சுந்தர சோழன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| சோழ மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலச் சோழர்கள் | |
| இளஞ்சேட்சென்னி | கரிகால் சோழன் |
| நெடுங்கிள்ளி | நலங்கிள்ளி |
| கிள்ளிவளவன் | கொப்பெருஞ்சோழன் |
| கோச்செங்கண்ணன் | பெருநற்கிள்ளி |
| மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848 | |
| இடைக்காலச் சோழர்கள் | |
| விஜயாலய சோழன் | கி.பி. 848-871(?) |
| ஆதித்த சோழன் | 871-907 CE |
| பராந்தக சோழன் I | கி.பி. 907-950 |
| கண்டராதித்தர் | கி.பி. 950-957 |
| அரிஞ்சய சோழன் | கி.பி. 956-957 |
| சுந்தர சோழன் | கி.பி. 957-970 |
| உத்தம சோழன் | கி.பி. 970-985 |
| இராஜராஜ சோழன் I | கி.பி. 985-1014 |
| இராஜேந்திர சோழன் | கி.பி. 1012-1044 |
| இராஜாதிராஜ சோழன் | கி.பி. 1018-1054 |
| இராஜேந்திர சோழன் II | கி.பி. 1051-1063 |
| வீரராஜேந்திர சோழன் | கி.பி. 1063-1070 |
| அதிராஜேந்திர சோழன் | கி.பி. 1067-1070 |
| சாளுக்கிய சோழர்கள் | |
| குலோத்துங்க சோழன் I | கி.பி. 1070-1120 |
| விக்கிரம சோழன் | கி.பி. 1118-1135 |
| குலோத்துங்க சோழன் II | கி.பி. 1133-1150 |
| இராஜராஜ சோழன் II | கி.பி. 1146-1163 |
| இராஜாதிராஜ சோழன் II | கி.பி. 1163-1178 |
| குலோத்துங்க சோழன் III | கி.பி. 1178-1218 |
| இராஜராஜ சோழன் III | கி.பி. 1216-1256 |
| இராஜேந்திர சோழன் III | கி.பி. 1246-1279 |
| சோழர் சமுகம் | |
| சோழ அரசாங்கம் | சோழ இராணுவம் |
| சோழர் கலைகள் | சோழ இலக்கியம் |
| பூம்புகார் | உறையூர் |
| கங்கைகொண்ட சோழபுரம் | தஞ்சாவூர் |
| தெலுங்குச் சோழர்கள் | |
| edit | |
இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான்.
கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டான். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கி.பி 973 ல் காலமானான்.
சுந்தரசோழனுக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான்.
தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான 'பொன்னியின் செல்வன்' இவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவியே எழுதப்பட்டுள்ளது.
சுந்தர சோழனின் மகன் அருள்மொழி வர்மன் பின்னாளில் ராஜராஜ சோழன் என்ற பெயரில் அரசபட்டம் ஏற்று மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தான்.

