சிகிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிகிரியா குன்று
பெரிதாக்கு
சிகிரியா குன்று

இலங்கையின் இணையற்ற கலைபாரம்பரியத்தின் சின்னமாக கருதப்படுவது சிகிரியா குன்றாகும். இது அனுராதபுரம் மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அண்மையில் அமைந்துள்ளது. 1144 அடி உயரமான இக் குன்றினுள் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இவை 6 ம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும். எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகத்துக் கொள்ளவே இக் கோட்டை 1ம் காசியப்பன் (AD 477-495) அமைத்தான். கோட்டை சுற்றி வெளியாக்கியதுடன் , அகழியும் கட்டப்பட்டது.சிகிரியா குன்றானது UNESCO வால் பாதுகாக்க படவேண்டிய கலாச்சாரமுக்கியதுவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[தொகு] ஒவியங்களின் சிறப்பு

சிகிரியா ஒவியம்
பெரிதாக்கு
சிகிரியா ஒவியம்
சிகிரியா ஒவியம்
பெரிதாக்கு
சிகிரியா ஒவியம்

இக் குகையினுள் FRASCO முறையில் இயற்கை வர்ணங்கள் கொண்ட வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன . இவை 6ம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும். இவைகளில் பல இன்னும் அழியாமல் அழகாக காட்சி தருகின்றது.இவ் ஒவியங்களில் காணப்படும் பெண்கள் அப்சரஸ்கள் எனவும் சிலரால் அவை காசியப்பனின் மனைவிகள் எனவும் கூறப்படுகிறது. இவர்களில் சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர் கொத்தை கையில் ஏந்தியவாறும் மேலாடை இன்றியும் மேலாடையுடனும் தனித்தும் கூட்டமாகவும் வரையப்பட்டுள்ளது.

ஏனைய மொழிகள்