கிறிஸ்துமஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இயேசுவை ஞானிகள் வணங்குதல்
பெரிதாக்கு
இயேசுவை ஞானிகள் வணங்குதல்

கிறிஸ்துமஸ் இயேசு இவ்வுலகில், பழைய ஏற்பாட்டில் தீர்கதரிசனம் உரைக்கப்பட்டது போலவே மேசியாவாக, கிறிஸ்துவாக, கன்னியிடமிருந்து, பெத்லகேமின் ஒரு மாட்துத் தொழுவத்தில், உற்பவித்ததை நினைவு கூறுகின்றது. கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ம் திகதி கொண்டாடடப் படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை ஜனவரி திங்கள் 7 ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.

மேற்கு நாடுக்ளில் கிறிஸ்த்துமஸ் மிக முக்கிய நாளாக காணப்படுகிறது. கிறிஸ்த்துமஸ் இயேசுவுக்கு முன்னரான மாரிகால கொண்டாங்களின் ஒரு மறுவிய வடிவமாகும் என்பது ஆரய்சியாளர்களின் கருத்தாகும்.

கிறிஸ்துமஸ் நாளில் பரிசுகளை பரிமாறிக்கொள்வதும் இயேசுவின் பிறப்பை குறிக்கும் பாடல்கள் இசைப்பதும் வழமையாகும். கிறிஸ்துமஸ் நாளன்று நடுநிசி திருப்பலிகளும் இடம் பெரும்.

[தொகு] வரலாறு

இயேசுவின் பிறப்பு
பெரிதாக்கு
இயேசுவின் பிறப்பு

புனித விவிலிய்த்தின் படி, கபிரியேல் என்ற இறைத்தூதன், கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவிமூலமாக இயேசு பிறக்கப்போவதை அறிவிக்கிறார். அச்சமயம் மரியாள் யோசேப்பு என்னும் மனிதனுக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார். மரியாள் கற்பமாயிருப்பதை தெரிந்துகொண்ட யோசேப்பு மரியாளை இரகசியமாக தள்ளிவிட (மணமுடிக்காது விட) நினைத்தார். இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் உற்பவித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை தெரிவிக்கிறார். பின்பு யோசேப்பு மரியாளை மனவியாக ஏற்றுக்கொண்டார்.

மரியாள் நிறைமாத கர்பினியாக இருந்தபோது பலஸ்தீனத்தை ஆண்ட அகோஸ்துராயர் (Emperor Augustus) மக்கள் தொகை கணிப்பீடு ஒன்றை கட்டளயிட்டார். அவர் கட்டளைப்படி யொசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவிதின் நகரமான பெத்லகேமுக்கு சென்றனர். தங்குவதற்கு அறைகள் கிடைகாத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அம் மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவை பெறுகிறார்.

இயேசு பிறந்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையருக்கு இறைத்தூதர் தோன்றி பெத்லகேமில் (தாவிதின் ஊரில்) இரட்சகர் பிறந்த நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் பரலோக இறைத்தூதரனைவரும் தோன்றி "உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமையும், இப் பூமியில் நன்மனதோருக்கு அமைதியுமாகுக" என பாடினர். இடையர் எழுந்து நகருகுள் சென்று குழந்தை இயேசுவை கண்டு வணங்கினார்கள்.

[தொகு] உசாத்துணை