ரணதீரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| பாண்டிய மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலப் பாண்டியர்கள் | |
| வடிம்பலம்ப நின்ற பாண்டியன் | |
| குடுமி | |
| கடைச்சங்க காலப் பாண்டியர்கள் | |
| முடத்திருமாறன் | கி.பி. 50-60 |
| மதிவாணன் | கி.பி. 60-85 |
| பெரும்பெயர் வழுதி | கி.பி. 90-120 |
| பொற்கைப் பாண்டியன் | கி.பி. 100-120 |
| இளம் பெருவழுதி | கி.பி. 120-130 |
| அறிவுடை நம்பி | கி.பி. 130-145 |
| பூதப் பாண்டியன் | கி.பி. 145-160 |
| நெடுஞ்செழியன் | கி.பி. 160-200 |
| வெற்றிவேற் செழியன் | கி.பி.200-205 |
| தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் | கி.பி. 205-215 |
| உக்கிரப் பெருவழுதி | கி.பி. 216-230 |
| மாறன் வழுதி | கி.பி. 120-125 |
| நல்வழுதி | கி.பி. 125-130 |
| கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி | கி.பி. 130-140 |
| இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் | கி.பி. 140-150 |
| குறுவழுதி | கி.பி.150-160 |
| வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி | கி.பி. 160-170 |
| நம்பி நெடுஞ்செழியன் | கி.பி. 170-180 |
| இடைக்காலப் பாண்டியர்கள் | |
| கடுங்கோன் | கி.பி. 575-600 |
| அவனி சூளாமணி | கி.பி. 600-625 |
| செழியன் சேந்தன் | கி.பி. 625-640 |
| அரிகேசரி | கி.பி. 640-670 |
| ரணதீரன் | கி.பி. 670-710 |
| பராங்குசன் | கி.பி. 710-765 |
| பராந்தகன் | கி.பி. 765-790 |
| இரண்டாம் இராசசிம்மன் | கி.பி. 790-792 |
| வரகுணன் | கி.பி. 792-835 |
| சீவல்லபன் | கி.பி. 835-862 |
| வரகுண வர்மன் | கி.பி. 862-880 |
| பராந்தகப் பாண்டியன் | கி.பி. 880-900 |
| பிற்காலப் பாண்டியர்கள் | |
| மூன்றாம் இராசசிம்மன் | கி.பி. 900-945 |
| வீரபாண்டியன் | கி.பி. 946-966 |
| அமர புயங்கன் | கி.பி. 930-945 |
| சீவல்லப பாண்டியன் | கி.பி. 945-955 |
| வீரகேசரி | கி.பி. 1065-1070 |
| சடையவர்மன் சீவல்லபன் | கி.பி. 1145-1150 |
| பராக்கிரம பாண்டியன் | கி.பி.1150-1160 |
| சடையவர்மன் பராந்தக பாண்டியன் | கி.பி.1150-1162 |
| மாறவர்மன் சீவல்லபன் | கி.பி. 1132-1162 |
| சடையவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1162-1175 |
| சடையவர்மன் வீரபாண்டியன் | கி.பி. 1175-1180 |
| விக்கிரம பாண்டியன் | கி.பி. 1180-1190 |
| முதலாம் சடையவர்மன் குலசேகரன் | கி.பி. 1190-1218 |
| முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1216-1238 |
| இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் | கி.பி. 1238-1250 |
| இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1239-1251 |
| முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1251-1271 |
| இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் | கி.பி. 1251-1281 |
| சடையவர்மன் விக்கிரமன் | கி.பி. 1149-1158 |
| முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1268-1311 |
| மாறவர்மன் விக்கிரம பாண்டியன் | கி.பி. 1268-1281 |
| சடையவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1276-1293 |
| சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1422-1463 |
| இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1429-1473 |
| அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1473-1506 |
| குலசேகர தேவன் | கி.பி. 1479-1499 |
| சடையவர்மன் சீவல்லப பாண்டியன் | கி.பி. 1534-1543 |
| பராக்கிரம குலசேகரன் | கி.பி. 1543-1552 |
| நெல்வேலி மாறன் | கி.பி. 1552-1564 |
| சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் | கி.பி. 1564-1604 |
| வரதுங்கப் பாண்டியன் | கி.பி. 1588-1612 |
| வரகுணராம பாண்டியன் | கி.பி. 1613-1618 |
| கொல்லங்கொண்டான் | (தகவல் இல்லை) |
| edit | |
ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான்.
[தொகு] ரணதீரன் ஆற்றிய போர்களும் பெற்ற பட்டங்களும்
ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது. படையெடுத்துச் சென்ற இவன் முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு, கருநாடகம் அனைத்தினையும் வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான். சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
[தொகு] ரணதீரன் ஆட்சியில் சேரமான் பெருமாள் நாயனார்
ரணதீரன் ஆட்சிக் காலத்தில் சேரமான் பெருமாள் நாயனார் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திருஆலவாய் இறைவனையும், திருப்பரங்குன்ற பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம், சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. (பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).
ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.

