இராஜேந்திர சோழன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| சோழ மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலச் சோழர்கள் | |
| இளஞ்சேட்சென்னி | கரிகால் சோழன் |
| நெடுங்கிள்ளி | நலங்கிள்ளி |
| கிள்ளிவளவன் | கொப்பெருஞ்சோழன் |
| கோச்செங்கண்ணன் | பெருநற்கிள்ளி |
| மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848 | |
| இடைக்காலச் சோழர்கள் | |
| விஜயாலய சோழன் | கி.பி. 848-871(?) |
| ஆதித்த சோழன் | 871-907 CE |
| பராந்தக சோழன் I | கி.பி. 907-950 |
| கண்டராதித்தர் | கி.பி. 950-957 |
| அரிஞ்சய சோழன் | கி.பி. 956-957 |
| சுந்தர சோழன் | கி.பி. 957-970 |
| உத்தம சோழன் | கி.பி. 970-985 |
| இராஜராஜ சோழன் I | கி.பி. 985-1014 |
| இராஜேந்திர சோழன் | கி.பி. 1012-1044 |
| இராஜாதிராஜ சோழன் | கி.பி. 1018-1054 |
| இராஜேந்திர சோழன் II | கி.பி. 1051-1063 |
| வீரராஜேந்திர சோழன் | கி.பி. 1063-1070 |
| அதிராஜேந்திர சோழன் | கி.பி. 1067-1070 |
| சாளுக்கிய சோழர்கள் | |
| குலோத்துங்க சோழன் I | கி.பி. 1070-1120 |
| விக்கிரம சோழன் | கி.பி. 1118-1135 |
| குலோத்துங்க சோழன் II | கி.பி. 1133-1150 |
| இராஜராஜ சோழன் II | கி.பி. 1146-1163 |
| இராஜாதிராஜ சோழன் II | கி.பி. 1163-1178 |
| குலோத்துங்க சோழன் III | கி.பி. 1178-1218 |
| இராஜராஜ சோழன் III | கி.பி. 1216-1256 |
| இராஜேந்திர சோழன் III | கி.பி. 1246-1279 |
| சோழர் சமுகம் | |
| சோழ அரசாங்கம் | சோழ இராணுவம் |
| சோழர் கலைகள் | சோழ இலக்கியம் |
| பூம்புகார் | உறையூர் |
| கங்கைகொண்ட சோழபுரம் | தஞ்சாவூர் |
| தெலுங்குச் சோழர்கள் | |
| edit | |
இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் மகனாவார்.
இன்றைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை , இந்தியாவிற்கு வெளியே வென்று , கடல் கடந்த தூர நாடுகளில் விண்ணுயரப் புலிக்கொடியைப் பறக்க விட்டவன் அவன் . இலங்கையையும் , மாலத் தீவையும் , வடக்கே வங்காள தேசம் வரை விரிவுபடுத்தியவன் . கங்கை வெற்றியை அடுத்து இராஜேந்திர சோழனின் மாபெரும் படையெடுப்பு கடல் வழி கடார படையெடுப்பு கி.பி 1025 யில் நடந்தது .
கடாரம் - மலேயா , சுமத்ரா, ஜாவா , போர்னியோ , பிலிப்பைன்ஸ் , பார்மோஸா, சீனாவின் கான்டன் ஆகிய இடங்களில் பரவியிருந்தது.ஏறத்தாழ, பத்து நாட்கள் கடற்பயணம் , அதன்பின் நிலத்தில் சோர்வின்றி நிகழ்த்த வேண்டிய உற்சாகமான போர் , இவற்றிற்கேற்ப சீரான பயிற்சிகள் என திட்டமிட்டு , 60,000 யானைகளும் , பல்லாயிரக்கணக்கான குதிரைகளும் , இலட்சக்கணகான வீரர்களும் சுமந்து செல்லக்கூடிய கப்பல்களை கட்டி கடாரம் சென்ற இராஜேந்திரனை , கடாரத்தோரால் நிறுத்தமுடியவில்லை .
கடாரம் மட்டுமின்றி பர்மாவிலிருந்து , இந்தோனேஷியாவின் தெற்கு முனை வரை இராஜேந்திரன்வென்ற நிலப்பரப்பு ஏறத்தாழ 36 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் (இன்றைய இந்திய நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோ மீட்டர்கள்) .
இதை மெய்க்கீர்த்தி,
"அலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்தி
சங்கிராம விசையோத் துங்கவர்மன் ஆகிய
கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொடும்
அகப்படுத்து உரிமையிற் பிறக்கிய பெருநிதி பிறக்கமும் ,
ஆர்த்தவன் அகநகப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தொ ரணமு மொய்த்து ஒளிர்
புனைமணிப் புதவமுங் கனமணி கதவமும் .." என குறிப்பிடுக்கிறது .
இவ்வளவு சிரமப்பட்டு நாடுகளை வென்ற இராஜேந்திர சோழன் , அவற்றை தன் பேரரசுடன் இணைத்துக்கொள்ளவில்லை . கடாரத்து பட்டத்து யானையையும் , பெரும் திறைப் பொருளையும் மட்டுமே எடுத்து தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டியதோடு அவன் நிறைவடைந்தான் .
[தொகு] Reference
(இதயம் - 1/6/1999 )தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன் - முனைவர் .இ.ஜே. சுந்தர் .

