விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.46.0-wmf.26
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
அட்டவணை:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf
252
22488
1929187
1920379
2026-05-01T08:16:26Z
Booradleyp1
1964
1929187
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[ஆர்மேனியச் சிறுகதைகள்]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=1981
|Source=pdf
|Image=1
|Number of pages=237
|File size=41.79
|Category=சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்
|Progress=V
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
6to7=பொருளடக்கம்
8=முன்னுரை
15= நூல் அறிமுகம்
/>
|Remarks={{பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/6}}
{{பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/7}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:மொழிபெயர்ப்பு அட்டவணைகள்]]
[[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:தலைப்பு மாற்றப்பட வேண்டிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
cazjnpu0smrul82zbac718x3ejwicxr
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/3
250
22585
1929112
1927152
2026-05-01T05:05:41Z
Booradleyp1
1964
1929112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" /></noinclude>{{dhr|15em}}
{{center|{{xx-larger|<b>ஆர்மேனியச் சிறுகதைகள்
</b>}}}}
{{dhr|15em}}<noinclude></noinclude>
ennkhxps8306mi4mo0tvvkxyosnzl3o
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/37
250
22619
1929113
1925489
2026-05-01T05:10:46Z
Booradleyp1
1964
1929113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|<b>அவெதிக் இஸாகியன்</b> <br>(1875—1957)}}
{{center|{{x-larger|<b>சாஅதீயின் கடைசி வசந்தம்</b>}}}}
வசந்தம் வந்துவிட்டது.
மண்ணுலகை அற்புதமாக மாற்றுகிற மாய வசந்தங்களில் அதுவும் ஒன்று. சந்தோஷத்தின், மற்றும் சோகத்தின் கவிஞனான சாஅதி அதைப்போல் நூறு வசந்தங்கள் கண்டிருக்கிறான்.
அன்று அதிகாலையிலேயே சாஅதி விழித்தெழுந்தான். கானப்பறவை மீண்டும் கீதமிசைப்பதைக் கேட்கவும், வசந்த கால அற்புதங்களை மறுபடியும் பார்ப்பதற்காகவும், ரோணாபாத் நதிக்கரையின் மீதிருந்த பூந்தோட்டத்துக்கு அவன் போனான்.
இயற்கையின் லெகுமதியான ரோஜா மலர்களைச் சூடி காலைத் துயிலில் ஆழ்ந்திருந்த ஷிராஜின் வயலை நோக்கினான். நறுமணம் கலந்த வெண்பனியினால் திரையிடப் பட்டிருந்தது அது.
பூத்துக் குலுங்கிய மல்லிகைச் செடி ஒன்றின் கீழே, அழகான விரிப்பின்மீது சாஅதி உட்கார்ந்தான். அவன் நடுங்கும் கைகளில் பசுமையும் செம்மையும் கலந்து ரோஜா மொக்கு ஒன்றைப் பற்றியிருந்தான். “தன்னை அணைக்கும் காதலனைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கும் ஒரு இளம் பெண்ணைப்போல, காலை மென் காற்றுக்காகத் தன் இதழ்களை விரிக்கிறது இந்த ரோஜா” என்று மெதுவாக முணுமுணுத்தாள்.
சாஅதி இப்போது மிகுந்த வயோதிகனாகிவிட்டபோதிலும், அவனுடைய ஆத்மா அரைவாசி மூடிய இமைகளினூடாகவும் காதுகளின் வழியாகவும் இந்த உலகத்தின் அற்புதமான நிகழ்ச்சிகளையும் உருவங்களையும், அறிமுகமாகாத நெடுந்தொலைவுகளின் இசைகளையும் நிசப்தங்களையும் இன்னும் கண்டும் கேட்டும் மகிழ்ந்தது. கவிதை எனும் மந்திரசக்தி—விண்மீன்களின் ராஜ்யத்தில் உள்ள காஃப் மலையின் உச்சியில் தனது கூட்டை அமைத்துள்ள அந்த ஜாருக்த் பறவை—அவனோடு இன்னும் பேசிவந்தது தான் காரணமாகும்.
ஒளி நிறைத்த கண்களும் சாம்பல்நிறச் சிறகுகளும் பெற்ற கானப்பறவைகள், காதல் கனலும் வசீகரமான இன்னிசைப்<noinclude></noinclude>
djv1aui4pdq49auzwvmfok5bdsn4cxk
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/42
250
22624
1929114
1921418
2026-05-01T05:12:14Z
Booradleyp1
1964
1929114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|12||சாஅதியின் கடைசி வசந்தம்}}</noinclude>படபடத்துச் சென்ற ஜும்ருக்த் பறவையின் அற்புதச் சிறகுகள்
தான் அது.
பின்னர், தன்னைச் சுற்றிலும் தகதகத்த மோகினிக் கதை
உலகத்தின்மீது, தன் ஆத்மாவின் அடித்தளத்திலிருந்து எழுந்த
பார்வை ஒன்றைப் படரவிட்டான். இனிய காதலியின்
பிரகாசமான புன்னகையை அவன் பார்த்தான். சூடான
கண்ணீர் அவனது கிழ இதயத்தைப் புண்ணாக்கியது. அவளுடைய
சின்னக் கையைத் தன் கையில் எடுத்தான். அதை முத்தமிட்டான்.
பிறகு அதை அவன் பதைபதைக்கும் தன்
நெஞ்சோடு அழுத்தினான்.
“எனது கடைசி வார்த்தைகளை என் குலிஸ்தான்
காவியத்தின் கடைசிப் பக்கத்தில் உனது சின்னக் கையினால்
எழுதிவை:
‘நமது சுய விருப்பத்தின்படி தாம் பிறப்பதில்லை. நாம் ஆச்சர்யத்தில் வாழ்ந்து, கவலையோடு சாகிறோம்.’ ”<noinclude></noinclude>
1hv2uxl4id8i5k2f6h068kq6buefgkb
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/62
250
22644
1929117
1924023
2026-05-01T05:17:24Z
Booradleyp1
1964
1929117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="S.PREMAMURUGAN" />{{rh|32||ஒரு ஆர்மேனியன் குழந்தைப்....... சில காட்சிகள்}}</noinclude>சீக்கிரமே, முன்னேறிச் செல்கிற ஒட்டகத்தின் சீரான ஆட்டத்தைத் தொடர்ந்து மணிகளின் கிண்கிணி நாதம் ஒலிக்கிறது. ஒட்டகக் கூட்டம் மேலே செல்கிறது.
இரவு பகலாக அது தன் வழியே செல்கிறது. சாமான்களை இறக்க, பண்டமாற்றுச் செய்ய, சரக்குகளை விற்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறபோதுதான் அது ஓய்ந்து நிற்கிறது. பிறகு மறுபடியும், அது தன் பயணத்தைத் தொடர்கிறது.
இரவின் ஆழ்ந்த அமைதியினூடு ஒட்டகக் கூட்டம் நகர் வந்து சேர்கிற சமயங்களில், மேகமின்றி நட்சத்திரங்கள் ஒளிரும் வானத்தின் கீழே வெகுதூரத்திலிருந்து அலைமோதி வருகிற சின்னஞ்சிறு மணிகளின் கிண்கிணி நாதத்தை நாங்கள் கேட்போம். மந்தகதியில் ஊர்ந்து அது நெருங்கி நெருங்கி வரும். ஒட்டகத்தின் சொந்தக்காரர்கள் அரைத் துக்கத்தோடு ஒட்டகங்களின் சீரான அசைவுக்குத் தக்கவாறு ஆடி அசைவார்கள். எங்கள் நகரின் சதுக்கம் ஒன்றில் வந்து ஒட்டகக் கூட்டம் நிற்கிறவரை அது நிகழும். எங்கும் நிற்காமலே போய்க்கொண்டிருந்தால், அதுவும் தொடர்ந்து நிகழும். மணியோசை படிப்படியாகத் தேய்ந்து, எங்கள் நட்சத்திரமயமான ஆகாயத்தின் ஆழத்தில் புதைந்துபோகும்.
{{***|3|6em|char=✽}}
எங்கள் தெருவுக்கு அப்பால் உள்ள சதுக்கத்தில் மூன்று நாட்களாக ஒட்டகக் கூட்டம் ஒன்று தங்கியிருக்கிறது. ஒட்டகக் காவலனின் ரோம உடைகள், பிசைந்த மாவு, ஒட்டக ரோமம் ஆகியவற்றுக்கே உரிய இயல்பான மனம் காற்றில் நிலவி நிற்கிறது. ஒட்டகங்களின் களைப்புற்ற குரல்களும் அமைதியான பார்வைகளும் அங்கே நிரம்பியிருக்கின்றன. ரோமங்களால் வேயப்பட்ட காவலர் கூடாரங்கள் நன்கு நிறுவப்பட்டிருக்கின்றன. மாலை வேளைகளில் நெருப்புகள் மூட்டப்படுகின்றன. காவலர்கள் தங்கள் ஒட்டகங்களுக்கு உணவு அளித்து, அவற்றிடம் அன்பு காட்டுகிறார்கள். அவர்கள் உரக்கச் சிரிப்பதில்லை; புன்னகை மட்டுமே புரிகிறார்கள். லேசான சோபையற்ற புன்முறுவல் அவர்களது முகங்களில் தோன்றிய உடனேயே மறைந்தும் போகின்றன. ஆனால், ஒரு பாலைவன மனிதனின் பார்வை நெருப்புமயமாக இருக்கிறது; அவனுடைய கண்கள் கதிரொளியோடு சுட்டுப் பொசுக்குகின்றன; எப்போதும் உயிர்ப்போடும் 'பேசும்பான்மை'யிலும் உள்ளன. பாலை மணலின் சூட்டையும் அமைதியையும் அவை நமக்குக் கொண்டு தருகின்றன.{{nop}}<noinclude></noinclude>
16nf43y16q2a86et5cln3nwb6bu4do2
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/63
250
22645
1929116
1924024
2026-05-01T05:16:56Z
Booradleyp1
1964
1929116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="S.PREMAMURUGAN" />{{rh|வாகன் டோடோவென்ட்ஸ்|| 33}}</noinclude>விரைவிலேயே ஒட்டகக் கூட்டம் மீண்டும் தன் வழியே போகிறது. ஒட்டகங்களின் கம்மலான, துயரம் தேங்கிய, தேடித் தவிக்கிற நெடுங்குரல்களால் நகரம் முழுவதும் நிறைந்து விடுகிறது.
{{***|3|6em|char=✽}}
ஆனால் ஒட்டகங்களில் ஒன்று அசைய மறுக்கிறது. அது எழுந்து நிற்கவில்லை. தரையில் கிடந்தபடி வெறுமனே பார்க்கிறது.
காவலர்கள் அதைச் சுற்றிக் கூடுகிறார்கள். அதன் கண்களின் ஆழத்தினுள் ஊடுருவிப் பார்த்து அதனுடைய அந்தரங்க உணர்வை முழுமையாகப் புரிந்துகொள்கிறார்கள்—ஒரு முரண்டு அதைப் பற்றிக்கொண்டுவிட்டது. அதற்கு உணவளித்து அதைக் கவனித்துவரும் காவலன் ஒட்டகக் கூட்ட முதலாளியின் கோபத்தை எண்ணிப் பயந்தவனாய் வெளிறிப்போகிறான்.
அந்த ஆள் செய்த ஏதோ ஒரு காரியத்தினால் அவ் ஒட்டகம் மனவேதனை கொண்டிருக்கிறது. முதலாளி திரும்பி வருகிறான்.
"இதன் முரண்டு தணிகிற வரை நீ இதன் கூடவே இங்கே தங்க வேண்டும். பிறகு எங்களோடு வந்து சேர்ந்துகொள்’’ என்று அவன் கட்டளையிடுகிறான்
காவலன் அதற்குக் கட்டுப்படுகிறான். ஒட்டகக் கூட்டத்து மணிகளின் ஓசை மீண்டும் ஒலிக்கிறது. முரண்டு பிடித்த ஒட்டகம் தனது தலையைத் திருப்பி, விலகிச் செல்லும் தன் தோழர்களை வெகுநேரம் கவனிக்கிறது. பிறகு நீண்ட துயரக் குரல் ஒன்றை எழுப்புகிறது. முதலாளி ஒட்டகக் கூட்டம் முழுவதையும் நிறுத்தினான். ஒருவேளை அந்த ஒட்டகம் தனியே விடப்படுவதை விரும்பவில்லை போலும். ஆனால் அப்படியில்லை. அது உட்கார்ந்தே இருக்கிறது. எழுந்து நிற்க மறுக்கிறது. மறுபடியும் ஒட்டகக் கூட்டம் நகர்கிறது. மெசபடோமியா போகிற வழியே, பாபிலோனியா மற்றும் அராபியப் பாலைவனங்களை நோக்கி, அது செல்கிறது.
முரண்டு பிடித்த ஒட்டகத்தின் காவலன் தனது ரோம உடையைக் கழற்றி அதன் அருகில் வைக்கிறான். தன் போர்வையின் அடியில் சுருண்டு மடங்கித் தூங்கிவிடுகிறான். அவன் விழித்தெழுகிற நேரத்திற்குள், அந்த ஒட்டகம் தன் மனக்குறையை மறந்துவிடும்; சாயங்காலத்திற்குள் அவர்களும் ஒட்டகக் கூட்டத்துடன் போய்ச் சேர்ந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு.{{nop}}<noinclude>{{rh|ஆ—3||}}</noinclude>
bnsycvatojf1rnegq46vta8off9jrly
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/72
250
22654
1929118
1924033
2026-05-01T05:18:31Z
Booradleyp1
1964
1929118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="S.PREMAMURUGAN" />{{rh|42 ||ஆல்ப் மலை வயலட் பூ}}</noinclude>பூவையோ புல்லையோ கவனிக்கவில்லை. அவை எல்லாம் அவன் காலணிகளின் கீழே மிதிபட்டு நசுங்கின.
அவனுக்கு உலகம் முழுவதும் ஒரு மியூசியம் (பொருட்காட்சி சாலை) ஆகவே தோன்றியது. அதில் உயிருள்ள பொருள் ஒன்று கூடக் கிடையாது. பாறைகளை மூடிக்கிடந்த ஐவிக் கொடிகளை அவன் பிய்த்தெறிந்தான். வெடிப்பினூடே பூத்திருந்த வயலட் செடியைத் தன் கைக்கம்பின் நுனியினால் பிடுங்கி வீசினான். கற்கள் மீது ஆசையோடு கையால் தடவினான். அவற்றில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகளில் அடைந்துகிடந்த புழுதியைச் சுரண்டி அகற்றினான். ஆய்வாளன் அக்கறை காட்டிய அனைத்தையும் வரைந்து முடிந்ததும், கலைஞன், இடிபாடுகளை, கரடுமுரடான பாறைகளுக்கிடையே இருந்த கழுகுக்கூட்டை, சுவரடியில் பூத்திருந்த வயலட்டை எல்லாம் வரையலானான்.
{{***|3|6em|char=✽}}
பிற்பகலில் அவர்கள் கோட்டையை வி ட் டுப் புறப்பட்டார்கள். கீழ்நோக்கி இறங்குவதற்கு முன்பு ஆராய்ச்சியாளன் இடிபாடுகளை மீண்டும் ஒரு தடவை சுற்றிவந்து, தனது கையேட்டில் குறிப்புகள் எழுதிக்கொண்டான். பிறகு மற்றவர்களோடு சேர்ந்துகொள்வதற்காக அவன் வேகமாக நடந்தான்.
இம்முறை வழிகாட்டி முன்னே சென்றான். ஆய்வாளன் பாகுர் இளவரசனையும் வரலாறுகள் நிறைந்த தோல் காகிதச் சுருள்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். கலைஞன் பாஸ்ட் ஆற்றின் கொந்தளிக்கும் நீரின் ஒசையைக் கேட்டவாறே வயலட் பூவை நினைவுகூர்ந்தான். வழிகாட்டியோ, வெள்ளாட்டின் பாலாடைக்கட்டியும் தயிரும் தோய்ந்த சூடான தோசையை எண்ணிக் கனவுகண்டான்.
முதல் குடிசையில் அவன் குதிரைகளை நிறுத்தினான். அவற்றை மேயும்படி விட்டுவிட்டு, அவன் குறுகிய வாசலினூடே புகுந்தான். பசியோடிருந்த குதிரைகள் புதிய புற்களை ஆசையோடு தின்னத் தொடங்கின.
குடிசைக்குள், வாயிலின் பக்கத்திலிருந்த அடுப்பருகே ஒரு சிறுவன் உட்கார்ந்திருந்தான். சூடான தீக் கங்குகளில் அவன் காளான்களை வறுத்துக்கொண்டிருந்தான். அந்நியன் வருகையால் அவன் திடுக்கிட்டான். காளான்களைக் கருகப்போட்டுவிட்டு ஒடுவதா? இல்லை, அவற்றை அனலிலிருந்து வெளியே எடுப்பதா? என்று அவனுக்குப் புரியவில்லை. அவன் அப்பா வரும் காலடி ஓசை கேட்டதும் அவன் துணிவுகொண்டான். வறுத்த காளான்<noinclude></noinclude>
mpsfgo8w5d5q3tv8z5n5ybu39gti37c
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/77
250
22659
1929119
1924038
2026-05-01T05:19:51Z
Booradleyp1
1964
1929119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="S.PREMAMURUGAN" />{{rh|அக்செல் பாகுன்ட்|| 47}}</noinclude>வழிநெடுக வயலட் பூக்கள் மலர்ந்திருந்தன. கலைஞன் தன் சேணத்திலிருந்து வளைந்து குனிந்து ஒரு பூவைப் பறித்தான். அதைத் தனது சித்திர ஏட்டில், அடுப்பருகே மெலிந்த பெண் ஒருத்தி இருந்த படம் தீட்டப்பட்ட பக்கத்தில் வைத்துக் கொண்டான்.
குதிரைகளின் குளம்புகளுக்குக் கீழே கற்கள் சிதறின. அவை இடுக்குகளுக்குள்ளே ஒசையிட்டு உருண்டன.
கலைஞன் உள்ளத்தில் ஒரு கடல் புரண்டது. அது தனது கரைகள் மீது முதலில், கறுப்பு வெல்வட் தொப்பி அணிந்த அழகிய தலை ஒன்றை மேலே உயர்த்தும்; பிறகு கனத்த குழல் கற்றைகள் முதுகில் தொங்க நீண்ட ஆடை அணிந்த ஒரு பெண்ணைக் காட்டும்; அப்புறம், ஒரு கோட்டையின் இடிபாடுகளையும், அதன் சுவர்களினடியில் மலர்ந்திருக்கும் கரும் சிவப்புப் பூக்களையும் பிரதிபலிக்கும்.
{{***|3|6em|char=✽}}
அந்தி மயங்கியது.
ஒரு மனிதன் மலைமேல் உள்ள அதே பாதையில் ஏறிக் கொண்டிருந்தான். அவன் இடுப்பு வாரில் ஒரு அரிவாள் சொருகியிருந்தது. அவன் களைத்திருந்தான். நாள் முழுவதும் அவன் தினைப்பயிரின் கட்டையான தண்டுகளை அறுத்துக்கொண்டிருந்தான். அவன் முதுகு வலித்தது. ஆகவே அவன் மெதுவாக அடி எடுத்து வைத்தான். தனது கைத்தடியின் மீது அழுத்தமாகச் சாய்ந்து, மூச்சு வாங்குவதற்காக அடிக்கடி நின்றான். அப்படி நின்றபோதெல்லாம் அவன் முழங்கால்கள் நடுங்கின. கோட்டையில் மறைந்துகிடந்த புதையலைப்பற்றி வழிகாட்டி தெரிவித்தானே, அதே ஆள்தான் அவன். குதிரைக்காரர்கள் சவாரி செய்து கீழே செல்வதை அவன் தன் வயலிலிருந்து தலை நிமிர்ந்து பார்த்திருந்தான். அவர்களுடைய சேணப் பைகளில் தங்கம் நிறைந்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது. அவனுடைய வெள்ளாடுகளும் செம்மறிகளும் இடிபாடுகளிடையே மேய்ந்துகொண்டிருந்த வேளைகளில் அவன் உட்கார்ந்திருந்த அதே பாறையின் அடியில் பல நூற்றாண்டுக் காலமாகப் புதைந்துகிடந்த தங்கம் அது. இந்த எண்ணம் அவன் மன அமைதியைக் கெடுத்ததாலோ, அல்லது அவன் வெகுவாகக் களைத்திருந்ததனாலோ, மாலைநேர வேட்டையின் போது பசித்து அலையும் ஒரு கரடி மாதிரி அவன் எரிச்சல் அடைந்திருந்தான்.{{nop}}<noinclude></noinclude>
e39bxfziptrruzs8eys5iqmi71f37m1
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/79
250
22661
1929121
1924102
2026-05-01T05:22:42Z
Booradleyp1
1964
1929121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அக்செல் பாகுன்ட்||49}}</noinclude>முடி அடர்ந்த அவன் கை கனத்த தடியைப் பற்றியது; அந்தப்
பெண்ணின் முதுகுமேலே அறைந்தது.
அவள் ஆடையின் பொத்தான்கள் கலகலத்தன. நீண்ட
குழல்கற்றைகள் குலைந்து சரிந்தன. கெட்டில் சாய்ந்து
விழுந்தது. தடியின் நுனி முறிந்து ஒரு மூலையை நோக்கிப்
பறந்தது. அவள் அழவேயில்லை; வேதனையால் வெறுமனே
நெளிந்தாள். முதுகின்மீது கையை வைத்தபடி அவள் வீட்டை
விட்டு வெளியே போனாள். அங்கே போய் அழுவாள். சிறுவன்,
இன்னும் டப்பாக்களை இறுகப் பற்றிக்கொண்டு அவள் பாவாடை
மடிப்புகளில் ஒளிந்தபடி அவள்கூடப் போனான்.
புருஷன், ஓயாது முறுமுறுத்தவாறு தினைத்தோசைகள்
சிலவற்றைத் தின்றான். பிறகு ஆட்டுத் தோல் தொப்பியைத்
தலைக்குக் கீழே வைத்து, பாயில் நீட்டி நிமிர்ந்தான்.
மீண்டும் காகவபெர்தா மலைச்சிகரத்தின்மீது மவுனம் கவிந்தது. இரவின் கருமை வந்து சூழ்ந்தபோது அடுப்புகளில் நெருப்பு அணைந்துவிட்டது. ஊர் நாய்கள், வனவிலங்குகளிடம் கொண்ட அச்சத்தால் நடுங்கியவாறே, வீடுகளுக்கு வெளிப்புறத்தில் சுருண்டு கிடந்தன. ஆடுகள் புல்லில் படுத்திருந்தன. அந்தப் பெண் ஒரு பாயில் படுத்து, அருகில் கிடந்த குழந்தையை நீண்ட ரோமப் போர்வையால் மூடியிருந்தாள். ஒரு மேகம், ஏதோ ராட்சச நத்தையைப்போல், மலை
மீதிருந்து குடிசைகளை நோக்கி ஊர்ந்து வந்தது. கனத்த இருள் பாறைகளையும் பாசியையும் மூடி மறைத்தது. தூங்கும் ஆடுகளின் ரோமத்தின்மீது இரவின் ஈரம் படிந்தது. வயலட் பூவின் இதழ்கள்மேலே பனி விழுந்தது. சின்ன வண்டு ஒன்று, அதன் மணத்தில் கிறக்கமுற்று, பூக்கிண்ணத்தில் உறங்கிக்கிடந்தது. உலகமே மணம் நிறைந்த வயலட் பூவாக அந்த வண்டுக்குத் தோன்றியது.{{nop}}<noinclude>
ஆ—4</noinclude>
7lnp2i19shie9xq4rz7o90vvrbfivfu
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/102
250
22684
1929128
1925498
2026-05-01T05:37:56Z
Booradleyp1
1964
1929128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|<b>காஷாக் ஜியுல்நஸாரியன்</b> <br>(1918)}}
{{center|{{x-larger|<b>ஆறாவது கட்டளை</b>}}}}
அவன் ஒரு பெரிய கவி என்று எல்லோரும் சொன்னார்கள்.
மரியா மகதலேனாளின் பாபத்தை மன்னித்த ஆண்டவனிடம் அவன் நம்பிக்கை வைத்திருந்தால்! ஆனால் அவன் மத நம்பிக்கை கொண்டவன் அல்ல. மேலும், தன்னலத் தியாகம் மடத்தனமானது என்று அவன் கருதினான். அவன் ஆண்மை நிறைந்தவன். அவனோடு பழகிய பெண்கள் அப்படித்தான் நம்பினார்கள். தடித்த உதடுகளும், உணர்ச்சி நிறைந்த பெரிய வாயும், நெளிநெளியான கரிய தலைமுடியும் பெற்றிருந்த அந்த இளைஞனோடு அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். ஒரே பார்வையில் வெற்றி கொண்ட, ஏக்கம் நிறைந்த தரும் கண்கள்தான் அவனின் மிகச் சிறந்த அம்சமாக விளங்கின. அவன் கழுத்தில் ‘டை’ கட்டிக் கொள்வதில்லை. மிகச் சமீபகால நாகரிக முறைகளை அவன் பின்பற்றமாட்டான்.
நேர்த்தியாக அலங்கரித்துக்கொண்ட யுனிவர்சிட்டி மாணவர்களை “இஸ்திரிபோட்ட உடுப்புகள்” என்று பெண்கள் பரிகசித்தார்கள். ஆனால், எப்போதும் அசிங்கமான தமாஷ்களைப் பேசிக்கொண்டு—தன் அம்மாவின் முன்னிலையில்கூட அவற்றைக் கூற அவன் தயங்கமாட்டான்—புகையும் கறுப்புக் குழாயை உறிஞ்சியவாறு காணப்பட்ட பார்கெவ் ஆராமஸை ஒரு ‘காட்டுமிராண்டி’ என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அவன் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தினான். ஆனல், இளம் பெண்கள் ஆச்சர்யம் அடையவில்லை. அவனைக் கண்டதுமே காதல் கொண்டார்கள்.
“ஆறாவது கட்டளையாவது: விபசாரம் செய்!”
ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தங்கள் புனிதமான எழுத்துகளை உருவாக்கிய ஒரு மீனவனும் ஒரு தச்சனும் வாழ்க்கையைப்பற்றி என்ன கண்டார்கள்? அப்போது கூட மரியா மகதலேனா அருகிலேயே வாழ்ந்துகொண்டிருந்தாளே!{{nop}}<noinclude></noinclude>
babyeza45htzwch2bogvx5fehf8ml12
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/225
250
22807
1929042
744042
2026-04-30T13:45:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929042
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|பி. செய்துன்சியன்||195}}</noinclude>“நாற்பத்தாறு...”
“நாற்பத்தேழு ...”
“நாற்பத்தெட்டு...”
“நாற்பத்தொன்பது...”
மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டதில், நாற்பத்தொன்பது
வியப்படைந்ததாகத் தோன்றவில்லை. ஆரம்பத்திலிருந்தே அவன்
அதுபற்றி நிச்சயம்கொண்டிருந்தான். அவன் ஒரு நாணயமான
மனிதனாக இருந்ததால் அவன் சாக வேண்டாம்.
திடீரென்று அதிகாரியின் குரல் கேட்டது.
“நிறுத்து! ஒரு தவறு நேர்ந்திருக்கிறது... திரும்பவும்
நாற்பதிலிருந்து எண்ணு..!”
தவறாகப் புரிந்துகொண்டதன் பயனாக ஐம்பதாவது நபர்
இடம் மாறி நாற்பத்தொன்பது ஆகியிருந்தான்! ஐம்பத்தொன்று ஐம்பது ஆகியிருந்தான்.
அதோ அப்படித்தான் அவை அமையவேண்டும்; அவன்
சாகத்தான் வேண்டும். ஆரம்பம் முதலே அதை அவன் அறிவான்.
அவன் ஒரு யோக்கியமான மனிதனாக இருந்ததால், அவன் சாக
வேண்டியதுதான்...
முந்திய ஐம்பது—இப்போது ஐம்பத்து ஒன்று—மற்றவனை
அறிந்தே இராதவன், வெட்கத்தால் முகம் சிவந்தான்.
அனைத்துக்கும் தன்னையே குற்றம் சாட்டவேண்டும் என்று
அவனுக்குத் தோன்றியது. அவன் முணுமுணுத்தான்.
“நான்... நான் குற்றவாளி இல்லை...”
ஆனால் அது மிகச் சிறியது. அதுகூடப் பொய்தான். அந்த
நேரத்தில், மிகச் சாதாரணமான உண்மைகூட ஒரு குற்றமாய்,
அவனது அண்டையில் நின்றவனைப் பொறுத்தமட்டில் ஒரு
ஏளனமாகவே தோன்றியது.
அவன் இன்னும் ஏதோ முனகினான். இது மிகவும் உண்மையானதாக ஒலித்தது.
“ஒருவேளை... ஒரு வேளை நான்கூடச் சாகத்தான் வேண்டும்...
யுத்தத்திலிருந்து சொற்பப் பேர்களே திரும்புகிறார்கள்...”
அதுதான் ஒரே ஒரு மகாப் பெரிய நியாயம் ஆயிற்று.
“ஐம்பத்தாறு ...”
“ஐம்பத்தேழு...”{{nop}}<noinclude></noinclude>
7llw4lf0eh1o0wdp9n2bm2nx98pae77
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/226
250
22808
1929043
744043
2026-04-30T13:48:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|196||ஒவ்வொரு பத்திலும் ஒருவர்}}</noinclude>“ஐம்பத்தெட்டு...”
“ஐம்பத்தொன்பது...”
“நான் சாக விரும்பவில்லை... நான் கட்டாயப்படுத்தப்
பட்டேன்...” அறுபதாவது நபரின் பழக்கமான, நரம்புத் தளர்ச்சி
உற்ற குரல் கேட்டது. அவனிடம் யாரும் இரக்கம் கொள்ளவில்லை.
அவர்கள் எழுபதாவது நபரிடம் இரக்கம் காட்டினார்கள்.
அதுவும் ஒரு விஷயத்துக்காகத்தான்: பத்தாவது, இருபதாவது,
முப்பதாவது, அவர்கள் எல்லோருமே, தாங்கள் எண்ணப்படுகிற
வரையில், நாம் சாகமாட்டோம் என்றே நம்பியிருந்தார்கள்
ஒவ்வொரு பத்தில் ஒருவராக அவர்கள் இருக்கமாட்டார்கள்
என்று நம்பினார்கள். ஆனால், எழுபதாவது, அந்தக் கடைசிப்
போர்வீரன் நெடுநேரமாக அதை நன்கு அறிந்திருந்தான்.<noinclude></noinclude>
mt7zvsfwpbshso1b09sf36anwzduglo
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/228
250
22812
1929045
744045
2026-04-30T13:56:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929045
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்||199}}</noinclude>
{{larger|<b>ஹோவன்னஸ் டூமேனியன்</b>}}<br>
(1869-1923)
டூமேனியன் ஆர்மேனியாவில், திசெஹ் என்ற கிராமத்தில்,
கிராம மதகுரு குடும்பம் ஒன்றில் பிறந்தார். தீபிலிஸியில் ஒரு
கல்விக்கூடத்தில் அவர் படித்தார். ஆனால் பிழைப்புக்காக
உழைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் அவர் படிப்பை
நிறுத்த நேரிட்டது.
1890-ல் டூமேனியனின் முதலாவது கவிதைத் தொகுதி
மாஸ்கோவில் பிரசுரமாயிற்று. டூமேனியனின் படைப்பாற்றல்
ஆர்மேனிய மக்களுக்குப் பெருமை தருவதாகக் கருதப்படுகிறது.
அவருடைய கவிதைகள் “அனுஷ்”, “அஹ்தமார்”,
“பர்வானா”, “தும்காபெர்தாவைப் பிடித்தது”, “மாரோ”,
“டேவிட் ஸாசன்கி”' ஆகியவை மிகப் பிரபலமானவை. அவை
ஆர்மேனிய மக்களால் மட்டுமன்றி, அனைத்து சோவியத்
மக்களாலும் விரும்பப்படுகின்றன. ஹோவன்னஸ் டூமேனியன்
குழந்தைகளுக்காகவும் எழுதினார். இவை மிக எளிமையாகவும்
தெளிவாகவும் அமைந்திருக்கின்றன.
{{larger|<b>அவெதீக் இஸாகியன்</b>}}<br>
(1875-1957)
இஸாகியன் லெனினாகான் அருகில் உள்ள காஸராபாத்
என்ற கிராமத்தில் பிறந்தார். அலெக்ஸாண்ட்ராபோலில்
இருக்கிற ஆர்மேனியன் மதஇயல் பள்ளியில் தனது ஆரம்பக்
கல்வியைப் பெற்றார். எக்மியாத்ஸினில் உள்ள கல்விச்சாலையில்
தனது பயிற்சியை முடித்துக்கொண்டு, இஸாகியன் மேல்
படிப்புக்காக வெளிநாடு சென்றார். லீப்ஸிக் யுனிவர்சிட்டியில்
சேர்ந்து, தத்துவம், மானிட இயல், மனித இன வரலாறு
ஆகியவை சம்பந்தமான சொற்பொழிவுகளைக் கேட்டுத்
தேர்ந்தார். உலக இலக்கியங்களையும் பயின்றார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் இஸாகியன் கிரீஸிலும் இத்தாலியிலும்
அதிகம் சுற்றுப்பயணம் செய்தார். 1895-ல் தாய்நாடு
திரும்பினார். 1911-ல் அவர் மறுபடியும் அயல்நாடு சென்றார்.
1926 வரை அவர் திரும்பி வரவேயில்லை. 1926-ல் அவர்
சோவியத் ஆர்மேனியாவுக்கு வந்தார்.{{nop}}<noinclude></noinclude>
6lx6kd6d1s9oxnkt4ft8cj347vl2klz
1929170
1929045
2026-05-01T07:59:31Z
Booradleyp1
1964
1929170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்||199}}</noinclude>
{{larger|<b>ஹோவன்னஸ் டூமேனியன்</b>}}<br>
(1869-1923)
டூமேனியன் ஆர்மேனியாவில், திசெஹ் என்ற கிராமத்தில்,
கிராம மதகுரு குடும்பம் ஒன்றில் பிறந்தார். தீபிலிஸியில் ஒரு
கல்விக்கூடத்தில் அவர் படித்தார். ஆனால் பிழைப்புக்காக
உழைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் அவர் படிப்பை
நிறுத்த நேரிட்டது.
1890-ல் டூமேனியனின் முதலாவது கவிதைத் தொகுதி
மாஸ்கோவில் பிரசுரமாயிற்று. டூமேனியனின் படைப்பாற்றல்
ஆர்மேனிய மக்களுக்குப் பெருமை தருவதாகக் கருதப்படுகிறது.
அவருடைய கவிதைகள் “அனுஷ்”, “அஹ்தமார்”,
“பர்வானா”, “தும்காபெர்தாவைப் பிடித்தது”, “மாரோ”,
“டேவிட் ஸாசன்கி”' ஆகியவை மிகப் பிரபலமானவை. அவை
ஆர்மேனிய மக்களால் மட்டுமன்றி, அனைத்து சோவியத்
மக்களாலும் விரும்பப்படுகின்றன. ஹோவன்னஸ் டூமேனியன்
குழந்தைகளுக்காகவும் எழுதினார். இவை மிக எளிமையாகவும்
தெளிவாகவும் அமைந்திருக்கின்றன.
{{larger|<b>அவெதீக் இஸாகியன்</b>}}<br>
(1875-1957)
இஸாகியன் லெனினாகான் அருகில் உள்ள காஸராபாத் என்ற கிராமத்தில் பிறந்தார். அலெக்ஸாண்ட்ராபோலில் இருக்கிற ஆர்மேனியன் மதஇயல் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். எக்மியாத்ஸினில் உள்ள கல்விச்சாலையில் தனது பயிற்சியை முடித்துக்கொண்டு, இஸாகியன் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றார். லீப்ஸிக் யுனிவர்சிட்டியில் சேர்ந்து, தத்துவம், மானிட இயல், மனித இன வரலாறு ஆகியவை சம்பந்தமான சொற்பொழிவுகளைக் கேட்டுத் தேர்ந்தார். உலக இலக்கியங்களையும் பயின்றார். அந்தச் சந்தர்ப்பத்தில் இஸாகியன் கிரீஸிலும் இத்தாலியிலும் அதிகம் சுற்றுப்பயணம் செய்தார். 1895-ல் தாய்நாடு திரும்பினார். 1911-ல் அவர் மறுபடியும் அயல்நாடு சென்றார். 1926 வரை அவர் திரும்பி வரவேயில்லை. 1926-ல் அவர் சோவியத் ஆர்மேனியாவுக்கு வந்தார்.{{nop}}<noinclude></noinclude>
np9szqisc7fd3fnwz1gmki8d95tiqbm
1929171
1929170
2026-05-01T08:01:33Z
Booradleyp1
1964
1929171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்||199}}</noinclude>
{{larger|<b>ஹோவன்னஸ் டூமேனியன்</b>}}<br>
(1869—1923)
டூமேனியன் ஆர்மேனியாவில், திசெஹ் என்ற கிராமத்தில்,
கிராம மதகுரு குடும்பம் ஒன்றில் பிறந்தார். தீபிலிஸியில் ஒரு
கல்விக்கூடத்தில் அவர் படித்தார். ஆனால் பிழைப்புக்காக
உழைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் அவர் படிப்பை
நிறுத்த நேரிட்டது.
1890-ல் டூமேனியனின் முதலாவது கவிதைத் தொகுதி
மாஸ்கோவில் பிரசுரமாயிற்று. டூமேனியனின் படைப்பாற்றல்
ஆர்மேனிய மக்களுக்குப் பெருமை தருவதாகக் கருதப்படுகிறது.
அவருடைய கவிதைகள் “அனுஷ்”, “அஹ்தமார்”,
“பர்வானா”, “தும்காபெர்தாவைப் பிடித்தது”, “மாரோ”,
“டேவிட் ஸாசன்கி”' ஆகியவை மிகப் பிரபலமானவை. அவை
ஆர்மேனிய மக்களால் மட்டுமன்றி, அனைத்து சோவியத்
மக்களாலும் விரும்பப்படுகின்றன. ஹோவன்னஸ் டூமேனியன்
குழந்தைகளுக்காகவும் எழுதினார். இவை மிக எளிமையாகவும்
தெளிவாகவும் அமைந்திருக்கின்றன.
{{larger|<b>அவெதீக் இஸாகியன்</b>}}<br>
(1875—1957)
இஸாகியன் லெனினாகான் அருகில் உள்ள காஸராபாத் என்ற கிராமத்தில் பிறந்தார். அலெக்ஸாண்ட்ராபோலில் இருக்கிற ஆர்மேனியன் மதஇயல் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். எக்மியாத்ஸினில் உள்ள கல்விச்சாலையில் தனது பயிற்சியை முடித்துக்கொண்டு, இஸாகியன் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றார். லீப்ஸிக் யுனிவர்சிட்டியில் சேர்ந்து, தத்துவம், மானிட இயல், மனித இன வரலாறு ஆகியவை சம்பந்தமான சொற்பொழிவுகளைக் கேட்டுத் தேர்ந்தார். உலக இலக்கியங்களையும் பயின்றார். அந்தச் சந்தர்ப்பத்தில் இஸாகியன் கிரீஸிலும் இத்தாலியிலும் அதிகம் சுற்றுப்பயணம் செய்தார். 1895-ல் தாய்நாடு திரும்பினார். 1911-ல் அவர் மறுபடியும் அயல்நாடு சென்றார். 1926 வரை அவர் திரும்பி வரவேயில்லை. 1926-ல் அவர் சோவியத் ஆர்மேனியாவுக்கு வந்தார்.{{nop}}<noinclude></noinclude>
58b0w9eh39wdvkibfqq7b3i4qixxodj
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/229
250
22814
1929046
744046
2026-04-30T14:15:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|200||ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்}}</noinclude>அவருடைய முதல் கவிதைத் தொகுதியான “பாடல்களும்
காயங்களும்” 1895-ல் பிரசுரமாயிற்று. அவரது செய்யுள்கள்,
சிறு பாடல்கள், கவிதைகள், சிறு கதைகள், தேவதைக் கதைகள்,
விஷேசமாக அவருடைய புகழ்பெற்ற கவிதையான “அபுல்-ஆலா-மாரி”
ஆகியவை அவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தன.
{{larger|<b>தெரெனிக் தெமிர்ச்யன்</b>}}<br>
(1877-1966)
தெமிர்ச்யன் (ஜியார்ஜியன் சோவியத் குடியரசில் இருக்கும்)
அஹால்காலாகி நகரில் பிறந்தார். ஜெனிவா யுனிவர்சிட்டியில்
இயற்கை விஞ்ஞானப் பிரிவில் கற்றுத் தேர்ந்தார். அதே
சமயம் இலக்கியம், ஆசிரிய இயல் சம்பந்தமான சொற்பொழிவுகளிலும்
கலந்துகொண்டார். “கான்ஸர்வேடாய்ர்”-ல்
பயின்றார். தெமிர்ச்யனின் படைப்பிலக்கியம் சோவியத்
ஆர்மேனிய உரைநடை, நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சியில்
மிகுந்த தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது.
முக்கியப் படைப்புகள் :
“வாஸாக்”, “விசாரணை” (“பணக்கார ஓவ்நாம்”);
“தீரன் நாஸார்”, “என் சொந்த நாடு” (நாடகங்கள்).
“வார்தானான்க்” (நாவல்).
சில சிறுகதைத் தொகுப்புகள்.
{{larger|<b>ஸ்டீபன் ஸோரியன்</b>}}<br>
(1890-1967)
ஸோரியன் கிரோவோகன் கிராமத்தில் பிறந்தார். ஸோரியனின்
படைப்புகள் ஆழ்ந்த தேசியப் பிடிப்பும், மனித நேயமும்
கொண்டவை. ஆர்மேனிய இலக்கிய வரலாற்றில் அவை
முக்கியமான ஒரு இடம் வகிக்கின்றன.
முக்கியப் படைப்புகள் :
“நூலகத்திலிருந்து வந்த பெண்” (கதை).
“ஒரு வாழ்க்கையின் கதை”, “பாப் அரசன்”, “அமிர்யன்
குடும்பம்” (நாவல்கள்).
“வாராஸ்தத்” (மூன்று பாகங்கள் கொண்ட வரலாறு).{{nop}}<noinclude></noinclude>
g7d4rbw7ppbxbk544nhnk0kuo8tj720
1929172
1929046
2026-05-01T08:02:03Z
Booradleyp1
1964
1929172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|200||ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்}}</noinclude>அவருடைய முதல் கவிதைத் தொகுதியான “பாடல்களும்
காயங்களும்” 1895-ல் பிரசுரமாயிற்று. அவரது செய்யுள்கள்,
சிறு பாடல்கள், கவிதைகள், சிறு கதைகள், தேவதைக் கதைகள்,
விஷேசமாக அவருடைய புகழ்பெற்ற கவிதையான “அபுல்-ஆலா-மாரி”
ஆகியவை அவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தன.
{{larger|<b>தெரெனிக் தெமிர்ச்யன்</b>}}<br>
(1877—1966)
தெமிர்ச்யன் (ஜியார்ஜியன் சோவியத் குடியரசில் இருக்கும்)
அஹால்காலாகி நகரில் பிறந்தார். ஜெனிவா யுனிவர்சிட்டியில்
இயற்கை விஞ்ஞானப் பிரிவில் கற்றுத் தேர்ந்தார். அதே
சமயம் இலக்கியம், ஆசிரிய இயல் சம்பந்தமான சொற்பொழிவுகளிலும்
கலந்துகொண்டார். “கான்ஸர்வேடாய்ர்”-ல்
பயின்றார். தெமிர்ச்யனின் படைப்பிலக்கியம் சோவியத்
ஆர்மேனிய உரைநடை, நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சியில்
மிகுந்த தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது.
முக்கியப் படைப்புகள் :
“வாஸாக்”, “விசாரணை” (“பணக்கார ஓவ்நாம்”);
“தீரன் நாஸார்”, “என் சொந்த நாடு” (நாடகங்கள்).
“வார்தானான்க்” (நாவல்).
சில சிறுகதைத் தொகுப்புகள்.
{{larger|<b>ஸ்டீபன் ஸோரியன்</b>}}<br>
(1890—1967)
ஸோரியன் கிரோவோகன் கிராமத்தில் பிறந்தார். ஸோரியனின்
படைப்புகள் ஆழ்ந்த தேசியப் பிடிப்பும், மனித நேயமும்
கொண்டவை. ஆர்மேனிய இலக்கிய வரலாற்றில் அவை
முக்கியமான ஒரு இடம் வகிக்கின்றன.
முக்கியப் படைப்புகள் :
“நூலகத்திலிருந்து வந்த பெண்” (கதை).
“ஒரு வாழ்க்கையின் கதை”, “பாப் அரசன்”, “அமிர்யன்
குடும்பம்” (நாவல்கள்).
“வாராஸ்தத்” (மூன்று பாகங்கள் கொண்ட வரலாறு).{{nop}}<noinclude></noinclude>
ero8f7kp7s9na6ioq7emlumt15tyuxr
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/230
250
22816
1929048
744048
2026-04-30T14:26:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்||201}}</noinclude>
{{larger|<b>வாகன் டோடோவென்ட்ஸ்</b>}}<br>
(1893-1938)
டோடோவென்ட்ஸ் மேற்கு ஆர்மேனியாவில், மெஸ்ரே
நகரில் பிறந்தார். பின்னர் அவர் அமெரிக்கா சென்றார்.
அமெரிக்காவில் விஸ்கான்ஸின் யுனிவர்சிட்டியில் வரலாற்றுப்
பகுதியில் கற்றுத்தேர்ந்தார்.
1922-ல் அவர் சோவியத் ஆர்மேனியாவுக்குத் திரும்பி
வந்தார்.
முக்கியப் படைப்புகள் :
“டோனோ” {கதை); “அமெரிக்கா” முதலிய பல சிறுகதைகள்.
“அஸாதுரும் கிளியோபாட்ராவும்” (கதை); “பாகு”
(நாவல்): “புராதன ரோமாபுரிப் பாதையின் வாழ்வு” (கதை);
“புறாக்கள்”, “நீல மலர்கள்” (கதைகள்).
{{larger|<b>அக்செல் பாகுன்ட்ஸ்</b>}}<br>
(1899-1937)
பாகுன்ட்ஸ் கோரிஸ் நகரில் பிறந்தார். திபிலிஸி யுனிவர்சிட்டியிலும்,
கார்கோவ் விவசாயக் கழகத்திலும் பயின்றார்.
சிறந்த மனிதாபிமானக் கலைஞராகவும், சர்வதேச சகோதரத்துவம்
என்ற கருத்தின் தீவிர ஆதரவாளர் என்றும் ஆர்மேனிய
இலக்கிய வரலாற்றில் அக்செல் இடம் பெற்றிருக்கிறார்.
முக்கியப் படைப்புகள்:
“ஹோனார் என்ற பெண்” எனும் சிறுகதைத் தொகுதி.
“சிறுகதைகளும் கட்டுக்கதைகளும்.”
“ஓவான்டன் படையெடுப்பு” மற்றும் “கார்ம்கார்”—
நாவல்.{{nop}}<noinclude></noinclude>
bhtxb66094xii8aot17owhy31y787ce
1929173
1929048
2026-05-01T08:02:40Z
Booradleyp1
1964
1929173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்||201}}</noinclude>
{{larger|<b>வாகன் டோடோவென்ட்ஸ்</b>}}<br>
(1893—1938)
டோடோவென்ட்ஸ் மேற்கு ஆர்மேனியாவில், மெஸ்ரே
நகரில் பிறந்தார். பின்னர் அவர் அமெரிக்கா சென்றார்.
அமெரிக்காவில் விஸ்கான்ஸின் யுனிவர்சிட்டியில் வரலாற்றுப்
பகுதியில் கற்றுத்தேர்ந்தார்.
1922-ல் அவர் சோவியத் ஆர்மேனியாவுக்குத் திரும்பி
வந்தார்.
முக்கியப் படைப்புகள் :
“டோனோ” {கதை); “அமெரிக்கா” முதலிய பல சிறுகதைகள்.
“அஸாதுரும் கிளியோபாட்ராவும்” (கதை); “பாகு”
(நாவல்): “புராதன ரோமாபுரிப் பாதையின் வாழ்வு” (கதை);
“புறாக்கள்”, “நீல மலர்கள்” (கதைகள்).
{{larger|<b>அக்செல் பாகுன்ட்ஸ்</b>}}<br>
(1899—1937)
பாகுன்ட்ஸ் கோரிஸ் நகரில் பிறந்தார். திபிலிஸி யுனிவர்சிட்டியிலும்,
கார்கோவ் விவசாயக் கழகத்திலும் பயின்றார்.
சிறந்த மனிதாபிமானக் கலைஞராகவும், சர்வதேச சகோதரத்துவம்
என்ற கருத்தின் தீவிர ஆதரவாளர் என்றும் ஆர்மேனிய
இலக்கிய வரலாற்றில் அக்செல் இடம் பெற்றிருக்கிறார்.
முக்கியப் படைப்புகள்:
“ஹோனார் என்ற பெண்” எனும் சிறுகதைத் தொகுதி.
“சிறுகதைகளும் கட்டுக்கதைகளும்.”
“ஓவான்டன் படையெடுப்பு” மற்றும் “கார்ம்கார்”—
நாவல்.{{nop}}<noinclude></noinclude>
ptb08tpdgxm73n158xtwuu37c9793ej
1929179
1929173
2026-05-01T08:08:27Z
Booradleyp1
1964
1929179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்||201}}</noinclude>
{{larger|<b>வாகன் டோடோவென்ட்ஸ்</b>}}<br>
(1893—1938)
டோடோவென்ட்ஸ் மேற்கு ஆர்மேனியாவில், மெஸ்ரே
நகரில் பிறந்தார். பின்னர் அவர் அமெரிக்கா சென்றார்.
அமெரிக்காவில் விஸ்கான்ஸின் யுனிவர்சிட்டியில் வரலாற்றுப்
பகுதியில் கற்றுத்தேர்ந்தார்.
1922-ல் அவர் சோவியத் ஆர்மேனியாவுக்குத் திரும்பி
வந்தார்.
முக்கியப் படைப்புகள் :
“டோனோ” {கதை); “அமெரிக்கா” முதலிய பல சிறுகதைகள்.
“அஸாதுரும் கிளியோபாட்ராவும்” (கதை); “பாகு”
(நாவல்): “புராதன ரோமாபுரிப் பாதையின் வாழ்வு” (கதை);
“புறாக்கள்”, “நீல மலர்கள்” (கதைகள்).
{{larger|<b>அக்செல் பாகுன்ட்ஸ்</b>}}<br>
(1899—1937)
பாகுன்ட்ஸ் கோரிஸ் நகரில் பிறந்தார். திபிலிஸி யுனிவர்சிட்டியிலும்,
கார்கோவ் விவசாயக் கழகத்திலும் பயின்றார்.
சிறந்த மனிதாபிமானக் கலைஞராகவும், சர்வதேச சகோதரத்துவம்
என்ற கருத்தின் தீவிர ஆதரவாளர் என்றும் ஆர்மேனிய
இலக்கிய வரலாற்றில் அக்செல் இடம் பெற்றிருக்கிறார்.
முக்கியப் படைப்புகள்:
“ஹோனார் என்ற பெண்” எனும் சிறுகதைத் தொகுதி.
“சிறுகதைகளும் கட்டுக்கதைகளும்.”
“ஓவான்டன் படையெடுப்பு” மற்றும் “கார்ம்கார்”—
நாவல்.{{nop}}<noinclude></noinclude>
g6gtacvp2czq7h6mufkex08abqbepzp
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/231
250
22818
1929049
744049
2026-04-30T14:41:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929049
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|202||ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்}}</noinclude>{{larger|<b>வாக்தாங் அனான்யன்</b>}}<br>
(1905— )
போகோஸ் - கிலிஸா என்ற கிராமத்தில், விவசாயக்
குடும்பம் ஒன்றில் அனான்யன் பிறந்தார். கிராமப் பள்ளியில்
கற்றுத் தேர்ந்தபின், 1915-ல் திலித்ஸான்ஸ் வட்டாரப்பள்ளியில்
சேர்ந்தார். அவர் எழுதிய ஒரு கட்டுரை ராஜத்துரோகமானது
என்று பரிசோதகர்கள் குற்றம் சாட்டியதால் அவர் 'ஜிம்னாஸியத்'தில்
சேர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கட்டுரை
பின்னர் ''நொண்டிடாக்கோ" என்ற தலைப்பில் பிரசுரம்
பெற்றது.
அவரது முக்கியப் படைப்புகள் :
“வயலட் சிகரங்கள்மீது”, “குகை மனிதர்கள்”
"வேட்டையின்போது'' (சிறுகதைத் தொகுப்புகள்).
“நரக வாசலின் மர்மம்” (வீரசாகசக் கதை).
இதர நூல்கள் :
“போருக்குப் பின்”, “வேட்டைக்காரன் கதைகள்”, “பண்ணையின் மக்கள்”, “ஸெவான் ஏரிக்கரையில்”,
“சிறுத்தை கார்ஜின் கைதிகள்”, “ஆர்மேனியாவின் மிருக உலகம்” (5 பாகங்கள்).
{{larger|<b>ஸெரோ கான்ஸாடியன்</b>}}<br>
(1915— )
கான்ஸாடியன் கோரிஸ் நகரில் பிறந்தார். கோரிஸ் நகரின்
செகண்டரி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் கற்று, 1934-ல் தேர்ச்சி
பெற்றார். பின்னர் பாகு நகரில் உள்ள ஆசிரியர் கழகத்தில்
வரலாற்றுப் பிரிவில் பயின்றார்.
அவரது முக்கியப் படைப்புகள் :
“நமது படையின் மக்கள்”, “நிலம்” “காட்ஸாரன்”, “மிடார் ஸ்பாராபெட்”, “பழங்காலம்பற்றிய புத்தகம்” (நாவல்கள்).
“சிகப்பு லில்லிப் பூக்கள்” (சிறுகதை, குறுநாவல் தொகுதி).{{nop}}<noinclude></noinclude>
36i9zb9yy4h55decq7gmhmhrq74yrx3
1929180
1929049
2026-05-01T08:09:06Z
Booradleyp1
1964
1929180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|202||ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்}}</noinclude>
{{larger|<b>வாக்தாங் அனான்யன்</b>}}<br>
(1905— )
போகோஸ் - கிலிஸா என்ற கிராமத்தில், விவசாயக்
குடும்பம் ஒன்றில் அனான்யன் பிறந்தார். கிராமப் பள்ளியில்
கற்றுத் தேர்ந்தபின், 1915-ல் திலித்ஸான்ஸ் வட்டாரப்பள்ளியில்
சேர்ந்தார். அவர் எழுதிய ஒரு கட்டுரை ராஜத்துரோகமானது
என்று பரிசோதகர்கள் குற்றம் சாட்டியதால் அவர் 'ஜிம்னாஸியத்'தில்
சேர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கட்டுரை
பின்னர் ''நொண்டிடாக்கோ" என்ற தலைப்பில் பிரசுரம்
பெற்றது.
அவரது முக்கியப் படைப்புகள் :
“வயலட் சிகரங்கள்மீது”, “குகை மனிதர்கள்”
"வேட்டையின்போது'' (சிறுகதைத் தொகுப்புகள்).
“நரக வாசலின் மர்மம்” (வீரசாகசக் கதை).
இதர நூல்கள் :
“போருக்குப் பின்”, “வேட்டைக்காரன் கதைகள்”, “பண்ணையின் மக்கள்”, “ஸெவான் ஏரிக்கரையில்”,
“சிறுத்தை கார்ஜின் கைதிகள்”, “ஆர்மேனியாவின் மிருக உலகம்” (5 பாகங்கள்).
{{larger|<b>ஸெரோ கான்ஸாடியன்</b>}}<br>
(1915— )
கான்ஸாடியன் கோரிஸ் நகரில் பிறந்தார். கோரிஸ் நகரின்
செகண்டரி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் கற்று, 1934-ல் தேர்ச்சி
பெற்றார். பின்னர் பாகு நகரில் உள்ள ஆசிரியர் கழகத்தில்
வரலாற்றுப் பிரிவில் பயின்றார்.
அவரது முக்கியப் படைப்புகள் :
“நமது படையின் மக்கள்”, “நிலம்” “காட்ஸாரன்”, “மிடார் ஸ்பாராபெட்”, “பழங்காலம்பற்றிய புத்தகம்” (நாவல்கள்).
“சிகப்பு லில்லிப் பூக்கள்” (சிறுகதை, குறுநாவல் தொகுதி).{{nop}}<noinclude></noinclude>
kw7fl8nei1fkufkh6502i83kyluait3
1929181
1929180
2026-05-01T08:10:57Z
Booradleyp1
1964
1929181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|202||ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்}}</noinclude>
{{larger|<b>வாக்தாங் அனான்யன்</b>}}<br>
(1905— )
போகோஸ் - கிலிஸா என்ற கிராமத்தில், விவசாயக்
குடும்பம் ஒன்றில் அனான்யன் பிறந்தார். கிராமப் பள்ளியில்
கற்றுத் தேர்ந்தபின், 1915-ல் திலித்ஸான்ஸ் வட்டாரப்பள்ளியில்
சேர்ந்தார். அவர் எழுதிய ஒரு கட்டுரை ராஜத்துரோகமானது
என்று பரிசோதகர்கள் குற்றம் சாட்டியதால் அவர் 'ஜிம்னாஸியத்'தில்
சேர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கட்டுரை
பின்னர் “நொண்டிடாக்கோ” என்ற தலைப்பில் பிரசுரம்
பெற்றது.
அவரது முக்கியப் படைப்புகள் :
“வயலட் சிகரங்கள்மீது”, “குகை மனிதர்கள்” “வேட்டையின்போது” (சிறுகதைத் தொகுப்புகள்).
“நரக வாசலின் மர்மம்” (வீரசாகசக் கதை).
இதர நூல்கள் :
“போருக்குப் பின்”, “வேட்டைக்காரன் கதைகள்”, “பண்ணையின் மக்கள்”, “ஸெவான் ஏரிக்கரையில்”,
“சிறுத்தை கார்ஜின் கைதிகள்”, “ஆர்மேனியாவின் மிருக உலகம்” (5 பாகங்கள்).
{{larger|<b>ஸெரோ கான்ஸாடியன்</b>}}<br>
(1915— )
கான்ஸாடியன் கோரிஸ் நகரில் பிறந்தார். கோரிஸ் நகரின்
செகண்டரி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் கற்று, 1934-ல் தேர்ச்சி
பெற்றார். பின்னர் பாகு நகரில் உள்ள ஆசிரியர் கழகத்தில்
வரலாற்றுப் பிரிவில் பயின்றார்.
அவரது முக்கியப் படைப்புகள் :
“நமது படையின் மக்கள்”, “நிலம்” “காட்ஸாரன்”, “மிடார் ஸ்பாராபெட்”, “பழங்காலம்பற்றிய புத்தகம்” (நாவல்கள்).
“சிகப்பு லில்லிப் பூக்கள்” (சிறுகதை, குறுநாவல் தொகுதி).{{nop}}<noinclude></noinclude>
8y2tumw7m0yteiic0oli26v2jx4vkcy
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/232
250
22820
1929050
744050
2026-04-30T14:51:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்||203}}</noinclude>{{larger|<b>காஷாக் ஜியுல்நஸாரியன்</b>}}<br>
(1918— )
ஜியுல்தஸாரியன் ஏரெவானில் பிறந்தார். ஏரெவான்
யுனிவர்சிட்டி மொழி இயல் பகுதியில் தேர்ச்சி பெற்றதும் அவர் மாபெரும் தேசிய யுத்தத்தில் கலந்து போராடினார். யுத்தத்துக்குப் பிறகு அவர் இலக்கியக் கழகத்தில் பணிபுரிய வந்தார்.
அங்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோதே அவர் இலக்கிய முயற்சிகளிலும் ஈடுபட்டார்.
முக்கியப் படைப்புகள் :
“வயல்வெளிகளின் விருந்தாளிகளும் வீட்டுக்காரர்களும்”, “என்ன என்று யார் அறிவார்”, “காலை வணக்கம், அம்மா” (சிறுகதைத் தொகுப்புகள்).
“நகரத்தின் காலை நேரம்”, “நண்பகல்”, “தங்கம் தோண்டுகிறவர்கள்” (கதைகள்).
“என்ரானா” (நாவல்).
{{larger|<b>அபிக் அவாகியன்</b>}}<br>
(1919— )
அவாசியன் டெஹ்ரானில் பிறந்தார். 1946-ல் சோவியத்
ஆர்மேனியாவில் வசிக்க வந்து, எரெவான் யுனிவர்சிட்டியின்
மொழி இயல் பிரிவில் சேர்ந்தார்.
முக்கியப் படைப்புகள்:
“சுட்டெரிக்கும் நிலம்”, “நாஸெலி டார்யன்” (நாவல்கள்).
“நாளை” (கதை).
“ஷாஹ்ரே ஷாத், ஒரு உல்லாச நகரம்” (சிறுகதைத் தொகுதி).{{nop}}<noinclude></noinclude>
jjli24288sbaglxtraaoqfqdobzzv2t
1929182
1929050
2026-05-01T08:11:45Z
Booradleyp1
1964
1929182
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்||203}}</noinclude>
{{larger|<b>காஷாக் ஜியுல்நஸாரியன்</b>}}<br>
(1918— )
ஜியுல்தஸாரியன் ஏரெவானில் பிறந்தார். ஏரெவான்
யுனிவர்சிட்டி மொழி இயல் பகுதியில் தேர்ச்சி பெற்றதும் அவர் மாபெரும் தேசிய யுத்தத்தில் கலந்து போராடினார். யுத்தத்துக்குப் பிறகு அவர் இலக்கியக் கழகத்தில் பணிபுரிய வந்தார்.
அங்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோதே அவர் இலக்கிய முயற்சிகளிலும் ஈடுபட்டார்.
முக்கியப் படைப்புகள் :
“வயல்வெளிகளின் விருந்தாளிகளும் வீட்டுக்காரர்களும்”, “என்ன என்று யார் அறிவார்”, “காலை வணக்கம், அம்மா” (சிறுகதைத் தொகுப்புகள்).
“நகரத்தின் காலை நேரம்”, “நண்பகல்”, “தங்கம் தோண்டுகிறவர்கள்” (கதைகள்).
“என்ரானா” (நாவல்).
{{larger|<b>அபிக் அவாகியன்</b>}}<br>
(1919— )
அவாசியன் டெஹ்ரானில் பிறந்தார். 1946-ல் சோவியத்
ஆர்மேனியாவில் வசிக்க வந்து, எரெவான் யுனிவர்சிட்டியின்
மொழி இயல் பிரிவில் சேர்ந்தார்.
முக்கியப் படைப்புகள்:
“சுட்டெரிக்கும் நிலம்”, “நாஸெலி டார்யன்” (நாவல்கள்).
“நாளை” (கதை).
“ஷாஹ்ரே ஷாத், ஒரு உல்லாச நகரம்” (சிறுகதைத் தொகுதி).{{nop}}<noinclude></noinclude>
1p96ctlonrbi4flbwp1io7t8sjfgd2a
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/233
250
22822
1929052
744051
2026-04-30T15:02:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929052
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|204||ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்}}</noinclude>{{larger|<b>ராபேல் ஆராம்யன்</b>}}<br>
(1931—1978)
ஆராம்யன் எக்மியாத்ஸினில் பிறந்தார். ஏரெவான் அரசு
யுனிவர்சிட்டியில் மொழி இயல் பகுதியில் படித்தார்.
முக்கியப் படைப்புகள் :
“ரூபின்யன் சகோதரர்கள்” (நாவல்).
“சேணம் இல்லாத குதிரைகள்” “ஒரு இறந்த நகரத்தின்
சுவர்களின் கீழே” (சிறுகதைத் தொகுப்புகள்).
{{larger|<b>எம்கிர்திச் சார்கிஸ்யன்</b>}}<br>
(1924— )
சார்கிஸ்யன் (ஜியார்ஜியன் சோவியத் சோஷலிசக்
குடியரசைச் சேர்ந்த) அஹால்காலாகியில், ஒரு குமாஸ்தா
குடும்பத்தில் பிறந்தார். ஏரெவான் ஆசிரிய இயல் கழகத்தில்
மொழி இயல் பிரிவில் கற்றுத் தேர்ந்தார்.
அவர் மாணவனாக இருந்தபோதே எழுத ஆரம்பித்தார்.
அவரது முதலாவது புத்தகம் “பாடல்கள்” 1957-ல் பிரசுரமாயிற்று.
முக்கியப் படைப்புகள்:
“நெருப்பின்கீழ் வாழ்க்கை” (சிறுகதைத் தொகுப்பு).
“விதியால் தண்டிக்கப்பட்டவர்கள்”, “நீங்கள் பெரிதும்
மாறிவிட்டீர்கள், பெண்களே” (2 கதைகள்).
“புனித அன்னை திருஉருவத்தின் முன்னே” (நாவல்களின்
தொகுப்பு).
“போர்வீரர்களும் காதலர்களும்”, “சார்ஜன்ட், காரோ”
(போர்பற்றிய நூல்கள்).{{nop}}<noinclude></noinclude>
4v3p0jkmcojzgg20gaufislnwkbtrgi
1929054
1929052
2026-04-30T15:02:45Z
Booradleyp1
1964
1929054
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|204||ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்}}</noinclude>{{larger|<b>ராபேல் ஆராம்யன்</b>}}<br>
(1931—1978)
ஆராம்யன் எக்மியாத்ஸினில் பிறந்தார். ஏரெவான் அரசு
யுனிவர்சிட்டியில் மொழி இயல் பகுதியில் படித்தார்.
முக்கியப் படைப்புகள்:
“ரூபின்யன் சகோதரர்கள்” (நாவல்).
“சேணம் இல்லாத குதிரைகள்” “ஒரு இறந்த நகரத்தின்
சுவர்களின் கீழே” (சிறுகதைத் தொகுப்புகள்).
{{larger|<b>எம்கிர்திச் சார்கிஸ்யன்</b>}}<br>
(1924— )
சார்கிஸ்யன் (ஜியார்ஜியன் சோவியத் சோஷலிசக்
குடியரசைச் சேர்ந்த) அஹால்காலாகியில், ஒரு குமாஸ்தா
குடும்பத்தில் பிறந்தார். ஏரெவான் ஆசிரிய இயல் கழகத்தில்
மொழி இயல் பிரிவில் கற்றுத் தேர்ந்தார்.
அவர் மாணவனாக இருந்தபோதே எழுத ஆரம்பித்தார்.
அவரது முதலாவது புத்தகம் “பாடல்கள்” 1957-ல் பிரசுரமாயிற்று.
முக்கியப் படைப்புகள்:
“நெருப்பின்கீழ் வாழ்க்கை” (சிறுகதைத் தொகுப்பு).
“விதியால் தண்டிக்கப்பட்டவர்கள்”, “நீங்கள் பெரிதும்
மாறிவிட்டீர்கள், பெண்களே” (2 கதைகள்).
“புனித அன்னை திருஉருவத்தின் முன்னே” (நாவல்களின்
தொகுப்பு).
“போர்வீரர்களும் காதலர்களும்”, “சார்ஜன்ட், காரோ”
(போர்பற்றிய நூல்கள்).{{nop}}<noinclude></noinclude>
8kwk1rgww0pcwcmmc2uvgc72eyedu5z
1929099
1929054
2026-05-01T04:04:43Z
Booradleyp1
1964
- added added at the end
1929099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|204||ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்}}</noinclude>{{larger|<b>ராபேல் ஆராம்யன்</b>}}<br>
(1931—1978)
ஆராம்யன் எக்மியாத்ஸினில் பிறந்தார். ஏரெவான் அரசு
யுனிவர்சிட்டியில் மொழி இயல் பகுதியில் படித்தார்.
முக்கியப் படைப்புகள்:
“ரூபின்யன் சகோதரர்கள்” (நாவல்).
“சேணம் இல்லாத குதிரைகள்” “ஒரு இறந்த நகரத்தின்
சுவர்களின் கீழே” (சிறுகதைத் தொகுப்புகள்).
{{larger|<b>எம்கிர்திச் சார்கிஸ்யன்</b>}}<br>
(1924— )
சார்கிஸ்யன் (ஜியார்ஜியன் சோவியத் சோஷலிசக்
குடியரசைச் சேர்ந்த) அஹால்காலாகியில், ஒரு குமாஸ்தா
குடும்பத்தில் பிறந்தார். ஏரெவான் ஆசிரிய இயல் கழகத்தில்
மொழி இயல் பிரிவில் கற்றுத் தேர்ந்தார்.
அவர் மாணவனாக இருந்தபோதே எழுத ஆரம்பித்தார்.
அவரது முதலாவது புத்தகம் “பாடல்கள்” 1957-ல் பிரசுரமாயிற்று.
முக்கியப் படைப்புகள்:
“நெருப்பின்கீழ் வாழ்க்கை” (சிறுகதைத் தொகுப்பு).
“விதியால் தண்டிக்கப்பட்டவர்கள்”, “நீங்கள் பெரிதும்
மாறிவிட்டீர்கள், பெண்களே” (2 கதைகள்).
“புனித அன்னை திருஉருவத்தின் முன்னே” (நாவல்களின்
தொகுப்பு).
“போர்வீரர்களும் காதலர்களும்”, “சார்ஜன்ட், காரோ”
(போர்பற்றிய நூல்கள்).{{nop}}-<noinclude></noinclude>
boq6kvs3mgmtmlzp34j99g8szt56pb6
1929177
1929099
2026-05-01T08:06:48Z
Booradleyp1
1964
1929177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|204||ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்}}</noinclude>{{larger|<b>ராபேல் ஆராம்யன்</b>}}<br>
(1931—1978)
ஆராம்யன் எக்மியாத்ஸினில் பிறந்தார். ஏரெவான் அரசு
யுனிவர்சிட்டியில் மொழி இயல் பகுதியில் படித்தார்.
முக்கியப் படைப்புகள்:
“ரூபின்யன் சகோதரர்கள்” (நாவல்).
“சேணம் இல்லாத குதிரைகள்” “ஒரு இறந்த நகரத்தின்
சுவர்களின் கீழே” (சிறுகதைத் தொகுப்புகள்).
{{larger|<b>எம்கிர்திச் சார்கிஸ்யன்</b>}}<br>
(1924— )
சார்கிஸ்யன் (ஜியார்ஜியன் சோவியத் சோஷலிசக்
குடியரசைச் சேர்ந்த) அஹால்காலாகியில், ஒரு குமாஸ்தா
குடும்பத்தில் பிறந்தார். ஏரெவான் ஆசிரிய இயல் கழகத்தில்
மொழி இயல் பிரிவில் கற்றுத் தேர்ந்தார்.
அவர் மாணவனாக இருந்தபோதே எழுத ஆரம்பித்தார்.
அவரது முதலாவது புத்தகம் “பாடல்கள்” 1957-ல் பிரசுரமாயிற்று.
முக்கியப் படைப்புகள்:
“நெருப்பின்கீழ் வாழ்க்கை” (சிறுகதைத் தொகுப்பு).
“விதியால் தண்டிக்கப்பட்டவர்கள்”, “நீங்கள் பெரிதும்
மாறிவிட்டீர்கள், பெண்களே” (2 கதைகள்).
“புனித அன்னை திருஉருவத்தின் முன்னே” (நாவல்களின்
தொகுப்பு).
“போர்வீரர்களும் காதலர்களும்”, “சார்ஜன்ட், காரோ”
(போர்பற்றிய நூல்கள்).{{nop}}-<noinclude></noinclude>
qdv3gd7onhezpmtl0jjyqa0q0ssom9h
1929183
1929177
2026-05-01T08:12:15Z
Booradleyp1
1964
1929183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|204||ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்}}</noinclude>
{{larger|<b>ராபேல் ஆராம்யன்</b>}}<br>
(1931—1978)
ஆராம்யன் எக்மியாத்ஸினில் பிறந்தார். ஏரெவான் அரசு
யுனிவர்சிட்டியில் மொழி இயல் பகுதியில் படித்தார்.
முக்கியப் படைப்புகள்:
“ரூபின்யன் சகோதரர்கள்” (நாவல்).
“சேணம் இல்லாத குதிரைகள்” “ஒரு இறந்த நகரத்தின்
சுவர்களின் கீழே” (சிறுகதைத் தொகுப்புகள்).
{{larger|<b>எம்கிர்திச் சார்கிஸ்யன்</b>}}<br>
(1924— )
சார்கிஸ்யன் (ஜியார்ஜியன் சோவியத் சோஷலிசக்
குடியரசைச் சேர்ந்த) அஹால்காலாகியில், ஒரு குமாஸ்தா
குடும்பத்தில் பிறந்தார். ஏரெவான் ஆசிரிய இயல் கழகத்தில்
மொழி இயல் பிரிவில் கற்றுத் தேர்ந்தார்.
அவர் மாணவனாக இருந்தபோதே எழுத ஆரம்பித்தார்.
அவரது முதலாவது புத்தகம் “பாடல்கள்” 1957-ல் பிரசுரமாயிற்று.
முக்கியப் படைப்புகள்:
“நெருப்பின்கீழ் வாழ்க்கை” (சிறுகதைத் தொகுப்பு).
“விதியால் தண்டிக்கப்பட்டவர்கள்”, “நீங்கள் பெரிதும்
மாறிவிட்டீர்கள், பெண்களே” (2 கதைகள்).
“புனித அன்னை திருஉருவத்தின் முன்னே” (நாவல்களின்
தொகுப்பு).
“போர்வீரர்களும் காதலர்களும்”, “சார்ஜன்ட், காரோ”
(போர்பற்றிய நூல்கள்).{{nop}}-<noinclude></noinclude>
0qx2kinduk3v6k8ej7ig0dtxphjm7tf
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/234
250
22824
1929097
744052
2026-05-01T03:59:36Z
Booradleyp1
1964
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1929097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /></noinclude>ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள் 205
அகாசி ஜவாசியன் { 1925– }
ஐவாசியன் (ஜியார்ஜியன் சோவியத் குடியரசைச் சேர்ந்த) அபாஸ்துமன் நகரில் பிறந்தார். தியிலிளி கலைக்கழகத்திலும், தியிலிஸி யுனிவர்சிட்டியின் மொழி இயல் பகுதியிலும் கல்வி கற்ருர்.
முக்கியப் படைப்புகள் :
'மழை', 'குடும்பத்தின் தந்தை', 'பிரதான நிகழ்ச்சி’, "லெய்னியர் மார்டிரோசின் வீரச் செயல்கள்’ (சிறுகதைத் தொகுப்புகள்),
'ஆர்மென் பிலிம்’ ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட ""முக்கோணம்’, "ஹாடபல்லா', "தந்தை', 'பாக்தலார் கல்யாணம் செய்துகொள்ளப்போகிருன்’ ஆகிய திரைப்படங் களுக்கான கதை வசனமும் அவர் எழுதியிருக்கிருர்,
வார்த்ஜெஸ் பெத்ரோசியன் (1932– X
பெத்ரோசியன் ஆஷ்தாரக் நகரில் பிறந்தார். 1954-ல் ஏரெவான் அரசு யுனிவர்சிட்டியின் மொழி இயல் பகுதியில் பத்திரிகையாளர் பிரிவில் கற்றுத் தேர்ந்தார்.
முக்கியப் படைப்புகள் : 'ஒரு மனிதனைப்பற்றிய சிறு பாட்டு’’ (பாடல் தொகுப்பு). 'கடைசி இரவு', 'முடிவு பெருத சித்திரங்கள்', 'நகரின் பாதி திறந்த சன்னல்கள்', 'ஆர்மேனியன் சித்திரங்கள்’, ‘வாழ்ந்த வருஷங்களும் வாழாத வருஷங்களும்’, 'குழந்தைப் பருவத்தின் பாதையோர நிலையங்களிலிருந்து எழுதிய கடிதங்கள்', 'எவருக் கும் சொந்தமான மருந்துச்சாலை', 'அளவில்லாத அளவுகளின் சமநிலை’ (கதைகள், சிறுகதைகள் கொண்ட தொகுப்புகள்).
அவருடைய வெளியே புறப்படுதல்’ என்ற கதையைத் தழுவி கல் கிலோமீட்டர்கள்’’ எனும் திரைப்படம் மாஸ்கோ பிலிம் ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது, ஹிப்போகிரட்டின் இந்தக் கனமான தொப்பி’ என்ற அவரது நாடகம் ஏரெவான் அகாடமிக் தியேட்டரால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. -<noinclude></noinclude>
b4u46b0vsal928mssxg0bg29m3jszr4
1929098
1929097
2026-05-01T04:04:31Z
Booradleyp1
1964
top space added
1929098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /></noinclude>
ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள் 205
அகாசி ஜவாசியன் { 1925– }
ஐவாசியன் (ஜியார்ஜியன் சோவியத் குடியரசைச் சேர்ந்த) அபாஸ்துமன் நகரில் பிறந்தார். தியிலிளி கலைக்கழகத்திலும், தியிலிஸி யுனிவர்சிட்டியின் மொழி இயல் பகுதியிலும் கல்வி கற்ருர்.
முக்கியப் படைப்புகள் :
'மழை', 'குடும்பத்தின் தந்தை', 'பிரதான நிகழ்ச்சி’, "லெய்னியர் மார்டிரோசின் வீரச் செயல்கள்’ (சிறுகதைத் தொகுப்புகள்),
'ஆர்மென் பிலிம்’ ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட ""முக்கோணம்’, "ஹாடபல்லா', "தந்தை', 'பாக்தலார் கல்யாணம் செய்துகொள்ளப்போகிருன்’ ஆகிய திரைப்படங் களுக்கான கதை வசனமும் அவர் எழுதியிருக்கிருர்,
வார்த்ஜெஸ் பெத்ரோசியன் (1932– X
பெத்ரோசியன் ஆஷ்தாரக் நகரில் பிறந்தார். 1954-ல் ஏரெவான் அரசு யுனிவர்சிட்டியின் மொழி இயல் பகுதியில் பத்திரிகையாளர் பிரிவில் கற்றுத் தேர்ந்தார்.
முக்கியப் படைப்புகள் : 'ஒரு மனிதனைப்பற்றிய சிறு பாட்டு’’ (பாடல் தொகுப்பு). 'கடைசி இரவு', 'முடிவு பெருத சித்திரங்கள்', 'நகரின் பாதி திறந்த சன்னல்கள்', 'ஆர்மேனியன் சித்திரங்கள்’, ‘வாழ்ந்த வருஷங்களும் வாழாத வருஷங்களும்’, 'குழந்தைப் பருவத்தின் பாதையோர நிலையங்களிலிருந்து எழுதிய கடிதங்கள்', 'எவருக் கும் சொந்தமான மருந்துச்சாலை', 'அளவில்லாத அளவுகளின் சமநிலை’ (கதைகள், சிறுகதைகள் கொண்ட தொகுப்புகள்).
அவருடைய வெளியே புறப்படுதல்’ என்ற கதையைத் தழுவி கல் கிலோமீட்டர்கள்’’ எனும் திரைப்படம் மாஸ்கோ பிலிம் ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது, ஹிப்போகிரட்டின் இந்தக் கனமான தொப்பி’ என்ற அவரது நாடகம் ஏரெவான் அகாடமிக் தியேட்டரால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. -<noinclude></noinclude>
rngb3ln4ar94t1thdosao8mfdvnk1o5
1929100
1929098
2026-05-01T04:05:02Z
Booradleyp1
1964
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1929100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /></noinclude>ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள் 205
அகாசி ஜவாசியன் { 1925– }
ஐவாசியன் (ஜியார்ஜியன் சோவியத் குடியரசைச் சேர்ந்த) அபாஸ்துமன் நகரில் பிறந்தார். தியிலிளி கலைக்கழகத்திலும், தியிலிஸி யுனிவர்சிட்டியின் மொழி இயல் பகுதியிலும் கல்வி கற்ருர்.
முக்கியப் படைப்புகள் :
'மழை', 'குடும்பத்தின் தந்தை', 'பிரதான நிகழ்ச்சி’, "லெய்னியர் மார்டிரோசின் வீரச் செயல்கள்’ (சிறுகதைத் தொகுப்புகள்),
'ஆர்மென் பிலிம்’ ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட ""முக்கோணம்’, "ஹாடபல்லா', "தந்தை', 'பாக்தலார் கல்யாணம் செய்துகொள்ளப்போகிருன்’ ஆகிய திரைப்படங் களுக்கான கதை வசனமும் அவர் எழுதியிருக்கிருர்,
வார்த்ஜெஸ் பெத்ரோசியன் (1932– X
பெத்ரோசியன் ஆஷ்தாரக் நகரில் பிறந்தார். 1954-ல் ஏரெவான் அரசு யுனிவர்சிட்டியின் மொழி இயல் பகுதியில் பத்திரிகையாளர் பிரிவில் கற்றுத் தேர்ந்தார்.
முக்கியப் படைப்புகள் : 'ஒரு மனிதனைப்பற்றிய சிறு பாட்டு’’ (பாடல் தொகுப்பு). 'கடைசி இரவு', 'முடிவு பெருத சித்திரங்கள்', 'நகரின் பாதி திறந்த சன்னல்கள்', 'ஆர்மேனியன் சித்திரங்கள்’, ‘வாழ்ந்த வருஷங்களும் வாழாத வருஷங்களும்’, 'குழந்தைப் பருவத்தின் பாதையோர நிலையங்களிலிருந்து எழுதிய கடிதங்கள்', 'எவருக் கும் சொந்தமான மருந்துச்சாலை', 'அளவில்லாத அளவுகளின் சமநிலை’ (கதைகள், சிறுகதைகள் கொண்ட தொகுப்புகள்).
அவருடைய வெளியே புறப்படுதல்’ என்ற கதையைத் தழுவி கல் கிலோமீட்டர்கள்’’ எனும் திரைப்படம் மாஸ்கோ பிலிம் ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது, ஹிப்போகிரட்டின் இந்தக் கனமான தொப்பி’ என்ற அவரது நாடகம் ஏரெவான் அகாடமிக் தியேட்டரால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. -<noinclude></noinclude>
b4u46b0vsal928mssxg0bg29m3jszr4
1929105
1929100
2026-05-01T04:41:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள்||205}}</noinclude>{{larger|<b>அகாசி ஐவாசியன்</b>}}<br>
(1985— )
ஐவாசியன் (ஜியார்ஜியன் சோவியத் குடியரசைச் சேர்ந்த)
அபாஸ்துமன் நகரில் பிறந்தார். திபிலிஸி கலைக்கழகத்திலும்,
திபிலிஸி யுனிவர்சிட்டியின் மொழி இயல் பகுதியிலும் கல்வி
கற்றார்.
முக்கியப் படைப்புகள் :
“மழை”, “குடும்பத்தின் தந்தை”, “பிரதான நிகழ்ச்சி”,
“ஸெய்னியர் மார்டிரோசின் வீரச் செயல்கள்” (சிறுகதைத்
தொகுப்புகள்).
“ஆர்மென் பிலிம்” ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட
“முக்கோணம்”, “ஹாடபல்லா”, “தந்தை”, “பாக்தஸார்
கல்யாணம் செய்துகொள்ளப்போகிறான்” ஆகிய திரைப்படங்களுக்கான
கதை வசனமும் அவர் எழுதியிருக்கிறார்.
{{larger|<b>“வார்த்ஜெஸ் பெத்ரோசியன்”</b>}}<br>
(1932— )
பெத்ரோசியன் ஆஷ்தாரக் நகரில் பிறந்தார். 1954-ல்
ஏரெவான் அரசு யுனிவர்சிட்டியின் மொழி இயல் பகுதியில்
பத்திரிகையாளர் பிரிவில் கற்றுத் தேர்ந்தார்.
முக்கியப் படைப்புகள் :
“ஒரு மனிதனைப்பற்றிய சிறு பாட்டு” (பாடல் தொகுப்பு).
“கடைசி இரவு”, “முடிவு பெறாத சித்திரங்கள்”, “நகரின் பாதி
திறந்த சன்னல்கள்” “ஆர்மேனியன் சித்திரங்கள்”, “வாழ்ந்த
வருஷங்களும் வாழாத வருஷங்களும்”, “குழந்தைப் பருவத்தின்
பாதையோர நிலையங்களிலிருந்து எழுதிய கடிதங்கள்”, “எவருக்கும்
சொந்தமான மருந்துச்சாலை”, “அளவில்லாத அளவுகளின்
சமநிலை” (கதைகள், சிறுகதைகள் கொண்ட தொகுப்புகள்).
அவருடைய “வெளியே புறப்படுதல்” என்ற கதையைத் தழுவி “கல் கீலோமீட்டர்கள்” எனும் திரைப்படம் “மாஸ்கோ பிலிம்” ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது, “ஹிப்போகிரட்டின்
இந்தக் கனமான தொப்பி” என்ற அவரது நாடகம் ஏரெவான் அகாடமிக் தியேட்டரால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
bmta5dc41wlbp6yrme2cq05fpgga4d5
1929184
1929105
2026-05-01T08:13:00Z
Booradleyp1
1964
1929184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள்||205}}</noinclude>
{{larger|<b>அகாசி ஐவாசியன்</b>}}<br>
(1985— )
ஐவாசியன் (ஜியார்ஜியன் சோவியத் குடியரசைச் சேர்ந்த)
அபாஸ்துமன் நகரில் பிறந்தார். திபிலிஸி கலைக்கழகத்திலும்,
திபிலிஸி யுனிவர்சிட்டியின் மொழி இயல் பகுதியிலும் கல்வி
கற்றார்.
முக்கியப் படைப்புகள் :
“மழை”, “குடும்பத்தின் தந்தை”, “பிரதான நிகழ்ச்சி”,
“ஸெய்னியர் மார்டிரோசின் வீரச் செயல்கள்” (சிறுகதைத்
தொகுப்புகள்).
“ஆர்மென் பிலிம்” ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட
“முக்கோணம்”, “ஹாடபல்லா”, “தந்தை”, “பாக்தஸார்
கல்யாணம் செய்துகொள்ளப்போகிறான்” ஆகிய திரைப்படங்களுக்கான
கதை வசனமும் அவர் எழுதியிருக்கிறார்.
{{larger|<b>“வார்த்ஜெஸ் பெத்ரோசியன்”</b>}}<br>
(1932— )
பெத்ரோசியன் ஆஷ்தாரக் நகரில் பிறந்தார். 1954-ல்
ஏரெவான் அரசு யுனிவர்சிட்டியின் மொழி இயல் பகுதியில்
பத்திரிகையாளர் பிரிவில் கற்றுத் தேர்ந்தார்.
முக்கியப் படைப்புகள் :
“ஒரு மனிதனைப்பற்றிய சிறு பாட்டு” (பாடல் தொகுப்பு).
“கடைசி இரவு”, “முடிவு பெறாத சித்திரங்கள்”, “நகரின் பாதி
திறந்த சன்னல்கள்” “ஆர்மேனியன் சித்திரங்கள்”, “வாழ்ந்த
வருஷங்களும் வாழாத வருஷங்களும்”, “குழந்தைப் பருவத்தின்
பாதையோர நிலையங்களிலிருந்து எழுதிய கடிதங்கள்”, “எவருக்கும்
சொந்தமான மருந்துச்சாலை”, “அளவில்லாத அளவுகளின்
சமநிலை” (கதைகள், சிறுகதைகள் கொண்ட தொகுப்புகள்).
அவருடைய “வெளியே புறப்படுதல்” என்ற கதையைத் தழுவி “கல் கீலோமீட்டர்கள்” எனும் திரைப்படம் “மாஸ்கோ பிலிம்” ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது, “ஹிப்போகிரட்டின்
இந்தக் கனமான தொப்பி” என்ற அவரது நாடகம் ஏரெவான் அகாடமிக் தியேட்டரால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
pttp8kgi3ra7z0dck3fc4sq7gcmpsgk
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/235
250
22826
1929108
744053
2026-05-01T04:51:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்||206}}</noinclude>{{larger|<b>மூஷேக் கால்ஷோயன்</b>}}<br>
(1933— )
கால்ஷோயன் காட்ரானூர் எனும் ஆர்மேனிய கிராமத்தில்
பிறந்தார். ஏரெவான் விவசாயக் கழகத்திலும், பிறகு மாஸ்கோவில்
உயர்தர இலக்கிய வகுப்புகளிலும் கற்றுத் தேர்ந்தார்.
முக்கியப் படைப்புகள்:
“த்ஸோரி மீரோ” (கதை); “கற்கள் புஷ்பிக்கின்றன” (கட்டுரைகள்) மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு; “தி க்ரூஸிபிள்” (உலோகங்களை உருக்குவதற்கான மண் பாத்திரம்) நாவல்.
{{larger|<b>ஹ்ரான்ட் மாடவோசியன்</b>}}<br>
(1933— )
மாடவோசியன் ஆர்மேனியாவில் அஹ்னித்ஸார் கிராமத்தில்
பிறந்தார்.
அவர் 1962-ல், எச். அபய்யன் பெயரால் நிறுவப்பட்டுள்ள
ஏரெவான் ஆசிரிய இயல் கழகத்தில் வரலாறும் மொழி இயலும் கற்றுத் தேர்ந்தார்.
1967-ல் மாஸ்கோவில் திரைக்கதை வசனம் எழுதும் உயர்தரப் பயிற்சியை முடித்தார்.
முக்கியப் படைப்புகள்:
“நாமும் நமது மலைகளும்” என்ற கதை.
“ஆகஸ்ட்”, “மரங்கள்”, “ஓட்டம்” ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகள்.
“ஆர்மென் பிலிம்” ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட
“நாமும் நமது மலைகளும்”, “இலையுதிர்காலக் கதிரவன்” என்ற
திரைப்படங்களுக்கு ஹ்ரான்ட் மாடவோசியன் கதை வசனம்
எழுதியிருக்கிறார்.<noinclude></noinclude>
mccre2wm0awakgyecpecpa8dxmsfj6p
1929175
1929108
2026-05-01T08:04:43Z
Booradleyp1
1964
1929175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்||206}}</noinclude>{{larger|<b>மூஷேக் கால்ஷோயன்</b>}}<br>
(1933— )
கால்ஷோயன் காட்ரானூர் எனும் ஆர்மேனிய கிராமத்தில்
பிறந்தார். ஏரெவான் விவசாயக் கழகத்திலும், பிறகு மாஸ்கோவில்
உயர்தர இலக்கிய வகுப்புகளிலும் கற்றுத் தேர்ந்தார்.
முக்கியப் படைப்புகள்:
“த்ஸோரி மீரோ” (கதை); “கற்கள் புஷ்பிக்கின்றன” (கட்டுரைகள்) மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு; “தி க்ரூஸிபிள்” (உலோகங்களை உருக்குவதற்கான மண் பாத்திரம்) நாவல்.
{{larger|<b>ஹ்ரான்ட் மாடவோசியன்</b>}}<br>
(1933— )
மாடவோசியன் ஆர்மேனியாவில் அஹ்னித்ஸார் கிராமத்தில்
பிறந்தார்.
அவர் 1962-ல், எச். அபய்யன் பெயரால் நிறுவப்பட்டுள்ள
ஏரெவான் ஆசிரிய இயல் கழகத்தில் வரலாறும் மொழி இயலும் கற்றுத் தேர்ந்தார்.
1967-ல் மாஸ்கோவில் திரைக்கதை வசனம் எழுதும் உயர்தரப் பயிற்சியை முடித்தார்.
முக்கியப் படைப்புகள்:
“நாமும் நமது மலைகளும்” என்ற கதை.
“ஆகஸ்ட்”, “மரங்கள்”, “ஓட்டம்” ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகள்.
“ஆர்மென் பிலிம்” ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட
“நாமும் நமது மலைகளும்”, “இலையுதிர்காலக் கதிரவன்” என்ற
திரைப்படங்களுக்கு ஹ்ரான்ட் மாடவோசியன் கதை வசனம்
எழுதியிருக்கிறார்.
{{nop}}<noinclude></noinclude>
dj5kr7jz9rmpbs9ek5tsfh1dshw69lu
1929185
1929175
2026-05-01T08:13:31Z
Booradleyp1
1964
1929185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள்||206}}</noinclude>
{{larger|<b>மூஷேக் கால்ஷோயன்</b>}}<br>
(1933— )
கால்ஷோயன் காட்ரானூர் எனும் ஆர்மேனிய கிராமத்தில்
பிறந்தார். ஏரெவான் விவசாயக் கழகத்திலும், பிறகு மாஸ்கோவில்
உயர்தர இலக்கிய வகுப்புகளிலும் கற்றுத் தேர்ந்தார்.
முக்கியப் படைப்புகள்:
“த்ஸோரி மீரோ” (கதை); “கற்கள் புஷ்பிக்கின்றன” (கட்டுரைகள்) மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு; “தி க்ரூஸிபிள்” (உலோகங்களை உருக்குவதற்கான மண் பாத்திரம்) நாவல்.
{{larger|<b>ஹ்ரான்ட் மாடவோசியன்</b>}}<br>
(1933— )
மாடவோசியன் ஆர்மேனியாவில் அஹ்னித்ஸார் கிராமத்தில்
பிறந்தார்.
அவர் 1962-ல், எச். அபய்யன் பெயரால் நிறுவப்பட்டுள்ள
ஏரெவான் ஆசிரிய இயல் கழகத்தில் வரலாறும் மொழி இயலும் கற்றுத் தேர்ந்தார்.
1967-ல் மாஸ்கோவில் திரைக்கதை வசனம் எழுதும் உயர்தரப் பயிற்சியை முடித்தார்.
முக்கியப் படைப்புகள்:
“நாமும் நமது மலைகளும்” என்ற கதை.
“ஆகஸ்ட்”, “மரங்கள்”, “ஓட்டம்” ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகள்.
“ஆர்மென் பிலிம்” ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட
“நாமும் நமது மலைகளும்”, “இலையுதிர்காலக் கதிரவன்” என்ற
திரைப்படங்களுக்கு ஹ்ரான்ட் மாடவோசியன் கதை வசனம்
எழுதியிருக்கிறார்.
{{nop}}<noinclude></noinclude>
kxiju8xwu1m7zap8vjmfbv0xdmw43bj
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/236
250
22828
1929109
744054
2026-05-01T05:02:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள்||207}}</noinclude>{{larger|<b>காரென் சிமோனியன்</b>}}—
(1936— )
சிமோனியன் ஏரெவானில் பிறந்தார். 1958-ல் பாலிடெக்னிக்
இன்ஸ்டிடியூட்டில் இயந்திர நிர்மாணப் பகுதியில்
கற்றுத் தேர்ந்தார். ஆனால் பின்னர் அவர் இலக்கியத்தில்
ஈடுபட்டார்.
அவரது முக்கியப் படைப்புகள்:
“மனவிருப்பம்”, “போய் வா, நத்தானியேல்”, “மருந்து
விற்பன்னர் நெர்சன் பாட்சன்”.
“உங்கள் கனவு நனவாகட்டும்” என்ற அவரது நாடகம்
ஏரெவான் தியேட்டரில் இளைஞர்களுக்காக அரங்கேற்றப்பட்டது.
“ஆர்மென் பிலிம்” ஸ்டுடியோவில் தயாரான சில திரைப்படங்களுக்கும்
அவர் கதை வசனம் எழுதியிருக்கிறார்.
{{larger|<b>பெர்ச் செய்துன்சியன்</b>}}<br>
(1938— )
செய்துன்சியன் எகிப்தில், அலெக்ஸாண்டிரியா நகரில்
பிறந்தார். 1948-ல் அவர் குடும்பம் சோவியத் ஆர்மேனியாவுக்குக்
குடியேறியது.
1963-ல் பெர்ச் செய்துன்சியன் பியாதி-கேர்ஸ்க் நகரில்
அயல்மொழிக் கழகத்தில் கற்றுத்தேர்ந்தார். பிறகு மாஸ்கோவில்
திரைக்கதை வசனம் எழுதும் உயர் பயிற்சி பெற்றார்.
முக்கியப் படைப்புகள்:
“அவன் நண்பன்”, “எங்கள் அண்டைவீட்டாரின் குரல்கள்”,
“பாரிசுக்காக” (சிறுகதைத் தொகுப்புகள்). “எங்களுக்கு
பிறகு” (ஒரு கதை). “க்ளாட் ராபர்ட் ஐசர்லி” (நாவல்).
செய்துன்சியன் எழுதிய “அழிக்கப்பட்ட நகரத்தின் கதை”,
“மிகவும் துக்ககரமான மனிதன்” என்ற நாடகங்கள் ஏரெவான்
நாடக அரங்குகளில் நடிக்கப்படுகின்றன.
“ஆர்மென் பிலிம்” ஸ்டுடியோவில் தயாரான சில திரைப்படங்களுக்கு
அவர் கதை வசனம் எழுதியிருக்கிறார்.
<b>{{rule|5em|align=}}</b><noinclude></noinclude>
aomobafsmlc2wqby6f57u4w5ajiv2ts
1929174
1929109
2026-05-01T08:03:44Z
Booradleyp1
1964
1929174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள்||207}}</noinclude>{{larger|<b>காரென் சிமோனியன்</b>}}<br>
(1936— )
சிமோனியன் ஏரெவானில் பிறந்தார். 1958-ல் பாலிடெக்னிக்
இன்ஸ்டிடியூட்டில் இயந்திர நிர்மாணப் பகுதியில்
கற்றுத் தேர்ந்தார். ஆனால் பின்னர் அவர் இலக்கியத்தில்
ஈடுபட்டார்.
அவரது முக்கியப் படைப்புகள்:
“மனவிருப்பம்”, “போய் வா, நத்தானியேல்”, “மருந்து
விற்பன்னர் நெர்சன் பாட்சன்”.
“உங்கள் கனவு நனவாகட்டும்” என்ற அவரது நாடகம்
ஏரெவான் தியேட்டரில் இளைஞர்களுக்காக அரங்கேற்றப்பட்டது.
“ஆர்மென் பிலிம்” ஸ்டுடியோவில் தயாரான சில திரைப்படங்களுக்கும்
அவர் கதை வசனம் எழுதியிருக்கிறார்.
{{larger|<b>பெர்ச் செய்துன்சியன்</b>}}<br>
(1938— )
செய்துன்சியன் எகிப்தில், அலெக்ஸாண்டிரியா நகரில்
பிறந்தார். 1948-ல் அவர் குடும்பம் சோவியத் ஆர்மேனியாவுக்குக்
குடியேறியது.
1963-ல் பெர்ச் செய்துன்சியன் பியாதி-கேர்ஸ்க் நகரில்
அயல்மொழிக் கழகத்தில் கற்றுத்தேர்ந்தார். பிறகு மாஸ்கோவில்
திரைக்கதை வசனம் எழுதும் உயர் பயிற்சி பெற்றார்.
முக்கியப் படைப்புகள்:
“அவன் நண்பன்”, “எங்கள் அண்டைவீட்டாரின் குரல்கள்”,
“பாரிசுக்காக” (சிறுகதைத் தொகுப்புகள்). “எங்களுக்கு
பிறகு” (ஒரு கதை). “க்ளாட் ராபர்ட் ஐசர்லி” (நாவல்).
செய்துன்சியன் எழுதிய “அழிக்கப்பட்ட நகரத்தின் கதை”,
“மிகவும் துக்ககரமான மனிதன்” என்ற நாடகங்கள் ஏரெவான்
நாடக அரங்குகளில் நடிக்கப்படுகின்றன.
“ஆர்மென் பிலிம்” ஸ்டுடியோவில் தயாரான சில திரைப்படங்களுக்கு
அவர் கதை வசனம் எழுதியிருக்கிறார்.
<b>{{rule|5em|align=}}</b><noinclude></noinclude>
0cvehnpqe6jws7b2mnygc5qhb9qamdy
1929186
1929174
2026-05-01T08:14:44Z
Booradleyp1
1964
1929186
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள்||207}}</noinclude>
{{larger|<b>காரென் சிமோனியன்</b>}}<br>
(1936— )
சிமோனியன் ஏரெவானில் பிறந்தார். 1958-ல் பாலிடெக்னிக்
இன்ஸ்டிடியூட்டில் இயந்திர நிர்மாணப் பகுதியில்
கற்றுத் தேர்ந்தார். ஆனால் பின்னர் அவர் இலக்கியத்தில்
ஈடுபட்டார்.
அவரது முக்கியப் படைப்புகள்:
“மனவிருப்பம்”, “போய் வா, நத்தானியேல்”, “மருந்து
விற்பன்னர் நெர்சன் பாட்சன்”.
“உங்கள் கனவு நனவாகட்டும்” என்ற அவரது நாடகம்
ஏரெவான் தியேட்டரில் இளைஞர்களுக்காக அரங்கேற்றப்பட்டது.
“ஆர்மென் பிலிம்” ஸ்டுடியோவில் தயாரான சில திரைப்படங்களுக்கும்
அவர் கதை வசனம் எழுதியிருக்கிறார்.
{{larger|<b>பெர்ச் செய்துன்சியன்</b>}}<br>
(1938— )
செய்துன்சியன் எகிப்தில், அலெக்ஸாண்டிரியா நகரில்
பிறந்தார். 1948-ல் அவர் குடும்பம் சோவியத் ஆர்மேனியாவுக்குக்
குடியேறியது.
1963-ல் பெர்ச் செய்துன்சியன் பியாதி-கேர்ஸ்க் நகரில்
அயல்மொழிக் கழகத்தில் கற்றுத்தேர்ந்தார். பிறகு மாஸ்கோவில்
திரைக்கதை வசனம் எழுதும் உயர் பயிற்சி பெற்றார்.
முக்கியப் படைப்புகள்:
“அவன் நண்பன்”, “எங்கள் அண்டைவீட்டாரின் குரல்கள்”,
“பாரிசுக்காக” (சிறுகதைத் தொகுப்புகள்). “எங்களுக்கு
பிறகு” (ஒரு கதை). “க்ளாட் ராபர்ட் ஐசர்லி” (நாவல்).
செய்துன்சியன் எழுதிய “அழிக்கப்பட்ட நகரத்தின் கதை”,
“மிகவும் துக்ககரமான மனிதன்” என்ற நாடகங்கள் ஏரெவான்
நாடக அரங்குகளில் நடிக்கப்படுகின்றன.
“ஆர்மென் பிலிம்” ஸ்டுடியோவில் தயாரான சில திரைப்படங்களுக்கு
அவர் கதை வசனம் எழுதியிருக்கிறார்.
<b>{{rule|5em|align=}}</b><noinclude></noinclude>
tqc8koxjcdl5fkqee9p1rmxu24kqui6
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/237
250
22829
1929110
1387317
2026-05-01T05:03:01Z
Booradleyp1
1964
1929110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Smiling Saranya" /></noinclude>
இந்திய மக்களுக்கும் ஆர்மேனிய மக்களுக்குமிடையே உள்ள நட்பு, பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. சமீபத்திய ஆர்மேனிய உரைநடை இலக்கியமானது, மனிதம் முழுவதையும் தழுவுகிற வளமான சித்திரமாக விளங்குகிறது. இந்திய வாசகர்களுக்கான இக் கதைத் தொகுப்பு, மேற்கூறப்பட்ட சித்திரத்தின் ஆதாரசக்திகள், போக்குகள், சார்புகள் பற்றிய ஒரு நல்ல அறிமுகமாக விளங்குகிறது. இந்த முதல் தொடர்பு, இனி ஏற்படக் கூடிய நெருக்கமான உறவுகளுக்கும், பரஸ்பர அறிந்து கொள்ளுதல்களுக்கும் ஒரு பாலமாக அமையக்கூடும்.{{nop}}
{{dhr|10em}}
{{Css image crop
|Image = ஆர்மேனியன்_சிறுகதைகள்_(மொழிபெயர்ப்பு).pdf
|Page = 237
|bSize = 401
|cWidth = 246
|cHeight = 105
|oTop = 443
|oLeft = 42
|Location = left
|Description =
}}<noinclude></noinclude>
796yn604wsz34ta40d0ao7pc4lrhxq6
1929176
1929110
2026-05-01T08:05:34Z
Booradleyp1
1964
1929176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Smiling Saranya" /></noinclude>{{dhr|3em}}
இந்திய மக்களுக்கும் ஆர்மேனிய மக்களுக்குமிடையே உள்ள நட்பு, பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. சமீபத்திய ஆர்மேனிய உரைநடை இலக்கியமானது, மனிதம் முழுவதையும் தழுவுகிற வளமான சித்திரமாக விளங்குகிறது. இந்திய வாசகர்களுக்கான இக் கதைத் தொகுப்பு, மேற்கூறப்பட்ட சித்திரத்தின் ஆதாரசக்திகள், போக்குகள், சார்புகள் பற்றிய ஒரு நல்ல அறிமுகமாக விளங்குகிறது. இந்த முதல் தொடர்பு, இனி ஏற்படக் கூடிய நெருக்கமான உறவுகளுக்கும், பரஸ்பர அறிந்து கொள்ளுதல்களுக்கும் ஒரு பாலமாக அமையக்கூடும்.{{nop}}
{{dhr|10em}}
{{Css image crop
|Image = ஆர்மேனியன்_சிறுகதைகள்_(மொழிபெயர்ப்பு).pdf
|Page = 237
|bSize = 401
|cWidth = 246
|cHeight = 105
|oTop = 443
|oLeft = 42
|Location = left
|Description =
}}<noinclude></noinclude>
8xijmpf1vefjjr2tj98eremujlsesbe
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/877
250
316598
1929103
1924347
2026-05-01T04:13:08Z
Karthiban Harikrishnan
6475
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Karthiban Harikrishnan" />{{Rh||391|}}</noinclude>391
அரசாங்கத்தார் கருதும் குழுக்களில் ஹரிஜன நலக் குழு ஒன்ருகும்.
13. மாவட்ட அபிவிருத்தி மன்றமும் அதன் நிலேக் குழுக்களும், செயல்படுவதற்கு வேண்டிய செயல் முறை உதவிகள் அத்தனேயும் கலெக்டர்கள் அலுவலகங்களில் செய்து கொடுக்கப்படும். இந்தக் காரியத்துக்கு வேண்டிய சிப்பந்திகள் கலெக்டர் அலுவலகத்தில், பஞ்சாயத்து அபி விருத்திக்கு என்று ஒதுக்கிய பிரிவுகளில் பணிபுரியலாம். கலெக்டர் அலுவலகத்தில், பஞ்சாயத்து அபிவிருத்திப் பணி புரிவதற்கு ஏற்ப அலுவலகச் சீரமைப்புப் பிரச்னை அரசாங்கத்தார் கவனத்தில் இருந்து வருகிறது. அதற்குத் தேவையான உத்தரவுகள் தனியே பிறப்பிக்கப்படும்.
| G. O. No. 1694 R. D. and L. A. 16–6–1961 ;
8. வேலைத்திட்டமும் நிறைவேற்றும் (լք ճոքակւն
1. 1958-ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டம், சென்னை 1958-ம் ஆண்டு பஞ்சாயத்துச் சட்டம் ஆகியவற்றின் நிறைவேற்புத் திட்டம் குறித்து அரசாங்கத் தார் தீர்மானித்து விட்டனர்.
2. 1958-ம் ஆண்டு பஞ்சாயத்துச் சட்ட நிறைவேற் புக்கு முந்தி எடுக்க வேண்டிய முன்ைேடித் திட்டப் பணி களில் முதன்மையானதாக, 1958-ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவர வேண்டும். எனவே, அரசாங்கத்தார் 1958-ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டத்தை 1959-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதற்கொண்டு அமுலுக்குக் கொண்டுவருவது என முடிவு செய்தனர்.
3. கிராம அபிவிருத்தி நடவடிக்கை விஸ்தரிப்பு சேவை, கிராம அபிவிருத்தி காரியமாக ரெவின்யூ மாவட்டத்தை விட அளவில் சிறிய பகுதிகளே உடனடியாக அபிவிருத்தி செய்ய வேண்டிய கட்டத்தை அடைந்துவிட்டது. இந்த அபிவிருத்தியில் பங்கு பெற, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முனிசிபல் நகரம், தேசீய வளர்ச்சிப் பணித் திட்டம் கொண்டுவரப்படாத வட்டாரங்கள் உட்பட ஒவ்வொரு வட்டாரம் ஆகியவற்றுக்கு இந்தச் சட்டம் வகை செய்கிறது.<noinclude></noinclude>
6e8atd4zqtpoiy3a3ik6p73mnjdzzsc
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/878
250
316599
1929102
1924348
2026-05-01T04:12:06Z
Karthiban Harikrishnan
6475
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1929102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Karthiban Harikrishnan" />{{Rh||392|}}</noinclude>392
மேலும் இந்த மன்றத்தில், மத்திய சட்ட சபை அங்கத்தினர் களும் திட்ட, அபிவிருத்தி துறையைச் சார்ந்த கெஜட் பதிவு பெற்ற அதிகாரிகள் அனைவரும் அங்கம் வகிப்பார்கள். இந்த முறையில் ரெவின்யூ மாவட்டத்துக்கு என்று அமைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி மன்றம் திறம்படச் செயலாற்ற முடியாத ஒன்ருகிவிடும். எனவே, இந்தச் சட்டத்தின் காரியமாக ரெவின்யூ மாவட்டத்துள்ளேயே ஒன்ருக இணைந்த உள் வட்டாரத்தை (Local area) அபி விருத்தி மாவட்டமாக அமைக்க வேண்டியது அவசிய ம்ாகும். சென்னை மாநகரத்தை இந்தச் சட்டம் பாதிக்க வில்லை. இந்தச் சட்டத்தின்படி செங்கற்பட்டு, கன்னியா குமரி, நீலகிரி ஆகிய மூன்று ரெவின்யு மாவட்டங்களும் அபிவிருத்தி மா வ ட் ட ங் க ள் என அறிவிக்கப்பட்டன. இரண்டு ஆக பதினெட்டு அபிவிருத்தி மாவட்டங்களாக வரையறுத்து வகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய முறையில் வகுத்துள்ள இருபத்தொரு அபிவிருத்தி மாவட்டங்கள் பின் வருமாறு :
1. செங்கற்பட்டு. 2. கன்னியாகுமரி. 3. நீலகிரி. 4. வடக்கு வேலூர். 5. தெற்கு வேலூர், 6. வடக்கு கடலூர். 7. தெற்கு கடலூர். 8. கிழக்கு கோயம்புத்துTர். 9. மேற்கு கோயம்புத்துார். 10. வட மதுரை. 11. தென் மதுரை. 12. கிழக்கு ராமநாதபுரம். 18. மேற்கு ராமநாத புரம். 14. வடக்கு சேலம். 15. தெற்கு சேலம். 16. தருமபுரி. 17. கிழக்கு தஞ்சாவூர். 18. மேற்கு தஞ்சாவூர். 19. வடக்கு திருச்சிராப்பள்ளி. 20. தெற்கு திருச்சிராப்பள்ளி. 21. வடக்கு திருநெல்வேலி. 23. தெற்கு திருநெல்வேலி.
ரெவின்யு மாவட்டத்தை, அபிவிருத்தி மாவட்டங் களாக வகுத்துள்ள பிரிவினே, மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டப் பணிக ளேப் பொறுத்த மட்டில் செயல்படும். தற்போது இருந்து வருவது போல, நிலத் தீர்வை, பொது நிர்வாகக் காரியங்கள் சம்பந்தமாய் ரெவின்யு மாவட்டம்ே, பிரதேச அடிப்படை அளவாகத் தொடர்ந்து செயல்பட்டு வரும.<noinclude></noinclude>
s1w1fuwj9kwqre2uc3vzti4pzsroczk
பயனர்:Info-farmer/common.js
2
405613
1929057
1928389
2026-04-30T15:05:59Z
Info-farmer
232
//
1929057
javascript
text/javascript
/* சோதனை */
//alert("வெற்றி! உங்கள் Common.js கோப்பு சரியாக இயங்குகிறது.");
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript' );
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/float360button.js&action=raw&ctype=text/javascript' );
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/fastPasteSaveRefresh.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/wikiCodeViewer.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/transclsionSubpageCreator.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionEditTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionPasteTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidData2anotherIndex.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/subpageCopier.js&action=raw&ctype=text/javascript'); (offline xml filter tool)
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/FloatingProofreader.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Neechalkaran/Floatingbutton.js');
importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css');
importScript('User:Boopalan28012003/textareaEditor.js');
importScript('User:Boopalan28012003/effort.js');
importScript('User:Boopalan28012003/dash.js');
n7s45jzdh2hma1qijaqbdpiti2jolaz
1929058
1929057
2026-04-30T15:08:28Z
Info-farmer
232
//
1929058
javascript
text/javascript
/* சோதனை */
//alert("வெற்றி! உங்கள் Common.js கோப்பு சரியாக இயங்குகிறது.");
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript' );
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/float360button.js&action=raw&ctype=text/javascript' );
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/fastPasteSaveRefresh.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/wikiCodeViewer.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/transclsionSubpageCreator.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionEditTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionPasteTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidData2anotherIndex.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/subpageCopier.js&action=raw&ctype=text/javascript'); (offline xml filter tool)
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/FloatingProofreader.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Neechalkaran/Floatingbutton.js');
//importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css');
//importScript('User:Boopalan28012003/textareaEditor.js');
importScript('User:Boopalan28012003/effort.js');
importScript('User:Boopalan28012003/dash.js');
amhopu1rltqrja90f5u7fff816bm3ng
1929061
1929058
2026-04-30T15:28:59Z
Info-farmer
232
removeApexEmptyLines
1929061
javascript
text/javascript
/* சோதனை */
//alert("வெற்றி! உங்கள் Common.js கோப்பு சரியாக இயங்குகிறது.");
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript' );
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/float360button.js&action=raw&ctype=text/javascript' );
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/fastPasteSaveRefresh.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/wikiCodeViewer.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/transclsionSubpageCreator.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionEditTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionPasteTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidData2anotherIndex.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/subpageCopier.js&action=raw&ctype=text/javascript'); (offline xml filter tool)
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/FloatingProofreader.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Neechalkaran/Floatingbutton.js');
//importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css');
//importScript('User:Boopalan28012003/textareaEditor.js');
importScript('User:Boopalan28012003/effort.js');
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/removeApexEmptyLines.js&action=raw&ctype=text/javascript');
importScript('User:Boopalan28012003/dash.js');
09ucdjfznpp1sv2m732em1dl91uir4z
1929064
1929061
2026-04-30T15:43:52Z
Info-farmer
232
123
1929064
javascript
text/javascript
/* சோதனை */
//alert("வெற்றி! உங்கள் Common.js கோப்பு சரியாக இயங்குகிறது.");
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript' );
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/float360button.js&action=raw&ctype=text/javascript' );
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/fastPasteSaveRefresh.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/wikiCodeViewer.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/transclsionSubpageCreator.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionEditTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionPasteTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidData2anotherIndex.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/subpageCopier.js&action=raw&ctype=text/javascript'); (offline xml filter tool)
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/FloatingProofreader.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Neechalkaran/Floatingbutton.js');
//importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css');
//importScript('User:Boopalan28012003/textareaEditor.js');
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/removeApexEmptyLines.js&action=raw&ctype=text/javascript');
importScript('User:Boopalan28012003/dash.js');
importScript('User:Boopalan28012003/effort.js');
bpguknpyzpt4v1rkyarl4asaiqg7w5y
1929066
1929064
2026-04-30T15:48:47Z
Info-farmer
232
//
1929066
javascript
text/javascript
/* சோதனை */
//alert("வெற்றி! உங்கள் Common.js கோப்பு சரியாக இயங்குகிறது.");
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript' );
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/float360button.js&action=raw&ctype=text/javascript' );
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/fastPasteSaveRefresh.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/wikiCodeViewer.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/transclsionSubpageCreator.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionEditTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionPasteTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidData2anotherIndex.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/subpageCopier.js&action=raw&ctype=text/javascript'); (offline xml filter tool)
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/FloatingProofreader.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Neechalkaran/Floatingbutton.js');
//importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css');
//importScript('User:Boopalan28012003/textareaEditor.js');
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/removeApexEmptyLines.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Boopalan28012003/dash.js');
//importScript('User:Boopalan28012003/effort.js');
bkqf7c1qxudfs6bcozy95k1ojrqiche
1929080
1929066
2026-04-30T16:24:00Z
Info-farmer
232
+ வெற்றுவரி இடு, முன்பக்கம் இறுதியில் கோடிடு
1929080
javascript
text/javascript
/* சோதனை */
//alert("வெற்றி! உங்கள் Common.js கோப்பு சரியாக இயங்குகிறது.");
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript' );
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/float360button.js&action=raw&ctype=text/javascript' );
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/fastPasteSaveRefresh.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/wikiCodeViewer.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/transclsionSubpageCreator.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionEditTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionPasteTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidData2anotherIndex.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/subpageCopier.js&action=raw&ctype=text/javascript'); (offline xml filter tool)
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/FloatingProofreader.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Neechalkaran/Floatingbutton.js');
//importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css');
//importScript('User:Boopalan28012003/textareaEditor.js');
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/removeApexEmptyLines.js&action=raw&ctype=text/javascript');
importScript('User:Boopalan28012003/dash.js');
importScript('User:Boopalan28012003/effort.js');
bpguknpyzpt4v1rkyarl4asaiqg7w5y
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/563
250
445395
1929094
1861776
2026-04-30T17:50:08Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" /><b>{{rh|இசை|514|இசை}}</b></noinclude>
{{gap2}}பிரதிமத்யம மேளங்கள்
{|
|37. சாலகம் || 55. சியாமளாங்கி
|-
|38. ஜலார்ணவம || 56. ஷண்முகப்ரியா
|-
|39. ஜாலவராளி || 57. சிம்மேந்திரமத்யமம்
|-
|40. நவநீதம் || 58. ஹேமவதி
|-
|41. பாவனி || 59. தர்மவதி
|-
|42. ரகுப்ரியா || 60. நீதிமதி
|-
|43. கவாம்போதி || 61. காந்தாமணி
|-
|44. பவப்ரியா || 62. ரிஷபப்ரியா
|-
|45. சுபபந்துவராளி || 63. லதாங்கி
|-
|46. ஷட்விதமார்க்கிணி || 64. வாசஸ்பதி
|-
|47. சுவர்ணாங்கி || 65. மேசகல்யாணி
|-
|48. திவ்யமணி || 66. சித்ராம்பரி
|-
|49. தவளாம்பரி || 67. ஸுசரித்ர
|-
|50. நாமநாராயணி || 68. ஜோதிஸ்வரூபிணி
|-
|51. காமவர்த்தனி || 69. தாதுவர்த்தினி
|-
|52. ராமப்ரியா || 70. நாஸிகாபூஷணி
|-
|53. கமனச்ரம || 71. கோசலம்
|-
|54. விச்வம்பரி || 72. ரசிகப்ரியா
|-
|}
<section end="1087"/><section begin="1088"/>
{{larger|<b>இசைக்குறியிடல்:</b>}} இசையை எழுத்து மூலம் காண்பிப்பதற்கு இரண்டு முறைகள் உள. 1. ச ரி க ம ப த நி என்னும் சுர எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது. இந்த முறையை இந்திய இசையில் காணலாம். இதற்கு மேனாட்டு இசையில் டானிக் சோல்பா குறியீடு (Tonic Solfa Notation) என்று பெயர். 2.சுரங்களைக் குறிகளைக் கொண்டு விளக்குதல். இதற்கு ஸ்டாப் குறியீடு (Staff Notation) என்று பெயர். இது மேனாட்டு இசையில் உபயோகப் படுகிறது. இதில் 5 கோடுகளைப் பயன் படுத்துவார்கள். சுரக் குறிகள் இருக்கும் இடத்திலிருந்து, அந்தக் குறிகள் என்ன சுரங்களைக் குறிக்கின்றன என்பது தெளிவாகும். உதாரணமாக
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 80
|oTop = 335
|oLeft = 9
|Location = centre
|Description = {{rh|||என்பது சரிகமபதநிச}}}}
என்பதைக் குறிக்கும். இன்னும் சுரங்களின் கால அளவுகளைக் காட்டுவதற்கும், கமகங்களைக் காட்டுவதற்கும், தக்க குறிகள் ஸ்டாப் குறியீட்டில் உள.
கருநாடக சங்கீதத்திலுள்ள இசைக் குறிகளை, சுரங்களின் கால அளவைக் காட்டுவதற்காக ஏற்பட்டவ, சுரங்களின் ஸ்தாயிகளைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை, கமகங்கள் முதலியவற்றைக் குறிக்கும் ஏனைய குறிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
ச என்னும் குறில் சுரம் ஓர் அட்சர காலத்தைக் குறிக்கும். சா என்னும் நெடில் சுரம் இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும். ஒரு சுரத்திற்கப்பால், காற்புள்ளி போடப் படின், அதன் கார்வை ஓர் அட்சர காலம் அதிகமாகும்; அரைப் புள்ளி போடப் படின், அதன் கால அளவு இரண்டு அட்சரங்கள் அதிகமாகும். அதிக அட்சர காலங்களைக் காட்டுவதற்குத் தேவையான காற் புள்ளிகளோ, அரைப் புள்ளிகளோ போடப் படும். அரை அட்சர காலத்தைக் காட்டுவதற்குச் சுரத்தின் மேல் ஒரு கோடு இடப் படும். கால் அட்சர காலத்தைக் காட்ட இரு கோடுகளும், அரைக்கால் அட்சர காலத்தைக் காட்ட மூன்று கோடுகளும் இடப் படும்.
உ-ம்:
{| class={|class="wikitable sortable"
|-
| ச
| =
| {{fs|130%|<sup>{{dual line|–|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|–|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| =
| {{fs|130%|<sup>{{dual line|<nowiki>=</nowiki>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<nowiki>=</nowiki>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<nowiki>=</nowiki>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<nowiki>=</nowiki>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| =
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
|-
| I
|
| ½
| ½
|
| ¼
| ¼
| ¼
| ¼
|
| ⅛
| ⅛
| ⅛
| ⅛
| ⅛
| ⅛
| ⅛
| ⅛
|-
|}
மேல் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு புள்ளியும், கீழ் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்கீழ் ஒரு புள்ளியும் போடப்படும். மத்தியஸ்தாயிக்குப் புள்ளி இராது.
{|
|உ-ம் : ||{{fs|130%|<sup>{{dual line|.|ச|style=vertical-align:baseline;}}</sup>}} {{fs|130%|<sup>{{dual line|.|ரி|style=vertical-align:baseline;}}</sup>}} {{fs|130%|<sup>{{dual line|.|க|style=vertical-align:baseline;}}</sup>}} {{fs|130%|<sup>{{dual line|.|ம|style=vertical-align:baseline;}}</sup>}}||(மேல் ஸ்தாயி)
|-
| || ச ரி க ம ||(மத்திய ஸ்தாயி)
|-
| || {{fs|130%|<sup>{{dual line|ச|.|style=vertical-align:baseline;}}</sup>}} {{fs|130%|<sup>{{dual line|ரி|.|style=vertical-align:baseline;}}</sup>}} {{fs|130%|<sup>{{dual line|க|.|style=vertical-align:baseline;}}</sup>}} {{fs|130%|<sup>{{dual line|ம|.|style=vertical-align:baseline;}}</sup>}}||(கீழ் ஸ்தாயி)
|-
|}
தாளங்களில் ஆறு அங்கங்களைக் காட்டும் குறிகள்:
{|
|அனுத்ருதம் || {{larger|◡}} ||குரு || {{larger|8}}
|-
|த்ருதம் || {{larger|◯}} ||புலுதம் || {{larger|{{sfrac nobar|1|8}}}}
|-
|லகு || {{larger|1}} ||காகபாதம் || {{larger|+}}
|-
|}
மற்றக் குறிகள் :- <nowiki>~~~~~</nowiki> அலைவு கோடு கம்பித சுரத்தைக் குறிக்கும்; 🞸 நட்சத்திரக் குறி பாஷாங்க ராகங்களில் தோன்றும் அன்னிய சுரத்தைக் குறிக்கும்; || இது பாட்டில் ஓர் அங்கத்தின் முடிவையோ, அல்லது பாட்டின் முடிவையோ காட்டும். {{larger|◠}} இந்த வளைவுக் கோடு ஒரு சுரத் தொடரின் மேல் இருந்தால், அந்தச் சுரங்களை ஒரே பிரயோகமாக வாசிக்க வேண்டுமென்று குறிக்கும்.
<section end="1088"/><section begin="1089"/>
{{center|{{larger|<b>இந்திய நாட்டு இசை</b>}}}}
பண்டைக் கால முதல் இசைக் கலையின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய இசையியலில் உள்ளன யாவும் யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தினவாகவே உள்ளன. மேலும், ‘அகிலத்துவம்’ (Comprehensiveness) என்னும் அமிசமும் அதில் உள்ளது; இந்திய இசையில் காணப் படாத மேளமோ, இராகமோ, தாளமோ கிடையாது என்று சொல்லக் கூடியதாகவும் இருக்கிறது. இராக முறையும், 72 மேள முறையும், இசை உலகத்திற்கு இந்தியர்கள் கொடுத்த கொடைகளாகும். சுர எழுத்துக்கள் (Solfa Syllables) ஸ ரி க ம ப த நி என்பவை முதன் முதலில் இந்திய சங்கீதத்தில்தான் ஏற்பட்டன. ஐரோப்பிய சங்கீத டோ,ரே,மி,பா,ஸோ, லா, ஸீ (Doh, ray, me, fah soh, la, si) என்பவை பின்னரே ஏற்பட்டன. இராகமே சுத்த இசை (Absolute music) உண்டாவதற்கு வழி காட்டியாயிற்று. நாலாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட பரத நாட்டிய சாத்திரத்தில், இசைக் கருவிகள், நாதத்தை உண்டாக்குவதற்கான சாதனங்களைக் கொண்டு, தத (Tata), ஸுஷீர (Sushira), அவனத்த (Avanaddha), கன (Ghana) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினையையே இப்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றுகிறது. தற்காலத்தில், அவை தந்திக் கருவிகள் (Chordophones), காற்றுக் கருவிகள் (Aerophones), தோற்கருவிகள் (Membranophones), கைத்தாளங்கள் (Autophones) என வழங்கப் படுகின்றன.
இத்தகைய சிறந்த இசைக் கலையில் தென்னிந்தியாவானது பண்டைக் காலத்திலிருந்தே பெயர் பெற்று<noinclude>{{dual line|-|ச|style=vertical-align:baseline;}} {{dual line|Top Line|Bottom Line|style=vertical-align:baseline;}}</noinclude>
eh4klturnethaeaih587tglfzzrch9n
1929095
1929094
2026-04-30T17:51:07Z
TI Buhari
4634
1929095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" /><b>{{rh|இசை|514|இசை}}</b></noinclude>
{{gap2}}பிரதிமத்யம மேளங்கள்
{|
|37. சாலகம் || 55. சியாமளாங்கி
|-
|38. ஜலார்ணவம || 56. ஷண்முகப்ரியா
|-
|39. ஜாலவராளி || 57. சிம்மேந்திரமத்யமம்
|-
|40. நவநீதம் || 58. ஹேமவதி
|-
|41. பாவனி || 59. தர்மவதி
|-
|42. ரகுப்ரியா || 60. நீதிமதி
|-
|43. கவாம்போதி || 61. காந்தாமணி
|-
|44. பவப்ரியா || 62. ரிஷபப்ரியா
|-
|45. சுபபந்துவராளி || 63. லதாங்கி
|-
|46. ஷட்விதமார்க்கிணி || 64. வாசஸ்பதி
|-
|47. சுவர்ணாங்கி || 65. மேசகல்யாணி
|-
|48. திவ்யமணி || 66. சித்ராம்பரி
|-
|49. தவளாம்பரி || 67. ஸுசரித்ர
|-
|50. நாமநாராயணி || 68. ஜோதிஸ்வரூபிணி
|-
|51. காமவர்த்தனி || 69. தாதுவர்த்தினி
|-
|52. ராமப்ரியா || 70. நாஸிகாபூஷணி
|-
|53. கமனச்ரம || 71. கோசலம்
|-
|54. விச்வம்பரி || 72. ரசிகப்ரியா
|-
|}
<section end="1087"/><section begin="1088"/>
{{larger|<b>இசைக்குறியிடல்:</b>}} இசையை எழுத்து மூலம் காண்பிப்பதற்கு இரண்டு முறைகள் உள. 1. ச ரி க ம ப த நி என்னும் சுர எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது. இந்த முறையை இந்திய இசையில் காணலாம். இதற்கு மேனாட்டு இசையில் டானிக் சோல்பா குறியீடு (Tonic Solfa Notation) என்று பெயர். 2.சுரங்களைக் குறிகளைக் கொண்டு விளக்குதல். இதற்கு ஸ்டாப் குறியீடு (Staff Notation) என்று பெயர். இது மேனாட்டு இசையில் உபயோகப் படுகிறது. இதில் 5 கோடுகளைப் பயன் படுத்துவார்கள். சுரக் குறிகள் இருக்கும் இடத்திலிருந்து, அந்தக் குறிகள் என்ன சுரங்களைக் குறிக்கின்றன என்பது தெளிவாகும். உதாரணமாக
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 80
|oTop = 335
|oLeft = 9
|Location = centre
|Description = {{rh|||என்பது சரிகமபதநிச}}}}
என்பதைக் குறிக்கும். இன்னும் சுரங்களின் கால அளவுகளைக் காட்டுவதற்கும், கமகங்களைக் காட்டுவதற்கும், தக்க குறிகள் ஸ்டாப் குறியீட்டில் உள.
கருநாடக சங்கீதத்திலுள்ள இசைக் குறிகளை, சுரங்களின் கால அளவைக் காட்டுவதற்காக ஏற்பட்டவ, சுரங்களின் ஸ்தாயிகளைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை, கமகங்கள் முதலியவற்றைக் குறிக்கும் ஏனைய குறிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
ச என்னும் குறில் சுரம் ஓர் அட்சர காலத்தைக் குறிக்கும். சா என்னும் நெடில் சுரம் இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும். ஒரு சுரத்திற்கப்பால், காற்புள்ளி போடப் படின், அதன் கார்வை ஓர் அட்சர காலம் அதிகமாகும்; அரைப் புள்ளி போடப் படின், அதன் கால அளவு இரண்டு அட்சரங்கள் அதிகமாகும். அதிக அட்சர காலங்களைக் காட்டுவதற்குத் தேவையான காற் புள்ளிகளோ, அரைப் புள்ளிகளோ போடப் படும். அரை அட்சர காலத்தைக் காட்டுவதற்குச் சுரத்தின் மேல் ஒரு கோடு இடப் படும். கால் அட்சர காலத்தைக் காட்ட இரு கோடுகளும், அரைக்கால் அட்சர காலத்தைக் காட்ட மூன்று கோடுகளும் இடப் படும்.
உ-ம்:
{| class={|class="wikitable sortable"
|-
| ச
| =
| {{fs|130%|<sup>{{dual line|–|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|–|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| =
| {{fs|130%|<sup>{{dual line|<nowiki>=</nowiki>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<nowiki>=</nowiki>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<nowiki>=</nowiki>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<nowiki>=</nowiki>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| =
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
| {{fs|130%|<sup>{{dual line|<math>\equiv</math>|ச|style=vertical-align:baseline;}}</sup>}}
|-
| I
|
| ½
| ½
|
| ¼
| ¼
| ¼
| ¼
|
| ⅛
| ⅛
| ⅛
| ⅛
| ⅛
| ⅛
| ⅛
| ⅛
|-
|}
மேல் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு புள்ளியும், கீழ் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்கீழ் ஒரு புள்ளியும் போடப்படும். மத்தியஸ்தாயிக்குப் புள்ளி இராது.
{|
|உ-ம் : ||{{fs|130%|<sup>{{dual line|.|ச|style=vertical-align:baseline;}}</sup>}} {{fs|130%|<sup>{{dual line|.|ரி|style=vertical-align:baseline;}}</sup>}} {{fs|130%|<sup>{{dual line|.|க|style=vertical-align:baseline;}}</sup>}} {{fs|130%|<sup>{{dual line|.|ம|style=vertical-align:baseline;}}</sup>}}||(மேல் ஸ்தாயி)
|-
| || ச ரி க ம ||(மத்திய ஸ்தாயி)
|-
| || {{fs|130%|<sup>{{dual line|ச|.|style=vertical-align:baseline;}}</sup>}} {{fs|130%|<sup>{{dual line|ரி|.|style=vertical-align:baseline;}}</sup>}} {{fs|130%|<sup>{{dual line|க|.|style=vertical-align:baseline;}}</sup>}} {{fs|130%|<sup>{{dual line|ம|.|style=vertical-align:baseline;}}</sup>}}||(கீழ் ஸ்தாயி)
|-
|}
தாளங்களில் ஆறு அங்கங்களைக் காட்டும் குறிகள்:
{|
|அனுத்ருதம் || {{larger|◡}} ||குரு || {{larger|8}}
|-
|த்ருதம் || {{larger|◯}} ||புலுதம் || {{larger|{{sfrac nobar|1|8}}}}
|-
|லகு || {{larger|1}} ||காகபாதம் || {{larger|+}}
|-
|}
மற்றக் குறிகள் :- <nowiki>~~~~~</nowiki> அலைவு கோடு கம்பித சுரத்தைக் குறிக்கும்; 🞸 நட்சத்திரக் குறி பாஷாங்க ராகங்களில் தோன்றும் அன்னிய சுரத்தைக் குறிக்கும்; || இது பாட்டில் ஓர் அங்கத்தின் முடிவையோ, அல்லது பாட்டின் முடிவையோ காட்டும். {{larger|◠}} இந்த வளைவுக் கோடு ஒரு சுரத் தொடரின் மேல் இருந்தால், அந்தச் சுரங்களை ஒரே பிரயோகமாக வாசிக்க வேண்டுமென்று குறிக்கும்.
<section end="1088"/><section begin="1089"/>
{{center|{{larger|<b>இந்திய நாட்டு இசை</b>}}}}
பண்டைக் கால முதல் இசைக் கலையின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய இசையியலில் உள்ளன யாவும் யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தினவாகவே உள்ளன. மேலும், ‘அகிலத்துவம்’ (Comprehensiveness) என்னும் அமிசமும் அதில் உள்ளது; இந்திய இசையில் காணப் படாத மேளமோ, இராகமோ, தாளமோ கிடையாது என்று சொல்லக் கூடியதாகவும் இருக்கிறது. இராக முறையும், 72 மேள முறையும், இசை உலகத்திற்கு இந்தியர்கள் கொடுத்த கொடைகளாகும். சுர எழுத்துக்கள் (Solfa Syllables) ஸ ரி க ம ப த நி என்பவை முதன் முதலில் இந்திய சங்கீதத்தில்தான் ஏற்பட்டன. ஐரோப்பிய சங்கீத டோ,ரே,மி,பா,ஸோ, லா, ஸீ (Doh, ray, me, fah soh, la, si) என்பவை பின்னரே ஏற்பட்டன. இராகமே சுத்த இசை (Absolute music) உண்டாவதற்கு வழி காட்டியாயிற்று. நாலாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட பரத நாட்டிய சாத்திரத்தில், இசைக் கருவிகள், நாதத்தை உண்டாக்குவதற்கான சாதனங்களைக் கொண்டு, தத (Tata), ஸுஷீர (Sushira), அவனத்த (Avanaddha), கன (Ghana) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினையையே இப்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றுகிறது. தற்காலத்தில், அவை தந்திக் கருவிகள் (Chordophones), காற்றுக் கருவிகள் (Aerophones), தோற்கருவிகள் (Membranophones), கைத்தாளங்கள் (Autophones) என வழங்கப் படுகின்றன.
இத்தகைய சிறந்த இசைக் கலையில் தென்னிந்தியாவானது பண்டைக் காலத்திலிருந்தே பெயர் பெற்று<noinclude></noinclude>
swb10xiioqccg2qt3on04ghqa4dtnsk
அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf
252
452394
1929092
1928267
2026-04-30T16:37:59Z
TI Buhari
4634
1929092
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=அறிவியல் களஞ்சியம் 14
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 15.pdf|15]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 16.pdf|16]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 17.pdf|17]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 18.pdf|18]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf|19]]
|School=அறிவியல்
|Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம்
|Address=தஞ்சாவூர்
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=969
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5 = "1"
5to22="roman"
23="1"
949 = பொருளடைவு
959 = தமிழ்–ஆங்கிலம்
964 = ஆங்கிலம்–தமிழ்
/>
|Remarks={{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/பதிப்புக்_குழு|பதிப்புக்குழு]]|{{DJVU page link 2|8|iv}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியறிவிப்பு|நன்றியறிவிப்பு]]|{{DJVU page link 2|9|v}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/வல்லுநர்_குழு|வல்லுநர் குழு]]|{{DJVU page link 2|10|vi}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியுரை|நன்றியுரை]]|{{DJVU page link 2|12|viii}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]]|{{DJVU page link 2|13|ix}}}}
{{Dtpl|symbol= |1.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நு|நு]]|{{DJVU page link 2|23|1}}}}{{Dtpl|symbol= |2.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நூ|நூ]]|{{DJVU page link 2|121|99}}}}
{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நு|அருஞ்சொல் அட்டவணை நு]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நூ|அருஞ்சொல் அட்டவணை நூ]]
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=ISBN : 81-7090-336-X
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
ne37hq1pgxq2wm9ammune3jx73m97xr
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/173
250
573639
1929206
1916888
2026-05-01T10:15:05Z
ஹர்ஷியா பேகம்
15001
1929206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 153}}</noinclude>அதன் முதற் கட்டமாக “கிரிக்கு வயதாகிவிட்டதால் ஜனாதிபதிப் பொறுப்பை அவரால் தாங்க முடியாது” என்று காங்கிரசின் மூத்த தலைவர் வட்டாரத்திலே பேச்சுக் கிளம்பிற்று.
மே 13–ஆம் நாளன்று கிரி அவர்கள் விடுத்த செய்தியொன்றில் “ஜனாதிபதி மரணம் அடைந்ததும் துணை ஜனாதிபதியையே ஜனாதிபதியாக்கும் பழக்கம் இதுவரை இருந்து வந்திருக்கிறது. அதையே இப்போதும் பின்பற்றவேண்டும். அந்த வழக்கப்படி காங்கிரஸ் சார்பில் என்னை வேட்பாளனாக நிறுத்தாவிட்டால் நான் துணை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி விடுவேன்” என்று குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு பாபு ஜெகஜீவன்ராம் அவர்களது பெயர் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது மே திங்கள் 18–ஆம் நாளன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அந்தப் பதவிக்குப் போட்டியிடத் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பஞ்சாப் முதலமைச்சர் குர்நாம் சிங் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் கோவை நகரில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் எல்லாக் கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் பாரபட்சமின்றிச் செயல்பட முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்களுடன் நான் பேச்சு நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்.”
அவர் கூறியவாறு என்னையும் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு எனக்கும் பஞ்சாப் முதல்வர் குர்நாம் சிங் அவர்களுக்கும் தூய்மையானதும் பாசம் நிறைந்ததுமான ஒரு நட்பு, பூத்துக் குலுங்கத் தொடங்கியது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வி.வி.கிரி அவர்கள் அவரது வெற்றிக்கு மூல காரணமாக விளங்கியவர்கள் கருணாநிதியும், குர்நாம் சிங்கும்தான் என்று பலமுறை நன்றியுணர்வு பொங்கிடக் கூறியிருக்கிறார்.
“யார் ஜனாதிபதி?” என்ற வினாக்குறிக்கும் – “கிரிதான் ஐனாதிபதி” என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட விடைக்கும் இடையிலே நடைபெற்ற நிகழ்ச்சிகளை எனது விமர்சனத்திற்-<noinclude></noinclude>
o5v4w8uf9ej7y7ec38jtv4kdfwcgwdv
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/174
250
573640
1929207
1916893
2026-05-01T10:44:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1929207
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|154 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>குரியதாக்குவதை விட தேதிவாரியாக வந்த செய்திகளைத் தொகுத்துத் தந்தாலே – அவற்றைப் படிப்பவர்கள்; யார் யார் எப்படிப்பட்ட மாற்று நிலைகளை மேற்கொண்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இயலும்.
அந்த ஆண்டு மே மாத இறுதியில் ராஜாஜி அவர்கள், “சுயராஜ்யா” பத்திரிகையில், “ஓய்வு பெறும் இராணுவத் தளபதி குமார மங்கலம் அவர்களை ஜனாதிபதியாக்கலாம்” என்று எழுதினார்.
ஜூன் 6–ந்தேதி வெளிவந்த ஏடுகளின் செய்தியின்படி; “எல்லாக் கட்சிகளும் கருத்து ஒற்றுமையுடன் ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க முடியும்” என்று பிரதமர் இந்திராகாந்தி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஜூன் முதன் வாரத்தில் “சுயராஜ்யா” இதழில் ராஜாஜி அவர்களின் கட்டுரை, பின்வருமாறு கருத்தை வழங்கியது.
“வி. வி. கிரி அவர்கள், நற்குணங்களும் திறமையும் நிரம்பியவர். 1937–ல் சென்னை மாகாணத்தில் நான் பிரதமராக இருந்தபோது அவர் தொழிலாளர் நல அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது முதலே அவர் சிறந்த உறுதியான காங்கிரஸ்காரராக இருந்து வருபவர். தொடர்ந்தும் அப்படியே இருப்பார். அதனால்தான் அவர் ஜனாதிபதி ஆவதை நான் விரும்பவில்லை. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் ராஷ்டிரபதியாகக் கூடாது. அரசியல் கட்சிச் சார்பற்றவரையே அப்பதவியில் அமர்த்த வேண்டும். பிரதமரும் அதையே விரும்புவார் என்று கருதுகிறேன். ஆளும் கட்சிக்கு ஆமாம் போடுவதைத் தமது கடமையாகக் கருதாமல் பிரச்சினைகள் தோன்றும்போது சுயமாகச் சிந்தித்து துணிவாக அதைக் கூறுபவரையே ஜனாதிபதியாக ஆக்க வேண்டும்.”
இதற்குப் பிறகு 19–6–69 ஏடுகளில் வெளிவந்த செய்தி குறிப்பிடத்தக்கது.
“ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளரைப் பொறுக்குவது சம்பந்தமாக பிரதம மந்திரி இந்திராவின் ஆதரவாளர்களுக்கும், சிண்டிகேட் உறுப்பினர்களுக்குமிடையே மோதுதல்; தவிர்க்க முடியாதது எனத் தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் இதுவரையில் திட்டவட்டமான முடிவு எதற்கும் வரவில்லை. வேட்பாளரைப் பொறுக்குவதில் சங்கடம் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இதில் பிரதமருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்குமிடையே கருத்து<noinclude></noinclude>
iz8szo0k9lzd3hf2zojfxe2w8v8uc6m
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/175
250
573641
1929208
1916895
2026-05-01T10:53:54Z
ஹர்ஷியா பேகம்
15001
1929208
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 155}}</noinclude>வேறுபாடு நிலவுவதுதான்! புதிய ஜனாதிபதி பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்துப் பிரதமர் இந்திரா காந்தி, இன்று காலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிகிறது. அது குறித்து தொலைபேசியில் விபரம் அறியக் கேட்டபோது கருணாநிதி அவர்கள் கருத்து எதுவும் இப்போது பத்திரிகைகளுக்குக் கூற இயலாது என மறுத்துவிட்டார்.”
இதனையடுத்து வந்த செய்தியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. நிஜலிங்கப்பா அவர்கள் பிரதமரைச் சந்தித்துப் பேசினார் என்றும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளராகக் கருதப்படும் சபாநாயகர் சஞ்சீவ ரெட்டி அவர்களும் பிரதமருடன் பேசினார் என்றும் குறிப்பிடப்பட்டது 23–6–69 வெளிவந்த ஏடுகளில்!
ஜூலை 10, 11, 12 ஆகிய தேதிகளில் பெங்களுரில் அகில இந்திய காங்கிரசின் முக்கிய தலைவர்கள் கூடியபோதுதான்; சூல் கொண்டிருந்த பூசலெனும் புயல், கரை நோக்கிக் கிளம்பிற்று எனக் கூறலாம்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கவும் கட்சியின் பல்வேறு பணிகளை ஆராய்ந்திடவும் என்ற பெயரால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்றக் குழுவும், காரியக் கமிட்டியும் பெங்களூரில் கூட்டப்பெற்றன.
அங்கு நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு (மத்திய பார்லிமெண்டரி போர்டு) கூட்டத்தைப் பற்றி ஜூலை 13–ந் தேதி ஏடுகளில் செய்திகள் பரபரப்பாக வெளியிடப்பட்டன.
“குழுக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தலைமை தாங்கினார். மேலிடக் குழு உறுப்பினர்களான பிரதமர் இந்திராகாந்தி, துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய், சவான், காமராஜர், பட்டீல், ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது ஆகியோர் கலந்து கொண்டார்கள். உணவு அமைச்சர் ஜெகஜீவன்ராமை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டுமென பிரதமர் இந்திராகாந்தி கூறினார்.
சபாநாயகர் சஞ்சீவ ரெட்டியை நிறுத்தவேண்டுமென மற்றொரு கருத்தும் குழுவில் கூறப்பட்டது. ஒருமனதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனதால் ஓட்டெடுப்பு நடைபெற்றது. சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக நிறுத்தவேண்டுமென; மொரார்ஜிதேசாய், சவான், காமராஜர், பட்டீல் ஆகிய நால்வரும் வாக்களித்தனர்.{{nop}}<noinclude></noinclude>
alqki2d7rlu05egwe0ifg0v5gw8nf8v
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/176
250
573642
1929209
1916896
2026-05-01T11:03:25Z
ஹர்ஷியா பேகம்
15001
1929209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|156 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பிரதமர் இந்திரா காந்தியும் பக்ருதீன் அலி அகமது ஆகிய இருவர் மட்டுமே ஜெகஜீவன்ராமை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென வாக்களித்தனர். சஞ்சீவ ரெட்டிக்கு இரண்டு ஒட்டுக்கள் அதிகம் கிடைத்ததால் அவரையே ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
இவ்வளவு முக்கியமான பிரச்சினையில் வாக்கெடுப்பு நடந்து பிரதம மந்திரிக்குத் தோல்வி ஏற்பட்டது இதுவே முதல் தடவையாகும். அந்தக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த நிஜலிங்கப்பாவின் ஆதரவும் சஞ்சீவரெட்டிக்கே என்பது வெளிப்படையான உண்மை. ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் சஞ்சீவரெட்டி என்பதை காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா அதிகாரபூர்வமாக அறிவிக்கும் உரிமையைப் பெற்றார். அந்த உரிமையை உடனே பயன்படுத்தி சஞ்சீவ ரெட்டியின் பெயரையும் அவர் அறிவித்தார்.”
இந்தச் செய்தி வந்த மறுநாளே “தற்காலிக ஜனாதிபதி”யாக இருந்த வி.வி.கிரி அவர்கள் ஒரு அறிக்கை விடுத்தார். 14–7–69 அந்த அறிக்கையைத் தாங்கி ஏடுகள் வெளிவந்தன.
அந்த அறிக்கையில் : “காங்கிரஸ் மேலிடம் எடுத்துள்ள இந்த முடிவு, நாட்டுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ நியாயமானது அல்ல! ஜனாதிபதிப் பதவி கட்சிகளுக்கு அப்பாற்பட்டு கண்ணியம் மிக்கதாகக் கருதப்பட வேண்டும். ஆனால் இப்போது நடந்துள்ள நிகழ்ச்சியால் அந்த உயர்ந்த பதவியின் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. எனக்கு நாடும் மனச்சாட்சியும்தான் முக்கியமானவை. அதன் அடிப்படையில் நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துவிட்டேன். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் உண்மைக்காகப் போராடுகிறவனை நல்ல வீரன் என்று காந்தியடிகள் கூறியிருக்கிறார். அந்த உணர்ச்சியின் அடிப்படையில்தான் நான் போட்டியிடுகிறேன்” என்று கிரி அவர்கள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
“கிரியின் அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. பழம்பெரும் காங்கிரஸ்காரரான கிரி, காங்கிரசின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் செய்தியை நம்பவே முடியவில்லை. எனினும் அவர் காங்கிரஸ் வேட்பாளரல்ல! அதனால் காங்கிரஸ்காரர்கள் அவரை ஆதரிக்க மாட்டார்கள்” என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா கூறினார்.
{{nop}}<noinclude></noinclude>
567nxvtrb5fww7tjnfpf33rs769xo08
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/177
250
573643
1929210
1916897
2026-05-01T11:05:57Z
ஹர்ஷியா பேகம்
15001
1929210
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 157}}</noinclude>கிரியின் போட்டியைப் பற்றிக் கருத்துக் கூற, துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் மறுத்துவிட்ட போதிலும் “போட்டியை சமாளித்தே ஆகவேண்டும்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பெங்களூரில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டபோது நிருபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கிரி அவர்கள் போட்டியிடுவது பற்றிக் கேட்டார்கள். “இந்தச் செய்தி கேட்டு நான் ஆச்சரியம் அடைந்தேன்” என்று அம்மையார் அவர்கள் பதில் கூறினார்கள்.
{{nop}}<noinclude></noinclude>
dlhx7cumbbaqoq22mfkq2m1tpsqv1eh
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/178
250
573644
1929211
1709713
2026-05-01T11:21:45Z
ஹர்ஷியா பேகம்
15001
1929211
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>21</b>}}
{{larger|<b>ஆச்சரியம் காத்திருந்தது!</b>}}
{{X-larger|<b>ஜ</b>}}னாதிபதி தேர்தலில் வி. வி. கிரி போட்டியிடப் போகிற செய்தி கேட்டு ஆச்சரியம் அடைந்தேன் என்று நிருபர்களிடம் கூறிய பிரதமர் இந்திரா காந்தி பொதுவாக ஜனாதிபதி தேர்தல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவை வரவேற்க இயலாத சூழ்நிலையில் இருந்தார் என்பதையும் அந்தப் பேட்டியின் மூலம் சூசகமாக அறிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் சார்பில் சஞ்சீவ ரெட்டி போட்டியிடுவதைத் தான் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் வேட்பாளராக நிற்க விரும்பாத ஜெகஜீவன்ராம் பெயரை தான் முன்மொழிந்ததாகவும், அதை காங்கிரஸ் கட்சியிலே உள்ள மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலிடக் கூட்டத்தில் பெங்களூரில் வி. வி. கிரி பெயரைத்தான் முதலில் தெரிவித்தேன் என்றும், அதை மற்றவர்கள் ஏற்காததால் அடுத்து ஜெகஜீவன்ராம் பெயரைக் கூறினேன் என்றும் பிரதமர் சொன்னார். சஞ்சீவரெட்டி வெற்றி பெறுவதற்காக முழுமனதோடு முயற்சி செய்வீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது இந்திரா காந்தி அவர்கள் பதில் அளிக்காமல் மௌனமாக இருந்துவிட்டார். அவரை ஆதரித்து வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுப்பீர்களா என்று கேட்டதற்கு அதுபற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார்.
இப்படிப்பட்ட ஒரு சிக்கலான சூழ்நிலை குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எழுந்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பு மிக முக்கியமானதாக ஆயிற்று. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் கழக உறுப்பினர்கள் அளிக்கின்ற வாக்குகளைப் பொறுத்தே அந்தத் தேர்தலுடைய வெற்றி தோல்வி நிர்ணயிக்கக் கூடிய நிலைமை அப்போதிருந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த என்னை நிருபர்கள் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜெகஜீவன்ராம் நிறுத்தப்படவில்லையே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் அந்த முடிவு பெரும் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்றும்<noinclude></noinclude>
p8oqb1g7b5c1r3z8wlboexxt5vipy6t
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/179
250
573645
1929227
1709714
2026-05-01T11:33:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1929227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆவதையே காந்தியடிகளேகூட விரும்பினார் என்றும் அவருடைய நூற்றாண்டு விழா நடக்கிற நேரத்தில் ஜெகஜீவன்ராம் ஜனாதிபதியாக ஆக்கப்பட்டிருந்தால் அது காந்தியடிகளின் ஆசையை நிறைவேற்றுவதாக இருந்திருக்கும் என்றும் பதிலளித்தேன்.
நடைபெறவிருக்கும் தேர்தலில் தி. மு. கழகத்தின் நிலை என்ன என்று கேட்கப்பட்டபோது கழகப் பொதுக்குழு, செயற்குழு கூடி அதுபற்றி முடிவெடுக்கும் என்றும் கூறினேன்.
ஜூலை 15-ஆம் நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பூபேஷ் குப்தா என்னைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் முக்கியமாக ஜனாதிபதி தேர்தல் குறித்து விரிவாகப் பேசினேன். பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளைத் தேசியமயமாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், மன்னர் மானியங்களை நிறுத்துவதற்கு மேற்கொண்ட தீவிரம் ஆகியவற்றை எண்ணிப் பார்த்து தொடர்ந்து முற்போக்குக் கொள்கைகள் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கையோடு இந்திரா காந்தியின் அரசுக்கு தி. மு. கழகமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியும் ஆதரவு அளித்துக் கொண்டிருந்த அந்தக் காலக் கட்டத்தில் இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி முடிவு செய்ய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அனைவரும் ஒன்றுகூடி சென்னையிலோ, டெல்லியிலோ அல்லது வசதிப்பட்ட வேறு ஒரு இடத்திலோ ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதித்து ஒரு ஏகோபித்த முடிவை எடுக்க வேண்டுமென்று அந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன்.
நான் கூறிய அந்த யோசனையை வரவேற்கத்தக்க — யோசனை—என்று பாராளுமன்ற பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் துவிவேதி அவர்கள் பாராட்டி அறிக்கை விடுத்தார்.
ஜூலை 16-ஆம் நாள் திடீரென்று மொரார்ஜி தேசாயிடமிருந்து நிதி இலாகா பொறுப்பை இந்திரா காந்தி எடுத்துக் கொண்டு “நிதி இலாகா பொறுப்பிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டு விட்டீர்கள்; ஆனால் தொடர்ந்து உதவி பிரதமராக இருந்து வரலாம்” என்று அவருக்குக் கடிதம் எழுதினார். நிதித் துறை பொறுப்புக்களை இந்திரா காந்தியே எடுத்துக்கொண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.
{{nop}}<noinclude></noinclude>
0j4d1gmb9n9qkyvyhuw0clegsmb4750
1929228
1929227
2026-05-01T11:33:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1929228
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 159}}</noinclude>ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆவதையே காந்தியடிகளேகூட விரும்பினார் என்றும் அவருடைய நூற்றாண்டு விழா நடக்கிற நேரத்தில் ஜெகஜீவன்ராம் ஜனாதிபதியாக ஆக்கப்பட்டிருந்தால் அது காந்தியடிகளின் ஆசையை நிறைவேற்றுவதாக இருந்திருக்கும் என்றும் பதிலளித்தேன்.
நடைபெறவிருக்கும் தேர்தலில் தி. மு. கழகத்தின் நிலை என்ன என்று கேட்கப்பட்டபோது கழகப் பொதுக்குழு, செயற்குழு கூடி அதுபற்றி முடிவெடுக்கும் என்றும் கூறினேன்.
ஜூலை 15-ஆம் நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பூபேஷ் குப்தா என்னைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் முக்கியமாக ஜனாதிபதி தேர்தல் குறித்து விரிவாகப் பேசினேன். பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளைத் தேசியமயமாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், மன்னர் மானியங்களை நிறுத்துவதற்கு மேற்கொண்ட தீவிரம் ஆகியவற்றை எண்ணிப் பார்த்து தொடர்ந்து முற்போக்குக் கொள்கைகள் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கையோடு இந்திரா காந்தியின் அரசுக்கு தி. மு. கழகமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியும் ஆதரவு அளித்துக் கொண்டிருந்த அந்தக் காலக் கட்டத்தில் இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி முடிவு செய்ய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அனைவரும் ஒன்றுகூடி சென்னையிலோ, டெல்லியிலோ அல்லது வசதிப்பட்ட வேறு ஒரு இடத்திலோ ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதித்து ஒரு ஏகோபித்த முடிவை எடுக்க வேண்டுமென்று அந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன்.
நான் கூறிய அந்த யோசனையை வரவேற்கத்தக்க — யோசனை—என்று பாராளுமன்ற பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் துவிவேதி அவர்கள் பாராட்டி அறிக்கை விடுத்தார்.
ஜூலை 16-ஆம் நாள் திடீரென்று மொரார்ஜி தேசாயிடமிருந்து நிதி இலாகா பொறுப்பை இந்திரா காந்தி எடுத்துக் கொண்டு “நிதி இலாகா பொறுப்பிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டு விட்டீர்கள்; ஆனால் தொடர்ந்து உதவி பிரதமராக இருந்து வரலாம்” என்று அவருக்குக் கடிதம் எழுதினார். நிதித் துறை பொறுப்புக்களை இந்திரா காந்தியே எடுத்துக்கொண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.
{{nop}}<noinclude></noinclude>
na5dhqqnz07rmnyv677w9isv4a9x5n2
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/180
250
573646
1929261
1709715
2026-05-01T11:50:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1929261
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|160 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இதைத் தொடர்ந்து மொரார்ஜி தேசாய் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் விடுத்த அறிக்கையில் “இந்த மாற்றம் குறித்து பிரதமர் முன்கூட்டி என்னுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. நிதித்துறை இல்லாமல் துணைப்பிரதமராக நீடிக்கும்படி பிரதமர் இந்திரா என்னைக் கேட்டுக் கொண்டுள்ளார். என்னிடமிருந்து நிதித்துறையை எடுத்துக் கொண்டது அவருக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த நிலையில் துணைப் பிரதமராக நான் எப்படி நீடிக்க முடியும்? இது சுயமரியாதை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் கிடைத்து அவர்களும் அப்படி ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து அந்தக் கூட்டம் டெல்லியிலே நடைபெறுமேயானால் அனைவருக்கும் வசதியாக இருக்கும் என்று எழுதியிருந்தார்கள். அந்தக் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பஞ்சாப் முதலமைச்சர் குர்நாம் சிங் அவர்கள் பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்து எனது கருத்தினை வரவேற்றிருந்தார்.
ஜூலை 17-ஆம் தேதி காலையில் மூதறிஞர் ராஜாஜி அவர்களைச் சந்தித்து அந்தத் தேர்தல் குறித்து நான் பேசினேன் நாங்கள் இருவரும் நடத்திய அந்தப் பேச்சுவார்த்தையில் யாரும் எந்த வேட்பாளர்களுடைய பெயரையும் குறிப்பிட்டு விவாதிக்கவில்லை. பொதுவான சூழ்நிலை பற்றி மட்டுமே விவாதித்தோம். அதைத் தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி சுதந்திரா கட்சியைச் சேர்ந்த தலைவர் மசானி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் நாத்பாய் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள்.
எல்லா தலைவர்களையும் தனித்தனியே கலந்து பேசி ஒருமித்த முடிவிற்கு வழி காண்பதற்கு, என்னை டெல்லிக்கு வருமாறு மசானியும் நாத்பாயும் அழைத்தார்கள். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி. ராமமூர்த்தியும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் துவிவேதியும் என்னை டெல்லிக்கு வருமாறு வலியுறுத்தி தந்தி அனுப்பினார்கள். அதனையொட்டி ஜூலை 20-ஆம் தேதி கழகத்தின் செயற்குழுவும். பாராளுமன்ற கழக நிர்வாகிகளும் அவசரமாகக் கலந்து பேசி அதில் உருவான கருத்துக்களுடன் டெல்லியில் எல்லா கட்சித் தலைவர்களிடமும் விவாதித்திட மறுநாள் காலை நான் டெல்லி சென்றேன்.
{{nop}}<noinclude></noinclude>
rrhwj3gxtqfz642x0fmuc4a47gse2zf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/131
250
639054
1929053
1928390
2026-04-30T15:02:39Z
Info-farmer
232
{{left_margin|3em|}}
1929053
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||107}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|உணவுப் பிரச்சினை—அதற்குப் பரிகாரம்.
நாலாவது ஐந்தாண்டுத் திட்டம்—அதன் வடிவம், பொருள்—பலன்.}}
இப்படிப் பிரச்சினைகள் பலப் பல உள்ளன. இவை பற்றி இவ்வளவு வளர்ந்துள்ளவர் என்ன கூறுகிறார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆவல் கொண்டுதானே இருப்பார்கள். இந்தப் பிரச்சினைகள் பற்றி மூண்டுவிட்டுள்ள குழப்பத்தைப் போக்குவார், தெளிவளிப்பார் என்று எண்ணாமலிருக்க முடியுமா; அகில இந்தியக் காங்கிரசின் தலைவராயிற்றே! ஆனால், பாரேன் தம்பி பொருளாதாரப் பிரச்சினை பற்றி டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் பேசட்டும்—உணவுப் பிரச்சினை பற்றிச் சுப்பிரமணியம் பேசட்டும்—உலகப் பிரச்சினை பற்றி இந்திர காந்தி பேசட்டும்—நான் அந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசப்போவதில்லை, என் முன் உள்ள பிரச்சினை ஒன்றே ஒன்று! இந்தத் தேர்தலில் கழகம் காங்கிரசை வீழ்த்தாமல் இருக்கும் வழியைக் கண்டு பிடிப்பது—அந்தப் பிரச்சினை பற்றித்தான் நான் பேசுவேன் என்று கூறுபவர்போல. வந்ததும் நம்மைப் பற்றிய தெந்தினமே பாடி இருக்கிறார்!
தம்பி! களம் செல்லும் வீரன் வாளின் கூர்மை சரியாக உளதா என்று பார்த்துக் கொள்வான்.
வீர அர்ஜுனன் வேடமணிந்து நாடகமேடை செல்வோன், வாளின் கூர்மை சரியாக உளதா என்றா பார்த்திடுவான், மீசை சரியாக ஒட்டப் பட்டிருக்கிறதா என்று தானே பார்த்துக் கொள்வான்.
காமராஜர் உலகப் பிரச்சினைகளைப் பற்றி ஆய்ந்தறிந்திடவே நாடு பல சென்றுள்ளார் என்று அவர் நாமாவளி பாடிடுவோர் கூறிடினும், அவர் கொண்டுள்ள அக்கறை உலகப் பிரச்சினைகள்மீது அல்ல; காங்கிரஸ் நடாத்தும் எதேச்சாதிகாரத்தை உருக்குலைக்க எழுந்துள்ள கழகத்தை எப்படி மடக்குவது என்பதிலேதான்.
அவர் ஏதோ நாலு வார்த்தை பேசிவிட்டார் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார்களே, நமது தோழர்கள், அவர்கள் ஒரு விஷயத்தை உணருகிறார்களா?
{{left_margin|3em|காமராஜர் கொண்டுள்ள வருத்தத்தை உணருகிறார்களா?}}
வருத்தம் கொஞ்சமாகவா இருக்கும் அவருக்கு?
{{left_margin|3em|சிற்றரசர்கள்
சீமான்கள்
வணிகக் கோமான்கள்
}}<noinclude>
<references/></noinclude>
0e7mww2kgvy7378uts3knmf7nx6sjkd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/132
250
639055
1929051
1927237
2026-04-30T15:02:05Z
Info-farmer
232
{{left_margin|3em|}}
1929051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|108||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
நிலப் பிரபுக்கள்
ஆலை அரசர்கள்
பெரிய புள்ளிகள்
அணிவகுத்து நிற்கிறார்கள், வெட்டி வா என்றால் கட்டி வருகிறோம் என்று கூறியபடி.
தேர்தல் நிதியினை இலட்ச இலட்சமாகத் திரட்டிக் கொடுத்திடக் கனதனவான்கள் போட்டி போட்டுக்கொண்டு முனைகின்றனர்.
இதழ்கள், புகழ் பாடிடத் தயாராக உள்ளன!
சேர்த்துக் கொள்ளுங்கள் சேவை செய்கிறோம் என்று செப்பிடப் பலர் துடித்துக் கிளம்பி வருகின்றனர்.
இருந்தும்! மனத்திலே மகிழ்ச்சி துள்ளத்தக்க சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்திடப் பலர் இருந்தும்?
{{left_margin|3em|அடுத்த தேர்தலைப்பற்றிய பயமற்று, கவலையற்று இருக்க முடிகிறதா அவரால்!
இருக்க விடுகிறதா கழகம்?}}
இதனை எண்ணிடும்போது அவருக்கு வருத்தமாகத்தானே இருக்கும். துளியாவது வெளியே காட்டிக் கொள்கிறாரா? இல்லையே! வருத்தத்தைக் குறைத்துக் கொள்ளத்தான் அவர் நம்மைப்பற்றி நாலு வார்த்தைகள் பேசுகிறார்.
{{left_margin|3em|மிக மட்டமாகப் பேசுகிறார்,
கேவலமான விதத்தில் பேசுகிறார்,
அவன்-இவன்-என்று கூடப் பேசுகிறார்,}}
என்று வருத்தப்பட்டுக் கொள்கிறாயே தம்பி! அவர் வேண்டுமென்றேவா அப்படிப் பேசுகிறார்?
அவருடைய பேச்சே அப்படித்தான்!
{{left_margin|3em|அவருக்குத் தெரிந்த பாணியில் அவர் பேசுகிறார்!
இத்தனை வயதான பிறகு அவரைப் புதுப்பாணியில் பேசப் பழகிக் கொள்ளச் சொல்லமுடியுமா!}}
ஏசுகிறாரே! ஏசுகிறாரே! என்று நீ வருத்தப்படுகிறாய்; தம்பி! அவர் ஆச்சரியப்படுகிறார், நான் எங்கே ஏசினேன்! பேசினேன்! என்கிறார்.
{{left_margin|3em|அவர் பேசுவது ஏசுவதுபோலத் தெரிகிறது உனக்கு. காரணம்? வேறுவிதமாகவும் அவருக்குப் பேசத்தெரியும் என்று நீ எண்ணிக் கொள்வதுதான்.}}<noinclude>
<references/></noinclude>
52qg4722fc1eaxsx8w349mshy9koyhh
1929055
1929051
2026-04-30T15:02:56Z
Info-farmer
232
top space added
1929055
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|108||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
நிலப் பிரபுக்கள்
ஆலை அரசர்கள்
பெரிய புள்ளிகள்
அணிவகுத்து நிற்கிறார்கள், வெட்டி வா என்றால் கட்டி வருகிறோம் என்று கூறியபடி.
தேர்தல் நிதியினை இலட்ச இலட்சமாகத் திரட்டிக் கொடுத்திடக் கனதனவான்கள் போட்டி போட்டுக்கொண்டு முனைகின்றனர்.
இதழ்கள், புகழ் பாடிடத் தயாராக உள்ளன!
சேர்த்துக் கொள்ளுங்கள் சேவை செய்கிறோம் என்று செப்பிடப் பலர் துடித்துக் கிளம்பி வருகின்றனர்.
இருந்தும்! மனத்திலே மகிழ்ச்சி துள்ளத்தக்க சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்திடப் பலர் இருந்தும்?
{{left_margin|3em|அடுத்த தேர்தலைப்பற்றிய பயமற்று, கவலையற்று இருக்க முடிகிறதா அவரால்!
இருக்க விடுகிறதா கழகம்?}}
இதனை எண்ணிடும்போது அவருக்கு வருத்தமாகத்தானே இருக்கும். துளியாவது வெளியே காட்டிக் கொள்கிறாரா? இல்லையே! வருத்தத்தைக் குறைத்துக் கொள்ளத்தான் அவர் நம்மைப்பற்றி நாலு வார்த்தைகள் பேசுகிறார்.
{{left_margin|3em|மிக மட்டமாகப் பேசுகிறார்,
கேவலமான விதத்தில் பேசுகிறார்,
அவன்-இவன்-என்று கூடப் பேசுகிறார்,}}
என்று வருத்தப்பட்டுக் கொள்கிறாயே தம்பி! அவர் வேண்டுமென்றேவா அப்படிப் பேசுகிறார்?
அவருடைய பேச்சே அப்படித்தான்!
{{left_margin|3em|அவருக்குத் தெரிந்த பாணியில் அவர் பேசுகிறார்!
இத்தனை வயதான பிறகு அவரைப் புதுப்பாணியில் பேசப் பழகிக் கொள்ளச் சொல்லமுடியுமா!}}
ஏசுகிறாரே! ஏசுகிறாரே! என்று நீ வருத்தப்படுகிறாய்; தம்பி! அவர் ஆச்சரியப்படுகிறார், நான் எங்கே ஏசினேன்! பேசினேன்! என்கிறார்.
{{left_margin|3em|அவர் பேசுவது ஏசுவதுபோலத் தெரிகிறது உனக்கு. காரணம்? வேறுவிதமாகவும் அவருக்குப் பேசத்தெரியும் என்று நீ எண்ணிக் கொள்வதுதான்.}}<noinclude>
<references/></noinclude>
lvonz5czy618n24a6gfkmebf02xjhnd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/133
250
639056
1929056
1927240
2026-04-30T15:03:36Z
Info-farmer
232
top space added
1929056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||109}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|இதனைப் புரிந்துகொள் தம்பி! புகையிலைக்கு யாரும் நெடியை ஊட்டத் தேவையில்லை; இயற்கையாகவே இருக்கிறது.
புகையிலையிலே பூமணம் எதிர்பார்ப்பது, யாருடைய தவறு, தம்பி!
காமராஜரிடம் வேறுவிதமான பேச்சை எதிர்பார்ப்பது உன் தவறு!
அவருக்குத் தெரிந்த முறையில் அவர் பேசுகிறார்—அவ்வளவுதான்.}}
இது எனக்குப் புரிந்திருப்பதால்தான் தம்பி! அவருடைய பேச்சு எனக்குக் கோபத்தையோ, வருத்தத்தையோ தரவில்லை.
{{left_margin|3em|மேலும் தம்பி! நாம் என்ன அவ்வளவு ‘மேலான’ நிலையினரா?
மெருகு கலையாத மோடாரிலா சவாரி செய்கிறோம்? மாளிகைகளிலா நமக்கு விருந்து நடக்கிறது?
அதிகாரிகளா நம்மைப் புடைசூழ்ந்து நிற்கிறார்கள்? ‘செக்கு’ களையா நம்மிடம் தருகிறார்கள்—}}
நன்கொடையாக. இல்லையே! நாம் எளிய நிலையினர்; எளியோருக்காகப் பணியாற்றுகிறோம். நம்மைக் கண்டதும், மதிப்பளிக்கவேண்டும், மரியாதை காட்ட வேண்டும் என்று பெரியவருக்குத் தோன்றுமா!
மகாராஜாக்கள் மண்டியிடுகிறார்கள்; ராஜாக்கள் உபசாரம் நடத்துகிறார்கள்; இந்தப் பயல்கள் எதிர்க்கிறார்களே என்று எண்ணுகிறார்; எரிச்சல் கொள்கிறார்.
இவ்வளவு செல்வம் செல்வாக்கு, அதிகாரம் அந்தஸ்து நம்மிடம் இருக்கிறது. பஞ்சைகள் நம்மை எதிர்க்கிறார்களே என்பதை எண்ணும்போது அவருக்கு ஏகப்பட்ட எரிச்சல் மூள்கிறது.
சிரங்கு பிடித்தவன் அரிப்பை அடக்கிக்கொள்ள வேகவேகமாகச் ‘சொறிந்து’ கொள்ளும்போது, பூசிக்கொள்ளச் சந்தனம் கொடுத்துப் பாரேன், சள்ளென்று எரிந்துவிழுவான். மனித சுபாவம் அது. அதனை உணராமல், ஏசுகிறாரே என்று வருத்தப்படுகிறாய்.
அதுமட்டுமா தம்பி! ஏசுகிறார் என்கிறாயே! இது என்ன முதல் முறையாகவா உன் காதிலே விழுகிறது! அல்லது ஏசக் கிளம்பிய முதல் மனிதரா இந்தக் காமராஜர்?
{{left_margin|3em|கழகம் தொட்டிலில் இருந்த நாள்தொட்டு ஏசினர் பலர்; இவரைவிடக் கடுமையாக.}}<noinclude>
<references/></noinclude>
9idvpw06dpcts7lwntxmwmkq213serl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/134
250
639057
1929059
1927241
2026-04-30T15:10:23Z
Info-farmer
232
top space added
1929059
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|110||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
பழகிக்கொள்ளச் சொல்லுகிறாயா அண்ணா! என்று கேட்கிறாய். அதற்காகச் சொல்லவில்லை.
{{left_margin|3em|இவ்வளவு ஏசி வருகிறார்களே இவர்கள், அது நம் வளர்ச்சியைத் துளியாவது கெடுத்ததா?
இவர்களின் ஏசலை மக்கள் மதித்திருந்தால் கழக வளர்ச்சிக்கு இந்த அளவு துணை நின்றிருப்பார்களா? கழகம் பெற்றுள்ள வளர்ச்சி என்ன இலேசானதா? எத்தனை இடிகளை, தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறது! எத்தனை சாகசத்தைக் கண்டும் நிலை குலையாமல் இருந்து வருகிறது. எத்தனை எத்தனை சதிச் செயல்களைக் கண்டிருக்கிறது; சாய்த்திடமுடியாத நிலையைப் பெற்றிருக்கிறது. இதிலிருந்து தெரியவில்லையா, இவர்கள் ஏசுவது, வீண்வேலை என்பது!
மழை பெய்கிறதே என்று கவலை கொண்டு குன்று, குடை பிடித்துக் கொள்ளுமா!!}}
தம்பி! அவர்கள் ஏசுவது நம்மை எந்த விதத்திலும் பாதித்ததில்லை; பாதிக்கவில்லை; பாதிக்காது.
மேலும் தம்பி! கழகம் விடுத்திடும் அழைப்பு என்ன? எல்லோரும் பாராட்டுவார்; எங்கிருந்தும் புகழ்மொழி கிடைத்திடும்; பெற்றிட வருக! பெருமகிழ்வு கொண்டிட வருக!!—என்றா அழைக்கிறது. இல்லையே!
ஏசுவர் — பொருட்படுத்தாதீர்.
தாக்குவர் — தாங்கிக் கொள்வீர்!
சிறையில் தள்ளுவர்—அதனை அறச்சாலை எனக்கொள்வீர்.
இஃதன்றோ கழகம் விடுத்திடும் வேண்டுகோள்!
இந்த வேண்டுகோளைக் கேட்டன்றோ கிளம்பினர் பணிபுரிய ஆயிரமாயிரம் தோழர்கள்.
குத்தும் வெட்டும் கிடைத்தது—சிலருக்கு.
தடியடி கிடைத்தது—பற்பலருக்கு!
கஞ்சிக் கலையம் கிடைத்தது—பலருக்கு—சிறையினிலே!
இன்னுயிரே பறிக்கப்பட்டது—சிலருக்கு—நமது வணக்கத்துக்குரிய வீரர்க்கு.
இவ்வளவு இன்னலையும் இன்முகத்துடன் ஏற்றனர் தோழர்கள்.<noinclude>
<references/></noinclude>
h9cw3qqc9oupqbxayybnfdf1rb78emc
1929067
1929059
2026-04-30T15:49:46Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1929067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|110||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>பழகிக்கொள்ளச் சொல்லுகிறாயா அண்ணா! என்று கேட்கிறாய். அதற்காகச் சொல்லவில்லை.
{{left_margin|3em|இவ்வளவு ஏசி வருகிறார்களே இவர்கள், அது நம் வளர்ச்சியைத் துளியாவது கெடுத்ததா?
இவர்களின் ஏசலை மக்கள் மதித்திருந்தால் கழக வளர்ச்சிக்கு இந்த அளவு துணை நின்றிருப்பார்களா? கழகம் பெற்றுள்ள வளர்ச்சி என்ன இலேசானதா? எத்தனை இடிகளை, தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறது! எத்தனை சாகசத்தைக் கண்டும் நிலை குலையாமல் இருந்து வருகிறது. எத்தனை எத்தனை சதிச் செயல்களைக் கண்டிருக்கிறது; சாய்த்திடமுடியாத நிலையைப் பெற்றிருக்கிறது. இதிலிருந்து தெரியவில்லையா, இவர்கள் ஏசுவது, வீண்வேலை என்பது!
மழை பெய்கிறதே என்று கவலை கொண்டு குன்று, குடை பிடித்துக் கொள்ளுமா!!}}
தம்பி! அவர்கள் ஏசுவது நம்மை எந்த விதத்திலும் பாதித்ததில்லை; பாதிக்கவில்லை; பாதிக்காது.
மேலும் தம்பி! கழகம் விடுத்திடும் அழைப்பு என்ன? எல்லோரும் பாராட்டுவார்; எங்கிருந்தும் புகழ்மொழி கிடைத்திடும்; பெற்றிட வருக! பெருமகிழ்வு கொண்டிட வருக!!—என்றா அழைக்கிறது. இல்லையே!
ஏசுவர் — பொருட்படுத்தாதீர்.
தாக்குவர் — தாங்கிக் கொள்வீர்!
சிறையில் தள்ளுவர்—அதனை அறச்சாலை எனக்கொள்வீர்.
இஃதன்றோ கழகம் விடுத்திடும் வேண்டுகோள்!
இந்த வேண்டுகோளைக் கேட்டன்றோ கிளம்பினர் பணிபுரிய ஆயிரமாயிரம் தோழர்கள்.
குத்தும் வெட்டும் கிடைத்தது—சிலருக்கு.
தடியடி கிடைத்தது—பற்பலருக்கு!
கஞ்சிக் கலையம் கிடைத்தது—பலருக்கு—சிறையினிலே!
இன்னுயிரே பறிக்கப்பட்டது—சிலருக்கு—நமது வணக்கத்துக்குரிய வீரர்க்கு.
இவ்வளவு இன்னலையும் இன்முகத்துடன் ஏற்றனர் தோழர்கள்.<noinclude>
<references/></noinclude>
9rb1d4gc0katdu5n4386k82v5784fwo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/135
250
639058
1929081
1924007
2026-04-30T16:24:34Z
Info-farmer
232
top space added
1929081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||111}}{{rule}}</noinclude>
கண்ணிழந்தோர் உளர், அறிவாயே! காலிழந்தோர், கரமிழந்தோர் உளர், தெரியுமே உனக்கு! சொத்திழந்தோர், சுகமிழந்தோர் உளர்—பலர்—நமக்காக—நாட்டுக்காக. மக்கள், தம்பி! இதனைத்தான் கணக்கெடுத்து வைத்துள்ளனர்; எவரெவர் என்னென்ன ஏசினர் என்பது பற்றி அல்ல!
ஏசுவோர் ஏசட்டும். எமதருமைத் தோழர்களே! இருக்கின்றோம் நாங்கள் தொகைதொகையாய், ஆதரவு தந்திடவே என்கிறார் மக்கள். இஃதன்றோ உன் உளத்தில் இருந்திடவேண்டும், ஊசல் சரக்காகிப்போன ஏசல் மொழியா!!
ஏசுகின்றனர், அதனால் நமது கழக வளர்ச்சி குன்றிடுவதில்லை, உணருகிறோம்; ஆயினும் அண்ணா! எரிச்சலாக இருக்கிறதே; வருத்தமாக இருக்கிறதே என்கின்றாய்.
இத்தனை பெரிய உயரிடம் கிடைத்திருக்கிறதே காமராஜப் பெரியவருக்கு, அவர் மனம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது என்றா எண்ணிக் கொள்கிறாய்? ஏமாற்றமும் எரிச்சலும் வேதனையும் துளைக்கிறது அவர் மனத்தை; அறிவாயா?
காங்கிரசைக் கட்டுப்பாடுள்ளதாக நடத்திச் செல்வதில் வல்லவர்—இது புகழ்மாலை. பிளவுகளைத் தடுத்திடுவார், பேதம் இழித்திடுவார்—இப்படிப் பாராட்டுதல்! எந்தப் பிரச்சினையையும் எளிதாகக் தீர்த்திடுவார், கூர்த்தமதி படைத்தார்—இப்படித் திருப்புகழ்.
சரி! தம்பி! திருப்புகழ் தித்திப்பாகத்தான் இருக்கிறது; ஆனால், உண்மை நிலைமை என்ன? கேரளத்திலே காங்கிரஸ் இரண்டு துண்டு. வங்கத்திலே காங்கிரசில் பிளவு. ஒரிசா காங்கிரசில் ஒரு வெடிப்பு. பீகார் காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்க ஏற்பாடு. ராஜஸ்தானத்துக் காங்கிரசில் ரகளை. ஆந்திரக் காங்கிரசில் இரு படைவரிசைகள். உத்தரப்பிரதேசப் பிரச்சினையின் இலட்சணமோ உலகறியும்!
இவை எதனைக் காட்டுகின்றன தம்பி! காங்கிரசைத் திறமையாக நடத்திச் செல்லும் ஆற்றல் மிக்கவர் காமராஜர் என்பதனையா! இவர் பார்வை பட்டால் போதும், பிளவுகள் மூடிக்கொள்ளும் என்றார்களே, பிளவு எத்தனைப் பெரிய அளவு விரிவாகிக்கொண்டு போகிறது, பார்த்தனையா?
இவர் கூப்பிட்டுப் பேச வேண்டியதுதான், உடனே ‘குடுமிப்பிடி’ச் சண்டையிட்டுக்கொண்டோரும், கட்டித்தழுவிக்கொள்வர்; ஒன்றுபடுவர் என்றனர்.
கேரளத்துக்குப் போயே பார்த்தார்—பலித்ததா!<noinclude>
<references/></noinclude>
rj3qj1fae7a8q36cf010e1fi5kwdyk5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/136
250
639059
1929082
1927045
2026-04-30T16:24:45Z
Info-farmer
232
top space added
1929082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|112||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
இவர் கேரளம் சென்று சங்கர் என்பாரைப் பட்டத்தரசர் போலாக்கினார்! பலன்? காங்கிரசே இரு துண்டுகளாகி விட்டது. தடுத்திட முடிந்ததா? ஒற்றுமை உண்டாக்க முடிந்ததா?
இந்தப் பிளவுகளெல்லாம் எம்மை ஒன்றும் செய்துவிடாது என்று பேசலாம்; பேசுகின்றனர்; அது வீறாப்பு! ஆனால் இவருடைய திறமை காரணமாக, காங்கிரசில் பேதம் நீங்கி, பிளவு நீங்கி, ஒற்றுமை ஏற்படும் என்று கூறினார்களே, நடந்ததா என்பதுதான். இல்லை! அப்படியாயின், இவருடைய திறமை பற்றிய திருப்பல்லாண்டு பாடுவதன் பொருள்?
போகட்டும் தம்பி! கட்சியிலே ஏற்பட்டுவிடும் பிளவுகளைத் தடுத்திட முடியாமலிருக்கட்டும்; காங்கிரஸ் கட்சியின் ஒப்பற்ற தலைவர் என்கிறார்களே. ஒரு பிரச்சினையிலாவது திட்டவட்டமான கருத்து, காங்கிரசில் உள்ள மற்றவர்களை வழி நடத்திச் செல்லத்தக்க விதமான கருத்தளிக்கும் போக்கு காண்கின்றாயா?
{{left_margin|3em|இதுநாள் வரையில்—ஊரே கொதிக்கிறது ரூபாய் மதிப்புக் குறைப்பு பற்றி. இவர் அதுபற்றி ஒரு விளக்கம் கொடுத்தாரா?}}
இவருடைய ஒப்புதலின் பேரில் நடந்தேறியதா, இவரை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பிரதம மந்திரி, இதை அமுலாக்கினார்களா? அதற்கான விளக்கமாவது கிடைத்ததா!
நாணயத்தின் மதிப்பைக் குறைத்திடும் பிரச்சினை இவர் கவனிக்கத் தேவையற்ற அற்பப் பிரச்சினையா! அறிவற்றவன் கூட அவ்விதம் கூறிடானே! கருத்தளித்தாரா? இதுவரையில் காணோம்! ஏன்?
மானத்தோடு வாழ்வோம், அன்னிய நாட்டிடம் உணவுக்காக ஏந்தமாட்டோம் என்று முழக்கம் எழுப்பினார். எழுப்பிய முழக்கம் ‘பிளேட்’ ஆக்கப்பட்டுவிட்டது.
{{left_margin|3em|கப்பல் கப்பலாக உணவுப் பொருள் அமெரிக்காவில் இருந்து வந்த வண்ணம் இருக்கிறதே–என்ன மதிப்பு அளிக்கப்பட்டது. இவருடைய மானத்தோடு வாழ்வோம் என்ற முழக்கத்துக்கு? இது பற்றிய கருத்து விளக்கம் தருகிறாரா? இல்லை! ஏன்? தந்திடின் இந்திராகாந்தி சர்க்காருடன் மோதிக் கொள்ளவேண்டி நேரிடும்! அதற்கு இவர் தயாராக இல்லை! காரணம்? என்ன ஆகுமோ என்ற அச்சந்தானே!
உரத்தொழில் சம்பந்தமாக அன்னிய நாட்டுக் கம்பெனிகளுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள், அக்கிரமமாக இருப்பதாகக் கருத்தறிவித்தார். இவரை நம்பிக்கொண்டு சில தலைவர்களும்
}}<noinclude>
<references/></noinclude>
16x0qyhqerpmd21kesnvk5vajealrho
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/137
250
639060
1929083
1927046
2026-04-30T16:24:54Z
Info-farmer
232
top space added
1929083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||113}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|அந்த ஒப்பந்தங்களைக் கண்டித்தனர். ஆனால், காங்கிரஸ் சர்க்கார், இவர் பேச்சை மதித்து நடந்ததா? இல்லை! அன்னியக் கம்பெனிகளுக்குச் சலுகைகள் தந்து ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. என்ன செய்கிறார்?}}
பிரச்சினைகள் பற்றிக் கருத்தறிவிப்பதே அத்திபூத்தது போல! அப்படி அவர் அறிவித்திடும் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை; மதிப்பளிக்கப்படுவதில்லை; அவர் கூறிடும் கருத்துக்கு முற்றிலும் முரணாகக் காரியங்களைச் செய்துகொண்டு போகிறார்கள்.
ஏகப்பட்ட பணத்தைக் கொட்டி ஐந்தாண்டுத் திட்டத்தை நடத்துவது தவறு என்று கூறி, நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொகை குறைக்கப்பட்டாக வேண்டும் என்று காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்தபோதே பேசினார்.
நடந்தது என்ன? இவர் பேச்சை ஏற்றுக் கொண்டார்களா? பாரேன், நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்காக எவ்வளவு பெரிய தொகை செலவிடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள் என்பதை!
எந்தக் கருத்தை ஏற்றார்கள்? ஏத்தி ஏத்தித் தொழுகிறார்களே, எமது காமராஜர்தான் இப்போது இந்தியாவையே நடத்திச் செல்கிறார் என்று: இதுதானா அதற்கான இலட்சணம்?
{{left_margin|3em|பாராட்டுதலைப் பெறுவதோடு திருப்திப்படச் சொல்லுகிறார்கள்! பவனி வருவதிலே மகிழ்ச்சி பெறச் சொல்லுகிறார்கள்! கொள்கை—திட்டம்— நிர்வாகம் இவைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள்!}}
இந்த நிலைமை காமராஜரின் மனத்திலே எவ்வளவு வேதனையை உண்டாக்கும் என்பதனை உணர்ந்திடின், தம்பி! அவருக்கு ஏன் எரிச்சல் ஏற்படுகிறது என்பது புரிந்துவிடும்; அது புரிந்துவிட்டால், அவர் ஏசுவது அவர் தமது எரிச்சலை அடக்கிக் கொள்வதற்கே என்பதும் புரிந்திடும்.
மாஸ்கோ போனால் என்ன, மன்னார்குடி சென்றால் என்ன, அவருக்கு உள்ள எரிச்சல் தீருவதாகக் காணோம்.
நாடு பல சுற்றிவிட்டுத் திரும்புகிறார்; காலடி கீழே வைத்ததும் அவர் காதில் என்ன விழுகிறது? அமீன்சந்த்! அமீர்சந்த் என்று மக்கள் பேசிக்கொள்வது. என்ன இழவு இது இந்த அமீர்சந்த் விவகாரம் என்று கேட்கிறார்! விவரம் கூறுகிறார்கள். வேதனை குடைகிறது. வேதனை வெளியே தெரியாதிருக்க என்ன செய்ய வேண்டும்? யார் மீதாவது பாயவேண்டும். யார் மீது பாய்வார்?<noinclude>
<references/></noinclude>
b16f9nxfjj6fy4gpeuguxcl0gxkaagj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/141
250
639087
1929084
1924012
2026-04-30T16:25:50Z
Info-farmer
232
top space added
1929084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||117}}{{rule}}</noinclude>
கழகமா? எங்களுக்கு அது ஒரு பொருட்டாகுமா! என்று அலட்சியம் காட்டிப் பேசிய காலம் போய்,
கழகமா? அதை 67,000 அடி ஆழமுள்ள குழி தோண்டி அல்லவா புதைக்கப் போகிறோம் என்று பேசும் காலம் வந்திருக்கிறதே!
இது எதைக் காட்டுகிறது? கழகத்தை அலட்சியப்படுத்தியவர்கள், அது தன்னாலே உருக்குலைந்து போகும், உடைபட்டுப் போகும் என்று எண்ணினவர்கள், கழகம் சாமான்யமல்ல, அதைப்போட்டுப் புதைப்பதானாலும், சாதாரணக் குழி போதாது, மிக மிக ஆழமான குழிவேண்டும் என்று கூறிட வேண்டிய அளவுக்குக் கழகம் வளர்ந்து, அவர்களைக் கலங்கிடச் செய்கிறதே, அது தம்பி! எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சியேகூடத் தருகிறது!
காலஞ் சென்ற சத்தியமூர்த்தி சொல்லிக்கொண்டிருந்தார், ஜஸ்டிஸ் கட்சியை 5,000 அடி ஆழத்தில் குழி தோண்டிப் புதைக்கப் போகிறேன் என்று.
இன்றைய காங்கிரஸ்காரர்கள் அவரை மிஞ்சி விட்டார்கள்; குழி தோண்டுவதில்! வாயால்! 67,000 அடி ஆழக் குழியாம்.
அவ்வளவு கடினமான வேலை செய்யவேண்டும் என்றாகிவிட்டது, கழகம் பெற்றுள்ள வளர்ச்சி.
ஒன்றை மறந்துவிடுகிறார்கள்—கோபம் கண்ணை மறைக்குமாமே, அதனால் என்று எண்ணுகிறேன்—67,000 அடி ஆழக் குழிதோண்டிக் கழகத்தைப் புதைக்கத் தக்க வல்லமை உள்ளவர்களானால், இந்த வீரர்கள் கழகம் இந்த அளவு வளர்ந்ததே, என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஏன் கழக வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை!!
கழகம் இவர்கள் கண்முன்பாகத்தானே வளர்ந்தது? வேறு எங்காவது ஓரிடத்திலே கட்டப்பட்டு இங்கு திடீரென ஒருநாள் கொண்டுவந்து இறக்குமதி செய்யப்பட்டதா? இல்லையே! இவர்கள் இப்போது இருப்பது போலவே அறிவாற்றலுடன், வீராவேச உணர்ச்சியுடன் இங்கேதான் இருந்து கொண்டிருந்தார்கள், நாம் வளர்ந்தபோது. ஏன் தடுக்க முடியவில்லை, கழக வளர்ச்சியை? வளர்ச்சியைத் தடுத்திட முடிந்திருந்தால் இன்று இத்தனை ஆழமான குழி தேவைப்பட்டிருக்குமா!! பாவம்! 67,000 அடி ஆழமல்லவா தோண்டப் போவதாகச் சொல்லுகிறார்கள். ஏன் இத்தனைக் கஷ்டம்! தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது என்பார்களே, அந்தப் போக்கா?
இப்போது இருப்பது போலவே அவர்களிடம் எல்லா வல்லமையும் இருந்தது! பிரசாரம், பணபலம், அதிகார பலம், எல்லாம்! இப்போது<noinclude>
<references/></noinclude>
6xb3wg60ibyou8mm5pn8da5neg1rs42
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/142
250
639088
1929072
1924013
2026-04-30T16:10:34Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1929072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|118||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இருப்பது போலவே அப்போதும்! இவர்களே ஆளவந்தார்கள்! இருந்தும்? கழக வளர்ச்சியைத் தடுத்திட முடிந்ததா? இல்லையே! கழகம் வளர்ந்து வளர்ந்து, இவர்களுக்கு மிரட்சி அதிகமாகி, ஆழமான குழி! மிக ஆழமான குழி! என்றல்லவா அலறுகிறார்கள்.
இவர்கள் வேறு முக்கியமான வேலையாக—அமெரிக்காவைச் சீர் செய்ய— புரட்சியால் இன்னல் அடைந்த ரஷியாவுக்கு இதம் செய்யச் சென்று பல ஆண்டுகள் அங்கே தங்கிவிட்டது போலவும், இவர்கள் இங்கே இல்லாத நேரமாகப் பார்த்து நாம் வளர்ந்தது போலவும், இவர்கள் இங்கே இருந்திருந்தால் நம்மை வளரவிடாமல் அப்பொழுதே செய்துவிட்டிருக்க முடியும் என்பதைப் போலவும் எண்ணிக் கொண்டு பேசுகிறார்கள்! இவர்கள் அவ்வளவு ேபரும், இங்ேக விழித்துக் ெகாண்டும் வீறாப்புப் பேசிக்கொண்டும் இருந்து வந்த நேரத்திலேயேதான், கழகம் வளர்ந்தது.
67,000 அடி ஆழமான குழி தோண்டப் போவதாகப் பேசும் இந்த வல்லவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
வளர்ந்தால் வளரட்டும் அது நம்மை என்ன செய்யும் என்று இருந்துவிட்டர்களா என்றால் அதுவும் இல்லையே! அப்போதும், இதே விதமான பேச்சு.
{{left_margin|3em|<poem>ஒழித்துக் கட்டுவோம்
குழி தோண்டிப் புதைப்போம்
கூண்டோடு தொலைப்போம்
பூண்டோடு ஒழிப்போம்</poem>}}
என்ற முழக்கங்கள்; உருட்டல் மிரட்டல்கள்!
{{left_margin|3em|இன்றைய இந்தியக் காங்கிரஸ் தலைவர் காமராஜர் அன்று சொன்ன திருவாய்மொழி தெரியாதா! கழகத்தாருடைய கை கட்டைவிரலை வெட்டி விடுவோம் என்பதல்லவா!!
எத்தனை விதமான எதிர்ப்புகளை,
எத்தனைக் கலவரங்களை மூட்டிவிட்டனர்!
என்னென்ன விதமான வழக்குகளைத் தொடுத்தனர்;
எத்தனை தடிஅடி! சிறைவாசம்!
சதிச் செயல்களுக்குத்தான் குறைவா?
தூத்துக்குடி சாமியிலிருந்து வண்ணை பாண்டியன் வரையில் கொலை செய்யப்படவில்லையா!}}<noinclude>
<references/></noinclude>
b5a94bftzy54kgo28blxsjzfnbx7zkp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/143
250
639090
1929085
1924014
2026-04-30T16:26:06Z
Info-farmer
232
top space added
1929085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||119}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|ஒடித்த கொடிமரங்கள் கொஞ்சமா! கொளுத்திய கொடிகள் கொஞ்சமா!
இட்டுக் கட்டியதும் இருட்டடிப்பு நடத்தியதும் திறமையுடன் அல்லவா!
கழகத் தலைவர்களை ஏசிப் பேசிட, வசைமொழிகள் சாதாரணமாகவா! தனித் தரமுள்ள நாராச நடையிலல்லவா!!
பிறப்பு, வளர்ப்பு, குடும்பம், கொடி வழி என்ற எதையாவது விட்டார்களா!
மண்ணாசைக்காரன், பெண்ணாசைப் பேயன், பொன்னாசை பிடித்தோன் என்றெல்லாம் கழகத்தின் முன்னணியினரை ஏசியது கொஞ்சமா!
கூத்தாடிகள்!— என்றல்லவா இகழ்ந்தனர்—இன்று ‘கலைஞர்களை’ நாங்களும் காட்டுகிறோம் என்று பேசிடும் இந்தக் குணாளர்கள்!
எத்தனை விதவிதமான எதிர்ப்பு மாநாடுகள், ஒழிப்பு மாநாடுகளை நடத்திக் காட்டினர்!
உள்ளூர்ச் சரக்குப் போதாது என்று வெளியூர்ச் சரக்குகளை வேணுமட்டும் வரவைத்துக் கூவிக் கூவி விற்றார்களல்லவா!
கருப்புக் கொடியா! காட்டுபவன் கரத்தை ஒடி என்ற அகிம்சைப் பேச்சு வழிந்ததே!
எதைச் செய்யாமல் விட்டார்கள்!}}
எல்லாம் செய்து பார்த்து, கழகம் வளருவதைத் தடுக்க முடியவில்லை.
{{left_margin|3em|வெட்ட வெளியில் இருந்த கழகம் சட்ட சபைக்கே வந்துவிட்டது!
சட்ட சபையிலும், கழகம் அதிகாரம் பெற்ற எதிர்க்கட்சியாகிவிட்டது!}}
இந்த வளர்ச்சியைத் தடுத்திட முடியாத இதே வல்லமைசாலிகள்தாம், இப்போது 67,000 அடி ஆழமான குழி தோண்டப் போகிறார்களாம்!
நாட்டிலே சில ஆயிரம் புதுப் பணக்காரர்களை உண்டாக்கி வைத்துக் கொண்டிருப்பதால், கேட்ட பணம் கிடைக்கிறது என்ற ஒரு தைரியம் தவிர, மக்களின் மனம் மசிழ்ச்சியால் துள்ளுகிறது எமது ஆட்சியின் திறமையால், ஆகவே மக்களின் பேராதரவு எமக்கே உண்டு என்று பேசிடும் தைரியமா இன்று அவர்களுக்கு இருக்கிறது?
{{left_margin|3em|மக்கள் மனம் மகிழ்ந்திடும்படியான ஆட்சி நடத்தியிருந்தால் எதிர்க்கட்சிகள் இந்த அளவு வளர்ந்திருக்க முடியுமா!}}<noinclude>
<references/></noinclude>
f6vl6384bog5htjdft5fx9lda3rc1v3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/145
250
639092
1929086
1927163
2026-04-30T16:26:26Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1929086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||121}}{{rule}}</noinclude>திராவிட முன்னேற்றக் கழகம், மக்களிடம் வாங்கிடும் வரித்தொகை எவ்வளவு, மக்களுக்சூச் செய்திடும் வசதி எந்த அளவு, காட்டு கணக்கு என்று துணிந்து காங்கிரசைக் கேட்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், எத்தனையோ பேர் நமக்கென்ன என்றும், நம்மால் ஆகுமா என்றும் வாய் மூடிக்கிடந்திடுவதைக் கண்ட பிறகும், நமக்கு என்ன நேரிட்டாலும் சரி, நம்முடைய உள்ளத்துக்குச் சரியென்று பட்டதைச் சொல்லியாக வேண்டும் என்ற தூய்மையுடன் பணியாற்றுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், மொழிக்காக, கலை வளத்துக்காக, தொழில் முன்னேற்றத்துக்காக, அந்த முன்னேற்றம் முதலாளிகளிடம் சிக்கிவிடாமல் சமுதாயத்துக்குப் பரவுவதற்காகப் பாடுபடுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், முதலாளிகளுக்கும் காங்கிரசாட்சிக்கும் ஏற்பட்டு விட்டுள்ள எழுதாத ஒப்பந்தத்தை எடுத்துக்காட்டுகிறது.
குட்டுகளை உடைக்கிறது! கொடுமைகளை எதிர்க்கிறது! ஆட்சியில் உள்ள அக்கிரமங்களை அம்பலப்படுத்துகிறது.
அந்த எரிச்சல், காங்கிரசுக்கு நமது ஆதிக்கத்துக்குக் கழகம் உலை வைக்கிறதே என்ற எரிச்சல்.
பட்டம் உண்டு, பதவி உண்டு, பர்மிட் உண்டு, லைசென்சு உண்டு; பத்திரிகைகளில் நிறைய விளம்பரம் உண்டு, வருக! பெருக! என்று அழைத்ததும் ஓடோடி வந்து நம்மோடு கூடிக்கொண்டார்கள் பலப் பலர், இந்தக் கழகத்துக்காரர்கள் மட்டும், பசப்புக் கண்டு மயங்க மாட்டோம், பாதை தவறமாட்டோம் என்று இருக்கிறார்களே? பொதுமக்களிடம் தோழமைத் தொடர்புடன் இருந்து வருகிறார்களே, இவர்களைத் தொலைத்தாலொழிய நமது ஆதிக்கம் நிலைக்காது, நீடிக்காது என்ற உணர்ச்சி.
இதன் காரணமாகத்தான், காங்கிரசாட்சியினர் கழகத்தைப் புதைக்க வேண்டும், அதற்காக ஆழக் குழி தோண்ட வேண்டும் என்று எண்ணுகிறார்கள்—என்று பேசிக்கொள்ள மாட்டார்களா!
இது அக்கிரமம்! நமக்காக, நாட்டுக்காகப் பாடுபடும் கழகத்தை நாம் காத்திட வேண்டும், துணை நிற்கவேண்டும் என்று பொதுமக்கள் எண்ணிடத்தான் செய்வார்கள்.
மக்களுக்கு வயிறாரச் சோறு கிடைக்க வழி செய்திடுக!— என்று கேட்டிடும் கழகத்தை, ஏழை மக்களே! எலி தின்று உயிர் பிழைத்துக்<noinclude>
<references/></noinclude>
8xogyirvzcxuummiy8s0njgjcfmtspf
1929087
1929086
2026-04-30T16:26:38Z
Info-farmer
232
top space added
1929087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||121}}{{rule}}</noinclude>
திராவிட முன்னேற்றக் கழகம், மக்களிடம் வாங்கிடும் வரித்தொகை எவ்வளவு, மக்களுக்சூச் செய்திடும் வசதி எந்த அளவு, காட்டு கணக்கு என்று துணிந்து காங்கிரசைக் கேட்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், எத்தனையோ பேர் நமக்கென்ன என்றும், நம்மால் ஆகுமா என்றும் வாய் மூடிக்கிடந்திடுவதைக் கண்ட பிறகும், நமக்கு என்ன நேரிட்டாலும் சரி, நம்முடைய உள்ளத்துக்குச் சரியென்று பட்டதைச் சொல்லியாக வேண்டும் என்ற தூய்மையுடன் பணியாற்றுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், மொழிக்காக, கலை வளத்துக்காக, தொழில் முன்னேற்றத்துக்காக, அந்த முன்னேற்றம் முதலாளிகளிடம் சிக்கிவிடாமல் சமுதாயத்துக்குப் பரவுவதற்காகப் பாடுபடுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், முதலாளிகளுக்கும் காங்கிரசாட்சிக்கும் ஏற்பட்டு விட்டுள்ள எழுதாத ஒப்பந்தத்தை எடுத்துக்காட்டுகிறது.
குட்டுகளை உடைக்கிறது! கொடுமைகளை எதிர்க்கிறது! ஆட்சியில் உள்ள அக்கிரமங்களை அம்பலப்படுத்துகிறது.
அந்த எரிச்சல், காங்கிரசுக்கு நமது ஆதிக்கத்துக்குக் கழகம் உலை வைக்கிறதே என்ற எரிச்சல்.
பட்டம் உண்டு, பதவி உண்டு, பர்மிட் உண்டு, லைசென்சு உண்டு; பத்திரிகைகளில் நிறைய விளம்பரம் உண்டு, வருக! பெருக! என்று அழைத்ததும் ஓடோடி வந்து நம்மோடு கூடிக்கொண்டார்கள் பலப் பலர், இந்தக் கழகத்துக்காரர்கள் மட்டும், பசப்புக் கண்டு மயங்க மாட்டோம், பாதை தவறமாட்டோம் என்று இருக்கிறார்களே? பொதுமக்களிடம் தோழமைத் தொடர்புடன் இருந்து வருகிறார்களே, இவர்களைத் தொலைத்தாலொழிய நமது ஆதிக்கம் நிலைக்காது, நீடிக்காது என்ற உணர்ச்சி.
இதன் காரணமாகத்தான், காங்கிரசாட்சியினர் கழகத்தைப் புதைக்க வேண்டும், அதற்காக ஆழக் குழி தோண்ட வேண்டும் என்று எண்ணுகிறார்கள்—என்று பேசிக்கொள்ள மாட்டார்களா!
இது அக்கிரமம்! நமக்காக, நாட்டுக்காகப் பாடுபடும் கழகத்தை நாம் காத்திட வேண்டும், துணை நிற்கவேண்டும் என்று பொதுமக்கள் எண்ணிடத்தான் செய்வார்கள்.
மக்களுக்கு வயிறாரச் சோறு கிடைக்க வழி செய்திடுக!— என்று கேட்டிடும் கழகத்தை, ஏழை மக்களே! எலி தின்று உயிர் பிழைத்துக்<noinclude>
<references/></noinclude>
izas49ejk0uf1krejsnkoq3a1og7icy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/146
250
639093
1929073
1927164
2026-04-30T16:11:38Z
Info-farmer
232
+
1929073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|122||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
கொள்க என்று பேசிடும் காங்கிரஸ் ஒழித்திட முனைவதா! அதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா! நமக்காக வாதாடும் கழகத்தை, நம்மை வதைத்து வரும் வன்கணாளர் குழி தோண்டிப் புதைப்போம் என்று கிளம்புவதா, நாம் வாளாயிருப்பதா— என்று பொது மக்கள் எப்படி எண்ணிடாமலிருந்திட முடியும்,
காங்கிரசாட்சியினர் இப்போதுபோல இறுமாந்து பேசிய ஒவ்வொரு கட்டத்திலும், அவர்களின் முயற்சி பலன்தராமல், கழகம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்ததன் காரணமே இதுதான் — பொது மக்களின் நல்லாதரவு!!
தம்பி! அவர்கள் குழி தோண்டுகிற வேலையிலே இருக்கட்டும்—ஆழமான குழி!!
நாம், மக்களிடம் சென்று உண்மை நிலைமையை எடுத்துக் கூறிடும் பணியிலேயே நம்மை முழுக்க முழுக்க ஒப்படைத்துவிட வேண்டும்.
தங்கள் ஆதிக்கத்துக்கு உலைவைக்கிறதே கழகம் என்ற எரிச்சலில், காங்கிரசார் ஆத்திரம் கொள்ளத்தான் செய்வார்கள் சுழி சுழற்றுவார்கள், விழி பெயர்த்திடுவேன் என்பார்கள், குழி தோண்டிப் புதைப்பேன் என்பார்கள்.
பாவிப்பயல்! இன்னும் தூங்கவில்லையே என்று நள்ளிரவு கன்னம் வைத்திட வருபவன், வீட்டுக்குடையானைச் சபித்திடத்தான் செய்வான்.
சனியன் இன்னும் வெளியே போய்த் தொலைக்கவில்லையே என்று கள்ளக் காதலனுக்காக ஏங்கிடும் நாயகி கை பிசைந்து கொள்கிறாள் என்று கதையில் எழுதுகிறார்கள் அல்லவா!
அதுபோல, இவர்கள் ஓயமாட்டேன் என்கிறார்களே! விடாது எதிர்த்து வருகிறார்களே! படிப்படியாக முன்னேறுகிறார்களே! வளர்ச்சி இருந்தபடி
இருக்கிறதே!—என்று எண்ணி மனம் புழுங்குகிறார்கள், அவர்களுக்குத் தோன்றத்தான் செய்யும், கழகத்தைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்று.
அவர்களின் ஆத்திரப் பேச்சு, நமது பணி ஆற்றலுடன் நடந்து வருகிறது என்பதற்குச் சான்றளிக்கிறது!
நாம் ஓயாமல் உழைத்து வருகிறோம் என்பதுடன், மேலும் உழைத்திட உறுதியும் உற்சாகமும் இருக்கிறது என்பதை நாம் உணருவதற்கு அவர்களின் உருட்டல் மிரட்டல் பேச்சு நமக்குப் பயன்படுகிறது.<noinclude>
<references/></noinclude>
9bb6ylat8mnmcyoeo6qsz3bddgd6xiz
1929074
1929073
2026-04-30T16:11:47Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1929074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|122||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>கொள்க என்று பேசிடும் காங்கிரஸ் ஒழித்திட முனைவதா! அதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா! நமக்காக வாதாடும் கழகத்தை, நம்மை வதைத்து வரும் வன்கணாளர் குழி தோண்டிப் புதைப்போம் என்று கிளம்புவதா, நாம் வாளாயிருப்பதா— என்று பொது மக்கள் எப்படி எண்ணிடாமலிருந்திட முடியும்,
காங்கிரசாட்சியினர் இப்போதுபோல இறுமாந்து பேசிய ஒவ்வொரு கட்டத்திலும், அவர்களின் முயற்சி பலன்தராமல், கழகம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்ததன் காரணமே இதுதான் — பொது மக்களின் நல்லாதரவு!!
தம்பி! அவர்கள் குழி தோண்டுகிற வேலையிலே இருக்கட்டும்—ஆழமான குழி!!
நாம், மக்களிடம் சென்று உண்மை நிலைமையை எடுத்துக் கூறிடும் பணியிலேயே நம்மை முழுக்க முழுக்க ஒப்படைத்துவிட வேண்டும்.
தங்கள் ஆதிக்கத்துக்கு உலைவைக்கிறதே கழகம் என்ற எரிச்சலில், காங்கிரசார் ஆத்திரம் கொள்ளத்தான் செய்வார்கள் சுழி சுழற்றுவார்கள், விழி பெயர்த்திடுவேன் என்பார்கள், குழி தோண்டிப் புதைப்பேன் என்பார்கள்.
பாவிப்பயல்! இன்னும் தூங்கவில்லையே என்று நள்ளிரவு கன்னம் வைத்திட வருபவன், வீட்டுக்குடையானைச் சபித்திடத்தான் செய்வான்.
சனியன் இன்னும் வெளியே போய்த் தொலைக்கவில்லையே என்று கள்ளக் காதலனுக்காக ஏங்கிடும் நாயகி கை பிசைந்து கொள்கிறாள் என்று கதையில் எழுதுகிறார்கள் அல்லவா!
அதுபோல, இவர்கள் ஓயமாட்டேன் என்கிறார்களே! விடாது எதிர்த்து வருகிறார்களே! படிப்படியாக முன்னேறுகிறார்களே! வளர்ச்சி இருந்தபடி
இருக்கிறதே!—என்று எண்ணி மனம் புழுங்குகிறார்கள், அவர்களுக்குத் தோன்றத்தான் செய்யும், கழகத்தைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்று.
அவர்களின் ஆத்திரப் பேச்சு, நமது பணி ஆற்றலுடன் நடந்து வருகிறது என்பதற்குச் சான்றளிக்கிறது!
நாம் ஓயாமல் உழைத்து வருகிறோம் என்பதுடன், மேலும் உழைத்திட உறுதியும் உற்சாகமும் இருக்கிறது என்பதை நாம் உணருவதற்கு அவர்களின் உருட்டல் மிரட்டல் பேச்சு நமக்குப் பயன்படுகிறது.<noinclude>
<references/></noinclude>
2ve6jx43v5cysafxs5klw0e5qoq3qp4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/150
250
639097
1929076
1927168
2026-04-30T16:15:09Z
Info-farmer
232
+
1929076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|126||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
உலகம் உணரட்டும், வழிவழி வந்திடுவோர் பாடம் பெறட்டும் என்ற நோக்கத்துடன் உலக வரலாறு எனும் தமது நூலிலே எழுதி இருக்கிறார்.
நேருவின் வாரிசுகள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, தம்பி! நான் இதனை நினைவுபடுத்தவேண்டி வருகிறது! என்ன செய்வது!!
{{left_margin|3em|Ideas and economic conditions make revolutions. Foolish people in authority, blind to everything that does not fit in with their ideas, imagine that revolutions are caused by agitations. Agitators are people who are dis-contented with existing conditions and desire a change and work for it. But tens and hundreds of thousands of people do not move to action merely at the bidding of an agitator. Most people desire security above everything else, thay do not want to risk losing what they have got. But when economic conditions are such that their day to day suffering grows and life becomes almost an intolerable burden, then even the weak are prepared to take the risk.}}
நேருவின் இந்த மணிமொழியை உணர இயலாமல், கிளர்ச்சிகள் மூண்டுவிடுகின்றன—மூட்டிவிடப்படுவன அல்ல—என்பதை அறியாமல், சுட்டுத் தள்ளினால் மக்கள் சுருண்டு பிணமாகக் கீழே விழுந்தால், சமுதாயம் அடங்கிப் போய்விடும் என்று கருதிக்கொண்டு, சுட்டுத் தள்ளுகிறார்கள்.
ஆமாம்! ஐம்பது பேர் சுட்டுத்தள்ளப்பட்டார்கள்!! என்று அவருடைய ஆயுட்காலத்திலேயே இதனை விடப் பெரிய சாதனை இல்லை என்று கருதுபவர் போலப் பேசினாரல்லவா பக்தவத்சலனார்—“பாறைபோல நின்றவர்”— அந்த நிலை எதைக் காட்டுகிறது?
சுட்டுத்தள்ளிக் கிளர்ச்சியை ஒடுக்குவோம் என்று இவர்கள் கொண்டுள்ள உறுதியை.
ஆகவேதான் தம்பி! 67,000 அடி ஆழமுள்ள குழி தேவைப்படுகிறது.
கழகத்தைப் போட்டுப் புதைக்க என்று பேசினார்களே தவிர, அத்தனை ஆழமான குழி தோண்டப்பட வேண்டும் என்று அவர்கள் எண்ணுவதற்குக் காரணம், அவர்கள் குழியில் போட்டுப் புதைத்துவிட விரும்புபவை, கழகம் மட்டுமல்ல, வேறுபல உள!
{{left_margin|3em|<poem>காந்தீயம்
ஜனநாயகம்
அறநெறி
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள்,</poem>}}<noinclude>
<references/></noinclude>
h5pka3o083ffetlxr7v4nmnk7iwvmas
1929077
1929076
2026-04-30T16:15:43Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1929077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|126||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>உலகம் உணரட்டும், வழிவழி வந்திடுவோர் பாடம் பெறட்டும் என்ற நோக்கத்துடன் உலக வரலாறு எனும் தமது நூலிலே எழுதி இருக்கிறார்.
நேருவின் வாரிசுகள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, தம்பி! நான் இதனை நினைவுபடுத்தவேண்டி வருகிறது! என்ன செய்வது!!
{{left_margin|3em|Ideas and economic conditions make revolutions. Foolish people in authority, blind to everything that does not fit in with their ideas, imagine that revolutions are caused by agitations. Agitators are people who are dis-contented with existing conditions and desire a change and work for it. But tens and hundreds of thousands of people do not move to action merely at the bidding of an agitator. Most people desire security above everything else, thay do not want to risk losing what they have got. But when economic conditions are such that their day to day suffering grows and life becomes almost an intolerable burden, then even the weak are prepared to take the risk.}}
நேருவின் இந்த மணிமொழியை உணர இயலாமல், கிளர்ச்சிகள் மூண்டுவிடுகின்றன—மூட்டிவிடப்படுவன அல்ல—என்பதை அறியாமல், சுட்டுத் தள்ளினால் மக்கள் சுருண்டு பிணமாகக் கீழே விழுந்தால், சமுதாயம் அடங்கிப் போய்விடும் என்று கருதிக்கொண்டு, சுட்டுத் தள்ளுகிறார்கள்.
ஆமாம்! ஐம்பது பேர் சுட்டுத்தள்ளப்பட்டார்கள்!! என்று அவருடைய ஆயுட்காலத்திலேயே இதனை விடப் பெரிய சாதனை இல்லை என்று கருதுபவர் போலப் பேசினாரல்லவா பக்தவத்சலனார்—“பாறைபோல நின்றவர்”— அந்த நிலை எதைக் காட்டுகிறது?
சுட்டுத்தள்ளிக் கிளர்ச்சியை ஒடுக்குவோம் என்று இவர்கள் கொண்டுள்ள உறுதியை.
ஆகவேதான் தம்பி! 67,000 அடி ஆழமுள்ள குழி தேவைப்படுகிறது.
கழகத்தைப் போட்டுப் புதைக்க என்று பேசினார்களே தவிர, அத்தனை ஆழமான குழி தோண்டப்பட வேண்டும் என்று அவர்கள் எண்ணுவதற்குக் காரணம், அவர்கள் குழியில் போட்டுப் புதைத்துவிட விரும்புபவை, கழகம் மட்டுமல்ல, வேறுபல உள!
{{left_margin|3em|<poem>காந்தீயம்
ஜனநாயகம்
அறநெறி
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள்,</poem>}}<noinclude>
<references/></noinclude>
hrcz65u09ag3rjcpgo3qytrm75g8gqq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/152
250
639099
1929212
1923428
2026-05-01T11:22:53Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929212
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|5em}}
{{Right|<b>காஞ்சிக் கடிதம் : 271</b>}}
{{center|{{X-larger|<b>மலர் மணம் (ஆண்டு மலர்)</b>}}}}
{{left_margin|3em|<poem><b> கழக ஏடுகள் பயன் தரத்தக்க படைக்கலன்கள்!
சுமை அதிகம்; பாடும் அதிகம்!
நாட்டுக்கு எழில் ஆட்சிக்கு ஏற்றம் தருவது ‘காஞ்சி’!</b></poem>}}
தம்பி,
சிரித்திடும் முல்லையைப் பறித்திடும்போது, அதனைத் தன் உள்ளம் வென்ற எழிலுடையாள் ஏற்றுக் கொள்வாள், மணம் கண்டு மகிழ்வாள், எழில் எழிலுடன் சேர்ந்திடும் என்ற எண்ணம் கொள்ளாத காதலன் உண்டா?
வாளினை வடித்தெடுத்துக் கொடுத்திட உலைக் கூடத்தினில் பணி புரிவோன், இந்த வாள், வீரன் கரம் சேர்ந்து அக்கிரமத்தை வெட்டி வீழ்த்தப் பயன்படும், உரிமை காத்திடத் துணை நிற்கும் என்ற நம்பிக்கை பெற்றிடும்போது தானே, அவன் வேலைத்திறன் நேர்த்திமிக்கதாகும்?
சொல்லழகும் பொருளழகும் இழைந்துள்ள நற்கவிதை இயற்றிடுவோன் அக்கவிதையினைச் சுவைத்திட, பயன் பெற்றிட இசைந்து வந்திடுவோர் உளர் என்ற உணர்வினைப் பெற்றாலொழிய உள்ளத்திலிருந்து கவிதா சக்தி சுரந்திடுமா?
எடுத்துக்கொள்ளும் எந்தச் செயலினையும் பாராட்டி வரவேற்றிடவும், ஏற்றுப் பயன்படுத்திக் கொள்ளவும் தக்கார் உளர் என்ற எண்ணம், மேற்கொள்ளும் செயலினைச் செம்மையான தாக்கிடுமல்லவா?
தாயின் அன்பினைப் பெற்றிட வாய்ப்பற்ற குழந்தை எத்தனை அழகுடன் விளங்கியும் பயன் என்ன?
இதழ் நடாத்தப்படுகிறது, மலர் வெளியிடப்படுகிறது. ஆயினும் அவற்றினைப் பெற்றிடுவதில் மகிழ்ச்சியும், பயன் பெறுவதில் சுவையும் தேடிடுவோரின் தொகை மிகுதியாகவும், வளர்ந்தவண்ணமும் இருந்தாலொழிய, எண்ணங்களை வடித்தெடுத்து இதழிலும் மலரிலும் தந்து வருவது எற்றுக்கு என்ற ஏக்கமல்லவா மனத்தினைக் குடைந்திடும் என்பது பற்றிய எண்ணம், இவை பற்றிய நினைவினைக் கொண்டு வந்து சேர்த்தது.<noinclude></noinclude>
071fsl1if8f8sdio6htqxkqr0jpk2dx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/153
250
639100
1929213
1923429
2026-05-01T11:24:07Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929213
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||129}}{{rule}}</noinclude>ஆனால், கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் அத்தகைய கவலை குடைந்திடும் நிலையினை மூட்டி விடவில்லை. 'காஞ்சி' இதழினுக்குத் தொடர்ந்து நல்லாதரவு அளித்து வருகின்றனர். மகிழ்ச்சி நன்றி.
'காஞ்சி' இதழும், கழகக் கருத்துக்களைப் பரப்பிவரும் மற்றைய இதழ்களும், முழுக்க முழுக்கத் தம்மைக் கழகத்திடம் ஒப்படைத்து விட்டவர்களால் நடத்தப்பட்டு வருவதாகும்.
ஏழெட்டுத் துணையாசிரியர்கள், மூன்று நான்கு ஓவியர்கள், சுறுசுறுப்பு மிக்க விளம்பரத் துறைக் குழுவினர் ஆகியோர் புடைசூழ ஆசிரியர் அமர்ந்தபடி, கண்களை மூடியபடி இந்த இதழில் என்ன வண்ணம் காட்டிடலாம், எந்தச் சுவையைக் கூட்டிடலாம் என்று சிந்தித்துப் பார்த்து எழில் ஏடுகள் பலவற்றினை ஒப்பிட்டுப் பார்த்து, வனப்பு மிக்க விதமான இதழினைத் தந்திடும் வகை காண்பது என்பதெல்லாம், வேறு இதழ்களில்; கழக இதழ் நடாத்துவோர் மாலையில் மன்னார்குடி, காலையில் காட்பாடி, மறுநாள் போடி, மற்றோர் நாள் சேலம், பிறிதோர் நாள் ஈரோடு என்ற முறையில் சுற்றிச் சுழல்பவர்கள். உடலிலே அலுப்பு ஏற்படும் என்பதனை எடுத்துக்காட்ட இதனைக் கூறிடவில்லை; ஓய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு நிம்மதியாகச் சிந்தித்து இதழினுக்குச் சுவை கூட்டிடும் நிலையில் உள்ளவர்கள் அல்லர் என்பதனை எடுத்துக் காட்டத்தான்.
பிற இதழ் நடாத்துவோர் போல, இதனையே தமது முழு நேர வேலையாகவோ, முதல் வேலையாகவோ கொண்டவர்கள் அல்லர்.
கழக இதழ் நடாத்துவோர் மேற்கொண்டுள்ள பணி, ஒரு புத்தரசு காண்பது; அதற்குத் தக்கவிதமான பாசறையாகக் கழகத்தை வலிவுள்ளதாக்குவது.
அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தேடிக்கொள்ளும் படைக்கலன்களில் ஒன்று, இதழ்!
அந்தப் படைக்கலன் வண்ணம் மிக்கதாக விளங்கிடச் செய்திட வேண்டுமே என்பதிலே மட்டுமே தம்மை ஈடுபடுத்திக்கொள்ள இயலாத நிலையினர்.
ஆனால், அதேபோது அந்தப் படைக்கலன், பயன்தரதக்கதாக இருந்திட வேண்டும் என்பதிலே கண்ணுங் கருத்துமாக உள்ளவர்கள்.
இந்தநிலை காரணமாகவே இதழில் எழிலினை மிகுதியாக்கிட, கண்களைக் கவரத்தக்க வடிவம் கொடுத்திட முடிவதில்லை.<noinclude></noinclude>
c5tej8fow1hu0e4szor16e96addlk7f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/154
250
639101
1929214
1923430
2026-05-01T11:24:33Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929214
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|130||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இதழ் நடத்துவது ஒன்றை மட்டுமே மேற்கொண்டிடின், எழில் ஏடு என்று எவரும் வியந்து பாராட்டிடத்தக்க முறையினில், நமது கழகத்தோழர் எவரும் இதழ் நடாத்திடலாம். இயலாத ஒன்று அல்ல! ஆனால், நாம் மேற்கொண்டுள்ள பணியின் அளவும் தன்மையும் நம்மை ஏட்டுக்கு எழிலூட்டும் வேலையிலே மட்டுமே நாம் பிணைந்துவிட இடம் தருவதில்லை.
இந்த நிலையிலும், கூடுமான வரையில், இதழிலே பொலிவு விளங்கிடச் செய்வதில், இளங்கோவன் ஈடுபட்டு, ‘காஞ்சி’ இதழினுக்கு ஒரு கவர்ச்சி கிடைத்திடச் செய்து வருவதனைப் பலர் பாராட்டிடக் கேட்டு மகிழ்ச்சிக் கொள்கின்றேன்.
‘காஞ்சி’ இதழின் இந்த இரண்டாம் ஆண்டுமலர், எழில் மிகு வடிவம் பெற்றிட முனைந்து பணியாற்றி அனைவருக்கும் அகமகிழ்ச்சி அளித்திடுவதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருக்கும் நிலையினைக் காண்கின்றீர்கள்.
மலரில், இடம்பெற என்னிடமிருந்து கட்டுரைகளைப் பெறுவதென்பதே ஒரு தனிக்கலை! சற்றுக் கடினமான கலையுங்கூட!
கட்டுரைகளை — அதிலும் மலருக்கு என்று தனித்தன்மை வாய்ந்த கட்டுரைகளை — எழுதிட எனக்குக் கிடைக்கும் நேரமே, நள்ளிரவுக்கும் விடிவதற்கும் உள்ள நேரம் — அதிலேயும் கழகத் தோழர்கள் தங்கள் பிரச்சினைகளுடன் வாராதிருந்திடின்.
ஆனால் இந்த நிலையிலும் இதழ் மூலம் என் உடன் பிறந்தாருடன் தொடர்பு கொள்வதிலே எனக்குள்ள பேரார்வம், என்னை எப்படியோ பணிபுரியச் செய்கிறது.
ஒவ்வொன்றையும் கூறிவிட வேண்டும், கூறிடும் ஒவ்வொன்றும் முழு அளவினதாக இருக்கவேண்டும் என்ற துடிப்பு எனக்கு.
கூறித் தீர வேண்டியவைகளோ மிக அதிகம் அளவில்; அந்த அளவு வளர்ந்து கொண்டும் வருகிறது.
உலக நடவடிக்கைகளைப் பற்றி, உள்ளத்து எழும் உணர்ச்சிகளைப்பற்றி, ஊராள்வோர் போக்கு பற்றி, அதனை மாற்றியாக வேண்டிய முறை பற்றி, கூறிட ஆயிரம் உள.
பிரச்சினைகள் கூவிக் கூவி அழைக்கின்றன.
எந்தக் கருத்துக்கும் இனிமை சேர்த்திட, நான் உளேன் காண்க! என்று தமிழ் இலக்கியம் அழைக்கிறது.<noinclude></noinclude>
l57grzyuzj058xb42gh3vne1xjz1erq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/155
250
639102
1929215
1923431
2026-05-01T11:24:57Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929215
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||131}}{{rule}}</noinclude>ஆதிக்கத்தை எதிர்த்திடும் ஆற்றலை மக்களிடம் எழச் செய்திட வேறு எதுவும் செய்திட வேண்டாம், நான் உள்ளடக்கி வைத்துக் கொண்டுள்ள கருத்தோவியங்களைப் பார், அவைகளைப் பக்குவப்படுத்தித் தந்திடு, அது போதும் என்று வரலாற்றுச் சுவடி கூறுகிறது.
கூற வேண்டியதற்கு வண்ணம் தேவையா, நல்வடிவம் தேவையா, நாடக வடிவினில் கொடுத்திடு, படிப்போர் உள்ளத்தைத் தொடும் என்று கூறுகிறது ஒரு குரல்!
கதை வடிவம் கொடு, எந்தக் கருத்தும் எளிதாகிவிடும், இனிப்பளித்திடும், இதயம் சென்று தாக்கிடும் என்று கூறுகிறது ஒரு குரல்!
ஒன்றல்ல இரண்டல்ல, பலப்பல உள, எனக்கு ஆவலூட்டுபவை,
ஆனால், நானோ கூறவேண்டியகளைக் கூற வேண்டிய முறையில் கூறியிருக்கிறோம் என்ற பெருமிதம் கொண்டிட முடியவில்லை; முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று மட்டுமே கூறிட முடிகிறது. ஆனால், அந்த நிலையே ஓர் தனித்தன்மை வாய்ந்த மகிழ்ச்சியினைத் தருகிறது. காரணம், வடிவம் வண்ணம் எந்தத் தரத்தில் உளது என்பது பற்றி அதிகம் பொருட்படுத்தாமல், நமக்குத் தேவைப்படுவனவற்றினை, நம்முடைய தோழமையிலே மகிழ்ச்சி தந்திடும் அண்ணன் தருகின்றான் என்ற பற்றுடன், இதழினை வரவேற்றிடும் ஆயிரமாயிரம் தோழர்கள் உளர் என்பதுதான்.
‘காஞ்சி’ இரண்டாம் ஆண்டு மலரும் அதேவிதமான வரவேற்பினைப் பெற்றிடும் என்பதனை உணருகின்றேன்; மகிழ்ச்சி கொள்கின்றேன்.
இந்த மலரில் நெடுங்கதைகள் என்று சொல்லத்தக்க அமைப்புடன், இரண்டு கருத்தோவியங்களைத் தந்துள்ளேன்; இரும்பு முள்வேலி, வண்டிக்காரன் மகன், கழகத் தோழர்களின் நன்மதிப்பினைப் பெற்றுள்ள பலர் தந்துள்ள கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மலரில் இடம் பெற்றுள்ளன.
இவைகளிலே ஒன்றுகூட, படித்துப் பொழுது ஓட்ட அல்ல! ஒவ்வொன்றும் ஒரு பிரச்சினையை விளக்கிட! இந்தத் தனித்தன்மை இதழ்களை மட்டும் நடத்திடுவோர் கொண்டிடவோ, தந்திடவோ முடியாது; அவர்கட்கு அந்த முறை, தேவையுமில்லை.
எடுத்துக்காட்டுக்காக — எரிச்சல் மூட்டவேண்டும் என்பதற்காக அல்ல — ஒன்று கூறுகின்றேன்: இன்று காங்கிரசாட்சியின் போக்கையும், ஒவ்வொரு நடவடிக்கையையும், கண்டிப்பதில், கேலி செய்வதில், இதழ்கள் பலவும் ஈடுபட்டுள்ளன; ஆர்வத்துடன்.<noinclude></noinclude>
67mree8dni85fpxwo8wajqa98glu2ho
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/156
250
639103
1929216
1923432
2026-05-01T11:25:23Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929216
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|132||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து அன்றாட நிர்வாகத்திலே நெளியும் ஊழல்கள் வரையில், ஆளுங்கட்சிக்குள் நெளியும் அலங்கோலங்கள் உட்பட கண்டிக்கப்படுகின்றன, இதழ்கள் பலவற்றாலும்.
ஆனால், தாம் வலியுறுத்தும் பிரச்சினைகள், அளித்திடும் விளக்கங்கள், தந்திடும் அறிவுரைகள், விடுத்திடும் எச்சரிக்கைகள், துளியேனும், ஆட்சியின் போக்கை மாற்றிடுவதில் வெற்றி தந்துள்ளனவா என்ற கணக்குப் பார்க்கின்றனரா, இதழ் நடாத்துவோர் என்றால் இல்லை; வேறு கணக்குத்தான் பார்த்துக் கொள்கின்றனர்.
கண்டனத்தைக் கொட்டுகின்றனர், காரணங்களை அடுக்கிக் காட்டுகின்றனர், வாதங்களைத் திறமையாகச் செய்கின்றனர். ஆனால், வழக்கிலே வெற்றி கிட்டிற்றா என்பது பற்றி மட்டும் பார்த்திட முனைவதில்லை. ஏன்? அவர்கள் இதழ் நடாத்துகிறார்கள்; ஆட்சியின் அக்கிரமத்தை ஒழித்திடும் இயக்கம் நடத்தவில்லை. அவர்களிலே சிலர் தமது திறமையை விளக்குகிறார்கள், தீமையை ஒழித்திடும் செயலில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளாமலேயே! அவர்கள் பிரச்சனைகளைப் பற்றி நிம்மதியாகச் சிந்திக்கவும், நேர்த்தியாக விளக்கிடவும் தகுதி பெற்றவர்கள்; நிலைமையை மாற்றிட வேண்டும் என்ற மனத்திண்மை கொள்பவர்கள் அல்லர்.
கழக ஏடுகள் அவ்விதமானவை அல்ல.
அந்த ஏடுகள், கழகம் பெற்றுள்ள படைக்கலன்கள்.
கழகமோ, ஆட்சியின் அக்கிரமத்தை ஒழித்திட அறப்போர் மேற்கொண்டுள்ள பாசறை.
ஆகவேதான் கழக ஏடுகளில் பிரச்சினைகள் விளக்கப்படுவது மட்டுமல்ல, சிக்கல்கள் போக்கிட வழி கூறப்படுகிறது; அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டப்படுகின்றன; குறிக்கோள் எடுத்துக்காட்டப்படுகிறது.
ஆக, நல்லாட்சி காணவேண்டும் என்பதற்கான ஆர்வம் கொண்டோர் எவரும்; அதற்கான இயக்கம் அளித்திடும் இதழ்களை, ஏந்தித் தீர வேண்டிய படைக்கலன் என்று கொண்டிட வேண்டும். கழக இதழ்கள் மூலம் பெற்றிடும் பலன், இதனால் தனித்தன்மை வாய்ந்ததாகிறது.
எந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும், அது குறித்து சர்க்கார் மேற்கொண்ட போக்கினைக் கண்டிக்கும் அதே இதழ்கள், சூடு தணிந்ததும், வேறு திசையிலே மக்களின் கவனத்தைத் திருப்பிவிட்டு விடுவதிலே முனைவதனைக் காணலாம்.<noinclude></noinclude>
2gfok0x7es4ynklc0vmh5ftymap1aak
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/157
250
639105
1929218
1923433
2026-05-01T11:26:05Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929218
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||133}}{{rule}}</noinclude>அதனைவிடத் துணிவாகச் சில இதழ்கள், கண்டனம் வெளியிட்டுவிட்டு, சின்னாட்களுக்குப் பிறகு 'கனம்'கள் தந்திடும் கருத்துக்களை அவை முன்னம் தாம் வெளியிட்ட கண்டனத்துக்கு முற்றிலும் ஒத்து வராது என்று தெரிந்திருந்தும் — வெளியிட்டு பிரச்சினையை மடியச் செய்து விடுகின்றன.
இந்த இதழ்கள் மட்டும், அறப்போர் மனப்போக்குடன், நல்லாட்சி கண்டாக வேண்டும் என்ற துடிப்புடன் பணிபுரிந்திடின், ஜனநாயகம் எவ்வளவோ அளவு செம்மைப்பட்டிருந்திருக்கும். ஆனால், அந்த முறையில் அவைகள் வேலை செய்யவில்லை.
அதனால் கழக இதழ்கள், வசதியும் வாய்ப்பும், வல்லமையும் அனுபவமும் கொண்ட மற்ற இதழ்கள் செய்திருக்கக்கூடிய — ஆனால் செய்யாது விட்டுவிட்டுள்ள — வேலைகளையும் சேர்த்துச் செய்திட வேண்டி இருக்கிறது. சுமை அதிகம்! ஆகவே பாடு அதிகமாகிறது.
நீண்ட பழங்காலந் தொட்டே — பணம் — பதவி — எனும் எதன் காரணமாக ஏற்படுவதாயினும் — செல்வாக்குக் கொண்டவர்களின் சீற்றத்துக்கு அஞ்சுவதும், புன்னகைக்கு விரும்புவதும், நம் நாட்டிலே இயல்பு ஆக்கப்பட்டு விட்டிருக்கிறது.
மந்தம், நிதானம் ஆக்கப்பட்டுப் பாராட்டப்படுவதும், கஞ்சத்தனத்தை சிக்கனம் என்று புகழ்வதும், துடுக்குத்தனத்தை அஞ்சாமை என்று கூறிப் பாராட்டுவதும், களியாட்டத்தில் ஈடுபாடு இருந்திடின் அதனைக் கலை ஆர்வம் என்றும், எவரையும் மதித்துக் கலந்து பேசிடாத போக்கை, சுயசிந்தனை என்றும், அகம்பாவத்தைக் கெம்பீரம் என்றும் கூறிப் பாராட்டுவோர் இருப்பதனைக் காண்கின்றாய்.
இந்தி ஆதிக்கப் பிரச்சினை பற்றித் தமிழக ஏடுகள் காட்டிய ஆர்வமும், தொடுத்த கண்டனமும் கொஞ்சம் அல்ல.
{{left_margin|3em|இன்று வரையில் இந்த இதழ்கள் கேட்டுக் கொண்ட அளவிலே கூட ஆட்சி மொழிச் சட்டம் திருத்தப்படவில்லை.}}
{{left_margin|3em|<poem>என்ன செய்கின்றன இந்த இதழ்கள்?
அதனையும் எழுதுகின்றன!
எழுதிவிட்டு?
எழுதுகின்றன!
அவ்வளவுதான்!!</poem>}}
ஜனநாயகம் வலிவு பெறவேண்டுமானால் என்ன செய்திருக்க வேண்டும்? தட்டாமல் தயங்காமல் இந்த இதழ்கள், மக்களிடம் கூறவேண்டும். இந்தத் தேர்தலில், காங்கிரசுக்கு ஓட்டுப் போடா<noinclude></noinclude>
61w9ar2swwfqqql9eh32t78veu284xy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/158
250
639106
1929220
1923435
2026-05-01T11:29:52Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929220
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|134||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>தீர்கள்! இந்தி ஆதிக்க நோக்கத்துடனேயே இந்த ஆட்சி இருந்து வருகிறது. எமது வேண்டுகோட்களுக்கு எள்ளளவு மதிப்பும் தரவில்லை. இது அரசியல் அகம்பாவம். இந்த அகம்பாவம், சர்வாதிகாரத்திற்குத்தான் நாட்டை இழுத்துச் செல்லும். ஆகவே, நாட்டினரே! இந்த காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று எழுத வேண்டும்.
{{left_margin|3em|எழுதுகின்றனவா?
இல்லை! ஏன்?
அவை, அக்கிரமத்தை ஒழித்தாக வேண்டும் என்பதற்காக அமைந்துள்ள படைக்கலன்கள் அல்ல! வண்ணம், வடிவம் பாரீர்! என்று கூறிடும், ஏடுகள்!!}}
எனவேதான் தம்பி! நான் மிக அதிகமாகவே வலியுறுத்திக் கொண்டு வருகிறேன், நல்லாட்சி காணவேண்டும் என்பதிலே நாட்டம் உள்ளோர், அந்த நோக்கத்துக்க்காகவே ஆக்கப்பட்டுள்ள படைக்கலன் போன்ற கழக ஏடுகளைப் பெரிய அளவில் ஆதரிக்க வேண்டும் என்பதனை.
{{left_margin|3em|வானவில்லின் வண்ணத்தைக் கண்டு வியந்திடலாம்; ஆனால், ஓவியம் தீட்டிட வண்ணக் கலவை நாம் தயாரித்துக் கொண்டாக வேண்டும். வானவில்லில் காணப்படும் வண்ணத்தை வழித்தெடுத்துக் கொள்ள முடியாது.}}
கழக ஏடுகளின் தனித்தன்மை எவ்வளவுக் கெவ்வளவு அதிக அளவில் உணரப்படுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு வேகம் நமது பயணத்திற்குக் கிடைக்கும்.
இந்தப் பணி சிறப்படைய வேண்டுமெனில், பறித்தெடுத்த சிரித்திடும் முல்லையைப் பெற்றுச் சூடிக்கொள்ள எழில் மங்கை இருந்திடவேண்டும் என்பது போல், வடித்தெடுத்த வாளினைக் கரம் கொண்டு களம் சென்றிடத் தகுதி மிகு வீரன் கிடைத்திட வேண்டும் என்பதுபோல, கழக ஏடுகளைத் தக்க ஆதரவு கொடுத்து வளர்ந்திடச் செய்வதுடன், பயன்படுத்திக் கொள்ளும் பக்குவம் உணர்ந்த பல்லோர் தேவைப்படுகின்றனர்.
அந்தப் பல்லோர், 'காஞ்சி' இதழினுக்கு ஊக்கமளித்து வருகின்றனர், தொடர்ந்து; தோழமையுடன். அவர்கட்கு நன்றி கூறிக் கொள்வதிலே மகிழ்ச்சி பெறுகின்றேன்.
'காஞ்சி' இதழுடன் தம்பி! உனக்கு ஏற்பட்டுள்ள அன்புத் தொடர்பு தெம்பு ஊட்டுவது மட்டுமல்ல, இதழின் எதிர்காலத்திற்கான ஒளியும் தந்திடுகின்றது.
போர்டில்லன் எனும் ஆங்கிலக் கவிஞன் கூறியதனை நினைவிற் கொள்ளுகிறேன்:<noinclude></noinclude>
9uy3alv99oxvpurwxdbkje6bcv4397f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/159
250
639107
1929221
1927243
2026-05-01T11:30:28Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929221
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||135}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>இரவுக்கு ஆயிரம் கண்கள்,
ஆனால், பகலுக்கு ஒன்றே!
ஆயினும், சூரியன் மறைந்தால்
உலகத்தில் ஒளி இல்லையே!
அறிவுக்கு ஆயிரம் கண்கள்
ஆனால், நெஞ்சுக்கு ஒன்றே!
ஆயினும், அன்பு மறைந்தால்
வாழ்வில் ஒளி இல்லையே!</poem>}}
முத்தமிழும் முத்தும் முழங்கிடும் திருநாடு நம் நாடு. கத்தும் கடல் அடக்கிக் களம் செலுத்திக் கடாரம் சென்றோர் நம் இனத்தார். நாமணக்கப் பாப்பாடி நற்றமிழை நல்லவையைப் பாமணக்கச் செய்ய வந்த பாவலர்கள் தேனொத்த தீந்தமிழைத் தந்திடும் திருநாடு, நம் நாடு. எனினும்...?
ஓர் ஏக்கம் — ஓர் பெருமூச்சு — ஓர் குமுறல் அன்றோ, அந்த 'எனினும்' என்பதுடன் பிறந்திடக் காண்கிறோம். அந்த ஏக்கம் போக்கிட, பெரு மூச்சு நின்று ஓர் புன்னகை மலர்ந்திடக் குமுறல் அகன்று மனத்திலே ஓர் நிம்மதி எழுந்திட, எடுத்துக்கொள்ளப்படும் இணையற்ற முயற்சியில், தனது பங்கினைச் செலுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது 'காஞ்சி'.
தம்பியாம் நீ திரட்டித் தந்திடும் பேராதரவே, 'காஞ்சி' இதழின் பணி செம்மையுடையதாகிடச் செய்திடும்.
'காஞ்சி' நடாத்திடும் இளங்கோவனும், உடனிருந்து பணியாற்றும் முத்துராமனும், சுந்தரேசனும் அவ்வப்போது கதை, கவிதை, கட்டுரை வழங்கிடும் நண்பர்களும், ஓவியம் தீட்டித் தந்திடுவோரும், இதழின் எழிலும் பயனும் மிகுந்திட வேண்டுமென விழைகின்றனர்.
எந்த எழிலும் தம்பி! உன் கரம் தந்திடும் எழிலுக்கு நிகராகாதன்றோ! இதோ என்னிடம்! என்னிடமுந்தான்!! – என்று கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் 'காஞ்சி'யைக் கரத்தில் கொண்டு கூறிடுவதைக் காட்டிலும் இனிய இசை வேறு எது இருக்க முடியும் — என் செவிக்கு!
அந்த மகிழ்ச்சியினை அளித்துவரும் மாண்புக்கு நன்றி கூறி, 'மலர்' கண்டிடுவாய், மணம் நுகர்ந்திடுவாய் என்று அழைத்துத் தருகின்றேன், நாட்டுக்கு எழிலும் ஆட்சிக்கு ஏற்றமும் தேடித் தந்திடும் முயற்சியினை மேற்கொண்டுள்ள 'காஞ்சி' இதழின், இரண்டாம் ஆண்டு மலரினை.
{{rh|<br>11.9.66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
ovp1d6mquwxjztmst3yei0bf04o9w7b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/160
250
639108
1929222
1923438
2026-05-01T11:31:06Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929222
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|10em}}
{{Right|<b>காஞ்சிக் கடிதம்: 272</b>}}
{{Right|{{X-larger|<b>தீமிதித் திருவிழா!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>★ பிரிவினை கேட்போர்க்குத் தேர்தலில் நிற்க இடமில்லையாம்!
★ கோலோச்சிகளின் குறுக்கு வழிச் சட்டம்!
★ உதய சூரியன் நுழைவதைத் தடுத்திடச் சூழ்ச்சி!
★ குட்டு உடைந்தது! திட்டம் அழிந்தது! ஜனநாயகம் பிழைத்தது!</b></poem>}}
தம்பி!
அறிவூர் அறிவானந்தர் சொன்ன கதை இது.
இதிலே, மெய்யம்மை கருத்தப்பன், பவுனாம்பாள் வலைவிரித்தான், கோட்டையூரான் கோலெடுத்தான், வாக்களிப்பார் தெளிவப்பன், நோட்டூரான், இருட்டூரான் என்போர் உளர்.
உதய சூரியன் கோட்டையூர் நுழைவதைத் தடுத்திடச் சூழ்ச்சி நடத்தப்படுவதும். அது முறியடிக்கப்படுவதும் கதையில் விளக்கப்பட்டிருக்கிறது.
மெய்யம்மையிடம் பவுனாம்பாள் தூபம் போட—வருகிற கட்டத்துடன் கதை துவங்குகிறது.
{{c|<b>மெய்யம்மை இல்லம்</b>}}
போகத்தான் போறேன், போகத்தான் போறேன்னு சொல்லிக் கொண்டே இருந்தாயே பொழுதுக்கும்; தலையே போறதானாலும் போகாம இருக்கப் போறதில்லே தீமிதிக்கற திருவிழாவுக்குன்னு; போகல்லியா, அமர்க்களமா நடக்குதாமே ஆட்சியூர் தடியெடுத்தான் கோயிலிலே; தீமிதிக்கிற திருவிழா.
போகணும்னு கொள்ளை ஆசைதான். தீமிதிக்கிற திருவிழாவோட வேடிக்கை பார்க்கமட்டுமில்ல, தீ மிதிக்கறதுக்கே ஆசைதான்...
தீ மிதிக்கிறதுக்கா? அடீ ஆத்தே! கால் புண்ணாயிடுமே கண்டவங்க தீ மிதிச்சா...!
மிதிக்கிறவங்க காலெல்லாம் என்ன தீஞ்சா போகுது...
அவங்க வேண்டுதலைச் செய்து கொண்டவங்க—விரதம் இருக்கிறவங்க — அவங்களைத் தீ ஒண்ணும் செய்துடாதாம்.<noinclude></noinclude>
49t91jddocg2r57gueaf3gmog95lu3y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/161
250
639109
1929223
1923440
2026-05-01T11:31:36Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929223
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||137}}{{rule}}</noinclude>
எனக்கு மட்டும் என்னவாம்? நானுந்தான், தீ மிதிக்கறதுன்னு தீர்மானிச்சி வைச்சிருக்கறேன்.
பயம் இல்லையா, உனக்கு?... நெஜமாச் சொல்லு, தீயிலே இறங்கத் துணிவு இருக்குதா?
இருக்கறதாலேதான், சொல்றேன் தீ மிதிச்சே காட்டப் போறேன்னு....
தீர்மானம் செய்து கொண்டிருந்தாச் செய்யத்தான் வேணும்; செய்வதாச் சொல்லி விட்டுச் செய்யாமேப்போனாத்தான், ஏகப்பட்ட பாபமாம், எல்லம்மன் கோயில் பூசாரி ஏழெட்டு நாளைக்கு முன்னாலே சொன்னாரு...
காலையிலே சொன்னாரா, மாலையிலே சொன்னாரா அந்தப் பேச்சு?
அதென்ன என்னமோ ஒரு தினுசாக் கேட்கறே, காலை வேளையிலா, மாலையிலான்னு ...?
காரணத்தோடுதான் கேட்கறேன். அவரோட பேச்சு பொழுதுவிடிஞ்சாப் போச்சி! புரியல்லையா! அட அவன் மொடாக் குடியன்—போதையிலே பேசினானா, நிதானத்தோட இருந்து பேசினான்னுதான் கேட்கிறேன்.
நீ ஒரு குறும்பு! பூஜாரி, நல்ல கட்டுகட்டா விபூதி பூசிக்கிட்டு, குங்குமம் அப்பிக்கிட்டு, சுத்தமா இருக்கறப்போதான். பேசினாரு. நீ சொல்ற மாதிரியிலே இல்லே. அது கிடக்குது; பொறப்படுறதுன்னா பொழுதோட கிளம்பு.
அதைப் பத்தித் தான் யோசிக்கறேன்...
அஞ்சாறு கல் தொலைவு நடக்க வேணுமே, கால் வலிக்குமேன்னு கவலை இருக்கும்...
அந்தக் கவலை கிடையாது—நான் என்ன, மேனா மினுக்கி வாழ்வு நடத்திக்கிட்டா இருக்கறேன், நடந்தா கால் கடுக்க? காடு மேடு சுத்தி உரம் ஏறினதுதான் காலு... ஆனால்...
போறதுக்குள்ளே இருட்டாயிடுமே, அதை எண்ணிப் பயப்படறயா...
அட, அந்தப் பயம் எல்லாம் இல்லை போ! நான் என்ன, கழுத்திலே தொங்கத் தொங்கப் போட்டுக் கிட்டா இருக்கறேன், தங்கச் செயினு உள்ளது, மூக்குத்தி அதுவும் பாட்டி போட்டுக் கிட்டு இருந்தது—பழக—முழுசா பத்து ரூபா கூடப் போவாது.<noinclude></noinclude>
nai26guhmhq6q0p42kqgbmn27zznktd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/162
250
639110
1929224
1923441
2026-05-01T11:31:58Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|138||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வேறே என்ன காரணம், தயக்கத்துக்கு...?
அதென்னடி அப்படிக் கேட்டு விட்டே... நான் என்ன ஒண்டிக்கட்டையா, நினைச்ச உடனே பொறப்பட வீடுன்னு ஒண்னு இல்லையா, அதிலே தட்டு முட்டுச் சாமானு ஏதோ கொஞ்சம் இல்லையா? கொழந்தை இருக்குது, தத்தித் தத்தி நடக்கற வயசு. அதை என்னா செய்யறது...
கொழந்தைக்கு என்னா... வீட்டிலே இருக்குது; வயத்துக்குப் போதுமானது போட்டுவிட்டா... பங்காளி வீட்டிலே பார்த்துக் கொள்ள மாட்டாங்களா...?
நல்லாச் சொன்னயே ஒரு பேச்சு; நண்டு சுட்டு நரியைக் காவல் வைக்கற மாதிரி, என் கொழந்தைக்குக் காவலு, என்னோட பங்காளிகளா? அது போதுமே தலைக்குத் தீம்பு.
உன்னோட கொழந்தையை, நீ, தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போய்த் திரும்பற வரைக்கும், பார்த்துக் கொள்ளவா மாட்டாங்க உன்னோட பங்காளிங்க...?
விவரம் தெரியாமப் பேசறே. அந்தப் பங்காளிங்க—என் கொழந்தை பொறந்ததிலே இருந்து, சபிச்சுக் கொட்டிகிட்டு இருப்பவங்களாச்சே–உனக்குத் தெரியாதா? விளக்கேத்திக் கும்பிட்டாங்க, கொழந்தை மாந்தத்திலே போயிடாதா, மாரிக்குப் பலியாயிடா தான்னு எல்லாம்...
செச்சே! கொழந்தைன்னா கொடியவங்களெல்லாம் கூடக் கொண்டாடு வாங்கன்னு பெரியவங்க சொல்லுவாங்களே...
இது, எல்லாக் கொழந்தையும் போல இல்லா, அதைத் தெரிஞ்சுக்கோ முதலிலே. இது அரசாளப் பிறந்தது, ஆமாம். பூவாகிக் காயாகிக் கனியாக வேணும். அதைப் பாதுகாத்து, வளரச் செய்தா, நாங்க இழந்து விட்ட செல்வத்தை மீட்டுக் கொண்டுவந்த எங்களோட, குலம் விளங்க வழி செய்து வைக்கும், அப்பேற்பட்ட கொழந்தை இது.
இருக்கட்டும். அதனாலே என்ன? பங்காளிங்க என்ன அதைக் கடிச்சித் தின்னுப் போடுவாங்களா? கையைக் காலை ஒடிச்சீப் போடுவாங்களா...
கால் அரைக்கு வித்துப் போடுவாங்க, வெளியூரானுக்கு காணாமப் போயிட்டுது, தேடாத இடமில்லே, சுத்தாத தெருவு இல்லே; கொழந்தையைக் காணோம்னு நீலிக் கண்ணீர் வடிச்சி, கதையை முடிச்சிடுவாங்க.
பைத்தியம் உனக்கு; கொழந்தையைக் கொடுமை செய்ய யாருக்கும் மனசு வராது...<noinclude></noinclude>
fgkr7v1mkxbe2g2rdvq6ywsspzfkbci
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/163
250
639112
1929226
1923443
2026-05-01T11:32:41Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||139}}{{rule}}</noinclude>
அப்படியா சொல்றே?..... நெஜமா, நம்பிக்கையோடவா சொல்றே...
சத்யப் பிரமாணமாச் சொல்றேன், கொழந்தைக்கு ஒரு கெடுதியும் வராது. நான் பார்த்துக் கொள்றேன்; நீ பயமில்லாமல் போய் வா.
உன்னோட தைரியத்திலேதான், போக முடிவு செய்யறேன். கொழந்தைக்கு ஒரு கெடுதலும் வராதபடி பார்த்துக் கொள்ளு. தீ மிதிக்கிற திருவிழா முடிஞ்சி, நான் வீடு திரும்ப, முடிய மணி நாலு ஆகுதோ அஞ்சு ஆகுதோ, தெரியாது...
அப்ப, உன்னோட வீட்டுக்காரரும் அண்ணாவும் வந்ததும் கிளம்பப் போறயா...
ஆமாம்; அவரும் வருவாரேல்லோ...
ஆமாம், குடும்பத்தோட போனாத்தானே, பூஜை பலன் கொடுக்கும்..
நீ மட்டும் என்ன, நாங்களும் தான் வரப் போறோம்னு அவங்களும் சொல்லிக்கிட்டுத்தான் இருக்கறாங்க. நான் மட்டும் பொறப்பட்டா, போய்விட்டுவான்னா சொல்வாங்க—
எல்லோருந்தான் கிளம்புவாங்க.... நான், நீ பொறப்படறப்போ, வந்து பார்க்கறேன்; வழி அனுப்பி வைக்கறேன். உனக்குத்தான் தெரியுமே, நான் தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போற பழக்கத்தை நிறுத்திப் போட்டது.
பவுனாம்பாள் மெய்யம்மையுடன் பேசிவிட்டுச் சென்றான பிறகு, மெய்யம்மையின் கணவன் கருத்தப்பன் வீடுவர, நடந்த உரையாடலை மனைவி கூறுகிறாள்.
கருத்தப்பன் எதனையும் ஆராய்ந்து பார்த்திடும் இயல்பினன்.
தீ மிதிக்கும் திருவிழாவுக்குப் போகவேண்டும் என்று ஏன் பவுனாம்பாள் தூண்டிவிட முனைந்தாள் என்பது குறித்துச் சிந்திக்கலானான். மெய்யம்மையுடன் அது பற்றிப் பேசிடலானான்.
பவுனாம்பாளா சொன்னாங்கறே, தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போய்வரச் சொல்லி...
ஆமா, அவதான், சொன்னா, தீமிக்கிற திருவிழா வரட்டும், போகத் தான் போறேன், போகத்தான் போறேன்னு பேசிக்கிட்டே இருக்கிறாயே, ஆட்சியூர் தடி எடுத்தான் கோயில் திருவிழாவுக்குப் போகலியாண்ணு
அட, இது அதிசயமா இருக்குது, புள்ளே! பவுனாம்பா வாயாலே, தீமிதிக்கிற திருவிழா பத்திப் பெருமையாச் சொல்றது.... பவுனாம்பாவும் வருதா உன் கூட...<noinclude></noinclude>
s8mnjjs38x77x1vm60b1ndmkkceldty
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/164
250
639113
1929229
1923444
2026-05-01T11:33:39Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929229
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|140||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
இல்லே, இல்லே, அதெப்படி வருவா, அவதான், தீ மிதிக்கிற வழக்கத்தை விட்டுவிட்டதாச் சொல்லியாச்சே...
அதைத்தான் சொல்றேன்; தீமிதிக்கிறது பைத்தியக்காரத்தனம், அதாலே ஒரு பலனும் இல்லேன்னு ஊர் மூச்சூடும் பேசிக்கிட்டு இருக்கிற பவுனாம்பா, உன்னை ஏன் தூண்டவேணும், தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போகச் சொல்லி —
அவபேர்லே குத்தம் கண்டு பிடிக்கறதா, நம்ம வேலை, நாம சொல்லிக்கொண்டு இருந்தமேல்லோ, தீ மிதிக்கிற திருவிழா வந்தா, போகப்போறோம்னு...
நாம சொன்னது நெஜந்தான் மெய்யப்மே! அதை நான் மறுக்கல்லே. நம்மை, தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போகச் சொல்றதிலே என்ன அக்கறை, ஏன் அந்த அக்கறை தீமிதிக்கிறதை வெறுக்கிற பவுனாம்பாவுக்கு? அதுதானே புதிரா இருக்குது. நாம, வீட்டைவிட்டு, வெளியே போகணும் என்கிறதிலே அல்லவா பவுனாம்பாவுக்கு அக்கறை ஏற்பட்டிருக்குதுன்னு தோணுது.
உங்களுக்குத் தோணும், எதற்கும் ஒன்பதனாயிரம் சந்தேகம்.
<center> ★ ★ ★ </center>
மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய பவுனாம்பாளை அவள் கணவன், வலை விரிப்பான் கண்டு மகிழ்கிறான்.
மெய்யம்மையிடம் பக்குவமாகப் பேசிக் காரியத்தைக் கச்சிதமாக முடிக்கிறாளோ இல்லையோ என்ற கவலையுடன் இருந்து வந்து வலைவிரிப்பான் பவுனாம்பாள் வெற்றிக்களை முகத்தில் ஆட வந்தது கண்டு நடந்ததைக் கூறிடக்கேட்டு, பேசுகிறான்.
சந்தேகப்படவே இல்லையா, மெய்யம்மா, உன் பேச்சைக்கேட்டு.
சந்தேகப்படுகிறது போலவா நான் பேசுவேன்? எனக்கு என்ன பக்குவம் தெரியாதா, பழக்கம் கிடையாதா?
பவுனாம்பா! நீயோ இதுவரைக்கும், தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போறது தப்புன்னு பேசி வந்திருக்கே...
ஆமாம். இப்பக்கூடத்தான், என்னோட எண்ணம் அது. நான் போகப் போறது இல்லே, தீ மிதிக்க...
தீமிதிக்கப் போகாதவ, எங்களை மட்டும் போகச் சொல்றயே, ஏன்னு, மெய்யம்மை கேட்கலியா?<noinclude></noinclude>
8wqf9td8al8qfbe5h0ky14zq9yyowrb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/165
250
639114
1929231
1923446
2026-05-01T11:33:58Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929231
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||141}}{{rule}}</noinclude>
கேட்கவிடுவேனா? தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போகப் பயமான்னு? கேட்டு ரோஷத்தை மூட்டிவிட்டேன். பாரேன், பிறகு மெய்யம்மை பட்ட பாட்டை! போகத்தான் போறேன், ஆனா கொழந்தை ஒண்ணு இருக்கேன்னு இழுத்தா...
மெய்யம்மைக்கு எப்பவும் அந்தக் கொழந்தை கவனம் இருக்குமே; தெரியுமே-
ரொம்பக் கவலைப்பட்டா கொழந்தைக்கு, பங்காளிங்களாலே, எதாச்சும் கெடுதல் வந்துவிட்டா என்ன செய்யறதுன்னு பொலம்பினா.
பொலம்பி? போகப் போறதில்லே தீமிதிக்கன்னு சொல்லிவிட்டாளா...
சொல்லவிடுவேனா? கொழந்தையைப்பத்திப் பயப்பட வேணாம்; பார்த்துக்கொள்ள நான் இல்லையான்னு சொன்னேன். ஒப்புக்கொண்டா போக...
சாமர்த்தியக்காரி பவுனாம்பா நீ, மெய்யம்மை குடும்பத்தோடத் தானே கிளம்புவா...
ஆமாம்; இவமட்டும் போனா, மத்ததுக சும்மா இருக்குமா... கொழந்தை மட்டும்தான் வீட்டிலே... கொண்டாட்டந்தான் உங்க பாடு...
நம்ம பாடுன்னு சொல்லு—பிரித்து வைத்துப் பேசாதே...
எனக்கும் எதாச்சும் தராமலா போவிங்க கிடைக்கறதிலே... கொழந்தையோட பேச்சை எடுத்தா, எவ்வளவு உருகிப்போறா தெரியுமா மெய்யம்மெ! அடே அப்பா! அது அரசாளப் பிறந்ததாம்!!
அரசு ஆளும், ஆளும்டி பவுனாம்பா, ஆளும். இவகிளம்பட்டும் தீ மிதிக்க; அந்தக் கோட்டான் என்ன கதி ஆகுதுபார்! அரசு ஆளப்போகுதாமா அவ கொழந்தை... கிடக்கட்டும். கைக்கொழந்தைக்கு யாருதான் காவலு?
குடும்பத்தோடு கிளம்புறா மெய்யம்மெ. கொழந்தைக்கு காவல் இருக்க, பொதுஊரான்தான் கிடைப்பான்.
பொதுஊரானா? அவனுக்குத் தூபம் போட்டு விடலாமே, நாம ஒண்ணு சேர்ந்தா...
வழி இருக்குது அதுக்கு. நான் முன்னமேயே யோசனை செய்து வைத்திருக்கறேன்...
பலே பலே! என்ன யோசனை? சொல்லு, சொல்லு...<noinclude></noinclude>
avf84rh8do3n0c9kqee8pduxg1cbz3k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/166
250
639115
1929233
1923448
2026-05-01T11:34:57Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929233
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|142||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
பச்சைக் கொழந்தை, பாவம்! அதைத் தனியா விட்டுவிட்டு, இவங்களோட போக்கைப்பாரு, தீமிதிக்கக் கிளம்பிவிட்டாங்க; இது முறையா சொல்லு, இது நியாயமா சொல்லு! அப்படி இப்படின்னு பேசினாப் போதும் பொதூரான் உருகிப் போய்விடுவான். தீமிதிக்கப் போனவங்களை வெறுத்துவிடுவான்...
கொழந்தைக்குக் காவல் இருக்கமாட்டானா...
நாம சொல்கிறபடி அவனைக் கேட்கச் செய்யலாம். பாவம், கொழந்தையை உன்னாலே பாதுகாக்க முடியாது. கொடு இப்படி, நான் பார்த்துக் கொள்றேன்னு சொன்னா, கொழந்தையைக் கொடுத்து விடுவான்.
கழுத்திலே இருக்கிறது எனக்கு, இப்பவே சொல்லி விட்டேன்.
காலிலே உள்ளதும் கையிலே உள்ளதும் எனக்கு சரிதானே...
மெதுவாப் பேசு, யார் காதிலேயாவது விழுந்து விடப்போகுது. மெய்யம்மை குடும்பத்தோட கிளம்பற மட்டும் வெளியே மூச்சுவிடாதே, விவரத்தை; காரியம் கெட்டுவிடப் போகுது.
{{c|{{larger|<b>★ ★ ★</b>}}}}
{{left_margin|3em|மெய்யம்மையிடம் பேசிவிட்டு, வெளியே வேறு வேலையாகச் சென்ற கருத்தப்பன் சாவடிப் பக்கத்திலே கோட்டை யூரானும் கோலெடுத்தானும் பேசிக்கொண்டிருக்கக் காண்கின்றான்.
ஒரு புறம் ஒதுங்கி நின்று அவர்கள் பேசுவதைக் கேட்கிறான்.}}
தீ மிதிக்கிறதுக்குத் துணிவு இல்லாத பயன்னு இனிப்பேச முடியாது அண்ணே! கருத்தப்பன் குடும்பத்தோட கிளம்பப் போறான் தீ என்னாதான் செய்துவிடும் பார்க்கலாம்னு கூறிக்கிட்டு...
பலே! பலே! அதைத்தானே நான் எதிர்பார்த்தப்படி இருந்தேன்! இந்தப்பய தீமிதிக்க வேண்டியதுதான், தீய்ந்து போகும் இவனோட திட்டம்... தெரியுமா....?
கோட்டையூர் அண்ணே! விவரமாச் சொல்லுங்க.
கோலெடுத்தான்! உனக்குத் தெரியுமேல்லோ, கருத்தப்பனோட திட்டம்... நம்ம கோட்டையூர்லே அவனுடைய கொழந்தை இருக்கே, உதயசூரியன், அதுக்கு இடம்பிடிக்கற எண்ணம்.
ஆமாம்! உதயசூரியனுக்குக் கோட்டையூர்லே இடம் கிடைக்கும்னு தான் சொல்றான்....<noinclude></noinclude>
qn108tnvwg1znf9w3q9z640o3006ufq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/167
250
639116
1929234
1923450
2026-05-01T11:36:12Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929234
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||143}}{{rule}}</noinclude>
சொல்றானேல்லோ! இப்ப, இவன் தீமிதிக்கக் கிளம்பப் போறானேல்லோ, அதோட தீர்ந்துபோய் விடும் கோட்டையூர்லே இடம் பிடிக்கற திட்டம்...
ஏன்! தீ மிதிக்கறதிலே ஆசாமி தொலைஞ்சு போயிடுவான். அப்படி நினைக்கறியா?
அது அல்ல அப்பா! உனக்கு ஒரு இரகசியம் தெரியாது. நம்ம பெரியவரு இல்லே, தொலைதூரத்தான், அவருடைய பேச்சை மீறிக் கோட்டையூராகட்டும் வேட்டையூராகட்டும், நடக்க முடியுமா?
முடியாது! ராட்டையூர் ராஜா இல்லையா அவரு. அதனாலே!
அந்த தொலை தூரத்தான் என்ன உத்தரவு போட்டிருக்கிறாரு தெரியுமா, தீ மிதித்தவன், கோட்டையூர்ப் பாதையிலே நடக்கக்கூடாதுன்னு உத்திரவு.
தீ மிதிக்கப்போனா, கோட்டையூர் போகக் கூடாதா...
கோட்டையூர் பாதையிலேகூட நடக்கக்கூடாது. அதுதான் புது உத்தரவு.
அப்படியானா, தீமிதிச்சிவிட்டு, கருத்தப்பன் வீடு திரும்பியதும், கோட்டையூரை அடியோடு மறந்து விடணும்...
ஆமாம், ஆமாம்! உதயசூரியன் கோட்டையூர் போய் அரசாளப் போகிறான்னு பேசிக் கொள்வானேல்லோ கருத்தப்பன், அந்த எண்ணத்திலே மண் விழுந்துது...
ஊரார் பாவம், உதயசூரியனோட இவன் கோட்டையூர் போகப் போறான்னு பேசிக்கொள்கிறாங்க...
ஆமாம்....தீமிதித்தா கோட்டையூர் பாதையிலேயே நடக்கக் கூடாதே. புது உத்தரவு!
பாதையிலேயே நடக்கக்கூடாதுன்னா, கோட்டையூர் போய்க் கொலுவிருக்கிறது எப்படி......?
நடக்காதுங்கறேன். பவுனாம்பாளும் அவளொட புருஷன் வலை விரித்தானும் திட்டமிட்டு, மெய்யம்மையைத் தூண்டிவிட்டாச்சி.
தீமிதிக்கக் கிளம்பறதுக்கா! ஒத்துக்கிட்டாங்களா....
ஒத்துக்கொள்ளாம இருப்பாங்களா! பவுனாம்பாதான் பச்சைச் சிரிப்பிலே கெட்டிக்காரியாச்சே! அடி ஆத்தே! நெருப்புன்னா பயமா<noinclude></noinclude>
d2zd5s89ckmdre2v1buxsu5pi19y55b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/168
250
639117
1929079
1923451
2026-04-30T16:22:29Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1929079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|144||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>உனக்கும் உங்க வீட்டுக்காரருக்கும்னு பேசி, மெய்யம்மைக்கு ரோஷமூட்டிவிட்டிருக்கறா......
சரியான ஆசாமிதான்! ஏன் தூண்டுறான்னு யோசிக்க ரோஷம் இடம் கொடுக்காது......
ஆமாம்... பவுனாம்பாளுக்கு இருக்கிற எண்ணம், தீமிதிக்க மெய்யம்மையோட குடும்பம் போய்விட்டா, குழந்தை இருக்குமேல்லோ வீட்டிலே, அதோட கழுத்திலே கையிலே உள்ளதைப் பார்த்துக்கொள்ளலாம் என்பதுதான்.
அடடே! அவளோட திட்டம் அதுவா! ஆக, தீமிதிக்கப் போனா, குழந்தை கோட்டையூர் போக முடியாது.....
ஆமாம்...ஆமாம்...எல்லாம் இவரோட ஏற்பாடு....தெரியுதா...... என்னமோ பெரிய திட்டம் போட்டானே கருத்தப்பன், இப்ப பார்த்தயா, அவனோட எண்ணத்திலே மண்விழுது......
தீ மிதிச்ச தீரன் கருத்தப்பன், அதனாலே அவனோட மகன் உதயசூரியனுக்கு, கோட்டையூர்லே இடம் கொடுக்கணும், அதுதான் மரியாதை என்று நினைக்க மாட்டாங்களா...
அவனேகூட அப்படித்தான் நினைப்பான்; தீ மிதிச்சது பற்றிப் பேசினா, கேட்கிறவங்க மனசு பாகா உருகும்னு எண்ணிக்கிட்டுத்தான் இருப்பான். அவன் கண்டானா, தீயை மிதிச்சா, கோட்டையூர்ப் பாதையிலே கூட அடி எடுத்து வைக்க முடியாது என்கிற விஷயத்தை...?
எக்கச் சக்கமா மாட்டிக்கிட்டான் பய...
கிளம்பட்டும் தீ மிதிக்க... பிழைச்சி வந்தாக்கூட, பய இந்தப் பேச்சூரோடு இருந்துவிட வேண்டியதுதான். ஒரு அடி கூட கோட்டையூர்ப் பக்கம் போக முடியாது... பாரேன், திண்டாடப் போறதை...
{{c|{{larger|<b>★ ★ ★</b>}}}}
தீ மிதிக்கும் திருவிழாவில் கலந்து கொள்ளும்படி, ஏன் தூண்டிவிடுகிறார்கள் என்பது கருத்தப்பனுக்குப் புரிந்துவிட்டது.
{{left_margin|3em|}}தீ மிதிப்பதோ, திட்டில் இருப்பதோ, எல்லாம், உதய சூரியன் கோட்டையூர் போய்ச் சேர உதவும் என்பது தான் அவன் எண்ணம்.
கோட்டையூரில் உதயசூரியன் இடம் பெற்றால்தான், பாலூர் தேனூர் போலாகும் என்று கூறி ஆட்சியைப் பிடித்துக் கொண்ட கோட்டையூரான், கோலெடுத்தானைத் துணைக்கு வைத்துக் கொண்டு மக்களைக் கொடுமைப்படுத்தும் அக்கிரமத்தை ஒழிக்க முடியும்.<noinclude></noinclude>
rvlxdwapv4dc8g4tfe9swkc1eg0skoj
1929235
1929079
2026-05-01T11:36:36Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|144||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>உனக்கும் உங்க வீட்டுக்காரருக்கும்னு பேசி, மெய்யம்மைக்கு ரோஷமூட்டிவிட்டிருக்கறா......
சரியான ஆசாமிதான்! ஏன் தூண்டுறான்னு யோசிக்க ரோஷம் இடம் கொடுக்காது......
ஆமாம்... பவுனாம்பாளுக்கு இருக்கிற எண்ணம், தீமிதிக்க மெய்யம்மையோட குடும்பம் போய்விட்டா, குழந்தை இருக்குமேல்லோ வீட்டிலே, அதோட கழுத்திலே கையிலே உள்ளதைப் பார்த்துக்கொள்ளலாம் என்பதுதான்.
அடடே! அவளோட திட்டம் அதுவா! ஆக, தீமிதிக்கப் போனா, குழந்தை கோட்டையூர் போக முடியாது.....
ஆமாம்...ஆமாம்...எல்லாம் இவரோட ஏற்பாடு....தெரியுதா...... என்னமோ பெரிய திட்டம் போட்டானே கருத்தப்பன், இப்ப பார்த்தயா, அவனோட எண்ணத்திலே மண்விழுது......
தீ மிதிச்ச தீரன் கருத்தப்பன், அதனாலே அவனோட மகன் உதயசூரியனுக்கு, கோட்டையூர்லே இடம் கொடுக்கணும், அதுதான் மரியாதை என்று நினைக்க மாட்டாங்களா...
அவனேகூட அப்படித்தான் நினைப்பான்; தீ மிதிச்சது பற்றிப் பேசினா, கேட்கிறவங்க மனசு பாகா உருகும்னு எண்ணிக்கிட்டுத்தான் இருப்பான். அவன் கண்டானா, தீயை மிதிச்சா, கோட்டையூர்ப் பாதையிலே கூட அடி எடுத்து வைக்க முடியாது என்கிற விஷயத்தை...?
எக்கச் சக்கமா மாட்டிக்கிட்டான் பய...
கிளம்பட்டும் தீ மிதிக்க... பிழைச்சி வந்தாக்கூட, பய இந்தப் பேச்சூரோடு இருந்துவிட வேண்டியதுதான். ஒரு அடி கூட கோட்டையூர்ப் பக்கம் போக முடியாது... பாரேன், திண்டாடப் போறதை...
{{c|{{larger|<b>★ ★ ★</b>}}}}
தீ மிதிக்கும் திருவிழாவில் கலந்து கொள்ளும்படி, ஏன் தூண்டிவிடுகிறார்கள் என்பது கருத்தப்பனுக்குப் புரிந்துவிட்டது.
{{left_margin|3em|}}தீ மிதிப்பதோ, திட்டில் இருப்பதோ, எல்லாம், உதய சூரியன் கோட்டையூர் போய்ச் சேர உதவும் என்பது தான் அவன் எண்ணம்.
கோட்டையூரில் உதயசூரியன் இடம் பெற்றால்தான், பாலூர் தேனூர் போலாகும் என்று கூறி ஆட்சியைப் பிடித்துக் கொண்ட கோட்டையூரான், கோலெடுத்தானைத் துணைக்கு வைத்துக் கொண்டு மக்களைக் கொடுமைப்படுத்தும் அக்கிரமத்தை ஒழிக்க முடியும்.<noinclude></noinclude>
m2w2t7nkhdrne46pzz5rdt4vslw5piz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/169
250
639118
1929236
1923453
2026-05-01T11:37:06Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929236
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||145}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|அதற்கு வாய்ப்புக் கிடைக்கவிடாமல் தடுத்துவிட வேண்டும், கோட்டையூர்ப் பாதையிலேகூட நடந்திடக் கூடாது என்று உத்தரவு போடுவது, சூதான ஏற்பாடு.}}
இவ்விதமான சூது சூழ்ச்சிகளைக் கூட முறியடிக்கும் வல்லமை கோட்டையூர் போனால்தான் முடியும்.
ஆகவே, கோட்டையூருக்கு உதயசூரியன் சென்று நாட்டைப் பெருவளநல்லூர் ஆக்கவேண்டுமானால், தீ மிதிக்கச் செல்லக்கூடாது என்ற முடிவுக்கு வந்தான் கருத்தப்பன், சூழ்ச்சிக்காரரின் திட்டம் அறிந்ததால்.
வீடு சென்று மெய்யம்மையிடம் கூறினான், உதய சூரியனைக் கோட்டையூர் நுழைய முடியாமல் தடுத்திடத் தீட்டப்பட்டுள்ள சூழ்ச்சி பற்றி.
மெய்யம்மைக்கு அப்போதுதான் பவுனாம்பாள் பசப்பிப் பேசியதன் காரணம் புரிந்தது.
தீ மிதிக்க முடியுமா என்று கேட்டு, ரோஷமூட்டப் பார்ப்பது, நம்மைக் கோட்டையூர் வரவிடாது தடுப்பதற்காகத்தான் என்பது புரிந்ததும், மெய்யம்மை, தீ மிதிக்கச் செல்லத் தேவையில்லை என்று தீர்மானித்தாள்.
தீமிதிக்கப் போவதில்லை, தங்கள் சூழ்ச்சி வெற்றி பெறப் போவதில்லை என்று தெரிந்ததும் பவுனாம்பாளும், வலைவிரிப்பானும், கோட்டையூரானும் கோலெடுத்தானும் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டனர்.
மெய்யம்மை தன் குழந்தை உதயசூரியனை உச்சி மோந்து முத்தமிட்டு, அரசாளப் பிறந்தவனே! உன்னை அழிக்க அல்லவா அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள், எங்களைத் தீமிக்கச் செல்லும்படி தூண்டிவிட்டு. உண்மை புரிந்தது. உன்னைக் காத்திட முடிந்தது. தீமிதிக்கச் செல்லும்படி எண்ணத்தில் தீ விழட்டும் என்று கூறி மகிழ்ந்தாள்.
தீ மிதிக்கமாட்டானாம்... துணிவு இல்லை... என்று தூற்றிப் பார்த்தான் வலைவிரிப்பான்.
அவனோட துணிவு பற்றிப் பேசுவது இருக்கட்டும் நீ ஏன் உதயசூரியனைக் கோட்டையூர் பாதையிலேயே நடக்கக்கூடாது தீ மிதிக்க அவர்கள் சென்றால் என்று ஒரு புது உத்திரவு போட்டாய்? தைரியம் என்றா அதற்குப் பெயர் ! சூது! சூழ்ச்சி! அதைக் கருத்தப்பன் புரிந்து கொண்டதால்தான், நீங்கள் மூட்டிய தீயிலேவிழ மறுத்துவிட்டார்கள்! இது புரியவில்லையா எங்களுக்கு என்று நாட்டாண்மைக்காரர் தெளிவப்பன் கூறினார்.
நல்ல காரியம் செய்தாயப்பா! பயந்து கொண்டிருந்தோம், அரசாளப் பிறந்தவனை விட்டுவிட்டு நீங்கள் எங்கே தீ மிதிக்கப் போய்விடுவீர்<noinclude></noinclude>
1pfj0wqbuo3lofpskt6qgsg5mym256x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/170
250
639119
1929237
1923454
2026-05-01T11:37:28Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929237
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />{{Rh|146||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
களோ என்று, நல்ல வேளை, உங்களுக்கு அவர்கள் சூழ்ச்சி புரிந்து விட்டது—என்று வாக்களிப்பர் பாராட்டினார்.
தீயிலே தள்ளி, என்றென்றும் உதயசூரியன் கோட்டையூர் நுழையாத படி செய்துவிடலாமென்று சூழ்ச்சி செய்தோம், முடியவில்லை; இனி கோட்டையூர் பாதையிலே காவலிருக்க வேண்டும், உதயசூரியனை அழைத்துக் கொண்டு, கருத்தப்பனும் மெய்யம்மையும் வராதபடித் தடுத்திட வேண்டும் என்று கோட்டையூரானும் கோலெடுத்தானும் முனைந்தனர்.
அவர்களுக்குத் துணையாக நோட்டூரான், இருட்டூரான் போன்றார் நின்றனர்.
பயப்படாதே தம்பி! நாங்கள் துணை இருக்கிறோம் என்று கூறி வாக்களிப்பாரும், தெளிவப்பனும் முன்வந்தனர்; உதயசூரியன் புன்னகை புரிந்தான்.
{{c|{{larger|<b>★ ★ ★</b>}}}}
அன்பானந்தரே! புதுமையாக இருக்கிறதே உமது கதை! எதற்காக இப்படி ஒரு கதையைக் கூறினீர்கள் என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே “ஏனப்பா! கதையைக் கேட்டதும் உனக்கு கருத்துப் புரிய வில்லையா?” என்று கேட்டுவிட்டு, “இப்போது நீயும் உன்னுடைய உடன்பிறப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எந்த முயற்சியிலே மும்முரமாக ஈடுபட்டிருக்கிறீர்கள்? தேர்தல் வேலையிலேதானே” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.
ஆமாம். தேர்தல் வேலையிலேதான்! அது என்ன பாதகச் செயலா? கேவலமானதா” என்று நான் கேட்டேன்.
“ஜனநாயக முறையை ஏற்றுக்கொண்டுவிட்டு, தேர்தல் காரியத்தைக் கேவலமானது என்று கூற முடியுமா? திருமணம் செய்துகொண்டு, குடும்பத்தை நடத்திச் செல்வது கேவலம் என்று சொல்வார் உண்டா? தேர்தல் என்பது ஜனநாயகத்தில் ஏற்பட்டுவிடும் மிக முக்கியமான கடமை. நான் அதைக் குறை கூறவில்லை. இந்தத் தேர்தலில் ஈடுபட்டுப் படிப்படியாக நீங்கள் முன்னேறி வருகிறீர்கள். இல்லையா?” என்றார்.
“ஆமாம்! பொது மக்களுடைய நல்லாதரவு காரணமாக....” என்று நான் விளக்கம் தந்தேன்.
“உங்களைப் பொதுமக்கள் துளியும் ஆதரிக்கவில்லை என்று கூறிக்கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு, இதனால் ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்பட்டுத்தானே இருக்கும்?”<noinclude></noinclude>
jbquqs2cn3dhwwitxos6ixojgyvk5f3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/171
250
639120
1929238
1923456
2026-05-01T11:37:56Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||147}}{{rule}}</noinclude>
“ஆமாம்! கொஞ்சநஞ்சமான எரிச்சல் அல்ல” என்று நான் கூறினேன்.
“அந்த எரிச்சல் காரணமாகத்தான், காங்கிரஸ் கட்சி உங்களைத் தூற்றுகிறது இல்லையா?” என்று கேட்டார்.
“சாதாரணமான தூற்றலா! பண்புள்ள யாரும் பேசக் கூசிடும் பேச்செல்லாம் பேசுகிறார்கள்; பெரிய இடத்தில் அமர்ந்திருப்பவர்கள்கூட!” என்று நான் கூறினேன்.
வருத்தப்படுகிறாயா! பைத்யமே! பைத்யமே! அவர்கள் தூற்றத் தூற்றத்தான், அதனை நீங்கள் தாங்கிக்கொள்ள தாங்கிக் கொள்ளத்தான், பொது மக்களுக்கு உங்களிடம் ஒரு பரிவு பற்று ஏற்பட்டிருக்கிறது. அதனையும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். ஆகவேதான் உங்களை எப்படியாவது தேர்தலிலே நிற்க ஒட்டாதபடி தடுத்துவிட முயன்றனர். சாதாரண முறைகள் போதவில்லை. ஜனநாயகத்தை நடத்துவதாக உலகத்துக்குச் சொல்லி விட்டு, ஒரு கட்சியைத் தேர்தலுக்கு நிற்கவிடாத படி, தடை உத்திரவு போடமுடியவில்லை. ஆகவே, நேர்வழி கூடாது என்று குறுக்கு வழி சென்று ஒரு சட்டம் உண்டாக்கிக் கொண்டனர். பிரிவினை கேட்பவர்கள் தேர்தலிலே ஈடுபடக் கூடாது என்ற சட்டம். ஆஹா! சட்டம் போட்டா எங்களை மட்டந்தட்டப் பார்க்கிறீர்கள் என்று நீங்கள் கூவிக் கொந்தளித்து, சட்டத்தை மீறுவீர்கள், உடனே தேர்தலில் நிற்கும் உரிமையை அழித்து விடலாம், போட்டி இருக்காது, போகபோக்கியம் தரும் பதவி என்றென்றும் இருக்கும் என்ற சூழ்ச்சி. அதை நீங்கள் உணர்ந்துகொண்டீர்கள், அதனால் ஜனநாயகம் பிழைத்தது. அதைத்தான் நான் கதையாகக் கூறினேன்! தீமிதிக்கிற திருவிழாவுக்கு, பவுனம்மாளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, மெய்யம்மை போயிருந்தால், அவள் குழந்தைக்கு என்ன கதி நேரிட்டிருக்கும்!” என்று விளக்கினார்.
“பெரியவரே! உம்மைப் போன்றவர்கள் உண்மையை உணர்ந்து ஊராருக்கு உரைப்பீர்கள் என்பதிலே எங்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாகவே, நாங்கள், காங்கிரஸ் அரசு தீட்டிய சூழ்ச்சிக்குப் பலியாகக் கூடாது என்று முடிவெடுத்தோம்” என்றேன் நான்.
“நல்ல முடிவு! உதயசூரியன் நாடாளும் வாய்ப்புப் பெற வழி கிடைத்திருக்கிறது.” என்றார் அறிவானந்தர்.
“உங்கள் பேராதரவும் நல்வாழ்த்துக்களும் வேண்டும் ஐயா!” என்றேன்.
“தாராளமாக! ஏராளமாக!” என்று அறிவானந்தர் கூறினார் மலர்ந்த முகத்துடன்.
{{c|{{larger|<b>★ ★ ★</b>}}}}<noinclude></noinclude>
917myzqbiu01xwp6mw0gxb5kps65yr4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/172
250
639121
1929239
1927244
2026-05-01T11:38:18Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929239
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|148||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
யார் அந்த அறிவானந்தர்! ஆறேழு ஆண்டுகள் அரித்துவாரத்தில் ஆசிரமம் நடத்திய மகானா? அல்லது கேட்டதும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக அள்ளிக் கொடுத்திடும் சீமானா? என்று கேட்கிறாயா? தம்பி!
அறிவானந்தர், உழைத்து உருக்குலைந்த நிலையில் உள்ள ஒரு எளியவர்! கவலைக்கோடுகள் படிந்துள்ள முகம்! கள்ளங் கபடமற்ற மனம்!! தான் படுகிற அல்லலையும் தொல்லையையும், தன் பிள்ளைகளாவது படாமல், நிம்மதியான வாழ்வு பெற வேண்டுமே என்ற ஏக்கம். தன்னைப் போன்றவர்கள் கொண்டுள்ள ஏக்கத்தைப் போக்கிடத்தக்க ஒரு நல்லாட்சி அமையவேண்டுமே என்ற எண்ணம் கொண்டவர். அமையும் என்ற நம்பிக்கை கொண்டவர்!
மிட்டாமிராசு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக அலையும் திருக்கூட்டத்தினர் அல்ல! உழைப்பின் பலனைப் பெறவேண்டும் என்று எண்ணிடும் தூயவர்.
அவர் பர்மிட்டும் லைசென்சும் கேட்கவில்லை; பாலும் தேனும் ஓடிட வேண்டும், அள்ளி அள்ளிப் பருகிடவேண்டும் என்ற பேராசை கொண்டவர் அல்ல!
செய்திட ஒரு வேலை! அதிலே ஒரு நீதி, ஒரு நிம்மதி! குடியிருக்க ஒரு இடம்! வயிறாரச் சோறு! மானங்காத்திட ஆடை! நோயற்ற வாழ்வு! ஓய்வு நேரம், உள்ளத்துக்குக் குளிர்ச்சி தர!—இவைகளைத்தான் எதிர்பார்க்கிறார்.
எங்கே இருக்கிறார் அந்த அறிவானந்தர்? என்றா தம்பி! கேட்கிறாய்? எங்கும் இருக்கிறார்! இந்நாட்டு உழைப்பாளியைத்தான் சொல்கிறேன்.
அவரிடம் பேசிப் பாரேன்! ஆதரவும் புரியும்! நல்வாழ்த்தும் கிடைத்திடும்.
அதனைப் பெற்றிடுவதிலே மட்டும், தம்பி! நீ வெற்றி பெற்று விட்டால், பிறகு உன் ஆட்சி அமைவதைத் தடுத்திடும் வல்லமை எவருக்கும் இருக்கப் போவதில்லை.
அவர், ஏழை; உழைப்பாளி; கவலை நிரம்பியவர்! ஆனால் தம்பி! மறந்துவிடாதே! அவர் இந்நாட்டு மன்னர்!
அவர் ‘கோலம்’ பளபளப்பு அற்றது! குரல் வலிவற்றது! ஆனால், அரசுகளை ஆக்கவும் அழிக்கவும் தேவைப்படும் ஆயுதம் அவரிடம் இருக்கிறது! ஓட்டுச் சீட்டு!!
{{rh|<br>18.9.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
aop3vjk7k273s92il10rn4kaqrgv8q3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/173
250
639122
1929240
1923458
2026-05-01T11:39:05Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929240
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|10em}}
{{Right|<b>காஞ்சிக் கடிதம்: 273</b>}}
{{center|{{X-larger|<b>மரண அடி கொடுப்பாராம்!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>★ காமராசரின் கோபத்துக்குக் காரணம் எரிச்சல்!
★ காமராசரின் புகழொளி காங்கிரசுக்குப் புதிய வலிவாம்!
★ நேருவின் புகழொளிக்கே மாய்ந்திடாத கழகம் காமராசரின் புகழொளி கண்டா மிரண்டிடும்?
★ ஏமாற்றமடைந்த மக்களின் படைப்புகள் எதிர்க்கட்சிகள்!
★ காமராசரின் மரண அடிப் பேச்சு கனதனவான்களுக்குத் தெம்பூட்டுவதற்காகவே!</b></poem>}}
தம்பி!
மரண அடி கொடுக்கப் போகிறேன் என்று பிரகடனம் செய்து விட்டுள்ளார் காமராஜர். எதிர்க் கட்சிகளுக்குத்தான்!
இவர் பாசம் பொழிவார், ஆதரவு அளிப்பார், என்றா எதிர்க்கட்சிகள் எண்ணிக் கொண்டிருக்க முடியும்? தாக்குவதற்குத்தான் துடித்துக் கொண்டிருப்பார், அதற்கே திட்டமிடுவார் என்பது எல்லோருக்கும் புரியும்! இதை இவர் சொல்லித்தானா எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும்? நன்றாகத் தெரியும், மிக நன்றாகத் தெரியும். எதிர்க் கட்சிகளை ஒழித்துக் கட்டினாலொழிய, தனது கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில், ‘அகில இந்தியா’ இருக்கிறார் என்பது. ஆகவே, அவரிடமிருந்து எதிர்க்கட்சிகள் தாக்குதலைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்; தட்டிக் கொடுப்பார் என்ற நினைப்புடனா இருக்க முடியும்? அந்நிலையில் காமராஜர் மரண அடி கொடுப்பேன் என்று பேசியிருப்பது, எதிர்க்கட்சிகளை நோக்கி அல்ல!
சஞ்சலமும் சந்தேகமும் கொண்டு, ஆரூடம் பார்த்தபடி இருக்கும் அவருடைய கட்சிக்காரர்களுக்கு, ‘தைரியம் ஊட்டுகிறார்; அஞ்சாதீர்கள்! நான் இருக்கிறேன்—மரண அடி கொடுக்கிறேன் எதிர்க்கட்சிகளுக்கு’ என்று பேசுகிறார்.
"பயலின் கையைக்காலை வெட்டிப் போட்டுவிடுகிறேன், பயப்படவேண்டாம்” என்று நிலப்பிரபுக்குத் தைரியம் ஊட்டி விட்டு, ‘செலவுக்கு’ வாங்கிக் கொண்டு, உல்லாசத்தைத் தேடிச் செல்லும் உருட்டு விழியினர் உள்ளனர்; அறிவோம் அல்லவா?<noinclude></noinclude>
5nks4myw277wax6k778m9h3nknla8dq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/174
250
639123
1929242
1923461
2026-05-01T11:39:35Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|150||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வரப்புச் சண்டை, வாய்க்கால் சண்டை, கற்பழிக்க முனைந்ததால் மூண்ட பகை போன்றவைகளிலே சிக்கிக் கொள்ளும் சீமான், என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று அச்சம் கொண்டு நடுங்கிடும்போது, குத்திக் குடலெடுப்போன், குறிபார்த்து வேல் வீசுவோன், மடக்கி அடிப்போன், மறைந்திருந்து வெட்டுவோன் போன்ற பேர்வழிகள், “ஐயா மட்டும் கொஞ்சம் தாராளமாகச் செலவுக்குப் பணத்தைக் கொடுத்தால், ஒரு நொடியிலே தீர்த்துக் கட்டி விடுகிறேன்-தலை வேறு, முண்டம் வேறு ஆக்கிவிடுகிறேன். ஐயா எதற்கும் கவலைப்படத் தேவையில்லை நான் காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்கிறேன், ஐயா மட்டும் செலவுக்குப் போதுமானதைத் தந்து பார்க்கட்டும்.... ஐயாவோட வம்புக்கு நின்றவனை உருத்தெரியாமல் செய்துவிடுகிறேன்” என்று பேசுவர்; பலர் சொன்னபடி படுகொலையும் செய்வர்; பிடிபட்டால் தப்பவைக்க ‘ஐயா’ வருவார் ஏதாவது வழி கண்டு பிடிப்பார் என்று துணிச்சலாகப் பாய்வர். இது கீழ் மட்டத்து நிலைமை.
மேல் மட்டத்தில் - அதிலும் மக்களை நடத்திச் செல்லும் தகுதி பெற்றவர்கள் என்ற விருது கொண்ட அரசியல் கட்சி மட்டத்தில்-பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள தன்னலக்காரர்கள் - தருக்கர்கள் - தங்கள் மீது மக்களின் சீற்றம் பாய்ந்திடும், தங்கள் ஆதிக்கம் சாய்ந்துபடும் என்ற நிலை ஏற்படும்போது, காமராஜர்போல, செல்வாக்கினைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களை நாடுவர். அப்போது காமராஜர்கள், “பயப்படாதீர்கள் எதிரிகளை ஒழித்துக் கட்டுகிறோம்; உமக்கு ஒரு ஆபத்தும் வராதபடி பார்த்துக் கொள்கிறோம்” என்று பேசி தைரியம் அளிப்பார்கள்.
செய்வதற்கான இடத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்துகொண்டு, செய்து முடித்திட அந்த வலிவு பயன்படக் காணோம்; வீறாப்புப் பேசுகிறார்-மரண அடி கொடுப்பேன் என்பதாக. என்னமோ இவர் இத்தனைக் காலமாகப் போனால் போகட்டும் என்ற போக்கிலே இருந்தவர் போலவும், தி. மு. கழகம் வளர்ந்து போகட்டுமே என்று கருதிவாளா இருந்தவர் போலவும், இப்பொழுதுதான், கழகத்தை ஒழித்தாக வேண்டும் என்ற நினைப்பே வந்தது போலவும் எண்ணிக் கொள்ளச் சொல்லுகிறாரா?
{{left_margin|3em|முன்பாகிலும், கழகத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் காட்டிக் கொண்டிருந்தார்கள். ‘ஓட்டு’ கேட்கிறது, நாட்டை ஆள விரும்புகிறது என்பது பற்றி எமக்குக் கோபம் இல்லை. ஆனால், இந்தக் கழகம் நாட்டை அல்லவா பிளக்க விரும்புகிறது; பிரிவினை அல்லவா கேட்கிறது! இது பெரியதோர் ஆபத்தல்லவா? இதனை அனுமதிக்கப்போமா! அதனால்தான்}}<noinclude></noinclude>
r9bmsbk50x5nnj6j4rva694wml347mb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/175
250
639124
1929243
1923462
2026-05-01T11:39:58Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929243
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||151}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|இந்தக் கழகத்தை ஒழித்தாக வேண்டும் என்கிறோம். அறிக! அறிக!-என்று ஆர்ப்பரித்தனர்; கழகமோ, நாட்டைத் துண்டாடும் திட்டத்தை விட்டுவிட்டது. மரண அடி கொடுக்க வேண்டும் என்று இப்போது ஏன் கூறவேண்டும்?
முன்பு, நாடு பிளவுபடாதிருக்கக் கழகத்தை ஒழித்திட வேண்டும் என்று பேசினர்.
இப்போது? கோபத்துக்குக் காரணம்?
பதவியைப் பறித்துக் கொள்ளத் திட்டமிடுகிறார்களே என்பது தானே!
அதற்கான வலிவும் வளர்ச்சியும் பொது மக்கள் ஆதரவினால் கழகத்துக்குக் கிடைத்துக் கொண்டு வருகிறது என்பதாலே ஏற்பட்டிருக்கும் எரிச்சல்தானே, கோபத்துக்குக் காரணம்?}}
சரி! கோபம் கொண்டதற்கான காரணம்கூட கிடக்கட்டும்; மரண அடி கொடுக்கிறேன் என்கிறாரே அதற்குத் தேவையான ‘வலிவு’ உள்ளபடி இருக்கிறதா? இருந்திருந்தால் கழகம் இந்த வளர்ச்சி பெற்றபோது, என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
{{left_margin|3em|கழகமா! அதற்குச் செல்வாக்கா! எதைக்கொண்டு சொல்லுகிறீர்கள். கூட்டத்திற்கு ஆள் சேருகிறதே அதைப்பார்த்தா? பைத்தியக்காரன் பின்னாலே கூடத்தான் பத்து பேர் செல்கிறார்கள்; வேடிக்கை பார்க்க! அந்தக் கும்பலைக் கண்டு, அவனுக்குப் பெரிய செல்வாக்கு என்று பேசிப் பார்த்தார் பேட்டைப் பெரியவர் கோட்டையிலே கொலுவிருக்கிறோம் என்ற துணிச்சலால்.
தெருக்கோடியிலே பிச்சைக்காரன் இனிமையாகப் பாடினால், அவனைச் சுற்றி ஒரு கூட்டம் சேரும்; காசுகள் கூடப் போடுவார்கள்! அதனால் அந்தப் பிச்சைக்காரன் பெரிய மனிதனாகி விடுவானா என்று கேட்டார் விருதுநகர் வல்லவர்.}}
ஆனால், பொதுமக்கள் இத்தகைய பொறுப்பற்ற முறையிலே நினைக்கவில்லை; கழகத்தை ஆதரிக்கலாயினர்.
{{left_margin|3em|கை தட்டுவார்கள், ஆனால், ஓட்டுப் போடுவார்களா?}}
என்று கேட்டுக் கெக்கலி செய்தார் காமராஜர். கழகம் ‘ஓட்டு’ கேட்டது. பொதுமக்கள் முதல் முறை 16,28,598 ஓட்டுகளை வழங்கினர்.
வெட்ட வெளியோடு சரி, இவர்களை எவனாவது சட்டசபைக்கு அனுப்பி வைப்பானா? என்று பேசியவர்கள், பொதுமக்கள் கழகத்துக்குத் தந்த ஆதரவின் கணக்குத் தெரிந்த பிறகாகிலும், ஜனநாயகப் பண்பின்படி, கழகத்துக்கு உரிய மதிப்பு அளித்திட முன்வந்தனரா? இல்லை!<noinclude></noinclude>
a3o10mdbtm5m1fsc9egd1hizykh0x5p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/176
250
639125
1929244
1923472
2026-05-01T11:40:22Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|152||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|கண்டபடி எழுதுகிறார்கள் கழகத்துக்காரர்கள்.
இவர்கள் கை கட்டை விரலை வெட்டி விடுவேன்!!}}
என்று பேசினார், கண்ணியம் மிக்க காமராஜர்.
அவர் அளவுக்கு ஆத்திரப்படாதவர்கள், ‘ஐயோ பாவம்’ என்று பச்சாதாபப்பட்டு, சிலர் ஓட்டுப்போட்டு விட்டார்கள். அடுத்து கழகம் என்ன கதியாகிறது என்பதை, மழைக்காலத்துக் காளான் சூரிய வெப்பம் பட்டதும் கருகிப் போவதுபோல, இருக்குமிடம் தெரியாமல் ஒழிந்து போய்விடும் என்று ஆரூடம் கணித்தார்கள்.
{{left_margin|3em|ஆனால், பொதுமக்கள் இரண்டாவது முறை கழகத்தை மேலும் அதிக அளவு ஆதரித்து 34 இலட்சம் வாக்குகளை வழங்கினர்.}}
இவ்விதம் இருமுறை மக்கள் கழகத்தை ஆதரித்தும் பெற வேண்டிய தெளிவைப் பெறாமல், இந்த முறை பாருங்கள்! மரண அடி கொடுக்கிறேன்!!-என்று பேசுகிறார் காமராஜர்.
{{left_margin|3em|“பெரியவர்” என்ற புதிய பட்டம் சூட்டி இருக்கிறார்கள், அவருக்கு. ‘பெரியவர்’ ஆனது இதற்குத்தானா?
கூட இருந்து கும்மி கொட்டுபவர்களின் ‘கோவிந்தா’ கோஷம் இப்படியுமா அவரைப் பாழ்படுத்தி விடுவது?
பாரினில் இவர்போல் யாம் கண்டதில்லை-என்று அவர்கள் பாடிடும் பஜனை கேட்டா இவ்வளவு மயக்கம் இவருக்கு ஏற்பட்டு விடுவது!
ஆத்தி சூடி தெரியுமா ஐயா! என்று இவரைக் கேட்டவர்கள் தான் இன்று அகில உலகில் இவர்போல் ஒரு தலைவர் இல்லை! என்று அர்ச்சிக்கிறார்கள் என்பதை இவர் அறியாரா?
எதனையும் சகித்துக் கொள்வேன், ஆனால், என் தலைவன் மீது ஒரு துளி எச்சில் துப்பினாலும், விடமாட்டேன் ஒழித்திடுவேன் என்று இன்று பேசிடும் ‘பக்தர்’கள், என்னைத் தமது தலைவன் என்று கொண்டிருந்தபோது, எவனாவது எங்கள் அண்ணன்மீது வசை உமிழ்ந்தால் “பாதக் குறடெடுத்து பன்னூறு அடி அடிப்பேன்” என்று பாடினவர்கள் என்பதை அறியாரா?}}
சிறுவர்களுக்கான பாடப் புத்தகத்தில், ‘ராஜபக்தி’க்கான பாடம் ஒன்று உண்டு.
{{left_margin|3em|இதோ நமது ராஜா. இவர் மிக நல்லவர்!}}
இதுதான் பாடம்! ஒரு ராஜாபோய், வேறோர் ராஜா பட்டத்துக்கு சூழவந்திடின், பழைய படம் எடுக்கப்பட்டு, புதிய ராஜாவின் படம் போடப்படும், படம்தான் மாறும்! பாடம் அப்படியேதான் இருக்கும்.<noinclude></noinclude>
rjtpy0wiggj5uptfxzbia8apdj9yjqb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/177
250
639126
1929245
1923474
2026-05-01T11:40:44Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||153}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|இதோ நமது ராஜா, இவர் மிக நல்லவர்!}}
இதற்கு ஒப்பான அரசியல் நடத்துபவர்கள் மொழிந்திடும் புகழுரை கேட்டு மயங்கியா, இந்தப் பூலோகமே தன் காலடியில் பந்தாகிக் கிடக்கிறது என்று மயக்கம் கொண்டுவிடுவது! நல்லது செய்யாதே அந்த மயக்கம்!
மரண அடி கொடுப்பேன் என்று பேசுகிறோமே; கேட்டிடும் குட்டிக் குபேரர்கள் கைதட்டி மகிழ்ச்சி காட்டுகிறார்களே; பிறகு அவர்கள் சிந்திக்க மாட்டார்களா, எந்தவிதமான வசதியுமில்லாமல், எல்லா முனைகளின் எதிர்ப்பையும் தாங்கிக்கொண்டு இந்தக் கழகம் இவ்வளவு வளர்ந் திருக்கிறதே; இப்போது மரண அடி கொடுப்பேன் என்று பேசிடும் பெரியவர், முன்பு பலமுறை கழகத்தை ஒழித்துக் கட்டுவதாகச் சொன்னவர் தானே; செய்தாரில்லையே; இப்போது மட்டும் எப்படிச் செய்வார் என்று யோசிக்க மாட்டார்களா; யோசித்திடும்போது நமது பேச்சு வெறும் உருட்டல் மிரட்டல்தான் என்பது புரிந்துவிடாதா- என்றெல்லாம் காமராஜர் எண்ணிப் பார்க்கமாட்டாரா? நேரம் இல்லை பாவம், அவர் என்ன செய்வார்! சூழ்ந்து கொண்டுள்ள ‘சூடமேந்திகள்’ அவருடைய சிந்திக்கும் சக்தியை பொசுக்கி விடுகின்றனர்.
தம்பி! 1962ம் ஆண்டுக்கும் 1967 பிறக்கப் போகிற கட்டமான இப்போதைக்கும் இடையில் காங்கிரசுக் கட்சிக்குத்தானாகட்டும், காமராஜப் பெரியவருக்குத் தானாகட்டும், கழகத்துக்கு மரண அடி கொடுக்கத்தக்க விதமான புதிய வலிவு என்ன கிடைத்துவிட்டது என்பது எப்போதாவது, எங்கேயாவது, எவராலாவது விளக்கப்பட்டுக் கேட்டதுண்டா?
1962–ம் ஆண்டு காங்கிரஸ் சில இடங்களிலே தோற்றதற்கும், எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்திலே வெற்றி பெற்றதற்கும் காரணம்,
{{left_margin|3em|<poem>வரி அதிகமானது
விலைவாசி ஏறியது
உணவு நெருக்கடி
ஏழை எளியோர் துயரம்</poem>}}
போன்ற நிலைமைகள். இதனால் மக்களுக்குக் காங்கிரசிடம் ஒரு கசப்புணர்ச்சி; கோபம்; பாடம் கற்பிக்க வேண்டும் என்ற துடிப்பு; அதன் காரணமாகக் காங்கிரசைத் தோற்கடித்தார்கள். ஆனால் 1967-ம் ஆண்டு வேகமாக வந்துகொண்டிருக்கும் இப்போது அந்த மோசமான நிலைமைகள் மாறிவிட்டன; மக்கள் கசப்புணர்ச்சி கொள்வதற்குப் பதிலாகக் களிப்புணர்ச்சி கொண்டுள்ளனர்: அதற்கான முறையில்,
{{left_margin|3em|<poem>உழுபவனுக்கே நிலம் என்று ஆகிவிட்டது.
தொழிலாளருக்கு நீதியும் நிம்மதியும் கிடைத்திருக்கிறது.</poem>}}<noinclude></noinclude>
qjnjxajfd8fpsa883qsbjgf94wmv2d6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/178
250
639127
1929247
1923475
2026-05-01T11:41:15Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929247
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|154||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>உணவு நெருக்கடி போக்கப்பட்டுவிட்டது.
விலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
வரிகளையும் குறைத்தாகிவிட்டது.
ஏழை எளியோர் புன்னகை புரிகிறார்கள்.</poem>}}
ஆகவே, இந்த முறை மக்கள் காங்கிரசிடம் பாசம் காட்டுவர், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு காட்டமாட்டார்கள்— என்று கூறமுடியுமா— கூசாது பொய் பேசிப் பழக்கப்பட்டவர்களால்கூட? முடியாது.
1962-ம் ஆண்டு இருந்த நிலைமையைவிட மிக மோசமான நிலைமை அல்லவா இப்போது; எல்லாத் துறைகளிலும். அப்போது இருந்துவந்த அல்லல் வளர்ந்தல்லவா இருக்கிறது. எலி தின்று பசி போக்கிக் கொள்ளுங்கள் என்று ‘உபதேசம்’ செய்கிற நிலைமையல்லவா காண்கின்றோம்.
{{left_margin|3em|இது மக்களின் கசப்புணர்ச்சியை, கொதிப்புணர்ச்சியை அதிகமாக்கித் தானே இருக்கும்?
இருந்தும், இம்முறை எதிர்க் கட்சிக்கு மரண அடி கொடுப்பேன் என்று பேசும் அளவுக்குத் துணிவு எப்படி வந்தது துரைத்தனம் நடத்தும் கட்சியினருக்கு?}}
தம்பி! நாம் மட்டும் அல்ல, உண்மையான ஜனநாயக வாதிகள் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. ஒரு கட்சியை மக்கள் வெறுத்து ஒதுக்குவதற்கு என்னென்ன கொடுமைகளை அந்தக் கட்சி நடத்திடும் ஆட்சி செய்திட வேண்டுமோ அவ்வளவும் செய்தான பிறகு, அந்தக் கட்சித் தலைவர், எதிர்க்கட்சிக்கு மரண அடி கொடுப்பேன் என்று பேசும் துணிவு, எதைக் கொண்டு பெற முடிகிறது?
பணம், தம்பி! பணம்! மூட்டை மூட்டையாகச் சேர்த்து வைத்துள்ள பணம்!
{{left_margin|3em|பணம் பாதாளம்வரை பாயும் என்பதிலே உள்ள நம்பிக்கை.
வாய்க் கசப்பைப் போக்க, நாக்கிலே தேன்தடவுவதுபோல, கசப்புணர்ச்சி கொண்டுள்ள மக்களுக்கு, பணத்தாசை காட்டி, மயக்கிடலாம் என்ற நம்பிக்கை.
ஏழ்மையும் அறியாமையும் கப்பிக் கொண்டிருக்கும் நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை மீண்டும் வலைவீசிப் பிடித்துவிடலாம் என்ற நைப்பாசை.}}<noinclude></noinclude>
giilcoj7lhzc426iucwhbrmdhpkq4t6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/179
250
639128
1929248
1923477
2026-05-01T11:41:39Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||155}}{{rule}}</noinclude>
இதனை மறுத்திட நினைத்திடும் மகானுபாவர்கள், 1962-ம் ஆண்டிலே இருந்த கசப்புணர்ச்சி போய்விட, இந்த ஐந்து ஆண்டுகளிலே காங்கிரசாட்சி எடுத்துக் கொண்ட முயற்சிகளிலே எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை விளக்கிடக் கேட்டதுண்டா?
விளக்கமாவது அவர்களாவது தருவதாவது! ஒரே வீராவேசம் அல்லவா பொங்கி வழிகிறது! பெரியவரே மரண அடி கொடுப்பேன் என்ற தரமான பேச்சுப் பேசும்போது ‘பொடியர்கள்’ பேசுவது எந்தத் தரம் இருக்கும் என்பதைக் கூறவா வேண்டும்?
ஏடா! மூடா! எமக்கு இதுபோது வந்திருக்கும் புதிய வலிவுக்கான காரணம் புரியாது கிடக்கின்றனையே! கூறுதும் கேண்மின்! இது காமராஜர் சகாப்தம்! அறிந்திடு மின்! அவர் புகழ் அவனியெலாம் பரவியுள்ள காலம்! பொருள் புரிந்துகொள்ள முனைமின்!- என்ற முறையில் நாநடமிடுவது தெரியும், தம்பி! நன்றாகத் தெரியும்.
{{left_margin|3em|காமராஜப் பெரியவரின் புகழ் இந்தக் காசினி எங்கும் பரவியுள்ள கதை சுவையுள்ளது.
ஆனால் அந்தப் புகழ் காங்கிரசுக்குப் புது வலிவும் பொலிவும் தேடிக்கொடுத்து, மக்களின் கசப்புணர்ச்சியை மாற்றிவிடும் அளவினது, அல்லது வகையினது என்றால்,
தம்பி! 1962-ம் ஆண்டுத் தேர்தலின்போது ‘முடிசூடா மன்னராக’ — ‘ஆசியாவின் ஜோதியாக’ — மகாத்மாவின் வாரிசாக — இருந்து வந்தாரே பண்டித ஜவஹர்லால் நேரு, அவருக்குப் புகழ் ஏதும் இல்லையோ!!
அந்தப் புகழ் இருந்தும்தானே, எதிர்க்கட்சிகள் வளர்வதைக் காங்கிரசினால் தடுத்திட முடியாமற் போய்விட்டது?}}
இன்று இருப்பதைக் காட்டிலும் சிறிதளவு குறைவாகவே அல்லலும் அவதியும் மக்களை வாட்டிக் கொண்டிருந்த போதே ‘நேருவின் புகழொளியில் மயங்கி’ மக்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்க முடியாது என்று கூறிவிடவில்லை.
{{left_margin|3em|நேருவின் ‘புகழொளி’க்கு இருந்ததைக் காட்டிலும் வசீகரமும் வல்லமையும் காமராஜர் புகழொளிக்கு உண்டு என்று கூறுவார் உண்டா?
நேருவினால் அவர் நாட்களில் சாதிக்க முடியாது போனவைகளைக் காமராஜர் இன்று சாதிக்கப் போகிறார் என்று கூறுவார் உண்டா?}}<noinclude></noinclude>
is7d1f53hwmyv3x07jnf6skad6d25ol
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/180
250
639129
1929249
1923478
2026-05-01T11:42:01Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929249
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|156||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
நேருவைக் காட்டிலும் காமராஜர் உலகமறிந்தவர்; நேருவிடம் உலகம் காட்டிய மதிப்பைவிட அதிக அளவு மதிப்பினைக் காமராஜரிடம் காட்டுகிறது; நேருவின் அறிவாற்றலைக் காட்டிலும் பன்மடங்கு அதிக அறிவு கொண்டவர் காமராஜர்; பிரச்சினைகளை விளக்குவதில், வாதத்திறமையில், சிக்கல்களை நீக்குவதில், நேருவுக்கும் இல்லாத திறமை இவருக்கு உண்டு என்பார் உண்டா?
மக்களைத் தன்வயப்படுத்திடும் ஓர் புன்னகை, கோபத்தையும் கொதிப்பையும் கூட ஓரளவு மறந்திடச் செய்திடும் நடை அழகு, உலகப் பிரச்சினைகளைப் படம்பிடித்துக் காட்டும் தனித்தன்மை, உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் மட்டுமல்லாமல், கவிஞர்கள், தத்துவமேதைகள், காவிய கர்த்தாக்கள், விஞ்ஞான வித்தகர்கள், பொருளாதார நிபுணர்கள், புரட்சி பூத்திடச் செய்த மாவீரர்கள் ஆகியோருடன் நேசத் தொடர்பு கொண்டிருந்ததால் ஏற்பட்டிருந்த விசாலமான நோக்கம், தாராளத் தன்மையுடைய சிந்தனை, இதயங்களை ஈர்த்திடத்தக்க இலட்சிய ஆர்வம் இவ்வளவும் கொண்டல்லவா விளங்கி வந்தார் பண்டிதர்.
அவர் புகழ் பாடாத ஏடுண்டா? பரவாத நாடுண்டா? படம் இல்லாத வீடு உண்டா?
எத்தனை எத்தனை கோலத்தில் அவர் படம்; நித்தநித்தம்; இதழ்கள் மூலம்!
சிந்திக்கும் நேரு, சிரித்திடும் நேரு, சீறிடும் நேரு, குழந்தைகளுடன் கொஞ்சிடும் நேரு, விளக்கிடும் நேரு, வினவிடும் நேரு, மாபெருங் கூட்டம் கண்டு நெஞ்சு நெகிழ்ந்திடும் நேரு, ஊர்வலத்தில் முகம் மலர்ந்திடும் நேரு, விமான நிலையத்தில் நேரு, விஞ்ஞானக் கூடத்தில் நேரு, குதிரை மீது நேரு, குதூகல நடனமிடும் நேரு, ஜொலிக்கும் நட்சத்திரங்களுடன் நேரு, உழைக்கும் பாட்டாளிகள் மத்தியில் நேரு, பத்திரிகை நிருபர்களிடம் நேரு, வணிகர் விழாவில் நேரு, பக்ரா பக்கத்தில் நேரு, குலு பள்ளத்தாக்கில் நேரு, நாகநாடு உடையில் நேரு, பர்மியக் கோலத்தில் நேரு, ஆங்கில உடையில் நேரு, கேக் வெட்டும் நேரு, பாங் அதிபருடன் நேரு, சோ–இன்–லாயுடன் நேரு, கெனியாடாவுடன் நேரு, நைல் நதி தீரத்தில் நேரு, வோல்கா கரையில் நேரு, ஐ.நா.சபையில் நேரு, ஆல்ப்ஸ் குன்றில் நேரு, வெசுவயஸ் எரிமலை காணும் நேரு, லால்பகதூர் தோளைத் தடவிக் கொடுத்திடும் நேரு தம்பி! ஒன்றா இரண்டா, ஓராயிரம் மட்டுமா? ஓராண்டா ஈராண்டா? முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அல்லவா, அவர் திருஉருவம் கண்டு, நாட்டு மக்கள் சொக்கினர்!<noinclude></noinclude>
3k78fdpc0rysvjyrisy5ube895m4q3f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/181
250
639130
1929251
1923480
2026-05-01T11:42:28Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929251
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||157}}{{rule}}</noinclude>
இருந்தும்? அவர் நடாத்திய ஆட்சி, மக்களுக்கு நல்வாழ்வு தரவில்லை என்று மனதார நம்பிய எதிர்க்கட்சிகள் அந்தப் புகழொளி கண்டு மயங்கி, முடங்கிக் கிடந்தனவா இல்லையே!
அந்தப் புகழொளி எதிர்க்கட்சிகளை இருக்கும் இடம் தெரியாமலா செய்துவிட்டது இல்லையே!
அவருடைய புகழ் ஒளி போதும் தனி மராட்டிய மாநிலம் வேண்டாம் என்றா கூறிவிட்டனர் இல்லையே!
அந்தப் புகழொளி இருக்கும்போது நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை-இந்தி வந்தால் வரட்டும் என்றா இருந்துவிட்டனர்? இல்லையே!
குறைகளைக் கூறிட, கருத்து வேற்றுமைகளை எடுத்துரைத்திட, கிளர்ச்சி நடத்திட, கருப்புக்கொடி காட்டிட முடிந்தது எதிர்க்கட்சிகளால்-புகழொளி இருந்தும்.
நேருவின் புகழொளிக்கு இல்லாத வசீகரமும் வல்லமையும், காமராஜரின் புகழொளிக்கு இருக்கிறது என்று கூறிடக் கூசுவர் எவரும்; கூறிடத் துணிவோர், நேருவின் நினைவுக்கே கறை பூசிடும் காதராவர்.
நேருவின் புகழொளியையே இவ்வளவு விரைவிலே மறந்து, வேறோர் புகழொளி அவருடையதைவிட வலிவுள்ளது என்று பேசிடத் துணிவோர், இந்தப் புதிய புகழொளியை எத்தனை சடுதியில் மறந்திடத் துணிவர் என்பதை எண்ணும்போது, தம்பி! எவருக்கும் நடுக்கம் எடுக்கும்.
என்றாலும், கூசாமல் கூறுகின்றனர், காமராஜரின் புகழொளி காங்கிரசுக்குப் புதிய வலிவைக் கொடுத்து விட்டது; எதிர்க்கட்சிகளுக்கு இனி எதிர்காலம் இல்லை, கசப்புணர்ச்சி கொண்டிருந்த மக்கள் இப்போது களிநடமிடுகின்றனர் என்றெல்லாம்.
அதுபோலக் கூறுபவர்களின், ‘போற்றி! போற்றியை’ப் பொருள் உள்ளது என்று எண்ணிக் கொண்டு காமராஜப் பெரியவர் ‘மரண அடி கொடுப்பேன்’- என்று முழக்கமிடுகிறார்.
தி.மு.கழகம் 34 இலட்சம் வாக்குகளைப் பெற்றபோது ‘ஆசியஜோதி’ ஒளிவீசிக்கொண்டிருந்திடக் கண்டோம்.
அந்தப் புகழொளி கண்டு மயங்கிடாத கழகம், மாய்ந்திடாத கழகம், காமராஜரின் ‘புகழொளி’யைக் கண்டா, மிரண்டிடும்!
‘புகழொளி’-தனி மனிதர்களின் அறிவாற்றலைக் கொண்டு அமைகிறது!<noinclude></noinclude>
e2fr2lkvbs9yrr6kev2tnyhr9tg5eh3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/182
250
639132
1929252
1927372
2026-05-01T11:42:54Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929252
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|158||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
ஏழையின் இதயத்துக்கு நிம்மதியும் இல்லத்துக்கு நல்வாழ்வும், இதழுக்குப் புன்னகையும் தரத்தக்க ஆட்சிக்காக போரிடுபவர்கள், 'புகழொளி' போதும் என்று இருந்து விடமாட்டார்கள்.
அத்தனை புகழொளியும் எமது பசியைப் போக்கிடவில்லையே, குமுறிக் கிடக்கின்றோம் வாழ்வு நிமிர்ந்திட வழி காணோமே என்ற ஏக்கக் குரலே எழுப்புவர்.
எதிர்க்கட்சிகள், ஏமாற்றமடைந்த, எரிச்சல் கொண்ட ஏக்கப் பெருமூச்சு எழுப்பும் மக்களின் படைப்புகள். எங்கிருந்தோ வந்து குதித்திடுபவைகள் அல்ல!
புகழொளிகளைப் புதிது புதிதாக உண்டாக்கிக் காட்டுவதால், எதிர்க்கட்சிகள் மடிந்திடா; மக்களின் முகத்தில் படிந்துள்ள கவலைக் கோடுகள் துடைக்கப்பட்டு, வறுமை தாக்கியதால் ஏற்பட்ட புண் ஆற்றப்பட்டு கண்ணீர் துடைக்கப்பட்டாலொழிய, எத்தனை பெரிய எக்காளம் கிளப்பி, மரண அடி கொடுப்பேன் என்று உரத்த குரல் எழுப்பினாலும் விம்மும் மக்கள் கட்டிக் காத்துவரும் எதிர்க்கட்சியினை ஒழித்திடுவது முடியாத காரியம்.
இதனைக் காமராஜர் அறியாமல் இருக்க முடியுமா? அறிவார்! ஆனால், அவரை நம்பிக்கொண்டு, ஆனால், கழக வளர்ச்சி கண்டு நடுங்கிக் கொண்டுள்ள ‘கனதனவான்களு’க்குத் தெம்பு தர, தைரியம் ஊட்ட மரண அடி கொடுக்கிறேன்!-என்று பேசுகிறார், பேசட்டும்.
{{rh|<br>25.9.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
oleqvz9gi7ntcajjvet9lpgr1bm2b59
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/190
250
639141
1929254
1923495
2026-05-01T11:46:57Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929254
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|166||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
என்னென்ன சாதனைகளைப் பெற்றுத் தருகிறது என்று பார்த்து, இரண்டையும் ஒப்பிட்டு, எது தரமுள்ளது என்று தீர்மானிக்க வேண்டும். அதற்கு இந்த இருபதாண்டுகளாக வழி இல்லை. இன்னும் இருபது ஆண்டுகளுக்கும் வழி இல்லை என்கிறார் காமராஜப் பெரியவர்.
{{left_margin|3em|அதாவது வேறோர் கட்சியின் திறமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்று விரும்புகிறார். அந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே திட்டமிட்டு வேலை செய்து வருகிறார்.}}
மக்கள் அளித்திடும் தீர்ப்பைப் பொறுத்து இருக்கிறது அவர் திட்டம். ஆனால், போட்டி கூடாது!!—என்கிறார்.
குழந்தை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுகிறான் என்பார்கள்; வேறு எந்தக் கட்சியும் ஆட்சி நடத்த விடக் கூடாது என்று திட்டமிடுவது, அத்தகைய விளையாட்டிலே உள்ள விருப்பம் காரணமாகப் போலும்!
அது எப்படியோ போகட்டும்; ஆனால், வேறு ஒரு கட்சியின் ஆட்சி ஏற்பட்டு, அப்போது கிடைத்திடும் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலொழிய காங்கிரசின் சாதனைகளைப் பற்றிப் பெருமிதத்துடன் பேசுவதிலே பொருள் இல்லை! ஆனால் பேசுகிறார்கள்!
“பயலே! என்னைப் போல மீசையை முறுக்கிவிட உன்னால் முடியுமா?” என்று கேட்டான் பக்கிரி; வயது நாற்பது; பனிரெண்டு வயது சிறுவனைப் பார்த்து.
“சித்தப்பா! எனக்கு இப்போதுதான் மீசை கருக்குவிடுகிறது! இதற்குள்ளே வம்பு பேசுகிறாயே! காலம் வரட்டும்! மீசை கொத்து கொத்தாக வளரும். அப்போது நான் முறுக்கிக் காட்டுகிறேன். அப்போது தெரியும், மீசையை முறுக்கிவிடுவதில், நம் இருவரில் யார் வல்லவர்கள் என்பது, இப்போது பேசி என்ன பயன்! ஆனால் சித்தப்பா! இதையும் தெரிந்து கொள் எனக்கு, முறுக்கிவிடும் அளவு மீசை வளரும் காலத்தில், உனக்கு உள்ளது உதிர்ந்து போய்விடும்” என்றான் சிறுவன் கதையில்!
நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள், நாட்டு மக்களை விவரம் அறியாதவர்கள் என்ற நினைப்பில்—'இதோ பார், காங்கிரசின் சாதனைகளை! காட்டு உன் சாதனைகளை!!' —என்று!
ஆட்சி என் கரம் வரட்டும், அப்போது நான் செய்தளிக்கும் சாதனைகளைக் காணலாம்; உன் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று கழகம் கூறுகிறது. உடனே காமராஜர் கடுங்கோபம் கொண்டு.<noinclude></noinclude>
sdu9uibf6c2t27fm2oorpwi26j9xxi0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/191
250
639142
1929256
1923496
2026-05-01T11:47:36Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929256
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||167}}{{rule}}</noinclude>
“மூஞ்சியைப் பார்! முகரக் கட்டையைப் பார்!” என்று பேசுகிறார். உலகிலே பாதி சுற்றிவிட்டாரல்லவா! அதற்கு அடையாளம் போல விளங்கும் உயர்தரமான பேச்சு!!
இவர்கள் இந்த நினைப்புடன் இருப்பது மட்டுமன்றி, மக்களிடம் சென்று, நாடாள காங்கிரஸ் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் யோக்யதை கிடையாது என்று பன்னிப் பன்னிப் பேசி வருவதைக் கேட்ட பிறகுதான் நான் சென்னை சூளையில் நடைபெற்ற கூட்டத்தில் கேட்டேன், வேறு எந்தக் கட்சிக்கும் நாடாளும் யோக்யதை இல்லையென்றால், எதற்காக 8 கோடி ரூபாய் செலவிட்டு, பொதுத் தேர்தல் நடத்துகிறீர்கள் என்று. உடனே ‘பத்து ஆண்டுகளுக்கு முன்பே சஷ்டியப்த பூர்த்தி’யைக் கண்ட பேட்டையார் சே! சே! இது கூடவா தெரியவில்லை! மக்களுடைய கருத்தை அறியத்தான் பொதுத் தேர்தல் நடத்துகிறோம் என்று பேசுகிறார். திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்துகிறார்
{{left_margin|3em|நாடாளும் யோக்யதை எந்தக் கட்சிக்கும் இல்லை என்ற பேச்சு, ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல என்பது என் வாதம்.}}
அதனைப் புரிந்துகொள்ள விடவில்லை, பதவி! எதை எதையோ பேச வைக்கிறது. எது பேசினாலும் ‘ஜீரணமாகும்’—பதவி காரணமாக!!
சாதனைகளைக் கணக்கிட, மதிப்பிட, தேவையான சூழ்நிலை இல்லாதபோது, காங்கிரஸ் தன் சாதனைகளை படமாக்கினாலும் சரி, பாட்டு ஆக்கினாலும் சரி, அது பாதிக் கதையே தவிர, ‘முழுவதும்’ ஆகாது.
ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பைப் பெற மக்கள் இம்முறை முனைந்திருக்கிறார்கள் என்பது என் கருத்து.
மற்றோர் கட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத நிலையிலும், இந்தச் சாதனைகளை மதிப்பிட, ஒரு வழி இருக்கிறது, என்ன அவ்வழி எனில், இவர்கள் அரசாண்டு வரும் இதே காலத்தில், பிற நாடுகளிலே அரசாள்பவர்கள் பெற்றுள்ள சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பிடலாம்.
அதற்கு அழைத்தாலோ, அவர்கள் அதெப்படி ஒப்பிடலாம்! வேறு நாடு! வேறு சூழ்நிலை! அந்த மக்களே வேறு! அவர்களுக்கு இருந்த சூழ்நிலையே வேறு! என்று பேசுகிறார்கள்; சிலர்; சில வேளைகளில்.
இவர்கள் குறிப்பிடுவனவற்றையெல்லாம் கணக்கில் வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து, இந்த நாட்டிலே இவர்கள் மூலமாகக் கிடைத்த சாதனைகளை மதிப்பிட்டவர்கள் என்ன கூறி இருக்கிறார்கள்? அவர்கள், ஆட்சியைப் பிடித்திட அலைபவர்கள் அல்ல! நாற்காலிப் பைத்தியம் பிடித்தவர்கள் அல்ல!!<noinclude></noinclude>
k3yob292mj774hezjh4taxzy7davcag
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/192
250
639143
1929257
1923498
2026-05-01T11:48:08Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929257
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|168||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|மேற்கத்திய நாடுகளைக்கூட கணக்கில் எடுக்காமல் புதிதாக விடுதலை பெற்ற கிழக்கத்திய நாடுகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு மதிப்புப் போட்டதில், இந்தோனீஷியா தவிர பிற எல்லா நாடுகளையும்விட, நம்நாடு எல்லாத் துறைகளிலும் ஒருசேர, பிற்போக்காக இருக்கிறது என்றும், இதே வேகத்தில் முன்னேற்றம் இருந்திடுமானால், ஜப்பான் அளவுக்கு இந்தியா வளம்பெற 130 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமென்றும், புது டில்லியில் சில திங்களுக்கு முன்பு கூடிய, பல்வேறு நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.}}
இதெற்கென்ன சொல்லுகிறார்கள்? சாதித்தோம், சாதித்தோம் என்று சொன்னால் போதுமா? சாதித்திடும் திறமை இருந்தால் இவர்களைப் போலவே, ஏகாதிபத்தியப் பிடிப்பில் இருந்து விடுதலை பெற்று, சுதந்திர வாழ்வு பெற்று, ஆட்சி நடத்திய பல கிழக்கத்திய நாடுகள் பெற்ற வளர்ச்சியை ஏன் இங்கு பெற முடியவில்லை? திறமைக் குறைவு தானே காரணம்? பொருத்தமான திட்டம் இல்லாததுதானே காரணம்?
{{left_margin|3em|அந்த ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக் கொண்ட எந்த நாட்டிலாகிலும் போட்ட திட்டங்கள் ஏழைகளுக்குப் பலன் அளிக்கவில்லை; பணக்காரர்களுக்கே அந்தப் பலன் போய்ச் சேர்ந்தது என்று கூறிக் கைபிசைந்து கொள்கின்றனரா?
இங்குதானே, காமராஜரே கூறுகிறார், “ஆமாம்! திட்டத்தின் பலன் ஏழைக்குக் கிடைக்கவில்லை” என்று; வேறு யாரோ, திட்டத்தை நடத்தியது போலவும் இவர் வேறு மண்டலங்களிலே சஞ்சரித்து விட்டு இப்போதுதான் இங்குவந்திருப்பது போலவும்!!}}
சமைக்கவே தெரியாதவள்; அவள் தயாரித்த சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு, கணவன் சலித்துப் போனான்; முகத்தைச் சுளித்துக் கொண்டான். அப்போது அவள் சொன்னாளாம். “நான் சமைப்பது நன்றாகத்தான் இல்லை! எனக்கேகூடத்தான் பிடிக்கவில்லை. அதற்காக நான் உங்களைப் போலவா முகத்தைச் சுளித்துக் கொள்கிறேன்” என்று.
அது, கணவன் – மனைவி கதை! இவருமா அதுபோலப் பேசுவது?
{{left_margin|3em|ஆமாம்! திட்டத்தின் பலன், ஏழைக்குக் கிடைக்கவில்லை. எனக்கே கூடத்தான் தெரிகிறது. ஆனால் அதற்காகக் குறை கூறுவதா! நான் குறை கூறுகிறேனா?}}
என்று. ஆனால் பேசுகிறாரே! அதைச் சாதனை என்றும் காட்டுகிறாரே! ஆய்வாளர்களோ, வேறு எந்த நாட்டிலும் இல்லை, இந்த அளவுக்குத் திறமைக் குறைவு என்கிறார்கள்.<noinclude></noinclude>
4xkaas5zmgp3f7ltv45b2u8y2monji3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/193
250
639144
1929258
1923499
2026-05-01T11:48:44Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929258
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||169}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|இத்தகைய ஆய்வுரைகளை உரைகல்லாகக் கொள்ளலாம்; இவர்களின் சாதனைகளை மதிப்பிட!}}
இந்த முறையிலே மதிப்பிடத் தேவைப்படும் அரசியல் தெளிவு அதிக அளவில் இங்கு இல்லை என்ற ஒரே தைரியத்திலா, இத்தனை பதட்டமாகப் பேசிக்கொண்டிருப்பது!
{{left_margin|3em|நான், தம்பி! நமது நாட்டு மக்களுக்கு அரசியல் தெளிவு வளரவில்லை என்ற எண்ணம் கொண்டவன் அல்ல. தெளிவு இருக்கிறது, அது வளர்ந்துகொண்டும் வருகிறது என்று நம்புகிறேன்.
அந்த நம்பிக்கையுடனேயே மக்களை அணுகி, கழகக் கருத்தைக் கூறி வருகிறேன்.
சாதனைகளைக் கணக்கில் எடுங்கள்—மற்ற இடங்களின் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்—அப்போதுதான் உண்மையான மதிப்பீடு தெரியும் என்று கூறி வருகிறேன்.
என் சொல் அவர்களின் செவி புகாமலில்லை.
அவர்கள் இதயத்திலே உண்மை பதியாமலில்லை.}}
பிறநாடுகளுடன் ஒப்பிடவும் மனம் இல்லையென்றால், தம்பி! இவர்களின் சாதனைகளை மதிப்பிட மற்றும் ஓர் வழி இருக்கிறது. இதற்காவது இவர்கள் இணங்குகிறார்களா என்று பார்த்தால், காணோம்.
{{left_margin|3em|இவர்கள் காட்டும் சாதனைகளை, இவர்கள் செய்தளிப்பதாகச் சொன்ன சாதனைகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, எந்த அளவு வெற்றி கிட்டிற்று என்பதையாவது கணக்கிடக் கூடாதா? அது ஒரு விதமான மதிப்பீடாக இருக்குமே! செய்வார்களா? செய்தார்களா? செய்தார்களா? இல்லையே!}}
உணவுப் பிரச்சினை பற்றிய, ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்தின் போதும், என்னென்ன சாதிப்பதாகச் சொன்னார்கள்? இன்று அந்த முறையிலே இவர்கள் பெற்றுள்ள சாதனை எப்படிப்பட்டது? எலியைக் காட்டி, எமது வேலை முடிந்தது என்று சொல்லும் அளவுக்கு அல்லவா ஆகிவிட்டது!
{{left_margin|3em|இதுவரையில், ரூபாய்க் கணக்கிலே உணவுப் பொருள் விலைக்குக் (கடனுக்கு) கொடுத்துக் கொண்டு வந்த அமெரிக்கா, இனி டாலர்தான் தரவேண்டும் என்று சொல்லி நிர்ப்பந்தப்படுத்தும் நிலை வந்திருக்கிறதே. இது சாதனைக்குச் சான்றா?
கடன் கொடுக்கத் தயக்கமாக இருக்கிறது; ஏனெனில் கடனைத் திருப்பித் தந்திடும் சக்தி இந்தியாவுக்கு இருக்கிறதா என்பதிலே எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று ஜப்பானியப் பொருளாதார நிபுணர்கள் கூறிவிட்டிருக்கிறார்களே, இது சாதனைக்குச் சான்றா?}}<noinclude></noinclude>
daq4rsy7cj8bz1oxj35ypxgp1ezwrb8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/194
250
639146
1929259
1923500
2026-05-01T11:49:23Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929259
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|170||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|ரூபாயின் மதிப்பைக் குறைத்தாலொழிய நெருக்கடியைச் சமாளிக்க முடியாது என்று இவர்களே கூறி விட்டார்களே? சாதனைக்குச் சான்றா?
செல்வம் — வருவாய்—ஒரு சிலரிடம் சிக்கிக் கொண்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனரே—இது சாதனைக்குச் சான்றா?}}
இல்லை! இல்லை! இல்லை!—என்று ஏழையின் இதயம் கூறுகிறது. இதை மாற்ற, அவர்களை மயக்கத்தில் ஆழ்த்த, வளைவுகள், வண்ணங்கள், உலாக்கள், உற்சவங்கள், பேரணிகள், முழக்கங்கள்! இவை போதாவென்று
படங்கள்!!
புனுகு பூசுகிறார்கள், புண் மறையும் என்று!!
அதிலே மிகவும் மணமுள்ளது என்ற நினைப்புடன் காமராஜர் புகழ் பாடுகிறார்கள். அது போதும், மக்களை மயக்க என்று!
இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜெர்மன் நாட்டவர் ஒருவர் வந்து பேசிக்கொண்டிருந்தார். இந்தப் பிரச்சினை எழுந்தது. நான் சொன்னேன்,
{{left_margin|3em|எங்கள் நாட்டில் இப்படி ஒருவரைப் புகழ் பாடி பூஜிக்கும் பழக்கம் நெடுங்காலமாக இருந்துவருகிறது. ஆனால், அதே மக்கள் தங்கள் இன்னல் போகவில்லை என்று தெரியும்போது ‘பூஜா விக்ரஹங்களை’த் தூக்கிப் போட்டு விடுவார்கள். இதுவும் நெடுங்காலமாக இங்கு இருந்து வருவதுதான் என்று கூறினேன்.}}
தம்பி! நேருவைப் போலக் காமராஜரை வடிவம் கொள்ளச் செய்திடுவோம்; அந்த வடிவத்தைக் கண்டு, மக்கள் மயங்கிடும் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஓட்டுகளைப் பறித்துக் கொள்வோம் என்று கருதுகின்றனர்.
நெடுங்காலமாக யாராவது ஒரு வடநாட்டுக்காரரே பெருந்தலைவராக—உற்சவ மூர்த்தியாக—இருந்து வருகிறார் என்பதிலே தென்னாட்டவருக்கு இயல்பாகவே இருந்து வரும் மனக்குறையை காமராஜரை அகில இந்தியப் பெருந்தலைவர் ஆக்குவதன் மூலம் போக்கிக் கொள்ளலாம் என்ற ஆசைகூட உலவிக் கொண்டிருக்கிறது.
ஆனால், ஒரு தலைவரின் புகழ் பாடி, ஒரு கட்சியோ, அதனால் நடத்தப்படும் ஆட்சியோ, மக்களுக்கு என்றென்றும் மயக்கத்தை ஊட்டிட முடியாது
{{left_margin|3em|சுகர்ணோவின் புகழ் பாடப்பட்டதை விடவா!
கனா நாட்டு அதிபர் நிக்ரூமாவின் புகழ் பாடப்பட்டதை விடவா!}}
இவர்கள், அந்த நாட்டு மக்களால் மட்டும் அல்ல, வெளிநாட்டு மக்களாலும் பாராட்டப்பட்ட நிலையில் இருந்தனர். முன்பு! இப்போது? இவர்கள்,<noinclude></noinclude>
8vh25kb93x8udu86v8bxl8isdiepas5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/195
250
639148
1929260
1923501
2026-05-01T11:49:56Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929260
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||171}}{{rule}}</noinclude>
அடிக்கடி நிலைமை மாறக்கூடிய ஜனநாயகச் சூழ்நிலையில் கூட அல்ல, ‘ஓரே கட்சி’ என்ற கவசம் அணிந்துகொண்ட நிலையில் இருந்து வந்தனர்! அவர்களே, மக்கள் தெளிவு பெற்று சீறி எழுந்த போது, நிலைகுலைந்து போயினர்.
ஒரு நாட்டு ஆட்சியிலே என்றாலும் சரி. ஒரு கட்சியிலே என்றாலும் சரி, புகழ் மிக்க இடம் கிடைத்து விட்டால் மட்டும் போதும், அது என்றென்றும் அவர்களை ‘வல்லவர்களாக’ வைத்திருக்கும் என்று கூறிவிடவும் முடியாது.
{{left_margin|3em|சந்தனம், பூசிக்கொள்ளப் பயன்படும், தாக விடாய் தீர்க்க அல்ல.
கடுகு, தாளிக்கப் பயன்படும், அதனையே தின்று கொண்டிருக்க முடியாது.
பெருங்காயம், குழம்புக்கு மணமளிக்கும்; அதனையே கரைத்துக் குடித்துக் கொண்டிருக்க முடியாது.}}
ஆனால், காங்கிரசார், காமராஜரின் புகழ் பாடினால் போதும், மக்கள் தமது மனக்குறை எல்லாம் தீர்ந்து போய் விட்டதாகக் கருதிக் கொள்வார்கள் என்று நம்புகிறார்கள்.
{{left_margin|3em|அவருக்கே அந்த நம்பிக்கை வந்து விட்டதாகவும் சொல்லுகிறார்கள்!}}
புகழ் பொழியப் பொழிய, ஒருவிதமான மனமயக்கம், புகழ் பெறுபவர்களுக்கு ஏற்பட்டு விடும்போது அவர்கள் தம்மைப் பற்றிப் போடும் கணக்கு, நாளாவட்டத்தில்—உடனே அல்ல—பொய்த்துப் போகும். அதிலும், பலனை எதிர்பார்த்து, செய்யப்படும் அர்ச்சனைக்கு மயங்கிவிடுவது மிகவும் ஆபத்தை மூட்டிவிடக் கூடும்.
{{left_margin|3em|அதனால் தான் ஆன்றோர் ஒருவர், கழுகு பிணத்தைத்தான் கொத்தித் தின்னும், ‘முகஸ்துதி’ செய்பவர்கள் உயிருடன் இருக்கும் போதே கொத்தித் தின்பார்கள் என்று கூறி, எச்சரித்தார்.}}
நெடுங்காலத்திற்குப் பிறகு, தமக்குக் கிடைத்துள்ள ‘புகழ்’ ‘நிலை’ செல்வாக்கு காமராஜருக்கு, ஒரு மயக்கத்தைத் தந்திருக்கிறது என்பது, அவருடைய பேச்சிலேயே தெரிகிறது; எதிர்க்கட்சிகளை ஏசுவதிலும், மக்கள் படும் இன்னலைப் பற்றி அக்கறையற்றுப் பேசுவதிலும், புரிகிறது. இந்த நிலையை அவருடைய கட்சியே எத்தனை நாளைக்குத் தாங்கிக்கொள்ளப் போகிறது என்பது, அலட்சியப்படுத்த முடியாத ஒரு கேள்வியாகும், இவர்மீது பொழியப்படுவதைக் காட்டிலும் மிக அதிகமான அளவு புகழ் பொழியப்படும் நிலையில் இருந்த தலைவர்கள், திடீரென்று, தமது கட்சியினராலேயே, ‘கைகழுவி’ விடப்பட்ட காதைகள். நிரம்ப உள்ளன; கருத்துள்ளவர்கள் பாடம் பெற்றிடலாம்.<noinclude></noinclude>
oee3l1oybzb68dfarmasmjjfqul015u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/196
250
639149
1929262
1927378
2026-05-01T11:50:29Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929262
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|172||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|எல்லோராலும்- விரும்பத்தக்க ஒரு திறமையான தலைவர். அவரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற அமெரிக்கர்கள் அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை ஒப்புக்கொள்வார்கள். இதை யாரும் மறுப்பதற்கில்லை.}}
இவ்விதம் புகழ்ந்தார், அமெரிக்க குடி அரசுத் தலைவர் அயிசனவர்; செப்டம்பர் 30; 1959-ல்.
{{left_margin|3em|அவருடைய குரல் உண்மையிலேயே சமாதானத்தின் குரலாகும்.}}
என்று நெஞ்சு நெக்குருகப் பேசினார் கனா நாட்டு அதிபர், 1961. ஜூலை 24-ம் நாள்.
{{left_margin|3em|அவர் சாதாரண மனிதரல்ல! அவர் மிகவும் ஆற்றலும், அஞ்சா நெஞ்சமும், ராஜதந்திர அனுபவமும், உறுதியும் படைத்தவர்.}}
இவ்விதம் புகழ் பாடினார், பின்லாந்து ஜனாதிபதி 1963, டிசம்பர் நாலாம் நாள்.
{{left_margin|3em|அறிவுக் கூர்மையும், விஷய ஞானமும், திட சித்தமுள்ள மனிதராகக் கருதுகிறேன். மேலும் அவரது நாட்டைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லக்கூடிய ஆற்றல் படைத்த ஒரே மனிதர் அவர்தான்!}}
என்று அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர் புகழ்ந்து பேசினார் 1964 ஜனவரி 8.
{{left_margin|3em|மேதா விலாசமும், நிதானமும், விடாமுயற்சியும் மிக்கவர். அதோடு விழிப்புணர்வும் அசைக்க முடியாத உறுதியும் படைத்தவர்}}
என்று புகழ்ந்தார் அமெரிக்க இதழ் அதிபர் ஒருவர்— 1959 பிப்ரவரி 22-ல்.
{{left_margin|3em|அவர் மக்கள் மத்தியில் இருந்து வந்தவராதலால், ஜனரஞ்சகமான ஞானத்தை அறிவார்.}}
என்று ஜப்பானியப் பத்திரிகையாளர் ஒருவர் புகழ்ந்து எழுதினார்—1963 டிசம்பர் 27-ல்.
{{left_margin|3em|அவரது விவேகத்தையும் பெருந்தன்மையையும் புகழ்வதற்கு உண்மையில் எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை.}}
தத்துவப் பேராசிரியர், பெர்ட்ராண்டு ரசல், 1962 அக்டோபர் 28-ல் இதுபோலப் புகழ்ந்துரைத்தார்,
இவ்வளவும், யாரைப் பற்றித் தெரியுமா, தம்பி! இன்று எல்லாம் இழந்து எவருடைய பார்வையிலும் படாமல் இருந்து வரும் குருஷேவ் பற்றி!<noinclude></noinclude>
q1qe6x22ecujiblrgv1mrughr334u78
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/197
250
639150
1929263
1923504
2026-05-01T11:50:55Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929263
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||173}}{{rule}}</noinclude>
அதிபராக இருந்தபோது இத்தனை புகழ் மாலைகள்! இவ்வளவு புகழ் கிடைக்கும்போது நமக்கென்ன குறை, என்றென்றும் நாம்தான் அதிபர், நாம்தான் தலைவர் என்றுதானே குருஷேவ் எண்ணிக் கொண்டிருந்திருப்பார்!
அத்தனை புகழும், அவரைக் காப்பாற்றிற்றா? இல்லையே!
அத்தனை புகழ்மாரி பொழிந்தவர்களும், அவருக்கா இந்தக் கதி என்று ஒரு வார்த்தை கேட்டிட முன்வந்தனரா? இல்லையே!!
ஆகவே புகழ் பொழியப்பட்டால் போதும் நமக்கு, அசைக்க முடியாத நிலை என்றென்றைக்கும் உண்டு என்று யாரும் இருந்துவிட முடியாது; கூடாது.
பெறுபவர் நிலை எப்படியாயினும், ஒரு தலைவர் பெற்றுவிடும் புகழ், மக்களுக்கு, செவிக்கு உணவு; அதுவும் சிறிது காலத்துக்கு!
மக்கள், வாழ்வு கேட்கிறார்கள்; உழைத்து விட்டு!
கேட்பது ரொட்டி! கிடைப்பது கல்!—என்றார்கள் கவிக்குயில் சரோஜினி அம்மையார்.
புசித்திட மக்கள் உணவு கேட்கிறார்கள்; புகழ் புசித்து அவர்கள் வாழ்ந்திட இயலாதே!
அவர்கள் வாழ்வு கேட்கிறார்கள்; வண்ணப் படங்கள் அல்ல;!
படம் காட்டி, மக்களை, மயக்கிட முனைகிறார்கள்! நாமும் படம் எடுக்க முடியும் தம்பி! மக்கள் கண்டு உண்மையை உறுதியாக உணர்ந்திட மட்டுமல்ல, ஊராளும் காங்கிரசாரே, பார்த்துவிட்டு, உண்மைதானே! உண்மைதானே! என்று கூறிக் குமுறிடும் நிலை பெற்றிடக் கூட!
{{left_margin|3em|<poem>ஐயோ! உன் மகனை...
என் மகனை...
அநியாயக்காரப் பாவிகள்
பாவிகள்!...
சுட்டுக் கொன்றுவிட்டார்களடி அம்மா!
அய்யய்யோ! என் மகனையா...
எங்கே! எங்கே!...</poem>}}
தம்பி! மொழிக் கிளர்ச்சியின்போது மூண்டுவிட்ட விரும்பத்தகாத நிலைமையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனைப் பெற்றெடுத்த தாய், சேதி கேட்டு, துடியாய்த் துடித்து, எங்கே! எங்கே! என்று அலறி<noinclude></noinclude>
enyindsh9clycowqe5xc6rmwtqiw26y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/198
250
639151
1929264
1927379
2026-05-01T11:51:29Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929264
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|174||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
ஓடிடும் காட்சி போதாதா!! அனுமதி கிடைக்குமா? ஒரு ஐம்பது அடி; இந்தக் காட்சி!!
{{left_margin|3em|<poem>தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!
இந்தி ஆதிக்கம் ஒழிக!
இந்தியை எதிர்த்துச் செந்தீயில் சாகிறேன்!</poem>}}
இந்த முழக்கம்! ஒரு தீக்குளிப்புக் காட்சி! கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவும் இயலாமல் மக்கள் திகைத்து நிற்பது! எடுத்துக் காட்டவிடுவார்களா!
படம் எடுக்கிறார்களாம், படம்! சாதனைகளை விளக்கிட!
சாதனைகள்தான், ஏழையின் முகத்தில் கவலைக் கோடுகளாகப் பதிந்து கிடக்கின்றனவே! படம் வேறு வேண்டுமா!!
{{rh|<br>2.10.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
pm5s0h5wv4tbomjkritis1q20yy9bsc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/251
250
639243
1929217
1926124
2026-05-01T11:25:42Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929217
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||227}}{{rule}}</noinclude>
இவ்வளவு பரபரப்பு மூண்டுவிட்டது. மற்ற நிருபர்கள் சீமானை மொய்க்கத் தொடங்கினார்கள், விவரம் கேட்டறிய. என்னென்ன தருமகாரியத்துக்குச் சொத்தினை எழுதி வைத்திருக்கிறார்? சிவன் கோயிலுக்கு எவ்வளவு? மடத்துக்கு எவ்வளவு? பஜனைக் கூடத்துக்கு என்ன சொத்து பள்ளிக்கூடத்துக்காக ஏதாகிலும் உண்டா? அனாதைப் பிள்ளைகளுக்காக?—என்று இப்படிக் கேள்விகள் அடுக்கடுக்காக!
சீமான், கேள்விக்கணைகளைத் தொடுத்தவர்களைப் பார்த்த பார்வையில், ஒரு திகைப்பே இருந்தது.
“என்ன கேட்கிறீர்கள்? இதெல்லாம் என்ன கேள்வி?” என்று கேட்டார் சீமான்.
“தொல்லை கொடுப்பதாகக் கருதக்கூடாது. ஊரே எதிர்பார்க்கிறது விவரம் அறிய. அதனால்தான் கேட்கிறோம்” என்றார் நிருபர்.
“என்ன விவரம்?”— என்று கேட்டார் சீமான்.
“தாங்கள் தங்கள் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதிவைத்திருக்கிறீர்களே, அதற்கான விவரத்தைத்தான்” என்றார்கள் நிருபர்கள்.
ஒரு வெடிச் சிரிப்புக் கிளம்பிற்று சீமானிடமிருந்து. “அட இழவே! நான் சொன்னதைத் தப்பர்த்தம் செய்து கொண்டீர்கள் என்றல்லவா தோன்றுகிறது. ஐயா! நான் என் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதிவைத்துவிட்டேன் என்றேன். உடனே உங்களுக்குக் கோயில் குளம், சத்திரம் சாவடி இவைகளின் மீது கவனம் போயிற்று; நான் அந்தத் தருமத்தைச் சொல்லவில்லை ஐயா! சொத்து முழுவதையும் என் பங்காளிகள் ஏதாகிலும் பிற்காலத்திலே பற்றிக்கொள்ளக் கிளம்புவார்களோ என்ற பயத்தில், இப்போதே என் மனைவி பேருக்கு எழுதிவைத்துவிட்டேன். அதைத்தான் நான் சொன்னேன், சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று என் மனைவி பெயர் தர்மாம்பாள்—செல்லமாக தருமு! தருமு! என்று அழைப்பேன்! அதனால் சொத்து அவ்வளவும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று சொன்னேன் என்றார்; நிருபர்கள் திணறிப் போயினர்! விஷயம் இப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்காமல், சீமானை, வள்ளல் என்றும் தருமவான் என்றும் ஏகப்பட்ட தூக்கு தூக்கிவிட்டோமே! ஆசாமி நம்மைப் பைத்தியக்காரராக்கி விட்டாரே என்று எண்ணி வெட்கப்பட்டனர்.
{{left_margin|3em|தருமாம்பாளுக்கு என்று சொல்வதற்குப் பதிலாக தருமத்துக்கு
என்று சொன்னதால் இத்தனை விபரீதமான அர்த்தம் எழும்பிவிட்டது.}}<noinclude>
<references/></noinclude>
ojwgkysf9wl202ed10pt7dkszm81vaj
1929219
1929217
2026-05-01T11:26:20Z
Subisena
16382
1929219
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||227}}{{rule}}</noinclude>
இவ்வளவு பரபரப்பு மூண்டுவிட்டது. மற்ற நிருபர்கள் சீமானை மொய்க்கத் தொடங்கினார்கள், விவரம் கேட்டறிய. என்னென்ன தருமகாரியத்துக்குச் சொத்தினை எழுதி வைத்திருக்கிறார்? சிவன் கோயிலுக்கு எவ்வளவு? மடத்துக்கு எவ்வளவு? பஜனைக் கூடத்துக்கு என்ன சொத்து பள்ளிக்கூடத்துக்காக ஏதாகிலும் உண்டா? அனாதைப் பிள்ளைகளுக்காக?—என்று இப்படிக் கேள்விகள் அடுக்கடுக்காக!
சீமான், கேள்விக்கணைகளைத் தொடுத்தவர்களைப் பார்த்த பார்வையில், ஒரு திகைப்பே இருந்தது.
“என்ன கேட்கிறீர்கள்? இதெல்லாம் என்ன கேள்வி?” என்று கேட்டார் சீமான்.
“தொல்லை கொடுப்பதாகக் கருதக்கூடாது. ஊரே எதிர்பார்க்கிறது விவரம் அறிய. அதனால்தான் கேட்கிறோம்” என்றார் நிருபர்.
“என்ன விவரம்?”— என்று கேட்டார் சீமான்.
“தாங்கள் தங்கள் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதிவைத்திருக்கிறீர்களே, அதற்கான விவரத்தைத்தான்” என்றார்கள் நிருபர்கள்.
ஒரு வெடிச் சிரிப்புக் கிளம்பிற்று சீமானிடமிருந்து. “அட இழவே! நான் சொன்னதைத் தப்பர்த்தம் செய்து கொண்டீர்கள் என்றல்லவா தோன்றுகிறது. ஐயா! நான் என் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதிவைத்துவிட்டேன் என்றேன். உடனே உங்களுக்குக் கோயில் குளம், சத்திரம் சாவடி இவைகளின் மீது கவனம் போயிற்று; நான் அந்தத் தருமத்தைச் சொல்லவில்லை ஐயா! சொத்து முழுவதையும் என் பங்காளிகள் ஏதாகிலும் பிற்காலத்திலே பற்றிக்கொள்ளக் கிளம்புவார்களோ என்ற பயத்தில், இப்போதே என் மனைவி பேருக்கு எழுதிவைத்துவிட்டேன். அதைத்தான் நான் சொன்னேன், சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று என் மனைவி பெயர் தர்மாம்பாள்—செல்லமாக தருமு! தருமு! என்று அழைப்பேன்! அதனால் சொத்து அவ்வளவும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று சொன்னேன் என்றார்; நிருபர்கள் திணறிப் போயினர்! விஷயம் இப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்காமல், சீமானை, வள்ளல் என்றும் தருமவான் என்றும் ஏகப்பட்ட தூக்கு தூக்கிவிட்டோமே! ஆசாமி நம்மைப் பைத்தியக்காரராக்கி விட்டாரே என்று எண்ணி வெட்கப்பட்டனர்.
{{left_margin|3em|தருமாம்பாளுக்கு என்று சொல்வதற்குப் பதிலாக தருமத்துக்கு என்று சொன்னதால் இத்தனை விபரீதமான அர்த்தம் எழும்பிவிட்டது.}}<noinclude>
<references/></noinclude>
8of88e99n6wgly98s1j3ujiuyse4kcq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/252
250
639244
1929225
1926125
2026-05-01T11:32:18Z
Subisena
16382
1929225
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|228||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
இந்தக் கதைதான் தம்பி! நினைவிற்கு வருகிறது, காங்கிரஸ் கட்சி இப்போது பேசிக்கொண்டு வரும் பேச்சைக் கேட்கும் போது.
<poem>மறை பொருள்
இரு பொருள்
குறை பொருள்</poem>
இந்த முறையிலே கொள்கைகளையும் திட்டங்களையும் பற்றி அவர்கள் பேசுவதால், முழுப் பொருளை, உண்மைப் பொருளை அறிந்து கொள்ளாதவர்கள், மயங்குகின்றனர்; வேறு விதமான பொருள் கொள்ளுகின்றனர்.
{{left_margin|3em|இதனைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளமுனைகிறது காங்கிரஸ் கட்சி.}}
இந்த விதமான ‘இருபொருள்’ தரும் பேச்சை ஒரு பொறுப்புள்ள கட்சி பேசுவதை ஜனநாயகத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற நாட்டினர் ஏற்கமாட்டார்கள். இங்கு?
தேள் கொட்டிற்று
தேனாக இனித்தது
என்று பேசிடக்கூட அவர்கள் துணிவு பெறுகிறார்கள். என்ன விபரீதமான பேச்சய்யா இது!–என்று கேட்டிடினோ, புருவத்தை நெறித்தபடி கேட்கவும்
முனைகின்றனர்,
<poem>தேள் கொட்டாதா?
தேன் இனிக்காதா?— என்று</poem>.
வேடிக்கைக்காகச் சொல்லுகிறேன் என்றோ, அவர்களிடம் பகை உணர்ச்சி கொண்டதால் அவ்விதம் பேசுகிறேன் என்றோ எண்ணிக் கொள்வர். அவ்விதம் நான் பேசுபவன் அல்ல.
<poem>தீவிரத் திட்டம்
அதிதீவிரத் திட்டம்
புரட்சித் திட்டம்
புதுமைத் திட்டம்
பொது உடைமைத் திட்டம்</poem>
என்றெல்லாம் பாராட்டினர் பலர், சீமான் தன் சொத்து அவ்வளவையும் தருமத்துக்கு எழுதிவைத்துவிட்டதாகச் சொன்ன உடன் பாராட்டியதுபோல.
{{left_margin|3em|எப்போது கிடைத்தது அந்தப் பாராட்டு?}}<noinclude>
<references/></noinclude>
amjqvijsvjs5qxmkak9d7wi9qg161hf
1929230
1929225
2026-05-01T11:33:42Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929230
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|228||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
இந்தக் கதைதான் தம்பி! நினைவிற்கு வருகிறது, காங்கிரஸ் கட்சி இப்போது பேசிக்கொண்டு வரும் பேச்சைக் கேட்கும் போது.
<poem>மறை பொருள்
இரு பொருள்
குறை பொருள்</poem>
இந்த முறையிலே கொள்கைகளையும் திட்டங்களையும் பற்றி அவர்கள் பேசுவதால், முழுப் பொருளை, உண்மைப் பொருளை அறிந்து கொள்ளாதவர்கள், மயங்குகின்றனர்; வேறு விதமான பொருள் கொள்ளுகின்றனர்.
{{left_margin|3em|இதனைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளமுனைகிறது காங்கிரஸ் கட்சி.}}
இந்த விதமான ‘இருபொருள்’ தரும் பேச்சை ஒரு பொறுப்புள்ள கட்சி பேசுவதை ஜனநாயகத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற நாட்டினர் ஏற்கமாட்டார்கள். இங்கு?
<poem>தேள் கொட்டிற்று
தேனாக இனித்தது</poem>
என்று பேசிடக்கூட அவர்கள் துணிவு பெறுகிறார்கள். என்ன விபரீதமான பேச்சய்யா இது!–என்று கேட்டிடினோ, புருவத்தை நெறித்தபடி கேட்கவும்
முனைகின்றனர்,
<poem>தேள் கொட்டாதா?
தேன் இனிக்காதா?— என்று</poem>.
வேடிக்கைக்காகச் சொல்லுகிறேன் என்றோ, அவர்களிடம் பகை உணர்ச்சி கொண்டதால் அவ்விதம் பேசுகிறேன் என்றோ எண்ணிக் கொள்வர். அவ்விதம் நான் பேசுபவன் அல்ல.
<poem>தீவிரத் திட்டம்
அதிதீவிரத் திட்டம்
புரட்சித் திட்டம்
புதுமைத் திட்டம்
பொது உடைமைத் திட்டம்</poem>
என்றெல்லாம் பாராட்டினர் பலர், சீமான் தன் சொத்து அவ்வளவையும் தருமத்துக்கு எழுதிவைத்துவிட்டதாகச் சொன்ன உடன் பாராட்டியதுபோல.
{{left_margin|3em|எப்போது கிடைத்தது அந்தப் பாராட்டு?}}<noinclude>
<references/></noinclude>
pl5ffwgk3rkgjvm5ow9cedlpjt3qnuq
1929232
1929230
2026-05-01T11:34:30Z
Subisena
16382
1929232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|228||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
இந்தக் கதைதான் தம்பி! நினைவிற்கு வருகிறது, காங்கிரஸ் கட்சி இப்போது பேசிக்கொண்டு வரும் பேச்சைக் கேட்கும் போது.
<poem>மறை பொருள்
இரு பொருள்
குறை பொருள்</poem>
இந்த முறையிலே கொள்கைகளையும் திட்டங்களையும் பற்றி அவர்கள் பேசுவதால், முழுப் பொருளை, உண்மைப் பொருளை அறிந்து கொள்ளாதவர்கள், மயங்குகின்றனர்; வேறு விதமான பொருள் கொள்ளுகின்றனர்.
{{left_margin|3em|இதனைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளமுனைகிறது காங்கிரஸ் கட்சி.}}
இந்த விதமான ‘இருபொருள்’ தரும் பேச்சை ஒரு பொறுப்புள்ள கட்சி பேசுவதை ஜனநாயகத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற நாட்டினர் ஏற்கமாட்டார்கள். இங்கு?
<poem>தேள் கொட்டிற்று
தேனாக இனித்தது</poem>
என்று பேசிடக்கூட அவர்கள் துணிவு பெறுகிறார்கள். என்ன விபரீதமான பேச்சய்யா இது!–என்று கேட்டிடினோ, புருவத்தை நெறித்தபடி கேட்கவும்
முனைகின்றனர்,
<poem>தேள் கொட்டாதா?
தேன் இனிக்காதா?— என்று.</poem>
வேடிக்கைக்காகச் சொல்லுகிறேன் என்றோ, அவர்களிடம் பகை உணர்ச்சி கொண்டதால் அவ்விதம் பேசுகிறேன் என்றோ எண்ணிக் கொள்வர். அவ்விதம் நான் பேசுபவன் அல்ல.
<poem>தீவிரத் திட்டம்
அதிதீவிரத் திட்டம்
புரட்சித் திட்டம்
புதுமைத் திட்டம்
பொது உடைமைத் திட்டம்</poem>
என்றெல்லாம் பாராட்டினர் பலர், சீமான் தன் சொத்து அவ்வளவையும் தருமத்துக்கு எழுதிவைத்துவிட்டதாகச் சொன்ன உடன் பாராட்டியதுபோல.
{{left_margin|3em|எப்போது கிடைத்தது அந்தப் பாராட்டு?}}<noinclude>
<references/></noinclude>
1mfal1s9x33scdw8psmdb1z4kh1n62z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/253
250
639245
1929241
1926126
2026-05-01T11:39:22Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||229}}{{rule}}</noinclude>
காங்கிரஸ் எர்ணாகுளத்தில் கூடி, நாட்டிலுள்ள பாங்குகளை இனி சர்க்கார் உடைமையாக்கிக் கொள்ளும் என்ற கருத்துப்பட, ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதனைத் தேர்தல் அறிக்கையிலே இணைத்தபோது.
பாங்குகளைத் தேசீய உடைமை ஆக்க வேண்டும்; இன்று அந்த அமைப்புகள் முதலாளிகளின் ஆதிக்கத்தை வளர்க்கும் கருவிகளாக உள்ளன; உண்மையான நாட்டு முன்னேற்றத்துக்கு, மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுவதில்லை; முதலாளிகள் மேலும் மேலும் தங்கள் தொழில்களைப் பெருக்கிக் கொள்வதற்கே பயன்பட்டுவிடுகின்றன என்ற கருத்து பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
துவக்கத்திலே இந்தக் கருத்தைத் துடுக்குத்தனம் என்றும், பொருளாதாரச் சீர்குலைவு உண்டாக்க வல்லது என்றும், தனிநபர் உரிமையைத் தகர்த்துவிடுவது என்றும் கூறித் தாக்கினர் காங்கிரஸ் அரசினர்.
{{left_margin|3em|விவரம் அறியாதார் பேச்சு என்றும் வீண் குழப்பம், மனப் பிராந்தி என்றும் கூறினர்; கண்டித்தனர்.}}
ஆனால் இந்தக் கருத்து மக்களாலே வரவேற்கப்பட்டு, வலிவு பெற்றது.
இந்தக் கருத்தினைக் கூறி, மக்களைத் தம் பக்கம் முற்போக்குக் கட்சிகள் இழுத்துக்கொண்டு விடுமோ என்ற அச்சம் ஆளவந்தார்களுக்கு ஏற்பட்டது.
அதனால்தான் ஆளவந்தார்கள், மக்களை மயக்கிட, பாங்குகளைத் தேசீய உடைமை ஆக்கத் திட்டமிட்டுவிட்டிருப்பதாக அறிவித்தனர்.
{{left_margin|3em|எர்ணாகுளத்தில் இந்தப் பேச்சு திட்ட வடிவம் கொண்டது; ஆனால் அதற்கு முன்பே தமிழகத்தில் ‘நிலை அறிய’ச் சுற்றுப் பயணம் நடத்திய முன்னாள் நிதி அமைச்சர், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், அழுத்தந் திருத்தமாகக் கூறினார் பாங்குகள் தேசீய உடைமைகளாக்கப்பட வேண்டும் என்று.}}
அவர் சொன்னதன் விளைவுதான் எர்ணாகுளத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கருத இடம் இருந்தது. டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், பொருளாதாரத் துறையிலே புலி! நிதி அமைச்சராக ஒரு முறைக்கு இருமுறை வேலை பார்த்தவர்; வித்தகர் என்று பாராட்டப்பட்டவர்; அவர் கூறுகிறார், பாங்குகள் தேசீய உடைமையாக்கப்பட வேண்டும் என்று.
<poem>காங்கிரசின் நடுநாயகர் அவர்!
பொருளாதாரத் துறையிலே நிபுணர் அவர்!</poem><noinclude>
<references/></noinclude>
kx6b94f5ec425ik08rd9l5c4g5hhxsa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/254
250
639246
1929246
1926135
2026-05-01T11:41:13Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929246
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|230||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
அவரே கூறிவிட்ட பிறகு, அது பற்றி ஐயப்பாடு கொள்ளப் போமோ! பாங்குகளைத் தேசீய உடைமை ஆக்கினால், பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும் என்ற அச்சத்தைக் கிளப்பிடுவோர் இனி வாய் மூடிக்கொள்வர் என்று காங்கிரஸ் பேச்சாளர்கள் விளக்கமளித்தனர்.
{{left_margin|3em|இதனை விடத் தீவிரமான திட்டம் வேறு இருக்க முடியுமா?
இதைப்போன்ற புரட்சிகரமான திட்டத்தைக் காட்டிலும் வேறு என்ன திட்டம் காட்ட முடியும் எதிர்க்கட்சிகளால்!}}
என்றெல்லாம் எக்காளமிட்டனர்.
தம்பி! நம்மைப்போல விளக்கம் வேண்டும், இருபொருள் கூடாது என்று கருதுபவர்கள், எர்ணாகுளத்துத் தீர்மானத்தில் பாங்குகளை தேசீய உடைமை ஆக்கிவிடப் போகிறோம் என்று திட்டவட்டமாகக் கூறக்காணோமே என்று கேட்டபோது, சீறி விழுந்தனர், ஆளுங்கட்சிச் சீலர்கள். ஏடா! மூடா! தேசிய உடைமை ஆக்குவோம் என்று இவ்வளவு வெளிப்படையாகச் சொன்னால்தானா— ஏன்!—கோடிட்டுக் காட்டினால் போதாதா?
<poem>Social Control—
சமுதாயக் கட்டுப்பாடு</poem>
என்று கூறியிருக்கிறோமே. அதன் பொருள் என்ன என்று அறிந்துகொள்ளக்கூடவா முடியவில்லை? அத்தனை மந்த மதியா?— என்றெல்லாம் பேசிக் கேலி செய்தனர்.
Social Control—சமுதாயக் கட்டுப்பாடு என்பதற்கும், Nationalisation—சர்க்கார் உடைமையாக்குவது என்பதற்கும் வித்தியாசம் இல்லையா? நிரம்ப!!
அதனைச் சிலர் எடுத்துக்காட்டியபோதுகூட, மறுத்தனர் இந்த மகானுபாவர்கள்.
பாங்குகளைத் தேசிய உடைமை ஆக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் கிருஷ்ணமேனன், Social Control சமுதாயக் கட்டுப்பாடு என்பதற்கு உண்மையான பொருள், நடைமுறைப் பொருள்—Nationalisation தேசிய உடைமை ஆக்குவது என்பதுதான் என்று விளக்கம் கூறினார்.
அப்போதுகூட ஆளவந்தார்கள், இல்லை! இல்லை! நாங்கள் கூறும் சமுதாயக் கட்டுப்பாடு வேறு, தேசிய உடைமை ஆக்குவது என்பது வேறு என்று அறிவிக்கவில்லை.
{{left_margin|3em|சொத்து அவ்வளவும் தருமத்துக்குத் தான் என்று கூறிய சீமான்போல இருந்துவிட்டனர்.}}<noinclude>
<references/></noinclude>
nxzv6zxvtmgsxdye7lvz0bv2ovbbfpe
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/255
250
639247
1929250
1926136
2026-05-01T11:42:11Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929250
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||231}}{{rule}}</noinclude>
ஏழை எளியோர்களின் செவிகளுக்கு பாங்குகள் சர்க்கார் உடைமை ஆக்கப்படும் என்ற பேச்சு இசையாக அல்லவா இருந்திடும். இனிப்பு கொஞ்சமா! மன மயக்கம் ஏற்படுமல்லவா!! அந்த நேரமாகப் பார்த்து ஓட்டுக்களைத் தட்டி பறித்துக் கொள்ளலாமல்லவா? அந்த நினைப்புடன், இந்த பேச்சை உலவவிட்டனர்.
உண்மையிலேயே இவர்களுக்கு, பாங்குகளைத் தேசிய உடைமை ஆக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதனை இருபொருள் கொண்ட பேச்சாக்காமல், திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியினரின் நோக்கம் வேறு!
ஏழைக்கு இனிப்பு அளிப்பதாகவும் இருக்க வேண்டும், அதேபோது முதலாளிகளுக்குக் கோபமோ ஐயப்பாடோ ஏற்படாமலும் இருக்க வேண்டும்.
ஏழைகளின் ஓட்டுகளும் வேண்டும், முதலாளிகளின் நோட்டுகளும் வேண்டும்.
சொல்லும் செயலும் இதற்குத் தகுந்ததாக அமைய வேண்டும்.
ஏழை எளியோர்களே! எப்படிப்பட்ட புரட்சித்திட்டம் கொண்டுவரத் தீர்மானித்திருக்கிறோம் பார்த்தீர்களா? பாங்குகளை இனி முதலாளிகளிடம் விட்டு வைக்கப் போவதில்லை, சர்க்காரிடம் அவை வந்து சேரும் என்று கூறவும்,
முதலாளிகளே! பயம் ஏன்? சந்தேகம் ஏன்? பாங்குகளைச் சர்க்கார் எடுத்துக் கொள்ளாது! எடுப்பதாக இருந்தால், Nationalisation – நாட்டுடைமை ஆக்குவது என்றல்லவா கூறியிருப்போம்; இப்போது நாங்கள் சொல்வது என்ன? கவனித்தீர்களல்லவா? கருத்துப் புரியவில்லையா? Social Control சமுதாயக் கட்டுப்பாடு என்றுதான் கூறினோம், வேறில்லை. ஆகவே வீண் குழப்பம் கொள்ளாதீர்கள் என்று கூறிடவும்,
{{left_margin|3em|ஏழைகளே! உங்களுக்காகப் பாடுபடும் எமக்கு உமது ஓட்டுகளைத் தாருங்கள்!! என்று கேட்டிடவும்,
முதலாளிகளே! உங்கள் ஆதிக்கத்தை அனுமதித்து வருகிறோம்; அது நிலைத்திருக்க வேண்டுமாயின் ஆட்சியில் நாங்கள் இருந்திட வேண்டும்; முற்போக்காளர் வந்திடின் Nationalisation-நாட்டுடைமை ஆக்கிவிடுவர் உம்மிடமுள்ள பாங்குகளை; நாங்கள் ஆட்சியில் இருந்திட வழி செய்திடின், Nationalisation-நாட்டு டைமை ஆக்குவது அல்ல, Social Control-சமுதாயக் கட்டுப்பாடு மட்டுமே திட்டமாக இருக்கும், ஆகவே எடும் நோட்டுகளை! கொடும் தாராளமாக!! என்று கேட்டிடவும், வழி செய்து கொள்ளவே இந்த முயற்சி.}}<noinclude>
<references/></noinclude>
nh2f24rq4qbmdij7xz4yzeqofrja7cn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/256
250
639252
1929253
1926137
2026-05-01T11:43:36Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929253
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|232||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
நாணயக் குறைவான முயற்சி அல்லவா என்று கேட்கத் தோன்றும்; ஆனால் தம்பி! நாணயத்தின் மதிப்பையே குறைத்திடத் துணிந்தவர்கள் இதற்கா கூச்சப்படப் போகிறார்கள்!
அதெல்லாம் இல்லை உங்கள் அண்ணாத்துரை பழிபோடுகிறான், எங்கள் நோக்கம் இருபொருள் கொண்ட பேச்சுப்பேசி இருதரப்பினரின் ஆதரவையும் பெறுவது என்பதல்ல; சமுதாயக் கட்டுப்பாடு என்றாலே நாட்டுடைமை ஆக்குவது என்பதுதான் பொருள் என்று தம்பி! யாரேனும் நாவாணிபம் புரிந்திடுவோர் வாதாட முன்வந்திடின்—அதற்காகவே தம்மை ஒப்படைத்துவிட்டோர் உளர் — அவர்களைக் காங்கிரஸ் மூலவர்களிலே ஒருவரும், இரயில்வே அமைச்சருமான எஸ். கே.பட்டீல் பேசியிருப்பதனைப் படித்துப் பார்க்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்.
பட்டீல், இவர்களின் குட்டு உடைபட்டுப் போகும் விதமாகப் பேசி இருக்கிறார்.
இவரும் எர்ணாகுளத்தில் இருந்தவர்தான்! பாங்குகள் பற்றிய திட்டத்தை எதிர்த்தவரும் அல்ல!
இவருடைய வார்த்தை கவனிக்கத் தக்கதல்ல என்று கூறிடவும் முடியாது.
இவருடைய ‘தயவு’ தேவை இல்லை என்று காங்கிரசும் கூறிவிட முடியாது. இவர் மூலமாகவே, பெரிய புள்ளிகளிடம் பணம் பெறப்படுகிறது தேர்தல் நிதிக்கு. பொருளாளர்!
ஆகவே எஸ். கே. பட்டீல், பாங்கு சம்பந்தமாக ஏற்பட்ட தீர்மானத்தை விளக்கிக் காட்டியிருப்பது, உண்மை நிலைமையை எடுத்துக் காட்டுவதாகும்.
பேசவேண்டிய இடத்தில்தான் பட்டீல் பேசி இருக்கிறார்.
மகாராஷ்டிர கவர்னர் செரியன் தலைமை வகித்திட, செல்வ புரியினர் நாலாயிரவருக்கும் அதிகமாகக் கொலுவிருக்க, பம்பாய் நகர மணி மண்டபத்தில் இந்தத் திங்கள் இருபத்தி இரண்டாம் நாள், ‘சிறப்பு விருந்தின’ராக அழைக்கப்பட்டிருந்த பட்டீல், திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்,
{{left_margin|3em|பாங்குகள் தேசீய உடைமை ஆக்கப்பட மாட்டா என்று உறுதி அளிக்கிறேன் என்று.}}
கனரா பாங்கியின் வைர விழா கொண்டாட்டத்திலே அவர் சிந்திய முத்து இது!
எர்ணாகுளம் தீர்மானம் பற்றி, பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்களே, தீவிரவாதிகள், பாங்குகளைக் காங்கிரஸ் அரசு நாட்டுடமை<noinclude>
<references/></noinclude>
phm3drgetmqn7tt0pz1sptdqy5find9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/257
250
639253
1929255
1926138
2026-05-01T11:47:31Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929255
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||233}}{{rule}}</noinclude>
ஆக்கிவிடும் என்று பொருள் கூறுகிறார்களே, பட்டீல் இதுபற்றி என்ன கூறுகிறார் கேட்போம் என்ற நோக்குடனேயே வைர விழாச் சொற்பொழிவாற்ற அழைத்தனர்.
எர்ணாகுளம் தீர்மானம் பற்றிய உண்மையான பொருளைக் கேட்டறிந்து கொள்வோம் என்ற நோக்கத்துடன் செல்வபுரியினர் நாலாயிரவர் கூடினர்.
எதற்கு அழைத்தார்கள் என்பதையும் அவர்கள் மனத்திலே எந்தவிதமான சந்தேகமும் அச்சமும் புகுந்திருக்கும் என்பதையும், அவர்களுடைய அச்சத்தைப் போக்காவிட்டால் தன் ஆட்சிக்கும் கட்சிக்கும் எத்தகைய இன்னலும் இழப்பும் ஏற்படும் என்பதையும் நன்றாகப் புரிந்து கொண்டே பட்டீல் பேசியிருக்கிறார்.
{{left_margin|3em|Mr. Patil asked Bankers not to entertain the fear that because the Congress election manifesto mentioned Social control over banks and life–Insurance it had armed itself with blanket powers to nationalise banks overnight. There need bc no such fear.}}
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பாங்குகள், இன்ஷூரன்ஸ் அமைப்புகள் ஆகியவைமீது சமுதாயக் கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதனால், திடுமென இவைகளை நாட்டுடைமை ஆக்கிவிடும் அதிகாரத்தைக் காங்கிரஸ் அரசு பெற்றுக்கொண்டு விட்டிருக்கிறது என்று எண்ணி அச்சம் கொள்ள வேண்டாமென்று பட்டீல் பாங்குக்காரர்களைக் கேட்டுக் கொண்டார்! அவ்விதமான அச்சம் இருக்கத் தேவையில்லை என்று அவர் கூறினார்.
தம்பி! எப்படி இருக்கிறது பார்த்தனையா, இவர்கள் போக்கு! எர்ணாகுளம் தீர்மானத்தைத் தூக்கிக்கொண்டு சந்தைச் சதுக்கம் சென்று சிந்து பாடுகிறார்கள் காங்கிரஸ் பேச்சாளர்கள்,
<poem>தீவிரமான திட்டம்
புரட்சித் திட்டம்
புதுமைத் திட்டம்
பொது உடைமைத் திட்டம்</poem>
என்றெல்லாம்; ஆகவே எமக்கு ‘ஓட்டு’—என்று இரைச்சலிடுகின்றனர்.
பட்டீலோ, செல்வபுரியினரைக் கூட்டிவைத்து தேர்தல் அறிக்கையிலே ஏதோ நாலுவார்த்தை எழுதிவிட்டதால் என்ன குடி முழுகிவிடும்! ஏன் இந்தப் பயம்! யார் உங்கள் பாங்குகளை எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்! ஒரு பேச்சுக்குச் சொன்னோம், Social control சமுதாயக்<noinclude>
<references/></noinclude>
ov5rglg0b7aoxcchg1cs4l00hz6zg0d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/291
250
639691
1929265
1927287
2026-05-01T11:54:57Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929265
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||267}}{{rule}}</noinclude>
இதனை அவர்கள் மிக வலிவுள்ள திட்டமென்றும் நம்புகின்றனர்.
தி.மு.கழகம் மிகமிகச் சாமான்யர்களாலே நடத்தப்பட்டு வருவது அதன்
வளர்ச்சிகண்டு அருவருப்புகொண்டோர் உளர், அவர்களைத் தட்டிவிட்டுப்
போட்டியை மூட்டி விடலாம் என்று கருதுகின்றனர்.
தம்பி! முதன் முதல் கழகம் தேர்தலிலே வெற்றி பெற்றபோது,
காங்கிரசைக் காலமெல்லாம் எதிர்த்து வந்தவர் ஒருவர்-ஆனால் நமது
கழகம் அல்ல-என்னைத் தருவித்து, தமது வாழ்த்தையும் பாராட்டுதலையும்
தெரிவித்ததுடன், இந்த விதமான வெற்றியும் வளர்ச்சியும் கழகத்துக்குக்
கிடைத்திடும், அதிலும் இவ்வளவு குறுகிய காலத்தில் என்று நான்
எண்ணிடவே இயலவில்லை, எப்படியோ நல்ல இடம் கிடைத்து
விட்டது; இனி அதனைக் கெட்டிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுரைத்தார்.
மகிழ்ச்சி அடைந்தேன். 'இதுவரையில் கழகத்துக்கு ஆதரவு காட்டாதிருந்து
வந்தவர்களெல்லாம்கூட, இது வளருகிற கட்சிதான் என்பது இப்போது
மெய்ப்பிக்கப்பட்டு விட்டதால், இனி ஆதரவு அளித்திட முன்
வருவார்கள் என்று பேசி என் ஆவலைக் கிளறினார்.
அந்த ஆவலுடன் எனக்கோர் ஐயப்பாடு கிளம்பிற்று. ஆதரவு
கிடைத்திடும் என்கிறாரே, எந்த இடத்து ஆதரவோ என்பது பற்றிய
ஐயப்பாடுதான் அவரே அதனைப் போக்கிவிட்டார்; "நான் சில
கம்பெனிகளுக்குச் செல்ல முடியும், ஆதரவு காட்டச் சொல்லி; அவர்
களுக்கெல்லாம் சில இலட்சங்களை நன்கொடையாகக் கொடுப்பது
என்பது மிக எளிதான காரியம்” என்றார்.
கிணறு வெட்டுகிறார், கிளம்புவது கிளம்பட்டும் என்று எண்ணிக்
கொண்டு நான் ஏதும் பேசாதிருந்தேன்; அவர் தமது பேச்சைத் தொடர்ந்தார்.
"ஒரு காரியம் செய்யவேண்டும் நீங்கள்; தொழில்களை - பஸ்கள்
போன்ற தொழில்களை - தேசிய மயமாக்க வேண்டும் என்ற பேச்சை
விட்டுவிட வேண்டும்; அது சரியான திட்டமல்ல; அதனை மட்டும்
கழகம் மறுத்து விடுமானால், தொழிற் கோட்டங்கள் உமது கழகத்துக்கு
நன்கொடை தந்திடத் தாராளமாக முன்வரத் தயக்கம் கொண்டிடா"
என்றார்.
புரிகிறதல்லவா, தம்பி! நமது கொள்கையை விலை பேசுகிறார்!
என்னிடம்! எந்தக் கொள்கையைக் கூறி மக்களின் பேராதரவைப்
பெற்றோமோ. அதே கொள்கையை, கம்பெனிகளிடம் நன்கொடை
வாங்கிட, 'விட்டுவிட'ச் சொல்லுகிறார்!!
நமது வளர்ச்சியும் வெற்றியும் அவருடைய மனத்திலே அந்த
அளவுக்குத்தான் மதிப்பைக் கொடுத்தது.<noinclude></noinclude>
libnk7pljphtg2pjad50bct6mqwlid5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/292
250
639692
1929266
1927290
2026-05-01T11:55:50Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929266
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|268||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
நான் கோபம் கொள்ளவில்லை, வீண்வேலை அல்லவா! அவர்.
அவருடைய 'அரசியலை'ப் பேசினார். எங்கள் அரசியல் வேறு என்று
கூறிவிட்டு வந்துவிட்டேன்.
{{left_margin|3em|கழகம் வளர வளர இது போல வளைந்து கொடுக்கும் என்ற
நினைப்பு நிரம்ப இருந்து வந்தது. இப்போது வெகுவாகக் குறைந்து
விட்டது. என்றாலும், கழகத்தில் சிலரிடமாவது இந்த வலையை
வீசிடலாம். ஏதாவது பிடிபடக் கூடும் என்ற நப்பாசை கொண்டோர்
சிலர் உளர்.
அது ஒரு காரணம், கழக ஆதரவாளர்களை வீழச் செய்துவிடலாம் என்று எண்ணித் திட்டமிடுவதற்கு.}}
ஆனால் இவைகளையெல்லாம்விட தம்பி! அவர்கள் மிகப் பலமாக
நம்பிக் கொண்டிருப்பது. உணர்ச்சி ஒரு செல்வம், அதனை அடக்கி
ஆண்டால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பதனை அறியாது. ஓடி
ஆடி உணர்ச்சியைப்பாழாக்கிக் கொள்ளுவோம் என்பதிலேதான். அதனை
உணர்ந்துதான் தம்பி! தெளிந்த சிந்தனையாளர் திரு.வி.க.வின்
மணிமொழியைத் துவக்கத்திலே தந்துள்ளேன்; உணர்ச்சியைப் பதப்படுத்தி
பயன் பெற்றிட முனையவேண்டும்.
{{left_margin|3em|மின்னல் கண்ணைப் பறித்திடும், இருளைப் போக்கிடாது.
அகல் விளக்காயினும் போதும், இருளைப் போக்கிட.}}
உணர்ச்சியைச் சிதறடித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் தம்பி!
அவர்கள் நம்பிக்கொண்டிருப்பது, நமதுபணி நின்று நிதானமாக.
தட்டாமல் தயங்காமல், தொடர்ந்து இருக்க முடியாது என்பதிலே.
இவர்களோ ஏழைகள், இல்லாமை கொட்டிக் கொண்டிருக்கும்;
இந்நிலையில் இவர்கள் ஆர்வம் மிக்கவராயினும், தொடர்ந்து எங்கிருந்து
தொண்டாற்றப் போகிறார்கள்; இடையிலே சோர்ந்து போவர். தளர்ந்து
போய்விடுவர்-என்று நம்புகின்றனர்.
{{left_margin|3em|கூட்டம் கூட்டுவர் கோலாகலமாக
கொடிகளை நாட்டுவர் கொண்டாட்டமாக.
முழக்கம் எழுப்புவர் இடிபோன்றதாக.
ஆனால், பரபரப்பான வேலையிலே தம்மை ஈடுபடுத்திக்
கொள்வதன் காரணமாகவே, அலுத்துப் போய்விடுவர்; தொடர்ந்து
பணியாற்றும் இயல்பு எழாது; வலிவு இராது; பழக்கம் இல்லை; பயிற்சி இல்லை என்று பேசிக்கொள்கின்றனர்.}}<noinclude></noinclude>
tddn6knluh0eb0uj6wj5tybh8tjjqt2
1929267
1929266
2026-05-01T11:56:23Z
Saranya V R
14232
1929267
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|268||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
நான் கோபம் கொள்ளவில்லை, வீண்வேலை அல்லவா! அவர்.
அவருடைய 'அரசியலை'ப் பேசினார். எங்கள் அரசியல் வேறு என்று
கூறிவிட்டு வந்துவிட்டேன்.
{{left_margin|3em|கழகம் வளர வளர இது போல வளைந்து கொடுக்கும் என்ற
நினைப்பு நிரம்ப இருந்து வந்தது. இப்போது வெகுவாகக் குறைந்து
விட்டது. என்றாலும், கழகத்தில் சிலரிடமாவது இந்த வலையை
வீசிடலாம். ஏதாவது பிடிபடக் கூடும் என்ற நப்பாசை கொண்டோர்
சிலர் உளர்.
அது ஒரு காரணம், கழக ஆதரவாளர்களை வீழச் செய்துவிடலாம் என்று எண்ணித் திட்டமிடுவதற்கு.}}
ஆனால் இவைகளையெல்லாம்விட தம்பி! அவர்கள் மிகப் பலமாக
நம்பிக் கொண்டிருப்பது. உணர்ச்சி ஒரு செல்வம், அதனை அடக்கி
ஆண்டால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பதனை அறியாது. ஓடி
ஆடி உணர்ச்சியைப்பாழாக்கிக் கொள்ளுவோம் என்பதிலேதான். அதனை
உணர்ந்துதான் தம்பி! தெளிந்த சிந்தனையாளர் திரு.வி.க.வின்
மணிமொழியைத் துவக்கத்திலே தந்துள்ளேன்; உணர்ச்சியைப் பதப்படுத்தி
பயன் பெற்றிட முனையவேண்டும்.
{{left_margin|3em|மின்னல் கண்ணைப் பறித்திடும், இருளைப் போக்கிடாது.
அகல் விளக்காயினும் போதும், இருளைப் போக்கிட.}}
உணர்ச்சியைச் சிதறடித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் தம்பி!
அவர்கள் நம்பிக்கொண்டிருப்பது, நமதுபணி நின்று நிதானமாக.
தட்டாமல் தயங்காமல், தொடர்ந்து இருக்க முடியாது என்பதிலே.
இவர்களோ ஏழைகள், இல்லாமை கொட்டிக் கொண்டிருக்கும்;
இந்நிலையில் இவர்கள் ஆர்வம் மிக்கவராயினும், தொடர்ந்து எங்கிருந்து
தொண்டாற்றப் போகிறார்கள்; இடையிலே சோர்ந்து போவர். தளர்ந்து
போய்விடுவர்-என்று நம்புகின்றனர்.
{{left_margin|3em|கூட்டம் கூட்டுவர் கோலாகலமாக
கொடிகளை நாட்டுவர் கொண்டாட்டமாக.
முழக்கம் எழுப்புவர் இடிபோன்றதாக.
ஆனால், பரபரப்பான வேலையிலே தம்மை ஈடுபடுத்திக்
கொள்வதன் காரணமாகவே, அலுத்துப் போய்விடுவர்; தொடர்ந்து
பணியாற்றும் இயல்பு எழாது; வலிவு இராது; பழக்கம் இல்லை;
பயிற்சி இல்லை என்று பேசிக்கொள்கின்றனர்.}}<noinclude></noinclude>
h9q0z7vmi2vy4n5clph65e8x7u2bfqk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/293
250
639693
1929268
1927299
2026-05-01T11:57:07Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929268
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||269}}{{rule}}</noinclude>ஒருவிதத்திலே இதிலே பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது
என்பதனை நான் முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலேயே
பார்த்திருக்கிறேன்; அதற்காக வருத்தப்பட்டும் இருக்கிறேன்.
{{left_margin|3em|தொகுதியின் அமைப்பு. வாக்காளர் நிலை, அவர்களின் தொடர்புகள். உள்ள வாக்காளர்களில் எத்தனை சதவிகிதத்தவர் வாக்கு அளித்திடுவர் ஏன் மற்றவர் வந்திடுவதில்லை என்பன போன்ற தகவல்களைத் திரட்டி அவற்றிற்கு ஏற்ப வேலையை அமைத்துச் செல்வது என்பதிலே, நமது கழகத் தோழர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக அளவிலும் நேர்த்தியான முறையிலும் பயிற்சி, காங்கிரசில் உள்ளவர்களுக்கு இருக்கிறது.}}
இந்த நிலை இப்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறிவிட்டிருக்கிறது
என்பது மகிழ்ச்சி தருகிறது. என்றாலும் இந்தத் துறையிலே நமது கழகத்
தோழர்களின் பயிற்சி மேலும் செம்மைப்பட்டாக வேண்டும்.
{{left_margin|3em|பொதுத் தேர்தலிலே நாம் நமது கடமையாகக் கருதி ஒட்டுச் சாவடி சென்றாகவேண்டும் என்ற உணர்வு கொண்டவர் தொகை வளர்ந்து வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் கடமை என்று கொள்ளாதாரின் தொகை பெரும் அளவு இருக்கத்தான் செய்கிறது.}}
ஆனால் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் தந்திரம் அறிந்தவர்கள்,
மேற்கொள்ளும் சூழ்ச்சி காரணமாக,
{{left_margin|3em|ஓட்டுச் சாவடிக்கு வராதவர்களின் ஓட்டுகளெல்லாம் காங்கிரசு கட்சிக்குக் கிடைத்திடும் விந்தை நடைபெற்றுவிடுகிறது.}}
ஆகவே, நமது கழகத் தோழர்களிடம் எழுச்சி இருந்தால் மட்டும் போதாது,
தொடர்ந்து செயலாற்றும் இயல்பு வளர வேண்டும்; அவற்றுடன்
விழிப்புணர்ச்சி வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டிடும்
குறுக்குவழிச் செயல்களைக் கண்டறிந்து தடுத்திட!
தம்பி! அவரவரும் தத்தமது தொகுதியைப் பொறுத்த மட்டில்,
இப்போதிருந்தே, இந்தத் துறை பற்றி அக்கறை செலுத்தியாக வேண்டும்.
முறைகளைச் செம்மைப்படுத்தியாக வேண்டும். நாம் வளர்ந்திருக்கிறோம்:
அதனை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; நம்மை ஒழித்தாலன்றி தமது
ஒய்யார வாழ்வுக்கு எதிர்காலம் இல்லை என்பதனை அவர்கள்
உணர்ந்து கொண்டுவிட்டுள்ளனர்; ஆகவே இந்த முறை அவர்களின்
தாக்குதலிலே கடுமை மிகுதியாக இருக்கும்; முறைகளிலே சூழ்ச்சி
அதிக அளவில் இருக்கும்.
காங்கிரசுக் கட்சி இலட்சியத்தை இழந்துவிட்டது; கொள்கை
வலிவு அதனிடம் இல்லை; ஆகவே காங்கிரசுக்கு மக்களைத் தன்பால்<noinclude></noinclude>
b455h5of97x7fekhlors6pvxp8mih1e
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/294
250
639694
1929269
1927301
2026-05-01T11:57:32Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929269
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|270||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>ஈர்த்திடும் சக்தி கிடையாது என்கிறோம். இது உண்மையுங்கூட.
கொள்கை வலிவு இழந்து விட்டது. காங்கிரஸ் கட்சி என்பது வரையில்.
{{left_margin|3em|ஆனால் கொள்கையாளர்கள் இருந்த நாட்களை விட ஓட்டு வேட்டையில் வல்லவர்கள் சேர்ந்திருக்கும் இந்த நாட்களில் காங்கிரஸ் கட்சிக்கு, மக்கள் மீது வலைவீசும் சக்தி வளர்ந்திருக்கிறது.}}
தம்பி காங்கிரஸ் தூய்மை மிக்கதாக, நாட்டு மக்கள் அனைவரும் 'பயபக்தி
விசுவாசம்' செலுத்திடத் தக்க நிலையினதாக இருந்தபோது, தேர்தலில்
வெற்றிபெற அந்தக் கட்சி எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கும் தூய்மை
இழந்த இன்றைய நிலையில் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கும்
வித்தியாசம் இருக்கிறது.
{{left_margin|3em|தூய்மை மிக்க தேசிய ஸ்தாபனமாகக் காங்கிரஸ் விளங்கிய போது, காங்கிரசின் பெயரால் யாரை நிற்க வைத்தாலும் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றனர்.}}
மக்கள் அது போன்றே, தேர்தலில் யார் நிற்கிறார் என்பதைப் பற்றிக்
கவலைப்படாமல் மகாத்மா கட்சிக்கு ஓட்டுப் போட முனைந்தனர்.
{{left_margin|3em|யாரை நிற்கவைத்தாலும் என்று நான் மரியாதைக்காகச் சொன்னது, காங்கிரசின் பேரால் எதை நிற்க வைத்தாலும் என்பதாகும்.}}
காங்கிரஸ் கட்சியைச் சுற்றி வளர்ந்திருந்த ஒரு எழுச்சி யூட்டும் வரலாறு.
அந்த அளவுக்கு வலிவளித்தது. முதன் முறை. ஆனால் ஒரே ஒரு முறை தான்!
அடுத்த முறையே, காங்கிரஸ், யாரை நிறுத்தி வைத்தாலும் என்ற
பேச்சை விட்டுவிட்டது.
{{left_margin|3em|காங்கிரஸ் ஸ்தாபனத்தின் பெருமையைப் பற்றிக் கூறியதுடன், தேர்தலுக்கு நிற்பவரின் நாட்டுப் பற்று, தொண்டு, தியாகம். அறிவாற்றில் ஆகியவை பற்றியே அதிகமாக, விளக்கமாகப் பேசித்தான் ஓட்டுக் கேட்க முடிந்தது.
அந்த அளவு மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு விட்டிருக்கிறது; இடையில்.}}
பிறகோ, காங்கிரசுக் கட்சியின் பேரால் தியாகிகள். அறப்போர் வீரர்கள்,
அஞ்சா நெஞ்சினர். அண்ணல் காந்தியாரின் வழி நின்றிடுவார்
என்போர்களைத் தேர்தலிலே நிற்க வைக்கவில்லை.
{{left_margin|3em|அவர்களின் தொகை குறைந்துகொண்டு வந்ததும் அவர்களிலே பலர், காங்கிரசாட்சியின் போக்கு கண்டு மனம் வெதும்பி. கட்சியை விட்டு வெளியேறி விட்டதும்.}}
இதற்கான காரணங்கள் என்று கொள்ளலாம்.
தியாகிகளுக்குப் பதிலாக, கனதனவான்களைத் தேடிப் பிடித்தனர்.<noinclude></noinclude>
pkmjz41jellz9obnal21nb7r7g05zao
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/295
250
639695
1929270
1928230
2026-05-01T11:58:49Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1929270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||271}}{{rule}}</noinclude>
கட்சியின் சாதனைகள் பற்றிப் பெருமிதத்துடன் பேசி ஓட்டுக்
கேட்பதற்குப் பதிலாக, வேட்பாளர்களின் நாட்டுப் பற்று. தியாக உள்ளம்.
மக்கள் தொடர்பு, ஆகியவை குறித்து எடுத்துக் கூறி ஒட்டுக் கேட்பதற்குப்
பதிலாக,
{{left_margin|3em|இவர் இந்தப் பகுதியில் மிக்க செல்வாக்குள்ளவர்.
பெரிய நிலச்சுவான்தாரர்.
கோயில் தர்மகர்த்தா.
சத்திரம் சாவடி கட்டியவர்.
ஆயிரம் பேர்களுக்குப் பிழைப்பு தருகிறார்; தமது தொழிலகங்களில்.
இவருடைய பேச்சைத் தட்டி நடந்திடுவோர் எவரும் இந்தப் பக்கத்திலே கிடையாது.
இவர்தான், இங்கு ஜாதித் தலைவர்-குலத் தலைவர்-பெரிய தனக்காரர்.
இவர் பாளையக்காரர் பரம்பரை, ஆள் அம்பு இவரிடம் ஏராளம்.}}
என்ற இவ்விதமான நாமாவளி பாடி ஓட்டுக் கேட்டிடலாயினர்.
காங்கிரசுக் கட்சி அதற்குள் அந்த விதமாக, பெரிய புள்ளிகளிடம்
அடைக்கலம் புகுந்துவிட்டது.
தம்பி! கோவை சுற்றுப் பயணத்தின்போது கேள்விப்பட்டேன். இப்போதைய அமைச்சர் இருக்கிறாரே. பழைய கோட்டை பட்டக்காரர்-
காங்கிரசல்லவா அவர்-அவருடைய,
{{left_margin|3em|தகப்பனார் காங்கிரசை எதிர்த்துத் தேர்தலிலே நின்று தமது செல்வம், செல்வாக்கு, ஆள்கட்டு எல்லாவற்றையும் காட்டியும், குட்டபாளையம் பெரியசாமி என்ற காங்கிரஸ்காரரால் தோற்கடிக்கப் பட்டார். பெரியசாமி என்பவர் சிறு நிலச்சுவான்தாரர்தானாம்.}}
காங்கிரஸ் என்ற அமைப்புகள் அன்று இருந்து வந்த அப்பழுக்கற்ற செல்வாக்கைக் காட்டுகிறது அந்த நிகழ்ச்சி.
{{left_margin|3em|இன்று அவர் திருக் குமாரர், காங்கிரசின் மீது பழிதீர்த்துக் கொண்டுவிட்டார்!
எந்தக் காங்கிரஸ் என் தகப்பனாரைத் தோற்கடித்ததோ அந்தக் காங்கிரஸ் இன்று என் அரண்மனைத் தாழ்வாரத்தில்! அதன் தலைவர்கள். என் எதிரில், சிரித்த முகத்துடன்! அதன் தொண்டர்கள், நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர!}}<noinclude></noinclude>
pb3e7jp32xbw0gkyj7a8m7ktxnmjjn2
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/119
250
640060
1929040
1928438
2026-04-30T13:32:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|106||கலைஞர்}}</noinclude>அழகிலே ஈடுபட்டு நிமிர்ந்து பார்க்கத்தான் வேண்டும். இலட்சியத்தில் முழு வெற்றி
அடையாவிட்டாலும், இலட்சியங்கள் எட்ட முடியாத அளவுக்கு உள்ளன என்பதற்காக,
அவற்றின் தரத்தைக் குறைத்துக் கொள்வது சரியாகாது.”
இலட்சியத்தில் எவ்வளவு பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார் என்பதையும் அதனை விரைவில் அடைய முடியாத காரணத்தாலேயே அதன் தகுதியைக் குறைத்து
மதிப்பிட அவர் தயாராக இல்லை என்பதையும் எத்துணை திடமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார், பார்த்தாயா?
“உடலுழைப்புச் செய்வது, மதிப்புக் குறைவானது என்றும் — இந்த மாதிரியான வேலைகள், தாழ்ந்த சாதியாருக்கே உரியன என்றும் ஒரு விந்தையான கருத்து நமது நாட்டிலே உலவி வருகிறது. “எல்லா மக்களும் சமம்” என்று நாம் கருதுகிறோம். எல்லோருக்கும் சமவாய்ப்பு கிடைக்க உறுதி செய்யவேண்டுமென்று விரும்புகிறோம். பயனுடைய எந்த வேலையையும் தாழ்வானது என்று நாம் கருதுவதில்லை. ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் உடலுழைப்பின் மதிப்பு, மிகவும் போற்றப்படுகிறது. எவனொருவன் உடலுழைப்பை மதிப்புடையதாகப் போற்றவில்லையோ அவனை வெறும் சோம்பேறி என்றே நான் கருதுகிறேன். சமுதாய நீதி வேண்டும் என்று மக்கள் இன்று எண்ணிடத் தொடங்கிவிட்டார்கள். ‘விதி’, ‘தலை எழுத்து’—என்றெல்லாம் பேசுகிற பேச்சை, இன்றைய மக்கள் குறைவாகவே மதிக்கிறார்கள்”” எனக் குறிப்பிடும் அவர்; எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் பொறியியல் நிபுணராக இருந்தாலும் மேசைக்கு முன் உட்கார்ந்து கொண்டு உத்திரவுகள் பிறப்பிப்பதை மட்டும் கடமையெனக் கொள்ளாமல் கடினமாக உழைக்கவும் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார்.
{{nop}}<noinclude></noinclude>
a7g63kna0c1nem2giqp2k59kc3tgk3j
பயனர்:Booradleyp1/common.js
2
640444
1929096
1925066
2026-05-01T03:57:23Z
Booradleyp1
1964
1929096
javascript
text/javascript
//importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css');
//importScript('User:Boopalan28012003/textareaEditor.js');
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/removeApexEmptyLines.js&action=raw&ctype=text/javascript');
importScript('User:Boopalan28012003/dash.js');
importScript('User:Boopalan28012003/effort.js');
isqhlbzqxb4i4xtg7kupolwyyow2gxs
1929101
1929096
2026-05-01T04:05:53Z
Booradleyp1
1964
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929101
javascript
text/javascript
phoiac9h4m842xq45sp7s6u21eteeq1
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/120
250
641248
1929041
1928451
2026-04-30T13:35:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||107}}</noinclude>::“நாம் மேற்கொண்டுள்ள பணி மகத்தானது. பலகோடி மக்களின் முன்னேற்றத்தை நோக்குவது. அவர்களிலே பெருந்திரளானவர்கள் உங்களுக்கு உதவினாலொழிய இதைச் சாதிக்க முடியாது. ஜனநாயக வழியை நீங்கள் நாடுவதாக இருந்தால் மக்களை அணுகும் முறையிலும் ஜனநாயகம் இருக்கவேண்டும். நீங்கள் அவர்களிடம் போகவேண்டும். அவர்களுக்கு ஆணைகள் அனுப்பக்கூடாது.”
அரசு அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் எப்படிப்பட்ட தொடர்பு இருந்திட வேண்டும் என்பதற்கு அவர் வழங்கும் அறிவுரைதான் இது!
இவற்றையெல்லாம் அவர் என்றைக்கோ சொன்னார்; இப்போது என்ன வந்தது—என்று புறக்கணித்து விடாமல்; சமுதாயம் புதுமை பூண்டு உலவிடவும், மூட நம்பிக்கைத் தடைகளை அகற்றி முன்னேற்ற வழியில் நாடு நடைபோடவும், சமவாய்ப்பும் சமூக நீதியும் பெற்றவர்களாக மக்கள் இலட்சியப் பயணத்தில் வெற்றி கண்டிடவும்—அவர் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொண்டு உழைத்திட வேண்டும். மக்களின் உழைப்பைக் கோருகிற அதே நேரத்தில் அந்த மக்களோடு இணைந்து நின்று அதிகார அணியினர், திட்டங்களின் வெற்றிக்குப் பாடுபடவேண்டும்.
சிறையிலிருந்தபோதும் — செங்கோல் நடாத்திய போதும் அவரது இதயம் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான சங்கீதத்தைத்தான் பாடிக்கொண்டிருந்தது.
உடன்பிறப்பே, நேருவைப்பற்றி இன்றைக்கு ஏதோ நமது கழகம் புகழ்ச்சரம் தொடுப்பதாகச் சிலர் எண்ணிடக்கூடும்.
{{nop}}<noinclude></noinclude>
ow5esrzj0z3hdswzp8c9obf20ot5at5
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/118
250
641250
1929039
1928430
2026-04-30T13:30:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||105}}</noinclude>புதுமைக் கருத்துக்கள் மலரும் பூஞ்சோலையாகத் திகழ்ந்த அந்தப் பேரறிவாளர் தனது மரண சாசனத்தில் தீட்டியுள்ள உருக்கமிகு வாசகத்தில், நண்பர்களை எவ்வாறு நேசித்தார் என்பதைப் படிக்கும்போது நம்மையறியாமலே உணர்ச்சி வசப்படுகிறோம்.
::“எனது பல்வேறு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் ஆழமான அன்பைத் தருவதற்கு நான் கடமைப்பட்டவன். நாங்கள் அனைவ்ரும் எல்லா நிலைமைகளிலும் தோழர்களைப் போலவே சுகதுக்கங்களைச் சமமாகப் பகிர்ந்துகொண்டவர்கள்”
நேருவின் வாழ்க்கை “நிறைந்த வாழ்க்கை”யாக இருந்தது என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை அல்லவா?
உடன்பிறப்பே, 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட“ஜவகர்லால் நேருவின் கருத்துரைகள்” என்ற நூலில் — இந்திய நாட்டுக் கிராம வளர்ச்சி பற்றிய வளமான எண்ணக் கருவூலங்களையும், தாய்த்திருநாடு தரணியெலாம் போற்றிடும் வண்ணம் எவ்வாறு தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற அவரது ஆவலையும் விரிவாகக் காணமுடியும்.
::“இந்தியாவைப்போல் உன்னதமான குறிக்கோள்களைக் கொண்டுள்ள நாடு, வேறு எதுவுமே இல்லை என்று கருதுகிறேன். இதே சமயத்தில் மற்றொன்றையும் நான் சேர்த்துச் சொல்ல வேண்டும். குறிக்கோளுக்கும், செயலுக்குமிடையே நிலவும் இடைவெளி, இந்தியாவில் இருப்பது போல் வேறு எந்த நாட்டிலும் பெரிதாக இருப்பதில்லை. ஆனாலும் ஒன்று சொல்கிறேன், நட்சத்திரங்களை எட்டி அடைந்துவிட முடியாதென்றாலும் அவ்வப்போது அவற்றின்<noinclude></noinclude>
du3x2ovx92v7a8vtgc08v877vsj5xe2
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/121
250
641251
1929120
1928460
2026-05-01T05:20:51Z
Mohanraj20
15516
1929120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|108||கலைஞர்}}</noinclude>சிற்சில கருத்து வேறுபாடுகளுக்கிடையிலேயும் இந்தியாவின் அந்த இணையற்ற மனிதரை நமது கழகம் மதிப்பு வாய்ந்த மாணிக்கம் என்றே கருதி வந்திருக்கிறது.
{{left_margin|3em|<poem>“நேரு. கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்,
நான் கொட்டிக் கிடக்கும் செங்கல்”</poem>}}
என்று அறிஞர் அண்ணா அவர்கள் பண்டித நேரு வாழ்ந்த காலத்திலேயே பாராட்டுப் பாமாலை அணி வித்திருக்கிறார்.
1964 ஆம் ஆண்டு பண்டிதர் மறைந்தபோது வானொலியில் உரையாற்றிட நான் அழைக்கப்பட்டேன். அப்போது அண்ணா சென்னை சிறைச்சாலையில் இருந்தார். சிறையிலிருந்தவாறே நேருவின் மறைவு குறித்து அண்ணா அவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்கள். வானொலியில் அன்று நான் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியை நினைவுபடுத்தி இந்தக் கடிதத்தை முடிக்கிறேன்.
“ஜனநாயகப் பாதுகாவலர் ஜவகர் காலமாகிவிட்டார். நம்பத்தான் முடியவில்லை ஆனாலும் நடந்து விட்டதே. நம்பிக்கை நட்சித்திரம், மறைந்துவிட்ட ஏமாற்றத்தில் பெருமூச்சு விடுகிறோம். உலகம். வல்லூறு களின் வேட்டைக் காடாக – நாய் நரிகள் விருந்துண்ணும் ரண களமாக — மாறிவிடக் கூடாது எனப் பாடுபட்டு அவர் பறக்கவிட்ட வெண்புறா. சிறகடித்துத் துடிக்கிறது, அவர் மறைந்த செய்தி கேட்டு! இமயம் முதல் குமரி வரையில் உள்ளோர் இதயங்களில் எல்லாம் இடம் பெற்றிருக்கும் உரிமையை உத்தமர் காந்தியடிகளுக்குப் பிறகு பெற்றிருந்த ஒரே மனிதர் — ஒரே தலைவர் — பண்டித நேரு. அவர் இன்றில்லை. அவர் பேணி வளர்த்த ஜனநாயகக் கொள்கை இருக்கி<noinclude></noinclude>
hvo8x1h5uwgrc4xiycb98fq3fakn2i5
1929189
1929120
2026-05-01T08:18:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929189
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|108||கலைஞர்}}</noinclude>சிற்சில கருத்து வேறுபாடுகளுக்கிடையிலேயும் இந்தியாவின் அந்த இணையற்ற மனிதரை நமது கழகம் மதிப்பு வாய்ந்த மாணிக்கம் என்றே கருதி வந்திருக்கிறது.
{{left_margin|3em|<poem>“நேரு. கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்,
நான் கொட்டிக் கிடக்கும் செங்கல்”</poem>}}
என்று அறிஞர் அண்ணா அவர்கள் பண்டித நேரு வாழ்ந்த காலத்திலேயே பாராட்டுப் பாமாலை அணிவித்திருக்கிறார்.
1964 ஆம் ஆண்டு பண்டிதர் மறைந்தபோது வானொலியில் உரையாற்றிட நான் அழைக்கப்பட்டேன். அப்போது அண்ணா சென்னை சிறைச்சாலையில் இருந்தார். சிறையிலிருந்தவாறே நேருவின் மறைவு குறித்து அண்ணா அவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்கள். வானொலியில் அன்று நான் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியை நினைவுபடுத்தி இந்தக் கடிதத்தை முடிக்கிறேன்.
“ஜனநாயகப் பாதுகாவலர் ஜவகர் காலமாகிவிட்டார். நம்பத்தான் முடியவில்லை ஆனாலும் நடந்து விட்டதே. நம்பிக்கை நட்சித்திரம், மறைந்துவிட்ட ஏமாற்றத்தில் பெருமூச்சு விடுகிறோம். உலகம். வல்லூறுகளின் வேட்டைக் காடாக – நாய் நரிகள் விருந்துண்ணும் ரணகளமாக — மாறிவிடக் கூடாது எனப் பாடுபட்டு அவர் பறக்கவிட்ட வெண்புறா. சிறகடித்துத் துடிக்கிறது, அவர் மறைந்த செய்தி கேட்டு! இமயம் முதல் குமரி வரையில் உள்ளோர் இதயங்களில் எல்லாம் இடம் பெற்றிருக்கும் உரிமையை உத்தமர் காந்தியடிகளுக்குப் பிறகு பெற்றிருந்த ஒரே மனிதர் — ஒரே தலைவர் — பண்டித நேரு. அவர் இன்றில்லை. அவர் பேணி வளர்த்த ஜனநாயகக் கொள்கை இருக்கி-<noinclude></noinclude>
h462xndmvkxn7wlgl7axtr9zexahgab
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/122
250
641252
1929122
1926221
2026-05-01T05:23:01Z
Mohanraj20
15516
1929122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||109}}</noinclude>றது. அதனை மேலும் சீர்பெறச் செயல்படுத்துவது தான் இருப்பவர்கள், மறைந்தவருக்குச் செய்யும் மரியாதையாகும். ஜனநாயகச் சோலையில் — பகுத்தறிவு
மேடை கட்டி — சமாதானக் கொடியை உலகமறியப் பறக்கவிட்டவர், மறைந்த உத்தமர். இன்னும் எத்தனையோ பணிகளை நாடு அவரிடம் எதிர்பார்த்தது. அதற்குள் இயற்கை தன் பணியை முடித்துக்கொண்டு விட்டது. கிரீடம் மறைந்து விட்டது. கீர்த்தி நிலைத்து
விட்டது.வாழ்க நேருவின் புகழ்!”
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
14—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
qlf664azvrnk08dvooi9iip3y6sb6in
1929190
1929122
2026-05-01T08:19:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929190
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||109}}</noinclude>றது. அதனை மேலும் சீர்பெறச் செயல்படுத்துவது தான் இருப்பவர்கள், மறைந்தவருக்குச் செய்யும் மரியாதையாகும். ஜனநாயகச் சோலையில் — பகுத்தறிவு
மேடை கட்டி — சமாதானக் கொடியை உலகமறியப் பறக்கவிட்டவர், மறைந்த உத்தமர். இன்னும் எத்தனையோ பணிகளை நாடு அவரிடம் எதிர்பார்த்தது. அதற்குள் இயற்கை தன் பணியை முடித்துக்கொண்டு விட்டது. கிரீடம் மறைந்து விட்டது. கீர்த்தி நிலைத்து
விட்டது. வாழ்க நேருவின் புகழ்!”
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
14—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
6zv1dwy0l9zsq0zpl0wl0hn72p3otku
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/123
250
641253
1929124
1926222
2026-05-01T05:27:06Z
Mohanraj20
15516
1929124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அவர்களை மாற்றுவது கடினம்!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
தேசீய பாரம்பரியம் கொண்ட ஒரு நாளிதழ் — அது எவ்வளவு தான் கொள்கை வேறுபாடு கொண்டிருந்தாலும் பத்திரிகை மரபுகளைக் காப்பாற்ற வந்தது என்ற பாராட்டுக்கு உரியதாக விளங்கிய ஏடு — அந்த ஏட்டில் ஒரு தலையங்கம் தீட்டப்பெற்றுள்ளது. அதனை நேரு பிறந்த நாளன்று எழுதியுள்ளார்கள். அதில் ஒரு பகுதியை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
“கொள்ளையடிப்பது ஒரு கலை.....புலி, மானைக் கொல்லாமல் இருந்தால் – கொக்கு,
மீனைக் கொத்தாமல் இருந்தால் நானும் கொள்ளை யடிக்காமல் இருப்பேன் — என்று வெறிக் கூச்சல் போடும் ஒரு “கேடி” கதாநாயகனை தமிழ்க் காவியமான குண்டலகேசியில் புகுத்திக் கதை எழுதி, சினிமா உலகில் விபரீதப் புகழ் தேடிக் கொண்டவர் கருணாநிதி. தனது கதாநாயகனை, பணம், பாவை, பச்சை ரத்தம் — மூன்றும்தான் என் வாழ்வின் இலட்சியங்களாகிவிட்டன என்று முழங்கவும் வைத்திருக்கிறார், ஒருக்கால் அவரது கதாநாயகன், கதையின் முடிவிலே தன்
தந்தையிடம் “சாகத்தான் போகிறேன், வாய் வீரம் பேசிவிட்டாவது சாகிறேன்” என்று கர்ஜிப் பதைப் போன்ற விபரீத முடிவுக்கு இந்தக் கதாசிரி யரே வந்து விட்டார்?”
{{nop}}<noinclude></noinclude>
t14iyi1po379xdnxpnew9mju46bxra4
1929191
1929124
2026-05-01T08:20:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929191
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அவர்களை மாற்றுவது கடினம்!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
தேசீய பாரம்பரியம் கொண்ட ஒரு நாளிதழ் — அது எவ்வளவு தான் கொள்கை வேறுபாடு கொண்டிருந்தாலும் பத்திரிகை மரபுகளைக் காப்பாற்ற வந்தது என்ற பாராட்டுக்கு உரியதாக விளங்கிய ஏடு — அந்த ஏட்டில் ஒரு தலையங்கம் தீட்டப்பெற்றுள்ளது. அதனை நேரு பிறந்த நாளன்று எழுதியுள்ளார்கள். அதில் ஒரு பகுதியை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
::“கொள்ளையடிப்பது ஒரு கலை.....புலி, மானைக் கொல்லாமல் இருந்தால் – கொக்கு,
மீனைக் கொத்தாமல் இருந்தால் நானும் கொள்ளையடிக்காமல் இருப்பேன் — என்று வெறிக் கூச்சல் போடும் ஒரு “கேடி” கதாநாயகனை தமிழ்க் காவியமான குண்டலகேசியில் புகுத்திக் கதை எழுதி, சினிமா உலகில் விபரீதப் புகழ் தேடிக் கொண்டவர் கருணாநிதி. தனது கதாநாயகனை, பணம், பாவை, பச்சை ரத்தம் — மூன்றும்தான் என் வாழ்வின் இலட்சியங்களாகிவிட்டன என்று முழங்கவும் வைத்திருக்கிறார், ஒருக்கால் அவரது கதாநாயகன், கதையின் முடிவிலே தன்
தந்தையிடம் “சாகத்தான் போகிறேன், வாய் வீரம் பேசிவிட்டாவது சாகிறேன்” என்று கர்ஜிப்பதைப் போன்ற விபரீத முடிவுக்கு இந்தக் கதாசிரியரே வந்து விட்டார்?”
{{nop}}<noinclude></noinclude>
7ozyxnq8q805qm5xdknp7efi620se15
1929192
1929191
2026-05-01T08:21:24Z
Booradleyp1
1964
1929192
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அவர்களை மாற்றுவது கடினம்!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
தேசீய பாரம்பரியம் கொண்ட ஒரு நாளிதழ் — அது எவ்வளவு தான் கொள்கை வேறுபாடு கொண்டிருந்தாலும் பத்திரிகை மரபுகளைக் காப்பாற்ற வந்தது என்ற பாராட்டுக்கு உரியதாக விளங்கிய ஏடு — அந்த ஏட்டில் ஒரு தலையங்கம் தீட்டப்பெற்றுள்ளது. அதனை நேரு பிறந்த நாளன்று எழுதியுள்ளார்கள். அதில் ஒரு பகுதியை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
::“கொள்ளையடிப்பது ஒரு கலை.....புலி, மானைக் கொல்லாமல் இருந்தால் – கொக்கு, மீனைக் கொத்தாமல் இருந்தால் நானும் கொள்ளையடிக்காமல் இருப்பேன் — என்று வெறிக் கூச்சல் போடும் ஒரு “கேடி” கதாநாயகனை தமிழ்க் காவியமான குண்டலகேசியில் புகுத்திக் கதை எழுதி, சினிமா உலகில் விபரீதப் புகழ் தேடிக் கொண்டவர் கருணாநிதி. தனது கதாநாயகனை, பணம், பாவை, பச்சை ரத்தம் — மூன்றும்தான் என் வாழ்வின் இலட்சியங்களாகிவிட்டன என்று முழங்கவும் வைத்திருக்கிறார், ஒருக்கால் அவரது கதாநாயகன், கதையின் முடிவிலே தன் தந்தையிடம் “சாகத்தான் போகிறேன், வாய் வீரம் பேசிவிட்டாவது சாகிறேன்” என்று கர்ஜிப்பதைப் போன்ற விபரீத முடிவுக்கு இந்தக் கதாசிரியரே வந்து விட்டார்?”
{{nop}}<noinclude></noinclude>
721lbiamo4p6m4fhpmj9hbqr9re0crr
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/124
250
641254
1929125
1926223
2026-05-01T05:30:06Z
Mohanraj20
15516
1929125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||111}}</noinclude>அந்தத் தலையங்கத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களை அப்படியே உனக்கு சுட்டிக்காட்டியிருக்கிறேன். நான் எந்த முடிவுக்கு வரவேண்டும் என்று தலையங்கம் எழுதிய அருமை நண்பர் ஆசைப்படுகிறார் என்று எனக்கு நன்றாகப் புரிகிறது.
உலகில் எல்லோருமே ஒரு நாள் அந்த முடிவுக்கு ஆட்படவேண்டியவர்களே தான்! அதனால் அவர் எழுப்பியிருக்கும் ஐயப்பாடு பற்றியோ — அல்லது அவர் எண்ணத்தில்
புகைந்து கொண்டிருக்கும் அந்த அளவில்லாத ஆசை பற்றியோ நான் கவலைப்படவில்லை.
சிரஞ்சீவி வரம் பெற்று வாழவேண்டுமென்று விரும்பு கிறவனும் நானல்ல! அதைப்போலவே சிரஞ்சீவி வரம் பெற்றவர்கள் யாரும் உலகில் இல்லை என்பதையும் நானறிந்தவன். ‘சாவு’ — ‘அழிவு’ — இவைகளைப் பற்றியே எண்ணிக்கொண்டு; அவைகள் என்மீது பாய்வதை விரைவில் காணவேண்டுமென்று சில நண்பர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்களே; அவர்களோடு சேர்ந்து இந்த நண்பர் நீடுழி காலம் வாழ வேண்டுமென்பதுதான் என் ஆசை!
குண்டலகேசி காவியத்தில் ஒரு கொள்ளைக்காரக் கதா நாயகனை நான் புகுத்தியிருக்கிறேனாம்! அதை அவரது பழக்கமான மொழியில் “கேடிக் கதாநாயகன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
‘குண்டலகேசி’ என்பது என்ன என்று அவர் முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி —
ஆகிய ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள் என அழைக்கப் படும். அவற்றில் வளையாபதி, குண்டலகேசி காப்பியங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. கால வெள்ளத்தில்<noinclude></noinclude>
qo0515h6pg3z0gkeo4r20qwnset55o8
1929193
1929125
2026-05-01T08:22:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929193
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||111}}</noinclude>அந்தத் தலையங்கத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களை அப்படியே உனக்கு சுட்டிக்காட்டியிருக்கிறேன். நான் எந்த முடிவுக்கு வரவேண்டும் என்று தலையங்கம் எழுதிய அருமை நண்பர் ஆசைப்படுகிறார் என்று எனக்கு நன்றாகப் புரிகிறது.
உலகில் எல்லோருமே ஒரு நாள் அந்த முடிவுக்கு ஆட்படவேண்டியவர்களே தான்! அதனால் அவர் எழுப்பியிருக்கும் ஐயப்பாடு பற்றியோ — அல்லது அவர் எண்ணத்தில்
புகைந்து கொண்டிருக்கும் அந்த அளவில்லாத ஆசை பற்றியோ நான் கவலைப்படவில்லை.
சிரஞ்சீவி வரம் பெற்று வாழவேண்டுமென்று விரும்பு கிறவனும் நானல்ல! அதைப்போலவே சிரஞ்சீவி வரம் பெற்றவர்கள் யாரும் உலகில் இல்லை என்பதையும் நானறிந்தவன். ‘சாவு’ — ‘அழிவு’ — இவைகளைப் பற்றியே எண்ணிக்கொண்டு; அவைகள் என்மீது பாய்வதை விரைவில் காணவேண்டுமென்று சில நண்பர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்களே; அவர்களோடு சேர்ந்து இந்த நண்பர் நீடுழி காலம் வாழ வேண்டுமென்பதுதான் என் ஆசை!
குண்டலகேசி காவியத்தில் ஒரு கொள்ளைக்காரக் கதாநாயகனை நான் புகுத்தியிருக்கிறேனாம்! அதை அவரது பழக்கமான மொழியில் “கேடிக் கதாநாயகன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
‘குண்டலகேசி’ என்பது என்ன என்று அவர் முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி —
ஆகிய ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள் என அழைக்கப் படும். அவற்றில் வளையாபதி, குண்டலகேசி காப்பியங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. கால வெள்ளத்தில்<noinclude></noinclude>
egs7wi2cc6skwg5vxlzioygjqrm4i4y
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/125
250
641255
1929127
1926224
2026-05-01T05:32:49Z
Mohanraj20
15516
1929127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|112||கலைஞர்}}</noinclude>அவை அழிந்தும் மறைந்தும் இப்போது எஞ்சியவை மிகக் குறைவேயாகும்.
குண்டலகேசியில் நமக்குக் கிடைத்த கருப்பொருள் என்ன தெரியுமா?
::“அரண்மனை அரச குருவின் மைந்தன் ஒரு கொள்ளைக்காரன். அவனைச் சிறைபிடித்துத் தூக்குமேடைக்குக் கொண்டு செல்லும் வழியில் அமைச்சரின் மகள் அவனைப் பார்த்துக் காதலிக்கிறாள். அமைச்சரின் முயற்சியால் அவன் விடு விக்கப்படுகிறான். அவனுக்கும் அமைச்சர் மகளுக்கும் மணம் நடந்தேறுகிறது. ஒரு நாள் தம் பதிகளுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவளை மலையுச்சியில் இருந்து உருட்டிவிட்டுக் கொன்றுவிட அவன் தீர்மானிக்கிறான். அவளோ அவனைத் தந்திரமாகக் கொன்று விடுகிறாள்.”
இதுதான் ‘குண்டலகேசி’ என்ற பெயரில் கிடைத்தது! அதை விரிவாக்கி நான் எழுதிய நாடகமும் — அந்த நாட கத்தில் சில மாற்றங்கள் செய்து நான் படைத்ததும்தான்;
“மந்திரிகுமாரி” என்ற திரைப்படக் கதையுமாகும்.
நாடகத்தைக் கண்ணுற்ற கவிஞர் கா. மு. ஷெரீப் அவர்கள் அப்போது அவர் பணியாற்றிக் கொண்டிருந்த சேலம் மாடர்ன் தியேட்டரில் பாராட்டிப் பேசியதைத்
தொடர்ந்து அதனைப் படமாக்க வேண்டுமென்று திரையுலக மேதைகளில் ஒருவரான மறைந்த திரு. டி. ஆர். சுந்தரம் விரும்பினார்.
கவிஞர் ஷெரீப் ஆரூருக்கு அடுத்த வேளுக்குடியைச் சேர்ந்தவர். இலக்கியங்களை முறையாகப் பயின்றவர். ‘நுனிப்புல்’ மனிதரல்ல. எனவே குண்டலகேசியில் நான்
செய்திருந்த மாற்றங்களைப் பெரிதும் புகழ்ந்தார்.
{{nop}}<noinclude></noinclude>
6ypz4o02ya2e0ojmyhkoyplau7tiu8p
1929194
1929127
2026-05-01T08:23:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|112||கலைஞர்}}</noinclude>அவை அழிந்தும் மறைந்தும் இப்போது எஞ்சியவை மிகக் குறைவேயாகும்.
குண்டலகேசியில் நமக்குக் கிடைத்த கருப்பொருள் என்ன தெரியுமா?
::“அரண்மனை அரச குருவின் மைந்தன் ஒரு கொள்ளைக்காரன். அவனைச் சிறைபிடித்துத் தூக்குமேடைக்குக் கொண்டு செல்லும் வழியில் அமைச்சரின் மகள் அவனைப் பார்த்துக் காதலிக்கிறாள். அமைச்சரின் முயற்சியால் அவன் விடு விக்கப்படுகிறான். அவனுக்கும் அமைச்சர் மகளுக்கும் மணம் நடந்தேறுகிறது. ஒரு நாள் தம் பதிகளுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவளை மலையுச்சியில் இருந்து உருட்டிவிட்டுக் கொன்றுவிட அவன் தீர்மானிக்கிறான். அவளோ அவனைத் தந்திரமாகக் கொன்று விடுகிறாள்.”
இதுதான் ‘குண்டலகேசி’ என்ற பெயரில் கிடைத்தது! அதை விரிவாக்கி நான் எழுதிய நாடகமும் — அந்த நாட கத்தில் சில மாற்றங்கள் செய்து நான் படைத்ததும்தான்;
“மந்திரிகுமாரி” என்ற திரைப்படக் கதையுமாகும்.
நாடகத்தைக் கண்ணுற்ற கவிஞர் கா. மு. ஷெரீப் அவர்கள் அப்போது அவர் பணியாற்றிக் கொண்டிருந்த சேலம் மாடர்ன் தியேட்டரில் பாராட்டிப் பேசியதைத்
தொடர்ந்து அதனைப் படமாக்க வேண்டுமென்று திரையுலக மேதைகளில் ஒருவரான மறைந்த திரு. டி. ஆர். சுந்தரம் விரும்பினார்.
கவிஞர் ஷெரீப் ஆரூருக்கு அடுத்த வேளுக்குடியைச் சேர்ந்தவர். இலக்கியங்களை முறையாகப் பயின்றவர். ‘நுனிப்புல்’ மனிதரல்ல. எனவே குண்டலகேசியில் நான்
செய்திருந்த மாற்றங்களைப் பெரிதும் புகழ்ந்தார்.
{{nop}}<noinclude></noinclude>
mjn7t7yruqe06swctpkdsx7zdu86l5z
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/127
250
641256
1929130
1928488
2026-05-01T05:49:15Z
Mohanraj20
15516
1929130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|114||கலைஞர்}}</noinclude>இலட்சியமாகக் கருதுகிறவன் — எந்த முடிவுக்கு ஆளானான்? என்று அந்தக் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. — அதைப் புரிந்துகொண்டால்; கதாசிரியரின் இலட்சியத்
தோடு அந்தக் கயவனின் இலட்சியத்தையும் இணைத்து முடிபோடுவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள்.
கம்ப ராமாயணத்தில் இராவணன் பேசுவதெல்லாம் கம்பரின் கொள்கையா?
பாரதக் கதையில் சகுனி அளிக்கும் விளக்கங்கள் எல்லாம் வேதவியாசர் விரும்பி ஏற்றுக்கொண்ட இலட்சியங்களா?
அதைப்போலத்தான் ஒரு கதையில் வரும் தீய பாத்திரங்கள் பேசும் தத்துவங்கள், கதாசிரியர் ஏற்றுக் கொண்ட கொள்கைகள் ஆகமாட்டா!
இதைப் புரிந்துகொள்வது சுலபம் — புரிந்தவர்கள், புரியாதவர்களைப் போலப் பேசினால் அவர்களை மாற்று வது கடினம்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
15—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
7j4i0d6fzdp7rxl2khn388buycf5y3g
1929196
1929130
2026-05-01T08:25:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|114||கலைஞர்}}</noinclude>இலட்சியமாகக் கருதுகிறவன் — எந்த முடிவுக்கு ஆளானான்? என்று அந்தக் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. — அதைப் புரிந்துகொண்டால்; கதாசிரியரின் இலட்சியத்
தோடு அந்தக் கயவனின் இலட்சியத்தையும் இணைத்து முடிபோடுவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள்.
கம்ப ராமாயணத்தில் இராவணன் பேசுவதெல்லாம் கம்பரின் கொள்கையா?
பாரதக் கதையில் சகுனி அளிக்கும் விளக்கங்கள் எல்லாம் வேதவியாசர் விரும்பி ஏற்றுக்கொண்ட இலட்சியங்களா?
அதைப்போலத்தான் ஒரு கதையில் வரும் தீய பாத்திரங்கள் பேசும் தத்துவங்கள், கதாசிரியர் ஏற்றுக் கொண்ட கொள்கைகள் ஆகமாட்டா!
இதைப் புரிந்துகொள்வது சுலபம் — புரிந்தவர்கள், புரியாதவர்களைப் போலப் பேசினால் அவர்களை மாற்றுவது கடினம்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
15—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
kqfbwo4iazkgumfheuuux7x2p638au9
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/128
250
641257
1929131
1926226
2026-05-01T05:52:09Z
Mohanraj20
15516
1929131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மீண்டும் நினைவுபடுத்துகிறேன் !</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
“1973 ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானம் தி. மு. கழகம் பிரிவினைக் கொள்கையைக் கைவிட வில்லை” என்பதைக் காட்டுகிறது என்பதாகத் திரு. ஓ வி. அளகேசன் எம். பி. அவர்கள் பேசியதாக ஏடுகள்
சிலவற்றில் செய்தி கண்டேன்.
ஏறத்தாழ பதின்மூன்று ஆண்டுகட்கு முன்பே கழகம், பிறிவினைக் கோரிக்கையைக் கைவிடுவதாகத் தீர்மானம் நிறைவேற்றி இந்திய ஒருமைப்பாட்டிலும் — இந்திய
பாதுகாப்பிலும் தனக்குள்ள ஆழமான நம்பிக்கையை செயல் மூலமாகவும் காட்டியிருக்கிறது.
இவற்றை விளக்கி நான் 27 – 10 – 76 – ல் முரசொலி வாயிலாக உனக்கு எழுதிய கடிதத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
அந்தக் கடிதத்தின் சில பகுதிகள் பின்வருமாறு: —
நாடாளுமன்றத்தில் அன்பர் அளகேசனார் பேசியிருகிறார்: “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டதாகத் தி. மு. கழகம் அறிவித்துள்ள போதிலும் —
பிரிவினைப் பிரச்சாரத்தை அவர்கள் நிறுத்தவில்லை” என்பதாக!
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி மாநிலங்கள் அவையில் அறிஞர் அண்ணா அவர்கள் அதாவது<noinclude></noinclude>
7718w9h1sj2u5lk5cc4w26a48vpg41k
1929197
1929131
2026-05-01T08:26:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929197
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மீண்டும் நினைவுபடுத்துகிறேன் !</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
“1973 ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானம் தி. மு. கழகம் பிரிவினைக் கொள்கையைக் கைவிட வில்லை” என்பதைக் காட்டுகிறது என்பதாகத் திரு. ஓ வி. அளகேசன் எம். பி. அவர்கள் பேசியதாக ஏடுகள்
சிலவற்றில் செய்தி கண்டேன்.
ஏறத்தாழ பதின்மூன்று ஆண்டுகட்கு முன்பே கழகம், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுவதாகத் தீர்மானம் நிறைவேற்றி இந்திய ஒருமைப்பாட்டிலும் — இந்திய
பாதுகாப்பிலும் தனக்குள்ள ஆழமான நம்பிக்கையை செயல் மூலமாகவும் காட்டியிருக்கிறது.
இவற்றை விளக்கி நான் 27 – 10 – 76 – ல் முரசொலி வாயிலாக உனக்கு எழுதிய கடிதத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
அந்தக் கடிதத்தின் சில பகுதிகள் பின்வருமாறு: —
நாடாளுமன்றத்தில் அன்பர் அளகேசனார் பேசியிருகிறார்: “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டதாகத் தி. மு. கழகம் அறிவித்துள்ள போதிலும் —
பிரிவினைப் பிரச்சாரத்தை அவர்கள் நிறுத்தவில்லை” என்பதாக!
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி மாநிலங்கள் அவையில் அறிஞர் அண்ணா அவர்கள் அதாவது<noinclude></noinclude>
7vlvb4vql4z8agxmiy24sx7nklqhav6
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/129
250
641258
1929134
1926227
2026-05-01T05:56:19Z
Mohanraj20
15516
1929134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|116||கலைஞர்}}</noinclude>1962 மே திங்கள் முதல் நாள் ஆற்றிய உரையில் பிரி வினைக் கோரிக்கையை வலியுறுத்தினார். அவர் பேசும் போது எழுந்த குறுக்கீடுகளுக்கு விளக்கம் அளித்தார்.
அந்த உரைக்குப் பிறகு, சில மா தங்களுக்கெல்லாம் சீன ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து பண்டித நேருவின் கரத்தைப் பலப்படுத்து வதற்காக இந்திய நாடு ஒரு அணியில் நின்றது. அந்த அணிவகுப்பில் அண்ணா தலைமையில் தி. மு. கழகமும் இடம்பெற்றது. இந்திய நாட்டுப் பாதுகாப்பையொட்டி கழகத்தின் பிரிவினைக் கொள்கை, கைவிடப்படுவதற்கான அடையாள அறிவிப்பை அண்ணா வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு சென்னையில் கூடிய கழகப் பொதுக் குழுவில், விரிவான விளக்கங்களுக்குப் பிறகு பிரிவினைக் கொள்கையைக் கழகம் அறவே கைவிடுகிறது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“அண்ணா அவர்கள், ‘இல்லஸ்ட்ரேட்டட்வீக்லி’ என்ற ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?” எனக் கேட்டு — நாள் இதழ் ஒன்றில் நேற்று முன்தினம் விவரம் எழுதியிருந்தார்கள் அல்லவா? அதாவது;
::<b>“இந்திய அரசியல் அமைப்புக்குள் ஒரு திராவிட யூனியன் அமைக்கப் பாடுபடு வது.”</b>
என்பதாக ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ இதழுக்கு அண்ணா சொன்னாரே; அதையேதான் தி. மு. கழகச் சட்ட திட்ட புத்தகத்தில் “குறிக்கோள்” என்ற தலைப்பில் அண்ணா காலத்தில் பொதுக்குழு ஏற்றுக்கொண்டது.
{{nop}}<noinclude></noinclude>
tbfxx8ld0rgb8u82hajdpoaq47y1mw1
1929199
1929134
2026-05-01T08:27:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929199
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|116||கலைஞர்}}</noinclude>1962 மே திங்கள் முதல் நாள் ஆற்றிய உரையில் பிரிவினைக் கோரிக்கையை வலியுறுத்தினார். அவர் பேசும் போது எழுந்த குறுக்கீடுகளுக்கு விளக்கம் அளித்தார்.
அந்த உரைக்குப் பிறகு, சில மாதங்களுக்கெல்லாம் சீன ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து பண்டித நேருவின் கரத்தைப் பலப்படுத்துவதற்காக இந்திய நாடு ஒரு அணியில் நின்றது. அந்த அணிவகுப்பில் அண்ணா தலைமையில் தி. மு. கழகமும் இடம்பெற்றது. இந்திய நாட்டுப் பாதுகாப்பையொட்டி கழகத்தின் பிரிவினைக் கொள்கை, கைவிடப்படுவதற்கான அடையாள அறிவிப்பை அண்ணா வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு சென்னையில் கூடிய கழகப் பொதுக் குழுவில், விரிவான விளக்கங்களுக்குப் பிறகு பிரிவினைக் கொள்கையைக் கழகம் அறவே கைவிடுகிறது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“அண்ணா அவர்கள், ‘இல்லஸ்ட்ரேட்டட்வீக்லி’ என்ற ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?” எனக் கேட்டு — நாள் இதழ் ஒன்றில் நேற்று முன்தினம் விவரம் எழுதியிருந்தார்கள் அல்லவா? அதாவது;
::<b>“இந்திய அரசியல் அமைப்புக்குள் ஒரு திராவிட யூனியன் அமைக்கப் பாடுபடுவது.”</b>
என்பதாக ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ இதழுக்கு அண்ணா சொன்னாரே; அதையேதான் தி. மு. கழகச் சட்ட திட்ட புத்தகத்தில் “குறிக்கோள்” என்ற தலைப்பில் அண்ணா காலத்தில் பொதுக்குழு ஏற்றுக்கொண்டது.
{{nop}}<noinclude></noinclude>
ft08ms5sm1phozchkchzun9z48h4lr5
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/131
250
641259
1929139
1928507
2026-05-01T06:07:13Z
Mohanraj20
15516
1929139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|118||கலைஞர்}}</noinclude>கருத்தைத்தான் புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் கழகம் தனது நோக்கங்களில் ஒன்றாகச் சித்தரித்துள்ளது.
<b>1971–ஆம் ஆண்டு கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலே கூட,</b>
“இந்தியா வலுப்பெற்றதாக இருக்க வேண்டுமென்ற இலட்சியத்திற்கு ஊறு தேடாமல், எந்தெந்தத் துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்காக மத்திய அரசு, செயல்பட வேண்டுமோ அந்த அதிகாரங்களைத்தவிர, இதர அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்” என்றுதான் மாநில சுயாட்சிக்கு விளக்கம் அளித்திருந் தோம்.
ஏற்கனவே மாநிலங்களுக்கு இருக்கிற சுயாட்சித் தன்மையை முழுமையான தாக விரிவுபடுத்த வேண்டு மென்பதுதான் தி. மு. கழகத்தின் கருத்தே தவிர மற்றவர்கள் கூறுவதைப்போல பிரிவினை எண்ணம்துளி அளவு கூடக் கழகத்திற்குக் கிடையாது.
இதே கருத்துக்களை நான் சட்டமன்ற பேரவை மேலவைகளில் நடந்த விவாதத்தின்போது தெளிவாகக் கூறியிருக்கிறேன்.
தன்னாட்சி என்பது <b>Autonomy</b>–தனியாட்சி என்பது <b>Independence</b>–அதாவது சுதந்திரம்!
சுயாட்சி வேறு; சுதந்திரம் வேறு! ‘சுயாட்சி’ என்பது தன்னாட்சிதானே தவிர, தனியாட்சியுமல்ல; சுதந்திரமும் அல்ல!
தனையும் நாம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம். இந்திய ஒருமைப்பாடு—ஒற்றுமை—பாதுகாப்பு—இவற்றில் நமக்குள்ள அக்கறையையும் ஈடுபாட்டையும்<noinclude></noinclude>
kk0fy254dvmzern1yfxxc1a3q8i47ng
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/133
250
641260
1929132
1926229
2026-05-01T05:52:21Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1929147
1929132
2026-05-01T06:25:46Z
Mohanraj20
15516
1929147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருத்திப் பார்க்கிறேன்</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
“குடும்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல் கொள்கை—கொள்கை என்று அலைகிறானே!”
“பெற்ற தாயை மறந்துவிட்டுப் பிறந்த பொன்னாடே சிறந்தது எனத் திரிகிறானே!”
“வீடு, வாசல், பிள்ளை, தாய், தந்தை, மனைவி அனைத்தையும் இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவிட்டுப் பொதுத் தொண்டினை முதல் இடத்தில் வைத்துப் பூஜை செய்கிறானே!”
இவனைத் திருத்தி, குடும்பத்தைக் கவனிக்குமாறு யாராவது அறிவுரை கூறக் கூடாதா? இப்படிப்பட்ட ஏக்கம் நிறைந்த கேள்விகள் எத்தனையோ இல்லங்களில் எழக் கேட்டிருக்கிறோம். இன்று நேற்றல்ல எத்தனையோ ஆண்டுக் காலமாக!
கட்சியால் தனக்கு என்ன லாபம் என்று கணக்கிடாமல் தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்று கணக்கிடுகிற தூய்மை உள்ளம் படைத்தவர்கள்தான் ஒரு கட்சியின் உயிரோட்டமுள்ள நாடி நரம்புகளாவார்கள்.
அப்படிப்பட்டவர்கள் இருக்கிற எந்தக் கட்சியும் இடையிடையே தோன்றுகிற இடுக்கண்களைத் தாங்கிக் கொண்டு தனது இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து
நடத்திக்கொண்டேதானிருக்கும்.
{{nop}}<noinclude></noinclude>
oqfobtkx0rd9qk6wsfjb4jl5i2ge63u
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/126
250
641261
1929129
1926230
2026-05-01T05:47:36Z
Mohanraj20
15516
1929129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||113}}</noinclude>குண்டலகேசியிலேயே இடம்பெற்றுள்ள கொள்ளைக் காரனை நான் “மந்திரிகுமாரி” படத்தில் புகுத்தினேன் என்று குற்றம் சாட்டுவது தலையங்கம் எழுதியவருக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தின் விளைவே தவிர வேறல்ல!
இன்னொரு வேடிக்கை, அந்தப் படத்தில் கொள்ளைக்காரன் கதாநாயனாக வருகிறானாம். அதனால் அவன் பேசுவ தெல்லாம் கதாசிரியராகிய என் கொள்கைகளாம்! இப்படி ஒரு கருத்தை வலிந்து எதிரொலிக்கிறார் அந்த நண்பர்.
தமிழ் நாடகங்களிலும் படங்களிலும் கதாநாயகன்யார்? வில்லன் யார்? என்பதற்கான சில குணாதிசயங்களை தமிழ் நாட்டு மக்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.
மந்திரி குமாரி—படத்தில் “கொள்ளையடிப்பது சிறந்தகலை” என வாதிடும் பார்த்திபன் (என்ற பாத்திரம் “வில்லன்” பாத்திரமாகத்தான் படைக்கப்பட்டுள்ளது.
அந்தப்படத்தில் கதாநாயகன் பாத்திரத்திற்குப் பெயர் “வீரமோகன்” என்பதாகும்.
வீரமோகன் தான் அந்த நாட்டின் தளபதியாகத் திகழ்கிறான். பார்த்திபன் கொள்ளைக்காரனாகத் திரிகிறான்.
தலையங்கம் எழுதியவர், படத்தின் வசனங்களை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார். ஆனால் கதா டாத் திரங்களைத்தான் மறந்து விட்டார்.
ஒரு கதையிலோ, நாடகத்திலோ, திரைப்படத்திலோ, உலவுகிற பாத்திரங்கள் அனைத்துமே அதன் ஆசிரியரின் உள்ளத்துப்பிரதிபலிப்புகள் அல்ல என்பது பாமர மனிதனும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாகும்.
கொள்ளையடிப்பதைக் கலையாகக் கருதுகிறவன்— பணம், பாவை, பச்சை ரத்தம் மூன்றையும் வாழ்வின்<noinclude>க—9—8</noinclude>
pbek1krtbxrop6avwkimos8xlkcvc59
1929195
1929129
2026-05-01T08:24:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929195
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||113}}</noinclude>குண்டலகேசியிலேயே இடம்பெற்றுள்ள கொள்ளைக் காரனை நான் “மந்திரிகுமாரி” படத்தில் புகுத்தினேன் என்று குற்றம் சாட்டுவது தலையங்கம் எழுதியவருக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தின் விளைவே தவிர வேறல்ல!
இன்னொரு வேடிக்கை, அந்தப் படத்தில் கொள்ளைக்காரன் கதாநாயனாக வருகிறானாம். அதனால் அவன் பேசுவதெல்லாம் கதாசிரியராகிய என் கொள்கைகளாம்! இப்படி ஒரு கருத்தை வலிந்து எதிரொலிக்கிறார் அந்த நண்பர்.
தமிழ் நாடகங்களிலும் படங்களிலும் கதாநாயகன்யார்? வில்லன் யார்? என்பதற்கான சில குணாதிசயங்களை தமிழ் நாட்டு மக்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.
மந்திரி குமாரி—படத்தில் “கொள்ளையடிப்பது சிறந்தகலை” என வாதிடும் பார்த்திபன் (என்ற பாத்திரம் “வில்லன்” பாத்திரமாகத்தான் படைக்கப்பட்டுள்ளது.
அந்தப்படத்தில் கதாநாயகன் பாத்திரத்திற்குப் பெயர் “வீரமோகன்” என்பதாகும்.
வீரமோகன் தான் அந்த நாட்டின் தளபதியாகத் திகழ்கிறான். பார்த்திபன் கொள்ளைக்காரனாகத் திரிகிறான்.
தலையங்கம் எழுதியவர், படத்தின் வசனங்களை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார். ஆனால் கதா டாத் திரங்களைத்தான் மறந்து விட்டார்.
ஒரு கதையிலோ, நாடகத்திலோ, திரைப்படத்திலோ, உலவுகிற பாத்திரங்கள் அனைத்துமே அதன் ஆசிரியரின் உள்ளத்துப்பிரதிபலிப்புகள் அல்ல என்பது பாமர மனிதனும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாகும்.
கொள்ளையடிப்பதைக் கலையாகக் கருதுகிறவன்— பணம், பாவை, பச்சை ரத்தம் மூன்றையும் வாழ்வின்<noinclude>
க—9—8</noinclude>
gjfcltoxuse25mgibihr0ts7b9cso4x
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/130
250
641262
1929136
1926231
2026-05-01T06:01:29Z
Mohanraj20
15516
1929136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||117}}</noinclude>திராவிட யூனியன் அல்லது திராவிடக் கூட்டமைப்பு என்று கூறுவது கூட “பிரிவினை” என்ற தவறான கருத்தை ஒருவேளை ஏற்படுத்தக்கூடுமோ என்ற எண்ணத்தின் காரணமாக — அண்ணா மறைந்த பிறகு; 1973–ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் “இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் <b>கலாச்சார அடிப்படையில்</b> நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது என்று குறிக்கோள். திருத்தம் செய்யப்பெற்று <b>திராவிடக் கலாச்சாரம்</b> என்பதற்கே முக்கியத்துவம் தரப்பட்டது.
கழக சட்ட திட்டத்தில் “நோக்கங்கள்” என்ற தலைப்பில்;
“அண்ணா வகுத்த — கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமை களைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை உருவாக்கவும் பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப்பணி ஆற்றிடவும், பொருளாதாரத் துறையில் வறுமையை வென்று சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வுபெற வழிவகை கண்டிடவும் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும் மாநிலங்களில் முழுமையான சுயாட்சியும் மத்தியில் கூட்டாட்சியும் அமைந்திடவும் தொண்டாற்றுவது.”
என்றுதான் 1973–ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக்குழு “நோக்கம்” என்ற தலைப்புக்கு விளக்க மளித்து சட்ட திட்டத்தில் இடம்பெறவும் செய்தது.
“ஏற்கனவே மாநிலங்களுக்கு சுயாட்சி இருக்கிறது — அதை விரிவுபடுத்தவே (Fuller Autonomy) முழுமையான சுயாட்சி தேவை என்று அண்ணா அவர்கள் “இல்லஸ்ட்
ரேட்டட் வீக்லி” பேட்டியில் கூறினார்” என்று ஏடுகளில் கட்டுரை தீட்டுகிறார்கள் அல்லவா? அண்ணாவின் அந்தக்<noinclude></noinclude>
pfjrqhhme8fxo2mm0k50i44tqbrnehc
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/132
250
641263
1929141
1926232
2026-05-01T06:08:48Z
Mohanraj20
15516
1929141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||119}}</noinclude>—சொல் அளவில் அல்ல; செயல் அளவில் காட்டியிருக்கிறோம்.
::சீன ஆக்கிரமிப்பு—
::பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு—
::வங்கதேசப் போர்—
இந்த நிகழ்ச்சிகளின்போது தி. மு. கழகத்தின் நாட்டுப் பற்றினை வெளிப்படுத்தியிருக்கிறோம்.
இவ்வளவுக்கும் பிறகு, தி. மு. க. பிரிவினைப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை என்று குற்றம் சாட்டுவது சரியல்ல என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
16—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
prj7itcinb0vixgumytrasex1a4uo97
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/134
250
641264
1929133
1926233
2026-05-01T05:52:39Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1929151
1929133
2026-05-01T06:29:59Z
Mohanraj20
15516
1929151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||121}}</noinclude>அந்தப் பயணத்திற்குத் துணையாகவும்—அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்போல் இல்லாது அக்குளத்துக் கொட்டியும் ஆம்பலும் போலவும் சந்தர்ப்பவாதம்—சபலம்—சலனம்—எதற்கும் இடம் தராமலும்—விளங்குகின்ற வீரமணிகள் தான் நெடும் புகழுக்குரியவர்கள்.
அவர்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே ‘கலித்தொகை’ நூலினைப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஒரு பக்கத்தில் என் பார்வை நிலைத்து நின்றது.
காட்டுப் பாதையில் தாய் ஒருத்தி வேகமாக ஓடுகிறாள். அந்தப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் சில பெரியவர்களைப் பார்த்து; “அய்யா! என் மகள் ஒருத்தி
இளம் பெண்—காதல் வயப்பட்டு காளையொருவனுடன் என்னைப் பிரிந்து சென்றுவிட்டாள், அவர்களிருவரையும் நீங்கள் இந்த வழியில் கண்டீர்களா?” எனத் துடிப்போடு கேட்கிறாள்.
“பார்த்தோம் அம்மா!” என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள். அத்துடன் நிறுத்தவில்லை. அந்தத்தாய்க்கு ஆறுதலும் கூறி அழகான விளக்கமும் தருகிறார்கள்.
“தாயே! நறுமணம்மிக்க சந்தனக்கட்டை மலையில் தான் வளர்கிறது. ஆனால் அது தன்னை அரைத்துப் பூசிக் கொள்பவர்க்குப் பயன்படுவதல்லாமல் தான் பிறந்த
மலைக்கு எந்தவிதத்திலும் பயன்படுவதில்லை. கடலில் பிறந்த முத்துக்கள், தன்னை அணிபவர்க்கு அழகு தருகின்றனவே அல்லாமல் உற்பத்தியான கடலுக்கு ஒருவகையிலும்
பயன்பட்டது கிடையாது. ஏழுவகை இன்னிசை, யாழில் தான் தோன்றுகிறது. எனினும் கேட்போர் செவிக்கும் சிந்தைக்கும் இன்பம் வழங்குகிறதேயன்றி அந்த இசை, யாழுக்கு இன்பம் அளிப்பதில்லை. அதைப் போலத்தான் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவும் ஆகும்”
பலவுறு நறும்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள், நுமக்கும் ஆங்கு அனையளே; சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை<noinclude></noinclude>
fe4mrsp74czqp1mnefmrjeyp2kikolb
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/135
250
641265
1929135
1926234
2026-05-01T05:56:48Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1929153
1929135
2026-05-01T06:33:55Z
Mohanraj20
15516
1929153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|122||கலைஞர்}}</noinclude>நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்? தேருங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே; ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதையாழுளே பிறப்பினும யாழ்க்கு அவை தாம் என்செய்யும்? சூழுங்கால்; நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
உடன்பிறப்பே, இந்தப் பாடலையும் இதற்குரிய பொருளையும் படிக்கப் படிக்க, எனக்கு உன்னைப் போன்ற உடன்பிறப்புக்களின் நினைவே நெஞ்சில் அலைமோதியது.
எந்தவொரு இயக்கத்திலும் தூய தொண்டுள்ளம் கொண்ட தியாக மலர்கள் பலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு தாங்கள் சொந்தமல்ல — நாட்டுக்கே
சொந்தமென எண்ணி வாழ்கிறார்கள்.
மலை தரும் சந்தனம்—
அதன் மணம், மற்றவர்க்கு உரியது — மலைக்குப் பெருமைதான் உரியது!
கடல் தரும் முத்து—
அதன் ஒளி, அணிவோர்க்கு உரியது — அது பிறந்த தால் ஆழ் கடலுக்குப் பெருமைதான் உரியது.
அதுபோலவே தன்னலமற்ற தொண்டர்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும் — அவர்கள் அந்த இயக்கத்துக்கு — நாட்டுக்கு — உரியவர்கள்! அவர்களை ஈன்றளித்த வீட்டுக்குப் பெருமை மட்டுமே உரியது!
கலித்தொகையில் நான் கண்ட காட்சி, காதலைப் பற்றியது என்றாலும்; என் உள்ளம், அந்த விளக்கத்தை உனக்கும் உன்னைப் போன்ற உண்மைத தொண்டர்களுக்கும் பொருத்திப் பார்த்துப் பூரிப்பு அடைகிறது.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
17—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
kiwb5do0ddcwynqw6ed0uglmnu6squg
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/136
250
641266
1929154
1926235
2026-05-01T06:36:07Z
Mohanraj20
15516
1929154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வாழ்க அந்த அஞ்சா நெஞ்சம்!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
கப்பலோட்டிய தமிழன் தீரர் சிதம்பரனார் மறைந்து நாற்பதாண்டுகள் ஓடிவிட்டதை நினைவு கூர்ந்திடும் நாள் நவம்பர் பதினெட்டாம் நாளாகும். அந்நிய ஆதிபத்தி
யத்தின் அச்சாணியை முறித்து — அடிமை விலங்கை ஒடித்து — உரிமைக் குரல் எழுப்ப அரிமா எனக் கிளம்பிய அந்த வீர மனிதர், சிறைச் சாலையில் சித்ரவதைகளை
ஏற்றுக்கொண்டு செக்கிழுத்தார் என்பதைச் செங்குருதி சூடேறப் படித்திருக்கிறோம். அந்த உத்தமத் தியாகி இழுத்த செக்கு எங்கிருக்கிறது எனத் தேடி, அதனைக்
கொண்டு வந்து சென்னை அரசினர் தோட்டத்தில் கழக அரசின் காலத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது. இன்றைக்கும் அவர் இழுத்த அந்தச் செக்கினைக் காணும்
போது வரலாற்றின் தியாக முழக்கம் நம் செவிகளில் ஆங்காரமாக ஒலித்திடவே செய்கிறது.
இந்திய நாட்டு விடுதலைப் போரின் மற்றொரு பாசறையாக சுதேசி இயக்கம் உருவெடுத்து, அந்நியப் பொருள் களைப் பயன்படுத்துவதை அறவே புறக்கணிக்க வேண்டு மென்று போர் முரசு கொட்டியது.
அந்தப் போர்ப் பரணிக்குச் செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடத்தான் சுதேசிக் கப்பல்களை ஓட்டுகிற நிறுவனத்தைத் தொடங்கிக் ‘கப்பலோட்டிய தமிழன்’
என்ற சிறப்பினையும் பெற்றார் சிதம்பரனார். இதன்<noinclude></noinclude>
ox8wnu24nt2q2o617xpbh31c787ky3l
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/137
250
641267
1929157
1926236
2026-05-01T06:40:12Z
Mohanraj20
15516
1929157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|124||கலைஞர்}}</noinclude>விளைவாக ஆங்கில ஆதிக்கக்காரர்களின் ஆத்திரத்துக்கு, ஆளானார்.
நேரம் பார்த்திருந்த அந்த ஏகாதிபத்தியம், கலெக்டர் விஞ்ச் துரையின் வாயிலாகத் தனது எண்ணத்தை நிறை வேற்றிக் கொண்டது.
தூத்துக்குடியில் வ. உ. சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் தடையை மீறி ஊர்வலமும் பொதுக் கூட்டமும் நடத்தினார்கள் என்று குற்றம் சுமத்தி அதன் தொடர்பாக “ராஜத் துவேஷ” வழக்கொன்றும் ஜோடனை செய்யப்பட்டது.
அந்த வழக்கில் சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சுப்பிரமணிய சிவாவுக்கு, பத்து ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது. சிதம்பரனார்
சார்பில் மேல் முறையீடு செய்து கொள்ளப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனைக் காலம் அவருக்குப் பத்து ஆண்டு தண்டனைக் காலமாக மாற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை வைத்துத்தான் பாரதியார் இரு பாடல்களை உணர்ச்சி பொங்கிட எழுதினார்.
விஞ்ச் துரையும், வீரர் சிதம்பரனாரும் வாக்குவாதம் செய்வது போன்ற பாடல் அது. அதில் சில வரிகளை மட்டும் நினைவூட்டுகிறேன்.
{{left_margin|3em|<poem>“நாட்டிலெங்கும் சுதந்தர வாஞ்சையை
::நாட்டினாய்; கனல் மூட்டினாய்.
வாட்டி உன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
::மாட்டுவேன், வலி காட்டுவேன்,”</poem>}}
இப்படி நெஞ்சுயர்த்திப் பேசுகிறான், நஞ்சனைய விஞ்ச்துரை.
அதற்குச் சிதம்பரனார் சீறியெழுந்து சொன்ன பதில் என்ன தெரியுமா? பாரதியின் வாயாலேயே கேட்போம்.
{{nop}}<noinclude></noinclude>
ttjj485pnflh1zn3c7z7380am5us57c
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/138
250
641268
1929140
1926237
2026-05-01T06:07:27Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1929160
1929140
2026-05-01T06:42:25Z
Mohanraj20
15516
1929160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||125}}</noinclude>{{left_margin|3em|<poem>“சதையைத் துண்டு துண்டாக்கினும் என் எண்ணம்
::சாயுமோ? ஜீவன் ஓயுமோ?
இதயத்துள்ளே இலங்கு மகா சக்தி
::ஏகுமோ? நெஞ்சம் வேகுமோ?”</poem>}}
இவ்வாறு வேங்கைப் புலியென உறுமி, இந்திய நாட்டின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்திய அந்தச் செம்மல், நாடு விடுதலைப்பெற்ற காட்சியை காண முடியா
விட்டாலும் — அவரைப் போன்ற தியாக வேந்தர்கள் சிந்திய ரத்தமும், ஏற்றுக்கொண்ட அடக்குமுறையும்தான் சுதந்திரப் பயிர் முளைக்க உரமாக விளங்கின என்பதைச்
சரித்திரம் கம்பீரமாக இசைத்துக் கொண்டுதானிருக்கிறது.
உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அண்ணா அவர்களின் முயற்சியால், சிதம்பரனாரின் சிலையை சென்னைத் துறைமுகத்துக்கருகே மாநகராட்சி சார்பில்
அமைக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பிரதமர் அவர்கள் சிதம்பரனாரின் சிலையைத் திறந்து வைத்தார்கள்.
சென்னை ‘ஜார்ஜ் டவுன்’ சிதம்பரனார் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கழக அரசின் காலத்திலேயே அறிவிக்கப்பட்டது.
சென்னை இராஜாஜி மண்டபத்தில் உள்ள வெள்ளையர் படங்களை அகற்றி விட்டு நம் நாட்டுச் சான்றோர் படங்களை வைத்தபோது சிதம்பரனார் படமும் அதில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
சிதம்பரனார் நினைவாக இன்னும் எத்தனை சின்னங்கள் எழுந்தாலும் அவை அவர் காட்டிய தீரத்துக்கும்—ஏற்றுக் கொண்ட சோதனைகளுக்கும் ஈடு ஆகமாட்டா என்பது<noinclude></noinclude>
0nyp4p0jktgpmw8dlis42uc8oqvj6u8
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/139
250
641269
1929149
1926238
2026-05-01T06:26:03Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1929162
1929149
2026-05-01T06:45:08Z
Mohanraj20
15516
1929162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|126||கலைஞர்}}</noinclude>மட்டும் உண்மை! அவ்வளவு பெரிய விடுதலைச் சிங்கமாக அவர் உலவியிருக்கிறார்.
நாட்டின் மீது அவர் கொண்டிருந்த பற்றுக்கும் பாசத்திற்கும் அவர் எழுதிய பாடல் ஒன்றே சான்று பகரும்.
{{left_margin|3em|<poem>“திருவும் புகழும் சிறந்தன பிறவும்
மருவற நிற்கும் என் மாசிலா மனைவியே
என்னரும் உயிரினும் என்னுயிர் உளத்தினும்
மன்னுறப் பாதியை மகிழ்ந்துனக் களித்தேன்
பின்னுறப் பாதியை பெரிய நம் தேயத்தின்
தன்னடிக் களித்தேன் சத்தியம் இஃதே”</poem>}}
ஆருயிர்த் துணைவிக்கு அவர் எழுதிய கவிதை மடல் இது!
அந்த உறுதி வாய்ந்த நெஞ்சத்துக்கு இன்று நாம் மலர் தூவுவோம்!
அந்த வீரமறவருக்குப் புகழாஞ்சலி பாடிப் போற்றுவோம்!
அந்த தியாகச் செம்மலுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்!
::வாழ்க, வ. உ. சி. யின் பெயர்!
::வாழ்க, அந்த அஞ்சா நெஞ்சம்!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
18—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
gfldepvm6ibqmh57nk7wtvz9b5ktlut
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/140
250
641270
1929152
1926239
2026-05-01T06:30:47Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1929165
1929152
2026-05-01T07:03:04Z
Mohanraj20
15516
1929165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>இந்த உடலின் மதிப்பு!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
{{left_margin|3em|<poem>“ஊத்தைக் குழியிலே மண் எடுத்து
உதிரப்புனலிலே உருண்டை சேர்த்து
வாய்த்த குயவனார் பண்ணு பாண்டம்
வரகோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே!</poem>}}
எனச் சித்தர்களும் சீவன் முக்தர்களும் மனித உடலைப் பழித்துப் பாடியுள்ள பாடல்கள் ஏராளம் உண்டு.
{{left_margin|3em|<poem>“நந்தவனத்தில் ஓர் ஆண்டி — அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி — அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”</poem>}}
பத்து மாதம் கருவிலே உருவாகி குழந்தையாய்ப் பிறந்து மனிதனாக நடமாடி இறுதி மூச்சை வெளிப் படுத்தி, இனி விழிப்பதில்லை என்ற உறுதியோடு இறுகக் கண்களை மூடிக்கொண்டவுடன் அந்த உடல், வரகோட்டுக்கும் ஆகாத ஒன்றாகவும் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்த மண் குடமாகவும் ஆகிவிடு கிறதென்றுதான் நமது முன்னோர்கள் எழுதி வைத்தார்கள்.
{{left_margin|3em|<poem>“காயமே இது பொய்யடா
காற்றடைத்த பையடா”</poem>}}
எனக் காரி உமிழப்பட்ட இந்தச் சரீரத்தின் மொத்த மதிப்பு ஐந்து கோடி ரூபாய் என்று இப்போது கணக் கிடப்பட்டிருக்கிறது.
{{nop}}<noinclude></noinclude>
4vnxag3wj7lss7bn8w8fzd4kxck07nz
1929166
1929165
2026-05-01T07:03:34Z
Mohanraj20
15516
1929166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>இந்த உடலின் மதிப்பு!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
{{left_margin|3em|<poem>“ஊத்தைக் குழியிலே மண் எடுத்து
உதிரப்புனலிலே உருண்டை சேர்த்து
வாய்த்த குயவனார் பண்ணு பாண்டம்
வரகோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே!”</poem>}}
எனச் சித்தர்களும் சீவன் முக்தர்களும் மனித உடலைப் பழித்துப் பாடியுள்ள பாடல்கள் ஏராளம் உண்டு.
{{left_margin|3em|<poem>“நந்தவனத்தில் ஓர் ஆண்டி — அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி — அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”</poem>}}
பத்து மாதம் கருவிலே உருவாகி குழந்தையாய்ப் பிறந்து மனிதனாக நடமாடி இறுதி மூச்சை வெளிப் படுத்தி, இனி விழிப்பதில்லை என்ற உறுதியோடு இறுகக் கண்களை மூடிக்கொண்டவுடன் அந்த உடல், வரகோட்டுக்கும் ஆகாத ஒன்றாகவும் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்த மண் குடமாகவும் ஆகிவிடு கிறதென்றுதான் நமது முன்னோர்கள் எழுதி வைத்தார்கள்.
{{left_margin|3em|<poem>“காயமே இது பொய்யடா
காற்றடைத்த பையடா”</poem>}}
எனக் காரி உமிழப்பட்ட இந்தச் சரீரத்தின் மொத்த மதிப்பு ஐந்து கோடி ரூபாய் என்று இப்போது கணக் கிடப்பட்டிருக்கிறது.
{{nop}}<noinclude></noinclude>
46qdqpi0div56vvu3o3rtn2pkztpq37
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/141
250
641271
1929167
1926240
2026-05-01T07:05:32Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1929167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/106
250
642125
1929104
1928363
2026-05-01T04:34:28Z
Ramya sugumar
15106
1929104
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||97}}</noinclude>இரங்கல் கூட்டம் நடந்தபோது சந்தித்தேன். காமராஜர் நினைவகத்தைத் தொடங்கி வைக்கும்போது அவரை அங்கு சந்தித்திருக்கக்கூடும். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு ஏற்படவில்லை! எனவே, பெரியவர் அவர்கள் கருதுகிறபடி நானும் ராமச்சந்திரன் அவர்களும் சந்திக்கவில்லை. நாங்கள் சந்தித்தே தீரவேண்டுமென்று அனுபவத்திலும், ஆற்றலிலும், அறிவிலும் முதிர்ச்சி பெற்ற பெரியவர் பக்தவத்சலம் போன்றவர்கள் ஆசைப்படுகிறார்களோ, என்னவோ எனக்குப் புரியவில்லை.
கடற்காற்று! மலிவாகக் கிடைக்கக்கூடிய ஒன்று பயணச்செலவு அதிகமின்றி, நாலு பட்டாணிக் கடலைகளோடு முடியக்கூடிய பொழுது போக்கு!
அதையும் கெடுப்பது என்று இந்த வயதான காலத்திலே இவர் “வைராக்கியம்” கொண்டு விட்டாரே! நான் என்னதான் செய்து தொலைப்பது!
என்னப்பா! தெரியுமா சேதி? காலேஜுக்குப் போகிறானே. உன் பையன் —ஜாக்கிரதையா பாத்துக்க! நேற்று பீச்சிலே பையனை பார்த்தேன்—பக்கத்திலே ஒரு “லோலாக்கு” “தாவணி” தெரிஞ்சுது — ரெண்டும் ஜாலியா அலைகளை விரட்டி விளையாண்டதை இந்தக் கண்ணால பாத்தேனாக்கும்;
என்று எதிர்வீட்டு ஏகாம்பரம், பையனைப் பெற்ற பெருமாள்சாமியிடம் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். கதைகளில் மட்டுமல்ல — நடைமுறையிலுங்கூட!
பெரியவர் பக்தவத்சலம் அந்தப் பாணியில் அல்லவா ஆரம்பித்துவிட்டார்! அவருடைய திறமையையும், செல்வாக்கையும் வைத்து அவருக்குக் கீழ் இயங்கும் தமிழ் நாட்டுக் காங்கிரசை இன்னும் எவ்வளவோ பெரிய அளவுக்கு அவரால் வளர்க்க முடியும்! அதற்கு நேரத்தைச் செலவிடாமல் எதிர்வீட்டு ஏகாம்பரம்போலக் கடற்கரைச் செய்திகளைக் கூறிக் கொண்டிருக்கிறாரே!{{nop}}<noinclude></noinclude>
jzfmq8753a2waosavzpv2a7ws7qjtc7
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/123
250
642151
1929106
1928614
2026-05-01T04:42:37Z
Ramya sugumar
15106
1929106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|114||கலைஞர்}}</noinclude>ஊனமுற்றோர் நல்வாழ்வுக்கு நிதி வழங்கியது— கண்ணொளி வழங்கும் திட்டத்துக்கு நிதி வழங்கியது— கருணை இல்லங்கள் அமைத்து அதற்குக் கோயில் நிதியில் ஒரு பங்கு வழங்கி அனாதைச் சிறுவர்களுக்கு கல்வி வழங்குவது — தொழு நோயாளிகளின் மறுவாழ்வு இல்லங்களுக்கு உதவி அளித்தது—
இவைகள் எல்லாம் வேறு காரியங்களுக்குச் செல வழித்தது என்ற குற்றத்தின்பாற்பட்டவைகளாம்!
முன்னாள் முதல்வராகவும் அறநிலைய அமைச்சராகவும் இருந்த பெரியவர் பக்தவத்சலம் அவர்கள். இந்த வார “தினமணி கதிர்” இதழில் பின்வருமாறு எழுதுகிறார்:
“கோயில் வருமானம், மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் ஏழைகளுக்கும் பயன்படவேண்டும். நூலகங்கள் ஏற்படுத்த வேண்டும். திருமண மண்டபங்கள் கட்டவேண்டும்”
இது அவரது சீரிய கருத்து! சிறந்த கருத்தும்கூட!
அதுமட்டுமல்ல 1959ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 66-ன் படியும். 1960ஆம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதிய அரசின் ஆணைப்படியும், கோயில்களின் உபரி நிதி, எந்தக் காரியங்களுக்கு வழங்கப்படலா மென்று
நிர்ணயிக்கப்பட்டிருப்பதில்,
1. வறுமை நிலைபிலிருக்கிற அல்லது உதவி தேவைப்படுகிற மத சம்பந்தமான இதர நிலையங்களுக்கு,
2. மத கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்ய,
3. இந்துக் குழந்தைகட்கு அனாதை இல்லங்கள் ஏற்படுத்தி பராமரிக்க,
4. தொழு நோயாளிகளுக்கான இல்லங்களை ஏற்படுத்த.
5. ஏழைகள், ஆதரவற்றவர், தேக திடமற்றவர்களுக்கு விடுதிகள் ஏற்படுத்த என்பவைகளும் அடங்கியிருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude>
pzppzybfvvtm7lmva968pxnnnazthik
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/147
250
642165
1929038
2026-04-30T13:14:18Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல் மூலப் பொருள்கள் 125}}</noinclude>மிகுதியாக முறுக்கேற்றப் படுகின்றன. முறுக்கேற்றத்தை நிலை நிறுத்துவதற்கும், இழை பிரிதலைத் தடுப்பதற்கும், இழையின் தன்மையைப் பொறுத்து, வெப்பத்தினாலோ, ஈரத்தினாலோ, இறுக்கத்தைத் தோற்றுவிக்கலாம்.
மென்பரப்பைக் கொண்ட துணிகளுக்கு, தளர்ந்த முறுக்கேற்றமும், வழவழப்பான துணிகளுக்கு, நூலில் நிறைய முறுக்குகளும், கூழாங்கல் தோற்றமுள்ள துணிகளின் நூல்களுக்கு, மிக உயர் நிலை முறுக்கும் அளிக்கப் படும். நூலைச் செங்குத்தாகப் பிடித்தால், முறுக்கின் திசையைக் கண்டறியலாம். S என்னும் எழுத்தின் நடுப்பகுதியில் சுழற் சுருள் அமைந்திருந்தால், அந்நூல் S முறுக்கைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடுவர்; மாறாக, Z என்னும் எழுத்தின் சாய்வை ஒத்திருந்தால், Z முறுக்கு என்பர்.
பெரு முறுக்கேற்றம் கொண்ட நூல்களைக் கொண்டு, சிஃபான், ஜார்ஜெட், காண்டன், ஃப்ரெஞ்சு க்ரீப் (crepe) ஆகிய துணி அமைப்புகள் உருவாக்கப் படுகின்றன. நன்கு முறுக்கப் பட்ட நூல்கள் மாற்றி மாற்றிப் பாவுத் திசையிலோ, நிரப்புத் திசையிலோ அமைக்கப் படுகின்றன. துணியைச் சலவை செய்யும் போதோ, சாயமேற்றும் போதோ, இந்நூல்கள் பல்வேறு திசைகளிலும் இடை முறுக்கு (Kink), சுருங்கிய வடிவத் (crinkled) தோற்றத்தைத் தருகின்றன.
மரபு வழி வளைய நூற்பு நூல்களில், முறுக்கேற்றத்தை அறிய இரு வழி முறைகள் வழக்கிலுள்ளன. ASTMD–1422, ASTMD–1423 ஆகிய இரு குறிப்புகளிலும் முறையே, முறுக்கைப் பிரித்து மறு முறுக்கேற்றம் செய்தல் (untwist and retwist), நேரடி எண்ணுதல் முறை (direct counting method) ஆகியன விவரிக்கப் பட்டுள்ளன. முதல் முறையில், முறுக்கப் பட்ட நூல், முறுக்கேற்றம் செய்யப் படுகிறது; இவ்வாறு நீளக் கூடிய நூல் மீண்டும் எதிர்த் திசையில் முறுக்கப் படுகிறது. தொடக்க நீளத்தை எட்டுவதற்குத் தேவைப் படும் சுற்றுக்களை இரண்டால் வகுத்து முறுக்கேற்ற மட்டத்தை அறியலாம். இரண்டாம் ஆய்வு முறையில் நூலின் ஒவ்வொரு செ.மீட்டரிலும் அடங்கியுள்ள திருகு சுருள்கள் (convolutions) எண்ணப் படுகின்றன.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 147
|bSize = 1080
|cWidth = 360
|cHeight = 275
|oTop = 1000
|oLeft = 95
|Location = center}}
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->
திறந்த முனை நூற்பில் தயாராகும் நூல்களில், ஒளிக் கருவிகளைக் கொண்டு எண்ணும் முறை பயன் மிக்க தாகக் கருதப் படுகிறது. .நூலின் புறப் பரப்பு இயல்புகளை அறிவதற்கு மட்டுமன்றி, நூலின் வலிவைக் கண்டறிவதற்கும், முறுக்கேற்றத்தின் சார்பலனாகப் படம் 1இல் காட்டப் பட்டுள்ளது. முறுக்கு உயரும் போது, இழைகளை ஒன்றிணைக்கும் உராய்வு விசைகளும் கூடுகின்றன. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் உராய்வு விசை உயரும் போது, தனி இழைகளில் திருகு கோண (helixangle) உயர்வினால், நூல் அச்சிலிருந்து இழைகள் தாறுமாறாக நீட்டிக் கொண்டிருக்கும் நிலை தோன்றும். இழைகள் யாவுமே ஒருங்கிணைந்த திசையில் அமைந்திருந்தால்தான், நூல் உயர் தகைவுகளும் ஈடு கொடுக்க முடியும். எனவே, இடைப்பட்ட ஏற்ற முறுக்கு நிலை விரும்பப் படுகிறது.
ஒரு செ.மீட்டருக்கு எவ்வளவு சுற்றுகள் இருப்பினும், இந்த அளவு திரிப்பு ஒரு தடிமான நூலில், மெல்லிய நூலிலுள்ளதை விடக் கூடுதலான திருகல் கோணத்தைத் தோற்றுவிக்கிறது. முறுக்கேற்ற நிலையை முறுக்குப் பெருக்கி (twist multiplier) என்னும் அளவையிலோ, முறுக்குக் காரணி (twist factor) என்னும் அளவையிலோ குறிப்பிடலாம்.<br>
முறுக்குப் பெருக்கி = {{sfrac|ஒரு செ.மீட்டரில் உள்ள சுற்றுகள்|√நூல் எண்}}<br>
முறுக்குக் காரணி = {{sfrac|ஒரு செ.மீட்டரில் உள்ள சுற்றுகள்|√நூல் டெக்ஸ்}}
மேற்காணும் வரை படத்தில் இவ்வலகுகளில் ஒன்றினைக் கிடைமட்ட அச்சாகக் கொண்டால், பெரும நூல் வலிவுக்கு ஏற்ற முறுக்கு நிலைகளை எவ்வகை நூலுக்கும் கண்டறியலாம்.
{{right|—<b>மே.ரா. பாலசுப்பிரமணியன்</b>}}
<b>துணை நூல்</b>. B.P. Corbman, <i>Textiles: Fiber to Fabric</i>, Sixth Edition, MCGraw–Hill Kogakusha, Ltd, Singapore, 1985.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="83"/><section begin="84"/>
{{fs|110|<b>நூல் மூலப் பொருள்கள்</b>}}
பல வகை இழைகள் மூலப் பொருள்களாக, நெசவுத் தொழிலில் பயன் படுத்தப் படுகின்றன. இவற்றுள், சில மனித நாகரீகத்தின் தொடக்க காலத்திலிருந்து பயன் பட்டு வருகின்றன.<noinclude></noinclude>
afs8ll6ncoyvohaatuv3u8j56pqrkkd
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/148
250
642166
1929044
2026-04-30T13:49:29Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929044
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|126 நூல் மூலப் பொருள்கள்}}</noinclude>ஏனையவை அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப் பட்டவை. இவ்விழைகளின் வளர்ச்சியும், பயன்களும், அவற்றின் நூற்புத் திறன், தேவையான அளவில் கிடைத்தல், தயாரிப்புச் செலவும், சிக்கனமும், நுகர்வோருக்கு அவ்விழைகளின் இயல்பினால் தோன்றும் நிறைவு ஆகிய காரணிகளால் வரையறுக்கப் படுகின்றன.
புதுப் புது இழைகள் தோன்றும் போது, நெசவுத் தொழிலில் இழைகளுக்குப் பெயரிடுதல், கண்டறிதல், வகையீடு செய்தல் ஆகிய பணிகள் சிக்கலாயின. தாங்கள் தயாரிக்கும் இழைகளுக்குத் தனிப் பெயர் அல்லது வணிகக் குறியீடு இட வேண்டும் என்னும் தனி நபர் விருப்பினால், இச்சிக்கல் உருவெடுத்தது. இப்பெயர்கள் நுகர்வோரைக் குழப்பத்திலாழ்த்தி, தாம் வாங்கும் துணியில் அடங்கியுள்ள இழைகளின் தன்மைகளோ, தனித்துவமோ தெரியாத நிலை உருவாகியது. இக்குழப்பத்திலிருந்து விடுபடும் பொருட்டு, எத்துணியாயினும், அதில் இடம் பெற்றுள்ள (5%க்கு மேலாக) இழைகளின் ஏற்கப்பட்ட பெயர்களைத் தயாரிப்பாளர் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும் என்று அமெரிக்க அரசு ஆணை பிறப்பித்தது. இதனால், இழைகளை வகை, பெயர், தோற்றுவாய், இயைபு ஆகியவற்றின் அடிப்படையில் வகையீடு செய்தல் எளிதாயிற்று (அட்டவணை).
<b>பருத்தி</b>. பருத்திக் காயில் உருவாகும் இழை பஞ்சாகும். ஒவ்வோர் இழையும், உள்ளீடற்ற முறுக்கப் பட்ட, தட்டையான ஒற்றைச் செல்லாகும். இவ்விழையால் 90% செல்லுலோசும், 6% ஈரமும், 4% இயல்பான மாசுப் பொருள்களும் உள்ளன. இழைகளின் வெளிப் பரப்பில், மெழுகு போன்ற பூச்சு பஞ்சுக்கு ஒட்டும் தன்மையை அளிக்கிறது. இவ்வியல்பும், இயல்பான முறுக்கும் நூலாக நூற்பதற்கு ஏற்ற இழையாகப் பருத்தியை விளங்கச் செய்கின்றன.
{{block_center/s}}<div style="width:450px; font-size:70%">
<center><b>அட்டவணை</b></center>
{|class="tablecolhdborder"
|-{{ts|vtt|ac|bb}}
|width=25% |<b>வகை</b>
|width=25%|<b>இழையின் பெயர்</b>
|width=50%|<b>தோற்றுவாய் / இயைபு</b>
|-
|colspan=2|<b>1. இயற்கை இழைகள்</b> ||
|-
|அ. பயிரினம்
|பருத்தி
|பருத்திக் காய் (செல்லுலோஸ்)
|-
|
|லினன்
|சணல் தண்டு (செல்லுலோஸ்)
|-
|
|இந்தியச் சணல்(Jute)
|சணல் தண்டு (செல்லுலோஸ்)
|-
|
|கற்சணல் (hemp)
|மணிலா தண்டு (செல்லுலோஸ்)
|-
|
|சிசால்
|அகேவு இலை (செல்லுலோஸ்)
|-
|
|ராமி
|சீனாப் புல் (செல்லுலோஸ்)
|-
|
|தேங்காய் நார்
|தேங்காய் நார் (செல்லுலோஸ்)
|-
|
|பீனா
|அன்னாசி இலை/தழை (செல்லுலோஸ்)
|-
|ஆ. விலங்கினம்
|கம்பளி
|ஆடு (புரதம்)
|-
|
|பட்டு
|பட்டுப் பூச்சி (புரதம்)
|-{{ts|vtt}}
|
|மயிரிழை
|ஒட்டகம், காஷ்மீர் ஆடு, அங்கோரா செம்மறி ஆடு, லாமா, அல்பாகா, விகுனா, குவானகோ, குதிரை ஆகியவற்றின் தோலின் மீது வளரும் முடி (புரதம்)
|-
|இ. கனிமம்
|கல்நார்
|பல வகைப் பாறைகள் (சிலிக்கேட்)
|-{{ts|vtt}}
|<b>2. செயற்கை இழைகள்</b>
|ரேயான்/செயற்கை பட்டு
|பருத்தி அல்லது மரம்
|-{{ts|vtt}}
|அ.செல்லுலோஸ் வகை
|அசெட்டேட்
|பருத்தி அல்லது மரம்
|-{{ts|vtt}}
|rowspan=3|ஆ. செல்லுலோஸ் அற்ற பல்லுறுப்பிகள்
|டிரை அசெட்டேட்
|பருத்தி அல்லது மரம்
|-{{ts|vtt}}
|நைலான், அரமிடு
|அலிஃபாட்டிக் பாலி அமைடு, அரொமாடிக்பாலி அமைடு
|-{{ts|vtt}}
|பாலிஎஸ்டர்
|டை ஹைட்ரிக் ஆல்கஹால் மற்றும் டெரி.. தாலிக் அமிலம்.
|-{{ts|vtt}}
|
|அக்ரிலிக்
|அக்ரிலோ நைட்ரைல் (குறைந்தது 85% கொண்டது)
|-{{ts|vtt}}
|
|மோடக்ரிலிக், ஸ்பாண்டக்ஸ்
|அக்ரிலோ நைட்ரைல் (35–84%), பாலியூரித்தேன் (85%–க்கு மேல்)
|-{{ts|vtt}}
|
|பாலிஒலிஃபீன், வின்யான்
|எத்திலீன் / புரோப்பிலீன் (85%), வினைல் குளோரைடு (85%)
|-{{ts|vtt}}
|
|சரண், நோவோலாய்டு
|வினைலிடீன் குளோரைடு (80%), ஃபீனால் வகை நோவோலாக்
|-{{ts|vtt}}
|
|பாலிகார்பனேட்
|கார்போனிக் அமிலம்(பாலிஎஸ்ட்டர் வழிப் பொருள்)
|-{{ts|vtt}}
|
|பாலிபென்சிமிடசோல், அல்கினேட்
|டைஃபீனைல் ஐசோதாலேட் கால்சியம் அல்கினேட்
|-{{ts|vtt}}
|
|ஃபுளுரோ கார்பன்
|டெட்ரா ஃப்புளுரோ எத்திலீன்
|-{{ts|vtt}}
|
|அணிக் கோவை வகை (Matrix)
|பல்லுறுப்புக் கலவை
|-{{ts|vtt}}
|இ. புரத வகை
|அஸ்லான், கேசீன்
|சோயா பீன்ஸ், சோளம், பால் புரதம்
|-{{ts|vtt}}
|ஈ. ரப்பர் (நீட்சி வகை)
|ரப்பர்
|இயற்கை அல்லது செயற்கை இரப்பர்
|-{{ts|vtt}}
|உ. உலோக வகை
|உலோகம்
|தங்கம்,வெள்ளி, அலுமினியம்
|-{{ts|vtt}}
|ஊ. கனிம வகை
|கண்ணாடி
|மணல், சுண்ணாம்புக் கல்
|-{{ts|vtt}}
|
|செராமிக் (களிமண்), கிராஃபைட்
|அலுமினா, சிலிக்கா , கார்பன்
|}<div>
{{block_center/e}}{{nop}}<noinclude></noinclude>
6xd7c2mjql6nz2r79ox7q0sibx2n1xb
1929089
1929044
2026-04-30T16:30:00Z
TI Buhari
4634
1929089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|126 நூல் மூலப் பொருள்கள்}}</noinclude>ஏனையவை அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப் பட்டவை. இவ்விழைகளின் வளர்ச்சியும், பயன்களும், அவற்றின் நூற்புத் திறன், தேவையான அளவில் கிடைத்தல், தயாரிப்புச் செலவும், சிக்கனமும், நுகர்வோருக்கு அவ்விழைகளின் இயல்பினால் தோன்றும் நிறைவு ஆகிய காரணிகளால் வரையறுக்கப் படுகின்றன.
புதுப் புது இழைகள் தோன்றும் போது, நெசவுத் தொழிலில் இழைகளுக்குப் பெயரிடுதல், கண்டறிதல், வகையீடு செய்தல் ஆகிய பணிகள் சிக்கலாயின. தாங்கள் தயாரிக்கும் இழைகளுக்குத் தனிப் பெயர் அல்லது வணிகக் குறியீடு இட வேண்டும் என்னும் தனி நபர் விருப்பினால், இச்சிக்கல் உருவெடுத்தது. இப்பெயர்கள் நுகர்வோரைக் குழப்பத்திலாழ்த்தி, தாம் வாங்கும் துணியில் அடங்கியுள்ள இழைகளின் தன்மைகளோ, தனித்துவமோ தெரியாத நிலை உருவாகியது. இக்குழப்பத்திலிருந்து விடுபடும் பொருட்டு, எத்துணியாயினும், அதில் இடம் பெற்றுள்ள (5%க்கு மேலாக) இழைகளின் ஏற்கப்பட்ட பெயர்களைத் தயாரிப்பாளர் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும் என்று அமெரிக்க அரசு ஆணை பிறப்பித்தது. இதனால், இழைகளை வகை, பெயர், தோற்றுவாய், இயைபு ஆகியவற்றின் அடிப்படையில் வகையீடு செய்தல் எளிதாயிற்று (அட்டவணை).
<b>பருத்தி</b>. பருத்திக் காயில் உருவாகும் இழை பஞ்சாகும். ஒவ்வோர் இழையும், உள்ளீடற்ற முறுக்கப் பட்ட, தட்டையான ஒற்றைச் செல்லாகும். இவ்விழையால் 90% செல்லுலோசும், 6% ஈரமும், 4% இயல்பான மாசுப் பொருள்களும் உள்ளன. இழைகளின் வெளிப் பரப்பில், மெழுகு போன்ற பூச்சு பஞ்சுக்கு ஒட்டும் தன்மையை அளிக்கிறது. இவ்வியல்பும், இயல்பான முறுக்கும் நூலாக நூற்பதற்கு ஏற்ற இழையாகப் பருத்தியை விளங்கச் செய்கின்றன.
{{block_center/s}}<div style="width:450px; font-size:70%">
<center><b>அட்டவணை</b></center>
{|class="tablecolhdborder"
|-{{ts|vtt|ac|bb}}
|width=25% |<b>வகை</b>
|width=25%|<b>இழையின் பெயர்</b>
|width=50%|<b>தோற்றுவாய் / இயைபு</b>
|-
|colspan=2|<b>1. இயற்கை இழைகள்</b> ||
|-
|அ. பயிரினம்
|பருத்தி
|பருத்திக் காய் (செல்லுலோஸ்)
|-
|
|லினன்
|சணல் தண்டு (செல்லுலோஸ்)
|-
|
|இந்தியச் சணல்(Jute)
|சணல் தண்டு (செல்லுலோஸ்)
|-
|
|கற்சணல் (hemp)
|மணிலா தண்டு (செல்லுலோஸ்)
|-
|
|சிசால்
|அகேவு இலை (செல்லுலோஸ்)
|-
|
|ராமி
|சீனாப் புல் (செல்லுலோஸ்)
|-
|
|தேங்காய் நார்
|தேங்காய் நார் (செல்லுலோஸ்)
|-
|
|பீனா
|அன்னாசி இலை/தழை (செல்லுலோஸ்)
|-
|ஆ. விலங்கினம்
|கம்பளி
|ஆடு (புரதம்)
|-
|
|பட்டு
|பட்டுப் பூச்சி (புரதம்)
|-{{ts|vtt}}
|
|மயிரிழை
|ஒட்டகம், காஷ்மீர் ஆடு, அங்கோரா செம்மறி ஆடு, லாமா, அல்பாகா, விகுனா, குவானகோ, குதிரை ஆகியவற்றின் தோலின் மீது வளரும் முடி (புரதம்)
|-
|இ. கனிமம்
|கல்நார்
|பல வகைப் பாறைகள் (சிலிக்கேட்)
|-{{ts|vtt}}
|<b>2. செயற்கை இழைகள்</b>
|ரேயான்/செயற்கை பட்டு
|பருத்தி அல்லது மரம்
|-{{ts|vtt}}
|அ.செல்லுலோஸ் வகை
|அசெட்டேட்
|பருத்தி அல்லது மரம்
|-{{ts|vtt}}
|rowspan=3|ஆ. செல்லுலோஸ் அற்ற பல்லுறுப்பிகள்
|டிரை அசெட்டேட்
|பருத்தி அல்லது மரம்
|-{{ts|vtt}}
|நைலான், அரமிடு
|அலிஃபாட்டிக் பாலி அமைடு, அரொமாடிக்பாலி அமைடு
|-{{ts|vtt}}
|பாலிஎஸ்டர்
|டை ஹைட்ரிக் ஆல்கஹால் மற்றும் டெரி.. தாலிக் அமிலம்.
|-{{ts|vtt}}
|
|அக்ரிலிக்
|அக்ரிலோ நைட்ரைல் (குறைந்தது 85% கொண்டது)
|-{{ts|vtt}}
|
|மோடக்ரிலிக், ஸ்பாண்டக்ஸ்
|அக்ரிலோ நைட்ரைல் (35–84%), பாலியூரித்தேன் (85%–க்கு மேல்)
|-{{ts|vtt}}
|
|பாலிஒலிஃபீன், வின்யான்
|எத்திலீன் / புரோப்பிலீன் (85%), வினைல் குளோரைடு (85%)
|-{{ts|vtt}}
|
|சரண், நோவோலாய்டு
|வினைலிடீன் குளோரைடு (80%), ஃபீனால் வகை நோவோலாக்
|-{{ts|vtt}}
|
|பாலிகார்பனேட்
|கார்போனிக் அமிலம்(பாலிஎஸ்ட்டர் வழிப் பொருள்)
|-{{ts|vtt}}
|
|பாலிபென்சிமிடசோல், அல்கினேட்
|டைஃபீனைல் ஐசோதாலேட் கால்சியம் அல்கினேட்
|-{{ts|vtt}}
|
|ஃபுளுரோ கார்பன்
|டெட்ரா ஃப்புளுரோ எத்திலீன்
|-{{ts|vtt}}
|
|அணிக் கோவை வகை (Matrix)
|பல்லுறுப்புக் கலவை
|-{{ts|vtt}}
|இ. புரத வகை
|அஸ்லான், கேசீன்
|சோயா பீன்ஸ், சோளம், பால் புரதம்
|-{{ts|vtt}}
|ஈ. ரப்பர் (நீட்சி வகை)
|ரப்பர்
|இயற்கை அல்லது செயற்கை இரப்பர்
|-{{ts|vtt}}
|உ. உலோக வகை
|உலோகம்
|தங்கம்,வெள்ளி, அலுமினியம்
|-{{ts|vtt}}
|ஊ. கனிம வகை
|கண்ணாடி
|மணல், சுண்ணாம்புக் கல்
|-{{ts|vtt}}
|
|செராமிக் (களிமண்), கிராஃபைட்
|அலுமினா, சிலிக்கா , கார்பன்
|}</div>
{{block_center/e}}{{nop}}<noinclude></noinclude>
hcv9l5twgk5tqvkcvo2fzrgr90fwl68
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/843
250
642167
1929047
2026-04-30T14:22:21Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறைந்த அளவில் சிறந்த குறிக்கோள்களைக் கொண்ட கல்விச் சுற்றுலாக்கள் நடத்துவது சிறந்த பயனுடையது. இவ்வகைக் கல்விச் சுற்றுலாக்கள் மாணாக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929047
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்விச் சுற்றுலா|815|கல்விசார் மானிடவியல்}}</noinclude>குறைந்த அளவில் சிறந்த குறிக்கோள்களைக் கொண்ட கல்விச் சுற்றுலாக்கள் நடத்துவது சிறந்த பயனுடையது. இவ்வகைக் கல்விச் சுற்றுலாக்கள் மாணாக்கரிடம் நன்கு ஊடுருவிப் பார்த்தல், கேட்டல், புதியன அறிதல், முழுமைக் கருத்து உணர்தல் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும்.
<b>இன்றைய நிலை:</b> ஒரு கல்விச் சுற்றுலா, சிறந்த கருக்கொண்டு, நல்லமுறையில் திட்டம் தீட்டப் பெற்றுச் சீரிய முறையில் நடத்தப்பெற்று, மதிப்பிடப்பட்டு, மதிப்பீட்டில் காணும் குறைகள் களைய வாய்ப்பளிக்க வல்லதாக அமைதல் வேண்டும். ஆனால், இன்று வளர்ந்துவரும் போக்கு, கல்விச் சுற்றுலா என்பது இயற்கைக் காட்சிகளைச் சுவைக்கவும், இனிமையாகப் பேசிப் பொழுது போக்கவும், ஆடவும், பாடவும் போன்ற களியாட்டங்கள் விரவும் நிலை மெல்ல மெல்ல அதிகமாகி வருவதைக் காணலாம். இவ்வகை நெகிழ்வுணர்வுகள் வேண்டியவை என்றாலும், அவையே கல்விச்சுற்றுலாவின் பயன்கள் என்று கருதும் நிலை மாறவேண்டும்.
<b>திட்டமிட்ட சுற்றுலா:</b> ஒவ்வொரு கல்விச் சுற்றுலாவும் ஆசிரியர்களால் கவனமுடன் திட்டமிடப்பட்டு, பள்ளியின் குறிக்கோள்களை நிறைவேற்றும் முறையில் படிக்கும் பாடங்களும் பாடத்திட்டமும் இயைந்தனவாக அமைதல் வேண்டும்; சிறப்புடன் திட்டமிடல் சுற்றுவசவின் பயனை விரிவாக்கும். நிகழ இருக்கும் ஒரு கல்விச் சுற்றுலாச் செல்லும் இடத்தைப்பற்றி ஆசிரியர் முன்கூட்டியே விவரங்களைத் திரட்டி மாணாக்கர்கள் ஆர்வத்திற்குப் பொருந்துமாறு இருக்குமா என அறிதல் இன்றியமையாதது. மேலும், காலக்கெடு முடிவு செய்யப்படுதல் வேண்டும். பள்ளி நிருவாக அனுமதி பெற்றோரின் அனுமதி ஆகியவற்றை முன்கூட்டியே பெற்றிருத்தல் வேண்டும். கல்விச் சுற்றுலா நிகழும் இடப்பொறுப்பாளர்கட்கு முன்கூட்டியே விவரம் அளித்து முன் ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும். போக்குவரத்து வசதிகள் செய்யப்படுதல் வேண்டும். மாணாக்கர்கட்கு உள்ள சலுகைகள் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
மேற்கண்ட நிலைகளை முடித்த பின்னர், ஆசிரியரும் மாணாக்கரும் கீழ்க்காணும் பொருள் பற்றி விவாதித்தல் வேண்டும். மாணாக்கர் ஆர்வ நிலை; கல்விச் சிக்கல்களைத் தீர்க்கவல்ல வாய்ப்பு; சுற்றுலாக் குறிக்கோள்களை வெளிப்படுத்தல்; பாட விளக்கத்திற்குத் தொடர்பான மற்றக் கருத்துக்களைச் சேகரித்தல்; கவனம் செலுத்த வேண்டிய கல்வி அனுபவங்கள் பற்றி விவரம் சேகரித்தல்; மாணாக்கரின் பாதுகாப்பும் நடத்தையும் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றித் திட்டமிட்டுக் குறித்தல் முதலியன.
சுற்றுலா முடித்த பின்னர், ஆசிரியர் கல்விச் சுற்றுலாவை மதிப்பிடல் வேண்டும். கல்விச் சுற்றுலா எந்த அளவிற்குப் பயனைத் தந்துள்ளது? இதன் வெற்றிக்கான காரணங்கள் யாவை? காலக்கெடு சிறப்பாக அமைந்ததா? போக்குவரத்து வழிகள் நன்கு இருந்தனவா? இக்கல்விச் சுற்றுலா மீண்டும் மேற்கொள்ளப்பட்டால் இன்னும் செவ்வையாக எவ்வாறு நடத்த இயலும்? என்பன போன்றவற்றை ஆசிரியர் மதிப்பிடுதல் வேண்டும். அவ்வாறே. மாணாக்கரும் கல்விச் சுற்றுலா சென்றுவந்த பின்னர், வகுப்பு முழுதும் கல்விச் சுற்றுலாவின் பயனை நுகர்ந்ததா? எந்த இடம் மிகச் சிறப்பாக அமைந்தது? எவரேனும் ஆர்வம் இழந்தனரா? அவ்வாறு எனின் ஏன்? ஆர்வமும் கவனிப்பும் இறுதி வரை மாணாக்கரிடம் நீடித்திருந்தனவா? ஒழுங்குச் சிக்கல்கள் எவையேனும் ஏற்பட்டனவா? என்பன வற்றையும் விவாதித்தல் வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு, மதிப்பீடு செய்து சென்றுவரும் கல்விச் சுற்றுலாக்கள் அடுத்து வரும் ஆண்டிலும் மாணவர்களைக் கவர்ந்திடக் கூடியனவாக அமைதல் வேண்டும்.
{{Right|<b>எஸ்.மோ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Edgar Dale,</b> ‘Audio Visual Methods in Teaching’, Dryden Press, New York, 1958.
<b>Waffich, Schulker,</b> Audio Visual Materials: their Nature and Uses, Harper Brothers, New York, 1953.
{{larger|<b>கல்விசார் மானிடவியல்</b>}} பண்பாட்டு மானிடவியலின் பெரும் பிரிவுகளுள் ஒன்று. மானிடவியலின் கொள்கைகள், அணுகுமுறைகள் ஆகியவற்றுடன் சமுதாய மொழியியல், இனக்குழு ஆய்வு முறையியல் (Ethnomethodology), குறியீடு சார்ந்த இடைவினை (Symbolic Interaction) முதலான பிரிவுகளைச் சார்ந்த அறிவினையுங்கொண்டு, இனக் குழுக்களின் கல்வி முறைகள் பற்றி அறியும் கல்விசார் மானிடவியல் (Educational Anthropology) அண்மைக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட மானிடவியலின் ஓர் உட்பிரிவாகும்.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட மானிடவியல் துறையில் உடல்சார் மானிட-<noinclude></noinclude>
fdw896ln866vvew2qiljxcplp5il8hl
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/149
250
642168
1929060
2026-04-30T15:19:02Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல் மூலப் பொருள்கள் 127}}</noinclude>இவ்விழையில் 70% செல்லுலோசும், ஈரமும், மரத் திசுக்களும் உள்ளன. லினன் மென்மையான, பளபளப்பான நேரிழையாகும். இது பருத்தியை விட எளிதில் உடையக் கூடிய இழையாதலால், நூற்பதற்கு எளிதன்று.
<b>கம்பளி</b>. ஆட்டின் தோலிலிருந்து வளரும் கரடு முரடான இந்த இழை கரோட்டின் என்னும் புரதத்தினாலானது. அலைவு மிக்க, செதில்களுடைய இழையான கம்பளியில் இரு வகை உள்ளன. இது ஆட்டின் இனத்திற்குத் தகுந்தாற் போல் அலைவு கூடுதலாகவும், சிறு நுண்ணிய செதில்கள் கொண்டதாகவும்; அலைவு குறைந்தும், பெரு செதில்கள் கொண்டதாகவும் அமையலாம். பெரிய எண்ணிக்கையிலான நுண் செதில்களினால், கம்பளியின் கதகதப்பு கூடுகிறது. இக்கம்பளியின் தோற்றம் மங்கலானது. செதில்களுக்கு அடியில் நிறப் பொருளின் இருப்பிடமான செல்கள், இழைக்கு வலிமையையும், நீட்சியையும் அளிக்கின்றன. இழையின் மையப் பகுதியில், காற்றால் நிரப்பப் பட்ட கழற் சுருள் வடிவிலான செல்கள் (மென்மையம் = Medulla) உள்ளன. இவற்றில், கொழுப்புப் பொருள் மிகுந்துள்ளமையால், சாய நாட்டம் (dye affinity) குறைவாக உள்ளது. மென்மையமற்ற, நுண்மையான கம்பளிகளுக்குச் சாய நாட்டம் கூடுதலாகும். வெப்பத்தால் பாதிக்கப் படும் தன்மையும், பின்னல் தன்மையும் (felting) கம்பளியின் இரு சிறப்பியல்புகளாகும்.
<b>பட்டு</b>. இது பட்டுப் பூச்சி எனும் ஒரு வகைக் கம்பளிப் புழுவின் கூட்டிலிருந்து பிரித்தெடுக்கப் படும் சன்னமான நீளிழை. புரத வகை இழையான பட்டு பெரும்பாலும் முசுக்கட்டைச் செடிப் பண்ணைகளில் பட்டுப் பூச்சிகள் கட்டுப் படுத்தப் பட்ட சூழ்நிலைகளில் வளர்க்கப் பட்டுத் தயாரிக்கப் படுகின்றது. காட்டுச் சிற்றினமாகத் தோன்றும் டஸ்ஸா (Tussah) எனும் பட்டு கடினமானதாகும். பளபளப்பு, மென்மை, எடைகுறைவு, வளமை, நீட்சி ஆகிய இயல்புகள் கூடுதலாக அமையப் பெற்றமையால், பட்டு வனப்பு மிக்க இழையாக விளங்குகிறது. பெரிதும் விரும்பப் படும் இழையாகையால், செயற்கை முறையிலும் பட்டை ஒத்த இழைகளைத் தயாரிக்கும் முயற்சிகள், வெற்றிகரமாக நிகழ்த்தப் பட்டுள்ளன.
<b>கல் நார்</b>. இது பாறைகளில் கால்சியம் சிலிக்கேட்டையும், மக்னீசியம் சிலிக்கேட்டையும் உள்ளடக்கியதாகக் கிடைக்கும் நார்ப் பொருள். அமிலம், தீச்சுடர் ஆகியவற்றினால் பாதிப்புறாத இவ்விழை துருப் பிடிக்காது. எனினும், கல் நார் தூள் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றில் கலந்தால், நுரையீரலை அடைந்து, புற்று நோயைத் தோற்றுவிக்கக் கூடுமாதலால், பெரிதும் பயன் படுத்தப் படுவதில்லை.
<b>ரேயான்</b>. இது பருத்தி விதைப் பிசிரிழைகளிலிருந்தோ, சில வகை மரங்களிலிருந்தோ செல்லுலோசைப் பிரித்து, தக்க கரைப்பானில் கரைத்து, மீண்டும் இழை வடிவாக்கிப் பெறப் படுகிறது. தயாரிப்பு முறைகளுக்குத் தகுந்தாற் போல், விசுகோஸ் ரேயான், குப்ரமோனியம் ரேயான், அசெட்டேட் ரேயான் என வகையிடப் படுகின்றன. இவை யாவுமே செயற்கைப் பட்டு என்னும் பொதுப் பெயரில் குறிப்பிடப் பட்டாலும், அசெட்டேட் ரேயான் வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் வடிவமைக்கத் தக்கது.
<b>நைலான்</b>. இது டைகார்பாசிலிக் அமிலங்களையும், டைஅமீன்களையும் குறுக்க வினைக்குட் படுத்திப் பெறப் படும் இழை. பாலிஅமைடுகளான இவ்விழைகள் அமிலப் பகுதியிலுள்ள கார்பன் அணு எண்ணிக்கையும் அமீன் பகுதியிலுள்ள கார்பன் அணு எண்ணிக்கையும் பொறுத்து வகையிடப் படுகின்றன. நைலான் 4.6; 6.6; 6,10; 6,12; 8,10; 8,10;11 நைலான் 6.6 என்றால் அமிலம், அமீன் இரு தொகுதிகளும் ஒரே எண்ணிக்கையில், அதாவது 6 கார்பன் அணுக்கள் உள்ளன என்று பொருள். நைலான் 6.10 என்றால் அமிலப் பகுதியில் 6, அமீன் பகுதியில் 10 கார்பன் அணுக்களாகும். நைலான் 6 என ஒற்றை எண்ணாக இருந்தால், ஒரே தொகுதியில் தலைப் பகுதியில் அமிலமும், வால் பகுதியில் அமீனும் (அல்லது தலை கீழாக) உள்ள அமினோ அமிலத்தின் தன் குறுக்கு வினை விளை பொருளாகும். ஒரு நைலானில் 85%க்கும் கூடுதலான அளவில் அமைடு தொகுதிகள் அரோமாட்டிக் வளையங்களுக்கிடையே அமைந்திருந்தால், அதனை அரமிடு என்பர். நைலான் ஒரு வலிமை மிக்க, நீட்சித் தன்மை கொண்ட இழையாகும்.
<b>பாலி எஸ்டர்</b>. இங்கு இழைப் பொருளில் குறைந்தது 85% எடை டெரிப்தாலிக் அல்லது அதன் தொடர்புடைய அரோமாட்டிக் அமிலத்தின் எஸ்ட்டர் இடம் பெறுகிறது. பல்வேறு தயாரிப்பாளர்கள், வெவ்வேறு வணிகப் பெயர்களுடன் பாலி எஸ்டரைத் தயாரிக்கின்றனர். வெப்ப நிகழ்வும், வலிவும் பொருந்திய இவ்விழை நீரை எளிதில் உறிஞ்சுவதில்லை.
<b>அக்ரிலிக்</b>. குறைந்தது 85% அக்ரிலோநைட்ரைல் தொகுதிகளை உள்ளடக்கிய இவ்விழை, கம்பளியை ஒத்த துணிகளைத் தயாரிக்க ஏற்றது. அக்ரிலிக் இழையில், அக்ரிலோநைட்ரைல் தொகுதிகள் 35–85% இருக்கக் கூடுமானால், அதற்கு மோடாக்ரிலிக் எனப் பெயர். அக்ரிலோ நைட்ரைலுடன், வினைல் குளோரைடு, வினிலிடீன் குளோரைடு, வினைலிடீன் டைசயனைடு<noinclude></noinclude>
czbjz1cgq41vdxnylov9e1k1yu6kb6m
பயனர்:Info-farmer/removeApexEmptyLines.js
2
642169
1929062
2026-04-30T15:31:21Z
Info-farmer
232
+ தொடக்கம்
1929062
javascript
text/javascript
/**
* பயனர்:Info-farmer/removeApexEmptyLines.js
* மேல் பகுதியில் உள்ள வெற்று வரிகளை நீக்க உதவும் கருவி
*/
$("#left-navigation").append('<img class="cUstOm-btn-REmOVE-LINE" style="margin-left: 20px; cursor: pointer;" src="https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7d/OOjs_UI_icon_trash-destructive.svg/20px-OOjs_UI_icon_trash-destructive.svg.png" width="21" height="21" title="வெற்று வரிகளை நீக்கு">');
let alertContainer = null;
function showCustomAlert(message, inputColor) {
if (!alertContainer) {
alertContainer = document.createElement('div');
alertContainer.id = 'custom-alert-container';
document.body.appendChild(alertContainer);
const style = document.createElement('style');
style.textContent = `
#custom-alert-container { position: fixed; top: 20px; right: 20px; z-index: 9999; display: flex; flex-direction: column; gap: 10px; }
.custom-alert-box { color: white; padding: 15px 20px; border-radius: 8px; font-family: sans-serif; min-width: 250px; display: flex; justify-content: space-between; align-items: center; animation: fadein 0.3s; }
.custom-alert-box-success { background: green; }
.custom-alert-box-error { background: red; }
.custom-alert-box button { margin-left: 10px; background: transparent; border: none; color: white; cursor: pointer; font-size: 14px; }
@keyframes fadein { from { opacity: 0; transform: translateX(20px); } to { opacity: 1; transform: translateX(0); } }
`;
document.head.appendChild(style);
}
const alertBox = document.createElement('div');
alertBox.className = inputColor == 'red' ? 'custom-alert-box custom-alert-box-error' : 'custom-alert-box custom-alert-box-success';
alertBox.innerHTML = `<span>${message}</span><button onclick="this.parentElement.remove()">✖</button>`;
alertContainer.appendChild(alertBox);
setTimeout(() => { if (alertBox.parentElement) alertBox.remove(); }, 2500);
}
var api = new mw.Api();
$(document).ready(function() {
$('.cUstOm-btn-REmOVE-LINE').click(function(e) {
e.preventDefault();
$(this).css('filter', 'invert(25%) sepia(94%) saturate(7414%) hue-rotate(358deg) brightness(94%) contrast(106%)'); // சிவப்பு நிறமாக மாறும்
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "query",
"format": "json",
"prop": "revisions",
"titles": mw.config.get("wgPageName"),
"utf8": 1,
"formatversion": "2",
"rvprop": "content"
},
dataType: 'json',
success: function(data_) {
var wikiPageContent = data_.query.pages[0].revisions[0].content;
// </noinclude> க்குக் கீழ் உள்ள அனைத்து வெற்று வரிகளையும் நீக்குகிறது
var wikiPageContentReplaced = wikiPageContent.replace(/(<\/noinclude>)\s+/g, '$1');
if (wikiPageContent === wikiPageContentReplaced) {
showCustomAlert('வெற்று வரிகள் ஏதுமில்லை', 'red');
return;
}
api.postWithToken("edit", {
action: "edit",
title: mw.config.get("wgPageName"),
summary: 'மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன',
text: wikiPageContentReplaced
}).done(function() {
showCustomAlert('வெற்று வரிகள் நீக்கப்பட்டன', 'green');
setTimeout(() => { location.reload(); }, 1000);
});
},
error: function(data) {
showCustomAlert('பிழை ஏற்பட்டுள்ளது', 'red');
console.warn(data);
}
});
});
});
kzrdvtuct0rhcf1he1ytsnm9w4ly6mx
1929065
1929062
2026-04-30T15:47:00Z
Info-farmer
232
+ பழுப்பு நிறம்
1929065
javascript
text/javascript
/**
* பயனர்:Info-farmer/removeApexEmptyLines.js
* மேல் பகுதியில் உள்ள வெற்று வரிகளை நீக்க உதவும் கருவி
*/
// அடர் பழுப்பு நிற ஐகானைச் சேர்த்தல் (Brown color icon)
$("#left-navigation").append('<img class="cUstOm-btn-REmOVE-LINE" style="margin-left: 20px; cursor: pointer; filter: sepia(100%) saturate(300%) brightness(40%) hue-rotate(350deg);" src="https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7d/OOjs_UI_icon_trash-destructive.svg/20px-OOjs_UI_icon_trash-destructive.svg.png" width="21" height="21" title="வெற்று வரிகளை நீக்கு">');
let alertContainer = null;
function showCustomAlert(message, inputColor) {
if (!alertContainer) {
alertContainer = document.createElement('div');
alertContainer.id = 'custom-alert-container';
document.body.appendChild(alertContainer);
const style = document.createElement('style');
style.textContent = `
#custom-alert-container { position: fixed; top: 20px; right: 20px; z-index: 9999; display: flex; flex-direction: column; gap: 10px; }
.custom-alert-box { color: white; padding: 15px 20px; border-radius: 8px; font-family: sans-serif; min-width: 250px; display: flex; justify-content: space-between; align-items: center; box-shadow: 0 4px 6px rgba(0,0,0,0.3); animation: fadein 0.3s; }
.custom-alert-box-success { background: green; }
.custom-alert-box-error { background: #8B4513; } /* Brown color for warning */
.custom-alert-box button { margin-left: 10px; background: transparent; border: none; color: white; cursor: pointer; font-size: 14px; }
@keyframes fadein { from { opacity: 0; transform: translateX(20px); } to { opacity: 1; transform: translateX(0); } }
`;
document.head.appendChild(style);
}
const alertBox = document.createElement('div');
alertBox.className = inputColor == 'red' ? 'custom-alert-box custom-alert-box-error' : 'custom-alert-box custom-alert-box-success';
alertBox.innerHTML = `<span>${message}</span><button onclick="this.parentElement.remove()">✖</button>`;
alertContainer.appendChild(alertBox);
setTimeout(() => { if (alertBox.parentElement) alertBox.remove(); }, 2500);
}
var api = new mw.Api();
$(document).ready(function() {
$('.cUstOm-btn-REmOVE-LINE').on('click', function(e) {
e.preventDefault();
// பட்டனை அழுத்தியவுடன் ஒரு சிறிய அனிமேஷன்
$(this).css('opacity', '0.5');
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "query",
"format": "json",
"prop": "revisions",
"titles": mw.config.get("wgPageName"),
"utf8": 1,
"formatversion": "2",
"rvprop": "content"
},
dataType: 'json',
success: function(data_) {
if (!data_.query.pages[0].revisions) {
showCustomAlert('பக்க உள்ளடக்கம் கிடைக்கவில்லை', 'red');
$('.cUstOm-btn-REmOVE-LINE').css('opacity', '1');
return;
}
var wikiPageContent = data_.query.pages[0].revisions[0].content;
// </noinclude> க்குக் கீழ் உள்ள அனைத்து வெற்று வரிகளையும் (\s+) முழுமையாக நீக்குகிறது
var wikiPageContentReplaced = wikiPageContent.replace(/(<\/noinclude>)\s+/g, '$1');
if (wikiPageContent === wikiPageContentReplaced) {
showCustomAlert('வெற்று வரிகள் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டன', 'red');
$('.cUstOm-btn-REmOVE-LINE').css('opacity', '1');
return;
}
api.postWithToken("edit", {
action: "edit",
title: mw.config.get("wgPageName"),
summary: 'மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன',
text: wikiPageContentReplaced
}).done(function() {
showCustomAlert('வெற்று வரிகள் வெற்றிகரமாக நீக்கப்பட்டன', 'green');
setTimeout(() => { location.reload(); }, 1200);
});
},
error: function(data) {
showCustomAlert('தொழில்நுட்பப் பிழை', 'red');
$('.cUstOm-btn-REmOVE-LINE').css('opacity', '1');
}
});
});
});
bkxf5fy2qsnyfns2vust55j5ph1uyk9
1929068
1929065
2026-04-30T15:55:41Z
Info-farmer
232
வெக்டர் 2022 ஏற்ப மாற்றம்
1929068
javascript
text/javascript
/**
* பயனர்:Info-farmer/removeApexEmptyLines.js
* மேல் பகுதியில் உள்ள வெற்று வரிகளை நீக்க உதவும் கருவி
*/
$(document).ready(function() {
// வெக்டர் 2022 மற்றும் பிற இடைமுகங்களில் உறுதியாகத் தெரியக்கூடிய வகையில் ஐகான் சேர்த்தல்
var iconHtml = '<li id="ca-remove-apex-lines" class="mw-list-item" style="cursor:pointer;">' +
'<a title="மேல் பகுதி வெற்று வரிகளை நீக்கு">' +
'<span style="display:inline-block; width:20px; height:20px; ' +
'background-color: #8B4513; ' + // அடர் பழுப்பு நிறம்
'-webkit-mask: url(https://upload.wikimedia.org/wikipedia/commons/4/47/OOjs_UI_icon_clear.svg) no-repeat center; ' +
'mask: url(https://upload.wikimedia.org/wikipedia/commons/4/47/OOjs_UI_icon_clear.svg) no-repeat center;">' +
'</span></a></li>';
// இடது பக்க மெனுவில் (p-navigation) சேர்த்தல்
$("#p-navigation ul").append(iconHtml);
let alertContainer = null;
function showCustomAlert(message, inputColor) {
if (!alertContainer) {
alertContainer = document.createElement('div');
alertContainer.id = 'custom-alert-container';
document.body.appendChild(alertContainer);
const style = document.createElement('style');
style.textContent = `
#custom-alert-container { position: fixed; top: 20px; right: 20px; z-index: 9999; display: flex; flex-direction: column; gap: 10px; }
.custom-alert-box { color: white; padding: 15px 20px; border-radius: 8px; font-family: sans-serif; min-width: 250px; display: flex; justify-content: space-between; align-items: center; box-shadow: 0 4px 6px rgba(0,0,0,0.3); animation: fadein 0.3s; }
.custom-alert-box-success { background: green; }
.custom-alert-box-error { background: #8B4513; }
.custom-alert-box button { margin-left: 10px; background: transparent; border: none; color: white; cursor: pointer; font-size: 14px; }
@keyframes fadein { from { opacity: 0; transform: translateX(20px); } to { opacity: 1; transform: translateX(0); } }
`;
document.head.appendChild(style);
}
const alertBox = document.createElement('div');
alertBox.className = inputColor == 'red' ? 'custom-alert-box custom-alert-box-error' : 'custom-alert-box custom-alert-box-success';
alertBox.innerHTML = `<span>${message}</span><button onclick="this.parentElement.remove()">✖</button>`;
alertContainer.appendChild(alertBox);
setTimeout(() => { if (alertBox.parentElement) alertBox.remove(); }, 2500);
}
var api = new mw.Api();
$('#ca-remove-apex-lines').on('click', function(e) {
e.preventDefault();
var $this = $(this);
$this.css('opacity', '0.5');
$.ajax({
url: mw.config.get("wgScriptPath") + '/api.php?',
data: {
"action": "query",
"format": "json",
"prop": "revisions",
"titles": mw.config.get("wgPageName"),
"utf8": 1,
"formatversion": "2",
"rvprop": "content"
},
dataType: 'json',
success: function(data_) {
if (!data_.query.pages[0].revisions) {
showCustomAlert('உள்ளடக்கம் கிடைக்கவில்லை', 'red');
$this.css('opacity', '1');
return;
}
var wikiPageContent = data_.query.pages[0].revisions[0].content;
// </noinclude> க்குக் கீழ் உள்ள அனைத்து வெற்று வரிகளையும் நீக்குதல்
var wikiPageContentReplaced = wikiPageContent.replace(/(<\/noinclude>)\s+/g, '$1');
if (wikiPageContent === wikiPageContentReplaced) {
showCustomAlert('வெற்று வரிகள் ஏற்கனவே இல்லை', 'red');
$this.css('opacity', '1');
return;
}
api.postWithToken("edit", {
action: "edit",
title: mw.config.get("wgPageName"),
summary: 'மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன (Apex lines removed)',
text: wikiPageContentReplaced
}).done(function() {
showCustomAlert('வெற்றிகரமாக நீக்கப்பட்டது', 'green');
setTimeout(() => { location.reload(); }, 1200);
});
},
error: function() {
showCustomAlert('பிழை ஏற்பட்டது', 'red');
$this.css('opacity', '1');
}
});
});
});
adda3w8tnd8q28l6bml57om2p6xtl10
1929069
1929068
2026-04-30T16:00:19Z
Info-farmer
232
நிரல் மாற்றம் பழுப்பு நிற வட்டம்
1929069
javascript
text/javascript
/**
* பயனர்:Info-farmer/removeApexEmptyLines.js
* மேல் பகுதியில் உள்ள வெற்று வரிகளை மட்டும் நீக்கும் எளிய கருவி
*/
$(document).ready(function() {
// இடது பக்க வழிநடத்தல் மெனுவில் ஒரு பழுப்பு நிற வட்டத்தை உருவாக்குதல்
var simpleCircleBtn = '<li id="ca-remove-apex-lines" class="mw-list-item" style="cursor:pointer; list-style:none; margin: 10px 0;">' +
'<a title="மேல் பகுதி வெற்று வரிகளை நீக்கு" style="display:flex; align-items:center; text-decoration:none;">' +
'<span style="height: 15px; width: 15px; background-color: #8B4513; border-radius: 50%; display: inline-block; margin-right: 8px;"></span>' +
'<span class="vector-menu-content-label" style="color:#8B4513; font-weight:bold; font-size: 0.85em;">வெற்றுவரி நீக்கி</span>' +
'</a></li>';
// மெனுவில் சேர்த்தல்
$("#p-navigation ul").first().append(simpleCircleBtn);
var api = new mw.Api();
$('#ca-remove-apex-lines').on('click', function(e) {
e.preventDefault();
var $this = $(this);
// அழுத்தியதைக் குறிக்க வெளிர் நிறமாக மாறுதல்
$this.css('opacity', '0.4');
// பக்கத்தின் உள்ளடக்கத்தைப் பெறுதல்
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: mw.config.get("wgPageName"),
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
var page = data.query.pages[0];
if (!page.revisions) return;
var content = page.revisions[0].content;
// </noinclude> க்குக் கீழே உள்ள அத்தனை வெற்று வரிகளையும் நீக்குதல்
var newContent = content.replace(/(<\/noinclude>)\s+/g, '$1');
// மாற்றம் ஏதும் இல்லை என்றால் செயல்பாட்டை நிறுத்துதல்
if (content === newContent) {
alert("வெற்று வரிகள் ஏற்கனவே இல்லை!");
$this.css('opacity', '1');
return;
}
// மாற்றத்தைச் சேமித்தல்
api.postWithToken("edit", {
action: "edit",
title: mw.config.get("wgPageName"),
summary: 'மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன',
text: newContent
}).done(function() {
// சேமித்த பிறகு பக்கத்தைப் புதுப்பித்தல்
location.reload();
});
}).fail(function() {
$this.css('opacity', '1');
});
});
});
p5saadsdew8f0k06havk5oflza4u87k
1929070
1929069
2026-04-30T16:04:49Z
Info-farmer
232
+ h1-க்கு அருகில் மாற்று.
1929070
javascript
text/javascript
/**
* பயனர்:Info-farmer/removeApexEmptyLines.js
* மேல் பகுதியில் உள்ள வெற்று வரிகளை நீக்கும் எளிய கருவி (h1 அருகில்)
*/
$(document).ready(function() {
// h1 தலைப்புக்கு அருகில் வைக்க ஒரு பழுப்பு நிற வட்டம்.
// title பண்பு மூலம் சுட்டியை வைக்கும்போது மட்டும் "வெற்றுவரிநீக்கி" எனக் காட்டும்.
var simpleCircleBtn = '<span id="ca-remove-apex-lines" title="வெற்றுவரிநீக்கி" style="cursor:pointer; display:inline-block; margin-left:15px; width:16px; height:16px; background-color:#8B4513; border-radius:50%; vertical-align:middle; box-shadow: 0 1px 3px rgba(0,0,0,0.3);"></span>';
// விக்கிப்பீடியாவின் h1 தலைப்பில் (firstHeading) இதைச் சேர்க்கிறோம்
$('#firstHeading').append(simpleCircleBtn);
var api = new mw.Api();
$('#ca-remove-apex-lines').on('click', function(e) {
e.preventDefault();
var $this = $(this);
// அழுத்தியதைக் குறிக்க வெளிர் நிறமாக மாறுதல்
$this.css('opacity', '0.4');
// பக்கத்தின் உள்ளடக்கத்தைப் பெறுதல்
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: mw.config.get("wgPageName"),
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
var page = data.query.pages[0];
if (!page.revisions) {
$this.css('opacity', '1');
return;
}
var content = page.revisions[0].content;
// </noinclude> க்குக் கீழே உள்ள அத்தனை வெற்று வரிகளையும் நீக்குதல்
var newContent = content.replace(/(<\/noinclude>)\s+/g, '$1');
// மாற்றம் ஏதும் இல்லை என்றால் செயல்பாட்டை நிறுத்துதல்
if (content === newContent) {
alert("வெற்று வரிகள் ஏதுமில்லை!");
$this.css('opacity', '1');
return;
}
// மாற்றத்தைச் சேமித்தல்
api.postWithToken("edit", {
action: "edit",
title: mw.config.get("wgPageName"),
summary: 'மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன',
text: newContent
}).done(function() {
// சேமித்த பிறகு பக்கத்தைப் புதுப்பித்தல்
location.reload();
});
}).fail(function() {
alert("பிழை ஏற்பட்டது!");
$this.css('opacity', '1');
});
});
});
kgwif7mvug6zjahog28uv46z5dhk6fi
1929071
1929070
2026-04-30T16:09:39Z
Info-farmer
232
இருநிற வட்டம்
1929071
javascript
text/javascript
/**
* பயனர்:Info-farmer/removeApexEmptyLines.js
* மேல் பகுதியில் உள்ள வெற்று வரிகளை நீக்கும் எளிய கருவி (h1 அருகில்)
*/
$(document).ready(function() {
// 40% பெரிய பழுப்பு வட்டம் மற்றும் நடுவில் 30% பச்சை வட்டம்
var simpleCircleBtn = '<span id="ca-remove-apex-lines" title="வெற்றுவரிநீக்கி" style="cursor:pointer; display:inline-flex; align-items:center; justify-content:center; margin-left:15px; width:22px; height:22px; background-color:#8B4513; border-radius:50%; vertical-align:middle; box-shadow: 0 1px 3px rgba(0,0,0,0.3);">' +
'<span style="width:35%; height:35%; background-color:#32CD32; border-radius:50%;"></span>' +
'</span>';
// விக்கிப்பீடியாவின் h1 தலைப்பில் (firstHeading) இதைச் சேர்க்கிறோம்
$('#firstHeading').append(simpleCircleBtn);
var api = new mw.Api();
$('#ca-remove-apex-lines').on('click', function(e) {
e.preventDefault();
var $this = $(this);
// அழுத்தியதைக் குறிக்க வெளிர் நிறமாக மாறுதல்
$this.css('opacity', '0.4');
// பக்கத்தின் உள்ளடக்கத்தைப் பெறுதல்
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: mw.config.get("wgPageName"),
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
var page = data.query.pages[0];
if (!page.revisions) {
$this.css('opacity', '1');
return;
}
var content = page.revisions[0].content;
// </noinclude> க்குக் கீழே உள்ள அத்தனை வெற்று வரிகளையும் நீக்குதல்
var newContent = content.replace(/(<\/noinclude>)\s+/g, '$1');
// மாற்றம் ஏதும் இல்லை என்றால் செயல்பாட்டை நிறுத்துதல்
if (content === newContent) {
alert("வெற்று வரிகள் ஏதுமில்லை!");
$this.css('opacity', '1');
return;
}
// மாற்றத்தைச் சேமித்தல்
api.postWithToken("edit", {
action: "edit",
title: mw.config.get("wgPageName"),
summary: 'மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன',
text: newContent
}).done(function() {
// சேமித்த பிறகு பக்கத்தைப் புதுப்பித்தல்
location.reload();
});
}).fail(function() {
alert("பிழை ஏற்பட்டது!");
$this.css('opacity', '1');
});
});
});
kignogeul08g48nu3rvm5qpuua35g89
1929075
1929071
2026-04-30T16:14:06Z
Info-farmer
232
அறிவிப்பு தானாகவே மறையும்.
1929075
javascript
text/javascript
/**
* பயனர்:Info-farmer/removeApexEmptyLines.js
* மேல் பகுதியில் உள்ள வெற்று வரிகளை நீக்கும் எளிய கருவி (5 நொடி அறிவிப்புடன்)
*/
$(document).ready(function() {
// 40% பெரிய பழுப்பு வட்டம் மற்றும் நடுவில் 30% பச்சை வட்டம்
var simpleCircleBtn = '<span id="ca-remove-apex-lines" title="வெற்றுவரிநீக்கி" style="cursor:pointer; display:inline-flex; align-items:center; justify-content:center; margin-left:15px; width:22px; height:22px; background-color:#8B4513; border-radius:50%; vertical-align:middle; box-shadow: 0 1px 3px rgba(0,0,0,0.3);">' +
'<span style="width:35%; height:35%; background-color:#32CD32; border-radius:50%;"></span>' +
'</span>';
// விக்கிப்பீடியாவின் h1 தலைப்பில் (firstHeading) இதைச் சேர்க்கிறோம்
$('#firstHeading').append(simpleCircleBtn);
// 5 நொடிகளில் தானாக மறையும் எளிய அறிவிப்புச் செயல்பாடு (Toast Message)
function showAutoMessage(message, isSuccess) {
var msgBox = document.createElement('div');
msgBox.textContent = message;
msgBox.style.position = 'fixed';
msgBox.style.bottom = '20px';
msgBox.style.right = '20px';
msgBox.style.backgroundColor = isSuccess ? '#28a745' : '#dc3545'; // வெற்றிக்கு பச்சை, இல்லை எனில் சிவப்பு
msgBox.style.color = 'white';
msgBox.style.padding = '10px 20px';
msgBox.style.borderRadius = '5px';
msgBox.style.boxShadow = '0 2px 5px rgba(0,0,0,0.3)';
msgBox.style.zIndex = '9999';
msgBox.style.fontFamily = 'sans-serif';
msgBox.style.fontSize = '14px';
msgBox.style.transition = 'opacity 0.5s';
document.body.appendChild(msgBox);
// சரியாக 5 நொடிகளில் (5000ms) மறைந்துவிட கட்டளை
setTimeout(function() {
msgBox.style.opacity = '0';
setTimeout(function() {
if (msgBox.parentNode) {
msgBox.parentNode.removeChild(msgBox);
}
}, 500);
}, 5000);
}
var api = new mw.Api();
$('#ca-remove-apex-lines').on('click', function(e) {
e.preventDefault();
var $this = $(this);
// அழுத்தியதைக் குறிக்க வெளிர் நிறமாக மாறுதல்
$this.css('opacity', '0.4');
// பக்கத்தின் உள்ளடக்கத்தைப் பெறுதல்
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: mw.config.get("wgPageName"),
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
var page = data.query.pages[0];
if (!page.revisions) {
showAutoMessage("பக்க உள்ளடக்கம் கிடைக்கவில்லை!", false);
$this.css('opacity', '1');
return;
}
var content = page.revisions[0].content;
// </noinclude> க்குக் கீழே உள்ள அத்தனை வெற்று வரிகளையும் நீக்குதல்
var newContent = content.replace(/(<\/noinclude>)\s+/g, '$1');
// மாற்றம் ஏதும் இல்லை என்றால் அறிவிப்பு தந்து 5 நொடியில் மறையும்
if (content === newContent) {
showAutoMessage("வெற்று வரிகள் ஏதுமில்லை!", false);
$this.css('opacity', '1');
return;
}
// மாற்றத்தைச் சேமித்தல்
api.postWithToken("edit", {
action: "edit",
title: mw.config.get("wgPageName"),
summary: 'மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன',
text: newContent
}).done(function() {
showAutoMessage("வெற்று வரிகள் நீக்கப்பட்டன! 5 நொடிகளில் பக்கம் புதுப்பிக்கப்படும்...", true);
// அறிவிப்பு வந்த 5 நொடிகளுக்குப் பிறகு பக்கத்தைப் புதுப்பித்தல்
setTimeout(function() {
location.reload();
}, 5000);
});
}).fail(function() {
showAutoMessage("பிழை ஏற்பட்டது!", false);
$this.css('opacity', '1');
});
});
});
0d8efc4olr08rv1azyaxug06r5v3v4v
1929078
1929075
2026-04-30T16:19:50Z
Info-farmer
232
அறிவிப்பு எளிமையாக 5 நொடிகளில் மறையும்.
1929078
javascript
text/javascript
/**
* பயனர்:Info-farmer/removeApexEmptyLines.js
* மேல் பகுதியில் உள்ள வெற்று வரிகளை நீக்கும் எளிய கருவி (பொத்தானுக்கு வலப்புறம் நேர அறிவிப்புடன்)
*/
$(document).ready(function() {
// 40% பெரிய பழுப்பு வட்டம் மற்றும் நடுவில் 30% பச்சை வட்டம்
var simpleCircleBtn = '<span id="ca-remove-apex-lines" title="வெற்றுவரிநீக்கி" style="cursor:pointer; display:inline-flex; align-items:center; justify-content:center; margin-left:15px; width:22px; height:22px; background-color:#8B4513; border-radius:50%; vertical-align:middle; box-shadow: 0 1px 3px rgba(0,0,0,0.3);">' +
'<span style="width:35%; height:35%; background-color:#32CD32; border-radius:50%;"></span>' +
'</span>';
// விக்கிப்பீடியாவின் h1 தலைப்பில் (firstHeading) இதைச் சேர்க்கிறோம்
$('#firstHeading').append(simpleCircleBtn);
var api = new mw.Api();
var isProcessing = false; // ஒரே நேரத்தில் பல முறை அழுத்துவதைத் தடுக்க
$('#ca-remove-apex-lines').on('click', function(e) {
e.preventDefault();
if (isProcessing) return; // ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருந்தால் திரும்பவும் இயங்காது
isProcessing = true;
var $this = $(this);
$this.css('opacity', '0.4'); // பொத்தான் அழுத்தப்பட்டதைக் குறிக்க
// ஏற்கனவே பழைய செய்தி இருந்தால் அதை நீக்குகிறோம்
$('#apex-line-msg').remove();
// பொத்தானுக்கு வலப்புறம் செய்தியையும் நேரத்தையும் காட்டும் சார்பு
function showInlineMessage(text, isSuccess) {
var color = isSuccess ? '#28a745' : '#dc3545'; // வெற்றிக்கு பச்சை, இல்லை எனில் சிவப்பு
var timeLeft = 5; // 5 நொடிகள்
// h1 தலைப்பிற்குள் வருவதால் எழுத்துரு அளவை (0.6em) சற்றுச் சிறியதாக வைத்துள்ளோம்
var $msgSpan = $('<span id="apex-line-msg" style="margin-left: 15px; font-size: 0.6em; vertical-align: middle; color: ' + color + '; font-weight: bold;">' + text + ' (' + timeLeft + ')</span>');
// பொத்தானுக்கு வலப்புறம் சேர்க்கிறோம்
$this.after($msgSpan);
// ஒவ்வொரு நொடியும் எண்ணைக் குறைக்கும் செயல்பாடு
var timer = setInterval(function() {
timeLeft--;
if (timeLeft > 0) {
// எண்ணை மட்டும் மாற்றி திரையில் காட்டுகிறோம்
$msgSpan.text(text + ' (' + timeLeft + ')');
} else {
// நேரம் முடிந்ததும் செய்தியை மறைக்கிறோம்
clearInterval(timer);
$msgSpan.fadeOut(300, function() { $(this).remove(); });
$this.css('opacity', '1');
isProcessing = false;
// வெற்றுவரிகள் நீக்கப்பட்டிருந்தால் பக்கத்தைப் புதுப்பிக்கிறோம்
if (isSuccess) {
location.reload();
}
}
}, 1000); // 1000 மில்லிவினாடிகள் = 1 நொடி
}
// பக்கத்தின் உள்ளடக்கத்தைப் பெறுதல்
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: mw.config.get("wgPageName"),
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
var page = data.query.pages[0];
if (!page.revisions) {
showInlineMessage("பிழை!", false);
return;
}
var content = page.revisions[0].content;
// </noinclude> க்குக் கீழே உள்ள அத்தனை வெற்று வரிகளையும் நீக்குதல்
var newContent = content.replace(/(<\/noinclude>)\s+/g, '$1');
// மாற்றம் ஏதும் இல்லை என்றால் "வெற்றுவரிகள் இல்லை" எனக் காட்டும்
if (content === newContent) {
showInlineMessage("வெற்றுவரிகள் இல்லை", false);
return;
}
// மாற்றத்தைச் சேமித்தல்
api.postWithToken("edit", {
action: "edit",
title: mw.config.get("wgPageName"),
summary: 'மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன',
text: newContent
}).done(function() {
// வெற்றிகரமாகச் சேமிக்கப்பட்டால் அறிவிப்பு
showInlineMessage("வெற்று வரிகள் நீக்கப்பட்டன", true);
}).fail(function() {
showInlineMessage("சேமிக்க முடியவில்லை!", false);
});
}).fail(function() {
showInlineMessage("பிழை ஏற்பட்டது!", false);
});
});
});
8fqjjqrqnfked6ric38m19kn49sozcb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/844
250
642170
1929063
2026-04-30T15:41:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வியல், பண்பாட்டு மானிடவியல் ஆகிய இருபெரும் தனித் துறைகளே இருந்தன. பல்வேறு ஆய்வு முறைகளும் ஆய்வுப்பரப்புகளும் பெருகத் தொடங்கியதிலிருந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929063
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்விசார் மானிடவியல்|816|கல்விசார் மானிடவியல்}}</noinclude>வியல், பண்பாட்டு மானிடவியல் ஆகிய இருபெரும் தனித் துறைகளே இருந்தன. பல்வேறு ஆய்வு முறைகளும் ஆய்வுப்பரப்புகளும் பெருகத் தொடங்கியதிலிருந்து பல உள் துறைகள் தோன்றி வளர்ந்துள்ளன. கல்விசார் மானிடவியலின் தோற்றம் இரு பரிமாணங்களைக் கொண்டதாகும். ஒன்று கல்விசார் அளவிலும் மற்றொன்று பயன்முறை அளவிலுமாகும். திணைக் குடிகளின் (Native People) வாழ்க்கையை மேம்படுத்த வேண்டி அரசின் திட்டங்கள் வகுப்போருக்கும் திணைக் குடியினருக்குக் கல்வி கற்பிக்க முயன்ற கல்வியியலாருக்கும் வழிகாட்டும் பொருட்டு மானிடவியலார் ஏற்படுத்திய அணுகுமுறை கல்விசார் அளவில் ஏற்பட்டதொன்று.
மானிடவியலாளருள் சிலர் 1950-ஆம் ஆண்டுக் காலத்தில், கல்வி கற்பிக்கும் பள்ளிகளைப் பற்றி மானிடவியல் போக்கில் ஆராயத் தொடங்கினர். அவர்களுள் இசுபிண்டுலர் (Spindler), என்றி (Henry) பிராமல்டு (Brameld), இரீடு (Read) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள், தம் ஆய்வுகளுக்குப் பின் மானிடவியலுக்கும் கல்வியியலுக்கும் இடையே வளர வேண்டிய துறையின் கண் ஆய்வுப் பரப்பின் தேவையை உணர்ந்தனர். இவ்விரு துறையினரும் 1950–களில் ஒன்று கூடி நடத்திய மாநாட்டின் வெளியீடான ‘கல்வியும் மானிடவியலும்’ (Education and Anthropology) என்னும் நூலே கல்விசார் மானிடவியலின் முதல் நூலாகும். அதன் பின்னர் 1960–களில் நிலவிய மூன்று முதன்மையான பரிமாணங்களில் கல்விசார் மானிடவியலார் 1960–களில் முனைந்தனர். ஒன்று, அமெரிக்காவில் எளியோர், சிறுபான்மையினர், கறுப்பினத்தவர் ஆகியோரின் கல்விச் சிக்கலைப் பற்றியது. மற்றொன்று கல்விச் சிக்கல்களைக் கல்வியியலாரும் கல்விசார் உளவியலாரும் ஆராயும் போக்கில் கொண்டிருந்த பண்பாடு பற்றிய தெளிவின்மையை அகற்றுவது. பிறிதொன்று பொதுப் பள்ளிக் கல்வி முறையில் மானிடவியலை ஒரு பாடமாகச் சேர்ப்பது.
கல்விசார் மானிடவியலின் பிரிவினை வளர்ச்சியுறச் செய்வதில் அமெரிக்க மானிடவியற் கழகம் முன்னின்றது. இக்கழகம் மேற்கூறிய மூன்று பரிமாணங்களில் கல்விசார் மானிடவியலை வளர்ச்சியுறச் செய்வதற்காக ஒரு குழுவினை அமைத்தது. அக்குழுவின் செயற்பாட்டினால் அமெரிக்காவில் இதன் நிலை விரைந்து வளம் பெற்றது.
இன்று கல்விசார் மானிடவியலின் பரப்பும் ஆய்வு முறைகளும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. இத்துறையின் பரப்புகள் பின் வருவனவாம்.
<b>படிமலர்ச்சியும் கல்வியும்:</b> இப்பிரிவில் மனிதனின் கற்றல் முறையின் அமைப்பினையும், மனிதனுக்கு அடுத்த நிலையிலுள்ள உயர்பாலூட்டிகளின் (Primates) கற்றல் முறையிலிருந்து மனிதன் வேறுபடும் நிலையினையும் ஆராய்கின்றனர். மனிதனின் இயல்பிற்கும் அவன் கற்கும் திறனுக்கும் அப்பாற்பட்டுக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளின் செயற்பாங்கு அமைந்துள்ளது என்று உடல்சார் மானிடவியலின் (Physical Anthropology) மிகச் சிறந்த வல்லுநர்களுள் ஒருவரான வாசுபர்ன் (Washburn) குறிப்பிட்டுள்ளார். கற்றல் முறையின் பல்வேறு இனக்குழுவினரின் வேறுபட்ட தன்மையை இன உயர்வு வாதத்திற்கு அடிப்படையாகக் கொண்டபோது உடல்சார் மானிடவியலாரின் பங்களிப்பு, படிமலர்ச்சி ஆய்வு நிலைகளை ஒட்டியதாய் அமைந்தது. உயர்பாலூட்டிகளிலிருந்து மனிதன் வரையிலான மூளையின் வளர்ச்சி மனித வரலாற்றில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. இதனாலேயே உயர்பாலூட்டிகள் முதல் மனிதன் வரையுள்ள உயிரின் மூளை வளர்ச்சி பற்றி முழுமையாக அறிய உடல்சார் மானிடவியலார் முனைந்தனர். இதில் நரம்பியல்சார் உடற்கூற்றியலார் (Neuro–anatomists), நரம்பியல்சார் மொழியியலார் (Neuro-linguists) ஆகியோரின் உதவியையும் அவர்கள் பெற்றனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு உயர்பாலூட்டிகள், வேட்டையாடி உணவு சேகரிக்கும் ஆதிக்குடிகள் ஆகியோரின் சமுதாய, பண்பாட்டு அமைப்புகளை நன்கு அறிய வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் உயர் பாலூட்டியியலார், சமுதாய மானிடவியலார் ஆகியோரின் உதவிகளையும் உடல்சார் மானிடவியலார் பெற்றனர்.
அப்பிரிவின் ஆய்வுகள் கல்விசார் மானிடவியலின் பயன்முறையை வலுவாக்கின. பல இனங்கள் வாழும், நாட்டின் கல்விமுறையில் காணப்படும் சிக்கலுக்கு, அவ்வகை ஆய்வுகள் தெளிவான அணுகு முறைகளை உருவாக்கின. கற்றல் திறனில் வெவ்வேறு இனக்குழுவினர் கொண்டுள்ள வேறுபாடுகளுக்கான காரணத்தை உயர்பாலூட்டிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளிலிருந்து விளக்குவர்.
மனிதனை உள்ளடக்கிய நேர்மூக்கின உயர் பாலூட்டிகள் (Catarrhini Primates), தட்டை மூக்கின் உயர்பாலூட்டிகளிடமிருந்து (Platyrrhini Primates) அளவிலும் தன்மையிலும் வேறுபட்ட மூளை அமைப்பினைப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, நேர் மூக்கின உயர்பாலூட்டிகளின் தரைவாழ் வாழ்க்கைத் தகவமைப்பு, மூளையின் அளவையும் நரம்பணுவில் உணர்திறன் மிக்க நுண்ணணுக்களின் எண்ணிக்கையையும் மிகுதியாக்கியுள்ளது. இந்த<noinclude></noinclude>
f6p1i35550del1s3casqu4vscysyh3e
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/150
250
642171
1929088
2026-04-30T16:26:45Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|128 நெகிழ்வு உரு மாற்றம் (உலோகம்)}}</noinclude>ஆகியவற்றை இணைப்பல்லுறுப்பாக்கம் செய்து, தயாரிக்கப் படும் மோடக்ரிலிக் இழைகள் தீ எதிர்ப்புத் தன்மை மிக்கவை.
<b>ஸ்பாண்டக்ஸ்</b>. குறைந்தது 85% பாலியூரித்தேன் தொகுதிகளைக் கொண்ட ஸ்பாண்டக்ஸ் இழை நீட்சி மிக்கது. நீச்சல் உடை, பனியன் போன்ற ஆண் உள்ளுடைத் தயாரிப்பில் இவ்விழை பயன் படுகிறது.
<b>பாலி ஒலிஃபீன்</b>. கார்பன், ஹைட்ரஜன் ஆகிய இரு தனிம அணுக்களை மட்டுமே கொண்ட இவ்வகையில் பாலிபுரோப்பிலீன் பயன் மிக்கதாகும்.
<b>வின்யான்</b>. குறைந்தது 85% எடை வினைல் குளோரைடு தொகுதிகளைக் கொண்ட தொகுப்பு நீளிழையான இதன் உருகு நிலை குறைவாக இருப்பதால், இது பயன் குன்றியதாகும்.
<b>சரண்</b>. 85%க்கு மேல் வினைலிடீன் தொகுதிகளைக் கொண்ட நீண்ட சங்கிலித் தொகுப்பு பல்லுறுப்பு சரண் என்னும் வணிகப் பெயரில் பயன் படுகிறது. இது உடைத் தயாரிப்புக்கு ஏற்றதன்று.
<b>நோவோலாய்டு</b>. 85%க்கு மேலாகக் குறுக்குப் பிணைப்புக் கொண்ட நோவோலக் எனும் ஃபீனால் ஃபார்மால்டிஹைடு வகை ரெசினைக் கொண்ட இவ்விழை சீருடைத் தயாரிப்புக்கும், தொழிலகத் துணித் தயாரிப்புக்கும் பயன் படுகிறது.
<b>பாலிகார்போனேட்</b>. பாலிபென்சிமிடசோல், அல்கினேட், டெஃப்லான் ஆகியன ஆடையில்லாத பயன்களில் ஈடுபடுத்தப் படும் இழைகளுள் சிலவாகும்.
<b>தள இழைகள்</b>. இரு வேறு வேதி வகை இழைகளை, ஒன்றாகப் பிழிந்து வார்த்தலால், இவை (எடுத்துக் காட்டாகக் கார்டிலான் எனும் 50% வின்யான், 50% வினால் இழைக் கலப்பு) புது நயத் துணிகள் தயாரிக்க ஏற்றவை. இரு வேறு பல்லுறுப்புச் சங்கிலிகளை ஒட்டாக (graft) ஒரு சங்கிலி முதன்மை பெற்றதாகவும், மற்றொன்று கிளைச் சங்கிலியாகவும் அமைந்த, ஒட்டு இழை (graft fibre) தள இழையிலிருந்து குறிப்பிடத் தக்க வகையில் மாறு படுகிறது. தள இழையின் உட்கூறுகளைப் பிரிப்பது போன்று, ஒட்டு இழையின் உட்கூறுகளை எளிதாகப் பிரிக்க முடியாது. புரத இழை, ரப்பர் இழை, உலோக இழை, கண்ணாடி இழை ஆகியனவும், சில தனி வகைத் துணிகளைத் தயாரிக்க உதவுகின்றன.
{{right|—<b>மே.ரா.பாலசுப்பிரமணியன்</b>}}
<b>துணை நூல்</b>. B.P.Corbman, <i>Textiles–Fiber to Fabric</i>, Sixth Edition, Mcgraw–hill Kogakusha, Ltd, Singapore, 1985.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="84"/><section begin="85"/>
<section end="நூ"/><section begin="நெ"/>{{fs|110|<b>நெகிழ்வு உரு மாற்றம் (உலோகம்)</b>}}
ஒவ்வோர் உலோகத்திற்கும் ஒரு மீட்சியியல் எல்லை (elastic limit) உண்டு. அந்த மீட்சியியல் எல்லைக்குள், அவ்வுலோகத்தின் மேல் செயல் படும் தகைவு (stress), உலோகத்தினைத் தற்காலிக உரு மாற்றம் அடையச் செய்கிறது. இந்தத் தகைவு அல்லது புற விசை நீக்கப் படுமானால், அவ்வுலோகப் பொருள் தன் பழைய உருவத்தை மீண்டும் பெறுகிறது. ஆனால், மீட்சியியல் எல்லைக்கு மேல் தகைவுக்கு உட்படுத்தப் பட்ட உலோகம், ஒரு நிலையான உரு மாற்றத்தைப் பெறுகிறது. தகைவு நீக்கப் பெற்ற போதிலும், உலோகம் பழைய வடிவத்தைப் பெறுதில்லை. இந்த நிலையான உரு மாற்றம் நெகிழ்வு அல்லது குழைம உரு மாற்றம் எனப் படுகிறது.
உலோகத்தின் இந்த அடிப்புறப் பண்பு அதனை அழுத்தத்தால் உருட்டுதல் (rolling) , அடித்து வடித்தல் (forging), வளைத்தல் (bending), நீட்டல் (drawing), தகடாக்கல் (flattening), வட்டு உருவாக்கல் (coining) போன்ற பல்வேறு உலோக வடிவமைப்பு முறைகளுக்கு உட்படுத்தப் பயன் படுகிறது.
<b>குழைம உருமாற்ற நுட்பம்</b>. உலோகங்களில் குழைம உரு மாற்றம், உலோக நழுவு (slip), முறுக்கு (twinning) ஆகிய செயல்பாடுகளினால் நிகழ்கிறது.
<b>நழுவு</b>. உலோகப் படிகத்தின் ஒரு பகுதி, மற்றொரு பகுதியைப் பொறுத்து நிலையாக இடம் பெயர்வது, நழுவு எனப் படுகிறது. இந்த இடப் பெயர்வு, அணுக்களின் தளமொன்று (plane of atoms), மற்றொரு தளத்தின் மீது நகரும் போது நினழ்கிறது. இந்த நகருதல் நிகழும் தளங்கள் நழுவு தளங்கள் (slip planes) என்றும், நழுவுவதல் நிகழும் திசை, நழுவு திசை (direction of slip) என்றும் குறிப்பிடப் படும். நழுவு தளத்திற்கு மேலும், கீழும் உள்ள அணுத் தொகுப்பு (block of crystals) எவ்வித உருக் குலைவையும் அடைவதில்லை.
நழுவு நிகழும் தளத்தில் அணுத் தொகுப்புகள் மேலும் அதிக அளவில் நகரும் போதோ, புதிய நழுவு தளங்கள் தோன்றும் போதோ உலோகம் மேலும் உருமாற்றம் அடைகிறது. பொதுவாக உலோகங்கள் அவற்றின் அணுக்கள் அமைந்திருக்கும் நிலையைப் பொறுத்துப் பல்வேறு படிக அமைப்பைப் (Crystallographic structures) பெறுகின்றன. எந்த ஒரு படிக அமைப்பிலும், ஒரு குறிப்பிட்ட தளத்தில், ஒரு குறிப்பிட்ட திசையிலேயே<noinclude></noinclude>
5lpqnpmlgh8fdu964z2aymgc7v81fqx
அறிவியல் களஞ்சியம் 14/நூ
0
642172
1929090
2026-04-30T16:31:10Z
TI Buhari
4634
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூ | previous = [[../நு/]] | next = [[../நே/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="121" to="150" fromsection="நூ" tosection="நூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929090
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம்
| translator =
| section = நூ
| previous = [[../நு/]]
| next = [[../நே/]]
| notes = }}
<pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="121" to="150" fromsection="நூ" tosection="நூ" />
44ep4zsj2ut06v6ixzg2e2im7t23rb2
1929091
1929090
2026-04-30T16:32:15Z
TI Buhari
4634
1929091
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம்
| translator =
| section = நூ
| previous = [[../நு/]]
| next = [[../நெ/]]
| notes = }}
<pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="121" to="150" fromsection="நூ" tosection="நூ" />
<!---- | next = [[../நே/]] ---->
n7hob7npc6xm9ygx7b4w1fwhtjx35tr
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/969
250
642173
1929093
2026-04-30T16:40:01Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1929093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude>
{{Css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 969
|bSize = 456
|cWidth = 443
|cHeight = 588
|oTop = 8
|oLeft = 5
|Location = center}}<noinclude></noinclude>
eu43ifzq2xd3k571jdijz9dgvyxihol
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/124
250
642174
1929107
2026-05-01T04:48:39Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உடன்பிறப்பே, எனது பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்ட ஏழை எளியோர்க்கான திட்டங்களுக்கு ஆலயங்களின் நிதியை ஓரளவு அரசுக்கு வழங்கியதில் தவற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||115}}</noinclude>உடன்பிறப்பே, எனது பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்ட ஏழை எளியோர்க்கான திட்டங்களுக்கு ஆலயங்களின் நிதியை ஓரளவு அரசுக்கு வழங்கியதில் தவறு கண்டுபிடிக்கிறார்களே; ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயில் வருமானத்தில் பெரும்பகுதி இப்படிப்பட்ட செலவுகளுக்காக அமெரிக்கா வரையிலே சென்றிருக்கிறது என்ற செய்தியை அவர்கள் படிக்கவில்லை போலும்!
1959ஆம் ஆண்டின் சட்டத்திற்குப் புறம்பாக ஆலய நிதி செலவழிக்கப்படவில்லையென்பது தெரிந்திருந்தும் மண்ணைவாரி வீசுகிறார்களே, காரணம் புரிகிறதா, உனக்கு?
“நாம் செய்யாத நல்ல காரியங்களை இவர்கள் செய்து விட்டார்களே!” என்ற கோபம்தான்!
கருணை இல்லங்கள். கழகத்தினருக்கே பயன்படுகிறதாம்!
இந்த இல்லங்களில் ஒன்றை வாரியார், கபாலி கோயிலில் திறந்துவைத்து வாயார மனமாரப் புகழ்ந்து பேசினார்! இதோ; கேட்கிறாயா அவர் பேச்சை!
“இறைவன் கருணையே வடிவானவன். இறைவன் வேறு கருணை வேறு அல்ல; இறைவனே அம்மா அப்பா இல்லாத அனாதைதான்!
அந்த அனாதைகளுக்கு முன்பு பெரியவர்கள் கோயில் வைத்தார்கள். இப்போது அம்மா, அப்பா இல்லாத அனாதைச் சிறுவர்களுக்கு இவர்கள் கோயில் வைக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் இரண்டும் ஒரே வேலைதான்.
தனமும் மனமும் படைத்தவர்கள் அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவு காட்டவேண்டும்; ஏழைச் சிறுவர்களுக்கு ஏதாவது நன்மை செய்கிறவர்கள், அவர்கள் ஒரு அரிசி கொடுத்தால் ஒரு பவுனுக்குச் சமமாகும்.{{nop}}<noinclude></noinclude>
h4clvqry0fcnss2ho2g0xvyjhjs72kc
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/125
250
642175
1929111
2026-05-01T05:05:19Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனம் உள்ளவர்கள் இந்தப் பணியை செய்யாததால் டாக்டர் கலைஞர் இந்தப் பணியைச் செய்சிறார். இந்த அருமையான திட்டம் நாட்டுக்கு இன்றியமையாதது. த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|116||கலைஞர்}}</noinclude>தனம் உள்ளவர்கள் இந்தப் பணியை செய்யாததால் டாக்டர் கலைஞர் இந்தப் பணியைச் செய்சிறார்.
இந்த அருமையான திட்டம் நாட்டுக்கு இன்றியமையாதது.
திருவள்ளுவர் கனவை நினைவாக்கக்கூடிய சிலருக்கு கருணை கொஞ்சமாக இருக்கிறது. சிலர் கருணை நிதியாக இருக்கிறார்கள்.
கருணை கொஞ்சமாக இருப்பவர்களால் எதுவும் செய்ய முடியாது. கருணை நிதியாக இருந்தால்தான் — கருணாநிதியாக இருந்தால்தான் இதையெல்லாம் செய்யமுடியும். நாடு இனி நன்றாக இருக்கும்.
படிப்பில், சாதியில். செல்வத்தில் பெரியவனாக இருக்க முடியாது. தனக்காக வாழ்கிறவன் சிறியவன். பிறருக்காக வாழ்கிறவன்தான் பெரியவன். நீண்ட காலமாக நம் முதல்வர் இதுபற்றி சிந்தனை செய்தார்.
முதல்வரின் மற்ற திட்டங்களைப் போலவே இத்திட்டமும் மிகச் சிறந்ததாக இருக்கிறது.
தாய் தந்தையற்ற திக்கில்லா குழந்தைகளுக்கு வாழ்வு தரும் இந்தச் செயல் முடிமணிபோன்றதாகும். இது தேசத்துக்கு செய்த தொண்டாகும்.
இந்தப் பணி ரொம்பவும் உயர்ந்த பணி. இதற்கு மேற்பட்ட ஒரு பணி இருக்க முடியாது.
இந்தப் பணியை அரசே செய்வதென்றில்லாமல் கோயில்களையும் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது.
திக்கற்ற குழந்தைகளே தெய்வக் கோயில்களாம்— அதற்கு திருத் தொண்டு செய்கிறார்கள். கோயில் பணத்திலிருந்து வானவேடிக்கைகளும் வீண் செலவும் செய்யப்படுகிறது அதை இதுபோன்ற நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தவேண்டும்.<noinclude></noinclude>
jh2vy8dtd37dneb3borhc6nwkeuds72
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/126
250
642176
1929115
2026-05-01T05:13:51Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முதல்வர் செய்யும் இதுபோன்ற நல்ல காரியங்களைப் பார்த்து, “நல்ல காரியம் செய்தாரப்பா முதல்வர்” என்று எம்பெருமானே மகிழ்வார் இப்படிப்பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||117}}</noinclude>முதல்வர் செய்யும் இதுபோன்ற நல்ல காரியங்களைப் பார்த்து, “நல்ல காரியம் செய்தாரப்பா முதல்வர்” என்று எம்பெருமானே மகிழ்வார் இப்படிப்பட்ட அற்புதமான சேவை நாட்டுக்குத் தேவை. முதல்வர் கலைஞர் அதைச் செய்ததால் எனது பிரத்யேகமான அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
1929ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் சுயமரியாதை மாநாட்டிலே கொண்டுவந்த தீர்மானம் ஆலய நிதியை அனாதைக் குழந்தைகளை வளர்த்துக் கல்வி அளிக்கப் பயன்படுத்த வேண்டுமென்பது! அது 1965-ல் சட்டமாகிறது! நமது ஆட்சிக் காலத்தில் விரிவாகச் செயல்படத்தொடங்குகிறது! அதாவது காமராஜர் காலத்தில் சட்டமாகி, கழக ஆட்சிக் காலத்தில் பரவலாக நடைமுறைப்படுத்தப்படுகிறது! இருவரையும் பெரியார் ஆதரித்த “ரகசியம்” இப்போது புரிகிறதா?
அனாதைக் குழந்தைகளை ஆதரித்தால்கூட அதுவும் கழகப் பிரச்சாரமா? அதோ கருணை இல்லத்து வாயிலில் நிற்கிற அந்தக் குழந்தைகளின் நெற்றியைப் பார், திருநீற்றுப் பூச்சை?
தெய்வீகப் பேரவையை தி. மு. க. ஆட்சிதான் தொடங்கியதாம்!
1966 ஜூன் திங்கள் 23ஆம் நாள் தெய்வீகப் பேரவை, பக்தவத்சலனார் காலத்தில் பதிவு செய்யப்பட்டது இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் 66ன்படி இந்தப் பேரவைக்கு நிதி ஒதுக்கம் செய்யப்பட்டு வந்தது. இந்து சமயத்தின் பெருமையை உணரவும், சமய நம்பிக்கையை மென்மேலும் உறுதிப்படுத்தவும் இந்தப் பேரவை அமைக்கப்பட்டது. பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் முதல்வராக இருந்தபோது! அதை .. ஒரு “தி. மு க. ஸ்தாபனம்” என்று கூறி, விளக்கம் தந்துவிட்டார்கள்! பதில் தரவேண்டியவர்கள் நாமல்ல! நம் காலத்தில் இது தொடங்கவில்லை என்பதற்கே இந்த விபரங்கள்!<noinclude>
க—7–8</noinclude>
rnv1pilyfn4sor91ygx99jvbircmunr
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/127
250
642177
1929123
2026-05-01T05:24:34Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருப்பணிகள், குடமுழுக்குகள் மட்டுமின்றி ஏழை மக்கள் குறைந்த செலவில் திருமணங்களைச் செய்து கொள்ளப் 80 திருமண மண்டபங்கள் கட்டி முடிக்கப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|118||கலைஞர்}}</noinclude>திருப்பணிகள், குடமுழுக்குகள் மட்டுமின்றி ஏழை மக்கள் குறைந்த செலவில் திருமணங்களைச் செய்து கொள்ளப் 80 திருமண மண்டபங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; 128 மண்டபங்கள் முடியுந் தருவாயில் இருக்கின்றன.
:எல்லாக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை!
:இது சற்று எரிச்சலை அளிக்கக் கூடியதுதான்!
:தகுதி படைத்த அனைத்து வகுப்பாரும் அர்ச்சக
ராக வரவேண்டுமென்று சட்டம்! ஆத்திரத்துக்கு இதுவும் ஒரு காரணம்!
{{larger|<b>அன்னைத் தமிழில் அர்ச்சனைகள்!<br>
அறங்காவல் துறையில் அரிஜனங்கள்!</b>}}
கோயில் அறங்காவல் குழுவில் கட்டாயம் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இடம் பெறவேண்டுமென்று சட்டத்தில் வகை செய்து இதுவரை இரண்டாயிரம் அரிஜனங்கள் அறங்காவல் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்
சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையை ஏற்று கோவில்களில் மிக முக்கியமானவர்களுக்கு (V.I.P's) தரப்படும் பரிவட்டம், பூர்ணகும்பம் ஆகிய தனி மரியாதைகளை நிறுத்தினோம்.
காழ்ப்பு ஏற்படாதா கனதனவான்களுக்கு? போதாதா காரணம் ஆங்காரத்துக்கு?
ஆலயப் பணி புரியும் ஐம்பதாயிரம் ஊழியர்க்கு வேலையில் நிரந்தரம்...கோயில் வருவாய்க்கேற்ற ஊதிய உயர்வு குடும்பப் பாதுகாப்புத் திட்டம்! ஆலய ஊழியர்க்குத் திருமணக் கடன் “25—45” என்று வயது வரம்பு நிர்ணயம்! இத்தனை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அறநிலையத்துறை
மானியம் பல்வகை (Miscellaneous) என்ற அளவில்தான் சீந்துவாரற்றுக் கிடந்தது! 1970ஆம் ஆண்டு நமது<noinclude></noinclude>
soyue9oy6i8yxham7i0ypsxnrl8586d
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/128
250
642178
1929126
2026-05-01T05:31:01Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் ஆட்சியில்தான் தனி அமைச்சர், திட்டம், பேரவையில் தனி உருவாக்கப்பட்டது. 119 தனி வரவு செலவுத் விவாதம் என்ற நிலை 1967ஆம் ஆண்டு 9600 அற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________
கடிதம்
ஆட்சியில்தான் தனி அமைச்சர், திட்டம், பேரவையில் தனி உருவாக்கப்பட்டது.
119
தனி வரவு செலவுத்
விவாதம் என்ற நிலை
1967ஆம் ஆண்டு 9600 அறநிலையங்கள் மட்டுமே இந்த துறையின் பொறுப்பிலே இருந்தது. துறைக்குக் கட்டுப்படாமல் பல்லாயிரக்கணக்கான கோயில்களும் அவற்றுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தனியார் ஆதிக்கத்தில் இருப்பது தெரிந்து அவைகளைக் கண்டுபிடிக்க கழக ஆட்சியில் அலுவலர் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற ஆய்வில் 41,306 அறநிலையங்களும் அவைகளுக்குச் சொந்தமான 201,343 ஏக்கர் நிலமும் தனியாரின் ஆதிக்கத்திலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது! சீற்றம் பிறக்காதா அந்தச் சீமான்களுக்கு? பதறமாட்டார்களா அந்த பக்த சிரோன் மணிகள்?
அவைகளில் சுமார் 25,000 அறநிலையங்களும் சுமார் 65,000 ஏக்கர் நிலமும் அறநிலையத்துறையின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளன.
1967-ல் தமிழ்நாட்டுக் கோயில்களின் வருமானம் ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்!
மொத்த
இப்போது ஆண்டுக்குப் பனிரெண்டு கோடிரூபாய்! கோயில்களின் வருமானத்தைப் பெருக்குவதற்கு ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. களில் குறிப்பிடத்தக்க சிலவற்றைக் கூறுகிறேன்.
அவை
கோயில்களுக்குச் சொந்தமான கட்டிடங்களிலிருந்து நியாயமான வாடகை பெறுவதற்கு பக்தவத்சலம் அவர்கள் அறநிலையத் துறையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு, கோவில் கட்டிடங்களுக்கு தமிழ்நாடு கட்டி டங்கள் குத்தகை மற்றும் வாடகைக்கட்டுப்பாடு சட்டத்தி<noinclude></noinclude>
5z0mh0asrzl6opywd1pzph3l38war0r
1929142
1929126
2026-05-01T06:10:17Z
Ramya sugumar
15106
1929142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||119}}</noinclude>ஆட்சியில்தான் தனி அமைச்சர், தனி வரவு செலவுத்திட்டம், பேரவையில் தனி விவாதம் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
1967ஆம் ஆண்டு 9600 அறநிலையங்கள் மட்டுமே இந்த துறையின் பொறுப்பிலே இருந்தது. துறைக்குக் கட்டுப்படாமல் பல்லாயிரக்கணக்கான கோயில்களும் அவற்றுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தனியார் ஆதிக்கத்தில் இருப்பது தெரிந்து அவைகளைக் கண்டுபிடிக்க கழக ஆட்சியில் அலுவலர் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற ஆய்வில் 41,306 அறநிலையங்களும் அவைகளுக்குச் சொந்தமான 201,343 ஏக்கர் நிலமும் தனியாரின் ஆதிக்கத்திலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது! சீற்றம் பிறக்காதா அந்தச் சீமான்களுக்கு? பதறமாட்டார்களா அந்த பக்தசிரோன் மணிகள்?
அவைகளில் சுமார் 25,000 அறநிலையங்களும் சுமார் 65,000 ஏக்கர் நிலமும் அறநிலையத்துறையின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளன.
1967-ல் தமிழ்நாட்டுக் கோயில்களின் மொத்த வருமானம் ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்!
இப்போது ஆண்டுக்குப் பனிரெண்டு கோடிரூபாய்!
கோயில்களின் வருமானத்தைப் பெருக்குவதற்கு ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவைகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றைக் கூறுகிறேன்.
கோயில்களுக்குச் சொந்தமான கட்டிடங்களிலிருந்து நியாயமான வாடகை பெறுவதற்கு பக்தவத்சலம் அவர்கள் அறநிலையத் துறையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு, கோவில் கட்டிடங்களுக்கு தமிழ்நாடு கட்டிடங்கள் குத்தகை மற்றும் வாடகைக்கட்டுப்பாடு சட்டத்தி-<noinclude></noinclude>
91k07z580pgg8eqq1imbafaebxjcwxr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/656
250
642179
1929137
2026-05-01T06:03:35Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பகுதிகளை விளக்கக் குறிப்புகளுடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுப் பெரும்பணி ஆற்றியுள்ளது. இந்நிறுவனம் குப்புசாமி சாத்திரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்புசாமி நாயுடு, கோ.|628|குப்புசாமி நாயுடு, கோ.}}</noinclude>பகுதிகளை விளக்கக் குறிப்புகளுடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுப் பெரும்பணி ஆற்றியுள்ளது.
இந்நிறுவனம் குப்புசாமி சாத்திரியின் நூற்றாண்டு விழாவினை 1981-இல் கொண்டாடியது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் வடமொழிப் புலமை மிக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், அவ்விழாவில் வடமொழி, வடமொழி இலக்கியம், சமயம், தத்துவம், சமூக அறிவியல், தமிழ் முதலான பல துறைகளிலும் ஆய்வுக் கருத்தரங்கங்கள் நடைபெற்றன.
ஆய்வு மாணவர்களுக்காக வடமொழி வகுப்புகளும் இந்நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகின்றன, இவ்வாறு இந்தியவியல் தொடர்பான பல பொரும்ளில் அறிஞர்களை ஈடுபடுத்தி ஆய்வுப் பணி தொடர இந்நிறுவனம் பெருந்தொண்டு ஆற்றி வருகிறது.{{Right|<b>அ.அ.ம.</b>}}
<b>குப்புசாமி நாயுடு, கோ</b>: கோவையைத் தொழில் நகராக மாற்றியதற்கு மூலகாரணமாக விளங்கிய குடும்பங்களுள் பாப்பதாயங்கன் பாளையம் குப்புசாமி நாயுடு குடும்பம் குறிப்பிடத்தக்க ஒன்று. பாப்பநாயக்கன் பாளையம் பெரிய கோவிந்தசாமி நாயுடு உப்பிலிபாளையம் ரங்கம்மாள் ஆகியோர்க்கு மைந்தராக கி.பி. 1884-ஆம் ஆண்டில் இவர் பிறந்தார், இளவயதில் உப்பிலிபாளையம் ஊராட்சிப் பள்ளியிலும், பிறகு கோவை புனித அந்தோணியார் பள்ளியிலும் கல்வி கற்றார். ஆனால், பள்ளிப் படிப்பை முற்றிலும் முடிக்காமலேயே, தம் குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்த வேளாண்மை நிலங்களில் தம் கவனத்தைத் திருப்பினார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 656
|bSize = 375
|cWidth = 110
|cHeight = 120
|oTop = 305
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|குப்புசாமி நாயுடு, கோ.}}
வேளாண்மைத் துறையில் மட்டும் முயல்லது போதாது என்று கருதி, வணிகத்துறைகளிலும் முயற்சி செய்ய விரும்பி, 1905-ஆம் ஆண்டு, புகையிலை வணிகத்தில் ஈடுபட்டார். சில மாதங்கள் கழித்து இவர் பருத்தி வணிகத்தில் முழுமூச்சுடன் இறங்கினார். அப்போது கோவையில் மிகச் சில பருத்தி ஆலைகனேயிருந்தன. முதலில் பருத்தியிலிருந்து கொட்டைகளை நீக்கித் தூய்மையாக்கி அதனைப் பருத்தி ஆலைகளுக்கு அனுப்புவதற்காக ஒரு பொறி நிலையத்தைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 1908-ஆம் ஆண்டு ‘இலட்சுமி மில்சு’ என்று இப்போது மிகப் புகழ் பெற்றுள்ள பஞ்சாலையை உருவாக்கினார். பருத்தி விதை நீக்கும் ஆலை மற்றும் நெசவாலைகளின் மூலம் இவர் நகரத்தின் முன்னணித் தொழில் வித்தகராக வளர்ச்சி பெறத் தொடங்கினார். இராலி, ஓல்காட்டு, படேல், சப்பான் வணிகக் குழுமம் போன்று அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த அனைத்துலக வணிக நிறுவனங்களுடன் இவர் தொழில் உறவு கொள்ளத் தொடங்கினார். முதல் உலகப் போரை ஒட்டிய கால கட்டத்தில் பருத்தி விலை வரையறையின்றி ஏறி இறங்கிக் கொண்டிருந்த வேளையில் இவருடைய கூர்மையான எதிர்கால உய்த்துணர் கிட்டங்களால் பெருமளவு பொருள் ஈட்டத் தொடங்கினார். அந்த நிலையில கோவை பருத்தி வணிகத்தைப் பம்பாயுடன் இணைத்து வளர்த்த பெருமையாளர்களின் முன்னோடி இவர். அந்தச் சமயத்தில் தொழில் மேதை சி.டி. நாயுடு (G.D. Naidu) அவர்களுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இவர் தொடங்கிய பருத்தி நெசவாலை படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தபோது, அவ்வப்போது மிகவும் புதிய பொறியமைப்புகளை ஏற்று நிறுவி அதனை நவீனப்படுத்தி வந்தார். ‘பைகாரா’ மின் திட்டம் 1929-ஆம் ஆண்டு செயற்படத் தொடங்கிய பின்னர்க் கோவை தொழில் மயமாவதில் ஒரு விரைவு தோன்றியது. அதன் முதற் படி குப்புசாமி நாயுடு தொடங்கிய ‘கோயமுத்தூர் காட்டன் மில்’ எனலாம். இவ்வாறு இவரால் தொடங்கப்பட்ட சிறு பருத்தி நெசவாலை விரிவாக வளர்த்து, இன்று பல பருத்தி ஆலைகள், தொழிற்கூடங்கள் வணிக நிறுவனங்கள் உள்ளடங்கிய பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது.
கோவையைத் தொழில் மயமாக்கிய முன்னோர்களுள் ஒருவரான குப்புசாமி நாயுடு சமூக, தேச நலன்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் 1921-இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்; 1930-இல் தம் புதல்வர் சுந்தரத்தை வேதாரணியம் உப்புச் சத்தியாகிரகத்திற்கு அனுப்பிவைத்தார். இவர் நகராட்சி உறுப்பினராகவும் சில காலம் பணியாற்றினார்.<noinclude></noinclude>
guw6s26gehszrk1sv2s9m4neou4p5kx
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/129
250
642180
1929138
2026-05-01T06:05:43Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லிருந்து சமய நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டுமென்று செய்த சிபாரிசை அப்போதிருந்த ஆட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் 19..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|120||கலைஞர்}}</noinclude>லிருந்து சமய நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டுமென்று செய்த சிபாரிசை அப்போதிருந்த ஆட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் 1973-ஆம் ஆண்டு மதிப்பீட்டுக் குழு செய்த சிபாரிசை கழக அரசு ஏற்றுக் கொண்டு சமய நிறுவனங்களுக்கு சட்டத்திலிருந்து விதி விலக்கு தரப்பட்டது. இதனால் சென்னை நகரத்தில் மட்டும் ரூ.20 லட்சம் கூடுதல் வருமானமாக சென்ற ஆண்டு கிடைத்துள்ளது. முறையாக தமிழ்நாடு முழுவதும் செயல் படுத்தினால் சுமார் 2 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயில்களுக்குச் சொந்தமான நகர்புறங்களில் உள்ள காலி இடங்களில் வீடுகள், கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
கோயில்களில் உண்டியல் மற்றும் இதரவகையான வருமானங்கள் முறையாக கணக்குகள் வைக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக உண்டியல்கள் பராமரிப்பு எந்தெந்த வகையில் இருக்கவேண்டும் என்பதற்கான சட்டமே கழக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1974-ஆம் ஆண்டு. உண்டியல் உடைக்கப்பட்டு நடைபெற்று வந்த திருட்டையும், போலி டிக்கட் அச்சிட்டு விநியோகித்ததும் கண்டு பிடிக்கப்பட்டு அத்தவறைச் செய்த நிர்வாக அதிகாரி, கோவில் ஊழியர்கள் உடனடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நடவடிக்கை எடுக்குமுன் இக்கோயிலின் ஆண்டுவருமானம் 3 லட்சம் ரூபாய். அதற்குப்பின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்!
சேலம் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோயில் பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்தில் இருந்தபொழுது 16<noinclude></noinclude>
qe6sr1w6pr2oxi5kl0ljh628qcx76uc
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/130
250
642181
1929143
2026-05-01T06:11:02Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 121 ஆயிரம் ரூபாயாக இருந்த ஆண்டு வருமானம் நிர்வாக அதிகாரி நியமிக்கப் பட்டபின் ஆ ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. ண்டு வருமானம் 90 கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
கடிதம்
121
ஆயிரம் ரூபாயாக இருந்த ஆண்டு வருமானம் நிர்வாக அதிகாரி நியமிக்கப் பட்டபின் ஆ ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.
ண்டு வருமானம் 90
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள வனபத்திர காளியம்மன்
கோயிலில்
பரம்பரை அறங்
கொடுக்கப்பட்டது
காவலர் இருந்த பொழுது சுமார் 1500 ரூபாய் ஆண்டு வருமானமாகக் க
கணக்குக்
ஊழல்
குற்றச்சாட்டு காரணமாக அவர் நீக்கப்பட்டு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்ட பின் இப்போது ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரம்.
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமிகோயில் பரம் பரை அறங்காவலர் இருந்தபோது ஆண்டுக்கு 10.000 ரூபாயாக இருந்த வருமானம், முறைய ன நடவடிக்கை மேற்கொண்ட பிறகு ஆண்டுக்கு சுமார் 75 ஆயிரம்
ரூபாய் ரூபாய் வருமானம் வருகிறது.
செங்கற்பட்டு விநாயகர் கோயிவில் 10,000 ரூபாயாக இருந்த ஆண்டு வருமானம் முறையான நடவடிக்கைக்குப் யின் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்!
திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் ஆண்டு வருமானம் 1லட்சம் ரூபாய்; இப்போது ஆண்டுவருமானம் 20 லட்சம் ரூபாய்!
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முன்பு ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாயாக இருந்த வருமானம் தற்போது ரூ.40 லட்சம்.
வரு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் மானம் முன்பு ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய். இப்போது 35 லட்சம் ரூபாய்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆண்டு வருமானம் முன்பு 35 லட்சம் ரூபாய்; இப்போது 102 லட்சம் ரூபாய்!<noinclude></noinclude>
j6rgmnujbhcss8dw5ccvpnmzmdg3n1u
1929144
1929143
2026-05-01T06:15:51Z
Ramya sugumar
15106
1929144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||121}}</noinclude>ஆயிரம் ரூபாயாக இருந்த ஆண்டு வருமானம் நிர்வாக அதிகாரி நியமிக்கப் பட்டபின் ஆண்டு வருமானம் 90 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள வனபத்திர காளியம்மன் கோயிலில் பரம்பரை அறங்காவலர் இருந்த பொழுது சுமார் 1500 ரூபாய் ஆண்டு வருமானமாகக் கணக்குக் கொடுக்கப்பட்டது ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அவர் நீக்கப்பட்டு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்ட பின் இப்போது ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரம்.
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமிகோயில் பரம் பரை அறங்காவலர் இருந்தபோது ஆண்டுக்கு 10.000 ரூபாயாக இருந்த வருமானம், முறையான நடவடிக்கை மேற்கொண்ட பிறகு ஆண்டுக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய் ரூபாய் வருமானம் வருகிறது.
செங்கற்பட்டு விநாயகர் கோயிவில் 10,000 ரூபாயாக இருந்த ஆண்டு வருமானம் முறையான நடவடிக்கைக்குப்யின் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்!
திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் ஆண்டு வருமானம் 1லட்சம் ரூபாய்; இப்போது ஆண்டுவருமானம் 20 லட்சம் ரூபாய்!
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முன்பு ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாயாக இருந்த வருமானம் தற்போது ரூ.40 லட்சம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் வருமானம் முன்பு ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய். இப்போது 35 லட்சம் ரூபாய்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆண்டு வருமானம் முன்பு 35 லட்சம் ரூபாய்; இப்போது 102 லட்சம் ரூபாய்!{{nop}}<noinclude></noinclude>
m234usqk7pir2ouq41sd1fi5c3cpe4t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/657
250
642182
1929145
2026-05-01T06:18:26Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குப்புசாமி நாயுடு அவர்களின் தனிப் பண்பு நலன்களைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்கவை அவருடைய விடாமுயற்சியும், எதையும் சோதித்துப் பார்க்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்புசாமி முதலியார், ஆரணி|629|குப்பைக்கோழியார்}}</noinclude>குப்புசாமி நாயுடு அவர்களின் தனிப் பண்பு நலன்களைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்கவை அவருடைய விடாமுயற்சியும், எதையும் சோதித்துப் பார்க்கும். ஆர்வமும் ஆகும், இவர் மற்றவர்கள் அஞ்சும் நிலைகளில் துணிவுடன் செயற்படுவார்; தொழியாளர்களிடையே சரிசமமாக இறங்கி நின்று பணியாற்றுவார்: ஏற்றத்தாழ்வு கருதாமல் அன்புடன் பழகுவார். தாமே முயன்று, தாமே உழைத்து இவர் உருவாக்கிய தொழிலமைப்பு இன்று கோடிக்கணக்கான மூலதனத்துடன், ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களுக்கு வாழ்வளித்து வருகிறது. இவர் 1942-இல் காலமானார். இவருடைய மறைவுக்குப்பிறகு இவர்தம் புதல்வர்கள் ‘குப்புசாமி நாயுடு அறநிலையம்’ அமைத்து, மருத்துவமனை, கல்விச் சாலைகள் போன்ற அறச்செயல்ளுக்காகக் கோடிக்கணக்கில் நிதியளித்து அறப்பணி செய்து வருகின்றனர்.{{Right|<b>இரா.ச.</b>}}
<b>குப்புசாமி முதலியார், ஆரணி</b> 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியில் (1926–1950) புகழ்பெற்று விளங்கிய தமிழ்ப் புதின ஆசிரியர் ஆவார். அக்காலத்தில் நடுத்தரக் குடும்ப மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் பரவுவதற்குப் பெருமளவு காரணமாயிருந்த எழுத்தாளர் மிகச் சிலருள் இவர் ஒருவர்.
இவர் தாகவேடு முனிசாமி முதலியார் நடத்திய ‘ஆனந்த போதினி’ என்னும் திங்கள் இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார், இவ்விதழ் அக்காலத்திலேயே இருபதாயிரம் படிகள் விற்பனையாகும் அளவுக்குப் புகழ்பெற்றிருந்தது. இவர்தம் புதினங்களுள் பல இவ்விதழில் தொடர்கதையாக வெளிவந்து, பின் நூல் வடிவம் பெற்றன.
இவர் ஏறத்தாழ நாற்பது புதினங்களை எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பாலன துப்பறி கதைகளே, அவற்றுள் சில பல பாகங்களைக் கொண்டு மிக நீண்ட புதினங்களாக உள்ளன. எடுத்துக்காட்டாக, இவரது ‘இரத்னபுரி இரகசியம்’ ஒன்பது பாகங்களையும், ‘ஞான செல்வம்மான்’ ஐந்து பாகங்களையும் கொண்டவை.
இவர், ஒருநாளில் பலமணி நேரம் எழுதும் பழக்கம் உடையவர் என்பர். இவர்தம் புதினங்கள் பெரும்பாலும் ஆங்கிலப் புதினங்களைத் தழுவி எழுதப்பெற்றவை. அவை மூலநூல்களின் மொழிபெயர்ப்பாகவோ, தமிழ்ச் சாயலை முற்றும் ஏற்றுக்கொண்ட தழுவலாகவோ அமையாமல், ‘தமிழில் எழுதப்பட்ட பிறமொழிக் கதை’ என்னும் வகையில் அமைந்தன. ‘ஆனந்த சிங்கு’, ‘கிருட்டிணா சிங்கு’, ‘அர்ச்சுன சிங்கும் சுந்தரும்’, ‘கோகர்சான்’ முதலிய புதினங்களில் இடம்பெற்ற பாத்திரங்களின் பெயர்களும், அவற்றின் மொழிநடையும், அவை தமிழ்நாட்டில் நிகழ்ந்தவையல்ல என்னும் எண்ணத்தைப் படிப்பவர்க்கு ஏற்படுத்தின.
இவர்தம் புதினங்கள் பெற்ற வரவேற்பைக் கண்ட ‘ஆனந்த போதினி’யின் உரிமையாளர் ஒவ்வொரு இதழிலும் ஒரு முழுப் புதினத்தை வெளியீடும் வகையில் ‘மனமோகினி’ என்னும் புதியதொரு மாத இதழைத் தொடங்கினார். ஆயினும், இவ்விதழ் சிறிது காலமே வெளிவந்து நின்றுபோயிற்று.
இவர்தம் புதினங்களுள் ஒன்று இவரது பிற புதினங்களைப் போலத் தழுவலாக இல்லாமல் நேரடி மொழி பெயர்ப்பாக அமைகிறது. அலெக்சாண்டர் தூமாக எழுதிய ‘மாண்டி கிறிசுட்டோ பிரபு’ (The Count of Monte Cristo) என்னும் பிரஞ்சுப் புதினத்தை ‘மாண்டிகிறிகடோ’ என்னும் பெயரில் இவர் மொழிபெயர்த்தார்.
இவர்தம் புதினங்களில் சமுதாய, அரசியல் கருத்துகள் எவையும் இடம்பெறவில்லை. ஆயினும், கதைச்சுவை கருதி அவை மக்களால் விரும்பிப் படிக்கப்பட்டன. இவர்தம் ‘மின்சார மாயவன்’, ‘மஞ்சள் அறையின் மர்மம்’, ‘கற்கோட்டை’ ஆகிய புதினங்கள் இவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தன.
குப்புசாமி முதலியார் வேதாந்த நெறியில் ஈடுபாடு உடையவர், பகவத் கீநை, கைவல்லிய நவநீதம் ஆகிய நூல்களுக்கு விளக்க உரை எழுதி வெளியிட்டுள்ளார்.{{Right|<b>ந.மெ.</b>}}
<b>குப்பைக்கோழியார்</b> கடைச்சங்க காலத்தே வாழ்ந்த புலவராவார். எட்டுத்தொகை நூல்களுள் சில பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அத்தகு பாடல்களில் உள்ள சிறப்பான சொற்றொடர்களைத் தேர்ந்து, அதனையே அப்பாடலாசிரியரின் பெயராக்கி வழங்கியுள்ளனர். கல்பொரு சிறு நுரையார், ஓரேருழவர், குப்பைக்கோழியார் முதலிய புலவர்கள் இம்முறையில் பெயர் பெற்றுத் திகழ்பவராவர்.
இப்புலவர் இயற்றிய ஒரேபாடல், குறுந்தொகையில் 305-ஆம் பாடலாக இடம் பெற்றுள்ளது. நெய்தல் திணையிலமைத்த இப்பாடல், தோழி அறத்தொடு நிற்க, தலைவி தன் ஆற்றாமை புலப்படுமாறு பாடுவதாக அமைந்துள்ளது.
ஒரு பெண்ணின் துன்பச் சூழலை வெளிப்படுத்தும் இப்பாடலைப் பெண்பாற் புலவரே பாடியிருக்க-<noinclude></noinclude>
tj77onxjeozjys0mm6srvn52zcyzx0c
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/131
250
642183
1929146
2026-05-01T06:25:06Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>திருவிழாக்கள் குறையவில்லை!</b>}} ழிை காம திருப்போரூர் சுப்பிரமணியர் கோயில் பரம்பரை அறங்காவலராக இருந்த ஒரு மடாதிபதி உண்டியலை உடைத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|122||கலைஞர்}}</noinclude>{{larger|<b>திருவிழாக்கள் குறையவில்லை!</b>}} ழிை காம
திருப்போரூர் சுப்பிரமணியர் கோயில் பரம்பரை அறங்காவலராக இருந்த ஒரு மடாதிபதி உண்டியலை உடைத்துத் திருடியது, சுவாமி நகைகள் களவாடப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டார். முறையான அறங்காவலர் நியமிக்கப்பட்டபின் கோயிலுக்கு திரளான மக்கள் வருவதால் வருமானமும் பெருகியுள்ளது.
சொத்து நிர்வாக முறைகேடுகள் என்றும், அறநிலையங்களுக்குச் சொந்தமான வீடுகள், நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. முறைகேடாக விற்கப்பட்டது என்றும் கோயில் நிலங்களை தி. மு. க.வினர் அனுபவித்துக்கொண்டு வருகின்றனர் என்றும் புகார்கள் கூறப்படுகின்றன.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இப்படிப்பட்ட முறைகேடுகள் கழக ஆட்சிக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறதே தவிர—தவறுகள் ஏதும் நடைபெறவில்லை.
செங்கற்பட்டு மாவட்டம் பாடி கைலாசநாதர் கோயில் மற்றும்
திருவல்லீசுவரர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 50 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள காலியிடம் கண்டு பிடிக்கப்பட்டு அதை அனுபவித்து வந்த பரம்பரை அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்தச் சொத்துக்கள் மூலம் வருகின்ற வருமானம் கோயிலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் திருக்கோயிலிலுள்ள சுவாமியின் பெயரை தன்னுடைய குழந்தைக்கு வைத்து ஆண்டவனின் பெயரால் இருந்த சொத்துக்களை தன் குடும்பத்துக்கு சொந்தமாக்கி கொண்டார் ஒரு பரம்பரை அறங்காவலர்! கழக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது!{{nop}}<noinclude></noinclude>
4b4b5uvcniggy2yvgyg598iluegpwgr
1929148
1929146
2026-05-01T06:25:50Z
Ramya sugumar
15106
1929148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|122||கலைஞர்}}</noinclude>{{larger|<b>திருவிழாக்கள் குறையவில்லை!</b>}}
திருப்போரூர் சுப்பிரமணியர் கோயில் பரம்பரை அறங்காவலராக இருந்த ஒரு மடாதிபதி உண்டியலை உடைத்துத் திருடியது, சுவாமி நகைகள் களவாடப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டார். முறையான அறங்காவலர் நியமிக்கப்பட்டபின் கோயிலுக்கு திரளான மக்கள் வருவதால் வருமானமும் பெருகியுள்ளது.
சொத்து நிர்வாக முறைகேடுகள் என்றும், அறநிலையங்களுக்குச் சொந்தமான வீடுகள், நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. முறைகேடாக விற்கப்பட்டது என்றும் கோயில் நிலங்களை தி. மு. க.வினர் அனுபவித்துக்கொண்டு வருகின்றனர் என்றும் புகார்கள் கூறப்படுகின்றன.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இப்படிப்பட்ட முறைகேடுகள் கழக ஆட்சிக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறதே தவிர—தவறுகள் ஏதும் நடைபெறவில்லை.
செங்கற்பட்டு மாவட்டம் பாடி கைலாசநாதர் கோயில் மற்றும்
திருவல்லீசுவரர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 50 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள காலியிடம் கண்டு பிடிக்கப்பட்டு அதை அனுபவித்து வந்த பரம்பரை அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்தச் சொத்துக்கள் மூலம் வருகின்ற வருமானம் கோயிலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் திருக்கோயிலிலுள்ள சுவாமியின் பெயரை தன்னுடைய குழந்தைக்கு வைத்து ஆண்டவனின் பெயரால் இருந்த சொத்துக்களை தன் குடும்பத்துக்கு சொந்தமாக்கி கொண்டார் ஒரு பரம்பரை அறங்காவலர்! கழக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது!{{nop}}<noinclude></noinclude>
aiu3dz8fxyo57rqnv08mz3r1j3bkywn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/658
250
642184
1929150
2026-05-01T06:29:04Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேண்டும் என்பாருமுனர். பலர் கண்டு மகிழப் போர்க்கோழிகள் பயிற்சி தரப்பட்டு ஒன்றோடொன்று போர் புதிய ஏவப்படுதலுண்டு. ஆனால், குப்பையில் இரண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்ளாய்கான்|630|குப்ளாய்கான்}}</noinclude>வேண்டும் என்பாருமுனர். பலர் கண்டு மகிழப் போர்க்கோழிகள் பயிற்சி தரப்பட்டு ஒன்றோடொன்று போர் புதிய ஏவப்படுதலுண்டு. ஆனால், குப்பையில் இரண்டு கோழிகள் சினத்து உடற்றும்போது, அவை ஏவுவாகும் காண்பாருமின்றிச் சண்டையிட்டுத் தாமே மாயும், இங்குத்தலைவி, குப்பைக் கோழிகளின் போரைத் தன் காதல் துன்பத்திற்கு உவமையாக்கித் தான் தன் துன்பம் களைவாரின்றி வருந்துவதனைக் கூறுகிறாள். அன்றாட வாழ்வில் காணும் இக்குப்பைக்கோழிகளின் போர் நிகழ்ச்சியினையும் காதல் துன்பத்தினையும் வெளிப்படுத்தும் இச்சிறந்த பாடல் இயற்றியவரின் இயற் பெயர் தெரியாமையால், இதிலமைந்த தொடராலேயே பெயரமைக்கப்பெறும் சிறப்புற்று விளங்குகிறது.{{Right|<b>குரு.கோ.</b>}}
<b>குப்ளாய்கான் (கி.பி. 1215-1294)</b>: செங்கிசு நானுக்குப் பின்னர் ஆட்சி புரிந்தவர்களும் தலைசிறந்த மன்னர். இவர் சீனாவில் மங்கோலிய (யூவான்-Yuan) வமிசத்தை நிறுவியவர். செங்கிககாவின் நான்காம் மகனான தோலு அல்லது துளே என்பானின் (Tolui or Tule) நான்காம் மகனாகத் தோன்றினார் குப்ளாய்கான் (Kublai Khan), சினா முழுமையையும் ஆண்ட, சீனரல்லாத முதல் மன்னரான இவர், வரலாறு கண்ட வேந்தர்களுள் முன்னணியில் நிற்பவர். சீனாவை ஆண்ட மாபெரும் மன்னராக விளங்கிய போதிலும் கீழை, மேலை நாடுகளால் மட்டுமன்றி, இசுலாமிய நாடுகளாலும் பேரரசர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர், தம் முன்னோர்களைப் போன்று, கொடியவராக நடந்து கொள்ளாமல், பரந்த மனப்பான்மையுடனும் கருணை உள்ளத்துடனும் ஆட்சி புரிந்தவர். இவர் பாராட்டத்தக்க வகையில் சீனப் பண்பாட்டு வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 658
|bSize = 375
|cWidth = 105
|cHeight = 120
|oTop = 315
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{center|குப்ளாய்கான்}}
குப்ளாய்கானின் அரசியல் வாழ்வு, இவர் அண்ணனான மங்குவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. இவர் அண்ணன் இவரை கி.பி. 1252-இல் தம் அரசின் கிழக்குப் பகுதியினுடைய சிவில், மற்றும் இராணுவ அதிகாரியாக அமர்த்தினார். இவர் கி.பி. 1253-இல் சங்கம் மாவட்டத்தின் முழுமை பெற்ற ஆட்சியாளராக அமர்த்தப்பட்டார். தொடர்ந்து பல படையெழுச்சிகளில் இவர் பங்கு கொண்டார். இவர் கி.பி.1252-இல் கேச்வன் மாநிலத்தின் தலைநகரான செங்-டூவைக் கைப்பற்றினார். இன்று யூன்னான் எனச் சொல்லப்படும் பண்டைய தாய் அரசான நான் சோவை கி.பி. 1253-56-இல் இவர் கைப்பற்றினார். (Tai Kingdom of Nan-Chao).
கான் மங்குளின் இறப்பிற்குப் பிள் (கி.பி. 1257), மங்கோலிய பிரபுக்களால் அடுத்த கானாக கி.பி. 1260-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்குப் போட்டியாகத் தானே மன்னன் என்று பறைசாற்றிக் கொண்ட இவர் தம்பி அரிக் போக்கு கி.பி. 1264-இல் தோற்கடிக்கப்பட்டான். கங் வமிசத்தார் மீது கி.பி.1267-இல் படையெடுத்து, கி.பி.1273-இம் கன் ஆற்றில் (Han river) இரு கரைகளில் அமைந்த இரட்டை நகரங்களான சியாங் யாங்கு, பான் செங்கு (Hsiang - Yang, Fan Ch'eng) ஆகிய இரண்டையும் கைப்பற்றினார். இப்படையெழுச்சிக்குப் பின் பாயன் (Bayan) என்னும் படைத்தலைவன் குப்ளாய்கானின் படையெழுச்சிகளில் பங்கு கொண்டு அடுக்கடுக்காகப் பல வெற்றிகளைப் பெற்றான். இவன் கங்கு வமிசத் தலைநகரான இலினானைத் தாக்கி, அரசனைக் கைது செய்தான். அதனால், முழுமையான சீன நாட்டிற்குக் குப்ளாய்கான் மன்னரானார்.
இவரது பேரரசு கொரியா முதல் அராபியப் பாலைவனம், மற்றும் கிழக்குப் போலந்துவரை பரவியிருந்தது. இவர் மாபெரும் மங்கோலியப் பேரரசர் என்பதனை இவரது சகோதரரான பாரசீக குலாகு ஏற்றுக்கொண்டார். மத்திய ஆசியாவின் ருவாய்டு (Qaidu) மட்டுமே இவர்தம் பகைவனாக இருந்தான். குப்ளாய்கானுக்குப் பலர் அடிபணிந்தனர். அன்னம், கொரியா ஆகியவை இவருக்கு முறையாகக் கப்பம் கட்டின, இவருக்கு கி.பி. 1294-இல் காம்பூசத்தின் குமர் அரசு (Khmer Kingdom of Kambuja) அடி பணிந்தது; பர்மா இவரது மேலாண்மையை ஓரளவு ஏற்றுக் கொண்டது, சாவாதாட்டு மசபாரி்த்து (Majapahit) அரசு கி.பி. 1293-இல் இவருக்கு அடி பணிந்தது. இவ்விதமான படையெழுச்சிகளால் இவர் தம் நிலையை வலுப்படுத்திக் கொண்டார்.
பீக்கிங்கை முதன்முதலில் தலைநகராக்கிய பெருமை குப்ளாய்காளைச் சாரும். இவர் நிருவாகத்திலும்<noinclude></noinclude>
sr89hm2s78q7q9pef0blkgg10l7ptcc
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/132
250
642185
1929155
2026-05-01T06:36:30Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சென்னை காபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமானமயிலை பல்லக்கு மான்யம் என்னுமிடத்தில் ஏழை மக்கள் குடிசைபோட்டு வாழ்ந்து வந்தனர். அதற்காக அவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929155
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||123}}</noinclude>சென்னை காபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமானமயிலை பல்லக்கு மான்யம் என்னுமிடத்தில் ஏழை மக்கள் குடிசைபோட்டு வாழ்ந்து வந்தனர். அதற்காக அவர்களிடமிருந்து வாடகையாக ஆண்டுக்கு ரூ. 1500 அளவில் வசூலிக்கப்படவேண்டும். ஆனால் இக்குறைந்த தொகை கூட பல ஆண்டுகாலமாக சரியானபடி வசூலிக்கப்படாமல் இருந்தது. குடிசை மாற்று வாரியத்திற்கு அந்த நிலத்தை விற்ற தொகைக்கு ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வட்டிமூலம் வருமானம் வருகிறது.
நீண்டகால குத்தகைக்கு கோயில் நிலங்களை சிலர் எடுத்துக்கொண்டு நிலையான கட்டிடங்களைக் கட்டிவிடுகின்றனர் அதனால் குத்தகைக் கெடு முடிந்ததற்குப் பிறகு கட்டிடம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை
எழுகிறது.
சாத்தூரில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை நீண்டகாலக் குத்தகைக்கு ஒருவர் பெற்று நிரந்தரமான சினிமா கொட்டகையைக் கட்டினார். இதே போல் குன்னூரிலும் கோவில் நிலத்தை வாடகைக்குப் பெற்று நிரந்தரமான சினிமா கொட்டகையைக் கட்டினார்.
கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு நிலத்தினுடைய குத்தகைக் கெடு முடிந்துவிட்டது.
கட்டியுள்ள கட்டிடம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை எழுந்து நீதிமன்றம் வரை செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று பல குடியிருப்பு மனைகள்; தொழிற்சாலைகள், தனியார்களால் கடந்த காலத்தில் கட்டப்பட்டு குத்தகைக் கெடு முடிந்த பிறகு மேற்கண்ட நிலைகளே உருவாகியுள்ளது. இவைகள் அரசின் கவனத்திற்கு வந்தவுடன் 1972-ம் ஆண்டு குத்தகைக்கு சொடுக்கும் நிலங்களில் நிலையான கட்டிடங்கள் கட்டக்கூடாதெனவும்; நீண்டகால குத்தகைக்கு கொடுப்பதில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
rioipjxzufdjssrjjvpv4m5abn5y56b
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/133
250
642186
1929156
2026-05-01T06:37:07Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 124 கலைஞர் கோவை மாவட்டத்திலிருக்கும் சிவன்மலை கோயி லுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கரா நிலம் பினாமி பெயரால் சில பெரிய மனித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
124
கலைஞர்
கோவை மாவட்டத்திலிருக்கும் சிவன்மலை கோயி லுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கரா நிலம் பினாமி பெயரால் சில பெரிய மனிதர்கள் அனுபவிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவைகளை கோயிலுக்கே மீட்பதற்கு நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அக்
தஞ்சை மாவட்டம் வலிவலம் இருதயநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான தஞ்சை நிலங்களை கோயிலின் பரம்பரை அறங்காவலர் பினாமி பெயர்களால் அனுபவித்து வந்தார். அந்நிலத்தில் பாடுபடக்கூடிய விவ சாயத் தொழிலாளர்கள் - சர்வோதய இயக்கத் தொண்டர் கள் குத்தகைதாரருக்கே நிலத்தை அனுபவிக்கச் செய்ய வேண்டி னர். அந்த நடவடிக்கைகளும் நீதிமன்றத்தில் இருக்கின்றன.
கோவில் நகைகள், கிரீடம், கவசம் போன்றவை களிலும் தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் மோசடி நடை பெற்றுள்ளதைப் போன்று பொருள்படுகின்ற வகையில் சிலர் செய்தி வெளியிடுவதைக் காண்கிறோம்
கண்
கோவில் நகைகள் பரிசோதனை செய்யப்பட்டு காணிக்கப்படுவதற்கு 2-7-1948 ஆம் ஆண்டில்தான் பரிசோதனை அலுவலர் ஒருவர்; அவருக்கு உதவியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர் அவர்கள் பெரிய கோவில் களிலுள்ள நகைகளை மட்டுமே பரிசோதனை செய்ய முடிந்தது
மூன்று
கழக ஆட்சிக் காலத்தில்தான் மேலும் பரிசோதனை அலுவலர் நியமிக்கப்பட்டு முறையாக பரிசோதனைகள் நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நகைகளை அழித்தோ, மாற்றியோ அல்லது பழுது பார்த்திட வேண்டுமானால் கூட ஆணையரின் முன் அனுமதி பெற்றுத்தான் செய்தாக வேண்டும்.<noinclude></noinclude>
0pihxthrjmagevyk5uyapsq89no0mz1
1929159
1929156
2026-05-01T06:41:47Z
Ramya sugumar
15106
1929159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|124||கலைஞர்}}</noinclude>கோவை மாவட்டத்திலிருக்கும் சிவன்மலை கோயிலுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கரா நிலம் பினாமி பெயரால் சில பெரிய மனிதர்கள் அனுபவிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவைகளை கோயிலுக்கே மீட்பதற்கு நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் வலிவலம் இருதயநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான தஞ்சை நிலங்களை அக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் பினாமி பெயர்களால் அனுபவித்து வந்தார். அந்நிலத்தில் பாடுபடக்கூடிய விவசாயத் தொழிலாளர்கள் — சர்வோதய இயக்கத் தொண்டர்கள் குத்தகைதாரருக்கே நிலத்தை அனுபவிக்கச் செய்ய வேண்டினர். அந்த நடவடிக்கைகளும் நீதிமன்றத்தில் இருக்கின்றன.
கோவில் நகைகள், கிரீடம், கவசம் போன்றவைகளிலும் தி. மு. கழக ஆட்சிக் காலத்தில் மோசடி நடைபெற்றுள்ளதைப் போன்று பொருள்படுகின்ற வகையில் சிலர் செய்தி வெளியிடுவதைக் காண்கிறோம்
கோவில் நகைகள் பரிசோதனை செய்யப்பட்டு கண் காணிக்கப்படுவதற்கு 2-7-1948 ஆம் ஆண்டில்தான் பரிசோதனை அலுவலர் ஒருவர்; அவருக்கு உதவியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர் அவர்கள் பெரிய கோவில்களிலுள்ள நகைகளை மட்டுமே பரிசோதனை செய்ய முடிந்தது
கழக ஆட்சிக் காலத்தில்தான் மேலும் மூன்று பரிசோதனை அலுவலர் நியமிக்கப்பட்டு முறையாக பரிசோதனைகள் நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நகைகளை அழித்தோ, மாற்றியோ அல்லது பழுது பார்த்திட வேண்டுமானால் கூட ஆணையரின் முன் அனுமதி பெற்றுத்தான் செய்தாக வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
f7vo0mtjafpm466jixkbdkn3wf21rwo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/659
250
642187
1929158
2026-05-01T06:41:32Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 659 |bSize = 375 |cWidth = 153 |cHeight = 130 |oTop = 57 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|குப்ளாய்கான் மங்கோலியப் பேரரசு}} மேம்பட்டு விளங்கினார்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்ளாய்கான்|631|குபேரன்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 659
|bSize = 375
|cWidth = 153
|cHeight = 130
|oTop = 57
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|குப்ளாய்கான் மங்கோலியப் பேரரசு}}
மேம்பட்டு விளங்கினார். இவர் முதன்முதலாக கி.பி. 1260-இல் சீனப்பட்டங்களைத் தரித்துக் கொண்டார். தனது வமிசத்திற்கும் சீனமொழியில் நியூவன் (Tayuna = great origin) எனப்பெயரிட்டார். இவரது முயற்சியால் தொன்று தொட்டு வந்த னெப் பழக்க வழக்கங்களும் மங்கோலியப் பண்பாடும் ஒன்று கலத்தன. மதத்துறையில் இலாமைசுடு புத்தமதம் (Lamaist Buddhism) ஆதரிக்கப்பட்டது. மன்னர் குப்ளாய்காலும் இம்மதத்திற்கு மாறினார். புத்த சங்கத்தின் (Buddhist Church) தலைவராக, திபெத்தின் இலாமாவாகப் பக்சுபா (Phags Pa) அமர்த்தப்பட்டார். திபெத்திய எழுத்தினை அடிப்படையாகக் கொண்டு மங்கோலிய மொழிக்கு கி.பி.1269-இல் புதிய எழுத்துகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த எழுத்து சீன மொழியைப் போன்று செங்குத்தாக (Vertical) எழுதப்பட்டது. மதத் துறையில் சமரசக் கருத்துடைய இவர் பிற மதத்தினருக்கும் மத சுதந்திரம் வழங்கினார்.
சீனமொழியில் ஓரளவுதான் பேசத் தெரிந்த போதிலும், இவர் சீனமொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். சீனப்பண்பாட்டு வளர்ச்சிக்கும் இவர் தொண்டுபுரிந்தார். சீன வரலாற்றையும், ஆட்சிக் கலையையும் (State craft) இலக்கியங்களையும் மங்கோலிய மொழியில் பெயர்க்க ஏற்பாடுகள் செய்தார். முதன்முதலில் கி.பி.1216-இல் ஐரோப்பியப் பயணியர் சீனாவிற்கு வருகை புரிந்தபோது, அவர்கள் தம்மைக் காண அனுமதித்ததுடன், அவர்களுடன் உரையாடுவதிலும் மகிழ்ச்சிகண்டார். சீனாவின் பெருங் கால்வாயை கி.பி. 1289-இல் செப்பனிட்டுப் புதுப்பித்து, வடக்கு தெற்கு நேரடிப் பாதையில் மாற்றினார்.
மங்கோலியர் என்று சொன்னாவே அனைவர் மனத்திலும் பயம் தோன்றுவது உண்டு. இதற்கு மாறாகச் சேற்றிலே பிறந்த செந்தாமரையாக மணம் வீகபவர் குப்ளால்கான். சீனப்பெரும் பேரரசராகத் திகழ்ந்த இவர், வரலாற்றில் மாபெரும் வீரராகவும், நாடு பிடிப்பாளராகவும் மட்டுமன்றி, இலக்கிய வளர்ச்சிக்கும் பண்பாட்டு மேன்மைக்கும் உன்னதமான ஆட்சிக்கும் பாடுபட்டவர் ஆவார். சீன வரலாற்றறிஞர்களும் கூட இவரது இலக்கியத் தொண்டையும், பண்பாட்டுத் தொண்டையும் புகழ்ந்து எழுதியுள்ளனர்.{{Right|<b>ம.இ.</b>}}
<b>குபேரன்,</b> செல்வத்திற்குத் தலைவனாகக் கருதப்படுபவன், தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வரலாற்றில் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு முதலே குபேரனுடைய செல்வச் சிறப்புப் பேசப்பட்டு வந்துள்ளது. மிகப்பெரும் செல்வம் பெற்றவனாகக் குபேரனை அனைத்து மக்களும் அறிந்துள்ளனர், குபேரனைப் பற்றிய பல செய்திகள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
குபேரன் என்னும் சொல் அழகற்ற தோற்றமுடையவன் (கு-அழகற்ற, பேரம்-உடம்பு) எனப் பொருள்படும். பத்ம கற்பத்தில் விசிரவசுவிற்கும் இளியிளைக்கும் மானாகத் தோன்றியமையால் இவன் வைச்சிரவணன் என்னும் பெயரையும் பெற்றான். விசிரவகளின் வேறொரு மனைவிக்கு இராவணன் மகனாகத் தோன்றினான். எனவே, குபேரன் இராவணனுக்குத் தமையன் என்று கருதப்படுகிறான்.
குபேரன் முன்னொரு பிறப்பின் (வராக கற்பம்) காம்பிலி நாட்டை ஆண்ட வேள்விதத்தனுக்கு மகனாகத் தோன்றினான். அப்பிறப்பியல் குணநிதி என்று அழைக்கப்பட்டான், குணநிதியும் அவன் தாயும் செல்வத்தை அழித்தமையால் கோபம் கொண்ட வேள்வி தந்தன், மனைவியையும் மகனையும் நாட்டைவிட்டுத் துரத்தினான். துரத்தப்பட்ட குணநிதி ஒரு சிவன் கோயிலுக்குச் சென்றான். அங்குள்ள பொருனைக் கவர்ந்து செல்லத் திட்டமிட்டான். அனைவரும் உறங்கிய பின் வெளிச்சத்திற்காக விளக்கைத் தூண்டினான். பொருளைக் கவர்ந்து கோயிலிலிருந்து வெளியேறும்போது, அங்குப் படுத்திருந்த ஒருவனின் கால் இடறி விழுந்தான். சமையற்காரர்களால் பிடிபட்டுக் கொலைசெய்யப்பட்டான். அன்று சிவராத்திரியான தால், அவன் வெதரிசனம் செய்ததாலும், விளக்கைத் தூண்டியமையாலும் ஏற்பட்ட புண்ணியத்தால்.<noinclude></noinclude>
aukod5a121gjacux89g4g10k9ou5nwo
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/134
250
642188
1929161
2026-05-01T06:44:59Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உடன்பிறப்பே, உன்னை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய தேவாலயச் சுற்றுலாவே நடத்திவிட்டேன்! இவ்வளவு விபரங்களை உன் வாயிலாக நான் அறிவித்த பிறகும்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||125}}</noinclude>உடன்பிறப்பே, உன்னை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய தேவாலயச் சுற்றுலாவே நடத்திவிட்டேன்! இவ்வளவு விபரங்களை உன் வாயிலாக நான் அறிவித்த பிறகும், “ஊழல் ஊழல்!” என்று ஓங்காரக் கூச்சலிடுவோர் ஓயப் போவதில்லைதான்!
ஊரார் உண்மையை உணர இது பயன்படுமல்லவா? அது போதும் எனக்கு!
{{Right|அன்புள்ள,<br>
<b>மு. க.</b><br>
6 – 5 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
8w0bbv43b6kz03bpxs7ezbxu7bzn8wn
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/135
250
642189
1929163
2026-05-01T06:49:31Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} <b>{{x-larger|இதயத் தொடர்பு<br> என்றைக்கும் இருக்கும்}}</b> உடன்பிறப்பே, திருத்தல யாத்திரைக்கு உன்னை அழைத்துச்சென்று திரும்பியபிறகு இடையிலே இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
<b>{{x-larger|இதயத் தொடர்பு<br>
என்றைக்கும் இருக்கும்}}</b>
உடன்பிறப்பே,
திருத்தல யாத்திரைக்கு உன்னை அழைத்துச்சென்று திரும்பியபிறகு இடையிலே இரண்டு மூன்று நாட்கள் கடிதத் தொடர்புகொள்ள முடியாமைக்கு வழக்கம்போல் என்னை மன்னித்துவிடு!
எழுத்துக்களின் வாயிலாக நம் இதயங்கள் சங்கமமாகின்றன! நான் உன்னை நேரிலே காணுகிற உணர்வையும் நீ என்னை நேரிலே காணுகிற உணர்வையும், முறையே கடிதம் எழுதும்போதும் நீ கடிதத்தைப் படிக்கும்போதும் பெறுகிறோம்.
இடையிடையே தொய்வு ஏற்படக்கூடிய சூழ்நிலை! நீ என் மீது கோபித்துக்கொள்ள மாட்டாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
ஏனெனில், எவ்வளவு துன்பச் சுமைகளை என் தோளும் தலையும் தாங்கிக்கொண்டிருந்தாலும்; இதயம் வலியெடுக்கிற அளவுக்கு இடுக்கண்கள் நச்சுக்கணைகளாகத் தாக்கினாலும்; நான் நெருப்பில் நிற்கவைக்கப்பட்டாலும்; நீர்ச் சுழலில் கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் தூக்கி எரியப்பட்டாலும், உன்னுடைய அன்பு முகத்தை நினைத்துக் கொண்டு, அய்யோ! நமது உடன்பிறப்புக்காகவாவது<noinclude></noinclude>
kku9u2van5r1piulavzvk8i2g7bv5wc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/660
250
642190
1929164
2026-05-01T06:54:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கலிங்கநாட்டு அருந்தமனுக்கு மகளாகப் பிறந்தான். தமன் என்ற பெயர் பெற்ற அவன் சிவனை நோக்கித் தவஞ்செய்தான். இறைவன் காட்சி அளிக்க உமையம்மையி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பகருணன்|632|கும்பகருணன்}}</noinclude>கலிங்கநாட்டு அருந்தமனுக்கு மகளாகப் பிறந்தான். தமன் என்ற பெயர் பெற்ற அவன் சிவனை நோக்கித் தவஞ்செய்தான். இறைவன் காட்சி அளிக்க உமையம்மையின் ஒளியைக் கண்டு கண்பார்வை இழந்தான். மீண்டும் சிவனை வேண்டிப் பொற்கண் பெற்றான். அளகை நாட்டுக்கு அரசனாகும் பேற்றைச் சிவன் அவனுக்கு அருளினான், மேலும், அவனைத் தன் தோழனாகவும், அமைச்சனாகவும் சிவன் ஏற்றான் என்று காசிகாண்டம் குபேரனது முற்பிறப்பு வரலாற்றைக் கூறுகிறது.
குபேரன் எண்திசைகளில் ஒன்றான வடதிசைக்குக் காவலனாவான் என்றும், பதிணெண்கணங்களில் இயக்கர்களுக்கும் சின்னரர்களுக்கும் தலைவன் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவன் செல்வத்திற்குத் தலைவனாகி இருநிதிக் கிழவன் எனவும் கூறப்பெற்றான். விசிரவகளிற்கு மகனாகத் தோன்றியமையால் குபேரன், வைச்சிரவணன் என்னும் பெயராலும் குறிப்பிடப்பட்டுள்ளான். வில்லிபுத்தூரார் பாரகமும் பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணமும் குபேரனைத் தனதன் என்னும் பெயரால் குறிப்பிடுகின்றன. இவன் மனைவி சித்திரரேகை என்பவன் மான் தனசுபரன் என்பவனாவான், குதிரை, கிளி, தரன் ஆகியவை இவனுடைய வாகனங்களாகும். புட்பக விமானம் இவனுக்குரியது. இராவணன் குபேரனுடன் போர்செய்து அப்புட்பக விமானத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் கட்கம் எனப்படும் ஆயுதத்தை ஏந்தியவன், சீரக்கத்தாரை தனக்குரிய மாலையாக அணிந்தவன். இவனுடைய பூந்தோட்டம் சைத்திரரகம் என்பதாகும்.{{Right|<b>அ.அ.ம.</b>}}
<b>கும்பகருணன்</b> இராமாயணத்தில் இடம்பெறும் கதை மாந்தருள் ஒருவன். இவன் விச்சிரங்க என்னும் முனிவருக்கும் கைகசி என்பாளுக்கும் மகனாய்ப் பிறந்தவன், ‘பேரியல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன்’ என்னும் வீடணன் கூற்றிலிருந்து இவன் இராவணனுக்குத் தம்பியும் வீடணனுக்கு அண்ணனுமாவான் என்பது தெரிகிறது. ‘ஞாலம்’ அடங்க விழுங்கினாலும் நிறையாத வயிற்றன்; நெடுவரை போல் நீண்ட உருவினன்; நிமிர் கையன்: பிறை போன்ற பற்களையும், பிலத்துவாரம் போன்ற அகன்ற வாயினையும் உடையவன்; பெருத்த விழியும், பெரும் பதியும் கொண்டவன்’ என்று இவன் உருவத்தோற்றத்தை உத்தர காண்டம் எடுத்துரைக்கும். ‘தோளொடு தோள் ரெலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பல கழியும்’, என்பது இவன் தோற்றம் குறித்த கம்பரின் படப்பிடிப்பாகும். ‘ஆறு நூறு சகடத்தடிசிலும் நூறுநூறு குடங்களும்’ கும்பகருணனின் உணவாரும் என்பதினின்றும் இவனது பெரும்பசியை ஒருவாறு ஊகித்தறியலாம்.
கும்பகருணன் சிங்கக் கொடியுடையவன்: சிவ பெருமானிடமிருந்து முத்தலைச் குலத்தைப் பெற்றவன், ‘கூற்றையும் ஆடல் கொள்ளும் திறம் வாய்ந்தவன்; தேவர்களை முதுகு கண்டவன்; ஐராவதத்தை இந்திரனோடு சுழற்றியவன்; ஐராவதத்தின் தந்தத்கைப் பறித்தவன்; உயர்த்த தவத்தினால் உயர்ந்த வரங்களைப் பெற்றவன்’ என்று இவன் பெருமைகள் சம்பரால் பேசப்படுகின்றன.
‘ஊழி நாளும் உறங்குவான்’ என்பது கும்பகருணனின் சிறப்பு அம்சமாகும். இவன் இளமையில் மிக்க தவம் செய்கையில், இவனுக்கு வேண்டும் வரம் நன்கும் நோக்கொடு பிரமன் தோன்றினான். அக்கடவுளிடம், ‘யான் என்றும் அழியாது நித்தியனாயிருக்க வேண்டும்’ என்று வரங்கேட்கத் தொடங்கியான் தேவர்கள் வேண்டுகோளின்படி கலைமகள் சூழ்ச்சியால் ‘என்றும் யான் நித்திரையுள்ளவனாக இருக்கவேண்டும்’ என்று வாய்தவறிக் கேட்க, அவ்வாறே வரம் கொடுக்கப்பட்டது. அதனால் இவன் என்றும் பெருந் நூக்கம் உடையவனானான், இவன் உறங்குவதற்கென்றே ஏழு ஓசனை அகன்றுயர்ந்த மண்டபம் கட்டப்பட்டது. அத்தகு மண்டபத்துள் ஆயிரந்தவைகளையுடைய ஆதிசேடனைப் போலவும், கருங்கடல் பரந்து கிடந்தாற் போலவும், உலகத்து இருளெல்லாம் ஒருங்கு கிரண்டாற் போலவும், தீவினை உருக்கொண்டாற் போலவும் கிடந்து உறங்கினான் என்று இவன் துயிலுங்காட்சி கம்பரால் காட்டப்பெறுகிறது. உறங்குகிற கும்பகருனனை இராவணனின் பணியாட்கள் சங்கு, தாரை சின்னங்கள் கொண்டு ஒலியெழுப்பியும், குதிரைகலை மேலே செலுத்தியும் எழவில்லை. ஆயிரம் முசலப்படை கொண்டடிப்ப இறந்தவன் எழுத்தாற்போல் எழுத்திருந்தான்.
கும்பகருணன் பிறப்பால் அரக்கர்குலத் தோன்றலாயினும் அறத்துஞ்கம் உள்ளமுடையவன்: நீலன் என்னும் வானர வீரனுடன் மற்போர் செய்யப் புருந்த போது அவன் படை தாங்காது வெறுங்கையனாய் நிற்பதைக் கண்ட கும்பகருணன் அவன்மேல் தன் முந்தலைச் சூலத்தைச் செலுத்தாது ‘போர் அறம்’ காத்தான், இராவணன் சீதையைச் சிறை கொண்ட செய்வில் கும்பாருணனுக்கு உடன்பாடில்லை. இத்தீச் செய்கையால் தன் அண்ணன் இராவணனின் ‘வானமும் வையமும் வளர்த்த வான்புகழ்’ அழித்ததாகவே கருதுகிறான். பிறர்மனைகவர்ந்த செயல் ‘அறமாகாது, உயிர்க்கேடு உண்டாக்கும்’ என்று ஒருமுறைக்கு இருமுறை தன் அண்ணனை எச்சரித்து அறிவுரை கூறுகிறான். ‘திட்டியின்விடமன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ?’ பொலங்கொள் தோளியை தன்றென தாயக விடுதி எனவரும் இவனுடைய வாய்ச் சொற்-<noinclude></noinclude>
h3g0ugpw2olifsnq7nowzqfi015y0dd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/661
250
642191
1929168
2026-05-01T07:41:46Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் இவன்தன் அறனவில் கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். போர்க்களத்தில் நிகழ்ந்த கும்பகருணன் வீடணன் உரையாடல் கும்பகருணனின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பகருணன்|633|கும்பகோணம்}}</noinclude>கள் இவன்தன் அறனவில் கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
போர்க்களத்தில் நிகழ்ந்த கும்பகருணன் வீடணன் உரையாடல் கும்பகருணனின் சிறந்த பண்பு நலன்களைக் காட்டுகிறது. ‘இராமனை அடைந்தால் அவன் அபயம் அளிப்பான், உலக வாழ்க்கையை ஒழித்து விடுபேறு தருவாள்; எனக்கு இராமன் தந்த செல்வத்து இலங்கையும் அரசுமெல்லாம் யான் உனக்குத் தந்து உன் ஏவலின்படி நிற்பேன்’ என்றெல்லாம் இராமனுடன் வந்து சேருமாறு வீடணன் கும்பகருணனுக்கு ஆசை மொழிகள் கூறுகிறான், தன் தம்பியின் கட்டுரைகளைக் கேட்ட கும்பகருணன் வாழ்நாளின் சிறுமையையும், செல்வத்தின் புன்மையையும் தன்மனத்துட் கொண்டான். தான் உறங்கி எழும்போதெல்வாம் தன்னை மதுமாமிசங்களால் ஊட்டி வளர்த்துப் பின்னர்ப் போர்க்கோலஞ் செய்துவிட்ட அண்ணன் இராவணனையும் நீள நினைந்து பார்த்தான், தான் இராமனைச் சென்றடைவதை அண்ணனுக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகமாகவே கருதினான். வளர்த்து உருவாக்கி வாழ்வு தந்த அண்ணனுக்கு உயிர்கொடாது, உயிர் கருதி, உயர்வுதரும் நலன்கருதி இராமன்பால் அடைக்கலம் புகுவதை அவனது அறவுள்ளம் விரும்பவில்லை. தன்னை வளர்த்த தமையன் நிறத்துச் செய்த்தன்றி காட்டி மரணத்தை ஏற்றுக்கொள்வதையே உண்டவர்க் குரிய செயலாக அவன் உள்ளம் கருதிற்று. அவனும் அவ்வாறே செயற்பட்டான்.
கும்பகருணன் தன் தம்பி வீடணன்பால் அளவற்ற அன்பு கொண்டவன், அண்ணன் இராவணனின் மறச்செய்கை காரணமாகத் தம்பி வீடனன் இராமன்பால் அடைக்கலம் புகுந்தது சீரிய செயலே என்பது கும்பகருணனின் கருத்து. ‘உனக்கு அது தக்கது’ என்னும் சொற்களின் அக்கருத்தை வெளியிட்டுள்ளான், ‘வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ’ என்று இடித்துக் கூறி, இராமன்பால் அடைக்கலம் அடைந்த வீடணனை இராவணன் மீண்டும் காண்பானாகில், தம்பியென்றும் நினையாது அருளும் செய்யாது கொல்லுவான் என்பதை உணர்ந்த கும்பகருணன், இராமனுடன் போரிட்டு இறக்கும்போது, ‘உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் ஒருபொழுதும் எம்பி பிரியானாக அருளுதி’ என்று இராமனிடம் அருள் வேண்டும் காட்சி, வீடணன்பால் அவன் கொண்டுள்ள பேரன்பிளைத் தெரிவிக்கும்.
குணங்களால் உயர்த்த கும்பகருணன் போர்வலியாலும் உயர்ந்து தோன்றினான். அங்கதன், அனுமன், இலக்குவன், சுக்கிரிவன், நீலன் ஆகியோரை எதிர்த்தவன் இறுதியில் இராமனை எதிர்த்துப் போரிட்டான். தன் கைகால்கள் இழந்தான்; செவியொடு மூக்கு மிழந்தான். தன் விருப்பப்படியே கடலுள் அமிழ்ந்து தன் இறப்பைத் தழுவிக் கொண்டான். வீரமும், மானமும், நன்றியுணர்வும் மிக்க ஒருவனாகக் கும்பகருணன் திகழ்கின்றான்.{{Right|<b>இரா.செ.</b>}}
<b>கும்பகோணம்</b> தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சைக்கு 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 661
|bSize = 375
|cWidth = 255
|cHeight = 155
|oTop = 278
|oLeft = 57
|Location = center
|Description =
}}
{{center|மகாமகக் குளம் - கும்பகோணம்}}<noinclude></noinclude>
lltfjt7jhii3uh6pnj56gf9sijibto0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/662
250
642192
1929169
2026-05-01T07:54:24Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிய நகரம். இதன் தெற்கில் அரிசிலாறும், வடக்கி காவிரியும் ஓடுகின்றன. இது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வட்டங்களுள் (Taluk) ஒன்றாகவும் திகழ்கிறது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பகோணம்|634|கும்பகோணம்}}</noinclude>கிய நகரம். இதன் தெற்கில் அரிசிலாறும், வடக்கி காவிரியும் ஓடுகின்றன. இது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வட்டங்களுள் (Taluk) ஒன்றாகவும் திகழ்கிறது. இது சங்க காலத்தில் குடந்தை என்றும், சம்பத்தர், அப்பர் தேவாரங்களில் திருக்குடந்தை, திருக்குடமூக்கு என்றும் குறிக்கப்படுகிறது. பிற்காலச் சோழர்களின் கல்வெட்டுகளிலும் இவ்வூர் குடமூக்கு என்றே பெயர்பெற்றுள்ளது. தக்கயாகப் பரணி பாடப்பட்ட கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் ‘கும்பகோணம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூரைச் சுற்றிலும் முக்கியமான சோழர்காலத் தலங்களான பழையாறை, தாராசுரம், திருபுவனம், திருவிடைமருதூர் போன்றவை உள்ளன. கும்பகோணத்தில் உள்ள பல புகழ்மிக்க கோயில்களுள் மிகத் தொன்மையானது கும்பேசுவரர் கோயில் ஆகும். இதனைச் சம்பந்தரும் அப்பரும் பாடியுள்ளனர். திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் எனத் தேவாரத்திலும், 9-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளிலும் கூறப்படும் நாகேசுவரர் கோயில் ஊரின் நடுவில் உள்ள பெரிய கோயிலாகும். இக்கோயில் தொடக்கத்தில் பௌத்தம் சார்த்திருந்து பிற்காலத்தின் சைவ சமயக் கோயிலானது என்று கருதுவாரும் உளர். இக்கோயிலில் வேலைப்பாடு மிக்க கல்தேர் ஒன்று உள்ளது. சம்பந்தர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் குடந்தைக் காரோணம் பற்றிப் பாடியுள்ளார். காரோணம் என்பது சைவ சமயத்தின் ஒரு பிரிவாகிய காளாமுக சைலத்தின் தலைமையிடமாகும். சோழ நாட்டில் குடந்தைக் காரோணம், நாகைக் காரோணம் என இரண்டு உள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 662
|bSize = 375
|cWidth = 115
|cHeight = 160
|oTop = 235
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{center|சாரங்கபாணி கோயில்-கும்பகோணம்}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 662
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 185
|oTop = 68
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|இராமசாமி கோயில்-கும்பகோணம்}}
இப்போது பாணபுரீசுவரர் கோயில் என்று சொல்லப்படும் கோயிலே முன்னானைய சோமநாதர் கோயிலாகும். இக்கோயில் இருந்த இடம் சோமநாத மங்கலம் என கி.பி. 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. கும்பகோணத்தின் ஒரு பகுதியே சோமநாத மங்கலம் எனப் பெயர் பெற்றுப் பின்னாளில் அப்பெயரை இழந்தது. மேற்கூறப்பட்ட சிவன் கோயில்களைத் தவிர இவ்வூரில் அபிமுகேசுவரர், கௌதமேசுவரர், கோமோர், ஆதிவிசுவேசுரர், காளகத்திநாதர் ஏகாம்பரேசர் கோயில்களும் உள்ளன.
இவ்வூரில் பல வைணவக் கோயில்களும் உள்ளன. அவற்றுள் சாரங்கபாணி கோயில் ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட கோயிலாகும். இது பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் போன்றோரால் பாடப்பெற்றதலமாகும். இங்குள்ள நாட்டியக் கரணச் சிற்பங்களும் கோபுரத்தின் மேற்றளத்தில் உள்ள ஓவியங்களும் அழகுமிக்கன. இக்கோயிலுக்குரிய தேர்கள் இரண்டு மரவேலைப்பாடு மிருந்து காணப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude>
ayrhrywelaeae785gi5n6rjqm2570r7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/663
250
642193
1929178
2026-05-01T08:07:26Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிற்பச் செழுமை வாய்ந்த இராமசாமி கோயில் அாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இராமாயணக் கதை ஓவியங்களாக இக்கோயிலில் தீட்டப்பட்டுள்ளது. சக்கரபா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929178
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பம்|635|கும்பமேளா}}</noinclude>சிற்பச் செழுமை வாய்ந்த இராமசாமி கோயில் அாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இராமாயணக் கதை ஓவியங்களாக இக்கோயிலில் தீட்டப்பட்டுள்ளது. சக்கரபாணி, பூவராகர், இலக்குமி நாராயணர், வரதராசர், இராமசுவாமி, நாராயணர், வேத நாராயணர், கோபாலர் போன்ற கடவுளர்களின் கோயில்களும் இவ்வூரில் உள்ளன.
வீரசைவம் மிகச் சிறப்பான நிலையைப் பெற்று இவ்வூரில் திகழ்ந்துள்ளது. ‘குடந்தையம் பதியில் கோதிலாப் பெரிய மடத்தனில் வாழ் வீரமாயேச்சுரர் வாழியே’ என்னும் தக்கயாகப்பரணிப் பாடல் வரிகள் கி.பி. 12-ஆம் நூற்றாண்டளவில் இங்கிருந்த வீர சைவ மடத்தைக் குறிப்பிடுகிறது.
இவ்வூரின் மற்றொரு சிறப்பு 12 ஆண்டுகட்கு ஒரு முறை நிகழும் ‘மகா மகம்’ என்னும் வீழா ஆகும். மகாமகக் குளத்து நீர்பற்றி நாவுக்கரசரும் சேக்கிழாரும் குறிப்பிடுகின்றனர். இக்குளத்தைச் சுற்றிலும் 16 மண்டபங்கள் உள்ளன. அவை தஞ்சை நாயக்க மன்னர்களின் அமைச்சர் கோவிந்தநீட்சிதரால் கட்டப்பட்டவை, அவற்றுள் ஒன்றில் இரகுநாத நாயக்கர் செய்த துலாபார தானம் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளது. மகாமகக் குளத்தில் நீராடுவதை இந்துக்கள் புனிதமாகக் கருதுவர். இதன் பரப்பு 10 ஏக்கர்.
கும்பகோணத்தில் காவிரியின் வடகரையில் அரசினர் ஆடவர் கல்லூரி ஒன்று உள்ளது. கணித மேதை இராமானுசம், சர் சி.பி. இராமசாமி ஐயர், அல்லாடி கிருட்டிணசாமி, உ.வே.சா. போன்ற அறிஞர் பெருமக்கள் இவ்வூருடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
கும்பகோணம் பட்டு நெசவு, உலோகச் சிற்பங்கள், வார்ப்புக் கலை, பாத்திரத் தயாரிப்பு முதலிய தொழில்களுக்குச் சிறப்புப் பெற்றது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இவ்வூரைப் பற்றித் திருக்குடந்தைப் புராணம் பாடியுள்ளார். திருக்குடந்தை மகாத்மியம் முதலாகப் பல நூல்கள் இவ்வூரின் பெயர் தாங்கிப் பெருமை பேசும் வண்ணம் பிற்காலத்தில் சிற்றியக்கியங்களாகத் தோன்றியுள்ளன. இந்நகரத்தின் மக்கள்தொகை 132,677 (1981).{{Right|<b>சொ.சா.</b>}}
<b>கும்பம்</b>: பன்னிரண்டு இராசிகளுள் பதினொன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. 27 நட்சத்திரங்களையும் மேடம் முதல் மீனம் முடியவுள்ள 12 இராசிகளுக்கும் பங்கிட்டு வைத்தால் இராசிக்கு இரண்டேகால் நட்சத்திரம் வரும். அவ்வாறு வரிசையாக வரும்போது கும்பத்திற்கு அவிட்டம் பின்னரையும் சதயமும் பூரட்டாதி முன் முக்கால் பகுதியும் வரும். இந்த நட்சத்திரக் கணக்குக்குள் பிறந்தவர்கள் கும்பராசிக்காரர்கள் ஆவர், அந்தக் கும்பராசியில் சந்திரன் இருப்பான். அதைக் கொண்டே சோதிடர்கள் கும்பராசி என்று உடனே கூறிவிடுவர், மேலும், பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு அதற்குத்தக்கவாறு இலக்கினத்தைக் குறிப்பர். கும்பலக்கினம் என்றால் கும்பத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருப்பர். சோதிடர்கள் இலக்கினத்தைத் தான் முக்கியமாகம் கொண்டு பலன் சொல்லுவார்கள். இராசியைக் கொண்டு பலன் சொல்வது அரிது. கும்பத்திற்குக் குடம், சாடி, குடங்கர் என வேறுபெயர்கள் உள என்று சூடாமணி நிகண்டு தெய்வப்பெயர்த் தொகுதியிலுள்ள 66-ஆம் செய்யுள் குறிப்பிடுகிறது. சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் முடியப் பன்னிரண்டு மாதங்களையும் மேடம் முதலிய பன்னிரண்டு இராசிகளுக்குப் பொருத்தி, மேடரவி முதலிய பெயர்களாகக் குறிப்பிடுவது வழக்கம், அம்முறையில் மாசி மாதத்திற்குக் கும்பரவி எனச் சோதிடர் பெயர் குறிப்பிடுவர்.
கும்பலக்கினத்திற் பிறந்தவன் மனத்திடமுடையவன்; எவ்வித வருத்தங்களுக்கும் அஞ்சமாட்டாள்: சரீரகளமும் கருமை கலந்த நிறமுமுடையவன்; நூலசரீரி; தன்னைப் புகழ்ந்து கொண்டேயிருப்பான். பிறரை இகழவும் செய்வான்; குள்ளமாயிருப்பான்; சிவந்த கண்ணையுடையவன்: பொதுவாகச் வாழ்க்கையுள்ளவன்; அதிகம் படிப்பில்லாவிட்டாலும் இந்த இலக்கினமுடையான் தெரிந்த அளவில் உள்ள கல்வியைக் கொண்டே புகழ்பெறுவான்: மானமுள்ளவன் பித்த ரோகமுடையவன்: செய்ந்நன்றி மறப்பவன்: பெண்மோகமுள்ளவள். இவன் 7.11 ஆம் வயதுகளில் வாகனம் தவறுதல் முதலிய கண்டமும் திடீரென்று நோய்களால் துன்பமும் அடைவான். அதில் பிழைத்தால் 19-ஆம் வயதில் சத்துருபயல் முதலியவற்றால் கண்டம் உண்டு. அதற்கும் மேல் இந்த லக்கினத்தைச் சுபர் பார்த்தாலும் இலக்கினத்தில் சுபர் இருந்தாலும் 80 வயது வரை ஆயுளோடிருப்பான் என்று சாதகாலங்காரம் 205 ஆம் செய்யுன் குறிப்பிடுகிறது. சோதிடப்பிரஞ்ஞான தீபிகை என்னும் நூலும் பக்கம் 340-இல் மேற்கண்ட செய்திகளையே வலியுறுத்திக் கூறுகின்றது.{{Right|<b>இரா.ச.</b>}}
<b>கும்பமேளா</b>: வட இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களுள் தலை சிறந்ததும், இலட்சக் கணக்கில் மக்கள் கலந்துகொள்ளக் கூடியதுமான ஒரு விழா, இக்காலத்தில் அலகாபாது என்று கூறப்படும் பிரயாகையில் திரிவேணி கூடலில் (சங்கமத்தில்) நடத்தப்படும் விழாக்களுல் குறிப்பிடத்தக்கது கும்ப-<noinclude></noinclude>
99sjqmiajyceli90jzhf7qf27i13hey
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/664
250
642194
1929188
2026-05-01T08:17:36Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேளா, மாசித் திங்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது தொன்மையான மரபாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு தடவை கும்பத்தில் குருவும் சூரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929188
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பல்|636|கும்பல்}}</noinclude>மேளா, மாசித் திங்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது தொன்மையான மரபாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு தடவை கும்பத்தில் குருவும் சூரியனும் இணையும் காலம், கும்பமேளா என்னும் புனிதமான காலம், கும்பத்தில் நிகழும் கிரகராகிச் சேர்க்கையின் விளைவாக இது இப்பெயர் பெற்றது. வடநாட்டிலுள்ள அரித்துவாரம், பிரயாகை, உச்சயினி, நாசிக்கு ஆகிய தீர்த்தங்களில் மக்கள் இலட்சச்கணக்கில் கூடி நீராடுவர். குரு சூரியனை ஒரு தடவை சுற்றிவரப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. எனவே, இவ்விழா பன்னிரண்டு ஆண்டுகட்கு தடவை சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது. இந்தியாவில் இவ்விழா தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பிரயாகையில் நடைபெற்ற கும்பமேளா விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாகவும், அதனைத் தாம் அருசவர்த்தன மன்னனுடன் தேமில் கண்டதாகவும் சீனப் பயணி யுவான் சுவாங்கு குறிப்பிட்டுள்ளார்.{{Right|<b>ம.இ.</b>}}
<b>கும்பல்</b>: ஏதேனும் ஒரு காரணத்திற்காகக் கூடுகின்ற கூட்டம் கும்பல் (Crowd) எனப்படுகிறது. ஒழுங்காள அமைப்பின்றி, அப்போதைக்கு, நேரடியாகச் சந்தித்துக் கொள்கின்ற நெருக்கமான கூட்டமாக உள்ள மக்களைக் கும்பல் என மெக் ஈவர் (Mac Iver) குறிப்பிடுகிறார். இவ்வாறே, மசும்தார் (Majumdar) என்ற அறிஞரும், எதிர் பாராத விதமாக, எந்தவித முன்னேற்பாடுமின்றி ஆர்வத்துடன் தனிப்பட்ட மனிதர்களுக்குன் உருவாகின்ற கூட்டமைப்பினைக் கும்பல் என்கிறார். ஆனால், கிம்பால்பங்கு (Kimbaill Young) என்ற அறிஞர், ஒரே நோக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பல மக்கள் கூடியிருப்பது கும்பல் எனப்படுவதாகக் கூறுகிறார். தூண்டுதல்களுக்காகத் தங்களுக்குள் மறுவினை (reaction) செய்கின்ற, அப்போதைக்கு ஒன்று கூடுகின்ற ஒரு மக்கள் தொகுப்பினைக் கும்பல் எனக் கொள்ளலாமெனக் கர்ட்டன் (Hurton), கண்ட்டு (Hunt) போன்ற அறிஞர்களும் கூறுகின்றனர். கும்பலும் கும்பல் நடத்தைகளும் பல அறிஞர்களால் வேறுபட்ட பல வழிகளில் ஆராயப்பட்டுள்ளன. இருப்பினும் சில பொதுவான பண்புகளையும், நடத்தைகளையும் கும்பல் கொண்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
கூட்டு வாழ்க்கை மனித சமுதாயத்திற்கு மிக அவசியமான ஒன்று எனினும், நிலையற்ற கும்பல் அவசியமானதன்று, ஒரு நிகழ்ச்சி அல்லது சமூகத்தின் மாறுதல் அல்லது எதிர்பாராவிதமாக ஏற்படும் விபத்து போன்றவை ஒரு கும்பல் கூடக் காரணமாகும். இக்கும்பலானது சமூக நிறுவனத்திற்குள் ஏற்படுவதால் நிலையற்றதாயினும் ஓரளவிற்கு ஒற்றுமையுடன் இருக்கின்றது. மன எழுச்சியானது (Emotion) கும்பலில் இருக்கும் மக்களுக்கு ஒரு கூட்டு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. அனைத்து மக்களுக்கும் ஒரே அளவில், ஒரே நேரத்தில் உணர்ச்சி எழுவதால் சில சமயங்களில் கும்பலின் நடத்தையானது எல்லை மீறியும் பயனற்றும் போகிறது.
கும்பல் என்பது ஒரு முறைப்படுத்தப்படாத அல்லது கட்டுப்பாடற்ற ஒரு குழுவாகும். கூடுபவர்களுக்குள் காணப்படும் இடைவினையானது (Interaction) பொதுமன எழுச்சியைக் கொண்டு செயற்படுகிறது. சில சமயங்களில் அளவுக்கு மீறிய தவறான உணர்ச்சி உடையவர்களாகவும் (Fanatic) மாறுகின்றனர். மேலும், தத்தம் ஆளுமையை இழத்து கீழ்நிலையில் இலங்குகின்றனர். அனைவரும் ஒன்றுகூடிச் செய்வதால் அவர்களிடையே பாதுகாப்பு, வலிமை அல்லது ஆற்றல் போன்றவை காணப்படுகிறது. அனைவரும் ஒரே நோக்கத்துடன் முறையான அல்லது முறையற்ற செயலைச் செய்வர். அதாவது, கூக்குரல், மெய்ப் பாட்டசைவு (Gesture), தோற்ற அமைவு (Posture) போன்ற இயல்பூக்கங்களைக் கொண்டு தாமாகவே செயற்படுகின்றனர். அந்நேரங்களில் மனிதனுடைய பகுத்தறிவு. சிந்தனை, முன்னறிவு ஆகியவை செயற்படுவதில்லை; பொதுவாகக் கும்பலிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தனது செயல்களைச் சீர் தூக்காது செயற்படுகிறான். எடுத்துக்காட்டாக, கிளர்ச்சி (Riot), வெறி (Fad), மன மாறாட்டம் (Craze), பீடு (Panic), மிரள் திறனோட்டம் (Stampede) போன்றவை கும்பலின் முக்கிய பண்புகளாகும்: இத்தகைய பண்புகளைப் பிற குழுக்களில் காண முடியாது. மக்களுடைய சிலிர்ப்பு (Thrill), இதயத் துடிப்பு மிகுதல், பூரிப்பு (Exhilaration) போன்றவை கும்பலில் மிகுந்து கொண்டிருக்கும். ஒரு கும்பலானது செயற்படத் தொடங்கினால் முடிவு காணும்வரை அதனைக் கலைக்க முடியாது. எதிர்பார்த்த முடிவினை அடைந்து விட்டால் கும்பன் கலைந்து விடும்.
பொதுவாகக் கும்பலிலுள்ள மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஒருவனைத் தலைவனாக ஏற்று அவனது கட்டனைக்கு இணங்கி நடக்கின்றனர். ஒன்று சேர்ந்து முழக்கமிடுதல், பாடுதல், ஆடுதல் போன்ற பண்புகளைக் கொண்டு கும்பமுடைய ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர். கும்பல் நடத்தையானது தனி மனிதனுக்கு, ஓரளவு தன்னம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. ஆனால், தனி மனப்பான்மை, உறுதியான பழக்க வழக்கங்கள் போன்றவைகளைக் கொண்டவர்கள் கும்பலில் கலந்து கொள்ள இயலாதவர்களாகின்றனர்.{{nop}}<noinclude></noinclude>
hcmepslye1ytpyrlfr43v9b8jgdr2wq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/665
250
642195
1929198
2026-05-01T08:27:02Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 665 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 150 |oTop = 65 |oLeft = 10 |Location = center |Description = }} {{center|சாதாரணக் கும்பல்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 665 |bSi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929198
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பல்|637|கும்பல்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 665
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 150
|oTop = 65
|oLeft = 10
|Location = center
|Description =
}}
{{center|சாதாரணக் கும்பல்}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 665
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 150
|oTop = 250
|oLeft = 10
|Location = center
|Description =
}}
{{center|வெளிப்பாட்டுக் கும்பல்}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 665
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 160
|oTop = 60
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|கிளர்ச்சிக் கும்பல்}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 665
|bSize = 375
|cWidth = 162
|cHeight = 138
|oTop = 262
|oLeft = 180
|Location = center
|Description =
}}
{{center|மரபுக் கும்பல்}}
{{center|கும்பலின் வகைகள்}}
{{nop}}<noinclude></noinclude>
ohzi1djl5izvmarfn7yb583h5c62op7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/666
250
642196
1929200
2026-05-01T08:37:23Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொதுவாகக் கும்பல்கள் பலவகைப்படுகின்றன சமுதாயத்தின் பிற பகுதிகளைப் பாதிக்காமல் விரைவாகத் தோன்றிக் கலையக் கூடிய கும்பல்கள் அதிகமாக உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பல்|638|கும்பல்}}</noinclude>பொதுவாகக் கும்பல்கள் பலவகைப்படுகின்றன சமுதாயத்தின் பிற பகுதிகளைப் பாதிக்காமல் விரைவாகத் தோன்றிக் கலையக் கூடிய கும்பல்கள் அதிகமாக உள்ளன. இவை, அப்போதைக்குரியவை; மேலும் அத்தகைய கும்பலுக்குக் குறிப்பிட்ட வரைமுறையோ பண்பாடோ இருப்பதில்லை. மக்களின் பாரம்பரிய நோக்கங்களையும் பழக்க வழக்கங்களையும் செயற்படுத்தி ஒரு குழு அல்லது ஓர் அமைப்பு நிலைபெறக் கூட்டுகின்ற கூட்டம், குழ்நிலைக்கேற்பக் கூட்டப்படும் கும்பலாகும். எடுத்துக்காட்டாக, அரசியல் பொதுக் கூட்டங்கள், சமயச் சார்பான கூட்டங்கள், வினையாட்டையோ திரைப்படத்தையோ கண்டுகளிக்கின்ற கூட்டத்தவர் பார்ப்போர்-கேட்போர் கும்பல் எனப்படுவர். வாழ்க்கையில் ஏற்படும் சோர்வு, சலிப்புப் போன்றவைகளைப் போக்குகின்ற விருந்துக் கும்பல், நடனக் கும்பல் போன்ற பொழுது போக்குக் கும்பல்கள் ஒரு வரன்முறையினை மேற்கொண்டு செயற்படுகின்றன. எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு போன்ற பொது நன்மைகளைப் பெறவும் கும்பலில் பங்கு கொள்கின்றனர். வெள்ளம், தீ, போர் போன்ற சூழ்நிலைகளிலிருந்து வெளியேறுகின்ற மக்கள் கூட்டம் அச்சம் கொண்ட கும்பல் (Panicky Crowd) எனப்படுகிறது. சில நேரங்களில் காண்போர் (Spectator) கும்பலிலும் மக்கள் இடம் பெறுகின்றனர். கிளர்ச்சிக் கும்பல், கொள்ளைக் கூட்டம் போன்றவை தீவிரக் கும்பல் (Active Crowd) எனப்படுகின்றன, இவை சமூக முறைப்படியாள நெறிகளுக்கு அப்பாற்பட்டு விரோதம், கோபம் போன்றவைகளைக் கொண்டு செயற்படுகின்றன.
இவ்வாறான பலதரப்பட்ட கும்பல்களைச் சமூகவியல், உளவியலறிஞர்கள் 1. சமூக அமைப்புசார் கூடும் கும்பல்கள் (Crowds leased on Social structure), 2. தற்செயலாகக் கூடும் கும்பல்கள் (Casual crowds), 3. சட்டப்புறக்கணிப்புக் கும்பல்கள் (Law-less crowds) என மூன்று வகையாகக் கூறுகின்றனர் ஒருபடித்தான கும்பல்கள் (Homogenous), பல படித்தான கும்பல்கள் (Heterogenous) எனக் கும்பல்கள் இருவகைப படுவதாக லே போன் (Le Bon) என்ற அறிஞர் கூறுகிறார். தல்செயலாகக் காரணமின்றிக் கூடுகின்ற தெருக் கும்பல்களும் (Street crowds), சில காரணங்களுக்காகக் கூட்டப்படும் பாராளுமன்றக் கூட்டம் போன்றவைகளும் பண்படித்தான கும்பலுக்கு எடுத்துக்காட்டாகும். சாதிகள், வகுப்புகள், இனங்கள் போன்றவை ஒருபடித்தான கும்பலுக்கு எடுத்துக்காட்டாகும். எர்பாட்டு புளுமர் (Herbert Pluiner) என்ற உளவியலறிஞர் கும்பலினைச் சாதாரணக் கும்பல் (Casual crowd), மரபுக் கும்பல் (Conventional crowd), கிளர்ச்சிக் கும்பல் (Active crowd), வெளிப்பாட்டுக் கும்பல் (Expressive crowd) என நான்கு வகைப்படுத்துகிறார்.
கிம்பால்லங்கு (Kimball young) கும்பலைச் செயற்படு கும்பல் (Active crowd), அமைதிக் கும்பல் (Inactive crowd) என இருவகைப்படுத்துறார். பொதுவாக, விரோதம், கோபம் போன்றவைகளைக் கொண்டு செயற்படு கும்பலின் செயல்கள் அமைத்திருக்கும். மேலும், ஒரு முறைப்படியான நெறிகளுக்கு (Norms) அப்பாற்பட்டுச் சமூகத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும். கலகங்கள், கிளர்ச்சிகள் போன்றவைகளை இக்கும்பலில் மிகுதியாகக் காணலாம். இக்கும்பலானது, வன்முறைக் கும்பல் (Aggressive crowd), பீதி கொண்ட கும்பல் (Panicky crowd), கொள்வினைக் கும்பல் (Acquistive crowd), வெளிப்பாட்டுக் கும்பல் (Expressive crowd) என நான்கு வகைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வகுப்புக் கலவரங்களில் ஈடுபடும் மக்கள் கூட்டமானது வன்முறைக் கும்பலாகும்; தீப்பிடித்த ஓர் இடத்திலிருந்து வெளியேறும் கூட்டம் பீதிகொண்ட கும்பவாகும்; ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வதற்காகக் கூடும் கூட்டம் கொள்வினைக் கும்பலாகும். ஏதேனும் விழா நிகழ்ச்சிகளில் ஆடல் பாடல்களை வெளிப்படுத்துவதற்காகக் கூடும் கூட்டம் வெளிப்பாட்டும் கும்பலாகும்.
அமைதிக் கும்பல், சில அமைதியான காரணங்களுக்காகக் கூடுகின்ற கூட்டமாகும். எடுத்துக்காட்டாக, சில செய்திகளை அறிந்து கொள்ளவோ, சமயச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்காகவோ கூடுகின்ற கூட்டமாகும். செயற்படு கும்பல்லில், பல மணி நேரங்களுக்குப் பின்பும் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால், அமைதிக் கும்பலில் சில நிமிடங்களிலேயே மாற்றம் ஏற்படும். அமைதிக் கும்பல், செய்திகளை அறிந்து கொள்வதற்காகக் கூடும் கூட்டம் (Information seeking crowd), மரபொழுங்கு சார்ந்து கூடும் கூட்டம் (Conventional crowd), பொழுது போக்கிற்காகக் கூடும்கூட்டம் (Recreational crowd), பாத சாரிகள் கூட்டம் (Pedestrian crowd) என நான்கு வகைப்படுகிறது.
இவ்வாறு கும்பல் பல பிரிவுகளாகப் பல்வேறு அறிஞர்களால் பிரித்துக் கூறப்படினும், கும்பல்களிடையே முரண்பாடுகள் அதிகமாக எழுவதில்லை. நெருக்கமான மக்கள், குறைந்த காலமே நீடிக்கின்ற தன்மை, ஒருவரையொருவர் தூண்டுதல், ஒருவரையொருவர் அறியாதிருத்தல், முறையற்ற இடைவினை (Inter-action) போன்றவை கும்பலில் பொதுவாகக் காணக்கூடிய தன்மைகளாகும்.{{Right|<b>பூ.த.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
stgw8fefdda14fkcgqw6kx8elypdsl7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/845
250
642197
1929201
2026-05-01T08:42:56Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாற்றம், காலப் போக்கில் மனிதனைச் சமுதாய வாழ்வில் தகவமைந்து செயற்படவும் கற்றல் திறனில் தகவமைந்து மேம்படவும் வழிகோலிற்று. மனிதர்களுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929201
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்விசார் மானிடவியல்|817|கல்விசார் மானிடவியல்}}</noinclude>மாற்றம், காலப் போக்கில் மனிதனைச் சமுதாய வாழ்வில் தகவமைந்து செயற்படவும் கற்றல் திறனில் தகவமைந்து மேம்படவும் வழிகோலிற்று.
மனிதர்களுக்கிடையேயும் கற்றல் திறன் பலவாறு மாறுபடுகிறது. அதற்குக் காரணம் பலவாகும். பண்பாட்டுத் தகவமைப்பு, சமுதாய வாழ்க்கை, பொருளீட்டும் தொழில் திறன் முதலான அனைத்தும் மனிதனின் கற்றல் திறனுக்கு அடிப்படையாகின்றன. வேட்டையாடி உணவு சேகரிக்கும் சமுதாயத்திலிருந்து நகரச் சமுதாயம் வரையுள்ள பண்பாட்டினர் கொண்டுள்ள மாறுபட்ட அறிதிறனின் காரணத்தைக் கல்விசார் மானிடவியலார் ஆழ்ந்து அறிய முற்பட்டனர். கல்வியின் படிமலர்ச்சி பற்றிய இவ்வகையான ஆய்வுகள் பின்வரும் உண்மைகளை வெளிப்படுத்தின. பல்வேறு சமுதாயத்தினரிடையே கல்வி கற்றலிலுள்ள மாறுபாடுகள் தவிர்க்க இயலாதன. ஏனெனில், ஒவ்வொரு சமுதாயத்தினரின் சமுதாய, பண்பாட்டுச் சூழ்நிலையின் தேவைக்கேற்ப அவரவரின் கல்வித் தேவை அமைகிறது. இதனை அனைத்து அறிஞர்களும் ஏற்றுக் கொண்டனர். வில்சன் (Wilson) மேற்கொண்ட பல ஆய்வுகளின் மூலம் எளிய சமுதாயம் முதல் மிகவும் முன்னேறிய சமுதாயம் வரையுள்ள கல்வி முறையினை ஒருவழிப் படிமலர்ச்சி (Unilinear Evolution) முறையில் ஒப்புமைப்படுத்துவார். இவரது ஆய்வுகளின் அடிப்படையில், சமுதாயத்தின் படிமலர்ச்சியின் பல நிலைகளிலும் தனித்தனியாகக் கல்விமுறையும் கற்றல் திறனும் உள்ளன என மதிப்பிட்டார்.
கல்விசார் மானிடவியலார் வளர்ந்து வரும் சமுதாய மாற்றத்திற்கேற்பப் பழங்குடிகளிடையே ஏற்பட்டு வரும் கல்வி முறையினைப் பல நிலைகளில் ஆராய்வர். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த பழங்குடிச் சமுதாயத்திற்கும் இப்போதுள்ள பழங்குடிச் சமுதாயத்திற்கும் பல மாறுதல் உண்டு. இன்றைய நிலையில் பழங்குடி மாணவர்கள் தம் இனத்தைச் சாராத மாணாக்கர்களோடும் கல்வி கற்கும் நிலையினைக் கொண்டுள்ளனர். இந்த அனைத்து நிலைகளிலும் கல்விசார் மானிடவியலார் இனக்குழுவியல் (Ethnogrpahy) ஆய்வு நெறிகளான பங்கேற்று உற்று நோக்கல் (Participant Observation), நேர்காணல் முதலானவற்றின் அடிப்படையில் ஆராய்கின்றனர். இன்றைய கல்விசார் இனக்குழுவியலார் (Educational Ethnographer) மேற்கூறிய ஆய்வு நெறிகளுடன் வாழ்க்கை வரலாறு, வினாநிரல், பொறியியல் கருவிகள் கொண்டு ஒலி, ஒளிப்பதிவு செய்தல் முதலான ஆய்வு நெறிகளின் மூலமும் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றனர்.
இன்றைய ஆய்வுப் போக்கில் இனக்குழுவியல் சார்ந்த ஆய்வு முறையே கல்விசார் மானிடவியலில் தலையானது. எய்ம்சு (Hymes) மூவகையான இனக் குழுவியல் ஆய்வு முறைகளைக் குறிப்பிடுவார். அவை, முழுநிலை இனக்குழுயியல் (Comprehensive Ethnography), ஆய்விற்கு எடுத்துக் கொண்ட தலைப்பைப் பற்றிய இனக்குழுவியல் (Topic Oriented Ethnography), எடுகோள் சார்த்த இனக்குழுவியல் (Hypothesis-Oriented Ethnography) எனப்படும் முழுநிலை இனக் குழுவியலார் தாம் அறிய விழையும் சமூகத்தின் கல்வி அல்லது பள்ளி பற்றி முழுவிவரத்தையும் அறிவர். அவற்றுள் வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் பல்வேறு செயல்கள், தொடர்புடைய நிறுவனங்கள் முதலான அனைத்தும் இடம் பெறும், ஆய்விற்கு எடுத்துக் கொண்ட தலைப்பில் மட்டும் ஆராயும் கல்விசார் இனக்குழுவியலார் சமூகத்தின் அனைத்து நிறுவனங்களையும் ஆராயாமல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் அனைத்துச் செயல்களையும், அது பிற நிறுவனங்களோடு கொண்டுள்ள சார்புத் தன்மையையும் அதன் விளைவுகளையும் மட்டும் ஆராய்வர். மூன்றாம் வகையான ஆய்வுகளில் தாம் கருதிய எடுகோளை உறுதிப்படுத்த மட்டுமே ஆய்வு செய்வர்.
கல்விசார் மானிடவியலின் ஆய்வு முறைகளில் 1960-ஆம் ஆண்டளவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஒகுபு (Ogbu), எரிக்சன், கோயட்சு (Goetz) இசுபிண்லர் (Spindler), நெல்லர் (Kneller) ஆகியோர் கல்விசார் மானிடவியலின் விரிவாக்கத்திற்குப் பல அணுகுமுறைகளை உருவாக்கியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள். முன் குறிப்பிட்ட மூவகை இனக்குழுவியல் முறையினை விடுத்துப் பெருநிலை இனக்குழுவியல் (Macroethnography), நுண்ணிலை இனக்குழுவியல் (Microethnography) ஆகிய இருநிலைகளில் பள்ளியின் அமைப்பையும் கல்வி அமைப்பையும் ஆராயலாம் எனக் கூறினர். எனினும், ‘கல்வி’ பற்றியும் ‘பள்ளி’ பற்றியும் மானிடவியலாரின் கோட்பாடுகள் தெளிவானவையாக 1970 வரை அமையவில்லை எனலாம். ஏனெனில் பள்ளி, கல்வி, பண்பாடு பற்றி அறிய ஒருமித்த கருத்து உருவாகவில்லை. பிறந்தது முதல் பள்ளிக்குச் செல்வாமலேயே தம் பாரம்பரியத்தைக் கற்கும் குழந்தைகள், பள்ளி ஒரு சமுதாய நிறுவனமாகச் செயற்பட்டு மாணவர்களுக்கு ‘அறிவு’ புகட்டுவதை மட்டுமே செய்யாமல் வேறு பல செயல்களையும் கொண்டுள்ளமை, புறச் சூழலின் தாக்கத்தில் பண்பாட்டின் கூறுகள் எவ்வாறு ஒவ்வொரு சமுதாயத்தினரிடையே கற்கப்படுகின்றன என்னும் மூன்று நிலைகளை ஒருமித்த கொள்கையில் ஆராய்வதில் பல முரண்பாடுகள் தோன்றின.
{{nop}}<noinclude>
<b>வா.க. 6 – 52</b></noinclude>
d4w9hfjwto5b4e2bu4fq246iz5m14a5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/667
250
642198
1929202
2026-05-01T08:46:50Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்கள்</b>:<br> <b>Bhusan, Vidya and Sach Deva D.R.,</b> An Introduction to Sociology, Kitab Mahal, Allahabad 1985.<br> <b>Bottomore, T.B.,</b> Sociology, Blackic & Son publishets Pvt Ltd., Bombay, 1978.<br> <b>Popetoe, David.,</b> Sociology, Prentice-Hall, Inc. New Jersey. 1977.<br> <b>Turner, Ralph H. and Lewis M, Killian,</b> Co..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|639|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bhusan, Vidya and Sach Deva D.R.,</b> An Introduction to Sociology, Kitab Mahal, Allahabad 1985.<br>
<b>Bottomore, T.B.,</b> Sociology, Blackic & Son publishets Pvt Ltd., Bombay, 1978.<br>
<b>Popetoe, David.,</b> Sociology, Prentice-Hall, Inc. New Jersey. 1977.<br>
<b>Turner, Ralph H. and Lewis M, Killian,</b> Collective, Behaviour, Prentice Hall, New Jersey, 1972.
<b>கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்</b>: மிகுதியான அளவில் மக்கள் ஓர் இடத்தில் கூடியிருப்பது கும்பம் எனப்படுகிறது. ஆனால் கூடியிருக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது அது கும்பல் என்று வரையறுப்பது கடினம். இருப்பினும், இம்பால் யங்கு (Kimball Young) என்ற அறிஞர் மக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு பொதுவான நோக்கிற்காகக் (Common object of attention) கூடி இருந்தால் அது கும்பல் எனப்படும் என்று வரையறுக்கிறார்.
<b>வகைகள்</b>: சமூக உளவியல் அறிஞர்கள் கும்பலின் வகைகளை வேறுபடுத்திக் காட்டியிருக்கின்றனர். அவர்களுள் புளுர் (Blumer) கும்பலை நான்கு வகைகளாகப் பிரித்திருக்கிறார். அவை;
:1. சாதாரணக்கும்பம் (Cssual Crowd), வீதிகளில் ஓட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை வேடிக்கை பார்க்கும் கூட்டம்.
:2. மரபுக் கும்பல் (Conventional Crowd), கால் பந்தாட்டத்தைப் பார்ப்பதற்காகக் கூடியிருக்கும் கூட்டம்.
:3. கிளர்ச்சிக் கும்பல் (Acting Crowd), போராடுவதற்காகக் கூடியிருக்கும் கூட்டம்.
:4. வெளிப்பாட்டுக் கும்பல் (Expressive Crowd), விழா நாள்களில் ஆடல் பாடல்களுக்காகக் கூடும் கூட்டம்.
பிரௌன் (Brown) என்ற அறிஞர் கும்பலை ஆரவாரக் கும்பல் (Active Crowd), அமைதிக் கும்பல் (Passive Crowd) என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றார்.
மேலும், ஆரவாரக் கும்பலை அவர் நான்கு வகைகளாகப் பிரிக்கிறார், அவையாவன:
:1. வன்முறைக் கும்பல் (Aggressive Mob), வகுப்புக் கலவரங்களில் ஈடுபடும் மக்கள் கூட்டம்.
:2. பீதி கொண்ட கும்பல் (Panicky mob), தீப்பிடித்த இடத்தில் இருந்து வெளியேறும் கூட்டம்.
:3. கொள்வினைக் கும்பல் (Acquisitive mob), உணவையோ பொருள்களையோ பெற்றுக்கொள்வதற்காக கூடும் கூட்டம்.
:4. வெளிப்பாட்டுக் கும்பல் (Expressive mob), விழா நாள்களில் தம் உணர்ச்சிகளை ஆடல், பாடல் முலம் வெளிப்படுத்துவதற்காகக் கூடும் கூட்டம்.
அமைதிக் கும்பலைக் தீம்பாவ் பங்கு (Kimball Young) மூன்று வகையாகப் பிரிக்கிறார். அவைம் செய்திகளை அறிந்து கொள்வதற்காகக் கூடும் கூட்டம் (Information seeking Audience), 2. மாற்றத்தை உருவாக்கக் கூட்டப்படும் கூட்டம் (Conventional Audience), 3. பொழுது போக்கிற்காகக் கூடும் கூட்டம் (Recreational Audience) எனப்படும்.
<b>பண்புகள்</b>: கும்பலிடையே பல்வகைப் பண்புகள் காணப்படுகின்றன. கும்பம் என்பது நிலையற்ற இயக்கம், மனிதர்கள் கூடிவாழும் கூட்டு வாழ்க்கை மனித சமுதாயத்திற்கு மிக இன்றியமையாதது. ஆனால், நிலையற்ற கும்பல் தேவையில்லை. கும்பலுக்குக் காரணம் ஒரு நிகழ்ச்சி அல்லது சமூக மாற்றம் (Social) change) அல்லது தற்செயலாக ஏற்படும் விபத்துப் போன்றவையாகும்.
பொதுவாகக் கும்பல் என்பது மக்கள் ஓரிடத்தில் கூடுவதாகும். இதற்குக் கட்டுப்பாடு கிடையாது. இதில் கூடுபவர்கள் அறிமுகமோ பழக்கமோ உறவோ இல்வாதவர்கள். இதற்கென்று ஓர் அமைப்போ (Organisation) தொழிற் பகுப்போ (Division of Labour), தலைவரோ கிடையாது. இது தற்செயலானது (Casual); பெயர் தெரியாதது (Anonymous) கும்பலில் வெவ்வேறு வயதினர், வகுப்பினர், மதத்தினர், அலுவலர் கூறமிருப்பதால் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள வாய்ப்புகள் குறைவு, பெயர் வெளி வாராத நிலை சமூக விரோத உணர்வுகள் (Anti-so-cial impulses) தோன்றக் காரணமாக உள்ளன. மிகப் பெரிய அளவிலான கும்பலும், அதிலுள்ள மக்களின் மிகுதியும் ஒருவனை மாறுபட்ட (Unusual) நிலையில் செயலாற்ற வைக்கின்றன.
கும்பலில் உள்ள மக்களிடையே மன ஒற்றுமை (Mental Homogenity) காணப்படும், அவர்களிடையே வேறுபட்ட உணர்ச்சிகள் காணப்படும். பீதியடைந்த கும்பலில் பய உணர்ச்சியும், வன்முறைக் கும்பலில்<noinclude></noinclude>
oa7xlslu1gu7dl8qwpd9pgrgjw5ujsp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/668
250
642199
1929203
2026-05-01T08:55:49Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோப உணர்ச்சியும், பொழுது போக்குக் கும்பலில் மகிழ்ச்சி உணர்வும் மிகுதியாகக் காணப்படும். கும்பலில் உள்ள மக்கள் அறிவு அடிப்படையில் செயற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929203
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|640|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்}}</noinclude>கோப உணர்ச்சியும், பொழுது போக்குக் கும்பலில் மகிழ்ச்சி உணர்வும் மிகுதியாகக் காணப்படும். கும்பலில் உள்ள மக்கள் அறிவு அடிப்படையில் செயற்பட மாட்டார்கள். பகுத்தறிவுக் குறைபாடு இருக்கும். உணர்ச்சியின் மிகுதியால் சிந்திக்கும் ஆற்றல் குறைவாக இருக்கும். சித்திக்கும் ஆற்றல் அத்தருணத்தில் இல்லாமற்போவதாலும், உணர்ச்சிகள் மிகுதியாக இருப்பதாலும் பொறுப்பற்ற தன்மை இருக்கும். மக்களிடையே கும்பலினால் எதையும் சாதீக்க முடியும் என்ற எண்ணம் பரவி இருக்கும்.
பெரும்பாலான கும்பங்களின் நடத்தைகள் சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணங்களின் பின்னணியில் இயங்குகின்றன. பல கும்பல்கள் தோன்றுவதற்குக் காரணம் அவர்களின் நெடுநாளைய துயரங்களையும், இழப்புகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கே ஆகும், வன்முறை, இறப்பு மற்றும் கொடுமையான செயல்கள் முதலியவை கும்பலின் பண்புகள் ஆகும்.
கும்பலின் ஈர்ப்புத் தன்மையானது (Polarization) கும்பலின் வடிவத்தையும் செயலையும் (Structure and Functions) தீர்மானிக்கிறது. இவ்வகையான ஈர்ப்புத் தன்மையில்-மாற்றம் ஏற்படுகிற நேரத்தைக் கொண்டு, அந்தக் கும்பலின் செயற்பாட்டை அறிய முடியும். சிறந்த பேச்சாளர் அல்லது அரசியல்வாதி தனது நாவன்மையால், அதிக நேரத்திற்குக் கும்பல் கலைந்து விடாது ஒரு ஈர்ப்புத் தன்மையை உருவாக்குவது அவரது திறமையைக் குறிப்பதாகும்.
<b>கோட்பாடுகள்</b>: கும்பலினால் மக்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் அறிய முடிகிறது. கும்பல் மூலமாக அவர்களுடைய உணர்ச்சிகாைல் காட்டுவதற்கு இயலுகிறது. அதன் மூலமாக அவர்கள் குறிக்கோளை அடைகின்றனர். கும்பலுக்குரிய இன்றியமையாத பண்புகள் ஒன்று சேர்ந்து முழக்க மிடுதல், பாடுதல் அல்லது ஆடுதல் என்பன ஆகும். இச்செயல்களால் ஒற்றுமை உணர்வு (Solidarity) அதிகமாகிறது. கும்பல் மக்களிடம் அசாதாரணமான நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உருவாக்குகிறது. கும்பலினால் இவை போன்ற சில நற்பயன்கள் விளையும் என்றாலும், அதனுடைய பல அழிவுப் பண்புகள் (Destructive Characters) சமூக உளவியல் அறிஞர்களையும், சமூகவியல் அறிஞர்களையும் கும்பலைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளத் தூண்டியுள்ளன.
<b>அ. கும்பல் மனக் கோட்பாடு</b>: மக்கள் தனியாக இருக்கும்போது இயல்பாக இருக்கிறார்கள். அதே மக்கள் கும்பலில் இருக்கும் பொழுது அவர்களுடைய நடத்தைகளும் செயல்களும் வேறுபடுகின்றன. லே போன் (Le Bon) கூற்றுப்படி, மனிதர்கள் ஓரிடத் கும்பலாக மாறும்பொழுது அங்கே கும்பல் மனம் உருவாகிறது. இக்கும்பல் மனக் கோட்பாட்டின்படி (Group Mind Theory) கும்பலில் உள்ள மனிதன் தன்னுடைய தனித் தன்மையை (Individuality) இழக்கிறான். அவன் கும்பலின் பகுதியாக மாறிவிடுகிறான். கும்பலில் மனிதன் தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைத் துறந்து கும்பலுடைய ஒட்டு மொத்த விருப்பத்திற்கு ஏற்பச் செயற்படுகிறான். உடனே கும்பல் தனக்கென்று ஒரே மாதிரியான நனவு நிலையைத் (Group Consciousness) தோற்றுவிக்கிறது. இந்தக் கும்பல் தளவு நிலை தனி மனித நளவு நிலையை அடக்கி விடுகிறது. அதனால், கும்பலில் உள்ள மக்கள் கும்பலூடைய தூண்டுதலுக்கு ஏற்றவாறு செயற்படுகிறார்கள். கும்பல் மனம் என்பது அதில் பங்கேற்றிருக்கும் அனைத்து மக்களின் கூட்டு மனநிலை ஆகாது; அது தனக்கென்று ஒரு மனநிலையை உருவாக்கி வெவ்வேறு அளவுகளில் செயற்படும். கும்பலில் மக்களிடையே கருத்தேற்றம் (Suggestion) ஏற்படுகிறது. இந்தக் கருந்தேற்றத்தின் ஊக்குவிப்பால் கும்பலில் உள்ள மனிதன் பலவித உணர்ச்சிகளுக்கு ஆளாகிறான். அதனால் அவன் எதையும் ஆராய்ந்து அறியும் பகுத்தறிவை இழந்து செயற்படுகிறான். கும்பல் மனத்தின் செயற்பாடு, மனவெழுச்சிகள் (Emotions), வேண்டுகோள்கள் (Appeals) கருத்தேற்றம், கொள்கைக் குரல்கள் (Slogans) ஆகியவற்றைப் பொறுத்து அமையும், இந்தக் கோட்பாட்டை லே பான் (Le Bon), எசுபிதாக (Espinas) திராட்டர் (Trotter), தர்க்கீம் (Durkheim), மெக்டூகல் (Mc Dougall), ஆல்போர்ட்டு (Allport) ஆகியோர் ஆதகிக்கின்றனர். கும்பல் மனக் கோட்பாட்டை ஆதரிக்கும் இவ்வறிஞர்கள் கும்பல் நடத்தைகளைப் பற்றிய தங்கள் விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்.
லே பான், செயல் நோக்கத்தை (Motive) உணர்வு நிலையுடைய செயல் நோக்கம் (Conscious Motives), உணர்வு நிலையற்ற செயல் நோக்கம் (Unconscious Motives) என இரண்டாகப் பிரிக்கிறார், மனிதன் கும்பலில் இருக்கும் பொழுது உணர்வு நிலையுடைய செயல் நோக்கம் பின்னோக்கித் தன்னப்பட்டு உணர்வு நிலையற்ற செயல் நோக்கம் முன் வருகிறது. இந்த உணர்வு நிலையற்ற செயல் நோக்கம் முன்வரும் பொழுது, அம்மனிதன் கும்பலில் மற்றவர்களின் செயலால் தூண்டப்பட்டுப் பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொள்கிறான்.{{nop}}<noinclude></noinclude>
kziyjwxqa94lxwbixdxwz0z0dcpl8sx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/669
250
642200
1929204
2026-05-01T09:07:17Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எசுபிநாக, கும்பல் நடத்தைக்கு உயிரியல் கருத்து (Concept) மூலமாக விளக்கம் கொடுக்கிறார். ஓர் உயிர்ப் பொருளின் (Organism) பல உயிரணுக்கள் (Cells) ஒன்று சேர்ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929204
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|641|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்}}</noinclude>எசுபிநாக, கும்பல் நடத்தைக்கு உயிரியல் கருத்து (Concept) மூலமாக விளக்கம் கொடுக்கிறார். ஓர் உயிர்ப் பொருளின் (Organism) பல உயிரணுக்கள் (Cells) ஒன்று சேர்ந்து ஓர் உணர்வு நிலையை உருவாக்குவதைப் போலக் கும்பலிலும் பல மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஓட்டு மொத்த உணர்வு நிலையை (Collective Consciousness) உருவாக்குகின்றனர் என்று கூறுகிறார்.
மனிதனுக்குக் கூடிவாழுத் தன்மை (Gregariousaess) இயல்பூக்கமாகலே (Instinct) அமைந்துள்ளது. அதனால், கூட்டம் அவனுக்கு என்ன கட்டளை இடுகிறதோ அதனை ஏற்று அதன்படி நடக்க அவன் ஆயத்த நிலையில் இருக்கிறான் என்று திராத்தர் கூறுகிறார்.
கும்பலில் மனிதர்களுடைய உணர்வு ஒன்று நிலைகள் சேர்ந்து ஒட்டு மொத்த உணர்வு நிலையை உருவாக்குகின்றன. இந்த ஒட்டு மொத்த உணர்வு நிலை தனிப்பட்ட மனிதனுடைய உணர்வு நிலையிலிருந்து மாறுபட்டு இருக்கிறது. அதனால், கும்பலில் மனிதனுடைய நடத்தை மாறுபடுகிறது என்கிறார் தர்க்கீம்.
மெக் சவர் (Mclver), இக்கும்பல் மனக் கோட்பாட்டை மறுக்கிறார். கும்பலுக்கென்று தனிமனம் (Mind) ஒன்று இருக்கமுடியாது. வெவ்வேறு மனங்கள் கும்பலில் ஒரே மாதிரியாகச் செயற்பட முடியுமே தவிர, எல்லோருடைய மனங்களும் ஒன்று கும்பல் மனம் என்று ஒன்று உருவாக முடியாது என்கிறார்.
<b>ஆ. உளநிலைப் பகுப்பாய்வுக் கோட்பாடு</b>: இ.டி.மார்ட்டின் (E.D. Martin) என்பவர் லே. பான், மெக்டூகல் ஆகியோரின் கும்பல் மனக்கோட்பாட்டை மறுத்து, கும்பனுடைய நடத்தைகளுக்கு உளவியற் பகுப்பாய்வு (Psychoanalysis) மூலமாக விளக்கம் கொடுக்கிறார். கும்பலில் இருக்கும்பொழுது மனிதன் மேல் மனநிலையை (Super ego) இழக்கிறான். அதனால், அவம் விலங்கின உணர்வுகளுக்கு இடமளித்துப் பகுத்தாராயும் தன்மை இழந்து, பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொள்கிறான். கும்பல் நடத்தை என்பது அப்போதைய பைத்தியத் தன்மை (Temporary Insanity) என்றும் கூறுகிறார். பைத்தியத் தன்மையும் (Insanity) பிறழ்வும் (abnormal) கும்பலின் பண்புகளாக விளங்குகின்றன என்று பிராய்டு (Freud) விளக்குகிறார். மார்ட்டினும், பிராய்டை ஆதரிக்கும் மற்ற உளவியல் அறிஞர்களும், கும்பல் நடத்தை என்பது அழுத்தப்பட்ட உணர்வுகள் அல்லது விருப்பங்களின் (Repressed Desires) வெளியீடு ஆகும் என்கிறார்கள். இயற்கையான மனித உணர்வுகளுக்குச் (Natural Human Impulses) செயற்கையான தடைகளைச் சமுதாயம் ஏற்படுத்துவதால் மனிதனிடத்தில் உளவிறுக்கம் (Tension) உண்டாகிறது. இவ்வித இயற்கையான மனித உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் இருக்கும் தடையானது, மனிதன் கும்பலில் இருக்கும் பொழுது நீக்கப்படுவதால் அவளது இயல்பூக்கம் வெளிவருகிறது. இவ்வாறு, மனிதன் கும்பலில் தற்செயலாக இருக்கும் பொழுது அவனுடைய அழுத்தப்பட்ட உணர்வுகளுக்கு விடுதலை கிடைக்கிறது.
ஆனால் இக்கருத்து சில அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. கும்பல் நடத்தை, உணர்வுகள் மற்றும் விருப்பங்கள் அழத்தப்படுவதாலேயே ஏற்படுகின்றது என்பதை மறுக்கின்றனர். அதற்கு சமூகம் மற்றும் பண்பாட்டுத தொடர்பு உண்டு என்பது அவர்கள் கூற்று.
<b>இ. தொற்றுதல் கோட்பாடு</b>: ஒருவருடைய செயல் மற்றொருவருடைய செயலுக்குத் தூண்டுதலாக அமைந்து அதே சமயம் கும்பல் முழுவதும் பரவுவது தொற்றுதல் எனப்படுகிறது. மற்றச் சமயங்களில் அவர்களின் செயல் சமுதாய ஏற்புடையதாக இருக்கும். கும்பலில் மற்றவர்களின் செயல்களைப் பார்ப்பதால் அவர்களிடம் கும்பலின் நடத்தைகள் தொற்றிக் கொய்கின்றன. பேகேகாட்டு (Bahehot), தார்டு (Tards) ஆகிய அறிஞர்கள் இத்தொற்றுதல் கோட்பாட்டில் (Contagion Theory) நம்பிக்கை உடையவர்கள் ஆவர். இதையே மெக்கேலும் கும்பலில் உள்ள மக்களின் உணர்ச்சிகள் அதைப் பார்ப்பவரிடத்து அதே விதமான உணர்ச்சிகளை இயல்பூக்கமாகத் தோற்றுமிக்கின்றன என்கிறார்.
<b>ஈ. குவிநிலைக் கோட்பாடு</b>: ஆல்போர்ட்டு (F. H. Alport) என்பவர் கும்பலின் நடத்தையை கும்பல் முழுவதையுமே வைத்து ஆராயாமல் அதில் உள்ள மனிதர்களின் உணர்வையும் பிரதிபலிப்பையும் (Impluses and Responses) கொண்டு ஆராயலாம் என்கிறார். மில்லர் (Miller) மற்றும் தோலார்டு (Dollard) என்பவர்களும் கூட்டத்தினுடைய மக்கள் எண்ணிக்கை ஆழ்ந்த பாதிப்பை அங்குள்ள மக்களிடத்தில் ஏற்படுத்துகிறது என்கிறார்கள். ஆல்போர்ட்டு ‘சமூக வாய்ப்பள்ப்பு’ (Social Facilitation) என்பதன் மூலமாகவும் இதனை விளக்குகிறார். கும்பலில் அடுத்தவர் எந்தச் செயலில் ஈடுபடுகிறாரோ அது மற்ற மக்களையும் பாதிக்கிறது. இவருடைய கூற்றுப்படி ஒருவனுடைய செயல் கும்பலில் மாறு-<noinclude>
<b>வா. க. 7 - 41</b></noinclude>
knxnqubyrppgz8z05wyja5v7x05qhu7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/670
250
642201
1929205
2026-05-01T09:18:31Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுவதில்லை. அவன் தனிமையில் எவ்வாறு செயற்படுவானோ அதே செயல் கும்பலில் இருக்கும் பொழுது வேகப்படுத்தப்படுகிறது. கும்பலில் பிரதிநிதித்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1929205
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பல் நடத்தைச் கோட்பாடுகள்|642|கும்மட்டம்}}</noinclude>படுவதில்லை. அவன் தனிமையில் எவ்வாறு செயற்படுவானோ அதே செயல் கும்பலில் இருக்கும் பொழுது வேகப்படுத்தப்படுகிறது.
கும்பலில் பிரதிநிதித்துவம் அல்லாத மக்கள் குழுக்கள் ஒன்று சேர்ந்துள்ளன. ஏனென்றால், அவர்கள் சில பொதுத் தன்மைகளைக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொதுத் தன்மைகவே அவர்கள் ஒன்று சேர்வதற்கு உறுதுணையாக உள்ளன. தனிமையிலும் அவர்களுக்கு இத்தன்மைகளே இருக்கும். கும்பலில் இதே தன்மை கொண்ட பலர் கூடியதும் அவர்கள் பலமாகச் செயற்படுகிறார்கள். இக் குவிநிலைக் கோட்பாட்டின் படி (Convergence Theory) ஒரே தன்மையுடையவர்கள் ஒருங்கே ஓரிடத்தில் கூடுகிறார்கள் என்பதாகும்.
<b>உ. கும்பல் மேல்வரிச் சட்டக் கோட்பாடு</b>: கும்பலில் ஒரு மனிதனுடைய நடத்தையானது மற்றவர்களுடைய நடத்தைகளின் தூண்டுதலால் அல்லது மற்றவர்களைக் கண்முடித்தனமாக அவன் பின்பற்றுவதனால் ஏற்படுவதில்லை எனக் கும்பல் மேல் வரிச்சட்டக் கோட்பாடு (Emergent Norm Theory) கூறுகிறது. கும்பலில் பங்கேற்பது தேவை என்று உணர்த்த பிறகுதான் அவன் அதில் செயலாற்றத் துணிகிறான்.
செரிபு (Sherif) என்ற உளவியல் அறிஞர் கும்பல் ஏற்படும் பொழுது புதிய நெறிகளும் (Norms) விழுமியங்களும் (Values) உருவாகின்றன என்று கூறுகிறார். கும்பலில் திடீரென்று உருவாகும் இச்சட்டம் பொதுவான சமூக நெறியிலிருந்தும், சமூக விழுமியங்களிலிருந்தும் மாறுபட்டு இருக்கிறது. கும்பலில் உள்ள மக்களும் அப்புதிய நெறியினை ஏற்று அதன்படி நடக்கின்றனர். அந்தப் புதிய நெறி அவர்களை வன்முறையில் நடக்கத் தூண்டுகிறது.
<b>ஊ. சமூகவியல் அனுகுமுறை</b>: சுமெல்சர் (Smelser) என்பவரின் கூற்றுப்படி மக்கள் சமூக நிறுவனங்கள் (Social Institutions) மூலமாகத் தங்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற இயலாது என்று உணர்ந்தபின் கும்பல்கள் மூலமாக அதை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை கொள்ளும் பொழுது, கும்பல் நடத்தை உருவாகிறது என்கிறார். கும்பல் உருவாவதைத் தீர்மானிக்கும் சில சூழ்நிலைகளையும் அவர் விவரிக்கிறார். சிறிய மரபு சார்ந்த சமுதாயத்தைவிட பெரிய நகரச் சமுதாயம் கும்பல்கள் தோன்றுவதற்குச் சாதகமாக அமையும், அதுபோல் அங்கு ஏற்படும் விலைவாசி உயர்வு, சம்பளக் குறைவு போன்ற சிக்கல்கள், கும்பம் நடத்தைகள் தோன்றக் காரணமாக உள்ளன. இம்மாதிரிச் சிக்கல்களனத் தீர்ப்பதற்குரிய எண்ணங்களும், கொள்கைகளும் மக்களிடையே பரவுவதும் கும்பல் ஏற்காட உதவுகிறது. இவை, மக்களை ஒருங்கிணைந்து செயலாற்றச் செய்கின்றன. இறுதியில் கும்பல் நடத்தை, சமூகக் கட்டுப்பாட்டின் ஆதரவு அல்லது எதிர்ப்பிற்குத் தகுந்தாற் போல் கூடவோ குறையவோ செய்யும் என்றும் அவர் கூறுகிறார்.
இவ்வாறாகப் பல்வேறு கோட்பாடுகள் இருப்பிணும் எந்த ஒரு தளிக் கோட்பாடும் கும்பல் நடத்தைக்கு எளிதான விளக்கம் அளிக்கவில்லை. கும்பல்கள் பல்வேறு சூழ்நிலைகளால், பல்வேறு காரணங்களால் ஏற்படுவதால் அதற்கு அதிக விளக்கம் தேவையுள்ளது. சமூகம், பண்பாடு, பொருளாதாரம் தனிமனிதன் வளர்க்கப்பட்ட விதம் முதலியவற்றைப் பொறுத்துக் கும்பல் நடத்தை அமையும். ஒருவனுக்கு வலிமையான பண்பாட்டுப் பின்னணியும், உறுதியான பழக்க வழக்கங்களும், தனித்தன்மையும் இருந்தால் அவன் கும்பலில் கலந்து கொள்வதில்லை; கும்பல் நடத்தையாலும் அவன் பாதிக்கப்படுவதில்லை. இதில் அவன் பெற்ற கல்வியறிவு பெரும் பங்கு வகிக்கிறது. கல்வி கும்பல் நடத்தைகளை முற்றிலும் நீக்க முடியாவிட்டாலும் அவற்றைக் குறைப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.{{Right|<b>என்.சொ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bhatia, Hans Raj,</b> Elements of Social Psychology. Somaiya Publications Private Limited, Bombay, 1974.<br>
<b>Bhusan, Vidya and Sach Deva D. R,</b> An Introduction to Sociology, Kitab Mahal, Allahabad, 1985.<br>
<b>Catoright, Dorwin and Zander,</b> Aivin (Ed.) Group Dynamics: Research and Theory, Row, Peterson and Company, New York, 1958.<br>
<b>Goodman, Nerman and Marx, Gary T.,</b> Society Today, Random House, New York, 1978.<br>
<b>Lindrey, Gardner and Aronson,</b> Elliot (Ed.) The Handbook of Social Psychology, Amerind Publishing Company Pvt., Ltd., New Delhi, 1975.
<b>கும்மட்டம்</b> கட்டடங்களில் கோன அல்லது அரைக்கோள வடிவிற் காணப்படும் கூரைப்பகுதி. பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் குடிசைகளை வட்டமாக அமைத்து அதன்மேல் கும்மட்ட-<noinclude></noinclude>
qvho3nxd1s32xku6en6jzrylvb9dd72