தெளிவத்தை ஜோசப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தெளிவத்தை ஜோசப் இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம். காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல்.
[தொகு] வெளியான நூல்கள்
- காலங்கள் சாவதில்லை (நாவல், வீரகேசரி பிரசுரம்)
- மலையகச் சிறுகதை வரலாறு (இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது பெற்ற நூல், துரைவி வெளியீடு, 2000)
- பாலாயி (மூன்று குறுநாவல்களின் தொகுப்பு, துரைவி வெளியீடு)

