தீவிரவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தீவிரவாதம் என்பது தொடர்ந்து ஒரு சமூகத்தின் மேல் நடத்தப்படும் குற்றவியல் செயல்கள் ஆகும். அரசியல்,சமயம், குறிப்பிட்ட கொள்கைகளால் ஒரு குறிப்பிட்ட சமூகம் மற்றும் அச்சமூகம் சார்ந்த சமயம் போன்றவற்றிற்கு விளைவிக்கப்படும் குற்றவியல் செயல்களே தீவிரவாதம் ஆகும்.பல சமூகங்கள் ஒன்றினைந்து வாழும் ஒரு நாட்டில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் காரணமாகவும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அந்நாட்டின் பிரதிநிதிகள் ஏற்படுத்தும் வேறுபாடுகள்,சம உரிமை வழங்காதல் போன்ற பல காரணங்களினாலும் தீவிரவாதம் உருவெடுப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஒரு நாட்டின் அரசியல் கட்டமைப்புகளை வீழ்ச்சி அடையச் செய்வதற்கு தீவிரவாதிகள் என குறிப்பிட்ட இனத்தவரால் கருதப்படுகின்றவர்கள் பலவகை யுத்தம்,நிழல் யுத்தம் போன்றவற்றினைப் பின்பற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

[தொகு] பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்

தீவிரவாத தக்குதல்களானது பொது மக்கள் என்ற வேறுபாடின்றியும் தமது குறிக்கோளை அடைவதற்காக அனைத்து சமூகத்தினர் மீதும் நடத்தப்படும் குற்றவியல் தாக்குதல்களாக அமைவது குறிப்பிடத்தக்கது.