நெடுங்கிள்ளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| சோழ மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலச் சோழர்கள் | |
| இளஞ்சேட்சென்னி | கரிகால் சோழன் |
| நெடுங்கிள்ளி | நலங்கிள்ளி |
| கிள்ளிவளவன் | கொப்பெருஞ்சோழன் |
| கோச்செங்கண்ணன் | பெருநற்கிள்ளி |
| மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848 | |
| இடைக்காலச் சோழர்கள் | |
| விஜயாலய சோழன் | கி.பி. 848-871(?) |
| ஆதித்த சோழன் | 871-907 CE |
| பராந்தக சோழன் I | கி.பி. 907-950 |
| கண்டராதித்தர் | கி.பி. 950-957 |
| அரிஞ்சய சோழன் | கி.பி. 956-957 |
| சுந்தர சோழன் | கி.பி. 957-970 |
| உத்தம சோழன் | கி.பி. 970-985 |
| இராஜராஜ சோழன் I | கி.பி. 985-1014 |
| இராஜேந்திர சோழன் | கி.பி. 1012-1044 |
| இராஜாதிராஜ சோழன் | கி.பி. 1018-1054 |
| இராஜேந்திர சோழன் II | கி.பி. 1051-1063 |
| வீரராஜேந்திர சோழன் | கி.பி. 1063-1070 |
| அதிராஜேந்திர சோழன் | கி.பி. 1067-1070 |
| சாளுக்கிய சோழர்கள் | |
| குலோத்துங்க சோழன் I | கி.பி. 1070-1120 |
| விக்கிரம சோழன் | கி.பி. 1118-1135 |
| குலோத்துங்க சோழன் II | கி.பி. 1133-1150 |
| இராஜராஜ சோழன் II | கி.பி. 1146-1163 |
| இராஜாதிராஜ சோழன் II | கி.பி. 1163-1178 |
| குலோத்துங்க சோழன் III | கி.பி. 1178-1218 |
| இராஜராஜ சோழன் III | கி.பி. 1216-1256 |
| இராஜேந்திர சோழன் III | கி.பி. 1246-1279 |
| சோழர் சமுகம் | |
| சோழ அரசாங்கம் | சோழ இராணுவம் |
| சோழர் கலைகள் | சோழ இலக்கியம் |
| பூம்புகார் | உறையூர் |
| கங்கைகொண்ட சோழபுரம் | தஞ்சாவூர் |
| தெலுங்குச் சோழர்கள் | |
| edit | |
நெடுங்கிள்ளி, முதலாம் கரிகால் சோழனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த சோழ அரசனாவான். இவன் கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சிபீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றது.
கோவூர்க் கிழார் என்னும் புலவர் பாடிய 44 ஆம், 45 ஆம் புறநானூற்றுப் பாடல்கள், இவ்விரு சோழர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மற்றும் அதனால் மக்களும், விலங்குகளும்கூடப் படும் துன்பங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது. அது மட்டுமன்றி இரு சோழர்களுக்கும் இடித்துரைத்து ஆலோசனை கூறும் தொனியையும் இப் பாடல்களிலே காண முடிகின்றது.

