அகமதாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட சபர்மதி ஆசிரமம்
பெரிதாக்கு
மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட சபர்மதி ஆசிரமம்

அகமதாபாத் இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். இது இந்தியாவில் ஆறாவது பெரிய நகரமாகும். இந்நகரத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இந்நகரம் இதன் பழைய பெயரான கர்ணாவதி என்ற பெயராலும் குஜராத் மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குஜராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர் காந்தி நகர் மாநிலத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.