இராஜேந்திர சோழன் II
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| சோழ மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலச் சோழர்கள் | |
| இளஞ்சேட்சென்னி | கரிகால் சோழன் |
| நெடுங்கிள்ளி | நலங்கிள்ளி |
| கிள்ளிவளவன் | கொப்பெருஞ்சோழன் |
| கோச்செங்கண்ணன் | பெருநற்கிள்ளி |
| மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848 | |
| இடைக்காலச் சோழர்கள் | |
| விஜயாலய சோழன் | கி.பி. 848-871(?) |
| ஆதித்த சோழன் | 871-907 CE |
| பராந்தக சோழன் I | கி.பி. 907-950 |
| கண்டராதித்தர் | கி.பி. 950-957 |
| அரிஞ்சய சோழன் | கி.பி. 956-957 |
| சுந்தர சோழன் | கி.பி. 957-970 |
| உத்தம சோழன் | கி.பி. 970-985 |
| இராஜராஜ சோழன் I | கி.பி. 985-1014 |
| இராஜேந்திர சோழன் | கி.பி. 1012-1044 |
| இராஜாதிராஜ சோழன் | கி.பி. 1018-1054 |
| இராஜேந்திர சோழன் II | கி.பி. 1051-1063 |
| வீரராஜேந்திர சோழன் | கி.பி. 1063-1070 |
| அதிராஜேந்திர சோழன் | கி.பி. 1067-1070 |
| சாளுக்கிய சோழர்கள் | |
| குலோத்துங்க சோழன் I | கி.பி. 1070-1120 |
| விக்கிரம சோழன் | கி.பி. 1118-1135 |
| குலோத்துங்க சோழன் II | கி.பி. 1133-1150 |
| இராஜராஜ சோழன் II | கி.பி. 1146-1163 |
| இராஜாதிராஜ சோழன் II | கி.பி. 1163-1178 |
| குலோத்துங்க சோழன் III | கி.பி. 1178-1218 |
| இராஜராஜ சோழன் III | கி.பி. 1216-1256 |
| இராஜேந்திர சோழன் III | கி.பி. 1246-1279 |
| சோழர் சமுகம் | |
| சோழ அரசாங்கம் | சோழ இராணுவம் |
| சோழர் கலைகள் | சோழ இலக்கியம் |
| பூம்புகார் | உறையூர் |
| கங்கைகொண்ட சோழபுரம் | தஞ்சாவூர் |
| தெலுங்குச் சோழர்கள் | |
| edit | |
இரண்டாம் இராஜேந்திர சோழன் முதலாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகனும், முதலாம் இராஜராஜ சோழனின் பேரனும் ஆவான். சோழ மன்னனாயிருந்த இவனது மூத்த சகோதரன் சாளுக்கியருடனான போரொன்றில் கொல்லப்பட, போரைத் தொடர்ந்து நடத்திச் சோழர்களின் தோல்வியைத் தவிர்த்தவன் இவன். கி.பி 1054 இல் போர்க் களத்திலேயே சோழ நாட்டின் அரசனாக முடி சூட்டிக்கொண்ட இவன் 1064 ஆம் ஆண்டுவரை ஆட்சி நடத்தினான்.
இவன் காலத்திலும், மேற்குச் சாளுக்கியருடனான சோழரின் பகைமை நீடித்திருந்தது. அவர்களுடன் போரிட்டு வெற்றியும் பெற்றுள்ளான். கிழக்குச் சாளுக்கியருடனான உறவு நல்ல நிலையில் இருந்தது. தனது மகளான மதுராந்தகி என்பவள் கீழை சாளுக்கிய இளவரசனான இராசேந்திரன் என்பவனை மணந்திருந்தாள். இவர்களுக்குப் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ நாட்டு அரசனாகி, சாளுக்கிய சோழ மரபு வழியை உருவாக்கியவன்.
இரண்டாம் இராஜேந்திரனைத் தொடர்ந்து, அவனுடைய தம்பியான வீரராஜேந்திரன் சோழ மன்னனானான்.

