கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| புதிய ஏற்பாடு |
|---|
| மத்தேயு |
| மாற்கு |
| லுக்கா |
| யோவான் |
| பணிகள் |
| உரோமர் |
| 1 கொரிந்தியர் |
| 2 கொரிந்தியர் |
| கலாத்தியர் |
| பிலிப்பியர் |
| பிலேமோன் |
| 1 தெசலோனிக்கியர் |
| 2 தெசலோனிக்கியர் |
| எபேசியர் |
| கொலொசெயர் |
| 1 திமோத்தேயு |
| 2 திமோத்தேயு |
| தீத்து |
| எபிரெயர் |
| யாக்கோபு |
| பேதுரு |
| பேதுரு |
| யோவன் |
| யோவன் |
| யோவன் |
| யூதா |
| வெளிபபடுத்தல்கள் |
கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபம் விவிலியத்திலுள்ள ஒரு நூலாகும். புதிய ஏற்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல் வரிசைப்படி ஏழாவது நூலாகும். இது புனித பவுல் அவர்களினால் கிறிசின் கொரிந்தி என்னும் இடத்தில் இருந்த கிறிஸ்தவருக்கு எழுதிய ஒரு கடிதமாகும் அல்லது பல கடிதங்களின் தொகுப்பாகும். இது பவுல் அவர்கள் எழுதிய பல நிருபங்களில் ஒன்றாகும் இதை எழுதியவர் பவுல் என்பதில் ஐயங்கள் எதுவும் எழுப்பப் படவில்லை. இது பல நற்செய்திகளுக்கு மதிப்பிடப்பட்டுள்ள காலத்துக்கும் முற்பட்ட காரணத்தால் (மத்திய தொடக்கம் அந்தி 50கள்) நற்செய்திகளில் இயேசுவினது வரலாற்று உண்மையையும் ஆதி கிறிஸ்தவரது நம்பிக்கையின் வளர்ச்சியையும் நிரூபிக்கப் பயன்படுத்தபடுகிறது. பல சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி பல கண்கண்ட சாட்சிகள் உயிரோடு இருக்க கூடுமாதலால் இரண்டு சதாப்தம் போன்ற சிறிய கால இடைவெளியில் ஒரு நபர் பற்றிய பொய்யான சரித்திரம் உருவாக வழியில்லை. மேலும் பவுல் இயேசுவின் மரணத்துக்கு பின்பே கிறிஸ்தவராக மாறுகின்றார். எனவே இந்நூலில் பவுல் குறிப்பிடும் இயேசுவின் வாழ்க்கை குறிப்புகள் வரலாற்று உண்மைத்தன்மையைக் கொண்டுள்ளன.

