கியோம் அப்போலினேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கியோம் அப்போலினேர் (Guillaume Apollinaire) (1880 - 1918) கவிதைத் துறைக்கும் கவிதை குறித்த சிந்தனைக்களுக்கும் ஒரு புதிய பார்வையையும் பரந்த வீச்சையும் அளித்தவராகக் கருதப்படுபவர். முப்பத்தெட்டு ஆண்டுகளே வாழ்ந்த இவர், இருபதாம் நூற்றாண்டின் மரபு சாரா பிரெஞ்சு கவிதை இயக்கத்தின் முன்னோடி எனப் பாராட்டப்பட்டார். இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஜாக்குலின் என்ற பெண்ணை மணந்தார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் இவர் "கவிஞர்களும் நவீன மனப்பாங்கும்" என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை பின்னர் நூலாக்கப்பட்டது.

