சுதாராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சுதாராஜ் 1972 இல் "ஒளி" என்ற சஞ்சிகையில் "இனி வருமோ உறக்கம்?" என்ற சிறுகதை மூலம் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர். நாவல், சிறுகதை இலக்கியத்தில் பல ஆக்கங்களை எழுதி வருகிறார்.

மல்லிகையில் சுதாராஜ்
மல்லிகையில் சுதாராஜ்

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

சுதாராஜ் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த சிவசாமி-இராசம்மா தம்பதிகளின் இரண்டாவது மகன், இயற்பெயர் இராஜசிங்கம். யாழ் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுப் பின்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றார். ஈராக், குவைத், பாகிஸ்தான், இத்தாலி, கிறீஸ், யேமன், அல்ஜீரியா, இந்தோனீசியா எனப் பல நாடுகளிலும் பணிபுரிந்து தற்போது புத்தளத்தில் பணியாற்றுகிறார். அங்கு புத்தகக் கடையையும் தேனுகா என்ற பெயரில் பதிப்பகமும் வைத்திருக்கிறார். இவரது தேனுகா பதிப்பகம் மூலம் 15 இற்கும் மேலான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார்.

சுதாராஜின் முதற் சிறுகதைத்தொகுதி கொடுத்தல் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களால் வெளியிடப்பட்டது. இது பின்னர் சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றது. 2002 முதல் தன்னை வளர்த்த சிரித்திரனைக் கௌரவிப்பதற்காக சிரித்திரன் சுந்தர் விருதினை, ஈழத்துப் படைப்பாளிகளால் பிரசுரிக்கப்படும் சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு வழங்கி வருகிறார்.

[தொகு] வெளிவந்த நூல்கள்

  • பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு, 1977)
  • இளமைக் கோலங்கள் (நாவல், வீரகேசரி பிரசுரம், 1981)
  • கொடுத்தல் (சிறுகதைத் தொகுப்பு, சிரித்திரன் பிரசுரம், 1983)
  • ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள் (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப் பந்தல் வெளியீடு, 1989)
  • தெரியாத பக்கங்கள் (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப் பந்தல் வெளியீடு, 1997)
  • காட்டில் வாழும் கரடி நாட்டுக்கு வந்த கதை (மணிமேகலைப் பிரசுரம்)
  • இலங்கை நாட்டுப்புறப் பாடல்கள் (மணிமேகலைப் பிரசுரம்)

[தொகு] விருதுகள்

  • 1981-1990 காலப்பகுதியில் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்திய விருது (கொடுத்தல்)
  • இலங்கை அரசின் இந்து சமயக் கலாச்சார அமைச்சின் இலக்கிய வித்தகர் பட்டம். (கொடுத்தல்)
  • 1989ம் வருட சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான யாழ் இலக்கிய வட்டத்தின் விருது (ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்).
  • அடைக்கலம் சிறுகதை ஆனந்த விகடன் வைர விழாப் போட்டியில் 1991இல் பரிசு பெற்றது.

[தொகு] வெளி இணைப்புகள்