவனை, அந்த வீராதி வீரனை, விருதுகள் பெற்றான் என்ற காரணத்துக்காக, ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள்!!
தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகிக் கதறி, என் மக்கள் இனி இந்த இந்தியிடம் சிக்கி என்னென்ன பாடுபடவேண்டி நேரிடுமோ, இந்தியை ஆட்சிமொழி ஆக்கிவிட்டால், அம்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்களன்றோ, ஆதிக்கம் செலுத்திடவும், அரசோச்சி மகிழவும் வழி ஏற்பட்டுவிடும். என் மக்கள் இழிநிலைமைக்குத் தள்ளப்பட்டுக் காடு வெட்டவும். கல் உடைக்கவும், குப்பை கூட்டவும் குற்றவேல் புரியவுமான அடிமை நிலையன்றோ அடைவார்கள்! சீராட்டிப் பாராட்டி வளர்த்தேன். செல்வக் குடிப்பிறந்தீர்கள், செயற்கரிய செய்து வாழ்வீர்கள் என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பூரித்துக் கிடந்தேன். இப்போதோ எமது மரபு அழித்திடும் இந்தியன்றோ ஆட்சிமொழி ஆகிறதாம் என்று கதறித் துடித்திடும் வேளையிலே, இந்திமொழிக்கு ஓர் வெற்றி உலா நடத்தி, அந்த உலாவின்போது, இந்திக்கு ஆலவட்டம் வீசிடத் தமிழ்த் தாயை அழைத்தால், எப்படி இருக்கும் நிலைமை?
குத்திக் குடலெடுத்துக் கணவனைக் கொன்ற ஓர் மாபாவிக்குக் கொடியவர்கள் உலா ஏற்பாடுசெய்து, அதனைக் காண மஞ்சள் இழந்த மாதை அழைத்தால், அவள் எவ்வளவு வேதனை அடைவாளோ, அஃதே போன்ற வேதனையன்றோ ஏற்படும், ஆட்சிமொழி ஆகிவிடும் இந்திக்கு ஆலவட்டம் சுற்றத் தமிழ்த்தாயை அழைத்தால்!
1965-க்குப் பிறகு இந்தியே ஆட்சிமொழி என்று அறிவிக்கும் ஆணையைப் பிறப்பித்துவிட்டு, குடிஅரசுத் தலைவர் தமிழகத்தில் உலா வருவது, இந்தி வெற்றி விழா நடத்துவதற்கு ஒப்பானதுதானே. எப்படித் தமிழர்கள் இதைத் தாங்கிக்கொள்ள முடியும்? ஏன் தாங்கிக் கொள்ளவேண்டும்?<noinclude></noinclude>
kfqpdo1jm8gu5t9k651cxi9ot0yp35u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/182
250
641810
1928597
1927833
2026-04-30T06:12:43Z
Rabiyathul
5890
+ மேலடி
1928597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|158||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>158
'திராவிட நாடு' இதழில்
குடிஅரசுத்தலைவர், 'சாந்த சீலர்' என்று போற்றப்படுவர்; வெள்ளையரை விரட்டிடும் போரிலே முன்னணி நின்றவர்; பல கஷ்ட நஷ்டம் கண்டு கலங்காதிருந்தவர்; காந்தியாரின் அன்பினைப் பெரும் அளவு பெற்றுத் திகழ்ந்தவர்; தம்பி/ இந்தச் சிறப்புகளை, நான் மறந்திட வில்லை. நீயும் அறிந்தே இருக்கிறாய், ஆனால், குடிஅரசுத் தலைவர். இந்திமொழி விஷயத்திலே மிகக் கண்டிப்பானவர், இந்தி வெறியர்களே. அவரைத்தான் தமது பாதுகாவலராகக் கருது கிறார்கள்; நேரு பண்டிதர் கூடச் சில வேளைகளில் - நெளிகிறார். ஆங்கிலத்தின் நேர்த்திபற்றித் தன்னை மறந்த நிலையில் கூடப் பேசுகிறார். ஆனால் பாபு இராஜேந்திரர். எப்போதும், இந்தி விஷயத்திலே. திட்டவட்டமாகவும், தீவிரமாகவும், துணிவாகவும் பேசி வருகிறார்; எனவே, இந்தித் திணிப்புக்கு இவரே தக்க கருவி, இவரைக் கொண்டுதான், இந்திமொழி ஆதிக்கம் வெற்றி பெறச் செய்துகொள்ள வேண்டும் என்று, இந்தி வெறியர்கள், முழு நம்பிக்கையுடன், இருந்து வருகிறார்கள்.
எனவே, பாபு இராஜேந்திர பிரசாத் இந்தி ஆதிக்கக்காரர்களின் பிரதிநிதியாகத் தமிழகம் வருகிறார்-எந்தத் தமிழகம், ஏற்கமாட்டோம் இந்தியை என்று எக்காளமிட்டு நிற்கிறதோ, அந்தத் தமிழகத்தில் உலா வருகிறார்!
“ஏடா, மூடா! எனது மொழி இணையற்ற எழிலுள்ள மொழி! தாய்மொழி! தமிழ்மொழி! என்றெல்லாம், முழக்கமிடுகிறாயே! செம்மொழி என்று பேசுகிறாய், செருக்குடன்! வேறு எம்மொழியிலும் காணக் கிடைக்காத கருத்துக் கருவூலங்கள் உண்டு எமது மொழி யிலே, என்று இறுமாந்து பேசுகிறாய்! முடியுடை மூவேந்தர்கள் கட்டிக் காத்தவர். போற்றி வளர்த்தனர், எமது இனிமைத் தமிழ் மொழியை என்று கவை சொட்டிடப் பேசுகிறாய்! இதோ, பார் பவனி வகும் பாபு, இந்தி மொழியின் ஆதிக்கத்தை விளக்கிடும். நடமாடும் சான்று! என்ன சொல்கிறீர்கள். இதைக் கண்டு! நல்ல மொழி என்கிறீர்களே உமது தமிழ் எமது இந்தி மொழியை, ஆட்சிமொழி ஆக்கிவிட ஆணையைப் பிறப்பித்துவிட்டு, உலா வரும் அஞ்சா நெஞ்சனாம் எமது பாபுவைப் பாராட்டி, ஒரு வாழ்த்துப்பா, இயற்றுங்கள். பரிக வேண்டுமானால் பெறலாம்! என்றன்றோ. இந்தி வெறியர் பேசுவர்.
இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கிவிட்டால், சமாளிக்க முடியாத எதிர்ப்பு எழும். சண்டமாருதம் போலத் தமிழர் கொதித் தெழுந்து நிற்பர் அவர்கள் விழி உமிழும் கோபக்கனல் தீயாகித் திக்கெட்டும் பரவும். என்றெல்லாம் பேசுகிறார்களே என்ன செய்ய இயலும். பிடியை<noinclude></noinclude>
q31vddq37hlqpl3ic2txt1nquplx1iv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/183
250
641811
1928598
1927834
2026-04-30T06:13:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||159}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
159
எம்மிடம் சிக்கிட விட்டுவிட்ட தமிழர்களால், அடிமைத்தளைகளையே அணிபணி என்று எண்ணிக் கொண்டுள்ள ஏமாளிகளால், கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு குழைத்து கிடக்கும் கும்பலால்! பவனி வருகிறார். பாபு! பல்லிளித்து நிற்க ஆட்கள் வேண்டுமா, காட்டுகிறோம். பாருங்கள்! பராக்குக் கூறிடுவோர், பாரீர்!-என்றல்லவா, பேசுவர், எதிர்ப்பு எதுவாயினும் அதனை முறியடித்து, எதிர்ப்போரின் இடுப்பொடித்தோ உயிர்குடித்தோ, எதிர்ப்பை அழித்தொழித்து, எமது இந்தியை ஆட்சிமொழி ஆக்கியே தீருவோம் என்று பேசி நிற்கும் வண்கணாளர்கள்.
"அம்மா! அது யார்?" என்று கேட்கும் சிறுவனுக்கு, தாய் என்ன பதில் கூறுவது!
"அவர் தானடா, கண்ணே! 'அம்மா' என்று எந்தத் தமிழ் மொழியால் இனிமை வழியவழிய என்னை நீ அழைத்து அகமகிழச் செய்கிறாயோ, அந்தத் தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றுள்ள மக்களுக்கு. வேற்றுமொழியை ஆட்சிமொழி ஆக்கிவிட்ட உத்தமர்! உன் தாய்மொழியை நீயே இகழ. இழக்கச் செய்திடும் 'சத்புருஷர்- என்றா பதிலளிக்க முடியும்?
"ஐயோ, அம்மா! நம் தாய்மொழிக்கே ஆபத்துத் தேடியவரா, இவர்? இப்படிப்பட்டவர், என்னையும் உன்னிடம் இருந்து பிரித்து, எவளோ ஒரு வெள்ளாட்டியிடம் விரட்டிவிட்டு. உன்னைப் பெற்றவள் இருக்கட்டும் ஒருபுறம், இனி இவளிடமே நீ இருந்து வரவேண்டும்!" என்று கட்டளை பிறப்பிப்பாரோ? பயம் மேலிடுகிறதே! அவரைக் காணவும் கூசுகிறதே!! என்றன்றோ, சிறுவனும் கூறுவான்.
"அண்ணா! அண்ணா! அகம் என்பாய், புறம் என்பாய், அழகுதரும் இலக்கியம் என்பாய்; அவனியோர்க்கே அறிவளிக்கும் அறநூலாகும் குறள் என்பாய்; அந்தத் தமிழ்மொழி பயின்றிடும் நமக்கு. ஆட்சி மொழியாக இந்தியா? அதற்கான கட்டளை பிறப்பித்தவர். இவர் தானா? இவர் விழாக் கொண்டாடும் நாட்டிலா, நாம் நடமாடிக் கிடக்கிறோம்" என்று தம்பி கேட்பான். அண்ணனை
தம்பி ! தமிழகம், எதைஎதையோ தாங்கிக்கொள்கிறது. பசி, பஞ்சம். பட்டினி, வேலையில்லாக் கொடுமை, விலையேற்றம், கடற்கொந்தளிப்பு, எனும் ஏதேதோ இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது; எனினும் இதனையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்?<noinclude></noinclude>
5nsbdtmkjrqmk3bx0vr62tiyj1sgal3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/184
250
641812
1928599
1927835
2026-04-30T06:13:43Z
Rabiyathul
5890
+ மேலடி
1928599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|160||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>160
'திராவிட நாடு' இதழில்
இந்தி ஆட்சிமொழி ஆகிவிடும்; தமிழர் தாழ்நிலைக்குத் தள்ளப் பட்டு விடுவர் என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள தமிழர் களுக்கு ஒரு ஆறுதல்மொழி அளிக்காமல், இந்தி பேசாதாரின் எதிர்காலம் இருண்டுபோய் விடாது, இந்தி பேசுவோர் ஆதிக்கம் செலுத்தவும், மற்றையோர் அடிமைப்பட்டும் கிடக்கும் நிலை ஏற்படாது என்று உறுதி மொழி அளிக்காமலும், குடிஅரசுத் தலைவர் உலா வருவது எற்றுக்கு!
நேரு பண்டிதர் வாக்குறுதி அளித்தார், பாராளுமன்றத்தில், ஒரு முறைக்கு இருமுறை.
அதனைத் தம்பி! நிதி அமைச்சர், நினைவுபடுத்துகிறார் - தேவை யில்லை. அமைச்சரிடம், நாம் இந்தத் 'தபால்' உத்யோகம் பார்க்கும் ஆற்றல் இருப்பதை மட்டுமா எதிர்பார்க்க வேண்டும்! நேரு பண்டிதர் தந்த வாக்குறுதி நமக்கும் தெரியும், நாட்டுக்கும் நாம் இதனை அறிவித்திருக்கிறோம்
ஆனால், விளக்கப்பட வேண்டிய பிரச்சினை, நேரு பண்டிதர் அளித்த வாக்குறுதி பற்றிக் குடிஅரசுத் தலைவரின் ஆணையிலே, ஏன் விளக்கமான, திட்டவட்டமான குறிப்பு இல்லை-என்பதாகும்.
இந்தி மொழியை ஆட்சி மொழியாக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், அதற்கு என்னென்ன குழுக்கள் அமைக்கலாம். என்பதுபற்றி ஆர்வமும் அவசரமும் காட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது; அந்த ஆர்வமும் அவசரமும்; இந்தி பேசாத மக்களுடைய கருத்து அறியவேண்டும், காலக்கெடு வின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கவேண்டும், என்பதிலே ஏன் காட்டப்படவில்லை. அந்த வகையிலே என்ன முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன?
இந்தி பேசாத மக்களின் கருத்தை அறியவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் உறுதி இருக்குமானால், அந்த வகையில் இந்திய அரசியல்சட்டம் திருத்தப்பட வேண்டும்! அதற்கான நடவடிக்கை, என்ன எடுத்துக்கொள்ளப்பட்டது?
அந்த நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படாமல், இந்தியை ஆட்சி மொழி ஆக்குவதற்கான வழிவகைகளிலே மட்டும், ஆர்வமும் தீவிரமும், அவசரமும் காட்டப்படுவதுதான், பேராபத்து என்கிறோம்.
தம்பி! இதற்காகத்தான், இந்தி எதிர்ப்பு அறப்போர் நடாத்த நமது கழகம் முடிவெடுத்திருக்கிறது.
இது.குடிஅரசுத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.<noinclude></noinclude>
b2jdpofw8htthns49tfvppgrg6vk6zw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/185
250
641813
1928601
1927836
2026-04-30T06:14:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928601
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||161}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
161
அதனைக் கண்ணுற்றவர். அது குறித்து ஏதும் கூறாமல், உலா வர மட்டும் ஏற்பாடு செய்கிறார் என்றால், உன்னையும் என்னையும், நம்முடன் திரண்டு நிற்கும் பல இலட்சக் கணக்கானவர்களையும், துச்சமென்று மதிக்கிறார்-இவர்களை ஏதும் செய்யலாம் என்று எண்ணுகிறார்; என்றுதானே பொருள்.
குடிஅரசுத் தலைவரின் உலா, இந்த அவர் போக்கை, நாடு ஏற்றுக்கொள்கிறது. அனைவரும் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். என்று உலகுக்கு உணர்த்தவும், இந்தி ஆதிக்கக்காரருக்கு உச்சி குளிரவேண்டும் என்பதற்கும் தானே பயன்படும்!
தம்பி! குடிஅரசுத் தலைவரோ, அல்லது இங்குள்ள எடுபிடிகளோ. நம்மை மதிக்காதது பற்றி, மனம்குமுறி என்ன பயன். மெயில் பத்திரிகைக்கே. மதிப்பு இன்னும் ஏற்படவில்லையே அறிவு அவ்வளவும் உருட்டித் திரட்டி, அந்த இதழ் நடாத்து'வோரி'டம் ஒப்படைக்கப் பட்டுவிட்டது போலவும், இதழின் பணி, நாட்டு நிலைமையை எடுத்து விளக்குவது என்றிருக்க, அதை மறந்து, ஒரு பெரிய இயக்கத்துக்கு 'புத்திமதி' கூறிடும் போதகாசிரியராகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்டு, அறப்போர் நடத்தாதீர்! என்று எழுதுகிறது.
ஏதோ, அந்த இதழுக்குத் தன் அறிவிலே அவ்வளவு அபாரமான நம்பிக்கை - முற்றிவிட்டிருக்கிறது-இருந்து போகட்டும். நமக்கோ நாட்டுக்கோ. அது நட்டமல்ல. விந்தை மனிதர்களை எவ்வளவோ காண்கின்றோம். இது ஒன்று அதிலே! ஆனால், மெயில் வேறொன்று கூறி இருக்கிறது. அதுதான், தம்பி! என் நெஞ்சை உள்ளபடி. குத்திக் குடைவதாக இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கிளர்ச்சிகளின் போது. துரைத்தனம், இலேசான தண்டனைகள் கொடுக்கிறதாம்-சீக்கிரம் சீக்கிரம் சிறையிலிருந்து விடுதலை தந்துவிடுகிறதாம். எனவேதான், கழகம், மறுபடியும் மறுபடியும் கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறதாம்! எனவே, மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், என்று எழுதுகிறது.
துரைத்தனத்தின் மனம் ஏதோ இலவம் பஞ்சாக இருப்பது போலவும், இரும்பாக்கிக் கொள்ளவேண்டும் என்று தூண்டிவிட வேண்டிய பொறுப்புத் தனக்கு இருப்பதாகவும். இந்த இதழ் எண்ணிக்கொள்வது பேதமை- வேறென்ன?
பிடிக்காதவர்கள்மீது. வேறு சிலரைத் தூண்டிவிட்டு, வேடிக்கை பார்ப்பவர்களை மிகமிக மட்டமான மக்கள் என்பர் ஆன்றோர்.<noinclude></noinclude>
mrnkvy39l053a9vkk3r6kpqqia30m3q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/186
250
641814
1928602
1927837
2026-04-30T06:14:42Z
Rabiyathul
5890
+ மேலடி
1928602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|162||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>162
'திராவிட நாடு' இதழில்
மெயில் இதழுக்கு, நாம், கடுமையாகத் தண்டிக்கப்படுவதிலே என்ன அலாதியான மகிழ்ச்சி ஏற்படுமோ, எனக்குத் தெரியவில்லை- அதையும் அனுபவிக்க விரும்பினால், தாராளமாக அனுபவித்துவிட்டுப் போகட்டும்.
ஆனால், தம்பி! இந்த நேரத்தில், நாமும் ஒரு விஷயத்திலே. தெளிவு பெற்றுக்கொள்ளவேண்டும்.
நாம் கொண்டுள்ள கொள்கையின் தூய்மையிலே நமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்குமானால், நெஞ்சார நாம் அந்தக் கொள்கையிடம் பற்றுக்கொண்டிருப்பது உண்மையானால், எத்துணை கொடுமைமிக்க தண்டனையையும், ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும்.
நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா?
நீண்டகாலச் சிறைவாசம், சொத்துப் பறிமுதல், போலீஸ் தடியடி, துப்பாக்கிப் பிரயோகம்-எனும் அடக்குமுறையின் பல்வேறு உருளைகள், நம்மீது பாய்ந்து, நம்மைப் பிய்த்தெரியும் நிலை பிறக்கலாம்; தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா?
எதற்கும் தயாராக இருப்பதுதான். இலட்சியவாதிகளின் கடமை- இலட்சணம். நம்மை மாற்றார் மட்டுமல்ல, மந்தமதி படைத்தோரும். இவர்கள் இலட்சியவாதிகள் என்பதில் ஐயமில்லை, இல்லையெனில் உண்டு களித்திருக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கும்போது, இவர்கள். அடக்குமுறையின் உறுமலைப் பொருட்படுத்தாமல், பயங்கரப் பற்களை அது நறநறவெனக் கடித்துக் காட்டிக் கிளம்பும் என்பது தெரிந்தும், அதன் பக்கம் நின்று 'மெயில்' போன்ற இதழ்கள், விடாதே! கடி! பாய்ந்து பாய்ந்து கடி! பிய்த்துப் பிய்த்து எடு! என்று உசுப்புவது தெரிந்தும், தங்கள் கடமையைத் துணிந்து செய்கிறார்களே என்பதை உணர்ந்து, புதுத் தெளிவு பெறவேண்டும்.
அறப்போர் பலவற்றில். நமது கழகத்தவர் ஈடுபட்டு, ஏற்கனவே தியாகத் தழும்பு பல பெற்றுள்ளனர்; எனினும், இப்போதும். நமது வீரத்தையும் தியாகமேற்கும் திறத்தையும் பழித்துப் பேசிடத் துணிவு கொள்கின்றனர். ஒரேயடியாகத் தலைதூக்க முடியாதபடி அடித்து நொறுக்கி விட வேண்டும். இவர்களின் தொல்லை தாளக் கூடியதாக இல்லை என்ற நினைப்பு, வெறி அளவுக்கு அவர்களுக்கு ஏற்பட்டு விட்டதால், எந்தக் கொடிய முறைகளைக் கையாளவும் தயாராகிக் கொள்வர். தயாராகும்படி மெயில் இதழ் போன்றவைகள் தூண்டிவிடும், தூபம் போடும். "உமது வீரதீரம் அபாரம்! உம்மிடம் நாடே சொக்கிக் கிடக்கிறது<noinclude></noinclude>
nwfr85qe3dnoaaesk70oujkca5bn8aq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/187
250
641815
1928603
1927838
2026-04-30T06:15:14Z
Rabiyathul
5890
+ மேலடி
1928603
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||163}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்
163
அடக்குமுறை வீசினால், நாட்டு மக்கள் உள்ளத்தில் அருவருப்பு ஏற்படுமோ. வெறுப்புப் பீறிட்டு எழுமோ என்று எண்ணிக் கவலைப் படாதீர்! நாங்கள் இருக்கிறோம், உமக்குத் துதிபாட! நீங்கள் அவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்-செத்தொழிந்தன நாட்டைக் கெடுக்கும் பீடைகள் என்று தலையங்கம் தீட்டுகிறோம்; உமக்குத் திருப்புகழ் பாடுகிறோம்!" என்று கூறிட இதழ்கள் உள்ளன.
ஆயினும், தம்பி! நம்மிலே பலர் வீழ்ந்துபட்டாலும், நமது உடலிலிருந்து கொட்டும் குருதிகண்டு, கள்ளமில்லா உள்ளம் கொண்டோர். சுயநலமற்றோர், நாடு, மொழி, இனம் என்பவைகளிலே நம்பிக்கையும் பற்றும் கொண்டோர். நமக்காக இரக்கம் காட்டி, ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால், போதுமடா, தம்பி! நாம் பட்ட கஷ்டமத்தனையும் பஞ்சாகப் பறக்கும். நமது உடலிலே ஏற்பட்ட புண் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாவாகி, உலகுக்கு. உண்மையை உரைத்திடும். சுற்றிச் சுற்றி வந்து ஊர் மக்களுக்கு, உண்மையை, விளக்கி வரும் நாம், சுடப்பட்டுக் கீழே சாய்ந்தால், காட்டிலே சந்தன மரங்களின் மீது கரி உராய்வதால் காடு முழுதும் மணம் பரவும் என்பார்களே, அதுபோல் நாடெங்கும் வீரம் பரவும். வெற்றி தொட்டணைத்து உச்சிமோந்து முத்தமிடும் வேண்டுவது, அடக்குமுறையின் தாக்குதலை ஏற்றுக்கொள்ளும் நெஞ்சுரம். அந்த நெஞ்சுரம், நாம் நேர்மைக்குப் பாடுபடுகிறோம் என்ற நம்பிக்கை யிலே இருந்து பிறக்கிறது. அந்த உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், நாம் என்பதை உலுத்தர்கள் உணரமாட்டார்கள், எனவேதான் அவர்கள், தெருக்கோடிச் சாவடியில் முடக்கிக்கொண்டு கிடக்கும் செயலாற்ற முடியாத நிலைபெற்ற 'போக்கிரி', மற்றவர்களைப் பார்த்துக் கூறுவானல்லவா, பயல்களை விடக்கூடாது! செம்மையாக உதைக்க வேண்டும்! கைகால் களை உடைத்திடவேண்டும்!' என்று. அதுபோலப் பேசுகின்றனர்.
பிறிதோர் நாள், தமிழகத்தில், நாம் நடத்தும் மாநாட்டிலே, பத்து இருபதுபேர், கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து வருகிறார்கள் என்று வைத்துக்கொள்-இப்போது நாம் திட்டமிடும் அறப்போரை அழித்திடும் ஆட்சியாளர், மெயில் தரும் மேலான அறிவுரையின்படி தடிகொண்டு தாக்கி, கால்களை ஒடித்து விடுவதால்- தம்பி! பத்து இருபதுபேர், காலிழந்து, கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து, மாநாட்டுக் கொட்டகைக்கு வந்தால், அதைவிட வீரஞ்செறிந்த காட்சி, வெற்றித் திருவைத் தேடித் தந்திடவல்ல உணர்ச்சிமிக்க காட்சி, வேறென்ன இருக்க முடியும்!
"அதோ, கடிலாக்கில் வந்து இறங்குகிறாரே கனவான், கருத்தமுகம், வைரக்கடுக்கன், அவர்: காட்டிலாகா காண்ட்ராக்டர், ஒரே வருஷத்தில் கால் கோடி இலாபம் பெற்றவர். காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு இரண்டு இலட்சம் கொடுத்தார்".<noinclude></noinclude>
c8gzn8ubq7nf9ua4nr57bdj7j0hz0j1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/188
250
641816
1928604
1927839
2026-04-30T06:15:43Z
Rabiyathul
5890
+ மேலடி
1928604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|164||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>164
'திராவிட நாடு' இதழில்
'அவரைப் பாருங்கள்-சிரித்தபடி இருக்கிறார். நாலைந்து சீமாட்டிகள் சூழ நிற்கிறாரே. அவர்தான்-அவர் அடுத்தமுறை தேர்தலில் ஈடுபட, இப்போதே அச்சாரம் கொடுப்பதுபோல், தமது மாளிகையில் ஒன்றைக் காங்கிரஸ் காரியாலயம் நடத்திக்கொள்ள கால் காசு கூடப் பெறாமல். கொடுத்திருக்கிறார்- அநியாய வட்டி வாங்குபவர் என்று அழுகுரலிற் பேசுவர் சிலர்-வட்டி வியாபாரம்தான் -நல்ல பக்தர் - நாட்டுப்பட்டி மிட்டாதாரர்.''
"கவர்னர். பார், கவர்னர். அவருடைய மாளிகை எவ்வளவு பெரிது தெரியுமா? மான்கள் கூட்டம் கூட்டமாகத் துள்ளி ஓடிடும் காட்சியைக் காணவேண்டுமே, அவருடைய தோட்டத்தில்-மிக அழகாக இருக்கும்"
"அதோ, அவர், உயர்நீதிமன்ற முதல்வர்! சட்ட நிபுணர்!'
"அந்தப் பக்கம் நிற்பவர், ஆறுஆயிரம் மாதச்சம்பளம் பெறும், உயர்தர அதிகாரி. நிர்வாகச் செலவை எப்படிக் குறைப்பது என்பதுபற்றி அவ்வப்போது யோசனை கூறுவதற்காக நியமிக்கப் பட்டிருக்கும் பிரத்தியேக அதிகாரி".
"இவர் சகலகலா பண்டிதர் சம்பூர்ணானந்தர். சமஸ்கிருத காவியங் களிலே விசேஷ பாண்டித்யம் இவருக்கு அமெரிக்கா போய் வந்தார். சென்ற மாதம்-கீதைபற்றி 'உபன்யாசம்' செய்ய!"
தம்பி! இவ்விதமெல்லாம், குடிஅரசுத்தலைவர் போன்றாருக்காக நடத்தப்படும் கோலாகல விழாக்களில் காணப்படுவோர் பற்றிப், பளபளப்புக் கண்டு பரவசம் அடைவோர், பேசட்டும்.
நமது எதிர்கால மாநாடுகளில், "அதோ காலிழந்து காணப்படும் கந்தசாமி, சிறுகடை வைத்துக்கொண்டு காலந்தள்ளிவந்தான்- ஆறு குழந்தைகள்-சொந்த வீடுகூடக் கிடையாது. ஏழை. ஆனால் கோழை அல்ல! எனக்கு வீடு இல்லாமலிருக்கலாம். என் தாய்மொழி நாடு இல்லாமல், நாதியில்லாமல் இருந்திட விடமாட்டேன் என்று கூறினான், இந்தியை எதிர்த்தான், அடக்குமுறை அவனை நோக்கிப் பாய்ந்தது. காலிழந்தான் வீரன், கண்ணீர் பொழிந்தனர் மக்கள். இதோ வருகிறான். வெற்றிநடை நடந்து! அவன் நடந்துவரும் பாதையை மக்கள் தூமது கண்ணீர் தெளித்து வணங்குகிறார்கள். நாடு வாழத் தன்னை நொண்டி யாக்கிக் கொண்டான். நாம் வாழ, அவன் வதைபட்டான்!"
"எழும்பி எழும்பிப் பேசுவானே. என் மொழி! என் நாடு என்றெல்லாம். ஒரு இளைஞன், கவனமிருக்கிறதல்லவா, அவன்தான் அதோ தத்தித் தத்தி நடந்து வருபவன்-காலிழந்தான்'".
"அதோ. கண்ணிழந்தான்! கரமிழந்தான்!"<noinclude></noinclude>
g9ecjvof2vjsnq42omi4hwhqlxtrgcp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/189
250
641817
1928605
1927840
2026-04-30T06:16:14Z
Rabiyathul
5890
+ மேலடி
1928605
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||165}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
165
தம்பி! இப்படிப்பட்ட எழுச்சியூட்டும் பேச்சுக்கள் கிளம்பிடத் தக்க நிலையில், ஊர் காக்கப் புறப்பட்டு உறுப்புகளில் சிலதை இழந்தவர்கள், நமது மாநாட்டிலே, வந்து சேரத்தக்க வகையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட வேண்டும்.
காலோ. கையோ, கண்ணோ, போனவர்களில் ஒருவனாக நான் இருக்க விரும்பவில்லை-தம்பி!
அதுமட்டும்தான் எனக்கு என்றால். நான் மெத்த வருத்தப் பட்டுக் கொண்டுதான் இருப்பேன்.
அப்படிப்பட்டதோர் மாநாடு நடக்கையிலே, நான் காலிழந்து கரமிழந்து வருவதைவிட, அந்த மாநாட்டைக் காணமுடியாத நிலையில், 'உயிரிழந்தோன்' ஆகிவிடவேண்டும் என்று விரும்புகிறேன்.
என் விருப்பம் நிறைவேறும் அளவிலும், வகையிலும், அடக்கு முறையை அவிழ்த்துவிடும்படி, மெயில், இன்னும் சிலமுறை தூபமிட வேண்டுமென விரும்புகிறேன்.
இம்முறை நேரிடுமோ, பிறகோ, என்பது வேண்டுமானால், விவாதிக்கப் படவேண்டியதாக இருக்கும் பிரச்சினையே தவிர, நம்மிலே பலர், இந்த நெருப்பாற்றில் இறங்கிய பிறகுதான், நாம் விரும்பும் இன்பத் திராவிடம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளும் அளவு, தம்பி! நான் படித்திருக்கிறேன்.
அங்ஙனம் இன்னுயிர் ஈந்து, இலட்சிய வெற்றி கண்டவர்களைப் பற்றிப் படித்து இன்புறும்போதெல்லாம், நமக்கு எப்போது அந்தப் பேறு கிடைக்கும் என்று எண்ணி எண்ணி இருந்திருக்கிறேன்.
நாம் இருக்குமிடத்திலிருந்து நெடுந்தொலைவில், முற்றிலும் வேறான சுற்றுச்சார்பில், வாழ்ந்துவரும், மெயில் போன்றார்கள். நாம் ஏதோ, விளைவு தெரியாமல், விளைவுகளைத் தாங்கிக்கொள்ளத் தான் வேண்டும் என்ற உறுதிகொள்ளாமல். விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டி ருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டுள்ளனர். தம்பி! தமது! நமது தியாகத் தழும்புகளின் மீது செந்நிறம், ஆறாது இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் -ஏனெனில், நமது கொள்கையின் தூய்மையை உலகுக்குக் காட்டிட, இதனைவிட வேறு மகிமை வாய்ந்த சான்றுகளை நம்மால் பெறமுடியாது.
அந்த நல்ல வாய்ப்பிலே ஒரு அளவு, இம்முறை எழ இருக்கும் அறப்போரின் பலனாக, நமக்குக் கிடைக்குமானால், நன்றி செலுத்தி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.<noinclude></noinclude>
17yphjgeaz697ge45szy6fs9hy7vyiu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/190
250
641818
1928606
1927841
2026-04-30T06:16:44Z
Rabiyathul
5890
+ மேலடி
1928606
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|166||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>166
'திராவிட நாடு' இதழில்
நாம். அவ்விதமான உணர்ச்சி நிரம்பப் பெற்றவர்கள் என்பதைத் துளியும் அறியாததால்தான். குடிஅரசுத் தலைவரை இந்தச் சமயமாகப் பார்த்து வரவழைத்துக் கோலாகலமான விழா நடத்தத் திட்டமிடு கிறார்கள் - இங்குள்ளோர்.
குடிஅரசுத் தலைவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர், அவருக்கு நாட்டவர் அனைவரும் மரியாதை காட்டவேண்டும் என்று இனி உபதேசம் செய்வார்கள்,
அவருடைய தனிச்சிறப்பு இயல்புகளை எடுத்துக்கூறி, எப்படிப் பட்ட நல்லவர் தெரியுமா என்று. கேட்போர் என்புருக எடுத்துக் கூறுவர்.
ஆமென்று நம்பி, அனைவரும் இருந்துவிட்டால், குடிஅரசுத் தலைவரின் உலா முடிந்ததும், அவர், தில்லி சென்று, உலகுக்கு அறிவிப்பார்:
"யாம் பத்து நாட்களாகப் பாரதத்தின் தென்பகுதி சென்று வந்தோம். சென்னை முதல் தூத்துக்குடி வரை சென்றோம்.
சென்ற இடமெங்கும் சிறப்பான வரவேற்பு, மக்கள் வெள்ளம் போல் கூடி நின்றனர்; வழிபட; வாழ்த்துப் பெற.
இந்தப் பகுதியில்தான், தனி நாடு. தனி இனம் என்ற தவறான பேச்சுப் பேசிக்கிடக்கும் ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம், இந்தியைக்கூட எதிர்க்கிறது!!-என்று எனக்குச் சிலர் கூறினார்கள்.
ஆனால். என் பத்து நாள் உலாவின்போதும், ஒரு இடத்திலாகிலும், ஒரு துளி எதிர்ப்பும், ஒரு சிறு அறிகுறியும் காணோம்.
இந்தியைத் தேசியமொழியாக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதற்கு. என் விஜயம் வெற்றியுடனும் விமரிசை யாகவும் நடை பெற்றது ஒன்றே போதும். ஜெய்ஹிந்த்!"
என்று அறிக்கை வெளியிடுவார். அகில உலக இதழ்களும், அதனை எடுத்து வெளியிட்டு, இந்தியை இந்தியர் ஏற்றுக் கொண்டனர் என்று கூறும்-தமிழர் என்றோர் இனம்உண்டு என்று எவரேனும் கூறினால், எந்தப் புதைகுழியில், எத்தனை ஆயிரம் அடி ஆழம் தோண்டிப் பார்த்தால் கிடைக்கும் என்று வேடிக்கைக்காக அல்ல, உண்மையாகவே கேட்பர்.
ஏனெனில், தமிழ் இனத்தின் சிறப்பு என்றும், தமிழ் மொழியின் சிறப்பு என்றும், நாம் எடுத்துக் றி வருவதை மட்டுமல்ல, ஏற்கனவே,<noinclude></noinclude>
id4b5uu1md97ebp5zj450v5ra722nil
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/191
250
641819
1928607
1927842
2026-04-30T06:17:15Z
Rabiyathul
5890
+ மேலடி
1928607
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||167}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
167
பேரறிவாளர் பலரும் எடுத்துச் சொல்வதையும் கேட்ட எவரும், அந்த இனம் அடியோடு அழிந்துபடா முன்பு, இந்தி ஆட்சி மொழியாகி ஆதிக்கம் செலுத்த முடியாது என்றே இயற்கையாகவே எண்ணுவர்.
குடிஅரசுத்தலைவரின் 'விஜயம்' இந்தக் குறிக்கோளுக்காக அல்ல, என்று விளக்கம் அளிக்கப்படும். உண்மையாகவும் இருக்கக் கூடும்.
ஆனால், அவர் உலாவின் விளைவு என்னவாக இருக்க முடியும்?
எனவேதான், தமிழர் தமது இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை எடுத்துக் காட்டத் தவறினால், உண்மை மறைக்கப்பட்டுப் போய்விடக் கூடும். உலுத்தர்கள் அதனையே சர்க்காகக்கொண்டு, இந்திக்கு எதிர்ப்பே இல்லை என்று பேசி உலகை ஏய்ப்பார்களே, என்ற கவலை, மிகவும் ஏற்படுகிறது.
நமக்கு ஏற்படும் இந்தக் கவலை குறித்தும், குடிஅரசுத் தலைவர் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது, எனினும், ஒவ்வொரு நாளும், குடிஅரசுத்தலைவர்.
சென்னை
தூத்துக்குடி நாகர்கோயில்
கன்னியாகுமரி
கோவை
சேலம்
மேட்டூர் வேலூர்
ஆகிய இடங்களில் விழா நடத்திச் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்- கவர்னர் உடன் வருகிறார்-காமராஜர்கூட வருகிறார்- என்ற செய்திகள். வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
என்ன செய்வது? நமது நாட்டிலே மூண்டுகிடக்கும் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, எப்படிக் குடிஅரசுத் தலைவர் உணரும்படி செய்வது?
உடன் வருவோர், அவரிடம் உபசாரம் பேசுவர். உண்மை நிலையைக் கூறப்போவதில்லை.
அவராகக் கேட்டாலும், தேர்தலில் தோற்ற ஒரு சிறு கூட்டம். காரணமற்று இந்தியை எதிர்க்கிறது என்று கூறி, அவருடைய புன்னகையைப் பரிசாகப் பெறவே முயற்சிப்பர்.<noinclude></noinclude>
6rvk4q4k32trx67eouk7qtnp5lnkj5c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/192
250
641820
1928608
1927843
2026-04-30T06:17:45Z
Rabiyathul
5890
+ மேலடி
1928608
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|168||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>168
'திராவிட நாடு' இதழில்
தமிழரின் தவிப்பை, தத்தளித்துக் கிடப்பதை அவர் அறியச் செய்வது எவ்வகையில்?
உமது ஆணை கண்டு. தமிழர் அஞ்சுகின்றனர்-இந்தி ஆதிக்க மொழியாகிட வழிவகுத்துவிட்டீர் என்று. நேரு பண்டிதர் கொடுத்த வாக்குறுதியும் மீறப்படுகிறது என்று, இதை நீக்கும் வகையில்,
இந்தி பேசாத மக்களின் விருப்பம் அறியாமல், இந்தி திணிக்கப்பட மாட்டாது,
அவர்களின் விருப்பப்படி, காலக் கெடுவின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருந்திடும்.
அதற்கான முறையில் இந்திய அரசியல் சட்டம் திருத்தப்படும். என்று, குடிஅரசுத்தலைவரை, 'அறிக்கை' பிறப்பித்துவிட்டுத் தமிழகம் வந்து, உலா நடத்திக்கொள்ளும்படி இங்குள்ள அமைச்சர்கள் கூறவேண்டும். அதை விட்டுப், போலீஸ் உண்டு, படை உண்டு, சிறை உண்டு, அடக்கி விடுவோம், ஒரு துளியும் எதிர்ப்புணர்ச்சி தலைகாட்டாதபடி செய்து விடுவோம், என்று கூறுவார்களானால், எந்தத் தலைவரின் உலா மிகச் சிறப்பாக, அனைவரும் கண்டு பெருமைப்படத்தக்க விதத்தில் நடைபெற வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பார்களோ. அம்முறையில், உலா அமையாது என்பது மட்டும் எனக்கும் தெரிகிறது, உனக்கும் புரிகிறது.
ஜனவரி ஆறாம் நாள் நிகழ்ச்சி நினைவுக் குறிப்பில் இருக்கு மானால், இங்குள்ள அமைச்சர்களும் அறிந்துதான் இருப்பார்கள்.
அன்று கையாண்டதைவிடக் கடுமையாக இருக்கும், கெடுபிடி என்று அமைச்சர்கள் கூறுவரேல், நாம் என்ன சொல்ல முடியும். அன்று வீழ்ந்த பிணத்தைவிட, இன்னும் சற்று அதிக அளவில் கீழே சாயும்! அது உமக்குச் சிறப்பளிக்கும் என்றால் செய்து கொள்ளுங்கள் என்றுதானே, சொல்ல முடியும்.
பாபு பவனிவந்தார். ஊருக்கு நாலுவீதம், மொத்தத்தில் நாற்பது ஐம்பது பிணங்கள் கீழே சாய்ந்தன தமிழகத்தில், என்று வரலாற்றிலே பதித்துக்கொள்வது. சிறப்புக்கும் அறிவுடைமைக்கும் அறநெறிக்கும் உகந்ததென்றால், ஆட்சியாளர், தமது இஷ்டப்படி செய்துகொள்ளட்டும்.
எதிர்ப்பு உணர்ச்சி காட்டாதிருந்தால், இந்திக்குத் தமிழகம் தலை சாய்த்துவிட்டது என்று பொருள்படும் என்று உணரும் தமிழர், அடக்கு முறைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள்! பாபுவின் பவனி முறையு மல்ல; அவருக்குத் தேடித் தரவேண்டிய சிறப்பினையும் இங்குள்ள அமைச்சர்கள், பெற்றளிக்கத் தவறி விட்டார்கள் என்ற பழிச்சொல்லே பெறப் போகிறார்கள்.<noinclude></noinclude>
ifnitgmdq9km7q93cfrtad342vhibzi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/193
250
641821
1928609
1927844
2026-04-30T06:18:14Z
Rabiyathul
5890
+ மேலடி
1928609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||169}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
169
அந்த வழிதான் எங்கள் வழி என்று அமைச்சர்கள் எண்ணினால், நாம் தடுக்கவா முடியும்!
நமக்கு நமது வழி தெளிவாகத் தெரிகிறது.
நமக்கு எத்துணை கஷ்டம் நேரிடுவதாயினும், தாயகத்துக்கு மானக்குறைவு, இனத்துக்கு இழிவு, மொழிக்குத் தாழ்நிலை, ஏற்படலாகாது, ஏற்படவிடக் கூடாது. அந்தத் தூய தொண்டாற்றவே, உயிர் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ட
தமிழர், நீண்ட பல காலமாகவே அந்த வழி நடந்து பழகினவர்கள். அவர் வழிவழி வந்த நாம், வேறுவழியா நாடுவோம்!
"தவறான வழி செல்லாதீர்" என்று உருக்கமாகப் பேசும் பாவனையில் சிலரும், "உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்' என்று உருட்டுவிழி காட்டிச் சிலரும், பேசி வருகின்றனர்-காங்கிரஸ் வட்டாரத்தில்.
தமிழ்நாடு காங்கிரஸ் குழு மதுரையில் கூடி இதைப்பற்றி விரிவாகப் பேசி-இந்தி எதிர்ப்பு அறப்போருக்கு ஆதரவு தராதீர் என்று, தமிழக மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழர்கள், தங்கள் பக்கம்தான் நிற்பர், கழகத்தின் வேண்டு கோளை ஏற்கமாட்டார்கள் என்பதில், இந்த ஆண்மையாளர்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், ஒருகாரியம் செய்யச் சொல்லு பார்க்கலாம். தம்பி!
குடிஅரசுத்தலைவரின் ஆணைகண்டு குமுறிக் கிடக்கும் மக்கள், தங்கள் எதிர்ப்புணர்ச்சியை எடுத்துக்காட்ட, அவர் செல்லுமிடங்களில், அமைதியான முறையில், கருப்புக்கொடி காட்டவேண்டும். என்று கழகம், கூறிடட்டும்.
காமராஜரிலிருந்து கக்கன் ஈறாக, இன்னும் உள்ள நாராச நடையினர், அனைவரும் கூடி, தமிழக மக்களுக்குப் 'புத்திமதி' கூறி, கருப்புக்கொடி காட்டாதீர்கள் என்று வேண்டுகோள் விடட்டும்.
ஒருவர் முயற்சியில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம்.
இருசாராரும், மக்களிடம் சென்று, நிலைமையை விளக்கித் தமது கருத்துக்கு ஆதரவு தேடட்டும்.
அப்போது, தமிழர்கள் கருப்புக்கொடி காட்டித் தமது கண்டனத்தைத் தெரிவிக்க முன்வருகிறார்களா. அல்லது காமராஜர் பேச்சைக் கேட்டு காலைக்கழுவி நீரைப் பருகிடும் பக்தர் போலாகி, குடிஅரசுத்தலைவரை வரவேற்கிறார்களா, என்று பார்ப்போம்.<noinclude></noinclude>
c0abkkedffae1ayjjlpv94i5y2za9xv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/194
250
641822
1928610
1927845
2026-04-30T06:18:44Z
Rabiyathul
5890
+ மேலடி
1928610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|170||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>170
'திராவிட நாடு' இதழில்
இந்த அறைகூவலை ஏற்றுக்கொள்ள, அவர்கள் தயாரா?
அந்த இலட்சணத்தைத்தான். நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டியபோதே கண்டோமே!
தம்பி! மக்களைக் கண்டு, இன்னின்ன முறையில், அமைதி கெடாமல், பலாத்காரம் துளியும் தலைகாட்டா வண்ணம், கருப்புக் கொடி காட்டுங்கள் என்று கூறக், கடற்கரைக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம்-மறுத்தனர்- மீறிச் சென்றோம்-வழியிலே வளைத்துப் பிடித்துக்கொண்டுபோய்ப் போலீஸ் கொட்டடியில் போட்டு அடைத்தனர்.
அவ்வளவுதான், அவர்களுக்கு மக்களிடம் உள்ள நம்பிக்கை.
நமது மாநிலத்தில், மிக நீண்ட காலமாகவே திறமையுடன் அமைந்துள்ள போலீஸ் படையின் தயவை நாடித்தான், காங்கிரசார் கிளர்ச்சிகளை ஒடுக்க முடிகிறதே தவிர, அறிவுரையாற்றி, மக்களைத் தம் பக்கம் ஈர்த்திட முடிகிறதா? இல்லை, தம்பி! இல்லை! அந்தச் சக்தியை அவர்கள் இழந்து நெடுங்காலமாகிவிட்டது.
மெயில் இதழ்கூடக் காங்கிரசாருக்கு - அமைச்சர்கள் உட்பட- மக்களிடம் விளக்கம் கூறித், தம் பக்கம் கொண்டுவரச் செய்யும் ஆற்றல் இல்லை என்பதை அறிந்துதான், கடுமையான தண்டனை கொடுத்து அடக்கவேண்டும், என்று எழுதுகிறது.
மக்களின் நெஞ்சைத்தொடும் விதமாகப் பேசும், மக்கள் தலைவரே! காமராஜரே! கிளம்புங்கள்! ஊரூர் சென்று, கழகத்தின் போக்கை மக்கள் ஆதரிக்கக் கூடாது என்று எடுத்துக் கூறுங்கள்-என்று எழுத மெயிலுக்கு மனம் வரவில்லை; நடவாத காரிய மாயிற்றே என்று எண்ணுகிறது.
'புள்ளிவிவரப் புலியே! வாத வல்லுநரே! கோவைச் சிங்கமே! சுப்ரமணியமெனும் அமைச்சர் ஏறே! போர்முழக்கம் செய்ய இன்றே புறப்படுக! உமது விவேகம் ததும்பும் பேச்சினைக் கேட்டால். மக்கள் தெளிவு பெறுவர்! உமக்கென்ன, காரசாரமாகவா பேசத் தெரியாது! ஏதோ இந்த நாடு செய்த 'தவப்பயனால்' 'அமைச்சர்' எனும் மிகச் சாதாரணப் பதவியில் இருக்கிறீர்-நீர் விரும்பினால், அகில உலக அரங்கின் அரியாசனம் அமர்ந்து, பண்டிதரால் செய்துமுடிக்க முடியாத பஞ்சசீலத்தைப் பாரில் வெற்றிபெறச் செய்ய இயலுமே! சில பயல்கள் பாபுவுக்குக் கருப்புக்கொடி பிடிக்கத் தூண்டினால் என்ன? உமது சங்கநாதம் கிளம்பினால், திக்காலொருவராக ஓடிவிட மாட்டார்களா? மக்கள், உமது பாதம்பணிந்து கட்டளையை எதிர்பார்த்து நிற்கமாட்டார்களா? அத்தகைய பேராற்றல் படைத்தவரல்லவோ! இன்றே புறப்படுகா<noinclude></noinclude>
1bxfgcmhqhhgt9wozdz491uy0ne9w2j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/195
250
641823
1928611
1927846
2026-04-30T06:19:15Z
Rabiyathul
5890
+ மேலடி
1928611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||171}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
171
என்று எழுதிட மெயிலுக்குக் கூச்சமாக இருக்கிறது. கோவையார் போகாத ஊரில்லை. பேசாத நாளில்லை, மக்கள் கேட்டதாகத் தெரியவில்லையே! மறுபடியும் ஏன் வீண் முயற்சி என்று எண்ணுகிறது. எனவேதான், எது, அமைச்சர்களால், எளிதிலே செய்திட முடியுமோ, அதுவாகப் பார்த்து. கடுமையாகத் தண்டித்துக் கழகத்தை ஒழித்துக்கட்டுங்கள் என்று. எழுதுகிறது.
மயில், காணும்போது தன் தோகையை விரித்தாடினால் காட்சி அழகாக இருக்குமே, என்ற எண்ணம் தோன்றும். கழுகைக் காணும் போது? இதன் கூரிய மூக்கினால் பிணங்களை எத்தனை வேகமாகக் கொத்துமோ! என்று வியப்புடன் நினைத்திடத் தோன்றும்.
மக்களாட்சி முறையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைத் தமது மறுப்புரை மூலம் பயனற்றதாக்க வேண்டும்; அந்த ஆற்றலுடன், அந்த ஆளுங்கட்சி இருந்தால், அத்தகைய ஆற்றல் அற்றுப்போனால்? பிடி!அடி! சுடு! இதுதான்!! இது புதிதுமல்ல; இதைக்கண்டு மருண்டு, எந்த இயக்கமும் சுருண்டுபோனதில்லை. சிலர் மடிந்தனர்; வேறு பலர் எழுந்தனர்! சிலர் வாழ்வு பாழ்படுத்தப்பட்டது; ஆனால், இறுதியில் மனித குலத்துக்குப் புதுவாழ்வு கிடைத்தது.
நிதி அமைச்சர் பேசாமலும் இல்லை.
ஏன் வீண் பீதி?
இந்தியை எங்கே திணிக்கிறார்கள்?
தமிழன்றோ ஆட்சிமொழி ஆகி இருக்கிறது.
ஆங்கிலம் அறவே போய்விடாது.
என்றெல்லாம் பேசி வருகிறார்.
ஒருவிதத்திலே மகிழ்ச்சிதான் எனக்கு.
எவனவன் இந்தியை எதிர்ப்பவன்?
இந்திதான் நமது தேசிய மொழி.
இந்திதான் ஆட்சி மொழி.
தமிழ்மொழி, தாய்மொழி என்று பேசலாகாது.
தமிழர் வேறு, இந்தியர் வேறு என்று கூறுவது மடமை, என்றெல்லாம் பேசவில்லை - பேச முடியவில்லை-பேசினால், இப்படியும் ஒரு தமிழ்த்துரோகி இருக்கிறாரே என்று பாமரரும் கூறிக் கண்டிப்பார்கள் என்ற பயம் மேலிட்டிருக்கிறது. தமிழ் இனம் விழிப்புற்று இருக்கிறது, என்பது தெரிந்து, சுடச்சுடப் பேசுவதுதான் சுவைமிக்கது என்ற கருத்தில்<noinclude></noinclude>
k58fcam3cizid0bjhpph8zx9qeqiowm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/196
250
641824
1928613
1927847
2026-04-30T06:19:45Z
Rabiyathul
5890
+ மேலடி
1928613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|172||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>172
'திராவிட நாடு' இதழில்
நாவைப் பயன்படுத்தும் அமைச்சர், அடக்க ஒடுக்கமாகப் பேசுகிறார். அந்த மாறுதல், வரவேற்கத்தக்கது, ஆனால், உண்மையையா. அவர் பேசுகிறார்?
தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகச் சிரமப்பட்டு விளக்கி இருக்கிறார்.
தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி ஆகி இருப்பது, அதிசயத்திலே
ஒன்றல்ல
மொழிவழி மாநில அமைப்பின்போதே. இப்படித்தான் நடந்திடும் என்பதை அனைவரும் அறிவர்.
தமிழ் மாநிலத்தில் தமிழ் ஆட்சிமொழி என்றிருப்பது போலவே, பிறமொழி பேசிடும் மாநிலங்களிலேயும் ஏற்பட்டுள்ளன.
இதிலே அமைச்சர் சுப்ரமணியனாரின் அலாதியான வீரதீரம் ஏதுமில்லை. இது, டில்லியால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு ஏற்பாடு ஆனால், அமைச்சர் அறிவிக்காதது, ஆனால் நாடு அறிந்து கொள்ளவேண்டியது வேறொன்று உளது.
தமிழ் மாநில அரசு தில்லி அரசுக்குக் கட்டுப்பட்டு, அது இட்ட வேலையைச் செய்துகிடக்கக் கட்டுப்பட்டிருக்கிறது.
எனவே ஆட்டிப்படைக்கும் அதிகாரம், தில்லிக்கு.
அந்தத் தில்லிக்கு, ஆட்சி மொழி இந்தி!
பேரரசு என்ற நிலைபெற்று உள்ள தில்லியில், எம்மொழி ஆட்சி மொழியோ, அந்த மொழியைத்தான் உலக நாடுகள், உண்மையான ஆட்சிமொழி என்று ஏற்றுக்கொள்ளும்-மதித்திடும்.
இந்த உண்மையை எடுத்துரைக்காது மறைத்துவிடுகிறார் அமைச்சர்.
வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்த நடவடிக்கைகள், இந்தியா முழுவதுக்கும் (தமிழகம் உட்பட) என்று இயற்றப்படும் சட்டங்கள், உத்தரவுகள், எல்லாம் இந்தியில்தான்!
இந்தியப் பேரரசின் கட்டுக்கு அடங்கி நடக்கவேண்டிய இராணுவத்தில் இந்திமொழியில்தான், கவாத்து பழகுவதிலிருந்து. காரிய விளக்கங்கள் வரையில்
இந்தியா முழுமைக்கும் என்று இருக்கிற உச்ச. உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தி மொழியில்தான்.<noinclude></noinclude>
79klkdhhbgs33qsz4qt7t224v6kbdwl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/197
250
641825
1928615
1927848
2026-04-30T06:20:15Z
Rabiyathul
5890
+ மேலடி
1928615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||173}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
173
இந்தியப் பேரரசு நடைபெறப் பணியாற்றிவரும் அலுவலகங் களிலே உள்ளோர். இந்தி கற்றுத் தேறியாக வேண்டும்.
இவைகள், எதைக் காட்டுகின்றன? இந்தி ஆட்சி மொழியாகி விடுவதை, ஆதிக்க மொழியாகி விடுவதை!
இந்தியப் பேரரசு, மாநில அரசுகளை, அதிகாரமற்ற, தானம் கேட்டுப் பிழைத்திடவேண்டிய தலையாட்டிகளாக ஆக்கி வைத்திருப் பதைத் துணிவுடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் போக்கினராக உள்ள அமைச்சரேகூட, ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலைதான். பேரறிவாளர் பலரும் கூறிவிட்டனர்.
அந்தப் பேரரசு, இந்தியை ஆட்சிமொழி என்றாக்கி விட்டால், இங்கு தமிழ்தான் ஆட்சிமொழி என்று கதைப்பதிலே, பொருள் என்ன இருக்கமுடியும்!
நீதி மன்றங்களில் கூட, இனித் தமிழ்தான் என்றார் அமைச்சர்.
யார் அவ்விதம் சொல்வது? உச்ச உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தியில் இருந்து தீரும். அந்நிலையில், ஒவ்வொரு மாநிலமும், தத்தமது தாய்மொழியில், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்திச் சென்றால், குழப்பமல்லவா ஏற்படும். எனவே மாநில உயர் நீதிமன்றங் களும், இந்தி மொழியிலேயே நடைபெறவேண்டும் என்று அறைகிறார். தில்லி அமைச்சர் சென்!
இப்போதும், உயர்நீதிமன்றம் தமிழில்தான் நடைபெற வேண்டும் என்பதில், சென்னைத் துரைத்தனம் உறுதியாக இருக்கிறது என்று. பேசுகிறார் நிதி அமைச்சர்.
உரத்த குரலிற்கூடப் பேசலாம் - ஆனால் உறுதியாக இருக்க இவருக்கு ஏது உரிமை
உயர்நீதிமன்றங்கள் இப்படி இப்படி நடைபெற வேண்டுமென்று. தில்லி தீர்மானித்துவிட்டால், அதை மீறும் துணிவும் வழி வகையும், இவருக்கு ஏது?
இவரே அல்லவா, தமது ஆட்சியின் கீழுள்ள இந்த மாநிலத்தில், ஏதேனும் ஓர் இந்திய மொழி பயிலவேண்டும் என்று தந்திரமாகக் கூறிவிட்டு, எல்லாப் பள்ளிகளிலும் இந்தியைத் திணித்திருக்கிறார்.
இவர், இந்தித்திணிப்பு இல்லை என்று பேசுவதை, எவர் மதித்திடுவர். இவைபற்றி எல்லாம் எண்ணிப்பார்த்தே, மெயில், இந்த அமைச்சர்கள் பேசிப் பயனில்லை-இவர்களுக்குத் தெரிந்ததும். முடியக் கூடியதும்<noinclude></noinclude>
jafj8h94sj1gtv0f7qqzy0i2od0qg4a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/198
250
641826
1928616
1927849
2026-04-30T06:20:47Z
Rabiyathul
5890
+ மேலடி
1928616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|174||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>174
'திராவிட நாடு' இதழில்
ஒன்றே ஒன்றுதான். ஈவு இரக்கமின்றி, எதிர்ப்பாளர்களை அடித்து நொறுக்குவது. அந்த வேலையைச் செய்யும்படி கூறலாம் என்ற போக்கிலே எழுதி இருக்கிறது.
கடுமையாகத் தண்டித்து விடுலோம் என்று மிரட்டினால், குடிஅரசுத்தலைவரின் விழாவின்போது, எதிர்ப்புத் தலைகாட்டாது என்று எண்ணுகிறார்கள் போலும்!
ஆளுங்கட்சியினர், அவர்களை அடுத்துப் பிழைப்போர், ஆகியோரை அணிபணி பூண்டு வரச்செய்து, குடிஅரசத் தலைவரின் முன் நிறுத்திக் காட்டி, "இதோ வரவேற்பாளர்கள்! தமிழர்கள்! தங்கள் ஆணையைச் சிரமேற்கொண்டு 'சேவை' செய்யக் காத்துக்கிடக்கும் கர்ம வீரர்கள்!” என்று, எடுத்துக் கூறுவர் போலும்!
தம்பி! முன்னமோர் நாள். ரோம் சாம்ராஜ்யத்தில் டைடஸ் ப்ளாவியஸ் டோமீஷியன் என்ற மன்னர் மன்னன் இருந்தான், வீரனல்ல; எனினும் விருதுகள் பெற விரும்பினான் இதோ வாய்ப்பு என்றனர், உடன் நின்றோர். ஜெர்மன் இனத்தவரின் ஆளுகையில் இருந்த ஒரு நாட்டின்மீது படை எடுத்துச்செல்லும் வாய்ப்புக் கிடைத்தது
போர் நடைபெற்றது! ரோம் நாட்டு மக்கள், தமது மாமன்னன் பெற்றளிக்கப்போகும் வெற்றியை விழாவாகக் கொண்டாடத் துடித்து நின்றனர் போர் முடிவுற்றது. மாமன்னன், வெற்றி உலா வந்தான் ரோம் நகரில்! வீதிகளெல்லாம் வளைவுகள், கொடிகள், தோரணங்கள், மாமன்னரே. வருக! மாற்றானை மண்டியிடவைத்த வீரரே வருக! ரோம் நாட்டுக் கீர்த்தியைப் பரப்பிய தலைவனே! வருக! வருக! என்று. வாழ்த்தி வரவேற்றனர்.
மாமன்னன், தலைநகரில் பவனி வந்தான்.
பிடிபட்ட ஜெர்மானியர்கள், அந்த ஊர்வலத்திலே, அணி அணியாக இழுத்துவரப்பட்டனர்.
ரோம் நாட்டு மக்களுக்குப் பேருவகை தோற்றவர்கள், பிடிபட்டனர், பிடிபட்டவர்களைப் பிடித்திழுத்து வருகிறார் மாமன்னர்-என்று எக்காளமிட்டனர்.
ஆனால், தம்பி! உண்மையில் நடந்தது என்ன தெரியுமோ? போரிலே மாமன்னர் வெற்றிபெறவில்லை - விரட்டி அடிக்கப்பட்டார்
தோற்றுப் போய்த்தான் தலைநகரம் திரும்பினார்<noinclude></noinclude>
ooys4uukun1no9gqk6xio11auys9v5a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/199
250
641827
1928617
1927850
2026-04-30T06:21:17Z
Rabiyathul
5890
+ மேலடி
1928617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||175}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
175
ஆனால், வெட்கமாக இருக்குமல்லவா? அதனால், தோற்ற செய்தியை மூடி மறைத்தார்-வெற்றி உலாவே நடத்திக் காட்டினார்.
அங்ஙனமாயின், பிடிபட்ட ஜெர்மானியர்களைப் பிடித்திழுத்து வந்தாரே, அது எப்படி? என்றுதானே தம்பி! கேட்கிறாய்.
அவ்வளவு பேரும், மாமன்னரின் அடிமைகள் அவர்களுக்கு, ஜெர்மானியர்போல் உடை அணிவித்து, அழைத்துவந்தார்-ஊரை ஏய்த்திட
நாளை குடிஅரசுத்தலைவர்முன் கொண்டுபோய் நிறுத்தப் படுபவர்கள், தமிழ் பேசுவோர். தமிழராகார்! தமிழரின் நடை உடை இருக்கும், நெஞ்சம் தமிழ் நெஞ்சமாக இராது! அடிமைகள் ஜெர்மன் உடையில்!! இவர்கள் அடிவருடிகள் தமிழர் கோலத்தில் பாபு இராஜேந்திரர், இந்தக் காட்சியைக் காணவா, தமிழகம் வர வேண்டும்! பரிதாபம்! மிகப் பரிதாபம்!!
31.7.60
அண்ணன்,
அண்ஐதுளி<noinclude></noinclude>
8x1chk7pkn3lyjd35eztmc3p1f06ik2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/200
250
641828
1928618
1927851
2026-04-30T06:21:48Z
Rabiyathul
5890
+ மேலடி
1928618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|176||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தம்பி!
கடிதம் : 114
மூலவர் மூவர் முரசொலி....
குடியரசுத் தலைவருக்குக் கருப்புக் கொடி
நேருவின் பதில்.
என்ன, என்னைக் கண்டதும், உன் முகத்தை ஒளிவிடச் செய்து கொண்டிருந்த அந்த 'வசீகர'ப் புன்னகையை மறைத்துக் கொண்டு. கோபமும் சோகமும் காட்ட முயற்சிக்கிறாய்? எதையோ எண்ணி எண்ணி, மகிழ்ந்து கொண்டிருந்திருக்கிறாய்-புன்னகை பூத்திடக் காரணம் அதுவே-எனினும் என்னைக் கண்டதும், புன்னகையைத் திரையிட்டு மூடிவிடுகிறாய், புதியதோர் கோலம் கொள்கிறாய்-எதை உணர்த்த?- அடே! அப்பா இலேசான ஆளல்லவே, நீ எழுச்சிக்கு இருப்பிடம்! வீரத்தின் பிறப்பிடம்! உணர்ச்சியின் உறைவிடம்! அல்லவோ-உன்னை நான் அறியேனா? உன் இயல்புகள் எனக்கு நன்கு தெரிந்திருப்பதனால் தானே, எத்தனை எத்தனையோ கற்று மெத்தத்தேறியவர்கள் என்போர் எண்ணிப் பார்த்திடக்கூட அச்சப்படும், நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடாத்தி வெற்றிபெற முடியும் என்ற உறுதியும் நம்பிக்கையும் என் போன்றார்களுக்கெல்லாம் ஏற்படுகிறது அந்த உன் இயல்பு. உன்னைப் புன்னகை புரிந்திட வைக்கிறது அதனூடே, பொய்க் கோபம் காட்டவும் செய்கிறது. அண்ணன் காணா நேரத்தில், அகமகிழ்ச்சி; வெளியே தெரியுமளவு புன்னகை கொள்கிறாய்; காணும்போதோ, இது போதாது அண்ணா! என்று கூறிட ஓர் பொய்க்கோபம் காட்டுகிறாய். புரிகிறது! புரிவதால், உன்னிடம் உள்ள பற்றும் மதிப்பும், வளரவும் செய்கிறது! வீரச்செயல்களை அடுக்கடுக்காகத், தொடர்ந்து, மாற்றார் மருண்டு மண்டியிடும் அளவுக்குச் செய்தவண்ணம் இருக்கத் துடிக்கிறாய்! இளமைத் துடிப்பு என்று மட்டும்கூட இதனைக் கூறுவதற்கில்லை- இலட்சியத்திலே உனக்குள்ள ஆர்வம், உனக்கு அத்தகைய உணர்ச்சியைத் தருகிறது. பகை அழிக்கத் துடிக்கிறாய்! பகை அழித்தே சிகை முடிப்பேன் என்று சூளுரைத்துக் களம் புகும் பண்டைய வீரத்தின், இன்றைய 'பதிப்பாக' விளங்கி வருகிறாய். வாழ்க நின் வீரஉணர்ச்சி! வளர்க உன் பேரார்வம்!!
எதற்கு அண்ணா. பேரார்வம். வளருவது? ஏன்? வளர்த்து விடுவாய், பிறகு, ஒரு கணத்தில். அதற்கு இது சமயமல்ல, தேவைப்<noinclude></noinclude>
kwrcg3y8sln7y5k3jyrncfylzmzdxkc
1929007
1928618
2026-04-30T10:59:32Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>தம்பி!
கடிதம் : 114
மூலவர் மூவர் முரசொலி....
குடியரசுத் தலைவருக்குக் கருப்புக் கொடி
நேருவின் பதில்.
என்ன, என்னைக் கண்டதும், உன் முகத்தை ஒளிவிடச் செய்து கொண்டிருந்த அந்த 'வசீகர'ப் புன்னகையை மறைத்துக் கொண்டு. கோபமும் சோகமும் காட்ட முயற்சிக்கிறாய்? எதையோ எண்ணி எண்ணி, மகிழ்ந்து கொண்டிருந்திருக்கிறாய்-புன்னகை பூத்திடக் காரணம் அதுவே-எனினும் என்னைக் கண்டதும், புன்னகையைத் திரையிட்டு மூடிவிடுகிறாய், புதியதோர் கோலம் கொள்கிறாய்-எதை உணர்த்த?- அடே! அப்பா இலேசான ஆளல்லவே, நீ எழுச்சிக்கு இருப்பிடம்! வீரத்தின் பிறப்பிடம்! உணர்ச்சியின் உறைவிடம்! அல்லவோ-உன்னை நான் அறியேனா? உன் இயல்புகள் எனக்கு நன்கு தெரிந்திருப்பதனால் தானே, எத்தனை எத்தனையோ கற்று மெத்தத்தேறியவர்கள் என்போர் எண்ணிப் பார்த்திடக்கூட அச்சப்படும், நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடாத்தி வெற்றிபெற முடியும் என்ற உறுதியும் நம்பிக்கையும் என் போன்றார்களுக்கெல்லாம் ஏற்படுகிறது அந்த உன் இயல்பு. உன்னைப் புன்னகை புரிந்திட வைக்கிறது அதனூடே, பொய்க் கோபம் காட்டவும் செய்கிறது. அண்ணன் காணா நேரத்தில், அகமகிழ்ச்சி; வெளியே தெரியுமளவு புன்னகை கொள்கிறாய்; காணும்போதோ, இது போதாது அண்ணா! என்று கூறிட ஓர் பொய்க்கோபம் காட்டுகிறாய். புரிகிறது! புரிவதால், உன்னிடம் உள்ள பற்றும் மதிப்பும், வளரவும் செய்கிறது! வீரச்செயல்களை அடுக்கடுக்காகத், தொடர்ந்து, மாற்றார் மருண்டு மண்டியிடும் அளவுக்குச் செய்தவண்ணம் இருக்கத் துடிக்கிறாய்! இளமைத் துடிப்பு என்று மட்டும்கூட இதனைக் கூறுவதற்கில்லை- இலட்சியத்திலே உனக்குள்ள ஆர்வம், உனக்கு அத்தகைய உணர்ச்சியைத் தருகிறது. பகை அழிக்கத் துடிக்கிறாய்! பகை அழித்தே சிகை முடிப்பேன் என்று சூளுரைத்துக் களம் புகும் பண்டைய வீரத்தின், இன்றைய 'பதிப்பாக' விளங்கி வருகிறாய். வாழ்க நின் வீரஉணர்ச்சி! வளர்க உன் பேரார்வம்!!
எதற்கு அண்ணா. பேரார்வம். வளருவது? ஏன்? வளர்த்து விடுவாய், பிறகு, ஒரு கணத்தில். அதற்கு இது சமயமல்ல, தேவைப்<noinclude></noinclude>
eh881xqmdzcgx32f402sj7khfx5f0uk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/201
250
641829
1928619
1927852
2026-04-30T06:22:19Z
Rabiyathul
5890
+ மேலடி
1928619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||177}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
177
படவில்லை என்று கூறிவிடுவாய்!! இதற்கா இத்துணை ஆர்வம் பொங்கிடக் கிளர்ந்து எழுந்தோம் என்று, பிறகு நான், நொந்து கொள்ளவேண்டும் - ஏனோ. இந்தப் போக்கு? பாடி வீட்டிலே பரணி பாடியபடி இருந்திடவேண்டி வருகிறதே. பகைக் கூட்டம் பழிச் சொல்லையும் இழிமொழியையும் உமிழ்ந்தபடி நடமாடிடக் காண்கிறோமே; அவர்தம் கொட்டம் அடக்க, நமக்கோர் வெற்றி கிடைக்க, செருமுனை சென்று, சீறிப்போரிட வேண்டாமோ. சிந்தனையில் பிறந்து வளர்ந்துள்ள எத்தனை எத்தனையோ செயல் முறைகளை, வடிவமெடுக்கச் செய்து காணவேண்டாமோ!-அந்த என் நிலையைத் துளியும் உணராமல், அடலேறே! வா! வா! என்று அழைக்கிறாய்; அணிபணி மறந்து, ஆடல் பாடல் வெறுத்து, குடும்பத்தையும் துறந்து, நீ கூப்பிடும் குரல், கோல மயிலாள், குழல் மொழிக் குழவி, பாசம் பொழியும் அன்னை, இவர்தம் குரலினும் மேலானது என்று எண்ணி, நான் ஓடோடி வருகிறேன்; வந்தவனை நோக்கி, "வல்லமை மிக்கவனே பொல்லாங்கு அறுப்பவனே! ஆற்றல் மிக்கோனே! அறப்போர் வீரனே! இப்போது இல்லை, உன் வீர விளையாட்டுக்கு வாய்ப்பு! பிறிதோர் சமயப் பார்ப்போம்! சென்று, வா!' என்று கூறுகிறாய், என்னைச் செயலாற்ற இயலாத வனாக்குகிறாய்- ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய், அண்ணா!- என்றெல்லாம் கேட்கிறாய். கோபமல்ல, தம்பி| மனம் குளிர்ச்சி அடைகிறது, உன் நோக்கம் காணும் போது!
ஆமாம்! கோபம்காட்டுகிறாய்-அதற்கான காரணம், உன் மனம் மகிழத்தக்க அளவுக்கு, வல்லமை விளங்கிடத்தக்க வகையில், அறப்போர்க் களத்திலே செயலாற்றும் செம்மலாகத் திகழுவதற்கு இருந்த நல்வாய்ப்பு, பறிக்கப்பட்டுப் போய்விடுகிறதே, என்பது ஆனால், பொய்க்கோபம் காட்டி நின்றாயே அதற்கு முன்பு, ஒர் புன்னகை பூத்திருந்ததே, மறுக்காதே தம்பி! அந்தப் புன்னகைக்குக் காரணம் என்ன? மகிழ்ச்சி! மகிழ்ச்சிக்குக் காரணம்? என்ன? கூறமாட்டாய்! தெரியும் எனக்கு! மூச்சடக்கிக் கடலடி சென்று, முத்து எடுக்கும் இனத்தவரின் வழிவழி அன்றோ! உனக்குக் கடலோர வெண்மணலில், முத்தொன்று. காலிலே தட்டுப்பட்டுக் கிடைத்திடின், பெருமகிழ்ச்சி கொண்டிட இயலாது.
பொங்கும் கடல்! மலைமலையாய் அலை! குமுறிடும் சுழல்! என்று பலர் கூறிடும் வேளையில், அச்சம் கொள்வோரிடம் கூறிடுக! ஆண்மையாளர்களிடம் இவை வெற்றுரை!-என்று உரைத்துவிட்டுப், பாய்ந்திடுவான் கடலில், மூழ்கிடுவான் அடிநோக்கி, மூச்சடக்கி; கண்டிடுவான் சிப்பிகளை; கைநிறையக் கொண்டு. மேலே எழும்பி வந்து. காட்டுவான், கரைநிற்போருக்கு, காணீர் நன்முத்து! என்று. அஃதே போல், களம் சென்று, கடும்போரிட்டுக், குருதி கொட்டி, வெற்றியைப்<noinclude></noinclude>
3tzm7ogmz47gqctcn5u230z6xq5ext7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/202
250
641830
1928620
1927853
2026-04-30T06:22:49Z
Rabiyathul
5890
+ மேலடி
1928620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|178||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>178
'திராவிட நாடு' இதழில்
பிடித்திழுத்துவந்து, மற்றையோர்க்குக் காட்டி மகிழவேண்டும் என்பது உன் எண்ணம். ஆனால், கடலோர வெண்மணற் பரப்பிலே நடந்து செல்கையிலேயே, முத்து காலினிலே தட்டுப்படுவது போன்று, களம் நோக்கி நின்றபோதே வெற்றி உன்னை நாடிவந்தது: புன்னகைக்குக் காரணம் அதுவே! ஆயினும், போரிடும் வாய்ப்பினை இழந்து விடுகிறோமே என்றெண்ணும்போது, சங்கடமாக இருக்கிறது; என்னைக் கண்டதும், இந்த உன் எண்ணத்தைத் தெரிவிக்கப் பொய்க்கோபம் காட்டுகிறாய்! அல்லவா?
தம்பி! உனக்கு மாதுளைப்பழம் தரவேண்டும். அதனைத் தின்றிடச் சொல்லி, பக்கம் நின்று பார்த்திட வேண்டும், என்று விரும்புகிறேன். ஏன், என்கிறாய்? மாதுளையின் தோலினை உரித்திடும் போதே வாயினிலே நீர் ஊறும், விரலெல்லாம் சாறுபோன்ற நீர்படியும். அழகான அணி செய்வோன். செம்பொன்னால் அதனைச் செய்து, அதிலே இடம் செதுக்கி, ஆங்கு வைரம், கெம்பு, வைடூரியம் முதலிய கற்களைப் பதித்து இழைத்தளிக்கும் பான்மைபோல, இயற்கை அன்னை, மாதுளைக் கனியில் கோலம் காட்டியன்றோ அளித்திடக் காண்கிறோம்! மேலே ஒரு நிறம்! உள்ளே, பெரிதும் மஞ்சள் வண்ணம்; ஆங்கு, இரத்தச் சிவப்பு நிறத்தில், சுவைமிகு மாதுளை மணிகள், பதிக்கப்பட்டு; மணியுடன் மணி உராய்ந்து உருவம் கெடாதிருக்க. இடையிடையே, வெண்மை கலந்த மஞ்சள் நிற மெல்லிய தோலினை அமைத்திருக்கும் பாங்கு, காணக் காண வியப்பளிக்கும். ஆனால், மேல்தோல் நீக்கியதும் மணிகள் மீது தானே, விருப்பம் பாயும்! எனவே, பலர், மாதுளையின் அமைப்பு காட்டிடும் அழகினைக் கண்டு மகிழும் வாய்ப்பினை இழந்தே விடுகின்றனர்.
தம்பி! உரித்தெடுத்து, ஒவ்வொன்றாக அல்ல, சிறு சிறு பிடி அளவு மாதுளை மணிகளை வாயினில் போட்டதும், சுவைமிகு சாறு கிடைக்கும்! குதப்பிக் குதப்பி, அந்தச் சாறு தரும் சுவையைப் பெறுவாய்! பிறகு? சாறு உண்ட பின்னர், கீழேயன்றோ. துப்பிடுவாய், சாறளித்த, மணிகளை-அவை சக்கையாகிவிட்டன என்பதை உணர்ந்து! அந்த மணிகளைக் கீழே துப்பும்போது. எவரேனும், மாதுளையின் தன்மை அறியாதார் கண்டால், என்ன எண்ணுவர்? செச்சே! பிடிக்காத பண்டம்! அதனால் தான், கீழே துப்புகிறார்! என்றன்றோ, எண்ணுவர்! உனக்கல்லவா, தெரியும், சுவை தரும் சாறு உண்ட பிறகே, சத்தற்றதைக் கீழே துப்பும்
உண்மை!!
அதுபோலவே தான், தம்பி! களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்ைைகதான் அதற்குச் சான்று; சாறு பருகிய பின்னர், மாதுளை மணியின் சக்கை<noinclude></noinclude>
n9kbg1e1p1fmbx8xcktkrb60sy5k3xl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/203
250
641831
1928621
1927854
2026-04-30T06:23:20Z
Rabiyathul
5890
+ மேலடி
1928621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||179}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்
179
யினைக் கீழே துப்புவதுபோல, வெற்றிச் சாறு தரும் சுவை பெற்றான பிறகு, பொய்க் கோபம் காட்டி நிற்கிறாய்!
ரோம்நாடு, பேரரசின் இருப்பிடமாய், பெருவெற்றிகள் திகழ்ந்திடும் எழிலிடமாய் இருந்த காலை, வீரர் குழாம் கூடிடும் வகையிலே. கோடம்பாக்கத்தில், நீல வானத்தையே கொட்டகையாகக் கொண்டு. பல்லாயிரவர் கூடினபோது,
"தமிழழிக்கும் இந்தியினைத் திணிக்கும் ஆணை பிறப்பித்து விட்டு. அது குறித்து எழுந்துள்ள அச்சத்தை நீக்கும் வகையிலும் ஐயப்பாட்டினைப் போக்கும் முறையிலும் விளக்கம் அளிக்காமல், பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் பவனி வரப்போகிறார். என்ன செய்யப் போகிறீர்கள்! வரவேற்கப் போகிறீர்களா? என்று, அந்த மாநாட்டுக்குத் தலைமை வகிப்பவன் என்ற முறையில் கேட்டேன்.
"இல்லை! இல்லை! வரவேற்க மாட்டோம்! கருப்புக்கொடி காட்டுவோம்!!
என்று முழக்கமெழுப்பினாய்! கண்முன் தெரிகிறது காட்சி| காதினிலே ஒலிக்கிறது முழக்கம்!
“பாபு இராஜேந்திரர் விளக்கம் அளித்துவிட்டுத் தமிழகம் வரவேண்டும்! இல்லையேல், அவருக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டும்".
என்று கூறினேன். ஆம்! ஆம்! என்று கூறி ஒப்பம் அளித்தாய். உள்ளம் மகிழ்ந்தது! ஊர் மகிழ்ந்தது! இந்தியத்துணைக் கண்டத்தையே, அந்தச் செய்தி ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது!
உளறித் திரியும் சில்லறைகளின் பேச்சை விட்டுத்தள்ளு. தம்பி! உன் குளுரை, அடிமுடி அனைத்தையும் கிடுகிடுக்க வைத்தது. ஊரெல்லாம் அடக்குமுறை வலைவீசிப் பிடித்தாலும், பிடிபட்டவர் போக. கருப்புக் கொடி காட்டப் பல்லாயிரவர் இருப்பர். என்பதை நேரு பண்டிதர் கண்ட காட்சியினின்றும். நாடு அறிந்திருக்கிறது. விரட்டினாலும். மிரட்டினாலும், அடித்துத் துரத்தினாலும், வட்டமிட்டு அடித்தாலும். வளையமிட்டு அடித்தாலும், குருதி கொட்டக் கொட்ட அடித்தாலும், கருப்புக் கொடி காட்டிடத் தயங்கமாட்டார்கள் என்பது ஆளவந்தார்களுக்குத் தெரியும். எனவே, கோடம்பாக்கத்தில், உன் முழக்கம் கேட்டு-மூலை முனை தேடித் திரிந்திடும் பேர்வழிகளைத் தள்ளு-மூலவர்கள் முகம் கருத்தது, மனம் குழம்பிற்று
கருப்புக்கொடியா? தி.மு.க.வா? ஐய்யயோ! பொல்லாத பாவிகளா யிற்றே! என்ன நேரிடினும் கலங்கமாட்டார்களே! எடுத்ததைச் செய்தே<noinclude></noinclude>
i38bmvchooi60t86520378dnsk76qa4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/204
250
641832
1928622
1927855
2026-04-30T06:23:51Z
Rabiyathul
5890
+ மேலடி
1928622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|180||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>180
'திராவிட நாடு' இதழில்
முடிப்பார்களே! கழகம் கட்டளை பிறப்பித்தால், நிறை வேற்றியே தீருவார்களே! கண்டோமே நேரு வந்தபோது- என்றெண்ணினர், கூடிக்கூடிப் பேசினர், குமுறிக் குமுறிக் கிடந்தனர்; தூதுவிட்டனர்; துயரப் பட்டனர், பாகுமொழி பேசிடுவோமா, பல்லைக் காட்டிக் கெஞ்சிடலாமா, அடைப்பம் தாங்கி கோபம் துடைத்திடலாமா, என்ன செய்து இந்த இக்கட்டை நீக்குவது என்றெல்லாம் எண்ணி, ஏங்கிக் கிடந்தனர். போலீசும் தூங்கிக்கொண்டில்லை. வட்டம் வட்டமாகச் சென்று, பெயர் என்ன? வயதென்ன? தொழிலென்ன? தோழர்கள் எவரெவர்? என்ற விவரங்களைக் கேட்டறிந்து குறித்த வண்ணமிருந்தனர். அறிவகம் நாடிவந்து அன்புரை பகன்று, ஆற்றலறிவோம்! கொள்கையின் நேர்த்தியும் தெரியும்! எனினும் குடிஅரசுத்தலைவர், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்- அவருக்குக் கருப்புக்கொடி பிடிக்காதீர்கள்! என்று கூறிக் கொஞ்சியோர் பலப்பலர்-மேலதிகாரிகளும் கூடத்தான்!!
இங்குள்ள இதழ்கள் மட்டுமல்ல, வடநாட்டு இதழ்கள் யாவும், இந்தச் செய்தியை வெளியிட்டன; வெளிநாட்டு இதழ்களிலே என்ன வந்துள்ளன என்பது எனக்கு இனித்தான் தெரியவேண்டும்; எங்கும் ஒரே பரபரப்பு, தம்பி! உன் ஆற்றலை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்! அன்றைய மாநாடு. ஒரு இலட்சம் மக்கள் திரண்டிருந்ததோர் அருமையான காட்சி என்பதையும் உணர்ந்தனர். எனவே, எப்படியும், மனதினைத் தொடவேண்டும், விபத்தை நீக்கிக்கொள்ள வேண்டும். இன்மொழி பேசவேண்டும், இன்னல் ஏற்படாமல் தடுத்துவிட வேண்டும், என்பதற்காகப் படாதபாடு பட்டார்கள்.
"பசப்பு! அண்ணா! பசப்பு! எல்லாம் வெறும் ஏமாற்றுவித்தை! நமது திட்டத்தை முறியடிக்கும் சதி! இனிப்பாகப் பேசினால் மனம் இளகும் என்பதறிந்து மேற்கொள்ளப்படும் முறை இதைக் கண்டு நாம் ஏமாறக்கூடாது" என்று கூறிடும் தம்பிமார்கள் ஏராளம் கூறினர். செயற்குழு கூடும்போதுகூட அறிவகம் வந்தனர்; பசப்பு மொழி கேட்டு போரை நிறுத்த வேண்டாம்! என்று உரிமையுடன் கூறினர்; உவகை யுடன் கேட்டுக்கொண்டுதான். உள்ளே சென்றேன்.
தம்பி! மாற்றாராயினும் உற்றாராயினும், பேசுவது எவ்வகையானது என்பதனையும், நோக்கம் யாது என்பதனையும், அதனை எந்த அளவு. எந்த முறையில், எந்தச் சமயத்தில், கவனிக்க வேண்டும். என்பதையும் அறிந்தவன்தான் உன் அண்ணன் என்பதை நினைவு படுத்தவா வேண்டும்.
கொஞ்சுமொழி கேட்டுக் கொள்கையை விட்டுவிடுவது என்றால். கொள்கையே இந்த அளவு உரம் பெற்றிருக்காது.<noinclude></noinclude>
63ji71t2nt9rh3q6cxm753z8elbqs45
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/205
250
641833
1928623
1927856
2026-04-30T06:24:21Z
Rabiyathul
5890
+ மேலடி
1928623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||181}}{{rule}}</noinclude>181
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இனிமைமொழி கேட்டு கொள்கையை விட்டுவிடுவதென்றால், கோகிலகான M.S. சுப்புலட்சுமி 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று பாடிய போதே, கொள்கையை விட்டு விட்டிருப்போம்.
பசப்பு மொழி கேட்டு, கொள்கையை விட்டுவிடுவதென்றால், வடக்காவது தெற்காவது! திம்மையா, யார்? கட்டாரி யார்? டாக்டர் இராதாகிருஷ்ணன் யார்? கிருஷ்ணமேனன் யார்? - என்றெல்லாம் பேசிக் காட்டினரே, அப்போதே, கொள்கையை விட்டுவிட்டிருப்போம் அல்லவா?
நாம் எடுத்துக்கொண்டுள்ள கொள்கையும், அதற்கான திட்டமும், அச்சமூட்டியோ, பசப்புக் காட்டியோ ஒழித்துக் கட்டிவிடக் கூடியன அல்ல; அடக்குமுறை எனும் நெருப்பாற்றில் நீந்திச் செல்ல நேரிடினும், வெந்து நீறானவர்கள் போக மீதமுள்ளோர், இலட்சியப் பயணத்தை மேற்கொள்வர்.
இதை அறிந்திருக்கிறாய், எனினும், தம்பி! அறப்போர் நடாத்தி உன் ஆற்றலைக் காட்டிடும் வாய்ப்புப் போய்விடுகிறதே என்று ஆயாசத்தால், அண்ணன் எங்கே பசப்பு வார்த்தை கேட்டு உறுதியைத் தளர்த்திக்கொண்டு விடுவானோ என்று ஐயம் கொள்கிறாய்.
இதிலே, உன் ஐயத்தைவிட, உனக்கு உள்ள பேரார்வம் இருக்கிறதே, அதை நான் பெரிதும் மதிக்கிறேன்-அந்த ஆர்வம் கொண்டவர்களை வாழ்த்துகிறேன். கோடம்பாக்கம் மாநாட்டில் நான் கூறியபடி, "பேரார்வம் பொங்கிடும் நிலையில் உள்ள படை வரிசை கண்டும், போரிட வழி தராமல் இருக்கும் தலைவனாக இருப்பது, போரிட அழைக்கும்போது, போரிடப் படை வீரர்கள் முன் வராது இருப்பதைக் காணும் தலைவனாக இருப்பதைவிட, மேலானது, மகத்தானது, பெருமைக்கு உரியது.
போர் இல்லை!
ஏன்?
போர் நடாத்த வீரர் இல்லை!
தம்பி! இதுதான், கேவலம்; இழுக்கு.
போர் இல்லை!
ஏன்?
இப்போது தேவையில்லையாம்?
யார், கூறுவது?
அவர்தான் போரிட ஆர்வம் காட்டியவரேதான்.
தம்பி! இதிலேதான், மாற்றாரே கண்டு மருளத்தக்க, வலிமை மிக்க, உண்மையான பெருமை, சிறப்பு இருக்கிறது.<noinclude></noinclude>
sdk0l7rsdtczua5y70qaobbep2oui4q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/206
250
641834
1928624
1927857
2026-04-30T06:24:52Z
Rabiyathul
5890
+ மேலடி
1928624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|182||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>182
'திராவிட நாடு' இதழில்
கட்டித் தங்கம் இருக்கிறது, அணிபணியாக ஆக்கப்படாமல்- இப்படி ஒரு நிலை
அணிபணி செய்வதற்காக உட்காருகிறோம், தொழிலிடத்தில் ஆனால், கட்டித் தங்கம் இல்லை1-இப்படி ஒரு நிலை
தம்பி! இந்த இருநிலைமைகளில், எது மதிக்கத்தக்கது! பதில், வேறு வேண்டுமா இதற்கு!!
நீ நிற்கிறாய், உன் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உடன்வர- களம் புகl ஆனால், போர் இல்லை என்ற அறிவிப்பு கிடைக்கிறது.
களம் புக வாரீர்! கடும் போரிட வாரீர்-என்று கரடுமீது நின்று அழைக்கிறார் ஒரு தலைவர், ஆனால், குரல் கேட்டு வருவார்தான் இல்லை; என்று வைத்துக்கொள்-எப்படி இருக்கும் அந்த நிலைமை!!
அதுபோலத்தான், தம்பி இந்த அண்ணன் இப்படித்தான்; அறப்போர் நடத்தப் போகிறோம், நடத்தப் போகிறோம் என்று நாம் எவ்வளவோ ஆவலாகத் துடித்துநிற்கிறோம், திடீரென்று வேண்டாம் இப்போது என்று அறிவிக்கிறார்-செ! என்ன ஏமாற்றம் எத்துணை மனச்சங்கடம்!-என்று நீ கூறிடும் நிலை, காணக் காணப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது
கருப்புக்கொடி காட்டவேண்டாமாமே? ஆமாம்! செயற்குழு முடிவு!
எவ்வளவு ஆசையாக இருந்தோம்! என்னென்ன எண்ணிக் கொண்டோம் அறப்போர் மாண்புபற்றி!
செயற்குழுவும், நிரம்ப எண்ணிப் பார்த்துத்தான், முடிவு செய்தது, ஐந்து மணி நேரம் நடந்ததாம்
தம்பி) நமது வட்டாரத்திலே இதுபோல இருக்கும் உரையாடல். கருப்புக்கொடி இல்லையாம்.
ஏன்?
அடக்குமுறை வரும் என்ற அச்சம்! நம்ம காமராஜர் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்று திகில்1
இது, தம்பி! காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக அமையும்: உன் காதில் விழ! ஆனால் தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமோ?<noinclude></noinclude>
43hka9fuy4ivx16fbvkqjt5iuyljm4j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/207
250
641835
1928625
1927858
2026-04-30T06:25:22Z
Rabiyathul
5890
+ மேலடி
1928625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||183}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கருப்புக்கொடி இல்லையாமே!
ஏன்?
183
எதற்காகக் காட்டப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் கேட்டது கிடைத்துவிட்டதே!
அதென்ன விஷயம்?
இது தெரியாதா, உனக்கு? கோடம்பாக்கத்திலே, கூறினார்கள். இராஜேந்திர பிரசாத் தமிழகம் வருமுன், மொழி பற்றிய தமது ஆணைக்கு விளக்கம் கூறிவிட்டுத்தான் வரவேண்டும்; விளக்கம் தராவிட்டால், கருப்புக்கொடி காட்டப்படும் என்று. இந்த இராஜேந்திர பிரசாத், இங்குவந்த பிறகாவது, பேசக்கூடாதா? அவர்கள் கேட்டுக் கொண்ட படியே. இங்கு வருவதற்கு முன்பே, அய்திராபாத்திலேயே விளக்கம் கொடுத்துப் பேசிவிட்டார்.
என்ன விளக்கம் கொடுத்துப் பேசினார்?
என்ன விளக்கம் வேண்டுமென்று. தீனா மூனாக்காரர் கேட்டார் களோ, அந்த விளக்கத்தைத்தான், இந்தி திணிப்பு இல்லை. இந்தி விஷயமாக, நேரு கொடுத்த வாக்குறுதியின்படி செயல்படுவோம். என்று விளக்கம் கொடுத்தார்.
பேச்சுத்தானே! பொதுக்கூட்டத்தில்!!
ஆமாம். நான்கூட அப்படித்தான், மனதுக்குச் சமாதானம் தேடிக்கொண்டேன், ஆனால்...
ஆனால் என்ன...
இவர் பேசினார் நமது பாரதப் பிரதமரோ, கடிதமே எழுதி அனுப்பினார் கடிதமா அவரா? இதுகளுக்கா!
ஆமாம்! நினைத்தாலே கோபம் கோபமாக வருகிறது. நாம். காங்கிரசுக்குத் தூணாக இருக்கிறோம். ஒரு மந்திரிகூட நமக்குக் கடிதம் எழுதுவதில்லை. இந்தக் கழகத்தான் சம்பத்து, "என்ன சொல்லுகிறீர்? என் கழகம் கருப்புக் கொடி காட்ட தீர்மானித்திருக் கிறது, இராஜேந்திர பிரசாத்துக்கு, நீங்கள் ஒரு விளக்கம், சமாதானம், கொடுக்கவேண்டும்" என்று.
எப்போது, எழுதினான்?
ஆகஸ்ட்டு மூன்றாம் தேதி!<noinclude></noinclude>
lgm67cm963zuzhewogu87ofj8c1bpbp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/208
250
641836
1928626
1927859
2026-04-30T06:25:53Z
Rabiyathul
5890
+ மேலடி
1928626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|184||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>184
'திராவிட நாடு' இதழில்
பாரேன், துணிச்சலை, ஆகஸ்ட் ஆறாம் தேதி கருப்புக் கொடி என்று அறிவித்துவிட்டு, மூன்றாம் தேதி கடிதம் எழுதி, பதில் கேட்டி ருக்கிறான். சீனாக்காரன் தொல்லை ஒருபுறம், நாகர்கள் அமளி இன்னோர் புறம், அசாம் ரகளை வேறோர்புறம். இவைகளைக் கவனிப்பாரா, இந்தக் கழகத்தான் கடிதத்தைக் கவனிப்பாரா?
நானும் அப்படித்தான் எண்ணிக்கொண்டேன். இதுகளுக்காவது. நேருவாவது, கடிதம் எழுதுவதாவது அவர் பதில் கடிதம் போட வேண்டிய அளவு இதுகள் என்ன பெரிய மனிதர்களா!!-என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன். பயல், முகத்தில் கரிபூசிக்கொண்டு வந்து சேருவான் என்று நினைத்தேன்.
.
ஆனால், நேரு, பதில் கடிதம் கொடுத்திருக்கிறாரே!
வெட்கம் பிய்த்துத் தின்கிறது. என்ன செய்வது? சம்பத் கடிதம் பார்த்த மூன்று மணி நேரத்துக்கெல்லாம், தானே கையெழுத்துப் போட்டு, கடிதம் அனுப்புகிறார். பெயர், பாரதப் பிரதமர்! செய்கிற காரியம் இப்படி இருக்கிறது!!
கழகக்காரர்கள், இதை வெற்றி என்று கொண்டாடமலா இருப்பார்கள்?
நமக்குள்ளே பேசிக்கொண்டால். என்ன தப்பு. வெற்றிதான்! இராஜேந்திர பிரசாத் அவசர அவசரமாக விளக்கம் கொடுக்கிறார்; அழுத்தக்காரர் என்கிறார்கள் கோவிந்தவல்லபபந்த். அவர், பார்லிமெண்டில் பேசுகிறார், இந்தித் திணிப்பு இல்லை; நேரு வாக்குறுதி நிலைக்கும்; ஆங்கிலம் நீடிக்கும்; அதற்கான சட்டம் நிறைவேற்றுவோம். என்றெல்லாம்; நேரு கடிதமே போடுகிறார்.
எல்லாம், இந்தப் பயல்கள் கருப்புக்கொடி காட்டுகிறோம் என்று சொன்ன பிறகு!-
அதுதான் எனக்கு வெட்கமாக இருக்கிறது. சாதாரண சமயத்திலே பேசட்டும், கடிதம் போடட்டும், அது ஒன்றும் பிரமாதம் அல்ல; அது எங்கள் தலைவர்களின் பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது என்று கூறிக்கொள்ளலாம்; நாலு பேரையும் நம்பவைக்கலாம் விளக்கம் கொடு. இல்லாவிட்டால் கருப்புக்கொடி என்று மிரட்டுகிறான், அப்பா! அப்பா! இதோ இந்தா விளக்கம், என்று இராஜேந்திர பிரசாத் பேசுகிறார். உறுதிமொழியை உறுதிப்படுத்துங்கள் என்று கேட்கிறான் சம்பத்: உடனே, உறுதி! உறுதி! என்று பதில் கடிதம் கொடுக்கிறார், நேரு! நினைத்தாலே, வெட்கமாக இருக்கிறது.
உ
உ<noinclude></noinclude>
se1cv8o3j9fs3facm94gowflccql89h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/209
250
641837
1928627
1927860
2026-04-30T06:26:24Z
Rabiyathul
5890
+ மேலடி
1928627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||185}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
185
கருப்புக் கொடிக்குப் பயந்துகொண்டுதான், உங்கள் தலைவர்கள். பந்த், நேரு, பிரசாத் மூவரும், விழுந்தடித்துக் கொண்டு, விளக்கம், உறுதி மொழி, கடிதம், தருகிறார்கள் நீ கேலியாகப் பேசினாயே, கருப்புக் கொடி பற்றி, பார்த்தாயா, உன் தலைவர்கள், அடிமுதல் முடிவரை கிடுகிடுத்துப்போனதை, என்று கழகத்தான், கேட்பானா மாட்டானா?
கேட்பானய்யா, கேட்பான். நமது தலைவர்கள் செய்து விட்ட காரியத்துக்கு, இதுவும் கேட்பான். இதற்கு மேலும் கேட்பான். நம் தலை எழுத்து, கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது.
அட, குமாரபாளையத்திலே, கூடி என்னமோ தீர்மானம் போட்டு அனுப்பிவைத்தார்களே, அப்போது இந்த இழவு விளக்கம், உறுதி மொழிக் கடிதம், இதை அனுப்பி இருக்கக் கூடாதா, நம்ம தலைவர்கள். அப்போதெல்லாம் கல்லுப்பிள்ளையார்போல் இருந்துவிட்டு.....
நான்கூடச் சந்தோஷப்பட்டேன். இந்தப் பயல்கள் தீர்மானம் போட்டு அனுப்பினால், சட்டை செய்வார்களா!! பார்! பார்! இதுகள் அனுப்பிய கடிதத்தை, எங்கள் தலைவர்கள், குப்பைக் கூடையிலே தூக்கி வீசினார்கள், என்றெல்லாம் பேசினேன்.
நான்கூடத்தான்பேசினேன். இப்போது? கருப்புக்கொடி காட்டுவோம் என்று மிரட்டியதும், மூலவர்கள் மூன்றுபேரும், போட்டி போட்டுக் கொண்டு, காட்டாதே! காட்டாதே! விளக்கம் தருகிறோம்! உறுதிமொழி தருகிறோம்! கடிதம் இதோ! என்று நடந்துகொள்கிறார்கள்.
உ
நாம் பேசுகிறோம், வீராவேசமாக! கழகம் கால் தூசு! இதை எவனும் மதிக்கமாட்டான். கழகம் சொல்லும் போர். வெறும் புஸ்வாணம். என்று...
ஆமாம்! நம்ம தலைவர்கள் அப்படி இல்லையே! அவர்களை மிரட்ட, புஸ்வாணமே போதும்போல் இருக்கிறதே.
கழகக்காரர்கள், நேரு கடிதத்தை, படம் போட்டல்லவா, வைத்துக்
கொள்வார்கள்!
ஆமாம்! நாம் அவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும் போதெல்லாம், எடுத்து வீசுவார்கள் நமது முகத்தில்.
கழகத்துக்கு வெற்றி தேடித் தருகிறார்கள் - நமக்குக் கேவலத்தை உண்டாக்குகிறார்கள்.
நமது தலைவர்கள்!<noinclude></noinclude>
ebodmwpvv30wtjoh4kwklnyb8zbd1nz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/210
250
641838
1928628
1927861
2026-04-30T06:26:54Z
Rabiyathul
5890
+ மேலடி
1928628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|186||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>186
'திராவிட நாடு' இதழில்
ஆமாம் ஆமாம், நமது தலை வர்கள். செ பிய்த்துத் தின்கிறது.
வெட்கம்
காங்கிரஸ் வட்டாரத்திலேயே ஒரு கலக்கம், தம்பி/ மூலவர் மூவர், உடனடியாக, ஒருவர் பின் ஒருவராக, கழகம் கேட்ட விளக்கத்தைத் தர. ஆவலும், அவசரமும் காட்டியது. வெறும் நிகழ்ச்சி அல்ல இது, வெற்றி என்பதில் ஐயமில்லை.
கருப்புக் கொடி காட்டப்படுவதற்கு ஆதரவு இல்லை, கழகம் இதை வெற்றிகரமாகச் செய்திட முடியாது. சுட்டுத் தள்ளினால் சுருண்டு விழுவார்கள். நாடு ஏன் என்று கேட்காது, நாதி ஏது? என்று பேசுவார் களே, சில கதராடைகள். அதுதான் உண்மையான நிலைமை என்றால், என்ன நடந்திருக்க வேண்டும்?
கருப்புக்கொடி காட்ட, ஆதரவு தாராதீர்!
என்று கூறிவிட்டு, மற்றக் காரியத்தைப் போலீஸ் பார்த்துக் கொள்ளும் என்று, இருந்துவிட்டிருக்க வேண்டும்.
கருப்புக் கொடி காட்டுவதை, சட்டம் சமாதானம் சம்பந்தப் பட்ட பிரச்சினையாகக் கருதிவிட்டிருக்க வேண்டும்.
ஆனால், அது நாட்டைக் கலக்கும் அரசியல் பிரச்சினை என்பதை. ஆளவந்தார்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டதால் தான், மூலவர் மூவருமே முன் வந்தனர். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திட இதைவிடக், குறிப்பிடத்தக்க வெற்றி வேறு என்ன வேண்டும். கருப்புக் கொடி காட்டினாலும், இந்த அளவிலும், முறையிலும், வகை யிலும், மூலவர்கள் மூவர் முன்வந்து, பேசி இருப்பார்களா, என்பதுகூடச் சந்தேகம்
அப்படிப்பட்ட மகத்தான வெற்றி கிடைக்கிறது. தம்பி நீ. களம்புகத் துணிந்து அறிவித்த உடன்!!
தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்,
கூடிக் கலந்து பேசுவோம், வாருங்கள்.
குடிஅரசுத்தலைவரின் ஆணைபற்றிப் பொதுவாக நிபுணரின் கருத்தைக் கேட்டறிவோம், வருக!
ஒரு கட்சி, மொழிப் பிரச்சினைபற்றிக் கவனிப்பதைவிட, எல்லாக் கட்சியும் கூடிச் செயலாற்றினால், வெற்றி நிச்சயம்.<noinclude></noinclude>
1aouyr0i1vpg54dch9hl28tda3dxbi4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/211
250
641839
1928629
1927862
2026-04-30T06:27:24Z
Rabiyathul
5890
+ மேலடி
1928629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||187}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
187
குடிஅரசுத்தலைவர் ஆணையில், மாற்றம் தேவை என்றால் எடுத்துச் சொல்லுங்கள்.
மாற்றம் ஏற்பட, நான், மத்ய சர்க்காருடன் வாதாடுகிறேன், போராடுகிறேன்.
என் சர்க்கார் இதற்குத் துணை நிற்கும் என்று, நான் சத்யம் செய்து கொடுக்கிறேன்.
தம்பி! இவையெல்லாம், கழகத்தைக் கண்ட துண்டமாக்கவல்ல வீராதிவீரர் என்கிறார்களே, அந்தச் சுப்ரமணியனார் இருக்கிறாரே(!!) அவர் திருவாய் மலர்ந்தருளியவை!!
அவருடைய வாழ்நாளிலேயே, இதற்குமுன் எப்போதும் காட்டாத அளவு, பணிவு, குழைவு, கனிவு ததும்பும் முறையில், பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டிப் பேசினார். இத்தனைக்கும் அவரிடம் இப்போது போலீகத்துறையும் விடப்பட்டிருக்கிறது.
எனவே, தம்பி! கோடம்பாக்கத்தில், நீ எடுத்த குளுரை, வெற்றியை, அவர்களே, நம்மைத் தேடிக் கொண்டுவந்து தர வைத்திருக்கிறது. இந்தித் திணிப்பு முயற்சியை முறியடித்த பெருமை
நேருவின் வாக்குறுதி காற்றிலே போய்விடாமல், உறுதிப்படுத்தப் பட்ட அருமை,
நம்மை அடக்குமுறை காட்டி ஒடுக்க முடியாது என்பதை ஆளவந்தார்கள் அறிந்து கொண்டுள்ள அரிய உண்மை,
இவ்வளவும், நீ, காட்டுவேன் கருப்புக்கொடி என்று முழக்க மிட்டதிலேயே, கிடைத்திருக்கிறது.
இந்த வெற்றிதான், உன்னைப் புன்னகை புரிய வைக்கிறது.
அறப்போர் நடத்துவதிலே உள்ள ஆர்வம், செயல்பட வழி ஏற்படாமல் போனதால், பொய்க்கோபம் எழுகிறது.
குமாரபாளையத்தில் கூடிய நாளிலிருந்து, செயற்குழு அறிவகத்தில் கூடி, கருப்புக்கொடி காட்டத் தேவையில்லை என்று முடிவெடுத்த நாள்வரை, நடைபெற்ற நிகழ்ச்சிகளை எல்லாம், முறையாக எண்ணிப் பார்த்தால். எவரும் மகிழ்ச்சி கொள்வர். வெற்றி கிடைத்தது கண்டு பெருமிதம் கொள்வர்.<noinclude></noinclude>
rwmwp322q5d16ddvgx4dhm2vuyed8lz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/212
250
641840
1928630
1927863
2026-04-30T06:27:55Z
Rabiyathul
5890
+ மேலடி
1928630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|188||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>188
'திராவிட நாடு' இதழில்
ஏடுகள் சில, இந்த வெற்றிகண்டு, காங்கிரசார் கலக்கமடையாது இருக்கவேண்டும் என்பதற்காகவும், வெட்கத்தை மறைத்துக் கொள்ளவும், ஈனத்தனமாக எழுதும்! கவலைப்படாதே! இசைவாணன் இல்லாதபோது, மந்தி புகுந்து, யாழ் மீட்டுகிறது என்று எண்ணிக்கொள். பெற்ற வெற்றி இனிப் பெற வேண்டியவைகளை நினைவுபடுத்தட்டும். வாழ்த்துகிறேன், உனை வாகை சூடிய, தம்பியை! நீ பெற்ற வெற்றியை உலகுக்கு அறிவிக்கும் முரசொலிதான், மூலவர் மூவர் தந்த உறுதி மொழிகள். மூலவர் மூவர் முரசொலி எழுப்ப, வாகை சூடினாய், வாழ்க, நீ, தம்பி!
7.8."60
அண்ணன்,
Jimmyma
+<noinclude></noinclude>
b9b4g19n55o19yl9dx6fx6arhcvd5ko
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/213
250
641841
1928631
1927864
2026-04-30T06:28:25Z
Rabiyathul
5890
+ மேலடி
1928631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||189}}{{rule}}</noinclude>கடிதம் : 115
தம்பி1
வேலை இருக்கிறது, நிரம்ப!
மொழிகள்-அரசியல் சட்டம் திருத்தப்படுதல்.
நேருவும் குடியரசுத் தலைவரும் உறுதி
இந்தி மொழி திணிப்பு.
வெற்றி விழாக்கூட்டம் நடத்தி, தமிழகத்துக்குத் தனிச்சிறப்பினைத் தேடிக் கொடுத்த உன்னை வாழ்த்துகிறேன் அன்று கடற்கரையில் கூடிய மிகப்பெரிய கூட்டம், தமிழர் தரணி மெச்ச வாழ்ந்த நாட்களிலே, பெற்ற வெற்றிகளை மக்களுக்கு அறிவிக்க நடாத்திய விழாக்கள் பற்றி இலக்கியம் காட்டுகிறதே. அதனை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது.
குடிஅரசுத்தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் பிறப்பித்த ஆணை, முன்பு பண்டித நேரு மொழிபற்றி அளித்திருந்த அருமை நிறைத்த வாக்குறுதியை உள்ளடக்கியதாக இலாது போனதால், பலரும் ஐயமும் அச்சமும் கொண்டனர்; அறிக்கைகள் விடுத்தனர் "ஐயகோ! ஈதென்ன கொடுமை இந்தியைத் திணித்திட அன்றோ, குடிஅரகத் தலைவரின் ஆணை வழிகோலுகிறது. பண்டிதர் பரிந்தளித்த வாக்குறுதி கேட்டு. நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்தோமே- அதனை இப்போது நொறுக்கித் தூள் தூளாக்கி விடுகிறதே இவர்தம் ஆணை! இந்தி பேசாதாரின் இதயக் குமுறலை மதித்து, இந்தித் திணிப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்பினை உணர்ந்து, இந்தி நுழைவைத் தடுத்து நிறுத்த இன்னுயிரையும் தந்திடும் உறுதியுடன் தமிழ்ப் பெருங்குடி மக்களில் தாசரானோர் தவிர, மற்றையோர் அனைவரும் திரண்டெழுந்து நிற்கின்றனர் என்பதனையும் அறிந்து, இத்துணை பெரும் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாது இருப்பது அறிவுடைமை அல்ல, இதனை அடக்குமுறை கொண்டு அழித்திட முனைவது அறவழி ஆகாது என்பதனை எல்லாம் எண்ணிப்பார்த்தன்றோ, நேரு பண்டிதர், “அஞ்சற்க! இந்தித் திணிப்பு இல்லை இந்தி பேசாதாரின் எண்ணம் கண்டறிந்து ஒப்பம் பெறா முன்னம், ஆங்கிலத்தை அகற்றப் போவதில்லை” என்றெல்லாம், வாக்குறுதி அளித்தார், பாரே கவனிக்கத் தக்க முறையில், பண்பாளர் போற்றத்தக்க வகையில், பாராளுமன்றத்தில், பண்டித நேரு அதனை முறியடிக்கும் முறையிலே இருக்கிறதே, குடிஅரசுத் தலைவரின் ஆணை என்று எடுத்துக் கூறினர் பலர்; விளக்கிக் காட்டினர் வித்தகர்; அறிக்கைகளை விடுத்தனர் அறிவிடம்<noinclude></noinclude>
2ubjt4gbj2gup2xd80rqsx30wljbj0e
1929008
1928631
2026-04-30T11:00:22Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம் : 115
தம்பி1
வேலை இருக்கிறது, நிரம்ப!
மொழிகள்-அரசியல் சட்டம் திருத்தப்படுதல்.
நேருவும் குடியரசுத் தலைவரும் உறுதி
இந்தி மொழி திணிப்பு.
வெற்றி விழாக்கூட்டம் நடத்தி, தமிழகத்துக்குத் தனிச்சிறப்பினைத் தேடிக் கொடுத்த உன்னை வாழ்த்துகிறேன் அன்று கடற்கரையில் கூடிய மிகப்பெரிய கூட்டம், தமிழர் தரணி மெச்ச வாழ்ந்த நாட்களிலே, பெற்ற வெற்றிகளை மக்களுக்கு அறிவிக்க நடாத்திய விழாக்கள் பற்றி இலக்கியம் காட்டுகிறதே. அதனை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது.
குடிஅரசுத்தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் பிறப்பித்த ஆணை, முன்பு பண்டித நேரு மொழிபற்றி அளித்திருந்த அருமை நிறைத்த வாக்குறுதியை உள்ளடக்கியதாக இலாது போனதால், பலரும் ஐயமும் அச்சமும் கொண்டனர்; அறிக்கைகள் விடுத்தனர் "ஐயகோ! ஈதென்ன கொடுமை இந்தியைத் திணித்திட அன்றோ, குடிஅரகத் தலைவரின் ஆணை வழிகோலுகிறது. பண்டிதர் பரிந்தளித்த வாக்குறுதி கேட்டு. நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்தோமே- அதனை இப்போது நொறுக்கித் தூள் தூளாக்கி விடுகிறதே இவர்தம் ஆணை! இந்தி பேசாதாரின் இதயக் குமுறலை மதித்து, இந்தித் திணிப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்பினை உணர்ந்து, இந்தி நுழைவைத் தடுத்து நிறுத்த இன்னுயிரையும் தந்திடும் உறுதியுடன் தமிழ்ப் பெருங்குடி மக்களில் தாசரானோர் தவிர, மற்றையோர் அனைவரும் திரண்டெழுந்து நிற்கின்றனர் என்பதனையும் அறிந்து, இத்துணை பெரும் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாது இருப்பது அறிவுடைமை அல்ல, இதனை அடக்குமுறை கொண்டு அழித்திட முனைவது அறவழி ஆகாது என்பதனை எல்லாம் எண்ணிப்பார்த்தன்றோ, நேரு பண்டிதர், “அஞ்சற்க! இந்தித் திணிப்பு இல்லை இந்தி பேசாதாரின் எண்ணம் கண்டறிந்து ஒப்பம் பெறா முன்னம், ஆங்கிலத்தை அகற்றப் போவதில்லை” என்றெல்லாம், வாக்குறுதி அளித்தார், பாரே கவனிக்கத் தக்க முறையில், பண்பாளர் போற்றத்தக்க வகையில், பாராளுமன்றத்தில், பண்டித நேரு அதனை முறியடிக்கும் முறையிலே இருக்கிறதே, குடிஅரசுத் தலைவரின் ஆணை என்று எடுத்துக் கூறினர் பலர்; விளக்கிக் காட்டினர் வித்தகர்; அறிக்கைகளை விடுத்தனர் அறிவிடம்<noinclude></noinclude>
lpfx2gqvj2ly4qbfa8rkjg6f5d4c94o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/214
250
641842
1928632
1927865
2026-04-30T06:28:55Z
Rabiyathul
5890
+ மேலடி
1928632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|190||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>190
'திராவிட நாடு' இதழில்
அமர்ந்து பணிபுரிவோர்; எதிர்த்துப் பேசினார் ஆச்சாரியார்; வங்கத்தில் ஓர் மாநாடு கூட்டினர் வல்லுநர்கள்; மற்றும் சிலர் அழுது காட்டினர்; தம்பி! ஆர்த்தெழுந்து அணிவகுப்புகளைத் திரட்டிக், களம் காணத் துடித்த பெருமை, நம்மை மட்டுமே சாரும்.
விளக்கம் அளிப்போம் மேலும் மேலும்; காரணங்களைக் காட்டுவோம் திறமையுடன், வாதாடுவோம் வல்லமை விளங்கிட, என்றுதான் பலர் கருதினரேயன்றி, இந்தப் பேராபத்தைப் போக்கப் போரிட்டாக வேண்டும், அறம்வெல்லும் என்பது ஆன்றோர் மொழி எனினும், அறங்காத்திட அஞ்சா நெஞ்சும் வேண்டும், என்று எண்ணிச் செயலாற்ற முன் வந்தார்களில்லை.
குடிஅரசுத்தலைவரின் துணைகொண்டு, இந்தியை எப்படியும் ஆட்சி மொழியாகத் திணித்து, ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி பேசாதவர்களை அடிமைகளாக்கிடலாம். ஆணவ அரசினை நிலை நாட்டி விடலாம் என்று எண்ணிடும் வன்கணார்கள், இந்தி பற்றிய விளக்கம் தெரியாமல், இந்தி பேசாதாரின் மனம் அறியாமல், பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுபோல எண்ணிக் கொண்டு, மெத்தவும் கற்றறிந்த வித்தகர்கள், பேசினர், எழுதினர்! வடக்கே இன்று ஆணவம் தலைக்கேறிய நிலையில் உள்ள இந்தி வெறியர்கள், தலைவர்கள் என்ற நிலை பெற்றுள்ளனர். எப்படி, காந்தியாரின் சமரச நோக்கத்தை, கோழைத் தனம் என்று திரித்துக் கூறி, அவருக்கு எதிர்ப்பு மூட்டி, இறுதியில் கயவனொருவன் அவரைச் சுட்டுக் கொன்றிடும் கொடுமை ஏற்பட்டதோ. அதுபோல இந்தி பேசாதாரின் உணர்ச்சிகளையும் உரிமையையும் மதித்து, அவர்களை இந்தி மொழிமூலம் அடிமைப்படுத்த முற்படுவது அடாது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து, அத்தகைய அக்ரமம் நடைபெற நான் இடந்தரமாட்டேன், உடந்தையாக இருக்கப் போவ தில்லை, என்று உறுதியாக உரைத்திடும் எவரையும், எதிர்த்து ஒழிக்கவோ, குழிபறிக்கவோ, குலவிக் கெடுக்கவோ தயாராக உள்ள ஓர் கூட்டம். மாடமாளிகைகள், வாணிபக் கோட்டங்கள் எனும் இடங்களில் மட்டுமல்ல, கல்விக் கழகங்கள், துரைத்தன மன்றங்கள் ஆகியவற்றிலும், நிரம்பி உள்ளனர். அவர்கள், இந்திக்காக வாதாடுவது கூடத் தேவை இல்லை; கட்டளை பிறப்பிக்க வேண்டியதுதானே இதிலென்ன காரணம் கூறுவதும், கனிமொழி பேசுவதும்; இந்தி படித்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் ஏற்றம் பெறுவீர்கள் என்றுக்கூட எடுத்து இயம்பவேண்டும், படித்தால், பிழைக்கட்டும், இல்லையேல் சாகட்டும். நமக்கென்ன; நாம் ஆணையிடும் நிலையில் இருக்கிறோம்; அவர்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள். நாம் வேங்கைகளாகி உள்ளோம்; அவர்கள் வெள்ளாடுகள்! இந்நிலையில் அவர்களிடம் நாம் ஏன் கெஞ்சிக் கிடக்கவேண்டும்; கொஞ்சுமொழி<noinclude></noinclude>
tcsxriexnn33cgpayszqk4ogake0kk8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/215
250
641843
1928633
1927866
2026-04-30T06:29:24Z
Rabiyathul
5890
+ மேலடி
1928633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
191
பேசவேண்டும். இந்தி தான் ஆட்சிமொழி! அறிந்திடுக! அதற்கேற்ப நடந்திடுக! என்று கட்டளையைப் பிறப்பித்துவிட்டு, அதனைச் செயல்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளைத் திறம்பட எடுத்துக் கொள்ள வேண்டியது தானே முறை! என்று கொக்கரித்துக் கிடக்கும் கெடுமதியாளர்கள். ஆட்சியின் எடுபிடிகளாக அல்ல. ஆட்டிப்படைப் போராக உள்ளனர். இதனைப் பண்டித நேரு மிக நன்றாக அறிவார். அறிந்திருந்தும், தமிழகம் எத்தகையது என்பதையும் தெரிந்துகொண்டதால், வாக்குறுதி வழங்கினார்; வாழ்த்தினோம் அவரை.
கைகாலில் தளைபூட்டிச் சிறையில் தள்ளப்பட்டிருப்போனுக்குக் கடும் தாகம் ஏற்பட்டு, நாவுலர்ந்து, பேசவும் இயலா நிலைபெற்றுக் குறிகாட்டிக் குடிக்கத் தண்ணீர் கேட்டிடக்கண்ட, இரக்கமனம் கொண்ட காவலாளி, குவளையில் தண்ணீர் கொண்டுவந்து, தருவதுகண்டு. செருக்கு மிகுந்த இரக்கமற்ற மேலதிகாரி குறுக்கிட்டு, குவளையைக் காலால் உதைத்துக் கீழே விழச்செய்து, "தண்ணீரா, தண்ணீர்! ஏடா! இவனுக்கு உபசாரம் செய்யவா, உன்னை இங்கு அமர்த்தினோம்! நாளையோ மறுநாளோ சாகப்போகிறான்; இவனுக்குத் தண்ணீர் ஒரு கேடா! ஏன்! கண்ணீர் பொழிகிறான் என்பாயே! அது போதாதோ| தண்ணீர் வேறு தரவேண்டுமோ!" என்று கேட்டு இடி இடியெனச் சிரிப்பதைத் தம்பி! நாடகங்களிலே கண்டிருப்பாய்.
குடிஅரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையைப் பார்த்ததும். பலருக்கும், இதுவும் அதுபோன்றதோர் நிலையே என்ற எண்ணம் தோன்றிற்று. ஐயோ! பாவம்! என்றனர் சிலர்; உனக்கோ இந்தக் கதி என்று கேட்டனர் சிலர்; காலக் கொடுமை, நாம் என்ன செய்யலாம் என்று ஆயாசப்பட்டனர் பலர். என்று வைத்துக்கொள், கைகாலில் தளைபூட்டப் பட்டவன் கொடுமைப்படுத்தப்படுவது கண்டு; பலன் என்ன? அவர்களின் பரிவுரையும் பெருமூச்கம், தளைகளை நொறுக்கிடுமோ? அவர்கள் அன்புரை காட்டுவதால். அவன் இருக்கும் சிறை சிங்காரச் சோலையாகிவிடுமோ? அஃதேபோல, இந்த ஆணை ஆகாது. இது செயல்படுத்தப்படுமானால் வரும் பெரும் தீது, இது நேரு தந்த வாக்குறுதியை மதித்ததாகாது. என்று விளக்கம் தந்தனரே, விவேகிகள் பலர். அதனால் விபத்து விலகிட வழி கிடைத்ததோ! இல்லை!! மாறாக, வாதத்துக்கு எதிர்வாதம்; மறுப்புக்கு மறுப்புச் சரமாரியாகக் கிளம்பி. மாலைநேரப் பேச்சுக்குச் சுவை தந்தது.
ய
தம்பி! மறத்தமிழ் மரபினன் நீ, மார்தட்டி நின்றாய்! வஞ்சகர்களே! வாழ்ந்தால் தமிழொடு வாழ்வேன் வீழ்வதேனும், இந்தியை எதிர்த்தபடி வீழ்வேன் என்று சூளுரைத்தாய், துடித்தெழுந்தாய், வெற்றி உனை<noinclude></noinclude>
9jbbcovnhlkbvz9v7hnymkm50k9qcr7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/216
250
641844
1928634
1927867
2026-04-30T06:29:55Z
Rabiyathul
5890
+ மேலடி
1928634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|192||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>192
'திராவிட நாடு' இதழில்
நாடி வந்தது, தேடி அடைந்தது. வெற்றி விழாக் கூட்டத்தில், மலர்ந்த முகம், எவருக்கும்.
ஆடவர் அனைவரும் அறப்போரில் ஈடுபடக் கிளம்புலர்.-எவரையும் அழித்துப் பழக்கப்பட்டுவிட்ட எதேச்சாதிகாரம். என்னென்ன ஏவுமோ, எதை எதைப் பறித்திடுமோ என்றெல்லாம் எண்ணி ஏக்கத்தால் தாக்குண்டு கிடந்த தாய்க்குலத்தவர் எண்ணற்றவர் கூடினர்; தமிழகம் போர்க்கோலம் பூண்டது கண்டதுமே, மாற்றார் மருண்டனர் என்ற செய்தி அறிந்து, அந்தச் செந்தேனைப் பருகி, அவர்தம் உரிமையாளரே. களிப்பில் திளைத்தனர். கழகம் நடாத்திச் சென்றிடும் பேறு பெற்றோர், காணற் கரிய காட்சி இது என்று களித்தது மட்டுமல்ல, இன்றுள்ள ஆற்றலும், கட்டுக்கோப்பும் மாசுபடாமல் வளர்ந்து, முறையும் திறலும் மேலும் செம்மை பெற்று, விடுதலைப்போர் நடாத்திக் காணவேண்டிய பெரியதோர் வெற்றி பற்றி எண்ணி எண்ணிக் களித்தனர்.
“வண்ணக் கிளியே வா! வா! வைரச் சிலையே! அருகே வா! தத்தி நடந்திடும் தங்கக் கொடியே! தாவி வந்திடும் மானின் கன்றே! தோகை காட்டிடும் கோலமயிலே எனை வாழ வைத்திடும் எழிலே, வா வா!' என்று தான் பெற்ற செல்வத்தைத் தாய் அழைத்து, மகிழ்ந்திடும் காட்சி ஒன்று.
நரை திரை மூப்பு மேலிட்டு, கையில் தடி ஊன்றிடும் பருவத்தினரான முதியவர், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அகமகிழ்ந்து, திருவும் புகழும் நிரம்பப் பெற்றுச் சான்றோனாகி வீரனுமாகி, நாட்டுக் குழைத்து நற்பெயரெடுத்து, வீட்டிற்கு வந்து விளக்கினைக் கண்டு, சுடும் என்றார்கள், சுவைதான் கண்டேன். அழுதாய் என்றார்கள் கண் அலர்ந்திடக் காண்கிறேன்; மேனி கருத்தது என்றனர் கண்டோர், செம்பொன் சிலை இது என்றறியாமல்! என்றெல்லாம் மகன் தன் துணைவியுடன் பேசி மகிழ்வது அறிந்து, பெருமிதம் கொண்டிடும் காட்சி, மற்றொன்று.
முன்னையதற்கு ஈடு, சென்னைக் கடற்கரையில் கழகம் நடாத்திய வெற்றிவிழா[ பின்னையதோ, விடுதலைபெற்ற திருநாட்டில், வீரர்கள் மகிழ்ந்திருக்கும் நாளைக் குறிப்பிடுவதாகும்.
பெற்ற வெற்றி, தம்பி! பெறவேண்டிய வெற்றியினையன்றோ நினைவூட்ட வேண்டும், அன்று அங்கு கூடினோர் அனைவரும் அதே எண்ணம் கொண்டவராகவே இருந்தனர்.
வெற்றி பற்றிய விளக்கங்களைக் கேட்டு இன்புற்றனர். எனினும், இதுபோதும் என்று எண்ணி அல்ல; இதுபோல். பலப்பல வெற்றிகள்<noinclude></noinclude>
qadc3kg65jw70oxqgc8y9lqwiynq4us
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/217
250
641845
1928635
1927868
2026-04-30T06:30:25Z
Rabiyathul
5890
+ மேலடி
1928635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||193}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
193
பெறப்பெறப் பாதை துலங்கும், பயணம் பாங்கானதாகும். இலட்சியம் நிறைவேறும், இன்பத் திராவிடம் காண்போம், என்ற எண்ணத்துடன்!
"என்னைப் போலவே, மாந்தர் ஏதேது தேடிப் பெற்றிடினும், வாலுக்கு எங்கே போவர்!" என்று மந்தி கேட்கிறதாம். மனித குலத்தை நோக்கி. பாரதியார் சொன்னார் தம்பி! நானல்ல. அதுபோல, நாம் பெற்ற வெற்றி கண்டு மனம் பொறாதார், வாலுண்டோ? என்று பேசிடு கின்றனராம், பாவம்! வேறு என்ன பேசி அவர்களுக்கு இயல்பாக எழுந்திடும் வேதனையை நீக்கிக் கொள்வது.
"கடிதம் கிடைத்ததாமா, கடிதம்! நேரு ஒரு கடிதம் போட்டு விட்டாராம். இதுகள் அதைத் தூக்கி வைத்துக் கொண்டு குதிகுதி யென்று குதிக்கின்றனவே" என்று குமுறலைக் குளறலாக்கித் திரியும் கும்பல் நமக்குத்தான் மிக நன்றாகத் தெரியுமே, தம்பி
கொண்டை அறுந்த பெண்டொருத்தி செண்டு கண்டு இகழ்ந்தாளாம்! இந்தித் திணிப்பைத் தடுத்திட முடியாது என்று ஒதுங்கி நின்றார். இன்று கொண்டை அறுந்த பெண்டுபோல, நாம் பெற்ற வெற்றிச் செண்டு கண்டு இகழ்கின்றனர்; வேறென்ன!
ஏதோ இவர்கள் துவக்கிடும் போராட்டம் ஒவ்வொன்றின் போதும், துணைக்குக் குருஷேவையும் அயிசனோவரையும் உடனழைத்துக் கொண்டு, நேரு பண்டிதர் பறந்து வந்து பேட்டிக்குக் காத்துக் கிடந்து, இவர்கள் பாசறை அலுவலை முடித்துக்கொண்டு. பாரிலுள்ளோருக்கு, அறிவுரைகள் அனுப்பிவிட்டு, வந்து பார்க்கச் சொல்லு பண்டிதர் குழுவை என்று 'சேதி' விடுப்பதுதான், வாடிக்கை போலவும், நாம் ஏதோ ஒரு காகிதத்தைப் பெற்றுக் களிப்படைவது போலவும் அப்பாவிகள் எண்ணிக் கொள்ளட்டும் என்ற நினைப்பில், ஏதேதோ பேசுகின்றனர்.. எனக்கிருக்கும் வருத்தம், தம்பி! நம்மை இவர்கள் இகழ்கிறார்களே என்பதனால் அல்ல. ஆனால், நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, இவர்கள் பேசுவது, நம்மை அல்ல, நேரு பண்டிதர் தரத்தை அல்லவா தாக்குவதாக ஆகிறது! நேரு பண்டிதர் என்ன மிகப்பெரிய தலைவரா? அவர் அமர்ந்திருக்கும் இடம் என்ன, மிக உயர்தரமானதா அவரிட மிருந்து கடிதம் வந்தது என்பதிலே, என்ன குறிப்பிடத்தக்கச் சிறப்பு இருக்கிறது!! என்று. இவர்கள் பேசுகிறார்கள் என்பதல்லவா தொக்கி நிற்கிறது, இவர்கள் கூற்றிலே!!
நாம் நேரு பண்டிதர் தனிப்பட்ட முறையிலும் சரி, அவர் இன்று பெற்றுப் பெருமை அளித்திடும் பதவியைக் கவனித்தாலும் சரி மதிக்கத் தக்கவர் என்பதனால்தான், அவர் உறுதிமொழி தருவதையும், மீண்டும் வலிவுபடுத்திக் கடிதம் எழுதியதையும், பாராட்டி மதிப்பளிக்கிறோம்
அதை<noinclude></noinclude>
7qy1o65kficnju5mc8ii6rva9z7cgwo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/218
250
641846
1928636
1927869
2026-04-30T06:30:55Z
Rabiyathul
5890
+ மேலடி
1928636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|194||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>194
'திராவிட நாடு' இதழில்
கடிதம் பெற்றது ஒரு பெரிய காரியமா! பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விஷயமா? என்று பேசுகிறார்களே, இவர்கள். நேரு பண்டிதர், மதிக்கத்தக்கவர், என்று கருதுகிறார்களா!!
ஏனோ பாவம், எரிச்சலை அடக்கிக்கொள்ள எண்ணி, நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, உலகத் தலைவர்களில் ஒருவர் என்ற உயர்நிலையினைப் பெற்றுள்ள பண்டித நேருவை இகழ்ந்து பேசித் திரிகின்றனர், பொருள் தெரியாததாலா? மனமருள் அவர்களை அப்படி ஆக்கிவிட்டதா!!
கழுநீர்ப் பானையினைத் தலையில் சுமந்துகொண்டு செல்பவன், பன்னீர்ச்செம்பினைக் கரத்தில் எடுத்துச் செல்பவனைக் கண்டு. பூ இந்தச் சின்னச் செம்புதான் உனக்குக் கிடைத்ததா! என் தலையில் பார்! எத்தனை பெரிய கழுநீர்ப் பானை!!" என்று கூறினால் எப்படி இருக்கும்? யாரண்ணா! அப்படிக் கூறுவார்கள்! என்று கேட்கிறாயா தம்பி! இதோ இவர்கள் பேசுகிறார்களே, கடிதம் ஒரு பிரமாதமா! என்று, அதற்கென்ன சொல்லுகிறாய்?
சட்டசபையில், நான்கூட ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இது பற்றிப் பேசும்போது, கேட்டேன்.
எங்களுக்குக் குடிஅரசுத் தலைவரும் முதலமைச்சர் நேருவும் உறுதிமொழிக் கடிதங்கள் அனுப்பியதால், அவர்களின் தரம் குறைந்துவிட்டதாகக் கனம் அங்கத்தினர் கருதுகிறாரா? என்று பதில் இல்லை!
அந்தக் கடிதத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இந்தனை ஆர்ப்பாட் என்று பேசுபவர்கள், ஒன்று, நேரு பண்டிதரின் தரம் இப்படி ஒரு கடிதம் எழுதியதால் குறைந்துவிட்டது என்ற கருத்துடன் இருக்கவேண்டும். அல்லது நேரு பண்டிதருக்கு. தரமே கிடையாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
இரண்டில் எது அவர்கள் எண்ணமாக இருப்பினும் இழிமொழியை அவர்கள் நேரு பண்டிதாமீது வீசுகிறார்கள் என்று பொருளாகுமே தவிர, நம்மீது அல்ல! நம்மீது என்றுதான், விவரமறியாமல் அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.
அவர்கள் கிடக்கட்டும்; நமக்குக் கிடைத்துள்ள வெற்றி.தம்பி! நமக்கு மட்டுமல்ல, நம் தமிழகத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி- அது மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி, இதுதான், இந்தித் திணிப்பு இல்லை; ஆங்கிலம் அகற்றப்பட<noinclude></noinclude>
9atjix0gwm64ma6jcvimrhwucaxpihh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/219
250
641847
1928637
1927870
2026-04-30T06:31:26Z
Rabiyathul
5890
+ மேலடி
1928637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||195}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்
195
மாட்டாது; இந்தி பேசாத மக்களின் கருத்தறியப்படும்; ஆங்கிலத்தை காலக்கெடுவின்றி நீடித்திடச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்ற திட்டவட்டமான, அறிவிப்புகள் கிடைத்துவிட்டன. அவை நேரு பண்டிதர், தனிப்பட்ட முறையில் தருவனகூட அல்ல; அவர் நடாத்திச் செல்லும் அரசின் சார்பிலே அளித்திருக்கிறார்.
இது நல்லதோர் வெற்றி எனவே மகிழ்ச்சி; இது நல்லதோர் வாய்ப்பு, எனவே இதனைப் பயன்தரத்தக்கதாக்கும் பொறுப்பும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
உளர்
உறுதிமொழிகள் அபின் மாத்திரைகள், நம்மை மயக்க, என்பார்
நான், அந்த வகையிலே எண்ணவில்லை; எனினும் அந்த விதமாக எண்ணுபவர் கூறுகிறபடி, நாம் விழிப்பாக இருக்கத்தான் வேண்டும்.
உறுதிமொழிகளை ஒரு கரத்தால் அளித்துவிட்டு, மறுகரத்தால் நிலைமையை உருக்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்; அது கண்டிக்கத்தக்கது; தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும்.
உறுதிமொழிகளுக்கேற்ப, ஆங்கிலம் காலக்கெடுவின்றி ஆட்சி மொழி அலுவலுக்கு இருந்துவரச் செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிகிறோம்.
ஆனால், அப்படி ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து, பிறகு, அதிலே ஏற்படக்கூடிய நேர்முக, மறைமுகக் குறைபாடுகளால் விபத்துக்கள் ஏற்படுமானால், பிறகு தொல்லை நாட்டினைத் தாக்கும்.
எனவே, நாம், ஆட்சிமொழி பற்றி, இந்திய அரசியல் சட்டத்திலே உள்ளதைத் திருத்தி அமைக்க வேண்டும் என்பதை, நாட்டவருக்கும் நாடாள்வோருக்கும், செயற்குழுத் தீர்மான வாயிலாக எடுத்துக் கூறி இருக்கிறோம்.
இந்திய அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவரப் பட்டால், நிலைமை தெளிவாகும் என்பது மட்டுமல்ல. இந்தி பேசாத மாநில அரசுகள் நிம்மதி பெற முடியும்.
தம்பி! வெற்றி விழாக் கூட்டத்துக்காக, நான் காஞ்சிபுரத்திலிருந்து. அ.க. தங்கவேலருடன் அவருடைய மோட்டாரில் வந்து கொண்டி ருந்தேன். திடீரென்று, வண்டி நின்றது; ஓட்டுபவர் பதறினார். கீழே இறங்கிப் பார்த்தோம்; சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து புகை குபுகுபுவென வரக்கண்டோம். என்ன இது? என்று கேட்டோம்.<noinclude></noinclude>
es0ifihclczk1legg6gb4kuqp4r4gmh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/220
250
641848
1928638
1927871
2026-04-30T06:31:58Z
Rabiyathul
5890
+ மேலடி
1928638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|196||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>196
'திராவிட நாடு' இதழில்
"மோட்டாரில், தடுத்து நிறுத்தும் கருவி பழுதாகிலிட்டது. சக்கரங்களை அடி பிடித்து அழுத்துகிறது. உராய்ந்து உராய்ந்து சூடேறி விட்டது" என்று கூறிடவே, நாங்கள் பதறி, இப்படியே போனால், என்ன ஆகும்? என்று கேட்டோம். தீப்பிடித்துக் கொள்ளும்" என்ற பதில் கிடைத்தது.
பிறகு...? என்று கேட்கிறாயா? ஒன்றும் ஆகவில்லை, தம்பி இருக்கிறேனே! அதே மோட்டாரில்தான் சென்னை வந்தோம்; தீப்பிடித்துக் கொள்ளவில்லை. எப்படி? அந்தக் கருவியைப் பழுதடையச் செய்த குழம்பிப்போன, பழைய எண்ணெயை, வெளியே எடுத்து விட்டுச் சிறிது பழுதுபார்த்திடவே, வண்டி விபத்து ஏதுமன்றி நகர்ந்தது.
இந்திய அரசியல் சட்டத்திலே இப்போது உள்ள மொழி பற்றிய விதிமுறை, பழைய எண்ணெய் ஆகிவிட்டது. துரைத்தனம் எனும் கருவியே பழுதுபட்டு, புகை சுருள் சுருளாக வெளிவந்தபடி இருக்கிறது. அந்த எண்ணெய் வெளியே எடுத்துவிடப்பட வேண்டும்; கருவி பழுது பார்க்கப்பட வேண்டும். என்பது போன்றதுதான். இந்திய அரசியல் சட்டத்திலே. மொழிபற்றிய விஷயத்திலே, ஒரு திருத்தம் செய்திட
வேண்டும் என்று கூறுவது.
"இதென்ன புதிய நிபந்தனை?" என்றார், ஒரு காங்கிரஸ் நண்பர்.
“கருப்புக்கொடிக்கு அச்சப்பட்டுக்கொண்டு. முதலமைச்சர் நேரு. கடிதம் கொடுத்தவுடன், உங்களுக்குத் துணிவு அதிகமாகிவிட்டது. அதனால்தான், இந்திய அரசியல் சட்டத்துக்கே திருத்தம் வேண்டும் என்று கூற வந்துவிட்டீர்கள்'' என்றார், எளிதாக ஆத்திரப்பட்டு விடும் மற்றோர் காங்கிரஸ் நண்பர்.
“இதை ஏனண்ணா' முன்பே சொல்லக்கூடாது?" என்று கேட்டார். நாம் செய்துவரும் காரியத்தைச் சரியானபடி கணிக்காமல், யோசனை களைக் கூறுவதிலே ஆர்வம் காட்டும். நமது கழகத் தோழர் ஒருவர்.
மொழி விஷயமாக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்; அதைச் செயல் படுத்தி வெற்றி காண்பது எப்படி என்பது பற்றிய கட்டம்.- வாய்ப்பு-இப்போது ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், சென்னை சர்க்கார், மொழிப் பிரச்சினை குறித்துத் தயாரித்து, எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் பொது உடன்பாடு பெற்றுப், பிறகு, இந்திய துரைத்தனத்துக்கு அனுப்பி வைத்த அறிக்கை, சென்னை சட்ட சபையிலே, விவாதிக்கப்பட்டபோதே, நமது கழகச் சார்பில், அந்த அறிக்கையில் இந்திய அரசியல்<noinclude></noinclude>
0p2519qlkkrglx5ot8dfes5pquuk6u2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/221
250
641849
1928639
1927872
2026-04-30T06:32:28Z
Rabiyathul
5890
+ மேலடி
1928639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||197}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
197
சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் இணைத்து அனுப்பவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது.
விளக்கம், விவாதம், மறுப்பு-இவைகளுக்குப் பிறகு ஓட்டுக்கும் விடப்பட்டது.
நாம்தான், தம்பி! 15!!-என்ன ஆகியிருக்கும் தீர்மானம், என்பதைச் சொல்லவா வேண்டும்.
தி.மு.கழக உறுப்பினர் தவிர, மற்ற எல்லாக் கட்சியினரும் ஒரே முகமாகி, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும், என்ற திர்மானத்தைத் தோற்கடித்துவிட்டனர்.
அன்றே சென்னை அரசினை நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, கட்சிக் கண்ணோட்டத்தை மறந்து, நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு, தி.மு.க. தந்த தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி இருப்பார்களானால், மொழிப் பிரச்சினையில் தமிழகம், கட்சிகளை மறந்து, ஒன்றுபட்டு நிற்கிறது. என்பது வடவருக்கு விளங்கி இருக்கும்.
என்னால் இயன்றமட்டும். கேட்டுப் பார்த்தேன்-அவர்களுக்கு வேறு எந்த வாதமும் சரியானதாகப் படவில்லை-150-15-அது ஒன்றுதான். அவர்களுக்குத் தெரிந்தது. தமிழகம் பெற்றிருக்கக் கூடிய பொன்னான வாய்ப்பினை அழித்தொழித்தார்கள்.
“இப்போதுள்ள மத்திய சர்க்கார் மூலமாகவோ இதற்குப் பின்னர் வரக்கூடிய சர்க்கார் மூலமாகவோ, தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க வேண்டுமானால், அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவேன்".
இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலே இதற்குக் கணிசமான ஆதரவு கிடைக்குமென்று துணிவாகக் கூறலாம். வங்காளத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, பாஞ்சாலத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, மராட்டிய நாட்டிலே ஏற்பட்டிருக்கும் குமுறல், இவைகள் எல்லாம் பிற்போக்குவாதிகள் செய்கின்ற கிளர்ச்சி என்று சொல்லி விடுவார்களானால்-அவர்களிடமுள்ள அரசியல் அகராதி அவர்களுக்கு அந்த ஒரு பதத்தைத்தான் தருகிறது என்று சொல்ல வேண்டும்) உண்மையாக ஆராய்ந்து பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு ஒரு (Political climate) அரசியல் சூழ்நிலை சரியானபடி ஏற்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன் செற
REDETI SAD<noinclude></noinclude>
n0b38vtlasi0m54au208x1lfsbs7gun
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/222
250
641850
1928640
1927873
2026-04-30T06:32:59Z
Rabiyathul
5890
+ மேலடி
1928640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|198||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>198
'திராவிட நாடு' இதழில்
1958 மார்ச்சுத் திங்கள் 11-ம் நாள், மொழிப் பிரச்சினை பற்றி, நான் அதுபோலக் குறிப்பிட்டுப் பேசினேன்.
இந்தித் திணிப்புப் பற்றிச் சென்னை சர்க்கார் விழிப்புடன் இருக்கிறது, என்ற கருத்துடன் அமைச்சர் வாதாடியதால், நான் அப்படிச் சென்னை சர்க்கார் கருத்தினாலும்கூட, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த முயற்சி எடுப்பதுதான் அறிவுடைமை என்பதையும், எடுத்துக் கூறினேன்.
“சென்னை சர்க்கார் கருத்து வெற்றிபெற வேண்டுமானால், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை வலி யுறுத்திக் கூறுகிறேன்”.
இப்போது, இதை வலியுறுத்திக்கொண்டு போனால், சிக்கல் ஏற்பட்டுவிடும், இந்திய துரைத்தனத்துடன் சமரசமாகப் போகும் வாய்ப்புக் கெட்டுவிடும், என்று அமைச்சர் கருத்துத் தெரிவித்ததால்,
“எதிர்கால சந்ததிகளை கட்டுப்படுத்தக்கூடிய மிக முக்கியமான முடிவில், அவசரப்பட்டு, ஏதோ சமரசம் காணவேண்டும் என்பதில் நாட்டம் வைக்காமல், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான எங்கள் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்". என்று எடுத்துக்காட்டினேன்.
இந்திய அரசியல் சட்டம் ஏதோ தொடக்கூடாத, திருத்தப்படக் கூடாத புனித ஏடு என்ற முறையிலே, காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதுதான் நமக்குத் தெரியுமே. தம்பி! அதனால், இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றியே, விளக்கம் கூறினேன்.
"இந்திய அரசியல் சட்டம் ஆக்கப்பட்ட நேரத்தில், அது எவ்வளவு அவசரமாக ஆக்கப்பட்டது என்பதனை உணர வேண்டும். அவ்வாறு யார் மூலம் உணர்ந்திருக்கிறோம் என்றால், இந்திய அரசியல் சட்ட நிபுணர்களாக இருந்தவர்கள், அரசியல் சட்டம் ஆக்கப்படும்பொழுது உடன் இருந்தவர்கள், இவர்களெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்,
அன்றைய தினம் வெள்ளைக்கார ஆட்சி நீங்கி, இந்த நாட்டுக்குச் சுயஆட்சி கிடைத்த நேரத்தில், வெள்ளைக்காரர் போய்விட்டார்கள் என்ற இயற்கையான சந்தோஷத்தில், எதிர்காலத்தில் ஆட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, ஒருவருக்கொருவர் எதை வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம் என்ற ஆனந்தத்தில். செய்துகொண்ட காரியம் இது, ஹோலி பண்டிகையன்று வேடிக்கையாக ஒருவருக்கொருவர்மீது வண்ணச்சாயத்தை வீசிக்கொள்வதுபோல. ஒருவருக்கொருவர் மீது வாதங்கள் ஆனந்தமாக வீசிக்கொள்ளப்பட்டன.<noinclude></noinclude>
cc9saphoepdnggfpuz2u9tn4p6ey4uc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/223
250
641851
1928641
1927874
2026-04-30T06:33:30Z
Rabiyathul
5890
+ மேலடி
1928641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||199}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
199
ஆரஅமர ஆராய்ந்து இது செய்யப்படவில்லை என்று அரசியல் சட்டத்தை ஆராய்ந்திருக்கும் பெரிய அரசியல் சட்ட நிபுணர்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
"மொழிப்பிரச்சினை சம்பந்தப்பட்டவரை, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துகொள்ளுவதுதான், உண்மையிலேயே நமக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது. நல்ல பாதுகாப்பு அளிப்பதாக இருக்கும். அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்காகத்தான் இந்த அறிக்கையிலே எங்களுடைய திருத்தத்தை இணைத்துக்கொள்வது பொருத்தம் என்பதை, நான் நிதி அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தப் பேச்சு, அதற்குத் துணைநிற்கக் கூடியவர்கள், சட்ட மன்றத்தில், 15 மட்டுமே, என்பதால் பலன் அளிக்காமற் போய்விட்டது.
வெறும் வாதத் திறமையைக் காட்டவேண்டும் என்ற எண்ணத் துடனோ, வேகம், விறுவிறுப்பு ஊட்ட வேண்டும் என்பதற்காகவோ நான் அன்று பேசவில்லை உணரக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய காரணங்களை, முறைப்படி எடுத்துக் கூறி, அமைச்சரின் இசைவினைப் பெறவேண்டும் என்று மெத்தவும் விரும்பினேன். ஆனால் அவர்கள் நமக்கு இணங்குவது, தங்கள் கட்சியின் அந்தஸ்துக்குக் கேடு என்று எண்ணிக்கொண்டு, எதிர்த்தார்கள்-நாட்டுக்கான திட்டம் இது. என்பதைக் கவனிக்க மறுத்தார்கள்.
இந்தியாவில்தான் நீங்கள் இருக்கமாட்டீர்களே! திராவிடம் தனிநாடு என்பவர்களாயிற்றே, உங்களுக்கு இந்திய அரசியல் சட்டத்திலே எந்த மொழி ஆட்சிமொழியாக இருந்தால் என்ன? என்று இப்போதும் கேலி பேசுகிறார்கள் அல்லவா, 'இடம் பிடித்தார்கள்' - அதே முறையில் தான் அன்றும்!
கனிவு இருக்கவேண்டும் என்ற அலாதி அக்கரையுடன் நிதி அமைச்சர், இப்போது பேசினார், மொழிப் பிரச்சினை பற்றி: பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டி; அதிலேகூடக் காணலாம். இந்த வாடை!
இந்தியாவிலே எது ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று இவர்கள் இவ்வளவு அக்கரை காட்டுவதிலிருந்து, பிரிவினை விஷயத்திலே, ஏதோ கருக்குமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது என்ற பொருள்பட அல்லவா பேசினரா. அன்றும் அதே விதமாகப் பேசப்பட்டது. நான் சிறிதளவு விளக்கமாகவே, அதுகுறித்து அன்று
பேசினேன்.<noinclude></noinclude>
4pg2n2ovqhkwm4fhf0rlsj8rde89etq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/224
250
641852
1928642
1927875
2026-04-30T06:34:00Z
Rabiyathul
5890
+ மேலடி
1928642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|200||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>200
'திராவிட நாடு' இதழில் "இப்போது மூன்று வகையான மொழிப் பிரச்சினைகள் நம் முன்னால் இருக்கின்றன. ஒன்று தேசிய மொழிப் பிரச்சினை.
தேசிய மொழியைப் பொறுத்தவரையில் 10-15-ஆண்டுகளுக்கு முன்னால், எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்ததெல்லாம், இந்திதான் தேசியமொழி என்பதாகும். இந்திதான் தேசியமொழி என்று எடுத்துக் கூறப்படாத காங்கிரஸ் கூட்டங்கள் அப்போது கிடையாது. இந்திதான் தேசியமொழி என்று கூறாத காங்கிரஸ்காரர் அப்போது கிடையாது. அவ்வாறு கூறாதவர் காங்கிரஸ்காரர் அல்ல என்ற கருத்து அப்போது நிலவிவந்தது. இன்றோ இந்தி தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மட்டுமல்லாமல். இந்தியுடன் தமிழும் மற்றப் பல மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மொத்தம் 14-தேசிய மொழிகள் இருக்கின்றன.
ஆட்சிமொழி அந்தஸ்தைப் பொறுத்தவரையில், தமிழ்தான் தமிழகத்தில் ஆட்சிமொழி.
இந்தியாவில், நிர்வாக மொழி எதுவாக இருக்கவேண்டும் என்பதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
இந்தப் பிரச்சினையை மூன்று விதமாக நோக்கலாம். இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில், இப்பிரச்சினையைப் பார்ப்பது ஒருவிதம்.
இரண்டாவது, இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கப் போவதில்லை; அது பிரியப் போகிறது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரியும்வரை உள்ள இடைக்காலத்தில் எது நிர்வாக மொழியாக இருக்க வேண்டுமென்று பார்ப்பது ஆகும்.
எங்களைப் பொறுத்த வரையில் இந்தியா பிரியப்போகிறது என்ற எண்ணத்துடன்தான், இப்பிரச்சினையை நாங்கள் அணுகுகிறோம்.
நிர்வாகத்தில் மத்திய சர்க்காரிடம் எந்தெந்தப் பொறுப்பு களை மாத்திரம் ஒப்படைக்கலாம் என்று பார்த்து, அவர்களிடம் இருக்கும் அதிகப்படியான பொறுப்புக்களைக் குறைத்துவிட்டால், அப்போது மத்திய அரசாங்க நிர்வாக மொழி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன், இப்பிரச்சினையை அணுகுவது மூன்றாவது விதம் ஆகும்.<noinclude></noinclude>
pr4gwrar4pqxol56k57gp6xptsry2qp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/225
250
641853
1928643
1927876
2026-04-30T06:34:31Z
Rabiyathul
5890
+ மேலடி
1928643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||201}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்
201
தம்பி மொழிப் பிரச்சினையை, நாம் அக்கறையுடன் கவனித்து வருகிறோம் என்று மட்டுமே, காங்கிரசார் எண்ணுகின்றனர், அப்படியல்ல, உரிமைப் பிரச்சினையுடன் சேர்த்தே நாம் இந்த மொழிப் பிரச்சினையைப் பற்றி நாட்டம் செலுத்துகிறோம் என்பதை ஆட்சியாளர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, நான் இத்தனை விளக்கம் தந்தேன். விளக்கமாகத்தான் இருக்கிறது; நமது கழகத்தின் அடிப்படைக் குறிக்கோளான நாட்டுப்பிரிவினை பற்றியும் வலியுறுத்தித்தான் சொன்னீர்கள்; இவ்வளவு விளக்கம் போதுமே என்று, தம்பி! நீயும் கூறுவாய், நாட்டவரும் கூறுவர்; ஆனால் நாடாள்வோர் அவ்விதமா! இந்தச் சாமான்யன் சொல்வதா, நாம் கேட்டுக்கொண்டு ஒப்பம் அளிப்பதா, என்ற எண்ணம் அவர்களிடம் தடித்து மேலோங்கி நிற்கிறது. எனவே, அவர்களிடம் வடக்கே உள்ளவர்களின் போக்கினை எடுத்துக் கூறி வாதாடலாம் என்று எண்ணினேன்.
நிர்வாக மொழியாக இந்திதான் இருக்கவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்திச் சொல்லும் வெறிபிடித்த தலைவர்களின் கூட்டம் வடநாட்டில் இருக்கிறதென்பதும், அந்தத் தலைவர்களுக்கு மத்தியிலுள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் மிகுந்த செல்வாக்கு இருக்கிறதென்பதும் உலகமறிந்த உண்மை. கௌஹத்தி காங்கிரஸ் மாநாட்டில் கனம். சுப்பிரமணியம் பேசிய பேச்சை, The most reactionary speech (பிற்போக்கான பேச்சு) என்று ஒரு வடநாட்டுக் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்',
என்று எடுத்துப் பேசினேன். கனம் கொதித்தெழுந்தார், பாவம்! சங்கடம் அவருக்கு. அவருடைய பேச்சை, அவருடைய கட்சிக்காரர் ஒருவரே. பிற்போக்கான பேச்சு, என்று, வெளிப்படையாக மாநாட்டிலே கண்டித்தார் என்பதைச் சட்டசபையில் நான் எடுத்துக் காட்டுவதை, எப்படிப் பொறுமையுடன் அவரால் கேட்டுக்கொண்டிருக்க முடியும்? பொங்கி எழுந்தார்;
"அவருக்கும் இந்திக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகவே, இந்தி தெரியாதவர்தான் அவ்வாறு கூறினார்".
என்று பேசினார்.
கொடுத்தார் சரியான அடி, நம்ம அமைச்சர்! என்று உடனிருந்தோர் எண்ணிக் கொண்டிருப்பார்களல்லவா? அவர்களின் களிப்புக் கருகி விட்டதோ என்னவோ, நான் தொடர்ந்து பேசியது கேட்டு.
"இந்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாதபோது. இந்தியின் சார்பாக அவர் பேசியிருப்பதிலிருந்து, இந்திக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அந்தச் செல்வாக்கு<noinclude></noinclude>
4ywgc1eqrijm2f443c0o4anl1ff6koe
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/226
250
641854
1928644
1927877
2026-04-30T06:35:00Z
Rabiyathul
5890
+ மேலடி
1928644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|202||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>202
'திராவிட நாடு' இதழில்
வளர்ந்துகொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும், அவ்வாறு கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையில் சமரச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவேண்டுமென்று பண்டித ஜவஹர்லால் நேரு விரும்பு கிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்தியை எப்படியும் நிர்வாக மொழியாகப் புகுத்த வேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும், வடநாட்டில் இருக்கிறார்கள். இந்தியைப் பக்குவமாக நிர்வாக மொழியாகப் புகுத்தவேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும் வடநாட்டில் இருக்கிறார்கள்.
இந்த இரு கூட்டத்தினருள் எந்தக் கூட்டத்தினர் வெற்றி பெற மாட்டார்கள் என்று நாம் இன்று அறுதியிட்டுக் கூறமுடியாது.
இப்படிப்பட்ட நிலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது என்றும், மற்ற எதிர்க்கட்சி களும் ஒப்புதல் அளித்துள்ளன என்றும் குறிப்பிட்டு, இந்த அறிக்கையை, மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பினால், வடநாட்டு இந்தி வெறியர்கள் இங்கே இந்தியைப் புகுத்துவதற்கு இந்த அறிக்கையைப் பயன்படுத்திக்
கொள்வார்கள்
ஆகவேதான், இந்தியை எதிர்ப்பவர்களும், இந்தி ஆட்சி மொழியாகக் கூடாது என்று சொல்பவர்களும், இந்தி மத்திய அரசாங்க ஆட்சி மொழியாக ஆக்கப்பட வேண்டுமென்று கூறும் அரசியல் சட்டப் பிரிவை எதிர்ப்பவர்களும், அந்தப் பிரிவைத் திருத்தவேண்டு மென்று வாதாடுபவர்களும், தமிழ் நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை, மத்திய அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கு நாங்கள் வகை செய்கிறோம்.
உ
நாங்கள் இவ்வாறு செய்வது, இந்தித் திணிப்பை எதிர்த்து மத்திய அரசாங்கத்திடம் வாதாடுவதற்கு, இந்த மாநில ஆட்சியாளர் களுக்கு உதவும்படியாக இருக்கும் என்று சொல்லுவேன்.
இந்த மொழிப் பிரச்சினையில் நாமெல்லோரும் சமரசத்திற்கு வந்துவிட்டோம் என்று தெரிவிப்பதைவிட, அடிப்படையில் சில மாறுபாடுகள் இருக்கின்றன என்பதை மத்திய சர்க்காருக்கு உணர்த்துவது மிகப்பொருத்தம் என்று கருதி, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்தத் திருத்தத்தை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்,<noinclude></noinclude>
1r9bqdwf3kn0e7xwhxvytoc5e5sh9lt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/227
250
641855
1928645
1927878
2026-04-30T06:35:30Z
Rabiyathul
5890
+ மேலடி
1928645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||203}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
203
இவ்வளவும் கூறி என்ன ஆயிற்று? இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்ற கழகத் தீர்மானம். தோற்கடிக்கப்பட்டது. நாம் 15-அவர்கள் 1501 அதனால்!!
தம்பி! நானும் நமது சட்டமன்ற உறுப்பினர்களும் மொழி சம்பந்தமாக, நிரந்தரமான ஒரு 'பரிகாரம்' கிடைக்க வேண்டுமானால், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வாதாடியபோது, கனம் சுப்பிரமணியம் அவர்கள் தமது பேச்சிலே இனிப்புக் கூட்டித் தந்தார். எல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம். என்றார். இப்போது எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, ஒருமனதுடன் அறிக்கையைத் தயாரித்து அனுப்பினார்கள் என்ற பெருமையை இழக்கக் கூடாது என்ற பொருள்படப் பேசினார்.
இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற தீர்மானத்தை, அன்பழகன் திரும்பிப் பெற்றுக்கொள்ள இசையாது போகவே, ஓட்டுக்கு விடப்பட்டது-தோல்விதான்!! சொல்லவா வேண்டும்!
இந்த அறிக்கையைப் பற்றித்தான் அமைச்சர் அவையை அமைத் துள்ள கட்சியினர், மொழிப் பிரச்சினையில் எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருமனப்பட்டு. முடிவெடுத்து. மத்திய சர்க்காருக்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது, என்று பெருமை பேசிக்கொள்கின்றனர்.
அன்றே சட்டசபையில், இந்திய அரசியல் சட்டம் திருத்தப் பட்டாக வேண்டும் என்று, நமது கழகம் வாதாடி இருக்கிறது.
இப்போது நமது செயற்குழுவிலும், இது மீண்டும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.
தம்பி! அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று மட்டுமல்ல, மேலும் பல அடிப்படைக் கருத்துக்களையும், அன்று. சட்டசபையில் நமது கழகம் வலியுறுத்தித், துரைத்தனம் தயாரித்த அறிக்கைக்குத் திருத்தங்களைக் கொடுத்திருக்கிறது.
ஆத்தூர் தொகுதி உறுப்பினர் M.P. சுப்பிரமணியம் பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கட்டாயமாகப் படிக்கவேண்டுமென்ற முறையை மறுத்து, தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழி மட்டுமே போதும் என்று திருத்தம் கொடுத்தார்,
தோழர் A. கோவிந்தசாமி அவர்கள், பாராளுமன்றத்தில், எந்த மொழியில் பேசினாலும் உடனுக்குடன் எல்லாத் 'தேசீய' மொழிகளிலும் அவை மொழிபெயர்த்தளித்திட ஏற்பாடு செய்யவேண்டும் என்ற திருத்தம் கொடுத்தார்.<noinclude></noinclude>
kklwe2hynkjs4ifxuewyki0z39ozyaw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/228
250
641856
1928646
1927880
2026-04-30T06:36:01Z
Rabiyathul
5890
+ மேலடி
1928646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|204||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>204
'திராவிட நாடு' இதழில்
(சுப்ரீம் கோர்ட்டில்) உச்ச உயர் நீதிமன்றத்தில், ஆங்கில மொழியே தொடர்ந்து அலுவல் மொழியாக இருந்து வரவேண்டும் என்ற திருத்தத்தை, தோழர் ப.உ. சண்முகம் கொடுத்தார்.
இவை யாவும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன.
சட்டசபையில் நமக்கு எண்ணிக்கை பலம் இல்லாததால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற நமது முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது.
இனித் தம்பி! உன் ஆற்றலால் கிடைத்துள்ள வெற்றிச் சூழ்நிலையையும், நாட்டு மக்கள் உள்ளத்திலே ஏற்பட்டுள்ள எழுச்சியையும் துணைகொண்டு, இந்திய அரசியல் சட்டத்திலுள்ள மொழி சம்பந்தமான பகுதியைத் திருத்தவேண்டுமென்று, செயற்குழு முடிவெடுத்திருக்கிறது.
எனவே, கருப்புக்கொடி காட்டிடும் வாய்ப்புப் பறிபோய் விட்டதே என்று எண்ணிக், களிப்புக் கருகிய நிலையில் இருந்து விடாதே. இதுநாள்வரை இந்தப் பிரச்சினை குறித்துக் காட்டாத அளவு கனிவு, இன்று மேலிடம் உள்ள மூலவர் மூவர் காட்டி யுள்ளனர்; என்பதை மறவாதே.
நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறு, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற யோசனை, திடீரென்று முளைத்த தல்ல; முறைப்படி, சட்டமன்றத்திலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் கூறப்பட்டதுதான்-அதற்கு இப்போது நாம் பெற்ற வெற்றி. புதியதோர் வலிவையும் பொலிவினையும் தந்துள்ளது என்பதனை எடுத்துக் கூறு.
இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று நாம் சொன்னபோது, எண்ணிக்கை பலத்தால் அதனைத் தோற்கடித்த அதே காங்கிரஸ் அரசு, முன்பு ஒருமுறை இந்திய அரசியல் சட்டம் திருத்தப் படத்தான் வேண்டும் என்று தனது கருத்தினை, மொழிக்குழு மூலம் மத்திய அரசுக்குத் தெரிவித்துமிருக்கிறது என்ற பேருண்மையை எடுத்துச் சொல்லு.
வேலை இருக்கிறது நிரம்ப. வெற்றிக் கோலம் பூண்ட தம்பி! செந்தமிழ் நாட்டுச் சோலையிலே நல்ல சிந்துபாடும் வேளையிலே, தென்றல் அடிக்குது என்னை மயக்குது!-என்று இருந்துவிடாதே!!
வடக்கே உள்ள இதழ்கள் பல 'டைம்ஸ் ஆப் இந்தியா', 'இதவாதம், 'போரம் - இவை, எப்படி நேருவும் பந்தும் குடிஅரசுத் தலைவரும் இந்த தி.மு. கழகத்துக்கு உறுதி மொழிகள் அளிக்கலாம்?<noinclude></noinclude>
5jyj0pc8ah4fxj27w59dcounmvu50mw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/229
250
641857
1928647
1927881
2026-04-30T06:36:31Z
Rabiyathul
5890
+ மேலடி
1928647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||205}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
205
அந்தக் கழகத்துக்கு அத்துணை மதிப்பு அளிப்பதா? இதனையே காட்டிக்காட்டி, கூறிக்கூறி, நாட்டு மக்களைத் தமது பக்கம் சேர்த்துக் கொள்வார்களே! ஏனோ, இந்தத் தலைவர்கள் இப்படி ஒரு காரியம் செய்தனர்? என்று அந்த இதழ்களெல்லாம் எழுதியுள்ளன- எரிச்சல் தாளமாட்டாமல்,
தொடர்ந்து நாலு கூட்டங்களில் விஷயத்தைத் திரித்துக் கூறிவிட்டால் போகிறது; வெற்றியை வைத்துக்கொண்டு என்ன பெரிய பலனைக் கண்டுவிடப் போகிறார்கள்!!-என்று ஏளனம் பேசுகின்றனர் இங்குள்ள காங்கிரசார்.
"எல்லாம் ஓட்டுப் பெட்டியில் இருக்கிறது!" என்ற மூல மந்திரத்தைக் கூறித் திருப்தி தேடுகிறார் முதலமைச்சர் காமராஜர்.
"யார் எப்படிச் சொன்னாலும், இந்தச் சமயத்தில் செயல்பட முனைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இந்தி ஆதிக்கக்காரரின் எண்ணத்தில் சரியானபடி மண்விழச் செய்துவிட்டார்கள். இது அவர் களுக்கு மகிழ்ச்சி என்பது மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை" என்று, கட்சிக் கண்ணோட்டத்தால் உண்மையைக் காண மறுக்கும் சிலர் போலன்றி, நடுநிலையாளர் அனைவருமே பேசுகின்றனர்.
எண்ணி எண்ணி மகிழத்தக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத், தக்கபடி பயன்படுத்தும் பணியாற்ற உனை அழைக்கிறேன், உவகை யுடன் உரிமையுடன்! வேலை நிரம்ப இருக்கிறது தம்பி! நிரம்ப!!
14.8.609
அண்ணன்,
Jimmys<noinclude></noinclude>
smr31nv5wyg8hae9alijygh20401usi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/230
250
641858
1928648
1927882
2026-04-30T06:37:01Z
Rabiyathul
5890
+ மேலடி
1928648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|206||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கடிதம்: 116
தம்பி!
காலம் இல்லை, அதிகம்!
கொள்கையில் உறுதி-
உ
தளராது பணிபுரிதல்.
வேதனை கப்பிய நிலையில் இந்தக் கிழமை, உன்னுடன் அளவளாவ இயலுமா என்பதுபற்றியே, எனக்கு ஐயப்பாடு இருந்தது. நமது மாநிலத்துக்கு வெளிப்பகுதிக்கு நாலுநாட்கள் சென்று வரவேண்டி இருந்தது. சென்னை புறப்படு முன்புதான், தொலைபேசி மூலம், தம்பி கருணாநிதி, குடந்தையிலே நேரிட்ட கோரச் சம்பவம் குறித்துக் கூறக் கேட்டேன். உள்ளம் துடித்தது; பறந்து வந்தேன். நிலைமைகளை விளக்கிக் கூறினர், நண்பர்கள். குடந்தை சென்று நேரடியாகவே தகவல்களைக் கேட்டறிந்து வருவதாகக் கருணாநிதியும், தர்மலிங்கம் எம்.பி அவர்களும், கூறிச்சென்றனர். தகவல் கிடைத்ததும், அறிந்ததை உரைத்திடவும், ஆவன செய்வதற்கு முயற்சி எடுத்திடவும் காத்துக் கிடக்கிறேன்.
-
ஒன்று பொதுவாகக் கூறுவேன் நமது கழக வளர்ச்சி கண்டு, அரசியல் வட்டாரங்களிலே எழுந்துள்ள பொறாமை, பகை உணர்ச்சியாகி. தீயதோர் தீச்சுழல், தமிழகமெங்கும், நமது கழகத்தைச் சுற்றி வளைய மிட்டது போலிருக்கிறது என்பதை, நான் உணருவது போலவே நீயும் உணர்ந்திருக்கிறாய் என்று எண்ணுகிறேன். இது, ஒவ்வொரு அரசியல் கட்சியும், அதிலும் குறிப்பாக விடுதலை இயக்கம், எதிர்பார்த்துத் தீர வேண்டிய கட்டம்.
நம்மை அலட்சியப்படுத்தினர் அரசியல் மாற்றார்கள் நாடு நம்மை எதிர்கொண்டழைத்தது. சான்றோர் என்ற சிறப்புப் பெயருக் கேற்ப, இயல்பு பெறவேண்டிய சிலர், நிலைகெட்டதால் நினைப்புக் கெட்டு நம்மைச் சபித்தனர் - நாடு நம்மை வாழ்த்தலாயிற்று. பேதமும் பிளவும் மூளும்; பிய்த்தெறியலாம் என்று எண்ணினர். சிறுமதி கொண்டு பெருநோக்குடையாரைச் சாய்த்திட எண்ணிடும் சதிமதி தெரிந்தோர் - நாமோ தணலைக் தங்கம் பயன்படுத்திக் கொள்ளும் தன்மைபோல. எதனையும் நமக்கு ஆக்கம் தரவல்லது ஆக்கிக் கொண்டு விட்டோம்.
இனி, இவர்களைச் செல்வாக்கற்றவர்களாக்குவதும் செயலற்றவர் களாக்குவதும் இயலாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதால்,<noinclude></noinclude>
if0yiu4mgyftad2e7gxed9s5ub8dgq6
1929014
1928648
2026-04-30T11:07:33Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம்: 116
தம்பி!
காலம் இல்லை, அதிகம்!
கொள்கையில் உறுதி-
உ
தளராது பணிபுரிதல்.
வேதனை கப்பிய நிலையில் இந்தக் கிழமை, உன்னுடன் அளவளாவ இயலுமா என்பதுபற்றியே, எனக்கு ஐயப்பாடு இருந்தது. நமது மாநிலத்துக்கு வெளிப்பகுதிக்கு நாலுநாட்கள் சென்று வரவேண்டி இருந்தது. சென்னை புறப்படு முன்புதான், தொலைபேசி மூலம், தம்பி கருணாநிதி, குடந்தையிலே நேரிட்ட கோரச் சம்பவம் குறித்துக் கூறக் கேட்டேன். உள்ளம் துடித்தது; பறந்து வந்தேன். நிலைமைகளை விளக்கிக் கூறினர், நண்பர்கள். குடந்தை சென்று நேரடியாகவே தகவல்களைக் கேட்டறிந்து வருவதாகக் கருணாநிதியும், தர்மலிங்கம் எம்.பி அவர்களும், கூறிச்சென்றனர். தகவல் கிடைத்ததும், அறிந்ததை உரைத்திடவும், ஆவன செய்வதற்கு முயற்சி எடுத்திடவும் காத்துக் கிடக்கிறேன்.
-
ஒன்று பொதுவாகக் கூறுவேன் நமது கழக வளர்ச்சி கண்டு, அரசியல் வட்டாரங்களிலே எழுந்துள்ள பொறாமை, பகை உணர்ச்சியாகி. தீயதோர் தீச்சுழல், தமிழகமெங்கும், நமது கழகத்தைச் சுற்றி வளைய மிட்டது போலிருக்கிறது என்பதை, நான் உணருவது போலவே நீயும் உணர்ந்திருக்கிறாய் என்று எண்ணுகிறேன். இது, ஒவ்வொரு அரசியல் கட்சியும், அதிலும் குறிப்பாக விடுதலை இயக்கம், எதிர்பார்த்துத் தீர வேண்டிய கட்டம்.
நம்மை அலட்சியப்படுத்தினர் அரசியல் மாற்றார்கள் நாடு நம்மை எதிர்கொண்டழைத்தது. சான்றோர் என்ற சிறப்புப் பெயருக் கேற்ப, இயல்பு பெறவேண்டிய சிலர், நிலைகெட்டதால் நினைப்புக் கெட்டு நம்மைச் சபித்தனர் - நாடு நம்மை வாழ்த்தலாயிற்று. பேதமும் பிளவும் மூளும்; பிய்த்தெறியலாம் என்று எண்ணினர். சிறுமதி கொண்டு பெருநோக்குடையாரைச் சாய்த்திட எண்ணிடும் சதிமதி தெரிந்தோர் - நாமோ தணலைக் தங்கம் பயன்படுத்திக் கொள்ளும் தன்மைபோல. எதனையும் நமக்கு ஆக்கம் தரவல்லது ஆக்கிக் கொண்டு விட்டோம்.
இனி, இவர்களைச் செல்வாக்கற்றவர்களாக்குவதும் செயலற்றவர் களாக்குவதும் இயலாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதால்,<noinclude></noinclude>
jx1vnmc4unc8hgzqov24iqx9ale5z7t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/231
250
641859
1928649
1927883
2026-04-30T06:37:31Z
Rabiyathul
5890
+ மேலடி
1928649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||207}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
207
நம்மை உயிரற்றவர்களாக்கி விடுவது என்று துணிந்து, தாக்கவும் தகர்க்கவும், குத்தவும், வெட்டவும், கொல்லவும் ஏவிவிடும் அளவுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
தம்பி! உயிரற்றவர் என்பதை, பிணம் என்று பேசுகிறோம்.
ஒருவன் செத்தால், உயிரற்றவனாகிறான் என்று பொதுவாகக் கூறும்போது, அது உண்மைதான் ஆனால் சாவு வேறு, உயிரற்றுப் போவது என்பது வேறு. தத்துவம் பேசுவதாக எண்ணிக்கொள்ளாதே, தம்பி! உண்மையை உரைக்கிறேன்.
சாகாமலே, உயிரற்றவர்களாகி விட்டவர்கள் உண்டு!
செத்து, உயிரூட்டம் தருபவர்கள் உண்டு.
முன்னவர். கொள்கைப் பற்றற்று, வாழ்க்கைச் சுவையில் மூழ்கி, நாடு, மொழி, இனம் மறந்து கிடக்கும் உருவாரங்கள். உயிர் இருக்கும், உண்ண உறங்க, உறவாட, உரையாட, பொருள்தேட, நடமாட! ஆனால் இனம் வாழ, நாடு பீடுநடை போட, மொழி வாழ, வழிவகுத்திட வேண்டும் என்ற உணர்ச்சி, துடிப்பு, செயலார்வம் அற்றுப் போயிருக்கும்.
அவர்தான் உள்ளபடி, உயிரற்றார்!
கொள்கைக்காகவே வாழ்ந்து, கொடியவரின் கொடுவாளுக்கோ, வஞ்சகரின் வீச்சுக்கோ, அடக்குமுறையின் கோரப் பற்களுக்கோ இரையாகி இறந்துபடும் மாண்பினர், உயிரற்றோர் எனும் பட்டியலில் அல்ல, உயிரூட்டம் தருவோர் வரிசைக்குத் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் என்பதுதான், நாம் போற்றிடத்தக்க பேருண்மையாகும்.
அந்த வரிசையில் ஏற்கனவே, நிரம்ப இடம் பெற்றனர், நமது கழகத்தவர். இனி அந்த வரிசை வளரவேண்டும், என்று, வன்கணாளர்கள் விரும்புகிறார்களோ என்று எண்ணத்தக்க விதமான நாசகால நடவடிக்கைகள், நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இது, என்னைப் பொறுத்தவரையிலும், என் போன்ற இயல்பினரைப் பொறுத்தவரையிலும், எதனை உணர்த்துகிறது எனின், எந்த நேரத் திலும், எந்த முறையிலும், உயிர்குடிக்கும் பகை நம்மைத் தாக்கி மாய்த்திடக்கூடும்; எனவே, உள்ள நேரத்தை, விரைந்தும், துணிந்தும், முறைப்படுத்தியும், மூலம் கெடாவகையிலும், பயனுள்ள தாக்கிக் கொள்ளவேண்டும்; எத்தனை நாள் இந்தப் பணியாற்ற விட்டு வைக்கப் பட்டிருப்போம் என்பதே பிரச்சினையாகி விட்டிருப்பதனால், கிடைக்கும் வாய்ப்புக்களைச் செம்மையாகப் பயன்படுத்தி, வீழ்த்தப்படுமுன்<noinclude></noinclude>
2mvkufvup9avxpdnsxlluua7e3b0ucj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/232
250
641860
1928650
1927884
2026-04-30T06:38:01Z
Rabiyathul
5890
+ மேலடி
1928650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|208||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>208
'திராவிட நாடு' இதழில்
வீரப்பணியாற்றினேன்! என்று நாம் நமது நெஞ்சத்துக்குக் கூறி கொள்ளத்தக்க நிலை பெற்று, பிறகு நிற்பவரிடம் வீழ்வோர், அறப்போர் ஆர்வத்தை, விடுதலை வேட்கையை ஒப்படைத்துவிட்டு, இவர் என்னினும் செம்மையாகச் செயல்படவல்லார்! என்ற மகிழ்ச்சியுடன், மண்ணில் சாய்ந்திட வேண்டும், என்பதுதான்.
-
வேலை நிரம்ப இருக்கிறது என்றேன். சென்ற கிழமை தம்பி அத்துடன் இதனை இணைத்துக்கொள், காலம் அதிகம் இல்லை!
-
வேலை நிரம்பஇருக்கிறது, காலம் அதிகம் இல்லை எனின், சிக்கலன்றோ அதிகப்படும் என்று, சிந்தை குழம்பிக் கிடந்திடும் சிற்றினம் அல்ல, திராவிட இனம்.
வேலை நிரம்ப இருக்கிறது காலம் அதிகம் இல்லை எனினும் உறுதிக்குக் குறைவேதுமில்லை - என்பது தான் முழு உண்மை.
அத்திமரம் கண்டிருக்கிறாயே, தம்பி! மரம் எத்துணை பெரிது அதிலே காய்த்திடுவது எத்துணை சிறிது! காண்கிறாயல்லவா? அளவுக்காக மட்டுமல்ல, தம்பி! அதனைக் காட்டுவது. மிக எளிதிலே 'சொத்தை' யாகிடத் தக்கது என்பதனையும் கூறத்தான். 'அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை' என்பது பழமொழி. நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அதனை அல்ல; மரம் பெரிது, காய்மிகச் சிறிது.
பூசுணைக்கொடி பார்க்கிறாயே, தம்பி! எப்படி இருக்கிறது? உலர்ந்து, சுருண்டு கீழே வீழ்ந்து கிடக்கிறது - ஆனால் காயோ மிகப் பெரிது!
அத்திமரத்தினையும், பூசுணைக்கொடியினையும் கண்டறியாதாரிடம், அத்திக்காயினையும், பூசுணைக்காயையும் காட்டி, பிறகு மரத்தையும் கொடியையும் காட்டினால், அத்தியைப் பூசுணைக் கொடியுடையது என்றும், பூசுணைக்காயை அத்திமரம் தந்தது என்று கூறுவரன்றோ.
நாம் செயலாற்றிப் பெற்ற சாதனைகள், தம்பி! கொடியிலே காணப்படும் பூசுணை போன்றது. காணாதார், நம்பமாட்டார்கள்! கண்டோர், வியப்படையாதிருக்க மாட்டார்கள்.
அத்திமரத்திலே காய்த்துக் கிடக்கும் கொத்துக் கொத்தான காய்கள் போல, காங்கிரஸ் கட்சியினர், ஆட்சி மன்றங்களிலே, எண்ணிக்கை பலத்துடன் அமர்ந்துள்ளனர். இப்போது அந்தப் பழமொழியை நினைவிற்குக் கொண்டு வா, அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை.
அப்படியொரு அத்திப் பழத்தைப் புட்டு, சொத்தை எவ்வளவு என்று பார்த்துக் கொண்டிருந்தனர், பெங்களூரில், நான் சென்றபோது -<noinclude></noinclude>
a597hyetcvidv56z1j6k0nweoyqcrak
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/233
250
641861
1928651
1927885
2026-04-30T06:38:31Z
Rabiyathul
5890
+ மேலடி
1928651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||209}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்
209
அவர்
ஜட்டி அமைச்சர் அவை எதிர்ப்பாளர்கள் கிளப்பிய புகார்கள் பற்றிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கர்நாடக வணிகக்கோட்டப் பெரியவர் ஒருவருடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது அந்த 'அத்திப்பழ' வேலையாக வந்திருந்தார். அவரிடம் நமது கழகம் செயலாற்றி வருகிற பான்மையினையும், பெற்ற வெற்றிகளையும் எடுத்துக் கூறும்போது, அவர், கொடியிலே காணப்படும் பூசுணைக்காயைத் தான் எண்ணிக் கொண்டிருந் திருப்பார். ஏனெனில் நான் சொல்லச் சொல்ல அவர், இவ்வளவு வேலை நடக்கிறதா? இத்துணை வலிவு இருக்கிறதா? இவ்வளவு ஆதரவு பெருகி வருகிறதா? என்று வியப்புடன் கூறிய வண்ணம் இருந்தார்.
நல்லவர் மனதிலே வியப்பும், நாடாள்வோர் மனதிலே விசாரமும், ஏற்படுத்தும் நமது நிலைமை, அழித்தொழிக்கும் முறையை அறமென்று எண்ணிக்கொள்ளும் அளவுக்கு மனம் அழுகிக் கிடப்போருக்கு, பகைஉணர்ச்சியைத்தான் ஊட்டும்- அதன் விளைவுதான், நமக்கு அவ்வப்போது ஏற்படும் விபத்துக்கள்.
இவை இனி ஏற்படாது என்ற உத்தரவாதம் தரத்தக்க பெருங் குணமோ, பேராற்றலோ கொண்டதாக அரசு இல்லை.
ஆனால், ஒன்று: இவைகளைத் தாங்கிக்கொள்ளும் நெஞ்சுரம் இல்லை என்று கூறிடும், வலுவிழந்தான் எவனும் இங்கு இல்லை.
வெட்ட வருவோனை வீழ்த்தவாகிலும் உரிமை வழங்க லாகாதா என்று வீரம் கொப்பளிக்கும் நிலையில் கேட்டிடும் காளையரைக் காண்கிறோமேயன்றி, விரண்டோடும் போக்கினர் எவரும், இந்த நம் அணிவகுப்பிலே நிச்சயம் இல்லை.
அதோ என் மகன்! வீட்டு வாயிற்படியிலே சிறிதளவு குனியா விட்டால் தலை இடித்துக்கொள்ளும், என்று பெருமிதத்துடன் கூறும் தாய், அந்த அடலேறு, தன் கருவில் இருந்த மணி என்பது பற்றி எண்ணிடும் போது. ஒருகணம் வியப்பன்றோ தோன்றிடும்! நானா, தாங்கி இருந்தேன், இந்த மாவீரனை, என் கருவில்!! - என்றன்றோ எண்ணுவர்.
அஃதேபோல, நமது கழகத்துக்குள்ள, வயது, வரலாறு வடிவத்தின் அளவு, கிடைத்துள்ள வாய்ப்புகள் இவைகளுடன் நாம் பெற்றுள்ள வெற்றிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது. பெற்ற மகன் அடலேறாகி உலவக்காணும் தாய்மனம், நமது கழகத்திற்கு ஏற்படுகிறது.
பெற்ற மகன் தத்தாரியாகிப் போனதையோ, அல்லது நோய் கொண்டோனாகிக் கிடப்பதையோ காண்பவள் அடலேறு போன்ற<noinclude></noinclude>
extvxmws1a4sckbc84lkva3twxof6g1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/234
250
641862
1928653
1927886
2026-04-30T06:39:01Z
Rabiyathul
5890
+ மேலடி
1928653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|210||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>210
'திராவிட நாடு' இதழில்
மகனை ஈன்றவளைக் காணும்போதே. கடுகடுத்த முகத்தினளாவளன்றோ, இழிகுணம் கொண்டோளாக அவள் இருந்திடின்.
அதுபோன்ற போக்கு, ஆளுங்கட்சிக்கு இன்று-நம்மை நோக்குங் காலை, இழிகுணம் கொண்டோர், அந்த முகாமில் இடம் பெற்றதால், நம்மிடம் அருவருப்புக் காட்டுவதுடன், அழித்திடவும் முயலுகின்றனர்.
ஆகவேதான் தம்பி! மீண்டும் கூறுகிறேன். வேலை இருக்கிறது -நிரம்ப! ... காலம் இல்லை அதிகம்! - என்பதை.
உள்ளபோதே, உண்மைக்கு உழைத்திட, ஊரர்க்குப் பணியாற்றிட, விடுதலைக் கிளர்ச்சிக்கு விறுவிறுப்பூட்ட, தளராது பணியாற்று. பணி முடியுமுன் பாதகரின் சதி, நம்மை வீழ்த்தினாலும், ஐயகோ! அதைச் செய்யாது விட்டோமே! இதைக் கவனியாதிருந்தோமே! என்று எண்ணித் துயருறும் நிலையில், நாம் இருத்தலாகாது. என் கடமையைச் செய்தேன் குறைவற! நானிருந்தால், தனக்கு வாழ்வில்லை என்று அஞ்சியவன் என்னை வீழ்த்துகிறான். நான் விடை பெற்றுக் கொள்கிறேன்; வேலை இருக்கிறது நிரம்ப! காலம் இல்லை அதிகம்! என்று கூறிவிட்டு, தொடர்ந்து பணியாற்றும் உடன்பிறந்தார்கள் உள்ளனர் அணி அணியாக என்ற எண்ணம் தவழ, உயிரூட்டம் தருவோரின் வரிசைக்கு நாம் உயரவேண்டும். அந்த வாய்ப்புப் பெற்றோருக்கு, என் வீர வணக்கம்.
21.8.'60
அண்ணன்,
Jimmy<noinclude></noinclude>
kzh81tmmpi2t507e4cdj6k77a431z2u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/235
250
641863
1928654
1927887
2026-04-30T06:39:32Z
Rabiyathul
5890
+ மேலடி
1928654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||211}}{{rule}}</noinclude>கடிதம்: 117
தம்பி!
இந்நாட்டில் வாழ்வதற்கு!
இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள்-
ஓ ஹென்றியின் கதை
விரைவிலே நீ காண இருக்கும் தமிழ்ப்படம் ஒன்றினை, சென்ற கிழமை நான் காணும் வாய்ப்பினை படப்பிடிப்பாளர்கள் ஏற்படுத்தித் தந்தனர் - படம், தம்பி இராஜேந்திரன் நடிக்கும் 'தங்கரத்தினம்'.
துவக்கத்திலே ஒரு காட்சி. இயற்கை எழில் குலுங்கும் சிற்றூரின் மருங்கு, பச்சைப் பட்டாடை அணிந்த நிலமகள்! அவளுடன் வண்ணத்தில் போட்டியிடும் எண்ணத்துடனோ என்னவோ, விண்ணழகி, நீலநிற ஆடையினை நேர்த்தியாக அணிந்துகொண்டிருந்தாள். கனிகுலுங்கும் மரங்கள், பூஉதிர்க்கும் செடிகள், கோலமளிக்கும் கொடிகள், வழிநெடுக. நாலைந்து கன்னியர், இரட்டை மாட்டு வண்டியிலே செல்கிறார்கள் ஓட்டுபவள் கள்ளங்கபடமற்ற இளமங்கை!
என்ன அண்ணா! காட்சியிலே, என்ன இருக்கிறது, புதுமையாக? வயலையும் வாவியையும், வட்டமிடும் வானம்பாடிகளையும், வளைந் தோடும் அருவிகளையும், இப்போதெல்லாம் எந்தப் படக் காட்சியிலும் காண முடிகிறதே! என்று கூற எண்ணுகிறாய். உண்மை, தம்பி! உண்மை! கண்களுக்குக் குளிர்ச்சி தரும் வண்ணமிகு, வெளிப்புறக் காட்சிகளை இப்போது, நிரம்பக் காணுகிறோம். ஆனால், என் மனதை ஈர்த்தது, கண்கண்ட காட்சி அல்ல -கருத்தைத் தொட்டிடும் வகையிலே, நான் கேட்ட இசை.
கிராமத்துக் கட்டழகி - விளக்கமாகச் சொல்வதானால், சேரிவாழ் சிங்காரி - தன் தோழிகளுடன், வண்டி ஓட்டிக் கொண்டு போகும்போது. சூழ இருந்த இயற்கைச் செல்வத்தைக் கண்ட மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில், பாடிய பாடல், கூடச் சென்ற தோழிகளைப் பார்த்தல்ல நாட்டு மக்களைப் பார்த்தே, பாடுவது போலிருந்தது.
இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு?
என்பது. பாடலின் எடுப்பு! என் செவியிலே, அந்த 'எடுப்பு' இன்னமும் ஒலித்த வண்ணம் இருக்கிறது.<noinclude></noinclude>
4947o4dypthflhyz6q1fohgpunk3avo
1929013
1928654
2026-04-30T11:06:45Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம்: 117
தம்பி!
இந்நாட்டில் வாழ்வதற்கு!
இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள்-
ஓ ஹென்றியின் கதை
விரைவிலே நீ காண இருக்கும் தமிழ்ப்படம் ஒன்றினை, சென்ற கிழமை நான் காணும் வாய்ப்பினை படப்பிடிப்பாளர்கள் ஏற்படுத்தித் தந்தனர் - படம், தம்பி இராஜேந்திரன் நடிக்கும் 'தங்கரத்தினம்'.
துவக்கத்திலே ஒரு காட்சி. இயற்கை எழில் குலுங்கும் சிற்றூரின் மருங்கு, பச்சைப் பட்டாடை அணிந்த நிலமகள்! அவளுடன் வண்ணத்தில் போட்டியிடும் எண்ணத்துடனோ என்னவோ, விண்ணழகி, நீலநிற ஆடையினை நேர்த்தியாக அணிந்துகொண்டிருந்தாள். கனிகுலுங்கும் மரங்கள், பூஉதிர்க்கும் செடிகள், கோலமளிக்கும் கொடிகள், வழிநெடுக. நாலைந்து கன்னியர், இரட்டை மாட்டு வண்டியிலே செல்கிறார்கள் ஓட்டுபவள் கள்ளங்கபடமற்ற இளமங்கை!
என்ன அண்ணா! காட்சியிலே, என்ன இருக்கிறது, புதுமையாக? வயலையும் வாவியையும், வட்டமிடும் வானம்பாடிகளையும், வளைந் தோடும் அருவிகளையும், இப்போதெல்லாம் எந்தப் படக் காட்சியிலும் காண முடிகிறதே! என்று கூற எண்ணுகிறாய். உண்மை, தம்பி! உண்மை! கண்களுக்குக் குளிர்ச்சி தரும் வண்ணமிகு, வெளிப்புறக் காட்சிகளை இப்போது, நிரம்பக் காணுகிறோம். ஆனால், என் மனதை ஈர்த்தது, கண்கண்ட காட்சி அல்ல -கருத்தைத் தொட்டிடும் வகையிலே, நான் கேட்ட இசை.
கிராமத்துக் கட்டழகி - விளக்கமாகச் சொல்வதானால், சேரிவாழ் சிங்காரி - தன் தோழிகளுடன், வண்டி ஓட்டிக் கொண்டு போகும்போது. சூழ இருந்த இயற்கைச் செல்வத்தைக் கண்ட மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில், பாடிய பாடல், கூடச் சென்ற தோழிகளைப் பார்த்தல்ல நாட்டு மக்களைப் பார்த்தே, பாடுவது போலிருந்தது.
இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு?
என்பது. பாடலின் எடுப்பு! என் செவியிலே, அந்த 'எடுப்பு' இன்னமும் ஒலித்த வண்ணம் இருக்கிறது.<noinclude></noinclude>
bko1vkq64sqh03pd9ih0la1ec61lt6i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/236
250
641864
1928655
1927888
2026-04-30T06:40:02Z
Rabiyathul
5890
+ மேலடி
1928655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|212||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>212
'திராவிட நாடு' இதழில்
நம் நாட்டின் இயற்கை வளம், மக்களின் உழைப்புத்திறம், அறிவு மேம்பாடு. இவைபற்றி எல்லாம் அந்தப் பாடலிலே, அழகான 'அடிகள்' உள்ளன; பொருட்சுவை இசை இனிமையுடன் குழைந்து வருகிறது; எனினும், 'எடுப்பு' இருக்கிறதே. அது ஒரு பாடலுக்காக மட்டுமல்ல. நமது நாட்டு மக்கள் எப்போதும் எண்ணிப் பார்த்திட, ஏற்றம் பெற்றிடத் தூண்டிடும் முறையிலே, அமைந்திருக்கிறது,
இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு
- இது பாடலின் எடுப்பாக அமைந்திருந்தது. என்றாலும் தம்பி! இச்சகம் பேசியோ, இளித்துக் கிடந்தோ, ஏவல் பல புரிந்தோ, எடுபிடி ஆகியோர் இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று எண்ணிக் கிடக்கிறார் களே சிலர், அவர்கள் ஒரு நாள் ஒரு பொழுதாகிலும், தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு! - என்று
இன்னொருவர் தயவை மட்டும் தேடித், தாள் தொட்டுக் கிடந்தன்றோ வாழமுடியும் என்று எண்ணிக் கிடக்கின்றனர், இருப்பதை மறந்துவிட்ட இயல்பினர்.
ஏதோ இந்நாடு, பாலைவனமும் பாழ்வெளியும், காடு மேடும். மட்டுமே கொண்டதாக இருப்பது போலவும், இங்கு, விதைத்தால் முளைக்காது. வெட்டினால் ஊற்றுச் சுரக்காது, என்று கூறத்தக்க நிலை இருப்பதுபோலவும், எதிரிப் படைகள் நாற்புறமும் சூழ்ந்து கொண்டு, தாக்கியபடி இருப்பது போலவும், ஓர் மனமயக்கத்தைத் தாமாக ஏற்படுத்திக் கொண்டு, ஓர் மேலிடம்' நாடி. அவர் தயவினைத் தேடிப்பெற்று மட்டுமே, வாழ்வினைச் செம்மையாக்கிக் கொள்ள முடியும் என்று எண்ணி, அடிமை மனப்பான்மையினராகி அவதியுறுவதுடன், அந்தப் 'பிச்சைப் பிழைப்பை இச்சையுடன் ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை; மறுப்பது மடைமை!-என்றெல்லாம் பேசியும் வருகின்றனரே, அவர்களின் நினைப்புத் தான் வந்தது. (பாடலின் எடுப்பைக் கேட்டதும்.)
சோம்பித் திரிந்திடாமல், சுரண்டிக் கெடுக்காமல், உழைத்தால் அனைவரும் உண்டு மகிழ்ந்திருக்கத்தக்க அளவு, வளம் கொண்டதாகவே நம்நாடு இருந்திடக் காண்கிறோம்.
கோடி கோடியாகப் பொருளைக் கொட்டிப் புதுத் திட்டங்களைத் தீட்டி நடத்தி, பெருஞ்செல்வத்தை உற்பத்திசெய்து குவித்திடுவோம் - என்று இன்று கூறுகின்றனர். தம்பி! நான் அந்தத் தனி முயற்சியை<noinclude></noinclude>
hok2vhc94ww9lny99ujgdonzg5uoyrc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/237
250
641865
1928656
1927889
2026-04-30T06:40:32Z
Rabiyathul
5890
+ மேலடி
1928656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||213}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
213
மனதில் வைத்துக்கொண்டு கூட அல்ல, உழைப்பைக் குறைத்துப் பொருளைப் பெருக்கித் தரத்தக்க விஞ்ஞானக் கருவிகள், கிடைக்காது போயினும் கூட. அறிவுத் தெளிவுடன் கூடிய உழைப்பின் மூலம் மட்டுமே, பெறத்தக்க வளமே கூட, இந்நாட்டு மக்களை, நிம்மதியாக வாழ்ந்திடச் செய்திடும் வகையிலும், அளவிலும், இருப்பதைக் குறிப்பிடுகிறேன். இது இல்லையே? இதற்கு என்ன செய்வோம்? என்று ஏங்கித் தவித்திடும் நிலையில் நாம் இல்லை நமது நாடு, போதுமான அளவு, வளம் பெற்றிருக்கிறது. அதனை அறிந்து, அனைவரும் கபடமற்று, உழைத்துக் கயமைத்தனத்தைத் தலைகாட்ட ஒட்டாது வெட்டிச் சாய்த்திட்டால், இன்னொருவர் தயவு எதற்கு? இந்நாட்டில் வாழ்வதற்கு?' என்று இசைபாடி மட்டுமல்ல, இசைபட வாழ்ந்திடவும் முடியும்.
-
புத்தம் புதுக்கருவிகள், புதுப்புதுத் திட்டங்கள், இங்கு நிம்மதியான வாழ்க்கையை மட்டுமல்ல, எங்கும் பொன் கொழிக்கும் நிலையை ஏற்படுத்தித் தரும், என்று திட்டம் தீட்டுவோர் அறிவிக்கின்றனர். அந்த நோக்கத்துடனேயே, இரண்டு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது மூன்றாவது திட்டம் கருவில் உருவாகி வருகிறது என்றும், கூறிக் களிப்பூட்டுகின்றனர். ஆனால், கவனித்திருப்பாயே, தம்பி! இந்தக் கிழமை, நேரு பண்டிதர், பேசியிருப்பதை.
ஆனால், கவனித்திருப்பாயே, தம்பி!
இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களாலும் பெருகிய செல்வம், எங்கே சென்று தங்கிவிட்டிருக்கிறது, என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்காக ஒரு தனிக்குழு அமைந்திட வேண்டும்.
பத்து ஆண்டுகள், பாடுபட்டதிலே கிடைத்த பலன், எங்கே இருக்கிறது என்பது, கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, தனிக்குழு அமைத்துக் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, இருக்கிறது.
திட்டத்தின் வெற்றிக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்! தேடுகிறார்கள். பலன் எங்கே என்று!!
'நான் தம்பி! இப்போது அந்தத் திட்டங்களை மனதிலே கொண்டு அல்ல, இயற்கை நமக்கு அளித்துள்ள செல்வத்தை மட்டுமே மனதிலே கொண்டுதான், கூறுகிறேன், ஒழுங்கான முறையில், ஒருவரை ஒருவர் அழித்திடும் கெடுமதியின்றி, அனைவரும் உழைத்தால், எவரும், இல்லாமை எனும் நோயால் பீடிக்கப் படாமல், நிம்மதியாக வாழ்ந்திட முடியும்.
உலகிலே, பல நாடுகள் உள்ளன-சில நாடுகளிலே சில பகுதிகளும் உள்ளன- இன்னொருவர் தயவு இருந்தால் மட்டுமே வாழ்ந்திட முடியும் என்று கூறத்தக்க நிலையில், வளம் குறைந்த நாடுகள் உள்ளன. குடி<noinclude></noinclude>
8282b06tyfscul5d17qf3wpqybpico9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/238
250
641866
1928657
1927890
2026-04-30T06:41:02Z
Rabiyathul
5890
+ மேலடி
1928657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|214||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>214
'திராவிட நாடு' இதழில்
வளமற்ற நாடுகள் உள்ளன. இன்றும், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், இவைகளை மட்டுமே வாழ்க்கைக்கு வழிகளாகக் கொண்ட நாடுகள் உள்ளன. சில இடங்கள் உள்ளன கதிரவனை வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே காணமுடியும்! சில நாடுகளிலே, அடிக்கடி, கடல் கொதித்தெழுந்து, படை எடுத்து அழிவை உண்டாக்கிவிடும்!! சில நாடுகளிலே, எப்போதும் மூடுபனி. புல் பூண்டு கூட முளைத்திட முடியாத நிலையிலே பனிப்பாறைகள் நிரம்பிக் கிடக்கும் இடங்களும் உள்ளன. இந்நாடு பல ஆயிரம் ஆண்டுகளாகவே, இயற்கையின் பேருதவியைப் பெருமளவு பெற்றுத் திகழ்ந்து வந்திருக்கிறது. அந்த வளத்தை. பழம்பெரும் புலவர்களின் பாக்களில் காண்கிறோம். அவர் களின் காலத்திலே, அற்புதம் செய்தளிக்கும் கருவிகள் இல்லை; உண்மை. ஆயினும் வளம் கொஞ்சிக் கிடந்தது. துள்ளிடும் வாளை கண்டனர்; புள்ளிமான் கோலம் கண்டனர்; கிள்ளை மொழி கேட்டு இன்புற்றனர்; சந்தன மணம் பெற்று மகிழ்ந்தனர்; கடலிடை முத்தும், கைத்திறனுள்ளோர் செய்தளிக்கும் அணிபணியும் கண்டனர்; பழமுதிர் சோலைகள், பாங்கு நிறை வயல்கள், செங்கரும்புக் கழனிகள், என்ற இன்னோரன்ன வளம்கண்டு பாடினரேயன்றி, வெடித்துக்கிடக்கும் வயல்கள், கொதித்துக் குழம்பிடும் கும்பிகள், நெருப்பைக் கக்கிடும் எரிமலைகள், அழிவினை ஏவிடும் நிலநடுக்கங்கள்-எனும் கொடுமைகளைக் கண்டார்களில்லை. பன்னெடுங்காலமாகவே, இன்னொருவர் தயவு எதற்கு, இந்நாட்டில் வாழ்வதற்கு? என்று பண்பாடியே, வாழ்ந்தனர், தமிழர்.
உ
உண்டிக்கும் உடுத்துவதற்குங்கூட, வழிவகையற்றுப்போய், மற்றவர் களை அண்டிப் பிழைத்திட வேண்டிய அல்லல் நிரம்பிய நிலையில், நாடுகள் இருந்தன; இருக்கின்றன; பிச்சைப் பிழைப்பு நம் நாட்டு மக்களை, முன்பு தீண்டினதில்லை. நாடு மட்டுமா, தனி மனிதனே, பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை இருக்குமானால், அது எத்துணை வெறுக்கத் தக்கது என்று. நமது ஆன்றோர் கருதினர் என்பதற்குச் சான்றுகளைத் தேடி அலைவானேன்,
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்
என்றன்றோ, வள்ளுவப் பெருந்தகை கூறினார்.
அப்படிப்பட்ட நாடு, இன்று எதிலாகிலும், தன்னிறைவு பெற்று இருந்திடக் காண்கிறோமா?
நாடு?
எதிலாகிலும், தன்னிச்சைப்படி நடந்திடும் உரிமை பெற்றிருக்கிறதா,<noinclude></noinclude>
rf03rp4smy1b5dojkokllafj0ht3rlc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/239
250
641867
1928658
1927891
2026-04-30T06:41:34Z
Rabiyathul
5890
+ மேலடி
1928658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
215
இல்லை! இல்லை! என்பதை, நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைக் கூடத் தள்ளிவிடட்டும், தம்பி! ஒவ்வொன்றுக்கும், நமது அமைச்சர்கள் அளிக்கிறார்களே, பதில்கள், அவைகளைக் கவனித்தாலே, புரிகிறதல்லவா!!
நம் நாட்டிலே, உழவு முறை எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதிலிருந்து, உரையாடுவது எம்மொழியில் என்பது வரையில், இன்னொருவர் தயவுகூட அல்ல. இன்னொருவரின் கட்டளையை எதிர்பார்த்தல்லவா, நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
துறைமுகங்கள் உள்ளன இங்கே, தூர்ந்துபோன நிலையில்; அவைகளைப் பழுது பார்க்கலாமா, ஆழப்படுத்தலாமா என்று யோசிக்கக் கூட, நமக்கு, அங்கிருந்து 'நிபுணர்கள்' தேவைப்படும் நிலையல்லவா, காண்கிறோம்.
தூத்துக்குடித் துறைமுகத்தைப் பற்றிய சோகக் கதைதான், தெரியுமே, தம்பி! உனக்கு ஓட்டு வேட்டைக்குச் செல்லும்போது, அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களைக் கவனித்தால், அடே! அப்பா! ஒரே மாதத்திலே, அவர்களே, தூத்துக்குடித் துறைமுகத்தை விரிவு படுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி, கப்பலே ஓட்டிவிடுவார்கள் என்று எண்ணிடத் தோன்றும்-அவ்வளவு கனிவு, குழைவு, தாராளம், வீரம், விவேகம் ததும்புகின்றன. பொங்கி வழியும் அந்த ஆர்வம், பெட்டியில் விழுந்ததை எண்ணிப் பார்த்ததும், இருக்குமிடம் தெரியாமல் வறண்டுபோயே விடுகிறது. ஏன்? இன்னொருவர் கட்டளைக்குக் காத்துக் கிடக்கவேண்டி இருப்பதால்! இதைச் சொன்னால், இப்போதெல்லாம். நமது மந்திரிமார்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. கோபம் பிறந்து என்ன பலன்? எதிர்க்கட்சிகளைத் தாக்கத்தான் அந்தக் கோபம் பயன்படுமேயன்றி, டில்லிப் பட்டினத்தருகே கூடச் செல்லும் வலிவு இல்லையே அதற்கு!! ஏன்? எதற்கும் டில்லியின் தயவை நாடிக் கிடக்கவேண்டிய இழி நிலையை, இவர்களாக ஏற்படுத்திக் கொண்டதனால்! இவர்களின், நெஞ்சுக்கு உரம் ஊட்ட, அறிவுக்குத் தெளிவு கிடைக்கத்தான், நமது கழகம்.
இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு!
என்று பண்பாடியபடி இருக்கிறது.
தம்பி! சில நாடுகள். இயற்கை வளமற்று, தொழில் திறனுள்ள மக்களற்று இருப்பதால், பேரரசு ஒன்றினுக்கு உட்பட்டு, அடங்கிக் கிடந்து, வாழ்க்கையை நடத்தித் தீரவேண்டியவைகளாகி விடுகின்றன.<noinclude></noinclude>
h964r0igfkyryd41tbwve9dllt4cx29
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/240
250
641868
1928659
1927892
2026-04-30T06:42:04Z
Rabiyathul
5890
+ மேலடி
1928659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|216||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>216
'திராவிட நாடு' இதழில்
வேறு சில நாடுகள், வளம் இருந்தும், அதனைத் தக்க முறையில் பயன் படுத்திக் கொள்ளும் உரிமை பெறாததாலோ, உரிமை பறிக்கப்பட்டுப் போய்விடுவதாலோ, அடிமைக்கோலம் பூண்டு, பேசு இடும் பிச்சையை உண்டு வாழவேண்டி நேரிட்டு விடுகிறது. நம் நாட்டு நிலை, மிக வியப்பான தொன்றாகும். நம் நாட்டு வளம் ஒரு பேரரசுக்கு வண்ணமளிக்கவும், நம் நாட்டுத் தொழில் திறமை வேறோர் இடத்துக்கு வலிவும் பொலிவும் தேடித் தரவும், பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நம் நாட்டு இரும்பு, நமக்கு இன்னமும் பயன்படவில்லை; நம் நாட்டுக்கோ, வேற்றிடத்து இரும்பு வருகிறது; அது மட்டுமல்ல வேடிக்கை; அந்த வேற்றிடத்து இரும்பை வெட்டி எடுக்கவும், அதற்கான திட்டமிட்டுச் செயல்படவும், நம் நாட்டவர் வேற்றிடம் செல்கிறார்கள்!!
நாட்டிலே, காவிரிக்கரையிலே எண்ணெய் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நம் நாட்டுக்கு இப்போது எண்ணெய் வேற்றிடத்திலிருந்து வருகிறது. அதுமட்டுமல்ல, வேற்றிடத்தில் உள்ள எண்ணெய்த் தொழிலிடங் களில், நம் நாட்டு உழைப்பாளிகளும், நிபுணர்களும், வேலை செய்து வருகிறார்கள்.
சந்தனத்தை அரைத்தெடுத்துக் கொடுக்கிறோம் - சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவன் மார்பிலே பூசிக் கொள்கிறான், மகிழ்ச்சியுடன்; அரைத்ததால் கையிலே வந்துற்ற 'சுளுக்கு'க்காக ஈரக் களிமண்ணை அப்பிக்கொண்டு, நாம் வேதனைப்படுகிறோம்.
என்ன செய்யலாம்! நாம் வந்த வழி அப்படி!! - என்று பேசிப் புலம்புவர். வழி அறியாதார். அது போலன்றோ, ஆளவந்தார்களும் பேசுகின்றனர். என்ன செய்வது? நாம், டில்லியின் தயவை எதிர்பார்த்துத் தான் வாழவேண்டி இருக்கிறது. என்று என்ன இல்லை இங்கே? ஏன் கை ஏந்திக் கஷ்டப்படுகிறீர்கள்? என்று கேட்டு விட்டாலோ, உருட்டு கிறார்கள், மிரட்டுகிறார்கள், தம்பி! குத்திக் குடலெடுக்கிறார்கள். கொன்றே போட்டுவிடுகிறார்கள்,
உண்மையிலேயே இந்த நாடு, இன்னொருவர் தயவை நாடினால் மட்டுமே வாழ முடியும், என்ற விதத்திலே, இருக்குமானால். நீயும் நானும், நமது பக்கம் திரண்டு நிற்கும் நற்பண்பாளரும், ஏன், தனி அரசு என்று பேசப்போகிறோம்! நமக்கு என்ன, ஆளவந்தார்களின் அருவருப்பைத் தேடிக் கொள்வதிலே. இலாபமா? சுவையா? தலையாட்டிகளெல்லாம்<noinclude></noinclude>
d2cwcsxhsllkgetj0gmvzklraqzfaxg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/241
250
641869
1928660
1927893
2026-04-30T06:42:34Z
Rabiyathul
5890
+ மேலடி
1928660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||217}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
217
தர்பாரில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்; எங்கோ கிடந்ததுகள் சாமரம் வீசிப் பங்காளிகளாகி விடுவதைக் காண்கிறோம்; எதிர்த்துப் பார்த்தோம். பலன் இல்லை; இனி எடுபிடியாகிப் பார்ப்போம், பலன் கேட்போம். என்ற முறையிலே, ஓங்காரக் கூச்சலிட்டு ஒரு காலத்தில் உலவி வந்ததுகளெல்லாம், இன்று புகழ் 'ரீங்காரம்' செய்து, வட்டமிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறோம்! எனினும் ஆளவந்தாரின் போக்கினை எதிர்த்து. இன்னல் வந்துற்றால் ஏற்றுக் கொள்கிறோம். என்ன காரணம்? நமது உள்ளத்தில் ஆட்சி செய்யும் உணர்வு, நம்மை உந்திக் கொண்டிருக்கிறது.
இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு!
என்ற பண், செவியில் கேட்டபடி இருக்கிறது. இந்நாட்டு அருவியின் சலசல ஒலியிலும், செந்நெல் மணிகளின் கலகல ஒலியிலும், இந்தப் பண்தான் கேட்கிறோம். ஓங்கி உயர்ந்த மலைகளும், தேனினைச் சொரிந்திடும் தருக்களும், நமக்கு இந்தப் பண்ணினைத்தான் இசைத்தபடி உள்ளன. அதன் வயப்பட்டு விட்டோம்; மற்ற எதுவும், நம்மை மயக்கிடாது; எந்த எதிர்ப்பும் நமது எண்ணத்தை மாய்த்திடாது; உடலைச் சாய்த்திடலாம்; இருட்டு நேரம், முரட்டு ஆள். கூர்மையான கத்தி, நேர்மை மறக்கும் அதிகாரி, இருந்தால் போதும், அதற்கு. ஆனால், எண்ணம், என்றும் இறந்துபடாது! காணும் காட்சிகள், கேட்டிடும் இசை எல்லம், அந்த எண்ணத்தை மேலும் வலிவுள்ளதாக்கும்!!
தம்பி! உடன் பிறந்த தங்கைமார் கூடி. நிலாச் சோறு செய்து உண்டு களிப்பர் கண்டிருக்கக் கூடும். பல்வேறு இல்லங்களின் செல்வங்கள் ஒரு இடத்தில் இருந்து, ஒன்றாகச் சமைத்து, ஒருசேர இருந்து உண்டு, ஆடிப்பாடி மகிழ்வர். எனினும், அந்த 'விளையாட்டு' முடிந்ததும், அவரவர் இல்லம் செல்வர்; பிறகு, உண்பதும் உறங்குவதும் அவரவர் இல்லத்திலேயே.
அதுபோல், வேடிக்கைக்காக அல்ல, காரணத்தோடு, ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக, பல நாட்டவர், பல இனத்தினர் ஒரு இடத்திலிருந்து. ஒன்றுபட்டுக் காரியமாற்றலாம்- காரியமாற்ற வேண்டி நேரிடும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரியம் குறைவின்றி நடந்தேறிய பிறகு. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு இனமும், தத்தமது எல்லை நின்று, உழைத்து, உயர்ந்து, உயர்வினை உலகுக்கு விரும்பி அளித்து, உலகப் பொதுநலனை வளர்த்திடவே முனைதல் வேண்டும்.
-
உலகே ஒரு பெரும்நாடு ஆகி எல்லைக் கோடுகள் அழிக்கப் பட்டு - இன இயல்புகள் நீக்கப்பட்டு - யாதும் ஊரே, யாவரும் கேளிர்<noinclude></noinclude>
bij7ucffnja4kevy0eryxxk6f96e6c5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/242
250
641870
1928661
1927894
2026-04-30T06:43:05Z
Rabiyathul
5890
+ மேலடி
1928661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|218||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>218
'திராவிட நாடு' இதழில்
என்பது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும், நன்னாள் வருமெனின், எவர் குறுக்கே நிற்பர்! ஜெர்மனி. ஜெர்மனி என்ற உணர்வை இழந்து, இத்தாலி தன் தனிப்பெயரை விட்டுக் கொடுத்து. பிரான்சு தன் பண்பு தனியானது என்று பேசுவதை விட்டொழித்து, அதுபோன்றே, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இரஷியா ஆகிய எல்லா நாடுகளும், தத்தமது எல்லைகள், இயல்புகள், அரசு முறைகள், வளமூட்டும் வாய்ப்புகள் அனைத்தையும் 'தியாகம்' செய்து, 'ஒரே உலகு' ஆகிவிடத் திட்டமிட்டாலும், நாங்கள் மட்டும், 'திராவிடம்' தனி நாடுதான் என்ற திட்டத்தை விடவேமாட்டோம் என்று, எவரும் கூறத் துணியார். ஆனால், 'ஒரே உலகு' என்பதே உயர்ந்த இலட்சியம், எனவே உனக்கென ஒரு நாடு, ஒரு அரசு, வேண்டுமென்று கிளர்ச்சி நடத்தாதே, அது குறுகிய மனப்போக்கு என்று பேசுவது, பேரறிவினைக் காட்டுவது மாகாது. நேர்மையுமாகாது.
*
'தேசியம்' என்பதுகூட, ஒரு போலித் தத்துவந்தான்! மனித குலம் ஒன்றேயன்றி, அதிலே, மஞ்சள், கருப்பு, வெள்ளை, மாநிறம் என்றெல்லாம் குறிப்பிட்டு இது என் நாடு, இது என் அரசு. என்று வாதாடுவது பேதமை என்றுகூடப் பெரியவர்கள் பேசுகிறார்கள் - சுவை இருக்கிறது பேச்சில், சூடுகூடப் பிறந்துவிடுகிறது; ஆனால் செயல் முறை, எங்ஙனம் இருக்கிறது என்று கவனிக்கும்போதுதான். அந்தப் பெரியவர்கள் பேசுவது, மற்றவர்கள் கேட்டுத், தம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்க அல்ல என்பது விளக்கமாகத் தெரிகிறது.
*
ஓ. ஹென்ரி சுவைமிகு சிறுகதைகள் பல எழுதிப் புகழ் ஈட்டிய, அமெரிக்க எழுத்தாளர். கதைகளில் சுவை என்றால், சொல்லடுக்கால், கட்டுக்கோப்பு முறையால் கிடைத்திடும் சுவை மட்டுமல்ல, கதையிலே இடம்பெற்று, படிப்போரின் நெஞ்சைத் தொட்டிடும் கருத்தால் கிடைத்திடும்
சுவை.
ஒரு உணவு விடுதி மிகப்பெரியது. புகழ் வாய்ந்தது. எப்போதும் இங்கு ஒரே ஆரவாரம், கூட்டம், குதூகலம். எங்கெங்கிருந்தெல்லாமோ, வருகிறார்கள் இந்த உணவு விடுதிக்கு.
கூட்டத்திலே சேராமல். ஆனால், அனைவரையும் கூர்ந்து கவனித்தப்படி, ஒருவன் இருக்கிறான் - அவன் ஒரு சிந்தனையாளன். அரசியல், பொருளியல், மன இயல், இவைகளைப் பற்றி எல்லாம்<noinclude></noinclude>
m0g0jaqpwbvustvsthdvpypvh39s2u4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/243
250
641871
1928662
1927895
2026-04-30T06:43:35Z
Rabiyathul
5890
+ மேலடி
1928662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||219}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
219
நிரம்பத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. இந்த விடுதியிலே பலர் வருகிறார்கள், பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதற்காகவே வந்திருக்கிறான்.
விந்தையான மனிதர்கள், வேடிக்கையான இடம்! என்று எண்ணிய படி அவன் உட்கார்ந்திருக்கிறான். நடமாடும் விந்தை என்று சொல்லத்தக்க விதத்தில், ஒருவன், உள்ளே நுழைந்து, ஒரு அதிர்வேட்டுச் சிரிப்பை வீசிவிட்டு, உட்கார இடம்தேடி, ஒதுக்குப் புறமான இடத்தில், தனியாக உட்கார்ந்திருக்கும் சிந்தனையாளனைப் பார்க்கிறான். என்ன எண்ணிக் கொண்டானோ, தெரியவில்லை. நேராக, அதே இடம் வந்து, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறான்.
ப
மயக்கும் பார்வை! இனிக்கும் பேச்சு! அந்த விந்தை மனிதனுக்கு.
"தாங்கள் எந்த ஊரோ?" என்று கேட்டான் சிந்தனையாளன்.
“நானா? நான், நார்வே! அல்லது பாலஸ்தீன்! பாரீஸ்!" என்று எதாவது பதில் சொல்லுவான் என்பது, சிந்தனையாளன் நினைப்பு. விந்தை மனிதனோ, உடனே பதில் கூறவில்லை. ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஏளனம், பச்சாதாபம், வியப்பு, எல்லாம் கலந்த ஒரு புன்னகையைக் காட்டியபடி, "நானா? எந்த ஊர் என்றா கேட்கிறாய்! நான், என்ன சொல்ல! என் ஊர், உலகம்!! இப்போது பீகிங் நகரிலிருந்து புறப்பட்டு வருகிறேன்; டமாஸ்கஸ் நகர வியாபாரி ஒருவருக்குக் காஷ்மீர் கம்பளம் தேவை என்று வெனிஸ் நண்பன் கூறக்கேட்டு, இன்றிரவு பக்தாத் கிளம்புகிறேன், அந்த வியாபாரியைக் கண்டு பேச!" என்று பதிலளித்தான்.
ஊர் எது என்று கேட்ட உடன், மளமளவென்று உலகையே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறானே என்று, ஆச்சரியம், சிந்தனையாளனுக்கு.
''உலகம், எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அவரவர் களுக்கு என்று ஒரு நாடு. ஒரு ஊர் உண்டு அல்லவா?" என்று கேட்டான் சிந்தனையாளன்.
உ
"இளைஞனே! பொதுவாகப் பலருக்கும் இருக்கும் பித்தம் உனக்கும் இருக்கிறது. என் நாடு, என் ஊர், என்பது அர்த்தமற்ற பேச்சு!! நாட்டின் மீது பற்றுவைப்பது என்ற தத்துவமே, போலி - சொத்தை. மண்ணும் விண்ணும், மரமும் மலரும், குதலைமொழிக் குழந்தையரும், குழல்மொழிக் குமரிகளும், எல்லா இடத்திலும், உலகமெங்கும் உண்டு! இதிலே, ஒரு குறிப்பிட்ட எல்லையை நாமாக வகுத்துக்கொண்டு, இது எனது நாடு, இதற்கு உலகிலே எங்கும் இல்லை ஈடு, என்று பேசுவது பேதைமை.<noinclude></noinclude>
s6v9educlc56ksj60g6lj5zawev3v4z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/244
250
641872
1928663
1927896
2026-04-30T06:44:05Z
Rabiyathul
5890
+ மேலடி
1928663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|220||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>220
'திராவிட நாடு' இதழில்
ஒரு குறிப்பிட்ட இடத்தின்மீது பற்று இருப்பதாகப் பேசுவதும் பொருத்த மற்றது. எனக்கு இமயமலை பனிமூடி இருக்கும் காட்சியும், இலண்டன் மாநகரம் மூடுபனியில் மூழ்கிக்கிடப்பதும், நைல் நதியின் நேர்த்தியும், நேப்பிள்ஸ் நகர வசீகரமும், பெர்லின் நகரத் தொழிற் சாலையும், பிரான்சு நாட்டு மதுவகையும், மணிபுரி நடனமும், மாட்ரிட் நகர மாட்டுச் சண்டையும், எல்லாமே பிடிக்கும்! எல்லாம் என்னுடையவை என்ற உணர்ச்சிதான் எனக்கு - என் நாடு அதிலே என் ஊர்! அதிலே என் தெரு! அதிலே நான் பிறந்த வீடு! நான் விளையாடிய மண்மேடு! அங்கு நான் கலைத்தெறிந்த குருவிக்கூடு! - என்றெல்லாம் பேசுவது கிடையாது. நான் மனிதன்! இந்த நாட்டுக்காரன் - அந்த நாட்டுக்காரன் என்று, என்னையே நான் மதிப்புக் குறைவாக்கிக் கொள்ளமாட்டேன். என் நாடு உலகம்!! மசூதியும் மாதாகோயிலும், தேரும் திருவிழாவும், உண்டு. இதிலே இதுதான் என்னுடையது, இது என்னுடையது அல்ல என்ற பேத உணர்ச்சி எனக்குக் கிடையாது. நான் சில வேளைகளில், சில இடங்களில் தங்குவேன் - ஆனால், அதிலே இன்ன இடம் என் இடம் என்று கூறி, மற்ற இடங்களை இழந்து விடுவேனா மதியற்றவனல்லவா, அப்படிச் செய்வான்! நான் அரேபிய பாலைவனத்திலே ஒட்டகத்தின் மீது அமர்ந்து செல்வேன். கேரளத்திலே படகேறிச் செல்வேன். டார்ட்டாரியில் குதிரை! இலண்டனில் விமானம்! இரஷியாவில், ரயில்!!-இப்படி!! ஆனால், இதிலே இதுதான் என் நாடு, மற்றவை மற்ற எவரெவருக்கோ என்று பேசும், பஞ்சப் புத்திக்காரனல்ல நான்! எனக்கு. உலகம் உறைவிடம்! உலகநாதன் என்று என்னை அழைக்கலாம்".
சிந்தனையாளன், வியப்பிலே அமிழ்ந்தே போனான்.
நாடு. நாட்டுப்பற்று, நாட்டு விடுதலை, அதற்கான போர், அதிலே தியாகங்கள், வீர வரலாறுகள், இவைகளை எல்லாம் படித்து, நெஞ்சு நெக்குருகி இருக்கிறான் - இதோ 'ஒருவன். தன்னை உலகநாதன்' என்று கூறிக்கொள்கிறான் - நாட்டுப்பற்று என்று பேசுவதே சிறுபிள்ளைத்தனம் என்று கேலிசெய்கிறான் - இவனல்லவா, தலைசிறந்த தத்துவவாதி - நாட்டுப்பற்று எனும் பாசத்தைக்கூடக் கடந்தவன்! - என்று எண்ணி வியந்தான்.
"என் நாடு இங்கிலாந்து என்று கூறிவிட்டால், உனக்குக் கரித் துண்டு மட்டும்தான் சொந்தமாகும்; ஆப்பிரிக்காவிலே உள்ள வைரம். உனக்கு இருக்காது தமிழ்நாட்டு முத்து உனக்கல்ல, ஆப்கன் நாட்டு பழவகை உனக்கில்லை..." என்று விந்தை மனிதன் கூறக் கேட்டு. சிந்தனையாளன், இவனே இலட்சிய புருஷன் - இவன் கூறுவதே உண்மையான தத்துவம், தேசியம் என்பதுகூடச் சொத்தைவாதம். நாமும் 'உலகநாதன்' ஆகிவிடவேண்டும். குறுகிய மனப்பான்மை கூடாது.<noinclude></noinclude>
nrxy0cix4ua4n2yrepakrz06yt1e9b4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/245
250
641873
1928664
1927897
2026-04-30T06:44:36Z
Rabiyathul
5890
+ மேலடி
1928664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||221}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
221
எல்லைக் கோடுகளிலே சிக்கிக் கொள்ளலாகாது என்றெல்லாம், தீர்மானித்தான்.
உலகநாதன், சிறிதுநேரம் இருந்துவிட்டு, விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
சிந்தனையாளன், செந்தேன் உண்டவன் போலாகி, அங்கேயே உட்கார்ந்திருந்தான்.
திடீரென்று, பெருங் கூச்சல் கேட்டது.
ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்வதும், தாறுமாறாகப் பேசிக் கொள்வதும், கேட்டது.
உதைப்பேன்! கொன்றுவிடுவேன்! சுட்டுத் தள்ளுவேன்! - என்று கூக்குரல் கிளம்பிற்று.
பரபரப்பு ஏற்பட்டது. அமளி மூண்டுவிட்டது. மேஜைகள், நாற்காலிகள், பறந்தன. உடைந்தன. உண்டு களித்திருந்தோர், மூலைக்கு ஒருவராக ஓடலாயினர்.
பலப்பல நூற்றாண்டுகளாகப் பாவாணர்களும், அரசியல் ஆசிரியர் களும், எழுச்சியூட்டி நிலைநாட்டிய தேசியம் - நாட்டுப் பற்று என்பதே போலித் தத்துவம் என்ற பேருண்மையை, உலகநாதனின் உன்னதமான விளக்கத்தால் பெற்றுப் பெருமிதம் அடைந்திருக்கும் வேளையில், ஏதோ ஒரு அற்ப விஷயத்துக்காக, இங்கு அமளி செய் கிறார்களே அறிவற்றவர்கள், பேருண்மையைக் கேட்டறியாப் பித்தர்கள், என்று எண்ணி வெறுப்படைந்தான், சிந்தனையாளன்.
இதற்குள், அமளி பலமாகிவிட்டது. ஒருவன் பலமாகத் தாக்கப் பட்டுக் கீழே சாய்ந்தான். அவன் உடலில் பல இடங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
"ஐயோ பாவம்! எவனையோ, பலமாகத் தாக்கி விட்டார்களே!" என்று முணு முணுத்தப் படி, அந்த இடம் நோக்கிச் சென்றான், சிந்தனையாளன். அடிப்பட்டவனைக் கீழே கிடத்தி இருந்தார்கள். அருகே சென்று பார்த்தான். திடுக்கிட்டுப் போனான்; அடிபட்டுக் கீழே கிடந்தவன், உலகநாதன்.
"ஐயா! இவரை ஏன் இப்படித் தாக்கினீர்கள்? அமளிக்குக் காரணம் என்ன?" என்று பரிவுடன் சிந்தனையாளன் கேட்டான்.
"பயல், முன்கோபக்காரன். யாரோ ஒருவன், இவனுடைய ஊரிலே சாக்கடை நாற்றம் மூக்கைத்துளைக்கும் என்று சொன்னானாம். ஆஹா!<noinclude></noinclude>
bdl2c72zx6u447ik93jboax7f8hpvr7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/246
250
641874
1928665
1927898
2026-04-30T06:45:06Z
Rabiyathul
5890
+ மேலடி
1928665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|222||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>222
'திராவிட நாடு' இதழில்
என் ஊரைப் பற்றியா கேவலமாக, இழிவாகப் பேசுகிறாய்? என்று கூவி, அவன்மீது பாய்ந்து அடித்தான்; தடுத்தார்கள், அடங்கவில்லை; பிறகு அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள் பலமாக பயல் கீழே உருண்டான்; இவனுடைய ஊரிலே உள்ள சாக்கடை நாற்றமடிப்பதைச் சொன்னால் கூடவா, கோபம் வருவது முட்டாள் தனமல்லவா அது!" என்று ஒருவர் விளக்கம் தந்தார்.
உலகநாதனைப் பார்த்தான்
அவன்
அவன் தன்னிடம், தேசியமே போலி என்று பேசிய பேச்சை நினைத்துக் கொண்டான் ஊரைப் பற்றி யாரோ கேவலமாகப் பேசினது கேட்டு, இவ்வளவு ஆத்திரம் பிறந்ததே, இவனா, உலகமே என் நாடு! எனக்கு நாடு என்ற எல்லைக் கோடுமீது பற்றுக் கிடையாது! என்று பேசிய, உலகநாதன்!! - என்று நினைத்தான் - மயக்கம் வந்தது சிந்தனையாளனுக்கு.
தம்பி! ஓ. ஹென்ரியின், சிறுகதையை, கூடுமான வரையில், புரியவைக்க முயன்றிருக்கிறேன் அதற்கான வடிவம் அமைத்து அவ்வளவுதான் - அந்த முழுச் சுவையைத் தர இயலவில்லை.
'ஒரே உலகம்' என்று பேசுபவர்களிடம், தமது நாடு தமது ஊர் என்ற உடன், எப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சி ஏற்படும், என்பதைக் கதை வடிவாக்கிக் காட்டி, தத்துவம் பேசலாம் தாராளமாக, ஆனால் பற்று, பாசம், அதனால் வரும் எழுச்சி இவைகளைப் போக்கிக் கொள்ள முடியாது என்பதை, அழகாக விளக்கிவிட்டார், ஓ. ஹென்ரி )
(திராவிட நாடாவது, தமிழ் நாடாவது. இந்தியா ஒரே நாடு. இதிலே என்ன, என் நாடு, என் இனம், என்ற குறுகிய மனப்பான்மை, என்று பேசுகிறவர்களைக் கண்டால், தம்பி/ ஓ. ஹென்ரியின் கதையை நினைத்துக் கொள்.)
(நாம். திராவிடம் கேட்கும்போது. பாரதம் - ஒரே இந்தியா என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள்-பலர் - மேதாலித்தனம் என்ற எண்ணத்தில், அவர்களே, அவர்களின் மாநிலம், அதன் உரிமை, அதன் தொழில் வளம், என்ற பிரச்சினை வந்ததும், தாவிக் குதிக்கிறார்கள். தாறுமாறாகக்கூட நடந்து கொள்கிறார்கள்.)
அசாமிலே, இன்னமும் அடங்கவில்லை அமளி. பஞ்சாபிலே கிளர்ச்சி ஓயவில்லை.<noinclude></noinclude>
7kdafqdk0mnku969m5o387xbkpn6b0m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/247
250
641875
1928666
1927899
2026-04-30T06:45:37Z
Rabiyathul
5890
+ மேலடி
1928666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||223}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
223
மகாராஷ்டிரம் கிடைத்த பிறகுதான், பம்பாய், ஆமதாபாத் அமளி அடங்கிற்று.
'நாக நாடு' என்று தனி அந்தஸ்துத் தருகிறோம், ஆண்டொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் செலவுக்குத் தருகிறோம், இந்தியாவில் ஒரு பகுதி என்ற ஏற்பாட்டுக்காகிலும் இணங்குக, என்று முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு, டில்லி, கெஞ்சுகிறது, பார்க்கிறோம்.
இவர்களேதான், 'திராவிடம்' என்று நாம் பேசும்போது, செச்சே! என்ன பேதைமை! பாரத தேசம் என்று சொல்லுங்கள்! - என்று உபதேசம் பேசுகிறார்கள் - உணவு விடுதியிலே கண்டோமே உலகநாதன், அவனைப் போல.
நமக்கு வேண்டிய உரிமையின் அருமையை, மற்றவர்கள், புரிந்து கொள்வார்கள், அக்கரை காட்டுவார்கள், ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் தவறுதானே!
நமக்குத்தானே, பிரச்சினை புரிய முடியும். நாம்தான், கேட்டுக் கொள்ளவேண்டும்,
இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு?
என்ற கேள்வியை.
28.8.'60
அண்ணன்.<noinclude></noinclude>
16cjcxrlcvv5e9gj3wd27hbz3x2byqc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/248
250
641876
1928667
1927900
2026-04-30T06:46:07Z
Rabiyathul
5890
+ மேலடி
1928667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|224||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தம்பி!
அமைச்சரும் அறிவாற்றலும் - தென்னாட்டுத் தொழில் வளம் -
கடிதம்: 118
மற்றொரு கூவம்!
தமிழகக் கிராமங்களின் இடர்ப்பட்ட நிலை
'கூவம் நதிக்கு அணைகட்டச் சொல்கிறார்களா, தி.மு.கழகத்தினர்' என்று கோபாவேசமாகப் பேசி வருகிறார், கோலோச்சும் நிலை கிடைக்கப் பெற்றதால், எத்தகைய வாய்வீச்சும் மதிப்புப்பெற்று விடும் என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளித்தனத்தில், தன்னை மிஞ்சுவார் இல்லை என்று காட்டிக் கொண்டுலவும் கனம். சுப்பிரமணியம்.
'என்னுடைய அறிவாற்றல் எத்தகையது, ஆராய்ச்சித் திறன் எத்தன்மையது. வீரதீரம் எத்துணை பெரிது. ஏதுமறியாதார்களே! எதையும் கதைத்துக்கொண்டு கிடப்போரே! பிழைக்கும் வழி அறியாப் பேதைகாள்! என்னைப்போய், கூவம் ஆற்றுக்கா அணைக் கட்டச் சொல்கிறீர்கள்" என்று கேட்கக் கிளம்புகிறார். தம்பி! இவரை ஒருவரும் இந்தக் காரியம் செய்யச் சொல்லவில்லை, எனினும், வடக்கே பெரிய பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளனவே, இங்கு என்ன சாதித்தீர்கள்? என்று நாம் கேட்கிறோமல்லவா, அதைத் திரித்துக் கூறி, ஆறு இருந்தாலும், இல்லை எனினும், அணைக்கட்டுக! என்று அறியாமை காரணமாக நாம் கூறுவது போலவும், நம்மை இடித்துக் காட்டித் திருத்தும் திருத்தொண்டினைச் செய்துதீர வேண்டிய பெரும் பொறுப்பினை இவர் தாங்கிக் கிடப்பது போலவும், கருவில் உள்ளது வெளியே வந்து வீழ்ந்தாலொழியச், சூல்கொண்ட மாது நிம்மதி பெறமுடியாது என்பார் போல, உள்ளத்திலே குடி புகுந்துவிட்ட பேரறிவினை இவர் வெளியே உமிழாவிட்டால், பாரம் தாங்கமாட்டாமல் தத்தளிக்க நேரிடும் என்பது போலவும் எண்ணிக்கொண்டு, கூவம் ஆற்றுக்கா அணைகட்டச் சொல்கிறார்கள்!! - என்று, கேலிபேசிப் பார்க்கிறார்.
ஏ! எனை நன்கு அறியாத மக்காள்! அணைகட்டுவது மிகப் பெரிய சாதனையோ! அந்த நாளில் குரங்குகள் அல்லவா சேதுவுக்கு அணைகட்டி முடித்தன, என்று இராமாயணம் கூறுகிறது. அங்ஙனமிருக்க, அமைச்சராக இருக்கிறேன், நாடு மண்டியிட்டுக் கேட்டுக்கொண்டதால், பல துறைகளையும் ஒருசேரப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அப்படிப்பட்ட என்னைப்<noinclude></noinclude>
c2gxuevz180df9i1hqz05qytnyrfymc
1929012
1928667
2026-04-30T11:06:04Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>தம்பி!
அமைச்சரும் அறிவாற்றலும் - தென்னாட்டுத் தொழில் வளம் -
கடிதம்: 118
மற்றொரு கூவம்!
தமிழகக் கிராமங்களின் இடர்ப்பட்ட நிலை
'கூவம் நதிக்கு அணைகட்டச் சொல்கிறார்களா, தி.மு.கழகத்தினர்' என்று கோபாவேசமாகப் பேசி வருகிறார், கோலோச்சும் நிலை கிடைக்கப் பெற்றதால், எத்தகைய வாய்வீச்சும் மதிப்புப்பெற்று விடும் என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளித்தனத்தில், தன்னை மிஞ்சுவார் இல்லை என்று காட்டிக் கொண்டுலவும் கனம். சுப்பிரமணியம்.
'என்னுடைய அறிவாற்றல் எத்தகையது, ஆராய்ச்சித் திறன் எத்தன்மையது. வீரதீரம் எத்துணை பெரிது. ஏதுமறியாதார்களே! எதையும் கதைத்துக்கொண்டு கிடப்போரே! பிழைக்கும் வழி அறியாப் பேதைகாள்! என்னைப்போய், கூவம் ஆற்றுக்கா அணைக் கட்டச் சொல்கிறீர்கள்" என்று கேட்கக் கிளம்புகிறார். தம்பி! இவரை ஒருவரும் இந்தக் காரியம் செய்யச் சொல்லவில்லை, எனினும், வடக்கே பெரிய பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளனவே, இங்கு என்ன சாதித்தீர்கள்? என்று நாம் கேட்கிறோமல்லவா, அதைத் திரித்துக் கூறி, ஆறு இருந்தாலும், இல்லை எனினும், அணைக்கட்டுக! என்று அறியாமை காரணமாக நாம் கூறுவது போலவும், நம்மை இடித்துக் காட்டித் திருத்தும் திருத்தொண்டினைச் செய்துதீர வேண்டிய பெரும் பொறுப்பினை இவர் தாங்கிக் கிடப்பது போலவும், கருவில் உள்ளது வெளியே வந்து வீழ்ந்தாலொழியச், சூல்கொண்ட மாது நிம்மதி பெறமுடியாது என்பார் போல, உள்ளத்திலே குடி புகுந்துவிட்ட பேரறிவினை இவர் வெளியே உமிழாவிட்டால், பாரம் தாங்கமாட்டாமல் தத்தளிக்க நேரிடும் என்பது போலவும் எண்ணிக்கொண்டு, கூவம் ஆற்றுக்கா அணைகட்டச் சொல்கிறார்கள்!! - என்று, கேலிபேசிப் பார்க்கிறார்.
ஏ! எனை நன்கு அறியாத மக்காள்! அணைகட்டுவது மிகப் பெரிய சாதனையோ! அந்த நாளில் குரங்குகள் அல்லவா சேதுவுக்கு அணைகட்டி முடித்தன, என்று இராமாயணம் கூறுகிறது. அங்ஙனமிருக்க, அமைச்சராக இருக்கிறேன், நாடு மண்டியிட்டுக் கேட்டுக்கொண்டதால், பல துறைகளையும் ஒருசேரப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அப்படிப்பட்ட என்னைப்<noinclude></noinclude>
iibtiyu669usz4u7ehlzfqlp9tcw060
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/249
250
641877
1928668
1927901
2026-04-30T06:46:38Z
Rabiyathul
5890
+ மேலடி
1928668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||225}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
225
போய், கேவலம் குரங்குகள் செய்து முடித்த வேலையையா செய்யச் சொல்கிறீர்கள்! எத்துணை இறுமாப்பு உமக்கு!! இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடல் இருக்கிறது; எனினும் பாதாளவழி அமைக்கலாமா என்றோர் பிரச்சினை இருக்கிறது. இலண்டன் செல்கிறீராமே, பிழைத்துப் போகட்டும் அந்த நாட்டு மக்கள் பிரச்சினைக்கு ஒரு விளக்கம், வழிவகை கூறிவிட்டு வருக! என்று கூறியிருந்தால், செய்து முடிப்போம்! என்று எண்ணி மகிழ்ந்திருப்பேன். கூடிக்கூடிப் பேசுகிறார்கள் போரை ஒழிப்பது எங்ஙனமென்று, அதற்கான வழி தெரியாது வதைபடு கின்றனர்; அமைச்சர் ஏறே! இலண்டன் சென்றதும், காரிருளில் சிக்கித் தவித்திடும் 'இராஜதந்திரிகளை' வரச்சொல்லி அறிவுரை அருளி, உலகம் உய்ய வழி கூறிவிட்டு வாரும், என்று கூறினால், மகிழ்ச்சியுடன் அந்தப் பணியினை ஏற்றுக்கொண்டிருந்திருப்பேன்!! சமதர்மம் என்பதுபற்றி எவரெவரோ ஏதேதோ எழுதிக் குழப்பி விட்டிருக்கிறார்கள். அதனால், சமதர்மம் எனும் தத்துவத்துக்கு ஒரு தெளிவுரை நூல் தீட்டி, அதனை உலக மொழிகள் அனைத்திலும் வெளியிட, தங்களைக் கண்டதும், துடிதுடித்தோடி வந்து, பதிப்பாளர்கள், குழுமி நிற்பர். கொங்குநாட்டுத் தங்கமே! அத்தகைய ஒரு நல்லேடு எழுதித்தந்து, மார்க்சையும், ஏன்ஜல்சையும், ப்ரோதானையும், பிறரையும் நம்பி நாசமாகிவிட்ட நானிலத்துக்கு. ஒரு புதுவழி காட்டிவிட்டு வாருங்கள், என்று கூறினால், சில மணிநேரம் அதற்கென ஒதுக்கி, அந்தக் காரியத்தைச் செய்த முடித்துத் திருப்தி அடைவேன் - தமிழகத்துக்குப் பெருமை ஏற்படச் செய்திடுவேன்!! இப்படிப்பட்ட பணிகளைக் கூறாமல், செச்சே! குரங்குகள் செய்து முடித்த காரியம், அணைகட்டுவது, அதைச் செய்யச் சொல்கிறீர்கள் என்னை? - என்று, அமைச்சர் ஆயாசப்படுகிறார்போல் தெரிகிறது. அவர் பேசும் போக்கினைக் கவனிக்கும்போது.
அமைச்சராக இருப்பவருக்குத் தமது அறிவாற்றலிலே, நம்பிக்கை இருக்கத்தான் வேண்டும் அளவு அறிந்து நம்பிக்கை இருந்தால் நல்லது - வரைமுறையற்ற நம்பிக்கை கொள்வது கேலிக்குரியது. எனினும், இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால், அத்துடன், பிறர் பேசுவது அத்தனையும் பேதைமை, என்று எண்ணிக் கொள்வது ஆணவத்தின் விளைவு; அதனை எடுத்துப் பேசுவது, நோய் முற்றுகிறது என்பதற்கு
அடையாளம்.
யார் எங்கே, எப்போது, இந்த உலக மகா மேதையைப் பார்த்து, ஆறுகள் இல்லை எனினும், அணைகள் கட்டவேண்டும். என்று கேட்டார்கள்!
அன்றும் கேட்டோம். இன்றும் கேட்கிறோம். கோடி கோடியாகக் கொட்டி மலை மலையாக அணைகள் கட்டி, வடக்கே பாலைவனத்தைச் சோலைவனமாக்குகிறீர்களே, தெற்குச் சீமைக்குச் செய்தது என்ன?<noinclude></noinclude>
r3lryosqonin3n1enjfrke6p45e0wlq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/250
250
641878
1928669
1927902
2026-04-30T06:47:08Z
Rabiyathul
5890
+ மேலடி
1928669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|226||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>226
'திராவிட நாடு' இதழில்
என்று கேட்கிறோம்; உரிமை இருப்பதால், தேவை அறிவதால், ஆட்சியாளர் திருவடி தாங்கிடுவோராகிப் போனதை உணருவதால்.
இதைத் திரித்துக்கூறி, அணையா? எங்கே? கூவம் ஆற்றிலே கட்டவா? என்று கேட்பவர், அமைச்சராக மட்டும் இல்லாது போனால் யார் இந்தக் குறும்புப் பேச்சுப் பேசுபவர்? கோமாளியோ!! என்றுதான் நாடு கேட்டிருக்கும். பேசுபவர் அமைச்சர் என்று அறிவதால், நாடு, திகைத்துக் கிடக்கிறது. அமைச்சரா இப்படிப் பேசுகிறார் என்று எண்ணி அல்ல; இப்படிப் பேசுபவரா அமைச்சராக இருக்கிறார் என்று எண்ணி.
கூவத்துக்கு அணைகட்டச் சொல்லியோ, கோவலத்திலே கோட்டை கட்டச் சொல்லியே, நாம் யாரும் கேட்டோமில்லை; கேட்டதெல்லாம். வடக்கு வளம்பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பெரும்பொருள் கொட்டி ஆர்வம் பொங்கிடும் நிலையில் காரியங் களைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார் களே, அந்த ஆர்வம் அக்கரை, திறமை, ஏனைய்யா, உமக்கு இல்லை? வளமளிக்கும் திட்டங்கள், தென்னகத்துக்கு எம்முறையில் இருத்தல்வேண்டும் என்பது பற்றி ஆர்வம்காட்டி, அதற்கான பொருள் ஈட்டுவதிலே அக்கரை செலுத்தித், திட்டங்களை நிறை வேற்றுவதிலே அவசரத்தைக் காட்டி, ஏன் வெற்றிப்பட்டியலை நீட்டாதிருக்கிறார்கள், என்று கேட்கிறோம். தவறா? இதற்குப் பதில், உதட்டைப் பிதுக்குவதும், உறுமிக் காட்டுவதும் தானா! வேற இல்லையா!!
தம்பி! அமைச்சர் கூவத்தக்கு அணைகட்ட வேண்டாம் - அதன் நாற்றத்தையாவது போக்கட்டு பார்ப்போம். பார்த்தோமே பொறுத் திருந்து இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக. கூவம் நதியின் நாற்றத்தைப் போக்கக்கூட வக்கு அற்று வழி அற்றுப்போயிருக்கும் இந்த வல்லமைசாலிதான், வாய் வீச்சிலே எனக்குள்ள வல்லமையைப் பாரீர் என்கிறார். இது வல்லமைகூடஅல்ல! இடத்தின் காரணமாகக் கிடைக்கும் வாய்ப்பு!! யாரறியார், இதனை! அவரே, ஒருகணம், நிதானமாக எண்ணிப் பார்த்தால், புரியும்.
கூவம் ஆற்றினைப் பயனுள்ளதாக்கத் திட்டம்கூட இருக்கிறது- அறிந்தோர் தீட்டி, ஆளவந்தார்களால் நிறைவேற்றப்படாமல், ஏட்டளவில் இருந்து வரும் திட்டம். செய்து முடித்தாரா? தெரு முனையில் எனக்கெதிர் நிற்பவன் யார்? என்று செருக்குடன் பேசிவரும், அமைச்சர் பெருந்தகை.
ஆறுகள் உள்ள இடத்தில் அணைகள் - ஏரிகள் உள்ள இடத்தில் கரைகள்!
கங்கைக்கும் யமுனைக்கும் கோடி கோடியாகப் பணம்! இங்கு காட்டாறுகளைக் கட்டுப்படுத்த தொகையின் அளவு ஏன் அதிகப் படுத்தக் கூடாது.<noinclude></noinclude>
ri9b0dnanfu6qfz0exxxz2arxmuecz6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/251
250
641879
1928670
1927903
2026-04-30T06:47:38Z
Rabiyathul
5890
+ மேலடி
1928670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||227}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
227
தம்பி! தமிழரின் பிணங்கள், கடலலையால் மோதப்பட்டு மோதப் பட்டு, சிங்களத் தீவின் கரையிலே ஒதுக்கப்பட்டிருக்கின்றன - ஆமடா, தம்பி! ஆம்! எந்தச் சிங்களம், சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ, எந்தச் சிங்களவர், போரில் தோற்றதால், அக்கால முறைப்படி அடிமைகளாக்கப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டு, காவிரிக்குக் கரை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களோ, அந்தச் சிங்களவர் காண, தமிழரின் பிணங்கள், சுறா தின்றது போக. சுழல் அரித்தது போக, மிச்சம் இருந்த பிணங்கள், சிங்களத் தீவின் கரை ஓரம் கிடந்தன!!
தமிழரின் பிணங்கள் சிங்களத் தீவின்; கரையிலே கிடக்கின்றன!
கொங்கு நாட்டுக் குடிமகன், தேம்ஸ் நதிக்கரை மீது எழுப்பப் பட்டுள்ள எழிலூர் சென்று, எமது காங்கிரஸ் ஆட்சியில், மக்கள் புதுவாழ்வு. முழுவாழ்வு பெற்று மகிழ்ந்திருக்கிறார்கள் என்று கூறப் போகிறார்!!
அமைச்சர் அல்லவா, ஆட்சியினால் ஏற்பட்டுள்ள அகமகிழ்ச்சி பற்றி ஆங்கிலர் அறிந்திட எடுத்துரைக்கப் போகிறார். எத்தனை எத்தனை அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், பெரும் பேராசிரியர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள், நமது அமைச்சர் பெருமானை, அச்சமும் அடக்கமும் கொண்ட நிலையில் அணுகிப், பாடம் கேட்கப் போகிறார் களோ, நமக்கென்ன தெரியும், தம்பி? தெரியாமலா, செல்வார்!!
ஆனால், அங்கு சென்றும், நமது நினைவால் தாக்கப்பட்டு, கூவம் நதிக்கா அணைகட்டுவது என்று கேட்டுவிடக் கூடாது; ஏனெனில், அணை இருக்கட்டும், கூவம் நதியின் நாற்றம் போய் விட்டதா என்று அறிந்தோர், கேட்பர்.
தொழில்வளம் காண்பதற்காக, இயற்கை வளத்தைச் சரியான முறையிலே பயன்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டுவதிலே தென்னகம் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்பதை எடுத்தக்காட்டி, இடித்துரைக்காத நிபுணர் இல்லை எனலாம். இந்த அமைச்சரேகூட, கனரகத் தொழிலைப் பொறுத்த வரையில் தென்னகம் - அதிலும் குறிப்பாகச் சென்னை சரியான அளவிலும் முறையிலும் வளர்ச்சி அடையவில்லை என்பதைச். சில வேளைகளில் எடுத்துக்காட்டிப் பேசியுமிருக்கிறார். மற்றவர்களுக்கு மட்டுந்தானா. எமக்கும் தெரியும், என்று உரிமையுடன் பேசித் தென்னகத்தின் தொழில் வளர்ச்சிக்கான வழிவகை நிச்சயமாகக் காண்பேன் என்று வாக்களித்துமிருக்கிறார். எனினும், இவரே. நாம் அதை எடுத்துக் காட்டும்போது எரிச்சலடைந்து, கூவத்துக்கு அணைகட்டவா என்று கொதித்துக் கேட்கிறார். கொஞ்சம் உரத்த குரலில் பேசுங்கள் - என்று கூறுபவரைப் பார்த்து, காது செவிடா? என்று கேட்டு விடுங்கள் -<noinclude></noinclude>
h0unsu9t7r9y7el3ifp1rxd5axv8uys
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/252
250
641880
1928671
1927904
2026-04-30T06:48:09Z
Rabiyathul
5890
+ மேலடி
1928671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|228||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>228
'திராவிட நாடு' இதழில்
எவ்வளவு கோபம் வருகிறது என்பது தெரியும். அந்த நிலைதான், அமைச்சருக்கு.
காங்கிரஸ் கட்சியிலேயே பலர், தென்னாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது, தொழில் வளர்ச்சி சரியான அளவிலும், வகையிலும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்து குமுறுகிறார்கள். பொதுவாகவே மக்கள், சுயராஜ்யத்தின் பலனை வடக்கே உள்ளவர்கள் சுவைத்து இன்புறுவது போலத் தென்னக மக்கள் இன்புறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். சிறிதளவு துணிவு கொண்டவர்கள், காங்கிரஸ் தலைவர்களைக் கேட்கவும் செய்கிறார்கள்; 'ஏனய்யா, வடக்கே மூன்று பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் அமைத்தார்களே, இங்கு இவ்வளவு கூக்குரலிட்டும் இன்னும் ஏன் இரும்புத் தொழிற்சாலை அமைக்கவில்லை' என்று கேட்கிறார்கள்.
ஏற்பாடாகி வருகிறது; பரிசோதனை நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது: நிபுணர்கள் திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை முறைதான். பொதுமக்களுக்குச் சமாதானம், கூறுவார்கள்! அவர்களுக்கும் சலிப்பும் ஆத்திரமும் ஏற்பட்டுப்போய், அவர்களே இப்போது டில்லி தேவதைகளைப் பார்த்துக் கேட்கத் துணிந்து விட்டார்கள்.
ஆயிரம் சொல்லு, தென்னாட்டுக்காக வாதாடுவதிலே: திறமையும் தீரமும் காட்டுபவர்கள் தி.மு.கழகத்தினர்கள் -என்று பொதுமக்களே. மகிழ்ச்சியுடன் கூறிடக் கேட்கும்போது, காங்கிரஸ் தலைவர்களுக்கே. ஒருபுறம் எரிச்சல், இன்னோர்புறம் வெட்கம் கிளம்புகிறது. இதிலென்ன பிரமாதம் நாங்களும்தான் கேட்கிறோம், என்று கூறிவிட்டு. இப்போது டில்லியில் காங்கிரஸ்காரர்கள், சம்பத்தோடு சேர்ந்து. குரல் எழுப்பக் காண்கிறோம். ஆனால், அவர்கள் இன்னமும் 'மனு' போடும் 'மகானுபாவர்களாக'வே உள்ளனர்; வேறுவிதமாக அவர்கள் இருப்பதற் கில்லை. ஆனால். இந்த அளவுக்கு அவர்கள் பேசுவது கூட, வடக்கே உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு, அதிர்ச்சியைத் தருகிறது. ஏதேது. இது கட்சிகளைக் கடந்த ஒரு தேசியப் பிரச்சினையாகி விடும்போல் இருக்கிறதே, பாரதம், ஏக இந்தியா, என்ற தத்துவமே தகர்ந்து போய்விடும்போல இருக்கிறதே என்று எண்ணுகிறார்கள்; எண்ணும் போதே அச்சம் குடைகிறது.
நிலைமை புரிவதால், அவர்களுக்கு அச்சம் குடைகிறது. பெற்றுள்ள நிலையின் காரணமாக, துணிவு தடித்துப் போயிருப்பதால், இங்குள்ள நிதி அமைச்சருக்கு, எவரைக் கண்டாலும் ஒரு ஏளனம், எதைச் சொன்னாலும் அலட்சியம், ஏற்படுகிறது; கூவத்துக்கா, அணை கட்ட என்று கேட்கிறார், கேலி பேசும் போக்கில்.<noinclude></noinclude>
d99hd4dkr2dg1chhtm45ghm0nd8lqzn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/253
250
641881
1928672
1927906
2026-04-30T06:48:39Z
Rabiyathul
5890
+ மேலடி
1928672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||229}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
229
எவ்வளவு முன்னேறி இருக்கிறது, இந்த மாநிலம், எமது திறமையான ஆட்சியினால்; மின்சாரத்தில் உணவு உற்பத்தியில், பாதைகள் அமைப்பில், பகல் உணவுத் திட்டத்தில், இப்படிப் பல துறைகளில், இப்படிப்பட்ட முன்னேற்றம் கண்டிருக்கும்போது, திரும்பத் திரும்ப வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது என்று பேசிக்கிடப்பதா, என்று அமைச்சர் வாதாடுகிறார். அவரே நீதிபதியுமாகி, நாம் கூறுவது தவறு; நடவாததை, நடக்கக் கூடாததை. தீதானதை, தேவையற்றதை, நாம் கேட்பது அடாத செயலாகும் என்று தீர்ப்பும் அளித்து விடுகிறார். தண்டனையும் தருகிறார்! நான் பொருளற்றது பேசுவேன்; அதனைப் பொன்மொழியாகக் கொள்ள வேண்டும்; இது தான் உமக்கு நாம் அளிக்கும் தண்டனை என்கிறார்.
க
தம்பி! கிடைக்கிற 'மின்சாரத்தைக்' கிராமப் பகுதிகளிலே, அதிகமான அளவுக்குப் பயன்படுத்துவதிலே 'சென்னை இராஜ்யம்' முன்னணியில் இருக்கிறது. ஆனால், மின்சார உற்பத்தியில் முதலிடமல்ல, சென்னைக்கு. சென்னையில் உற்பத்தியாவதைவிட, அதிக அளவு மின்சக்தியை உற்பத்தி செய்து கொண்டிருக்கும்' மாநிலங்களில், மேலும், மின்சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன; இங்கு, அந்த வாய்ப்புகள் யாவும் தீர்ந்துபோய்விட்டன; இனி அணு உலைக்கூடம் மூலம்தான், வழி கண்டாக வேண்டும். இங்கு அமைச்சர்கள், அதைக் குறித்துப் பேசத் தவறவில்லை, வாக்களிக்கத் தவறவில்லை. மேலிடம் சென்று கெஞ்சிடத் தவற வில்லை. ஆனால், தம்பி! உனக்குத்தான் தெரியுமே. அணு உலைக் கூடம், இங்கு இல்லை - எது மிக அவசியமோ, அங்கு அது இல்லை; பம்பாய் பகுதியில் அமைக்கத் தீர்மானித்து விட்டார்கள்! நமது அமைச்சர்கள். என்ன செய்கிறார்கள்? இந்தச் செய்தியை நாட்டுக்கு அறிவிக்கிறார்கள்!! சிறிதளவு ஆயாசமோ, அருவருப்போ, கண்டனமோ தெரிவிக்கக்கூட அவர்களுக்கு அச்சம்! என்ன நேரிட்டு விடுமோ என்ற கவலை. இப்படி இடுப்பொடிந்த நிலையில் இருந்தால், தென்னகத்தின் உரிமைகளை யார்தான் பறித்துக் கொள்ளத் துணிய
மாட்டார்கள்.
அசாமும், வங்காளமும், காங்கிரஸ்காரர்கள் அரசோச்சும் மாநிலங்கள்; அங்கு உள்ள முதலமைச்சர்கள், தரத்தில், திறத்தில், தகுதியில், இங்கு அரசு நடாத்தும் காங்கிரஸ் தலைவர்களைவிடக் குறைவானர்கள் அல்ல! ஏக இந்தியா - அகில பாரதம் என்ற மயக்கமொழிகளை அவர்களும், மக்களிடம் பேசி வருபவர்கள்தான். ஆனால், தத்தமது மக்களின் உரிமை பற்றிய பேச்சு எழும்போது, எவ்வளவு துடித்துக் கிளம்புகிறார்கள்.
-<noinclude></noinclude>
jhn04wh7gzl2wbxxf9k3efyxc8x0jxg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/254
250
641882
1928673
1927907
2026-04-30T06:49:09Z
Rabiyathul
5890
+ மேலடி
1928673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|230||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>230
'திராவிட நாடு' இதழில்
அசாம் அமைச்சரவையைக் கலைத்துவிட வேண்டும். என்று வங்க முதல் அமைச்சர், பேசுகிறார்.
சுதந்திர தினத்தையே அல்லவா, கொண்டாட முடியாது என்று, வங்க அமைச்சரவை அறிவித்தது. வங்க மாநில கவர்னர், சுதந்திர தின விழாவின்போது நடத்தும் விருந்து. வைபவம்கூட அல்லவா, நிறுத்தி விட்டார். டில்லி செங்கோட்டையில், நேரு பண்டிதர் கொடி ஏற்றுகிறார்; வங்கத்திலோ, எமது மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அசாமில் இழைக்கப்படும் கொடுமை எமது உள்ளத்தைக் கொதிக்கச் செய்திருக்கிறது; இந்நிலையில், கொண்டாட்டம் ஒரு கேடா செத்து விழுகிறார்கள். வங்க மக்கள்; தடுத்து நிறுத்தவில்லை, டில்லிப் பேரரசு, இந்த இலட்சணத்தில், சுதந்திர விழா வேறு கொண்டாட வேண்டுமா? முடியாது! மனம் இடம் தராது! மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! என்று வங்கக் காங்கிரசு திட்ட வட்டமாகக் கூறுகிறது. இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்கள்? குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும் குணாளர்களாக விளங்குகிறார்கள்.
'ஐயனே! அணு உலைக்கூடம் வேண்டும்', என்று கேட்கிறார்கள்.
அணு உலைக்கூடமா? ஆமாம்! அதன் அற்புதசக்தி அபாரம். அதை நாமும் உணர்ந்திருக்கிறோம். உமக்கு அணு உலைக்கூடத்தின் மீது ஆசை ஏற்பட்டிருப்பதைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த அணு உலைக்கூடத்தைக் காண விரும்பினால், பம்பாய் வட்டாரம் சென்று காணவும்; அங்குதான் அணு உலைக்கூடம் அமைக்க ஏற்பாடாகி இருக்கிறது! - என்று டில்லி கூறுகிறது.
மெத்த சந்தோஷம்! மிக்க நன்றி! - என்று இவர்கள் கூறுகிறார்கள்.
எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை சம்பந்தமாக, முன்பு. அசாமுக்கும், டில்லித் துரைத்தனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தம்பி! இப்போது இங்கே கவர்னராகக் கொலுவிருந்து கொண்டு, அகில பாரதம்' பற்றிய அரிய 'உபதேசம்' செய்து கொண்டிருக்கிறாரே. இதே மேதி அவர்கள் அசாமில் முதலமைச்சராக இருந்தார். என்ன நடந்தது என்பதை, இங்குள்ள காங்கிரசாரை, பழைய பத்திரிகையைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளச் சொல்லு, தம்பி! அசாம் முழுவதும் முழக்கம்-அகில பாரதம் என்று அல்ல - அசாம் அசாமியருக்கே! என்ற முழக்கம். தேசிய ஒற்றுமை, பாரதப் பண்பாடு என்றெல்லாம் பேசுவது. அசாமை வஞ்சிக்க, புறக்கணிக்க, சுரண்ட, என்பது எமக்குப் புரிந்து விட்டது. வேண்டாம் இந்தப் போலி உறவு! அசாமுக்கு நீதி கிடைத்தாக வேண்டும்; உரிமை பறிபோக விடமாட்டோம். டில்லிப் பேரரசு ஓரவஞ்சனையாக நடந்தால். அசாம் இந்தியாவிலிருந்து பிரிந்து<noinclude></noinclude>
n4kfgciwxh6pa9dd1bu5nlrotlbgt0t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/255
250
641883
1928674
1927908
2026-04-30T06:49:39Z
Rabiyathul
5890
+ மேலடி
1928674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||231}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
231
போய்விடும்! என்று பேசி. நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், ஊர்வலம், வேலை நிறுத்தம், கடை அடைப்பு நடத்தி, டில்லிப் பேரரசை நடுநடுங்க வைத்தது. அசாம். டில்லிப் பேரரசு, அசாமில், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை ஏற்படும் என்று உறுதி அளித்த பிறகே, குமுறல் அடங்கிற்று.
இங்கு? இரும்புத் தொழிற்சாலை இப்போதைக்கு இல்லையா? சரி. உரத் தொழிற்சாலை ஏற்படத் தாமதமாகுமா? சரி!
தூத்துக்குடி, சேது சமுத்திர திட்டம், மூன்றாவது திட்டத்தில் சேர்க்கப்படுவது முடியாத காரியம் என்கிறீர்களா? சரி!
எமது பதவிக்கு ஆபத்து இல்லையல்லவா? அது போதும், ஐயனே! அதுபோதும்!! -என்று கூறிக் காலந்தள்ளி வருகிறார்கள்.
பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு பேருண்மை நன்கு தெரிந்திருக்கிறது; பதவியில் இல்லாவிட்டால், நாடு தங்களைத் தேடாது, நாடாது என்ற பேருண்மையைத்தான் குறிப்பிடுகிறேன். காமராஜர் போன்ற ஒருவர் இருவர் தவிர, மற்றவர்கள், பதவியின்றி இருந்த காலத் திலேயே, யாருக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர்? நாடு, அவர்களுக்கு அப்போது அளித்த 'மரியாதை' என்ன? பத்திரிகைகளேகூட அவர்களின் பேச்சுக்கு என்ன இடம் கொடுத்தன? யாருக்குத் தெரியாது!
பதவி போய்விட்டால், மீண்டும் அந்தப் பழைய நிலைதான் என்ற பேருண்மை தெரிந்திருப்பதால்தான், அவர்கள் நாட்டுக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்காது போயினும், நமக்குக் கிடைத்துள்ள பதவி பறிபோகாதிருந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள்; அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலே அவ்வளவு கவலையுடன் இருக்கிறார்கள்.
பதவியில் இருந்து கொண்டு, சிரித்தால் முகம் செந்தாமரை என்றும்? கடுகடுப்பாக இருந்தால், கெம்பீரம் என்றும், தருக்குமொழி பேசினால் பாமரர் தலைவன் என்றும் பாராட்ட, ஏடுகள் முன் வருகின்றன! எப்படி அந்தச் சுவையை இழக்க மனம் வரும்? எனவேதான், டில்லிப் பேரரசு எத்தனை முறை, இல்லை! இல்லை! என்று சொன்னாலும், இவர்கள் சரி! சரி! என்று கூறிவிடுகிறார்கள்; அதுமட்டுமல்ல டில்லிப் பேரரசுகூடக் கூசக் கூறிடும் வார்த்தைகளை வீசி, இந்நாட்டு மக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள்.
இங்கு செய்யவேண்டியதனைத்தையும் செய்து முடித்து விட்டது போலவும், மக்கள் வெற்றிக் களிநடனம் ஆடிக்கிடப்பது போலவும்.<noinclude></noinclude>
s1xgxr0byrjie117jg78xva8jqaa9zf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/256
250
641884
1928675
1927909
2026-04-30T06:50:09Z
Rabiyathul
5890
+ மேலடி
1928675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|232||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>232
'திராவிட நாடு' இதழில்
ஒரு நாலைந்துபேர் மட்டுமே வீண் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பது போலவும் நினைத்துக் கொண்டு, கேலிபேசி எதிர்ப்பை ஒழித்து விடலாம் என்று, 'கூவத்துக்கு அணை கட்டவா?' என்று கேட்கிறார். குறும்புத்தனத்தை விட்டொழிக்க வேண்டிய பருவத்தை அடைந்து மேலான பதவியிலும் அமர்ந்திருக்கும் அமைச்சர்.
"இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்படிசெய்ய, மேல் பெரியாற்றுத் திட்டத்தை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
குந்தாறு, நாராயண காவேரி போன்ற சிற்றாறுகளின் நீரைப் பாசனத்திற்கு உதவும்படி செய்ய வேண்டும்.
சிக்கல், குதங்கல், எராகுடி போன்ற பெரிய வாய்க்கால்களைச் சீராக்கவேண்டும்.
முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள குளங்களைச் சீரமைக்க வேண்டும்". தம்பி! ஒரு மாவட்டத்தில் மட்டும். செய்யப்பட வேண்டியவை ஒரே ஒரு துறையில் மட்டும்.
எல்லாம் செய்தாகிவிட்டது. இனிக் கூவத்துக்கு அணை கட்ட வேண்டியதுதான் பாக்கி, என்று எக்காளமிடுகிறாரே அமைச்சர், அவருடைய திருப்பார்வையிலே, இராமநாதபுரம் மாவட்டம் படவில்லையா?
முதுகுளத்தூர் தாலுகா காங்கிரஸ் மாநாட்டிலே, நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திலிருந்து ஒரு பகுதியைத்தான், மேலே குறிப்பிட்டி ருக்கிறேன். காமராஜர் வீர உரை, விளக்க உரை, எல்லாம் அளித்தார் - அந்த மாநாட்டில். அவருடைய ஆட்சி செய்யவேண்டியது எவ்வளவு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதுபோலத் தீர்மானங்களைக் காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவந்து பேசினர்.
தம்பி! இதை நான் எழுதி கொண்டிருக்கும் நேரத்தில், காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த கீழம்பி எனும் சிற்றூரின் மருங்கே வாழ்ந்து வரும் ஆதித் திராவிட மக்கள், பிணம் விழுந்தால் எடுத்துச் செல்வதற்குக்கூடப் பாதை வசதி இல்லாத குறையைப் போக்க, துரைத்தனம், எவ்வளவு மனுக்கள் அனுப்பியும், இதுவரை, ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளாதது பற்றி வருத்தத்துடன் வந்து கூறினர்.
இந்த இலட்சணத்தில், காமராஜர், கமுதியில் பேசுகிறார், இப்படிப் பட்ட மாநாடுகள் நடத்துவதால், மக்களுக்கு உள்ள குறைகளை நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது என்று.<noinclude></noinclude>
f0r8jhvp7kjgy27zo48qigb4sy7f8p9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/257
250
641885
1928676
1927910
2026-04-30T06:50:40Z
Rabiyathul
5890
+ மேலடி
1928676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||233}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
233
பாகல்மேடு இதற்குத்தான் என்றார்! பாதயாத்திரை இதற்காகவே தான் என்றார்! சூறாவளிச் சுற்றுப்பயணம் இதற்காகத்தான் என்றார்! இப்போது மாநாடுகள் நடத்துவது இதற்குத்தான் என்கிறார்.
மாத்திரை தீர்ந்ததேயன்றி, மாந்தம் போகவில்லை என்பார்கள், தாய்மார்கள்.
அதுபோல, இவர் முறை பல காட்டுகிறாரேயன்றி, குறைகள் எங்கே களையப்பட்டன?
இதோ, கீழம்பியில், ஆதித் திராவிட மக்கள், பிணம் எடுத்துச் செல்ல, பாதை இல்லை என்கிறார்கள்-இதை, முதலமைச்சரிடம், ஏழை பங்காளன் என்ற விருது சூட்டிக்கொண்டு உலாவரும் காமராஜரிடம், நான் முன்னின்று நடத்திய தண்டலம் மாநாட்டிலே, மனுக் கொடுத்துத் தெரிவித்துக் கொண்டார்கள், பலன் என்ன? பூஜ்யம்!! அதனால் வெட்கப்பட வேண்டியது, யார்? காமராஜர் ஆட்சி அல்லவா!!
கீழம்பிப்பகுதி ஆதித் திராவிட மக்களுக்கு, பிணம் எடுத்துச் செல்லப் பாதை இல்லாவிட்டால் என்ன, உங்கள் உரிமையைக் காத்திட, உமக்குப் பெருமை தேடித்தர, கக்கன் இருக்கிறார் கனம் மந்திரியாக, என்று போய்ச் சொல்வதா!
அமைச்சர் கேட்கிறார், கூவத்துக்கு அணை கட்டவா? என்று.
பிணம் புதைக்கும் இடம், அதை எடுத்துச் செல்ல 'வழி' அமைத்துக் கொடுக்கக்கூட, வக்கற்றுக் கிடக்கும் அமைச்சர், வாய்க்கு வந்தபடி பேசிவிட்டால், வளம் பொங்கி வழிந்துவிடும் என்று எண்ணுகிறாரா? வளமும் பொங்கி வழியாது. திறமும் வளராது. இப்படிப்பட்ட பேச்சினால், நாராச நடையினால் நறுமணம் எங்ஙனம் எழும்! ஓங்கி அடித்தேன், ஒடிந்து விட்டார்கள் சரியான போடு போட்டேன், சாய்ந்தார்கள் கீழே!-என்று வேண்டுமானால், துதிபாடித் திரிபவரிடம் பேசி மகிழலாம். தூய்மை, வாய்மை, செயல்திறமை, என்பவைகளைக் கவனித்து ஆய்வு நடாத்தும் அறிவாளர்கள் இத்தகைய பேச்சினை வீரமென்றோ விளக்கமென்றோ கொள்ள மாட்டார்கள். இது மற்றொரு 'கூவம்' என்றுதான் கூறுவர்.
கொங்கு நாட்டுக் குடிமகன் வாயிலே இருந்து, இந்த 'கூவம் வெளிவரலாமா! நான் பரிதாபப் படுகிறேன்.
தொழில் வளர, செல்வம் கொழிக்க, விலைவாசி கட்டுப்படுத்தப் பட, விஞ்ஞானம் வளர, இன்னபிற பற்றிய தெளிவுரை கூறவேண்டிய வரிடமிருந்து, கூவம் கிளம்புவது கண்டால், பரிதாபமாகத்தானே இருக்கும்!<noinclude></noinclude>
2mskhuj3pb5sn1vw0az8n3z8iivzd8l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/258
250
641886
1928677
1927911
2026-04-30T06:51:10Z
Rabiyathul
5890
+ மேலடி
1928677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|234||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>234
'திராவிட நாடு' இதழில்
கூவம் ஏன் கெடுநாற்றம் கிளப்புகிறது என்று அறிந்தோரைக் கேட்டேன், நல்ல நீரோட்டம் இல்லாததால் சரியான முறையில் துப்புரவு செய்யப் படாததால், அடைப்புகள் ஏற்பட்டுவிட்டதால், நாற்றம் அடிக்கிறது. என்கிறார்கள்.
பேச்சிலே 'கூவம்' ஏற்படக் காரணம் என்ன என்பதை, விளக்கவா வேண்டும். சிந்தனை வழி அடைப்பட்டுப் போயிருப்பது, எல்லாக் கருத்துக் களையும் அறிந்து உண்மையைக் காணவேண்டும் என்று எண்ணம் கொள்ளாமல், ஒரே இடத்தில் தமது சிந்தனையைக் கட்டிப் போட்டு வைத்து, உயிரூட்டம் இல்லாமற் செய்துவிடுவது. அலட்சியம், அகம் பாவம், போன்ற அழுக்குகள் படிந்து படிந்து, அறிவுக்குத் தேவையான தெளிவைப் பாழ்படுத்திவிடுவது ஆகியவைகளே, பேச்சு 'கூவம்' ஆகிவிடக் காரணம்.
கூவத்துக்கு அணைகட்டச் சொல்லி. அமைச்சருக்கு. ஒருவரும் சொல்லவில்லை, அவர் பேச்சைப் பார்க்கும் போது, "ஐயனே! அமைச்சராக இருக்கும் காலம் வரையிலுமாகிலும், பேச்சிலே, 'கூவம்' புகாமல் பார்த்துக் கொள்வீராக!' என்று கூறத் தோன்றுகிறது.
இவர்தம் ஆட்சியின் சிறப்பினை, உலகுக்கே, எடுத்துக் காட்டச் சிங்களக் கரையிலே ஒதுக்கப்பட்ட 18 தமிழர்களின் பிணங்கள் போதுமே!!
சிங்களவர், என்ன எண்ணி இருப்பர், தமிழரின் பிணங்களைக் கண்டு: தமிழருக்கு இது சதி, இவர்கள் ஆட்சியில்! இது குறித்து வெட்கித் தலைகுனிந்து வேதனைப்பட்டுக் கிடக்கவேண்டியதிருக்க, வீறாப்புக் காட்டுவதும், பேச்சைக் கூவமாக்குவதுமாக இருக்கிறார்கள்.
இறந்துபட்ட அந்தத் தமிழர்கள், அலைகடலில் தத்தளித்த போது, சுறா கொத்தியபோது, கைகால் சோர்ந்தபோது, கண் பஞ்சமடைந்தபோது என்னென்ன எண்ணினரோ, எப்படி எப்படிப் புலம்பினரோ, யாரறிவர்!
கடலில், தமிழின் பிணமாகி மிதக்கிறான் அது கண்டு சிங்களவன், இதோ 'கள்ளத் தோணி' என்று கேலிபேசிக் சிரிக்கிறான், வாழ வைக்கவேண்டிய பொறுப்பினை நிறைவேற்றும் தகுதி இழந்து போனோமே என்று கண்ணீர் வடிக்கவேண்டிய அமைச்சர், பேச்சைக் கூவம் ஆக்கிக் கொள்கிறார்; ஏனோ, பாவம்!
4.9.1960
அண்ணன்,
Jimmzqnz<noinclude></noinclude>
jbwoztnflkw70ol8hdddmq8uqn2wv9s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/259
250
641887
1928678
1927912
2026-04-30T06:51:42Z
Rabiyathul
5890
+ மேலடி
1928678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||235}}{{rule}}</noinclude>கடிதம்: 119
'ஞோ ஞா’
தம்பி!
மலேய மொழி உணர்வு-
இந்தி வெறி - அசாமிய மொழி உணர்ச்சி-
தமிழின் தனி இயல்பு.
"ஞோஞா” - உச்சரிக்கத் தெரிகிறதா-முடிகிறதா! வேடிக்கையாக இருக்கிறதல்லவா, ஞோஞா என்று கூறும்போது. உனக்கு உச்சரிக்கக் கஷ்டமாக இருக்கக் கூடும். எனக்கு 'ஞோஞா' என்று கூற, வசதியாக இருக்கிறது ஒரு கிழமையாகவே, எனக்கு நாசியில் அடைப்பு, தொண்டையில் சளி, இலேசாகக் காய்ச்சல் இந்த நிலை 'ஞோஞா' என்று கூறக், கன கச்சிதமாக இருக்கிறது!!
-
.
அதுசரி, அண்ணா! இரு கிழமைகளாக என்னோடு உரையாடாம் லிருந்தது, சீன மொழி கற்கத்தானா என்று கேட்கிறாயா, தம்பி! தவறு, தவறு, மிகத் தவறு! ஞோஞா, சீனமொழி அல்ல; மலாய் மொழி.
ஆமாம். இனி மலாயா வானொலியில், அடிக்கடி இந்த 'ஞோஞா' எனும் சொல் கூறப்படுவதைக் கேட்கலாம்.
மணமாகாதவளைக் குமாரி அல்லது மிஸ்-என்றுதான் மலாய் வானொலி, கூறிக்கொண்டு வந்தது - குமாரி தமிழ்ச் சொல் மிஸ் ஆங்கிலம், மலாய் நாட்டிலே, தமிழோ ஆங்கிலமோதானா, இருக்க வேண்டும்? மலாய் மொழியை ஏன் புறக்கணிக்கவேண்டும்? மலாய்மொழி, புறக்கணிக்கப்பட்டால், பின்னர், மலாய் நாடு என்ற தனிநிலை பெற்றதனால் பயன் என்ன?
தாய்மொழியில் தக்கசொல் கிடைக்கும்போது, எதற்காக வேற்று மொழிகளைச் சுமந்துகொண்டிருக்க வேண்டும்? நாட்டுப் பற்று வளர. வழிகோல வேண்டுமெனின், முதலில் மொழிப் பற்றன்றோ தேவை! அங்ஙனமிருக்க, குமாரி என்றும், மிஸ் என்றும் வானொலியில் அறிவிக்கலாமோ? வானொலி இனி, மணமாகாத பெண்களைக் குறிப்பிடுகையில் 'ஞோஞா' என்றுதான் கூறவேண்டும் என்று, மலாய் நாட்டுத் துரைத்தனம் அறிவித்து விட்டது!
துவான் ஹாஜி ஜைனுல் ஆபிதின் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, மலாய் மொழியிலே காணக்கிடக்கும்<noinclude></noinclude>
phwlnytvz6vfcfdu5t8dwywwjkitlx8
1929011
1928678
2026-04-30T11:05:16Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம்: 119
'ஞோ ஞா’
தம்பி!
மலேய மொழி உணர்வு-
இந்தி வெறி - அசாமிய மொழி உணர்ச்சி-
தமிழின் தனி இயல்பு.
"ஞோஞா” - உச்சரிக்கத் தெரிகிறதா-முடிகிறதா! வேடிக்கையாக இருக்கிறதல்லவா, ஞோஞா என்று கூறும்போது. உனக்கு உச்சரிக்கக் கஷ்டமாக இருக்கக் கூடும். எனக்கு 'ஞோஞா' என்று கூற, வசதியாக இருக்கிறது ஒரு கிழமையாகவே, எனக்கு நாசியில் அடைப்பு, தொண்டையில் சளி, இலேசாகக் காய்ச்சல் இந்த நிலை 'ஞோஞா' என்று கூறக், கன கச்சிதமாக இருக்கிறது!!
-
.
அதுசரி, அண்ணா! இரு கிழமைகளாக என்னோடு உரையாடாம் லிருந்தது, சீன மொழி கற்கத்தானா என்று கேட்கிறாயா, தம்பி! தவறு, தவறு, மிகத் தவறு! ஞோஞா, சீனமொழி அல்ல; மலாய் மொழி.
ஆமாம். இனி மலாயா வானொலியில், அடிக்கடி இந்த 'ஞோஞா' எனும் சொல் கூறப்படுவதைக் கேட்கலாம்.
மணமாகாதவளைக் குமாரி அல்லது மிஸ்-என்றுதான் மலாய் வானொலி, கூறிக்கொண்டு வந்தது - குமாரி தமிழ்ச் சொல் மிஸ் ஆங்கிலம், மலாய் நாட்டிலே, தமிழோ ஆங்கிலமோதானா, இருக்க வேண்டும்? மலாய் மொழியை ஏன் புறக்கணிக்கவேண்டும்? மலாய்மொழி, புறக்கணிக்கப்பட்டால், பின்னர், மலாய் நாடு என்ற தனிநிலை பெற்றதனால் பயன் என்ன?
தாய்மொழியில் தக்கசொல் கிடைக்கும்போது, எதற்காக வேற்று மொழிகளைச் சுமந்துகொண்டிருக்க வேண்டும்? நாட்டுப் பற்று வளர. வழிகோல வேண்டுமெனின், முதலில் மொழிப் பற்றன்றோ தேவை! அங்ஙனமிருக்க, குமாரி என்றும், மிஸ் என்றும் வானொலியில் அறிவிக்கலாமோ? வானொலி இனி, மணமாகாத பெண்களைக் குறிப்பிடுகையில் 'ஞோஞா' என்றுதான் கூறவேண்டும் என்று, மலாய் நாட்டுத் துரைத்தனம் அறிவித்து விட்டது!
துவான் ஹாஜி ஜைனுல் ஆபிதின் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, மலாய் மொழியிலே காணக்கிடக்கும்<noinclude></noinclude>
jh590s3gqpxwivrd0su2z4i63omxbh2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/260
250
641888
1928679
1927913
2026-04-30T06:52:11Z
Rabiyathul
5890
+ மேலடி
1928679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|236||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>236
'திராவிட நாடு' இதழில்
சொற்களை ஆய்ந்தெடுத்துப் பழக்கத்துக்குக் கொண்டுவர. வழி அமைத்திருக்கிறது. அதன் விளைவாகவே இனி ஞோஞா, என்று மலாய் வானொலி ஒலிபரப்ப இருக்கிறது.
பெயரில் என்ன இருக்கிறது - என்று பேசிடும் பெருந்தன்மையாளர் இங்கு உளர்! அவர்கட்கு 'ஸ்ரீ' என்றால் இனிக்கும்; 'திரு' -என்றால் தித்திக்காது! ‘ஆகாஷ்வாணி' என்று கூறி அகமகிழ்வர், வானொலி என்று கூறினால், வாய் வெந்துவிடும் என்று கருது கின்றனர். தமிழ் மொழியாம் 'திரு' இருக்க, ஏனோ வடமொழியில் ஸ்ரீ என்று கூறுகிறீர்கள்... இனி 'திரு' என்ற அடைமொழியை கூறிடுவீர் என்று சென்னை மாநகராட்சி மன்றம் செப்பிற்று; காஞ்சிபுரம் நகராட்சிமன்றமும் கூறிற்று: பல நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றிச் சென்னை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன. அரசோ, எப்படிச் சொன்னால் என்ன? 'ஸ்ரீ' இருந்துவிட்டுப் போகட்டுமே, ஏன் அதை மாற்ற வேண்டும்? என்று வாதாடுகிறது. விரிந்த பரந்த மனப்பான்மைக்கு இஃதே சான்று என்று சென்னை அரசு கூறுகிறது - தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறது. 'மலேயாவிலே தம்பி! துங்கு ரஹிமான், மலாய் மொழி, மலாய் இனம், மலாய் நாடு. எனும் உணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும். அப்போதுதான், மலாய் தனி அரசு நடாத்துவதிலே பொருளும் உண்டு. பயனும் ஏற்படும், சுவையும் கிடைக்கும் என்று கருதுகிறார்-அந்தக் கருத்துக்கேற்ப காரியமாற்றுகிறார்.
ஆடவர்களை, இஞ்சே என்றும், பெண்களை, சே என்றும், மணமாகாத பெண்களை ஞோஞா என்றும், மணமானவளை புவான என்றும், மலாயா வானொலி அறிவிக்கும்.
மொழிவெறி -
குறுகிய மனப்பான்மை கோணல் வழி என்றெல்லாம் இங்கு, தூய தமிழ் வேண்டும் என்று உரைப்போரை, ஊராள்வோர் ஏசுகின்றனர். மலேயாவில், துரைத்தனமே மலாய் மொழி தான் நாட்டு மொழி, பிறமொழிக் கலப்பும் பிற இனத் தொடர்பும், பிற பண்பாடு குழைந்து விடுவதும், நன்றன்று, என்று துணிந்து கூறுகிறது: கருத்து வெற்றிபெறக் காரியமாற்றவும் செய்கிறது.
இத்தனைக்கும், தம்பி! மலேயாவே, பல்வேறு காலங்களிலே பல்வேறு நாட்டு மக்கள் சென்று தங்கி, ஒரு 'கலப்படம்' ஏற்பட்டுப் போயிருக்கும் நாடு. அங்கேகூட, ஓர் இனம், ஓர் மொழி, உண்டு என்ற உணர்வும், அதனை அரசோச்சச் செய்திடல் வேண்டும் என்ற ஆர்வமும், எழக் காண்கிறோம். இங்கோ, பிறமொழிகளைச் சுமந்துகொண்டு திரிந்திடுவோரையன்றோ காண்கிறோம். அந்தக் கொடுமை போதாதென்று. அப்பேரறிவாளர், தமிழின் தூய்மைக்காகப் பாடுபடுவோரை எள்ளி<noinclude></noinclude>
t7qf52z34gzly3hxifhik2z4uzskp8q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/261
250
641889
1928680
1927914
2026-04-30T06:52:42Z
Rabiyathul
5890
+ மேலடி
1928680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||237}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
237
நகையாடவும் செய்கின்றனர். மேலிடம் உள்ளோர், தம்மைக் குட்டி உட்கார வைப்பரோ, அல்லது பதவி யினின்றும் உருட்டிக் கீழே தள்ளி விடுவாரோ. என்ற அச்சம், குடிகொண்டவர்கள், ஆளவந்தார்களாகியுள்ளனர்.
“இந்தி மொழியில் இருபெரும் காப்பியங்கள் உள்ளன ஒன்று துளசிதாசின் இராமாயணம்....”, என்று தம்பி! நான் இம்முறை சட்டமன்றத்தில் பேசியபோது, பலர். இரண்டு காவியம் என்றுரைக் கிறானே துளசிதாஸ் இராமாயணம் ஒன்றுதானே காவியம், மற்றொன்று எது? என்று எண்ணிக்கிடந்தனர்; நான் என் பேச்சைத் தொடர்ந்து.
மற்றோர் காவியம் அகில இந்திய இரயில்வே கைட்-என்று கூறினேன். சிலரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அமைச்சரும் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையில்தான் இருந்தார்-எனினும் கடமை அவரைக் குடைந்தது. எழுந்தார், குறுக்கிட்டார். 'நமது மொழிபற்றி எவ்வளவு பெருமையாக வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், ஆனால், பிற மொழியை இப்படி இகழத் தேவை இல்லை' என்றுரைத்தார். எனக்கு அவருடைய நிலைபுரிந்தது, அதனையும் அங்கேயே கூறினேன்.
இந்தி மொழியைப் பற்றி ஒருவன் ஏளனம் பேசக் கேட்டும், சும்மாவா இருந்தீர்? என்று மேலிடத்தார் கேட்டால், 'இல்லையே, உடனே எழுந்து, அதனைத் தடுத்து நிறுத்தினேனே!' என்று மேலிடத்தாருக்குச் சொல்லிக் கொள்ளத்தான் இப்போது அமைச்சர் குறுக்கிட்டுப் பேசினார்.
என்று நான் கூறினேன் - அமைச்சர் இருக்கை நாடினார்! தம்பி! நமது அமைச்சர்கள், தமிழர், தமிழகம், தமிழ்மொழி, தமிழர் நெறி, என்று கூறவும் அஞ்சுகின்றனர் - அடிமைத்தனம் அவர்களைத் தடித்த தோலர் களாக்கி விட்டிருக்கிறது பதவிப்பற்று, அவர்களைப் பல்லிளிக்க வைக்கிறது - தமிழகத்தைச் சென்னை என்றே செப்பு கின்றனர்-பாரதி விழாவின் போதோ, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது, காதினிலே - என்று பாடிவிடுகிறார்கள். மலாயாவிலே மேற்கொள்ளப்பட்டு வரும், முயற்சியினைக் கண்டேனும், இவர்தம் கருத்துத் தெளியுமா? துணிவு ஏற்படுமா? என்று கேட்கத் தோன்றுகிறது.
போகட்டும், தம்பி! கறந்த பால் காம்பேறாது. கருத்தழிந்தோர் துணிவினைப் பெறார்-என்று எண்ணிக்கொள்வோம். மலாய் நாடு தேடித் தேடிப் பார்த்து, கல்லி எடுத்து, குமாரிக்குப் பதில் ஞோஞா என்ற சொல்லினை வானொலி மூலம் ஒலிபரப்புவது கேட்கும்போது, நாம். தமிழ் மொழிக்கு ஏற்றம் கிடைத்திட வேண்டும். ஒரு துளியும் தேவையற்ற நிலையில், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கொண்டு<noinclude></noinclude>
hdw3e8zd867rkwutka9p5q23l3tbio1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/262
250
641890
1928681
1927915
2026-04-30T06:53:12Z
Rabiyathul
5890
+ மேலடி
1928681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|238||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>238
'திராவிட நாடு' இதழில்
வந்து கலக்கிவிடுவது தீது, எனவே அஃது நீக்கப்பட்டாக வேண்டும். என்று கொண்டுள்ள கொள்கை அப்பழுக்கற்றது, என்பது உறுதிப்படுகிற தல்லவா? ஆளத் தெரியாதார், அந்த வாய்ப்புக் கிடைக்கப்பெறாதார். வீணான பகைமையுணர்ச்சியை மூட்டிவிடவே, 'திரு' என்றும், 'வானொலி' என்றும் செப்பித் திரிகின்றனர் என்று கூவிக்கிடந்திடும். குணாளர்கள் தலையிலே ஓங்கிக் குட்டுவது போலன்றோ, மலாய் துரைத்தனம் ஞோஞா கூறுகிறது.
மிகக் கோடியிலிருக்கிற க்யூபா நாட்டிலிருந்து அண்டையிலே, உள்ள மலாயா வரையிலே, தாய்மொழி, தாயகம், தனி அரசு எனும் உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிந்திடக் காண்கிறோம்; காண்பதனால், நாம், கொண்டுள்ள கருத்து, வலிவுடையது என்பது மட்டுமல்ல, உரிமைக்குப் போரிடும் அறிவாற்றல் கொண்டோர் எவரும் போற்றத் தக்கது என்பது, உறுதிப்படுகிறது.
மொழியில் என்ன இருக்கிறது என்று பேசுவோர், தமது மொழி மூலம் ஆதிக்கத்துக்காக வழி வகுத்துக்கொண்டுள்ள சூது வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே, அவ்விதம் பேசுகின்றனர்.
அசாமில் அசாம்மொழி ஆட்சிமொழி ஆவதை, அந்த மாநிலத் திலே பெரும் அளவு குடி ஏறி உள்ளவர்கள், பல்வேறு துறைகளிலே இடம் பிடித்துக்கொண்டு கொட்டமடிப்போர் எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினர். குத்தும் வெட்டும். கொலையும் கொள்ளையும், சூறை யாடலும் கற்பழித்தலும் ஆகிய கொடுமைகள் நடைபெற்றன கண்டனங்கள், அறிவுரைகள், கிளம்பின; குழுக்கள் அமைக்கப் பட்டன; ஆய்வுரைகள் வெளியிடப்பட்டன; எனினும் புகை கிளம்பியபடியே இருக்கிறது.
மொழி பற்றியா இப்படி ஒரு அமளி! ஏனோ இந்த வெறி! எதற்கோ இந்த அறிவீனம்! -என்று பெருந்தலைவர்கள். நெடுந் தொலைவிலே இருந்துகொண்டு பேசுகின்றனர். ஆனால், அமளியில் சிக்கினோரோ. அடிமைகளாக, நடைப் பிணங்களாக உழலுவதைவிட, ஒரு கணம் உரிமை முழக்கம் செய்து விட்டேனும், மடிந்துபடுவோம். ஏற்றுக்கு இந்தப் பிச்சைப் பிழைப்பு! நாம் பிறந்த நாட்டிலேயே நாம் மற்றவர்களை நத்திப் பிழைத்துக் கிடக்கத்தான் வேண்டுமா ! - நமது தொழிலிடங்களில் வேற்றார் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாமோ மாற்றானால் சிறைபிடிக்கப் பட்டவன் கொத்தடிமையாகிக் கிடப்பதுபோலக் கூலிகளாகிக் குமுறிக் கிடக்கிறோம். மனதை மயக்கும் இயற்கை வளம், நமக்கு வயிறாரச் சோறளிக்கவுமில்லை - வேற்றாரோ அதனைச் சுரண்டி கொழுக்கிறார்கள் ஏனென்று கேட்கவோ, பெரியவர்கள் கூசுகின்றனர் - கொடுமைகளால் அவர்கள் தாக்கப்பட்டததால் - நாமும், அவர்போல் இருந்து விட்டால்,<noinclude></noinclude>
9odinuwofss9mtzijbeb5o64win08e5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/263
250
641891
1928682
1927916
2026-04-30T06:53:43Z
Rabiyathul
5890
+ மேலடி
1928682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||239}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
239
நமது கதி யாது ஆகும்? நாம் வாழ வழி வகுக்காத, நாடு ஒன்று நமக்கென்று இருப்பதைக் காட்டிலும், நாம் நாடற்றவர் ஆகிவிடுவதும் நன்று - இல்லையேல் உயிரற்றவர் ஆவது மிகநன்று! -என்று எண்ணி எண்ணிக் குமுறிக் கிடந்தனர். மக்கள்-வெடி மருந்துக் கிடங்கிலே சிறுபொறி வீழ்ந்ததுபோல, மொழிபற்றிய தகராறு கிளம்பிற்று, நெடுங் காலமாக மூண்டு கிடந்த பகை பீறிட்டுக் கிளம்பிற்று பாரதநாடு இந்திய மக்கள்-எனும் சொற்கள் பொருளற்றன, சுவையற்றன, வலிவற்றன என்பது விளங்கிற்று - அசாம் அசாமியருக்கே என்ற முழக்கம், நாட்டையே கிடுகிடுக்க வைத்தது: அசாம் அரசு, வழி தவறிச் சென்றதென வங்க அரசும். வங்க அரசு வரம்பு மீறி நடக்கிறது என்று அசாம் அரசும் வசைபாடிக் கொண்டது. இரு அரசுகளும், டில்லிப் பேரரசு கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்தன. எவர் உண்மையில் குற்றம் புரிந்தனர், எவர் உள்ளபடி அத்துமீறிய செயல்புரிந்தனர் என்பது. தம்பி! கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், எந்தக் குழு இனிப் பணியாற்றினாலும் கசப்பு வளருமே தவிர, குறையாது.
வங்கத்தவரும் அசாமியரும்-இருசாராருமே-தவறுகளை உணர்ந்து விட்டனர்-ஏற்பட்டுவிட்ட தவறுகளுக்காக வருந்துகின்றனர் - வெட்கப் படுகின்றனர் - இனி ஒரு தாய் வயிற்று மக்கள்போல வாழ உறுதி கொண்டுவிட்டனர், என்று அறிவிக்கப்படுகிறது.
இதிலே தம்பி! ஆபத்தை எந்த நேரத்திலும் காக்கக் கூடிய. சொற்றொடர்கள் இருப்பதனைக் கவனித்தாயா-இருசாராரும்! மிக ஆபத்தான சொற்றொடர்!] ஒரு தாய் வயிற்று மக்கள் போல!!- சுவை பூசப்பட்டிருக்கிறது. எனினும் ஆபத்துத் தொக்கி நிற்கிறதல்லவா. "போல" என்ற சொல்லில்!!
ஒரு தாய்வயிற்று மக்களே கூட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதுண்டு பகையுணர்ச்சி ஏற்பட்டு-வெட்டி வீழ்த்திக் கொள்வதுண்டு வெறி முற்றி-எனினும் இறுதியில் ஒரு தாய் வயிற்று மக்கள் என்ற உண்மை வெற்றிபெறும். ஆனால் ஒரு தாய் வயிற்று மக்கள் போல என்று மட்டும்தானே பேச முடிகிறது. அசாமியருக்கும் வங்காளி களுக்கும் இடையே மூண்டுவிட்ட பகையைப் போக்கும் நோக்குடன் பாகுமொழி பேசிப், பண்பினைப் போதித்துச். சமரசம் காண விழைவோரால்!
ஆமாம். இனி நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக் கூடாது நாமென்ன நற்பண்புகளறியாக் காட்டுக் குணமுடையோரா! - வெள்ளை யருக்கும் கருப்பருக்கும் இடையே உள்ளது போன்ற 'நிறபேதம்' நம்மிடம் இல்லையே! மும்மூர்த்திகளை இருவரும் வழிபடுகிறோம்-புனிதக் கங்கையிலே பாபம் போக்கிக் கொள்ள இருவருமே மூழ்கி மகிழ்கிறோம்-<noinclude></noinclude>
d7moc4cb5nvqng7upu85dvsku49y8lu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/264
250
641892
1928683
1927917
2026-04-30T06:54:14Z
Rabiyathul
5890
+ மேலடி
1928683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|240||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>240
'திராவிட நாடு' இதழில்
இமயத்தின் பனிப்படலம் காண இருவரின் நெஞ்சிலேயும் ஒரு எழுச்சி ஏற்படத்தானே செய்கிறது - அன்னை பாரதமாதாவின் அருமருந்தன்ன மக்களன்றோ இருவரும் என்றெல்லாம் பேசிடும்போதும், நேசம் காட்டி மகிழ்ந்திடும்போதும் இருசாராருமே, வேறோர் கருத்தினை உள்ளூரப் பற்றிக் பற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே முற்றிலும் பொருத்தமானதாகும். அந்த உள் உணர்ச்சி, மெள்ள மெள்ள, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தலை தூக்கும்-மறுப்பு எழும்போது வேகமாக வெளிப்படும் - எதிர்ப்புக் காட்டப்படும்போது கொதித்து எழும்! அந்த உணர்ச்சி, ஆனால் என்ற முன்னுரையுடன் தொடங்கி, ஆகவே என்ற சொல்லினை நாடிப் பெறும், பிறகோ, குத்தும் வெட்டும், கொலையும் பிறவும் தலைவிரித்தாடும். நட்பு நாசமாகும், பகை கொக்கரிக்கும்.
இ
இதோ ஒரு அசாமியன், தம்பி! நடைபெற்ற நாச காரீயத்துக்காக இன்று வெட்கப்படுகிறான்-இனி வங்க மக்களுடன் ஒருதாய் வயிற்று மக்கள்போல வாழச் சம்மதம் தெரிவிக்கிறான்-அவனே எந்தக் குடிலுக்குத் தீ மூட்டி விட்டானோ, அதே குடிலைத் திரும்பக் கட்டித்தர முன்வருகிறான்- அவனைப் பாராட்டிவிட்டு, 'ஏனப்பா, இத்துணை நல்லவனாக இருக்கிறாயே! வங்காளியானால் என்ன, அசாமியன் ஆனால் என்ன, அனைவரும் பாரத மக்களன்றோ என்று கீதம் பாடுகிறாயே, கீதம் பாடுகிறாயே, இப்படிப்பட்ட பண்பாளனாகிய நீயா, வெறிச் செயலில் ஈடுபட்டாய், வங்காள மாதர் களைக்கூடத் துன்புறுத்த மட்டுமல்ல, மானபங்கப்படுத்தக்கூடத் துணிந்தனை! ஏன் ஏற்பட்டது, ஈனத்தனமான எண்ணம்! எவர் மூட்டிவிட்டனர், உன் இதயத்திலே, இத்தகைய இழிகுணத்தை|-என்று கேட்டிடின், அவன் முதலில், 'வீணாக ஏன் பழைய நிகழ்ச்சியைக் கிளறுகிறீர்கள்? வேண்டாம்! புதுக்காலம் பிறந்து விட்டது! பொற்காலமாக்குவோம் இதனை! பகை மடிந்தது! பண்பு மலர்ந்தது! பாரதம் வென்றது!!" என்று கூறுவான், தம்பி! உண்மையினைக் காணவேண்டி, நீ அவனை மேலும் உசாவினால், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மெல்லிய குரலிலே பேசுவான், "பகை கூடாது. நண்பனே! நிச்சயம் கூடாது! மனிதத் தன்மை புனிதமானது, மறந்தேனில்லை. ஆனால்.... இதைக்கேள் இது அசாம்! என் தாயகம்! இங்கு எனக்கு வாழ வழி இல்லை!! கூலிவேலை செய்தாலன்றி!! அதோ பார் அலுவலகங் களை-வட்டிக் கடைகளில் வங்காளியர்! தபால் நிலையங்களில் வங்காளியர்! வணிகக் கோட்டங்களில் வங்காளியர்! புகைவண்டி நிலையங்களிலே வங்காளியர்! எண்ணெய் சுத்தரிகரிப்புத் தொழிற்சாலையில் வங்காளியர்! எங்கும் அவர்கள் எதிலும் அவர்கள்! ஏற்றமெல்லாம் அவர்கட்கு!! எமக்கு உள்ளது என்ன? கல் உடைக்க நாங்கள், கனவானாக அவர்கள்! மண் சுமக்க அசாமியர், மண்டிக் கடை நடாத்த வங்காளியர்! ஏடு நடாத்த அவர்கள், எடுத்துச்சென்று கூவிக் கூவி விற்க நாங்கள் இதற்கு. எமக்கு அசாமியர் என்று பெயர்<noinclude></noinclude>
trseaagreqbfvf79lohy5d4ype2anp4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/265
250
641893
1928684
1927918
2026-04-30T06:54:45Z
Rabiyathul
5890
+ மேலடி
1928684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||241}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
241
எதற்கு! இந்த நாட்டுக்கு அசாம் என்ற தனிப்பெயர் இருப்பானேன்! வங்கத்தவர், இங்கு பையப்பையப் புகுந்து இத்துணை ஆதிக்கம் பெற்றபிற்கு, வங்கத்தின் கொல்லை யாக்கிக் கொள்வதுதானே, ஏன் அசாம் ஓர் தனி மாநிலம் என்று கூறிட வேண்டும்! அசாமியன் வாழ வழி இல்லை, அசாம் என்ற பெயர் எதற்கு!!-என்று கூறிக் குமுறுகிறான்! கண்களிலே வெறி உணர்ச்சி காணப்படுகிறது கவனித்தாயா!!
இந்த உள் உணர்ச்சியை ஓராயிரம் தலைவர்கள், உன்னதமான உபதேசம் அளித்தும் நீக்கிட இயலவில்லை-நீக்கிட இயலாது! ஒன்று, அவன் தன் உரிமை எவராலும் பறிக்கப்படவில்லை என்று உணரவேண்டும்- அல்லது, அவனுக்கு உரிமை உணர்ச்சி அறவே அற்றுப் போய்விட வேண்டும்-அந்த அளவு அவன் தடித்த தோலனாகி விட வேண்டும். தம்பி பத்துப்பேர் பதினைந்துபேர், மாதம் ஆயிரம் இரண்டாயிரம் கைக் கூலி பெற்றுக்கொண்டு, 'தடித்த தோலராகி- அது வெளியே தெரிய ஒட்டாதபடி, பதவிப் பட்டாடை அணிந்து கொண்டு, மந்திரிகளாகி விடலாம்! ஒரு இன மக்கட் கூட்டம் முழுவதுமா, அங்ஙனம் நிலைகெட்டுப் போய்விட முடியும்! முடியாதே! அங்ஙனமாவது இயலாததொன்று என்பதனால்தான், வீர, வீரம், தீரம், தியர்கம் எனும் எழுச்சியூட்டும் இயல்புகளை உள்ளடக்கிய விடுதலைப் போர்க்கதைகளாம் காப்பியங்கள், உலக மன்றத்திலே. என்றோ ஓர் நாளல்ல, புதிது புதிதாக இயற்றப்பட்டு வருகின்றன! குமுறிக் கிடக்கும் மக்கள், கைகூப்பி நிற்கும் மக்கள், கண் கசக்கி நிற்கும் கதியற்ற மக்கள், ஓர்நாள் கொதித்தெழுந்து கிளம்பு கின்றனர். அச்சம் அழிந்து படுகிறது. ஆண்மை தலைமை ஏற்கிறது. ஆணவக் கோட்டைகள் தூள்தூளா கின்றன! விடுதலை முரசொலி எங்கும் எழுகின்றது!!-என் நாடு! என் அரசு! என் மொழி! என் இனம்!! - என்று எக்காளம் எழுகிறது. மனித குலத்தின் ஓர் பகுதியினர், தளைகளை நொறுக்கி எறிந்துவிட்டுத், தன்னாட்சி பெற்றுத், தலை நிமிர்ந்து நடக்கின்றனர்.
காலில் தட்டுப்படும் வைரத்தைக், கற்களிலே ஒரு வகை என்று எண்ணிக் கொள்கிறான், கருத்தறியாதான், கருப்பன்! யானைத் தந்தத்தை அடுப்பிலிடுகிறான், அதன் மதிப்பறியாமல்? கூவுகிறான், அது இசையாம்! கூத்தடிக்கிறான், அது நடனமாம்! சொல்லுகிறான், அது வேள்வியாம்! செச்சே! ஆண்டவன் படைப்பிலே, இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா!!- என்று வெள்ளையர் கேலி பேசினரே, தம்பி! கருப்பர்' எனும் நீக்ரோ இனமக்களை காண்கிறாயல்லவா, இன்று அவர்தம், வீரச் செயல் களை, விடுதலைப் போரினை, வெற்றிக் காதையினை!
காமஞன் டோகோ<noinclude></noinclude>
s80rb4owvytq8kaw029ewsqgbvsrepd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/266
250
641894
1928685
1927919
2026-04-30T06:55:15Z
Rabiyathul
5890
+ மேலடி
1928685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|242||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>242
சோமாலியா
காங்கோ
தாஹோமி
நைஜர்
மேல்வோல்டா
‘திராவிட நாடு' இதழில்
ஐவரிகோஸ்ட்
சாட்
கேபன்
மத்திய ஆப்பிரிக்கா
சைப்ரஸ்
தம்பி! 14 புதிய நாடுகள்-விடுதலை பெற்ற வீரபுரிகள்-தனிக் கொடியினைப் பறக்கவிடும் குடி அரசுகள். இதோ இப்போது ஐக்கிய நாடுகள் மன்றத்திலே. உறுப்பினர்களாகிவிட்டன. சோவியத் தலைவர் குருசேவ், கைதட்டி வரவேற்றாராம். இது அறிவிக்கப்பட்டபோது. காலம் இப்படியும் ஆகிவிட்டதே என்றெண்ணிச் சில ஆதிக்க அரசுகள், கைபிசைந்து கொள்ளக்கூடும் - எனினும் படையும் தடையும், வேட்டின் வேதனையும், கொலையும் கொடுமையும், விடுதலை உணர்ச்சியை, உரிமை உணர்ச்சியை அழித்திட முடியவில்லை, இறுதி வெற்றி எழுச்சி பெற்றோருக்கே, என்பதையன்றோ, இந்தக் குடிஅரசுகள், எடுத்துக் காட்டுகின்றன!
"எம்மைப் பாரீர்! அடிமைத்தளை பூண்டு அழுது கிடந்திடும் மக்கள்! பாரீர் எம்மை! எமது கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருந்தன தசையை அழுத்தும் அளவுக்கு! சாட்டையடி பட்டோம்! பசியாலும் தாக்குண்டோம்! பல்லிளிக்காவிட்டால், பாதம் பிடித்திட மறுத்தால் பயங்கரமான கொடுமைகள் ஏற்படும்! கரும்பு விளை விப்போம். சுவை காணமாட்டோம்! வெட்டி எடுப்போம் தங்கம், அவர் கண்முன் கொட்டிக் காட்டி மகிழ்விக்க உழுது அழுவோம், அவர்கள் அறுவடை கண்டு மகிழ்வர்! அவர்கள் மருத்துவமனை அமைப்பர், நாங்கள் நோயாளிகளை அனுப்பி வைப்போம். அவர்கள் குதிரை வளர்ப்பர். நாய்கள் மேய்ப்போம். தேய்ப்போம்! அவர்களின் நாய்கள். எமது குழந்தைகளைத் கடித்துவிடும். நாங்கள் எமது குழந்தைகளை அடித்து அடக்கமாக்கவேண்டும்! அவர்கள் படித்து மகிழ்வர், நாங்கள் வாய் பிளந்து நிற்போம்! செடியும் கொடியும், கல்லும் மண்ணும், எலும்பும் எரிபொருளும், இவைதாமே, உமக்குத் தெய்வங்கள், என்று கேட்டுக் கேலி செய்வர், நாங்கள் ஆம்! ஆம்! என்று தலை அசைத்து நிற்போம். ஆடு! என்பர். ஆடுவோம்!! அவள்? என்று கேட்பர், மகளாயினும் மாதாவாயினும், ஆடிக்காட்டு என்போம். ஆடுவர், வெள்ளையர் மனம் மகிழ! ஆடை ஏன்? என்பர், களைந்தெறிவர் எமது பெண்டிர் - இல்லையேல் கசையடி!!<noinclude></noinclude>
rw34j18zs7fx9mc4sblyh029l3oyowr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/267
250
641895
1928686
1927920
2026-04-30T06:55:45Z
Rabiyathul
5890
+ மேலடி
1928686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||243}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
243
அடிமைகளே! சொல்லொணாக் கொடுமைகளைத் தாங்கித் தவித்தோம்! கண்ணீர் வடித்தோம்! பிறகோ கண்கள் வற்றி விட்டன! உடலெங்கும் வடுக்கள்-வடுக்கள் உலர்ந்தன-உள்ளம் உலர்ந்துவிட்டது- அச்சமேகூட அழிந்துவிட்டது! சாவுக்கஞ்சா நிலை பெற்றோம். வாழ்வுக்கும் சாவுக்கும் வேறுபாடு காணமுடியாத நிலையில் தள்ளப் பட்டதால், விம்முவதை விட்டொழித்தோம், விழிகளிலே நெருப்புக் கிளம்பிடலாயிற்று! விடுதலை ஆர்வம் எனும் தீ நெஞ்சில் புகுந்தது. கண் வழி வெளிவரலாயிற்று. பார்வையிலே ஒரு கடுமை தெரிகிறது! நடையிலே ஓர் ஆணவம் காணப்படுகிறது! பயலை அடித்தால் அழ மாட்டேனென்கிறான்! என்ன, இதன் பொருள்? என்று ஆதிக்கக்காரர்கள் திகைத்தனர்.
தளையை நொறுக்கிடத் துணியாதிருப்போரே! அவர்தம் திகைப்புக் கண்டோம், இடி இடி எனச் சிரித்தோம்! அடிமை சிரித்தால், பொருள் என்ன தெரியுமா!! கொடுமையை அலட்சியமாகத் தாங்கிக்கொண்டு, அடிமை, ஆதிக்கக்காரன் காது செவிடுபடச் சிரித்தால், பொருள் என்ன தெரியுமா? அடிமை, அடிமை அல்ல என்பது பொருள்! அவனை அடக்கிவைத்திடும் ஆற்றலை, ஆதிக்கக்காரன் இழந்து விட்டான் என்று பொருள்!
எனவே, விடுதலை பெற்ற எமக்கு வாழ்ந்தளித்து மகிழ்வோரே! எங்ஙனம் பெற்றோம் விடுதலை என்று அறிய விரும்பிடின், கூறுவோம் கேண்மின், கொடுமைகளைத் தாங்கிக் கொண்டோம், குமுறிக்கிடப்பதை விட்டொழித்தோம், சிரித்தோம், ஆதிக்கக்காரன் எமைத் தாக்கியதால் இரத்தம் சொட்டக்கண்டு! விடுதலை பெற. ஒரே வழிதான் உண்டு! வீரத் தியாகம், அதற்கு நீவிர் தயாராகி விட்டீர்களாயின், தளைகள் அறுபடும். தருக்கரின் அரசு அழிந்து படும், தன்னரசு பெறுவீர்.
பல்கலைக்கழகங்களிலே உள்ளோர். இது குறித்து எண்ணற்ற ஏடுகளை வைத்துக் கொண்டுள்ளனராம். இனித்தான். நாங்கள் அவை களைப், படிக்கக்கூட வாய்ப்புக் கிடைக்கும். எமக்கும் பாடம் புகட்டப் பல்கலைக் கழகம் இல்லை. மகனை இழந்த, தாயின் கண்ணீர், எமக்குப் பாடம் புகட்டிற்று! தள்ளாடி நடக்கவும் வலிவற்ற கிழவனைப், பிடித்திழுத்துச் சென்றனர் சிறையில் தள்ள. அவன் பார்வையிலே, காணப்பட்ட திகில் திகைப்பு, எமக்குப் பாடம் புகட்டிற்று! எரிந்த குடிசைகள், இடிந்த வீடுகள், இழுத்துச் செல்லப் பட்ட ஆடு மாடுகள், உடைத்தெறியப்பட்ட தட்டுமுட்டுச் சாமான்கள் இவையே எமக்குப் பேராசிரியர்கள்! கை இழந்தோர், கால் இழந்தோர், எமக்குத் தன்மானம் இழந்திடாதிருக்கும், வழி காட்டினர்! கண் இழந்தோன், எமக்கு விடுதலைப் பாதையைத் தெரிந்திடச் செய்தான்.<noinclude></noinclude>
namaqfookrxuvve2xzp7d5kkyz0iy4v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/268
250
641896
1928687
1927921
2026-04-30T06:56:16Z
Rabiyathul
5890
+ மேலடி
1928687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|244||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>244
'திராவிட நாடு' இதழில்
'மகளே! மகளே! ஏன் இப்படி வெறிக்க வெறிக்கப் பார்க்கிறாய்?' என்று கேட்டிடும் தந்தையின் முகத்தைக் காணவும் முடியாமல், தலையைக் கவிழ்த்துக்கொண்ட, தையலின் கன்னத்தில் புரண்டோடிய கண்ணீர் கண்டோம். விடுதலைப் போருக்கான வீரம் பெற்றோம்!!
அடிமைத்தனம், துவக்கத்திலே, உணர்ச்சியற்ற நிலையை உண்டாக்கி
வைக்கும்.
அல்லற்படும்போது, அழத்தோன்றும்.
அழமட்டும் தெரியும்போது, நெஞ்சிலே பீதி குடிபுகும்.
N
கொடுமை வளர வளரப் பீதி அழிந்துபடும், கண்ணீர் வறண்டு விடும், நெஞ்சிலே நெருப்பு மூண்டுவிடும்!
அந்தக் கட்டம் தோன்றிவிட்டால், ஆதிக்கக்காரன், திகைப்படை கிறான், கடைசி முயற்சி செய்து பார்க்கிறோன்!
அவன் கடைசி முயற்சியில் ஈடுபடும்போது. கொடுமை பல செய்து செய்து, அவன் கரங்கள் வலுவிழந்து கிடக்கின்றன; அடிமைப்பட்டுக் கிடப்பவனோ, கொடுமை பலவற்றைத் தாங்கித் தாங்கி, உரம் ஏறி நிற்கிறான்!
கடைசி முயற்சி வலுவற்றுப் போகிறது!
அடிமை சிரிக்கிறான்! ஆதிக்கக்காரன், திணறுகிறான்! விடுதலை வெற்றி பெறுகிறது! இதுதான் நாங்கள் பெற்ற பாடம்! விடுதலை பெற விழைவோருக்கு, இஃதன்றி வேறோர் வழிகாட்ட, யாமறியோம் என்றன்றோ, தம்பி! இதுபோது, விடுதலைப் பெற்று வீரக்கோட்டம் சென்று இடம்பெறும், நாடுகள் நமக்குக் கூறிடும்.
தம்பி! விடுதலைபெற்ற நாடுகள், பேசிடக் கேட்டால் வீரம் கொப்புளிக்கத்தான் செய்யும், என்கிறாய்-உன் புன்னகை அதனைத் தான் செப்புகிறது. ஆயின், மற்றொன்றைக் கவனித்தனையோ? வீரம் கொப்புளிக்கச் செய்யும் உரையாற்றிடத் தக்க நிலைபெற்ற இந்த நாடுகள், இதோ அகம் காணீர், புறம் பாரீர்! தொல்காப்பியம் காண்மின்! திருக்குறளைப் பெறுமின்! என்று கூறிட இயலுமோ, எனின், இல்லை என்றுதான் கூறவேண்டும்.
எனினும், நமது தாயகம், வீரக்கோட்டமாகத் திகழ்ந்தது இன்று? எண்ணிடவே, வெட்கமாகவன்றோ இருக்கிறது!!
எத்துணை எத்துணை வீரக்காதைகள், உள்ளன நந்தமிழகத்தின் தனிச்சிறப்பினை விளக்கிட<noinclude></noinclude>
sg5tptxgop1t47aere6jpeenko9u8nq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/269
250
641897
1928688
1927922
2026-04-30T06:56:47Z
Rabiyathul
5890
+ மேலடி
1928688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||245}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
245
எத்தனை எத்தனை மாற்றார்களை, மண்டியிடச் செய்தனர் நம் முன்னோர்!!
எங்கெங்கு படைஎடுத்துச் சென்றனர், பகை முடித்து வென்றனர்!
இன்றும், அந்த வீரக் காப்பியங்களைப் படிக்கப் படிக்க, இனித்திடக் காண்கிறோம்! பொருள் விளக்கிட, பொறி பறக்கும் கண்ணினராகி நிற்கிறோம்!
தம்பி! ஓசை கேட்டாலே, விசை ஒடிந்த தேகத்திலும் வீரம் வந்து சேரும்! கூறட்டுமா.....
விடவிகள் மொடுமொடு விசைபட முறிபட ஏற்பட நெறிபடவே! அடவிகள் பொடிபட, அருவிகள் அனல்பட, அருவரை துகள்படவே.
ஓசை கேட்கும்போதே. பெரும் படையொன்று எதிர்ப்பட்ட தனைத்தையும் அழித்தொழித்தபடி, பாய்ந்து செல்வது, தெரிகிறதல்லவா?
மொடு மொடுவென்று, மரங்கள் முறிந்து விழுகின்றன, படைகள் பாய்ந்து வருவதால், அடவிகள் பொடிபடுகின்றன; மலைகள் தூளாகின்றன, அருவிகள் நெருப்பாறாகின்றன.
இது தம்பி! கலிங்கப்படை! தமிழ் மறவரின் படையினைத் தடுத்து நிறுத்தப் பாய்ந்து வருகிறது. ஆனால் தமிழரின் பெரும் படையோ, தமிழகத்தைக் கடந்து கலிங்கம் செல்கிறது. படையுடன் செல்வோமா- பாடல் படித்தேனும்!
பாலாறு, குசைத்தலை, பொன் முகரிப் பழஆறு, படர்ந்து ஏழு கொல்லி எனும் நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும் நதி ஆறு கடந்து நடந்து, உடனே
வயலாறு புகுந்து, மணிப்புனல் வாய் மண்ணாறு, வளம் கெழு குன்றி எனும் பெயலாறு, பரந்து நிறைந்து வரும் பேர் ஆறும் இழிந்து, அது பிற்படவே கோதாவரி நதி, மேலாறொடு குளிர் பம்பா நதியொடு சந்தப் பேர் ஓதாவரு நதி ஒரு கோதுமையுடன் ஒலி நீர் மலிதுறை பிற காக.<noinclude></noinclude>
pjq33zdkzjvl5aikyub8ymu7dhpxc6i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/270
250
641898
1928689
1927923
2026-04-30T06:57:18Z
Rabiyathul
5890
+ மேலடி
1928689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|246||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>246
‘திராவிட நாடு' இதழில்
இப்படி, தம்பி! தமிழர் பெரும்படை, ஆறு பல கடந்து, அடவி பல நடந்து, கலிங்கப் படையைத் தாக்குகிறது. சோளத்தட்டுகள் போன்றாருடன் அல்ல. போர்! மாற்றார், வீரமே புலியுடன் புலி போரிடுவது போல! மலையுடன் மலை மோதுதல் போல!! அந்தப் போரிலே,
குருதியின் நதிவெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே கரி துணிபடும் உடல் அடுக்கியே கரை என இருபுடை கிடக்கவே
இரத்த வெள்ளம்-ஆறு போல! வீழ்ந்த வெண் குடைகள் மிதக்கின்றன, நுரைபோல! ஆறு கரை புரண்டோடாது தடுத்தது என்னையோவெனின், வெட்டுண்ட யானைகளின் உடலங்கள் கரைபோல அமைந்துவிட்டன- அதனால்!!
இத்தகைய பெரும்போரில், தமிழர் வெற்றியினைப் பெற்றனர் – கலிங்கத்துப் பரணி, அந்தச் சிறப்பினைச் செப்புகிறது.
அந்த வீரத் தமிழ் மக்கள்தாம். நாம்! ஆம்! இன்று வடபுலத்து பேரரசுக்கு உட்பட்டுக் கிடக்கும் அடிமைக்காடு!
கொற்றம் இழந்தோம், எனினும், மொழி வளத்தை இன்னும் இழக்காதிருப்பதால், அந்த நாளில் நம்மனோர் வாழ்ந்தது எத்துணைச் சிறப்புடன் என்பதனை, ஓரோர் வேளை அறிந்திடவேனும், வாய்ப்புக் கிடைக்கிறது.
அந்த வாய்ப்பினைத் தக்க முறையில் பயன்படுத்தித் தன்மான உணர்ச்சி பெற்றுத், தனி அரசு கேட்டுப் பெறும் திறம் பெற்று விடுவோமே, என்பதனால், தமிழ்மொழி தனித்தியங்கும் நிலையினைக்கூடக் குழி பறித்துப் புதைத்திடத் திட்டமிட்டுப் பணிபுரி கின்றனர்; அவர்தரும் சுவைமிகு திண்டி உண்டு கிடக்கும் திம்மப்பரோ, மொழியிலே என்ன இருக்கிறது, 'திரு' என்று கூறிடுவதால் என்ன உயர்வு, ஸ்ரீ என்றுரைத்தால் என்ன இழுக்கு என்று கூறுகின்றனர்.
மலாய் நாடு. இதுபோன்ற உணர்ச்சியற்ற தன்மையில் இல்லை. ஞோஞா என்று வானொலி பேசுகிறது.
மலாய் மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்றித் தீர வேண்டும் என்று துங்கு ரஹிமான் உறுதி காட்டுகிறார். இங்கோ, மொழியில் என்ன இருக்கிறது என்று பேசிக் குழைகிறார்கள், பதவிபெற்றுப் பசி தீர்த்துக்கொள்ளும் போக்கினர்.<noinclude></noinclude>
l8wqolgq8m8zng22wmmqfyogrd4zov4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/271
250
641899
1928690
1927924
2026-04-30T06:57:49Z
Rabiyathul
5890
+ மேலடி
1928690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||247}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
24/
ஆனால், அத்தகைய போக்கினரின் தொகையும் மிகக் குறைவு; அவர்பால் மக்கள் கொண்டுள்ள வெறுப்போ மிக அதிகம்.
இன்று, தமிழ்மொழியின் துய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலே நாட்டம் காட்டாத நல்லிளைஞன் இல்லை எனலாம்.
மொழி, இனத்தின் பண்பையும், நாட்டு வரலாற்றினையும் எடுத்துக்காட்டி, வீரம் ஊட்டிடவல்ல தாய் என்பதை, தன்மை மறவாதார் அனைவருமே, அறிந்துள்ளனர்.
தனி நாடு, தனி அரசு என்று குறிக்கோள் கொள்ளாதவர்களும் கூட, தனிமொழி, தாய்மொழி என்ற உணர்ச்சியை மதித்திடக் காண்கிறோம்.
மொழிவளமேகூடப் பெற்றிராத நாடுகள் பல, பேரரசுகளின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, தனி அரசுகளாகித் தரணிக்கோர் அணி என விளங்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்திலே அமர்ந்து, அவனிக்கோர் புதிய பாடம் அளித்திடக் காண்கிறோம்.
இந்த நிலையில், தம்பி! நாம் நமது மொழி, இனம், நாடு, அரசு என்று பேசுவதும், உரிமை கொண்டாடுவதும், அந்த உரிமை யினைப் பெறத் திரண்டெழுவதும், தவறாமோ? அங்ஙனம், கூறிடும் குறைமதி யாளர்கட்கு, மலாய் வானொலி ஒலிபரப்பும் 'ஞோஞா' எனும் சொல்லேனும், நல்லறிவு கொளுத்தட்டும்.
25.9.60
அண்ணன்,
அண்ஐதுஸ்<noinclude></noinclude>
f0may9o5dl4uuj85thdv7wpth80afan
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/272
250
641900
1928691
1927925
2026-04-30T06:58:19Z
Rabiyathul
5890
+ மேலடி
1928691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|248||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கடிதம் : 120
தம்பி!
ஒன்றாகக் கூடி,
இன்பத் திராவிடம் தேடி!
தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பு-
சாலமன் வெற்றி-
கழகத் தோழர்களுக்கு அறிவுரை.
புரிகிறது, புரிகிறது, உன் குறும்புப் புன்னகை. எப்படி அண்ணா எமது திறமை!! தம்பிகள் இருக்கிறார்கள் எதையும் தாங்கிட! அறிவாற்ற லிருக்கிறது அவர்களிடம் நிரம்ப; எதனையும் செய்து முடிக்க! எனக்கென்ன குறை! எதையும் அவர்களைக் கொண்டே செய்து முடிப்பேன் என்றெல்லாம் கூறி, நிம்மதியாக, ஓய்வாக, இருந்துவிடலாம் என்றெல்லவா எண்ணிக் கொண்டிருந்தாய். பார்த்தனையா. இப்போது, பிடித்திழுத்து வந்து இருக்கையிலே அமர்த்திவிட்டோம், பொதுச்செயலாளராக்கிட்டோம்! என்று கேட்கிறாய், குறுநகை மின்னிட, வசமாகச் சிக்கிக்கொண்டு விட்டேனே, நான். அன்புக் கயிற்றினாலே பிணைத்துவிட்டாய்! நீ ஆட்டி வைக்கிறபடி ஆடித்தீர வேண்டியவனாகி விட்டேன். வேறென்ன முடிகிறது என்னால்... ஆண்டு பல உழைத்தோம். கள்ளமின்றி, உள்ள திறமத்தனையையும் ஒப்படைத்துவிட்டு; நிலைமையிலே மகிழத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனித் தம்பிகளிலே எவரேனும் ஒருவர், மற்றவர்களின் மகிழ்ச்சி கலந்த ஒத்துழைப்பைப் பெற்றுத், தானையினை நடாத்திச் செல்லவேண்டும் என்றுதான், சொன்னேன். 'தவம் கிடந்தேன்' என்றே கூறலாம். ஆனால்.....
மீண்டும் 'சுமைதாங்கி' யாக்கப்பட்டு விட்டேன்!! விடுவதாக இல்லையே, நீயும் உன் போன்றாரும்.
குன்றெடுக்கும் நெடுந்தோள் எனக்கு இல்லை. எனினும், என் தோளின்மீது பொறுப்புகளை எடுத்துவைத்துச், சுமந்திடச் சொல்வதிலேயோ, உனக்கோர் தனிச்சுவை ஏற்பட்டுவிடுகிறது; நான் என்ன செய்வேன்? தாங்கிக்கொள்கிறேன்.
என்னைப் பிடித்திழுத்து இருக்கையிலே அமர்த்துகிறார்களே. ஏனோ நமக்கு இனியும் இந்த இக்கட்டு என்றெண்ணித் தம்பி! நான் இடர்ப் பட்ட நேரத்தில், 'ஏனண்ணா! வீண் கலக்கம், எழுந்து நில், எம்முடனே!!<noinclude></noinclude>
q6vqlau9l7uvuq7eu6lvkff5b4xlk8o
1929010
1928691
2026-04-30T11:04:42Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம் : 120
தம்பி!
ஒன்றாகக் கூடி,
இன்பத் திராவிடம் தேடி!
தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பு-
சாலமன் வெற்றி-
கழகத் தோழர்களுக்கு அறிவுரை.
புரிகிறது, புரிகிறது, உன் குறும்புப் புன்னகை. எப்படி அண்ணா எமது திறமை!! தம்பிகள் இருக்கிறார்கள் எதையும் தாங்கிட! அறிவாற்ற லிருக்கிறது அவர்களிடம் நிரம்ப; எதனையும் செய்து முடிக்க! எனக்கென்ன குறை! எதையும் அவர்களைக் கொண்டே செய்து முடிப்பேன் என்றெல்லாம் கூறி, நிம்மதியாக, ஓய்வாக, இருந்துவிடலாம் என்றெல்லவா எண்ணிக் கொண்டிருந்தாய். பார்த்தனையா. இப்போது, பிடித்திழுத்து வந்து இருக்கையிலே அமர்த்திவிட்டோம், பொதுச்செயலாளராக்கிட்டோம்! என்று கேட்கிறாய், குறுநகை மின்னிட, வசமாகச் சிக்கிக்கொண்டு விட்டேனே, நான். அன்புக் கயிற்றினாலே பிணைத்துவிட்டாய்! நீ ஆட்டி வைக்கிறபடி ஆடித்தீர வேண்டியவனாகி விட்டேன். வேறென்ன முடிகிறது என்னால்... ஆண்டு பல உழைத்தோம். கள்ளமின்றி, உள்ள திறமத்தனையையும் ஒப்படைத்துவிட்டு; நிலைமையிலே மகிழத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனித் தம்பிகளிலே எவரேனும் ஒருவர், மற்றவர்களின் மகிழ்ச்சி கலந்த ஒத்துழைப்பைப் பெற்றுத், தானையினை நடாத்திச் செல்லவேண்டும் என்றுதான், சொன்னேன். 'தவம் கிடந்தேன்' என்றே கூறலாம். ஆனால்.....
மீண்டும் 'சுமைதாங்கி' யாக்கப்பட்டு விட்டேன்!! விடுவதாக இல்லையே, நீயும் உன் போன்றாரும்.
குன்றெடுக்கும் நெடுந்தோள் எனக்கு இல்லை. எனினும், என் தோளின்மீது பொறுப்புகளை எடுத்துவைத்துச், சுமந்திடச் சொல்வதிலேயோ, உனக்கோர் தனிச்சுவை ஏற்பட்டுவிடுகிறது; நான் என்ன செய்வேன்? தாங்கிக்கொள்கிறேன்.
என்னைப் பிடித்திழுத்து இருக்கையிலே அமர்த்துகிறார்களே. ஏனோ நமக்கு இனியும் இந்த இக்கட்டு என்றெண்ணித் தம்பி! நான் இடர்ப் பட்ட நேரத்தில், 'ஏனண்ணா! வீண் கலக்கம், எழுந்து நில், எம்முடனே!!<noinclude></noinclude>
7u7619anpok62fdz0obbxdrlqxwf70w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/273
250
641901
1928692
1927926
2026-04-30T06:58:49Z
Rabiyathul
5890
+ மேலடி
1928692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||249}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
249
என்று கூறுவதுபோலத், தம்பிகள் நாவலரும் சம்பத்தும், கருணாநிதியும், மதியும், நடராசனும் அன்பழகனும், சிற்றரசும், எனைச்சுற்றி வளையம் அமைத்துக்கொண்டனர் - என்செய்வேன்! -தம்பி ஓடிடவா முடியும்-உம்! என்று இழுத்தேன், உட்கார்! என்றனர், வேறென்ன செய்ய இயலும் பொறுப்பேற்றுக் கொண்டேன்! அல்ல! அல்ல! பொறுப்பேற்றுக் கொண்டேன் என்று கூறிவிட்டேன்! பொறுப்புகளை நிறைவேற்றிட இயலும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை-ஏனொவெனில்- வீரர்களாம் என் தம்பிமார்கள், ஒவ்வொருவர் ஒவ்வோர் துறையிலே அரசோச்சி, அருந்திறன் காட்டிப் பெறப்போகும் பலன்களை, நாட்டு மக்களைக் கூட்டிக் காட்டி மகிழத்தானே, நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன்! அவர்கள் செய்தளிக்கும் அணிபணியினை, அனைவரும் கண்டு மகிழ, கொண்டுவந்து காட்டிட, நான் 'பொது'ச் செயலாளன் ஆக்கப்பட்டிருக்கிறேன். இதை எண்ணும்போது, முதலில் எழுந்த திகைப்புத் தகர்ந்து தித்திப்புத் தட்டுகிறது.
தம்பி! அலைகடலில் கிடக்கிறது முத்து. மண்ணடியில் கிடக்கிறது தங்கம்! பிறகோ, கைத்திறன், தொழில் நுட்பம் பெற்றோரின் கரம் வந்தடைகிறது; பிறிதோர் நாள், மனதை மயக்கும் பருவத்தாளின் மார்பினில் புரள்கிறது, மாலையாகி!!
எங்கெங்கு இருந்த பொருள், எவரெவர், எத்தகைய திறம்காட்டிக் கொணர்ந்தனர்-கொண்டுவந்த பின்னர், வண்ணம் வளரத்தக்க வடிவம் பெற்று, ஒன்றுடன் மற்றொன்று பொருத்தமான முறையில் இணைக்கப்பட்டு, பிறகு, இருக்குமிடம் சென்று, எழில் எழிலோடு சேர்ந்துவிடுகிறதல்லவா? அஃதேபோல், பல்வேறு துறைகளிலே, பணிபல புரிந்து, என் தம்பிகள், தேடிக்கொண்டு வந்தளிக்கும், பொன்னும் மணியும், முத்தும் பிறவும், கோர்த்தளித்து, அதனைத் தாயகம் அணிந்து, பெருமிதம் கொண்ட நிலையில் இருந்திடக்கண்டு, மகிழ, நீயும் நானும் இருக்கிறோம். மூழ்கியும் கல்லியும், முறியடித்தும் பகை முடித்தும், அவர்கள் தேடிக் கொண்டுவந்து அளிக்கும் 'செல்வத்தை' நாட்டுக்குக் காட்டி, 'காணீர்! என்னருந் தம்பிகளின் ஆற்றலை!' என்று கூறி மகிழ்ந்திட, நான். ஆம்! ஆம்! கடற்கரைக் கூட்டத்திலேயே, அதனைத்தான் நான் கூறினேன். அதற்குத் தடை ஏதும் இல்லை என்றே, அவர்தம் முகப்பொலிவும், பொலிவளிக்கும் கண்ணொளியும் காட்டின. மட்டற்ற மகிழ்ச்சி,
திராவிட முன்னேற்றக் கழகம், ஈடுபடும் எந்தக் காரியத்தையும், எடுத்துக்காட்டும் எந்தப் பிரச்சினையையும், மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும், நாடு இன்று கூர்ந்து பார்த்து, 'இதற்கென்ன பொருள்? இது எதைக் காட்டுகிறது? இதற்கு என்ன நோக்கம்? இது<noinclude></noinclude>
l9rgkxq3zdjegn4ctz17xcwyfuxq0qy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/274
250
641902
1928693
1927927
2026-04-30T06:59:19Z
Rabiyathul
5890
+ மேலடி
1928693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|250||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>250
'திராவிட நாடு' இதழில்
எதன் விளைவு?”-என்றெல்லாம், ஆராய்ந்திடவும், உரையாடிடவும் காண்கிறோம்.
எங்கோ, எதுவோ, நடந்தது-என்ற முறையில் அல்ல, ஏன், இது, இவ்வண்ணம், இதுபோல, நடைபெற்றது? என்று, நமது ஒவ்வொரு நடவடிக்கையையும், ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும்.அலசிப் பார்த்திட இன்று, எல்லா அரசியல் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அலசிப்பார்த்து உண்மையை, அந்தக் கட்சிகள் கண்டறிந்து விட்டன, என்று கூறுவதற்கு இல்லை! ஆனால், முயற்சியிலே மட்டும், மும்முரமாக ஈடுபடுகின்றன.
இது, நமது கழகம், இன்று பெற்றுள்ள வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சான்று.
தம்பி! நாம் கவனிக்கப்பட்டு வருகிறோம்-நமது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கவனிக்கப்பட்டு வருகின்றன-என்பதுதான் பொருள். அதிலே தொக்கி நிற்பது, சுவைதரும் மற்றொர் உண்மை, எவரும் அலட்சியப்படுத்த முடியாத நிலையில், இன்று நம் கழகம் இருக்கிறது. அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்-திகிலுடன் சிலர், திடுக்கிட்டுப்போன நிலையில் சிலர், அருவருப்புடன் சிலர், பொறாமை யுடன் வேறு சிலர்-அவரவர், தத்தமது நிலைக்கு ஏற்ற நினைப்புடன் - ஆனால், எவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.:
அடவியில் சென்றுகொண்டிருக்கிறான் ஒருவன்-கதிரவன் களைத்துப் போய், இளைத்துப்போய், மறையும் நேரம்-கால்கடுக்க நடக்கிறான்-சற்றுத் தொலைவில், மரம் அடர்ந்த இடத்தில், சிறு பொறி காண்கிறான்- உற்றுப் பார்க்கிறான்-பொறி பெரிதாகக் காண்கிறான் நடையை நிறுத்திக் கொள்கிறான்-தீப்பந்தங்கள் போலத் தெரிகின்றன-அசைவற்று நிற்கிறான்- புலியின் கண்களே, அதுபோலத் தெரிகின்றன, என்று எண்ணுகிறான்- திகிலன்றோ அவன் நெஞ்சில் தீயெனப்புகும்.
மாலை வேளை! ஆற்றோரச் சோலை! அழகு தமிழ்ப் பாடலை இசைத்தபடி, நடக்கிறான், ஒரு இளைஞன்! யார்? என்றா, கேட்கிறாய்? என்ன தம்பி! நேரம், இடம், கூறினேனே - இதற்கு மேலுமா விளக்கம் வேண்டும்? - சொல்லிவிடட்டுமா அதனையும் கெண்டை விழியாளைக் கண்டு, அவள் தனக்குச் செண்டு தந்து, பின்னர் இன்பம் மொண்டு உண்டிடச் செல்லும் காதலன், போதுமா! - சரி, அவன் செல்கையில், குக்கூ குக்கூ) என்ற ஒலி செவியில் வீழ்கிறது. என்ன செய்வான்? முகமலர்ச்சியுடன், தருக்களைக் கூர்ந்து கவனிக்கிறான். எங்கு ஒளிந்து கொண்டு இன்னிசை எழுப்புகிறது. குயில் என்று கண்டறிய. திகிலுணர்ச்சியா, அவனுக்கு - தித்திப்பு உணர்ச்சி!<noinclude></noinclude>
tkyrimjrc7dzpbmqzbyt6mq83rtyyau
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/275
250
641903
1928694
1927928
2026-04-30T06:59:50Z
Rabiyathul
5890
+ மேலடி
1928694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||251}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
251
அஃதேபோல, அவரவர். தத்தமது நிலைமைக்கு ஏற்ப, எதிர்ப்படு வனவற்றைக் கூர்ந்து கவனிப்பர்.
வழியே கிடக்கும் எருக்கஞ் செடியினையும், எலும்புத் துண்டு களையும், சோளக்கொல்லைப் பொம்மைகளையும், வயல் வளைவாழ் எலிகளையும், கத்திக்கத்திச் செத்த தவளைகளையும், காலில் உதை யுண்டு சிதறிய ஓட்டாஞ் சல்லிகளையுமா, கூர்ந்து கவனிப்பார்கள். உலகம் என்ன அவ்வளவு விவரமறியாதவர்களின் இருப்பிடமாகவா. உளது! இல்லை, தம்பி! நிச்சயம் இல்லை! எதைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும் என்பது, மிக நன்றாக உலகுக்குத் தெரிகிறது-அதிலும் அரசியல் உலகு இருக்கிறதே. அதற்கு இந்தத் துறையில் தனியானதோர் திறமை, மிக வேகமாக வளர்ந்துவிட்டிருக்கிறது.
அத்தகைய அரசியல் உலகம், நமது கழகத்தின் ஒவ்வொரு அசைவையும், நமது பேச்சின், 'அசை'யைக்கூட, மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது; காரணம் தேடுகிறது, பொருளை ஆராய்கிறது, இயன்றால், எவ்வழியில் அதனைப் பயன்படுத்தி, நம்மை வீழ்த்தலாம், என்ற நினைப்புடன்.
நெடுந்தொலைவிலிருந்து வர இருக்கும் எதிர்ப்படை கண்ணுக்குத் தெரியுமுன்பே, தூசி கிளம்பிடக் கண்டதும், படை வருகிறது, என்பதனைக் கண்டறிய முடிகிறதல்லவா? மண் காற்று அடிக்கிறது-அதனைப்போய் இத்துணைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டுமா, என்று கருதுபவன், அந்தத் துறையிலே ஓர் மதியிலி யன்றோ!
அதுபோலத்தான், நமது ஒவ்வொரு நடவடிக்கையும், மாற்றாரின் கண்களிலே, நடவடிக்கை உருவாகு முன்பே, தூசி அளவாக இருக்கும்போதே, தெரிந்துவிடுகிறது.
.
எனவே, தம்பி! நாமும் நமது நடவடிக்கைகள், திருப்பங்கள், முடிவுகள், முயற்சிகள், முகாம் அமைப்புகள் என்பவைகளை, எதிரிகள் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப, நமது செயல்முறைகளை மட்டுமல்ல, பேச்சு முறை களைக்கூட செம்மையானவையாக மட்டுமல்ல, ஆற்றல் மிக்கவையாக மட்டுமல்ல, எவரும் பாராட்டத்தக்கவையாக மட்டுமல்ல, எதிரிகள் கண்டு, இதற்கு இதுவா பொருள் யாமறி யாமற் போனோமே? இதற்கா இந்த நடவடிக்கை, எமக்கு முதலில் விளங்காமற் போய் விட்டதே? இவ்விதமாகவா முடிவு செய்தனர், இது திடீர் நடவடிக்கையாக வன்றோ இருக்கிறது? - என்று எண்ணித் திணறத் தக்க விதமாகக், கூடுமானவரையில் அமைத்தல் வேண்டும்-ஆனால், இது இயற்கையானதாகவும் பலனளிக்கத்தக்கதாகவும், வளர்ச்சியைக் காட்டுவதாகவும், இருத்தலும் வேண்டும்.
(மாநில
ழைய<noinclude></noinclude>
ro5bk0fj986vbwhnxh0778y3061ql5q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/276
250
641904
1928695
1927929
2026-04-30T07:00:20Z
Rabiyathul
5890
+ மேலடி
1928695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|252||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>252
'திராவிட நாடு' இதழில்
பரப்பரப்புணர்ச்சிக்காகப் பலனளிக்காத் திட்டங்களை மேற் கொள்வதும் தீங்கு பயக்கும்; அமைதியே ஆனந்தம் என்ற போக்குக்காகச் சொரணையற்றுக் கிடப்பதும் அழிவுதரும். தேய்வினை உண்டாக்கும்.
கரிப்படைகள் மட்டுமே இருந்தால் போதும், வலிவுமிக்க கோட்டை களையும் தூள் தூளாக்கலாம் என்றெண்ணிப் பிற வகைகளை அமைக்காதிருப்பவன் வெற்றியா பெறுவான்?
கேடயம் ஏந்தாத வாள் வீரன் உண்டோ?
திறமைகள் பலப்பல-அவைகளை இணைத்திடும் முறையோ மிகப் பெரியது. மிக மிகத் தேவையானது.
இன்றல்ல நேற்றல்ல, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப்பேருண்மையை, நமது நாவலர் விளக்கிக் கூறிடக் கேட்டு இன்புற்று இருப்பாயே!
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.
அஃதேபோல, நமது கழகத்துக்குக் கிடைத்துள்ள ஒப்பற்ற, ஓய்வறியா வீரர் குழாத்திலே, பல்வேறு துறைகளிலே, பார்மெச்சும் தனித்திறமை பெற்றோர் உளர் அவர் ஒவ்வொருவரிடமும், அவரவரின் தனித் திறமையினைக் காட்டிக், கழகத்துக்கு வலிவு ஈட்டிடச் செய்திடும் நோக்குடன், ஒவ்வோர் துறை ஒப்படைக்கப்படல் வேண்டும்-அவர்களே தேர்ந்தெடுத்தல் எனினும், சாலச்சிறந்ததே-அவரவர் தனித்திறமை யினைக் காட்டிடத், தமக்கேற்ற துறையினிலே ஈடுபட்டு, ஈட்டிடும் கூட்டுச் சக்தியினை, பொது வலிவினை, வடித்தெடுத்து, உம்மிடம் தந்திட, நான்-அந்த நோக்கத்துடனேயே, என்னை 'இருக்கைக்கு' இழுத்து வந்துள்ளனர், என்று உளமார நம்புகிறேன்.
தம்பி! கரிப்படை வலிவளிக்குமா, கரிப்படை வெற்றி தேடித் தருமா, என்பது பற்றிக் காலாட்படை பேசியபடி காலத்தை ஓட்டினால், களத்திலே வெற்றியா, கிட்டும்?
அது போலவே, நமது கழகத்தவரில், சிலரோ பலரோ, திறமைகளிலே, எந்தத் திறமை பெரிது, உயர்வுடையது, எது முன்னணி, எது மூன்றாமணி என்று ஆராய்வதிலும், உரையாடிக் கிடப்பதிலும், ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தால், திறமைகளைக் காட்டிக் கழகத்துக்கு வலிவு ஈட்டிட, மனமும் வராது, திறமும் குறையும். நேரமும் கிடைக்காது.
திறமைகளின் வகை வளர வளர, இந்தப் பிரச்சினையில், சுவைமிகு சிக்கல் நிச்சயம் ஏற்படும் - அதனை எத்துணை பொறுப்புணர்ச்சி<noinclude></noinclude>
k3eyh960k77j74s53hraah7zhr62jdr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/277
250
641905
1928696
1927930
2026-04-30T07:00:50Z
Rabiyathul
5890
+ மேலடி
1928696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||253}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
253
யுடன், தன்னல மறுப்புணர்ச்சியுடன், தீர்த்துக்கொள்கிறோமோ. அதைப் பொறுத்தே. நமது வெற்றி உளது.
சென்ற கிழமை, இரு நாட்கள், தொடர்ந்து ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன்.
ஆமாம், தம்பி! ஏன் திகைக்கிறாய்? கழகத்திலே பெரிய பிளவாமே! குழப்பமாமே! அப்படிப்பட்ட நேரத்திலே, படக்காட்சிக்கு செல்வதா, கவலையில்லாத மனிதனா நீ!-என்று தானே, கேட்கிறாய் தம்பி! இதிலிருந்தே, நீ தெரிந்துகொள்ளவேண்டும், பெரிய பிளவு-குழப்பம்- என்பன மாற்றாரின் மனதிலே மூண்ட அற்ப ஆசைகளின் ஓசைகள்!!
எனவேதான், நான் படம் பார்க்கச் சென்றேன்-அங்கும் பாடம் தேடிப் பெறும் பக்குவம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. ஆதலால்.
மதத் தொடர்புடைய கதை-சாலமனும் ஷீபா நாட்டு அரசியும் என்ற படம்.
சாலமன், எகிப்து நாட்டிலிருந்து கிளம்பிவந்த மிகப்பெரும் படையால் தாக்குண்டு, தன் படை சின்னாபின்னமாகிப் போனது கண்டு, மனம் வெதும்பிக் கிடக்கிறான்.
.
இரவு, இருளை ஏவி, அவனையும் அவன் படையினரையும் அரவணைத்துக் கொள்ளச் செய்கிறது. துக்கம் துளைக்கிறது; தூக்கம் இல்லை.
காலையில், சாலமன் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறான்-களம் சென்றாகவேண்டும்-காற்றெனக் கடுகிவரும் எதிரிப் படையுடன் போரிட-புயலின் வேகம் எதிரிப் படைக்கு - கிளைகள் முறிந்த மரம் போல், இவன் படை.
எதிர்ப்புறம், ஓர் ஒளிப்பிழம்பு, ஊடுருவிக் கிளம்பிடக் காண்கிறான்.
இருளைக் கிழித்துக்கொண்டு, ஞாயிறு எழுந்தான்-ஞாயிற்றின் ஒளியின் இடையிலேயே, தனிப் பளபளப்புடன், மற்றோர் ஒளி, காண்கிறான். வியந்து, இதற்குக் காரணம் யாது என்று பார்க்கிறான் அவனிடமிருந்த, கேடயத்தின்மீது கதிரவன் ஒளிபடுவதால், காண்போரின் கண்களைக் கூசிடச் செய்திடும் ஒளிப்பிழம்பு உமிழப் படுகிறது என்பதறிந்தான்.
படையினரை விளித்துக் கேடயங்களைப் பளபளக்கச் செய்து வைத்துக்கொள்ளச் செய்தான்.<noinclude></noinclude>
g1t3m6nmrpn475mwy9josq9whw6am6r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/278
250
641906
1928697
1927932
2026-04-30T07:01:20Z
Rabiyathul
5890
+ மேலடி
1928697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|254||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>254
'திராவிட நாடு' இதழில்
பாய்ந்துவந்த எகிப்தியப் படை, குன்றின் முகடு வரும் வரையில் காத்திருந்து, சாலமன் படையினர், தமது கேடயங்களைக் கதிரவன் ஒளி அவைமீது விழும் வண்ணம், ஏந்தி நின்றனர் - ஒளிப்பிழம்புகள், ஆயிரமாயிரம் கிளம்பின-எதிரிப் படையினரின் கண்களைத் துளைத்தன! வாளுக்கு வாள்! வேலுக்கு வேல்! இது போர்முறை! ஆனால், இங்கோ, ஒளிப்பிழம்புகள் தாக்குகின்றன; கண்கூசுகிறது! வழி தெரியவில்லை; பாதை தவறுகிறது! ஒளிப் பிழம்பைக் காண மாட்டாமல், வீரர்கள் விழிகளை இறுக மூடிக் கொள்கிறார்கள். குதிரைகள் மிரண்டுடோடு கின்றன, வழி தவறி. படையிலே குழப்பம்| கிலி! விவரமறியாததால் திகில்! படை, மலை முகடு சென்று, படுகுழியில் வீழ்கிறது-சின்னா பின்னமாகிறது. தாக்கமாலேயே, தாக்கவந்த பெரும்படையை வீழ்த்து கிறான் சாலமன், அறிவாயுதம் கொண்டு. பளபளப்பான கேடயம், கூர்மையான வாளேந்திய குதிரை வீரர்களை வீழ்த்திவிடுகிறது. ஒளிப்பிழம்பு கிளம்பிப் பெரும் படையைப் பிளந்தெறிகிறது.
தம்பி! கேடயத்தின் பளபளப்பை, ஒளிப்பிழம்பாக்கி, எதிரிப் படையை முறியடிப்பது, சாலமன், செய்துகாட்டும் வரையிலே போர் முறைகளிலே, ஒன்று அல்ல! நிலைமை, ஒரு புதுமுறையை அளித்தது; வெற்றியும் கிடைத்தது.
நாமும் மிகப் பெரிய படையினைத் திரட்டிவைத்துக் கொண்டுள்ள, காங்கிரஸ் கட்சியைக் களத்திலே சந்திக்க வேண்டும்-ஆற்றல் மிக்கது நமது படை, எனினும், அவர்கள் திரட்டிக் காட்டத்தக்க அளவு, மிகப் பெரிதாகவே அமையும், அறிந்திருக்கிறோம்.
இத்தகைய போரில் நாம், முறைகள், அணிகளின் வரிசைகள், திறமைகளின் வகைகள், அவைகளிலே உள்ள ஏற்றத்தாழ்வுகள். இவை குறித்துப் பேசிக்கிடப்பது, நேரக்கேடு, திறமை துருப்பிடிப்பது என்பவை களை, நாமே வலியத்தேடிப் பெற்றுக்கொள்ளும் தற்கொலைத் திட்டமாக முடியும்.
மாற்றார், நமது முறை, முகாம் வரிசை,. திறமைகளின் வகை, என்பனபற்றி அறிந்திடவும், அறிவதால் கலாம் விளைவித்திடவும், வழி ஏற்படச்செய்து வைப்பது, நமது படை வரிசையை நாமே, நம்மையும் அறியாமல், காட்டிக்கொடுத்து விட்டுப், பிறகு கண் கசக்கி. நிற்கும் கருத்தற்றோர் ஆக்கிவிடும்.
முறைகளிலே, நிலைமைகளுக்கேற்பத் திருப்பங்கள், திருத்தங்கள், புதுமைகள் கண்டிடத் தெரிந்தாலன்றி, கேடயம் கக்கிய ஒளியினைக் கொண்டே, எதிரிப்படையினை அழித்தொழித்துச் சாலமன் பெற்ற வெற்றிபோல, நமக்கு வெற்றி கிட்டுவதும், இயலாததாகிவிடும்.<noinclude></noinclude>
0h4psh5yzgr6itpjfmu0obtfqhc2hld
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/279
250
641907
1928698
1927933
2026-04-30T07:01:58Z
Rabiyathul
5890
+ மேலடி
1928698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||255}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
255
இப்போது, சொல்லு தம்பி! நாம் மேற்கொண்டுள்ள குறிக்கோள் வெற்றிபெற வேண்டுமானால், நாம் எத்துணை விழிப்பாக இருத்தல் வேண்டும் என்பது புரிகிறதல்லவா?
இனி, ஒரு விடுதலை இயக்கம், தன் குறிக்கோளில் வெற்றி பெற, என்னென்ன வகையான திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும், எண்ணிப்பார். அந்தத் திறமைகளைத் தமது தனித் திறமையாகப் பெற்றுத் திகழும், தம்பிமார்களின் முகாமல்லவா, நமது கழகம் என்பதையும் நினைத்துப்பார் -அப்போதுதான் நமது கழகத்தின் அளவு மட்டுமல்ல, இயல்பு விளங்கிடும்-ஏற்றம் தெரிந்திடும்.
மாற்றார், மேடை தவறாமல், சிக்கலான கேள்வியை எழுப்பி, நமக்குத் தொல்லை தருகிறார்களே? என்ன கூறி, இந்தச் சிக்கலை அறுப்பது என்று எண்ணிடும்போது தம்பி! சிற்றரசு உன் நினைவிற்கு வருகிறாரல்லவா? ஆமாம்! அவர் பேசினால், இந்தச் சிக்கலையே சின்னாபின்னமாக்கி எறிவார் என்று தோன்றுகிறதல்லவா?
கேட்பவர்கள் கிடுகிடுக்க, எதிரிகள் படை நடுங்க, நமது படை எக்களிக்க, சம்மட்டி அடி கொடுப்பது போல, மொழியும் விழியும் உறுதியையும் உணர்ச்சியையும் கொட்டிடத் தக்கபடி பேசினால், மாற்றார் மமதை மடியும், என்ற எண்ணம் தோன்றும்போது, சம்பத் தெரியவில்லையா உன் கண்முன்பு!
நெஞ்சம் நெக்குருக, இதயம் விம்மிட, கண்களில் நீர் துளிர்த்திட, நரம்புகள் புடைத்திட, ஓசை நயமும் சொல்லடுக்கு அழகும் துலங்கிடப் பேசி, நமது கொள்கைவழி, கேட்போரை ஈர்த்திடவேண்டும் என்று எண்ணும்போது, கருணாநிதியைக் காண்கிற தன்றோ உன் மனக்கண்.
ஆரியப்படை கடந்தானின் ஆற்றல், இமயம் முட்டிய பெரும் படை நடாத்தியவனின் பெருமை, சாவகம் யவனம் சிங்களமெனும் பலநாடு சென்று பரணி பாடிய அடலேறுகளின் அஞ்சா நெஞ்சம், பரணி பாடித் தரணியாண்ட பைந்தமிழ் வேந்தரின் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறந்திட்ட மாட்சி, இவைதமை, முகபடாம் போர்த்த யானை மீதமர்ந்து, முரசொலித்துச் செல்லும் ஆணையாளன் போலவும், இன்று இயற்றும் இன்கவிதை என்றும் நிலைத்து நின்று அறிவு புகட்டும் என்று அறிந்து கவிதை ஆர்த்திடும் அருந்தமிழ்ப் புலவோன் போலவும், தமிழழகும் இலக்கியச் செறிவும் மிளிர, இனிமை துள்ளிட, ஏறுநடையில் பேசினால், தமிழகத்தின் தொன்மை அறிந்த கற்றோர் களிப்படைவர். கழகத்தின் மாண்பறிவர், என்று எண்ணிடும் வேளையிலே, நாவலர்<noinclude></noinclude>
mflxszc9qhbihoibiv2m85waypuw01v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/280
250
641908
1928699
1927934
2026-04-30T07:02:33Z
Rabiyathul
5890
+ மேலடி
1928699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|256||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>256
'திராவிட நாடு' இதழில்
நெடுஞ்செழியன், நினைவிலே வந்து நின்று, அன்புகெழுமிய தோழர்களே! தோழியர்களே! என்றழைக்கும், பாங்கு தெரியாமலிருக்குமா?
பிரச்சினைகளை அலசி, எளிதாக்கித் தொடர்புடையன, தொக்கி நிற்பன, துணை வருவன, என்னும் வகையினதாக கருத்துக்களையும் பிணைத்து. ஆசிரியர்போல எடுத்துக்கூறிக், கேட்போர்க்குத் தெளிவளித்து, நம் பக்கம் அவர்தம் ஆதரவைத் திரட்டிட வேண்டும், என்று எண்ணம் தோன்றும்போது, பல ஆண்டுகள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் பணிபுரிந்து. இன்று விடுதலை இயக்கத்தின் வீரர் கோட்டத்திலே திகழும். அன்பழகன் அழைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா?
கட்டையாய் குட்டையாய் உள்ள இந்த இளைஞன், கல்லுரியில் படித்த நாள் தொட்டு, காண்போரைக் கண்களால் கவ்வி, எண்ணங் களை எடுத்து இயம்பும்போது, கேட்போர், ஏற்றுக்கொண்டனர் என்று அறிந்தாக வேண்டும் என்ற இயல்புடன்; நிறுத்தி நிறுத்திப் பேசி, உலைக்கள நெருப்பு வளரட்டும் என்று காத்திருந்து, தழல் கொழுந்து விட்டதும் இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி எடுத்துச் சம்மட்டி அடி கொடுக்கும் பான்மை போல, எண்ணி எண்ணித் துவக்கி, பின்னர், மேலை நாட்டு வரலாற்றுச் சம்பவங்களைப் பின்னி, கொள்கைக் கனலைச் சொற்களாக்கித் தருகிறான்-இத்தகு திறமுடையான் இளைஞர் தமை நமது இயக்கம் ஈர்த்திடத்தக்க வழிமுறை கொண்டான், என்றன்றோ மதியழகனைக் குறித்து, எண்ணுவீர்!
நாடு நமது ஆகாதிருப்பதால் வந்துற்ற நலிவு, நாடாள்வோர் எதனையும் நன்முறையில் கவனியாது இருப்பதால் ஏற்படும் இன்னல், வடவரிடம் சிக்கியதால் வந்துற்ற சீர்கேடு. இவை குறித்துக், கேட்போர் மனதில் குமுறல் எழவேண்டும் எனில், உருக்கமும் உழைப்பாளியின் உள்ளம் அறிந்த தன்மையும், வேதனையைக் காட்டிடும் குரல் கம்மலும், எளியார்க்கே இக்கழகம் என்பதனை எடுத்துக் காட்டிடும் தோற்றமும். கொண்ட முறையில் பேசிப், பாட்டாளிகள், நமக்கேற்ற பாசறை, தி.மு.க. என்று உணரச் செய்தல் வேண்டும். என்ற எண்ணம் எழும்போது, நடராசன் என்று நினைவு செல்கிறதன்றோ.
தம்பி! இஃதேபோல, ஒவ்வொருவர், குறித்தும், என் எண்ணத்தைக் கூறப்புகின் ஏடு கொள்ளாது-நாடு மதித்திடத்தக்க நல்ல திறமையினைப் பெற்றிருப்போர், நமது பெரும் படையில், உள்ளனர். நான் என் பணி யினை எளிதாக்கிட உடன் இருந்து உழைத்து வெற்றி தேடிட முனைந்து, இப்போது செயலாற்றும் செம்மல்களை மட்டும், குறிப்பிட்டேன்-மற்றவர் பற்றிக் கூறிட ஏதும் இல்லை என்பதால் அல்ல-ஏட்டில் இடம் இராது என்பதால்.<noinclude></noinclude>
pt1grvio9jnqbvxw7bkai2gcehdemus
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/281
250
641909
1928700
1927935
2026-04-30T07:03:04Z
Rabiyathul
5890
+ மேலடி
1928700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||257}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
257
ஒரு விடுதலை இயக்கம் இதனினும், சிறந்தோர் பாசறையை இவ்வளவு குறுகிய காலத்திலே, பெற்றது இல்லை.
இதனை எண்ணி மகிழவும், இந்த நிலைமையைத் தக்கபடி பயன்படுத்திப் பலன் பெறவும், நாம் ஒவ்வொருவரும் முனைந்து நிற்கவேண்டுமேயன்றி, மாற்றார். நமது முறைபற்றிக் கூறிடும் மருளுரை கேட்டு, மனம் தடுமாறிடப் போமோ!!
பார்! பார்! பயல்கள் நாலே நாட்களில், பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டும், எதிர்த்துக் கொண்டும். திக்காலொருவராக ஓடப்போகிறார்கள்-என்று கூறினாராம், காமராசர்-'தீர்க்கதரிசனம்'- தெரிந்தவர்-முதலமைச்சர் அல்லவா!!
ஆனால், நடந்தது என்ன?
ஆராய்கிறார்களாம், அரசியல் வட்டாரத்தில்-இதன் பொருள் என்ன? நோக்கம் என்ன? விளைவு யாதாக இருக்கும் என்று.
தம்பி! பொதுக் குழுவு எடுத்த முடிவு, மாற்றார்களின் முகாம் களிலே, உலவிக் கிடக்கும், ஒற்றர்கள், உளவாளிகள், அங்கிருந்து கிளம்பிப், பிற இடங்களில் உறவாடிக் கெடுத்திட நினைக்கும் நயவஞ்சகர்கள் ஆகியோர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம்.
ஆயிரத்தெட்டு ஆராய்ச்சிகள் நடத்திக்கொண்டு, அவர்கள் கிடக்கட்டும் - தம்பி! உனக்கு வேலை, நிரம்ப இருக்கிறது - தொடர்ந்து செய்யப்படவேண்டிய பணி.
ஒருவர், முன்பு-இப்போது, அதே பணியினைச் செம்மை யாகவும், வளர்ச்சிக்கு ஏற்ற வண்ணமும் நடத்திச்செல்லப் பலர்! மாற்றம் இவ்வளவே-திருப்பம், இதுதான்.
உள்ள திறமைகள் அவ்வளவையும், திரட்டிப் பயன்படுத்த வேண்டிய நேரமிது.
ஒவ்வொருவரும் ஒவ்வோர் துறைநின்று, முன்நின்று, வழி கண்டு, வல்லமையை ஈந்து, பணிபுரிந்து, பொதுநோக்கம் ஈடேறப் பாடுபடவேண்டிய வேளை இது.
எந்த ஒரு கட்சியிலும், முதல் கட்டத்தில், யார் உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று பிறர் கேட்கக்கூட மாட்டார்கள்?<noinclude></noinclude>
o5alg3t6md2jl8oaf5u5jdwtjqq7wr0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/282
250
641910
1928701
1927936
2026-04-30T07:03:34Z
Rabiyathul
5890
+ மேலடி
1928701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|258||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>258
இன்றும் அதுபோலக் கட்சிகள் பல உள.
'திராவிட நாடு' இதழில்
இரண்டாவது கட்டத்திலே, அலட்சியத்துடனும் கேலிச் சிரிப்புடனும், இவன்தானே உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று கேட்பர்.
மூன்றாவது கட்டம் வந்ததும், யர் உங்கள் கட்சிக்குத் தலைவர், அவரா? இவரா? எவர்? என்று கலாம் விளைவிக்கும் நோக்கத்துடன் கேட்பர்.
நாலாவது கட்டத்தின்போது, கட்சித் தலைமைக்காக அவனும் இவனும் மோதிக்கொள்ளப் போகிறார்கள், அமளி எழப்போகிறது. கட்சி அழியப்போகிறது, என்று ஆரூடம் கணிப்பார்கள்.
ஐந்தாவது கட்டத்தில், எமகாதகப் பேர்வழிகளப்பா இவர்கள். என்னமோ பேதம் என்றார்கள், பிளவு என்றார்கள், குழப்பம் வரும் என்றார்கள், குட்டிக் கலகம் ஏற்படும் என்றார்கள்-கடைசியில் பார்த்தால் எல்லோருமே ஒன்றாகத் திரண்டு நின்று, இதுதான் எமது கட்சி தெரிகிறதா புரிகிறதா, என்று கேட்கிறார்களே, ஏ! அப்பா! சாமான்யப் பட்டவர்களல்ல, இவர்கள்-என்று பேசிக்கொள்வார்கள்.
அதுதான், தம்பி! இது!! நாம், வளர்ச்சி பெற்றிருக்கிறோம், மாற்றார் எதை எதையோ எண்ணி எதிர்பார்த்து, ஏமாந்து, ஏக்கமுற்றுப் போகும் நிலையிலும், அளவிலும், நாம், வளர்ந்திருக்கிறோம்.
ஏமாளிகள், எண்ணிக் கொண்டார்கள், நமது கழகம் பிளவுபடும் என்று - நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போவோம், என்று. நான் நமது கழகத்தைக் குறித்துக் கொண்டுள்ள நம்பிக்கை. நமது உடன் பிறந்தார்கள் பற்றி எனக்குள்ள மதிப்பும் பற்றுப் பாசமும், எத்தகையது என்பதை அவர்கள் எங்ஙனம் அறிய முடியும்?
இருவர் மட்டும் செல்கின்றனரே. ஐந்து நூறுபேர் உள்ள அயலார் கோட்டை சென்று, உரிமை முழக்கமிட, என்ன நேரிடுமோ? எவன் தாக்குவானோ? என்றெண்ணிச், சம்பத்தை, டில்லிக்கு வழியனுப்பி வைத்தபோது, என் கண் கலங்கியதை, மாற்றுக் கட்சி முகாமில் இருந்து கொண்டிருக்கும், 'இடம் பிடித்தான்களால்' எப்படி, உணர்ந்துகொள்ள முடியும்?
கண்ணதாசனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்களாமே! - என்றோர் வதந்தி, மும்முனைப் போராட்டத்தின்போது, சிறை நுழைந்து என் காதினில் நுழைந்ததால், சோற்றுத் தட்டிலே சிந்திய, என் கண்ணீர் பற்றி, மாற்றுக் கட்சியினர் எங்ஙனம் தெரிந்துகொள்ள முடியும்? அந்தக் கண்ணீரின் மதிப்பும் சக்தியும் இன்னது என்றுதான், அவர்களால் எப்படிக் கணித்திட இயலும்!<noinclude></noinclude>
teasuymh2ssd149x9m2artin9lx08et
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/283
250
641911
1928702
1927937
2026-04-30T07:04:05Z
Rabiyathul
5890
+ மேலடி
1928702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||259}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
259
நாடகமாடுவதை இயக்கத் தொண்டாகவும், தொழிலாகவும் கூடக்கொண்டு கருணாநிதி இருந்த நாட்களில், எதிரிகள் இழுத்துப் போட்டு அடித்து, பிணமானான் என்று கருதிப் பெருஞ்சிரிப்புச் சிரித்து விட்டுச் சென்றனர் என்பதைக் கேள்விப்பட்ட உடன், தம்பிக்கு வந்துற்ற ஆபத்தினைத் தடுத்திடும் ஆற்றலும் அற்ற நிலையிலே இருக்கிறேனே! என் போன்றோர் மொழி கேட்டும், காட்டும் வழிநடத்தும் பணியாற்றிய, வாழ்க்கையைச் சுவைத்திடாப் பருவத்தினனை, மாபாவிகள், நொறுக்கினரே. அடிபட்டபோது, இரத்தம் கொட்டியபோது, கயவர் கத்தியைக் காட்டிய போது, என்னென்ன எண்ணினானோ! எனக்கு ஒரு அண்ணன் உண்டு! அவன் சொல்லில் எனக்குப் பற்று உண்டு! அவன் இருக்க நாம் அச்சமடையத் தேவை இல்லை என்றெண்ணி இருந்தேன், இதோ நான் கொல்லப்படுகிறேன், எங்கு இருக்கிறான் என் அண்ணன்? என்றெல்லாம் எண்ணித் திகைத்தானோ-இது போலெல்லாம் எண்ணிப், புதுவையி லிருந்து விழுப்புரம் வந்து சேரும் வரையில், விம்மிக் கிடந்தேன்- இடம் தேடி அரசியலை நாடியோருக்கு அந்த இதயத் துடிப்பு எப்படித் தெரிய முடியும் ?
அடையாற்றில், காந்திநகரில், நடிப்பிசைப் புலவரின் வீட்டு மாடியில் படுத்துப் புழுவெனத் துடித்துக் கிடந்தேன். நண்பர் நடராசனை, குன்றத்தூரில் 144 தடையை மீறச் சென்றதற்காக, போலீஸ் தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச் சூடு எழுப்பினார்கள், நடராசன் என்ன ஆனாரோ தெரியவில்லை என்று, செய்தி தெரிவிக்கப்பட்டபோது,
பாராங்கல்லைத் தூக்கி மண்டையில் போட்டு, நாவலரைக் கொன்றுவிடத் தேனியில் முயற்சி செய்யப்பட்ட செய்தி கேட்டு, பழந்தமிழரின் வீரத்துக்கு உறைவிடம் என்று கூறத்தக்க, கட்டுடல் கொண்டவர் தானெனினும், குழந்தை உள்ளமாயிற்றே நெடுஞ்செழியனுக்கு. கொடியவர்கள், கொலைக்கஞ்சாப் பாதகர்கள் சூழ்ந்தகாலை, எப்படி எப்படிப் பதறினாரோ, எதை எதை எண்ணித் துடித்தாரோ என்றெண்ணித் துடிதுடித்துப்போன என் முகத்திலே, கப்பிக்கொண்டிருந்த வேதனையை, வேற்றுக் கட்சிக்காரர்கள், எப்படிப் பார்த்திருக்க முடியும்?
தம்பி! நம்மில், ஒருவர் மாற்றாரால் வதைக்கப்பட்டதைக் கேட்டு, மற்றவர் மனம் குமுறிக் குமுறி, ஒரு குடும்பத்தின ரானவர்கள்-ஒரு கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல.
இதோ இப்போது, பொதுக்குழு கூடும் சமயத்தில், கையிலும் காலிலும் வெட்டுக் காயத்துடன், தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த குன்றத்தூர் சம்பந்தத்தையல்லவா, கண்டேன்-கட்சிக்காரர் என்றா எண்ணத் தோன்றும்-நமது குடும்பத்தவரிலே ஒருவன்-நாம் கொண்ட கொள்கைக்காகக்<noinclude></noinclude>
1xo4jmi83q15xa7xnw7r9d39m2gwmg7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/284
250
641912
1928703
1927938
2026-04-30T07:04:35Z
Rabiyathul
5890
+ மேலடி
1928703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|260||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>260
'திராவிட நாடு' இதழில்
கொடியவர்களின் தாக்குதலைத் தாங்கித் தத்தளிக்கும் உடன்பிறந்தான். என்ற எண்ணமல்லவா எழுகிறது.
இத்தகைய ஒரு குடும்பத்திலே, முறைகளைப் புதுப்பிக்க எழும் வேகம் அல்லது ஆர்வம், பணியாற்றுவதிலே எவரெவர் எந்தெந்தத் துறை நிற்பது என்பது குறித்து எழும் எண்ணங்கள் ஒன்றோடொன்று உராய்ந்துகொள்வது போன்ற இவைகளைக் கேட்டும், காட்டியும், பிளவு ஏற்படும் என்று எதிர்பார்ப்பது பேதைமை - பிளவு மூட்டிவிட வேண்டும் என்று முயற்சிப்பது கொடுமை-பிளவு ஏற்படவில்லையே, என்று திகைத்தும் திகிலுற்றும் பேசிக் கிடப்பது, மடமை.
தம்பி! மாற்றார், இது குறித்து எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும், கதைத்துக் கொள்ளட்டும் - உனக்கும் எனக்கும் அது குறித்துக் கவலை எழக் காரணம் இல்லை.
பொதுத்தேர்தலை எதிர்நோக்கி நாம் இருக்கும் நேரமாகப் பார்த்து, என்னை இழுத்து உட்காரவைத்து விட்டார்கள்-பொதுச் செயலாளராக.
அமைச்சர்கள், புகாத ஊரில்லை, போகாத நாளில்லை, பேசாத புளுகு இல்லை. ஏசாத வேளையில்லை என்று ஆகிவிட்டிருக்கிறது.
மற்றோர் புறமோ, தாக்குவது, குத்துவது, வெட்டுவது, கோணல் வழக்குகள் தொடுப்பது, என்ற முறையில் அமளி மூட்டிவிடும் நடவடிக்கைகள், அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.
பணம் படைத்தோரைப் பயமூட்டியும், ஆசை காட்டியும், தேர்தல் நிதி மிகப்பெரிய அளவிலே திரட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி.
முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, ஐந்து கோடி ரூபாய் செலவிட்டது காங்கிரஸ் கட்சி என்று, வெட்கமின்றி, வீராப்புடன், காங்கிரஸ் அமைச்சர் ஒருவரே பேசினார், பதினைந்து நாட்களுக்கு முன்பு.
நமது கழகப்பிரசாரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் முறை, பல வழிகளில் கையாளப்பட்டு வருகின்றன.
அதிகார வர்க்கமே ஓட்டுப் பெற்றுத்தர, ஏவி விடப்படக் கூடும் என்று ஐயப்படத்தக்க சூழ்நிலை, இப்போதே தெரிகிறது.
இந்த ஐயம் நீங்கவும், பொதுவாழ்வுத் துறையிலே ஒழுக்கம் ஓங்கவும். தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, காங்கிரஸ் அமைச்சர்கள், தமது
.<noinclude></noinclude>
79qwpx6xzbhfo2jx6fa6xvhbnbljgr9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/285
250
641913
1928704
1927939
2026-04-30T07:05:06Z
Rabiyathul
5890
+ மேலடி
1928704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||261}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
261
பதவியை விட்டு விலகுவது, அறமாகும் என்று அன்பர் ஆச்சாரியார் பேசுகிறார்-அது எள்ளி நகையாடப் படுகிறது.
புயல் பலமாகத்தான் இருக்கும்-சந்தேகமில்லை.
நாம், அதனை எதிர்த்து வெற்றி பெற்றாக வேண்டும். ஏனெனில், நாம், தனி ஆட்களுக்காக அல்ல, அரசியல் கட்சி என்பதற்காக அல்ல-விடுதலை இயக்கம் இது-இதற்கு மக்களிடம் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதை உலகறியச் செய்தாக வேண்டும் - அதற்காக நாம், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்.
தம்பி! உன் நினைவிலே இந்த நிலைமைதான். பளிச்சிட்டுக் கொண்டிருக்க வேண்டுமேயன்றி, இவரிவர் இன்னின்ன இடத்தில் இருப்பது எதற்கு என்று, பிரச்சினை அல்ல; அந்தப் பிரச்சினை சூடுதரும், சுவை தராது. சூடே சுவைதான் என்று வாதிடுவரேல், அந்தச் சுவையின் மூலம், கழகம் பலன் பெறாது என்றுதான் கூறவேண்டும்.
எனவே தம்பி! நமது கழகத்தின் கட்டுக்கோப்பினைக் குறித்தும், ஒன்றுபட்டுப் பணியாற்றும் மாண்பு குறித்தும், நாட்டவருக்கு எடுத்துக் கூறு.
நாட்டவரின் நலிவு போக, வாழ்வு துலங்க, நாம் எடுத்துக் காட்டும் வழியின்றிப் பிறிதோர் வழி இல்லை என்பதை எடுத்துக் கூறு.
அனைவரையும் ஆற்றல் படைத்தோராக்கு; வீரர்களாக்கு; விடுதலைப் போரார்வம் கொண்டவர்களாக்கு!
அண்ணனைச் சிக்கவைத்துவிட்டோம், என்பதிலே மட்டும் அகமகிழ்ச்சி கொள்வதிலே, அர்த்தமில்லை.
எனக்கு இது முதன் முறையுமல்ல, பூரிக்க, வாழ்த்துகளைப் பெற்று இன்புற.
நான் தம்பி! திராவிடர் கழகமாக நாம் இருந்தபோதே. பொதுச் செயலாளன்தான்.
என் நிலைமையிலோ, பெறும் இடத்திலோ ஏற்றம் இல்லை; மாற்றம் இல்லை. என் இயல்பிலேயும் மாற்றம் எழாது.
எளிதிலே திருப்தி பெற்றுவிடுபவன், என்னைக் காட்டிலும் ஒருவர், உனக்குக் கிடைப்பது அரிது.<noinclude></noinclude>
ff4wyny1ymgnk42p9iyiq1pqvoywoin
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/286
250
641914
1928705
1927940
2026-04-30T07:05:37Z
Rabiyathul
5890
+ மேலடி
1928705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|262||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>262
'திராவிட நாடு' இதழில்
ஆனால், காரியம் சரியாகச் செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும்போது, மற்ற எவரையும்விட அதிகமாக ஏக்கம் அடைபவன், நான்.
அச்சம் வேண்டாம் அண்ணா! நானிருக்கிறேன், துணை நிற்கிறேன்! என்று உன் போன்றார் பல இலட்சம், கூறிடும் காட்சியை மனக்கண்ணால் காண்கிறேன். காண்பதனால்தான். 'சுமைதாங்கி' வேலைக்கு இசைவு தந்தேன்.
என் வேலையை எளிதாக்குவதும், சுவைமிக்க தாக்குவதும், பயனுள்ள தாக்குவதும், வெற்றியுள்ள தாக்குவதும், உன்னிடம்தான் தம்பி, இருக்கிறது.
சிதறிச் சிதறிக்கிடந்த சக்திகளை, பத்தே ஆண்டுகளிலே ஓரிடம் கொணர்ந்து, ஒன்றுபடுத்தி, ஓர் எழிலுருவம் தந்த செயல்வீரனல்லவா! என்னை மகிழ்வித்து, வெற்றிப் பாதையில் கழகத்தை அழைத்துச் செல்லவா உன்னால் முடியாது!!
வா, தம்பி! வா! அந்த எழுச்சியூட்டும் நம்பிக்கையுடன் நாம் ஒன்றாகக்கூடி, இன்பத் திராவிடம் தேடி, நடைபோடுவோம்.
பிறந்த பொன்னாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர, நாம் நம்மை ஒப்படைத்துவிட்டோம். வெற்றி நமதே!
2.10.60
அண்ணன்,
அண்ஐது?<noinclude></noinclude>
q8o7de4qhc22cxkssny4o2w6zf1ekhr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/287
250
641915
1928706
1927941
2026-04-30T07:06:08Z
Rabiyathul
5890
+ மேலடி
1928706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||263}}{{rule}}</noinclude>தம்பி!
கடிதம் : 121
ஐந்து கால் பசு!
காங்கிரஸ் தலைவரும் உத்திரப்பிரதேசத்துக்காரரும்
மதமும் இராசேந்திரரும்-
காந்தியாரும் மதமும்.
பந்த பாசங்களால் கட்டுண்டு கிடக்கும் இந்தச் சடலத்தைக் கீழே போட்டுவிட்டு, பரமன் திருவடி சேர்ந்திட வழிகாண்பதே. மானிடரின் பிறவிப் பெருங்கடன் என்று கூறித் தவம் கிடப்போர் தங்கி இருக்கும், ரிஷிகேசம்-பனிப் படலத்தையே ஆடை அணியாகக் கொண்டுள்ள பத்ரிநாத்-எனும் திருத்தலங்களைத் தரிசித்து வர, இந்தியக் குடிஅரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத் சென்றிருந்தார்.
அழிவுக் கருவிகளைக் குவித்து வைத்துக்கொண்டு, ஆணவ அரசுகளை அமைத்துக்கொண்டு, அமளி மூட்டிவிட எது தக்க தருணம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வல்லரசுகளை, 'காட்டுக் குணத்தை விட்டிடுமின்! மனிதகுல மாண்பினை மதித்து நடந்திடுமின்! இனி ஒரு போர் மூண்டிடின், வென்றவர் எவர், தோற்றவர் எவர் என்று நிலை இராது, உலகமே நாசப் படுகுழியில் வீழ்ந்துபோகும்' என்று எடுத்துரைத்துப், போர் வெறியைப் போக்கிட, நடைபெற்றிடும் ஐக்ய நாடுகளின் மன்றக் கூட்டத்திலே கலந்துகொண்டு, உலக சமாதானம் குறித்து உரையாற்றிட, நேரு பண்டிதர், நியூயார்க் நகர், சென்றார்.
குத்தும் வெட்டு மிகுந்து, கொள்ளையும் கொலையும் நடமிடும் அசாம். மொழிகாரணமாக அமளியில் ஈடுபட்டிருக்கிற இழி நிலையைப் போக்கிடப், பல்வேறு தரப்பினருடன் பேசி வழிகண்டிட, ஷில்லாங் நகர் சென்றார் கோவிந்த வல்லபபந்த்.
கேரள மாநிலத்தில், சுதந்திரக் கட்சிக்கு வித்தூன்ற, முதுகிழவர். ஆச்சாரியார், திருவனந்தபுரம் சென்றிருந்தார்.
அவர் போன்றே பருவமுடையார் எனினும், அவரைக் காட்டிலும் உழைப்புத்திறனும் நெஞ்சுரமும் கொள்கைப் பற்றும் கொண்ட பெரியார். காமராஜர் ஆட்சியின் சாதனைகளைக் காங்கிரசாரே கேட்டு வியந்திடும் வண்ணம் எடுத்துப் பேசத் தமிழகத்தில், பல்வேறு இடங்களில், உலா வந்து கொண்டிருக்கிறார்.<noinclude></noinclude>
k9lx0ja7w7vab0brr9b4qhfnm7e4grd
1929015
1928706
2026-04-30T11:16:46Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>தம்பி!
கடிதம் : 121
ஐந்து கால் பசு!
காங்கிரஸ் தலைவரும் உத்திரப்பிரதேசத்துக்காரரும்
மதமும் இராசேந்திரரும்-
காந்தியாரும் மதமும்.
பந்த பாசங்களால் கட்டுண்டு கிடக்கும் இந்தச் சடலத்தைக் கீழே போட்டுவிட்டு, பரமன் திருவடி சேர்ந்திட வழிகாண்பதே. மானிடரின் பிறவிப் பெருங்கடன் என்று கூறித் தவம் கிடப்போர் தங்கி இருக்கும், ரிஷிகேசம்-பனிப் படலத்தையே ஆடை அணியாகக் கொண்டுள்ள பத்ரிநாத்-எனும் திருத்தலங்களைத் தரிசித்து வர, இந்தியக் குடிஅரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத் சென்றிருந்தார்.
அழிவுக் கருவிகளைக் குவித்து வைத்துக்கொண்டு, ஆணவ அரசுகளை அமைத்துக்கொண்டு, அமளி மூட்டிவிட எது தக்க தருணம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வல்லரசுகளை, 'காட்டுக் குணத்தை விட்டிடுமின்! மனிதகுல மாண்பினை மதித்து நடந்திடுமின்! இனி ஒரு போர் மூண்டிடின், வென்றவர் எவர், தோற்றவர் எவர் என்று நிலை இராது, உலகமே நாசப் படுகுழியில் வீழ்ந்துபோகும்' என்று எடுத்துரைத்துப், போர் வெறியைப் போக்கிட, நடைபெற்றிடும் ஐக்ய நாடுகளின் மன்றக் கூட்டத்திலே கலந்துகொண்டு, உலக சமாதானம் குறித்து உரையாற்றிட, நேரு பண்டிதர், நியூயார்க் நகர், சென்றார்.
குத்தும் வெட்டு மிகுந்து, கொள்ளையும் கொலையும் நடமிடும் அசாம். மொழிகாரணமாக அமளியில் ஈடுபட்டிருக்கிற இழி நிலையைப் போக்கிடப், பல்வேறு தரப்பினருடன் பேசி வழிகண்டிட, ஷில்லாங் நகர் சென்றார் கோவிந்த வல்லபபந்த்.
கேரள மாநிலத்தில், சுதந்திரக் கட்சிக்கு வித்தூன்ற, முதுகிழவர். ஆச்சாரியார், திருவனந்தபுரம் சென்றிருந்தார்.
அவர் போன்றே பருவமுடையார் எனினும், அவரைக் காட்டிலும் உழைப்புத்திறனும் நெஞ்சுரமும் கொள்கைப் பற்றும் கொண்ட பெரியார். காமராஜர் ஆட்சியின் சாதனைகளைக் காங்கிரசாரே கேட்டு வியந்திடும் வண்ணம் எடுத்துப் பேசத் தமிழகத்தில், பல்வேறு இடங்களில், உலா வந்து கொண்டிருக்கிறார்.<noinclude></noinclude>
5t2h024p7w53u7w6lqf7bd4qvmkupu9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/288
250
641916
1928707
1927942
2026-04-30T07:06:39Z
Rabiyathul
5890
+ மேலடி
1928707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|264||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>264
'திராவிட நாடு' இதழில்
காமராஜரோ, 'ஏழைகள் நெளிகின்றனர், எனக்குத் தெரியும்; ஏற்பாடுகள் பல செய்கிறோம், எனினும், எல்லாம் பணக்காரருக்கே பலன் தருகின்றன; அதுவும் தெரியும்: விலைவாசிகள் விஷம் போல் ஏறுகின்றன, கட்டுப்படுத்தத்தான் வேண்டும்; ஆனால் முடியவில்லை. நாடு பிரியவேண்டும் என்று பேசுவார்கள், நன்றாகப் பேசுவார்கள். திறமையாக வாதாடுவார்கள்; என்றாலும் நம்பாதீர்கள்- என்று இந்த முறையில், பேசிவரப் பட்டிதொட்டிகளெல்லாம் சென்று வருகிறார்.
பச்சைப் பயிரை நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் கோடி கோடியாக இராஜஸ்தானிலிருந்து கிளம்பி, ஆந்திர மாநிலம் வரை படையெடுத்துப் படுநாசத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றன.
என்ன அண்ணா! பத்ரிநாத்தில் துவக்கிப், பயிரை அழிக்கும் வெட்டுக் கிளியின் படை எடுப்பிலே வந்து நிற்கிறாயே! ஒன்றுக் கொன்று, தொடர்பற்றுக் கிடக்கிறதே, என்றுதானே தம்பி! கேட்கத் துடிக்கிறாய். இவைகளுக்குள் தொடர்பு உள்ளன என்பதற்காகக் கூறினேன் என்று எண்ணிக்கொள்ளாதே. நமது மக்களின் கவனத்தை ஈர்த்திடும் மிக முக்கியமான நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள், நடமாட்டங்கள், நிலைமைகள், பல உள; அவற்றிலே சில, இவை.
திருத்தலங்களைக் காணச்செல்வது தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்கம். இதனை, மகா மேதாவிகள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்தச் 'சூனாமானாக்கள்' கண்டிப்பர். கேலி பேசுவர்; ஆனால் பாரதப் பண்பாடு தெரிந்தவர், நமது பாபு இராசேந்திரர் தர்மநெறி அறிந்தவர், நமது குடிஅரசுத் தலைவர், குலாச்சாரம், மதாச்சாரம், சதாச்சாரம் வழுவலாகாது என்ற கோட்பாடுடையவர், நமது பாபு: எனவேதான், துரைத்தன அலுவல் ஆயிரத்தெட்டு இருப்பினும், நோய்கொண்ட நிலை பற்றியும் பொருட்படுத்தாது, பத்ரிநாத் சென்றார். இவரன்றோ பாரதப் பண்பாடு தெரிந்தவர்! என்னே அவர்தம் மத உணர்வு! என்று, காங்கிரசார் பலர் பாராட்டுகின்றனர்.
தம்பி! உள்ளபடி, காங்கிரஸ் நண்பரொருவர், என்னிடம், பாபுவின் பக்திப்பிரபாவம் பற்றிப் பெருமிதத்துடன் எடுத்துப் பேசினார். முழு உண்மையைக் கூறிவிடுகிறேன்: பாபு இராஜேந்திரரின் பெருமை பற்றிப் பேசியதுடன், அந்தக் காங்கிரஸ் நண்பர் நிற்கவில்லை; சுற்று முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு. குரலைத் தாழ்த்திச், சிறிது கடுமையையும் வரவழைத்துக் கொண்டு, நேரு பண்டிதருக்கு, இந்த நேர்த்தியான<noinclude></noinclude>
qfpa2e7gdyiitetnfvizepa92b8kj0h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/289
250
641917
1928708
1927943
2026-04-30T07:07:10Z
Rabiyathul
5890
+ மேலடி
1928708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||265}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
265
பண்பு கிடையாது. கண்டகண்ட நாடுகள் செல்வதும், கை குலுக்குகளில் களிப்பதும். அடுக்கடுக்காகச் சிகரெட் புகைப்பதும், அவசியமற்ற அரசியல் பிரச்சினைகளைப் பேசிக் கிடப்பதும், உலா வருவதும், உலகத்தின் தொல்லைகளைத் தாமாகத் தூக்கித் தோளில் போட்டுகொண்டு, பாரம் அதிகம்! நேரம் போதாது இவைகளைக் கவனிக்க!-என்று பேசுவதுமாக இருக்கிறார்!! என்ன பயன் ஆத்மபலம் எங்ஙனம் கிடைக்கும்? ஆத்ம பலம் இல்லையேல், அரசு, தர்ம சூன்யமானதாகவன்றோ ஆகிவிடும்; என்றெல்லாம் பேசினார். தம்பி! அவர் ஏசினார், நான், அதனை, பேசினார் என்று சொல்லத்தக்க விதமானதாக்கி இங்குத் தந்திருக்கிறேன்.
காங்கிரஸ்காரரா நேரு பண்டிதரைக் குறித்து ஏசினார் என்று தம்பி! நீ. கேட்கமாட்டாய் என்பதை நான் அறிவேன். -ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக்கொள்ளும் போக்கினர். கேட்பர்-ஏனெனில், அவர்கட்கு இன்றுள்ள காங்கிரசாரின் 'இரட்டை நாக்கு'ப் பற்றித் தெரியாதல்லவா!
ஒரு விஷயம், கவனித்திருக்கிறாயா, தம்பி! நமது கழகத் தோழர்கள், எண்ணுவதைப் பேசுகிறார்கள்-உள்ளொன்று வெளியே ஒன்று என்பது கிடையாது. ஆனால், காங்கிரசார், தனியாக நம்மைச் சந்திக்கும்போது பேசுவது ஒன்று; மேடை ஏறி மக்களைப் பார்த்துப் பேசும்போது, மற்றோர்விதமாக!! இதைத்தான், 'இரட்டை நாக்கு' என்கிறோம். இது அந்தக் கட்சி, உள்ளுக்குள்ளே குலைந்து வருகிறது, முறிந்து கொண்டு வருகிறது, என்பதைத்தான் காட்டுகிறது.
"மன்னர் மன்னவா! தங்களுடைய அறிவுத்தெளிவு கண்டு. அவையிலேகூடி இருந்த அயல்நாட்டுப் பேரறிவாளர் அனைவரும், வியப்புற்றனர்; வாய்திறந்து பேசிடக்கூட அவர்களால் இயலவில்லை" என்று அரசனை அண்டிப் பிழைத்திட வேண்டிய நிலையினன் கூறிடக் கூடும். ஆயின், அவனே தன் ஆருயிர்த் தோழனைக் கண்டு பேசும்போது. உண்மையை உரைத்திடத் துடிக்கிறான். "என்ன செய்வர், வெளிநாட்டு விற்பன்னர்கள்! அரசபீடத்தில் அமர்ந்து கிடக்கும் மாமிசப் பிண்டத்தைக் கண்டனர்! வெறிச்சென்ற பார்வை! காரணமற்ற கண் சிமிட்டல்! பொருளற்ற பேச்சு! கவர்ச்சியற்ற சிரிப்பு!- இவைகளைக் கண்டனர். இந்த உருவாரத்திடம் உரையாடி யாது பயன்? என்றெண்ணினர்- ஏதும் பேசாது எழுந்து சென்றனர்' என்று கூறுகிறான்.
அஃதேபோலத்தான், இன்று, காங்கிரஸ் தலைவர்களைக் குறித்து உண்மை ஊழியர்கள், கருதுகின்றனர். வெளியே சொன்னால், வெட்கக்
கேடல்லவா!!<noinclude></noinclude>
5d0qd07ms6el7u25x63n49zo4cqgvht
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/290
250
641918
1928709
1927944
2026-04-30T07:07:40Z
Rabiyathul
5890
+ மேலடி
1928709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|266||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>266
'திராவிட நாடு' இதழில்
அதுபோலவே, ஊழியர்களைப்பற்றிக், காங்கிரஸ் தலைவர்களுக்கும், மிகமிக மட்டமான கருத்துத்தான்.
பெரியார், அடிக்கடி கூறுவார்-முன்பெல்லாம்-இப்போது எப்படியோ தெரியாது-எவன் இருக்கிறான் யோக்யன், நம்முடன்? என்று
இதை, சொத்து சுகம் இழந்தவன், குடும்பத் தொடர்பினைக்கூட அறுத்துக் கொண்டவன், ஊர்ப்பகை கிளம்பினாலும் கவலைப்படாமல், உண்மையான தொண்டாற்றுபவன், அனைவரும், பதிலேதும் கூறாமல், கேட்டுக்கொள்வர்.
தம்பி! அதுபோலவே, இப்போது, மிகப்பெரிய காங்கிரஸ் தலைவர்கள், தமது தோழர்கள்-துணைப் பணியாளர்கள்-தொண்டர்கள்- ஆகியோர்பற்றி, மிகத் துச்சமாகப் பேசுவதை, நானே கேட்டிருக்கிறேன்.
இருசாராரும், ஒருவரை ஒருவர் மதித்து, நேசித்து, வந்த காலம் போயேவிட்டது.
இப்போது இருப்பது, கூட்டுறவுகூட அல்ல; ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் இருந்து தீரவேண்டிய நிர்ப்பந்தத்தை இருசாராரும் உணர்ந்துகொண்டு, ஒரே முகாமில் இருக்கிறார்கள் என்றுதான், சொல்லவேண்டும்-
"தெரியுமா உங்களுக்கு ஒரு விஷயம்" என்று தோழமை உணர்ச்சி வழிந்திடும் போக்கிலே காங்கிரஸ் வட்டாரத்தினர் ஒருவர் - மிகப்பெரிய நிலையில் உள்ளவர்-அமைச்சர் என்றே வைத்துக் கொள்ளேன், தம்பி! என்னிடம் ஒரு நாள் பேசத் தொடங்கினார்.
“என்ன?” என்று நான் கேட்டேன்-எழுந்த ஆவலை அடக்கியபடி.
"சமுதாய நலத்திட்டத்தின்படி கட்டுகிறார்களே. வீடுகள். அந்த இலட்சணம் எப்படி இருக்கிறது தெரியுமா? நானே அப்படிப்பட்ட வீட்டைப் பார்த்தேன். மகா மட்டம்! உளுத்துப்போன சாமான்கள் போட்டுக் கட்டப்பட்டிருந்தது. சுவரிலே, கைவைத்து அழுத்தினால், பள்ளம் விழுகிறது. பாளம் பாளமாக வெடிப்புகள் உதிருகின்றன. பணம் பாழாகிறது. ஒரே மோசடி, வீண் விளம்பரத்துக்குத் தான் பயன்படுகிறது" - என்று அவர் கூறினார். - என்னிடம் - தனிமையில் - மெத்த உருக்கத்துடன்!
ஆனால், மேடைமீது நின்று பேசும்போது பார்த்தால், தேன் கலந்த சொற்கள்! தீப்பொறி பறக்கும் முழக்கம்!!
இரட்டை நாக்கு, தம்பி!-ஒன்று, உண்மை பேச! மற்றொன்று. பிழைக்கும் வழி பேச!!<noinclude></noinclude>
ohtqy8hh7fb8q56k74e433idnmuh5c1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/291
250
641919
1928711
1927945
2026-04-30T07:08:12Z
Rabiyathul
5890
+ மேலடி
1928711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||267}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
267
வேறோர் பெரிய காங்கிரஸ் தலைவர் - மிகப்பெரியவர், என்னிடமே சொன்னார்:
"யாரை நம்பினாலும் நம்பலாம், உத்தரப்பிரதேசத்தானை மட்டும் நம்பவே கூடாது. ஏற்படுகிற அரசியல் குழப்பம், சச்சரவு அவ்வளவும், உத்தரப்பிரதேசத்துக்காரரால்தான்! இந்தியாவிலே மட்டு மல்ல, பாகிஸ்தானிலே கிளம்பும் சச்சரவுகள்கூட உத்தரப்பிரதேசத்தார் கிளப்பிவிடுவதுதான். நான்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன், நாட்டை அண்ணாத்துரை அல்ல பிரிக்கப்போவது; உத்தரப்பிரதேசத்துக் காரர்கள் செய்கிற 'ரகளை'யால் தான், நாடு பிரியப் போகிறது, என்று சொல்லிவிட்டேன்".
தம்பி! அச்சம் தயை தாட்சணியமற்ற பேச்சல்லவா இது. ஆனால், சொன்னவர், என்னிடம், தனிமையில் இதைச் சொன்னார்-மேடை ஏறினாலோ தொடை தட்டிக், கழகத்தை வம்புச்சண்டைக்கே இழுக்கிறார். "வடக்காவது தெற்காவது! இதெல்லாம் என்ன பேச்சு! வேண்டியது என்ன இப்போது? வடக்கு, தெற்கா! சோறு வேண்டும் இப்போது- வயிறாரச் சோறு!'-என்று பேசுகிறார்.
இரட்டை நாக்கினர் இதுபோல நிரம்பியுள்ளனர் காங்கிரஸ் கட்சியில்.
இந்த மனப்பான்மையுடன் அவர்களில் பலருக்கு, தமக்கென்று தயாரித்து அளிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களில், எது உள்ளபடி ஏற்புடையது என்பதிலே ஒரே குழப்பம்.
அவர்களை இன்று ஒரே உருவாக்கிக் காட்டுவது, கொள்கையில் உள்ள ஒருமித்த கருத்துமல்ல, நம்பிக்கையுமல்ல- ஓருருவாக இருந்தால் மட்டுமே பேருருவாகத் தெரிந்திட முடியும்- அந்தப் பேருருக்கண்டு தான், மாற்றுக் கட்சியினர், மருண்டிட வேண்டும்-அவர்களுக்கு அந்த மருட்சி இருக்கிற வரையில்தான், நமக்கு ஆட்சி-இல்லையேல் வீழ்ச்சிதான்-இந்த எண்ணம்தான், இன்று காங்கிரசாரைப் பிணைத்து இருக்கிறது.
1
ஒரு அரசரிடம் குற்றவேல் புரிந்து கொண்டே, அவரிடம், பற்று இன்றிப், பகையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, பணிந்து கிடப்பது போலப் பாவனை காட்டிக்கொண்டு, அதேபோது எப்போது வீழ்வான், கைக்கொட்டிச் சிரிக்கலாம் என்று உள்ளூர எதிர்பார்த்துக் கொண்டு இருந்திடும். எடுபிடிகள், எதிரிப்படையினரைவிட, அந்த அரசுக்கு ஆபத்தல்லவா அது இன்றுள்ள காங்கிரஸ் நிலை. இதேநிலை, பயங்கரமான புரட்சி வெடிக்குமுன்பு, பிரான்சு நாட்டிலே இருந்தது.<noinclude></noinclude>
ipahvclcspo1t5ijk9k230u5y8pqzsw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/292
250
641920
1928712
1927946
2026-04-30T07:08:43Z
Rabiyathul
5890
+ மேலடி
1928712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|268||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>268
'திராவிட நாடு' இதழில்
காவலனும், அவனுக்குற்ற தோழர்களாக விளங்கிய கனவான் களும் நடாத்திய காமக்களியாட்டங்களைக் கண்டு. வெகுண்டனர். உழைத்தும் பிழைக்க முடியாமல், உழன்று கிடந்த மக்கள்! எனினும், கோபத்தை வெளியே தெரியவிட மாட்டார்கள். அது மட்டுமல்ல. மன்னன் நடத்தும் காமக்களியாட்டத்தை, கலை என்றுகூடக் கூறிப் பாராட்டினர்! காய்ந்து கிடக்கும் இந்தப் பாறை நெருப்பைக் கக்கும் என்று கூறினால், யார் எளிதில் நம்புவர் குமுறிக் கொதித்து, வெடித்து. நெருப்புக் குழம்பு வேகமாகப் பீறிட்டுக் கொண்டு வெளியே வரும் போதுதான், எரிமலையின் அழிக்கும் சக்தி தெரிகிறது. அதுபோன்றே. இளித்துக் கிடக்கும் இந்த மக்கள். என்ன செய்ய வல்லார்! இறையே! எமைக் காத்தருளே! என்று தொழுது கிடக்கும் இந்த எலும்புந் தோலுமா யுள்ளவர்கள், எங்ஙனம் நம்மை எதிர்ப்பர்! நமது மணிமுடி விடு ஒளிகண்டு. ஆச்சரியத்தால், வாய்பிளந்து நிற்கும் இந்தப் பராரிகள். படைபலம் கொண்ட நம்மை எதிர்க்கும் துணிவினை எப்படிப் பெறமுடியும்! - என்றெல்லாம் எண்ணியன்றோ வேந்தர்கள் ஏமாந்தனர். அதுபோலவே, காங்கிரஸ் கட்சியின் மூலவர்கள், தம்மை நத்திப் பிழைப்போர், தெந்தினம் பாடி நிற்போர், மாலை அணிவித்து வரவேற்போர். மனுக்கள் கொடுத்து மண்டியிடுவோர், வளைவுகள் அமைத்து வாழ்த்துக் கூறுவோர், ஆகியவர்கள், என்றென்றும் அடிமைகளாய், அறிவாற்றலற்ற வர்களாய் இருப்பர், எதிர்த்திட இயலாது, குனிந்து நிற்க, வளைந்து நிற்க, வீழ்ந்து வணங்க மட்டுமே அறிவர், நிமிர்ந்து நின்று உரிமை கேட்டிடும் வகை அறியார்- என்றுதான் எண்ணிக்கொண்டுள்ளனர்.
அது போலிருப்பதுதான் 'பாமரர்' வாடிக்கை! ஆனால், அவர்கள்,
மிகக் கூர்மையாக, மற்றொன்றைக் கவனித்துக் கொண்டே இருப்பர்- ஆட்டிப் படைப்போர், ஆதிக்கக்காரர்-எப்போது இளைப்பாலோ, களைப்பாலோ, திடமிழந்து தடுமாறப் போகிறார்கள்-அந்தச் சமயம் வந்ததும், பாய்ந்து கீழே சாய்த்து பழிக்குப்பழி வாங்கிடவேண்டும் என்று காத்துக் கிடப்பர்! வகை அறியாதார் அல்ல, பாமரர் காலம் வரட்டும் என்று காத்திருக்கும் பொறுமைசாலிகள்! அறிவற்றவர்கள் அல்ல. மக்கள் ஆத்திரத்தை அடக்கிக்கொள்ளக் கற்றவர்கள்! பிடிசாம்பலாகிப் போனவர்கள் அல்ல, அந்த மக்கள்-நீறு பூத்த நெருப்பாகி நிற்பவர்கள்!!
இதை, வீழ்ந்த அரசுகள், விரண்டோடிய மன்னர்கள், வெட்டுண்ட தலைகள், காட்டுகின்றன.
இப்போது படித்தாலும், தம்பி! எப்படி எப்படியோ எண்ணம் செல்கிறது - அப்பாவிகள் என்று ஆணவக்காரர் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இருந்த மக்கள், காலம் பிறந்தது என்று தெரிந்ததும்,<noinclude></noinclude>
4h17gnqqbepblyc45lhpwh5iey3sufw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/293
250
641921
1928713
1927947
2026-04-30T07:09:14Z
Rabiyathul
5890
+ மேலடி
1928713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||269}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
269
ஆர்த்தெழுந்து ஆணவ அரசுகளைத் தூள்தூளாக்கிய வீரக் காதைகளைப் படிக்கும்போது.
பிரான்சு நாட்டிலே, வெட்ட வெளியை விழாப்பந்தலாக்கி, விருந்து ஏற்பாடு செய்வானாம், மன்னன்! அதைக் கட்டணம் கொடுத்துக் கண்டு மகிழ வருவராம், மக்கள்!! ஆரணங்குகள் உண்டு மிச்சமானதை ஆற்றலரசர்கள் உண்பதும், 'அதரம் பட்டது எனக்கு! வேண்டாம். அவள் கரம் பட்டதே போதும் எனக்கு' - என்று சீமாட்டி முன் நின்று சல்லாபச் சண்டையிடும் சீமான்கள் களிநடமாடுவது இவை காட்சிகள் - கட்டணம் கொடுத்துக் காணவேண்டிய காட்சிகள்!!
இதே மக்கள் தான், அதிலும், பெண்கள், படை வரிசை அமைத்துக்கொண்டு, கூட்டுக்கோலும், தட்டு முறங்களும், ஏரோட்டும் கோலும், இன்ன பிறவும் ஆயுதங்களாகக் கொண்டு, படை எடுப்பு நடத்தி, அரண்மனையில் நுழைந்து, ஆங்கு காணக்கிடக்கும் போகப் பொருட்களை எல்லாம், தொட்டும் இழுத்தும், உடைத்தும் உருக்குலைத்தும், வேடிக்கை காட்டினர்!!
நல்ல வேளையாகக் காமராஜருக்கு இந்தக் காதைகள் தெரியாது- அவர் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையோடு தமது படிப்பை நிறுத்திக் கொண்டவர், என்கிறார்கள். எனவே அவருக்கு. அடங்கிக் கிடைக்கும் மக்கள் ஆர்த்தெழக்கூடும், பணிந்து கிடக்கும் பாமரர். பிறிதோர் நாள் பயங்கரப் புரட்சி நடத்திடக்கூடும் என்பது பற்றிய நினைப்பே எழாது.
இதனை அறிந்துள்ள மற்ற அமைச்சர்களோ, அறிந்ததைக் கூறார் ஏனோவெனில், அவர்களுக்குப் பாபம், சங்கடமாகத்தானே இருக்கும் - என்ன கற்று என்ன பலன்! நாம் இவருக்குக் கீழ்தானே!! - என்று எண்ணும்போது அவர்களுக்குக் கற்றதை மறந்தால் நல்லது என்றுகூடத் தோன்றக்கூடும்.
இந்நிலையில், இன்றுள்ள காங்கிரசில், பாபு பத்ரிநாத் சென்றதைப் பாராட்டி, அது அவருடைய பக்திப் பிரபாவத்தை, பாரதப் பண்பாட்டைக் காட்டுவதாகும் என்று கனிவுடன் கூறி, அதேபோது, நேரு பண்டிதர், உலகிலே பல்வேறு இடங்கட்கு உலாவருதல் குறித்துக், காங்கிரசார் ஒருவர். கேலியாகப் பேசியதிலே வியப்பில்லை அல்லவா? ஆனால், இதிலே வியப்பு இல்லை என்பதை எடுத்துக்காட்ட அல்ல நான் இதனைக் குறிப்பிடுவது. எனக்கு, அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் கொள்கையில் பிடித்தமும் அழுத்தமும் எந்த அளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள<noinclude></noinclude>
lui6oe3efyhmaksb3o5f8j4k0g3t6x4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/294
250
641922
1928714
1927948
2026-04-30T07:09:45Z
Rabiyathul
5890
+ மேலடி
1928714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|270||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>270
'திராவிட நாடு' இதழில்
வேண்டும் என்பதிலே. சுவை கலந்த ஒரு ஆவல். எனவே நான். அவரிடம், பேச்சைத் தொடர்ந்தேன்.
"ஆமாம்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது, பாரதப் பண்பாடு என்கிறீர். இருக்கட்டும். இது, பாபு இராஜேந்திரருக்கு இருக்கிறது; ஆனால் நேரு பண்டிதரிடம் இல்லை என்கிறீர். அதுவும் சரி. ஆனால் இந்த விஷயத்தில், காந்தியார் பற்றி உமது கருத்து என்ன?" என்று
கேட்டேன்.
நண்பருக்கு மெத்த மகிழ்ச்சி,
''உண்மையாகச் சொல்கிறேன்- இப்போது எங்கள் காங்கிரசார். காந்தியாரை அறவே மறந்து விட்டார்கள் - உங்கள் கழகத்துக்காரர்தான், அவரைப்பற்றி, மக்களிடம் பேசி வருகிறார்கள்," என்றார் அந்த நண்பர்.
அவருடைய அந்த முன்னுரைக்குப், புன்னகையன்றி வேறென்ன பதிலுரை இருக்க முடியும். தந்தேன்-பெற்றுக் கொண்டார்-பேச்சைத் தொடங்கினார்.
காந்தியார், பாரதப் பண்பாடு தழைக்க வேண்டும். என்பதற் காகவேதான், 'ஸ்வராஜ்யம்' கேட்டார் - பெற்றுத் தந்தார்! மகா பக்தி மானல்லவோ, அவர்! இராம பக்தர்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது. இந்து தர்மம் என்பதை நன்கு உணர்ந்தவரல்லவா!! - என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
"மன்னிக்கவேண்டும்! காந்தியார், திவ்ய க்ஷேத்திரங்களைப் பற்றி, மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்" என்று நான் சொன்னேன். "ஆரம்பமாகிவிட்டதா, கழகம்!!" - என்று கோபமும் கேலியும் கலந்த குரலில் பேசலானார்.
'கோபம் கூடாது! காந்தியாருடைய மிக முக்கியமான உபதேசமே அது. நான் கூறுவதைக் கேளும். காந்தியார். திவ்ய க்ஷேத்திரங் களிலே காணப்படும், ஆபாசங்களைப் பார்த்துவிட்டு மனம் நொந்து போனவர் என்றேன்.
''உம்மிடம், வந்து சொன்னாராக்கும்" என்று குத்தலானார், நண்பர். கோபம் இருக்குமல்லவா, அவருக்கு, "என்னிடம் மட்டுமல்ல - எல்லோரிடமும் சொல்லவேண்டும் என்பதற்காக, காந்தியார். எழுதியே வைத்துவிட்டார். படிக்கிறேன்; பதறாமல், கேளும்"-என்று கூறிவிட்டுக் காந்தியாரின் சுயசரிதையை எடுத்தேன்.<noinclude></noinclude>
o63q2b1r4e1wsjb348nwu8rj9vgdo9a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/295
250
641923
1928740
1927949
2026-04-30T07:34:47Z
Rabiyathul
5890
+ மேலடி
1928740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|272||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
271
"காந்தியார், அரித்துவாரத்தில், நடைபெற்ற கும்பமேளா பார்க்கச் சென்றார்...!"-என்று நான் துவக்கினேன். நண்பர், 'காந்தியாருக்கு, திவ்விய க்ஷேத்திரம் பிடிக்காது என்றல்லவா சொன்னாய்;' என்றார். "சிறிதளவு பொறுமை காட்டும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் படிக்கலானேன்.
"சுற்றித் திரிந்ததில் பல விஷயங்களைக் கவனித்தேன். யாத்திரீகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளி வேஷமும், துப்புக்கெட்ட தனமுமே அதிகமாக இருந்ததைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள். உலக வாழ்க்கையின் இன்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப் பவர்களாகவே அவர்கள் தோன்றினர்".
இதை நான் படித்துவிட்டு, நண்பரின் முகத்தைக் கவனித்தேன். வேதனைக் குறிகள் தென்பட்டன.
திவ்ய க்ஷேத்திரங்களிலே, சாதுக்கூட்டம் இருந்து கொண்டு. ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காந்தியார், எத்துணை நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார். கவனித்தீர்களா...
"உலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவிப்பதற்கு என்றே பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்'.
இதை நாம். விரிவாக, விளக்கமாகப் பேசவும் வேண்டுமா...
மும்மலம் நீக்கினோர், ஐம்புலனை அடக்கினோர். உலகைத் துறந்தோர், கனியேனும் செங்காயேனும் கந்தமூலங்களேனும் உண்டு இருப்போர் என்று. நாம் பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், அரித்துவாரம், ரிஷிகேசம் ஆகிய இடங்களிலே இருந்துவரும் சாதுக்கள், இன்பங்களை அனுபவிக்கவே பிறந்தவர்கள் என்று காந்தியாருக்குத் தோன்றிற்று! ஐயா! காந்தியார், பக்திமான், சனாதனி, இந்து-எனினும், நேர்மை, தூய்மை, வாய்மை, இவைகளில் அசைக்க முடியாத பற்று வைத்திருந்தவர்-எனவேதான், கட்டியிருப்பது காவி எனினும், உலவுவது கங்கைக்கரை என்றாலும், பெயர் சாது சன்யாசி என்று இருப்பினும், அவர்களுடைய செயல் கண்டு, மனம் வெதும்பி, எழுதினர், இவர் களைத் தரிசிக்கவா, பாபு இராஜேந்திரர் போகவேண்டும்?-என்று நான் கேட்டேன். நண்பருக்குக் கோபம் குறைந்தது; வருத்தம் மேலிட்டது.
காந்தியார், மதத்தை வாணிபச் சரக்காக்கிக் கொள்ளவில்லை. எனவேதான், உள்ளதை உள்ளபடி உரைத்தார்-அதனைக் கேட்டுப் பலருக்கு, திவ்ய க்ஷேத்திரங்களின்மீது வெறுப்பு ஏற்படும் என்பது<noinclude></noinclude>
t43oc52vdktjjpc7pwbz6ozohgxhfq4
1928742
1928740
2026-04-30T07:36:18Z
Rabiyathul
5890
+ மேலடி
1928742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||271}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
271
"காந்தியார், அரித்துவாரத்தில், நடைபெற்ற கும்பமேளா பார்க்கச் சென்றார்...!"-என்று நான் துவக்கினேன். நண்பர், 'காந்தியாருக்கு, திவ்விய க்ஷேத்திரம் பிடிக்காது என்றல்லவா சொன்னாய்;' என்றார். "சிறிதளவு பொறுமை காட்டும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் படிக்கலானேன்.
"சுற்றித் திரிந்ததில் பல விஷயங்களைக் கவனித்தேன். யாத்திரீகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளி வேஷமும், துப்புக்கெட்ட தனமுமே அதிகமாக இருந்ததைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள். உலக வாழ்க்கையின் இன்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப் பவர்களாகவே அவர்கள் தோன்றினர்".
இதை நான் படித்துவிட்டு, நண்பரின் முகத்தைக் கவனித்தேன். வேதனைக் குறிகள் தென்பட்டன.
திவ்ய க்ஷேத்திரங்களிலே, சாதுக்கூட்டம் இருந்து கொண்டு. ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காந்தியார், எத்துணை நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார். கவனித்தீர்களா...
"உலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவிப்பதற்கு என்றே பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்'.
இதை நாம். விரிவாக, விளக்கமாகப் பேசவும் வேண்டுமா...
மும்மலம் நீக்கினோர், ஐம்புலனை அடக்கினோர். உலகைத் துறந்தோர், கனியேனும் செங்காயேனும் கந்தமூலங்களேனும் உண்டு இருப்போர் என்று. நாம் பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், அரித்துவாரம், ரிஷிகேசம் ஆகிய இடங்களிலே இருந்துவரும் சாதுக்கள், இன்பங்களை அனுபவிக்கவே பிறந்தவர்கள் என்று காந்தியாருக்குத் தோன்றிற்று! ஐயா! காந்தியார், பக்திமான், சனாதனி, இந்து-எனினும், நேர்மை, தூய்மை, வாய்மை, இவைகளில் அசைக்க முடியாத பற்று வைத்திருந்தவர்-எனவேதான், கட்டியிருப்பது காவி எனினும், உலவுவது கங்கைக்கரை என்றாலும், பெயர் சாது சன்யாசி என்று இருப்பினும், அவர்களுடைய செயல் கண்டு, மனம் வெதும்பி, எழுதினர், இவர் களைத் தரிசிக்கவா, பாபு இராஜேந்திரர் போகவேண்டும்?-என்று நான் கேட்டேன். நண்பருக்குக் கோபம் குறைந்தது; வருத்தம் மேலிட்டது.
காந்தியார், மதத்தை வாணிபச் சரக்காக்கிக் கொள்ளவில்லை. எனவேதான், உள்ளதை உள்ளபடி உரைத்தார்-அதனைக் கேட்டுப் பலருக்கு, திவ்ய க்ஷேத்திரங்களின்மீது வெறுப்பு ஏற்படும் என்பது<noinclude></noinclude>
jjq3cw3wofg2d057ifang7e4eicdsmg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/296
250
641924
1928733
1927950
2026-04-30T07:30:23Z
Rabiyathul
5890
+ மேலடி
1928733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||271}}{{rule}}</noinclude>272
'திராவிட நாடு' இதழில்
அவருக்குத் தெரியும்-எனினும், பொய்யும் புனைசுருட்டும் எந்தப் போர்வையிலே இருப்பினும், அதனை வெளிப்படுத்தித் தீரவேண்டும் என்று அந்தத் தூயவர் கருதினார்-எனவேதான், காவி உடையில் உலவியவர்களின் கபடத்தைக் கண்டித்தார்? இன்றோ, கதர் உடையில் இருந்து கொண்டு. எத்துணை அக்ரமம் செய்தாலும், கண்டிக்கப் பலர் கூச்சப்படுகின்றனர். தண்டிக்கச் சில அதிகாரிகள் அச்சப்படுகிறார்கள்!" என்று நான் கூறினேன். நண்பர், நீண்ட பெருமூச்செறிந்தார்.
"நண்பரே! ஐந்து கால் பசு பார்த்திருக்கிறீரா?" என்று நான் கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போய். "என்னய்யா ஐந்தாண்டுத் திட்டங் களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. அது போதாதா! ஐந்து கால் பசு வேறு பார்க்க வேண்டுமா?'' என்று கேட்டார்.
"காந்தியார், பார்த்தாராம்" என்றேன் நான்.
"நல்ல வேளை, ஐந்தாண்டுத் திட்டத்தைப் பார்க்கவில்லை அவர்! ஐந்துகால் பசுவைப் பார்த்தார் போலும். உம்! அது என்ன சொல்லும். கேட்போம்" என்றார் ஆயாசத்துடன்.
"சொல்வதாவது! படிக்கிறேன். கேளும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் பிரித்தேன்.
"இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரமையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான ஐந்துக் கால் பசு. கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதே யன்றி, வேறு அல்ல. உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த ஐந்தாவது காலே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன் இவ்வித இரட்டைக் கொடுமையின் பயனைக் கொண்டு, ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள், இந்த ஐந்துகால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத இந்துவே இல்லை. இந்த அற்புதப் பசுவிற்குத் தாராளமாகத் தருமம் செய்யாத இந்துவும் இல்லை".
தம்பி! காங்கிரஸ் நண்பர், வெடுக்கென்று, என் கரத்திலிருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டார்-கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்- அவருக்கு ஆத்திரம், அவசரம்-ஐயப்பாடு, நான் உண்மையில், புத்தகத்தைத் தான் படிக்கிறோனா, அல்லது இட்டுக்கட்டிப் பேசுகிறேனா, என்று சந்தேகம்.
புத்தகத்தைப் பார்த்தார்-உண்மை அவர் உள்ளத்தை உலுக்கி விட்டது. வேதனை அடைந்தார்.<noinclude></noinclude>
f7v99un1y87dezxovvk4aw5t41k78z4
1928743
1928733
2026-04-30T07:36:49Z
Rabiyathul
5890
+ மேலடி
1928743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|274||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>272
'திராவிட நாடு' இதழில்
அவருக்குத் தெரியும்-எனினும், பொய்யும் புனைசுருட்டும் எந்தப் போர்வையிலே இருப்பினும், அதனை வெளிப்படுத்தித் தீரவேண்டும் என்று அந்தத் தூயவர் கருதினார்-எனவேதான், காவி உடையில் உலவியவர்களின் கபடத்தைக் கண்டித்தார்? இன்றோ, கதர் உடையில் இருந்து கொண்டு. எத்துணை அக்ரமம் செய்தாலும், கண்டிக்கப் பலர் கூச்சப்படுகின்றனர். தண்டிக்கச் சில அதிகாரிகள் அச்சப்படுகிறார்கள்!" என்று நான் கூறினேன். நண்பர், நீண்ட பெருமூச்செறிந்தார்.
"நண்பரே! ஐந்து கால் பசு பார்த்திருக்கிறீரா?" என்று நான் கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போய். "என்னய்யா ஐந்தாண்டுத் திட்டங் களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. அது போதாதா! ஐந்து கால் பசு வேறு பார்க்க வேண்டுமா?'' என்று கேட்டார்.
"காந்தியார், பார்த்தாராம்" என்றேன் நான்.
"நல்ல வேளை, ஐந்தாண்டுத் திட்டத்தைப் பார்க்கவில்லை அவர்! ஐந்துகால் பசுவைப் பார்த்தார் போலும். உம்! அது என்ன சொல்லும். கேட்போம்" என்றார் ஆயாசத்துடன்.
"சொல்வதாவது! படிக்கிறேன். கேளும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் பிரித்தேன்.
"இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரமையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான ஐந்துக் கால் பசு. கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதே யன்றி, வேறு அல்ல. உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த ஐந்தாவது காலே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன் இவ்வித இரட்டைக் கொடுமையின் பயனைக் கொண்டு, ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள், இந்த ஐந்துகால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத இந்துவே இல்லை. இந்த அற்புதப் பசுவிற்குத் தாராளமாகத் தருமம் செய்யாத இந்துவும் இல்லை".
தம்பி! காங்கிரஸ் நண்பர், வெடுக்கென்று, என் கரத்திலிருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டார்-கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்- அவருக்கு ஆத்திரம், அவசரம்-ஐயப்பாடு, நான் உண்மையில், புத்தகத்தைத் தான் படிக்கிறோனா, அல்லது இட்டுக்கட்டிப் பேசுகிறேனா, என்று சந்தேகம்.
புத்தகத்தைப் பார்த்தார்-உண்மை அவர் உள்ளத்தை உலுக்கி விட்டது. வேதனை அடைந்தார்.<noinclude></noinclude>
jdycdqcrefle8uacg1y5hrq342s6asv
1928745
1928743
2026-04-30T07:38:12Z
Rabiyathul
5890
+ மேலடி
1928745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude>272
'திராவிட நாடு' இதழில்
அவருக்குத் தெரியும்-எனினும், பொய்யும் புனைசுருட்டும் எந்தப் போர்வையிலே இருப்பினும், அதனை வெளிப்படுத்தித் தீரவேண்டும் என்று அந்தத் தூயவர் கருதினார்-எனவேதான், காவி உடையில் உலவியவர்களின் கபடத்தைக் கண்டித்தார்? இன்றோ, கதர் உடையில் இருந்து கொண்டு. எத்துணை அக்ரமம் செய்தாலும், கண்டிக்கப் பலர் கூச்சப்படுகின்றனர். தண்டிக்கச் சில அதிகாரிகள் அச்சப்படுகிறார்கள்!" என்று நான் கூறினேன். நண்பர், நீண்ட பெருமூச்செறிந்தார்.
"நண்பரே! ஐந்து கால் பசு பார்த்திருக்கிறீரா?" என்று நான் கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போய். "என்னய்யா ஐந்தாண்டுத் திட்டங் களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. அது போதாதா! ஐந்து கால் பசு வேறு பார்க்க வேண்டுமா?'' என்று கேட்டார்.
"காந்தியார், பார்த்தாராம்" என்றேன் நான்.
"நல்ல வேளை, ஐந்தாண்டுத் திட்டத்தைப் பார்க்கவில்லை அவர்! ஐந்துகால் பசுவைப் பார்த்தார் போலும். உம்! அது என்ன சொல்லும். கேட்போம்" என்றார் ஆயாசத்துடன்.
"சொல்வதாவது! படிக்கிறேன். கேளும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் பிரித்தேன்.
"இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரமையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான ஐந்துக் கால் பசு. கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதே யன்றி, வேறு அல்ல. உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த ஐந்தாவது காலே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன் இவ்வித இரட்டைக் கொடுமையின் பயனைக் கொண்டு, ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள், இந்த ஐந்துகால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத இந்துவே இல்லை. இந்த அற்புதப் பசுவிற்குத் தாராளமாகத் தருமம் செய்யாத இந்துவும் இல்லை".
தம்பி! காங்கிரஸ் நண்பர், வெடுக்கென்று, என் கரத்திலிருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டார்-கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்- அவருக்கு ஆத்திரம், அவசரம்-ஐயப்பாடு, நான் உண்மையில், புத்தகத்தைத் தான் படிக்கிறோனா, அல்லது இட்டுக்கட்டிப் பேசுகிறேனா, என்று சந்தேகம்.
புத்தகத்தைப் பார்த்தார்-உண்மை அவர் உள்ளத்தை உலுக்கி விட்டது. வேதனை அடைந்தார்.<noinclude></noinclude>
8blqhqdrgf5a7kf58f78wtl4aqkmhun
1928747
1928745
2026-04-30T07:39:05Z
Rabiyathul
5890
+ மேலடி
1928747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|272||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>272
'திராவிட நாடு' இதழில்
அவருக்குத் தெரியும்-எனினும், பொய்யும் புனைசுருட்டும் எந்தப் போர்வையிலே இருப்பினும், அதனை வெளிப்படுத்தித் தீரவேண்டும் என்று அந்தத் தூயவர் கருதினார்-எனவேதான், காவி உடையில் உலவியவர்களின் கபடத்தைக் கண்டித்தார்? இன்றோ, கதர் உடையில் இருந்து கொண்டு. எத்துணை அக்ரமம் செய்தாலும், கண்டிக்கப் பலர் கூச்சப்படுகின்றனர். தண்டிக்கச் சில அதிகாரிகள் அச்சப்படுகிறார்கள்!" என்று நான் கூறினேன். நண்பர், நீண்ட பெருமூச்செறிந்தார்.
"நண்பரே! ஐந்து கால் பசு பார்த்திருக்கிறீரா?" என்று நான் கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போய். "என்னய்யா ஐந்தாண்டுத் திட்டங் களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. அது போதாதா! ஐந்து கால் பசு வேறு பார்க்க வேண்டுமா?'' என்று கேட்டார்.
"காந்தியார், பார்த்தாராம்" என்றேன் நான்.
"நல்ல வேளை, ஐந்தாண்டுத் திட்டத்தைப் பார்க்கவில்லை அவர்! ஐந்துகால் பசுவைப் பார்த்தார் போலும். உம்! அது என்ன சொல்லும். கேட்போம்" என்றார் ஆயாசத்துடன்.
"சொல்வதாவது! படிக்கிறேன். கேளும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் பிரித்தேன்.
"இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரமையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான ஐந்துக் கால் பசு. கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதே யன்றி, வேறு அல்ல. உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த ஐந்தாவது காலே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன் இவ்வித இரட்டைக் கொடுமையின் பயனைக் கொண்டு, ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள், இந்த ஐந்துகால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத இந்துவே இல்லை. இந்த அற்புதப் பசுவிற்குத் தாராளமாகத் தருமம் செய்யாத இந்துவும் இல்லை".
தம்பி! காங்கிரஸ் நண்பர், வெடுக்கென்று, என் கரத்திலிருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டார்-கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்- அவருக்கு ஆத்திரம், அவசரம்-ஐயப்பாடு, நான் உண்மையில், புத்தகத்தைத் தான் படிக்கிறோனா, அல்லது இட்டுக்கட்டிப் பேசுகிறேனா, என்று சந்தேகம்.
புத்தகத்தைப் பார்த்தார்-உண்மை அவர் உள்ளத்தை உலுக்கி விட்டது. வேதனை அடைந்தார்.<noinclude></noinclude>
8o6qw3927s5vewg292l5439tjya48kr
1928749
1928747
2026-04-30T07:39:46Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|272||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அவருக்குத் தெரியும்-எனினும், பொய்யும் புனைசுருட்டும் எந்தப் போர்வையிலே இருப்பினும், அதனை வெளிப்படுத்தித் தீரவேண்டும் என்று அந்தத் தூயவர் கருதினார்-எனவேதான், காவி உடையில் உலவியவர்களின் கபடத்தைக் கண்டித்தார்? இன்றோ, கதர் உடையில் இருந்து கொண்டு. எத்துணை அக்ரமம் செய்தாலும், கண்டிக்கப் பலர் கூச்சப்படுகின்றனர். தண்டிக்கச் சில அதிகாரிகள் அச்சப்படுகிறார்கள்!" என்று நான் கூறினேன். நண்பர், நீண்ட பெருமூச்செறிந்தார்.
"நண்பரே! ஐந்து கால் பசு பார்த்திருக்கிறீரா?" என்று நான் கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போய். "என்னய்யா ஐந்தாண்டுத் திட்டங் களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. அது போதாதா! ஐந்து கால் பசு வேறு பார்க்க வேண்டுமா?'' என்று கேட்டார்.
"காந்தியார், பார்த்தாராம்" என்றேன் நான்.
"நல்ல வேளை, ஐந்தாண்டுத் திட்டத்தைப் பார்க்கவில்லை அவர்! ஐந்துகால் பசுவைப் பார்த்தார் போலும். உம்! அது என்ன சொல்லும். கேட்போம்" என்றார் ஆயாசத்துடன்.
"சொல்வதாவது! படிக்கிறேன். கேளும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் பிரித்தேன்.
"இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரமையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான ஐந்துக் கால் பசு. கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதே யன்றி, வேறு அல்ல. உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த ஐந்தாவது காலே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன் இவ்வித இரட்டைக் கொடுமையின் பயனைக் கொண்டு, ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள், இந்த ஐந்துகால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத இந்துவே இல்லை. இந்த அற்புதப் பசுவிற்குத் தாராளமாகத் தருமம் செய்யாத இந்துவும் இல்லை".
தம்பி! காங்கிரஸ் நண்பர், வெடுக்கென்று, என் கரத்திலிருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டார்-கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்- அவருக்கு ஆத்திரம், அவசரம்-ஐயப்பாடு, நான் உண்மையில், புத்தகத்தைத் தான் படிக்கிறோனா, அல்லது இட்டுக்கட்டிப் பேசுகிறேனா, என்று சந்தேகம்.
புத்தகத்தைப் பார்த்தார்-உண்மை அவர் உள்ளத்தை உலுக்கி விட்டது. வேதனை அடைந்தார்.<noinclude></noinclude>
69yzu2sb7f7asnxv4h46cbox7a0evnz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/297
250
641925
1928734
1927951
2026-04-30T07:30:54Z
Rabiyathul
5890
+ மேலடி
1928734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|272||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
273
"உலக இன்பத்தை அனுபவிக்கும் சாதுக்கள்! அக்ரமமான புரட்டு நடத்திப் பணம் பறிக்கும் எத்தர்கள்! அற்புதம் என்று நம்பி, பணம் பறிகொடுத்து பஜித்துக் கிடக்கும் அப்பாவிகள்!!-திருத்தலங் களில் காணக்கிடப்பவை இவை!! இங்கு சென்று வருவதால், என்ன பலன்?" என்று நான் கேட்டேன்-அவர் பதில் கூறுவார், என்ற எண்ணத்துடன் அல்ல! மனம் மாறுவது நன்கு தெரிந்ததால்.
நண்பரே! புரட்டுக்கும் புனிதத் தன்மைக்கும் வித்யாசம் தெரியாமல். காவி கட்டியவனைக் கடவுள் அருள் பெற்றோன் என்றெண்ணிக் கருத்திழந்து கிடக்கும், இந்த மக்களுக்கு, மதவெறி எந்த அளவு இருந்ததாம் தெரியுமா?
கல்கத்தாவிலிருந்து அரித்துவாரம் செல்லும் இரயில், மிக நெருக்கடியானதாம்-வெப்பம் கொல்லுமாம். ஆனால் அப்போதும், இந்து, இந்து தரும் தண்ணீரைத்தான் சாப்பிடுவானாம்.
காந்தியார் எழுதுகிறார். இதைக் குறித்து; கேளும்:
"இத்தகைய பிரயாணத்தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில் கூட, வைதிக இந்துக்கள் முஸ்லீம்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர். இந்து தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இதே இந்துக்கள் நோயுற்று விடும்போது, டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட்டிறைச்சிச் சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிருஸ்தவக் கம்பவுண்டரா, முஸ்லீம் கம்பவுண்டரா என்பதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும்.
நண்பருக்கு, மேலும் விளக்கங்கள் தரத் தேவையில்லை என்று தோன்றிற்று; எனவே, தம்பி, வேறு பகுதிகளை, படித்து மட்டும் காட்டினேன்- விளக்கம் கூறாமல். அந்தப் பகுதிகள் இவை.
"இயற்கைக் காட்சிகள் மிகுந்த இடங்களை மனிதர்கள் உபயோகித்து வந்த விதங்கள் என் மனத்திற்குச் சங்கடத்தை உண்டாக்கின. அரித்துவாரத்தைப் போல, ரிஷிகேசத்திலும் மக்கள் ரஸ்தாக்களையும், அழகிய கங்கைக் கரைகளையும் ஆபாசப்படுத்தி வந்தனர். கங்கையின் புனித நீரையும் அசுத்தப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. கொஞ்சத் தூரம் போனால் ஜன நடமாட்டமில்லாத இடங்களுக்கு எளிதாகப் போயிருக்கக் கூடுமெனினும், அப்படிச் செய்யாமல், பாட்டைகளிலும் நதிக்கரைகளிலும் மக்கள் மலஜலம் கழித்ததைக் கண்டு என் மனம் அதிக வேதனை அடைந்தது".
தம்பி! காந்தியாருக்கு இருந்துவந்த அழுத்தமான மத நம்பிக்கையை, நான் குறிப்பிட்ட காங்கிரஸ் நண்பர் எடுத்துக் காட்டி, பாபு இராசேந்திர<noinclude></noinclude>
giw4f6455ivec9azjoo20wd8jvowwqm
1928750
1928734
2026-04-30T07:40:40Z
Rabiyathul
5890
+ மேலடி
1928750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
273
"உலக இன்பத்தை அனுபவிக்கும் சாதுக்கள்! அக்ரமமான புரட்டு நடத்திப் பணம் பறிக்கும் எத்தர்கள்! அற்புதம் என்று நம்பி, பணம் பறிகொடுத்து பஜித்துக் கிடக்கும் அப்பாவிகள்!!-திருத்தலங் களில் காணக்கிடப்பவை இவை!! இங்கு சென்று வருவதால், என்ன பலன்?" என்று நான் கேட்டேன்-அவர் பதில் கூறுவார், என்ற எண்ணத்துடன் அல்ல! மனம் மாறுவது நன்கு தெரிந்ததால்.
நண்பரே! புரட்டுக்கும் புனிதத் தன்மைக்கும் வித்யாசம் தெரியாமல். காவி கட்டியவனைக் கடவுள் அருள் பெற்றோன் என்றெண்ணிக் கருத்திழந்து கிடக்கும், இந்த மக்களுக்கு, மதவெறி எந்த அளவு இருந்ததாம் தெரியுமா?
கல்கத்தாவிலிருந்து அரித்துவாரம் செல்லும் இரயில், மிக நெருக்கடியானதாம்-வெப்பம் கொல்லுமாம். ஆனால் அப்போதும், இந்து, இந்து தரும் தண்ணீரைத்தான் சாப்பிடுவானாம்.
காந்தியார் எழுதுகிறார். இதைக் குறித்து; கேளும்:
"இத்தகைய பிரயாணத்தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில் கூட, வைதிக இந்துக்கள் முஸ்லீம்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர். இந்து தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இதே இந்துக்கள் நோயுற்று விடும்போது, டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட்டிறைச்சிச் சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிருஸ்தவக் கம்பவுண்டரா, முஸ்லீம் கம்பவுண்டரா என்பதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும்.
நண்பருக்கு, மேலும் விளக்கங்கள் தரத் தேவையில்லை என்று தோன்றிற்று; எனவே, தம்பி, வேறு பகுதிகளை, படித்து மட்டும் காட்டினேன்- விளக்கம் கூறாமல். அந்தப் பகுதிகள் இவை.
"இயற்கைக் காட்சிகள் மிகுந்த இடங்களை மனிதர்கள் உபயோகித்து வந்த விதங்கள் என் மனத்திற்குச் சங்கடத்தை உண்டாக்கின. அரித்துவாரத்தைப் போல, ரிஷிகேசத்திலும் மக்கள் ரஸ்தாக்களையும், அழகிய கங்கைக் கரைகளையும் ஆபாசப்படுத்தி வந்தனர். கங்கையின் புனித நீரையும் அசுத்தப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. கொஞ்சத் தூரம் போனால் ஜன நடமாட்டமில்லாத இடங்களுக்கு எளிதாகப் போயிருக்கக் கூடுமெனினும், அப்படிச் செய்யாமல், பாட்டைகளிலும் நதிக்கரைகளிலும் மக்கள் மலஜலம் கழித்ததைக் கண்டு என் மனம் அதிக வேதனை அடைந்தது".
தம்பி! காந்தியாருக்கு இருந்துவந்த அழுத்தமான மத நம்பிக்கையை, நான் குறிப்பிட்ட காங்கிரஸ் நண்பர் எடுத்துக் காட்டி, பாபு இராசேந்திர<noinclude></noinclude>
9wlywtdziyn0yvsp7yz51vjhgdmo4gn
1928752
1928750
2026-04-30T07:41:15Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1928752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude>
"உலக இன்பத்தை அனுபவிக்கும் சாதுக்கள்! அக்ரமமான புரட்டு நடத்திப் பணம் பறிக்கும் எத்தர்கள்! அற்புதம் என்று நம்பி, பணம் பறிகொடுத்து பஜித்துக் கிடக்கும் அப்பாவிகள்!!-திருத்தலங் களில் காணக்கிடப்பவை இவை!! இங்கு சென்று வருவதால், என்ன பலன்?" என்று நான் கேட்டேன்-அவர் பதில் கூறுவார், என்ற எண்ணத்துடன் அல்ல! மனம் மாறுவது நன்கு தெரிந்ததால்.
நண்பரே! புரட்டுக்கும் புனிதத் தன்மைக்கும் வித்யாசம் தெரியாமல். காவி கட்டியவனைக் கடவுள் அருள் பெற்றோன் என்றெண்ணிக் கருத்திழந்து கிடக்கும், இந்த மக்களுக்கு, மதவெறி எந்த அளவு இருந்ததாம் தெரியுமா?
கல்கத்தாவிலிருந்து அரித்துவாரம் செல்லும் இரயில், மிக நெருக்கடியானதாம்-வெப்பம் கொல்லுமாம். ஆனால் அப்போதும், இந்து, இந்து தரும் தண்ணீரைத்தான் சாப்பிடுவானாம்.
காந்தியார் எழுதுகிறார். இதைக் குறித்து; கேளும்:
"இத்தகைய பிரயாணத்தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில் கூட, வைதிக இந்துக்கள் முஸ்லீம்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர். இந்து தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இதே இந்துக்கள் நோயுற்று விடும்போது, டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட்டிறைச்சிச் சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிருஸ்தவக் கம்பவுண்டரா, முஸ்லீம் கம்பவுண்டரா என்பதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும்.
நண்பருக்கு, மேலும் விளக்கங்கள் தரத் தேவையில்லை என்று தோன்றிற்று; எனவே, தம்பி, வேறு பகுதிகளை, படித்து மட்டும் காட்டினேன்- விளக்கம் கூறாமல். அந்தப் பகுதிகள் இவை.
"இயற்கைக் காட்சிகள் மிகுந்த இடங்களை மனிதர்கள் உபயோகித்து வந்த விதங்கள் என் மனத்திற்குச் சங்கடத்தை உண்டாக்கின. அரித்துவாரத்தைப் போல, ரிஷிகேசத்திலும் மக்கள் ரஸ்தாக்களையும், அழகிய கங்கைக் கரைகளையும் ஆபாசப்படுத்தி வந்தனர். கங்கையின் புனித நீரையும் அசுத்தப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. கொஞ்சத் தூரம் போனால் ஜன நடமாட்டமில்லாத இடங்களுக்கு எளிதாகப் போயிருக்கக் கூடுமெனினும், அப்படிச் செய்யாமல், பாட்டைகளிலும் நதிக்கரைகளிலும் மக்கள் மலஜலம் கழித்ததைக் கண்டு என் மனம் அதிக வேதனை அடைந்தது".
தம்பி! காந்தியாருக்கு இருந்துவந்த அழுத்தமான மத நம்பிக்கையை, நான் குறிப்பிட்ட காங்கிரஸ் நண்பர் எடுத்துக் காட்டி, பாபு இராசேந்திர<noinclude></noinclude>
0uery25stepr17i58tv2vm56knmpo8a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/298
250
641926
1928735
1927952
2026-04-30T07:31:26Z
Rabiyathul
5890
+ மேலடி
1928735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude>274
'திராவிட நாடு' இதழில்
பிரசாத் அத்தகைய பாரதப் பண்பாடு வழி நிற்பவர் என்று பெருமிதத் துடன் பேசினார்-ஆனால், காந்தியார், தமது சுயசரிதையில் ஒளிவுமறைவு இன்றி, மதத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளையும், பக்தி காரணமாகப் பாமரர், ஐந்து கால் பசுவைப் பூஜிப்பது போன்ற அளவு ஏமாளிகளாகிப் போவதையும் எடுத்துக்காட்டியிருப்பதை நான் படித்துக்காட்டவே, என்ன எண்ணிக் கொண்டாரோ தெரியவில்லை, மேற்கொண்டு பாபு பற்றியோ, பத்ரிநாத் பற்றியோ, பேச்சை எடுக்கவில்லை.
மதநம்பிக்கையைக் கைமுதலாக்கிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்த விரும்புவோர், கொழுக்கத் துடிப்போர் தவிர, மற்ற எவரும், எத்துணை மத நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பினும், பொய்யும் புரட்டும். மூடத்தனமும் ஏமாற்றுவித்தையும், திருத்தலங்களில் காணப்படின், மூடி மறைக்காமல், கண்டித்து வந்தனர். அவ்விதம் கண்டித்தவர்களை, வன்கணாளர்கள், விட்டு வைத்ததுமில்லை.
அரித்துவாரம், ரிஷிகேசம், காசி போன்ற க்ஷேத்திரங்களில் நடைபெற்ற புரட்டுகளையும், நெளிந்த ஆபாசங்களையும், எடுத்துக் காட்டியது போலவே, காந்தியார், காசியிலே உள்ள கண்றாவிக் காட்சியையும், கல்கத்தாவில் காளிமாதாவுக்குத் தரப்படும் உயிர்ப் பலிக் கொடுமையையும், எடுத்துக்காட்டிக் கண்டித்தார்.
*
சுயமரியாதைக்காரரின் கண்டனம் என்றால், வெகு எளிதாக. நாத்திகப் பட்டம்கட்டிப், பொதுமக்களை அவர்களின் மீது ஏவி விடலாம் என்று, மதத்தால் மந்தகாச வாழ்வு நடாத்துவோர். எண்ணிக்கொள்வர்.
ஆனால், காந்தியாரோ, மதவாதி; சனாதனி, இராம பக்தர்; வைஷ்ணவ ஜனதோ என்று பாடிக் கேட்போர் உள்ளத்தை உருக்கி, அனைவரையும் பக்தர்களாக்கவே பாடுபட்டவர் அவர்; மதத்தைக் காட்டி எத்தர்கள் ஏமாளிகளைச் சுரண்டிக் கொழுத்திடுவதை எடுத்துக்காட்டிக் கண்டிக்கும் போது, என்ன செய்ய முடியும்? நாத்திகம் பேசுகிறார் என்று கூறினால். மக்கள் நம்பமாட்டார்கள். எனவே, அவரை ஒழித்துக்கட்டினால் மட்டுமே, தங்கள் சுரண்டல் தங்கு தடையின்றி நடைபெறும் என்ற முடிவுக்கு வந்தனர். மூன்று முறை சுட்டு அல்லவா, மதவெறி, தன் உண்மை வடிவத்தைக் காட்டி, அன்புருவான அண்ணலின் உயிர் குடித்தது.
தம்பி! இந்தத் திங்கள் அவருக்கு 'ஜெயந்தி' நடத்தினார்கள் காங்கிரஸ் கட்சியினர் - அந்த மேடைகளிலே ரிஷிகேசிலும் அரித்து வாரத்திலும்.
.<noinclude></noinclude>
ifh2rs5y0hq3f6h7ngawzdfakfm9v9j
1928758
1928735
2026-04-30T07:49:47Z
Rabiyathul
5890
+ மேலடி
1928758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|274||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>274
'திராவிட நாடு' இதழில்
பிரசாத் அத்தகைய பாரதப் பண்பாடு வழி நிற்பவர் என்று பெருமிதத் துடன் பேசினார்-ஆனால், காந்தியார், தமது சுயசரிதையில் ஒளிவுமறைவு இன்றி, மதத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளையும், பக்தி காரணமாகப் பாமரர், ஐந்து கால் பசுவைப் பூஜிப்பது போன்ற அளவு ஏமாளிகளாகிப் போவதையும் எடுத்துக்காட்டியிருப்பதை நான் படித்துக்காட்டவே, என்ன எண்ணிக் கொண்டாரோ தெரியவில்லை, மேற்கொண்டு பாபு பற்றியோ, பத்ரிநாத் பற்றியோ, பேச்சை எடுக்கவில்லை.
மதநம்பிக்கையைக் கைமுதலாக்கிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்த விரும்புவோர், கொழுக்கத் துடிப்போர் தவிர, மற்ற எவரும், எத்துணை மத நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பினும், பொய்யும் புரட்டும். மூடத்தனமும் ஏமாற்றுவித்தையும், திருத்தலங்களில் காணப்படின், மூடி மறைக்காமல், கண்டித்து வந்தனர். அவ்விதம் கண்டித்தவர்களை, வன்கணாளர்கள், விட்டு வைத்ததுமில்லை.
அரித்துவாரம், ரிஷிகேசம், காசி போன்ற க்ஷேத்திரங்களில் நடைபெற்ற புரட்டுகளையும், நெளிந்த ஆபாசங்களையும், எடுத்துக் காட்டியது போலவே, காந்தியார், காசியிலே உள்ள கண்றாவிக் காட்சியையும், கல்கத்தாவில் காளிமாதாவுக்குத் தரப்படும் உயிர்ப் பலிக் கொடுமையையும், எடுத்துக்காட்டிக் கண்டித்தார்.
*
சுயமரியாதைக்காரரின் கண்டனம் என்றால், வெகு எளிதாக. நாத்திகப் பட்டம்கட்டிப், பொதுமக்களை அவர்களின் மீது ஏவி விடலாம் என்று, மதத்தால் மந்தகாச வாழ்வு நடாத்துவோர். எண்ணிக்கொள்வர்.
ஆனால், காந்தியாரோ, மதவாதி; சனாதனி, இராம பக்தர்; வைஷ்ணவ ஜனதோ என்று பாடிக் கேட்போர் உள்ளத்தை உருக்கி, அனைவரையும் பக்தர்களாக்கவே பாடுபட்டவர் அவர்; மதத்தைக் காட்டி எத்தர்கள் ஏமாளிகளைச் சுரண்டிக் கொழுத்திடுவதை எடுத்துக்காட்டிக் கண்டிக்கும் போது, என்ன செய்ய முடியும்? நாத்திகம் பேசுகிறார் என்று கூறினால். மக்கள் நம்பமாட்டார்கள். எனவே, அவரை ஒழித்துக்கட்டினால் மட்டுமே, தங்கள் சுரண்டல் தங்கு தடையின்றி நடைபெறும் என்ற முடிவுக்கு வந்தனர். மூன்று முறை சுட்டு அல்லவா, மதவெறி, தன் உண்மை வடிவத்தைக் காட்டி, அன்புருவான அண்ணலின் உயிர் குடித்தது.
தம்பி! இந்தத் திங்கள் அவருக்கு 'ஜெயந்தி' நடத்தினார்கள் காங்கிரஸ் கட்சியினர் - அந்த மேடைகளிலே ரிஷிகேசிலும் அரித்து வாரத்திலும்.
.<noinclude></noinclude>
bmlzn78ydh56pis8x8wnyr1m3rifg1p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/299
250
641927
1928737
1927953
2026-04-30T07:31:57Z
Rabiyathul
5890
+ மேலடி
1928737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|274||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
275
காளிகட்டத்திலும் காசியிலும் காணப்பட்ட கபடம், கயமைத்தனம், ஆபாசம், அக்ரமம், இவைகளைக் கண்டித்த காந்தியாரைக் காட்டி இருக்கமாட்டார்கள். அந்தக் காந்தியாரைத் தான் கொன்று போட்டா யிற்றே! இப்போது அவர்கள் காட்டும் காந்தியார், இவர்களுக்கு ஓட்டு வாங்கித்தரும் கருவியாக்கப்பட்ட காந்தியார். நான். தம்பி! அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் காட்டிய காந்தியார், காசியைக் கண்டு, மனம் குமுறியதையும் கூறுகிறேன். நாட்டினருக்கு எடுத்துக்கூறும், நல்ல தம்பியாயிற்றே, நீ, அதனால்,
*
காசி! கர்மம் யாவும் தீருமாம். அந்தத் திருத்தலம் சென்றால். புனிதக் கங்கை, பாபம் போக்கும்-காசி விசுவநாதரின் தரிசனம், புண்யம் தரும். காசியைத் தரிசித்த பிறகுதான். ஒருவன். பூரண இந்து ஆகிறான் என்பர். வைதிகர்கள்.
அத்தகைய காசிக்குக் காந்தியார், சென்றார்- பயபக்தியுடன்- தூய உள்ளத்துடன். என்ன கண்டார்? நான் கூறத் தேவையில்லை, அவரே, விளக்கமாக எழுதிவிட்டிருக்கிறார். துவக்கத்திலேயே, தமது துக்கத்தைக் காட்டுகிறார்.
"நான் சுவாமி தரிசனத்துக்காக, காசி விசுவநாதர் கோயிலுக்குப் போனேன்.
"நான் கண்டவை எனக்கு மனவேதனையைத் தந்தன.
''நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்திருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது".
காந்தியார், ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட இந்து. ஆனால் வேறு பலர், மதப்புரட்டுகளைக் கண்டறிந்தவர்கள். திருத்தலங் களிலேயே நடைபெறும் அக்ரம ஆபாசங்களை அம்பலப்படுத்தி இருந்தனர், எனவே, காந்தியார் காசி செல்லும்போதே. அவர் ஓரளவு, அக்ரமம் அங்கு இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்துத்தான் சென்றார்.
ஆனால், அவர் கூறுவதுபோல, அவர் அங்கு கண்டது. எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது.
மகன், சுயமரியாதை இயக்கம், காசி இராமேஸ்வரம் போவது, காவடி தூக்குவது, வீதியில் புரள்வது போன்றவைகள், காட்டு மிராண்டித்தனம் என்று ஊருக்குக் கூறுகிறான். நான் மட்டும், அவன் பேச்சைத் துச்சமென்று கருதலாமா? அதனால்தான், காசி போகிறேன் என்று காமாட்சி சொன்னபோது, ஆசையை அடக்கிக் கொண்டு, போய்வாடி<noinclude></noinclude>
h85vdcxz2kg1vcqdasoeowmvqstfu7y
1928759
1928737
2026-04-30T07:50:19Z
Rabiyathul
5890
+ மேலடி
1928759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||275}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
275
காளிகட்டத்திலும் காசியிலும் காணப்பட்ட கபடம், கயமைத்தனம், ஆபாசம், அக்ரமம், இவைகளைக் கண்டித்த காந்தியாரைக் காட்டி இருக்கமாட்டார்கள். அந்தக் காந்தியாரைத் தான் கொன்று போட்டா யிற்றே! இப்போது அவர்கள் காட்டும் காந்தியார், இவர்களுக்கு ஓட்டு வாங்கித்தரும் கருவியாக்கப்பட்ட காந்தியார். நான். தம்பி! அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் காட்டிய காந்தியார், காசியைக் கண்டு, மனம் குமுறியதையும் கூறுகிறேன். நாட்டினருக்கு எடுத்துக்கூறும், நல்ல தம்பியாயிற்றே, நீ, அதனால்,
*
காசி! கர்மம் யாவும் தீருமாம். அந்தத் திருத்தலம் சென்றால். புனிதக் கங்கை, பாபம் போக்கும்-காசி விசுவநாதரின் தரிசனம், புண்யம் தரும். காசியைத் தரிசித்த பிறகுதான். ஒருவன். பூரண இந்து ஆகிறான் என்பர். வைதிகர்கள்.
அத்தகைய காசிக்குக் காந்தியார், சென்றார்- பயபக்தியுடன்- தூய உள்ளத்துடன். என்ன கண்டார்? நான் கூறத் தேவையில்லை, அவரே, விளக்கமாக எழுதிவிட்டிருக்கிறார். துவக்கத்திலேயே, தமது துக்கத்தைக் காட்டுகிறார்.
"நான் சுவாமி தரிசனத்துக்காக, காசி விசுவநாதர் கோயிலுக்குப் போனேன்.
"நான் கண்டவை எனக்கு மனவேதனையைத் தந்தன.
''நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்திருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது".
காந்தியார், ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட இந்து. ஆனால் வேறு பலர், மதப்புரட்டுகளைக் கண்டறிந்தவர்கள். திருத்தலங் களிலேயே நடைபெறும் அக்ரம ஆபாசங்களை அம்பலப்படுத்தி இருந்தனர், எனவே, காந்தியார் காசி செல்லும்போதே. அவர் ஓரளவு, அக்ரமம் அங்கு இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்துத்தான் சென்றார்.
ஆனால், அவர் கூறுவதுபோல, அவர் அங்கு கண்டது. எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது.
மகன், சுயமரியாதை இயக்கம், காசி இராமேஸ்வரம் போவது, காவடி தூக்குவது, வீதியில் புரள்வது போன்றவைகள், காட்டு மிராண்டித்தனம் என்று ஊருக்குக் கூறுகிறான். நான் மட்டும், அவன் பேச்சைத் துச்சமென்று கருதலாமா? அதனால்தான், காசி போகிறேன் என்று காமாட்சி சொன்னபோது, ஆசையை அடக்கிக் கொண்டு, போய்வாடி<noinclude></noinclude>
977kcfmzpx13zbwivqak18lluktgyps
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/300
250
641928
1928738
1927954
2026-04-30T07:32:29Z
Rabiyathul
5890
+ மேலடி
1928738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||275}}{{rule}}</noinclude>276
'திராவிட நாடு' இதழில்
அம்மா என்று சொல்லி அனுப்பினேன். அவள் கொடுத்து வைத்தவள், காசி க்ஷேத்திரம் செல்கிறாள், நமக்குத்தான் அந்தப் பாக்யம் இல்லையே, என்று தம்பி! வீட்டிலே பாட்டியோ அத்தையோ, பெரியம்மாவோ பிறரோ, மனச்சங்கடத்தோடு இருப்பார்களானால், அவர்களை ஒருமுறை, காசியைக் காணச் சொல்லு-இங்கு இருந்தபடியே-காந்தியார் கண்ட காசியை-அவர் சுயசரிதையில் சித்தரிக்கப்பட்டுள்ள காசியை.
காந்தியார் அழைக்கிறார், காசியைக் காண
"குறுகலான வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது.
அங்கோ அமைதி என்பதே இல்லை.
ஈக்கள் ஏகமாக மொய்த்தன.
கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது.
நான் கோயிலுக்குள்ளே போனதும், வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது.
வைக்
அழகு
உயர்ந்த கற்களாலான தரை; ஆனால், உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், சலவைக் கற்களை ஆங்காங்கே உடைத்து அவற்றில் ரூபாய் நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்குச் சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன.
ஞானவாவி (ஞானக்கிணறு) பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன்.
ஆனால் நான் காணவில்லை.
ஆகையால், எனக்கு மனநிலை நன்றாக இல்லை. ஞானவாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை. ஆகையால், ஒரு தம்படி கொடுத்தேன்.
அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத் தம்படியை வீசி எறிந்துவிட்டார்.
இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டு போகும்' என்று கூறி என்னைச் சபித்தார்".
கவனித்தனையா, தம்பி! நாம் பகுத்தறிவாளர் என்பதனால். பதறிப், பழைமையாளர் நம்மீது பாய்கின்றனர், தூற்றுகின்றனர் என்பதைப்<noinclude></noinclude>
hy93u4wtbice9gy3cec57g05zo1v9kp
1928760
1928738
2026-04-30T07:50:50Z
Rabiyathul
5890
+ மேலடி
1928760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|276||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>276
'திராவிட நாடு' இதழில்
அம்மா என்று சொல்லி அனுப்பினேன். அவள் கொடுத்து வைத்தவள், காசி க்ஷேத்திரம் செல்கிறாள், நமக்குத்தான் அந்தப் பாக்யம் இல்லையே, என்று தம்பி! வீட்டிலே பாட்டியோ அத்தையோ, பெரியம்மாவோ பிறரோ, மனச்சங்கடத்தோடு இருப்பார்களானால், அவர்களை ஒருமுறை, காசியைக் காணச் சொல்லு-இங்கு இருந்தபடியே-காந்தியார் கண்ட காசியை-அவர் சுயசரிதையில் சித்தரிக்கப்பட்டுள்ள காசியை.
காந்தியார் அழைக்கிறார், காசியைக் காண
"குறுகலான வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது.
அங்கோ அமைதி என்பதே இல்லை.
ஈக்கள் ஏகமாக மொய்த்தன.
கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது.
நான் கோயிலுக்குள்ளே போனதும், வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது.
வைக்
அழகு
உயர்ந்த கற்களாலான தரை; ஆனால், உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், சலவைக் கற்களை ஆங்காங்கே உடைத்து அவற்றில் ரூபாய் நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்குச் சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன.
ஞானவாவி (ஞானக்கிணறு) பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன்.
ஆனால் நான் காணவில்லை.
ஆகையால், எனக்கு மனநிலை நன்றாக இல்லை. ஞானவாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை. ஆகையால், ஒரு தம்படி கொடுத்தேன்.
அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத் தம்படியை வீசி எறிந்துவிட்டார்.
இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டு போகும்' என்று கூறி என்னைச் சபித்தார்".
கவனித்தனையா, தம்பி! நாம் பகுத்தறிவாளர் என்பதனால். பதறிப், பழைமையாளர் நம்மீது பாய்கின்றனர், தூற்றுகின்றனர் என்பதைப்<noinclude></noinclude>
l5ri234d64hqx451m96c1ieybx0fvx9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/301
250
641929
1928761
1927955
2026-04-30T07:51:21Z
Rabiyathul
5890
+ மேலடி
1928761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||277}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
277
பார்க்கும்பொழுது, நம்மிலே துடிப்புள்ளவர்கள் மெத்தக் கோபப் படுகிறார்களல்லவா!
பிரம்மத் துவேஷி!
வேத நிந்தகன்! நாஸ்திகன்!
நாக்கு அழுகிவிடும்!
ரௌரவாதி நரகம் போவாய்!
கசடன்!
அசடன்!
அற்பாயுசு!
.
தம்பி! இவை தமிழகத்திலே, இப்பொழுது, சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத், துணிவை வரவழைத்துக் கொண்டு, பட்டிதொட்டிகளிலே. குளத்துப் படிக்கட்டுகளிலே, காது கேளாதவன், கண் அவிந்தவன், கதியற்றவன், கிலி கொண்டவன், ஆகியவர்களுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லப்படும். வார்த்தைகளாகி விட்டன.
உரத்த குரலில், கோபத்துடன், இந்த வார்த்தைகளை நாடக மேடையில் மட்டுமே கூறிடக் கேட்கலாம்; நாட்டிலே இவை இப்போது நடமாட விடப்படுவதில்லை.
நமது தம்பிகளிலே, பதினைந்து வயதுக்குள் இருப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள், பொருள் விளங்கா ஓசைகளாகி விட்டன.
ஆனால், தம்பி! என் போன்றோர் இளைஞர்களாக, பள்ளி மாணவர் களாக இருந்தபோது, இந்தச் 'சாபம்' நித்த நித்தம், நாடெங்கணும், எவர் செவியிலும் வீழ்ந்து கொண்டிருந்த சங்கீதமாக இருந்தது.
ஐயோ சாபம் கொடுத்துவிடப் போகிறார்! - என்று பாட்டனார் பதறுவார், பாட்டி, பாதம் வீழ்ந்து வணங்குவாள் அவ்வளவு பயம் பிய்த்துத் தின்னும்
-
கட்டுக்காவலை மதியாமல், குலதர்மத்தைக் கவனிக்காமல், மதத்தை அழித்திடும் போக்கிலே, பேசுவோர், செயலில் ஈடுபடுவோர், ஆகியோருக்கு, பூசுரர். அவர்கள் பூஜை செய்வோராயினும், பூட்ஸ் அணிந்து பரங்கியனுக்குப் பணிவிடை செய்வோனாயினும், இடும் சாபம்!
அப்படியா சபித்தனர் என்று, இப்போது தம்பிமார்கள். கேட்டுத் துடிக்கின்றனர்.
அப்போதேகூடச் சிறிது கோபமுள்ளவர்கள், எதிர்த்தனர் - தாக்கினர் - பெரும்பாலும் சொல்லால்.<noinclude></noinclude>
l61jxt0atsjbklesfwkkow6r6fhtbum
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/302
250
641930
1928762
1927956
2026-04-30T07:51:53Z
Rabiyathul
5890
+ மேலடி
1928762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|278||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>278
'திராவிட நாடு' இதழில்
ஆனால், அப்படிச் 'சாபம்' பெற்றவர்களில், மதத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, இராம நாமத்தைப் பஜித்துக் கொண்டிருந்த, காந்தியாரும் ஒருவர், என்பதை அறியும்போது, வேதனையினூடே சிரிப்பல்லவா வருகிறது.
தட்சணை கொடுத்தார், ஒரு தம்படி!
இது, ஆயிரத்தெட்டு இழிமொழி வீசுவதைக் காட்டிலும், கொடுமை யானதாகக், கேவலமானதாகத்தானே தோன்றும் பண்டாவுக்கு பூஜாரிக்கு!
-
இகபரசுகம் இரண்டுக்கும் வழி அருளும் விசுவநாதர் ஆலயம்! காசி ஷேத்திரம்! அங்கு, பக்தருக்கும் பரமனுக்கும் இடையிலே, வேதாகமம் தந்த உரிமையின்படி நிற்கிறார், பண்டா! இந்தப் பொல்லாத காந்தியார். ஒரு தம்படியா, கொடுப்பது தட்சணை!
பவுன் கொடுத்தனர் - வெள்ளி நாணயம் கொடுத்தனர் - பாதம் தொட்டுக் கும்பிட்டுவிட்டு - பக்தர்கள். இவர், ஒரு தம்பிடி தருகிறார்!
ஆலயத்திலே அமர்ந்துள்ள தேவனிடம், பக்தன் வந்திருக்கிறான்! அவன் பாபம் போக்கு! புண்யம் கிடைத்திடச்செய்! - என்று மன்றாடப் போகிறான் - அதற்கான 'மாதவன்' செய்து பண்டாவானான். அவனுக்கு, ஆலயத்தில், பல பக்தர்கள் முன்னிலையில், காந்தியார், தட்சணை தரப் பணம் இல்லை என்றுகூடச் சொல்லி விட்டிருக் கலாம் - ஒரு தம்படியா தருவது, தட்சணையாக!
காலமெல்லாம், பண்டாவின் செல்வாக்கைப் பார்த்துப் பார்த்து ஆச்சரியத்தால், அசைவற்று நிற்கும், விசுவநாதர்கூட அல்லவா. ஒரு தம்படி தட்சணை தரப்படுவது கண்டு, விலா நோகச் சிரிப்பார்!
சபித்தார், பண்டா! 'நேரே நரகம்தான் போவாய்' - என்று. என்ன செய்தார். காந்தியார்?
இதைக் கேட்டு நான் பரபரப்பு அடைந்துவிடவில்லை. 'மகராஜ்! என் விதி எப்படியானாலும் சரி, ஆனால், இப்படியெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது. விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்' என்றேன்.
எப்படி, காந்தியாருடைய நெஞ்சழுத்தம் என்று கூற அல்ல, இதை எடுத்துக்காட்டுவது, காந்தியாருடைய சொல்லிலே தொக்கி நிற்கும். நகைச்சுவை இருக்கிறதே, அதைக்காட்ட இதைக் கூறினேன்.<noinclude></noinclude>
hwwiwulho3y2uzvs1vm310qyf5h1j94
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/303
250
641931
1928763
1927957
2026-04-30T07:52:25Z
Rabiyathul
5890
+ மேலடி
1928763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||279}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
279
தம்பி! கவனித்தாயா? கொடுத்தது தம்படி! பண்டாவுக்கு! ஆனால், பண்டாவைக் கூப்பிடுவதோ, மகராஜ்! - கவனித்தாயா
திகைத்துப் போயிருக்கவேண்டும், காசிவாசி.
"போய்த்தொலை. உன் தம்படி எனக்கு வேண்டாம்" என்றார், தொடர்ந்து வசைமாரி பொழிந்தார்!
சரி! பண்டா, வசைமாரி பொழியட்டும் என்று கவலையற்றுக் காந்தியார், தம் வழி நடந்தாரா? அல்லது, நின்று, பண்டாவைப் பார்த்து, அளவுக்கு மீறிப் பேசாதே! அவதியைக் கூவி அழைக்காதே! என்று எச்சரித்தாரா? என்ன செய்தார்? அவரே, கூறக் கேள். தம்பி! சுவை காண்பாய்.
"தரையில் கிடந்த தம்படியை எடுத்துக்கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன்.
"பிராமணர் ஒரு தம்படியை இழந்தார்.
"எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன். ஆனால் மகராஜ் அந்தத் தம்படியையும் விட்டுவிடக் கூடியவர்
அல்ல.
என்னைத் திரும்பக் கூப்பிட்டார்.
அது சரி, அந்தத் தம்படியை இங்கே கொடுத்துவிட்டுப்போ! உன் தம்படியை வாங்கிக் கொள்ள நான் மறுத்துவிட்டால், அது உனக்குக் கெடுதல் ஆகிவிடும் என்றார்.
நான் ஒன்றும் சொல்லாமல், அந்தத் தம்படியை அவரிடம் கொடுத்தேன். அப்புறம் ஒரு முறை பெருமூச்சுவிட்டுக்கொண்டு அப்பால் போய்விட்டேன்".
தம்பி! இதைக் கருணாநிதி கதை வடிவாக்கினால், நமது காங்கிரஸ் நண்பர்கள், சீறி விழுவார்கள். கதையாம் கதை! இப்படியா ஒரு சம்பவம் நடக்கும்! அற்பத்தனத்தை அச்சாணியாக வைத்து ஒரு அபத்தக் கதை எழுதிவிடுவதா இதுதான், தமிழ் வளர்க்கும் வழியா? இதுதான் கலையா? தூ! தூ! சே! சே! என்றெல்லாம் ஏசுவர்.
ஆனால், இது, காந்தியாரின் சுயசரிதையில் இருக்கிறது.
கொடுத்தது தம்படி கிடைத்தது சாபம்! அந்தத் தம்படியும் இல்லை என்ற நிலை! உடனே. அதையாவது கொடு என்ற பவதி பிக்ஷாந்தேஹி நிலை!!<noinclude></noinclude>
orsni8kcot08h10hidrn4ovyb633xr9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/304
250
641932
1928764
1927958
2026-04-30T07:52:57Z
Rabiyathul
5890
+ மேலடி
1928764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|280||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>280
'திராவிட நாடு' இதழில்
ஒவ்வொரு மாலையும், காந்தியார் இராமநாமப் பஜனை மட்டும் செய்யாதிருந்திருப்பாரானால், இந்த ஒரு செயலுக்காக மட்டுமே. அவரை, 'ஈரோடு' ஆக்கிவிட்டிருப்பார்கள் வைதிகர்கள்.
ஐந்து கால் பசு, இருப்பதைக் காணீர்! என்று காந்தி யாரையே நம்பவைத்த புரட்டர்களுக்கு முதலிடமாகத் திருத்தலங்கள் உள்ளன என்பது, தெரிந்துதான், பகுத்தறிவாளர்கள். அந்த இடங்களுக்குச் சென்று வருவது நேரக்கேடு, அறிவுக்கேடு என்று கருதுகின்றனர். மெள்ள மெள்ளப் பாமரர்கூடப் புரட்டுகளை வெறுக்கவும், மதத்தைக் காட்டி ஏய்ப்போரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும் துணிவுபெற்று வருகின்றனர். இந்த நேரத்திலே பாபு இராஜேந்திர பிரசாத் திருத்தல யாத்திரை ஏற்பது பிற்போக்காளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பாகி விடுமே என்பதுதான், நம் போன்றாருக்கு உள்ள கவலை. அதனால்தான் திருத்தலங்களிலே காந்தியார் கண்டதைக் குறித்தும், கொள்கை கருத்துப் பற்றியும் எழுதினேன்.
நேரு பண்டிதர், வேறோர் வகையான திருத்தலம் சென்று வந்திருக்கிறார். அது குறித்துப் பிறகு எழுதுகிறேன்.
16.10.60
அண்ணன்,
Jimmzanz<noinclude></noinclude>
emedub6vah06cg3a9e16xl1h7y9oy31
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/305
250
641933
1928766
1927959
2026-04-30T07:53:27Z
Rabiyathul
5890
+ மேலடி
1928766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||281}}{{rule}}</noinclude>தம்பி!
கடிதம் : 122
கொல்லிமலைச் சாரலிலே
கொல்லிமலை மக்கள் இயல்பு -
குமாரசாமி ராஜா கருத்துரை -
தமிழக மலை வளம்.
கொல்லிமலைச் சாரலிலே, கொஞ்சும் சதங்கை ஒலி எழுப்பிய படி அடிவரும் அருவிக்கருகே, வழவழப்பான கற்குவியலின் மீதமர்ந்து, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். திருச்சி மாவட்டத்திலே பல்வேறு இடங்கட்கு இந்தக் கிழமை அழைத்துச் செல்லப்பட்டேன் ஒவ்வோர் நாளும் மூன்று நான்கு நிகழ்ச்சிகள். இப்படி இழுத்துச் செல்வதால், களைப்பும் சலிப்பும் எனக்கு ஏற்பட்டுவிடுமோ. மற்ற பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்பம் அளித்திட மறுப்பேனோ என்னவோ, என்று எண்ணிக் கொண்டனர் போலும், அன்பில் தர்மலிங்கமும், அவருடன் இருந்து என்னை அகமகிழவைத்த, தோழர்கள் காமாட்சி, அழகமுத்து, முத்துக் கருப்பன், ஆகியோரும் சரி, அண்ணனுக்கு எதையாவது காட்டிக் களிப்பூட்டுவோம் என்று எண்ணிக்கொண்டு, மலைவளம் அழைத்தனர். கோடி கோடியாகக் கொட்டிச் செலவிட்டாலும் செய்து காட்ட இயலாத காட்சியன்றோ, மலைவளம். அதிலும், தம்பி! தமிழகத்தின் தன்னிகரில்லா வரலாற்றுச் சிறப்பினுக்கு உள்ள சான்றுகளிலே ஒன்றன்றோ, கொல்லிமலை! அந்த மலைச்சாரலில் அமைந்துள்ள புளியஞ்சோலை என்னும் இடம் அழைத்துச் சென்றனர் பகற்பொழுது முழுவதும் ஆங்கு தங்கி, உண்டு இளைப்பாறி, உரையாடி மகிழ்ந்து, மாலை நிகழ்ச்சிக்குச் சென்றிடுவது என்ற திட்டத்துடன்.
காண
தம்பி! கொல்லிமலை, திருச்சி மாவட்டத்துக்கும் சேலம் மாவட்டத்துக்கும் நடுவே. இயற்கை அமைத்துள்ள எழில்மிகு திரை என்று கூறலாம், இப்புறத்தில் திருச்சி - அப்புறம் சென்றால் சேலம்- சேந்தமங்கலப் பகுதி! 'ஒஹோ! உனக்கு அப்படிக் கூறுவதை விட, விளங்கத்தக்க விதத்தில் கூற வேண்டும்! அப்புறம், நமது இயக்க முதியவர்.ஜி.பி. சோமசுந்தரம்!
கொல்லிமலையினின்றும், இரு மாவட்டங்களுக்கும் கீழ்நோக்கிச் செல்ல, ஒற்றையடிப் பாதைகள் உள்ளன. மலைபடு பொருள்களைச் சுமந்துகொண்டு, இரு மாவட்டங்களுக்கும் வருகின்றனர்.<noinclude></noinclude>
7g62c2evfywrzvv2bsdllftf1ytcwfa
1929017
1928766
2026-04-30T11:20:16Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>தம்பி!
கடிதம் : 122
கொல்லிமலைச் சாரலிலே
கொல்லிமலை மக்கள் இயல்பு -
குமாரசாமி ராஜா கருத்துரை -
தமிழக மலை வளம்.
கொல்லிமலைச் சாரலிலே, கொஞ்சும் சதங்கை ஒலி எழுப்பிய படி அடிவரும் அருவிக்கருகே, வழவழப்பான கற்குவியலின் மீதமர்ந்து, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். திருச்சி மாவட்டத்திலே பல்வேறு இடங்கட்கு இந்தக் கிழமை அழைத்துச் செல்லப்பட்டேன் ஒவ்வோர் நாளும் மூன்று நான்கு நிகழ்ச்சிகள். இப்படி இழுத்துச் செல்வதால், களைப்பும் சலிப்பும் எனக்கு ஏற்பட்டுவிடுமோ. மற்ற பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்பம் அளித்திட மறுப்பேனோ என்னவோ, என்று எண்ணிக் கொண்டனர் போலும், அன்பில் தர்மலிங்கமும், அவருடன் இருந்து என்னை அகமகிழவைத்த, தோழர்கள் காமாட்சி, அழகமுத்து, முத்துக் கருப்பன், ஆகியோரும் சரி, அண்ணனுக்கு எதையாவது காட்டிக் களிப்பூட்டுவோம் என்று எண்ணிக்கொண்டு, மலைவளம் அழைத்தனர். கோடி கோடியாகக் கொட்டிச் செலவிட்டாலும் செய்து காட்ட இயலாத காட்சியன்றோ, மலைவளம். அதிலும், தம்பி! தமிழகத்தின் தன்னிகரில்லா வரலாற்றுச் சிறப்பினுக்கு உள்ள சான்றுகளிலே ஒன்றன்றோ, கொல்லிமலை! அந்த மலைச்சாரலில் அமைந்துள்ள புளியஞ்சோலை என்னும் இடம் அழைத்துச் சென்றனர் பகற்பொழுது முழுவதும் ஆங்கு தங்கி, உண்டு இளைப்பாறி, உரையாடி மகிழ்ந்து, மாலை நிகழ்ச்சிக்குச் சென்றிடுவது என்ற திட்டத்துடன்.
காண
தம்பி! கொல்லிமலை, திருச்சி மாவட்டத்துக்கும் சேலம் மாவட்டத்துக்கும் நடுவே. இயற்கை அமைத்துள்ள எழில்மிகு திரை என்று கூறலாம், இப்புறத்தில் திருச்சி - அப்புறம் சென்றால் சேலம்- சேந்தமங்கலப் பகுதி! 'ஒஹோ! உனக்கு அப்படிக் கூறுவதை விட, விளங்கத்தக்க விதத்தில் கூற வேண்டும்! அப்புறம், நமது இயக்க முதியவர்.ஜி.பி. சோமசுந்தரம்!
கொல்லிமலையினின்றும், இரு மாவட்டங்களுக்கும் கீழ்நோக்கிச் செல்ல, ஒற்றையடிப் பாதைகள் உள்ளன. மலைபடு பொருள்களைச் சுமந்துகொண்டு, இரு மாவட்டங்களுக்கும் வருகின்றனர்.<noinclude></noinclude>
7ipg7nm848amlb9qzkbp3wwnb2viteo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/306
250
641934
1928767
1927960
2026-04-30T07:53:59Z
Rabiyathul
5890
+ மேலடி
1928767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|282||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>282
'திராவிட நாடு' இதழில்
நான் சென்ற அன்று, புளியஞ்சோலையிலே, சந்தை.
நெடுஞ்சாலைக்கருகே நடத்தப்படும் சந்தைகள் பலவற்றைக் கண்டதுண்டு; மலைச்சாரலிலே நடந்திடும் சந்தையை அன்றுதான் கண்டேன்.
கொல்லிமலையிலே
விளைந்திடும் பலாவும், வாழையும். கொய்யாக் கனிகளும், பருப்பு வகைகளுமான பொருள்களை, மலை வாழ் மக்கள், சுமந்தபடி ஒற்றையடிப்பாதை வழியாக இறங்கிவந்த வண்ணம் இருந்தனர். சாரை சாரையாக, மரத்தடிக்கு மரத்தடி, சிறு கடைகள் அமைத்துக்கொண்டு. மலை மக்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். சிறுகடை நடாத்தும் வணிகர்கள். இரைச்சல் குறைவு! இயற்கை அமைத்தளித்த எழிலோ மிகுதி! கட்டுடல் இருக்கிறது. மலைவாழ் மக்களிடம். ஆயினும், முகத்திலே கவலை தோய்ந் திருக்கக் கண்டேன். அவர்கள் மனதைக் குடைந்திடும் எண்ணம் யாதோ, அறிந்திட இயலவில்லை; ஆயினும், இயற்கையுடன் போராடி, காடுகளில் குடிஇருந்துகொண்டு. காலமெல்லாம் கஷ்டப்படுகிறோமே. நல்ல பாதை, புதிய வாழ்வு, எப்போதுதான் கிடைத்திடுமோ, புத்தம் புதிய ஆட்சி வந்தது என்றனர்; புல்லர்களின் கொட்டம் அழிந்தது என்றனர்; எனினும், நமது வாழ்க்கையிலே மட்டும். எந்தப் புதிய மாற்றமும் ஏற்படக் காணோமே, என்று எண்ணி ஏக்கமடைகின்றனரோ, என்னவோ, யாரறிவர்.
மலைவாழ்மக்கள், தமிழைத்தான் பேசுகின்றனர். தடுக்கு மொழி! பெயர் கேட்டேன். ஒரு இளைஞனை - செல்லப்பன் என்றான். அழகிய பெயர்! தந்தையின் பெயர் வடமன் என்றான். பெண்கள், புடவையையே மேலாடைக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். தோற்றத்தால். அவர்கள், எவ்வகையிலும், நம்மில் வேறுபட்டவர்களாகத் தெரியவில்லை. மலைமீது, கானிடை வாழ்வதால், ஏற்படும், நடைஉடை முறைகளிலே மட்டுமே, வேறுபாடுகள் தெரிந்தன.
கொய்யாக் கனிகளும், மலைவாழையும், பலாவும் மட்டுந்தானா. மலைபடு பொருள்கள் என்று கேட்டேன் தம்பி! நான் கேட்டு மலைத்திடும் முறையில், மளமளவென்று மலைபடு பொருள்களின் பட்டியலைக் கூறினர்.
காப்பியும் மிளகும், கடுக்காயும் ஏலமும், சந்தனமும் மிளகும், ஆங்கு உண்டு என்றனர். இவை, வெறும் பொருள்களின் பெயர்ப் பட்டியலென்று, பொருளாதார நூலறிவு உடைய எவரும் கூறார்.<noinclude></noinclude>
r8vrkxqyk6iut2q2cinmhdpuqifiznk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/307
250
641935
1928768
1927961
2026-04-30T07:54:30Z
Rabiyathul
5890
+ மேலடி
1928768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||283}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
283
இவை யாவும் வெளிநாட்டினர் விரும்பிப்பெற்று, பொருளினை நமக்கு அளித்திட உதவும் செல்லப் பொருள்கள்! மேனாடுகள் பலவற்றினுக்கும், சுவையும் மணமும், இத்தகு பொருள்கள் மூலமே கிடைக்கின்றன.
செல்வப் பொருள்களை ஈந்திடும், கொல்லிமலையின் வளத்தைத் திட்டமிட்டுப் பெற்றிடத்தக்க ஏற்பாடுகளைத் துரைத்தனம் மேற்கொண்டு இருந்திருக்குமானால், எதெதற்கோ செலவிடும் தொகையிலே ஒரு சிறு அளவு இதற்கென ஒதுக்கிச் செலவிட்டு இருந்திருப்பின், கொல்லிமலையின் கொடைத்திறன், பன்மடங்கு அதிகமாகி இருக்கும்-திருச்சி மாவட்டம் முழுவதும், இந்த மலைபடு பொருள் ஈட்டித் தரும் செல்வத்தைக் கொண்டே, ஏற்றம் பெற்றிடக் கூட இயலும். இப்போது கொல்லி மலையிலே கிடைப்பவை, திட்ட மிட்டுப் பெறப்படுபவை அல்ல. மலைப்படுபொருள் வகை அறிந்த விற்பன்னர்கள். வளம் கண்டறிந்து, இங்குத் தோட்டங்களை அமைத்தனரோ, எனின், இல்லை. பன்னெடுங் காலமாக இருந்து வரும் தருக்கள்! பாய்ந்தோடிவரும் அருவி, வழவழப்பாகிப்போன நிலையிலுள்ள பாறைகள், உருளைக் கற்கள்! மரக்கிளைகளிலே மந்திகள்! இனிய பண் பல எழுப்பி, வட்டமிட்டுத் திரிந்திடும் புள்ளினங்கள்! சீறிடும் சிறுத்தைகளும், கிழங்கு அகழ்ந்திடும் காட்டுப் பன்றிகளும், சிறு நரிகளும் உண்டு! உச்சி செல்லச் செல்ல, கரடிக் கூட்டமும் உண்டு என்கின்றனர். இவைகளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டு, வாழ்கின்றனர், மலை மக்கள் - தம்பி! அவர்கள் ஓட்டர்களும் கூட!! - அதாவது அவர்களும், நம்மைப் போல் இந்நாட்டு மன்னர்!!
பெரும்பகுதி நிலத்திலே சாமை பயிரிடுகின்றனர் - அந்தச் சோறு. மல்லி நிறம்! வேறு நெல்வகையும்கூடப் பயிராகின்றது. எல்லாம், தக்க திட்டமிட்டு அல்ல! பெரும்பாலானவை, தன்னிச்சையாகத் தழைக்கின்றன. "என் ஆற்றலின் அளவு அறியமாட்டீர்கள், அறிவிலிகாள்! நான் தரவல்ல யாவை என்பதை நீவீர், சிறிதளவு தெரிந்துகொள்ள மட்டுமே. இப் பொருள்களைக் காட்டி நிற்கிறேன்!" - என்று நம்மை நோக்கிக் கேலி செய்வதுபோல, நிற்கிறது கொல்லி மலை, இங்கு வீழ்ந்தோடிவரும், அருவி நீரைத் தேக்கிப் பயன்மிகுதியாகப் பெற இயலும் என்று. பல ஆண்டுகளுக்கு முன்பே, பலரும் எடுத்துக் கூறினர்: நமது கழக மாநாட்டிலே தீர்மானமும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அதற்காகச் செலவிடப்படும் பணத்தின் அளவிற்குத்தக்க பலன் கிட்டாது என்று, நிபுணர்கள் செப்புவதாகக் கூறித் துயில்கொண்டனர் துரைத்தனத்தார். மீண்டும் மீண்டும், அந்தப் பிரச்சினையைப் பலரும் எடுத்துப்பேசி வருவதால், இப்போது துரைத்தனத்தார், செயல்படத் துணிந்துள்ளனர் என்று அறிகிறேன். அதற்கு அறிகுறியாகத் தேக்கம், அணை, போன்றவைகளை அமைத்திடும் துறையினர், ஆங்கு நடமாடுகின்றனர் -<noinclude></noinclude>
svxz8i63w8x2rlt7mfvbw9o16y9g8gh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/308
250
641936
1928770
1927962
2026-04-30T07:55:15Z
Rabiyathul
5890
+ மேலடி
1928770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|284||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>284
'திராவிட நாடு' இதழில்
இங்கும் அங்குமாக வெள்ளைநிறம்
பாறைகளிலே அடித்து வைத்துள்ளனர் - காண்போர். இந்தப் பக்கமாகத்தான் தேக்கம் - அணை என்று பேசிக்கொள்கின்றனர்.
தம்பி! துரைத்தனம், எந்த திட்டம் நடாத்துவதானாலும், செலவிடும் தொகைக்கு ஏற்பப், பலன் கிடைத்திட வேண்டும் என்று கருதித் தான் பணியாற்ற வேண்டும். ஆனால், ஏதும் செய்யாதிருக்க இந்த நோக்கத்தைச் சாக்காக்கிக் கொள்வதே, நமது துரைத்தனத்தின் போக்காகி விட்டது. அதிலும் தென்னகத்தைப் பொறுத்தவரையிலே, புள்ளிவிவரப் புலிகள், எதையும் உடனடி துணிந்து செய்திட இடமளிப்பது இல்லை.
கொல்லிமலை நீரைத் தேக்கிடச் செலவிடும் பணத்துக்குத் தக்க பலன் கிடைக்காது என்று அச்சமூட்டுகின்றனர். இந்த அச்சம், வடக்கே, பெரும் அணைகள் கட்டப்படும்போது, குறுக்கே நிற்கிறதா! மறைந்த இராஜபாளையம் குமாரசாமி ராஜா அவர்கள் கோவையிலே பேசியது நினைவிலே இருக்கிறதல்லவா?
"வடக்கே அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் ஆகிய வற்றிலே செலவிடப்பட்டுள்ள தொகையிலே, மிக மிக விரயம் ஏற்பட்டிருக்கிறது.
என்றல்லவா, கவர்னராகப் பணியாற்றிய குமாரசாமி ராஜா அவர்கள் கூறினார்.
கொல்லிமலையை வளமாக்கத், தொகை ஒதுக்கச் சொன்னால், ஆயிரத்தெட்டு ஐயப்பாடுகளை அவிழ்த்து விடுகின்றனர்; ஆனால் வடக்கே, எத்துணை கோடிகளாயினும் கொட்டிடத் தயங்குவதில்லை.
பக்ரா - நங்கல் அணைக்குக் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவு. தட்டாமல் தயங்காமல் கொட்டிச் செலவிட்டனர். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா என்றால், நிபுணர்கள் திகைக்கின்றனர். அரசியல் தலைவர்கள் ஆயாசமடைகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் கைபிசைந்து கொள்கின்றனர்.
என்னுடைய 'திருத்தலம்' என்று பக்ரா - நங்கலைக் குறிப்பிட்டுக் குதூகலமாகப் பேசினார். நேரு பண்டிதர். வெளி நாட்டிலிருந்து எந்தத் தலைவர் வந்திடினும், அழைத்துச் சென்று காட்டுவது, இந்த பக்ரா - நங்கலைத்தான். எனினும் இப்போது நிபுணர்கள், பக்ரா - நங்கல் மூலம், எவ்வளவு பரப்பு நிலத்துக்குப் பாசன வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவ்வளவுக்கும் கிடைக்காது என்று அறிவிக்கின்றனர்.<noinclude></noinclude>
k13iyfcsjxysb4rhw0z8zt2z02nxzm9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/309
250
641937
1928772
1927963
2026-04-30T07:55:59Z
Rabiyathul
5890
+ மேலடி
1928772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||285}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நூற்றுக்கு முப்பது பங்கு குறைவாம் - எதிர்பார்த்த பலனில்.
285
மற்றும், ஆங்கு அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் பெருந்தொழில்கள் அனைத்திலுமே, நிர்வாக ஊழலும், நேரக்கேடும், பொருள் நட்டமும், நாற்றமெடுக்கும் அளவில் உள்ளன என்று அவ்வப்போது நிபுணர்கள் ஆய்வுக்குழுவினர், அறிவிக்கின்றனர். எனினும், மேலும் பல புதிய திட்டங்களை மேற்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனரா எனில், இல்லை. இல்லை, என்பது பளிச்செனத் தெரிகிறது. பொக்காராவில் நாலாவது இரும்புத் தொழிற்சாலை அமைத்திடுவதிலே ஆர்வமும், சுறுசுறுப்பும், காட்டப்படுகிறது.
கொல்லிமலையோ, மகன் வரவுக்காக, சுவைமிகு உணவினைச் சமைத்து வைத்துவிட்டு, அது சில்லிட்டுப் போகும் நிலையிலும், மகன் வீடு வராதிருந்தால், ஏக்கத்துடன், வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் தாய்போல, இருந்துவரக் காண்கிறேன்.
-
ஆயிரம் கோடியா! அட பேராசைக்காரா! என்ன செய்வாய் அவ்வளவு தொகையை வைத்துக் கொண்டு? என்று என்னைக் கேட்கின்றனர், கேலி பேசுகின்றனர், அமைச்சர்கள். கோலேந்திகளே! கொல்லிமலையைப் பார்த்து விட்டு, என்மீது கேலிக்கணைகளை ஏவுங்கள்! பழமுதிர் சோலை யாக்கலாம் கொல்லிமலையை சில கோடி ரூபாய், பயன்தரும் முறையிலே செலவிட்டால்! சந்தனக் காடு காணலாம்! அடவி அழகும், அருவி அழகும் காணச் செல்வோர், சிந்துபாடி மகிழ்ந்திடும் உல்லாசக் கூடமாக்கலாம்! வெளிநாட்டார் விரும்பி வாங்கிடும் காப்பி பயிரிடலாம், மிளகு பயிரிடலாம்! கொல்லிமலைத் திட்டம் என்று மலைபடு பொருள் காணும் நிபுணர் குழுவினைத் திட்டம் தயாரித்து அளிக்கச் சொன்னால், இயலாது என்றா கருதுகிறீர்கள்; - என்று கேட்கத் தோன்றுகிறது. அமைச்சர்களைப் பார்த்து! அவர்கள், தம்பி! இந்த ஏழையின் பேச்சையா ஏற்பார்கள்!! அதனால்தான், உன்னிடம் கூறுகிறேன், ஊராருக்கு நீ உரைத்திடுவாய் என்ற நம்பிக்கையில்.
முன்பொருமுறை, தம்பி! கழுதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்பது குறித்துக் கவலைப்பட்டுப் பேசினார். அமைச்சர் பக்தவத்சலம்! ஆமாம், தம்பி! வேடிக்கை அல்ல! ஏழை பங்காளர் அல்லவா காங்கிரஸ் அமைச்சர்! அதனால், ஏழைக்குப் பொதிசுமக்க. மலிவானது கழுதைதானே! அதனால், அமைச்சருக்கு அந்தக் கவலை ஏற்பட்டது. கழுதைகளை வளர்க்க வேண்டும் என்றார். அதற்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதோ இல்லையோ, நானறியேன் - ஆனால் கழுதைகள் விஷயமாக ஏற்படும் அக்கறையிலே ஒரு சிறு அளவாகிலும், காடுவளர்த்திட வேண்டும் என்பதிலே. அமைச்சர்<noinclude></noinclude>
gr0hig09iork0ndxhfqevzvskb1qzgd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/310
250
641938
1928774
1927964
2026-04-30T07:56:40Z
Rabiyathul
5890
+ மேலடி
1928774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|286||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>286
'திராவிட நாடு' இதழில்
பக்தவத்சலனாருக்கு ஏற்படவேண்டுமல்லவா! தேவிகுளம் பீர்மேடு இழந்தோம். காட்டுவளம் கெட்டு விட்டது. தமிழகத்துக்கு. கொல்லி மலை, பச்சைமலை, ஜவ்வாதுமலை, சேர்வராயன் மலை, ஏலகிரி என்பன போன்ற மலைகளையாகிலும் இந்த நோக்கத்துடன் கவனித்துத் திட்ட மிட்டுக் காரியமாற்ற வேண்டாமா! எங்கே செய்கின்றனர்? எப்படிச் செய்ய இயலும்? அவர்கள்தான், ஆயிரம் கோடி கிடைத்தால், செலவிட முடியாது என்ற அதி அற்புதமான பொருளாதார அறிவு பெற்றவர் களாக இருக்கிறார்களே! இவர்கள் ஆட்சியிலே, கொல்லி மலை இருந்தென்ன, குடகுமலை கிடைத்தென்ன? ஊமை கண்ட கனவுதானே!
முகிலைத் தொட்டிழுத்து முத்தமிடும் குன்றுகள் உள்ளன - அந்தக் குன்றுகளிலே இயற்கைவளம் கொஞ்சி விளையாடுகிறது -எனினும், அது திருமாலுக்கா, அவன் மருகனுக்கா என்று மல்லுக்கு நிற்கின்றனர், மேதைகள்! அதனைத் தீர்த்துவைக்க மன்றம் அமைத்துத் தருகிறது துரைத்தனம்.
அந்தக் குன்றுகளும், ஆங்கு தழைத்துக் கிடந்திடும் காடுகளும் எத்தகைய செல்வங்களை ஈந்திடத் தக்கவை என்பது குறித்து எவர் அக்கறை காட்டுகின்றனர்? அங்கு எங்காவது, ஆமை ஓட்டிற்குள்ளே அங்கத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு, ஒரு மகான் இருக்கிறார் என்று எவனாவது கதைகட்டி விடுவானேல், சூடம் பழத்துடன், கும்பல் கும்பலாகச் செல்வர், கும்பிட்டுக் கூத்தாட! சந்தனமும் மிளகும். காப்பியும் தேயிலையும், பலாவும் முந்திரியும், தேக்கும் அகிலும், தினையும் தேனும் நிரம்பப் பெறலாமே அத்தகைய இடங்களில் என்று எங்கே எண்ணம் பிறக்கிறது. அமெரிக்கா, பால் பவுடர் தரவேண்டும். பிரான்சு பழரசம் அனுப்பவேண்டும்; டென்மார்க் பாலேடு கொடுக்கவேண்டும் என்று, பிச்சைப் பாத்திரம் ஏந்திக் கொண்டு செல்வதற்காகத் தூதுவர்களை எட்டுத்திக்கும் அனுப்பி வைக்கிறார்கள் மலைவளம் பெருக்கிட, காட்டுவளம் கண்டிட ஆங்காங்கு என்னென்ன முறைகளைக் கையாண்டு வருகின்றனர். அம்முறைகளிலே, எவை நமக்கு ஏற்றவை என்பன பற்றி அறிந்துவர, என்ன திட்டம் அமுலில் இருக்கிறது?
தம்பி கொல்லிமலைச் சாரலில் உட்கார்ந்து, கொய்யாக் கனியைக் கடித்துத் தின்றபடி, இவ்விதமெல்லாம் எண்ணிக்கொண்டேன். இந்த மலைகளெல்லாம், அந்த நாட்களில், 'அரண்கள்' என்றல்லாவா கருதப் பட்டன -கொள்ளப்பட்டன. முடியுடை மூவேந்தர்களின் பிடி தளர்ந்த பிறகு, பாரியும் ஓரியும். பேகனும், குமணனும், காரியும் மலை அரண் களிலன்றோ அமர்ந்து அரசோச்சி, அருந்தமிழ் காத்தனர், வல்வில்ஓரி! என்று புலவர் கூறிய சொற்றொடரை உச்சரிக்கும் போதே. நாணேற்றும் போது எழும் ஓசையேயன்றோ, செவியில் வீழ்கின்றது. அந்த நாள்<noinclude></noinclude>
gchyr7fgvz1bkucxxq0gh6zu741ur3b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/311
250
641939
1928776
1927965
2026-04-30T07:57:24Z
Rabiyathul
5890
+ மேலடி
1928776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||287}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
287
வந்திலை அருங்கவிப் புலவோய்! என்று முதிரமலையாண்ட குமணன் கூறியது நினைவிற்கு வரும்போது, நெஞ்சம் எப்படியெல்லாம் நெகிழ்கிறது. அந்த மலைகளெல்லாம் இன்று, புதரும் பொந்தும், உள்ள வெற்று இடங்களாகிப் போயினவே - சோற்றுக்கு வழி காணா மக்கள், கடல் கடந்தன்றோ செல்கின்றனர். காடு திருத்திக் கழனியாக்க - இதோ உள்ளனவே வளமளிக்கும் மலைகள், செல்வப் பொருளளிக்கும் காடுகள் - இவை களைத் தக்க விதத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டால், வேற்று நாடு களிலே கூலிகளாக்கிக் கொடுமையில் உழலும் நம் உடன் பிறந்தார். உழைத்துப் பிழைக்கலாமே, தாயகத்தில். ஏனோ துரைத்தனத்தார்க்கு தினையளவும் இந்த எண்ணம் ஏற்படவில்லை.
வ
காடுபடு பொருட்களை மட்டுமே நம்பி உள்ளன. இதுபோது விடுதலைப் பெற்றுத் திகழும், ஆப்பிரிக்க பூபாக நாடுகளிலே பல; இன்று இந்தியத் துணை கண்டத்துப் பிரதமரால் வரவேற்கப் படும் நிலையைப் பெற்றுள்ள இன்க்ரூமா என்பவர் அரசோச்சும் கனா நாட்டிலே, செல்வம் தருவதே. காட்டுப்பயிர் என்று கருதப்படும். கொக்கோ செடிதானே!
நமது மலைகளிலே, எத்தனை எத்தனையோ வகையான மூலிகைகள், உள்ளன - இன்று மலைப்பாம்புகளும் அவைகளைத் துரத்தித் தடிகொண்டு தாக்கும் வேட்டையாடுவோரும் இந்த மூலிகைகள் படர்ந்து கிடக்கும் இடங்களை அறிவர். இவைகளைக் கண்டறிந்து, வகைப்படுத்தி, பயன் படுத்தினால், பெரும் பொருள் ஈட்டிட இயலும் என்கின்றனர் அறிந்தோர். இங்கோ மூலிகைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன; நாமோ பெரும் பொருளைக் கொடுத்து இதுபோன்ற மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும், வெளிநாட்டு மருந்து வகைகளை, விலை கொடுத்து வாங்குகிறோம்.
அமைச்சர்களும், ஆளும்கட்சியினரும், சென்ற கிழமை, 'வன விலங்குகள் வாரம்' நடத்தினர். வனவிலங்குகளைக் கூண்டில் அடைத்து, கூண்டுகளை வண்டிகளில் ஏற்றி, உலா நடத்திக் காட்டினர். சிறுவர்கள் களிப்புற்றிருப்பர். ஆனால் இந்த 'வாரம்' நடத்துவதிலே ஏதேனும் பொருள் இருக்குமானால், காட்டு வளத்தைப் பெருக்குவது எப்படி என்பதுபற்றி அக்கறை காட்டுவதாகத்தானே இருக்கவேண்டும். கொல்லி மலையும், பச்சைமலையும், வேறு பல குன்றுகளும் கவனிப்பாரற்றுக் கிடக்கும்போது, கூண்டிலிட்டு, மிருகங்களைச் சிறார்களுக்குக் காட்டி விழா நடத்துவது, கேலிக்கூத்தன்றி வேறென்னவாக இருக்கமுடியும்,
தம்பி! முந்திரி பயிரிட வேண்டும் என்று நாம் கூறியபோது கேலி பேசியவர்கள்தானே ஆளவந்தார்கள், இப்போது? முந்திரிக் காடுகளை<noinclude></noinclude>
79pvn1agw13axst9ytv1zmtcv4nbu05
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/312
250
641940
1928777
1927966
2026-04-30T07:58:02Z
Rabiyathul
5890
+ மேலடி
1928777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|288||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>288
'திராவிட நாடு' இதழில்
வளர்த்து வருகிறோம் என்று அவர்களே பெருமையுடன் பேசிக் கொள் கின்றனர். அதுபோலவே, மலைவளம், காட்டுவளம் ஆகியவற்றைப் பெருக்கவேண்டும் என்று, இன்று நாம் கூறும்போது கேலிதான் செய்வர். என்றாலும், இன்றில்லாவிட்டால் மற்றோர் நாள், மலைவளமும் காட்டு வளமும் ஒரு நாட்டுக்கு மிகமிகத் தேவைப் படுவதாகும் என்று ணரத்தான் போகிறார்கள்.
கொல்லிமலைச் சாரலிலே அமர்ந்திருந்தபோது, தோன்றிய எண்ணங்களைத் தொகுத்து எழுதும்போது, தம்பி! வேறோர் யோசனையும், எனக்கு எழத்தான் செய்கிறது.
தேரும் திருவிழாவும் காணவும், ஊரூர் சென்று இடிபட்டு மிதிப்பட்டு, அறிவிழந்து, கண்ட கண்ட காதகர் காலடியெல்லாம் வீழ்ந்து வணங்கும் போக்கினராக உள்ள, நமதுமக்கள், ஓய்வு நாட்களை, கொல்லிமலை போன்ற இடங்களைச் சென்று காண்பதற்குச் செலவிட்டால், மனத் தூய்மையும், தெம்பும் ஏற்படுமல்லவா! எங்கே செல்கிறார்கள்! கானிடை சென்று தங்கி இருக்கும்போது, ஆங்கு வீசும் காற்றுமன்றோ கானமாகி வருகிறது!
அமெரிக்கக் குடிஅரசுத் தலைவராக இருந்தாரே, ரூசுவெல்ட், அவருக்கு ஒரு பழக்கமாம் - பொழுது புலரும் வேளையிலே, புள்ளினங்கள் மிகுந்துள்ள சிறுகானிடை சென்று தங்குவாராம் - ஒவ்வோர் வகையான புள்ளினமும் ஒவ்வோர் வகையான பண் எழுப்புமன்றோ! அந்தப் பண்ணினைக் கேட்பதிலே, அவருக்குத் தனிச்சுவையாம்! பண்ணின் வகையினைக் கேட்டு, இது இன்ன புள்ளினத்தின் பண் என்று கூறுவாராம்.
இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை இருக்கிறது; அந்தச் சுவை உள்ளத்துக்குத் தூய்மையும் தரவல்லது என்பதை, மலைவளம், காணின் கவர்ச்சி ஆகியவற்றினைக் காணும்போது. நிச்சயமாக உணர முடிகிறது.
உயர்ந்து விளங்கிய கொல்லிமலையையும், உருண்டோடி வரும் அருவியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே, நான் என்னுடன் வந்திருந்த நண்பர் முல்லை சத்தியை உற்று உற்றுப் பார்த்தேன். என் பார்வையின் பொருளை அவர் உணர்ந்து கொண்ட தாகத் தெரியவில்லை. மணமாகாதவர்! முல்லைக்கு மணமானதும், துணைவியுடன் வந்து, காணவேண்டிய காட்சி, மோட்டார் சத்தம் காதைத் துளைத்திட, ஆலைச் சங்குகள் அலறி அலறி அலுப்பைத் தந்திட, பேரிரைச்சலை எழுப்பிடும், பெரிய நகரமல்ல; கண்ணுக்குத் தெரியாமல் இருந்துகொண்டே கானம்<noinclude></noinclude>
kzma1l03nq593d6padvzllpo9229hpx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/313
250
641941
1928778
1927967
2026-04-30T07:58:40Z
Rabiyathul
5890
+ மேலடி
1928778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||289}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
289
எழுப்பி மகிழ்விக்கும் புள்ளினங்கள் நிரம்பிப் புனலாடிப் புதுத்தெம்பு பெற்றிடத் தக்கதான சூழ்நிலை அழகுற அமைந்துள்ள, கொல்லிமலைச் சாரலன்றோ, என்று எண்ணிக்கொண்டேன். இயற்கையின் அன்பழைப் பாகவே, காற்றினால் அசைவுபெறும் செடியும் கொடியும், எனக்குத் தென்பட்டன. நந்தமிழ் மக்களும், தம்பி! வாழ்விழந்து தவிக்கும் இந்நாளில் அல்ல, மாற்றார்முன் மண்டியிடாது வாழ்ந்துவந்த நாட்களிலே, இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை பெற்றிருந்தனர். புலவர் பெருமக்கள் அன்று எழுதிய சொல்லோவியம் அத்தனையும், இன்றும், கூர்ந்து பார்த்திடும் எவருக்கும், இயற்கை சமைத்தளிக்கும் வடிவழகின் விளைவு என்பதும் விளங்கும். ஒரு பகற்பொழுது மட்டுமே கிடைத்தது, எனக்கு அந்த வாய்ப்பு. இதோ வெளியே இருக்கிறார், அன்பில், அரியலூர் அழைத்துச் செல்ல. சென்று வருகிறேன்.
அண்ணன்,
23.10.60<noinclude></noinclude>
t7vnt1bteoimb6j50ial9e80xkkfhlp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/314
250
641942
1928780
1927968
2026-04-30T07:59:47Z
Rabiyathul
5890
+ மேலடி
1928780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|290||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கடிதம் : 123
தம்பி!
எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)
குழல்மொழி, கயல்விழி, துடியிடை புன்னகை பூத்திடும் பொன்னவிர் மேனியாள். ஏழிசைவல்லி, ஆடலழகி, எனும் அணங்குகள், தத்தமது திறனத்தனையையும் தங்கு தடையின்றித், தரக்குறைவின்றிக், காட்டிப் பார்த்தனர் - காவலன், கடுகடுத்த முகத்தோனானானேயன்றிக் கலகலப்புப் பெற்றானில்லை.
.
மாற்றார்கள் களத்தில் போட்டோடிச் சென்று. மாமல்லர்களால் எடுத்துவரப்பட்ட, குருதிதோய்ந்த கொடிகள், உடைந்துகிடந்த யானைத் தந்தங்கள், வாட்பிடிகள், வேற்கம்புகள் இவையெல்லாம் கொண்டுவந்து எதிரே குவித்துக் காட்டினர், கோமான், வீரச்செயல் பற்றிய நினைவு பெற்று, மகிழ்ச்சிபெறுவான் என்று எண்ணி; மாமன்னனோ, அப்பொருட் குவியலைக் கண்டு புன்னகையும் செய்தானில்லை.
கன்னியரின் கடைக்கண் ஊட்டிடாத சுவையைக் கனிவகையா தந்திடும்! எனவே, பழவகைகளைக் கொணர்ந்ததும், பட்டத்தரசன், எட்டிப் போ! என்று கட்டளையிட்டான் பணியாட்களை நோக்கி.
மன்னன் மனமகிழ வேண்டும் - அவையினர் ஏதேதோ எண்ணினர், தெளிவு பிறந்திடவில்லை.
யானறிவேன், அவருக்குக் களிப்பூட்டும் வகை" என்றான் கவிதை வல்லானொருவன்.
''ஐயா புலவரே! எதுகை மோனையைக் காட்டியா, மன்னனை மகிழ்விக்க முயல்கிறீர். வானவில்லென வளைந்து நின்றாள், வடிவழகி; மன்னன் ஏறெடுத்தும் பார்த்திட மறுத்தான். கரம் இரண்டன்றி வேறோர் துணை தேடிடாது, வேங்கையுடன் போரிட்டுக், கழுத்தை நெறித்தானே, வேங்கையை - வெற்றி வேலன் பெற்றெடுத்த வீரமைந்தன் அதன் பற்களைக் கொட்டிக் காட்டினோம் - சுற்றுமுற்றும் பார்த்தானேயன்றி, மன்னன். அதனை உற்றும் பார்த்ததுண்டா? இந்நிலையில் உள்ளான் ஊராள்வோன், நீவிர் ஏடு தூக்கிக் காட்டிடின் வேந்தன் கொண்டுள்ள கசப்பெலாம் கரைந்தோடிப்போகும், களிப்பு மலரும் என்று கருதுவது, எத்துணைப் பேதைமை!" என்று எடுத்துரைத்தனர். அவை அமர்ந்த முதியோர்.<noinclude></noinclude>
hcnsesp3l9g6wvuqff893a375w3wd1u
1929019
1928780
2026-04-30T11:23:36Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம் : 123
தம்பி!
எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)
குழல்மொழி, கயல்விழி, துடியிடை புன்னகை பூத்திடும் பொன்னவிர் மேனியாள். ஏழிசைவல்லி, ஆடலழகி, எனும் அணங்குகள், தத்தமது திறனத்தனையையும் தங்கு தடையின்றித், தரக்குறைவின்றிக், காட்டிப் பார்த்தனர் - காவலன், கடுகடுத்த முகத்தோனானானேயன்றிக் கலகலப்புப் பெற்றானில்லை.
.
மாற்றார்கள் களத்தில் போட்டோடிச் சென்று. மாமல்லர்களால் எடுத்துவரப்பட்ட, குருதிதோய்ந்த கொடிகள், உடைந்துகிடந்த யானைத் தந்தங்கள், வாட்பிடிகள், வேற்கம்புகள் இவையெல்லாம் கொண்டுவந்து எதிரே குவித்துக் காட்டினர், கோமான், வீரச்செயல் பற்றிய நினைவு பெற்று, மகிழ்ச்சிபெறுவான் என்று எண்ணி; மாமன்னனோ, அப்பொருட் குவியலைக் கண்டு புன்னகையும் செய்தானில்லை.
கன்னியரின் கடைக்கண் ஊட்டிடாத சுவையைக் கனிவகையா தந்திடும்! எனவே, பழவகைகளைக் கொணர்ந்ததும், பட்டத்தரசன், எட்டிப் போ! என்று கட்டளையிட்டான் பணியாட்களை நோக்கி.
மன்னன் மனமகிழ வேண்டும் - அவையினர் ஏதேதோ எண்ணினர், தெளிவு பிறந்திடவில்லை.
யானறிவேன், அவருக்குக் களிப்பூட்டும் வகை" என்றான் கவிதை வல்லானொருவன்.
''ஐயா புலவரே! எதுகை மோனையைக் காட்டியா, மன்னனை மகிழ்விக்க முயல்கிறீர். வானவில்லென வளைந்து நின்றாள், வடிவழகி; மன்னன் ஏறெடுத்தும் பார்த்திட மறுத்தான். கரம் இரண்டன்றி வேறோர் துணை தேடிடாது, வேங்கையுடன் போரிட்டுக், கழுத்தை நெறித்தானே, வேங்கையை - வெற்றி வேலன் பெற்றெடுத்த வீரமைந்தன் அதன் பற்களைக் கொட்டிக் காட்டினோம் - சுற்றுமுற்றும் பார்த்தானேயன்றி, மன்னன். அதனை உற்றும் பார்த்ததுண்டா? இந்நிலையில் உள்ளான் ஊராள்வோன், நீவிர் ஏடு தூக்கிக் காட்டிடின் வேந்தன் கொண்டுள்ள கசப்பெலாம் கரைந்தோடிப்போகும், களிப்பு மலரும் என்று கருதுவது, எத்துணைப் பேதைமை!" என்று எடுத்துரைத்தனர். அவை அமர்ந்த முதியோர்.<noinclude></noinclude>
6876520iax6g7wq8r3x79q7vb3halr0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/315
250
641943
1928782
1927969
2026-04-30T08:00:26Z
Rabiyathul
5890
+ மேலடி
1928782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||291}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
291
"ஐயன்மீர்! அருங்கவிதைத் திறன்காட்டி அல்ல, மகிழ்ச்சியூட்ட விரும்புவது. என் கவிதையும், அரசர்க்குச் சிரிப்பூட்ட அல்ல; அவனிக்கு அறிவூட்ட! அதனையும் அறிமின்! யான் நினைப்பது முற்றிலும் வேறு!" என்றான் புலவன்.
"வாதிட்டுப் பொழுதினை ஓட்டிடுவதைக் காட்டிலும், அவர் வகுத்திடும் முறையேனும், மன்னனின் சோகத்தை நீக்கிவிடுகிறதா என்பதைக் கண்டிடுவதே சாலச் சிறந்தது" என்றனர் ஆன்றோர்.
புலவர், எழுந்தார்; பணியாளிடம், ஏதோ, மெல்லிய குரலிற் கூறினார்; அமர்ந்தார்! அரசனை விளித்தார்.
"கோமானே! எட்டுத் தளபதிகளைக் கீழே வீழ்த்தி, பதினாறு வேற்படை வீரரின் பற்களைத் தட்டிப்பறித்து, பழம் பெரும் போர்க் கலை ஆசானின் இடுப்பிலே, ஈராண்டும் தீராத வலி ஏற்படத் தக்கதான உதை கொடுத்து. கரிப்படைத் தலைவனின் கண்ணைக் கலங்கிடச்செய்த, வீராதி வீரன், குரலெடுத்துப் படை நடுங்கிட வைத்திட வல்லோனாம் வெஞ்சமர்ச் சூரன் தங்களைக் காண வருகிறான்-கட்டளைக்குக் காத்திருக்கிறான்- அனுமதி அருள்வீரா?" - என்று கேட்டார். மன்னன், "ஈதென்ன விந்தை! இத்துணை வீரச் செயல்புரிந்தோனை, யான் ஏன் இதுவரை, காணவில்லை" என்று எண்ணிப் புலவரை நோக்கி, 'தளபதிகள் எண்மர், வேற்படையாளர் பதினாறுபேர், மற்றும் கரிப்படைக் காவலன், ஆகியோரைத் தாக்கியவனர் - யார் அவன்? எங்குள்ளான்? கொண்டு வந்து நிறுத்தும், அவனை, நம்முன் - தாமதமின்றி!" என்று முழக்கமிட்டான்.
பவனிக்கான இசைமுழக்கம் எழும்பிற்று.
பராக்குக் கூறுவார் பதின்மர் வந்து நின்றனர்.
பந்தல் அமைத்ததுபோன்ற பட்டுப் போர்வையைப் பலர் முறைப்படி ஏந்திவந்தனர்.
மன்னன் எதிர்ப்புறம் அந்தப் பந்தற் போர்வை வந்தடைந்ததும், 'இனிக் காணீர், தளபதியின் பல் உடைத்து, வீரனின் விலாவை நொறுக்கி, கரிப்படையானை வீழ்த்திய, மாவீரனை!' என்று கூறிக், குறி
-
காட்டினான் புலவன்; போர்வையை நீக்கினர்; கோவேறு கழுதை ஒன்று, நின்றது. மன்னன் எதிரில்; மன்னன், இடிஇடியெனச் சிரித்து, "ஏடா! வீராதி வீரா! நீதானோ. புலவர் போற்றிய மாவீரன்! எட்டி உதைத்து இத்தனையையும் செய்ததன்றோ. நம் பாடிவீட்டுக்குக் கொட்டிலில் கிடந்திடும் இக்கோவேறு கழுதை! பலே பலே! எறி ஈட்டிக்கும், கொடுவாளுக்கும் அஞ்சாது போரிடும் என் தளபதிகள், இதனிடம்<noinclude></noinclude>
4ibyiwyqo2ktlnyslgahn3w9qn80uho
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/316
250
641944
1928783
1927970
2026-04-30T08:00:56Z
Rabiyathul
5890
+ மேலடி
1928783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|292||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>292
'திராவிட நாடு' இதழில் படாதபாடு பட்டனர்; பல் உடைபட்டனர்; ஆம்! புலவரே! ஆம் !”- என்று கூறிக் கூறிச் சிரித்தான் கோமான்; அவையினர் அனைவருமே, புலவர் செய்தளித்த நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
ஆடலும் பாடலும், அருங்கவிச் சுவையும், வீரமும் வெற்றிப் பொருட்களும் பெற்றளிக்க முடியாத பெருஞ்சிரிப்பை, கோவேறு கழுதை அளித்திட முடிந்தது.
முடி ஆட்சியிலே, மூதறிஞர்களாகவும், வெற்றி வீரர்களாகவும் விளங்கிய மன்னர்கள் இருந்தனர் கொலைபாதகத்துக்கு அஞ்சாத கொடியவர்களும் கோலேந்திகளாகி இருந்தனர். மடமை மிக்கவர் களும், மன்னன் மகனானதால் மன்னனாயினர்!
கொடுமை புரிந்தவர்கள் கோல் முறிக்கப்பட்டது.
மடமை கொண்டோரின் அரசு, மதியிலிகளின் மந்தகாசக் கூடமாகவும், நத்திப் பிழைப்போரின் புகவிடமாகவுமாகி, மக்களால் எள்ளி நகையாடப் பட்டது!
இந்நிலைக்கு முடிஅரசு சரிந்ததும், முறை மாற்றியாக வேண்டும் - ஒருவனிடம் அதிகாரமத்தனையையும் ஒப்படைத்துவிட்டு, அவன் அறிவாற்றலுள்ளவனானால், அவதிக்கு ஆளாகாமல் இருக்கவும், கொடியவனானால், அஞ்சி அஞ்சிக் கிடக்கவும், மதியற்றவனானால் கேலிப் பொருளாகி இருக்கவுமான, நிலைமையைத் தாங்கித் தாங்கிப் பார்த்து, இனி இது ஆகாது என்ற முடிவுக்கு வந்த பிறகே, பேரறிவாளர் பலர் எண்ணிப் பார்த்து, எடுத்தியம்பியது மக்களாட்சி முறை என்பது.
முடி ஆட்சிக் காலத்திலே, மன்னனிடம் மக்கள் அச்சத்துடன் அடங்கிக் கிடக்க நேரிட்டது; கொடுமை செய்யும் போது குமுறிச் சாக நேரிட்டது; மடமைக்காரனாக இருக்கும்போது வெட்கப்பட்டுக் கிடக்க வேண்டி நேரிட்டது: எனினும், மன்னன் சரியில்லை, எனவே, அவனை நீக்குவோம், வேறு தகுதியுள்ளவனை ஆட்சிப் பீடம் அமர்த்துவோம் என்று கூறிடும். ஆற்றலும் உரிமையும், மக்களிடம் இல்லை.
பெய்யெனப் பெய்யும் மழை வளமளிக்கிறது; பேய்மழை நாட்டை அழிக்கிறது. பூங்காற்று இனிமை பயக்கிறது; சூறைக் காற்று ஊர் அழிக்கிறது.
ஆனால், இயற்கையின் செயலைக் கட்டுப்படுத்த இயலாமல் மாமழை போற்றியும், பேய்மழை கண்டு துயருற்றும், பூங்காற்றுப் பெற்று இன்புற்றும், அழிவூட்டும் காற்றால் அவதியுற்றும், நாம் யாது செய்ய வல்லோம்; இயற்கையை நாம் எங்ஙனம் கட்டுப்<noinclude></noinclude>
nlwdh2qgin73u082jc9rfaok35z55fv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/317
250
641945
1928785
1927971
2026-04-30T08:01:28Z
Rabiyathul
5890
+ மேலடி
1928785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||293}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
293
படுத்த இயலும்! - என்று எண்ணிக் கிடந்திடும் போக்கினர் போன்றே, மக்கள் முறை தவறும் மன்னன், முறை அறியா மன்னன் என்போர் ஆட்சி நடாத்தி, அவதியை மூட்டிய காலத்திலும்; இயற்கை சிற்சில வேளைகளில் கொடுமையை ஏவுவது போல, ஆண்டவன் எக்காரணம் குறித்தோ நமக்குக் கேடு சூழ்ந்திடக் கொடுமையாளனைக் கோலேந்தியாக்கினான்; மடமை மிக்கவனை மன்னனாக்கி மகிழ்கிறான்! நாம் எங்ஙனம், இதனைத் தடுத்திட, முடியும்! எங்ஙனம் மாற்ற இயலும்! நமக்கு ஏது அந்த ஆற்றல்!! - என்று எண்ணிக்கிடந்தனர் நீண்ட காலம்.
கண்ணீர் முழுதும் வற்றிய பிறகு, கனல் பிறந்தது கண்களில்; தொல்லையின் எல்லைவரை துரத்தப்பட்ட பிறகு, துணிவு பிறந்தது நெஞ்சத்தில்; பிறகே, முடி ஆட்சி முறை, திட்ட வட்டமாக, இன்ன குணமுள்ளதாக இருக்கும், இன்ன பலன் தரும் என்று அறுதியிட்டுக் கூற இயலாததாகவும், மாற்றி அமைக்க முடியாததாகவும் இருப்பதனால், அதனை நம்பி மக்கள் தமது வாழ்க்கையை ஒப்படைப்பது கூடாத காரியம் - எனவே மக்கள், கண்டறியத் தக்கதும், தேவைப்பட்டபோது மாற்றி அமைக்கத் தக்கதுமான ஓர் ஆட்சிமுறை வேண்டும்; நோக்கம் குறித்து அமைத்திடவும், எதிர்பார்த்த நலன் பெற்றளிக்க இயலாது போயின், மாற்றிவிடவும் தக்கதான ஆட்சிமுறை இருத்தல் வேண்டும். என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர் - குடிஅரசு கண்டனர்.
தம்பி! குடிஅரசு கண்டனர், என்று மிகச் சுருக்கமாகக் கூறி விட்டேன் - ஆனால், மிக நீண்ட, பயங்கரப் பயணம் நடாத்தியே, மக்கள் குடிஅரசு கண்டனர்.
முடி அரசு, கேடுபயப்பினும், மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமே யன்றி, மாற்றிவிட இயலாது.
குடிஅரசு, கேடு தந்திடின், மாற்றி அமைத்திடும் உரிமை மக்களுக்குக் கிடைக்கிறது.
முடிஅரசு, கோணல் வழி சென்றிடினும், கண்டித்துப் பேச, மக்களுக்கு உரிமை கிடையாது - உயிரைப் பற்றிய கவலை இருக்கும்வரை!!
குடிஅரசு, தவறு செய்வதாகத் தோன்றும்போதே, மக்கள் எடுத்துரைக்கலாம், கண்டிக்கலாம், எதிர்க்கக்கூடச் செய்யலாம்.
முடிஅரசுக்கும், குடிஅரசுக்கும் இடையே உள்ளது இந்த வித்தியாசம். பல நூற்றாண்டுகள் சிந்தனையாளர்களும் வீரத் தியாகி களும், அரும்பாடுபட்டு ஈட்டிய முறை. குடி அரசு.<noinclude></noinclude>
3ajosvncleo2suth95af9fq2on8ifqm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/318
250
641946
1928786
1927972
2026-04-30T08:02:00Z
Rabiyathul
5890
+ மேலடி
1928786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|294||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>294
'திராவிட நாடு' இதழில்
முடிஅரசுக் காலத்தில், மன்னனை மகிழ்விக்க வேண்டியது தமது கடமை என்று கிடந்தனர் மக்கள்.
அந்த மகிழ்ச்சி, கதை காட்டினேனே, அதுபோல் கோவேறு கழுதையின் வீரம்பற்றி, நகைச்சுவையுடன் எடுத்துக்கூறிக் களிப்பூட்டும் வகையினதாகத் தான் இருக்கும் என்பதல்ல பொருள் - மதியிலி மன்னனாக இருக்கும் போது இது போதும்! மமதையாளன் மன்னனானாலோ, அவன் மனம், குடிமகனொருவன் பெற்றெடுத்த செல்வத்தின் கற்பைச் சூறையாடுவதிலே தான் மகிழ்ச்சி பெறும் என்றால், அதுதான் நடக்கும்; மானமுள்ளோருக்குப் புகலிடம், சிறைக்கோட்டம், வெட்டுப் பாறை, அல்லது மரக்கிளை!
முடிஅரசுக் காலத்துமுறை, மக்கள் மன்னனுக்கு மகிழ்ச்சி யூட்டிப் பிழைத்துக் கிடப்பது.
குடிஅரசுக் காலத்திலோ,
ஆளவந்தார்கள், இடம் பெற்றிருப்பர்.
மக்களுக்கு
மகிழ்ச்சியூட்டி,
பசிப்பிணி போக்கி, வளம் உண்டாக்கி, நல்வாழ்வு அளித்து, மக்களை மகிழவைக்கும், குடிஅரசுகளும் உண்டு. ஒரே நாளில் அமைச்சர் எண்பது ஊர் உலா வந்தார், உமக்காக!! என்றுரைத்தும், உமக்காக இன்னின்ன திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்று ஏடு காட்டியும், பசிகண்டு பதறாதீர்! பாலாறு தயாராகிறது. பாரீர்! என்று புள்ளிவிபரம் வீசுவதுமான, வேடிக்கை காட்டியும் பொழுதை ஒட்டிடுவோர் நடாத்தும் குடி அரசும் உளது.
கேடளிக்கும் முடி அரசு மாற, முடி தரித்தோன் மாய்ந்திடல் வேண்டும்; ஆனால் கேடளிக்கும் குடி அரசை மாற்ற, மக்களுக்கு உரிமை இருக்கிறது-
அறிந்து, ஆற்றலுடன் அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும்; பயன்படுத்துவர் என்ற நம்பிக்கையினால்தான், குடிஅரசு முறையே வகுக்கப்பட்டது; பல நாடுகளிலே, இந்த நம்பிக்கை வீணாகிப் போகவுமில்லை.
தம்பி! ஒரு நாட்டை ஆள்வது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா...? அதற்கேற்ற அறிவாற்றல் அனைவருக்கும் ஏற்பட்டு விடுமா? ஆண்டவன் யாரோ சிலருக்கு மட்டுமே, அத்தகைய தகுதியை அருள்கிறான். மன்னர்கள், மகேசனின் அருள் பெற்றோர்! அவனுடைய பிரதிநிதிகள்! என்று கூறப்பட்டது போய். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று கூறிடத்தக்க காலம் இன்று பிறந்து விட்டிருக்கிறது; என்றாலும், குடிஅரசு ஏற்பட்டான பிறகு, எதிர்பார்த்ததனைத்தும் கிடைத்துவிட்டது என்று எவரும் கூறி விடுவதற்கில்லை.<noinclude></noinclude>
tbzaviia26ui87gf85a2ey5mi8hk63y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/319
250
641947
1928787
1927973
2026-04-30T08:02:31Z
Rabiyathul
5890
+ மேலடி
1928787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||295}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
295
இது குடி அரசுக்காலம் என்று குதூகலத்துடன் கூறிக் கொள்பவர் களை நோக்கிக் கேலி செய்து கொண்டல்லவா, ஸ்பெயின் நாட்டுப் பிராங்கோவும், போர்ச்சுகல் நாட்டு சலாசரும் உள்ளனர்! எகிப்துநாட்டு நாசரும். பிரான்சின் தெகோலூம், இந்தோனேசிய நாட்டு டாக்டர் சுகர்னோவும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் எனினும், சர்வாதிகாரிகள் எனும் நிலையில்தானே உள்ளனர். பக்கத்து நாடான பாகிஸ்தானில், பட்டாளத்துத் தலைவர்தானே, ஆட்சி நடத்துகிறார்!
இன்றைய உலகில், முடிமன்னர்களும் உள்ளனர். பிடியை பிரபுக்களிடம் விட்டுவிட்டு இருக்கும் முடி தாங்கிகளும் உள்ளனர்.
குடிஅரசுத் தலைவர்களும் உள்ளனர்; குடிமக்களை நல்லபடி நடத்திச்செல்ல நான் எல்லா அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டிருக் கிறேன் என்றுரைக்கும் சர்வாதிகாரிகளும் உள்ளனர்.
பாராளுமன்றமுறை மூலமே, குடிஅரசு முறையிலே பக்குவம் ஏற்படுத்த முடியும்; அந்தப் பாராளுமன்ற முறைக்கு அடிப்படையாகக் தேவைப்படுவது, அரசியல் கட்சிகள் - அந்த முறைதான் இங்கு உள்ளது என்று கூறும் நாடுகள் உள்ளன; சோவியத்தோ, அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது, நேரக்கேடு, வீணாட்டம்; அத்தகைய கட்சிகள், பணம் படைத்தோரின் உடைமைகளாகி விடுகின்றன; எனவே மக்களாட்சி என்பது வெறும் கேலிக் கூத்தாகிவிடுகிறது! எனவே இங்கு ஒரே கட்சிதான் உண்டு, அது மக்கள் கட்சி! ஒரே தேர்தல்தான் - அந்தக் கட்சி மட்டுமே ஈடுபடும் தேர்தல் - இதுதான் உண்மையான மக்களாட்சி! மற்றது போலி! புரட்டு! - பகட்டு| - என்று செப்புகிறது.
இது ஆட்சி முறையிலே ஒருவகை என்று கூறத்தக்கதேயன்றிப், பாராளுமன்ற ஆட்சிமுறை ஆகாது என்று கூறிடும், அரசியல் தத்துவ வாதிகள் நிரம்ப உள்ளனர்.
முடி ஆட்சி, ஒரு அருள் பெற்ற குடும்பத்துக்கு மட்டுமே, ஆட்சி நடாத்தும் தகுதி, வழிவழி கிடைத்திடும் என்ற நிலையை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
குடிஅரசு முறையோ, கொல்லன் மகனாயினும், உழவனாயினும், சிறுகடை நடாத்துவோனாயினும், செருப்புத் தைப்போனாயினும் ஆட்சி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிட இயலும் என்ற நம்பிக்கையையும், அந்த உரிமை அவனுக்கு உண்டு என்ற நிலையையும், ஏற்படுத்தித் தருகிறது.
எல்லோரும் இந்நாட்டு மன்னர் - என்பதிலே, மன்னர், என்ற வார்த்தை, ஆட்சி நடாத்தும் உரிமையைக் குறிக்க மட்டுமே, பயன்படுதல்<noinclude></noinclude>
ndr6fbh9u5dn5psvez7hgbv45n9hfp0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/320
250
641948
1928789
1927974
2026-04-30T08:03:02Z
Rabiyathul
5890
+ மேலடி
1928789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|296||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>296
'திராவிட நாடு' இதழில்
வேண்டுமேயன்றி, மன்னன்போல், 'அருள் பெற்றேன், அமுல் நடத்துவேன், எதுசெயினும் முறையே என்று எவரும் இருத்தல் வேண்டும்' என்ற மனப்போக்கை, மண்டைக் கனத்தைக் குறித்திடப் பயன்படுத்தப்படு மானால். குடி அரசு முறை. கொடுமைகளை மட்டும் மூட்டுவதாக அல்ல. மடைமைப் படுகுழியில் மக்களைத் தள்ளிடும் மாபெரும் சதியாகிப் போகும்.
*
இந்த நிலையில், இன்று நடைபெறும் அரசு முறை ஆகி விட்டது என்றுதானோ என்னவோ, குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத், மனம் வெதும்பியது போலவும், கேட்போர் மனம் புண்படும் முறையிலும், சில கருத்துக்களை வெளியிட்டி ருக்கிறார். பத்ரிநாத் போய்வந்தவர், பாபம் போக மார்க்கம் ஏதேனும் கூறுவார் என்றும் பலரும் எதிர்பார்த்திருப்பர் - ஆனால் பாபுவோ, இன்றுள்ள ஆட்சி முறைப்பற்றி, கேலியும் கண்டனமும், வியப்பும் வேதனையும் நெளியும் விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.
சட்டமன்றங்களில் அமர்ந்து, சட்டமியற்றுவோருக்கு, அதற்குத் தேவையான அறிவாற்றல் இல்லை; அவர்களுக்கு உள்ள ஒரே தகுதி, அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதுதான். அப்படித் தேர்ந்தெடுத்த மக்கள் யார் எனில் இவர்களைப் போலவே அறிவாற்றலற்றவர்கள் - என்ற கருத்துப்படப் பேசிவிட்டார்.
குருடும் குருடும் குருடாட்டம் ஆடுவது போல என்பார்களே அதுபோல, இன்று ஆட்சிமுறை இருப்பதாக, அவர் கருதுகிறார்.
இவ்விதமான கருத்துக்கொண்டுள்ள இவரே. குடிஅரசுத் தலைவராக, இன்று அமர்ந்திருப்பது, கேலிக்குரிய, கண்டிக்கத்தக்க, தரம் கெட்ட ஒரு அரசியல் முறையின் மூலமாகத்தான் என்பதை அவர் மறந்து விட்டிருக்க முடியாது. சிலராகிலும் இதைச் சுட்டிக் காட்டுவார்களே என்பதைத் தெரிந்திருந்தும் தான், குடிஅரசுத் தலைவர் அவ்விதம் பேசியிருக்கிறார். பேசியதோடு நிற்கவில்லை, சட்ட மன்றங்கள் செல்வதற்குச் சில தகுதிகள் இருத்தல் வேண்டும். சில தகுதிகளைக் குறிப்பிட்டு, அத்தகுதிகள் உள்ளவர்கள் மட்டுமே, சட்டமன்றங்கள் செல்லலாம் என்று முறை ஏற்படுத்துவது மிக நல்லது என்றும் எடுத்துக்காட்டி இருக்கிறார்.
மிக உச்சிக்குச் சென்று அமர்ந்து கொண்டவர்களும் சட்டமன்றம் போன்ற இடங்கள் செல்வது தமது தகுதிக்குக் குறைவு என்று<noinclude></noinclude>
tfaosevupt2b56v1k6ad80v7wrxnkyn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/321
250
641949
1928790
1927975
2026-04-30T08:03:34Z
Rabiyathul
5890
+ மேலடி
1928790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||297}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
297
கருதுவோரும், சட்டமன்றம் போன்ற இடங்களுக்குச் செல்லமுடியாது கிடப்போரும், செய்திடும் 'உபதேசம்' இது என்று மட்டும், பாபுவின் பேச்சைக் கொள்வதற்கு இல்லை.
முன்பொருமுறை, இப்போது இருந்துவரும் எல்லோரும் ஓட் அளிக்கும் முறை, இனியும் நீடிக்க வேண்டுமா? அதைவிட, மறைமுகத் தேர்தல் முறை இருப்பது நல்லதல்லவா? என்ற கருத்துப்பட, நேரு பண்டிதர் பேசி இருக்கிறார்.
குடி அரசுதான் சிறந்தது; ஆனால், அது கட்சிகளற்ற குடி அரசாக இருக்கவேண்டும் - ஆனால் அதேபோது சர்வாதிகாரமும் கூடாது, சோவியத் முறையும் ஆகாது! - என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறிவருகிறார்.
பெரியார், பலமுறை பேசியிருக்கிறார், இராஜாவே ஆண்டால் என்ன? சர்வாதிகாரி இருப்பதுதான் நல்லது! - என்றெல்லாம்.
அவர், இந்த நாடு பற்றியும், ஆட்சி பற்றியும் என்ன கருதுகிறார் என்பதை அறிந்துகொள்ள, அவர் பன்முறை பேசி இருக்கிற ஒரு கருத்தைக் கவனித்தாலே போதும்.
"இந்த நாட்டை எவன் ஆண்டால் என்ன? இந்த நாட்டை ஒரு ஜதை செருப்பு ஆண்டிருக்கிறது, 14-வருஷங்கள்" என்று பேசி இருக்கிறார்.
இதைக் கவனிக்கும்போது, அவர். இந்த நாட்டு மக்களுடைய போக்கைக் குறித்துக் கொண்டுள்ள வெறுப்புத்தான், அவரை அவ்விதம் பேசவைக்கிறதேயன்றி, ஆட்சி முறைகளிலே எது சிறந்தது, எது தரமானது என்று எண்ணிப் பார்த்து அவர் ஏதும் கூறுவதாகத் தெரியவில்லை என்பது விளக்கமாகிறது.
பாபு இராஜேந்திரர் போன்றவர்கள், இன்று, சட்டம் இயற்றும் போக்குக்கண்டு கசப்புற்று, இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது சட்டம் இயற்ற என்று பேசுவது, என்ன காரணத்தால்? அவர்களுக்குப் பிடித்த மற்ற முறையிலே, சட்டங்கள் இன்று நிறைவேற்றப் படுகின்றன என்ற கசப்பா? அல்லது, இன்று சட்டமியற்றும் பொறுப்பும் உரிமையும் பெற்றுள்ள தமது கட்சியினர், இனி அந்த நிலையினின்றும், விரைவிலே தள்ளப்பட்டுப் போவார்கள்; அவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் சட்ட மன்றத்துக்குச் செல்லலாம் என்ற முறையையே மாற்றிவிட வேண்டும் என்று எண்ணுகிறாரா?<noinclude></noinclude>
mt5lfh5igje1r9qew9qzegsknpn6qba
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/322
250
641950
1928791
1927976
2026-04-30T08:04:05Z
Rabiyathul
5890
+ மேலடி
1928791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|298||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>298
‘திராவிட நாடு' இதழில்
சட்டமன்றம் செல்வதற்குச் சில தகுதிகள் இருக்கவேண்டும் என்பது முறையானால், சட்டமன்றத்துத் தேர்தலில் ஈடுபட்டு ஓட் அளிக்கவும், சில தகுதிகள் இருக்கவேண்டும் அல்லவா? அதாவது. வயது வந்த எல்லோருக்கும் 'ஓட்டு' என்ற முறை இருக்கக்கூடாது என்று ஏற்படுகிறது. அப்படியாகுமானால், நாடு, வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடத்தி, முணுமுணுத்துக் கொண்டே, சிறிது சிறிதாக, அரசியல் உரிமைகளை மக்களுக்கு அளித்தார்களே, அந்தப் பழைய காலத்துக் கன்றோ இழுத்துச் செல்லப்படும்! அதனைத்தானே, ஐம்பது அறுபது ஆண்டுகளாக, எதேச்சாதிகாரம், பிற்போக்கு அரசியல், என்றெல்லாம், பாபுவின் சகாக்கள் கண்டித்தனர்.
இப்போது, எதேச்சாதிகாரமும், பிற்போக்கு அரசியல் முறையும் தேவை என்ற முடிவுக்குக் காங்கிரஸ் வந்துவிட்டது என்பதைத் தான் பாபுவின் பேச்சு முன்கூட்டியே அறிவிக்கிறதோ என்ற அச்சம் எவருக்கும் ஏற்படத்தான் செய்யும்.
சுதந்திரம் பெற்ற உடன், எமது காங்கிரஸ் கட்சிதான், எல்லா மக்களுக்கும் ஓட்டுரிமை வாங்கிக் கொடுத்தது என்று மார்தட்டிக் கொள்ளும் காங்கிரஸ், இனி வெகு விரைவில், கொடுத்த ஓட்டுகளைப் பறித்துக்கொண்டு, எதேச்சாதிகார அரசியல் முறையை அமுல் நடத்தப் போகிறதோ, என்னவோ, யார் கண்டார்கள்!
எகிப்து நாட்டிலே, படைபலம் காட்டி, ஆட்சியைக் கைப்பற்றி யுள்ள, நாசர் நல்லவர், திறமைமிக்கவர், இலட்சியவாதி - எல்லாம் உண்மை, ஆனால், அவர், நான் பார்த்து, ஒத்துக் கொள்வது மட்டுமே அரசியல்கட்சி என்ற உரிமையைப் பெற முடியும் மற்றவை தலைகாட்டக்கூடாது என்று கூறிவிட்டார்.
-
அவருடைய சொல்லே சட்டம்! ஏனெனில், அந்தச் சொல்லுக்கு வலிவளிக்கப், பெரும்படை தயாராக இருக்கிறது.
அவர் போன்றே, இந்தோனேசிய அதிபர் சுகர்ணோவும் அரசியல் கட்சிகளுக்கு, இன்னின்ன இலக்கணம் இருக்க வேண்டும்; இவ்விதம் நடந்துகொள்ள வேண்டும்; இல்லையென்றால், அந்தக் கட்சிகளின் சீட்டுக் கிழிக்கப்பட்டுவிடும் என்று அறிவித்துவிட்டார்.
உரிமைகள் பற்றிய ஆர்வமற்றவரோ, டாக்டர் சுகர்ணோ? இல்லை! நிரம்பப் பேசி இருக்கிறார். ஐக்கிய நாடுகள் மன்றத்திலே!!
தம்பி, இந்தப் பெரும் தலைவர்களின், வியப்பூட்டும் பேச்சுக் களைப் பார்க்கும்போது, இவர்கள் ஒவ்வொருவரும், தமக்கு எவை<noinclude></noinclude>
fglm220tlo45k46p1102wv3z5and2pc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/323
250
641951
1928792
1927977
2026-04-30T08:04:37Z
Rabiyathul
5890
+ மேலடி
1928792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||299}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
299
சாத்தியமோ, பிடித்தமோ, அவைமட்டுமே மக்களுக்கு நல்லாட்சி ஏற்படுத்தித் தரத்தக்கன; மற்ற எல்லா முறைகளும் தீது பயப்பன; எனவே, தேவையற்றன, நீக்கத்தக்கவை என்று கருதுகிறார்கள் என்பது மிக நன்றாகத் தெரிகிறது.
உலகப்பெருந்தலைவர்கள் கூடிப் போர்க்கருவிகளை ஒழித்திட, மாநாடு நடாத்துகிறார்களே, தம்பி! கூர்ந்து பார்த்தால், ஒவ்வொரு தலைவரும், தம்மிடம் இல்லாத போர்க்கருவிகள், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது; தமக்குச் சாத்யமாகாத எந்தப் போர் முறையும் திட்டமும், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது, என்பதைத்தான் மிகச் சாமர்த்தியமாகப் பேசி வருவது புரியும்.
1932-ல் ஜெனிவா நகரில், போர்க்கருவிகள் ஒழிப்புக்கான மாநாடொன்று நடைபெற்றது. சோவியத் நாட்டு லிட்வினாப் இப்போது குருஷேவ் வலியுறுத்தியது போலவே. போர்க்கருவிகள் ஒழிக்கப்படவேண்டும் என்ற திட்டம் கொடுத்துப் பேசினார்.
அப்போது, ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்த மாட்ரியாகா என்பவர் ஒரு கதை கூறினார்.
"காட்டிலே உள்ள மிருகங்களெல்லாம் கூடி, ஒன்றை ஒன்று கொன்று குவித்திடும் கொடுமையை ஒழிக்க வழிவகை என்ன என்று மாநாடு நடத்தின. காட்டரசனான சிங்கம், கெம்பீரக் குரலில், கழுகைப் பார்த்தப்படி, நாமெல்லாம் கூர்மையான மூக்குகளை ஒழித்துவிட வேண்டும், என்று கூறிற்று; புலி, யானையைப் பார்த்தப்படி, ஒழிக்கப் பட வேண்டியது தந்தங்கள்! என்று பேசிற்று; யானையோ, புலியைப் பார்த்துக் கொண்டே, கோரமான பற்களையும் கூரான நகங்களையும் ஒழித்தாக வேண்டும் என்று முழக்கமிட்டது. இப்படி ஒவ்வொரு மிருகமும், தன்னிடம் எது இல்லையோ, எதை வைத்துக்கொண்டு, மற்ற மிருகங்கள் கொல்லும் வலிவு பெறுகின்றனவோ, அவைகளை ஒழித்துவிட வேண்டு மென்ற நோக்கத்துடன் பேசின. கடைசியாகக், கரடி எழுந்தது, கனிவுடன், கொல்லும் செயலுக்குப் பயன்படும் எல்லாமே ஒழிக்கப்படத்தான் வேண்டும் கொடிய வாய், கூரான நகம், நீண்ட கூரிய மூக்கு- எல்லாம் - புவியெங்கும் இருந்து வருகிற, கட்டித் தழுவிக்கொள்ளும் முறை தவிர, மற்றதெல்லாம், ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று கூறிற்று''.
தம்பி! கரடி, கட்டிப்பிடித்தே மற்றதைக் கொல்லவல்லது. எனவே, கரடி, அதுமட்டும் இருக்கவேண்டும். மற்றவை ஒழிய வேண்டும். என்று பேசிற்று என்பதாகக் கூறினார், ஸ்பெயின் நாட்டுக்காரர்.
அது, சோவியத்தைக் கிண்டல் செய்யப் பேசப்பட்டது. ஆனால் இதிலே தொக்கி நிற்கும் உண்மை, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு<noinclude></noinclude>
iv72248tt886cyrk2m7d6ngxotia5mm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/324
250
641952
1928794
1927978
2026-04-30T08:05:09Z
Rabiyathul
5890
+ மேலடி
1928794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|300||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>300
'திராவிட நாடு' இதழில்
வலிவு எதுவோ, அதை ஒழிக்கவே, போர்க்கருவி ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. என்பதுதான்.
போர்க்கருவி பற்றி மட்டுமல்ல, ஆட்சி முறை பற்றியும், பெரும் தலைவர்கள் பேசுவது, இஃதே போன்ற நோக்குடையதாகவே இருந்து வரக் காண்கிறோம்.
நோக்கம் இருக்கட்டும், இந்தப் பேச்சுப்பேச ஏன் முன்வந்தனர். பாபு போன்றார்! மக்கள், குடி அரசு முறையிலே அடியோடு நம்பிக்கை இழந்துவிடவில்லையே தவிர, எதிர்பார்த்த பலன், நலன், குடிஅரசு முறைமூலம் கிடைக்கக் காணோமே என்ற ஏக்கமும் திகைப்பும் மக்கள் மனதிலே, வேகமாக வளர்ந்த வண்ணம் இருக்கிறது.
அதனைத் தெரிந்துகொண்டே பெருந்தலைவர்கள், இதுபோலப் பேசத் தலைப்பட்டுள்ளனர்.
மக்களுக்குத், திகைப்பு ஏற்பட்டிருப்பதற்கும் காரணம் நிரம்ப இருக்கிறது.
எந்தக் குடிஅரசு முறைபற்றி விழாக் கொண்டாடி மக்களை, ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே! என்று பாடி, ஓட்டு வாங்கி, ஆட்சி நடத்தத் தொடங்கினார்களோ, அந்தக் காங்கிரசார் ஆட்சியிலே, வெள்ளைக்கார ஆட்சியிலே, நடைபெற்றதைவிட, அளவிலும் வகையிலும் அதிகமான அடக்குமுறை அவிழ்த்து விடப்படுகிறது.
உலகுக்கே, சாந்திபோதனை பேசிவிட்டு, ஊர் திரும்புகிறார். நேரு பண்டிதர்; அவர் ஆட்சியிலே என்ன நடக்கிறது; எதைக் கண்டார்?
சிறையில் அடைக்கப்பட்ட அகாலியர், கலகம் செய்தனர் என்பதற்காகச் சிறையிலே சுட்டுத்தள்ளப்பட்டனர்.
வரியோ ஏறியபடி இருக்கிறது; கடன் பளுவோ, கழுத்தை நெறிக்கும் அளவுக்கு; சட்டங்களோ, தொழிலாளரின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில்! செல்வ வான்களுக்குத் தரப்படும் சலுகைகளோ அவர்களே வெட்கப்படும் அளவிலும், முறையிலும்! விலைவாசியோ விஷம்போல் ஏறியபடி நிர்வாகத்தில் ஊழல்களோ, நாற்றமெடுக்கும் அளவுக்கு!
என்றாலும், தம்பி! மீண்டும் மீண்டும் இத்துணை கேடுபாடு களைச் செய்திடும் காங்கிரஸ்கட்சிக்குத் தேர்தல் வெற்றி கிடைக்கிறது.
இதைக் காணும்போது மக்களுக்கு, திகைப்பும், குடிஅரசு முறை மீதே ஒருவிதமான அருவருப்பும் ஏற்படத்தானே செய்யும்.<noinclude></noinclude>
t884v28uyq1rk9yvxih8gy2gxs6inup
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/325
250
641953
1928795
1927979
2026-04-30T08:05:41Z
Rabiyathul
5890
+ மேலடி
1928795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||301}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
என்ன தேர்தல்! என்ன சட்டசபை!
என்ன குடிஅரசு!
எந்த அரசு வந்தும் நமது கஷ்டம்
போகக் காணோம்.
என்று மக்கள் மனம் குமுறிப் பேசுகின்றனர்.
பேசுகின்றனர், திகைப்படைகின்றனர், திகில்கூடக் கொள்கின்றனர்; ஆனால், கேடுபாடு நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தும் உரிமையும் ஆற்றலும், குடிஅரசுக் கோட்பாட்டின் மூலம், தங்களிடம் தரப்பட்டி ருக்கிறது, என்பதை மட்டும் தெளிவாக உணர மறுக்கின்றனர்.
விழிப்புடனிருத்தல், குடிஅரசு வெற்றிபெற மிக மிகத் தேவை.
விழிப்புடன் இருக்கும் நிலையில் உள்ள மக்களையே, குடிஅரசு முறையையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும், பணம் படைத்தோர். மயக்கவும், மிரட்டவும் முடிகிறது, என்றால், விழிப்புணர்ச்சியே அற்றுக் கிடக்கும் மக்களிடம், ஆதிக்கக்காரர்கள் என்னதான் செய்ய
மாட்டார்கள்!
மக்களை, மிரட்டவும் மயக்கவும் எளிதாக முடிகிறது என்று தெரியும்போது, சீமான்கள், குடிஅரசு முறையையே குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடிகிறது.
நாம் ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்து கொண்டு, அதற்கு விளக்கம், இதற்குச் சமாதானம், இந்தக் கணக்கு அந்த விவரம், என்றெல்லாம் காட்டிக்கொண்டும். எதிர்ப்பாளர்களுடன் மல்லுக்கு நின்று கொண்டும் கஷ்டப்படுவானேன்; நமது 'பாகார்டு' ஓட்ட நல்ல ஆளை அமர்த்திக் கொள்வது போல, நமது நலனைப் பாதுகாக்கும் முறையிலே ஆட்சி நடத்தத் தக்கவர்களைத் தட்டிக்கொடுத்து, வேலை வாங்கினால் போதாதா! - என்ற முறையிலேதான் கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
ஐந்து கோடி ரூபாய் செலவிட்டுத்தான் போன பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்பதைக் காங்கிரஸ் அமைச்சரே, வெட்கமின்றி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
மக்கள் 'ஓட்' அளிக்கிறார்கள். சீமான்கள் நோட் அளிக்கிறார்கள். ஓட்டளித்த மக்களுக்காக முற்போக்கான சட்டங்களை இயற்றுவோம். நோட் அளித்த சீமான்களுக்காக, அந்தச் சட்டத்திலே, நிறையச்<noinclude></noinclude>
7281ptu10rubnoy77x0wvxdo98nywbi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/326
250
641954
1928796
1927980
2026-04-30T08:06:12Z
Rabiyathul
5890
+ மேலடி
1928796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|302||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>302
'திராவிட நாடு' இதழில்
சந்துபொந்துகளை ஏற்படுத்திக் கொடுப்போம். திடலில் தீவிரம் பேசுவோம் அது மக்களுக்குத் தரும் தித்திப்பு! மாளிகைகளிலே சீமான்களிடம், வேண்டுகோள் விடுப்போம் - அது இலட்சங்கள் பெற!! இந்த முறையில்தானே தம்பி! காரியம்.
மக்களே! உங்கள் வாழ்வு வளம் பெறப் புதுப்புது தொழில்களை அமைக்கிறோம் என்று திடலில் பேசுகின்றனர். மாளிகைக்காரரிடமோ, தொழில்களை நடத்த இன்னின்ன வசதிகள், சலுகைகள், வாய்ப்புகள் தருகிறோம். பெற்றுக் கொள்க என்று பேசுகின்றனர்.
ஜயன்மீர்! திட்டம் திட்டம் என்று பேசுகிறீர். புதுப்புது தொழில் வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு, முதலாளிகளைத்தானே கொழுக்க வைக்கிறீர், என்று கேட்டுவிட்டாலோ, மூக்குச் சிவந்துவிடுகிறது அமைச்சர் களுக்கு. அப்படியானால், தொழில் வளரவேண்டாம் என்கிறீரா! மக்கள் வறுமையிலேயே வாடட்டும் என்கிறீரா!- என்று பேசி, மக்கள்மீது மாயவலை வீசுகிறார்கள்.
தம்பி! ஒரு தகவல் பார்த்தேன். ஏதோ ஒரு இதழில் தனிப்பட்ட முதலாளி, சுயராஜ்யத்திலே தன் ஆதிக்கத்தை எந்த அளவு பெருக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதற்கான தகவல். திகைத்தே போனேன். சொல்கிறேன், கேட்கிறாயா, திகைப்படையாமல், காங்கிரஸ் கட்சிக்கு மெத்த வேண்டியவர் அல்லவா, பிர்லா! அவருடைய மாளிகையில் தானே, காந்தியாரே சுட்டுக்கொல்லப்பட்டார்!! அவருடைய தர்மாலயங்கள், என்னென்ன தெரியுமா! குமரி முதல் இமயம் வரை என்கிறார்கள் அல்லவா - அது இவரைப் பொறுத்த வரையிலே, முற்றிலும், உண்மை.
ஹென்றி கெய்சர் எனும் அமெரிக்கக் கோடீஸ்வரருடன் கூட்டாகச் சேர்ந்து, உத்திரப்பிரதேசத்தில், மிகப்பெரிய அலுமினியத் தொழிற்சாலையைத் துவக்கி இருக்கிறார்.
தம்பி! இங்கே ஏன், தொழிற்சாலை அமைக்கக் கூடாது என்று நாம் கேட்கும்போது, படிக்காத மேதையும் படித்த மேதையும் சேர்ந்து கொண்டே பதில் கூறுகின்றனர், நினைவிலிருக்கிறதா - கண்ட கண்ட இடத்திலே தொழிற்சாலைகளை ஆரம்பித்துவிட முடியுமா! தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள் கிடைக்க வேண்டாமா? மூலப்பொருள் எங்கு கிடைக்கிறதோ, அங்கு தொழில் வளரும். இது கூடத் தெரிய வில்லை. இந்தத் தி.மு.க.வுக்கு - என்று பேசிக் கெக்கலி செய்கின்றனர்.
ஆனால், தம்பி! பிர்லா அமெரிக்கக் கூட்டுடன், உத்திரப் பிரதேசத்தில் அமைக்கிறாரே. அலுமினியத் தொழிற்சாலை, அதற்கு<noinclude></noinclude>
0uny8eezlyk9g6xpajy8rtub396zwhc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/327
250
641955
1928797
1927981
2026-04-30T08:06:45Z
Rabiyathul
5890
+ மேலடி
1928797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||303}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
303
மிகமிகத் தேவைப்படுவது பாக்சைட்! அந்தப் பாக்சைட் உத்திரப் பிரதேசத்தில் இல்லை. மத்திய பிரதேசத்திலிருந்து, 400 கல் தொலைவிலே இருந்து, கொண்டுவரப்பட வேண்டும்!!
இதைச் சொல்லிப் பார், காமராஜரிடம், "போ! போ! அலுமினிய மாவது காரீயமாவது! இங்கே வேண்டியது சோறு!!'' என்று அழகாக, எந்தநாட்டு அமைச்சரும் இதுவரை சொல்லாத முறையில், கூறுவார்.
பிர்லாவின் தொழிற்சாலை, உத்திரப் பிரதேசத்தையும் மத்தியப் பிரதேசத்தையும், இணைக்கிறது.
டெல்லியில், பிர்லா பஞ்சாலை!
பம்பாயில், பிர்லாவுக்கு சென்ச்சரி நூற்பாலை.
குவாலியரில், அவருக்கு, ஜீவாஜீராவ் பஞ்சாலை..
கல்கத்தாவில், ஜெயஸ்ரீ கேசவராம் பஞ்சாலை.
மத்தியப் பிரதேசத்தில், குவாலியர் பட்டுநூல் ஆலை
ஆமதாபாத்தில், புதிய சுவதேசி ஆலை.
ஹைதராபாத்தில், சிர்சில்க் எனும் ஆலை.
பிர்லா சணலாலை, ராமேஸ்வர் சணலாலை, பாலி சணலாலை, சூரா சணலாலை, இத்தனையும் கல்கத்தாவில்.
ஜாம் நகரில், திக்விஜயா, கம்பளி ஜவுளி ஆலை.
கல்கத்தாவில், நெசவாலையந்திர உற்பத்திச் சாலை.
கிம்கோ என்ற பெயரில், குவாலியரில், பரத்பூரில் தொழிற் சாலைகள்.
கல்கத்தாவில், புதிய இந்தியா, மேல் கங்கை, பாரத்பூர், அவுத், புது சுவதேசி, கோவிந்து, என்று இத்தனை பெயர்களில் சர்க்கரை ஆலைகள். பெப்பர்மின்டு தொழிற்சாலை, கல்கத்தாவில்.
வனஸ்பதி, துங்கபத்ரா தொழிற்சாலையில், பேரார் சுவதேசி வனஸ்பதி, சர்க்கரை ஆலை யந்திர உற்பத்திச்சாலை, ஓரியன்ட் காகிதத் தொழிற்சாலை, இவ்வளவும் வங்காளத்தில்.
ஹைதராபாத்தில் சிர்பூர் காகித ஆலை.
ஓரியன்ட் மின்சார விசிறித் தொழிற்சாலை கல்கத்தாவில்.<noinclude></noinclude>
di1xo7u2vlx6adscyzdh0tzlzom5y1z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/328
250
641956
1928799
1927982
2026-04-30T08:07:17Z
Rabiyathul
5890
+ மேலடி
1928799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|304||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>304
'திராவிட நாடு' இதழில்
பம்பாயில் ஹிண்ட் சைகல் தொழிற்சாலை.
கல்கத்தாவில், இந்துஸ்தான் மோட்டார் தொழிற்சாலை. ஜெய்பூரில், தேசிய உருளைகள் தயாரிப்புத் தொழிற்சாலை.
பம்பாயில், உருக்கு உலை.
கல்கத்தாவில், யந்திரச் சாமான்கள் தயாரிப்புத் தொழிற்சாலை; ரேடியோ, பிளாஸ்டிக் தொழிற்சாலைகள்; மருந்துவகை தயாரிக்கும் தொழிற்சாலை. இவ்வளவும்.
போர்பந்தரில் சோடா உப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை. தேடத்தேடத் தகவல்கள் நிறையக் கிடைக்கும்; கிடைத்தது? காங்கிரசாட்சி, கனதனவான்களுக்குக் கரும்பாக இனிப்பதிலே வியப்பு என்ன?
இத்தனை, விதவிதமான தொழிற்சாலைகளை நடத்தும் பிர்லாவுக்கு, மூலதனம், வெளிநாட்டுக்கடன், வெளிநாட்டு யந்திரம், இவ்வளவும் தேவைப்படும் அளவுக்குக் கிடைக்கிறது; தொழில் தழைக்கிறது. காங்கிரசாட்சியின் துணையின்றி, எப்படி, இப்படிப்பட்ட 'ராஜ்யத்தை' ஒரு பிர்லா அமைத்து ஆண்டிட முடியும்?
காங்கிரசாட்சியின் துணை இவ்வளவுக்கும் தேவைப்படும் போது, தேர்தலிலே, காங்கிரசை வெற்றிபெறச் செய்வதிலே, பிர்லாவுக்கு அக்கறை எப்படி ஏற்படாமல் போகும். அந்த அக்கறை கோடிகளா கின்றன! கோடிகள் இருப்பதால், கோணல் ஆட்சி நடாத்திடினும், மக்களை மயக்கி, மீண்டும் பீடம் ஏறக் காங்கிரஸ் கட்சியால் முடிகிறது.
குடி அரசு, மக்களின் நலனைக் காத்திடும் அரசாகாமல் இருக்கிறது என்றால், தம்பி! காரணம் இப்போது புரிகிறது அல்லவா?
பலப்பல கோடி ரூபாய்கள், திட்டங்களின் பெயரால் செலவிடப் படுகின்றன; இதிலே, பெரும்பங்கு தனிப்பட்ட முதலாளிகளுக்குத் தான் சேருகிறது-அவர்கள் தொழில்கள் வளர, இலாபம் பெருக.
'முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே, 233 கோடி ரூபாய், தனியார் துறைக்கு ஒதுக்கினீர்களே - இதிலே, பல தொழில்களை அமைத்துக் கொண்டு. ஏகபோக பாத்யதை கொண்டாடும் 20 பெரிய தொழிலதிபர் களிடம் போய்ச்சேர்ந்தது எவ்வளவு தொகை? பரவலாகத் தொழில் வளரச் சிறு முதலாளிகளுக்குப் போய்ச் சேர்ந்தது, எவ்வளவு தொகை?<noinclude></noinclude>
pbwtuei2uztfbv173uf5f0wo2ws1jge
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/329
250
641957
1928800
1927983
2026-04-30T08:07:47Z
Rabiyathul
5890
+ மேலடி
1928800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||305}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
305
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே, தனியார் துறைக்கு 570 கோடி ரூபாய் ஒதுக்குகிறீர்களே. இதை எப்படிப் பகிர்ந்தளிக்கப் போகிறீர்கள்?
தொழில் உலகில், வல்லரசு அமைத்துக்கொள்ளப் பெரிய முதலாளி களால் முடிகிறது! அதைத் தடுத்து நிறுத்த உங்களால் முடியவில்லை.
தொழிற்சாலை அதிபர்கள், மேலும் மேலும் வலிவு அடைகிறார்கள்; ஆதிக்கம் பெறுகிறார்கள்".
என்று அசோக் மேத்தா பாராளுமன்றத்திலேயே பேசினார். பேசி? நான் எப்போதாவது எடுத்துச் சொன்னால்தான் வெளியே தெரியுமே தவிர, இந்துவும், மெயிலும், இன்னபிற இதழ்களும், இதனையா எழுதி மக்களுக்கு உண்மை நிலையைத் தெரியச்செய்திடும்! பத்திரிகைகள் மட்டும் என்ன 'சூளைக்கல்லும் பிடாரிதான்' என்ற பழமொழிப்படி தானே!
தம்பி! அரசு முறை எவ்விதம் இருப்பினும், முடிஅரசு ஆகட்டும், குடிஅரசு ஆகட்டும், இங்கிலாந்தில் உள்ளதுபோல குடிக் கோனாட்சி யாகட்டும், முறை எவ்விதம் இருப்பினும், தொழிலதிபர்களிடம் சிக்கிக்கொண்டால், தீர்ந்தது-ஆட்டி வைக்கிறபடி ஆடும். நீட்டிய இடத்தில் கையெழுத்திடும்!
குடிஅரசு முறையையும் வைத்துக்கொண்டு, சமூகத்திலேயும். தொழில் உலகிலேயும் ஆதிக்கக்காரர்களுக்குப் பிடி இருக்கும்படியும் அனுமதித்துவிட்டால், புத்தியுள்ள ஒரு மன்னனே கூடக், குடிஅரசுக் கோட்பாடு பேசும் அமைச்சர்களை ஆட்டிப்படைக்க முடியும்.
அடுத்து அப்படிப்பட்ட ஒரு மன்னனைக் காணலாம்.
30.10.60
அண்ணன்,
அஸ்ஐது?<noinclude></noinclude>
l27n9dq3wnjsvyuzepku8jvaedwrw13
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/330
250
641958
1928801
1927984
2026-04-30T08:08:19Z
Rabiyathul
5890
+ மேலடி
1928801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|306||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தம்பி,
கடிதம் : 124
எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2)
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"
என்ற செய்யுளை, வேறு எதற்காக இல்லையென்றாலும், செந்தமிழின் செம்மை கருதியேனும், இன்றும் பள்ளிகளில் பிள்ளைகள் படிக்கின்றார்கள்
அல்லவா!
அந்த உழவனைச் சற்றுக் காண்போமா? கழகத் தோழர்கள் எடுத்தளிக்கும் படப்பிடிப்பு அல்ல; காங்கிரஸ் ஆட்சி அமைத்த குழுவினர்
தருவது.
1956-57-ம் ஆண்டு. உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் நிலைகுறித்து, ஆய்ந்தறிந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பும் இதுபோன்றதோர் அறிக்கை வெளியிடப்பட்டது.
வேறு எந்தச்செயலிலே காட்டத் தவறினாலும், காங்கிரஸ் துரைத்தனம், பல்வேறு குழுக்கள் அமைப்பது, அறிக்கைகள் வெளியிடுவது, ஆய்வுரை களைத் தருவது எனும் செயலிலே மட்டும், மிகமிகச் சுறுசுறுப்புக் காட்டுகிறது. காங்கிரசார் ஆளவந்தார்களான பிறகு வெளியிடப்பட்ட அறிக்கைகளைக் குன்றெனக் குவித்துக் காட்டலாம்-அளவில் குன்று பலன்? குடிஅரசுத் துணைத்தலைவர், டாக்டர் இராதாகிருஷ்ணன், சின்னாட்களுக்கு முன்னம், "ஆய்வுக் குழுக்கள் அமைப்பிலே, அறிக்கைகள் வெளியிடுவதிலே, எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை, நானே, பல ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழகம் குறித்து ஆய்ந்தறிந்து அறிக்கை வெளியிட்டி ருக்கிறேன்; பலன்ஏதும் விளையவில்லை!!"- என்று மெத்த வேதனையுடன் பேசினார்.
ஆளவந்தார்கள். குழுக்களை அமைக்கிறார்கள்; குழுக்கள் உலா வருகின்றன; உரையாடல்கள் உற்சாகத்துடன் நடைபெறுகின்றன, அறிக்கைகள் ஆர்வத்துடன் தயாரித்து வெளியிடுகிறார்கள்; அந்த அறிக்கைகளோ குவிகின்றன; செயல்படவேண்டிய துரைத்தனமோ, துயில்கொண்டு விடுகிறது.
அறிக்கையின் மூலம் விளைவு, விரும்பத்தக்க முறையில் கிடைப்பதில்லை என்றாலும், கூர்ந்து பார்க்கக் கூடியவர்களுக்கு.<noinclude></noinclude>
d3tlve5doey547ynu3tuaftlj72t6ej
1929018
1928801
2026-04-30T11:22:26Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>தம்பி,
கடிதம் : 124
எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2)
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"
என்ற செய்யுளை, வேறு எதற்காக இல்லையென்றாலும், செந்தமிழின் செம்மை கருதியேனும், இன்றும் பள்ளிகளில் பிள்ளைகள் படிக்கின்றார்கள்
அல்லவா!
அந்த உழவனைச் சற்றுக் காண்போமா? கழகத் தோழர்கள் எடுத்தளிக்கும் படப்பிடிப்பு அல்ல; காங்கிரஸ் ஆட்சி அமைத்த குழுவினர்
தருவது.
1956-57-ம் ஆண்டு. உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் நிலைகுறித்து, ஆய்ந்தறிந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பும் இதுபோன்றதோர் அறிக்கை வெளியிடப்பட்டது.
வேறு எந்தச்செயலிலே காட்டத் தவறினாலும், காங்கிரஸ் துரைத்தனம், பல்வேறு குழுக்கள் அமைப்பது, அறிக்கைகள் வெளியிடுவது, ஆய்வுரை களைத் தருவது எனும் செயலிலே மட்டும், மிகமிகச் சுறுசுறுப்புக் காட்டுகிறது. காங்கிரசார் ஆளவந்தார்களான பிறகு வெளியிடப்பட்ட அறிக்கைகளைக் குன்றெனக் குவித்துக் காட்டலாம்-அளவில் குன்று பலன்? குடிஅரசுத் துணைத்தலைவர், டாக்டர் இராதாகிருஷ்ணன், சின்னாட்களுக்கு முன்னம், "ஆய்வுக் குழுக்கள் அமைப்பிலே, அறிக்கைகள் வெளியிடுவதிலே, எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை, நானே, பல ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழகம் குறித்து ஆய்ந்தறிந்து அறிக்கை வெளியிட்டி ருக்கிறேன்; பலன்ஏதும் விளையவில்லை!!"- என்று மெத்த வேதனையுடன் பேசினார்.
ஆளவந்தார்கள். குழுக்களை அமைக்கிறார்கள்; குழுக்கள் உலா வருகின்றன; உரையாடல்கள் உற்சாகத்துடன் நடைபெறுகின்றன, அறிக்கைகள் ஆர்வத்துடன் தயாரித்து வெளியிடுகிறார்கள்; அந்த அறிக்கைகளோ குவிகின்றன; செயல்படவேண்டிய துரைத்தனமோ, துயில்கொண்டு விடுகிறது.
அறிக்கையின் மூலம் விளைவு, விரும்பத்தக்க முறையில் கிடைப்பதில்லை என்றாலும், கூர்ந்து பார்க்கக் கூடியவர்களுக்கு.<noinclude></noinclude>
hnall1tq0sctwv3f3bu99pn8052qsgb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/331
250
641959
1928803
1927985
2026-04-30T08:08:51Z
Rabiyathul
5890
+ மேலடி
1928803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||307}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
307
நாட்டு நிலைமையையும், நாடாள்வோரின் திறனற்ற போக்கையும் எடுத்துக்காட்ட இவை பயன்படுகின்றன. அத்தகைய அறிக்கைகளிலே ஒன்றுதான் 1956-57-ம் ஆண்டு வெளிவந்தது; உழவர் பெருங் குடிமக்கள். இந்த உத்தமர்கள் ஆட்சியில் இராம ராஜ்யம் என்பதே கிராம ராஜ்யம்தான் என்று தடிக்குத்தாமே புகழாரம் சூட்டிக் கொள்வோர் ஆட்சியில், எத்தகைய நிலைமையிலே உள்ளனர் என்பதை, இந்த அறிக்கை காட்டுகிறது.
3600 சிற்றூர்களிலே நிலைமைகளைக் கண்டறிந்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
உழவுத்தொழிலில் உள்ளவர்கள் எவர் என்பதற்கு, ஆய்வுக் குழுவினர் ஒரு இலக்கணம் வகுத்துக்கொண்டு, அறிக்கைத் தயாரித்துள்ளனர். அந்த இலக்கணத்தின்படி, வருவாயின் பெரும்பகுதி, உழவுத்தொழிலில் கிடைக்கும் கூலியாக எவருக்கு அமைந்து இருக்கிறதோ, அவர்களே, உழவர் என்பதாகும்.
அந்த முறையில் நடத்தப்பட்ட ஆய்வு, என்ன உண்மை களைத் தந்திருக்கிறது?
உழவர்களின் நிலைமை, நாளுக்குநாள் தேய்ந்துகொண்டு
வருகிறது.
நிலமற்ற உழவர்களின் தொகை அதிகமாகி விட்டிருக்கிறது. உழவுத்தொழிலில் உள்ளவர்களின் கூலி, குறைக்கப்பட்டுப் போயிருக்கிறது.
முன்பு 109 புதிய காசுகள், கூலியாகப் பெற்றுவந்த உழவர்களுக்கு. இப்போது 96 புதிய காசுகள் மட்டுமே கிடைக்கின்றன.
உழவுத் தொழிலிலே ஈடுபட்ட பெண்களுக்கு, முன்பு 68 புதிய காசுகள் கிடைத்தன, காங்கிரசாட்சியின் சிறப்பின் விளைவாக(!) இப்போது அந்தக் கூலி குறைந்து, 59 புதிய காசுகள் பெறுகின்றனர்- தாய்மார்கள்.
சிறார்களோ, முன்பு பெற்றது 70 புதிய காசுகள்; இப்போது 531 கொட்டுங்கடி! கும்மி கொட்டுங்கடி!
கோலேந்தும் காங்கிரஸ் புகழைப்பாடி!
என்று, 'மாதர் பகுதி' கும்மி கொட்டுகிறது. ஓட்டு வாங்க!! ஆனால் அறிக்கையைப் பார்த்தாலோ, காங்கிரசாட்சியிலே ஏர்பிடித்தோன் திண்டாட்டம் வளருவது தெரிகிறது.<noinclude></noinclude>
2kw4sr4d6kpe4co4d2u11e5zyfls1ct
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/332
250
641960
1928805
1927987
2026-04-30T08:09:22Z
Rabiyathul
5890
+ மேலடி
1928805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|308||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>308
'திராவிட நாடு' இதழில்
1951-ம் ஆண்டு அறிக்கைப்படி, உழவர் குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 447-ரூபாய் வருவாயாம். 1957-ம் ஆண்டில் கணக்கெடுக்கும் போது, 437 ரூபாய் வருவாய்தான் கிடைக்கிறதாம்!
கோழி கூவா முன்பு எழுந்திருந்து சென்று, கோட்டான் கூவும் வரை பாடுபடும் உழவன், வருவாய் குறைந்து விட்டிருக்கிறது. துணிச்சலுடன், அமைச்சர்கள், அவனுடைய குடிசைக்குப் பக்கத் திலேயே, கொடிமரம் நடுகிறார்கள்; கும்மி கொட்டிட, கொட்டி முழக்கிட, படை வருகிறது; பத்திரிகைகளோ, இந்த வளர்ச்சியை எடுத்துக்காட்டப் பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுகின்றன.
நம்மவர்கள் வருகிறார்கள் நாடாள நல்லவர்கள் வருகிறார்கள் பாடுபட இனி நமது வருவாய் வளரும், வாட்டம் குறையும் என்று எண்ணினர். உழுது கிடப்போர்! வருவாய் குறைந்துவிட்டிருக்கிறது; வாய்வீச்சு மிகுந்துவிட்டிருக்கிறது!
உழவர்களின் வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்ல, வேதனை யூட்டும் உண்மை; அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாகிவிட்டிருக்கிறது.
முன்பு ஆண்டு ஒன்றுக்கு, 461 ரூபாய் இருந்தால், குடும்பம் ஏதோ இழுத்துப் பறித்துக்கொண்ட நிலையில் நடந்து வந்தது; இப்போது, குடும்பச் செலவு ஆண்டொன்றுக்கு, 618- ரூபாய் பிடிக்கிறதாம்.
தம்பி! கணக்குத் தயாரித்தது, நம் கழகமல்ல, காங்கிரசாட்சி அமைத்த ஆய்வுக்குழு! கவனமிருக்கட்டும் கவனப்படுத்திவை!
உழவர்களுக்குக் கடன் பளுவும் ஏறிவிட்டிருக்கிறது.
இந்த இலட்சணத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டு. பாரதிக்கு விழாக் கொண்டாடும்போது,
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
என்று பாடிவிட்டால், பசித்த வயிறுக்குப் பாலும் பழமுமா கிடைத்து விடும்! பாவிகளே! உங்களை நம்பி நாசமானோமே!!-என்று கொதித்தெழுந்து கேட்கத் தோன்றுகிறது, மாடென உழைத்து ஓடென ஆகிவிட்டிருக்கும் உழவர்களுக்கு ஆனால், எப்படிக் கேட்பார்கள்? பேச வருகிற அமைச்சருடன் தான் பராக்குக் கூறுவோர், பல்லிளிப்போர், பர்மிட் கேட்போர், பட்டுப் பட்டாடைகள், பவுன் துப்பட்டாக்கள், பஸ் ரூட்டுகள். இப்படி ஒரு<noinclude></noinclude>
jyadwoptp9i17ts43itbofh6qa18h7p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/333
250
641961
1928807
1927988
2026-04-30T08:09:53Z
Rabiyathul
5890
+ மேலடி
1928807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||309}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
309
படையே வருகிறதே!! எப்படி மனதிலுள்ளதை எடுத்துக்கூற, உழவர் களுக்குத் தைரியம் ஏற்படும்?
அதோ அமைச்சரின் கால்தூசு தன்மேலே பட்டாலே போதும், அதைக்காட்டியே, அங்காடியிலே, செல்வாக்குப் பெறலாம் என்று எண்ணிக்கொள்பவர் போல நிற்கிறாரே, திருவாளர் சமயமறிந்தான் பிள்ளை. அவருக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலே, கழனி; காடு என்கிறார் வயலை! கடாமாடுகள் என்கிறார், அதை உழுது கிடப்பவர்களை! 'கனம்' என்கிறார், அமைச்சரை! இருளை ஓட்டும் அவர் காதிலுள்ள வைரக்கடுக்கன்) உடலிலே தங்கம், உள்ளத்திலே. இரும்பு! அவரிடம் அண்டிப்பிழைக்கிறான், உழவன், அவன் அமைச்சர் பொய்யுரைக்கிறார் என்று, எப்படிக் கூறமுடியும்?
'காங்கிரசாட்சியிலே ஆதித் திராவிடர் வீடுகளிலே வெள்ளிப் பாத்திரங்கள் காணப்படும் அளவுக்கு வளம் கொழிக்கின்றது'.
என்று வாய் கூசாமல் கனம் கக்கன் பேசுகிறார்.
ஐயா! தகரக் குவளையைப் பார்த்துவிட்டு இப்படிப் பேசலாமா? என்று கேட்கத்தோன்றுகிறது. ஆனால், அமைச்சரைச் சுற்றி நிற்கும் கனதனவான்கள், சற்றுத் தொலைவில், கெட்டித்த துப்பாக்கி களுடன் தயாராக நின்று கொண்டிருக்கும் போலீஸ் படையினர், இவர்களைக் கண்ட பிறகு, ஏழை எப்படிப் பேச முடியும்?
அஞ்சி அஞ்சிச் சாவார்
இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்றல்லவா, பாரதியார் பாடினார்.
அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள ஏழை உழவர்களை, போலீஸ் படை சூழ நின்றிடப், பூமான்கள், உடனிருந்த அதிகாரிகள் ஆரத்தி எடுத்திட, உலாவந்து, அமைச்சர்கள் காணும்போது, கிலி அதிகமாகுமே யன்றி வேறென்ன ஏற்பட முடியும்
அதை அறிந்து, அகமிக மகிழ்ந்துதான், அமைச்சர்கள், அமுலில் இருந்துகொண்டே ஓட்டு வேட்டை ஆடவேண்டும். பஞ்சை பராரி களிடம் பயமூட்டியே ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளமுடியும், என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த முறைகேடான போக்கைத்தான், மலைபோலக் காங்கிரஸ் ஆட்சி நம்பிக்கொண்டிருக்கிறது.<noinclude></noinclude>
hb58v3tqdcm493gg1n1hozkf35d115j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/334
250
641962
1928809
1927989
2026-04-30T08:10:30Z
Rabiyathul
5890
+ மேலடி
1928809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|310||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>310
'திராவிட நாடு' இதழில்
குடி அரசு முறை, மக்களிடம் 'ஓட்டு' வாங்கி நடத்தப்படுவது.
ஆனால் அதிகார அமுலைக் கண்டால், இயல்பாகவே அச்சப்படும் மக்கள் பெரும் அளவுக்கு இருக்கும் இந்த நாட்டில், அமைச்சர் களாகப் பதவியில் இருந்துகொண்டே பவனி வந்து, தேர்தல் நடத்துவது, எப்படி நியாயமாகும்?
செய்தவைகளை எடுத்துக் காட்டி, மக்களுடைய ஆதரவை மீண்டும் பெறமுடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கு மானால், தேர்தலுக்கு ஒரு ஆறு திங்களுக்கு முன்பாகவேனும், பதவியைவிட்டு விலகிநின்று, காங்கிரஸ்காரர்களாக மட்டும் கிராமப்புறம் சென்று, ஓட்டுக் கேட்கவேண்டும்.
அப்படிக் கேட்டுப் பெரும்அளவு ஓட்டு இவர்கள் பெற்று விடுவார்களானால், தம்பி! அதுதான், அறவழி நடாத்திடும் அரசியல் என்று கூறத்தக்கதாகும்.
அஃதன்றி, அமைச்சர்களாகக் கொலுவிருந்த வண்ணமே, 'ஓட்டு வேட்டையிலும் ஈடுபடுவார்களானால், குடிஅரசு முறையைச் கோணல் வழியில் பயன்படுத்தி, ஆதிக்கம் தேடிக் கொள்கிறார்கள் என்றுதான், அறிவாளர் எவரும் கூறுவர்.
கட்சிக் கண்ணோட்டத்துடன் அல்ல, இதனை நான் கூறுவது.
விதி, பழைமைப் பிடி, ஜாதி எனும் பல கொடுமையான பிடிப்புகளிலிருந்தே இன்றும் விடுபட முடியாமல் தத்தளித்துக் கொண்டி ருக்கும் பாமர மக்களிடம், அதிகாரம் தரும் அச்சத்தையும் ஏவிவிட்டு ஓட்டு வாங்குவது, அறமல்ல; அரசியலை வெறும் சூதாட்டம் ஆக்குவதே யாகும், என்ற பொதுநெறி பற்றி எடுத்துரைக்கிறேன். கட்சி வளர்ச்சிக்காக அல்ல.
'மன்னன் எதையும் செய்யலாம்' என்பது தவறு, தீது, கொடுமை என்பதால்தான், முடி அரசு முறையை மாற்றிக். குடிஅரசு முறையைத் தேடினர்;குடி அரசிலோ, மந்திரிகள் எதையும் செய்ய வல்லவர்கள் என்பதை உணர்ந்து, உள்ளத்தில் கிலி குடிகொண்ட நிலையில் இருக்கும் மக்களிடம், மந்திரிகளாக இருந்துகொண்டே ஒட்டுக் கேட்பது, முடிஅரசு முறையின் கேடுபாட்டைவிட மோசமான நிலைமையையன்றோ ஏற்படுத்திவிடும்.<noinclude></noinclude>
2btnz1zaoa9m2c3ep43fico7s3wqu1y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/335
250
641963
1928811
1927990
2026-04-30T08:11:07Z
Rabiyathul
5890
+ மேலடி
1928811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||311}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
311
எனவேதான், குடிஅரசு முறை, இந்த நாட்டைப் பொறுத்த வரையில், உண்மையான மக்களாட்சி அமைய வழிகோல வேண்டு மானால், பொதுத்தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்னாலாவது, காங்கிரஸ் மந்திரிகள் பதவியைவிட்டு விலகிச், சொந்த அறிவாற்றலை காட்டிக், கட்சி சாதித்தவைகளை எடுத்துக் கூறி, 'ஓட்டு' கேட்க வேண்டும்.
'முன்பு இருந்ததைவிடக் காங்கிரசுக்கு இப்போது வலிவு அதிகமாகி இருக்கிறது' என்று முதலமைச்சர் காமராஜர் பேசி வருகிறார்.
அவர் கூறுவதிலே அவருக்கே நம்பிக்கை இருக்குமானால், தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, பதவியை விட்டு விலகி, வெறும் காமராஜராக, கர்மவீரர் காமராஜராகவோ, பச்சைத் தமிழர் காமராஜராகவோ, கிராமம் கிராமமாகச் சென்று, போட்ட பாதைகள், வெட்டிய வாய்க்கால்கள், தோண்டிய கிணறுகள், திறந்த பள்ளிக் கூடங்கள், ஏற்றிய விளக்குகள்- இவைகளுக்காக வாங்கிய வரித் தொகை-இந்தக் கணக்கைக் காட்டி, 'ஓட்டு' வாங்கி விடட்டும், பார்க்கலாம்!!
தம்பி! இந்த ஏற்பாடு, இன்றுள்ள நிலையில், குடிஅரசு முறையைக்கூடத் தூய்மைப்படுத்த மிகமிகத் தேவை.
எல்லா அரசியல் கட்சிகளுமே, இதனை நாட்டு மக்கள்முன் ஒரு உடனடிப் பிரச்சினையாக வைத்து, மக்களின் வலிவைத் திரட்டிக் காட்டிக், காங்கிரஸ் கட்சியை இந்த ஏற்பாட்டுக்கு இணங்கும்படி, வலியுறுத்த வேண்டும்.
ஏதோ ஓரளவுக்காகிலும், குடி அரசு முறை பலன் தரவேண்டும் என்று விரும்பினால், இந்த ஏற்பாடு, நடைமுறைக்கு வந்தே ஆகவேண்டும்.
பாபு இராஜேந்திர பிரசாத், சட்டம் இயற்றச் செல்வோர்களுக்குத் தகுதிகள் இருத்தல் வேண்டும் என்று கூறினார்-அதுபோலவே, அல்லது அதனைவிட மிகமிக அவசியமாகவும், அவசரமாகவும், இன்று தேவைப் படுவது, மக்களை மிரட்டி 'ஓட்டு' வாங்கும் முறையை ஒழித்துக் கட்டுவது.
தேர்தலில் ஈடுபட்டு, மக்களின் ஆதரவைக் கேட்டுப் பெறச் செல்வோர், அமைச்சர்கள் என்ற 'அந்தஸ்து' பலத்தைக் காட்டுவது, அவர்களுக்கு பதவியை விட்டுவிட்டால், மக்களின் நல்லாதரவைப் பெறத்தக்க வேறு தகுதிகள் இல்லை என்பதையே, உலகுக்கே எடுத்துக் காட்டும், தரக்குறைவான காரியமாகிப் போகும்.<noinclude></noinclude>
pm8uvw4d28ut9cqx0p9ny6zcchqw5xd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/336
250
641964
1928813
1927991
2026-04-30T08:11:43Z
Rabiyathul
5890
+ மேலடி
1928813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|312||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>312
'திராவிட நாடு' இதழில்
கட்சி மகத்தான காரியங்களைச் சாதித்து விட்டது என்பதற்காக அல்ல, அமைச்சர்களாக இருக்கிறார்களே என்பதற்காகவே. நெஞ்சின் குமுறலை அடக்கிக்கொண்டு கிடக்கிறோம், என்று பேசாதவர்கள் இல்லை.
குடிஅரசு முறையிலே செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்துப், பாபு இராஜேந்திரர் போன்றாரெல்லாம், அக்கரை காட்டிப் பேசுவதால், தம்பி! உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய பிரச்சினையை எடுத்துரைத்தேன் - என் வார்த்தையைக் கேட்டுவிட்டு, அமைச்சர்களுக்கு, 'ரோஷம்' பொத்துக்கொண்டு வந்துவிடும். 'அடே! அறிவிலி! எமக்கு இருக்கும் செல்வாக்கு, அமைச்சர்களாக இருப்பதனால் மட்டும் என்றா வாய்த்துடுக்காகக் கூறுகிறாய்? எம்மை நாடு அறியும்- நன்கு அறியும்!! எமது அறிவாற்றல், வீரதீரம், தியாகம், யாவும், அறியாத வீடு உண்டா? கேவலம், அமைச்சர் பதவியைக் காட்டியா, நாங்கள் 'ஓட்டு' வாங்கவேண்டும்? அங்ஙனமா, எண்ணிக்கொண்டாய்? இதோ பார், பதவி பழஞ்செருப்பு-வீசி எறிந்துவிட்டு, மக்களை அணுகி, எமது சொந்தத் தகுதி, திறமை, சாதித்தவை இவைகளைக் காட்டியே ஓட்டுக் கேட்டுப் பெறுகிறோம்!! - என்று கூறிவிடுவார்கள். என்ற நம்பிக்கை யுடன் இதைக் கூறவில்லை, நாடு அறியட்டும், இவர்கள், நிலைமையை- மக்கள் திரண்டெழுந்து வலியுறுத்தட்டும்-பொய்க்கால் இல்லாமல், பூச்சு, பூணாரம் இல்லாமல், வந்து ஓட்டுக் கேளுங்கள்-அதுதான் முறை- எல்லோரும் இந்நாட்டு மன்னர்-என்று தத்துவம் பேசுகிறீர்கள்-ஆனால் அமைச்சர்களாக இருந்துகொண்டு, ஓட்டுக்கேட்க நீவிர் வருகிறபோது. நாங்கள், கைகட்டி வாய் பொத்தி நிற்கவேண்டி இருக்கிறது- நீவிர் கல்லைக் கனி என்று கூறினாலும், சுடு சொல்லை எம்மீது வீசினாலும், மறுத்திட மார்க்கமின்றிக் கிடக்கவேண்டி நேரிடுகிறது எப்பக்கம் திரும்பினாலும், உமக்கு. பதவி தரும் பலம் தெரிகிறது திகில் பிறக்கிறது-ஓட்டுகளைத் தட்டிப் பறித்துக் கொள்கிறீர்கள்-இது குடி அரசு முறை அல்ல-தடி அரசு முறையாகிப் போகிறது. ஆகவே, எங்கள் தயவை நாடி வருகிற போதாகிலும், தடி தூக்கிக் கோலம் கலைத்து விட்டு வாருங்கள்-காட்டவேண்டிய கணக்கைக் காட்டுங்கள் - நாங்கள் கேட்க வேண்டியவைகளைக் கேட்கிறோம்-அதுதான் முறை-என்று மக்கள் கூற வேண்டும், என்பதற்காகவே, இதனை எழுதுகிறேன்.
தம்பி! பதினைந்து ஆண்டுகளுக்குமேல் இருக்கும் என்று நினைக்கிறேன்-சென்னையில், நான் ஓர் நாடகத்துக்குத் தலைமை வகிக்க அழைக்கப்பட்டுச் சென்றிருந்தேன். எனக்கு வலப்புறம், நாடகக் குழுவின் உரிமையாளர் அமர்ந்திருந்தார்-மறுபுறம், அவருடைய மகன், சிறுவன்- ஏழெட்டு வயதிருக்கும் அமர்ந்திருந்தான்.<noinclude></noinclude>
pk1a8bfwkpsqzss87do0xhix8pqmfdo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/337
250
641965
1928815
1927992
2026-04-30T08:12:21Z
Rabiyathul
5890
+ மேலடி
1928815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||313}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
313
நாடக முடிவில், பேசச் சென்றேன். சிறந்த முறையில் அமைந் திருந்த நாடகம் அது. அன்று அந்தக் குழுவில் இருந்தவர்களில் பலர். இன்று திரையில் ஒளிவிடும் திறமைமிக்க நட்சத்திர நடிகர்களாக உள்ளனர். அவர்கள் அந்தநிலை பெறப்போகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டத்தக்க சிறப்புடனேயே, அவர்களின் அன்றைய நடிப்பு இருந்தது. பாராட்டிப் பேசினேன். உரிமையாளர், மாலை அணிவித்தார். அவர் மகன், மாலையையே உற்று உற்றுப் பார்த்தான்.
சிறுவன், மாலையை மிக உன்னிப்பாகப் பார்த்துவிட்டுத், தன் தகப்பனாரைப் பார்த்து, "அப்பா! இவர் சின்ன மந்திரியா?" - என்று கேட்டான். எனக்கு. அந்தக் கேள்வி வியப்பாக இருந்தது. அவர், சற்றுச் சிரமப்பட்டார். சிறுவர்களா, கேள்விக்குப் பதில் பெறாமல் விடுவார்கள்! கிளறியபடி இருந்தான்-அவர், வேறு பக்கமாகப் பேச்சைத் திருப்பிப் பார்த்தார்.
"இவர்தானடா...அண்ணாதுரை அண்ணா...தெரியாது?"- என்று கேட்டார். சிறுவன் செல்லமாக, "ஓ! தெரியுமே! இவர்தான் அண்ணா! அது தெரியும். ஆனால், இவர் சின்ன மந்திரியா?"- என்று மீண்டும் கேட்டான். நான் சிறுவனைப் பார்த்து, "தம்பி! ஏன் அப்படிக் கேட்கிறாய்?" என்று கேட்டேன். உரிமையாளர் திகைத்தார்-சிறுவன், சொன்னான்: 'நேற்று ஒருவர் தலைமை வகித்தார். அவர்க்கு இந்தாப் பெரிய மாலை போட்டாங்க, அப்பா. அவர் யார் என்று கேட்டேன். மந்திரி என்று சொன்னார். இப்ப, உங்களுக்குச், சின்ன மாலைதான் போட்டாங்க... அதனாலே தான், நீங்க சின்ன மந்திரியா, என்று கேட்டேன்"-என்றான். சிரித்தேன், உரிமையாளரின் சங்கடத்தைக் குறைத்திட அந்த உரிமையாளர், என்னிடம் உள்ளன்பு கொண்டவர்- அன்றும், இன்றும். அன்றும் சரி, இன்றும் சரி, மந்திரிகளைவிட நாடகத்தைக் காண்பதிலும், சுவைப்பதிலும், நடிப்புத் திறனைக் கண்டால், நடிகர்களின் விருப்பு வெறுப்புப் பற்றி மறந்து பாராட்டுவதிலும், நான் அதிக ஈடுபாடு கொண்டவன், இதை நாடு அறியும். என்னைத் திட்டுவதற்கு, மாற்றுக்கட்சியினர், பயன்படுத்தும் வார்த்தையிலே, மிக முக்கியமான சொல்லே, கூத்தாடி என்பதல்லவா?
இருப்பினும், மந்திரி தலைமைவகிக்கிறார் என்றால். மற்றவர் களுக்குச் செய்கிற மரியாதையைவிடச் சற்றுச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற நினைப்பும், நிலையும், யாருக்கும் ஏற்பட்டுவிடுகிறது.
இது தவறும் அல்ல! அவர்களிலே, மிகப் பலர், தலைமை வகிக்கும் வாய்ப்புப் பெற்று. 'பெரியமாலை' என்றானே சிறுவன், அவ்விதமான மரியாதைகளைப் பெறுவதே, மந்திரிகள் என்ற பதவியில் இருக்கும் போதுதான்.<noinclude></noinclude>
d9jz6d9zr873pypeq3b143gn9fqg41d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/338
250
641966
1928818
1927993
2026-04-30T08:13:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|314||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>314
'திராவிட நாடு' இதழில்
முன்னும் இல்லை, பின்பும் அநேகமாக இருக்காது.
என்போன்றோர்களின் நிலை, அது அல்ல.
ஆகவே, அமைச்சர்கள், 'பெரிய மாலை' போட்டுக்கொள்வது. தவறும் அல்ல; தகாது என்றும் கூறுவது கூடாது. ஆனால், சிறுவனுக்கு என்ன தோன்றிற்று? மந்திரிக்குப் பெரிய மாலை-அண்ணாதுரைக்குச் சின்ன மாலை-ஆகவே, இவன் இவன் சின்ன மந்திரி!-என்றுதானே!
குழந்தை உள்ளம் அது. குடிமக்களில் பெரும்பாலோருக்கும், நிலை அதுதான். அறிவாற்றல், தகுதி, திறமை, என்பவைகளைப் பார்த்துமட்டும் அல்ல, பதவியின் உயர்வைக் கண்டு, 'பெரிய மாலை போடவேண்டியவர்களாகிறார்கள். மாலை மரியாதை மட்டும்தான் என்றால், நஷ்டமும் இல்லை, ஆபத்தும் எழாது. ஆனால், பதவி காரணமாக மூட்டிவிடப்படும் மயக்கம், அச்சம் காரணமாக 'ஓட்டு களை'யும் போடும் நிலை ஏற்பட்டுவிடுமானால், பிறகு குடிஅரசு முறை, கோணலாட்சிக்குத்தானே, வழி ஏற்படுத்தும்.
தம்பி ஒரு கணம் மீண்டும், அந்த நாடக மேடைக்குப் போவோம். மந்திரி என்பதால், பெரிய மாலை போட்டுக் கொண்டதாலே ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடாது-ஆனால், மந்திரியின் கரம் பட்டவன்தான் திறமுள்ள நடிகன், என்று ஒரு முறை உண்டாக்கி விட்டிருந்தால், என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும்? இன்று மந்திரி களின் கரம் குலுக்கிக் களிப்படையும் நடிகர்களேகூட, ஒரு சமயம், மந்திரியின் கண் பார்வை கிடைக்காது போயிருக்குமானால், உரிய உயர் இடம் பெற்றிருக்க முடியாது.
நடிகன், எந்த இடம் பெறத்தக்கவன் என்பது, ரசிகர்களின் கை ஒலியில் இருக்கிறது; மந்திரியின் பார்வையில் அல்ல!!
அதுபோலவே, யார் மக்களின் ஓட்டுகளைப் பெறத்தக்கவர்கள் என்பது, அவர்களின் அறிவாற்றல், செய்தவை, இவைகளைக் காட்டிப் பெறுவதாக இருக்கவேண்டும்-பதவியைக் காட்டிப் பறிக்கப்படுவதாக இருத்தல் கூடாது-அது தீது-பேராபத்துமாகும்.
குடிஅரசு முறை, காங்கிரசாரிடம் இருப்பதால், உழவர்களின் நிலை, தேய்ந்துவிட்டிருக்கிறது என்பது, ஆய்வுக் குழுவின் அறிக்கை யிலேயே, விளக்கமாக்கப்படுகிறது.
இதை ஆதாரமாகக் கொண்டு, 'ஓட்டு' அளிப்பது என்றால், உழவர் பெருங்குடி மக்களின் ஆதரவு, எப்படிக் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க முடியும்?<noinclude></noinclude>
mjeundfbg40c61m1t6f3zx0vpj843wb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/339
250
641967
1928821
1927994
2026-04-30T08:13:55Z
Rabiyathul
5890
+ மேலடி
1928821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||315}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
315
இவ்வளவும் செய்துவிட்டு, உழவனைக் கடனாளியாக்கி, நோயாளி யாக்கி உழலவைத்துவிட்டுப், பதவியைக் காட்டிப் பயமூட்டி 'ஓட்டு' வாங்கினால், அது கூர்மையான கத்தியைக் காட்டி நடத்தப் படும் வழிப்பறி, அல்லது சுவையான பண்டம் கொடுத்து குழந்தையை ஏய்த்துவிட்டு நடத்தப்படும் களவு, போன்றதாகத்தானே ஆகிவிடும்.
இதனைத்தான், எல்லா அரசியல் கட்சிகளும், குடிஅரசு செம்மையாக்கப்பட வேண்டும் என்பதிலே அக்கரை கொண்டவர்களும், கவனிக்கவேண்டும்.
குடிஅரசு முறையை ஏற்று நடத்திக் கொண்டு வரும் காங்கிரஸ் கட்சி, உழவர்களை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதைக் கண்டோமல்லவா! தம்பி! நெசவாளியைக் காண்போம்! அவன், இவர்கள் ஆட்சியிலே, எப்படி இருக்கிறான்? நெய்யுந் தொழிலுக்கு நிகர் இல்லை என்று நேர்த்தியாகக் கூறப்பட்டிக்கிறது. காங்கிரசாட்சியோ, பட்டமரம் துளிர்த்திடச் செய்யும் 'மாயாவிகள்' நிரம்பிய கட்சி என்று பாமரரிடம் கூறி வைத்திருக்கிறார்கள். இந் நிலையில் நெசவாளி முன்னேற்றம் அடைந்தல்லவா இருக்கவேண்டும்! ஆனால், எப்படி இருக்கிறான்? நான் எதற்காகத் தம்பி! அதைச் சொல்லிக், காங்கிரசாரின் கோபத்தைக் கிளறவேண்டும். ஒரே அடியாகச் சொல்வார்கள்- இவனுக்கு நெசவுத் தொழில்பற்றி என்ன தெரியும்? - என்று. ஆகவே, நான் ஏதும் கூறப்போவதில்லை-இதோ ஒரு நெசவாளி ! நீயே. கேள்:
நான் ஓர் ஏழை நெசவாளி, எனக்கு வயது 17. என் தந்தை சிறுவயதிலேயே என்னையும், என் தம்பி, தங்கை ஆகியவரையும் விட்டுவிட்டு, இறந்துவிட்டார். நான் தறிசெய்து, நான், தாயார், தம்பி, தங்கை ஆகிய நால்வரும் சாப்பிடவேண்டும். வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குப் படிப்பு, சம்பளம், துணி, மருந்து, வைத்தியம்....
இதோ எனது வருமானம்.
மாதம் ஒன்றுக்கு நான் நெய்வதால் கிடைக்கும் கூலி ரூபாய் 40. எனது தாயார் கூலிக்கு நூல் சுற்றினால் மாதம் 7 ரூபாய் கிடைக்கும், ஆக ரூபாய் 47 தான் மாத வருமானம். இதற்குக் குறையுமே தவிர அதிகமாவது கிடையாது.
தறியுடன் கூடிய வீட்டு வாடகை ரூபா 7
அரிசி,பருப்பு, சாப்பாட்டு வகை 30-8-0
பள்ளிக்கூடச் சம்பளம் அல்லது புத்தக வகை 2-8-0<noinclude></noinclude>
2s7194qnk1gj7rc5hx2afjeehckbogh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/340
250
641968
1928824
1927995
2026-04-30T08:14:33Z
Rabiyathul
5890
+ மேலடி
1928824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|316||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>316
ஆகச் செலவு 40-0-0
'திராவிட நாடு' இதழில்
இனி வைத்தியம், போக்குவரத்து, ஆடைகள், சினிமா இவை களுக்கு நான் எங்கே போவது? தவிர, எனக்குத் திருமணம் ஆக வேண்டும். என் தங்கைக்கும் செய்யவேண்டும். பெண்ணுக்கு நகை சீர் வரிசை இவைகள் உண்டல்லவா? இவற்றிற்கெல்லாம் பணம் தேவை. மேலும் எனது வயோதிகத் தாயாருக்குப் பிற்கால அந்திமக்கிரியைகள் - இவையெல்லாம் நான் சுமக்கும் பாரமாகும். எங்கே இதற்கெல்லாம் வருவாய்? நான் எந்த ரகம்போட்டுக் கொண்டு கைத்தறியிலே நெய்தாலும், மாதம் சுமார் 40,50,60 ரூபாய்க்குமேல் வருவாய் காண முடியாது, இது என் குடும்பத்துக்குப் போதுமா? பெருகிவரும் குடும்பத் திற்கும், அதனால் ஏற்படும் செலவுகளுக்கும் நான் எங்கே போவது?
தம்பி! என்ன பதில் அளிக்கப்போகிறாய்? நான், என்ன அண்ணா? பதில் அளிக்கமுடியும்? அவர்களை ஆண்டிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி அல்லவா பதில் கூற வேண்டும்- என்றுதான் கூறுவாய், நெசவாளி காங்கிரஸ் கட்சியினரைக் கேட்கிறான் என்றால்.
கலகக்காரன் கழகக்காரன்
என்று ஏசி, அவன் வாயை அடைத்துவிட முடியும்-முடிகிறது.
கூட்டுறவு நாடு
காங்கிரசைத் தேடு
என்று புத்திமதி கூறிட, பெரியவர்கள் முன்வருகிறார்கள்.
காலத்துக்கேற்ற ரகம் வேண்டும்.
நாணயமாகத் தொழில் நடத்தவேண்டும்.
என்று எச்சரிக்கை கூறிடவும் கதராடையினர் உள்ளனர்.
இதையே நம்பிக் கிடக்காதே.
விசைத் தறி வைத்துக்கொள். வேறு வேலைக்குப் போ!
என்று பயங்கரமான, அல்லது பயனற்ற யோசனைகளைக் கூறவும். காங்கிரசில் ஆட்கள் உள்ளனர்.
தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன், நொந்து கிடப்பதாகப் பேசும் நெசவாளி கேட்டிடும் கேள்விக்குப் பதில். எவ்வளவு பளிச்சுப்<noinclude></noinclude>
p8hus7p7h7cmtc8bucqozqaatnn05ps
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/341
250
641969
1928826
1927996
2026-04-30T08:15:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||317}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
317
பளிச்செனத் தருகிறார் தெரியுமா, தம்பி! அதைப் படித்தால்; நெசவாளி மீது கோபமே கூட ஏற்பட்டு விடக்கூடும். அவ்வளவு அன்புடன், அக்கறையுடன், பட்டியல் தருகிறார் அமைச்சர். இன்னின்ன உதவிகள் செய்கிறோம் என்பதாக. அவரே கூறட்டும். கேள் தம்பி!
...சமுக பொருளாதார நிலை உயர்வதில், சென்னை இராஜ்ய நெசவாளர் கூட்டுறவுச் சங்கமும், இதர நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களும், பெரும் பணி ஆற்றியுள்ளன என்பதை அறிய, அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது"
அரசாங்கம் மகிழ்ச்சி அடைகிறதாம்! நெசவாளி, குமுறுகிறான். என் கதி என்ன ஆவது? நான் எங்கே போவேன்? என்று கேட்கிறான். அமைச்சரோ, மகிழ்ச்சி அடைகிறார்-அவ்வளவு நன்மை செய்தாகி விட்டதாம் நெசவாளிக்கு!
அமைச்சரின் பேச்சு, ஏற்றுக்கொள்ளத் தக்கதுதானா? நெசவாளி, வேண்டுமென்றா, வேதனைக் கீதம் பாடுகிறான்! நாம் தான் பார்க்கிறோமே, அவன், நாளுக்கு நாள் காய்ந்து, தேய்ந்து, உருமாறிப் போய்க் கொண்டிருக்கும், உள்ளம் உலுக்கும் காட்சியை. மரக்கிளை, ஆழ்கிணறு. இவைகளை அல்லவா, அவன் அமைச்சர்களை நம்புவதைவிட, அதிக ஆர்வத்துடன் நம்புகிறான். அவ்வப்போது இதழ்களில் காண்கிறோமே இம்சைக்கு ஆளான நெசவாளி படும் அவதிகளை. அமைச்சரோ எவ்வளவோ உதவிகள்! செய்தபடி இருக்கிறோமே. இவ்வளவு செய்கிறோமே, என்று எங்களுக்கே மகிழ்ச்சி!!-என்கிறார்.
"நாட்டிலே 2-ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேறியுங்கூடக் கைத்தறியாளர்கள் சம்பந்தப்பட்டவரை, அவர்களது சொந்த வாழ்க்கையில் எவ்வித மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. சுருங்கச் சொன்னால், அவர்களது வாங்கும் சக்தி குறைந்துபோய், அகவிலை உயர்வுடன் அன்றாடம் மல்லுக் கட்டி வருகிறார்களென்று கூறலாம்."
தம்பி! கைத்தறியாளர்களின் பாதுகாவலன் என்ற நிலையில் உள்ளவர்கள், இதுபோலக் கூறுகிறார்கள்; அமைச்சரோ, அகமகிழ்ச்சி கொள்கிறார்; அந்த அகமகிழ்ச்சியையும் சேர்த்து எடுத்துக்கொண்டு தான், அமெரிக்கா போயிருக்கிறார்.
யாரோ, வீணாகக் கண்ணீர் வடிக்கிறார்கள், கைத்தறியாளர் களைக் காட்டி; நிலைமை அது அல்ல: அமைச்சர் சொன்னதுபோல. அகமகிழத்தக்க அளவிலும் வகையிலும் தான் உதவி செய்கிறது சர்க்கார் என்று, ஓட்டு கேட்க வரும் காங்கிரசார். கூறுவர்.<noinclude></noinclude>
chtpg93nv6m4qqnq7lo0vwc6e4n2d5i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/342
250
641970
1928829
1927997
2026-04-30T08:15:51Z
Rabiyathul
5890
+ மேலடி
1928829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|318||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>318
'திராவிட நாடு' இதழில்
நெசவாளி கஷ்டப்படுகிறான். என்பதை மேலும்
மாகவே கூறுகிறார், பாதுகாவலர்.
விளக்க
''தொழில்துறையில் அவர்களது ஆதார தேவையாகவுள்ள மூலப் பொருளான நூலுக்கு, இன்று உயர்ந்துள்ள விலையானது. இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் மங்கம்மா மார்க்கட்டிலே விற்ற நூல் விலையைக் கேலிசெய்வதாக இருக்கிறது. கேள்வி முறையற்று உயர்ந்து விட்ட நூல்விலை காரணமாகக், கைத்தறி நெசவாளர்கள். இன்று சொல்லொணாத் துன்ப துயரங்களுக்கு ஆளாகி நிற்கின்றனர்".
மங்கம்மா மார்க்கட்டு விலையைவிட அதிகமாமே இப்போது - ஏழை பங்காளர் ஆட்சியிலே - கவனித்தாயா தம்பி! இது நாட்டு மக்களுக்குத் தெரியாது-தெரிந்தாலும் உருட்டி மிரட்டி வாயை அடக்கி விடலாம் என்ற துணிச்சலில், கதராடைகளுக்கு. எவ்வளவு வீறாப்பு. கனைப்பு, முறைப்பு-பார்க்கிறாயல்லவா
'நூற்பாலை முதலாளிகளே, தாங்களாக முள் வந்து நூலுக்கு விலைக்குறைவு செய்து விட்டதாக அறிவித்து, அரசாங்கத்தையும் கைத்தறியாளர்களையும் ஒரு வகையாக ஏமாற்றியதைத் தவிர, உருப்படியான பலன் ஏதும் ஏற்படவில்லை. அப்படித்தான் நூல் விலையைக் குறைத்து விட்டதாகச் சொன்னார்களே, அந்த விலைக்காவது மார்க்கெட்டில் நூல் கிடைக்கிறதா? இல்லையே! அதிலும் இப்போது கள்ள மார்க்கட் தானே!”
காங்கிரசாட்சி-கள்ள மார்க்கட் இந்த இரண்டையும் எவ்வளவு ஜோடிப் பொருத்தத்தோடு, சேர்த்துப் பேசுகிறார்கள். ஆனால், துளியாவது வெட்கம் காணோமே, ஆள வந்தார்களுக்கு!!
கைத்தறியாளருக்கு நூல் கிடைப்பதில்லை-கள்ள மார்க்கட்டை நாடுகிறான் -விலை ஏறுகிறது-மங்கம்மா மார்க்கட் விலையைவிட
ஆனால், அமைச்சர்கள், 'நெசவாளி காலனி திறப்பு விழா செய்யச் செல்கிறார்கள்-அதைத் திறப்பதற்காகத் திறக்கும் வாய், வலி எடுத்துப் போகும் அளவுக்கு, நமது கழகத்தைத் தூற்றிப் பேசப் பயன் படுத்திவிட்டு, இறுதியாக, எந்த நாட்டு அரசியல் தலைவனும் எடுத்தியம்பத் தெரியாமல் தத்தளிக்கும் அதி அற்புதமான அரசியல் தத்துவம் பேசுவதாக எண்ணிக் கொண்டு. வீணாக எதை எதையோ பேசுவானேன் இப்போது வேண்டியது சோறு!" என்று தெளிவுரை தருகிறார்கள்
இனி இந்தச் சோற்றுக்குக்கூட, காமராஜர் அதிகமாக வாய்திறக்க முடியாது போலிருக்கிறது-தேரு பண்டிதர், அரிசிச்சோறு சாப்பிட்டா<noinclude></noinclude>
4eyam70tpb0nl9h4ato6kh8evptbn3o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/343
250
641971
1928832
1927998
2026-04-30T08:16:29Z
Rabiyathul
5890
+ மேலடி
1928832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||319}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
319
சோம்பேறிகள்-ஆகிவிடுகிறார்கள் மூளைகூடச் சரியாக இருக்காது!- என்று பேசுகிறார்.
இத்தகைய ஒரு விஞ்ஞான நுணுக்கம் நிரம்பிய (!!) கருத்தை வெளியிடுவதற்கு முன்பு, நேரு பண்டிதர், நன்கு ஆராய்ந்து பார்த்து, காமராஜர் போன்றாரிடம் கலந்து பேசித் தெரிந்துகொண்டு தான், வெளியிட்டிருப்பார். காமராஜர்களும், ஆமாமாம்! என்று தலை அசைத்திருக்கக்கூடும்.
கைத்தறியாளர்களுக்கு, காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லையா? ஏய்! கழகம்! உன்னைத்தான் கேட்கிறேன்! ரிபேட் கொடுப்பது, தெரியுமா? தெரியாதா? என்று கதருடையார் கோபத்துடன் கேட்கிறார்.
அமைச்சர்களோ, 'ரிபேட்' தருகிறோம், இப்போது; ஆனால், டில்லி வேறு விதமாகப் பேசுகிறது; ரிபேட் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறுவதற்கு இலலை என்று பேசுகிறார்கள்.
"கைத்தறித் தொழிலுக்குத் தொடர்ந்து பாதுகாப்புத் தர இயலாது; ரிபேட்டுக்குப் பதிலாக மாற்று யோசனை இருந்தால் தெரிவியுங்கள்" என முக்கிய அமைச்சர்களே பேசுகிறார்கள். இதே பல்லவியை, கதர்த் தொழிலைப் பார்த்து மட்டும் சொல்ல அவர்களது நா கூசுகிறதே. ஏன்?
சாதாரண காலத்தில் கைத்தறி ஜவுளிக்கு 5 காசு ரிபேட்; இப்போது தீபாவளிக்காகக் கூடுதலாக 5 காசு சேர்த்து ரூபாய்க்கு 10 காசு ரிபேட் தர அனுமதித்துவிட்டு, அடுத்த பக்கம் கதர் ஜவுளிக்கு ரூபாய்க்கு 5 அணா-அதாவது 31 காசு ரிபேட் தருவதற்கு அனுமதிக்கிற நியாயம் எதில் உட்பட்டதோ தெரியவில்லை!"
தம்பி ! இதைவிடத் தெளிவாக, கைத்தறியாளர் பிரச்சினையைக் கூற முடியாது.
நெசவாளியின் குமுறல், அமைச்சரின் அகமகிழ்ச்சி, மங்கம்மா மார்க்கட், கதருக்கு 5 அணா ரிபேட் என்ற, இவ்வளவும் பற்றி நான் இங்கு கூறியிருப்பது, நெசவாளர்களின் பாதுகாவலனாகப் பணியாற்றும், "கைத்தறி" தீபாவளி மலரில் காணப்படும், கட்டுரைகள், தலையங்கம் இவற்றிலிருந்து, எடுக்கப்பட்டவை.
***
.
ஆக, ஆய்வுக் குழுவின் அறிக்கை, உழவர்படும் துயரத்தையும். நெசவாளர்படும் அல்லலை 'கைத்தறி' மலரும், நன்கு எடுத்துக் காட்டு கின்றன. உழவர்-நெசவாளர்-இவர்கள், சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்கள். இவர்களுக்குக் காங்கிரஸ் நடாத்தும் குடிஅரசு, கொடுத்திருப்பது இது;<noinclude></noinclude>
7g5eeqb48kegyx9ys38el27ggfwgyaj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/344
250
641972
1928833
1927999
2026-04-30T08:17:06Z
Rabiyathul
5890
+ மேலடி
1928833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|320||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>320
'திராவிட நாடு' இதழில்
இனிக் குடிஅரசு முறைமீதே மக்களுக்குக் கசப்பு ஏற்படுவதில் வியப்பு
என்ன?
அது சரி அண்ணா! முன்பே வாக்களித்தாய், மன்னனைக் காணலாம் என்று; நானும் ஆவலாக வந்தேன்; நெசவாளியையும், உழவனையும் காட்டுகிறாயே!!-என்றுதானே தம்பி கேட்கிறாய்.
இவர்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்!!
முடிதரித்த மன்னனையே காணவேண்டுமா. சரி காணலாம் வா.
6.11.1960
அண்ணன்.
அண்ணுது.<noinclude></noinclude>
a8jz69vcjt34uptukjq2tspytz31425
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/345
250
641973
1928836
1928000
2026-04-30T08:17:44Z
Rabiyathul
5890
+ மேலடி
1928836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||321}}{{rule}}</noinclude>தம்பி,
கடிதம் : 125
எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3)
மன்னர்கள் பலர் உளர், சிலரைக் காணலாம்!! காணுமுன்பு இதனை எண்ணிப்பார்; முடிஅரசு முறை தீது, ஆகாது. தேவையற்றது என்று கூறுவது, மிகச் சுவையுள்ள, மிக எளிதிலே எவரும் ஒப்புக் கொள்ளத்தக்க அரசியல் தத்துவம் என்பது நிலைத்து நின்றான பிறகும், மன்னர்களைக் காண்பது என்றால், ஓர் ஆவல், பரபரப்பு உணர்ச்சி, உன்போன்றார் உள்ளங்களில்கூட ஏற்பட்டுவிடுகிறதே, அது ஏன்? புரிகிறதா? மன்னர்கள் மமதையாளர்களாகிவிடக் கூடும், மக்களை மந்தை என்றெண்ணி நடத்திடக்கூடும்-அதுபோல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பல உள! மக்கள் தமது குடிசைகளில் உள்ள தட்டு முட்டுச் சாமான்களை விற்றாகிலும், மன்னன் மனையாட்டியின் கருத்துக்கேற்ற மரகதமணி மாலை - வாங்கப் பணம் செலுத்தவேண்டும் என்று கூறிய முடிஅரசுகள் இருந்திருக்கின்றன. எனக்கு மட்டும் அவன் கிடைத்து விட்டால், இரு கரங்கள் போதும், வாள் வேண்டாம், வேல் வேண்டாம், கழுத்தை நெறித்தே காதகனைக் கொன்று போடுவேன்; கற்பழிக்கப்பட்ட கன்னியரின் கண்ணீரை எண்ணிக்கொண்டால் போதும், இந்த என் கரங்கள், இரும்பினும் வலிவுடையனவாகும்-என்று புரட்சிப்பொறி பறந்திடப் பேசிய வீரர்களை, முச்சந்தியிலே தூக்குமரம் நாட்டி, அதிலே பிணமாக்கித் தொங்கவிட்ட மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். எனினும், இன்றும், இவ்வளவு சுவையுடன் 'ஜனநாயகம்' பேசும் இந்த நாட் களிலேயும், எங்கிருந்தாகிலும், யாரேனும் மன்னன் வருகிறார் என்றால், பார்க்க வேண்டும் என்று மக்களுக்கு ஆவல் பொங்குகிறது.
தலைவர்கள், நடிகர்கள், வெற்றிவீரர்கள், ஆகியோரைக் காணவும் மக்களுக்கு ஆவல் எழத்தான் செய்கிறது; ஆனால், அந்த ஆவல் அவர்கள் தத்தமது துறைகளில், பாராட்டத்தக்க திறம் காட்டி, மக்களின் மனதை ஈர்த்த பிறகே, ஏற்படுகிறது.
ஆனால், மன்னர்களைக் காணவேண்டும் என்ற ஆவலோ அவன் மன்னன் என்பதற்காகவே ஏற்பட்டுவிடுகிறது-தரம் திறம், வெற்றி, எதுவும் அவ்வளவாகத் தேவைப்படுவதில்லை.
இந்த நிலை, பழமையை விட்டுவிடத் துணிவு இல்லாத இந்நாட்டிலே மட்டும் என்பதற்கில்லை; புரட்சி பூத்திட்ட சோவியத் நாட்டிலேயே,
.<noinclude></noinclude>
q81faclo66fve48bs1w6pgq2idgqki9
1929023
1928836
2026-04-30T11:39:44Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>தம்பி,
கடிதம் : 125
எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3)
மன்னர்கள் பலர் உளர், சிலரைக் காணலாம்!! காணுமுன்பு இதனை எண்ணிப்பார்; முடிஅரசு முறை தீது, ஆகாது. தேவையற்றது என்று கூறுவது, மிகச் சுவையுள்ள, மிக எளிதிலே எவரும் ஒப்புக் கொள்ளத்தக்க அரசியல் தத்துவம் என்பது நிலைத்து நின்றான பிறகும், மன்னர்களைக் காண்பது என்றால், ஓர் ஆவல், பரபரப்பு உணர்ச்சி, உன்போன்றார் உள்ளங்களில்கூட ஏற்பட்டுவிடுகிறதே, அது ஏன்? புரிகிறதா? மன்னர்கள் மமதையாளர்களாகிவிடக் கூடும், மக்களை மந்தை என்றெண்ணி நடத்திடக்கூடும்-அதுபோல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பல உள! மக்கள் தமது குடிசைகளில் உள்ள தட்டு முட்டுச் சாமான்களை விற்றாகிலும், மன்னன் மனையாட்டியின் கருத்துக்கேற்ற மரகதமணி மாலை - வாங்கப் பணம் செலுத்தவேண்டும் என்று கூறிய முடிஅரசுகள் இருந்திருக்கின்றன. எனக்கு மட்டும் அவன் கிடைத்து விட்டால், இரு கரங்கள் போதும், வாள் வேண்டாம், வேல் வேண்டாம், கழுத்தை நெறித்தே காதகனைக் கொன்று போடுவேன்; கற்பழிக்கப்பட்ட கன்னியரின் கண்ணீரை எண்ணிக்கொண்டால் போதும், இந்த என் கரங்கள், இரும்பினும் வலிவுடையனவாகும்-என்று புரட்சிப்பொறி பறந்திடப் பேசிய வீரர்களை, முச்சந்தியிலே தூக்குமரம் நாட்டி, அதிலே பிணமாக்கித் தொங்கவிட்ட மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். எனினும், இன்றும், இவ்வளவு சுவையுடன் 'ஜனநாயகம்' பேசும் இந்த நாட் களிலேயும், எங்கிருந்தாகிலும், யாரேனும் மன்னன் வருகிறார் என்றால், பார்க்க வேண்டும் என்று மக்களுக்கு ஆவல் பொங்குகிறது.
தலைவர்கள், நடிகர்கள், வெற்றிவீரர்கள், ஆகியோரைக் காணவும் மக்களுக்கு ஆவல் எழத்தான் செய்கிறது; ஆனால், அந்த ஆவல் அவர்கள் தத்தமது துறைகளில், பாராட்டத்தக்க திறம் காட்டி, மக்களின் மனதை ஈர்த்த பிறகே, ஏற்படுகிறது.
ஆனால், மன்னர்களைக் காணவேண்டும் என்ற ஆவலோ அவன் மன்னன் என்பதற்காகவே ஏற்பட்டுவிடுகிறது-தரம் திறம், வெற்றி, எதுவும் அவ்வளவாகத் தேவைப்படுவதில்லை.
இந்த நிலை, பழமையை விட்டுவிடத் துணிவு இல்லாத இந்நாட்டிலே மட்டும் என்பதற்கில்லை; புரட்சி பூத்திட்ட சோவியத் நாட்டிலேயே,
.<noinclude></noinclude>
bllwzvmeeelxglqbnvgw9lyhiwzndpl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/346
250
641974
1928838
1928001
2026-04-30T08:18:24Z
Rabiyathul
5890
+ மேலடி
1928838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|322||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>322
'திராவிட நாடு' இதழில் இப்போது, மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராகப் 'பவனி' வருகிறார்கள்; மக்கள் கண்டுமகிழ்கிறார்கள்.
என்ன எண்ணிக்கொண்டு, ஜார் மன்னனை ஒழித்துக்கட்டிய புரட்சிப் பரம்பரையினர், இந்த மன்னர்களைப் பார்க்கிறார்களோ? அப்படி அங்கு செல்லும் மன்னர்களும், சோவியத் மக்களைக் கண்டு புன்னகை புரிகிறார்களே, அதற்குத்தான் என்ன பொருளோ? யாரறிவர்!!
'மைசூர் மகாராஜா' அமெரிக்கா சென்று, காட்டு மிருகங்களைப் பற்றியும். கடவுள் கொள்கை பற்றியும், பல்கலைக்கழகங்களில் பேருரையாற்றிவிட்டு, வருகிறார்.
'மகாராஜா'வை அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற் கிறார்கள். ஆனால் தங்கள் நாட்டுக்கு ஒரு 'ராஜா' வேண்டுமென்று அவர்கள் விரும்பவுமில்லை; முன்பு இங்கிலாந்து நாட்டு அரசன் ஆணைக்கு உட்பட்டு இருந்த நிலைமையைப் புரட்சி நடாத்திப் போரிட்டு ஒழித்துக் கட்டியவர்கள் அமெரிக்கர்கள்.
அமெரிக்காவில், வரவேற்பு வைபவங்களைப் பெற்று. மகாராஜா! என்று மக்களால் புகழாரம் சூட்டப்பட்டு, மகிழ்ந்திடும் மன்னர், இங்கு திரும்பி வந்ததும், 'ராஜ்யம்' பறிபோன நிலைதான் அவரை வரவேற்கிறது!
நேபாள நாட்டு மன்னர், காஷ்மீர் நாட்டு மன்னர், இவர்கள் தத்தமது நாடுகளிலே, இன்று, இந்தியப் பேரரசின் துணை தரும் வலிவின் காரணத்தால்தான், அரசாள முடிகிறது-ஆனால் அவர்கள் 'பவனி' வரும் சோவியத் போன்ற புத்தம் புதுமுறை கண்ட நாடுகளிலே, அவர்கள், புரட்சித் தலைவர்களுடன் குலவ முடிகிறது. குடிஅரசுத் தலைவருடன் கொலுவிருக்க முடிகிறது. மக்களாட்சி மட்டுமே மாண்பளிக்கும் என்ற கருத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த, நாட்டுத் தலைவர்கள், இந்த மன்னர்களுடன் உரையாடி, உலக சமாதானம் குறித்தும், நேசத் தொடர்பு கொள்வது பற்றியும் பேசி, அறிக்கை வெளியிடுகிறார்கள். விந்தையாக இருக்கிறதல்லவா?
ஆப்கன் நாட்டு மன்னரும், மன்னர் பரூக்கை விரட்டி, அரசுத் தலைவராகிவிட்ட நாசரும், எழில்மிகு எகிப்தில் விருந்துண்டு மகிழ் கிறார்கள். உலகு சீர்பெற வழி காண்போம் என்று செப்புகிறார்கள்,
மைசூர், திருவனந்தபுரம், கொச்சி, புதுக்கோட்டை, போபால், ஜெயப்பூர், ஜோத்பூர், பவநகர், நவநகர், பாடியாலா, -இப்படியுள்ள ஐநூருக்கு மேற்பட்ட இராஜ்யங்களை அரசாண்டு வந்தவர்களை, இந்தியப் பேரரசு வீட்டுக்கு அனுப்பிவிட்டது-எனினும் இப்போது, 'பிரிட்டிஷ் மகாராணி இங்கு வருகிறார்கள்' என்பதற்காக, என்னென்ன வகையான விருந்து<noinclude></noinclude>
hiufv8q75u9g4ef56mk9jia0rb7sp07
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/347
250
641975
1928840
1928002
2026-04-30T08:19:02Z
Rabiyathul
5890
+ மேலடி
1928840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||323}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
323
வைபவங்கள் ஏற்பாடுசெய்வது என்பது பற்றித் துரைத்தனமே சுறுசுறுப்பாகி விட்டிருக்கிறது.
மாலைபோடலாம்-ஒன்றே ஒன்று!
விருந்துவைக்கலாம்-ஆங்கில முறை உணவு!
உடனிருந்து உபசாரங்களைக் கவனித்துக் கொள்ள, இலட்சுமி மேனன் எனும் துணைஅமைச்சரே, கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்.
மகாராணி, புலிவேட்டை காண்பாராம்! மகாராணியின் மணாளன், புலியைச் சுடுவாராம்!
இருவரும் சென்று. காதற்சின்னமாம் கவின்மிகு 'தாஜ்மகாலை'க் காண்பராம்-நிலவொளியில்!!
தம்பி! பிரிட்டிஷ் மகாராணியின் வரவேற்பு வைபவத்துக்காக, அமைச்சர்கள் வண்டுபோலச் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறார்கள் அதிகாரிகள் பம்பரமாகச் சுழன்று வேலை செய்துகொண்டுள்ளனர்.
இது 'குடிஅரசு' கொடிகட்டி வெற்றி முழக்கமிடும் காலம்!- இப்போது, உலகில் மிகப்பெரிய ஏகாதிபத்யத்தை அமைத்து, பல நாடுகளை அடிமை கொண்ட, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணி யாருக்குக், குடிஅரசு முறையை மேற்கொண்டுவிட்ட இந்தியாவில், இத்துணை சிறப்புடனும், பகட்டுடனும் வரவேற்புகள்!! பொருள் உண்டா, இதற்கு? குடிஅரசு முறையிலே, மக்களுக்கு ஐயப்பாடே ஏற்பட்டுவிடுமோ என்றுக்கூடச்
சிலர் அச்சம் முடிதரித்தோர் முன், குடியாட்சித் தலைவர்கள்,
முகமன்கூறி நின்றிடும் 'அடக்க உணர்ச்சி'யைக் காணும்போது.
அஃதே போல, முடிதரித்தோர், குடியாட்சித் தலைவர்களுடன் கைகுலுக்கி, கனிவு காட்டி, அவர்தம் அறிவாற்றலைப் பாராட்டிப் பேசும்போது, குடியாட்சித் தலைவர்களில், மிகமிக உறுதி படைத்தவர் களுக்கேகூட, ஒரு கணம், உச்சி குளிரத்தான் செய்யும்.
குடியாட்சி முறையை மேற்கொள்ளுங்கள், என்று முடி தரித்தோருக்கு இவர்கள் யோசனை கூறுவதில்லை. முடி அரசுதான் சாலச் சிறந்தது என்று குடியாட்சித் தலைவர்களுக்கு, மன்னர்களும் அறிவுரை கூறுவதில்லை; இருவரும் ஒருவருக்கொருவர் 'அன்புரை' கூறிக்கொள்கின்றனர்; அவனியோர்க்கு வாழும் வழி கூறுகின்றனர்.
முடிதரித்தோருக்கு உள்ள பகட்டு கண்டு, குடியாட்சித் தலைவர்கட்கு நெஞ்சில் சபலம் தட்டுகிறதோ என்னவோ, யார் கண்டார்கள்? அது போலவே, குடியாட்சித் தலைவரானால், மக்களின் பேரன்பு கிடைக்கிறது<noinclude></noinclude>
ja5zun5hdtdb1wmsarb7jh2ckcwe0ar
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/348
250
641976
1928843
1928003
2026-04-30T08:19:46Z
Rabiyathul
5890
+ மேலடி
1928843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|324||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>324
‘திராவிட நாடு' இதழில்
என்பது கண்டு, முடிதரித்தோர் மனம், குடியாட்சி முறையை நாடுமோ,
என்னவோ!
ஆனால், மக்கள் இன்றும், மன்னர்களைக் காண்பதிலே, மட்டற்ற ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஈரான் நாட்டு மன்னருக்கு, சின்னாட்களுக்கு முன்பு ஒரு ஆண்மகவு பிறந்தது! ஆண் குழந்தை ஈன்றெடுக்காத ஒரே காரணத்துக் காகவே, ஈரான் மன்னர், தன் இதயத்தில் இடம்பெற்ற பேரழகி சுரையா மகாராணியை விலக்கி வைத்து விட்டார்; வேறோர் மங்கையை மணமுடித்துவிட்டார்; அவள் பெற்றெடுத்தாள் ஆண் மகவு! ஈரான் நாடு விழாக்கோலம் பூண்டது! மன்னனுக்கு மகன் பிறந்தான்- நாட்டுக்கு இளவரசன் பிறந்தான்-என்று குதூகலம், நாடு முழுவதும்.
ஈரான்நாட்டு மன்னர், 'இளவரசனை'க், கண்டுவிட்டுத் திரும்புகையில், அவருடைய மோட்டாரைச் சூழ்ந்துகொண்டு, ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த காட்சி படமெடுக்கப்பட்டு, குடியாட்சி பரவப் பாடுபடும் நாளிதழ்களில், முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இன்றளவும், பிடிதளரவில்லை; முறை அதிகமாக மாறிவிடவில்லை; எல்லா அதிகாரமும் தமது கரத்திலேயே வைத்துக்கொண்டு இருக்கிறார் அபிசீனிய நாட்டு மாமன்னர், ஹெயிலி செலாசி! சென்ற கிழமை, அவர் அரசாளத் தொடங்கி, முப்பதாண்டுகள் ஆயின என்பதைக் காட்டிட ஒரு விழா நடைபெற்றது-கோலாகலமாக!
பிரான்சு நாட்டிலே, மன்னனை விரட்டிய நாளை, இன்றும் விழாவாக்கிக் கொண்டாடுகிறார்கள்.
ரஷிய நாட்டிலே, இந்த நவம்பரில், ஜார் மன்னன் ஆட்சி ஒழிக்கப்பட்ட புரட்சி, விழா நாளாக்கப்பட்டுக் கொண்டாட்டம் நடக்கிறது.
அபிசீனியா நாட்டிலே, மாமன்னர் முடி தரித்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன என்பதால், மகிழ்ச்சியுற்று விழாக் கொண்டாடுகிறார்கள்.
பேரறிவாளன் என்று போற்றப்படும் சாலமன் எனும் மன்னனுக்கும், பேரழகி ஷீபா எனும் அரசிக்கும் பிறந்த மைந்தனுடைய வழி வழி வந்தவர், அபிசீனிய மாமன்னர், என்கிறார்கள்.
இவரும், இன்றுள்ள குடியாட்சித் தலைவர்களுக்கு, நல்லாட்சி நடத்தவேண்டும் என்பது குறித்தும், உலகப்போர் மூண்டிடாமல், அறநெறியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும், அறிவுரைகள் கூறுகிறார்.<noinclude></noinclude>
rhsstiye9ae5lve85zjeiz2hdybwa4k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/349
250
641977
1928845
1928004
2026-04-30T08:20:31Z
Rabiyathul
5890
+ மேலடி
1928845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||325}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
325
இவ்விதமானதோர் விந்தையான நிலைமை இன்று இருந்து வருகிறது. குடியாட்சி முறையை முடியாட்சி முறையுடன் இணைத்துக் கொண்டுள்ள நாடு பிரிட்டன்.
முறை.
முடியுடையோன் தலையை வெட்டினர் பிரிட்டனில், முன்போர்
மற்றோர் மன்னனை நாடு கடத்தினர்!
மிகப் பழங்காலத்திலேயே, மன்னனை மாளிகைக்குள்ளே, மடக்கி அடக்கி, அவனிடம் 'உரிமைச் சாசனம்' எழுதி வாங்கினர்-இதே பிரிட்டனில்.
இதே பிரிட்டனில், மகாராணிக்குக் குழந்தை பிறக்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல், அரண்மனைக்கு எதிரே, பெருந்திரளாக மக்கள் கூடி நின்றனர்- சேதி கேட்டு மகிழ்ந்திட!
அப்படிப்பட்ட விந்தை முறைகள் நிறைந்த பிரிட்டனை, ஆண்ட ஓர் மன்னனைத்தான். நாடகப் பேராசிரியர், நானிலம் போற்றிய பகுத்தறிவாளர், பேரறிஞர் பெர்னாட்ஷா 'ஆப்பிள் கார்ட்' எனும் நாடக நூலொன்றிலே, படைத்துக் காட்டுகிறார்; ஆமாம் தம்பி! உண்மையாக இருந்த மன்னன் அல்ல; சமதர்ம குடிஅரசு, பகுத்தறிவு எனும், பல தூய கருத்துக்களைக் கருவூலமாக்கித் தந்த பேரறிஞர், 'பெர்னாட்ஷா'வின் கற்பனையில் தோன்றிய மன்னன்! காண்போம் வா!
மன்னன் அரண்மனை பெரியது! கவர்ச்சிகரமானது! மன்னனுடைய நிலைமைக்கு ஏற்றதாகத்தானே அவன் இருப்பிடம் இருத்தல் வேண்டும். நமது நாட்டிலே தம்பி! கோயில் என்றே பெயர் தந்தனர், மன்னன் மனைக்கு!
நுழைவு வாயிலைக் கடந்துவிட்டோம்-முன்புறக் கூடம்! இங்கு உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டுதான் உள்ளே போகமுடியும். அவர்கள் இருவரும், மன்னனுக்கு வந்த கடிதங்களைப் படித்துக்கொண்டும், இடையிடையே பேசிக் கொண்டுமிருக்கிறார்கள். என்ன செய்வது, தம்பி! கனைத்தாலும், கண் சிமிட்டினாலும், இவர்கள். தங்கள் வேலை முடிந்தாலொழிய, அல்லது என்ன காரணத்தினாலோ நம்மிடம் அக்கறை ஏற்பட்டாலொழிய, உள்ளே செல்ல அனுமதி அளிக்க மாட்டார்கள். எவ்வளவு நேரமாகும் என்று கேட்கிறாய்- பார்வையால்! என் பெருமூச்சு கூறுவது புரியவில்லையா-எவ்வளவு நேரமாகுமோ எனக்கே தெரியாது.<noinclude></noinclude>
3x7t9hmqa4k0djm7g15roox3dbklpq7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/350
250
641978
1928847
1928005
2026-04-30T08:21:04Z
Rabiyathul
5890
+ மேலடி
1928847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|326||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>326
'திராவிட நாடு' இதழில்
இதுதான் அண்ணா! முடிஅரசு முறையிலே உள்ள கொடுமை- என்று கூறுவாய்.
குடியாட்சி முறையிலே மட்டும் என்னவாம்! கண்டவர்கள், கண்ட கண்ட நேரத்திலெல்லாம், அமைச்சர் பெருமானைக் காணச் சென்றுவிட முடியுமா? 'நந்திபூஜை' அங்கு இல்லையா?
இராஜகோபாலாச்சாரியார் அமைச்சராக வந்த உடன், குடியாட்சி முறையின் அருமை பெருமையை உயர்த்தும் நோக்குடன், தன்னை எவரும் எந்த நேரத்திலும் வந்து பார்க்கலாம் என்று கூறினார். ஒரே கொண்டாட்டம் மக்களுக்கு! காங்கிரஸ் வட்டாரத்திலே பெரு மகிழ்ச்சி! ஆனால், என்ன நடந்தது; தெரியுமோ? தம்பி! அணி அணியாகக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும், வந்து பார்த்தபடி இருந்தனர்- வேறு வேலை பார்க்கவே நேரம் கிடைக்க வில்லை. கூப்பிய கரத்தை, மடக்க முடியவில்லை! சிரித்தமுகம்- மாறக்கூட நேரம் கிடைக்க வில்லை. கடைசியில், இது ஆகாது என்று உணர்ந்து, ஆச்சாரியார், முதலில் செய்திருந்த ஏற்பாட்டைக் கைவிட்டு விட்டார்.
குடியாட்சியிலேயே இது என்றால், முடியாட்சியிலே, கட்டுக் காவல், தடை, இவை அதிகமாகத்தானே இருந்திடும்!
அதிகாரிகள் நமது பக்கம் திரும்பிப் பார்ப்பதாக இல்லை-தம்பி! அடுத்து, காண்போம், மன்னனை.
13.11.1960.
அண்ணன்,
Hmmmm<noinclude></noinclude>
owtva16dav52ehemg26hqspo8l0dxr5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/351
250
641979
1928849
1928006
2026-04-30T08:21:36Z
Rabiyathul
5890
+ மேலடி
1928849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||327}}{{rule}}</noinclude>தம்பி,
கடிதம் : 126
எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)
மன்னனைக் காணப் பலர் வரக்கூடும்; இளவரசர்கள், தளபதி, வணிகர் கோமான்கள், கலைவல்லோர், மார்க்கத் தலைவர்கள், வெளி நாட்டுத் தூதுவர்கள், இப்படிப் பலர். இவர்கள் ஒவ்வொரு வருக்கும், மன்னனைக் காண்பது, அவருடன் உரையாடுவது என்பதிலே, ஒவ்வொரு முறை இருக்கும் கொலுமண்டபம், கோட்டை வெளி, விழாமன்றம், களியாட்டக் கூடம், கானாற்றுப் பக்கம் எனும் பல்வேறு அரங்கங் களில், மன்னனுடன் செல்வோர் அல்லது வந்துகாண்போர், என்னமுறையில் வரவேற்கப்படுவர், எங்கு இடம் பெறுவர் என்பதற்கெல்லாம், கட்டுத் திட்டம் உண்டு; அது துளியும் கெடாதபடி பார்த்துக் கொள்வார்கள்; கெடாவிடின், மன்னன், தன்நிலை அறியாது தடுமாறினான் என்று கேலி பேசுவர், கண்டிக்கக் கூடச் செய்வர்.
இங்குவர இருக்கும் பிரிட்டிஷ் பேரரசிக்கு மணாளனாக இருப்பவர், வேறோர் நாட்டு அரச குடும்பத்தவர் எனினும். அரசர் அல்ல! பேரரசி யுடன் அவர் செல்கிறார், பல நாடுகளுக்கு; பேரரசிக்குக் காட்டப்படும் சில தனிச்சிறப்புகள் இவருக்குக் கிடையாது; பெற இயலாது; கேட்கவும் மாட்டார். நாட்டுக்கு மட்டுமல்ல, நாயகனுக்கும், அவர் பேரரசி!
பேரரசியின் பாராளுமன்றத் துவக்கஉரை நிகழ்ந்தபோது, பேரரசியின் தங்கை, அவையில் அரசு குடும்பத்தினருக்கு என்றுள்ள இருக்கையில் காணப்படவில்லை. காரணம் என்ன என்று இதழ்கள் விளக்கின. ஒரு இதழ், உண்மையான காரணம், அவர் மட்டும்தான். அரசு குடும்பத்தினர் இருக்கையில் அமரலாமேயொழிய, பக்கத்தில் கணவன் அமரமுடியாது! ஏனெனில், அவர் அரச குடும்பத்தவர் அல்ல; தனக்கு ஒரு இடம், மணாளனுக்கு மற்றோர் இடம் என்று இருப்பதை விரும்பாததாலேயே, அரச குமாரி பாராளுமன்ற விழாவில் கலந்துகொள்ளவில்லை, என்று எழுதிற்று. இது இந்த ஆண்டு!
இங்குவர இருக்கிறாரே எலிசபத் பேரரசி, அவர், புலி வேட்டை காணப்போகிறார்? காணமட்டுமே! புலிவேட்டை ஆடப் போவதோ பேரரசியின் கணவர்.
தம்பி ! பேரரசி, புலிவேட்டை ஆடுவது கூடாது! தரக்குறைவான செயல்! அவர் கணவர், வேட்டை ஆடலாம், அவருக்கு உள்ள நிலையின்<noinclude></noinclude>
rhyfll2fzp7wa22d9esz3do6x0xi4bi
1929024
1928849
2026-04-30T11:41:30Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>தம்பி,
கடிதம் : 126
எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)
மன்னனைக் காணப் பலர் வரக்கூடும்; இளவரசர்கள், தளபதி, வணிகர் கோமான்கள், கலைவல்லோர், மார்க்கத் தலைவர்கள், வெளி நாட்டுத் தூதுவர்கள், இப்படிப் பலர். இவர்கள் ஒவ்வொரு வருக்கும், மன்னனைக் காண்பது, அவருடன் உரையாடுவது என்பதிலே, ஒவ்வொரு முறை இருக்கும் கொலுமண்டபம், கோட்டை வெளி, விழாமன்றம், களியாட்டக் கூடம், கானாற்றுப் பக்கம் எனும் பல்வேறு அரங்கங் களில், மன்னனுடன் செல்வோர் அல்லது வந்துகாண்போர், என்னமுறையில் வரவேற்கப்படுவர், எங்கு இடம் பெறுவர் என்பதற்கெல்லாம், கட்டுத் திட்டம் உண்டு; அது துளியும் கெடாதபடி பார்த்துக் கொள்வார்கள்; கெடாவிடின், மன்னன், தன்நிலை அறியாது தடுமாறினான் என்று கேலி பேசுவர், கண்டிக்கக் கூடச் செய்வர்.
இங்குவர இருக்கும் பிரிட்டிஷ் பேரரசிக்கு மணாளனாக இருப்பவர், வேறோர் நாட்டு அரச குடும்பத்தவர் எனினும். அரசர் அல்ல! பேரரசி யுடன் அவர் செல்கிறார், பல நாடுகளுக்கு; பேரரசிக்குக் காட்டப்படும் சில தனிச்சிறப்புகள் இவருக்குக் கிடையாது; பெற இயலாது; கேட்கவும் மாட்டார். நாட்டுக்கு மட்டுமல்ல, நாயகனுக்கும், அவர் பேரரசி!
பேரரசியின் பாராளுமன்றத் துவக்கஉரை நிகழ்ந்தபோது, பேரரசியின் தங்கை, அவையில் அரசு குடும்பத்தினருக்கு என்றுள்ள இருக்கையில் காணப்படவில்லை. காரணம் என்ன என்று இதழ்கள் விளக்கின. ஒரு இதழ், உண்மையான காரணம், அவர் மட்டும்தான். அரசு குடும்பத்தினர் இருக்கையில் அமரலாமேயொழிய, பக்கத்தில் கணவன் அமரமுடியாது! ஏனெனில், அவர் அரச குடும்பத்தவர் அல்ல; தனக்கு ஒரு இடம், மணாளனுக்கு மற்றோர் இடம் என்று இருப்பதை விரும்பாததாலேயே, அரச குமாரி பாராளுமன்ற விழாவில் கலந்துகொள்ளவில்லை, என்று எழுதிற்று. இது இந்த ஆண்டு!
இங்குவர இருக்கிறாரே எலிசபத் பேரரசி, அவர், புலி வேட்டை காணப்போகிறார்? காணமட்டுமே! புலிவேட்டை ஆடப் போவதோ பேரரசியின் கணவர்.
தம்பி ! பேரரசி, புலிவேட்டை ஆடுவது கூடாது! தரக்குறைவான செயல்! அவர் கணவர், வேட்டை ஆடலாம், அவருக்கு உள்ள நிலையின்<noinclude></noinclude>
tvtq4l104iobah9wr5rccz7i2wja7h5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/352
250
641980
1928851
1928007
2026-04-30T08:22:09Z
Rabiyathul
5890
+ மேலடி
1928851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|328||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>328
'திராவிட நாடு' இதழில்
அளவு அது! ஏன் இந்த வித்தியாசம் என்று வியப்பாக இருக்கிறதா? இதிலென்ன, தம்பி! வியப்பு? உண்மையாக நீ வியப்புறவேண்டியது எதை அறிந்து தெரியுமா? பேரரசியின் கணவன் பேரரசன் அல்ல; பேரரசனின் மனைவி பேரரசி ஆகலாம்!!
இத்தகைய சில தனிச்சிறப்புகள், இன்றும், அரசர்களுக்கு உள்ளன; மக்களும், இந்தச் சிறப்புகளைத் தருவதிலே தயக்கம் காட்டுவதில்லை; மன்னன் உலா, விழாபோல் இருக்கலாம் என்கின்றனர் மக்கள்; விழாவில் களிப்புப் பெறுகின்றனர்! மன்னன், கண்ணைக் கவரும் வனப்பு அளித்திடும் அணிபணி பூண்டிடலாம், மக்கள் அதனை அனுமதிக் கின்றனர்! கண்டு அகமகிழ்கின்றனர், ஆனால் மன்னன், ஆட்சிப் பொறுப்பு அத்தனையும் வேண்டுமென்று கேட்டாலோ மறுக்கின்றனர்; உமக்கு எது நல்லது என்பது எமக்கன்றோ தெரியும் என்று மன்னன் பேசிடின், அதனை மமதை என்கின்றனர் மக்கள்!!
பிடி யாராரிடமோ உளது. முடிமட்டும் நம் தலையில்! அரசன் என்று விருது இருக்கிறது, ஆட்சியோ நம் விருப்பப்படி இல்லை! அரண்மனை இருக்கிறது பெரிதாக; ஆனால் அது சிங்காரச் சிறைக்கூடம் போலாக்கப் படுகிறது! இந்நிலையில், அரசர்க்கான உடையும் முடியும் வெறும் சுமையாகிறது. பொன்னால் சமைக்கப்பட்டு நவமணிகள் இழைக்கப்பட்ட 'சிம்மாசனம்,' எந்தச் சமயத் திலும் கடித்திடத் தயாராக இருக்கும் 'சர்ப்பாசனம்' போலாகிறது! இந்த நிலையில், மன்னன் என்று இருப்பதை விடக் குடிமகனாக இருப்பதுமேல்! மன்னன் குடிமகனை, எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற முறை முறிந்து போய்விட்டது. குடிமகன், இன்று மன்னனை, எப்படி எப்படிக் காணவேண்டும் என்று எண்ணுகிறானோ, அதுபோல் ஆக்கிவிட முடிகிறது. இந்நிலையில், குடிமகனாக இருப்பது கோலேந்தியாக இருப்பதைக் காட்டிலும், எத்துணையோ மடங்கு மேலானது, என்று எண்ணிக்கிடந்திடும். மன்னர்களும் உளர்.
இவ்விதமான எண்ணம்கொண்ட மன்னனைத்தான் தம்பி! நாம் காணப் புறப்பட்டோம்.
அதோ பார்! ஏறு நடை| எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக் கூடியவர் என்பதை எடுத்துக் காட்டிடும் பார்வை, கண்டவர் தன் நிலை உயர்ந்தது என்பதை அறியவேண்டும் என்ற நோக்குடன், உடை அலங்காரம். ஆதிக்கக்காரருக்கு அடிபணிபவன் நான் அல்ல; நான் புரட்சி நோக்குடையவன் என்பதை எடுத்துக்காட்டும், சிகப்பு அங்கி. இவர் ஓர் அமைச்சர்! புதிதாக அமைச்சரானவர்
அமைச்சரானேன். என்றார் இவர்.<noinclude></noinclude>
ndltpkdsln7i7ha0ndjn8eird82orlk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/353
250
641981
1928852
1928009
2026-04-30T08:22:40Z
Rabiyathul
5890
+ மேலடி
1928852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||329}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அமைச்சர் ஆக்கினேன் என்பார், முதலமைச்சர்.
329
இவர். வணிகக் கோட்டத் துறைக்குத் தலைமை ஏற்றிருக்கும் அமைச்சர். பேரறிஞர் பெர்னாட்ஷா இந்த அமைச்சருக்கு போனார்ஜிஸ் என்று பெயரிட்டிருக்கிறார்.
தம்பி! நான், நமது வசதிக்காக, இந்த அமைச்சரை, புயலார் என்று அழைக்கிறேன். இந்த அமைச்சர், தமது அறிவாற்றலால், புரட்சிப் போக்கினால், முடிஅரசு முறையையே வீழ்த்தத்தக்க புயல் கிளப்பி விடுவதாக எண்ணுபவர்; எனவே இவருக்குப் புயலார் எனும் பெயர் ஒருவகையில் பொருத்தமானதுங்கூட.
அமைச்சர் அவையில் இடம்பெறுமுன், இவர், பொறி பறக்கப் பேசியும், புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டியும், ஆட்சி முறையிலே மதமதப்பு ஏற்பட்டு விட்டது என்று கடிந்துரைத்தும், மன்னராட்சி முறை உள்ளமட்டும் மக்களாட்சி மலராது என்று விளக்கியும், முடிதரிப்போரே இருத்தல் ஆகாது. முழுக்க முழுக்க குடிஅரசு ஏற்பட்டாக வேண்டும் என்று முழக்கமிட்டும், 'பெரிய புள்ளி' ஆனவர்; "புயலார்" ஆனவர்!
அவருக்கு அமைச்சர் அவையில் இடம் தரப்பட்டது.
புதிய அமைச்சர் மன்னனைக் காண வருகிறார்.
மன்னனைக் காணவந்திருக்கிறேன்-என்று புயலார் கூறிடும்போது. அச்சொல் கேட்டதும் அலுவலர்கள் அஞ்சி நடுநடுங்கி, ஐயனே! அமருவீர் இதோ அரைநொடியில் அரசனை அழைத்து வருகிறோம்- என்று கூறி விட்டு, ஓடோடிச் சென்று, அரசனை அழைத்து வருவர், என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். ஏனெனில், மன்னர்களைப் பேட்டிகாணச் செல்வது பேதைமை என்றும், மக்களின் தலைவர் களை மன்னர்கள் காத்திருக்கச் செய்வது கொடுமை என்றும், அந்த முறையை வாழவிடுவது மடைமை என்றும், சந்தைத் திடலில், அவர், எத்தனையோ முறை முழக்க மிட்டிருப்பார். அப்படிப்பட்டவர், அமைச்சர் என்ற நிலையைப் பெற்று மன்னனைக் காணவந்திருக்கிறார்- மதியிலிகள், அவரை ஊர் என்ன? பேர் என்ன? உற்ற குறை யாது? என்று கேட்கிறார்கள்-அவ்விதம் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டதால்!! புயலார் கோபம் கொள்ளாமலிருந்திருக்க முடியுமா?
கேட்பதென்ன! வந்தது மன்னனைக் காண-காணச்செல்வோம்- என்று எண்ணிக்கொண்டார் போலிருக்கிறது, உள்ளே நுழைந்தார். மன்னனுக்கு அனுப்பப்படும் மடல்களைக் கவனிக்கும் அலுவலர் இருவர் கண்டனர், அவர்களில் ஒருவன், வந்தவர் யார் எனக் கண்டு கொண்டான். அவர் போக்கும் நோக்கமும் தெரிந்தவன் என்ற முறையில் பேசினான்.<noinclude></noinclude>
k9hj9gxbdq793l5uuvypy3fft5qhn1u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/354
250
641982
1928853
1928010
2026-04-30T08:23:12Z
Rabiyathul
5890
+ மேலடி
1928853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|330||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>330
'திராவிட நாடு' இதழில்
''வருக! அமைச்சரே! வருக! தாங்கள் அமைச்சரானதற்காகத் தங்களை நான் வாழ்த்துகிறேன்.....இல்லை, இல்லை தங்களைப் பெற்றதற்காக அமைச்சர் அவையை வாழ்த்துகிறேன்".
பொல்லாதவன் இந்த இளைஞன். முடி அரசனோ, குடிஅரசுக் கொள்கையுடையோனோ, எவனாயினும், புகழ்மொழி கேட்டால் மயங்கிப் போவர், என்ற உண்மையை உணர்ந்து, புயலாரிடமே, அந்த வித்தையை காட்டுகிறான். மன்னர்களாகிலும், பலருடைய புகழுரையைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருப்பர்! எனவே அவர்கள், தம்மைப் புகழ்பவர்களின் எண்ணிக்கை வளர வளர, ஓரளவு சலிப்புணர்ச்சி கூடக் கொள்ளக்கூடும். புயலார் போன்றவர்கள் அவ்விதம் அல்லவே! அங்காடியிலும், ஆற்றோரத் திடலிலும், முச்சந்தியிலும், மன்றங்களிலும், பாராட்டுரைகளைப் பெற்றிருப்பர். இது அரண்மனை! எந்த அரண்மனையைச் சுட்டிக் காட்டி, ஆணவம் குடி கொண்ட இடம்! அக்ரமம் கொலு இருக்கும் இடம்! என்றெல்லாம் கண்டித்துப்பேசி இருக்கிறானோ, அதே அரண்மனை, அங்கு அவன் நுழைகிறான், மன்னனைக் காண, அமைச்சர் என்ற நிலை பெற்று அந்த இடத்தில், தன்னைப் புகழ்கிறார்கள் என்றால், உச்சி குளிர்ந்திடத்தானே செய்யும்.
மன்னர்! என்று இளைஞர்களில் ஒருவன் அறிவிக்கிறான்.
உட்கார்ந்திருக்கும் புயலார், இருக்கையில் இருந்தபடியே, கதவுப் பக்கம் திரும்பிப் பார்க்கிறார்-எழுந்திருக்கவில்லை.
மன்னன் வருகிறார் என்ற உடன், எழுந்து நின்றால், செ தன்மானத்தை, இழந்துவிடும் செயலாகி விடாதா! ஓ! பயல், நம்மைக் கண்டதும் மரியாதை காட்டுகிறான் என்று மன்னன் எண்ணிக்கொண்டு விடுவானே! நாடு, நமது கட்டளைக்காகக் காத்துக்கிடக்கிறது: நமது அறிவாற்றலால் இந்த அரசையே ஆட்டிப் படைக்கிறது-அப்படிப் பட்ட நாம், கேவலம் ஒரு முடிதாங்கியைக் கண்டு எழுந்து நிற்பதா? கூடாது. கூடவே கூடாது. நாம் உட்கார்ந்தபடி இருந்தால்தான் நமது நிலையின் உயர்வு தெரியும், தரம் புரியும், குடிஅரசுக் கோட்பாட்டுக்கு ஏற்றம் ஏற்படும், என்றெல்லாம் புயலார் எண்ணிக்கொண்டிருந்திருக்கக் கூடும்.
நாற்பத்தைந்து வயதிருக்கும் மன்னனுக்கு: நல்ல உயரம்; அறிவாளி என்பதைக் காட்டிடும் தோற்றம். கனிவுடன், கரங்களை நீட்டியபடி, புயலாரை நோக்கி வருகிறார்.
மன்: என் சிறிய அரண்மனைக்கு வந்திருக்கிறீர்-நல் வரவேற்பு. புயலாரே! அமருங்களேன்!!<noinclude></noinclude>
0pcqx47d1hxex2kq03a7cbc9zbkibf6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/355
250
641983
1928854
1928011
2026-04-30T08:23:44Z
Rabiyathul
5890
+ மேலடி
1928854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||331}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
331
(மன்னன், அமைச்சருக்குத் தரவேண்டிய உரிய மதிப்பைத் தரவேண்டி, வரவேற்பு கூறுகிறான். மன்னனைக் காண வருபவர்கள், மன்னனைக் கண்டதும் எழுந்து நிற்பது வாடிக்கையாக இருந்து வரும் மரியாதை முறை; அங்ஙனம் நிற்பவரை, அமருக! என்று அன்புடன் மன்னன் கூறுவதும் மரியாதை முறைகளிலே ஒன்று.
மன்னன், தனக்கென்று இருந்துவரும் மரியாதை முறைப்படி. அமைச்சரை வரவேற்றபடி, அமருக! என்று கூறினார். அமைச்சர் தான், வழக்கமான மரியாதை முறையைக் கையாள்வது தன் நிலைமையைக் குறைத்துவிடும், தாழ்வு மனப்பான்மையைக் காட்டும் என்று கருதி, எழுந்திருக்கவேயில்லையே. அதைக் கவனித்து விட்டதாகக்கூட மன்னன் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கமான மரியாதை முறை இருப்பது போலவே கருதிக்கொண்டு, அமருக! என்கிறார்.)
அமை: நான் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.
மன் : உண்மை, புயலாரே! நான் அதைக் கவனிக்கவில்லை. மன்னித்துக்கொள்க! அமருக! என்று கூறிவிட்டேன்!! பழக்கம் அப்படி!
தம்பி! மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை எடுத்துக்காட்ட இந்த ஒரு பேச்சுப்போதும் என்று கூறலாம்.)
தேவையற்ற திமிர் என்றுதான், தெளிவுள்ள எவரும் கூறுவர், சாதாரண, வழக்கமான, மரியாதையை காட்டக்கூட மறுத்திட்ட அமைச்சரின் போக்கை.
ஆனால், அதைக் கண்டும். காணாதது போலிருந்துவிட்டது மன்னனுடைய பெருந்தன்மையை மட்டுமல்ல, அவனுக்கு உள்ள 'எடை போடும் திறமையையும் நன்கு காட்டுகிறது.
ஆணவம் தலைக்கேறிவிட்ட நிலை இவனுக்கு; எனவேதான், கஷ்டமோ நஷ்டமோ தராத, மிகமிகச் சாதாரணமான மரியாதை முறையைக்கூடக் கைக்கொள்ளாதிருக்கிறான். இத்தனை முடுக்கும், முறிவுக்குத்தான் வழி அமைக்கும்!
இவன், கொந்தளிக்கும் உள்ளம் கொண்டவனேயொழிய, நின்று நிதானித்து, காரியமாற்றி, நீங்காப் புகழ்பெறும் வாய்ப்பினைத் தேடிக் கொள்பவனல்ல. எனவே இவன், நாம், கவனிக்கத்தக்க பகைவன் அல்ல! என்றுதான், மன்னன் எண்ணிக்கொண்டிருப்பான்.
அமருக! என்று கூறினேன், அட அறிவிலி! மன்னர்கள் அங்ஙனம் கூறுவது முறை! அதற்குப் பிறகு அமருவதே, பழக்கமாக இருந்து வருகிறது!<noinclude></noinclude>
mkp5qlp3qw4sx350ihbsexacqddxsz1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/356
250
641984
1928855
1928012
2026-04-30T08:24:17Z
Rabiyathul
5890
+ மேலடி
1928855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|332||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>IN
332
'திராவிட நாடு' இதழில்
என்று, மன்னன் கடிந்துரைக்கவில்லை. மாறாக, 'மன்னித் தருள்க. பழக்கத்தால் அங்ஙனம் கூறிவிட்டேன்" என்று பேசினான்.
இங்கு அனேகர் வருகின்றனர், புயலாரே! அவர்கள் நான் நின்று கொண்டிருக்கும்போது அமர்ந்து கொண்டிருக்கமாட்டார்கள்- அது பண்பு அல்ல என்பதால்! அவர்கள் நின்று கொண்டிருக்க, நான் அமருவதும், பண்பு அல்ல! எனவேதான், நான், அமருக! என்று கூறுவது வழக்கம். இங்கு எப்போதும் போலத்தான், முறை தெரிந்தவர்கள். மரியாதை அறிந்தவர்கள், பண்பு புரிந்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டு வந்தேன். அவ்விதம் நான் எண்ணிக்கொண்டதால் தான், வந்தவர் நின்றுகொண்டுதானே இருப்பார் என்ற நினைப்பில், அமருக! என்றேன். பண்புடன் நடந்து கொள்வோருக்கு, நான் காட்டும் மரியாதை அது. தேவையில்லை என்பதை அறியாது போனேன்-அமருக! என்று கூறியதற்காக மன்னித்திடுக!-என்றன்றோ, கூறுகிறான் கொற்றவன்!!
இதற்குள், அலுவலர், ஓர் நாற்காலியை, புயலாருக்குப் பக்கத்தில் போடுகிறார்-மன்னன் காட்டிய குறிகண்டு.
பண்பற்று நீ நடந்துகொண்டாலும், நான் அங்ஙனம் நடந்து கொள்ளமாட்டேன், என்று இடித்துரைப்பதுபோல, மன்னன், புயலாரைப் பார்த்து,
"என்னை உட்கார அனுமதிக்கிறீர்களா?"-என்று கேட்கிறார்.
மன்னன் பாடம் புகட்டக் கையாண்ட நேர்த்தியான இந்த முறை, அமைச்சர் புயலாருக்கு, புரிந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு இருந்த எண்ணமெல்லாம், ஒருவன் மன்னன் என்பதற்காக, நான் ஒரு தனி மரியாதையும் காட்டி, என்னைத் தாழ்த்திக் கொள்ளமாட்டேன் என்பதுதான். எனவே, அமைச்சர்,
"அட உட்கார் ஐயா! உட்கார்! உன் வீட்டில்தானே நீ இருக்கிறாய். எனக்கு இந்தச் சம்பிரதாய உபசார முறைகள் கட்டோடு பிடிக்காது". என்றுதான் பேச முடிகிறது.
.
மன்னனைக் காணச் சென்றேன்! நானென்ன, மற்ற மற்றவர்களைப் போல நோஞ்சானா!! பல்லிளிக்கும் பேர்வழியா! மன்னன் அவன் என்றால். நான் மக்களின் தலைவன்! மன்னர்களின் மணி முடியைப் பறித்தெடுத்துப் பந்தாடக்கூட உரிமையும் வலிமையும் பெற்றவன். வந்தான் மன்னன். அவனிடம் கூலி வாங்கிக்கொண்டு கிடக்கும் பயல்கள், மன்னர்! மன்னர் என்று பயபக்தியுடன் கூடினர். அந்தச் சொல்லைக் கேட்ட உடனே, நான் நடுநடுங்கிப்போவேன், கூப்பிய கரத்துடன் நிற்பேன், என்று எண்ணிக்கொண்டார்கள் போலிருக்கிறது. நானா,<noinclude></noinclude>
60antq5pj9pn219frl53v8cc8rc0mly
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/357
250
641985
1928856
1928013
2026-04-30T08:24:48Z
Rabiyathul
5890
+ மேலடி
1928856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||333}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
333
என்னைவிட ஒருவன் மேலானவன் என்பதை ஏற்றுக் கொள்வேன் என் வீரதீரம் எத்தகையது! அறிவாற்றல் எத்துணைச் சிறப்பானது! நான் மக்கள் தலைவன்! இவன் மன்னன்!! இவனைக் கண்டு நான் எழுந்திருக்கவில்லை, உட்கார்ந்த படியேதான் இருந்தேன். மன்னன் திருதிருவென்று விழித்தான். கோபம் கொண்டு ஏதாகிலும் கேட்பான், செம்மையாகக் கொடுக்கலாம் என்று இருந்தேன். கோழை, வாயைத் திறந்தானில்லை. குழைந்து குழைந்து பேசினான். - என்று பொறிபறக்கப் பேசிடுவார், நமது மாசற்ற தலைவர் என்று புகழ் பாடிடும் கூட்டத்தினர் முன்பு புயலார். அவ்வளவே! வேறு உருவான, சுவையான, பயன்தரும் விளைவு எதுவும் ஏற்படாது. பண்பு மறந்த அந்தச் செயலால், மன்னன் 'எடைபோட்டு' இதனை அறிந்துகொண்டான்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தாங்கள் தேர்தலில் ஈடுபட்டீர்களே, அப்போதிருந்தே நான் தங்கள் அரசியல் வாழ்க்கையைக் கவனித்து வந்திருக்கிறேன். இப்போது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது.
காரணமற்ற
மண்டைக்கனம் காட்டும் இந்த அமைச்சன், இரண்டொரு புகழுரைகளைப் பெற்றாலே, புத்தி தடுமாறி நிற்பான் என்பதைப் புரிந்துக்கொண்டு மட்டும், மன்னன் இதுபோலப் பேசினார் என்று கொள்வதற்கில்லை.
அரசுகளை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவனே, நான் உன் போன்றவர்களின் நடவடிக்கை களை அறிந்து வைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஏதுமறியாதவன் என்று என்னை எண்ணிக்கொள்ளாதே. முடிதாங்கியாக மட்டுமே இருக்கிறேன் என்று எண்ணிவிடாதே. நான் நாட்டிலே கிளம்பிடும் நானாவிதமான சுழல்களையும் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறேன்-எனவே, நிலைமையை அறிந்து நடந்துகொள்ளக் கூடியவன், அப்படிப்பட்ட என்னை வீழ்த்துவது எளிதான செயலல்ல என்பதைத் தெரிந்துகொள்- என்று கூறாமற் கூறுகிறான் மன்னன்!
இன்று அமைச்சனாகி அரண்மனைக்கு வந்திருக்கிறாய், என்னைக் காண! என்னைக் காண வந்திருக்கும்போதே. என்னை அவமானப் படுத்துவதாக எண்ணிக்கொண்டு, உன் சிறுமைக் குணத்தைத்தான் காட்டிவிட்டாய். இந்த அளவு உயர, இந்த நிலைபெற, இந்த இடம் பிடிக்க, நீ எத்தனை ஆண்டுகளாகப் பாடுபட்டு வந்திருக்கிறாய், என்னென்ன காரணம், எத்துணை 'கூட்டு'-யாராருடைய 'தயவு'- இவை களைத் துணைகொண்டு, வளர்ந்திருக்கிறாய். இந்த வளர்ச்சியைக் காண, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமேல் உழன்று வந்திருக்கிறாய் - தெரியும்- எனக்கு!!-என்று கேலிக் கசையடி அல்லவா தருகிறான் காவலன்.<noinclude></noinclude>
915udqsytiula6ai8dy04lkkx7sjoum
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/358
250
641986
1928857
1928014
2026-04-30T08:25:19Z
Rabiyathul
5890
+ மேலடி
1928857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|334||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>334
'திராவிட நாடு' இதழில்
இந்த உட்கருத்தினை அமைச்சர் கவனித்ததாகத் தெரியவில்லை; மன்னன், இருபத்தைந்து ஆண்டுகளாகவே, தன்னைக் கவனித்து வந்திருப்பதாகக் கூறினார். அவ்வளவு பெருமதிப்பு நம்மிடம் மன்னருக்கு நம்முடைய தரத்தையும் திறத்தையும் மன்னர் போற்றுகிறார்!!-என்று மட்டுமே எண்ணிக்கொள்ள முடிகிறது அமைச்சனால். அவ்வளவுதான் முடிகிறது. மகிழ்ச்சியுடன், தன் பெருமையைத் தம்பட்டமடித்துக் கொள்கிறான்.
"ஆமாம் அரசே! கவனித்திருப்பீர். இரண்டொரு முறையாவது, நான் உங்களை உலுக்கிவிட்டிருப்பேன், அல்லவா!"
என்று கூறுகிறான். புரட்சிவீரன்! அவன் சொல், மன்னனை உலுக்கிவிட்டதாம்!
புன்னகை புரிகிறான் மன்னன். புகழ்மொழி, இந்த புரட்சி வீரனை பூப்பந்தாக்கிவிடும் என்பது மன்னனுக்கு விளங்கிவிடுகிறது. அதே வழியில், அவனை இழுத்துச்செல்ல விரும்புகிறான். உலுக்கி விட்டிருக்கிறேன் என்று மட்டும்தானே கூறினான் அமைச்சன், அரசன் மேலும் ஒருபடி சென்று.
"தங்கள் முழக்கம், என் சிம்மாசனத்தையே பலமுறை ஆடச் செய்து விட்டிருக்கிறதே!"
என்று கூறுகிறான். இந்தப் புகழ்மொழி, அமைச்சருக்கு போதை ஏறச் செய்துவிடுகிறது. மன்னனிடம் தனித்திருந்து பேசவேண்டும்; மனம் விட்டுப் பேசவேண்டும்; இவன் சாதாரண மன்னன் அல்ல; நமது ஆற்றலை அறிந்திருக்கிறான்; நமது தாக்கும் சக்தி இவனுக்குப் புரிந்துவிட்டிருக்கிறது; இவனிடம் நாம் மிகத்தாராளமாகப் பேசலாம் - என்றெல்லாம் தோன்றுகிறது. அலுவலர் இருவர் ஆங்கு இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
"இவர்கள் இருவர் இங்கு உளர்! நாம் பேசுவதை எல்லாம் இவர்கள் கேட்டுக் கொண்டு இருப்பதா?" என்று கேட்கிறார் அமைச்சர்.
அமைச்சர் புயலார். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கோட்பாட்டுக்காரர்! எனினும், அவர், மன்னனுடன் தனித்திருந்து அரசியல் விஷயம் பேசவேண்டுமே தவிர, கண்டவர்களின் முன்பு பேசுவது முறையல்ல, என்று எண்ணுகிறார்.
அவருடைய 'ஜனநாயகம்' எல்லோருக்கும், அல்ல! மன்னன் தன் மதிப்பை அறிந்து, தன்னிடம் அரசியல் விஷயமாகத் கலந்து பேசும் அளவுக்கு இருந்தால் போதும், என்று இருக்கிறது.
நாடாளும் மன்னன், அவனை எதிர்த்திடும் மக்கள் தலைவன், இந்த இருவர் கூடிப் பேசி நடத்துவதே ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று, எண்ணுகிறார்.<noinclude></noinclude>
ii5u3wxnme1ptxtyymm65mlruf0tdtq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/359
250
641987
1928858
1928015
2026-04-30T08:25:51Z
Rabiyathul
5890
+ மேலடி
1928858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||335}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
335
மன்னன் ஜனநாயகவாதியாகிறார்-அவர்கள் இருப்பதால் தவறு ஏதும் ஏற்பட்டுவிடாது என்கிறார். பிறகு உரையாடல் நடைபெறுகிறது.
அமை : இதுவரை மன்னர்கள் முன் எவரும் சொல்லிடாத விஷயங்களை நான் இப்போது சொல்லப்போகிறேன் என்பதை உணருகிறீரா?
மன் : மகிழ்ச்சி அமைச்சரே! மன்னர்களிடம் என்னென்ன சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லியாகிவிட்டதாகத் தான் நான் கருதுகிறேன். ஏதேனும் சிறு அளவு புதுமை இருப்பினும், மகிழ்ச்சி!
அமை : எச்சரிக்கிறேன் மன்னரே! தித்திப்புப் பேச்சல்ல! நான் வெளிப்படையாகப் பேசுபவன்.
:
மன் : தாங்களா? இல்லை! இல்லை! தாங்கள் ஒரு புதிர்! எப்போதுமே எனக்குத் தாங்கள் ஒரு புதிராகவே இருந்து வருகிறீர்.
தம்பி! இந்தப் பேச்சு, அமைச்சருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தன் சொல், செயல், இவற்றின் உட்பொருள், வலிவு, விளைவு இவைகளைப் பிறர் அறிந்துகொள்ளவே இயலாது, புதிர்போல் இருக்கும் தனது நடவடிக்கை. இன்னதுதான் என்று அறியாமல், எவரும் ஏமாந்து போவர், வீழ்ந்துபோவர், என்று அமைச்சருக்கு உள்ளூர ஒரு எண்ணம். அடே, அப்பா! அவன் எமகாதகப் பேர்வழி திட்டம் என்ன போடுகிறான், வழி என்ன தேடுகிறான் என்று கண்டுபிடிக்கவே முடியாதே! கடலாழம் காணலாம், இவன் கருத்தாழம் காண இயலாது எவராலும். இவன் ஓர் நடமாடும் புதிர்! என்று தன்னைப்பற்றி எவரும் பேசவேண்டும்- புகழிலே இதற்கு நிகர் வேறு இல்லை-என்ற எண்ணம், இந்த அமைச்சருக்கு என்பதைக் கண்டுகொண்டுதான். மன்னன், அந்த நரம்பைத் தொட்டான். அமைச்சருக்கு அளவற்ற மகிழ்ச்சி புன்னகையை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை-ஏன் இந்தப் புகழ்மொழி! அப்படி எல்லாம் இல்லை! நான் சாதாரணம்-சாமான்யன்- புதிர் அல்ல-என்று கூற இயலவில்லை.
"ஆமாம் - ஒரு விதத்தில் உண்மைதான். நான் ஒரு புதிர்தான்!"
என்று தன்னைத்தானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறான். மன்னன், உள்ளூரச் சிரித்திருப்பான்!
'புதிர்போலிருக்கும் உம்மைப் புரிந்துகொள்ள முடியவில்லை- முயற்சித்தும். விளக்கமாகப் பேசும் அமைச்சரே!"
'ஆம்! வெளிப்படையாகத்தான் பேச வந்திருக்கிறேன். முதலிலே இதை அறிந்துகொள்ளும், இந்த நாட்டை நீர் அல்ல, உமது அமைச்சர்கள் ஆளவேண்டும்".<noinclude></noinclude>
7pov8e1lpfqbqgaqmh6zden6esajonp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/360
250
641988
1928859
1928016
2026-04-30T08:26:22Z
Rabiyathul
5890
+ மேலடி
1928859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|336||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>336
'திராவிட நாடு' இதழில்
"கடினமான ஆட்சிப்பொறுப்பை அமைச்சர்கள் என் கரத்திலிருந்து எடுத்துக்கொண்டு பார்த்துக்கொள்வதற்கு நான் அவர்களுக்கு நன்றி கூறுவேன்",
"உம் கரத்தில் இருப்பதாகச் சொல்வது தவறு. உமது அமைச்சர் களின் கரத்தில் ஆட்சிப் பொறுப்பு இருக்கிறது. கட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் காவலன், நீர்! தெரிகிறதா? பெல்ஜியத்தில் இந்த முறையை என்ன பெயரிட்டுச் சொல்கிறார்கள் தெரியுமா?"
"ரப்பர் ஸ்டாம்ப்? மந்திரி கை முத்திரை" என்பார்கள்!
'ஆமாம் மன்னவா! ஒரு ரப்பர்! ஸ்டாம்புதான். அப்படித்தான் நீர் இருந்தாகவேண்டும்".
"ஆமாம். நாம் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறோம்"
அதென்ன, 'நாம்' என்கிறீர்? என்ன பொருள்?
நம்மிடம் காகிதங்களைக் கொண்டு வருகிறார்கள். கை எழுத்திடு கிறோம். அவைகளைப் படிக்க அமைச்சர்களாகிய உமக்கு நேரம் இல்லை. அது நல்லது. ஆனால், நான் எல்லாவற்றையும் படித்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ. சரியோ தவறோ, கையொப்பமிடவேண்டும். குற்ற மற்றவர்களுக்குக் கூடத் தண்டனை தரப்பட்டிருக்கும்; நான் கையொப்பமிடவேண்டும். தூக்குத் தண்டனை தரவேண்டிய குற்றம் செய்திருப்பார்கள் சிலர், தண்டனை தர எனக்கு அதிகாரம் இல்லை.
"ஓஹோ கொண்டுவா அவனுடைய தலையை என்று கொக்கரித்த காலம் திரும்பி வரவேண்டும் என்கிறீரா?"
தம்பி! உரையாடலின்போதே, மன்னன், அமைச்சரின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொள்கிறான்.
அமைச்சரே! நான் மன்னனாக இருப்பதிலே ஒரு பிரமாதமும் இல்லை. அரச குடும்பத்தவன், அரசன் ஆனேன். மற்ற வாரிசுகள் செத்ததால், ஆனால் உங்கள் பெருமையே பெருமை. சாமான்யக் குடும்பம்! வறுமைசூழ்ந்த இளமை! உழைப்பாலும், அறிவுத் திறத்தாலும் உயர்ந்து. நாடாளும் அமைச்சரானீர்! மன்னனாக இருக்கிறேன், என்ன பலன்? குடிஅரசுத் தலைவராக இருப்பின், எவ்வளவு நிரம்பிய அதிகாரம் கிடைக்கும்! தாங்களே அப்படி, குடி அரசுத் தலைவராகப் போவதாகவும் கூறுகிறார்கள்- என்று மன்னன் தேன்துளிகளாக்குகிறான் வார்த்தைகளை. சுவைத்து இன்புறுகிறார் அமைச்சர்<noinclude></noinclude>
fblts96i1lf97xpi7gmwzythe2qmtax
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/361
250
641989
1928860
1928017
2026-04-30T08:26:53Z
Rabiyathul
5890
+ மேலடி
1928860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||337}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
337
'அதென்ன குடிஅரசுத் தலைவரானால் வலியும் பொலிவும் அதிகம் என்கிறீர்! அப்படியானால் மன்னனாக இருப்பதைவிட குடி அரசுத் தலைவராவதைத்தானா மேலானது என்று கருதி விரும்புகிறீர்''- என்று கேட்கிறார் அமைச்சர்.
அப்படிச் சொல்வதற்கில்லை. அரசனாக இருப்பவர்களுக்கு அதிகாரம் இல்லையே தவிர, அவர்கள் அரசராக இருக்கும்போது, பாதுகாப்பு நிரம்ப இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தலைவர் களாக வருகிறவர்களுக்கு அந்தப் பாதுகாப்பு இல்லை. போற்றுகிற மக்களே தூற்றிக் கீழே இறக்கிவிடலாம். போட்டி ஏற்பட்டுத் தலைமைப் பதவி போய்விடலாம். வேறு ஒரு தலைவன் தோன்றி, அதிக தீவிரம் பேசி, மக்களைத் தன் பக்கம் அழைத்துக்கொள்ளலாம். அப்போது பழைய தலைவர்பாடு ஆபத்தாகிப் போகும். மன்னன் என்றால் அந்த ஆபத்து இல்லை. நிம்மதி இருக்கும். பாதுகாப்பு இருக்கும். அதிகாரம் இருக்காது, பரவாயில்லை; ஆபத்தும் இல்லை அல்லவா?
மன்னன், எடுத்துக் காட்டியது, மறுக்கமுடியாத உண்மை என்பது அமைச்சருக்குப் புரிகிறது! புரிகிற காரணத்தாலேயே அச்சமும் ஏற்படுகிறது.
ஜனநாயக முறையிலே ஈடுபட்டுத் தலைவர்களாக, அமைச்சர் களாக உயர்ந்து விடுவதாலேயே, மண்டைக்கனம் கொண்டு விடாதீர்கள். ஆபத்து எந்த நேரத்திலும் உமது பதவிக்கு, செல்வாக்குக்கு, தலைமைக்கு ஏற்படலாம்! மக்களின் மனம் மாறிவிடக் கூடும்-வீழ்ச்சி ஏற்பட்டுவிடும். எனவே அமைச்சர் என்ற நிலை கிடைத்ததும், இந்த உயர் இடம் என்றென்றைக்கும் இருக்கும், நம்மை மிஞ்சுவார் இல்லை, என்று எண்ணி இறுமாப்பு அடையாதீர். தலைக்கு மேல் ஆபத்து இருக்கிறது. அதைத் தெரிந்து, இந்தப் பதவி நிலையில்லாதது, இந்தச் செல்வாக்கு சரிந்து போகக் கூடியது என்பதை உணர்ந்து, பக்குவமாக பண்போடு நடந்துகொள்வதுதான் அறிவுடைமை-என்று மன்னன், இலைமறைகாய் முறையில் எடுத்துக் கூறுகிறான்.
நுழைந்தபோது இருந்த முடுக்கு, வெகுவாகக் குறைந்து தானே போகும், மறுக்கமுடியாத உண்மையினை மன்னன் எடுத்துச் சொன்ன பிறகு
மன்னன் மகள் அங்கு வருகிறாள். மன்னன் வந்தபோது மரியாதை காட்டுவது வலிவற்ற தன்மையைக் காட்டுவதாகும் என்று எண்ணி, எழுந்து நிற்காதிருந்த அமைச்சர், மன்னன், தன் மகளை அறிமுகப்படுத்திய போது, முகமலர்ச்சியுடன், எழுந்திருந்து, கனிவுடன் கை குலுக்குகிறான் அரசகுமாரியுடன், அரசகுமாரி, அவன் ஆடையைக்கூட, சரியில்லை என்று சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறாள். ஒரு விநாடி, அமைச்சருக்கு. 'சூடு' பிறக்கிறது. இது உழைப்பாளியின் உடை அரசகுமாரி! உத்தமரின்<noinclude></noinclude>
8y029o85eqcbuokf75dk2sfk9zekcaf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/362
250
641990
1928861
1928018
2026-04-30T08:27:23Z
Rabiyathul
5890
+ மேலடி
1928861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|338||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>338
'திராவிட நாடு' இதழில்
உடை! இதை அணிந்துகொள்வதிலே நான் பெருமை கொள்கிறேன்!- என்று முழக்கம் எழுப்புகிறான். அரசகுமாரி வாதாடவில்லை.
அதெல்லாம் சரி. அப்படித்தான் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், உமக்கு உடை ஒத்துவரவில்லை, உம்மைப் பார்த்த உடனே. எவரும் சொல்லிவிடுவார்களே, ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் இவர் என்று. உமக்கு ஏன், உழைப்பாளி உடை?
அரசகுமாரி, இவ்விதம் பேசக் கேட்டு அமைச்சருக்குக் கோபம் வரவில்லை.
ஒருவிதத்தில் தாங்கள் சொல்வது சரிதான்.
என்று குழைத்து பேசத்தான் முடிகிறது.
மன்னன், மகளை அழைத்துக்கொண்டு செல்கிறான், மற்றோர் சமயம் பேசலாம் என்று அமைச்சரிடம் கூறிவிட்டு.
அமைச்சர், சென்று வருக! என்று மரியாதையாகக் கூறுகிறார். அவர்கள் சென்ற பிறகு, அலுவலரிடம், அமைச்சர் "என்னதான் சொல்லு, மன்னன், மதியிலி அல்ல" என்று கூறுகிறான்.
மிரட்ட வந்தான் மன்னனை; மன்னன், அந்த அமைச்சரை மயக்கிவிட்டான்.
ஆணவமாக நடந்து அரசனை அவமதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடந்துகொண்டான் அமைச்சன்; இரண்டொரு உண்மை களைக் கூறியும், உச்சிகுளிரும்படி சில புகழுரை பேசியும், தாக்கவந்த அமைச்சனைத் தழதழத்த குரலிற் பேசுவோனாக்கி விட்டான், மன்னன்.
மன்னன் மதிமிக்கவன்; மன்னராட்சியுடன் இணைந்த மக்களாட்சியில் இடம் பெற்ற அமைச்சனோ, மண்டைக்கனத்தை மட்டுமே நம்பிக் கிடந்தான். பிறகு? என்று கேட்கிறாய் தம்பி!
எனக்கு இந்த "ராஜா" வேலை வேண்டாம்; விலகிவிடப் போகிறேன்- என்று மன்னன் கூறுகிறான். இந்த அமைச்சர் மட்டுமல்ல, முதலமைச்சர் உட்பட அமைச்சர் அவையே கூடி, மன்னனை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறது. மன்னா! மன்னனாகவே வீற்றிருக்க வேண்டுகிறோம்!!-என்று.
மன்னன் என்ன செய்தான் மேலால் என்று அறிய வேண்டு கிறாய். ஆகட்டும் தம்பி!
அண்ணன்,
20.11.1960<noinclude></noinclude>
ljpqd291irlxvr5l7aiepdqmwzp16hd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/363
250
641991
1928862
1928019
2026-04-30T08:27:54Z
Rabiyathul
5890
+ மேலடி
1928862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||339}}{{rule}}</noinclude>கடிதம் : 127
தம்பி!
எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)
நினைவிலிருக்கிறதல்லவா, குடிஅரசுக் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்ட மன்னன்-முடிஅரசு முறையின் மூலத்தைக் கல்லி எறியத் தேவையில்லை. அதனை ஓர் சின்னமாக, அணியாக வைத்துக் கொண்டு, மக்களாட்சியை நடாத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையுடன் நாடாளும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள், அவர்களில் ஒருவனை, மன்னன் தித்திப்புப் பேச்சுமூலமே தீர்த்துக் கட்டிவிட முனைந்த கட்டம்! எதிர்த்துப் பேசச்சென்று, இளித்து விட்டுத் திரும்பிய அவன் போக்கு-இதனைக் கண்டோம்.
மன்னன் முடிதரித்த-சிரம்கொண்டோன் மட்டுமல்ல; மனதிலே திடம், பேச்சிலே திறம், நடவடிக்கையிலே உறுதி, இவையெலாம் கொண்டவன். எனின், அவன் ஏன், மன்னனாக இரேன் என்று கூறினான் என்றன்றோ கேட்கிறாய்! அது, அவன் கையாண்ட முறை! மன்னனைப் பொம்மையாக்கி வைத்துக்கொண்ட பிறகும், மனக் கொதிப்புத் தீராமல், அடியோடு ஒழித்துக் கட்டிவிட்டு, பீடத்தை வெற்றிடமாக்கி விட்டால் மட்டுமே. எல்லோரும் இந்நாட்டு மன்னராகத் திகழமுடியும் என்று எண்ணிக் கனல் கக்கும் கண்ணினராய், தீச்சொல் உமிழும் வாயினராய். கொலுவிருக்கும் அமைச்சர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினான், மன்னன், அதற்காகவே, மன்னன், நான் அரச பீடத்தில் அமர்ந்திருக்க விரும்பவில்லை-விலகிக்கொள்கிறேன் - என்றுரைத்தான்,
இவன் மதிமிகு மன்னன்! இவனுக்கெனத் துறையில்லை, அலுவல் இல்லை. அதிகாரம் இல்லை! முத்திரை மோதிரம் இருக்கிறது. நமது விருப்பத்தைச் சட்டமாக்கி அதிலே தன்பெயரை ஆணையினைப் பொறித்திட! இவ்வளவே அவன் பணி! எனினும் இவன், இது போதும் என்று எண்ணுபவனாக இல்லை. கலைமான்களையும், கலாபங்களையும். கிள்ளைமொழியையும் கிண்கிணி ஒலியையும், வண்ணத் தாமரை யினையும், வட்டில் மோகினிகளையும் கண்டும் கொண்டும், காலமெலாம் களிநடம் புரியட்டும் பணம் பாழாகும் ஓரளவு - எனினும், மக்களை ஆட்டிப்படைத்திடும் வாய்ப்பினை அதிகாரமூலம் பெற விழைவு கொள்ளாதிருந்தால் போதும், என்று எண்ணினர்-அங்ஙனம் எண்ணியே,<noinclude></noinclude>
e3ni5u186are8ytupnl6xg929wwnjm5
1929022
1928862
2026-04-30T11:35:39Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம் : 127
தம்பி!
எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)
நினைவிலிருக்கிறதல்லவா, குடிஅரசுக் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்ட மன்னன்-முடிஅரசு முறையின் மூலத்தைக் கல்லி எறியத் தேவையில்லை. அதனை ஓர் சின்னமாக, அணியாக வைத்துக் கொண்டு, மக்களாட்சியை நடாத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையுடன் நாடாளும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள், அவர்களில் ஒருவனை, மன்னன் தித்திப்புப் பேச்சுமூலமே தீர்த்துக் கட்டிவிட முனைந்த கட்டம்! எதிர்த்துப் பேசச்சென்று, இளித்து விட்டுத் திரும்பிய அவன் போக்கு-இதனைக் கண்டோம்.
மன்னன் முடிதரித்த-சிரம்கொண்டோன் மட்டுமல்ல; மனதிலே திடம், பேச்சிலே திறம், நடவடிக்கையிலே உறுதி, இவையெலாம் கொண்டவன். எனின், அவன் ஏன், மன்னனாக இரேன் என்று கூறினான் என்றன்றோ கேட்கிறாய்! அது, அவன் கையாண்ட முறை! மன்னனைப் பொம்மையாக்கி வைத்துக்கொண்ட பிறகும், மனக் கொதிப்புத் தீராமல், அடியோடு ஒழித்துக் கட்டிவிட்டு, பீடத்தை வெற்றிடமாக்கி விட்டால் மட்டுமே. எல்லோரும் இந்நாட்டு மன்னராகத் திகழமுடியும் என்று எண்ணிக் கனல் கக்கும் கண்ணினராய், தீச்சொல் உமிழும் வாயினராய். கொலுவிருக்கும் அமைச்சர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினான், மன்னன், அதற்காகவே, மன்னன், நான் அரச பீடத்தில் அமர்ந்திருக்க விரும்பவில்லை-விலகிக்கொள்கிறேன் - என்றுரைத்தான்,
இவன் மதிமிகு மன்னன்! இவனுக்கெனத் துறையில்லை, அலுவல் இல்லை. அதிகாரம் இல்லை! முத்திரை மோதிரம் இருக்கிறது. நமது விருப்பத்தைச் சட்டமாக்கி அதிலே தன்பெயரை ஆணையினைப் பொறித்திட! இவ்வளவே அவன் பணி! எனினும் இவன், இது போதும் என்று எண்ணுபவனாக இல்லை. கலைமான்களையும், கலாபங்களையும். கிள்ளைமொழியையும் கிண்கிணி ஒலியையும், வண்ணத் தாமரை யினையும், வட்டில் மோகினிகளையும் கண்டும் கொண்டும், காலமெலாம் களிநடம் புரியட்டும் பணம் பாழாகும் ஓரளவு - எனினும், மக்களை ஆட்டிப்படைத்திடும் வாய்ப்பினை அதிகாரமூலம் பெற விழைவு கொள்ளாதிருந்தால் போதும், என்று எண்ணினர்-அங்ஙனம் எண்ணியே,<noinclude></noinclude>
2tuw3r44bxrxbn86gjxj69whp61aelw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/364
250
641992
1928863
1928020
2026-04-30T08:28:25Z
Rabiyathul
5890
+ மேலடி
1928863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|340||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>340
‘திராவிட நாடு' இதழில்
அரண்மனையில் அரசோச்ச அனுமதித்தனர். இம்மன்னனோ, அரண்மனை யோடு தன் அரசோச்சுதல் இருந்து விடுவதில் மனநிறைவு கொண்டானில்லை. அரசாள வேண்டும், அரசன் என்ற நிலை உண்மை நிலை உண்மை என்றால் இல்லையேல், அரசாள அரசன் என்ற நிலையையே வேண்டாமென்று விட்டொழித்து விடுதல் வேண்டும்-என்று எண்ணினான். அவனைத்த ன் பெர்னாட்ஷா, படம் பிடித்துக் காட்டுகிறார். தமது நாடகப் பெருநூலில் புயலார் என்று கூறத்தக்க போக்குடைய, புதிய அமைச்சரை, மன்னன், புன்னகைபூத்த முகத்தினனாக மட்டுமல்ல, அசட்டுச் சிரிப்புக் காரனாகவே, நொடியில் மாற்றி அனுப்பிய காட்சியினைக் கண்டாய். இனி அமைச்சர் அவை காணலாம்.
முதலமைச்சர்,ப்ரேரடியஸ் எனும் பெயருடையார், காட்சி மூலம், அவர் போக்கு விளங்கிடும்-அதற்கேற்பப், பொருத்தமான, வசதியான பெயரைத் தேடிச் சூட்டிவிடு, தம்பி! அவருடைய தலைமையிலே அவை கூடுகிறது.
முடி தரித்த மன்னன் பிடியிலே சிக்கிக்கிடந்தது நாடு! அவன் இட்டது சட்டம்! என்றநிலை இருந்தது. மக்கள், வாயில்லாப் பூச்சி களாக்கப்பட்டுக் கிடந்தனர். நம் போன்றாரின் உள்ளத்திலே ஓராயிரம் உன்னதமான எண்ணம் எழும்-பயனென்ன?-யாவும் மக்கி மண்ணாகிப் போகும் -அவைதமை மதித்திடான் மன்னன்! கலை அறியான்-எனினும், அவனே கலைக்கூடக் காவலன்! பொருள் ஈட்டும் வழி அறியான்- எனினும் பிறர் திரட்டியதைக் கொண்டுவந்து கொட்டச் சொல்வான், பெருநிதிக்கு உடையோன் ஆவான்! வாளேந்தான்- எனினும், அவனே படைகளுக்கெல்லாம் தலைவன் எனும் விருதுடையோன் என்பர் இந்நிலையில் இருந்த முடிஅரசு முறையினை எதிர்த்துப் போரிட்டுப் போரிட்டுக், குடிஅரசுக் கோட்பாட்டினை மெள்ள மெள்ள வெற்றி பெறச் செய்து, கொற்றவன் கொலுவிருக்கட்டும். ஆனால் அரசு நடாத்த, ஆற்றலுள்ளோர் அமைச்சர்களாகட்டும்-அந்த ஆற்றலை அளந்திடும் கோலாக, மக்கள் அளித்திடும் ஆதரவு அமையட்டும்-அந்த ஆதரவு பெறும் முறையாக, தேர்தல்முறை ஏற்படட்டும் என்றெல்லாம், திட்டம் தீட்டி, நடைமுறையாக்கி, மன்னனை இன்று, அரண்மனைவாழ் அலங்காரன் என்ற அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டோம்; உண்மையில் அரசாள்வது நாம்-என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து கிடப்போர், அமைச்சர்கள். முதலமைச்சரோ. அத்தகைய மகிழ்ச்சியால் மயக்கமுற்று உண்மை நிலைமையை அடியோடு மறந்துவிட்டவரல்ல- மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை உணர்ந்திருக்கிறார்.
சென்ற தேர்தலிலே, நாம் மற்ற எல்லாக் கட்சிகளையும் அழித் தொழித்து, இந்த மூன்றாண்டுகளாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறோம்.<noinclude></noinclude>
ma1pwdz2w98tekvio2pizalidv0ge0i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/365
250
641993
1928864
1928021
2026-04-30T08:28:56Z
Rabiyathul
5890
+ மேலடி
1928864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||341}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
341
ஆனால், இந்த மூன்று ஆண்டுகளும், உள்ளபடி, நாட்டை ஆள்வது, இந்த மன்னன்தான் என்பதை உணர்கிறீர்களா..?
-என்று கேட்கிறார், முதலமைச்சர்!
முடிஅரசு, நிலைகுலையாமல் இருந்த நாட்களில், அரசன், சிலரை அமைச்சர் ஆக்குவான் ஆற்றல் அறிந்தேதான் என்பதல்ல- எவ்வகை யாலோ, மன்னன் மனதில் இடம் பெற்றவனானால் போதும்! மன்னன் மகிழ மலர் கொடுத்திருக்கலாம்-காட்டு மல்லிகையோ, வீட்டு ரோஜாவோ, ஏதோ ஒரு மென்மலர்!!
அமைச்சர்கள் இருப்பர்-அரசாள அல்ல-அரசன் ஆட்சி நடத்துவான், இவர்கள் எடுபிடிகளாவர், இளித்துக் கிடப்பர்.
முடி அரசு முறையின் கேடு முறிக்கப்பட்டான பிறகு மன்னன் இருப்பான்-ஆனால், அரசாள்வோனாக அல்ல-முடிதரித்துக் கொலு விருக்க! அமைச்சர்கள் இருப்பர்-முடி இராது சிரத்தில்-ஆட்சியின் பிடியோ, அவர்தம் கரம் இருக்கும்.
ஷா, குடிஅரசுக் காலத்துக் கொற்றவனைத்தான் காட்டுகிறார். எனினும், அவன் எங்ஙனமோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் களின் தலைவுன், அச்சத்துடன் ஆயாசத்துடன் உணரத் தக்க விதத்தில். வெறும் சின்னமாக இருந்துவிடாமல், ஆட்சியை நடத்துபவனாக இருந்து வருகிறான். இதனைத்தான், முதலமைச்சர், மற்ற அமைச்சர்களுக்குக் கூறுகிறார். கூறுகிறார் என்று சொல்வதற் கில்லை-இந்த நிலையை உணர்ந் திருக்கிறீர்களா, என்று கேட்கிறார்!
ஒரு அமைச்சர், இந்த அளவு உணர்வு பெறாததால், எனக்கு அப்படிப் புலப்படவில்லை...
என்று கூறிடத் தொடங்கும்போதே. முதலமைச்சருக்கு இருப்புக் கொள்ள வில்லை.
இதை உணர்ந்துகொள்ள உம்மால் முடியாவிட்டால், விலகி விடுமய்யா! நிலைமையை உணர்ந்துகொள்ளக் கூடியவர்களுக்கு இடம் கொடும்! இல்லையானால், என் வேலையை ஏற்றுக் கொண்டு, கட்சியை நடத்திச்செல்லும். என்று பேசுகிறார்.
அமைச்சராயிற்றே! வேறு பல அமைச்சர்கள் முன்னிலையில், முதலமைச்சர் பேசிவிட்டார் என்பதால், கோபம் எழுமல்லவா. எனவே, அந்த அமைச்சர், சற்று முடுக்காக-ஆனால், ஆழ்ந்த அறிவின் துணையுடன் அல்ல - பேசுகிறார்;<noinclude></noinclude>
mdss84nf6mu8c6quqz6auuan8cnh61y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/366
250
641994
1928865
1928022
2026-04-30T08:29:27Z
Rabiyathul
5890
+ மேலடி
1928865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|342||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>342
'திராவிட நாடு' இதழில்
முதலமைச்சர் ஐயா நீர்! முழுமுதற் கடவுள் அல்ல! மன்னன் என்ன செய்ய இயலும் என்கிறீர்? நாம் எதை எப்படிச் செய் என்று புத்திமதி கூறுகிறோமோ, அதைத்தான் செய்யமுடியும். அதிகாரம் அனைத்தும் நம்மிடம் இருக்கும்போது, அந்த மன்னன் எப்படி நாடாள இயலும்? சொல்கிறீரே!!
தம்பி இந்த அமைச்சர் கேட்பதுபோலத்தான், பெரும்பாலானவர் களுக்குக் கேட்கத் தோன்றும். ஏனெனில், ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாட்டின்படி, அமைச்சர்களிடமே எல்லா அதிகாரங்களும்-மன்னன் தானாக ஏதும் செய்ய இயலாது எனினும், இந்த மன்னன், ஒரு முதலமைச்சர் அச்சம்கொள்ளத் தக்க முறையில் அமுல் நடத்து கிறான்! எப்படி?
மன்னனும் அமைச்சர்களும் பேசிடும் கட்டத்தின்போது, இது விளக்கப்பட்டிருக்கிறது-நாடக நூலில், தம்பி! நான் குறிப்புகள் மட்டுமே தருகிறேன்.
குடிஅரசுக் கோட்பாடும், கேடு களையப்பட்ட முடி அரசு முறையும் இணைந்ததோர் அமைப்பினைக் குடிக்கோனாட்சி முறை என்று கூறுவர்.
குடிக்கோனாட்சி முறையிலே, அமைச்சர்களே அனைத்துக்கும் பொறுப்பாளர்; மக்களே, ஆட்சி மன்றத்தினரைத் தேர்ந்தெடுப்பர்.
அமைச்சர்கள் ஆட்சி மன்றம் மூலம் சட்டங்கள் இயற்றுவர் திட்டங்கள் தீட்டுவர்-நாடு அவைதமை ஏற்கும்.
இந்த முழு உரிமை அமைச்சர்களுக்கு-எனினும், ஏதேனும் ஓர் சட்டமோ திட்டமோ செயலோ முறையோ, மக்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று ஏற்படின், மன்னன், அதனைத் தன் மறுப்பு மூலம் தடுத்து நிறுத்தலாம்.
நாட்டை நடத்திச் செல்ல அமைச்சர்கள்-அவர்கள் நடத்திச் செல்வதிலே, மன்னன் குறுக்கிடவோ, அலுவலிலே பங்கு பெறவோ கூடாது-ஆயினும், நடத்திச் செல்லப்படுவதை. மக்கள் சார்பில், நாட்டின் சார்பிலே, கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்து, பேராபத்துக்கு நாட்டை இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தோன்றினால், தடுத்து நிறுத்திட மன்னனுக்கு அதிகாரம் உண்டு.
மன்னர்கள் இந்தத் தடுத்துநிறுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்து வதில்லை - அநேகமாக.
தேவைப்படுவதில்லை, ஆகவேதான், பயன்படுத்துவதில்லை என்று கூறுவார் உளர்.<noinclude></noinclude>
pbwdg51em351sf5xzxe8alrbiyqcm2w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/367
250
641995
1928866
1928023
2026-04-30T08:29:59Z
Rabiyathul
5890
+ மேலடி
1928866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||343}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
உளர்.
343
தெரிவதில்லை, ஆகவே பயன்படுத்துவதில்லை என்றுரைப்பாரும்
பயன்படுத்தத்
தொடங்கினால், பிறகு இந்த அதிகாரமும் பறிக்கப்பட்டுப் போய்விடும் என்று அச்சம்-எனவே எந்த மன்னனும், தன்னுடையது என்று குறிக்கப்பட்ட, தடுத்து நிறுத்தும் உரிமையைப் பயன்படுத்துவதில்லை என்றும், கூறுவர் வேறு சிலர்.
தம்பி! இந்த மன்னன், இந்த 'அதிகாரத்தை'ப் பயன்படுத்தி, அமைச்சர்களின் உரிமையைப் பாழாக்கினானில்லை. இவன் செய்த தெல்லாம், சான்றோர் கூடிடும் இடங்களில், அல்லது மக்கள் மன்றங் களில் பேசும் வாய்ப்புப் பெறும்போது, மன்னனுக்கு உள்ள இந்த அதிகாரத்தைப்பற்றி விளக்கம் தந்து வருவது வாடிக்கை.
மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நோக்குடன் குடிஅரசு முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த முறையின்படி, நாடாளும் பொறுப்பினை ஏற்றுள்ளோர் அமைச்சர்கள். அவர்கள் வழிதவறி நடப்பின், அல்லது முறை கேடான செயலில் ஈடுபடின், தீதுதரும் சட்ட திட்டத்தைப் புகுத்திடின், தடுத்து நிறுத்த, மன்னருக்கு அதிகாரம் உண்டு. எனவே, அமைச்சர்களின் ஆட்சியிலே என்ன கெடுதல் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் கலக்கமடையத் தேவை யில்லை-மன்னன் இருக்கிறார். தடுத்து நிறுத்திடும் வல்லவராக!
இம்முறையில் பேசிக்கொண்டிருந்தார் இந்த மன்னர்.
இந்தக் கருத்துப்பட இதழ்கள் எழுதிய வண்ணம் இருந்தன- அந்த இதழ்களில் மன்னனுக்குத் தொடர்பு உண்டு!!
அமைச்சர் அவையின் மதிப்பு, இதன் காரணமாகக் குறையும் அல்லவா? இவர்களைக் கண்காணிக்க ஒரு மேலோன் இருக்கிறான்.
இவர்கள் ஏதேனும், தெரிந்தோ தெரியாமலோ, தவறுகள் செய்து விடக் கூடும் என்பதால், அந்த மேலோனிடம், இறுதி அதிகாரத்தை- தடுத்திடும் உரிமையை - ஒப்படைத்திருக்கிறார்கள்.
ஆகவே, அந்த மேலோன்தான், உண்மையில், மக்களின் பாதுகாவலன் தம்பி! இந்தக் கருத்துக்களைத்தான், காவலன், பேச்சுக் கிளப்பியபடி இருந்தது.
அமைச்சர்கள், தவறு செய்யக்கூடியவர்கள்-தவறு செய்கிறோம் என்று தெரியாமலேகூட தவறுகளைச் செய்துவிடக் கூடியவர்கள்-எனவே<noinclude></noinclude>
e6bwanowhxmrsug9ww3ck0qt9o6px4z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/368
250
641996
1928867
1928024
2026-04-30T08:30:30Z
Rabiyathul
5890
+ மேலடி
1928867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|344||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>344
'திராவிட நாடு' இதழில்
தான், ஒரு மேலோன், இருக்கிறான், தடுத்து நிறுத்த! அந்த மேலோன், எது நாட்டுக்கு, மக்களுக்கு, தீது பயக்கும், நன்மை பயக்கும், என்பதை அறிந்திடும் ஆற்றல் படைத்தவன்-தடுத்து நிறுத்திடும் தகுதி படைத்தவன்.
குடிஅரசு முறையையும் நடத்திக்கொண்டு, இந்தக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொண்டு இருப்பது. முரண்பாடாக மட்டு மல்ல, சிறிதளவு தரக்குறைவாகவேகூடத் தோன்றும்.
மமதை, மந்தமதி, அக்கரையற்றப் போக்கு, இவைகள் காரணமாக, தன்னிச்சையாக நடக்கும் மன்னன், நாடு கேடுறக்கூடிய காரிய மாற்றுவான் - எனவே கட்டுப்படுத்த வேண்டும், மட்டுப்படுத்த வேண்டும்- என்று ஆர்த்தெழுந்து பலர் பேசிப்பேசி, கிளர்ச்சி பல நடாத்திக், கொடுமைகளை ஏற்றுக்கொண்டு, இறுதியில் பெற்றது, எல்லோரும் இந்நாட்டு மன்னர்-எனும் குடிஅரசுக் கோட்பாடு!
ட
எனினும் அமைச்சர்களையும், கண்காணித்து வர, தவறாகச் சென்றால். தடுத்து நிறுத்திட ஒரு மேலோன் உண்டு!-அந்த மேலோனாக ஒரு மன்னன் இருந்து வருவான் என்பது, முடிஅரசுக் காலத்திலே தரப்பட்டிருந்ததை விட, வலிவான அதிகாரம் என்று, முதலமைச்சர் கருதினார்.
எனவே, மன்னன், இனி அந்த 'உரிமை'யைப் பற்றி, எங்கும் பேசக்கூடாது, என்று உறுதிமொழி தந்தாக வேண்டும்-என்பது முதலமைச்சரின் திட்டம். அந்தத் திட்டத்துக்கு மன்னன் ஒப்பம் அளித்தாக வேண்டும் என்று வலியுறுத்தவே, அமைச்சர் அவை கூடிற்று, அரண்மனையில் ஓர் பகுதியில்.
அமைச்சர் அவையில் என்னென்ன போக்கினர். நோக்கினர். உளர், என்பதை பெர்னாட்ஷா எடுத்துக்காட்டுவதைப் படிக்கும்போது. நகைச்சுவைக்காக இருக்குமோ, என்று எண்ணத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மையான நிலைமை, எந்த அமைச்சர் அவையிலும் என்பது, தம்பி! எண்ணிப் பார்த்திடும் எவருக்கும் புரியும்.
ஐவர் கொண்ட அமைச்சர் அவை! இதில் இடம்பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பினர்! அம்மட்டோ! ஒருவரைக் குறித்து ஒருவர் கொண்டுள்ள கருத்துக்களோ, வேடிக்கை வேடிக்கை யானவை! தமக்கன்றி மற்றவர்களுக்குத் தகுதியும் திறமையும் இல்லை. அமைச்சராக இருக்க-என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள எண்ணம்.
உற்றார் உறவினருக்கு, வரம்பு மீறிப் பதவிகள் கொடுப்பவர் என்று ஒருவரைப்பற்றி மற்றவர், புகார் கூறிக்கொள்வர்.<noinclude></noinclude>
9agg3fk5tux5avat2ks94ymc37f0nnv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/369
250
641997
1928868
1928025
2026-04-30T08:31:00Z
Rabiyathul
5890
+ மேலடி
1928868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||345}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
345
நம்மால் மட்டுமே இந்த அமைச்சர் அவை செயல்படுகிறது. அமைச்சர் அவை ஏற்படத்தக்க விதமான வளர்ச்சி கட்சிக்கு ஏற்பட்டது, என்று ஒவ்வொரு அமைச்சருக்கும், உள்ளூர எண்ணம்.
முதல் அமைச்சருக்கோ, அமைச்சர்கள் அனைவருமே, இடம் பிடித்துக் கொண்டவர்கள், என்ற எண்ணம்!
இதனை விளக்கிடும் பான்மையிலே, அமைச்சர்களின் பேச்சினை அழகுற அமைத்தளிக்கிறார், ஷா. கருத்து வேற்றுமைகளை எடுத்துக் கூறிக்கொள்வதிலே, கட்டுக்கு அடங்கும் தன்மையும் கைவிடப்பட்டு விடுவது கண்டு, முதலமைச்சர், மன்னனை எண்ணிக்கொள்கிறார்.
*
தம்பி! நாடகத்திற்கு ஷா சூட்டியுள்ள பெயர் ஆப்பிள் கார்ட் (Apple Cart) என்பது; தமிழில் இதற்கொப்பான பெயரிட வேண்டுமெனின், நெல்லிக்காய் மூட்டை எனலாம்.
மூட்டைக்குள் இருப்பதால், உருண்டோடி விடவில்லை; அவிழ்த்து விட்டால், திக்காலொன்றாக உருண்டோடிவிடும்!
தீர்த்துக் கட்டிவிடவேண்டும் முடிஅரசு முறையை! சின்னமும் கூடாது! முழுக்க முழுக்கக் குடி அரசு மலரவேண்டும்!- என்று முழக்கமிட்டு அமைச்சரான புயலார்-ஒருவர்! இன்னொருவர், பெரிய முதல் போட்டு நடத்தப்படும் தொழிற்சாலை முதலாளியின் கையாள்! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீர்கேடு!
இந்தச் சீர்கேடுகளை அறிந்து, தக்கபடி பயன்படுத்திக்கொண்டு, தன் தலைமையைக் காப்பாற்றிக் கொண்டுள்ள முதலமைச்சர்.
மன்னன் இதனை நன்கு அறிவானே-இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வானே, என்ற கவலை, முதலமைச்சருக்கு.
மன்னர்களுக்கு மதி ஏது! என்று எண்ணுபவர்-அதிகாரம் ஏது! என்று நினைப்பவர்-ஏது செய்ய இயலும்!! என்று பேசுபவர்-எதற்காக இப்படி ஒரு பதுமை என்று ஏளனம் பேசுபவர்-இப்படித்தான் அமைச்சர்கள் உளர்!
-
என்று‘
முதலமைச்சரோ, இந்த மன்னன் மதிமிக்கவன், வாய்ப்பினை நழுவ விடாது காரியம் செய்பவன், என்று உணர்ந்திருக்கிறார்.
மனதிலே திடமும் தெளிவும் கொண்டவன் மன்னன். தெளிவற்ற பத்துப் பேர்களைக்கூடத், தெளிவும் திடமும் கொண்ட ஒருவன் வீழ்த்திட<noinclude></noinclude>
raz60a57f5blzjv1fnwkvlkc0snoyrz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/370
250
641998
1928869
1928026
2026-04-30T08:31:33Z
Rabiyathul
5890
+ மேலடி
1928869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|346||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>346
‘திராவிட நாடு' இதழில்
முடியும். மன்னன் அப்படிப்பட்டவன். நீங்கள் ஒருவருக் கொருவர் மாறுபாடுகளைக் குறித்துக் கூச்சலெழுப்பிப் பிளவுபட்டு நிற்பீரேல், மன்னன் பாடுதான் கொண்டாட்டம் என்பதனை முதலமைச்சர் எடுத்துக் காட்டுகிறார்.
தபால்துறை, எதனையும் இயக்குவிக்கும் வலிவுத்துறை, எனும் இரண்டினையும், மாதர்களிடம் ஒப்படைத்திருக்கிறார், பெர்னாட்ஷா, நாடகத்தில்!!
இந்த இருவரும், அமைச்சர் அவை கூடிடும்போது, உடனிருந் திருக்க வேண்டும்-எனினும் ஷா தீட்டிய நாடகத்தில், இந்த இரு பெருமாட்டிகளும் அமைச்சர் அவைக்கு மன்னர் வரும்போதுதான், அவருடன் வருவதாகக் காட்டியிருக்கிறார்!
அமைச்சர் அவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூடத்துக்கு, மன்னன், இந்த இரு மாதர்களும் இருபுறம் இருக்கும் நிலையிலே தான், வந்து நுழைகிறார்.
மன்னன், பேச்சாற்றல் மிக்கவன் என்பதை, தம்பி! முன்பே கண்டிருக்கிறாய்-ஆனால் அவனுடைய முழு ஆற்றலை இங்குதான் காணவேண்டும்.
என்னை வந்து காணும் உரிமையை, அமைச்சர் குழுவினரே! ஒருசேர நீவிர் இன்று பயன்படுத்தி, எனக்குக் களிப்பூட்டிடும், காரணம் யாதோ! நாம் அதைக் கேட்டு இன்புறலாமோ!
என்று பேச்சைத் துவக்குகிறார் மன்னர்.
முதலமைச்சர், சுற்றி வளைத்துப் பேசாமல், அமைச்சர் அவையின் முடிவை எடுத்துக் கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து, சுவைமிக்க உரையாடல்கள் நடைபெறுகின்றன. எமது ஆட்சியிலே, மக்கள், வாழ்வில் வளம் பெற்று மகிழ்கிறார்கள் என்றனர் அமைச்சர்கள்.
வாழ்வில் வளமா? யாருக்கு? மக்களுக்கா! இல்லையே! தொழில் அதிபர்கள் அல்லவா கொழுக்கிறார்கள்! என்றெல்லாம் சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறார் மன்னர்.
கடைசியில், இனிக் கட்டுக்கு அடங்கி நடந்துகொள்வதாக, இறுதி உறுதிமொழிச் சீட்டிலே மன்னன் கையொப்பமிட வேண்டும் - அதனைப் பெறாமல் அமைச்சர் அவை கலையப்போவதில்லை, என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். அரசன், உறுதிமொழிகள் யாவை என உசாவுகிறான்.<noinclude></noinclude>
6poev9b06c1qless5odehiighharq60
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/371
250
641999
1928870
1928027
2026-04-30T08:32:04Z
Rabiyathul
5890
+ மேலடி
1928870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||347}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
மன்னர் இனி, சொற்பொழிவாற்றக் கூடாது!
347
அப்படியா! அமைச்சர் அவை, தயாரித்துக் கொடுக்கும் சொற் பொழிவுகளைக் கூடவா நான் படித்துக் காட்டக்கூடாது?
ஆமாம்.. ஆமாம்...அதை
வைத்துக்கொண்டே,
படிக்கும்
முறையிலேயே, கேலியும் கண்டனமும் எழச்செய்துவிடக்கூடிய திறமைசாலி, நீர்-தெரியும்!
வாயைத் திறக்கவே கூடாதா? ஊமையாக இருக்கவேண்டும், உங்கள் மன்னர்! அப்படித்தானே!
ஒருவிதத்திலே, அப்படித்தான். அரசியல் பேச்சுகளைப் பொறுத்த வரையிலே, மன்னர் ஊமையாகத்தான் இருக்கவேண்டும். ஏதாவது திறப்பு விழாக்களிலே வேண்டுமானால், இதைத் திறந்துவைக்கிறேன் என்று கூறலாம்.
சரி ! மற்றும், நான் செய்யவேண்டியது?
பத்திரிகைகளில் கட்டுரைகள், செய்திகள், எழுதக்கூடாது. நானா எழுதுகிறேன், இல்லையே...
உங்கள் தூண்டுதலால், எழுதப்பட்டு வருவது தெரியும்.
நீங்கள் கூடத்தான் எழுதுகிறீர்கள்.
நாங்கள் எழுதுவோம்! நீர் எழுதக்கூடாது!
என்ன நியாயமோ!! சரி! ஆகட்டும்! பிறகு?
தடுத்து நிறுத்தும் உரிமை, அதிகாரம் இருந்து வருகிறதே. அதை அடியோடு விட்டுவிடவேண்டும்.
அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தவே இல்லையே, இதுவரையில்,
அதைப்பற்றி பேசுகிறீர்..
ஆமாம்! மக்களாட்சியிலே அமைச்சர்களுக்கு உள்ள அதிகாரம், உரிமை பற்றி, நீங்கள் பேசுகிறீர்கள். அதுபோல், மன்னனுக்கு உள்ள அதிகாரத்தைப் பற்றி நான் பேசினால், என்ன?
நாங்கள் பேசுவோம், நீர் பேசக்கூடாது.
உ
இந்த உறுதிமொழியில் நான் கையொப்பமிடுவது, மிகக் கடினம். ஏனெனில், கையொப்பமிட்டுவிட்டால், அதன்படி நடக்கவேண்டும். என்னால், ஏதும் செய்யாமல், பொம்மையாக இருந்துவர இயலாதே.<noinclude></noinclude>
09al49nwkf44yhs8k8b2jorhkgn78wv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/372
250
642000
1928871
1928028
2026-04-30T08:32:35Z
Rabiyathul
5890
+ மேலடி
1928871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|348||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>348
'திராவிட நாடு' இதழில்
மீறக்கூடாது. உறுதிமொழியில் கையொப்பம் இடத்தான் வேண்டும்.
மறுத்தால்?
மறுத்தால்! அமைச்சர் அவை, 'ராஜிநாமா'ச் செய்யும். பொதுத் தேர்தல்! என் கட்சி மக்களிடம் சென்று, கட்டுக்கடங்கிய காவலன் வேண்டுமா, கண்மூடித் தர்பார் வேண்டுமா என்ற பிரச்சினையை வைத்துப், போட்டி யிடும், வெற்றி எமது கட்சிக்கே!!
தம்பி! மக்களை, இந்தப் பிரச்சினை மூலம், கட்சி தன்வயப் படுத்திக் கொள்ளும் என்பதை உணர முடியாதவன் அல்ல, மன்னன். எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கிறான், இந்த ஏற்பாடு வேண்டாம் - என் இயல்புக்கு ஏற்றதல்ல-என்றெல்லாம்.
முதலமைச்சருக்கு இந்தப் பிரச்சினையிலே, மன்னன் பிடிவாதம் காட்டுவது, தன் கட்சிக்குப் பெருத்த இலாபமே பெற்றுத் தரும் என்பது நன்றாகத் தெரியும் எனவே, உறுதியுடன் பேசுகிறார்.
பொதுத்தேர்தலை, இவ்வளவு விரைவிலே வைத்துக் கொண்டால், பொருட்செலவு, மறுபடியும்!! இந்தக் கவலை சில அமைச்சர்களுக்கு- குறிப்பாக, புதிதாக அமைச்சரானவருக்கு.
பல கட்டங்கள், உள்ளன, இந்தக் காட்சியில்.
அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வது முதற் கொண்டு, 'தொடர்புகள்' பற்றிய புகார்கள் வரையிலே! ஒவ்வொன்றும் படித்திட இனித்திடும், என்பது மட்டுமல்ல-வரிக்கு வரி, குடிஅரசு, தக்கபடி நடைமுறைக்குக் கொண்டுவரப்படாவிட்டால், வெறும் கேலிக் கூத்தாக்கப்பட்டுப் போய்விடும் என்பது போன்ற அரசியல் விளக்கங் களைப் பெறலாம். பிறிதோர் சமயம், விரிவாகக் கூறிடக் கூட எண்ணு கிறேன்- இப்போது நாம். விரைவாக இறுதிக் கட்டம் கண்டாகவேண்டும்.
முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
ஆம்! உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும். வேண்டாம் முதலமைச்சரே! மன்னன், என்றோர் சின்னம் இருப்பது நாட்டுக்கும் நல்லது! உங்களுக்கும் நல்லது<noinclude></noinclude>
1j6dnttu3jlp616fw1zsgqxx8px7d5u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/373
250
642001
1928873
1928029
2026-04-30T08:33:05Z
Rabiyathul
5890
+ மேலடி
1928873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||349}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
349
உபதேசம் வேண்டியதில்லை! உமது கையொப்பம். உடனே - தயங்காமல்..
என்னால் முடியாது அமைச்சரே!
முடியாது என்றால், பொதுத்தேர்தல்! மன்னரின் முறை கேடுபற்றி மக்களிடம் சொல்லுவோம்-ஆதரவு திரட்டுவோம்...
என் இயல்பு, இதற்கு இடம் கொடுக்காது. உங்களுக்கோ ஒரு ஊமை மன்னன் வேண்டும்!
குடிஅரசு முறையால் அமைச்சரான உமக்கு, சிறு துளி அதிகாரம் கொண்ட அரசனையும் சகித்துக்கொள்ள விருப்பம் இல்லை. குடிஅரசுக்கும் கட்டுப்பட்ட காவலன் வேண்டும், உமக்கு.
அதுதான்! சரியாகச் சொன்னீர். குடிஅரசுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் காவலன் வேண்டும்.
என்னால் அப்படி இருக்க முடியாதே!
எங்கள் முடிவு அது!
உங்கள் முடிவு நியாயமானது.
அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மகிழ்ச்சி! சரியான முடிவுக்கு வந்துள்ளீர்! இடும் கையொப்பம்!
உறுதி மொழியிலா? அது என்னால் முடியாதே! கட்டுப்பட்டுக் கிடக்க இயலாது!
கட்டுக்கு அடங்கும் மன்னன் தேவை என்ற எங்கள் முடிவு நியாயமானது என்று ஒப்பம் அளித்தீர்!
ஆமாம்! அதை மறுக்கவில்லையே! ஆனால், அப்படி, நான் இருக்க முடியாது என்கிறேன்.
அப்படியானால்..?
சிக்கலான நிலைமை! நான் மன்னனாக இருப்பதானால், நீங்கள் சொல்கிறபடி கட்டுண்டு கிடக்க முடியாது, எனவே, நான் ஓர் முடிவுக்கு வந்துவிட்டேன்.
உறுதிமொழியில் கையொப்பமிடச் சம்மதம் அப்படித்தானே..
இல்லை! உறுதிமொழியில் கையொப்பமிடக்கூடிய, மன்னனைத் தருகிறேன்..என் மகன் உங்களின் இன்றைய இளவரசன்பு<noinclude></noinclude>
h7ec6ujj4jiym25fhl1vifptuo9h8mp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374
250
642002
1928874
1928030
2026-04-30T08:33:36Z
Rabiyathul
5890
+ மேலடி
1928874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|350||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>350
அப்படியானால், தாங்கள்?
‘திராவிட நாடு' இதழில்
நான் அரசப் பதவியைத் துறந்துவிடுகிறேன்..என் மகன், மன்னனாவான். உம் விருப்பப்படி, உறுதிமொழி தருவான்...
காவலா! உம்மை இழக்கத்தான் வேண்டுமா?
வேறுவழி? சிக்கல் தீர நான் விலகுவதுதான் முறை..
கூடிக் கலந்து பேச வந்தோம், பிரிவு உபசாரக் கூட்டமாகி விட்டதே. இன்று.
உமது அன்புக்கு என் நன்றி!
கொள்கையால் நாம் பிரிகிறோம்-எனினும் உமது அறிவாற்றலை நாங்கள் மறவோம், இனிச் செல்லவேண்டியதுதானா, வெவ்வேறு வழியாக...
ஏன், வெவ்வேறு வழி! நானல்லவா, உங்கள் வழிக்கு வந்து விடத் தீர்மானித்துவிட்டேன்..
மன்னர் பதவியைத் துறந்து, பிறகு, யாது செய்யவல்லீர், அரசே! அரச பதவியில் இருக்கும்போது, செய்ய இயலாததையெல்லாம் செய்திடலாமே..
என்ன கூறுகிறீர் வேந்தே!
என் பேச்சு முற்றுப் பெறவில்லை, அமைச்சரே!
நான் அரச பதவியைத் துறப்பேன்-என் மகன் உமது கட்டுக்கு அடங்கும் மன்னனாவான்! மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், பெருவாரிக் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து, அந்தக் கட்சியினர் ஆணையின்படி நடந்துகொள்வான். நான் பதவியிலிருந்து விலகு முன், என் அதிகாரத்தைக் கொண்டு, எனக்குள்ள அரச குடும்பத்துக்கான தனிஉரிமைகள், சலுகைகள் ஆகியவற்றை நீக்கிக்கொண்டு, சாதாரணக் குடிமகனாகிவிடப் போகிறேன்.
கொற்றவன் குடிமகனாவதா?
குடிமகனாவதற்காகத்தானே. நான் கொற்றவனாக இருக்கும் நிலையையே துறக்கிறேன்.
ஏன்? எதற்கு? என்ன செய்யத் திட்டமிடுகிறீர்?
உம்மோடு உறவாடி மகிழ உடனிருக்க! டுத்த பொதுத் தேர்தலில், சாதாரணக் குடிமகனாக ஈடுபட
வெற்றி நிச்சயமல்லவா மன்னருக்கு<noinclude></noinclude>
i2ekmrozm1amxljemhud503i883mocz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/375
250
642003
1928875
1928031
2026-04-30T08:34:06Z
Rabiyathul
5890
+ மேலடி
1928875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||351}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எதிர்த்து எவர் போட்டியிடுவர்?
351
வெற்றி பெறக்கூடும்! ஏன்! நான் ஒரு கட்சியைத் துவக்கி, தலைவனாகித், தேர்தலில் போட்டியிடக்கூடும். இப்போது, நான் மன்னன் என்று இருப்பதால், என்னைக் குற்றம் கூறிப் பேச உம்மால் முடியவில்லை. எனக்கும் மன்னனாக இருப்பதால், அமைச்சர்களின் அவலட்சணங்களை எடுத்துப் பேச முடியவில்லை. குடிமகனானால், இருவருமே, தாராளமாக, காரசாரமாகக் கண்டனக் கணைகளை
ஏவிக்கொள்ளலாம்...
இதெல்லாம் எதற்கு மன்னவா?
எதற்கா! என் கட்சி, மகத்தான வெற்றி பெற! உமது உறுதி மொழியில் கையொப்பமிட்டுக் கட்டுண்டு கிடக்கும் காவலன், என் மகன், எந்தக் கட்சிக்கு அதிக இடம் கிடைக்கிறதோ, அந்தக் கட்சித் தலைவனை அழைத்துத்தானே அமைச்சர் அவை அமைக்கச் சொல்லி, அதன் ஆணைக்கு அடங்கி நடப்பான்! என் கட்சி அத்தகைய வெற்றி பெற்றால், என்னையே அழைத்து, அமைச்சர் அவை அமைக்கச் சொல்லக் கூடும்! குடிமகன் ஆகிவிட்டால், அமைச்சரே. கொற்றவனாக நான் இருக்கும்போது கிடைக்காத வாய்ப்பு, வலிவு, எனக்கும் கிடைக்கிறது!!
தம்பி! இந்த உரையாடல், அமைச்சர் அவையினருக்கு அதிர்ச்சியை, அச்சத்தை, வெகுவாக எப்படி ஏற்படுத்தாமலிருந்திருக்க முடியும்? ஏதேது இவன் அசகாயசூரன்! மன்னனாக இருப்பதாலாவது, இந்த அளவுக்குக் கட்டுப்படுகிறான்-இவன் குடிமகனாகி, கொற்றவனாக இருந்து அந்தப் பெரும் சிறப்பினையே துச்சமென்று துறந்த தியாகி, வீரன், மக்கள் தொண்டன் என்ற பெயரும் பெற்றுத், தேர்தலில் ஈடுபட்டால் எவரே அவனைத் தடுக்க முடியும்! ஆட்சி அவன் கரம்செல்லும்! முடிஅரசு மகன் மூலம்! குடிஅரசு தந்தை மூலம்! இதற்கு இடமளித்தால், நாம் யாரும் தலை தூக்கவே தலை தூக்கவே முடியாது-என்று எண்ணினர் - வியர்த்தனர் வெடவெடத்துப் போயினர்.
முதலமைச்சர் ஒரு முடிவுக்கு வந்தார்.
மன்னா! அந்த உறுதிமொழிப் பத்திரம் எங்கே என்று கேட்டார். நான் கையொப்பம் இடவேண்டிய பத்திரம் தானே; இதோ!-என்று கூறியபடி, பத்திரத்தை, மன்னன் தந்தான். முதலமைச்சர், அதைச் சுக்கு நூறாகக் கிழித்தெரிந்தபடி, அமைச்சர் அவைக் கூட்டம் கலைகிறது!- என்று கூறிவிட்டுச் சென்றார்!!<noinclude></noinclude>
f1s3lfzx8hqqquj6j37epb7bheshm11
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/376
250
642004
1928876
1928032
2026-04-30T08:34:38Z
Rabiyathul
5890
+ மேலடி
1928876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|352||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>352
'திராவிட நாடு' இதழில்
தம்பி/ மன்னன் என்னென்ன எண்ணிச் சிரித்திருப்பான், என்பதைக் கற்பனைசெய்து பார்க்கப் பார்க்கச் சுவை சொட்டும் அல்லவா!
முடி அரசாகட்டும் குடி அரசாகட்டும், அதை நடாத்திச் செல்வோரின் திறமையைப் பொறுத்தே, அந்த முறை மூலம் பெறத்தக்க பலன், சுவை, கிடைக்கும். வெறும் முறையினால் மட்டும், போலிச் சுவைதான் கிடைக்கும்; காகிதப் பூவாகத்தான் இருக்கும்! கவர்ச்சி இருக்கும் வண்ணத்தால்; மணம் கிடைக்காது.
கொற்றவனைக் குட்டிக் குட்டிக் குனியவைக்கக் கிளம்பினர், குடி அரசு முறையைக் கருவியாக்கிக் கொண்டவர்; கூர்ந்த மதிபடைத்த கொற்றவனோ, நான் குடிமகனாகிக் கோலோச்சும் பேறு பெற்றிருந்த போது இருந்ததைவிட ஏற்றத்துடன் இருந்திடுவேன், என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினான்-குடி மகனாக வேண்டாம்! கொற்றவனாகவே இருந்திடு!!-என்று கூறாமற் கூறிவிட்டுச் சென்றான், குடிஅரசு முறையால் தலைமை பெற்றவன்.
குடி அரசு, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கொள்கையைத் தருகிறது.
அந்தக் கொள்கையைச் சாதமாக்கிக் கொண்டு எவரெவர் அந்த இடத்தைப் பெற்று, என்னென்ன செய்யக்கூடும் என்பதை எண்ணிப் பார்த்துத், தெளிவு தேடிப்பெறவே, இதுகுறித்து, பன்னிப் பன்னிச் சொன்னேன்.
தம்பி! முன்பு கொற்றவன் என்ற நிலையிலிருந்து கொண்டு, ஆதிக்கம் செலுத்த இருந்த வாய்ப்பினைவிட, இன்று குடிமகன் என்ற நிலையில் இருந்துகொண்டு, நல்லது செய்யவும், வாய்ப்பு அதிகம்; கேடு செய்திடவும் வழி கிடைத்துவிடுகிறது.
எனவே மமதை, மந்தமதி எனும் கேடுடைக் குணம் கொண்ட மன்னன் நாடாள்வது, தீது தரும் என்பதால் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற ஏற்புடைய, குடிஅரசுக் கோட்பாட்டை நிலைபெறச் செய்து விட்டதாலேயே, ஆட்சியிலே சீரும் சிறப்பும், மக்கள் வாழ்விலே நலனும் தாமாக வந்து தழைத்திடும் என்று எண்ணிவிடுவது, பேராபத்து. முன்பாவது ஒருவர் மன்னர்! இன்று எல்லோரும் மன்னர்கள்! எனவே, எல்லோருக்குமே, ஆட்சி நடாத்தத்தக்க அறிவாற்றல் இருக்க வேண்டும். அதேபோது ஆணவம் இருத்தல் ஆகாது-திறம் இருக்க வேண்டும். தலைக்கனம் இருத்தலாகாது!
இந்தப் பண்புகள் உள்ள சில பலரிடம், சிலபல குறிப்பிட்ட காலத்துக்கு, ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப், பொதுமக்கள். உழவு, நெசவு, தொழில், தொண்டு, கலை, கல்வி, களியாட்டம் எனும்<noinclude></noinclude>
g9sj1n61oi8surf6fdn65g5x0jvkm2b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/377
250
642005
1928877
1928033
2026-04-30T08:35:08Z
Rabiyathul
5890
+ மேலடி
1928877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||353}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
353
பல்வேறு செயல்களில் ஈடுபட்டு, நல்வாழ்வு, முழுவாழ்வு, பெறவேண்டும்! அவர்கள் அத்தகைய நல்வாழ்வு பெறத்தக்க சூழ்நிலையைத் தக்கபடி ஆக்கிக் காத்து, அழிந்துபடாது பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பை ஏற்றுத், தன்னல மறுப்புடன் நடந்திடும் பேராற்றல் வளர்ந்தால்தான், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற சுவைமிகு கொள்கை, பயன்தரும் முறையாகி நிற்கும்... அதற்காகப் பணியாற்ற, எங்கோ, யாரோ உளர். வருவர், என்று எதிர்பார்த்து நின்று, பிறகு இலவுகாத்த கிளியாகிப் போய்விடலாகாது. அதற்கான பணியாற்றும் கடமை, நம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது.
4.12.1960
அண்ணன்,
ஐது<noinclude></noinclude>
dbzzgrtid92r99ts5fs797pnt8gdi0o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/378
250
642006
1928878
1928034
2026-04-30T08:35:39Z
Rabiyathul
5890
+ மேலடி
1928878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|354||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கடிதம் : 128
தம்பி!
மேயர் தேர்தல் வெற்றி- நாகர் கிளர்ச்சி
மேனி சிலிர்க்குது!..
நெல்லைச்சீமை சென்றிருந்தேன்-நாலு நாட்கள்-பல இடங்கள் - எழுச்சியூட்டும் நிகழ்ச்சிகள் - எனவே, மடல் அனுப்ப இயலவில்லை. எனினும், திருநெல்வேலிச் சீமையிலே நான் கண்டு அளவளாவி அகமகிழ்ந்திட, பொதுக்கூட்டங்களிலேயும், தனியாகவும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் தோற்றத்திலே, கண்ணொளி யிலே, கருத்தாழம் மிக்க உரையாடலிலே, புன்னகையிலே, புதியதோர் விறுவிறுப்பிலே, உன்னைக் கண்டேன்! உள்ளத்தால் ஒருவர், வடிவத்தால் வெவ்வேறு என்றன்றோ இன்று நமது கழகத் தோழர்களின் நிலைமை! வாங்க அண்ணா! வாங்க அண்ணாச்சி! தடம் பார்த்து வாங்க! அதோ அந்தாலே பாருங்க! சொதி இன்னும் கொஞ்சம் போடட்டுமா அண்ணாச்சி!- என்று இவ்விதம் மாவட்டத்துக்கு மாவட்டம், பேச்சு எனினும், எங்கும் தமிழ் உள்ளம் தானே காண்கிறோம். அஃதேபோலத்தான் தம்பிமார்கள் எந்தெந்தச் சீமையில் இருக்கிறார்களோ, அந்தந்த இடத்திலே வழக்கிலே இருந்துவரும் முறைப்படி பேசுகிறார்கள் என்றாலும், எங்கும் ஆர்வமும் எழுச்சியும், நம்பிக்கையும் நல்லுணர்வும், பொங்கிப் பொலிவளித்த வண்ணமிருக்கிறது. பக்குவமாக அமைக்கப் பூந்தோட்டம் சென்றால். தூய்மையைக் காட்டிநிற்கும் முல்லையும், மல்லியும், அந்தி வானத்தை நினைவூட்டும் வண்ணப் பூக்கள் பலவும், வடிவத்தால் வகையால் வெவ்வேறாகத் தெரியும் காண்பதற்கு அத்தனை பூக்களும் அழகுடன் விளங்கி-எல்லாம் ஒருசேர மணம் பரப்பி, மனதுக்கு ஈடற்ற ஓர் மகிழ்ச்சியைத் தருகிறதல்லவா? அதுபோலவே, கழகத் தோழர்கள், கடலோரம் வாழ்ந்திடுவோராகட்டும், காடிடை உள்ள சிற்றூரில் உள்ளவர் களாகட்டும், வரிசை வரிசையாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளும், கொள்வோரும் கொடுப்போரும் எழுப்பிடும் ஒலிமிகு அங்காடி கொண்டதாக உள்ள சீரூர் வாழ்வோராக இருக்கட்டும், பலகல் பாழ்வெளியைக் கடந்தான பிறகு, பசுமையற்று. பாங்கற்று. வறுமை கொட்டியதால் வடிவம் கெட்டு, பிய்ந்து போயுள்ள கூரைகள், சரிந்து கிடக்கும் மண் சுவர்கள், செல்லரித்துப்போன வாயிற்படிகள் எனும் நிலையிலுள்ள, இருண்ட பட்டிதொட்டியில், பாடுபட்டுப் பலன் காணாமல், பகல் உண்டு, இரவில்<noinclude></noinclude>
efcqcqu4duaplf43z4s7kbqt92xbs54
1929026
1928878
2026-04-30T11:45:48Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம் : 128
தம்பி!
மேயர் தேர்தல் வெற்றி- நாகர் கிளர்ச்சி
மேனி சிலிர்க்குது!..
நெல்லைச்சீமை சென்றிருந்தேன்-நாலு நாட்கள்-பல இடங்கள் - எழுச்சியூட்டும் நிகழ்ச்சிகள் - எனவே, மடல் அனுப்ப இயலவில்லை. எனினும், திருநெல்வேலிச் சீமையிலே நான் கண்டு அளவளாவி அகமகிழ்ந்திட, பொதுக்கூட்டங்களிலேயும், தனியாகவும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் தோற்றத்திலே, கண்ணொளி யிலே, கருத்தாழம் மிக்க உரையாடலிலே, புன்னகையிலே, புதியதோர் விறுவிறுப்பிலே, உன்னைக் கண்டேன்! உள்ளத்தால் ஒருவர், வடிவத்தால் வெவ்வேறு என்றன்றோ இன்று நமது கழகத் தோழர்களின் நிலைமை! வாங்க அண்ணா! வாங்க அண்ணாச்சி! தடம் பார்த்து வாங்க! அதோ அந்தாலே பாருங்க! சொதி இன்னும் கொஞ்சம் போடட்டுமா அண்ணாச்சி!- என்று இவ்விதம் மாவட்டத்துக்கு மாவட்டம், பேச்சு எனினும், எங்கும் தமிழ் உள்ளம் தானே காண்கிறோம். அஃதேபோலத்தான் தம்பிமார்கள் எந்தெந்தச் சீமையில் இருக்கிறார்களோ, அந்தந்த இடத்திலே வழக்கிலே இருந்துவரும் முறைப்படி பேசுகிறார்கள் என்றாலும், எங்கும் ஆர்வமும் எழுச்சியும், நம்பிக்கையும் நல்லுணர்வும், பொங்கிப் பொலிவளித்த வண்ணமிருக்கிறது. பக்குவமாக அமைக்கப் பூந்தோட்டம் சென்றால். தூய்மையைக் காட்டிநிற்கும் முல்லையும், மல்லியும், அந்தி வானத்தை நினைவூட்டும் வண்ணப் பூக்கள் பலவும், வடிவத்தால் வகையால் வெவ்வேறாகத் தெரியும் காண்பதற்கு அத்தனை பூக்களும் அழகுடன் விளங்கி-எல்லாம் ஒருசேர மணம் பரப்பி, மனதுக்கு ஈடற்ற ஓர் மகிழ்ச்சியைத் தருகிறதல்லவா? அதுபோலவே, கழகத் தோழர்கள், கடலோரம் வாழ்ந்திடுவோராகட்டும், காடிடை உள்ள சிற்றூரில் உள்ளவர் களாகட்டும், வரிசை வரிசையாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளும், கொள்வோரும் கொடுப்போரும் எழுப்பிடும் ஒலிமிகு அங்காடி கொண்டதாக உள்ள சீரூர் வாழ்வோராக இருக்கட்டும், பலகல் பாழ்வெளியைக் கடந்தான பிறகு, பசுமையற்று. பாங்கற்று. வறுமை கொட்டியதால் வடிவம் கெட்டு, பிய்ந்து போயுள்ள கூரைகள், சரிந்து கிடக்கும் மண் சுவர்கள், செல்லரித்துப்போன வாயிற்படிகள் எனும் நிலையிலுள்ள, இருண்ட பட்டிதொட்டியில், பாடுபட்டுப் பலன் காணாமல், பகல் உண்டு, இரவில்<noinclude></noinclude>
j5e60ozfcgej5hx68xbaei3chy6w5b6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/379
250
642007
1928879
1928036
2026-04-30T08:36:10Z
Rabiyathul
5890
+ மேலடி
1928879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||355}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
355
அதை எண்ணிக்கொண்டு, படுத்துப் புரண்டு கிடந்திடுவோராயினும், அகில உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள வாய்ப்புப் பெற்ற கல்வி வளம் பெற்றோராயினும், மலையும் மடுவும், வயலும் வாவியும், கருகிய மொட்டும் கசந்த கரும்பும். வாலிபநரையும் வயோதிகர் உழைப்பும், கந்தலாடையும் காச இருமலும் என்பன வற்றையே, பாடம் தந்திடும் பள்ளிகளாக்கிக் கொண்டுள்ள குறிச்சியில் உழல்வோராயினும், எங்கும் எவரிடமும் தம்பி! இன்று, இதுநாள் வரை நான் கண்டிராத ஓர் ஆர்வம், தமக்கு ஓர் நல்ல எதிர்காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது, அந்தத் தூயதொண்டிலே நமது கழகம் ஈடுபட்டிருக் கிறது. ஈடுபட்டிருப்பதால், இல்லாதானை ஏய்த்து ஏய்த்துக் கொழுத்திடும் வல்லான், அந்தக் கழகத்தை அழித்திடத் துடிக்கிறான். எனவே, நாம் நொந்துகிடப்பினும், நமக்காகப் பணி யாற்றும் கழகத்துக்குத் துணை நிற்கவேண்டும் என்ற ஓர் விதமான 'பந்தபாச' உணர்ச்சி உருவாகி இருப்பதைக் காண்கிறேன். மாடோட்டும் சிறார் முதல் காரோட்டும் தொழிலாளிவரை, கரும்பு பயிரிடும் காராளரிலிருந்து இரும்பு காய்ச்சி அடித்திடும் உலைக்கள உழைப்பாளி வரையிலே, ஏதோ ஓர் விதமான- என்னால் தெளிவாக விளக்கக் கூட முடியவில்லை-பற்றுக்காட்டுவது தெரிகிறது. துணைநிற்க இசைவது புரிகிறது, தோழமை கொண்டாடுவது காண்கிறேன். அத்துணை பேரும், ஐயந்திரிபற, நமது கொள்கைகளை அறிந்து கொண்டார்களா, அலசிப் பார்த்தார்களா, அடுக்கடுக்காக மாற்றார்கள் ஏவிடும் கண்டனங்கள், கருத்துள்ளனவா, அன்றிக் காழ்ப்பின் விளைவா என்பது பற்றியேனும் விளங்கிக் கொண்டனரா, என்று அவர்கள் தமது இதயத்தை வழங்கிடும் போதெல்லாம், நான் எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்-வியப்புறுகிறேன். அத்துணை ஆர அமர இருந்து ஆராய்ச்சி நடத்திட, அவர்கட்கு ஓய்வும் இல்லை; வாய்ப்பும் கிடையாது. எனினும் நம்மிடம் ஓர் பற்று, நாம் அவர்களுக்காக என்ற ஓர் நம்பிக்கை, அந்த மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது-கழகத்தை மாற்றார்கள் தாக்கத் தாக்க, இழிமொழியினர் பழிச்சொற்களை உமிழ உமிழ, அந்த நம்பிக்கை உறுதிப்படுகிறது, வளருகிறது, உரம் ஏறுகிறது! வைரம் பாய்ந்தது என்கிறார்களே-அதுபோல,
தம்பி! பாரதியார் பாடலொன்று நான் அடிக்கடி கேட்டு மகிழ்ந் திருக்கிறேன். அதிலே ஓரிடத்தில், மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி-என்றிருக்கும். அதன் முழுப்பொருளை உணர வேண்டுமானால், நமது கழகத்தோழர்களில் எவருக்கேனும், ஒரு ஊராட்சி மன்றத்திலே வரவேற்பு அளிக்கப்படும்போது, மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்துப் பாராட்டுரை வழங்கிப் பரிவு காட்டிடும்போது, விழாக் காணக் கூடிடும், நமது கழகத் தோழர்கள் களிநடமாடிடுவதைக் காணவேண்டும்! உள்ளபடி அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது! நமது<noinclude></noinclude>
6lrt1pla8pa6ci3e815x7hnn6o7gdpa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/380
250
642008
1928880
1928037
2026-04-30T08:36:42Z
Rabiyathul
5890
+ மேலடி
1928880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|356||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>356
'திராவிட நாடு' இதழில் கழகத்தவருக்கு. நமது தோழருக்கு இந்தச் சிறப்பு நடக்கிறது! ஏற்றம் பெறுபவர். பாராட்டுத் தாளை வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்து நிற்போர் மட்டுமல்ல, கழகம் ஏற்றம் பெறுகிறது; கழகத்துக்குப் பாராட்டுக் கிடைக்கிறது என்று எண்ணி எண்ணி, மகிழ்ச்சியால் துள்ளுகிறார்கள். ஊராட்சி மன்றங்களுக்கு, வரவேற்புக் கொடுப்பது, வாடிக்கையாகிப் போயுள்ள அலுவலாகி விட்டிருக்கிறது என்று கூடக் கூறலாம். எனவே ஊராட்சி மன்றத்தினர் 'உளங்கனிந்து' வரவேற்புத் தரும்போது, அவர்களுக்கு, புதியதோர் களிப்புப் பூத்திடக்கூடச் செய்யாது. பலமுறை வரவேற்புகள், பல திறப்பட்டவர்களுக்கு வழங்கி வழங்கி. பழகிப்போய் விட்டிருக்கிறார்கள். நான் இந்தச் சுற்றுப்பயணத்தின் போது காயல்பட்டினம் ஊராட்சிமன்றத்தின் வரவேற்பினைப் பெற்றேன். விழாவுக்காக அழகிய பந்தல் அமைத்திருந்தனர். அதே இடத்தில் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்றம் வரவேற்பு அளித்ததாகவும், மறுநாள் அன்பர் ஆச்சாரியாருக்கு வரவேற்பு ஏற்பாடாகி இருப்பதாகவும் அறிந்தேன். இதுபோலத்தான் ஊராட்சி மன்றங்கள் பல்வேறு தரத்தினருக்கு, வரவேற்புகள் வழங்கு கின்றன! எனவே, அவர்களுக்கு, மேனி சிலிர்த்திடக் காரணம் இருக்காது. செருக்குடன் செப்புகிறேனோ என்று எவரும் எண்ணிவிட வேண்டாம்- உள்ளதைச் சொல்லுகிறேன்-எனக்கு இத்தகைய வரவேற்புகளைப் பெறும்போது மேனி சிலிர்ப்பது இல்லை. ஒரே ஒருமுறை, என்மேனி சிலிர்த்ததுண்டு-அது, மீண்டும் திரும்பிவர முடியாத 'அந்தக் காலத்தில்-ஈரோடு நகராட்சி மன்றத்தின் வரவேற்பு எனக்கு அளிக்கப்படவேண்டும் என்று பெரியார் முன்னின்று நடத்திய விழா-ஊர்வலமாக, பழையகோட்டைக் காளைகள் பூட்டிய வண்டி யிலே நான் அமர்ந்துகொண்டிருக்க, வெண்தாடி காற்றினிலே அசைந்தாட, திராவிடச் செங்கோலாகிடத்தக்க வலிவு பெற்ற கைத்தடியை ஏந்திக் கொண்டு, அரிமா நோக்கு இதுதானோ என்று எவரும் எண்ணிடத்தக்க தனியானதோர் பார்வையை இப்புறமும் அப்புறமும் செலுத்திக்கொண்டு, பெரியார் ஊர்வலத்தில் நடந்து வந்தபோது-அன்று-உள்ளபடி எனக்கு மேனி சிலிர்த்தது. இப்போது. மேனி சிலிர்த்திடுவது இல்லை! நன்றி கொள் உள்ளம் உண்டு!
ஆனால், நமது தோழர்களுக்கு, இப்படி ஒரு வரவேற்புக் கூட்டம் கண்டால், ஊராட்சிமன்றத்தலைவர் மாலையை அணிவிக்கக் கண்டால், அடே அப்பா! என்ன களிப்பு! எத்துணை பெருமை! என்ன பூரிப்பு! மேனி சிலிர்க்கிறது!! ஒருவரில் மற்றவர். என்றாகி விட்டோம். நாம் அவ்வளவு தூரம் கலந்துபோயிருக்கிறோம். நமக்குள் ஏற்பட்டுவிட்டுள்ள தொடர்பு, அரசியல் கட்சிகளிலே காணக்கிடக்கும், சதுரங்கக் காய்களின், இடம்பெறும் வகையினது அல்ல-இது, நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்<noinclude></noinclude>
h56mafxf7fpegoxc5ybwkbntqhfkick
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/381
250
642009
1928881
1928038
2026-04-30T08:37:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||357}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
357
நிலை! தம்பி! எதைவேண்டுமானாலும் இழந்துவிடலாம். மீண்டும் பெறலாம், எற்றுக்கு என்று கேட்டு அலட்சியப்படுத்திவிடக் கூடச் செய்யலாம்.ஆனால், இது இருக்கிறதே, 'நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்' தன்மை நாம் இழக்கக் கூடாத செல்வம்-வேறு எந்தக் கட்சியிலும் காணக் கிடைக்காத கருவூலம்-பழங்காலத்துக் கதையொன்று உண்டு, கடவுளர் சிந்திடும் கண்ணீர்த்துளிகளே, கடலிடை முத்துக்களாக மாறின என்று-நமக்குள், ஏற்பட்டுவிட்டுள்ள இந்த இழைந்துள்ள இதய உறவு, நாம் தனியாக விடப்படுகிறோமே, திக்குத் தெரியாத காட்டிலே, சிறகு வளராத நிலையிலே கிளம்பிடும் புள்ளினம் போலானோமே, நமது எதிர்காலம் யாதோ? இருள்மருட்டுமோ, ஒளிக்கீறலாகிலும் கிடைக்குமோ, என்று எண்ணி, ஏக்கமுற்று, இந்நிலை ஏற்பட்டுவிட்டதே என்று கசிந்து உதிர்த்த கண்ணீர்த் துளிகள், தம்பி! நான் குறிப்பிடும் கருவூலமாகி விட்டிருக்கிறது. இதை இழந்து, மற்ற எதைப் பெறுவதும், கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும்.
இம்முறை, என்னைக் காணும்போது, நமது தோழர்களுக்கு, மகிழ்ச்சி பொங்கிட மற்றோர் காரணம் இருந்தது-மேயர் தேர்தல்!
ஊரூருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், இம்முறை முக்கறுப்பட்டு விடும், முக்காடிட்டு மூலைக்குச் செல்வார்கள், மேயர் ஆக முடியாதது மட்டுமல்ல. பிளவு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் பாருங்கள் அந்த வேடிக்கை என்று நிறையப் பேசி வைத்திருக்கிறார்கள். வெடிகள், வாணங்கள், அறிவிப்புப் பலகைகள், ஊர்வல ஏற்பாடுகள் எல்லாமே தயாராகிவிட்டிருந்ததாம். காங்கிரஸ் வட்டாரத்தில்-பல ஊர்த்தோழர்கள் கூறினர். மேயர் தேர்தலில், கழகம் தோற்றது என்ற செய்தி கிடைத்திடும். தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு, சங்கு ஊதிக்கொண்டு, 'சாவு' ஊர்வலம் நடத்த வேண்டும் என்றுகூடத் திட்டம் போட்டிருந்தானராம்; எனவே, நமது தோழர்கள். நெருப்பின்மீது நின்று கொண்டிருந்தார்கள் வெற்றி கிடைத்ததும், தந்தையிடம் சென்று தகதகவென ஆடிடும் மகனும், தம்பியின் முதுகினைத் தட்டிக் கொடுத்திடும் அண்ணனும், அரும்பு மீசையை மேலும் அழகு தர முறுக்கியபடி, அது கீறிவிடுவதால் கன்னத்துக் கதகதப்புக் கண்ட, காதலி முன்நின்று, எப்படி என் வெற்றி! என்று கேட்டிடும் காதலனும், ஆக இப்படி எல்லாம் ஆகிவிட்டிருக்கின்றனர் நமது தோழர்கள், என்னைக் காணவே அவர்களுக்கு. மேலும் மகிழ்ச்சி பொங்கிற்று! மேனி சிலிர்த்த நிலை!! மேயர் பதவி, முதலமைச்சர் நிலை போன்றது அல்ல-தெரியும்-புரிகிறது-ஆனால், அந்த இடம் நமக்குக் கிடைப்பது, நாம் வெற்றிப் பாதையிலேதான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை<noinclude></noinclude>
kz2aeb7mkj0qwof8ontf1o3yuhuh74u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/382
250
642010
1928882
1928039
2026-04-30T08:37:44Z
Rabiyathul
5890
+ மேலடி
1928882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|358||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>358
'திராவிட நாடு' இதழில்
யன்றோ எடுத்துக் காட்டுகிறது-உரியவளைக் காணாமுன்பே, அவள் வளை ஒலிகேட்டு இன்புறுவது, உண்டன்றோ! அஃதேபோல!!
"ஏன் அண்ணா! இருவர் கேட்டார்களே. வாய்ப்பு அளித்திடும்படி- என்ன காரணம்கொண்டு, முனுசாமியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, ஒருவராவது கேட்க வேண்டுமே! உஹும்! ஒருவரும் கேட்கவில்லை அத்துணை அலட்சியமா, பிரச்சினையிலே, அல்லது என்னிடம் உள்ள நம்பிக்கையின் ஆழமும், அழுத்தமும், அவர்களைச் சிந்திக்க வைக்க வில்லையா, என்றால், தம்பி! அது அல்ல-அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார்கள்-கழகத்துக்கு வெற்றி-கபடத்தை வீழ்த்திப் பெற்ற வெற்றி-தொடர்ந்து வெற்றி-இந்த எண்ணம், அவர்களை வேறு எது குறித்தும், நினைத்திட வைக்கவில்லை, மழலை பேசிடும் மதலை, தனக்கென்று தந்த கனியைக் குழப்பி, நமது வாயிலே திணித்திட, அதைக் குதப்பிக் கொண்டிருக்கும் போது. பெற்றளித்த பெருமாட்டி, என்ன ஒரே கொஞ்சல்! என்று கேட்க, உள்ளத்தை வென்றான், பதில் சொல்வது, எப்படி இருக்கும்! வார்த்தைகள் தெளிவாக இரா-கனி போலவே குழம்பிக் கிடக்கும்- கனியிலும் இனித்திடும்! அது போன்ற முறையில்தான், நமது கழகத் தோழர்கள் மேயர் தேர்தல்பற்றிப் பேசினர், உள்ளம் நெகிழ்ந்து, மேனி சிலிர்த்திடும் நிலை!
எனக்கே, தம்பி! மேயர் தேர்தலிலே, நாம் பெற்ற வெற்றி எத்துணை மகிழ்ச்சிக்குரியது என்பது, ஆயிரமாயிரம் ஆசைத் தம்பிகள் மேனி சிலிர்த்த நிலையில் இருந்ததைக் கண்டபோது தான், பளிச்சென்று தெரிந்தது. செடியில் உள்ள மலர், செண்டாகி, சேரிடம் அறிந்து சேர்ந்த பிறகு, தனியான, புதிய, கவர்ச்சி பெற்று, அளிக்கிறதல்லவா! அதுபோல!!
இந்த மகிழ்ச்சியைத் தேடிப்பெற்று, திருநெல்வேலிச் சீமையிலே. நண்பர்கள் C.V. இராசகோபால், அன்பில் தருமலிங்கம், மதுரை முத்து, மதுரை துரை அரசு, பாண்டி, நெல்லை இரத்தினவேலு பாண்டியன், தூத்துக்குடி சிவசாமி ஆகியோர் உடனிருந்து உவகையை உயர்வான தாக்கிட, மதுரை டாக்டர் அருணாசலம் அவர்கள், வழிமடக்கி விருந் தளித்துக் களிப்பூட்ட, நாலு நாட்கள் சுற்றிவிட்டு வந்தேன். நாலாயிரத்து ஐம்பது ரூபாய், தேர்தல் நிதி, தந்தனர்-பெற்று மகிழ்ந்தேன்- எனினும் ஒரு கணம்தான்-என்னையோவெனில், அது போய்ச்சேர வேண்டிய இடம் போய்ச் சேரட்டும் என்று, டாக்டர் வாங்கிக் கொண்டார், பொருளாளர் கருணாநிதியிடம் சேர்ப்பிக்க!!
கேட்டது கிடைத்ததா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா, தம்பி! நான், இவ்வளவு தரவேண்டும் என்று கேட்கவில்லை; ஆனால் நெல்லை மாவட்டச் செயலாளர் சிவசாமி, நாலாயிரம் தருவதாக வாக்களித்தார்,<noinclude></noinclude>
4rxgmehe6w6hobzze2oiyzqlekbkuqn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/383
250
642011
1928883
1928040
2026-04-30T08:38:14Z
Rabiyathul
5890
+ மேலடி
1928883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||359}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
359
நிறைவேற்றியுமிருக்கிறார்-ஆனால், இது முதல் தவணை-அவரறிவார், அறிந்தோர் அவர் பணி விரைவிலே வெற்றிபெற உடனிருந்து செயலாற்றக் கேட்டுக்கொள்கிறேன்.
தம்பி! தேர்தல் செலவுக்காக, காங்கிரஸ் கட்சியினால் இலட்ச இலட்சமாகப் பணத்தை மிக எளிதாகத் திரட்ட முடியும். பட்டப் பகலில் சட்டத்தின் கண்களைப் பணத்திரை போட்டு மூடிவிட்டு. கொள்ளை கொள்ளையாகப் பணத்தைக் குவித்துக் கொண்டுள்ளவர்கள், பாதுகாப்புத் தேடிக்கொள்ள, காங்கிரஸ் கட்சிக்கு வலியச் சென்றும் பொருளைக் கொட்டிக் கொடுப்பர் என்பதும் புரிகிறது, என்றாலும், நாம், ஏழை, எளியவர்களின் சார்பிலே, பணியாற்ற, தேவைப்படும் தொகையினைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை, நமது தோழர்களுக்கு, நிரம்ப இருக்கிறது. அதிலே நமக்கு வெற்றியின் அறிகுறிகள் தென்படும் போதே, நமது கழகத் தோழர்களுக்கு மேனி சிலிர்க்கிறது.
-
மணிக்குக்
கொளுத்தும் வெயிலில் பகல் பன்னிரண்டு கோயில்பட்டிக் கூட்டம், இசைபாடுவோர், இராக இலாபனை நடத்தி, கீர்த்தனங்கள் பாடி, பக்க வாத்தியக்காரருடன் வித்தைகள் செய்துகாட்டி, திருப்புகழ், காவடிச் சிந்து அருட்பா என்று இப்படி எல்லாம் பாடுவார்-என்ன பாடினாலும் பணம் வராது! கடைசியில் மங்களம் பாடி முடித்த பிறகுதான் பணம் தருவார்கள். அதுபோல் நள்ளிரவுப் பேச்சு, மழையின் ஊடே பேச்சு, என்று பல ஊர்களில் -நெல்லை யிலும் தூத்துக்குடியிலும் சிறப்புச் சொற்பொழிவுகளும் எனினும் பணம் தந்தாரில்லை, நண்பர் சிவசாமி - கோயில்பட்டியில் 'மங்களம்' பாடியபோது, நாலாயிரம் தந்தார். தம்பி! அந்தத் தொகையை ஒரு தட்டிலே (பித்தளைத் தட்டுதான்!!)' வைத்து, என்னிடம் தந்த உடனே, பார்க்கவேண்டுமே அங்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை! மேனி சிலிர்த்தது!! நமது கழகம் தேர்தல் நிதி திரட்டுகிறது-அதற்கு நாலு ஆயிரம் கிடைத்தது-என்பது காணும் போது அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. காங்கிரசுக்குப் பணம் சேருகிறது. இலட்சக்கணக்கில் - அது ஒரு பிரமாதமாகத் தோன்றுவதில்லை. நமது கழகத்தவருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கே கூட - ஏனெனில்
காங்கிரஸ், கோடீஸ்வரர்கள் உள்ள கட்சி, அதிலே இலட்சக் கணக்கிலே பணம் திரட்ட முடிவதிலே, ஆச்சரியப்படவோ, செயலாற்றிய வர்களைப் பாராட்டவோ என்ன இருக்கிறது. பணம் படைத்தோன், வெள்ளித் தட்டிலே வைத்தளிக்கப்படும் பாதாம் அல்வாவில், கால்பாகம் தின்கிறான்; தின்னும்போதுகூட கிடைத்திருக்க வேண்டிய கால் இலட்சம் இலாபத் தொகை குறைந்து விட்டதை எண்ணிக் கொண்டு விட்டால், இனிப்புப் பண்டமே கசப்பாகிப் போகிறது.<noinclude></noinclude>
gei7wy5tce8h52kbe03z01gw05tlkvc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/384
250
642012
1928884
1928041
2026-04-30T08:38:44Z
Rabiyathul
5890
+ மேலடி
1928884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|360||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>360
'திராவிட நாடு' இதழில்
பாடுபட்டவன், பெற்ற பணத்தைக் கொண்டு, செட்டாகக் குடும்பம் நடத்தும் இல்லாள், அன்புடன் அளித்திடும் உண்டியை அவளுடன் உரையாடிக்கொண்டே உண்டு மகிழ்பவன், கடைசி உருண்டையைக் குதப்பியபடி, இலையோடு ஒட்டிக்கொண்டு விட்டிருக்கும் ஊறுகாயை எடுக்க முயலுவதுகண்ட இல்லத்தழகி குருநகை புரிந்து, இலை பிய்த்துக் கொண்டு வந்துவிடப் போகிறது! -என்று கேலி பேசிட, வெட்கத்தை வெறும் சிரிப்பால் மறைத்தபடி, ஊறுகாய் கிடைக்காவிட்டாலும் அதைத் தொட்ட விரலைச் சுவைத்திடு கிறானே, அப்போது அவனுக்குக் கிடைத்திடும் சுவையும், அது அளித்திடும் மகிழ்ச்சியும், பாதாம் அல்வா சாப்பிட்ட பத்து இலட்சத்தாருக்குக் கிடைக்குமா என்ன!
நாம் தேர்தலில் நிதி திரட்டுகிறோம் - சிறுதொகை - அதற்குப் பெரும்பாடு என்றாலும், அதிலே நாம் வெற்றி காணும்போது, ஏழைக்கு ஊறுகாய் தொட்ட கைதரும் சுவை காண்கிறோம். இல்லத்தில் உண்கிறோம்! இல்லக்கிழத்தி அருகே இருக்கிறாள், எந்தப் பண்டத்திலே எந்தச் சுவை குறைந்திருந்தாலும், இன்மொழியால், புன்னகையால், ஈடுசெய்து மகிழ்வளிக்க! பாடுபட்டுப் பிழைக்கிறோம் என்ற எண்ணம், தேனாகிறது!!
அஃதேபோலத்தான் தம்பி! தேர்தல்களம் செல்கிறோம். பதவி பறிக்க தல்ல; தாயகம் காண, களம்பல சென்றாக வேண்டும், அதிலே இது ஒன்று என்ற உணர்வுடன், அங்கு செல்ல, இந்தத் தொகை பயன் படுத்தப்படும் என்று எண்ணும் போதே மகிழ்ச்சி பொங்கிவழியத் தானே செய்யும். அதற்கான தொகையினைத் திரட்டிட முடியும், திரட்டித் தரத் தோழர்களால் முடிகிறது, திரட்டச் செல்லும் போது, பொதுமக்கள், ஆதரவு தருகிறார்கள் என்பது நமக்கு, இன்ப உணர்ச்சிகளை, எடுத்ததை முடித்திடுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.
நாலு ஆயிரம் என்று நண்பர் அறிவித்ததும், கூடியிருந்தோர், கையொலி செய்தனர் களிப்பினைக் காட்டிட! ஏன்? அவர்கள், அதுவரையில் ஆவலுடன் - அச்சம் கலந்த ஆவலுடன் அமர்ந்திருக் கிறார்கள் - நல்ல தொண்டாற்றத்தான் பணம் கேட்கிறார்கள், தரவேண்டும் என்று மனம் கூறுகிறது, மடியோ நமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது- மிகமிகச் சிறிய தொகைதான் நம்மாலே கொடுக்க முடிகிறது- நம்மைப் போலத்தானே மற்றவர்கள், நம்முடன் உள்ளோரில் பெரும் பாகம் இவர்கள் சேர்ந்து கொடுக்கும் தொகை, எப்படி அதிகமாக இருக்க முடியும் - ஒரு ஐந்நூறோ ஆயிரமோ சேருவதே கடினம் - என்று எண்ணி ஏக்கத்துடன் இருக்கின்றனர். அந்த நிலையில் நாலாயிரம் என்று அறிவிக்கப்பட்ட உடனே அவர்களுக்கு பெருமை கலந்த களிப்பு நம்மாலே நாலாயிரம்! நமது கழகத்துக்கு நாலாயிரம்! நாம் சிறுதொகை<noinclude></noinclude>
40q96tiqpwqzlnk8ifs9eprt00438yp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/385
250
642013
1928885
1928042
2026-04-30T08:39:16Z
Rabiyathul
5890
+ மேலடி
1928885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||361}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
361
தானே கொடுத்தோம் என்று ஆயாசப்பட்டுக் கொண்டோம், சிறுதுளி பெருவெள்ளமாகிறது! இதோ நாலாயிரம்! இதே முறையிலே முயன்று பணியாற்றினால், கழகம் குறித்துள்ள தொகையைச் சேர்த்துவிட முடியும்!- தம்பி! இதுபோன்ற எண்ணங்கள் அவர்களை மேனி சிலித்திட வைக்கிறது.
நாகர்களின் விடுதலைக் கிளர்ச்சி, நம்முடையது போல அல்ல அது காங்கிரசாரின் ஆகஸ்ட்டுக் கிளர்ச்சிக்கு அண்ணனாகிவிட்டது. இந்திய துரைத்தனம் பல நூறுகோடி ரூபாய் செலவிட்டு அமைத்துள்ள படைபலம் நாகர்களை அடக்க முடியவில்லை - இன்றுவரை. அதற்கு மாறாக, சின்னாட்களுக்கு முன்பு டில்லி அனுப்பி வைத்த படையினரில்
நான்கு பேர்களை, விமானப்படையைச் சேர்ந்தவர்களை, நாகர்களின்
விடுதலைப் படையினர், சிறைபிடித்து விட்டனர். டில்லி அரசிடம் உள்ள படை மிகப்பெரிது! அதிலே நாலே நாலு பேர்தான், நாகர்களிடம் பிடிபட்டனர். ஆனால், அந்தச் செய்தி கேட்டதும், நாகநாடு முழுவதும் தலைநிமிர்ந்தன்றோ நின்றிருக்கும்! எம்மை அழிக்க வந்தார்கள் எம்மிடம் பிடிபட்டார்கள்-கட்டிப் போட்டு வைத்திருக்கிறோம் என்றன்றோ விடுதலைப்போரைத் தொடர்ந்து நடாத்தி வரும் நாகர்கள் பெருமிதத் துடன் கூறுவர். அம்மட்டோ! நாகர்களை அடக்க, அழிக்க, ஏவப்பட்ட டில்லிப் படையினைச் சேர்ந்த நால்வரை, நாகர் சிறை பிடித்தனர் என்று கேள்விப்பட்டதும், விடுதலை வீரர்களாம் நாகர்களுக்கு மேனி சிலிர்த்துத் தானே போகும்!!
தம்பி! கேள்விப்பட்டால் நாமே, மேனி சிலிர்த்திடும் நிலை பெறுவோம்-அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இதை ஒட்டி,
பிடிப்பட்டவர்களைத் தேடி அலைகிறார்கள், டில்லி அரசினர். அந்த டில்லி அரசுக்கு, நாகர்களின் விடுதலை இயக்கம், சொல்லி அனுப்புகிறது, "சிறைப்பட்ட நால்வரை விடுதலை செய்து விடுகிறோம்; விடுதலை செய்துவிடும்படி, டில்லி அரசு எங்கள் நாகநாட்டு அரசைக் கேட்டுக் கொண்டால்" என்பதாக!
கேட்கும்போதே மேனி சிலிர்க்கும், பேச்சல்லவா இது! டில்லியில் ஒரு அரசு - நாகநாட்டில் ஒரு அரசு! முன்னையது பெரிதாக இருக்கலாம். நாகருடைய அரசு அளவு சிறியதாக இருக்கலாம்-எனினும், நிலையில், இரண்டும் ஒன்றே! இதுவும் அரசு, அதுவும் அரசு!! - என்று எடுத்துக் காட்டும் விடுதலை வீரம் கொழுந்து விட்டெரியும் ஆர்வப் பேச்சல்லவா. அது! எனவேதான் மேனி சிலிர்க்கிறது.
மலைவாழ் மாவீரர்கள் தமக்கென்று வகுத்துக்கொண்ட முறைப்படி விடுதலைப் போரினை நடாத்தி வருகின்றனர். வீரச் செயல்கள் நிகழும் போது, நாகர்களின் மேனி சிலிர்க்கிறது.<noinclude></noinclude>
4uy34hi6ga1anpvwu50lca0zrkegl9s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/386
250
642014
1928886
1928043
2026-04-30T08:39:47Z
Rabiyathul
5890
+ மேலடி
1928886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|362||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>362
'திராவிட நாடு' இதழில்
நாம் திராவிட விடுதலைக்கு வகுத்துக்கொண்டிருப்பது, அறவழி நின்று உரிமைக்கான கிளர்ச்சி நடாத்துவது; அதற்கான களங்களிலே ஒன்று. தேர்தல் களம்; அந்தக் களம் சென்று பணிபுரிந்திட, பொது மக்களின் நல்லாதரவு மிக மிகத் தேவை. சிவசாமி திரட்டித் தந்த நாலாயிரம், இந்த ஆதரவு தர, மக்கள் தயாராக உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவது கண்டுதான், கழகத் தோழர்களின்,
மேனி
சிலிர்க்கிறது. அண்ணா! என்று அழைத்து மதுரை முத்து, நான் தந்தது ஐந்து ஆயிரம் - என்று என்று கவனப்படுத்துகிறார். அதுமட்டுமல்ல! இந்தத் திங்கள் இறுதியில் இன்னும் பெற வருக என்று அழைக்கிறார்.
அந்த மாவட்டங்கள், இருமுறை வரவழைத்துத் தரும் தொகையை எமது மாவட்டம், ஒரே நாளில் தர இருக்கிறது என்று சுவையூட்டு கிறார். வடாற்காடு மாவட்டச் செயலாளர் தருமலிங்கம். எவ்வளவு என்று கேட்டு அவரே பதிலளிக்கிறார், பதினைந்தாயிரம் என்று.
இந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுடன் உறவாடி மகிழ்ந்து கொண்டி ருப்பதனால்தான், தம்பி! ஊர் விஷயம், உலக விவகாரம், இவை பற்றி எழுதாமல், நமது குடும்ப விஷயமாக மட்டும், குதூகலப்படத்தக்க பகுதியை இந்தக் கிழமை எழுதினேன். மகிழ்ந்திரு. ஆனால், விழிப்பாக இரு பணியாற்றியபடி இரு; புதிய நம்பிக்கையடன் நாடு நமது நோக்கத்தை அறிந்து, ஆதரவுதரும் கட்டம் பிறந்திருக்கிறது, மேனி சிலிர்க்கிறது.
அண்ணன்,
18.12.60<noinclude></noinclude>
t4js9255bvo0pp8u9s3yjsbj2rct6o5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/387
250
642015
1928887
1928044
2026-04-30T08:40:17Z
Rabiyathul
5890
+ மேலடி
1928887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||363}}{{rule}}</noinclude>கடிதம் : 129
தம்பி!
வாழு! வாழவிடு!
அவளும், அவனும்-கருத்துக்கதை இந்திய ஒற்றுமை-சர்.சி.பி.யின் கருத்து
உருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்கு முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது உனக்கும் அதைக் கூறவேண்டும் போலத் தோன்றுகிறது. கூறுகிறேன்.
சாலைகளும் சோலைகளும் கண்டு சொக்கிட, அவர்களுக்கு நேரம் இல்லை; சாலைகளும் சோலைகளும் அங்கு இல்லவும் இல்லை; ஏனெனில் அவை சிறிது சிறிதாக அழிக்கப்பட்டுப் போய்விட்டன!
சோலைகள் இருந்தால், புள்ளினம் நிரம்பி இருக்கும்; புதுப் புதுப் பண் அமைப்போருக்குப் பாடம் தருவது போன்ற முறையில், இசை எழுப்பும்; அவர்கள் கேட்டு இன்புற்றிருக்கலாம்! அவர்கள் என்பதுகூடத் தவறு-அவள் கேட்டு இன்புற்றிருப்பாள், அவனுக்குந்தான் அவள்பேச்சே இசையாயிற்றே! புள்ளினம் இல்லை, இசையுமில்லை, இருந்திருப்பினும் அவர்கள் அதனைக்கேட்டு மகிழ்ந்திட நேரமும் இல்லை! அவர்கள், உருளைகளின் ஒலி, உருண்டோடும் வண்டிகளின் இரைச்சல், இடித்தல் வடித்தல், அறுத்தல் எரித்தல் போன்றவைகள் எழுப்பிடும் பேரிரைச்சல், இவைகளுக்கிடையிலே உழன்று கிடந்தனர்! இசை கேட்டு இன்புற நேரமும் இல்லை! கிடைத்திடின், இசையை நுகரும் இயல்பே கூடப் பழுதுபடாமல் இருந்திருக்குமோ என்னவோ, கூறுவதிற்கில்லை. அவர்கள் உழைப்பாளிகள் - உனக்கு நான், எனக்கு நீ. -என்று பாடி ஆடிடும் நிலையினர் அல்ல!
அந்தக் கண்களிலே நான் கண்ட ஒளி! என்று கூறிக்கூறி மகிழ்ந்து கிடக்க அவனுக்கு நேரம் இல்லை; ஒளி இருந்த கண்கள் - உண்மை- ஆனால், அது முன்பு! இப்போது ஒரோர் சமயம் ஒளிச் சிதறல் தெரிகிறது, மறுகணம் மறைகிறது! அவள் அவனுக்காக வேலை செய்கிறாள்- அவன் அவளுக்காக உழைக்கிறான் அவனும் அவளும் உழைத்துப் பிழைக்கும் எளிய குடும்பத்தினர்.
கவிதைகளைப் படித்திட வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள். அவனிடம் மேலே உலவிடும் மேகத்தை, மங்கையரின் கூந்தலுக்கு<noinclude></noinclude>
nmswo1emwlp96qh68o8okv6xv82j9dg
1929027
1928887
2026-04-30T11:48:19Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929027
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம் : 129
தம்பி!
வாழு! வாழவிடு!
அவளும், அவனும்-கருத்துக்கதை இந்திய ஒற்றுமை-சர்.சி.பி.யின் கருத்து
உருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்கு முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது உனக்கும் அதைக் கூறவேண்டும் போலத் தோன்றுகிறது. கூறுகிறேன்.
சாலைகளும் சோலைகளும் கண்டு சொக்கிட, அவர்களுக்கு நேரம் இல்லை; சாலைகளும் சோலைகளும் அங்கு இல்லவும் இல்லை; ஏனெனில் அவை சிறிது சிறிதாக அழிக்கப்பட்டுப் போய்விட்டன!
சோலைகள் இருந்தால், புள்ளினம் நிரம்பி இருக்கும்; புதுப் புதுப் பண் அமைப்போருக்குப் பாடம் தருவது போன்ற முறையில், இசை எழுப்பும்; அவர்கள் கேட்டு இன்புற்றிருக்கலாம்! அவர்கள் என்பதுகூடத் தவறு-அவள் கேட்டு இன்புற்றிருப்பாள், அவனுக்குந்தான் அவள்பேச்சே இசையாயிற்றே! புள்ளினம் இல்லை, இசையுமில்லை, இருந்திருப்பினும் அவர்கள் அதனைக்கேட்டு மகிழ்ந்திட நேரமும் இல்லை! அவர்கள், உருளைகளின் ஒலி, உருண்டோடும் வண்டிகளின் இரைச்சல், இடித்தல் வடித்தல், அறுத்தல் எரித்தல் போன்றவைகள் எழுப்பிடும் பேரிரைச்சல், இவைகளுக்கிடையிலே உழன்று கிடந்தனர்! இசை கேட்டு இன்புற நேரமும் இல்லை! கிடைத்திடின், இசையை நுகரும் இயல்பே கூடப் பழுதுபடாமல் இருந்திருக்குமோ என்னவோ, கூறுவதிற்கில்லை. அவர்கள் உழைப்பாளிகள் - உனக்கு நான், எனக்கு நீ. -என்று பாடி ஆடிடும் நிலையினர் அல்ல!
அந்தக் கண்களிலே நான் கண்ட ஒளி! என்று கூறிக்கூறி மகிழ்ந்து கிடக்க அவனுக்கு நேரம் இல்லை; ஒளி இருந்த கண்கள் - உண்மை- ஆனால், அது முன்பு! இப்போது ஒரோர் சமயம் ஒளிச் சிதறல் தெரிகிறது, மறுகணம் மறைகிறது! அவள் அவனுக்காக வேலை செய்கிறாள்- அவன் அவளுக்காக உழைக்கிறான் அவனும் அவளும் உழைத்துப் பிழைக்கும் எளிய குடும்பத்தினர்.
கவிதைகளைப் படித்திட வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள். அவனிடம் மேலே உலவிடும் மேகத்தை, மங்கையரின் கூந்தலுக்கு<noinclude></noinclude>
bcy3y560isqes7z8e5zi4f7tpk3xec9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/388
250
642016
1928888
1928045
2026-04-30T08:40:47Z
Rabiyathul
5890
+ மேலடி
1928888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|364||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>364
'திராவிட நாடு' இதழில்
ஒப்பிட்டுக் காட்டியிருப்பதை எடுத்துக் கூறியிருப்பர் - அவன் இதழில் ஒரு புன்னகை தவழும் மறுகணம் மறையும்! தன் துணைவியின் குழலழகை எண்ணி மகிழ்வான்! எனினும், வேலை இருக்கிறதே - என்
செய்வான்?
அந்தக் கூந்தலின் சுருளழகும், மினுமினுப்பும், அதனைக் கோதிடும் போது, கரத்தின் வழி நுழைந்து நேரே இதயம் சென்று இன்பமூட்டிடும் களிப்பும், அவன் நினைவிற்கு வருகிறது. ஆனால், அதேபோது செய்து முடிக்க வேண்டிய வேலையின் அளவும் தெரிகிறது! மகிழ்ச்சியை, ஒரு பெருமூச்சால் விரட்டி விடுகிறான்- பிறகு? வேலை! வேலை!!
கூந்தலுக்கு இயற்கையாக அமையாத அழகினைக் கூட்டிட மினுக்குத் தைலம் தேடுகிறார்கள். வண்ணக்கலவை நாடுகிறார்கள். வைரம் இழைத்த அணி பணியினை, கோதி முடித்த கூந்தலில் செருகிக் கொள்கிறார்கள்-உள்ளவர்கள்!
அவள், வியர்வை பொழியும் நெற்றியிலே, வந்து வந்து விழுந்திடும் கூந்தற் சுருளை, கரத்தால் மேலுக்குத் தள்ளித் தள்ளி கூந்தலோ, எப்போது பார்த்தாலும், ஏதேதோ வேலை செய்தபடி இருக்கிறாயே, என்னையும் தான் கொஞ்சம் பாரேன்! என்று கெஞ்சுகிறது! அவளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை! பட்டுக்கயிறு கொண்டாகிலும், கட்டி முடித்துக் கொள்ளலாம்! ஆனால், அதற்குப் பணம் வேண்டுமே? உழைப்பில் கிடைப்பது உணவுக்கும் உடைக்கும் விடுதிக்கும் மட்டும் கட்டிவந்தாலே போதாதா, கூந்தலுக்கு அழகுதேடச் செலவிடக் கூடவா காணும்!
அவன், அந்தக் கூந்தலில் செருகிக்கொள்ள ஒரு அழகான அணிவேண்டும். என்று உணர்ந்தான். தன்கரம் கொண்டா எப்போதும் நெற்றியிலே வந்து விழும் கூந்தற் சுருளைத் தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டிருக்க முடியும்! கரத்துக்கு வேறு கடினமான வேலைகள் நிரம்ப உள்ளனவே!
எனவே, எப்படியாகிலும் கூந்தலில் அணிந்து கொள்வதற்கான அணி வாங்கியாக வேண்டும்! அவளிடம் கூடக் கூறக்கூடாது- வாங்கும் வரையில்! பிறகு! என்னென்னவோ விதமான கற்பனைகள், பாவம், அவனுக்கு! உழைப்பாளிதான், என்றாலும் நினைவு குழம்பிப் போகும் நிலை பெற்ற வயோதிகன் அல்லவே! கட்டிளம் காளை!!
அந்த நினைவு பிறந்ததும், அவனுடைய உழைக்கும் திறனே கூடத் தன்னாலே வளரலாயிற்று. வேலை செய்யுமிடம், விரைந்து செல்கிறான், கைக்கடிகாரம்,நேரமாகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டியதால்!<noinclude></noinclude>
21hn7j2ba9f3uj2xxmzutcbynt7hwey
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/389
250
642017
1928889
1928046
2026-04-30T08:41:17Z
Rabiyathul
5890
+ மேலடி
1928889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||365}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
365
அவள், அவனைக் காண்கிறாள்-அவன் புன்னகைக்குக் காரணம் கேட்காமல்! எப்படிக் கேட்பாள்! அவள், சிந்திய புன்னகைக்குக் காரணம், கூறினாளா? அவன் அவளுடைய கூந்தலுக்கு, வாங்கிச் சூட்டிடப் போகும் அழகிய ஆபரணத்தை எண்ணி மகிழ்ந்தான்! அவளோ, அவன் கரத்தில் கட்டப்பட்டிருந்த கடிகாரத்தின், தோல் பட்டைக்குப் பதிலாகப், பளபளப்பான முலாம் பூசப்பட்ட செயற்கை வெள்ளியாலான, பட்டையை (கற்பனைக் கண்களால்)க்கண்டு, புன்னகை புரிந்தாள்.
உழைப்பால் மெருகேறியிருந்த கரங்கள்-பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டையுடன் கடிகாரம் இருந்தால், அழகாகத்தான் இருக்கும்- அந்தப் பட்டை, கடையிலே கண்ணாடிப் பேழையிலே இருக்கும்போது உள்ளதைக் காட்டிலும், அழகு அதிகமாக விளங்கிடும். கடையிலே அதைக் காணும்போதெல்லாம், அவள் இதையே எண்ணுவாள். எப்படியும் அதை வாங்கிவிடவேண்டும்-அவருக்குத் தரவேண்டும்-நாமே அவர் கரத்தில் அதனைக் கட்டி விடவேண்டும் என்று எண்ணிக் கொள்வாள், அவனுக்கும் அதுபோலவே நினைப்பு-எப்படியாகிலும், கூந்தலில் செருகிக் கொள்ள அழகான அணி வாங்கிவிடவேண்டும் என்று.
அவளுக்குத் தன் கூந்தலிற் செருகிக்கொள்ள ஒரு அழகான அணி இல்லையே என்று நினைப்பு எழவில்லை.
அவனுக்குத் தன் கைக்கடியாரத்துக்குத் தோலாலான பட்டையை விட, பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டை இருந்தால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை.
அவன், அவள் கூந்தலழகையே எண்ணிக் கிடந்தான்.
அவள், அவன் கரத்திலே பளபளப்பான பட்டை இருக்க வேண்டும் என்பது பற்றியே எண்ணிக்கொண்டு இருந்தாள்.
அவளுக்காக அவன்! அவனுக்காக அவள்!
இவர்களின் தூய காதலைக் கண்டு. காதலர்களிடம், கஞ்சத்தனம் படைத்தோரிடம் குவிந்துகிடந்த பணம், உருண்டோடி வந்து, உறவாடி உரையாடிடவா, முடியும்? அதுதான், சிக்கிக்கொண்டு விட்டோம். இனி நம்மை ஏவி என்னென்ன சீரழிவுகளைச் செய்கிறார்களோ, என்றெண்ணி வாயடைத்துக் கிடக்கிறதே!!
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் அல்லவா! தூய காதலால் கட்டுண்டு கிடந்தவர்களுக்கும் வழி கிடைத்தது.<noinclude></noinclude>
q8y3hhq9fnre3g5xigqh17rm9mpf8du
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/390
250
642018
1928890
1928047
2026-04-30T08:41:48Z
Rabiyathul
5890
+ மேலடி
1928890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|366||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>366
'திராவிட நாடு' இதழில்
'கண்ணாளா! கண்ணை மூடிக்கொண்டு, தங்கள் கரத்தை இப்படி என் முன் நீட்டுங்கள்!" என்று கொஞ்சும் மொழி பேசினாள் கோதை. ஓர் நாள்.
இதென்ன பந்தாடும் சிறுமிபோலப் பேசுகிறாளே என்றெண்ணினான் வியப்புடன், அவளோ, செல்லக் கோபம் காட்டி, சேல்விழியால் களிப்பூட்டித், தேனை மொழியாக்கித் தருகிறாள்.
என்ன? என்ன? ஏன்? என்றெல்லாம் கேட்கிறான்-அவள் நினைவிலே தன்னை இழைத்துவிட்ட காதலன்.
சொல்கிறபடி கேட்க வேண்டும்! உம்-என்று மிரட்டுகிறாள்- கரத்தைப்பற்றி இழுக்கிறாள்.
"கண்ணே! அப்படியே திருப்பு முகத்தை!" என்று அவன் கட்டளை யிடுகிறான்.
''ஏன்?'' என்று அவள் கேட்கிறாள். தழதழத்த குரலில்.
“உன் அழகான கூந்தலிலே இடம் பெற்று புது அழகு பெறத் துடிக்கும் இந்தக் 'கொண்டைச் செருகு' உன்னைக் கெஞ்சுகிறது, பாரேன்!'' என்று கூறிக், கடையிலே வாங்கி வந்த அழகுமிகு அணியினைக் காட்டுகிறான்.
அவள், அதைப் பார்க்கிறாள்! வியப்புடன் பார்க்கிறாள்!! அகலக் கண்களைத் திறந்தபடி பார்க்கிறாள்!!
வெற்றி வீரன், பரிசாகப் பெற்ற வீரக்கழலை, காதலியிடம் காட்டும் போது, எத்துணை மகிழ்ச்சியும் பெருமிதமும் அவன் விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான். வெற்றி வீரன் போல்!!
"எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கி வந்தீர்களா! தங்களுக்குத் தான் என்மீது எத்துணை அன்பு! கண்ணாளா! இத்தனை கனிவு கொண்டுள்ள, தங்களை என் மணாளராகக் கொண்டுள்ள, நானே பாக்கியசாலி! புதிதாகக் கட்டிமுடித்த மாளிகையிலே ஓர் புறம் வெட்டப்பட்டிருக்கும் பளிங்குக் குளத்திலே, பட்டு மெத்தைகள் போடப்பட்டுள்ள உல்லாச ஓடம் ஓயிலாக ஆடி நிற்பதைக் கணவன் காட்டிடும்போது, அந்தக் காரிகைக்கு ஏற்பட முடியாத களிப்பு, என் அரசே! எனக்கு இப்போது ஏற்படுகிறது. என்னைப் பற்றிய எண்ணம், உமக்கு எத்துணை இருந்தால், என் கூந்தலுக்கு இந்தச் 'செருகு' இல்லை என்பதை அறிந்து, பெற்றுத் தந்திருப்பீர்!! அதைத் தரும் கரங்களைக் கண்களிலே ஒத்திக்கொண்டு, காலமெல்லாம் இருந்திடலாம் போல் தோன்றுகிறது!- என்றெல்லாம், நாடக மேடையானால்! பேசிடலாம் -<noinclude></noinclude>
4jjrzqga9ngdkv51uzgsv19pm3w8pvo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/391
250
642019
1928891
1928048
2026-04-30T08:42:20Z
Rabiyathul
5890
+ மேலடி
1928891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||367}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
367
இது வீடு -அவள் பேசவா முடியும்-பேசவா செய்தாள்! அவள் கண்கள், இதுபோல மட்டுமல்ல, காதற் காவியமே தீட்டிக் காட்டிற்று.
திரும்பு! நானே என் கரத்தால் கொண்டைச் செருகினை உன் கூந்தலில் சூட்டி மகிழவேண்டும் என்கிறான், அவன்.
புன்னகை பூத்திடும் நிலையிலே நிற்கிறாள் பூவை-அவன் எதிரில்! அவன் முகவாய்க்கட்டையைத் தடவியபடி!!
அவன், அவளைத் திருப்பி நிற்கச் செய்யும் எண்ணத்துடன், தொட்டு இழுக்கிறான்! துடியிடை, சிலையாகி நிற்கிறாள்!! வேண்டாம்! வேண்டாம்! என்று குறிகாட்டி நிற்கிறாள்.
இதற்கு வெட்கமா! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுமா! நாம், தனியாக இருக்கும்போது கூடவா!! -என்றெல்லாம் கேட்கத் தோன்று கிறது, அவனுக்கு-ஆனால், செயலல்லவா முக்கியம் பேச்சைவிட- எனவே அவன், அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தப்படி திருப்ப முயற்சிக்கிறான். அவன், கண்கள் துளிர்க்கின்றன! உற்றுப் பார்க்கிறான்! கண்ணீர்த் துளிகள், வெளிப்பட்டுக் கன்னத்தில் வீழ்கின்றன!
"அன்பே! என்ன இது?" என்று கேட்கிறான்-அவள் அவன் மார்மீது சாய்கிறாள். அணைத்தப்படி, கண்ணீரைத் துடைக்கிறான். தலையில் முக்காடிட்டது போலக் கட்டப்பட்டிருந்த துண்டு நழுவி விடுகிறது; கூந்தல் புரளவில்லை-கத்தரித்து விடப்பட்டுக், கழுத்தளவோடு நிற்கிறது!!
கூந்தலில் செருகிக் கொள்ள, அணிகொண்டு வந்தான்-சுருண்டு அடர்ந்து புரண்டு கிடக்கும் கூந்தல் இல்லை!!
எப்படி இருக்கும்? அதைத்தான், விலைக்கு வாங்கிய கடைக்காரன் தொட்டுப் பார்த்து 'பட்டு' என்கிறான்-அளவு எடுத்துப் பார்த்து அற்புதம் என்கிறான் - கொடுத்த பணத்தைக் கணக்கெடுத்து, கிடைக்கப்போகும் பணத்துடன் ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டி ருக்கிறானே!
ஏழையிடம் இருந்தது இந்த அழகு!
இந்த 'அழகு' தேடி அலைகிறார்கள், பணம் படைத்த பெருமாட்டிகள்.
மருத்துவர்கள் கொடுத்தவை அனைத்தும் பயனளிக்கவில்லை. செம்பட்டை போகவில்லை!! இதோ கற்றைக் குழல்! ஆனால் அது ஒரு ஏழையிடமல்லவா இருந்துவந்தது-மினுக்குப் பெறலாமல்!!
வாடைக் காற்றிலே முன்பு ஆடி இருக்கும் - இனி மாளிகையிலே கிடைக்கும் பூங்காற்று அல்லவோ, இதற்கு!<noinclude></noinclude>
p97lzthjzuxkbkrhfs162e8379dhekw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/392
250
642020
1928892
1928049
2026-04-30T08:42:51Z
Rabiyathul
5890
+ மேலடி
1928892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|368||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>368
'திராவிட நாடு' இதழில்
காதற்கணவனுக்குக் கைக்கடியாரத்துக்கான செயற்கை வெள்ளிப் பட்டை வாங்க, காரிகைக்குப் பணம் வேண்டும்! ஒவ்வொரு நாளும் கண்ணாடிப் பேழைக்குள் இருந்துகொண்டு, அந்தப் 'பட்டை' 'உன் கணவனுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன், இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு இருக்க முடியும்? உள்ளவன் எவனாவது வாங்கிக் கொண்டு போய்விட்டால்!! பிறகு, உனக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்படும்! உடனே வாங்கிக் கொண்டு, போ!!-என்று பேசிற்று பணம் இல்லை! என்ன செய்வது? பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி இருந்தாள்.
கூந்தல் தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரன், உற்றுப் பார்த்தப்படி இருந்தான், ஒவ்வொரு நாளும்-அவளை அல்ல-கூந்தலை!!
அலைந்து திரியும் இவளிடம் இவ்வளவு அழகான கூந்தல்- இதுபோல வேண்டுமென்று அங்காடி அங்காடியாக அலைந்து திரிகிறார்கள், சீமாட்டிகள்!-இந்தப் பெண்ணின் கூந்தல் கிடைத்தால்...!!- என்று நினைத்தது நடந்தது. கூந்தலை வெட்டி எடுத்துக்கொண்டு கொடுப்பதைக் கொடு என்றாள். அவன், பக்குவமாகப் பேசினான் - கூந்தல் போய்விடுகிறதே என்று கவலைப்படாதே- வாலிபப் பருவம் உனக்கு-கருகருவென விரைவிலே கூந்தல் மீண்டும் வளர்ந்து விடும்-வளராவிட்டால் கூட என்ன கவனிக்காமல் இருந்தால், கூந்தலில், சிக்கு ஏற்படும், சுண்டு சொறி கிளம்பும்-என்றான்!
-
வெட்டி எடுக்கப்பட்ட கூந்தலைக் கண்டதும், அவளுக்கு ஒரு கணம் வருத்தமாகத்தான் இருந்தது. நமது கூந்தலா இத்தனை நீளமாக, இவ்வளவு அடர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது!!-என்று எண்ணினாள். மறுகணமோ, அதை எடுத்துக் கொடுத்துவிடுவதால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப்போகும் பொருளை எண்ணிக் கொண்டாள், முகம் புதுமலராயிற்று!
அந்தப் 'பட்டை' அவளிடம் இருந்தது-அவன் கட்டித் தழுவியபடி. 'செருகு' சூட நினைத்துப் பார்க்கும் போது, கூந்தல் வெட்டி எடுக்கப் பட்டுப் போய்விட்ட அலங்கோலத்தைக் கண்டு கண்ணீர் உகுக்கும்போது!
சூட்டி மகிழ நினைத்தார் - அவளுடைய மகிழ்ச்சியைப் பாழாக்கி விட்டேனே-என்றுதான், அவள் கவலைப்பட்டாள்.
அவருக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை-நான் அவர் கரத்தில், பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டையை மாட்டி மகிழ்ச்சி பெற. அவர் மகிழ்ச்சியை இழக்கிறார்-என்று எண்ணினாள், நெஞ்சு நெகிழ்ந்தது.
'"கண்ணாளா! நெடுநாட்களாக, இதை வாங்கித் தங்கள் கடிகாரத் துடன் இணைத்துக், கரத்தில் அணிவித்துப் பார்த்து மகிழ ஆவல்-<noinclude></noinclude>
gfwxsbc0h4qrbr04g6thu8x76po3yb6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/393
250
642021
1928893
1928050
2026-04-30T08:43:23Z
Rabiyathul
5890
+ மேலடி
1928893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||369}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
369
அதை நிறைவேற்றிக் கொள்ளவே. கூந்தலை இழந்தேன்! கோபம் கொள்ளாதீர்! கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும்-இன்று கொண்டு வந்ததைப் பிறகோர் நாள் என் கூந்தலிலே செருகி மகிழலாம்! இப்போது இன்பமே! கரத்தை நீட்டுங்கள்!''-என்று கூறியபடி நின்றாள். அவன் ஏதும் பேசவில்லை, கரத்தை நீட்டினான். கடிகாரம் இல்லை!!
அவளுடைய கண்கள் கேள்விக் குறியாயின!
அவனுடைய அணைப்புப் பதிலளித்தது!
அந்தக் கடிகாரம்தான் இது-என்று கொண்டைச் செருகைக் காட்டினான் செருகு இருந்தது, கொண்டை இல்லை!
கடிகாரப்பட்டை இருந்தது, கடிகாரம் இல்லை!!
அவர்கள் இருவரிடமும் காதல் ததும்பி இருந்தது-கண்ணீராக வழிந்தது!
அண்ணா! கதை சுவைதான்-காதல் மாண்பினை விளக்கிடத்தான் செய்கிறது. எனினும், இந்தக் கதை யாது கருத்துடன் கூறிடுகிறாய். வெறும் கதை பேசும் பழக்கம், நமக்குள்ளே கிடையாதே!-என்றுதானே தம்பி! கேட்கிறாய். காரணம் இருக்கிறது!
இந்திய ஒற்றுமை-பாரதப் பண்பாடு-ஏக இந்தியா-எனும் எழிலோவியம் காணவேண்டும் என்று நேரு பண்டிதர், துடியாய்த் துடிக்கிறார்-அதனை அவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், சொல்லியும் வருகிறார். கனிவாகப் பேசுகிறார் சில வேளை, கடுங்கோபம் காட்டுகிறார் மற்ற வேளைகளில். விளக்கம் தருகிறார் சில சமயங்களில், இது உணரப்பட வேண்டியது, உண்மை என்று உபதேசமளிக்கிறார். மற்ற வேளைகளில். 'ஏக இந்தியா' என்பது பற்றிப் பேசிப் பேசி. அவரே, அதிலே 'இலயித்து' விட்டாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது, அவருடைய போக்கைக் கவனிக்கும்போது.
'ஏக இந்தியா என்பது இன்றுள்ள அரசியல் அங்காடியிலே மதிப்புள்ள பொருள்-எனவே அதைக் கொள்வோம், என்ற போக்கினர் உளர்-அவர்களின் உரையைக் குறித்து, நாம் கவலைப்படத் தேவை யில்லை, காற்றடிக்கும் பக்கம் திரும்புவர்.
பண்டிதர்போல, நெகிழ்ச்சியுடன், 'ஏக இந்தியா' என்ற தத்துவம் பற்றிப் பேசுபவர், போக்குதான், அனுதாபத்துடன் கவனிக்கத்தக்கது.<noinclude></noinclude>
4fnrgo8hndwxxbwu2uv923llreutj8s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/394
250
642022
1928894
1928051
2026-04-30T08:43:53Z
Rabiyathul
5890
+ மேலடி
1928894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|370||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>370
'திராவிட நாடு' இதழில்
"ஆமாம், அதனால் என்ன? எல்லாம் ஒண்ணுதான், இதை எவன் மறுக்க முடியும்? எது எங்கே கட்டினா என்ன? இவனுங்க யாரு இதைக் கிளப்பிவிட!!"-என்று இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிடும். காமராஜர்களின், போக்குப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை! ஓட்டுப் பெட்டியிலே ஓட்டை விழுகிற வரையிலே இப்படிப்பட்டவர்கள் இதுபோலத்தான் ஒய்யாரப் பேச்சுப் பேசிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்.
தம்பி! நான் கவனிப்பது, உள்ளபடி, நெகிழ்ச்சியுடன், நம்பிக்கை யுடன், 'ஏக இந்தியா' என்ற கொள்கையை அணைத்துக் கொண்டிருக்கும் சுயநலமற்ற, பதவிப்பற்று அற்ற, சிலருடைய போக்குப் பற்றித்தான்.
இந்தத் திங்கள், டில்லியில் 'பாரதம்' பற்றிப் பண்டித நேரு பேசுகிறார், பாசம் நிரம்பிய பேச்சு என்று கூறலாம். துக்கம் தோய்ந்த குரலிற் பேசினார் என்று கூடக் குறிப்பிடலாம். தென்னாட்டுக்காரர்கள் நடாத்தும் கல்விக்கூட விழாவிலே பேசும்போது, 'இந்தியா ஒன்று' என்ற உணர்வு இருக்க வேண்டும். மொழி, மாநிலம் என்பவை காரணமாகப் பேத உணர்ச்சி, பிளவு மனப்பான்மை கூடாது-அது கொடும் தீது- என்றெல்லாம் பேசி இருக்கிறார்.
அதற்குச் சின்னாட்களுக்கு முன்பு, பம்பாயில், 'மேதைகள்' சிலர் கூடி, இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேசி இருக்கிறார்கள்- சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர், ஆச்சாரிய கிருபாளினி, முன்ஷி, ஆகியோர்.
இவர்களின் பேச்சிலே, வாதங்கள், விளக்கங்கள், மறுப்புக்கு மறுப்புகள், போன்ற இலட்சணங்கள் நிரம்ப உள்ளன-மன நெகிழ்ச்சி- பண்டிதரிடம் உள்ளது போன்றது-இருப்பதாக எனக்குப் படவில்லை.
சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர் விஷயத்தையே, தம்பி! கவனித்தால். அவர் இந்திய ஒற்றுமை குறித்து மட்டுந்தான், திறம்படப் பேசக் கூடியவர் என்று சொல்வதற்கில்லை-எதிர் தரப்பிலே இருக்க நேரிட்டாலும், இதே திறமையுடன், இந்தியா ஒன்றாக இருப்பது நல்லதுமல்ல, நடைபெறுவதும் சாத்தியமில்லை என்று மன்றத்தினர் பாராட்டத்தக்க விதத்திலே பேசக் கூடியவர் என்பது விளக்கமாகும்.
சர்.சி.பி. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான திருவானாக இருந்தார். அப்போது, அவருடைய ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தத் தக்க, அகன்ற கண்களின் ஒளி, அரண்மனைக்கே ஓர் புதுமெருகு கொடுத்தது என்று பேசினர்! மக்களின் எதிர்ப்புச் சக்தியை 'பத்மநாப தாசரின்' சார்பிலே நின்று, அடக்கிய ஆற்றல் மிக்கவர், சர்.சி.பி.
அப்போது வெள்ளையர் ஆதிக்கப் படலம் முடிவுற்று, அவர்கள் இங்கு உள்ளவர்களை ஆட்கொண்ட படலம் ஆரம்பமாயிற்று - வைதீக பாஷையிலே கூறுவதானால், தம்பி! சுதந்திரோதயம், ஏற்பட்டது!<noinclude></noinclude>
dt65yenbacgab54hip1xunvuv8c1teq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/395
250
642023
1928895
1928052
2026-04-30T08:44:24Z
Rabiyathul
5890
+ மேலடி
1928895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||371}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
திவான் சர்.சி.பி. என்ன செய்தார்!
371
பாரதம் ஒரே தேசம் - பிரிக்க முடியாதது-பிரிக்கக்கூடாது-என்று, இன்று பேசுகிறார். உம்! ஆற்றலுடன்!! ஆற்றலுக்கு என்ன பஞ்சமா!!
அன்று, அதே ஆற்றலுடன், சர்.சி.பி. சொன்னது யாது?
திருவிதாங்கூர் தனி அரசு! அதை ஏக இந்தியாவில் பிணைத்து விடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்-என்று முழக்கமிட்டார்.
தம்பி! வெறும் பேச்சோடு இல்லை!! பாகிஸ்தானோடு திருவாதாங்கூர் தனியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் -பண்டமாற்றுமுறை ஏற்பாடாகும் - இந்தியாவிலிருந்து அரசி வராவிட்டால் கவலை இல்லை. பாகிஸ்தானம் அரிசி தரும் - என்று கூறினார் - ஏற்பாடுகளைக் கூடத் துரிதமாக்கினார்.
நாடு துண்டாடப்படுவது கூடாது என்று இன்று பேசுபவர். அன்று, திருவிதாங்கூர், தனி அரசு நடத்த முடியும் என்று பேசினார்.
எனவேதான், தம்பி! அவர் போன்றாரின் பேச்சை, மேதைகளின் பொழுதுபோக்கு என்ற அளவிலேதான் கவனிக்க வேண்டும் -அது ஒரு பிரச்சினை அல்ல, என்று நான் கருதுகிறேன்.
பண்டிதரின் போக்கை அவ்விதம் என்று தள்ளிவிடுவதற்கில்லை.
கதையிலே வருகிற காதலர்போல், அவருடைய நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது.
எதை இழந்தேனும் பாரத ஒற்றுமையைப் பெற்றாக வேண்டும் - எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்படினும், ஏக இந்தியா எனும் ஏற்பாடு, பழுதின்றிப், பங்கமின்றி இருந்துவர வேண்டும் என்று, பண்டிதர் கூறுகிறார்.
அதற்காக, எதையும் இழக்கத் துணிகிறார் என்பது மட்டுமல்ல. எதனையும் அழித்தொழிக்கவும் தயாராகிறார்.
"வங்கமே! சிங்கமெனச் சீறாதே! பாரத ஒற்றுமைக்காக, எதையும் இழந்திடச் சம்மதிக்கவேண்டும். பெருபாரியானாலும் சரி, வங்கமொழிச் சிறப்பானாலும் சரி, கவலைப்படக்கூடாது".
"பாஞ்சாலமே! வீரக் கோட்டமே! உனக்குக் கூறுகிறேன். உன் தன்மானம் பறிக்கப்படுகிறது என்றாலும், பாரத ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால் கூட, அன்னை பாரத தேவி அழுதிடுவாள்! அவள் வாழ, நீ வதை படுவதானாலும், நஷ்டம் இல்லை! வீரப் புதல்வர்கள் வெஞ்சிறையில்<noinclude></noinclude>
7heb2z9hlklsl81hli3st86wqjbr1rx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/396
250
642024
1928896
1928053
2026-04-30T08:44:55Z
Rabiyathul
5890
+ மேலடி
1928896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|372||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>372
'திராவிட நாடு' இதழில்
உழல்கிறார்களே. என்பதை எண்ணிடும் போது வேதனையாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் - பாரத மாதாவுக்காக".
"இரத்தக் காடாகிறதே பாஞ்சாலம், என்கிறாய், பாஞ்சாலத்து வீரர்கள் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். குருதி கொட்டுகிறார்களே! இரத்தக் காடாகிறதே, பாஞ்சாலம்!" என்கிறாய், "வீரக் கோட்டத்துத் தீரர்காள்! அந்த இரத்தம் வீண்போகவில்லை. பாரத மாதா குளித்திடும் பன்னீராக மாறுகிறது. பாஞ்சால மக்கள் கொட்டும் இரத்தம்' என்று 'கவிதை பாடுகிறார்.
''செச்சேச்சே! என்ன சிறுமைக் குணம் இது. அந்த அணை எங்கே, இந்தத் தொழிற்சாலை யாருக்கு? எமக்கு என்ன பங்கு? இங்கு எவருக்கு உரிமை? என்றெல்லாம், பேசிப் பேசி, மாநிலம் மாநிலம் என்று கூச்சலிட்டுக் கிடக்கிறீர்களே, சரியா? முறை பாரதம் ஒரு நாடு -ஒரே நாடு -உங்கள் நாடு-நாம் நாடு - இதிலே எது எங்கே இருந்தால் என்ன?" என்று சீற்றத்துடனே பேசுகிறார், தெற்குச் சீமையினர், உரிமை, பங்கு, உறவுமுறை இவைபற்றிப் பேசும் பேதெல்லாம்.
அவருடைய மனம், 'பாரத தேசம்' ஒரே நாடு ஒரே அரசு என்ற தத்துவத்தில் இலயித்துவிட்டிருப்பதால், உண்மை நிலைமைகளை அவர் காண மறுக்கிறார்-எவரேனும் சுட்டிக் காட்டினாலோ, சீறுகிறார்.
எனக்குத் தம்பி! அவருடைய போக்குப்பற்றி நினைக்கும்போது, கதையிலே காண்கிறோமே, கடிகாரப் பட்டைக்காக கூந்தலை விற்ற காரிகை, கூந்தல் செருகுக்காகக் கடிகாரத்தை விற்ற கணவன், இவர்கள் நினைவுதான் வந்தது - உள்ளபடி.
'பாரதம்' காண்பதற்காக, வங்கத்தை வதைத்து, பாஞ்சாலத்தை படுகளமாக்கி, திராவிடத்தைத் தேயவைத்து, இவர், 'ஏக இந்தியா' எனும் அணியினைப் பெற்றாலும், செருகு உண்டு, கூந்தல் இல்லை! கைப்பட்டை உண்டு. கடிகாரம் இல்லை! என்பது போன்ற நிலையைத் தான் உண்டாக்கிவிடும், என்ற அச்சம் எழுகிறது.
'திராவிடம்' என்ற எழுச்சியும் உணர்ச்சியும் வெட்டி எறியப் பட்டுப், பாரதம் என்ற உணர்ச்சியும் கிடைக்காமல், ஓர் 'சூன்ய' நிலைமை ஏற்படுமோ என்று கூட அஞ்சுகிறேன்.
23.12.60
அண்ணன்,
அண்ஐதுர்<noinclude></noinclude>
r48dlzj7z4g2sj0v3qch1209gxyt7fq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/397
250
642025
1928897
1928055
2026-04-30T08:45:26Z
Rabiyathul
5890
+ மேலடி
1928897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||373}}{{rule}}</noinclude>கடிதம் : 130
இல்லறம் இன்பப் பூங்கா
(பொங்கல் மலர்)
தம்பி
யோகி பாரதியாரின் காதல் கவிதை
பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக!
இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை
உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு
இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம்
என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண் டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய். இல்லை! இல்லை! நானறிவேன் எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே. இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude>
o959f00x89debqkpx5eqc0cxoky9xks
1929030
1928897
2026-04-30T11:51:18Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம் : 130
இல்லறம் இன்பப் பூங்கா
(பொங்கல் மலர்)
தம்பி
யோகி பாரதியாரின் காதல் கவிதை
பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக!
இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை
உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு
இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம்
என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண் டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய். இல்லை! இல்லை! நானறிவேன் எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே. இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude>
09y30ui4deoa13cd8ooe3rkrysiy0zf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/398
250
642026
1928898
1928056
2026-04-30T08:45:56Z
Rabiyathul
5890
+ மேலடி
1928898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|374||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>திராவிட நாடு இதழில்
நம் நெஞ்சம் நேசத்தால் நெகிழ்ந்திட்ட நாள் தொட்டு, என்னால் இயன்றதனை இம்மியும் வஞ்சமின்றி எடுத்து வந்து தருகின்றேன். ஏற்கின்றாய்; மகிழ்கின்றாய்! முத்து இது அல்ல, மூலையில் போட்டுவிடு என்றுரைக்கும் தாய் உண்டோ, தன் சிறுமதலை தரும் கடலலையால் ஒதுங்கிவந்து உடைபட்ட கிளிஞ்சல் துண்டு! அஃதேபோல அளித்திடும் பொருளுக் கெல்லாம். அங்காடிக் கணக்கைவிட்டு, அகத்திலே ஊறுகின்ற அன்பு பெய்திட்டதென்று, ஆங்கதனைத்தான் கொண்டு அக மகிழ்ந்து இருப்பது தான், உடன்பிறந்தார் காட்டும் உவகைமிகு பாசமாம். இன்றும் அதுவே முறை! என்றென்றும் அம்முறையால், வாராது எக்குறையும்! குன்றின் மேல் வீழும் கொன்றை, கண்ட நம் புலவோர் பேழையுள் கிடந்திட்ட பொன்னுக்கு நிகர் என்றார்; அது பண்பு. அவர் வழியில் நாம் வந்தோம். நாம் தாழ்ந்தால், அவர் தம்மைப் பிறர் இகழவைக்கின்றோம் என்றாகும். ஆகையினால், என்றென்றும் நம் நெஞ்சில் தமிழ்ப்பண்பு ஏற்றம் பெற்றாளட்டும்.
அண்ணன் தருகின்ற பொருளைப் பெறுங்காலைத் தந்த பொருள், தர எண்ணும் பொருளைச் சுட்டிக்காட்டிடும் வகைதான், என்று எண்ண வேண்டும். மலர் தொட்ட கரம் காட்டும் மணத்தைக் கண்டால், மலர்த் தோட்டம் பெறவேண்டும் என்ற எண்ணம் எழுதல் வேண்டும்; அஃதேபோல, அண்ணனால் இயன்றதனை அளிக்கின்றான், அதனைப் பெற்று, அவனால் ஆகாதனவற்றை நாம் முடித்து வெற்றி காண்போம். என்றெண்ணி இகல் வென்று, வாழ்க நீயும். இனிதாக நீ வாழுங்காலை, நானும் இடுக்கணிலா உழன்றிடுவேன்? இல்லை! வாழ்வேன்!!
இன்றுனக்கு விழா! இல்லம் புதுக்கோலம் கொள்ளும் நாள்! அந்தக் கோலம், அழகளிக்கும், ஏனென்றால், காணும்போது. உள்ளம் களிப்புப் பொங்கும் காரணத்தால். பொங்கற் புதுநாள் போந்தது என்றால், மங்கிக் கிடந்ததெலாம் தங்கமென்றாகும்காண் வெளியெல்லாம் பொன்பரப்பி, வேலியெல்லாம் மணி இழைத்து. வைத்திருக்கும் இந்த எழில், தந்ததெவர்? உழைப்பாளி! அவர், சதிராடிக் காட்டிடும் கதிராளைக் கண்டதாலே, மயங்கிடாமல், நின்றவளை, அழைத்து வந்தார். மனைதனுக்கு! அவள் ஏறிவரும் வண்டிக்கு எருதுகள்தான் பூட்டியது. என்றாலும். எழிலரசி ஏழெட்டுக் குதிரைகளைப் பூட்டியதோர் நல் இரதத்தில் புறப்பட்டு உலா வந்தால்; ஊர் என்ன கவின் பெறுமோ, அதற்கு நேர் இஃது, இல்லை, அதனையும் மிஞ்சிடும் எழில்மிக்க காட்சி இது என்பதனை, இன்றல்ல, என்றோ அறிந்தார், நம் தமிழர், அதனால்தான், மன்னவனைக் கண்டிட்ட மாப்புலவர் கூறி நின்றார். நின்கரத்துச் செங்கோற்குக் காப்பு எது கூறுவன், கேள்! ஏரடிக்கும் சிறுகோல்!! என்றியம்பினர்; வியந்தார்.
இன்றும், ஏதேதோ தொழில், ஏற்றம், மாற்றமிகு வினைபலவும். காண்கின்றோம், களிக்கின்றோம். என்றாலும், அச்சாணியாக இன்றும்,<noinclude></noinclude>
h2ls7zlk744rn3jr0ycldeiq0psxddc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/399
250
642027
1928899
1928057
2026-04-30T08:46:28Z
Rabiyathul
5890
+ மேலடி
1928899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||375}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அமைந்து இருப்பது முன் ஆன்றோர்கள் மெச்சிப் புகழ்ந்திட்ட உழவு தான்; மறுப்பு இலை. அந்த உழவு, கனிவு பெற்றளிக்க, அந்தச் சுவை உண்டு மகிழ்ந்திடத்தான், மனைதோறும் கூடுகின்றார், மாடுகன்றும் போற்றுகின்றார். பொங்கலோ பொங்கலென்று! பாடி மகிழ்கின்றார், திருநாள் கொண்டாடும் திரு இடத்து மாந்தரெலாம். அந்த நன்னாளிலே, அருகே கரும்பிருக்க, அதைக் காண மனமின்றி, ஆரணங்கின் மொழி கேட்டு, பலவின் கனிமொய்க்கும் பான்மை யிலே, நீ இருக்க, எனை என்ன, உனக்கேற்ற பொருள் அளிக்கும் திறன் பெற்றோன். என்றா எண்ணப்போகின்றாய்? உம்! நானறிவேன், இன்றுனக்கு, பொன்னும் பொருளும் மின்னலிடையாள் வீசும் கன்னல் மொழியில் உண்டு! குழலுண்டு! யாழுண்டு! கூத்துண்டு! பாட்டுண்டு!! இவை எல்லாம் இருக்கை யிலே, உனக்கின்று, நானென்ன உயர்ந்த பொருள் அளித்திடுவேன்! முயற்சியும் வீணே! பூத்தமலரின் புதுத்தேனைத் தானுண்டு, பாடி வட்டமிடும் வண்டினுக்கு, நான் இன்று, 'பருகப் பால் உண்டு!' என்றழைக்க வருவது, நன்றல்ல, நானறிவேன்.
மகிழ்ந்திருக்கும் இவ்வேளை, மகிழ்ச்சியே வினையென்று, மயங்கிடுதல் கூடாது, என்று மூதறிஞர் இயம்பியதை மட்டும், மறவாதிருப்பதுதான், மாண்பு; தமிழர்நெறி.
மகிழ்ச்சியே மயக்கம்; மன்னுயிரைத்தான் மாய்க்கும்! என்று கூறினோர் அல்லர் நம் தமிழர், எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டாம், என்றிருத்தல் நன்றன்று; வினை வித்து; மகிழ்ச்சி, விளைவு; அந்த விளைவு அவ்வளவும், தின்று தீர்த்திட்டால், பின்வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவை யினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன், இருந்திடாது 'வித்து' எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொளல் வேண்டும்; அங்ஙனம், முறை வகுத்துக் கொண்டால் தான், வாழ்வில் வளம் காண வகை கிடைக்கும், தொடர்ந்து.
மகிழ்ச்சி, மயக்கமாகுதல் கூடாது; மது மாந்திடும் மந்தி போன்றதன்று மனிதகுலம்! மகிழ்ச்சி, புது முயற்சிகட்கு ஊக்குவிக்கும் மாமருந்து, மதுவன்று.
கரும்பளித்த கழனி, மீண்டும் கரும்பளிக்கக் காண்கிறோம்; மண் தான், எனினும் மதிமிக்க செயலன்றோ! மனிதன், அதனினும் மேம்பட்டன்றோ இருத்தல் வேண்டும்? எனவே, ஒரு விளைவு, மறுவினைக்குத் துவக்கம்; மகிழ்ச்சி வினையின் இறுதிமுடிவு அல்ல; வினைப்பயன்; புதிய வினைக்கு அழைப்பு. புதிர் அல்ல, புண்யம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும் இஃதல்ல; பொருள் பொதிந்த உண்மை: தமிழர்க்கு இது புதிதுமன்று.<noinclude></noinclude>
211zz2y2774uzqblh48x1uqcspx6r9u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/400
250
642028
1928900
1928058
2026-04-30T08:46:59Z
Rabiyathul
5890
+ மேலடி
1928900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|376||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>திராவிட நாடு இதழல்
தாயின் அழகைப் பெற்றிடும் மகவு, பிறகு தாயுமாகித், தன் அழகளித்துச் சேயை அளித்திடும்; காண்கிறோம் அன்றோ!
அதுபோலவேதான், மகிழ்ச்சி பெறுகிறோம் விழாக் காரணமாக, எனில், அந்த மகிழ்ச்சியில் திளைத்துப் பிறகு, தொடர்ந்து, தொகை தொகையாக, வகை வகையாக, மகிழ்ச்சி பெற்றிடச் செயலில் ஈடுபட வேண்டும்.
குழலில் உள்ள துளைகளின் மீது விரல் சேர்க்கும் இசை வல்லான், என் செய்யக் காண்கின்றோம்? எல்லாத் துளைகளையும் இறுக மூடிவிட்டால், இசை தானும், எங்கிருந்து எழும், கூறு? இசையின் வகைக்கேற்ப, அளவுக்கேற்ப, இன்னின்ன நேரத்தில், இன்னின்ன முறையோடு, விரலுக்கும் குழலிலுள்ள துளைகட்கும் தொடர்புண்டு என்பது இசைவல்லோன், கண்டறிந்த இலக்கணம், அதற்கேற்ப, மூடுகிறான் ஓர் துளையை, முற்றும் ஒலி பிறக்கும் நிலையிலே வேறோர் துளையை விட்டுவைத்துக் காட்டுகிறான், தொட்டும் தொடாததுமாய் விரல் இருக்கும் சில துளையில், பாதி, கால், அரைக்கால் என்று பாங்கறிந்த அளவுமுறை தானறிந்து, விரல்களையே வினை செய்ய விடுகின்றான்; அதனால் தான் ஏழிசையின் இனிமைதனை, மானிடர் கேட்டு இன்புற்று மகிழ்ந்து இருக்கின்றார்; நாகமும் தீண்டாதாம், நஞ்சு கொண்டதெனினும்!
வாழ்க்கையே, அதுபோல்தான்.
அளவு, தொடர்பு, அறிந்து வினை செய்து, எதற்கும் முறை வகுத்து, இன்பம் காண்பது, வாழ்வு! அதுவும், மூழ்கிச் செயலற்றுப் போக அல்ல; அது மடமை! துய்த்திடலாம் வாழ்வின் சுவை; துஞ்சிட அல்ல: வினை மேற்கொள்ள; தொடர்ந்து செயலாற்ற; ஏனெனில், இயங்குதல் வாழ்க்கையின் இலக்கணம்; இனியன புரிதல் அறநெறி யாகும்; அறநெறியதனை அடவி ஏகாமல், மாடும் மனையும் சூழ இருந்திடும் மாண்புமிகு இல்லறம் அதனிலேயே, பெற்றிட இயலும் என்று கூறினர், தமிழர்; துறவோரும், இவரில்லை எனில் இல்லை யாங்கண் என்றார் உணர்ந்து.
இல்லறத்தாருக்கு நல்ல விழாவாக அமைந்திருப்பதுதான், பொங்கற் புதுநாள். எனவேதான், இன்று, ஈசன் திருவடி நிழலைச் சேர்ந்திடும் காதைப் பற்றிப் பேசிடும் கவலை இல்லை; பொங்கிற்றா பால்! என்று ஒருவருக்கொருவர் கேட்கும், பூரிக்கும் காட்சி காண்கிறோம்.
"எப்படியும் வந்திடுவார் என்றாள். அவள் ஆரூடம் இப்படிப் பலிக்குமென்று, எண்ணவே இல்லை" என்று இருபதாண்டு தாங்கும் எழிற்கொடியைத்தான் பார்த்து, இதுபோல மும்மடங்கு ஆண்டு கண்ட<noinclude></noinclude>
mos8iynqzecxcycgi8v9pl04mu6znmd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/401
250
642029
1928901
1928059
2026-04-30T08:47:30Z
Rabiyathul
5890
+ மேலடி
1928901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||377}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
முதியவள் கூறி நிற்க, "நானென்ன அவருக்காக, ஏக்கமா கொண்டி ருந்தேன்? அவர் வந்த காரணமும், எனைக் காணத் தானா! இப்பக்கம் ஏதேனும் அலுவல் இருந்திருக்கும்; அக்காரணம் பற்றி வந்திருப்பார், மனைவுரையில்” என்றந்த மலரனையாள், இடிக்கின்றாள் சொல்லாலே. வெடுக்கென்று இதழ் கடிக்கும் தன் மகவுக் கன்னத்தை. இதுகேட்டு, இலேசாகத் தட்டுகிறான் பெற்றெடுத் தோன்; "ஏதேது! மெத்தவும் நீ; போக்கிரியாகிவிட்டாய்! உன்னைக் கட்டித் தழுவி நான், கசக்கிவிடப் போகிறேன், பார்!'' என்று கூறுகிறான், குழவிக்காம் அப்பேச்சு! ஆனால், பார்வை? அவள் மீது!!
"இதைப் பாரண்ணா! இதைப் பார்! பால் பொங்குகிறது பார்! பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!'' என்று கூவுகிறாள், அவன் உடன்பிறந்தாள்; அவள் செங்காய்!
“ஏடா உன் அண்ணன், ஏதுகூற முனைந்திடினும், இழுத்து வந்து பேசுவானாம் காதல் கதை எல்லாம்; கடிந்துரைத்தார் ஓர் 'கனம்' கால்வாய் திறப்பு விழாவன்று; அவர் உரைத்தது போலவா உன் அண்ணன் பேசுகிறான்?" என்று கேட்டிடுவார், காதற் காவியத்தின் கடைசி ஏடுவரை, படித்து முடித்திட்ட முதியோர், இல்லத்துப் பெரியோர். அவரல்ல பேசுவது; அமைச்சர்! அவர்க்கும் கோபம், காதல் மீதல்ல; என்மீது! அதற்கும் காரணம், காதல் அவர்க்கெல்லாம் காஞ்சிரமுமல்ல!! எனினும், ஏன் இதுபோல் அவர் பேசித்திரிகின்றார் என்பாயேல், மாசு எனக்குச் சேருமாம்; மனப்பால் குடிக்கின்றார். அறம் பொருளை உரைத்ததுடன், வீடு காண அழைத்துச் சென்றாரில்லை, அருங்குறளை ஆக்கியோனும், 'இன்பம்' தந்தார்; அஃது இயற்கை எனும் காரணத்தால். அஃது அற்றுப்போமேல், உயிரில்லை, ஊரில்லை, ஊராளும் முறையு மில்லை; ஊராள்வோர்க்கோ இது புரியவில்லை.
நானுங்கூடத் தீதோதான் காதற்றிறமுரைத்தல். ஆன்றோரெல்லாம். அதனை வெறுத்துத்தானா கூறியுளார் என்பதனைக் கண்டறிய, ஏடு பலவும் பார்த்தேன், அதனுள் இருப்பதனை எடுத்தியம்ப வல்லோர் தம்மை அடுத்துக் கேட்டுப் பார்த்தேன்; அமைச்சர் பேசும் பேச்சு, பேச்சாக இருத்தல்கூட, அமைச்சராய் அவர் இருக்கும் காரணத் தாலேதான். வாழ்வுக்கு நல்லோர்கள் வகுத்த நல்லறமே காதல் என்கின்றார்; அறிகின்றேன்.
காதலே யுலகம்! காதலே வாழ்க்கை! காதற் களிப்பே கடவுட் களிப்பாம்; காதலின் மறுப்பே கவலையுந் துயரும்!<noinclude></noinclude>
dei110aumer00z49o7cph4fx1gygw81
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/402
250
642030
1928902
1928060
2026-04-30T08:48:03Z
Rabiyathul
5890
+ மேலடி
1928902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|378||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>'திராவிட நாடு இதழில்
காதலின் அளிப்பே கட்டறு மின்பம்! காதலால் உயிரைக் கடவுள் படைத்தான். காதலித் தின்னுங் கண்ணிலம் பெருகவே! விண்மீன் கணங்களு மிளிர்வன காதலில்! தண்ணுங் காற்றுந் தவழ்வன காதலில் உண்கனி விளைவதும் உள்ளக் காதலால்! புன்னகை யொன்றாற் பூத்திடுங் காதல்; கண்கள் கதுவிக் கனவுகள் காணும்; இன்னிய காதலால் எண்ணம் உயரும்; பொன்னொளிர் வனப்பும், புதுப்புது மகிழ்வும், நாளொரு மேனியும், நாண்மல ரழகும், வாள்விழி நோக்கின் வரப்பிர சாதம். புள்ளின் பாட்டும், பூவின் மணமும் கள்ளுண் வண்டும், காற்றின் உயிர்ப்பும் அன்னமும், மானும், அழகிய கிளியும், வன்ன வியற்கையும், வசந்தப் பசுமையும், காதலர் தூதே! காசினி யெல்லாம்
காதலர் கடிதம், காதலர் பேச்சு!
காலமும் இடமும் காதலை வெல்லா; கால மிடத்தைக் காதலே வெல்லும்; காதலே காய கற்பமு மாகும்;
காதலே தேவர் சோதிக் கனவாம்;
கண்களாற் பேசிக் கருத்திரண் டணைத்துப்
புண்களை யாற்றிப் புலன்களைப் பற்றி,
இமையவ ரின்பமும் இணையிலா இன்பம் இமையி னளித்திடும் இன்பமே காதல். காதல் வாழ்க! காதலர் வாழ்க! காதலால் வாழ்வுக் கற்பக மோங்குக! ஓங்குயர் காதலே உயிர்க்கடை யாளம் நீங்காக் காதலே நித்திய வாழ்வு;
உ
காத லற்றவர் கட்டையைப் போல்வர்; உயிரின் இன்பமே, உயிரெனும் பசிய
பயிரினை வளர்க்கும் பைம்முகி லேயுனைப் பிரிந்து வாழேன்; பிதற்றியுன் பெயரை
விரிந்த வுலகெலாம் வெறிகொண் டலைந்தேன்;
நீவே றில்லை; நான்வே றில்லை; பூவே றில்லை; நிறம்வே றில்லை; நானுன் யாக்கை; நீயென் னாவி;<noinclude></noinclude>
lw8gbo29o1ki9xcn94eaf1pa7hfwohc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/403
250
642031
1928903
1928061
2026-04-30T08:48:34Z
Rabiyathul
5890
+ மேலடி
1928903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||379}}{{rule}}</noinclude>‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நானுன் வாழ்க்கை; நீயென் வையம்; உள்ளந் தாராய்; உயிரைத் தாராய்; உள்ளம் வணங்கும் ஒன்றிய காதலே!
379
எப்படித் தம்பி, கவிதை!! ஏதேது, அமைச்சர்கள் சொல்லச் சொல்ல, அண்ணன், அகவலாகக் கொட்டுகிறான் போலும், காதல் பற்றி; என்று தானே எண்ணிக் கொள்கிறாய்; தம்பி! இது நான் தொடுத்த கவிதையே அல்ல!! வாழ்வு எனும் மாயப் பைசாசத்தின் பிடியில் அகப்பட்டு உழன்று, பேரின்பம் பெறவே முடியாத வகையில் சிற்றின்பச்சேற்றில் அழுந்திக் கிடந்திடும், அறம் மறந்த ஒருவரின், வேட்கை குழம்பி வெளிப்பட்டது மல்ல. இளைஞர் மனத்தினை ஈர்த்துக் கட்சிக்கு வலிவு தேடும் 'கதை கூறி'யின் பேச்சுமல்ல. கண் கவரும் காட்சி காட்டிக் காசுதனைப் பறிக்கக் கலையை விலையாக்கும் காதகரும் அல்ல இவர்! தூயவர்! ஆம்! அங்ஙனம் நான் கூறுவதை அமைச்சரும் ஒப்புவர்! மேலவர்! அவர் அறிவு கண்டோர் கூறுவர் அதுபோல்! அதுமட்டுமன்று தம்பி! புலன் அடக்கி வாழ்கின்றார். புதுயோகி இவர்; என்று, அமைச்சர் போன்றார் போற்றினர், நாடறியும். அரவிந்தர் அமைத்த நல் ஆசிரமம் தனில் இருந்து; அறம் வளர்த்தார். இவர் துறவி. என்று அநேகர் கூறினர். அந்தத் துறவி தந்த அருங் கவிதைதான், இங்கு நான் இணைத்துத் தந்தது. காதலின்பம், மாண்பு கூறிடுதல் தீதென்றால், இக்கவிதைக்கு என்ன பெயர்? இதனைத் தந்த துறவியை அறிவர் நாட்டார்; சுத்தானந்த பாரதியார்.
அவர் பாடி அளித்திட்ட இந்த அரும் கவிதை கண்ட அமைச்சர்கள், நாவெல்லாம் அசையாது இருந்தது ஏன்? பசைபோட்டு அவர் நாவை ஒட்டிவைத்தனரோ, எவரேனும்? கதைக்கின்றார் இதுபோது, 'கழகம் உள்ளோர், காதற்கதை பேசி வளர்க்கின்றார். கேடு' என்று; அன்று துறவி தொடுத்த கவிதை கண்டு, வாய் அடைத்துக் கிடந்திடக் காரணம் என்ன? அவர் கவி பாடினார்; கட்சி நடத்தவில்லை, நாம் கவி பாடவு மில்லை. கட்சி ஒன்றில் ஈடுபட்டோம்; அந்தக் கட்சியின் வளர்ச்சி கண்டதால் அவர்க்குக் கசப்பு! உள்ளே வெந்தால், வாயும் கசக்கும். என்றுரைப்பர் மருத்துவம் அறிந்தோர். இவர்தம் கசப்புக்கு இஃதே காரணம். வாய்க்கசப்புடையோர் வட்டில் தன்னில் பழச்சாறு பெய்து தந்திட்டாலும், ஐயோ! எரியுது! ஆகாது. இது தீது! என்றே அலறுவர்! குறை, அவர் நாவில்!! நமது பேச்சில் இல்லை. அகம் என்றும், புறம் என்றும் அன்று புலவோர் வகுத்த காலை இவ்விதம் சில பேர் குமுட்டல் கொண்டோர் வருவர் என்று துளியேனும் எண்ண வில்லை. போகட்டும்! அவர் நோய். விரைவில் தீரட்டும்! விழாநாளன்று, அவர்க்கும் நல்வாழ்த்தளிப்போம், அவரும், தமிழர் ஆதலாலே<noinclude></noinclude>
ht5s9qa4chv0kahsnr5yeor0su6wlzy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/404
250
642032
1928904
1928062
2026-04-30T08:49:05Z
Rabiyathul
5890
+ மேலடி
1928904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|380||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>'திராவிட நாடு இதழில்
இல்லற இன்பம், மாண்புடையது என்பதைச் சுவைபட எடுத்துக் காட்டும் விழாவாக, பொங்கற் புதுநாள் இருப்பதனால்தான், தம்பி! தமிழகத்திலே புதியதோர் எழில் அந்நாளில் பூத்திருக்கிறது.
வேட்டுச் சத்தம் கொட்டு முழக்கு. இல்லை!
தாளமும் மேளமும் தோற்றிடும் அளவில், 'கைலையும் வைகுந்தமும்' கிலிகொண்டு கிடுகிடுத்து, ஆங்குள்ள கடவுளர் அவரவர் வாகனம் கிடைத்திடினும் மேய்ந்திட எங்கேனும் போயிருப் பினும், இனியும் தாமதித்தால், இக்கூச்சல் நம் உலகினைத் துளைக்கும் என்று அஞ்சி ஓடி வந்து, என்ன வேண்டும்? என்று கேட்டு, வரம் தந்து போகவேண்டும் என்று கூறும் வகையில், கோவிந்தன் பெயரையோ பரமசிவன் நாமந்தனையோ, பல்வேறு வகையான ஒலியாலே எழுப்பிடும், பஜனைக்கோஷ்டிகள், பாற்பொங்கல் நாளன்று இருப்பதில்லை.
வளை ஒலி எழும்பிடும்; வண்ணக் கலவையால் கோலம் போடுவர்! வீடு அழகு பெறும்; வீட்டுளார் புத்தாடை புனைவர்; மாடு கன்று நீராட்டல் பெறும்; அவற்றினுக்கும் புதுக்கோலம் புனைவர்: மஞ்சளும் இஞ்சியும், அவரையும் துவரையும், பூசுணையும் பிறவும் கொட்டி இருக்கும்! வாழையுடன் கரும்பிருக்கும்; வடித்தெடுத்த சோற்றினிலே சுவையும் குழம்பியிருக்கும்; உண்டு மகிழ்ந்திருப்பர்; உரையாடிக் களித்திருப்பர்; இது தமிழர் திருநாள்.
தம்பி! எனக்கொரு ஆசை: சிற்சில ஊர்களிலே ஓரளவு செய்கின்றனர், நமது தோழர்கள்.
தமிழர்கள் திருநாள், அந்த ஊருக்கே, மகிழ்ச்சி தரும் நாள்! எனவே, ஊர் மக்கள் அனைவரும், விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நாள், உழைப்புக்கும், அறிவுக்கும், எழிலுக்கும், ஏற்றத்துக்கும், ஊர் மன்றம் புகழ்மாலை சூட்டிப் பெருமைப்படுத்த வேண்டும்.
உழவுத்திறன் காட்டச்சொல்லி, உழவர்க்குப் பரிசு அளித்தல்,
வலிவுத்திறம் விளக்கிடும் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தி வெற்றிகொள்வோருக்குப் பரிசளித்தல்.
நேர்த்திமிக்க ஆடை நெய்தவர்க்குப் பரிசு. ஊர்மக்கள் நோய்தீர்த்த உத்தமருக்குப் பரிசு, கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்குப் பரிசு, முதல் தரமான பசு,
நல்ல காளை, அழகான கன்று.<noinclude></noinclude>
q3vintpgeq2abmvy1dwx6igx7pg29rn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/405
250
642033
1928905
1928063
2026-04-30T08:49:36Z
Rabiyathul
5890
+ மேலடி
1928905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||381}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எடுப்பான தோற்றமுள்ள சேவல், கோழி, அழகான குழந்தை,
ஆடல் பாடலில் வல்லோர்,
புதிய கவிதைகள் புனைந்தோர், நல்ல ஏடு தருவோர்,
381
இப்படிப்பட்ட, சிறப்பு இயல்புகளுடையோரைத் தேர்ந்தெடுக்க ஊர் மன்றம் கூடிப் பரிசளித்து, மகிழ்ந்து கொண்டாட வேண்டும்.
அன்றலர்ந்த பூத்தொடுத்த அழகான மாலையோ, புத்தாடையோ, பொற்பதக்கமோ,
பரிசுப்பொருள், எதுவாக இருப்பினும், அன்று பெறுவதிலே ஓர் தனி மகிழ்ச்சியுண்டு; அத்தகைய ஓர் ஏற்பாடு விழாவினுக்குச் சிறப்பளிக்கும்.
களம் சென்று மட்டுமே உள்ளவுரம் காட்ட வேண்டும் என்று தமிழர் இருந்தால் இல்லை.
ஊரார் கண்டு மகிழ, தம்மையொத்தவர் வியந்திட வீர விளையாட்டு களில் ஈடுபட்டு, வெற்றி பெற்று, விருது பெற்றனர்; விழாக்களிலே இவை தனிச்சிறப்பான இடம் பெற்றிருந்தன.
மல்லர்கள், தமது திறம் காட்டினர்.
மாடு அடக்குதல், வீர விளையாட்டாகத் திகழ்ந்தது.
கூடிப்பாடுதல், கைகோத்து ஆடுதல் - இவை மகிழ்ச்சிப் பெருக்கைக்
காட்டின.
விழாக்களில், ஈடுபடும்போது புதுஎழிலைப் பெற்றனர் அணிபணியாலும் ஆடை வகையாலும் ஆடவரும் ஆரணங்குகளும்.
செல்வம் சீரளித்தது என்பதனை எடுத்துக்காட்டுவனவாக, விழாக்கள் இருந்து வந்தன என்பது மட்டுமல்ல, விழாக்கோலம், கலை அழகு வளர்ந்திட, வாய்ப்பு அளித்தது என்பதும் தெரிகிறது; இலக்கியம் பயிலும்போது,
கசங்கிய கண்ணினராக, கூப்பிய கரத்தினராக, வாழ்வைச் சுமை யாகக் கருதிக் காதலை வெறுத்து மாதரை மாயப்பிசாசு என்று இழித்துக் கூறி, தமிழர் வாழ்ந்தாரில்லை.
வாழ்க்கையும் ஒரு கலை என்று அறிந்திருந்தனர்.<noinclude></noinclude>
qp5roucv9g3fpdnq29wn7457x81jdjv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/406
250
642034
1928906
1928064
2026-04-30T08:50:07Z
Rabiyathul
5890
+ மேலடி
1928906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|382||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>382
'திராவிட நாடு' இதழில்
வாழ்க்கைக் கலையினை விளக்கத் தனியாக நூலொன்று தந்தாரோவெனில், இல்லை. ஆனால், அறநெறி உரைத்திடத் தமிழ்ப் புலவோர் ஆக்கி அளித்த காப்பியங்களிலேயே, மக்கள் வாழ்ந்த வகையினை அழகுற எடுத்துக் கூறும்போது, கலை அறிவுடன் அவர்தம் வாழ்க்கை அமைந்து இருந்ததை எடுத்துக்காட்டினர்.
பூம்புகார், மதுரை மாநகர் இரண்டிலேயும், மாந்தர் வாழ்க்கை. சிறப்பாக மகளிர் வாழ்க்கை இருந்த விதத்தைப் படம்பிடித்துக் காட்டும் பான்மையிலே தந்தவர் துறவி, இளங்கோ அடிகள்.
மலரணி கொண்டை மாதர்க்கு அழகு!
இளங்கோ அடிகள், மதுரை மகளிர், மலரணிந்து மகிழ்ந்திருந்தனர் என்று மட்டுமல்ல, மலர்கள் பல வண்ணங்களாக உள்ளன அல்லவா? அவற்றினை ஒன்றாகத் தொடுத்து, அணிந்தனர் என்பதையும் கூறுகிறார்.
மலர், மணம் தருகிறது! எனவே, மாதர்தம் கூந்தலுக்குச் சேருகிறது.
ஆனால், இது, கலை அழகும் பெறுகிறது. கலை அழகு உணர்வு மிகுந்தவர் மதுரை மகளிர், என்பதைக் காட்டுகிறது. அவர்கள் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றினைத் தொடுத்து அணிந்து கொண்டனர், என்று அடிகளார் கூறும்போது.
அந்த மலர்களையும், மதுரை மகளிர், முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்திருந்தனராம். பாண்டி நாடு முத்துடைத்து அல்லவா
செல்வம், சீர், கலை உணர்வு, வாழ்க்கையை வெறுத்திடாத தன்மை, இவ்வளவும் விளங்கும் வகையில், மதுரை மகளிர் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றை முத்தாரங் களுடன் தொடுத்து அணிந்தார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
வாழ்க்கை இவ்விதம் இருத்தல்தான் முறை: மதுரை மகளிர் இப்படி இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை, அடிகள் எப்போது காட்டுகிறார்? கண்ணகி, கணவன் அன்பைத் திரும்பவும் பெற்றுப் புது வாழ்வு தொடங்கப் பொருள் தேட முயலும் நோக்குடன் கோவலனுடன் வருகிறபோது!
மதுரை மகளிர், முத்தாரமும் மலரும் தொடுத்து அணிந்துள்ளனர்; வணிகக் கோமான் மகள், கண்ணகி இதனினும் மேலாக, அணிபணி பூண்டு வாழ்ந்திடலாம்.
ஆனால், காற்சிலம்பு விற்றால்தான், கைப்பொருள் கிடைக்கும் என்ற நிலை!!<noinclude></noinclude>
msa2v53gi1bufr4hzn6v4kcu1rzrw77
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407
250
642035
1928907
1928065
2026-04-30T08:50:38Z
Rabiyathul
5890
+ மேலடி
1928907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
383
என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ!
காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும்.
இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர்.
காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது.
இயற்கை
அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும்.
அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக் கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது.
பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம்.
ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை,ஆடிடும் விறலியர் அணிவராம்.
வெள்ளியால் நார்! பொற்குவளை!
-
வண்ணங்களை அடுக்கி
அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா?
ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர்.
அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன.
கொள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே
எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை
(புறநா: 11)
வாலொளி முத்தமொடு பாடினி யணிய. (பொருந : 159-62)
வேடி- சிவந்த பொன், அழகிய); பித்தை - கூந்தல்: பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude>
kt1h9g99nc2t3np1abli4upsgaleriw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408
250
642036
1928908
1928066
2026-04-30T08:51:08Z
Rabiyathul
5890
+ மேலடி
1928908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|384||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>384
'திராவிட நாடு' இதழில்
அணிவன, சூடுவன, என்பதில் மட்டுமல்ல, பூசுவனவற்றிலே. பல பொருள், பல முறைகள் இருந்திருக்கின்றன.
மாதவி, தன் கூந்தலைப் பத்து வகைப்பட்ட துவர் ஐந்து வகைப் பட்ட விரை, முப்பத்து இரண்டு வகை ஓமாலிகைகள் முதலியன ஊறின நல்ல நீராலே கழுவி, வாசனைப் புகையூட்டி கஸ்தூரி, சவ்வாது கலந்த தைலத்தைத் தடவி அழகுபடுத்திக்கொண்டாள், என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.
இப்படியெல்லாம் செய்து, கோவலனை மயக்கினாள் கூறுவர்,நுனிப்புல் மேய்வோர்.
-
என்று
எண்ணிப்பார்த்து வியப்படைய வேண்டியது அஃது அல்ல. இவ்வளவு இன்பமாகச் செல்வமாகக் கலை அழகு உணர்வுடன், காட்சிப் பொருளாக வளர்ந்த அந்த ஆடலழகி, கோவலன் தன்னைத் துறந்தான், பின்னர் வெட்டுண்டு இறந்தான் என்றவுடன், என்ன ஆனாள்? எல்லாம் துறந்தாள்!!
அவ்வளவு அழகூட்டும் முறைகளும், அவனுக்காக; அவனை மகிழ்விக்க! அவன் இல்லை! அவை இனி ஏன்? என்று துறந்தாள்.
ஆடலழகியரும் விறலியரும் அழகளிக்கப் பலமுறை தேடிக் கொள்வதிலே வியப்பென்ன? அது பொதுமுறையாமோ? என்று சிலர் ஐயப்படுவர்.
அலத்தகம் எனும் செம்பஞ்சுக் குழம்பை, கால், உள்ளங்கை, இதழ், நெற்றி, நகம் - இங்கெல்லாம் பூசி இலக்கணையார் மண அறைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார் என்று சிந்தாமணியில் காண்கிறோம்.
கால வேறுபாட்டினைக் கவனித்துப் பெண்கள், மலர் சூடுவர் என்பதும், கூறப்பட்டிருக்கிறது.
மாதவியின் ஒப்பனை
பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை யோமா லிகையானும் ஊறின நன்னீர் வுரைத்த நெய்வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி
(சிலப்: கடலாடு காதை:76-81)<noinclude></noinclude>
nx1l8pj7v60vn2tc056pex61iqu1el5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/409
250
642037
1928909
1928067
2026-04-30T08:51:39Z
Rabiyathul
5890
+ மேலடி
1928909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||385}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
(துவர் -பூசுவன, விரை
L
385
கலவைச் சாந்து: ஓமாலிகை - மணம்
உள்ள நீரில் இடும்பொருள்: மான்மதம் - கஸ்தூரிக் குழம்பு)
அம்மலர் அடியுங் கையும் அணிகிளர் பவழவாயும் செம்மலர் நுதலும் நாவும் திருந்தொளி உகிரோ(டு) அங்கேழ் விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதி இட்டாள் அம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத் தெரிவை தானே.
இலக்கணையாரிலம்பகம்: 69)
(நுதல் - நெற்றி; உகிர் - நகம்; அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.)
முன்பனிக் காலத்தில், மகளிர், தம் கூந்தலில் மல்லிகையையும், அதன் அருகே வாகையையும் சூடிக் கொள்வராம்.
இளவேனிற் காலத்திலோவெனில், கழுநீர் மாலையாம், குவளை
மலராம்!!
தம்பி! இவ்விதமாகவெல்லாம். இல்லறத்திலே, வாழ்க்கைக் கலையழகுடன், வாழ்ந்து வந்தவர் தமிழர், முன்பு!!
ஓர் -
தமிழரின் தனிச்சிறப்புடைத் திருநாளாம், பொங்கற் புதுநாளன்று - ஓர் நாளாகிலும் -எழில் குலுங்க, இன்பம் துலங்க, மகிழ்ச்சி பொங்க இருக்கவேண்டாவா? அதை அறிந்தே, தமிழகம் விழா நடத்தி மகிழ்கிறது.
-
எதனையும் அளித்திட இயலாதாராக உள்ள இன்றைய ஆட்சியாளர், தமிழர் வாழ்ந்த வகை அறிந்து அகமகிழ்ந்திடும் வாய்ப்பினைப் பெறுகிறார்களே, இன்று மக்கள் ஓரளவுக்கு -நமது கழகம், தரணி மெச்சத் தமிழர் ஓர் காலத்தில் வாழ்ந்த சீரினை எடுத்துக்காட்டுவது கேட்டு, அந்த மகிழ்ச்சியையாவது அனுபவித்துத் தொலைக்கட்டும், என்று வாளா இருக்கிறார்களா? இல்லை, வேலாய்க் குத்துகிறார்கள்! அதென்ன, தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்ப்பண்பு ! இதெல்லாம் சின்னப் புத்தி! பேதப்புத்தி! ஆகா வழி! என்று பேசுகின்றனர். பேசுவதுடன், இவ்விதமெல்லாம் தமிழ் இனம், தமிழ் நாடு. திராவிடம், தனி அரசு என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்தக் கழகத்தார்கள், ஏன் தெரியுமா? என்று கேட்டு விடையும் தருகிறார்கள்; எல்லாம், அமைச்சர் ஆகும் ஆசையினால்தான் என்று.
பாரேன், தம்பி! ஒவ்வொரு நாட்டு அறிவாளர், வித்தகர், வேலை யற்றுப்போய், சந்திரமண்டலம் போகும்வழி, செவ்வாய் மண்டலத்தின் தன்மை, எனும் ஏதேதோ ஆராய்ச்சி நடத்துகிறார்கள் நமது - அமைச்சர்களைப் பார்! யாரும் நடத்தாத, எவராலும் நடத்த இயலாத, எவரும் வியந்து பாராட்டத்தக்க ஆராய்ச்சி நடத்திப் பேருண்மை ஒன்றைக் கண்டுபிடித்துக்<noinclude></noinclude>
1609ipgxgwvmuwj6hr92ea2udjhu443
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/410
250
642038
1928910
1928068
2026-04-30T08:52:10Z
Rabiyathul
5890
+ மேலடி
1928910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|386||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>386
'திராவிட நாடு' இதழில்
கூறிவிட்டனர் - தனிநாடு என்று நாம் பேசுவது மந்திரி வேலைக்காகத் தான்! என்று!!
இப்படி அமைச்சர்கள் பேசியது கேட்ட நண்பரொருவர், சொன்னார், நூலை அறுத்திடுமோ என்று அஞ்சி, அங்குக் குதித்துக் கூத்தாடிய
குரங்குகளை ஒருவன் விரட்டினானாம்! குரங்கு, ஓஹோ! என் போன்ற
'வால்' இவனுக்கு இல்லாத பொறாமையால், இவ்விதம் செய்கின்றான்! எனக்குள்ள பெருமையே இந்த 'வாலால்' வருவதன்றோ. இது அந்த மானிடனுக்குக் கிடைத்திடலாமா - கூடாது - என்று கூறிற்றாம், ஏதோ அப்படி ஒரு கதையாம்.
நான்தான். மெத்தவும் கேட்டுக்கொண்டேன், அந்த நண்பனை, இப்படி நாலுபேர் நடுவே பேசாதேயப்பா - சரியல்ல - நமக்கும் அவர் களுக்கும் பிறகு வித்தியாசம்தான் என்ன - அமைச்சர்கள் பேசட்டும் - தாங்கிக்கொள்வதிலே என்ன தலை இறக்கம் அவர்களையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, அவர்களின் நாக்குத் தீண்டுவது கண்டு நாம் கோபப்படலாமா? என்றெல்லாம் சொல்லி வைத்தேன்.
-
தம்பி, தமிழகத்தின் பழங்காலச் சிறப்பினை மறந்துவிட்டால், இன்று அமைந்துள்ள, வட அரசுக்கு இம்மியும் எதிர்ப்பு எழாது என்றெண்ணி, வரலாற்றையும் இலக்கியத்தையும்கூட, அழித்தொழிக்க முனைகின்றனர்.
தமிழ் உணர்வு, பொங்கற் புதுநாள் போன்ற பொன்னான விழாக் களின்போது, ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது.
இதை அறிந்து, பாழாக்க இனி, என்னென்ன செய்வாரோ, யாரறிவார்?
முன்பு நான், வாழு! வாழவிடு!! என்றெழுதியபோது, நமது இயற்கையும், உரிமையும் கொண்ட தமிழர். திராவிடர் என்ற உணர்ச்சியையும் அழித்தொழித்து, பாரதம், ஏக இந்தியா எனும் உணர்ச்சி போலி என்ற காரணத்தால் அதனைப் புகுத்தி வெற்றி காணவும் முடியாமல் ஒரு 'சூன்ய' நிலைமையை, எங்கே இவர்கள் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தை வெளியிட்டேன். பலர், அவ்விதம் அஞ்சத் தேவையில்லை. நாம் நமது இன உணர்ச்சியை என்றும் இழந்து விடப் போவதில்லை என்றெல்லாம் எழுதி எழுச்சியூட்டினார்கள். அவர்கட்கு என் நன்றி. பொங்கற் புதுநாள் போன்ற விழாக்காலம், தமிழ் இன உணர்வை, மங்கிடாதிருக்கச் செய்யும் மகத்தான நல்வாய்ப்பு. எனவே, மனைதோறும் பெற்றிடும் மகிழ்ச்சியுடன், மன்றமெங்கும், தமிழர் மாண்பு பற்றி எடுத்துரைத்திட இந்த நாட்களைப் பயன்படுத்துதல் ஏற்றம் அளிக்கும்; அறிந்து செயல்பட வேண்டுகிறேன்.<noinclude></noinclude>
slunimb06nj71euxzu2l0glt9yvlmvg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/411
250
642039
1928912
1928069
2026-04-30T08:52:41Z
Rabiyathul
5890
+ மேலடி
1928912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||387}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
387
உருட்டி மிரட்டினாலும், உறுமிக் கிடந்தாலும், உண்மையினை அடியோடு ஒழித்துவிடுதல் இயலாது.
வரலாறு தெளிவாக உணர்த்துவது, ஓர் பேருண்மை. நமது இடம். திருஇடம்; வடக்கே வேறு இடம்: இரண்டையும் பிணைக்கிறார்கள்; அது ஒவ்வாது. என்பதை எடுத்துக் கூறாத, வரலாற்றுப் பேராசான்களும், உளநூல் வல்லோரும் - விலைக்கு வாங்கப்பட்டவர்கள் தவிர-இல்லை என்று கூறலாம்.
தம்பி! இந்தியா என்பது இயற்கையானது அல்ல தான் - பல்வேறு இனங்களின் இருப்பிடங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன என்பதும் உண்மைதான் - என்றாலும், இந்தியாவை ஒரு நாடு ஆக்கி விட்டோம் - ஒரு பேரரசு அமைத்துவிட்டோம் - இனி இதை மாற்றப் போவதில்லை என்று பேசுகின்றனர் அரசினர்.
இது வேதனை நிரம்பிய பேச்சு - இன உணர்ச்சி உள்ள எவரையும் செய் அல்லது செத்துமடி என்று தூண்டிவிடக்கூடிய அறைகூவல்; அதுமட்டுமல்லாமல், ஒரு போலி அமைப்புத்தான் இந்தியா என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்வதுமாகும்.
கிடைத்ததை விடமாட்டோம் என்று பேசுவது அறம் அறிந்தோர் பேச்சு அல்ல - ஆதிக்கக்காரரின் ஆணவப் பேச்சு.
ஆனால், வரலாறும், இலக்கியமும் அழிக்கமுடியாத விதத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள உணர்ச்சி, வழிவழி வளர்ந்து, பண்பாடு ஆகி, இருக்கிறது; அந்த 'உணர்ச்சி'யை அழித்துவிடுவது, இயலாத காரியம் என்பதை, இன்று ஆதிக்கத்தை நம்பிக்கொண்டிருக்கும் அரசினர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.
ஆனால், உரிமைக்காக எதனையும் இழந்திடும் வீர உணர்ச்சி, தியாக உள்ளம், கொழுந்துவிட்டு எரியும் போது ஆணவம் வெந்து கருகிச் சாம்பலாகும்.
இவ்வளவு பலமாக அமைத்துவிட்டிருக்கிறோம், ஆதிக்கத்துக்கு அரண்கள் உள்ளன; அரண் காக்கப் படைகள் உள்ளன: படைகள் அமைத்திடப் பணபலமும் உண்டு என்று இறுமாந்துகிடப்போர். இந்தியப் பேரரசு என்றென்றும் நிலைத்து இருக்கப்போகிறது என்று எண்ணுகிறார்கள்.
எனினும், அவர்களுக்கே சிற்சில போது, ஐயப்பாடும் அச்சமும் கவலையும் கலக்கமும் ஏற்பட்டு விடுகின்றன; கைபிசைந்து கொள்கின்றனர்; இந்தியர் என்ற உணர்ச்சி இல்லையே, என் மொழி! என் பிரதேசம்! என்று பேசுகிறார்களே. அதற்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்று<noinclude></noinclude>
rt6q31pwnqzc0qh3k0g24azx4xn8q10
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/412
250
642040
1928913
1928070
2026-04-30T08:53:11Z
Rabiyathul
5890
+ மேலடி
1928913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|388||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>388
'திராவிட நாடு' இதழில்
தெரிந்தால், பேயாட்டமாடுகிறார்களே! என்று பேசுகிறார்கள். மனம் மருண்டு.
பேரரசு அமைத்துவிடலாம் பலர் அமைத்தனர்
-
அதனை உடைபடாமல் பாதுகாக்கவும் செய்யலாம் வெகு பாடுபட்டு - ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக் கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது.
புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் - என் வேர்கள் நைந்து போயுள்ளன - பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை - என்று அபாய அறிவிப்பா தருகிறது?
காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித் தான் போகும்.
உதுமானிய சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்யமாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர் களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர்.
படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப்பட்டனர்.
எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்!
உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனிநாடு களாகி விட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு 'நாடுகளை' சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது.
இன்றைய துருக்கி
கிரீஸ்
பல்கேரியா
ருமேனியா
செர்பியா
போஸ்னியா
கிரீமியா
ஈஜிப்ட்<noinclude></noinclude>
odngjruq42ynx2p719vcvcza6rex3zu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/413
250
642041
1928914
1928071
2026-04-30T08:53:42Z
Rabiyathul
5890
+ மேலடி
1928914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||389}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
சிரியா துனீசியா திரிபோலி அல்ஜியர்ஸ்
வை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்!
389
இந்தியப் பேரரசு, எப்படித் திராவிடம் போன்ற நாடுகளைப் 'பிரதேசங்கள்' என்று பேசிவருகிறதோ, அது போல, இவைகளை உதுமானிய சாம்ராஜ்யமும், பகுதிகள் என்றுதான் குறிப்பிட்டது.
1907-ம் ஆண்டுவரை உதுமானிய சாம்ராஜ்யம், பல இனம், பல நாடுகளைத் தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டு, ஆண்டவனின் அருளும், படைபலமும், பாதுகாப்பு அளித்து வருவதாகவும், எதிர்த்து எவரும் ஏதும் செய்துவிட முடியாது என்றும் எக்காளமிட்டது.
இன்று, தம்பி! இத்தனை பெரிய உதுமானிய சாம்ராஜ்யம், என்ன ஆயிற்று? உடைபட்டுப் போயிற்று!
துருக்கியை மையமாக வைத்துத்தான், உதுமானிய சாம்ராஜ்யம் கட்டப்பட்டது; இன்று மிச்சமாக இருப்பது துருக்கி ஒன்றுதான்.
வரலாறு அறியாதார், ஈஜிப்ட் ஒரு காலத்திலே, துருக்கியால் அமைக்கப்பட்ட, உதுமானிய ராஜ்யத்திலே ஒரு பகுதி என்று நாம் கூறினால், ஆச்சரியப்படுவர்.
கிருஸ்தவ மார்க்கத்தைக் கொண்ட பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளாகிலும், இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்ட துருக்கியர் அமைத்த சாம்ராஜ்யத்தில் இருப்பது இழுக்கு, கடவுளுக்கே பொறுக்காது என்று கருதிக் கொதித்தெழுந்து, விடுபட, தனியரசாகத் துடித்திருக்கலாம் - ஈஜிப்ட்டுக்கு என்ன கெடுதல்?
ஈஜிப்ட்டில் உள்ளவர்கள் அராபியர்.
துருக்கியரும் அராபியரும் இருவருமே, இஸ்லாமியர். மதம் ஒன்று! என்றாலும், அராபியருக்கு அராபியர் என்ற இன உணர்ச்சி, துருக்கியரின் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு அழுத்தமாகப் பிணைக்கப் பட்டிருந்தும் மங்கிப் போய்விடவில்லை.
இஸ்லாம்போல, மார்க்கத்திலே சேர்ந்துள்ளவர்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக்தி வேறு இல்லை. இருந்தும், அராபியர் தம் இன உணர்ச்சியை இழக்கவில்லை!
இப்போதும், நாசர், அராபியப் பேரரசு என்றுதான் கூறிப் பூரிப்படைகிறார்.<noinclude></noinclude>
8udyg5pnhegzwyrzm8cukabwtej89uu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/414
250
642042
1928915
1928072
2026-04-30T08:54:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|390||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>390
'திராவிட நாடு' இதழில்
இமயமுதல் குமரிவரை, எங்கு இருந்தாலும், இந்தியப் பேரரசில், பேதம் காட்டப்படுவதில்லை; எல்லோரும் சமம் எவரும் தாழ் வில்லை - எவரும் உயர்ந்தோர் என்றும் உரிமை கொண்டாடுவதற் கில்லை - என்று இந்தியப் பேரரசுக்காக வாதிடுவோர் பேசுகின்றனர்.
உதுமானிய சாம்ராஜ்யத்தில், துருக்கியர், அராபியரை எந்த ஒரு துறையிலும், எந்த வகையிலும், தாழ்வாக நடத்தவில்லை. படை யிலாகட்டும், ஆட்சி அலுவலகங்களிலாகட்டும், அராபியர், துருக்கியருக்குச் சமமாகவே இடம் பெற்றனர், பெருமை பெற்றனர். என்றாலும், நாம் அராபியர்! நமது நாடு, ஈஜிப்ப இன்று அதனைத் துருக்கியர், தமது சாம்ராஜ்யத்தில் அடிமைப் படுத்தியுள்ளனர் என்ற எண்ணம், அவர்கள் மனத்தை விட்டு அகலவே இல்லை.
அராபியரும் துருக்கியரும் கலப்பு மணம் செய்து கொண்டும் வாழ்ந்தனர். என்றாலும், அராபியர் என்ற தேசிய உணர்ச்சி, பீறிட்டுக் கொண்டு வந்தது, சாம்ராஜ்யப் பிடிப்பு பொடிப்பொடியாயிற்று; விடுபட்ட ஈஜிப்ட் தனி அரசு, தன்னரசு நடத்துகிறது.
***
அது அந்தக் காலம் - புரட்சி செய்து - படைகொண்டு தாக்குவது அதனால்தான் பேரரசிலிருந்த நாடுகள் பிரிந்து, தனி அரசு என்றாகி விட்டன. இது வேறு காலம்!! என்று, மிரட்டும் குரலிலும், கேலி செய்யும் விதத்திலும், ஆதிக்கக்காரர் பேசுகின்றனர்.
காலம், முறைகளை மாற்றுமே தவிர, மனப்போக்கையும், உணர்ச்சியையும், நிச்சயம் மாற்றிவிடாது - அழித்து விடாது.
முன்புபோல அல்ல, இப்போது. எந்த இடத்திலிருந்து, குமுறல் கேட்டாலும், எந்தப் பகுதியில் வீரத்தியாகிகளின் இரத்தம் கொட்டப் பட்டாலும், ஏன்? என்று கேட்கவும், நியாயம் பேசவும், துணை நிற்கவும், உலகில் பல்வேறு நாடுகள் முனைந்து நிற்கின்றன.
அந்தக் காரணத்தால்தான், கெனியா நாட்டு விடுதலைக்கான நல்லெண்ண ஆதரவு பெற, அந்நாட்டு விடுதலைத் தளபதி டாம் இம்போயா, இந்தியப் பேரரசுத் தலைவரை நாடி வருகிறார்.
அவர்களுக்கெல்லாம், தமது நாட்டு விடுதலை குறித்து எடுத்துரைக்க, இங்கெல்லாம் வரும் அளவுக்கு 'ஏகாதிபத்தியம்' உரிமை தருகிறது. ஆனால், இங்கு நடைபெறும் 'அன்பாட்சி', 'அகிம்சையாட்சி' வெளி நாடுகள் செல்ல, நமது கழகத்தவருக்கு. அனுமதி வழங்க இப்போதே மறுக்கிறது.<noinclude></noinclude>
8aethcs7bb8b7sguiz0kgvi7patlp5q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/415
250
642043
1928916
1928073
2026-04-30T08:54:46Z
Rabiyathul
5890
+ மேலடி
1928916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||391}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இஃதொன்றே. இந்தியப் பேரரசுக்கு உள்ள வலிவைக் காட்ட வில்லையா, என்று கேட்கத் தோன்றும், தம்பி! இது அந்த அரசுக்கு உள்ள வலிவை அல்ல, நம்பிக்கைக் குறைவை, பயத்தைத்தான் காட்டுகிறது. எந்த நாடு சென்று இவர்கள், வரலாற்று, இலக்கிய ஆதாரங்களைக் காட்டித் தங்கள் இன இயல்புகள் பற்றி எடுத்துச் சொன்னாலும், ஏற்றுக்கொண்டு ஆம்! ஆம் என்று பேசுவார்களே, நாம் பிறகு, பலருடைய கேள்விகளுக்கு அல்லவா பதிலளிக்க வேண்டி வந்துவிடும், என்ன பதில் அளிப்பது? நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த அமைக்கப் பட்ட பேரரசுக்கு என்ன நியாயம் காட்டுவது? என்ற பயமும், நம்பிக்கைக் குறைவுமே, கழகத் தோழர்களை, வெளிநாடுகள் போக விடாமல் தடுத்து வைத்திடச் செய்கிறது.
ஆனால், தம்பி! இலண்டனிலோ, பெர்லினிலோ, டோக்கியோ விலோ, பாரிசிலோ, வாஷிங்டனிலோ இது பற்றி இப்போது ஒன்றுமே தெரியாது என்றும் கூறிவிட முடியாது.
நமது பூம்புகார் பற்றியும், கொற்கை குறித்தும், உறையூரில் நமது அரசு இருந்த ஏற்றம் பற்றியும், நமது மன்னர், காழகம், கடாரம் வங்கம், கலிங்கம் சென்று வெற்றி கண்டது குறித்தும், நமது தமிழகப் பட்டிதொட்டிகளிலெல்லாம், எடுத்துக்கூறும் கட்டத்திலே நாம் மும்முரமாக ஈடுபட வேண்டி இருக்கிறது.
தமிழகமெங்கணும், தமிழ் இன உணர்வு வீரமணம் எழுப்பினால், பிற நாட்டார் நம்மை அறிந்துகொள்ளச் செய்வதிலே கஷ்டம் அதிகம் இருக்காது.
எந்த நாடும், ஒரு நாட்டின் ஆட்சி மன்றத்திலே எவர் இடம் பெறுகின்றனர். அவர்தம் திட்டமென்ன, கொள்கை என்ன, மக்கள் ஆதரிப்பது எந்தக் காரணம் கொண்டு என்பதனை இன்று அறிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
எனவேதான், இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம், சுரண்டல் யந்திரம், இன உணர்வு அழிக்கும் பலிபீடம், என்ற கொள்கையைக் காட்டி, திராவிடம் அமைக்கவேண்டும் என்ற திட்டத்துக்காகப் பணி யாற்றும், நமது கழகம், பொதுத் தேர்தலில், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.
அது கிடைத்திடுமேல், தட்டாமலே, அறமன்றக் கதவுகள், திறக்கப்படும்; கேளாக் காதினருக்கும், நமது விடுதலைப் போர்ப்பணி கேட்கும், வெற்றித் தென்றல் வீசிடும்.<noinclude></noinclude>
mz75oizfobak2r32lqar3t9aumc6s39
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/416
250
642044
1928917
1928074
2026-04-30T08:55:24Z
Rabiyathul
5890
+ மேலடி
1928917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|392||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>392
'திராவிட நாடு' இதழில்
தம்பி! இன்று விழாநாள். தென்றல் காண்கிறாய் இல்லத்தில்! இது, உன் மனைமாட்சிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நாட்டிலே வீசி, நலிவு களைப் போக்கிடும், வெற்றித் தென்றல் விடுதலை எனும் சந்தனமணம் கமழ்ந்து வீசிட வேண்டும் அன்றோ?
அதற்கான அரும்பணி அடுக்கடுக்காய் உள்ளது, அறிவாய். அறிந்ததை உரைத்திடின், ஆரணங்கும் தடுத்திடப் போவதில்லை.
பொருள் தேடப் புறப்படுகிறார் என்றால், இருப்பார்க்கு வந்து உரை என்று இயம்பிடுவாள், சங்க காலத்துப் பெருமாட்டி! அந்த ஆரணங்கேகூட, களம் செல்கிறான் என்றாலோ, வேல் எடுத்துக் கரம் கொடுத்து, புன்னகை விருந்திட்டுப் போய்வருவீர், என் அரசே! வெற்றித் திருவுடனே, நீர் வருவீர். நானறிவேன்! நாடு உமை அழைக்கிறது. நாட்டுக்கே நாம் உள்ளோம். மாடு மனை இருப்பதும், மலர்த்தோட்டம் இருப்பதும் ஆங்கு நாம் ஆடி மகிழ்வதும் நாடு நமது என்ற நன்னிலை இருப்பதனால்தான், அந்த நிலைக்கு ஒரு துளியும் குந்தகம் விளையு மென்றால், ஆவி தரிக்காது; மானமொன்றே நமக்கு வழி வழி வந்த செல்வம், அது காக்கப் புறப்படுவீர்! ஆற்றல் உண்டு நாட்டைக் காக்க! அந்தக் கடமையினை ஆற்ற நீர் செல்கையிலே, பிரிவு தாங்கும் மனம் உண்டு, தமிழ் மகள் நான்! என்றுரைத்துக் களம் அனுப்பி வைப்பர்.
இன்றும், அந்தப் பண்பு பட்டுப்போய்விடவில்லை. எத்தனையோ தாய்மார்கள் நாட்டுக்கு இடிவந்துற்ற காலையிலே, ஆரணங்கு பலரும், தம் நெஞ்சில் நிறைந்தவரை, கொஞ்சு மொழி பேசிடும் தம் கொழுநரை, கோல் கொண்டோர் அது சாய்க்கும் வேலையிலே ஈடுபட்டு, தமிழ் வீரத்தைப் பழித்தபோது, அறப்போருக்கு அனுப்பி வைத்தார் அறிவோம் நாம். அது நம் கழக வரலாறு.
'நாகநாடு' கேட்டிடும் தலைவனை வேட்டையாடிப் பிடிக்கப் பார்த்தனர்; இன்றோ அவன் கேட்டிடும் 'தனி நாடு போன்ற ஒரு ஏற்பாடு தந்து, சமரசம் கேட்கின்றார்; நாகர் இணங்க மறுக்கின்றனர்.
'பஞ்சாபி சுபா' கேட்கும் பழம்பெரும் வீரராம் தாராசிங் பாடிடும் பரணிகேட்டுப் பல்லாயிரவர் சிறை சென்று, இன்று விடுதலை பெற்று வந்தனர் வெளியே, அறப்போர் தொடுத்திட - புதிய முறையினில்.
'ரகுவம்ச' காலமுதல் எமது வங்கம் எவருக்கும் அடிபணிந்து கிடந்ததில்லை, இன்றும் எவர் எம்மை அடிமை கொள்ளச் சூழ்ச்சிகள் செய்திடினும், முறியடிப்போம் என்று முழக்கமெழுப்புகின்றனர் வங்க மக்கள்.<noinclude></noinclude>
3w8vh7u9yiqt0jvw0ptqgzt987t20th
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/417
250
642045
1928918
1928075
2026-04-30T08:55:56Z
Rabiyathul
5890
+ மேலடி
1928918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||393}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
393
அவரெலாம் அடவிதன்னைப் புகலிடம் என்று பெற்று உழன்ற காலத்திலேயே, அணிநகர் பலவும் கண்டு, அறநூற்கள் பலவும் பெற்று, அரசு அமைத்துத், தமிழர் வீர முரசு கொட்டி வாழ்ந்தார்.
ஆப்பிரிக்கக் கண்டத்துள்ளார், அடவியில் உள்ள பொல்லா மிருகத்துக்கொப்பார் என்று, அவர்களைப் பிடித்துச் சென்று அடிமை களாக விற்றார். ஆணவ வெறியர் முன்பு. இன்று ஆப்பிரிக்க பூபாக மெங்கும் விடுதலை முரசு!
எவரையும் அடிமைகொள்ள எவருக்கும் உரிமை இல்லை; அவரவர் தாயகத்தில் தனி அரசமைத்து வாழ்வதே, அவனிக்கு அடுக்கடுக்காய், அழகுறு அணி அளிக்கும். இதனை இனிக் காணா விட்டால், இருண்டிடும் எதிர்காலமென்று, அறிவுளார் அனைவருமே அறைகின்றார் நாளும்.
இத்தகு நாட்கள் தன்னில் இருந்திடும் நமக்குத் தம்பி! மெத்தவும் பொறுப்பு உண்டு. விடுதலைக்கு நல்வாய்ப்பு உண்டு; வேண்டுவ தெல்லாம் உறுதி; அதுபோல் உறுபகை அழிக்கவல்ல கருவியும் வேறு உண்டோ?
அந்த உறுதிபூண்ட வீரனாம் உனக்கு ஓர்நாள், திருநாளாய் உள்ளது; உறுதி வளர்த்திடும் வகையான உற்சாகம் பெற்றிட.
ஆகையினால், அருமைத் தம்பி! ஆகட்டும், ஆகட்டும் இன்றுனக்கு அரிய விழா; அதிலே கிடைக்கும் இன்பம், பெற்று மகிழ்ந்திடுக! பேசிட ஆயிரம் உண்டு| பூசிடச் சந்தனம் உண்டு! வாசமலரெடுத்துச் சூட்டிடவும். வாய்ப்புண்டு!! இத்தனையும் உன் செல்வம், இடம் கொடுத்தால் மட்டுந்தான்!
இன்பம் பொங்கி, நின் இல்லம் எழில் பூத்து விளங்கட்டும். அந்த இன்பத்தூடே, திருநாடு தெரியட்டும் என்ற என் நல்வாழ்த்தே, நான் இன்று உனக்களிப்பேன்; வேறென்ன வேண்டும் உனக்கு?
மழை
நெஞ்சில் நெருப்பு கன்னி விதவையானாள் நீதிபதி, வக்கீலானார் செந்தாமரையாள்
பூச்சு வேலை
என்பன
இக்குறியிட்டுக்
காட்டப்பட்டுள்ளன;
நானளிக்கும், இஞ்சி, மஞ்சள் இன்ன பிற என்று கொள்ளேன்!
அவை<noinclude></noinclude>
4h4b70lf1exb3k5g8xvxw12xpm84pu6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/418
250
642046
1928919
1928076
2026-04-30T08:56:28Z
Rabiyathul
5890
+ மேலடி
1928919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|394||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>394
'திராவிட நாடு' இதழில்
பொன் எனினோ, உன் மின்னிடையாள், மேனிக்கென்ன
மணி எனினோ, மகவின் கண் ஒளியே, காண்பாய்! உன்னிடம் உள்ள செல்வம் ஏ! அப்பா! மிக அருமை!!
நான் அளிக்க ஒன்று உண்டு; என் நல்லெண்ணம்; வாழ்த்துகள்; இல்லம், இன்பப் பூங்காவாகத் திகழ்க! உனக்கென்று அளிக்கும் போது, அதனைப் பெற்று, மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வாய் என்று, சொல்லவா வேண்டும்? நீ, தமிழன்; என் உடன்பிறப்பு! வாழ்க! வாழ்க!!
14.1.61
அண்ணன்,
Jimmyma<noinclude></noinclude>
1plmbcd2gjt89pczqv017pjz4n696tp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/419
250
642047
1928920
1928078
2026-04-30T08:57:00Z
Rabiyathul
5890
+ மேலடி
1928920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||395}}{{rule}}</noinclude>கடிதம்: 131
தம்பி!
கண்ணொளி போதும்....
உலக நிகழ்ச்சிகள்-தி.மு.க பற்றி மக்கள் ஆர்வம் . கழகத்தவர் பணி
தமிழர் திருநாளில் மலர்அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல-அளவில், வகையில், எதிர்பாராதவை, ஏக்கமளிக்கத் தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம் தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்து கொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடி களிலே; அறமன்றங்களிலே; அமைச்சர் முகாம்களிலே; உலகிலே.
அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார்-அரசோச்ச.
அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத் திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும் சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா என்பது பற்றிய கவலை ஒருபுறம்.
மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர் கென்னடிக்கும், தெடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர்புறம்.
ஐக்கியநாடுகள் சபையின் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச் சிதை வதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து, என்ன வழி யினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார் எனும் கேள்வி.
உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை.
இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும், காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம்.
இவையும், இவைபோன்ற வேறு பல பிரச்சினைகளும், மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன.<noinclude></noinclude>
t8q8ywrm2z384t31o1ngcnalbemonk0
1929031
1928920
2026-04-30T11:52:11Z
Rabiyathul
5890
- சுத்தம்
1929031
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>கடிதம்: 131
தம்பி!
கண்ணொளி போதும்....
உலக நிகழ்ச்சிகள்-தி.மு.க பற்றி மக்கள் ஆர்வம் . கழகத்தவர் பணி
தமிழர் திருநாளில் மலர்அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல-அளவில், வகையில், எதிர்பாராதவை, ஏக்கமளிக்கத் தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம் தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்து கொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடி களிலே; அறமன்றங்களிலே; அமைச்சர் முகாம்களிலே; உலகிலே.
அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார்-அரசோச்ச.
அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத் திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும் சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா என்பது பற்றிய கவலை ஒருபுறம்.
மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர் கென்னடிக்கும், தெடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர்புறம்.
ஐக்கியநாடுகள் சபையின் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச் சிதை வதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து, என்ன வழி யினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார் எனும் கேள்வி.
உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை.
இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும், காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம்.
இவையும், இவைபோன்ற வேறு பல பிரச்சினைகளும், மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன.<noinclude></noinclude>
7xncsv3rrxcf764fooo5w9kvflr07m2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/420
250
642048
1928921
1928079
2026-04-30T08:57:31Z
Rabiyathul
5890
+ மேலடி
1928921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|396||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>396
'திராவிட நாடு' இதழில்
க்யூபா நாட்டிலே புரட்சிப் புயல்! அபிசீனிய நாட்டிலே மன்னருக்கு எதிராகச் சதி! போர்ச்சுகலில் சலாசர் ஆதிக்கத்தை அழித்தொழிக்கத் புரட்சிப்படை தயாராகிவரும் நிலைமை! லாவோசில் உள்நாட்டு அமளி!-இவ்வண்ணம் பல பிரச்சினைகள்- பயமூட்டத்தக்க விதத்தில்.
எல்லையைப் பறிகொடுத்துவிட்டதால் ஏக்கமும் திகைப்பும் கொண்டு இந்திய துரைத்தனம் இருக்கும் நிலைமை.
பர்மா, பூடான், சிக்கிம், நேபாளம், பாஸ்தான் ஆகிய நாடுகளுடன், சீனா விருந்து வைபவம், கூட்டறிக்கை, கொள்கை விளக்கம், ஒப்பந்தம் போன்ற முறைகள் மூலம், புதிய நேசத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போக்கு.
தம்பி! தமிழகத்தில், நான் மேலே கோடிட்டுக் காட்டிய நிகழ்ச்சிகள், நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி அல்ல, அக்கரை யோடும், பரபரப்பு உணர்ச்சியோடும் பேசத் தலைப்பட்டது.
பேரரசி எலிசபத் பவனி வருகிறார், பால்வண்ண நிலவொளியில், காதல் வண்ணத்தையும், மொகாலய சாம்ராஜ்யச் சிறப்பினையும் எடுத்துக்காட்டி இசைபாடி நிற்கும் எழிலுருவமாம் 'தாஜ்மகாலை'க் கண்டு வியந்தார்; பாராட்டுரை வழங்கினார். பேரரசின் கணவர் முதலையைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினார்-புலியினைக் கொன்றார். ஏராளமான வாத்துகளையும் சுட்டு வீழ்த்தினார்; போலோ விளையாட்டில் ஈடுபட்டார்.
சிற்றார்களும், சீமான்களும், சீமாட்டிகளும், ஆட்சியாளர்களும் பேரரசியாருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர்.
இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில் பேசிக்கொண்டிருந்தது.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம் வஞ்சிக்கப் படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது.
கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்க உதவாத காரியங்களிலே ஈடுபடுகின்றனரே, காங்கிரஸ் ஆட்சியினர் என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று.
புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு. ஏழையர் வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ-பிப்ரவரித் திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே - என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை.
விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள் திகைப்படைந்துள்ளனர்.<noinclude></noinclude>
tvct8b4hxg570od1rjrm8nocf1f3hol
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/421
250
642049
1928922
1928080
2026-04-30T08:58:05Z
Rabiyathul
5890
+ மேலடி
1928922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||397}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
397
எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம் இவை பற்றி அல்ல, பேசிக்கொண்டிருந்தது.
வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக் கோலாகல மாகக் கொண்டாடினர்-ஆனால், தமிழக மக்கள் இவைபற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை!
உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல் பிரச்சினை வரையில், அக்கரையுடன் பேசினாரில்லை.
பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது. அப்படியா? என்று ஆச்சரியத்துடனோ, இனி என்ன நடக்கும்? என்று அக்கரையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை.
தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச் சரிப்படுத்திக் கொண்டு, போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா? நாக நாட்டு விடுதலை வீரனாம். பிசோ இனி என்ன செய்வார்? என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அது குறித்த உரையாடலைக்
காணோம்.
நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது மனிதனையே அனுப்பி யுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக் காணோம்.
தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வானவெளிப் பயண மாயினும், விலைவாசி ஏற்றமாயினும், இவை பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற் பொழிவுகளில் பேசப்பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர்- ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடைவீதியில் இதுதான் பேச்சு-கல்லூரிகளிலும் இஃதேதான்!
கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர் போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர்; ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர்.
எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர் போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சியத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர், அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்!<noinclude></noinclude>
3pgmibyvr7gs2q2axoycpwha7o1ddmw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/422
250
642050
1928923
1928081
2026-04-30T08:58:37Z
Rabiyathul
5890
+ மேலடி
1928923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|398||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>398
'திராவிட நாடு' இதழில்
எத்துணை இறுமாப்பு இதுகளுக்கு என்று ஏளனம் பேசி, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ள முயற்சித்தனர் சிலர்.
என்னென்னமோ எண்ணிக்கொண்டிருந்தோமே! இப்படி இருக்கிறதே நிலைமை!! -என்று வாட்டத்துடன் பேசினர் சிலர்.
ஏன் இப்படி நேரிட்டது? என்று காரணம் காண விரும்பிப் பேசினர் சிலர்; எப்படியாவது, விரும்பத்தகாத இந்த நிலைமையை, மாற்றியாக வேண்டும் என்ற உள்ளன்புடனும் உறுதியுடனும் பேசினார் சிலர்.
உணர்ச்சி வயப்படக்கூடிய வயதினர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இப்படித்தான் நேரிடும் என்று கவலையைத் தெரிவித்துக் கொண்டனர் சிலர். இது நாட்டுக்கும் நல்லதல்லவே என்று நல்லுரை கூறினர் சிலர்.
ஒரே ஒரு பிரச்சினைதான். பேசப்படத்தக்கதாகத் தமிழகத்துக்குத் தோன்றிற்று. ஒரே ஒரு பிரச்சினை பற்றித் தான் கொந்தளிப்பும் கோப தாபமும், காரசாரமும் கொண்ட முறையில் பேசிக்கொள்ளப் பட்டது.
தம்பி! அந்த ஒரே ஒரு பிரச்சினை-பலருடைய உள்ளத்தைக் குலுக்கிய பிரச்சினை-அகில உலகத் தொடர்பு கொண்ட பிரச்சினை களையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு, முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!!
தி.மு.கழகத்திலே நெருக்கடி- நேசத் தொடர்புகளிலே முறிவுகள்- பாசத்தைப் பிய்த்தெறியத்தக்க பிளவுகள் - குழப்பம்-தலைவர்கள் திக்காலொருவர் ஓடிவிட்டனர் - என்பது தான். தமிழகத்திலே பத்துப் பதினைந்து நாட்களாகப் பரபரப்பூட்டிய பேச்சு.
நல்ல வேட்டை நிருபர்களுக்கு பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம்! காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி!
ஆந்திர மாநிலக் காங்கிரசிலே, அமளி மூண்டிடத்தக்க நிலைமை.
மைசூர் மாநிலக் காங்கிரசிலே, மருட்சி கொண்டி வைக்கும் மனமாச்சரியம்.
உத்தரப்பிரதேசக் காங்கிரசில், உள்ளத்தைக் குலுங்கச் செய்யும் விதமான பிளவுகள்.
பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சிக் கோலத்தில் காங்கிரஸ் கட்சியினர். கேரளத்தில், காங்கிரஸ்-பிரஜா சோஷியலிஸ்ட் கூட்டுக்கு வேட்டு வைக்கும் போக்கிலே, காங்கிரஸ் வட்டாரத்திலே நடவடிக்கைகள்<noinclude></noinclude>
9s8mowq0ysgfwv4gtvv96z2odxk4t4o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/423
250
642051
1928924
1928082
2026-04-30T08:59:08Z
Rabiyathul
5890
+ மேலடி
1928924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||399}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
399
வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான கலக நிலைமை காங்கிரஸ் முகாமில்.
இவைகளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம் செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ என்று அச்சப் படவுமில்லை. ஆயாசப்படவுமில்லை. ஆனால், தி.மு. கழகத்திலே பிளவு-நெருக்கடி-குழப்பம்-என்று தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன் அன்பு கலந்த அக்கரையுடன் பேசிக் கொண்டனர்.
தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே. நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்ப வில்லை; ஆனால், அந்த நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக்கொண்டிருந்தே அது எதைக் காட்டுகிறது என்பதை எண்ணிப் பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப் படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும்.
நமது கழகம், அந்த அளவுக்கு. மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களால் மிக மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பட்டு வருகின்றன.
கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும், ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது? பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொதுமக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம் காண விழைகின்றனர்.
கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள், திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமைகளையே. பாதிக்கத் தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது.
கழகத்தார், கழத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு பொறுப்பான வர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக்கிறோம்.
கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும், கழகத்தவர் பார்த்துக் செய்திடவேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள்-நாட்டு நலனில் அக்கரை கொண்டோர். தொடர்பு கொண்டு சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது.<noinclude></noinclude>
fk7h46kwl0jn1gh4l10kf2e9aypjoeh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/424
250
642052
1928925
1928083
2026-04-30T08:59:39Z
Rabiyathul
5890
+ மேலடி
1928925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|400||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>400
'திராவிட நாடு' இதழில்
கழகம். நாட்டுக்கான நற்பணியாற்றக் கடமைப்பட்டிருக்கிறது என்பதைக் கழகத்தவர் அல்ல, நாட்டு மக்களே நம்பிக்கையுடன், எடுத்துரைக்கும் நாட்களில் இருக்கிறோம்.
*
கழகம், நாட்டுக்கோர் அணிகலனாய்த் திகழ்கிறது, என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது.
கழகம், கபடரின் ஆட்சியை, வஞ்சகரின் ஆதிக்கத்தை, வீழ்த்தத் தக்கதோர் படைக்கலம், என்ற நம்பிக்கை, நாட்டுக்குரியவர்களிடம் ஆழப் பதிந்துவிட்டது.
கழகம், விடுதலைப்போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி எனும் வாடையை விரட்டி. மரபு காத்திடும் மன்றமாகி, நம்நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத்தர வேண்டிய விலை இன்னுயிரே எனினும் ஈந்து, திராவிட நாடு பெற்றாக வேண்டுமென்று துடித்தெழுந்து போரிடும் முன்னணி என்ற பேருண்மை, நிலைநாட்டப்பட்டு விட்டிருக்கிறது.
எனவேதான், தம்பி! இதற்கு ஒரு இடுக்கண் வருகிறது என்ற நிலை கண்டால், நாடே பேசுகிறது. நல்லோரெல்லாம் கவலையுறு கின்றனர், ஆதிக்கக்காரர் அகமகிழ்கின்றனர், பொச்சரிப்புக்காரர் ஏசித் திரிகின்றனர், பொறுப்புணந்தோர் குமுறுகின்றனர்.
நிலைமை இது அல்ல எனின், ஏன் நாலாறு நாட்களாக, நாடே இந்தப் பிரச்சினைப்பற்றிப் பேசுகிறது: நாடாள்வோர், இதை வைத்துக் கொண்டே நையாண்டி செய்து வருகின்றனர்; எண்ணிப் பார்த்தனையா?
விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சிக் கண்டு, எவரும் பதறு வதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, என்ன? என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல் பாய்ந்த வேதனைாயோ? வெட்டிய படுகுழியில் வீழ்ந்து பட்டதோ? சூல்கொண்டதால் வந்துற்ற வலியோ? காரணம் யாதோ, கரி இதுபோல் குரலெழுப்ப என்று எவரும் எண்ணுவர்.ஆமல்லவா?
பட்டுத் துணி, காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச் செல்லப் பட்டால்தான், எவரும் பதறுவர்; பறந்திடும் பட்டம் அறுபட்டால், பதறுவாரோ?
அஃதேபோன்றுதான் தம்பி! நமது கழகம், மதிப்பு மிக்கது, பயன்தரவல்லது, நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின் ஆதரவு பெற்றது. பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருப்பது, என்பதனால்தான், அத்தகைய ஓர் அமைப்புக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும், நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று.<noinclude></noinclude>
6hkrj8dvwwpvgoukhc1nttoiccesqms
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/425
250
642053
1928926
1928084
2026-04-30T09:00:10Z
Rabiyathul
5890
+ மேலடி
1928926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||401}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
401
நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன் என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும் எனக்கு, இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது.
அது எக்கேடோ கெடட்டும், நமக்கென்ன? நாம் நமது காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிடவில்லை. இது இப்படி யானால், நமது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையைத் தெரிவித்தனர்.
கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும் பெற்று, வளரவேண்டும்; அதன்மூலமாக நமது நலிவுகள் போக்கப் பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர். எனவேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர்.
உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும். என்பது மக்களுக்குத் தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கரை காட்டுவதில்லை. ஆயாசப் படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும் வலிவு இழப்பதும், அதைப் புகலிடமாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப்படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொதுமக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை.
கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்று திகழ்கிறது. பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப.
அதுபோலவே, விரவமறியா மக்களை, வெள்ளை உள்ளத்தினரை மயக்கியும், மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபட வேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! - என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக் கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக்கொண்டிருக்கும், புலியென்றாகி விட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில், 'நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு 'அறை கூவல்' ஆகி நிற்கிறது.
அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத் தக்க வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்து<noinclude></noinclude>
ojk557dke8zme47bbvoz4pcdvksm8l1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/426
250
642054
1928927
1928085
2026-04-30T09:00:42Z
Rabiyathul
5890
+ மேலடி
1928927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|402||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>402
'திராவிட நாடு' இதழில்
விடவில்லை. கட்கமேந்திப் போரிடுவோனைக் கவண் கற்கள் கொண்டே வீழ்த்திய தீரனைப் பற்றிய கதையொன்றுண்டு. அது போல, நாம். எல்லாச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை, நமது உறுதி, தன்னம்பிக்கை, ஆகியவற்றின் துணைகொண்டு எதிர்த்து நின்றோம்; இன்று. காங்கிரசிடம் உள்ள சகல சாதனங்களும், நம்மைச் சமாளிக்கப் பயன்படுத்திக் தீரவேண்டிய நிலைமை!!
இவர் என்ன சொல்லுகிறார் கேட்போம்-என்று ஆவலுடனும் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும், பொதுமக்கள் அருகே வந்து சேரத்தக்க, மேல் நிலையினராகவோ, மேதைகள் ஆகவோ, விருது பெற்றவர்களாகவோ, வீரக் கழலணிந்தவர்களாகவோ, கூடித் துவக்கியது அல்ல, திராவிட முன்னேற முன்னேற்றக் கழகம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் துவக்கியபோது, ஆற்காட்டு இராமசாமியார், தமது அறிவுத்திறனை எடுத்துக்காட்ட, ஆங்கில நாடுகளில் உலா வந்துகொண்டிருந்தார்! வணிகக் கோமான்கள் பொருள் ஈட்டினர்; பிரபுக்களாயினர்! மேதைகள் நூற்கள் எழுதினர், பாராட்டுப் பெற்றனர். தேர்தல் தந்திரமறிந்தோர், கூடு விட்டுக் கூடுபாய்ந்தனர்; பதவிகளைப் பெற்று மகிழ்ந்தனர். இசை வாணர்கள், காங்கிரஸ் நாமாவளி பாடி, புகழ் தேடினர். நாடக மேடைகள், நம்மை நள்ளிரவில் நையாண்டி செய்யும், மாற்றார் கைக்கருவிகளாக இருந்தன. படக்காட்சிகள், பரலோக விளக்கமளித்துக் கொண்டிருந்தன. புலவர்கள், நமது 'சிற்றறிவு' பற்றி எடுத்துரைத்து, ஏளனம் செய்திடத் தமது பேரறிவைப் பயன்படுத்தி வந்தனர். மாணவர்கள், ஜெய்ஹிந்திலேயோ, இன்குலாப் ஜிந்தாபாத்திலேயோ, ஈடுபட்டுவிட்டிருந்தனர். தம்பி! அன்று, கொட்டும் மழையில், வெட்டவெளியில், கூடினோமோ கழகம் துவக்க, அந்த நாளையும், அதுபோது, நமக்கு இருந்த வசதிக் குறைவுகளையும், இன்று நமது கழகம் பெற்றுள்ள ஏற்றத்துடன், ஒப்பிட்டுப்பார்; உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும்.
பத்திரிகை உலகம், நம்மைப் பரிகாசப்பொருளாகக் கருதிற்று; நாம் கவலைப்படவுமில்லை; செயலாற்றாமலிருந்து விடவுமில்லை; இன்று, நம்மைத் தாக்குவதாலேயே விற்பனையைப் பெருக்கிக்கொள்ள முடியும் என்ற வித்தையைக் கையாண்டு வரும் பத்திரிகைகள் பல. நாட்டிலே. பெரிய இதழ்கள் பெயர் பெற்ற இதழ்கள் இருட்டடிப்புச் செய்தபோது, என்ன செய்தோம்? நாட்டு மக்களிடம் இடைவிடாத் தொடர்புகொண்டோம்; பிறகு மக்கள், இத்துணைப் பணியாற்றும், இந்தக் கழகத்தின் செய்தியைத் துளிக்கூட வெளியிடாமலிருக்கும் பத்திரிகைகளும், பத்திரிகைகள்தானா என்று கேட்டனர்; கண்டித்தனர். தம்பி! தெரியுமா, உனக்கு: இப்படி இருட்டடிப்பில் தள்ளப்பட்டிருந்த நமது கழகம், பண்டித நேருவுக்குக்<noinclude></noinclude>
nuozkyvtyvcge8upm6tyqorkqihqw04
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/427
250
642055
1928928
1928086
2026-04-30T09:01:13Z
Rabiyathul
5890
+ மேலடி
1928928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||403}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
403
கருப்புக் கொடி பிடித்ததே. அந்தச் செய்தி, நிகழ்ச்சி நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள். அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், மிக முக்கியமான செய்தியாக வெளியிடப் பட்டது. நமது கழகத்தின் இறுதிநாள் வந்துவிட்டது என்று இறுமாப்பாளர் பேசித்திரிந்த இதுபோது டென்மார்க் நாட்டிலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர் நமது கழகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் படி, எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
காங்கிரஸ் மேடைகளில், மாநாடுகளில், இசைவாணர்கள், கோகிலகானங்கள், கொடுமுடிகள் பாடுவர், பெருமைப்படுவர்.
நமக்கு? இயக்கத் தொண்டர்கள்-கொள்கையை இசையாக்கி, உற்சாகத்தை இராகதாளமாகக் கொண்டு பாடுவர். தம்பி! இப்போது நிலைமை என்ன தெரியுமா? இசைவாணர்கள், நமது இயக்கப் பாடல் களில் இரண்டொன்றையாவது தெரிந்துவைத்துக் கொண்டால் தான், 'கச்சேரிகளைகட்டும்' என்ற நிலைமை!!
நாடகமாடிப் பெயர் பெற்றவர்கள், வேடமணியும்போது 'வெல்வெட்'- மற்ற நேரங்களில் கதர்! அதுதான் 'பாணி'!! இன்று? புதுப்புது நாடகங்கள் கேட்கிறார்கள் நடிக நண்பர்கள், நாடக மேடை என்றாலே, கழகப் பிரசாரமாகிவிட்டது, என்று நாடாள்வோரே கவலைப்படுகின்றனர்.
இவைகளை எண்ணிப் பார்க்கச் சொல்லும் காரணம், வெற்றிப் பட்டியலைக் காட்டிக் களிநடமாடவும் அல்ல; இதுபோதும் திராவிட நாடு பெற என்ற ஏமாளித்தனம் கொண்டதாலுமல்ல; இத்துணை மாறுதல். வளர்ச்சி, பொதுமக்கள் தந்த ஆதரவினால் நமக்குக் கிடைத்தது என்பதைக் காட்ட அதனால்தான், நாம் ஊட்டிவளர்த்த கழகத்துக்குத் துளி ஊனமும் வரக்கூடாது என்ற கவலை, பொதுமக்களுக்கு ஏற்படுகிறது; இவ்வளவு விரைவிலே, பொதுமக்களின் நல்லாதரவைப் பெற்று, நமது ஆதிக்கத்தை அழிக்கத்தக்க ஆற்றலைப் பெற்றுவிட்ட இந்தக் கழகத்திலே, ஏதேனும் ஊனம் ஏற்படாதா, உடைபட்டுப் போகாதா, நாம் உயிர்தப்பிப் பிழைத்திட வழி கிடைக்காதா, என்ற நப்பாசை நாடாளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது. அதனால் தான், காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள். நமது மாநாடுகளை நாலே வரியில் நாட்டு மக்களுக்குக் கூறும் ஏடுகள், நமக்குள்ளே பேதம், பிளவு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்து அலைந்து, சிந்தியது சிதறியது, வீசியது பூசியது ஆகியவற்றைப், பக்கம் பக்கமாக வெளியிட்டு, நமது கழகத்தைப் பொதுமக்கள், கைவிட்டு விடவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாண்டு, குடியரசு விழாக் கூட்டம் முழுவதுமே, கழகத்துக்கு அர்ச்சனை நடத்தத்தான் பயன்பட்டதாம். அமைச்சர் கூடப், போதையேறிய<noinclude></noinclude>
svkaf3cqkgfp2i7dh2ijuayff0prs51
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/428
250
642056
1928929
1928087
2026-04-30T09:01:44Z
Rabiyathul
5890
+ மேலடி
1928929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|404||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>404
'திராவிட நாடு' இதழில்
பூபதிபோல ஆசனத்தில் சாய்ந்தபடி கேட்டாராம்; தி.மு.கழகத்தை நாங்களா அழிக்க வேண்டும்!-என்று. அது தன்னாலே அழிகிறது. ஒருவருக் கொருவர் பேதப்பட்டு அழிவைத் தேடிக்கொள்கிறார்கள் என்று பொருளாம்!! உத்தரப் பிரதேசத்துப் பிளவை நீக்க ஓடோடி வருகிறார் நேரு! ஆந்திர அமளியைத் தீர்த்து வைக்க வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார். அந்த விதமான பிளவுகளால், காங்கிரஸ் அழிந்துவிடாதாம்; நமக்குள்ளே, முறைகளைப் பற்றிய கருத்துரைகள் கூறப்படுவதிலே கசப்புகள் ஏற்பட்டால் போதுமாம், நாம் உடைபட, அழிந்து விட!! அளவற்ற புல்லறிவும் துணிவும் வேண்டும். இப்படியொரு வாதம் புரிய
நான் அங்ஙனம் கூறுவதால், நமக்குள் கருத்து வேற்றுமைகளால் பேதம் தலைதூக்கி நிற்க வேண்டும் என்று கூறுவதாகக் கொள்ளற்க. நமக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள், கழகத்தை நடத்திச் செல்லும் முறைகள் பற்றி - கழகக் கொள்கை பற்றியது அல்ல.
ஆனால், இதற்கே இத்துணை இரைச்சல் கிளப்புகின்றனர். இடுப்பொடிக்க முயலுகின்றனர், ஏளனம் செய்கின்றனர், காங்கிரசார். பொதுமக்களும், இந்த அளவிலும் வகையிலும் கூட, நமது கழகத்தில் பேத உணர்ச்சி காணப்படுவதை விரும்பவில்லை; கலக்கமடைகிறார்கள். பெற்ற குழந்தைக்கு வந்துற்றது நோய்கூட அல்ல; பால் மணம் மாறாக் குழந்தை படுத்துறங்குகையில் சிற்றெறும்பு கடித்ததனால், ஏற்பட்ட சிறு தழும்பு என்றாலும், தாய் பதறுவதைக் காண்கிறோமல்லவா; அஃதே போல, நாம் வளர்த்திடும் கழகத்திலே முறைப்பற்றிக் கூடத்தான் பேத உணர்ச்சி மூண்டிடுவது ஏன்? மூண்டிட்டதும் இந்த வடிவம் பெறுவானேன் என்ற கவலை, நல்லோருக்கெல்லாம் ஏற்படுகிறது.
மாற்றார்களுக்கு நாமே இரைதேடிக் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடாதபடி, பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, தம்பி! நம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது. ஆனால் மாற்றார்களுக்கு இடம் கிடைத்துவிடுமே என்ற அச்சத்தால், உள்ளத்தில், எழும் கருத்தை அழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறமாட்டேன். அதனை எடுத்துரைக்கும் முறையும், தன்மையும், எடுத்துரைக்கும்போது, நாம் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதிலே மேற்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் பண்பும், வளர்ந்தாக வேண்டும். கழகம் வளர வளரப் புதிய புதிய பிரச்சினைகளை நாம் சந்தித்துத் தீர வேண்டும். அது தவிர்க்க முடியாத கடமை. அந்தக் கடமையைச் செய்வதிலே, அச்சம் தயை தாட்சணியம் தேவையில்லை. ஆனால், தோழமை பாழ்படலாகாது- முறைகேடு ஏற்படக்கூடாது-கட்டுக்கோப்பு உடைப்படக்கூடாது. மெத்தக் கஷ்டப்பட்டு, கட்டப்பட்டது. தம்பி இது. இதற்கு ஒரு ஊனம் ஏற்படக்கூடாது.<noinclude></noinclude>
endfvx20ow46zvdao7kqk3j5oautvlw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/429
250
642057
1928930
1928088
2026-04-30T09:02:16Z
Rabiyathul
5890
+ மேலடி
1928930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||405}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
405
இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி, தம்பி, நீ நிறைய அறிந்திருக்கிறாய். நான் கூற, புதிதாக என்ன இருக்கிறது.
ஒன்றுமட்டும் கூறுவேன், நமது தோழர்கள் பீதி அடையத் தக்க விதமான நிலைமைக் கேடுகள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. மாற்றார் களுக்கு இதனைச் சொல்வேன், வேழம் வேல் பாய்ந்து வேதனைக் குரல் எழுப்புகிறது. வீழ்ந்துபடும் என்று எண்ணாதீர் வேழம் சந்தன மரத்தின் மீது உராய்ந்து கொள்ளுமாம்-புலவர் கூறுகின்றனர். ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, அடவியில் ஓடுமாம்-முழக்கமிட்டபடி.
முறைகளைப் பற்றி இங்கு ஒருவருக்கொருவர் விவாதம் எழுப்பும் குரல் கேட்டு, கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொள்ளாதீர்,
முறைப்பற்றிக் கருத்து வேற்றுமை எழுகிறது என்றால், உமது எதேச்சாதிகாரத்தை அழித்தொழிக்க, எம்முறை சிறந்தது, விரைவில் வெற்றி தரத்தக்கது என்பது பற்றித்தான்.
தம்பி! மாற்றாரின் மனம் களிப்பது எனக்குத் தெரியும்; என்னைவிட மிக நன்றாக, நீ அறிந்திருக்கிறாய்.
மாற்றுக் கட்சியினரோ, செயற்குழுவில் அமளி-அடிதடி, நடிக நண்பர்கள் தாக்குதல் நடத்தினர், சட்டையைப் பிடித்து இழுத்தனர் என்ற பொய்யுரையைப் பரப்பி, நமது கழகத்துக்கு இழுக்குத் தேடவும், நமக்குள் கலாம் மூட்டவும் முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு. நான் இதனைக் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெறவில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர்-அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது-அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை.
ஏ
மங்கிப் போய்விட்டதாலே மறைந்து போய்விட்டதோ என்று பலரும் எண்ணி, இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர்- எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர்விடுகிறது படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடுகிறது! பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள்.<noinclude></noinclude>
62pak05c14tdp2xct7zgs7ji8083qq5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/430
250
642058
1928931
1928089
2026-04-30T09:02:48Z
Rabiyathul
5890
+ மேலடி
1928931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|406||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>406
'திராவிட நாடு' இதழில்
கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல வெட்டிச் சாய்க்கப்பட்டனர் பலர். வெஞ்சிறையில் உழன்றனர் பலப்பலர்.
இறந்துபட்டவர்கள் சென்ற வழி செல்லாதவரையில், நாம் இயக்கத்துக்குத் தரவேண்டிய காணிக்கையைத் தந்தவர் ஆக மாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள். நம் உடன் இருப்போர்! பலரால் இதை எடுத்துக் கூறக் கூடத் தெரியாமல் இருக்கலாம்; சிலர் இது பற்றிப் பேசுவது முறைகேடு, நேரக்கேடு என்றுகூட எண்ணிப் பேசாது இருந்திடக் கூடும். ஆனால், அழைப்பு வந்திடும் போது, ஆமையாகிவிடமாட்டார்கள், களம் புகாது ஏமாற்றிவிடமாட்டார்கள். உயிரைத் தந்திடத் தயங்க
மாட்டார்கள்.
அவ்விதமான வீர உணர்ச்சி கொப்பளிக்கும் நிலைமை யினை நமது கழகம், மிகமிகக் குறுகிய கால அளவிலே செய்து தந்துள்ளது.
பயனாக
கழகம் நடாத்திய பிரசாரத்தின் இன்று, வடநாடு தென்னாடு எனும் பிரச்சினை குறித்துப் பேசாதார் இல்லை என்ற கட்டம் காண்கிறோம்.
கிளர்ச்சியில் ஈடுபடத் துடித்து நிற்கும் தூயவர் ஆயிரம் ஆயிரம். அஃதேபோல், தோழமை உணர்ச்சியுடன், கழகப் பணியாற்றப் பல்லாயிரவர் உளர். பாங்கான வளர்ச்சி, தம்பி! பார்ப்போர் பரவசப் படுகின்றனர், மாற்றார் வியப்படைகின்றனர், எப்படி இவர்களால் இத்துணை விரைவில் ஏற்றமிகு அமைப்பைச் சமைத்து நடாத்திச் செல்ல முடிகின்றது என்று. அத்தகைய ஓர் அமைப்பு உடைபடுமானால், எண்ணும்போதே. நெஞ்சிலே நெருப்புப் பிடிக்கிறது, உலகம் நம்மை மன்னிக்காது, ஆமாம் தம்பி! இவர்களை நம்பி, வழி நடந்தோம். துணை நின்றோம், தொல்லைகளைத் தாங்கிக் கொண்டோம்; ஆயின் கழகத்தை நடத்திச் செல்லும் நிலையிலிருப்போரோ, தமக்குள் மாறுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, இத்தனை ஆண்டு உழைப்பையும் உருக்குலைகிறார்களே, என்று எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பர். அவர்கள் மனம் உடைபடும்; உடைபடின், இனி என்றென்றும், நம்போன்ற சாமான்யர்கள். ஒரு இயக்கத்தை, அமைப்பைச் சமைத்திட இயலாது; மக்கள் ஆதரவு கிட்டாது. இந்த மாபெரும் உண்மையை உணர்ந்தால், நம்மில் எவரும், கருத்து வேற்றுமைகளை கோபதாப வேகத்துடன் கலந்து உலவவிட்டுத் தம்மையும் அறியாமல், கழகத்துக்கு ஊறுதேடிடார். உடைபட்டுப் போனபின் உட்கார்ந்து, அழுது பயனில்லை; உண்மை நிலைமையினை உணராததும் மாபெரும் தீதுக்கு வழி கோலிவிடும்.
ஒரு அமைப்பினைக் கட்டுங்காலை உள்ள கஷ்டத்தைவிட அதனைக் காத்திடும்போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகம். அமைப்புக்கு அதிர்ச்சி<noinclude></noinclude>
1vl9v3thvnnxfy63bi69h27cu2m5w4t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/431
250
642059
1928932
1928090
2026-04-30T09:03:18Z
Rabiyathul
5890
+ மேலடி
1928932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||407}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
407
ஏற்படுத்துவது, அதனை அழித்திடத்தக்க ஆபத்தினைக் கூட உண்டாக்கி விடக்கூடும். தூசுபோகக் கண்ணாடிப் பலகையினைத் துடைத்திடத்தான் வேண்டும்; ஆனால், பக்குவமாக, எங்கெங்கு அழுக்கேறிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதனை நீக்கிடத்தக்க விதத்தில், துடைத்திட வேண்டும்-ஆர்வத்துடன். ஆனால் ஆர்வத்துடன் பக்குவமும் சேர்ந்திட வேண்டும் - இல்லையேல், துடைக்கும் போதே, கண்ணாடி பாளம்பாள மாகக் கீழே வீழ்ந்து விடும், பாழ்பட்டுப் போகும்-பட்டபாடு அத்துணையும் பாழாகிப் போகும்.
தம்பி! இந்தக் கவலைதான் என் மனதைக் குடைகிறதேயன்றி, எந்தப் புதிய முறைகள் புகுத்துவதற்கான முயற்சிகள் பற்றியும் நான் கவலைகொள்ளவில்லை. முறைகள், புதியனவோ, பழையனவோ. எவை எனினும், அவை ஒரு அமைப்புக்காக-எனவே, அமைப்பு அழிந்து விடாதபடி, கேலிக்கு ஆளாகாதபடி மாற்றாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். நேர்த்தியான அறுவைத் திறன் காட்டினார் மருத்துவர்; ஆனால், நோயாளிதான் செத்துவிட்டார் என்று கூறிடத்தக்க நிலை ஏற்படக்கூடாததல்லவா? வேலின் கூர்பார்க்க, - நம் விழியினையே குத்திக் கொள்ளப் போமோ!!!
உன் கருத்து இவ்வழிதான் இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். உன் கைவண்ணத்தில் கிடைத்தது. கழகம் எனும் இந்த அமைப்பு, இன்று அது கலகலத்துப் போகாதிருக்கும் பொறுப்பினையும் நீ மேற்கொண்டாக வேண்டும். நிலைமை இது. கூறிடுவது என் கடமை. என் முயற்சியில் குறையிராது-என் நெஞ்சில் உள்ள வலிவு போதுமானதுதான் என்ற உணர்வு குறைந்து வருகிறது. உடனிருந்து பணியாற்றிக் கழகத்தைக் கட்டிக் காத்து, வெற்றியைத் தேடிக் கொடுத்திட வேண்டும். மிக நல்ல, அமைப்பு-கடினமான உழைப்பின் விளைவு - தோழமைக்கு எடுத்துக்காட்டு-தி.மு.கழகம்.
ஓர்
இன்றோ, மாற்றார் எள்ளி நகையாடுகின்றனர்-உற்றார் உள்ளம் குமுறுகின்றனர்- உடைபட்டுப் போய்விடும் என்று மிரட்டுகின்றனர். நமை அழித்தொழித்துத் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள முயற்சிக்கும், காங்கிரசார். என் அச்சத்தையும், ஆயாசத்தையும் ஐயப் பாட்டினையும் நீக்கிடத் தக்க விதத்தில், கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசுவோர்கூடக், 'கழகம் உடைபட விடமாட்டோம், அழிவு வந்திடாது. என்று உறுதி அளிக்கின்றனர். மகிழ்ச்சி. கழகத்தில் தொடர்புள்ள எவருக்கும், நிச்சயமாக, கழகத்துக்கு இழுக்கு வந்துவிடும்,அழிவு ஏற்பட்டுவிடும் என்று தோன்றுமானால், நெஞ்சு துடிக்காமலிராது: ஏனெனில், அவரெலாம் அளித்த அருந்திறனும் அயரா உழைப்பும்<noinclude></noinclude>
2ph0f0c0h78ono2wdei1p7k23gvufzd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/432
250
642060
1928933
1928091
2026-04-30T09:03:48Z
Rabiyathul
5890
+ மேலடி
1928933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" />
{{Rh|408||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>408
'திராவிட நாடு' இதழில்
சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான், கழகம். அதற்கொரு ஊனம் ஏற்பட, எவரும் இடமளிக்க மாட்டார்கள். அந்த நம்பிக்கையும் எனக்கு உண்டு. உன் உழைப்பும், திறனும்தான், அந்த நம்பிக்கை நான் கொள்வதற்குக் காரணம். தம்பி! உன் கண்ணொளி போதும், என் கவலையை ஓட்ட, காரிருளை விரட்ட; உன் நெஞ்சு உரம் போதும், என் நடுக்கத்தை நீக்க! கழகம் காப்பாற்றப்படும் என்று, என்போன்றோர் புதுஉறுதி பெறுவதே. நீ எழுப்பும் எழுச்சி முழக்கம் கேட்டுத்தானே!
.
உன் சொல்லும் செயலும், மாற்றாருக்கு, நமது கழகத்தின் மாண்பு துளியும் மங்கவில்லை என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமையவேண்டும். உன் யோக்கும், நோக்கும், பேச்சும் செயலும் கழகத்தை நடத்திச் செல்பவன் என்ற பொறுப்பினைச் சுமந்து கொண்டிருக்கும் என்போன்றாருக்கும், நல்வழி காட்டத்தக்கதாக அமையட்டும். எந்த ஒரு கட்சியும், அதன் மேல்மட்டத்திலே அமர்த்தப்பட்டிருப்பவர் களின் இயல்பு, திறமை. உழைப்பு இவைகளை மட்டுமே பொறுத்து இல்லை. அவர்களை அமர்த்தும் உரிமையும் ஆற்றலும் பெற்றுள்ள பல இலட்சம் உறுப்பினர் களின் திறமை, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இருக்கிறது. கலசத்தின் மினுமினுப்பு, காலக்கரம் பட்டுப்பட்டு மங்கிப்போகக் கூடும்; நட்டமில்லை, அடித்தளம் வலிவுடன் இருந்தால், தம்பி! அடித்தளத்தை ஆக்கிக் காத்திடும் பொறுப்பு, உன்னுடையது. அதற்கேற்ற ஆற்றலும் உனக்கு நிரம்ப இருக்கிறது. அந்த நம்பிக்கைதான், இயக்கத்துக்கு உயிர் ஊட்டம் தருகிறது. உன் பணியின் மேம்பாடுதான் நாட்டின் பிணி போக்கும். மாமருந்து. அதை அளித்து, என் போன்றாரை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தோனே! அஞ்சாது பணியாற்று! அயராது பணியாற்று! வெற்றிக்கான பாதை வெகு தெளிவாகத் தெரிகிறது.
அண்ணன்,<noinclude></noinclude>
spx4rnzxftwl1uyqurpp3s1lhmim2sf
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/66
250
642075
1928273
1928206
2026-04-29T12:39:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928273
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||57}}</noinclude>மாதங்களுக்கு மேலாகிவிட்டது. பரூவா அவர்களின் கணக்குப்படி, அல்லது அவருக்குத் தரப்பட்டுள்ள புள்ளி விவரப்படி தி.மு.க அடியோடு ஒழிந்துவிட்டது. அதாவது இரண்டு காங்கிரஸ் இணைப்புக்கு இடையூறாக இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்ட தி. மு. க. ஆட்சியும், தி. மு. கழகமும் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட்டு, இனிமேல் தலை தூக்க முடியாமல் தரைமட்டமாக ஆக்கப்பட்டுவிட்டது. இணைப்புக்குக் குறுக்கே நின்றதாகக் கருதப்பட்டு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட தி. மு. கழகம், தண்டிக்கப்பட்ட பிறகு இரு காங்கிரசும் இரண்டறக் கலந்து திரு. பி. ராமச்சந்திரன் தலைமையில் உள்ள நிறுவனக் காங்கிரஸ் கட்சியில் ஆளே இல்லாமல் போய், எல்லோருமே புதுக் காங்கிரசில் இரு கடல் இணைந்ததுபோல் இணைந்து விட்டனர்.
இப்படிப்பட்ட மகத்தான வெற்றியும், செல்லுமிடமெங்கும் சிறப்பான வரவேற்பும். விமான நிலையங்கள். ரயிலடிகள் எங்கணுமே மக்களின் வெள்ளமும் நிரம்பி வழிகிற அளவுக்கு மாபெரும் ஆதரவும் பரூவா அவர்களின் தலைமையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு தன்னாலேயே உருவாகியிருக்கிறபோது, அவரது கருத்துப்படி அழிந்து போய்விட்ட கழகத்தின் மீது அவருக்கு இவ்வளவு கோபம் பொங்குவானேன்?
பரூவாவை நான் அறிவேன் நானும் நண்பர் மாதவன் அவர்களும் டெல்லிக்குப் போகும் போதெல்லாம் மத்திய அமைச்சராக இருந்த திரு. பரூவா அவர்களை சந்திக்கத் தவறியதே இல்லை. நீண்ட நேரம் எங்களுடன் இன்முகத்துடன் உரையாடுவார். சில சமயம் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அடுத்த நிகழ்ச்சிக்குக் கூட காலதாமதம் ஆகிவிடும், அவ்வளவு சுவையாகப் பேசிக்கொண்டேயிருப்பார். நேரம் போவதுகூடத் தெரியாமல்! தமிழ் நாட்டுத் தேவைகளை அவரிடம் நாங்கள் அரசின் சார்பில்<noinclude></noinclude>
86thbh6artgk8zcap9rpa5jjp2axuqu
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/67
250
642076
1928275
1928209
2026-04-29T12:41:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928275
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|58||கலைஞர்}}</noinclude>எடுத்துச் சொல்லும்போது அனுதாபத்துடன் கேட்டு ஆவன செய்திட முயற்சிப்பதாக உறுதி அளிப்பார். பழகுதற்கினிய அந்தப் பண்பாளருக்கு இப்படி ஒரு “பதைப்பு” ஏன் ஏற்பட்டது என்பதுதான் எனக்குப் புரியவில்லை.
எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சிலபேர் காரசாரமாகவும், “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்றும்; எதிர்க் கட்சிகளைப் பற்றிச் சுடுசொல் வீசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அந்தக் கட்சியின் பொறுப்புக்கு வந்த பிறகு, அல்லது அனுபவத்தின் காரணமாக பண்பட்ட பிறகு கட்சியின் முக்கிய இடங்களிலே வீற்றிருப்பவர்கள்.
:“அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
:தொகையறிந்த தூய்மை யவர்”
என்ற குறளுக்கொப்பவே நடந்துகொள்ள முனைவார்கள். கோபத்திலோ, வேகத்திலோ, வார்த்தை தவறி வருதல் (Slip of the Tongue) அல்லது ஆவேசமாகவே ஒரு வார்த்தையைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கூறிவிடுதல், அல்லது சீற்றத்தை வேண்டுமென்றே ஒரு வார்த்தையின் வாயிலாக வெளிக்காட்டுதல் இவைகூட அரசியல் வாதிகள் பேச்சில் ஏற்பட்டு விடக்கூடிய நிலைமைகளாகும். 1967-ல் கழகம் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆளும் பொறுப்பேற்கும் வாய்ப்பு ஏற்பட்டபோது பெரியவர் பக்தவத்சலம் கூட “விஷக்கிருமிகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகச் செய்திகள் வெளிவந்து, அதற்குப் பிறகு அதனை மறுத்து ஒரு தன்னிலை விளக்கம் வழங்கியதின் மூலம் தனது அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்தினார்.
ஆனால் தஞ்சை நகர்க் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பரூவா அவர்கள் போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்பவனை நோக்கி அக்கினியாஸ்திரம், வாயு-<noinclude></noinclude>
m66vpczzxumezcofb9rbrjig5qcjamo
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/68
250
642078
1928276
1928210
2026-04-29T12:42:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928276
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||59}}</noinclude>வாஸ்திரம், பிரம்மாஸ்திரம். நாகாஸ்திரம் போன்றவைகளைத் தொடுக்கும் சீற்றமிகு தளபதியாக ஏன் தன்னை மாற்றிக்கொண்டார் என்பதுதான் எனக்கு வியப்புக்கு மேல் வியப்பை அளிக்கிறது.
உடன்பிறப்பே, இருபது அடிக்குச்சியால் கூட நம்மைத் தொடுவதற்கு மக்கள் கூச்சப்படுவார்கள் என்று அவர் பேசியிருக்கிறார். பார்ப்பதற்கே கூச்சப்பட்டு புறக்கணிக்கப்பட்ட தொழு நோய்ப் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப் பரனூர் முதலிய பத்து இடங்களில் மறுவாழ்வு இல்லங்களை அமைத்த நமக்கு மேன்மைமிகு பரூவா அவர்கள் வழங்கும் பரிசு இது!
டெல்லி சென்றபோதெல்லாம் என் கையை அவர் குலுக்கியிருக்கிறார்.
நானும் அவர் கரம் பற்றி விடைபெற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போதோ தொடவே கூச்சமாயிருக்கிறது என்கிறார்.
அவர் சாதாரணமானவர் அல்ல! மத்திய அரசில் அமைச்சர் பொறுப்பேற்பதற்கு முன்பே அஸ்ஸாம் மாநிலத்தில் அமைச்சராக இருந்து பெரும் புகழ்பெற்றவர், திடீரென பொறுப்பான இடத்துக்கு வந்தவரல்ல! அவரா இவ்வளவு இழிவாக ஒரு அரசியல் கட்சியைப் பற்றி பேசினார் என்று படித்திடும்போது நம் விழிகளையே நம்மால் நம்ப முடியவில்லையே!
“ஜன நாயக முறைகளை தி. மு. கழகம் அசிங்கப்படுத்தி விட்டது” என்று அவர் கூறியிருப்பதைக் காணும்போது அழுவதா, சிரிப்பதா என்றே எனக்குத் தெரியவில்லை. சட்டமன்ற மேலவையில் அண்மைக் காலம் வரையில் ஜனநாயக இலக்கணத்தைப் பற்றி விரிவாகப் பேசிய தஞ்சை நண்பர் சாமிநாதனைப் போன்றவர்களின் பேச்சு, நடவடிக்கைக் குறிப்புக்களிலே தானிருக்கிறது. இரண்-<noinclude></noinclude>
lafzhrtksiw75iyxb0i4rvyz8blkb1f
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/69
250
642079
1928277
1928215
2026-04-29T12:43:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|60||கலைஞர்}}</noinclude>டொரு நாட்களுக்கு முன்புகூடப் படித்துப் பார்த்தேன் அந்தக் குறிப்புக்களை!
::தி.மு.க. அரசியல் எதிரி மட்டுமல்ல;
::அது ஒரு ஊழல் புழு!
::புரையோடிக் கிடக்கும் புற்றுநோய்!
அரசியலில் இருந்தே அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்!
இந்த வாசகங்களுக்குச் சொந்தக்காரர், திரு பரூபா அவர்கள்தானா? என்று பத்திரிகைகளை மீண்டும் மீண்டும் கவனமாகப் பார்த்தேன். ஆம், அவரேதான் பேசியிருக்கிறார்.
உடன்பிறப்பே, எனக்கு ஒரு ஐயப்பாடு! வாதத்திற்காகக் கேட்கிறேன்—ஒரு கட்சியில் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விடுவதாலேயே அந்தக் கட்சியே ஊழல் புழுவாக ஆகிவிடுமா? புற்று நோயாகப் போய்விடுமா? புரையோடும் புண்ணாக மாறிவிடுமா? பஞ்சாப்பின் பழைய முதல்வர் பிரதாப்சிங் கெய்ரான்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். அதற்காக அவர் இணைந்திருந்த காங்கிரஸ் கட்சியின் புனிதமே கெட்டுவிட்டது. புற்று நோயாக அந்தக் கட்சியே ஆகி விட்டது என்று சொல்ல முடியுமா?
ஒரு சிலர் தவறே செய்ததாக நியாயமாக நிரூபிக்கப்பட்டாலுங்கூட அந்தச் சிலர்தான் ஒரு கட்சியல்லவே—இலட்சோப இலட்சம் உறுப்பினர்களையும், தொண்டர்களையும், அமைப்புக்களையும். அவைகளின் தலைவர்களையும் கொண்டு இயங்குகிற ஒரு கட்சியையே புழுவென்றும், புரையோடிய புண் என்றும் புற்றுநோய் என்றும் சாடுகிற அளவுக்கு பரூவா அவர்களுக்குப் பதட்டம் ஏன் ஏற்பட்டது?{{nop}}<noinclude></noinclude>
mx6jrakiqxts1xwu5580ic0ya1i0kxv
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/70
250
642081
1928278
1928218
2026-04-29T12:44:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928278
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||61}}</noinclude>இந்தியாவின் மிகப் பெரிய கட்சியின் தலைவர், அனைத்துலக அரசியல்வாதிகளின் கவனத்தைக் கவரத்தக்க இடத்தில் அமர்ந்திருப்பவர், அவருடைய நாவினாலா இதுபோன்ற “நாமாவளி” பாடப்படுவது? நம்மை ‘அழுக்குப் பொருள்’ என்கிறாரே என்பதற்காக நான் வருந்தவில்லை, இந்தப் பேச்சின் காரணமாக புகழ் வாய்ந்த அவருக்கு ஒரு ‘இழுக்கு’ ஏற்பட்டுவிடக் கூடாதே என்பது தான் என் கவலை!
“இருபது அம்சத் திட்டத்தைப் பயன்படுத்தி, தி. மு. க.வை சமாளிக்க வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்! இருபது அம்சத் திட்டத்துக்கு தி. மு. க. விரோதியல்ல! அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அதனை இதயமார வரவேற்ற கட்சிதான் தி. மு. கழகம்.
தி. மு. க.வை சமாளிக்கவேண்டும் என்கிற சாதாரண காரியத்துக்காக இந்தியப் பிரதமர் அவர்கள் இவ்வளவு பெரிய திட்டத்தைக் கொண்டு வரவில்லை. நாட்டு மக்களின் துயர் துடைக்க, கட்டுப்பாடு வளர, ஏழைகளின் இன்னல் விலக, அறிவிக்கப்பட்ட பொருளாதார திட்டம் அது! அந்தத் திட்டத்துடன் ஒத்துழைக்க என்றுமே தி. மு. க தயாராகத் தானிருக்கிறது அரசுப் பொறுப்பில் இருந்த கழகம். அந்தத் திட்டங்களைத் தன்னால் இயன்ற வரையில் நடைமுறைப்படுத்தி, அதற்கான புள்ளிவிவரங்களையும் அப்போதே வழங்கியிருக்கிறது.
அந்தத் திட்டத்தை வைத்துக்கொண்டு தி. மு. க.வை சமாளிக்க வேண்டும் என்பது அந்தத் திட்டத்தின் நோக்கத்தையே திசை திருப்புவதாக ஆகிவிடுமோ என அஞ்சுகிறேன்! பிரதமரின் எண்ணம், நிச்சயமாக அதுவல்ல!
ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில் மற்ற கட்சிகளை விமர்சிப்பது போல தி.மு. கழகத்தையும் அதன்<noinclude></noinclude>
4h5bqlm8tkq71i1z24wnolgzvd40lah
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/71
250
642083
1928279
1928220
2026-04-29T12:46:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|62||கலைஞர்}}</noinclude>கொள்கைகளையும் கடுமையாகக்கூட விமர்சிக்கலாம். அதற்காக ஒரு கட்சியையே அடியோடு அழித்துவிட வேண்டும். பூண்டற்றுப் போகச் செய்துவிட வேண்டும் என்று சபதம் செய்து கொண்டு புறப்பட்டால்,
:::முதலில் தி. மு. க.
:::சரி, முடிந்தது கதை!
:::அடுத்தது எது?
:::அதற்குப் பிறகு எது?
என்ற அளவுக்கு “ருசி” ஏற்பட்டு விடக்கூடும். அதனால் எதிர்க்கட்சிகளே இல்லாமற் போய்விடக்கூடும். அப்படி ஒரே கட்சி என்ற நிலையை பிரதமர் அவர்கள் விரும்பவே இல்லை. பிரதமர் அவர்கள், கட்சிகள் சிலவற்றின்மீது தனக்குள்ள கருத்து வேறுபாடுகளைத் தெரிவிக்கிறார்களே தவிர, திரு. பரூவா அவர்களைப்போல் ஒரு அரசியல் கட்சி அறவே ஒழிக்கப்பட வேண்டுமென்று எள்ளளவு எண்ண மும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
நிதானப் போக்கும், அவசரமின்றி எதையும் சிந்துத்துச் செயல்படும் இயல்பும், இன்னாத கூறுவதை விடுத்து இனியவைகளையே கூறுகிற பண்பும் படைத்த பரூவா அவர்கள், இவ்வளவு படபடப்பாகப் பேசியதற்கு, எதுதான் காரணமாக இருக்க முடியும்?
நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்; எனக்கு விளங்கவே இல்லை!
தி.மு.க. இன்னும் பலமாக இருக்கிறது என்று யாராவது “தவறான தகவலை” அவரிடத்தில் சொல்லியிருப்பார்களா?
நிறுவனக் காங்கிரசார் இன்னும் சிலர் இணைவதற்குத் தடையாக, தி. மு. க. தான் நிற்கிறது என்று அவர் இன்னமும் நம்புகிறாரா?{{nop}}<noinclude></noinclude>
lrkxwoo97b15xozptm0e8fjphnz2o28
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/72
250
642084
1928280
1928223
2026-04-29T12:47:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||63}}</noinclude>வினாக்கள் என்னைக் குடைகின்றன! விடைதான் கிடைக்கவில்லை.
நான் அன்போடும் அண்ணா கற்றுத்தந்த கனிவோடும், திரு. பரூவா அவர்களைக் கேட்டுக்கொள்வேன், அடுத்த முறை தமிழகம் வரும்போதாவது கோபமில்லாமல் வரவேண்டுமென்று!
தி.மு.க. வன்முறை இயக்கமல்ல! பிரிவினை இயக்கமல்ல! ஒருமைப்பாட்டுக்கு விரோதமான கட்சியல்ல! அமைதி நாடும் இயக்கம்! அண்ணா வழியில் நடைபோடும் இயக்கம்!
:கடைசியாகச் சொல்லுகிறேன்.
:கழகம், கருத்து மோதல்களை வரவேற்கும்.
:கண்டனக் கணைகளைப் பொறுத்துக்கொள்ளும்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
18 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
08jl9d4a703uc9pcpls9dnvv3v1rs36
1928831
1928280
2026-04-30T08:16:29Z
Booradleyp1
1964
1928831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||63}}</noinclude>வினாக்கள் என்னைக் குடைகின்றன! விடைதான் கிடைக்கவில்லை.
நான் அன்போடும் அண்ணா கற்றுத்தந்த கனிவோடும், திரு. பரூவா அவர்களைக் கேட்டுக்கொள்வேன், அடுத்த முறை தமிழகம் வரும்போதாவது கோபமில்லாமல் வரவேண்டுமென்று!
தி.மு.க. வன்முறை இயக்கமல்ல! பிரிவினை இயக்கமல்ல! ஒருமைப்பாட்டுக்கு விரோதமான கட்சியல்ல! அமைதி நாடும் இயக்கம்! அண்ணா வழியில் நடைபோடும் இயக்கம்!
:கடைசியாகச் சொல்லுகிறேன்.
:கழகம், கருத்து மோதல்களை வரவேற்கும்.
:கண்டனக் கணைகளைப் பொறுத்துக்கொள்ளும்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
18 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
a1xb8mj9nft0bgtb4hr94cbwftf8if4
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/73
250
642085
1928281
1928227
2026-04-29T12:48:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928281
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{larger|<b>வாய்ப்பந்தல் நிலைக்காது!</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
தமிழ் நாட்டிலேயுள்ள இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு. யார்மீது கோபம் வந்தாலும் உடனே அவர்களை “அமெரிக்க ஏஜண்டு” சி. ஐ. ஏவுக்கு தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டுவதிலே ஒரு தனியான சுவை!
அவர்களுடைய பேச்சுக்களானாலும், அல்லது அவர் தம் கட்சிப் பத்திரிகைகளானாலும் இடைவிடாமல் இந்தப் பிரச்சாரத்தையே என்மீதும், நமது கழகத்தினர் மீதும் செய்து கொண்டிருப்பதை நீ கவனித்துக் கொண்டு தானிருக்கிறாய்.
“வடிவேலருக்கு வந்த வாழ்வு” என்று நான் எழுதிய சிறிய நாடகத்தைப் படித்துவிட்டு அதற்குப் பதில் அளிக்கும் வகையில் எந்த வாதத்தையும் எடுத்து வைக்காமல், வாதங்களை எடுத்துவைக்கும் “வக்கோ, வகையோ” இல்லாமல். “ஆகா! கருணாநிதி ஒரு அமெரிக்க ஏஜண்டு!” என்று அலறியிருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகள் வாதம் செய்வதில் வல்லவர்களாக இருந்தார்கள். வாதத்திறமைமிக்க அந்த வல்லவர்கள், இப்போதும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள் என்றாலும், வாதத்திற்கான ‘சரக்கு’ அவர்களிடத்திலே இல்லாத காரணத்தால் வெறும் மண்ணைவாரித் தூற்றும் காரியத்திலே ஈடுபட்டிருக்கிறார்கள்.{{nop}}<noinclude></noinclude>
e22y0eia8ke7vnvux3uoo23yvb4lj13
1928830
1928281
2026-04-30T08:16:04Z
Booradleyp1
1964
1928830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|5em}}
{{x-larger|<b>வாய்ப்பந்தல் நிலைக்காது!</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
தமிழ் நாட்டிலேயுள்ள இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு. யார்மீது கோபம் வந்தாலும் உடனே அவர்களை “அமெரிக்க ஏஜண்டு” சி. ஐ. ஏவுக்கு தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டுவதிலே ஒரு தனியான சுவை!
அவர்களுடைய பேச்சுக்களானாலும், அல்லது அவர் தம் கட்சிப் பத்திரிகைகளானாலும் இடைவிடாமல் இந்தப் பிரச்சாரத்தையே என்மீதும், நமது கழகத்தினர் மீதும் செய்து கொண்டிருப்பதை நீ கவனித்துக் கொண்டு தானிருக்கிறாய்.
“வடிவேலருக்கு வந்த வாழ்வு” என்று நான் எழுதிய சிறிய நாடகத்தைப் படித்துவிட்டு அதற்குப் பதில் அளிக்கும் வகையில் எந்த வாதத்தையும் எடுத்து வைக்காமல், வாதங்களை எடுத்துவைக்கும் “வக்கோ, வகையோ” இல்லாமல். “ஆகா! கருணாநிதி ஒரு அமெரிக்க ஏஜண்டு!” என்று அலறியிருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகள் வாதம் செய்வதில் வல்லவர்களாக இருந்தார்கள். வாதத்திறமைமிக்க அந்த வல்லவர்கள், இப்போதும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள் என்றாலும், வாதத்திற்கான ‘சரக்கு’ அவர்களிடத்திலே இல்லாத காரணத்தால் வெறும் மண்ணைவாரித் தூற்றும் காரியத்திலே ஈடுபட்டிருக்கிறார்கள்.{{nop}}<noinclude></noinclude>
82qpcs17bg1n3e0yzoea542cai3ltse
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/74
250
642086
1928282
1928233
2026-04-29T12:53:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||65}}</noinclude>இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் திறமைசாலிகளுக்குப் பஞ்சமில்லை. நல்ல வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். திட்டங்கள் தீட்டக்கூடிய ஆற்றலாளர்கள் அங்கே உண்டு. தொய்வின்றித் தொடர்புகெடாமல் விஷயங்களை விளக்கக் கூடிய எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் நான் மிக நெருங்கிப் பழகிக்கூட அனுபவ ரீதியாக அறிந்து கொண்டவன். ஆனால் அவர்கள் எப்படியும் தி. மு. கழகத்தை அழித்துவிட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ‘சுருதி’யைவிட்டுச் சங்கீதம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
வாதங்களை அடுக்குவதற்குப் பதில் அபவாதங்களை நம்மீது அள்ளி வீசுகிறார்கள்.
கொள்கைகளை விளக்குவதற்குப் பதில் கோணல் வழியில் குறுக்கு வழியில் தாக்குதல்களை நடத்துகிறார்கள்.
தி. மு. கழகத் தலைவர்களோ, அல்லது கழகத்தினரோ அமெரிக்க ஏஜண்டாக இருக்கவும் விரும்பவில்லை. ரஷ்யாவின் ஏஜண்டாகவும் இருக்கவிரும்பவில்லை.
எந்த ஒரு வெளிநாட்டுக்கும் ஏஜண்ட ஏஜண்டாக இருந்து கொண்டு அந்த நாட்டு ஆதிக்கம் மறைமுகமாகவும், மெல்ல மெல்லவும், இந்தியாவில் பரவுவதற்கு யார் வழி வகுத்தாலும், யார் துணை அந்தக் போனாலும், கூட்டத்தைத் துரோகக் கூட்டம் என்று தி. மு. கழகம் திட்டவட்டமாகக் கருதுகிறது.
தி.மு. கழகத்தின் வெளிநாட்டுக் கொள்கை மிகத் தெளிவானது. இந்தியப் பேரரசு வகுக்கின்ற வெளி நாட்டுக் கொள்கைகளுக்கு முழு ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வந்திருப்பதுதான் தி. மு. கழகத்தின் வரலாற்றில் காணக் கிடைக்கும் உண்மையாகும்.{{nop}}<noinclude></noinclude>
itw8cz92nsd88z67hj7w6wpmd7604tm
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/75
250
642087
1928283
1928241
2026-04-29T12:54:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|66||கலைஞர்}}</noinclude>அந்த உண்மையை மறைப்பதற்காக இந்திய கம்யூனிஸ்டுகள் மிகப்பலமான முயற்சிகளைச் செய்து வருகிறார்கள்.
சீன நாட்டுக்கும்—இந்திய நாட்டுக்கும் 1962ஆம் ஆண்டு போர் மூண்டபோது தி.மு.க. எடுத்தநிலை என்ன?
அதுவும் எப்படிப்பட்ட சூழ்நிலையில்?
இருபதாயிரத்து மேற்பட்ட கழகத் தோழர்கள் அண்ணா முதலிய கழகத் தலைவர்கள் சிறையில் இருந்த போது!
நமது கழகக் கண்மணிகளாம் கோ. சு. மணியும், பொற்செழியனும் சிறைச்சாலையில் மறைந்தபோது!
சீனா இந்தியாமீது நடத்திய ஆக்ரமிப்பை எதிர்த்து பிரதமர் பண்டித நேருவின் கரத்தைப் பலப்படுத்துவோம் என்று முழக்கமிட்டோம்.
சிறையில் அனுபவிக்க வேண்டிய தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தவுடன், போர் நிதி திரட்டுகிற பணியில் கழகம் தீவிரமாக ஈடுபட்டு—திரட்டிய தொகையையும் அண்ணா பேசிய கூட்டத்தில் வழங்கப்பட்ட தங்க நகைகளையும், நானும் நாவலரும் அன்றைய முதலமைச்சர் காமராசர் அவர்கள் இல்லம்சென்று அவரிடத்திலேயே ஒப்படைத்துவிட்டு வந்தோம்.
எதிர்க்கட்சியாக இருந்து கொண்டே தி. மு. கழகம் வழங்கிய ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டு அது!
14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நமது இந்திய அரசும், சீன அரசும் தங்கள் தங்கள் நாடுகளுக்குத் தூதர்களை ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ள முடிவும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மட்டுமல்ல; இந்திய அரசு வெளிநாட்டுக் கொள்கையில் கடைப்பிக்கும் போற்றத்தகுந்த திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
{{nop}}<noinclude></noinclude>
k1934lahyui907ax0l9lkpw7um1m7nu
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/76
250
642088
1928284
1928246
2026-04-29T12:55:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928284
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||67}}</noinclude>இதிலிருந்து, இந்திய அரசு வெளிநாட்டு விவகாரத்தில் எடுக்கும் முடிவுகளை நமது கழகம் என்றைக்குமே ஆதரித்து வந்திருக்கிறது என்பது தெளிவாகும்.
பாகிஸ்தான் போரின் போதும், அதற்குப் பிறகு ஏற்பட்ட ‘பங்களாதேஷ்’ போரின் போதும் கழகம், எந்த அளவுக்குத் தன் பங்கினைச் செலுத்தியிருக்கிறது என்பதை நாடறியும்; நடுநிலையோடு சிந்திப்போர் அறிவர்.
உடன்பிறப்பே, நான் மறந்துவிட்டேன் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள், இந்தியக் கம்யூனிஸ்டுகள்!
1962ஆம் ஆண்டு சீன ஆக்ரமிப்பின்போது தமிழகசட்டப் பேரவையில் பெரியவர் பக்தவத்சலம் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்துக் கழகச் சார்பில் நான் உரையாற்றினேன்.
தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டு இன்றைய இந்தியக் கம்யூனிஸ்டுத் தலைவர் அன்றைக்கு, சபையில் என்ன பேசினார் என்பதும்; அவர் பேச்சின் போக்கை விரும்பாமல் அவையில் ஏன் குறுக்கீடுகள் ஏற்பட்டன என்பதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது..
வேளைக்கு வேளை தங்கள் கட்சியின் இஷ்டத்துக்கு வெளிநாட்டிக் கொள்கையை மாற்றிக் கொள்கிறவர்கள் அவர்கள்!
எந்த நேரத்திலும் வெளிநாட்டு விவகாரத்தில் இந்திய அரசின் பக்கமிருப்பவர்கள் நாம்!
நம்மை, சி. ஐ. ஏ. நண்பர்கள் என்பதற்கும், அமெரிக்க ஏஜண்டுகள் என்பதற்கும் அவர்கள் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
::{{overfloat left|align=right|padding=1em|☐}} நான் முதலமைச்சராக இருக்கும்போது அமெரிக்க தூதர்கள் கால்பிரெய்த்தும், மொய்னிகனும் என்னை வந்து சந்தித்தார்களாம்!{{nop}}<noinclude></noinclude>
rzvr1h1sepdkqruil1a8ra6sn7cbdbn
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/77
250
642089
1928285
1928248
2026-04-29T12:56:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|68||கலைஞர்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|☐}} நான் அமெரிக்காவுக்குப் போய்விட்டு வந்தேனாம்!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}அமெரிக்காவை நாம் கண்டித்ததேயில்லையாம்!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}இந்திய சோவியத் நட்புறவுக் கழகத்தில் அண்ணா கலந்துகொண்டாராம்.
::{{overfloat left|align=right|padding=1em|☐}}நான் சோவியத் யூனியனைப் புகழ்ந்து பேசியதே இல்லையாம்!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}சோவியத் யூனியன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதே யில்லையாம்!
அதனால் அண்ணா, சோவியத்துக்கு நண்பராம். நான் பகைவனாம்! அமெரிக்காவுக்கு நான் நண்பனாம்!
எப்படிப்பட்ட சொத்தையான வாதங்கள் பார்த்தாயா.
சொத்தையானவை மட்டுமல்ல; உண்மைக்கு மாறானவையுங்கூட!
அமெரிக்க தூதர்கள் என்னை வந்து சந்தித்தது குற்றமென்றால், அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோதும் அவர்கள் அவரைச் சந்தித்திருக்கறார்களே!
அண்ணா, ‘யேல்’ பல்கலைக் கழக அழைப்பின் பேரிலும் அமெரிக்க அரசின் அழைப்பின் பேரிலும் அங்கு சென்று வந்திருக்கிறாரே!
நான் முதல்வராக இருந்தபோது அமெரிக்க நாட்டுக்காரர்கள் மட்டுமல்ல; சோவியத் யூனியன் போன்ற கம்யூனிச நாட்டுக்காரர்களும் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள்!
சோவியத் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டதில்லையாம்!
இதோ, பார் படங்களை!
நான் முதல்வராக இருந்தபோது 1970ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28 ஆம் நாள் சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் படங்கள்!{{nop}}<noinclude></noinclude>
lc7gticpnzoudwwkb0jfsqj8duv1c66
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/78
250
642090
1928286
1928250
2026-04-29T12:58:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||69}}</noinclude>சோவியத்தின் வானவெளி வீரர்கள்—வாலிநோவ், குர்நோவ் ஆகிய இருவருக்கும் நடைபெற்ற பாராட்டு விழா!
“செம்பட்டுப் பதாகை”யொன்றை நான் பரிசாக அளிக்கும் விழா!
சிலம்புச் செல்வர், கவிஞர் கண்ணதாசன், எம். கல்யாணசுந்தரம், ஏ. எஸ். கே. அய்யங்கார் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம்.
நான் பரிசுகளை வழங்கிப் பாராட்டுரை நிகழ்த்தினேன்.
நண்பர்கள் கல்யாணசுந்தரமும், ஏ. எஸ். கே. அய்யங்காரும் முன்நின்று நடத்திய விழா!
ஆம்; 1970 நவம்பர் 28ஆம் நாள்! அதாவது 1971ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு இரண்டொரு மாதங்களுக்கு முன்பு!
உடன்பிறப்பே! சோவியத் யூனியனுக்குச் சென்று திரும்பிய பெரியார் அவர்கள் தமிழகத்தில் பொதுவுடைமைத் தத்துவங்களைப் பரப்பத் தொடங்கிய காலந்தொட்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் சமதர்மக் கொள்கைகளை எழுத்திலும், பேச்சிலும், செயலிலும் காட்டுவதற்கு நம்மைத் தயாரித்து இயங்கவிட்டுள்ள இந்தக் காலம் வரையில், நமக்கு மார்க்ஸ், லெனின் கொள்கைகளிலே குறையாத ஈடுபாடு உண்டு!
அந்த இலட்சியங்களை ஜனநாயக முறையில்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற தெளிவும் உண்டு.
திசை திருப்புவதற்காக இந்தியக் கம்யூனிஸ்டுகள் நடத்தும் பொய்ப் பிரச்சாரம், மக்கள் மத்தியில் நிச்சயம் மதிப்பைப் பெற முடியாது.{{nop}}<noinclude>
க—7—5</noinclude>
pe4vi185qnhyh52b2ze0i710h7k1ihs
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/79
250
642091
1928287
1928252
2026-04-29T12:59:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928287
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|70||கலைஞர்}}</noinclude>“நான் அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல! என் தந்தை பண்டித நேருவும் அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல!”
என்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், “சான்பிரான்சிஸ்கோ எக்ஸாமினர்” என்ற பத்திரிகை நிருபருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருப்பதாக நேற்று முன்தினம் ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது.
சீன நாட்டுக்கு இந்திய தூதர் அனுப்பப்படுகிறார். அதுபோல சீனத் தூதர் இந்தியாவுக்கு வர இருக்கிறார்.
சோவியத் யூனியனுடன் இந்தியா நட்புறவு கொண்டுள்ளது.
இதுபோன்ற வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சினையில் இந்திய அரசு அவ்வப்போது பொருத்தமான தேவையான முடிவுகளை எடுக்கும்போது. கழகம் இந்திய அரசின் பக்கம் தான் இருந்து வந்திருக்கிறது! இனியும் இருக்கும்!— இடையில் இந்தியக் கம்யூனிஸ்டுகள் போடும் வாய்ப் பந்தல் நிற்காது! நிலைக்காது!!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
21 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
bpw9ghce5nb9vgpu9qyui8ffxmnfa5q
1928835
1928287
2026-04-30T08:17:30Z
Booradleyp1
1964
1928835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|70||கலைஞர்}}</noinclude>“நான் அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல! என் தந்தை பண்டித நேருவும் அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல!”
என்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், “சான்பிரான்சிஸ்கோ எக்ஸாமினர்” என்ற பத்திரிகை நிருபருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருப்பதாக நேற்று முன்தினம் ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது.
சீன நாட்டுக்கு இந்திய தூதர் அனுப்பப்படுகிறார். அதுபோல சீனத் தூதர் இந்தியாவுக்கு வர இருக்கிறார்.
சோவியத் யூனியனுடன் இந்தியா நட்புறவு கொண்டுள்ளது.
இதுபோன்ற வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சினையில் இந்திய அரசு அவ்வப்போது பொருத்தமான தேவையான முடிவுகளை எடுக்கும்போது. கழகம் இந்திய அரசின் பக்கம் தான் இருந்து வந்திருக்கிறது! இனியும் இருக்கும்!— இடையில் இந்தியக் கம்யூனிஸ்டுகள் போடும் வாய்ப் பந்தல் நிற்காது! நிலைக்காது!!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
21 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
rmswr6oxsv2f3kq306bo7xacprksxy3
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/80
250
642092
1928288
1928254
2026-04-29T13:00:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|4em}}
{{larger|<b>உண்மை உறங்கிவிடுவதில்லை!</b>}}
உடன்பிறப்பே,
“BUSINESS STANDARD” (பிசினஸ் ஸ்டாண்டர்டு) என்று ஒரு ஆங்கில நாளேடு கல்கத்தாவிலிருந்து வெளிவருகிறது. இந்தியாவில் இருபது அம்சதிட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு மாநிலங்களில் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதனை ஆய்ந்து புள்ளி விபரங்களோடு அறிவிக்கும் பணியினை அது செய்து வருகிறது. இருபது அம்சத் திட்டம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று என்று அந்தத் திட்டத்தை இந்தியப் பிரதமர் அவர்கள், வானொலியில் அறிவித்த போதே நாம் குறிப்பிட்டிருக்கிறோம்! அவைகளில் பெரும்பான்மையானவற்றை இயன்றவரையில் கழக அரசு, நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது என்றும் மகிழ்ச்சியுடன் அறிவித்தோம். இருபது அம்சத் திட்டத்தில் மைய இழையாக ஓடிக்கொண்டிருக்கிற ஒன்று வேலைவாய்ப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வேலைவாய்ப்பு அளிக்கும் பணியில் கழக அரசு, தன் கடமையைத் தொடர்ந்து — தன்னால் முடிந்த அளவு செய்தது என்பது மட்டுமல்ல, 1975-ஆம் ஆண்டு, இருபது அம்சத் திட்ட அறிவிப்புக்குப் பிறகு வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் தமிழகம் முதல் வரிசையில் நிற்கக்கூடிய தகுதியையும் உருவாக்கிக் காட்டியிருக்கிறது. இதனை நாம் சொன்னால், இங்கேயிருப்பவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். கழக அரசு, இருபது அம்சத்திட்டத்தை செயல்படுத்தவே-<noinclude></noinclude>
8kc7ulp7pwcv32vo5odxdbqwxn42jvf
1928834
1928288
2026-04-30T08:17:10Z
Booradleyp1
1964
1928834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|4em}}
{{x-larger|<b>உண்மை உறங்கிவிடுவதில்லை!</b>}}
'''உடன்பிறப்பே,'''
“BUSINESS STANDARD” (பிசினஸ் ஸ்டாண்டர்டு) என்று ஒரு ஆங்கில நாளேடு கல்கத்தாவிலிருந்து வெளிவருகிறது. இந்தியாவில் இருபது அம்சதிட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு மாநிலங்களில் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதனை ஆய்ந்து புள்ளி விபரங்களோடு அறிவிக்கும் பணியினை அது செய்து வருகிறது. இருபது அம்சத் திட்டம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று என்று அந்தத் திட்டத்தை இந்தியப் பிரதமர் அவர்கள், வானொலியில் அறிவித்த போதே நாம் குறிப்பிட்டிருக்கிறோம்! அவைகளில் பெரும்பான்மையானவற்றை இயன்றவரையில் கழக அரசு, நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது என்றும் மகிழ்ச்சியுடன் அறிவித்தோம். இருபது அம்சத் திட்டத்தில் மைய இழையாக ஓடிக்கொண்டிருக்கிற ஒன்று வேலைவாய்ப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வேலைவாய்ப்பு அளிக்கும் பணியில் கழக அரசு, தன் கடமையைத் தொடர்ந்து — தன்னால் முடிந்த அளவு செய்தது என்பது மட்டுமல்ல, 1975-ஆம் ஆண்டு, இருபது அம்சத் திட்ட அறிவிப்புக்குப் பிறகு வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் தமிழகம் முதல் வரிசையில் நிற்கக்கூடிய தகுதியையும் உருவாக்கிக் காட்டியிருக்கிறது. இதனை நாம் சொன்னால், இங்கேயிருப்பவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். கழக அரசு, இருபது அம்சத்திட்டத்தை செயல்படுத்தவே-<noinclude></noinclude>
enr8pf3bx5vws20yyjt19ba9z2exq4c
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/81
250
642093
1928289
1928255
2026-04-29T13:02:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928289
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|72||கலைஞர்}}</noinclude>யில்லை என்று கண்டனம்செய்து கொண்டிருந்தன இங்குள்ள சில கட்சிகள்!
அந்தக் கண்டனம் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டவும், வேண்டுமென்றே கழக அரசின் மீது இங்குள்ளவர்கள் செய்த பிரச்சாரம் என்பதை விளக்கிடவும் ஏற்ற வகையில் இதோ, கல்கத்தா ஏட்டில் வந்துள்ள ஒரு புள்ளி விபரத்தை உன் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
1976 ஏப்ரல் 19 - ஆம் நாள் அந்த இதழில் வெளி வந்துள்ள புள்ளி விபரக் குறிப்புப் படங்கள்தான் இவைகள்.
முதல் படம் 1975-ஜூலை முதல் தேதியிலிருந்து டிசம்பர் 31-ந் தேதி வரையில் ஆறுமாத காலத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்ட விபரங்களை வெளிப்படுத்துவதாகும் படத்தில் உயர்ந்து நிற்கிற கட்டைகள் மாநிலங்களின் வேலைவாய்ப்பு நிலையைக் குறிப்பிடுகின்றன.
இருபது அம்சத் திட்டம் பிரகடனப் படுத்தப்பட்ட பிறகு — (நெருக்கடி காலத்தில்) ஆறு மாதங்களில் தமிழ் நாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றோர் 21, 680 பேர் ! தமிழ் நாட்டின் மக்கள் தொகை சுமார் 4கோடி! உத்திரபிரதேச மக்கள் தொகை சுமார் எட்டு கோடியைத் தாண்டுகிறது. அங்கே அந்த ஆறு மாதங்களில் வேலைவாய்ப்பு பெற்றோர் தமிழ்நாட்டை விடக் குறைவு! 21549 பேர்! ஆந்திரத்தில் 19436 பேர்! மராட்டியம் 17498 பேர்! மத்தியப்பிரதேசம் 17732 பேர்! பஞ்சாப் 14445 பேர்! முழுமையான விபரம் படத்திலேயே இருப்பதால் நீயே மற்ற மாநிலங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
1976 ஏப்ரல் 18-ஆம் நாளன்று அந்தக் கல்கத்தா ஏடுமற்றொரு படத்தை வெளியிட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் நாளன்று இந்தியா முழுமையும் மின் வசதி செய்யப்பட்ட கிராமங்களைப் பற்றிய தகவல் தரும் புள்ளி விபரப் படம் அது!
{{nop}}<noinclude></noinclude>
6kksg0by9cdxfmy3koonqruqbn54z3i
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/82
250
642094
1928290
1928256
2026-04-29T13:04:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928290
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||73}}</noinclude>இந்த வரிசையில் அரியானா மாநிலம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது! இரண்டாவது இடத்தைத் தமிழ்நாடு பெற்றுள்ளது! உனக்கு, முன்பே நான் நினைவூட்டியிருக்கிறேன். அரியானாவின் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி! தமிழ்நாட்டின் மக்கள் தொகை அரியானாவைவிட நான்கு பங்கு அதிகம்! அரியானாவில் சட்டமன்ற தொகுதிகள் 81 தான்! தமிழ் நாட்டில் 234 தொகுதிகள்!
இந்தக் கணக்கின்படிப் பார்த்தால் இந்திய மாநிலங்களிலேயே கிராமங்களுக்கு மின்வசதி செய்து கொடுத்ததில் தமிழ்நாடுதான் முதலிடம் வகிப்பதாகச் சொல்ல வேண்டும். அரியானா 100 சதவிகிதம்! தமிழ்நாடு 98 சதவிகிதம்! கேரளா 94 சதவிகிதம்! மற்ற மாநிலங்கள் பற்றிய சதவிகிதக் குறிப்புக்களை. இத்துடன் நான் இணைத்துள்ள படம், செம்மையாக விளக்கிடும். அகில இந்திய சராசரி 30 சதவிகிதம் என்பதற்கும் குறைவாக எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன என்பதையும் உன்னிப்பாகக் கவனி!
1970- ஆம் ஆண்டில், தமிழ்நாடு முழுவதும் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி செய்து தருவது என்ற தீவிரத் திட்டத்தின் வாயிலாகத்தான் கழக அரசு, இந்த மகத்தான சாதனையைச் செய்ய முடிந்திருக்கிறது;
இந்த இரண்டு படங்களின் மூலம் கல்கத்தா ஏடு வரிசைப்படுத்தியுள்ள மாநிலங்களின் புள்ளி விபரங்களை நீ பார்த்தால் மட்டும் போதாது.
எனக்குக் கிடைத்துள்ள மாநிலங்களின் மக்கள் தொகைக் கணக்கையும் மறந்துவிடக் கூடாது. நான் சேகரித்த அளவில் சில மாநிலங்களைப் பற்றிய மக்கள் தொகையை மட்டும் தருகிறேன்.
::{{overfloat left|align=right|padding=1em|☐}}தமிழ்நாடு — 41199168 பேர்!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}ஆந்திரா — 43 62708 பேர்!<noinclude></noinclude>
axapk00d3keka9m23f1jis2v8rxb7zt
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/83
250
642095
1928291
1928258
2026-04-29T13:05:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|74||கலைஞர்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|☐}}அரியானா —9971165 பேர்
::{{overfloat left|align=right|padding=1em|☐}}கர்நாடகம்—29299014 பேர்
::{{overfloat left|align=right|padding=1em|☐}}கேரளா—21343375 பேர்
::{{overfloat left|align=right|padding=1em|☐}}உத்திரபிரதேசம்— 88341144 பேர்
மக்கள் தொகையையும் மனத்தில் வைத்துக் கொண்டு புள்ளி விபரப் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாடு—கழக ஆட்சியில் பின் தங்கிவிடவில்லை என்பது மட்டுமல்ல; முதல் வரிசையில் நிற்கும் தகுதியையும் பெற்றிருக்கிறது என்பது விளங்கும்.
இருபது அம்சத் திட்டத்துக்கு ஏற்ப தொழில் பயிற்சியாளர் திட்டத்தில் நமது மாநிலம் நூறு சத விகிதத்தைத் தாண்டி விட்டது என்று கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்டது.
நிலச் சீர்திருத்தம், உபரி நிலங்களை நிலமற்றோருக்கு வழங்குதல் ஆகிய திட்டத்திலும் நமது மாநிலம் முன்னணியில் நிற்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்த ஆய்வுக் குழு, கடந்த நவம்பர் மாத வாக்கில் அறிவித்ததையும் அதற்குள்ளாக நாடு மறந்துவிட வில்லை.
பசுமைப் புரட்சி திட்டத்தில் நமது தீவிரப் பணிகளுக்கு அடையாளமாகக் கழக அரசின் காலத்தில் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களால் பயன் பெற்ற பரப்பு 16 லட்சம் ஏக்கர்.
காங்கிரஸ் ஆட்சியில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து 1967— வரையில் பாசன வசதி பெற்ற பரப்பு 6 லட்சம் ஏக்கர் தான்!
குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்திலும் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது.
{{nop}}<noinclude></noinclude>
tme9mxns5s5rjvc3vdkpunz3b7o4c5l
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/84
250
642096
1928292
1928260
2026-04-29T13:05:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||75}}</noinclude>கழக உடன்பிறப்பே! கல்கத்தா ஏட்டினைக் கண்டேன்; அதனை உன் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்று விரும்பினேன். அதன் விளைவுதான் இந்தக் கடிதம்.
உண்மை உறங்கிவிடுவதில்லை என்பதற்கு இவை உதாரணங்கள்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
22 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
ajezkckniq7kv64o13qqf6ufd3jc7bg
1928839
1928292
2026-04-30T08:18:24Z
Booradleyp1
1964
1928839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||75}}</noinclude>கழக உடன்பிறப்பே! கல்கத்தா ஏட்டினைக் கண்டேன்; அதனை உன் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்று விரும்பினேன். அதன் விளைவுதான் இந்தக் கடிதம்.
உண்மை உறங்கிவிடுவதில்லை என்பதற்கு இவை உதாரணங்கள்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
22 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
q7u59kdhzbkwtxhboxqrpskzphfnbd1
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/85
250
642097
1928293
1928261
2026-04-29T13:07:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928293
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>கோட்டமும் கூடமும் எதற்காக?</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
படித்தாயா செய்தியை ! பதினோரு லட்ச ரூபாய் செலவில் இருநூறு வீடுகள் இலவசமாகக் கட்டி வழங்கப்பட்டிருக்கிறது! எங்கே தெரியுமா? பாஞ்சாலங் குரிச்சியில்! யாருக்குத் தெரியுமா? வீரபாண்டியக் கட்டபொம்மனின் சந்ததியினருக்கு! ஆளுநரின் ஆலோசகர் அந்தத் திறப்பு விழாவை நடத்தியிருக்கிறார். கட்டப் பொம்மனுக்கு நினைவுக்கோட்டை எதற்காக என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள்! அந்த நினைவுக்கோட்டைக்குச் செலவான தொகை ஆறு லட்ச ரூபாய் அளவிலேதான் இருக்கும். ஆனால் அதற்கருகே கட்டப்பொம்மனின் சந்ததியினருக்கு இலமசமாக வழங்கப்பட்ட வீடுகளுக்குக் கழக அரசு செலவிடுவதற்காக ஒதுக்கிய தொகை பதினோரு லட்ச ரூபாய்!
பல ஆண்டுக்காலமாக வறுமையோடு போராடியவர்கள், வசதி வாய்ப்பற்றுக் கிடந்தவர்கள், அவர்களது கண்ணீர் கவனிப்பாரற்றுப் போயிற்று! அவர்களது கோரிக்கைகள், குப்பைக் கூடைகளை அலங்கரித்துக் கொண்டு இருந்தன.
வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து வீரப் போர் புரிந்து தூக்குக் கயிற்றினை முத்தமிட்ட அந்த மாவீரனின் சந்ததியினர் எங்கோ ஒரு மூலையில் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தனர்.{{nop}}<noinclude></noinclude>
1fatsh2nueszf5x65gn84yl7zgugls3
1928837
1928293
2026-04-30T08:18:02Z
Booradleyp1
1964
1928837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>கோட்டமும் கூடமும் எதற்காக?</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
படித்தாயா செய்தியை ! பதினோரு லட்ச ரூபாய் செலவில் இருநூறு வீடுகள் இலவசமாகக் கட்டி வழங்கப்பட்டிருக்கிறது! எங்கே தெரியுமா? பாஞ்சாலங் குரிச்சியில்! யாருக்குத் தெரியுமா? வீரபாண்டியக் கட்டபொம்மனின் சந்ததியினருக்கு! ஆளுநரின் ஆலோசகர் அந்தத் திறப்பு விழாவை நடத்தியிருக்கிறார். கட்டப் பொம்மனுக்கு நினைவுக்கோட்டை எதற்காக என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள்! அந்த நினைவுக்கோட்டைக்குச் செலவான தொகை ஆறு லட்ச ரூபாய் அளவிலேதான் இருக்கும். ஆனால் அதற்கருகே கட்டப்பொம்மனின் சந்ததியினருக்கு இலமசமாக வழங்கப்பட்ட வீடுகளுக்குக் கழக அரசு செலவிடுவதற்காக ஒதுக்கிய தொகை பதினோரு லட்ச ரூபாய்!
பல ஆண்டுக்காலமாக வறுமையோடு போராடியவர்கள், வசதி வாய்ப்பற்றுக் கிடந்தவர்கள், அவர்களது கண்ணீர் கவனிப்பாரற்றுப் போயிற்று! அவர்களது கோரிக்கைகள், குப்பைக் கூடைகளை அலங்கரித்துக் கொண்டு இருந்தன.
வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து வீரப் போர் புரிந்து தூக்குக் கயிற்றினை முத்தமிட்ட அந்த மாவீரனின் சந்ததியினர் எங்கோ ஒரு மூலையில் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தனர்.{{nop}}<noinclude></noinclude>
fmddxuaect2phdwgt863f36kaawn8e3
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/86
250
642098
1928294
1928262
2026-04-29T13:09:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||77}}</noinclude>முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நண்பர் சுப்பு அவர்கள் எடுத்துக்கொண்ட இடைவிடாத முயற்சிகளின் காரணமாக பாஞ்சைப் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. பாழடைந்து கிடந்த கோட்டைப் பெருவெளியையும் கண்டேன். பரதவிப்புக்கு ஆளாகியிருந்த கம்பளத்து நாயக்கப் பெருமக்களையும் கண்டேன். அந்தத் துன்ப நிலையிலும் அந்த மக்கள், தங்கள் குலதெய்வமான ஜக்கம்மா தேவியின் கோயிலுக்கு விழா எடுப்பதை நிறுத்தவில்லை. அந்த விழாவினையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியிலேதான் கட்டபொம்மன் கோட்டையைச் சீர் செய்யவும்; அதனருகே மாதிரிக் கோட்டையொன்றை உருவாக்கவும், அவன் சந்ததியினர் வாழ்வில் ஒளியேற்றவும் முடிவுகள் மலர்ந்தன. அந்த மலர்ச்சியின் வீரங்கமழும் நறுமணம் தான் இன்றைக்குப் பாஞ்சைப் பகுதியிலே வீசிக்கொண்டு இருக்கிறது.
ஏதோ அழகுக்கும், ஆரவாரத்துக்கும், வீண் விளம்பரங்களுக்கும் இத்தகைய காரியங்களைச் செய்து அரசின் பணத்தைக் கரியாக்குகிறார்கள் என்று கழக அரசின் மீது காழ்ப்பினைக் கொட்டியவர்கள், இன்று அந்தக் கோட்டைக்கு அருகாமையில் குதூகலமாக இருநூறு குடும்பத்தினர் தங்களுக்குக் கிடைத்துள்ள ஐயாயிர ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள வீடுகளில் குடியேறுகிறார்களே; அவர்களின் உதடுகள் வாழ்த்துத் துடிப்புக்களை வெளிக்காட்ட முடியாவிட்டாலும், அவர்களின் இதயச் சுவர்களில் எழுதப்பட்டிருக்குமே, “தி. மு. க. வாழ்க!” என்று, — அதனை யார்தான் அழித்து எழுதிவிட முடியும்?
காவிரிப்பூம்பட்டினத்தில் கரிகால் பெருவளத்தானின் பழங்காலத் தலைநகரம் கடலின் வயிற்றுக்குள் போய்விட்ட காரணத்தால் புதிய பூம்புகாரை உருவாக்கினோம்!
கலைமாடங்கள், கூடங்கள் அந்த அலைபாடும் பூமியிலே முகில் தழுவி நிற்கின்ற காட்சி, கண்கொள்ளாக் காட்சி.<noinclude></noinclude>
l6igtvmvvolhubci4ht10cympv8mvss
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/87
250
642099
1928295
1928263
2026-04-29T13:12:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928295
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|78||கலைஞர்}}</noinclude>எனினும், அதையும் காணச் சகிக்காதவர்கள் நம் மீது தொடுத்த கண்டனைக் கணைகள் கொஞ்சமா? கலைக் கூடத்துக்குச் செலவிட்ட தொகையை விட அதிகத்தொகை செலவிட்டுப் பூம்புகாரில் மீனவர்களுக்காக ஆயிரம் வீடுகள் கட்டி இலவசமாக வழங்கியிருக்கிறோம்!
கோட்டையும். கூடமும் கட்டியது தமிழர்களின் வரலாற்றை விளக்குவதற்காக! அதே அதே சமயம், குந்தக் குடிலின்றி வாழ்கின்ற மக்களின் குமுறலை அடக்க மீனவர்க்கு, அரிஜனங்களுக்கு, குடிசைவாழ் மக்களுக்கு ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டியிருக்கிறோம்!
::மாடகூடங்கள் அமைத்தது—சரித்திரம்!
::மண்ணில் நெளிந்தோர்க்கு,
::வீடுகள் அமைத்து வழங்கியது—சாதனை!
எனவே சாதனையும் புரிந்தோம்! சரித்திரமும் படைத்தோம்!
நமது சாதனைச் சரித்திரத்தை அல்லது சரித்திர சாதனையைக் கண்டு மனம் புழுங்கியோர் மனுக்களை நம்பினர்! நம்மை அழிக்க மழுக்களை ஏந்தினர்!
சென்ற பிப்ரவரி திங்களிலே மட்டும் கழக அரசு திட்ட மிட்டிருந்த நிகழ்ச்சிகள் எத்தனை!
பிப்ரவரி 3-ஆம் நாள் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் அமைந்த எண்ணூர் மின்நிலைய ஐந்தாவது யூனிட் திறப்பு விழா!
பிப்ரவரி 8 ஆம் நாள் மாமல்லபுரத்தில் சுற்றுலா வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட பயணிகள் மாளிகையின் திறப்பு விழா!
அதைத் தொடர்ந்து அரிஜனங்களுக்கு கட்டப்பட்ட முப்பத்தையாயிரம் இலவச வீடுகள் கட்டி முடிக்கப்பெற்ற முழுமை விழா!{{nop}}<noinclude></noinclude>
ho8vqlyb1tbshkvjebfy1c92654wbdi
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/88
250
642101
1928269
2026-04-29T12:10:10Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பூம்புகார் வானகிரியில் மீனவர்க்கான இலவச வீடுகள் திறப்பு விழா! பாஞ்சாலங்குரிச்சியில் கட்டபொம்மன் சந்ததியினர்க் கான இலவச வீடுகள் திறப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928269
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||79}}</noinclude>பூம்புகார் வானகிரியில் மீனவர்க்கான இலவச வீடுகள் திறப்பு விழா!
பாஞ்சாலங்குரிச்சியில் கட்டபொம்மன் சந்ததியினர்க் கான இலவச வீடுகள் திறப்பு விழா!
மதுரையில் ஒரு கோடி ரூபாய் செலவில் உருவானபால் பவுடர் தொழிற்சாலைத் திறப்புவிழா!
அம்பத்தூரில் இரண்டு கோடி ரூபாய் செலவில் அமைந்த இரண்டாவது பால்பண்ணை திறப்புவிழா!
வள்ளுவர் கோட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிகு திறப்பு விழா!
இவ்வளவும் கழக அரசால் ஏற்பாடாகியிருந்த நிகழ்ச்சிகள்!
ஏதோ, கோட்டமும் கூடமும் கட்டித் திறக்கிறோம் என்று கதைக்கிறார்களே. அவர்களுக்கு நினைவூட்டத்தான் கூறுகிறேன், ஏழை எழியோர்க்கு வீடுகள் வழங்குதல், மின்சார உற்பத்திக்கான தீவிரப் பணிகள்; அறிவார்ந்த கல்விக்கு அயர்விலாத் திட்டங்கள்; சிற்றூரையும் நாடிச் செல்லும்வண்ணம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பணிகள். குக்கிராமங்களை இணைக்கும் சாலைகள், பாலங்கள், பட்டிக்காட்டுக்குப் பயணம் செய்யவும் பேருந்து வசதிகள். தொழில் துறை முன்னேற்றம், தொழிலாளர் நல்வாழ்வு. உணவு நெருக்கடியைச் சமாளித்த திறன்; கூட்டுறவுத் துறையில் விவசாயிகளுக்கு நலன் பெருக்கும் திட்டங்கள் தாழ்த்தப்பட்டோர்; பிற்படுத்தப்பட்டோர்க்கு எண்ணற்ற வசதி வாய்ப்புக்கள், பட்டிதொட்டியெங்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகள். இத்தனையும் நிறை வேற்றிக் கொண்டுதான் தமிழகத்தின், கலை இலக்கிய வரலாற்றுப் புகழ் பரப்பும் பணியினையும் நாம் மேற்கொண்டோம்!{{nop}}<noinclude></noinclude>
ru05gpq0pva5lfrjavlntoim0h58f35
1928296
1928269
2026-04-29T13:14:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928296
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||79}}</noinclude>பூம்புகார் வானகிரியில் மீனவர்க்கான இலவச வீடுகள் திறப்பு விழா!
பாஞ்சாலங்குரிச்சியில் கட்டபொம்மன் சந்ததியினர்க் கான இலவச வீடுகள் திறப்பு விழா!
மதுரையில் ஒரு கோடி ரூபாய் செலவில் உருவான பால் பவுடர் தொழிற்சாலைத் திறப்புவிழா!
அம்பத்தூரில் இரண்டு கோடி ரூபாய் செலவில் அமைந்த இரண்டாவது பால்பண்ணை திறப்புவிழா!
வள்ளுவர் கோட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிகு திறப்பு விழா!
இவ்வளவும் கழக அரசால் ஏற்பாடாகியிருந்த நிகழ்ச்சிகள்!
ஏதோ, கோட்டமும் கூடமும் கட்டித் திறக்கிறோம் என்று கதைக்கிறார்களே. அவர்களுக்கு நினைவூட்டத்தான் கூறுகிறேன், ஏழை எளியோர்க்கு வீடுகள் வழங்குதல், மின்சார உற்பத்திக்கான தீவிரப் பணிகள்; அறிவார்ந்த கல்விக்கு அயர்விலாத் திட்டங்கள்; சிற்றூரையும் நாடிச் செல்லும்வண்ணம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பணிகள்; குக்கிராமங்களை இணைக்கும் சாலைகள், பாலங்கள், பட்டிக்காட்டுக்குப் பயணம் செய்யவும் பேருந்து வசதிகள்; தொழில் துறை முன்னேற்றம், தொழிலாளர் நல்வாழ்வு;; உணவு நெருக்கடியைச் சமாளித்த திறன்; கூட்டுறவுத் துறையில் விவசாயிகளுக்கு நலன் பெருக்கும் திட்டங்கள்; தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர்க்கு எண்ணற்ற வசதி வாய்ப்புக்கள், பட்டிதொட்டியெங்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகள், இத்தனையும் நிறைவேற்றிக் கொண்டுதான் தமிழகத்தின், கலை இலக்கிய வரலாற்றுப் புகழ் பரப்பும் பணியினையும் நாம் மேற்கொண்டோம்!{{nop}}<noinclude></noinclude>
r61lb2ejbkj0pxc2lheunyfry2whz98
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/89
250
642102
1928270
2026-04-29T12:10:56Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude><noinclude></noinclude>
m0uxjjgfwypaooy0dd45jbuzaa832ga
1928305
1928270
2026-04-29T13:39:26Z
Ramya sugumar
15106
1928305
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|80||கலைஞர்}}</noinclude>தமிழகத்தில் தமிழக அரசு நடத்தியுள்ள ஆக்கப் பணிகளை எத்தனை பெரியவர்கள் எல்லாம் பாராட்டியிருக்கிறார்கள் என்ற பட்டியலை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக்கொண்டால், நம் நெஞ்சுக்கு எவ்வளவோ நிறைவாக இருக்கிறது!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தொழு நோய்க்கு நிரந்தரமான பரிகாரம்காணும் விதத்தில் தொழு நோய் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் தமிழக அரசின் தலைசிறந்த திட்டம் பாராட்டுக்குரியது”
{{Right|பிரதமர் இந்திரா காந்தி அம்மையார்<br>
10—9—74 (பரனூரில்)}}
::{{overfloat left|align=right|padding=1em|☐}} “காந்தியடிகளுடைய எண்ணம் உண்மையாகத்தக்கவகையில். தமிழக முதல்வர், ஊனமுற்றவர்க்கும் உதவி செய்து, கிராமத்தில் இருக்கக்கூடிய அழுத்தப்பட்ட மக்கள், அதிர்ஷ்டக் குறைவான மக்கள் முன்னேற, வசதிகளைப் பெற தமிழக அரசு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுகிறது”.
{{Right|உமாசங்கர் தீட்சித்<br>
3—10—74 (காந்தி மண்டபம்)}}
::{{overfloat left|align=right|padding=1em|☐}}“அண்ணா அவர்களின் வாழ்வு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட வரலாறாகும். சமூகநலப்பணிகளுக்கு வித்திட்டவர் அண்ணா! அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி வருபவர் முதல்வர் கருணாநிதி! மதுக் குடியை ஒழித்ததும், குதிரைப் பந்தயத்தை நிறுத்தியதும் அவர் எடுத்த துணிகர முடிவுகள்; காந்தீய லட்சியங்களை நிறைவேற்றும் பணிகளு மாகும்.”
{{Right|வி.வி, கிரி <br>
16—9—74 (மயிலை)}}<noinclude></noinclude>
g6q6edj43ray1fyiauls9blt71sk775
1928321
1928305
2026-04-29T14:02:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928321
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|80||கலைஞர்}}</noinclude>தமிழகத்தில் தமிழக அரசு நடத்தியுள்ள ஆக்கப் பணிகளை எத்தனை பெரியவர்கள் எல்லாம் பாராட்டியிருக்கிறார்கள் என்ற பட்டியலை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக்கொண்டால், நம் நெஞ்சுக்கு எவ்வளவோ நிறைவாக இருக்கிறது!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தொழு நோய்க்கு நிரந்தரமான பரிகாரம்காணும் விதத்தில் தொழு நோய் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் தமிழக அரசின் தலைசிறந்த திட்டம் பாராட்டுக்குரியது”
{{Right|பிரதமர் இந்திரா காந்தி அம்மையார்<br>
10—9—74 (பரனூரில்)}}
::{{overfloat left|align=right|padding=1em|☐}} “காந்தியடிகளுடைய எண்ணம் உண்மையாகத்தக்கவகையில். தமிழக முதல்வர், ஊனமுற்றவர்க்கும் உதவி செய்து, கிராமத்தில் இருக்கக்கூடிய அழுத்தப்பட்ட மக்கள், அதிர்ஷ்டக் குறைவான மக்கள் முன்னேற, வசதிகளைப் பெற தமிழக அரசு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுகிறது”.
{{Right|உமாசங்கர் தீட்சித்<br>
3—10—74 (காந்தி மண்டபம்)}}
::{{overfloat left|align=right|padding=1em|☐}}“அண்ணா அவர்களின் வாழ்வு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட வரலாறாகும். சமூகநலப்பணிகளுக்கு வித்திட்டவர் அண்ணா! அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி வருபவர் முதல்வர் கருணாநிதி! மதுக் குடியை ஒழித்ததும், குதிரைப் பந்தயத்தை நிறுத்தியதும் அவர் எடுத்த துணிகர முடிவுகள்; காந்தீய லட்சியங்களை நிறைவேற்றும் பணிகளுமாகும்.”
{{Right|வி.வி, கிரி <br>
16—9—74 (மயிலை)}}<noinclude></noinclude>
myjyo9lzgj0ykukaxm2ziafoum8sgsv
1928323
1928321
2026-04-29T14:05:25Z
Booradleyp1
1964
1928323
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|80||கலைஞர்}}</noinclude>தமிழகத்தில் தமிழக அரசு நடத்தியுள்ள ஆக்கப் பணிகளை எத்தனை பெரியவர்கள் எல்லாம் பாராட்டியிருக்கிறார்கள் என்ற பட்டியலை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக்கொண்டால், நம் நெஞ்சுக்கு எவ்வளவோ நிறைவாக இருக்கிறது!
::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தொழு நோய்க்கு நிரந்தரமான பரிகாரம்காணும் விதத்தில் தொழு நோய் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் தமிழக அரசின் தலைசிறந்த திட்டம் பாராட்டுக்குரியது”
{{Right|<b>பிரதமர் இந்திரா காந்தி அம்மையார்</b><br>
10—9—74 (பரனூரில்)}}
::{{overfloat left|align=right|padding=1em|☐}} “காந்தியடிகளுடைய எண்ணம் உண்மையாகத்தக்கவகையில். தமிழக முதல்வர், ஊனமுற்றவர்க்கும் உதவி செய்து, கிராமத்தில் இருக்கக்கூடிய அழுத்தப்பட்ட மக்கள், அதிர்ஷ்டக் குறைவான மக்கள் முன்னேற, வசதிகளைப் பெற தமிழக அரசு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுகிறது”.
{{Right|<b>உமாசங்கர் தீட்சித்</b><br>
3—10—74 (காந்தி மண்டபம்)}}
::{{overfloat left|align=right|padding=1em|☐}}“அண்ணா அவர்களின் வாழ்வு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட வரலாறாகும். சமூகநலப்பணிகளுக்கு வித்திட்டவர் அண்ணா! அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி வருபவர் முதல்வர் கருணாநிதி! மதுக் குடியை ஒழித்ததும், குதிரைப் பந்தயத்தை நிறுத்தியதும் அவர் எடுத்த துணிகர முடிவுகள்; காந்தீய லட்சியங்களை நிறைவேற்றும் பணிகளுமாகும்.”
{{Right|<b>வி.வி. கிரி</b> <br>
16—9—74 (மயிலை)}}<noinclude></noinclude>
89dqncndsi9p5exxf7dieyddzh52t4t
அறிவியல் களஞ்சியம் 14/அருஞ்சொல் அட்டவணை நு
0
642103
1928271
2026-04-29T12:16:35Z
TI Buhari
4634
"https://ta.wikisource.org/wiki/அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நு {| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" + {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நு</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நு</b>}} |- |width=25%|அறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928271
wikitext
text/x-wiki
https://ta.wikisource.org/wiki/அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நு
{| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%"
+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நு</b>}}
|-
! colspan="4"|{{fs|130%|<b>நு</b>}}
|-
|width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் கணிதம்|நுண் கணிதம்]]
|width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் கதிர் வரைவியல்|நுண் கதிர் வரைவியல்]]
|width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் காலக் கணிப்பளவுக் கருவி|நுண் காலக் கணிப்பளவுக் கருவி]]
|width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் குமிழ்க் கண் சவ்வழற்சி|நுண் குமிழ்க் கண் சவ்வழற்சி]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் கூறாக்கம்|நுண் கூறாக்கம்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் சிறு தமனி|நுண் சிறு தமனி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலை எதிர்ப்பு அளவி|நுண்ணலை எதிர்ப்பு அளவி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைக் குழாய்|நுண்ணலைக் குழாய்]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைகளும் நுண்ணலைச் சுற்றுகளும்|நுண்ணலைகளும் நுண்ணலைச் சுற்றுகளும்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைச் செலுத்தத் தொடர் வழிகள்|நுண்ணலைச் செலுத்தத் தொடர் வழிகள்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைத் திண்ம நிலைக் கருவிகள்|நுண்ணலைத் திண்ம நிலைக் கருவிகள்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலை நிற மாலையியல்|நுண்ணலை நிற மாலையியல்]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணளவி|நுண்ணளவி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணளவுப் பகுப்பாய்வு|நுண்ணளவுப் பகுப்பாய்வு]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர் இதய உள்ளுறை அழற்சி|நுண்ணுயிர் இதய உள்ளுறை அழற்சி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர் ஊட்டங்கள்|நுண்ணுயிர் ஊட்டங்கள்]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்க் கரை கொல்லி|நுண்ணுயிர்க் கரை கொல்லி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்க் கூட்டு வாழ்க்கை|நுண்ணுயிர்க் கூட்டு வாழ்க்கை]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்க் கொல்லி|நுண்ணுயிர்க் கொல்லி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்ச் சூழலியல்|நுண்ணுயிர்ச் சூழலியல்]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்த் தரம்|நுண்ணுயிர்த் தரம்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்ப் பூச்சி கொல்லிகள்|நுண்ணுயிர்ப் பூச்சி கொல்லிகள்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்ப் பெருக்கத் தடை|நுண்ணுயிர்ப் பெருக்கத் தடை]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர் வடிப்பி|நுண்ணுயிர் வடிப்பி]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரி|நுண்ணுயிரி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரிக் குருதி|நுண்ணுயிரிக் குருதி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரி மரபியல்|நுண்ணுயிரி மரபியல்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியல்]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிருண்ணி|நுண்ணுயிருண்ணி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி|நுண்ணோக்கி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்|நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி உடனொளிர்வு|நுண்ணோக்கி உடனொளிர்வு]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, எக்ஸ் கதிர்|நுண்ணோக்கி, எக்ஸ் கதிர்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, எதிரொளிப்பு|நுண்ணோக்கி, எதிரொளிப்பு]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, ஒலியியல்|நுண்ணோக்கி, ஒலியியல்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, ஒளியியல்|நுண்ணோக்கி, ஒளியியல்]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, கட்ட வேறுபாடு|நுண்ணோக்கி, கட்ட வேறுபாடு]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை|நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, புல அயனி|நுண்ணோக்கி, புல அயனி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, புல உமிழ்வு|நுண்ணோக்கி, புல உமிழ்வு]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, மைய விலக்கு|நுண்ணோக்கி, மைய விலக்கு]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு|நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் தட்ப வெப்பம்|நுண் தட்ப வெப்பம்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் திவலையாக்கி|நுண் திவலையாக்கி]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் பயிர்ப் பெருக்க முறை|நுண் பயிர்ப் பெருக்க முறை]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் புழைப்பாய்வு|நுண் புழைப்பாய்வு]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண், மீநுண் நிற மாலையும் இடை வினையும்|நுண், மீநுண் நிற மாலையும் இடை வினையும்]]
|
|-
|}{{nop}}
anjzbvjoh2g933m5hwdlx2z2g1psuh7
1928272
1928271
2026-04-29T12:17:11Z
TI Buhari
4634
1928272
wikitext
text/x-wiki
https://ta.wikisource.org/wiki/அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நு
{| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%"
|+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நு</b>}}
|-
! colspan="4"|{{fs|130%|<b>நு</b>}}
|-
|width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் கணிதம்|நுண் கணிதம்]]
|width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் கதிர் வரைவியல்|நுண் கதிர் வரைவியல்]]
|width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் காலக் கணிப்பளவுக் கருவி|நுண் காலக் கணிப்பளவுக் கருவி]]
|width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் குமிழ்க் கண் சவ்வழற்சி|நுண் குமிழ்க் கண் சவ்வழற்சி]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் கூறாக்கம்|நுண் கூறாக்கம்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் சிறு தமனி|நுண் சிறு தமனி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலை எதிர்ப்பு அளவி|நுண்ணலை எதிர்ப்பு அளவி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைக் குழாய்|நுண்ணலைக் குழாய்]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைகளும் நுண்ணலைச் சுற்றுகளும்|நுண்ணலைகளும் நுண்ணலைச் சுற்றுகளும்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைச் செலுத்தத் தொடர் வழிகள்|நுண்ணலைச் செலுத்தத் தொடர் வழிகள்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைத் திண்ம நிலைக் கருவிகள்|நுண்ணலைத் திண்ம நிலைக் கருவிகள்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலை நிற மாலையியல்|நுண்ணலை நிற மாலையியல்]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணளவி|நுண்ணளவி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணளவுப் பகுப்பாய்வு|நுண்ணளவுப் பகுப்பாய்வு]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர் இதய உள்ளுறை அழற்சி|நுண்ணுயிர் இதய உள்ளுறை அழற்சி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர் ஊட்டங்கள்|நுண்ணுயிர் ஊட்டங்கள்]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்க் கரை கொல்லி|நுண்ணுயிர்க் கரை கொல்லி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்க் கூட்டு வாழ்க்கை|நுண்ணுயிர்க் கூட்டு வாழ்க்கை]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்க் கொல்லி|நுண்ணுயிர்க் கொல்லி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்ச் சூழலியல்|நுண்ணுயிர்ச் சூழலியல்]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்த் தரம்|நுண்ணுயிர்த் தரம்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்ப் பூச்சி கொல்லிகள்|நுண்ணுயிர்ப் பூச்சி கொல்லிகள்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்ப் பெருக்கத் தடை|நுண்ணுயிர்ப் பெருக்கத் தடை]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர் வடிப்பி|நுண்ணுயிர் வடிப்பி]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரி|நுண்ணுயிரி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரிக் குருதி|நுண்ணுயிரிக் குருதி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரி மரபியல்|நுண்ணுயிரி மரபியல்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியல்]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிருண்ணி|நுண்ணுயிருண்ணி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி|நுண்ணோக்கி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்|நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி உடனொளிர்வு|நுண்ணோக்கி உடனொளிர்வு]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, எக்ஸ் கதிர்|நுண்ணோக்கி, எக்ஸ் கதிர்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, எதிரொளிப்பு|நுண்ணோக்கி, எதிரொளிப்பு]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, ஒலியியல்|நுண்ணோக்கி, ஒலியியல்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, ஒளியியல்|நுண்ணோக்கி, ஒளியியல்]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, கட்ட வேறுபாடு|நுண்ணோக்கி, கட்ட வேறுபாடு]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை|நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, புல அயனி|நுண்ணோக்கி, புல அயனி]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, புல உமிழ்வு|நுண்ணோக்கி, புல உமிழ்வு]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, மைய விலக்கு|நுண்ணோக்கி, மைய விலக்கு]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு|நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் தட்ப வெப்பம்|நுண் தட்ப வெப்பம்]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் திவலையாக்கி|நுண் திவலையாக்கி]]
|-
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் பயிர்ப் பெருக்க முறை|நுண் பயிர்ப் பெருக்க முறை]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் புழைப்பாய்வு|நுண் புழைப்பாய்வு]]
|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண், மீநுண் நிற மாலையும் இடை வினையும்|நுண், மீநுண் நிற மாலையும் இடை வினையும்]]
|
|-
|}{{nop}}
n2u3obulh50xvxd9qb0xj56pu3w37kv
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/129
250
642104
1928274
2026-04-29T12:39:11Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல்கோல்}}</noinclude>மேலும் நூலின் குறுக்களவில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதன் பண்புகளிலும் மாற்றம் ஏற்படும்.
{{right|—<b>தி.அ. வெங்கடாசலம்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="74"/><section begin="75"/>
{{fs|110|<b>நூல் குறை</b>}}
நூல் நூற்பவர் நூற்பு எந்திரத்தில் நூல் தயாரிக்கும் போது வரும் குறைபாடுகளாவன: தவறான அல்லது குறைவான அல்லது அதிக முறுக்கமுள்ள நூல், தடித்த அல்லது முதிரா இழை (roving) தவறான இழுவையால் உண்டாகும் நூல், மொத்தமான அல்லது மெல்லிய நூல், உருண்டை வடிவம் அமைதல், அறுந்த கோர்வையான நூல் அழுக்கான அல்லது எண்ணெய்க் கறையான நூல், நூல் முறுக்கம் (twist) என்பன.
நூல் முறுக்கத்தில், கார்க் ஸ்குரு (Cork screw) நூல், ஒற்றை நூல், கனமான நூல், இரண்டிற்கு மேல் ஒட்டிய முறுக்கமான நூல், குறைந்த அல்லது அதிக முறுக்கமான நூல், எண்ணெய்க் கறையான அல்லது அழுக்கான நூல் ஆகிய குறைகள் ஏற்படக் கூடும்.
{{right|—<b>தி.அ. வெங்கடாசலம்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="75"/><section begin="76"/>
{{fs|110|<b>நூல்கோல்</b>}}
இக்காய்கறியின் தாவரப் பெயர் பிராசிக்கா ஒலிரேசியா வகை காங்கிலோடெஸ் (<i>Brassica oleracea Var gongylodes</i>) <!---- Checked the botanical name with https://en.wikipedia.org/wiki/Kohlrabi----> என்பதாகும். பிராசிக்கா ஒலிரேசியா வகை காலோராபா (<i>Brassica oleracea var. Caulorapa</i>) என்பது இதன் இணை தாவரப் பெயராகும். இச்செடி குரூசிஃபெரே குடும்பத்தைச் சேர்ந்தது.
நூல்கோல் வடக்கு ஐரோப்பியக் கடற்கரையோரப் பகுதிகளையே தாயகமாகக் கொண்டதாகக் கருதப் படுகிறது.
அமைப்பு. இது ஒரு சிறு செடி; தண்டு நேரானது; தண்டு வீங்கி உருண்டையாக, 5–10 செ.மீ. குறுக்களவுள்ளதாக மாறும். இலைகள் பளபளப்பானவை.
இலைக் காம்பு நீண்டிருக்கும். மஞ்சரி ரெசீம் வகையைச் சேர்ந்தது. 10–20 செ.மீ. நீளமுடையது, பூக்காம்புச் செதில், பூவடிச் செதில் அற்றது. மலர்கள் இரு பால் ஆரச் சமச் சீரானவை. புல்லி இதழ்கள் நேரானவை. அல்லி இதழ்கள் 1–1.5 செ.மீ. நீளமானவை.
புல்லி இதழ்களை விட ஏறக் குறைய, இரு மடங்கு நீளமானவை. எலுமிச்சை மஞ்சள் நிறமானவை. ஆறு மகரந்தத் தாள்களும் நேரானவை.
மேல் மட்டச் சூல் பை. கனி நெற்று (pod) வகையைச் சேர்ந்தது. இரண்டு இணைப்புகளினின்றும் கீழிருந்து மேல் நோக்கிக் கனிகள் வெடிக் கின்றன. இவ்வாறு அறைகள் பிரியும் போது, தடுப்புச் சுவரில் இணைத் திசுவின் மூலம் சூல்கள் பொருந்தியுள்ளன.
கனி 5–10 செ.மீ. நீளத்தில் உருண்டையாகவும், நுனி கூரியதாயும் இருக்கும். .கனியின் நுனி விதை அற்றது. ஒவ்வொரு கனியிலும் 8–16 விதைகள் அடங்கியிருக்கும். கனி அடர் சாமபல் பழுப்பு நிறத்தில் 2–4 மி.மீ. குறுக்களவுடன் இருக்கும். விதைகளில் கரு பெரியதாகவும், முழுமையாக விதையை அடைத்துக் கொண்டும் இருக்கும்.
<b>சாகுபடி முறை</b>. இதன் சாகுபடிக்குப் பல வகையான மண் வகைகள் ஏற்றவையாக இருந்த போதிலும், செம்மண் கலந்த இரு மண்பாட்டு நிலம் மிகவும் ஏற்றது.
விதைகள் பெரும்பாலும் ஜுன்–ஜூலை மாதங்களிலும், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் விதைக்கப் படுகின்றன. இந்தியாவில், வியன்னா, கருநீல வியன்னா என்னும் வகைகளே சாகுபடியில் உள்ளன. கிங் ஆஃப் நார்த் என்னும் வகையும் தற்போது பயிராகிறது. வெள்ளை வியன்னா 60–80 நாளில் விளையும். தண்டங்கிழங்கு சற்று நீள் சதுரமாகவும், மென்மையாகவும் இளம் பச்சை நிறமாகவும் இருக்கும்.
கரு நீல வியன்னா 80–90 நாளில் விளைகிறது. இதில் கரு நீலமான நடுத்தர பருமனுடைய தண்டங்கிழங்குகள் உண்டாகின்றன.
ஒரு ஹெக்டேர் நிலப் பரப்பில் சாகுபடி செய்வதற்கு<noinclude></noinclude>
rfpzquzx5bqei7fdnvlxdy8c9o4v34d
அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 14.pdf
253
642105
1928299
2026-04-29T13:26:31Z
TI Buhari
4634
/* பெயரிடல் மரபு */ புதிய பகுதி
1928299
wikitext
text/x-wiki
== பெயரிடல் மரபு ==
தாவர, மற்றும் விலங்கினப் (பறவைகள், மீன்கள், புழுக்கள் மற்ற உயிரினங்களையும் உள்ளடக்கியது) பெயர்களை ஆங்கிலத்தில் குறிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்: இப்பெயர்கள் பெரும்பாலும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் பகுதியின் முதலெழுத்து பேரெழுத்தாகவும் (Capital letter), இரண்டாம் பகுதி சாதாரணமாகவும், சாய்வெழுத்துகளில் குறிக்கப் பெறும். பொதுவாக, பெயரின் முதல் பகுதி பேரினத்தையும், இரண்டாம் பகுதி சிற்றினத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.
எடுத்துக் காட்டு: மல்லிகையின் தாவரவியல் பெயர் ஆங்கிலத்தில் <nowiki><i>Jasminum officinale</i></nowiki>
Botanical nomenclature is the formal, scientific naming of plants. It is related to, but distinct from taxonomy. Plant taxonomy is concerned with grouping and classifying plants; botanical nomenclature then provides names for the results of this process. The starting point for modern botanical nomenclature is Linnaeus' Species Plantarum of 1753. Botanical nomenclature is governed by the International Code of Nomenclature for algae, fungi, and plants (ICNafp), which replaces the International Code of Botanical Nomenclature (ICBN). Fossil plants are also covered by the code of nomenclature.
Source: <nowiki>https://en.wikipedia.org/wiki/Botanical_nomenclature</nowiki>
See also: <nowiki>https://en.wikipedia.org/wiki/International_Code_of_Zoological_Nomenclature</nowiki> [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:26, 29 ஏப்ரல் 2026 (UTC)
bmk45jezuybd9dpg5qef9pvgxnd7ncx
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/130
250
642106
1928300
2026-04-29T13:35:07Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928300
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|108 நூல்கோல்}}</noinclude>1.250 கிலோ விதையைப் பயன் படுத்த வேண்டும். பின்னர், 500 கிராம் 15:15:15 தொழு உரத்தைச் சேர்த்து, மண்ணுடன் கலக்க வேண்டும். 7.5 செ.மீ. இடை வெளியில் கோடுகளை இழுத்து, விதைகளை விதைத்து, மண்ணால் மூடி, நீர் பாய்ச்ச வேண்டும். பெரும்பாலும், 3–4 வார நாற்றுகள் 30–22.5 செ.மீ. இடைவெளியில் பார் முறையில் நடப் படுகின்றன. ஹெக்டேருக்கு 150 கி.கி. தழைச் சத்து, 100 கி.கி. மணிச் சத்து, 125 கி.கி. சாம்பல் சத்து ஆகியவை தேவை. மணிச் சத்து உரமும், சாம்பல் சத்து உரமும் முழுமையாக அடியுரமாக இடப் படுகின்றன. தழைச் சத்தில் பாதியளவு அடியுரமாகவும், பாதியளவு நடவு செய்த நான்கு வாரங்களுக்குப் பின்பும், இடப் படுகிறது. நீர் பாய்ச்சிய பின், நடவு செய்தல் வேண்டும். பின்பு நூல்கோல் தோட்டத்திற்கு 4–6 நாளுக்கு ஒரு முறை நீர் இறைக்க வேண்டும். தண்டின் அடிப் பகுதி 5–7 செ.மீ. குறுக்களவிற்குக் கருத்தவுடன், செடிகள் பிடுங்கப் பட்டுக் கிழங்குகள் அறுவடை செய்யப் படுகின்றன. நாற்று நட்ட 45–60 நாளில் அறுவடை நடை பெறுகிறது.
<b>நோய்கள்</b>. இப்பயிரை அசுவுணி, இலைப் பேன், தத்து வண்டு, அரைக் காவடிப் புழு மஞ்சரித் துளைப்பான் போன்றவை தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த நாற்றங்காலில் 10 லி. நீருக்குக் குவினால் பாஸ் 20 மி.லி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும். நூல்கோல் உள்ள தோட்டத்தில், நட்ட 2, 4 ஆம் வாரத்தில் மேற்குறிப்பிட்ட மருந்தைத் தெளித்துப் பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம். நோய்களுள், பாக்டீரியாக் கருப்பழுகல், இலைக் கருகல், வெள்ளைத் துரு முதலியவை குறிக்கத் தக்கவை. பாக்டீரியக் கருப்பழுகல் நோயைக் கட்டுப் படுத்துவதற்கு 10 லி. நீருக்கு டெட்ராசைக்ளின் ஹைட்ராக்சைடு 100 மி.கி. கரைத்துத் தெளிக்க வேண்டும். ஏனைய நோய்களைக் கட்டுப் படுத்த, 10 லி. நீருக்கு 25 கிராம் என்னும் அளவில் தாமிர ஆக்சி குளோரைடு மருந்தைக் கரைத்துத் தெளிக்க வேண்டும்.
<b>பயன்</b>. நூல்கோல் தண்டங்கிழங்கு பச்சை அல்லது நீல நிறத்தில் காணப் படும். அறுவடை செய்த செடிகளிலிருந்து பச்சைத் தழைகளை அரிந்து நீக்கி விட்டுக் கிழங்குகளைச் சிறு, சிறு துண்டுகளாக்கிச் சமைத்து உண்பதுண்டு.
{{right|—<b>கோ. அர்ச்சுனன்.</b>}}
<b>துணை நூல்</b>. J.W. Purseglove, <i>Tropical Crops-Dicotyledons</i>, Longman Group Ltd., London, 1974.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="76"/><section begin="77"/>
{{fs|110|<b>நூல் புழு</b>}}
சில நூல் புழுக்கள் விலங்கினங்களையும், பயிரினங்களையும் தாக்குகின்றன. விலங்கினங்களைத் தாக்குபவை மிக நீளமாக இருக்கும். ஆனால், பயிரினங்களைத் தாக்கும் நூல் புழுக்கள் உருவில் மிக, மிகச் சிறியவையாயும், மெலிந்தும் காணப் படும். தாவர நூல் புழுக்களை உருப் பெருக்கியின் மூலமே காண இயலும்.
விலங்குகளைத் தாக்கும் நூல் புழுக்களில், குடல் உருண்டைபுழு. (Intestinal round worm), கொக்கிப் புழு (hook worm), யானைக் கால் நோய்ப் புழு (Elephantiasis), கினியாப் புழு, இழைப் புழு (thread work), டிரைக்கினாப் புழு, சாட்டைப் புழு ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இவை மனித இனத்தில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.
<b>குடல் உருண்டைப் புழு</b>. ஆக்காரிஸ் லும்ரிகாய்டிஸ் (<i>Ascaris lumbricoides</i>). என்பது இதன் விலங்கினப் பெயராகும்.. இப்புழு உலகம் முழுவதும் பரவியுள்ளது. மனிதனின் குடலில், குறிப்பாகக் குழந்தைகளின் குடலில் இது ஒட்டுண்ணியாக வாழ்கிறது. பொதுவாக, ஆண் புழு குட்டையாகவும், அதன் பின் புறம் சற்றுக் கீழ் நோக்கி வளைந்தும் இருக்கும். பெண் புழு நீளமாகவும், அதன் பின் புறம் நேராகவும் இருக்கும்.
இப்புழுக்களின் இனச் சேர்க்கை மனிதனின் குடலில் நிகழ்கிறது. இனச் சேர்க்கைக்குப் பின்பு, பெண் புழு நாளொன்றுக்கு 20,000 முட்டைகள் வீதம் 2,00,000 முட்டைகள் வரை இடும். இம்முட்டைக்குள் மலத்துடன் வெளி வருகின்றன. முட்டைக்குள்ளேயே கரு வளர்கிறது. இது முட்டைக்குள் சுருண்டு கிடக்கும். பின்பு, முட்டைகள் மலத்திலிருந்து ஈயின் மூலமாகவோ, காற்றின் மூலமாகவோ, உணவையோ, குடி நீரையோ உட்கொள்ளும் போது, முட்டை குடலுக்குள் செல்கிறது. அங்கே, முட்டையிலிருந்து இளம் புழு வெளி வருகிறது. இது குடலின் சுவரைத் துளைத்து, அங்குள்ள குருதிக் குழாயினுள் புகும். இங்கிருந்து, முறையே கல்லீரல், இதயம், நுரையீரல், சுவாசக் குழல், தொண்டை, அன்னக் குழல், வயிறு ஆகிய உறுப்புகளின் வழியாகச் சென்று இறுதியில் சிறு குடலை அடையும். இங்கு இளம் புழு முதிர்ந்து, பெரிய புழுவாகிறது. இளவுயிரி சுவாசக் குழாயின் வழியாகத் தொற்றித் தொண்டைக்குச் செல்லும் போது, தொண்டையில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும். இது கூட்டமாகச் சுவாசக் குழாயில் செல்வதால், சுவாசக் குழாய் அடைபடலாம். குடலில் புழுக்கள் கூட்டமாக இருந்தால், குடல் அடைபடவும் வாய்ப்புண்டு. இப்புழுத் தாக்குதலைத் தவிர்க்க முட்டை தொற்றியுள்ள உணவு வகைகளையும் குடிநீரையும் தவிர்க்க வேண்டும்.{{nop}}<noinclude></noinclude>
k1vj0y9yp4chk0yq29cpx97gxhckh6s
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/131
250
642107
1928303
2026-04-29T13:38:30Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928303
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல் புழு 109}}</noinclude>{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 131
|bSize = 400
|cWidth = 365
|cHeight = 450
|oTop = 48
|oLeft = 15
|Location = center}}<noinclude></noinclude>
mwlmm4zbvw936sn3tqaifvay4rxbfqo
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/90
250
642108
1928311
2026-04-29T13:47:56Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தமிழ்நாட்டில் மீண்டும் மது விலக்கை அமுலுக்குக் கொண்டுவந்த தி. மு. க. அரசையும். முதல்வர் கருணாநிதியையும் பாராட்டுகிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||81}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தமிழ்நாட்டில் மீண்டும் மது விலக்கை அமுலுக்குக் கொண்டுவந்த தி. மு. க. அரசையும். முதல்வர் கருணாநிதியையும் பாராட்டுகிறேன். பிற மாநிலங்களும் தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டும்”.
{{Right|வினோபா பாவே<br>
3—10—74 (வார்தா)}}
::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட பயனுள்ள பல்வேறு கல்விப் பரிசோதனைகள், இந்தியாவின் பல பாகங்களில் பரவியிருக்கின்றன. கல்வித் துறையில் தமிழ்நாடு முன்னேறியிருப்பது கண்டு தமிழக அரசைப் பாராட்டுகிறேன்”.
{{Right|ஜட்டி–குடியரசுத் துணைத் தலைவர்<br>
9—10—75 (மதுரை)}}.
::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தமிழக அரசின் உள்ளத்தில் — குறிப்பாக முதலமைச்சர் கருணாநிதியின் உள்ளத்தில் ஏழை எளியவர்கட்கு நன்மை செய்யும் எண்ணம் மிகவும் நிறைந்துள்ளது. அரிஜனங்களிடமும் பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் தனி அக்கறை காட்டுவதற்காக நான் நன்றி கூறிக்கொள்கிறேன்”.
{{Right|போலோ பஸ்வன் சாஸ்திரி<br>
9—6—74 (சென்னை)}}
உடன்பிறப்பே! நீண்டதோர் பட்டியலில் ஒன்றிரண்டைத்தான் உனக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். மக்களின் வாழ்வுப் பிரச்சினையில் ஆர்வம் காட்டாமல் கோட்டமும். கூடமும் நிர்மாணிப்பதாக கூச்சல் போடுகிறார்களே; அவர்<noinclude></noinclude>
1s2ekrxlbcsikvxlyapk4yianrc5tq9
1928322
1928311
2026-04-29T14:04:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928322
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||81}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தமிழ்நாட்டில் மீண்டும் மது விலக்கை அமுலுக்குக் கொண்டுவந்த தி. மு. க. அரசையும். முதல்வர் கருணாநிதியையும் பாராட்டுகிறேன். பிற மாநிலங்களும் தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டும்”.
{{Right|<b>வினோபா பாவே</b><br>
3—10—74 (வார்தா)}}
::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட பயனுள்ள பல்வேறு கல்விப் பரிசோதனைகள், இந்தியாவின் பல பாகங்களில் பரவியிருக்கின்றன. கல்வித் துறையில் தமிழ்நாடு முன்னேறியிருப்பது கண்டு தமிழக அரசைப் பாராட்டுகிறேன்”.
{{Right|<b>ஜட்டி–குடியரசுத் துணைத் தலைவர்</b><br>
9—10—75 (மதுரை)}}.
::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தமிழக அரசின் உள்ளத்தில் — குறிப்பாக முதலமைச்சர் கருணாநிதியின் உள்ளத்தில் ஏழை எளியவர்கட்கு நன்மை செய்யும் எண்ணம் மிகவும் நிறைந்துள்ளது. அரிஜனங்களிடமும் பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் தனி அக்கறை காட்டுவதற்காக நான் நன்றி கூறிக்கொள்கிறேன்”.
{{Right|<b>போலோ பஸ்வன் சாஸ்திரி</b><br>
9—6—74 (சென்னை)}}
உடன்பிறப்பே! நீண்டதோர் பட்டியலில் ஒன்றிரண்டைத்தான் உனக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். மக்களின் வாழ்வுப் பிரச்சினையில் ஆர்வம் காட்டாமல் கோட்டமும். கூடமும் நிர்மாணிப்பதாக கூச்சல் போடுகிறார்களே; அவர்<noinclude></noinclude>
2sfjpxqldmqww5jmq8fbdj8r51ctn2r
1928325
1928322
2026-04-29T14:05:59Z
Booradleyp1
1964
1928325
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||81}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தமிழ்நாட்டில் மீண்டும் மது விலக்கை அமுலுக்குக் கொண்டுவந்த தி. மு. க. அரசையும். முதல்வர் கருணாநிதியையும் பாராட்டுகிறேன். பிற மாநிலங்களும் தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டும்”.
{{Right|<b>வினோபா பாவே</b><br>
3—10—74 (வார்தா)}}
::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட பயனுள்ள பல்வேறு கல்விப் பரிசோதனைகள், இந்தியாவின் பல பாகங்களில் பரவியிருக்கின்றன. கல்வித் துறையில் தமிழ்நாடு முன்னேறியிருப்பது கண்டு தமிழக அரசைப் பாராட்டுகிறேன்”.
{{Right|<b>ஜட்டி–குடியரசுத் துணைத் தலைவர்</b><br>
9—10—75 (மதுரை)}}.
::{{overfloat left|align=right|padding=1em|☐}}“தமிழக அரசின் உள்ளத்தில் — குறிப்பாக முதலமைச்சர் கருணாநிதியின் உள்ளத்தில் ஏழை எளியவர்கட்கு நன்மை செய்யும் எண்ணம் மிகவும் நிறைந்துள்ளது. அரிஜனங்களிடமும் பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் தனி அக்கறை காட்டுவதற்காக நான் நன்றி கூறிக்கொள்கிறேன்”.
{{Right|<b>போலோ பஸ்வன் சாஸ்திரி</b><br>
9—6—74 (சென்னை)}}
உடன்பிறப்பே! நீண்டதோர் பட்டியலில் ஒன்றிரண்டைத்தான் உனக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். மக்களின் வாழ்வுப் பிரச்சினையில் ஆர்வம் காட்டாமல் கோட்டமும். கூடமும் நிர்மாணிப்பதாக கூச்சல் போடுகிறார்களே; அவர்-<noinclude></noinclude>
jrn0xgyv91gue8acji5s4fq755s2zay
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/91
250
642109
1928312
2026-04-29T13:52:52Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களுக்குத் தெளிவு ஏற்படுத்தவே இவ்வளவு விபரங்களை வழங்கியிருக்கிறேன் ஆனால் ஒன்று — உண்மையிலேயே உறங்குபவனைத்தான் எழுப்பிட இயலும், அதுவு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928312
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|82||கலைஞர்}}</noinclude>களுக்குத் தெளிவு ஏற்படுத்தவே இவ்வளவு விபரங்களை வழங்கியிருக்கிறேன் ஆனால் ஒன்று — உண்மையிலேயே உறங்குபவனைத்தான் எழுப்பிட இயலும், அதுவும், எனக்குத் தெரியாமல் இல்லை!
உணவு, உடை, உறையுள் இவை மூன்றும் மக்களின் அடிப்படைப்
பிரச்சினை எனினும், அவைகளுடன் “உணர்வு” என்ற அடித்தளத்துப் பிரச்சினைக்கும் உரிய இடம் தந்தாக வேண்டும்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
24 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
af50o1ttx9xp2ufresciiwl0gp0whqf
1928326
1928312
2026-04-29T14:06:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928326
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|82||கலைஞர்}}</noinclude>களுக்குத் தெளிவு ஏற்படுத்தவே இவ்வளவு விபரங்களை வழங்கியிருக்கிறேன் ஆனால் ஒன்று — உண்மையிலேயே உறங்குபவனைத்தான் எழுப்பிட இயலும், அதுவும், எனக்குத் தெரியாமல் இல்லை!
உணவு, உடை, உறையுள் இவை மூன்றும் மக்களின் அடிப்படைப்
பிரச்சினை எனினும், அவைகளுடன் “உணர்வு” என்ற அடித்தளத்துப் பிரச்சினைக்கும் உரிய இடம் தந்தாக வேண்டும்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
24 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
9jap130r8esctbz8ukl7pk0lbjqykq0
1928844
1928326
2026-04-30T08:20:12Z
Booradleyp1
1964
1928844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|82||கலைஞர்}}</noinclude>களுக்குத் தெளிவு ஏற்படுத்தவே இவ்வளவு விபரங்களை வழங்கியிருக்கிறேன் ஆனால் ஒன்று — உண்மையிலேயே உறங்குபவனைத்தான் எழுப்பிட இயலும், அதுவும், எனக்குத் தெரியாமல் இல்லை!
உணவு, உடை, உறையுள் இவை மூன்றும் மக்களின் அடிப்படைப்
பிரச்சினை எனினும், அவைகளுடன் “உணர்வு” என்ற அடித்தளத்துப் பிரச்சினைக்கும் உரிய இடம் தந்தாக வேண்டும்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
24 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
ozzh95vfji7ozqysn720qletnittcbl
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/92
250
642110
1928319
2026-04-29T13:58:43Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{larger|<b>நாகாக்க! நாகாக்க!! நாகாக்க!!!</b>}} உடன்பிறப்பே, “நாகாக்க!” என்று நண்பர் சம்பத் எனக்கு அறிவுரையும் எச்சரிக்கையும் வழங்கியிருக்கிறா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928319
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>நாகாக்க! நாகாக்க!! நாகாக்க!!!</b>}}
உடன்பிறப்பே,
“நாகாக்க!” என்று நண்பர் சம்பத் எனக்கு அறிவுரையும் எச்சரிக்கையும் வழங்கியிருக்கிறார். அவர் விடுத்துள்ள அந்த அறிக்கையில் 'நாகாக்கும்' பண்பைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் அவர், மிகுந்த அடக்க சுபாவமுடைய என்னைப் பார்த்து 'நாகாக்க' என்று கூறி யிருப்பது விந்தையான கதைதான்!
எனக்கு அடக்கம், இயல்பாகவே இயல்பாகவே அமைந்த ஒன்று! கொதிப்படையத்தக்க சில சூழ்நிலைகளில் நான் சற்று உணர்ச்சிமிகப் பேச முனைந்தாலும்கூட அறிஞர் அண்ணா விடத்தில் பெற்ற பயிற்சி, அந்த முனைப்பைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.
மேன்மை மிகு பரூவா அவர்கள், கழகத்தைப் புற்று நோய் என்றும், இருபது அடிக் குச்சியால்கூடக் கழகத் தினரைத் தொடக் கூச்சமாக இருக்கிறதன்றும் பேசியதற்கு நான் அளித்த அடக்கமான. ஆனால் விளக்கமான பதிலைப் பார்த்து சில எதிர்க்கட்சி ஏடுகள்கூட, “கருணாநிதியின் பணிவு” என்று கிண்டல்செய்து எழுதியதாகக் கேள்வி! ஆனால் நான் அடக்கமில்லாமல் எழுதுவதாகவும் பேசுவதாகவும் நண்பர் குற்றம் சாட்டுகிறார். அந்தக் குற்றச்சாட்டு அறிக்கையில் அவர் “நா காத்திடும் நாகரீகத்”தைச் சற்று கவனிக்கலாம்.
“கூண்டில் விலங்கிடாக் குற்றவாளி”<noinclude></noinclude>
nhkd2cjkvhurwux8k8wdjlmyk9j4rjr
1928330
1928319
2026-04-29T14:22:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928330
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>நாகாக்க! நாகாக்க!! நாகாக்க!!!</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
“நாகாக்க!” என்று நண்பர் சம்பத் எனக்கு அறிவுரையும் எச்சரிக்கையும் வழங்கியிருக்கிறார். அவர் விடுத்துள்ள அந்த அறிக்கையில் 'நாகாக்கும்' பண்பைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் அவர், மிகுந்த அடக்க சுபாவமுடைய என்னைப் பார்த்து 'நாகாக்க' என்று கூறியிருப்பது விந்தையான கதைதான்!
எனக்கு அடக்கம், இயல்பாகவே இயல்பாகவே அமைந்த ஒன்று! கொதிப்படையத்தக்க சில சூழ்நிலைகளில் நான் சற்று உணர்ச்சிமிகப் பேச முனைந்தாலும்கூட அறிஞர் அண்ணாவிடத்தில் பெற்ற பயிற்சி, அந்த முனைப்பைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.
மேன்மை மிகு பரூவா அவர்கள், கழகத்தைப் புற்று நோய் என்றும், இருபது அடிக் குச்சியால்கூடக் கழகத்தினரைத் தொடக் கூச்சமாக இருக்கிறதன்றும் பேசியதற்கு நான் அளித்த அடக்கமான, ஆனால் விளக்கமான பதிலைப் பார்த்து சில எதிர்க்கட்சி ஏடுகள்கூட, “கருணாநிதியின் பணிவு” என்று கிண்டல்செய்து எழுதியதாகக் கேள்வி! ஆனால் நான் அடக்கமில்லாமல் எழுதுவதாகவும் பேசுவதாகவும் நண்பர் குற்றம் சாட்டுகிறார். அந்தக் குற்றச்சாட்டு அறிக்கையில் அவர் “நா காத்திடும் நாகரீகத்”தைச் சற்று கவனிக்கலாம்.
“கூண்டில் விலங்கிடாக் குற்றவாளி”{{nop}}<noinclude></noinclude>
7f9xhvgg29v8clvyxwdh7lqkvvrwcj4
1928841
1928330
2026-04-30T08:19:15Z
Booradleyp1
1964
1928841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{lx-arger|<b>நாகாக்க! நாகாக்க!! நாகாக்க!!!</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
“நாகாக்க!” என்று நண்பர் சம்பத் எனக்கு அறிவுரையும் எச்சரிக்கையும் வழங்கியிருக்கிறார். அவர் விடுத்துள்ள அந்த அறிக்கையில் 'நாகாக்கும்' பண்பைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் அவர், மிகுந்த அடக்க சுபாவமுடைய என்னைப் பார்த்து 'நாகாக்க' என்று கூறியிருப்பது விந்தையான கதைதான்!
எனக்கு அடக்கம், இயல்பாகவே இயல்பாகவே அமைந்த ஒன்று! கொதிப்படையத்தக்க சில சூழ்நிலைகளில் நான் சற்று உணர்ச்சிமிகப் பேச முனைந்தாலும்கூட அறிஞர் அண்ணாவிடத்தில் பெற்ற பயிற்சி, அந்த முனைப்பைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.
மேன்மை மிகு பரூவா அவர்கள், கழகத்தைப் புற்று நோய் என்றும், இருபது அடிக் குச்சியால்கூடக் கழகத்தினரைத் தொடக் கூச்சமாக இருக்கிறதன்றும் பேசியதற்கு நான் அளித்த அடக்கமான, ஆனால் விளக்கமான பதிலைப் பார்த்து சில எதிர்க்கட்சி ஏடுகள்கூட, “கருணாநிதியின் பணிவு” என்று கிண்டல்செய்து எழுதியதாகக் கேள்வி! ஆனால் நான் அடக்கமில்லாமல் எழுதுவதாகவும் பேசுவதாகவும் நண்பர் குற்றம் சாட்டுகிறார். அந்தக் குற்றச்சாட்டு அறிக்கையில் அவர் “நா காத்திடும் நாகரீகத்”தைச் சற்று கவனிக்கலாம்.
“கூண்டில் விலங்கிடாக் குற்றவாளி”{{nop}}<noinclude></noinclude>
2lc2xx6pv18nfhuitdathuafrlp6c30
1928842
1928841
2026-04-30T08:19:46Z
Booradleyp1
1964
1928842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>நாகாக்க! நாகாக்க!! நாகாக்க!!!</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
“நாகாக்க!” என்று நண்பர் சம்பத் எனக்கு அறிவுரையும் எச்சரிக்கையும் வழங்கியிருக்கிறார். அவர் விடுத்துள்ள அந்த அறிக்கையில் 'நாகாக்கும்' பண்பைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் அவர், மிகுந்த அடக்க சுபாவமுடைய என்னைப் பார்த்து 'நாகாக்க' என்று கூறியிருப்பது விந்தையான கதைதான்!
எனக்கு அடக்கம், இயல்பாகவே இயல்பாகவே அமைந்த ஒன்று! கொதிப்படையத்தக்க சில சூழ்நிலைகளில் நான் சற்று உணர்ச்சிமிகப் பேச முனைந்தாலும்கூட அறிஞர் அண்ணாவிடத்தில் பெற்ற பயிற்சி, அந்த முனைப்பைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.
மேன்மை மிகு பரூவா அவர்கள், கழகத்தைப் புற்று நோய் என்றும், இருபது அடிக் குச்சியால்கூடக் கழகத்தினரைத் தொடக் கூச்சமாக இருக்கிறதன்றும் பேசியதற்கு நான் அளித்த அடக்கமான, ஆனால் விளக்கமான பதிலைப் பார்த்து சில எதிர்க்கட்சி ஏடுகள்கூட, “கருணாநிதியின் பணிவு” என்று கிண்டல்செய்து எழுதியதாகக் கேள்வி! ஆனால் நான் அடக்கமில்லாமல் எழுதுவதாகவும் பேசுவதாகவும் நண்பர் குற்றம் சாட்டுகிறார். அந்தக் குற்றச்சாட்டு அறிக்கையில் அவர் “நா காத்திடும் நாகரீகத்”தைச் சற்று கவனிக்கலாம்.
“கூண்டில் விலங்கிடாக் குற்றவாளி”{{nop}}<noinclude></noinclude>
e59gni8l71uremdgjornqbhfapsrru1
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/93
250
642111
1928324
2026-04-29T14:05:48Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":“சனியன்” :“வில்லன்” :“அருவருக்கத் தக்க குற்றச்சாட்டுக்கு ஆளானவர்” இந்த அடைமொழிகள் எல்லாம் நண்பர் சம்பத் அவர்கள் எனக்குச் சூட்டியுள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928324
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|84||கலைஞர்}}</noinclude>:“சனியன்”
:“வில்லன்”
:“அருவருக்கத் தக்க குற்றச்சாட்டுக்கு ஆளானவர்”
இந்த அடைமொழிகள் எல்லாம் நண்பர் சம்பத் அவர்கள் எனக்குச் சூட்டியுள்ளவைகளாகும்.
இவைகளைவிட இன்னும் இழிவு நிறைந்த வசைமாரிகளைக் கேட்டுப் பழகியவன்தான் நான்! என்குலம், கோத்திரம், குடும்பம், பெண்டு பிள்ளைகள், அனைத்துமே எதிர்க் கட்சி மேடைகளில் விமர்சிக்கப்பட்டவைதான்! “வாழ்க வசவாளர்கள்!” என்று அண்ணா வாழ்த்தியதைப் போலத்தான் நான் அவர்களை வாழ்த்தியிருக்கிறேன். இப்போதும் என் பழைய நண்பரை அதுபோலவே வாழ்த்துகிறேன்.
நான் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்தவன் — மிகமிக மிகப் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்தவன் —
அதனால் அடக்கம் இயல்பாகவே இருந்து — அண்ணா அவர்களால் நிலைபெற்றுவிட்ட ஒன்றாகிவிட்டது என்னிடம்!
அன்றொரு நாள் தமிழ்நாட்டுப் பெரிய தலைவர் ஒரு வரும் அவரது சகாக்களும் கள்ள நோட்டு தயாரிப்பதாக ஆயிரம்விளக்குக் கூட்டத்தில் பேசியவரும் இவர்தான்! நீதி மன்றத்தில் நான் அப்படிப் பேசவில்லை என்று வீரமாக ‘டன்கர்க்’ செய்தவரும் இவர்தான்; “நா காக்க!” என்று, இவர் எனக்குச் சொல்லுகிறார்! காலம் மிகவும் கெட்டுத்தான்விட்டது!
“அடிமுட்டாள்” என்பதற்கு இனிமேல் அகராதியிலே புதிய சொல்லையே புகுத்தலாம் — அந்தச் சொல்தான் “கா...” என்று பொதுக் கூட்டங்களிலே ஒரு பெரிய தலைவரைப்பற்றிப் பேசி, அதனைக் கேள்வியுற்ற அண்ணா<noinclude></noinclude>
5gc1zk76ziqsprslrrgc9mb7e1gjzjf
1928331
1928324
2026-04-29T14:23:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928331
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|84||கலைஞர்}}</noinclude>:“சனியன்”
:“வில்லன்”
:“அருவருக்கத் தக்க குற்றச்சாட்டுக்கு ஆளானவர்”
இந்த அடைமொழிகள் எல்லாம் நண்பர் சம்பத் அவர்கள் எனக்குச் சூட்டியுள்ளவைகளாகும்.
இவைகளைவிட இன்னும் இழிவு நிறைந்த வசைமாரிகளைக் கேட்டுப் பழகியவன்தான் நான்! என் குலம், கோத்திரம், குடும்பம், பெண்டு பிள்ளைகள், அனைத்துமே எதிர்க் கட்சி மேடைகளில் விமர்சிக்கப்பட்டவைதான்! “வாழ்க வசவாளர்கள்!” என்று அண்ணா வாழ்த்தியதைப் போலத்தான் நான் அவர்களை வாழ்த்தியிருக்கிறேன். இப்போதும் என் பழைய நண்பரை அதுபோலவே வாழ்த்துகிறேன்.
நான் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்தவன் — மிகமிக மிகப் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்தவன் — அதனால் அடக்கம் இயல்பாகவே இருந்து — அண்ணா அவர்களால் நிலைபெற்றுவிட்ட ஒன்றாகிவிட்டது என்னிடம்!
அன்றொரு நாள் தமிழ்நாட்டுப் பெரிய தலைவர் ஒருவரும் அவரது சகாக்களும் கள்ள நோட்டு தயாரிப்பதாக ஆயிரம்விளக்குக் கூட்டத்தில் பேசியவரும் இவர்தான்! நீதி மன்றத்தில் நான் அப்படிப் பேசவில்லை என்று வீரமாக ‘டன்கர்க்’ செய்தவரும் இவர்தான்; “நா காக்க!” என்று, இவர் எனக்குச் சொல்லுகிறார்! காலம் மிகவும் கெட்டுத்தான் விட்டது!
“அடிமுட்டாள்” என்பதற்கு இனிமேல் அகராதியிலே புதிய சொல்லையே புகுத்தலாம் — அந்தச் சொல்தான் “கா...” என்று பொதுக் கூட்டங்களிலே ஒரு பெரிய தலைவரைப்பற்றிப் பேசி, அதனைக் கேள்வியுற்ற அண்ணா<noinclude></noinclude>
m3bked76m6vhlf82566t3zplu2q5991
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/94
250
642112
1928327
2026-04-29T14:07:46Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 85 அவர்கள் மெத்தவும் வருந்தியதை அனைவரும் அறிவர்! “நாகாக்க” என்று, இவர் எனக்கு உபதேசம் செய்கிறார்! உலகம் மிகவும் கெட்டுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928327
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________
கடிதம்
85
அவர்கள் மெத்தவும் வருந்தியதை அனைவரும் அறிவர்! “நாகாக்க” என்று, இவர் எனக்கு உபதேசம் செய்கிறார்! உலகம் மிகவும் கெட்டுத்தான் போய்விட்டது!
"தம்பீ! தம்பீ!" என்று அன்பு தவழ அழைத்த அண்ணனை, ஒரே நொடியில் அவமதித்துவிட்டு,-"யார் இந்த அண்ணாத்துரை?'' என்று மேடை போட்டுக் கேட்டார் இந்த மேதை! இவர்தான் 'நாகாக்க' என்று எனக்கு அறிவுரை கூறுகிறார்! நான் யாரை நோவது?
கழகத்திலிருந்தபோது காங்கிரஸ் தலைவர்களை நாகாக் காமல் தாக்கியவர்!
தனக்கொரு புதிய கட்சி தொடங்கியபோது கழகத் தலைவர்களை நாகாக்காமல் தாக்கியவர்!
கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்து எதிர்க் கட்சித் தலைவர்கள் எல்லோரையும் நாகாக்காமல் தாக்கியவர்!
காமராசரின் காங்கிரசில் இருந்துகொண்டு புதிய காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களை நாகாக்காமல் தாக்கியவர்!
புதிய காங்கிரசில் சேர்ந்து பழைய காங்கிரஸ்
தலைவர்களை, நாகாக்காமல் தாக்கியவர்!
இப்போது இணைந்த காங்கிரசில் இருந்து கொண்டு, என்னை நாகாக்காமல் தாக்குகிறவர்!
இவர்தான் இதோபதேசம் செய்கிறார், "நாகாக்க"
என்று!
44
கூண்டில் விலங்கிடாக் குற்றவாளி" என்று குறை பட்டுக் கொள்கிறாரே; பாபம்!
66
'அதையும் பூட்டிப் பார்த்துக் களிப்படையுங்களேன்!
5-7-6<noinclude></noinclude>
fdwm9ay93ba18cvum6jpoc4i1qo06gn
1928329
1928327
2026-04-29T14:17:58Z
Ramya sugumar
15106
1928329
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||85}}</noinclude>அவர்கள் மெத்தவும் வருந்தியதை அனைவரும் அறிவர்! “நாகாக்க” என்று, இவர் எனக்கு உபதேசம் செய்கிறார்! உலகம் மிகவும் கெட்டுத்தான் போய்விட்டது!
“தம்பீ! தம்பீ!” என்று அன்பு தவழ அழைத்த அண்ணனை, ஒரே நொடியில் அவமதித்துவிட்டு,—“யார் இந்த அண்ணாத்துரை?” என்று மேடை போட்டுக் கேட்டார் இந்த மேதை! இவர்தான் ‘நாகாக்க’ என்று எனக்கு அறிவுரை கூறுகிறார்! நான் யாரை நோவது?
கழகத்திலிருந்தபோது காங்கிரஸ் தலைவர்களை நாகாக்காமல் தாக்கியவர்!
தனக்கொரு புதிய கட்சி தொடங்கியபோது கழகத் தலைவர்களை நாகாக்காமல் தாக்கியவர்!
கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்து எதிர்க் கட்சித் தலைவர்கள் எல்லோரையும் நாகாக்காமல் தாக்கியவர்!
காமராசரின் காங்கிரசில் இருந்துகொண்டு புதிய காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களை நாகாக்காமல் தாக்கியவர்!
புதிய காங்கிரசில் சேர்ந்து பழைய காங்கிரஸ் தலைவர்களை, நாகாக்காமல் தாக்கியவர்!
இப்போது இணைந்த காங்கிரசில் இருந்து கொண்டு, என்னை நாகாக்காமல் தாக்குகிறவர்!
இவர்தான் இதோபதேசம் செய்கிறார், “நாகாக்க” என்று!
“கூண்டில் விலங்கிடாக் குற்றவாளி” என்று குறைபட்டுக் கொள்கிறாரே; பாபம்!
“அதையும் பூட்டிப் பார்த்துக் களிப்படையுங்களேன்!<noinclude>
க—7–6</noinclude>
iz69dgnuv8j1tvwihsdstf0zxb3ew6i
1928332
1928329
2026-04-29T14:25:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928332
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||85}}</noinclude>அவர்கள் மெத்தவும் வருந்தியதை அனைவரும் அறிவர்! “நாகாக்க” என்று, இவர் எனக்கு உபதேசம் செய்கிறார்! உலகம் மிகவும் கெட்டுத்தான் போய்விட்டது!
“தம்பீ! தம்பீ!” என்று அன்பு தவழ அழைத்த அண்ணனை, ஒரே நொடியில் அவமதித்துவிட்டு,—“யார் இந்த அண்ணாத்துரை?” என்று மேடை போட்டுக் கேட்டார் இந்த மேதை! இவர்தான் ‘நாகாக்க’ என்று எனக்கு அறிவுரை கூறுகிறார்! நான் யாரை நோவது?
கழகத்திலிருந்தபோது காங்கிரஸ் தலைவர்களை நாகாக்காமல் தாக்கியவர்!
தனக்கொரு புதிய கட்சி தொடங்கியபோது கழகத் தலைவர்களை நாகாக்காமல் தாக்கியவர்!
கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்து எதிர்க் கட்சித் தலைவர்கள் எல்லோரையும் நாகாக்காமல் தாக்கியவர்!
காமராசரின் காங்கிரசில் இருந்துகொண்டு புதிய காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களை நாகாக்காமல் தாக்கியவர்!
புதிய காங்கிரசில் சேர்ந்து பழைய காங்கிரஸ் தலைவர்களை, நாகாக்காமல் தாக்கியவர்!
இப்போது இணைந்த காங்கிரசில் இருந்து கொண்டு, என்னை நாகாக்காமல் தாக்குகிறவர்!
இவர்தான் இதோபதேசம் செய்கிறார், “நாகாக்க” என்று!
“கூண்டில் விலங்கிடாக் குற்றவாளி” என்று குறைபட்டுக் கொள்கிறாரே; பாபம்!
“அதையும் பூட்டிப் பார்த்துக் களிப்படையுங்களேன்!{{nop}}<noinclude>
க—7—6</noinclude>
sr70alv4yu2qt8og4dw7vrgni7qg7x3
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/95
250
642113
1928336
2026-04-29T14:35:59Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கைக்கு விலங்கு மட்டுமல்ல; என் கழுத்துக்கு சுருக்குக்கயிறே வரினும் அதுகண்டு நண்பர் சம்பத் போன்றவர்கள் மகிழ்வதைவிட நான் அதிக மகிழ்ச்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928336
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|86||கலைஞர்}}</noinclude>கைக்கு விலங்கு மட்டுமல்ல; என் கழுத்துக்கு சுருக்குக்கயிறே வரினும் அதுகண்டு நண்பர் சம்பத் போன்றவர்கள் மகிழ்வதைவிட நான் அதிக மகிழ்ச்சிதான் அடைவேன்!
விலங்கிடுங்கள்! வீதியிலே இழுத்துச் செல்லுங்கள்! விரும்பியவாறெல்லாம் சித்ரவதை செய்யுங்கள்! எதையும் தாங்கும் இந்த இதயம் என்பதை மட்டும் மறவாதீர்கள்” என்றுதான், நான் அவர்களுக்குக் கூறிக்கொள்வேன்.
சனியனாம், வில்லனாம், அருவருக்கத்தக்க குற்றங்களுக்கு ஆளானவனாம் நான்!
வழக்கு ஜோடிக்கிறார் ஈரோட்டு இளவல்!
அருவருக்கத்தக்க குற்றங்களின் மொத்த உருவமாகக் காட்சியளிப்பவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும்! சம்பத்தைப் போன்றவர்கள் ஜோடிக்கும் வழக்கில் அவர்களே சிக்கிக் கொள்வார்கள்! எனவே, ஜோடனை நில்லாது, செல்லாது அது பொல்லாததுங்கூட. முடிவில் ஜோடிப்பவர் மீதே பாய்ந்துவிடும்! எனவே, “நாகாக்க” வேண்டியது எனது பிரியமுள்ள பழைய நண்பர் சம்பத்தும்; அவரைப் போன்ற வேறு சில பழைய நண்பர்களும்தான்.
அரசியலில் பழிவாங்கும் வரலாறுகள் பலவற்றைப் படித்தவன் நான்! என்னைப் போலவே என் நண்பரும் படித்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்!
யாரோ சொல்கிறார்களாம்; கழகத் தலைமையிலிருந்து நான் விலக வேண்டுமென்று; தன் கட்சி வேலையைக் கவனிக்காமல், அடுத்த கட்சிக்கு ஆலோசனை சொல்ல வருகிறார்!
இதைவிட நாகாக்கத் தெரியாத குணம், வேறு எதுவாக இருக்க முடியும்?
கழகத் தலைமையில் நான் இருப்பதும் விலகுவதும் நண்பர் சம்பத்தோ, அல்லது வேறு நாலுபேர்களோ கூடி முடிவு கட்டக்கூடிய விவகாரமல்ல!{{nop}}<noinclude></noinclude>
lsoc7ky3awmoopn9yqhl3oapcet79rs
1928719
1928336
2026-04-30T07:20:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|86||கலைஞர்}}</noinclude>கைக்கு விலங்கு மட்டுமல்ல; என் கழுத்துக்கு சுருக்குக்கயிறே வரினும் அதுகண்டு நண்பர் சம்பத் போன்றவர்கள் மகிழ்வதைவிட நான் அதிக மகிழ்ச்சிதான் அடைவேன்!
விலங்கிடுங்கள்! வீதியிலே இழுத்துச் செல்லுங்கள்! விரும்பியவாறெல்லாம் சித்ரவதை செய்யுங்கள்! எதையும் தாங்கும் இந்த இதயம் என்பதை மட்டும் மறவாதீர்கள்” என்றுதான், நான் அவர்களுக்குக் கூறிக்கொள்வேன்.
சனியனாம், வில்லனாம், அருவருக்கத்தக்க குற்றங்களுக்கு ஆளானவனாம் நான்!
வழக்கு ஜோடிக்கிறார் ஈரோட்டு இளவல்!
அருவருக்கத்தக்க குற்றங்களின் மொத்த உருவமாகக் காட்சியளிப்பவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும்! சம்பத்தைப் போன்றவர்கள் ஜோடிக்கும் வழக்கில் அவர்களே சிக்கிக் கொள்வார்கள்! எனவே, ஜோடனை நில்லாது, செல்லாது அது பொல்லாததுங்கூட. முடிவில் ஜோடிப்பவர் மீதே பாய்ந்துவிடும்! எனவே, “நாகாக்க” வேண்டியது எனது பிரியமுள்ள பழைய நண்பர் சம்பத்தும்; அவரைப் போன்ற வேறு சில பழைய நண்பர்களும்தான்.
அரசியலில் பழிவாங்கும் வரலாறுகள் பலவற்றைப் படித்தவன் நான்! என்னைப் போலவே என் நண்பரும் படித்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்!
யாரோ சொல்கிறார்களாம்; கழகத் தலைமையிலிருந்து நான் விலக வேண்டுமென்று; தன் கட்சி வேலையைக் கவனிக்காமல், அடுத்த கட்சிக்கு ஆலோசனை சொல்ல வருகிறார்!
இதைவிட நாகாக்கத் தெரியாத குணம், வேறு எதுவாக இருக்க முடியும்?
கழகத் தலைமையில் நான் இருப்பதும் விலகுவதும் நண்பர் சம்பத்தோ, அல்லது வேறு நாலுபேர்களோ கூடி முடிவு கட்டக்கூடிய விவகாரமல்ல!{{nop}}<noinclude></noinclude>
ohf0qt462t9oo2ejf6doxk39z6f1sim
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/96
250
642114
1928338
2026-04-29T14:38:10Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இது நமது கழக விவகாரம்! நமது கழகப் பொதுக்குழு தீர்மானிக்க வேண்டிய விவகாரம்! ஜனநாயக முடிவை ஏற்றுக் கொள்ள என்றைக்கும் தயாராயிருப்பவன் நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928338
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||87}}</noinclude>இது நமது கழக விவகாரம்! நமது கழகப் பொதுக்குழு தீர்மானிக்க வேண்டிய விவகாரம்!
ஜனநாயக முடிவை ஏற்றுக் கொள்ள என்றைக்கும் தயாராயிருப்பவன் நான்!
இதில் சம்பத்துக்கு என்ன அக்கறை?
பாவம். ஏதோ எழுத வேண்டுமென்று எழுதியிருக்கிறார் ஒரு அறிக்கையை!
அவர் வீட்டு நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று அவர் திரும்பத் திரும்பக் கூற வேண்டிய வார்த்தை “நாகாக்க” என்பது?
உடன் பிறப்பே! நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் பெயரைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியதற்காக மன்னித்துக்கொள்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
26 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
mwyp3d6e2d37y2g8runt00wbd3wr2sb
1928722
1928338
2026-04-30T07:21:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||87}}</noinclude>இது நமது கழக விவகாரம்! நமது கழகப் பொதுக்குழு தீர்மானிக்க வேண்டிய விவகாரம்!
ஜனநாயக முடிவை ஏற்றுக் கொள்ள என்றைக்கும் தயாராயிருப்பவன் நான்!
இதில் சம்பத்துக்கு என்ன அக்கறை?
பாவம். ஏதோ எழுத வேண்டுமென்று எழுதியிருக்கிறார் ஒரு அறிக்கையை!
அவர் வீட்டு நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று அவர் திரும்பத் திரும்பக் கூற வேண்டிய வார்த்தை “நாகாக்க” என்பது?
உடன் பிறப்பே! நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் பெயரைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியதற்காக மன்னித்துக்கொள்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
26 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
4tewo86tbxto02nhwsi0wyocv5798qc
1928731
1928722
2026-04-30T07:29:22Z
Booradleyp1
1964
1928731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||87}}</noinclude>இது நமது கழக விவகாரம்! நமது கழகப் பொதுக்குழு தீர்மானிக்க வேண்டிய விவகாரம்!
ஜனநாயக முடிவை ஏற்றுக் கொள்ள என்றைக்கும் தயாராயிருப்பவன் நான்!
இதில் சம்பத்துக்கு என்ன அக்கறை?
பாவம். ஏதோ எழுத வேண்டுமென்று எழுதியிருக்கிறார் ஒரு அறிக்கையை!
அவர் வீட்டு நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று அவர் திரும்பத் திரும்பக் கூற வேண்டிய வார்த்தை “நாகாக்க” என்பது?
உடன் பிறப்பே! நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் பெயரைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியதற்காக மன்னித்துக்கொள்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
26 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
qf72timkd0cxqoajhos1z6pz6btnr9d
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/97
250
642115
1928342
2026-04-29T14:44:04Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{larger|<b>வலுவில் பறித்த வெற்றி!</b>}} உடன்பிறப்பே! இந்தியாவுக்கும், மேற்கிந்திய தீவுகளுக்கும் நடைபெற்ற நாலாவது இறுதி கிரிக்கெட் போட்டிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928342
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>வலுவில் பறித்த வெற்றி!</b>}}
உடன்பிறப்பே!
இந்தியாவுக்கும், மேற்கிந்திய தீவுகளுக்கும் நடைபெற்ற நாலாவது இறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது! முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தன. மற்றொரு போட்டியில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு ஏற்பட்டது. எனவே இறுதி வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக, “கிங்ஸ்டன்” நகரத்தில் நாலாவது “டெஸ்ட்” போட்டி அமைந்தது. இதில் இந்தியாவின் வெற்றியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்!
வானொலியில் நான் வேறு எந்த நிகழ்ச்சியையும் கேட்கா விட்டாலும், இந்த “கிரிக்கெட்” போட்டியின் முடிவை அறிவதற்காகப் பெரிதும் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தேன்.
எனக்குக் ‘கிரிக்கெட்’ ஆடத் தெரியாது என்றாலும், சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘டெஸ்ட்’ போட்டிகளைக் கண்ட பிறகு அந்த விளையாட்டில் ஒருபுது அக்கறையே பிறந்தது! சென்ற தடவை சென்னையில் நடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுக்குழுவினரை<noinclude></noinclude>
nw241otpxvqe1u2p62scv8p6dq72ou4
1928723
1928342
2026-04-30T07:22:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>வலுவில் பறித்த வெற்றி!</b>}}
உடன்பிறப்பே!
இந்தியாவுக்கும், மேற்கிந்திய தீவுகளுக்கும் நடைபெற்ற நாலாவது இறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது! முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தன. மற்றொரு போட்டியில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு ஏற்பட்டது. எனவே இறுதி வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக, “கிங்ஸ்டன்” நகரத்தில் நாலாவது “டெஸ்ட்” போட்டி அமைந்தது. இதில் இந்தியாவின் வெற்றியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்!
வானொலியில் நான் வேறு எந்த நிகழ்ச்சியையும் கேட்கா விட்டாலும், இந்த “கிரிக்கெட்” போட்டியின் முடிவை அறிவதற்காகப் பெரிதும் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தேன்.
எனக்குக் ‘கிரிக்கெட்’ ஆடத் தெரியாது என்றாலும், சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘டெஸ்ட்’ போட்டிகளைக் கண்ட பிறகு அந்த விளையாட்டில் ஒரு புது அக்கறையே பிறந்தது! சென்ற தடவை சென்னையில் நடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுக்குழுவினரை<noinclude></noinclude>
lpkpg4pyf5b2yh52i7cqzegdfteyigh
1928732
1928723
2026-04-30T07:30:05Z
Booradleyp1
1964
1928732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>வலுவில் பறித்த வெற்றி!</b>}}
<b>உடன்பிறப்பே!</b>
இந்தியாவுக்கும், மேற்கிந்திய தீவுகளுக்கும் நடைபெற்ற நாலாவது இறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது! முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தன. மற்றொரு போட்டியில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு ஏற்பட்டது. எனவே இறுதி வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக, “கிங்ஸ்டன்” நகரத்தில் நாலாவது “டெஸ்ட்” போட்டி அமைந்தது. இதில் இந்தியாவின் வெற்றியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்!
வானொலியில் நான் வேறு எந்த நிகழ்ச்சியையும் கேட்கா விட்டாலும், இந்த “கிரிக்கெட்” போட்டியின் முடிவை அறிவதற்காகப் பெரிதும் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தேன்.
எனக்குக் ‘கிரிக்கெட்’ ஆடத் தெரியாது என்றாலும், சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘டெஸ்ட்’ போட்டிகளைக் கண்ட பிறகு அந்த விளையாட்டில் ஒரு புது அக்கறையே பிறந்தது! சென்ற தடவை சென்னையில் நடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுக்குழுவினரை<noinclude></noinclude>
n0mzxjn7bxy8yq9zqbf89x6lplerv89
1928846
1928732
2026-04-30T08:20:39Z
Booradleyp1
1964
1928846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>வலுவில் பறித்த வெற்றி!</b>}}
<b>உடன்பிறப்பே!</b>
இந்தியாவுக்கும், மேற்கிந்திய தீவுகளுக்கும் நடைபெற்ற நாலாவது இறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது! முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தன. மற்றொரு போட்டியில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு ஏற்பட்டது. எனவே இறுதி வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக, “கிங்ஸ்டன்” நகரத்தில் நாலாவது “டெஸ்ட்” போட்டி அமைந்தது. இதில் இந்தியாவின் வெற்றியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்!
வானொலியில் நான் வேறு எந்த நிகழ்ச்சியையும் கேட்கா விட்டாலும், இந்த “கிரிக்கெட்” போட்டியின் முடிவை அறிவதற்காகப் பெரிதும் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தேன்.
எனக்குக் ‘கிரிக்கெட்’ ஆடத் தெரியாது என்றாலும், சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘டெஸ்ட்’ போட்டிகளைக் கண்ட பிறகு அந்த விளையாட்டில் ஒரு புது அக்கறையே பிறந்தது! சென்ற தடவை சென்னையில் நடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுக்குழுவினரை<noinclude></noinclude>
st2thfxmwner892ucsdssf3sbsecsqe
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/98
250
642116
1928343
2026-04-29T14:46:16Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 89 எதிர்த்து இந்தியா வெற்றி பெற்றபோது இரு குழுவின ருக்கும் இராஜாஜி மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு பாராட்டும் வரவே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928343
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
கடிதம்
89
எதிர்த்து இந்தியா வெற்றி பெற்றபோது இரு குழுவின ருக்கும் இராஜாஜி மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு பாராட்டும் வரவேற்பும் அளித்து விருந்து வழங்கி மகிழ்ச்சியுற்றேன்.
ஆசை
விளையாட்டுக் கலையில் நமது நாடு உலகப் புகழ்பெற வேண்டுமென்பதில் நமக்கெல்லாம் இயல்பாகவே எழத்தான் செய்யும், அதற்காக. மற்றநாட்டு விளையாட்டு வீரர்களின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிட்டது கிடையாது.
உலகில் விளையாட்டுக் கலைகள் பல இருந்தபோதிலும், கிரிக்கெட்' விளையாட்டுப் போட்டிகள் தான் தலையாய இடத்தைப் பெற்று உலகத்தினர் பெரும்பான்மையோரின் கவனத்தைக் கவருவதாயிருக்கிறது. அத்தகைய சிறப் புடைய அந்த விளையாட்டுக் கலையில் இந்திய நாடுபெறுகிற வெற்றிகள், நம்மைப் பூரிப்படையச் செய்யும் என்பதில் வியப்பில்லையல்லவா?
சந்திரசேகர், பேடி, வெங்கட்ராகவன் போன்ற வர் களின் பந்து வீச்சும், விசுவநாத், கெயிக்வாட், கவாஸ்கர் போன்றவர்கள் பந்தை அடித்து ஓட்டங்களின் எண்ணிக் கையைப் பெருக்கும்பாங்கும் மெத்தவும் நம்மைக் கவர்ந்த கலையாகும்!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் நளினமாக இந்த விளை யாட்டை ஆடக்கூடியவர்கள்.
முரட்டுத்தனமான மட்டையடியும். ஆவேசமான பந்து வீச்சும் இந்திய வீரர்களின் பாணியல்ல! அந்த அழகிய பாணியைக் கொண்டே, அவர்கள் முரட்டு விளை யாட்டுக்காரர்களான மேற்கிந்தியக் குழுவினரைத் திணற அடித்திருக்கிறார்கள். அதனால் தான் ஒரு போட்டியின்
முடிவு சமநிலையாக ஆகியிருக்கிறது.
ஒன்று இந்தியாவுக்கும் கிடைத்துள்ளது.
மற்ற மூன்றில் இரண்டு மேற்கிந்திய தீவினருக்கும்
இறுதிப்<noinclude></noinclude>
otw15ypbgnrfeuajj170k2jcchmz675
1928346
1928343
2026-04-29T14:54:44Z
Ramya sugumar
15106
1928346
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||89}}</noinclude>எதிர்த்து இந்தியா வெற்றி பெற்றபோது இரு குழுவினருக்கும் இராஜாஜி மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு பாராட்டும் வரவேற்பும் அளித்து விருந்து வழங்கி மகிழ்ச்சியுற்றேன்.
விளையாட்டுக் கலையில் நமது நாடு உலகப் புகழ்பெற வேண்டுமென்பதில் நமக்கெல்லாம் இயல்பாகவே ஆசை எழத்தான் செய்யும், அதற்காக. மற்றநாட்டு விளையாட்டு வீரர்களின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிட்டது கிடையாது.
உலகில் விளையாட்டுக் கலைகள் பல இருந்தபோதிலும், ‘கிரிக்கெட்’ விளையாட்டுப் போட்டிகள் தான் தலையாய இடத்தைப் பெற்று உலகத்தினர் பெரும்பான்மையோரின் கவனத்தைக் கவருவதாயிருக்கிறது. அத்தகைய சிறப்புடைய அந்த விளையாட்டுக் கலையில் இந்திய நாடுபெறுகிற வெற்றிகள், நம்மைப் பூரிப்படையச் செய்யும் என்பதில் வியப்பில்லையல்லவா?
சந்திரசேகர், பேடி, வெங்கட்ராகவன் போன்றவர்களின் பந்து வீச்சும், விசுவநாத், கெயிக்வாட், கவாஸ்கர் போன்றவர்கள் பந்தை அடித்து ஓட்டங்களின் எண்ணிக்கையைப் பெருக்கும்பாங்கும் மெத்தவும் நம்மைக் கவர்ந்த கலையாகும்!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் நளினமாக இந்த விளையாட்டை ஆடக்கூடியவர்கள்.
முரட்டுத்தனமான மட்டையடியும். ஆவேசமான பந்து வீச்சும் இந்திய வீரர்களின் பாணியல்ல! அந்த அழகிய பாணியைக் கொண்டே, அவர்கள் முரட்டு விளையாட்டுக்காரர்களான மேற்கிந்தியக் குழுவினரைத் திணற அடித்திருக்கிறார்கள். அதனால் தான் ஒரு போட்டியின் முடிவு சமநிலையாக ஆகியிருக்கிறது.
மற்ற மூன்றில் இரண்டு மேற்கிந்திய தீவினருக்கும் ஒன்று இந்தியாவுக்கும் கிடைத்துள்ளது. இறுதிப்<noinclude></noinclude>
8xpn1ya476i5aptnki77wb1izk5hp8a
1928726
1928346
2026-04-30T07:24:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||89}}</noinclude>எதிர்த்து இந்தியா வெற்றி பெற்றபோது இரு குழுவினருக்கும் இராஜாஜி மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு பாராட்டும் வரவேற்பும் அளித்து விருந்து வழங்கி மகிழ்ச்சியுற்றேன்.
விளையாட்டுக் கலையில் நமது நாடு உலகப் புகழ்பெற வேண்டுமென்பதில் நமக்கெல்லாம் இயல்பாகவே ஆசை எழத்தான் செய்யும், அதற்காக. மற்றநாட்டு விளையாட்டு வீரர்களின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிட்டது கிடையாது.
உலகில் விளையாட்டுக் கலைகள் பல இருந்தபோதிலும், ‘கிரிக்கெட்’ விளையாட்டுப் போட்டிகள்தான் தலையாய இடத்தைப் பெற்று உலகத்தினர் பெரும்பான்மையோரின் கவனத்தைக் கவருவதாயிருக்கிறது. அத்தகைய சிறப்புடைய அந்த விளையாட்டுக் கலையில் இந்திய நாடு பெறுகிற வெற்றிகள், நம்மைப் பூரிப்படையச் செய்யும் என்பதில் வியப்பில்லையல்லவா?
சந்திரசேகர், பேடி, வெங்கட்ராகவன் போன்றவர்களின் பந்து வீச்சும், விசுவநாத், கெயிக்வாட், கவாஸ்கர் போன்றவர்கள் பந்தை அடித்து ஓட்டங்களின் எண்ணிக்கையைப் பெருக்கும்பாங்கும் மெத்தவும் நம்மைக் கவர்ந்த கலையாகும்!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் நளினமாக இந்த விளையாட்டை ஆடக்கூடியவர்கள்.
முரட்டுத்தனமான மட்டையடியும், ஆவேசமான பந்து வீச்சும் இந்திய வீரர்களின் பாணியல்ல! அந்த அழகிய பாணியைக் கொண்டே, அவர்கள் முரட்டு விளையாட்டுக்காரர்களான மேற்கிந்தியக் குழுவினரைத் திணற அடித்திருக்கிறார்கள். அதனால் தான் ஒரு போட்டியின் முடிவு சமநிலையாக ஆகியிருக்கிறது.
மற்ற மூன்றில் இரண்டு மேற்கிந்திய தீவினருக்கும் ஒன்று இந்தியாவுக்கும் கிடைத்துள்ளது. இறுதிப்<noinclude></noinclude>
aq61iygtemed18ukf8gzmvatdxdqvy5
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/99
250
642117
1928347
2026-04-29T14:55:46Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 90 60. கலைஞர் போட்டியின் தொடக்கம் இந்திய வீரர்களைப் பொறுத்து மிகுந்த எழுச்சி நிறைந்ததாக இருந்தது. ஆம்! முதல் "இன்னிங்ஸ்'' ஆட்டத்தில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928347
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
90
60.
கலைஞர்
போட்டியின் தொடக்கம் இந்திய வீரர்களைப் பொறுத்து மிகுந்த எழுச்சி நிறைந்ததாக இருந்தது.
ஆம்! முதல் "இன்னிங்ஸ்'' ஆட்டத்தில் 306 ரன்கள் (ஓட்டங்கள்) எடுத்தோம், ஆறு விக்கெட்டுக்கள் இழப் புக்கு ! நமது நளினமான பாணிக்குக் கிடைத்த வெற்றி யாகும் அது! அடுத்து, மட்டைபிடித்த மேற்கிந்திய தீவுகளின் குழுவினர் 391ரன்கள் (ஓட்டங்கள்) எடுத்தனர்!' இது ஒன்றும் பெரிய வித்தியாசமல்ல!
இந்தியா இரண்டாவது 'இன்னிங்ஸ்' ஆட்டத்தில் 85. ''ரன்கள்" எடுத்து அந்த வித்தியாசத்தை ஈடுகட்டிவிட்டு முதல் இன்னிங்ஸைப் போலவே "ரன்"களை குவித்திருந். தால், மேற்கிந்தியத் தீவுக் குழுவுக்கு வெற்றி கிட்டாமலே போயிருக்கக் கூடும். இப்போது அந்தக் குழு, பெற் றிருக்கிற வெற்றியும் முறையான வெற்றியென எடுத்துக் கொள்ள இயலாது!
இந்தியக் குழுவின் தலைவர் பேடி அவர்கள் விடுத்துள்ள விளக்கத்தில் "இந்திய வீரர்கள் ஐந்துபேர் “பாட்” செய்ய முடியாத நிலையில் இருந்தனர்! எனவே இரண் டாவது இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக இந்தியா அறிவிக்கவில்லை. முதல் இன்னிங்ஸ் ஆடும்போதே கெயிக் வாட், விசுவநாத், படேல் ஆகியோர் காயமடைந்தனர். மேற்கிந்திய குழுவினரின் பந்து வீச்சால் இந்தக் காயங்கள் ஏற்பட்டன. விசுவநாத்தின் வலது கையில் ஒரு விரல், முறிவு ஏற்பட்டுள்ளது. கெயிக்வாட்டுக்கு காதின் அருகே அடிப்பட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. படேல், வாயில் காயம்பட்டு மூன்று தையல்கள்போடப்பட்டுள்ளன. எனது இடது கையிலும், சந்திரசேகரின் விரல்களிலும் காயம்! எங்களில் பலர்இப்படிக் காயம் அடைந்ததால் போட்டியில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டது'' என்று குறிப்பிட்டிருக் கிறார்.<noinclude></noinclude>
o1if7u3ifyp9pmpqydm0dwl88d0w8oi
1928349
1928347
2026-04-29T15:03:08Z
Ramya sugumar
15106
1928349
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|90||கலைஞர்}}</noinclude>போட்டியின் தொடக்கம் இந்திய வீரர்களைப் பொறுத்து மிகுந்த எழுச்சி நிறைந்ததாக இருந்தது.
ஆம்! முதல் “இன்னிங்ஸ்” ஆட்டத்தில் 306 ரன்கள் (ஓட்டங்கள்) எடுத்தோம், ஆறு விக்கெட்டுக்கள் இழப்புக்கு! நமது நளினமான பாணிக்குக் கிடைத்த வெற்றியாகும் அது! அடுத்து, மட்டைபிடித்த மேற்கிந்திய தீவுகளின் குழுவினர் 391 ரன்கள் (ஓட்டங்கள்) எடுத்தனர்! இது ஒன்றும் பெரிய வித்தியாசமல்ல!
இந்தியா இரண்டாவது “இன்னிங்ஸ்” ஆட்டத்தில் 85 “ரன்கள்”
எடுத்து அந்த வித்தியாசத்தை ஈடுகட்டிவிட்டு முதல் இன்னிங்ஸைப் போலவே “ரன்”களை குவித்திருந்தால், மேற்கிந்தியத் தீவுக் குழுவுக்கு வெற்றி கிட்டாமலே போயிருக்கக் கூடும். இப்போது அந்தக் குழு, பெற்றிருக்கிற வெற்றியும் முறையான வெற்றியென எடுத்துக் கொள்ள இயலாது!
இந்தியக் குழுவின் தலைவர் பேடி அவர்கள் விடுத்துள்ள விளக்கத்தில் “இந்திய வீரர்கள் ஐந்துபேர் “பாட்” செய்ய முடியாத நிலையில் இருந்தனர்! எனவே இரண்டாவது இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக இந்தியா அறிவிக்கவில்லை. முதல் இன்னிங்ஸ் ஆடும்போதே கெயிக்வாட், விசுவநாத், படேல் ஆகியோர் காயமடைந்தனர். மேற்கிந்திய குழுவினரின் பந்து வீச்சால் இந்தக் காயங்கள் ஏற்பட்டன. விசுவநாத்தின் வலது கையில் ஒரு விரல், முறிவு ஏற்பட்டுள்ளது. கெயிக்வாட்டுக்கு காதின் அருகே அடிப்பட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. படேல், வாயில் காயம்பட்டு மூன்று தையல்கள்போடப்பட்டுள்ளன. “எனது இடது கையிலும், சந்திரசேகரின் விரல்களிலும் காயம்! எங்களில் பலர்இப்படிக் காயம் அடைந்ததால் போட்டியில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
{{nop}}<noinclude></noinclude>
a0ffh3e0mz5jmisrc5vblsl9wdfpr82
1928727
1928349
2026-04-30T07:25:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|90||கலைஞர்}}</noinclude>போட்டியின் தொடக்கம் இந்திய வீரர்களைப் பொறுத்து மிகுந்த எழுச்சி நிறைந்ததாக இருந்தது.
ஆம்! முதல் “இன்னிங்ஸ்” ஆட்டத்தில் 306 ரன்கள் (ஓட்டங்கள்) எடுத்தோம், ஆறு விக்கெட்டுக்கள் இழப்புக்கு! நமது நளினமான பாணிக்குக் கிடைத்த வெற்றியாகும் அது! அடுத்து, மட்டைபிடித்த மேற்கிந்திய தீவுகளின் குழுவினர் 391 ரன்கள் (ஓட்டங்கள்) எடுத்தனர்! இது ஒன்றும் பெரிய வித்தியாசமல்ல!
இந்தியா இரண்டாவது “இன்னிங்ஸ்” ஆட்டத்தில் 85 “ரன்கள்”
எடுத்து அந்த வித்தியாசத்தை ஈடுகட்டிவிட்டு முதல் இன்னிங்ஸைப் போலவே “ரன்”களை குவித்திருந்தால், மேற்கிந்தியத் தீவுக் குழுவுக்கு வெற்றி கிட்டாமலே போயிருக்கக் கூடும். இப்போது அந்தக் குழு, பெற்றிருக்கிற வெற்றியும் முறையான வெற்றியென எடுத்துக் கொள்ள இயலாது!
இந்தியக் குழுவின் தலைவர் பேடி அவர்கள் விடுத்துள்ள விளக்கத்தில் “இந்திய வீரர்கள் ஐந்துபேர் “பாட்” செய்ய முடியாத நிலையில் இருந்தனர்! எனவே இரண்டாவது இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக இந்தியா அறிவிக்கவில்லை. முதல் இன்னிங்ஸ் ஆடும்போதே கெயிக்வாட், விசுவநாத், படேல் ஆகியோர் காயமடைந்தனர். மேற்கிந்திய குழுவினரின் பந்து வீச்சால் இந்தக் காயங்கள் ஏற்பட்டன. விசுவநாத்தின் வலது கையில் ஒரு விரல், முறிவு ஏற்பட்டுள்ளது. கெயிக்வாட்டுக்கு காதின் அருகே அடிப்பட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. படேல், வாயில் காயம்பட்டு மூன்று தையல்கள்போடப்பட்டுள்ளன. “எனது இடது கையிலும், சந்திரசேகரின் விரல்களிலும் காயம்! எங்களில் பலர் இப்படிக் காயம் அடைந்ததால் போட்டியில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
{{nop}}<noinclude></noinclude>
mclct0o8tfb2i2gvbsq8zj9ovvnthqb
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/100
250
642118
1928350
2026-04-29T15:04:12Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 91 நாம் முறையோடு ஆடியிருக்கிறோம்! அவர்களோ முரட்டுத்தனமாக மோதியிருக்கிறார்கள்! நம்மவர்களைக் காயப்படுத்தி ஆட முடியாமல் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928350
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________
கடிதம்
91
நாம் முறையோடு ஆடியிருக்கிறோம்! அவர்களோ முரட்டுத்தனமாக மோதியிருக்கிறார்கள்! நம்மவர்களைக் காயப்படுத்தி ஆட முடியாமல் செய்துவிட்டு காதைப் பார்த்தும், வாயைப் பார்த்தும் பந்து வீச்சு நடத்திவிட்டு, வெற்றிக் கொண்டாட்டம் நடத்துவதில் அர்த்தமென்ன இருக்கிறது!
கிரிக்கெட் விளையாட்டில் காயம் ஏற்படுவதுண்டு! இல்லையென்று சொல்லவில்லை! அதற்காக, உடல் வலிவு இருக்கிறது. அத்துடன் முரட்டு சுபாவமும் இருக்கிறது. என்பதைப் பயன்படுத்தி, வேண்டுமென்றே காயப்படுத்து வதில் நியாயம் எப்படியிருக்க முடியும்? ஆட்டத்தைக் காணும் மக்கள் தான் அதனை எப்படி ரசிக்க முடியும்? "கிரிக்கெட்" விதிமுறைகளின்படி அது ஒன்றும் தவறில்லை என்றுகூட வாதாடலாம்! ஆனால் வெளிப்படையாக அனை வருக்கும் புரிகிற உண்மையை மறைத்துவிட முடியா தல்லவா!
இரண்டு பெண்கள் பரதநாட்டியப் போட்டிக்கு அரங்கில் ஏறினார்களாம்! ஒருத்தி ஒருத்தி கொடியிடையாள்! கயல் விழியாள்! அவள் ஆட்டமும், அபிநயமும், பாவமும், லயமும், அனைத்தும் பரதநாட்டியத்திற்குரிய இலக்கணத் தோடு இருந்தன!
அவள் ஆடிமுடிந்தபிறகு இன்னொருத்தி அதே அரங்கில் ஏறிக்குதித்தாள்! கண்ணன், பாலோடு சேர்த்து உயிரையும் உறிஞ்சிய பிறகு கீழே விழுந்த பூதகி போல இருந்தாள் அவள்! நாலு குதி குதித்து அந்த மேடையை எட்டு துண் டாக உடைத்துப் போட்டாள்!...''ஆகா! இவள்தான் மேடையை உடைத்த பரதநாட்டிய மேதை" என்று அங்கிருந்தோர் அவளுக்குப் பரிசு வழங்கினர்!
அந்த நிகழ்ச்சியைப் போலத்தான் இருந்திருக்கிறது, மேற்கிந்தியத் தீவுகளின் குழுவினர் ஆடிய ஆட்டம்/<noinclude></noinclude>
m66m4vely9q3ciz3egij99xqbsq12to
1928352
1928350
2026-04-29T15:09:16Z
Ramya sugumar
15106
1928352
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||100}}</noinclude>நாம் முறையோடு ஆடியிருக்கிறோம்! அவர்களோ முரட்டுத்தனமாக மோதியிருக்கிறார்கள்! நம்மவர்களைக் காயப்படுத்தி ஆட முடியாமல் செய்துவிட்டு காதைப் பார்த்தும், வாயைப் பார்த்தும் பந்து வீச்சு நடத்திவிட்டு, வெற்றிக் கொண்டாட்டம் நடத்துவதில் அர்த்தமென்ன இருக்கிறது!
கிரிக்கெட் விளையாட்டில் காயம் ஏற்படுவதுண்டு! இல்லையென்று சொல்லவில்லை! அதற்காக, உடல் வலிவு இருக்கிறது. அத்துடன் முரட்டு சுபாவமும் இருக்கிறது. என்பதைப் பயன்படுத்தி, வேண்டுமென்றே காயப்படுத்து வதில் நியாயம் எப்படியிருக்க முடியும்? ஆட்டத்தைக்காணும் மக்கள் தான் அதனை எப்படி ரசிக்க முடியும்? “கிரிக்கெட்” விதிமுறைகளின்படி அது ஒன்றும் தவறில்லை என்றுகூட வாதாடலாம்! ஆனால் வெளிப்படையாக அனைவருக்கும் புரிகிற உண்மையை மறைத்துவிட முடியா தல்லவா!
இரண்டு பெண்கள் பரதநாட்டியப் போட்டிக்கு அரங்கில் ஏறினார்களாம்! ஒருத்தி ஒருத்தி கொடியிடையாள்! கயல் விழியாள்! அவள் ஆட்டமும், அபிநயமும், பாவமும், லயமும், அனைத்தும் பரதநாட்டியத்திற்குரிய இலக்கணத்தோடு இருந்தன!
அவள் ஆடிமுடிந்தபிறகு இன்னொருத்தி அதே அரங்கில் ஏறிக்குதித்தாள்! கண்ணன், பாலோடு சேர்த்து உயிரையும் உறிஞ்சிய பிறகு கீழே விழுந்த பூதகி போல இருந்தாள் அவள்! நாலு குதி குதித்து அந்த மேடையை எட்டு துண்டாக உடைத்துப் போட்டாள்!...“ஆகா! இவள்தான் மேடையை உடைத்த பரதநாட்டிய மேதை” என்று அங்கிருந்தோர் அவளுக்குப் பரிசு வழங்கினர்!
அந்த நிகழ்ச்சியைப் போலத்தான் இருந்திருக்கிறது, மேற்கிந்தியத் தீவுகளின் குழுவினர் ஆடிய ஆட்டம்!<noinclude></noinclude>
0chvo3yepeizrnx5d6f7yonulr68u2d
1928728
1928352
2026-04-30T07:27:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||100}}</noinclude>நாம் முறையோடு ஆடியிருக்கிறோம்! அவர்களோ முரட்டுத்தனமாக மோதியிருக்கிறார்கள்! நம்மவர்களைக் காயப்படுத்தி ஆட முடியாமல் செய்துவிட்டு காதைப் பார்த்தும், வாயைப் பார்த்தும் பந்து வீச்சு நடத்திவிட்டு, வெற்றிக் கொண்டாட்டம் நடத்துவதில் அர்த்தமென்ன இருக்கிறது!
கிரிக்கெட் விளையாட்டில் காயம் ஏற்படுவதுண்டு! இல்லையென்று சொல்லவில்லை! அதற்காக, உடல் வலிவு இருக்கிறது, அத்துடன் முரட்டு சுபாவமும் இருக்கிறது என்பதைப் பயன்படுத்தி, வேண்டுமென்றே காயப்படுத்துவதில் நியாயம் எப்படியிருக்க முடியும்? ஆட்டத்தைக்காணும் மக்கள் தான் அதனை எப்படி ரசிக்க முடியும்? “கிரிக்கெட்” விதிமுறைகளின்படி அது ஒன்றும் தவறில்லை என்றுகூட வாதாடலாம்! ஆனால் வெளிப்படையாக அனைவருக்கும் புரிகிற உண்மையை மறைத்துவிட முடியாதல்லவா!
இரண்டு பெண்கள் பரதநாட்டியப் போட்டிக்கு அரங்கில் ஏறினார்களாம்! ஒருத்தி கொடியிடையாள்! கயல் விழியாள்! அவள் ஆட்டமும், அபிநயமும், பாவமும், லயமும், அனைத்தும் பரதநாட்டியத்திற்குரிய இலக்கணத்தோடு இருந்தன!
அவள் ஆடிமுடிந்தபிறகு இன்னொருத்தி அதே அரங்கில் ஏறிக் குதித்தாள்! கண்ணன், பாலோடு சேர்த்து உயிரையும் உறிஞ்சிய பிறகு கீழே விழுந்த பூதகி போல இருந்தாள் அவள்! நாலு குதிகுதித்து அந்த மேடையை எட்டு துண்டாக உடைத்துப் போட்டாள்!...“ஆகா! இவள்தான் மேடையை உடைத்த பரதநாட்டிய மேதை” என்று அங்கிருந்தோர் அவளுக்குப் பரிசு வழங்கினர்!
அந்த நிகழ்ச்சியைப் போலத்தான் இருந்திருக்கிறது, மேற்கிந்தியத் தீவுகளின் குழுவினர் ஆடிய ஆட்டம்!{{nop}}<noinclude></noinclude>
mtei4th43i1c94aamg6bpdc0av6lcrf
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/101
250
642119
1928353
2026-04-29T15:13:51Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்திய அணியினர் சோடைகள் அல்லர் என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் நாலாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 306 ரன்கள் எடுத்த சாதனை! அந்த ஆற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928353
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|92||கலைஞர்}}</noinclude>இந்திய அணியினர் சோடைகள் அல்லர் என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் நாலாவது போட்டியில் முதல்
இன்னிங்ஸில் 306 ரன்கள் எடுத்த சாதனை!
அந்த ஆற்றலின் வேகம் எங்குபோய் வேகம் எங்குபோய் நிற்குமோ, என்று ஏங்கிப் புகைந்த ஆத்திரத்தின் விளைவாகத்தான் நம்மவர் மீது மூர்க்கத்தனமான பாய்ச்சலை நடத்தியிருக்கின்றனர் மேற்கிந்தியத் தீவினர்!
விக்கெட்டை வீழ்த்துவதற்குப் பதில் விளையாடியவர்களை அடித்தனர்! பந்து வீச்சைக் குண்டுவீச்சு போல நடத்தினர்! எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற நினைவில். திறமையான ஆட்டக்காரர்களைக் குறிவைத்துக் தாக்கினர்!
இத்தனைக்கும் பிறகு தங்களை “வெற்றிக்குச் சொந்தக் காரர்கள்” என்று அவர்கள் கூறிக்கொள்வதில் இம்மியளவுப் பொருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை
நம்மவர்களும். இதுபோன்ற நிலைமைகளுக்கு இனியாகிலும் ஆளாகாதவாறு முன்கூட்டி எச்சரிக்கையாக இருந்திட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
விளையாட்டுக் கலையில், இந்தியா உன்னதமான இடத்தைப் பெற மத்திய அரசு நல்ல ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கி வருகிறது. அந்த எண்ணம் மேலும் வளர்ந்தோங்கிட நமது விளையாட்டு வீரர்கள் செயல்பட்டாக வேண்டும்!
இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்கால வெற்றிகளுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் வழிகாண வேண்டும்.{{nop}}<noinclude></noinclude>
hf5a6x2yyk5p361ktx1k0vdbueykvlo
1928729
1928353
2026-04-30T07:28:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|92||கலைஞர்}}</noinclude>இந்திய அணியினர் சோடைகள் அல்லர் என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் நாலாவது போட்டியில் முதல்
இன்னிங்ஸில் 306 ரன்கள் எடுத்த சாதனை!
அந்த ஆற்றலின் வேகம் எங்குபோய் வேகம் எங்குபோய் நிற்குமோ, என்று ஏங்கிப் புகைந்த ஆத்திரத்தின் விளைவாகத்தான் நம்மவர் மீது மூர்க்கத்தனமான பாய்ச்சலை நடத்தியிருக்கின்றனர் மேற்கிந்தியத் தீவினர்!
விக்கெட்டை வீழ்த்துவதற்குப் பதில் விளையாடியவர்களை அடித்தனர்! பந்து வீச்சைக் குண்டுவீச்சு போல நடத்தினர்! எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற நினைவில். திறமையான ஆட்டக்காரர்களைக் குறிவைத்துக் தாக்கினர்!
இத்தனைக்கும் பிறகு தங்களை “வெற்றிக்குச் சொந்தக்காரர்கள்” என்று அவர்கள் கூறிக்கொள்வதில் இம்மியளவுப் பொருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை
நம்மவர்களும். இதுபோன்ற நிலைமைகளுக்கு இனியாகிலும் ஆளாகாதவாறு முன்கூட்டி எச்சரிக்கையாக இருந்திட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
விளையாட்டுக் கலையில், இந்தியா உன்னதமான இடத்தைப் பெற மத்திய அரசு நல்ல ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கி வருகிறது. அந்த எண்ணம் மேலும் வளர்ந்தோங்கிட நமது விளையாட்டு வீரர்கள் செயல்பட்டாக வேண்டும்!
இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்கால வெற்றிகளுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் வழிகாண வேண்டும்.{{nop}}<noinclude></noinclude>
rul3nxnd68y1ni47pawccbhlqztt3jb
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/102
250
642120
1928354
2026-04-29T15:15:37Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நம்மைப் பொறுத்தவரையில் இந்த இறுதிப் போட்டியை ஒரு தோல்வியாகக் கருதத் தேவையில்லை! முறை தவறிய முரட்டுத்தனத்தால் அவர்கள் வலுவில் பறித்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928354
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||93}}</noinclude>நம்மைப் பொறுத்தவரையில் இந்த இறுதிப் போட்டியை ஒரு தோல்வியாகக் கருதத் தேவையில்லை!
முறை தவறிய முரட்டுத்தனத்தால் அவர்கள் வலுவில்
பறித்துக்கொண்ட வெற்றி! அவ்வளவுதான்?
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
27 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
0svye3wa0ielc29phq3d5ldw8qrwv8d
1928730
1928354
2026-04-30T07:28:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||93}}</noinclude>நம்மைப் பொறுத்தவரையில் இந்த இறுதிப் போட்டியை ஒரு தோல்வியாகக் கருதத் தேவையில்லை!
முறை தவறிய முரட்டுத்தனத்தால் அவர்கள் வலுவில்
பறித்துக்கொண்ட வெற்றி! அவ்வளவுதான்?
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
27 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
a04i66kk3frw17gtd8gmnmfslft2q36
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/132
250
642121
1928356
2026-04-29T15:19:00Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928356
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|110 நூல் புழு}}</noinclude><b>கொக்கிப் புழு</b>. கொக்கிப் புழுவின் விலங்கினப் பெயர் ஆங்கிலோஸ்டோமா டியோடினேல் (<i>Anchylostoma dyodenale</i>) என்பதாகும் . இப்புழுவை வட சீனா, இந்தியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணலாம். கொக்கிப் புழு மனிதச் சிறு குடலின் நடுப் பகுதியில் வாழ்கிறது. இங்கு, புழுக்களுக்குள் இனச் சேர்க்கை நிகழ்கிறது. இதன் பின், பெண் புழு முட்டையிடுகிறது. முட்டைகள் மலத்துடன் வெளி வருகின்றன. பின்பு, முட்டையிலிருந்து இளவுயிரி வெளி வருகிறது. இவ்விளம் புழு மண்ணிலுள்ள பொருள்களை உண்டு வளர்ந்து, இரண்டாம் வளர் புழு நிலையை அடையும். இந்நிலைக்கு, இழை வளர் புழு என்று பெயர். இப்புழு தொடர்ந்து வளரும் போது, இதன் தோல் உரியும். இவ்வாறு தோல் உரிந்த நிலையில், இழை வளர் புழு உண்ணுவதில்லை. இதற்கு உண்ணாத இழை வளர் புழு என்று பெயர். மண்ணில் இப்புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கும். இத்தகைய மண்ணில் ஒரு மனிதன் நடந்தால், தோலைத் துளைத்துக் கொண்டு, அவன் குருதிக் குழாயினுள் இழை வளர் புழு புகுந்து விடுகிறது. குருதிக் குழாயின் மூலம் நேராக இப்புழு நுரையீரலுக்குச் செல்லும். பின்பு, அங்கிருந்து முறையே சுவாசக் குழாய், தொண்டை, அன்னக் குழல், வயிறு ஆகிய உறுப்புகள் வழியாகச் சென்று, இறுதியில் சிறு குடலின் நடுப் பகுதிக்கு வந்து சேரும். பின்னர், அங்கு அது வளர்ந்து, பெரிய புழுவாகி விடும்.
பாதத்தில் கொக்கிப் புழுவால் துளைக்கப்பட்ட காயத்தினுள் பாக்டீரியா புகுந்து, பாத அரிப்பு (ground itch) என்னும் கால் நோயை ஏற்படுத்தும். குடலில் இருக்கும் போது, அதன் சுவரைக் கொக்கிப் புழு சேதப் படுத்தி, நஞ்சையும் சுரக்கிறது. இந்நஞ்சு குருதி உறைதலை நிறுத்தும் தன்மை கொண்டது. இதனால், குடல் புண் வழியாகப் பெரும் அளவில் குருதி வெளிப் படும். இவ்வாறு வெளிப்படுவதால், குருதிச் சோகை ஏற்படும். கொக்கிப் புழு பரவாமல் இருக்க, கால்களில் எப்போதும் செருப்பு அணிதல் வேண்டும்.
<b>யானைக் கால் நோய்ப் புழு</b>. யானைக் கால் நோய்ப் புழுவிற்கு ஃபிலேரியா பாங்கராஃப்ட்டி (<i>Filaria bancrofti</i>) என்னும் விலங்கியல் பெயருண்டு. இப்புழு சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் மிகப் பரவலாகக் காணப் படும். இந்தியாவில் ஒரிசா, மேற்கு வங்காளம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணப் படும். தமிழகத்தில் குறிப்பாகத் தஞ்சாவூரில் இப்புழுவின் தாக்குதல் மிகுதி. மனிதனுக்கு உண்டாகும் யானைக் கால் நோயைக் கியூலெக்ஸ் (culex) என்னும் கொசு பரப்புகிறது. இப்புழு தோலுக்கு அடியில் காணப் படும் நிண நீர்க் குழாய்களில் காணப் படுகிறது. இனச் சேர்க்கைக்குப் பின் உண்டாகும் குட்டிப் புழுக்களை, நுண்ணிழைப் புழுக்கள் என்பர். மிகச் சிறிய இவை, நிணநீர்க் குழாயை விட்டுத் தோலின் அடிப் பகுதியிலுள்ள குருதிக் குழாயை அடைகின்றன. இரவு நேரம் நெருங்கும் போது, இப்புழு தோலின் மேற்.பகுதியிலுள்ள குருதிக் குழாய்க்கு இடம் பெயர்கிறது. இது இரவு உணர்தன்மை எனப் படும். இச்சமயத்தில், கியூலெக்ஸ் கொசு ஒட்டுண்ணியால் பாதிக்கப் பட்டவரின் குருதியை உறிஞ்சினால், குருதியுடன் நுண்ணிழைப் புழுவையும் சேர்த்து உட்கொள்கிறது.
கொசுவின் குடலுக்குள் நுண்ணிழைப் புழு தன் தொய்வான உறையை விட்டு வெளி வருகிறது. பின்பு, குடற்சுவரைத் துளைத்துக் கொண்டு, கொசுவின் மார்புத் தசைகளில் தங்குகிறது. அங்கே, இன உறுப்பைத் தவிர, ஏனைய உறுப்புகள் யாவும் வளர்ச்சியுறுகின்றன. இதற்குப் பின், ஒரு வாரத்தில் இதன் வெளித் தோல் உரிந்து வளரும். இறுதியில், வளர்ச்சியுற்ற நுண்ணிழைப் புழு கொசுவின் வாய்ப் பகுதியில் வந்து தங்குகிறது. இச்சமயத்தில், கொசு வேறொருவரின் குருதியை உறிஞ்சினால், அவர் குருதியினுள் அதன் உமிழ் நீருடன் நுண்ணிழைப் புழுவும் செல்கிறது. பின்பு, நேராக நிண நீர்க் குழாயை அடைந்து பெரிய புழுவாக மாறிப் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது.
<b>கினியாப் புழு</b>. <!---- கினிப் புழு என்பதே சரியான உச்சரிப்பு. See : https://en.wikipedia.org/wiki/Dracunculus_medinensis ---> கினியாப் புழுவிற்கு டிராகன்குலஸ் மெடினென்சிஸ் (<i>Dracanculus medinensis</i>), ஃபிலாரியா மெனென்சிஸ் (<i>Filaria medinensis</i>) என்னும் விலங்கினப் பெயர்கள் உண்டு. இப்புழுவை இந்தியா, ஆப்பிரிக்கா, பிஜித் தீவு, அரேபியா, மேற்கிந்தியத் தீவு,தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாகக் காணலாம். பெண் புழு ஏறக் குறைய 50 செ.மீ. நீளமிருக்கும். ஆண் புழு ஏறக்குறைய 2 செ.மீ. நீளமிருக்கும். கினியாப் புழுவின் உடல் பால் வெள்ளை நிறமாக இருக்கும். இப்புழு கால், கணுக் கால், பாதம் ஆகிய உறுப்புகளில், தோலுக்குக் கீழுள்ள இணைத் திசுக்களில் (connective tissues) வாழ்கிறது. இங்கே, ஆண், பெண் புழுக்களுக்கிடையே இனச் சேர்க்கை நிகழ்கிறது. இனச் சேர்க்கைக்குப் பின், ஆண் புழு இறந்து விடுகிறது. கருவுற்ற பெண் புழு, தோலைத் துளைத்து ஒரு சிறிய வீக்கத்தைத் தோற்றுவிக்கும். இவ்வீக்கமுற்ற உறுப்பில் நீர் பட நேர்ந்தால், வீக்கம் உடையும். உடைந்த பகுதியின் வழியாகப் புழுவின் கருப்பை வெளிப் படும்.
கருப்பையிலிருந்து எண்ணற்ற வளர் புழுக்கள் நீருக்குள் வெளிப் படும். இவை அதே நீர் நிலையில் வாழ்கின்ற சைக்ளோப்ஸ் என்னும் கணுக் காலியின் உடலினுள்<noinclude></noinclude>
k9j1j9gnwh8hsvqwyan5q7i77g7z6cb
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/103
250
642122
1928357
2026-04-29T15:20:09Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{larger|<b>தீர விசாரிப்பதே மெய்!</b>}} உடன்பிறப்பே, :“தேனில்லாத மலர்களிலே வண்டுகள் இல்லை, :தெளிவில்லாத மனதினிலே தெம்புமே இல்லை.” —என்று கவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928357
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>தீர விசாரிப்பதே மெய்!</b>}}
உடன்பிறப்பே,
:“தேனில்லாத மலர்களிலே வண்டுகள் இல்லை,
:தெளிவில்லாத மனதினிலே தெம்புமே இல்லை.”
—என்று கவியரசு பொன்னிவளவன் எழுதிய கவிதை வரிகளை உடன் பிறப்பு ஒருவர் உடன்பிறப்பு இசைகூட்டிப் பாடிட நானும் மற்றவர்களும் அதனை மெத்தவும் சுவைத்தோம்; எங்கே தெரியுமா? கடற்கரையில்!
கடற்கரை என்றதும் “ஓகோ! உனக்கு மட்டும் கடற்காற்று கேட்கிறதோ?” என்று கேட்டுவிடாதே!
நான் எப்போதுமே உதகை, கொடைக்கானல் ஏற்காடு, குற்றாலம் என்று ஓய்வுக்காக ஒரு மாதம் இருமாதம் போய்த் தங்கியவனல்ல! சென்னைக் கடற்கரை தான் எனக்கு ஓரிரு மணிநேரம் ஓய்வும், பொழுதுபோக்கும் வழங்கக்கூடிய இடமாகும்!
காலையில் எழுந்தவுடன் பார்வை, பத்திரிகைச் செய்திகளிலே விழுந்துவிடும். ஒன்பது அல்லது பத்து மணி வரையிலே கழகக் கண்மணிகளாம் உடன் பிறப்புக்களின் சந்திப்பு!
அப்பப்பா, இந்தச் சந்திப்பு எவ்வளவு நிம்மதியாக. இருக்கிறது தெரியுமா? அவரவர்களும் தங்கள் ஊர்களில், அல்லது பகுதிகளில் கழகம். எவ்வளவு கட்டுப்கோப்புடன் இயங்கி வருகிறது என்பதை எடுத்தியம்பி தங்கள் உள்ள உறுதியை வெளிப்படுத்தி, பாசத்தையும் அன்பையும்.<noinclude></noinclude>
ek0hduldrahc9w7o25cnvvifvr6xz53
1928736
1928357
2026-04-30T07:31:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>தீர விசாரிப்பதே மெய்!</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
::“தேனில்லாத மலர்களிலே வண்டுகள் இல்லை,
::தெளிவில்லாத மனதினிலே தெம்புமே இல்லை.”
—என்று கவியரசு பொன்னிவளவன் எழுதிய கவிதை வரிகளை உடன் பிறப்பு ஒருவர் இசைகூட்டிப் பாடிட நானும் மற்றவர்களும் அதனை மெத்தவும் சுவைத்தோம்; எங்கே தெரியுமா? கடற்கரையில்!
கடற்கரை என்றதும் “ஓகோ! உனக்கு மட்டும் கடற்காற்று கேட்கிறதோ?” என்று கேட்டுவிடாதே!
நான் எப்போதுமே உதகை, கொடைக்கானல் ஏற்காடு, குற்றாலம் என்று ஓய்வுக்காக ஒரு மாதம் இருமாதம் போய்த் தங்கியவனல்ல! சென்னைக் கடற்கரை தான் எனக்கு ஓரிரு மணிநேரம் ஓய்வும், பொழுதுபோக்கும் வழங்கக்கூடிய இடமாகும்!
காலையில் எழுந்தவுடன் பார்வை, பத்திரிகைச் செய்திகளிலே விழுந்துவிடும். ஒன்பது அல்லது பத்து மணி வரையிலே கழகக் கண்மணிகளாம் உடன் பிறப்புக்களின் சந்திப்பு!
அப்பப்பா, இந்தச் சந்திப்பு எவ்வளவு நிம்மதியாக. இருக்கிறது தெரியுமா? அவரவர்களும் தங்கள் ஊர்களில், அல்லது பகுதிகளில் கழகம். எவ்வளவு கட்டுப்கோப்புடன் இயங்கி வருகிறது என்பதை எடுத்தியம்பி தங்கள் உள்ள உறுதியை வெளிப்படுத்தி, பாசத்தையும் அன்பையும்<noinclude></noinclude>
t8sqae3e7v00zl10d9rlzdf757n04mi
1928848
1928736
2026-04-30T08:21:16Z
Booradleyp1
1964
1928848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>தீர விசாரிப்பதே மெய்!</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
::“தேனில்லாத மலர்களிலே வண்டுகள் இல்லை,
::தெளிவில்லாத மனதினிலே தெம்புமே இல்லை.”
—என்று கவியரசு பொன்னிவளவன் எழுதிய கவிதை வரிகளை உடன் பிறப்பு ஒருவர் இசைகூட்டிப் பாடிட நானும் மற்றவர்களும் அதனை மெத்தவும் சுவைத்தோம்; எங்கே தெரியுமா? கடற்கரையில்!
கடற்கரை என்றதும் “ஓகோ! உனக்கு மட்டும் கடற்காற்று கேட்கிறதோ?” என்று கேட்டுவிடாதே!
நான் எப்போதுமே உதகை, கொடைக்கானல் ஏற்காடு, குற்றாலம் என்று ஓய்வுக்காக ஒரு மாதம் இருமாதம் போய்த் தங்கியவனல்ல! சென்னைக் கடற்கரை தான் எனக்கு ஓரிரு மணிநேரம் ஓய்வும், பொழுதுபோக்கும் வழங்கக்கூடிய இடமாகும்!
காலையில் எழுந்தவுடன் பார்வை, பத்திரிகைச் செய்திகளிலே விழுந்துவிடும். ஒன்பது அல்லது பத்து மணி வரையிலே கழகக் கண்மணிகளாம் உடன் பிறப்புக்களின் சந்திப்பு!
அப்பப்பா, இந்தச் சந்திப்பு எவ்வளவு நிம்மதியாக. இருக்கிறது தெரியுமா? அவரவர்களும் தங்கள் ஊர்களில், அல்லது பகுதிகளில் கழகம். எவ்வளவு கட்டுப்கோப்புடன் இயங்கி வருகிறது என்பதை எடுத்தியம்பி தங்கள் உள்ள உறுதியை வெளிப்படுத்தி, பாசத்தையும் அன்பையும்<noinclude></noinclude>
mhw4fv5pgdf2agwte4zzvzs7l0a88mg
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/104
250
642123
1928358
2026-04-29T15:20:52Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 95 கொட்டிப் பேசுகிறார்கள். அவர்கள் நெஞ்சில் தன்னல நோக்கமில்லை. எனும் அண்ணா கூறியது போல சூழ்நிலையின் கைதியாக ஆக்கி வைத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928358
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
கடிதம்
95
கொட்டிப் பேசுகிறார்கள். அவர்கள் நெஞ்சில் தன்னல நோக்கமில்லை.
எனும்
அண்ணா கூறியது போல சூழ்நிலையின் கைதியாக ஆக்கி வைத்திருந்த பதவி பொறுப்பு அகன்றவுடன், உடன் பிறப்புக்களை நெருக்கமாகக் காணவும், இதயங்களை இணைத்துக் கொள்ளவும் எவ்வளவு சுலபமாக முடிகிறது! அவர்கள் குடும்பம் குடும்பமாக வருகின்றனர். குழந்தை குட்டிகளுடன் வருகின்றனர்.இதோ. விசாரணைக் கமிஷன் செலவுக்கான நிதியென்று வழங்குகின்றனர்.
பிறகு, முரசொலி அலுவலகம்! பதினோரு மணிவரை யிலே எழுத்துப்பணி -உனக்காகத்தான்!
ஒரு நாள் எழுதத் தவறினால்கூட உடனே கோபித்துக் கொள்கிறாயே! அதற்குள் தொலைபேசி மணி அடிக்கும்! அன்பகத்துக்கு நாவலர் வந்துவிட்டார்; பேராசிரியர் வந்து கொண்டிருக் கிறார்; மற்ற முன்னணித் தலைவர்களும் வந்துவிட்டனர். பார்வையாளர்களும் ஏராளமாக இருக்கிறார்கள் என்று செய்திவரும். உடனே அன்பகத்துக்கு ஓடுகிறேன் அங்கு உரையாடல்! கருத்துப் பரிமாற்றங்கள்! கழகப் பணிகள்!
உறுப்பினர் சேர்க்கும் விண்ணப்பத் தாட்களைப் பெற வந்திருப்போர் காட்டுகின்ற ஆர்வம்! நிதி வழங்கும் உடன் பிறப்புக்களின் உற்சாகம்! ஏறத்தாழ இரண்டு மணி அளவில் நானும், நாவலரும், பேராசிரியரும், கழக முன்னணியினரும் அன்பகத்திலிருந்து புறப்படுகிறோம்.
மீண்டும் மாலை நாலு மணிக்குப் பார்வையாளர்கள் குவிகின்றனர். தொடர்ந்து முரசொலி அலுவலகம் - எழுத்துப் பணிதான் எட்டு மணி வரையில்!
தியாகராயநகர் கலைவாணர் சிலையைச் சுற்றிக் கொண்டு முரசொலிக்குச் முரசொலிக்குச் செல்லுகிற நான், இரவு 8 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தின் வழியாகத் திரும்பி கடற்கரைக்குச் செல்லுகிறேன்.<noinclude></noinclude>
4gp2j0qoed3hjg8nrial7al322kxprr
1928359
1928358
2026-04-29T15:26:11Z
Ramya sugumar
15106
1928359
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||95}}</noinclude>கொட்டிப் பேசுகிறார்கள். அவர்கள் நெஞ்சில் தன்னல நோக்கமில்லை.
அண்ணா கூறியது போல சூழ்நிலையின் கைதியாக ஆக்கி வைத்திருந்த பதவி எனும் பொறுப்பு அகன்றவுடன், உடன் பிறப்புக்களை நெருக்கமாகக் காணவும், இதயங்களை இணைத்துக் கொள்ளவும் எவ்வளவு சுலபமாக முடிகிறது! அவர்கள் குடும்பம் குடும்பமாக வருகின்றனர். குழந்தை குட்டிகளுடன் வருகின்றனர். இதோ, விசாரணைக் கமிஷன் செலவுக்கான நிதியென்று வழங்குகின்றனர்.
பிறகு, முரசொலி அலுவலகம்! பதினோரு மணிவரையிலே எழுத்துப்பணி—உனக்காகத்தான்! ஒரு நாள் எழுதத் தவறினால்கூட உடனே கோபித்துக் கொள்கிறாயே! அதற்குள் தொலைபேசி மணி அடிக்கும்! அன்பகத்துக்கு நாவலர் வந்துவிட்டார்; பேராசிரியர் வந்து கொண்டிருக்கிறார்; மற்ற முன்னணித் தலைவர்களும் வந்துவிட்டனர். பார்வையாளர்களும் ஏராளமாக இருக்கிறார்கள் என்று செய்திவரும். உடனே அன்பகத்துக்கு ஓடுகிறேன் அங்கு உரையாடல்! கருத்துப் பரிமாற்றங்கள்! கழகப் பணிகள்!
உறுப்பினர் சேர்க்கும் விண்ணப்பத் தாட்களைப் பெறவந்திருப்போர் காட்டுகின்ற ஆர்வம்! நிதி வழங்கும் உடன் பிறப்புக்களின் உற்சாகம்! ஏறத்தாழ இரண்டு மணி அளவில் நானும், நாவலரும், பேராசிரியரும், கழக முன்னணியினரும் அன்பகத்திலிருந்து புறப்படுகிறோம்.
மீண்டும் மாலை நாலு மணிக்குப் பார்வையாளர்கள் குவிகின்றனர். தொடர்ந்து முரசொலி அலுவலகம் எழுத்துப் பணிதான் எட்டு மணி வரையில்!
தியாகராயநகர் கலைவாணர் சிலையைச் சுற்றிக் கொண்டு முரசொலிக்குச் முரசொலிக்குச் செல்லுகிற நான், இரவு 8 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தின் வழியாகத் திரும்பி கடற்கரைக்குச் செல்லுகிறேன்.{{nop}}<noinclude></noinclude>
rnvfmxrilt5l3xn8eme6yair8rwz44y
1928739
1928359
2026-04-30T07:32:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||95}}</noinclude>கொட்டிப் பேசுகிறார்கள். அவர்கள் நெஞ்சில் தன்னல நோக்கமில்லை.
அண்ணா கூறியது போல சூழ்நிலையின் கைதியாக ஆக்கி வைத்திருந்த பதவி எனும் பொறுப்பு அகன்றவுடன், உடன் பிறப்புக்களை நெருக்கமாகக் காணவும், இதயங்களை இணைத்துக் கொள்ளவும் எவ்வளவு சுலபமாக முடிகிறது! அவர்கள் குடும்பம் குடும்பமாக வருகின்றனர். குழந்தை குட்டிகளுடன் வருகின்றனர். இதோ, விசாரணைக் கமிஷன் செலவுக்கான நிதியென்று வழங்குகின்றனர்.
பிறகு, முரசொலி அலுவலகம்! பதினோரு மணிவரையிலே எழுத்துப்பணி—உனக்காகத்தான்! ஒரு நாள் எழுதத் தவறினால்கூட உடனே கோபித்துக் கொள்கிறாயே! அதற்குள் தொலைபேசி மணி அடிக்கும்! அன்பகத்துக்கு நாவலர் வந்துவிட்டார்; பேராசிரியர் வந்து கொண்டிருக்கிறார்; மற்ற முன்னணித் தலைவர்களும் வந்துவிட்டனர். பார்வையாளர்களும் ஏராளமாக இருக்கிறார்கள் என்று செய்திவரும். உடனே அன்பகத்துக்கு ஓடுகிறேன் அங்கு உரையாடல்! கருத்துப் பரிமாற்றங்கள்! கழகப் பணிகள்!
உறுப்பினர் சேர்க்கும் விண்ணப்பத் தாட்களைப் பெறவந்திருப்போர் காட்டுகின்ற ஆர்வம்! நிதி வழங்கும் உடன் பிறப்புக்களின் உற்சாகம்! ஏறத்தாழ இரண்டு மணி அளவில் நானும், நாவலரும், பேராசிரியரும், கழக முன்னணியினரும் அன்பகத்திலிருந்து புறப்படுகிறோம்.
மீண்டும் மாலை நாலு மணிக்குப் பார்வையாளர்கள் குவிகின்றனர். தொடர்ந்து முரசொலி அலுவலகம் எழுத்துப் பணிதான் எட்டு மணி வரையில்!
தியாகராயநகர் கலைவாணர் சிலையைச் சுற்றிக் கொண்டு முரசொலிக்குச் முரசொலிக்குச் செல்லுகிற நான், இரவு 8 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தின் வழியாகத் திரும்பி கடற்கரைக்குச் செல்லுகிறேன்.{{nop}}<noinclude></noinclude>
24wt9qgranhj1zxttxiichm5h2j0g6v
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/105
250
642124
1928361
2026-04-29T15:32:38Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இதுவரையில் காரில் எனக்குத் துணையாக நண்பர் சுருளிவேல் இருந்தார். இப்போது அவரும் இல்லை. எப்படியோ மாறி மாறி இரண்டொரு உடல் பிறப்புக்கள் என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928361
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|96||கலைஞர்}}</noinclude>இதுவரையில் காரில் எனக்குத் துணையாக நண்பர் சுருளிவேல் இருந்தார். இப்போது அவரும் இல்லை. எப்படியோ மாறி மாறி இரண்டொரு உடல் பிறப்புக்கள் என்னுடனேயே இருக்கத்தான் செய்கின்றனர். எட்டு மணிக்குக் கடற்கரைக்குச் சென்று அங்கு வரும் உடன் பிறப்புக்களுடன் உரையாடிப் பொழுது போக்குவதுகூடச் சிலருக்குப் பிடிக்கவில்லை. அதிலும் குறிப்பாக நமது பெரியவர் பக்தவத்சலத்துக்கு, அந்த நிம்மதியைக்கூட நான் அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணம் போலும்!
“இரவில் கருணாநிதியும், ராமச்சந்திரனும் சென்னைக் கடற்கரையில் சந்தித்துப் பேசுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.”
என்று அவர் பேசியதாக ஏடுகளில் செய்து வெளி வந்துள்ளது. எனக்கு தலைப்புச் செய்தியைப் பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது! கடற்கரையில் போட்டது! கடற்கரையில் எந்த ராமச்சந்திரர்களையும் நாம் சந்திக்கவேயில்லையே; இது என்ன “திடீர் வெடிகுண்டு” வீசுகிறார் — என்று பதறிப் போனேன்!
கடற்கரையில் அமர்ந்து சந்திரனைப் பார்க்கிறோம் வானத்தில். கடலோரம் அமர்ந்து சந்திரனைக் காண்பதே தனி அழகுதான்! ஆனால் பக்தவத்சலனார் கூறுகிற “ராமச் சந்திரனை நான் கண்டதேயில்லை.
இதைச் சொன்னால்கூட, உடனே பெரியவர். விழித்துக் கொண்டு “கடற்கரையில் சந்திக்கவில்லையா? அப்படியானால் வேறு எங்கே சந்திக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டாலும் கேட்பார்!
இதுவரையில், அவர் குறிப்பிடும் ராமச்சந்திரன் அவர்களை நான் எங்குமே சந்திக்கவில்லை! காமராஜர் அவர்கள் உடல்நலங் குன்றியிருந்தபோது சந்தித்தேன். காமராஜர் மறைந்தபோது சந்தித்தேன். காமராஜர் அவர்களுக்கு<noinclude></noinclude>
r8yw0bm2dwyi330kdvx5tr9830iqngy
1928741
1928361
2026-04-30T07:35:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|96||கலைஞர்}}</noinclude>இதுவரையில் காரில் எனக்குத் துணையாக நண்பர் சுருளிவேல் இருந்தார். இப்போது அவரும் இல்லை. எப்படியோ மாறி மாறி இரண்டொரு உடன் பிறப்புக்கள் என்னுடனேயே இருக்கத்தான் செய்கின்றனர். எட்டு மணிக்குக் கடற்கரைக்குச் சென்று அங்கு வரும் உடன் பிறப்புக்களுடன் உரையாடிப் பொழுது போக்குவதுகூடச் சிலருக்குப் பிடிக்கவில்லை. அதிலும் குறிப்பாக நமது பெரியவர் பக்தவத்சலத்துக்கு, அந்த நிம்மதியைக்கூட நான் அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணம் போலும்!
“இரவில் கருணாநிதியும், ராமச்சந்திரனும் சென்னைக் கடற்கரையில் சந்தித்துப் பேசுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.”
என்று அவர் பேசியதாக ஏடுகளில் செய்து வெளி வந்துள்ளது. எனக்கு தலைப்புச் செய்தியைப் பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது! கடற்கரையில் எந்த ராமச்சந்திரர்களையும் நாம் சந்திக்கவேயில்லையே; இது என்ன “திடீர் வெடிகுண்டு” வீசுகிறார் — என்று பதறிப் போனேன்!
கடற்கரையில் அமர்ந்து சந்திரனைப் பார்க்கிறோம் வானத்தில். கடலோரம் அமர்ந்து சந்திரனைக் காண்பதே தனி அழகுதான்! ஆனால் பக்தவத்சலனார் கூறுகிற “ராமச்சந்திரனை” நான் கண்டதேயில்லை.
இதைச் சொன்னால்கூட, உடனே பெரியவர். விழித்துக் கொண்டு “கடற்கரையில் சந்திக்கவில்லையா? அப்படியானால் வேறு எங்கே சந்திக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டாலும் கேட்பார்!
இதுவரையில், அவர் குறிப்பிடும் ராமச்சந்திரன் அவர்களை நான் எங்குமே சந்திக்கவில்லை! காமராஜர் அவர்கள் உடல்நலங் குன்றியிருந்தபோது சந்தித்தேன். காமராஜர் மறைந்தபோது சந்தித்தேன். காமராஜர் அவர்களுக்கு<noinclude></noinclude>
q7fgnlgj518h3e7pssvxfttgyiqjac9
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/106
250
642125
1928363
2026-04-29T15:33:55Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 97 இரங்கல் கூட்டம் நடந்தபோது சந்தித்தேன். காமராஜர் நினைவகத்தைத் தொடங்கி வைக்கும்போது அவரை அங்கு சந்தித்திருக்கக்கூடும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928363
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
கடிதம்
97
இரங்கல் கூட்டம் நடந்தபோது சந்தித்தேன். காமராஜர் நினைவகத்தைத் தொடங்கி வைக்கும்போது அவரை அங்கு சந்தித்திருக்கக்கூடும். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு ஏற்படவில்லை! எனவே, பெரியவர் அவர்கள் கருதுகிறபடி நானும் ராமச்சந்திரன் அவர்களும் சந்திக்கவில்லை. நாங்கள் சந்தித்தே தீரவேண்டுமென்று அனுபவத்திலும், ஆற்றலிலும், அறிவிலும் முதிர்ச்சி பெற்ற பெரியவர் பக்தவத்சலம் போன்றவர்கள் ஆசைப்படுகிறார்களோ, என்னவோ எனக்குப் புரியவில்லை.
கடற்காற்று! மலிவாகக் கிடைக்கக்கூடிய ஒன்று பயணச்செலவு அதிகமின்றி, நாலு பட்டாணிக் கடலை களோடு முடியக்கூடிய பொழுது போக்கு!
அதையும் கெடுப்பது என்று இந்த வயதான காலத் திலே இவர் “வைராக்கியம்” கொண்டு விட்டாரே! நான் என்னதான் செய்து தொலைப்பது!
'என்னப்பா! தெரியுமா சேதி? காலேஜுக்குப் போகிறானே. உன் பையன் - ஜாக்கிரதையா பாத்துக்க! நேற்று பீச்சிலே பையனை பார்த்தேன்-பக்கத்திலே ஒரு "லோலாக்கு'' தெரிஞ்சுது - ரெண்டும் ஜாலியா அலைகளை விரட்டி விளையாண்டதை இந்தக் கண்ணால பாத்தேனாக்கும்;''
..
'தாவணி'
1
பையனைப் பெற்ற
என்று எதிர்வீட்டு ஏகாம்பரம், பெருமாள்சாமியிடம் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். கதை களில் மட்டுமல்ல - நடைமுறையிலுங்கூட!
பெரியவர் பக்தவத்சலம் அந்தப் பாணியில் அல்லவா ஆரம்பித்துவிட்டார்! அவருடைய திறமையையும், செல்வாக்கையும் வைத்து அவருக்குக் கீழ் இயங்கும் தமிழ் நாட்டுக் காங்கிரசை இன்னும் எவ்வளவோ பெரிய அளவுக்கு அவரால் வளர்க்க முடியும்! அதற்கு நேரத்தைச் செலவிட டாமல் எதிர்வீட்டு ஏகாம்பரம்போலக் கடற்கரைச் செய்திகளைக் கூறிக் கொண்டிருக்கிறாரே!<noinclude></noinclude>
aswj49rdtnyrmc931csan7d1lim1fr6
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/133
250
642126
1928364
2026-04-29T15:39:53Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928364
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல் புழு 111}}</noinclude>புகுந்து கொள்ளும். பின்பு, வளர் புழு சைக்ளோப்சின் உடற் குழிக்குச் சென்று, இரண்டு முறை தன் தோலை உரிக்கிறது. இந்நிலையில், சைக்ளோப்சைச் சேர்த்து, நீருடன் அருந்தினால், வளர் புழுவும் குடலுக்குள் செல்கிறது. பின்பு, அங்கிருந்து குருதிக் குழாயின் வழியாக நேராகத் தோலுக்கு அடியிலுள்ள இணைத் திசுக்களுக்குச் சென்று, பெரிய புழுவாக வளர்கிறது. இப்புழுவால் உண்டாகும் நோய் பரவாமலிருக்கச் சைக்ளோப்ஸ் கலந்த நீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அல்லது நீரைக் கொதிக்க வைத்து, அருந்த வேண்டும். நீர் நிலைகளிலுள்ள சைக்ளோப்சைச் சுண்ணாம்பு தெளித்து அழிக்கலாம் அல்லது, சைக்ளோப்சைத் தின்று வாழும் மீன்களை நீர் நிலைகளில் விட்டு வளர்க்கலாம். உடலில் இருக்கும் போது, இப்புழு ஒவ்வொரு நாளும், தன் உடலைப் புண்ணின் வழியாக நீட்டி, வளர் புழுக்களை ஈனும். ஒவ்வொரு நாளும் வெளியே நீளுகின்ற இதன் உடல் பகுதியை மெதுவாக ஒரு குச்சியால் இதன் உடல் முழுவதும் வெளி வரும் வரை சுற்ற வேண்டும்.
<b>இழைப் புழு</b>. இப்புழுவிற்கு எண்டிரோலோபஸ் வேர்மிகுலாரிஸ் (<i>Enterolobus vermicularis</i>) என்றும், ஆக்சியூர்ஸ் வெர்மிகுலாரிஸ் (<i>Oxyuirs vermicularis</i>) என்றும், விலங்கினப் பெயர்கள் உண்டு. உலகெங்கும் காணப் படும் இழைப் புழு குழந்தைகளின் மலக் குடலில் வாழ்கிறது. ஆண் புழு ஏறக்குறைய 4 மி.மீ. நீளமிருக்கும். பெண் புழு இதைப் போல் இரண்டு மடங்கு நீளமிருக்கும். இனச் சேர்க்கைக்குப் பின், கருவுற்ற பெண் புழு குழந்தையின் மல வாய் அருகில் வந்து, மல வாயின் வெளிப்புறத் தோல்களின் மீது முட்டைகளை இடும். இச்சமயத்தில், மல வாயைச் சுற்றிலும் அரிப்பு ஏற்படும். அரிப்பை நீக்குவதற்காகக் குழந்தை தன் விரல் நகத்தால் சொரியும் போது, நகத்தினுள் முட்டைகள் சிக்கிக் கொள்ளும். கையைக் கழுவாமல், குழந்தை உணவு உட்கொண்டால், உணவுடன் நகத்திலுள்ள முட்டைகளும் குடலுக்குள் செல்லும். அங்கே முட்டையிலிருந்து வளர் புழுக்கள் வெளி வந்து பெரிய புழுக்களாகின்றன.
நோயுற்ற குழந்தைகளின் ஆடைகளில் முட்டை ஒட்டிக் கொண்டிருக்கும். ஆடையிலிருந்து முட்டைகள் பிறருடைய உணவுக்குச் செல்லலாம். இந்நோய் பிறருக்குப் பரவுதலும் உண்டு. இதனைத் தடுக்க, குழந்தைகளின் உடலைக் குறிப்பாக, விரல்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நகங்களை வளர விடாமல் அடிக்கடி வெட்டிக் கொண்டிருக்க வேண்டும். உண்பதற்கு முன், கையை நன்றாகக் கழுவ வேண்டும்.
<b>தாவர நூற்புழுக்கள்</b>. தாவர நூற்புழுக்கள் மிகவும் சிறியவையாக 0.01–1.00 மி.மீ. நீளம் கொண்டிருக்கும். பொதுவாக, இப்புழுக்கள் நீண்டும், மெல்லியவாகவும், வளைந்தும் காணப்படும். வாய்ப் பகுதியில் ஊசி போன்ற அலகினைக் கொண்டிருக்கும். இதனால் தாவரத் திசுவறைகளைத் துளைத்துச் சாற்றை உறிஞ்சும். இவை மண்ணில் 4–25 மி.மீ. ஆழத்தில் இருக்கும். மண்ணின் மேற்பரப்பில் இவை காணப்படா. நூல் புழுக்கள் ஓர் இடத்திலிருந்து, ஏனைய இடங்களுக்கு நீர், பண்ணைக் கருவிகள் மூலமாகப் பரவும். ஒரு நாட்டிலிருந்து, ஏனைய நாடுகளுக்கு விதைப் பொருள்களால் பரவும்.
<b>வாழ்க்கைச் சுழற்சி</b>. நூற்புழுக்கள் நூற்றுக் கணக்கான முட்டைகளை மண்ணிலோ, தாவரத் திசுக்களிலோ, தனித் தனியாகவோ, கூட்டமாகவோ இடும். சில புழுக்கள் முட்டைகளைப் பசை போன்ற கசிவால் மூடி விடும். வேறு சில நூற்புழுக்கள் முட்டைகளைக் கடினமாக்கப் பட்ட உடலினுள் அடக்கி மடிந்து விடும். இவற்றினுள் பாதுகாக்கப் படும் முட்டைகள் எவ்விதக் கெடுதலுக்கும் உட்படாமல் இருக்கும். நூற்புழுக்களின் வாழ்க்கைச் சுழற்சியில் 6 பருவங்கள் உள்ளன. அவை, முட்டைப் பருவம், 4 புழுப் பருவங்கள், வளர்ச்சிப் புழுப் பருவம் என்பன.
புழு, முதல் தோலுரிப்பை முட்டையிலேயே கழித்து விடும். இரண்டாம் பருவ புழுக்கள், முட்டை களிலிருந்து வெளி வந்து, மூன்று முறை தோலுரித்த பின், முழு வளர்ச்சியடையும். வாழ்க்கைப் பருவம் ஏறக் குறைய 30–40 நாள் இருக்கும். சில நூற்புழுக்கள் மண்ணிற்குள்ளும், இலை, தண்டு, விதை முதலியவற்றிலும், பல ஆண்டுகள் உறக்க நிலையில் இருந்து, பிறகு தகுந்த பருவ காலத்தில், பெருக்கமடையும். ஏனைய உயிரினங்களைப் போல், தாவர நூற் புழுக்களிலும், பெண் சேர்க்கையுண்டு. சில வகைகளில் ஆண் புழுக்கள் இல்லை. எனினும், அவை இனப் பெருக்கமடையும் தன்மை கொண்டவை. அனைத்து வகை நூற்புழுக்களும் முட்டையிடுகின்றன.
<b>தாவர நூற்புழுத் தாக்கமும் அறிகுறியும்</b>. நூற்புழு தாக்கிய பயிர்கள் வளர்ச்சி குன்றிக் குட்டையாக இருக்கும். மேலும், மஞ்சள் நிறமாகி, இலைகள் வாடி விடும். இளம் பயிர்கள் அழிந்து விடும். வேர் குட்டையாகும். வேர்களில் முடிச்சுகளையோ, கருகலையோ உண்டாக்கி, வேரின் சத்து, நீர் உறிஞ்சும் தன்மையைப் பாதிக்கும். உருளைக் கிழங்கில் உண்டாகும் பொன்னிற நூற்புழுவால் (golden nematode) கிழங்கு பளபளப்புத் தன்மையை இழந்து சொறி போன்ற<noinclude></noinclude>
08dm71k76m3mjlerjalkc3nkwvjw08u
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/134
250
642127
1928365
2026-04-29T16:32:41Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928365
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|112 நூல் புழு}}</noinclude>தோற்றத்தைத் தரும். எலுமிச்சை நூற்புழுத் தாக்குதலால், மரத்தின் வளர்ச்சி குன்றுவதுடன், சிறு சிறு காய்களே உற்பத்தியாகின்றன.
<b>வேர் நூற்புழுக்கள்</b>. வேர் நூற்புழுக்கள் (root nematodes) மண்ணில் தோன்றி, அருகிலுள்ள வேர்களைத் தாக்கி அழிக்கின்றன. தக்காளி, பப்பாளி, பருத்தி, கத்தரி, கரும்பு, வாழை, எலுமிச்சை, நெல், திராட்சை, புகையிலை போன்ற பயிர்களில், வேர் முடிச்சு, வேர்க் கருகல், வேர் அழுகல் முதலிய நோய்களை உண்டாக்குகின்றன. இவற்றால், செடிகளின் காய்ப்புத் திறன் குறைவதோடு, காய்களும் சிறியனவாக இருக்கும். இவை வேரின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்துவதோடு, வேரின் உணவு, நீர் ஆகியவற்றை உள்ளேற்கும் திறனையும் குறைத்து விடுகின்றன. வேர்ப் புழுக்களால் தாக்கப்பட்ட செடிகள், நாளடைவில் பழுத்துக் காய்ந்து அழிந்து விடுகின்றன. உருளைக் கிழங்கைத் தாக்கும் பொன்னிற நூற்புழு இவ்வகையைச் சேர்ந்தது. இதனால், வேரின் வளர்ச்சி குன்றி, கிழங்குகள் குறைந்த அளவிலும், சிறியனவாகவும், உருமாறியும் உண்டாகின்றன. நாளடைவில் செடிகள் பழுத்து, வாடி, வதங்கி, அழிந்து விடுகின்றன.
<b>இலை நூற்புழுக்கள்</b> (leaf nematodes). இவை பயிர்களின் இலைகளைத் தாக்கி, அழிக்கின்றன. தாக்கப்பட்ட இலைகள், வளர்ச்சி குன்றியும், வெளுத்தும் காணப் படும். இவை இலைகளிலுள்ள பச்சையத்தைத் தாக்குவதால், பயிரின் ஒளிச் சேர்க்கை தடைப் படுகிறது. நெல் இலைகளின் நுனி பழுத்துக் காய்ந்து, காணப் படும். தாக்கப் பட்ட இலைகள் உதிர்ந்து விடுகின்றன. கனகாம்பரச் செடியின் இலைகள் தாக்கப் படுவதால், அக்செடியின் பூக்குந் தன்மை குறைகிறது. இலைக் குருத்துகளும், மொட்டுகளும் பெருமளவில் பாதிக்கப் படுகின்றன. கோதுமை போன்ற பயிர்களிலும், இலைகள் அழிக்கப் படுகின்றன.
<b>தண்டு நூற்புழுக்கள்</b> (Stem nematodes). இவ்வகை நூற்புழுக்களால் தென்னை, பாக்கு போன்ற மர வகைகள் தாக்கப் பட்டுப் பேரழிவடைகின்றன. நூற்புழுக்களால் தாக்கப் பட்ட ஓட்ஸ் பயிர்களின் வளர்ச்சி குன்றி, தானிய மணி உற்பத்தியும் தடைப் படுகிறது.
<b>மலர் மற்றும் தானிய நூற்புழுக்கள்</b> (flower and grain nematodes). இவ்வகைப் புழுக்களால், கனகாம்பரச் செடிகள் தாக்கப் படுகின்றன. தாக்கப் பட்ட செடிகள் உருவில் சிறியனவாகியும், உரு, நிறம் மாறியும் இருக்கும். கோதுமையில், தானியங்கள் அழிக்கப் படுகின்றன. இலைகளின் வளர்ச்சிக்கேற்றவாறு, நூற்புழுக்களும் எடுத்துச் செல்லப் படுகின்றன. தானியங்களுக்குப் பதிலாக, ஆயிரக் கணக்கான நூற்புழுக்கள் அவற்றில் உற்பத்தியாகின்றன. நூற்புழுக்கள் அடங்கிய தானியங்கள் மிளகு உருவத்தில் கறுப்பாக இருக்கும். தாக்கப் பட்ட கோதுமையின் இலைகள் சுருட்டிக் கொண்டும், வளைந்தும் காணப் படும்.
<b>தாவர நோய் நூற்புழுக்கள்</b>. வேரில் நூற்புழுக்கள் ஏற்படுத்தும் துளைகளின் மூலம், பாக்டீரியா, பூசணம், நச்சுயிரி போன்ற நோய் நுண்ணுயிரிகள் பரவி, நோய்களை மிக எளிதில் ஏற்படுத்துகின்றன. சில வகை நூற்புழுக்கள் இந்நோய் நுண்ணுயிரிகளை ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்குப் பரப்புகின்றன. நூற்புழுக்கள், பூசணங்கள் கூட்டுறவின் மூலம் பருத்தி, கனகாம்பர வாடல் நோய்களால் ஏற்படும் அழிவு கூடியுள்ளமை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மண்ணில் காணப் படும் நச்சுயிரி நோய்கள், நூற்புழுக்களால் பரவுகின்றன. திராட்சை விசிறி இலை என்னும் நோயை உண்டாக்கும் நச்சுயிரியைச் சிஃபினேமா இன்டெக்ஸ் என்னும் நூற்புழு பரப்புவது 1958ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது. சிஃபினேமா (Xiphinema), லான்ஜிடோரஸ் (Longidorus), டிரைகோடாரஸ் (Trichodorus) என்னும் மூன்று பேரினங்களைச் சேர்ந்த நூற்புழுக்கள் நச்சுயிரிகளைப் பரப்புகின்றன. நோயுள்ள செடியிலிருந்து, சாற்றை உறிஞ்சிய நூற்புழுக்கள், பின்பு, நல்ல செடியில் உள்ள வேரிலிருந்து சாற்றை உறிஞ்சும் போது, நச்சுயிரிகள் பரவுகின்றன. நச்சுயிரிகள் நூற்புழுக்களில் முட்டை வழியாகப் பரவுவதில்லை. நூற்புழுக்கள் தோலுரித்த பின்னர், நச்சுயிரியைப் பரப்பும் தன்மையை இழந்து விடுகின்றன. இளம் நூற் புழுக்களும், முதிர் நூற்புழுக்களும் நச்சுயுயிரிகளைப் பரப்புகின்றன. இளம் நூற்புழுக்கள் முதிர் நூற்புழுக்களை விடப் பெருமளவில் நச்சுயுரிகளைப் பரப்புகின்றன.
<b>பயிர்ச் சுழற்சி</b> (Crop rotation). ஒரே வகைப் பயிரையே பயிரிடாமல், பயிர்ச் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், அப்பயிரைத் தாக்கும் நூற்புழுக்கள் நாளடைவில் பெருகி, விளைச்சலைப் பெரிதும் குறைக்கும். நீலகிரி மாவட்டத்தில், உருளைக்கிழங்கை ஒவ்வொரு பருவத்திலும் தொடர்ந்தாற் போல் பயிர் செய்து வந்தமையால், உருளைக் கிழங்கைத் தாக்கும் பொன்னிற நூற் புழுக்களின் எண்ணிக்கை பெருகி, உருளைக் கிழங்கை அந்நிலங்களில் தற்போது சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
rgpwle8e1n8etssc8wo9mclq6n0oc2m
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/135
250
642128
1928366
2026-04-29T16:50:26Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928366
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூற்புழு உடல் செயலியல் 113}}</noinclude><center>{{fs|110|<b>தடுப்பு முறைகள்</b>}}</center>
<b>ஆழ உழுதல்</b>. அறுவடை செய்த வயலை, ஆழ உழ வேண்டும். இதனால், மண்ணிலுள்ள நூற்புழுக்களும், நூற்புழுக்கள் உள்ள வேர்களும், தாக்கப்பட்ட பிற தாவர உறுப்புகளும் ஆழப் புதைக்கப் பட்டு விடுகின்றன.
<b>தரிசு போடுதல்</b>. நூற்புழுக்கள் ஈரமுள்ள, வெப்பம் குறைந்த மண்ணில் வாழும் தன்மையுடையன. வெப்ப நிலை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மிகுந்தால், அவை இறந்து விடுகின்றன. நீர் விடாமல் தரிசு போட்டு, மூன்று அல்லது நான்கு முறை நிலத்தை உழுதல் வேண்டும். நூற்புழுக்களும், அவற்றின் முட்டைகளும், சூரிய வெப்பத்தால் தாக்கப் பட்டு அழிந்து விடுகின்றன. களைகளையும், அவ்வப்போது களைந்து அழித்து விடுதல் வேண்டும். நிலத்தைத் தரிசாகப் போடுவதால், உணவு கிடைப்பதற்குரிய தாவரங்கள் கிடைக்காமையால், நூற்புழுக்கள் அழிந்து விடுகின்றன.
<b>பண்ணைத் தூய்மை</b>. நூற்புழுக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பாசன நீர், உழு கருவி, விதை, நாற்று வழியாகப் பரவுகின்றன. ஆகையால், நூற்புழுக்கள் தாக்கிய நிலத்தின் வழியாக ஏனைய நிலங்களுக்கு நீர் பாய்ச்சக் கூடாது. நூற்புழுக்கள் உள்ள நிலங்களில், அறுவடைக்குப் பின் வேர், தண்டு, இலை முதலியவற்றை நீக்கி எரித்து விட வேண்டும். நூற்புழுக்கள் தாக்கிய நிலத்திலிருந்து கிடைக்கும் விதைகளையும், நாற்றுகளையும் விதைக்காக, பயன் படுத்தாமை நன்று. தாக்கப்பட்ட நிலங்களில், பயன்படுத்திய கருவிகளைத் தூய்மை செய்த பிறகே, ஏனைய நிலங்களுக்குப் பயன் படுத்த வேண்டும்.
<b>இயற்கை உரமிடுதல்</b>. இயற்கை உரங்களாகிய பிண்ணாக்கு, சாணம், குப்பை, எரு போன்றவற்றைப் பயன் படுத்துவதால், பயிர்கள் செழுமையாக வளர்வதற்குரிய சத்துகள் கிடைக்கின்றன. மேலும், இவை நூற்புழுக்களைக் கொல்லக் கூடிய பாக்டீரியா, பூசணம், நன்மை செய்யும் நூற்புழுக்கள் முதலியவற்றையும் உற்பத்தி செய்து, பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப் படுத்துகின்றன.
<b>நூற்புழுக்கள் தாக்காத செடிகள்</b>. கடுகு, துளுக்க மல்லிகை, சணப்பை போன்ற பயிர்களின் வேர்களிலிருந்து வெளி வரும் வேதிப் பொருள்கள், நூற்புழுக்களுக்கு நஞ்சாக அமைந்து, அவற்றை அழிக்கின்றன. எனவே, இவ்வகைப் பயிர்களைத் தழையுரமாகவும், மாற்றுப் பயிராகவும் பயிரிடுதல் நல்லது.
<b>நூற்புழுக் கொல்லிகள்</b> (Nematocides). நூற்புழுக்கள் பெரும்பாலும், மண்ணில் தோன்றி, வேர்களைத் தாக்குவதால், மண்ணிற்குள் மருந்தைச் செலுத்தி, அவற்றை அழிக்க வேண்டும். தற்பொழுது டி.டி. (DD), டி.பி.சி.பி. (DBCP) அல்லது நெமகான், வேப்பம், வி.சி 13 (VC 13), டெரசர்மீ (Terracurp), போன்ற நூற்புழுக் கொல்லிகள் பெரும்பாலும் பயன் படுகின்றன. இவற்றில், நெமகான் தவிர ஏனைய மருந்துகள் முளைக்கும் விதைகளுக்கும், பயிர்களுக்கும் தீமை செய்பவை. ஆதலால், அவற்றை விதைப்பதற்கு அல்லது நடுவதற்கு ஒரு மாதம் முன்பே, மண்ணிற்குள் செலுத்தி விடுதல் வேண்டும்.
{{right|—<b>பி. வி. சுப்பாராவ்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="77"/><section begin="78"/>
{{fs|110|<b>நூற்புழு உடல் செயலியல்</b>}}
வளர்ச்சி, அதனால் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள், சிதைவுகள் அல்லது சேமிப்புகள், உணவு முதலியன நூற்புழுச் செயலியலில் (nematode physiology) அடங்கும். நூற்புழுக்களில், அவ்வப்போதைய செயல் மாற்றங்களும், இயற்கையாகவே உண்டாகும் அல்லது வேதி மருந்துகளால் ஏற்படும். இத்தகைய செயல் மாற்றங்களுக்குக் காரணமறிய அதன் செயலியலைத் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.
<b>நூற்புழுவின் வேதிப் பொருள்கள்</b>. ஏனைய உயிரினங்கள் போலவே, நூற்புழுக்களிலும், மாவுப் பொருள்கள், புரதச் சத்து, கொழுப்புச் சத்து, உட்கருப் புரத அமிலங்கள், நுண்ணுயிரிச் சத்து, ஹார்மோன்கள், கரிம உப்புச் சத்துகள் போன்றவை உள்ளன. ஆனால், அவற்றைப் பற்றிய நுட்பமான அளவும், நிலையும் இது வரை சரியாக ஆராய்ந்து அறுதியிடப் படவில்லை. நூற்புழுவில் உள்ள வேதிச் சத்துகள் அவற்றின் வாழ் நாள், வெளி வெப்ப நிலைக்கெதிரான தடுப்பாற்றல், வறட்சி தாங்கும் ஆற்றல், வெளி உப்புச் சத்து முதலியவற்றால் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றை அறிய உதவுகின்றன. சில வகைச் சர்க்கரைச் சத்துகளும், 15 வகைத் தனித்தியங்கும் புரதங்களும், அமினோ அமிலங்களும் ஓரிரு நூல் புழுக்களில் கண்டறியப் பட்டுள்ளன. நூற்புழு புறத் தோல் சவ்வு, புரதம், கொழுப்புச் சத்து, பாலிஃபீனால், உட்கருப் புரத அமிலங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நூற்புழுப் புறத் தோல் சவ்வின் புரதம், பூச்சிகளில் உள்ள கொம்புப் பொருளாக (Chitin) இல்லாமல் கெரடின் என்னும் புரதப் பொருளாக உள்ளது.{{nop}}<noinclude><br>{{rh|அ. க. 14–8}}</noinclude>
55ao7npobfbprimpwygoeeyo96tyzsp
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/136
250
642129
1928367
2026-04-29T17:47:34Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928367
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|114 நூற்புழு உடல் செயலியல்}}</noinclude><b>வளர்ச்சி, சிதைவு</b>. நூல் புழுக்களின் உடலில் இரு வகை அமினோ அமிலங்கள் உற்பத்தியாகின்றன. நூற்புழுக்களின் உணவுக் குழாய்ச் சுரப்பி, பலவகையான வேதி நீர்மங்களை உற்பத்தி செய்கிறது. இவை அலகு மூலம் வெளிப்பட்டுத் தாவரங்களின் செல்லினுள் சென்று, மாவு, புரதம், சர்ககரை, நார்ப் பொருள்கள், பெக்டின் ஆகியவற்றைக் கரைத்து விடுகின்றன. இதனால், நீர்மப் பொருள்கள் எளிதாக அலகு மூலம் நூற்புழுவின் உடலுக்குள் உறிஞ்சப் பட்டு விடும்.
<b>சுவாசித்தல்</b>. நூல் புழுக்கள் சுவாசிப்பதற்கெனச் சிறப்பான சுவாச உறுப்புகள் இல்லை. எனினும், அவை உயிர் வாழ, ஆக்சிஜன் இன்றியமையாதது. குறைந்த அளவு ஆக்சிஜன் உள்ள நிலையிலும், நூற்புழுக்கள் செயல் படும் என்றாலும், அவற்றின் வளர்ச்சியும், முட்டை பொரிதலும் பாதிக்கப் படும். முட்டை உற்பத்தி, சட்டை உரிக்கும் நிலை போன்ற செயல்களின் போதுள்ள நூற்புழுக்களும் ஆக்சிஜன் குறைந்த நிலையில் பாதிக்கப் படும்.
<b>வெப்பம்</b>. நூல் புழுக்களுக்கு உடலின் தட்ப, வெப்ப நிலையைக் கட்டுப் படுத்த இயலாது. எனவே, இவற்றின் வளர்ச்சி, சிதைவு போன்ற செயல்களும், சூழலில் உள்ள வெப்பத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. பொதுவாக, 5–30°C வெப்ப நிலை வளர்ச்சிக்கு ஏற்றது. உடல் நீர் மிகக் குறைந்த நிலையிலுள்ள நூல் புழுக்களுகட்குக் குறைந்த அல்லது மிகுதியான வெப்பத்தைத் தாங்கும் தன்மை, ஈரம் மிகுந்த நூல் புழுக்களை விட மிகுதியாக இருக்கிறது. இதற்குக் காரணம், நீர் மிகுந்துள்ள உடலில் உள்ள நொதிகள், வெப்பத்தின் மாறுதல்களால் பாதிக்கப் படுவதேயாகும். மாறாக, நீர்ப் பசை குறைந்த நூற் புழுவின் குடலில் உள்ள நொதிகள், வெப்ப மாறுதல்களைத் தாங்கும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. இதற்கு மையக் காரணமாக ஈரமே அமைகிறது.
<b>ஈரம்</b>. நூல் புழுக்கள் வாழ்வதற்கு மிகச் சிறிதளவாவது நீர் தேவைப் படுகிறது. புழுக்கள் நிலத்திலிருந்தாலும், மண் துகள்களைச் சுற்றியுள்ள நீரிலேயே இருக்கின்றன. நூற்புழுவின் உடலிற்கு வேண்டிய சத்துகளும், தாதுக்களும் அவற்றைச் சுற்றியுள்ள நீரில் கரைந்த நிலையிலேயே கிடைக்கின்றன.
தாவரங்களின் திசுக்களிலும், செல்களிலும் நூல் புழுக்களுக்குத் தேவையான நீர்க் கரைசல் மிகுதி. நீரும், அதில் கரைந்துள்ள பொருள்களும், நூற்புழுவின் தோல் சவ்வு மூலம் ஊடுருவி உட்செல்கின்றன. நீர் குறைந்த நிலையில் நூற்புழுக்கள் தங்கள் உடலில் உள்ள நீர்மம் முற்றிலும் வெளியேறி விடா வண்ணம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கின்றன எனக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. நிலத்தின் நீர், செடி வாடல் நிலைக்குக் (wilting point) குறைந்தால், அங்குள்ள நூற்புழுக்களின் செயல் பாதிக்கப் பட்டு, அழிந்து விடும்.
பல வகை நூற்புழுக்களும், ஒவ்வாத சூழ்நிலையில் அழிந்து விடாமல் தங்களைக் காத்துக் கொள்ள, தம் செயல்கள் அனைத்தையும் முடக்கிக் கொண்டு, செயல் முடக்க நிலையில் காணப் படுகின்றன. ஏற்ற சூழ்நிலை வரும் போது, மீண்டும் சிறுகச் சிறுக, இவை செயல் படத் தொடங்குகின்றன. செயல் முடக்க நிலை என்பது ஒவ்வொரு நூல் புழுவிற்கும், அதன் வாழ்நாளின் ஒரு பருவத்தில் மட்டுமே காணப் படும். கோதுமையைத் தாக்கும் நூல் புழுவில், இரண்டாம் இள நிலைப் பருவமும், உருளைக் கிழங்கு நூற்புழுவில் முட்டைக் கூட்டினுள் இருக்கும் முட்டையிலுள்ள நூல் புழுவும், நெல் வெண் இலை நூற்புழுவில் முன் முதிர்ச்சிப் பருவமும், செயல் முடக்க நிலையில் அமையும். நூல் புழுக்கள் நன்றாக வாழ்ந்து பல்கிப் பெருக ஏற்ற தாவர உணவு தேவை. இது இராத போது, நூல் புழுக்களின் வாழ்நாள் சுற்றுப் புறச் சூழ்நிலையின் கட்டுப்பாட்டிற்குள் அமைகிறது. தேவையான பயிர் விளைவிக்கப் படும் போது, நூல் புழுக்களின் எண்ணிக்கை மீண்டும் பெருகி மிகுதியாகிறது.
<b>வளர்ச்சியும் பால் மாறுபாடும்</b>. மிகுந்த உணவு உள்ள போது, நூற்புழுக்கள் பல வாழ்க்கைப் பருவங்களையும், விரைவாகத் தடையின்றி அடைந்து, வளர்ச்சி பெற்று முதிர்கின்றன. ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும், தோல் சவ்வும் விரிவடைகிறது. அதே போல், ஒவ்வொரு வளர்ச்சியின் முடிவையும் குறைக்க, நூற்புழுவின் மேல் தோல் உரித்து அகற்றப் படுகிறது. மரபைத் தழுவியும், உணவின் அளவைப் பொறுத்தும், நூற்புழுக்களின் ஆண், பெண் இனப் பாகுபாடு அமையும். உணவு குறையும் போது, பெரும்பாலும், ஆண் இனம் மிகுதியாகிறது. ஏற்ற சூழ்நிலையில் உணவு, குறையும் போது, பெரும்பாலும், ஆண் இனம் மிகுதியாகிறது. ஏற்ற சூழ்நிலையில், உணவு, தேவைக்கு மேல் உள்ள போது, பெண் இனம் பெருகவும், முட்டைகள் மிகுந்த இனப் பெருக்கம் நிகழவும் வாய்ப்பாகிறது. நூல் புழு எதிர்ப்புத் திறன் படைத்த பயிரில் உள்ள நூல் புழுக்களிலும், பெரும்பான்மையாக ஆண் இனமே இருக்கும்.
<b>உணவு</b>. தாவர நூல் புழுக்கள் திசுக்களில் உள்ள சாற்றையே உணவாகக் கொள்கின்றன. சில நூல் புழுக்கள்<noinclude></noinclude>
4cuu1bacpy3s62b4kirrwq6synfzs58
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/137
250
642130
1928368
2026-04-29T18:08:05Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928368
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல் புழுக் கட்டுப்பாடு 115}}</noinclude>மண்ணில் இருந்து கொண்டு, தம் அலகால் வேரின் திசுக்களைத் துளைத்துச் சாற்றை உறிஞ்சும். சில வகை நூல் புழுக்கள் வேரினுட் சென்று, சாற்றை உறிஞ்சும். அவற்றின் உடல் பகுதி மட்டும் வெளியில் தெரியும். சில வகை நூல் புழுக்கள் வேரினுட் சென்று, சாற்றை உறிஞ்சும். அவற்றின் உடல் பகுதி மட்டும் வெளியில் தெரியும். சில வகை நூல் புழுக்கள், தம் வாழ்நாள் முழுவதையுமே தாவரங்களின் திசுக்களினுள் கழிக்கும்.
நூற்புழுக்கள் திசுக்களைக் குத்திக் கிழித்து, ஊடுருவ அலகு உதவுகிறது. திசுக்களிலுள்ள சாற்றை நன்றாகக் கரையச் செய்ய, உணவுச் சுரப்பிகளின் நொதி ஓரளவு செரிக்கச் செய்து பின்னர், அந்தச் சாற்றை அலகின் நடுவில் உள்ள நுண்ணிய பாதை மூலம் உறிஞ்சி, உணவுக் குழாய் வழியாகக் குடலை அடையும். இதற்கு மூன்று நிலைகள் உள்ளன. முதலில் நூற்புழு மண்ணில் திசை அறியாமல், சரியான தாவரத்தின் வேரை நாடிச் செல்லும். தன் வாழ்நாளின் பெரும் பகுதியை நிலத்தில் கழிக்கும் நூல் புழு, உணவிற்கு ஏற்ற தாவர வேரைக் கண்டு பிடித்தலை அடிப்படையாகக் கொண்டது.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 137
|bSize = 820
|cWidth = 353
|cHeight = 275
|oTop = 440
|oLeft = 20
|Location = center}}
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->
நூல் புழுவில் பெரிதும் வளர்ச்சி பெற்றிருக்கும் நரம்பு மண்டலமும், அதைச் சார்ந்துள்ள உணர்வு, நுகர் உறுப்புகளும், தாவரங்களின் வேர் மண்டலத்திலிருந்து வெளிப் படும் வேதிப்பொருள்களுக்குத் தக்கவாறு செயல் படும். தகுந்த உணவுச் செடியின் வேரில் ஏற்படும் வேதிக் கசிவால் ஈர்க்கப் பட்டு, நூல் புழுக்கள் நிலத்தில் உள்ள நீரின் வழியாக வேரை அடைந்து, பின்னர், ஊடுருவி உட்செல்லும் அல்லது வெளியிலிருந்து கொண்டே தலையை மட்டும் உட்புகுத்தி, உணவுச் சாற்றை உறிஞ்சும். நூற்புழுக்களின் பாதை முதலில் திசை தெரியாமல் செல்லும் (அ, ஆ, இ, ஈ). வேர் மண்டலத்திற்கு அருகில் வந்தவுடன், (ஈ) தனக்கேற்ற தாவரத்தின் வேரில் கசிவு இருந்தால், நுகர் உறுப்புகளின் மூலம், அதனை உணர்ந்து, பின்னர், வேர் மண்டலத்தினூடே சென்று வேரை அடையும்.
{{right|—<b>சிவகாமி வடிவேலு</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="78"/><section begin="79"/>
{{fs|110|<b>நூல் புழுக் கட்டுப்பாடு</b>}}
பயிர்களைத் தாக்கும் நூல் புழுக்களைக் கட்டுப் படுத்துவது கடினமான செயலாகும். நூல் புழுக்களை அறவே அழிக்க இயலாவிடினும், அவற்றால் விளையும் பேரிழப்பை ஓரளவு குறைக்க இயலும். மண்ணின் ஈரம், வெப்பம், மண்ணின் கூறு, பருவ நிலைகளைப் பொறுத்து, நூல் புழுக்களின் எண்ணிக்கை மாறும். நூற்புழுக்களைக் கீழ்க் காணும் பல முறைகளில் கட்டுப் படுத்தலாம்.
<b>உழவியல் முறை</b>. இம்முறை சிக்கனமும், எளிமையும் கொண்டது. நூல் புழுக் கொல்லிகளை விடக் குறைந்த அளவிலேயே, இம்முறையில் நூல் புழுக்களைக் கட்டுப் படுத்த இயலும்.
<b>நூல் புழுக் கண்காணிப்பு</b>. மண்ணில் உள்ள நூல் புழுக்களை நன்கறிந்து, மண்ணை மிகுந்த அளவு, மித அளவு, குறைந்த அளவு, நூல் புழுக்கள் கொண்டவை எனப் பிரித்தறிய வேண்டும். உருளைக் கிழங்கின் பொன்னிற நூல் புழுக்கள் மிகக் குறைவாக உள்ள நிலங்களில், உருளைக் கிழங்கைப் பயிர் செய்யலாம்.
கோடையில் 5–7 முறை உழவு செய்தும், வயல்களில் பயிரிடாமலும் தவிர்ப்பதால், வேர் முடிச்சு நூல் புழுக்கள் பெருகா வண்ணம் தடுக்கலாம். வயல்களில் உள்ள களைகள், கட்டைப் பயிர்கள், பயிரிடாப் பருவத்தில் தோன்றும் பயிர்களைக் களைந்து அழித்தல் இன்றியமையாதது. கோடை உழவு செய்வதால், தானியப் பயிர்களில் உற்பத்தியாகும் முட்டை வடிவ நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். கட்டைப் பயிர்களை அழிப்பதால், நெல்லில் தோன்றும் யூஃப்ரா நோயைக் கட்டுப் படுத்தலாம். களைகளை நீக்குவதன் மூலம், வேர் முடிச்சு நூல் புழுக்களான மெலாய்–டோகைன், இன்காகினிட்டா, மெ.ஜவானிக்கா, துளைத்துச் செல்லும் நூல் புழுக்களான ரோடா பெலணுசிமிலிஸ், ரோடிலென்குலஸ் ரெனிபாமிஸ் ஆகியவற்றைக் கட்டுப் படுத்தலாம்.{{nop}}<noinclude><br>{{rh|அ. க. 14–8அ}}</noinclude>
lhtdgzp2tuaqiia02fm8gpxkepnfh37
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/138
250
642131
1928369
2026-04-29T18:27:25Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928369
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|116 நூல் புழுக் கட்டுப்பாடு}}</noinclude><b>பயிர்ச் சுழற்சி</b>. நூல் புழு தாக்காத பொருளாதாரப் பயிர்களைப் பயிரிடுவதால், நூல் புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கலாம். நூல் புழுக்களின் எண்ணிக்கையும், பொருளாதார அழிவிற்குக் கீழே இருக்கும். சான்றாக, மேலை நாடுகளில், உருளைக் கிழங்கை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடுவதால், பொன்னிற நூல் புழுக்களின் தாக்கம் காணப் படுவதில்லை. ஏனைய காலங்களில், உருளைக் கிழங்கைத் தவிர, ஏனைய மாற்றுப் பயிர்களைப் பயிரிடுகின்றனர்.
கோதுமைப் பயிரில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை, நூற்புழுக்கள் மொல்யா நோயை ஏற்படுத்துகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோதுமை -பயிரிட்டும், மற்றப் பருவங்களில் பயறு வகை அல்லது தானிய வகை அல்லாத பயிர்களைப் பயிரிட்டும், இந்நூற்புழுக்களின் அழிவைத் தவிர்க்கலாம். வேர் முடிச்சு நூல் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க, சோளம் போன்ற தானியப் பயிர்களைப் பயிரிடலாம். வேர் முடிச்சு நூல் புழுக்கள் தாக்கும் பயிர்களான காய்கறி, கரும்பு போன்றவற்றை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடலாம். இந்த முறைகளினால், மாற்றுப் பயிர்களைப் பயிரிடும் போது, விவசாயிகள் மிகு வருவாய் பெற இயலாத நிலையும் உள்ளது. பயிர்கள் பயிரிடும் காலத்தைப் பொறுத்து, நூற்புழுக்களின் எண்ணிக்கை உயர்ந்து, விளைச்சல் குறைகிறது. உருளைக் கிழங்கைப் பின் பட்டத்தில் பயிரிடுவதால்,பொன்னிற நூல் புழுக்கள் மிகுவதில்லை.
<b>பொறிப் பயிர்கள்</b>. குறைவான வருவாய் தரக் கூடிய, நூல் புழுக்கள் மிகுதியும் தாக்கும் பயிர்களைப் பயிரிடுவதால், முதலில் நூல் புழுக்கள் இப்பயிர்களைத் தாக்கும். நூல் புழுக்களின் வாழ்க்கைப் பருவங்கள் முடியும் முன்பே, அவற்றைத் தொடக்கத்திலேயே அழித்து விடலாம். பொன்னிற நூல் புழுக்கள் தாக்கும் உருளைக் கிழங்கிற்கு இடையே, தக்காளியைப் பயிரிட்டு, பின்னர்த் தக்காளிப் பயிரை அழிப்பதால், நூற்புழுக்களின் உற்பத்தியைத் தவிர்க்கலாம். மேலும், பயிர்களுக்குக் கீழே பசுமையான இலைகளையும், புற்களையும் பரப்புவதால், நூல் புழுக்களின் உற்பத்தியைக் குறைக்கலாம்.
<b>தரிசு நிலம்</b>. கோடைக் காலத்தில் உழவு செய்து, கட்டிகளை உடைத்துச் சமன் செய்து தரிசாக வைத்தால், சூரிய ஒளிக் கதிர்கள் பட்டு, பொன்னிற நூல் புழுக்கள், வேர் முடிச்சு நூல் புழுக்களைத் தடுக்கலாம். தாய்கறி, கரும்பு போன்றவற்றைப் பயிரிட்டுப் பின் நெல் பயிரிடுவதால், நீர் தேங்கியிருக்கும். இதன் மூலம், வேர் முடிச்சு நூல் புழுக்களைப் பெருமளவில் குறைக்கலாம்.
<b>பண்ணைத் துப்புரவு</b>. உழவு செய்தவுடன், உழவுக் கருவிகளை மண்ணின்றித் தூய்மை செய்ய வேண்டும். ஏனெனில், ஒரு வயலில் உழவு செய்தவுடன், கலப்பையை மண்ணுடன் எடுத்துச் சென்று, வேறு வயலில் உழவு செய்யும் போது, நூல் புழுக்கள் அந்த வயலில் பெருக வாய்ப்புண்டு. எலுமிச்சைப் பயிர் உள்ள வயலின் வழியாகத் திராட்சைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், எலுமிச்சையைத் தாக்கும் நூற்புழுக்கள் நீரில் சென்று, திராட்சையைத் தாக்கக் கூடும். இதனால், ஒவ்வொரு பயிருக்கும் தனித் தனி நீர் மேலாண்மை வேண்டும். வாழைக் கன்றின் மேல் தோலைச் சீவி விட்டு நடுவதால், கன்றைத் துளைத்துச் செல்லும் நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். நூல் புழுக்கள் தாக்கிய பூச்செடிகளின் மேற்பகுதியிலுள்ள இலை, தண்டு போன்றவற்றை வெட்டி அழிப்பதால், நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். மேலும், நூற்புழுக்கள் தாக்காத வளமான நாற்று, விதை, விதைக் கரணை ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து நடவு செய்வதால், நூல் புழுக்களைத் தவிர்க்கலாம்.
<b>சுடு நீர் முறை</b>. விதை நெல்லைச் சுடு நீரில் 10–20 நிமிடங்கள் நனைப்பதால், நெல்லின் வெள்ளை நுனி இலை நோயைக் கட்டுப் படுத்தலாம். இரண்டு பங்கு நீர், இரண்டு பங்கு கொதி நீர், ஒரு பங்கு விதை என்னும் விகிதத்தில் கலக்க வேண்டும். சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள நூல் புழுக்களைக் கட்டுப் படுத்துவதற்குக் கிழங்குகளை நன்கு மூடப்பட்ட கிடங்குகளில் இட்டு, 50°C அளவில் வெப்பக் காற்றைச் செலுத்த வேண்டும். மேல் மண்ணில் உள்ள நூல் புழுக்களைக் கட்டுப்படுத்த, காய்ந்த இலை, தண்டுகளை 15 செ.மீ. உயரத்தில் மண்ணின் மேல் பரப்பி, அவற்றை எரிக்க வேண்டும்.
உருளைக் கிழங்கின் மேல் உள்ள பொன்னிற நூல் புழுக்களின் கூட்டுப் புழுக்களைத் தூரிகைகளைக் (brush) கொண்டு நீக்கலாம். சணல் சாக்குகளில், கிழங்குகளைப் போட்டு நன்கு குலுக்குவதால், உருளைக் கிழங்குகளில் ஒட்டியுள்ள கூட்டுப் புழுக்கள் விழுந்து விடும். வயல்களில் வேப்பம் புண்ணாக்கு, நிலக் கடலைப் புண்ணாக்கு, ஆமணக்குப் புண்ணாக்கு போன்றவற்றை இடலாம். இதற்கு மேல், மரத் தூள், பயிர்க் கழிவுகளைப் பரப்பலாம். இதனால், மண்ணில் உருவாகும் பாக்டீரியாக்கள் நூல் புழுக்களை உண்டு, அவற்றின் உற்பத்தியைக் குறைக்கும். மக்கிய காட்டு உரம், எண்ணெய்ப் புண்ணாக்கு வகை, மரத் தூள் ஆகியவற்றை இடுவதால், வேர் முடிச்சு நூல் புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். இவ்வகை நூற்புழுக்கள் தாக்கும் பயிர்களான மிளகாய்,<noinclude></noinclude>
k1kwj6gui805ejtmc213wejjquxra8m
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/139
250
642132
1928379
2026-04-29T23:23:06Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928379
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல் புழுக் கட்டுப்பாடு 117}}</noinclude>காய்கறி வகை, பூ வகைக்கு இடையே, மஞ்சள் சாமந்தியைப் பயிர் செய்வதால், நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம்.
<b>வேதி முறை</b>. விதைகளை மெத்தில் புரோமைடு மருந்தில் 1 நாள் வைத்திருந்து, நச்சைப் புகைக்கச் செய்து, நூல் புழுக்களைக் கொல்லலாம். பஞ்சு நீக்கம் செய்த பருத்தி விதைகளை, டைபுரோமோ குளோரோ புரோபேன் நூல் புழுக் கொல்லியுடன் கலந்து விதைத்தால், விதைத்த 40 நாள்கள் வரை, நூல் புழுக்களின் தாக்குதலிலிருந்து, பருத்தி பாதுகாக்கப் படுகிறது.
<b>மண்ணில் உள்ள நூல் புழுக்களைக் கட்டுப் படுத்துதல்</b>. மண்ணில் இயற்கையிலேயே உள்ள நூல் புழுக்களைக் கட்டுப் படுத்த, நூல் புழுக் கொல்லிகளைப் பயிர் விதைப்பு அல்லது நடவுக்கு முன்போ, பின்போ, நீருடன் கலந்து, மண்ணில் இட வேண்டும். நூல் புழுக் கொல்லியை மண்ணினுள் செலுத்து முன், நிலத்தை நன்றாக உழ வேண்டும். பயிர்களின் கழிவுப் பொருள்களை நீக்கி, மண் மிகுதியும், மென்மையாகும் நிலை வரும் வரை கட்டிகளை உடைத்துச் சமன் செய்ய வேண்டும். மண்ணில் ஈர மிகுதியோ, வறட்சியோ இருக்கக் கூடாது. விதைகள் நன்கு முளைக்கும் அளவுக்கு ஈரம் இருக்க வேண்டும். பயிர் நடுவதற்கு அல்லது விதைகள் நடுவதற்குக் குறைந்தது 2 அல்லது 3 வாரங்களுக்கு முன்பே, நூல் புழுக் கொல்லிகளை மண்ணினுள் செலுத்த வேண்டும். இல்லையேல், விதைகளையும், நாற்றுகளையும், செடிகளையும் நூற்புழுக்கள் பாதிக்கும். நூற்புழுக் கொல்லிகளைச் செலுத்திய பின், மண்ணைச் சமன் செய்து, நூற்புழுக் கொல்லி செலுத்திய துளைகளை மூடி, மண்ணைக் கெட்டிப் படுத்த வேண்டும்.
<b>நூல் புழுக் கொல்லிகள்</b>. டி.டி. கலவை என்பது குறிப்பிடத் தக்க நூல் புழுக் கொல்லியாகும். இதை, மண்ணில் செலுத்துவதற்கு முன், மண்ணில் நன்றாக நீர் பாய்ச்ச 'வேண்டும். பின்னர், நிலத்தை நன்றாக உழுது, சமன் செய்ய வேண்டும். டி.டி. கலவையை, நூல் புழுக் கொல்லியைச் செலுத்தும் ஊசிக் கருவி மூலம், மண்ணினுள் 30 செ.மீ. இடைவெளியில் செலுத்தலாம். மருந்து செலுத்திய வயலில் பாலித்தீன் உறைகளைப் பரப்பி, நச்சு வெளியே செல்லா வண்ணம் தடுக்க வேண்டும். டி.டி. கலவையிலிருந்து வெளி வரும் வளிமம், மண் துகள்களுக்கு இடையே ஊடுருவிச் சென்று, நூல் புழுக்களைக் கொல்லும். மண்ணின் மேல் குறைந்தது, இரண்டு நாள்களுக்குப் பாலித்தீன் அட்டைகளைப் பரப்பி மூடி வைக்க வேண்டும். இதனால், எஞ்சிய நூல் புழுக் கொல்லி மண்ணிலிருந்து ஆவியாக வெளியேறும். மருந்து செலுத்திய 14 நாள்களுக்குப் பின்னரே, விதைகளை விதைக்கலாம் அல்லது பயிர்களை நடலாம்.
டி.பி.சி.பி. என்பது ஒரு நீர்ம நூல் புழுக் கொல்லியாகும். இதை மண்ணிற்குள் ஊசிக் கருவி மூலம் செலுத்தலாம். அல்லது விதைப்பதற்கு முன்போ, நட்ட பின்போ நீர் பாய்ச்சும் போது, நீருடன் கலந்து விடலாம். இந்த நூற்புழுக் கொல்லியால், பயிர்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாது. ஆனால், இதைக் கையாளும் போது, சில தீங்குகள் விளைவதால், இது பெரும்பாலும் பயன் படுத்தப் படுவதில்லை.
ஃபென்சல்ஃபோதியான் என்பது குருணை வடிவான நூல் புழுக் கொல்லியாகும். இது இந்தியா, ஜெர்மனி, நீலகிரி மாவட்டப் பயிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பொன்னிற நூல் புழுக்களைக் கட்டுப் படுத்த ஜெர்மனி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டது. ஆனால், தற்போது இந்தியாவில் இந்நூல் புழுக் கொல்லி விற்பனை செய்யப் படுவதில்லை. ஃபென்னமிஃபாஸ் என்னும் குருணை மருந்து நூல் புழுக் கொல்லி, நெமகூர் என்னும் வணிகப் பெயரில் ஆய்வில் உள்ளது.
ஃயபோரேட் என்பதன் வணிகப் பெயர் திம்மெட் என்பதாகும். இது ஊடுருவிப் பாயும் பூச்சி கொல்லியுமாகும். விதைக்கும் போது, இதை விதையுடன் கலக்கலாம். இதை தொடு நஞ்சாகவும், வளிம நஞ்சாகவும், சிலந்தி நஞ்சாகவும் பயன் படுத்தலாம். இது நீண்ட நாள்கள் மண்ணில் நிலைத்து நிற்காது. இந்நூல் புழுக் கொல்லியால், வேர் முடிச்சு நூல் புழு, பொன்னிற நூல் புழு, வேர் அழுகல் நூல் புழு, திராட்சை நூல் புழு, பூப்பயிர் நூல் புழு போன்றவற்றைக் கட்டுப் படுத்தலாம்.
பொன்தியான் என்பது ஒரு கனிமப் பாஸ்ஃபரஸ் பூச்சி கொல்லியாகும். இது ஊடுருவிப் பாயும் நஞ்சாகவும், தொடு நஞ்சாகவும் பயன் படும். பயிர்களில், இது வேதி மாற்றமடைந்து, சல்பாக்சைடுகளாகவும் சல்ஃபோன் களாகவும் மாற்றப் படுவதால், கொல்லும் தன்மை கூடுதலாகக் காணப் படுகிறது. நட்ட 45ஆம் நாளில் இதை ஹெக்டேருக்கு 500 மி.லி. வீதம் நெல்லில் தெளிப்பதினால், நெல்லின் வெள்ளை நுனி நூல் புழுவின் தாக்குதலைக் கட்டுப் படுத்தலாம்.
<b>கார்பமேட் கொல்லிகள்</b>. கார்போஃயூரான், இந்த நூல் புழுக் கொல்லி 3% குருணையாகும். இதன் வணிகப்<noinclude></noinclude>
nq5say4n1z6vcc9ijkptl57wnaxogqd
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/140
250
642133
1928380
2026-04-29T23:39:30Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928380
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|118 நூல் புழுச் சூழலியல்}}</noinclude>பெயர் ஃபியூரடான் என்பதாகும். ஊடுருவிச் செல்லும் இந்நச்சுக் கொல்லியைக் கொண்டு, நெல்லின் வெள்ளை நுனி நோய், வேர் நூல் புழு, வேர் முடிச்சு நூல் புழு, நீள் முட்டை வடிவ நூல் புழு, கோதுமை, பார்லிப் பயிர்களில் தோன்றும் தானிய நீள் முட்டை நூல் புழு, வாழையில் துளைத்து உண்ணும் நூல் புழு ஆகியவற்றைக் கட்டுப் படுத்தலாம்.
<b>ஆல்டிகார்ப்</b>. இதன் வணிகப் பெயர் டெமிக் என்பதாகும். 10% குருணையாக விற்கப் படும் இதை, ஊடுருவிப் பாயும் நூல் புழுக் கொல்லியாகவும் பயன் படுத்தலாம். இந்நூல் புழுக் கொல்லியில் உள்ள கந்தக அணுக்கள், ஆக்சிஜனுடன் இணைந்து, வேதி மாற்றம் அடைந்து, சல்ஃபாக்சைடுகளாகவும், சல்ஃபோன்களாகவும் மாற்றப் படுகின்றன. ஆல்டிகார்ப் குருணைகளை, ஹெக்டேருக்கு 1 கி.கி. வீரிய மருந்து என்னும் அளவில் இடலாம்.
<b>ஆக்சாமில்</b>. இந்த நூல் புழுக் கொல்லி, 24% நீர்மமாகவும், 10% குருணையாகவும் உள்ளது. இது பரந்த அளவில் நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தும் தன்மை உடையது. இதன் வணிகப் பெயர் வைடேட் என்பதாகும். ஊடுருவிச் செல்லும் இந்நச்சுக் கொல்லி, பயிர்களின் மேல் தெளிக்கும் போது, ஊடுருவிச் சென்று, வேர்களில் உள் நூல் புழுக்களைக் கொல்லும் திறன் பெற்றுள்ளது.
{{right|—<b>குரு. பாலசுப்ரமணியன்}}
துணை நூல்</b>. B. Vasantharaj David and T. Kumaraswamy, <i>Elements of Economic Entomology</i>, Popular Book Depot, Madras, 1975.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="79"/><section begin="80"/>
{{fs|110|<b>நூல் புழுச் சூழலியல்</b>}}
நூல் புழுக்கள் மெல்லியவாகவும்,மிக நுண்ணியவாகவும், நூலிழை போல இரு நுனிப் பகுதிகள் குறுகியும் காணப் படும். நூல் என்பதைக் குறிக்கும் நீமா (nema) என்னும் கிரேக்க சொல்லைத் தழுவியே, நூற்புழுக்கள் (nematodes) என்று பெயர் ஏற்பட்டது. பாம்பு போல நெளிந்து செல்லும் இவை செயல்படவும், உயிர் வாழவும் நூற்புழுக்களுக்குச் சிறிதளவாவது நீர் இருக்க வேண்டும். நூல் புழுக்கள், உப்பு நீர்க் கடலில் இருக்கக் கூடியவை, மனிதரையும், விலங்குகளையும் பாதிக்கக் கூடியவை, தாவரங்களைப் பாதிக்கக் கூடியவை, முக்கிய தாவரங்களில் உயிர் வாழ்பவை எனப் பிரித்தறியலாம்.
தாவர நூல் புழுக்கள் மிக நுண்ணியவை; இவை செடிகளின் வேரின் திசுக்களிலும், வேர் மண்டலத்திலும் உள்ளமையால், இந்தச் சூழ்நிலையில் ஏற்படும் மாறுதல்கள் இந்நூல் புழுக்களைப் பாதிக்கும். நூல் புழுக்களுக்கும், அவற்றிற்கு உணவாக அமையும் தாவரங்களுக்கும் நெருங்கிய பிணைப்பு உள்ளது. தாவரங்களை அவை விளையும் நிலத்தின் தன்மை, சுற்றுச் சூழல், தட்ப வெப்ப நிலை ஆகியவை பாதிக்கின்றன. தாவர நூல் புழுக்களைப் பொறுத்த வரை, அவை தங்கி வாழும் செடி, அதன் சுற்றுப் புறம், அதில் ஏற்படும் மாறுதல்கள், அதனால் இந்நூல் புழுக்களுக்கு உண்டாகும் பாதிப்பு முதலியவற்றை விளக்குவதே அதன் சூழலியல் (ecology) ஆகும்.
சூழலியல், மண்ணின் வகை, அதன் தன்மை, வெப்பம், ஈரம், காற்று, மண்துகள்களுக்கு இடையேயுள்ள இடைவெளி, அவற்றிலுள்ள கரிமப் பொருள்களின் அளவு, காற்றின் ஈரப் பசை, மழை முதலியன அடங்கும். மண், சிறிய மண் துகள்களில் ஆயிரக் கணக்கான நூல் புழுக்கள் இருக்கும். எனினும், நூற்புழுக்களின் எண்ணிக்கையும், வகையும், மண்ணின் மாதிரியையும், தன்மையையும் பொறுத்தே இருக்கும். மணற் பாங்கானது, சதுப்பு, வயல் மண், சிறிதளவு மணல் கலந்தது, படுகை மண் என நிலத்தைப் பல வகைகளாகப் பிரிக்கலாம். இந்த மண் கண்டங்களில், மண் துகள்களின் அளவு பெரியதாகவோ, சிறியதாகவோ, நுண்ணியதாகவோ இருக்கும். இதைப் பொறுத்து, அந்நிலத்தில் மண் துகள்களின் இடைவெளியும், அதில் தேங்கக் கூடிய நீரின் அளவும் இருக்கும்.மண் துகள்களைச் சுற்றியுள்ள நீர் மண்ணின் தன்மையைப் பொறுத்தது. பருமனான தன்மையுள்ள மண்ணில், மணல் மிகுந்திருக்கும். பருமன் மிகுந்த மண்ணில், இடைவெளி கூடியிருக்கும். அதில் நீர் தேங்காமல், வடிந்து விடும். இத்தகைய மண்ணில் வேர் முடிச்சு, நூற்புழு முதலியன மிகுந்திருக்கும். நுண்ணிய மண் துகள்கள் மிகுந்துள்ள மண்ணில், மணல் மிகக் குறைவாக இருக்கும். இடைவெளியும் குறுகியிருக்கும். நீர் களிமண்ணால் ஈர்க்கப் பட்டிருக்கும். உடனடியாக வடியாமல் நீர் தேங்கி நிற்கும். இதில் வேர் அழுகல் நோயுண்டாக்கும் மிக நுண்ணிய உரு அமைப்புக் கொண்ட நூற்புழுக்கள் மிகுந்திருக்கும். எலுமிச்சை நூற்புழு போன்றவை இரு வகை மண்ணிலும் இருக்கும்.
<b>தட்ப வெப்ப நிலை</b>. மழை, வெப்பம் ஆகியவை தாவர வளர்ச்சிக்கும், நூல்புழுக்களுக்கும் இன்றியமையாதவை. குறிப்பாக இலை, தண்டு, பூ முதலியவற்றைத் தாக்கும் நூற்புழுக்களின் எண்ணிக்கை, தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு மாறு படும். காற்றின் ஈரப் பசை மிகுந்தால்,<noinclude></noinclude>
gd8mmc2rfm2u9lbp5umateamctfsrqr
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/107
250
642134
1928400
2026-04-30T03:43:15Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஏகாம்பரமாவது. நடந்த செய்தியைச் சொல்லுகிறான்! இவர், யாரோ கொடுத்த தகவல் என்றல்லவா கூறுகிறார். பொன்னிவளவன் பாட்டுப்படி, தெளிவில்லாத மனது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928400
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|98||கலைஞர்}}</noinclude>ஏகாம்பரமாவது. நடந்த செய்தியைச் சொல்லுகிறான்! இவர், யாரோ கொடுத்த தகவல் என்றல்லவா கூறுகிறார்.
பொன்னிவளவன் பாட்டுப்படி, தெளிவில்லாத மனதுக்குத்தான் தெர்பு இருக்காது என்பார்கள்.
இவர் உள்ளம் தெளிவடைந்த உள்ளமாயிற்றே! ஏன், தெம்பை இழந்துவிட்டு வம்பை விலை பேசுகிறது?
உடன்பிறப்பே. உன் வாயிலாக அவருக்குச் சொல்கிறேன் “கண்ணால் கண்டதும் பொய்—காதால் கேட்டதும் பொய்-தீர விசாரிப்பதே மெய்”— என்ற முன்னோர் அறிவுரையை மறக்க வேண்டாமென்று!
யார் யாரோ சொல்வதை நம்பி, விசாரிக்காமல், தற்காலிகமாக இருக்கிற என் கடற்கரைப் பொழுது போக்கையும் வீணாக அவர் கெடுத்துவிட வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
30 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
e3txccc8s4ckvi07k454i8obcmmpr27
1928746
1928400
2026-04-30T07:38:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|98||கலைஞர்}}</noinclude>ஏகாம்பரமாவது, நடந்த செய்தியைச் சொல்லுகிறான்! இவர், யாரோ கொடுத்த தகவல் என்றல்லவா கூறுகிறார்.
பொன்னிவளவன் பாட்டுப்படி, தெளிவில்லாத மனதுக்குத்தான் தெம்பு இருக்காது என்பார்கள்.
இவர் உள்ளம் தெளிவடைந்த உள்ளமாயிற்றே! ஏன், தெம்பை இழந்துவிட்டு வம்பை விலை பேசுகிறது?
உடன்பிறப்பே. உன் வாயிலாக அவருக்குச் சொல்கிறேன் “கண்ணால் கண்டதும் பொய்—காதால் கேட்டதும் பொய்-தீர விசாரிப்பதே மெய்”— என்ற முன்னோர் அறிவுரையை மறக்க வேண்டாமென்று!
யார் யாரோ சொல்வதை நம்பி, விசாரிக்காமல், தற்காலிகமாக இருக்கிற என் கடற்கரைப் பொழுது போக்கையும் வீணாக அவர் கெடுத்துவிட வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
30 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
oebz8gqb2jwnb1cjhdan01fwi57xcv6
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/108
250
642135
1928401
2026-04-30T03:47:19Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{larger|<b>கலைஞர் கடிதம்</b>}} உடன்பிறப்பே, மே இரண்டாம் நாள் ஞாயிறு மாலை சென்னைப் பெரியார் திடலில் பாரதிதாசன் விழாவில் உன்னைச் சந்திக்கலாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928401
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>கலைஞர் கடிதம்</b>}}
உடன்பிறப்பே,
மே இரண்டாம் நாள் ஞாயிறு மாலை சென்னைப் பெரியார் திடலில் பாரதிதாசன் விழாவில் உன்னைச் சந்திக்கலாம் என்று ஆசைகளை நெஞ்சில் அலைபாய விட்டுக் கொண்டிருந்தேன். நெஞ்சுயர்த்தி, நிமிர்ந்து நின்று பாடிய கவிஞன் — நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலவு — அந்தப் பாவேந்தனின் விழாவில் பாசமிகு நமது சந்திப்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு நிகழுமென மகிழ்ந்திருத்தேன். இயலவில்லை. வருந்தாதே! வாழ்க பாரதிதான்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
3 – 5 – 76}}
(விழாவுக்கு “எமர்ஜன்சி” அரசு தடை விதித்து விட்டதால் எழுதியது.){{nop}}<noinclude></noinclude>
dqbw1b57eyxlt5xjvzjrvg26oaw265i
1928748
1928401
2026-04-30T07:39:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>கலைஞர் கடிதம்</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
மே இரண்டாம் நாள் ஞாயிறு மாலை சென்னைப் பெரியார் திடலில் பாரதிதாசன் விழாவில் உன்னைச் சந்திக்கலாம் என்று ஆசைகளை நெஞ்சில் அலைபாய விட்டுக் கொண்டிருந்தேன். நெஞ்சுயர்த்தி, நிமிர்ந்து நின்று பாடிய கவிஞன் — நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலவு — அந்தப் பாவேந்தனின் விழாவில் பாசமிகு நமது சந்திப்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு நிகழுமென மகிழ்ந்திருத்தேன். இயலவில்லை. வருந்தாதே! வாழ்க பாரதிதான்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
3 – 5 – 76}}
(விழாவுக்கு “எமர்ஜன்சி” அரசு தடை விதித்து விட்டதால் எழுதியது.){{nop}}<noinclude></noinclude>
3ibq118l51qc19n70o922168fe1qd27
1928850
1928748
2026-04-30T08:21:53Z
Booradleyp1
1964
1928850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>கலைஞர் கடிதம்</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
மே இரண்டாம் நாள் ஞாயிறு மாலை சென்னைப் பெரியார் திடலில் பாரதிதாசன் விழாவில் உன்னைச் சந்திக்கலாம் என்று ஆசைகளை நெஞ்சில் அலைபாய விட்டுக் கொண்டிருந்தேன். நெஞ்சுயர்த்தி, நிமிர்ந்து நின்று பாடிய கவிஞன் — நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலவு — அந்தப் பாவேந்தனின் விழாவில் பாசமிகு நமது சந்திப்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு நிகழுமென மகிழ்ந்திருத்தேன். இயலவில்லை. வருந்தாதே! வாழ்க பாரதிதான்!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
3 – 5 – 76}}
(விழாவுக்கு “எமர்ஜன்சி” அரசு தடை விதித்து விட்டதால் எழுதியது.){{nop}}<noinclude></noinclude>
51i2lnbaxpoc1u9w6cs8xp3q6zokcgq
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/110
250
642136
1928403
2026-04-30T03:53:41Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நீதிமன்றங்களில் சில மனுக்களை அளித்து வாதாடி வருகிறோம். எதுவும் முறையாக நடைபெற வேண்டுமென்று கருதுவது பின்வாங்குவதாகாது! {{Right|அன்புள்ள,<..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928403
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்101||}}</noinclude>நீதிமன்றங்களில் சில மனுக்களை அளித்து வாதாடி வருகிறோம்.
எதுவும் முறையாக நடைபெற வேண்டுமென்று கருதுவது பின்வாங்குவதாகாது!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
4 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
foou4nvjn4m39jfzwvao517aygozr8c
1928753
1928403
2026-04-30T07:41:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்101||}}</noinclude>நீதிமன்றங்களில் சில மனுக்களை அளித்து வாதாடி வருகிறோம்.
எதுவும் முறையாக நடைபெற வேண்டுமென்று கருதுவது பின்வாங்குவதாகாது!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
4 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
ddlkh62dujrocq9xu0ovv1wj4vu5be7
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/111
250
642137
1928404
2026-04-30T03:57:11Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{larger|<b>மனவேதனை போக்கும் மலைமருந்து!</b>}} உடன்பிறப்பே, உன் அன்பு மடல்கள் கிடைத்தன. என் இதயத்தைப் பிழிந்தெடுத்து இரத்தத்தை கண்ணீர்ச் சாற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>மனவேதனை போக்கும் மலைமருந்து!</b>}}
உடன்பிறப்பே,
உன் அன்பு மடல்கள் கிடைத்தன. என் இதயத்தைப் பிழிந்தெடுத்து இரத்தத்தை கண்ணீர்ச் சாறாக்கி, என் விழி வழியே கன்னத்தில் ஓடவிட்டன அந்த எழுத்துக்கள்!
எவ்வளவோதொலைவு எனக்கும் உனக்கும் இடையிலே இருந்தாலும் இடைவெளி என்பது ஒரு சிறு நூலிழையில் நூறில் ஒரு பகுதிகூட இல்லாத அளவுக்கு நம் இதயங்கள் இணைந்து கிடப்பதால் அல்லவா நீ எழுதுகிற கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் என்னை உலுக்குகிற சக்தியும் இருக்கிறது; உறுதிப்படுத்துகிற வல்லமையும் இருக்கிறது!
நீ விருதுகளைப் பெறுகிற நேரத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறேன். விழுப்புண்களைப் பெறுகிற நேரத்தில் வேதனைக் கண்ணீரால் அந்தப் புண்களைக் குளிப்பாட்டியுமிருக்கிறேன். அதைப் போலவே எனக்காக நீ மகிழ்ந்த நேரங்களும் உண்டு! அழுது கண்ணீர் கொட்டிய நேரங்களும் உண்டு! இந்தப் பாச உணர்வு உனக்கும் எனக்கு மிடையே எப்படி ஏற்பட்டது என எண்ணி எண்ணிநான் வியப்பதுண்டு! வியப்பு நீக்கும் விடைகளாக என் எதிரே, பெரியாரும் அண்ணாவும் நிற்பார்கள்! ஆம் அவர்கள் கட்டி வளர்த்த குடும்ப பாச உணர்வுதானே இது! வெறும் அரசியல் கட்சிகளில் தலைவர், செயலாளர், பொருளாளர் என்று நிர்வாகிகள் அளவிலும் தொண்டர்கள் அளவிலும் தொடர்புகள் இருப்பதுண்டு! ஆனால்<noinclude></noinclude>
04zbtrrhkruqh9ji3v1t6p7fkagkrio
1928755
1928404
2026-04-30T07:45:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>மனவேதனை போக்கும் மலைமருந்து!</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
உன் அன்பு மடல்கள் கிடைத்தன. என் இதயத்தைப் பிழிந்தெடுத்து இரத்தத்தை கண்ணீர்ச் சாறாக்கி, என் விழி வழியே கன்னத்தில் ஓடவிட்டன அந்த எழுத்துக்கள்!
எவ்வளவோ தொலைவு எனக்கும் உனக்கும் இடையிலே இருந்தாலும் இடைவெளி என்பது ஒரு சிறு நூலிழையில் நூறில் ஒரு பகுதிகூட இல்லாத அளவுக்கு நம் இதயங்கள் இணைந்து கிடப்பதால் அல்லவா நீ எழுதுகிற கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் என்னை உலுக்குகிற சக்தியும் இருக்கிறது; உறுதிப்படுத்துகிற வல்லமையும் இருக்கிறது!
நீ விருதுகளைப் பெறுகிற நேரத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறேன். விழுப்புண்களைப் பெறுகிற நேரத்தில் வேதனைக் கண்ணீரால் அந்தப் புண்களைக் குளிப்பாட்டியுமிருக்கிறேன். அதைப் போலவே எனக்காக நீ மகிழ்ந்த நேரங்களும் உண்டு! அழுது கண்ணீர் கொட்டிய நேரங்களும் உண்டு! இந்தப் பாச உணர்வு உனக்கும் எனக்குமிடையே எப்படி ஏற்பட்டது என எண்ணி எண்ணி நான் வியப்பதுண்டு! வியப்பு நீக்கும் விடைகளாக என் எதிரே, பெரியாரும் அண்ணாவும் நிற்பார்கள்! ஆம் அவர்கள் கட்டி வளர்த்த குடும்ப பாச உணர்வுதானே இது! வெறும் அரசியல் கட்சிகளில் தலைவர், செயலாளர், பொருளாளர் என்று நிர்வாகிகள் அளவிலும் தொண்டர்கள் அளவிலும் தொடர்புகள் இருப்பதுண்டு! ஆனால்<noinclude></noinclude>
aptiauib7uqn2j7289b6cfcfdfoxc23
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/112
250
642138
1928405
2026-04-30T04:05:44Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்த இயக்கம் அப்படி வளர்க்கப்படவில்லை. முற்றிலும் பாச உணர்வை மையமாக வைத்தே நமது இயக்க அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் சிலபே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928405
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||103}}</noinclude>இந்த இயக்கம் அப்படி வளர்க்கப்படவில்லை. முற்றிலும் பாச உணர்வை மையமாக வைத்தே நமது இயக்க அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் சிலபேர், கட்டுப்பாட்டைமீறி இந்தக்
கழகக் கொள்கைகளைச் சிதைக்க முனையும்போதும், அல்லது தங்களையமறியாமல் தன்னலத்திற்கு ஆட்பட்டு இந்தப் பெரிய குடும்பத்தை விட்டுப் பிரிந்துவிடத் திட்டமிட்டுப் பணியாற்றும் போதும் வெறும் அரசியல் விமர்சனம் செய்து அதனை அலட்சியப்படுத்திவிட முடியாமல் மனங்குமுறுகிறோம்! பாசத்தோடு பழகியவர்கள் சிலபேர் பல்வேறு காரணங்களுக்காக நம்மிடமிருந்து வேறுபடும் போது நம் நெஞ்சம் அழுது புலம்பத்தான் செய்கிறது.
அரசியலுக்காகவே வந்து அரசியல் நடத்திவிட்டு “அக்கரைப் பச்சை”யிலே நாட்டம் கொண்டு நடையைக் கட்டுகிறவர்களும் சிலர் இல்லாமல் இல்லை! அவர்களுக்காக நாம் கவலை கொண்டதுமில்லை.
என்மீது உள்ளூரப் பகையில்லாத உடன்பிறப்புக்கள் சிலபேர் உள்ளூர்க் கோபதாபங்களால் வெளியேறிவிட்டதை எண்ணி நான் வேதனைப்படலாமா இருந்திருப்பேன் என்று கருதுகிறாய்!
அதனால் தானே அவர்கள், அவர்களது இடத்தை நிலைப்படுத்திக்கொள்ள என்மீது பொழியும் நெருப்புக்கணைகளைக்கூட மலர்க் கணைகளாக எண்ணிக் கொள்கிறேன் என்பதை உன்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்! அது போலவே அவர்களின் மனப்புழுக்கத்தையும் நான் அறியமுடியாத தூரத்தில் இல்லை! நமது குடும்ப பாசத்தை யாரும் அழிக்க முடியாது என்பதைப் போலவே நமது கொள்கைகளையும் எந்தச் சூழ்நிலையும் சூன்யமாக்கி விட முடியாது என்ற திடமான உள்ளம் எனக்கு உண்டு.
நாம் மட்டும் வாழ எண்ணியிருந்தால், எத்தனையோ ஆராதனைகளோடு தொடர்ந்து வாழ்ந்துகொண்டேயிருக்-<noinclude></noinclude>
ja62056s8nlx9zrp4qlspqrjavk33fl
1928756
1928405
2026-04-30T07:47:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||103}}</noinclude>இந்த இயக்கம் அப்படி வளர்க்கப்படவில்லை. முற்றிலும் பாச உணர்வை மையமாக வைத்தே நமது இயக்க அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் சிலபேர், கட்டுப்பாட்டைமீறி இந்தக்
கழகக் கொள்கைகளைச் சிதைக்க முனையும்போதும், அல்லது தங்களையறியாமல் தன்னலத்திற்கு ஆட்பட்டு இந்தப் பெரிய குடும்பத்தை விட்டுப் பிரிந்துவிடத் திட்டமிட்டுப் பணியாற்றும் போதும் வெறும் அரசியல் விமர்சனம் செய்து அதனை அலட்சியப்படுத்திவிட முடியாமல் மனங்குமுறுகிறோம்! பாசத்தோடு பழகியவர்கள் சிலபேர் பல்வேறு காரணங்களுக்காக நம்மிடமிருந்து வேறுபடும் போது நம் நெஞ்சம் அழுது புலம்பத்தான் செய்கிறது.
அரசியலுக்காகவே வந்து அரசியல் நடத்திவிட்டு “அக்கரைப் பச்சை”யிலே நாட்டம் கொண்டு நடையைக் கட்டுகிறவர்களும் சிலர் இல்லாமல் இல்லை! அவர்களுக்காக நாம் கவலை கொண்டதுமில்லை.
என்மீது உள்ளூரப் பகையில்லாத உடன்பிறப்புக்கள் சிலபேர் உள்ளூர்க் கோபதாபங்களால் வெளியேறிவிட்டதை எண்ணி நான் வேதனைப்படலாமா இருந்திருப்பேன் என்று கருதுகிறாய்!
அதனால் தானே அவர்கள், அவர்களது இடத்தை நிலைப்படுத்திக்கொள்ள என்மீது பொழியும் நெருப்புக்கணைகளைக்கூட மலர்க் கணைகளாக எண்ணிக் கொள்கிறேன் என்பதை உன்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்! அது போலவே அவர்களின் மனப்புழுக்கத்தையும் நான் அறியமுடியாத தூரத்தில் இல்லை! நமது குடும்ப பாசத்தை யாரும் அழிக்க முடியாது என்பதைப் போலவே நமது கொள்கைகளையும் எந்தச் சூழ்நிலையும் சூன்யமாக்கி விட முடியாது என்ற திடமான உள்ளம் எனக்கு உண்டு.
நாம் மட்டும் வாழ எண்ணியிருந்தால், எத்தனையோ ஆராதனைகளோடு தொடர்ந்து வாழ்ந்துகொண்டேயிருக்-<noinclude></noinclude>
j3w4n74h1kc6uuvmkjtfzvhduyodiyi
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/113
250
642139
1928406
2026-04-30T04:12:05Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கலாம்! சாகும்வரையில் வாழ்க்கையைப் போராட்டமாக்கிக் கொண்டாரே பெரியார் — எதற்காக? மண்டிக் கடைகளுக்கும் மாடமாளிகைகளுக்கும் சொந்தக்காரர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|104||கலைஞர்}}</noinclude>கலாம்! சாகும்வரையில் வாழ்க்கையைப் போராட்டமாக்கிக் கொண்டாரே பெரியார் — எதற்காக? மண்டிக் கடைகளுக்கும் மாடமாளிகைகளுக்கும் சொந்தக்காரராக இருந்துகொண்டே யாருடைய எதிர்ப்புக்கும் ஆளாகாமலே “ஸ்ரீமான் ராமசாமி நாயக்க”ராக அவர் வாழ்ந்து மறைந்திருக்க முடியாதா?
தள்ளாத வயதில், பொல்லாத வியாதிகளோடு போரிட்டுக்கொண்டு— “முக்கி முனகி” யவாறு 95-ஆவது வயதிலும் பட்டிதொட்டிகளுக்குப் பயணம் சென்று பக லென்றும் இரவென்றும் பாராமல் பிரச்சாரம் செய்தாரே, யாருக்காக? எந்தக் கொள்கை வாழ்வதற்காக? யார் முன்னேறுவதற்காக?
விடிய விடியக் கண்விழித்து தம்பிக்குக் கடிதம் எழுதி, வேல்கொண்டு புண்ணில் குத்துவது போன்ற மாற்றாரின் நாராச மொழிகளைப் பொறுத்துக்கொண்டு, வீழ்ச்சியுற்ற சமுதாயத்தில் எழுச்சி வேண்டும். விசை யொடிந்த தேகத்தில் வன்மை வேண்டுமென முழங்கி ஊர் பல சுற்றிச் சுற்றி உழைத்தாரே, பேரறிஞர் பேரறிஞர் அண்ணா எதற்காக? யாருக்காக?
பதவிகள் எதிர்பாராமல் அல்லவா தேடி வந்தன!
பதவியை எதிர் நோக்கியா அவர் பொதுவாழ்வுப் பணியில் குதித்தார்? இல்லையே!
அவரது அறிவு ஆற்றல் ஆங்கிலப் புலமை அனைத்துக்கும் எத்தனையோ உயர்ந்த இடங்கள்; அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லாத அளவுக்குக் கிடைத்திருக்குமே! பெரியாரின் இயக்கத்தை அவர் தேர்ந்தெடுக்காமல் ஆரம்பத்திலேயே வேறு பாதைக்குப் போயிருந்தால் விளைவுகளே வேறாகியிருக்குமல்லவா?
என்னைத்தான் எடுத்துக் கொள்ளேன்! ஏழாண்டுக்காலம் முதலமைச்சராக வரப்போகிறோம் என்று திட்ட-<noinclude></noinclude>
c8h0zfvrifmwxgbm3r19ns1qadccu5h
1928757
1928406
2026-04-30T07:48:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|104||கலைஞர்}}</noinclude>கலாம்! சாகும்வரையில் வாழ்க்கையைப் போராட்டமாக்கிக் கொண்டாரே பெரியார் — எதற்காக? மண்டிக் கடைகளுக்கும் மாடமாளிகைகளுக்கும் சொந்தக்காரராக இருந்துகொண்டே யாருடைய எதிர்ப்புக்கும் ஆளாகாமலே “ஸ்ரீமான் ராமசாமி நாயக்க”ராக அவர் வாழ்ந்து மறைந்திருக்க முடியாதா?
தள்ளாத வயதில், பொல்லாத வியாதிகளோடு போரிட்டுக்கொண்டு— “முக்கி முனகி” யவாறு 95-ஆவது வயதிலும் பட்டிதொட்டிகளுக்குப் பயணம் சென்று பகலென்றும் இரவென்றும் பாராமல் பிரச்சாரம் செய்தாரே, யாருக்காக? எந்தக் கொள்கை வாழ்வதற்காக? யார் முன்னேறுவதற்காக?
விடிய விடியக் கண்விழித்து தம்பிக்குக் கடிதம் எழுதி, வேல்கொண்டு புண்ணில் குத்துவது போன்ற மாற்றாரின் நாராச மொழிகளைப் பொறுத்துக்கொண்டு, வீழ்ச்சியுற்ற சமுதாயத்தில் எழுச்சி வேண்டும். விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டுமென முழங்கி ஊர் பல சுற்றிச் சுற்றி உழைத்தாரே, பேரறிஞர் பேரறிஞர் அண்ணா எதற்காக? யாருக்காக?
பதவிகள் எதிர்பாராமல் அல்லவா தேடி வந்தன!
பதவியை எதிர் நோக்கியா அவர் பொதுவாழ்வுப் பணியில் குதித்தார்? இல்லையே!
அவரது அறிவு ஆற்றல் ஆங்கிலப் புலமை அனைத்துக்கும் எத்தனையோ உயர்ந்த இடங்கள்; அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லாத அளவுக்குக் கிடைத்திருக்குமே! பெரியாரின் இயக்கத்தை அவர் தேர்ந்தெடுக்காமல் ஆரம்பத்திலேயே வேறு பாதைக்குப் போயிருந்தால் விளைவுகளே வேறாகியிருக்குமல்லவா?
என்னைத்தான் எடுத்துக் கொள்ளேன்! ஏழாண்டுக்காலம் முதலமைச்சராக வரப்போகிறோம் என்று திட்ட-<noinclude></noinclude>
b3wt6ps6tbajia2hysgpiokpfgr3kii
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/114
250
642140
1928407
2026-04-30T04:12:46Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் மிட்டா ஏழாம் வகுப்பில் 105 வகுப்பில் படிக்கும்போதே மொழி உரிமைப் போராட்டத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண் டேன்! ம என் அழைப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
கடிதம்
மிட்டா ஏழாம்
வகுப்பில்
105
வகுப்பில் படிக்கும்போதே மொழி உரிமைப் போராட்டத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண் டேன்!
ம
என்
அழைப்பினையேற்று ஆரூருக்குச் சொற்பொழி வாற்ற வந்த நாவலரோ பேராசிரிய ரோ...அன்றைக்கு ண வப் பருவத்திலேயே என்றோ ஒரு நாள் "மாண்புமிகு " ஆகப் போகிறோம் என்று கருதியா இந்த இலட்சியப் பயணத்தில் ஈடுபட்டனர்?
பெரியார், அண்ணா இருவரின் பேரணியில் நின்ற நாம் அனுபவித்த சிறைக் கொடுமைகள்! அடக்கு முறைகள் ! கொஞ்சமா? நம் கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்க்கப் பட்டதல்லவா இந்த இலட்சியத் தரு!
இதனை எதிரிகள் வெட்டியெறிபத் துடித்தனர்! இங் குள்ள சிலரே அதற்குத் து ணை போயினர்! எனினும் வீழ்ந்திடவில்லை இந்த இயக்கம்! வீழ்த்த முடியாது தனை!
அமைப்புக்கள், கிளைகள், பத்திரிகைகள், பிரச்சார சாதனங்கள், நிர்வாகிகள் இவைகளைக் கொண்டது மட்டு மல்ல. இந்த இயக்கம்! அனைத்துக்கு மேலாக அடித்தளத்து மக்களை பொருளாதாரச் சுர ண்டலில் இருந்தும், மத சமூக, சாதிக் கொடுமைகளிலிருந்தும். விடுபெறச் செய்து
ஏற்றத் தாழ்வற்ற நிலையை - மு- நம்பிக்கையற்ற நிலையை - உருவாக்குவதற்கும், மொழி, கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் காப்பதற்கும் அறுபது ஆண்டுக் காலமாக நெஞ்சில் ஏற்றிக் கொண்டிருக்கிற உணர்வு களின் பெருவெள்ளப் பெருக்குத்தான் இந்த இயக்கம்!
இதற்கோர் அழிவு ஏற்படுவதற்கான சூழல் எங்கு தோன்றினும் இன்னும் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அடித்தளத்து பாட்டாளி வர்க்கத்துக்குத் தொண்டாற்ற இயக்கம் தோன்றவே முடியாது!
வேறொரு<noinclude></noinclude>
c586wvipzoho2vnkvlqrj47f1hcmgk0
1928421
1928407
2026-04-30T04:41:10Z
Ramya sugumar
15106
1928421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||105}}</noinclude>மிட்டா ஏழாம் வகுப்பில் படிக்கும்போதே மொழி உரிமைப் போராட்டத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்!
என் அழைப்பினையேற்று ஆரூருக்குச் சொற்பொழி வாற்ற வந்த நாவலரோ பேராசிரியரோ...அன்றைக்கு மாணவப் பருவத்திலேயே என்றோ ஒரு நாள் “மாண்புமிகு” ஆகப் போகிறோம் என்று கருதியா இந்த இலட்சியப் பயணத்தில் ஈடுபட்டனர்?
பெரியார், அண்ணா இருவரின் பேரணியில் நின்ற நாம் அனுபவித்த சிறைக் கொடுமைகள்! அடக்கு முறைகள்! கொஞ்சமா? நம் கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்க்கப் பட்டதல்லவா இந்த இலட்சியத் தரு!
இதனை எதிரிகள் வெட்டியெறிபத் துடித்தனர்! இங்குள்ள சிலரே அதற்குத் துணை போயினர்! எனினும் வீழ்ந்திடவில்லை இந்த இயக்கம்! வீழ்த்த முடியாது தனை!
அமைப்புக்கள், கிளைகள், பத்திரிகைகள், பிரச்சார சாதனங்கள், நிர்வாகிகள் இவைகளைக் கொண்டது மட்டுமல்ல. இந்த இயக்கம்! அனைத்துக்கு மேலாக அடித்தளத்து மக்களை பொருளாதாரச் சுரண்டலில் இருந்தும், மத சமூக, சாதிக் கொடுமைகளிலிருந்தும். விடுபெறச் செய்து ஏற்றத் தாழ்வற்ற நிலையை — மு— நம்பிக்கையற்ற நிலையை — உருவாக்குவதற்கும், மொழி, கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் காப்பதற்கும் அறுபது ஆண்டுக் காலமாக நெஞ்சில் ஏற்றிக் கொண்டிருக்கிற உணர்வுகளின் பெருவெள்ளப் பெருக்குத்தான் இந்த இயக்கம்!
இதற்கோர் அழிவு ஏற்படுவதற்கான சூழல் எங்கு தோன்றினும் இன்னும் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அடித்தளத்து பாட்டாளி வர்க்கத்துக்குத் தொண்டாற்ற வேறொரு இயக்கம் தோன்றவே முடியாது!{{nop}}<noinclude></noinclude>
e9wi7qyjeq3kpzwqtg5hzu3bw0u5mt2
1928765
1928421
2026-04-30T07:53:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||105}}</noinclude>மிட்டா ஏழாம் வகுப்பில் படிக்கும்போதே மொழி உரிமைப் போராட்டத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்!
என் அழைப்பினையேற்று ஆரூருக்குச் சொற்பொழிவாற்ற வந்த நாவலரோ பேராசிரியரோ...அன்றைக்கு மாணவப் பருவத்திலேயே என்றோ ஒரு நாள் “மாண்புமிகு” ஆகப் போகிறோம் என்று கருதியா இந்த இலட்சியப் பயணத்தில் ஈடுபட்டனர்?
பெரியார், அண்ணா இருவரின் பேரணியில் நின்ற நாம் அனுபவித்த சிறைக் கொடுமைகள்! அடக்கு முறைகள்! கொஞ்சமா? நம் கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்க்கப்பட்டதல்லவா இந்த இலட்சியத் தரு!
இதனை எதிரிகள் வெட்டியெறியத் துடித்தனர்! இங்குள்ள சிலரே அதற்குத் துணை போயினர்! எனினும் வீழ்ந்திடவில்லை இந்த இயக்கம்! வீழ்த்த முடியாது இதனை!
அமைப்புக்கள், கிளைகள், பத்திரிகைகள், பிரச்சார சாதனங்கள், நிர்வாகிகள் இவைகளைக் கொண்டது மட்டுமல்ல. இந்த இயக்கம்! அனைத்துக்கு மேலாக அடித்தளத்து மக்களை பொருளாதாரச் சுரண்டலில் இருந்தும், மத சமூக, சாதிக் கொடுமைகளிலிருந்தும். விடுபெறச் செய்து ஏற்றத் தாழ்வற்ற நிலையை — மூட நம்பிக்கையற்ற நிலையை — உருவாக்குவதற்கும், மொழி, கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் காப்பதற்கும் அறுபது ஆண்டுக் காலமாக நெஞ்சில் ஏற்றிக் கொண்டிருக்கிற உணர்வுகளின் பெருவெள்ளப் பெருக்குத்தான் இந்த இயக்கம்!
இதற்கோர் அழிவு ஏற்படுவதற்கான சூழல் எங்கு தோன்றினும் இன்னும் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அடித்தளத்து பாட்டாளி வர்க்கத்துக்குத் தொண்டாற்ற வேறொரு இயக்கம் தோன்றவே முடியாது!{{nop}}<noinclude></noinclude>
fj7x4aatykg80axv3l1svq6qawjbsm1
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/141
250
642141
1928422
2026-04-30T04:41:49Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928422
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல் புழுச் சூழலியல் 119}}</noinclude>இலையைப் பாதிக்கும் நெல்லின் வெண் இலை நுனி நூல் புழு நன்கு செயல் பட்டுப் பரவும்.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 141
|bSize = 600
|cWidth = 353
|cHeight = 350
|oTop = 105
|oLeft = 175
|Location = center
|Description = {{c|{{fs|100%|<b>படம் 1. மண் துகளிடையே நூல் புழு செல்லல் படம் 2. நூல் புழுவின் பாதை</b>}}}}}}
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->
<b>மண்ணின் வெப்பம்</b>. ஈரப் பசையைப் போலவே, மண்ணின் வெப்ப நிலையும் நூற்புழுக்களின் எண்ணிக்கை, செயல், இனப் பெருக்கம், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் தன்மை, வாழ்நாள் முதலியவற்றை அறுதியிடும் இன்றியமையாக் கூறாகிறது. குறைந்த, மிகு வெப்ப நிலைகளான முறையே 5–15°C, 30–40°C ஆகியன நூல் புழுக்களுக்கு ஏற்றவையல்ல. மேலும், அவை இவ்வெப்ப நிலையில் செயலிழக்கின்றன. இவ்விரு வெப்ப நிலை வரம்பிற்கும் அப்பாற்பட்ட வெப்பம் நூற்புழுக்களுக்கு அழிவு விளைவிக்கும். மித வெப்ப நிலையான 15–30°C நூல் புழுக்களுக்கு ஏற்றவாறுள்ளது.
<b>மண்ணின் ஈரம்</b>. மழையாலோ, நீர்ப் பாசனத்தாலோ,
மண்ணில் அவ்வப்போது ஈரப் பதம் மாறு படும். இது நூல் புழுக்களின் எண்ணிக்கையைப் பெரிதும் பாதிக்கும் காரணியாகிறது. மண்ணின் வறட்சி, நூல் புழுவின் செயல்களை மட்டுப் படுத்துகிறது. ஆனால், முட்டைகள் மிகுதியாகப் பாதிக்கப் படுவதில்லை. வயல்களில் விளைவிக்கும் தாவரங்களான நெல், வாழை முதலியவற்றைத் தாக்கும் நெல்லின் வேர் அழுகல் நூல் புழு, வாழையின் வேர் அழுகல் நூல் புழு போன்றவை மட்டும் இந்நிலையில் வாழ இயலும். ஏறத்தாழ 40–60% ஈரப் பசை உள்ள மண்ணில் நூல் புழுக்கள் நன்கு செயல் படும்.
<b>உணவு</b>. நூல் புழு உறிஞ்சியுண்ணக் கூடிய சாறு, அது தங்கியிருக்கும் செடியின் வேர், தண்டு, இலை முதலிய பகுதிகளிலிருந்தே கிடைக்கிறது. மண்ணிலுள்ள நூல் புழு, வேரின் நுனிப் பகுதியைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சுகிறது. இப்பகுதியில் செல் சுவர்கள் (Cell walls) மென்மையாக இருக்கும். செல்களிலும், வேதிப் பொருள்கள் செறிந்திருக்கும். செடியின் திசுக்கள், அவற்றின் உள்ளிருக்கும்<noinclude></noinclude>
ffoqr7mqb60pelmtr0lvimeox4vaoqw
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/142
250
642142
1928452
2026-04-30T05:01:16Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|120 நூல் புழு நோய்கள்}}</noinclude>நூல் புழுக்களுக்குப் பாதுகாப்பாக அமைகின்றன. மேலும், செடியின் சாற்றின் தன்மையும், அளவும் நூல் புழுவின் வளர்ச்சிக்கும், இனப் பெருக்கத்திற்கும் வரையறையாகும்.
நூல் புழுக்களுக்கு ஏற்ற தாவர இனத்தில், அவை நன்கு வளர்ந்து, பல்கிப் பெருகும். வேண்டப் படாத வேறு தாவர இனமாயிருந்தால், நூல் புழுக்கள் துளைக்க இயலாமல், வேர்ச் செல்லின் சுவர்கள் வேதி மாற்றமடையும் அல்லது துளைத்தாலும் அவை முழு வளர்ச்சியடையாமல் போகலாம். சில சமயம் வளர்ச்சி நிலையடைந்தாலும், சரி வர முட்டைகள் இடாமல் போகும். வேர் முடிச்சு, முட்டைக் கூடு, எலுமிச்சை நூல் புழுக்கள் உறிஞ்ச, சிறப்புச் செல்கள் ஏற்படும். இவை திசுக்களிலிருந்து நூல் புழுக்களுக்குச் செல்லும் சாற்றையும், அவற்றின் இணைப்பையும் சம நிலையில் வைத்திருக்கும்.
<b>வேர் மண்டலம்</b>. வேரின் சாறு, நூல் புழுக்களுக்கு உணவாகிறது. இது மேலும் வேரின் சுற்றுப்புறத்தின் வேதிப் பொருள்களையும், ஈரத்தையும் குறைக்கும். ஆக்சிஜனைக் குறைத்துக் கார்பன் டைஆக்சைடை மிகுதியாக்கும். வேரிலிருந்து வரும் வேதிப் பொருள்கள் அடங்கிய கசிவும், சுற்றுப் புறத்தின் தன்மையை மாற்றும். உருளைக் கிழங்கு முட்டைக் கூடு நூல் புழுக்களின் முட்டைகளை, உருளைக் கிழங்கு வேரிலிருந்து வெளி வரும் கசிவு பொரியச் செய்யும். இக்கசிவு, முட்டையிலிருந்து பொரிந்து வெளி வந்த புழுக்கள், வேரின் இடமறிந்து செல்லவும் உதவும். நூல் புழுக்களுக்கு வேண்டாத தாவர வகைகளின் வேர்க் கசிவு, அவற்றின் முட்டைகள் பொரியாமல் இருக்கச் செய்யும்.
<b>நில நீர்க் கரைசல்</b>. கார அமிலத் தன்மை, கரிமப் பொருள், உரம், பூச்சி, பூச்சி கொல்லி, ஏனைய நச்சுத் தன்மை பொருந்திய பொருள்கள் ஆகியவை அடங்கியதே நில நீர்க் கரைசல். இதில் கரைந்திருக்கும் வேதிப் பொருள்கள் நூல் புழுக்களுக்கு ஏற்றவாறோ, எதிர்ப்பாகவோ அமைகின்றன. ஏனெனில், இதிலிருந்தே தனக்கு வேண்டிய சில வகை உணவை நூல் புழு எடுத்துக் கொள்கிறது. நூல் புழுக்களின் முட்டை பொரிதல், அவற்றின் இளவுயிரிப் பருவம் வாழுதல் முதலியனவும் இக்கரைசலின் தன்மையைப் பொறுத்து அமையும். சில வகைச் செடிகளின் வேரிலிருந்து கசியும் வேதிப் பொருள்கள் பெரிதும் வேர் மண்டலத்தைச் சூழ்ந்திருக்கும். இந்தக் கசிவு, நீர்க் கரைசலில் சேர்வதால், வேர் மண்டலத்தில் இருக்கும் கசிவின் தன்மைக்கேற்ப நூல் புழு பாதிக்கப் படும் அல்லது நன்கு செயல் படும்.
<b>கரிம உரங்கள்</b>. பொதுவாகக் கரிம உரங்கள், செடிகளுக்குத் தழைச் சத்தை மிகுதியாகக் கிடைக்கச் செய்து, செழிப்பாக வளர வழி வகுக்கும். இந்த உரங்கள் மட்கும் போது வெளிப் படும் சில வேதிப் பொருள்களும், கரிம அமிலங்களும் நூல் புழுக்களை ஓரளவிற்குப் பாதிக்கின்றன. இந்த உரங்களின் ஊட்டத்தால், முன்னரே நிலத்தில் உள்ள நூல் புழுக்களைப் பாதித்து அழிக்கும் பூசணங்கள், ஏனைய நுண்ணுயிரிகள், எதிரி நூல் புழுக்கள் முதலியன பெருகி, தாவர நூல் புழுக்களை ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கின்றன.
நூல் புழுக்களின் சூழலியல் அவற்றின் இனத்திற்குத் தக்கவாறு மாறு பட்டிருக்கும். அவற்றின் செயலையும், வாழ்க்கையும் அறியச் சூழலியல் இன்றியமையாதது. தாவர நூல் புழுக்கள், சராசரியாக 10% அழிவை ஏற்படுத்தும். சில வகை முக்கிய நூல் புழுக்கள் விளைச்சலை முற்றிலும் பாதித்து விடுகின்றன.
{{right|—<b>சிவகாமி வடிவேல்</b>}}
<b>துணை நூல்</b>. J.F. Southey, <i>Plant Nematology</i>, HMS Publication, London, 1978.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="80"/><section begin="81"/>
{{fs|110|<b>நூல் புழு நோய்கள்</b>}}
வட்டப் புழுக்கள் அல்லது விலாங்குப் புழுக்கள் என்றும் நூல் புழுக்களைக் கூறலாம். நூல் புழுக்கள், பயிரிடப் படும் மண்ணில் 20–25 செ.மீ. ஆழம் வரை இருக்கும். பயிர்களைத் தாக்கும் நூல் புழுக்களுக்கு முட்டைப் பருவம், புழுப் பருவம், முதிர் வளர்ச்சிப் பருவம் ஆகியன உள்ளன. முட்டைக்குள்ளேயே புழு வெளி வந்தவுடன், தன் முதல் நிலைப் புழுப் பருவத்தை முடித்துக் கொண்டு, இரண்டாம் நிலைப் புழுவாக வெளி வரும். இரண்டாம் நிலையிலிருந்து, ஐந்தாம் நிலை வரை புழுக்கள் செடிகளின் வேர், தண்டு, மொக்கு, இலை, பூ, விதைகளின் திசுக்களில் உள்ள செல் சாற்றை உறிஞ்சி வாழும். சாற்றை உறிஞ்சுவதால், செடிகளின் ஊட்டச் சத்துக் குறைந்து விடும். அத்துடன், செல்களின் உள்ளே, நூல் புழுக்கள் உமிழ் நீரைச் செலுத்துவதால், செல்லின் உட்பொருள்கள் செரிக்கப் படும். இதனால், செல்கள் காய்ந்து, பயிர்களின் வெளித் தோற்றத்தில் மஞ்சள் நிறத்துடன் காணப் படும்.
பயிர்களில், நேரிடையாகச் செல்களின் சாற்றை உறிஞ்சியும், செல்களின் உட்பொருள்களைக் கரைத்துச் செல்களை இறக்கச் செய்தும், ஊட்டச் சத்துகளை<noinclude></noinclude>
ptxfpvuqk8zdk4j6vlnm4ys9j7l6ghl
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/115
250
642143
1928480
2026-04-30T05:14:03Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“எங்கள் மொழிப்பற்றை விட்டுவிடுகிறோம்! எங்கள் கொள்கைகளை மறந்துவிடுகிறோம்! எங்களுக்கென்று— அதாவது எங்கள் இயக்கத்துக்கென்று எந்தத் தன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|106||கலைஞர்}}</noinclude>“எங்கள் மொழிப்பற்றை விட்டுவிடுகிறோம்! எங்கள் கொள்கைகளை மறந்துவிடுகிறோம்! எங்களுக்கென்று— அதாவது எங்கள் இயக்கத்துக்கென்று எந்தத் தனித் தன்மையும் வேண்டாம்!” என்றெல்லாம் கூறிவிட்டு, இன்னல் எதுவுமின்றி, இம்மியளவு எதிர்ப்புமின்றி, நிம்மதியாக வாழ முடியாதா, நாம் நினைத்திருந்தால்?
உடன்பிறப்பே, அதைத்தான் நான் நினைப்பதுபோல் நீயும் நினைத்திருக்கிறாய்! அதை உன் மடலில் உறுதி வாய்ந்த எழுத்துக்களாகப் பதித்திருக்கிறாய்!
நம் அருகே இருந்தாலும் இல்லாவிட்டாலும்; இந்த நினைப்புடன் இருப்பவர்கள் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள்!
இந்த உணர்வுடன் இருப்பவர்களை எண்ணும்போதே வேதனைகள் பறந்து போகின்றன! ஆம். அவர்கள் எல்லாம் — உன்னை உட்படத்தான் சொல்கிறேன்; இதய வேதனையைத் தீர்க்கும் மருந்தாக அமைந்திடுவதைக் காண்கிறேன்! அதுவும் சாதாரண மருந்தல்ல, மலையில் கிடைத்த உயர்ந்த மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்து! ஆம், மலை மருந்து!
மன வேதனையைப் போக்கும் மலை மருந்து! நேற்று, நீ கவனித்திருக்கக் கூடும். விசாரணைக் கமிஷன் செலவுக்கு “மலை மருந்து” எனும் பெயருடையவரி நிதி வழங்கியிருப்பதை!
அந்தப் பெயரையே எண்ணிக் கொண்டிருந்தேன்.
இந்த இயக்கத்தின் உணர்வுகள் மடிந்துவிடாமல் காப்பாற்றக் கூடிய மலை மருந்து நீதான்! அந்த மலை மருந்தாக இருப்பதுதான் உன் கடிதம்! அன்பே! ஆருயிர் உடன்பிறப்பே! மாசற்ற கண்மணியே! மலை மருந்தே! என்றைக்கும் என் இதயத்தில் நீ இருக்கிறாய்! இந்தக் கழகத்<noinclude></noinclude>
kexpenhn2w2u1ghulm9qv43bi08tduj
1928773
1928480
2026-04-30T07:56:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|106||கலைஞர்}}</noinclude>“எங்கள் மொழிப்பற்றை விட்டுவிடுகிறோம்! எங்கள் கொள்கைகளை மறந்துவிடுகிறோம்! எங்களுக்கென்று— அதாவது எங்கள் இயக்கத்துக்கென்று எந்தத் தனித் தன்மையும் வேண்டாம்!” என்றெல்லாம் கூறிவிட்டு, இன்னல் எதுவுமின்றி, இம்மியளவு எதிர்ப்புமின்றி, நிம்மதியாக வாழ முடியாதா, நாம் நினைத்திருந்தால்?
உடன்பிறப்பே, அதைத்தான் நான் நினைப்பதுபோல் நீயும் நினைத்திருக்கிறாய்! அதை உன் மடலில் உறுதி வாய்ந்த எழுத்துக்களாகப் பதித்திருக்கிறாய்!
நம் அருகே இருந்தாலும் இல்லாவிட்டாலும்; இந்த நினைப்புடன் இருப்பவர்கள் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள்!
இந்த உணர்வுடன் இருப்பவர்களை எண்ணும்போதே வேதனைகள் பறந்து போகின்றன! ஆம். அவர்கள் எல்லாம் — உன்னை உட்படத்தான் சொல்கிறேன்; இதய வேதனையைத் தீர்க்கும் மருந்தாக அமைந்திடுவதைக் காண்கிறேன்! அதுவும் சாதாரண மருந்தல்ல, மலையில் கிடைத்த உயர்ந்த மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்து! ஆம், மலை மருந்து!
மன வேதனையைப் போக்கும் மலை மருந்து! நேற்று, நீ கவனித்திருக்கக் கூடும். விசாரணைக் கமிஷன் செலவுக்கு “மலை மருந்து” எனும் பெயருடையவரி நிதி வழங்கியிருப்பதை!
அந்தப் பெயரையே எண்ணிக் கொண்டிருந்தேன்.
இந்த இயக்கத்தின் உணர்வுகள் மடிந்துவிடாமல் காப்பாற்றக் கூடிய மலை மருந்து நீதான்! அந்த மலை மருந்தாக இருப்பதுதான் உன் கடிதம்! அன்பே! ஆருயிர் உடன்பிறப்பே! மாசற்ற கண்மணியே! மலை மருந்தே! என்றைக்கும் என் இதயத்தில் நீ இருக்கிறாய்! இந்தக் கழகத்-<noinclude></noinclude>
ml3kk0rwp732et3053t2t4gnfpf33gc
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/116
250
642144
1928485
2026-04-30T05:16:16Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 107 தின் மேன்மைக்காக, நீ ஏற்றுக்கொள்கிற எந்தவகைத் துன்பத்திற்கும் எதிர்காலத்திலே மிகப் பெரிய மதிப்பு என் கண் உன் கடிதத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________
கடிதம்
107
தின் மேன்மைக்காக, நீ ஏற்றுக்கொள்கிற எந்தவகைத் துன்பத்திற்கும் எதிர்காலத்திலே மிகப் பெரிய மதிப்பு என் கண் உன் கடிதத்தை உண்டு! வழக்கம்போல் களிலே ஒத்திக் கொள்கிறேன்! உன் கால்கள் நான் தொட முடியாத தூரத்தில் இருப்பதால் அவைகளை இங்கிருந்தே வணங்குகிறேன்.
!காபை
ள்ள, மு.க.
அன்புள்ள
5-5-76<noinclude></noinclude>
kggaykpas4suqekz35kd6yksg98o31g
1928494
1928485
2026-04-30T05:19:46Z
Ramya sugumar
15106
1928494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||107}}</noinclude>தின் மேன்மைக்காக, நீ ஏற்றுக்கொள்கிற எந்தவகைத் துன்பத்திற்கும் எதிர்காலத்திலே மிகப் பெரிய மதிப்பு உண்டு! வழக்கம்போல் உன் கடிதத்தை என் கண்களிலே ஒத்திக் கொள்கிறேன்! உன் கால்கள் நான் தொடமுடியாத தூரத்தில் இருப்பதால் அவைகளை இங்கிருந்தே வணங்குகிறேன்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
5 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
qkwj3p5296gz1vhk7vlkn7wki5cnc8d
1928775
1928494
2026-04-30T07:57:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||107}}</noinclude>தின் மேன்மைக்காக, நீ ஏற்றுக்கொள்கிற எந்தவகைத் துன்பத்திற்கும் எதிர்காலத்திலே மிகப் பெரிய மதிப்பு உண்டு! வழக்கம்போல் உன் கடிதத்தை என் கண்களிலே ஒத்திக் கொள்கிறேன்! உன் கால்கள் நான் தொடமுடியாத தூரத்தில் இருப்பதால் அவைகளை இங்கிருந்தே வணங்குகிறேன்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
5 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
9iaybo8hcqgao600syfwqftq1r7cd76
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/143
250
642145
1928497
2026-04-30T05:25:03Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல் புழு நோய்கள் 121}}</noinclude>உள் நோக்கிச் செலுத்தும் சல்லடைக் குழாய்த் திசு (Phloem), கட்டைத் திசு (xylem) ஆகியவற்றைத் தாக்கி ஊட்டச் சத்துகள் மேலே செல்லா வண்ணம் செய்து, பயிர் விளைச்சலைத் குறைக்கின்றன. பயிர்களில் நோய் உண்டாக்கும் பூசணம், பாக்டீரியாக்களுடன் இணைந்து, நோயின் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
எலுமிச்சைச் செடியில் எலுமிச்சை நூல் புழுவின் (<i>Tylenchulus semipenetrans</i>) தாக்கம் 80% வரை ஏற்படுகிறது. இந்நூல் புழுவால், எலுமிச்சையின் குறைவான வீழ்ச்சி நோயும் (Slow decline disease), பின் இறப்பு நோயும் (Die-Back disease) ஏற்படுகின்றன. உருளைக் கிழங்கின் முட்டை வடிவ நூல் புழு, (<i>Verticillium dahliae</i>) வெர்டிசிலியம் டாலியே என்னும் பூசணத்துடன் இணைந்து, வாடல் நோயை மிகுதிப் படுத்தும்.
புகையிலையில், கறுப்புத் தண்டு நோயை ஏற்படுத்தும் பைடோப்தோரா பேரசைடிகா (<i>Phytopthora parasitica</i>) என்னும் பூசணத்தின் தாக்குதலை எதிர்த்து நிற்கும் வகைகள் உள்ளன. ஆனால், வேர் முடிச்சு நூல் புழு, பூசணத்துடன் சேரும் போது, எதிர்ப்பாற்றல் வகைகளிலும் கருந்தண்டு நோய் மிகும். புகையிலையில் வேர் முடிச்சு நூற்புழுவும், ஃபியூசோரியம் பூசணமும் சேர்ந்து, பழுப்புப் புள்ளி நோயை மிகுவிக்கும். பருத்தியில் பியூசோரியம் என்னும் பூசணத்தால் ஏற்படும் வாடல் நோய். ஆனால், ரோடிலென்சூலஸ் ரெனிஃ பார்மிஸ் (<i>Rotylenchylus reniformis</i>) என்னும் நூல் புழு தாக்கினால், 80% வரை வாடல் நோய் ஏற்படுகிறது.
<b>வெள்ளரி வகை</b>. டிரிக்ஸ், N.Z. வெள்ளரி வகைகளில், ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம் லைக்கோபெர்சிகை என்னும் பூசணத்தால் வாடல் நோய் ஏற்படுவதில்லை. ஆனால், வேர் முடிச்சு நூல் புழுவான மெலாய்டோகைன் இன்காகினிட்டா பூசணத்துடன் சேரும் போது, வாடல் நோய் ஏற்படுகிறது. இதைப் போன்றே தக்காளியில் ஃபியூசேரியம் ஆக்சிஸ்போராம் குக்குமிரியம் என்னும் பூசணமும், மேற்கூறிய நூற்புழுவும் சேரும் போது, பூசணத் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றல் கொண்ட வகை, எதிர்ப்புத் திறனை இழந்து விடுகிறது. மேலும், வாடல் நோய் ஏற்படவும் நூற்புழு காரணமாகிறது. நூற்புழு தாக்கிய செடிகளில், பூசண வித்துகள் (conidia) பெருகக் காரணமாக உள்ளது. தக்காளியில் ஃபியூசேரியம் பூசணத்துடன், நூல் புழு மெலாய்டோகைன் இன்காகினிட்டா சேரும் போது, வாடல் நோய் ஏற்படும். பட்டாணியில் ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம் பைசாவுடன், மெ.இன்கானிட்டா, மெ. அக்ரிட்டா சேரும் போது, வாடல் நோய் ஏற்படுகிறது. உருளைக் கிழங்கில், ஹெட்டிரோடெரா கிலைசன்ஸ் நூல் புழுவும், ஃபியூசேரியம் பூசணமும் இணையும் போது, வாடல் நோய் மிகும்.
மிளகுப் பயிரில் பிராட்டிலின்கஸ் மைனஸ் நூல் புழுவும், செர்டிசிலியம் எலாலிலே பூசணமும் இணைந்து தாக்கும் போது, வாடல் நோய் மிகும். வேர் முடிச்சு நூல் புழுவான மெ. இன்காகினிட்டாவும், பித்தியம் அஃபானிடேர்மேட்டாவும், சாமந்திப் பயிரில் இணைந்து தாக்கும் போது, வேர்களின் வளர்ச்சி குன்றி விடுகிறது.
புகையிலையில், மெ.இன்காகினிட்டா, பூசணங்களான ரைசக்டோனியா சொலானி, பித்தியம் அல்டிமத்துடன் இணைந்து தாக்கும் போது, இலைகள் காய்ந்து செடிகளை மடியச் செய்கின்றன. புகையிலையில், மெ.இன்காகினிட்டா தாக்கிய நான்கு வாரங்களுக்குள் குர்குலேரியா டிரையோனியை, போட்ரிடஸ் சினரியா, ஆஸ்பர்ஜிலஸ் அக்ரேசியஸ், பெனிசிலியம் மார்டென்சி ஆகிய பூசணங்கள் வேர்களைத் தாக்கி, அழுகச் செய்கின்றன. இவ்வேர் முடிச்சு நூல் புழுவின் தாக்குதலால் இலைப் புள்ளி நோயும் மிகும்.
பிராட்டிலிங்கஸ் மைனஸ் நூல் புழுவும், ரை. சோலானி பூசணமும் இணைந்து, கோதுமைப் பயிரைத் தாக்கும் போது, வேர்கள் அழுகி விடுகின்றன. ஆல்ஃபால்ஃபா என்னும் பயிரில், பி.பெனிட்ரன்சும், டிரைகோடெர்மா விரிடியமும் இணைந்து தாக்கி, தண்டு மற்றும் வேர்களின் வளர்ச்சியைக் குறைக்கின்றன. பிராட்டடிலிங்கஸ் ஜியா நூல் புழுவும், பித்தியம் கிராமினிகோலா பூசணமும் இணைந்து தாக்கி, கரும்பின் நுனித் தண்டு வளர்ச்சியைப் பாதிக்கின்றன. டைலன்கஸ் அக்ரிபோலா நூல் புழுவும் எஃப். ரோசியம் பூசணமும் இணைந்து, மக்காச் சோளத்தில் வேர் அழுகல் நோயை மிகுதிப் படுத்துகின்றன. தென்னையில் ரொடாபெலஸ் சிமிலிஸ் என்னும் நூல் புழு சிவப்பு மோதிர நோயை ஏற்படுத்துகிறது. ரோ. சிமிலிஸ் நூல் புழுவும், ஃபியூ. மொனிலிபார்மி என்யென்சி பூசணமும் இணைந்து, வாழையில் வாடல் நோயைப் பெருக்குகின்றன. ஹெலிகோடைலின்கஸ் மல்டிசின்க்டஸ் நூல் புழு வாழையில் வேர்ச் சிதைவு, பின் இறப்பு நோய் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
{{right|—<b>குரு. பாலசுப்ரமணியன்</b>}}
<b>துணை நூல்</b>. Mathews, <i>Plant Virology</i>, Academic Press, New York, 1970.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="81"/>{{nop}}<noinclude></noinclude>
nc5kpatqyc7tiqg94uekzepsn2ja79v
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/117
250
642146
1928524
2026-04-30T05:40:14Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{larger|<b>அன்றும் இன்றும் <br> அறநிலையப் பணிகள்!</b>}} உடன்பிறப்பே, எல்லோரும் ஏதேதோ யாத்திரை போகிறார்களே, நாமும் ஒரு யாத்திரை புறப்படுவோமே என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928524
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>அன்றும் இன்றும் <br>
அறநிலையப் பணிகள்!</b>}}
உடன்பிறப்பே,
எல்லோரும் ஏதேதோ யாத்திரை போகிறார்களே, நாமும் ஒரு யாத்திரை புறப்படுவோமே என்று நினைத்து உன்னையும் என்னோடு அழைக்கிறேன். “யாத்திரை ஸ்தலம்” என்று அண்ணா ஒருமுறை ஒரு இடத்தைப் பற்றிக் குறிப்பிட்டாரே; அதை மறந்து விடவில்லை நானும் நீயும்! நான் இப்போது உன்னை விரும்பி அழைப்பது திருத்தலயாத்திரைக்கு! நான்பிறந்த ஊரே ஒரு திருத்தலம் தான்! நால்வரால் பாடப் பெற்ற திருக்கோளிலியம்பதியென்னும் திருக்குவளையில் தான் பழுத்த ஆத்தீகரான முத்துவேலருக்கு மகனாகப் பிறந்தேன். சின்னஞ்சிறு வயதிலேயே அந்தச் சிற்றூர்க் கோயிலை நம்பி வாழுகின்ற கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை நான் உணருவேன்.
சுயமரியாதைக் கருத்துக்களால் நான் ஈர்க்கப்பட்டு இளம் வயதிலேயே துடிப்புடன் அவைகளைப் பரப்புகிற நேரத்திலும் ஆலயங்களை நம்பி வாழுகிற கிராமாந்திர ஊழியர்கள், உழவர்கள், பற்றிய அனுதாப உண்ர்ச்சி என் உள்ளத்தில் இடம் பெற்றே இருந்தது.
அந்தக் காலத்தில் கோயில்களை ஏராளமாகக் கட்டியது பக்தியின் அடிப்படையில் மாத்திரமின்றி, சிற்பிகள்,<noinclude></noinclude>
b65fs4p8gu4rb8kq0pbwmnbhnl88w7u
1928779
1928524
2026-04-30T07:58:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{x-larger|<b>அன்றும் இன்றும் <br>
அறநிலையப் பணிகள்!</b>}}
<b>உடன்பிறப்பே,</b>
எல்லோரும் ஏதேதோ யாத்திரை போகிறார்களே, நாமும் ஒரு யாத்திரை புறப்படுவோமே என்று நினைத்து உன்னையும் என்னோடு அழைக்கிறேன். “யாத்திரை ஸ்தலம்” என்று அண்ணா ஒருமுறை ஒரு இடத்தைப் பற்றிக் குறிப்பிட்டாரே; அதை மறந்து விடவில்லை நானும் நீயும்! நான் இப்போது உன்னை விரும்பி அழைப்பது திருத்தலயாத்திரைக்கு! நான்பிறந்த ஊரே ஒரு திருத்தலம் தான்! நால்வரால் பாடப் பெற்ற திருக்கோளிலியம்பதியென்னும் திருக்குவளையில் தான் பழுத்த ஆத்தீகரான முத்துவேலருக்கு மகனாகப் பிறந்தேன். சின்னஞ்சிறு வயதிலேயே அந்தச் சிற்றூர்க் கோயிலை நம்பி வாழுகின்ற கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை நான் உணருவேன்.
சுயமரியாதைக் கருத்துக்களால் நான் ஈர்க்கப்பட்டு இளம் வயதிலேயே துடிப்புடன் அவைகளைப் பரப்புகிற நேரத்திலும் ஆலயங்களை நம்பி வாழுகிற கிராமாந்திர ஊழியர்கள், உழவர்கள், பற்றிய அனுதாப உண்ர்ச்சி என் உள்ளத்தில் இடம் பெற்றே இருந்தது.
அந்தக் காலத்தில் கோயில்களை ஏராளமாகக் கட்டியது பக்தியின் அடிப்படையில் மாத்திரமின்றி, சிற்பிகள்,<noinclude></noinclude>
6v0mkql942qeah5se8e3o58z5h94fis
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/118
250
642147
1928536
2026-04-30T05:45:55Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 109 கொத்தர்கள், கருமான்கள் போன்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கவும் - கட்டி முடிந்த பிறகு வேலை வாய்ப்புக்களை ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928536
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________
கடிதம்
109
கொத்தர்கள், கருமான்கள் போன்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கவும் - கட்டி முடிந்த பிறகு வேலை வாய்ப்புக்களை நிரந்தரமாக்கவும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது!
கடவுள் கொள்கையில் தந்தை பெரியார் மிகவும் தீவிரவாதி! கடவுளே இல்லையென்று மறுப்பவர்!
"உண்டென்பார் சிலர், இல்லையென்பார் சிலர், எனக் கில்லை கடவு ள், கவலை!'' என்றவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் கொள்கையே தி.மு. கழகத்தின் கடவுட் கொள்கை என்று அறிவித்தவர் அண்ணா!
கோயில் கூடாது என்பதல்ல? கோயில் கொடியவர் களின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பது தான் என் கொள்கை!" என்ற வாசகத்தை நான் எழுதி அதை யார் எப்போது முழங்கினார்கள் என்பதெல்லாம் உனக்கும்
நாட்டுக்கும் தெரியும்!
ஆத்தீகப் பெரியோர்கள் கூடியதோர் அவையில் என்னைப் பற்றிக் குறிப்பிட்ட பண்டார சந்நதிகள் ஒருவர், "கருணாநிதி அவர்கள் கடவுளை ஏற்றுக் கொள்ள மாட் டார் என்றாலும் கடவுள் காரியங்களுக்கு அவர் ஆட்சி குறுக்கே நிற்கவில்லை!'' என்றார். அதற்கு விடையளித்த நான், “கடவுளை நாம் ஏற்றுக்கொள்வது பெரிசல்ல; கடவுள் நம்மை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நாம் நடக் கிறோமா என்பதுதான் முக்கியம்!'' என்று சுட்டிக்காட்டி னேன்,
ஒருவனே தேவன் என்று கூறிய அறிஞர் பெருமக்கள் அந்தத் தேவன் எங்கேயிருப்பதாகச் சொன்னார்கள்? சொல்லுகிறார்கள்? நல்ல உள்ளத்தில் இருப்பதாகத்
தானே!
;<noinclude></noinclude>
kgc81utlxbymsfdan8cc5gbltwtfv79
1928549
1928536
2026-04-30T05:51:38Z
Ramya sugumar
15106
1928549
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||109}}</noinclude>கொத்தர்கள், கருமான்கள் போன்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கவும் — கட்டி முடிந்த பிறகு வேலை வாய்ப்புக்களை நிரந்தரமாக்கவும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது!
கடவுள் கொள்கையில் தந்தை பெரியார் மிகவும் தீவிரவாதி! கடவுளே இல்லையென்று மறுப்பவர்!
“உண்டென்பார் சிலர், இல்லையென்பார் சிலர், எனக்கில்லை கடவுள், கவலை!” என்றவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமூலர் கொள்கையே தி.மு. கழகத்தின் கடவுட் கொள்கை என்று அறிவித்தவர் அண்ணா!
“கோயில் கூடாது என்பதல்ல? கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பது தான் என் கொள்கை!” என்ற வாசகத்தை நான் எழுதி அதை யார் எப்போது முழங்கினார்கள் என்பதெல்லாம் உனக்கும்
நாட்டுக்கும் தெரியும்!
ஆத்தீகப் பெரியோர்கள் கூடியதோர் அவையில் என்னைப் பற்றிக் குறிப்பிட்ட பண்டார சந்நதிகள் ஒருவர், “கருணாநிதி அவர்கள் கடவுளை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றாலும் கடவுள் காரியங்களுக்கு அவர் ஆட்சி குறுக்கே நிற்கவில்லை!” என்றார். அதற்கு விடையளித்த நான், “கடவுளை நாம் ஏற்றுக்கொள்வது பெரிசல்ல; கடவுள் நம்மை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நாம் நடக்கிறோமா என்பதுதான் முக்கியம்!” என்று சுட்டிக்காட்டினேன்,
ஒருவனே தேவன் என்று கூறிய அறிஞர் பெருமக்கள் அந்தத் தேவன் எங்கேயிருப்பதாகச் சொன்னார்கள்? சொல்லுகிறார்கள்? நல்ல உள்ளத்தில் இருப்பதாகத்தானே!{{nop}}<noinclude></noinclude>
t7zbh0ledm5w3a9k3wjm7kl4pvi4c1d
1928781
1928549
2026-04-30T07:59:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||109}}</noinclude>கொத்தர்கள், கருமான்கள் போன்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கவும் — கட்டி முடிந்த பிறகு வேலை வாய்ப்புக்களை நிரந்தரமாக்கவும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது!
கடவுள் கொள்கையில் தந்தை பெரியார் மிகவும் தீவிரவாதி! கடவுளே இல்லையென்று மறுப்பவர்!
“உண்டென்பார் சிலர், இல்லையென்பார் சிலர், எனக்கில்லை கடவுள், கவலை!” என்றவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமூலர் கொள்கையே தி.மு. கழகத்தின் கடவுட் கொள்கை என்று அறிவித்தவர் அண்ணா!
“கோயில் கூடாது என்பதல்ல? கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பது தான் என் கொள்கை!” என்ற வாசகத்தை நான் எழுதி அதை யார் எப்போது முழங்கினார்கள் என்பதெல்லாம் உனக்கும் நாட்டுக்கும் தெரியும்!
ஆத்தீகப் பெரியோர்கள் கூடியதோர் அவையில் என்னைப் பற்றிக் குறிப்பிட்ட பண்டார சந்நதிகள் ஒருவர், “கருணாநிதி அவர்கள் கடவுளை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றாலும் கடவுள் காரியங்களுக்கு அவர் ஆட்சி குறுக்கே நிற்கவில்லை!” என்றார். அதற்கு விடையளித்த நான், “கடவுளை நாம் ஏற்றுக்கொள்வது பெரிசல்ல; கடவுள் நம்மை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நாம் நடக்கிறோமா என்பதுதான் முக்கியம்!” என்று சுட்டிக்காட்டினேன்,
ஒருவனே தேவன் என்று கூறிய அறிஞர் பெருமக்கள் அந்தத் தேவன் எங்கேயிருப்பதாகச் சொன்னார்கள்? சொல்லுகிறார்கள்? நல்ல உள்ளத்தில் இருப்பதாகத்தானே!{{nop}}<noinclude></noinclude>
lc8qia7vnx1kwksi38zfji7uty7hunh
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/119
250
642148
1928551
2026-04-30T05:52:15Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 110 கலைஞர் என்ற ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் கவி தாகூரின் தத்துவத்தைத் தானே அறிஞர் அண்ணாவும், கழக அரசும் செயல் படுத்தினோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________
110
கலைஞர்
என்ற
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் கவி தாகூரின் தத்துவத்தைத் தானே அறிஞர் அண்ணாவும், கழக அரசும் செயல் படுத்தினோம்!
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
என்ற வட டலூர் வள்ளலாரின் கருத்தாழமிக்க வரிகளை
மறவாமல் கடவுட் பணியென்பது என்னவென்று தெளி வாக உணர்ந்து காரியமாற்றியதுதான் கழக அரசு!
1967-ஆம் ஆண்டு கழகம் தேர்தல் களத்தில் நின்ற போது "தி.மு. க வெற்றி பெற்றால் தேவாலயங்கள் இடிக் கப்படும்! தேர்த் திருவிழா நின்று விடும்! தெப்போற்சவம் தடுக்கப்படும்! மதவாதிகள் மனம் புண்படுத்தப்படும்! ஆண்டவன் திருவுலா இருக்காது! ஆறு கால பூஜை நடக் காது! ஆடிக்கிருத்திகை இல்லை! ஆனித் திருமஞ்சனம் இல்லை! மாசி மகமில்லை! பங்குனி உத்திரமில்லை! கார்த் திகை தீபமில்லை! கருமாரியம்மன் விழா இல்லை!" என் றெல்லாம் எதிர்க்கட்சியினர் எழுதினர், பேசினர்! ஒன்ப தாண்டுக் கால கமக ஆட்சியில் ஒருகுறைவும் ஏற்படாமல் அறநிலையப் பணிகள் தொடர்ந்து நடந்திருக்கின்றன.
.
ஆட்சி, ஜனவரி 31 ஆம் நாள் அகற்றப்பட்டதிலே யிருந்து நானும் பார்க்கிறேன், நாலாதிக்கிலிருந்தும் நமக்கு லட்சார்ச்சனைகள், சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன, என்ன காரணம் சொல்லி?
66
ஆலயங்களில் தி. மு. க ஆட்சிக் காலத்தில் ஊழல்கள்
பெருகிவிட்டன." இது பொதுப்படையான குற்றச்சாட்டு! இதன் கிளைகளாகப் பல குற்றச்சாட்டுக்கள்!
அவைகளை நான் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு விளக்கமளிக்க விரும்பு கிறேன்.
.
"சுவாமி காரியங்கள். திருப்பணிகள் எதுவும் சரியாக நடைபெறவில்லை" இது ஒரு குற்றச்சாட்டு!<noinclude></noinclude>
oj6r9tm9qqko7rl9apwul2sb6zmfy15
1928563
1928551
2026-04-30T05:58:07Z
Ramya sugumar
15106
1928563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|110||கலைஞர்}}</noinclude>ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற கவி தாகூரின் தத்துவத்தைத் தானே அறிஞர் அண்ணாவும், கழக அரசும் செயல் படுத்தினோம்!
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
என்ற வடலூர் வள்ளலாரின் கருத்தாழமிக்க வரிகளை
மறவாமல் கடவுட் பணியென்பது என்னவென்று தெளிவாக உணர்ந்து காரியமாற்றியதுதான் கழக அரசு!
1967-ஆம் ஆண்டு கழகம் தேர்தல் களத்தில் நின்ற போது “தி.மு. க வெற்றி பெற்றால் தேவாலயங்கள் இடிக்கப்படும்! தேர்த் திருவிழா நின்று விடும்! தெப்போற்சவம் தடுக்கப்படும்! மதவாதிகள் மனம் புண்படுத்தப்படும்! ஆண்டவன் திருவுலா இருக்காது! ஆறு கால பூஜை நடக்காது! ஆடிக்கிருத்திகை இல்லை! ஆனித் திருமஞ்சனம் இல்லை! மாசி மகமில்லை! பங்குனி உத்திரமில்லை! கார்த்திகை தீபமில்லை! கருமாரியம்மன் விழா இல்லை!” என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் எழுதினர், பேசினர்! ஒன்பதாண்டுக் கால கமக ஆட்சியில் ஒருகுறைவும் ஏற்படாமல் அறநிலையப் பணிகள் தொடர்ந்து நடந்திருக்கின்றன.
ஆட்சி, ஜனவரி 31 ஆம் நாள் அகற்றப்பட்டதிலேயிருந்து நானும் பார்க்கிறேன், நாலாதிக்கிலிருந்தும் நமக்கு லட்சார்ச்சனைகள், சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன, என்ன காரணம் சொல்லி?
“ஆலயங்களில் தி. மு. க ஆட்சிக் காலத்தில் ஊழல்கள்
பெருகிவிட்டன.” இது பொதுப்படையான குற்றச்சாட்டு! இதன் கிளைகளாகப் பல குற்றச்சாட்டுக்கள்! அவைகளை நான் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு விளக்கமளிக்க விரும்புகிறேன்.
“சுவாமி காரியங்கள், திருப்பணிகள் எதுவும் சரியாக நடைபெறவில்லை” இது ஒரு குற்றச்சாட்டு!{{nop}}<noinclude></noinclude>
3xm3lijnieym43jgnbhkrbpnlp98zkt
1928784
1928563
2026-04-30T08:01:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|110||கலைஞர்}}</noinclude>ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற கவி தாகூரின் தத்துவத்தைத் தானே அறிஞர் அண்ணாவும், கழக அரசும் செயல் படுத்தினோம்!
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வடலூர் வள்ளலாரின் கருத்தாழமிக்க வரிகளை மறவாமல் கடவுட் பணியென்பது என்னவென்று தெளிவாக உணர்ந்து காரியமாற்றியதுதான் கழக அரசு!
1967-ஆம் ஆண்டு கழகம் தேர்தல் களத்தில் நின்ற போது “தி.மு. க வெற்றி பெற்றால் தேவாலயங்கள் இடிக்கப்படும்! தேர்த் திருவிழா நின்று விடும்! தெப்போற்சவம் தடுக்கப்படும்! மதவாதிகள் மனம் புண்படுத்தப்படும்! ஆண்டவன் திருவுலா இருக்காது! ஆறு கால பூஜை நடக்காது! ஆடிக்கிருத்திகை இல்லை! ஆனித் திருமஞ்சனம் இல்லை! மாசி மகமில்லை! பங்குனி உத்திரமில்லை! கார்த்திகை தீபமில்லை! கருமாரியம்மன் விழா இல்லை!” என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் எழுதினர், பேசினர்! ஒன்பதாண்டுக் கால கமக ஆட்சியில் ஒருகுறைவும் ஏற்படாமல் அறநிலையப் பணிகள் தொடர்ந்து நடந்திருக்கின்றன.
ஆட்சி, ஜனவரி 31 ஆம் நாள் அகற்றப்பட்டதிலேயிருந்து நானும் பார்க்கிறேன், நாலாதிக்கிலிருந்தும் நமக்கு லட்சார்ச்சனைகள், சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன, என்ன காரணம் சொல்லி?
“ஆலயங்களில் தி. மு. க ஆட்சிக் காலத்தில் ஊழல்கள்
பெருகிவிட்டன.” இது பொதுப்படையான குற்றச்சாட்டு! இதன் கிளைகளாகப் பல குற்றச்சாட்டுக்கள்! அவைகளை நான் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு விளக்கமளிக்க விரும்புகிறேன்.
“சுவாமி காரியங்கள், திருப்பணிகள் எதுவும் சரியாக நடைபெறவில்லை” இது ஒரு குற்றச்சாட்டு!{{nop}}<noinclude></noinclude>
ru80iu934qodqjzehtgalfew98ok63x
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/121
250
642149
1928578
2026-04-30T06:04:00Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ £112 கலைஞர் பழனி கோயில் மலையினை விரிவுபடுத்தும் திருப்பணி வேலை 105 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணன் கோயில் கிருஷ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
£112
கலைஞர்
பழனி கோயில் மலையினை விரிவுபடுத்தும் திருப்பணி வேலை 105 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணன் கோயில்
கிருஷ்ணாபுரம் (நெல்லை)
திருப்பணி நடைபெற்று வருகிறது
கூடம்
திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் கலைக் அமைக்கும் வேலையை நானும் நமது நண்பர் கண்ணப்பன் அவர்களும் கலந்துகொண்டு தொடங்கி வைத்தோம்.
சங்கரன் கோயில் ஆலயத் திருப்பணி நடைபெற்று வருகிறது.
திருவைகுண்டம்
நடைபெற்று வருகிறது.
கள்ளபிரான் கோயில் திருப்பணி
ஆழ்வார் திருநகரி வடுவூர் கோதண்டராமசாமி கோயில், திண்டுக்கல் காலகத்தீஸ்வரர் கோயில், தஞ்சை மாவட்டம் பருதியப்பர் கோயில், பந்தணை நல்லூர், திருமுல்லைவாயில் கோயில்கள்-
மதுரை கூட -லழகர் கோயில், சோளிங்கர். விருத் தாசலம் கொளஞ்சியப்பர் கோயில்கள், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், திருமுஷ்ணம் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்
கோ
யில், வடசென்னிமலை, பாலசுப்பிரமணியர் கே யில் டும்பாவனம், தாராபுரம் மூலனூர் வஞ்சியம்மன் கே யில், அவிநாசி கோயில், காரமடை ரங்கநாதர் கோல். அய்யம்பாளையம் வாழைத் தோட்டத்து அம்மன் கோயில் முதலியவற்றில் திருப்பணிகள் முடிந்து குட முழுக்கு நடைபெற்றும், சிலவற்றில் திருப்பணிகள் நடந்து கொண்டும் இருக்கின்றன! இத்தனையும் கழக ஆட்சியில் தான்! இதை மறுக்கிறார்களே, மறைக்கிறார்களே-ஏன்?
ஒருவேளை திருப்பணி, குடமுழுக்கு என்று தழியில் கூறுவதால் புரியவில்லையோ? 'ஜீரணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்', "சம்ரோக்ஷணம்" என்ற<noinclude></noinclude>
5qdlvbv30c0iyvrvg6huyezio4bht48
1928585
1928578
2026-04-30T06:06:52Z
Ramya sugumar
15106
1928585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|112||கலைஞர்}}</noinclude>பழனி கோயில் மலையினை விரிவுபடுத்தும் திருப்பணி வேலை 105 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணன் கோயில்
கிருஷ்ணாபுரம் (நெல்லை)
திருப்பணி நடைபெற்று வருகிறது
கூடம்
திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் கலைக் அமைக்கும் வேலையை நானும் நமது நண்பர் கண்ணப்பன் அவர்களும் கலந்துகொண்டு தொடங்கி வைத்தோம்.
சங்கரன் கோயில் ஆலயத் திருப்பணி நடைபெற்று வருகிறது.
திருவைகுண்டம்
நடைபெற்று வருகிறது.
கள்ளபிரான் கோயில் திருப்பணி
ஆழ்வார் திருநகரி வடுவூர் கோதண்டராமசாமி கோயில், திண்டுக்கல் காலகத்தீஸ்வரர் கோயில், தஞ்சை மாவட்டம் பருதியப்பர் கோயில், பந்தணை நல்லூர், திருமுல்லைவாயில் கோயில்கள்-
மதுரை கூட -லழகர் கோயில், சோளிங்கர். விருத் தாசலம் கொளஞ்சியப்பர் கோயில்கள், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், திருமுஷ்ணம் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்
கோ
யில், வடசென்னிமலை, பாலசுப்பிரமணியர் கே யில் டும்பாவனம், தாராபுரம் மூலனூர் வஞ்சியம்மன் கே யில், அவிநாசி கோயில், காரமடை ரங்கநாதர் கோல். அய்யம்பாளையம் வாழைத் தோட்டத்து அம்மன் கோயில் முதலியவற்றில் திருப்பணிகள் முடிந்து குட முழுக்கு நடைபெற்றும், சிலவற்றில் திருப்பணிகள் நடந்து கொண்டும் இருக்கின்றன! இத்தனையும் கழக ஆட்சியில் தான்! இதை மறுக்கிறார்களே, மறைக்கிறார்களே-ஏன்?
ஒருவேளை திருப்பணி, குடமுழுக்கு என்று தழியில் கூறுவதால் புரியவில்லையோ? 'ஜீரணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்', "சம்ரோக்ஷணம்" என்ற<noinclude></noinclude>
qcuptk6zi1vyfa56a1k7i665uao8sjd
1928600
1928585
2026-04-30T06:13:52Z
Ramya sugumar
15106
1928600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|112||கலைஞர்}}</noinclude>பழனி கோயில் மலையினை விரிவுபடுத்தும் திருப்பணி வேலை 105 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணாபுரம் (நெல்லை) கிருஷ்ணன் கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது
திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் கலைக்கூடம் அமைக்கும் வேலையை நானும் நமது நண்பர் கண்ணப்பன் அவர்களும் கலந்துகொண்டு தொடங்கி வைத்தோம்.
சங்கரன் கோயில் ஆலயத் திருப்பணி நடைபெற்று வருகிறது.
திருவைகுண்டம் கள்ளபிரான் கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது.
ஆழ்வார் திருநகரி வடுவூர் கோதண்டராமசாமி கோயில், திண்டுக்கல் காலகத்தீஸ்வரர் கோயில், தஞ்சை மாவட்டம் பருதியப்பர் கோயில், பந்தணை நல்லூர், திருமுல்லைவாயில் கோயில்கள்—
மதுரை கூடலழகர் கோயில், சோளிங்கர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில்கள், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், திருமுஷ்ணம் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், வடசென்னிமலை, பாலசுப்பிரமணியர் கோயில் இடும்பாவனம், தாராபுரம் மூலனூர் வஞ்சியம்மன் கோயில், அவிநாசி கோயில், காரமடை ரங்கநாதர் கோயில், அய்யம்பாளையம் வாழைத் தோட்டத்து அம்மன் கோயில் முதலியவற்றில் திருப்பணிகள் முடிந்து குட முழுக்கு நடைபெற்றும், சிலவற்றில் திருப்பணிகள் நடந்து கொண்டும் இருக்கின்றன! இத்தனையும் கழக ஆட்சியில தான்! இதை மறுக்கிறார்களே, மறைக்கிறார்களே—ஏன்?
ஒருவேளை திருப்பணி, குடமுழுக்கு என்று தழியில் கூறுவதால் புரியவில்லையோ? “ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்”, “சம்ரோக்ஷணம்” என்ற<noinclude></noinclude>
fm2x2c3568zsxk6myqter1djxi52ybn
1928793
1928600
2026-04-30T08:04:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|112||கலைஞர்}}</noinclude>பழனி கோயில் மலையினை விரிவுபடுத்தும் திருப்பணி வேலை 105 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணாபுரம் (நெல்லை) கிருஷ்ணன் கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது
திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் கலைக்கூடம் அமைக்கும் வேலையை நானும் நமது நண்பர் கண்ணப்பன் அவர்களும் கலந்துகொண்டு தொடங்கி வைத்தோம்.
சங்கரன் கோயில் ஆலயத் திருப்பணி நடைபெற்று வருகிறது.
திருவைகுண்டம் கள்ளபிரான் கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது.
ஆழ்வார் திருநகரி வடுவூர் கோதண்டராமசாமி கோயில், திண்டுக்கல் காலகத்தீஸ்வரர் கோயில், தஞ்சை மாவட்டம் பருதியப்பர் கோயில், பந்தணை நல்லூர், திருமுல்லைவாயில் கோயில்கள்—
மதுரை கூடலழகர் கோயில், சோளிங்கர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில்கள், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், திருமுஷ்ணம் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், வடசென்னிமலை, பாலசுப்பிரமணியர் கோயில் இடும்பாவனம், தாராபுரம் மூலனூர் வஞ்சியம்மன் கோயில், அவிநாசி கோயில், காரமடை ரங்கநாதர் கோயில், அய்யம்பாளையம் வாழைத் தோட்டத்து அம்மன் கோயில் முதலியவற்றில் திருப்பணிகள் முடிந்து குட முழுக்கு நடைபெற்றும், சிலவற்றில் திருப்பணிகள் நடந்து கொண்டும் இருக்கின்றன! இத்தனையும் கழக ஆட்சியில தான்! இதை மறுக்கிறார்களே, மறைக்கிறார்களே—ஏன்?
ஒருவேளை திருப்பணி, குடமுழுக்கு என்று தமிழில் கூறுவதால் புரியவில்லையோ? “ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்”, “சம்ரோக்ஷணம்” என்ற<noinclude></noinclude>
6s8w0boixf4q8r82eelrjdrcwdtcwkp
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/122
250
642150
1928612
2026-04-30T06:19:21Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சொற்களைப் பயன்படுத்தியிருந்தால் புரிந்திருக்குமோ, என்னவோ! இடிந்த கோபுரங்கள் எழில் பெற்றன! இருண் கோயில்கள் ஒளி பெற்றன! ஆமாம்! நமது கழக ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||113}}</noinclude>சொற்களைப் பயன்படுத்தியிருந்தால் புரிந்திருக்குமோ, என்னவோ!
இடிந்த கோபுரங்கள் எழில் பெற்றன! இருண் கோயில்கள் ஒளி பெற்றன! ஆமாம்! நமது கழக ஆட்சியில்! அதற்குத்தான் இத்தனை பெரிய பட்டியலை உனக்குத் தந்தேன்!
இன்னும் ஐயாயிரம் கோயில்களில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடந்ததற்கான பெரிய பட்டியலே இருக்கிறது.
திருத்தணி, பழமுதிர்சோலை, சென்னிமலை ஆகிய மலைக்கோயில்களுக்குச் சிரமமின்றி செல்வதற்கு ஒழுங்கான சாலைகள் அமைக்கப்பட்டதும் கழக ஆட்சியிலேதான்!
பழனியில் திருப்பணி தொடக்க விழாவும், அந்த ஆலயத்தின் சார்பில் அமைக்கப்பட்ட செவிடர், ஊமையர் பள்ளிகள் தொடக்க விழாவும் நடைபெற்றபோது நானும் நண்பர்கள் அன்பில் கண்ணப்பன், ஒ. பி. இராமன் ஆகியோரும் கலந்து கொண்டோம்.
இதயத்தில் பதிந்திருக்கிற கொள்கைக்கும், ஏற்றுக் கொண்டிருக்கிற பொறுப்புக்கும் மாசு வராமல் காப்பாற்றுகிற கடமையைக் கழக அரசு தவராமல் செம்மையாகச் செய்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக் காட்டுக்கள்! இவைகளைப் பாராட்ட முடியாதவர்கள் பழி கூறியல்லவா தி. மு. கழகத்தைக் களங்கப்படுத்தப் பார்க்கிறார்கள்! அதற்காக அவர்கள் அடுக்கிக் காட்டும் குற்றச்சாட்டுகள் யாவை?
நிதி மாற்றங்கள் செய்து வேறு காரியங்களுக்குச் செலவழித்தது ஒரு குற்றம்! வேறு காரியங்கள் என்றால் என்ன?{{nop}}<noinclude></noinclude>
q18feug2cuhphvg2m37eqyiuj635n3m
1928798
1928612
2026-04-30T08:06:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||113}}</noinclude>சொற்களைப் பயன்படுத்தியிருந்தால் புரிந்திருக்குமோ, என்னவோ!
இடிந்த கோபுரங்கள் எழில் பெற்றன! இருண் கோயில்கள் ஒளி பெற்றன! ஆமாம்! நமது கழக ஆட்சியில்! அதற்குத்தான் இத்தனை பெரிய பட்டியலை உனக்குத் தந்தேன்!
இன்னும் ஐயாயிரம் கோயில்களில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடந்ததற்கான பெரிய பட்டியலே இருக்கிறது.
திருத்தணி, பழமுதிர்சோலை, சென்னிமலை ஆகிய மலைக்கோயில்களுக்குச் சிரமமின்றி செல்வதற்கு ஒழுங்கான சாலைகள் அமைக்கப்பட்டதும் கழக ஆட்சியிலேதான்!
பழனியில் திருப்பணி தொடக்க விழாவும், அந்த ஆலயத்தின் சார்பில் அமைக்கப்பட்ட செவிடர், ஊமையர் பள்ளிகள் தொடக்க விழாவும் நடைபெற்றபோது நானும் நண்பர்கள் அன்பில் கண்ணப்பன், ஒ. பி. இராமன் ஆகியோரும் கலந்து கொண்டோம்.
இதயத்தில் பதிந்திருக்கிற கொள்கைக்கும், ஏற்றுக் கொண்டிருக்கிற பொறுப்புக்கும் மாசு வராமல் காப்பாற்றுகிற கடமையைக் கழக அரசு தவறாமல் செம்மையாகச் செய்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக் காட்டுக்கள்! இவைகளைப் பாராட்ட முடியாதவர்கள் பழி கூறியல்லவா தி. மு. கழகத்தைக் களங்கப்படுத்தப் பார்க்கிறார்கள்! அதற்காக அவர்கள் அடுக்கிக் காட்டும் குற்றச்சாட்டுகள் யாவை?
நிதி மாற்றங்கள் செய்து வேறு காரியங்களுக்குச் செலவழித்தது ஒரு குற்றம்! வேறு காரியங்கள் என்றால் என்ன?{{nop}}<noinclude></noinclude>
9dl8hogw0uq70tb9w3jyz74e0hk8j5r
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/123
250
642151
1928614
2026-04-30T06:20:12Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 114 கலைஞர் ஊனமுற்றோர் நல்வாழ்வுக்கு நிதி வழங்கியது- கண்ணொளி வழங்கும் திட்டத்துக்கு நிதி வழங்கியது- கருணை இல்லங்கள் அமைத்து அதற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________
114
கலைஞர்
ஊனமுற்றோர் நல்வாழ்வுக்கு நிதி வழங்கியது- கண்ணொளி வழங்கும் திட்டத்துக்கு நிதி வழங்கியது- கருணை இல்லங்கள் அமைத்து அதற்குக் கோயில் நிதியில் ஒரு பங்கு வழங்கி அனாதைச் சிறுவர்களுக்கு கல்வி வழங்கு வது - தொழு நோயாளிகளின் மறுவாழ்வு இல்லங்களுக்கு உதவி அளித்தது-
இவைகள் எல்லாம் வேறு காரியங்களுக்குச் செல வழித்தது என்ற குற்றத்தின்பாற்பட்டவைகளாம்!
முன்னாள் முதல்வராகவும் அறநிலைய அமைச்சராகவும் இருந்த பெரியவர் பக்தவத்சலம் அவர்கள். இந்த வார "தினமணி கதிர்" இதழில் பின்வருமாறு எழுதுகிறார்:
..
"கோயில் வருமானம், மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் ஏழைகளுக்கும் பயன்படவேண்டும். நூலகங்கள் ஏற்படுத்த வேண்டும். திருமண மண்டபங்கள் கட்டவேண்டும்
D
இது அவரது சீரிய கருத்து! சிறந்த கருத்தும்கூட!
அற
அதுமட்டுமல்ல 1959ஆம் ஆண்டு இந்து சமய நிலையத்துறை சட்டம் 66-ன் படியும். 1960ஆம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதிய அரசின் ஆணைப்படியும், கோயில் களின் உபரி நிதி, எந்தக் காரியங்களுக்கு வழங்கப்படலா மென்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதில்,
1.
வறுமை நிலைபிலிருக்கிற அல்லது உதவி தேவைப் படுகிற மத சம்பந்தமான இதர நிலையங்களுக்கு,
2. மத கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்ய,
3.
இந்துக் குழந்தைகட்கு அனாதை இல்லங்கள் ஏற்படுத்தி பராமரிக்க,
4. தொழு நோயாளிகளுக்கான இல்லங்களை ஏற்படுத்த.
5. ஏழைகள்,
ஆதரவற்றவர், தேக திடமற்றவர்
களுக்கு விடுதிகள் ஏற்படுத்த என்பவைகளும் அடங்கி
யிருக்கின்றன.<noinclude></noinclude>
08dhf2gn0qvsbn4mhtxi7ujwmp6uvxa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/646
250
642152
1928652
2026-04-30T06:38:50Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நகர வேந்தனுக்கு வழங்கினான். விசய நகர இந்து வேந்தனின் பேராதிக்கமும் பெரும் புகழும் பெருகி, வருவது கண்ட அகமது நகர், பீசப்பூர், பீடார், கோல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குதுப்சாகி அரசர்கள்|618|குதுப்சாகி அரசர்கள்}}</noinclude>நகர வேந்தனுக்கு வழங்கினான். விசய நகர இந்து வேந்தனின் பேராதிக்கமும் பெரும் புகழும் பெருகி, வருவது கண்ட அகமது நகர், பீசப்பூர், பீடார், கோல்கொண்டாகல்தான்கள், தங்களுக்குள் சோலாப் பூசில் உடன்படிக்கை செய்து கொண்டு, விசயநகரத்தின் மீது படையெடுக்க ஆயத்தமாயினர், பன்னிகட்டி (Bannihatti) என்னுமிடத்தில் விசயநகரப் படைக்கும். சுல்தான்களின் படைக்கும் கி.பி. 1565 சனவரித் திங்கள் 23-ஆம் நாள் நடந்த கடும் போரில், சுல்தான்கள் பெரு வெற்றி பெற்றனர். இங்வெற்றிக்குப் பின்னர்ச் சுல்தான்களிடையே கருத்து வேறுபாடு மீண்டும் ஏற்பட்டது.
பின்னர் இபுராகிம் தென் ஓரிசாவின் மீது படையெடுத்து இராசமுந்திரி, காசிம்கோட்டோ, சந்திரபார் - முதலான நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டார். பின்னர் இவர் விசய நகரத்தின் மீது படையெடுத்து கி.பி. 1578-இல் அகோபிலத்தையும் உதயகிரியையும், கி.பி. 1579-இல் வினுகொண்டா கச்சர்கோட்டா, கொண்ட வீடு - முதலான கோட்டைகளையும் பிடித்துக் கொண்டார். ஆதில் சாகி அரசின் மீது படையெடுத்து சாகர், யாத்கீரி (Yadgir) முதலான பல கோட்டைகளைக் கைப்பற்றிய இபுராகிம், அகமது நகரச் சுல்தானுடன் சேர்ந்து கொண்டு பீசப்பூரையும் தாக்கினார். இபுராகிம் 5.5.1580-இல் இறந்தார்.
குதுப்சாசி வமிசத்தின் வலிமைமிக்க சுல்தான்களும் ஒருவராகத் திகழ்ந்த இபுராகிம், உள்நாட்டுக் கலகங்களை ஒடுக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதுடன், தம் அரசினை வங்காளத்தின் எல்லைவரையில் விரிவுபடுத்தினார். இவரது ஆட்சிக் காலத்தில் வாணிகம் செழித்தது, பாரசீகம், அரேபியா துருக்கி முதலான நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் கோல்கொண்டாவுடன் வாணிகத் தொடர்பு கொண்டனர். கலையார்வம் கொண்ட இவர் கோல்கொண்டா கோட்டையை விரிவுபடுத்தியதுடன், பல அரண்மனைகளையும் கட்டடங்களையும் கட்டினார். இவரால் அணைகளும் பேரேரிகளும் கட்டப்பட்டன. பூங்காக்களை அமைத்தார். இவரால் கட்டப்பட்ட அவணகளுன் புட்வல் அணையும் (Budwal Dam) பேரேரிகளுள் உசைன்சாகர், இபுராகிம் பட்டணப் பேரேரி ஆகியவை குறிப்பிடத் தக்கயவாகும். முசி ஆற்றில் இவரால் கட்டப்பட்ட புராணா பூல் (Purana Pul) என்னும் பழைய பாலம் மிகப் பெரியதும் வலிமை மிக்கதும் ஆகும்.
இபுராகிம் தெலுங்கு இலக்கியத்தையும், தட்சிண உருதுவையும் பேணிப் பாதுகாத்தார். அடங்கி கங்காதரர், பண்ணகண்டி தெமிகதார்யர் சந்து கூரிருத்ரர் முதலான தெலுங்கு கவிகளும் முல்லாகியாலி, மகமது, அகமது, பிரூசு (Firuz) - முதலான உருதுப் புலவர்களும் இவரது அவையை அலங்கரித்தனர். சமயப் பொறை கொண்ட இவரது ஆட்சியில் இந்துக்களும் உயர்பதவி பெற்றனர். இவர் கி.பி. 1580-இல் இறந்து பட்டார்.
<b>முகம்மது கூலிருதுப்சா</b> (கி.பி.1580-1612) குதுப்சாகி வமிசத்தின் சுல்தானாக 5.5.1580-இல் பதவியேற்று 32 ஆண்டுகள் சிறப்புடன் ஆண்டார். ஐதராபாது நகரத்தை உருவாக்கிப் பூங்காக்கள், அரண்மனைகள், மசூதிகள் - ஆகியவற்றை அமைத்து, அதனை அழகு படுத்திய பெருமை குதுப்சாவைச் சாரும். நகரின் நடுவே சமி மசூதியையும் (Jami Mosque) சார்மினாரையும் அமைத்தவரும் இவரே. நகரத்தின் வெளியிலும் பல மசூதிகளை அமைத்த இவர், மக்களுக்காக மருத்துவமனையும் கட்டினார், எல்லாவற்றிற்கும் மேலாக இசசுல்தானின் வீறார்த்த கல்லறைமாடம் மிகுந்த கலைநுட்பம் கொண்டது.
குதுப்சாவின் ஆட்சிக்காலத்தில மொகலாய வேந்தன் அக்பரின் தக்காணப் படையெழுச்சி கி.பி. 1596,1597-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தது. குதுப்சா நைசாம்ராகி அரசுக்குப் படையுதவி செய்து முகலாயரை எதிர்த்தார். தைசாம் சாகி அரசின் மாலிக் அம்பருக்கு கி.பி. 1609-இல் பெரும்பொருள் கொடுத்துதவி, அகமது நகர் கோட்டையினின்றும் முகலாயர்களை விரட்டியடிக்கத் துணைபுரிந்தார். விசயநகர வேந்தனான இரண்டாம் வேங்கடரை வென்று, இவர் குட்டிகானால், கண்டிக்கோட்டைப் பகுதிகளைக் கைக்கொண்டார். இவ்வேந்தனது பெருமையை உணர்ந்த பாரசீகச் சுல்தானான அப்பாக (Shah Abbas, கி.பி. 1587-1629) அகுசுலு சுல்தான் (Aghuzlu Sultan) என்னும் தூதுவனிடம் விலையுயர்ந்த பரிசுகளை அளித்துக் கூலி குதுப்சாலிடம் அனுப்பினான். இத்தூதுவனும் ஆறாண்டுக் காலம் குதுப்சாவின் அரண்மனையில் தங்கினான், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் மசூலிப்பட்டணத்தில் தொழிற்சாலை அமைக்கவும் குதுபசா அனுமதி அளித்தார். ஏழைகளுக்கு இலவச உணவும் வெகுமதியும் வழங்கி இலக்கியப் புரவராகவும், கலைக் காவலராகவும் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிய பொதுநலப் பிரியராகவும் விளங்கிய கூலி குதுப்சா கி.பி. 1612-ஆம் ஆண்டு காலமானார்.
<b>முகம்மது குதுப்சா</b> (கி.பி. 1612-1626) கூலி குதுப்சாவிற்குப்பின் சுல்தான் பதவி ஏற்று, ஐதராபாதை மேலும் அழகு படுத்தினார். அமைதிப் பணியில் நாட்டம் கொண்ட இவர் மாபெரும் கவிஞராகவும் அறிஞராகவும் விளங்கினார்; பல கவிதைகளையும் இயற்றி-<noinclude></noinclude>
opv0yhpfinu4yrg3ti4pn0qdgzzh69p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/647
250
642153
1928710
2026-04-30T07:08:09Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னார். முதலாய அரசுடன் பகைத்துக் கொள்ள விரும்பாமல் சாசகானுடன் நட்புப் பாராட்டிய முகம்மது குதுப்சா கி.பி. 1626-இல் இறந்தார். இவரது ஆட்சிக்குப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குதுப்சாகி அரசர்கள்|619|குதுப்சாகி அரசர்கள்}}</noinclude>னார். முதலாய அரசுடன் பகைத்துக் கொள்ள விரும்பாமல் சாசகானுடன் நட்புப் பாராட்டிய முகம்மது குதுப்சா கி.பி. 1626-இல் இறந்தார். இவரது ஆட்சிக்குப்பின் குதுப்சாசி வமிசம் வீழ்ச்சியுறத் தொடங்கியது. இச்சுய்தானுக்குப்பின் இவர் மைந்தலான அப்துல்லா குதுப்சா (கி.பி. 1626-1672) என்னும் 12 வயதுச் சிறுவன் ஆட்சிப் பொறுப்பேற்றான். முகலாய சாசகான் தக்காண சுல்தான்களை வேருடன் களைய முனைத்தான். அப்துல்லா கி.பி. 1636-ஆம் ஆண்டு முகலாயரின் மேலாண்மையை நிலையாக ஏற்றுக் கொண்டு, கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான். தக்காணத்தின் அரசப் பேராளராக அமர்த்தப்பட்ட ஒளரங்கசீபு, தனது பேராளனாக ஒருவனைக் கோல்கொண்டா அரசவையில் அமர்த்தி, அரசகாரியங்களைக் கண்காணிக்கர் செய்தான், அப்துல்லாவிற்கும் அவன் தலைமை அமைச்சரான மீர்கம்வாலிற்கும் (Mir-Jumlu) தகராறு எழுந்தது. மீர்சும்லாவின் அதிகாரம் பெருகியது. மீர்சும்லாவின் குடும்பம் அப்துல்லாவால் தண்டிக்கப்பட்டது. மீர்கம்லா மொகலாய வேந்தனுடன் இரகசியத் தொடர்பு கொண்டான். அதன் விளைவாக இளவரசர் ஔரங்கசீபின் தாக்குதலை அப்துல்லா சந்திக்க வேண்டியிருந்தது, கோல்கொண்டாவை 7.12.1636-இல் முற்றுகையிட்ட ஒளரங்கபுே பேரரசர் சாசகானின் தலையீட்டால் முற்றுகையைக் கைவிட்டான். இவ்வாறு குதுப்சாகி அரசு அப்துல்லா காலத்தில் முகலாயரின் மிரட்டலுக்கு உள்ளானது.
<b>அபுல் அசன் குதுப்சா</b> (Abul Hasan Qutb Shah-கி.பி. 1672-1687) சுல்தான் பதவியேற்று, 21.4.1672-இல் மதண்ணன், அக்கண்ணன் என்னும் இரு பார்ப்பன சகோதரர்களின் துணை கொண்டு தனது படை வலிமையைப் பெருக்கினான்; மராட்டிய சிவாசியுடனும் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொண்டான், குதுப்சா அரசவையில் இந்துக்களின் ஆதிக்கத்தை அனுமதித்ததாலும், சிவாசிக்கு உதவி புரிந்ததாலும். ஒளரங்கசீபு அபுல் அசன் மீது தீராக் கோபம் கொண்டான். மொகலாயப் படை மூவராம் (Muazzam) தலைமையில் கோல்கொண்டாவை. முற்றுகையிட்டு, வென்று, அழிவு வேலையில் ஈடுபட்டது. அபுல் அசன் முகலாயருடன் சமாதானம் செய்து கொண்டு ஆண்டுதோறும் பெரும் பொருளைக் கப்பமாக அளிக்க ஒப்புக் கொண்டான். மீண்டும் 28.1.1687 -இல் கோல்கொண்டா கோட்டை முகலாயப் படையால் முற்றுகையிடப்பட்டது. அப்துல் ரசாக்கு என்ற முகதபாகான் (Abdur Razzaq Lari alias Mustafa Khan) கோல்கொண்டா கோட்டையைப் பெரு வீரத்துடனும் திறமையுடனும் காத்துக்கடும் போர் புரிந்தான். அபுல் அசனுக்காக வீரமரணம் அடையவும் விழைந்தான், இருப்பினும் அப்துல்லா பானியின் துரோகச் செயலால் கோட்டை எதிரியின் கரத்தில் வீழ்ந்தது. கோல்கோண்டா அரசு கி.பி. 1687-இல் முகலாயப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. அபுல் அசன் கி.பி.1700-இல் மண்ணுலக வாழ்வை நீத்தான்.
<b>குதுப்சாகி அரசும் தமிழகமும்</b>: தக்காண அரசுகளுக்கும் தமிழகத்திற்கும் நெடுங்காவமாகலே தொடர்பு உண்டு, பாமினி சுல்தானின் படைத் தலைவனான முகம்மதுகவான் கி.பி. 1481-இல் முதன் முறையாகத் தமிழகத்தின் மீது படையெடுத்து, காஞ்சி வரை முன்னேதினான். பாமினியின் அழிவிற்குப் பின் கோல்கொண்டாவின் குதுப்சாகி அரசும் தமிழகத்தின் மீது தனது தாக்குதலை நிகழ்த்தியது. சுல்தான்களுக்கும் தமிழக வேந்தர்களுக்கும் நேரடிப் பகைமை ஏற்படாதிருந்த போதிலும், விசயநகரத்தை அழிக்க முற்பட்ட கோல்கொண்டாச் சுல்தான்கள், விசய நகரப் பேரரசனுக்கு உட்பட்ட பகுதியாக விளங்கிய தமிழகத்தின் மீதும் படையெடுத்தனர். விசயநகரப் பேரரசர்களான கிருட்டிணதேவராயர், அச்சுதராயர் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் தமிழகம் முழுவதும் பேரரசரது ஆட்சிக்குட்பட்டிருந்தது. தலைக்கோட்டைப் போருக்குப் (2.பி 1565) பின்னர் விசயநகரம் அழிக்கப்பட்டது. ஆரவீடு வமிசத்தினர் தம் தலைநகரை முதலில் பெனுகொண்டாவிற்கும், பின்னர் சந்திரகிரிக்கும் இறுதியில் வேலூருக்கும் மாற்றினர், விசயநகரத்தைத் தாக்கிய சுல்தான்கள், தமிழகத்தின் மாநிலத் தலைநகரங்களாகத் திகழ்ந்த மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் ஆகியவற்றையும் தாக்கினர், விசய நகர வமிசத்தின் பேரரசர் வேங்கடர், தாம் இழந்த பகுதிகளை மீட்கக் கருதிக் கோல்கொண்டாவின் மீது படையெடுத்தார். வேங்கடரின் இத்தவறான செயலே தக்காணச் சுல்தான்களைத் தமிழகத்தில் படையெடுக்கத் தூண்டியது; மாறான விளைவுகளையும் ஏற்படுத்தியது. கோல்கொண்டார் சுல்தான் கி.பி.1590-இல் பெனுகொண்டாவை முற்றுகையிட்டான். வேங்கடர் கோல்கொண்டாவைத் தாக்கினாம். கோல்கொண்டாச் சுல்தானும் அப்போது தமிழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்.
விசய நகரப் பேரரசில் கி.பி. 1616 முதல் 1639 முடிய ஏற்பட்ட உள்நாட்டுக் கலகங்களைச் சாதகமாகப் பயன்படுத்தில் கொண்டு, பீசப்பூர் கோல் கொண்டாச் சுல்தான்கள் தம் செல்வாக்கைத் தமிழகத்தில் பரப்பினர். கோல்கொண்டாச் சுல்தான், கி.பி. 1644-இல் பேரரசின் மீது படையெடுத்தான், சீரங்கன், பீசப்பூர் படையுதவியுடன் இதனைத் தடுத்தான். இருப்பினும் கோல்கொண்டாப் படையினர்<noinclude></noinclude>
2q9b8vp3me9925xqa820ndhlhib3qvc
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/144
250
642154
1928715
2026-04-30T07:10:32Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|122 நூல் புழு வகையியல்}}</noinclude><section begin="82"/>{{fs|110|<b>நூல் புழு நோய்கள்</b>}}
நூல் புழுக்கள் நிமெட்டோடா என்னும் விலங்கியல் வகையைச் சேர்ந்தவை. வகையிலும், எண்ணிக்கையிலும், பல விதமான சூழ்நிலைக்கேற்பப் பரவிக் காணப் படும் தன்மையிலும், இவை ஏறத்தாழ பூச்சி வகைகளை ஒத்தவை. நூல் புழுக்களின் வகைகளைச் சார்பாகக் கொண்டு, அவற்றின் உடற்கூறு, இருப்பிடம், உணவு வகை, வாழ்க்கை நிலை, வளர்ச்சி, இனப் பெருக்கம், சூழ்நிலை முதலியவற்றை ஆராய்ந்தறிய முடியும். அவ்வப்போது மேற்கொள்ளப் படும் ஆராய்ச்சியின் பயனாக, முன்னரே ஏற்படுத்தியுள்ள வகைகளில் மாற்றங்கள் ஏற்படும் அல்லது புதியன புகுத்தப் படும். நூல் புழுக்களின் பெயர்களும், பொருத்தமான காரணங்களால் மாற்றத்திற்குள்ளாவதும் உண்டு. ஆனால், விலங்கியலில் பலராலும் ஏற்கப்படும் பெயரிடும் மரபிற்குட்பட்டே (International code of Zoological nomenclature) பெயர் வைப்பதும், மாற்றமும் செய்யப் படும்.
நூல் புழுக்களின் பெயர் இரு பிரிவாக இருக்கும். முதற்பகுதி அது சார்ந்துள்ள தொடர்பை அல்லது இனத்தைக் குறிப்பதாகவும், இரண்டாம் பகுதி அந்த நூல் புழுவுக்கு மட்டுமே குறிப்பிட்ட பெயராகவும் அமையும். எ–டு: மிலாய்டொகைனி இன்காகினிடா (<i>Meloidogune incognita</i>).
<b>நூல் புழுவின் உடற்கூறு</b>. ஏனைய இனங்களிலிருந்து பிரித்துக் கண்டறிய, நூல் புழுவின் உடல் கூற்றில் பல வேறுபாடுகள் உள்ளன. நூல் புழு மெலிந்து, நீண்டு புழுப் போல நுனியில் குறுகியிருக்கும். இதன் தோல் மேல் சவ்வில் நுண்ணிய வளைவுகள் காணப் படும். இந்தச் சவ்வு மூன்று அடுக்காக இருக்கும். உடலில் வாய்ப் பகுதியில், கடினமான குத்தூசி போன்ற அலகு இருக்கும். இதனைத் தொடர்ந்து அன்னக் குழாயும், அதன் ஏனைய பகுதிகளும், குடலும் அமைந்திருக்கும். கரு உறுப்புகளான முட்டைச் சுரப்பி (ovary), விந்துச் சுரப்பி (testis) ஆகியவை இருக்கும். பெண் கரு உறுப்பின் வழி சவ்வில் அமைந்திருக்கும். ஆசன வாய் குடலின் வெளிப் புறம் வழியாக வால் சவ்வில் இருக்கும்.
ஆண் நூல் புழுவில் விந்துச் சுரப்பியின் வழி, ஆசன வாயுடன் கூடி இருக்கும். விந்துச் சுரப்பியுடன், ஆண் குறி இணைந்து இருக்கும். சில ஆண் நூல் புழுக்களின் ஆசன வாயைப் பாதுகாக்க, விசிறி போன்ற சவ்வு (bursa) படர்ந்திருக்கும். முட்டைச் சுரப்பிகள் இரண்டு அல்லது ஒன்றாக இருக்கும். விந்துச் சுரப்பியும் ஒன்று அல்லது இரண்டாக இருக்கும். பல நூல் புழு வகைகளில் ஆண், பெண் இரண்டுமே புழு வடிவில் காணப் படும். ஆனால், சிலவற்றில் பெண் நூற்புழுக்கள் பெருத்துத் தடித்த உருண்டை போன்ற பல்வேறு அமைப்புக் கொண்டவையாய் இருக்கும். இவையே ஒட்டுண்ணி வாழ்க்கையை மேற்கொண்டுமிருக்கும்.
<b>வகைப்படுத்துதல்</b>. நூல் புழுக்களை வகைப்படுத்தலில் அவற்றின் உடற்கூறு இன்றியமையாதது. இதில் உடலமைப்பு, தோல் சவ்வின் மேலுள்ள வளைவு அமைப்பு, அதன் அளவு, அலகின் நீளம், வடிவமைப்பு, அன்னக் குழாயின் உருவமைப்பு, உணவுக் குழல் சுரப்பி (oesophageal gland), அது குடலின் மேல் பக்கத்தில் அமைந்துள்ள விதம் போன்றவை பொது உடற் கூறுகளாகும். பெண் கரு உறுப்பு அமைந்துள்ள இடம், முட்டைச் சுரப்பிகளின் பகுதிகள், எண்ணிக்கை, முட்டை வெளியில் தனித் தனியாக இடப் படுகிறதா, முட்டைச் சவ்வில் (egg matrix) இடப் படுகிறதா, முட்டைக் கூட்டினுள்ளேயே இருக்கிறதா போன்ற விவரங்கள், பெண் நூற்புழுவை இனம் காண <!--- Line repeated ---> உதவும். இதே போல், ஆண் நூற்புழுக்களின் வகையறிய, விந்துச் சுரப்பியின் எண்ணிக்கை, ஆண் குறியின் அமைப்பு, ஆசன வாயை மூடியுள்ள விசிறி போன்ற சவ்வின் நீளம், அமைப்புப் போன்றவை பயனாகும். சில நூற்புழு வகைகளில் முட்டை, பெண் புழுவின் கருப்பையின் உள்ளேயே பொரிந்து, பின்னர், புழு துளைத்துக் கொண்டு வருவதும் உண்டு.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 144
|bSize = 820
|cWidth = 353
|cHeight = 350
|oTop = 667
|oLeft = 437
|Location = center}}{{nop}}<noinclude></noinclude>
3e579z4zuay5iye18rdl9kqmh8ye3la
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/145
250
642155
1928716
2026-04-30T07:11:44Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல் புழு வகையியல் 123}}</noinclude>{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 145
|bSize = 400
|cWidth = 365
|cHeight = 450
|oTop = 48
|oLeft = 10
|Location = center}}{{nop}}<noinclude></noinclude>
ejfwfbqwqxahyx1m5s9om8ntpq1m0dt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/648
250
642156
1928717
2026-04-30T07:17:56Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தமிழகத்தைத் தாக்கிப் பழவேற்காடு வரையில் தடையின்றி முன்னேறினர்; பெரும் பொருளைக் கொள்ளையிட்டனர்; சீரங்களோ வேறு வழியின்றிக் கோல்கொண்டா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குதுப்மினார்|620|குதுப்மினார்}}</noinclude>தமிழகத்தைத் தாக்கிப் பழவேற்காடு வரையில் தடையின்றி முன்னேறினர்; பெரும் பொருளைக் கொள்ளையிட்டனர்; சீரங்களோ வேறு வழியின்றிக் கோல்கொண்டா படைத்தலைவனுக்குப் பெரும்பொருளைக் கையூட்டாகக் கொடுத்துச் சுல்தானுடன் சமாதானம் செய்து கொண்டான்.
பேரரசர் மூன்றாம் சீரங்கர் கி.பி. 1645-இல் திருமலைநாயக்கரைத் தண்டிக்க மதுரை மீது படையெடுத்தார். திருமலை நாயக்கரோ கோல்கொண்டாச் சுல்தானை வேலூர் மீது படையெடுக்கும் படி கேட்டுக் கொண்டார், கோல்கொண்டாப் படைத்தலைலனான மீர் கம்லா வேலூரைப் பிடித்தான். சீரங்கள் வேலூரை விட்டு ஓடிவிட்டான். இத்தருணத்தில் மீர் கம்லா ஆவந்தியரிடமிருந்து பழவேற்காட்டையும், பறங்கிமலையையும் கைப்பற்றினான். இப்படைத் தலைவன் கி.பி. 1647-இல் ஆங்கிலேயரின் சென்னைக் கொடைப் பத்திரத்தைப் புதுப்பித்து வழங்கினான். பின்னர்க் கோல்கொண்டாப் படை கி.பி. 1648-இல் பூவிருந்தவல்லி, காஞ்சி, செங்கற்பட்டு, செஞ்சி ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டு, காஞ்சியில் முகாமிட்டது. அடுத்து, மீர்சும்லா செஞ்சி, தஞ்சைப் பகுதிகளை நோக்கிப் பாய்ந்தான். செஞ்சி கைப்பற்றப்பட்டது. தஞ்சை நாயக்க வேத்தன் விசயராகவனோ அச்சம் கொண்டு, மீர்கம்லாவிடம் அடிபணிந்தான். திருமலை நாயக்கர் உடனே பீசப்பூர் சுல்தானின் உதவிபெற்றுக் கோல்கொண்டாப் படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றார். செஞ்சியைப் பிடித்த பீசப்பூர் சுல்தான் கோல்கொண்டா படையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். பின்னர் பீசப்பூர் படை தஞ்சை, மதுரைப் பகுதிகளைத் தாக்கியது.
இவ்வாறு விசயநகரப் பேரரசினை அழித்த சுல்தான்கள் பேரரசினைப் பெனுகொண்டாவிற்கும், வேலூருக்கும் துரத்திவிட்டு, அங்கும் தம் ஆதிக்கத்தையும் அழிவு வேலைகளையும் நிலைநாட்டினர்.{{Right|<b>ம.இ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Chopra, P, N., Ravindran, T. K. & Subramanian, N.,</b> History of South India, Vol II, Medieval Period, S, Chand & Co., Delhi, 1980.<br>
<b>Krishnasamy, A.,</b> The Tamil Country Under Vijayanagar, Annamalai University, 1960.
<b>குதுப்மினார்</b>: தில்லியிலுள்ள உலகப் புகழ்பெற்ற மினார். இது மசூதியுடன் இணைந்த ஒரு பகுதி ஆகும். இங்கிருந்துதான் வழிபாட்டிற்கு அழைப்பு விடப்படும். இந்தியாவில் அடிமை மரபை கி.பி. 1206-இல் நிலைநாட்டிய குத்புதீன் ஐபக்கு (Qutbudin Aibak) என்பவரால் தொடங்கப்பட்டு இவருக்குப் பின்வந்த இல்தூத்மின் (Iltutmish) என்பவரால் குதுப்மினார் கட்டி முடிக்கப்பட்டது.
குதுப்மினார் முதலில் நான்கு தனங்களைக் கொண்டதாக விளங்கியது. பெரோசா துக்ளக் தான் காம் தளத்தைப் பழுது பார்த்துச் சீர் செய்த பொழுது நான்காம் தளத்தை இரண்டு தளமாக மாற்றினார். எனவே, இம்மினார் இப்பொழுது ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது, மேலும் ஒரு கல்வெட்டு, குத்புதீன் ஐபக்கின் அடிமையான பாசல் அபுல் மாலி என்பவர் இதனைக் கட்டிய கட்டட நிபுணன் என உரைக்கிறது, மற்ற மூன்று தளங்களில் உள்ள கல்வெட்டுகள் இந்தூத்மிக பற்றிப் புகழ்ந்துரைக்கின்றன.
குதுப்மினாரைக் கட்டிய அரசர்களோ அக்காலத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்களோ அவர்களுக்குப் பின்வந்தவர்களோ இதைக் குதுப்மினார் என்று குறிப்பிடவில்லை. அனைவரும் இம்மினார் முகம்மது பீன்சாம் (Muhammad bin Sam) என்பவரின் பெயரால் எழுப்பப்பட்டுள்ளது என்றே கூறினர். முகம்மது பின்சாம் ஐயக்கின் தலைவரான முகம்மது பின்கோரியே ஆவர். எனவே, இம்மினார் குதுப்மினார் என்னும் பெயரை எப்பொழுது பெற்றது என அறுதியிட்டுக் கூறமுடியாது.
இம்மினார் அலாவுதீன் கில்சிக் காலத்தில் பழுது பார்க்கப்பட்டதாக அமீர் குகரு தனது தாரிக்-இ அவாய் (Tarikh-i-Alai) என்ற நூலில் தெரிவிக்கிறார். பின்னர் முகம்மது பின் துக்ளக்கு (கி.பி. 1325-S1) தம் காலத்தில் குதுப்மினாரை மின்னல் தாக்கியதால், ஏற்பட்ட சேதத்தை கி.பி. 1332-இல் சீர் செய்தார்.
பெரோசா துக்ளக்கு குதுப்மினாரைப் பழுது பார்த்ததைத் தனது நூலான புதுகத் இ-பெரோ சாகி (Futuhat-i-Firozohahi) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர் காலத்தில்தான் மேலும் ஓர் தளம் புதிதாக அமைக்கப்பட்டு ஐந்து தளமாக்கப்பட்டது, சிக்கந்தர் லோடி கி.பி. 1503-இல் குதுப்மினாரின் மேல் தளத்தைச் சீர் செய்தார்.
குதுப்மினார் செந்திற மணற்பாறை, பழுப்பு திறக்கல், வெள்ளைச் சலவைக்கல் ஆகிய கற்பாறை வகைகளைக் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இது 72.45 மீ. உயரத்தையும், 14.74 மீ குறுக்களவு கொண்ட அடிப்பாகத்தையும், 2.75 மீ. குறுக்களவு<noinclude></noinclude>
rmukjor2lbm8dr23y68u8ydir1em65y
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/146
250
642157
1928718
2026-04-30T07:20:29Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1928718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|124 நூல் முறுக்கு}}</noinclude>{{block_center/s}}<div style="width:400px; font-size:75%">
<center><b>நூற் புழுவின் வகைப்பாடு</b></center>
{|
|-{{ts|vtt}}
|
|வகை
|துணை வகை
|கூட்டுக் குடும்பம்
|-{{ts|vtt}}
|கூட்டம்
|டைலென்கிடா
|(1) டைலென்கினா
|டைலென்காய்டியா<br>ஹெட்டிரோடிராய்டியா<br>கிரிகோனிமெடாய்டிமா<br>ஏடைலென்காய்டியா
|-{{ts|vtt}}
|சிசர்னென்சியா
|ராப்டிட்டிடா<br>ஸ்டிராங்கைலிடா<br>அஸ்காரிடா
|அபிலென்கினா
|அமிலென்காய்டியா
|-{{ts|vtt}}
|கூட்டுக் கூட்டம்
|ஸ்பைரூரிடா
|-{{ts|vtt}}
|நிமெட்டோடா
|டோரிலெய்மிடா (2)
|rowspan=2|டோரிலெய்மினா
|rowspan =2|டோரிலெய்மாய்டியா<br>டிரைகோடிராய்டியா
|-{{ts|vtt}}
|அடினோஃபோரியா
|குரோமோடோரிடா<br>மோனோஹிஸ்டிரிடா<br>எனோபிளிடா<br>டிக்டோபைமாட்டிடா
|}</div>
{{block_center/s}}
c' ={{sfrac|முழு நீளம்|ஆசன வாய் அகலம்}}<br>= {{sfrac|உச்சியிலிருந்து பெண் கரு உறுப்பு வாய் அமைந்துள்ள இடம்|ஆசன வாய் அகலம்}} X 100<br>
{{sfrac|ஆண் கரு உறுப்பு வாயிலிருந்து விந்துச் சுரப்பி நுனி வரை நீளம்|ஆசன வாய் அகலம்}} X 100<br>
St = அலகின் நீளம்.<br>
Spicule - ஆண் உறுப்பு நீளம்<br>
h = வாலின் நுனியிலிருந்து நிறமற்ற பகுதி வரை உள்ள நீளம்<br>
V%R = உடல் முழுவதுமுள்ள வளைவுகளின் எண்ணிக்கை<br>
T% RB = ஒரு வளைவில் பருமன்<br>
Ran = வால் நுனியிலிருந்து ஆசன வாய் வரை உள்ள வளைவுகள்.<br>
Rvan = பெண் கரு உறுப்பு வாயிற்கும், ஆசன
வாயிற்கும் இடையே வளைவுகள்<br>
* வளைவுகள் பெரியவையாகவும், துல்லியமாய் அறியக் கூடியவையாகவும் உள்ள சில மாறுபட்ட வகை உடற்புழுக்களுக்கு இது பயன் படும்.
</b>குறிப்பு:</b> டைலென்சினாவின் (1) கீழுள்ள அனைத்து நூற்புழுக்களும், டோரிலெய்மிடாவின் (2) கீழுள்ள சில நூற்புழுக்களும் தாவரங்களைப் பாதிக்கக் கூடியவை.
{{right|—<b>சிவகாமி வடிவேலு</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="82"/><section begin="83"/>
{{fs|110|<b>நூல் முறுக்கு</b>}}
வெட்டிழை நூற்பு வகை நூல்களில், நூல் வலிவேற்ற இழைகளுக்கிடையே பிணைப்பைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன், முறுக்கேற்றம் மேற்கொள்ளப் படுகிறது. முறுக்கேற்றமிராவிடில், நூலிலுள்ள இழைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிறழ்ந்து விடக் கூடும். முறுக்கேற்றமடையாத நூல் நெசவுத் தொழிலுக்குத் தகுதியற்றதாகும். நீளிழை வகை நூல்களில், ஒவ்வொரு நீளிழையும் அது இடம் பெறும் நூலின் நீளத்தைக் கொண்டிருக்கும். எனவே, நூலிழை வகை நூல்களில் முறுக்கு, ஒரு துணை நிலை விளைவையே நூலில் தோற்றுவிக்கிறது.
முறுக்கு, துணியின் உறுதியையும், பயனுறு கால அளவையும் வரையறுக்கிறது. முரட்டு நூல்களை விடச் சன்னமான நூல்களுக்கு, முறுக்கேற்றம் கூடுதலாகத் தேவைப் படுகிறது. நெய்யப் படும் துணிகளில், நீள வாக்கில் இடம் பெறும் பிரிவு நூல்கள், நிரப்பு நூல்களை விட<noinclude></noinclude>
itfg4ga2i7zwjnlbj6d97x7p9zad60h
1928720
1928718
2026-04-30T07:21:00Z
TI Buhari
4634
1928720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|124 நூல் முறுக்கு}}</noinclude>{{block_center/s}}<div style="width:450px; font-size:75%">
<center><b>நூற் புழுவின் வகைப்பாடு</b></center>
{|
|-{{ts|vtt}}
|
|வகை
|துணை வகை
|கூட்டுக் குடும்பம்
|-{{ts|vtt}}
|கூட்டம்
|டைலென்கிடா
|(1) டைலென்கினா
|டைலென்காய்டியா<br>ஹெட்டிரோடிராய்டியா<br>கிரிகோனிமெடாய்டிமா<br>ஏடைலென்காய்டியா
|-{{ts|vtt}}
|சிசர்னென்சியா
|ராப்டிட்டிடா<br>ஸ்டிராங்கைலிடா<br>அஸ்காரிடா
|அபிலென்கினா
|அமிலென்காய்டியா
|-{{ts|vtt}}
|கூட்டுக் கூட்டம்
|ஸ்பைரூரிடா
|-{{ts|vtt}}
|நிமெட்டோடா
|டோரிலெய்மிடா (2)
|rowspan=2|டோரிலெய்மினா
|rowspan =2|டோரிலெய்மாய்டியா<br>டிரைகோடிராய்டியா
|-{{ts|vtt}}
|அடினோஃபோரியா
|குரோமோடோரிடா<br>மோனோஹிஸ்டிரிடா<br>எனோபிளிடா<br>டிக்டோபைமாட்டிடா
|}</div>
{{block_center/s}}
c' ={{sfrac|முழு நீளம்|ஆசன வாய் அகலம்}}<br>= {{sfrac|உச்சியிலிருந்து பெண் கரு உறுப்பு வாய் அமைந்துள்ள இடம்|ஆசன வாய் அகலம்}} X 100<br>
{{sfrac|ஆண் கரு உறுப்பு வாயிலிருந்து விந்துச் சுரப்பி நுனி வரை நீளம்|ஆசன வாய் அகலம்}} X 100<br>
St = அலகின் நீளம்.<br>
Spicule - ஆண் உறுப்பு நீளம்<br>
h = வாலின் நுனியிலிருந்து நிறமற்ற பகுதி வரை உள்ள நீளம்<br>
V%R = உடல் முழுவதுமுள்ள வளைவுகளின் எண்ணிக்கை<br>
T% RB = ஒரு வளைவில் பருமன்<br>
Ran = வால் நுனியிலிருந்து ஆசன வாய் வரை உள்ள வளைவுகள்.<br>
Rvan = பெண் கரு உறுப்பு வாயிற்கும், ஆசன
வாயிற்கும் இடையே வளைவுகள்<br>
* வளைவுகள் பெரியவையாகவும், துல்லியமாய் அறியக் கூடியவையாகவும் உள்ள சில மாறுபட்ட வகை உடற்புழுக்களுக்கு இது பயன் படும்.
</b>குறிப்பு:</b> டைலென்சினாவின் (1) கீழுள்ள அனைத்து நூற்புழுக்களும், டோரிலெய்மிடாவின் (2) கீழுள்ள சில நூற்புழுக்களும் தாவரங்களைப் பாதிக்கக் கூடியவை.
{{right|—<b>சிவகாமி வடிவேலு</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="82"/><section begin="83"/>
{{fs|110|<b>நூல் முறுக்கு</b>}}
வெட்டிழை நூற்பு வகை நூல்களில், நூல் வலிவேற்ற இழைகளுக்கிடையே பிணைப்பைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன், முறுக்கேற்றம் மேற்கொள்ளப் படுகிறது. முறுக்கேற்றமிராவிடில், நூலிலுள்ள இழைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிறழ்ந்து விடக் கூடும். முறுக்கேற்றமடையாத நூல் நெசவுத் தொழிலுக்குத் தகுதியற்றதாகும். நீளிழை வகை நூல்களில், ஒவ்வொரு நீளிழையும் அது இடம் பெறும் நூலின் நீளத்தைக் கொண்டிருக்கும். எனவே, நூலிழை வகை நூல்களில் முறுக்கு, ஒரு துணை நிலை விளைவையே நூலில் தோற்றுவிக்கிறது.
முறுக்கு, துணியின் உறுதியையும், பயனுறு கால அளவையும் வரையறுக்கிறது. முரட்டு நூல்களை விடச் சன்னமான நூல்களுக்கு, முறுக்கேற்றம் கூடுதலாகத் தேவைப் படுகிறது. நெய்யப் படும் துணிகளில், நீள வாக்கில் இடம் பெறும் பிரிவு நூல்கள், நிரப்பு நூல்களை விட<noinclude></noinclude>
s14j2te6a0nd9y9cbtq81096nhmgioh
1928721
1928720
2026-04-30T07:21:29Z
TI Buhari
4634
1928721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|124 நூல் முறுக்கு}}</noinclude>{{block_center/s}}<div style="width:450px; font-size:72%">
<center><b>நூற் புழுவின் வகைப்பாடு</b></center>
{|
|-{{ts|vtt}}
|
|வகை
|துணை வகை
|கூட்டுக் குடும்பம்
|-{{ts|vtt}}
|கூட்டம்
|டைலென்கிடா
|(1) டைலென்கினா
|டைலென்காய்டியா<br>ஹெட்டிரோடிராய்டியா<br>கிரிகோனிமெடாய்டிமா<br>ஏடைலென்காய்டியா
|-{{ts|vtt}}
|சிசர்னென்சியா
|ராப்டிட்டிடா<br>ஸ்டிராங்கைலிடா<br>அஸ்காரிடா
|அபிலென்கினா
|அமிலென்காய்டியா
|-{{ts|vtt}}
|கூட்டுக் கூட்டம்
|ஸ்பைரூரிடா
|-{{ts|vtt}}
|நிமெட்டோடா
|டோரிலெய்மிடா (2)
|rowspan=2|டோரிலெய்மினா
|rowspan =2|டோரிலெய்மாய்டியா<br>டிரைகோடிராய்டியா
|-{{ts|vtt}}
|அடினோஃபோரியா
|குரோமோடோரிடா<br>மோனோஹிஸ்டிரிடா<br>எனோபிளிடா<br>டிக்டோபைமாட்டிடா
|}</div>
{{block_center/s}}
c' ={{sfrac|முழு நீளம்|ஆசன வாய் அகலம்}}<br>= {{sfrac|உச்சியிலிருந்து பெண் கரு உறுப்பு வாய் அமைந்துள்ள இடம்|ஆசன வாய் அகலம்}} X 100<br>
{{sfrac|ஆண் கரு உறுப்பு வாயிலிருந்து விந்துச் சுரப்பி நுனி வரை நீளம்|ஆசன வாய் அகலம்}} X 100<br>
St = அலகின் நீளம்.<br>
Spicule - ஆண் உறுப்பு நீளம்<br>
h = வாலின் நுனியிலிருந்து நிறமற்ற பகுதி வரை உள்ள நீளம்<br>
V%R = உடல் முழுவதுமுள்ள வளைவுகளின் எண்ணிக்கை<br>
T% RB = ஒரு வளைவில் பருமன்<br>
Ran = வால் நுனியிலிருந்து ஆசன வாய் வரை உள்ள வளைவுகள்.<br>
Rvan = பெண் கரு உறுப்பு வாயிற்கும், ஆசன
வாயிற்கும் இடையே வளைவுகள்<br>
* வளைவுகள் பெரியவையாகவும், துல்லியமாய் அறியக் கூடியவையாகவும் உள்ள சில மாறுபட்ட வகை உடற்புழுக்களுக்கு இது பயன் படும்.
</b>குறிப்பு:</b> டைலென்சினாவின் (1) கீழுள்ள அனைத்து நூற்புழுக்களும், டோரிலெய்மிடாவின் (2) கீழுள்ள சில நூற்புழுக்களும் தாவரங்களைப் பாதிக்கக் கூடியவை.
{{right|—<b>சிவகாமி வடிவேலு</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="82"/><section begin="83"/>
{{fs|110|<b>நூல் முறுக்கு</b>}}
வெட்டிழை நூற்பு வகை நூல்களில், நூல் வலிவேற்ற இழைகளுக்கிடையே பிணைப்பைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன், முறுக்கேற்றம் மேற்கொள்ளப் படுகிறது. முறுக்கேற்றமிராவிடில், நூலிலுள்ள இழைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிறழ்ந்து விடக் கூடும். முறுக்கேற்றமடையாத நூல் நெசவுத் தொழிலுக்குத் தகுதியற்றதாகும். நீளிழை வகை நூல்களில், ஒவ்வொரு நீளிழையும் அது இடம் பெறும் நூலின் நீளத்தைக் கொண்டிருக்கும். எனவே, நூலிழை வகை நூல்களில் முறுக்கு, ஒரு துணை நிலை விளைவையே நூலில் தோற்றுவிக்கிறது.
முறுக்கு, துணியின் உறுதியையும், பயனுறு கால அளவையும் வரையறுக்கிறது. முரட்டு நூல்களை விடச் சன்னமான நூல்களுக்கு, முறுக்கேற்றம் கூடுதலாகத் தேவைப் படுகிறது. நெய்யப் படும் துணிகளில், நீள வாக்கில் இடம் பெறும் பிரிவு நூல்கள், நிரப்பு நூல்களை விட<noinclude></noinclude>
bzr830aj27fu8ia291v2qyvbls7j66z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/649
250
642158
1928724
2026-04-30T07:23:02Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 649 |bSize = 375 |cWidth = 320 |cHeight = 415 |oTop = 38 |oLeft = 26 |Location = center |Description = }}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குதுப்மினார்|621|குதுப்மினார்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 649
|bSize = 375
|cWidth = 320
|cHeight = 415
|oTop = 38
|oLeft = 26
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
5glpao6rell71z4666hncyttzpk421k
1928725
1928724
2026-04-30T07:23:16Z
Bharathblesson
15164
1928725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குதுப்மினார்|621|குதுப்மினார்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 649
|bSize = 375
|cWidth = 320
|cHeight = 415
|oTop = 38
|oLeft = 26
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude></noinclude>
g8eosjrvhdsvjpra3ytch84qgvl4x15
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/650
250
642159
1928744
2026-04-30T07:37:38Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்ட மேல் பாகத்தையும் கொண்டு கீழ் இருந்து மேலே செல்லச் செல்லக் குறுகிச் செல்கிறது. இதன் வடபுறத்தில் நுழைவாயில் உள்ளது. இதனுள் படிக்கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குந்தி|622|குப்தர் ஆண்டு}}</noinclude>கொண்ட மேல் பாகத்தையும் கொண்டு கீழ் இருந்து மேலே செல்லச் செல்லக் குறுகிச் செல்கிறது. இதன் வடபுறத்தில் நுழைவாயில் உள்ளது. இதனுள் படிக்கட்டுகள் சுற்றுவழியில் (Spiral steps) மேலே செய்கின்றன. இது மொத்தம் 379 படிகளைக் கொண்டுள்ளது. தளங்களின் உச்சியில் அழகிய வேலைப்பாடு கொண்ட போதிகையால் தாங்கப்பட்டுள்ள மாடங்கள் உள்ளன. இது செங்குத்து குழிவரிகளைக் கொண்டு விளங்குகிறது. முதல் தளத்தில் இரு செங்குத்து வசிகளுக்கு இடைப்பட்ட பகுதி ஒன்று வட்டமாகவும் மற்றொன்று கோணாரவிலும் உள்ளன. மூன்றாம் தனம் வட்ட வடிவில் உள்ளது. தளங்கனைச் சுற்றிலும் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய கல்வெட்டுகள் இதன் வரலாற்றுச் செய்தியைப் பறா சாற்றுகின்றன.{{Right|<b>கே.இரா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Brown, Percy.</b> Indian Architecture (Islamic Period), D. B. Taraporevala Sons & Co.. Pvt.. Ltd.. Bombay, 1956<br>
<b>Nath. R.,</b> History of Sultanate Architecture, Ahhinav Publications, New Delhi. 1978.<br>
<b>Sharada Y. D.,</b> Delhi and its neighbourhood, Archaeological Survey of India, New Delhi 1974.
<b>குந்தி</b> பாண்டு என்னும் மன்னனின் இருமனைவியருள் ஒருத்தி யாதவகுல அரசனாகிய குரசேன் அரசனின் மகன் பிருதா என்று அழைக்கப்பட்டால், குந்திபோசன் என்ற அரசனால் குழந்தை இல்லாத காரணத்தினால் தத்து எடுத்துக்கொள்ளப்பட்டுக் ‘குந்தி’ என்ற பெயருடன் அவ்வரசனால் வளர்க்கப்பட்டாள். கன்னியாக இருக்கும்பொழுதே ஒருசமயம் துருவாச முனிவருக்குப் பணிவிடை செய்து அம்முனிவரால் போற்றப்பட்டால், அவர் அவளுக்கு உபதேசித்த மந்திரத்தின் உதவியினால் தான் விரும்புகின்ற தேவர்களின் மூலம் குழந்தையை அடையக்கூடிய பெருமையையும் அடைந்தாள். துருவாசமுனிவர் சென்றவுடன் அவர் உபதேசித்த மந்திரத்தின் ஆற்றலைச் சோதனை செய்ய விழைந்து ‘சூரிய தேவனைக்’ குறித்து அம்மந்திரத்தைக் கூறின அளவில் குழைந்தையைப் பெற்றான். அக்குழந்தை தான் ‘கர்ணன்’, அப்பொழுது அவள் கன்னிப் பெண்ணாக இருந்தமையால் தன் கற்பினைப் பிதா ஐயுறக் கூடும் என்று அஞ்சி ஒருவருக்கும் தெரியாமல் அக்குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றாள், அக்குழந்தையை ஆதிரதன் என்ற தேரோட்டி பெட்டியிலிருந்து எடுத்துக் கர்ணன் என்று பெயர்சூட்டித் தன் மகனாகவே வமார்க்கின்றான். ஆகவே, கர்ணன் தேரோட்டி மகனாகவே பாரதப் போர் வரையில் எல்லோராலும் அழைக்கப்படுகிறான். குந்திபோசனால் பாண்டு மகாராசனுக்குத் திருமணம் செய்விக்கப்பட்டுக் குந்தி அவ்வரசனின் முதல் மனைவியாகிறான். மாத்திரி அவ்வரசனின் இளையமனைவி. ஒரு முனிவரின் சாபத்தினால் பாண்டு மன்னனுக்குத் தன் மனைவிகளின்
மூலம் குழந்தைகளை அடைய வாய்ப்பில்லாத சமயம், குந்தி தனக்குத் துருவாச முனிவர் அருளிய மந்திரத்தைப் பற்றித் தன் கணவனிடம் கூறி, பிறகு அவர் அனுமதிபெற்றுத் தருமதேவதை (எமன்), வாயு தேவதை, இந்திரன் இவர்களை வேண்டி அம்மந்திரத்தைக் கூறி, முறையே தர்மபுத்திரன் (யுதிட்டிரன்), பீமன், அருச்சுனன் ஆகிய மூன்று குழந்தைகளை அத்தேவதைகள் மூலம் அடைகின்றான், பிறகு அம்மந்திரத்தை இளைய மனைவி மாத்திரிக்கும் கூறி, அவளும் அச்வினி தேவதைகளாகிய இரட்டைக் கடவுளர்களைத் துதிக்க நகுல, சகாதேவன் என்ற இரு மக்களையும் அடைகிறாள். இல்லை வருமே ஐந்து பாண்டவர்கள், பாண்டு அரசன் இறந்ததும் மாத்திரி உடன்கட்டை ஏற, குந்தி ஐவரையும் திருதராட்டிரன் குமாரர்களான துரியோதனன் முதலியவர்களால் இழைக்கப்படும் பல இன்னல்களுக்கிடையே வளர்க்கிறாள், பாரதப் போர் நடந்துகொண்டிருக்கும் பொழுது பாண்டவர்களைக் கர்ணன் துரியோதனின் தூண்டுதலின்மூலம் கொல்வக்கூடும் என்று பயந்து கர்ணனைத் தனிமையில் சந்தித்து, கர்ணன் தன் மகன்தான் என்று கூறி, அவன் நம்பும்படி செய்து, பாண்டனர்களுடன் சேர்த்து போர்புரியும்படி வேண்டுகின்றாள். கர்ணன் தன் இயலாமையைக் கூறி, அருச்சுனனைத் தவிர பாண்டவர்களுள் வேறெவரையும் கொல்லமாட்டேன் என்று வாக்களித்து விட்டு, அருச்சுனன் இறந்தால் நாள், தான் இறந்தால் அருச்கனன், ஆக பாண்டவர்கள் ஐவராகவே இருப்பர் என்று கூறுகின்றான். பாரதப் போரில் கர்ணன் இறந்தவுடன் போர்க்களத்தில் குந்தி, கர்ணல் பாண்டவர்களில் மூத்தவன் என்ற உண்மையைத் தருமபுத்திரர் முதலியவர்களிடம் கூறி எல்லோருமே துன்பமடையும்படி செய்கின்றாள்.{{Right|<b>எஸ்.ஜெ.</b>}}
<b>குப்தர் ஆண்டு</b> இது குப்தர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுக் கணக்கீட்டு முறையாகும். குப்தப் பேரரசின் மூன்றாம் அரசரான முதலாம் சந்திர குப்தர் கி.பி.319 அல்லது 320-இல் குப்தர் ஆண்டைத் தோற்றுவித்தார். முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வந்த குப்த அரசர்கள் குப்தர் ஆண்டைப் பயன்படுத்தினர், குப்தர் காலத்தில் இவ்வாண்டு குப்தர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், அசாம், வங்காளம்,<noinclude></noinclude>
qhh6gafk0sgn5it97mp3vq5gg69xzqv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/651
250
642160
1928769
2026-04-30T07:55:14Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஓரிசா போன்ற பகுதிலும் பயன்பாட்டிலிருந்தது. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் வட இந்தியாவை ஆண்ட பல சிற்றரசர்களும் குப்தர் ஆண்டைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்தர் பேரரசு|623|குப்தர் பேரரசு}}</noinclude>ஓரிசா போன்ற பகுதிலும் பயன்பாட்டிலிருந்தது. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் வட இந்தியாவை ஆண்ட பல சிற்றரசர்களும் குப்தர் ஆண்டைப் பயன்படுத்தியுள்ளனர், வல்லபியை ஆண்ட மைத்ரேயர்கள் குப்தர் ஆண்டைப் பயன்படுத்தினர். குப்தர் ஆண்டு வளர்பிறையில் சைத்திய மாதத்தில் தொடங்குகிறது. கத்தியவார்ப் பகுதியில் வேரவல் (Veraval) கல்வெட்டில் குப்தர் ஆண்டு இறுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது. கி.பி. 1264-ஆம் ஆண்டுக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள குப்தர் ஆண்டு 945 ஆகும். குப்தர் ஆண்டு 945 உடன் 319-ஐக் கூட்டினால் (945 + 319 = 1264) கிறித்து பிறந்த ஆண்டு வரும்.{{Right|<b>சு.இரா.</b>}}
<b>குப்தர் பேரரசு</b>: மௌரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு வடஇந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு மிக்கபேரரசு குப்தப் பேரரசாகும். குப்தப் பேரரசர்கள் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சி புரிந்தனர். இந்திய வரலாற்றில் இவர்களுடைய காலம் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. இவர்களது ஆட்சியில் பேரரசு விரிவாக்கம் அடைத்தது மட்டுமன்றி இலக்கியம், கலை, கல்வி, அறிவியல், சமயம் ஆகிய எல்லாத் துறைகளும் சிறப்பு அடைந்தன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 651
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 150
|oTop = 240
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|குப்தர் பேரரசு}}
<b>முதலாம் சந்திர குப்தன்</b>: குப்தர்கள் சத்திரிய வகுப்பைச் சார்ந்தவர்கள் என்றும் சாட்டுகள் என்றும் பல விதமாகக் கருதப்படுகின்றனர். குத கோத்திரத்தைச் சார்ந்ததாலும் அக்னிமித்திரரின் வம்சத்துடன் உறவு முறை இருந்ததாலும், இலிச்சாவி வம்சத்தின் குமார தேவியை முதலாம் சந்திரகுப்தன் மணந்து கொண்டதாலும் அவர்கள் அந்தணர்களாகவோ வையர்களாகவோ இருந்திருக்க வேண்டுமென்றும் கருதப்படுகிறது. வங்காளத்திலிருந்து இவர்களின் ஆட்சி தொடங்கியது; மகதத்திலிருந்து அன்று சில கல்வெட்டுகளிலிருந்து கடோத்கசருப்தன் என்பவனே இவ்வம்சத்தின் முதல் மன்னனாக அறியப்படுகிறான். ஆனால் முதலாம் சத்திரகுப்தன் (கி.பி. 319-355) ஆட்சியில் இருந்து தான் குப்தர்களில் தெளிவான வரலாறு உள்ளதாக அறிஞர் ஆல்பிருனி கூறுகிறார். ஆல்பிரூனி தான் சாதர்களின் சகாப்தத்திற்கும் (கி.பி. 78) முதலாம். சந்திரகுப்தனின் ஆட்சிக்கும் இடைப்பட்ட காலம் 241 ஆண்டுகள் என்று சரியாகச் கணக்கிட்டுக் கொடுத்துள்ளார். இல்லடிப்படையில் தான் முதலாம் சந்திரகுப்தன் கி.பி. 319-ஆம் ஆண்டில் இவ்வமிசத்தைத் தோற்றுவித்தான் என்று தெரிகிறது.
<b>சமூத்திரகுப்தன்</b>: இவனையடுத்துச் சமூத்திரகுப்தன் (கி.பி. 355-375) ஆட்சிக்கு வந்தான். இவனது ஆட்சியின் சாதனைகளை விளக்கும் சான்று அலகபாது கல்வெட்டாகும். அசோகனது சாதனைகளைக் குறிப்பிடும் இக்கல்லெட்டின் ஒரு பகுதியிலேயே சமுத்திர குப்தனீன் வெற்றிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனைச் சமூத்திரகுப்தனின் படைத்தலைவரும் புலவருமான அரிசேனர் வரைந்துள்ளார். அவ்வெற்றிகள் பாவாகவும் உரைநடையாகவும், 33 வரிகளில் உள்ளன. இக்கல்வெட்டு வெற்றிகளை 4 பகுதிகளாகப் பிரிந்து, தெற்கே தக்காணத்தில் 11 இராச்சியங்களையும், ஆரியவர்த்தத்தின் 9 மன்னர்களையும், மலைப்பகுதியின் குறுதிய மன்னர்களையும், எல்லைப்புறப் பகுதிகளின் குடியரசுகளையும் இராச்சியங்களையும் வென்றார் எனக் கூறுகிறது.
கணபதி தாகசேனர், தாகதத்தர், அச்சுர் ஆகிய பாணர்களை வெற்றி கொண்டு மதுரா, அபிசாரா, பத்மாவதி ஆகிய பகுதிகளைச் சமுத்திரகுப்தன் கைப்பற்றினான். ஆனால் இவன் தெற்கு மண்டலத்தில் பெற்ற வெற்றிகளே புகழுக்குரியனவாகும். கோசலத்தின் மகேந்திரா, மகாகாத்தராவின் வியாக்ரராசர், கேரளாவின் மந்தராசர், பிட்டலபுரத்தின் மலேந்திரர். கொட்ரோவின் சுவாமி தத்தர், எரண்ட பாலாவின் தாமனர், தேவராட்டிராவின் குபேரர், குட்டவபுராவின் தனஞ்சயர், பாவக்கானின் உர்ரேனர், அவமுத்தாவின் தீவராசர், வேங்கியின் அத்திவர்மன், காஞ்சிபுரத்தின் விட்ணுகோபர்-ஆகிய மன்னர்கள் பள்ளிருவரையும் வரிசையாகச் சமுத்திரகுப்தன் தோற்கடித்தான் என்று கூறப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
jv047tpfmqx14ekvxksxk8pqbgml1vq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/652
250
642161
1928822
2026-04-30T08:14:04Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 652 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 165 |oTop = 40 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|குப்தர் நாணயங்கள்}} சமுத்திரகுப்தன் இலங்கையின் மேகவர்மன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்தர் பேரரசு|624|குப்தர் பேரரசு}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 652
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 165
|oTop = 40
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{center|குப்தர் நாணயங்கள்}}
சமுத்திரகுப்தன் இலங்கையின் மேகவர்மனுடன் அரசியல் தொடர்பு கொண்டு இந்திய நாட்டில் புத்த விகாரை ஏற்படுத்த அனுமதித்தான். இவன் எட்டு வகையான நாணயங்களை வெளியிட்டான். இசையில் வல்லவனான சமுத்திர குப்தன் வீணை வாசிப்பது போன்றதொரு நாணயத்தை வெளியிட்டான். இவன் வைணவ சமயத்தைச் சார்ந்திருந்தாலும் பிற மதங்களையும் ஆதரித்தான்.
சமுத்திரகுப்தனுக்கு மகன் இருவர் இருந்தனர். மூத்தவன் இராம குப்தன், இவனைச் சமூத்திரகுப்தன் தேர்ந்தெடுத்தான், ஆனால் சரிவர இவன் ஆட்சி புரியாததாலும், சாகர்களை அடக்க முடியாததாலும், இராம குப்தரின் தம்பி இரண்டாம் சந்திரகுப்தன் சாசுர்களை அடக்கி, அண்ணனையும் கொன்றுவிட்டு, அவன் மனைவி உருத்திரதேவியை மணந்துகொண்டு கி.பி.375-ஆம் ஆண்டு முதல் ஆட்சி புரியலானான் என்று கூறப்படுகிறது.
<b>இரண்டாம் சந்திரகுப்தன்</b> (கி.பி.380-413) 33 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான், இவன் விக்கிரமாதித்தன் என்னும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றான். மதுரா, உதயகிரி, தெகராலி ஆகிய 3 கல்வெட்டுகள் இவனது ஆட்சியின் சிறப்புக்களை எடுத்துக் கூறுகின்றன. இவன் வங்காளத்தையும் சுத்தியவாரையும் மானவத்தையும் வென்றான் சாகர்களை அடக்கினான், முன்பு குசாணர்களுக்குட்பட்டிருந்த வடமேற்கு இந்தியப் பகுதிகளும் இவருக்குட்பட்டன.
தம் தந்தையைப் போன்றே இரண்டாம் சந்திர குப்தனும், தங்க நாணயங்களை வெளியிட்டான். ஒரு புறத்தில் கருடனும், மறு புறத்தில் இலக்குமியின் உருவமும் அதில் பொறிக்கப்பட்டன. இதனால் இவன் வைணவன் என்பது தெளிவு. இவனுக்கு நரேந்திரசந்திரா, தேவகுப்தா எனப் பல பட்டங்கள் இருந்தன. இவன் தாகவமிசத்தில் திருமண உறவு கொண்டான். தன் மகளை வாகாடகர் வமிசத்தின் இரண்டாம் உருத்திரசேனனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.
இவன் தன் பேரரசை விடாபதி, உபரிதா, மகாதண்ட நாயகா, என்று மாகாண, மாவட்ட அதிகாரிகளை நியமித்துச் சீராக ஆட்சிபுரித்தான். விதிசா, உச்சினி, கெளசாம்பி, பாடலிபுத்திரம், காசி, பிரயாகை, வைசாலி, அயோத்தி, கயை ஆகியவை இவனது பேரரசில் சிறப்புமிக்க நகரங்களாகும்.
<b>பாகியான்</b>: இரண்டாம் சந்திரகுப்தன் ஆட்சியில் தான் பாகியான் (கி.பி.399.411) என்னும் சீனயாத்திரிகன் இந்தியாவுக்கு வந்தான், பாகியான் சூன் செங்காறு என்னும் தலைநகரை விட்டுப் புறப்பட்டுக் கோபி பாலைவளம், யார்கந்து, கோட்டான் பகுதிகள் வழியாக கி.பி. 402-இல் இந்தியாவை வந்தடைந்தான், அவன் 10 ஆண்டுகள் இந்தியாவில் தங்கினான் ஆப்கானிசுத்தானுக்கும் சென்று திரும்பினான், புத்தரின் வாழ்க்கை வரலாற்றை அறிவதற்காகவும் பௌத்த நூல்களைத் திரட்டுவதற்காகவும் அவன் இந்தியாவிற்கு வந்தான். பாடலிபுத்திரம், தயா, காசி இராசகிருகம், கம்பினி ஆகிய இடங்களுக்கும் பாகியான் சென்றான் கிழக்கு நோக்கியும், பிறகு தெற்கு நோக்கியும் சென்று 14 நாள்கள் கடல் பிரயாணத்திற்குப் பிறகு இலங்கையை அடைந்தான். பாகியான் பல பௌத்த நூல்கனைத் தன்னுடன் எடுத்துச் சென்றான். பாகியான் எழுதிய நூல் ‘போருவோசீ’ (‘Fo-Kuo-CHI’- ‘Record of Buddhist Kingdoms’) என்பதாகும். சீன மொழியில் பாகியான் மொழி பெயர்த்துள்ள நூல் ‘மகாபரி நிர்வாண சூத்ரா’ என்பதைப் பற்றியதாகும்.
இரண்டாம் சந்திரகுப்தனை அடுத்து முதலாம் குமாரகுப்தன் (கி.பி.415-455) ஆட்சிக்கு வந்தாள். இவன் சிரீமசேத்திரா, அதர மகேந்திரா, அகவமேத மகேந்திரா, மகேந்திரகல்பா, மகேந்திரா சிம்கா ஆகிய பட்டங்களைப் பெற்றிருந்தான் இவன் ஆட்சி அமைதியும் வளமையுமுடையதாக இருந்தது. குமாரகுப்தனை அடுத்து இசுகந்தருப்தன் ஆட்சிக்கு வந்தான் இவனுக்குப் பிறகு வேறு வாரிசு இல்லாததால் புருகுப்தன் ஆட்சிக்கு வந்தான். பிறகு நரசிம்மன் (கி.பி. 469-473) இரண்டாம் குமார குப்தன் (கி.பி. 473–<noinclude></noinclude>
5exumuh5lm0wf53g0wtp4lmj8wvj5yg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/653
250
642162
1928872
2026-04-30T08:32:51Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "477) புத்த குப்தன் (R.பி. 477-495) எனத் தொடர்ந்து குப்தர்கள் ஆட்சிபுரியலாயினர். அதன் பின்னர் மூன்றாம் குமாரகுப்தன், மகாசேன குப்தன், இரண்டாம் தேங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்தர் பேரரசு|625|குப்தர் பேரரசு}}</noinclude>477) புத்த குப்தன் (R.பி. 477-495) எனத் தொடர்ந்து குப்தர்கள் ஆட்சிபுரியலாயினர். அதன் பின்னர் மூன்றாம் குமாரகுப்தன், மகாசேன குப்தன், இரண்டாம் தேங்குப்தன், மாதகுப்தன், ஆதித்ய சேனன் என்று வரிசை வரிசையாகப் பேரரசர்கள் ஆட்சிபுரிந்தாலும், இவர்கள் ஆட்சியில் குப்தப் பேரரசர்களின் பழைய பொலிவு குறைந்துவிட்டது. இரண்டாம் சீலித குப்தன் என்பவன்தான் குப்தர்களின் பேரரசில் இறுதியான மன்னனாகவும், பெயரளவில் ஆட்சி புரிந்தவனாகவும் கருதப்படுகிறான்.
குப்தர்களின் பேரரசு இறுதியாகக் கேளடர்காலும், ஊணர்களாலும் அழிக்கப்பட்டது. புசயமித்திரர்கள் என்பாரும் இப்பேரரசை நிலைகுலையச் செய்தனர். வெளிநாட்டு ஊணர்களின் மன்னர்களான தோரமானா, மிகிரகுவா என்போர் பல முறைகளில் குப்தப் பேரரசுப் பகுதிகளைத் தாக்கி வெற்றி கண்டனர். மானலத்தின் மன்னன் யசோதர்மனும் இப்பேரரசு அழிவதற்குக் காரணமாக இருந்தான்.
<b>அரசும் சமூகமும்</b>: முப்தர்களுடைய ஆட்சி மீகச் சிறப்பாக நடைபெற்றது, பேரரசின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டன. பேரரசர் தேய்விகப் பிறவி எனக் கருதப்பட்டார். இறையுரிமைக் கோட்பாடு ஏறத்தாழ செயற்பாட்டிலிருந்தது. அரசியல், நிருவாகம், நீதி, இராணுவ அதிகாரங்கள் ஆகியவை மன்னரிடம் இருந்தன. பேரரசருக்கு, அமைச்சர் முதலானோர் ஆலோசனைகளைக் கூறினார், நாடு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
குப்தப் பேரரசர்களது ஆட்சியில் தண்டனைகள் கடுமையாக விதிக்கப்பட்டன. குற்றவாளி யானையின் கால்களால் மிதிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவான். மன்னரை எதிர்த்துச் சதி செய்தவரின் கண்கள் பிடுங்கப்பட்டன. ஆனால் மாகாண, மாவட்ட, நகர, கிராம நிருவாகங்கள் செம்மையாக நடைபெற்றதால் பொதுவாகச் செழிப்புக் காணப்பட்டது நான்கு சமுதாயப் பிரிவுகள் இருந்தன. சமுதாயக் கட்டுப்பாடு இறுகியிருந்தது. சதி என்னும் கொடிய பழக்கம் இருந்தது. கைம்பெண் மறுமணம் ஆதரிக்கப்படவில்லையாயினும் பெண்களுக்கு உயர்ந்த நிலை அளிக்கப்பட்டிருந்தது.
<b>பொற்காலம் - இலக்கியம்</b>: தல்வி, இலக்கியம் ஆகியவை உயர்நிலையுற்றன. நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் ஆகியவை ஒழுங்குபடுத்தப்பட்டன. பஞ்சதந்திரக் கதைகள் இக்காலத்தில் இயற்றப்பட்டன. காளிதாசர் ‘சாகுந்தலம்’ என்ற நாடகத்தை இயற்றினார். உலகத்தின் முக்கியமான 100 இலக்கியப் படைப்புகளுள் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘குமார சம்பவம்’ ‘மேகதூதம்’, ‘இரகுவம்சம்’ ‘விக்கிரம ஊர்வசியம்’ முதலியனவும் காளிதாசரின் பிற இலக்கியப் படைப்புகளாகும். சூத்திரகா என்பவர் மற்றோரு குறிப்பிடத்தக்க நாடகாசிரியர்: வீராசதந்தர், ‘முத்திரா ராட்சசம்’ என்னும் நாடகத்தை இயற்றினார் பாரலி என்பார் ‘கிராதார்ச்சுயம்’ என்னும் நாடகத்தை இயற்றினார். ‘பட்டி’ என்னும் மற்றொரு புலவர் ‘பட்டிகாவியம்’ என்னும் காலியத்தை இயற்றினார்.
<b>அறிவியல்</b>: குப்தப்பேரரசு இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகள் மட்டுமல்லாது அறிவியல் துறையிலும் சிறப்புான முன்னேற்றத்தைக் கண்டது. எடுத்துக்காட்டாக இன்று உலக வழக்கில் உள்ள 1,2,3,4,5 போன்ற அரேபியர்களின் எண்களை ஆரியபட்டா போன்ற கணித வல்லுநர்கள் முன்பே பயன்படுத்தினர் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவர்கள் ‘0’-வின் (Zero) மதிப்பை அறிந்திருந்ததனால் ஆரியபட்டர், வராகமிகிரர், பிரமகுப்தர் என்னும் அறிஞர்கள் கணிதத்திலும், வானசாத்திரத்திலும் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். ஆரியபட்டா ‘சூரியசித்தாந்தம்’ என்ற நூலை எழுதி சூரியசத்திர பிரகணங்கனின் காரணங்களை விளக்கினார். வராகமிகிரர் ‘பிருகத்சம்கிதா’ என்னும் வானஇயல் நூலை எழுதினார் பிரமகுப்தரும் வானநூல் ஒன்றை இயற்றினார். வராகமிகிரர் ‘இயஞ்ச சித்தத்திகா’, ‘பிருகத்சாதகா’ ஆகிய இரு நூல்களையும் எழுதினார். கணித சூத்திரங்கள் பலவற்றை உலகுக்கு அளித்தனர்.
<b>கலைகள்</b>: இப்பேரரசின் கீழ் நுண்கலைகள் அனைத்தும் வளர்ச்சி பெற்றன. மதுரா, வாரணாசி, பாட்னா ஆகியவை கலைகளின் உறைவிடங்களாகத் நிகழ்ந்தன கலையும் சமயமும் இணைத்தன், சார நாத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலையும், மதுராவில் நிற்கும் நிலையில் உள்ள சிலையும், சுல்தான்கஞ்சில் கம்பீரமான நிலையில் உள்ள செப்புச் சிலையும், குப்தர்காளக் கலைத்திறனை விளக்குகின்ற கௌதம புத்தர் அழகிய கருட்டைமுடியுடன் கம்பிரமாக நிற்பது போல் வடிக்கப்பட்ட செப்புச்சிலை உருவம், சைவ, வைணவ கடவுள்களின் உருவங்கள் ஆகியவை இக்காலத்தில் வடிக்கப்பட்டன. மதுரா, காலால், உதயகிரி ஆகிய இடங்களில் விட்டுணுவின் சிலைகளும், தரசிம்ம அவதாரம் போன்ற சிலைகளும் காணப்படுகின்றன.
புதுதில்லிக்கு அருகிலிருக்கும் மெகராலி இரும்புத் தூண் குப்தர்களின் கலைத் திறமைக்குச் பிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தூணின் உயரம் 251.8°<noinclude>
<b>வா. க. 7 - 40</b></noinclude>
3jext0vx0ckw2amidda8thjcgaxxn9w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/654
250
642163
1928911
2026-04-30T08:52:18Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆகும் மொத்த எடை 6 கண்டிகாரும் (Tons). மேகராலி இரும்புத்தூண் இந்தியக் கலைஞரின் அணுக்க வேலைப்பாட்டிற்க்கும் சிற்ப மேதைத்தனதிற்கும் சிறந்த ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்தர் பேரரசு|626|குப்புசாமி சாத்திரி}}</noinclude>ஆகும் மொத்த எடை 6 கண்டிகாரும் (Tons). மேகராலி இரும்புத்தூண் இந்தியக் கலைஞரின் அணுக்க வேலைப்பாட்டிற்க்கும் சிற்ப மேதைத்தனதிற்கும் சிறந்த புகழாரமாகும் எனப் பெர்சிபிரௌன் கூறுகிறார்.
சபங்பூர் மாவட்டத்தில் திக்வாவில் உள்ள விட்டுணு கோவில் பூமாராவின் சிவன் கோவில், பார்வதிகோவில், தேவ்கரின் தசாவதாரக் கோவில் ஆகியவை குப்தர்களின் தட்டடக்கலைக்குச் இருந்து எடுத்துக்காட்டாகும். இவர்களின் கட்டுக் கோவில்கள் குட்டையாகவும் தட்டையாகவும் உள்ளது. உள் மண்டபங்களோ சிகரங்களோ இவற்றிற்குக் கிடையா குகைக் கோவில்களும் இக்காலத்திம் குடைத்தெடுக்கப்பட்டன. அவைகளுக்கு 16, 17, 19 இலக்கமிட்ட விகார்களும் குகைகளும் குறிப்பிடத்தகையாகும்.
அசந்தாக் குசையின் ஓவியங்கள் குப்தர்காலக் சலையின் முழுமைத் தன்மையையும் மிக உன்னந் நிலையையும் விளக்குகின்றன. இவைகளின் சிகிரியா, புதுக்கோட்டையின் சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்கள் போன்றே அசந்தா, பாருக் (Bagh) குகை ஓவியங்களும் அமைந்துள்ளன. மெலிந்த இடையுடனும், அழகிய ஆடை அணிகலன்களுடனும், பின்னே வாரி முடிக்கப்பட்ட கொத்தான அழகிய கூந்தலிடனும் சித்திரிக்கப்பட்ட பெண்களின் உருவங்கள் உலகப்புகழ் பெற்ற அந்தாக் குகைகளின் ஒலியக் காட்சிகளாகும் 1, 2, 16, 17, 19 இலக்கமிட்ட குகைகளில் சித்திரிக்கப்பட்ட காட்ரிகள் பார்ப்போர். மனத்திலிருந்து என்னும். நீங்க முடியாதனவாகும். இவை போன்றே பாருக்குகை ஓவியங்களும் பார்ப்போரை ஈர்க்க வல்லனவாகும்.
<b>நாணயங்கள்</b>: குப்தர்கள் பல நாணயங்களை வெளியிட்டுள்ளனர். முதலாம் சந்திரகுப்தர் அவரது மனைவி குமாரதேவி ஆகிய இருவரின் உருவங்களும் பொதிக்கப்பட்ட நாணயங்கள், லிச்சாலி வம்சத்துடன் கொண்டிருந்த தொடர்பு குப்தர்களின் மேன்மை அதியவற்றை விலக்குவதாக உள்ளன. நாணயங்களில் புலியைச் கொல்வது போன்ற காட்சியும், பெண் கடயும் மீனின்மேல் நிற்பதுபோன்ற காட்சியும், வாழ் மீட்டுவது போன்ற காட்சியும், பெண் தெய்வமான இலக்குமியின் உருவமும், மன்னர் அகவ மேசு வெள்ளி நடத்தும் காட்சியும், மன்னர் அரசியுடன் விற்றிருப்பது போன்ற காட்சியும், போருக்குக் கோடரியை ஏந்திச் செல்வது போன்ற காட்சியும், சமுத்திரகுப்தருடைய நாணயங்களில் காணக்கிடக்கின்றன. இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள் கிம்மாசன நாணயங்களும், தாமரை மலரில் கடவுள் இலக்குமி வீற்றிருக்கும் நாணயங்களுமா இருவகைப் பட்டனவாக விளங்கின. குதிரை வீரர் காட்சியைப் பொறித்த நாணயங்களை இரண்டாம் சந்திர குப்தர் வெளியீட்டார் பன்னும் கூறப்படுகிறது. முதலாம் குமாாகுப்தர் இசுகந்த குப்தர் ஆகிய பேரரசர்களும் தந்தம் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.
<b>குப்புசாமி சாத்திரி (15.12.1880-5.9.1943)</b>: மாவட்டத்திலுள்ள குப்புசாமி சாத்திரி தஞ்சை கணபதி அக்கிரகாரத்தில் 15.12.1880 அன்று பிறத்தார். இவர் தந்தையார் பெயர் சேதுராம ஐயர். இவர் சிறுவயது முதலே தம் பாட்டனாரிடமிருந்து வடமொழிச் கலோகங்களைக் கற்றுத் தேர்ந்தார். இவருடைய மாமன், தமையனார் ஆகியோரும் வடமொழிப் புலமை மிக்கவர்கள். அவர்களும் சாத்திரிக்கு வடமொழிக் காவியங்களைக் கற்றுத் தந்தனர். இவ்வாறு வடமொழிப் புலமைமிக்க குடும்பர் சூழலில் வளர்ந்த காரணத்தினால் மிக விரைவிலேயே வடமொழியில் ஆழ்ந்த புலமை பெற்றார். பிற்காலத்தில் இவர் வடமொழிக்கு ஆற்றிய மிகப்பெருந் தொண்டுக்கு இச்சூழல் முதற்காரணமாய் அமைந்தது எனலாம்.
இவர் முதலில் திருவையாறு ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்; அக்காலத்தே பழமானேசிச் கொண்டு (பழமாரநேரி) சுவாமிகளைக் குருவாக வடமொழிச் சாத்திரங்களைக் கற்றுவந்தார், பின்னர்த் திருவையாறு நீலகண்ட சாத்திரி, சந்திரசேகர சாத்திரி ஆகியோரிடமும் கற்று முறையான மொழிப்புலமை பெற்றார். இவர் கி.பி. 1896-இல் ‘மெட்ரிருலேசன்’ தேர்வில் தேர்ச்சி பெற்றுத் தஞ்சாவூர் எசு.பி.சி. கல்லூரியில் (S.P.G. College) தத்துவம் பயின்று 1900-இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன்பின் சாத்திரங்களைத் தொடர்ந்து கற்று 1905-இல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
சாத்திரியின் புலமைத்திறம் பற்றிக் கேள்வியுற்ற வி. கிருட்டிணசாமி ஐயர் தாம் நிறுவிய சென்னை வடமொழிக் கல்லூரியின் முதல் முதல்வராகத் குப்புசாமி சாத்திரிகளை நியமித்தார். அக்கல்லூரியில் 1906 முதல் 1910 வரை முதல்வராக அமர்ந்து பல அறிஞர்களுக்கும் வழிகாட்டினார். பின் 1910 முதல் 1914 வரை திருவையாறு வடமொழிக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். சென்னை மாநிலக் கல்லூரியின் வடமொழித்துறைப் பேராசிரியராகவும், சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிநூலகக் காப்பாளராகவும் 1914 முதல் 1936 வரை அமர்ந்து வடமொழி, கடிப்பதிப்பு ஆகிய இருதுறைகளிலும் பெருந்தொண்டாற்றினார். இவர் 1936 முதல் 1940<noinclude></noinclude>
dd3scomtwcai21v2v8ebsupqf2dgz2z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/655
250
642164
1928934
2026-04-30T09:04:06Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வடமொழித் துறையில் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றினார். சாத்திரி, தம் பணிக்காலத்தில் தமிழ் அகராத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1928934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்புசாமி சாத்திரி...|627|குப்புசாமி சாத்திரி...}}</noinclude>வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வடமொழித் துறையில் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றினார். சாத்திரி, தம் பணிக்காலத்தில் தமிழ் அகராதிக்குழு, சென்னைப் பல்கலைக்கழகப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக வடமொழிப் பாடத்திட்டக்குழு, கல்விப் பேரவை ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றினார்.
சாத்திரி, சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகச் சுவடிகளை அடைவுபடுத்தி விளக்கத்துடன் 58 தொகுதிகளாக வெளியீட்டார். 1931-இல் வீணா வாசவதத்தா என்னும் காவியத்தையும், 1932-இல் துவன்யா லோகம் என்னும் நூலையும், 1936-இல் மண்டன மிசுராவின் பிரம்மசித்தியினையும் ஆராய்ச்சி முன்னுரைகளோடு வெளியிட்டார். பேராசிரியர் எம்.இ. ரங்காச்சாரிய உதவியுடன் பத்ய சூடாமணி என்னும் நூலையும் (1921), டி.வி. இராமச்சந்திர தீட்சிதருடன் விப்ரம் விவேகா என்னும் நூலையும் (1932) பதிப்பித்தார். இந்தியத் தருக்கம் குறித்து ஒரு நூலையும், இந்தியத் தத்துவம், வடமொழி சாத்திரம் குறித்துப் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார். சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் சுமார் 65 ஆய்வுரைகளை இவர் வழங்கியுள்ளார். சென்னை வடமொழிக் கழகத்தை 1926-இல் நிறுவி அதன் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசை ஆய்வு நிறுவனம் ஏற்படுத்தி அதற்கென ஓர் ஆண்டிதழையும் தொடங்கி வைத்தார்.
காசியில் இருந்த பாரத தர்ம மகாமண்டலம் 1926-இல் இவருக்கு ‘வித்யா வாசசுபதி’ என்ற பட்டத்தையும், இந்திய அரசு 1927-இல் ‘மகாமகோ பாத்தியாய’ என்னும் பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தன. இத்தகு சிறப்புப் பேற்ற வடமொழிப் பேரறிஞராக விளங்கிய மகாமகோபாத்தியாய குப்புசாமிசாத்திரி 5.9.1943-இல் காலமானார் இவர் நினைவாக 1944-இல் சென்னையில் நிறுவப்பெற்ற ‘குப்புசாமி சாத்திரி ஆராய்ச்சி நிறுவனம்’ இவருடைய புலமைத் தொண்டினை நிலைவுறுத்திய வண்ணம் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது.{{Right|<b>அ.அ.ம.</b>}}
<b>குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம் (1944)</b>: குப்புசாமி சாத்திரியின் நினைவாக அவர் விட்டுச் சென்ற ஆய்வுப் பணியைத் தொடர்ந்து செய்வதைக் குறிகோளாகக் கொண்டு 1944-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் ‘குப்புசாமி சாத்திரி ஆராய்ச்சி நிறுவனம்’ சென்னையில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் சென்னை, மைலாப்பூரில் உள்ள வடமொழிக் கல்லூரி வளாகத்தில் இந்திய அரசு நிதியுதவியுடன் இப்போது செயற்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் முதல் தலைவராக வி.எசு. சீனிவாச சாத்திரி பொறுப்பேற்று இந்நிறுவனம் கால்கொள்வதற்கு அடிப்படை அமைத்தார். அவருக்குப் பின்னர் இந்தியாவின் மிகச் சிறந்த பேரறிஞர்களான டி.ஆர். வேங்கடராமசாத்திரி, டாக்டர் எசு. இராதாகிருட்டிணன், டாக்டர் ஏ. இலக்குமணசாமி முதலியார், டி.எல், வேங்கடராம ஐயர், டி.லி. விசுவநாத ஐயர் போன்றோர் தலைவராகவும், துணைத் தலைவராகவும் அமர்ந்து இந்நிறுவயத்தின் வளர்ச்சிக்குத் துணைபுமித்துள்ளனர். இந்நிறுவனம், இந்தியாவிலுள்ள கீழ்த்திசை ஆய்வு நிறுவனங்களில் சிறந்த ஒன்றாக இருப்பதற்கு முக்கிய காரணமாக டாக்டர் வி. இராகவன் அவர்களின் தொண்டு அமைந்தது. அவர் இந்நிறுவனம் தொடங்கிய தான் முதல் செயலாளராக அமர்த்து இதன் வனச்ச்சிக்கு அருந்தொண்டாற்றினார்.
உலகத்தின் பல பகுதிகளிலும் உள்ள அறிஞர்கள் இந்நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ளவர். அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் நார்மன் பிரௌன், பாரிசு தாரைச் சேர்ந்த பேராசிரியர் சான் பிரியோசா ஆகியோர் இந்நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
இந்நிறுவனத்திலுள்ள நூலகத்தில் 30,000க்கும் மேற்பட்ட பல்துறை நூல்கள் உள்ளன. குப்புசாமி சாத்திரி டாக்டர் இராதாகிருட்டிணன், வி.எசு. சீனிவாச சாத்திரி, மைசூரைச் சேர்ந்த பேராசிரியா எம். இரியன்னா போன்ற பல பேரறிஞர்களால் அளிக்கப்பட்ட புத்தகங்களும் இந்நூலத்தில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கீழ்த்திசைக் கலை ஆய்வை வாக்குவித்தல், ஆய்வாளர்கள் கலந்துரையா அவ்வப்போது கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றை அமைத்தல், ஆய்விற்கு உதவும் வகையில் நூலகத்தை அமைத்துச் செயற்படல், கீழ்த்திசை மற்றும் இந்தியவியல் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடல் ஆகியவற்றை இலக்குகளாக வைத்து இந்நிறுவனம் செயற்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் கீழ்த்திசை ஆய்விதழை வெள்யிடுவது மட்டுமன்றி, இந்நிறுவனம் இலக்கியம் சோதிடம், மருந்துவம், மதம், சாத்திரம் ஆகிய பலதுறை நூல்களையும் வெளியிட்டுள்ளது. பேராசிரிய குப்புசாமி சாத்திரியின் கட்டுரைகளையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது, மேலும், தொல்காப்பிய-<noinclude>
<b>வா. க. 7 - 40அ</b></noinclude>
az2psyrh0j76klqjl1p902xojdf6gi9