முத்தரசநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருச்சி மாநகரத்திலிருந்து ஏழு கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஓர் அழகிய கிராமம் முத்தரசநல்லூர்.

2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 7 -10 தெருக்கள், சிவன் கோவில், மதுரகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சில தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், 10-15 கடைகள், தபால் நிலையம், மின்னனு தெலைபேசி நிலையம், ஒரு திருமண மண்டபம், சுமார் 200 - 300 ஏக்கர் விளைநிலம் இவையனைத்தும் முத்தரசநல்லூர் கிராத்தை செழுமை படுத்துகிறது.

இங்கு இரயில் தண்டவாளம், திருச்சி-கரூர் பைபாஸ் சாலை, காவிரி ஆறு இவை மூன்றும் அருகருகே இருப்பதை காணலாம்.