விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.15 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/481 250 630860 1958198 1896229 2026-08-14T13:22:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நாடகக் கலை|457|இந்திய நாடகக் கலை}}</noinclude>காண முடிகிறது. மரபுவழிக் கதைகள் மற்றும் வடிவங்களில் சோதனையாக்கங்கள் நடைபெற்று வருகின்றன. இளைஞர்கள் முன்னணியில் இதனைச் செய்து வருகின்றனர். ஓவியம் என்னும் புகரம்பாவின் (1945-1980) நாடக இலக்கியம் முக்கியமானதாகும். கன்னியாலாலின் கலாசேத்திராவும், இரத்தன் திய்யத்தின் தோரசுதமுவும், அனைத்திந்தியப் பாராட்டைப் பெறும்வண்ணம் நாடகங்களை உருவாக்கி வருகின்றன. இவர்களே தங்கள் நாடகங்களையும் எழுதிக் கொள்கின்றனர். அம்மாநிலக் கிராமியக் கதைகள், மற்றும் கலைகள் இவர்களது நாடக ஆக்கத்தின் அடித்தளமாகும். புதிய விளக்கத்தோடு இவர்கள் படைக்கின்றனர். கன்னியாலால் காட்சியமைப்பு ஏதுமின்றி நடிகர்களைக் கொண்டே படிமங்களைப் படைத்துக் காட்டுகிறார். சமூக விமரிசனம் இவர் நாடகங்களில் இடம்பெறுகின்றது. திய்யத்தின் இரு சகோதரிகள், பறவைகளின் குரல்கள் ஆகியவை களரிப்பயிற்றுப் போன்ற கலைகளின் கூறுகளைக் கொண்டவை. இவரது ஊருபங்கம் என்னும் பாச மகாகவியின் சமசுகிருத நாடகம் அகில இந்தியப் பாராட்டுப் பெற்றதாகும். <b>ஒரியா நாடகம்:</b> ஒரியா நாடகமும் அசாம் நாடகத்தைப் போலவே வங்க நாடகத்தின் தாக்கம் பெற்றதாகும். கதைப்பாட்டுகள், நாடகப் பாங்கான நடனங்கள், கிராமிய நிகழ்வுக் கலைகள், பாவைக் கூத்துக்கள் நிறைந்த மாநிலம் ஒரிசா. வணிக முறையிலான நாடகங்களின் தாக்கம் இருந்தும் மரபுக் கலைகள் சிதறாத நிலையில் இன்றும் காணப்படுகின்றன. அசுவினிகுமார் கோசு (கி.பி. 1892-1962) காளிசரன் பானிக்கிரகி போன்றோர் வணிகமுறை நாடக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய நாடக ஆசிரியர்களாவர். விடுதலைக்குப் பின்னர் ஒரிய நாடகத்தின் வளர்ச்சி என்று சிறப்பித்துக் கூற எதுவுமில்லை. இன்றைய சமூக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நாடக ஆசிரியர்கள் என்று குறிப்பிட்டுக் கூறவேண்டுமாயின், மனோரஞ்சன்தாசு, செ.பி.தாசு, விசயமிசுரா, கார்த்திக்குரத்துப் போன்றோரைக் குறிப்பிடலாம். மரக்குதிரை, ஆரணிய அறுவடை, கதிரவன் மறையும் முன்பு என்னும் நாடகங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவையாகும். முன்னது மனோரஞ்சன் தாசினது. பின்னது சே.பி. தாசினது ஆகும். <b>மராத்தி நாடகம்:</b> வங்கத்தை அடுத்து நாடகக்கலையில் சிறந்து நிற்பது மராத்தி நாடகமே ஆகும். கி.பி. 1843-இல் சங்கலி என்னும் சிற்றரசில் விட்டுணுதாசுபாவே என்பவர்தாம் புதிய மராத்தி நாடகத்தினைத் தொடங்கி வைத்தார் எனலாம். இவரது சீதா சுயம்வரம் என்னும் நாடகம் கருநாடகத்து எட்சகானம், மராட்டியக் கிராமிய நடனங்கள் மற்றும் கலைகள் ஆகியவற்றின் கூறுகளைக் கொண்டதாகும். தமாசாவின் இயல்பைப் புதிய மராத்தி நாடகங்களில் காணலாம். கே.பி. கடில்கர் சீவகதம் பற்றி அரசியல் நோக்க நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார். கம்சரி என்பவரின் ‘ஒரே ஒரு தவளை’ என்னும் மதுவிலக்கு நாடகம் புகழ்பெற்றதாகும். மற்றொரு நாடகம் தேவிலாலின் சாரதா ஆகும். 1920-க்குப் பிறகு மராத்தி நாடகக்கலை நடப்பியல் பாணிக்குத் திரும்பியது. மாமாவரேர்கரின் பூமிகன்னியாசீதை, ஆதிக்கத்தின் அடிமைகள் ஆகியன மராத்தி நாடக இலக்கியத்தில் ஒரு நிலையாகும். பி.கே. ஆத்திரே, பி.கால். தேசு பாண்டே போன்றோர் நாடக ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர். கோகல் எழுதிய “இன்சுபெக்டர் செனரல்,” பிரகடின் எழுதிய திரீபென்னிலபரா ஆகிய நாடகங்களைத் தேசுபாண்டே மராட்டிய மொழியில் பெயர்த்துள்ளார். மராத்தி மொழி இசை நாடகத்தில் பெயர்பெற்றதாகும். ஏ.பி. கோல்தாட்கர் மற்றோர் இசை நாடக ஆசிரியராவார். நாராயணஇராவ் காலகந்தருவ என்ற பெயரால் எல்லாராலும் அறிந்து கொள்ளப்பட்ட நடிகர் ஆவர். அவரது பெண்வேடம் பெயர்பெற்றதாகும். விடுதலைக்குப் பிறகு விசயதெண்டூல்கரைத் தவிர, கன்னோல்கள் சயந்துதாவலி, மகேசு எல்குஞ்சுலான், சதீசு அலேகர் அசியுல் வாலேச, அனில் பார்வே ஆகியோர் மராட்டிய நாடக ஆசிரியர்களாவர். கன்னோல்கரின் ஏகசூனிய பாசராவ், எல்குச்சுவாரின் வாசனாகந்த, தாலிவியின் சந்தியானாயா ஆகியவை பல முறை மேடையேறிய நாடகங்களாகும். விசயமேதா, அரவிந்த தேசுபாண்டே, சபார் பட்டேல், அமோல் பலேக்கர், திலிப்புகோல்தாட்கர், சத்தியதேந்துபே ஆகியோர் புகழ்பெற்ற மராத்தி நாடக இயக்குநர் ஆவர். சபார் பட்டேலின் காவிராம் கொதுவால் மிகவும் புகழ்பெற்ற படைப்பு ஆகும், பிருதிவிதியேட்டர், இந்தியன் நேசனல் தியேட்டர், தேசீய நிகழ்க்கலை மையம் ஆகியவை மராத்தி நாடகத்திற்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களாகும். உரோசினி அட்டங்காடி காந்தி திரைப்படத்தில் கத்தூரிபாயாக நடித்ததன் மூலம் உலகம் முழுதும் அறிமுகமாகி உள்ளார். இவர் மராட்டிய நாடக மேடையில் சிறந்த நடிகையாவார். திரைப்பட நடிகரான நசுருதீன்சாவும் பம்பாய் நாடக மேடையில் சிறப்பிடம் பெற்றவரே. <b>வங்கமொழி நாடகம்:</b> இலெவடம், கோவக்கு நாததாசு ஆகியோரின் புதிய நாடக முயற்சியைத் தொடர்ந்து, சோரசங்கு அரங்கு கவிஞர் தாகூர் சகோதரர்களால் தொடங்கப்பட்டது. கவிஞர் தாகூர்<noinclude> வா. க. 3-58</noinclude> m7cydicxr58fits2mg7rxl8r7555dlc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/482 250 630870 1958199 1896254 2026-08-14T13:31:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நாடகக் கலை|458|இந்திய நாடகக் கலை}}</noinclude>தம் நாடக எழுத்தாக்கத்தை வான்மீகி பிரதிபா என்னும் அவரது முதல் இசை நாடகத்துடன் தொடங்கி, ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடகங்கள் எழுதி முடித்தார். அவற்றுள் செவ்வலரி, இராசா, முத்ததாரா போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும். தாகூர் நாடகங்கள் இந்நூற்றாண்டின் ஐம்பது, அறுபதுகளில் சம்புமித்திராவால் மேடையேற்றப்பட்ட பின்பே இவற்றின் மேடையாக்கக் கூறுகள் அவர் நிறுவிய நிறுவனமான சாந்திநிகேதனத்திற்கு வெளியே உணரப்பட்டன. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கிரிசு சந்திரகோசின் (கி.பி. 1844-1911) கிராசு உத்தெளலா. சத்திரபதி சிவாசி, திவிசேந்திர இலால் இராயின் இராணாபிரதாப்பு (கி.பி. 1863 -1913), துர்க்கா தாசு, சந்திர குப்தர் போன்ற வரலாற்று நாடகங்கள் வங்கத்தில் மட்டுமன்றி, அக்கால கட்டத்திலேயே பிற மொழிகளிலும் நடிக்கப் பெற்றவையாகும். நடிப்புக் கலையில் இன்றும் சிறந்து விளங்கும் மகசசாய் பரிசு பெற்ற சம்புமித்திரா, உதுபல்தத்துப் போன்றோரும், 1930-இல் புகழ்க்கொடியோடு விளங்கிய அதிந்திர சௌத்திரியும் சிசிர்குமார் பதுரியின் (கி.பி. 1889-1959) வழித்தோன்றல்களாவர், உதுபல்தத்தின் இலிட்டில் தியேட்டர் குருப்பினர் சாத்துராப் பாணியில் இலெனின், மாவோ, வியட்நாம் பாற்றிய படைப்புகளை நடத்தினர். புதிய நாடக இயக்கம் ‘புதிய அறுவடை’ என்னும் நாடகத்துடன் தொடங்கியது. தருன் இராய். அருண்முகர்ஜி. மொகிச்சட்டர்சி போன்றோர் இயக்குநர், நாடக ஆசிரியர்கள் என்ற நிலையில் சிறப்பாகக் கருதப்படுகின்றனர். உருத்திரப்பிரசாத்து சென்குப்தா ‘தத்திகார்’ என்னும் அமைப்பில் மேலை நாடகங்களான பிரசுடின் நாடகங்களைப் படைத்துள்ளார். வங்க நாடக ஆசிரியருள் பாதல் சர்க்காருக்குத் தனியிடம் உண்டு, அவரது மூன்றாம் நாடக அரங்கக் கோட்பாடு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். இவர் நடிகர், பார்வையாளர் ஆகிய நாடகப் படைப்பின் அடித்தளத்தில் மரபு, வழக்கம் தாண்டிய மூன்றாம் நிலை நாடகத்தைப் படைத்து வருபவர். இவரது ‘ஏவம் இந்திரசித்து’, ‘பாக்கி இதிகாசர்’ ஆகியன புதிய இந்திய நாடகமாகக் கருதப்படுகின்றன. ஒளியமைப்பில் தபசுசென் குறிப்பிடத்தக்கவர். இவ்வாறு வங்க நாடகக்கலை இந்தியாவில் முன்னணியில் நிற்கிறது. <b>மலையாள நாடகம்:</b> கேரளவர்ம வலியகோயித்து தம்புரானின் சாகுந்தல நாடக மொழிபெயர்ப்புடனும் (1901), திருவட்டார் நாராயன பிள்ளையின் சாகுந்தல நாடக அரங்கேற்றத்துடனும் புதிய மலையாள நாடகம் கி.பி. 1882-இல் தொடங்குகிறது. வடமொழி நாடகம், தமிழ் இசை நாடகம் ஆகியவற்றின் பாதிப்போடு சேக்சுபியர், மோலியர், இப்சன் போன்றோரின் மேலை நாட்டு நாடகங்களின் பாதிப்பும் மலையாள நாடகத்தைப் பெரிதும் தாக்கியுள்ளன. ஈ.வி. கிருட்டிணபிள்ளை, சி.வி. இராமன்பிள்ளை, போன்றோரின் நாவல் பத்திகள் மற்றும் சமூக நகைச்சுவை நாடகங்கள் தொடக்ககால மலையாள நாடகக் கலையுள் குறிப்பிடத்தக்கன. சி.செ. தாமசின் கி.பி. 1128-இல் ‘கிரைம்நிர், 27உம்,’ புளிமான பரமேசுவரன் பிள்ளையின் சமத்துவவாதியும் மலையாள நாடகத்தில் தனிஇடம் பெற்றவை. என். கிருட்டிண பிள்ளை சமுதாயச் சிக்கல்களைக் கொண்ட நாடகம் எழுதியவர். இவரது ‘பக்கின பவனம்’ குறிப்பிடத்தக்கதாகும். இப்சனின் பாதிப்பை இவரிடம் காணலாம். சி.என். சிரீகண்டன் நாயரின் முப்பெரும் நாடகங்களான சாகேதம், இலங்காலட்சுமி, காஞ்சன சீதை ஆகியவை புகழ் பெற்ற நாடகங்களாகும். இவர் நாடக ஆசிரியராக மட்டுமன்றி, நாடக இயக்கத் தலைவராகவும் விளங்குபவர். சி. சங்கரபிள்ளை இவர்தம் பூசாமுறி, கருப்புத் தெய்வத்தைத்தேடி ஆகியன அனைத்திந்திய அளவில் அறியப்பட்டவை. கேரளத்தில் நாடகக்களரி, நாடகப் பட்டப்படிப்பு தோன்றக் காரணமானவரும் இவரே. காவாலம் நாராயணப் பணிக்கர் கிராமிய மற்றும் செவ்வியல் வடிவப் பின்னணியில் நாடகம் எழுதுபவர். இவரது ‘தெய்வத்தார்’, ‘அவனவன் கடம்ப’, என்பவை புகழ்பெற்றவை. இவரது வடமொழி நாடகப் படைப்பான பாசனின் மத்திய மலியாயோகம் அகில இந்தியாவில் மட்டுமன்றி, உலக நாடுகளிலும் இவருக்கு அறிமுகத்தை அளித்தன. தேசிய நாடகப் பள்ளி மாணவரும் தமிழகத்தைச் சார்ந்தவருமான சே. இராமாநுசத்தின் மலையாள நாடகப் படைப்புகள் சிறப்பிடம் பெற்றவையாகக் கருதப்பட்டன. மரபுக் கலைகளில் எழுச்சி பெற்ற கற்பனையின் வீச்சிற்காக இவர் தம் நாடகங்கள் பாராட்டப் படுகின்றன. இவரது ‘கருப்பு தெய்வத்தைத் தேடி’ என்னும் நாடகம் அகில இந்திய அங்கீகாரம் பெற்றதாகும். கேரளத்தில் 1967-இலிருந்து தோன்றிய நாடகக்களரி புதிய நாடக உணர்வைக் கேரளத்தில் ஏற்படுத்தியது. இந்தப் பயிலியல் நாடகத்தைத் தவிர தொழிலியல் நாடகத் துறையில் தோப்பில் பாசி, என்.என். பிள்ளை, திக்கோடியன், கே.டி. முகமது, எம்.டி. வாசுதேவன் நாயர் ஆகியோர் குறிப்பிடப்படத்தக்கவராவர். <b>கன்னட நாடகம்:</b> எட்சகான மரபும், மராத்தி நாடகத் தாக்கமும் கன்னட நாடகக் கலையின் பின்னணியாகும். வணிக இயல் குழு வடமொழி, ஆங்கில,<noinclude></noinclude> 2oo2k9agctbh39n7x3wmr2db2tkamgh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/483 250 630873 1958200 1896264 2026-08-14T13:39:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நாடகக் கலை|459|இந்திய நாடகக் கலை}}</noinclude>மராத்தி நாடகங்களின் மொழிபெயர்ப்பு நாடகங்களை நடத்தி வந்தன. இவற்றுள் குப்பிவீரண்ணாக்குழு குறிப்பிடத்தக்கது. 1930 வரை ஆடம்பரக் காட்சியமைப்பும், வரலாற்று நாடகங்களும் பரவலாக இருந்தன. டி.பி. கைலாசம், நாராயண இராவ், டி.ஆர். பெந்தரே, ஏ.என். கிருட்டிண இராவ், சிவராம் கரந்து, ஆதியரங்காச்சாரியா போன்றோர் நாடக ஆசிரியர்களாக மட்டுமன்றி, கன்னட நாடகக் கலையின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களும் ஆவர். விடுதலைக்குப் பிறகு, கிரிசுகர்னாடு, பி.வி. கரந்து ஆகியோர் கன்னடமொழி நாடகக் கலைக்குப் பெரிதும் தொண்டாற்றியுள்ளனர். பிரசன்னா, நாகேசு, சிம்கா இலங்கேசு, சி.பி. சோசி, சந்திரசேகரப் பட்டீல், சந்திரசேகர கம்பார் போன்ற இயக்குநர்களும் நாடக ஆசிரியர்களும் கன்னட நாடக அரங்கில் தமக்கெனத்தனியிடம் வகுத்துக் கொண்டவர்களாவர். கருனாடின் துக்ளக்கு, அயவதனா, கம்பாரின் சோகுமாரசுவாமி ஆகியன குறிப்பிடத்தக்க நாடகங்களாகும். வீ. இராமமூர்த்தி ஒளியமைப்பிலும் அரங்கச் சிற்பத்திலும் சிறந்தவராவார். எக்காடுவில், கே.வி. சுப்பண்ணா நாடகம், திரைப்படக் கலை ஆகிய இரண்டின் சுவையிலும் ஆக்கமுறையிலமைந்த செயலில் ஈடுபட்டுள்ளார். <b>தெலுங்கு நாடகம்:</b> மராத்தி, பார்சி நாடகப் பாதிப்புடன் புதிய தெலுங்கு நாடகக்கலை கி.பி. 1880-இல் முகப்பு நாடக அரங்கத் தோற்றத்துடன் தொடங்குகிறது. ஆந்திர நாடகத்தின் முதன்மையாளராகப் பெல்லாரி டி. இராமகிருட்டிணாச்சாரிலு கருதப்படுகிறார். தருமாவரம் கிருட்டிணமாச்சாரியார், கோலாச்சலம் சீனிவாச இராவ் ஆகிய இருவரும் முக்கியமான தெலுங்கு நாடக ஆசிரியர்களாவர். தெலுங்கு நாடகக் கலையில் நடப்பியல் பாணி சி.வி. அப்பாராவின் கன்னியாசுல்கத்துடன் தொடங்குகிறது. பெல்லாரி இராகவாச்சாரி சிறந்த நடிகராவார். இவர் சேக்சுபியர் நாடகப் பாத்திரங்களில் தலைசிறந்து விளங்குகிறார். சுதந்திரத்திற்குப் பின்னர் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடும்போது, தெலுங்கு நாடகக் கலை பின்தங்கிய நிலையில் உள்ளது. எனினும் சமூகச் சீர்திருத்தம், அரசியல் கருத்து விளக்கம் இவற்றிற்காகத் திரு கத்தார், திரு சுந்தரம் போன்ற இளைஞர்கள் மரபுக் கலைகளின் உத்திகளை இணைத்துப் படைக்கும் படைப்புகள் இந்நாடகக் கலை வளர்ச்சிக்கு ஓரளவு நம்பிக்கையூட்டுகின்றன. <b>தமிழ் நாடகம்:</b> சிலப்பதிகாரத்திலும் சாத்தனாரின் கூத்தநூலிலும் பரிதிமாற்கலைஞரின் நாடகவியலிலும் தமிழ் நாடகம் பற்றிய இலக்கணங்கள் காணப்படுகின்றன. தமிழ் நாடகம் இசை தழுவிய கூத்தேயாகும். தமிழ் மரபுவழி நாடகக்கலை என்று கூறிக்கொள்ளத் தெருக்கூத்து ஒன்றுதான் எஞ்சி நிற்கிறது. பாசுவதமேளா தமிழ் நாட்டின் தெலுங்கு மொழி நாடகமாகும். கி.பி. 1891-ஆம் ஆண்டு சங்கரதாசு சுவாமிகள் (கி.பி. 1867-1927) நாடக உலகில் நுழைந்ததும், தமிழ் நாடகத்தின் திருப்புமுனை தொடக்கமாயிற்று, இவருக்குச் சமகாலத்தவர் அப்பாவுப்பிள்ளை, கந்தசாமி, முத்துசாமிக் கவிராயர், சந்தான கிருட்டிணநாயுடு, சங்கரலிங்கக் கவிராயர், பாசுகரதாசு முதலியோர். மதுரைத் தத்துவ மீனலோசனி தத்துவ பாலசபா, மதுரைப் பாலமீன இரஞ்சனி சங்கீத சபா. மதுரை ஒரிஜினல் பாய்சு கம்பனி போன்ற குழுக்கள் தமிழ் நாடகக் கலையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன. 1927-இல் சிரீபாலசண்முகானந்த சபா என்ற பெயரில் டி.கே. எசு. சகோதரர்கள் நாடகக்குழு அமைத்தனர். அவ்வை டி.கே. சண்முகம் தமிழ் நாட்டில் தலைசிறந்த நடிகராவார். தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் ஆவார். இவர் சென்னையில் சுகுணவிலாச சபை நிறுவினார். சேக்சுபியர், காளிதாசர் நாடகங்களை மொழிபெயர்த்தும் தழுவியும் தமிழில் சில நாடகங்கள் எழுதியதோடு தாமே பல நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது மனோகரா நாடகம் பலமுறை அரங்கேற்றப்பட்ட சிறப்புடையது. திரு. கன்னையா கம்பனி சென்னை சிரீகிருட்டிண விநோத சபா என்ற பெயரில் தசாவதாரம், இராமாயணம், மகாபாரதம் போன்ற நாடங்களை அரங்கேற்றியுள்ளது. பல தந்திரக் காட்சிகளைக் காட்டி மக்களை மகிழச் செய்தவர் கன்னையா. திரு. எசு. சி. கிட்டப்பா (1919-1926) என்னும் மேடை இசை நடிப்பு வல்லுநர், இக்குழு மேடையிலேயே முதலில் தோன்றினார். இவரைப் பின்பற்றி நவாபு டி.எசு. இராசமாணிக்கம் மதுரைத் தேவிபால விநோத நாடக சபா என்னும் புகழ்மிக்க நாடகக்குழுவை அமைத்தார். தமிழ் நாடக மேடையில் திரு.எம். கந்தசாமி முதலியாருக்குத் தனியிடம் உண்டு. சே.ஆர். அரங்கராக, வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றோரின் நாவல்கள் நாடகமாக்கப்பட்டன. மற்றொரு நாடக ஆசிரியர் சங்கரதாச சுவாமிகள் ஆவார். தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை நடிகரான கலைவாணர் என்.எசு. கிருட்டிணன், என்.எசு.கே. என்ற பெயரில் நாடகக்குழு ஒன்றை அமைத்தார். இவரது நாடகக்குழுவில் கே.ஆர். இராமசாமி, சிவாசிகணேசன் போன்றோர் நடித்தனர். எசு.வி. சகசுரநாமத்தின் சேவைக் குழு (Seva stage) மற்றொரு நாடகக் குழுவாகும். விடுதலைக்குப்பின் உள்ள தொழில்<noinclude></noinclude> 2h89lmvuw88y307sumj6sgdmwipvua2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/484 250 630881 1958201 1896286 2026-08-14T13:45:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நாடசுக் கலை|460|இந்திய நாடசுக் கலை}}</noinclude>முறை நாடகக் குழுக்களில் டி.கே. சண்முகம் குழுவினர், சகசுரநாமத்தின் சேவைக்குழு, மேசர் சுந்தரராசனின் என்.எசு.என் நாடகக்குழு, மனோகரின் நேசனல் தியேட்டர்சு ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். விவேகானந்தா பைன் ஆர்ட்சு மூலம் சோ அங்கத நாடகங்களை மேடையேற்றினார். எம்.ஜி. இராமச்சந்திரன், சிவாசிகணேசன், எசு.எசு. இராசேந்திரன், மனோரமா போன்றோர் திரைப்பட நடிகராயினும், நாடகங்களிலும் நடித்து வந்தனர். கே. பாலச்சந்தர், கோமல் சுவாமிநாதன், பூரணம் விசுவநாதன் போன்றோர் அமெச்சூர் நாடக சபாக்களில் புதிய முயற்சிகள் சில செய்தனர். நாடகம் பற்றிய முதல் பயிற்சி முகசம் 1977-இல் காந்தி கிராம பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் சே. இராமானுகம், திரு.எசு.பி. சீனிவாசன் ஆகியோர் இணைந்து நடத்தியதாகும். இதனைத் தொடர்ந்து, தேசிய நாடகப் பள்ளியின் இரண்டரை மாதப் பயிற்சி, பாதல்சர்க்காரின் நாடகப் பயிற்சி முகாம், மதுரைப் பல்கலைக் கழகத்தில் நாடகச் சான்றிதழ்ப் படிப்பு, நிச நாடக இயக்கத்தின் தெருக்கூத்துப் பயிற்சி முகாம். ஆசிரியருக்கான நாடகப்பட்டறை முதலியன நடைபெற்றன. மரபுக்கலையோடு இணைந்து புதிய நாடக முயற்சிகளில் சே.இராமானுசத்தின் புறஞ்சேரி 1977-78 எர்ணாகுளம் தேசிய நாடக விழாவிலும், பன்சிகவுல் இயக்கிய ‘பிணந்தின்னும் சாத்திரங்கள்’ 1978-இல் தில்லி சிரீராம் கலை மையத்திலும், 1984-இல் நிச நாடக இயக்கத்தின் சார்பில் மு.இராமசாமி இயக்கிய ‘துர்க்கிர அவலம்’ பெங்களூர், தில்லி சங்கீத நாடக அகாடமி விழாக்களிலும், 1985-இல் கூத்துப் பட்டறையின் சார்பாக எசு. இராசேந்திரன் இயக்கிய ந.முத்துசாமியின் ‘கட்டியங்காரன்’ எருணாகுளம் அகாடமி விழாவிலும் பங்கு பெற்றன. அண்ணா, கருணாநிதி, அரு. இராமநாதன், எசு.டி. சுந்தரம், பி.எசு. இராமையா, தி. சானகிராமன், என்.வி. இராசாமணி, கே. பாலச்சந்தர், சோ, மு.சா. கிருட்டிணமூர்த்தி போன்ற நாடக ஆசிரியர்களால் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்திரா பார்ததசாரதியின் மழை, போர்வை போர்த்திய உடல்கள், ஒளரங்கசீபு, ந. முத்துசாமியின் நாற்காலிக்காரர், சுவரொட்டிகள் புதிய நாடகத்தில் குறிப்பிடத்தக்க சிலவாகும். இவை பிற இந்திய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. மதுரை நிச நாடக இயக்கம், சென்னையில் பரிகுசா, கூத்துப்பட்டறை போன்றவை புதிய முயற்சிகளில் ஈடுபட்ட குழுக்களாகும். பரம்பைச் செல்வன், அசுவகோசு, ஞானி, மு. இராமசுவாமி, இரா. இராசு, கே. எசு. இராசேந்திரன், ஆறுமுகம் போன்ற புதிய இளம் நாடக இயக்குநர்கள் நவீன நாடகப் போக்குகளில் தலைமை வகிக்கின்றனர். தமிழ்ப் பல்கலைக்கழகம் நாடக ஆய்வுக்காக நாடகத் துறையை உருவாக்கியுள்ளது. இதில் கல்லூரி ஆசிரியர்களுக்குரிய நாடகப்பட்டறை, மரபுவழிக் கலைகள் மூலம் நடிகர் பயிற்சி முறைகள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சற்றுப் பின்தங்கினாலும் தேசிய ஓட்டத்தில் தமிழகமும் சேர்ந்துள்ளது. <b>இந்தி நாடகக்கலை:</b> பார்சி நாடகக் குழுவின் பாதிப்பு இந்தி நாடகக்கலையில் பெரிதும் காணப்படுகிறது. ஆ.சா. ஆசுகர் காசுமீரி, இராசேசியாம் கதாவாசக் நாராயணப் பிரசாத் பெதாம் போன்றோர் வணிகமுறை குழுவின் நாடக எழுத்தாளர்களுள் சிறந்து விளங்கினர். காசுமீரின் பீசும சபதமும் சத்திய அரிச்சந்திசாவும் புகழ்பெற்றவை. பாரதேந்து அரிச்சந்திரர் (கி.பி. 1850-1885) இந்தி நாடகத் தந்தையாகக் கருதப்படுகிறார். இவர் தம் அரிச்சந்திராவும் அந்தேர் நகரியும் குறிப்பிடத்தக்கன. இந்தி நாடகக் கலையில் நாடக இலக்கிய வடிவாக்கத்தின் திட்டத்தில் நூலாக்கும் தகுதி பெற்றுள்ளவை செய சங்கர் பிரசாத்தின் (கி.பி. 1889-1937) நாடகங்களாகும். இவற்றை மேடையாக்கம் செய்யும் முயற்சி பின்னர்த் தோன்றியது. இவர்தம் கந்தகுப்தர், சமுத்திரகுப்தர் போன்றவை பெயர்பெற்றவை. இந்தி நாடகத்தில் இலட்சுமி நாராயண மிசுரா, உபேந்திரநாத்து அசுக்கு போன்றோர் சமூகச்சிக்கல்களைத் தாங்கிய நாடகங்கள் பல எழுதினர். இந்தித் தொழில்முறை நாடகத்தில் பிருதிவிராசபூரின் பிருதிவிக்கு திரையகம் சிறப்பானதாகும். விடுதலைக்குப் பின்னர் மோகன் இராகேசு, இலட்சுமி நாராயணன் இலால், சுரேந்திரவருமா, மணிமதுக்கர், இரமேசு பட்சி, சங்கர் சேசு, முத்திரா இராட்சசு போன்றோர் நாடக ஆசிரியர்களாக விளங்குகின்றனர். தருமவீரர் பாரதியின் அந்தாயுக்கு, மோகன் இராசேசின் ஆசாடமாதத்தில் ஒரு நாள், ஆதே அதுரே ஆகியன தேசிய அளவில் குறிப்பிடத்தக்கவை. குசராத்தில் சி.சி. மெகதாவின் ஆக்குகார்கி (புகை வண்டி) குறிப்பிடத்தக்க நாடகமாகும். ஆதிமாச்சு பாவன், இயசுவந்து தாகர், கைலாசு பாணியா, பர்வின் சோசி போன்றோர் குசராத்தி மொழி நாடக இயக்குநர்களாவர். இளம் நாடக ஆசிரியரில் மதுரை என்பர் குறிப்பிடத்தகுந்தவராவார். பஞ்சாபியில் ஐ.சி. மெகதாவின் மணப்பெண், பல்வந்து கார்க்கியின் மாமரம், சிலாபாட்டியாவின் நாயக-<noinclude></noinclude> py95glk43191vclianz9rzei8cezlzu 1958202 1958201 2026-08-14T13:46:40Z Booradleyp1 1964 1958202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நாடகக் கலை|460|இந்திய நாடகக் கலை}}</noinclude>முறை நாடகக் குழுக்களில் டி.கே. சண்முகம் குழுவினர், சகசுரநாமத்தின் சேவைக்குழு, மேசர் சுந்தரராசனின் என்.எசு.என் நாடகக்குழு, மனோகரின் நேசனல் தியேட்டர்சு ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். விவேகானந்தா பைன் ஆர்ட்சு மூலம் சோ அங்கத நாடகங்களை மேடையேற்றினார். எம்.ஜி. இராமச்சந்திரன், சிவாசிகணேசன், எசு.எசு. இராசேந்திரன், மனோரமா போன்றோர் திரைப்பட நடிகராயினும், நாடகங்களிலும் நடித்து வந்தனர். கே. பாலச்சந்தர், கோமல் சுவாமிநாதன், பூரணம் விசுவநாதன் போன்றோர் அமெச்சூர் நாடக சபாக்களில் புதிய முயற்சிகள் சில செய்தனர். நாடகம் பற்றிய முதல் பயிற்சி முகசம் 1977-இல் காந்தி கிராம பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் சே. இராமானுகம், திரு.எசு.பி. சீனிவாசன் ஆகியோர் இணைந்து நடத்தியதாகும். இதனைத் தொடர்ந்து, தேசிய நாடகப் பள்ளியின் இரண்டரை மாதப் பயிற்சி, பாதல்சர்க்காரின் நாடகப் பயிற்சி முகாம், மதுரைப் பல்கலைக் கழகத்தில் நாடகச் சான்றிதழ்ப் படிப்பு, நிச நாடக இயக்கத்தின் தெருக்கூத்துப் பயிற்சி முகாம். ஆசிரியருக்கான நாடகப்பட்டறை முதலியன நடைபெற்றன. மரபுக்கலையோடு இணைந்து புதிய நாடக முயற்சிகளில் சே.இராமானுசத்தின் புறஞ்சேரி 1977-78 எர்ணாகுளம் தேசிய நாடக விழாவிலும், பன்சிகவுல் இயக்கிய ‘பிணந்தின்னும் சாத்திரங்கள்’ 1978-இல் தில்லி சிரீராம் கலை மையத்திலும், 1984-இல் நிச நாடக இயக்கத்தின் சார்பில் மு.இராமசாமி இயக்கிய ‘துர்க்கிர அவலம்’ பெங்களூர், தில்லி சங்கீத நாடக அகாடமி விழாக்களிலும், 1985-இல் கூத்துப் பட்டறையின் சார்பாக எசு. இராசேந்திரன் இயக்கிய ந.முத்துசாமியின் ‘கட்டியங்காரன்’ எருணாகுளம் அகாடமி விழாவிலும் பங்கு பெற்றன. அண்ணா, கருணாநிதி, அரு. இராமநாதன், எசு.டி. சுந்தரம், பி.எசு. இராமையா, தி. சானகிராமன், என்.வி. இராசாமணி, கே. பாலச்சந்தர், சோ, மு.சா. கிருட்டிணமூர்த்தி போன்ற நாடக ஆசிரியர்களால் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்திரா பார்ததசாரதியின் மழை, போர்வை போர்த்திய உடல்கள், ஒளரங்கசீபு, ந. முத்துசாமியின் நாற்காலிக்காரர், சுவரொட்டிகள் புதிய நாடகத்தில் குறிப்பிடத்தக்க சிலவாகும். இவை பிற இந்திய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. மதுரை நிச நாடக இயக்கம், சென்னையில் பரிகுசா, கூத்துப்பட்டறை போன்றவை புதிய முயற்சிகளில் ஈடுபட்ட குழுக்களாகும். பரம்பைச் செல்வன், அசுவகோசு, ஞானி, மு. இராமசுவாமி, இரா. இராசு, கே. எசு. இராசேந்திரன், ஆறுமுகம் போன்ற புதிய இளம் நாடக இயக்குநர்கள் நவீன நாடகப் போக்குகளில் தலைமை வகிக்கின்றனர். தமிழ்ப் பல்கலைக்கழகம் நாடக ஆய்வுக்காக நாடகத் துறையை உருவாக்கியுள்ளது. இதில் கல்லூரி ஆசிரியர்களுக்குரிய நாடகப்பட்டறை, மரபுவழிக் கலைகள் மூலம் நடிகர் பயிற்சி முறைகள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சற்றுப் பின்தங்கினாலும் தேசிய ஓட்டத்தில் தமிழகமும் சேர்ந்துள்ளது. <b>இந்தி நாடகக்கலை:</b> பார்சி நாடகக் குழுவின் பாதிப்பு இந்தி நாடகக்கலையில் பெரிதும் காணப்படுகிறது. ஆ.சா. ஆசுகர் காசுமீரி, இராசேசியாம் கதாவாசக் நாராயணப் பிரசாத் பெதாம் போன்றோர் வணிகமுறை குழுவின் நாடக எழுத்தாளர்களுள் சிறந்து விளங்கினர். காசுமீரின் பீசும சபதமும் சத்திய அரிச்சந்திசாவும் புகழ்பெற்றவை. பாரதேந்து அரிச்சந்திரர் (கி.பி. 1850-1885) இந்தி நாடகத் தந்தையாகக் கருதப்படுகிறார். இவர் தம் அரிச்சந்திராவும் அந்தேர் நகரியும் குறிப்பிடத்தக்கன. இந்தி நாடகக் கலையில் நாடக இலக்கிய வடிவாக்கத்தின் திட்டத்தில் நூலாக்கும் தகுதி பெற்றுள்ளவை செய சங்கர் பிரசாத்தின் (கி.பி. 1889-1937) நாடகங்களாகும். இவற்றை மேடையாக்கம் செய்யும் முயற்சி பின்னர்த் தோன்றியது. இவர்தம் கந்தகுப்தர், சமுத்திரகுப்தர் போன்றவை பெயர்பெற்றவை. இந்தி நாடகத்தில் இலட்சுமி நாராயண மிசுரா, உபேந்திரநாத்து அசுக்கு போன்றோர் சமூகச்சிக்கல்களைத் தாங்கிய நாடகங்கள் பல எழுதினர். இந்தித் தொழில்முறை நாடகத்தில் பிருதிவிராசபூரின் பிருதிவிக்கு திரையகம் சிறப்பானதாகும். விடுதலைக்குப் பின்னர் மோகன் இராகேசு, இலட்சுமி நாராயணன் இலால், சுரேந்திரவருமா, மணிமதுக்கர், இரமேசு பட்சி, சங்கர் சேசு, முத்திரா இராட்சசு போன்றோர் நாடக ஆசிரியர்களாக விளங்குகின்றனர். தருமவீரர் பாரதியின் அந்தாயுக்கு, மோகன் இராசேசின் ஆசாடமாதத்தில் ஒரு நாள், ஆதே அதுரே ஆகியன தேசிய அளவில் குறிப்பிடத்தக்கவை. குசராத்தில் சி.சி. மெகதாவின் ஆக்குகார்கி (புகை வண்டி) குறிப்பிடத்தக்க நாடகமாகும். ஆதிமாச்சு பாவன், இயசுவந்து தாகர், கைலாசு பாணியா, பர்வின் சோசி போன்றோர் குசராத்தி மொழி நாடக இயக்குநர்களாவர். இளம் நாடக ஆசிரியரில் மதுரை என்பர் குறிப்பிடத்தகுந்தவராவார். பஞ்சாபியில் ஐ.சி. மெகதாவின் மணப்பெண், பல்வந்து கார்க்கியின் மாமரம், சிலாபாட்டியாவின் நாயக-<noinclude></noinclude> 53d8vrr6hnzybw2qkdq9aj29i1pohki பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/485 250 630888 1958203 1896297 2026-08-14T13:52:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நாடகக் கலை|461|இந்திய நாடகக் கலை}}</noinclude>நாயகி என்னும் இசை நாடகம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். <b>புதிய நாடகம்:</b> புதிய இந்திய நாடகம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலை நாட்டு-குறிப்பாக இங்கிலாந்து நாட்டுப் பாதிப்பைப் பெற்றுத் தொடங்குகிறது. ஆங்கில ஆதிக்கமும் ஆங்கிலக் கல்வியும் இப்பாதிப்பிற்குக் காரணங்களாகின்றன. ஆங்கிலேய அதிகாரிகள் தங்கள் மன மகிழ்விற்காக இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்த சில நாடகப் படைப்புகளும், இங்கே தங்கிய ஆங்கிலேயர் எழுதி நடித்த நாடகமும் புதிய நாடகங்களுக்கு முன்மாதிரிகளாகக் கொள்ளப்பட்டன. வண்ணந்தீட்டிய பொதுத் தளங்கள் கொண்ட திரைகள், முகப்புத் தாங்கிய மேடை, ஒளியமைப்பு, பறையறையும் பாணியில் அமைந்த பேச்சு, முகக்குறிப்பு ஆகியன புதுமையாகிப் பார்வையாளர்களைக் கவர்ந்தன. வணிகக் குலத்தினரான பார்சிக்கள் கி.பி. 1850-இல் நாடகக்குழு ஒன்றை வணிக அடிப்படையில் தொடங்கினர். கண்ணைக்கவரும் காட்சியமைப்யும், மிகைப்படுத்தப்பட்ட அபிநயமும், நிகழ்ச்சிச் செறிவு மிக்க கதைகளும் உடைய நாடகங்களை பார்சி நாடகக்குழு இந்தியா முழுவதும் நடத்தியது. இதன் விளைவாகப் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற நாடகக்குழுக்கள் தோன்றி மக்களிடையே பேராதரவைப் பெற்றன. ஆங்கிலக் கல்வி கற்றமையால் சேக்சுபியர், பெர்னாட்சா, இப்சன் போன்றவரின் நாடக இலக்கிய வடிவாக்கத்தின் தாக்கம் ஏற்பட்டுப்பல நாடகங்கள் எழுதப்பெற்றன. இதன் பின்னணியில் சில நாடக வகைகள் தோன்றின. அவற்றுள், நாட்டுப் பற்றை வலியுறுத்தும் வரலாற்று நிகழ்வுகள், விடுதலை வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் ஆகியவற்றைக் கருவாகக் கொண்ட நாடகங்கள் ஒருவகை; வருக்கப்போராட்டம், சமுதாயச் சீர்திருத்தம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட போதனை நாடகங்கள் மற்றொரு வகை; பள்ளிப் பாடப் புத்தகத்திற்கான இலக்கிய நாடகங்கள் வேறொரு வகையாகும். எராசிம் இலெப்டெபு (Herasim Lebdeff) என்னும் உருசியரும் வங்காள மொழி ஆசிரியரான கோகுல நாத்தாசும் மாறுவேடம் (Disguise), மோலியரின் அன்பே சிறந்த மருத்துவர் (Love is Great Doctor) ஆகிய இரண்டு நகைச்சுவை நாடகங்களை மொழிபெயர்த்து, 1975-இல் வங்க மொழியில் அரங்கேற்றினர். இதுவே புதிய இந்திய நாடகத்தின் தொடக்கம் எனலாம். கருநாடகத்தில் குப்பிவீரண்ணா (கி.பி. 1814), டி.பி. கைலாசம், ஆந்திராவில் கே.வி. வீரேசலிங்கம் பந்தலு, (கி.பி. 1848), இராகவாச்சாரி (1919) தமிழ்நாட்டில் சம்பந்த முதலியார் (1904) ஆகியோர் புதிய நாடகப்பயிலியல் அமைப்பில் குறிப்பிடத்தக்கோர். கேரளாவில் சாகுந்தலம் என்னும் நாடகம், கேரளவரும தம்புரான் மொழிபெயர்ப்பு புதிய நாடகத் தொடக்கமாகக் கருதப்படுகிறது. திருவட்டார் நாராயண பிள்ளையே முதலில் சாகுந்தலத்தை அரங்கேற்றியவர். குசராத்தில் கவிராசு (கி.பி. 1865), இந்தியில் பாரதேந்து அரிச்சந்திரா (கி.பி. 1870), செயசங்கர் பிரசாத்து (1928), வங்கத்தில் பண்டித இராம் நாராயணன் (கி.பி. 1857), கவிஞர் இரவீந்திரநாத தாகூர் (கி.பி. 1877), ஒரிசாவில் இராம் சங்கர் இராய் (கி.பி. 1888), மராட்டியில் கே.டி. கடின்கர் (1906) முதலியோர் புதியநாடகத்துறையில் குறிப்பிடத் தக்கோராவர். 1953-இல் மத்திய சங்கீத நாடக அகாடமியின் தோற்றமும், 1957-இல் தில்லியில் தேசிய நாடகப் பள்ளியின் தோற்றமும் நாடக வளர்ச்சியில் சிறப்பிடம் பெறுகின்றன. பஞ்சாபு, சண்டிகார், பாட்டியாலா, பரோடா, இரவீந்திர பாரதி, கல்கத்தா, மைசூர், பங்களூர், கள்ளிக்கோட்டை ஆகிய பல்கலைக்கழகங்களில் நாடகத் துறைகள் தோன்றியுள்ளன. சான்றிதழ் முதல் பட்டப்படிப்பு, ஆய்வுகள், கிராமியக் கலைகளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளுதல் போல்வன அங்கு நடைபெறுகின்றன. கள்ளிக்கோட்டைப் பல்கலைக் கழகத்தின் திருச்சூரிலுள்ள நாடகப் பள்ளி, போபால் அரங்கமண்டல் தில்லி தேசிய நாடகப் பள்ளி போல்வன கலைக்குழுவாகவும் (Repertory company) சோதனைக் கூடமாகவும் ஆய்வுக் கூடமாகவும் விளங்குகின்றன. வடமொழி நாடகங்களைப் படைத்தல், மரபுக்கலைகளிலிருந்து உத்திகளைக் கையாளுதல், சோதனை முயற்சி ஆகியவை நாடகக் கலையில் நடைபெற்று வருகின்றன. இந்தியத் தன்மையுடன் நாடகங்கள் மிளிரவேண்டும் என்னும் முயற்சிகள் இப்போது நடைபெறுகின்றன. அல்காசி (1925 - ஆங்கிலம், இந்தி), உதுபல்தது (1929), சம்புமித்திரா (1915 வங்காளம்), அபீப் தன்வீர் (1923 - இந்தி) ஆகியோர் சில குறிப்பிடத்தக்க முன்னோடி இயக்குநர் ஆவர். தியேட்டர் யூனிட்டு, இலிட்டில் தியேட்டர் குரூப்பு, பொகுருபீ, நயாதியேட்டர் என்பன முறையே இவர்களுடைய நாடகக் குழுக்கள் ஆகும். பம்பாயில் விசயமேதாவின் அரங்காயன், காளிதாசரின் சாகுந்தலம், விசாகதத்தரின் முத்திரா இராட்சசம் போன்ற வடமொழி நாடகங்கள் அரங்-<noinclude></noinclude> ircx51f36dwgkzj8p9t1tvbzklayasm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/486 250 630984 1958204 1896627 2026-08-14T14:00:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நாடகக் கலை|462|இந்திய நாடகக் கலை}}</noinclude>கேற்றப்பட்டுள்ளன. அரவிந்த தேசுபாண்டே, அவர் மனைவி சுபாதேசுபாண்டே ஆகியோர் பம்பாயில் அரங்கக் கலையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய தேசிய நாடக மன்றம் (IPTA), தேசிய நிகழ் கலை மையம் (NEPA) முதலியன பம்பாயில் புதிய நாடகத்திற்கு ஊக்கமளித்து வருகின்றன. வங்கத்தில் அசிக் பானர்சி, உருத்திர பிரகாசு சென்தப்தா போன்றோரின் நந்திகாடு, தருன் இராயின் அரங்கக் கலை மையம் (Theatre Centre), அருண் முகர்சியின் சேத்தனா போன்ற குழுக்கள் வங்காளத்தில் பணியாற்றி வருகின்றன. சியாமனந்த சலான், அனாமிகா குழுவில் பணிபுரிந்தார். தில்லியின் இரசாசந்திரநாத்து தமது அபியான் மூலம் நாடகத்தை நடத்தி வருகிறார். இவரது பொறுப்பில் உள்ள சிரீராம் கலை மையம் பொம்மலாட்டம், புதிய நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. பி.வி, கரந்து (கன்னடம், இந்தி), சபார் பட்டேல் (மராத்தி), இரத்தன் திய்யம், கன்னையா இலால் (மணிபுரி), அருண்முகர்சி (வங்காளம்), எம்.கே. இரெய்னா, பன்சிகவுல், பி.எம். சா (இந்தி), காவாலம் நாராயணப் பணிக்கர், சே. இராமானுசம் (மலையாளம்), பிரசன்னா (கன்னடம்), மோகன் மகரிசி (இந்தி) போன்றோர் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க இயக்குநர்கள். ஓம் சிவபுரி, ஓம்புரி, மனோகர் சிங், உரோகிணி அட்டங்காடி, சுதாபுரி, சுரேகா வருமா, உத்தராபரோக்கர், திருப்தி மித்திரா போன்றோர் சிறந்த நடிகராவர். கோவர்த்தன் பாஞ்சால் அரங்கக்கட்டடக் கலையிலும், என்.சி, செயின் விமரிசனத்திலும், வீ. இராம மூர்த்தியும் தபசு சென்னும் ஒளியமைப்பிலும், தர்சிம்லால் அரங்கத் தச்சு வேலையிலும் சிறந்தவராவர். விசய்தெண்டுல்கர், பாதல் சர்க்கார் போன்றோர் சிறந்த நாடக ஆசிரியர். சிறந்த மேடைப் படைப்புகள் சில வருமாறு: அந்தாயுக்கு துக்ளக்கு (அல்காசி), சரண் தாசுசோர் (அபீப்புதன்வீர்), பருனாம்வனம் (கரந்து), காசிராம் கோத்துவால் (ஐபுார்பட்டேல்), மத்யமவியாயோகம் (காவாலம் நாராயணப் பணிக்கம்), மாரிச சங்கபாத்து (அருண் முகர்சி), ஊருபங்கம் (இரத்தன் திய்யம்), ஆல அப்சார் (பன்சிகவுல்) கருப்புத் தெய்வத்தைத் தேடி (இராமானுசம்), திருசங்கு (பி.எம். சா). உதுபல்தத்து கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என்ற மூன்று நிலைகளிலும் சிறந்தவர். இவர் சேக்சுபியர் நாடகங்களை தொடக்கக்காலத்தில் ஆங்கிலத்திலும், பின்னர் வங்க மொழியிலும் உருவாக்கினார். மாக்சிம் கார்க்கியின் அதலபாதாளம் (Lower depth), இலெனின், மாவோ, சாத்துரா ஆகிய மொழிபெயர்ப்புகள் இவர் தம் சிறந்த படைப்புகளாகும். தாகூர் நாடகங்களைச் சம்புமித்ரா மேடையாக்கம் செய்து மக்களிடையே பரப்பினார். இரத்தசுரபி, இராசா, ஈடிபசு போன்றவை இவர் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை. இவர் மனைவி திருப்திமித்திரா சிறந்த நடிகையாக விளங்குகிறார். அபீப் தன்வீரின் மிருச்சகடிகம், சரன் தாசுசோர் என்பன சிறந்த படைப்புகளாகும், கிரேக்க நாடகங்களையும் இப்சன், உலோர்கா, சிடிரிண்பரு, மோலியர் போன்றோரின் நாடகங்களையும் அல்காசி பம்பாயில் தியேட்டர் யூனிட்டு என்னும் நாடகக்குழுவில் மொழியாக்கம் செய்து அரங்கேற்றினார். தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராகி அதனைச் செம்மைப்படுத்தியவர் அல்காசியே ஆவார். நாடகக் கல்வியுடன் சப்பான், செர்மனி போன்ற பிற நாடகக்கோட்பாட்டுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பை இணைத்தவரும் இவரே. தருமவீர் பாரதியின் அந்தாயுக்கு, மோகன் இராகேசின் ஆசாட்காரத்தின், கிரிசுகர்னாடின் துக்ளக்கு, பாதல் சர்க்காரின் பாக்கி இதிகாசு போன்ற தேசிய நாடகப் பள்ளி நாடகங்கள் தனித்தன்மை பெற்ற சிறப்புடையவையாகும். இந்திய நாடக அரங்கம் 1960-க்குப் பிறகு மரபு வழி நிகழ்வுக் கலைகளிலிருந்து இந்தியத் தன்மை பெற்ற தனி மேடை மொழியாக்கத்திற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இன்றைய சிக்கல்களை காட்டும் நாடகங்களை மரபுக் கலைகளின் உத்திகளில் படைத்துக் காட்டுதல் என்பது இதன் நோக்கு ஆகும். ஏதாவது ஒரு நிகழ் கலை வடிவத்தைச் சார்தல், பல வடிவங்களின் உத்திகளைச் சேர்த்தல், இவ்வுத்திகளிலிருந்து எழுச்சி பெறல் போன்றவை நாடக ஆக்கத்தால் நடைபெற்று வருகின்றன. மராத்தியில் விசய தெண்டுல்கரின் (1928) அமைதி நீதிமன்றம் நடைபெறுகிறது. காசிராம் கோத்துவால், வங்கத்தில் பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரசித்து, பாக்கி இதிகாசம், இந்தியில் மோகன் இராகேசின் ஆதே அதுரே, கன்னடத்தில் கிரிசு கர்னாடின் அயவதனா போன்ற நாடகங்கள் இம்முயற்சிகளின் பலனாகும். சென்னையில் மகராசு பிளேயர்சு, பம்பாயில் தியேட்டர் குரூப்பு ஆகியன ஆங்கில நாடகங்களை நடத்துகின்றன. அலக்பதம்சி இத்துறையில் சிறந்த இயக்குநராவார். தனிப்பட்ட நிறுவனங்களாலும் மாநிலங்களிலுள்ள இயலிசை மன்றங்களாலும் தேசிய நாடகப்<noinclude></noinclude> 67xnctbx90je6qap7bec9ocv6cqdis9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/487 250 630985 1958205 1954960 2026-08-14T14:10:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நிலப்பயன்பாடு|463|இந்திய நிலப் பயன்பாடு}}</noinclude>பள்ளியிலும் நாடகக் கல்லூரிகளிலும் பயிற்சி பெற்றோரைக் கொண்டு கல்லூரி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், நாடக ஆர்வமுள்ளவர்கள் ஆகியோருக்காக நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. மேலை நாடகக் கலைஞர்களோடு கொள்வினை, கொடுப்பினை நிகழ்ச்சி நடைபெறுகின்றது. பேரிசான், பெனிவிட்சு, மாயாதன்பர்கு, சான்மார்டின் போன்ற வெளிநாட்டோரும் உலகப்புகழ் பெற்ற குராட்டோவிசுகி, பீட்டர் புரூக்கு, இரிச்சார்டு செக்குனர் போன்றோரும் பங்குகொள்ளும் பட்டறைகள், படைப்புகள் நாடகக் கலையில் புதிய பரிமாணங்களை உணர வகை செய்துள்ளன. பிரசுடு பெக்கடு, செனே, ஜனசுகோ போன்ற இந்த நூற்றாண்டுத் தலை சிறந்த நாடகக் காப்பியங்களும், நாடகக் கோட்பாடுகளும் இந்தியாவில் பல இடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூற்றாண்டின் இறுதிக்கட்டத்திலும் எல்லாத்துறைகளிலும் ஒரு நடுக்கம் தோன்றிப் புதிய கோட்பாடுகளுடன் அடுத்த நூற்றாண்டு தொடங்குவதை வரலாற்றில் காணலாம். இந்திய நாடகக் கலையிலும் இவ்வதிர்வு இப்போது தோன்றியுள்ளது. {{right|சே. இரா.}} <section end="இந்திய நடனக் கலை"/> <section begin="இந்திய நிலப் பயன்பாடு"/> {{dhr}} <b>இந்திய நிலப் பயன்பாடு:</b> வேளாண்மைத் துறையின் வளர்ச்சிக்கும் உற்பத்திக்கும் நிலம் இன்றியமையாக் காரணியும் அடிப்படைத் தேவையுமாகும். நிலத்தைப் பயன்படுத்தும் (Land Utilization) முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. மிகுந்த நன்மை பயக்கும் வகையில் நிலத்தைப் பயன்படுத்த முனையும்போது பல இடர்ப்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. நிலத்தின் தன்மையிலும் பல வேறுபாடுகளுள்ளமையால், எல்லா நிலங்களும் வேளாண்மைக்குகந்தனவாகா. பனி மண்டலங்கள், வறட்சியான பாலை நிலங்கள், மலை உச்சிகள் போன்ற நிலப் பகுதிகளில் உணவு உற்பத்தி செய்வது மிகவும் கடினமாகும். அத்தகைய நிலங்களைப்பயன்படுத்துவதற்குக் கடின உழைப்பும், நிதி வசதிகளும், தொழில்நுட்பக் கருவிகளும், பயிற்சி அனுபவம் பெற்ற பணியாளர்களும் பெரிதும் தேவைப்படும். இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 45.5 விழுக்காடே விளைநிலமாகப் பயன்படுத்தப்படுகின்றது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பயிரிடப்படும் விளைநிலம் 171.325 மிலியன் எக்டேராகவும் (Hectares) காடும் அதைச் சார்ந்த பகுதியும் 60.3 மிலியன் எக்டேராகவும் பயிரிடத் தகுதியற்ற நிலம் 50.7 மிலியன் எக்டேராகவும், மேய்ச்சல் பகுதிகள் 14.9. மிலியன் எக்டேராகவும், மரங்களும், பழத்தோட்டங்களும் 4.1 மிலியன் எக்டேராகவும் பயிரிடத்தகுந்த ஆனால் பயிரிடப்படாத நிலங்கள் 17.2 மிலியன் எக்டேராகவும், தரிசு நிலங்கள் 22.6 மிலியன் எக்டேராகவும் உள்ளன. எஞ்சிய நிலப்பகுதியின் பயன்பாட்டுப் புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. பயிரிடப்படும் விளை நிலம் அதன் தன்மையின் காரணமாக மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. காலநிலை, மண்வளம், நீர்ப்பாசன வசதி, இட அமைப்பு ஆகிய காரணிகள் பயிரிடப்படக்கூடிய நிலப் பயன்பாட்டை வரையறுக்கின்றன. பயிரிடத்தகுந்த மொத்த நிலத்தில் குசராத்து, கேரளம், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஒரிசா, பஞ்சாபு, மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் முறையே 97%, 83%, 83%, 79%, 78%, 70%, 68%, 62%, நிலங்கள் விளைநிலங்களாகப் பயன்படுகின்றன. கடலோரச் சமவெளிப் பகுதிகளிலும் (Coastal Plains) சிந்து, கங்கை நதிவளச் செறிவுப்பகுதிகளிலும் (River Delta) இந்தியாவிலேயே உயர்ந்த அளவு, அதாவது 80, 90 விழுக்காடு நிலம் விளைநிலமாகப் பயன்படுத்தப்படுகிறது. மலைப் பகுதிகளிலும் வறட்சிப்பகுதிகளிலும் இப்பயன்பாடு குறைத்து 10 முதல் 20 விழுக்காடு வரை உள்ளது. மக்கள்தொகைப் பெருக்கத்தினாலும் வேளாண்மைசார் மக்களின் பெருக்கத்தினாலும் உணவுப் பண்டங்களின் தேவை பெருகி விளைநிலங்களின் பரப்பளவு மிகுந்துள்ளது. கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களும் விளைநிலங்களாக மாற்றப்பட்டு அதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்திய வேளாண்மை சார்ந்த மக்களின் பெருக்கம் தொடர்ந்து நிகழ்வதால் பயிரிடும் நிலத்தில் மக்கள்தொகை நெருக்கம் மிக அதிகமாக உள்ளது. ஒவ்வொரு 100 ஏக்கர் விளைநிலத்திலும் சராசரி 135 பேர், வேளாண்மையைத் தங்கள் தொழிலாகக் கொண்டு வாழ்கின்றனர். இதுவே, இங்கிலாந்தில் 6 ஆகவும், போலந்தில் 31 ஆகவும், கிரீசில் (Greece) 48 ஆகவும் உள்ளது. போதுமான அளவு உணவைப் பெறுவதற்குத் தனியாள் ஒருவர் 1.5 ஏக்கர் விளை நிலத்தை வைத்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்திய மக்களின் தலையாய அடிப்படை உணவு, தானிய வகைகள் எனினும் தனியாள் ஒருவருடைய நில அளவு 0.75 ஏக்கராக மட்டுமாகவே இருந்து வருகிறது. தனியாள் ஒருவருக்குத் தேவையான 1.5 ஏக்கர் விளைநிலத்தையடைய இந்திய மக்கள்தொகை 50 விழுக்காடு குறைய வேண்டும் என்பது இன்றியமையாததாகும். மொத்த விளைநிலத்தைப் பரந்த வேளாண்மை முறை (Extensive Cultivation) மூலம் பெருக்குவது மற்றொரு முறையாகும்.{{nop}}<noinclude></noinclude> i7n6mmhp5e1gmce36n3rogcj9pwrp6j 1958212 1958205 2026-08-14T14:33:21Z Booradleyp1 1964 1958212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நிலப் பயன்பாடு|463|இந்திய நிலப் பயன்பாடு}}</noinclude>பள்ளியிலும் நாடகக் கல்லூரிகளிலும் பயிற்சி பெற்றோரைக் கொண்டு கல்லூரி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், நாடக ஆர்வமுள்ளவர்கள் ஆகியோருக்காக நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. மேலை நாடகக் கலைஞர்களோடு கொள்வினை, கொடுப்பினை நிகழ்ச்சி நடைபெறுகின்றது. பேரிசான், பெனிவிட்சு, மாயாதன்பர்கு, சான்மார்டின் போன்ற வெளிநாட்டோரும் உலகப்புகழ் பெற்ற குராட்டோவிசுகி, பீட்டர் புரூக்கு, இரிச்சார்டு செக்குனர் போன்றோரும் பங்குகொள்ளும் பட்டறைகள், படைப்புகள் நாடகக் கலையில் புதிய பரிமாணங்களை உணர வகை செய்துள்ளன. பிரசுடு பெக்கடு, செனே, ஜனசுகோ போன்ற இந்த நூற்றாண்டுத் தலை சிறந்த நாடகக் காப்பியங்களும், நாடகக் கோட்பாடுகளும் இந்தியாவில் பல இடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூற்றாண்டின் இறுதிக்கட்டத்திலும் எல்லாத்துறைகளிலும் ஒரு நடுக்கம் தோன்றிப் புதிய கோட்பாடுகளுடன் அடுத்த நூற்றாண்டு தொடங்குவதை வரலாற்றில் காணலாம். இந்திய நாடகக் கலையிலும் இவ்வதிர்வு இப்போது தோன்றியுள்ளது. {{right|சே. இரா.}} <section end="இந்திய நடனக் கலை"/> <section begin="இந்திய நிலப் பயன்பாடு"/> {{dhr}} <b>இந்திய நிலப் பயன்பாடு:</b> வேளாண்மைத் துறையின் வளர்ச்சிக்கும் உற்பத்திக்கும் நிலம் இன்றியமையாக் காரணியும் அடிப்படைத் தேவையுமாகும். நிலத்தைப் பயன்படுத்தும் (Land Utilization) முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. மிகுந்த நன்மை பயக்கும் வகையில் நிலத்தைப் பயன்படுத்த முனையும்போது பல இடர்ப்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. நிலத்தின் தன்மையிலும் பல வேறுபாடுகளுள்ளமையால், எல்லா நிலங்களும் வேளாண்மைக்குகந்தனவாகா. பனி மண்டலங்கள், வறட்சியான பாலை நிலங்கள், மலை உச்சிகள் போன்ற நிலப் பகுதிகளில் உணவு உற்பத்தி செய்வது மிகவும் கடினமாகும். அத்தகைய நிலங்களைப்பயன்படுத்துவதற்குக் கடின உழைப்பும், நிதி வசதிகளும், தொழில்நுட்பக் கருவிகளும், பயிற்சி அனுபவம் பெற்ற பணியாளர்களும் பெரிதும் தேவைப்படும். இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 45.5 விழுக்காடே விளைநிலமாகப் பயன்படுத்தப்படுகின்றது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பயிரிடப்படும் விளைநிலம் 171.325 மிலியன் எக்டேராகவும் (Hectares) காடும் அதைச் சார்ந்த பகுதியும் 60.3 மிலியன் எக்டேராகவும் பயிரிடத் தகுதியற்ற நிலம் 50.7 மிலியன் எக்டேராகவும், மேய்ச்சல் பகுதிகள் 14.9. மிலியன் எக்டேராகவும், மரங்களும், பழத்தோட்டங்களும் 4.1 மிலியன் எக்டேராகவும் பயிரிடத்தகுந்த ஆனால் பயிரிடப்படாத நிலங்கள் 17.2 மிலியன் எக்டேராகவும், தரிசு நிலங்கள் 22.6 மிலியன் எக்டேராகவும் உள்ளன. எஞ்சிய நிலப்பகுதியின் பயன்பாட்டுப் புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. பயிரிடப்படும் விளை நிலம் அதன் தன்மையின் காரணமாக மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. காலநிலை, மண்வளம், நீர்ப்பாசன வசதி, இட அமைப்பு ஆகிய காரணிகள் பயிரிடப்படக்கூடிய நிலப் பயன்பாட்டை வரையறுக்கின்றன. பயிரிடத்தகுந்த மொத்த நிலத்தில் குசராத்து, கேரளம், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஒரிசா, பஞ்சாபு, மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் முறையே 97%, 83%, 83%, 79%, 78%, 70%, 68%, 62%, நிலங்கள் விளைநிலங்களாகப் பயன்படுகின்றன. கடலோரச் சமவெளிப் பகுதிகளிலும் (Coastal Plains) சிந்து, கங்கை நதிவளச் செறிவுப்பகுதிகளிலும் (River Delta) இந்தியாவிலேயே உயர்ந்த அளவு, அதாவது 80, 90 விழுக்காடு நிலம் விளைநிலமாகப் பயன்படுத்தப்படுகிறது. மலைப் பகுதிகளிலும் வறட்சிப்பகுதிகளிலும் இப்பயன்பாடு குறைத்து 10 முதல் 20 விழுக்காடு வரை உள்ளது. மக்கள்தொகைப் பெருக்கத்தினாலும் வேளாண்மைசார் மக்களின் பெருக்கத்தினாலும் உணவுப் பண்டங்களின் தேவை பெருகி விளைநிலங்களின் பரப்பளவு மிகுந்துள்ளது. கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களும் விளைநிலங்களாக மாற்றப்பட்டு அதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்திய வேளாண்மை சார்ந்த மக்களின் பெருக்கம் தொடர்ந்து நிகழ்வதால் பயிரிடும் நிலத்தில் மக்கள்தொகை நெருக்கம் மிக அதிகமாக உள்ளது. ஒவ்வொரு 100 ஏக்கர் விளைநிலத்திலும் சராசரி 135 பேர், வேளாண்மையைத் தங்கள் தொழிலாகக் கொண்டு வாழ்கின்றனர். இதுவே, இங்கிலாந்தில் 6 ஆகவும், போலந்தில் 31 ஆகவும், கிரீசில் (Greece) 48 ஆகவும் உள்ளது. போதுமான அளவு உணவைப் பெறுவதற்குத் தனியாள் ஒருவர் 1.5 ஏக்கர் விளை நிலத்தை வைத்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்திய மக்களின் தலையாய அடிப்படை உணவு, தானிய வகைகள் எனினும் தனியாள் ஒருவருடைய நில அளவு 0.75 ஏக்கராக மட்டுமாகவே இருந்து வருகிறது. தனியாள் ஒருவருக்குத் தேவையான 1.5 ஏக்கர் விளைநிலத்தையடைய இந்திய மக்கள்தொகை 50 விழுக்காடு குறைய வேண்டும் என்பது இன்றியமையாததாகும். மொத்த விளைநிலத்தைப் பரந்த வேளாண்மை முறை (Extensive Cultivation) மூலம் பெருக்குவது மற்றொரு முறையாகும்.{{nop}}<noinclude></noinclude> px52usm4e07ozil48m5xti7ix1g8170 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/488 250 630986 1958206 1954962 2026-08-14T14:16:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நிலப் பயன்பாடு|464|இந்திய நூலகச் சங்கம்}}</noinclude>பரந்த வேளாண்மை முறையைச் செயற்படுத்துவதில் பல வரையறைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. நில அளிப்பு, வளரும் அல்லது பெருகும் தன்மையுடையதன்று. ஏற்கனவே மரபியல் வழி, பல பயன்பாட்டுக்குட்படுத்தப் பட்டுள்ள நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது பல சிக்கல்களையும், பிற துறைகளில் இணை விளைவுகளையும் (Side Effects) உண்டாக்கும். காடுகளை விளைநிலங்களாக மாற்றலாம் என்றால் அதிலும் பற்றாக்குறை உள்ளது. காட்டு வளங்களை மேலும் 33.3 விழுக்காடு பெருக்க வேண்டும் என்பது காட்டுவளத் தேவையின் அடிப்படையில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவாகும். கட்டடங்கள், சாலைகள் முதலியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது தொழிற்றுறை வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதிக்கும். அத்தகைய நிலங்கள் பெரும்பாலும் பயிரிடுவதற்கு உகந்ததன்று. தரிசு நிலங்களையும் (Fallow Lands) வறண்ட பயன்தரா நிலங்களையும் (Barren Lends) பயிரிடத்தக்கதாக மாற்றப்படுவதன் மூலமும் பரந்த வேளாண்மை முறையைச் செயற்படுத்தவாம். ஆனால், இம்முறைக்கு மிக்க அளவில் நிலம் பண்படுத்தும் திட்டங்கள் (Land Reclamation) மிகுந்த நிதி, தொழில் நுட்ப வளங்களுடன் முதலீடு செய்ய வேண்டும். மலைகள், குன்றுகள், பாலை நிலங்கள், மலைச்சரிவுகள் போன்றவை இத்திட்டத்தின் கீழடங்கும். இத்தகைய நிலங்கள் இராசசுத்தானில் 6.2 மிலியன் எக்டேரும், அசாமில் 5.6 மிலியன் எக்டேரும், குசராத்தில் 4.8 மிலியன் எக்டேரும், உத்தரப் பிரதேசத்தில் 4.5 மிலியன் எக்டேரும், தமிழ்நாட்டில் 4 மிலியன் எக்டேரும், மகாராட்டிரத்தில் 6 மிலியன் ஏக்கரும், கன்னடாவில் 4 மிலியன் ஏக்கரும், கேரளத்தில் மிகக் குறைவான 0.8 மிலியன் ஏக்கருமே உள்ளன. இந்நிலங்களைப் பயிரிடும் நிலங்களாக மாற்றுவதைவிட, இத்தகைய நிலங்களின் மண்வளத்திற்குகந்த மரங்களை வளர்ப்பதும், கால்நடைத்தீவனம் உற்பத்தி செய்வதும் மேய்ச்சல் நிலமாக மாற்றுவதும், குறைந்த முதலீட்டில் உழைப்பிற்கு மிகுந்த ஆதாயத்தையும் பயனையும் விளைவிக்கும். இந்தியாவில் பயிரிடத் தகுந்த விளைநிலங்களில் பயிரிடப்படாமல் தரிசாக உள்ளவை 22.6 மிலியன் எக்டேராகும். இவற்றில் எளிதில் அகற்ற இயலாத புல்லும் முட்புதர்களும், கொடிகளும் களையும் வளர்ந்துள்ளன. இவை மண்வளம் குன்றியும், வடிகால் வசதிகளில்லாமலும், நீர்வளமின்றியும் உள்ளமையோடு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பெருகக்கூடிய பகுதிகளாகவும் உள்ளன. இந்நிலங்களில் உப்புத்தன்மையும் காரத்தன்மையும் மிகுதியாக உள்ளன. மேலும், இவை காட்டு மிருகங்களின் இருப்பிடமாவதால் பாதுகாப்பின்றி அழிவும் ஏற்படுகிறது. மண் அரிப்பின் காரணமாக விளைநிலங்களின் அளவு பல்வேறு மாநிலங்களில் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் 300 மிலியன் ஏக்கர்களுக்கும் மேலான விளைநிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. மண் பாதுகாப்புத் திட்டங்களைச் செயற்படுத்துவதனால் இந்நிலங்கள் வீணாவதைத் தடுக்கலாம். மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், இராசசுத்தான், குசராத்துப் போன்ற மாநிலங்களின் ஆற்றோரப் பகுதிகளில் மண் அரிப்பு மிகுந்து காணப்படுகிறது. மண் அரிப்பைத் தடுக்க மண் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் அணைகட்டுதல், வரப்பெடுத்தல், பெரும்வரப்பு அமைத்து உழவு செய்தல் (Contour Cultivation) காடு வளர்த்தல், புல் வளர்த்தல், மேய்ச்சலைக் கட்டுப்படுத்தல், நிலத்தைச் சமனாக்கல் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவது இன்றியமையாததாகும். தொடர்ந்து பெருகிவரும் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்குப் புதிதாக நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளன. இதற்குத் தேவையான மிகுந்த முதலீடும், தொழில்நுட்ப உழைப்பும் மிகுந்த ஆதாயத்தை அளிக்கவல்ல தொழிற்றுறையை நாடிச் செல்கின்றன. எனவே பரந்த பண்ணை முறையை மட்டும் சார்ந்து முன்னேற நாடாமல், செறிந்த பண்ணை முறையை நாடெங்கிலும் செயற் படுத்த இந்திய அரசு தன் திட்டங்களின் வாயிலாக வலியுறுத்துகிறது. நிலப் பயன்பாடு வேளாண்மைக்கு மட்டும் உரியதன்று. விளைநிலங்களாக மட்டுமல்லாமல் நிலம், உச்ச நன்மையைத் தரும் வகையில், சமூகப் பொருளாதாரத்திற்குகந்ததாகப் பயன்படுவதே அதன் சிறப்புத் தன்மையாகும். தொழிற்றுறை வளர்ச்சி, கனிம மூலப் பொருள்களை ஆய்ந்து பயன்படுத்துதல், செய்திப் போக்குவரத்து வளர்ச்சி, மின்சாரத்திட்டங்கள், நீரோட்டக் கட்டுப்பாடு, நீர்ப்பாசன வசதி, சுகாதார வசதி, வடிகால் வசதி, குடிநீர் வழங்கல், குடியிருப்பு வசதி, ஊரக நலத்திட்டங்கள், பிற வாழ்க்கை வசதித் திட்டங்கள் போன்றவை நிலத்தைப் பண்படுத்தும் பணிகளுடன் இணைந்து நிலப் பயன்பாட்டிலுள் அடங்குகின்றன. <section end="இந்திய நிலப் பயன்பாடு"/> <section begin="இந்திய நூலகச் சங்கம்"/> {{dhr}} <b>இந்திய நூலகச் சங்கம்:</b> இக்கால இந்திய மக்களிடையே நூலக விழிப்புணர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தது தேசிய விடுதலை இயக்கம் எனலாம். இந்திய மக்கள் கல்வி, சமூ-<noinclude></noinclude> kejih2svfqznsvpf6jyhxg290f8iu0x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/489 250 630991 1958208 1896654 2026-08-14T14:23:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நூலகச் சங்கம்|465|இந்திய நூலகச் சங்கம்}}</noinclude>கம், அரசியல் ஆகியவற்றில் முன்னேற்றம் அடையவேண்டும் என எண்ணிய விடுதலை இயக்கத் தலைவர்கள் கல்வியைப் பரப்ப நூலகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்கள். இதனால், நாடு முழுவதும் நூலகங்களை அமைக்க ஆர்வம் கொண்டனர். இதற்காகப் பரோடா மன்னர் சயாசி ராவ் கெய்டுவார்டு (Sayaji Rao Gackward-III), ஆந்திராவைச் சேர்ந்த ஐயாங்கி வேங்கடரமணய்யா போன்றவர்கள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். 1914-ஆம் ஆண்டில் ஐயாங்கி வேங்கடரமணய்யாவின் முயற்சியால் முதன் முதலில் ஆந்திர தேச நூலகச் சங்கமும் (Andhra Desa Library Association), 1919-ஆம் ஆண்டில் அகில இந்தியப் பொது நூலகச் சங்கமும் (All India Public Library Association) விசயவாடாவில் ஏற்படுத்தப்பட்டன. இதன் காரணமாக ஆர்வமிக்க நூலகர்கள் தங்கள் மாநிலங்களிலும் நூலகச் சங்கங்களை ஏற்படுத்த விரும்பினர். டாக்டர் எசு.ஆர். அரங்கநாதனின் முயற்சியால் 1928-ஆம் ஆண்டில் சென்னை நூலகச் சங்கம் (Madras Library Association) அமைக்கப்பட்டது. இதுபோன்று பல நூலகச் சங்கங்கள் தோன்றலாயின. <b>இந்திய நூலகச் சங்கத்தின் தோற்றம்:</b> மாநில அளவில் நூலகச் சங்கங்கள் தோன்றிய போதிலும் தேசிய அளவில் ஒரு நூலகச் சங்கம் இல்லையே என அப்போதிருந்த நூலகர்கள் உணர்ந்தனர். கல்கத்தாவிலுள்ள இம்பீரியல் நூலகத்தின் அப்போது நூலகரான திரு.கே.எம். அசதுல்லா (K.M. Asadulla) என்பவரின் பெரும் முயற்சியால், முதல் அகில இந்திய நூலக மாநாடு (All India Library Conference) கல்கத்தாவின் ஆசிய சமூகக் கூடத்தில் (Asiatic Society Hall) 1983-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் நாள் கூட்டப்பட்டது. இம்மாதாடு அப்போது இந்திய அரசின் கல்வி ஆணையாளராக இருந்த திரு. சே.லீத் வில்சன் (J. Leitch Wilson) என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது, இம்மாநாட்டில் இந்திய நூலகச் சங்கத்தின் (Indian Library Association) அமைப்பு மற்றும் விதிகள் தயாரிக்கப்பட்டுப் பின் செயலாக்கப்பட்டது. அதன்படி அப்பொழுது பஞ்சாபு பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஏ.சி. ஊல்னர் (Dr.A.C. Woolner) என்பாரைத் தலைவராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகராக இருந்த டாக்டர் எம்.ஒ. தாமசு (M.O. Thomas) என்பவரையும், வங்காள மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராய் இருந்த திரு. குமார் முனிந்திர தேப்ராய் மகாசை (Kumar Munindra Debrai Mahasai, M.L.V., Bengal) என்பவரையும் துணைத் தலைவர்களாகவும், திரு.கே.எம். அசதுல்லா அவர்களைச் செயலாளராகவும் கொண்டு இந்திய நூலகச் சங்கம் அமைக்கப்பட்டது. <b>நோக்கங்கள்:</b> இந்திய நூலகச் சங்கம் பல நோக்கங்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. அவற்றுள் முக்கிய நோக்கங்கள் (Objectives) கீழ் வருவன: (1) நூலக இயக்கத்தைத் தொடர்ந்து வளர்ப்பது, (2) நூலகர்கள் சிறந்த பயிற்சி பெறுவதற்கான எல்லா வசதிகளையும் ஏற்படுத்துவதுடன் நூலக அறிவியலில் ஆராய்ச்சிக்கான வசதிகளையும் ஏற்படுத்துதல், (3) நூலகர்களின் ஊதியத்தையும் பணி நிலைமையையும் செம்மைப்படுத்துதல், (4) நூலகச் சார்பான பொதுக் கருத்துகளில் உலக நூலகச் சங்க நிறுவனங்களுடன் ஒத்துழைத்தல், (5) நூலகங்களையும் ஆவண மையங்களையும் நிறுவ ஏற்பாடு செய்தல், (6) நூலகச் சட்டங்களை வடிவமைப்பதில் உதவுதல், மேலும், அவற்றைச் செயற்படுத்துமாறு அரசுகளிடம் பரிந்துரைத்தல், (7) பிற வெளிநாட்டு உள்நாட்டு நூலகச் சங்கங்களுடன் ஒத்துழைத்தல். <b>அமைப்பு:</b> இந்திய நூலகச் சங்கம் மூன்று அமைப்புகளைக் கொண்டது. அவையாவன: (1) பொதுச் சபை (General Body), (2) பேரவை (Council), மற்றும் (3) நிருவாகக் குழு (Executive Committee). இச்சங்கத்தில் நூலகர்கள் மட்டுமன்றிக் கல்வியாளர்கள், நூலக இயக்கத்தில் ஆர்வமுள்ள பொதுமக்கள், வாசகர்கள், நூலக நண்பர்கள், பிற நூலகச்சங்கங்கள், அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களுள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மேற்கூறிய பேரவை மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களைத் தேர்தல் வாயிலாகத் தேர்த்தெடுக்கின்றனர். இது ஒரு தேசிய நூலகச் சங்கமாகையால் தன் பணியைச் சிறந்த முறையில் செய்ய 13 பிரிவுக் குழுக்களை (Sectional Committee) அமைத்துள்ளது. ஒவ்வொரு பிரிவுக் குழுவும் ஒவ்வொரு வகை நூலகங்களின் வளர்ச்சிப் பணிகளைக் கவனித்து வருகிறது. சங்கச் செயல்களை ஒருமுகப் படுத்துவதற்காக 1976-ஆம் ஆண்டு மாநாட்டில் மாநிலக் குழுக்களையும் (State Committee) ஐந்து மண்டலப் பேரவைகளையும் (Zonal Council) அமைப்பதென்று முடிவெடுத்து அவை அமைக்கப்பட்டன. <b>சங்கச் செயல்கள்:</b> (1) சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இச்சங்கம் தொடக்-<noinclude> வா. க. 3 - 30</noinclude> kjdmdvvrhjb2ddemuzzzyekqdhq5zq3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/490 250 630992 1958209 1896662 2026-08-14T14:27:07Z Booradleyp1 1964 /* மேம்படுத்த வேண்டியவை */ 1958209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|இந்திய நூலகச் சங்கம்|466|இந்திய நூலகச் சங்கம்}}</noinclude>கத்திலிருந்தே பாடுபட்டு வருகிறது. இந்தியா முழுவதும் நூலகங்களை அமைத்து எல்லா மக்களுக்கும் கல்விச் செல்வம் கிடைக்கும்படி செய்ய நூலகச்சட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படுத்துவதற்காக இச்சங்கம் மாநில அரசுகளையும், அவற்றை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் தேசிய நூலக அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசையும் வலியுறுத்துகிறது. இதற்காக இச்சங்கம் அரசுகளுக்கு ‘மாதிரி நூலகச் சட்டம்’ (Model Library Bill) தயாரித்துக் கொடுத்துள்ளது. இத்துடன் இருந்துவிடாமல் அவற்றை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தப் பலமுறை அரசுகளின் கவனத்திற்குக் கொண்டுவந்ததோடு தொடர்ந்து முயன்றும் வருகிறது. (2) இந்திய நூலகச் சங்கம் நூலக அறிவியற் கல்வியில் ஈடுபாடு கொண்டுள்ளது. தேசிய அளவில் ஒரே சீரான தரமான உயர்கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழகங்களையும் கல்வி நிலையங்களையும் கேட்டுக் கொள்வதுடன் பல்கலைக்கழக மானியக் குழுவின் கவனத்திற்கும் கொண்டு வருகிறது. மேலும், கால மாற்றத்திற்கேற்ப நூலக அறிவியல் கல்வி அமைப்பில் புதுப்பாடத் திட்டங்களை உண்டாக்கும்படி கேட்டுக்கொள்கிறது. (3) இச்சங்கம் நூலகர்களின் சமூக மதிப்பை உயர்த்தவும் மக்களிடமிருந்து நன்மதிப்பைப் பெறச் செய்யவும் பல வழிகளில் பாடுபட்டு வருகிறது. நூலகர்களின் வாழ்க்கை நிலையைப் பிற துறையிலுள்ள அலுவலர்களைப் போல் உயர்த்தவும், பணி நிலைமைகளைச் சீர்திருத்தவும், சம்பள விகிதத்தைக் காலத்திற்கேற்ப மாற்றி அமைக்கவும் அவ்வப்போது அரசுடன் வாதாடி வருவதுடன், நூலகர்களின் சார்பில் சம்பளக் குழுக்களுக்கும் (Pay Commissions) பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் பல முறை ஆலோசனை கூறி வந்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் லேண்டுகோளுக்கு இணங்க டாக்டர் எசு.ஆர். அரங்கநாதன் 1957-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி நூலகர்களின் கல்வித் தகுதி, பணியின் தன்மை, பணிச்சுமை, சம்பள விகிதம், ஒரு நூலகத்திற்கு வேண்டிய மனித சக்தி (Man power) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல அளவீடுகளைக் கணித்துத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (4) இச்சங்கம், ஆண்டுதோறும் மாநாட்டைப் பல இடங்களில் நடத்துகிறது. தேசத்தின் பல பாகங்களிலும் இருந்து ஆர்வமுள்ள உறுப்பினர்கள், மாநாட்டில் கலந்துகொண்டு நூலகத்தைச் சார்ந்த நடைமுறையில் இருக்கும் முக்கிய சிக்கல்களை மையமாகக் கொண்ட தலைப்புகளின் அடிப்படையில் கட்டுரைகளை எழுதி, அவற்றை விவாதித்து, இறுதியில் முடிவுகள் செய்கின்றனர். இத்தகு முடிவுகள் மத்திய அரசுக்கும் மற்ற முக்கிய தேசிய அமைப்புகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. (5) மக்களிடையே நூலக உணர்வை ஏற்படுத்த இச்சங்கம் தேசிய அளவில் நூலக வாரவிழாவை ஆண்டுதோறும் நவம்பர் 14-ஆம் நாள் முதல் 20-ஆம் நாள் வரை கொண்டாடச் செய்கிறது. முதல் அகில இந்திய நூலக மாநாடு 1919-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் நாள் சென்னையில் கோகலே மண்டபத்தில் நடைபெற்றமையால் அதனை நினைவு படுத்த வேண்டி மேலே குறிப்பிட்ட விழாக் கொண்டாடப்படுகிறது. மேலும் ‘புத்தகக் காதலர்’ என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் சவகர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமும் இத்துடன் சேர்ந்து வருவதால் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நூல் பதிப்பாளர்களும், நூல் விற்பனையாளர்களும் கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதால் மக்களை ஈர்த்து நூல் படிக்கும் பழக்கத்தை மேலும் வளர்க்கிறது. விழாக் காலத்தில் நூலகப் பணிகளையும் சேவைகளையும் மக்களுக்குத் தெரிவிப்பதால் நூலகப் பணிக்குப் பெருமையையும் மதிப்பையும் சேர்க்கிறது. (6) இச்சங்கம், நூலகங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த ஏழாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்திற்கான அறிக்கையை உருவாக்கி, தேசியத்திட்டக் குழுவின் செயற்படுத்தும் குழுவிடம் தந்துள்ளது, அதில் நூலகச் சேவைகளைப் புதிதாக்கும் இன்றியமையாமையினை வலியுறுத்தியுள்ளது. இவ்விதமே இச்சங்கம் ஏனைய தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து நான்காம் ஊதியக் குழுவிடம் அரசுத்துறைகளில் பணியாற்றும் எல்லா நூலகர்களுக்கும் ஒரே சீரான ஊதிய விகிதத்தையும், பணியில் முன்னேற்றமடைய பல பணி நிலைகளையும் ஏற்படுத்தும்படி வலியுறுத்தி ஒரு விளக்கமான அறிக்கையை உருவாக்கி அளித்துள்ளது. இந்திய நூலகச் சங்கம், உலக நூலகச் சங்கங்களுள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இச்சங்கம், உலக நூலக வளர்ச்சிக்காகச் செய்யும் எந்தச் செயலிலும் பங்கு கொள்வதற்காக உலக நூலகச் சங்கங்களின் பேரியக்கத்துடனும் (International Federation of Library Association) பொதுநல நாடுகளின் நூலகச் சங்கங்களுடனும் (Common<noinclude></noinclude> rb0szig5tgkvltxjp480a4u4ziak2cc 1958213 1958209 2026-08-14T14:33:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நூலகச் சங்கம்|466|இந்திய நூலகச் சங்கம்}}</noinclude>கத்திலிருந்தே பாடுபட்டு வருகிறது. இந்தியா முழுவதும் நூலகங்களை அமைத்து எல்லா மக்களுக்கும் கல்விச் செல்வம் கிடைக்கும்படி செய்ய நூலகச்சட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படுத்துவதற்காக இச்சங்கம் மாநில அரசுகளையும், அவற்றை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் தேசிய நூலக அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசையும் வலியுறுத்துகிறது. இதற்காக இச்சங்கம் அரசுகளுக்கு ‘மாதிரி நூலகச் சட்டம்’ (Model Library Bill) தயாரித்துக் கொடுத்துள்ளது. இத்துடன் இருந்துவிடாமல் அவற்றை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தப் பலமுறை அரசுகளின் கவனத்திற்குக் கொண்டுவந்ததோடு தொடர்ந்து முயன்றும் வருகிறது. (2) இந்திய நூலகச் சங்கம் நூலக அறிவியற் கல்வியில் ஈடுபாடு கொண்டுள்ளது. தேசிய அளவில் ஒரே சீரான தரமான உயர்கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழகங்களையும் கல்வி நிலையங்களையும் கேட்டுக் கொள்வதுடன் பல்கலைக்கழக மானியக் குழுவின் கவனத்திற்கும் கொண்டு வருகிறது. மேலும், கால மாற்றத்திற்கேற்ப நூலக அறிவியல் கல்வி அமைப்பில் புதுப்பாடத் திட்டங்களை உண்டாக்கும்படி கேட்டுக்கொள்கிறது. (3) இச்சங்கம் நூலகர்களின் சமூக மதிப்பை உயர்த்தவும் மக்களிடமிருந்து நன்மதிப்பைப் பெறச் செய்யவும் பல வழிகளில் பாடுபட்டு வருகிறது. நூலகர்களின் வாழ்க்கை நிலையைப் பிற துறையிலுள்ள அலுவலர்களைப் போல் உயர்த்தவும், பணி நிலைமைகளைச் சீர்திருத்தவும், சம்பள விகிதத்தைக் காலத்திற்கேற்ப மாற்றி அமைக்கவும் அவ்வப்போது அரசுடன் வாதாடி வருவதுடன், நூலகர்களின் சார்பில் சம்பளக் குழுக்களுக்கும் (Pay Commissions) பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் பல முறை ஆலோசனை கூறி வந்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் லேண்டுகோளுக்கு இணங்க டாக்டர் எசு.ஆர். அரங்கநாதன் 1957-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி நூலகர்களின் கல்வித் தகுதி, பணியின் தன்மை, பணிச்சுமை, சம்பள விகிதம், ஒரு நூலகத்திற்கு வேண்டிய மனித சக்தி (Man power) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல அளவீடுகளைக் கணித்துத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (4) இச்சங்கம், ஆண்டுதோறும் மாநாட்டைப் பல இடங்களில் நடத்துகிறது. தேசத்தின் பல பாகங்களிலும் இருந்து ஆர்வமுள்ள உறுப்பினர்கள், மாநாட்டில் கலந்துகொண்டு நூலகத்தைச் சார்ந்த நடைமுறையில் இருக்கும் முக்கிய சிக்கல்களை மையமாகக் கொண்ட தலைப்புகளின் அடிப்படையில் கட்டுரைகளை எழுதி, அவற்றை விவாதித்து, இறுதியில் முடிவுகள் செய்கின்றனர். இத்தகு முடிவுகள் மத்திய அரசுக்கும் மற்ற முக்கிய தேசிய அமைப்புகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. (5) மக்களிடையே நூலக உணர்வை ஏற்படுத்த இச்சங்கம் தேசிய அளவில் நூலக வாரவிழாவை ஆண்டுதோறும் நவம்பர் 14-ஆம் நாள் முதல் 20-ஆம் நாள் வரை கொண்டாடச் செய்கிறது. முதல் அகில இந்திய நூலக மாநாடு 1919-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் நாள் சென்னையில் கோகலே மண்டபத்தில் நடைபெற்றமையால் அதனை நினைவு படுத்த வேண்டி மேலே குறிப்பிட்ட விழாக் கொண்டாடப்படுகிறது. மேலும் ‘புத்தகக் காதலர்’ என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் சவகர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமும் இத்துடன் சேர்ந்து வருவதால் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நூல் பதிப்பாளர்களும், நூல் விற்பனையாளர்களும் கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதால் மக்களை ஈர்த்து நூல் படிக்கும் பழக்கத்தை மேலும் வளர்க்கிறது. விழாக் காலத்தில் நூலகப் பணிகளையும் சேவைகளையும் மக்களுக்குத் தெரிவிப்பதால் நூலகப் பணிக்குப் பெருமையையும் மதிப்பையும் சேர்க்கிறது. (6) இச்சங்கம், நூலகங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த ஏழாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்திற்கான அறிக்கையை உருவாக்கி, தேசியத்திட்டக் குழுவின் செயற்படுத்தும் குழுவிடம் தந்துள்ளது, அதில் நூலகச் சேவைகளைப் புதிதாக்கும் இன்றியமையாமையினை வலியுறுத்தியுள்ளது. இவ்விதமே இச்சங்கம் ஏனைய தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து நான்காம் ஊதியக் குழுவிடம் அரசுத்துறைகளில் பணியாற்றும் எல்லா நூலகர்களுக்கும் ஒரே சீரான ஊதிய விகிதத்தையும், பணியில் முன்னேற்றமடைய பல பணி நிலைகளையும் ஏற்படுத்தும்படி வலியுறுத்தி ஒரு விளக்கமான அறிக்கையை உருவாக்கி அளித்துள்ளது. இந்திய நூலகச் சங்கம், உலக நூலகச் சங்கங்களுள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இச்சங்கம், உலக நூலக வளர்ச்சிக்காகச் செய்யும் எந்தச் செயலிலும் பங்கு கொள்வதற்காக உலக நூலகச் சங்கங்களின் பேரியக்கத்துடனும் (International Federation of Library Association) பொதுநல நாடுகளின் நூலகச் சங்கங்களுடனும் (Common<noinclude></noinclude> lqutkv3qo6xdvwhemdlbxnswrsx95np பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/491 250 630994 1958211 1954963 2026-08-14T14:32:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய நூலகச்‌ சங்கம்‌|467|இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள்}}</noinclude>Wealth Library Association) தொடர்பு கொண்டுள்ளதோடு தேரிய அங்கத்தினராகவும் இருந்து வருகிறது. இலிசுபனில் (Lisbon) 1935-ஆம் ஆண்டில் நடந்த முதல் உலக நூலகர்களின் மாநாட்டில் இச்சங்கம் கலந்து கொண்டது. இதன் விளைவாக 1951-ஆம் ஆண்டில் ‘ஆசிய நூலகச் சங்கங்களின் பேரியக்கம்’ (Asia Federation of Library Association) ஒன்றை நிறுவ வேண்டியதன் இன்றியமையாமைகளை உணர்ந்தது. அதற்காகத் தேசிய அமைப்புகளான இராசாராம் மோகனராய் நூலக நிறுவனத்தோடும், இந்தியத் தர நிருணய நிலையம் (Indian Standard Institute) இந்தியத் தேசிய புத்தகநிறுவனம் (National Book Trust of India) ஆகியவற்றோடும் தொடர்பு கொண்டு வலியுறுத்தி வருகிறது. <b>வெளியீடுகள்:</b> இந்திய நூலகச் சங்கம் பல நல்ல வெளியீடுகளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிட்டுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கன: (1) இந்திய நூல்கங்களின் நெறிகாட்டி (Directory of Indian Libraries), (2) ஆசியாவின் பாடப் பருவ இதழ்கள் நெறிகாட்டி (Directory of Learned Periodicals in Asia), (3) டாக்டர் எசு.ஆர். அரங்கநாதனின் நூல் தேர்வு (Book Selection), (4) தென் ஆசிய நூலகங்களில் உள்ள பாடப் பருவ இதழ்களின் கூட்டு நூற்பட்டி (Union Catalogue of Periodical Holdings in South Asian Libraries), (5) பி.என். கௌர் (P.N. Gour) எழுதிய இந்தியில் கருத்துப் பொருளைக் குறிக்கும் தலைப்புகன் (Subject Headings), (6) இந்தியாவின் ஐம்பதாண்டுக் கால நூலகவியல் (Fifty Years of Librarianship in India), (7) ஐம்பதாண்டுக் கால இந்திய நூலகச் சங்கம் (Fifty years of Indian Library Association) முதலியனவாகும். இந்திய அரசின் கல்வி மற்றும் பண்பாட்டு அமைச்சரகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இச்சங்கம் ‘இந்தியாவிலுள்ள நூலகங்களின் நெறி காட்டி’ (Directory of Libraries in India) ஒன்று தயாரித்து வருகிறது. இவையன்றி வேறு சில பருவ இதழ்களையும் இச்சங்கம் வெளியிட்டுள்ளது. அவையாவன: (1) நூலகச் செய்திமலர் (Library Bulletin 1942-1946), (2) அப்கிலா (Abgila Standing for Annals, Bulletin and Granthalaya of Indian Library Association 1949-1953), (3) இந்திய நூலகர் இதழ் (Journal of Indian Librarianship 1954-64), (4) இந்திய நூலகச் செய்திமலர் (Indian Library Bulletin Since 1965), (5) ஐ.எல்.ஏ. செய்தி அறிக்கை (I.L.A. News Letter Since 1984). இந்திய நூலகச் சங்கம் அண்மையில் சாரதா அரங்கநாதன் நூலக அறிவியல் அறக்கட்டளை (Sarda Ranganathan Endowment for Library Science) உதவியுடன் ‘அரங்கநாதனின் தத்துவம், என்ற தலைப்பில் உலக மாநாடு (International Conference on Ranganathan’s Philosophy) புதுதில்லியில் 1985-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் நாள் நடத்தியது. பல கட்டுரைகள் வரவேற்கப்பட்டுப் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளது. இச்சங்க அலுவலகம் புது தில்லியிலுள்ள டாக்டர் முகர்சி நகரிலுள்ள அன்சால் கட்டிடத்தில் செயற்பட்டு வருகிறது. {{right|எம்.சு.}} <b>துணை நூல்: ::Bharadwaja (BI)</b>, The Indian Library Association: Its Contribution to the development of Libraries in India, Edited by S.N. Agarwal, Print House, Lucknow, 1982. <section end="இந்திய நூலகச் சங்கம்"/> <section begin="இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள்"/> {{dhr}} <b>இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள்:</b> பண்பாட்டுச் சின்னங்கள் மக்களின் சமூக வாழ்க்கையில் சிறந்த பங்கு கொண்டுள்ளன. மக்களின் மனப்பான்மைகள், ஊக்குவிப்புகள், சமூக எதிர்பார்ப்புகள் போன்றவற்றை அவர்கள்தம் பண்பாட்டுச் சின்னங்கள் எதிரொலிக்கின்றன. மக்கள் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளுடன் இயையு கொண்ட சின்னங்கள் இருக்கின்றன. இச்சின்னங்களுக்குப் பல உட்பொருள்கள் உள்ளன. உளச் சின்னங்கள் மனிதர்களின் ஆளுமையை உருவாக்குகின்றன என்று யுங்கு போன்ற உளவியலறிஞர்கள் கூறியுள்ளனர். உளச் சின்னங்களை யுங்கு உள உருவங்கள் (Archetypes) என்று குறிப்பிட்டுள்ளார். சமூக உளவியலில் சின்னங்கள் கருத்துப்பரிமாற்றம், உள ஒன்றுபடல், சமூகக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருக்கின்றன. சின்னங்களை, மக்களின் நனவிலி நிலைக் கருத்துகளின் உருவகங்கள் என்று வரையறுக்கலாம். சின்னங்கள் மக்கள் வாழ்க்கையுடனும் இரண்டறக் கலந்து விடுகின்றன. திருமணச் சின்னமாக மோதிரம், மாலை போன்றவை குடும்பத்தின் ஒற்றுமையை நினைவுறுத்துவனவாக அமைகின்றன. இவற்றைப் போன்றே நாட்டுத் தலைவர்களின் படங்கள், நாட்டுக் கொடி, நாட்டுப்பாடல் ஆகியவை நாட்டு மதிப்பை நினைவுறுத்துவனவாக விளங்குகின்றன. வணிகச் சின்னம், வணிக அடையாளம், நாணயம், காசோலைப் புத்தகம் ஆகியவை தொழில் முன்னேற்றத்தின் சின்னங்களாக இருக்கின்றன. பட்டங்களின் விவரம், கல்வி நிலையத்திற்குரிய உடைகள் ஆகியவை கல்வியின் சின்னங்களாக அமைகின்றன. இத்தகைய சின்னங்களின் வழி மனிதர்கள் தம்மைச் சமூகத்துடன் தொடர்புபடுத்திக் கொள்கி-<noinclude> வா. க. 3 - 30அ</noinclude> oibtlg8q6at54eg620sykgvv7q3njf5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/492 250 630996 1958215 1954964 2026-08-15T03:26:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பண்பாடு|468|இந்தியப் பண்பாடு}}</noinclude>றார்கள். மக்கள் நாட்டுக் கொடியை மதிக்கும் பொழுது அவர்கள் தங்கள் நாட்டையே மதித்தவராகின்றனர். இத்தகைய சின்னங்கள் பல இந்தியப் பண்பாட்டுடன் இணைந்துள்ளன. அவற்றுள் சில சின்னங்களைப் பற்றி இங்குக் காணலாம். நடராசர் நடனத்தின் வாயிலாக ஆடற்கலைஞர்கள் மற்றவர் மனங்களை மயங்க வைக்கின்றனர். இதற்குமுன் ஆடற் கலைஞர்கள் ஆடல் அரசனாகிய சிவபெருமானின் தாண்டவக் கோலத்தை ஆடலின் சின்னமாக உள்ளத்தில் ஏற்றுக் கொள்கிறார்கள். சிவன் கையில் இருக்கும் உடுக்கையின் ஒலி வாய்மையினைக் குறிப்பதாகவும், சிவபெருமானின் ஆடல் உருவத்தைச் சுற்றி எரியும் அனல் அறிவொளியின் திறனைக் குறிப்பதாகவும், ஆடலின் தாள ஒலி சிவத்தின் படைப்பாற்றலுள் அடங்கியுள்ள, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறிப்பதாகவும் கருதப்படுகின்றன. மனித உள்ளத்தின் இயல் கடந்த நிலையைக் குறிக்கும் நடராசர் சின்னம், இந்தியாவில் ஆடல் கலைச்சிறப்பினை உணர்த்துவது மட்டுமன்றி, இந்தியப் பண்பாட்டின் அடிப்படை நம்பிக்கைகளையும் வாழ்க்கைத் தத்துவத்தினையும் விளக்கும் உருவமாகவும் அமைந்துள்ளது. தாமரை, மலரும் செழிப்பின் உருச்சின்னமாக அமைந்துள்ளது. திருமகள் தாமரை மலர் மீது இருப்பதாகக் கூறுவதும் செல்வத்தினைத் தாமரை மலருடன் தொடர்புப்படுத்துகிறது. ஆதலின், பத்மசிரீ, பத்மபூசன் போன்ற அரசு விருதுகளும் அறிவின் உருவாகத் தோன்றிய புத்தர் வழி நடக்கும் பௌத்தர்கள் தூய்மையாகக் கருதும் தாமரை மலருடன் தொடர்பு கொண்டிருப்பனவாக உணர்தல் கூடும். இதனைப்போன்றே யானை, வலிமை, செழிப்பு ஆகியவற்றை நினைவுறுத்துகிறது. பழங்காலச் சிற்பங்களில் யனையை மிகுதியாகக் காணமுடியும், நாகப்பாம்பும் செல்வத்தைக் காக்கும் சின்னமாகக் கருதப்படுகிறது. சக்தி ஒரு பெண் தெய்வமாகவும் தீமைகளை அழிப்பவளாகவும் கருதப்படுகிறாள். சரசுவதி கல்வி, கலைகளை நினைவுறுத்தும் சின்னமாக விளங்குகிறாள். இத்தகைய சின்னங்கள், பண்பாட்டுச் சமய உணர்வுகளைக் காட்டுவனவாகவும் தீய நடத்தைகளின்று மனிதர்களைக் காப்பாற்றுவனவாகவும் அமைந்துள்ளன. <section end="இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள்"/> <section begin="இந்தியப் பண்பாடு"/> {{dhr}} <b>இந்தியப் பண்பாடு:</b> மக்கள் அனைவரும் இயல்பாகவே அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வினைப் பெற விரும்புகின்றனர். இத்தகைய வாழ்வினை அடையச் செம்மையான உலகியல் இன்றியமையாதது. செம்மையான உலகியல், பண்புடையார் துணையாலேயே அமையும். இது பற்றியே வள்ளுவர் ‘பண்புடையார்ப் பட்டுண்டுலகம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ‘உலகம் என்பது உயர்ந்தோர்மாட்டே’ என்ற சொற்றொடரும் இதனையே விளக்குகிறது. எனவே, செம்மையான வாழ்விற்கு அடிப்படையாய் அமைவது பண்பாடு எனலாம். பண்பாடு என்னும் சொல்லை ஏறக்குறைய நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் டி.கே. சிதம்பரநாதமுதலியார் உருவாக்கிக் கொடுத்தார் என்பது கூறப்படுகிறது. அதற்கு முன்னர்க் ‘கலாச்சாரம்’ என்னும் சொல் வழங்கப்பட்டு வந்தது. பண்படு என்னும் சொல்லே பண்பாடாயிற்று. இதுபண்படுத்தல் அல்லது சீர்படுத்தல் எனப் பொருள்படும். பண்பாடு என்பதற்கு நம்மைச் செம்மையான வாழ்விற்குப் பண்படுத்திக் கொள்ளுதல் அல்லது தகுதியாக்கிக் கொள்ளுதல் என்று பொருள் கொள்ளலாம். சான்றாண்மையாகிய ஒழுக்கம், உயர்ந்த வழியில் செல்லுதல் ஆகியவற்றையும் பண்பாடு குறிக்கும். பண்பாடு, ஒரு வாழும் முறையாக வாழ்வின் முழுமையையும் தன்னுள்ளே அடக்கியுள்ளது. ‘ஒரு சமுதாயத்திலுள்ள மக்கள் வாழ்க்கையை நடத்தும் முறையே பண்பாடு’ என மானிடவியலும் சமூகவியலும் கருதுகின்றன. இ.பி. தெய்லர் (E.B. Taylor) என்ற அறிஞர், ‘மனிதன் சமுதாயத்தின் உறுப்பினன் என்ற நிலையில் அடைந்துள்ள அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கக் கோட்பாடுகள், சட்டம், வழக்கம். ஏனைய ஆற்றல்கள், பழக்கங்கள் ஆகியவற்றைத் தன்னுள்ளே அடக்கியுள்ள சிக்கலான முழுமையே பண்பாடு’ எனக் கூறுகிறார். கே.எம். முன்சி (K.M. Munshi) அவர்கள், ‘பண்பாடு என்பது சீரிய வாழ்வு முறை; இவ்வாழ்வு முறை மக்கள் நம்பிக்கை வைத்துள்ள அடிப்படை மதிப்பீடுகளால் ஊக்குவிக்கப்படுகிறது’ என்கிறார். பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்’ என்கிறது கலித்தொகை. பிறர் தன்மையை அறிந்து வாழ்தல் பண்பாடாம். ‘நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தோறும் பண்புடையாளர் தொடர்பு’ என்னும் குறள், பண்பாட்டின் தெளிந்த பொருளை உணர்த்துகிறது. பண்பாடு பின்வரும் இயல்புகளைக் கொண்டது மனிதன் சமுதாயத்திலிருந்து கற்றுக் கொண்ட பண்புகள், பழக்கங்கள், எண்ணங்கள் ஆகியவற்றைப் பண்பாடு குறிக்கிறது. 1. மரபு வழியாகப் பெறப்பட்டதன்று பண்பாடு. சமுதாயம் ஒருவனைப் பண்புடையவனாக ஆக்குகிறது. 2. பண்பாடு நிலைபெற்ற ஒன்றன்று. அது நெகிழும் தன்மையுடன் கூடிய<noinclude></noinclude> nqx3k1dxvw50p6wcs2qzhel65vro3dh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/493 250 631085 1958216 1897005 2026-08-15T03:44:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பண்பாடு|469|இந்தியப் பண்பாடு}}</noinclude>இயக்காற்றல் பெற்றது. பண்பாடு வழிவழியாக வந்து கொண்டே இருக்கிறது. 3. பண்பாடு சமுதாயத்தின் சாதனையாகும். ஒவ்வொரு தனிமனிதனும் பண்பாட்டிற்குத் தன் பங்கினை அளித்தாலும், பண்பாடு உருவாவதும் வளர்வதும் சமுதாயத்தில் தான். 4. பண்பாடு சமுதாயத்தின் உயர்ந்த குறிக்கோள்களான அறத்தேவைகளை நிறைவு செய்வதால், நடைமுறை வாழ்விற்குப் பயன்படுகிற ஒன்றாக விளங்குகிறது. 5. பண்பாட்டின் அமைப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே வந்தாலும் அதன் வளர்ச்சி நிற்பதில்லை. 6. ஒவ்வொரு நாட்டின் பண்பாடும் பிற பண்பாட்டின் தாக்கத்திற்கு உள்ளானாலும், அவற்றின் சிறப்புக் கூறுகளை இணைத்துக் கொண்டு தன்னை முழுமை ஆக்கிக் கொள்கிறது. மேலும், எந்த இரு பண்பாடும் ஒத்ததாக இருப்பதில்லை, ஒவ்வொரு பண்பாடும் குறிப்பிட்ட மக்களின் பட்டறிவினால் விளைந்ததாகும். 7. பண்பாட்டுடன் செயற்படுவது, மனித இனம் முழுமைக்கும் உரித்தான ஒரு பொது நுகர்வே தவிர, தனி மனிதனுக்கோ, சமுதாயத்திற்கோ உரியதன்று. பண்பாடு பொருள் பற்றியதாகவோ, ஆன்மா பற்றியதாகவோ இருக்கலாம். பிற நாட்டுப் பண்பாடுகளில் பொருட் கூறுகள் மேலோங்கியிருக்க இந்தியப் பண்பாட்டில் ஆன்மிகக் கூறுகள் மேலோங்கி நிற்கின்றன. இந்தியப் பண்பாடு என்பது. மக்களுக்கே உரிய பண்பட்ட உளப்பான்மை என்பது பொருளாகும். உடலையும் உள்ளத்தையும் செம்மைப் படுத்தி ஆன்மிகத்தின் மேம்பாட்டை மையமாகக் கொண்டு இயங்குவது இந்தியப் பண்பாடு. ஆன்ம வேட்கையை அடித்தளமாகக் கொண்டதே இந்தியப் பண்பாடு. இவ்வுயர்ந்த குறிக்கோளுடன் பண்பாட்டிற்குரிய அனைத்து இயல்புகளையும் தன்னகத்தே கொண்டு இந்தியப் பண்பாடு விளங்குகிறது. மேலும் இந்தியப் பண்பாடு பின்வரும் சிறப்புக் கூறுகளையும் கொண்டுள்ளது. உலகில் எகிப்திய, கிரேக்க, பாபிலோனியப் பண்பாடுகள் ஒவ்வொரு காலங்களில் உச்ச நிலையில் இருந்தன. கால வெள்ளத்தில் அவை அழிந்து போயின. ஆனால், இந்தியப் பண்பாடு என்றும் அழியாத அமைப்போடு உறுதியாக இன்றும் நிலைபெற்று விளங்குகிறது. இந்தியப் பண்பாட்டின் மூலக் கூறுகள் பல நூற்றாண்டுகளாக அரசின் ஆதரவில்லாத போதிலும், பல்வேறு படையெடுப்புகள் நிகழ்ந்த போதிலும் அவற்றை வென்று அழியாது வளர்ந்து வருகிறது. மிகப் பழங்கால வேதங்களும், காப்பியங்களும், இறைவடிவங்களும், முனிவர்களும் இன்றைக்கும் ஓர் இந்தியனுடைய உள்ளத்தை ஈர்க்கின்றன. இந்தியப் பண்பாட்டின் சிறந்த பண்பாக விளங்குவது சகிப்புத் தன்மையும், பிறசமய, இனங்களின் மீது மதிப்பும் ஆகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இன்று வரை ஆரிய, திராவிட, பாரசீக, கிரேக்க, அரேபிய, இசுலாமிய, கிறித்தவப் பண்பாடுகளின் சீரிய கூறுகளைத் தன் சகிப்புத் தன்மையாலும் பிறவற்றின் மீதுள்ள மதிப்பினாலும், தன்னுடன் இணைத்துக் கொண்டு சிறந்து விளங்குகிறது. இதன் விளைவாகச் சமய, கால, இன, பால் வேற்றுமைகளைக் கடந்து உலக மக்கள் அனைவரும் ஏற்கக் கூடிய பண்பாடாகவும், அனைவருடைய தேவைகளையும் நிறைவு செய்யக் கூடியதாகவும் இந்தியப் பண்பாடு விளங்குகிறது. இந்திய நாட்டிற் பிறந்த இப்பண்பாடு உலகெங்கும் விரிந்து பரந்து கிடக்கிறது என வரலாறு மொழியியல், தொல்லியல், அறிஞர்கள் எடுத்துக் கூறுகின்றனர். வரலாற்றுக்கு முற்பட்ட பண்பாடாகையால் இது தொடக்கங்காணமுடியாச் சிறப்பினையுடையது. இந்தியப் பண்பாட்டின் மற்றுமொரு சிறப்பியல்பாக விளங்குவது வேற்றுமையில் ஒற்றுமை காணுவதாகும். இந்திய நாட்டில் பல்வேறு வேற்றுமைகள், இனங்கள், மொழிகள், சமயங்கள், சடங்குகள், எண்ணங்கள், மெய்ப் பொருளியல்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவை இருப்பினும், இவ்வேற்றுமைக் கூறுகளின் ஊடே மனநிறைவை அளிக்கக் கூடிய ஓர் ஒற்றுமைச் சிறப்புடன் இப்பண்பாடு விளங்குகிறது. இந்தியப் பண்பாடு, இறை உணர்வையும், ஆன்மிக நாட்டத்தையும் அடித்தளங்களாகக் கொண்டுள்ளது. ஆன்மா வீடுபேறு அடைய இறை உணர்வு இன்றியமையாதது. ஆன்மாளின் மேம்பாட்டையே இறுதிக் குறிக்கோளாகக் கொண்டிருப்பது இந்தியப் பண்பாடாகும். மறுமையைப் பற்றி மிகுதியாக வலியுறுத்தினாலும், உலகியலோடு ஒன்றியே அனைத்து அறிவியல் கூறுகளையும், சமுதாய, பொருளியல், அரசியல் போன்றவற்றையும் தன்னகத்தே கொண்டு, நடைமுறை வாழ்விற்குத்துணை புரிகிறது. இந்தியப் பண்பாடு அறிவியல்களின் ஆக்கம் நிறைந்த கருத்துகளை ஏற்றுக் கொள்வதோடு, இயற்கையோடு இணைந்த வாழ்வியலையும் போற்றுகிறது. இந்தியப் பண்பாட்டின் பிறிதொரு சிறப்பியல்பு சமயம் ஆகும். சமயமின்றி இந்தியப் பண்பாடு பொருளற்றது. அறம் என்னும் உயரிய கோட்பாட்டைத் தன்னுள் பெற்றுள்ளது. சமயம் உணர்த்தும் இறைவன் வினை, மறுபிறவி, மண்ணுலகில் பிறத்தல் ஆகிய கோட்பாடுகள் இந்தியப்பண்பாட்டில் அடங்கியுள்ளன. மேலும், சிறந்த அறக்கோட்பாடுகளான ‘இன்னா செய்யாமை’ ‘உண்மையை உறுதியாகக் கடைப்பிடித்தல்’ ‘உடல் உள்ளக்கட்டுப்பாடுகள்’ போன்றன வேதகாலத்-<noinclude></noinclude> ax3iaq2nellvztf8u10vibbn7lub3e1 1958217 1958216 2026-08-15T03:45:22Z Booradleyp1 1964 1958217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பண்பாடு|469|இந்தியப் பண்பாடு}}</noinclude>இயக்காற்றல் பெற்றது. பண்பாடு வழிவழியாக வந்து கொண்டே இருக்கிறது. 3. பண்பாடு சமுதாயத்தின் சாதனையாகும். ஒவ்வொரு தனிமனிதனும் பண்பாட்டிற்குத் தன் பங்கினை அளித்தாலும், பண்பாடு உருவாவதும் வளர்வதும் சமுதாயத்தில் தான். 4. பண்பாடு சமுதாயத்தின் உயர்ந்த குறிக்கோள்களான அறத்தேவைகளை நிறைவு செய்வதால், நடைமுறை வாழ்விற்குப் பயன்படுகிற ஒன்றாக விளங்குகிறது. 5. பண்பாட்டின் அமைப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே வந்தாலும் அதன் வளர்ச்சி நிற்பதில்லை. 6. ஒவ்வொரு நாட்டின் பண்பாடும் பிற பண்பாட்டின் தாக்கத்திற்கு உள்ளானாலும், அவற்றின் சிறப்புக் கூறுகளை இணைத்துக் கொண்டு தன்னை முழுமை ஆக்கிக் கொள்கிறது. மேலும், எந்த இரு பண்பாடும் ஒத்ததாக இருப்பதில்லை, ஒவ்வொரு பண்பாடும் குறிப்பிட்ட மக்களின் பட்டறிவினால் விளைந்ததாகும். 7. பண்பாட்டுடன் செயற்படுவது, மனித இனம் முழுமைக்கும் உரித்தான ஒரு பொது நுகர்வே தவிர, தனி மனிதனுக்கோ, சமுதாயத்திற்கோ உரியதன்று. பண்பாடு பொருள் பற்றியதாகவோ, ஆன்மா பற்றியதாகவோ இருக்கலாம். பிற நாட்டுப் பண்பாடுகளில் பொருட் கூறுகள் மேலோங்கியிருக்க இந்தியப் பண்பாட்டில் ஆன்மிகக் கூறுகள் மேலோங்கி நிற்கின்றன. இந்தியப் பண்பாடு என்பது. மக்களுக்கே உரிய பண்பட்ட உளப்பான்மை என்பது பொருளாகும். உடலையும் உள்ளத்தையும் செம்மைப் படுத்தி ஆன்மிகத்தின் மேம்பாட்டை மையமாகக் கொண்டு இயங்குவது இந்தியப் பண்பாடு. ஆன்ம வேட்கையை அடித்தளமாகக் கொண்டதே இந்தியப் பண்பாடு. இவ்வுயர்ந்த குறிக்கோளுடன் பண்பாட்டிற்குரிய அனைத்து இயல்புகளையும் தன்னகத்தே கொண்டு இந்தியப் பண்பாடு விளங்குகிறது. மேலும் இந்தியப் பண்பாடு பின்வரும் சிறப்புக் கூறுகளையும் கொண்டுள்ளது. உலகில் எகிப்திய, கிரேக்க, பாபிலோனியப் பண்பாடுகள் ஒவ்வொரு காலங்களில் உச்ச நிலையில் இருந்தன. கால வெள்ளத்தில் அவை அழிந்து போயின. ஆனால், இந்தியப் பண்பாடு என்றும் அழியாத அமைப்போடு உறுதியாக இன்றும் நிலைபெற்று விளங்குகிறது. இந்தியப் பண்பாட்டின் மூலக் கூறுகள் பல நூற்றாண்டுகளாக அரசின் ஆதரவில்லாத போதிலும், பல்வேறு படையெடுப்புகள் நிகழ்ந்த போதிலும் அவற்றை வென்று அழியாது வளர்ந்து வருகிறது. மிகப் பழங்கால வேதங்களும், காப்பியங்களும், இறைவடிவங்களும், முனிவர்களும் இன்றைக்கும் ஓர் இந்தியனுடைய உள்ளத்தை ஈர்க்கின்றன. இந்தியப் பண்பாட்டின் சிறந்த பண்பாக விளங்குவது சகிப்புத் தன்மையும், பிறசமய, இனங்களின் மீது மதிப்பும் ஆகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இன்று வரை ஆரிய, திராவிட, பாரசீக, கிரேக்க, அரேபிய, இசுலாமிய, கிறித்தவப் பண்பாடுகளின் சீரிய கூறுகளைத் தன் சகிப்புத் தன்மையாலும் பிறவற்றின் மீதுள்ள மதிப்பினாலும், தன்னுடன் இணைத்துக் கொண்டு சிறந்து விளங்குகிறது. இதன் விளைவாகச் சமய, கால, இன, பால் வேற்றுமைகளைக் கடந்து உலக மக்கள் அனைவரும் ஏற்கக் கூடிய பண்பாடாகவும், அனைவருடைய தேவைகளையும் நிறைவு செய்யக் கூடியதாகவும் இந்தியப் பண்பாடு விளங்குகிறது. இந்திய நாட்டிற் பிறந்த இப்பண்பாடு உலகெங்கும் விரிந்து பரந்து கிடக்கிறது என வரலாறு மொழியியல், தொல்லியல், அறிஞர்கள் எடுத்துக் கூறுகின்றனர். வரலாற்றுக்கு முற்பட்ட பண்பாடாகையால் இது தொடக்கங்காணமுடியாச் சிறப்பினையுடையது. இந்தியப் பண்பாட்டின் மற்றுமொரு சிறப்பியல்பாக விளங்குவது வேற்றுமையில் ஒற்றுமை காணுவதாகும். இந்திய நாட்டில் பல்வேறு வேற்றுமைகள், இனங்கள், மொழிகள், சமயங்கள், சடங்குகள், எண்ணங்கள், மெய்ப் பொருளியல்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவை இருப்பினும், இவ்வேற்றுமைக் கூறுகளின் ஊடே மனநிறைவை அளிக்கக் கூடிய ஓர் ஒற்றுமைச் சிறப்புடன் இப்பண்பாடு விளங்குகிறது. இந்தியப் பண்பாடு, இறை உணர்வையும், ஆன்மிக நாட்டத்தையும் அடித்தளங்களாகக் கொண்டுள்ளது. ஆன்மா வீடுபேறு அடைய இறை உணர்வு இன்றியமையாதது. ஆன்மாளின் மேம்பாட்டையே இறுதிக் குறிக்கோளாகக் கொண்டிருப்பது இந்தியப் பண்பாடாகும். மறுமையைப் பற்றி மிகுதியாக வலியுறுத்தினாலும், உலகியலோடு ஒன்றியே அனைத்து அறிவியல் கூறுகளையும், சமுதாய, பொருளியல், அரசியல் போன்றவற்றையும் தன்னகத்தே கொண்டு, நடைமுறை வாழ்விற்குத்துணை புரிகிறது. இந்தியப் பண்பாடு அறிவியல்களின் ஆக்கம் நிறைந்த கருத்துகளை ஏற்றுக் கொள்வதோடு, இயற்கையோடு இணைந்த வாழ்வியலையும் போற்றுகிறது. இந்தியப் பண்பாட்டின் பிறிதொரு சிறப்பியல்பு சமயம் ஆகும். சமயமின்றி இந்தியப் பண்பாடு பொருளற்றது. அறம் என்னும் உயரிய கோட்பாட்டைத் தன்னுள் பெற்றுள்ளது. சமயம் உணர்த்தும் இறைவன் வினை, மறுபிறவி, மண்ணுலகில் பிறத்தல் ஆகிய கோட்பாடுகள் இந்தியப்பண்பாட்டில் அடங்கியுள்ளன. மேலும், சிறந்த அறக்கோட்பாடுகளான ‘இன்னா செய்யாமை’ ‘உண்மையை உறுதியாகக் கடைப்பிடித்தல்’ ‘உடல் உள்ளக்கட்டுப்பாடுகள்’ போன்றன வேதகாலந்-<noinclude></noinclude> bu4t990p7n9ceb2aap8v8v4oe99ikji பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/494 250 631089 1958218 1954965 2026-08-15T03:49:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பண அங்காடி|470|இந்தியப் பண அங்காடி}}</noinclude>தொட்டு இன்றுவரை உலகியலில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றையும் சிறந்த மெய்ப்பொருளியல்களையும் தன்னகத்தேகொண்டு இந்தியப் பண்பாடு விளங்குகிறது. எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருளின் மெய்ப்பொருளைக் கண்டு தன்னுடன் இணைத்துத் திகழ்வது இந்தியப் பண்பாடு. சமுதாயத்தால் உண்டாக்கப்பட்ட நமது பண்பாடு, தனி மனிதச் சிந்தனைக்கும் ஆளுமைக்கும மட்டுமன்றி, இந்திய மண்ணில் இருக்கிற அனைத்துப் பொருள்களுக்கும் நன்மதிப்பை நல்கி வருகிறது. இத்தகைய சிறந்த பண்பாட்டினைப் பெற்றிருக்கிற ஒவ்வோர் இந்தியனும் பெருமைப்படத் தக்கவனாவான். {{right|பி.ஆர்.ந.}} <section end="இந்தியப் பண்பாடு"/> <section begin="இந்தியப் பண அங்காடி"/> {{dhr}} <b>இந்தியப் பண அங்காடி:</b> பண அங்காடி பொதுவாகக் குறுகிய காலக் கடன் வசதிபெறும் நிதித் துறையைக் குறிப்பதாகும். இது, சேமிப்புப் பணத்தை முதலீடு செய்வதற்கும் தொழில், வணிகம் முதலியவற்றில் ஈடுபட்டிருப்போர் குறுகிய காலக்கடன் வசதி பெறுதற்கும் வழி வகுக்கிறது. இடைக்காலத்தில் மிகையாக உள்ள நிதியினை விற்கவும், வாங்கவும் உதவும் நிதி நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அங்காடி என இதனைக் கொள்ளுதல் பொருந்தும். இவ்வகையில் நீண்டகாலக் கடன் வசதிகளை அளிக்கும் மூலதன அங்காடியினின்றும் (Capital Market) இது வேறுபட்டது. எனினும் பண அங்காடியும் (Money Market) மூலதன அங்காடியும் எவ்விதத் தொடர்புமின்றி இயங்கும் தன்மையுடையவை எனக் கொள்ளுதல் கூடாது. மூலதன அங்காடியில் வழங்கப்படும் ஆதாய ஈவு (Dividend) அல்லது வட்டி (Interest) பண அங்காடியின் கடன் அளிப்பு அளவினை மாற்றிவிடக் கூடும். பண அங்காடி தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். எங்கெல்லாம் பணம் கொடுக்கல் வாங்கல் நிகழ்கிறதோ அங்கெல்லாம் பண அங்காடி இயங்குவதாகக் கருதலாம். ஒரு நாட்டின் பண அங்காடியின் அமைப்பு, அந்நாட்டின் வரலாறு, சட்ட திட்டங்கள், பொருளாதார அமைப்பு, மக்களுடைய சேமிப்பு முதலீட்டு இயல்புகள், மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையினைச் சார்ந்து அமையும். இந்தியப் பண அங்காடி (Indian Money Market) குறிப்பாக இரு இயல்புகளை உடையது எனலாம். அவை, ஒருங்கமைந்த துறை (Organised Sector) ஒருங்கமையாத் துறை (Unorganised Sector) என்பவையாகும். வணிக வங்கிகள், நாணயமாற்று வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவை மைய வங்கியின் மேற்பார்வையில் ஒருங்கமைந்த முறையில் இயங்கும் முதல் வகையினைச் சாரும். வட்டித் தொழிலர்கள் (Money lenders), நாட்டு முறை வங்கியர் (Indigenous Bankers), நிதிகள் (Nidhi), கடன் அலுவலகங்கள் (Loan Offices) போன்றவை ஒருங்கமையா முறையில் இயங்கும் இரண்டாம் வகையினைச் சாரும். இந்தியப் பண அங்காடியின் பிறிதோர் இயல்பு விறுவிறுப்பான பருவக் காலத்தில் (Busy Season) மிகுதியான பணம் தேவைப்படுவதும் மந்தக்காலத்தில் (Slack Season) குறைவான பணம் தேவைப்படுவதும் ஆகும். அக்டோபர் தொடங்கி ஏப்ரல் முடிய உள்ள விறுவிறுப்பான பருவக் காலத்தில், அறுவடை முடிந்தபின் விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யவும், பல இடங்களுக்கு அனுப்பி வைக்கவும், கணிசமானநிதி தேவைப்படுகிறது. இத்தேவையை முழுமையாக நிறைவு செய்திட இந்தியப் பண அங்காடியினால் இன்னும் இயன்றிடவில்லை என்பது கருதத்தக்கது. <b>இந்தியப் பண அங்காடியின் பிரிவுகள்:</b> பண அங்காடி நன்கு சிறப்புற இயங்குவதற்குக் குறுகிய காலத் தாள்களும், ஆவணங்களும் மிக்க அளவில் புழக்கத்தில் இருக்க வேண்டும். எப்பொழுதும் ஒருவர் தம்மிடமுள்ள இத்தகைய ஆவணங்களைக் கழிவு செய்து பணம் பெற்றிட வாய்ப்பிருக்க வேண்டும். இந்தியப் பண அங்காடி, நியூயார்க்கு பண அங்காடி அல்லது இலண்டன் பண அங்காடி அளவிற்கு வளர்ச்சியும் முதன்மையும் அடையவில்லை. எனினும் பண அங்காடியின் ஒருங்கமைந்த துறை, அழைப்புக் கடன் சந்தை (Call Money Market), உண்டியல் சந்தை (Bill Market), பிணைக் கடன் சந்தை (Collateral Loan Market) என்று முப்பிரிவுகளைக் கொண்டும் பம்பாய், கல்கத்தா ஆகிய பெருநகரங்களைத் தலையாய மையங்களாகக் கொண்டும் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்திய மைய இருப்பு வங்கியும் (Reserve Bank of India), வணிக வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் பம்பாயில் உள்ளன. மேலும் பண்டங்கள், உலோகங்கள், பங்குச் சீட்டுகள், அரசு ஆவணங்கள் ஆகியவற்றை வாங்கவும் விற்கவும் பம்பாயில் மிகுந்த வசதிகள் உள்ளன. எனவே குறுகிய கால ஆவண முதலீட்டையும், குறுகிய காலக்கடனையும் நாடுவோர்க்குப் பம்பாய் நல்வாய்ப்புகளை அளிக்கிறது. ஒருங்கமைந்த பண அங்காடியின் நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயலாற்றிட 1935-ஆம் ஆண்டு வரையில் திட்ட வரையறை ஏதுமில்லை. பணம் வெளியிடும் நேரடி அதிகாரத்தைக் கொண்டிருந்த அரசு, அதன் வாயிலாக வட்டிவீதத்தையும் மாற்றியமைக்க முடிந்தமையால், பண அங்காடியின் மீது தன் செல்வாக்கினைச் செலுத்தி வர முடிந்தது. இந்தியாவின் மைய வங்கியான இந்திய மைய இருப்புவங்கி, 1935-ஆம் ஆண்டு<noinclude></noinclude> 9whjijzaa994i4hrlvvds8u7tpsd4xe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/495 250 631094 1958219 1897021 2026-08-15T03:54:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பண அங்காடி|471|இந்தியப் பண அங்காடி}}</noinclude>செயற்படத் தொடங்கியது. இது தொடங்கப் படுவதற்கு முன்னால் இம்பீரியல் வங்கி மைய வங்கியின் பணியிற் சிலவற்றைச் செய்து வந்தது. பிற வணிக வங்கிகள் தமக்குப் பணம் தேவைப்பட்ட காலத்தில் தம்மிடமுள்ள அரசுப் பிணையங்களின் ஈட்டின் மீது இம்பீரியல் வங்கியிடமிருந்து கடன் பெற்று வந்தன. ஆனால், இக்கடனுக்கு அவை செலுத்த வேண்டிய வட்டிவீதம் மிகையாக இருந்து வந்தது. எனவே வணிக வங்கிகள் நிறைவான பயன் பெற இயலவில்லை. ஆனால், இந்திய மைய இருப்பு வங்கி தோற்றுவிக்கப்பட்ட பிறகு அழைப்புக் கடன் சந்தை, சீட்டுச் சந்தை, துணைக்கடன் சந்தை ஆகியனவற்றை அது தன் சட்ட திட்டங்களின் வழியாகவும் நெறிப்படுத்துவதன் வாயிலாகவும் அவற்றின் பணிகளைச் சிறப்புடன் நிருவகிக்கிறது. <b>அமைப்புக் கடன் சந்தை:</b> இது பண அங்காடியின் மையமாக இயங்குவது. வணிக வங்கிகளும் நாணயமாற்று வங்கிகளும் தமக்குத் தேவையான இடைக்கால நிதியினை இங்குக் கடனாகப் பெறுகின்றன. சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களில் இது இயங்கி வருகிறது. பெரிய வணிசு நிறுவனங்கள், வணிக வங்கிகள், நிதியாளர்கள் ஆகிய அமைப்புகள் நேரடியாக அல்லது தரகர்கள் வழியாக வங்கிகளுக்கு அழைப்புக் கடனை வழங்குகின்றன. வணிக வங்கிகளும் குறிப்பாக நாணயமாற்று வங்கிகளும் இச்சந்தையின் கடனை நாடுகின்றன. இச்சந்தையிலுள்ள வட்டிவீதம் விறுவிறுப்புக் காலங்களில் மிகுதியாகவும் மந்தக் காலங்களில் குறைவாகவும் இருக்கும். வங்கிகள் தம் கையிருப்பு உரொக்க விகித்ததை இந்திய மைய இருப்பு வங்கி விதித்துள்ள விகிதப்படி எப்பொழுதும் வைத்திருக்க அழைப்புக் கடன் சந்தையில் கடன் வாங்குகின்றன. <b>உண்டியல் சந்தை:</b> பண்டங்கள் வாங்கல், விற்றல் நடவடிக்கைகளையொட்டி உண்டியல்கள் வரையப்படுகின்றன. நன்கு வளர்ச்சியுற்ற உண்டியல் சந்தையில் பலவகை உண்டியல்களை ஏற்கவும் மாற்றித்தரவும் ஆயத்தமாக வாங்குவோரும், விற்போரும் செயலாற்றி வருவர். பண்டங்களை வாங்குவோர் விற்போர் தவிர, நாணயமாற்று வங்கிகள், மைய வங்கி, உண்டியல் தரகர்கள், ஏற்பகங்கள், தள்ளுபடி நிலையங்கள், காப்பீட்டுக் கழகங்கள், மிகுதியான பண வசதியுள்ள கூட்டுப்பங்கு நிறுவனங்கள் ஆகியன உண்டியல் சந்தையின் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இந்தியாவில் உண்டியல் சந்தை ஓரளவே வளர்ச்சி பெற்றுள்ளது. இந்திய மைய இருப்பு வங்கி 1952-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் தனது உண்டியல் சந்தைத் திட்டத்தை தோற்றுவித்தது. இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டத்தின் பிரிவு 17(4) இன்படி பத்துக் கோடி உரூபாய்க்கும் அதற்கு மேலும் வைப்புகள் உள்ள வங்கிகள், தம் வாடிக்கையாளரின் 90 நாட்கள் தவணை உண்டியல்களைப் பிணையாக அளித்து, இந்திய மைய இருப்பு வங்கியிடம் கேட்டுக் கடன்பெற வழிவகை செய்யப்பட்டது. வணிக வங்கிகள் பெரும்பாலும் கடன் வழங்கிடும்போது கேட்புக் கடனையே வழங்குகின்றன. இக்கேட்புக் கடன்களில் ஒரு பகுதியைத் தவணைக் கடன்களாக மாற்றி அவற்றைப் பிணையமாக வைத்து இந்திய மைய இருப்பு வங்கியிடம் கடனுதவி பெற்றிட, வணிக வங்கிகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இதன்பொருட்டுத் தம் கேட்பு உண்டியல்களைத் தவணை உண்டியல்களாக மாற்றுவதில் வங்கிகள் ஏற்க வேண்டிய முத்திரை வரியில் (Stamp Duty) பாதிச் செலவை இந்திய மைய இருப்பு வங்கி ஏற்றுக் கொண்டது. தொடக்கத்தில் பத்துக் கோடி உரூபாய்க்கு மேற்பட்ட வைப்புகளுடைய வங்கிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட இத்திட்டம், நாளடைவில் அட்டவணைப்படுத்தப்பட்ட எல்லா வங்கிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இத்திட்டம் 1963-ஆம் ஆண்டு வரை உள்நாட்டு உண்டியல்களுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்தது. பின்னர் ஏற்றுமதி உண்டியல்களையும் ஏற்றுக்கொள்ள வகை செய்யப்பட்டது. இவ்வுண்டியல் சந்தைத் திட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தன. இது எளிமையாக இல்லை. இத்திட்டத்தினால் பயன்பெறும் வண்ணம் வணிக வங்கிகள் கேட்பு உண்டியல்களைத் தவணை உண்டியல்களாக மாற்றிட இந்திய மைய இருப்பு வங்கி தனிச்சலுகைகளை வழங்க வேண்டி வந்தது. இச்சலுகைகள் நிறுத்தப்பட்டால் திட்டம் நலிவுறும் நிலை தோன்றும். எனவே, 1970-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு புதிய உண்டியல் சந்தைத் திட்டம் இந்திய மைய இருப்பு வங்கியின் 17 (2) (3) விதிப்படி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தியப் பண அங்காடியில் பல ஆண்டுகளாக உண்டியல்கள் புழக்கத்திலிருந்தபோதும், அவற்றைப் பெருமளவில் தள்ளுபடி செய்து நிதிபெறும் முறை வழக்கத்தில் இல்லை. பண்டங்களின் மீது கடன்பெறும் முறையே பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. புதிய உண்டியல் சந்தைத்திட்டம் உண்டியல்களை மறு தள்ளுபடி (Re-discounting) செய்திட வழி வகுத்துப் பணச் சந்தையில் ஓர் இயல்பான நெகிழ்ச்சியை வழங்கியது. இவ்வுண்டியல் சந்தையின் மூலம் வணிக வங்கிகளின் கடன் நடவடிக்கைகளில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் இந்திய மைய இருப்பு<noinclude></noinclude> 6p9fsoajsvts1kohh2uyqhoxvv92acu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/496 250 631101 1958220 1897055 2026-08-15T04:00:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பண அங்காடி|472|இந்தியப் பண அங்காடி}}</noinclude>வங்கி தோற்றுவிக்க முயல்கிறது. சில வரையறைகளுக்குட்பட்ட உண்டியல்களை மட்டுமே அது மறு தள்ளுபடி செய்ய முன் வருவதன் மூலம் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் செயற்படுத்துகிறது. <b>துணைக்கடன் சந்தை:</b> இது பண அங்காடியின் சிறப்பான பகுதியாகும். சாதாரணக் கடன், அதிகப் பற்றுக்கடன் (Over drafts), உரொக்கக் கடன் ஆகியன இதில் அடங்கும். வணிக வங்கிகள் அரசு ஆவணங்கள், முதல்தரப் பங்குச் சீட்டுகள், பல்வேறு பண்ட இருப்புகள் போன்றவற்றை ஈடாக ஏற்றுக்கொண்டு இவ்வகைக் கடனை வழங்குகின்றன. ஈடாகப் பெறும் பொருள் அல்லது பண்டத்தின் மதிப்பிற்கும் கடன் தொகைக்கும் இடையே ஏற்ற இடை வெளி (Margin) இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, அரசு ஆவணங்கள் போன்ற உயர்ந்த ஈட்டிற்கு 10 முதல் 20 விழுக்காடுகளும், முதல் தரப் பங்குச் சீட்டுகளுக்கு 30 முதல் 40 விழுக்காடுகளும், பண்டங்களுக்கு 30 முதல் 50 விழுக்காடுகளும் இடைவெளி இருக்கவேண்டும் என வங்கிகள் வரையறுப்பதுண்டு. பொதுவாக வணிகர்கள் கையிருப்புப் பணத்தை விரும்புதல் கண்கூடு. இதற்கு ஈடாக அவர்கள் பண்டங்களை அளிக்கின்றனர். அதிகப்பற்று வேண்டுவோர் கடன் சீட்டுகள், பங்குச் சீட்டுகள் ஆகியவற்றை ஈடாக வைக்கின்றனர். <b>கருவூல உண்டியல்கள்:</b> வங்கிகள் வணிக அடிப்படையில் வரையப்படும் உண்டியல்களை மட்டுமன்றிக் கருவூல உண்டியல்களை (Treasury Bills) வாங்குவதிலும் விற்பதிலும் ஈடுபடுகின்றன. மைய அரசும் மாநில அரசுகளும் வெளியிடும் இவ்வுண்டியல்கள் பொதுவாக மூன்றுமாதத் தவணை கொண்டவை. இவற்றின் மீது வணிக வங்கிகள் தம்மிடம் மிகையாக உள்ள பணத்தைக் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்கின்றன. போர்க்காலச் செலவுகள். அரசின் வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறை (Budget Deficit), நடைமுறை மூலதனச் செலவுகள் போன்றவற்றை ஈடுகட்ட அரசுகள் இவ்வுண்டியல்களை வெளியிடுகின்றன. தள்ளுபடிச் சந்தை இல்லாத நிலையில் கருவூல உண்டியல்களை நன்கு பரப்பிட அரசால் இயலவில்லை. எனினும், இந்திய மைய இருப்பு வங்கி இவ்வகை உண்டியல்களுக்கு மறுதள்ளுபடி வசதியையும் வேறு சலுகைகளையும் வழங்கி இவற்றைப் பரவலாக்க முயன்று வருகிறது. <b>பண அங்காடியின் வட்டி வீதங்கள்:</b> ஒரு பண அங்காடியின் நடவடிக்கைகள் அங்கு நிலவும் வட்டி வீதத்தை மையமாகக் கொண்டு இயங்கும் தன்மையனவாகும். வணிக வங்கிகள் கடன்கள் மீது விதிக்கும் வட்டிவீதம் அவ்வப்போது நிலவும் பொருளாதார நிலை, பணப்புழக்க அளவு, பருவகால வேறுபாடுகள் ஆகியனவற்றைச் சார்ந்து அமைகின்றது. பண அங்காடி நன்கு வளர்ச்சியுள்ள நாடுகளில் மைய வங்கி விதிக்கும் வங்கி வீதத்திற்கும் (Bank Rate) பண அங்காடியிலுள்ள பிற வட்டி வீதங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவு நிலை பெறவில்லை. இங்கு நாட்டு வங்கியர்கள் சிறு வணிகர்களின் உண்டியல்களைத் (Hundies) தள்ளுபடி செய்து தரும் வீதம், இந்திய மைய இருப்பு வங்கியின் வீதத்தினின்றும் கணிசமாக மாறுபட்டிருப்பதைக் காணலாம். நாட்டு வங்கியரின் வட்டிவீதம் பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில்கூட ஒரே அளவினதாக அமைவதில்லை. பம்பாய் நகரிலேயே மூன்று முதன்மையான சந்தைகளில் ஒரே நேரத்தில் பலவீதங்கள் நிலவுவதும் உண்டு. இந்த வட்டி வீதங்களிடையே வேறுபாடுகள் இருந்திடக் காரணம் பணச் சந்தையின் மையப்பகுதி நன்கு வளர்ச்சியுற்றதாகவும் நாட்டு வங்கியாளரின் (Bazaar Bank) பகுதி கட்டுப்பாடின்றி இயங்கும் தன்மையதாகவும் இருப்பதேயாகும். இந்தியப் பண அங்காடியில் மைய வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு உட்படாமல் தன்னிச்சையாக இயங்குகிற, ஒருங்கமையாத துறை சார்ந்த வட்டித்தொழிலர்களுள் நாட்டு வங்கியர்கள் ஆகியோர் பலர் உள்ளனர். வட்டிக்குக் கடன்தரும் தொழில் தொன்றுதொட்டு நடந்துவரும் தொழில்களுள் ஒன்றாகும். குறிப்பிட்ட சில இனங்களைச் சார்ந்த மக்கள் பரம்பரைத் தொழிலாகப் பல்லாண்டுகளாகக் கடன் தரும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளனர். வட்டித் தொழிலருக்கும் நாட்டு வங்கியருக்குமிடையே உள்ள சிறப்பு வேறுபாடு யாதெனில், முன்னவர் தம் பணத்தையே கடனாக வழங்கித் தொழில் நடத்துகிறார். ஆனால், நாட்டு வங்கியர்கள் வைப்புகளைப் பெற்று அல்லது வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்றுத் தொழில் நடத்துகிறார்கள். உற்று நோக்குமிடத்து, இவ்விருவகையினராலும் வட்டித் தொழிலிலுள்ள தீமைகள் மிகுந்துள்ளனவேயன்றிப் பொருளாதாரத்திற்கு நன்மைகள் ஏற்படவில்லை, பெரும்பாலும் இவ்வகை நிறுவனங்கள் வணிகர்களுக்கு உரொக்கக் கடன் வசதியை அளிக்கவே முன்வருகின்றன. உண்டியல் நடவடிக்கைகள் மிகக் குறைவு. ஒழுங்குற்ற அமைப்புடைய வணிக வங்கியர்க்கும் அத்தகைய அமைப்பற்ற நாட்டு வங்கியர்க்கும் முறையான தொடர்பு இல்லாமையால், முன் கூறியபடி இருவகைச் சந்தைகளிலும் வேறுபட்ட வட்டி வீதங்கள் நிலவுகின்றன. நாட்டு வங்கியர்களும் வட்டித் தொழிலர்களும் தனித்தனி நிறுவனங்களாக, தனி மனிதர்களாகச் செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் நடவடிக்கை-<noinclude></noinclude> avn85wv54d9t7jedr6itx32awy8ijm3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/497 250 631106 1958221 1954966 2026-08-15T04:04:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பல்கலைக் கழகங்கள்|473|இந்தியப் பல்கலைக் கழகங்கள்}}</noinclude>களை ஒருங்கிணைத்திடத் திட்டங்கள் எவையும் இல்லை. இவ்வாறு பண அங்காடியின் ஒருங்கமையாத் துறை ஒருங்கிணைக்கப்பட்டால் காலப்போக்கில் ஒருங்கமைந்த துறையுடன் அதன் தொடர்பு வலுப்பட்டு, எதிர்காலத்தில் முழுமையான ஒருங்கமைத்த பண அங்காடி தோன்றுவதற்கு வழி உண்டாகும். {{right|ஆர்.இ.}} <section end="இந்தியப் பண அங்காடி"/> <section begin="இந்தியப் பல்கலைக் கழகங்கள்"/> {{dhr}} <b>இந்தியப் பல்கலைக் கழகங்கள்:</b> பொதுவாக இன்று பல்கலைக்கழகம் (University) என்னும் சொல்லுக்கு உணரப்படும் கருத்தில், இந்தியாவில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான் பல்கலைக்கழகங்கள் தோன்றின. இலண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில், இந்தியாவில் முதன்முதலாக மூன்று பல்கலைக்கழகங்கள் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நகரங்களில் அன்றைய ஆங்கில அரசினால் அமைக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இலக்கிய மறுமலர்ச்சியுடனும் அறிவியல் கருத்துகள் பரப்புகையுடனும் தம் வரலாற்றைத் தொடங்குகின்றன. இன்று வழங்கப்படும் ‘பல்கலைக்கழகம்’ என்னும் கருத்து இந்திய மண்ணில் விளைந்ததன்று; மேனாட்டவர்களால் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது. எனினும், உயர்கல்வி வழங்கிய இடங்கள் பல பழங்கால இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றன. வேத காலத்தில் இருந்த ‘குருகுலங்களை’ (Gurukulas) பல்கலைக்கழகங்கள் என்று சொல்லிவிட முடியாது. என்றாலும், அவையே அக்கால உயர்கல்வியான வேதங்கள் (Vedas), சாத்திரங்கள் (Shastras) ஆகியவற்றைக் கற்பதற்கு அடிப்படையாக விளங்கி வந்திருக்கின்றன. அக்காலத்தில் இருந்த பரிசத்து (Parishads) முறையே இன்றைய பல்கலைக்கழக வளர்ச்சியின் முதற்படியாகக் கூறலாம். பல்வேறு இடங்களிலிருந்து வந்த அறிஞர்களும் அவர்தம் மாணவரும் அறிவு விளங்க விவாதிக்கக் கூடிய கூட்டமே பரிசத்து எனப்பட்டது. விவாதத்திலும் சொல்லாற்றலிலும் வல்லோருக்கு இக்கூட்டம் பட்டங்கள் வழங்கும் பணியையும் செய்து வந்திருக்கிறது. இன்றுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைப் போலவே இவை நாளடைவில் உயர்கல்வி மையங்களாகத் தழைத்தோங்கின. இவற்றுள் சில வைதிக சமய அடிப்படையில் வளர்ந்தன; சில பௌத்த சமயச் சார்பில் சிறந்தோங்கின. இத்தகு உயர்கல்வி மையங்கள் ஐரோப்பாவிலிருந்த இடைக்காலப் (Mediaval) பல்கலைககழகம் நிறுவப்பட்டதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, பண்டைய இந்தியாவில் இருந்தனவென்று மேனாட்டார் குறிப்புச் சுட்டுகிறது. தட்சசீலம் (Takshasila) என்னும் இடத்தில் (இப்பொழுது பாகிசுத்தானில் உள்ளது) இருந்த கல்விக்கூடமே இந்தியாவின் பழமையான ‘பல்கலைக்கழகமாக’க் கருதப்படுகிறது. கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை இப்பல்கலைக்கழகம் கல்வியிற் சிறந்தோங்கியதாகக் கூறப்படும். <b>பௌத்தக் கல்வி மையங்கள்:</b> பௌத்தத் துறவிகள் தங்குமிடங்கள் கல்வி மையங்களாகச் சிறந்தன. பௌத்த சமயப்படி, பௌத்தத் துறவிகள் ஆண்டில் எட்டு மாதங்கள் நாடெங்கும் பயணம் செய்தும் இரந்தும் வாழ வேண்டியிருந்தது. காலப் போக்கில் அவர்கள் பணமும் நிலமும் புரவலர்களிடமிருந்து பெற்றுத் துறவிகளின் மடம் கட்டினர். இம்மடங்கள் விகாரங்கள் (Viharas) எனப்பட்டன. பௌத்த சமயக் கொள்கைகளைக் கற்பிப்பதற்கென்றே இம்மடங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் மற்ற அறிவியலும் கலைகளும் வளர வளர, இவையும் கற்பிக்கத் தகுந்த பாடங்களாகச் சேர்க்கப்பட்டு, காலப்போக்கில் பெருங்கல்வி மையங்களாகப் பௌத்த மடங்கள் விளங்கலாயின. நாலந்தாவில் அசோக மன்னர் ஒரு பெளத்த மடம் நிறுவினார் என்பது சொல்லப்படுகிறது. படாதித்தியா (Bataditya) என்பவரால் கி.மு. 5-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட பெளத்த மடமே பின்னர் நாலந்தாப் பல்கலைக்கழகமாக வளர்ந்து ஏறத்தாழ 800 ஆண்டுகள் தழைத்தோங்கியது என்று நம்பப்படுகிறது. யுவான் கவாங்கு, இட்சிங்குப் போன்ற சீனப்பயணிகள் இப்பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தங்கிப் பௌத்த சமய நூல்கள் பலவற்றிற்குப் படிகள் எடுத்துச் சென்றனர் என்று அவர்கள் வரலாற்றுக் குறிப்பிலிருந்து தெரிகிறது. யுவான் சுவாங்கு நாலந்தாவில் 10,000 மாணாக்கர்களும் 1000 ஆசிரியரும் தங்கியிருந்தனர் என்றும், ஆசிரியர்கள் சிறந்த கல்வித்திறமை கொண்டிருந்தார்கள் என்றும், மகாயான புத்த நெறிகள், நீதிகள், சாக்கியத் தத்துவம், தருக்கம், இலக்கணம், மருத்துவம், விலங்கியல் முதலியவை போதிக்கப்பட்டனவென்றும், இப்பல்கலைக்கழகத்தில் நுழையும் தகுதிபெறுதற்குக் கடும்போட்டி இருந்ததென்றும், பொதுவாக நூற்றில் 20 மாணாக்கரே நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றனர் என்றும், அனைத்து மாணாக்கருக்கும் இலவச உணவு, உடை, உறையுள், மருந்து முதலியன வழங்கப்பட்டன என்றும் குறித்திருக்கின்றார். சொல்வன்மையை இப்பல்கலைக்கழகம் மிகவும் வளர்த்தது என்றும் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத் தலைவருக்குக் கல்வி வல்லுநர் குழு, ஆட்சி வல்லுநர் குழு என்ற இரு அவைகள் துணைபுரிந்தன. பாடத்திட்டம், தேர்வு, வேலைப்<noinclude> வா. க. 3-60</noinclude> j2hc309mipr0azuimlfrh68j15z1hq2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/498 250 631114 1958222 1897086 2026-08-15T04:09:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பல்கலைக் கழகங்கள்|474|இந்தியப் பல்கலைக் கழகங்கள்}}</noinclude>பங்கீடு முதலியவைகளைக் கல்வி வல்லுநர் குழுவும், கட்டடப் பராமரிப்பு, நிதிப் பங்கீடு, உண்டி, உறையுள், மேலாண்மை போன்ற செயல்களை ஆட்சி வல்லுநர் குழுவும் கவனித்தன. சீனா, கொரியா, திபெத்து, சாவா (Jawa) முதலிய நாடுகளிலிருந்து அறிஞர் நாலந்தாவிற்கு வருகை தந்தனர் என்றும், தின்னாகர், தர்மபாலர், சந்திரபாலர், குணமதி, இந்திரமதி போன்ற அறிஞர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் சிறந்த ஆசிரியராகத் திகழ்ந்தார்கள் என்றும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. தின்னாகரின் தருக்க நூல்களும் இந்திரமதியின் இலக்கண நூல்களும் அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தனவாம். கங்கையின் வடகரையில் வங்கால் பால அரசர்களின் ஆதரவோடு விக்கிரமசீலம் (Vikramasila) என்னும் பல்கலைக்கழகம் சிறந்து விளங்கியது. இது சிறப்பில் நாலந்தாவிற்கு இணையாகத திகழ்ந்ததாம். இவை தவிர உச்சயினி (Ujjain), வல்லபி (Valabhi), காசி (Kashi Banares), காஞ்சிபுரம் போன்ற இடங்களிலும் புகழ்பெற்ற உயர் கல்வி மையங்கள் செயற்பட்டு வந்தன. இக்கல்வி மையங்கள் அனைத்தும் மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் (Residential) அமைந்திருந்தன. குருகுலக் கல்வி மையங்களைப் போலன்றி, பல்வேறு துறைகளைக் (Faculties) கொண்டவையாக இக்கல்வி மையங்கள் விளங்கின. அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் மொகலாயர் படையெடுப்போடு அழிந்துபட்டன. நாலந்தாவின் புகழ்பெற்ற தர்மகஞ்சம் என்ற நூலகம் தரைமட்டமாக்கப்பட்டது. <b>தமிழ்ச் சங்கங்கள்:</b> வட இந்தியாவின் வேதகாலக் கல்வி மையங்களுக்கும் பௌத்தக்கல்வி நிலையங்களுக்கும் இணையாகத் தமிழ்நாட்டில் ‘தமிழ்ச் சங்கம்’ என்ற கழகம் இருந்ததாகத் தமிழ் நூல்களிலிருந்து தெரிகிறது. பாண்டிய நாட்டுத் தலைநகரான கூடல் நகரத்தில் கிறித்துப் பிறப்பிற்கு முன்னமேயே பல்கலைக்கழகத்தை ஒத்த தமிழ்ச் சங்கங்கள் இருந்திருக்கின்றன. புதிய நூல்கள் இச்சங்கங்களின் ஒப்புதல் பேரிலேயே அரங்கேற்றப்பட்டன. சங்க காலத்திற்குப் பின் பல்லவர் காலத்தில் தமிழகம் முழுவதும் வேதபாடசாலைகள் நிறுவப்பட்டன. உயர்கல்வியென்பது வேதங்கள், வடமொழி இலக்கணம் ஆகியவற்றைக் கற்பதுவே என்று எண்ணப்பட்டது. பௌத்த, சமண சமயங்களும் தமிழ் நாட்டில் தங்கள் சமயக் கொள்கைகளைப் பரப்ப விகாரங்களையும் பள்ளிகளையும் ஏற்படுத்தின. எடுத்துக்காட்டாக, காஞ்சிபுரத்தில் பௌத்த, சமண சமய நூல்கள் எல்லாம் கற்பிக்கப்பட, அந்நகரம் சிறந்த வேதக்கல்வி மையமாகத் திகழ்ந்தது. <b>கோயில் கல்லூரிகள்:</b> பௌத்த சமயக் கல்விச்சாலைகளின் சிறந்த கட்டுக் கோப்பான நிருவாகத்தைப் பின்பற்றி, இடைக்காலத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலிருந்து இந்துசமயக் கோயில் கல்லூரிகள், மடங்கள் கல்விமையங்களாகத் திகழத் தொடங்கின. கோயில் கல்லூரிகள் தமிழ் நாட்டில் காஞ்சி, திருமுக்கூடல், எண்ணாயிரம், திருவொற்றியூர் என்னும் இடங்களிலும் பிசப்பூரில் சுலோத்தகில், வங்காளத்தில் நாடியா, நவதீபம் ஆகிய இடங்களிலும் இயங்கின. இத்தகு கல்விக்கூடங்களில் பணிக்கொடைகள் நிறுவப்பட்டு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உணவு, உடை, மருந்து முதலியன இலவசமாக அளிக்கப்பட்டன. ஓர் ஆசிரியருக்கு இருபது மாணாக்கர் என்ற விகித அடிப்படையில் கல்விப்பணி நடைபெற்றது. கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரை வேதபாட சாலைகள், குருகுலங்கள். புத்தவிகாரங்கள், வடமொழிக் கல்லுாரிகள், தமிழ்ச் சங்கங்கள், கோயில் கல்லூரிகள், சமணப் பள்ளிகள் எனப் பலவகைப்பட்ட உயர்கல்வி மையங்கள் பாரதம் முழுமையும் சிறந்து விளங்கின. <b>இசுலாமிய மதரசாக்கள்:</b> முகலாயரின் ஆட்சிக்காலத்தில் ‘மதரசா’ (Madrasahs) என்ற உயர் கல்விக் கூடங்கள் எழுந்தன. இந்த நிறுவனங்கள் அக்காலத்தில் சிறந்து விளங்கிய பாரசீகத்தின் சிராகப் பல்கலைக் கழகத்திற்கு இணையாக விளங்கின. இராம்பூர் மதரசா தருக்க நெறியிலும், இலக்னோ மதரசா இறைமாட்சியிலும், தில்லி மதரசா இசுலாமிய மரபிலும், சலந்தர் மதரசா கணிதவியல். வானியல்களிலும் சிறந்து விளங்கின. பல்வேறு நாடுகளிலிருத்தும் மாணாக்கர்கள் இக்கல்வி மையங்களுக்கு வந்து பயின்றனர். <b>மேனாட்டுப் பாங்கில் உயர் கல்வி நிலையங்கள்:</b> கிறித்தவப் பாதிரிகள் ஆங்கில அரசின் உதவியோடு மேலைநாட்டு உயர் கல்வியைப் பரப்ப வங்காளத்தில் செராம்பூரில் தச்சு கல்லூரி, பம்பாயில் சான் கல்லூரி, சென்னையில் தி நோபிலி கல்லூரி முதலியவற்றைத் தொடங்கி நடத்தி வந்தனர். அதனால், மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்திப் பட்டங்கள் அளிக்கப் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கல்கத்தா பம்பாய், சென்னை ஆகிய மூன்று நகரங்களில் இலண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் கி.பி. 1857-இல் மூன்று பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இப்பல்கலைக்கழகங்களுக்கு வேந்தரும், துணைவேந்தரும், பணியமர்த்தம் செய்யப்பட்டனர். தேர்வுகள் நடத்திப் பட்டங்கள் அளிப்பதென்ற பணியைத் தவிர கற்-<noinclude></noinclude> 7fi6usgpf2ml4zj2rayx0v2gfhnk6qw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/499 250 631288 1958223 1897581 2026-08-15T04:14:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பல்கலைக் கழகங்கள்|475|இந்தியப் பல்கலைக் கழகங்கள்}}</noinclude>பித்தல், ஆராய்ச்சி என்ற தலையாய பணிகளைப் பல்கலைக் கழகங்கள் மேற்கொள்ளவில்லை. இப்பல்கலைக் கழகங்களின் முதன்மையான பணி தேர்வு நடத்துதல் என்ற நிலையில் இருந்தது. கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய இடங்களில் இருந்த பல்கலைக்கழகங்களும் அதனுடன் இணைந்த கல்லூரிகளும் ஏறத்தாழ 20 ஆண்டுகள் நாட்டின் கல்வித் தேவையை நிறைவேற்றி வந்தன. இலாகூரை (இப்போது பாகிசுத்தான் நாட்டில் உள்ளது.) தலைமையகமாகக் கொண்டு, கி.பி. 1882-இல் பஞ்சாபுப் பல்கலைக்கழகம் (University of Punjab) தோற்றுவிக்கப்பட்டது. ஐந்தாண்டுகள் கழித்து, கி.பி. 1887-இல் இந்தியாவின் ஐந்தாம் பல்கலைக்கழகமாக அலகாபாது நகரில் அலகாபாது பல்கலைக்கழகம் தோன்றியது. இப்பல்கலைக்கழகம் தொடங்கியதற்குப் பின் புதிய பல்கலைக்கழகம் தொடங்குவதில் 1916-ஆம் ஆண்டுவரை ஒரு பெரிய சுணக்கம் (Lull) இருந்து வந்தது. கல்லூரிகளின் எண்ணிக்கை கி.பி. 1857க்குப் பின்னர்ப் பெருகத் தொடங்கியது. ஆனால், பெரும்பாலான கல்லூரிகள் கலைக் கல்லுரிகளாகவே தொடங்கப்பட்டன. சில சட்டக் கல்லூரிகளும் கட்டடப்பொறியியல் கல்லூரிகளும் மட்டுமே தொடங்கப்பட்டன. இயந்திரப் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படவில்லை. தொழிற்கல்விக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படாமையால் நாட்டில் தொழில் வளர்ச்சியும் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையவில்லை. மிகவும் விரைவாக உயர்கல்வி பெருகியதால் அதன் தரமும் குன்றியது. இந்திய அரசு 1902-இல் கர்சன் பிரபு (Lord Curzon) தலைமையில் பல்கலைக்கழகக் குழு (Universities Commission) ஒன்றினை அமைத்தது. இக்குழு பல்கலைக்கழகக் கல்வித் தேவைகளை ஆராய்ந்து, கல்வியமைப்பில் மாற்றத்திற்கான பரிந்துரைகளை வழங்கியது. அவற்றின் அடிப்படையில் 1904-ஆம் ஆண்டு பல்கலைக்கழகச் சட்ட முன்வரைவு (Indian Universities Act of 1904) பல்கலைக்கழகச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்களை வெளியிட்டது. அவற்றின் தலையாய கருத்துகள் பின்வருவன: 1. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் சொந்தமாகவே கற்றல், கற்பித்தல், ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுதல், 2. தகுதியுடைய கல்லூரிகளுக்கு மட்டுமே இணைத்தல் (Affiliation) அனுமதி அளிக்கப்படுதல், 3. பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் 100க்கு மேற்படாமல் உறுப்பினர்கள் ஐந்தாண்டுக் காலத்திற்கு மட்டுமே இருத்தல், 4. பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் ஆசிரியருக்குப் பெரும் பங்களித்தல். இப்பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தியாவில் இருந்த 5 பல்கலைக்கழகங்களும் அவற்றின் தலைமையகத்தில் கற்பித்தல் துறைகளைத் (Teaching Departments) தொடங்கின. இந்திய அரசு 1917-ஆம் ஆண்டில் சர் மைக்கேல் சேட்லர் (Sir Micheal Sadler) தலைமையில் அமைந்த கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு (Calcutta University Commission) பழைய பல்கலைக் கழகங்களைப் புதுமைப்படுத்துதல், புதிய பல்கலைக்கழகங்களைத் தனித்தன்மை வாய்ந்த தங்கிப் பயிலும் சிறிய பல்கலைக் கழகங்களாக அமைத்தல், மூன்றாண்டுப்பட்ட வகுப்புகள், தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தல் போன்ற மாற்றங்களைப் பரிந்துரை செய்தது. சேட்லர் குழுவின் பரிந்துரைகளுள் எதையும் கல்கத்தாப் பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தவில்லை. எனினும், அடுத்துத் தோன்றிய புதிய பல்கலைக்கழகங்களில் சில இக்குழுவின் பரிந்துரைகளிற் சிலவற்றை ஏற்றுக்கொள்ளத் தொடங்கின. அலிகார் முசுலிம் (1920), இலக்னோ (1921), தாக்கா (இப்போது வங்காளதேசத்தில் உள்ளது) (1921), தில்லி (1922), நாக்பூர் (1923), ஆந்திரா (1926), ஆக்ரா (1927), அண்ணாமலை (1929) ஆகிய பல்கலைக்கழகங்களே சேட்லர் குழு அறிக்கைக்குப் பின் இந்தியாவில் தொடங்கப்பட்டவையாம். இவற்றுள் நாக்பூர், ஆந்திரா, ஆக்ரா ஆகியன இணைந்த கல்லூரிகளைக் (Affiliated Colleges) கொண்டவை; பிற பல்கலைக்கழகங்கள் ஓரிடத்தில் அமைந்த தனித்த பல்கலைக்கழகமாகவும் (Unitary) ஒரே நகரில் உள்ள பல கல்லூரிகளை இணைத்த பல்கலைக்கழகமாகவும் (Federal) அமைந்தன. திருவாங்கூர்ப் பல்கலைக்கழகம் 1937-இல் மாகாணப் பல்கலைக்கழமாகத் (State University) தொடங்கப்பட்டது (இந்திய மாகாணங்கள் சுதந்திரத்திற்குப் பிறகு 1956-இல் திருத்தி அமைக்கப்பட்ட பின், 1957-இல் கேரளாப் பல்கலைக்கழகம் என இதற்குப் பெயரிடப்பட்டது). இரண்டாம் உலகப் போரின் விளைவால் 1942 வரை புதிய பல்கலைக் கழகங்கள் நாட்டில் தோன்றவில்லை. உட்கல் பல்கலைக்கழகம் கட்டாக்கு (Cuttack) நகரில் தோன்றியது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் சாகர் (Saugar), இராசசுத்தான் (Rajasthan) பல்கலைக்கழகங்கள் முறையே 1946-இலும் 1947-இலும் தோன்றின. இந்தியா 1947-இல் சுதந்திரமடைந்த பொழுது இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 19. சுதந்திர இந்தியாவில் புதிய பல்கலைக் கழகங்கள் வேகமாகத் தோற்றுவிக்கப்பட்டன. அவை வழக்கமான பல்கலைக்கழக் அமைப்பு, செயல் ஆகியவற்றிலிருந்து மாறியிருந்தன. எடுத்துக்காட்டாக, சாம்நகரிலுள்ள (Jamnagar) குசராத்து ஆயுர்வேதப் பல்கலைக்கழகம் (1966)<noinclude></noinclude> deo8nhatc3hdcukajaexk41vzccgm9v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/500 250 631292 1958224 1897586 2026-08-15T04:20:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பல்கலைக் கழகங்கள்|476|இந்தியப் பல்கலைக் கழகங்கள்}}</noinclude>பழங்கால இந்திய மருத்துவ முறைகளைக் கற்பிப்பதற்கென்றே தொடங்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் கிரகார் (Khiragarh) நகரிலுள்ள பல்கலைக்கழகமான இந்திர கலா சங்கீத விசுவவித்தியாலயம் (1956) இசை, நடனம் இவ்விரண்டு மட்டுமே கற்பிக்கின்றன. பீகாரில் தார்பாங்கா (Darbhanga) நகரிலுள்ள பல்கலைக்ககழகமான காமேசுவர சிங்கு தார்பாங்கா விசுவவித்தியாலயம் (1961) வடமொழி கற்பித்தலை மட்டுமே செய்கிறது, தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் (1981) தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ் மக்கள் தொடர்பான ஆய்வுகளைச் செய்வதற்காகவே தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து பாகிசுத்தான் பிரிந்தவுடன் (1947) செய்ப்பூரில் இராசசுத்தான் பல்கலைக்கழகமும் சண்டிகாரில் பஞ்சாபுப் பல்கலைக்கழகமும் தோன்றின. தேசத்தலைவர்களுக்கு அஞ்சலி செய்யும் வகையில் சில பல்கலைக்கழகங்கள் அவர்கள் தம் பெயரிலேயே தோற்றுவிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, புதுதில்லியில் உள்ள சவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (1969), அகமது நகரிலுள்ள குருநானக்குப் பல்கலைக்கழகம் (1969), சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் (1978), கோயம்புத்தூரிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகம் (1982), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் (1982), காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (1985) முதலியலற்றைச் சொல்லலாம். சில்லாங்கு (Shillong), கொகிமா (Kohima) ஆகிய ஈரிடங்களில் அமைந்துள்ள வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் (North Eastern Hill University 1973), மலைப்புற மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா ஆகியவற்றிற்கும், அருணாசலப் பிரதேசம், மிசோரம் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் கல்வி வளர்ச்சி அளிக்கும் வகையில் தோற்றுவிக்கப்பட்டது. மகளிர் கல்வி வளர்ச்சிக்காக இந்தியாவில் முதன்முதலாக 1951-இல் பம்பாய் நகரில் திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே பெண்கள் பல்கலைக்கழகம் (Shreemati Nathibai Damodar Thackersey Womens' University) தொடங்கப்பட்டது. இதைப் பின்பற்றி அன்னை தெரசாவின் பெயரில் ஒரு மகளிர் பல்கலைக்கழகம் (1984) தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலில் உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் பெண்களுக்காகச் சிரீபத்மாவதி மகிள விசுவ வித்தியாலயா என்னும் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக்கழகப் புறக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன்முதலாக ஆந்திரப்பிரதேச வெளிப் பல்கலைக்கழகம் (1982) ஒன்று ஆந்திர மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இதைப்போலவே, தேசிய அளவில் பல்கலைக்கழகப் புறக் கல்வியை வளர்த்திடும் வகையில் இந்திராகாந்தி தேசிய வெளிப் பல்கலைக்கழகம் (1985) புது தில்லியில் தொடங்கப்பட்டது. இன்று இந்தியாவில் 140 பல்கலைக்கழகங்கள் (1985) உள்ளன. வேளாண்மை நாடான இந்தியாவின் வேளாண்மை வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு வேளாண்மையில் உயர்கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக இந்தியாவில் 21 வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றுள், முதன்முதலாகக் கோவிந்த வல்லப பந்து வேளாண்மை தொழில் நுட்பவியல் பல்கலைக்கழகம் (Govind Ballabh Pant University of Agriculture and Technology) 1960-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பண்டுநகர் என்னுமிடத்தில் தோற்றுவிக்கப்பட்டது. (தொடங்கும்போது உத்தரப்பிரதேச வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்ற பெயரே இருந்தது). உத்தரப்பிரதேசத்தைப் பின்பற்றிப் பிற மாநிலங்களும் தத்தம் மாநிலங்களில் வேளாண்மைப் பல்கலைக்கழகங்களை விரைவாகத் தொடங்கின. இன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்ற கணக்கில் இவ்வகைப் பல்கலைக்கழகங்கள் தோன்றி வளர்ந்துள்ளன. கோயம்புத்தூரில் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1971-இல் தோன்றியது. பல்கலைக்கழக நிதியுதவிக் கழகச் சட்டத்தின் (1956) அடிப்படையில், பல உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக நிலையை (University Status) எய்தின. அவை கருதுநிலைப் பல்கலைக்கழகங்களாகவும் (Deemed Universities) எண்ணப்பட்டன. இவ்வகைப் பல்கலைக் கழகங்கள் இன்று இந்தியாவில் 12 உள்ளன. அவை, குருகுல காங்கிரி விகவ வித்தியாலயா, அரித்துவார் (1900); இந்திய வேளாண்மையாய்வு நிறுவனம், புதுதில்லி (1905); இந்திய அறிவியல் கழகம், பெங்களூர் (1909); குசராத்து வித்தியா பீடம், அகமதாபாது (1920); சமியா மிலியா இசுலாமியா (Jamia Mjlia/Islamai); புதுதில்லி (1920); இந்தியச் சுரங்கப் பள்ளி, தன்பாது (Indian School of Mines, Dhanbad) (1926); தாட்டா சமூக அறிவியல் நிறுவனம், பம்பாய் (1936); காந்திகிராம ஊரக நிறுவனம், காந்திகிராமம் (1957); ஆங்கில, அயல்மொழிகள் மைய நிறுவனம், அய்தராபாது (1958); பிர்லா தொழில்நுட்பவியல் நிறுவனம், பிலானி (1964); கட்டடக் கலைத் திட்டப் பள்ளி, புதுதில்லி (1979); தயால் பாக்குக் கல்வி நிறுவனம் (Dayal Bagh Educational Institute), ஆக்ரா (1980) ஆகியனவாம். இக்கருதுநிலைப் பல்கலைக்கழகங்கள் தாமே பட்டங்கள் வழங்கும் உரிமை பெற்றுள்ளன.{{nop}}<noinclude></noinclude> tom81oy5q7f06y88zlfcd521awn1qzm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/501 250 631296 1958225 1954967 2026-08-15T04:26:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பல்கலைக் கழகங்கள்|477|இந்தியப் பல்கலைக் கழகங்களின் சங்கம்}}</noinclude>பல்கலைக்கழகங்கள், கருதுநிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றோடு சில தேசிய நிறுவனங்களும் (National Institutes) பல்கலைக்கழக நிலையைப் பெற்று ஆய்வு செய்வதோடு பட்டங்களும் வழங்குகின்றன. கராக்பூர் (1951), பம்பாய் (1958), சென்னை (1959), கான்பூர் (1960), புதுதில்லி (1963) ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஐந்து இந்தியத் தொழில்நுட்பவியல் (Indian Institutes of Technology) நிறுவனங்கள்; இந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி (1956); இந்தியப் புள்ளியியல் நிறுவனம், கல்தத்தா (1932); மருத்துவப் பட்ட மேற்படிப்புக் கல்வி, ஆய்வு நிறுவனம், சண்டிகார் (1962); சிரீசித்திரா திருநாள் மருத்துவ அறிவியல், தொழில்நுட்பவியல் நிறுவனம் (Sree Chitra Tirunal Institute for Medical Science and Technology), திருவனந்தபுரம் (1973), தட்சிணபாரத இந்திப் பிரசார சபை (Dakshina Bharat Hindi Prachar Sabha), சென்னை ஆகிய தேசியச் சிறப்பு மிக்க நிறுவனங்கள் ஆய்வுக்கும் கல்விக்கும் பட்டங்கள் வழங்குகின்றன. <b>பயிற்று மொழி:</b> பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் முதன்முதலாகக் கி.பி. 1857-இல் தொடங்கியபோது பயிற்றுமொழி ஆங்கிலமாகவே இருந்து வந்தது. இந்தியாவில் 1937-இல் தேசிய காங்கிரசு அரசுகள் (National Congress Governments) சில மாகாணங்களில அமைந்தபோது அவ்வரசு, மாநிலமொழி வழியான கல்வியை வலியுறுத்தின. இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் பல்கலைக்கழகங்களில் பயிற்று மொழியாக எம்மொழியை வைப்பது என்பதில் மாநில அரசுகள் பெரிதும் கவனம் செலுத்தின. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தி மொழிக்கு அலுவலக மொழி (Official Language) என்னும் தகுதியை அளித்தது. மொழியின் அடிப்படையில் 1956-இல் இந்திய மாநிலங்கள் அமைந்தபோது, ஒவ்வொரு மாநிலமும் ஆங்கில மொழிக்கு மாறாகத் தத்தம் மாநில மொழிகளையே ஆட்சிமொழியாக்கத் திட்டம் தீட்டத் தொடங்கின. பயிற்று மொழி வைப்பதில் அரசியல் தலையீடு வெளிப்பட்டது. பல வட இந்தியப் பல்கலைக் கழகங்களில் இந்தியே பயிற்று மொழியாக உள்ளது. இந்திமொழி பேசாத தென்னிந்திய மாநிலங்களில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியைப் பயிற்று மொழியாக்குவதற்கு வேகமான எதிர்ப்புணர்ச்சி உள்ளது. எனவே, தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களில் தாய்மொழி அல்லது ஆங்கிலமே பயிற்று மொழியாக உள்ளது. மும்மொழித் திட்டத்தை (Three Language Formula) இந்திய அரசு கொண்டு வந்த போதிலும், பல பல்கலைக் கழகங்கள் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை. மருத்துவம், தொழில்நுட்பவியல் போன்ற துறைகளில் இன்னும் ஆங்கிலமே பயிற்று மொழியாக உள்ளது. இத்துறைகளில் கூடப் பல பல்கலைக் கழகங்கள் தாய் மொழியிலேயே பாட நூல்களையும் எழுதத் தொடங்கிவிட்டன. {{right|ஜெ.கோ.பி.}} <b>துணை நூல்கள்: ::Buch, M.B.</b> (Ed).. Second Survey of Research in Education Centre of Advanced Study in Education, M.S. University of Baroda. Braoda, 1979. ::<b>Naik, J.P.</b>, The Education Commission and After, Allied Publishers, New Delhi, 1982, ::<b>Nurula, S. and Naik. J.P</b>. A History of Indian Education, Macmillan, Delhi, 1974. <section end="இந்தியப் பல்கலைக் கழகங்கள்"/> <section begin="இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்"/> {{dhr}} <b>இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்:</b> இந்தியா, சிரீலங்காப் பல்கலைக் கழகங்களுக்கிடையேயான மன்றம் (Inter-University Board of India and Ceylon) 1925-இல் தோற்றுவிக்கப்பட்டது. ‘சிலோன் பல்கலைக்கழகம்’ (University of Ceylon) இம்மன்றத்திலிருந்து 1973-ஆம் ஆண்டு விலகியதால், இந்தியப் பல்கலைக் கழகங்களின் சங்கம் (Association of Indian Universities) எனப் புதிய பெயரிடப் பெற்றது. இச்சங்கம் அரசியற் கட்டுப்பாடற்ற (Voluntary) ஒரு நிறுவனம், இது இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கிடையே ஒரு செய்திப் பாலமாகவும் உயர்கல்வியினை ஒருங்கிணைக்கும் கருவியாகவும் விளங்குகிறது. இந்தியப் பல்கலைக்கழகங்களிலுள்ள அனைத்துத் துணைவேந்தர்களும் இச்சங்கத்தின் உறுப்பினர்களே. இச்சங்கத்தின் பொதுக்குழு ஆண்டுக்கு ஒரு முறை கூடும். செயற்குழுவில் 19 துணைவேந்தர்கள் உள்ளனர். இச்செயற்குழு பொதுவாக ஆண்டுக்கு நான்கு முறை கூடிச் சங்கத்தின் செயற்பாடுகளை வரையறுக்கிறது. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் இந்தியாவிலும் பிறநாடுகளிலும் உயர்கல்லி குறித்த அனைத்துச் செய்திகளையும் சேகரிக்கும் பணியினைச் செய்கிறது. மேலும், இந்தியப் பல்கலைக்கழகங்கள், வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஆகியன வழங்கும் பட்டங்களின் தகுதியை உறுதி செய்து ஒப்புதல் (Recognition) வழங்குவது இச்சங்கத்தின் தலையாய பணியாகும். புதிய பல்கலைக்கழகச் சட்டமியற்றுதலில் மாநில அரசுகள் முனையும்போது, இச்சங்கம் தொடர்பு கொண்டு உதவுகிறது. இது தேசியக்கல்வி<noinclude></noinclude> o5yz014yz4bd1sg74ivohybyrgq9d99 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/502 250 631306 1958226 1954968 2026-08-15T04:31:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம்|478|இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம்}}</noinclude>நிறுவனங்களுக்கு (எ-டு. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம்) பல்கலைக்கழகச் சார்பாளர்களை நியமிக்கவும் செய்கிறது. பல்கலைக்கழகப் பணவுதவி ஆணையகம் (University Grants Commission), கல்வி அமைச்சகம் ஆகியவற்றுடன் இது நேரடித் தொடர்பு கொண்டு பணியாற்றி வருகிறது. இச்சங்கத்தின் வெயீடான ‘பல்கலைக்கழகக் கையேடு’ (Universities Hand Book) என்னும் நூலில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் குறித்த அனைத்துச் செய்திகளும் உள்ளன. இந்தியப் பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு விளக்கத்தை (Bibliography of Doctoral Dissertations) இரண்டு தொகுதிகளாக இச்சங்கம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்துறைக்கும் வினாவங்கி நூல் வரிசைகள் (Questions Bank Book Series) என்னும் கேள்வித் தொகுப்பு நூல்களை, இச்சங்கம் 18க்கும் மேற்பட்ட பாடங்களுக்கு வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகச் செய்திகள் (University News) என்னும் மாதமிரு முறை ஏடு உயர்கல்வி குறித்து இச்சங்கத்தால் வெளியிடப் பெறுகிறது. இச்சங்கம் 1979-ஆம் ஆண்டிலிருந்து கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு முறைமை, தேர்வுகள் (Evaluation Methodology and Examinations) ஆகியவற்றில் அஞ்சல்வழித் தொடர்கல்வி அளித்து வருகிறது. பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே விளையாட்டையும் உடற் பயிற்சியையும் வளர்த்திடும் நோக்கத்துடன் பல்கலைக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டு மன்றம் (Inter - University Sports Board) ஒன்றை நடத்தி வருகிறது. இம்மன்றத்தில் அனைத்து இந்தியப் பல்கலைககழகங்களும் இடம் பெற்றுள்ளன. இச்சங்கத்தின், 1986-87-ஆம் ஆண்டிற்கான தலைவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சை.வே. சிட்டிபாபு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். <section end="இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்"/> <section begin="இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம் 1904"/> {{dhr}} <b>இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம் 1904</b>: இந்தியப் பல்கலைக்கழகங்களின் பேராளர்களையும், மற்றக் கல்வி நிறுவனங்களின் பேராளர்களையும் கொண்ட ஒரு மாநாட்டினைக் கர்சன் பிரபு 1901 செப்டம்பரில் சிம்லாவில் கூட்டினார். கல்வித் தரத்தை எவ்வாறு மேம்படுத்தலாமென்பது பற்றி இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இம்மாநாடு பல முடிவுகளை நிறைவேற்றியது. சர்தாமசு இராலே (Sir Thomas Raleigh) என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களின் அமைப்பையும் செயல் முறைகளையும் எந்த வகையில் மேம்படுத்தலாமென்பது பற்றிக் கருத்துரைகளைத் தெரிவிக்குமாறு இக்குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக 1904-ஆம் ஆண்டில் இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம் (Indian University Act) இயற்றப்பட்டது. பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் பிரிவுகளை ஏற்படுத்துதல் வேண்டும் என்றும் தனியாக ஆய்வுக் கூடங்களும் பெரிய நூலகங்களும் இருத்தல் வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. திறமை மிக்க பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட வேண்டும்; பல்கலைக்கழக ஆளவை (Senate) யில் 50-க்கு மேற்பட்ட, ஆனால் 100-க்கு குறைந்த உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். இவ்வுறுப்பினர்களுள் பெரும்பாலானவர்களை அரசே பணியமர்த்தம் செய்தல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய (20 அல்லது 15) உறுப்பினர்கள் மட்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகம் அரசின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டுவரப்படுதல் வேண்டும். ஆளவையின் முடிவுகளை நீக்குவதற்கும் செயற்படுத்தற்கும் திருத்தியமைப்பதற்கும் அரசுக்கு அதிகாரமிருத்தல் வேண்டும். ஆட்சிக்குழுவினைச் சேர்ந்த உறுப்பினர்கள் தனியார் கல்லூரிகளை ஆய்வு செய்தல் வேண்டும். தனியார் கல்லூரிகள் குறிப்பிட்ட கல்வித் தரத்தைப் பாதுகாத்து வருதல் வேண்டும். தனியார் கல்லூரிகளுக்குப் பல்கலைக்கழகம் ஒப்புதல் கொடுப்பதற்கும் அதனை நீக்குவதற்கும் அரசின் அனுமதியும் தேவையானதாகும். பல்கலைக்கழகங்களின் அலுவல் வரம்பின் எல்லை எப்பகுதி வரையில் உள்ளது என்பதை அரசே முடிவு செய்தல் வேண்டும். பின்னர்க் கல்கத்தா, சென்னை, பம்பாய், அலகாபாது ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டு, அவற்றிற்கென்று தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்தப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்த மட்டிலும் இந்த 1904-ஆம் ஆண்டைய இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம் செல்லாது. சென்னை மாநிலத்தைப் பொறுத்தமட்டிலும் 1923-ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகச்சட்டம் இயற்றப்பட்டு, அது சென்னை மாநிலம் முழுவதற்கும் செல்லத்தக்கதாக இருந்தது. அந்நிலையில் இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம்<noinclude></noinclude> nbukohynlbm7kasrt4pl287hsmbp11b விக்கிமூலம்:விக்கிப்பீடியா25 பிறந்தநாள் விழா நாள் 1 4 631695 1958248 1958176 2026-08-15T11:39:45Z Velumani Veluchamy 16585 /* 13 ஆகட்டு 2026 (ஆத்மாவின் ராகங்கள்) */ ஒப்பம் 1958248 wikitext text/x-wiki [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]] “'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது. இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன. ==திட்ட அறிக்கை== *[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E2%80%9D_(Wikipedia_25th_Anniversary_Celebration)/Final_Report திட்ட அறிக்கைப் பக்கம்] =='''பயிற்சிகள்'''== =='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''== ==='''தொடக்கவிழா: 9.30-10.00'''=== *தமிழ்த்தாய் வாழ்த்து *வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர் *வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர், *சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு *நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா *தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா ==='''அமர்வு - 1 (10.00-11.15''')=== *10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம் *11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 2 (11.15-2.00)'''=== *11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா *11.30 - 11.45 - செயல்முறை *11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர் *12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR) *12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்) *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 3 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1 ** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]] ** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf] ** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2 ** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] ** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *3.00 - 3.20 - செயல்முறை *3.20 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 4 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''== * தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா * தொடக்கவிழா: 9.30-10.00 ==='''அமர்வு - 5 (10.00-11.15)'''=== * 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும் # முனைவர் பா.கவிதா, # முனைவர் ம. மைதிலி # முனைவர் ந. இராஜேந்திரன், # முனைவர் இரா. குணசீலன் # முனைவர் வா. காருண்யா, # முனைவர் க. பாலாஜி # முனைவர் இரா.நித்யா, # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி #பேரா. இரா. அரிகரசுதன் * 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல் * 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு * 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 6 (11.20-2.00)'''=== *11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும் *11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை. *12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல் *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 7 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு) *3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல் #பேரா. இரா. அரிகரசுதன் #திரு இரெ. லோகநாதன் # முனைவர் மணிமேகலை *3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல் *4.00 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 8 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் பா.கவிதா # முனைவர் ம. மைதிலி, # முனைவர் ந. இராஜேந்திரன் # முனைவர் இரா. குணசீலன், # முனைவர் வா. காருண்யா, # முனைவர் இரா.நித்யா =='''திட்ட மேலாளர்'''== # சிறீதர் =='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி # பேரா. இரா. அரிகரசுதன் =='''பயில்வோர்'''== இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும். #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC) # --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC) # --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC) --[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC) ==புதிய பயனர்== [https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்] =='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''== * [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]] * [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] * [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] == Edit Summary (Wikipedia 25 Celebration) == இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம். {| class="wikitable" ! Sl.No ! Wikimedia Project ! Total edits ! Pages created ! Pages improved |- | 1 | Wikipedia | 1125 | 164 | 961 |- | 2 | Wikisource | 7493 | 1647 | 5846 |- | 3 | Wiktionary | 1073 | 11 | 1062 |- | 4 | Wikidata | 157 | 10 | 147 |- | 5 | Wikimedia Commons | 75 | 37 | 38 |- ! colspan="2" | Total ! 9923 ! 1869 ! 8054 |} == Detailed Contribution – Wikipedia (12 Users) == *[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved) |- | Dharshika2026 || 3 || 1 || 2 |- | Gunathamizh || 1 || 1 || 0 |- | Info-farmer || 961 || 133 || 828 |- | KarunyaRanjith || 1 || 1 || 0 |- | Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45 |- | Magizh Sundram || 1 || 1 || 0 |- | Mythily Balakrishnan || 1 || 1 || 0 |- | Neyakkoo || 71 || 11 || 60 |- | NithyaSathiyaraj || 5 || 1 || 4 |- | Saranya V R || 11 || 3 || 8 |- | Sridharrv2000 || 15 || 6 || 9 |- | Subisena || 7 || 2 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961 |} == Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) == {| class="wikitable sortable" ! Sl.No ! User ! Date ! Article Title |- | 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்] |- | 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்] |- | 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்] |- | 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்] |- | 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்] |- | 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு] |- | 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்] |- | 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்] |- | 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு] |- | 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்] |- | 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்] |- | 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி] |- | 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு] |- | 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்] |- | 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்] |- | 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்] |- | 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)] |- | 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்] |- | 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்] |- | 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்] |- | 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்] |- | 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை] |- | 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா] |- | 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி] |- | 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா] |- | 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா] |- | 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை] |- | 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்] |- | 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்] |- | 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்] |- | 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா] |- | 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு] |- | 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்] |- | 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்] |- | 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி] |- | 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்] |- | 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்] |- | 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)] |- | 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா] |- | 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்] |} == Detailed Contribution – Wikisource (26 Users) == *[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query] {| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026 |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Boopalan28012003 || 10 || 1 || 9 |- | Dharshika2026 || 1234 || 28 || 1 |- | Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2 |- | Gunathamizh || 6 || 0 || 6 |- | Info-farmer || 868 || 221 || 647 |- | KarunyaRanjith || 35 || 0 || 35 |- | Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1 |- | LALITHAA K || 57 || 56 || 1 |- | M.Deepika Muthukumar || 3 || 0 || 3 |- | Magizh Sundram || 120 || 117 || 3 |- | Mallika Vijayakumar || 63 || 62 || 1 |- | Manimekalaiamuthan || 514 || 92 || 0 |- | Mythily Balakrishnan || 114 || 92 || 22 |- | Neyakkoo || 754 || 37 || 717 |- | NithyaSathiyaraj || 2707 || 22 || 655 |- | Pavanar Sathiyaraj || 29 || 26 || 3 |- | R. Ariharasuthan || 349 || 2 || 5 |- | Rajendran Nallathambi || 219 || 84 || 135 |- | Rarunachinna || 43 || 38 || 5 |- | Saranya V R || 92 || 1536 || 385 |- | SavithaDuraisamy || 42 || 26 || 16 |- | Sridharrv2000 || 93 || 70 || 937 |- | Srijayanthi Devi || 11 || 10 || 1 |- | Subisena || 178 || 30 || 148 |- | Sujivenba04 || 41 || 40 || 1 |- | Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846 |} == Detailed Contribution – Wiktionary (5 Users) == * [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 18 || 2 || 16 |- | Neyakkoo || 1011 || 5 || 1006 |- | Pavanar Sathiyaraj || 5 || 1 || 4 |- | Rajendran Nallathambi || 4 || 1 || 3 |- | Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062 |} == Detailed Contribution – Wikidata (10 Users) == *[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Dharshika2026 || 1 || 0 || 1 |- | Info-farmer || 143 || 10 || 133 |- | KarunyaRanjith || 1 || 0 || 1 |- | Magizh Sundram || 1 || 0 || 1 |- | Mythily Balakrishnan || 1 || 0 || 1 |- | Neyakkoo || 5 || 0 || 5 |- | NithyaSathiyaraj || 1 || 0 || 1 |- | Saranya V R || 1 || 0 || 1 |- | Sridharrv2000 || 2 || 0 || 2 |- | Subisena || 1 || 0 || 1 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147 |} == Detailed Contribution – Wikimedia Commons (2 Users) == *[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 1 || 0 || 1 |- | Neyakkoo || 74 || 37 || 37 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38 |} =='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''== * '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. * திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. *இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது. * இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர். * இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. * மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன. * முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது. ==Project and impact== * The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions. * The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence. * The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage. * One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement. * Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language. * The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource. * Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion. * Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community. * During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book. * Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge. * As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations. * Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report] =='''விளைவுகள்'''== * செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. * [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது. * Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions: ** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835 ** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836 ** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837 ** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838 ** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832 * These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity. == '''நிழற்படங்கள்''' == ==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''=== <gallery> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small> </gallery> ==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''=== <gallery> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small> </gallery> =='''நிகழ்படங்கள்'''== =='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''== * இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது. * அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை]. === 27 பிப்ரவரி 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC) # # # # # # # # === 13 மார்ச் 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]] #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) # # # # # # === 17 ஏப்பிரல் 2026 === * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC) # # # # # # # === 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC) # # # # # # === 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfhbfrbfbbgfbfbbfrbfwbgfbfwbfsbflbfrbfbbfq-activity-7470825703102402560-ZwHP?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC) #--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:59, 11 சூன் 2026 (UTC) # # === 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/நிகழ்வுப் பரப்புரை]* * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7481191719406014465/ நிகழ்வு முடிவுப் பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] # --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:55, 9 சூலை 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:54, 9 சூலை 2026 (UTC) #--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:12, 21 சூலை 2026 (UTC) # # === 13 ஆகட்டு 2026 (ஆத்மாவின் ராகங்கள்)=== * அடுத்துவரும் நிகழ்வு * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/நிகழ்வுப் பரப்புரை]* * [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7493692467351904256/ நிகழ்வு முடிவுப் பரப்புரை] * மேம்பாட்டு நூல் **[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] **[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]] **[[அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf]] **[[அட்டவணை:சிந்து வெளி தரும் ஒளி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 13:42, 13 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:14, 13 ஆகத்து 2026 (UTC) #--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 11:39, 15 ஆகத்து 2026 (UTC) # [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] jfp1bsv86nd1p6a6m8l56jod0vserao பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/503 250 633492 1958227 1954969 2026-08-15T04:34:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பழங்கல்வி முறைகள்|479|இந்தியப் பழங்கல்வி முறைகள்}}</noinclude>சென்னை மாநிலத்துக்குச் செல்லாததாகி விட்டது. இப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தவிர்த்து, மேலும் பல பல்கலைக்கழகங்கள் தமிழ் நாட்டில் செயற்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பல்கலைக் கழகத்துக்கும் தனித் தனிச் சட்டம் உள்ளது. <section end="இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம் 1904"/> <section begin="இந்தியப் பழங்கல்வி முறைகள்"/> {{dhr}} <b>இந்தியப் பழங்கல்வி முறைகள்:</b> மனித இனம் தோன்றிய நாள் முதல் ‘கற்பித்தல், கற்றல் ஆகிய செயல்கள் ஏதோ ஒரு வகையில் நிகழ்ந்த வண்ணம் இருந்துவருகின்றன. பண்பாட்டு ஏணியின் முதற்படியில் இருந்த பண்டைச் சமுதாயங்களிலும் இளைஞர்கள் இன்றியமையாத வாழ்க்கைத் திறன்களில் பயிற்சியளிக்கப் பட்டுப் பின்னர்ச் சமுதாயத் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். நாகரிகம் பெருகப் பெருகப் ‘பள்ளிகள்’ எனப்பட்ட தனியான கல்வி நிலையங்களும் தோன்ற, ‘ஆசிரியர்கள்’ எனப்படும் சிறப்புப் பிரிவினரும் தோன்றினர். இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்த வரை அதன் தொடக்ககாலக் கல்வி அமைப்பின் அடித்தளமாக அமைந்தவை வேதகாலக் கல்வி முறையும் அதன் இணைக் காலத்ததாகக் கருதப்படும் பண்டைய தமிழர் சுல்வி முறையுமே, பின்னர் எழுந்த பௌத்த, சமண, இசுலாமியக் கல்வி முறைகளும் இந்திய மக்களின் கல்வி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு பெற்றன. இப்பல்வேறு இந்தியப் பழங்காலக் கல்வி முறைகள் ஒவ்வொன்றிலும் சில தனிப் பண்புகள் காணப்பட்டன. இந்தியப் பழங்கல்வி முறைகளின் அழியாப் பல சிறப்புகளின் பாதிப்பு சுதந்திர இந்தியாவின் இன்றைய கல்வி முறையிலும் இருந்தல் தெளிவு. <b>வேதகாலக் கல்வி முறை:</b> பண்டைய இந்திய நாகரிகத்தின் கருவூலங்களாக வேதங்கள் கருதப்படுகின்றன. வேத கால இந்தியாவில் இருக்கு எசுர், சாமம் போன்ற வேதங்களின் அறிவினைப் பெற்ற சமுதாயப் பிரிவினர் வேதங்களின் துதிப்பாக்களையும் அவற்றுடன் தொடர்பு கொண்ட சடங்கு முறைகளையும், பின்னர் எழுந்த ‘உபநிடதங்களின்’ கருத்துகளையும் தம் குடும்ப ஆண் தலைமுறையினருக்கு வாய்மொழியாகவும் எடுத்துக் காட்டுகளாகவும் கற்பிக்கத் தொடங்கினர். இக்கல்வி முறை வேத காலக் கல்வியின் தொடக்கக் கட்டமாக அமைகிறது. வேத காலப்பள்ளிகளின் சிறந்த ஆசிரியர்களின் புகழினால் கவரப்பட்டுப் பிற குடும்பத்துச் சிறுவர்களும் இவ்வாசிரியர்களின் மாணாக்கர்களாயினர். தொடக்கத்தில் வேதியச் சிறுவர்கள் மட்டும் இவ்வாசிரியர்களால் கல்வி கற்க ஏற்கப்பட்டனர். பின்னர் அன்றைய சமுதாயத்தின் பிற பிரிவினரான சத்திரியர், வைசியர் குடும்பச் சிறுவர்களும் வேத ஆசிரியர்களால் ஏற்கப்பட்டனர். இவர்களுக்குத் தேவைப்படும் வாழ்க்கைத் திறன்களுக்கேற்ற பாடப் பொருள்களும் படிப்படியாக வேத காலப் பள்ளிகளில் கற்பிக்கப்படத் தொடங்கின. <b>குருகுலக் கல்வி</b>: வேதகாலப் பார்ப்பனக் கல்வி முறை ‘குருகுலக்கல்வி’ எனச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. வேதகாலப் பள்ளிகள் குருகுலங்களெனப்பட்டன. குருகுலங்களில் கற்க விழையும் தகுதிபெற்ற சிறுவர்கள், ஆசிரியர்களைப் பணிவுடன் அணுகி, அவர்கள் இசைவினைப் பெற்று, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஒருவராக வாழ்ந்து, ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் பணிவிடைகளைச் செய்து, அவ்வப்போது அவர்கள் கற்பித்தலைச் செவிமடுத்துக் கல்வி பயின்றனர். குருகுல உறுப்பினராக வாழ்ந்து கற்பது மாணாக்கர்தம் ஒழுக்க-ஆன்மிகப் பயிற்சிக்கும் உதவியது. குருகுலங்களில் பயிலும் மாணாக்கர்களுக்குப் புலனடக்கத்திலும் நடத்தையிலும் வலுவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் சொல்லுக்கு மறுப்பின்றி முழுமையாகக் கீழ்ப்படிதல் ஒவ்வொரு மாணாக்கரிடமும் எதிர்பார்க்கப்பட்டது. எளிய புறவாழ்க்கையினையும் உயர்ந்த சிந்தனைகளுக்குட்பட்ட அகவாழ்க்கையையும் வாழ மாணாக்கர்களுக்குக் குருகுலக்கல்வி முறை பயற்சியளித்தது. <b>குருகுலப் பள்ளி ஆசிரியர்கள்:</b> இவர்கள் சமுதாயத்தில் மிக்க உயர்நிலையில் வைத்துப் போற்றப்பட்டனர். அரசர்களும் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். இத்தகைய உயர்மதிப்பினைப் பெறத்தக்க அறிவு, ஒழுக்கம், ஆன்மிக உயர்வு ஆகிய யாவற்றையும் இவ்வாசிரியர்கள் பெற்றிருந்தனர். கற்பித்தலுக்கென இவர்கள் எத்தகைய ஊதியத்தையும் தம் மாணாக்கர்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. கல்வி புகட்டுதலைத் தமது மேன்மையான கடமையாக இவர்கள் கருதினர். உயர்ந்த குறிக்கோள் வாழ்க்கை வாழ்ந்து, மாணாக்கர்களுக்குக் குருகுல ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகளாக விளங்கினர். தம் மாணாக்கர்களை மிக்க அன்புடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்தினர். மாணாக்கர்களின் தகுதி, தேவை ஆகியவற்றுக்கேற்பக் கல்விக் காலம் இருந்தது. கல்விக் காலம் முடிவடைந்த பின் மாணாக்கர் ஆசிரியரிடமிருந்து விடைபெற்றுத் தம் தனி வாழ்க்கையைத் தொடங்கினர். இவ்வாறு பிரிந்து செல்லும் போது, தம் அன்பினையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் தம்மால் இயன்ற அன்பளிப்பு எதையேனும் மாணாக்கர்கள் ஆசிரியருக்குத் தருவது வழக்கம்.{{nop}}<noinclude></noinclude> r83sf8jekaaen23kzky1z5z8t1ysnxm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/504 250 633495 1958228 1905090 2026-08-15T04:38:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பழங்கல்வி முறைகள்|480|இந்தியப் பழங்கல்வி முறைகள்}}</noinclude><b>குருகுலப் பள்ளிகள்:</b> இவை அழகும் அமைதியும் நிறைந்த இயற்கைச் சூழலில் அமைந்திருந்தன. பல பள்ளிகள் குறிப்பிட்ட ஒரு சூழலில் அருகருகே இருத்தலும் உண்டு. இத்தகைய தொகுப்பு இன்றைய பல்கலைக் கழகங்களைப் போன்று செயற்பட்டன. காசி, தட்சசீலம், நதியா போன்ற இடங்களில் பின்பு எழுந்தவை இவ்வகை எனலாம். குருகுலப் பள்ளியில் ஓர் ஆசிரியர் ஒரு சில தகுதி வாய்ந்த மாணாக்கர்களுக்குக் கற்பித்ததனால் அவர்கள்பால் தனிக்கவனம் செலுத்தி, அவர்கள் ஒவ்வொருவரது முழுத்திறனும் நல்வளர்ச்சி பெறும் வகையில் பயிற்சியளிக்க முடிந்தது. வேதகாலப் பள்ளிகளில் தொடக்கத்தில் வேதங்களும் அவற்றின் துணை நூல்களுமே கற்பிக்கப்பட்டன. பிற்காலத்தில், இவற்றுடன் சோதிடம், வானவியல், மருத்துவம், தருக்கம், தத்துவம் போன்ற பல்வேறு கலைகளும் கற்பிக்கப்பட்டன. இது வேத காலக் கல்வியின் நோக்கம் விரிவு பெற்றதை உணர்த்துகிறது. சத்திரியர், வைசியர் ஆகிய சமுதாயப் பிரிவு மாணாக்கர்கள் குருகுலப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின், இவர்கள் தம் வாழ்க்கைத் தொழில்களுக்கு உதவக் கூடிய பயிற்சியும் ஓரளவு அளிக்கப்பட்டது. குருகுலக் கல்வியின் அடிப்படை கற்பித்தல் முறை ஆசிரியரது வாய்மொழி விளக்கமும் மாணாக்கர் அதனை நெட்டுருச் செய்தலுமாக இருந்தது. பிற்காலத்தில் ஓலைகளில் எழுதும் முறை பின்பற்றப்பட்டது. குருகுலக் கல்வி சீரிய வாழ்க்கைக்கான கல்வியாக விளங்கியது. ஆசிரியரது கற்பித்தலின் பயனாக மாணாக்கர் அறிவு பெற்றதுடன், அவருடன் வாழ்ந்ததன் பயனாக அவர்கள் பல சமய, ஒழுக்க ஆன்மிகப் பண்புகளையும் பெற்றனர். ஆசிரியர் சமூகத் தலைவராகப் போற்றப்பட்டார். ஆசிரிய - மாணாக்கத் தொடர்பு அன்பு, மதிப்பு ஆகிய இருவலுவான அடித்தளங்களின் மேல் அமைக்கப்பட்டிருந்தது. உடலுழைப்பு கல்விப் பயிற்சியின் ஒரு சிறந்த பகுதியாகக் கருதப்பட்டது. குருகுலக் கல்வி முறையில் சில குறைபாடுகள் இருத்தலைக் கல்வி வல்லுநர் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இக்கல்வி முறையில் மாறி வந்த சமூகத் தேவைகளுக்கேற்பத் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள உதவும் நெகிழ்ச்சித் தன்மையின்மை இதன் செல்வாக்கைக் குறைத்தது. இப்பள்ளிகள் சமூகத்தின் உயர்நிலைப் பிரிவினரெனக் கருதப்படுவோருடைய சிறுவர்களுக்கு மட்டுமே பயனளிப்பனவாக இருந்தன. சமூகத்தின் அடித்தள மக்களுள் பெரும் பான்மையினர் இம்முறையினால் புறக்கணிக்கப்பட்டனர். பண்டைய வேத காலத்தில் சமுதாயத்தில் பெண்கள் நிலை உயர்ந்திருந்ததென ஊகிக்கப் பல சான்றுகள் காணப்பட்டாலும், பிற்காலக் குருகுலக் கல்வி முறை பெண் கல்வியைப் பெருமளவு புறக்கணித்தது. இவ்வாறே தொழிற் கல்விக்கும் போதிய முதன்மைத் தன்மை அளிக்கப்படவில்லை. எனினும், குருகுல முறையின் மையக் கருத்துகளான தகுதிக்கேற்ற கல்வி, சிறு வகுப்புகள், பரிவுடன் கூடிய இணக்கமான ஆசிரிய - மாணாக்கர் தொடர்பு, கற்பித்தலைத் தம் கடமையாக ஆசிரியர் கருதுதல், குறிக்கோள் மிகுந்த எளிய வாழ்க்கைக்கான இளமைக்காலப் பயிற்சி போன்ற பலவும் இன்றும் கல்விச் சிறப்பு மிக்கனவாகத் திகழ்கின்றன என்பது தெளிவு. <b>பண்டைய தமிழகத்தில் கல்வி:</b> இந்தியாவின் வடபகுதியில் வேதகாலம் முதல் எழுந்து வளர்ந்து பரவிய குருகுலக் கல்வி முறையுடன், அதே காலத்தில் தென்பகுதியில் பண்டைய தமிழசுத்தில் பரவியிருந்த கல்வி அமைப்பு, கற்பித்தல் முறை போன்றன பற்றிய பல கருத்துகள் சங்க இலக்கியங்களினின்றும் நமக்குக் கிடைக்கின்றன. பண்டைய தமிழகத்தின் கல்விச் சிறப்புப் பற்றிய சான்றுகள் பலவும் தெரித்துள்ளன. அவை, வரலாற்றுக் கால முறைப்படி கிடைக்கப் பெறாவிடினும், ஆங்காங்கே இலக்கிய நூல்களில் பரவலாகக் காணப்படும் பல்வேறு விவரங்களைத் தொகுத்து ஆராய்ந்து, பண்டைய தமிழகக் கல்வி முறை பற்றிய பல உண்மைகளை ஆராய்ச்சியாளர் நமக்குத் திரட்டித் தந்துள்ளனர். பவணந்தி முனிவரின் நன்னூல் நூற்பாக்கள் தமிழகக் கல்வியின் பல பண்புகளை எடுத்துக் கூறுகின்றன. நல்லாசிரியர்களின் சிறப்புப் பண்புகள், கல்வி கற்போரது தன்மை, கற்பித்தலின் இயல்பு, ஆசிரிய மாணாக்கர் தொடர்பு போன்ற பலவற்றைப் பற்றி நன்னூல் தெளிவுபடுத்துகிறது. நன்னூலாசிரியர் காலத்துக்கு முற்பட்ட தமிழகச் சமுதாயத்திலும் பெருமளவு இதே போன்ற கல்வி முறை பரவிக் காணப்பட்டது என்று ஊகித்தல் கூடும். <b>கல்வியின் நோக்கம்</b>: கல்வியின் நோக்கங்களென நன்னூல் நான்கு இலக்குகளைக் குறிப்பிடுகிறது. அவை அறநெறிப்பட்ட வாழ்க்கை, பொருளீட்டுதல், வாழ்க்கையின் நல்லின்பங்களை நுகர்தல், பின்னர் இவற்றைத் துறந்து பேரின்ப வீட்டினையடைதல் ஆகியவையாம், குருகுலக் கல்வியின் வாழ்க்கைக் குறிக்கோள்களை இவை ஒத்திருத்தல், இவ்விரு கல்வி முறைகளும் ஒன்றோடொன்று கலந்து வளர்ச்சி பெற்றதனைத் தெளிவுபடுத்துகிறது.{{nop}}<noinclude></noinclude> dyod0vj3yit3lnhkhbgk0o3w2u6pxz2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/505 250 633497 1958229 1905093 2026-08-15T04:45:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1958229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியப் பழங்கல்வி முறைகள்|481|இந்தியப் பழங்கல்வி முறைகள்}}</noinclude><b>கல்வி அமைப்பு</b>: தமிழகத்தின் சமுதாய நிலைகள் எல்லாவற்றிலும் கல்வி பரவியிருந்தது. கல்வியின் சிறப்பு மக்கள் யாவராலும் உணரப்பட்டது. கல்வியின் வழியேதான் பண்பாடு, நல்லொழுக்கம், சமூகப்பண்புகள் போன்றவற்றை ஒருவன் பெறவியலும் என்பது வலியுறுத்தப்பட்டது. நேரடியாகக் கற்றலைப் போன்று கேள்வி வழியே அறிவு பெறுதலும் இன்றியமையாததாகக் கருதப்பட்டது. கற்றலுக்கேற்ப நடத்தலின் தேவையும் வலியுறுத்தப்பட்டது. கல்வியின் நடைமுறைப் பயன் தெளிவுபடுத்தப்பட்டது. கல்வி கற்றவன் எண்ணும் உரிமையும் ஆய்வுத் திறனும் பெற்று விளங்க வேண்டும். கல்வி பற்றிய குறட்பாக்கள் இத்தகைய பல கருத்துகளை எடுத்துக் கூறுகின்றன. <b>தமிழகக் கல்வியின் சிறப்பு:</b> பார்ப்பனக் கல்லி முறை போலன்றிப் பண்டைய தமிழகக் கல்வி சாதி சமய வேறுபாடுகளின்றிச் சமுதாயத்தின் எல்லாப் பிரிவு மக்களுக்கும் அளிக்கப்பட்டது என்பது அதன் சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். இவ்வாறே, பெண்களுக்குக் கல்வியறிவு புகட்டுவதனையும் பறக்கணிக்கவில்லை. கல்வித் திட்டத்தில் தமிழ்மொழி இலக்கிய இலக்கணங்கள் நடுஇடம் பெற்றிருந்தனவெனினும் பிற கலைகளும் பங்கு பெற்றன. போர்க் கலைகள், நுண்கலைகள் ஆகியன கற்பிக்கத் தனிப் பள்ளிகள் இருந்தன. ஆசிரியர்கள் நிலை உயர்ந்து காணப்பட்டது. கற்பித்தல் முறை பெருமளவு குருகுலப் பள்ளிகளிற் பின்பற்றப்பட்டது போன்று இருந்தது. <b>உயர்கல்வி:</b> பண்டைய தமிழகத்தே பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்விக் கூடங்கள் தென்மதுரை, கபாடபுரம், மதுரை ஆகிய நகரங்களில் நிறுவப்பட்டுச் சிறந்து விளங்கின. முதல், இடை, கடைச் சங்கங்கள் இத்தகையன. பிற்காலத்தில் காஞ்சி போன்ற இடங்களில் சமண, பௌத்தக் கல்விக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. பெரும் புலவர்களும் பேராசிரியர்களும் அவற்றில் இடம் பெற்றுத் தமிழ் இலக்கிய இலக்கண வளர்ச்சிக்கு மட்டுமன்றி கணிதம், அறிவியல், வானவியல், மருத்துவம், நுண் கலைகள் போன்ற பல துறைகளின் வளர்ச்சிக்கும் உதவினர். உயர்நிலைப்பட்ட இத்தகைய கல்வி அமைப்புடன் எல்லா ஊர்களிலும் சிற்றூர்களிலும் பல பள்ளிகள் செயற்பட்டன. அவை ‘கணக்காயர்’ எனப்பட்ட ஆசிரியர்களால் தம் இல்லங்களிலும் ஊர்ப் பொதுவிடமான கோயில்களிலும் நடத்தப்பட்டன. கல்வி வாய்மொழியாகவும் பின்னர் ஓலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதியும் கற்பிக்கப்பட்டது. ஒழுங்கு நன்னடத்தை, முழுக்கவனம், ஆர்வம், அறிவு வேட்கை, ஆசிரியர் சொல்லுக்குப் பணிவோடும் மகிழ்ச்சியோடுங் கீழ்ப்படிதல், நல்ல நினைவாற்றல் போன்ற பண்புகள் மாணாக்கர்களிடம் எதிர்பார்க்கப்பட்டன. மாணாக்கனது தகுதிக்கேற்பக் கற்பித்தல் முறை ஆசிரியரால் கையாளப்பட்டது. உடற்பயிற்சிக்குக் கல்வியில் சிறப்பிடம் அளிக்கப்பட்டது. திறன் மிகுந்த மாணாக்கர் ஆசிரியருக்கு உதவியாகப் பிற மாணாக்கர்களுக்குக் கற்பிக்கும் முறையும் அன்று காணப்பட்டது. ஆசிரியர்கள் சமுதாயத் தலைவர்களாகக் கருதப்பட்டனர். சிறந்த ஆசிரியர் பலர் அன்று காணப்பட்டதன் விளைவாகப் பழங்காலத்தமிழகக் கல்வி உலகின் அன்றைய சிறந்த கல்வி அமைப்புக்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது. பிற்காலத்திண்ணைப் பள்ளிகள் பண்டைய பண்புகள் ஒரு சிலவற்றைக் கொண்டு இயங்கி, தமிழக மக்கள் கல்வித் தரம் குறையாமல் இருக்க உதவின. <b>பௌத்தக் கல்வி முறை:</b> வேதகாலப் பார்ப்பனர் கல்வி முறையினை அடுத்து, சிறப்பாக இந்தியாவின் வடக்கிலும் மையப்பகுதிகளிலும் புத்தரது சமயக் கருத்துகளின் விளைவாக எழுந்து பரவிய பௌத்தக் கல்வி முறையினையும் இந்தியப் பழங்கல்வி முறைகளுள் ஒன்றாகக் குறிப்பிடலாம். பல கூறுகளில் பௌத்தக் கல்வி முறையானது பார்ப்பனக் கல்வி முறையினை ஒத்திருந்ததெனினும், இவற்றினிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும் காணப்பட்டன. பௌத்தக் கல்வியில் வேதங்களைக் கற்றல் நடுவிடம் பெறவில்லை; ஆசிரியர்களும் பார்ப்பனப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கவில்லை; மேலும் பௌத்தப் பள்ளிகளில் தொடக்க காலந்தொட்டுச் சமுதாயத்தின் எல்லாப் பிரிவினரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். வடமொழியை விடப் பாலி மொழி கல்விக் கூடங்களில் சிறப்பிடம் பெற்றது. பௌத்த சமயம் தமிழகத்தில் பரவிக் தமிழ்நாட்டுப் பேரரசர்களின் துணையைப் பெற்ற காலங்களில், பௌத்தக் கல்வியின் அடிப்படையில் அமைந்த பள்ளிகள் தமிழகத்திலும் நிறுவப்பட்டன. பௌத்தக் கல்வியின் தலையாய நோக்கம் சமயத் தலைவர்களான பிட்சுகளை உருவாக்குதலாகும். பிட்சுகள் தங்கியிருந்த விகாரங்கள் எனப்பட்ட மடாலயங்கள் பௌத்தக் கல்விக் கூடங்களாக உருப் பெற்றன. சமயத் தொண்டாற்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் இவ்விகாரங்களிலுள்ள பிட்சுக்களின் சங்கங்களில் சேர்த்துக் கொள்ளப்பட்டுக் கற்பிக்கப்பட்டனர். இவ்வாறு சேர ஆர்வமுள்ளவர்களுக்குச் சில எளிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நோயுற்றோர், அடிமைகள், கடன்பட்டோர், அரசனின் பணியாட்கள் போன்றோர் பௌத்த சங்கங்களில் சேரத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்ட-<noinclude> வா. க. 3 - 31</noinclude> cf3wl13ams9h83qcrjt76tuxzpxlltm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/751 250 642971 1958230 1932759 2026-08-15T04:55:52Z Sridevi Jayakumar 15329 1958230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாம்|723|குவாம்}}</noinclude>உயர்கல்வி, அரசாலும் தனியார் பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்படுகிறது. சான் கார்லோசு தேசிய பல்கலைக் கழகமும் (San Carlos National University) நான்கு தனியார் பல்கலைக்கழகங்களும் உயர்கல்வியின் பல்வேறு துறைகளில் கற்பித்தல், ஆராய்ச்சி ஆகியவற்றை மேற்கொள்கின்றன. குவாதிமாலாவில் உள்ள முறைசாராக் கல்வி நான்கு குழுக்களுக்கு முதன்மையிடம் தருகிறது. அக்குழுக்கள், திறனறிவு பெறாதோர், பாதித் திறனறிவு பெற்றோர், முழுத் திறனறிவு பெற்றோர், இடைநிலைத் தொழிற் பயிற்சியாளர் ஆகியோர் ஆவர். குவாதிமாலா அரசு 1979-ஆம் ஆண்டுக் கணக்கின்படி, கல்விக்கான ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 37.89 விழுக்காடு தொடக்கக் கல்விக்கும், 11.28 விழுக்காடு இடைநிலைக் கல்விக்கும் ஒதுக்கிற்று, தனியார் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடமிருந்து பெறும் பயிற்சிக் கட்டணத்தாலும், பல்கலைக்கழக உறுப்பினர்களின் நன்கொடையாலும் நடைபெற்று வருகின்றன. தேசிய பல்கலைக்கழகத்திற்கு அரசு நிதியுதவி செய்கிறது. மழலையர் பள்ளிகளிலிருந்து மேனிலைப் பள்ளிகள் வரையில் பள்ளித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடந்து வருகிறது. ஆண்டின் இறுதியில் நடைபெறும் இரண்டாம் பருவத் தேர்வில் மாணவர்கள் பெரும் மதிப்பெண்களைப் பொறுத்து, மாணவர்களின் தேர்ச்சி முடிவு செய்யப்படுகிறது. தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், மண்டலப் பொதுப் பள்ளிகளில் (Regional Normal Schools) ஆசிரியர் பயிற்சி பெறுகின்றனர். இடைநிலைப்பள்ளி ஆசிரியர் பயிற்சிக்கான நிறுவனத்தினைச் சான் கார்லோசு தேசிய பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. குவாதிமாலாவின் ஊர்ப்புற மக்களுள் 80 விழுக்காட்டினர் கல்வியறிவு அற்றவர்களாக உள்ளனர். இம்மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவதே குவாதிமாலா கல்வித் திட்டத்தில் முதன்மையாகத் தீர்வு காண வேண்டிய சிக்கலாகக் கருதப்படுகிறது.{{Right|<b>எஸ்.த.</b>}} <section end="குவாதிமாலா"/> <section begin="குவாம்"/> {{dhr}} <b>குவாம்</b>: பசிபிக்கு மாக்கடலின் மேற்கில் உள்ள மேரியானா தீவுக் கூட்டத்தில் (Marianas Islands) ஒன்றான குவாம் (Guam) கி.பி. 1521-இல் மெகல்லன் என்ற இசுபானியரால் கண்டுபிடிக்கப்பட்டது. இசுபெயின் (Spain), 1898-ஆம் ஆண்டு பாரிசு (Paris) உடன்படிக்கையின்படி இத்தீவை அமெரிக்க ஐக்கியக் குடியரசுக்கு அளித்தது. இரண்டாம் உலகப் போரில் (1941) சப்பான் இதைக் கைப்பற்றிக் கொண்டது. இத்தீவின் இயற்கை அமைப்பு இக்காலத்தில் இதற்குச் சிறப்பைக் கொடுத்துள்ளது. மாநிலமாக இணைத்துக் கொள்ளப்படாத ஓர் அமெரிக்கத் தீவாக இது விளங்குகிறது. மேரியானா தீவுக்கூட்டத்திலேயே இது மிகப் பெரியது. இதன் பரப்பு 541.3. சதுர கி.மீ. இதன் தலைநகரம் ஆகனா (Agana). முக்கிய துறைமுகம் ஆப்ரா (Apra). அமெரிக்கர்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறையாகவும் இத்தீவு பயன்படுத்தப்படுகிறது. இதன் உட்பகுதி காடுகள் நிறைந்தது. மக்கள் மிகுதியாக வாழும் ஊர்கள் கடலோரப் பகுதிகளில் உள்ளன. அமெரிக்கர்கள் இங்குத் தம் விருப்பம்போல் சென்று வரலாம். அயலவர், சில பொதுவான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இத்தீவுக்குச் செல்லலாம். இத்தீவு, கி.பி.1899 முதல் 1949 வரை, கடற்படை ஆட்சித் துறையின் கீழிருந்தது. பிறகு உள்ளாட்சித்துறையின் மேற்பார்வையின் கீழ்க் கொணரப் பெற்றது. குவாம் மக்களுக்கு முழு நகர வாசி உரிமைகளும் வழங்கப்பெற்றுள்ளன. அவர்கள் அமெரிக்க சட்ட சபையின், கீழ் அவைக்கு ஒரு பேராளரை தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை வழங்கப் பெற்றுள்ளனர். தீவின் ஆட்சி முறையை இரு அவைகளையுடைய சட்டமன்றமும், ஆளுநர் ஒருவரும் கண் காணிக்கின்றனர். அச்சட்டமன்றம் அமெரிக்க மாநிலச் சட்டமன்றத்தை ஒத்த அதிகாரங்களைப்- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 751 |bSize = 375 |cWidth = 132 |cHeight = 130 |oTop = 160 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|குவாம் அமைவிடம்}}<noinclude> <b>வா.க.7-46அ</b></noinclude> oj4boup5z0gbg2u006rheqd4t15fya7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/752 250 642972 1958231 1932780 2026-08-15T04:59:45Z Sridevi Jayakumar 15329 1958231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாயசு|724|குவாலியர்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 752 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 135 |oTop = 65 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|ஆகனா நகரம்}} பெற்றுள்ளது. பதினெட்டும் அதற்கு மேற்பட்டும் உள்ள வயதினர் யாவருக்கும் தேர்தலில் வாக்குரிமை உண்டு. பலமலைகளையும் ஆறுகளையும் பவளத் திட்டுகளையும் கொண்ட இத்தீவில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவதுண்டு. தென்னை மரங்கள் இங்கு மிகுதி, கரும்பு, நெல், காப்பி முதலியன பயிராகின்றன. இதன் உள்நாட்டு மக்களில் பெரும்பாலோர் சாமரோக்கள் (Chamorros) என்ற பெயரை உடைய பூர்வீகக் குடிகளாவர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவாம்"/> <section begin="குவாயசு"/> {{dhr}} <b>குவாயசு</b>: தென்னமெரிக்காவில் சக்குவடார் நாட்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலத்திற்கும், அங்கே பாயும் ஓர் ஆற்றுக்கும் குவாயசு (Guayas) என்பது பெயர். நீர் வளமும் நிலவனமு மிச்சு இப்பகுதியில் நெல், கரும்பு, புகையிலை, காப்பி முதலியன விளைகின்றன. மாநிலத்தின் பரப்பு 21,259 ச.கி.மீ. ஆகும்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவாயசு"/> <section begin="குவாயாக்கீல் துறைகமும்"/> {{dhr}} <b>குவாயாக்கீல் துறைகமும்</b>: ஈக்குவடாரில் கி.பி.16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமைக்கப்பட்ட முக்கிய துறைமுகப்பட்டினம் குவாயாக்கீம் (Guayaquil). இது குவாயக மாநிலத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இதை ஒட்டியே குவாயசு ஆறு ஓடுகிறது. மது தயாரித்தல், இயந்திர வேலை, மரம் அறுத்தல், கப்பல் கட்டுதல் முதலிய தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களில் முக்கியமானவை காப்பி, கோக்கோ, புகையிலை, பருத்தி முதலியன. தொழில் நுட்பக் கல்லூரியும், பல்கலைக் கழகமும் இங்கு உள்ளன. இந்நகரம் பல இன்னல்களுக்கு உட்பட்டதை வரலாற்றில் காணலாம். அடிக்கடி தீயினால் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. சக்வடாரில் சுதந்திரப் போராட்டம் ஏற்பட்டபோது விடுதலை வீரர்கள் கி.பி.1821-இல் இந்நகரைக் கைப்பற்றினர். விடுதலைப் போரின் சிறப்பான கட்டம் இதுவே.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவாயாக்கீல் துறைகமும்"/> <section begin="குவாயாக்கீல் வளைகுடா"/> {{dhr}} <b>குவாயாக்கீல் வளைகுடா</b>: பசிபிக்கு மாக்கடலில் தென்னமெரிக்காவில் உள்ள ஈக்குவடாரின் தென்மேற்கில் உள்ள வளைகுடாவிற்ருக்குவாயாக்கில் (Gunyaquil) வளைகுடா என்பது பெயர். குவாயக் ஆறு இங்குக் கலக்கிறது. பூனா (Puna) முதலிய பல தீவுகள் இவ்வளைகுடாவில் உள்ளன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவாயாக்கீல் வளைகுடா"/> <section begin="குவாலியர்"/> {{dhr}} <b>குவாலியர்</b> மத்திய பிரதேசத்தில் உள்ளதொரு நகரம். இது ஆக்ராவிற்குத் தெற்கே 100 தொலைவில் அளமந்துள்ளது. இந்நகரம் குவாலியர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். முன்பு இது மத்திய இந்தியாவிலிருந்த 25 சமசுதானங்களில் மிகப் பெரியதாக விளங்கியது. சம்பல் ஆறே இதன் வட எல்லையாக இருந்தது. குவாலியா சமகதானத்தை கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்தியா மரபைத் தோற்றுவித்த இரானோசி சிந்தியா என்பவரின் மகன் மகதசி சித்தியா கி.பி. 1784-இல் திருமாணித்தார். குவாலியர் சமசுதானம் 1948-இல் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. ருவாளியசின் புகமுக்குக் காரணமாக விளங்குவது இங்குள்ள கோட்டையாகும். இது பழைய நகரத்தின் தெற்கிலுள்ள 90 மீட்டர் உயரமுள்ள மலைமீது கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையைக் கச்சவாரு மரபின் அரசர் சுராசு சென் (Suraj Sen) என்பவர் கி.பீ. 980-இல் கட்டினார் எனக் கூறுகின்றனர். இப்பகுதி குப்தர், ஊணர், கச்சவாகர், பிரதிகாரர், தோமர், மொகலாயர், மராட்டியர், ஆங்கிலேயர், முதலானவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தமையால் இங்குப் பல பண்டைய சின்னங்கள் காணப்படுகின்றன. இல்குடுமிசு (ltutmish) இந்நகரை கி.பி. 1232-இல் கைப்பற்றினார். இந்நகரத்தின் வீரர்கள் வீரத்துடன் இல்குடுமிசுவை எதிர்த்தனர். அரண்மனைப் பெண்கள் பலர் தீக்குளித்தனர். தைமூர் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் இந்தியாலின்மீது படையெடுத்த பொழுது ஏற்பட்ட குழப்பத்தில் தோமர் இனத்தவ-<noinclude></noinclude> 59kx0fx6t3aqo60107ef2vvyqjkmzu4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/755 250 642975 1958232 1932786 2026-08-15T05:03:26Z Sridevi Jayakumar 15329 1958232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவிசுலிங்கு, விட்குன்|727|குவின்சுலாந்து}}</noinclude>கோட்டைக் குன்றின் விளிம்பில் இரண்டு வைணவக் கோயில்கள் உள்ளன. இவற்றை மகிபாலர் என்ற அரசர் கி.பி. 1093-இல் கட்டினார். கோட்டையின் தென்புறத்தில் உள்ள தெலிகாமந்திர் கோயில் 9-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயில் திராவிட ஆரியக் கலைகளின் கலப்பு அமைப்பையுடைய சிற்பங்களைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயிலின் சிகரம் 100 அடி உயரமுடையதாகும். குவாலியர் கோட்டையின் நடுவில் குரசு பால் வெட்டிய சூரசு குண்டு என்ற குளம் உள்ளது. கோட்டைக்குச் செய்லும் ஊர்வாகிச் (Urwahi) சமவெளிப் பாதையில் இரு சரிவுகளிலும் உள்ள குன்றின் புறப்பகுதிகளில் சமண தீர்த்தங்கரரின் சிற்பங்கள் பல காணப்படுகின்றன. இவற்றுள் சிறப்புடையது ஆதிநாதர் சிற்பமாகும். இதன் உயரம் 57 அடி பாதநீளம் 9 அடி. இது கி.பி.1440-இல் செதுக்கப்பட்ட சிற்பமாகும். குவாலியரில் மொகலாயக் கட்டடக்கலைக்கு சிறந்த சான்றுகளாக விளங்குவன கவுசு (Ghais) சமாதீயும் தான்சென் சமாதியும் ஆகும். கவுசு என்பவர் ஒரு இசுலாமியப் பெரியார், தான்சென் இசைப்புலவர் ஆவார். இவக்கர் (பாசறை) என்ற புதிய நகரம் தௌவத்ராவ் என்பவர் கி.பி. 1809-இல் பாசறை அமைத்த இடத்தில்எழுத்த நகரமாகும். இங்குச் செயவிலாசம், மோதி மகால் என்ற இரு அழகிய அரண்மனைகள் உள்ளன. செய விலாச அரண்மனையின் வெளியே மகாதேவ சிந்தியாவின் உருவச் சிலையும் சான்சி இராணியின் கல்லறையும் உன்னை, குவாலியரில் கி.பி.1858-இல் ஆங்கிலேயருக்கும் சிப்பாய்களுக்கும் பெரும்போர் நடைபெற்றது. சிப்பாய்கள் விரட்டியடிக்கப்பட்டனர். எனினும் சித்தியாவும் சான்சி இராணி இலட்சுமிபாயும் விடாமுயற்சியுடன் போரிட்டனர். இறுதியில் சான்சி இராணி இலட்சுமிபாய் கொல்லப்பட்டார். இங்குள்ள அருங்காட்சியகத்தில் பல அழகு வாய்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் நாட்டியமாடும் மங்கையின் சிற்பத் தொகுதி சிறப்பு வாய்ந்ததாகும். குவாலியர் பாண்டத் தொழிலுக்குப் புகழ்பெற்றது. இங்கு இரயில் வண்டி நிலையமும் வான்வூர்தி நிலையமும் உள்ளன. குவாலியர் மாவட்டத்தின் பரப்பளவு 5241 ச.கி.மீ. ஆகும். இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1107879 (1981).{{Right|<b>சு.இரா.</b>}} <section end="குவாலியர்"/> <section begin="குவிசுலிங்கு, வீட்குன்"/> {{dhr}} <b>குவிசுலிங்கு, வீட்குன்</b>; ஐரோப்பாவில் நார்வே நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவரானவிட்குன் குவிசுலிங்கு (Witquin Quisling) நாசி (Nazi) கட்சியைச் சேர்ந்த தீவிர வாதி செர்மன் நாட்டு நாசிக் கட்சியைச் சேர்ந்த இவர் தமது தாய் நாட்டுக்கே துரோகம் செய்யத் தயங்கவில்லை, பிரிசுட்டல் (Bristol) என்னும் ஊரில் கி.பி. 1887-இல் பிறந்து இராணுவப் பயிற்சி பெற்றபின் முதல் உலகப் போரில் பங்கு கொண்டார். நார்வே நாட்டின் அமைச்சரவையில் 1931-இல் ஓர் அமைச்சராகப் பணியேற்றார். இவர் 1932-இல் பதவியினின்று விலகி ஒரு புதிய கட்சியை உருவாக்கினார். செருமனியில் இட்லர் (Hitler) முன்னேறி வருவதைக் கண்டு, அலகுடன் சேர்ந்து செயலாற்ற 1940-இல் நார்வே நாட்டின் நாசிக்கட்சிக்குத் தலைவரானார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இட்லர் நார்வேயைப் படையெடுத்தபொழுது குவிகளிங்கு அவருக்கு உதவி செய்தார், இதற்குப் பரிசாகக் குவிசுலிங்கு நார்வேயின் அரசியல் தலைவரானார். இவருடைய இச்செயல் உலகம் இவரிடம் வெறுப்பைக் கொள்ளுமாறு செய்தது. குவிகலிங்கு என்ற சொல்லுக்கே நாட்டுத்துரோல் என்னும் பொருள் ஏற்பட்டு விட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்தபின் 1945-இல் நார்வேயின் புதிய அரசு குவிகலிங்கை விசாரித்து, துரோகச் குற்றத்திற்காகக் கொலைத் தண்டனை விதித்தது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவிசுலிங்கு, வீட்குன்"/> <section begin="குவின்டில்யன், மார்க்கசு பாபியன்"/> {{dhr}} <b>குவின்டில்யன், மார்க்கசு பாபியன்</b> ‘சொற்பொழிவாளருக்குரிய பயிற்சி’ (Institution Oratoria) என்ற நூலை கி.பி. முதல் நூற்றாண்டிலேயே எழுதிச் சொற்பொழிவுக் கலையை ஊக்குவித்த உரோமானிய அறிஞன், மார்க்கசு பாபியல் குவினடில்யன் (Marcus Fabian Quintilianus) கி.பி. 35-ஆம் ஆண்டில் இசுபெயின் நாட்டில் காலகாக்சு என்ற இடத்தில் பிறந்தார். இவருக்கு ஆசிரியராக இருந்தவர் தாமித்தியசு ஆபெர் (Dominitius Aber) என்ற பெரியார். தொடக்கத்தில் கால்பா காட்டில் கி.பி. 61 முதல் ஏழு ஆண்டுகள் அரசுப் பணி ஆற்றி விட்டு, பிறகு 20 ஆண்டுகள் உரோமாபுரியில், சொற்கலைப் பள்ளிக்குத் தலைவராக இருந்து சொற்பொழிவுக் கலையை வளர்க்க உதவினார். பன்னிரண்டு தொகுதிகளாக உள்ள இவருடைய பெரிய நூலில் பல அரிய செய்திகள் கூறப்பட்டுள்ளன, ஆவை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன. இவர் கி.பி.95-இல் காலமானார்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவின்டில்யன், மார்க்கசு பாபியன்"/> <section begin="குவீபசெவு"/> {{dhr}} <b>குவீபசெவு (Kuibyshev)</b>: காண்க: கூயிபிசெவு. <section end="குவீபசெவு"/> <section begin="குவீன்சுலாந்து"/> {{dhr}} <b>குவீன்சுலாந்து</b> ஆசுத்திரேலியப் பொதுவுரிமையரசின் வடகிழக்கில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய மாநிலம், தொடக்கத்தில் நியூ சௌத்வேல்சின் நிருவாகத்திற்குட்பட்ட இம்மாநிலம், 1859-இல் பிரிசுபேனைத் தலைநகராகக் கொண்டு தனிக்-<noinclude></noinclude> ewqt0ct66owqrlqwicnot1oshmgadt8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/757 250 643014 1958233 1933156 2026-08-15T05:05:52Z Sridevi Jayakumar 15329 1958233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவெட்டா|729|குவைத்து}}</noinclude>படுகின்றன. மேற்கூறப்பட்டவையேயன்றிச் சர்க்கரை. பருத்தித் துணி, மது ஆகியவை உற்பத்தி செய்தல், இறைச்சி பதனிடல், தோல் பொருள்கள் செய்தல் தொழில்களும் செய்யப்படுகின்றன. இம்மாநிலத்தில் 90 விழுக்காடு வெள்ளையர் வாழ்கின்றனர். கட்டாய ஆரம்பக்கல்வி தரப்படுவதால் இங்கு 100 விழுக்காடு மக்களும் கல்வி பெற்றுள்ளனர். பிரிசுபேனில் பொறியியல் நிறுவனங்களும் கப்பல் கட்டும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. குவீன்சுலாந்தில் முதலமைச்சரைத் தவைவராகக் கொண்ட அமைச்சர்களின் செயற்குழு (Executive Council of Ministers) நிருவாகத்தைக் கவனிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும் உள்ளது. இங்கிலாந்து மன்னரின் சார்பில் ஆளுநர் ஒருவரும் அமர்த்தப்பட்டுள்ளார்.{{Right|<b>ம.இ.</b>}} <section end="குவீன்சுலாந்து"/> <section begin="குவெட்டா"/> {{dhr}} <b>குவெட்டா</b> அரண்கள் சூழ்ந்த இராணுவ நகரான குவெட்டா (Quetta) பலுசித்தானத்தில் தலைநகர், இதற்குத் தெற்கில் கராச்சி நகர் விளங்குகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கு இராணுவ அலுவலர் கல்லூரி அமைக்கப்பட்டது. இதற்கு அருகில் நிலக்கரிச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கே 1935-இல் நிலநடுக்கம் ஏற்பட்டது. மலைகள் சூழ்ந்த இப்பகுதி 1680 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆப்கானிசுத்தானம், ஈரான், மத்திய ஆசியா முதலிய பகுதிகளுக்கு இது வாணிக மையம்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவெட்டா"/> <section begin="குவேசோ"/> {{dhr}} <b>குவேசோ</b>: சேய்மைக்கிழக்கில் சீன நாட்டில் உள்ள ஒரு மாநிலத்திற்குக் குவேசோ (Kweichow) என்பது பெயர். இதன் தலைநகரம் குலேயாங்கு (Kutiyang) என்பது. இம்மாநிலம் சீ (Sg) ஆற்றுக்கும் யாங்கசு (Yangtze) ஆற்றுக்குமிடையே இருப்பதாலும், யாங்டீசிகியாங்கு (Yangisckiang) ஆறும் அதன் துணை ஆறுகளும் பாய்வதாலும் மிக்க வளமுள்ள பகுதியாக வளர்த்துள்ளது. மக்காச் சோளமும் கோதுமையும் இங்கு மிகுதியாக விளைகின்றன. தோல், மரம் ஆகியன இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. சிறந்த குதிரைகள் இங்கு அதிகமாக உள்ளன. வெள்ளி, பொன், பாதரசம், செம்பு, நிலக்கரி, இரும்பு முதளிய கலிப்பொருள்கள் கிடைக்கின்றன. மாநிலத்தின் பரப்பு 170,940 ச.கி.மீ. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சீனரி இங்குக் குடியேறியிருந்தனர். ஆனால், கி.பி.10-ஆம் நூற்றாண்டில்தான் அவர்கள் ஆதிக்கம் உறுதியாக அமைந்தது. மிங்கு வமிச ஆட்சியின் கீழ் இது கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஒரு மகாணமாக்கப்பட்டது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குவேசோ"/> <section begin="குவைத்து"/> {{dhr}} <b>குவைத்து</b> ஒரு சுதந்திர அரபு நாடாகும். இது பாரசீக வளைகுடாவின் மேல் முலையில் அமைந்துள்ளது. ஈராக்கு நாடு அதனுடைய வடக்கு மற்றும் மேற்கு எல்லையாகவும், பாரசீக வளைகுடா கிழக்கு எல்லையாகவும், சௌதி அரேபியா தெற்கு எல்லையாகவும் அமைந்துள்ளன. குவைத்து (Kuwit) நாட்டின் பரப்பு 17,818 ச.கி.மீ. ஆகும். அதனுடைய மக்கள் தொகை 815,000 (1972) ஆகும். அது மூன்று ஆளுநராட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அல் அகமதி (Al Ahmadi) அல் குவைத்து (Al-Kuwayt), ஆலல்வி (Hawalli). அவற்றுள் அல் குவைத்து மிகப் பெரிய பகுதியாகும். அது 11,230 ச.கி.மீ பரப்புள்ளது. ஆனால், மொத்த தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே அங்கு வாழ்கின்றனர். அடுத்தது அல் அகமதி. அது 5138 ச.மீ. பரப்புள்ளது. எட்டில் ஒரு பங்கு மக்கள் அங்கு வசிக்கின்றனர். ஆவல்லியின் பரப்பு 550 ச.கி.மீ. மக்கள் தொகையில் பாதிப் பேர் அங்கு வாழ்கின்றனர். கரையோரத்தில் பல தீவுகள் உள்ளன. அவற்றுள் மிகப் பெரியவை பூபியன் (8ubiyan), அல் வர்பா (al-Warbah) ஆகியவை. அங்கு மக்கள் வசிப்பதில்லை. குவைத்து விரிகுடாவின் முகப்பில் உள்ள பாய்லகா (Faylnkab) தீயில் மக்கள் வசிக்கின்றனர். மிகச்சிறிய தீவுகள் பல உள்ளன. அவற்றுள் சில புறக்காவல் நிலையங்கள் அமைக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிற தீவுகளுக்கு மீன்பிடிப்பவர்கள் மட்டுமே செல்வர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 757 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 128 |oTop = 125 |oLeft = 207 |Location = center |Description = }} {{center|குவைத்து}} அல்சாராப் பாலைநிலச் சோலையும் தென்கிழக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள சில செழிப்-<noinclude></noinclude> orclj7zm1yzy0gputnugs072ca0o29r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/760 250 643026 1958234 1933188 2026-08-15T05:07:48Z Sridevi Jayakumar 15329 1958234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவைத்து|732|குவோமின்டாங்கு}}</noinclude>ஊனமுற்றவர்களுக்கும் பொருளுதவி செய்கிறது. மக்களுக்கு வசதியான வீடுகளைக் கட்டித் தருகிறது. குவைத்து அராபியர் அன்றி ஏனைய இனத்தவர்களும் இங்கு வசிக்கின்றனர். 1970 ஆம் ஆண்டுக் கணக்குப்படி அங்கு 390,000 அன்னிவர்கள் வாழ்கின்றனர். அவர்களுள் 27,000 ஈராக்கியர்களும் 18,000 ஈரானியர்களும், 31,000 சோர்தானியர்களும், நூற்றுக்கணக்கான இந்தியர்களும் பாகிசுதானியர்களும், ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் வாழ்கின்றனர். குலைத்து மக்களுள் பெரும்பாலோர் இசுலாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். சில அராபியர்களும் ஐரோப்பியர்களும், கிறித்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனர். இந்து சமயத்தினர்களும் இங்கு வாழ்கின்றனர். சமய சுதந்திரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். அதுவே மொழியும் ஆகும். ஆங்கிலம் இரண்டாவது அடிப்படை மொழியாக அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தி, உருது, பாரசீக மொழிகளும் இங்கு வழக்கில் உள்ளன.{{Right|<b>தி.ஆர்.இ.</b>}} <b>கல்வி</b>: குவைத்தில் 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. பாடநூல்கள், பயிற்சி ஏடுகள், சீருடை, காலணி போன்றவைகளும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. பள்ளிக் கல்வி மொத்தம் 12 ஆண்டுகள்; தொடக்கப்பள்ளி, இடை நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி என ஒவ்வொரு நிலையும் மொத்தம் 4 ஆண்டுகள். பள்ளிக் கல்வியின் இறுதியில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. தொடக்கப்பள்ளிக் கல்விக்கு முன்னர், ஓராண்டு மழலையர் பள்ளிக் கல்லியும் உண்டு, ஆனால் அக்கல்வி குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்படவில்லை. குவைத்துப் பல்கலைக்கழகம் 1966-ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று உயர்கல்விப் பொறுப்பை ஏற்றுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் கலைப் புலம், அறிவியற் புலம், இசுலாமியச் சட்டலியல் (Shurin) வணிகவியல், பொருளியல், அரசியலறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், கல்வியியல், மதிப்பீடு மற்றும் அளவிடுதல், மொழிக்கல்வி ஆகியவற்றுக்கான புலங்கள் உள்ளன. குளவத்து அரசு வயதுவந்தோர் கல்வியிலும் அக்கறை காட்டி வருகிறது. வயது வந்தோர் கல்வித் திட்டங்களின் உதவியால் இரவுப் பள்ளிகளில் எழுத்தறிவு கற்பிக்கப்படுகிறது. வயதுவந்தோர் கல்வித் திட்ட வகுப்புகளுக்கு 1980-81-ஆம் ஆண்டுக் கணக்கின்படி இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து பயின்றனர். குவைத்துப் பல்கலைக் கழகத்தில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் கல்லிப் பயிற்சிக்காக 1981-82-இல் கல்வியியல் கல்லூரி ஒன்றும் இயங்கி வருகிறது.{{Right|<b>எஸ்.த.</b>}} <section end="குவைத்து"/> <section begin="குவோமின்டாங்கு"/> {{dhr}} <b>குவோமின்டாங்கு</b> என்பது சீனாவில் சன்-வாட்-சென்னால் (Sun Yat-Sen) 1912-ஆம் ஆண்டில் கட்சியாகும். மக்கள் நிறுவப்பட்ட ஓர் அரசியல் கட்சி அல்லது தேசிய கட்சி என்பது இதன் பொருள். சீனாவில் 1911-ஆம் ஆண்டில் நிகழ்ந்த புரட்சியின் விளைவாக முடியாட்சி அகற்றப்பட்டு ஒரு குடியரசு அமைக்கப்பட்டது. இக்குடியரசின் தலைவராகப் பொறுப்பேற்ற சன்-யாட்-சென் குவோமின்டாங் அமைத்தார். (Kuomintong) என்ற இக்கட்சியினை பாராளுமன்ற ஆட்சிமுறையினை ஏற்படுத்துவதற்கு நாடு தழுவிய ஒரு தேசிய கட்சி தேவை என்ற உணர்வினால் இது 1912-இல் துவக்கப்பெற்றது. புதிய சீனக் குடியரசில் ஒரு உள்நாட்டுப் போரினைத் துவக்க விரும்பாத சள், யுவான்-சி-கே (Yuan-Shih- Kai) என்ற வட்சீனத் தளபதியிடம் ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். அடுத்து நடைபெற்ற தேசிய சபைக்கான தேர்தலில் குவோமின்டால் கட்சியானது பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் சீனத் தேசியத்தை விரும்பாத சர்வாதிகாரியான யுவாள் குவோமின்டாங் கட்சியைச் சேர்த்த உறுப்பினர்களைத் தேசிய சபையிலிருந்து அகற்றிவிட்டு, அவர்களில் பலரையும் கொன்றார். சன்னும் குவோமின்டாங் கட்சியினரும் தென்சீனாவிக்குச் சென்று கான்டன் (Canton) நகரில் ஒரு புதிய அரசினை 1917-இல் நிறுவினர். குலோமின்டாங் மாநாடு 1924-இல் கூடியபோது அக்கட்சியின் கொள்கைகள் இறுதி வடிவம் கொடுக்கப் பெற்று அறிவிக்கப் பெற்றன. தேசியம், சனநாயகம், நல்வாழ்வு என்ற ‘மூன்று மக்கட்கோட்பாடுகளே’ (Three Principles of the People) இக்கட்சியின் அடிப்படைக் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டன. தேசியம் (Nationalism) என்பது அந்நிய நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து சீனநாட்டின் வீடு தலையையும், சனநாயகம் (Democracy) என்பது பாராளுமன்ற முறையிலான மக்களாட்சியையும், நல்வாழ்வு (Livelihood) என்பது மக்களனைவருக்கும் பசியும் வறுமையும் இல்லாத பொருளாதார மேம்பாட்டினையும் கட்டின. அடுத்த ஆண்டில் சன்நோயுற்று இறந்தபின் குவோமின்டாங் அரசின் படைத் தளபதியான பொங்-கே-சேக் (ChiangKai- Shek) குடியரசுத் தலைவராகவும் கட்சியின் தலைவ-<noinclude></noinclude> 5in2h5d7ze2l473msxpyqkobaf8tqy9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/761 250 643085 1958235 1933540 2026-08-15T05:08:29Z Sridevi Jayakumar 15329 1958235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை.அ.மு.|733|குழந்தை.அ.மு.}}</noinclude>ராகவும் ஆனார். குவோமின்டாங் படைகள் வட சீனாவின் பல மாநிலங்களையும் அடுத்த இரண்டாண்டுகளில் மீட்டு, பீகிங் நகரையும் விடுவித்து அதனையே சீன தேசிய குடியரசின் தலைநகராக்கின இதற்கிடையில் சாங்காய் (Shanghai) நகரத்து முதலாளிகளின் நிதி ஆதரவினைப் பெற்று வலது சாரியாக மாறி வந்த சியாங், குலோமின்டாங் கட்சியைப் பிளவு படுத்தி அதிலிருந்து பொதுவுடமையினர் போன்ற எல்லா இடதுசாரிகளையும் விரட்டியடித்தார். சன்-யாட்-சென்னின் மனைவியும் தோழர்களும் கூட வெளியேற்றப்பட்டனர். நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பின் சியாங்கின் குவோமின்டாங் அரசு 1949 செப்டம்பர்-அக்டோபரில் சீனாவிலிருந்தே விரட்டப்பட்டு, அண்டையிலுள்ள தைவான் (Taiwan or Formosa) எனப்படும் தீவில் அடைக்கலம் புகுந்தது, அமெரிக்கக் கப்பற்படைகளின் பாதுகாப்பில் அத்தீவில் குவோமின்டாங் அரசு இன்றுவரை நீடித்துள்ளது. முற்போக்கான, மக்கள் நலம் பேணும் நல்லதொரு கட்சியாக சன்னின் காலத்தில் புகழோடு விளங்கிய குவோமின்டாங் கட்சியானது சியாங்கின் தலைமையில் தன் செல்வாக்கினைப் படிப்படியாக இழந்தது. 1975 ஏப்ரலில் சியாங்-கே-சேக் காலமான பின் அவரது மகன் சியாங்-சிங்-குவோ (Chiang-Ching-Kuo) என்பவர் குவோமின்டாங் அரசின் தலைவராக ஆனார்.{{Right|<b>இர.ஆ.</b>}} <section end="குவோமின்டாங்கு"/> <section begin="குழந்தை, அ.மு"/> {{dhr}} <b>குழந்தை, அ.மு.</b>:இன்றைய பெரியார் மாவட்டத்தைச் சேர்ந்த ஈரோடு வட்டம் அறச்சதுரை அடுத்துள்ள ஓவவலசு என்னும் சிற்றூரில் 1906-இல் புலவர் குழந்தை பிறந்தார், தந்தையார் முத்து சாமிக் கவுண்டர்; தாயார் சின்னம்மையார். பெற்றோருக்கு இவர் ஒரே மகன் ஆவார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 761 |bSize = 375 |cWidth = 80 |cHeight = 127 |oTop = 308 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|குழந்தை, அ.மு.}} இவர் திண்ணைப் பள்ளிக் கூடங்களில் சில ஆண்டுகள் பயின்றார். ஒரு பாட்டைக் கேட்டால் அதே ஓசையில் புதுப்பாட்டொன்றை இயற்றும் ஆற்றலை இவர் இளம் பருவத்திலேயே பெற்று விளங்கினார். குழந்தை, தம் 12 ஆம் வயதில் பாடில் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் முதல் நூல் 1918-இல் அச்சானது. முறையாக யாப்புப் பயிலாமலேயே வெள்ளக்கோயில் வீரகுமாரசுவாமி இரதோற்சவச்சிந்து, வீரகுமாரசாமி காவடிச்சிந்து, வெள்ளக் கோயில் வழிநடைச் சிந்து ஆகிய இசை நூல்களை இயற்றினார். இவர்தம் கவிச் சிறப்பை அறிந்த பெருமக்கள் பலர் இவரைத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பயிலுமாறு தூண்டினர், ஆசிரியப் பணி ஆற்றிக் கொண்டே தகுந்த ஆசிரியர் கிடைக்காமையால் தாமே அரிதின் முயன்று தமிழ் படித்து 1934-இல் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பல பள்ளிகளில் பணியாற்றி இறுதியில் 1941-முதல் 1962 வரை பவானி கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோதே சமூக சீர்திருத்த மாநாடுகளில் பங்கு கொண்டார். பல விதவைகட்குத் திருமணங்களை முன்னின்று நடத்திவைத்தார். பகவத்சிங்கு போன்ற தேசிய வீரர்களின் விடுதலை வேட்கை பற்றிய பாடல்கள் பாடினார். இவர் 1938, 1948 ஆகிய ஆண்டுகளில் இந்தி எதிரப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார்; முதியோர் கல்வி வகுப்புகள் நடத்தினார், ‘வேளாளன்’, ‘தமிழோசை’ ஆகிய இதழ்களை ஆசிரியராக இருந்து நடத்தினார். குழந்தை அவர்கனின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருக்குறளுக்குச் ‘குழந்தை உரை’ என்னும் புதிய உரை வெளியிட்டார். தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கும் உரை எழுதியுள்ளார், நாலடியார் முதலிய 21 நீதி நூல்களை நீதிக் களஞ்சியம் என்ற பெயரில் தொகுத்து உரை எழுதியுள்ளார். இவர் யாப்பதிகாரம், தொடையதிகாரம், இன் நூல் முதலிய இலக்கண நூல்களை இயற்றியுள்ளார். தொடையதிகாரம் என்ற நூலில் கும்மி, ஒப்பாரி, உடுக்கைப்பாட்டு முதலிய எல்லா வகையான சிந்து கட்கும் இலக்கணம் எழுதியுள்ளார்.{{nop}}<noinclude></noinclude> bn47pww8hp9sf8x485ezsem9nnrhvyj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/762 250 643089 1958236 1933543 2026-08-15T05:09:19Z Sridevi Jayakumar 15329 1958236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை உளவியல்|734|குழந்தை உளவியல்}}</noinclude>அரசியலரங்கம், நெருஞ்சிப்பழம், உலகப்பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, கா மஞ்சரி, இராவண காவியம், புலவர் குழந்தை பாடல் ஆகியவை இவர் இயற்றிய செய்யுள் நூல்கள், இராவண காவியம் 5 காண்டங்களாகவும், 57 படலங்களாகவும் 3100 பாடல்களில் உருவானது. இந்நூல் 1948 இல் அரசால் தடைசெய்யப்பட்டுப் பின்னர். 1971-இல் தடை நீக்கம் செய்யப்பட்டது. தொல்காப்பியர் காலத் தமிழா, திருக்குறளும் பரிமேலழககும், பூவா முல்லை, கொங்கு நாடு, தமிழ் வாழ்க, தமிழக வரலாறு, தீரன் சின்னமலை, கொங்கு நாடும் தமிமும், கொங்குக் குலமணிகள், அருந்தமிழ் விருந்து, அருநதமிழ் அமிழ்து, சங்கத் தமிழ்ச் செல்வம், ஒன்றே குலம், அண்ணல் காந்தி, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் ஆகியலை இவர் எழுதிய உரைநடை நூல்கள். திராவிட காவியம் என்ற பெயரில் நூலொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுச் செய்திகள் முழுவதும் தொகுத்து மூன்றில் ஒரு பங்கு செய்யுள்களையும் இயற்றி முடித்துள்ளார். அப்பணி முடியாத நிலையில் புலவர் குழந்தை 1972-இல் காலமானார்.{{Right|<b>செ.இரா.</b>}} <section end="குழந்தை, அ.மு"/> <section begin="குழந்தை உளவியல்"/> {{dhr}} <b>குழந்தை உளவியல்</b>: பிறந்தது முதல் குமரப்பருவம் அடையும் வரை அதாவது குறையப் பதினோராண்டுகள் வரையிலான காலம் குழந்தைப் பருவமாகும். இப்பருவத்தில் குழந்தையிடம் காணப்படுகின்ற பல்வேறு வளர்ச்சிகளையும் அவற்றின் முதிர்ச்சிகளையும் ஓர் ஒழுங்குமுறைப்படி அறிவதுதான் குழந்தை உளவியலின் நோக்கமாகும். குழந்தையின் உடல், ஆற்றல்கள், கற்றல் பற்றிய வளர்ச்சிச் செய்திகள் ஆகியவை குழந்தை உளவியலின் இன்றியமையாக் கருப்பொருள்களாகும். குழந்தைகள் உயரத்திலும் பருமனிலும் வளகுவதைப் போன்றே அனுபவத்திலும் வளர்கின்றனர். குழந்தையின் வளர்ச்சி ஒரு சுறுசுறுப்பான இயக்கச் செயல்முறையாகவும். மாற்றத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றது. வளர்ச்சியானது சூழ்நிலை, உட்கரப்பிகள், உடல்நலம், முதிர்ச்சி, கல்வி முதலிய பல காரணக் கூறுகளின் ஊடாட்டத்தைச் சார்ந்திருக்கிறது. குழந்தையிடம் நடைபெறுகின்ற வளர்ச்சி மிக மெதுவாக தடைபெறுகிறது. ஆனாலும் அவ்வளர்ச்சி ஒரு தொடர்ச்சிச் செயல்முறையாக நடைபெறுகிறது. வளர்ச்சி, அனுபவங்களை ஏற்றுக் கொள்வதைச் சார்ந்திருக்கிறது. வாழ்க்கை அனுபவங்கள் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. குரோ-குரோ (Crow and Crow) என்ற இரு அறிஞர்கள் குழந்தை உளவியல், வளர்ச்சி நிலையும் முதிர்ச்சியும், தனியாள் வளர்ச்சியில் சூழ்நிலையின் ஆதிக்கம் ஒரு குழந்தைக்கும் அதன் சமுதாயத்துப் பிற உறுப்பினர்களுக்கும் இடையேயுள்ள உள, சமூக இடைவினைகள் ஆகியவற்றை ஆராய்கின்றது என்று கருதுகிறார்கள். குழந்தையின் வளர்ச்சி அது கருவிலிருக்கும் போதே தொடங்குகிறது. எனவே, குழந்தை பிறப்பதற்கு முன்னர் உள்ள காலத்து அனுபவங்களையும் உளவியல் ஆராய்கிறது. பிறப்பதற்கு முன் குழந்தையின் வளர்ச்சி மூன்று நிலைகளின் வழியாக ஏற்படுகிறது. முதல்நிலை கருத்தரித்தல், இது கருத்தரிக்கத் தொடங்கியதிலிருந்து இரண்டு வாரம் வரையான காலம். இரண்டாம் நிலை வளர்ச்சியுறாக் கரு. இது இரண்டு முதல் எட்டு வாரக் காலமாகும். மூன்றாம் நிலை வளர்ச்சியுற்ற கரு. இது ஒன்பது வாரம் முதல் குழந்தை பிறக்கும் வரையிலான காலம், இந்த மூன்று நிலைகளிலும் இயக்கத்ததை வளர்ச்சியும் புலனுணர்வு வளர்ச்சியும் காணப்படுகின்றன. பிறந்தது முதல் குமரப்பருவத்தை அடையும் வரையுள்ள காலத்தில் ஒவ்வொருவரும் இளம்பிள்ளைப் பருவம், குழந்தைப் பருவம் என்ற இருநிலைகளைக் கடக்கின்றனர். முதல் ஆறு ஆண்டுகள் இளம்பிள்ளைப் பருவமாகும். ஏழு முதல் பதினொன்று வரை குழந்தைப் பருவமாகும். ஒவ்வொரு நிலையிலும் வளர்ச்சியானது உடல், உளம், உளக்கிளர்ச்சி, அறநெறி, அழகுணர்வு என்ற ஐந்து செயற்பாடுகள் வழியாக ஏற்படுகின்றது. இளம்பிள்னைப் பருவத்திலும் குழந்தைப் பருவத்திலும் முதல் மூன்று ஆண்டுகள் வளர்ச்சி நிலையெனவும், பின் மூன்று ஆண்டுகள் முதிர்ச்சி நிலையெனவும் கருதப்படுகின்றன. குழந்தை உளலியல் இவை எல்லாவற்றையும் ஆராய்கிறது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு குறிப்பிட்ட இடம், சமூகம். உளவியல் ஆகியவற்றின் சூழவில் வாழ்கிறது. இந்தச் சூழல்கள் குழந்தையின் நடத்தை முறை, வளர்ச்சி வேகம், ஆகியவற்றைப் பாதிக்கின்றன, குழந்தை உளவியல் இத்தகைய பாதிப்புகளை ஆராய்வதோடு குழந்தைகளின் பல்வேறு வளர்ச்சிக்கு இணக்கமான குழல் எது என்பதனையும் கண்டறிய முற்படுகிறது. ஒரு குழந்தையின் ஆளுமையிலும் வளர்ச்சியிலும் அதன் குடும்ப உறுப்பினர்கள், அண்டையிலுள்ள அயலார். விளையாடுமிடம், பள்ளி, கல்லூரி ஆகிய அனைத்தும் பாதிப்பினை விளைவிக்கக் கூடியனவாம். அத்தகைய பாதிப்பு உளவியல் அல்லது சமூகம் அல்லது இரண்டையும் சார்ந்ததாக இருக்கக்கூடும்<noinclude></noinclude> jm7bdvxlq6iu7lixgkoghf1atv7ynla பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/764 250 643091 1958237 1933545 2026-08-15T05:10:13Z Sridevi Jayakumar 15329 1958237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை உளவியல்|736|குழந்தைக் கவிராயர்}}</noinclude>திரட்ட வேண்டும். அதன் அடிப்படையில் பல இடைவேளைகளில் பேட்டிகள் நடத்திச் செய்திகளைப் பெற வேண்டும். பேட்டியின்போது பேட்டியாளர் சில செய்திகளைச் சொல்லி அதற்குப் பேட்டியாளர். தரும் விடைகளைப் பெற்றுச் செய்திகளைத் திரட்டலாம். அவை, தனியான் வரலாற்றுச் செய்திகளுக்குத் துணைச் செய்திகளாகும். அவையனைத்தையும் ஒரு கோலையாகச் சேர்த்துப் பார்த்து அவற்றில் பின்னணியிலுள்ள புனை கொள்கையை (hypothesis) உருவரக்குகின்றனர். அதற்காக மிகுதியான குழந்தைகளை ஆராய்தல் இன்றியமையாதது ஆகும். <b>தரவீடு அளவுகோல், வினாத்தொகுதி முறைகள்</b>: குழந்தைகளிடமிருந்து செய்திகளைச் சேகரித்து வகைப்படுத்துவதற்கு இந்த முறைகள் பெரிதும் உதவுகின்றன. நடத்தையின் குணவியல்புகளை அளவிடுவதற்குத் தரவீடு அளவுகோல் முறை சிறந்ததாகும். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட பண்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகின்றனர். குறிப்பிட்ட பண்பினை மிகுதியாகக் கொண்டிருக்கும் குழந்தை முதலானதாகவும், மிகக் குறைவாகப் பெற்றிருக்கும் குழந்தை கடைசியானதாகவும், மற்றக் குழந்தைகள் அவற்றின் பண்புக்குத் தக இடையில் ஓர் இடத்தினவாகவும் வரிசைப்படுத்தப்படும். தரவீடு செய்வோர் எல்லாக் குழந்தைகளையும் புறநிலையிலிருந்து தரவீடு செய்திடுதல் வேண்டும். குழந்தைகளின் நடத்தை, ஆர்வம், கற்றல், ஊக்கிகள் போன்ற எல்லா வகையான வளர்ச்சி நிலைகளையும் பற்றி வினாக்கள் தயாரித்து, அவைகளைத் தொகுதியாக அச்சிட்டு ஆய்வாளர் பயன்படுத்துவார். அவர் குழந்தைகளை அணுகி அவ்வினாக்களுக்கு விவரங்களைத் திரட்டுவார். அவ்விவரங்களுக்குத் தக்க புள்ளிவிவர விளக்கம் தரப்படுகிறது. அதன் அடிப்படையில் பொதுக் கருத்துக்கள் உருவாக்கப்படும்.{{Right|<b>கி.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Crow, L.D. and Crow, A.,</b> Child Development and Adjustment, The Macmillan Co., New York. 1963.<br> <b>Dorothy, Rogers,</b> Child Psychology. Brocks Cole Publishing Company, California. 1969.<br> <b>Hurlock, E.B.,</b> Child Development, McGraw-Hilt Book Co., New York, 1959. <section end="குழந்தை உளவியல்"/> <section begin="குழந்தைக் கவிராயர்"/> {{dhr}} <b>குழந்தைக் கவிராயர்</b> கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மிதிலைப் பட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். தந்தை மங்கை பாகக் கவிராயர் என்பவராவார். தந்தையும் இவர் தம் முன்னோர்களும் கல்வியறிவிற் சிறந்தவர்களாக விளங்கினர். இவர்தம் முன்னோர்கள் மாமல்லபுரத்தில் தங்கி வாழ்ந்தவர்கள். அம்முன்னோர்களில் ஒருவரான சிற்றம்பலக் கவிராயர் வெங்களப்ப நாயக்கர் மீது குறவஞ்சி ஒன்று பாடினார். அதற்குப் பரிசாக அவர் இவருக்கு மிதிலைப்பட்டியை மடப்புறமாக அளித்தார். மிதிலைப்பட்டியைப் பெற்றபின் இவர்தம் மரபினர் அங்கேயே வாழ்ந்து வகுகின்றனர். இவர் தந்தை தத்தம் பெருநிலக்கிழாராகிய இம்முடிலிங்கைய நாயக்கர் மகன் சொக்கலிங்க நாயக்கர் மீது வருக்கக் கோவை என்னும் நூலினைப் பாடினார். அதற்குப் பரிசாகப் பூசாரிப்பட்டி என்னும் ஊரைப் பெற்றார். இவர் தத்தம் பெருநிலக்கிழாரிடம் சென்று தம் பல்லக்கில் சிங்கம்பிடாரி என்னும் ஊர் வழியே வந்து கொண்டிருந்தார். அவ்வழியில் அந்தணப் பெண்கள் சிலர், கன்வர்கள் தங்கள் தாலியுட்பட அனைத்துத் தங்க அணிகலன்களையும் கைக்கொண்டு தங்களையும் துன்புறுத்தியதாக இவரிடம் வந்து முறையிட்டனர். இவர் அவ்வூரில் உள்ள ஐயனார்மீது ‘அண்டர்தொழும்’ எனத் தொடங்கும் செய்யுளைப் பாடினார். அதன் விளைவாகக் கள்வர்கள் கண் பார்வை இழந்தனர் என்றும் பின்னர்த் திருடிய நகைகளை அவ்வூர்த் தலைவரிடம் தந்து தங்கள் பிழை பொறுக்க வேண்டினர் என்றும் கூறுவர். இவர் மான்விடுதது என்னும் நூலினையும் பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார். மான்விடுதாது என்பது சிவகங்கைச் சமத்தானப் பிரதானியான தாண்டவராயப் பின்னை மீது பாடப்பட்டதாகும். அதனால், மனமகிழ்ந்த தாண்டவராயப் பிள்ளை பல பரிசுகளும் ஆயிரம் கல நெல்லும் நன்கொடையாக அளித்துள்ளார் எனத் தெரிகிறது. மேலும், அவர்மீது பல தனிப்பாடல்களும் பாடிப் பரிசுகள் பெற்றுள்ளார். கல்வியிற் பிறந்தவரும் இசைப்பயிற்சியுடைய வரும் தமிழ்ப் புலவரை ஆதரிக்கும் இயல்புடைய வருமான தாண்டவராயப்பிள்ளை இவரைக் ‘குழந்தைக் கவிராயர்’, ‘நாவலர் தாகு’, ‘வாணர் புரவலன்’ முதலிய புகழுரைகளால் போற்றியுள்ளார். தாண்டவராயப் பிள்ளையின் தமையனாராகிய இராமகிருட்டிணப் பிள்னையையும் நத்தம் சமீன்தார் ஒருவரையும் புதுக்கோட்டை அரசர் திருமலைத் தொண்டைமான்<noinclude></noinclude> 8l7z9r68ghc3mrc0h6urxgd2cee88bj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/765 250 643093 1958238 1933550 2026-08-15T05:10:53Z Sridevi Jayakumar 15329 1958238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைக் கொலை|737|குழந்தைக் கொலை}}</noinclude>என்பவரையும் பல தனிப்பாடல்களால் சிறப்பித்துள்ளார்.{{Right|<b>வி.சே.</b>}} <section end="குழந்தைக் கவிராயர்"/> <section begin="குழந்தைக் கொலை"/> {{dhr}} <b>குழந்தைக் கொலை</b>: குழந்தை பிறந்தவுடன் கொல்வது, பருவமடைவதற்குமுன் குழந்தைகளைக் கொல்வது, இயற்கைச் குழலில் அப்படியே பிறந்த குழந்தையை இறக்கவிடுவது, குழந்தைகளை உயிர்ப்பலியிடுவது ஆகியனவே குழந்தைக் கொலை (Infanticide) எனக் கூறப்படும். உலகின் பல்வேறு சமுதாயங்களில் சமய நம்பிக்கைகள், மரபு முதலானவற்றின் அடிப்படையில் பல காரணங்களுங்காகப் பெண் குழந்தைகளைக் கொலை செய்வதும் ஆண் குழந்தைகளைக் கொலை செய்வதும் வழக்கத்திலிருந்தன. பிறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட மிகத் தொன்மையான முறையே குழந்தைக் கொலை எனக் குறிப்பிட்டாலும், வேறு சில முதன்மையான காரணங்களுக்காகவும் இம்முறை வழக்கிலிருந்தது. சில சமுதாயத்தினரிடையே குழந்தைக் கொலைக்கு உயிர்ப்பலி முறையும் காரணமாகும். தாம் வணங்கும் கடவுள்களைத் திருப்திப் படுத்துவதற்காக முதல் குழந்தையைக் கொல்லும் முறை இந்தியாவில் சில சமுதாயத்தினரிடையே கி.பி. 19-ஆம் நூற்றாண்டுவரை காணப்பட்டு வந்துள்ளது. விவிலியத்திலிருந்தும் பண்டைய எகிப்து, கிரேக்கம், உரோம் முதலானவற்றின் வரலாற்றிலிருந்தும் பல சடங்குகளில் முதல் குழந்தையைக் கொலை செய்யும் முறை பற்றி அறிய முடிகிறது. தொன்மையான எபிரேயப் (Hcbrew) பழங்குடியிரிடையே மேற்கூறிய காரணத்திற்காகக் குழந்தையைக் கொல்லும் பழக்கமிருந்தது. சிலரிடையே இரட்டைக் குழந்தைகள் பிறப்பு, பிறக்கும் குழந்தைகள் சாதாரணமாக இல்லாமல் ஏதாவது உடற் குறையுடனோ அதிகப்படியான உறுப்புகளுடனோ பிறத்தல், குழந்தைகள் பற்களுடன் பிறத்தல், இரண்டு மூன்று குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறத்தல் முதலானவற்றுடன் தொடர்புற்ற மூடநம்பிக்கைகளும் குழந்தைக் கொலைக்குக் காரணமாகும். சில சமுதாயங்களில் சமய, சமுதாயக் காரணங்களுக்காகவும் குழந்தைக் கொலை மேற்கொள்ளப்பட்டது. தென்னிந்தியாவில் தேவையற்றது எனக் கருதியும் பழிவாங்கும் செயல்களுக்காகவும் குழந்தைக் கொலை நடைபெற்றுள்ளது. மேலும், சோதிடர் குழந்தை பிறந்த நேரம் கொடியது என்றால், உடனே அக்குழத்தையைக் கழுத்தை தெரித்துக் கொல்லும் பழக்கமும் காணப்பட்டது. வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடியினர் உணவு சேகரிக்கும் பொருட்டுப் பல்வேறு இடங்களுக்குச் செல்பவர்களாக உன்னமையால், அவர்களின் குடும்பங்கள் வெவ்வேறு இடத்தில் பிரிந்து விடுகின்றன. இதனால் முதியோரும் குழந்தைக்கும் தனியாக இருக்க நேரிடுகிறது. அந்நிலையில் குழந்தைகளுக்கு உணவு ஏதும் கிடைக்காத போது, அவற்றின் காப்பாளரோ பெற்றோரோ குழந்தையைக் கொவை செய்தனர். கணவன் மனைவி சண்டை, தகாப்புணர்ச்சியின் வினைவால் எழும் சண்டை முதலானவற்றின் போது. குழந்தைகளைக் கொல்வது கள்ளர் (Kallars) பழங்குடியினரின் வழக்கமாக இருந்தது. தம் எதிராளியை இங்ஙனம் குழந்தைக் கொலையினைச் செய்யத் தூண்டுவதற்காகவும் இம்முறை அவர்களிடையே மேற்கொள்ளப்பட்டது. கேரலரிப் (Colleries) பெண்களிடையே சண்டை அல்லது கருத்து வேறுபாடு ஏற்படும்போது, வலுச்சண்டைக்கு வந்தவரைப் பழிவாங்கும் வகையில் தங்கம் சொந்தக் குழந்தையை சண்டைக்கு வந்தவரின் வீட்டு வாயிலில் வைத்துக் கொல்லும் வழக்கமிருந்தது என்னும் குறிப்பு மதுரை மாவட்டக் கையேட்டிம் காணப்படுகிறது. இங்ஙனம் தன் குழந்தையைக் கொன்ற பின் அப்பெண் தன் பொருள்களுடன் அருகிலிருக்கும் கிராமத்திற்குச் செல்ல முற்படுகிறாள். அவன் செய்வதை அண்டைப் பகுதியில் வாழ்பவர்கன் தடுக்க முற்படும் போது சண்டை அல்லது குழப்பம் ஏற்படுகிறது. இதன் விளைவு கிராமப் பெரியவர்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. விசாரணையின் போது குழந்தை கொலையாவதற்குக் காரணமாக இருந்த பெண்ணின் கணவன், அலையினர் அறியா வகையில் தன் இல்லத்திற்குச் சென்று, தன் குழந்தைகளுள் ஒன்றைக் கொணர்ந்து, அவையினர் முன்பு அக்குழந்தையைக் கொல்கிறான். இச்செயலால் அவர்களால் ற்பட்ட குழந்தைக் கொலைப்பழி தீர்க்கப்பட்டது என்று பஞ்சாயத்துத் தலைவரால் அறிவிக்கப்படுகிறது, இங்ஙனம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாங்களாகவே குழந்தையைக் கொல்லவில்லையெனில், அங்ஙனம் செய்ய அவர்களுக்கு 15 தாங்கள் கெடு அளிக்கப்படுகிறது. அவ்வமயம் அவையில் உள்ளோருக்கான உணவுக்கு ஆகும் செலவுகனைக் குற்றம் சாட்டப்பட்டவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் மரபிருந்தது. இச்செலவுகளைத் தவிர்ப்பதற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்களே முன்வந்து குழந்தைக் கொலையினை மேற்கொண்டனர். பெண்குழந்தைக் கொலை செய்ப்பூரில் அதிக அளவில் காணப்பட்டது என்பார் தர்சுட்டன் (Thur-<noinclude></noinclude> aqyi0j6vs2h90w32d6ghueyml2hvjjq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/766 250 643094 1958239 1933552 2026-08-15T05:11:32Z Sridevi Jayakumar 15329 1958239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைக் கொலை|738|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்}}</noinclude>ston), குழத்தைக் கொலையினால் செய்ப்பூர் அரசர் பெருமளவில் வருவாய் கிடைக்கப் பெற்றார் எனவும் இவர் கூறியுள்ளார். பெண்குழத்தை பிறந்ததும் தாசரி (Dusari) அக்குழந்தையைக் கொல்வவேண்டும். என்றவுடன், குழந்தையின் பெற்றோர் வட்ட அமீனிடம் (Taluk Amia) குழந்தையைக் கொல்வதற்கான உரிமை பெறக்குறிப்பிட்ட தொகையினைச் செலுத்தினர், ஒவ்வோர் ஆண்டும் குழந்தையைக் கொல்தும் உரிமை பெறுவதற்காக உரூ. 300/- அமீனால் அரசருக்குச் செலுத்தப்பட்டுள்ளது என்று தர்சுட்டன் குறிப்பிட்டுள்ளார். ஓரீசாவில் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த கத்தர் (kbond) பழங்குடியினரிடையே பெண் குழந்தையைக் கொலை செய்யும் பழக்கம் இருந்தது. அதற்குப் பல சாரணங்கள் கூறப்படுகின்றன ஒரு காலத்தில் ஒரு பெண் முழு உலகையும் ஆட்டிப்படைத்ததைப் பழிவாங்கும் நோக்கத்தாலும், பெண்கள் மிகத் தொல்லை கொடுப்பவர்களரதலால் அவர்கள் உலகில் இல்லாதிருந்தல் தயபென்று கருதியதாலும், பெண்களுக்கு மணம் புரிய அதிக அளவில் பணம் அளிக்க வேண்டியுள்ளதாலும், பெண்குழந்தைக் கொலைவழி ஆண்களின் எண்ணிக்கையை மிகுதியாக்கலாம் என்று எண்ணியதாலும் பெண் குழந்தைகள் கொல்லப்பட்டன. கோண்டு (Gond) பழங்குடியினரிடையே சமய நம்பிக்கைகளுக்காகவும் குழந்தைக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் நம்பிக்கையின்படி, சூரியக் கடவுள் நல்லவற்றையும் பூமிக்கடவுள் தீயவற்றையும் படைத்தவர், சமுதாயத்திற்குத் தீங்கு விளையாமல் இருப்பதற்குப் பெண் குழந்தைகள் பிறப்பு குறைக்கப்பட வேண்டும் என்பது சூரியக் கடவுளின் கருத்து என்று இம்மக்கள் கருதியமையால், இவர்களிடையே பெண்குழந்தைக் கொலை நடைபெற்றது எனவும் கூறப்படுகிறது. மேலும், இறந்தவர்களின் ஆவி தாங்கள் முதலில் பிறந்த குடும்பத்திலேயே மீண்டும் பிறக்கும் என்னும் கருத்தும் இவர்களிடையே நிலவியது, இருப்பினும், குழந்தை பெற்ற ஏழாம்நாள் செய்யப்படும் சடங்குவழி மட்டுமே இறந்தோரின் ஆனி மீண்டும் அக்குடும்பத்தின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இவர்கள் நம்பிக்கை. எனவே, பெண் குழந்தை பிறந்து ஏழு நாட்கள் ஆவதற்கு முன்னரே அது கொல்லப்படுவதால், குடும்பத்தில் மேலும் பெண் குழந்தை பிறக்காமல் தடுக்கப்படுவதாக நினைக்கின்றனர். கோண்டு பழங்குடியினர் ஓவ்வொருவரும் தங்களுக்கு ஆண் குழந்தையே இருக்க வேண்டும் என்று விரும்புவதால். அவர்களிடையே பெண் குழந்தைக் கொலை தடை பெற்றது. இலம்பாடிகள் எவ்வித பயணத்தை மேற்கொண்டாலும் அதற்கு முன்னர்ச் சிறு குழந்தையொன்றை நிலத்தில் கழுத்துவரை புதைத்து, பாரமுடையமாட்டு வண்டியை அதன்மீது ஏற்றிக் கொன்றனர். இச்செயலால் அவர்கள் பயணம் வெற்றிகரமாக அமையும் எனக் கருதியதால் குழந்தைக் கொலையை மேற்கொண்டனர். தோடர்களிடையே காணப்பட்ட பெண் குழந்தைக் கொலைக்கு அவர்களின் வறுமைநிலையே காரணமாகும். அவர்கள் நோய்வாய்ப்பட்ட அல்லது உடல் ஊனமுற்ற குழந்தைகளைக் கொல்வதைப் செயலாகக் கருதுகின்றனர். ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரு பெண்குழந்தைகளுக்கு மேலிருந்தால், அவற்றிற்குப்பின் பிறக்கும் பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன, பெண் குழந்தை பிறந்தயுடன் கேனாச்சி (Kelachi) என்று அழைக்கப்படும் பெண்மணி ஒரு துணியைக் கொண்டு பிறந்த குழந்தையின் மூக்கு, காது, வாய் ஆகியவற்றை இறுக்கி, மூச்சுத்திணறச் செய்து கொல்கிறான், இச்செயலுக்காக அப்பெண்மணிக்கு நான்கு அணா பரிசாக அளிக்கப்படுகிறது. இச்சமுதாயத்தினரிடையே குழந்தைக் கொலை பண்டைக் காலத்தொட்டே நடைபெற்று வந்துள்ளது. ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர்த்து இப்போது இந்தியாவின் அனைத்துப் பழங்குடியினரும் குழந்தைத் தொலையைக் கைவிட்டு விட்டனர். இதற்குக் காரணம் ஆங்கிலேயர்கள் குழந்தைக் கொலையைக் தடுத்துச் சட்டம் இயற்றிக் கடுமையாகச் செயற்படுத்தியதேயாகும், இக்காலச் சமுதாயங்களில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்குக் கருத்தடை, கருச்சிதைவு முதலானவை எளிமையாகக் கையானப்படுகின்றன.{{Right|<b>ம.ந.பு.</b>}} <section end="குழந்தைக் கொலை"/> <section begin="குழந்தைகள் சத்துணவுத் திட்டம்"/> {{dhr}} <b>குழந்தைகள் சத்துணவுத் திட்டம்</b>: வளர்ந்து வரும் நாடுகளில் சத்துணவின்மை மிகப் பரவலாக நிலவுகிறது. இந்தியாவில் சத்துணவின்மை மிக அதிகமான அளவில் நிலவுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏறத்தாழ 95 விழுக்காடு குழந்தைகளுக்குச் சத்துணவு கிடைப்பதில்லை. இந்தச் சத்துணவின்மை குழந்தைகளின் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் ஊறுவிளைவிக்கிறது. அவர்களுடைய ஆயுளைக் குறைத்து இறப்புக்கு வழி கோலுகிறது. ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியம் (United Nation's Children's Fund) செய்துள்ள<noinclude></noinclude> 0ghjg2pme70ayimwlx3m2b2lxlp2ddg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/770 250 643098 1958240 1933558 2026-08-15T05:15:46Z Sridevi Jayakumar 15329 1958240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைகள் பூங்காப் பள்ளி|742|குழந்தைகள் பூங்காப் பள்ளி}}</noinclude>இந்தத் திட்டம் பொதுவாக எல்லாக் குழந்தைகளுக்கும் பயனளிக்கிறது என்றாலும் குறிப்பாக வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் குழந்தைகளுக்கு இது பெரும் பயனைத் தருகிறது. ஒரு வேளை கூட முழு உணவு பெற இயலாத குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளே இத்திட்டத்தினால் பெரிதும் பயனடைகிறார்கள் என்பதும், ஊட்டச்சத்து பெறுகிறார்கள் என்பதும் இத்திட்டத்தின் சமூக பொருளாதாரச் சிறப்பை உணர்த்தும், தமிழ்நாடு அரசு இக்கீட்டத்தின் இன்றியமையாமையை நடுவண் இருபது அரசுக்கு உணர்த்தி இதைப் பிரதமரின் அமிசத் திட்டத்தில் சேர்க்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை ஒருங்கிணைத்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைத்த ஊட்டச்சத்துத் திட்டம் ஆகியவற்றுடன் இணைத்துக் குழந்தைகளின் உடல்நல மேம்பாட்டிற்கு ஒரு முழுமையான ஒருங்கிணைந்த திட்டத்தைச் செயற்படுத்த எண்ணியுள்ளது. தெற்காக ஆண்டுதோறும் 400 கோடி உருபாய் தேவைப்படும் என்பதை மதிப்பிட்டு, உலக வங்கியின் நிதியுதவியைக் கோர முடிவெடுத்துள்ளது. <b>துணை நூல்</b>:<br> தமிழ்நாடு மாறில ஆட்சி அறிக்கை, 1984-85.{{Right|<b>சி.என்.ந.</b>}} <section end="குழந்தைகள் சத்துணவுத் திட்டம்"/> <section begin="குழந்தைகள் பூங்காப் பள்ளி"/> {{dhr}} <b>குழந்தைகள் பூங்காப் பள்ளி</b>: செருமனி நாட்டைச் சேர்ந்த புரோபல் (Froebel) இளம்சிறார்களுக்கு அளித்த பரிசுதான் குழந்தைப் பூங்காப்பள்ளி (Kindergarten School). புரோபலின் கல்வித் தத்துவம் ஒருமை விதியினை அடிப்படையாகக் கொண்டது. அனைத்து உயிர்களும் இறைவனிடமிருந்தே தோற்றுவிக்கப்படுகின்றன இறைவன் என்னும் ஒருமையிலிருந்து பிரித்த இரு மாறுபாடுகளே மனிதனும் இயற்கையும். ஆகவே மக்களைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருள்களும் ஒன்றொடொன்று தொடர்புடையனவே, கதிரவனின் கதிர்களில் பல்வேறு வண்ணங்கள் உண்டெனினும் அவை ஒன்றாகத் தோன்றுவது போன்று, மாறுபாடுள்ள பொருன்களில் ஒருமையையும், ஒருமையில் மாறுபாடுகளையும் காண்பதே இந்த ஒருமைவிதித் தத்துவமாகும். புரோபல் வாழ்க்கையை, மனித வளர்ச்சியை, ஒரு தொடர் பரிணாம முன்னேற்றமாகக் கருதுகிறார். உள்ளார்ந்த செயல்திறனால் மட்டுமே உண்மையான வளர்ச்சி ஏற்படும், குழத்தைகளுக்குத் தாங்களாகவே கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படும்போது அவர்கள் தம் எண்ணங்களை திறந்த மனத்தோடு செயலாக்குகின்றனர். உள்ளார்ந்த செயலால் மட்டுமே சிறு குழந்தைகள் அவர்களது இயற்கைத் தந்துவத்தை உணர்ந்து தனித் தன்மையை வளர்த்துக் கொள்ள இயலும். புரோபல் தம் கல்விக் கோட்பாட்டில் சமூகத் தொடர்பினை அதிகமாக வலியுறுத்துகிறார், சமூக இயல்பினைப் பெற்ற குழந்தையே தனது உள்ளார்ந்த செயல் திறன், தற்பொருள் விளக்க ஆற்றல், அக உணர்வு, ஆக்க உணர்வு, தனித்தன்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள இயலும். குழந்தை சமுதாயத்தோடு ஒன்றி வாழும் போதுதாள் முறையான, உண்மையான கல்வியைக் கற்க இயலும், குடும்பம், பள்ளி, கோயில், சமுதாயம் ஆகிய சமூக நிறுவனங்கள் குழந்தைகளின் தனித்தன்மை வளர்ச்சியுறப் பெரிதும் உதவுகின்றன என்பது அவரது கருத்து. மனித வளர்ச்சிப் பருவங்களாகிய குழவிப் பருவம் (Infancy), குழத்தைப் பருவம் (Childhood), இளமைப் பருவம் (Boyhood), குமரப்பருவம் (Adolescence) ஆகியவற்றின் அடிப்படையில் கல்வியும் வளர்ச்சி அடைகிறது. ஆகவே, மனித வளர்ச்சிப் பருவத்திற்கேற்ற கல்வியை அளிப்பதுதான் சிறந்தது. அப்போதுதான் குழந்தை தன் நிலையினை அறித்து, தன்தனித் திறனுக்கேற்றவாறு செயற்பட இயலும்: அதன் வளர்ச்சியும் முழுமை பெறும் என்பது புரோபலின் கல்வித் தத்துவமாகும். புரோபல் நாம் அளித்த கல்விக் கோட்பாடுகளின்படி 1837-ஆம் ஆண்டு செருமனியில் பிளாங்கின்பாகு என்ற இடத்தில் ஏற்படுத்திய சிறார்களுக்கான பள்ளியே குழந்தைப் பூங்காப் பள்ளி. ‘கிண்டர்கார்டன்’ (Kindergarten) என்ற செருமானியச் சொல்லுக்குக் ‘குழந்தைகளின் பூங்கா’ என்பது பொருள். ஆசிரியரை ஒரு தோட்டக்காரருக்கும், குழந்தைகளை இளம் நாற்றுகளுக்கும் ஒப்பிட்டுக் கூறுகிறார் புரோபல், தோட்டக்காரரைப்போல் தம்மிடம் தரப்பட்டுள்ள இளம் பயிர்களாகிய சிறார்களைக் கண்ணும் கருத்துமாக நாற்றங்காலாகிய குழந்தைப் பூங்காவில் காத்து, அதன் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும். இளம் பயிர் இயற்கையாகவே வளரும் தன்மை பெற்றிருந்தல் போன்றே குழந்தைகளும் இயற்கையாக வளரும் தன்மை பெற்றுள்ளனர். ஆகவேதான் புரோபல் குழந்தைகளை இளம் பயிர்களுக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார். <b>விளையாட்டின் முக்கியத்துவம்</b>: ஒரு முழுமையான கல்விப் பயிற்சியினைக் குழந்தைகள் பெறுவ-<noinclude></noinclude> 5ed8rsjv7ue03726umqjikowe8vq93i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/772 250 643100 1958242 1933560 2026-08-15T06:59:53Z Sridevi Jayakumar 15329 1958242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைப் பூங்காப் பள்ளி|744|குழந்தைத் திருமணம்}}</noinclude>யானால், பிற்காலத்தில் கற்கும் திறனும் ஆர்வமும் தாமாகவே வளர்ச்சியடையும் என்பது தான்புரோபலின் கொள்கை. ஆகவே, வண்ணம் தீட்டுதல், படம் வரைதல், பாசிமணி கோத்தல், காதெம் வெட்டுதல், தையல், நேசவு ஆகிய செயல்களை மையமாகக் கொண்டும் குழந்தை உளவியலை அடிப்படையாகக் கொண்டும் அவரது கற்பிக்கும் முறை அமைந்தது. <b>தாய்மார்களின் பாடல்கள்</b>: குழந்தைகள் எப்போதுமே ஓடியாடி மற்றவர்களோடு சேர்த்து உற்சாகமாக விளையாடும் தன்மையுடையவர்கள், இந்த உண்மையைக் கண்டறிந்த புரோபல் அவரது குழந்தைப் பூங்காப் பள்ளியில் குழந்தைகளை வட்டமாக நிறுத்திப் பாடல்கள் பாடுவதை ஊக்குவித்தார். அந்தப் பாடல்கள் தாய்மார்கள் பாடக்கூடியதாக அமைந்ததன் காரணமாக அவற்றைத் ‘தாய்மார்களின் பாடல்கள்’ (Mothers' Songs) என்று கூறினார். தாய்மார்கள் பாடுவதையும் அவர் ஊக்குவித்தார். <b>கதை சொல்லுதல்</b>: குழந்தைப் பூங்காப் பள்ளியில் புராணக் கதைகள், கற்பனைக் கதைகள், வனதேவதை பற்றிய கதைகள், நீதிக் கதைகள் போன்று பல்வேறு வகையான கதைகளைச் சொல்லுவதை (Story Telling) புரோபலின் கல்லிக் கொள்கை வளியுறுத்துகிறது. அவர் குழந்தைகளின் மனத்தில் எழக்கூடிய, கதைகல் கேட்கலேண்டுமென்ற ஆர்வத்தை மதித்துத் தம் பள்ளியில் அதற்குரிய இடத்தினை அளித்தார். கதைகளின் மூலமாகப் பண்டைக்காலப் பண்பாடுகளையும், வீர வரலாறுகளையும், குழந்தைகள் அறிந்து கொள்கிறார்கள். அவர்களின் கற்பனைத் திறன் வளர்வதற்கும் அவை பேருதவியாக அமைகின்றன. குளிப்பது உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பது போன்று, கதை கேட்பது உள்ளத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கின்றது: அறிவாற்றம், சக்தி ஆகியவை வளர்வதற்கு உதவுவதோடு குழந்தைகளின் நியாய உணர்வுகளையும் வளர்க்கிறது. ‘விளையாட்டு உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது போன்று கதை உள்ளத்திற்கு ஊக்கத்தை அளிக்கின்றது’ என்பவை புரோபயின் நிலையான கருத்துகளாகும். புரோபலின் கல்விக் கொள்கைகளும் செயல்களும் இன்றைக்கும் பள்ளி முன்பருவக் கல்வியில் சில மாறுதலோடு பயன்படுத்தப்படுவதைக் காணலாம். இந்தியாவில் மட்டுமல்லாது வளர்த்து வரும் மேலை நாடுகளிலும் புரோபல் குழந்தைப் பூங்காப் பள்ளிகள் அமைக்கப்பட்டுத் திறம்பட நடைபெறுகின்றன. ஆனால் அவர் அளித்த பரிசுகளையும், செயல்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமையாது இன்றைய நிலைமைக்கு ஏற்றவாறு சிறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. புரோபலின் கல்விக் கொள்கைகளும் பரிசுகளும், மாறுபட்டவையாக இருந்தாலுங்கூட, இப்போதும் சிறு குழந்தைகளைக் கவரக் கூடியதாகவும், செயல்களையும் உணர்வுகளையும் தூண்டக் கூடியதாகவும், மகிழ்விக்கக்கூடியதாகவும் உள்ளன.{{Right|<b>ஞா.ப.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Pringle, M.K., and S. Naidoo,</b> Early Child Care in Britain, Gordon and Breach, London, 1975.<br> <b>Somerset, G.,</b> Parent Iavolvement in Early Child-hood Education, Wellington Playcenbe Assoziation, Wellington, 1976. <section end="குழந்தைகள் பூங்காப் பள்ளி"/> <section begin="குழந்தைத் திருமணம்"/> {{dhr}} <b>குழந்தைத் திருமணம்</b>: தொழிற்சாலைகள் சட்டம், 1948 பதினான்கு வயதுக்கு உட்பட்டவர்களைக் குழந்தைகள். என்று கூறுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 24-ஆம் பிரிவும் 14 அயதுக்கு உட்பட்டவர்களைக் குழந்தைகள் என்றே கூறுகிறது. 14 வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தைகளாகக் கருதப்படுவதால் அவர்களுக்கு நடக்கும் திருமணம் குழந்தைத் திருமணம் எனப்படுகிறது. 1920-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குழந்தைத் திருமணக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆரம்பத்தில் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு நடைபெறும் திருமணத்தைக் குழத்தைத் திருமணம் என்று அறிவித்து, அத்தகைய திருமணங்களைத் தடை செய்தது. குழந்தைத் திருமணம் சட்ட பூர்வமாகத் தடை செய்யப்பட்ட போதிலும் இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது 10-இலிருந்து 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் கிராமப் புறங்களில் 13.2 விழுக்காட்டினர் மணமானவர்களாகவும், 0,1 விழுக்காட்டினர் விதவைகளாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. தில்லியிலும், பீகாரிலும் 1971-ஆம் ஆண்டில் நடந்த சிற்றாள் பெண்கள் பற்றிய ஓர் ஆய்வில் அவர்களில் 43,3 விழுக்காட்டினர் 10 வயதுக்கு முன்னரும் 90 விழுக்காட்டினர் 15 வயதுக்கு முன்னரும் திருமணம் முடித்திருந்தனர் என்று கண்டறியப்பட்டது. சமூக மேம்பாட்டுக் கழகம் (Council of Social Development) என்ற அமைப்பைச் சேர்ந்த சுர்சீத்கவுர் என்பவர் அரியானாவிலும், தமிழ்நாட்டி<noinclude></noinclude> 71ezazn3o2wiahshmprrdfaigrrix69 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/778 250 643309 1958243 1933981 2026-08-15T07:00:41Z Sridevi Jayakumar 15329 1958243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைத் தொழிலாளர்|750|குழந்தைத் தொழிலாளர்}}</noinclude>கற்கும் குழந்தைத் திருமணங்களும் ஒரு காரணம், அதற்கு மேலாகப் பேறுகாலப் பெண்களின் இறப்பு: விகிதமும் (4.5/1000-1976), ஓராண்டு நிரம்பாத குழந்தைகள் இறப்பு விகிதமும் (114/1000-1980) மிகுதியாக இருப்பதற்கும் குழந்தைத் திருமணங்கள் ஓரளவு காரணம்.{{Right|<b>சி.என்.ந.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Kapadia, K.M.</b> Marriage and Family in India, 3rd ed, Oxford University Press, Bombay, 1966.<br> <b>O'Malley, L.S.S.,</b> India's Social Heritage, Indian ed. Vikas Publishing House, New Delhi, 1976. <section end="குழந்தைத் திருமணம்"/> <section begin="குழந்தைத் தொழிலாளர்"/> {{dhr}} <b>குழந்தைத் தொழிலாளர்</b>: தொழில் மயமாக்கம் பல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றுள் ஒன்று குழந்தைகள் வேலையில் ஈடுபடுத்தப்படுவது. குறிப்பாக, சட்டத்தினால் ஒழுங்குபடுத்தப் படாத தொழில் துறைகளில் குழத்தைகள் மிகுதியான எண்ணிக்கையில் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குழந்தைகள் தொழிற்சாலைகளில் வேலையில் ஈடுபடுத்தப்படுவது தொழிற் புரட்சிக் காலத்தில்தான் தொடங்கிற்று. தொழிற்புரட்சியின் காரணமாகத் தொழிற்சாலைகள் மிகுந்த அளவில் தொடங்கப்பட்டதும், அவற்றுக்கு அளவற்ற தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அந்தத் தேவையைச் சமானிக்கக் குழந்தைகளும் தொழிலாளர்களாக வேலையில் அமர்த்தப்பட்டனர். முக்கியமாக, குறைந்த ஊதியத்தில் குழந்தைகள் வேலைக்குக் கிடைத்ததால் தொழிலதிபர்கள் அவர்களை மிகுதியாக வறுமையில் சேர்த்துக் கொண்டனர். அப்பொழுது நிலவிய வறுமையின் தாக்குதலினால் பெற்றோர்கள் தம் குழந்தைகளை வருமானத்திற்காக வேலைக்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. அதைப் பயன்படுத்தித் தொழிலதிபர்கள் மிகுதியான குழந்தைகளைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு எடுத்துக் கொண்டனர். தொழில் சாலைகள் மீதும், அவற்றின் வேலை நிலைமைகள் மீதும் அரசாங்கக் கட்டுப்பாடு ஏதும் அந்தக் காலத்தில் இல்லாததால், தொழிலதிபர்கள் குழந்தைத் தொழிலாளர்களைத் தமது விருப்பம் போல நடத்தினர்; குறைந்த ஊதியம் கொடுத்தஈர்; அதனையும் ஒழுங்காகக் கொடுப்பதில்லை. கடினமான வேலை நிலைமைகளில் அவர்களை வேலை செய்யச் செய்தனர். கால வரையறை இல்லாமம் விருப்பம் போல நீண்ட நேரம் அவர்களை வேலை வாங்கினர். அவர்களுடைய சக்திக்கு மீறிய வேலைகளிலும் அவர்களை ஈடுபடுத்தி வேலை வாங்கினர் தொழில் மயமாக்கம் இந்தியாவில் ஏற்பட்டதும், இந்தியத் தொழிலதிபர்களும் அவ்வாறே குழந்தைகளைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தி அவர்களைக் கடுமையாக வேலை வாங்கினர். இந்தியத் தொழிலாளர் நிலை பற்றி 1931-ஆம் ஆண்டு ஆராய வந்திருந்த தொழிலாளர் பற்றிய அரசாய்வு ஆணையம் (Royal Commission on Labour) பல நகரங்களில் எண்ணற்ற குழந்தைகள் தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்ததைக் கண்டறிந்தது. அவர்களில் ஐந்து வயது கூட திரம்பாத குழந்தைகள் இருந்தனர். ‘குழந்தைத் தொழிலாளர்களுடைய வேலை நிலைமைகளைப்பற்றிக் குறிப்பிட்ட பொழுது, அவ்வாணையம் குழந்தைத் தொழிலாளர்கள் மிகக் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர்; சிறிய தவறுகளுக்குக் கூட அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது; அவர்கள் ஒரு நாளைக்கு 10-இலிருந்து 12 மணி நேரம் வரை வேலை வாங்கப்பட்டனர்; அவர்களுக்குப் போதிய உணவு இடைவேளையோ, வாராந்திர விடுமுறை நாள்களோ வழங்கப்படவில்வை; ஒரு நாளைக்கு இரண்டு அணாக் கூட (சுமார் 12 பைசாக்களுக்குச் சமம்) அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படவில்லை’ என்று தெரிவித்தது. <b>குழந்தைத் தொழிலாளர் பற்றிய சட்டங்கள்</b>: குழந்தைகளைத் தொழிற் சாலைகளில் வேலைக்கு நியமிப்பதைக் கட்டுப்படுத்தச் சட்ட முறைப்படி அரசு எந்த முயற்சியும் கி.பி. 1881-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளவில்லை. பம்பாய்ப் பருத்தித் துறையில் முதன்மை ஆய்வாளராகப் பணியாற்றிய படைத் தலைவர் (Major) மூர் என்பவர் இந்தியத் தொழிற் சாலைகளின் நிலைமைகளை கி.பி.1874-ஆம் ஆண்டு ஆராய முற்பட்டபொழுது, பம்பாய்ப் பஞ்சாலைகளில் எண்ணற்ற குழந்தைகள் வேலையில் அமர்த்தப்பட்டிருந்ததைக் கண்டார். அவர்களுள் பெரும் பகுதியினர் எட்டு வயதுக் கூட நிரம்பாதவர்களாய் இருந்தனர். அவர்கள் அனைவரும் காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து வந்தனர். அரை மணி நேரம் மட்டுமே அவர்களுக்கு உணவு இடைவேளை விடப்பட்டது. அவர்களுக்குச் சரியான விடுமுறை கூடத்தரப்படவில்லை. இந்த உண்மைகளைப்படைத் தலைவர் மூரின் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியதும், தொழிற்சாலை நிலைமைகளை ஆராயும் போக்கு பரவத்தொடங்கியது. முரைத் தொடர்ந்து பம்பாயில் நாணயத் தொழிற்சாலை அமைச்சராக இருந்த பல்லார்டு, தேசிய இந்தியச் சங்கம் என்ற அமைப்பை நிறுவிய செல்வி கார்ப்பெண்டர் ஆகியோரும் களத்தில் குதித்து, இந்தியத் தொழிற்சாலை நிலைமை<noinclude></noinclude> 7b8z7kf6xpxuhuzkmtnf86r3rlz5xqj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/784 250 643315 1958244 1933992 2026-08-15T07:01:27Z Sridevi Jayakumar 15329 1958244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை நலம்|756|குழந்தை நலம்}}</noinclude><b>Mauroria, C.B., and Mauroria, Satiya,</b> Industrial Labour, Social Security and Industrial Peace in India, Kitab Mahal, Allahabad, 1984.<br> <b>Tyagi, B.P.,</b> Labour Economics and Social Welfare, 3rd ed. Jai Prakash Nath & Co., Meerut 1982. <section end="குழந்தைத் தொழிலாளர்"/> <section begin="குழந்தை நலம்"/> {{dhr}} <b>குழந்தை நலம்</b>: ஒரு குழந்தையின் நலம் அது வளரும் சுற்றுப்புறச் சூழ்நிலையையும், வளர்க்கப்படும் முறையையும், உணவையும், நோய்த்தடுப்பு நோய் நீக்கும் மருத்துவ முறைகளையும் பொதுத்து அமைகிறது. இவற்றில் ஏதாவது ஒன்றில் குறை ஏற்பட்டாலும் அதன் விளைவாகக் குழந்தையின் உடல்நலம் குன்றுகிறது. <b>சுற்றுப்புறம்</b>: சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால் ஒழியக் குழந்தை நலமாக வளரமுடியாது. குப்பையும் கூனமுமாகத் தூய்மையற்றுக் காற்றோட்டமில்லாமல், நலவாழ்வுக்குக் கேடுவிளைவிக்கும் சுற்றுப்புறச் சூழ்நிலையில் எந்தக் குழந்தையும் நலமாக வளரமுடியாது. இத்தகைய சூழ்நிலையில் எந்தக் குழந்தையும் அது எப்படி வளர்க்கப்பட்டாலும் நலமாக இருக்கமுடியாது. தூய்மையற்ற சுற்றுப்புறச் சூழ்நிலை தொற்றுநோய்க் கிருமிகளுக்கு இடம்கொடுத்து, நோய்கள் பெருகவும், அதனால் குழந்தைகளின் உடல்நலம் கெடவும் வழிவகுக்கும். <b>வளர்ப்பு முறை</b>: குழந்தையின் நலத்திற்குக் குனியம் மிகவும் தேவை, ஆயினும் அது பிறந்ததும் தொப்புள்கொடி விழும்வரை அதைக் குளிப்பாட்டக் கூடாது. அப்படிக் குளிப்பாட்டினால் தொப்புள் கொடி தலைத்து தொப்புளில் சீழ் உண்டாகிக் குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டு அதன் உடல்நலம் கெடக்கூடும். ஆகவே, தொப்புள்கொடி விழும்வரை ஈரத்துண்டால் தினமும் குழந்தையைத் துடைத்து விடுவது நல்லது. குழந்தையைக் குளிப்பாட்டும்போது இளஞ் சூடான வெத்நீரில் குளிப்பாட்டுவது தவ்வது. காற்றோட்டமான இடத்தில் குளிப்பாட்டவேண்டும். குளிப்பாட்டும்போது நீர் குழந்தையின் காது, மூக்கு, வாய் இவற்றினும் போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையைத் தூங்க வைக்கும்போது, அதற் கெனத் தனிப் படுக்கை இருத்தல் அவசியம், அந்தப் படுக்கை காற்றோட்டம் உள்ள இடத்தில் அமைவது இன்னும் அவசியம். குழந்தைக்குத் துணியால் தொட்டில் கட்டி அதில் தூங்க வைக்கும் பழக்கம் இந்தியாவில் இருந்து வருகிறது. இது எளிய முறைதான் ஆயினும் இதனால் குழந்தைக்குப் பல தீங்குகள் உண்டாகக்கூடும். குழந்தை இதில் தாராளமாகப் படுத்துப்புரள முடியாது. குப்புறக் கவிழ்த்துவிட்டால் பாளமுடியாமற் போய்க் குழத்தை மூச்சு முட்டி இறக்கக்கூடும். இதில் தூங்குவதால் குழந்தைக்குப் போதிய காற்றோட்டம் கிடைக்காது. மேலும் குழந்தை இதில் நெஞ்சையும் உடலையும் குறுக்கிக் கொண்டுதான் படுக்கமுடியும், இதனால் குழந்தையின் நுரையீரல்கள் விரிவடைய முடிவதில்லை. அதனால் மார்பில் சனிகண்டாகி மூக்கடைப்பு ஏற்படும். ஆகவே, குழந்தையை ஒரு பிரம்புத் தொட்டிலில் இட்டுப் படுக்கவைப்பது நல்லது. ஏனெனில் அதன் நான்கு பக்கங்களிலிருந்தும் காற்று வர வழியுண்டு. மேலும், அதில் குழந்தை புரண்டு படுக்கப் போதிய இடம் இருக்கும். பிரம்புத் தொட்டியினுள் ஒரு சிறிய மிருதுவான மெத்தையைப் போட்டுக் குழந்தையைப் படுக்கவைப்பது நல்லது. <b>உணவு</b>: பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால்தான் சிறந்த உணவு. அதில்தான் இயற்கையின் பல சத்துகள் அடங்கியுள்ளன. இச்சத்துகள் குழந்தையின் நலத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுகின்றன மேலும் தாய்ப்பால் எப்பொழுது வேண்டுமானாலும் கொடுப்பதற்கு உடலின் குட்டோடு தயாராக இருக்கிறது. இது மற்றப் பால்களைப் போலக் இருமிகளால் தாக்கப்படுவதில்லை. ஆகவே, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி முதலிய நோய்கள் வருவதிர்யை படை, செரிமான மில்லாக் கோளாறு ஆகிய துன்பங்களும் வருவதில்லை. குழந்தை பிறந்து சுமார் 12 மணி நேரம் சென்றவுடன் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கலாம். சாதாரணமாகத் தாய்மார்களுக்கு நான்கு நாள்கள் கழித்துத்தாள் மார்பில் பால் கரக்கும். இந்த நான்கு தாள்கள் வரை முதல் தாய்ப்பால் (Colostrum) என்னும் திரவம் வெளிவரும். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில தாய்மார்கள் குழந்தையின் உடனுக்கு இந்தத் திரவம் தன்மைபயக்காது என்று கருதுகிறார்கள். இது தவறு இத் திரவத்தில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. தாய்ப்பாலைவிட இதில்தான் புரதச்சத்து அதிகம். எனவே, இத்திரவத்தைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது மிக நல்லது. தாய்ப்பால் கொடுக்கமுடியாமற் போனால், குழந்தைக்குப் பசும்பால் கொடுப்பது நல்லது. பகம் பாலை நன்றாகக் கொதிக்கவைத்துத் தரவேண்டும்.<noinclude></noinclude> iiosjr7e3oosgxfp7ni5yjo7pc5houk பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1958246 1958180 2026-08-15T09:21:33Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1958246 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்குகள்‌|சமூகப்‌ பங்குகள்‌]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌]] 598-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பணி|சமூகப்‌ பணி]] 604-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌|சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாவனை நாடகம்‌|சமூகப்‌ பாவனை நாடகம்‌]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பிறழ்வு|சமூகப்‌ பிறழ்வு]] 610-614 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்‌|சமூகம்‌]] 614-619 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள்‌ தொகையியல்‌|சமூக மக்கள்‌ தொகையியல்‌]] 619-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்‌|சமூகமயமாதல்‌]] 623-629 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்‌|சமூக மனப்பான்மைகள்‌]] 629-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்‌|சமூக மாற்றம்‌]] 631-636 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌|சமூகவியல்‌]] 644-654 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌|சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌]] 654-658 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்‌|சயங்கொண்டார்‌]] 662-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப்‌ புலவர்‌|சர்க்கரைப்‌ புலவர்]] 670-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்‌|சர்ச்சில்‌]] 671-673 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌|சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 673-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌|சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌]] 676-677 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்‌|சரக்கு மாற்றகம்‌]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌|சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌]] 688-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச்‌ சட்டம்‌|சரக்கேற்றிச்‌ சட்டம்‌]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌|சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌]] 693-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத்‌ சந்திர சட்டர்சி|சரத்‌ சந்திர சட்டர்சி]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌|சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌]] 706-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌|சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌]] 708-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்‌|சருவோதயம்‌]] 709-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்‌|சலந்தர்‌]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத்‌ தொழில்‌|சலவைத்‌ தொழில்‌]] 714-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்‌|சலாதின்‌]] 716-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால்‌ நேரு|சவகர்லால்‌ நேரு]] 718-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்‌|சன்மார்க்கம்‌]] 730-731 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்‌|சனகன்‌]] 733-734 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 747-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்‌|சாங்கியம்‌]] 751-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்‌|சாதபூரா மலைத்தொடர்‌]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 772-773 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்‌|சாதவாகனர்கள்‌]] 773-778 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதன சாத்தியம்|சாதன சாத்தியம்]] 778-779 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை உளவெழுச்சி|சாதனை உளவெழுச்சி]] 779-780 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனை ஊக்கி|சாதனை ஊக்கி]] 780-780 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதனைக் கவலைச் சோதனை|சாதனைக் கவலைச் சோதனை]] 780-782 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதாரணப் பங்குகள்|சாதாரணப் பங்குகள்]] 782-784 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதி|சாதி]] 784-784 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதிக்கு, குலாம்‌ முகம்மது|சாதிக்கு, குலாம்‌ முகம்மது]] 784-784 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதுநாத்து சர்க்கார் (சர்‌)|சாதுநாத்து சர்க்கார் (சர்‌)]] 784-784 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்த கவிராயர்‌|சாந்த கவிராயர்‌]] 784-785 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தயானா, சார்சு|சாந்தயானா, சார்சு]] 785-786 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்க அடிகளார்|சாந்தலிங்க அடிகளார்]] 786-787 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தலிங்கத் கவிராயர்|சாந்தலிங்கத் கவிராயர்]] 787-787 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா குருசு|சாந்தா குருசு]] 788-788 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தா பே|சாந்தா பே]] 788-789 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திக்கூத்து|சாந்திக்கூத்து]] 789-790 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்திமத் தீவு|சாந்திமத் தீவு]] 790-790 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ|சாந்தியாகோ]] 790-791 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ|சாந்தியாகோ–தெல்–எசுத்தெரோ]] 791-792 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தியாகோ தே கியூபா|சாந்தியாகோ தே கியூபா]] 792-793 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துப்புலவர்‌|சாந்துப்புலவர்‌]] 793-794 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்துபீபி|சாந்துபீபி]] 794-794 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாந்தோக்கிய உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதம்]] 794-795 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்சே|சாப்சே]] 795-795 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாப்ரூ, தேசு பகதூர்|சாப்ரூ, தேசு பகதூர்]] 795-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபாசுகர்க்கி|சாபாசுகர்க்கி]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாபுவா|சாபுவா]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம் ஆறு|சாம் ஆறு]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்செட்பூர்|சாம்செட்பூர்]] 797-798 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நகர்|சாம்நகர்]] 798-798 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்நைட்டுகள்|சாம்நைட்டுகள்]] 798-798 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பசி ஆறு|சாம்பசி ஆறு]] 798-798 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பவான்|சாம்பவான்]] 798-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பாசி|சாம்பாசி]] 799-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாம்பொவாங்கா|சாம்பொவாங்கா]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்கண்டு|சாமர்கண்டு]] 800-801 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமர்செட்டு|சாமர்செட்டு]] 801-801 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமரோசு|சாமரோசு]] 801-801 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமலாசி|சாமலாசி]] 801-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமவேதம்|சாமவேதம்]] 802-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமா|சாமா]] 803-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமார்|சாமார்]] 803-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)|சாமிநாத தேசிகர் (ஈசானமடம்)]] 803-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதம்|சாமிநாதம்]] 803-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர்‌, உ.வே. டாக்டர்‌|சாமிநாதையர்‌, உ.வே. டாக்டர்‌]] 805-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர், சி.வி.|சாமிநாதையர், சி.வி.]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமிநாதையர் நூல்நிலையம்|சாமிநாதையர் நூல்நிலையம்]] 806-807 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுண்டிக் குன்றுகள்|சாமுண்டிக் குன்றுகள்]] 807-808 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமுராய|சாமுராய]] 808-808 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாமோசு|சாமோசு]] 808-809 df2j5yxwl3ew9ul50x05014idqta7fq பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1958241 1958048 2026-08-15T05:30:31Z Sridevi Jayakumar 15329 /* வா.க7 அட்டவணை 6 */ 1958241 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின்‌ ஆணை|காரகல்லாவின்‌ ஆணை]] 212-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்‌|காரகோரம்‌]] 214-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத்‌ தொடர்‌|காராகோர மலைத்‌ தொடர்‌]] 214-215 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்‌|காரைக்காலம்மையார்‌]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, இசுடேன்லி கிரான்விலே|கால்‌, இசுடேன்லி கிரான்விலே]] 243-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்‌|கால்சிடன்‌]] 244-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு|கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு]] 244-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன்‌, சர்‌ பிரான்சிசு|கால்டன்‌, சர்‌ பிரான்சிசு]] 248-248 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு|கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு]] 248-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல்‌, இராபர்ட்டு|கால்டுவெல்‌, இராபர்ட்டு]] 251-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, பிரான்சு சோசபு|கால்‌, பிரான்சு சோசபு]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர்‌, சான்‌-பா தீசித்து|கால்பெர்‌, சான்‌-பா தீசித்து]] 253-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்‌|கால்மார்‌]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின்‌ கோட்பாடு|கால்வின்‌ கோட்பாடு]] 258-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்‌|கால இயக்க ஆய்வுகள்‌]] 261-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332 |- ! colspan="5"|<b>கி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507 |- ! colspan="5"|<b>கீ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541 |- ! colspan="5"|<b>கு </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700 |- |} </center> </div></div></div> == வா.க7 அட்டவணை 6 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாம்|குவாம்]] 751-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயசு|குவாயசு]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் துறைகமும்|குவாயாக்கீல் துறைகமும்]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் வளைகுடா|குவாயாக்கீல் வளைகுடா]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாலியர்|குவாலியர்]] 752-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவிசுலிங்கு, வீட்குன்|குவிசுலிங்கு, வீட்குன்]] 755-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவின்டில்யன், மார்க்கசு பாபியன்|குவின்டில்யன், மார்க்கசு பாபியன்]] 755-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீபசெவு|குவீபசெவு]] 755-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீன்சுலாந்து|குவீன்சுலாந்து]] 755-757 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவெட்டா|குவெட்டா]] 757-757 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவேசோ|குவேசோ]] 757-757 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவைத்து|குவைத்து]] 757-760 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவோமின்டாங்கு|குவோமின்டாங்கு]] 760-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை, அ.மு|குழந்தை, அ.மு]] 761-762 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை உளவியல்|குழந்தை உளவியல்]] 762-764 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கவிராயர்|குழந்தைக் கவிராயர்]] 764-765 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கொலை|குழந்தைக் கொலை]] 765-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் சத்துணவுத் திட்டம்|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்]] 766-770 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் பூங்காப் பள்ளி|குழந்தைகள் பூங்காப் பள்ளி]] 770- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ e0u9f44xepimm9qkzj4rufb8vflb978 1958245 1958241 2026-08-15T07:06:16Z Sridevi Jayakumar 15329 /* வா.க7 அட்டவணை 6 */ 1958245 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின்‌ ஆணை|காரகல்லாவின்‌ ஆணை]] 212-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்‌|காரகோரம்‌]] 214-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத்‌ தொடர்‌|காராகோர மலைத்‌ தொடர்‌]] 214-215 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்‌|காரைக்காலம்மையார்‌]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, இசுடேன்லி கிரான்விலே|கால்‌, இசுடேன்லி கிரான்விலே]] 243-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்‌|கால்சிடன்‌]] 244-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு|கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு]] 244-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன்‌, சர்‌ பிரான்சிசு|கால்டன்‌, சர்‌ பிரான்சிசு]] 248-248 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு|கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு]] 248-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல்‌, இராபர்ட்டு|கால்டுவெல்‌, இராபர்ட்டு]] 251-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, பிரான்சு சோசபு|கால்‌, பிரான்சு சோசபு]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர்‌, சான்‌-பா தீசித்து|கால்பெர்‌, சான்‌-பா தீசித்து]] 253-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்‌|கால்மார்‌]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின்‌ கோட்பாடு|கால்வின்‌ கோட்பாடு]] 258-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்‌|கால இயக்க ஆய்வுகள்‌]] 261-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332 |- ! colspan="5"|<b>கி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507 |- ! colspan="5"|<b>கீ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541 |- ! colspan="5"|<b>கு </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700 |- |} </center> </div></div></div> == வா.க7 அட்டவணை 6 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700-701 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகோவிந்த சிங்கு|குருகோவிந்த சிங்கு]] 701-701 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருசேவு|குருசேவு]] 701-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருஞான சம்பந்தர்|குருஞான சம்பந்தர்]] 703-704 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருட்சேத்திரம்|குருட்சேத்திரம்]] 704-705 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருத்தோலை ஞாயிறு|குருத்தோலை ஞாயிறு]] 705-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு நமசிவாயர்|குரு நமசிவாயர்]] 706-707 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு|குருநானக்கு]] 707-708 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்|குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்]] 708-708 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபரம்பரை|குருபரம்பரை]] 708-710 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருபாததாசர்|குருபாததாசர்]] 710-712 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் அரசாங்க முறை|குருமார் அரசாங்க முறை]] 712-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் உரிமை|குருமார் உரிமை]] 714-714 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு]] 714-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவட்டி|குருவட்டி]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருவாயூர்|குருவாயூர்]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குருகர், பாலசு|குருகர், பாலசு]] 717-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோ இந்தியர்|குரோ இந்தியர்]] 718-719 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோச்சே, பெனெதெத்தோ|குரோச்சே, பெனெதெத்தோ]] 719-721 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியசு, கியூகோ|குரோசியசு, கியூகோ]] 721-723 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோசியா|குரோசியா]] 723-724 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோட்டு சார்சு|குரோட்டு சார்சு]] 724-724 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோபர், ஆல்பிரடு உலூயி|குரோபர், ஆல்பிரடு உலூயி]] 724-725 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரோமாக்னன் மனிதன்|குரோமாக்னன் மனிதன்]] 725-727 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்பர்கா|குல்பர்கா]] 727-728 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்மார்க்கு|குல்மார்க்கு]] 728-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குல்லூகபட்டர்|குல்லூகபட்டர்]] 729-729 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலக்குறி|குலக்குறி]] 729-733 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலச்சிறை நாயனார்|குலச்சிறை நாயனார்]] 733-733 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரப்பட்டினம்|குலசேகரப்பட்டினம்]] 733-733 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 733-734 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன் சடையவர்மன்|குலசேகர பாண்டியன் சடையவர்மன்]] 734-735 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியன்]] 735-735 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலசேகரர்|குலசேகரர்]] 735-737 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலம்|குலம்]] 737-739 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலர்]] 739-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலுக்மேன், எர்மன் மேச்சு|குலுக்மேன், எர்மன் மேச்சு]] 740-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்க சோழ சரிதை|குலோத்துங்க சோழ சரிதை]] 740-741 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குலோத்துங்கன்|குலோத்துங்கன்]] 741-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவலயானந்தம்|குவலயானந்தம்]] 745-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சீ|குவாங்சீ]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்சென|குவாங்சென]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாங்துங்கு|குவாங்துங்கு]] 746-747 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாசிரோப் பழங்குடி|குவாசிரோப் பழங்குடி]] 747-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடல்கானல்|குவாடல்கானல்]] 748-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலாசாரா|குவாடலாசாரா]] 749-749 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாடலூப்பு|குவாடலூப்பு]] 749-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாதிமாலா|குவாதிமாலா]] 750-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாம்|குவாம்]] 751-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயசு|குவாயசு]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் துறைகமும்|குவாயாக்கீல் துறைகமும்]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாயாக்கீல் வளைகுடா|குவாயாக்கீல் வளைகுடா]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவாலியர்|குவாலியர்]] 752-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவிசுலிங்கு, வீட்குன்|குவிசுலிங்கு, வீட்குன்]] 755-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவின்டில்யன், மார்க்கசு பாபியன்|குவின்டில்யன், மார்க்கசு பாபியன்]] 755-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீபசெவு|குவீபசெவு]] 755-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவீன்சுலாந்து|குவீன்சுலாந்து]] 755-757 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவெட்டா|குவெட்டா]] 757-757 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவேசோ|குவேசோ]] 757-757 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவைத்து|குவைத்து]] 757-760 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குவோமின்டாங்கு|குவோமின்டாங்கு]] 760-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை, அ.மு|குழந்தை, அ.மு]] 761-762 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை உளவியல்|குழந்தை உளவியல்]] 762-764 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கவிராயர்|குழந்தைக் கவிராயர்]] 764-765 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைக் கொலை|குழந்தைக் கொலை]] 765-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் சத்துணவுத் திட்டம்|குழந்தைகள் சத்துணவுத் திட்டம்]] 766-770 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைகள் பூங்காப் பள்ளி|குழந்தைகள் பூங்காப் பள்ளி]] 770-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் திருமணம்|குழந்தைத் திருமணம்]] 772-778 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தைத் தொழிலாளர்|குழந்தைத் தொழிலாளர்]] 778-784 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழந்தை நலம்|குழந்தை நலம்]] 784- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ d4v9xc0ud8re9djjdsx29zljhmyl3s1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/806 250 651519 1958207 2026-08-14T14:16:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர் எழுதி வெளியிட்ட கட்டுரைகள் நல்லுரைக் கோவை (4 பாகங்கள்), நினைவுமஞ்சரி (2 பாகங்கள்), நான் கண்டதும் கேட்டதும் என்னும் நூல்களாக வெளிவந்தன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாமிநாதையர்‌, உ.வே. டாக்டர்‌|780|சாமிநாதையர்‌ நூல்நிலையம்‌}}</noinclude>இவர் எழுதி வெளியிட்ட கட்டுரைகள் நல்லுரைக் கோவை (4 பாகங்கள்), நினைவுமஞ்சரி (2 பாகங்கள்), நான் கண்டதும் கேட்டதும் என்னும் நூல்களாக வெளிவந்தன. பழையதும் புதியதும், சங்க காலத் தமிழரும் பிற்காலத் தமிழரும், மணிமேகலைக் கதைச் சுருக்கம், சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம், உதயணன் கதைச்சுருக்கம், புத்தசரிதம், திருக்குறளும், திருவள்ளுவரும், மத்தியார்ச்சுன மான்மியம் என்பன இவர் எழுதிய பிற கட்டுரை நூல்கள். மணிமேகலைக்கும் குறுந்தொகைக்கும் இவர் உரையெழுதியுள்ளார். இவர் பதிப்பித்த பிற நூல்களுக்கு இவர் எழுதிய குறிப்புரைகள் விளக்கம் செறிந்தனவாகவும் ஒப்புமை அகராதி போலவும் அமைந்தவையாம். மணிமேகலை உரை சிலப்பதிகார அரும்பத உரை போல அமைந்தது. குறுந்தொகை உரை அவர்தம் எண்பத்திரண்டாம். அகவையில் எழுதி நிறைவு செய்யப்பெற்றது. ஆகவே, அவருடைய ஆழமான புலமையும் பட்டறிவும் அவ்வுரையில் புலனாகின்றன. டாக்டர் உ.வே.சா. இசையீடுபாடு நிறைந்தவராகலின் தனம் கிருட்டிணையர், கோபால கிருட்டிண பாரதியார், மகா வைத்தியநாதையர் ஆகிய இசை மேதைகளின் வாழ்க்கை வரலாறுகளைச் சுவைபட எழுதியுள்ளார். வித்துவான் தியாகராச செட்டியார் வரலாற்றை எழுதிய டாக்டர் உ.வே.சா. தமக்குக் கல்லூரிப் பணி கிடைக்க உதவிய நல்லறிஞர் அவர் என்பதனை நினைவு கூரும் வகையில் தம் வீட்டிற்குத் தியாகராச விவாசம் என்றும், தம் வெளியீடுகளுக்குத் தியாகராச விலாச வெளியீடு என்றும் பெயரிட்டார். மீனாட்சி சுந்தரம்பிள்ளை (கி.பி. 1815–1879) அவர்களை ஆசிரியராகக் கொண்டு தாம் கற்றது ஆறு ஆண்டுகளே எனினும், அவரது வாழ்க்கை வரலாற்றை முப்பத்தைந்து ஆண்டுகள் ஆய்ந்து இரண்டு பாகங்களாக வெளியிட்டார். தம் வரலாற்றை எழுதுவதில் ஆர்லங் காட்டாதிருந்த அவரைக் கல்கியும், டி.கே. சிதம்பரநாத முதலியாரும் வற்புறுத்தியதால், ஆனந்தவிகடன் வார இதழில் 1940 முதல் 1942–இல் அவர் இறப்பது வரை தொடர்ந்து 122 வாரங்கள் தம் வரலாற்றைத் தொடர்போல் எழுதினார். ‘என் சரித்திரம்’ என்னும் பெயர் தாங்கிய அந்நூல் அவரது நாற்பத்து மூன்று வயது வரையுள்ள வரலாற்றையே பெற்றுள்ளது. நூற்பதிப்பு வரலாறும் நண்பர்கள் வரலாறும் நிரம்பிய அந்நூலில் டாக்டர் உ.வே.சா. அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றி மிகச் சிறிய அளவிலேயே உள்ளது. டாக்டர் உ.வே.சா. தாம் பதிப்பித்த நூல்களுக்கு ஆராய்ச்சி முன்னுரை எழுதும் வழக்கமுடையவர். அதில் ஏடு தேடி அலைந்த வகைகளையும் பட்ட சிரமங்களையும் விரிவாக எழுதியுள்ளார். கிடைத்த ஏட்டுப் பிரதிகள், அவற்றுக்கிடையேயுள்ள வேற்றுமைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். பல ஏடுகளை ஒப்பிட்டுப் பாடபேதம் பிரதிபேதம், போன்றவற்றைக் குறித்தும் ஒப்புமையகராதி ஒன்றை அமைத்தும் அரும்பதவுரை இணைத்தும் முற்றிலும் அறிவியல் நோக்கப் பதிப்பாகத் தம் பதிப்புகளைக் கொண்டு வந்தார். ஒரு நூலின் இரண்டாம் பதிப்பில் முன் பதிப்பின் தவறுகளைச் சுட்டித் திருத்துவதுடன் புதுச் செய்திகளையும் இணைப்பது இவரது வழக்கம். {{Right|<b>பூ.சொ.</b>}} <section end="சாமிநாதையர்‌, உ.வே. டாக்டர்‌"/> <section begin="சாமிநாதையர், சி.வி."/> {{dhr}} {{larger|<b>சாமிநாதையர், சி.வி.</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழறிஞர், இவர் தஞ்சை மாவட்டத்ளதச் சேர்ந்த திருவையாற்றில் கி.பி. 1863–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தமிழ்ப் புலமையோடு ஆங்கில அறிவும் நிரம்பப் பெற்றவர். இவர் சுதேசமித்திரன் இதழின் துணையாசிரியராக கி.பி. 1885–இல் பொறுப்பேற்று ஏழாண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் அதன் தலைமையாசிரியருமானார். அறிஞர் பலரின் துணைக்கொண்டு இவர் விவேக சிந்தாமணி என்னும் திங்கள் இதழையும் தொடங்கி நடத்தினார் இவ்விதழில் கட்டுரை எழுதிய குறிப்பிடத்தக்க அறிஞர்கள் வி.கோ. சூரியநாராயண சாத்திரியார், இராசமையர் மாதலையர் முதலியோராவர், இவ்விதழ் 1920–ஆம் ஆண்டு முடிய நடைபெற்றது. இவர் கொல்சர்ட்டுச் சரித்திரம் என்னும் நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இது விவேகசிந்தாமணியிலிருந்து தொகுத்து கி.பி. 1897-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூல் துணிக்கடையில் பணியில் சேர்ந்த ஒருவன் தன் சொந்த முயற்சியினால் முன்னேற்றமடைந்து முதலமைச்சர் பதவியையும் பெற்ற வரலாற்றைச் சொல்வதாக உள்ளது. {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சாமிநாதையர், சி.வி."/> <section begin="சாமிநாதையர் நூல்நிலையம்"/> {{dhr}} {{larger|<b>சாமிநாதையர் நூல்நிலையம்:</b>}} டாக்டர் உ.வே. சாமிநாதையர் மறைவுக்குப்பின், அவர் மகன் கலியாணசுந்தரமையர் தம் தந்தையின் நினைவுச் சின்னமாக ஒரு நூலகம் அமைக்கவேண்டும் என்று கருதினார். அதன்பயனாகச் சென்னை, அடையாறு கலாட்சேத்திரத்தை நிறுவியவரும், சிறந்த பரதநாட்டியக் கலைஞருமான உருக்மணி அருண்டேல் அம்மையார் உதவியுடன் அவரைத் தலைவராகக் கொண்டு 1943–ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 7–ஆம் நாள் ‘மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்’ என்ற பெவருடன் இந்த நூலகம் தோன்றியது. அன்று தொடங்கி இந்த நூலகம்<noinclude></noinclude> ngkya3bytsyhjzfcqwk4qpv3074pl7j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/807 250 651520 1958210 2026-08-14T14:30:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘கலாட்சேத்திரத்தின்’ ஓர் அங்கமாகவே இயங்கி வருகிறது. தொடக்கத்தில் இது அடையாறு பிரம்மஞான சங்கத்தின் நூலகமான அடையாறு நூலகத்தின் ஓர் அதை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாமிநாதையர்‌ நூல்நிலையம்‌|781|சாமுண்டிக் குன்றுகள்}}</noinclude>‘கலாட்சேத்திரத்தின்’ ஓர் அங்கமாகவே இயங்கி வருகிறது. தொடக்கத்தில் இது அடையாறு பிரம்மஞான சங்கத்தின் நூலகமான அடையாறு நூலகத்தின் ஓர் அதைவில் இயங்கியது. இந்த நூலகம் 1964-ஆம் ஆண்டு ஒரு ‘பதிவு பெற்ற கழகமாக’ மாற்றியமைக்கப்பட்டது. இதனை நிருவகிக்க ஒரு செயற்குழுவும், செயற்குழுவைத் தேர்ந்தெடுக்க ஒரு பொதுக்குழுவும் கொண்டு இந்த நூலகம் செயற்படுகிறது. மைய–மாநில அரசுகளும், தனியார் பலரும் கொடுத்த பொருளுதவியால் இந்த நூலகத்திற்கு ஒரு கட்டடம் சென்னை-திருவான்மியூரில் கட்டப்பட்டுள்ளது.அங்கு இந்நூலகம் இப்போது செயற்பட்டு வருகின்றது. இங்குப் பணிபுரியும் ஊழியர்களுக்குரிய ஊதியத்தை மாநில அரசு மானியமாகக் கொடுத்து வருகிறது. மைய அரசு, நூல் வெளியீடுகளுக்கும், நூலக வளர்ச்சிப் பணிகளுக்கும் பொருளுதவி புரிந்துவருகிறது. ஐயர் தம் வாழ்நாள் முழுதும் தேடிச் சேமித்த ஓலைச் சுவடிகள்-காகிதச் சுவடிகள், நூல்கள் ஆகியவற்றை இங்குக் காணலாம். ஐயரால் முதன் முதலில் வெளியிடப்பட்ட சங்க இலக்கியங்கள்–காப்பியங்கள் தலபுராணங்கள் ஆகியற்றின் மூலச்சுவடிகளும் இந்த நூல்களின் முதற்பதிப்புத் தொடங்கி அடுத்தடுத்த பதிப்புகளும் வரிசையாகக் காட்சிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு பதிப்பில் பிழை புகுந்துவிட்டால் அதனை நேர்மையுடன் ஏற்று மறு பதிப்பில் திருத்திக் கொள்வதும், முதற்பதிப்பில் புரியாமலிருக்கும் பகுதிகள் பிற்கால ஆய்வில் தெளிவுற்றால் அவற்றைப் புதிதாகப் பிற பதிப்புகளில் சேர்ப்பதும் ஐயரின் செயல்கள். இவற்றை ஆய்வாளர்கள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் பொருட்டு இவை ஆய்வாளர்கள் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதிப்பின் அடுத்தடுத்த பதிப்புகள் தெளிவாக வெளிவருவதற்காக ஐயர் கைப்பட எழுதிய பென்சில் குறிப்புகளையும் வண்ண வண்ண மசியால் எழுதியுள்ள குறிப்புகளையும் இந்த நூல்களில் காணலாம். தேவாரத்தைத் தினமும் பாராயணம் செய்யும் வழக்கமுடையவராதலால் அவ்வப்பொழுது எழுதி வைக்கப்பெற்ற பல செய்திகளைப் பல குறிப்பேடுகளில் குறித்துவைத்துள்ளார். இவை தேவார ஆய்வாளர்களுக்கும், தமிழன்பர்களுக்கும் ஒரு விருந்து. அதைப்போலவே அகநானூறு, நற்றிணை, திவ்வியப் பிரபந்தம், தல புராணங்கள், சிற்றிலக்கியங்கள் பற்றிய பல செய்திகளையும், பலவகைக் குறிப்புகளையும் ஐயர் குறித்துவைத்துள்ளார். அவை அவரது ஆராய்ச்சியின்போது பயன்பட்டனவும் இனி பயன்படக்கூடியனவுமான செய்திகளைத் தாங்கியுள்ள காகிதக் குறிப்புகள். இவை இந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை ஆராய வசதியாக இருக்கும்பொருட்டுப் படி எடுக்கப்பட்டுத் ‘தமிழ்க் கருவூலம்’ என்ற பெயரில் சுமார் 26 தொகுதிகளாக வைத்துள்ளனர். மேலும் 19–20–ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து புகழுடன் விளங்கிய இசைக் கலைஞர்களைப் பற்றிய சரித்திரச் சுருக்கமும், தமிழ்ப் புலவர்களின் வரலாறும், இன்றும் அச்சில் வாராத தமிழ்ப் பிரபந்த நூல்களும் வைக்கப்பெற்றிருப்பது இந்த நூலகத்தின் சிறப்பாகும். ஐயருடன் நெருங்கிப் பழகிய தமிழறிஞர்கள் ஐயருக்கு எழுதிய பல கடிதங்களை இங்குக் காணலாம். குறிப்பாக, சி.வை. தாமோதரம்பிள்லை, திரு.வி.க., வ.உ. சிதம்பரம்பிள்ளை, ஔவை துரைசாமிப்பிள்ளை, மு. இராசுவையங்கார், வை.மு. கோபால கிருட்டிணமாச்சாரியார், பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார், போப்பையர், சூலியோவின் சோன் ஆகிய புலவர்களைக் குறிப்பிடலாம். ஐயருக்கு மகாமகோபாத்தியாய பட்டத்தை ஆங்கில அரசு கொடுத்தபோது பாரதியாரால் புகழ்ந்து பாடிய மூன்று பாடல்களும் (அவர் கைப்பட எழுதியவை) இன்றும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் ஓலைச் சுவடிகள் சுமார் 2326–உம், காகிதச் சுவடிகள் 741–உம் இருக்கின்றன. இந்தச் சுவடிகளின் விவரப் பட்டியலாக (Descriptive Catalogue) 6 தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஐயர் படித்த நூல்களும், அவரது பார்வைக்காக அனுப்பப்பட்ட நூல்களும், பிற்காலத்தில் நூலகத்திற்காக வாங்கப்பட்ட நூல்களுமாக சுமார் 19575க்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. 44 ஆண்டுக் காலமாக இயங்கிவரும் இந்நூலகத்தில் வெளியீடுகளாக ஏறத்தாழ 101க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. பல ஆய்வாளர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆய்வாளர்களுக்கு வசதியாக இருக்கும் பொடுட்டு நகல் எடுக்கப் பயன்படும் இயந்திரம் (Xerox) பயன்பட்டு வருகிறது. சில சுவடிகள் நுண்படம் (Micro Film) எடுக்கப்பட்டும் பாதுகாக்கப்படுகின்றன. ஐவர் செய்து வந்த தமிழ்ப் பணியை இந்த நூலகமும் தொடர்ந்து செய்துவருகிறது. {{Right|<b>ந.சீ.</b>}} <section end="சாமிநாதையர்‌ நூல்நிலையம்‌"/> <section begin="சாமுண்டிக் குன்றுகள்"/> {{dhr}} {{larger|<b>சாமுண்டிக் குன்றுகள்:</b>}} இக்குன்றுகள் கருநாடக மாநிலத்தில் எழில் வாய்ந்த மைசூர் நகரத்தில் உள்ளன. இங்குள்ள சாமுண்டீசுவரி கோயில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோயிலுக்குச் செல்லும் பாதை 1095 மீட்டர் உயரமுள்ளது; 13 கிலோ மீட்டர் நீளமுள்ளது. பாதையில் 1000 கற்படிகள் உள்ளன. இப்படிகள் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொட்டதேவராசனால் உருவாக்கப்பட்டவை. ஒரே கல்லினால் உருவாக்கப்பட்ட<noinclude></noinclude> g4qyhzhlhrfh4xog0ps8xuxf1p51khx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/808 250 651521 1958214 2026-08-14T14:44:31Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "16 அடி உயரமுள்ள எருது இக்கோயிலின் சிறப்புக் கூறாகும். சாமுண்டி (Chamundi) கோயிலில் குடி கொண்டிருக்கும் அன்னை சாமுண்டீசுவரி, உடையார் மரபினரால்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாமுராய|782|சாமோசு}}</noinclude>16 அடி உயரமுள்ள எருது இக்கோயிலின் சிறப்புக் கூறாகும். சாமுண்டி (Chamundi) கோயிலில் குடி கொண்டிருக்கும் அன்னை சாமுண்டீசுவரி, உடையார் மரபினரால் அன்றாடம் வழிபடும் குடும்பத் தெய்வமாகும். ஏழு கன்னிகளில் ஒருத்தி இத்தெய்வம், இவன் பல தலைகள் கொண்ட மாலை அணிந்துள்ளாள். மார்பின் குறுக்கே பாம்புகளை மாலையாக அணிந்துள்ளாள். இவளது முடி தீப்பொறியைப் போன்று தோன்றும். மகிடாசுரனின் பெரிய சிலையும் இக்கோயிலில் உள்ளது. மக்களின் அமைதிக்காக இவன் சாமுண்டீசுவரியால் கொல்லப்பட்டான். களிமண்ணினால் ஆகிய இச்சிலை 30 ஆண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்டது. இச்சிலையின் கரங்களில் கத்தியும் பாம்பும் இருக்கின்றன. இவைகளின் வண்ணம் காண்போரைத் திகிலடையச் செய்யும் ஓர் அரிய கலைப்படைப்பு. இக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கோயில் கூம்பு வடிவமுள்ளது. சாமுண்டிக்குன்றுகள் சுற்றுலா மையமாகவும் திகழ்கின்றன. இப்போது உணவுவிடுதியாக ஆக்கப்பட்ட இலலிதமகால் என்று சொல்லப்படும் ஓர் கவின்பெறு அரண்மனையும் இங்குள்ளது. இத்தாலிய பாணியில் அமைக்கப்பட்ட மாடிப் படிகள் இக்கலைக் கருவூலத்தில் உள்ளன. {{Right|<b>கே.சே.</b>}} <section end="சாமுண்டிக் குன்றுகள்"/> <section begin="சாமுராய்"/> {{dhr}} {{larger|<b>சாமுராய்</b>}} சப்பானிய வீர குலத்தவர். சாமுராய் என்னும் பெயர் உயர்குலப் போர் மரபினரை மட்டும் குறிப்பதற்காகத் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், கி.பி. 12–ஆம் நூற்றான்டில் சாமுராய் (Samurai) இனத்தவருடன் பிற இனத்தாரும் ஒன்றுபட்டு ஆட்சியைக் கைப்பற்றியதால், போர் மரபினைச் சேர்ந்த அனைவரையும் குறிக்கும் சொல்லாகும். காமக்குரா (Kamakura) காலத்தில் (கி.பி. 1192-1333) இவர்கள் படைத்துறையில் மிகுந்த திறன் பெற்றவர்களாகவும், இன்ப துன்ப நடுநிலைக் கோட்பாட்டில் (Stoicism) மிகுந்த பற்றுடையவராகவும் வளர்ந்து, தமக்கென்று ஒரு தனித்தன்மையை நிலைநிறுத்திக் கொண்டனர். முரோமாச்சி (Muromachi) காலத்தில் (கி.பி. 1338–1573) மிகவும் செழிப்புற்ற நிலையில் சென் புத்த தத்துவம் (Zen Buddhism) இருந்த நேரத்தில் சாமுராய் பண்பாடு அதன் உச்ச நிலையை எட்டியது எனலாம். தேயிலைச் சடங்கு (Tea Ceremony), பூக்கள் ஒப்பனை முதலான கலைகள் சப்பானியப் பண்பாட்டின் தனித்தன்மைகளாக இருந்தன. பூக்கள் ஒப்பனை இன்றும் தொடர்ந்து வரும் ஒரு சிறப்புக் கூறாகத் திகழ்கிறது. சாமுராய் மக்களின் கட்டுப்பாடும் கடமை உணர்வும் இவர்கள் மரபு வழியில் வரும் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதைக் காட்டுகிறது. இவர்கள் வாழ்வில் ஒழுக்கம், வெற்றி ஆகிய இரண்டும் இன்றியமையாதன. ஒழுக்கம் தவறியவர்களையும் தோல்வியைத் தழுவியவர்களையும் சடங்கு முறைத் தற்கொலை (Ritual Suicide) மூலம் கொல்லும் முறையை இவர்கள் கொண்டிருந்தனர். தோக்குகாவா (Tokugawa) காலத்தில் (கி.பி. 1603-1867) சாமுராய் மக்கள்தொகை மொத்தக் குடித் தொகையில் 10 விழுக்காடேயாகும். இந்தக் காலத்தில் இவர்கள் கட்டுக்கோப்பான குழுவினராக இருக்க வேண்டியிருந்ததால் அதன் தொடர்ச்சியாக இன்றும் இருகத்திகள் குறியிட்ட ஆடையை அணிந்து கொண்டுள்ளனர். ஆயினும், புதிய வணிகத் தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டது. சப்பானில் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புதிய நகரங்களும் வாணிக அடிப்படையிலான பொருளாதாரமும் நகரப் பண்பாட்டை மேலோங்கச் செய்தன. அதனை ஏற்காமல் சாமுராய் மக்கள் தங்கள் மரபுவழி வாழ்க்கையைத் தொடர முடியவில்லை. சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்த இவர்கள் தோக்குகாவா காலத்தில் பல நிலைகளில் தகுதி இழந்தார். மேலைநாட்டுச் செல்வாக்கு கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் சப்பானில் பரவத் தொடங்கியபோது இவர்களும் தங்கள் பொருளாதார நிலையை வலுப்படுத்திக் கொள்ளவேண்டியிருந்தது. அதனால் தோக்குகாவா அரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யும் இயக்கத்தைத் தோற்றுவித்தனர். மீசி (Meiji) ஆட்சி கி.பி. 1868–இல் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் கி.பி. 1871–இல் நிலமானிய அரசு முழுவதுமாக ஒழிக்கப்பட்டதால் சாமுராய் மரபினரின் செல்வாக்குக் குறைந்து போயிற்று. அதனால், கி.பி. 1870–களில் சாமுராய் மரபினர் பல கிளர்ச்சிகளைச் செய்தனர். ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய படை சாமுராய்களை முற்றிலும் ஒடுக்கிவிட்டது. {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சாமுராய"/> <section begin="சாமோசு"/> {{dhr}} {{larger|<b>சாமோசு,</b>}} ஈசியன் (Aegcan) கடலில் உள்ள ஒரு தீவு. இது 43 கிலோமீட்டர் நீளமும் 23 கி.மீ. அகலமும் கொண்டது. இதன் பரப்பு 778 ச.கி.மீ. மக்கள்தொகை 1971-இன் கணக்குப்படி 41,709. இதன் தலைநகரின் பெயரும் சாமோசு. <b>வரலாற்றுப் பின்னணி:</b> இத்தீவில் வெண்கலக் காலத் தொடக்க நிலையில், மைசினியன் கிரேக்கர்கள் வசித்துவந்தனர். பின்னர்த்தான் அயோனியன் (Ionian) கிரேக்கர் வந்தனர். இது கி.மு. 7–ஆம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் புகழ்மிக்க வாணிக<noinclude></noinclude> 4lyq95d9gvix9m84cog1o27uyz8xeb0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/809 250 651522 1958247 2026-08-15T10:12:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இடங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது. சாமியன்கள் (Samians) எனப்படும் இப்பகுதி மக்கள் கருங்கடல், எகிப்து ஆகியவற்றுடன் வாணிகம் செய்தனர். சிப்ரால்டர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாய்ந்த கோபுரம்‌|783|சாயர்புரம்}}</noinclude>இடங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது. சாமியன்கள் (Samians) எனப்படும் இப்பகுதி மக்கள் கருங்கடல், எகிப்து ஆகியவற்றுடன் வாணிகம் செய்தனர். சிப்ரால்டரை அடைந்த முதல் கிரேக்கர்கள் இவர்களே. வாணிகத் தொடர்பின் காரணமாகச் சிரின் (Cyrene), கொரிந்து (Corinth), சாகிசு (Chakis) ஆகியவற்றுடன் இவர்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. {{Right|<b>கே.கி.</b>}} <section end="சாமோசு"/> <section begin="சாய்ந்த கோபுரம்"/> {{dhr}} {{larger|<b>சாய்ந்த கோபுரம்:</b>}} இது இத்தாலியில் பைசா நகரிலுள்ள கோபுரம், சாய்ந்து காணப்படுவதால் இக்கோபுரம் இப்பெயரைப் பெற்றது. இன்றைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. இக்கோபுரம் உயரே செல்லச் செல்ல ஒரு பக்கம் சாய்ந்து விழுவது போல் காட்சியளிக்கிறது. இக்கோபுரத்தை கி.பி. 1173–ஆம் ஆண்டில் தொடங்கி கி.பி. 1372–ஆம் ஆண்டில் கட்டிமுடித்தனர். இக்கோபுரம் ஒவ்வோராண்டும் சிறிது சிறிதாக ஒருபக்கம் சாயத்தொடங்கியது. இச்சாய்வு 1970–ஆம் ஆண்டுகளில் நின்றுவிட்டது. கலிலியோ கி.பி. 1589–ஆம் ஆண்டு தம் புவியீர்ப்பு ஆய்வை இக்கோபுரத்தின் மீதிருந்தே செய்தார் எனப் பலர் கருதுகின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 809 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 276 |oTop = 297 |oLeft = 51 |Location = center |Description = }} {{center|சாய்ந்த கோபுரம்}} சாய்ந்த கோபுரம் 54 மீட்டர் உயரம் உடையது. கோபுரம் முழுமையும் சலவைக் கல்லால் கட்டப்பட்டது. இது உரோமானிய வழிப்பாணிக் கட்டடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இச்சாய்ந்த கோபுரமும் இதன் அருகில் உள்ள தேவாலயமும் உலகப் புகழ் பெற்ற உரோமானிய வழிப்பாணிக் (Romanesque Architecture) கட்டடங்களாகும். கோபுரத்தின் அடிச்சுலர்ப் பகுதி 4 மீ. கனமும், மேற்சுவர்ப் பகுதி 2.1.மீ. கனமும் உடையன. கோபுரத்தின் முதல் தளத்தில் 15 தூண்கள் வளைவமைப்பு முகப்புகளுடன் கோபுரத்தைச் சுற்றிக் காணப்படுகின்றன. அதனை அடுத்துள்ள 6 தளங்களில் 30 தூண்கள் வளைவமைப்புகளுடன் கோபுரத்தைச் சுற்றிக் காணப்படுகின்றன. மேல் தளத்தில் 12 தூண்கள் உள்ளன. இத்தளத்தில் மணி ஒன்று உள்ளது. கோபுரத்தின் உட்பகுதியில் உச்சிக்குச் செல்ல 300 படிக்கட்டுகள் உள்ளன. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சாய்ந்த கோபுரம்"/> <section begin="சாயர்புரம்"/> {{dhr}} {{larger|<b>சாயர்புரம்</b>}} சிதம்பரனார் மாவட்டத்தில், தூத்துக்குடியிலிருந்து ஏறக்குறைய 20 கி.மீ. தொலைவிலுள்ள ஊர். இராபர்ட்டு புரூசு பூட்டு (Robert Bruce Foote) என்பவர் இங்குக் கடைக்கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்தார். அது குறித்து ஐயப்பன் என்பவர் 1945-இல் கட்டுரை ஒன்று எழுதினார். அதன் பின்னர் இவ்வூரில் தொல்லியல் அறிஞர்கள் கடைக்கற்காலக் கருவிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். இவ்வூரில் ‘தேரிகள்’ எனப்படும் மணல் திட்டுகள் உள்ளன. இத்திட்டுகள் இன்றைய கடல் மட்டத்திலிருந்து 20 அடி (6 மீ.) உயரத்தில் உள்ளன. இத்திட்டுகளுக்கும் கடற்கரைக்கும் இடையில் உப்பங்கழிகள் முன்பு இருந்தன. இப்பொழுது மணல் திட்டுகளே மேடுகளாக உள்ளன. இம்மணல் திட்டுகள் பவழத் திரள்களாலும் கடல்வாழ் துண்ணுவீர்ச் சிதைவுகளாலும் உருவானவையாகும். இத்திட்டுகளில் கடைக்கற்காலக் கருவிகள் பெருமளவில் கிடைக்கின்றன. இத்திட்டுகளின் அடியிலுள்ள மணல் நாளடைவில் வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி, நிறம் மாறிச் சிவந்த நிலையில் உள்ளது. மேல் மண்ணின் நிறம் பெரிதும் மாறவில்லை. இங்குக் கிடைக்கும் கற்கருவிகளும் சிவப்பு நிறத்தைப் பெற்றிருப்பதனால் அவை கீழேயுள்ள செந்நிற மணலுக்குச் சமகாலத்தவை எனலாம். இம்மணல் படிந்த காலத்தில் கடல் நீர் மட்டம் இப்போது இருப்பதைவிட 20 அடி (6 மீ.) உயரத்தில் இருந்தது. அதாவது, இக்கருவிகளைப் பயன்படுத்திய மக்கள் வாழ்ந்திருந்த காலத்திற்குப் பின்னால் கடல் சிறிது பின்சென்று நிலத்தைவிட்டு நகர்ந்துவிட்டது. கடல் தாழ்வு ஏறக்குறைய கி.மு. 4000-இல் அல்லது அதற்குச் சிறிது காலத்திற்கு முன்பு நிகழ்ந்திருக்கக்கூடும். {{nop}}<noinclude></noinclude> jh219jvbjfb9uujrptay5l32fespj8m பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/15 250 651523 1958249 2026-08-15T11:42:18Z Velumani Veluchamy 16585 வருடல் 1958249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தைச் சேர்ந்த ஆங்கிலேயர் ஒருவர் 1906ஆம் ஆண்டு பாளையங்கோட்டைக்கு அடுத்த மருகால்தலை என்னும் ஊருக்குச் சென்றவர், அவ்வூருக்கு அருகில் உள்ள குன்றுகளுக்குச் சென்றார். அங்கு ஒரு குன்றில் இயற்கையாக அமைந்துள்ள குகையின் வாயிலின் அருகில் சென்ற போது குகைவாயிலின் மேற்பாறையில் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருப்பதைக் கண்டார். பிறகு அவர், அந்த எழுத்துக்களைப் பற்றித் தொல் பொருள்- ஆய்வுத்துறை மேலாளருக்குத் தெரி வித்தார். தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலர் மருகால் தலைக் குன்றுக்குப்போய் அங்கிருந்த எழுத்துக்களைப் படி எடுத்து வந்தனர். பிறகு இந்தச் செய்தியை 1907ஆம் ஆண்டு எபிகிராபி ஆண்டு அறிக்கையில் வெளியிட்டார்கள். இந்த எழுத்துக்களை அவர்கள் அப்போது படிக்கத் தெரியாமல் இருந்தார்கள். இந்தக் கல்வெட் டெழுத்து, பிராமி எழுத்தாக இருக்கிறபடியால் இந்தக் கல்வெட்டின் வாசகம் பாலி மொழியில் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். இதற்கு முன்பே வட இந்தியாவிலும் இலங்கையிலும் பிராமி எழுத்துச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட் டிருந்தன. அவை பாலி (பிராகிருத) மொழியில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள். மருகால்தலை பிராமி கல்வெட்டும் பாலிமொழியில் எழுதப்பட்டதென்று அவர்கள் ஊகித்தார்கள். அவர்கள் தங்களுடைய அறிக்கையில் "அசோக மாமன்னருடைய சாசன எழுத்துக்களைப் போன்ற எழுத்தினால் இந்தப் பாலிமொழிச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. பாலி மொழியில் எழுதப்பட்டிருக் கிறபடியால், அந்தப் பழங்காலத்தில் பாண்டி நாட்டில் பாலிமொழி தெரிந்திருந்தது என்பது தெரிகிறது" என்று எழுதினார்கள். இது பிராமி எழுத்தினால் எழுதப்பட்ட தமிழ்மொழி வாசகம் என்பதை அறியாமல் அவர்கள் பாலி மொழி வாசகம் என்று கூறினார்கள். மருகால்தலை பிராமி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வேறு பல பிராமிக் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டிலும் மற்ற இடங் களிலும் புதியவாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனைமலை, திருப்பரங் குன்றம், மாங்குளம் (அரிட்டாபட்டி), முத்துப்பட்டி, வரிச்சியூர், 2. Madras Epigraphy Report, 1907. Part II, Para 1. P. 60.<noinclude></noinclude> ms8cveaw520l9wpnlih2dowb3e8iy2q பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/16 250 651524 1958250 2026-08-15T11:42:55Z Velumani Veluchamy 16585 வருடல் 1958250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>முன்னுரை T அழகர்மலை, கருங்காலக்குடி, கீழவளவு, மேட்டுப்பட்டி (சித்தர் மலை), விக்கிரமமங்கலம் (உண்டான்கல்லு), கொங்கர் புளியங் குளம், சித்தன்னவாசல், புகழூர், அரசலூர், மாமண்டூர், மால கொண்டா முதலான இடங்களில் பழைய பிராமி எழுத்துக் கல் வெட்டுக்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவ்வப்போது எபி கிராபி ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டன. பிராமிக்கு முந்திய எழுத்து தமிழ் இலக்கியங்களின் பழைமையை அறியாதவர்கள், தமிழ் இலக்கியங்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டு, 10ஆம் நூற்றாண்டு களில் தோன்றியவை என்று அக்காலத்தில் எழுதியும் பேசியும் வந்தனர். பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவர்கள் தங்களுடைய கருத்து தவறு என்பதைக் கண் டார்கள். பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கி.மு. 3ஆம் நூற் றாண்டிற்கும், கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத் தவை யாகையால், தமிழ் இலக்கியங்கள் அக்காலத்திலேயே தோன்றிவிட்டன என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், பிராமி எழுத்து தமிழகத்துக்கு வருவதற்கு முன்னமே, வேறு பழைய தமிழ் எழுத்து இருந்தது என்பதையும் அறியாமல், பிராமி எழுத்து தமிழகத்துக்கு வந்தபிறகுதான் தமிழருக்கு எழுத்து கிடைத்தது என்றும் பிராமி எழுத்தினால் அவர்கள் இலக்கியங்களை எழுதினார்கள் என்றும் சிலர் சொல்லத் தொடங்கினார்கள். அஃதாவது கி.மு.3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழில் எழுத்தும் இல்லை; இலக்கியமும் இல்லை என்பது இவர்கள் கருத்து. 3 அரிட்டாபட்டி கழுகுமலைக் குகையில் கண்டு பிடிக்கப்பட்ட கற்படுக்கைகள் பிராமி எழுத்துக்கள் இவற்றைப்பற்றி 1907 ஆம் ஆண்டு கல்வெட்டுத்துறை, இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்து. தமிழ் எழுத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றியும் வட்டெழுத்தின் தோற்றம் வளர்ச்சியைப் பற்றியும் விளக்கந் தருகிற அரிய சான்றாக இருக்கிறது என்று எழுதியமை முன்னமே காட்டினோம்.<noinclude></noinclude> 3y3g6mwzid3537en09anqubehnsym85 பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/17 250 651525 1958251 2026-08-15T11:43:28Z Velumani Veluchamy 16585 வருடல் 1958251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>8 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் 'தமிழ் நாட்டின் தெற்கு வட்டாரங்களில் பாறைகளிலும் குகைகளிலும் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் எழுதப்பட்டவை. அந்தக் கல்வெட்டுக்கள், தமிழ் எழுத்தும் தமிழ்மொழியும் உருவடைந்துகொண்டிருந்த காலத்தைத் தெரிவிக்கின்றன. தமிழரின் வட இந்தியக் கலாசாரத் தொடர்பு வளர்ச்சிக் காலத்தை இவை தெரிவிக்கின்றன' என்று திரு.கே.ஏ. நீலகண்ட சாத்திரி எழுதியுள்ளார்.' (கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே பிராமி எழுத்து தமிழகம் வந்துவிட்டது. சாத்திரி கி.மு. முதல் நூற்றாண்டு என்று நூற்றாண்டு என்று காலத்தைக் குறைத்துக் கூறுகிறார்.) - தமிழ்நாட்டு வரலாற்றைப் பொறுத்தவரையில் பல தவறான கருத்துக்களை வெளியிட்ட திரு நீலகண்ட சாத்திரி பிராமி எழுத்தைப் பற்றியும் தவறாகக் கூறியுள்ளார். திரு நீலகண்ட சாத்திரியின் இந்தத் தவறான கருத்தை ஐரோப்பியத் தமிழறிஞராகிய டாக்டர் கமல் சுவலபில் அவர்களும் ஆராயாமல் இவரைப் பின்பற்றுவது வியப்பாக இருக்கிறது. இந்த அறிஞர், சாத்திரி கூறிய தவறான கருத்தையே பொன்போலப் போற்றி எழுதியுள்ளார். அசோகருடைய காலத்தில் அல்லது அவருடைய காலத்துக்குச் சற்றுப் பிறகு தமிழ் எழுத்து தமிழருக்குத் தெரிந் திருந்தது. கி.மு. 2ஆம் நூற்றாண்டளவில் தமிழ் மொழிக்குத் தமிழ்-பிராமி எழுத்து அமைத்துக்கொள்ளப்பட்டது. அமைத்துக் கொண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு அவ்வெழுத்து இலக்கியம் எழுதப் பயன்படுத்தப்பட்டது என்னும் கருத்துப்பட டாக்டர் சுவலபில் எழுதுகிறார். இந்தத் தவறான கருத்தையே அவர் மீண்டும் இன்னோர் இடத்தில் எழுதுகிறார்: கி.மு.250 ல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் அசோகன் (கி. மு. 272-232) 3. Sangam literature: its cults and cultures, K. A. Nilakanta Sastri, 1962, p.4. 4. The smile of Murugan, Dr. Kamil Zvelebil, 1973, p. 25.<noinclude></noinclude> 44lc797m63safr2abg1fozbed3h0ogm பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/18 250 651526 1958252 2026-08-15T11:44:06Z Velumani Veluchamy 16585 வருடல் 1958252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>முன்னுரை உடைய தெற்குப் பிராமி எழுத்து தமிழ் ஒலியமைதிக்குப் பொருந்தத் தமிழில் அமைத்துக்கொள்ளப்பட்டது. கி.மு.200-100 க்கு இடையில் பௌத்த- சைனத் துறவிகள் இருந்த இயற்கைக் குகைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டன என்று கூறுகிறார்.5 இவை ஆழ்ந்து ஆராயாமல் மேற்போக்காகக் கூறப்படுகிற கருத்துக்கள். தமிழின் பழைமையை யறிந்தவர், பிராமி எழுத்து வருவதற்கு முன்பு தமிழில் எழுத்து இல்லை, நூல்கள் இல்லை என்று கூறமாட்டார். தொடக்ககாலத்தில் தமிழில் ஏதோ ஒருவகையான தமிழ் எழுத்து வழங்கி வந்தது. பிராமி எழுத்து தமிழகத்துக்குப் புதிதாக வந்த பிறகு, அதற்கு முன்பு வழங்கிவந்த பழைய தமிழ் எழுத்து மறைந்துபோய், பிராமி எழுத்து நிலைத்துவிட்டது. 'பழையன கழிதலும் புதியனபுகுதலும், வழுவல கால வகையி னானே' என்பது எழுத்து மாறுதலுக்கும் பொருந்தும். பழைய எழுத்தை மாற்றிப் புதிய எழுத்தை மேற்கொண்டதைத் துருக்கி நாட்டிலும் காண்கிறோம். துருக்கி மொழியின் பழைய எழுத்து அரபி எழுத்து. அரபி எழுத்தில் பழைய துருக்கி மொழி இலக்கியங்கள் எழுதப்பட்டன. அண்மைக் காலத்தில் துருக்கி நாட்டில் சீர்திருத்தங்களை உண்டாக்கிய துருக்கியின் தந்தை எனப்படும் ஆட்டா டர்க் என்பவர் பழைய அரபி எழுத்தை மாற்றிப் புதிதாக இலத்தீன் எழுத்தை (ஆங்கில எழுத்தை) அமைத்து விட்டார். இப்போது துருக்கியர் துருக்கி மொழி இலக்கியங்களைப் புதிய இலத்தீன் எழுத்தினால் எழுதி வருகிறார்கள். இப்போது இலத்தீன் எழுத்தினால்' எழுதி வருவதனால், இலத்தீன் எழுத்து தான் துருக்கி மொழியின் ஆதி எழுத்து, இலத்தீன் எழுத்து வந்த பிறகுதான் துருக்கி இலக்கியம் உண்டாயிற்று என்று கூறுவது பொருந்துமா? அப்படிக் கூறுவது தவறு அல்லவா? இதுபற்றி விரிவாக எழுதுவதற்கு இஃது இடம் அன்று. பிராமி எழுத்து வந்தபிறகுதான் தமிழர் இலக்கியம் வளர்த் தனர் என்று இவர்கள் - கூறுவது தவறு. பிராமி எழுத்து வருவதற்கு முன்பே கி. மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பே 5. The smile of Murugan, Dr. Kamil Zvelabil, 1973, p. 140-<noinclude></noinclude> ayz8payqy2oiud8kbd49986g66hyrse பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/19 250 651527 1958253 2026-08-15T11:44:50Z Velumani Veluchamy 16585 வருடல் 1958253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>10 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழில் இலக்கியங்களும் நூல்களும் எழுதப்பட்டிருந்தன. கி.மு. 8ஆம் நூற்றாண்டிலே தொல்காப்பியம் எழுதப்பட்டது. இவற்றை யறியாமல் பிராமி எழுத்து வந்த பிறகுதான் தமிழில் இலக்கியம் தோன்றியது என்று இவர்கள் கூறுவது தவறு. பிராமி எழுத்து வருவதற்கு முன்பு பழைய தமிழ் எழுத்து தமிழகத்தில் வழங்கி வந்தது. பிராமி எழுத்து வந்த பிறகு பழைய தமிழ் எழுத்து மறைந்துவிட்டது என்பதுதான் தமிழின் பழைமைக்கும் வரலாற் றுக்கும் பொருத்தமானது. வடக்குப் பிராமியும் தெற்குப் பிராமியும் பிராமி எழுத்து வடஇந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் அக்காலத்தில் வழங்கிவந்தது. ஆனால் தென்னிந்திய பிராமிக்கும் வட இந்திய பிராமிக்கும் வரி வடிவில் சிறு வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகளை யறியாத காலத்தில் இவை சரியாகப் படிக்கப்படவில்லை. பிறகு தென்னிந்திய பிராமி எழுத்தைச் சரியாகப் படிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஆந்திர நாட்டிலே கிருஷ்ணா வட்டாரத்தில் பட்டிப்ரோலு என்னும் ஊரில் பழங்காலம் பௌத்தத் தூபி ஒன்று உண்டு. அந்தத் தூபியைத் திறந்து தொல்பொருள் ஆய்வாளர் ஆராய்ந்து பார்த்தபோது அந்தத் தூபிக்குள் வட்ட வடிவமான கல் பேழை காணப்பட்டது. அந்தப் பேழையின் விளிம்பைச் சுற்றிலும் பிராமி எழுத்து வாசகம் எழுதப் பட்டிருந்தது. அந்தப் பிராமி எழுத்துக்கும் வட இந்தியப் பிராமி எழுத்துக்கும் சிறு வேற்றுமை காணப்பட்டது. பட்டிப்ரோலு பிராமி எழுத்து தென் இந்திய பிராமி எழுத்துக்களைச் சரியாகப் படிப்பதற்கு உதவியாக அமைந்தது. தென் இந்தியப் பிராமி எழுத்தைத் திராவிடி என்று கூறினார்கள். பட்டிப்ரோலு பிராமி எழுத்து எபிகிராபியா இண்டிகா என்னும் வெளியீட்டில் வெளி யிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுப் பிராமி எழுத்துக்களில் தமிழுக்கே தனிச் சிறப்பாக உள்ள ழ, ற, ன என்னும் எழுத்துக்களும் காணப்படு கின்றன. இந்தச் சிறப்பு எழுத்துக்களைப் பிராமி எழுத்து வருவதற்கு 6. P. 323, Epigraphia Indica, Vol. II.<noinclude></noinclude> d6gk955hxp44mcjzobtv1kipdtfzfab பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/20 250 651528 1958254 2026-08-15T11:45:23Z Velumani Veluchamy 16585 வருடல் 1958254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>முன்னுரை 12: முன்னே தமிழகத்தில் வழங்கிவந்த பழைய தமிழ் எழுத்திலிருந்து எடுத்துப் பிராமி எழுத்துக்களோடு அமைத்துக்கொண்டனர் என்றூ தோன்றுகிறது. பிராமி எழுத்தின் ஒலி வடிவம் பழங்காலத்தில் பாரத நாடு முழுவதும் வழங்கிவந்த பிராமி எழுத்து பிற்காலத்தில், வேறு எழுத்துக்கள் தோன்றிவிட்ட காரணத்தினால், மறக்கப்பட்டு மறைந்துபோயிற்று. நெடுங் காலத்துக்கு முன்பே பிராமி எழுத்துச் சுவடிகள் மறைந்து. விட்டன. ஆனால், மலைப் பாறைகளிலும் குகைகளிலும் எழுதி வைக்கப்பட்ட பிராமி எழுத்துச் சாசனங்கள் அழியாமல் வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் அங்கங்கே இருக்கின்றன. இவற்றையெல்லாம் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்தனர். பிராமி எழுத்தின் வரி வடிவங்களே காணப்பட்டவை யெல்லாம். அவற்றின் ஒலி வடிவங்கள் மறைந்து போயிள. அவற்றின் ஒலி வடிவங்கள் ஒரு வருக்கும் தெரியவில்லை. அசோக மாமன்னரின் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும் மற்றும் வேறு பல பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும், அவ்வெழுத்துக்களின் ஒலி வடிவம் தெரியாத. படியால், படிக்கப்படாமலே கிடந்தன. இந்தக் கல்வெட்டுக்களைப் படிக்க, திறவுகோல் கிடைக்காமல் இருந்தது. கடைசியாக கி.பி. 18ஆம் நூற்றாண்டில் பிரின்ஸிப் என்னும் பெயருள்ள ஆங்கிலேயர் பல காலம் முயன்று பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களைப் படித்துத் திறவுகோலைக் கண்டுபிடித்தார். அஃதாவது பிராமி எழுத்தில் மறைந்துபோன ஒலி வடிவத்தைக் கண்டுபிடித்தார். அக்காலத்தில் ஆங்கிலேய தளபதிக்கு அங்குப் பழங்காசுகள் கிடைத்தன. அந்தக் காசுகளை அவர் வங்காள நாட்டுக்கு அனுப்பினார். பழம் பொருள் ஆராய்ச்சியில் ஈடு பட்டிருந்த பிரின்ஸிப் அந்தப் பழங்காசுகளை ஆராய்ந்தார். அந்தம் பழங்காசுகள் சிலவற்றில் அசோக மன்னர்காலத்து எழுத்துக்கள் (பிராமி எழுத்துக்கள்) பொறிக்கப்பட்டிருந்தன. அக் காசுகளின் மறுபக்கத்தில் பழைய கிரேக்க எழுத்துக்களும் பொறிக்கப்பட்டி<noinclude></noinclude> ry64fw57umv5t59deqpz7hph1jv3lgh பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/21 250 651529 1958255 2026-08-15T11:46:06Z Velumani Veluchamy 16585 வருடல் 1958255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>12 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் ருந்தன. கிரேக்க எழுத்துச் சொற்களே பிராமி எழுத்திலும் எழுதப்பட்டிருந்தது என்பதை யறிந்த இவர் கிரேக்க ஒலியைக் கொண்டு பிராமி எழுத்துக்களின் ஒலியைக் கண்டுபிடித்தார். இப்படிப் பல காலம் உழைத்ததன் விளைவாகப் பழைய பிராமி எழுத்துக்களின் மறைந்துபோன ஒலி வடிவத்தைக் கண்டறிந்தார். பிராமி எழுத்தின் வரி வடிவத்துக்கு ஒலி வடிவம் கண்டுபிடிக்கப் பட்டதனால், பழைய பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் வாசிக்கப் பட்டன. பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த பிராமி எழுத்து வாசகம் 18ஆம் நூற்றாண்டில் படிக்கப்பட்டது. தமிழ்ப் பிராமியின் வாசகம் 1906ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது தமிழ்நாட்டில் ஆங்காங்கிருந்த பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அந்த எழுத்துக்கள் நெடுங்காலம் படிக்கப்படவில்லை. உழம்பொருள் ஆய்வுத் துறையினர், இவ்வெழுத்துக்கள் பாலி மொழி அல்லது பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருப்பதாகக் கருதினார்கள். இந்தக் கருத்து பல ஆண்டுகள் நிலவியிருந்தது. இந்தப் பிராமி எழுத்துக்கள் தமிழ்மொழியில் எழுதப்பட்டன என் பதைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிந்தனர். பிறகு இவ் வெழுத்துக்களைப் படித்த சிலர் தமிழராக இருந்தும் இக் கல்வெட்டு களின் கருத்தைச் சரியாக அறியவில்லை. காரணம் என்னவென்றால், இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட காலத்தில் (கடைச் சங்க காலத்தில்), தமிழ் நாட்டில் இருந்த இலக்கியங்களையும் பழக்க வழக் கங்களையும் நாகரிகங்களையும் அறியாததுதான். மற்றும், இந்திய (ஆரிய) தொடர்புகளை இந்தக் கல்வெட்டுக்களோடு இணைக்கவேண்டும் என்னும் கருத்துடன் இவர்கள் ஆராய்ந்தனர். இதனால் இவர்களுடைய ஆராய்ச்சிகள் பிழைபட்டுள்ளன. அவர்கள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். தவறு இல்லாமல் சரியாக வாசிக்கப்பட்ட வாசகங்கள் மிகச் சிலவே. வடமொழி வெறி வட தமிழ்நாட்டிலுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களை ஆராய்ந்து படித்துப் பொருள் காண்பவர் நடுநிலையுள்ளவராக<noinclude></noinclude> r5pt0uqqa67w08csv4rgsh5ei1anl7a பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/22 250 651530 1958256 2026-08-15T11:46:32Z Velumani Veluchamy 16585 வருடல் 1958256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>முன்னுரை 17 இருக்கவேண்டும். அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட காலத்துப் பழக்க வழக்கம் முதலியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாமல் உண்மை காணும் கருத்து உள்ளவு ராகவும் நேர்மையாளசாகவும் இருக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வெறுப்பு உணர்வு உள்ளவராக இருத்தல் கூடாது. தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்த ஒருவர் அளவுகடந்த சமற்கிருத வெறியுள்ளவராக இருக்கிறார். அதுபற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் அவர் தமிழ்மொழிமீதும் தமிழர் மீதும் வெறுப்புள்ளவராகவும் தவறான எண்ணமுள்ளவராகவும் இருக்கிறார். அவர் அவற்றைத் தம் இடத்திலேயே வைத்துக் கொண்டால் தவறு இல்லை. ஆனால் தமிழ் மொழியைப்பற்றித் தாக்கி எழுதியிருக்கிறார். ஆகவே அதை இங்கு எடுத்துக்காட்ட வேண்டி யிருக்கிறது. திரு. சி. கிருட்டிணராவ் என்பவர் வெறுப்புணர்வுடன் எழுதியுள்ளதை இங்குக் காட்டவேண்டியிருக்கிறது. தமிழ் நாட்டுப் பிராமிக் பிராமிக் கல்வெட்டெழுத்துக்களை முதல் முதலாகப் படித்தவர் எபிகிராபி இலாகாவில் இருந்த ராவ்சாகிப் எச்.கிருட்டிண சாத்திரியும், திரு கே. வி. சுப்பிரமணிய அய்யரும் ஆவா. இவர்கள் தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களை சமற் கிருத- பிராகிருத மொழிக் கண்ணோட்டத்தோடு படித்து அரை குறையான கருத்துக்களைக் கூறினார்கள். இவர்கள் தங்கள் ஆராயச்சியில், இந்தக் கல்வெட்டுக்களில் தமிழ்ச் சொற்களும் இருக். கின்றன என்று கூறினார்கள். இவர்களுக்குப் பிறகு இந்தக் கல் வெட்டெழுத்துக்களை ஆராய்ந்த நாராயண ராவ், இவர்கள் கூறி யதை முழுவதும் மறுத்துக் கல்வெட்டுக்களுக்குத் தொடர்பில்லாத வற்றைக் கூறித் தமக்குள்ள தமிழ் வெறுப்பையும் சமற்கிருத வெறியையும் காட்டியுள்ளார். இவர் எழுதியுள்ளதன் சுருக்கம் இது : எபிகிராபி இலாகாவிலிருந்த ராவ் சாகிப். எச். கிருட்டிண சாத்திரி 1919ஆம் ஆண்டில் புனாவில் நடைபெற்ற அகில இந்திய முதலாவது ஓரியண்டல் மாநாட்டில், தமிழ்நாட்டுப் பிராமி கல்வெட் டெழுத்துக்களைப் பற்றி ஒரு கட்டுரை படித்தார். திரு கே. வி. சுப்பிர<noinclude></noinclude> f0rc4ahf2fzilawecv9t7g8v7wov59w பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/23 250 651531 1958257 2026-08-15T11:47:09Z Velumani Veluchamy 16585 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "4 சங்ககாலத்துப்‌ பிராமிக்‌ கல்வெட்டெழுத்துக்கள்‌ மணிய அய்யர்‌ 1924ஆம்‌ ஆண்டில்‌ சென்னையில்‌ நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல்‌ மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1958257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>4 சங்ககாலத்துப்‌ பிராமிக்‌ கல்வெட்டெழுத்துக்கள்‌ மணிய அய்யர்‌ 1924ஆம்‌ ஆண்டில்‌ சென்னையில்‌ நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல்‌ மா நாட்டில்‌ அதே பொருள்‌ பற்றி ஒரு கட்டுரை படித்தார்‌. இந்த இரண்டு கட்டுரைகளும்‌ இந்தப்‌ பிராமி எழுத்துக்களின்‌ பொருளை ஒருவாறு கூற முயன்‌ றுள்ளன. இவர்களுடைய இந்த முயற்சிகள்‌ இரண்டுவகையான கேடுகளுக்குக்‌ காரணமாக உள்ளன. 1, இந்தப்‌ பிராமி எழுத்துக்‌ கல்வெட்டுக்களிலே, வேறு பிராமி எழுத்துக்‌ கல்வெட்டுககளில்‌ காணப்படாத எழுத்துக்கள்‌ காணப்படுவதால்‌, அத்த எழுத்துக்களைச்‌ சரியாக உச்சரிக்க முடியாதது ஒன்று, 2. இவர்கள்‌ இருவரும்‌ இதர்தக்‌ கல்வெட்டுக்களில்‌ சில தமிழ்ச்‌ சொற்கள்‌ இருக்கின்றன என்‌ பதை ஒத்துக்கொண்டிருப்பது இன்னொன்று. திரு சுப்பிரமணிய அய்யர்‌, இந்தப்‌ பிராமி எழுத்துக்‌ கல்‌ வெட்டுக்கள்‌ தமிழ்மொழியில்‌ எழுதப்பட்டவை என்று முன்னமேயே .முடிவு செய்துகொண்டு இக்கல்‌ வெட்டுக்களில்‌ உள்ள சில எழுத்துக்‌ களுக்கு முன்பின்‌ அறியாத ஒலிகளைக்‌ கற்பித்துக்கொண்டு படித்து அதிகக்‌ குழப்பத்தை உண்டாக்கிவிட்டார்‌, இந்தப்‌ பிராமி சொற்‌ றொடர்களைத்‌ தமிழ்மொழிச்‌ சொற்றொடர்கள்‌ தாம்‌ என்று நிலை நிறுத்தமுடியாத இவருடைய கற்பனைகள்‌, இவரை இவைபற்றி ஆராய்ச்சி செய்யத்தூண்டி, இவருடைய கருத்துக்களுக்கு ஒப்பப்‌ பல வகையான மாற்றங்களைச்‌ செய்துவிட்டது. கிருட்டிண சாத்திரியும்‌ கூட இவை தமிழ்மொழிக்‌ கல்வெட்டுகள்‌ என்பதை ஒப்புக்கொண்டு இவற்றில்‌ தமிழ்ச்‌ சொற்களையும்‌ பிராகிருத மொழிச்‌ சொற்களையும்‌ கலந்து வாசகங்களைத்‌ தாறுமாருக்கிவிட்டார்‌. இந்தக்‌ கல்வெட்டுக்கள்‌ பிராகிருத மொழியில்‌ எழுதப்பட்டவை என்று எனக்குத்‌ தோன்றுகிறது. மிகப்‌ பழையகாலமாகிய கி. மு. 8ஆம்‌ நூற்றாண்டில்‌ எழுதப்பட்ட இவற்றைத்‌ தமிழ்மொழி என்று கூறித்‌ தமிழுக்குப்‌ பழைமை கொடுப்பது கூடாது. கி, மு, 9ஆம்‌ நூற்றாண்டுக்‌ கல்வெட்டுக்களைத்‌ தற்காலத்‌ தமிழுடன்‌ பொருத்தி உருமாற்றுவது விழிப்புணர்வு இன்றித்‌ தவருன வழியில்‌ செலுத்துவ தாகும்‌ என்று பணிவுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌; இந்தக்‌ கல்வெட்டுக்களைப்‌ படித்த கிருட்டிண சாத்திரி, சுப்பிர மணிய அய்யர்‌ போன்றவர்களே அதிகமாக மாறுபடுகிறபோது<noinclude></noinclude> q219jw0glk50fqp5qqrgn9tlujch0ni பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/24 250 651532 1958258 2026-08-15T11:47:50Z Velumani Veluchamy 16585 வருடல் 1958258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>15 முன்னுரை நான்‌ மட்டும்‌ சரியாகப்‌ படித்துப்‌ பொருள்‌ காண்பேன்‌ என்று நான்‌ சொல்லவில்லை, அப்படிக்‌ கூறுவது அறியாமையாகும்‌. இந்தக்‌, கல்வெட்டுக்கள்‌ பிராமி எழுத்தினால்‌ எழுதப்பட்டிருப்பதனாலும்‌, ஏனைய (வடநாட்டுப்‌) பிராமி எழுத்துக்கல்வெட்டுக்கள்‌ எல்லாம்‌ பிராகிருத மொழியில்‌ எழுதப்பட்டிருப்பதனாலும்‌, இந்தப்‌ பிராமி எழுத்துக்‌ கல்வெட்டுக்களும்‌ பட்டவையே கிறேன்‌. என்று கருதி பிராகிருத மொழியில்‌ இவற்றிற்குப்‌ பொருள்‌ காண எழுதப்‌ முயல்‌ இந்தக்‌ கல்வெட்டுக்கள்‌ பிராமி எழுத்தினால்‌ எழுதப்பட்டுள்ளன என்பதை நினைவில்‌ வைக்க வேண்டும்‌. இதுவரையில்‌ கண்டு பிடிக்கப்பட்ட பிராமி எழுத்து& கல்வெட்டுக்கள்‌ எல்லாம்‌ பிராகிருத மொழியில்தான்‌ எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில்‌ இரண்‌ டொரு எழுத்துக்கள்‌ தவிர மற்ற எழுத்துக்கள்‌ எல்லாம்தெளிவாகத்‌ தெரிகின்றன. இவற்றைக்‌ கிருட்டிண சாத்திரி திறமையாகப்‌ பீடித்திருக்கிறார்‌. புதுமையாகக்‌ இந்தப்‌ பிராமி காணப்படுகிற எழுத்துக்‌ கல்வெட்டுக்களில்‌ இரண்டொரு எழுத்துக்களைக்‌ கொண்டு இந்தக்‌ கல்‌ வெட்டுக்கள்‌ பிராகிருதம்‌ அல்லாத மொழி (தமிழ்மொழி) என்று கருதுவது கூடாது, இந்தப்‌ பிராமிக்‌ கல்வெட்டுக்களில்‌, ஏனைய பிராமி எழுத்துக்‌ கல்வெட்டுக்களில்‌ காணப்படாத எழுத்துக்கள்‌ காணப்படுகின்றன. சில எழுத்துக்கள்‌ வியப்பான புதிய உருவத்தைப்‌ பெற்றுள்ளன. இந்தக்‌ வென்றால்‌, என்பதே. பாண்டி கல்வெட்டுக்களின்‌ வியப்பான அமைப்பு என்ன இவை பிராகிருத மொழியைச்‌ சேர்ந்த பைசாச மொழி பிராகிருத மொழி இலக்கண ஆசிரியர்‌ கருத்துப்படி, நாட்டிலே அவர்களுடைய பேசப்பட்ட இந்தக்‌ கருத்தை மொழி இந்தக்‌ பைசாச மொழியாகும்‌. கல்வெட்டுக்கள்‌ மிகப்‌ பொருத்தமாக உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு திரு. நாராயண ராவ்‌ தமக்குள்ள அளவு கடந்த தமிழ்‌ வெறுப்பினையும்‌ அளவு கடந்த சமற்கிருத வெறியையும்‌ வெளிப்படையாகக்‌ காட்டியுள்ளார்‌.” இந்தச்‌ சமற்கிருத வெறிய 5, ‘The Brahmi Inscription of South India, C. Narayana Rao, pp. 362-376. The New Indian Antiquary, Vol. I, 1938-39.<noinclude></noinclude> jo8w7d8cssbv0jj60ps13uqk1cv90lf பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/26 250 651533 1958259 2026-08-15T11:48:30Z Velumani Veluchamy 16585 வருடல் 1958259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>முன்னுரை 17 பெளத்த சமண சமயத்தார்களே, தமிழ்நாட்டில்‌ எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்‌ கல்வெட்டுக்கள்‌ எல்லாம்‌ தமிழ்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அவை கடைச்சங்க காலத்தில்‌ கி. மு, 9ஆம்‌ நூற்றாண்டுக்கும்‌ கி. பி. 8ஆம்‌ நூற்றாண்டுக்கும்‌ இடைப்பட்ட காலத்தில்‌ எழுதப்பட்டவை. அவை பிராகிருத மொழி பயின்ற பெளத்த சமணர்களால்‌ எழுதப்பட்டவையாகையால்‌ இத்தமிழ்‌ மொழித்‌ தொடரின்‌ இடையிடையே பிராகிருத மொழிச்‌ சொற்களும்‌ இடம்‌ பெற்றுள்ளன. பிராகிருத மொழிச்‌ சொற்கள்‌ கலவாத தமிழ்‌ மொழித்‌ தொடர்களும்‌ இந்தக்‌ கல்வெட்டுக்களில்‌ கரணப்படு கின்றன. இடர்ப்பாடுகள்‌ பிராமி எழுத்துக்‌ கல்வெட்டுக்களைப்‌ படிப்பதில்‌ பாடுகள்‌ உள்ளன. இவ்வெழுத்துக்கள்‌ கற்பாறைகளில்‌ பட்டுள்ளபடியால்‌, பட்ட இந்த இடர்ப்‌ எழுதப்‌ இரண்டாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்‌ எழுத்துக்கள்‌ காலப்‌ பழைமையினாலுந்‌ தட்பவெப்பக்‌ கால நிலைகளினாலும்‌ தேய்ந்தும்‌ மழுங்கியும்‌ உருமாறியும்‌ உள்ளன. கற்பாறைகளில்‌ உள்ள கீறல்‌, பிளவு, வெடிப்பு, புள்ளி புரைசல்கள்‌ முதலானவற்றினால்‌ கல்வெட்டெழுத்துக்களின்‌ சரியான வடிவம்‌ தெரிவதில்லை. சில இடங்களிலே இன்ன எழுஐதுதான்‌ என்று அறிய முடியாதபடி சிதைந்துள்ளன. அவற்றின்‌ சரியான வடிவத்‌ தைக்‌ கண்டுபிடித்துப்‌ படிப்பது சங்கடமாக இருக்கிறது. எழுத்தைப்‌ பொறித்த கற்றச்சர்‌ சில சமயங்களில்‌ இடையே எழுத்துக்களைப்‌ பொறிக்காமல்‌ வீட்டுவிடுவதும்‌, உண்டு. இந்தப்‌ பிழை பெரும்பாலும்‌ ஒற்றெழுத்து இரட்டித்து வரும்‌ இடங்களில்‌ காணப்படுகின்றது. பளி, கொடுபிதவன்‌, குறு, குன்றது, தசன்‌, உபு, இயகன்‌ என்று ஒற்றெழுத்து இரட்டிக்காமல்‌ வீடுபட்டிருக்கும்‌, இவற்றை முறையே பள்ளி, கொடுப்பித்தவன்‌, குன்று, குன்றத்து, தச்சன்‌, உப்பு, இயக்கன்‌ என்று இடமறிந்து படிக்க வேண்டும்‌. புள்ளி இடப்பட வேண்டிய எழுத்துக்கள்‌ பெரும்பாலும்‌ புள்ளி இல்லாமலே பொறிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச்‌ சிலவற்றைக்‌ கூறுகிறோம்‌. சபி, ௪.2 பெருங்கடுங்கொன, தமமம,<noinclude></noinclude> e7ynrp0svhrmsbj86z97nge9v0sbsyq பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/27 250 651534 1958260 2026-08-15T11:48:46Z Velumani Veluchamy 16585 வருடல் 1958260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>18 சங்ககாலத்துப்‌ பிராமிக்‌ கல்வெட்டெழுத்துக்கள்‌ அதிட்டானம,-கிரன, ஊர, இவற்றைப்‌ புள்ளியிட்டு ஆதன என்று பொறிக்கப்பட்டிருக்கும்‌. முறையே பெருங்கடுங்கோன்‌; தம்மம்‌, அதிட்டானம்‌, கீரன்‌, ஊர்‌, ஆதன்‌ என்று படிக்க வேண்டும்‌. இகர ஈற்றுச்‌ இடங்களில்‌ சொற்களும்‌ யகரமெய்‌ ஐகார சேர்த்து ஈற்றுச்‌ சொற்களும்‌ எழுதப்பட்டுள்ளன. சில மனிய்‌, ஆந்தைய்‌, மதிரைய்‌, கணிய்‌, பாளிய்‌, வழுத்திய்‌ என்று எழுதப்‌ பட்டவை முறையே மனி, ஆந்தை, மதிரை, கனி, பாளி, வழுத்தி என்று படிக்கப்பட வேண்டும்‌. சில இடங்களில்‌ இகர ஈற்றுச்‌ சொற்களின்‌ கடைசியில்‌ இகரமும்‌ யகர மெய்யும்‌ சேர்த்து எழுதப்‌ பட்டிருப்பதும்‌ உண்டு, நெல்வெளிஇய்‌, பாளிஇய்‌ என்பவற்றை நெல்வெளி, பானி என்று படிக்க வேண்டும்‌. இவ்வாறு எழுதுவது அக்காலத்து முறை, குறியீடுகள்‌ பிராமி எழுத்து வாக்கியங்களின்‌ பெ.றிக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டு இடங்களில்‌ கொங்கர்‌ உள்ள பிராமி இறுதியில்‌ சில குறிகள்‌ புளியங்குளம்‌, அழகர்மலை எழுத்துச்‌ சொற்றொடம்‌ களின்‌ கடைசியில்‌ இக்குறிகள்‌ காணப்படுகின்றன. மற்ற இடங்‌ களில்‌ இக்குறிகள்‌ காணப்படவில்லை. அந்தக்‌ குறிகள்‌ இவை, {BT இந்தக்‌ குறியீடுகளும்‌ வேறுசில குறியீடுகளும்‌ இலங்கையில்‌ உள்ள பிராமி எழுத்துக்‌ கல்வெட்டுக்களிலும்‌ காணப்படுகின்‌ றன. இந்தக்‌ குறியீடுகள்‌, வாக்கியத்தின்‌ முடிவைக்‌ காட்டுகின்றன என்று கே. அறிஞர்‌ சிலர்‌ கருதுகிறார்கள்‌. கிருட்டிணசாத்திரி, வி. சுப்பிரமணிய அய்யர்‌, ஐ. மகாதேவன்‌, டி. வி, மகாலிங்கம்‌ ஆகியோர்‌ இவ்வாறு கருதுகின்றனர்‌. இவர்களுடைய கருத்து தவறானது என்று தோன்றுகிறது. இந்தக்‌ குறிகள்‌ வேறு ஏதோ பொருளைத்‌ தெரிவிக்கின்‌ றன, Wi இந்தக்‌ குறியை சுவஸ்திகம்‌ என்றும்‌ இது மங்கலத்தைக்‌ குறிக்கிறது என்றும்‌ திரு. கிருட்டிண சாத்திரி கருதுகிறார்‌. இவர்‌<noinclude></noinclude> iwwv932bd3nqlp1vwh1wphyqkl5at4k பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/28 250 651535 1958261 2026-08-15T11:49:08Z Velumani Veluchamy 16585 வருடல் 1958261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>முன்னுரை ig கூறுவது தவறு என்று தோன்றுகிறது. சுவஸ்திகத்தின்‌ குறி பூ இப்படி இருக்கும்‌. நாற்சதுரமாக அமைந்த இத்தக்‌ குறி வேறு எதையோ குறிக்கிறது என்று தோன்றுகிறது. மேலே காட்டப்பட்ட குறிகள்‌ ஏதோ எண்ணின்‌ அளவை (பொன்‌ அல்லது நாணயத்தின்‌ மதிப்பைத்‌) தெரிவிக்கின்றன என்று தோன்றுகிறது. கொங்கர்‌ புளியங்குளத்துக்‌ கல்வெட்டில்‌, (பாகலூர்‌ போத்தன்‌ பிட்டன்‌ ஈந்தவை பொன்‌! குட்டு கொடங்கு ஈத்தவன்‌ சிறு ஆதன்‌ பொன்‌” என்று எழுதப்பட்டுள்ளன. இந்தச்‌ சொற்றொடர்களின்‌ இறுதி யில்‌ உள்ள குறிகள்‌, இவர்கள்‌ செலவு செய்த பொன்னின்‌ மதிப்பைத்‌ தெரிவிக்கின்றன என்பது இந்தக்‌ குறியீடுகளின்‌ முன்‌ உள்ள (/பொன்‌' என்னும்‌ சொல்லினால்‌ அறிகிறோம்‌. எனவே இந்த அடையாளங்கள்‌ இவர்கள்‌ இக்‌ குகைகளில்‌ கற்படுக்கைகளை அமைப்பதற்குச்‌ செலவு செய்த பொன்னின்‌ அளவை (மதிப்பைத்‌) தெரிவிக்கின்றன என்பது ஐயமில்லாமல்‌ தெரிகிறது. அழகர்‌ மலைப்‌ பிராமி எழுத்துக்‌ கல்வெட்டுக்களிலும்‌ குறி யீடுகல்‌_தானப்படுகின்றன. ஆனால்‌, குறியீடுகளின்‌ முன்பு /பொன்‌" என்னும்‌ சொல்‌ இல்லை. இலலாமற்போனாலும்‌ இக்‌ குறியீடுகள்‌ செலவு செய்யப்பட்ட பொன்னின்‌ மதிப்பைக்‌ குறிக்கின்றன என்று கருதலாம்‌. அக்‌ குறியீடுகள்‌ இவை: மதுரை பொன்‌ கொல்லன்‌ ஆதன்‌ ஆதன்‌! *மதுரை உப்பு வாணிகன்‌” (பணித வாணிகன்‌ நெடுமூலன்‌' *அணிகன்‌” (கொழுவாணிகன்‌ இளஞ்சேந்தன்‌' இந்தப்‌ : பெயர்களின்‌ இறுதியில்‌ உள்ள பெயருள்ளவர்‌ இக்கு கையில்‌ கற்படுக்கைகளை குறியீடுகள்‌ இப்‌ அமைப்பதற்காகச்‌<noinclude></noinclude> 31v5du055kureb6j4j452jt2l511hsc பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/29 250 651536 1958262 2026-08-15T11:49:40Z Velumani Veluchamy 16585 வருடல் 1958262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>சங்ககாலத்துப்‌ பிராமிக்‌ கல்வெட்டெழுத்துக்கள்‌ 20 செலவு செய்த தொகையைக்‌ குறிக்கின்றன என்பது நன்றாகத்‌ இரண்டாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிவந்த தெரிகிறது. இந்தக்‌ குறியீடுகள்‌ குறிப்பிடுகிற பொன்னின்‌ இன்னதென்று இப்போது தெரியவில்லை. அளவு (மதிப்பு), கற்படுக்கைகள்‌ ஏன்‌7 அந்தப்‌ பழங்காலத்திலே பெளத்த சமயத்துத்‌ தேரர்களும்‌ சைன சமயத்துத்‌ துறவிகளும்‌ ஊர்களில்‌ தங்காமல்‌ ஊருக்கப்பால்‌ காடுகளில்‌ மலைக்குகைகளில்‌ இருத்து தவம்‌ செய்தார்கள்‌, பாயில்‌ படுக்காமல்‌ தரையில்‌ படுப்பது அவர்களுடைய நோன்பு. அவர்கள்‌ இருந்த குகைகளின்‌ கற்றரைகள்‌ இயற்கையாகக்‌ கரடுமுரடாகவும்‌ மேடுபள்ளமாகவும்‌ இருந்தன. ஆகவே, அவர்களுடைய சாவகர்‌ கள்‌ (சாவகர்‌ - சிராவக இல்லறத்தார்‌) கற்றரைகளைச்‌ சமப்படுத்திச்‌ செம்மையாக்கி வழவழப்புள்ள கற்படுக்கைகளை அமைத்துக்‌ கொடுத்தார்கள்‌. மழை பெய்தால்‌ பாறைகளின்‌ மேலிருந்து வழிந்து வருகிற மழைநீர்‌, குகை வாயிலின்‌ மேற்பாறை வழியாக விழுந்து குகையின்‌ உட்புறத்தை நனைத்து ஈரமாக்கிவிடும்‌. குகை வாயிலின்‌ மேற்புறப்‌ பாறையிலிருந்து விழுகிற நீர்‌ காற்றினால்‌ உந்தப்பட்டுக்‌ குகை முழுவதும்‌ பாய்ந்து நனைத்துவிடும்‌, அதனால்‌ குகைக்குள்‌ இருக்கும்‌ துறவிகளின்‌ உடம்பு நனைந்து ஈரமாகிக்‌ குளிரும்‌ காய்ச்சலும்‌ ஏற்படும்‌. இவ்வாறு நேராதபடி, குகை வாயிலின்‌ மேற்பாறையிலிருந்து மழைநீர்‌ மழைநீர்‌ வாயிற்புறத்தில்‌ விழாதபடி தடுத்து பாறைகளின்‌ 'போகும்படி இரு உளியினால்‌ புறமும்‌ பக்கவாட்டமாக மேற்புற்ப்‌ பாறையைச்‌ வழிந்து செதுக்கித்‌ தூம்புபோல அமைத்தனர்‌. இவற்றை யெல்லாம்‌ கற்றச்சரைக்‌. கொண்டு செய்விக்கவேண்டும்‌, கற்றச்சருக்குக்‌ கூலியாகப்‌ பொருள்‌ தர வேண்டும்‌ பொருள்‌ செலவு அமைத்தும்‌ மழைநீர்‌ வழிந்து போகும்படி செய்து உள்ளே மலைக்குகைகளில்‌ விழாதபடி தூம்புகளைச்‌ கற்படுக்கைகளை தடுத்துப்‌ செதுக்கியும்‌ பக்கங்களில்‌ கொடுத்தனர்‌.<noinclude></noinclude> oku7w1m63w5qixxf253qnk2lbidkga4 பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/30 250 651537 1958263 2026-08-15T11:50:13Z Velumani Veluchamy 16585 வருடல் 1958263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>முன்னுரை 21 தாங்கள் அளித்த கொடைகளைப் பற்றி ஏடுகளில் தங்கள். பெயர் களை எழுதிவைப்பது உலக இயற்கை, இவற்றை அமைத்துக் கொடுத்தவர் தங்கள் பெயர்களைக் கற்படுக்கைகளிலும் குகைவாயில் களின் மேலும் செதுக்கி வைத்தனர். குகைகளில் இருந்த துறவிகள் பெளத்த - சைன மதத்தவர் ஆகையாலும் அவர் களுக்காகப் படுக்கைகளை அமைத்துக்கொடுத்தவரும் அந்த மதங்களைச் சேர்ந்தவர் ஆகையினாலும் அந்த மதத்தார் கையாண்டு வந்த பிராமி எழுத்தினால் இதை எழுதி வைத்தார்கள். (சைவ வைணவ மதத்துத் துறவிகள் காடுகளிலும் குகைகளிலும் வசிக்க வில்லை. ஆகவே அவர்களுக்குக் குகைகளில் கற்படுக்கைகள் அமைக்கப்படவில்லை.) சங்கச் செய்யுட்கள் ஏன் கூறவில்லை ? கடைச் சங்க காலத்திலே (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3ஆம் நூற்றாண்டு வரையில்) எழுதப்பட்ட சங்கச் செய்யுட் களிலே இந்தக் குகைகளைப் பற்றியும் இங்கு இருந்த முனிவர்களைப் பற்றியும் ஏன் கூறப்படவில்லை என்று கேள்வி எழுகிறது. சங்கச் செய்யுட்களை எழுதினவர் பெரும்பாலும் பௌத்த-சமணர் அல்லாத சைவ-வைணவர்கள். மேலும் அவர்கள் அகப்பொருள் புறப் பொருள்களைப் பற்றி, செய்யுட்களைச் செய்தனர். காதலையும் வீரத்தையும் பற்றிப் பாடின செய்யுட்களில் துறவிகள் (சமண- பௌத்தத் துறவிகள்) இடம்பெற வேண்டிய வாய்ப்பு இல்லை. ஆகவே இவற்றைப் பற்றிய செய்திகள் சங்கச் செய்யுட்களில் இடம் பெறவில்லை. ஆனால், சங்கச் செய்யுட்களிலே காடுகளில் குகைகளில் வசித்த முனிவர்களைப் பற்றிய குறிப்புகள் குறிப்பாகக் காணப்படு கின்றன. சல்லியங்குமரனார் நற்றிணை 141ஆம் செய்யுளில் ‘குன் றுறை தவசியரை'க் குறிப்பிடுகிறார்.க 8. பொரியரை ஞெ பிரித்த புழற் காய்க் கொன்றை நீடிய சடையோடு ஆடா மேனிக் குன்றுறை தவசியர் போல" (நற். 141:8-5)<noinclude></noinclude> ksjmq7x956zwb0xcjhe0bqlqmyqtlcd பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/31 250 651538 1958264 2026-08-15T11:50:45Z Velumani Veluchamy 16585 வருடல் 1958264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>22 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், சமண மதத்துத் துறவிகள் மலைப்பக்கங்களில் இருந்ததைக் குறிப்பாகக் கூறுகிறார். கலித்தொகை மருதக்கலி 28ஆம் செய்யுள் 'கடவுட்பாட்டு' என்று கூறப்படுகிறது. (கடவுள்-முனிவர், துறவிகள்). இந்தச் செய்யுளிலும் சமண சமயத்துத் துறவிகள் மலையில் இருந்தது. குறிப்பாகக் கூறப்படுகிறது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் சமண சமயத் துறவிகள் மலைகளில் இருந்து தவஞ் செய்தனர். இதைத் திருஞான சம்பந்தர் 'ஆனைமாமலை ஆதியாய இடங்களில்' சமண சமயத் துறவிகள் இருந்ததைக் கூறுகிறார். பிராமிக் கல்வெட்டுக்களினுால் அறியப்படுபவை தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் கி. மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 3ஆம் நூற்றண்டு வரையில் எழுதப் பட்டவை. இதே காலத்தில்தான் சங்கச் செய்யுட்கள் (கடைச் சங்கச் செய்யுட்கள்) பாடப்பட்டன. சங்கச் செய்யுட்கள் பெரும்பாலும் தனித் தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளன. அச் செய்யுட்களில் பிராகிருத மொழி வடமொழிச் சொற்களின் கலப்பு மிகச் சிலவே. (ஆடாமேனித் தவசியர் - அசையாமல் தியானத்தில் இருக்கும் உடம்பையுடைய தவசியர் என்று இதற்குப் பொருள் கொள்வது கூடாது. ஆடாமேனி என்பதற்கு, நீராடாத உடம்பையுடையவர் என்பது பொருள். சைன முனிவர் நீராடுவது கூடாது என்பது அந்த மதக் கொள்கை.) 9. "உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர் போல வரைசெறி சிறுநெறி நீரையுடன் செல்லும் கானானை கவினழி குன்றம். (அகநா. 132:1-4} (மலைகள் நெருங்கிய இடுக்கான காட்டுவழியில், உணவு கொள் ளாமல் பட்டினியிருப்பதனால் வாடிய தோற்றத்தையும் நீராடாத விரதத்தையும் உடைய சமண முனிவர் செய்வதுபோல், மலையிடுக்கு வழியில் யானைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றன என்பது இதன் பொருள்.)<noinclude></noinclude> jweoba035wu53kzrg120jz1f7i631vh பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/32 250 651539 1958265 2026-08-15T11:51:22Z Velumani Veluchamy 16585 வருடல் 1958265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>முன்னுரை 23 ஆனால், அக் காலத்தில் வேற்றுமொழி (முக்கியமாக பிராகிருத மொழியும் சமக்கிருத மொழியும; கலப்பு ஏற்படவில்லை என்று கருதுவது வரலாற்றுக்குப் பொருந்தாது. பிராகிருத மொழிச் சொற்கள் கடைச்சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கி வந்ததைப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்குகின்றன. அச் சொற்களைக் காட்டுவோம். தம்மம் (தருமம்) ஸாலகன், நிகமம், உபாசன், விஸுவன் (ஓர் ஆளின் பெயர்) அதிட்டானம், காஞ்சணம், பணிதம், கரஸபன் (ஆளின் பெயர்) காயிபன் (ஆளின் பெயர்) குவீரன், கோயிபன் (கோசிபன் குலஸ, ஸெட்டி முதலியன. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் கிரேக்க- உரோம நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்து வாணிகஞ் செய்த யவனர் வாயிலாக, சில கிரேக்க மொழிச் சொற்கள் சங்க காலத் தமிழில் கலந்துவிட்டதைக் காண்கிறோம். அவை, சுருங்கை, மத்திகை, கலம் மரக்கலம்), கன்னல் முதலியன. வாணிகத்துக்காக வந்துபோன யவனரின் கிரேக்க மொழிச் சொற்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன என்றால், மதச் சார்பாகத் தமிழகத்துக்கு வந்து ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த பெளத்த - சமண சமயத்தவர்கள் மூலமாகப் பாலி, சூரசேனி என்னும் பிராகிருத மொழிச் சொற்கள் தமிழோடு கலக்காமல் இருக்குமோ ? கி.மு.3ஆம் நூற்றாண்டில் வந்து தமிழகத்தோடு கலந்துபோன பௌத்த சமண சமயங்களின் 'தெய்வ' மொழியாகிய பாலி சூரசேனி மொழிச் சொற்கள் சமயச் சார்பாகத் தமிழரிடையே கலக்காமல் இருந்திருக்க முடியுமா? பௌத்த- சமண சமயங்களை மேற்கொண்ட தமிழர் பிராகிருத மொழிகளைக் கற்றனர். வடமொழியையும் கற்றனர். அதனால் அவர்கள் சமயநூல் எழுதினபோது அந் நூல்களில் பிராகிருத மொழிச் சொற்களைக் கலந்து எழுதினார்கள். சீத்தலைச் சாத்தனார் தமிழை நன்கு கற்றவர். அதனோடமையாமல், பெளத்தர் என்னும் முறையில் பாலி மொழியையும் நன்கு கற்றவர். ஆகவே, அவருடைய மணிமேகலையில் தாராளமாகப் பாலி மொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவர் காலத்தவரான இளங்கோ அடிகள் தாய்மொழியாகிய தமிழ்மொழியை நன்றாகக் கற்றவர்.<noinclude></noinclude> kyky5nvkwdo68kbz6vw7m4dd0k2itvs பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/33 250 651540 1958266 2026-08-15T11:51:53Z Velumani Veluchamy 16585 வருடல் 1958266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>24 சங்ககர்லத்துப்‌ பிராமிக்‌ கல்வெட்டெழுத்துக்கள்‌ அதனோடு அமையாமல்‌, சமணர்‌ மொழியையும்‌ நன்கு கற்றவர்‌. என்னும்‌ முறையில்‌ பிராகிருத அவர்‌ இயற்றிய சிலப்பதிகாரத்தில்‌ பல பிராகிருத மொழிச்‌ சொற்களும்‌ இடம்‌ பெற்றுள்ளன. அதே காலத்திலிருந்த சங்கப்‌ புலவர்கள்‌ தனித்‌ தமிழ்‌ கற்றவர்கள்‌. அவர்கள்‌ அயல்மொழிகளைக்‌ கற்றவர்‌ அல்லர்‌. அவர்கள்‌ தனித்‌ தமிழ்‌. மொழியில்‌ தமிழ்‌ மரபுப்படி அகப்புறப்‌ பொருள்‌ பற்றிய அதனால்‌ அவர்‌ ஈளின்‌ செய்யுட்கள்‌ செய்யுட்களை இயற்றினார்கள்‌. அவர்கள்‌ காலத்தில்‌ வேற்றுமொழிகள்‌ தனித்‌ தமிழாக உள்ளன, தமிழில்‌ கலக்கவில்லை என்று கூறுவது வரலாற்றுக்கும்‌ உண்மைக்‌ கும்‌ பொருந்தாது. தனித்தமிழ்ப்‌ புலவர்களான சங்கப்‌ புலவர்‌ காலத்திலேயே பிராகிருதச்‌ சொற்கள்‌ தமிழில்‌ கலந்துவிட்டன என்‌ பதற்கு பிராமி எழுத்துக்‌ கல்வெட்டுக்களும்‌ மணிமேகலை சிலப்பதி காரக்‌ காவியங்களும்‌ சான்று பகர்கின்றன. இந்த வரலாற்று உண்மையை யறியாத சிலர்‌, கடைச்‌ சங்ககாலத்தில்‌ வேறுமொழிச்‌ சொற்கள்‌ கலக்கவில்லை என்றும்‌ தனித்‌ தமிழ்‌ வழங்கிற்று என்றும்‌ கூறுவதும்‌, மணிமேகலை சிலப்பதிகாரக்‌ காவியங்கள்‌ சங்க காலத்துக்குப்‌ பிறகு சில நூற்றாண்டு கழித்து எழுதப்பட்டன என்று கூறுவதும்‌, வரலாற்றுக்கும்‌ உண்மைக்கும்‌ பொருந்தாத சான்றுகளாகும்‌. கி. மு. 8ஆம்‌ நூற்றாண்டில்‌ தமிழகத்துக்கு (பெளத்த, சமண மதங்களோடு) வந்த பாலி சூரசேனி முதலான பிராகிருத மொழிச்‌ சொற்கள்‌ கலவாமல்‌, கடைச்‌ சங்கம்‌ முடிகிற வரையில்‌ காத்துக்கொண்டிருந்து, கி. பி. 8ஆம்‌ நூற்றுண்டில்‌ கடைச்‌ சங்கம்‌ முடிந்த பிறகு தமிழில்‌ கலந்தது என்று கூறுவது மொழியின்‌ இயற்கையும்‌ வரலாற்று உண்மையும்‌ அறியாதவர்‌ கூறும்‌ கூற்றாகும்‌. , சங்க சொற்கள்‌ காலத்திலேயே பெளத்தத்‌ பிராகிருதம்‌ தமிழரிடையே போன்ற புகுந்து வடமொழிச்‌ பொதுமக்களி டையேயும்‌ பரவிவிட்டது என்பதே வரலாற்று உண்மை. அதற்குச்‌ சான்றாக இருப்பது பிராமிக்‌ கல்வெட்டெழுத்துக்களில்‌ காணப்‌ படுகிற பிராகிருத மொழிச்‌ சொற்கள்‌. தமிழ்மொழி வருகிற மொழி. உயிருள்ள மொழி. நெடுங்காலமாக வழங்கி உலகத்திலே, வழங்கி வருகிற உயிருள்ள<noinclude></noinclude> hd44ujje8fgnxuck8ycj26186e86hgr பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/34 250 651541 1958267 2026-08-15T11:52:23Z Velumani Veluchamy 16585 வருடல் 1958267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>95. முன்னுரை மொழிகள்‌ எல்லாம்‌ வற்றின்‌ வாணிகம்‌, தொடர்பாக கொள்வது இயல்பு. சமயத்‌ தொடர்பு பற்றி சமயம்‌, வேற்றுமொழிச்‌ அரசாட்சி, கலை முதலிய சொற்களையும்‌ பெற்றுக்‌ இந்த இயல்புப்படி சங்க காலத்திலேயும்‌ (பெளத்தம்‌, சமணம்‌) பிராகிருத மொழிச்‌ சொற்கள்‌ தமிழில்‌ கலந்துவிட்டன. இந்த வரலாற்று உண்மையை மறுக்க முடியாது. சங்க காலத்தி லே அயல்‌ மொழிச்‌ சொற்கள்‌ கூறுவது கலவாமல்‌ தூய தமிழ்‌ மட்டும்‌ இருந்தது என்று பொருந்தாது. வடநாட்டுப்‌ பெளத்தழம்‌ சமணமும்‌ வந்தபோதே அவர்களோடு பிராகிருத மொழியும்‌ வந்துவிட்டது. அவர்கள்‌ வருவதற்கு முன்பு, வேறு மொழித்‌ தொடர்பு இல்லாத காலத்தில்‌, தூய தமிழ்‌ வழங்கியது உண்மை. ஆனால்‌, வேது மொழிகளைச்‌ சமய மொழி.பாகக்‌ கொண்ட பெளத்த ழம்‌ சமணமும்‌ தமிழகத்திலே வந்து (கி. மு. 3ஆம்‌ நூற்றாண்டு வரை) 200 ஆண்டுகளாகத்‌ தமிழரோடு உறவாடிக்கொண்டிருந்த காலத்‌ 9ல்‌ வேறு மொழிச்சொற்கள்‌ கலவாமல்‌ தூய தமிழ்‌மொழிதான்‌ வழங்கிற்று என்று கூறுவது பொருந்தாது, சங்க இலக்கியங்‌ களில்‌ தூய தமிழாக இருக்கின்றன என்றால்‌, அவை தமிர மரபுப்படி இயற்றப்பட்டவை. அகப்‌ பொருள்‌ புறப்‌ பொருள்களைப்‌ பற்றிம்‌ ஆகவே பழந்தமிழ்‌ மரபு அவற்றில்‌ காணப்படு பவாரடப்பட்டவை. ஆனல்‌ அந்தக்‌ காலத்திலேயே தமிழ்மொழி.பில்‌ வேறு கின்றன. அந்தத்‌ தமிழ்‌ இலக்கி மொழிச்‌ சொற்களும்‌ கலந்துவிட்டன. யங்கள்‌ தாம்‌ சிலப்பதிகாரமும்‌ மணி 3மகலையும்‌ஃ பிராமிக்கு முன்பு பிராமி எழுத்து தமிழகத்துக்கு வந்தது. பெளத்தடசைன மதங்களின்‌ பிராமி எழுத்து சார்பாகத்‌ வருவதற்கு முன்பு தமிழில்‌ வேறுவகையான எழுத்து நடைமுறையில்‌ இருந்தது. தொல்காப்பியம்‌ முதலான பழைய இலக்கண இலக்கிய நூல்கள்‌ பிராமி எழுத்து பழைய தமிழ்‌ எழுத்தினால்‌ எழுதப்பட்டன. நுழைந்த தமிழகத்தில்‌ மெல்ல முதன்மை ஒதுக்கப்பட்டுப்‌ பெற்றது. ஏற்படவில்லை. பழைய பிறக, புதிய இந்த எழுத்து பழைய தமிழ்‌ எழுத்து மெல்ல பிராமி எழுத்து எழுத்து மெல்ல மாறுதல்‌ மறைவதற்கும்‌ மெல்ல திடீரென்று புதிய எழுத்து<noinclude></noinclude> prrq4pbc160cqzxquihbono2amh7g9w பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/35 250 651542 1958268 2026-08-15T11:53:02Z Velumani Veluchamy 16585 வருடல் 1958268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>a6 சங்ககாலத்துப்‌ பிராமிக்‌ கல்‌வெட்டெழுத்துக்கள்‌ இடம்‌ பெறவும்‌ பலகாலம்‌ சென்றிருக்க வேண்டும்‌. இரண்டு தூற்றாண்டுகளாவது சென்றிருக்க வேண்டும்‌. பெளத்த--சைன /2தங்களின்‌ கொள்கை பரப்புதலினாலே பிராமி எழுத்து தமிழகத்தில்‌ அளக்கமடைந்தது. அறிஞர்‌ சிலர்‌ பிராமி எழுத்து வந்தபிறகுதான்‌ தமிழ்‌ “மொழியில்‌ இலக்கியங்கள்‌ ஏற்பட்டன என்றும்‌ அதற்கு முன்பு தமிழில்‌ இலக்கியநூல்கள்‌ எழுதப்படவில்லை என்றும்‌ கூறு கின்றனர்‌. அவர்கள்‌ கூற்று தவருனது, பிராமி எழுத்து தமிழகத்தில்‌ புகுவதற்கு முன்பே எழுத்தும்‌ நூல்களும்‌ இருந்தன. தமிழருக்கு உரிய தமிழ்‌ தமிழ்நாட்டில்‌ பிராமி கல்வெட்டுக்களை எழுதியவர்‌ நன்ருகத்‌ தமிழ்‌ கற்காதவர்‌. அவர்கள்‌ பிராகிருதச்‌ சொற்களையும்‌ சேர்த்துப்‌ பேச்சு நடையில்‌ எழுதியுள்ளனர்‌. அந்தச்‌ செரற்களையும்‌ பிழையாக, பாமரர்‌ பேச்சு நடையில்‌ எழுதியுள்ளனர்‌. மணிய்‌ (மணி), கணிய்‌ (கணி), பணஅன்‌ (பணயன்‌) வழுத்தி (வழுத்‌)) ஆந்தைய்‌ (ஆந்‌. தை), மத்திரை (மதுரை), பளி (பள்ளி), காவிதி இய்‌ (காவிதி), கொட்டுபிதோன்‌ (கொடுப்பித்தோன்‌) முதலான கொச்சைச்‌ சொற்‌ களைக்‌ காண்க, சில பிராமி எழுத்து வாக்கியங்கள்‌ வீனைச்சொல்‌ (பமனிலை) இல்லாமலே எழுதப்பட்டுள்‌ என. யானைமலை, குன்‌ றக்குடி, அழகர்மலை என்னும்‌ இடங்களில்‌ உள்ள கல்வெட்டுக்கள்‌ நன்றாகப்‌ டிக்கா தவர்களால்‌ கொச்சைத்‌ தமிழில்‌ எழுதப்பட்டுள்ளன. அதே சமயத்தில்‌ சங்கப்‌ புலவர்களின்‌ உயர்ந்த, சிறந்த செந்தமிழ்‌. தடைச்‌ செய்யுள்களும்‌ வழங்கி வந்துள்ளன. இவ்வாறு, ஒரே சமயத்தில்‌ உயர்‌ தனிச்‌ செம்மொழி நடையும்‌ பிராகிருதம்‌ கலந்த கொச்சைத்‌ தமிழ்‌ நடையும்‌ வழங்கின என்பதைப்‌ பிராமி எழுத்து வாசகங்களினால்‌ அறிகிறோம்‌. இதற்குக்‌ காரணம்‌ பழைய தமிழ்‌ எழுத்தைப்‌ பயின்று வந்ததும்‌ அதே சமயத்தில்‌ புதிய பிராமி பயிலப்பட்டு வந்ததும்‌ என்பது தெரிகிறது. ஆறுகள்‌ பாயும்‌ மொசபடோமியாவில்‌, யூபிரிதீஸ்‌ தைகிரிஸ்‌ பழங்காலத்தில்‌ இருந்த கால்டியா தேசத்தில்‌ ஒரே சமயத்தில்‌ இரண்டு வகையான எழுத்துக்‌. கள்‌ வழங்கி மதகுருமார்‌ வந்ததை வரலாற்றில்‌ அறிகிறோம்‌. அந்‌ நாட்டு தங்களுக்கென்று ஒருவகை எழுத்தை எழுதினார்‌.<noinclude></noinclude> 32rev421y00v9v3axvmpw7qqhyf23di பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/37 250 651543 1958269 2026-08-15T11:53:46Z Velumani Veluchamy 16585 வருடல் 1958269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>7 :28 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் தவிர, இலத்தின் எழுத்து வந்தபிறகுதான் துருக்கி மொழி இலக்கியங்கள் தோன்றின என்பது தவறு. இது யாவரும் அறிந்ததே. இதுபோலவே, சங்ககாலத்தில், பழந்தமிழ் எழுத்துக்குப் பதில், பிராமி எழுத்து எழுதப்பட்டபோது, எழுத்து மாறிற்றே தவிர, பிராமி எழுத்து வந்தபிறகுதான் தமிழ் இலக்கியம் தோன் றிற்று என்பதும் தவறு. தமிழ் மரபும் தமிழ்மொழி வரலாறும் அறியாதவரே தவறான கருத்தைக் கூறுவர். படித்த முடிவுகள் தமிழ்நாட்டுப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கடைச் சங்ககாலத்தில் எழுதப்பட்டவை என்று கூறி னோம். அதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை யில் எழுதப்பட்டவை என்று சொன்னோம். இந்த எழுத்துக்களைப் படித்துப் பொருள் காண அறிஞர் சிலர் முயன்றனர். இராவ் சாகிப் எச்.கிருட்டிண சாத்திரி, கே.வி. சுப்பிரமணிய அய்யர், சி.நாராயணராவ், ஐராவதம் மகாதேவன், டி. வி. மகாலிங்கம் ஆகி யோர் இந்தக் கல்வெட்டுக்களைப் படித்துப் பொருள் கூறினார்கள். ஆனால், அவர்கள் எல்லோரும் ஒரே முடிவுக்கு வரவில்லை. வெவ்வேறு கருத்துக்களைக் கூறிச் சென்றனர். இதற்குக் காரணம் சில எழுத்துக்களை வெவ்வேறு எழுத்தாகக் கொண்டு படித்தது ஒன்று. எழுத்துக்களைச் சேர்த்து, சொல் சொல்லாகப் பிரித்த போது ஏற்பட்ட மாறுபாடு இன்னொன்று. ஆரியத் தொடர்பைப் யுகுத்திக் கூற வேண்டும் என்று கருதித் தங்களுடைய சொந்தக் கருத்தைப் புகுத்தியது வேறொன்று. இக் கல்வெட்டெழுத்துக்கள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த தமிழக மரபையும் தமிழர் பழக்க வழக்கங்களையும் அறிந்து அதற்கேற்பப் பொருள் காணாதது மற்றொன்று. இந்தக் காரணங்களினாலே தமிழ்நாட்டுப் பிராமி எழுத்துக்கள் சரியாகப் படிக்கப்படாமல் உள்ளன. ஆகவே, இவற்றைப் புதிதாக ஆராய்ந்து முடிவு காண வேண்டியிருக்கிறது. அவற்றைக் காண்போம்.<noinclude></noinclude> 2u2ktk3wtblfry4ho5hny9zb30yerse பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/38 250 651544 1958270 2026-08-15T11:54:33Z Velumani Veluchamy 16585 வருடல் 1958270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>1. அரசலூர் பிராமி எழுத்துக்கள் கோயமுத்தூர் மாவட்டம் ஈரோடு தாலுகாவில், ஈரோடு காங்கேயம் நெடுஞ்சாலையில் ஈரோடு நகரத்திலிருந்து பன்னிரண்டு கல் தொலைவில் அரசலூர் இருக்கிறது. புகழூருக்கும் அரசலூருக்கும் முப்பது கல் தொலைவு இருக்கும். அரசலூர் நாக மலைமேல் ஏறத்தாழ அறுபது அடி உயரத்தில் இயற்கையாக அமைந்துள்ள குகையை இவ்வூரார் ஆண்டிப்பாறை என்று கூறுகிறார்கள். இந்தக் குகையில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் உள்ளன. 1961ஆம் ஆண்டு மயிலை சீனி வேங்கடசாமி, ஈரோடு புலவர் இராசு மற்றும் சில நண்பர்கள் இந்தக் குகைக்கும் சென்று. இங்குள்ள பிராமி எழுத்தை மைப்படி எடுத்து சுதேசமித்திரன், செந்தமிழ்ச் செல்வி இதழ்களில் வெளியிட்டார்கள்.1 பிறகு தொல்பொருள் துறையினர் அங்குச் சென்று இவ்வெழுத்துக்களைப் பார்த்தனர். இதனுடைய வரிவடிவம் இது : OU 0377709002335 இந்தப் பிராமி எழுத்து காவத்தால் பிற்பட்டது. இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்கவேண்டும் 1. சுதேசமித்திரன் 1961 சூன் 4 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வெளியீடு, 'ஈரோடு அருகே பிராமி எழுத்துச் சாசனம் என்னும் தலைப்பு' 'ஈரோடுக்குப் பக்கத்தில் அரசலூர் மலையில் மே 28 ஆம் நாள் பிராமி எழுத்துச் சாசனம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அரசலூர் மலையிலே ஆண்டிப்பாறை என்னும் குகையிலே இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது.மயிலை சீனி வேங்கடசாமியும்<noinclude></noinclude> 8vg7nbxs0yubqochactnuv1echdqfag பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/39 250 651545 1958271 2026-08-15T11:54:57Z Velumani Veluchamy 16585 வருடல் 1958271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>730 சங்ககாலத்துப்‌ பிராமிக்‌ கல்‌9வெட்டெழுத்துக்கள்‌ இது இருபத்தேழு எழுத்துக்களைக்‌ கொண்ட ஒரே சொற்றொடராக அமைந்திருக்கிறது. எபிகி.நபி இலாகாவின்‌ 1961 - 62 ஆம்‌ ஆண்டு அறிக்கையில்‌ இத்த எழுத்துக்களைப்‌ பற்றி அறிமூகப்படுத்தி, தற்காலிகமாக இதைப்‌ படித்துள்ளனர்‌.” அதில்‌ இவ்வாறு படித்திருக்கிறார்கள்‌. எழுத்துப்‌ புணர்‌(ரு)த்தான்‌ மா(லை)ய்‌ வண்ணக்கன்‌ (தேஹ்ன்‌ (சாத்தின்‌ திரு. ஐ. மகாதேவன்‌ இதை இவ்வாறு படித்துள்ளார்‌£. ஏழு தானம்‌ பண்‌ வித்தான்‌ மணிய்‌ வண்ணக்கன்‌ தே(ஷஹின்‌ சா(த்த)ன்‌. மணிக்கல்‌ வாணிகனான படுக்கைகளை (இருக்கைகளை) தேவன்‌ சாத்தன்‌ (இந்த) ஏழு பண்ணுவித்தான்‌. என்று பொருள்‌ கூறியுள்ளார்‌. திரு. டி. வி. மகாலிங்கம்‌ இவ்வாறு படித்துப்‌ பொருள்‌ கூறியுள்ளார்‌.* இவ்‌்வெழுத்துக்களின்‌ தொடக்கத்தில்‌ உள்ள - வட்டமும்‌ அதனுள்‌ உள்ள புள்ளியும்‌ *சித்தம்‌' என்னும்‌ சொல்லைக்‌ குறிக்கிற அடையாளம்‌ என்று கருதுகிறுர்‌. (சித்கம்‌) தித்தம்‌ பூணதத்தான்‌ மாறைய வண்ணக்கன்‌ தேவன்‌ சாத்தன்‌'. தித்தம்‌ என்பது தீர்த்தம்‌. புனிதம்‌ என்னும்‌ பொருள்‌ உள்ளது. தத்தான்‌ என்றிருப்பது தந்தான்‌ என்றிருக்க அவருடைய -யம்பன்‌, ஈண்பர்களான ஸ்ரீபால்‌, வித்துவான்‌௧ள்‌ சென்னியப்பனும்‌ இ£தச்‌ சாசனத்தைத்‌ இராசு, பச்சை தற்செயலாகக்‌ ரிடித்தார்கள்‌. 2. Annual Report on Indian Epigraphy 1961-62 1, 10 3. P. 67. Seminar on Inscriptions 1966. 4. Harly South Indian Palaeography, P. 293-298. சுண்டு<noinclude></noinclude> oxsy0mgs18r9fummsroyeex7piidkd0 பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/40 250 651546 1958272 2026-08-15T11:55:23Z Velumani Veluchamy 16585 வருடல் 1958272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>அரசலூர் பிராமி எழுத்துக்கள் 21 வேண்டும். 'மாறைய' என்பது ஓர் ஊரின் பெயரைக் குறிக்கிறது. இது மாறை நாட்டைச் சேர்ந்த ஊர் என்பது பொருள். வண்ணக்கன் என்பது நாணயப் பரிசோதகன் என்னும் பொருள் உள்ளது. கடைசிச் சொற்கள், தேவன் சாத்தன் என்பவை. மாறநாட்டு நாணயப் பரிசோதகனாகிய தேவன் சாத்தன் தூய்மை பெறுவதற்குத் தவம் செய்ய (இந்தப் படுக்கைகளைக்) கொடுத்தான் என்பது பொருள். இதை நாம் படித்துப் பொருள் காண்போம். முதலில் உள்ள வட்டமும் அதனுள் உள்ள புள்ளியும் எ என்னும் எழுத்தாகும். சாதாரணமாகப் புள்ளியிடப்பட வேண்டிய எழுத்துக்கள் கல்வெட்டில் புள்ளியிடப்படுவது இல்லை. இந்த எகர எழுத்தில் புள்ளியிடப்பட்டிருக்கிறது. 'எகர ஒகர மெய் புள்ளி பெறும்' என்பது பழைய எழுத்திலக்கணம். இதில் புள்ளி யிட்டிருப்பதனால் இது எகரக் குற்றெழுத்து என்பது நன்றாகத் தெரிகிறது. பிராமி எகர எழுத்து முக்கோண வடிவமாக எழுதப்படுவது வழக்கம். முக்கோண வடிவம் காலப் போக்கில் வட்டவடிவமாக மாறிவிட்டது. இந்த எழுத்துக்களைக் கீழ்க் கண்டவாறு படிக்கலாம்: எழுத்தும் புணருத்தான் மணிய் வணக்கன் தேவன் சாத்தன். எழுதுதும் என்றிருப்பது எழுத்தும் என்றிருக்கவேண்டும். புணருத்தான் என்பது பொருத்தினான் சேர்த்தான் என்னும் பொருள் உள்ள சொல். இது புணர்த்தான் என்றிருக்கவேண்டும். எழுத்தும் புணர்த்தான் என்பதன் பொருள். எழுத்தையும் சேர்த்தவன் (எழுதினவன்) என்பது. மணிய் என்பது மணி. மணிக்கற்கள். இகர ஈற்றுச் சொல்லில் யகர மெய் சேர்ந்துள்ளது. வண்ணக்கன் வாணிகன் என்னும் பொருள் உள்ள சொல். மணி வண்ணக்கன் என்றால் மணிக்கல் (இரத்தினக்கல்) வாணிகன் என்பது பொருள். தேவன் சாத்தன் - இது மணி வாணி கனுடைய பெயர். வண்ணக்கன் என்பது பொன்னையும் மணி<noinclude></noinclude> 6gesh0k9gkfj7udvdvfhhjditvqhtfi பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/41 250 651547 1958273 2026-08-15T11:55:46Z Velumani Veluchamy 16585 வருடல் 1958273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>22 சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் களையும் பரிசோதிக்கிறவன். புதுக்கயத்து வண்ணக்கன் சம்பூர் கிழான், வடம வண்ணக்கன் தாமோதரன், வண்ணக்கன் சோமருங்குமரனார் என்னும் பெயர்களைச் சங்கச் செய்யுட்களில் காண்கிறோம். மணிக்கல் வாணிகனாகிய தேவன் சாத்தன் (இந்தக் கல் வெட்டின்) எழுத்துக்களையும் எழுதினான் என்பது பொருள் எழுத்தும் என்பதில் உள்ள 'உம்' இவன் இன்னும் எதையோ செய்தான் என்று கூறுகிறது. அது என்ன ? குகையில் முனிவர் இருப்பதற்குக் கற்படுக்கையை அமைத்ததோடு அல்லாமல் அவனே இந்தக் கல்வெட்டின் எழுத்துக்களையும் எழுதினாள் ஈன்பது பொருள்.<noinclude></noinclude> gf3huoix7e652rubvjqmqh5g38ze1ow பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/42 250 651548 1958274 2026-08-15T11:56:07Z Velumani Veluchamy 16585 வருடல் 1958274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>2. கொங்கர் புளியங்குளப் பிராமி எழுத்து மதுரைக்குத தென்மேற்கே ஒன்பதரைக் கல் தொலைவில் திருமங்கலம் சாடையில் கொங்கர் புளியங்குளம் என்னும் ஊர் இருக் கின்றது. இவ்வூரின் வடகிழக்கே தாழ்வான பாறைக்குன்றுகள் இருக்கின்றன. இக் குன்றுகள் ஒன்றில் இயற்கையாக அமைந்த ஒரு பொடலில் ஆறு சிறு குகைகள் உள்ளன. இந்தக் குகைகளிலே 33 கற்படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குகையிலே மூன்று பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக் கின்றன. இக் கல்வெட்டுகள் 1910 ஆம் ஆண்டு கல்வெட்டுத் தொகுப்பில் 55,56,57 ஆம் எண்ணுள்ளவையாகத் தொகுக்கம் பட்டுள்ளன. 2 1 +5 fab58f. + G F € V t f A K B L J SHK £o[ { @ 3 CFFE12kk I left habtf £ அவற்றைப் படித்த அறிஞர்கள் வெவ்வேறு வகையாகப் படித்துப் பொருள் கூறியுள்ளனர். அவற்றைக் கூறுவோம். திரு. கிருட்டிணசாத்திரி இவ்வாறு படிகதுள்ளார். 1 1. 1st Oriental Conforence. ச.பீ.க.-3<noinclude></noinclude> fndccy65wnw8csjkljjdxjgmbe0ilgc பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/43 250 651549 1958275 2026-08-15T11:56:35Z Velumani Veluchamy 16585 வருடல் 1958275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>34 சங்ககாலத்துப்‌ பிராமிக்‌ கல்வெட்டெழுத்துக்கள்‌ பிநாலானா ஊபாசா குட்டு கொட்டு 3. யா(ட்டு) வ ._ லகு (கு)ட்‌(ஊ)கொட்டா உ அத்‌(ஆ)னாலேஞ அனா (ஊ) ததா வினா சே ட்டு (ஈ) 3. urs @ exo Cu s (a) 5 (2)@ பிட்டானாஈததா Gar Gur @ குட்டு என்பது திருப்பரங்குன்றத்துக்‌ கல்வெட்டில்‌ வருகிற இது கொடு என்னுஞ்‌ சொல்லின்‌ திரிபு. “குட்டு' என்பதாகும்‌. பாகனூர்‌ என்பது மதுரைக்கு வடக்கே உள்ள பாகனூர்க்‌ கூற்றம்‌. “லேனா என்பது பாலிசிமாழிச்‌ சொல்‌, லேனா என்பதன்‌ பொருள்‌ குகை என்பது, திரு, கே. வி சுப்பிரமணிய அய்யர்‌ படித்து விளக்‌ 5ங்‌ கூறுவது வருமாறு :" 1. குட்டு கொட்டுபிதாவான்‌ உபாசா அன்‌ உபாருவான்‌ 2. குட்டு கொட்டால கு இதா தாவின்‌ சேட்டு அதான்‌ லேன்‌ 3. பாகனூர்‌ போதாதான்‌ பிட்டான்‌ இதாதாவெ லேன்‌. முதல்‌ வாக்கியத்தில்‌ உள்ள உபாருவான்‌ என்பது ஓர்‌ ஆளினுடைய பெயர்‌. உபாசகனான (பக்தனான) உபாருவான்‌ இத்தக்‌ குகையை வெட்டுவித்தான்‌ என்பது இந்த வாக்கியத்தின்‌ பொருள்‌. என்பது உள்ளது. அடுத்த வாக்கியத்தில்‌ குகையை வெட்டி இதாதாவின்‌ உள்ள கொட்டு அமைக்கிறவன்‌ சேட்டு அதான்‌ கொட்டாலகு" என்னும்‌ பொருள்‌ என்பது ஓர்‌ ஆளின்‌ பெயர்‌. கொத்திக்‌ குகையை உண்டாக்குகிறவனாகிய இதா தாவின்‌ என்பவனுடைய குகை என்பது இதன்‌ பொருள்‌, அடுத்த வாக்கியத்தில்‌ உள்ள பாகனூர்‌ என்பது பாண்டி நாட்டுப்‌ பாகனூர்க்‌ கூற்றத்தில்‌ ஒர்‌ ஊர்‌. போதாதான்‌ என்பதன்‌ பொருள்‌ தெரிய வில்லை பிட்டான்‌ இதாதாவெ(ன்‌) என்பது ஓர்‌ ஆளின்‌ பெயர்‌. பிட்டான்‌ என்பது பட்டாரன்‌ என்பதன்‌ திரிபு, லேன்‌ என்பதன்‌ பொருள்‌ குகை. என்பவனுடைய 2. பாகனூரில்‌ கு என்பது இருக்கும்‌ பிடான்‌ இதாதாவெ இந்த வாக்கியத்தின்‌ பொருள்‌. Third Oriental Conference.<noinclude></noinclude> 9wt9ere63y5vzgp3hf0de5oeuxbq72e பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/44 250 651550 1958276 2026-08-15T11:56:56Z Velumani Veluchamy 16585 வருடல் 1958276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>35 கொங்கர்‌ புளியங்குளப்‌ பிராமி எழுத்து பின்‌ இரண்டு சொற்றொடர்களின்‌ கடைசியில்‌ : இரண்டு முதல்‌ குறி சிறு வட்டமும்‌ வட்டத்தின்‌ குறிகள்‌ உள்ளன. மேலும்‌ கீழும்‌ இரண்டு கைகளும்‌ உள்ளன. இஃது ஓம்‌ என்பதைக்‌ அடுத்துச்‌ சதுரமும்‌ அதற்குள்‌ குறுக்கு அதை குறிக்கிறது. இவை தெடுக்காக இரண்டு ளேடுகளும்‌ காணப்படுகின்றன. £ சுவஸ்திகத்தின்‌ அடையாளமாகும்‌. திரு. சி. நாராயணராவ்‌ வழக்கப்படி இவற்றைப்‌ பிராகிருத மாக்கிப்‌ பிறகு சமற்கிரு தபபடுத்தியும்‌ பொருள்‌ கூறுகிறார்‌." 1. (குட்டு கொட்டு பிதா வானு உபாசா அவுவா ஊ பாட்டுவ” (பிராகிருதம்‌) கொட்டாபிதவான்‌ :உபாட்டு--அ குட்டு உபாத்யா _யானாம்‌' (சமற்கிருதம்‌) ஊபாட்டுஅ என்பவன்‌ பொக்கிஷத்துக்காக இதை வெட்டி னான்‌ என்பது இதன்‌ பொருள்‌. 9. குட்டு கொடாலகு இதாதாவி நா சேட்ட அதா லேனா' (பிராகிருதம்‌) ்‌ (கோஷ்ட்டம்‌ கோஷ்ட்டாகா--க்ருதே ஹிதார்த்தாய) ஞான - ஸ்ரேஷ்ட்யஸ்ஸ தானம்‌ லயனம்‌' (சமற்கிருதம்‌) ஞான நூல்திலையத்தின்‌ ஆக்கத்துக்கான இடம்‌; பொருள்‌, என்பது குகை உன்‌ தானமாகக்‌ கொடுத்த 9, பாகானா சிரேஷ்‌ -ஊரா பேத்‌ (ஆ) தானு பிட்டானா இதாதாவே போனா' (பிராகிருதம்‌) (பாகானா' ஊரா வருத்தானாம்‌ தானம்‌ தாய போ 3, 4, (ப்ரோ) தானாம்‌' Third Oriental (சமற்கிருதம்‌) Conference. New Indian Antiquary. பிட்டாகானாம்‌ ஹிதார்‌<noinclude></noinclude> da027of6wv9arsaa6f7lfudfpw4mo2i பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/45 250 651551 1958277 2026-08-15T11:57:18Z Velumani Veluchamy 16585 வருடல் 1958277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>36 சங்ககாலத்துப்‌ பிராமிக்‌ கல்வெட்டெழுத்துக்கள்‌ முன்பின்னாக மாறிப்போன (பெளத்த மதத்தின்‌) பிடகம்‌ புத்தகங்களை மாணவர்‌ நன்மைக்காகப்‌ பாகனூர்ப்‌ பெரியவர்கள்‌ கொடுத்த தானம்‌ என்பது இதன்‌ பொருள்‌ : திரு. ஐ. மகாதேவன்‌ இவற்றை இவ்வாறு படிக்கிறார்‌.” 1. *குற கொடுபிதவன்‌ உபாசன்‌ ஊபறுவ்‌...' உபாசகனாகிய (இவன்‌ உ(ய்‌)ப றுவ(ன்‌) இந்தக்‌ கூறையைக்‌ கொடுப்பித்தான்‌. பொருள்‌ என்று கூறை படித்துக்‌ என்று 'குற' முதல்‌ சொல்லைக்‌ கூறுகிறார்‌.) 2, குற கொடல கு--ஈத்தவன்‌ சேற அதன்‌ (மேல்கட்டூ) கூறையை வேய்ந்தான்‌. 3. பாகன்‌--ஊர்‌ பேதாதன்‌ அதன்‌ என்‌? சேறு பிடன்‌ ஈத்த பா(க்‌)கனூர்‌ பேராதன்‌ பி(ட்‌)டன்‌ இந்தக்‌ கூரையை கிறார்‌. திரு. தி. வி. மகாலிங்கம்‌ சி 1, இவ்வாறு வேபொன்‌” வேய்ந்தான்‌. படித்துப்‌ பொருள்‌ கூறு *குறு கொடுபிதவன்‌ உபசஅன்‌ உபறுவ' குறு என்பது கூறு என்னும்‌ சொல்‌. இங்கு இது கற்படுக்கை கொடுபிதவன்‌ என்பது களின்‌ ஒரு பகுதியைக்‌ குறிக்கின்றது. குறுகோடுவைச்‌ சேர்ந்த உபசன்‌ என்பது உபாசகன்‌, சொல்‌. உபாசகனான உபறுவன்‌ இதைக்‌ கொடுப்பித்தான்‌ என்பது இதன்‌ இதை வேறுவகையாக இப்படியும்‌ படிக்கலாம்‌2 பொருள்‌. (குறு கோடு பிதவான்‌ ஊ பச--அன்‌ ஊபறுவ" குறுகோடு என்பதை ஓர்‌ ஊர்‌ அல்லது சிறு குன்று என்று பிதவான்‌ என்பது பிதா அல்லது பிதுர்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. இதன்‌ பொருள்‌ என்னும்‌ சொற்களுடன்‌ சம்பந்தப்பட்ட சொல்‌. துறவியைச்‌ சுட்டுகிறது. இது தூய்மையான என்பது, தந்த 5. p. 61. Seminar on Inscriptions 1966. 6. p. 228 - 231 Early South Indian Palaeography.<noinclude></noinclude> cyqshbvbeul59jei22r9u1bwkx7n8gx பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/46 250 651552 1958278 2026-08-15T11:57:40Z Velumani Veluchamy 16585 வருடல் 1958278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>கொங்கர் புளியங்குளப் பிராமி எழுத்து 37 உபசன் என்பது உபாசகன். உபறுவ என்பது ஓர் ஆளினுடைய பெயர். குறுகோட்டுத் தூய துறவியின் பக்தனான உபாசகன் உபாறுவன் என்பது இதன் திரண்ட பொருள். 2. குறு கொடல்கு ஈத தூவின் செறு அதன் போன்' குறு என்பது கூ. இங்குக் கற்படுக்கையின் ஒரு கூறைக் குறிக்கிறது. ஈத என்பதன் பொருள் இந்திரன். தூவின் என்பது மயில் இறகுக் கத்தை. செறு அதன் என்பது ஓர் ஆளின் பெயர். 3. 'பாகன் ஊர் பொத்தன் பிடன் ஈத தூ வே போன்' . பாகனூர் என்பது ஓர் ஊரின் பெயர். பிடன் என்பது ஓர் ஆளின் பெயர். தூ வெ என்பது மயில் இறகுக் கத்தை. போன் என்பது பொன். பொன் என்பதன் பொருள் மலை (மேருமலை, பொன்மலை) மலைக்குகை என்பது. இந்த மூன்று கல்வெட்டெழுத்துக்களை நாம் படிப்போம். 1. குட்டு கொடுபிதவன் உபாசா அன் ஊபட்டூவ் 'குட்டு கொடுப்பித்தவன் உபாசான் ஊபட்டுவ(ன்)' என்பது இதன் வாசகம். குட்டு என்பது குன்று. கொடுபிதவன் என்பது கொச்சைச் சொல். இது கொடுப்பித்தவன் என்று இருக்க வேண்டும். உபாசாஅன் என்பதும் கொச்சைச் சொல். இஃது உபாசகன் என்றிருக்க வேண்டும். ஊபட்டுவன் என்பது உபாச னுடைய பெயர், 2. குட்டு கொடாலகு ஈத்தவன் சொறு அதன் பொன். இந்த வாக்கியத்திலும் குட்டு என்னும் சொல் வருகிறது. குட்டு என்பதற்குக் குன்று என்று பொருள் கூறினோம். குன்று என்பதைப் பேச்சு வழக்கில் குட்டு என்று கூறுகிறார்கள். மதுரை வட்டத்து மேலூருக்கு வடக்கே எட்டுக் கல் தொலைவிலுள்ள கருங்காலக் குடியில் இருக்கிற குன்றுகளை அவ்வூரார் குட்டு என்று கூறுகின்றார்கள். அவர்கள் அந்தக் குன்றுகளைப் 'பஞ்ச<noinclude></noinclude> cpw299ggvsg2x2gqhy92bfs6eiu3a41 பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/47 250 651553 1958279 2026-08-15T11:57:58Z Velumani Veluchamy 16585 வருடல் 1958279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>38° சங்ககாலத்துப்‌ பிராமிக்‌ கல்வெட்டெழுத்துக்கள்‌ பாண்டவர்‌ குட்டு' என்று கூறுகிறார்கள்‌. எபிகிராபி அறிக்கை 57ஆம்‌ பக்கத்தில்‌ என்னுஞ்‌ சொல்‌ குற்று cro GA இது 1911ஆம்‌ ஆண்டு கூறப்படுகிறது. குன்று பிறகு குட்டு என்ருயிற்று. இரண்டாவது சொல்‌ /(கொடாலகு' என்று இருக்கிறது. இதன்‌ பொருள்‌ தெரியவில்லை. 'குட்டு கொடாலகு” என்று இருப்‌ பதைக்‌ கொண்டு, இது, பொடவு ஆக இருக்கலாம்‌ என்று தோன்றுகின்றது. குடங்கு என்பதைத்‌ தவறாகக்‌ கொடலகு என்று: எழுதியிருப்பதாகத்‌ தோன்றுகிறது. ஈத்தவன்‌--கொடுத்தவன்‌. மூன்றாவது சொல்‌ சொறு. சிறு என்று எழுதப்படவேண்டியதைச்‌ (சொறு' என்று பிழையாக எழுதியிருக்கின்ருன்‌ கற்றச்சன்‌. ஆதன்‌ என்பதை அதன்‌ என் எழுதீயிருக்கிருன்‌. சிறு ஆதன்‌ என்பது ஓர்‌ ஆளினுடைய பெயர்‌. 4சொறு அதன்‌ பொன்‌' என்பது சிறு ஆதன்‌ கொடுத்த பொன்‌; அவன்‌ அமைக்கப்‌ பொன்‌ கொடுத்தான்‌. களில்‌ காட்டப்பட்டுள்ள து. 3, குகையின்‌ கற்படுக்சையை அதன்‌ மதிப்பு இரண்டு குறியீடு பாகன்‌ ஊர்‌ பேத்தன்‌ பிடான்‌ ஈத்தவெ பொன்‌ பாகனூர்‌ என்பது பாகன்‌ ஊர்‌” என்று பிரித்து எழுதப்பட்‌ டுள்ளது. பாகனூர்‌ பாண்டி நாட்டில்‌ மதுரைக்கு வடக்கே இருந்த ஓர்‌ ஊரின்‌ பேயர்‌. இது பாகனூர்க்‌ கூற்றத்தின்‌ தலைநகரமாக இருந்தது. பிற்காலத்து வேள்விக்குடிச்‌ செப்பேட்டில்‌ பாகனூர்க கூற்றம்‌ கூறப்படுகிறது. 'பாகனூர்க்‌ கூற்றமென்னும்‌ பழனக. கிடக்கை நீர்நாடு' * வேள்விக்குடி என்னும்‌ ஊர்‌ பாகனூர்க்‌ கூற்றத்தில்‌ இருந்தது என்று வேள்வீக்குடி செப்பேடு கூறுகிறது. மாகந்தோய்‌ மலர்ச்‌ சோகப்‌ பாகனூர்க்‌ கூற்றத்துப்படுவது, ஆல்வ தானை ஆடல்‌ வேந்தேய்‌ ! வேள்ளிக்குடி என்னும்‌ பெயர்‌ உடையது. ஒங்காத வேற்றாணையோ டோதவேல உடன்‌ காத்த பல்யாக முதுகுடுமிப்‌ பெருவழுதி என்னும்‌ பரமேச்‌ வரனால்‌ வேள்‌ வீக்‌. குடி என்னப்பட்டது. 7. வேளவிக்குடிச்‌ செப்பேடு, மூனறாம்‌ ஏடு, பின்‌ பக்கம்‌ 83-94 8. வேள்விக்குடிச்‌ செப்பேடு, வரி. 110. ஏழாம்‌ ஏடு பின்புறம்‌ வரி 107 -<noinclude></noinclude> j5acy5ac68gwclbaoe224bw3k1f0zxh பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/48 250 651554 1958280 2026-08-15T11:58:20Z Velumani Veluchamy 16585 வருடல் 1958280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>கொங்கர் புளியங்குளப் பிராமி எழுத்து 39 நாகன் பேத்தன் பிடான் என்பதும் தவறாக எழுதப்பட்டிருக்கின்றது. போத்தன் பிட்டன் என்று இஃது எழுதப்படவேண்டும். பேத்தன் என்றும் பிடான் என்றும் பெயர் இல்லை. போத்தன், பிட்டன் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் வழங்கி வந்தன. போத்தனார், மதுரைப் போத்தனார், மதுரை மருதங்கிழார் மகனார் இளம் போத்தனார் என்று போத்தன் என்னும் பெயரைச் சங்க இலக்கியங்களில் பார்க்கின்றோம். பிட்டன், பிட்டங்கொற்றன் என்னும் பெயர்களையும் சங்க இலக்கியங்களில் பார்க்கின்னோம். பிட்டன் கொற்றனைப் பாடிய செய்யுள்கள் புறநானூற்றில் உள்ளன. 9 இந்தச் சான்றுகளைக் கொண்டு இந்தப் பிராமிக் கல்வெட்டில் பேத்தன் பிடான்' என்றிருப்பது தவறு என்றும் அது போத்தன் பிட்டன் என்றிருக்க வேண்டும் என்பதும் உறுதி யாகத் தெரிகின்றது. 'ஈத்தவெ' என்றிருப்பதும் கொச்சைச் சொல். இஃது ஈத்தவை என்று இருக்க வேண்டும். ஈத்தவை என்பது ஈந்தவை என்பதன் வலித்தல் விகாரம். ஈந்தவை - ஈத்தவை - கொடுத்தவை.பொன் என்பதன் பக்கத்தில் இரண்டு குறியீடுகள் உள்ளன. பொன்னின் அளவை (மதிப்பைத்) தெரிவிக்கின்றன. அந்த அளவு இன்னதென்பது தெரியவில்லை. அவை பொன் பாசனூரில் இருந்த போத்தன் பிட்டன் என்பவர் இந்தக் குகையில் கற்படுக்கை அமைப்பதற்காகச் செலவிட்ட இவ்வளவு என்பதை இந்தக் கல்லெட்டு மொழிகள் கூறுகின்றன. 9.புறநா.120, 168, 169, 172.<noinclude></noinclude> io2tcrm6rls5o0ttrwnhpplb7rar919 பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/49 250 651555 1958281 2026-08-15T11:58:38Z Velumani Veluchamy 16585 வருடல் 1958281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>8. குன்னக்குடி (குன்றக்குடி) பிராமி எழுத்து இராமநாதபுர வட்டத்து, கிரப்பத்தூர்‌ தாலுக்காவில்‌ குன்னக்‌ குடி (சன்றக்கு,) தொலைவில்‌ பெயராக இருக்கிறது. உள்ளது, இங்கள்ள அமைந்திருக்கின்றது. மானுக்குக்‌ கோயில்‌ மூன்று நடைவரை மேல்‌ உள்ள அமைந்த குன்றின்‌ குன்றின்‌ இவ்வூரின்‌ முருகப்‌ பெரு அடிவாரத்தில்‌ கோயில்கள்‌ இருக்கின்‌ றன. கேயிலுக்கு இருக்கிறது. பெயரே ரூன்றின்‌ மேல்‌ இருக்கின்றது. (குகைக்‌)% முருகன்‌ பொடவு காரைக்கடியிலிரந்து ஐந்துகல்‌ மேற்கே மலை இயற்கையாக இந்தப்‌ பொடவு இப்போது ஞானியார்‌ மடம்‌ என்று பெயர்‌ கூறப்படுகிறது. இந்தப்‌ பொடவின்‌ மேற் புறப்‌ பாதையின்‌ உட்பக்கத்தில்‌ நம்‌ முடைய ஆராய்ச்சிக்குரிய பிராமி எழுத்துக்‌ கல்வெட்டு இருக்கின்றது. 1909ஆம்‌ ஆண்டில்‌ இந்த எழுத்து கண்டுபிடிக்கப்பட்டது. 1910ஆம்‌ ஆண்டு கல்வெட்டுத்‌ துறை அறிக்கைபில்‌ இதுபற்றி அறிவிக்கப்‌ பட்டுள்ளது. 1 இந்த எழுத்து 1909 ஆம்‌ ஆண்டு கல்வெட்டுத்‌ தொகுப்பின 44 ஆம்‌ எண்ணாஃப்‌ பதிவு செய்யபபட்டுள்ளது.” குகை வாகிலின்‌ மேற்புறத்துப்‌ பாறையில்‌, உட்புறமாகப்‌ பொறிககப்‌ ஃட்டுள்ள இந்த எழுத்துக்கள்‌ ஒ£ர வரியில்‌ பதினொரு எழுத்துக்களைக்‌ சொண்டிருககிறது. இந்த எழுத்துக்களைப்‌ பொறிதத கதறச்சன்‌ தவறு செய்துவிட்டான்‌. வழக்ஃப்படி இடப்‌ புறததிமிருந்து வலப்‌ புறமாக எழுதாமல்‌, வலப்‌ பக்கத்திலிருந்து இடப பக்கமாகப்‌ பொறித்திருக்கின்றான்‌. இந்த நிலையில்‌ இவ்‌ வெழுத்துக்களைப்‌ படிப்பது கடினமாக இரககின்றது. இந்த எழுததுககளின்‌ வரிவடிவம்‌ இது. “ 011 1. Madras Epigraphy Report, 1910 pt. Il para 5. 2. Epi. Call. 44 of 1909.<noinclude></noinclude> hikw0iyb1dzlz33gprub686lj9l2f0r பக்கம்:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf/50 250 651556 1958282 2026-08-15T11:58:57Z Velumani Veluchamy 16585 வருடல் 1958282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Velumani Veluchamy" /></noinclude>குன்னக்குடி (குன்றக்குடி) பிராமி எழுத்து இதை இடப்‌ புறத்திலிருந்து தொடங்கி எழுதினால்‌ இதன்‌ உருவம்‌ இப்படி அமையும்‌. PALL வலப்‌ 41 புறமாக IARISYS இதுதான்‌ சரியான வடிவம்‌. ட்ப 14ம்‌. திரு. கிருட்டிண சாத்திரியும்‌, திரு. சுப்பிரமணிய அய்யரும்‌ இதைப்‌ படிக்காமல்‌ விட்டனர்‌. திரு. டி. வி.மகாலிங்கம்‌ இதை இவ்வாறு படித்துள்ளார்‌. *உர ஊர அதன்‌ சாத்தன்‌! என்று: படித்துள்ளார்‌. உபி ஊர்‌ ஆகன்‌ சாத்தன்‌ என்று அமைத்து விளக்கங்‌ கூறுகிறார்‌. அதன்‌ என்பது ஆதன்‌. ஆதன்‌ என்பதன்‌ பொருள்‌ ஆட்தன்‌ ஆப்தன்‌ என்பதும்‌ அர்ஹத்‌ என்பதும்‌ ஒன்றே. அர்ஹத்‌ என்னுஞ்‌ சொல்லைப்‌ பெளத்தர்‌, சைனர்‌, ஆசீவகர்‌ பயன்‌ படுத்தியுள்ளனர்‌ என்று கூறுகின்ருர்‌.” இதை இவர்‌ *உபிஊர்‌ ஆதன்‌ சாச்சன்‌” என்று படித்தது சரியே. ஆனால்‌ ஆதன்‌ என்பதற்கு இவர்‌ கூறும்‌ விளக்கம்‌ தவறாகவும்‌ கு.த்திரயுக்தியாகவும்‌ இருக்கின்றது. ஆதன்‌ என்னும்‌ பெயர்‌ சங்க காலத்தில்‌ மக்கள்‌ பெயராக வழங்கி வந்துள்ளது. திரு. ஐ. மகாதேவன்‌ இதைப்‌ படித்ததில்‌ முதல்‌ எழுத்து அந்த தெரியாமலிருப்பதனால்‌ புரைசல்‌ இடையே சரியாகத்‌ படித்துள்ளார்‌. ்‌ மற்ற எழுத்துக்களைப விட்டுவிட்டு எழுத்தை .பிஊர்‌ ஆதன்‌ சாத்தன்‌” என்று படிக்கின்றார்‌.* இவர்கள்‌ இரு வரும்‌ இந்த எழுத்துக்களைச்‌ சரியாகவே படித்திருக்கின்றார்கள்‌. 3. Journal of madras University Vol. XXX No. 1, (page - 4. p.67. 5.7) ற. 285-287 Early South Indian palaeography 1967. Seminar on Inseriptions 1966.<noinclude></noinclude> 0705odxxffm889t7yw1do9f1kfma9xj