பசுமைக்கரங்கள் திட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பசுமைக்கரங்கள் திட்டம் என்பது தமிழ் நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் இலாப நோக்கமற்ற பக்க சார்பற்ற ஈசா அமைப்பினால் முன்னெடுக்கப்படும் திட்டமாகும். இத்திட்டம் 17 அக்டோபர் 2006 அன்று ஈசா மையம் தலைவர் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதியால் துவங்கி வைக்கப்பட்டது. 17 அக்டோபர் அன்று ஒருநாளில் சுமார் 7 இலட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கைத் தான்டி 813226 மரக்கன்றுகள் நடப்பட்டன.
பொருளடக்கம் |
[தொகு] திட்டத்தின் இலக்குகள்
[தொகு] உடனடி இலக்குகள்
- விழிுப்புணர்வு, பரப்புரை, தன்னாவலர் சேர்ப்பு: இந்த இலக்கு எட்டப்பட்டது.
- ஆரம்பமாக 17 Oct 2006 700 000 மரங்களை ஒரேநாளில் நடுதல்: இந்த இலக்கு எட்டப்பட்டது.
[தொகு] தொலைநோக்கு திட்டங்கள்
- தமிழ் நாட்டின் பசுமைப் போர்வையை 33 விழுக்காட்டாக அதிகரித்தல். இதைச் செய்ய 114 மில்லியன் மரங்களை 2016 இற்கு முன்னதாக நடவேண்டும்.
- சுற்றுச்சூழல் பேணலை உறுதிப்படுத்தும் ஒரு பண்பாட்டு சூழலை உருவாக்கல்.
- இந்த திட்டத்தை பிற இடங்களில் அமுல்படுத்தல்.

