பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது யாழ்ப்பணத்தில் பலாலியில் ஒர் சர்வதேசவிமானநிலையமும் திருச்சிக்கான விமானசேவையும் கட்டுநாயக்கவில் விமானநிலையமும் இருந்தது. பலாலி சர்வதேச விமானநிலையமானது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சாட்டாக வைத்து மூடப்பட்டது. பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையமே தற்போது இலங்கையில் இருக்கும் ஒரே சர்வதேச விமானநிலையமாகும். இது கொழும்பில் இருந்து வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இரண்டாம் உலக மகாயுத்தில் இது ராயல் விமானப் படையின் ஓர் தளமாகவும் அமைந்தது. இன்றளவும் இதில் இலங்கை விமானப் படையின் விமானப் படைத் தளமும் அமைந்துள்ளது. இதுவே விடுதலைப் புலிகளின் கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதலிற்கு வழியமைத்தது.
இவ்விமான நிலையமானது 1970 இல் SWRD பண்டாரநாயக்கவின் நினைவாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் எனப் பெயரிடப் பட்டது. 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிமாறியதும் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் எனப் பெயர்மாற்றப் பட்டது. பின்னர் இது மீண்டும் 1994 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும் மீள்வும் பழைய பெயரிற்கு மாற்றப் பட்டது.
ஜூன் 24, 2001 ஆங்கிலத் திரைப்படங்களில் வருவதுபோன்று திகைப்பூட்டும் வகையில் விடுதலைப் புலிகள் விமானநிலையத்தில் கடுமையான பாதுக்காப்புக்களை எல்லாம் மீறி உள்நுளைந்து 26 போர் மற்றும் வர்த்தக விமாங்களைச் சேதப் படுத்தினர்.

