கொன்றை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
?
கொன்றை மரம் |
||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() பூக்களுடன் கொன்றை மரம்
|
||||||||||||||||||
| அறிவியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
|
|
||||||||||||||||||
| கசியா பிஸ்டூலா L. |
||||||||||||||||||
|
|
கொன்றை மரம், ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவரவியற் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தெற்காசியப் பிராந்தியத்தைச் சேர்ந்தது. பாகிஸ்தானின் தெற்குப் பகுதிகளிலிருந்து, இந்தியா ஊடாகக் கிழக்கே மியன்மார் (பர்மா) வரையும், தெற்கே இலங்கைத் தீவு வரையும் இது பரவலாகக் காணப்படுகின்றது.
இது நடுத்தர உயரம் கொண்ட ஒரு மரம். வேகமாக வளரக்கூடிய இம்மரம் 10 தொடக்கம், 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இலையுதிர்க்கும் தன்மை கொண்ட அல்லது, ஓரளவு பசுமைமாறாத் தன்மை கொண்ட இம் மரத்தின் இலைகள், 15 தொடக்கம் 60 சதம மீட்டர் வரை நீளம் கொண்டவை. இறகு வடிவான இவ்விலைகள், 3 தொடக்கம், 8 சோடிகள் வரை எண்ணிக்கையான சிற்றிலைகளைக் கொண்டவை. சிற்றிலைகள் ஒவ்வொன்றும், 7 - 21 சமீ நீளமும், 4 - 9 சமீ அகலமும் உள்ளவை. பூக்கள், 20 - 40 சமீ நீளமுள்ள நுனிவளர் பூந்துணர்களில் (racemes) உருவாகின்றன. சம அளவும், வடிவமும் கொண்ட ஐந்து மஞ்சள் நிற இதழ்களாலான பூக்களின் விட்டம் 4 - 7 சமீ வரை இருக்கும். இதன் பழம் 30 - 60 சமீ நீளமும், 1.5 - 2.5 சமீ வரை அகலமானதுமான ஒரு அவரையம் (legume) ஆகும். நச்சுத்தன்மை கொண்ட பல விதைகளைத் தன்னுள் அடக்கிய இப் பழம் எரிச்சலூட்டும் மணம் தருவது.
[தொகு] பயன்பாடும், வளர்ப்பும்
கொன்றை பெரும்பாலும் அலங்காரத் தாவரமாகவே வளர்க்கப்படுகிறது. வெப்பமண்டலம் மற்றும் குறை வெப்பமண்டலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. நன்றாக நீர் வடியக் கூடிய நிலத்தில், நல்ல சூரிய ஒளியில் சிறப்பாக வளரும். வறட்சியையும், உப்புத்தன்மையையும் தாங்கக் கூடிய இத் தாவரம், குறுகியகால உறைபனிக் காலநிலையையே தாக்குப் பிடிப்பதில்லை. கொன்றை, பூஞ்சணம், இலைப்புள்ளி, மற்றும் வேர் நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியது.
[தொகு] இந்துசமயத்தில் கொன்றை
இந்துக்கள், கொன்றைப் பூவைச் சிவனின் பூசைக்குரியதாகக் கருதுகின்றனர். இச் சமய இலக்கியங்கள், சிவபெருமானைக் கொன்றைப் பூவைத் தலையில் சூடியவராக வர்ணிக்கின்றன. (எ.கா: மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே)


