வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| பாண்டிய மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலப் பாண்டியர்கள் | |
| வடிம்பலம்ப நின்ற பாண்டியன் | |
| குடுமி | |
| கடைச்சங்க காலப் பாண்டியர்கள் | |
| முடத்திருமாறன் | கி.பி. 50-60 |
| மதிவாணன் | கி.பி. 60-85 |
| பெரும்பெயர் வழுதி | கி.பி. 90-120 |
| பொற்கைப் பாண்டியன் | கி.பி. 100-120 |
| இளம் பெருவழுதி | கி.பி. 120-130 |
| அறிவுடை நம்பி | கி.பி. 130-145 |
| பூதப் பாண்டியன் | கி.பி. 145-160 |
| நெடுஞ்செழியன் | கி.பி. 160-200 |
| வெற்றிவேற் செழியன் | கி.பி.200-205 |
| தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் | கி.பி. 205-215 |
| உக்கிரப் பெருவழுதி | கி.பி. 216-230 |
| மாறன் வழுதி | கி.பி. 120-125 |
| நல்வழுதி | கி.பி. 125-130 |
| கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி | கி.பி. 130-140 |
| இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் | கி.பி. 140-150 |
| குறுவழுதி | கி.பி.150-160 |
| வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி | கி.பி. 160-170 |
| நம்பி நெடுஞ்செழியன் | கி.பி. 170-180 |
| இடைக்காலப் பாண்டியர்கள் | |
| கடுங்கோன் | கி.பி. 575-600 |
| அவனி சூளாமணி | கி.பி. 600-625 |
| செழியன் சேந்தன் | கி.பி. 625-640 |
| அரிகேசரி | கி.பி. 640-670 |
| ரணதீரன் | கி.பி. 670-710 |
| பராங்குசன் | கி.பி. 710-765 |
| பராந்தகன் | கி.பி. 765-790 |
| இரண்டாம் இராசசிம்மன் | கி.பி. 790-792 |
| வரகுணன் | கி.பி. 792-835 |
| சீவல்லபன் | கி.பி. 835-862 |
| வரகுண வர்மன் | கி.பி. 862-880 |
| பராந்தகப் பாண்டியன் | கி.பி. 880-900 |
| பிற்காலப் பாண்டியர்கள் | |
| மூன்றாம் இராசசிம்மன் | கி.பி. 900-945 |
| வீரபாண்டியன் | கி.பி. 946-966 |
| அமர புயங்கன் | கி.பி. 930-945 |
| சீவல்லப பாண்டியன் | கி.பி. 945-955 |
| வீரகேசரி | கி.பி. 1065-1070 |
| சடையவர்மன் சீவல்லபன் | கி.பி. 1145-1150 |
| பராக்கிரம பாண்டியன் | கி.பி.1150-1160 |
| சடையவர்மன் பராந்தக பாண்டியன் | கி.பி.1150-1162 |
| மாறவர்மன் சீவல்லபன் | கி.பி. 1132-1162 |
| சடையவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1162-1175 |
| சடையவர்மன் வீரபாண்டியன் | கி.பி. 1175-1180 |
| விக்கிரம பாண்டியன் | கி.பி. 1180-1190 |
| முதலாம் சடையவர்மன் குலசேகரன் | கி.பி. 1190-1218 |
| முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1216-1238 |
| இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் | கி.பி. 1238-1250 |
| இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1239-1251 |
| முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1251-1271 |
| இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் | கி.பி. 1251-1281 |
| சடையவர்மன் விக்கிரமன் | கி.பி. 1149-1158 |
| முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1268-1311 |
| மாறவர்மன் விக்கிரம பாண்டியன் | கி.பி. 1268-1281 |
| சடையவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1276-1293 |
| சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1422-1463 |
| இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1429-1473 |
| அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1473-1506 |
| குலசேகர தேவன் | கி.பி. 1479-1499 |
| சடையவர்மன் சீவல்லப பாண்டியன் | கி.பி. 1534-1543 |
| பராக்கிரம குலசேகரன் | கி.பி. 1543-1552 |
| நெல்வேலி மாறன் | கி.பி. 1552-1564 |
| சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் | கி.பி. 1564-1604 |
| வரதுங்கப் பாண்டியன் | கி.பி. 1588-1612 |
| வரகுணராம பாண்டியன் | கி.பி. 1613-1618 |
| கொல்லங்கொண்டான் | (தகவல் இல்லை) |
| edit | |
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு (கி.மு.300 - கி.பி.300) முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுயுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. இவனுடைய அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இவ்வரசன் தலைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. முதல் இரு தமிழ்ச் சங்கங்கள் இருந்ததற்கான உறுதி பயக்கும் சான்றுகள் அதிகம் இல்லை. இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் முதல் இரு சங்கங்கள் இருந்ததாகக் கருதப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் வரும் சிறு குறிப்புகளும், இறையனார் அகப்பொருளில் வரும் விரிவான குறிப்புமே இவ்விலக்கிய சான்றுகள்.
இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. ஒரு புறநானூற்றுப் பாடல் நெடியோன் என்னும் இவ்வரசனைப் பற்றிய பாடலில் இவனை வாழ்த்தும் ஒரு செய்தியில்
"முன்னீர் விழவின் நெடியோன்"
"நன்னீர் பஃறுளி மணலினும் பலவே" (புறம்-9)
என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.
"நிலந்தந்த பேருதவிப்"
"பொலந்தார் மார்பின்"
"நெடியோன் உம்பல்" (60-61)
என மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைச்சங்க காலத்து இறுதி அரசனாக இருந்திருப்பான் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.

