கடலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம்
தலைநகர் கடலூர்
பரப்பு 3564 ச.கி.மீ
மக்கள் தொகை 21,22,759
எழுத்தறிவு 10.66 இலட்சம்
சாலைகள் 583.60 கி.மீ
வங்கிகள் 152
மழையளவு 1.136.9 மி.மீ

கடலூர் (Cuddalore) தமிழ் நாட்டின் மாவட்டங்களில் ஒன்றும் அதன் தலைநகரமும் ஆகும். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம். தெற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டமும் தென்கிழக்கே தஞ்சாவூர் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே விழுப்புரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன. திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை ஆகிய அணைகள் அமைந்துள்ளன.பிச்சாவரம்,கெடிலத்தின் கழிமுகம், கடலூர் தீவு,புனித டேவிட் கோட்டை,துறைமுகம் ஆகியவை கடலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள் ஆகும்.

[தொகு] வெளி இணைப்புகள்

கடலூர் மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்

"http://ta.wikipedia.org../../../%E0%AE%95/%E0%AE%9F/%E0%AE%B2/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது
ஏனைய மொழிகள்