தி. ச. வரதராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

"வரதர்" என அழைக்கப்படும் தி. ச. வரதராசன் (பிறப்பு: 1924, பொன்னாலை, யாழ்ப்பாணம்), சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். இலங்கைக் கலைக் கழகத்தின் சாகித்திய இரத்தினம் விருது பெற்றுள்ளார்.

பொருளடக்கம்

[தொகு] சிறுகதைகள், கவிதை

இவரது முதற் சிறுகதையான கல்யாணியின் காதல் ஈழகேசரியில் வெளியானது. ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' ஜூன் 13, 1943 இல் தொடங்கப்படக் காரணமாயிருந்தோரில் இவர் ஒருவர். இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய ஓர் இரவினிலே எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. வரதரின் முதற் சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளியானது.

[தொகு] சஞ்சிகைகள்

மறுமலர்ச்சி சஞ்சிகையின் (1946 - 1948) ஆசிரியர் குழுவில் ஒருவர். ஆனந்தன் (1952), தேன் மொழி (1955), வெள்ளி (சஞ்சிகை), புதினம் (வார இதழ்), அறிவுக் களஞ்சியம் ஆகியன இவர் நடத்திய இதழ்கள்.

[தொகு] வரதர் வெளியீடு

"வரதர் வெளியீடு" என்னும் வெளியீட்டு முயற்சியின் மூலம் பெருமளவு நூல்களை வெளியிட்டுள்ளார். வரதரின் பல குறிப்பு என்ற பெயரில் தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியிட்டார்.

[தொகு] இவரது நூல்கள்

  • கயமை மயக்கம் (சிறுகதைகள்)

[தொகு] வெளி இணைப்புக்கள்

[தொகு] வரதரின் நூல்கள்